ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -92 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே
ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று
இங்கு
அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன்
என்கிறது –

அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –

ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்

இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் –

———————————————————–

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

பதவுரை

வான் ஆகி–ஆகாசமாகியும்
தீ ஆய்–அக்நியாகியும்
மறி கடல் ஆய்–அலை யெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய்–காற்றாகியும்
தேன் ஆகி–தேன் போன்றும்
பால் ஆம்–பால் போன்றும் பரம போக்யனான
திருமாலே–எம்பெருமானே!
முன் ஒரு நாள்–பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை–(பிரளய காலத்தில் உட் கொண்டிருந்த) இவ் வண்டத்தை
உமிழ்ந்த-(உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு–உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய்–இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதை யென்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
விழுங்க–அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே–நிறைந்து விடுமோ? [நிறைய மாட்டாது]

——————————————————–

வியாக்யானம் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் –
பூத பஞ்சகங்களாலும்
ஆரப்தமான அண்டாந்தர வர்த்தி புருஷர்களுக்கு நிர்வாஹகனாய் –

தேனாகிப் பாலாம் திருமாலே –
சர்வ ரச-என்கிறபடியே
நித்ய விபூதியிலே உள்ளார்க்கு போக்யனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறது –

தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்

ஆக
இவ்விரண்டாலும்
உபய விபூதி யுக்தன் -என்றபடி –

உபய விபூதி யோகத்துக்கும் மேலாய்
ஒரு ஐஸ்வர்யம் போலே காணும்  ஸ்ரீயப்தித்வமும் –
ஆகைத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கும்
காமிநிக்கைக்கும்
ஒரு விஷயம் உண்டாவது என்றபடி

அவள் திரு முலைத் தடத்திலும் வெண்ணெய் போக்யமான படி
அது போக்யம் –
இது தாரகம் -என்றபடி

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் உரலினோடு இணைந்து இருந்து
ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய்மொழி -1-3-1-என்னக் கடவது இறே –

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ  நீ செய்தது –

ஆனாய்ச்சி வெண்ணெய் –
வெண்ணெயிலே அல்பம் முடை நாற்றம் குறையில் புஜியான் யாய்த்து

நிறையுமே –
குறைக்கும் இட்டு அடைக்க வேணும்

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

—————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading