Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-71-80- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 4, 2021

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பொதியம் தரு -பொதிய மலையால் கொடுக்கப் பட்ட -அதிலிருந்து தோன்றும்
நதி யங் குருகூர் எந்தை -ஆழ்வாரது திவ்ய ஸூக்திகளை
பூசுரர்க்கே
பதியந் தமிழ் என்ன –மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்
நான்மறை என்ன –ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்
இப் பார் புரக்கும் மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன –ப்ரயோஜனாந்த பரர்கள் உலோகோரை
நல்வழிப்படுத்திப் பாதுகாக்கவும் வரம்பில்லா ஞானமாகிய ஒளியை வெளிப்படுத்தும் ஆரங்கள் என்று சொல்லும்படியாகவும்
மறை தமிழின் அதியம் தரும் கவி ஆயிரம் செய்து –வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்
பூ சுரருக்கு அளித் தானமுதம்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்

———

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

குருகூர் வந்த கற்பகமே.
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் -ப்ரசன்ன புத்தர் மாயாவதி போன்ற மதஸ்தர் வாத வித்வான்களுக்கு பூட்டு போன்றும்
பொய்ச் சமயம் மித்யா வாதம் மாயா வாதம்
போக்கு வல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு -சமணர்களுக்கு மாறுபாட்டை போக்கும்
கூர் வாயை யுடைய வாட்சி-மரத்தைச் சீவும் – கருவியாகவும்
அது மரக் கோணலைத் தீர்ப்பது போல் இது மனக் கோணலைத் தீர்க்கும்
வாள் என்று கொண்டு சி பகுதிப் பொருள் விகுதி என்றுமாம்
மன் உயிர் கட்கு ஆட்சி கண்டீர் -உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு அழிவற்ற பொருளாகவும்
ஜீவாத்மாக்கள் நித்யம் என்பதால் மன்னுயிர்
ஜீவ ராசிகளை ஆளுபவர் என்றுமாம்
தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் -அடியவர்களுக்குப் பேரின்பப் பெருக்காகவும்
அறிவைக் காட்சி கண்டீர் -அவர்கள் அறிவுக்கு காணத்தக்க பொருளாகவும்
ஞான ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்தை விசத தமமாக அறிந்தவர் என்றுமாம்
பரவும்
ஆகவே பரவும் -வணங்கி புகழ்ந்து வழி படுங்கோள் என்று உபதேசிக்கிறார்

———

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

எம்மை விற்றும் விலை கொள்ளவும் உரியான்-எங்களை விற்கவும் வாங்கவும் உரியவர் —
ஆழ்வாருக்கு அத்யந்த பரதந்த்ரராய்
விலை கொள்ளுதல் -விலைக்கு கொள்ளுதல்
மாறன் கவி வெள்ளத்தையே.–ஆழ்வாரது அருளிச் செயல் பிரவாஹத்தை
யாம் நிதம்–யாம் நாள் தோறும்
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் -ஓதியும் பிறர் ஒதக் காதில் நன்றாகக் கேட்டும் குடித்து மகிழ்வோம்
உள்ளே முற்றும் உகப்பெய்தும் -அகத்திலே அவ்வெள்ளம் முழுவதும் விழும்படி ஊற்றிக் கொள்வோம்
மறந்து விடாமல் மனதிலே நிரம்பப் பதிந்து வைத்துக் கொள்ளுதல்
மூழ்கிக் குடைதும் -அவ்வெள்ளத்திலே அமிழ்ந்து நீராடுவோம்
முகந்து கொடு நிற்றும் நிலையுற -அப்பெருக்கை மொண்டு எடுத்துக் கொண்டு நிலை பெற நிற்போம்
அப்பொருளை பாராட்டி தாம் உபயோகிக்குமாறு தேக்கிக் கொள்ளுதல்
நீந்துதும் -அவ்வெள்ளத்தில் நீந்துவோம் -அவற்றில் ஈடுபடுதல்

———–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல் –

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

இவை
வெள்ளம் பரந்தனவோ கமலத்து -செந்தாமரை மேல் பிரவாகம் பரவியதாமோ
அன்றி வெண் மதி மேல் முயல் நீக்கி கள்ளம் பரந்தனவோ -சந்திரனின் களங்கத்தை நீக்கி களவுத் தொழில் பரம்பியதாமோ
கருமை நிறத்தை களவு என்பது கவிகள் மரபு
கவிக் கரசன் தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் -பூம் கொம்பு போன்ற இந்த மங்கையுடைய
ஆழ்வார் திரு நா வீறு உடைய பிரான் என்பதால் கவிக்கு அரசன் என்கிறார்
செம் முகத்து எம் உள்ளம் பரந்தனவோ -சிவந்த திரு முகத்திலு திரு உள்ளம் பரவியது
கண்களோ -கண்களே தாமோ -உபமானங்கள் உபமேயத்து அளவு போதாமையாலே அவை தம்மையே சொல்லிற்று
ஒன்றும் ஓர்கிலமே.-ஒன்றையும் துணிவாக அறிகின்றிலோமே

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது
தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது
நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்
இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் –
இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால்
வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார் –

—————-

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

ஓரும் தகைமைக்கு உரியாரும் -தத்வப் பொருளை ஆராயும் தன்மைக்கு உரியவர்களும்
ஓங்கிய ஞானியரும்-அங்கனம் ஆராய்ந்து தெளிந்து உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்களும்
கேள்வி -ஞானம் அனுஷ்டானங்கள்
விமர்சம் -ப்ரமாணங்களைக் கொண்டு தெளிய ஆராய்தல்
இவை இரண்டையும் முதலில் சொல்லி அவர்களிலும் மேம்பட்ட ஓங்கிய ஞானியரை –
பாவனை -இடையறாமல் சிந்தித்தல் -உடையாரை அடுத்து சொன்னவாறு

சாரும் தனித் தலைவன் சட கோபன் -சரணம் அடையப்பெற்ற ஒப்பற்ற ஆழ்வார் திரு அவதார ஸ்தலமான
தடம் பதிக்கே வாரும் -வாருங்கோள்
அங்கே வருவீர்களானால்
உமக்கொரு உறுதி சொன்னேன் -கேட்டு உய்வீராக
மயக்கமெல்லாம் தீரும் -விபரீத ஞானம் எல்லாம் போகுமே
திருக்கு அறும் —செருக்கு வஞ்சகம் போன்ற மாறுபாடு நீங்குமே
சிந்தை செவ்வே நிற்கும் -மனம் கோணாமல் நல் வழியில் நிலை நிற்கும்
தீங்கு அறுமே-தீ வினைகள் எல்லாம் தொலையுமே –

திவ்ய தேச மஹிமையை அறிவித்தவாறு

———–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகையாய சமயமும் –ஆறு வகையான சமய நூல்களும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே-ஒருங்கே ஒழிவித்து -தம் தமக்குத் தோன்றியபடி
பொருள் விரிவு முழுவதையும் ஒரு சேர போக்கி
பெறு வகை ஆறெனச் செய்த –முக்தி பெரும்படியான வழி இது என்று திவ்ய பிரபந்தகள் அருளிச் செய்த
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய்
பிரான் குருகூர்ப் பிறந்த சிறு வகையார் அவரைத் தொழுதோம் -மூர்த்தி சிறுத்தும் கீர்த்தி பெருத்தும் –
சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும்
ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –
அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————–

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

வினையேன் இவ் வெறும் பிறவி ஆண்டில் பிறந்த அக் காலத்திலே –பயன் அற்ற இந்தப் பிறவியாக
அவ்விடத்தில் பிறந்த அக்காலத்திலேயே
அன்பனாய் அணி நீர்ப் பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே–ஆழ்வாருக்கே பக்தனாகி
உருக் காட்டுதல் -ரூபத்தைத் தோன்றுவித்தல் -இச்சா வடிவம் எடுத்து ஆவிர்பவித்தல்
பாவகற்கே-பரிசுத்தராக்குபவர் -ஜ்யோதி ஸ்வரூபமான ஆழ்வாருக்கு

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்
வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே –
சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்
இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால் -தனது தோற்றத்தைக் கண்டு அதனால்
தனது தூய்மை செய்து அருளும் தன்மையால்-பாவனத்வத்தால் – என்றுமாம்
தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப் பூவகத்தார் அறியாத வண்ணம் –திருமாலது பதினொன்றாவதாகிய
திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

தன்னையே புகழந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி -தன்னையே தான் ஸ்துதித்து -திருவாய் மொழி அருளிச் செயலை அருளிச் செய்து
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே
அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்
சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்
வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்
கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

நடித்து -வேறான ஒருவரைப் போலவே தம்மைக் காட்டி அருளி
கும்பிடு நட்டமிட்டு ஆடி -அந்தக் கூத்தாடி என்றுமாம் –
அளித்த-திவ்ய பிரபந்தங்கள் மூலம் லோகத்தாரை ரஷித்து அருளி

கோவகத்தாற் கன்றி -திருமாலாகிய ஆழ்வாருக்கே குற்றேவல் செய்யாமல்
கோ அகம் -மேலான இடம் -ஸ்ரீ வைகுண்டம்
கோபகம் -ரக்ஷிப்பவர் என்றுமாம்
என் புறத்தார் செய் குற்றேவல்களே-அந்நியர்களுக்கு செய்யும் கிஞ்சித்காரம் ஒரு நல் பயனையும் அளிக்க மாட்டாவே –
தேவதாந்த்ர பஜனத்தால் என்ன பலன் என்றவாறு

————

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே 79–

குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே-பண் அமைதியோடு கூடிய இயல் தமிழ் அருளிச் செயல்களினால்
பண்ணார் பாடல் இன் கவிகள் அன்றோ -குருகையர் கோன் யாழினிசை வேதத்தியல் அன்றோ –
யான்
மெய் கண்டு-தத்வார்த்தங்களும் உணர்ந்து
கை கொண்டு கும்பிட்டு -கைகளால் வணங்கி
குற்றேவலும் செய்தும் -கைங்கர்யமும் செய்து
அன்பு பெற்றேன் –ஆழ்வாரது கருணையையும் பெற்றேன்
என் போல் எவர் பேறு பெற்றார் -இப் பேறு என்னைப் போல் பெற்றார் யாருமே இல்லை என்னும் படி அன்றோ இப் பேறு
இது அன்றி
பின்னையே பிறந்து-ஆழ்வார் திரு அவதாரத்துக்குப் பின்பு பிறந்து
வெற்றேவலின் நின்ற -தேவதாந்த்ர கைங்கர்யங்கள் செய்து
பொய்யன்பர் தாங்களும் -திரிபு உணர்வுடைய தொண்டர்களும்
மெய் யுணர்ந்தார் எற்றே -ஆழ்வார் அருளிச் செயல்களால் தத்வ ஞானம் பெற்றார்கள் -அறிந்து கொண்டார்களே என்ன வியப்பு –

————

தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக்காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

இன்னிசையைப் புணர்த்து-இனிமையான பண் இசைகளை அமைத்து
இயலைத் தொடுத்து -இயல் தமிழ் பாசுரங்களைப் பாடி
எம்மை யிப் பிறவி மயலைத் துடைத்த –எமது இந்தப் பிறப்பு துன்பங்களைப் போக்கி அருளிய
பிரான் -உபகாரகராகிய நம்மாழ்வாருடைய
குருகூர் –திருக் குருகூரிலே
மதியைக் கொணர்ந்து-சந்த்ர மண்டலத்தைக் கொண்டு வந்து
முயலைத் துடைத்துத் -அதன் நடுவில் உள்ள முயல் என்னும் களங்கத்தைப்[போக்கி
தனுவைப் பதித்து -அதில் இரண்டு விற்களைப் பதிய வைத்து
வில் போலே வளைந்து ஆடவர் நெஞ்சு உறுதியைப் போக்கும் ஆற்றலுடைய புருவங்களின் சிறப்பைக் கூறியவாறு
முத்தங்குயிற்றிக்-முத்துக்களை பதித்து -வெண்மையான பற்களை சொன்னவாறு
கயலைக் கிடத்திக் கொள் -இரண்டு கயல் மீன்களையும் வைத்து –பிறழுகிற கண்களை சொன்னவாறு
சாளரத்தூடு கதவிட்டதே.-பலகணியுனுள்ளே-அச் சந்த்ர மண்டலத்தை நிறுத்தி -புறத்தே கதவு அமைக்கப் பட்டதோ
இத் தோற்றம் எனத் தோன்றா எழுவாய் வருவித்து முடித்துக் கொள்ள வேண்டும் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-61-70- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 24, 2021

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

கூறப் படா மறையின் பொருள் கூறிக் -தெளியா மறை நிலங்களை தெளியும்படி அருளிச் செய்து
குவலயத்தோர் மாறப் படா வினை மாற்றிய -பண்டை வல் வினை பாற்றி அருளிச் செய்து
மாறன் மகிழலங்கல் நாறப் படா நின்ற போது –மகிழம்பூ மணம் வீசப்பெறும் காலத்தில்
அமுது ஆகும் -தென்றல் காற்று அமுதம் போல் இருக்கும்
அதன்றி நஞ்சம் தேறப் படாது –அம்மணம் பெறாத போது விஷம் போலே கொடுமையாக இருக்குமே
கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே–ஆகவே தென்றல் காற்றை நம்பப் போகாதே

கெட்டேன் -மிக்க இரக்கத்தால் கூறும் வார்த்தை
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -பெரியாழ்வார்
தென்றலும் தீயினும் கொடி தாம் -கலியன்

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

———–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை -தெண் திசை உண்டாக்கிய உபநிஷத்தும்
என் தீ வினையை நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை –எனது கர்மங்களைப் பாற்றி அருளி
பொருந்திய நீதி மார்க்கம் யுடையதுமாய்
நிறை குருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை –எல்லா வளங்களும் நிறைந்த திருக்குருகூரில் அவதரித்த
ஆழ்வார் பக்கல் உண்டான சொல்லிலும் பொருளிலும் இனிய பாசுரங்களை
அலைத்து நின்று என்றுமாம் –
மனத்துள் வைப்பார்-ஓதி உணர்ந்து தம் மனதில் வைத்துக் கொள்பவர்கள்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் -என் சென்னியில் வைத்து விளங்கும் என் தலைவராவார்
என் நாவுக் குரியவரே.-என்னால் ஸ்துதிக்கப் படுமவரும் அவரே

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –
ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

பிறர் புன் கவி -மற்றவரின் புல்லிய பாடல்கள்
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என –உரிக்கப்படுகின்ற வெண் காந்தளின் பெரிய கிழங்கு போல்
காந்தம் -கிழங்கு
ஒன்றுமின்றி விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் –வகுத்து நோக்க நோக்க சாரம் ஒன்றும் இல்லாமல்
மிகவும் பயன் அற்றவையாய் போய் விடும்
மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வார்
தன் தெய்வக் கவி -யுடைய திவ்ய ப்ரபந்தங்களோ
தோண்டச் சுரத்தலினே–ஆழ்ந்து நோக்க நோக்க மென்மேலும் நற்பொருள் இடையறாது வெளிப்படுதலால்
புவியில் சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் -நுண்ணிய மணல் பாங்கில் நீரூற்றைப் போன்று இருக்கும் –

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊரும் அறிவு

————–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

திரக்கும் -உறுதி பெற்ற -நன்கு வளர்ந்து முதிர்ந்த –ஸ்திரம் -வடமொழி
கழை நெடுந் தாளில் -நீண்ட கருப்பந்தண்டிலே
கழை-மூங்கில் என்றுமாம் -மருத நிலா வருணனைக்குச் சேராது
தொடுத்த செந் தேன் -கட்டிய சிவந்த தேனையுடைய கூடுகள்
கயல் குதிப்ப உடைந்து-கயல் மீன்கள் துள்ளி விழும் போது அவை படுதலால் உடைபட்ட
பரக்கும் –தேன் பரவிப் பாயப் பெற்ற
பழன வயல் குருகூர் –கழனி களை யுடைய மருத நிலம் சூழ்ந்த ஆழ்வார் திரு நகரி யுடைய
வளம் படுமினே-மஹிமையை கவி பாடி ஸ்துதியுங்கோள் –
அங்கனம் பாடினீராகில் உங்களுக்கு
சுரக்கும் திருவும் -கைங்கர்ய ஸ்ரீ வளரும்
வறுமையும் தீரும் –தரித்திரம் நீங்கும் -சம்சாரம் தொலையும்
தொடக்கு விட்டுக் கரக்கும் இருவினை –புண்ய பாப இரு வினைகளும் தொடர்ச்சி நீங்கி
இருந்த இடம் தெரியாதபடி அழிந்து விடும் –
தொடக்கு –கட்டு -பந்தம்
மேன்மையும் காணும்–எல்லா மேன்மைகளை உண்டாகும் –

———–

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

இச் சுழல் பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை –காற்றாடி போன்று கர்மங்களால் உண்டாகும் பிறவிச் சூழலை
நீக்கி யுணர்வுதவி-அடியார்களுக்கு போக்கி அருளி நல் ஞானத்தையும் அருளி
வீடும் திறந்து தந்தானை –ஸ்ரீ வைகுண்டமும் கொடுத்து அருளி
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் -வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு
பாடும் -பக்கம் முழுவதும் என்றுமாம் –
பைந் தாள் குவளை யோடும் கறங்கும் -பசுமையான நாளத்தை யுடைய குவளைகளின் இதழ்களும் சுழலப் பெற்ற
குருகைப் பிரான் எந்நான்றும் விடகிலமே.–திருக் குருகையில் திரு அவதாரம் செய்து அருளிய ஆழ்வாரை விட்டுப் பிரிய மாட்டோம்

——-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார –கருமையாலும் கொடுமையாலும் விஷம் போன்ற இருளை யுடைய
வெம் பாலிற் -கொடிய இரவாகிய காலப்பகுதியில்
பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்று இரங்கிப் புணர்ந்திலர் –மனம் இரங்கி வந்து கூடினார் அல்லர்
இன்று இவ் வந்தி வந்து பட –மாலைப்பொழுதாகிய பெரும் தீயும் வந்து சேர
அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.–இருளாகிய பெரும் புகை எங்கும் பரவி
இன்னுயிரை அட வந்த காலன் கொலோ அறியேன்

——————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல்

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சுருதிப் பசுக்கள் சுரவா தவற்றைச் சுரப்பித்து-வேதப்பொருளாகிய பாலை எளிதில் சுரக்கும்படி செய்து
அவை சொரியும் பொருள் பால் –தத்வப் பொருளாகிய பாலை
கரவாது உதவிய மாறன் –லோபம் செய்யாதே திவ்ய பிரபந்தங்கள் மூலம் அனைவருக்கும் கொடுத்து அருளிய ஆழ்வாருடைய
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் அன்றோ
கவி அனையாய் – ஆழ்வாருடைய திவ்ய பாசுரங்களை ஒத்த சிறப்பையும் இனிமையும் யுடைய மங்கையே
இனி இப்புறம் ஓர் சர வாதம் -இனி எனது ஊருக்கு இப்பால் செல்ல வேண்டிய இடம் ஓர் அம்பு வீழ்ச்சி அளவு தான்
சர பாதம் -சர வாதம் என்று விகாரப்பட்டுள்ளது-சர பாத ஸ்தானம் -எய்த அம்பு விழும் தூரம்
அப்புறம் அ தட பணையே காண் –அதற்கு அப்பால் முன்பு நான் சொல்லி இருக்கிற எனது ஊரின் எல்லை யாகிய மருத நிலமே காண்
ஆகவே
இனி பரவாது கேட்டு பைய நட -விரைவு கொள்ளாமல் நான் சொல்லும் வார்த்தையை கேட்டுக் கொண்டு மெல்ல நடப்பாய்
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –
சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

——————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

தடம் பணைத் –அகன்ற வயல்களை யுடையதும்
தண் -நீர் வளத்தால் குளிர்ச்சியானதும்
பொருநைக் குருகூரர் –ஆழ்வாருடைய
தகை வகுள வடம் –அழகிய மகிழம் பூ மாலையை
எவ்வகைத் தாபத்தையும் தணிக்க வல்ல வகுள மாலை அன்றோ
பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் –பாங்கிமார் கொணர்ந்து பருத்த எனது கொங்கைகளிலே வைக்கின்றார் இல்லை
மற்றை மாலை யெல்லாம் உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் –மற்ற மாலைகள் அனைத்தும்
விரஹ தாபத்தால் வெந்து பொடியாய் உதிர்ந்து விடும்
இந்நிலையில்
பனி தோய்ந்திடு மேகங்களே–நீர்த்துளி நிறைந்த மேகங்களோ
ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த விடம் பணைக் கொண்டனவே -கொடிய ஐந்து பாம்புகள் ஒருங்கே உமிழ்ந்த விஷங்கள் போலெ திரண்டனவே
கொடிய ஐந்தலை நாகம் என்றுமாம் –
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே
ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –மேகங்கள் ஆகிய உங்களை இடை வழியிலே கண்டு
செய்தி கூறினேன் என்று இதனை ஒரு இழிவாக நீங்கள் நினையாமல்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வாரது
மிக இனிய சொற்களை யுடைய என் காதலியை
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே –விஞ்சியுள்ள மோஹத்தை தணிவித்துக் கொண்டே
நீங்கள் சமீபிப்பவர்களாய்
கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே –நீங்கள் வருகிற வழியில் நான்
மீண்டு வருவதைக் கண்ட செய்தியைச் சொல்லி அவளது விரஹ வேதனையை சாந்தப்படுத்திக் கொண்டே
துளித் தூவத் தொடங்குகவே.-மழைத் துளி பெய்யத் தொடங்குவீர்களாக
மேகங்களை பாகவதர்களாக சொல்லாத தட்டில்லையே
ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

——————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

சவையீர்–சபையில் உள்ளவர்களே
சொல்லு கின்றேன்-நான் உங்களுக்கு ஒரு உறுதி சொல்கின்றேன் -கேளுங்கள்
மதங்கி–ஆடல் பாடல் வல்ல ஓர் இள மங்கை
நடம் தொடங்கு கின்றாள்–கூத்தாடத் தொடங்குகின்றாள்
குருகூரர் தொழா மடங்கு கின்றாள் –ஆழ்வாரை தொடக்கத்திலே தொழுது திரைக்குள்ளே திரும்பிச் செல்லுகின்றாள்
மண்டலம் சுற்றி யாடுகின்றாள் -மண்டலமாக அங்கேயே இருந்து சுழன்று கூத்தாடுகின்றாள்
விடங்கு கண்டார் பிழைப்பார் -இந்த மதங்கியின் அழகைக் கண்டு காதல் நோயால் மரண வேதனைப்படாது
பிழைப்பவர் எவர் -எவரும் இல்லை என்றபடி
இந்த படங்கு விண்டால் உம் பதிகளுக்கே பின்னைப் போக ஒண்ணாது –இந்தத் திரையை வாங்கி விட்டால் –
அவளது அழகைக் கண்டு மோஹித்து விழாமல் உங்கள் ஊருக்குப் போக முடியாதே
ஆதலால்
விரைந்து ஏகும் -யாத்திரை வாங்குவதற்கு முன்னே அப்பால் போய் விடுங்கோள் –

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு
பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-51-60- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே -அதிர்ஷ்டம் இருக்கும் போதும் அந் நன்மை மிகுதி நேராமல் தவறுதல் உண்டோ -இல்லை என்றபடி
பிறர் பால் வெறும்பாக் கிளத்தி -மற்றவர் மேல் பயன் இல்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு
மாரி அனைய கை–மால் வரை ஒக்கும் திண் தோள் என்று பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே -திருவாய் மொழி

மெலிகின்ற -திரிந்து இளைக்கின்றவனும்
என்னை வினை கொடுப் போய் எறும்பாக்கிய தமியேனை -தீ வினைகளால்
வலிய இழுத்துக் கொண்டு சென்று எறும்பு போல் எளியவனாக்கி -வேறு கதி அற்றவனான என்னை
இரும் பாடு எரி கொள்ளியினுள் எறும்பு போல் உருகா நிற்கும் என்னுள்ளம் -கலியன்

குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து-தீமைகள் செய்யும் படியான மூன்றுவகை பகைகளையும்-
காமம் கோபம் மயக்கம் -போன்றவை -வித்யா மதம் குல மதம் சீல மதம் -உயர் பிறப்பு மதம் -போல்வனவும் – போக்கி
ஆண்ட குருகை மன்னே-கைங்கர்ய ஸ்ரீ யும் அளித்து அருளி
அமரர்க்கும் ஏற விட்டான்-தேவர்களிலும் மேலாக்கி அருளி விட்டான் –

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

———-

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

எம்மை யுள்ளும் சுற்றும்–ஜீவாத்மாக்களான நம்மை -புறத்தே அன்றே அகத்தும் சூழ்ந்து உள்ள
இருகூர் வினையும் அறுத்து-மிகுதியாக புண்ய பாப இருவகை கர்மங்களையும் துணித்து
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாம்யம் அனைத்தையும் என்றுமாம்

இறப் பார்க்கும்-அவ்வினை மரத்தை வேரோடு அழியும் படி செய்வதான
பார்த்தல் -செய்தல் என்ற பொருளில் வந்தது இங்கு
இயற்கை-தன்மை கொண்ட
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி -ஆழ்வார் அடியார் குழாங்களுடன் கூடி
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ மன் நாதமுனிகள் -ஸ்ரீ பராங்குச தாஸர் போல்வார்
அன்புற்று-அவர்கள் பக்கல் அன்பு பூண்டு அவரகள் அன்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியும் என்றுமாம்

இன்புற்று -பாட பேதம் –
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே -அவர்களுடன் நித்ய வாஸம் செய்பவர்களுக்கும் உள்ளதேயாம்
தொண்டக்குடியாக இருந்தால் என்றபடி
மற்றும்
யவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே–சமீபத்தில் உள்ளாருக்கும்
அடுத்து அடுத்து வேறு ஊரில் உள்ளாருக்கும் உண்டே

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்

———-

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல் –

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து -எவருடன் பகை கொள்ளாத அன்றில் பறைவையுடனும் இப்பொழுது
என்னுடன் பகை கொள்ளும் படி செய்து அருளி
குருகு -கிரௌஞ்சம் -எப்பொழுதும் இணையுடனே இருக்குமே
அன்றுதல் – பகைத்தல்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டனை -கலியன்
என்னை அன்னையுடன் பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் -என்னுடைய செவிலித் தாயுடன் மாறுபடத்
தகாத வகைகளில் எல்லாம் மாறுபாடச் செய்வித்து அருளி
பிழைக் கொழுந்தை ஒன்றாத வண்ணம் -இளஞ்சந்த்ரனை என்னுடன் வேறுபாடு கொள்ளும்படி
உபாயம் இயற்றியது –சூழ்ச்சி செய்து அருளியது
யாதோ என்னில்
ஊழ் வினையை வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே–விதியை வென்ற ஆழ்வாருடைய
மகிழம்பூ மாலையே தவிர வேறே ஒன்றும் இல்லையே

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———–

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு ஏறே -கவி ஸிம்ஹமே
எதிகளுக்கு இன்னமுதே–ராமானுஜர் போல்வாருக்கு ஆராவமுதமே
எறி நீர்ப் பொருநை ஆறே தொடர் குருகூர் -அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கை யுடைய தாமிரபரணி
இடையறாது பாயப்பெற்ற திருக்குருகூரில் திரு அவதரித்த
மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே–வைதிகர்கள் பெறாப் பேறாகப் பெற்ற மாற்று உயர்ந்த அரும் பொன் போன்றவரே
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனல் -இவன் சிறப்பாக அன்பு உள்ள அடியவன் என்று என்னைக் குறித்து மனப் பூர்வகமாக நம்ப மாட்டேன் என்று கொள்ளாதே
அது தேறத் தகும் -அங்கனம் மெய்யடியவனாக என்னை நீ நம்பத்தகும்

———–

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

பெருந் தண் குருகூர்-மகிமையுடைய -நீர் வளம் மிக்கு குளிர்ந்த திருக்குருகூரில் திரு அவதரித்த
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. -இயல் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும்
தலையில் அணியும் ரத்ன ஆபரணம் போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே –மாற்று அறிய பொன்னோடே அன்றோ பொன்னை உரைத்துப் பார்ப்பது
அங்கனம் நோக்கப் புகும் இடத்து
உயற் நாற் கவியும் பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் — –எல்லை நிலமாகச் சொல்லத் தக்கது அல்லால்
புலமைக் கொருவர் உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ –உமக்கு ஈடாக மாற்று சொல்ல ஒருவரும் இல்லையே

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்
குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி

———–

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

எம் தீ வினையைத் துணித்தான்–கர்மங்களைப் போக்கி அருளியவரும் –
பண்டை பல்வினை பாற்றி அருளியவர் அன்றோ
தமிழால் சுருதிப் பொருளைப் பணித்தான்-வேதம் தமிழ் செய்து அருளியவரும் –
அவ்வருமறையின் பொருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ
குருகைப் பிரான் பணி யன்றெனில் –அவர் கட்டளை அன்றாயின்
மணித் தார் அரசன் தன் ஓலையைத் –இரத்தின மாலை அணிந்த அரசனது திரு முகத்தை
தூதுவன் வாய் வழியே திணித்து -தூதன் வாயினுள்ளே புகுத்தி அவன் வாயை அடைத்து
ஆசழியச் சிதைமின் தலையை -பெண்ணைக் கொடு என்று
கேட்ட குற்றம் தீருமாறு -அத் தூதன் தலையைத் துணுத்திடுங்கோள்
கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே-எம் குருகைப் பிரான் அன்றி மற்ற ஓர் அரசன் எமது பெண்ணைக் கொள்வான் போலும்
பாவை -சித்திரப் பிரதிமை -கண் மணிப் பாவை –கொல்லிப் பாவை போல் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பழத்தைப் -கனிந்த பலம் போன்ற இனிமை யுடையதும்
பசும் கற்பகத்தின் பூவைப் -வேண்டுவார் வேண்டுவற்றைக் கொடுப்பதாலும் அனைவரும்
தலை மேல் கொள்ளும் சிறப்பினாலும் கற்பக வ்ருக்ஷத்தின் மலர் போன்றதும்
பொரு கடல் போதா அமுதைப் -அலை மோதும் பாற் கடலில் நின்றும் தோன்றாத ஆரா அமுதமாயும் –
இல் பொருள் உவமை இது
பொருள் சுரக்கும் கோவைப் -நல்ல பொருளை சுரக்கும் காம தேனு வாகவும்
திருவாய் மொழிப் பாவைப் பணித்த எம் கோவை -திருவாய் மலர்ந்து அருளிச் செய்த எமது ஸ்வாமியான ஆழ்வாரை
யல்லா -அல்லாமல் பிறரை முன்பு கவி பாடிய
என்னைக்
குற்றம் கண்டென்-இவரை முன்னமே பாடாத குற்றம் யுடையவனாக உணர்ந்து
மற்றை நாவலரே என் நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ -மற்றைப் புலவர்கள் எனது நாக்கைத் பிடுங்கினாலும் நல்லவர் அல்லரோ
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது –
நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

———-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

நாவலந் தீவில் –அம் நாவல் தீவில் -அழகிய ஐம்பூத் வீபத்தில்
கவிகள் எல்லாம் சில நாள் கழியப்–பிறர் பாடிய பாடல்கள் சில நாள்கள் கழிகிற அளவிலே
பூவலந் தீவது போல்வ அல்லால் -மலரின் மணம் மென்மை முதலிய சிறப்புக்கள் கெட்டு அழிவது போலேத் தாம் கெட்டிடுமே யல்லாமல்
குருகூர்ப் புலவன் கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் -பண்டை வல் வினை பற்றி அருளும் ஆழ்வார் பாசுரங்கள் போல்
எங்கும் போய்க் கெழுமிக்-எல்லா இடங்களிலும் பரவி
வெள்ளம் கோளிழைத்தே–வெள்ளத்தைப் போவதாய்
ஆழ் பொருளான பரமாத்மாவைத் தெளிவாகக் காட்டி அருளும்
பிரளய வெள்ளத்திலும் அழியாமல் நிலை நின்று
அதுக்கும் மேலே
கூவலந் தீம் புனலும் கொள்ளும்மே –கிணற்றில் உள்ள அழகிய இனிய நீரையும் கொள்ள மட்டுமோ -மாட்டாது என்றபடி
கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை -அபவ்ருஷேயமான நித்யமான வேதங்களை
இன் தமிழால் குழைந்தார் -தமிழால் தளைக்கச் செய்து அருளியவரும் –
குருகையிற் கூட்டம் கொண்டார்-திருக் குருகையில் சேர்ந்த -திரு அவதரித்தவரும் —
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடனும் இங்கேயே சேர்ந்து அவருக்கும் அருள் புரிந்தார்
குமரித் துறைவர்-கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்துக்கு உரியவருமாகிய ஆழ்வார்
பாண்டிய மன்னனை -குமரித் துறைவன் என்றும் கன்னித் துறைவன் என்றும் சொல்வது உண்டே
வானின் வரம்பிடை நின்று–பரமபதத்தை எல்லையில் நின்று கொண்டு
மழைத்தார் தடக் கைகளால் என்னை அழைத்தார் -மேகம் போன்ற வண்மையான திருக்கைகளால்
என்னை அவ்விடத்துக்கு வா என்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அது மாத்ரமும் இல்லாமல் அங்கு செல்லுவதற்கு உரிய தத்வ ஞானத்தையும் தந்து அருளினார்
அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே–ஆதலால் இங்கு அர்ச்சா ரூபியான ஆழ்வாருக்கு
கைங்கர்யம் செய்வதோடு நிற்காமல் அங்கும் சென்று அவருக்கே அடிமை செய்வேன் என்கிறார் –

———–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தேன் –அடிமைத் தொழில்கள் அனைத்தையும் செய்து
ஆழ்வார் திருவடி இணைகளை அடைந்தேன்
அதன்றித்-அது மட்டும் அல்லாமல்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் –திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தப் பெற்றேன்
தண் குருகூர் நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் –ஆழ்வார் திரு நாமத்தையும் வைபவத்தையும்
திரு அவதார ஸ்தல மஹாத்ம்யத்தையும் பாராட்டிக் கூறினேன்
இனி-இப்படி ஆழ்வாரை சரண் அடைந்து ஏற்றிய பின்பு
நாட் குறித்துக் கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே–யம பயம் தான் உண்டோ
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறு கப் பெறா

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-41-50- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

மூர்த்தத்தினை–ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற தீர்த்தத்தினைச் –ஸமஸ்த உலகங்களும் அடங்கும் இடமான
ஸ்வயம் பரிசுத்தமான பர ப்ரஹ்மத்தின் தன்மையையும்
செய்ய வேதத்தினைத் -செவ்வியை யுடைய வேதங்களையும்
திருமால் பெருமை பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் –ஸ்ரீ கீதாச்சார்யன்
அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளிய ஸ்ரீ பகவத் கீதையை யுள் அடக்கிய மஹா பாரதத்தை
பணித்தானும் -அருளிச் செய்த வேத வியாச பகவானும்
நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் -நிலை நிற்கும் திவ்ய ஸூ க்திகள் அருளிச் செய்து அருளிய ஆழ்வாரும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற புகழ் என்றுமாம் –
ஆகிய இருவருமே
கண்டான் அம் மறைப் பொருளே-ரஹஸ்ய வேத ஸாரார்த்தங்களை அறிந்தவர்கள்
பணித்தானும் கண்டான் -குருகைப் பிரானும் கண்டான் என்றவாறு –

———

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல் –

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

குரு கூர்ப் புனிதன் அருளைச் சுமந்தவள் -ஆழ்வாரது கருணையை மிகுதியாகப் பெற்றவளான தலை மகளினது
கண்ணின் கடை -கண்களின் நுனி இடத்தை
திறந்து -திறந்து -அவ்வழியாக வெளிப்பட்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
குருளைச் சுமந்து வெளி பரந்து ஓட்டரும்–பலவகை விலங்கின் குட்டிகளை இழுத்து மேற் கொண்டு
வெளியான நிலம் எங்கும் பரவி ஓடுவதான
கொள்ளை வெள்ளம்-மிகுதியான கண்ணீர்ப் பெருக்கானது
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே.–சக்கரங்கள் பூண்ட -ரத்தினங்கள் பதித்த
தலைமகன் தேரை வந்து மோதுகின்றதே
பிரயாணத்துக்குத் தடை செய்கின்றது என்றவாறு

இங்கனமாக
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே –தலைமகன் செல்வதை இனியது என்று எண்ணி –
அதன் பொருட்டு இவளைப் பிரிந்து செல்வது எவ்வாறு என்றவாறு –

கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்-என்றதும்
தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே-என்றதும்
அதிசய யுக்தி வகையால் கண்ணீர்ப் பெருக்கை காட்டியவாறு –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் –
ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே
விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-ஆழ்வார் திரு நகரியிலே வஞ்சிக்கொடி போல் உள்ள இந்த இளைய மாதினிடத்தே
கொங்கைகள் -வந்து அடிக் கொண்டன -கொங்கைகள் -மங்கைப் பருவம் தோன்ற
வளர்ந்து மார்பின் இடம் எல்லாம் தம்மிடமாகக் கொண்டன
இங்கனம் தனது பாரம் மிக்கதானால்
கொந்து அடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய–பூங்கொத்துக்கள் நிறைய சூட்டப் பட்ட கூந்தல் பாரமும்
உடுத்த ஆடையும் நிலை குலைந்து சோருமாறு -இம் மெல்லியலாள்
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது –இவள் இடைக்கு என்னாகுமோ என்று
நெஞ்சம் பட பட என்று துடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே.–செவ்விய மின்னல் போன்ற இவள் இடைக்கு
இப்பாரங்களை -துவளாது நின்று -சுமக்கும் வல்லமை இருக்குமோ

வாடிடை நோக்கி வருந்தினன் போல் ஆடமை தோழியை ஆர்வமோடு அணைதல்

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

—————

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

கன வாயினவும் -ஸ்வப்ன அவஸ்தையின் வகைகளும்
துரியமும் –துரிய அவஸ்தையும்
ஆயவையும் கடந்து-மற்ற அவற்றின் இனமான ஜாக்ரத ஸூஷ்ப்தி அவஸ்தைகளையும் கடந்து
மன வாசகங்களை வீசிய -மநோ வாக்குகளைக் கடந்த
மாறனை –ஆழ்வாரை
மா மறையை வினவா துணர்ந்த விரகனை -எம்பெருமானாலேயே மயர்வற மதி நலம் அருளப்பட்ட ஆழ்வாரை
வெவ் வினையைத் தொலைத்த சின வாரணத்தைக் –யானை போன்றவரும் -சடகோபர் அன்றோ
குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே–ஆழ்வாரை சரணம் அடைந்தோமே
ஆழ்வார் திருவடிகளே சரணம் -என்றபடி

———

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

அவ் வரியினுக்கே–அந்த ஸ்ரீ ஹரி -ஸ்ரீ மன் நாராயணனுக்கு
வேதம் செப்பும் பேராயிரம் -நாமோ ஸஹஸ்ரவான் -பேர் ஆயிரம் உடையான் அன்றோ
திண் பெரும் புயம் ஆயிரம் –தோள்கள் ஆயிரத்தாய்
பெய் துளவத் தாரார் முடியாயிரம்– திருத்துழாய் மாலை பொருந்திய முடிகள் ஆயிரத்தாய்
இப்படி அனைத்துமே ஆயிரமாக -எண்ணிறந்தவையாக -அமையப் பெற்ற எம்பெருமானுக்கு
குரு கூர்ச் சட கோபன் சொன்ன ஆரா அமுதம் கவி ஆயிரம் –வான் திகழும் சோலை மதிள் அரங்கன்
வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் –
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு -மற்றும் இவருக்கு சேராத பொருள் உண்டோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் -பெரிய சங்கினால் பெறப்பட்ட முத்தும்
சினையும்-அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க-நீர்த்துறையிலே கலந்து மாறாடினவாக
அவற்றைக் குறித்து
வரி வளையும் அன்னமும் -உள் சுழியை யுடைய சங்கும் அன்னப் பறவையும்
முறை செறுத்து தம்மிலே வழக்காட–ஒன்றன் பொருளை மற்றது தன்னது என்று மயங்குவதால்
நீதி முறை கடந்து தமக்குள்ளே -ஒன்றோடு ஓன்று வழக்காட
வலம் புரிவளை யூடறுக்கும்–வலம்புரி சங்கு சென்று நாடு நின்று அவற்றின் போரை விலக்குவதற்கு இடமான
குருகூர் எம் புரவலனே.-ஆழ்வாரான நம் தலைவர்
அந்தி வந்து-இன்று மாலைப் பொழுதில் மீண்டு வந்து
அரிவளை பொன் மகிழ் -வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப் பெற்ற அழகிய தனது மகிழம்பூ மாலையை
அரி வளை -தான் கவர்ந்த அபஹரித்த வளை என்றுமாம்
ஆயிழைக்கு ஈயும் கொல் -தேர்ந்து எடுத்து அணிந்த ஆபரணங்களை யுடைய இம்மட மங்கைக்குக் கொடுத்து அருள் வானோ

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே
அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்
அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்
ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி
அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

——–

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல்

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

புரை துடைத்துப் –ஐம் புலன்களால் உண்டாகும் குற்றங்களை போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் -அவற்றுக்கு மூல காரணமான மகா மாயையும் போக்கி
பிறர் புகலும் உரை துடைத்து -புற சமயத்தார் வாதங்களை பொருந்தாமை காட்டிக் கழித்து
அங்குள்ள வூசல் துடைத்து -பரதத்வ நிர்ணயத்தில் தடுமாற்றத்தையும் தீர்த்து
எம் முறு பிறவித் துரை துடைத்து ஆட் கொண்ட -பிறவித்துயர் தீர்த்து கைங்கர்யமும் கொண்டு அருளிய
தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை-ஆழ்வார் திருமஞ்சன துறையுடைய தாமிரபரணி
கடை துடைக்குங் கடலே -பெரு வெள்ளமாக வந்து கரையை உடைக்கப் பெற்ற கடலே
துடையேல் அன்பர் கால் சுவடே.-கருணையால் நிர்ஹேதுகமாக சம்ச்லேஷித்து சென்ற தலைவனது
திருவடிச் சுவட்டை அழித்திடாதே

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி

———————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் —

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்-செவிலித்தாய் நல் தாயை விளித்து
இரண்டு கவடிறக் -தனக்கு முன்னும் பின்னும் உள்ளனவாய்த்த தன்னைக் காட்டுதற்கு ஆதாரமான மரத்தறிகள் இரண்டும் ஓடிய
உள் பகை புறப்பகை -வஞ்ச வர்க்கம் இரண்டும் அழிய என்றவாறு தலை மகன் பக்ஷத்தில்
கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து -தன்னைக் கட்டிய கால் விலங்காகிய சங்கிலியின் பொறுத்து வாயைத் துணித்திட்டு
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து -மத ஜலம் பெருகுகிற அடையாளம் மிகுதியாகத் தொடர்ந்து
இருக்கப் பெற்ற திக்கஜத்தை நாடிச் சென்று -அதனோடு போர் தொடர்ந்து
சங்கம் குவடிறக் குத்திய -அழகிய மலைச் சிகரங்களை ஓடியுமாறு -தந்தங்களினால் குத்திய
மாறப் பெயர்க் கொலை யானை -மாறன் என்னும் பெயரை யுடைய கொல்லுதல் வல்ல யானையானது
படர்ந்தி வானம் இருள்கின்றதே–பிரிந்தாருக்குத் துன்பத்தைச் செய்கின்ற சாயம் காலத்திலேயே இருள் அடைகிற அளவிலே
இவள் திறத்து ஒன்றும் -இவள் பக்கல் தவறாது வந்து சேர்ந்து விடும்

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்
சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

———–

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

இருளாய்ப் பரந்த -இருள் மிக்குப் பரவப் பெற்ற
உலகங்களை -நில உலகத்தின் பகுதிகளை எல்லாம்
விளக்கும் -இருள் ஒழித்து விளங்கச் செய்கின்ற
இரவி-ஸூர்ய மண்டலம்
பொது நிற்றலின்-எல்லா வுயிர்கட்க்கும் பொதுப்பட உதவி செய்து நிற்றலால்
பொருளாய்ப் பரந்தது –உலகம் முழுவதும் காணப்படும் பொருளாய் விளங்கிற்று
அது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் –பலரும் மருளும்படி பரவுகிற மாயையினால் ஆகும் சோர்வு இல்லாத மாறன் கருணையினால்
சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே.–ஸ்ரீ மன் நாராயணன் உளன் என்று அறிந்து கொண்டனவே
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

——–

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

அறிவே -எனது உணர்வே
மற்றை ஆகம வாதியரைச் செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது–வேதம் இருக்க அதனை விட்டு
அதற்கு மாறான ஆகமங்களை ப்ரமாணமாகக் கொண்டு துர்வாதம் செய்பவராகிய புறச் சமயத்தாரை சேர்வேன்
என்ற தீய சிந்தனை ஒன்றையும் கொள்ளாமல்
செய்தாரை யில்லா நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப் பிறிவேன் எனவும் எண்ணாது -தன்னைச் செய்தவர்
எவரையும் உடையது அல்லாததும் சன்மார்க்கத்தையே போதிப்பதுமாகிய வேதத்தில் ஊன்றி
பரதத்வத்தை அறிந்தவராகிய ஆக்வாறது திரு அவதார ஸ்தலமான திருக்குருகூரை விட்டுப் பிரிய எண்ணவும் செய்யாமல்
தென்னை வீடு பெறுத்தினையே-நீ முக்தி பெறவும் செய்து அருளினாயே -அந்த மஹா உபகாரகத்துக்கு
உனைத் தொழுதேன் –
உன்னை நான் நமஸ்கரித்தேன்

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல்
இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-31-40- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

உறு வினையைக்-மிக்க கருமங்களை
கொய்யும் -அறுத்து ஒழிக்கின்ற
மெய் வாள் வலவன் –ஸத்ய வாக்காகிய வாள் படையின் தொழிலில் வல்லவரும்
குருகைக் கரசன் -திருக்குருகூருக்குத் தலைவரும்
புலமை செய் மெய்யன் தனக்கே -ஸ்வரூப ஞானம் உபதேசித்து அருளும் பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கே
தனித் தாளன்பு செய்த பின்னே.–ஒப்பற்ற திருவடிகளில் நான் பக்தி செய்த பின்பே
எனக்கு
மெய்யும் மெய்யாது -உண்மைப்பொருளும் உண்மையாக விளங்கிற்று –
மெய் -ஜீவ பரமாத்ம ஸ்வரூபங்கள்
பொய்யும் பொய்யாது -பொய்மைப் பொருள்களும் பொய்யாகப் புலப்பட்டன
பொய் -தேகம் பிரகிருதி -பொய் நின்ற ஞானம் போல்வன
வேறு படுத்து-இங்கனம் பகுத்து அறிந்த பின்பே
உய்யும் -ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உரிய
மெய்யாய உபாயம் வந்துற்றது -உண்மையான உபாயமும் எனக்கு வந்து ஸித்தித்தது

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர-ஸ்ரீ யபதியை -செய்யன் கரியன் என்று ஆராய்ந்து அறிய
செய்ய வாய் செய்ய கண் செய்ய கால் செய்ய கை -செய்ய அவயவங்களையும்
நீல மேனி கருமையும் ஆராய்ந்து அறியார்கள் அன்றோ
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு
வய்யம் கரி யல்ல -வையகத்து உயிர்கள் சாக்ஷி யாக மாட்டாதே
மாட்டா மறை -வேதங்களும் அப்படியே
அவன் ஸ்வரூபத்தை இன்னது இப்படிப்பட்டது என்று உரைக்க சக்தி கொண்டவை அல்லவே
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டதே
ஆகவே
மதுரக் குருகூர் அய்யன் கவி யல்லவேல் –ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் இல்லாமல் போயிருந்தால்
இவ் வுயிர்களுக்கே. பிறவிக் கடலாழ்வது அல்லால்-உயிர்கள் எல்லாம் பிறவிக் கடலில் ஆழ்ந்து போவது அல்லாமல்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் -உஜ்ஜீவன உபாயம் ஒன்றுமே யான் கண்டேன் அல்லேன்

—————

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

உயிர்த் தாரையில் புக்கு உறு –உயிர் செல்லுகிற வழியிலே உடன் சென்று கூடுகிற
குறும்பாம் ஒரு மூன்றனையும்–முக்குறும்புகளையும்
செயிர்த்தார் -வெறுத்து ஒழித்தவராகிய
குருகை வந்தார் திரு வாய்மொழி -திவ்ய பிரபந்தங்களை
செப்பலுற்றால்-ஓதி உணரத் தொடங்கினால்
எங்கள் அந்தணர்க்கே–எங்களை ஆள உரியவர்களாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் போல்வார்
மயிர் தாரைகள் பொடிக்கும் –உடம்பில் உள்ள மயிர் ஒழுங்குகள் சிலிர்ப்பு கொள்ளும்
கண்ணீர் மல்கும் –ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும்
மா மறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் –பொருள் உணர்த்துவதற்கு அரிய பெருமையை யுடைய
வேதங்களின் கருத்துக்களில் புற சமயத்தார் சந்தேகித்த அர்த்தங்கள் எல்லாம் விளங்கும்

—————-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

அந்தணர்க்கோ -வேதியர்கட்காகவோ
நல் அருந்தவர்க்கோ -சிறந்த தபஸ்ஸூக்கள் செய்பவர்கட்காககோ
அன்றி யோகியராய் வந்தவர்க்கோ -அல்லது யோக அப்யாஸம் செய்பவர்கட்காகவோ
மறம் வாதியர்க்கோ -பிணக்கர்களாய் புற சமயத்தார்கட்காகவோ
மதுரக் குழை சேர் சுந்தரத் தோளனுக்கோ –ஸ்ரீ மன் நாராயணனுக்கட் காகவோ
அவன் தெண்டர்கட்கோ -அவன் அடியார்களுக்காகவோ
சுடர் தோய்-சந்தன ஸூர்யர்கள் விண் ஒளி கள் தன் மேல் படும்படி
தொடர்பு உயர்வு நவிற்சி அணி -சோலைகளின் மிக்க உயர்ச்சியைக் காட்டும் –
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.–ஆழ்வாரது திரு அவதாரம் –
இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்
எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்ததியும் -எழுத்து புணர்ச்சி இலக்கணத்திலும்
சந்திப் பதமும் -அங்கணம் புணர்வதற்கு உரிய பாதங்களின் இலக்கணத்திலும்
அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் -அச் சொற்களில் மிக்கு விளங்குகிற பொருள் இலக்கண வகைகளிலும்
பல் அலங்காரப் பொருளும் -பலவகை அலங்கார அணி இலக்கண விஷயங்களிலும்
பயிலுகிற்பீர்-பழகுகிற இலக்கண புலவீர்காள்
தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. –திருக்குருகூரை சேவித்து
வந்தியும் -நமஸ்கரியுங்கோள்
வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்-அந்த ஆழ்வார் அடியார்களை வணங்குகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை
வணங்கும் விதத்தை அறிவீர்கள்
சிந்தியும் -அவர்களை தியானமும் செய்யுங்கோள் –

———-

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்–தெய்வ ஆவேசம் கொண்ட கட்டு விச்சியை சீர் கெடுத்து விட்டீர்கள்
பூவரை ஏறிய கோதை –மலர்களை அளவாகச் சூட்டப் பெற்றுள்ள கூந்தலுடைய இவ்விள மங்கையுடைய
யுள்ளம் புகுந்தார் எவர் என்று -மனத்தில் புகுந்து வறுத்துபவர் யார் என்று நீங்கள் வினவியத்தைக் குறித்து
அக்கட்டுவிச்சி
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று -நமது உறை யுள்ளின் எல்லையில் ஏறி-
கட்டுவிச்சி கட்டேறி போல் – வந்து விடை கூறுகிற போது சொன்னது
இறைவர் மூவரையோ -த்ரிமூர்த்திகளையோ
குரு கூரரையோ -ஆழ்வாரையோ
சொல்லும் முந்துறவே. –என் முன்னே சொல்லுங்கோள்

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

—————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

துறவாதவர்க்கும் -இல்லத்தாருக்கும்
துறந்தவர்க்கும் -துறவறத்தாருக்கும்
சொல்லவே சுரக்கும்-ஓதும் அளவிலேயே சகல புருஷார்த்தங்களையும் அளிக்கும்
அறம் ஆ அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க -பரம தர்ம ரூபமான ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் சிறப்புற்று இங்கே இருக்க
அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி–மலட்டுப் பசுவை பலன் தருவதாகக் கொண்டு
கறவாக் கிடப்பர் -கறந்து கொள்ள முயல்வர்
அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.-அங்கு கை நோவப் பெறுவது பலன் ஒன்றுமே இல்லையே –
இது என்ன பேதைமை
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

குருகூர் என்னும் ஆறு அறியாப்–தலை மகன் இருக்கும் திவ்ய தேசப் பெயரையும்
வாயினால் சொல்லும் விதத்தையும் அறியாது இருந்த
பைதலைக் -இளைமை யுடைய இம்மகளை -சிறு கிளிப் பைதலே -திருவாய் மொழியிலும் உண்டே
கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய –முறை கேடு தலைக்கு ஏறி பனை மடல் குதிரையின் மேல் ஏறுமாறு செய்த
கோகு உகட்டுதல் –கும்பிடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதார் –திருவாய் மொழியிலும் உண்டே
கோகு -அடைவு கேடு
உகட்டுதல் -தலை மண்டியிடுதல் -மேலிடுதல்
பண்பனையே–குணத்தை யுடைய தலை மகனை -எதிர்மறை லக்ஷணம்
சென்று–அவனது ஊருக்கு யாம் சென்று
கை தலைப் பெய்து –கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு
அரும் பூசலிட்டுக் -பொறுத்தற்கு அரிய பேர் ஆரவாரத்தைச் செய்து
கவியால் உலகை உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ -ஆழ்வார் பாசுரங்களால் உலகத்தின் துன்பம் தீர்ந்து
வாழுமாறு செய்தனன் என்பதையும் பொய் என்று சொல்லி முறையிடுவோமோ
அவ்வூர் அறிய வைதலைத்து ஏசுதுமோ -அங்குள்ளார் அனைவரும் அறியும்படி நிந்தித்து கலக்கம் விளைத்துப் பழிப்போமோ

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து –
அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே –
ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

—————

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு -திவ்ய பிரபந்தங்களை சிந்தனை செய்வதாகிய பெருமைக்கு
உரிய மெய் யோகியர்-ஏற்ற ஞான பக்தி யோகங்களை யுடையவர்களுடைய
பாவின் இன்னிசை பாடித்திரிவனே -மதுர கவி ஆழ்வார் -அருள் பெற்ற நாதமுனிகள் போல்வாருடைய
ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் – –அறிவாகிய அகக் கண்ணும் -மனமும் -காதுகளும்
தவம் செய்த காலத்திலே
பண்ணும் தமிழும் -குறிஞ்சி முதலிய பண்களும் தமிழ் மொழியும் தவம் செய்தன
பழ நான்மறையும் மண்ணும் விசும்பும் தவம் செய்தன –

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

கடை நாள்–கல்பாந்த காலத்திலே
ஆலத்திலே துயின்றோர்–ஆலிலையில் யோக நித்ரை செய்து அருள்பவரான எம்பெருமான்
கொண்ட–கரும வசத்தால் அன்றியே இச்சையாலே எடுத்துக் கொண்ட
ஐ யிரண்டா யமைந்த கோலத்திலே –தசாவதாரங்களிலே
முளைத்து–அடிக் கொண்டு
கொழுந் தோடி-கொழுந்து விட்டு வளர்ந்து
குணங்கடந்த மூலத்திலே செல்ல மூட்டிய -இழி குணங்களைக் கடந்த ஆதி மூலப் பெருமாளாகிய
அந்த ஸ்ரீ மன் நாராயணன் பக்கலிலே -பலரும் செல்லுமாறு —
தமது திவ்ய பிரபந்தம் மூலமாக பலருக்கும் ஆதரத்தை உண்டாக்கி அருளிய
ஞானத்து எம் மூர்த்தியையே–தத்வ ஞான பரி பூர்னரான ஆழ்வாரையையே
குருகூர் புக்குக் கைக் கொண்மினோ -கால விளம்பம் இன்றி -பழுதே பல பகலும் போக்காது –
திருக்குருகூர் சென்று சரண் புக்கு உஜ்ஜீவியுங்கோள்
ஞானத்தை மூட்டிய ஆழ்வார் என்றுமாம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-21-30- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21–

மலை யவனே-மலைக்கு உரியவனே
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் -குறிஞ்சி நிலத்து சோலையிலே
தளிர் மெல்லடித் தண் மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு -கண்ணுக்கு இனிய பற்களையும் –
குறிஞ்சி என்னும் பண் போல் இனிய சொற்களையும் புன் சிரிப்பையும் யுடைய தலைவியின் முகத்தைப் பார்க்க
நீ முடுகும்–நீ விரைந்து வருவதாகிய
சூரல் குறிஞ்சி நெறி -பிரப்பங்காடு மிக மலை வழியை
நினை தோறும் துணுக்கு எனுமால்-நினைக்கும் தோறும் திடுக்கிட்டு அஞ்சுவதாய் இருக்கும்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை –ஆதலால் ஆழ்வார் மேல் ஆணை -இனி நீ இங்கனம் வர வேண்டா –

பகல் குறி -இரவுக் குறி -ஏகாந்தத்தில் தலைமகனை சந்தித்தல்
ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி -அகத்துறை
இதன் பயன் -வெளிப்படையாக வந்து மணம் புரிய வற்புறுத்தல்
குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்-புணர்ச்சிக்கு உரிய இடம்

தமோ குண பிரசுரராய்
சம்சார மார்க்கத்தில் இருந்து மேற்பட்ட இடத்தில்
ஆழ்வார் பக்கல் பக்தி செய்து ஒழுகுகிற பாகவதர்களை நோக்கி
அன்பர்கள் இக்களவு ஒழுக்கைத்தை விட்டு
பிரபத்தி மார்க்கத்தில் நின்று அந வரத பாவனை செய்வதை வறுபுறுத்துவது இதன் ஸ்வா பதேசம் –
ஸ்ரீ வைஷ்ணவர்களை கிளவித் தலைமகனாக கொள்ளுதல் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மாயப்பிரான் அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ -போல் –

————-

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22-

மலை யாரமும் -பொதிய மலையில் உண்டாகிற சந்தன மரமும்
கடல் ஆரமும் –கடலில் தோன்றுகிற முத்துக்களும் -பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து அன்றோ
பன் மா மணி குயின்ற விலை யாரமும் -ரத்தினங்கள் பதிக்கப்பட்ட விலை மிக்க ஹாரங்களும்
விரவுந் திரு நாடனை –பொருந்திய சிறந்த பாண்டி வள நாட்டில் திரு அவதரித்தவரும்
வேலை சுட்ட சிலையார் அமுதின் அடி சட கோபனைச் –சமுத்திரத்தை ஆக்நேய அஸ்த்ரத்தால் வேகச் செய்த
சாரங்க பாணியின் திருவடி நிலைகளான ஆழ்வாரை
சென்று இறைஞ்சும்–போய் வணங்குகிற
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப்பாசுரம் –

————-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் -இந்திராதி தேவர்கள் எங்கள் ஸ்வர்க்க லோகம் வருவாய்
என்று வேண்டும்படி மேம்பட்ட பதவி கிடைப்பதானாலும்
பூந்தொழுவின் வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் –செருக்கு கொண்ட -ராஜஸ குணம் மிக்க
எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை அடைந்த திருமாலது ஸ்ரீ வைகுண்டமே பெறினும்
எழில் குருகூர் நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும் -எப்பொழுதும் திருவாய் மொழி யாகிய
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே–அமுதத்தை பருகி களித்துத் திரியும் பேறே எனக்கு சித்திக்க வேண்டும் –
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24-

சடகோபன் மொழித் தொகையே.
சித்தர்க்கும் -அணிமா மஹிமா இத்யாதி யோக சித்திக்களைப் பெற்றவருக்கும்
வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் -வேதாந்தம் அறிந்தவர்களுக்கும்
செய்தவர்க்கும்-தவம் செய்தவர்களுக்கும்
சுத்தர்க்கும் -மனம் மொழி மெய்-த்ரிகுண ஆர்ஜவம் உள்ளோருக்கும்
மற்றைத் துறை துறந்தோர் கட்கும் -இல்லறம் கடந்து சந்யாச ஆஸ்ரமம் கொண்டவர்களுக்கும்
தொண்டு செய்யும் பத்தர்க்கும் -பகவத் பாகவத சேஷ பூதர்களாய் அடிமை செய்வார்களுக்கும்
ஞானப் பகவர்க்குமே யன்றி –தத்வ ஞானம் யுடைய பெரியோர்கட்க்கும் அல்லாமல்
ஞானம் பலம் வீர்யம் ஐஸ்வர்யம் சக்தி தேஜஸ்ஸூக்கள் உடைய பகவர்
பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதம் –முக்தர்களுக்கும் இன்னமுதம் போல் இனிய சுவை விளைப்பதாம்

——–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் -தொகுதியாக உள்ள மற்ற சமய நூல்களுக்கு எல்லாம்
துறை தோறும் தொட்டால்-இடம் தோறும் ஊன்றி நோக்கினால் -அவற்றில் உள்ள பொருள்களை எல்லாம் ஆராய்ச்சி செய்தால்
பகை யுளவாம் -முன்னுக்கு பின் வருத்தமாகவும் -வேத விருத்தமாகவும் உள்ளனவாம்
மற்றும் -மேலும் இது அன்றியும்
பற்றுளவாம் பழ நான் மறையின் வகை யுள வாகிய வாதுளவாம் -வேத விருத்தமான உள்ள சொற் போர்களும் உண்டாகும்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே- இங்கேயோ எதிர் வாதம் ஒன்றுமே இல்லாமல்
விசேஷ அர்த்தங்கள் பார்த்த பார்த்த இடங்களில் அமைந்து இருக்கும்

————-

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

அரு வினைகாள்
இள நாகு சங்கம் கொழுப்பாய் மருதம் சுலாம்-இளமையான பெண் சங்குகள் உடன் ஆண் சங்குகள் மருத நிலத்திலே திரியப் பெற்ற
கொழுப்பாய் மருதம்-கொழு பாய் மருதம் -கலப்பைக்காறு உழுது பாயப்பெற்ற வயல்கள் என்றுமாம்
குருகூர் எம் குலக் கொழுந்தே –பிரபன்ன ஜன கூடஸ்தரே
தொண்டக் குலத்தின் பேருக்கு காரணமானவர் ஆதாலால் கொழுந்து என்கிறார்
எம் குலக் கொழுந்து இராமானுசர் என்பதற்கு வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள்
வ்ருஷமாய் பலிக்கைக்கும்
கொடியாய்ப் படர்ந்து பலிக்கைக்கும் மூலமான கொழுந்து ஆகையால்
எம் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் என்றபடி

அன்றிக்கே
எம் குலம் அடங்கலும் ஒரு வேராய் -அதுக்கு எம்பெருமானார் கொழுந்தாய்க் கொண்டு
வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்படத் தம்முடைய திரு முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் –
உம்மை அப்புறத்தே இழுப்பான் ஒருவன் வந்து -உங்களை இழுத்து அப்புறத்திலே எறிய வல்ல ஒருவராய் எழுந்து அருளி
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் இருந்து ஆட்டைப் பற்றி புலி இழுப்பது போல் இழுக்க வல்லவராய் வந்து
இன்று நின்றான்-இப்பொழுது எமது திரு உள்ளத்திலே நின்று அருளினார்
விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் -இனி மேல் எம்மை பிறவித் துன்பத்தில் விழுத்த வல்லவர் எவரும் இல்லை
ஆகவே
மெய் உற வந்து அழுப்பா தொழியின் -எமது உடம்பில் பொருந்த வந்து வருத்தாமல் நீங்கிப் போகுகங்கள்
மெய்யாக அழுப்பாது ஒழிமின் -என்றுமாம் –

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல் –

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27-

இந்த மெல் இயலாள்
கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் –மகிழ மரத்தினது கொளுத்தும் இலையும் அரும்பும்
உட்பட எல்லாவற்றையும் தனக்கு கொண்டு தர வேண்டுவாள்
கொய்ம் மகிழ்க் கீழ் விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் –மலர் கொய்வதற்கு உரிய மகிழ மரத்தின் கீழ் உதிர்ந்து –
காற்றின் விசையால் எப்புறத்தும் ஓடுவதான சருகு ஒன்றை யாயினும் பெற்றாள் இல்லை
விறல் மாறனென்றால்-பெருமை யுடைய மாறன் என்று தலைமகன் பெயரைச் சொன்னால் தலை மகன் பெயரைச் சொன்னால்
அழும் -ஆற்றாமையால் அழுவாள்
தோள் தளரும் –தோள்கள் தளரப் பெறுவாள்
மனமுருகும் -நெஞ்சு உருகப் பெறுவாள்
குருகூர் அறையில் –அவரது அவதார ஸ்தலப் பெயரைச் சொன்னால்
இவ் இளங் கொடிக்கே எழுந்து ஓடவுங் கருத் துண்டு – இவளுக்கு எழுந்து இருந்து இங்கு இருந்து
அவ்விடத்துக்கு ஓடிச் செல்லவும் எண்ணம் உண்டாகிறது
கெட்டேன்

பாட்டுடைத் தலைவனே கிளவித் தலை மகன்

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த
நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும்
அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும்
ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய்
அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும்
அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும்
அன்பர்கள் பாராட்டி
இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல்
இதற்கு ஸ்வாப தேசம் –

———

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28-

ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட -வேதம் போலவே சாரமான அர்த்தங்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு
அருளிச் செய்த –வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ
மாறன் என்றால் -மாறன் என்னும் திரு நாமம் உடையவர் என்று யார் சொன்னாலும்
அவரைக் குறித்து
பதுமக் கரங்கள் முடி எடுத்துக் கொண்ட -தாமரை போன்ற தமது கைகளைக் குவித்து அஞ்சலி பந்தத்தை
தமது சிரஸில் மேல் கொள்ளும் தன்மையரான
அந்தணர் தாள் -ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிகள்
என் முடி -எனது சிரஸ்ஸின் மேல் கொள்ளப் படுபவனவாம்
எனவே. -என்று சொல்லி
கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் -பாகவதருக்கு வழித் தொண்டன் யான் என்று வெளியிடுமாறு
விருதுக் கொடி பிடித்துக் கொண்டு நின்றேன்
இனிக் -இவ்வாறு ஆழ்வார் அடியார் அடியார்குத் தொண்டனான பின்பு
கொடுங் கூற்றினுக்கோ அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் -யமனுக்கு என் பக்கல்
ஒரு காலடியாவது எடுத்து வைத்து வருதல் கூடுமோ

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

இராவணன் தன் பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான்– தலைகளைத் துணித்து அவற்றைக் கொண்டே
ஆழ்ந்த கடலை நிரம்பி விட்ட ஸ்ரீ கோதண்ட பாணி அடியவராக
பிரமன் வரத்தால் மீண்டும் மீண்டும் தலை முளைக்கச் செய்ததே இதற்காக அன்றோ
பொருநைந் துறைவன் -ஆழ்வார்
அவன் தாள் இணைக் கீழ்–ஸ்ரீ யபதியின் திருவடி இணைக்கீழ்
தன் முடியால் -தனது சென்னியால் வணங்கி
சொல் முடியால்-திருவாய் மொழி சேர்க்கையால்
எப் பொருளும் தழீஇச்-முமுஷுவுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் –
அர்த்த பஞ்சகங்களையும் -ஒருங்கு தொகுத்து
அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.–பா மாலையை சூட்டி அருளி சமர்ப்பிக்க
இப்படிப்பட்ட ஆழ்வாருக்கு அடிமைப்பட்ட பின்பு
என் முடியா தெனக்கி -எனக்கு அசாத்தியமாக இருப்பது யாது -ஒன்றுமே இல்லையே
யாதே அரியது -எனக்கு சிரமம் பட்டு சாதிக்க வேண்டியது தான் ஏது -ஒன்றுமே இல்லையே –
வேண்டிய நற் பயன்கள் எல்லாம் தவறாமல் எளிதில் கை கூடும் அன்றோ –

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

சூட்டில்-நெல் போர் களிலே
குருகு -மருத நிலத்துப் பறவைகள்
உறங்கும் -நிர்ப்பரமாக இனிது உறங்கப் பெற்ற
குருகூர் தொழுதேன் —ஆழ்வார் திரு நகரியை சேவிக்கப் பெற்றேன்
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன் –இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கைங்கர்யங்களும் செய்யப் பெற்றேன்
மறை மெய் எனிலே.–வேதங்கள் ஸத்யமாகுமானால்
மெய் -யதார்த்த பிரமாணம்
என்னை நல் வினையாம் காட்டில் புகுத விட்டு –என்னை நற் செயகைகள் ஆகிற தவ வனத்தில் செல்ல விட்டு
நல் வினை -பிரபத்தி மார்க்கம்
சரணாகதி சாஸ்திரமான ஸ்ரீ கம்ப ராமாயணம் சாதிக்கச் செய்தவரும் ஆழ்வாரே என்கிறார்
உய்யக் கொள் -யான் ஈடேறுமாறு என்னை ஆள் கொண்டு அருளுகிற
மாறன் கழல் பற்றிப் போய் -ஆழ்வார் திருவடிகளை சரண் புக்க பின்பு
மாறன் கழல் பற்றி குருகூர் தொழுதேன் ஆளும் செய்தென்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை -ஸ்ரீ வைகுண்டம் சேர்வதற்கு பிரதிபந்தகம் ஏதேனும் உண்டோ
இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தருமே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-11-20- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 21, 2021

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள் வேற்றில்–ஓதி உணர அரியதாகவும்
அநந்த சிறந்த பலவகைப்பட்ட வேதங்கள்
நஹி நிந்தா நியாயத்தால் வேதங்களைப் பழித்தார்
செஞ் சொற் பதிகம் நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு ஒரு ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு
ஒரு பாட்டே அமையும்படி யாயிற்று இவர் பாடி அருளியது -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

————-

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

தமிழ்ச் செஞ் சொற்களால் பல வேதமும் மொழிந்தான்
குரு கூர்ப் பதுமத்து இதழ் இலவே -தாமரை மலரில் இதழ்கள் இலவ மலரே போலும் -திருவாய் இதழ்களைச் சொன்னவாறு
அவ்விதழ்களின் உள்ளே
முல்லை யுளவே -முல்லை அரும்புகள் உள்ளனவே -வெண்ணிற பற்களைச் சொன்னவாறு
உள் இயம்பும் மொழியும் சிலவே -அவற்றுள் பேசப்படும் பேச்சுக்களும் சிலவே
உண்டு
அவை செழுந் தேனொக்குமே -அந்த சின் மொழிகள் தாம் சுவை மிக்க தேனே போலும்
மற்றும் அந்தத் தாமரை மலரில்
இரண்டு சல வேல்களும் உளவே -அசைகின்ற இரண்டு வேலாயுதங்களும் உள்ளன
யது காண் என் தனி யுயிரே–இவை அனைத்தும் யுடைய அந்த உருவம் தான் எனது உயிர் போன்ற காதலி என்று நீ உணர்வாய் –

இயற்கைப் புணர்ச்சி -தெய்வப் புணர்ச்சி -முன்னுறு புணர்ச்சி
இயல் இடம் கூறல் துறை
கலந்து பிரிந்து மீண்டும் கலக்க வரும் தலைமகன் பாலகனுக்கு –
என்னால் காணப்பட்ட வடிவுக்கு இயலிவை இடம் இது -என்று கூறுதல்

முல்லை பதுமம் வேல் –உருவக உயர்வு நவிற்சியால் உபமேயத்தின் மேல் நின்றன –

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும்
கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும்
அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும்
தீம் சொற்களையும்
கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

————–

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13

திருடித் திருடித் தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சடகோபன் –திருவடி நிலையான ஆழ்வார் –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் அன்றோ
சந்தோடு அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை –பரிமளத்தால் சந்தனத்தையும்
இனிமையால் சக்கரையையும் -தோற்கச் செய்யும் தாமிரபரணி
அம் தமிழே.உயிர் உருக்கும் -பக்திப் பெருக்கால் உயிரை உருகச் செய்யும்
புக்கு உணர்வு உருக்கும் -உடலினுள் புக்கு அகத்தின் உறுப்பான மனத்தை ஆனந்த அதிசயத்தால் கரையச் செய்யும்
உடலத்தினு ள்ள செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும்
குற்றமே புருஷ வடிவம் கொண்ட தேக சம்பந்தத்தால் காம க்ரோதாதிகளைப் போக்கும் –

——–

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14

தமிழார் கவியின்–ஆர் தமிழ் கவியின் -இலக்கணம் நிரம்பிய தமிழ் பாடல்கள் –சீர் கேடு இன்றி ஒழுகுதல் -போலே
பந்தம் விழா ஒழுகும் –முறை தவறாமல் நித்ய நைமித்திக உத்ஸவங்கள் நடக்கப் பெற்ற
குருகூர் வந்த பண்ணவனே–பெரியவர்
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை–அநந்த சாகைகள் கொண்ட வேத ஆழ்ந்த அருமையான -சார அர்த்தத்தை
செந் தமிழாகத் திருத்திலனேல் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து இரா விடில்
நிலைத் தேவர்களும் தந்தம் விழாவும் அழகும் என்னாம் –ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ கோயில் உத்ஸவங்களும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யும் என்னாகி முடியும் –

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே
அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

(ஸஹ்யம் -மேற்குத் தொடர்ச்சி மலை / தோதவத்தித் துறை -திருவரங்கத்தில் திருக் காவேரித்துறை –
தோதவத்திகளின் துறை -தூயதாகத் தோய்த்து உணர்த்தின வஸ்திரங்களை யுடையவர்கள் -/
சங்கணி துறை -ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நீர்த்துறை /அந்தஸ்தத்தை -உள்ளே கிடைக்கும் பொருளை-
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –ஸ்ரீ தேசிகன் –
திருவாய் மொழி செப்பலுற்றால் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே -ஸ்ரீ கம்பநாட்டாழ்வார்- )
( தூயானை தூய மறையானை –பிரமேயம் பிரமாணம் சாம்யம் -உபய லிங்கம்-அகில
ஹேய பிரத்ய நீகம் -கல்யாணை கதா -அப்பருஷேயத்வம் நித்யம் இரண்டும் இதுக்கும் –
ஸமஸ்த சப்த மூலத்வாத்-வாஸ்ய வாசக சம்பந்தம் -ஜகத் காரணத்வம்/
பிரமேயம் கண்ணன் இரு தாய் தந்தை -ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த தாய் ராமானுஜன் )

மேகம் பருகின சமுத்ராம்பு போலே
நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-
( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

————

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15-

இயலோடு இசையின் வண்ணப் படைக்கும் -இயல் இசை துறைகளான சேனைகளுக்கு
தனித் தலை வேந்தன்–ஒப்பற்ற தலைமை பூண்ட அதிபதி –
மலர் உகுத்த சுண்ணப் படர் -பூக்கள் சிந்திய மகரப்பொடிகள் பரவப் பெற்ற
படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே.–மருத நிலத்தூராகிய திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வாரது சொல் கடல்
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் –நூதனமாகச் செய்யப்பட வேதங்களும் உண்டோ என்று பலராலும் கருதப் படுமாறு
சொல் திகழச் செய்தான் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து தமிழ் சொற்களை அருளினார்
எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன
சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்

——–

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16-

களித்தார் குடலைக் கலக்கும் –செருக்கிய பகைவருடைய குடலை அச்சத்தால் கலங்கச் செய்கின்ற
குளிர் சங்கினான்-குளிர்ந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் உடைய திருமால்
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான்
அதே போலே
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே–பிறப்பு ஒழித்து அடிமை கொண்டு அருளினை ஆழ்வார்
குறையா மறையின் திடலைக் கலக்கித் -ஏறுவதற்கு அரிய வேதமாகிய மேட்டை அளவின்மையை ஒழித்து அளவுடைமையாக்கி
திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்–தொண்டர்க்கு அமுது ஈந்து அருளினார்
மலை மேட்டிலே தேன் கூடுகள் இருக்கும் அன்றோ
எடுத்துக்காட்டு உவமை அணி

——–

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17–

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்-அவர்கள் கழித்த சேஷத்தை விரும்பி
ஆழ்வார் அடியார்கள் சேஷம் உண்டு இருந்தேன் ஆகில் உய்ந்து இருப்பேனே –
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் -பல இடங்களிலும் ஓய்வின்றி அலைந்து திரியும்
இழிந்த பிறப்பை யுடையனான என்னை
பிறவி யெனும் நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்–
இப்பத்தும் பிறப்பு எனும் நோய் அறுக்கும் என்னும் படி உமது திருவாய் மொழிப் பிரபந்தத்தை
நோக்கும் படி பண்ணி அருளிய உனக்கு
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே-தாஸனான அடியேன்
முன்பு செய்த ஸூஹ்ருதம் யாதோ –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் போலவே
உங்கள் வேதம் பர தத்துவத்தைச் சாதிக்குமே –பர ப்ரஹ்மத்தை நிலை நிறுத்தி சாதிக்குமோ
சமயத் திருக்கை சேதிக்குமே –புற பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களை சேதித்து ஒழிக்குமோ
ஒன்று சிந்திக்குமே -யாதானும் ஒரு விஷயத்தை ஆய்ந்து ஓய்ந்து உணர மட்டுமோ
யதனைத் தெரியப் போதிக்குமே -அத்தைப் பிறருக்கு விளங்க உணர்த்த மாட்டுமோ
எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே -எவ்விடத்தும் சிறந்து யாவருக்கும் பொதுப்பட நிற்கும் உண்மையான விஷயத்தையும்
அதற்கு மாறான பொய்யான விஷயத்தையும் பகுத்து ஆராய மட்டுமோ –
மாட்டாது என்றவாறு

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்களை
திருவடிகளில் சாத்தப்படும் பூ மாலை போல பா மாலை அன்றோ
அடி சூட்டலாகும் அந்தாமமே
சொல் என்கெனோ -எல்லா இலக்கணங்களும் அமைந்த சொல் என்பேனோ –
எம்பெருமானுடைய புகழ் என்பேனோ என்றுமாம்
முழு வேதச் சுருக்கென்கெனோ -வேத முழுவதுக்கும் சார ஸங்க்ரஹம் என்பேனோ
எவர்க்கும் நெல் என்கெனோ -அனைவருக்கு ஜீவன உபாயமான நெல் என்பேனோ
தேக யாத்திரைக்கு நெல் போலே ஆத்ம யாத்திரைக்கு ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் அன்றோ
உண்ணும் நீர் என்கெனோ -இன்றியமையாத தீர்த்தம் என்பேனோ
மறை நேர் நிறுக்கும் கல் என்கெனோ –தராசுத் தட்டில் வேதத்துக்கு சமமாக வைக்கும் கல் என்பேனோ
முதிர் ஞானக் கனி யென்கெனோ -முதிர்ந்த தத்வ ஞானப் பழம் என்பேனோ
புகல வல் என்கெனோ -அதன் திறத்தை உள்ளபடி எடுத்துச் சொல்ல வல்லமை எனக்கு உளதோ என்பேனோ
பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலியும் –தலை மகளும் -கூந்தல் அழகால் தலைமகனை வஸீ கரித்தவள்
வில்லியும் -ஸ்ரீ கோதண்ட பாணியான தலைமகனும்
ஆகிய இருவரும்
மாறனை வாழ்த்தலர்போம் பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் –ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் செல்லும்
பாலை நிலமாகிய கொடும் சுரத்தை இன்றைப் பகலிலேயே கடந்து சென்று
ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் மறுமைப் பயனே அன்றி இம்மைப் பயன்களையும் இழப்பார்களே
கடந்து ஏகி-கடத்தற்கு அரியனவாக இருந்தும் எளிதில் கடந்தனர் என்றவாறு
பணை மருதத்து-விளை நிலமாகிய மருத நிலத்திலே
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை -கரும்பை ஆட்டும் ஆலையின் நரேல் என்று ஒலிக்கிற ஓசைக்கு
அஞ்சி -பயந்து -பூனையின் குரல் என்று அஞ்சுமாம் -மயக்க அணி தொக்கி நிற்கும்
யம்பொன் சாலைக் கிளி உறங்காத் -கிளிகள் நித்ரை கொள்ளாத
திரு நாட்டிடம் சார்வார்களே–சிறந்த பாண்டி வள நாட்டின் எல்லையில் சேர்வார்கள் –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி
அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து
தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும்
திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து
அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து
ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று
இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார்
அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-1-10- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 21, 2021

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது
அடுத்த மூன்று செய்யுள் களும் அப்படியே –

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!

ஏகாரம் இரண்டும் பிரிநிலையோடு தேற்றம்
முன் இரண்டு அடிகள் உபமானம்
பின் இரண்டு அடிகள் உபமேயம்
எடுத்துக்காட்டு உவமை அணி

மதுரகவி ஆழ்வார் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹத்தை எழுந்து அருளிப் பண்ணி
வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்
திருமாலுக்கு உரிய தெய்வப் புலவர் வந்தார்
அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்
விருதுகளைக் கூறி திருச்சின்னம் முழங்கி –
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம்
திண்ணம் நாரணமே -சங்கப் பலகை ஏற்றியதும்

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும் உளவோ
பெருமான் உனக்கு –என்றும்

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாய் ஆடுவதோ உறுமிப் புலி முன் நரி கேசரி முன் நடையாடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசிக்கு முன் பெருமான் வகுளா பரணன் நன்னருள் கூர்ந்து
ஓவாது உரை யாயிர மா மறையின் ஒரு சொல் பெறுமோ உலகில் கவியே – –என்றும்

ஸ்ரீ ராம பக்தியில் சிறந்த ஸ்ரீ பரதாழ்வான் போல் ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார்
வாழ்வார் -நில உலகில் சிறந்த புகழுடன் வாழ்வார் என்றுமாம் –

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.–தற் சிறப்புப் பாசுரம்-
என்றபடி
இவருக்கும் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடன் ஒரு புடை ஒற்றுமை உண்டே

—–

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

வேதாந்தத்தின் விழுப் பொருளின் மேல் விளக்கு -பெரியாழ்வார்
பற்பல வா -ஆழ்வாரைச் சிறப்பித்தும் -திருவாய் மொழியைச் சிறப்பித்தும் -அத்தைக் கற்றோரைச் சிறப்பித்தும் –
தலைவன் கூற்றாகச் சிறப்பித்தும் -தலைவி கூற்றாகச் சிறப்பித்தும் -தாய் கூற்றாகச் சிறப்பித்தும் –
தோழி கூற்றாகச் சிறப்பித்தும் -பிற வகைகளாகச் சிறப்பித்தும் இப்படி பல படி களால்

நாரணனாம் என–பாத்ம புராணம் ஆழ்வாரை பகவத் அம்சம்
திருக்குறுங்குடி நம்பியே ஆழ்வாராக திரு அவதரித்து அருளினார் அன்றோ –
நாராயணா அடியேனாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

அணவுபவன் -என்றது அணன்-என்று விகாரப்பட்டு நின்றது

அந்தணர் -அந்தத்தை அணவுபவர் -நச்சினார்க்கு இனியர்

கொடைக் கார் அணன்-மேகம் போல் பிரதியுபகாரம் கருதாது அளிக்கும் ஞான வண்மை
கொடைக்குக் காரணமானவன் -செய்பவன் என்றுமாம்

———–

‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் நம் பெருமாள் நம் ஆழ்வார் –இத்யாதி உபதேச ரத்ன மாலை பாசுர
வியாக்யானத்தில் இந்த தனியனை மேற்கோள் காட்டி உள்ளார்

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஆழ்வார் ஸ்ரீ பகவத் அம்சமே யாதலால் அவரை மெய்ப்பொருள் என்று விளித்தார்

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவின் உள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமயம் வெல்லும் பரம
இராமானுசர் இது என் விண்ணப்பமே –தனியன் பாசுரத்தோடு ஒக்கும் இதுவும் –

———–

தற் சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

——-

நூல்

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே.– 1-

தொல்லை மூலம் -ஆதி மூலம்
வேதம் -மங்கள பதத்துடன் உபக்ரமிக்கிறார் –

ஆழ்வாரின் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொரு அடியும் திவ்ய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை
ஐயம் திரிபுற காட்டி அருளுவதால் -கடந்து செல்ல மாட்டாமல் அதனுள் அடங்கி நிற்பானே –

திவ்ய ஞானத்தின் வரம்பின்மையையே குணம் கடந்த போதம் -என்கிறார்

எண்ணிலா காட்சி -அநந்த ஞானம் என்றபடி
குணம் கடந்த -ஒவ்வொரு குணத்திற்க்கும் ஸீமா -எல்லை அன்றோ அவனது –
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் போலே

குணங்கள் தந்த -சாம்யா பத்தி அருளுவதைச் சொன்னவாறும்
புனிதன் கவி ஓர் பாதம் -உயர்வற உயர் நலம் உடையவன்-என்பர் ஒரு சாரார் –
பர ப்ரஹ்ம ஸ்வரூபம் அடங்கி இருப்பதால் –

கடந்த ஞானியர் கடவுளர் காண் கலாக் கழலிணை சிவப்பேறத் தொடர்ந்த நான்மறை பின் செலப்
பன்னகத்துவசன் மா நகர்த் தூது நடந்தவன் -என்றும்

உரலும் வேதமும் தொடர -என்றும்

சுரர் உடனே முனிவர்களும் ஸ்ருதி நான்கும் தேடுகின்ற பதம் சிவப்பத் திரு நாடு பெறத் தூது செல்ல -என்றும்
உள்ள வில்லி புத்தூரார் பாரதம்

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் –திரு மழிசைப் பிரான்

ஓதி ஓதி உணரும் தோறும் உணர்ச்சி உதவும் வேதம் வேதியர் விரிஞ்சன் முதலோர் தெரிகிலா
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவரோ -ஸ்ரீ கம்ப இராமாயணத்திலும் ஸ்ரீ கம்பர்

————–

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

முன்பு ஸூர்ய குல சந்த்ர குல -சுடர்கள்-இரண்டு நமது பிறவித் துன்பங்களைத் தீர்க்கும்
இரண்டு தாமரைத் திருவடிகள்
திருவாய் மொழி அருளிச் செய்த பின்பு மூன்றாயினவே

பல்லாயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளி வரும் வில்லாளன் -ராம திவாகரன்
அச்யுத பானு
பண்டு -த்ரேதா யுகம்-த்வாபர யுகம்
பின்பு கலியுகம் – -43-நாள் ஆவிர்பவித்தார் அன்றோ -வகுள பூஷண பாஸ்கரர் –

இப் பத்து அறு வினை நீறு செய்யுமே
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்று இருப்பாரே
இப் பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே
இப் பத்தும் கண்டு பாட வல்லார் வினை போமே

அச்சம் தருவதால் வினையை இருள் என்கிறார் இதில்
இடர் இரண்டு -புண்ய பாப வினைகள்

முதல் இரண்டு சுடர்களுக்கும் விசேஷணம் இல்லாமலும்
திருவாய் மொழி சுடருக்கு மட்டும் –
துகள் தீர்ந்துலகத்து-இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன-என்பதால்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆச்சார்ய ஹிருதயம்–83-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3–

குருகூர்ப் பூ வொடுக்கும் –ஆழ்வாரது திருவாய் மலரின் உள்ளே -எம்பெருமானால் நிறைத்து வைக்கப் பட்ட
அமுதத் திரு வாயிரம் போந்தனவே.–ஆயிரம் திருவாய் மொழிகளும் வெளிப்பட்டன

பா வொடுக்கும் -இயல் தமிழ் இலக்கணங்களை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
நுண் இசை ஒடுக்கும் -இசைத் தமிழ் இலக்கணங்களை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
பலவும் பறையும் நா வொடுக்கும் -பல விஷயங்களைப் பேசும் நாடகத் தமிழ் இலக்கணங்களை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
நல் அறி வொடுக்கும் -நல்ல அறிவுகளை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
மற்றும் நாட்டப் பட்டதே வொடுக்கும் -மற்றும் பேசி நாட்டப்பட்ட தெய்வங்களை எல்லாம் ஒடுங்கச் செய்வன
பர வாதச் செரு ஒடுக்கும் -அந்நிய மதஸ்தரின் வாதப் போர்களை அடங்கச் செய்து விடுவன -பராங்குசர் திருவாய் அமுத மொழிகள் அன்றோ –

பா ஒடுக்கும் -இயல் பா இலக்கணங்கள்

எழுத்துப் பதிமூன்று இரண்டு அசை சீர் முப்பது ஏழு தளை ஐந்து
இழுக்கில் ஆதி தொடை நாற்பத்து மூன்று ஐந்து பா இனம் மூன்று
ஒழுக்கிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண் பொருள் கோள் இரு மூ
வழக்கில் விகாரம் வனப்பு எட்டு யாப்புள் வகுத்தனவே

நுண் இசை ஒடுக்கும்
குறிஞ்சி -செருந்தி -இந்தளம் -கொல்லி -காமரம் -தக்கேசி -பஞ்சமம் -கைசிகம் –
காந்தாரம் -பாலை -யாழ் -முதலிய பண்களைத் தன்னுள் ஒடுக்கும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு போல் –

ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை –69-

ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது
தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே –
தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—
சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே
த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டு என்கிறார் .

உதாத்தாதி பத க்ரம ஜடா
வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த
ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல்
எழுத்து அசை சீர் பந்தம் அடி
தொடை நிரை நிரை யோசை தளை இனம்
யாப்பு பாத்துறை பண் இசை தாளம்
பத்து நூறாயிரம்
முதலான செய்கோலம்
இதுக்கும் உண்டு-

அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் )
இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா கனம் பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி
இரண்டு முறை சொல்லுதல்/கனம் மூன்று முறை சொல்லுதல் / பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – )
ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் )
வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் ..
பர்வாதி என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..

பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் )
ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட அவ்யஹாரம் உண்டு இறே ..
கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி ,
அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல் —

எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும் குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –
வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்

அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்
(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )

சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர்
தே மாங்காய் புளி மாங்காய் பூவிளங்காய் கருவிளங்காய் )
வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம்
தே மாங்கனி புளி மாங்கனி பூவிளங்கனி கருவிளங்கனி)
வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )
பொதுச்சீர் பதினாறும் ,
ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-
(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள்
நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )

பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே
பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் ,
மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே
இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்

அடியாவது –
குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –
(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )

தொடையாவது
மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும்
அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் ,
அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக
ஆக நாற்பத்து மூன்று தொடையும் .

(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை
மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –
அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை
முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )

நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை ..(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம்
அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )

ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை
ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )

தளை யாவது
நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை –
ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை -முதலான ஏழு தளையும்

இனமாவது
தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும் ,,

யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )

பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்

துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே
புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –
செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/
வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )

பண் ஆவது –
முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம்
செந்திரி -பியந்தை – இந்தளம் முதலானவை

இசையாவது –ஸ்வர ஸ்தானம்
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )

தாளமாவது
கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச
தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — )
கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ்
கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம்
சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே
கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் ..
ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட -போன்றவை தாள வேறுபாடுகள் –

பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான
அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது –
பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே
நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11-
என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது
சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்

முதலான என்கையாலே
முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய்
நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய்
மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய்
மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது
( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )

முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது
செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால்
குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .

இயலுக்கும் இசைக்கும் பொதுவாக நடுவாக நாடகம் -நா -எனப்பட்டது

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
வணங்கும் துறைகள் பலபலவாக்கி –நின் மூர்த்தி பரவி வைத்தாய்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் நாயகன் அவனே
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்
குருகூர் பூ -ஸ்வயம் பூ -பிரமன் -ஆத்ம பூ மன்மதன் அக்னி பூ முருகன் -போல்
பூ ஆகு பெயரால் வாயைக் குறிக்கும்
நித்யம் செய்யா மொழி -இதுவும் இவர் நாவால் வெளிப்படுத்தி அருளினான்
திரு நா வீறுடையான் அன்றோ

———–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத்
தரும நிறை கனமாம் சிலர்க்கு –தர்மம் நிறைந்த சிறந்த காம புருஷார்த்தமாம் –
சீரிய நல் காமம் –கண்ணனுக்கே ஆமது காமம் என்பதால் கனக்க இருக்குமே
அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு -அந்த காம புருஷார்த்தத்துக்கு உரிய வேதமுமாம்
காம -சாஸ்திரம் நாயகி பாவத்தில் தூது விடுதல் மடலூர்தல்
ஆரணத்தின் இனமாம் சிலர்க்கு -வேத வர்க்கமுமாம் -நான்கு பிரபந்தங்களும் நான்கு வேத சாரம் அன்றோ
அதற்கு எல்லையுமாம் -அதற்கு எல்லையான வேதாந்தமுமாம்

அந்த அந்த அதிகாரிகளுக்கு ஏற்ப -அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே போல்
திருவாய் மொழி அத்யாபகர்களுக்கு எங்கும் சிறப்பே
தீதில் அந்தாதி –இசையோடும் வல்லார் ஆதுமோர் தீதிலாராகி இங்கும் எங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே–5-

குளிர் நீர்ப் பொருநை சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே-நீர்ச் சுழிகள் -நிறைந்த பொருநல் -ஆவிர்பவித்ததால்
மொழி பல ஆயின செப்பம் பிறந்தது -பல பாஷைகளில் செவ்வி -செந்தமிழ் ஒன்றுக்கே –
முத்தி யெய்தும் வழி பல வாய விட்டொன்றா யது -பல வழிகளில் முக்தி அடைய ஒன்றாகவே நின்று
வழுவா நரகக் குழி பல ஆயின பாழ் பட்டது -தவறாத நரகக் குழிகள் பலவும் பாழாயினவே –

பிரபன்ன ஜன கூடஸ்தர் அன்றோ
நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றோ
நமன் தம் தமர் தலைகள் மேல்–நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை

——–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

பல காலும் தம்மின் மூன்றா யினவும் நினைந்து –பல இடங்களிலும்
ஒருங்கு கூறப்பட்டு -தம்முள் சேர்ந்து இருந்துள்ள தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றையும்
யாவரும் அறிய வேண்டும் என்று திரு உள்ளத்தில் கொண்டு -அவற்றை வெளியிட்டு
தத்வ த்ரயார்த்தம் -ரஹஸ்ய த்ரயார்த்தம் என்றுமாம்
ஆரணத்தின் மும்மைத் தமிழை ஈன்றான் -வேத சாரமான இயல் இசை நாடக ரூபமான முத்தமிழில்
குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே.
தோன்றா உபநிடதப் பொருள் தோன்ற லுற்றார் தமக்கும்–ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் –
போல்வாருக்கு அருளிச் செய்தார்
சான்றாம் இவை என்ற போது மற்றென் -இவற்றின் வை லக்ஷண்யத்துக்கு வேறே என்ன சாட்சி வேண்டும்

கண்ணன் அல்லால் தெய்வம் அல்ல
அத் தெய்வ நாயகன் தானே போல்வன அனுசந்தேயம் –

———-

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப்பா அமுத இசையின் கறியோடு -பாசுர அமுத உணவுடன் பண்ணிசைகள் கறி வர்க்கத்துடனே
கண்ணன் உண்ணக் குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் -திருமால் அமுது செய்து அருளும்படி பரிமாறுபவரும்
குமரி கொண்கன்–குமரி ஆற்றுக்குத் தலைவர்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி-கவிகளுக்கு எல்லாம் தலைவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. –நிலத்தேவர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் காதுகளில்
குருமுகமாகச் சென்று மனத்திலே புகுந்து தித்திக்குமே
செவிக்கு இனிய -சிந்தைக்கு இனிய-வாய்க்கு இனிய –

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

———–

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் மூலத் தெளி யமுதே -பழைய அமிர்தம் மாத்திரம் அன்று
உண்டு தெய்வ மென்பார் பத்திக்கு மூலம்-தெய்வம் உண்டு மென்பார் பத்திக்கு மூலம்–ஆஸ்திகர்களுடைய பக்திக்கு காரணமுமாம்
பனுவற்கு மூலம் -மற்றத் திவ்ய பிரபந்தங்களும் மூலம் -முதல் நூல் -அங்கி -அங்க -உப அங்க பாவம் உண்டே
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம் -முமுஷுக்களுக்கு முத்தி சாதனமும்
முளரிக்கை வாணகை மொய் குழலார் அத்திக்கு மூலம் -மால் பால் மனம் வைத்து மங்கையர் தோள் கைவிடக் காரணமுமாகுமே

மூலம் -பல பொருளில் வந்து சொல் பொருள் பின் வரு நிலை அணி –

——-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9-

தண்ணங் குருகூர்ச் சேய் -குமாரரும்
இரு மா மரபும் செவ்வியான் -அன்னையாய் அத்தனாய் -தாய் தந்தை இரண்டு வம்சங்களிலும் ஸ்ரேஷ்டமானவரும்
செய்த செய்யுட்களே.ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் -வேதங்களுக்கே அலங்காரமானவை
அருந் தமிழ்க்குப்பாயிரம் -இனிய சுவையினால் தமிழ் மொழிக்கே முகவுரையாகவும்
நாற் கவிக்குப் படிச் சந்தம் -நாலு வகைக் கவிகளுக்கும் மாதிரியாயும்
பனுவற்கு எல்லாம் தாய் -எல்லா நூல்களுக்கும் தாயாகவும்
இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -எட்டுத் திக்குகளுக்கும் ஒப்பற்ற விலக்காகாவும் விளங்குமே

ஆசு கவி
மூச்சு விடும் முன்னே முந்நூறும் நானூறும் ஆச் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
இம் என்னும் முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னே கவி பாடினது ஏழு நூறே
நிமிஷக் கவிராயர் -விரைவாகப் பாடும் கவி

மதுர கவி -சொற்களிலும் பொருள்களிலும் மதுரமான இனிமையான கவி –
ஆதி தொடங்கி அந்தம் வரையில் செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்குமே

சித்ர கவி -உயர்வற -மயர்வற -அயர்வற -பிரணவ மகா மந்த்ரார்த்தம் -இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு

விஸ்தார கவி –பகவத் விஷயம் ஒன்றையே உபாய உபேய -தத்வ த்ரய -ரஹஸ்ய த்ரய –
அர்த்த பஞ்சக அர்த்தங்களை அருளிச் செய்து அவற்றையே விஸ்தாரமாக ஆயிரமாக அருளிச் செய்து அருளினார் அன்றோ –

திருவழுதி வள நாடர் –
அவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் –
அவர் திருக்குமாரர்-சக்ரபாணியார் –
அவர் திருக்குமாரர்-அச்சுதர் –
அவர் திருக்குமாரர்-செந்தாமரைக் கண்ணர்
அவர் திருக்குமாரர்-செங்கண்ணர்
அவர் திருக்குமாரர்-பொற் காரியார்
இவருக்கும் உடைய நங்கையாருக்கும் -நம் மாறன் –

திரு வள்ளுவர் – -ஒவ்வையார்–இடைக்காதர்- -சம்வாதம்

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து –ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ ஷேப்பில் இரண்டும் ஓன்று
அவ்வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம்மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து –இடைக்காதர்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10-

செய் ஓடு அருவி -வயல்களில் விரைந்து பாய்கின்ற நீர்ப்பெருக்கை யுடைய
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் -கையில் கனி எனக் கண்ணனைக் காட்டித் தந்தாலும்
கமலம் பொய்யோம் -தாமரை மலர்களை இட்டு அர்ச்சிக்கின்றோம் அல்லோம்

குரும் ப்ரகாசயேன் நித்யம்
நேசனைக் காணா இடத்தே நெஞ்சார துதித்தால் -ஆசானை எவ்விடத்தும் அப்படியே
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே
அரங்கன் அடியார்களாகிய அவருக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் உலகினில் மிக்கதே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 20, 2021

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நாவண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நாவண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே.

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

———

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

———–

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

————

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

———–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

————

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

———–

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

———

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

————

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

—————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

———–

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

———-

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

————

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

————-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

—————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

—————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

————–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

————–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

———–

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

———–

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

————-

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

————–

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

————–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

————

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

———–

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

————

இதுவும் அது

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -81-87–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இரு பொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலி கட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
பகல் போது போக்குவது ஓன்று
இரா வைகும் போது போக்குவது ஓன்று என்று பாராதே
எல்லாப் போதும் ஒரு போகியாகத்
தம்முடைய குணங்களாலே
எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்

(மோஹன அஸ்திரம்- மயங்கி தூங்க வைத்து -அவன் இடம் ஈடுபாடு
ஜ்ரும்பனாஸ்திரம் -சிற்றம் சிறு காலை எழுந்து மற்றவர்களை எழுப்புகிறாள் )

குணம் ஈடுபடுத்துமோ என்ன அருளிச் செய்கிறார்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு
குணத்தால் ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இறே

போது போக்குவர் போது போக்க மாட்டார் என்று விசாரியாதே -என்றபடி
இகல் -யுத்தம்

தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
தம்முடைய கிருபைக்கும் அவிஷயமான சிறிதென்றும்
தம்முடைய குணங்களைக் கொண்டு
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்குக் கூட்டும் இல்லை என்றும் விசாரியார்

தெரிந்து செழும் பரவை மேயார்
ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷிக்கும் தேசம் ஆராய்ந்து
திருப்பாற் கடலிலே மேவினவர் –

தெரிந்து செழும் பரவை மேயார்
தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
என்று அந்வயம்

———-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹா பாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேக வுணர்ச்சி சிறிது மில்லாமையினாலே
அந்நான்று–முன்பொரு காலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக் கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையி லணிந்திருந்த இராம பிரானை
கைகேயி கழற்றாமல் விட்ட கணையாழி ஒன்றே பெருமாளிடம் அப்போது இருந்தது –
அத்தையும் திருவடி இடம் கொடுத்தார் அன்றோ
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவு கெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க் கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்
அது பத்து
இது எட்டு
என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்
தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம்
வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்

(ப்ரஹ்மம் காணவும் அடையும் உள்ள ஞானமே ஞானம்
சம்சாரத்தில அழுத்தாமல் ப்ரஹ்மம் அடையும் கின்பணமே வித்யை
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-துளி கூட ஞானம் இல்லை
கர்மம் -வித்யா -இரண்டையும் சொல்லி
ப்ரவ்ருத்தி மார்க்கம் இவை )

தீ வினையேன்
பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின
பாபத்தைப் பண்ணினேன்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன்
(ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )

அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்

கரந்த உருவின் அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே
வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்

அம் மானை ஏத்தாது அயர்த்து
ஏத்துகை -அடிமையாய்
இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை
அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )

பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது
அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று
ஒருவன் கவி பாடவும்
எம்பெருமானார் கேட்டு அருளி
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

————–

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத் தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ண பிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயயர்ப்பாய்–(அப் பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்ல வேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய் அயயர்ப்பாய்
அவனை மறந்து அநர்த்தப் படிலும் படு
நினைத்து வாழிலும் வாழு

நெஞ்சமே சொன்னேன்
ஒருத்தன் கிணற்றிலே விழா நின்றால் கரையிலே நின்று அவனுக்குக் கூப்பிட வேணும் இறே
அவ்வோபாதி சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய் –
அல்லாது எல்லாம் விநாசத்துக்குக் கண்ட வழி
உஜ்ஜீவிக்கக் கண்ட வழி இதுவே

செயற்பால வல்லவே செய்கிறுதி
நான் தப்பச் செய்கிறது உண்டோ என்னில்
செய்யப்படாதவை செய்யா நின்றாய்

செய்யப்படாதவை யாவது –
அயோக்யன் என்று அகலுகை –
தேவதாந்த்ர பஜனங்கள்

நெஞ்சமே யஞ்சினேன்
புகழ்வோம் பழிப்போம் என்கிற இத்தை அஞ்சினேன்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல வேண்டா
பயப்படாமல் வாழ்த்து என்றபடி –

மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து
நம்முடைய விரோதிகள் செய்வது என் என்னில்
மல்லரில் காட்டில் மிடுக்கு உண்டோ
அவற்றுக்கு மல்லருடைய ஆயஸ்ஸை க்ரஸித்தவனை வாழ்த்து

(நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்றவாறு )

———————-

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத் திருவடிகளிலே) பஷ்பங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங் கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியை யுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கே யிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–தான்-அசைச் சொல்லாக்க கொண்டு –தங்க ஆம் எனில் தங்கு

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே
அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே
(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )

எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே
அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

என்னெஞ்சமே
யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி
இரு கை கூப்பு என்றால் கூப்பாதே
எங்குற்றான் என்றவனை ஏத்தாத
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
என்று அந்வயம்

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-

————-

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளை யுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால் வேலை வாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல-அழகிய கறுமை – திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத் தவம் செய்திட்டன கொல்–எவ் வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் –
உத்யோகித்த உத்யோகம் மாறாதே
ஆகாச அவகாஸம் எல்லாம் உலாவி
எங்கே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றனவோ

தாழ் விசும்பு -எங்கும் ஓக்க ஒத்து ஏக ரூபமாய் இருக்கை –

பொங்கோதத்தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார்
கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள்
எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ

(தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே

மேகங்களோ உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும்
யோகங்களும் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல நீர்கள் சுமந்துநும் தம்
ஆக்கங்கள் நோவ வருத்தும் தவம் மா அருள் பெற்றதே –திரு விருத்தம் –32)

————

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றை யுடையவனும்
தண்ணீரால் கண்டு பிடித்து கரைக்க முடியாமல் ரக்ஷித்து அருளினான் அன்றோ
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக் குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ் வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக் கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே
ஒத்த திரு மேனியை யுடையவன்

கை கலந்த வாழியான்
திருக் கையிலே வேர் விழுந்த திருவாழியை யுடையவன்
(வேர் மரம் கிளை பூ போல் பொருந்தி அன்றோ இருக்கிறது )

பார் கலந்த வல் வயிற்றான்
பிரளயம் தேடி வந்தாலும் தோற்றாத படி
கலந்த பூமியை யுடையவனுமாய்
வயிற்றிலே புக்க வற்றுக்கு ரக்ஷகமான வயிற்றை யுடையவன்

(நமக்கு வல் வயிறு எத்தை உண்டாலும் ஜெரிக்க வேண்டும்
அவனுக்கு அனைத்தையும் ரக்ஷிக்கவே திருவயிற்றிலே கொள்கிறான் )

பாம்பணையான் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
வடிவு அழகுக்கும்
குணங்களுக்கும் வாசகமாய்ப்
பசும் கூட்டான சொற்களை நினைத்து
அனுபவ விநாஸ்யமான பாப பலமான துக்கத்தைப் போக்காராகில்

என்னினைந்து போக்குவார் இப்போது
பாபம் போக்க வேண்டா வாகில்
காலத்தைச் செல்ல விடும்படி எங்கனே

இப்போது –
இப்போதை -இக்காலத்தை -என்றபடி

(கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் )

———

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம் மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒரு போதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய் கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக் காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல்
இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு

நல் நெஞ்சே –
நான் புக்க இடத்தே புகக் கடவ நெஞ்சே

எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
எல்லாக் காலத்திலும் கையை விட்டு அகலாத திருவாழியை யுடையவன்
நம் பக்கல் பாபத்தைப் போக்குவான்

மொய் கழலே ஏத்த முயல்
போக்யமான திருவடிகளை ஏத்த உத்ஸாஹி
பற்றினாரை விட்டுக் கொடாத திருவடிகளை என்றுமாம் –

ஈதே சொல்லு

மொய் கழல்
அழகாதல்
மிடுக்காதல்

(ஈதே சொல்-
கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்
அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும் )

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரண