முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-11-20–திவ்யார்த்த தீபிகை —

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தான் தொழா -பேய்முலை நஞ்சு
ஊணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண் கேளா செவி–11-

——————————————————————————————-

உலகம் தாயவன் -ஆஸ்ரித ரஷிப்பதில் தீஷை
முலை நஞ்சு உண்டது -துஷ்ட நிரசன தீஷை
ஜிஹ்வே கீர்த்தய கேசவம்
தம்முடைய இந்த்ரியங்கள் அவன் இடம் அவஹாஹித்த படிகளை பேசி ஹ்ருஷ்டர் ஆகிறார்-

—————————————————————————————————————————————————

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு–12

——————————————————————————————

தானே வந்து ரஷிக்குமவன் அன்றோ
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலாப் பன்றி யாய் திருவவதரித்து –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே செய்து அருளுபவன்
விலக்காமை ஒன்றே வேண்டும்
அத்தையே பற்றாசக் கொண்டு
என் ஊரைச் சொன்னாய்
பேரைச் சொன்னாய்
அடியாரை நோக்கினாய்
அவர்கள் விடாயைத் தீர்த்தாய்
ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்
மடி மாங்காய் இட்டு
பொன் வாணியன் பொன்னை உரைகல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்து
கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று போலே
யாத்ருச்சிகம்
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்
ஸூ க்ருத விசேஷங்களை கற்பித்துக் கொண்டு
ஒன்றை பத்தாக்கி நடத்திக் கொண்டு நன்மைகளை அருளுபவன்
வேறு ஒரு உபாயாதையும் அறியாதே
ஆறேனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
இது அறியாமல்
தைலதாரை போலே இடைவிடாத த்யான பக்தி செய்து அடையலாம்
என்றும் சொல்கிறார்களே என்று நிந்திக்கிறார்
ரத்னம் ஸ்வல்ப விலைக்கு மாற்றும் செம்பட்டவன்
உள்ள விலைக்கு மாற்றும் வியாபாரி
ஸ்வயம் போக்யமாக கொள்ளும் அரசன்
செம்படவன் -பக்தி கொண்டு அல்ப அஸ்த்ர பலன்கள் பெற்று போருமவர்கள்
வியாபாரி -பக்தியை மோஷ சாதனமாக கொள்பவர்கள்
அரசன் -பக்தியை ஸ்வயம் போக்யமாக கொள்ளுமவர்கள்
அதையே பலமாகக் கொள்ளாமல் அந்த பக்தியை உபாயமாக கொண்டு
கீழ் வகுப்பில் புகுவாரை ஆர் கொல் விலக்குவார்
வானத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று -இரண்டாம் திருவந்தாதி
அருள் வெள்ளம் புகப் புக்கால் தாங்கிக் கொள்ளவே
நமது நற்கிரிசைகள் உறுப்பு -என்றபடி
இந்த்ரியங்களையும்
பஞ்ச பூதங்களாலான சரீரத்தையும் சொல்லி
பக்தி உபாயத்வம் கழிக்கப் படுகிறது
என்பரே
ஏகாரத்தை அசையாகக் கொண்டு
பகவத் பிராப்திக்கு பக்தியை உபாயம் என்பர்
என்பாரும் உண்டு
இயல்வு -உபாயம்-

——————————————————————————————————————————————————————————————————

இயல்வாக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வாக
நீதியாலோதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றாரவர்–13-

————————————————————-

நித்யர்கள் அன்றோ நித்ய கைங்கர்யம் செய்ய யோக்யதை படைத்தவர்கள்
நம் போல்வார் பணிந்து உய்ய விரகு உண்டோ
வேதங்களை ஓதி
படிப்படியாக திருந்தி கிட்டும்படி
அவனே மூல ஸூ க்ருதமாக இரா நின்றான்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் எம்மான் திரிவிக்ரமனையே –
ஆதியாய் நின்றார் அவர் -இப்படி கிருஷிகள் பண்ணிக் கொண்டு
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா -ரகஸ்ய த்ரய சாரம்-

——————————————————————————————————————————————————————-

அவரவர் தாம்தாம் அறிந்த வாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி உருவே முதல் —14-

—————————————————————–

ஆதியாய் நின்றார் அவர் -என்றத்தை
விவரித்து அருளுகிறார்
ஸ்ரீ மன் நாராயண மூர்த்தியே பிரதானம்
உலகளந்த மூர்த்தி என்றது
சம்சாரிகளோடு
சூத்திர தேவதைகளோடு
வாசி அற எல்லாரும் தன்னுடைய
திருவடிகளின் கீழே துகை உண்ணுமாறு
வ்யாபித்தவன் –
இவனே முழு முதல் கடவுள் என்று மூதலித்தார் ஆய்த்து

அவரவர் -செய்து குணக்குறைவைக் காட்டும்

தாம்தாம் அறிந்த வாறு-
சாஸ்திரங்களையும்
சிஷ்டாசாரமும் அறியாமல்
ராஜச தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு-

———————————————————————————————————————————————————————————

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி வண்ணன் முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது –15-

———————————————

முதலாவார் மூவர் -பாட பேதம்
தளை தட்டும்
மூவரே சரியான பாடம்
மூவர் -அம்மூவரினுள்ளும் -என்று மாற்றுவர்
ஆழ்வார் பாசுரங்களை நம்முடைய ஸ்வாதந்த்ர்யம் கொண்டு மாற்றுதல் கூடாதே

மூரி -பெருமையும் வலிமையையும்

நாமநீர் –பெரிய நீர் -கடல் சூழ்ந்த
சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்
முதலாய நல்லான் அருளே நன்று
பல்லார் அருளும் பழுது-

——————————————————————————————————————————————————————————————

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி–16-

———————————————————————–

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி
அரவணை மேல் கண்டு
இன்று தொழுதேன் -நிகழ கால பகவத் சேவை கிடைக்க பெற்ற ஹர்ஷம்

பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்
என்கையால் இறந்த கால இழவை அனுசந்திக்கிறார்

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே
கண்டு தொழுதேன் என்ற பின்பு அஞ்ச வேண்டுவது என் என்னில்
இருப்பது இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்

கீழ் ஆறாம்பாட்டில்
ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான் -என்றும்
அன்று கருவரங்கத்துட் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -என்றும்
அருளினவர்
பழுதே பலகாலும் போயின வென்று அழுவதாக சொல்லுவான் என் என்னில்
இப்பிறவிக்கு முன்பே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களின் நாள்கள்

பேயாழ்வார் -சென்ற நாள் செல்லாத செங்கண் மால் –எந்நாளும் நாளாகும்
எல்லா காலமும் நல்ல காலம் இறந்த எதிர் காலம் நினைவு இன்று நிகழ கால ஆனந்தத்தால்
அஃது ஒரு சொல் சமத்காரம்

அடலோத வண்ணர் ஓதம்
திருமேனியில் பரவுகின்ற லாவண்யா தரங்கங்கள்
அனுபவிக்க வருமவர்களை அடர்த்து தள்ளக் கூடியது

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே

————————————————————————————————————————————————————————————————————————————————

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் -வடிவுகிரால்
ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்
ஊர்ந்தான் உலகளந்த நான்று–16

—————————————————————————

பழுதே பலபகலும் போயின -என்றத்தை விவரிக்கிறார்
உலகு அளந்த திவ்ய சரித்ரத்தில் ஈடுபட்டு இருந்தேன் ஆகில்
முக்தனாய் இருப்பேனே
என்பர் -என்பதால் பிறர் சொல்லிக் கேள்விப் பட்டேனே ஒழிய
நேரிலே சேவிக்கப் பெற்றேன் இல்லையே என்கிறார்

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே –
அடியவர்களுக்கு சிரோ பூஷணமாக அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு
கல்லும் காடும் மேடுமான உலகங்களை அளப்பதே -என்கிற வருத்தம் தோன்ற

முடியும் விசும்பு அளந்தது என்பர்
எங்கள் கண் முன்னே விளங்கி
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று
பாசுரம் பேசும்படியான திரு முடியை
அஹங்காரிகளும் பகவத் விஷய சுவடு அறியாதவர்களுமான தேவதைகள் உள்ள இடத்தில் நிமிர்ப்பதே

-வடிவுகிரால்ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்  ஊர்ந்தான் உலகளந்த நான்று –
ஹிரண்யனைப் பிளந்துஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு அருள் செய்த காலத்திலும்
ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானைக் காத்தருள பெரிய திருவடி மீது
அரை குலைய தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் சேவித்து வாழாது ஒழிந்தேனே -என்கிற அனுதாபம் தோன்ற அருளிச் செய்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால்–17

———————————————————————-

இங்கும்
இழந்த நாளைக்கு அனுதாபம் பட அருளிச் செய்கிறார்
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி
இடைக்குலத்தில் வந்து பிறந்த இடத்திலும்
இழந்தேன் இ றே என்று சோகிக்கிறார்

கிருஷ்ணாவதார சரிதங்களை பேசி
ஆனந்தமாக கால ஷேபம் செய்கிறார் என்னவுமாம்

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு
உறி வெண்ணெய்தோன்ற வுண்டான்
வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய்
மண்ணளந்த மால்
மருதிடை போனது ஒரு காலத்திலும்
மண் அளந்தது ஒரு காலத்திலும் ஆகிலும்
ஆழ்வார் உடைய ஞான வைச்யத்தாலே அனுசந்தான தோரணியில்
முன் பின் என்கிற வாசி இன்றியே
எல்லாம் ஓன்று சேர விளங்குகிற படியே
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய –
பொய்ம்மாயமருதான வசுரரை-

புள்ளின் வாய் கீண்டானும் -வெண்டளை பிறழும் பாடம்-

———————————————————————————————————————————————————————————

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
ஆலினிலைத் துயின்ற வாழியான்-கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று–19-

——————————————————————————–

தம்மைப் போலே இழவாமல்
நொடிப் பொழுதும் விடாது அனுபவிக்கப் அனுபவிக்கப் பெற்றவர்கள் உண்டோ
என்று ஆராய்ந்து பார்க்க
மா கடல் நீருள்ளான்-சமுத்திர ராஜனுடைய பாக்யமே பாக்கியம்
நீ நோற்ற நோன்பைச் சொல்லி அருள்
நானும் நோற்று அந்த பேறு பெற்று உஜ்ஜீவிக்க -என்கிறார்
உறங்குவான் போலே யோகு செய்து அருளுகின்றானே

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -ஸ்ரீ ரெங்க விமானம்
அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்தச் சயாயோ மாகத ஸூ குமாரை ரங்க பர்த்துர் மயூகை
சகல ஜகதிபா நச்யா மஜீ மூத ஜைத்ரம் புளகயதி விமானம் பாவனம் லோசநே ந

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
திருப்பாற்கடல் வெள்ளை நிறமாயினும்
எம்பெருமான் உடைய நிழலீட்டாலே கரும் கடல் ஆயிற்று
நான் விரஹத்தால் வெளுத்து இருக்க நீ நித்ய ஹர்ஷா பீடு தோற்ற மாமை பெற்று விளங்குகிறாயே
உவர்க்கும் கரும்கடல் நீருள்ளான் -உப்புக் கடலிலும் உள்ளவன் ஆகியே அத்தை விளித்ததாகவுமாம்

ஆலினிலைத் துயின்ற வாழியான்
-கோலக் கருமேனிச் செங்கண் மால்
கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
கண்படை -கண் வளர்ந்து அருளுகிற நிலை -யோகத் துயில் நிலை-

—————————————————————————————————————————————————————————————————

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் -நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20-

———————————————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலும்
ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரத்திலும்
எம்பெருமான் திருவடிகளை ஏத்தி இறைஞ்சப் பெற்ற பாக்ய சாலிகள் இருந்தனரே
அடியேன் இழந்தேனே

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
வசு தேவ தேவகிகள் கால் விலங்கு கழன்ற
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -திருமங்கை
வாமனன் என்று கொண்டால்
பெற்றார் -தன்னை ஆஸ்ரயிக்க்க பெற்றவர்கள் என்னுமாம்
தழை -கரும பந்தம்
அது நீங்கும்படி பரம பதத்தில் நின்றும் வந்ததைச் சொல்லிற்று ஆகவுமாம்

செற்றார் படி கடந்த செங்கண் மால்
செற்றார் -சத்ருக்கள்
படி -பூமி
மகாபலி போல்வார் தங்களது என்று அபிமானித்து இருந்த பூமி –

நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று
ஏத்துவராம் நின்று -ஏத்துவரால் நின்று -பாட பேதங்கள்
பிரயோஜனாந்த பரர்களும்
ஏத்தி இறைஞ்சும் படி ஆச்சர்யம் தொனிக்க அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading