அவதாரிகை –
அவிர் சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு
அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று
இவனைக் குறையச் சொல்லுகிறது என்-
அவனைத் தனியே ஈஸ்வரனாகவும்
அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது
என்னில்
அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே வந்தது
அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –
—————————————
பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-
பதவுரை
பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடைமுடியை யுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.
—————————–
வியாக்யானம் –
பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும் –
பொன் போலே உஜ்ஜ்வலம் ஆகா நின்றுள்ள
வடிவையும் பின்னின சடையையும் உடைய
அம் புண்ணியனும்
அழகியதாக சாதனத்தை அனுஷ்டித்து உள்ளவனும் –
பொன் திகழும் மேனி –
சர்வேஸ்வரன் மேக ஸ்யாமனாய் இருக்கும் இறே –
அதுக்கு எதிர் தட்டு
புரி சடை –
தாழ் சடையானுக்கும் நீண் முடியானுக்கும்
வாசி பார்த்துக் கொள்ளும் இத்தனை இறே
அம் புண்ணியனும் –
ஹூத்வாத்மா நம் தேவதேவோ பபூவ -என்னும்படியே
பாபம் ப்ராமாதிகம்
இப் பததுக்கு அடியாகப் பண்ணின புண்யம் –
நின்றுலகம் தாய நெடுமாலும்
ஸ்வைரமாக ஆதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும்
ருத்ரன் தன்னோடு பிறரோடு வாசி அற
எல்லார் தலைகளிலும் திருவடிகளை
நின்ற இடத்தே நின்று வைக்கப் பிறந்த சர்வேஸ்வரனும்-
என்றும் இருவரங்கத்தால் திரிவரேலும் –
எப்போதும் இரண்டு தேஹத்தைப் பரிஹரித்துக் கொடு
திரிந்தார்களே யாகிலும் –
ஒருவன் ஒரு வனங்கத் தென்று முளன் –
ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
அன்றிக்கே
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி
லப்த ஸ்வரூபனாய் இருக்கும் என்னுதல்-
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – திருவாய்மொழி -1-3-9-என்னும்படியே –
ஆக
இத்தால்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -திருவாய்மொழி -4-10-3-என்றபடி –
———————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply