Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–இரண்டாம் பத்து விவரணம்-

February 3, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளில் –
விலக்ஷணம் ஆகையாலே கலங்கி ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
கண்ணால் கண்ட பதார்த்தங்கள் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு படுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கீழில் திருவாய் மொழியிலே
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -என்று
ஸுலப்யமும் -மேன்மையும்-வடிவு அழகும் -ஆகிற ஆகார த்ரயமும்
மேல் விழுகைக்கு உடலாகயாலே இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ண —

அனுபவம் பெறாமையாலே பிறந்த அவஸா அதிசயத்தாலே ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
ஆற்றாமை கை கொடுக்கத் தன் லீல உத்யானத்திலே சென்று இருந்து
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களைக் கண்டு
அவை எல்லாம் தன்னைப் போலவே நோவு படுகின்றனவாகக் கொண்டு
தான் அவற்றுக்குமாக நோவு பட

அப்போது ஸர்வ ஸக்தனானவன்
இவர் அவஸாதம் எல்லாம் தீர வந்து ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைக் குறித்து
இனி ஒரு நாளும் என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்கிறார் –

———-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

உயர்வற -என்கிற பாட்டை -வேவாரா வேட்கை நோய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -வேவாரா -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி -ப்ரஹ்மானந்தது அளவும் -லீலா விபூதியாய் -அதில் வர்த்திக்கிற பத்தரைச் சொல்கிறது –
அவர்கள் அர்த்த காமங்களிலே ஈடுபடா நிற்கையாலே ஸம்ஸார மக்நர் ஆனார்கள்

உயர் நலம் என்று
நித்ய விபூதியையாய் -அதில் வர்த்திக்கிற நித்யரைச் சொல்கிறது –
அவர்கள் ஸம்ஸ்லேஷ ஏக போகராகையாலே நித்ய ஆனந்த மக்நர் ஆனார்கள் –

இவர்
அங்கன் அன்றிக்கே –
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த-
தாம் இரண்டு கோடியிலும் கூட்டு அற்று
பகவத் காமமானது அதாஹ்யமான ஆத்மாவைக் குருத்து வற்றாம்படி வேவா நின்றது –
லௌகிக அக்னிக்கு தஹிக்கக் கூடாத ஆத்மாவை ப்ரேமம் ஆகிற அக்னி தஹிப்பது ஆவியை இறே

இது எங்கனே அறிந்தீர் என்ன
மயர்வற மதி நலம் அருளுகையாலே அறிந்தேன் என்ன

அறிந்த படி என் என்ன –

மயர்வற மதி நலம் அருளின யுன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

முன்பு சொன்ன ஸம்ஸாரிகள் உண்டு உடுத்து திவா ராத்ர விபாகம் பாராமல் திரிய
நித்யரும் முக்தரும் பகவத் அனுபவமே யாத்ரியாய் இருக்க
உபய விபூதியில் உள்ளார் படி அன்றிக்கே
வேவாரா வேட்க்கை நோயாலே
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தேன்

மெல்லாவியை –அல்பப்ப்ராணனை –வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
கூடோக்நிர் இவ பாதபம் -உள்ளேயே குமுறுகிற நெருப்பு மரத்தை எரிக்குமா போலே
உள்ளே பிடித்துப் புறம்பே வேவா நின்றது –

ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டாருக்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய் –
இப்படி யாக்கின நீ ஒருவரும் இல்லாதான் ஒருவனோ –

உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா
சற்றும் அயர்வில்லாமல் ஆனந்த அம்ருத பானம் பண்ணும் நித்ய முக்தர் அனுபாவ்யமான நீ
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து கேசியை ஸம்ஹரித்து
யாமளார்ஜுனங்கள் நடுவே தவழ்ந்து போய்
மகா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –

இப்படி உபகாரங்களைப் பண்ணினவான உன்னுடைய
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணின
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
இத்தனைக்கும் காரணனான நீ
சுடர் அடி தொழுது எழப் பண்ணின நீ
சோர விடாதே கொள்

கீழ் ஒன்பது பாட்டிலும்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழக் கண்ட திருமால்
சகிக்க மாட்டாமல் வந்து அரதி யாற்றி சாந்தவதானம் பண்ணி

மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த எந்தாய்
புத்வா காலமதீதஞ்ச முமோஹ பரமா துர -பகவானைக் கண்டு அவனுக்கு அடிமை செய்யாமையாலே
ஏராளமான காலம் கடந்து விட்டது -அது தெரிந்தவாறே வருத்தம் தாங்காமல் மூர்ச்சை அடைந்தார் -என்க –
சீதா பிராட்டி பிரிவால் பெருமாள் மோஹித்தத்தை சொல்லும் ஸ்லோகம்
இதே போல் முன்புள்ள காலம் இழந்தாலும் மேல் உள்ள காலம் கை விடாதே கொள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -நீயும் மூவா முதல்வனைச் சோரேல் -கிடாய் என்கிறார் –

——–

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீட்டில்
பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப்பண்ணுமோ பாதி
கூடினாலும் மறக்கும் படி பண்ணும் என்கிறார்

உயர்வற உயர்நலம் என்கிற பாட்டைத் திண்ணன் வீடு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கீழில் திருவாய் மொழியிலே இவருக்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே

கடல் வெதும்பினால் விளாவ நீர் இல்லை -என்னுமா போலே ஆற்றாமையோடே முடியப் புக்கவாறே
அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர் –

இதுக்கு அடி என் என்று ஆராயப் பார்த்தவாறே
இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவல்லாத விஷய வை லக்ஷண்யமாய் இருந்தது –

இதுக்கு அடி என் என்று பார்த்தார்
ஸமஸ்த கல்யாண குணாத் மகனாகையாய் இருந்தது –

இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே -ஸர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் என்றால் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இறே தோன்றுவது
இப்படி அறியும்படி மயர்வற மதி நலம் அருளினன் என்றது –

ஆக இங்கனே ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –

கீழே மூவா முதல்வா -என்று
காரணத்வம் ப்ரஸ்துதமானவாறே
அந்தக் காரணத்தை உபபாதிக்கிறார் என்று பிள்ளான் பணிப்பர் –

உயர்வற உயர் நலம் யுடையவன் யவன் அவன் என்று சொல்லிற்று இல்லையோ
ஸர்வேஸ்வரத்வம் என்னில் ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லவர் அல்லர் இறே

ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாயவாகாது
ஒரு குணத்தையே எல்லாக் காலத்திலும் அனுபவிக்க வல்லார் இவர்

மயர்வற மதிநலம் அருளுகையாலே ஒரு குணம் தன்னையே இதுக்கு முன் அனுபவித்தது என்று தோற்றாத படி
க்ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து அபர்யாப்த்த அம்ருதம் -ஆராவமுதம் -ஆனவன் -இவனே இறே
பயிலா நிற்கச் செய்தே இறே -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் என்பது –

ஆகையாலே -உயர் நலம் உடையவனே காரணம் என்று -ஸ்ருதிப் பிரசித்தன் –
ப்ரமாதிகளைக் காரணம் என்கிறவர்களைக் குறித்து வெந்நரகில் விழாதே கிடி கோள்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீராடாதே கிடி கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
ஆனந்தாதி கல்யாண குணங்களிலே வைத்துக் கொண்டு ஒவ் தார்ய குணம் சொல்கிறார்

திண்ணன் வீடு
திருத்தமான வீடு -என்று ஆவிர்ப்பவாதிகளான கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை என்கை
இத்தால்
திண்ணம் என்று நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் யுடையவன் அவன் யவன் அவன்
மோக்ஷப் ப்ரப்ருத்-அசேஷ -புருஷார்த்த பிரதனனாவான் ஆகையாலே மயர்வற மதிநலம் அருளினன்

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறியலாம் என்று பார்த்தாலும்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று
எண்ணுக்கும் எல்லை கடந்து இருக்கும் என்கை

ஓரோர் குணங்கள் வகையற எண்ணிறந்து இருக்கும் –
ஆக
அஸங்கயேயமான கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் தன் குண விபூதிகளைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
அயர்வறும் அமரர்கள் -சற்றும் அயர்வு அல்லாமல் கைங்கர்யமே தாரகமான நித்ய முகத்திற்கு
அனுபாவ்யமானவன் யாவன் ஒருவன் அவன்
மண்ணும்
லீலா விபூதியில் பூமி அந்தரிக்ஷ முதலான லோகங்கள் எல்லாம் ஒருக்காலே அமுது செய்த
என் கிருஷ்ணனை அல்லது இல்லை –

எல்லா வகைகளாலும் நிர்வாஹகன் அவன் ஒழிய வேறு நிர்வாஹகர் யாரும் இல்லாத தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் திரு உள்ளத்தைக் குறித்தும்
தம் நெஞ்சு போல்வாருக்கும் –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -ஆகையால்
ஹேய ப்ரத்ய நீகமான -வீடு முதலான ஸகல பல தோஹி விஷ்ணு -என்று
ஸர்வ பல ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய திருவடிகளைத் தொழுது
தாப த்ரயங்களும் மாறும் படி
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
தொழுது வர்த்தியுங்கோள் என்று
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———

ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

ஊனில் வாழ் உயிரிலே
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷம் உள்ளளவு பட்டிராமையாலே
இப்பேற்றுக்கு உஸாத் துணை யாவார் யார் என்று பார்த்த இடத்தில்
ஸம்ஸாரிகளில் இல்லாமையாலே
அவன் தன்னோடே ஓக்க ப்ராப்யமருமாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணா நிற்பாருமாய்
பகவத் அனுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று
அநா வாப்தியோடே தலைக்கட்டினார்

வாயும் திரை யுகளில் -ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிற இத்திருவாய் மொழி
நடுவு ப்ராசங்கிகமாக பரஸ்துததாம் அத்தனை

ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளானவற்றை
நீயும் நான் பட்டது பட்டாயோ என்று அவற்றைக் கட்டிக் கொண்டு அழுதார் அங்கு

இங்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நை சர்க்கிகமான-இயற்கையாகவே உள்ள –
நித்ய ஸூரிகளை உஸாத் துணையாகத் தேடுகிறார்

———-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

உயர்வற பாட்டை -இனியார் ஞானங்களால்-பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இனியார் ஞானங்களால்-
ப்ரஹ்மானந்தம் தொடங்கி மனுஷ்யானந்தம் அளவும்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
எத்தனையேனும் அதிசயித ஞானர் ஆனவர்களுடைய-ஞான விசேஷங்களாலும்
ஸ்வ யத்னத்தால் எடுப்பாருக்கும் அன்று
பேர்க்கப் போகாதே இருக்கிற என்னாயன் எவன் ஒருவன் அவன் மதி நலம் அருளினன்

கனிவார் வீட்டின்பம்
அஞ்ஞான கந்த ரஹிதமான பக்தி ரூபா பன்ன ஞானருடைய ஹ்ருதயங்களிலே வஸியா நிற்கிற

கடற்படா அமுதே!
அபர்யாப்த்த அம்ருதம் ஆனவனே
அன்றியே
அவர்கள் இருப்பிடங்களில் வந்து அவர்களுக்குப் போக்யமானவனே

இப்படி போக்யமானவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
தனியேன் வாழ் முதலே
அசர்வு இல்லாத நித்யருக்கு போக்யனானவன்
அமரர்க்கு இன்பத்தை விளைக்குமவன்
அல்லாதாருக்கு அறிய ஒண்ணாதவன்
இவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாது இருக்கிற எனக்கு அயத்ன ஸித்தமான போக்யனானவனே

தனியேன் வாழ் முதலே!
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ -தனியேன் வாழ் முதலாய் -மயர்வை அறுத்து –
மதி நலத்தை அருளின பின்பு
உபய விபூதியிலும் கூட்டு அற்றுத் தனியேனாய் நான் இருக்கக் கைமுதல் ஆனவனே

எனக்குப் பிரதான ஸூஹ்ருதம் ஆனவனே
ஏகாஷி ஏக கர்ணிகள் நடுவே இருப்பதற்கு அஸஹ்யமான படி இருக்கிற
எனக்கு வாழ் முதலானவனே

இப்படி ச நாதன தர்ம – அயர்வரும் அமரர்கள் அதிபதி
உபாய உபேயமும் தானே யாய் –
பகவத் அனந்தைக பரருக்கும் நித்ய முக்தருக்கும் போக்யனான

பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்
நீ தான் தனிமையில் வந்து உதவிற்று இல்லையோ
வராஹ ரூபியாய் பிரளயங்கதமான புவனங்கள் ஏழையும் எடுத்து –

நுனியார் கோட்டில் வைத்தாய்
கூர்மை மிக்க கோட்டு இடையிலே வைத்து ரக்ஷித்தாய்
இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு சொல்லுகிறது –

இப்படி தனிமையிலே உதவி ரக்ஷிக்குமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய பிரதிபடமாய் தேஜோ ரூபமான திருவடிகளான யுன் பாதம் சேர்ந்தேனே -என் மனனே

இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி
நீ அறிவு தந்த போதே உன் திருப்பாதம் சேர்ந்தேனே யன்றோ
அடியார்கள் குழாங்களுடன் இனி சுடர் அடி தொழுது உஜ்ஜீவிக்கும்
அத்தனை அன்றோ என்று உகக்கிறார்

———–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடியில் ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிட்டார்

கீழில் திருவாய் மொழியிலே
பருகிக் களித்தேனே என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை
பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேணும் என்று பார்த்து
அதற்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி -அனுபவிக்கக் கோலி நினைத்த போதே அத்திரளிலே புகப் பெறாமையாலே
மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வ கீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
எம்பெருமானுக்கு அறிவிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

உயர்வற என்கிற பாட்டை -வாட்டமில் புகழ் -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில் –
உயர்வற -வாட்டமில் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்து அளவாக வருகிற உயர்த்தி அற்ற வாட்டமில் புகழ் வாமனன் –

உயர்நலம் உடையவனுக்கு வாட்டமாவது
இந்த விபூதி அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே விஞ்சி
ஈஸ்வரோஹம் என்று இருக்கையாலே ஈஸ்வரத்தினுடைய வாட்டமாம்

சேஷித்வமும் ஸ்வா தந்தர்யமும் வாட்டம் உண்டாய் வருகையாலே -அது வாராமைக்காக
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளானாய் மகா பலி பக்கலிலே மண்ணை இரந்தவாறே
அது பெற்ற பின்பு வாட்டமில் புகழ் வாமனன் என்கிறது அல்ல

என் ஆர்த்தியில் ஓதுத்திலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வரும் என்று
இவ்வளவிலே வந்து முகம் காட்டுகையாலே வாட்டமில் புகழ் வாமனன் என்கிறார்

ஒன்றிலே ஓன்று கண் நழுவாமல் வந்து இரந்து அளந்து கொண்டவன் என்கிறார் –
நீர் இது அறிந்தபடி என் என்ன
அவன் மதிநலம் அருளப் பெற்றவத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

இசை கூட்டி வண் சடகோபன் சொல்
இசை கூட்டி –
ஸாம ரஸ உத் கானமானது -சடகோப வாங் மயம் என்று -ஸஹஸ்ர ஸாக உபநிஷத் -ஸமா கமமான
ஈர் ஐந்தினுடைய
இசை கூட்டி வண் சடகோபன் சொல் -என்று
லோகங்கள் எல்லாம் பிரசித்தமாம் படி மதி நலம் அருளினவன் யாவன் ஒருவன்
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்யரானவர்கள்
ஏதத் ஸாம காயானாஸ்தே -என்று சாமத்தின் இசை கூட்டி ஸஹஸ்ர சாகையை
அமை பாட்டோராயிரத்து இப்பத்து –
அமைந்த படி

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே
வாசகமாகி
நாட்டை வாழ்வித்த ஒவ்தார்யம் இது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அடி சூட்ட ஸாம கணத்தில் இசை சற்று நாவறுதல் அற
ரஸ அனுபவத்தில் வந்த நித்ய முக்தருக்கு உத் கீதார்த்த ரச ஞானம் உடையவனான அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே
ஹேய ப்ரத்ய நீகமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயமுமான திருவடிகளிலே
சாமசாகர்த்த மான ரசங்களாலே அமையப்பட்ட ஆயிரம் பாட்டுக்களிலும் வைத்துக் கொண்டு
இப்பத்துப் பாட்டையும் அதிகரிக்க வல்லார்க்கு
இச்செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்
பண்ணப் பெறுவர் -என் மனனே

அடி சூட்டலாகுமே அந்தாமமே
வாசக மாலையை அடி சூட்டலாகுமே அந்தாமமே
பித்ரு தனம் புத்திரனுக்கு அனுபாவ்யமாம் போலே அனுபாவ்யமாம்
ஆழ்வார் கிலேசம் வேண்டா -அவர் பேறே இறே கற்றாருக்கும் பேறு
அடியார்கள் குழாங்களை உடன் கூடி அங்கு
அடியவரோடு இருந்து அனுபவிக்கப் பெறுவர் என்கிறார் –

———–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

ஆடியாடியிலே ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிடுகிறார் –

கீழ் ஆடியாடியிலே ஆழ்வாருக்குப் பிறந்த வியசனம் எல்லாம் மாறும் படியாக
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் —
ஆர்த்த ரக்ஷணத்துக்காக பகவான் த்வரை யுடன் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார்
தாங்கும் நிமித்தமாக காண்பிக்கப்பட்ட கையைக் கவனிக்காமல் -பெரிய த்வரையுடன் –
ஆயுத ஆபரணங்களை அக்ரமமாக -அரை குலைய தலை குலையத் தரித்துக் கொண்டு வந்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து உதவினால் போலே

இவரும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் -என்று கூப்பிடட ஆர்த்த நாதம் செவிப்பட்டு
அழகியதாக ஜகன் நிர்வஹிணம் பண்ணினோம் என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களுக்கு ஒப்பவைகளான ஆயுத ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியோடே
வந்து ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு ஹ்ருஷ்டராய் பெற்ற பேற்றை உகந்து அனுபவிக்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

உயர்வற என்கிற பாட்டை -சொல்லீர் என் அம்மானை-என்கிற இப்பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்

மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவும் அவரவர்கள் பிரயாசத்தாலே ஆர்ஜிக்கிற
போக்யதா அனுபவங்களை எல்லாம் அல்பமாய் அஸ்திரமாய் அற்றது
ஆகையால் உயர்வற என்கிறது

இத்தை நீங்கள் அறிந்து கொண்டு
உயர் நலம் யுடையவன் என்னோடே வந்து -அந்தாமத்து அன்பு செய்து –
தனக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாம் என் அவயவங்களிலே யாம்படி கொண்டு அருளி
உயர்வற உயர் நலம் உடையவனாய் விளங்குகிற படியை

சொல்லீர் என் அம்மானை-
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அதுக்குப் பாசுரம் இட்டுக் கவி சொல்லி
இருக்கிற நீங்கள் சொல்ல வல்லீர்களோ

எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை–என் அம்மானை–
தன் குண சேஷ்டிதங்களாலே எனக்கு மயர்வற மதி நலம் அருளி
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே என்னை சேஷத்வ முறையிலே நிறுத்தினவன் –

மயர்வற
அஞ்ஞான கந்த ரஹிதமான ஞான பக்திகளாலே ஆத்ம பரமாத்ம விவேக ஞானத்தை யுண்டாக்குகையாலே
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மா வானவனை –

மதி நலம் அருளினன் என்று
கிருபா குண விசிஷ்டமான குணங்கள் கல்யாண குணைக தானமாகையாலேயும்
சவுந்தர்யாதி குண விசிஷ்டமான திவ்ய மங்கள விக்ரஹமும் புதுக்கணித்து தேஜோ மயமாயிற்று

யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வில்லாத நித்ய முக்தருக்குப் போக்ய பூதனானவன் யாவன் ஒருவன்
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
என்னோடே கலந்த பின் புகர் பெற்றானாய் இருக்கிற படி

நல்ல வமுதம்
அப்ராக்ருத போக்யங்களில் தலையான அம்ருதம் -அபர்யாப்த அம்ருதம் -ஆரா வமுதம்

பெறர்க்கு அரிய வீடுமாய்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத மோக்ஷ புருஷார்த்தமும் ஆனவன் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதர விஷயங்களில் போக ருசி அற்று –

நிரவதிக தேஜோ ரூபமான
அல்லிமலர் விரையொத்த
திருவடிகளை யுடையவன்

ஆண் அல்லன்
இதர புருஷ ஸஜாதீயன் அல்லன்

பெண் அல்லனே
அதுவும் அப்படியே யாகையாலே
உபய விஷய ஸஜாதீயன் அல்லன் என்றபடி

அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

அந்தாமத்து அன்பில் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொல் என்ற இவர் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தான் என்கிறார்
ஆடியாடியில்
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த படி சொல்லித்து அந்தாமத்து அன்பு
அந்த ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது
வைகுந்தா மணி வண்ணனில் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

உயர்வற -என்கிற பாட்டைச் -சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் அல்பமான
காம்ய ரசங்களைப் புசித்து உயர்வு ஏற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஸர்வ ரஸ -என்கிறவன்
ஸர்வ ரசிகத்வமும் ஆழ்வாரோடே அனுபவிக்கைக்கு -இவ்விடத்தில் ஸர்வ ரக்ஷகத்வமும் செய்து இருந்தால்
இவரோடு ஐக ரஸ்யம் ஸித்தியாதே என்று அவற்றை எல்லாம் ஸ்வ ரஷிதமாக வைத்து
பின்னை அனுபவிப்போம் என்று பார்த்து
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி
ஆழ்வார் திரு உள்ளத்திலே
சிக்கெனைப் புகுந்தான் –

ஜகத் ரக்ஷணத்துக்கு வேண்டுமாவை எல்லாம் தன்னுள்ளே யாக்கி அநந்ய பரனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான்

இவர் திரு உள்ளத்திலே இருந்து செய்தது என் என்னில்
இப்படிவரும் ஜகத்துக்கு ஸர்வ ரக்ஷகத்வங்களும் இவர் இடத்திலே யாக வேணும் என்று
இவருக்கு மயர்வற மதி நலம் அருளினன்

பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்
மயர்வற இவருக்கு அந்யதா ஞான விபரீத ஞானங்கள் ஆகிற இருளைப் போக்குகைக்கு பக்தி ரூபா பன்ன மாகிற
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கை
நந்தா விளக்காகப் பிரகாசிப்பித்து -அத்தாலே தானும் விகஸித ஸகஜ ஸர்வஞ்ஞனாய்
விஜ்வரனுமாயிற்று
விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது ஆயிற்று –

ஆழ்வாரை அனுபவித்து -இப்படி விளங்கினவன் -யாவன் ஒருவன் -அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அஞ்ஞானம் அசக்திகள் இல்லாத அமரர்கள் -அநந்த வைனதே யாதி ப்ரப்ருதிகள் –
த்ரிபாத் விபூதியும் அடங்காதவர்கள் பரிசர்யை பண்ண இருக்கும் ஸ்வாமி யானவன் –

துளக்கற்ற அமுதமாய்
அபர்யாய அம்ருதமாய்
ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர்ந்தான் தானாய் இரா நின்றான் –

இனி இவர் வள வேழுலகு தலையெடுத்து இவர் நம்மை விடில் செய்வது என்
என்று உள் நடுக்கம் தீர்ந்தது இப்போது ஆயிற்று –

துளக்கற்ற அமுதமாய்
அவன் இவரை அபர்யாப்த அம்ருதமாய் -பிரமுமோதஹ -என்கிறபடியே
அவன் தம்மை விரும்பி போக்யமாக நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிற படி –

இப்படி போக்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துளக்கம்
அற -அற்ற
அமுதமான சுடர் அடிகளைத் தொழுது உத்ஸாஹி –

அவன் நம்மைப் பார்த்தவருக்கு
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
எங்கும் பக்க நோக்கு அறியான்
அயர்வறும் அமரர்கள் -அநிமிஷராய் அபர்யாப்த அம்ருதம் அல்லது அனுபவியாதர்களையும் நோக்கு அறியான் –

ஆழ்வார் பக்கல் ப்ராவண்யத்தைத் தவிர்க்கலாமோ பார்ப்போம் என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டிற்று இலன்

என் பைந்தாமரைக் கண்ணன்
என் பக்கல் ப்ரீதியாலே விகசிதமான திருக்கண்களை யுடையவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-

அவதாரிகை

வைகுந்தா மணி வண்ணனில்
தன்னை இவர் பிரியில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
மாஸூச -என்றும்
சங்கையைத் தீர்த்து அவனை உளன் ஆக்கினார்

இவர் ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர
கேசவன் தமரில் –
இவ்வாழ்வார் உடன் கலைக்கையால் வந்த ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் இன்றிக்கே
இவரோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிறபடியை அருளிச் செய்கிறார் –

வந்து கலந்தபடி சொல்லி
அந்தாமத்து அன்பிலே
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது -வைகுந்தா மணி வண்ணனிலே
அந்தப் ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் அன்றிக்கே இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவிலும்
வெள்ளம் இட்டுப் பெருகுகிற படி சொல்லுகிறது -கேசவன் தமரிலே -என்று கண்டு கொள்வது –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

உயர்வற என்கிற பாட்டைக் -கேசவன் தமர் -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஆழ்வார் உபதேசத்தால்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தாலே வந்த உயர்த்தி அற்று
சம்பந்த ஞானம் பிறந்து
கேசவன் தமர் ஆனார்கள் –

ஈஸ்வரனும் உயர்வற உயர் நலம் உடையவன் ஆனான்
தத கேசவ நாமா வான் என்கிறபடியே ஸர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள் -என்னுதல்

ஸர்வேஸ்வரன் உடையார் என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புவது

எமர் என்று -ஆழ்வார் சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புவது

இத்தாலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்கு என்றபடி –

கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்
இப்படி அவர் திருத்துகைக்கு அடி என் என்னில்
கேசவ கிலேச நாசநன் -என்கிறவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளுகையாலே
முன்னை வினை
பின்னை வினை
ப்ராரப்தங்கள்
தாப த்ரயங்களும் எல்லாம் நசித்தது
பக்தி ரூபா பன்ன ஞானம் பிறந்து பர உபதேசம் பண்ணித் நிறுத்தின படி

குலம் தாரயதே தாத ஸப்த ஸப்த ச ஸப்த ச -என்கிறபடியே
இப்படிச் சொன்னவன் யாவன் ஒருவன் அவன் பிரஸாதத்தாலே லோகமானது திருந்தப் பெற்றது

மா சதிர்
பகவத் கிருபை -மகத்தான சதிர்
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்றுக் கேசவன் தமர் ஆனார்கள் –

மா சதிர்
இந்த சதிர் தம்மளவு அன்றிக்கே
தம்மோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிற படி
மயர்வற மதி நலம் அருளுகையாலே -மா சதிர் இது பெற்று

தன் தலையாலே வந்ததாகில் இறே -ஸா வதி யாவது

இது பெற்று -ஞான பக்திகளைப் பெற்று

எவன் அவன் மேல் மேல் என இவர்களை சிரஸா வஹிக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து வாய்க்கிற படி

எழு படி கால் என்ற அளவில்லை
தொட்டாரைத் தொட்டு இருபத்தொரு படி கால்
இன்னும் நம் அளவும் வருகிற படி

இப்படி உம் மக்களுக்கு அருளினவன் ஆர் என்ன
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ததீய சேஷத்வத்தில் அளவில்லாத வைகுந்தத்து அமரரும் முனிவரும்
மங்களா ஸாஸனம் பண்ண இருக்குமவன்

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்
இப்படி விஷயீ கரித்ததற்கு ஹேது
ஸ்வாமி யாகையாலே -வடிவு அழகாலும் கண் அழகாலும் – என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
மா சதிர் பெற்றுத்
துயர் அடி தொழுது எழு என் மனனே

நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நித்ய ஸூரி ஸேவ்யனானவன் -நமக்கு ஸ்வாமியான உபகாரகன் ஆனவன் –
ஸர்வ சமாஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளைத் தொழுது
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்கிறபடியே
கேசவன் தமரோடே வர்த்தி என்கிறார் –

———-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணையில்
அவனுடைய முக்த மோக்ஷ ப்ரதத்வத்தை அருளிச் செய்கிறார்

அணைவது அரவணையில்
நம்மோடே ஸம்பந்தமே ஹேதுவாக அவன் விஷயீ கரிப்பதான பின்பு
சம்சாரிகளுக்கு நம்மோடே ஒரு சம்பந்தம் உண்டாக்கி
அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் என்று பார்த்து
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை
அணைவது அரவணை-விவரிக்கிறது -அது எங்கனே என்னில் –
உயர்வற
மனஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஐஹிக ஆமுஷ்மிக போகமே உத்தேச்யம் என்று புஜிக்கிறவர்கள் ஆகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலம் என்று பர ப்ரஹ்மானந்தம் உடையவன் எவன் அவன் மோக்ஷ பிரதன் ஆனவன்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூடி இருந்து
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே எழுந்து அருளி இருக்க இச் சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால்
ஈஸ்வரன் கோசி என்றால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி– நான் ராஜ புத்ரன் -ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்

ஆகில் இங்கனே போராய் என்று அவன் அங்கீ காரம் பெற்று
மாதா பிதாக்கள் இருந்த படுக்கையிலே பிரஜை சென்று ஏறுமா போலே
பாதே நான்ய ஆரோஹதி -என்று ஏறக் கடவன் என்கிறது –

அணைவது
தாபத்ரயங்கள் எல்லாம் ஆறும்படி அணைவது
புணர்வது-என்கிறது மூவருக்கும் ஒக்கும் படி பரிமாறினது

ஆக
சர்வேஸ்வரனும் பிராட்டியுமாக திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏறி இருக்க
இவனும் அனுமதியால் ஏற
அணைத்து மடியில் வைத்து உகந்து
கிரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக்கொள்ள அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகம் ஆகிறது

இவருக்கு இப் ப்ராப்யத்துக்கு சாதகம் ஏது என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
இவருடைய துர்க்கதி கண்டு -தன் நிர்ஹேதுக கிருபையாலே
பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுத்தது இதற்கு ஹேது

இப்படிப்பட்டவன் எவன் அவன்
இருவரவர் முதலும் தானே
ப்ரமாதிகளுக்கு காரணமாய் இருக்க
ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர -என்கிற பிரஸித்தியாலே சொல்லுகிறார்
இவ்விபூதி கார்ய காரண ரூபத்தாலே சம்பந்தம் சொல்லிற்று
அவ்விபூதி போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்று சொல்லிற்று
இப்படி உபய விபூதிக்கும் நாயகனானவன் யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

ப்ரம்ம ருத்ராதிகளைப் போலே ஸம்ஸார பந்தகம் அல்லாமையாலே
அம்ருத ஸப்த வாசிகளாய் -அம்ருதம் திவி -வாசிகளாய் -அபர்யாப்த அம்ருத போகிகளாய்
இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே ஸேவ்யமானவன் மோக்ஷ பிரதன்

ப்ரம்ம ருத்ராதிகளுக்குக் காரணபூதனாய் நிர்வஹிக்கிறான் யாவன் ஒருவன் அவன்
எப்பொருட்கும்-இணைவனாம்
தேவாதி பதார்த்தங்கள் தோறும் ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
எந்நின்ற யோனியுமாய் பிறக்கும்

இப்படி
ப்ரம்ம ருத்ராதிகள் நடுவே விஷ்ணு நாமாவாயும் உபேந்த்ரனாயும்
சக்கரவர்த்தி திருமகனாயும் வஸூ தேவ புத்ரனாயும்
மஹா வராஹமாயும் குப்ஜா மரமாயும்
தாம் பிறக்கிறது எதுக்காக என்னில்
உயிர் அளிப்பான்
வீடு முதலாம்
மோக்ஷ பிரதனாகைக்காகவே அன்றோ

பஷி பிசாசம் முதலானோருக்கும் மோக்ஷம் கொடுத்து ரஷிக்கைக்காக -என்ன
ஆனால் எல்லாரும் முக்தராக வேண்டாவோ பின்னை என்ன –

துயர் அறு சுடர் அடி தொழுது
பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணைவன்
தேவதாந்த்ர பஜனாதிகளான துயர் அற்று மோக்ஷ ப்ரதனான ஸர்வ ஸ்மாத் பரனானவன் திருவடிகளை
என் மனனே
உனக்கு மயர்வற மதி நலம் அருளி மோக்ஷத்தையும் தன் நிர்ஹேதுக கிருபையால் தந்த உபகாரகனைத் தொழுது
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலை -அது யாராலும் கடக்கப் போகாதே –
பிரபலமான நீயே கடத்தித் தர வேணும் என்று பர ந்யாஸம் பண்ணி இருப்பார்க்கு
ப்ரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்

புணைவன்
புணையாம் அவன்
ஸர்வ பர நிர்வாஹகன் -ஆனவன்
என் மனனே தொழு

ஸம்ஸார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ் தரந்தி மநீஷண
விஷ்ணு போதாஸ்ர யந்மே மன –என்னக் கடவது இறே
அக்கரையும் இக்கரையும் ஒன்றாய் நின்று கடத்தும் ஓடம் இறே –

———

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டில்
ஸர்வேஸ்வரன் இவனுக்கு மோக்ஷம் கொடுப்பானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
அங்கே போகவுமாம் -இங்கே இருக்கவுமாம்
ஏதேனுமாக எனக்காக இருக்கும் இருப்புத் தவிர்த்து உனக்கே உறுப்பாம் படி
அதுவே எனக்கு வடிவாம்படி தந்து அருள வேணும் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ் கர்ஷித்தார்

கீழே அணைவது அரவணையிலே
வீடு முதலாம் என்று தானும் அனுசந்தித்து
நலம் அந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்று பிறருக்கும் உபதேசிக்கக் கண்டு
ஸர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரங்களுக்கும் மோக்ஷம் கொடுப்பதாகப் பாரிப்பதைக் கண்டு
தேவரீர் எனக்கு மோக்ஷம் தரப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –

அதாகிறது
உனக்கு மோக்ஷம் கொள் என்று எனக்காகத் தருகை அன்றிக்கே
நமக்காகக் கொள் என்று -தேவரீர்க்கே ஆம்படி
ஸ்ரக் சந்த நாதிகளாக தேவர் கொள்ளும்படியாகத் தர வேணும் என்று
தான் நினைத்து இருந்தபடியைப் பிரார்திக்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -எம்மா வீடு விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலம் எம்மா வீடு
ஐஹிக ஆமுஷ்மிகாதிகள் அன்று
உயர் நலமான வீடு கொள்ளும் என்றான் ஈஸ்வரன்
வேண்டா என்றார்
மா வீடு -வி லக்ஷணமான மோக்ஷம் கிடீர் -என்றான்
அதுவும் வேண்டா -என்கிறார்
எம்மா வீடு கிடீர் -ஐஸ்வர்ய கைவல்யாதிகள் -என்று இருக்க வேண்டா –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம் என்றான் –
அதுவும் வேண்டா என்றார்
இவைகள் எல்லாம் எம்மா வீட்டுத் திறங்கள்

செப்பம் -செப்போம்
எவ் வகையாலும் உயர்நலம் உண்டே யாகிலும் எனக்கு வேண்டா

செப்போம் -செல்லோம் —
நீயும் ப்ரசங்கிக்க வேண்டாம்
நானும் நிஷேதிக்க வேண்டா

எம்மா வீட்டுத் திறமாவது
ஸா லோக்ய ஸா ரூப்ய ஸா மீப்ய ஸா யுஜ்யம் என்ற இவைகள்

உமக்கு இப்படி அறியும்படி உபதேசித்தார் யார் என்ன
உயர் நலம் உடையவன் எவன் அவன் -எனக்கு மதிநலம் அருளினன் –
எனக்கு -என்கிற
மயர்வு அறுத்து
அத்யந்தம் பரதந்த்ரனாம் படி அருளினன்

ஆகில் உமக்கு வேண்டுவது என் என்ன
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
அகவாய் சிவந்து புறவாய் கறுத்து
மஹத்தாய்
மணத்து மலர்ந்த திருவடித் தாமரைகளை அடியேன் தலையிலே வைக்க வேணும் –
நீ நிர்ஹேதுகமாக அருளின பக்தியைப் பெறுகையாலே இதுவே அமையும் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிமிஷமும் விஸ்லேஷிக்கப் பொறாத நித்யருக்கு நிர்வாஹகனானவன்
துயர் அறு சுடர் அடியான பாத பற்பை
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உள்ளவனான என் சிரஸ்ஸையே அலங்கரிக்கையை

ஒல்லை
இந்த அர்த்தித்தவம் இப்போதே செய்து அருள வேணும் –

நாம் இப்படி சீக்கிரமாக யாருக்குச் செய்தோம் என்ன
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்று
பதறிக் கொண்டு வந்து தோன்றி யானையின் துயரம் தீர்த்தவன்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை யிலே அருள வேணும்

கொக்குவாயும் பிடி கண்ணியும் இட்டால் போலே
கழற்றாமல் ஆதரிக்க வேணும் –

அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
ஸ்வாமியான உன் துயர் அறு சுடர் அடி
துக்க அந்தகாரமான காள ராத்ரிக்கு அவிவேக கந அந்த திங் முகத்திலே
பிரளய காலத்திலே ஸூர்யனைப் போலே என் ஹ்ருதயத்திலே உதித்தும்
போக்கும் திருவடிகளைத் தொழுது எழு என்று
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார் –

——–

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

கிளர் ஒளி இளமையில்
எம்மா வீட்டில் நிஷ் கர்ஷித்த ப்ராப்யம் பெறுகைக்குத் திருமலையை ஆஸ்ரயித்தார்

—–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

உயர்வற என்கிற பாட்டைச் -சதிரிள மடவார்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சதிராவது –
ப்ரம்ம பாவன நிஷ்டரையும் தங்கள் வசம் ஆக்குகை

பருவத்தால் வந்த இளைமையாலும் மோஹிப்பிக்கை –
பவ்யர்களாய் இருந்து வஸீ கரிக்கிற சதிராகையாலே உயர்வற என்கிறது –

மடவார்கள் தாழ்ச்சியை மதியாதே
அவர்கள் தங்கள் ஆகிஞ்சன்யம் தோன்ற வணங்கி ஒடுங்கி யாயிற்று வஸீ கரிப்பது
அவர்கள் பக்கல் மனஸ்ஸை வைக்காதே –
இது நெடு நாளவற்று உயர்த்தி கொளே இனி யமையும்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
சவுந்தர்ய சீலாதி குணங்களை யுடையவனானவன் பக்கலிலே மனஸ்ஸை
வைமின் என்ன

அவன் உங்களுக்கும் மயர்வற மதிநலம் அருளுகைக்காகாவே திருமலையிலே
வந்து நிற்கிறவன் –

அதிர்குரல் சங்கத்து அழகர்
மயர்வு பிறப்பிக்கும்
மடவார் தாழ்ச்சியை மதியாதே என்றும்
மதியிலே நலமான ஞான பக்தி வைராக்யம் பிறக்கும் படி
அதிர்குரல் சங்கத்து அழகர்
ஊதுகிற குழல் போலே சங்கம் முழங்குகிற படி –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அதிர்குரல் சங்கத்து அழகர்

சவுந்தர்யாதிகளிலே கண் வைக்காதே -அடிமை செய்து இருக்கும் படிக்கு –
நித்யர்
முக்தர்
முமுஷுக்கள்
பத்தர்
கர்ம பாவநா நிஷ்டர்
ப்ரஹ்ம பாவநா நிஷ்டர்
ஐஸ்வர்யார்த்திகள்
கைவல்யார்த்திகள்
எல்லாரும் அவரவர் பேறு பெறுகைக்காக –

மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே
துயர் அறு சுடர் அடி தொழுது எழுவது பயனே
சந்திரன் தவழும்படி ஓங்கின கொடி முடியை யுடைய
மாலிருஞ்சோலை மலையை
பருத்து உயர்ந்த சோலையை யுடைய மலையையே

பதியதி ஏத்தி
அழகர் நித்ய வாஸம் செய்கிற பதியான கோயிலிலே
நலம் திகழ் நாரணன் துயர் அறு சுடர் அடி
ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளைத் தொழுது

என் மனனே
எழுவது பயனே -என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

இரண்டாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–முதல் பத்து விவரணம்–

February 1, 2022

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை நூலை இயற்றியவர் ஒரு வைணவப் பெண்மணி.
இவரது பெயர் ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை. காலம் 13 ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ திருவாய்மொழிப் பாடல்கள் சிலவற்றிற்கு எழுதப்பட்டுள்ள விவரண சதகம்.

பொதுவாகச் சைவ, வைணவ மரபுகளில் சமய ஆசாரியருடைய நூல்களே செல்வாக்குப் பெறுவது வழக்கம்.
அல்லாதார் நூல்கள் மக்களிடம் அவ்வளவாகப் பரவுவது இல்லை. அவ்வாறு பரவாமல் போன நூல்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது. அதில் 164 பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு
அவற்றிற்கான விரிவுரை கூறுவது இந்த நூல்.
திருவாய்மொழியில் 10 அல்லது 11 பாடல்களைக் கொண்ட பகுதி ஒரு பதிகம். 10 பதிகங்களைக் கொண்டது ஒரு பத்து.
இவ்வாறு 10 பத்துக்கள் சேர்ந்ததே திருவாய்மொழி.
இவ்வாறு அமைந்துள்ள திருவாய்மொழி நூலிலிருந்து ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் முதல்-பாடல் அல்லது முதல்-இரண்டு-பாடல்
விரிவுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களே 146.
இந்தப் பாடல்களுக்கு விவரண சதகம் பாடும்போது அந்தந்த பதிகத்தில் அடங்கியுள்ள பாடல்கள்
அனைத்துக்குமான தொகுப்புப் பொருளையும் இந்த நூல் குறிப்பிட்டு மணிப்பிரவாள நடையில் கூறுகிறது.

———-

பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து -பாண்டிய நாட்டின் ஒரு பகுதி -வழுதி நாடு -தலைநகர் -திருக்குருகூர்
கோவிந்தன் தனக்கே குடி அடியாரான வேளாள குல மன்னர் -திருவழுதி வள நாடர்
இவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் -செந்நெறிச் செல்வர்
இவர் திருக்குமாரர் சக்ரபாணியார்
இவர் திருக்குமாரர் -அச்சுதர்
இவருக்கு செந்தாமரைக் கண்ணர் என்றும் பொற் காரியர்
இருவரும் திருக்குமாரர்கள்
பொற் காரியாரது திருக்குமாரர் காரியார்
இவரே நம்மாழ்வாரைத் தோற்றுவித்து உலகை உய்வித்த புண்ணிய புருஷர் –

திரு வண் பரிசாரம் திருப்பதியில் -திருவாழ் மார்பணிந் செல்வப்புதல்வியார் -உடைய நங்கையார் -ஆழ்வாரது திருத்தாயார்

திருக்குறுங்குடி நம்பி நாமே உங்களுக்கு புதல்வராவோம் என்று அருளிச் செய்து ஆழ்வார் திரு அவதாரம்

ஆதி சேஷன் முன்னமே திருப்புளிய மரமாக திரு அவதரித்தார்
கலியுகம் –43 நாள் -வைகாசி -விசாகம் -இவர் திரு அவதாரம் -சேனை முதலியார் அம்சம் –
உலகு இயல்புக்கு மாறாக இருக்க மாறன் என்று திரு நாமம் சாத்தினார்கள்

மதுரகவி ஆழ்வார் -செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் -கேள்வி
அத்தைத் தின்று அங்கே கிடைக்கும் -பதில்

அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்

திவ்ய தேச எம்பெருமான்கள் தங்கள் பரிவாரங்களுடன் திருப்புளிய மரத்தில் காட்சி கொடுத்து பாடல்கள் பெற்று மகிழ்ந்தனர் –

———

அர்த்தபஞ்சகம் -ஒவ்வொன்றுக்கும் இரண்டு பதிகங்கள் திருவாய் மொழி என்றும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -முதல் இரண்டு பத்துக்கள்
உணர் முழு நலம் -முழு உணர் முழு நலம் -ஞான ஆனந்த ஸ்வரூபம்
ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந -அடுத்த இரண்டு பத்தும் –
ப்ராப்த் யுபாயம் -அடுத்த இரண்டு பத்தும்
பிராப்தி விரோதி அடுத்த இரண்டு பத்தும்
பலம் ப்ராப்தோ -கடைசி இரண்டு பத்தும் –

த்வயார்த்தமே திருவாய் மொழி -தீர்க்க சரணாகதி -சார ஸங்க்ரஹம்

தோன்றா உபநிஷத் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாம் இவை –

ஆயிர மா மறைக்கும் அலங்காரம் யாரும் தமிழுக்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்க்கு எல்லாம்
தாய் இரு நால் திசைக்கும் தனித்தீபம் தண்ணம் குருகூர்ச்
சேய் இரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே

ஆரா வமுதம் கவி யாயிரம்
என்று எல்லாம் கம்ப நாட்டாழ்வார் சடகோபர் அந்தாதி

—————

தேசிகரும் –
தமிழ் வாதம் அறிந்த பகவர்களே
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே
சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு
ஸூர்யனால் மலரப் பெற்ற தாமரைக்காடுகள் -அவன் திருக்கண்கள் -ரகுவீர கத்யத்தில் -ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே –
புண்டரீகத்து அங்கேழ் வனமோர் அனைய கண்ணான் -23–திரு விருத்தப் பாசுரம்

முதல் -23-பாசுரங்கள் கொண்டே ஸ்ரீ பாஷ்யார்த்தம் –

——-

வேதம் தமிழ் செய்த மாறன் –

ஸ்வரூப பரமான அருளிச் செயல்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -1-1-1–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஆனந்தோ ப்ரஹ்ம -தைத்ரியம்
இனன் உணர் முழு நலம் -1-1-2-விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ப்ருஹதாரண்யம்
மிகுநர் இலனே -1-1-2- ந தத் ஸமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஸ்வேதா
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -3-7-1-நாராயண பரஞ்சோதி -தைத்ரியம்
பரஞ்சோதீ –3-1-2-பரம் ஜோதி ரூப ஸம்பத்ய –சாந்தோக்யம்

பங்கயக்கண்ணனை -3-7-1-யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம்
செம் பொன் திரு உடம்பே -2-5-1-ஆ ப்ராணதாத் ஸர்வ ஏவ ஸூ வர்ண -சாந்தோக்யம்
எண்ணின் மீதியன் எம்பெருமான் –2-2-1-அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம்
சொல் அளவன்று -8-2-6- யதோ வாஸோ நிவர்த்தந்தே
இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் -8-2-6-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத
ஸ அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாதம் அவிஜா நதாம் -கேனோ
என் வல் வினை மாய்ந்தறச் செய்குந்தன் –7-9-7-ஸர்வே பாப்மாந பர தூயந்தே -சாந்தோக்யம்
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1- யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா -சாந்தோக்யம்

காரண பரமான அருளிச் செயல்கள்

முதல் தனி வித்தேயோ -10-10-8–ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -மஹா உபநிஷத்
தானோர் உருவே தனி வித்தாய் –1-5-4-ப்ரஹ்ம வா இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் -ப்ருஹதாரண்யம்
மூவாத் தனி முதலாய் –2-8-5—ஆத்மா வா இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -ப்ருஹதாரண்யம்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –1-5-2–ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -சாந்தோக்யம் –

ஸ்ருஷ்டி வாக்யங்கள்

பாமரு மூ வுலகும் படைத்த –7-6-1- தத் ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி –சாந்தோக்யம்
தானே உலகு எல்லாம் தானே படைத்து –10-5-3-இதம் ஸர்வம் ஸ்ருஜத -தைத்ரியம்
எல்லா உலகும் உயிரும் தானேயாய் –10-7-2-ஸத் ச த்யச்சா பவத் -தைத்ரியம்
யாவையும் எவையும் தானாய் –3-4-10-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் –

காரண கார்ய நிபந்தன சாமாநாதி கரண்யம்

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-நாராயணாத் பிரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே

ஆத்ம சரீரபாவ நிபந்த சாமா நாதி கரண்யம்

ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –8-1-5—அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் —1-1-10-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மிந்
த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ரியம் –
தானேயாகி நிறைந்து –10-7-2–தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -தைத்ரியம்
முதலில் சிதையாமே –1-5-2-பூர்ணம் ஏவா வஸிஷ்யதே –ஸ்வேதாஸ்வரம்
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து –8-1-5–ஆபோ வா இதம் அக்ரே சலிலம் ஆஸீத் தஸ்மிந் ப்ரஜாபதிர் வாயுர் பூத்வா சரத் –தைத்ரியம்

ஏனமாய் நிலம் கீண்ட –5-7-6-தாம் வராஹோ பூத்வா ஹரத்
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3-3-2-விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் -புருஷ ஸூக்தம்
எல்லையில் சீர் -2-5-9-விபூதீ நாம் நாஸ்த்யந்தோ விஸ்தரஸ் யமே -கீதை
தானே யாள்வானே –10-5-3-அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம்
அயனாம் சிவநாம திருமாலால் -8-8-11
அரியை அயனை அரனை அலற்றி -10-10-11-

அவனே அவனும் அவனும் அவனும் -9-3-2—ச ப்ரம்மா ச சிவ சேந்த்ர -தைத்ரியம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6-1—தத் ஹைதத் பஸ்யன் ருஷி வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்யச்ச
தன்மை பெறுத்தி -3-7-7–ஸ்வேந ரூபேணே அபி நிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
நல்ல வமுதம் –2-5-9-இதம் அம்ருதம் -ப்ருஹதாரண்யம்
இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து –8-8-8—ஞாதய பர்யுபாஸதே ஜாநா ஸிமாம் ஜாநாஸி மாமிதி –சாந்தோக்யம்

இனிப்பிறவி யான் வேண்டேன் –10-6-1—லிந்து மாபிகாம் –சாந்தோக்யம்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11- தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-தைத்ரியம் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ –8-1-5–தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
ஆர் உயிரேயோ –8-1-5–பிராணஸ்ய ப்ராணா –கேந உபநிஷத்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் –9-1-1–ததேதத் ப்ரேயஸ் புத்ராத் பிரேயோ மித்ராத் ப்ரேயோ வித்தாத் –ப்ருஹதாரண்யம்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி -முண்டகம் –

சந்தங்கள் ஆயிரத்து –10-9-11-தத் சந்தஸாம் சந்தஸ்த்வம் ப்ரஹ்மவை சந்தாம்ஸி -தைத்ரியம்
பொறி யுணர்வு அவை இலன் –1-1-2-யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் –முண்டகம்
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –3-4-10-ஏகஸ் ததா ஸர்வ பூத அந்தராத்மா ந லிப்யதே லோக துக்கேந பாஹ்ய -கட
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –4-1-1–ஸ்வோபாவா மர்த்யஸ்ய யதந்த கைதத் –கட
தோற்றங்கள் ஆயிரத்துள் –6-8-11–வாசா விரூப நித்யயா -தைத்ரியம்

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-2-ப்ரஹ்ம தம் பராதாத் –ப்ருஹதாரண்யம்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –10-7-5–ஏதஸ் யை வைதாநி ஸர்வாணி நிச்வஸிதாநி –ப்ருஹதாரண்யம் –
பல பிறப்பாய் –1-3-2—பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1–வாஸூ தேவம் ஸர்வம் இதி –கீதை –

————–

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் –

நிர்ஹேதுகமாக ஸ்வரூப ரூப குணங்களையும் நித்ய ஸூரிகள் அதிபதியாயும்-நிர்வாஹகானாயும் –
இருக்கும் இருப்பையும் காட்டிக் கொடுக்க –
ப்ரத்யக்ஷமாக அனுபவித்த ஆழ்வார் -அனுபவ ஜெனித ப்ரீதி உந்த -இன்ப வெள்ளத்தை
வாயினால் பாடி அல்லது தரிக்க மாட்டாமல் பேசுகிறார் –

உயர்வு அற -வருத்தம் இல்லாமல்
மற்றவர்கள் உயர்வு அறும் படி -இல்லாமல் போகும்படி –
ஸூர்யன் ப்ரகாஸத்தால் நக்ஷத்திரங்கள் இருந்தும் இல்லாதவை போல் இருக்குமா போல் –

உயர் –
அளவிடமுடியாத -எல்லை காண முடியாமல் உயர்ந்து கொண்டே இருக்குமே
தொல்லை யஞ்சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று -இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் –
நலம் -ஆனந்த குணம் -எண்ணற்ற கல்யாண குணங்கள் –
ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட விபூதிகள் -மூன்று அர்த்தங்களும் உண்டு –

யவன் -அவன் என்பதால்
இந்த கல்யாண குணங்கள் அவனை அடைந்து நிறம் பெறுகின்றன

ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்தோ -(தைத்ரியம் )
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ஸ்வேதாஸ்வரம் )
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )

கோந் வஸ்மின் ஸாம் பிரதம் லோகே குணவான் (ஸ்ரீ மத் ராமாயணம் )
குணவான் என்றதே இங்கு நலமுடையவன்

த மேவம் குண ஸம் பன்ன மகா மயதமேதி நீ
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத (ஸ்ரீ மத் ராமாயணம் )

கேவல அனுபவ ஆனந்த ஸ்வரூப பரம ஸ்வராட் (ஸ்ரீ மத் பாகவதம் )

ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முர மதந குணஸ் தோம கர்ப்பம் முனீந்திர -தேசிகன்

மனுஷ்ய- -கந்தர்வ -சிரலோக பித்ருக்கள் -ஆஜானஜ தேவர் -கர்மதேவர் -தேவர் –
இந்திரன் -ப்ருஹஸ்பதி -பிரஜாபதி -ப்ரஹ்மானந்தம் -சொல்லி
மீண்டும் கீழே வந்து -இப்படி பல மடங்குகள்

உபர் யுபர் யப்ஜபுவோபி பூரு ஷாந் பிரகல்ப்ய தேயே சதம் இத் யனு க்ரமாத் க்ரஸ்த்வ
தேகைக குணாவ தீப்ஸயா ஸதாஸ்திதா நோத்யமதோதி சேரதே

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ

சுடரடி -திவ்ய மங்கள விக்ரஹம் உப லக்ஷணம்
சுடர் ஒளி மூர்த்தியை
மாசூணாச் சுடர் உடம்பாய்

அர்த்த பஞ்சகமும் இதில் உண்டே
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பர ஸ்வரூபம்
என் மனனே -அதிகாரி ஸ்வரூபம்
மயர்வு -விரோதி ஸ்வரூபம்
அருளினன் -உபாய ஸ்வரூபம்
தொழுது எழு -ப்ராப்ய ஸ்வரூபம்
உபதேச கர்ப்ப அனுபவம் -அனுபவ கர்ப்ப உபதேசம் –

——–

எம்பெருமானார் -அடுத்தபடி
சந்திரிகிரி ஐயன்
ஸ்ரீ மன் நாராயண ஐயர்
திருக்கோஷ்டியூர் ஜீயர்
என்று மூவரையும் குறிப்பிட்டு பின்பு
வடக்குத் திருவீதிப்பிள்ளை பற்றியும் – குறிப்பிடுகிறார்

எனவே
இப்பிரபந்த கர்த்தா -பெண்பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஸ்வாமிகளுடைய சிஷ்யை-
ஸர்வஜித் வருஷம் இவர் திரு அவதாரம்
அதுக்கு அடுத்த ஆங்கீ ரஸ வருஷம் இவரது
கலி யுகாதி -சக வருஷங்கள் எண் குறிப்பிட வில்லை
ஆங்கீர வருஷம் -மார்கழி -26-தேதி இப்பிரபந்தம் வெளியிட்டதாகக் குறிப்பிடுகிறார் –

நிர்ப்பரோ நிர்பயோஸ்மி -ந்யாஸ விம்சதி கடைசி ஸ்லோகத்தை இவர் காட்டி உள்ளதால்
தேசிகருக்குப் பிற்பாடாராக இருக்க வேண்டும் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாமம் இந்த நூலில் இல்லை
ஆகவே அவருக்கு முன் திரு அவதரித்தவராக இருக்க வேண்டும்
ஆகவே 1270-1370-காலத்துக்குள் இவர் அவதாரம்

ஈட்டில் உள்ள ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு வந்துள்ளது இப்பிரபந்தம் –
இவ் வுரை நூறு பாட்டுக்களுக்கே உள்ளது
தஞ்சை ஸரஸ்வதி மஹாலில் உள்ள ஒரே சுவடு -ஆசிரியர் தமது கையாலேயே எழுதப்பட்டது –

ஸரஸ்வதி மஹால் ஓலைச்சுவடிகள் 700 வருஷங்கள் பழைமை என்பதால்
இது இவரே எழுதின ஓலைச் சுவடியாக இருக்க முடியாது –

இணைவனாம் எப்பொருட்க்கும் -என்கிறபடி -முதல் பாசுரம் மற்ற எல்லா பாசுரங்களுடன் இணைக்கப் பட்டு
அவற்றுடன் பொருள் ஒன்றி இருப்பதை நன்கு விளக்குகிறது இந்நூல்
வருந்தி நான் வாசகமாலை கொண்டு -என்ற ஆழ்வார் அருளிச் செயலுக்கு ஏற்ப
திருவாய் மொழிச் செய்யுள்களையே வசன நடையில் தொகுத்தால் போலே அமைந்துள்ள இந்நூலுக்கு
திருவாய் மொழி வாசக மாலை என்று பெயர் இடப்பட்டுள்ளது –

உயர்வற உயர் நலம் உடையவன் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று சேர்த்து
உயர்வற -உயர்த்தி அற்ற லீலா விபூதியை -ஈர் ஏழு லோகங்களை –
உயர் நலம் உடையவன் -அவ்வெம்பெருமான் இருப்பிடமாகிய நித்ய விபூதியைச் சொல்லும்
கங்குல் -இரவு -பகல் -இருள் தரும் மா ஞாலம் -நித்ய விபூதி -பகல் -இவற்றை உடையவன் உயர் நலம் உடையவன் –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
இப்படி ஸ்வா பதேச அர்த்தங்களையே இவ்வாறு இணைத்து அருளிச் செய்கிறார் –

இதே போல் ஆழி எழ பாதிக்கத்துக்கு உயர்வற உயர் நலம் உடையவனே வாமனன் என்று
கொண்டு பொருத்திப் பொருள் விளக்குகிறார் –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———

இந்த ஏட்டில் மூன்று சித்ரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழ் மறை தந்து அருளிய -ஆராவமுதாழ்வார் -பாம்பணையில் பள்ளி கொண்டு அருள
நடுவில் பராங்குச நாயகி -ஞான முத்ரையுடனும்
வலப்புறம் கண்ணன் யசோதா பிராட்டியால் உரலினோடு இணைத்துக் கட்டப்பட்டு -இரண்டு மருத மரங்களும்
இவ்வாறு ஒலை யிலே சித்திரம் வரைவதும் சகஜம் போல் அன்று இருந்தது போலும்

——–

அவதாரிகை
ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஓடி ஓடிப் பல பிறவிகளிலும் தோன்றித் தோன்றி
எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துத் தன் உண்மையான ஸ்வரூபத்தை மறந்து தவிக்கும்
எண்ணற்ற ஜீவாத்மாக்களை உய்வித்து நற்கதியை அடைவிப்பதற்காகத் தோற்றுவித்த
தத்துவ உபதேச திவ்ய பிரந்தங்களுக்குள்
திருவாய் மொழி எனப்படும் செஞ்சொல் கவிகள் ஆயிரமும் ஒன்றாகும் –

இது மதிநலம் அருளப்பெற்ற -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான்
என்று இருந்த நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட அந்தாதித் தொடையில் அமைந்த சரம பிரபந்தம்

ஆழ்வார் அவனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டித விபூதியை யாதாத்ம்யமாக காட்டப்பட்டு அறிந்து
அருளிச் செய்த -பொய்யில் பாடல்கள் -தேனினும் இனிய தமிழ் பாசுரங்கள்
ஆழ்வாரை வியாஜமாக எம்பெருமானே -தானே தன்னைப் பாடிய வாய் முதல் அப்பன் –

இவற்றில் நூறு பாடல்களுக்கே இந்த உரை -விவரண சதகம் என்று தாமே திருநாமம் சூட்டி அருளுகிறார்
இதில் முதல் 13 ஏடுகளும் -15-16- ஏடுகளும் லுப்தம்
இப்பொழுது கிடைத்த ஏடுகளில் 1-6 -தொடங்கி உள்ளது –

————-

பரிவதில் யீசனைப் பாடி விரிவதில் மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகைப் பூவே –1-6-1-

தத் ஆஸ்ரயணீயன் யார் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அத்தாலே
தேவதாந்தர பஜனம் அற்று
அருளின பக்தியால்
ஸூகரமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணப் பெற்றேன்

நீங்களும்
விரிவது மேவலுறுவீர்
அயர்வரும் அமரர்கள் அதிபதியானவனை ஆஸ்ரயித்து
விஸ்த்ருதராக-விரிந்த -மழுங்காத ஞானம் உடையராய் – வேண்டி இருப்பீர்

பிரிவகை யின்றி நன்னீர் தூவி
சற்றும் அசராமல் ஆஸ்ரயிக்கிற
நித்யருக்கு அதிபதியாய்
நியாந்தா வானவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது

பிரிவகை யின்றி -அயோக்யன் என்று அகலாதே
நன்னீர் தூய்ப் -ஏலாதி ஸம்ஸ்காரங்கள் வேண்டா
துயர் அறு சுடர் அடிகள் ஆகையாலே
புரிவதுவும் புகைப் பூவே -ஏதேனும் புகையும் பூவும் அமையும்
கள்ளார் துழாயும் -இத்யாதி

சுடர் அடி தொழுது எழு என் மனனே
இப்படி
ஸூலபமுமாய் –
ஸூ கரமான திருவடிகளைத் தொழுது வர்த்தி -என்கிறார் –

———–

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயரில்
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் –
இப்படி போக்யனானவனை விட்டுப் ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு அகலுவதே -என்று
கேவலரை நிந்திக்கிறார்

உயர்வற என்கிற பாட்டைப் பிறவித் துயர் என்கிற பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
காம்ய பலன்களையும்
அதுக்கும் அவ்வருகான கைவல்யத்தையும் பெறுவதே என்று கேவலரை நிந்திக்கிறார் –

உயர்வு அற
பிறவித துயர் அற
ஸ்வர்க்காதிகளில் கைவல்யத்தில் உயர்த்தி யுண்டோ என்ன
அவற்றுக்கு ஒரு வகையாலும் உயர்வு இல்லை என்கிறது -பரமானந்தத்தைப் பற்றச் சொல்கிறது –

அற ஞானத்துள் நின்ற
உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஞான ஆனந்தாதி ஸ்வரூபம் ஆனவன்
மயர்வற மதிநலம் அருளினன்
பரமானந்த ஸ்வரூபத்தைப் பற்றி
ஜரா மரண மோஷாயா -என்றதை அறிந்து
ஆத்ம அனுபவ ஞானத்தில் ஞானம் முற்றி இருக்கை –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்குகிற மதி நலம் அருள பெற்று அவனாலே

துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
பிரகிருதி விநிர் முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன்
அவன் ஆழிப்படை அந்தணனை
அசர்வற்று
அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரான நித்ய ஸூரி சேவ்யனை அகன்று
ஆத்ம அனுபவத்திலே மூளத் தேடுவதே
ஏதேனும் ஒன்றைத் தேடிப் பெறும் போது அவனை ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்படி இருக்கிற
இது -என்ன தார்மிகனோ -என்கிறார் –

ஆழிப் படை அந்தணனை
துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்கிக் கொள்வதே -சுத்தி குண விசிஷ்டன் என்றதாயிற்று
அவர்கள் பற்றுற்றும் என் மனனே
சுடர் அடி தொழுது எழப் பெற்றோமே

ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –
அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் பழைய ஸம்ஸாரமே ஸித்திக்கும் என்கிறார் –

———–

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
பூர்ணனுமாய் இருக்கிறவன் -யாவன் ஒருவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அமரர்கள் ஆதி முதல்வனானவன் –
அக்குணங்களை நித்ய ஸூரிகள் அனுபவிப்பிக்க –அவர்கள் தம் அதீனமாம் படி இருக்கிறவன் –

மயர்வற மதிநலம் அருளினன்
அஞ்ஞான கந்த ரஹிதமான -பக்தி ரூபா பன்ன ஞானத்தை
தன் நிர்ஹேதுக கடாக்ஷத்தினாலேயே பூரித்தவன் யாவன் ஒருவன்
தன்னோடு ஏக ரஸம் அனுபவிக்கும் படி பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் –

கருகிய நீல நன்மேனி வண்ணன்
தம்மோடு உண்டான அவயவ அனுபவம் பண்ணினவற்றால் வந்த திருமேனியில் புகர்
கருத்து நெய்த்துப் பேசுகைக்க விஷயமாம் படி யாயிற்று –

செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்குப் பிரகாசகமான திருக்கண்களை யுடையவன்
எனக்கு மயர்வான அவித்யாதிகளைப் போக்கி
ஞான பக்தியாதிகளாலே தன்னோடு ஐக ரஸ்யம் பிறந்து அனுபவிக்கும் படி
பண்ணினவற்றால் வந்த என்னவா
தன்னதாம் படி
திருமேனியும் திருக்கண்களும் செவ்வி பெற்று விகஸிதமாய் யுகக்கிறவன்
யாவன் ஒருவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
சற்றும் அசராதே ஏக ரஸ அனுபவ மக்நரானவர்களும் ரசிக்கிற ஸ்வாமி யானவன் –

பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஸர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற் கொள்ளுவதாகக் கடாக்ஷித்தால்
அவனுடைய அங்கீ காரம் பெற்றால்
அந்த ஹர்ஷத்தால் பெருக்காறு சுழித்தால் போல்
தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையவனாய்க் கொண்டு யாயிற்று த் தோற்றுவது –

இன்னம் -அவனை மேற்கொள்ளப் பெற்றோம் இறே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடே யாயிற்று மேற் கொள்ளுவது –

பூ மகளார் தனிக்கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய்
போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால்
இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதவனாய் யாவன் ஒருவன் இருக்கிறான்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

அவன் பண்ணின மஹா உபகாரம் மட்டில்லை என்ன
அது ஏது என்ன
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்
திருவனந்த ஆழ்வானுக்குப் படுக்கையால் வந்த முறை
திருவடிக்கு வாகனமான முறை
பிராட்டிமாருக்கு மஹிஷியான முறை
ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வானுக்கு செங்கோல் செலுத்தின முறை
இப்படித் தனித்தனியே முக்தர் நித்யருக்கு முறை முறையால் வரும் கைங்கர்யங்கள் எல்லாம்
அவர் அவர்களோடே பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருக்கு ஒரு வழியால் வந்தது அன்றிக்கே
சர்வ வித ரஸத்தையும் தந்து விடுகிறிலன்
என் அளவில் நித்ய முக்தர்கள் எல்லார் அளவிலும் பண்ணும் ஆதரத்தை
என் பக்கலிலே பண்ணா நின்றான் –

ஒழிவிலன் என்னோடு உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறான் –
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கேயே இருந்து கேட்க்கும் அத்தனை

தண் தாமம் செய்தது என்று நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணினார் என்றார்
கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளார் உடன் பரிமாறும் படியை என் ஒருவன் இடம் பரிமாறா நின்றான் என்கிறார் –

பூசும் சாந்திலே -இவர் அவயவங்களை சந்தன புஷ்ப்பமாகக் கொண்டான்
இதில் போக வஸ்துக்களாயும் போக ஸ்தானங்களாயும் கொண்டான்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
நீயும் ஓர் அனுபவம் குறையாமல் துயர் அறு சுடர் அடி தொழுது அனுபவித்து எழு
என் மனனே -என்கிறார் உபகார ஸ்ம்ருதியாலே –

—————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படையில்
இப்படிப்பட்ட பேற்றுக்கு இத்தலையில் ஒன்றும் செய்ய வேண்டாத படி
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி தொடக்கமாக -பரமபக்தி பர்யந்தமாகத் தானே பிறப்பித்து
நித்ய ஸூரிகள் பேற்றையும் தந்தான் என்கிறார் –

கீழில் திருமொழியில் பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அநுஸந்தித்து உச்சி யுள்ளே நிற்கும் என்று இறே கீழ் நின்றது
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகே ஏற்றமாகச் செய்து கொடுக்களாவது இல்லை என்று நிர் வ்ருத்தராகிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி –
நிர் வ்ருத்தி என்று ஸூ கமாக ஸூ கிக்கிறார் என்றபடி

கீழே பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அனுசந்தித்துச் சொல்லுவது ஓர் ஏற்றம் உண்டு
உச்சியுள்ளே நிற்கும் என்று இறே -கீழ் இதுக்கும் மேல் ஏற்றமாக –பண்ணிக் கொடுக்கிறான் என்று பட்டர் அருளிச் செய்தார்

நீர் தாம் இங்கனே கிடந்தது படுகிறது என்
மறந்து பிழைக்கலாகாதோ என்ன
எத்தைச் சொல்லி மறப்பேன் என்கிறார் –

———–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக லீலா விபூதி யோகம் சொல்லுகிறது
உயர் நலம் உடையவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
யவன் அவன் என்று –
உபய விபூதியிலும் அதிசயிதமான த்ருதீய விபூதிக்கும் நிர்வாஹகனான நம்பியை
பூர்ணமானவனை
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி-என்கிறது –

இப்படிப் பரிபூர்ணமானவன் எனக்கு மயர்வற மதி நலம் அருளித் தன் ஸ்லாக்யமான
பரத்வாதிகளில் காட்டில்
அர்ச்சக பராதீனமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டிப் பரத்வாதிகளிலே
மனஸூ போகிற மயக்கத்தை அறுத்து

அர்ச்சாவதாரத்திலும் திருக்குறுங்குடி நம்பியை ஒழியப் போகாமல்
மனன் அக மலம் அறும் படி பண்ணி
இப்படி மயர்வற மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -என்றும்

உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
இப்படி நித்ய ஸூரி ஸேவ்யனாய்
ஆதி காரணமான பரஞ்சோதியை மறப்பது என்
அஞ்ஞான கந்த ரஹிதரான மேலாத் தேவர்களுக்கும் நிலத் தேவர்களுக்கும்
காரணமானவனை மறக்க விரகு உண்டோ –
இப்படி உபகாரகனானவனை மறக்க விரகு உண்டோ –

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மறக்க ஒட்டாத் திருவடிகள்
உன் மறப்பாகிற துயர் அறுக்கும்
அஞ்ஞான அந்தகாரம் நீக்கி -ஞானப் ப்ரகாஸம் ஆகிற பரஞ்ஜோதிஸ்ஸூ
உனக்கு விளக்காகக் காட்டும் திருவடிகளைத் தொழுது எழப் பண்ணின
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ

அபூர்ணன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரன் அல்லன் என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பேன் -என்கிறார் –

முதல் பத்து விவரணம் முற்றிற்று –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -2-10–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 30, 2022

அவதாரிகை –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் –
ஸூலபனாய் –
ஸூரி போக்யனான ஈஸ்வரன் –
திருவடிகளில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு
விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை

ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு
வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்

இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்
இமையோர் தலைவா என்றும்
சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

முழுநீர் முகில் வண்ணன்
கடலைக் கழுத்து அளவாகப் பருகின காளமேகம் போன்ற நிறத்தை யுடையவன்

கண்ணன்
அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய்
எட்டாதே இருக்கை இன்றிக்கே
பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய

மூதுவராம் விண்ணாட்டவர் தொழுநீர் இணையடிக்கே
பூர்வே என்றும்
ப்ரதம ஜா என்றும்
சொல்லுகிறபடி முற்பாடராய்
பரமபதத்துக்கு நிலத்து ஆளிகளான அநந்த கருட விஷ்வக் ஸேனாதிகளான நித்ய ஸூரிகள்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்கிறபடியே
நிரந்தர கைங்கர்யம் பண்ணும் படியான ஸ்வ பாவத்தை யுடைய
பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளிலே –

அன்பு சூட்டிய சூழ் குழற்கே —
தன்னுடைய ப்ராவண்யத்தை சூட்டின செறிந்த குழலை உடையவளுக்கு

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப
அழகிய நீரை யுடைத்தான தடாகத்தில் கயலானது இடம் வலம் கொண்டால் போல

சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன
சிவந்த அரியை யுடைத்தான கண்கள் ப்ரேமத்தால் அழுத நீர் துளும்ப
ஆற்றாமையால் நின்ற இடத்திலே நில்லாமல் அலமருகின்றன

வாழியரோ
இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே
நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்
அன்றியே
இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று

(மீன் வாசஸ்தானம் செழும் நீர் தடாகம் ஆதாரம்
இவர் ஞானத்துக்கு அடி மயர்வற மதிநலம் அருளின-அவனே ஹேது ஆதாரம் )

சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே
அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

அழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே
அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது
(அன்பு ஆர்வம் அபிநிவேசம் -அன்பே தகளி -ஆர்வமே நெய் )

முழு நீர் முகில் வண்ணன் என்று
ப்ரேம விஷயம் பூர்ணமாய் –
தர்ச நீயமாய்
உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று

கண்ணன் என்று
இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே
விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே
அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று

அன்பு சூட்டிய என்கையாலே
இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே
அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது

வாழியரோ -என்கையாலே
இப்பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று –
(அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )

இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

——-

தாத்பர்யம்

சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஆழ்வார்
அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க
கிட்டாமையாலே
அத்யந்தம் ஆர்த்தராய்

தனது ஸ்வ பாவம் மறந்து
தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க
அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க
அப்படி வந்தவர்களே தோழிகள்
அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க
ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே
சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள்

நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள்
எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று
தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும்
கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு
தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி
விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க
பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே
இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

——–————

அவதாரிகை –

இப்படி பார்ஸ் வஸ்த்ரான ஸூஹ்ருத்துக்களும் கண்டு விஸ்மிதாராம் படி ப்ரேம பரவசரானவர்
இந்தப் பாரவஸ்யத்துக்கு மூலமான பகவத் விஷயத்திலே ப்ராமண புரஸ்சரமாக
(பிரமாணம் வேதம் -பிரமேயம் காட்டும் புள் -வேத மயன் )
நெஞ்சு சென்ற பிரகாரத்தை
பிரிந்து போன தலைமகன் பின் சென்ற நெஞ்சை நோக்கித்
தலைவி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல் போல் சினத்த–பி ள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு
குழலை நிரூபகமாக உடையவராகையாலே
அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான
கோப குலத்திலே பிறக்கையாலே
தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய்
மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்

சாயை போலே அனுவர்த்திக்கிற படியைக் கண்டு

நிற்கும் கொல் மீளும் கொல்
இவர்கள் அப்ருதக் ஸ்திதைகள் ஆனால் போலே
நமக்கு அபிமானியான நாயகிக்கும் செறியக் குறை இல்லையே -என்று நிற்குமோ
இவர்களும் அனுவர்த்திக்கும்படியான அவனைக் கிட்டல் அரிது என்று மீளுமோ

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து அழகியதான திருத் துழாயையும்
ஆஸ்ரித விரோதிகளை அக்னி போலே பஸ்ம ஸாத்தாக்கும் திருவாழியையும் யுடையவனாகையாலே
ஸ்வாமி யானவன்

விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன
ப்ரஹ்ம ருத்ராதிகள் சேஷத்வ ப்ரகாசிகையான வ்ருத்தியைப் பண்ண
ஆஸ்ரித ஸம் ரக்ஷணார்த்தமாக
அதி த்வரையுடன் நடத்தப்படுவானாய்

பரிகர பூதனான ஆழ்வானிலும்
பரிகரவானான ஈஸ்வரனிலும்
விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான
மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள
பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தனி நெஞ்சமே
பின்னையும் விட்டு
அங்கும் முகம் பெறாமல் தனிப்பட்ட நெஞ்சம்
ஸ்வ தந்திரமான நெஞ்சம் என்றுமாம்

முகம் பெறும் அளவும் நிற்குமோ
மீண்டு போருமோ என்றுமாம்

குழல் என்று
இவள் தன் மயிர் முடி ஆகவுமாம் –

இத்தால்
இவ்வாழ்வார் தம் திரு உள்ளம்
வேத மயனான புள்ளின் பின் போனமை சொல்லுகையாலே
பிராமண அநு சாரித்த்வம் சொல்லிற்று

அப்புள் -என்கையாலே
ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று

தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

கடவும் என்கையாலே
காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி
பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று

விண்ணோர் தொழ -என்கையாலே
விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது
ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று

தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே
1-போக்யத்வமும்
2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
3-ஸ்வாமித்வமும்
ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம் என்று தோற்றிற்று

நிழற் போல்வனர்-என்கையாலே
ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே
இப்படி மஹிஷீ
பூஷண
பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு
வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ-
விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

இப் பாட்டு
தலைவன் பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழித்து உரைத்தது

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை
போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே
தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –

அப் புள்ளின் பின் போன-என்று
நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

———

ப்ராப்ய விஷயத்திலே பிராமண அதீனமாக நெஞ்சு பற்றி
அத்தால்
ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும்
அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த்
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

தனி நெஞ்சம்
என்னோடு உறவற்று நீங்கிய நெஞ்சத்தை

முன்னவர் புள்ளே கவர்ந்தது
முன்பு அவரோட்டை சம்பந்தத்தால் உண்டான
ராஜ குலத்தாலே
பெரிய திருவடியே அபஹரித்தான்

நெஞ்சம் புள்ளே கவர்ந்தது
பருந்து இறாஞ்சிக் கொண்டது

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
குளிர்ந்து அழகிய திருத் துழாய்க்கு இனி இங்குக் கவருகைக்கு நாம் நெஞ்சுடையோம் அல்லோம்

நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில்
திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே )
அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம்
நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து
(பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிந்து வஞ்சகத்தை உடையளான பேய் மகளுடைய முலையைப் பசையறச் சுவைத்த
(விஷம் கலந்து ரஸ்யம் சுவை -பராசரர் விஷ்ணு புராணத்தில் )
கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே
அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும்
கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய் முலை சுவைத்தான்
வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே
உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே
(ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )

பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று
பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு

அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது

முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்

பனி நஞ்ச மாருதமே
திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

எம்ம தாவி பனிப்பியல்வே
தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –
(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது
மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை
(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

முன் என்றது
பிரதமத்திலே சித்தாந்த அவகாஹி யாகை

அவர் புள்ளே என்றது
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று
ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )

புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக
ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் )
வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்

(உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே
தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்
வேதமே பெரிய திருவடி வடிவம் )

கவர்ந்தது என்று
வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் -என்று
இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில்
அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

(அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர
ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே )

இனி கவர்வது யாமிலம் -என்று
ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு
ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

நீ நடுவே என்று
ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய
சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே
ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி

(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து –
காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே
ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும் என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்
தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்
ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே
அத்தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து –

(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -)

———

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே
என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

————-

அவதாரிகை
இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு
ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி
பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு
தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இக்காலம்–இப்போது மாத்திரம்
இவ் ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

பனிப்பியல்வாக உடைய தண் வாடை
குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை

இக் காலம் இவ் ஊர்
இக் காலத்திலும் இவ் வூரிலும்
காலாந்தரத்திலும் இல்லை
தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்

இவளுக்கு என்னாதே
இவ்வூருக்கு என்றது
இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு

எரி வீசும்
வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று
தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது

வீசும்
ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது

அம் தண் அம் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு )
இந்த நெருப்பை ஆற்றலாவது
அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள்
ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்
(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே
நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக
வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்

பனிப் புயல் வண்ணன்
குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்

செங்கோல்
வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை

ஒரு நான்று தடாவியதே
ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது

பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்
செவ்வையே ஸ்வ பாவமான இது
இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –

இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை -என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் -என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு
அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு
இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே
ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை

எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே
பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )

அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி
நேர் அறிவு கலங்கின படி

மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும்
ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –

பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி
அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே
ஆர்த்தியினுடைய அதிசயம் –

தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் –
அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –
சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக
பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க

அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை
ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை
தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத் துழாயில் ஆசைப்பட்டு –
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்
தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன்
தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –

———————–

அவதாரிகை
இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட
அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை
தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
வளைந்த அம்பையும்
முரி போன சிலைகளையும் தவிர்ந்து

கடாயின கொண்டொல்கும்
தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்

வல்லி ஈதேனும்
இது ஒரு கொடி என்று சொல்லும்படி
ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து
அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –

அம்பும் -என்றது
ஜாதி ஏக வசனம்

சிலைகள் என்று
முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி

இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்

பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே

மதன செங்கோல் நடாவிய கூற்றம்
மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே
உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்

ஞாலத்துள்ளே–
இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று
உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
அம்பு என்று
லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது

சிலை என்று
ப்ரேரகமாகையாலே
க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –

இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது
அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே
அப்ராப்த விஷய அவகாஹநம்

சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை

(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல்
ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர்
மதி நலம் அருளப்பெற்றவர் )

ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு
கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்

அதாவது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –

இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட
நித்யத்வ
அபவ்ருஷேயத்வ
ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே
அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு
ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே
மதன செங்கோல் நடாவிய
நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான

கூற்றம்
பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே
ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்

இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்

ஞாலத்துள்ளே–
ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 )
ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று

பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் –
என்று அந்வயிக்கவுமாம் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வார்
பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க
அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து
மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு
கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும்
உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு
புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை
அப்ரதிஹதமாய் நடத்தக்கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள்
பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து
உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்

——

அவதாரிகை

ஏவம் வித ப்ராவண்ய அநு ரூபமான போக ஸித்திக்கு ப்ராப்த காலமாய் இருக்க
(கீழ் ஆறாம் பாட்டில் விளக்கிய அவள் ப்ராவண்யம்
அதுக்கு ஏற்ற காலமும் வர )
விளம்பிக்கையாலே கண் கலங்கின ஆழ்வாரை
ஆற்றி உரைக்கிற ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை
கார் காலத்துத் தலைவன் வரவு காணாது கண் கலங்கின தலைவியைக்
கால மயக்காலே ஆற்றின தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் எல்லாம் நடுங்கும்படி தன்னில் தான் நெருங்கி

நன்னீரிட்டு
ஸ்வ கதமான ஜலத்தை இட்டு

பனிப்ப நன்னீர் இட்டு -என்று
நனையும்படி நன்றாக நீர் இட்டு என்றுமாம் –

கால் சிதைந்து-
மேகத்துக்கு வர்ஷ தாரை முரிந்து விழுகை
ஏற்றுக்குச் சினத்தாலே காலைச் சிதைக்கை –

நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைய ஏறு என்று
மேகத்தை மயக்கி உரைக்கிறாள் –

பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்திலே பொருகிறன அத்தனை

கால் சிதைந்து பொரா நின்ற -என்று
மேகமானது காற்றின் சிதைவாலே மேகம் எதிர் எதிரே பொருகிறது என்றுமாம்

அன்றியே
திருமால் கோலம் சுமந்து
விளங்கின மின்னாலும்
ஸ்யாமளமான நிறத்தாலும்
ஸ்ரீ மானுடைய கோலத்தைத் தரித்து

பிரிந்தார் கொடுமை குழறு
இக்காலத்தில் பிரிந்து போய் வராத தலைவருடைய கொடுமையைத்
தன் அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான

தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்து
அழகிய
கார் காலம் தானோ

வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-
உன்னை இப்படிக் காண வைத்த பாபத்தை யுடைய நான்
காணா நின்றன ஏது என்று அறிகின்றிலேன்
தெரிந்து அறிய மாட்டு கிறிலேன் –

இத்தால்
இவ்வாழ்வாருடைய அனுபவ யோக்ய காலத்தில்
விளம்ப அஷமத்வத்தாலே
அவி விவேக கன அநந்த திங் முகமாய்
பஹுதா சந்தத துக்க வர்ஷியான பவ துர் தினத்திலே (ஸ்தோத்ர ரத்னம் -49 )
அகப்பட்டோம் என்று ஸாம்ஸாரிக கோலா ஹலத்தாலே
இவருக்குப் பிறந்த கண் கலக்கத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துகள் (நல்லார் நாவில் குருகூர் ஸாத்விகர் )

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் நடுங்கும்படி பரஸ்பர ஸ்பர்தாளுக்களாய் நெருங்கி

நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நல்ல நீர்மையை இட்டு வைத்து
நிலை குலைந்து
(நீர்மை ஸுலப்ய குணம் விட்டு )

நீல வல்லேறு
நைல்யத்தாலே தமஸ் பிராஸுர்யத்தையும்
ஏறு என்று
செறுக்கு சொல்லுகையாலே
ரஜஸ் பிராஸுர்யத்தையும்
உடைய வலியரான துர்மான ப்ரசுர புருஷரானவர்கள்

பொரா நின்ற
ஒருவருக்கு ஒருவர் மேலிட்டு நடத்துகிற

வானமிது -என்கையாலே
இத் தோஷம் ப்ரஹ்ம பவனம் அறுதியாக நடக்கும் என்றபடி –

இத்தால்
ஸம்ஸாரிகள் கோலாஹலத்துக்குக் கண் கலங்க வேணுமோ
பாடாந்தரம் -நீர் கலங்க வேணுமோ என்று கருத்து –

அன்றியே
அனுபவ அலாப தசையிலே
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ரஜஸ் தமஸ் ப்ரஸுரரான புருஷர்கள்
ஸ்ரீ யபதியைப் பாவித்துத்
தங்கள் ஸாந்நித்யத்தாலே
பிரிந்தாருடைய கொடுமையை ஸூசிப்பிக்கிற ஆகாரத்தாலே
இவ்வவஸ்தை அஸஹ்யமாகவும் கூடும் இறே என்று
கோடி த்வய தர்சனத்தாலே ஸம்ஸயித்து ஆற்றாமையை மட்டம் செய்வித்தார் ஆயிற்று

(ரஜஸ் தமஸ் ப்ரக்ருதிகள் தங்களுக்குள்ளே பொருது என்றும்
உம்மிடம் கலந்து என்றும்
கோடி த்வயம் )

இங்கு வினையாட்டியேன் என்றது
பாரதந்தர்யத்தாலே
ஸ்மாரகமான லௌகிக கோலாஹலத்தைத் தவிர்த்தல்
அவிளம்பேந போக ஸித்தியைப் பிறப்பித்தல்
செய்ய மாட்டாத பாபத்தை யுடையேன் என்றபடி –

—–

தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை
ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி
இது வர்ஷா காலம் அன்று
மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்
அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று
ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதை பார்த்தால்
நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது
உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்

————-

அவதாரிகை

இப்படி பகவத் அலாப தசையிலே ஆஸ்வாஸ கரரான அன்புடைய பாகவதர்
பகவத் பரராய்க் கொண்டு
திருமலை தொடக்கமான உகந்து அருளின தேசங்களிலே போகைக்கு ஒருபடிப்பட்டமை
அறிந்து அருளின இவர் –
அவர்கள் பிரிவாற்றாமையாலே அவர்களை நோக்கி அருளிச் செய்த பாசுரத்தைத்
தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்து உரைத்த
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இது தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்த தோழி
தலைவன் தன்னை நோக்கி உரைத்ததாகவுமாம்

பிரியலுற்ற அன்பரை நோக்கி
இவ்வாழ்வார் பிரகிருதி அறிந்த ஸூஹ்ருத்துகள் வார்த்தை யாகவுமாம் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால்
அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பொருட்க்குப் பிரிவானாக ஒருப்பட்ட தலைமகன்
தலைவி தரிக்கைக்காக சில தாழ்வுகள் செய்யவும்
சில தாழ்வுகள் சொல்லவும் கண்டு
இதுக்கு முன்பு கண்டும் கேட்டும் அறியாதே
இப்போது காண்கின்றவையும் கேட்க்கின்றவையும் ஆராய்ந்து பார்க்கில்

பாண்
பாண்மையாய் இரா நின்றது

குன்ற நாடர்
மலையோடு கூடின நாட்டை யுடையாராகையாலே வன்னெஞ்சர் என்று கருத்து

பயில்கின்றன
பல படியும்
செய்வது
சொல்வது ஆகிறன

இதெல்லாம்
இந்த அதிசயித உபசாரங்கள் எல்லாம்

அறிந்தோம்
ஸா பிப்ராயம் என்று அறிந்தோம்

மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து
கோ ரக்ஷணத்துக்கு உறுப்பாகையாலே மாட்சிமை யுடைத்தான கோ வர்த்தனமாகிற மலையை
அநாயாசேன ஏந்திய கிருஷ்ணனுடையதாய்
குளிர்த்தியை யுடைத்தாய்
பெரிய திருமலை என்று சொல்லப்படுவதான திரு வேங்கடத்திலே

மாட்சிமை -நன்மை

மாண் குன்றம் ஏந்தி -என்று
மாணுமாய்
குன்றம் ஏந்தியுமானவன் என்று
வாமன கிருஷ்ண அவதாரங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று
மேலாத் தேவர் (திருவாய் -5-1-2 ) விரும்பும் உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி

பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
அழியாப் பொருள் படைக்கைக்கு அறுதியிட்ட சிக்கனவு -என்று அறிந்தோம் -என்று அந்வயம் –

இத்தால்
பகவத் அனுபவ பரராய்க் கொண்டு
ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற அன்பர்
இவர் அநுமதியோடே விடை கொள்ள வேணும் என்று நினைத்து இவர் அளவிலே
பஹு முகமாக அனுவ்ருத்தியைப் பண்ணி தாழ்ச்சி தோன்ற சில விண்ணப்பம் செய்ய
இவர்கள் பிரிவுக்கு அடியான இது பொறுத்து அருளாமையாலே
பாடுவார் கொண்டாட்டம் போலே பல படியும் தாழ்வு செய்வது சொல்லுவதாகிற இதுக்கு அபிப்ராயம் அறிந்தோம்

(அரையர் திருவேங்கடம் செல்ல ஆசை கொள்ள மந்தி பாய் வேங்கடம் பாசுரம் –
நின்றான் கிடந்தான் -அறிந்தேன் யாத்திரை போகவில்லை என்று சொல்ல வைத்தாரே நம்பெருமாள் )

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –அன்று ஞாலம் அளந்த பிரான் -சென்று சேர் திருவேங்கட மா மலையிலே (திருவாய் -3-3-8 )என்றும்
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் (திருவாய் -6-10-10-) என்றும்
உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி
ஸ்ரீ நிதியாகிற மஹா நிதியைப் பெறுகைக்கு அறுதியிட்ட சிக்கனவே இறே என்று அருளிச் செய்தமை தோற்றிற்று –

இவ்விடத்தே
குன்ற நாடர் என்றது
வேங்கடத்தைப் பதியாக (நாச்சியார்-8-9 ) வாழ நினைத்தவர்கள் என்றபடி

(கிளைவித் தலைமகன் பாட்டுடைத் தலைமகனை நோக்கிச் செல்வதாக தலைவி சொன்னவாறு )

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————–

அவதாரிகை

அன்புடையாரை அகல மாட்டாத இவருடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தாலும்
ஞான வை லக்ஷண்யத்தாலும்
பிரிய மாட்டாமையால் அன்பர் சொன்ன பாசுரத்தை
பிரிவு அறிந்த தலைவி எழிலும் வேறுபாடும் கண்டு
பிரிய மாட்டாத தலைவனுடைய கோளான வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர்
திண்மையையும்
புகர் யுடைமையையும்
ஒளியையும்
‘கூர்மையையும்
உடைய திருவாழியோடே உண்டான சேர்த்தி அழகையும் உடையராய்
ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே
வைகுண்ட பர லோக -லிங்க புராண ஸ்லோகம்
பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ மானுடைய
(அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அம்மானுக்கு–ஆழி இத்யாதி
அங்கும் உண்டே -தாமம் ஸ்ரீ வைகுண்டம் )

விண்ணாடனைய
பரமபதம் போலே
நிரதிசய ஆனந்தா வஹையான

வண் பூ மணி வல்லி
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான கொடி போன்றவளை
(பூ மலர்ந்த கொடி )

யாரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ

அது நிற்க
இவையோ கண்
கண்ணாய் இருக்கிறானோ

பூங்கமலம்
அழகிய கமலமானது

கருஞ்சுடராடி
அஞ்ஐனத்தின் ஒளியை அணிந்து

வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்கள் ஆகிற
வெளுத்த முத்தை அரும்பி

வண் பூங்குவளை
உதாரமாய்
அழகிதான
செங்கழு நீரினுடைய

மடமான் விழிக்கின்ற
மடப்பத்தை யுடைய
மானின் நோக்கை யுடைத்தாகா நின்ற

மாயிதழே–
பெரிய இதழை யுடைத்து என்னலான
இவை கண்ணாய் இருக்கின்றனவோ

இக் கொடிக்கு வண்ணம் சிறப்புடைய பூ என்னும் அத்தனை
ஆதலால் ஆரே பிரிபவர் என்று கருத்து
இது நீங்கல் அருமை கூறல்

கமலம் என்கையாலே அரி சிதறுதலும் (மெதுவாக மலரும் )
கருஞ்சுடர் என்கையாலே அஞ்சனம் அணிவும்
வெண் முத்து அரும்பி -என்கையாலே ஆற்றாமையும்
குவளையின் பெரிய இதழ் -என்கையாலே கடைச் சிவப்பும்
மான் விழிக்கின்ற -என்கையாலே செல்லாமை நோக்குதலும் தோற்றிற்று
குவளை -நெய்தல் என்னவுமாம்

இத்தால்
இவ்வாழ்வாரைப் பிரிய நினைத்த அன்பரான பாகவதர்
பரத்வ ப்ரகாசகமான திருவாழியோடு உண்டான சேர்த்தியாலே
தர்ச நீயனான ஸ்ரீ மானுடைய பரமபதம் போலே
ஆனந்தாவஹமாய்

உதாரமாய் –
போக்யமாய் –
அத் யுஜ்ஜ்வலமாய் –
உபக்ந அபேக்ஷமான கொடி போலே –
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஸ்வரூபத்தை யுடைய இவரை
ஸ்வரூப ஞானம் பிறந்தாரில் விடுவார் யுண்டோ –

(வண் பூ மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல -நாயனார்
வல்லி கொடி -தேக ஆத்ம குணங்கள் )

அது நிற்க
இவையே கண் என்கையாலே
நாட்டு ஒப்பான ஞானம் அன்று என்றபடி

பூங்கமலம் கருஞ்சுடராடி -என்கையாலே
ஞானத்துக்கு ஆகாரம் விஷயாதீனம் என்றிட்டு
பத்ம வர்ணனையும் அஞ்சநாபனையும் விஷயீ கரித்தமை தோற்றிற்று

(கண்ணுக்கு கூர்மை சேர்ப்பது மை -அஞ்சனம்
இவரது ஞானத்துக்கு விஷயம் மெய் நின்ற பகவத் ஞானம் -அந்த வடிவம்
ஸம்ஸார ஞானம் பொய் நின்ற ஞானம்
திருவையும் மாலையையும் க்ரஹித்தவள் -மெய்யான ஞானம்
பூம் கமலம் -அவள்
கரும் குவளை -அவன் )

வெண் முத்தரும்பி -என்கையாலே
சுத்த ஸ்வ பாவமான முக்தா ஹாரத்தை ஆவிஷ் கரித்தமை சொல்லிற்று

குவளை மாயிதழ் என்கையாலே
அநுராதகதை (சிகப்பு) தோற்றிற்று

(இவரது வெறும் வாக்ய ஜன்ய ஞானம் இல்லையே
பக்தி ரூபா பன்ன ஞானம் தானே
ராகம் கலந்த ஞானம் )

மான் விழிக்கின்ற என்கையாலே
விஸ்லேஷ அசஹதை தோற்றிற்று

ஏவம் விதமான ஞான வை லக்ஷண்யத்தாலும் இவரைப் பிரியப் போமோ
என்கிற பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

——-

தாத்பர்யம்

முன் பாசுரத்தில் ஆழ்வார் ஸூஹ்ருதரான பாகவதர்கள்
தம்மை விட்டுப் பிரிவதாக விசன்னராக இருக்க
அவர்களும் உம்முடைய வை லக்ஷண்யத்தைக் கண்டா நாங்கள் பிரிய மாட்டோம் என்று அருளிச் செய்த பாசுரத்தை
நாயகி யுடைய சவுந்தர்யத்தால் மக்னனான நாயகன் உரைத்த பாசுரமாக அருளிச் செய்கிறார்

சவுந்தர்யம்
லாவண்யம்
மார்த்தவம் –
சந்நிவேசம் -முதலான
இவற்றை நிரூபகமாக உள்ள அவயவங்கள் உடைய நாயகியை
ஸ்ரீ மானான திருமால் உள்ள ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தவர்கள் அங்குள்ள தேஜோ மயமான
வலிய திருவாழி தொடக்கமான -ஆயுதம் ஆபரணம் இரண்டு ஆகாரமும் உண்டே –
போக்யத்தில் ஈடுபட்டு அத்தை விட்டுத் திரும்ப மாட்டாதாப் போலே

உன்னுடைய மாந்தளிர் போன்ற அதரத்தையும்
கமலம் போல் அதி ஸூந்தரமாய் கரு நெய்தலின் முத்துக்கள் சிதரிக்க கிடந்தால் போல் -சோக அஸ்ரு சொரிந்து
மான் போல் விழிக்கும் குவளை போன்ற கண்களை யுடைய
உன்னைக் கண்டார் பிரிவாரோ
ஆகையால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம்
பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப்போவாரோ என்றவாறு

—————

அவதாரிகை

இப்படிப் பிரிய மாட்டாத அன்பரான பாகவதர்
இவ்வாழ்வாருடைய அவயவ சோபையிலும்
அருளிச் செய்த வசன வ்யக்திகளிலும்
ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தையை
தோழியும் தலைமகளும் இருந்த கானல் புனத்து எதிர்ப்பட்ட தலைவன்
மதியுடன் படுத்தலுற்றுக்
குறை யற யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

மாயோன்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய
ஸர்வேஸ்வரனதான

வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
வட எல்லையான திருமலையை நாடாக யுடைய
வல்லி போன்று இருந்த பெண்காள்

இங்குக் கொடி என்று
கொடிச்சியாய்
குற மகள் ஆகவுமாம்

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
உங்கள் முன்னே நின்று ஈடுபட்ட என்னுடைய நோய் காணாத அளவன்றியே
சொல்லவும் கேட்க்கிறீலீர்
ஸ்வர அவஸாதமும் செவிப்படுகிறது இல்லை

ஓ என்று
ஈடு பாடு தோற்றுவித்த அசைச் சொல்
உங்கள் ஸந்நிதி எனக்கு ஈடுபாட்டை விளைத்த படி

நுமது வாயோ
உங்கள் விகசிதமான வாய் அழகோ

அதுவன்றி
அவ்வளவு இன்றியே

வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ
கால் தாழ்ந்து நோவு படுகைக்கு ஈடான வலிய பாபத்தை யுடையேனான நானும்
உங்கள் புனத்திலே போகம் படிந்து உண்ணும் கிளியும்
சிதிலராம்படி
ஆய விடுகிற மிடற்று ஓசையோ

தொண்டையோ
அக்காலத்தில் தொண்டைப்பழம் போலே சிவந்த
அதர சோபையோ

அடும்
என்னை உயிர்க் கொலை செய்யா நிற்கும்

இது அறிவது அரிதே
இவற்றில் ஏதோ நலிகின்றது என்று அறிய அரிதாய் இரா நின்றது

உரையீர் அறை
நீங்கள் சொல்ல வல்லீராகில் சொல்லுங்கோள்
இவர்கள் வார்த்தை கேட்க்கையில் விருப்பத்தாலே கருத்து அறிவித்த
தலைமகன் மேலிட்டு உரைத்த பாசுரம்
குறை நயந்த தலைவன் கருத்து அறிவித்தல்

மாயோன் வட திருவேங்கட நாட
இத்தால்
பிரிய மாட்டாத அன்பர்கள்
மாயோன் இத்யாதியாலே
அபரிச்சின்ன போக்யதையாலே ஆச்சார்யாவஹனுடைய ஸர்வ உத்தரமான
திருமலையிலே நாட்டத்தை யுடைய -என்றபடி

வல்லிக் கொடிகாள்-என்று
பகவத் அனுபவ ரஸ அபேக்ஷமான பாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது
பன்மை -கௌரவத்தைக் காட்டுகிறது

ஆக
போக்ய பூதன் வர்த்திக்கிற போக ஸ்தானமான திருமலையிலே
மானஸ அனுபவம் நடந்து
அத்தாலே பாரவஸ்யம் பிறந்து இருக்கிற நீர் என்றதாயிற்று

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் -என்று
உம்முடைய பக்கல் ப்ராவண்யத்தாலே எங்களுக்கு உண்டான ஈடுபாடு விண்ணப்பம் செய்தாலும்
அனுபவ பாரவஸ்யத்தாலே திரு உள்ளம் போற்றுகிறது இல்லை –

உரையீர்
இது அருளிச் செய்ய வேணும்

நுமது வாயோ
அனுபவ பரிவாஹ ரூபமான பிரபந்த நிர்மாண தசையில் முக விகாஸமோ

அதுவன்றி
அவ்வளவு அன்றியே

வல்வினையேனும்
உம்மைப் பிரிந்து போகாதபடி துவக்குவதான வலிய வினையை யுடைய நானும்

இவ்விடத்தில் வினை என்பது
பாவ பந்தத்தை

கிளியும் -என்று
பசுஞ்சாம நிறத்தாலும்
அவ்வதரத்தில் பழுப்பாலும்
வசன மாதுர்யத்தாலும்
போக்ய பூதனான ஈஸ்வரனை ஸூசிப்பிக்கிறது

எள்கும்-என்று
ஈசேஸிதவ்ய விபாகம் அற
இவர் பாசுரத்தில் ஈடுபட்டமை தோற்றிற்று

(தொண்டர்க்கு அமுது உண்ண அன்றோ சொன்னார்
அவனும் தென்னா தென்னா என்று ஈடுபடும் படி அன்றோ இவர் திவ்ய பிரபந்தங்கள் )

ஆயோ -என்று
வ்யவஹார ரூபமான ஸப்த வ்ருத்தியோ -என்றபடி

தொண்டையோ -என்று
தாத் காலிகமான அதர ஸ்புரணமோ -என்றபடி

அடும்-என்கையாலே
இவை தனித்தனியே சைதில்ய ஜனகம் என்றபடி

அறையோ விதறிவரிதே—என்கையாலே
வேறே ஆராலே இத்தை விவேகித்து அறியலாம் என்றபடி

உரையீர் -என்று
நீர் தாமே இத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ய வேண்டும் என்று அந்வயம் –

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
(நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது
நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி
நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே
என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -தனியன்/பிரவேசம் -முதல் பாசுரம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 28, 2022

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் வைபவம்

ஸூந்தர ஜாமாத்ரு முநே ப்ரபத்யே சரணாம் புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்ந ஐந்து சந்தார போதகம்

ஸம்ஸாரக் கடலில் அழுந்தி உள்ள ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரைகளை சரண் அடைகிறேன் –

————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கும் அவர் திருக்குமாரர் ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான இவர்
தென் தேசத்தில் ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயிலில் -ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் திரு அவதரித்தவர்
திருவாய் மொழிக்கு பன்னீராயிரப்படி அருளிச் செய்தவர்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் –உபதேச ரத்னமாலை –45-

இவரைப் பெரியவாச்சான் பிள்ளை திருத்திப் பணி கொண்டு அருளிய விவரம் இவர் வைபவத்தில் காட்டப்பட்டுள்ளது

மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில –(உபதேச 47)என்று மா முனிகள் அருளியபடி
திரு விருத்தம் ஸ்வாபதேச உரை முதலான மூவாயிரத்தில் சில பிரபந்தங்களுக்கு உரை
த்ராவிட உபநிஷத் சங்கதி -ஸம்ஸ்க்ருத பத்ய கிரந்தம்
தத்வ தீபம் -ஸம்ஸ்க்ருத கத்ய கிரந்தம்
அதுக்கு இவரே -தீப பிரகாசம் -மணிப்பிரவாள வியாக்யானம்
தீப ஸங்க்ரஹம்
தத்வ நிரூபணம்
ரஹஸ்யத்ரய காரிகா வளி
ஸ்ரீ பகவத் கீதை வெண்பா இவை போல்வன நமக்கு கிடைத்துள்ளன –
இவர் அருளிச் செய்துள்ள கீதைக்கு மணிப்பிரவாள வியாக்யானம் போல்வன இப்பொழுது லுப்தம்

திருமாலை ஆண்டான் திரு வம்சத்தவரான யாமுனாச்சார்யர் இவரது சிஷ்யர்
ப்ரமேய ரத்னம் போன்ற கிரந்தங்கள் சாதித்தவர்

பூர்வாஸ்ரமத்தில் -வரதராஜர் என்னும் திருநாமம் –
உத்தம ஆஸ்ரமத்தில் ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் என்று திருநாமம் பெற்றார்
வாதிகளை ஜெயிக்கையால் வாதி கேஸரீ என்ற பட்டப்பெயர் பெற்றார் –

————————–

பிரவேசம்
ஸ்ரீ யபதியாய்
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
பதிம் விஸ்வஸ்ய-என்று விஸ்வத்துக்கும் பதி யாகையாலே
தன்னுடைய நாராயணத்வ ப்ரயுக்தமான
வியாப்ய வியாபக பாவம்
சரீர ஆத்ம பாவம்
சேஷ சேஷி பாவம்
நியாந்த்ரு நியாம்ய பாவம்
ஆதார ஆதேய பாவம்
முதலான அவிநா பூத சம்பந்தம் ஸகல ஆத்மாக்களோடும் ஒத்து இருக்க

(அப்ருதக் ஸித்த விசேஷணம் – பிரிவில்லாமல் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிந சேஷ ஸாயினே –
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்துஸ் ச ஸக்யஞ்ச தத் தஸ்ய சரீரம்
அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகவே இருப்பதே சரீரம்
பரகத அதிசய ஆதேயன உபாயத்வமே -சேஷ சேஷி பாவம் -அவனுக்கே
பஸ்யமே லோக ஐஸ்வர்யம் -அனைத்தையும் நானே தாங்குகிறேன் -கீதை )

ஒரு விபூதியில் உள்ளார்
நிரந்தர அனுபவ ஜெனித நிரதிசய ஆனந்த திருப்தராயப் போருகிற படியையும்
ஒரு விபூதியில் உள்ளார் –
அநீசயா சோசதி முஹ்யமாந -ஸ்வேதாஸ்வரம் -4-7-என்று
அநாதி அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
அநாத்மந் யாத்ம புத்தியும் -(அஹங்காரம் -யானே -ஸ்வரூபம் மாறி )
அஸ்வே ஸ்வ புத்தியுமாகிற -(மமகாராம்–என் தனதே -என்னுடையது அல்லாதவற்றை என்னுடையது ஸ்வ பாவம் மாறி )
அந்யதா ஞான
விபரீத ஞானங்களாலே
ஆத்ம அநநு ரூபமான அர்வாசீந புருஷார்த்தங்களிலே அதி ப்ரவணராய்
(தாழ்ந்த விஷயாந்தரங்களில் ஐஸ்வர்யார்த்திகளாய் )
ஆத்ம அநு ரூபமான அதிசயித புருஷார்த்தத்தில் அத்யந்த விமுகராய்
கர்ப்ப நரகாதி ஸகல கிலேசங்களாலும் வ்யாகுலராய்ப் போருகிற படியையும் கண்டு

இவர்களுக்கு அவகாசம் பிறக்கைக்கு அடியான ஸ்வ அபிமுக்யத்தைப் பண்ணுவிக்கைக்கு உப கரணமான
கரண களேபரங்களையும் கொடுத்து
மாநம் ப்ரதீபம் இவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-என்கிறபடியே

(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-1-

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்––ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை 1-)

அந்தகாரத்திலே திரிவாருக்கு அர்த்த பிரகாசம் பிறக்கைக்குக் கை விளக்கு கொடுத்தால் போலே
நிர்த் தோஷமான பிராமண ப்ரகாஸத்தையும் பண்ணுவிக்க

திமிர உபஹத த்ருஷ்டியானவனுக்கு தீபமும் ப்ரகாஸமும் அல்லாதாவோ பாதி
பகவத் பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தாலே ஆந்த்ர சஷுஸ்ஸான நெஞ்சின் குருடு தீராமையாலே
அதுவும் அகிஞ்சித் கரமாக

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் சமுப ப்ரும்ஹயேத்–(பார்ஹஸ் பத்ய ஸ்ம்ருதி ) என்று
வேத உப ப்ரும்ஹணமான ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ரூபங்களாய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருத பராவர தத்வ விபாகரான பரம ரிஷிகளாலே
ப்ரணீதங்களான பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்தும்
அதுவும் கார்ய கரம் அல்லாமையாலே

ஓலைப் புறத்துச் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
தான் ராம கிருஷ்ண ரூபத்தாலே திரு அவதரித்தும்

ரூப ஓவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணம் (அயோத்யா -3-26 ) என்று
ஸுந்தர்யாதி குண ஆவிஷ்காரேண
அக்ரூர மாலாகாராதிகான் பரம பாகவதான் க்ருத்வா -(கீதா பாஷ்யம் -அவதாரிகை )என்று சொல்லுகிறபடியே
ஸாஸ்த்ர சஸ்த்ரம் முனை மடிந்தால் எடுக்கும் -ப்ரஹ்மாஸ்திரமாகிற வடிவு அழகைப் பிரகாசிப்பித்தும்

உபதேஸ அநுஷ்டானாதி முகத்தால் தர்ம ஸம்ஸ்தாபநத்தைப் பண்ணியும்
வசீகரிக்கப் பார்த்த இடத்திலும்

அநாதி பாப வாஸநா தோஷ தூஷிதா சேஷ சேமுஷீகர் ஆகையாலே
பாஹ்ய குத்ருஷ்டி மத அவகாஹநம் பண்ணி
(புத்தோடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ )
வைதிக மார்க்க பராங் முகராகக் கண்டபடியாலே

இவர்களை வசீகரிக்கைக்கு உபாயம் ஏதோ என்று பார்த்து
(எம்பெருமானாராய் இருந்தால் அப்போதே ஒரு சிந்தை செய்து நாரணர்க்கு ஆளாக்கி அருளுவார் )
தீபகம் காட்டி மிருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீய புத்தி பண்ணலாம் படியான
ஆழ்வார்களைப் ப்ரவர்த்திப்பித்தான் –

இவர்கள் ஆகிறார் –
ரிஷிகளைப் போலே கர்மாதி ஸாத்ய ஞானர் அன்றியே –
பகவத் ப்ரஸாதத்தாலே
அயத்ன லப்த ஞான வைராக்ய பக்தி கராய்
வேத இதிஹாஸ புராணாதிகளைப் போலே அதி க்ருதாதிகாரம் இன்றியே
ஸர்வ அதிகாரமாய்
திராவிட ரூபமான பிரபந்த விசேஷங்களாலே
ஸகல வேத வேதாந்த ரஹஸ்ய அர்த்தத்தைப் பிரகாசிப்பிக்கையாலே
அத்யந்த விலக்ஷணராய் இருப்பார்கள் –

இவர்களிலும் வைத்துக் கொண்டு
நம்மாழ்வார் -அல்லாத ஆழ்வார்களைப் போலே லௌகிக ஞானம் நடையாடா நிற்க
பகவத் பிரஸாதத்தாலே -ஒரு கால விசேஷத்திலே தத்வ ஞானாதிகள் பிறந்து அனுபவிக்கை அன்றிக்கே
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமா போலே
ஸஹஜ ஞான பக்தியை உடையவராகையாலும்

மாதா பிதா –ஆத்யஸ்ந குல பதே –ஸ்தோத்ர ரத்னம் –5- என்று
இது தத்வ ஞான ப்ரவர்த்த நத்திலே பிரதம ஆச்சார்யராக விலக்ஷண பரிக்ருஹீதர் ஆகையால்
ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவர் என்று அங்கீ கரித்து

என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன் -திரு விருத்தம் -48- என்னும்படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தாமே ப்ரவர்த்திப்பிக்கையாலும்
அத்யந்த வ்யாவ்ருத்தராய் இருப்பார் ஒருவர் –

(மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-)

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடைய இவருக்கு உத்தம வர்ணாதிகளிலே அன்றியே
துரீய வர்ணத்திலே அவதாரமான இது
பத்ப்யாம் சூத்ரோ அஜாயதே –புருஷ ஸூக்தம் –என்கிற மரியாதையாலே
(முகத்தில் இருந்து பிராமணன் -சதுர்த்த வர்ணன் திருவடியில் இருந்து )
வர்ண உத்கர்ஷம் அன்றியே சேஷத்வமே உத்தார ஹேது என்னும்
அர்த்த விசேஷத்தை ஸூசிப்பிக்கைக்காக –

ஹரி கீர்த்திம் விநைவாந்யத் -(மாத்ஸ்ய புராணம் யம வசனம் )-என்கிற நியாயத்தாலே
பகவத் விஷயமான பாஷைக்கு அபகர்ஷம் உண்டாகில் இறே
ந சூத்ரா பகவத் பக்தா -என்கிற நியாயத்தாலே
சேஷத்வ ஞான ஆஸ்ரயமான இவ்வர்ணத்துக்கு அப கர்ஷம் உள்ளது –

இப்படி வை லக்ஷண்யத்தை யுடையவரான இவ்வாழ்வார் பக்கலிலே
பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி
என்று நாலு வகையாகப் பிரதிபாதிக்கப் பட்டன –

அவற்றில் பிரதம பாவியான இப்பிரபந்தத்திலே
அஞ்ஞான கர்ம தேஹாதி ரூபமான (பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கு -அழுக்கு உடம்பு )
ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்திக் கொண்டு
அனுபவ உபகரணமான ப்ராவண்ய அதிசயத்தாலே அனுபவ அபி நிவேசம் நடந்த படியையும்
அனுபவ அலாபத்தில் ஆர்த்தி அதிசயித்த பிரகாரத்தையும்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஆர்த்திக்கு அதிசய ஜனகங்களான பிரகாரத்தையும்

இவருடைய ப்ராவண்யாதி வை லக்ஷண்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்களும் -பரிவருமாய் உள்ளார்
தாங்கள் ஈடுபட்டும்
இவரை ஆஸ்வசிப்பித்தும்
போந்த பிரகாரத்தையும் –
ஆர்த்தி அதிசயம் கால விளம்பம் பொறுக்க மாட்டாத ஸைதில்யத்தை ஜநிப்பித்த பிரகாரத்தையும்
மறந்து பிழைக்க ஒண்ணாத படி ஞானம் சங்குசிதமாகாத பிரகாரத்தையும்
ப்ராப்ய ப்ராபகங்கள் –பகவத் சீல ஸுலப்யங்களே

(ஆஸ்ரய ஸுகர்ய குணமே ஸுசீல்யம் -இதுவே ப்ராப்யம்
அனுபவத்துக்கு ஸுகர்ய குணம் -ஸுலப்யம்-இதுவே ப்ராபகம்
அங்கும் சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண
பாலேய் போல் சீர் குணங்களில் அனுபவம்
ஆகவே இவையே ஆறும் பேறும் என்றபடி -)

என்று அறுதியிட்டு பிரகாரத்தையும் வெளியிடுகையாலே
ஈஸ்வரன் திரு உள்ளத்திலே படும்படி இவர் தம்முடைய வ்ருத்த கதனம் பண்ணினார் ஆயிற்று –
ஆகையால் இறே இப்பிரபந்தத்துக்கு திரு விருத்தம் என்று பேர் ஆயிற்று

அல்லது
தாழிசை-
துறை –
விருத்தம் என்று இனத்தின் வகையான
கலித் துறையை விருத்தம் என்னக் கூடாது –

(வெண்பா -கலிப்பா -ஆசிரியப்பா வஞ்சிப்பா -என்று இருக்க வேண்டுமே
வெண்பா தாழிசை -கலி தாழிசை -போல் இருக்க வேண்டும்
கலி விருத்தம் என்று சொல்லக் கூடாதே
நான்கு சீர் அடி நான்கு -எதுகை ஒத்து இருக்க வேண்டுமே )

இப் பிரபந்தத்திலே அத்யாத்ம ரூபமான இவ்வர்த்தங்களைப் பிரகாசிக்கிற இவர்
நாயக நாயிகா சங்கம ரூபமான காம ராக பிரகாரமாய் இருக்கிற
கிளவித் துறையைப் பேசுவான் என் என்னில்

காமமாவது –
இதர விஷயத்திலான போது அநர்த்தா வஹமாய் த்யாஜமாகக் கடவது
காமத் கோப்ய-(ஸ்ரீ மத் பாகவதம் -7-1-33)என்கிற கணக்கிலே
கண்ணனுக்கே காமமான போது புருஷார்த்த அந்வயியாய்க் கடவது –

(சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -இராமானுஜ நூற்றந்தாதி-40 – )

ஆகையால் இந்த வகை தமிழ் மர்யாதையான ஸ்ருங்கார ப்ரகாசகமான பாசுரங்களாலே
இவ்வத்யாத்மத்தை அருளிச் செய்தது –
கட்டி பூசிக் கடு தீற்றுவாரைப் போலே விஷயசக்தரான ஸம்ஸாரிகள் நெஞ்சிலே படுகைக்காக –
(இந்திரியங்கள் எந்த மார்க்கங்களில் போகுமோ
அவற்றையே கண்ணன் இடம் வைக்க -அவற்றை மாற்றலாமே )

ஆனால் ஈஸ்வரனே தலைமகனாகப் பாடப் ப்ராப்தமாய் இருக்க -அவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கிளவித் தலைமகனாக வைத்துப் பாடின இடத்துக்குத் தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரன் போக்ய பூதனாமோ பாதி
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
பரி ஜனைஸ் தவ சங்க ஸீய -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77- என்றும்
தத் சம்பந்த முகத்தாலே ததீயாருக்கும் போக்யதை உண்டாகையாலே
அவர்கள் பக்கல் ப்ராவண்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –

(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய–77-

கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –
பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்
நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்
அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற
பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும்
பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் –
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும்
இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)

இந்த நாயக நாயகிகளுடைய இயற்கைப் புணர்ச்சி முதலான சம்பந்தமானது ஸாஸ்த்ரீயமோ என்னில்
ஸாஸ்த்ரத்திலே
1-ப்ராஹ்மோ
2-தைவ
3-ப்ரஜாபத்ய
4-ஆர்ஷ
5-ஆஸூரோ
6-காந்தர்வோ
7-ராக்ஷஸ
8-பைஸாசா
இதி -என்று விவாஹம் எட்டு வைகையாக இருக்கும் என்றது

இது தான்
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம்
அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய
மறையோர் மன்றல் எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப்
புலமையோர் புணர்ப்பு பொருண்மை என்மனார் புலமையோரே -என்று அகத் தமிழிலும் சொல்லப்பட்டது –

1-அற நிலை
3-ஒப்பே
4-பொருள் கோள்
2-தெய்வம்
6-யாழோர் கூட்டம்
5-அரும் பொருள் வினையே
7-இராக்கதம்
8-பேய் நிலை

அதில்
ப்ராஹ்மம் ஆவது
அபி ரூபனாய் வ்ருத்த ஸம்பன்னனாய் இருக்கிறவனை அழைத்து ஸத் கரித்து
அலங்க்ருதையான கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு அற நிலை என்று பெயர் –

தைவமாவது
தேவ யஜன ரூபமான யாகத்திலே ஆர்த்விஜ்யம் பண்ணினவனை அழைத்துக் கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு தெய்வம் என்று பெயர்

ப்ரஜாபத்யமாவது
ஓக்க இவர்கள் இருவரும் ப்ரஜா உத்பாதநாதி ரூபமான தர்மங்களை அனுஷ்டிக்கக் கடவர்கள் என்று
வாக்காலே அறுதியிட்டுச் சொல்லி
அக்னி காரியத்தையும் தானே அனுஷ்ட்டித்துக் கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்கு ஒப்பு என்று பெயர் –

ஆர்ஷமாவது
ஒன்றாதல் இரண்டாதல் கோ மிதுனத்தோடு கன்யகையை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்குப் பொருள் கோள் என்று பெயர் –

ஆஸூரமாவது
வரன் தானே கன்யகைக்கு ஆபரணம் பூட்டி சக்திக்கு ஈடாக பந்துக்களுக்கு
(தனம் )தானம் கொடுத்துக் கைப்பிடித்தல்
இதற்கு அரும் பொருள் வினை என்று பெயர் –

காந்தர்வமாவது
தனியிடத்து இருவருடையவும் காம மோஹத்தாலே கூடுகை
இதுக்கு யாழோர் கூட்டம் என்று பெயர்

ராக்ஷஸமாவது
பந்துக்களை அடர்த்துப் பெண்ணைக் கைப்பிடிக்கை
இதுக்கு இராக்கதம் என்று பெயர்

பைசாசமாவது
ஸூப்தை யாதல் – ப்ரமத்தை யாதல் -கன்யகையை ரஹஸ்யத்திலே கூடுகை
இதுக்கு பேய் நிலை என்று பெயர் –

இவை எட்டிலும் –
ப்ராஹ்மம் தைவம் ப்ரஜாபத்யம் ஆர்ஷம் என்கிற இவை நாலும்
அக்னி பூர்வகமாக ப்ராஹ்மணனுக்குக் கர்த்தவ்யம் ஆகையாலே ப்ரஸஸ்தங்கள்

அல்லாத நாலும்
ஐகன்யங்கள் (தாழ்ந்தவை)

இதில்
ப்ராஹ்ம விவாஹத்தில் பிறந்தவன் –
தச பூர்வான் தசா பரான் ஆத்மாநம் ச (போதாயன தர்மம் ) என்று
தன் வம்சத்தை இருபத்தொரு படி கால் சுத்தனாக்கும்

தைவ விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஏழும் பின் ஏழும் சுத்தனாக்கும்

ப்ரஜாபத்ய விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஆறும் பின் ஆறும் சுத்தனாக்கும்

ஆர்ஷ விவாஹத்தில் பிறந்தவன்
முன் மூன்றும் பின் மூன்றும் சுத்தனாக்கும்

ஆஸூராதிகளான நாலுக்கும் இவ்விசேஷம் இல்லையே யாகிலும்
விலக்ஷண புருஷ அனுஷ்டிதமாகில்
அதிசயித புருஷ உத்பாதகங்கள் என்று ஸாஸ்த்ரங்களிலே கண்டு கொள்ளப் படும்

இவ்
வெட்டிலும் வைத்துக் கொண்டு
காந்தர்வமானது ஸ்ருங்கார ரஸமுமாய் ஸ்திரீயினுடைய அநந்யார்ஹதா ரூபமான கற்புக்கும் முதலாகையாலே
அகத்தமிழ் மர்யாதைக்குப் பிரதானமாய்ப் போரும்

அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது அந்தணர் அரு மறை மன்ற வெட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் என்று அகத்தமிழிலும் -இறைவனார் அகப் பொருளில் சொல்லப்பட்டது –

இப்படி ஸாஸ்த்ரீயமாய்க் கற்புக்கும் உறுப்பான சம்பந்தமாகையாலே இந்தக் கிளவித்துறை
மர்யாதையாலே தம்முடைய அநந்யார்ஹதையைப் பிரகாசிப்பிக்கக் குறையில்லை

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வாதி பேதம் இன்றிக்கே இருக்க
நாயிகா ரூபத்தாலே ஸ்த்ரீத்வம் சொல்லுகைக்கு அடி என் என்னில்

ஸ்வரூபம் ஸர்வதா பரதந்த்ரமாகையாலும்
அநந்யார்ஹம் ஆகையாலும்
அநந்ய ரக்ஷகமாகையாலும்
அநந்ய போக்யமாகையாலும்
ஸ்த்ரீத்வ சாதரம்யம் உண்டாகையாலே சொல்லக் குறையில்லை

ச ஏவ வாஸூ தேவோ சவ் ஸாஷாத் புருஷ உச்யதே –
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் ஸரம் (ஸ்ரீ விஷ்ணு தர்மம் ) என்று சொல்லக் கடவது இறே

ஸ்வாமித் வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யாஸ் ஸ்வாமிநோ குணா
ஸ்வேப்யோ தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயிந –என்று
ஸ்வாமி குண அனுசந்தானத்தில் ஸ்வத்துக்குத் தத் ப்ரதி சம்பந்திக ஸ்வ பாவங்கள் தோற்றுகையாலே
ஈஸ்வரனுடைய புருஷோத்தமத்வ அனுசந்தானத்தில்
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வ அனுசந்தானம் அவர்ஜனீயம் என்றதாயிற்று –

இப்படி நாயக நாயிகா ஸம்பந்தம் ஸித்தமாய் இருந்துள்ள இடத்தில்
தாய் வார்த்தையான இடம் -ஞான தசையாதல் -பரிவர் வார்த்தை யாகக் கடவது
தலைமகள் -என்பது ப்ரேம தசையை
தோழி என்பது ஸூஹ்ருத்துக்களை
கிளவித் தலைமகன் என்பது அபிமத பாகவத விஷயத்தை
தூது என்பது -கடகமான ஆச்சார்ய விஷயத்தை
கண் அழகு என்பது ஞான வை லக்ஷண்யத்தை
முலை அழகு என்பது -பாரதந்தர்ய லக்ஷணமாய் போக உபகாரணமான பக்தி வை லக்ஷண்யத்தை
இடை அழகு என்பது -ஒன்றும் பொறாத வைராக்கியத்தை
நடை அழகு என்பது -அனுஷ்டானத்தை
வளை -என்பது அநந்யார்ஹதா சிஹ்னத்தை
இருள் என்பது அஞ்ஞானத்தை
வாடை அன்றில் தென்றல் முதலான பாதகங்கள் என்பது ஸ்மாரகத்வேந அஸஹ்யங்களான லௌகிக பதார்த்தங்களை
இரவு நெடுமை என்பது -விளம்ப அஷமத்வத்தை
பொழுதோடு புலம்பல் -மாலைக்கு ஆற்றாமை என்பது -போக யோக்ய கால ஸந்நிதியை
சந்த்ர உதயம் என்பது -அலாப தசையில் விவேகமும் பாதகமான படியை
இன்னமும் இப் பிரகாரங்களிலே வ்யங்யங்களும் (ஆழ் பொருள்களையும் உள்ளுறை பொருள்களையும் )
கண்டு கொள்ளப்படும் –

————-

இப் பாட்டு ப்ரபந்த தாத்பர்யத்தை ஸங்க்ரஹிக்கிறது
அதாவது
அவித்யா கர்ம தோஷாதிகள் விரோதி என்னும் இடமும்
(ஆதி வாசனா ருசி ஜென்மம் -ஸ்வரூப உபாய மோக்ஷ புருஷார்த்த விரோதிகள் )

இவை ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு நிவர்த்த நீயம் என்னும் இடமும்

நிவர்த்தகனானவன் –
ஸர்வ ரக்ஷகனாய் –
அவதார ப்ரயுக்த ஸுலப்ய விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் என்னும் இடமும்
(சர்வேஸ்வரன் பரத்வம் -நாம் கிட்ட ஸுலப்யம் உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்த விபவம் )

நிவ்ருத்த விரோதிகனுக்கு ப்ராப்யனானவன்
நித்ய ஸூரி ஸேவ்யனான சர்வாதிகன் என்னும் இடமும் அறுதியிட்டு –

இவ்வர்த்தத்தை புத்தி சாஷாத்கார ஸந்நிஹிதனான ஈஸ்வரனைப் பார்த்து
(புத்தி சாஷாத்கார–மானஸ ப்ரத்யக்ஷ சமானாதிகாரம்
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா)
ஸங்க்ரஹேண விண்ணப்பம் செய்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.-கேட்பதே அருள்

உரை

பொய் நின்ற ஞானமும்
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான
அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்

பொல்லா ஒழுக்கும்
அந்த தேஹாத்ம அபிமானம் அடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும்

அழுக்கு உடம்பும்
இக் கர்மம் அடியாக வரக் கடவதான மாம்ஸா ஸ்ருகாதி மல ரூபமான தேஹ சம்பந்தமும்

(பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–53-)

இந் நின்ற நீர்மை
இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )

இனி யாம் உறாமை
நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு
முன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய்
பிராணி பதார்த்தங்களினுடைய
அநிஷ்ட நிவ்ருத்தியையும் –
இஷ்ட ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுக்கைக்காக
ரூப ப்ரகார வ்யவஸ்திதங்களான ஸகல ஜாதிகளிலும்
அவதீர்ணன் ஆனவனே –

இமையோர் தலைவா
ஏவம் வித ஸுலப்ய விசிஷ்டனான உன்னை ஆஸ்ரயித்தாரை அனுபவிப்பிக்கைக்காக
ஸதா தர்சன பரரான அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே –
(தாங்களும் அனுபவித்தும் நாம் அங்கு போனாலும் வந்து எதிர் கொண்டு நம்மை அனுபவிப்பித்தும் )

அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் நின்று கேட்டருளாய்–
உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை
ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்

மெய்ந் நின்று கேட்டருளாய்–
அபேக்ஷிக்கும் படி நின்று கேட்டருளாய் என்றுமாம்
(சரீரத்தில் நின்று என்றுமாம் )

கேட்டு அருளாய்
என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –

(கேட்டு அருளி வேறே ஒன்றும் செய்ய வேண்டாம்
எழுந்து அருள வேண்டும் -என்று வந்ததே அருள் போல் –
கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –62- திரு நக்ஷத்ரம் -எழுந்து அருளி கடாக்ஷத்தாலே போதும்
உபன்யாசம் செய்ய வேண்டாம் என்பார்களாம் )

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் என்று அந்வயம் —

யாம் உறாமை
என்று பன்மையாய் இருக்க

அடியேன்
என்று ஒருமையாலே
ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய்
பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –

(விண்ணப்பம் உடையவர் ஒருவரே -பலம் நமக்கு எல்லாருக்கும் உண்டே
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்–60-)

இனி பிரபந்த சேஷமும்
இதில் சொன்ன அர்த்தங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறது –

செய்யும் விண்ணப்பம் -1- என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த –100-என்று தலைக் கட்டுகையாலே
ஸ்ருணு விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் –50- என்று தொடங்கி
மது மதந விஞ்ஞாபனம் —57- என்ற கணக்கிலே
இப் பிரபந்தமாக இப் பாட்டில் சொன்ன அர்த்தமே ஒரு வார்த்தையாய் இருக்கிறது –

(ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —50

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —57

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.)

இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும்
அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும்
அடியேன் -என்று ஸ்வரூபத்தையும்
மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே
அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம் — ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

January 15, 2022

ஸ்ரீப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்யப் ப்ரபந்தங்கள்.
* பிறந்திறந்து பேரிடர்ச் சுழி * என்று சொல்லப்படுவது ஸம்ஸார ஸாகரமாகும்.
* ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜனம் * என்று சொல்லப்படுவது இந்த * இருள் தருமாஞாலம் * ஆகும்.
தாண்ட முடியாததாய், மிகுந்த துன்பங்களுக்குப் பிறப்பிடமாய் இருப்பது இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமாகும்.
அப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தினைக் கடப்பதற்குரிய அருமருந்தன்ன ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய்தவர்கள் ஆழ்வார்கள்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் அருளிய ஜ்ஞானத்தாலே இவர்கள்
* தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் * அருளியவர்கள்.
இது தன்னை * தத்வம் திவ்ய ப்ரபந்தானாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் * (பூர்வ தினசர்யா – 27)
என்றருளினார் ஸ்வாமி ஸ்ரீ எறும்பியப்பா.
திவ்யப்ரபந்தங்கள் சரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்கின்றது

* மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார்
பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே * (திருவிருத்தம்-100),

* செயிரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே * (திருவாய் 4-8-11)

* நோய்கள் அறுக்கும் மருந்தே *

* அணைவிக்கும் முடித்தே * முதலிய பாசுரங்களினால் விளங்கும்.

இப்படிப்பட்ட மிக்க க்ருபாளுக்களான ஆழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார்.
ஏனைய ஆழ்வார்கள் இவ்வாழ்வாரின் அவயவங்களாகவே போற்றப்படுகின்றனர்.
ஸம்ப்ரதாயத்தில் * ஆழ்வார் * என்றாலே நம்மாழ்வாரைத் தான் குறிக்கும்.
இவ்வாழ்வார் தாமும் நான்கு வேத ஸார ரூபமாக நான்கு திவ்யப்ரபந்தங்கள் அருளிச் செய்துள்ளார்.
இவற்றுள் ப்ரதம (முதல்) திவ்யப்ரபந்தம் திருவிருத்தமாகும்.
இது ருக்வேதஸாரமாய், 100 பாசுரங்கள் கொண்டதாய் இருக்கிறது.
இதில் ஸ்வாபதேச அர்த்தங்களும், அகப்பொருள்களும் நிறைந்து உள்ளன.

——

திருவிருத்ததிற்கு ஏற்பட்ட வ்யாக்யானங்கள்
நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம்
பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானம்
அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி அருளிய ஸ்வாபதேச வ்யாக்யானம்
பெரிய பரகால ஜீயர் ஸ்வாமி அருளிய வ்யாக்யானம்
அப்பிள்ளை ஸ்வாமி ஸ்வாமி அருளிய அரும்பதம்

———–

இந்த திவ்யப்ரபந்தம் ஆழ்வார் பராங்குச நாயகியின் நிலையினை அடைந்து,
ஸர்வேஶ்வரனை நாயகனாகக் கொண்டு அருளப்பெற்றதாகும்.
ஜீவாத்மாக்களுடைய இயல்பான நிலைமை பெண்ணிலைமையே ஆகும்.
* கந்தல் கிழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையினுடைய அவஸ்தை வரக்கடவதாயிருக்கும் * என்கிறது
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஸ்ரீஸூக்தி.

இதில் நடந்த கதைகளைச் சொல்லுகிறபடியால் திருவிருத்தம் (ஆழ்வாருடைய விருத்தம்) என்று திருநாமம் ஆயிற்று.
ஆழ்வார் தமக்குத் தாமே * மணிவல்லி * என்று இந்த திவ்யப்ரபந்தத்தில் திருநாமம் சாற்றியுள்ளார்.
எனவே இத்திருநாமத்தை நமது ஆசார்யர்கள் மிகவும் ஆதரித்து வந்துள்ளனர்!
* அடியேன் செய்யும் விண்ணப்பம் * என்று தொடங்கி
* மாறன் விண்ணப்பம் செய்த * என்று முடிக்கையாலே,
திருவிருத்தம் முழுமையும் ஆழ்வாருடைய வ்ருத்தத்தினைத் தெரிவிப்பதாக அமைந்தது என்றபடி.

———

ஸ்வாபதேஶார்த்தங்கள்-

இத் திவ்ய ப்ரபந்தத்தில் ஸ்வாபதேஶார்த்தங்கள் நிறைந்துள்ளன.
எம்பெருமானே ரக்ஷிப்பன் என்கின்ற அத்யவஸாய ஜ்ஞாநத்தைத் தாய் என்றும்,
பாகவதர்களை ஸகிகளென்றும்,
கடகனான ஆசார்யனை (சேர்த்து வைப்பவரான ஆசார்யனை) தூதென்றும்,
ஜ்ஞாந வைலக்ஷண்யத்தைக் கண்ணழகென்றும்,
அஜ்ஞாநத்தை இருளென்றும்,
பாதக பதார்த்தங்களை வாடை, தென்றல், அன்றில் என்றும் ஸ்வாபதேஶார்த்தங்கள் அருளப்பட்டுள்ளன.

* மயில் பிறை வில் அம்பு முத்துப் பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வ உரு விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய அக மேனியின் வகுப்பு * என்கிற
ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் (137)
ஆழ்வார் ஸ்த்ரீ நிலைமை யெய்தி
ஸ்த்ரீகளின் அவயவங்களாகச் அருளுகின்றவைகளின் ஸ்வாபதேஶார்த்தம் அருளப்பட்டுள்ளது.

———

திருவிருத்தமும் – அகத் துறையும்

திருவிருத்தத்தின் முதல் பாசுரம் எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்வதாகவும்,
இறுதிப் பாசுரம் பல ச்ருதியாகவும் அமைந்துள்ளது.
மற்றைய 98 பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை.

“காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல் -பொருள்-நூ.83)
நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று
உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர்.
எனவே கடவுளைத் தலைவனாகக் கொண்டு அகத்துறையில் பாசுரங்கள் பாடுவது தமிழர் மரபு என்பது தேறும்.
உதாரணமாக சில பாசுரங்களைப் பார்க்கலாம்.

ஏழாம் பாசுரம் காலமயக்கு துறையில் அமைந்ததாகும்.
மழைக்காலம் வந்தவுடன் தான் திரும்பிவிடுவதாக வாக்களித்த தலைவன், மழைக்காலம் வந்தும் திரும்பி வராததால்
கவலையுற்ற தலைவியைக் குறித்துத் தோழியானவள் அவளைத் தேற்றும் விதமாக
இது மழைக்காலமா – அல்லது இரண்டு நீல எருதுகள் வானில் சண்டையிடுகின்றன.
அவற்றின் திமிலிலிருந்து மதநீர் பெருகுகின்றனவா என்று தெரியவில்லை என்று கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

ஞாலம் பனிப்பச் செறுத்து நன்னீரிட்டுக்கால்சிதைந்து
நீலவல்லேறுபொராநின்றவானமிது, திருமால்
கோலஞ்சுமந்து பிரிந்தார்கொடுமை குழறுதண்பூங்
காலங்கொலோவறியேன், வினையாட்டியேன்காண்கின்றவே. (7)

கால மயக்குத் துறையிலே அமைந்த இன்னுமொரு பாசுரம் பதினெட்டாம் பாசுரமாகும்.

கடல்கொண்டெழுந்ததுவானம், அவ்வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண்டொழிந்தவதனாலிது, கண்ணன்மண்ணும்விண்ணுங்
கடல்கொண்டெழுந்தவக் காலங்கொலோ புயற்காலங்கொலோ
கடல்கொண்டகண்ணீர், அருவிசெய்யாநிற்குங்காரிகையே (18)

ஸமுத்ரத்தைத் தோற்பித்த கண்களில் இருந்து ஜலத்தைப் பெருக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணே!
ஆகாசமானது ஸமுத்ரத்தை விழுங்கி மேலே கிளம்பிற்று; ஸமுத்ரமானது அந்த ஆகாசத்தை கோபித்துக் கொண்டு,
பின் தொடர்ந்து சென்று, ஆகாசம் கொண்டுபோன ஜலத்தை வாங்கிக் கொண்டு –
அப்போது அதில் தங்கிப்போன ஜலத்தினால் இந்த மழைத்துளி விழுகிறது.
ஸ்ரீக்ருஷ்ணனுடைய பூலோகத்தையும் விண்ணுலகத்தையும் ஸமுத்ரம் கபளீகரித்து
வ்ருத்தியடைந்த ப்ரளயகாலந்தானோ?
மழைக்காலந்தானோ? நிச்சயிக்க மாட்டுகிறிலேன் – என்று
கால மயக்குத் துறையில் அமைந்துள்ளது இப்பாசுரம்.

இங்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள் –
” திருமங்கையாழ்வார்க்குச் சரணம் புக வேண்டுமா போலே இவர்க்கும் பலகாலும் கால மயக்கு வேண்டியிருக்கிறபடி ”
(எப்படித் திருமங்கை ஆழ்வார் அடிக்கடி சரணாகதி செய்வாரோ
அது போல நம்மாழ்வார் அடிக்கடி காலமயக்கு அனுபவத்தில் ஈடுபடுவார்)

அகத்துறையில் வெறிவிலக்கு என்றால் தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை
வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும்
வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறுதல்.
இத்துறையில் அமைந்துள்ள பாசுரம் இருபதாம் பாசுரமாகும்

சின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம், இந்நோயினதென்
றின்மொழிகேட்கு மிளந்தெய்வமன்றிது, வேலநில்நீ
என்மொழிகேண்மி னென்னம்மனைமீருலகேழுமுண்டான்
சொன்மொழி, மாலையந்தண்ணத்துழாய்கொண்டுசூட்டுமினே (20)

தலைவியானவள் சோகித்துக் கிடக்கும் தசையினைக் கண்ட திருத்தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்சமுடையார்
புகுந்து நிற்க/சிலவற்றைச் செய்யத் தொடங்க;
தோழி தலைமகளது ப்ரபாவத்தினைத் தெரிந்தவளாகையாலே திருத்தாயாரை நோக்கி
இவளுக்கு நோய் தீர்க்கிறோம் என்று விநாசத்தை விளைக்க வேண்டா என்று
கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரமாகும்.

நலம் பாராட்டல் துறையில் அமைந்தது 55வது பாசுரம்.
தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம் பாராட்டல் என்பர்.
கொளு இதனை,அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று என்று விளக்குகிறது.

இங்கு,
திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார்
நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே? (55)

——–

திருவிருத்தத்தில் ஆழ்வாரின் ப்ரபாவங்கள்

ஆழ்வாருடைய ப்ரபாவங்களைச் சொல்வதாக இத் திரு விருத்தத்தில் சில பாசுரங்கள் அமைந்துள்ளன.
எப்படித் திருவாய்மொழியில் * துவளில் மாமணிமாடமோங்கு * பதிகமோ அதே போன்றதாகும்.
சில பாசுரங்களைக் காணலாம்

ஈர்வனவேலுமஞ்சேலுமுயிர்மேன்மிளிர்ந்து, இவையோ
பேர்வனவோவல்லதெய்வநல்வேள்கணைப் பேரொளியே
சோர்வனநீலச்சுடர்விடுமேனியம்மான் விசும்பூர்
தேர்வன, தெய்வமந்நீரகண்ணோவிச்செழுங்கயலே (14)

இப்பாசுரத்தில் நாயகியின் (பராங்குச நாயகியின்) கண்ணழகில் ஈடுபட்ட நாயகன்,
அவற்றின் அழகைச் சொல்லிப் புகழ்வதாக அமைந்தது இப்பாசுரம்.
கண்ணழகு ஞானமாகச் சொல்லப்பட்டது காண்க.
ஆழ்வாருடைய ஜ்ஞாநத்தின் ஏற்றத்தைக் கண்டுரைத்த பாகவதர்கள் பாசுரத்தைச் சொல்லுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.
இந்த ஜ்ஞாநத்தின் தன்னேற்றம் எப்படிப்பட்டது எனில் நித்யஸூரிகளும் பரமபதநாதனின் அநுபவத்தினையும்
விட்டுவிட்டு ஆழ்வாரைத் தேடிக் கொண்டு வருவதாக அமைந்துள்ளது.

கயலோநுமகண்களென்றுகளிறுவினவிநிற்றீர்,
அயலோரறியிலுமீதென்னவார்த்தை, கடல்கவர்ந்த
புயலோடுலாங்கொண்டல்வண்ணன் புனவேங்கடத்தெம்மோடும்
பயலோவிலீர், கொல்லைகாக்கின்றநாளும் பலபலவே (15)

யானை (இங்குவரக் கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி,
“உங்கள் கண்கள் கயல்மீன்களோ?”என்று (எங்கள் கண்களைக் கொண்டாடி) நின்றீர்;
அயலார் அறிந்தாலும் இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும் மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான காளமேகம் போன்ற
திருநிறத்தையுடையனனான எம்பெருமானது (பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே (நாங்கள்)
கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும் எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர் – என்பது இப்பாசுரத்தின் அர்த்தம்.

இப்பாசுரத்திலும் ஆழ்வாருடைய பகவத் விஷயாவகாஹநத்தில் உண்டான வைலக்ஷண்யத்தினைக் கண்ட
பாகவதர்கள் இவருடைய ஜ்ஞாநாதி குணங்களிலீடுபட்டு இருப்பதாக இருப்பது இப்பாசுரமாகும்.

கொடுங்கால்சிலையர்நிரைகோளுழவர்கொலையில்வெய்ய
கடுங்காலிளைஞர்துடிபடுங்கவ்வைத்து அருவினையேன்
நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம்பரவிப்பெற்ற
தொடுங்காலொசியுமிடை இளமான்சென்றசூழ்கடமே (37)

இப்பாசுரத்தில், ஆழ்வார்க்குப் பிறந்த ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைக் கண்டு, இவர்க்கு
இந்த ஸம்ஸாரத்தில் இருப்பு மிகவும் கொடிதாயிருக்குமென திருத்தாயார் கருதுவதாக அமைந்தது இப்பாசுரம்.

உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர் – குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ, வையமோ? நும்நிலையிடமே. (75)

ஆழ்வாரினுடைய திருக்கண்களின் அழகைப் பேசுவதாக அமைந்தது இப்பாசுரம்.
* வெஞ்சிலை வாண் முகத்தீர்* – ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர்கள் அவரை நோக்கி
‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும்
முகமலர்ச்சியுடையவரே! என அழைத்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும்,
அங்கு நின்று இங்கு வந்தவர் ஒருவர் என்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி வினவுதற்குக் காரணம்.

———–

மேலும் இத்திவ்யப்ரபந்தத்தில் தத்வார்த்தங்கள் பொதிந்துள்ளன.
ஆழ்வார் தாமும் தொடங்கியருளும் பொழுதே
* பொய்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் * என்று தான் தொடங்கியருளுகிறார்.
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை மிகவும் வியந்து கொண்டாடி இங்கு வ்யாக்யானமிட்டருளுகிறார்!
மஹாபாரதம் தொடங்கி க்ரந்தங்கள் விரிவாக இருந்தும் தெளிவாகச் சொல்ல இயலாத ஜீவாத்மாக்களின் நிலையை
ஆழ்வார் ஒரே சந்தையில் அருளிச்செய்கிறார் என்று.
* மஹாபாரதமெல்லாம், கூளமும் பலாப்பிசினும் போலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணமாட்டிற்றில்லை;
இவர் மயர்வறமதிநலம் அருளப் பெற்றவராகையாலே, மூன்று பதத்தாலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணியருளினார் *.

இன்னமும் முதல் பாசுரத்திலுள்ள அர்த்தங்களைச் சுருக்கி ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் தாமும்
* இமையோரதிபதி அடியேன்மனனே பொய்மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே,
அவித்யாதிஸ்வரூப ஸ்வாபாவ, ஆத்மேச்வரபந்த, ரக்ஷணக்ரம, குண, விக்ரஹ, விபூதியோக, ததீயாபிமாந,
உபதேசவிஷய, அந்யாபதேச ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம் * (212) என்கிற சூர்ணிகையிலே ஆசார்ய ஹ்ருதயத்தில்
சுருக்கியருளினார்.

அதாவது (1) * இமையோர் தலைவா * என்று பரஸ்வரூபத்தினையும்,
(2) * அடியேன் செய்யும் * என்று ஸ்வஸ்வரூபத்தையும்,
(3) *பொய்ந்நின்ற ஜ்ஞாநமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும் * என்று விரோதி ஸ்வரூபத்தையும்,
(4) *என் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * என்று உபாய ஸ்வரூபத்தையும்
(5) * செய்யும் விண்ணப்பம் * என்கையாலே புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் முதல் பாசுரத்திலேயே காட்டியருளியுள்ளார்.

(குறிப்பு – திருவிருத்த விஷயமான கட்டுரையாகையாலே திருவாய்மொழி எடுக்கப்படவில்லை.
மாமுனிகள் வ்யாக்யானத்திலே கண்டு கொள்வது)

திருவிருத்தமே, திருவாய்மொழியாக விரிந்துள்ளது என்பதினை ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்
* ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமாபோலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று * என்று காட்டியருளினார்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத்தம்புக்குழலுறுவீர், உயிரின்பொருட்கட்கு
ஒருவிருத்தம்புகுதாமல்குருகையர்கோனுரைத்த
திருவிருத்தத்து ஓரடிகற்றிரீர் திருநாட்டகத்தே

கர்ப்ப, ஜன்ம, பால்ய, யௌவன, ஜரா, மரண நரகங்களாகிற அவஸ்த்தைகளிலே சிக்கி ஸம்ஸாரத்திலே
உழல்கின்ற ஜீவர்களைப் பார்த்து, ஆழ்வார் அருளிச்செய்த திருவிருத்தத்தின் ஓரடி கற்கையே உங்களை
இந்த ஸம்ஸாரச் சுழலில் நின்றும் விடுபட ஹேதுவாக இருக்கும் – என்று
திருவிருதத்தின் பெருமையைப் பகர்வதாக அமைந்துள்ளது இத் தனியன்.

முடிவுரை

இவ்வாறு திருவிருத்தத்தின் உரைகளில் காட்டப்பட்ட சில பல விசேஷமான அர்த்தங்களை இங்கே அனுபவித்தோம்.

அடியேன் ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யை யுடைய சீர்மை ஆராயும் சீர்மைத்தே —

October 24, 2021

உடல் ஆராய்ச்சி -பொய் நின்ற ஞானம் -நமன்தமர் உடல் ஆராய்வார்
உயிர் ஆராய்ச்சி -இதுவே மெய் நின்ற ஞானம் –
சிங்கப்பிரானின் பெருமை ஆராயும் சீர்மை -தெள்ளிய சிங்கத் திருவடிக் காவலர் நம்மாழ்வார் ஒருவரே
நாதஸ்ய தூந முசிதா நரஸிம்ஹ மூர்த்தே -என்றே ஆழ்வாரை தேசிகர் கண்டு களிக்கிறார் –
கற்றதால் ஆய பயன் என் கொல் வால் அறிவன் நல் தாள் தொழார் எனின் —
இக் கல்வியே ஆகம அறிவு என்பர் பரிமேல் அழகர் –
இதுவே மெய் நின்ற ஞானம்

மறை கொண்டு ஆராயும் ஓர் அறிவே ஆர் உயிர் நின்ற அப்பன் பொன்னடிப்பால் நம் சென்னியைத் தாழ்த்துவைத்து வாழ்விக்கும்
அனைத்து உலகுக்கும் ஓர் உயிராய்க் கரந்து எங்கும் பரந்து விளங்கும் பரம்பொருளின் பொன்னடி ஆராய்ச்சியே ப்ரஹ்ம வித்யை –
பகவத் விஷயத்தை ஒழியக் கற்றவை எல்லாம் செருப்புக் குத்தக் கற்றவோ பாதி என்பர் நம்பிள்ளை

பாரதத்தைப் பணித்தானும் நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம்மறைப் பொருளே என்பர் கம்பநாட்டாழ்வார்
இரு கண்களும் காண்பது கண்ணனாம் அறம் என்னும் மறைப்பொருளையே

தருமவரும் பயனாய திருமகளார் தனிக்கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவ்வுணர்வு உற்றாரையே முழுதுணர் நீர்மையினார்

தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி -என்பர் வால்மீகி பகவான்

கண்ணன் கழலிணையே ஆய்ந்து உருகி ஒருப்படும் சீரியரே பொன்னுலகு ஏகும் புண்ணியர்

ஆழ்வார் ஆராய்ந்து புலப் படப் புகுந்தது கண்ணன் பெருமையை
புலப்பட்டது ஆழ்வார் பெருமையே
புலப்படுத்தினவன் கண்ணனே

கண்ணனையே ஆழ்வார் ஆராய்வார் -ஆழ்வாரையே கண்ணன் ஆராய்வான் –
இருவரும் நன்கு ஆராய்ந்தே ஒருவர் ஒருவர் பெற்றது –
ஆழ்வார் பெற்ற பேறே கண்ணன் –கண்ணன் பெற்ற பேறே ஆழ்வார் –

அர்ஜுனனை வியாஜ்யமாக்கி ஊழி முதல்வன் தானே மன்னருள் சுரந்து மெய்ம்மை காக்கும் அறத்தையே ஓர் மறையாய் விரித்து
தன் அருங்கலை ஒருங்கிய மறை அனைத்துக்கும் ஒரே இலக்கு பொற்கழலே என்று உலகு அனைத்தும் கண் கொண்டு காணுமாறு
கை கொண்டு காட்டி முழு முதல் குருவாயத் திகழ்ந்த அன்று தன் செம்பவளத் திரள் வாய் கொண்டே மறை முடி அமிழ்தம் உமிழ்ந்து
தன் திருவடி நிலையைத் தானே நீராட்டுவித்து அருளினான் –
அப்பன் திருப்பவளம் உமிழ்ந்து நீராட்டு வித்த அத்திருவடி நிலை கான் நம் சடகோப பெருஞ்செல்வர் –
கண்ணன் தானே தன் கழலிணையை ஆழ்வார் திருமுடிக்கண் புனைவித்து
ஆழ்வாரையே தன் கழலிணைக் காவலராக முடி சூட்டி அருளிய சரிதையின் பெருமை ஆராயும் சீர்மைத்தே
என்பதே பெரிதும் பொருந்தும் –

உபநிஷதம் உதாராம் உத்வ மந்ந்வ அபி லஷ்யே சரணம் உப கதாந்ந த்ராயதே சார்ங்க தந்வா –
தந்தை என நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே —
ஸ்ரீ பகவத் கீதையையே -சடாரே சரீரம் மஹத் -என்பார்களே
யமே வைஷ வ்ருணுதே –
பஹு நாம் ஜென்ம நாம் அந்தே –

திருமாலே தானே திரு மாறனும்
அப்பனை ஆராயும் அற நெறி வகுத்தவர் ஆழ்வார்
ஆழ்வாரை ஆராயும் அற நெறி வகுத்தவன் அப்பன்
ஆர் என்னை ஆராய்வார் –நம் கண்ணனும் வாரானால் –என்று இவர் செந்நாப் போது
அவிழ்ந்த வாறே மறை முடி செழித்து மணம் கமழ்ந்தது –

இம் மெய்ப் போது அவிழ்த்து மகிழ்ந்தவன் கண்ணனே
இப் பெரு நல் உதவிக் கைம்மாறு தெரிக்கவே ஏனையர் தம்மை ஆராய வல்லர் அல்லர் அன்று என்று
அருளிச் செய்யும் தெய்வ மாக் கவிக் குறிப்பு ஆராயும் சீர்மைத்தே
கண்ணன் திருவருளால் அகக் கண் விழித்து அவன் பொன்னடி ஆராய்ந்தார் இழைக்கும்
மண மொழியை ஒழியப் பேசுமவை எல்லாம் துஞ்சுமவர் கண்ட கனவே யாம் –என்று
அன்றோ ஆழ்வாரது கவிக்குறிப்பு

அகக்கண் செழித்தோர் சில தறுவாய் துஞ்சினாலும் கனவிலும்
அவர்கள் மணமே உணர்வர் —
மண மொழியே பகர்வர் –
மங்கல வீதி வலம் செய்து மண நீர் அங்கு அவனோடே உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனமாட்டவே கனாக் கண்டேன் என்பர் –
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோ நித்தம் –
ஆழ்வாரும் கண்ணனும் ஒருவரை ஒருவர் அளப்பரிய அவா வுற்றுப் பெற்றே விடாய் தீர்த்தனர் –
இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி
ஸம்ஸ்லேஷித்து அருளினான் -நம்பிள்ளை

அப்பன் திருவடியும் ஆழ்வார் திருமுடியும் கலந்தே நீர்மை பெற்றன
உபநிஷத்தும் திருவாய் மொழியும் கலந்த நீர்மை
உண்மையும் அறமும் ஒருங்கிய பான்மை
இவை ஒன்றிய சீர்மை விளக்கியவர் மதுரகவியார்
தொல் வழி நின்று இவர் ஏற்றியதே சான்றோருக்கு நல் வழி விளக்காம்

ஒண் தமிழாம் அருள் கொண்டு தமிழ் ஆரணக்
கொண்டல் எனும் சடகோபன் அவன் தான்
அண்டம் அளந்த பிரான் அடி என்றே
பண்டு ஒளி நண்ணிய பண்டிதர் கண்டார்

அருளிச் செயல்களின் த்ருஷ்ட அத்ருஷ்ட சக்தியினால் ப்ரத்யக்கான அவனைப்
ப்ராக் போலே ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளி
அத்ருஸ்யத்தை த்ருஸ்யமாக்கி
விஷயீ என்னும் ஞான ஸ்வரூபனான ஈஸ்வரன் என்னும் உள் பொருளை விஷயம் போலவே
சாஷாத்காரிக்கச் செய்து அருளுவதாலேயே
பகவத் விஷயம் –
தீர்க்க சரணாகதி ஸாஸ்த்ரம் -திருவாய் மொழி என்னும் இன்ப வெள்ளம் –

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
‘இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
‘அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது
அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?

‘ஸம் ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம் த்ருஷ்யதே வாப் யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84

தது அந்த ப்ரஹ்மம் -அறிய படுகிறதோ பார்க்க படுகிறதோ அடைய படுகிறதோ ததேவ ஞானம் –
ஸ்ரவண நினைக்க கேட்க -சந்த்ருஷ்யதே கண்ணால் பார்ப்பது -ஸம் ஞாயதே -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்

பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?

—————–

அகார வாஸ்யனே அரவணை அமலன்
ஆகார நியமம் ஆரியருக்கு அழகு
இல்லறத்து இருந்து இருடீகேசன் அடி சேர்
ஈசற்கு ஈசன் இலக்குமி நாதன்
உயர் நலம் உடையவன் உம்பருக்கு அதிபன்
ஊரார் உகப்ப உத்தமர் பேணு
எடுப்புமிலி ஈசன் எந்தை தந்தை
ஏரகத்தோனே ஏற்றம் உடையான்
ஐவை அர்த்தம் ஐயங்கார் கொள்கை
ஒப்பற்றவன் கான் ஒரு தனி முதல்வன்
ஓதல் தன்னுடன் ஒழுக்கத்தோடு இரு
ஒவ்வியம் அவித்தான் ஓவ்தார்ய புருஷன்

—————-

ஏவல் செய் அடியேன் நானே
இவருக்குத் தம்பி தொண்டன் அஹம் அஸ்மி ப்ராதா குணர் க்ருத தாஸ்யன்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சொம்பு தண்ணீர்
தண்ணீர் கொண்டு வந்தாயா சொம்பு கொண்டு வந்தாயா -போல்
தேகமும் உள்ளில் உறையும் ஆத்மாவும்
யானே நீ என்னுள் உறைவதால்

————-

அருளிச் செயல்களில் ஆழ்ந்த சிறுவர் கேள்வியும் பதிலும் –

கண்ணா -உன்னை நான் இன்று பன்னிரு பாட்டுக் கேட்க நீ ஓன்று கூட சொல்ல வில்லை யன்றா

1-கண்ணா நான்முகனைப் படைத்தானே -பெரியாழ்வார்
2- உன்னை -உன்னையும் ஓக்கலையில் கொண்டு –பெரியாழ்வார்
3-நான் -நான் கூறும் கூற்றாவது இத்தனையே –பெரிய திருவந்தாதி
4-இன்று -இன்று வந்து இத்தனையும் -நாச்சியார்
5-பன்னிரு –பன்னிரு திங்கள் -பெரியாழ்வார்
6-பாட்டு -பாட்டு முறையும் -நான்முகன்
7-கேட்க -கேட்க நான் உற்றது உண்டு -திருக்குறும் தன்னடக்கம்
8-நீ -நீயும் திரு மக்களும் நின்றாயால் –முதல் திருவந்தாதி
9-ஓன்று -ஓன்று உண்டு செங்கண் மால் -பெரிய திருவந்தாதி
10-கூட -கூடச் சென்றேன் இனி என் –திருவாய் மொழி
11-சொல்ல -சொல்ல மாட்டேன் அடியேன் -திருவாய் மொழி
12-இல்லை -இல்லை அல்லல் எனக்கேல் இனி -திருவாய் மொழி
13-அன்றா -அன்றாயர் குலக்கொடி யோடு -பெரிய திருமொழி

அமரம் காவியம் மாகம் சம்பு நாடகம் அலங்காரம் தற்கம் வேதம் வேதாந்தம் புராணம் பாரதம் ராமாயணம்
திருவாய் மொழி எல்லாம் சொல்லுவாயோ

1-அமரம் -அமர வோர் அங்கம் ஆறும் -திருமாலை
2-காவியம் -காவியங் கண்ணி எண்ணில் -பெரிய திருமொழி
3-மாகம் -மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் -பெரிய திருமொழி
4-சம்பு -செறி தவச் சம்பு -பெருமாள் திருமொழி
5-நாடகம் -நாடகம் செய்கின்றனவே -திருவாய் மொழி
6-அலங்காரம் -அலங்காரத்தால் வரும் மாயப்பிள்ளை -பெரியாழ்வார்
7-தற்கம் -தற்கச் சமணரும் -இராமானுச நூற்றந்தாதி
8-வேதம் -வேதம் வல்லார்களைக் கொண்டு -திருவாய் மொழி
9-வேதாந்தம் -வேதாந்த விழுப்பொருள் –பெரியாழ்வார்
10-புராணம் -இலிங்கத்திட்ட புராணத்தீரும் -திருவாய் மொழி
11-பாரதம் –பன்னி உரைக்கும் கால் பாரதமாம் -பெரிய திருமடல்
12-ராமாயணம் -படி கொண்ட கீர்த்தி இராமாயணம் எனும் பக்தி வெள்ளம் (ராமானுச )
13-திருவாய் மொழி -திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை (ராமாநுச )
14-எல்லாம் -மற்றை யமரர் எல்லாம் (திருவாய் )
15-சொல்லு-சொல்லுவான் சொற் பொருள் (பெரிய திருமொழி )
16-வாயோ -வாயோர் ஈர் ஐஞ்சூறு நுதங்கள் (பெருமாள் திருமொழி )

——–

ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னை திருமணம்
காமம் க்ரோதம் லோபம் மோஹம் மதம் மாத்சர்யம் அஸூயை -போக்கி நம்மைக் கைக் கொள்ளுகிறான்

இரண்டு மல்லர்களை மாட்டியது -நீர் நுமது -என்ற இவை வேர் முதல் மாய்த்து

குவலயாபீட நிரசனம் -இந்திரியங்கள் மத களிற்றை அடக்கி

மாலாகாரர் உகந்து அளித்த பூ பெற்று மகிழ்ந்தது போல்
அஹிம்ஸா பிரமம் புஷ்பம் புஷ்பம் இந்திரிய நிக்ரஹ -ஸர்வ பூத தயா புஷ்பம் -புஷ்பம் ஷமா -புஷ்பம் விசேஷத –
ஞாதம் புஷ்பம் -தபஸ் புஷ்பம் -த்யானம் புஷ்பம் -ததைவ ச ஸத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் —
எண் வகைப் பூவையும் சிஷ்யர் பக்கலில் செழித்து வளரக் கண்டு ஹ்ருஷ்டராவார்

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரப்படி –ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை —

August 11, 2021

ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

தந்தை தளை கழலத் தோன்றி
பிறந்தவாறும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
பிறந்த மாயா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான்
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன்
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –

———

ஸ்ரீ கிருஷ்ணன் போய் ஆய்ப்பாடி புக்கதும்

போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –

————-

அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை
ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும்
நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல-1-3-2-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-

—————————-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-91-100- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

பருகின்றது இருள் -இருட்டோ வந்து நிறைகின்றது
போகின்றது வண்ணம் பூவை -இவளது நல்ல நிறமோ நீங்குகின்றதே
கண்ணீர் உருகின்றது -கண்ண நீரும் பெருகுகின்றதே
தென்று உயிர் ஓய்கின்றதால்-இக் காரணங்களால் எனது உயிர் சோர்வடைகின்றது
மேன் மேலும் காதல் தருமவரே–அபிநிவேசத்தை வளர்த்து அருளும் அவரே
உலகு ஏழுமுய்யத் தொகுகின்ற ஆயிரம் சொன்னோன்–தொண்டர்க்கு அமுதால அருளிச் செய்த ஆழ்வார்
குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் -கீர்த்தியால் விளங்கத் தக்கவர் அல்லர்

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்

———

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளும் -தர்மம் அர்த்தம் காமம்
தணவாக் கருமமும் ஆகிய -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
காரணம் கண்ட அக் காரணத்தின்–அந்த பர ப்ரஹ்மம் போலவே
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்து–அனைத்திலும் பெரிய மஹா மாயை என்னும்
பிரகிருதி சம்பந்தமும் அதனால் வரும் மாறுபாடும் இல்லாமல்
உறு பேதம் செய்யம் இருமையும் தீர்ந்த –இருவித கர்மங்களையும் தொடரப் பெறாத
பிரான் சட கோபன் தன் இன்னருளே.–ஆழ்வாரது பரம காருண்யமே காரணம் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே

———–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

இயலோடு இசையின் பொருளில் சிறந்த -இயல் தமிழ் பொருள் அமைதியிலும் இசைத்தமிழ் பொருள் அமைதியிலும் சிறப்புற்ற
குருகையர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
அலங்கார வல்லியின் -அலங்காரங்கள் அமைந்த பூங்கொடி போலும் படி
கடவல்லி ப்ரஹ்ம வல்லி ஆனந்த வல்லி போல் அலங்கார வல்லி
போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. –நம்மாழ்வார்
ஆயிழைக்கு —ஆழ்வார் திரு உள்ளம் மகிழும்படி ஆத்ம குணம் நிறைந்த தலை மகளுக்கு –
அருளில் சில மகிழா ஈவர் கொல் -கருணையால் மகிழம் பூவைத் தந்து அருளுவாரோ –
அந்தி வந்த இருளில் பிறிது துயரும் உண்டோ -மாலைப் பொழுதில் இருள் போல் வேறே ஓன்று உண்டோ -இல்லை என்றபடி –

———-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்-ப்ரஹ்மாதிகளுக்கும் மற்ற தேவர்களுக்கும்
பவரே கை யுற்று என் -பிறப்பு வகை நேர்ந்து என்ன பயன்
படர் நீரின் இட்ட நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் -நீரில் மேல் எடுத்திய புது எழுத்துக்கள் போல்
நிலை இல்லாத பிரபஞ்ச விஷயங்களை மனம் கொள்ளும்படி செய்தது அல்லால்
பணி கொள்ளுமோ -நித்ய கைங்கர்யம் செய்தலைப் பெறுமோ
அவர் எவரே -அவர்களில் எவர் தாம்
நம்பி மாறனைப் போல் திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே-நம்மாழ்வார் போல்
மோக்ஷ ஸாஸ்த்ரம் அருளிச் செய்தவர் யாரும் இல்லையே –

———-

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

தம்மை ஒறுத்து-தங்களை வருத்தி
தவம் செய்வதும்
தழல் வேள்வி முடிப்பதும்
எவன் செய்யும் -இது நல்ல பயனைக் கொடுக்கும்
அவம் செய்கை மாற்றச்–கொடிய கர்மங்களை ஒழிக்க
மெய்யன் குருகைப் பிரான் -உண்மைப் பொருளை உண்மையாக அறிந்த ஆழ்வார்
எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் -இனி சம்சாரத்தில் இருக்க ஒட்டாமல் இருக்க
வண் தமிழ்ப் பாவம் உண்டே-திவ்ய ப்ரபந்தகளும் இருக்கின்றனவே
செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. –காதுகளும் நாக்கும் அர்த்த பஞ்சகம் அறிய அறிவும் உண்டே –

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு
மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்

———-

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல் –

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும் திருமால் –திரு விளையாடல்களை யுடைய ஸ்ரீ யபதி யுடைய –
அலகிலா விளையாட்டுடைய தலைவருடைய
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
உருவை -திவ்ய மங்கள விக்ரஹங்களை
உயர்த்து-மோக்ஷ சாதனம் என்று வெளியிட்டு அருளி
உலகைத் தொண்டாட்டிய -கைங்கர்யங்களிலே உலகோரை மூட்ட
வந்து தோன்றிய தோன்றல் -திரு அவதரித்த ஆழ்வார்
துறைக் குருகூர்-திருச்சங்கு அணித் துறையிலே
நண்டாட்டிய நங்கை -திருக்கை வளையல்களை ஓசை எழுப்பி வரும் இவளது
நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம் திண்டாட்டிய கண்கள் போல் -திருக்கண்கள் போல் –
ஞான விசேஷங்களையே திருக்கண்கள் என்பரே
செய்யுமோ கயல் தீங்குகளே.-கயல் மீன்கள் வருந்தச் செய்ய வல்லவே –

———-

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

இந்த நுண் பிறவி-இந்த எளிய பிறப்பாகிய
மாயைக் கிழியைக்-மாயா ரூபமான ஆடை எமது உயிரைப் போர்த்து உள்ளதை
கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே–திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வல்ல ஆழ்வார்
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்-நெருப்பைப் பிளந்து ஒரு பிறைச்சந்திரனாக செய்தது அல்லாமல்
அன்றில் பனை-அன்றில் பறவைக்கு இடம் கொடுக்கும் பனை மரத்தை
பேயைக் கிழித்தென பிளவார்-பேயைக் கிழிப்பது போல் பிளந்தார் இல்லையே
உளவாம் நோயைக் கிழிக்கும் வகுளம் நல்கார் -பிரேம நோயைப் போக்கும் மகிழம் பூ மாலையையும் தர மாட்டார்

——–

இதுவும் அது –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

அம் புலி முக -நீரில் பொருந்திய தாமரை திரு முகத்தில் உள்ள
வாயில் கரும்பின் -திருவாய் மொழியாகிய அம்ருதம் கொண்டு
வல் மறு பிறப்பைக்-விரைவிலே மறு பிறப்பை ஒழித்திட்ட
அம்புலி -அழகிய ஸிம்ஹம் போன்ற ஆழ்வார்
யோர் வகுளம் கொடார்- அத்விதீயமான மகிழம் பூ கொடுக்க மாட்டார்
கொடுங்கோகு உகட்டிச்-கொடுமையான முறை கேடு தலைக்கு ஏறி -அக்கிரமம் விஞ்சி
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது –முள்ளம் பன்றி போல் எதிர்த்துப் பாய்வதாகிய
தாயென்றிங்கோர் இல்லம் புலியும்-வீட்டுப்புலியும்
இங்கு உண்டு -இவ்விடத்தில் என்னை வருத்திக் கொண்டு உள்ளது
இதற்கும் மேல்
கொல்லம் புலி மீள எழுகின்றதே–வானத்திலும் ஓர் அம்புலி என்னை வறுத்த மீள தோன்றுகிறது
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

புகழ் மெய்ப் புலவோர்-தத்வ ஞானிகள்
தொழுதியல் –வணங்கி அடியார்களாகி
நாயகன் -தலைவன் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் –அக்னி கார்யம் விடாத நீர் வளம் மிக்க
திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வார் அருளிச் செய்த
திருவாய் மொழி எம் மனத்தனவே.–திருவாய் மொழியை மனத்திலே நிலை கொண்டு
ஆதலால்
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் -பிரமன் எழுதிய ஆயுஸ்ஸூ காலமும்
அநாதி கால கர்மங்களும் அடியேனை பிறவிச் சூழலில் சிக்க வைக்க மாட்டாவே
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

———

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-81-90- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

கேணியிலும்-கிணறுகளிலும்
பட்டத்திலும்-பெருக்குக் காலத்தில் நீர் ஏறிப் பாயும் பட்டக் கால்களிலும்
பைந் தடத்திலும் -பசுமையான தடாகங்களிலும்
ஓடைப் பழனத்திலும்-நீரோடை சூழ்ந்த வயல்களிலும்
குட்டத்திலும் -ஆழமான குட்டை களிலும்
கயல் பாய் -நீர் வளத்தால் கயல் மீன்கள் பாய்ந்து குதிக்கப் பெற்ற
குரு கூரர் குணங்களுக்கே. -நம்மாழ்வாருடைய கல்யாண குணங்களுக்காகவே
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்பு உருக்கிய உருக்குக் கிட்டத்தை விட வலிய கல் நெஞ்சு உடையவரும்
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் உருகுவர் -தம் தம்முடைய மனம் புத்தி சித்தம் என்னும்
அகக் கரணங்களில் கரைவார்கள் –

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை

கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –

ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே
வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

———

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –மகிழ மலர்களின் வாசனை -அனைவராலும் விரும்பப்படுகிற
தண் தெரியல் பெருமான் செய்யுள் –ஆழ்வாரது திவ்ய பிரபங்தங்கள் ஆகிய
மா மணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் -ரத்னக் கூட்டங்களை தமக்கு இன்றியமையாதவை என்று அறிந்து ஓதி உணர்பவர்களை
கண்டால் சென்று கைத் தொழுமே–நீங்கள் எங்கே கண்டாலும்-உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கோள்

தொழும் -பன்மை ஏவல்
குணம் வேண்டுமே -நல்ல குணங்கள் வேண்டுமோ
நற் குலம் வேண்டுமே -நல்ல குலங்களில் பிறக்க வேண்டுமோ
யக்குலத் தொழுக் காம் பிணம் வேண்டுமே -அதுக்குத் தக்க ஆசாரமாகிய பிணம் வேண்டுமோ
செல்வப் பேய் வேண்டுமே -செல்வப் பொருளாகிய பேய் வேண்டுமோ
ஒன்றுமே வேண்டாம் என்றவாறு

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-

தொழும் பாக்கிய -உயிரைத் தனக்கு அடிமையாகச் செய்த
வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று -அநாதியான -பிறவிச் சூழல் நடுவில் இருந்து
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் –மீண்டு உய்யும் படியான அத்ருஷ்டத்தை யுடையதாம் படி செய்யவும்
தென்னிய லோடிசைந்து கெழும் பாக்–அழகிய இலக்கணங்களோடே கூடிய திவ்யப் ப்ரபந்தங்களிலே
கெழுமிய கீர்த்தியை -எம்பெருமானுடைய புகழை
நாளும் கிளத்தி யென் நாத் தழும்பாக் கவும் -நாளும் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏறும்படி செய்யவும்
வல்ல கோ சட கோபன் தயா பரனே-திறமை கொண்ட ஸ்வாமி -கருணையே வடிவானவர்

தயா பரன் -பரம தயாளு
முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

—————-

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-

நங்காய்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் –யாரேனும் தலைவனது ஊர்ப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே
நின் மகள்
கண் பனிக்கும்-கண்ணீர் பெருக்குகின்றாள்
கரம் தலைக் கொள்ளும் -கைகளைக் கூப்பித் தொழுகிறாள்
உள்ளும் உருகும் -மனமும் கரைந்து நீராகுகிறாள்
கவியால் உலகைப் புரந்து –திவ்ய ப்ரபந்தங்களால் உலகை ரக்ஷித்து
அலைக்கும் வினை தீர்த்தான் -கருமங்களைப் போக்கி அருளும் தலைமகனது
புனை மகிழ் பூவுமன்றி– மகிழ மலர்களை சூடிக் கொள்ளுவது மட்டும் அல்லாமல்
மரந்தலைக் கொள்ளவும் போது -மகிழ மரத்தைச் சார்ந்து அத்தையும் தலை மேல் கொள்ளச் செல்கிறாள்
உன் மகள் கருத்தே.

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி
ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

—————

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

கருத்தில் கருணை வைத்து -திரு உள்ளத்தில் பேர் அன்பு கொண்டு
ஏகும் இவளோடு-இம்மங்கை யுடன் செல்லக் கடவீர்
இதுவும் -இவ்வாறு இவளைக் கைப் பற்றுவதும்
கலை மறையோர் திருத்திற்று ஒரு மணம் -ஸாஸ்த்ரம் வல்லவர் அமைத்த விவாஹங்களில் ஒரு வகை
அன்றியும்
தீரும் தின மயல் -நாள் தோறும் இருவருக்கும் உள்ள மயக்கமும் நீர் இவளைக் கொண்டு போக நீங்கி விடுமே
நீரின் நிறை-நீர் வளத்தால் நீர் அருகில் முளைத்து நிறைந்துள்ள
முருத்தின் செருந்து -வெண்மையாக அடிக் குருத்துக்கள் உடைய செருந்தி கோரைகள்
அயலே கரும்பின் குருத்தில் -அருகில் உள்ள கரும்பின் குருத்துக்களில்
முயல் பிரசம் வைக்கும் -முயல் கூடான சந்த்ர மண்டலம் போல் தேன் கூடு கட்டப் பெற்ற
குருகூர் சென்று கூடுமினே–இவளை அழைத்துக் கொண்டு போவீராக —

கரும்பினிடைத்தேறல் -கலியன்

சாஸ்திரம் அஷ்ட வித மணங்களைச் சொல்லும்
ப்ராமம் -பிரஜா பத்த்யம் -ஆர்ஷம் -தேவம் -காந்தர்வம் -ஆசுரம் ராஷாஸம் -பைசாஸம்

சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய முயலும் தீருமே –

———-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

கூட்டங்கள் தோறும் -தாம் கூடும் பொழுது எல்லாம்
குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்-ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே கூறும் அடியார்கள்
ஈட்டங்கள் தோறும் -கூட்டங்களில் எல்லாம்
இருக்கப் பெற்றேம் -கூடி இருக்கப் பெற்றோம்
இருந்து -இவ்வாறு அடியார் கூட்டங்களில் கூடி இருந்து
எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் -ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்றோம்
இனி மேல்-இவ்வாறு ஆன பின்பு
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே -பரமபதத்தில் எங்களை சார்ந்தவர்களுக்கு
பெரும் போகம் விளைகின்றதே–பேர் இன்பம் நலம் நிகழா நின்றது –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ –

————

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

கிளையாம் பிறவித்-மேலே மேலே தொடரும் பிறவி சூழலில்
தளை யாசழியத் -பந்தமாகிய குற்றம் போகும்படி
தடுத்துத் -போக்கி
தென் பாலை வழி தடுத்துக் – தெற்குத் திக்கில் -பாலை நில வழியையும் தவிர்த்து
களை ஆசறத் தடுத்து -களைகளை முற்றும் போக்கி
ஆண்டான் குருகையின் காப் புனமே.–ஆழ்வாருடைய திருக்குருகூரைச் சேர்ந்த தினை புலமே
தினையின் கிளையாக் கிளர விளைகின்றதால் -தினைப் பயிர்கள் மிகைத்து வளர்ந்து கதிர் முற்றிப் போகின்றதே
விளையா தொழிய மருந்தும் உண்டே -இப்படி முற்றாமல் கதிர் பரிந்தபடியே இருக்க ஏதேனும் மருந்து உண்டோ
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

————–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல்

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

வழுவா நரகத் தினம் பாழ் படுத்த –நரபலி அடியார்களுக்கு இல்லாத படி செய்து அருளும்
பிரான் சட கோபன் இன்னாக் கலியின் சினம் பாழ் படுத்த நின்றான்–உபகாரகர் -காளி கோலாகலம் அடக்கி அருளிய ஆழ்வார்
குன்று சூழ்கின்ற செந்தினையே.-பொதிகை மலை சார்ந்து விளைந்த சிவந்த தினையே
புனல் பாழ் படுத்துப் -கதிர் கொய்து விட்டதால் -கொல்லையைப் பாழாக்கி
புகழ் பாழ் படுத்தல்லால் -உனது கீர்த்தியையும் பாழாக்கி
அத்தோடு நில்லாமல்
புகுந்தென் மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே -எனது மனத்தையும் சார்ந்து பாழாக்கினாயே -வாழி
கம்பத்து அந்தரங்கம் சிவந்த தினை-
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் — தன்னை நிஷேதித்த கொடியவளான திருத்தாயார் உறங்கினாலும்
தன் வாய் அடங்கா வினை ஒன்றிய அன்றிலுக்கு –அன்றில் பறவைக்கு
இடம் காட்ட விரிதலைய பனை யன்றியும் உளதோ -தங்க இடம் கொடுத்த விரிந்த தலையை யுடைய பனை மரமும்
தமியேற்குப் -தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் எனக்கு
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்-ஆழ்வாரின் மேல் உள்ள காதலால்
பழம் பகையே–வேறே பழைய பகை இல்லையே

———

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து-காமம் கோபம் மயக்கம் மூன்றையும் அடியோடு ஒழித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி -இதன் மூலம் வரும் கர்மங்கள் பிறவிகளை இவற்றை தமக்கும் உலகோருக்கும் போக்கி அருளி
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாமியம்-என்று வகை வகையாக வருமே இவற்றின் அடியாகவே
இவ் வையமுய்யத் தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் –ஆழ்வாரது திரு நாமம் சொல்லவே
சூழ் பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே.–அஞ்ஞானம் இருள் சவாசனமாகப் போகும் நாளும் என்று வருமோ
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்