நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு -என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே யறி–21-
——————————————————————-
தம்முடைய திரு உள்ளத்தை நோக்கி
எம்பெருமான் உடைய சௌசீல்ய திருக் குணத்தை
அருளிச் செய்கிறார்
உலகளந்த சரித்ரம் சொல்லி
இப்படிப்பட்ட அவனுடைய மேன்மையைப் பார்த்து
நெஞ்சே நீ பின் வாங்க வேண்டா என்கிறார்
நம்முடைய விரோதிகளை போக்கி அருள
திருக்கையிலே திரு ஆழி உண்டே
நம் கூக்குரல் கேட்டு சடக்கென ஓடி வந்து காத்தருள
வாகனமும் உண்டே -என்கிறார்-
—————————————————————————————————————–
அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -வெறி கமழும்
காம்பேய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயை
தாம்பே கொண்டார்த்த தழும்பு -22-
————————————————————————————–
அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
உனது சௌலப்ய திருக் குணத்தை அறியாதார் யார்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் –
பல நிறங்களையும் கொண்ட
சிறகுகளை உடைய
கருடாழ்வானை
ஏறி நடத்தும் பெருமானே
காம்பேய் மென்தோளி
மூங்கிலை ஒத்த -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் –
மெல்லிய தோள்களை உடைய யசோதையினாலே
வெறி கமழும் கடை வெண்ணெய் உண்டாயை
கடையப் பட்டு
பரிமளம் வீசப் பெற்ற வெண்ணெயை
களவிலே அமுது செய்து அருளிய உன்னை
சீரார் கலை யல்குல் சீரடிச் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
எராரிடை நோவ எத்தனையோர் போதுமே
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாராருறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கி யறிவுற்று
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்
வாராத்தான் வைத்தது காணாள் வயிறடித்து இங்கு
ஆரார புகுத்துவார் ஐயர் இவரல்லால்
நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண வுரலோடே
தீரா வெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -சிறிய திருமடல்
தாம்பே கொண்டார்த்த தழும்பு
கையிலே கிடைத்த தொரு தாம்பைக் கொண்டு
சௌலப்யம் பரத்வம் உள்ள இடத்தில் தான் பாராட்டத் தகும்
மேரு பரத்வம் உண்டு இங்கு சௌலப்யம் இல்லையே
இரண்டும் அவன் இடம் ஸ்வா தினம் என்று காட்டி அருள பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -என்கிறார்
செந்தாமரைக் கண் பரதவ லஷணம் இதுவும்
வெறி கமழும் -விசேஷணம் -வெண்ணெய்க்கும்- காம்பேய் மென்தோளி யசோதைக்கும்-
———————————————————————————————————————————————————————————–
தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடித் -தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-
—————————————————————————————–
ஒரு தழும்பு இருந்தால்
மறைக்க முடியும்
கையிலும்
காலிலும்
விரலிலும் ஆக உடம்பு முழுவதும்
ஆஸ்ரியர்க்காக செய்து அருளிய சேஷ்டிதங்கள்
ஸ்ரீ ராம
ஸ்ரீ கிருஷ்ண
ஸ்ரீ நரசிம்ஹ
அவதாரங்களில் ஏற்பட்ட தழும்புகள் உண்டே –
சகாதசம் ஜ்யாகிண கர்க்கசைச் சபை சதுர்ப்பி ராஜா நுவிலம்பி பிர்ப்பிஜை –ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம்
தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
ஸ்ரீ ராமபிரான் -தர்மோ விக்ரஹவான் அதர்ம விதரம் தன்வீ ஸ தந்வீத ந -தசாவதார ஸ்தோத்ரம் தேசிகன்
புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலைவா –
நாண் தழும்பு ஸ்ரீ ராமாவதாரம்
தழும்பிருந்த தாள் சகடம் சாடித் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தழும்பு
தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
பெரிய பிராட்டியார் அகலகில்லே இறையும்என்று உறையுமவள்
ஜகத்துக்கு பிரளயமோ என்று அஞ்சி நடுங்கும்படி
வீங்கோத வண்ணர் விரல்
கை தாள் விரல் மூன்றினோடும்
அன்வயிக்கத் தக்கது
கடல் வண்ணன் உடைய கை
கடல் வண்ணன் உடைய தாள்
கடல் வண்ணன் உடைய விரல்
கை தாள் விரல் இவற்றை எழுவாயாகக் கொண்டு
தழும்பை சுமந்து இருக்கின்றன என்றுமாம்-
———————————————————————————————————————————————————————————
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே
ஒண்கோத வண்ணா வுரை –24-
———————————————————————————
மூன்று தழும்புகள் -சாரங்க நாண்
சகடம் உதைத்த -இரணியன் மார்பிடந்த -வீரச் செயல்களை விளக்கும்
தாம்பால் உண்டான தழும்போ பரிஹாசாஸ்பதமாய் இருக்கும் இ றே
வெண்ணெய் திருடினதும் இல்லை
ஆய்ச்சி பிடித்ததும் இல்லை கட்டினதும் இல்லை அடித்ததும் இல்லை
தழும்பு உண்டானதும் இல்லை என்று
முழு பூசணியை மறைக்கப் பார்த்தான்
அவாப்த சமஸ்த காமனாய்
சர்வஞ்ஞனாய்
சர்வசக்தனாய்
உள்ள நீ குறையாளன் போலே களவு செய்து தண்டிக்கப் பட்டு
கட்டை அவிழ்க்க உபாயம் அறியாதவனாய் இருந்தாயே
என்ன ஆச்சர்யம்
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று –
குரல் ஓவாது ஏங்கி நினைந்து
அயலார் காண விருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை
இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலை தேக்கி வைத்தால் போலே காணும்-
————————————————————————————————————————————
உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலத்– திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
யிடந்தானை ஏத்தி எழும்–25-
——————————————————————————-
கிருஷ்ணன் ஓயாமல் ஏங்கி அழுதது போலே
தாமும் கிருஷ்ணன் உடைய சீலகுணத்தை
ஓயாமல் பேச உத்சாகம் கொண்டு அருளிச் செய்கிறார் இதில்
உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்ஏத்தி எழும்
நெஞ்சு சிந்தனை உடன் நில்லாமல்
வாக்கின் தொழிலையும் ஏற்றுக் கொண்டதே
முடியானே மூ வுலகும் தொழுது ஏத்த -திருவாய்மொழி -3-8-1-
மேல் உரை கொண்டு -மேலான சொற்களைக் கொண்டு என்றுமாம்
வரை மேல் மரகதமே போல திரை மேல்கிடந்தானை-
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு இருப்பது
வெண் நிறமான தொரு மலையிலே
மரகதக் கல்லைப் பதித்தால் போலே
அபூத உவமை
கீண்டானைக் –
இரணியன் மார்பையும்
கேசியின் வாயையும் கீண்டானே
அன்றிக்கே
கேழலாய் கீண்டானை இடந்தானை
அண்டபித்தியில் ஒட்டின பூமி கீண்டு இடந்தவன் என்றுமாம்
திரை மேல் கிடந்தானை கீண்டானை
உறங்குவான் போல் யோகு செய்து
ரஷிப்பதில் நோக்கு
அப்படி ரஷிப்பவனை நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கிறது-
———————————————————————————————————————————————————————————–
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் -தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை–26-
———————————————————————————–
விபவம் அனுபவித்தார் இதுவரை
பின்னானார் வணங்கும் சோதியாக
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையாக வடிவமைந்த -என்று
சொல்லப் படுகிற திருவேங்கட மலை யை அனுபவிக்கிறார்
அவனை விட அவன் சம்பந்தம் பெற்ற திருமலையே உத்தேச்யம்
பிரயோஜனாந்தர பரர்களையும் அநந்ய பிரயஜோனரையும் வாசி அற வினைகளைப் போக்கி
பலனைப் பெறுவிக்குமது என்கிறார் –
எழுவார்-
எழுந்து போவாரையும்
மேன்மேலும் ஆசைப் பெருக்கம் உடையவர்களையும் சொல்லும்
ஐஸ்வர் யத்தை தர வேணும் பிரார்த்தித்து பெற்று போவாரையும்
மேலும் ஐஸ்வர்யம் கேட்பாரையும்
வினைச் சுடரை நந்துகை -ஐஸ்வர்ய பிராப்திக்கு விரோதியான பாபங்களைத் தொலைத்து
ஐஸ்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை
விடை கொள்வார்-
விட்டு நீங்குகிறவர்கள்
ஆத்மானுபவதுக்கு விரோதியான பாவங்களை தொலைத்து
கைவல்ய அனுபவத்தை நிறைவேற்றுகை –
ஈன் துழாயானைவழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
பரமைகாந்திகளான பகவத் பக்தர்கள்
இவர்கள் வினைச் சுடரை நந்துவிக்கையாவது
மாறி மாறி பல பிறப்பும் பிறக்கும்படியான தீ வினைகள் தொலைத்து முக்தராக்கை
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே-
வேண்டுவார் வேண்டிய படி
அநிஷ்ட நிவ்ருதிக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
செய்விக்க வல்ல திருவேங்கடம்
பாவங்களை நெருப்பாக ரூபிவித்து -நந்துவிக்கும் -நெருப்பை அணைக்கும் என்கிறார்
வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –
ஒரு நெருப்பை அணிவிக்கும்
ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்கிறார்
மனச் சுடரை –
நித்யர்களை இங்கே வந்து சௌலப்ய குணம் அனுபவிக்க தூண்டும் -என்றவாறு-
——————————————————————————————————————————————————————————————-
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று-கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-
கார்க்கோடு -கம்பீரமாக முழங்குவதில் மேகத்தை ஒத்த சங்கு
————————————————————————————–
திருமலையை அனுசந்திதவர்
திருவேம்கடமுடையானையும்
அவன் விபவத்தில் செய்து அருளின வீரச் செயல்களையும் அனுபவிக்கிறார்
மலையால் குடை கவித்து
மாவாய் பிளந்து -கேசி குதிரை வாயை பிளந்ததுவும்
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானைப்போர்க்கோடு ஒசித்தனவும்
பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை
இந்த திருக்கைகளே பழைய வீரச் செயல்களை செய்து அருளின என்கிறார்-
———————————————————————————————————————————————————————————————–
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின்னாகத்தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை–28-
——————————————————————————-
திருவேங்கடமுடையானை குறித்து
உனது திருமேனியில்
அழகும்
ஐஸ்வர் யமும்
சீலமும்
நிழல் இட்டுத் தோன்றுகின்றன -என்கிறார்
கைய வலம்புரியும் நேமியும் –
இத்தால் ஈச்வரத்வம்
கார் வண்ணத்து ஐய
இத்தால் அழகையும்
மலர்மகள் நின்னாகத்தாள்-
இத்தாலும் ஈச்வரத்வம்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் இ றே
செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை
இத்தால் சீலாதி குணங்கள்
வேதங்களே தனக்கு சிறந்த செல்வமாக கொண்டதால் செய்ய மறையான்
தாரகாசுரன் புத்ரர்கள் வித்யுன்மாலி -தாரகாஷன் -கமலாஷன் –
பிரம்ம வரத்தால் வானில் பறந்து -துன்புறுத்த சிவன்
பூமியை தேராக கொண்டு
சந்திர சூர்யர் தேர் சக்கரம்
நான்கு வேதங்கள் நான்கு குதிரைகள்
பிரமன் சாரதி
மகா மேரு வில்
ஆதி சேஷன் வில் நாண்
திரிபுரம் எரித்த விருத்தாந்தம்
நின்னாகத்து இறை –
அல்பம் -அல்ப பாகம் என்றவாறு
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -திருவாய்மொழி -4-8-1-
ஸ்வ பார்ஸ்வே தஷினே சம்போ நிவாஸ பரிகல்பித –
சிவன் தாபத்தால் திரு உள்ளம் உகந்து வலப்பக்கம் இடம் கற்பித்து தந்து அருளினான் –
———————————————————————————————————————————————————————————————————
நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயுமாவான் -பிறை மருப்பின்
பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி–29-
—————————————————————————–
எம்பெருமான் மேன்மையும் நீர்மையையும்
வெளியிடுகிறார்
இறையும் –
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் –
சர்வ ஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வைகுண்ட நாதத்வம் இங்கே விவஷிதம்
இறை என்று நித்ய விபூதி நாதத்வம் சொல்லும்
நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான்-
லீலா விபூதி நாதத்வம் சொல்லிற்று
பஞ்ச பூதங்களினால் ஆகிய பதார்த்தங்கள் நிறைந்த இடம்
இறையும் போலே ஆவானும் -சேர்த்துக் கொள்ள வேண்டும்
மேலே இவற்றுக்கு அடியான நீர்மை அருளிச் செய்கிறார்
பிறை மருப்பின் பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி
யானைக்கு வெளுத்த தந்தம்
பசுமை தாங்கிய கண்கள்
சாதாரணம் தானே
குழந்தை கிணற்றில் விழ
இது ஒரு கால் அழகும்
கை அழகும்
தலை அழகும்
முக அழகும்
என்னே -சொல்லி மாய்ந்து போவது போலே
எம்பெருமான் யானை அவயவ அழகில் கரைந்தமை தோற்ற
அந்த பகவத் சமாதியாலே ஆழ்வார் அருளிச் செய்கிறார்
நெஞ்சமே -விளி வருவித்துக் கொள்ள வேண்டும்
————————————————————————————————————————————————————————————————-
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை -எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து —30-
—————————————————————————-
ஆழ்வார் திரு உள்ளம் போலே நமது உள்ளம் ஈடுபட
அருளுகிறார்
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை –
பட்டிமேய ஒண்ணாத படி மனத்தை அடக்கி
எம்பெருமானோடு தமக்கு உள்ள உறவை
அறிந்து இருப்பவர்களின் மனமானது
மற்று எவரையும் பற்றாமல்
ஐம் புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே
பதறிக் கொண்டே மிக்க ஆவலுடன் சென்று கிட்டும் –
எளிதாகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து
ஒரு கன்றுக் குட்டியானது பல்லாயிரம்
பசுக்களின் பசுக்களின் திரளின் உள்ளே
தனது தாயை கண்டு பிடித்துக் கொள்வது எப்படியோ அப்படியே இதுவும்
இதற்கு சம்பந்த உணர்ச்சியே காரணம்
சம்பந்த ஞானம் இல்லாதவர்களுக்கு ஒரு நாளும் எம்பெருமானைக் கிட்டுதல் சாத்தியம் அன்று
அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸூ லபம் என்றார் ஆயிற்று
அடிக்கே -அடியே- இரண்டும் பாட பேதம்-
——————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply