முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-1-10–திவ்யார்த்த தீபிகை —

ஸ்ரீ யதோத்த காரி சந்நிதியில் -திரு வெக்கா திவ்ய தேசத்தின்
வலப்புறத்தில்
பொற்றாமரைப் பொய்கையிலே
ஐப்பசி திருவோணம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சமாக திருவவதரித்து அருளினார்
திரு பொய்கை ஆழ்வார்
தெண்ணீர் வயல் தொண்டை நாடு சான்றோர் உடைத்து
முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் காஞ்சி
காசி முதலிய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சிக்கு ஒவ்வாது
ஆரோடு ஈரெட்டு தொண்டை -22 திருப்பதிகள் கொண்டது தொண்டை நாடு
வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் பிரணமேத் புவி –
ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் தேஹளீசன்
யோக பலத்தால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்து இருந்து வையகத்தை வாழ்வித்து அருளினார்-

இன்கவி பாடும் பரம கவிகள்
செஞ்சொல் கவிகாள்
செந்தமிழ் பாடுவார்

—————————————————

எண் வகை வனப்பு சொல்லும்
தொல்காப்பியம் செய்யுளில்
அம்மை அழகு தொன்மை தோல்
விருந்து இயைபு புலன் இழைபு –
விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே -என்ற தொல்காப்பிய சூத்திர உரையில்
விருந்து தானும் பழங்கதை மேலதன்றி புதிதாக தாம் வேண்டியவாற்றால்
பல செய்யுளும் தொடர்ந்து வரத் தொடுத்துச் செய்யப்படும் தொடர் நிலை மேலது -என்றும்
அது முத் தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க
கலம்பகம் முதலாயினவும் சொல்லுப -என்று உரைத்துள்ளமை காண்க
திரு அந்தாதி மேன்கையாகிய அந்தாதி மேன்மையை உடைய அந்தாதி-

————————————————————-

முதலி ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு -வையத்
தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து-

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப்பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி -உபமானத்துக்கும் திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து -எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு -புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

—————————————————————————————————————————————————————————————–

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று–1-

——————————

வையம் தகளியா
தகளியாவது நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாய் இருக்கும் அகல்
வார் கடலே நெய்யாக

பிரபஞ்சத்தை நிருமிக்க வல்ல ஞான சக்தியாதிகளை உடையவன்
திவ்ய மங்கள விக்ராஹத்தோடு கூடியவன்
சர்வேஸ்வரன் என்றும்
அவனுக்கே அடிமை செய்வது புருஷார்த்தம் என்றும் விளக்கப்பட்டது
வாசிக கைங்கர்யம் இவர் செய்து அருளுகிறார்
இடையூறாக இருந்த சம்சார துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக என்கிறார்

அனுமானத்தால் சாதிக்கிறார் இல்லை
சாஸ்திர யோநித்வாத்
வேதத்துக்கு விருத்தம் இல்லாத அனுமானம் சாஸ்திர சம்மதம்

இடராழி நீங்குகவே யென்று
எம்பெருமானை துதியாமல் இருந்த வருத்தம் தீர
துதிக்க ஒட்டாமல் பிரதிபந்தகமாக இருந்த பாபங்கள் தொலைய
இப்பிரபந்தம் கற்று சம்சாரிகளும் துயர் தீர்ந்து வாழ
மூன்று படியாக உரைக்கலாம்

———————————————————————————————————————————————————————

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –2-

———————————–

அனுமானம் கொண்டுஅவனை சாதிக்க வேண்டிய வருத்தம் இல்லை
எல்லை அற்ற அதி மானுஷங்களான செயல்களே சாதித்துக் கொடுக்கக் கூடியவை என்கிறார் இதில்

த்வாம் சீலரூப சரிதை -ஆளவந்தார்
சித்ரைச்ச கைச்சிது சிதை பவதச் சரித்ரை -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
கேள்வி கேட்பதில் நோக்குடையது அல்ல
கடல் கடையும் போது திரையும் நுரையும் மாறாமல் இப்பொழுது தான் கடல் கடைந்தால் போலே தோற்றுகிறதே
உலகு அளக்கும் போது வைத்த அடி சுவடு மாறாமல்
வாமனன் மண் இது -என்னும்படி
இதோ தோன்றுகிறதே -என்று
பிரத்யஷமாக காட்டி அருளுகிறார்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமையால் ஸ்பஷ்டமாக தோற்றக் குறை இல்லையே ஆழ்வாருக்கு-

நேரிலே கண்டு மங்களா சாசனம் செய்யப் பெற்றிலோமே
திருவடிகளின் கீழே தலையை மடுக்கப் பெற்றிலோமே
இழவு விளங்க
ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
நம் ஆழ்வார்
மத்துறு கடை வெண்ணெய்அற களவினில் உரலிடை ஆப்புண்ட
சரிதையை
அனுசந்தித்ததும் –
எத்திறம் என்று மோஹித்தால் போலே
இவரும் -ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
கடலை கடைந்ததும் உலகை அளந்ததும் அனுசந்திக்க
எம்பெருமான் கடல் உலக சம்பந்தம் நினைவுக்கு வர
அன்று அது அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் -என்கிறார்
மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-
சேது பந்தனம் பண்ணி அருளி
பிராட்டியை கைக் கொண்டு மீண்ட பொழுது உடைத்தருளி
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்தரை கொள்ளுகின்ற -என்றபடி
தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி பள்ளி கொண்டு அருளிய கார்யங்கள்
உலகுக்காக செய்த செயல்கள்
ஆதியில் படைத்தருளி
ஸ்ரீ வராஹமாய் இடந்தருளி
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்தருளி
பின்பு வெளிப்பட உமிழ்ந்தருளி
செய்த செயல்கள் அனுசந்திக்கப் பட்டன
இப்படி அதிமாநுஷ சேஷ்டிதங்களை செய்து அருளினவன் ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ‘
இந்த செயல்களே அவனுடைய உண்மையை சாதித்து தர வல்லன -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————-

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ யளவு கண்ட நெறி –3

———————————

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –
உலகளந்த சரிதையில் ஈடுபட்டு அருளுகிறார்

அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி
அளப்பது -மாறி காலிடுதல்
ஓர் இடத்திலே நின்று கொண்டு இருப்பது அளத்தல் ஆகாதே
மாறி இடுவதற்கு அவகாசம் இல்லையே
சமத்காரமாக
நீ யளவு கண்ட நெறிஅறிகிலேன்-என்கிறார்

கழல் தலம் ஒன்றே நிலம் முழுதாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்கு அளக்கின்றதே -திரு விருத்தம் -58

அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையில் நின்றாரை அளந்தார் என்ன ஒண்ணாது இ றே
அடி மாறிலிடில் அன்றே அளந்ததாவது
இவன் இங்கே அளந்தானாக ஒன்றும் காண்கிறி லோமீ-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் அவ்விடத்தில்

சூருருவின் பேயளவு கண்ட பெருமான்
சம்போதனம் -விளி
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் நிகண்டு
தெய்வ நங்கை -யசோதை உருவில் வந்தவள்
அவள் ஆயுளின் அளவைக் கண்டுவிடுதல் முடித்தல்
தனது வல்லமையால் அளவிட்டு காண நினைப்பவர்கள் பூதனை பட்ட பாடு படுவார்கள்-

——————————————————————————————————————————————————————————-

நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி -அறிவானாம்
ஆலமர நீழலறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமமர் கண்டத் தரன் –4-

—————————————————————–
அகஸ்த்யர்
புலஸ்தியர்
தஷர்
மார்கண்டேயர் -நான்கு சிஷ்யர்களுக்கும்
தர்மோபதேசம் செய்த சிவன்
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞால
மளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு -நான் முகன் திருவந்தாதி -17-

அறிவானாம்
அறிந்து விட்டதாக செருக்கு உற்று இருக்கிறானே
இது என்ன அறிவு கேடு -என்கிறார்
அரன் -நெறி வாசல் தானேயாய் நின்றானை-அறிவானாம் -என்று அந்வயம்

நெறி -உபாயம்
வாசல் -உபேயம்
அன்றிக்கே நெறி வாசல் -ஸ்வரூபத்துக்கு ஏற்ற உபாயம் என்றுமாம்

ஆலமமர் கண்டத் தரன்
தமோ குணத்துக்கு தக்க செயலைச் செய்பவன் அன்றி
சாத்விகர் செய்யும் செயலை செய்ய வல்லவன் அன்றே-

———————————————————————————————————————————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று –5-

—————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அழிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று
இருவர் உடைய
நாமம்
ரூபம்
வாஹனம்
தொழில்
முதலியவற்றால் நன்கு விளங்கும்

சர்வ ரஷகன் இவன் சர்வ பஷன் அவன்

அட மாடே நிந்திக்கும் ரிஷபம் அவனுக்கு வாஹனம்
இவனுக்கு ஸூ பர்ணோசி கருத்மான் -வேதாத்மா விஹகேச்வர –
வேத ஸ்வரூபி பெரிய திருவடி

வேதம் இவனை பிரதிபாதிக்கும் ஆகம நூல் அவனுக்கு

அருளார் திருச் சக்கரம் இவன் திருக்கையில் சூலம் அவனது கையில்

ரூபமேவாச்ய ஏதன் மஹிமா நம் வ்யாசஷ்டே
உருவம் எரி கார் மேனி ஓன்று
காலாக்னி போலே அவன் உருவம்
காளமேகம் போல் செல்வ நாரணன் திரு உருவம்
ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் -திரு நெடும் தாண்டகம்

உபநிஷத் -அங்கான் யன்யா தேவதா -நாராயணன் அங்கி அரன் -அங்கம் -அதனால் மேனி ஓன்று என்கிறார்
ஓன்று சரீரம் என்றால் மற்று ஓன்று சரீரி தானே
அந்தர்யாமி ப்ராஹ்மணம்-ஸ்ரீ மன் நாராயணனே சர்வ சரீரி-

———————————————————————————————————————————————————————————-

ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை–6-

திசை -தன்மை பொருளில் இங்கே

——————————————

அரன் அறிவானாம் என்றீர்
நீர் பிரபந்தம் அருளிச் செய்து சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது எங்கனே என்ன
எம்பெருமான் திருவருளால் -அவனே காட்டக் கண்டு
ஜாயமானம் ஹி புருஷம்யம் பச்யேத் மது ஸூ தன
சாத்விகஸ் ஸ து விஜ்ஞேய ஸ வை மோஷார்த்த சிந்தக –

ஓத நீர் வண்ணனை -வடிவு அழகு நெஞ்சிலே ஊறப் பெற்றவர்
மறக்க சம்பாவிதம் அல்ல –
எப்போதும் கடாஷித்து விஷயீ கரிக்க அவனே திருவரங்கம் மேயான் -என்கிறார்-

கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன்-
அயோ நிஜார் கர்ப்ப வாசம் உண்டோ என்றால்
சீயும் நரம்பும் –நாற்றமும் மிக்கு இருக்கிற
கர்ப்பத் தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறக்க வில்லை
எங்கு நின்றும் ஆவிர்பவித்தாரோ அதுவே கர்ப்ப ஸ்தானம்
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே-என்னக் கடவது இ றே
இருள் தரும் மா ஞாலதுக்குள் வரும் முன்பே அவன் கடாஷித்தான்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-

————————————————————————————————————————————————————————–

திசையும் திசை யுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு–7-

—————————————————————–

பரம விலஷணமான அவனை அனுபவிக்க மாட்டாத
சூத்திர ஜனங்களை மயக்க
இவை எல்லாம் ஏற்படுத்தப் பட்டன -என்கிறார்
ஒவ்வொரு ஸ்தானத்திலும் ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தி
தெய்வத்துக்கு இசையும் கருமங்களையும் ஏற்படுத்தி
நான் முகன் -படைக்க
சிவன் -சம்ஹாரம் -காம தஹனம் -திரிபுரம் மூன்று எரித்தல்
இந்த்ரன் -மெய் காட்டிக் கொள்ளும் தொழில்
யமன் -உயிர் நீக்கும் தொழில்
மோகினி உருவம் கொண்டு மயக்கினால் போலே
அமுதம் விஷம் யானை சந்தரன் கல்பவ்ருஷம் அப்சரஸ் போன்ற
விசித்திர பொருள்களை படைத்தருள வல்லவன்
இவற்றையும் உண்டாக்கி மயக்கி -என்றவாறு-

————————————————————————————————————————————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும்  எரி கதிரோன் தன்னை -முயங்கு அமருள்
தேராழியால் மறைத்தது என் நீ திருமால்
போராழி க் கையால் பொருது –8-

———————————————

ஆஸ்ரித பஷ பாதி -என்கிறார்
நாழிகை கூறிட்டுக் காத்து -அரசர்கள் தம் முகப்பே நாழிகை போக படை பொருத–தேவகி தன் சிறுவன் -பெரியாழ்வார்
திருவாழி பிரகாசம் மழுங்கிப் போக கடவ ஒரு சாபம் ஏற்பட்டு இருந்தது என்றும்
அதனால் மறைத்தான் என்பர்

போராழி க் கையால் பொருது
பீஷ்மரை தேரில் இருந்து இறங்கி துரத்திக் கொன்ற

முயங்கு அமர் -பலர் திரண்டு நெருங்கி-

——————————————————————————————————————————————————————————————

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவில் நீ யளந்த மண்–9-

——————————————–
விரிதோட்ட-ஒளி விரிகின்ற திருக் குண்டலங்கள் அணிந்து இருந்தவனே

மகர நெடும் குழைக் காதனே விரி தோட -விகாரம் பெற்று விரி தோட்ட –
மலர்ந்த இதழ்களை உடைய தாமரை போன்ற சேவடி என்றுமாம்-
பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏராருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -திருமங்கை ஆழ்வார்-பெரிய திருமொழி -8-8-3-
தன்னை அழிய மாறியும் ரஷித்து அருளுபவன்
ஆபத்து வந்தால் தலையாலே சுமந்து நோக்குதல்
தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவன் அன்றோ நீ
ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ
என்று உகந்து அனுபவிக்கிறார்
உதாரனாய் இருப்பான் ஒருவன் நாலு பேருக்கு சோறிட நினைத்து
நாற்பது பேருக்கும் இட்டு
மிகும்படி சோறு உண்டாக்குவான் போலே
ரஷ்யத்தின் அளவன்று இ றே ரஷகனின் பாரிப்பு
இந்த பிரபந்தத்தில்
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் உலகளந்த ஞான்று வராகத்
தெயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்தபடி –84

——————————————————————————————————————————————————————————————–

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் -எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்கு அன்று இவ்
வுலகளவும் உண்டோ உன் வாய்-10-

—————————————————–

சிறிய வாயினால் பெரிய உலகங்களை எல்லாம் விழுங்க வல்ல
அகடிகடநா சாமர்தம் உள்ளவன் நீ

அலகு அளவு கண்ட சீர்
அலகு -நூறு ஆயிரம் பதினாறாயிரம் லஷம் கோடி சங்கம் மகா சங்கம் பத்மம்
அளவு காண்கை எண்களின் எல்லைக்கு மேல் பட்டு போதல்
அசங்க்யேய கல்யாண குணகனௌ மகார்ணவ -ஸ்ரீ பாஷ்யகாரர்
சீர் ஆழியாய்க்கு ஆழியான்
சமுத்ரம் போன்ற கல்யாண குணங்கள்
கல்யாண குணக்கடலும் சக்ராயுதத்தையும் உடையவன் –

————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading