ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-
ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள் வேற்றில்–ஓதி உணர அரியதாகவும்
அநந்த சிறந்த பலவகைப்பட்ட வேதங்கள்
நஹி நிந்தா நியாயத்தால் வேதங்களைப் பழித்தார்
செஞ் சொற் பதிகம் நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு ஒரு ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு
ஒரு பாட்டே அமையும்படி யாயிற்று இவர் பாடி அருளியது -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
————-
இயல் இடம் கூறல்
இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-
தமிழ்ச் செஞ் சொற்களால் பல வேதமும் மொழிந்தான்
குரு கூர்ப் பதுமத்து இதழ் இலவே -தாமரை மலரில் இதழ்கள் இலவ மலரே போலும் -திருவாய் இதழ்களைச் சொன்னவாறு
அவ்விதழ்களின் உள்ளே
முல்லை யுளவே -முல்லை அரும்புகள் உள்ளனவே -வெண்ணிற பற்களைச் சொன்னவாறு
உள் இயம்பும் மொழியும் சிலவே -அவற்றுள் பேசப்படும் பேச்சுக்களும் சிலவே
உண்டு
அவை செழுந் தேனொக்குமே -அந்த சின் மொழிகள் தாம் சுவை மிக்க தேனே போலும்
மற்றும் அந்தத் தாமரை மலரில்
இரண்டு சல வேல்களும் உளவே -அசைகின்ற இரண்டு வேலாயுதங்களும் உள்ளன
யது காண் என் தனி யுயிரே–இவை அனைத்தும் யுடைய அந்த உருவம் தான் எனது உயிர் போன்ற காதலி என்று நீ உணர்வாய் –
இயற்கைப் புணர்ச்சி -தெய்வப் புணர்ச்சி -முன்னுறு புணர்ச்சி
இயல் இடம் கூறல் துறை
கலந்து பிரிந்து மீண்டும் கலக்க வரும் தலைமகன் பாலகனுக்கு –
என்னால் காணப்பட்ட வடிவுக்கு இயலிவை இடம் இது -என்று கூறுதல்
முல்லை பதுமம் வேல் –உருவக உயர்வு நவிற்சியால் உபமேயத்தின் மேல் நின்றன –
ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும்
கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும்
அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும்
தீம் சொற்களையும்
கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –
————–
உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13
திருடித் திருடித் தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சடகோபன் –திருவடி நிலையான ஆழ்வார் –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் அன்றோ
சந்தோடு அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை –பரிமளத்தால் சந்தனத்தையும்
இனிமையால் சக்கரையையும் -தோற்கச் செய்யும் தாமிரபரணி
அம் தமிழே.உயிர் உருக்கும் -பக்திப் பெருக்கால் உயிரை உருகச் செய்யும்
புக்கு உணர்வு உருக்கும் -உடலினுள் புக்கு அகத்தின் உறுப்பான மனத்தை ஆனந்த அதிசயத்தால் கரையச் செய்யும்
உடலத்தினு ள்ள செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும்
குற்றமே புருஷ வடிவம் கொண்ட தேக சம்பந்தத்தால் காம க்ரோதாதிகளைப் போக்கும் –
——–
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14
தமிழார் கவியின்–ஆர் தமிழ் கவியின் -இலக்கணம் நிரம்பிய தமிழ் பாடல்கள் –சீர் கேடு இன்றி ஒழுகுதல் -போலே
பந்தம் விழா ஒழுகும் –முறை தவறாமல் நித்ய நைமித்திக உத்ஸவங்கள் நடக்கப் பெற்ற
குருகூர் வந்த பண்ணவனே–பெரியவர்
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை–அநந்த சாகைகள் கொண்ட வேத ஆழ்ந்த அருமையான -சார அர்த்தத்தை
செந் தமிழாகத் திருத்திலனேல் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து இரா விடில்
நிலைத் தேவர்களும் தந்தம் விழாவும் அழகும் என்னாம் –ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ கோயில் உத்ஸவங்களும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யும் என்னாகி முடியும் –
அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –
மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே
அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-
(ஸஹ்யம் -மேற்குத் தொடர்ச்சி மலை / தோதவத்தித் துறை -திருவரங்கத்தில் திருக் காவேரித்துறை –
தோதவத்திகளின் துறை -தூயதாகத் தோய்த்து உணர்த்தின வஸ்திரங்களை யுடையவர்கள் -/
சங்கணி துறை -ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நீர்த்துறை /அந்தஸ்தத்தை -உள்ளே கிடைக்கும் பொருளை-
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –ஸ்ரீ தேசிகன் –
திருவாய் மொழி செப்பலுற்றால் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே -ஸ்ரீ கம்பநாட்டாழ்வார்- )
( தூயானை தூய மறையானை –பிரமேயம் பிரமாணம் சாம்யம் -உபய லிங்கம்-அகில
ஹேய பிரத்ய நீகம் -கல்யாணை கதா -அப்பருஷேயத்வம் நித்யம் இரண்டும் இதுக்கும் –
ஸமஸ்த சப்த மூலத்வாத்-வாஸ்ய வாசக சம்பந்தம் -ஜகத் காரணத்வம்/
பிரமேயம் கண்ணன் இரு தாய் தந்தை -ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த தாய் ராமானுஜன் )
மேகம் பருகின சமுத்ராம்பு போலே
நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-
( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )
————
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15-
இயலோடு இசையின் வண்ணப் படைக்கும் -இயல் இசை துறைகளான சேனைகளுக்கு
தனித் தலை வேந்தன்–ஒப்பற்ற தலைமை பூண்ட அதிபதி –
மலர் உகுத்த சுண்ணப் படர் -பூக்கள் சிந்திய மகரப்பொடிகள் பரவப் பெற்ற
படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே.–மருத நிலத்தூராகிய திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வாரது சொல் கடல்
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் –நூதனமாகச் செய்யப்பட வேதங்களும் உண்டோ என்று பலராலும் கருதப் படுமாறு
சொல் திகழச் செய்தான் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து தமிழ் சொற்களை அருளினார்
எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன
சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்
——–
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16-
களித்தார் குடலைக் கலக்கும் –செருக்கிய பகைவருடைய குடலை அச்சத்தால் கலங்கச் செய்கின்ற
குளிர் சங்கினான்-குளிர்ந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் உடைய திருமால்
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான்
அதே போலே
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே–பிறப்பு ஒழித்து அடிமை கொண்டு அருளினை ஆழ்வார்
குறையா மறையின் திடலைக் கலக்கித் -ஏறுவதற்கு அரிய வேதமாகிய மேட்டை அளவின்மையை ஒழித்து அளவுடைமையாக்கி
திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்–தொண்டர்க்கு அமுது ஈந்து அருளினார்
மலை மேட்டிலே தேன் கூடுகள் இருக்கும் அன்றோ
எடுத்துக்காட்டு உவமை அணி
——–
நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17–
நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்-அவர்கள் கழித்த சேஷத்தை விரும்பி
ஆழ்வார் அடியார்கள் சேஷம் உண்டு இருந்தேன் ஆகில் உய்ந்து இருப்பேனே –
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் -பல இடங்களிலும் ஓய்வின்றி அலைந்து திரியும்
இழிந்த பிறப்பை யுடையனான என்னை
பிறவி யெனும் நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்–
இப்பத்தும் பிறப்பு எனும் நோய் அறுக்கும் என்னும் படி உமது திருவாய் மொழிப் பிரபந்தத்தை
நோக்கும் படி பண்ணி அருளிய உனக்கு
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே-தாஸனான அடியேன்
முன்பு செய்த ஸூஹ்ருதம் யாதோ –
———–
சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–
எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் போலவே
உங்கள் வேதம் பர தத்துவத்தைச் சாதிக்குமே –பர ப்ரஹ்மத்தை நிலை நிறுத்தி சாதிக்குமோ
சமயத் திருக்கை சேதிக்குமே –புற பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களை சேதித்து ஒழிக்குமோ
ஒன்று சிந்திக்குமே -யாதானும் ஒரு விஷயத்தை ஆய்ந்து ஓய்ந்து உணர மட்டுமோ
யதனைத் தெரியப் போதிக்குமே -அத்தைப் பிறருக்கு விளங்க உணர்த்த மாட்டுமோ
எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே -எவ்விடத்தும் சிறந்து யாவருக்கும் பொதுப்பட நிற்கும் உண்மையான விஷயத்தையும்
அதற்கு மாறான பொய்யான விஷயத்தையும் பகுத்து ஆராய மட்டுமோ –
மாட்டாது என்றவாறு
————-
சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-
குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்களை
திருவடிகளில் சாத்தப்படும் பூ மாலை போல பா மாலை அன்றோ
அடி சூட்டலாகும் அந்தாமமே
சொல் என்கெனோ -எல்லா இலக்கணங்களும் அமைந்த சொல் என்பேனோ –
எம்பெருமானுடைய புகழ் என்பேனோ என்றுமாம்
முழு வேதச் சுருக்கென்கெனோ -வேத முழுவதுக்கும் சார ஸங்க்ரஹம் என்பேனோ
எவர்க்கும் நெல் என்கெனோ -அனைவருக்கு ஜீவன உபாயமான நெல் என்பேனோ
தேக யாத்திரைக்கு நெல் போலே ஆத்ம யாத்திரைக்கு ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் அன்றோ
உண்ணும் நீர் என்கெனோ -இன்றியமையாத தீர்த்தம் என்பேனோ
மறை நேர் நிறுக்கும் கல் என்கெனோ –தராசுத் தட்டில் வேதத்துக்கு சமமாக வைக்கும் கல் என்பேனோ
முதிர் ஞானக் கனி யென்கெனோ -முதிர்ந்த தத்வ ஞானப் பழம் என்பேனோ
புகல வல் என்கெனோ -அதன் திறத்தை உள்ளபடி எடுத்துச் சொல்ல வல்லமை எனக்கு உளதோ என்பேனோ
பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –
———
செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்
மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-
மாலைக் குழலியும் –தலை மகளும் -கூந்தல் அழகால் தலைமகனை வஸீ கரித்தவள்
வில்லியும் -ஸ்ரீ கோதண்ட பாணியான தலைமகனும்
ஆகிய இருவரும்
மாறனை வாழ்த்தலர்போம் பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் –ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் செல்லும்
பாலை நிலமாகிய கொடும் சுரத்தை இன்றைப் பகலிலேயே கடந்து சென்று
ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் மறுமைப் பயனே அன்றி இம்மைப் பயன்களையும் இழப்பார்களே
கடந்து ஏகி-கடத்தற்கு அரியனவாக இருந்தும் எளிதில் கடந்தனர் என்றவாறு
பணை மருதத்து-விளை நிலமாகிய மருத நிலத்திலே
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை -கரும்பை ஆட்டும் ஆலையின் நரேல் என்று ஒலிக்கிற ஓசைக்கு
அஞ்சி -பயந்து -பூனையின் குரல் என்று அஞ்சுமாம் -மயக்க அணி தொக்கி நிற்கும்
யம்பொன் சாலைக் கிளி உறங்காத் -கிளிகள் நித்ரை கொள்ளாத
திரு நாட்டிடம் சார்வார்களே–சிறந்த பாண்டி வள நாட்டின் எல்லையில் சேர்வார்கள் –
திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி
அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து
தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும்
திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து
அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து
ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று
இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார்
அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply