ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -81-87–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இரு பொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலி கட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
பகல் போது போக்குவது ஓன்று
இரா வைகும் போது போக்குவது ஓன்று என்று பாராதே
எல்லாப் போதும் ஒரு போகியாகத்
தம்முடைய குணங்களாலே
எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்

(மோஹன அஸ்திரம்- மயங்கி தூங்க வைத்து -அவன் இடம் ஈடுபாடு
ஜ்ரும்பனாஸ்திரம் -சிற்றம் சிறு காலை எழுந்து மற்றவர்களை எழுப்புகிறாள் )

குணம் ஈடுபடுத்துமோ என்ன அருளிச் செய்கிறார்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு
குணத்தால் ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இறே

போது போக்குவர் போது போக்க மாட்டார் என்று விசாரியாதே -என்றபடி
இகல் -யுத்தம்

தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
தம்முடைய கிருபைக்கும் அவிஷயமான சிறிதென்றும்
தம்முடைய குணங்களைக் கொண்டு
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்குக் கூட்டும் இல்லை என்றும் விசாரியார்

தெரிந்து செழும் பரவை மேயார்
ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷிக்கும் தேசம் ஆராய்ந்து
திருப்பாற் கடலிலே மேவினவர் –

தெரிந்து செழும் பரவை மேயார்
தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
என்று அந்வயம்

———-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹா பாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேக வுணர்ச்சி சிறிது மில்லாமையினாலே
அந்நான்று–முன்பொரு காலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக் கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையி லணிந்திருந்த இராம பிரானை
கைகேயி கழற்றாமல் விட்ட கணையாழி ஒன்றே பெருமாளிடம் அப்போது இருந்தது –
அத்தையும் திருவடி இடம் கொடுத்தார் அன்றோ
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவு கெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க் கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்
அது பத்து
இது எட்டு
என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்
தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம்
வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்

(ப்ரஹ்மம் காணவும் அடையும் உள்ள ஞானமே ஞானம்
சம்சாரத்தில அழுத்தாமல் ப்ரஹ்மம் அடையும் கின்பணமே வித்யை
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-துளி கூட ஞானம் இல்லை
கர்மம் -வித்யா -இரண்டையும் சொல்லி
ப்ரவ்ருத்தி மார்க்கம் இவை )

தீ வினையேன்
பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின
பாபத்தைப் பண்ணினேன்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன்
(ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )

அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்

கரந்த உருவின் அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே
வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்

அம் மானை ஏத்தாது அயர்த்து
ஏத்துகை -அடிமையாய்
இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை
அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )

பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது
அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று
ஒருவன் கவி பாடவும்
எம்பெருமானார் கேட்டு அருளி
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

————–

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத் தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ண பிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயயர்ப்பாய்–(அப் பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்ல வேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய் அயயர்ப்பாய்
அவனை மறந்து அநர்த்தப் படிலும் படு
நினைத்து வாழிலும் வாழு

நெஞ்சமே சொன்னேன்
ஒருத்தன் கிணற்றிலே விழா நின்றால் கரையிலே நின்று அவனுக்குக் கூப்பிட வேணும் இறே
அவ்வோபாதி சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய் –
அல்லாது எல்லாம் விநாசத்துக்குக் கண்ட வழி
உஜ்ஜீவிக்கக் கண்ட வழி இதுவே

செயற்பால வல்லவே செய்கிறுதி
நான் தப்பச் செய்கிறது உண்டோ என்னில்
செய்யப்படாதவை செய்யா நின்றாய்

செய்யப்படாதவை யாவது –
அயோக்யன் என்று அகலுகை –
தேவதாந்த்ர பஜனங்கள்

நெஞ்சமே யஞ்சினேன்
புகழ்வோம் பழிப்போம் என்கிற இத்தை அஞ்சினேன்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல வேண்டா
பயப்படாமல் வாழ்த்து என்றபடி –

மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து
நம்முடைய விரோதிகள் செய்வது என் என்னில்
மல்லரில் காட்டில் மிடுக்கு உண்டோ
அவற்றுக்கு மல்லருடைய ஆயஸ்ஸை க்ரஸித்தவனை வாழ்த்து

(நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்றவாறு )

———————-

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத் திருவடிகளிலே) பஷ்பங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங் கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியை யுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கே யிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–தான்-அசைச் சொல்லாக்க கொண்டு –தங்க ஆம் எனில் தங்கு

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே
அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே
(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )

எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே
அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

என்னெஞ்சமே
யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி
இரு கை கூப்பு என்றால் கூப்பாதே
எங்குற்றான் என்றவனை ஏத்தாத
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
என்று அந்வயம்

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-

————-

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளை யுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால் வேலை வாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல-அழகிய கறுமை – திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத் தவம் செய்திட்டன கொல்–எவ் வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் –
உத்யோகித்த உத்யோகம் மாறாதே
ஆகாச அவகாஸம் எல்லாம் உலாவி
எங்கே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றனவோ

தாழ் விசும்பு -எங்கும் ஓக்க ஒத்து ஏக ரூபமாய் இருக்கை –

பொங்கோதத்தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார்
கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள்
எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ

(தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே

மேகங்களோ உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும்
யோகங்களும் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல நீர்கள் சுமந்துநும் தம்
ஆக்கங்கள் நோவ வருத்தும் தவம் மா அருள் பெற்றதே –திரு விருத்தம் –32)

————

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றை யுடையவனும்
தண்ணீரால் கண்டு பிடித்து கரைக்க முடியாமல் ரக்ஷித்து அருளினான் அன்றோ
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக் குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ் வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக் கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே
ஒத்த திரு மேனியை யுடையவன்

கை கலந்த வாழியான்
திருக் கையிலே வேர் விழுந்த திருவாழியை யுடையவன்
(வேர் மரம் கிளை பூ போல் பொருந்தி அன்றோ இருக்கிறது )

பார் கலந்த வல் வயிற்றான்
பிரளயம் தேடி வந்தாலும் தோற்றாத படி
கலந்த பூமியை யுடையவனுமாய்
வயிற்றிலே புக்க வற்றுக்கு ரக்ஷகமான வயிற்றை யுடையவன்

(நமக்கு வல் வயிறு எத்தை உண்டாலும் ஜெரிக்க வேண்டும்
அவனுக்கு அனைத்தையும் ரக்ஷிக்கவே திருவயிற்றிலே கொள்கிறான் )

பாம்பணையான் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
வடிவு அழகுக்கும்
குணங்களுக்கும் வாசகமாய்ப்
பசும் கூட்டான சொற்களை நினைத்து
அனுபவ விநாஸ்யமான பாப பலமான துக்கத்தைப் போக்காராகில்

என்னினைந்து போக்குவார் இப்போது
பாபம் போக்க வேண்டா வாகில்
காலத்தைச் செல்ல விடும்படி எங்கனே

இப்போது –
இப்போதை -இக்காலத்தை -என்றபடி

(கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் )

———

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம் மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒரு போதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய் கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக் காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல்
இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு

நல் நெஞ்சே –
நான் புக்க இடத்தே புகக் கடவ நெஞ்சே

எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
எல்லாக் காலத்திலும் கையை விட்டு அகலாத திருவாழியை யுடையவன்
நம் பக்கல் பாபத்தைப் போக்குவான்

மொய் கழலே ஏத்த முயல்
போக்யமான திருவடிகளை ஏத்த உத்ஸாஹி
பற்றினாரை விட்டுக் கொடாத திருவடிகளை என்றுமாம் –

ஈதே சொல்லு

மொய் கழல்
அழகாதல்
மிடுக்காதல்

(ஈதே சொல்-
கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்
அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும் )

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரண

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading