Archive for the ‘Madurakavi Aazlvaar’ Category

பகவத் விஷயம் காலஷேபம் -9-கண்ணி நுண் சிறுத் தாம்பு – தனியன்/அவதாரிகை — -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 19, 2016

அவதாரிகை-

ஆச்சார்யர் அபிமானம்
ஸூ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குலைத்துக் கொண்ட சம்சாரிக்கு ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
ஸ்வ தந்தரனை பற்றின அன்று சங்கை -பாபம் கண்ணில் பட்டு வீழ -கருணை கண்ணில் பட வாழ –
பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் செய்யுமது ஆராய முடியாதே -பாபத்தை பார்த்து தள்ளலாம் தம் கருணை பார்த்து கொள்ளலாம்
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று -உன்னை அன்றோ களைகணா கருதுமாறு -ஆஸ்ரித பஷபாதி அன்றோ –
முத்தரை மோதிரம் கொடுத்து -ஆச்சார்யர்களை நியமித்து -மோஷம் அளிக்கும் பரதந்த்ரர்கள் ஆக்கி –
வேதார்த்தம் அறுதி இடுவது சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராண்ங்களாலே –ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கையைப் பிடித்து கார்யம் கொள்வது அவன் இடம் போவது -திருவடி பிடித்து கார்யம் கொள்வது ஆச்சார்களைக் கொண்டு கார்யம் கொள்ளுவது போலே –
இன்பத்தில் இறைஞ்சுதலில் –துன்பற்ற மதுர கவிகள் தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வலிகள் துணிவார்கட்கே -தேசிகன் –
சுக்கான் தரை போன்ற -உவர் நிலம் போல இரும்பு போல் வலிய நெஞ்சம் -பாட்டம் மழை பெய்து பான் படுத்தி -ஆசார்ய உபதேசமே -மலை போலே
செங்கமலம் –வெம்கதிரர்கு அல்லால் அலராதே -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் –உலர்த்துவான் நீர் பசை இல்லாவிடில் –
ஒண் தாமரையாள் கேவன் ஒருவனையே நோக்கும் உணர்வு -ஆச்சார்யா சம்பந்தம் நீர்ப்பசை –
தன் குருவின் -தாளிணையில் அன்பு வைக்காமல் -அன்பு தன் பால், வைத்தால் –விண்ணாடு தான் அளிக்க வேண்டாதான் -அம்புயை கோன்-
உத்தாரக ஆச்சார்யர் -ராமானுஜர் -உபகாரக ஆச்சார்யர் நம் ஆச்சார்யர் -சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசிப்பவரே நேராக ஆச்சார்யர்-
ஆத்மா குணம் -ஆச்சார்யர் -மந்த்ரம் -பகவான் -வைகுந்த மா நகர் கை புகுரும் –
திருக் கோளூர் சித்தரை மாசம் சித்தரை நஷத்ரம் -நடு நஷ்த்ரம் -நடு பதம் நமஸ் சப்தார்த்தாம் -வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்யமாம் பதம் போல்
ஸ்வரூப யாதாம்யம் -தாதாய சேஷத்வ ததீய பாரதந்த்ர்யம் -அடியார்க்கு அடிமை -மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -மா முனிகள் –
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் -அகாரத்தில் தொடங்கி
செத்தது -சரீரம் -வயிற்றில் சிறியது ஆத்மா பிறந்தால் எத்தை தின்னும் சரீர சுகம் அனுபவித்து சரீரங்கள் பல மாறி மாறி பல பிறப்புகள் முதல் கருத்து
ஜீவாத்மா -செத்தது ஞானம் இல்லாமல் -சிறிய ஞானம் பிறந்தால் -அத்தை -திருவடிகளை பற்றி கைங்கர்யமே புருஷார்த்தம்
அத்தை தின்று –ஸ்ரீ மன் நாராயண சரனௌ சரணம் பிரபத்யே அங்கே கிடக்கும் -ஸ்ரீ மாதே நாராயணாய நாம
தீர்க்க சரணாகதி -சார சங்கரகஹம்-

——————————————

ஸ்ரீ செல்வமிகு சீர்- நாத முனிகள் அருளிய தனியன்கள்-

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —

அவிதித விஷயாந்தரச்-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –
பெருமாளை அன்றி அறியாத ஆழ்வாரை அன்றி மற்று ஓன்று அறியாத மதுரகவி ஆழ்வார் ஒருவரையே ஹ்ருதயத்தில் கொண்ட நாத முனிகள்

-தனியன் அவதாரிகை –

அவிதித விஷயாந்தர -இத்யாதி
-இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள்
அவிவிதங்களாய் இருப்பாராய் –
சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று –
அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும்
ஸ்ரீ -மதுரகவிகள் -தன் நிஷ்டை-நிலை – உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில்
ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது

-தனியன் வியாக்யானம் –

அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி- பால பாடம் கூட பண்ணி – யறியார் -என்கிறது –
சிந்தைமற்று ஒன்றின் திறத்தல்லா –8-7-10–என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இ றே –
இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
பாட்டுக் கேட்கும் இடமான பர -விஷயமும்
கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
குதித்த இடமான விபவ விஷயமும் –
வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும்
அறியாதே இருப்பர் –
வைகுந்த நாடும் –உந்தனக்கு எத்தனை இன்பம் தரும் -உன் இணை மலர்த் தாள் எனக்கு -அமுதனார் –

மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் -எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே-தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த நம்மாழ்வார்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் -என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை வைத்தேன் மதியால் -என்கையாலே –என்றும்
-அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான் -என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே -ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான் என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி -என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இ றே-
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –

அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்
என்கிறது –
அதாவது -ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது -கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான
பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இ றே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தீர்ப்பாரை யாமினி –உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–சகி வெறி விலக்கு
மற்று ஒரு தெய்வம் –உற்றிலேன் -கருவறை நீல மேகப் பெருமாள் மூலவர் சௌரி ராஜ பெருமாள் மூலவர் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-திருக்குறுங்குடி நம்பி அறியோம் திருக்குருகூர் நம்பியையே அறிவோம்

சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் — மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின்– பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -என்று இருக்கை -என்றபடி-யஜ்ஞம் தானம் தபசாதிகள் வேண்டாமே –
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –
மாறனில் மிக்குமோர் தேவும் உளளோ -மால் தனில் மிக்கும் ஓர் தேவு உளதோ –

அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் -குணத்துக்கும் தோற்று -அபிச –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தம்பி உலகத்தார் அபிப்ப்ராயத்தாலே -குணத்துக்கு தோற்ற அடிமை அடியேன் அபிப்ராயத்தால் –
அகல்யை சீதா பிராட்டி -சம்வாதம் -குணங்கள் பிரியாதே பெருமாள் இடம் —
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –

ஏவம் பூதரான -மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

—————————————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –

வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் –
என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை -வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான் –
என்றத்தை -வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி  மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை -மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வ ண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
என்றத்தை -வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது

எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –
ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை
வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்
எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆழ்கிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே
நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது –

—————————————————————————–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

அவதாரிகை –

ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்கிற புருஷார்த்தங்களான சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்கள் –
அவற்றில் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களாலே பிரகிருதி தத்வம் அதம புருஷார்த்தம் –
ஜன்ம மரணாதி ஷட் பாவ விகார ரஹீதமாய் நிடதிசய ஸூ க ரூபமாய் இருந்ததே யாகிலும்
பகவத் ஏகாந்தமான கல்யாண குண வைதுர்யத்தாலே தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பமான ஆத்மானுபவம் மத்யம புருஷார்த்தம்
சர்வேஸ்வரன் புருஷார்த்தம் என்னும் இடத்தில் கரும்பு தின்பார் வேர்ப்பற்றையும் நுனுயையும் கழித்து நடுவைக் கொள்ளுமா போலே
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒழிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே புருஷார்த்தமாகவும் -அதிலே கம்ச வதத்துக்குப் பின்பாகக் கழித்து
முன்பு வெண்ணெய் களவு கண்டு யசோதைப் பிராட்டியார் கையில் கட்டுண்டு அவளுக்கு அஞ்சி நின்ற
அவஸ்தையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே உபாயமும் உபேயமும் விரோதி நிரசனம் பண்ணுவானும் மற்றும் எல்லாம் என்றும்
அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களே இவ்வாத்மாவுக்கு நாத பூதரும்
நிரதிசய புருஷார்த்த பூதரும் என்றும் ஆழ்வார் நிர்ணயித்தார்
ஸ்ரீ மதுர கவி யாழ்வார் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே அத்தைப் பூர்வ பஷம் ஆக்கி எம்பெருமான் பக்கலிலும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும்
ஆழ்வார் பண்ணினது அடைய ஆழ்வார் திருவடிகளிலே யாக்கி அது ருசித்து அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த-வியாக்யானம்-

பிரவேசம்-அவதாரிகை —

த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே -ஐஸ்வர்யாதி சகல புருஷார்த்தங்களையும் யதாதிகாரம் விதிக்கிற
வேத மர்யாதையிலேநின்றார்கள் ருஷிகள் –
அதாகிறது வேத உப ப்ரும்ஹண முகத்தாலே சேதனருடைய குண அநுகூலமாக
ஐஸ்வர்யாதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் -பரம புருஷார்த்த  லஷணமான
மோஷத்தையும் உபதேசிக்கை –
கேவல சரீர  அனுஷ்டானங்களே ஐஸ்வர்ய விசேஷங்களுக்கு சாதனமாக உபதேசித்து –
கைவல்ய நிஷ்டருக்கு ஆத்ம ப்ராப்தியை உபதேசித்து –
நித்ய சத்வஸ்தருக்கு பகவத் ப்ராப்தியை உபதேசித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –

தேகாத்மா அபிமானிகள் நமக்கும் ரிஷிகளுக்கும் பர்வத பரமாணு வாசி –இதே போலே ரிஷிகள் -ஆழ்வார்கள் /
ஆழ்வார் -பெரியாழ்வார் /பெரியாழ்வார் -ஆண்டாள் -ஜன்ம சித்த ச்த்ரீத்வம் –

இந்த ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -எங்கனே என்னில் –
வேத தாத்பர்யமாய் -உத்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தியில் நிஷ்டராய் –
பிறருக்கும் உபதேசிக்கும் இடத்திலும் சாஸ்திர சித்தமான ஐஸ்வர்யாதிகளையும்
த்யாஜ்யமாக உபதேசிக்குமவர்கள் இ றே
இவ் விலஷண புருஷார்தத்தின் காஷ்டையான ததீய சேஷத் வத்தளவிலே
வரப் புகுர நின்றார் ஸ்ரீ மதுர -கவிகள்

இவர்க்கு இவ் வேற்றம் வந்தபடி எங்கனே என்னில் –
ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் -தொடங்கி -அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
செல்ல அனுபவித்த இடத்தில் ஆழ்வார் தமக்கு புருஷார்த்த காஷ்டையாக அபிமதமான
ததீய சேஷத்வத்தைப் பற்றுகிறார் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதரான அர்த்தமே சாத்விகருக்கு
பரிக்ராஹ்யம் -என்னும் இடம் மகாபாரத சாரமான ஸ்ரீ சஹஸ்ரநாம அத்யாயத்திலே
சொல்லிற்று இ றே

ஸ்ரீ  பீஷ்மர் பக்கலிலே சகல அர்த்தங்களையும் குறைவறக் கேட்ட தர்ம -புத்திரன்
இவ்வர்த்தம் தமக்கு உத்தேச்யமாக ஸ்வீகரித்த தத்வ ஹிதங்களே நமக்கு உத்தேச்யம் என்று
நினைத்து –கேட்க தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசித்தான் இ றே –
த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலோ -எம்பிரானே ஆஸ்ரயணீயன் -என்று
நீங்கள் பற்றிற்று -என்ன -அது ஒன்றும் அன்று -எம்பெருமானார் காழிச்சால் மூலையில்
தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில் அதுவும் எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக்–கடவது -என்றாள் –
அந்த ந்யாயத்தாலே -ஆழ்வார் தமக்கும் தஞ்சமாக நினைத்து இருக்கும் ததீய சேஷத்வத்தையே
இவரும் தமக்கு புருஷார்த்தமாக அத்யவசிக்கிறார்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக -காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை
அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
பெருமாள் விசேஷ தர்மம் விட்டார் -ஸ்ரீ பரத ஆழ்வான் வேண்டிக் கொள்ள திரும்ப வில்லையே சாமான்ய தர்மம் பிடித்து கொண்டார் –

லுப்த சதுர்த்தி தாதர்த்யம் -ஆய -பிரார்த்தனா சதுர்த்தி -அஹம் வேலேய சாகரம் -கரையை கடல் தாண்ட முடியாதே
பிரதிஜானாமீ -நீர் என்னை தாண்ட முடியாது என்று பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறார் -தே வீர தலைக் கட்டும் ஆண்பிள்ளை நீர் அன்றோ –
வீர லோக பாக் -நிர்பந்தித்து அடிமை செய்த இளையபெருமாள்
பாரதந்த்ர்யம் அநுஷ்டித்தார் ஸ்ரீ பரத ஆழ்வான்
இஷ்ட விநியோக அர்ஹத்வம்–சேஷத்வம் -யோக்யதை -தகுதி –
இஷ்ட விநியுஜ்ய மாநத்வம் பாரதந்த்ர்யம் –இஷ்டப்படி விநியோகப் படுத்தப் பட்டார் –
ஓங்காரத்தில் சேஷத்வம்
நமஸ் பாரதந்த்ர்யம்
நாலுக்கு மேல் ஆறு -ஆய -லுப்த சதுர்த்தி தாதர்த்யம்
ஆறாவது வேற்றுமை பாரதந்த்ர்யம்
ஞானம் விட ஆனந்தம் ஏற்றம்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்

நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
சகுந்தலை துஷ்யந்தை குமாரன் பிள்ளை பரதன் -இந்த பிரமாணம் அதில் இருந்து எடுத்தார் –
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அஹங்கார மமகார நிவ்ருத்தி இரண்டும் சொல்லிற்று இத்தால் சேஷத்வ விரோதி இ றே இரண்டும்
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே –
அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே
பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்
பலி -கூட்டம் கலைக்கிற பெருமாள் விரோதி உத்தேச்யம் பிரமாண அனுபவம் பிரமேயம் விரோதி ஆயிற்றே அங்கு
ஆரார் எனச் சொல்லி ஆடும் அது கண்டு –வல்வினையால் -குடக்கூத்தாடு -ஸ்ரீ கிருஷ்ண பக்தி குற்றம் அங்கே –
மன்றம் அமர கூத்தாடி மகிழ்ந்தாய் -மன்றம் அமரும் படி பரகால நாயகி மயங்கி இருக்க –
அத்யயன உத்சவம் முடிந்த பின்பு இது நடந்ததே என்று நினைப்போம்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்
அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு
ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குணங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே-எதிர் விழி கொடுக்கும் அசித் போன்ற பாரதந்த்ர்யம் –
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை
உன் பவள வாய் -நீத ப்ரீதி புரஸ்தா -அஹம் அன்னம் அஹம் -அந்நாதாக –
இரண்டிலும் உன் -அவன் பவள வாய் -அவன் மகிழ அத்தைக் கண்டு நான் மகிழ்வேன் –
கைங்கர்யம் பண்ணி மகிழ்வேன் இல்லை -பெருமாள் மகிழும் திருமுகம் பார்த்து மகிழ்வோம் -தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றோமே –

அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை -நீத ப்ரீதி புரஸ்தன் -இரண்டும் பாவனத்வம் போக்யத்வம் காட்டும்
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்-முமுஷுவாக்கி –
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த அவதாரிகை

ஸ்ரீ சத்ருக்னன் ராம குணத்தில் கால் தாழ்ந்திலன் -இவர் கிருஷ்ண குணங்களில் கால் தாழ்ந்திலர் -இது வாசி
ஆழ்வார் பகவத் விஷயத்தைக் கவி பாடுகிற நாவாலே தம்முடைய வைபவம்
துவளில் மா மணி மாடம் போன்ற திருவாய் மொழிகள் வாயிலாக -சொன்னார் இத்தனை போக்கி அமுதூகிற இவருடைய
நாவாலே கேட்கப் பெறாத குறை தீர்க்கிறார் யாய்த்து இவர்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -6-5-7-என்று அவன் குணங்கள் அவ்வாழ்வார் வாயாலே
திருந்தினால் போல் யாய்த்து -ஆழ்வாருடைய குணங்களும் இவர் வாக்காலே திருந்தின படி –

அப்படியே இவர் அருளிச் செய்த பிரபந்தமும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்று குணத்ரய வச்யருக்கு குண அனுகுணமான பலன்களைச் சொல்லுகிற வேதங்கள் போலேயும்
சீர்த்தொடை யாயிரம் -1-2-11- என்று பகவத் குனிக பிரத்க்ஹிபாதகமான திருவாய் மொழியும் போல் அன்றியே
ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே பிரதிபாதிக்கையாலும்
வேதம் போலே அனந்தமாய் இருத்தல் – திருவாய்மொழி போலே ஆயிரம் பாட்டாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
ஸூக்ரஹமாய் இருக்கையாலும் வாசி பட்டு இருக்கும்
திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –

ஒரு முமுஷுவுக்கு ஆதரணீயராய் இருப்பார் நாலு வ்யக்திகளாய் இருப்பார்கள் -சர்வேஸ்வரனும்- பிராட்டியும் -ஆசார்யனும் -ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
அதில் சர்வேஸ்வரன் –1– அடியிலே இழந்து கிடந்த கரண களேபரங்களைத் தன கருணையாலே கொடுத்து இவனைக் கரை மரம் சேர்க்கும்
தேவன் ஆகையாலும்–2– இவனுக்கு ஆதார பூதனாகையாலும்–33- -இவனுக்கு இஷ்டா நிஷ்ட ப்ராப்தி பரிகாரத்துக்கு உபாய பூதன் ஆகையாலும்–4- அசாதாராண
ஸூஹ்ருத்தாகையாலும் –5–ப்ராப்ய பூதன் ஆகையாலும் ஆதரணீயனாய் இருக்கும்
மாதா பிதா என்கையாலே பிரிய பரத்வ ஹித பரத்வங்களைச் சொல்லிற்று -ப்ராதா என்கையாலே அல்லாத பந்த்வந்தரங்களுக்கும் உப லஷணம்-
நிவாஸ -என்கையாலே ஆகாரத்வம் சொல்லிற்று சரணம் என்கையாலே -உபாய பாவம் சொல்லிற்று
-ஸூ ஹ்ருத் -என்கையாலே சோபனாசமசி -என்னும் இடம் சொல்லிற்று
கதி -கம்யாத இதி கதி யாய் ப்ராப்ய பாவம் சொல்லிற்று
நாராயண -என்று இவை எல்லாமாக வற்றான வஸ்து ஸ்வ பாவம் சொல்லிற்று

யேன யேன வியுஜ்யந்தே ப்ரஜாஸ் ஸ்நிக்தேன பந்து நா ச ச பாபத்ருதே தாசாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் -என்று
ஒரு சேதன விசேஷத்துக்கு இது உண்டாகச் சொல்லா நின்றாள் இவ்விஷயத்துக்கு சொல்ல வேண்டா வி றே
பாபாத்ருதே என்ன வேண்டாதபடி அவர்ஜ நீயமான சம்பந்தமும் இங்கே விநியோகம் கொள்ளும் படி யாய்த்து இவ்விஷயம் இருப்பது
கதிர்ப்பர்த்தா ப்ரபுஸ் சாஷி நிவாசாஸ் சரணம் ஸூ ஹ்ருத் என்று அவன் தானே சொன்னான் இ றே

பிராட்டி இவன் பக்கலிலே 1–மாத்ருத்வ பிரயுக்தமாக நிருபாதிக வத்சலை யாகையாலும் –2-இவன் பகவத் ஆச்ரயண சமயத்தில் தன்னுடைய பூர்வ
அபராத பீதனாய் அங்கு அணுகக் கூசினால் இவன் பூர்வ அபராதத்தை அவன் முகம் கொண்டு பொறுப்பித்துச் சேர்ப்பிக்குமவள் ஆகையாலும்
3–இவனுக்கு இவ்வுபாய விஷயமான வ்யவசாயத்தைக் கொடுக்குமவள் ஆகையாலும் –
4–அவனோபாதி ஸ்வாமிநி யாகையாலும் ஒரு தேச விசேஷத்து ஏறப் போனாலும் அவனுக்கே கைங்கர்ய வர்த்தகை யாகையாலும்
5–தன்னைக் கிட்டும் இடத்தில் ஒரு புருஷகார நிரபேஷை யாகையாலும் ஆதரணீயமாய் இருக்கும் –

ஆச்சார்யன் 1–இவனுக்கு பகவத் விஷயத்தையும் பிராட்டி வைபவத்தையும் கரும் தரையிலே உபதேசிக்கும் அவனாகையாலும்
2–தான் அனுஷ்டித்துக் காட்டி இவனை அனுஷ்டிப்பிக்கும் அவனாகையாலும்–3– இவன் குற்றம் பார்த்த அளவிலும் கைவிடாதவனாகையாலும்
4–இவனோடு சஜாதீயனாகையாலும் –5–ஸூ லபனாகையாலும் –6–இவனுடைய க்ருதஜ்ஞதை யடியாகப் பண்ணும் கிஞ்சித்காரங்களுக்கு சரீர சம்பந்த
முகத்தாலே இங்கே பிரதி சம்பந்தி யாகையாலும்–7– தன கார்யத்தை மறந்தாகிலும் இவனுடைய ஹிதமே பார்த்துப் போருமவனாகையாலும் ஆதரணீயனாய் இருக்கும் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் 1– இவனுக்கு பிரதமத்திலே ருசி ஜனகர் ஆகையாலும் –2–ஆச்சார்யா உபதிஷ்டமான ஜ்ஞானத்துக்கு வர்த்தகராய் உசாத் துணை யாகையாலும்
3–ஆச்சார்யா பிரேமத்தை அபிவ்ருத்தம் ஆக்குமவர்கள் ஆகையாலும் –4–இவனுக்கு சேஷிகள் ஆகையாலும்–5– இவனுக்கு பிரகிருதி வச்யைதையாலே
சில ல்காலித்யங்கள் பிறந்தாலும் அத்தைத் தெளியப் பண்ணவும் வல்லர்களாய் இந்த முகத்தாலே ஆதரணீயராய்ப் போருவர்கள் –

இத்தை ஸ்ருதியும் மாத்ருதேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்யா தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று சொல்லி வைத்தது –
இங்கு அதிதி யாகிறான் -ஸ்ரீ வைஷ்ணவன் யாய்த்து -அதிதிகள் ஆகிறார் தாங்கள் முன்பு நின்ற நிலை குலைந்து
இவன் இருக்கிற வர்க்கத்திலே புகுமவர்கள் இ றே
இவர்களும் தந்தாமுடைய பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யஜித்து இவன் பற்றி நிற்கிற சரணத்திலே ஆகதரர் ஆனவர்கள் ஆய்த்து –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யாயம் -இத்யாதி -அப்படி வந்தவனை குல சரண கோத்ராதிகளை ஆராயாதே
சத்கரிக்க வேண்டுமோபாதிஸ்ரீ வைஷ்ணவனுடைய குலாதிகளை ஆராயாதே அதிதி சத்காரன்களைப் பண்ணக் கடவன் –
அதிதிர் யத்ர பக்நர்சேர க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி -என்கிறபடியே
அதிதிகளுடைய அசத்காரத்தில் பாபாகமனமும் புண்ய சாயமும் பிறக்கும் என்கையாலே இவனும் இவ்வைஷ்ணவனை ஆதரியானாகில்
பகவன் நிக்ரஹ ரூபமான பாபம் வரும் -தத் அனுக்ரஹ ரூபமான புண்யமும் இவனை விட்டுப் போகக் கடவது –

இனி இந்நால்வரில் அத்யந்த ஆதரணீயாராவார் யார் என்னில் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வைபவ ஜ்ஞானமும்
-பிராட்டியுடைய வைபவ ஜ்ஞானமும் ஈஸ்வரனுடைய சர்வபிரகார வைபவ ஜ்ஞானமும்
இவ்வாச்சார்யா அங்கீகார அனந்தரம் ஆகையாலே
-யதா தேவே ததா குரௌ -என்கிற அளவன்றிக்கே விசேஷண ஆதரணீயன் ஆச்சார்யனே யாய்த்து

ஆகையாலே இவ்வாழ்வார் ஆகிறார் அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்

ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று –
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

கண்ணி நுண் சிறுத் தாம்பு -1-கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ண — ஸ்ரீ தம்பிரான் படி -அருளிச் செய்த வியாக்யானம் –

March 29, 2016

அவதாரிகை –

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

——————————————

வியாக்யானம்-

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு –எத்திறம் -என்றும்
பிறந்தவாறும் என்றும் -பையவே நிலையும் வந்து -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையால் அத்தைப் பேசுகிறார்

கண்ணி இத்யாதி
ஆழ்வார் பக்கல் இவருக்கு உண்டான உத்தேச்யத்தை இருந்தபடி
ஆழ்வாருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டினதொரு கயிற்றினுடைய உள் மானம் புறமானம் ஆராயும் படி யாய்த்து இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்தில்
கண்ணித்தாம்பு
என்றது -உடம்பில் கட்டப் புக்கால் உறுத்தும் படி பல பிணைகளை யுடைத்தாய் இருக்கை
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத் தாம்பு
இவனைக் கட்டின பின்பு உரலோடு சேர்க்கைக்கு எட்டாம் போராது இருக்கை –

கட்டுண்ணப் பண்ணிய
உரலை நேராகச் செதுக்கப் போகாது
அப்போதாகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இனி இவனை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் இவன் தான் எட்டான் காற்றில் கடியனாய் ஓடும்
இனிச் செய்வது என் -என்று அவள் தடுமாறுகிற படியைக் கண்டான்

கட்டுண்ணப் பண்ணிய
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கண்டு கட்டும் படி பண்ணினான்
கட்டுகைக்கு பரிகாரம் இல்லை என்று நிவ்ருத்தை யாமாகில் பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் அத்தனை இ றே
ஆகையாலே திருமேனியிலே இடம் கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது தான் –

தாம் நா சைவ –யதி சக் நோஷி என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான் இ றே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வியதிரிக்தரை யடையக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேது வானவன் கிடீர்
இப்போது ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் இன்றிக்கே இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் அபிமத விஷயத்தின் கையில் அகப்பட்டு ஒரு கருமுகை மாலையாலே கட்டுண்டால்
அதுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாது இருக்கிற இருப்பும்
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டு அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை
ஆழ்வார் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று அவர் குணத்தை வர்ணித்தார்
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மையே பற்றுகையாலே அவன் திருமேனியில் ஸ்பர்சித்த தொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய்க் கழிகிறது இ றே
அதவா
கட்டுண்ணப் பண்ணிய
பக்தி உண்டாகிலும் அவன் தானே தன்னை அனைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மே த்யாதி –யமேவைஷா வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரத்தையை அறுக்கும் அத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-
இவன் தன்னைக் கட்டுவது -ஒரு வெண்ணெயைக் களவு கண்டான் -ஊரை மூலையடியே நடத்தினான் என்று இ றே
இவன் சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இடுங்கோள்என்று இருந்தான் –அதாவது களவிலே தகண் ஏறின படி –
இவனைக் கட்டி வைத்து அடிக்கப் புக்கவாறே தொழுகையும் என்கிறபடியே தொழத் தொடங்கும்
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இ றே தொழுகிறான்
இத்தசையில் அபிமத சித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறியுமவன் இ றே
தாம் நா சைவோதரே பத்வா பிரத்யபத்நா து ஸூ கலே -யதி சக் நோஷி கச்ச தவம் -தான் தாயான பரிவு தோற்ற
இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
நீ வல்லையாகில் போய்க் காணாய் என்று உருக்கி விட்டால் போக மாட்டாதே இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளிதான படி இ றே இங்கனே சொல்லுகிறாள்
அதி சஞ்சல சேஷ்டித -துறு துறுக்கையாய்க் கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் அல்லையோ
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் கறப்பது கடைவதாகத் தொடங்கினாள்
குடும்பி நீ -இவனைப் போலே நியமிக்க வேண்டுவன அநேகம் உண்டு இ றே இவளுக்கு –

பெருமாயன்
நிரதிசய ஆச்சர்ய யுக்தன்
இத்தால் அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் அது தன்னை ஷூத்ரரைப் போலே களவாகிற வழி எல்லா வழியே இழிந்து
சர்வ சக்தியான தான் அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு -பையவே நிலையும் -என்று
உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார்

என்னப்பனில்
ஆழ்வார் இவர்க்கு உத்தேச்யராய் நிற்க இங்கனே சொல்லுவான் என் என்னில் பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராம் அத்தனை இ றே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்-என்கிறபடியே அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே
துவக்குண்டு சொல்லுகிறார் ஆகவுமாம் –

என்னப்பனில் நண்ணி
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கல் கிட்டி –
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போல் அன்று பிரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டுப் புருஷார்த்தத்தில் சரம அவதியான ததீய சேஷத்வத்தைக் கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் -அதின் தோஷ தர்சனத்தாலே அங்கு -இங்கு அங்கன் ஒரு தோஷம் காண விரகில்லை-ஆகையாலே அதிலும் இது அரிது

தென் குருகூர் நம்பி –
நல்கி என்னை விடான் நம்பி என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்தின் பூர்த்தி யளவன்று இ றே இவர் பற்றின விஷயத்தின் பூர்த்தி
எங்கனே என்னில் –பகவத் விஷயத்தைப் பற்றினால் அதினஎல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்யம் இல்லை இ றே
ஆசார்யர்களை நம்பி எண்ணக் கற்பித்தார் ஸ்ரீ மதுர கவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர்

என்றக்கால்
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
ஓர் உக்தி மாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு
பூர்த்தியால் வந்த ஏற்றமே யன்று -சௌ லப்யத்தாலும் ஏற்றம் உண்டு என்கை-

அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆஅல்வாருக்கு பிறக்கும் ஆனந்தம் எல்லாம் இவ்விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே எனக்கு சித்திக்கிறது

அமுதூறும்
அமுது ஊற்று மாறாதே நிற்கும்
ந ச புனராவர்த்ததே என்ற விஷயம் ஆழ்வாருக்கு தத் பிரசாதத்தாலே நித்யமாகச் செல்லுகிறாப் போலே
எனக்கும் ஆழ்வார் பிரசாதத்தாலே நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்

என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில்
முதல் அடியான பகவத் விஷயம் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு அதின் எல்லையிலே நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதியாக விஷயாந்தரங்களை ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ்விஷயம் ரசிக்கிறது என்றுமாம் –

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -11- அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 29, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில் இவர் அருளிச் செய்த பிரபந்தத்தைக் கற்றார்க்கு ஆழ்வார் ஆணை பரிமாறும் ஸ்ரீ வைகுண்டமே தேசம் என்கிறார் –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

 

அன்பன்- –
ஈஸ்வரத்வம் அன்று ஸ்வரூபம்-எம்பெருமான் இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஒரு தலையாய் இருக்கை-ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே –

தன்னை அடைந்தவர்கட்கெலாம்-அன்பன்
ஏவம் குண விசிஷ்டணாஆணா எம்பெருமானை ஆச்ரயித்தார்க்கு எல்லாம் அன்பராய் இருக்கை ஆழ்வாருக்கு ஸ்வரூபம் -தம்தாம் சத்தையிலே யன்றோ எல்லாரும் ஸ்நேஹிப்பது –

தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
ஆழ்வாருக்கே அன்பராய் இருக்கை ஸ்ரீ மதுர கவிகளுக்கு ஸ்வரூபம்-ப்ரீதி ப்ரேரிதராய்க் காணும் சொல்லிற்று-தாம் காண வந்த சோழரோ பாதி ப்ரீதி காணும் சொல்லுவித்தது
இவர் முன் சொல்லும் எனபது பரிதியைக் காணும் –

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-
இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் –
இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில்
திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது –
சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை
அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இ றே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா
நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்
திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன
நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில் இவர் பிரபந்தத்தைத் தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வாஸ பூபி பரமபதம் என்கிறார் –

அன்பன் –
வாத்சல்யத்தை நிரூபகமாக யுடையவன்
இவனுடைய வாத்சல்யம் -ரிபூணாமபி -என்கிறபடியே சர்வ விஷயமாய்த்து இருப்பது
அதுக்கடி தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்ய மதிதைவதம் -என்று சம்பந்தம் பொதுவாய் இருக்கையாலே –

தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் யன்றாய்த்து இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் எம்மை ஆளும் பரமர் -என்று இ றே இருப்பது –

தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் –
பகவத் விஷயத்து அளவன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிக்கே ஆச்சார்ய விஷயத்திலே சக்தராய்
தனக்குப் புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தைப் பற்ற அடுக்கும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே அவன் உகந்தது செய்ய வேண்டி இருக்கில் பாகவதர்களைப் பற்ற வடுக்கும்
அவர்கள் எல்லாரும் உகந்தது செய்ய வேண்டி இருக்கில் ஆச்சார்யனைப் பற்ற வடுக்கும்
ஆசார்யன் முதலிலே அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே உத்தேச்யனாம்
பின்பு பகவத் குணங்களிலே அவகாஹித்து குண அனுபவத்தால் அல்லது செல்லாத படியானால்
போத யந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை யாகையாலே உத்தேச்யனாம்
ப்ராப்தி தசையிலே சாத்யவிருத்தி ரூபத்தாலே உத்தேச்யனாம் –

மதுரகவி சொன்ன சொல்
தமக்குப் பாசுரமே இனிதாய் இருக்கையாலே மதுர கவி என்கிறார்

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தது இல்லை யாகிலும் இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வச்தவ்ய தேசம் பரம பதம்
ஆழ்வார் உத்தேச்யர் ஆகில் இவருக்குத் திரு நகரி யன்றோ ப்ராப்யம் ஆவது என்னில்
திரு நகரியில் ஆழ்வார் ஆணையும் பொலிந்து நின்ற பிரான் ஆணையும் இரு புரியாயய்த்துச் செல்லுவது
அங்கன் அன்றியே ஆழ்வார் ஆணையே செல்லும் தேசம் பரமபதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தம் என்றும் வானவர் நாடு என்றும் சொல்லக் கடவது இ றே
நம்பி திருவழுதி வள நாடு தாசர் அவர்கள் இருந்த தேசம் தானே பரமபதம் என்று சொல்லுவர்
கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காண்-
என்று பணித்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
1-ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக்கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-தாம் அலமருகிற படியையும் இ றே கீழ்ச் சொல்லி நின்றது –

இவ்வர்த்தங்களுக்கு வாசக சப்தம் இட்டுச் சொன்ன இப்பிரபந்தத்திலே ஆதரம் உள்ளார்க்கு நித்ய ஸூரிகள்-பரம பதத்திலே ஒரு பிராப்தி பண்ணிக் கொடுப்பார்கள் என்கிறார்-
இவர்களுக்குத் திரு நகரியே ப்ராப்ய ஸ்தலமாய் இருந்ததே யாகிலும் அவர்கள் ஆதரத்துக்காக அங்கே போய்-அங்கும் ஆழ்வாரை அனுபவிக்கப் பெறுவார்கள் –
கவி பாட்டுண்ட விஷயத்தையும்–கவி பாடின தம்மையும்–கவியையும் –
கவியை ஏதேனும் ஒரு வழியால் கற்றவர்களுக்குப் பலமும் சொல்லுகிறது –

தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –
தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்த என் போல்வார்க்கு எல்லாம் வத்சலராய் இருக்குமவர்
எங்கள் தோஷங்களைப் பாராதே தம்முடைய குணங்களைத் தந்து தரிப்பிக்குமவர்
நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்றும்-நின்று நின் புகழ் ஏத்த அருளினான் என்றும் சொல்லுகிறபடியே
அன்றிக்கே
அன்பன் என்று சர்வேஸ்வரனுக்கு திரு நாமமாய்-அவனை ஆச்ரயித்தவர்க்கு எல்லாம் ஸ்நிக்தராய் இருப்பவர்-மத்பக்த ஜன வாத்சல்யம் -என்று இத்தை இ றே பிரதம லஷணமாகச் சொல்லிற்று –

அன்பன்
இன்னபடி அன்பன் என்கை அன்றியிலே எல்லாருக்கும் எல்லாப் படியாலும் நிசர்க்க ஸூ ஹ்ருத்தாய் இருக்கும்-ஏவம் நிசர்க்க ஸூ ஹ்ருதி ந சித்ரமிதமாஸ்ரித்த வத்சலத்வம் என்று சௌஹாரத்த கார்யம் இ றே வாத்சல்யம்-
(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் தொடங்கி  யத்ருஷா கடாக்ஷம் -சாது சமாகம் வரை ஆறு படிகள் -உண்டே )சர்வ லோகைக வத்சலா -என்றும் -சரணா கத வத்சலா -என்றும் -ரிபூணாமபி வத்சலா -என்னும் படி லோகத்துக்காக வத்சலனுமாய்-அதில் ஆஸ்ரிதர் அளவிலே தோஷோயத்யபி என்னும் படி வத்சல்யனுமாய் -ப்ராதி கூல்யமே பண்ணிப் போருமவர்களுக்கும்-வத்சலனுமாய் இருக்கும் -பிரதிபவமா பராத்துர் முக்த சாயுஜ்ய தோபூ-இ றே-அங்கு மௌக்த்யம் ஆவது தோஷம் படாது ஒழிகை யாவது –
அன்பன்
தன்னை ஸ்நேஹித்தார்க்குத் தான் ஒருவனுமே விஷய பூதனுமாய் தான் ஸ்நேஹிக்கும் இடத்தில் விபூதியாக ஸ்நேஹிக்குமவன்
தன்னை ஸ்நேஹித்தவன் புறம்பே சிலவற்றை ஸ்நேஹித்தால் அவனுக்குத் தன்னைப் பெற விரகு இல்லை-தான் எல்லாரையும் ஸ்நேஹியானாகில் தான் இன்றிக்கே ஒழியும்
நிரவதிக வாத்சல்ய ஜலதே -என்றும் -வாத்சல்ய மஹோததே -என்கிறபடியே கடலுக்கு உள்ளே மாணிக்கங்கள் அடைய மறைந்து கிடைக்குமா போலே-இவ்வாத்சல்ய குணத்தில் குணாந்தரங்கள் அடைய மறையும் படி யாய்த்து இது ஸ்வரூபத்தை விளாக்குலை கொண்டு கிடக்கும் படி
ஸ்வரூபம் தான் சர்வதா சாத்ருச்ய ரஹிதமானாப் போலே யாய்த்து இக்குணமும் சத்ருச்ய ரஹிதமாய் —நிகரில் புகழாய் இருக்கும் படி
அந்த – ஸ்வரூப –சாத்ருச ராஹித்யத்தால் பெற்றது பரதவ சித்தி -இந்த-வாத்சல்ய – சாத்ருச்ய ராஹித்யத்தால் பெற்றது சரண்யத்வ சித்தி –
அன்பன்
தன்னைப் பற்றிப் புறம்பே சிலவற்றை ஆசைப்பட்டவர்களுக்கும் -உதாரா என்று குணம் கொள்ளும் வ்யாமோஹத்தை யுடையவன் –
அன்பன்
உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி
உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார் அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இ றே-இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று -(கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -அன்பன் -நான்கு சப்தங்கள் நான்கு குணங்களைக் காட்டி அருள )

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன்-
இப்படி சர்வ லோக வத்சலனான சர்வேஸ்வரனுடைய குணத்துக்குத் தோற்று
குணைர் தாஸ்யம் உபாகத என்று அடிமை புக்கு அவன் திருவடிகளை உபாயத்வேன வரணம் பண்ணி இருக்கும் சாத்விக வர்க்கத்துக்கு நல்லராய் இருக்குமவர்
அவனுக்கு எல்லாரோடும் பந்தம் உண்டாகையாலே எல்லாரையும் ஸ்நேஹிக்கும்
இவர் பரமனைப் பயிலும் திரு யுடையார் யவரேலும் அவர் கண்டீர் -என்னை யாளும் பரமர் -என்று இருக்குமவர் யாய்த்து
இவரைப் போலே வைராக்ய பூர்வகமான ஸ்நேஹம் அன்றே அவனது
அவனுக்கு எல்லாரோடும் ஸ்வரூப நிபந்தன சம்பந்தம் -இவரது உபாதி நிபந்தன சம்பந்தம்
எல்லாம் அன்பன்
அவர்களுடைய ஜாத்யாதி நியமம் பாராதே தத் சம்பந்தமே ஹேதுவாக நல்லராய் இருக்குமவர்-
கும்பி நரகர்க ளேதத்துவரேலும் –எம் தொழு குலம் தாங்கள் -என்றும் எத்தனை நலம் தாம் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகள் -என்று இருக்குமவர் –

அன்பன்
அவன் அடியார் -நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்று பகவத் அனுபவ சூ கத்தை விட்டே யாகிலும்-வைஷ்ணவசமமாய் சம்ச்லேஷ ராசராய் இருக்குமவர்
அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
அவனை சேஷியாக வரிக்க்கவுமாம் -பந்துத்வன வரிக்க்கவுமாம் -உபாயத்வென வரிக்க்கவுமாம் -உபேயத்வென வரிக்க்கவுமாம்-இவருக்கு ஆதரிக்க வேண்டுவது ஏதேனும் ஒரு சம்பந்தம் ஆய்த்து

தென் குருகூர் இத்யாதி
இவருக்கு இப்படி பகவத் பாகவத விஷயத்தில் ஸ்நேஹத்துக்கு ஊற்றுவாய் திரு நகரியில் பிறப்பாய்த்து-துறை வாய்ப்பாலே பயிரும் வாய்க்கும் இ றே -இவருக்கு காதல் கடல் புரைய விளவிக்கைக்கு அடி அந்த நிலப் பண்பு யாய்த்து
நகர்
அந்நகர வாசத்தாலே யாய்த்து இவர் சார அசார விவேகஜ்ஞ்ஞர் யாய்த்து
நம்பி
இப்படி ஆத்ம குண பூரணரான ஆழ்வார்
அன்பனாய்
இப்படி இவருடைய பகவத் ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகிற ஆத்ம குணம் கண்டாய்த்து இவருக்கு ஸ்நேஹம பிறந்தது

அன்பனாய் மதுரகவி
அவருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் -ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் என்று நிரூபகம் ஆனால் போலே-இவருக்கும் ஆழ்வாருக்கு நல்லவர் ஆனவர் என்று நிரூபகம்
அவர் பிரணவ நமஸ் ஸூ க்கள் இரண்டிலும் நிஷ்டராய்ப் போருவர்-இவர் மத்யம பதத்திலே நிஷ்டராய் இருப்பர்-
மதுரகவி
அவர் தத் விஷயத்தை கவி பாடுகையாலே -என்நாவில் இன்கவி என்றால் போலே இவரும் ஆழ்வாரைப் பாடுகையாலே தம்மை மதுர கவி என்கிறார் –
நம்பிக்கு அன்பனாய் மதுரகவி
நெஞ்சுக்குப் பணி ஆழ்வார் பக்கல் ஸ்நேஹமே –வாய்க்குப் பணி அவருடைய குண ஸ்தோத்ரமே ஆனவர்-(அன்பு -நெஞ்சுக்கு  / கவி வாய்க்கு )
சொன்ன சொல்
அவர் ப்ரபந்தீ கரித்த இந்த சப்த சந்தர்ப்பத்தை
சொன்ன சொல்
இதுவும் ஒரு சொல்லே என்று விஸ்மிதர் ஆகிறார்
நம்புவார்
இத்தை ஆசைப்படுமவர்கள்-இவ்வர்த்தத்தை வ்யுத்பத்தி பண்ணி விடுதல் செய்கை அன்றிக்கே இதிலே நசை யுடையராய் இவ்வியலிலே எப்போதும் பரிசயிப்பது
-இதுக்குள் ஓடுகிற ஆழ்வாருடைய ப்ரபாவங்களிலே வித்தராவது -இப்பிரபாவத்தை எப்போதும் ஒருவர் சொல்லக் கேட்க ஆசைப்படுவதாய்–இப்படி நசை பண்ணிப் போருவார்-
நம்புவார்
பகவத் ப்ரபாவத்தில் காட்டில் ஆழ்வார் பிரபாவத்தை விரும்புவார்-
ஆழ்வார் பிரபாவம் சொன்ன இது கைதவம் அன்று சத்யம் என்று இவ்வர்த்தத்தை தங்களுக்குத் தஞ்சமாக விஸ்வசித்து இருப்பார்-(-நம்புவார்-ஆசை விசுவாசம் வியப்பது )
பதி வைகுந்தம் காண்மினே
அவர்களுக்கு வஸ்தவ்ய பூமி பரம பதம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு — 10- பயனன் றாகிலும் பாங்கலராகிலும் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்

பயிர்கள் எறி மறியக் கடவது இ றே -அப்படியே ஆழ்வார் பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கையாலே தாம் பண்ணின பக்தி-ஒன்றும் இல்லையாய்த் தோற்றி தேவரீர் திருவடிகளிலே இப்போது இ றே நான் ஸ்நேஹிக்கத் தொடங்கினேன் என்கிறார் –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

 

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
அனுத்தேச்யர் ஆகிலும் அபவ்யரே யாகிலும் எம்பெருமான் அன்றே அனாஸ்ரிதர் என்று கை விடுகைக்கும் அவிதேயர் என்று நிரசிக்கைக்கும் –

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
நின்ற நிலையிலே துர்வ்ருத்தரையும் ஸூ வ்ருத்தர் ஆக்கிக் கொள்ளுவார் ஆழ்வார் அன்றோ-பகவத் விஷயம் போலே அதிகாரம் பார்த்துப் புகுகை யன்றியே நின்ற நிலையிலே புகுரலாம் படி இ றே ஆழ்வாருடைய நீர்மை இருப்பது –

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-
நின்ற நிலையிலே கிட்டலாம் என்கைக்கு நிதர்சனம் சொல்லுகிறது-
இவரை அவகாஹித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி இவரைக் கிட்டினார்க்கும் உண்டு காணும்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்கை பகவத் விஷயத்துக்காகில் இ றே ஒரு தேச விசேஷத்து ஏறப் போக வேண்டுவது
ஏற்றம் உள்ள விஷயத்தைப் பற்றினார்க்கு இங்கே கிடைக்கும் போலே காணும்
முக்தர்க்கு இ றே அங்குப் போக வேண்டுவது -முமுஷுக்களுக்கு கிடைக்கும் இடம் இ றே இவ்விடம்
எம்பெருமானோடு நித்யரோடு முக்தரோடு வாசியற ஹ்ருஷ்டராம் படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே ஸ்நேஹத்தைப் பண்ணுகைக்கு உத்சாஹியா நின்றேன்
பணி கொள்வானான குருகூர் நம்பி -என்னுதல்-பணி கொள்ளுகைக்காக முயல்கின்றேன் என்னுதல் –

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே தாம் இதுக்கு முன்பு ஆழ்வார் விஷயத்தில்-நின்ற நிலை யடங்க முதல் அடி இட்டிலராக தோன்றுகையாலே அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார்-
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே ஆசார்ய விஷயத்தில் எல்லாம் செய்தாலும்-அவன் பண்ணின உபகாரத்தைப் பார்த்தால் ஒன்றும் செய்யப் பெற்றது இல்லை என்னும் படியாய்த்து இருப்பது –
அவன் இவனுக்கு உபகரித்தது சர்வேஸ்வரனை யானால் இன்னமும் ஒரு சர்வேஸ்வரன் உண்டாகில் இ றே
இவனுக்குக் கொடுத்து பிரத்யுபகாரம் பண்ணினான் ஆகலாவது
ஆகையால் என்றும் குறைப்பட்டே போம் அத்தனை –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்-
ஒருவன் ஒருவனுக்கு உபகரிப்பது தனக்கு ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இ றே -அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லை யாகிலும்-
பிரயோஜனம் இல்லா விட்டாலும் சொல்லுகிற ஹிதம் கேட்கைக்கு பாங்காய் இருக்கலாம் இ றே-அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே யாகிலும்
இப்படி இருக்கிறவர்களுக்கு ஹிதம் சொல்லுகிறதுக்கு பிரயோஜனம் என் என்னில் -இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை சொல்லுகிறது
ராவணனுடைய துர்தசையைக் கண்டு -மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று அவனுக்கும் கூட ஹிதம் சொன்னாள் இ றே பிராட்டி-
ஒருவன் தலைக் கடையையும் புறக்கடையையும் அடைத்துக் கொண்டு கிடக்க அவ்வகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்-கண்டு நிற்கிறவர்களுக்கு அவிக்க வேண்டி இருக்கும் இ றே -அப்படியே யாய்த்து ஆழ்வார் படியும் –

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-
தன்னுடைய செயலாலே இவை எல்லாம் நன்றாம் படி –
இவனுடைய செயலாலே -செயலிலே -எல்லாம் நன்றாம் படி என்னவுமாம்
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல -என்று ப்ராப்யமும் ப்ராககமும் தானே என்று அத்யவசித்து-இருக்குமவர்களுடைய விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –
அங்கன் இன்றிக்கே அவை ஒன்றும் இன்றிக்கே இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இ றே இவர்
பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-
இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு-
ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு-
இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன
இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
குருகூர் நம்பி
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று சேதனர் அளவின்றியே திர்யக்குகள் அளவிலும்-ஏறும்படி யாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பை முயலா நின்றேன் -யத்னியா நின்றேன்-என்னைத் தீ மனம் கெடுத்தாய் யுனக்கு என் செய்கேன் என்று அவர் தாம் அருளிச் செய்யுமா போலே-பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடுமாறுகிறார் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் பிரபந்தத்தில் ஓடின தாத்பர்யம் ஆழ்வாருடைய சர்வ பிரகார வைலஷண்யமும் (பிராப்யம் பிராபகம் ஞானம் பிரதத்வம் தோஷம் பிரதிபடத்வம் -நான்கும் உண்டே )இப்படி விலஷணரான ஆழ்வார் தம்-பக்கல் பண்ணின உபகார வைபவமும் இ றே -தம்முடைய தோஷத்துக்கு எதிர்த் தட்டான ஆழ்வார் வைலஷண்யமும்-தம்முடைய குறைக்கு எதிர்த் தட்டான உபகாரத்வமும் இவ்விரண்டையும் சொல்லிக் கொண்டு போந்தார் கீழ் –
இப்பாட்டில் அவ்வுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் தேடிக் காணாமையாலே தெகுடுகிறார்-(தடுமாறுகிறார் -எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும் ) வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -யோ மா ததாதி ச இ தேவ மாவா -என்று-முமுஷு தசையோடு முக்த தசையோடு வாசியற உபகார ஸ்ம்ருதி நடக்குமது போக்கி பிரத்யுபகாரம் பண்ணித் தலைக் கட்டப் போகாது இ றே-
பரத்வ உபகார நிரபேஷத்வம் ஆசார்ய லஷணமாய் பிரத்யுபகார சாபேஷத்வம் சிஷ்ய லஷணம் ஆகையாலே-அதுக்கு வழி தேடிக் காணாமையாலே அலமருகிறார்-
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் -அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இ றே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே -(
ஆச்சார்யர் திருத்தி பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே -அதனாலே அத்தை பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்-
தர்மார்த்தௌ யத்ர ந ஸ்யாதாம் ஸூ ச்ருஷா வா ததாவிதா தத்ர வித்யா வக்தவ்ய -என்கிறபடியே தர்மார்த்த ரூபமான பிரயோஜனம் ஆதல்-
ஸூ ஸ்ருஷாவா என்கிற அதிகாரமாதல் எனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அத்ருஷ்ட பிரயோஜனம் ஆதல் –
த்ருஷ்ட பிரயோஜனம் ஆதல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பகவத் ப்ரிய சித்திக்காதல் -பகவத் சமாராதன சேஷமாக-இவன் பக்கல் உண்டான த்ரவ்ய சித்திக்காதல் அன்றிக்கே ஸூஸ் ருஷையாகிற அதிகார பூர்த்தி கண்டதால் இ றே
பகவத் விஷயத்தை உபதேசிக்கைக்கு யோக்யதை யுள்ளது
அர்த்த தோ- தர்ம த- ஸூஸ்ரூஷூ ரத்யாப்ய -என்கிறபடியே நிரவதிக வத்சலனானவனும்-சிஷ்யாதே அஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் -என்ற பின்பு இ றே உபதேச ப்ரவர்த்தகனாய்த்து-இவர் அப்படி அன்றிக்கே துர்க்கதியே பற்றாசாக வி றே உபதேசித்தது-
புன்மையாகக் கருதினதே பற்றாசாக வாய்த்து இவர் அன்னையாய் அத்தனாய்த்து
இத்தலையில் ஒரு நன்மை பார்க்க வேண்டிற்று இல்லை புன்மையாகிற துர்க்கதி-
ஸ்வ பிரயோஜன நிரபேஷமாகப் பிறருடைய துர்க்கதியே பற்றாசாக வாய்த்து சத்துக்கள் உபதேசிப்பது –
ச்ரூயதாம் பரமார்த்தோ மே தைதேயா தநுஜாத்மஜா -ந சானியா தை தன்மந்தவ்யம் நாத்ர லோபாதி காரணம் -என்கிறபடியே
நாத்ர லோபாதி காரணம் -என்கிற இடம் ஸ்வ பிரயோஜன நிரபேஷத்வம் -தநுஜாத்மஜாஎன்கிற ஆ சூரா சம்பந்தம் -பிறருடைய துர்க்கதி
–ச்ரூயதாம் -என்கிற இடம் உபதேசம் -பரமார்த்தோ -என்கிற இடம் உபதேஷ்டவ்யமான அர்த்த கௌரவம்
-மே என்கிற இடம் உபதேஷ்டாவினுடைய ஆப்த பூர்த்தி –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்-
நிஷ் பலமே யாகிலும் அநதிகாரிகளே யாகிலும்

செயல் நன்றாகத் திருத்திப்
அனுஷ்டான பர்யந்தமாக யுபதேசித்துத் திருத்தினார் -என்னளவு அன்றியிலே தம்முடைய அளவிலே உபதேசித்தார்
ஷத்ர பந்துவுக்கும் துர்க்கதியே பற்றாசாக வைஷ்ணவன் உபதேசித்த இடத்திலும் காலாந்தரத்திலே இ றே அவனுக்குப் பலித்தது
இவர் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே யாக்குமவர் ஆகையாலே செயல் நன்றாகத் திருத்தினார்
செயல் நன்றாகத் திருத்தி-
இவர் உபதேசித்த அர்த்தம் என் நெஞ்சிலே பட்டு அது தான் அத்யவசாய பர்யந்தமாய் அவ்வளவு அன்றிக்கே அனுஷ்டான சேஷமாய்-அவ்வனுஷ்டானம் தான் சதசத நுஷ்டான மிஸ்ரமாகை யன்றிக்கே சத நுஷ்டானமே யாம்படி திருத்தினார்-( சத் அஸத் அனுஷ்டானம் இரண்டும் கலந்து போலே இல்லாமல் )
1-முற்படச்ரவணமும் –2-ஸ்ருதமான வர்த்தத்தில் மனனமும் -3- மதமான வர்த்தத்தில் மஹா விசுவாசமும் –4-விச்வச்தமான அர்த்தத்தில் அனுஷ்டானமும்-5-அதில் அசத நுஷ்டானம் கலசாதே சத நுஷ்டானமே யாய்ப் போருகையும் இ றே செயல் நன்றாகத் திருத்துகை யாவது
திருத்தி
இவற்றில் என் கையில் என்னைக் காட்டிக் கொடாதே தாமே கைத்தொடராய் நின்று இவ்வவஸ்தா பன்னமாக்கினார்-

பணி கொள்வான்
பகவத் பாகவத விஷயங்களில் கிஞ்சித் காரத்திலே மூட்டினார்-
திருத்தின பலம் விநியோகம் கொள்ள வேணுமே -இவரும் அவருக்கு உகப்பாக வாய்த்து பகவத் பாகவத விஷயங்களுக்கு அடிமை செய்வது
பகவத் கிஞ்சித் காரமும் வேணும் -ஆசார்ய கிஞ்சித் காரமும் வேணும் -வைஷ்ணவ கிஞ்சித் காரமும் வேணும்-
பகவத் பாகவத விஷயங்களுக்கு அடிமை செய்யும் -ஆசார்யனுக்குப் பிரியமாக
பகவத் பாகவத விஷயம் இரண்டும் உகக்கைக்கு ஆசார்யனுக்கு அடிமை செய்யும்
பதத்ரய நிஷ்டையைப் போலே கிஞ்சித்கார த்ரயமும் இவனுக்கு அபேஷிதமாய் இருக்கும் -ஸ்வரூபம் பகவத் கிஞ்சித் காரத்திலே மூட்டும் –
பகவத் ப்ரீதி பாகவத கிஞ்சித் காரத்திலே மூட்டும்-
பாகவத ப்ரீதியும் இவ்யக்தித்வயத்தினுடைய வைபவத்தை யுபதேசித்த உபகார ச்ம்ருதியால் வந்த இவன் தன்னுடைய ப்ரீதியும் ஆசார்ய கிஞ்சித் காரத்திலே மூட்டும்
இப்படி ஒன்றுக்கு ஓன்று ப்ரவர்த்தகமாய் யாய்த்து மூன்று விஷயமும் இருப்பது-(ஆச்சர்ய கைங்கர்யம் பிரதமம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யம் -மா முனிகள் -அதனால் பகவத் கைங்கர்யம் -அடுத்து பகவான் உகப்புக்கு பாகவதர் கைங்கர்யம் -மேலே பாகவதர்  உகக்கும் -ஆச்சார்யர் கைங்கர்யம் )
இதில் ஓன்று-(பகவத் சம்பந்தம்) நிருபாதிக சம்பந்தம் -மற்றவை இரண்டும் சோபாதிக சம்பந்தம்-அதில் ஓன்று-(பாகவத  ) உத்தேச்யத்தை உபாதியாகப் பிறக்கும் -ஓன்று (ஆச்சார்ய )உபகாரகத்வோபாதியாகப் பிறக்கும் –
பயனன் றாகிலும்  பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
அநதிகாரியான என்னை அதிகாரத்தின் மேல் எல்லையில் நிறுத்தி நிஷ்பலனான என்னை பகவத் பாகவத கைங்கர்யத்திலே-அன்வயிப்பித்துத் தாம் அருளின பிரயோஜனம் கொண்டார் –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
அவன் தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ளும் இத்தனை
இவர் கருந்தரையிலே திருத்துமவர் யாய்த்து-
அவன் அதிகார நிஷ்பத்தி பிறந்தால் ப்ராப்ய விரோதிகளைப் போக்கிப் பணி கொள்ளும்-
அவ்வதிகார நிஷ்பத்தி தன்னையும் கொடுத்தாய்த்து இவர் அடிமை கொண்டது
அதிகார நிஷ்பத்தி ஆசார்யனாலே –புருஷார்த்த நிஷ்பத்தி ஈச்வரனாலே
அதிகாரம் ஆவது ஜ்ஞான அனுஷ்டானங்களில் புரை யறுதியாகையாலே செயல் நன்றாகத் திருத்தி என்று அவராலே இ றே இவருக்கு உண்டாய்த்து
இவனைத் தன் உபதேசத்தாலே வெளிச் செறிப்பித்து தான் அனுஷ்டித்துக் காட்டி தன்னில் விஞ்சின அனுஷ்டானம்-இவன் கையிலே கண்டாலாய்த்து அவன் இவனை பகவத் பாகவத கிஞ்சித் கார யோக்யன் என்று அறுதி இடுவது-(அதிகாரம் கொடுத்து கைங்கர்ய சிரத்தை ஆச்சார்யர் ஏற்படுத்த -அப்புறம் பிரதிபந்தகங்களை அவர்களுக்குப் போக்கி தான் கைங்கர்யம் பெற்றுக் கொள்வான் அவன் -)
ஆர்ந்த புகழ் அச்சுதன் -இவ்வளவிலே புகழ் படைத்து பற்றினாரை விடாதவன் என்கிற பட்டப் பெயரும் பெற்றாய்த்து அவன் இருக்கிறது –

பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
பணி கொள்ளுமவர்யாய்த் திரு நகரிக்கு நிர்வாஹகரானவரே என்று சம்புத்தி-(விளிச் சொல் -உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய முயல்கின்றேன் )

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-
அசேதனமான பஷி ஜாதம் அடைய ஆழ்வார் பரிசரத்திலே திருந்தி திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ
சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )
ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா வி றே-
தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்

குருகூர் நம்பி
பிரத்யுபகார நிரபேஷைதைக்கு அடியான பூர்த்தியை யுடையவரே -பகவத் கிஞ்சித் காரத்துக்கு த்வாரம் பெறிலும் ஆசார்ய-கிஞ்சித் காரத்துக்கு த்வாரம் இல்லை -இவன் த்ருஷ்டத்தைக் கர்மத்தின் கையிலே பொகட்டு-அத்ருஷ்டத்தை ஈஸ்வரன் கையிலே பொகட்டு இருக்குமவன் இ றே-(அவாப்த ஸமஸ்த காமன் ஆகையால் -கிஞ்சித் காரம் -வழி இல்லை யாக இருந்தாலும் சாபேஷை போலே அர்ச்சாவதாரத்தில் அபிநயனம் –
அங்கு கூடினாலும் ஆச்சார்யர் கிஞித்காரம் துவாரம் இல்லையே -)

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-
உன்னுடைய பரம போக்யமான திருவடிகளில் உண்டான ஸ்நேஹம் அடியாக பிரத்யுபகாரம் தேடி உத்சாஹியா நின்றேன்
இவ் உத்சாஹத்துக்கு மேற்பட பிரத்யுபகாரம் பண்ணுகைக்கு விரகு இல்லையே -அவர் தாம் -உனக்கென் செய்கேன் -எனபது –
அப்பனுக்கு எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் என்றால் போலே
மொய் கழல்
மொய் கழலே ஏத்த முயல் என்று ஆழ்வார் அவ்விஷயத்தை அருளிச் செய்யக் கேட்டுப் போந்த வாசனையாலே இங்கும் மொய் கழல் என்கிறார்
கீழே அவன் பொன்னடி என்று ஆழ்வார் திருவடிகளின் பாவ நத்வம் சொன்னார்
இங்கே போக்யதை சொல்லுகிறார்
வகுளாபி ராமமாய் ஸ்ரீ மத்தாய் (போக்யத்வமும் பாவானத்வமும் -)-இ றே ஆழ்வார் திருவடிகள் இருப்பது-
மொய் கழற்கு அன்பையே
இத் திருவடிகளின் போக்யதை அன்பைக் கொடுத்தது-அன்பு பிரத்யுபகார்த்திலே மூட்டிற்று-அதுக்கு இடம் காணாமையாலே அலமரா நின்றேன்-இவ்வலமாப்பு யாவச் சைதன்யம் இ றே –மொய் கழற்கு அன்பையே-முயல்கின்றேன்-(வர்த்தமானம் யாவதாத்மா பாவி ப்ரபத்யே போலே )

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –9- மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் – — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான் என்கிறார் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

 

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
எம்பெருமான் பக்கலிலே ஜ்ஞான பக்திகளைப் பூரணமாக வுடைய வைதிகர்-
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம்  (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –

நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-
பண்ணோடும் இசையோடும் பாடி என் நெஞ்சிலே பிரதிஷ்டிப்பித்தான்
கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே கிடீர் செய்தது –

தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு –
எல்லா மேன்மையும் சொன்னாலும் தகுதியான ஆழ்வார் எல்லாம் சொன்னாலும் அங்குத்தை பிரபாவத்தை-எல்லை காண ஒண்ணாத படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –

ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே-
இவர் திருவடிகளில் உண்டான பக்தி யன்றோ இவருக்கு அடியேன் ஆனதில் உண்டான பிரயோஜகம் –(நான் -அடிமை யானதால் பலன் பக்தி -அடியேன் ஆனதால் ருசி ஏற்பட்டது –ருசி வந்தால் தானே அடிமை ஆவோம் –பொருந்தாமை நாயனார் காட்டி அருளுகிறார் மேல் )

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

உமக்கு அருளின அருளுக்கு அவதி ஏது என்ன -என்னுடைய தண்மை பாராதே சகல வேதங்களினுடைய ரஹஸ்யார்த்தத்தை-எனக்கு உபகரித்தான் என்று -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் நம் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே என்று
ஆழ்வார் அருளிச் செய்தால் போலே இவரும் உபகார ச்ம்ருதியாலே ஆழ்வார் திருவடிகளிலே அருளிச் செய்கிறார் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
பிரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தையே நிரூபகமாக உடையவர்கள் –
அநேக சாகை அத்யயனனம் பண்ணினவர்கள் என்றுமாம்
வேதத்தினுடைய பொருள் -சகல வேதங்களினுடைய ரகஸ்ய அர்த்தத்தை –

நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
பிரதிபத்தி பண்ண அரிதாய் இருக்கிற வேத ரகஸ்ய அர்த்தத்தைக் கேட்டார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி பாடி-
மலையைக் குழித்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிஸ் ஸூ ஷிரமான என் நெஞ்சுக்கு இதுவே விஷயமாம் படி பண்ணினார் –

தக்க சீர் சடகோபன்-
சர்வேஸ்வரன் கவிகள் என்றால் தகுதியான கல்யாண குணங்களை யுடைய ஆழ்வார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றால் போரும்படி சர்வேஸ்வரன் இருக்குமா போலே
சர்வேஸ்வரன் கவிகள் என்றால் தகுதியாய்த்து ஆழ்வார் இருப்பது
ஏற்கும் பெரும் புகழ்வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வ ண் குருகூர்ச் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இ றே –

என்னம்பிக்கு
என்னை விஷயீ கரிக்கைக்குத் தகுதியான பௌஷ்கல்யத்தை உடையவர்க்கு –

ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே –
அடிமையாக வேணும் என்று எனக்குப் பிறந்த ருசி –
அடிமையாகிற பிரயோஜனத்தொடே வ்யாப்தமாய் இருக்கும்
பகவத் விஷயத்தில் ருசி இவர்க்கு சரீர விச்லேஷம் பிறந்தால் அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே-சென்றால் பெறக் கடவதே இ றே இருப்பது
ஆழ்வார் விஷயத்தில் பிறந்த ருசி அங்கன் அன்றிக்கே இச் சரீரத்தோடு ஆழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமைகளும்-செய்யலாம் படி பண்ணும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கு அவ்வருகே இ றே பேறு ஆய்த்து
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பம் இல்லை என்கிறது
அன்றே -என்றது ஆமே என்றபடி -அன்று எனக் கிளவியாம் எனத் தகுமே –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

கீழே ஆழ்வாருடைய குண கீர்த்தனம் பண்ணும்படி அவர் தமக்கு கிருபை பண்ணும் படியைச் சொல்லி
அதுக்குத் தண்ணீர்த் துரும்பான அநாதி கர்மங்களை ஆழ்வார் தம்முடைய பார்வையாலே பாறு படுத்தியத்தைச்  சொல்லி
அப்படியான ஆழ்வாருடைய க்ருபா வைபவத்தை திக்குகள் தோறும் அறிவிக்கக் கடவேன் என்று தம்முடைய ஆதர விசேஷத்தைச் சொல்லி
கிருபா பர்யபாலயத் -என்றும் -அருளினன் -என்று தொடங்கி -ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -என்றது முடிவாக
ருஷிகளும் ஆழ்வார் தாமுமாக பகவத் கிருபையை ஆதரித்துப் போரா நிற்க
நீர் ஆழ்வாருடைய கிருபா பிரசித்தியிலே பிரவணர் ஆனபடி என் என்ன
பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையே இந்த லோகத்தில் அபிவ்ருத்தம் ஆகையாலே என்றும் சொல்லி நின்றது கீழ் –

இதில் கீழே ஆழ்வாருடைய ஜ்ஞான பிரதானம் ப்ரஸ்துதம் ஆகையாலே அவர் சகல வேதாந்த தாத்பர்யமான அர்த்த விசேஷத்தை
தமக்கு அறிவித்த பிரகாரத்தைச் சொல்லி அதுக்கு ஈடான குணங்களை யுடையராகையாலே பூரணரான ஆழ்வார் விஷயத்தில்
சேஷ பூதன் பிரமமே யன்றோ அவர்க்கு அடிமை செய்கையிலே பிரயோஜனம் என்று உபகார ச்ம்ருதியாலே-அவருக்கு சேஷ பூதன் என்று பிரேம பூர்வகமாகப் பிறக்குமாதரம் அன்றோ அடிமையில் முடிந்த நிலம் என்கிறார் –(அன்பு -ஆதரவு -கைங்கர்யம் –மூன்று நிலைகள் –ஆதரவே ப்ரேமம் கைங்கர்யம் என்றுமாம் )

கீழ் நாலாம் பாட்டிலே ஆச்சார்ய விஸ்வாசம் சொன்னார்-
மேல் இரண்டு பாட்டாலே ஆச்சார்ய வைபவமும் அவனுடைய உபகார வைபவமும் சொன்னார்-
இதில் உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்-
ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-
ஆழ்வார் தமக்கு அறிவித்த அர்த்தத்தின் சீர்மையை அருளிச் செய்கிறார் –
வேதியர்
வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்
அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-
ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கே
உத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த  ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்
மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –
அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்
ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்

வேதத்தின் உட்பொருள்
அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்
அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இ றே
உட்பொருள்
அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்
அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -இரண்டாலும் அருளிச் செய்தார்

நிற்கப் பாடி
1-துர்க்ரஹமான வேதார்த்தத்தை பிரதிபத்தி விஷயமாம் படி பாடி
நிற்கப்பாடி
2-கேட்டவர்கள் நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி பாடி என்றுமாம்
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி
3-அது நிற்கும் நான்மறை யானாப் போலே அதில் அர்த்த ரூபமான இதுவும் சர்வ காலமும் அழிவின்றிக்கே நிற்கும் படியாகப் பாடி என்றுமாம்
வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி
4-வைதிகர் ஆனவர்கள் அதுக்கு ஹ்ருதயமான அர்த்த தாத்பர்யத்தை அறிந்து அதிலே நிஷ்டராம் படி பாடி

என்நெஞ்சுள் நிறுத்தினான்
அது தன்னை என் நெஞ்சிலே ஸூ பிரதிஷ்டிதமாம் படி பண்ணினார்
என் நெஞ்சுள் நிற்கப்பாடி நிறுத்தினான்
பாடுகிறபோதே என் நெஞ்சில் தங்கும் படிக்கு ஈடாக விரகிட்டுப் பாடி நிறுத்தினான்
நெஞ்சுள் நிறுத்தினான்-
அது தன்னிலும் மேல் எழச் சொல்லி விடுகை யன்றிக்கே அந்தரங்கமாக உபதேசித்தார்
என் நெஞ்சுள் நிறுத்தினான்
புன்மையே வேஷமான என் நெஞ்சிலே படுத்தினார்
நிறுத்தினான்
உபதேசித்தவர் தாமே குலைக்கிலும் குலையாத்படி திருட அத்யவசாயமாக உபதேசித்தார்
என் நெஞ்சுள் நிறுத்தினான்
தத் விஷயமும் உட்பட வூடு போகாத என் நெஞ்சிலே ததீய வைபவம் உட்பட நடையாடும்படி பண்ணினார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
வேதார்த்தங்களை வகுத்து அதுக்குப் பாசுரம் இட்டுத் திருவாய் மொழி பாடினால் போலேயோ -அப்பரமார்த்தங்களை என் நெஞ்சிலே படுத்தின அருமை –
வேதார்த்தங்களைத் திருவாய் மொழியிலே சேர்த்து -அத் திருவாய் மொழியின் அர்த்தங்களை என் நெஞ்சிலே சேர்த்தார்
ஆசார்ய வைபவம் கைபட்டவனுக்கு ஆய்த்து சகல வேதார்த்தங்களும் வசப்படுவது
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
பிரமாண வைபவத்தையும்- ப்ரமேயமான தத் வைபவத்தையும்- ப்ரமாத்ரு வைபவத்தையும் -அபிமத வைபவத்தையும்-இவர் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் பண்ணினார் ஆய்த்து –

தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு
இப்படி உபதேசிக்க வல்ல ஜ்ஞானாதி பூர்த்தியைக் காட்டி என்னுடைய சாட்யத்தைப் போக்கித் தம்முடைய பூர்த்தியிலே நிலை நின்றவர் –
குறைவாளரைக் குறை வறுக்கை இ றே ஒருவன் பூர்த்திக்கு மேல் எல்லை-(பட்டர் பிரான் ஆனா பின்பு -பொற் கிழி- வித்வான்களுக்கு அபகரித்த பின்பு பெரிய ஆழ்வார் -தத்வம் நிர்ணயம் பொழுது பிரான் -அவனை அனுபவித்து -பொங்கும் பிரிவால் -ப்ரீதி உண்ட அருளி பெரியாழ்வார் ஆனார் போலே இவரும்-சட கோபன் இவர் முதலில் அப்புறம் நம்பி ஆனார் என்றபடி –தம் விரோதி போக்கி என் விரோதியையும் போக்கி அருளினார் )நம்பி -விபூதிக்காக உபதேசித்தாலும் தம்முடைய ஜ்ஞானாதிக்ளைத் தரைக் காண ஒண்ணாதவர்-
என் நம்பி
அவர் உபதேசித்த அர்த்தங்களிலும் அவருடைய பூர்த்தியிலே யாய்த்து இவர் தோற்றது
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு
தக்க கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியான அவருடைய் நம்பி யன்று இவருடைய நம்பி
அப்பூர்த்தி என்னளவில் வந்தது இல்லையே-

ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே
அவருக்கு அடிமை புக்கத்தால் உண்டான ஆதரம்–அடிமையே பிரயோஜனமாக யுடையதன்றோ-
முற்பட அடிமை புக்கு –அநந்தரம் ஆதரம் நடந்து– பின்பு அடிமை செய்யுமதுவே அவருக்கு பிரத்யுபகாரம்-
முற்பட சேஷ பூதனாய் -பின்பு ப்ரேமம் நடந்து -ப்ரேம அனுரூபமான கிஞ்சித் காரமும் நடக்க வேணும்-
ஆசார்யபவ்யதையும் -ஆசார்ய ப்ரேமமும்– ஆசார்ய கிஞ்சித் காரமும் -இம்மூன்றும் அபேஷிதம் இ றே சிஷ்யனுக்கு
அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து-
அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து
அடிமைப் அயன் அன்றே
அடிமை பிரயோஜனம் என்னும் இடம் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே கற்றார்
அன்றே
அதுவே யன்றோ அர்த்தம்
அந்த வழுவிலா வடிமை செய்கிறதில் காட்டில் இது ஆட்புக்க காதல் அடிமைப் பயன் -வன்றோ உறுவது –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு — 8-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

வேத ரஹஸ்யத்தை வெளியிட்ட சர்வேஸ்வரன் கிருபையைக் காட்டில் -திருவாய்மொழியை அருளிச் செய்த-ஆழ்வாருடைய கிருபை ஜகத்துக்கு மிக்கது -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற-
சேஷ பூதனுக்கு ஆனந்திக்கையே ஸ்வரூபம்-சேஷ பூதராகையும் ஹ்ருஷ்டராகையும் வேறு இல்லை காணும்-இவன் அருளை அனுசந்தித்து ஹ்ருஷ்டா என்கிறபடியே ஹ்ருஷ்டராம் இத்தனை –

வருளினான் அவ் வருமறையின் பொருள்-
பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு  அருளிச் செய்தானே )

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-
ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் / விருத்திக்காரர் -கீதாச்சார்யன் / ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே )
இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-
எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் -ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்-
பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இ றே சொல்லிற்று –

——————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி -ஆழ்வாருடைய அருள் கொண்டாடும் அருள்-சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும் கபளீகரித்து இருக்கையாலே -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ்வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் -அதுவும் அவனது இன்னருள் -என்றும்
-அருள் பெறுவார் அடியார் -என்றும் இங்கனே இ றே இவர் தாமும் அருளிச் செய்வது -அப்படி இருக்குமவர்கள்-

இன்புற-
எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலைச் சிறப்ப -என்கிறபடியே ஆனந்த நிர்ப்பரராக –

வருளினான் அவ் வருமறையின் பொருள்-
பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறது-அருமறை
அவன் தன்னைப் பெறிலும் பெறுதற்கு அரிதாய் இருக்கை –
சா ஹி ஸ்ரீ ரப்ருதா சதாம் -என்கிறபடியே வேதார்த்தத்தை அருளிச் செய்தார்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-
இவர் தாம் கை வந்தபடி பாடினார் அல்லர்
மயர்வற மதிநலம் அருளினன் என்கிறபடியே பகவத் பிரசாதத்தை முதலாகக் கொண்டு யாய்த்து இவர் கவி பாடிற்று
இவர் தாம் கவி பாடா நிற்கச் செய்தே -என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி தாமும் விஸ்மயப்படும்படி நிரவத்யமாக இ றே கவி பாடுவித்துக் கொண்டபடி
ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான்
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே ஆயிரமாக வாயிற்றுப் பாடிற்று
இன் தமிழ்ப் பாடினான்
பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே இனிதாய் துரவகாஹமான அர்த்தத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும்-சப்தம் அதிக்ருதாதிகாரம் இன்றிக்கே சர்வாதிகாரமாம் படியும் பாடினார்

பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அறிலின வருள் போல் அன்றிக்கே அது தன்னை விளாக்குலை கொண்டு யாய்த்து இருப்பது

இவ் உலகினில் மிக்கதே-
சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும் கபளீகரித்து இருக்கை –

————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வாருடைய கிருபையை கீழில் பாட்டிலே -எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளை -என்று
இவர் சொல்லக் கேட்டிருக்குமவர்கள் பகவத் கிருபை யன்றோ நாட்டார் அடையக் கொண்டாடுவது -நீர் ஆழ்வாருடைய கிருபையை-எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி என் என்ன-
பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையும் ஆனால் ப்ராப்தி சித்திக்கும் அன்று அன்றோ பகவத் கிருபை வேண்டுவது -அந்த ப்ராப்தி யுன்டாவது ஜ்ஞானத்தாலே அன்றோ -அந்த ஜ்ஞான சித்தி ஆழ்வாராலே யன்றோ -ஆகையாலே-ஆழ்வார் கிருபை யன்றோ லோகத்தில் விஞ்சி இருப்பது என்கிறார்-
பிராப்தி ஜ்ஞான சாபேஷமாய் இருக்கும் (ஆத்ம ஞானமும் -சேஷத்வ பாரதந்ரய ஞானம் இருந்து அதன் பலனாக -அப்ரதிஷேதம் விலக்காமை யும் வேண்டும் )-ஜ்ஞானம் ப்ராப்தி சாபேஷமாய் இராது-
கீழே நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -என்று தம்முடைய புன்மையைச் சொல்ல அந்தப் புன்மை ஏது என்ன-
-அத்தை நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் -என்று இரண்டு வகையாகப் பேசி-
அநந்தரம் –பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்று அத்தை போக்கின படியைச் சொல்லி போக்கின பிரகாரத்தை இப்பாட்டிலே சொல்லுகிறார் –

அநாத்மன் யாத்ம புத்தியையும் அபோக்யங்களில் போக்ய புத்தியையும் அத்யாத்ம ஜ்ஞானத்தாலே போக்க வேணும்-
ஆச்சார்யன் ஜ்ஞான பிரதானம் பண்ணின வாறே -அந்த ஜ்ஞானம் மேல் உண்டான கர்மார்ஜனத்தை மாற்றும் –
முன்பு உண்டான அவித்யையாலே ஆர்ஜித்து வைத்த கர்மங்களை ஈஸ்வரன் போக்கும்படி பண்ணுவதுமது-
சங்கல்பஜத்தை இவன் போக்கும் -(மனசால் நினைத்த பாபத்தை அறிந்து -ஆச்சார்யர் சர்வஞ்ஞன் ஆகையால் போக்கும் என்றபடி )-கர்மஜத்தை அவன் போக்கும் -அவன் போக்குகைக்கு அடி இவன்-ஜ்ஞான சித்தியைப் பண்ணிக் கொடுக்கையாலே இ றே-
அத்தைப் பற்ற இறே- அம்ருதச்ய ஹி தாதானம் தமாசா பாரம் தர்சயதி சனத்குமார -என்றும் ஆச்சார்யனைச் சொல்லுகிறது –

எனக்கு அத்யாத்ம ஜ்ஞானத்தைப் பிறப்பிக்கக் கடவதாக வேதார்த்தங்களைத் திருவாய் மொழி முகத்தாலே வெளியிட்டு-அருளினார் என்னப் பார்த்து -அத் திருவாய்மொழி பாடினதற்கு வேறேயும் ஒரு பிரயோஜனம் சொல்லுகிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற-
திருவாய் மொழி பாடிற்றும் பகவத் ப்ரிணநார்த்தமாக வன்றிக்கே சாத்விக அக்ரேசருடைய முக மலர்த்திக்கு உறுப்பாக வாய்த்து –
அடியவர் -அருள் கொண்டாடும் அடியவர் -ஜ்ஞான விஷய பூதனான ஈஸ்வரனுடைய பிரியத்துக்கு அன்றிக்கே
ஜ்ஞான நிஷ்டரான சாத்விகர் உகக்கைக்காக வாயிற்று திருவாய் மொழி பாடினது
அடியவர்
சேஷவ்ருத்தி புருஷார்த்தம் என்னும்படி ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவர்கள் -சேஷத்வ ஜ்ஞானம் சேஷவ்ருத்தி சேஷம் இ றே
அருள் கொண்டாடும் அடியவர்
அப்புருஷார்த்ததுக்கு சாதனமும் அவனுடைய கிருபை என்று இருக்கும் அவர்கள்
ஆகையாலே கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்குமவர்கள்
அருள் கொண்டாடும்
அல்லாத குணாந்தரங்களில் காட்டில் கிருபையைக் கொண்டாடுமவர்கள்
ஈஸ்வரனையும் கொண்டாடுகிறது தான் உண்டான போது ஜகத் உண்டாய் -இல்லாத போது இல்லையாம் என்று இட்டு இ றே
அப்படியே க்ருபா குணம் இல்லாத போது குணாந்தரங்களும் அகார்யகரமாய் -இது கூடினவாறே கார்யகரமாய் இருக்கையாலே-இத்தையே கொண்டாடா நிற்பவர்கள்
அப்படியே தேவ தாந்தரங்களில் காட்டில் ஈஸ்வரன் கொண்டாடத்துக்கு விஷயம் ஆனாப் போலே யாய்த்து-குணாந்தரங்களில் காட்டில் இது கொண்டாடத்துக்கு விஷயமான படி
மனஸ் தத்வம் இந்த்ரிய அந்தர்பூதமாய் இருக்கச் செய்தேயும் இது சஹகாரி யாகாத போது இந்த்ரிய வியாபாரம் கூடக் காணாமை-லோகத்திலே கண்டு போகிறாப் போலே இந்த கிருபையும் குணாந்தரப்பூதம் ஆகிலும் இது சஹ கரியாத போது-சேதனர் அளவில் குணாந்தரங்கள் ஜீவிக்கை யாகாது
ஸ்வரூபமும் நித்யம் குணங்களும் நித்யங்களாய் இருக்கச் செய்தே இவனுடைய சம்சார சம்பந்தம் ஒழுக்கு அறாமல் நடக்கையாலே-அத்தை மாற்றி இவனை உத்தரிப்பித்தது க்ருபா குணம் ஆகையாலே அத்தை யாய்த்து முமுஷுக்கள் கொண்டாடுவது –

சக்தனுக்கும் கிருபை வேணும் -அசக்தனுக்கும் கிருபை வேணும் –
சக்தனுக்கு நம்மைப் பெறுகைக்கு இப்படி வருத்தப்பட்டு சாதன அனுஷ்டானம் பண்ணுவதே என்னுமவன் நெஞ்சில் ஈரப் படாய்த்து பல சேஷம் ஆவது
அந்த ஈரப் பாடாய்த்து அவனை ப்ரீதனாக்குவதும் –
அசக்தனுக்கு நார்ச்ச நாதௌ ச்துதௌ ந ச -என்றால் க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி ப்ரசீத -என்னும்படி இருக்கும்-
அங்கு அவனுடைய அனுஷ்டானம் கண்டு பிறக்கிற கிருபை
இங்கு ஆகிஞ்சன்யம் கண்டு பிறக்கிற கிருபை
ஸ்வகதமான தொன்று சாதனம் ஆக வேண்டாவோ -பரகதமான குணம் சாதனம் ஆம்படி என் என்ன பாதகமே யாகிலும்-அருள் பெறுவார் அடியார்- என்கிறபடியே ஆஸ்ரயம் அவனாய் விஷயம் இவனாய் இருக்கும் -(இலக்கு அடியார் -அருள் அவன் இடம் -திருவட்டாறு சேவிக்கும் பொழுது இத்தை நினைத்து சேவிக்க வேண்டுமே -கடல் போன்ற அருள் இருக்க விலக்காமல் கொள்ள வேண்டுமே நாம் அவன் அடியாராக இருந்து)

அருள் கொண்டாடும்–அருள் கொண்டு ஆடும் — அடியவர்-
அன்றிக்கே அருளைத் தங்களுக்கு அவஷ்டம்பமாகக் கொண்டு நடையாடுமவர்கள் –
இவனுக்கு ஊன்று கோலானதும் விரோதிகளைச் சேதித்துத் தருவதும் அருளே யாய்த்து
அருள் என்னும் தண்டு -என்றும் -அருள் என்னும் ஒள் வாள் என்றும் -சொல்லுகிறபடியே அவர் தம்முடைய ப்ராஹ்மண்யம் தோற்றத் தண்டு என்கிறார்
இவர் தம்முடைய ஷாத்ரம் தோற்ற ஒள் வாள் என்கிறார்-(ப்ராம்மணரும்  இல்லை க்ஷத்ரியர் இல்லை -குணத்தால் -உப சாந்தர் ஆழ்வார் -பரம சாந்தர் -இவருக்கு கோபம் உண்டே)ஆகையால் இவர்கள் பக்த்யாதிகள் அவஷ்டம்பமாக்குதல் -அசங்க சஸ்த்ரத்தைக்-(அசங்க சஸ்த்ரேன -சம்சாரம் மரம் கோடரி -திடேன  சித்வா பற்று அற்ற தன்மை-திடமான வைராக்யம் கொண்டே -கீதை  )-விரக்தி யாகிற வாள் – கொண்டு திரிதல் செய்யுமவர்கள் அல்லர்
அவனும் தனக்கு- பலாதி குணங்கள் உண்டே யாகிலும் –உபகரண பூர்த்தி -(திவ்யாயுதங்கள் -)உண்டே யாகிலும் இக்கிருபை கொண்டாய்த்து பல ப்ரதன் ஆவது-ஆகையாலே யாய்த்து பாழியான் ஆழியான் அருளே நன்று என்ன வேண்டிற்று –

இன்புற-
அவர்கள் பரிதியைப் பெற அவர்கள் பண்டே அருள் கொண்டாடும் அடியவரே யாகிலும் இவ்வர்த்தம் ஆப்தரான-ஆழ்வார் அருளிச் செய்யப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள் –ராக சித்தம் விதி சித்தமாகப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள்

வருளினான் அவ் வருமறையின் பொருள்
மறையின் அந்த அரும் பொருளை அருளினான்
அப்பொருளை-
கருணை சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப்பொருளை-வழுவிலா வடிமை செய்ய வேண்டும் -எனபது -அடியை யடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்பதே இவற்றை உபதேசிக்ககை
பொருளை அருளினான்
தாம் வாக்ய உச்சாரணம் பண்ண மாட்டாமையாலே பொருளை அருளினார் (மூன்று எழுத்து -ஓம் நாலாயிரத்திலும் இல்லை உபதேச ரத்ன மாலையில் மட்டும் உண்டு -நாலாயிரம் அனைவருக்கும் -இது பரம பிரபன்னர்களுக்கு மட்டும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருப்பவர்களுக்கு மட்டுமே )
அ -அரும் பொருளை -அருளினான் –
ப்ரவ்ருத்தி சீலர்க்கு பட அரிதான வர்த்தத்தை நிர்த்தோஷரான சத்துக்களுக்கு அருளினார்-(உய்யக் கொண்டார் -ராமா நுஜர் காலத்தில் இருந்தவர் -சாதன நிஷ்டர் -வாதம் பண்ணி -சரணம் பண்ண விருப்பம் இல்லை -வித்வான் ஆனதால் இசைந்தீர் -பகவத் கிருபை இல்லாமல் இழந்தீர் -அவர் போல்வார் பிரபத்தி சீலர் )-அது தான் ஸ்வார்த்தத்தை போதிப்பியா நிற்க இவர் வெளியிட வேண்டிற்று என் என்ன-மறை-ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கு ஸ்வார்த்தத்தை மறைத்து சத்வ பிரசுரர்க்கு போதிக்கும் படி-மறையாய நால் வேதம் ஆகையாலே அவ்வர்த்தத்தை வெளியிட்டார் -(விருப்பம் உள்ளாருக்கு வேதம் சொல்லும் -ஆழ்வார் சொல்லி விருப்பம் உண்டாக்குவார் )

இவர் இவ்வர்த்தத்தை வெளியிடுகிற விடத்தில் என்ன சப்த முகத்தால் வெளியிட்டது என்ன-அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-ஆயிரம் -இனிய -தமிழ் -மூன்று பெருமைகள் –அந்த சஹச்ர சாகா பிரதி பாதிதமான அர்த்தத்தை சஹச்ர காதா முகத்தாலே வெளியிட்டார்-
தமிழ் பாடினான்
துர்ப்போதா வைதிகாச்சப்தா -என்று துர்ப்போதமான வேத சப்தம் போல் அன்றிக்கே திராவிட பாஷையாலே வெளியிட்டார்
ஆயிரம் இன் தமிழ் பாடினான்
பிரணவம் போல் அதி சங்க்ரஹம் ஆதல் மஹா பாரதம் போலே அதி விச்த்ருதமாதல் அன்றிக்கே ஆயிரம் இன் தமிழாகப் பாடினார்
இன் தமிழ் பாடினான்
அவன் சொன்னதும் அறியலாய் இருக்கச் செய்தே அது வரை முறுகலாய் இருக்கும்
இது செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்கும்-கீதா -வேதம் -மகா பாரதம் -பிரணவம் இவற்றில் வேறுபாடு –
பாடினான்
வேட்கையால் சொன்ன பாடல் -என்கிறபடியே தம்முடைய அனுபவ ஆனந்த சாகரத்துக்கு பரிவாஹ சுப வசனங்களைப் பண்ணினார்-(கிருஷ்ண அனுபவ ப்ரீதி சாகரம் –பராங்குச பயோதி -கடல் -பூமா ) ஆனால் ஒரு புருஷ புத்தி மூலமாக வந்த இது பிரமாணமாம் படி என் என்ன -தாம் சொன்னாராகில் அன்றோ அது சொல்ல வேண்டுவது-அவனுடைய அருள் மூலமாகச் சொன்னவர் ஆகையாலே அது சொல்லப் போகாது-மோஹ சாஸ்த்ராணிகாரய -என்கிற அந்த நிக்ரஹம் அடியாக வந்தது அன்றே இது-தெரியச் சொன்ன ஆயிரம் ஆகையாலே அருள் அடியாக வந்தாயிற்று
ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன-என் வாய் முதல் அப்பனை -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே-
தன் புகழ் ஏத்த அருளினான் என்று ஆழ்வார் அருள் கொண்டு அவருடைய புகழை ஏத்தினாப் போலே யாயிற்று-ஆழ்வாரும் அவனுடைய அருள் கொண்டு ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்தைப் பாடிற்று -இவர் தாம் நெடியான் அருள் சூடும் படியான் ஆகையாலே அருள் ஒழிய இவர்க்குக் கைம்முதல் இல்லையே-

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
அவருடைய அருள் அன்றோ இந்த லோகத்தில் அதிசயம் ஆயிற்று
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
பாட்டும் அன்று
பாடினவரும் அன்று
பாட்டுக்கு அடியான அருளும் அன்று
இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று
இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி
நெறி யுள்ளி யுரைத்த அம் பகவன் என்று
தான் தோன்றியான தன்னுடைய ஜ்ஞானம் கொண்டு சொன்னது அன்றிக்கே  அவனுடைய அருள் கொண்டு பாடின-தன்னேற்றமும் உண்டே இவர் அருளுக்கு-(தான் தோன்றி பாட்டு கீதை அருள் தூண்ட பாடியது அன்றோ திருவாய்மொழி )
இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இ றே லோக ஸ்பாவங்கள் இருப்பது –

இவ்வுலகினில் மிக்கதே
அவனுடைய அருள் ஆழ்வார் அளவில் சுவரி விட்டது
இவருடைய அருள் சாம்ராஜ்யம் பண்ணா நின்றது
அவனுடைய அருளைக் கொண்டாடுமவர்கள் அடியவர்களாய்
இவர் அருள் லோகம் அடங்கக் கொண்டாடும் படி தேஜிஷ்டமாயிற்று
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
ஸ்ரீ கீதை சொன்ன கிருஷ்ணன் என்றால் கை எடுப்பார் ( கூப்புவார் -)-இல்லை
திருவாய்மொழி பாடின ஆழ்வார் உடைய பேரைக் கேட்க இருந்ததே குடியாகக் கை எடா நின்றது-திருவாய் மொழி கேட்டால் ஈஸ்வர அபிமானிகளைக் கை எடார்கள் இ றே

கண்டீர்
இவ்வம்சம் நான் சொல்ல வேண்டி இருந்ததோ-ப்ரத்யஷம் அன்றோ
கண்டீர்
அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்
இவ்வுலகினில் –கண்டீர்
இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )
இவ்வுலகினில் மிக்கது
இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ-
கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இறே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )

————-

நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-
எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –7 – கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்- ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

என்னுடைய சகல பிரதிபந்தகங்களையும் போக்கின ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தை ஸூ பிரசித்தம் ஆக்குவேன் என்கிறார் –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

கண்டு கொண்டு என்னை
இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-(பெருமாள் -அந்யோன்யம் அபிவிஷணை  மஹாராஜர் போலே-மூவர் அனுபவம் – )

காரி மாறப் பிரான்
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்னுமா போலே இவரும் காரி மாறப் பிரான் என்கிறார் -பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ப்ரவாஹ அநாதி யாகையாலே அடி காண வல்லார் இல்லை
அந்தவத்தாகையாலே அடி யுண்டு என்று அனுபவிக்கும் இத்தனை இ றே
பிராயச்சித்த விநாச்யம் அன்று கர்மம் -அனுபவ விநாச்யம் என்கிற பிரமாணத்துக்கும் அவ்வருகாய்க் காணும் இருப்பது
கரிய கோலத் திருவுருக் காண்பன் என்னும் அத்தையும் தவிர்த்தாப் போலே காணும் ஆழ்வார்
உத்தேச்ய விரோதி பாபமாம் இத்தனை இ றே
மதி நலம் அருளினான் என்று தலை சீய்த்தார் ஆழ்வார்
இவரும் நமக்கு உபகரித்த இடத்தை அருளினான் என்கிறார் –

எண் திசையும் அறிய இயம்புகேன்-
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –

ஒண் தமிழ்
ஒள்ளிய தமிழ்
பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –

சடகோபன் அருளையே-
மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –

—————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் தம் பக்கல் நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த விஷயீ காரத்தைக் கண்டு இத்தை நாட்டார் அறியாதே-அனர்த்தப் படுகிற படியைப் பார்த்து இத்தை எல்லாரும் அறியும் படி கூப்பிடுவேன் என்கிறார் –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
கண்டு கொண்டு
கிட்டினவாறே தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் என்று தோற்றி இருந்து
என்னை –
இந்த நிர்ஹேதுக விஷயீ காரத்தை பிரதிபத்தி பண்ணவும் மாட்டாதே இருக்கிற வென்னை
காரி மாறப் பிரான்
உபகார ச்ம்ருதியாலே பிரான் என்கிறார்
காரி மாறன் என்கிற விசேஷணத்தாலே ஆழ்வாருக்கு உபகாரகனான ஈஸ்வரன் அளவிலே போகாமைக்காகச் சொல்லுகிறார் –

பண்டை வல்வினை –
அநாதி காலம் சஞ்சிதமான இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான பாபம் –
ஸூ ர்ப்பணகியைப் போலே வழி எல்லா வழியே பற்றுகைக்கு ஈடான ருசி -பிரதம அவதியான பகவத் விஷயத் தளவிலே
பிறந்த புருஷார்த்த புத்தி -இவை அடங்கலும்
வல்வினை –
பிராயச்சித்த சாத்யமும் அன்றிக்கே அனுபவ விநாச்யமும் அன்றிக்கே இருக்கை

பாற்றி யருளினான்
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியும் அன்றிக்கே உருமாய்ந்து போம்படி பண்ணினான் –

எண் திசையும் அறிய இயம்புகேன்
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு எல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –

ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
மயர்வற மதி நலம் அருளின அருள் போல் அன்று இவருடைய அருள்
அவ்வருளுக்கும் கூடத் தப்பின எனக்கு அருளின வருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் மூன்றாம் பாட்டிலே தம்முடைய புன்மையைக் கண்டு பெரியவர்களும் தம்மை இகழ்ந்த  படி சொல்லி
இவனுக்கு நம்மை ஒழிய இனிக் கதி இல்லை என்று ஆழ்வார் மாதா பிதாவே நின்று தம்மளவிலே அபிமானித்த படியையும் சொல்லி
அநந்தரம் பாட்டிலே அந்தப் புன்மை தான் ஏது -ஆழ்வார் தம்மை நீர் கிட்டின வழி என் என்று கேட்க -அவற்றுக்கு உத்தரம் சொல்லி
கீழில் பாட்டிலே இப்போது கைக்கொண்ட ஆழ்வார் உம்முடைய குற்றம் கண்டு இன்னும் இகழில் செய்வது என் என்ன -இன்று தொடங்கி
கால தத்வம் உள்ளதனையும் என்னை இகழாதே தம்முடைய குண ஸ்துதியே கால யாத்ரையாம் படி பண்ணினார்
ஆனபின்பு என் குற்றம் மேலிடுமோ -மேலிட்டாலும் பரிபூர்ணர் ஆனவர் என்னை நெகிழப் புகுகிறாரோ என்றார் –
இதில் ஆழ்வார் என்னை அங்கீ கரிக்கிற போதே என்னுடைய துர்க்கதி கண்டு இவன் பக்கல் இவை கிட்டக் கடவது அல்ல
என்று பழையதாய் வலியதான பாபங்களைப் பாறிப் போம்படி பண்ணி யன்றோ கிருபை பண்ணிற்று –
இனி இவற்றுக்கு உயிர் உண்டோ என்று கீழ் உக்த்தத்தைப் பரிஹரித்துக் கொண்டு தன் புகழ் ஏத்த அருளினான் என்று
ஆழ்வாருடைய கிருபை கீழே ப்ரஸ்துதம் ஆகையாலே அவருடைய க்ருபா பிரபாவத்தை திகந்தரங்கள் தோறும் வெளியிடக் கடவேன் என்கிறார் –

குரும் பிரகாசயேந்நித்யம்-என்கிற வித்தய நுஷ்டானம் பண்ணக் கடவேன் என்கிறார்
இனி ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-1- பரத்வ புத்தி -2-தேவ தாந்தரங்களிலே பரத்வ புத்தி நிவ்ருத்தி -3-அப்பர வஸ்துவின் பக்கல் ததீய சேஷத்வ பர்யந்தை யான சேஷத்வ புத்தி –4-விஷயாந்தர விரக்தி-5- பகவத் விஷயத்தை விச்லேஷிக்கில் தரைப் படும்படியான ப்ராவண்யாதிசயம் -6-அவன் கை விடில் தமக்குப் புறம்பு போக்கில்லை என்னும் படியான விஸ்வாச அதிசயம் -7-சம்சார பீதி- 8-புருஷார்த்த லாபத்தில் அதிசயித்தவரை-அர்ச்சாவதாரங்களில் உண்டான ப்ராவண்யம் -என்றாப் போலே சொல்லுகிற ஆத்ம குணங்களில் காட்டில்
வீடு மின் முற்றவும் என்று தொடங்கி கண்ணன் கழலிணை ஈறாக பல இடங்களிலும்
சம்சாரி சேதனர் உடைய துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாமே உபதேசிக்கைக்கு அடி கிருபை யாகையாலே-அந்த க்ருபா பிரபாவத்தை அனுசந்தித்து அத்தை எல்லாரும் அறியும் படி வெளியிடக் கடவேன் என்கிறார்
ஈஸ்வரன் நிரதிசய க்ருபாவானாய் இருந்தானே யாகிலும் ஸ்வாதந்த்ர்யா விசிஷ்டன் ஆகையாலே தோஷ தர்சனத்தாலே-உபேஷிப்பதும் ஒரு புடை யுண்டு- ஆழ்வார் அப்படி அன்றிக்கே பற்றினாரை இகழாதவர் ஆயிற்று –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்-எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள் நீர் ஏத்துகிற படி தான் என்ன -ஆழ்வாருடைய கிருபை யன்றோ -என்கிறார் –
ஆழ்வாருக்கு ஞானம் பக்தி விரக்தி கிருபை என்று சில குணங்கள் உண்டு
அதில் ஞானம் -சித் அசித் ஈஸ்வர ரூபமான தத்வ த்ரய விஷயமாய் இருக்கும்
பக்தி -ஈஸ்வர ஏக விஷயமாய் இருக்கும்
விரக்தி தத்வத்ய விஷயமாய் இருக்கும்
ஞானம் த்யாஜ்ய உபாதேய விவேக விஷயமாய் இருக்கும்
பக்தி உபாதேயைக விஷயம்
விரக்தி த்யாஜ்யைக விஷயம்
கிருபை துர்க்கதி விஷயமாய் இருக்கும்
அதில்- ஞானம் -தத்வ ஞானம் -சாஷாத்கார ஞானம் –(தத்வ ஞானம் என்றது – சாஸ்திர ஜன்ய ஞானம் /பிரத்யக்ஷ சாமான்யகார சாஷாத்காரம் -முக்த தசையில் சாஷாத்காரம் –விஷய பேதங்கள் -உண்டே -அத்தை மேலே -)அதில் பகவத் ஸ்வரூப விஷயம் -குண விஷயம் -விபூத் விஷயம் -விக்ரஹ விஷயம்-என்றாப் போலே பல கப்புகளை உடைத்தாய் இருக்கும்
பக்தியும் -காதல் கடல் புரைய விளைவித்த -(பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்க காதல் -5-3-/ -5-4-/-5-5-)-காதல் கடலின் மிகப் பெரிதால் -மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்–அதனில் பெரிய என்னவா -என்னும்படி அநேக பர்வையாய் இருக்கும்
விரக்தியும் -பிரக்ருத ப்ராக்ருத விரக்தி -தேவதாந்திர விரக்தி -தேவதாந்தர பரர் பக்கல் விரக்தி -சப்தாதி விஷய விரக்தி -ஆத்மானுபவ விரக்தி–பகவத் அனுபவத்தில் எனக்கு என்னுமத்தில் விரக்தி இப்படி பஹூ விதையாய் இருக்கும் –
இவை எல்லாவற்றிலும் விஞ்சியாய்த்து க்ருபா குணம் இருப்பது -ஈஸ்வரனுடைய ஜ்ஞான சக்த்யாதிகளும் சம்சாரிகளுடைய-ரஷண சேஷம் ஆகாமல் பாதன சேஷமாக அவற்றை ரஷணத்திலே புரிப்பித்துத் தருவது கிருபை யாய்த்து –
அந்த ஈஸ்வர கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையினுடைய தன்னேற்றத்தை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் –

கண்டு கொண்டு என்னை
தம்முடைய துர்க்கதியைச் சொல்லுகிறார்
என்னைக் கண்டு
சத்துக்களாலே அசமீஷ்யனான என்னைக் கூசாதே கடாஷித்து
என்னைக் கண்டு
இவருடைய யம் பச்யேத்-என்கிற பிரதம கடாஷம் இருக்கிற படி
கொண்டு
தோஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார்
என்னைக்கண்டு -என்னைக் கொண்டு-
பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்
எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக்கொண்டார்
இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே
காரி மாறப் பிரான்-
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கின ஆழ்வார் உடைய பிரான் அன்று-அபிஜாதரான ஆழ்வார்
காரி மாறப் பிரான் –
அக்குடியிலே பிறந்து எனக்கு உபகரித்தவர்
காரி மாறப் பிரான்
தான் பிறந்து என் பிறவியை அறுத்தவர்-(ஜனக தசரத வாசு தேவ குலங்களுக்கு –மூத்த பெண் -புகழ் ஆக்கிய சீதா / நடுவில் பிள்ளை -பரதன் ஆக்கமும் ஆக்கி பரதந்த்ரன் முறை அறிவித்து / கடைக்குட்டி கண்ணன் அஞ்சிறை அறுத்தார் -போலே இல்லாமல் நமக்கு -பிரபன்ன ஜன கூடஸ்தர் புகழை ஆக்கி -பாரதந்தர்யம் அறுதி ஈட்டி -அஞ்சிறை அறுத்தார் -சம்சாரம் இங்கு அங்கு கால் விலங்கு தாய் தந்தைக்கு மட்டும் _

பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ஸ்வரூப அனுபந்தியோ என்னும் படி இவ்வாத்மாவோடே பழகிப் போந்த பாபம்
அநாதி சித்தமுமாய் அனுபவ விநாச்யமும் இல்லாத பாபம்
வல்வினை
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஈஸ்வரன் சௌஹார்த்தைப் பொகட்டு -ஷிபாமி என்னும் படியான பாபம்
வல்வினை
ஆழ்வார் ஒரு கடாஷம் நேர வேண்டும்படியான பாபம்
பாற்றி
அத்தைப் பாறப் பண்ணி -ஈஸ்வரனைப் போலே மோஷயிஷ்யாமி பண்ணி விடுகை அன்றிக்கே பாறு பாறாம் படி பண்ணினார்
எந்தத் தூற்றிலே புக்கது என்று தேடும்படி பாற்றினார்
என்னைக் கொண்டு பண்டை வல் வினை பாற்றி அருளினான்
ஈஸ்வரனைப் போலே மாமேகம் சரணம் வ்ரஜ மோஷயிஷ்யாமி என்கை அன்றிக்கே தாமே என்னை சுவீகரித்து என் பாப பந்தத்தையும் பாற்றி அருளினார்
அருளினான்
தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-விரோதி நிவ்ருத்தியையும் பண்ணி அபிமத பிரதானமும் பண்ணினார்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
அநாதி சித்தமான பாபத்தைப் போக்கி தம்முடைய குண ஸ்துதியே எனக்கு யாத்ரையாம் படி பண்ணினார் –

எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்
மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்
ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன்
என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே
தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்
தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே
அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்
இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –6-இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 27, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

நீர் க்ருதக்ருத்யரான படி எங்கனே என்னில்-
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும்-ஆழ்வார் தம்மையே ஏத்தும் படி பண்ணினார் என்கிறார் –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே-6-

 

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
இன்று தொட்டும்
பகவத் விஷயத்தில் காட்டில் தத் சம்பந்தியான ஆழ்வார் உத்தேச்யர் என்று ருசி பிறந்த இன்று தொடங்கி –
எழுமையும் –
கால விச்சேதம் இன்றிக்கே எனக்கு உபகாரகரான ஆழ்வார் –
போன காலமும் எனக்கு ருச்யபாவத்தாலே இழந்தேன் இத்தனை

நின்று
ப்ராப்யத்தில் பிரதம அவதியாகில் இ றே கமன பிரசங்கம் உள்ளது
எல்லை நிலத்தில் புக்கார் நிலை நிற்கும் அத்தனை இ றே
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இ றே
இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
பர்வதங்கள் போலே இருந்துள்ள மாடங்களை யுடைய திருக் குருகூரில் நிரபேஷரான ஆழ்வார் –
ஆழ்வார் பூர்த்தி எல்லை காண ஒண்ணாதாப் போலே மாடங்களின் உயர்த்தி எல்லை காண ஒண்ணாத படி –

என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே
தாம் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஹேது சொல்லுகிறார்
ஆழ்வார் சந்நிதி போலே காணும் இவரைப் பேசுவிக்கிறது
உங்களைப் போலே பகவத் விஷயத்தில் அன்றி நான் ஆழ்வார் கவியானபடி காண மாட்டி கோளோ-

——————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் இப்போது இங்கனே விஷயீ கரித்தார் ஆகிலும் நீர் தாம் அநாதி காலம் புறம்பே அந்ய பரராய்ப் போந்தேன் என்றீர்
இன்னமும் அப்படிப் புறம்பே போகிலோ வென்ன-அங்கனே போகலாம் படியோ ஆழ்வார் அருளிச் செயல் இருப்பது என்கிறார் –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
மேல் ஒரு நாளிலே பலிப்பதாக விட்டு வைக்கிறாரோ
விஷயீ கரித்த இன்று தொடங்கி
ஏழு ஜன்மம் என்கிறது உப லஷணம்-மேல் உள்ள காலம் எல்லாம் என்றபடி
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்திலே ஆழ்வார் சொல்லுமத்தை உபகார ச்ம்ருதியாலே –எம்பிரான்--என்று அவர் விஷயத்திலே சொல்லுகிறார் -(பிரான் அவர் பொதுவான உபகாரத்தை -இவர் எம்பிரான் தமக்கு செய்ததை )

நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று
பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே
தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் தமக்கு உபகரித்த பகவத் விஷயத்தை ஒழியப் புறம்பே போனாராகில் இ றே
இவர் தம்மை ஏத்தினார் அன்றிக்கே ஒழிவது –

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
ஆழ்வார் தம்மையும் ஏத்தி இன்னமும் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி-
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யுமது இவர் நெஞ்சில் வாசிதமாய் இருப்பது –அது தன்னையே சொல்லும் அத்தனை இ றே

என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே
யாவதாத்மபாவி புறம்பு ஒன்றில் போகாதபடி யன்றோ என்னை விஷயீ கரித்தது
என் தண்மை பாராதே என்னை விஷயீ கரித்தவர் நான் புறம்பே போவேன் என்றால் போகலாம் படி என் வசம் என்னைக் காட்டித் தருவரோ –

——————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் இரண்டு பாட்டாலே தம்முடைய தோஷ அதிசயத்தையும் -அத்தோஷமே பற்றாசாக தம்மை ஆழ்வார் அங்கீ கரித்த படியையும் –
-ஆழ்வார் அங்கீ கரித்த அநந்தரம் அத் தோஷங்களைத் தாம் வென்ற படியையும் -அவை போகையாலே-ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான ஆதரத்தையும் சொன்னார் –
இத்தைக் கேட்டவர்கள் இப்போது உம்முடைய குற்றம் கழிந்ததே யாகிலும் உமக்கு பிரகிருதி சம்பந்தத்தாலே பின்னையும் மறுவல் இடாதோ-(புகை நெருப்பு -பிரியா பாபங்கள்  / கண்ணாடி அழுக்கு -துடைக்க துடைக்க திரும்பும் /பனிக் குடம்  கர்ப்பம் -தானே உடைந்து வராதே -மூன்றும் பாபங்களை போக்க -)
-அதுக்குப் பரிஹாரமாக நீர் கண்டு வைத்தது என்ன -கீழ் உள்ள தோஷமும் நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிப் போக்கினேனோ-
ஆழ்வார் அங்கீ காரத்தால் போய்த்தாகில் அவ்வங்கீ காரம் மாறினால் அன்றோ அது மேலிடுவது
ஆழ்வார் என் தோஷம் கண்டு ஒரு காலும் இகழார்-இது காண மாட்டி கோளோ வென்று இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –
கீழ்ப் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் உண்டான தம்முடைய-1- ஜ்ஞான-2- பக்திகளைச் சொன்னார்-(சதிர்த்தேன் என்பதால் ஞான பக்தியை சொல்லி-ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே பக்தி  )
இதில் அவர் பக்கல் தமக்குப் பிறந்த3- வ்யவசாயம் சொல்லுகிறார்-( உறுதி முக்கியம் -நின்று -என்பதால் உறுதி -)
தாம் அங்கீ கரித்த இன்று முதல் யாவதாத்மா பாவியாகத் தம்முடைய குண கீர்த்தனம் பண்ணிப் போரும்படி என் பக்கலிலே
கிருபையைப் பண்ணின ஆழ்வார் குற்றம் கண்டு கைவிடப் புகுகிறாரோ என்று இகழாமைக்கு அடி சொல்லுகிறார் இப்பாட்டின் முற்கூற்றாலே-

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-
என் தோஷமே பச்சையாகக் கைக்கொண்ட இன்று தொட்டும்
மேல் உள்ள காலங்களிலும்
இப்போதை அங்கீகாரம் யாதொருபடி இருக்கிறது -இதன் கீழ் யாய்த்து மேல் உள்ள காலம் அடைய அவர் என்னை விடாத படி என்று தாத்பர்யம்-(தோஷமே பச்சையாக கொண்ட இன்று தொட்டும் மேலும் தோஷமே பச்சையாக கொள்ளுவார் அன்றோ )
இவருடைய நியமம் இருக்கிற படி ஒரு தேச விசேஷத்திலே போனாலும் ஆழ்வார் கீழே ஒதுங்குமவர் யாய்த்து இவர் -(பல்லவம் –புஷ்பித்தம் -பலிதம் மூன்று நிலைகள்)
மாதுல குலத்துக்குப் போன ஸ்ரீ பரதாழ்வானைப் பின் சென்ற ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே இவரும் நித்ய சத்ருக்னர் இ றே
திருக் குருகூர் நம்பிக்கு அன்பன் ஆகையாலே ப்ரீதி புரச்க்ருதத்வம் உண்டாய்த்து

எம்பிரான்
எனக்கு ஸ்வாமி யானவர் -ஸ்வாமி யானவன் ஸ்வ த்தைக் குற்றம் கண்டு இகழுமோ
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்
இன்று தொட்டும் எழுமையும் எனக்கு எம்பிரான் என்று கீழோடு கூட்டலாம்
ஒருகால் பகவத் ஸ்வம்மாய் ஒருகால் ஆழ்வார்க்கு ஸ்வம்மாய் இராதே சர்வ காலமும் ஆழ்வாருக்கு ஸ்வம் என்று தம்மை நினைத்து இருக்கிறார் யாய்த்து
எம்பிரான் –
எனக்கு உபகாரகர் ஆனார் –
என்னுடைய குன்றனைய குற்றத்தையே குணமாகக் கொண்டு நான் அதபதியாமல் நோக்கினவர்
என்னுடைய அஹங்கார அர்த்த காமங்களில் நசை அறுத்து ஆத்ம ஜ்ஞானாதிகளை உபகரித்த அளவன்றிக்கே
பகவத் விஷயத்தில் காட்டிக் கொடாதே தாமே கைக்கொண்ட மஹா உபகாரகர்

மேல் அந்த உபகாரம் தன்னை உபபாதிக்கிறார்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
தம்முடைய சத்குண சம்ஸ்துதியைப் பண்ணும் படி அருளைப் பண்ணினார்
தன் புகழ் ஏத்த அருளினான்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி -முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே
என்று இறுதியாக தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-
ஏத்த
நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி -மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்-(வாசிக கைங்கர்யம் முடித்து காயிக கைங்கர்யம் உத்தியோகித்தார் இவர் – முயல்கிறேன் மொய் கழற்கு அன்பை என்பதால் )
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் பகவத் குணங்களையே புகழும் படித் திருத்தினாரே யாகிலும் இவர் தம்முடைய ப்ரீதியாலே தன் புகழ் ஏத்த அருளினார் என்கிறார் (ஆழ்வார் தம்மைப் பாட சொல்லிக் கொடுக்க மாட்டாரே -ஸஹபூஜ்யா மத் பக்தன் -நின்னொடு ஓக்க வழி பட அருளினாய் -என்பதால் -சாம்யம் -ப்ரீதி அதிசயத்தால் ஆழ்வாரை பாடுகிறார் -)
தன் புகழ் ஏத்த
பகவத் குணங்கள் போலே குற்றம் காண்கையும்-கண்டத்துக்கு தக்க தண்டம் பண்ணுகையுமாயோ ஆழ்வார் குணங்கள் இருப்பது
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் என்கிறபடியே வாத்சல்ய உத்தரமாய் அன்றோ இருப்பது-ஆழ்வாருடைய நிகரில் புகழ் இது இ றே-
தன் புகழ் ஏத்த அருளினான்
இவருடைய புருஷார்த்த சாதனங்கள் இருக்கிறபடி -( கண்ணே உன்னை காண கருதி -சாதனம் சாத்யம் -காண்கையே புருஷார்த்தம் -போலே இங்கும் )
இவ்வாசிக கைங்கர்யத்துக்கு சாதனம் ஆழ்வார் கிருபை என்று அறுதி இடுகிறார்
நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ வென்று எனக்கு அருளி -என்று கடகர் அங்கீ காரத்துக்கும் கருணையே வேணும் என்று-ஆழ்வார் பாடே அறிந்து வைப்பரே
ஏத்தும் இடத்தில் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே  புருஷார்த்தம்
அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இ றே அத்யவசாய ப்ரதரும் – (தன் புகழ் ஏத்த அருளினான் -புருஷார்த்தம் -சாதன-நின்று அருளி -உறுதிப்பாடு )
நின்று தன் புகழ் ஏத்த
அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே -முனே வஷ்யாம்யஹம் புத்வா -என்கிறபடியே –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி-
பர்வத சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாப் போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான திரு நகரியிலே வர்த்திக்கிற பூரணரான ஆழ்வார்
கீழில் பாட்டில் செம்பொன் மாடம் என்று மாடங்களின் உடைய அலங்காரத்தைச் சொன்னார்
இதில் மாடங்கள் வெறும் புறத்திலே ஆகர்ஷகமாய் சர்வதாதுசமலங்க்ருதமாய் சம்சார பீதருக்கு அண்டை கொள்ளலாம் படி இருக்கும் என்கிறார்
நம்பி
யாவதாத்மா பாவி தம்முடைய புகழை ஏத்தா நின்றாலும் வரையிடாத குண பூர்த்தியை யுடையவர் –

என்றும் என்னை இகழ்விலன் –
எனக்கு தோஷம் மேலிட்ட போதோடு குணம் மேலிட்ட போதோடு வாசியற -என்னை அநாதரிக்கிறிலர்-(நம்மாழ்வாரால் அங்கீகாரம் பண்ணப் பட்ட குணம் உண்டே இப்பொழுது )
நம்பி என்னை என்றும் இகழ்விலன்
அவர் என்னை அநாதரிப்பார் ஆகில் அவருடைய பூர்த்தி நிறம் பெறும் படி என்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்
அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாது

காண்மினே
இவ்வர்த்தம் உங்களுக்கு ஏறக் காண மாட்டி கோளோ
காண்மினே
பகவத் குணங்களை யாராய்கிற நீங்கள் அத்தை விட்டு ஆழ்வார் குணங்களை நெஞ்சாலே காண மாட்டி கோளோ
காண்மினே
ப்ராப்த முத்தம குணாந பரித்ய ஜந்தி -என்றும் -பாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –5-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் – ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 27, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

சத்துக்களும் கை விடும்படி உம்முடைய பக்கல் குற்றம் ஏது என்னில்
அநாதி காலம் பரதார பரிக்ரகாம் பரத்ரா வ்யபஹாரம் பண்ணிப் போந்து இளிம்பனானேன்-
இன்று ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே சதுரனானேன் என்கிறார்
இதுக்கு முன்பு யுண்டான அநாத்ம குணங்களை அனுசந்தித்து ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே க்ருதக்ருத்யன் ஆனேன் என்கிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பிறர் நன் பொருள் என்றது -ஐக்ய ஸ்ருதிகளும் சொல்லச் செய்தே பேதம் ஜீவிக்கைக்காக -(பிறர் நன் பொருள் -தத்வ த்ரயமும் -போக்தா போக்யம் ப்ரேரிதா -நஞ்சீயர் வேதாந்தி அன்றோ -ஸ்ரீ பாஷ்யகாரர் இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் -ஐக்கிய சுருதிகள் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -போல்வன உண்டே ) பொருள்- என்கிறது விரோதி வ்யாவ்ருத்தமான ஸ்வரூபம்

நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
ஆத்மாபஹாரத்தாலே பலித்த பலம் சொல்லுகிறார்
மஹா விசுவாச பூர்வகம் –என்று இருக்கும் இருப்பு எல்லாம் ஸ்திரீகள் பக்கலிலேயாய்- ஆகிறது
விரைகுழல் மடவார் கலவியை விடு -என்றும் சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது -என்றும் அபியுக்தரான என்னாச்சார்யர்கள்-(பிராப்த விஷய கொள்ளுவதை விட -இதர விஷயம் முந்துற விட வேண்டுமே  -என்பார்களே -)
சொன்ன விஷயத்தைக் கிடீர் நான் அநாதி காலம் விஸ்வசித்துப் போந்தது –
மடவார் என்கிற பஹூ வசனத்தாலே ஒன்றில் பர்யாப்தம் ஆகாமையாலே கண்டவிடம் எங்கும் நுழையும் படி சொல்லுகிறது

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று
ஆழ்வார் திருவவதரிக்கையாலே அங்குள்ளது அடங்க இவருக்கு ஸ்லாக்கியமாய் இருக்கிறபடி
இவ்வூரில் ஐஸ் வர்யத்துக்கு அடியான பூர்த்தியை யுடைய ஆழ்வார் நிர்ஹேதுக கடாஷத்தாலே தம் பக்கலிலே பக்தியை யுண்டாக்கின படியை-
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்-என்கிறபடியே வந்த வழி அறிந்திலேன் -இங்கனே பலிக்கக் கண்ட அத்தனை
அபூர்ணமான பகவத் விஷயத்திலே அடியனாம் ஆகாதே பூரணரான ஆழ்வாருக்கு அடியேனே சதுரனானேன் என்கிறார்
ஸ்திரீகளை விஸ்வசித்து இளிம்பனான நான் ஆழ்வாரைப் பற்றி இன்று சதுரனானேன் என்றுமாம் –

————————————————————-

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

உம்மைப் புன்மையாகவும் உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரராகவும் சொன்னீர் -உம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் அவர் உமக்கு உபகரித்த எல்லையையும் சொல்லிக் காணீர் என்னச் சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
இது என்னுடைய புன்மை இருந்தபடி-
பிறர் பொருளை நம்பினேன் -இப்போது பொருள் என்கிறது அர்த்தத்தை -அதாவது ஆத்மவஸ்து -எங்கனே என்னில்
த்ரவ்யம் குணஸ்ததா கர்ம ஜாதிச் சேதஸ்கதாச்ரய-என்று பதார்த்தம் சொல்லுகிற இடத்தே த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தது இ றே
அத்தை இ றே இவர் முன்பு அபஹரித்தது என்கிறது-
கள்வன் ஆனேன் -என்றும் -வன் கள்வன் -என்றும் சொல்லுகிறபடிகளை இவரும் சொல்லுகிறார் –
பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது
-ஆழ்வார் அளவும் வந்த வன்று இ றே இது அனந்யார்ஹம் ஆய்த்தாவது
பிறர் -என்று
ஒரு விஷயத்தை விவஷிக்கிறது -த்ரவ்யத்தினுடைய ச்லாக்யதைக்கும் உடையவனுடைய ச்லாக்யதைக்கும் தக்க படி கனத்து இ றே பிராயச்சித்தம் இருப்பது
பிராமணனுடைய த்ரவ்யத்தை அபஹரித்தால் போல் அன்று இ றே சண்டாளனுடைய த்ரவ்யத்தை அபஹரித்தால் பிராயச்சித்தம் இருப்பது –
ஆத்மவஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய் இத்தை உடையவன் சர்வேஸ்வரனாய் இ றே இருப்பது –

நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
ரத்ன அபஹாரம் பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவு காண அஞ்சுமோ
ஈஸ்வரன் என்னது என்று அபிமானித்த வஸ்துவை அபஹரித்தவன் தேஹ பரிக்ரஹம் பண்ணினார் என்னது என்று
அபிமானித்த வஸ்துவை அபஹரிக்கச் சொல்ல வேணுமோ
முன் எலாம்
இப்படி ஆத்ம அபிமானம் பண்ணியும் விஷய ப்ரவணனாயும் போந்த காலம் சாவதியாகப் பெற்றதாகிலும் லாபம் உண்டு இ றே
ஈச்வரனோபாதி ஆத்மவஸ்துவும் நித்யம் -காலமும் அநாதி யாகையாலே முன்புள்ள காலம் எல்லாம் என்றபடி –

உம்முடைய தண்மை குறைவற்று இருந்தது -ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்தது ஏது என்னச் சொல்லுகிறார்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று
இப்படி அநாதி காலம் ஆத்ம அபஹாரம் பண்ணியதும் விஷய பிரவணனானதுவும் இழவுக்கு உடலாகி அன்றிக்கே
சரண்ய ப்ரபாவத்தாலே பேற்றுக்கு உடலாக கிருஷி பண்ணினாரைப் போலே பலித்துக் கொண்டு நிற்கக் கண்டேன்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு-
ஆத்ம அபஹாரம் பண்ணியும் அந்ய பரனாய் போந்தான் என்றும் என்னுடைய பூர்வ வருத்தத்தை ஆராய அத்தனைய பூர்ணரோ ஆழ்வார்
இன்று அன்பனாய்
என்னது என்று இருக்காய் தவிர்ந்து அவனுக்கு என்று இசைந்து இதர விஷயத்திலே ச்நேஹத்தை விட்டு
பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே அதில் எல்லையான ததீய சேஷத்வத்தின் அளவிலே நின்றார் ஆழ்வார்
இந்த பிரதிபக்தி க்ரமம் வேண்டாதே எனக்கு முதல் அடியிலே இது எல்லாம் உண்டாய்த்து என்கிறார்
அடியேன் சதிர்த்தேன்
முன்பு தேஹாத்மா அபிமானம் பண்ணிப் போந்த நாள் இ றே நான் எனபது
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்த பின்பு அடியேன் என்று ஆய்த்து இவருடைய அஹம் அர்த்த பிரதிபத்தி இருப்பது
சதிர்த்தேன்
ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கையும் இதர விஷய பிரவணன் ஆகைக்கும் மேற்பட சதிர்க்கேடு இல்லை இ றே
அவற்றை விட்டு பகவச் சேஷத் தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வருமவனாம் படியான சதிரை யுடையவன் ஆனேன்
ஆசார்யர்களை நம்பி என்கைக்கும் அவர்கள் அழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ஸ்ரீ மதுர கவிகள் வாசனை யாய்த்து –

————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் என்று சொல்லக் கேட்டவர்கள்
அந்தப் புன்மை யாகிறது ஏது என்றும் அவற்றிலே ஒன்றை இரண்டைச் சொல்லீர் என்றும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியேன் என்றீர் -நீர் தாம் ஆழ்வாருக்கு அடிமையான பிரகாரம் என்
முன்பு என்ன நிலையிலே நின்று பின்பு ஆழ்வாரைக் கிட்டினீர்
நீர் ஆழ்வாரைக் கிட்டுகைக்கு ருசி ஜனகர் ஆர் என்றும் கேட்க
அநாதி காலம் அஹங்கார அர்த்த காம பரவசனாய் அதில் பிரதான புருஷார்த்தமான காமம் அர்த்த சாத்யம் ஆகையாலும்
அவ்விஷய சங்கம் ஓன்று இரண்டு என்ற அளவில் நில்லாமையாலே அவ்விஷயங்கள் பலவற்றையும் போய் அனுபவிக்கைக்கும்
-அதுக்கு அர்த்தார்ஜநார்த்தமாகவும் தேசாந்தர பர்யடனம் பண்ணா நிற்க திரு நகரியில் மாடங்கள் மேரு சிகரத்தைக் கொடு வந்து
வைத்தாப் போலே மின்னித் தோற்றிற்றுஇது ஒரு தேச விசேஷம் இருந்தபடி என்
இத்தேசத்தின் விசேஷங்களை ஆராய்ந்து விலஷண விஷயங்கள் உண்டாகில் அனுபவிக்கிறோம் என்று ஊரிலே புக்கேன்
அதுவே பற்றாசாக அத்தேச நிர்வாஹகரான ஆழ்வார் திருவடிகளிலே ஆதாரம் ஜனித்து அவர்க்கே ஆளாய் விஷயாதிகளை வென்றேன்
இது இ றே நான் நின்ற நிலை என்று அவர்களுக்கு உத்தரம் சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
கீழ் தாம் அருளிச் செய்த புன்மை எண்ணித் தலைக் கட்டப் போகாமையாலே அதில் பிரதானமாய் அவை எல்லாவற்றையும்
தனக்கு உள்ளே உடைத்தாய் இருப்பதொன்று இரண்டை உபாதானம் பண்ணுகிறார்

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
அதில் பிரதான தோஷமாய் அறுவன ஆத்ம அபஹாரமும் அந்ய விஷய சங்கமும் இ றே
ஆத்ம அபஹாரம் ஆவது பகவத் ஏக சேஷமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்திர புத்தி பண்ணி ஆதரித்துப் போருகை
பொருள் -வஸ்து
சத்யஞ்ச என்றும் உள்ளது என்றும் சொல்லும்ன்படி உண்டாயே போருமது
அஹம் அர்த்தமாய் என்றும் பிரகாசித்தே போரும் வஸ்து-(தத்வ த்ரயமும் நித்யம் -அசேதனம் ஒரே மாதிரி இருக்காது என்ற மட்டுமே  )
நாபாவோ வித்யதே சத-என்கிறபடியே-(அசத்துக்கு  பாவம் இல்லை -சத்துக்கு அபாவம் இல்லை -என்பர் தத்வ தர்சிகள் )
நன் பொருள்
விலஷண த்ரவ்யம்
என் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்
நன்மையாவது -பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் –மேவிய பொருள் -என்றும் சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும்
அது போலே அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே
நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –

பிறர் நன் பொருள்
இங்குப் பிறர் என்பது சர்வேஸ்வரனை
பிறர் என்பது அந்யரை இ றே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத் மேத்யுதாஹ்ருத -என்றும் -வித்யாவித்யே ஈசாதே யஸ்து சோன்ய- என்றும் சொல்லுகிறபடியே
சேதன அசேதன விசஜாதீயனான சர்வேஸ்வரன் ஆய்த்து அந்யன் ஆகிறான்
உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும்
பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்
அந்யன் ஆகிறான்
கூடி இருக்கச் செய்தேயும் கார்யங்க ளிலே கூட்டுப் படாதவன் இ றே
அதில் சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில்
ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இ றே அவன்
இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இ றே

அவன் என்னது என்று போரும் பதார்த்தமாய்த்து இவ்வாத்மவஸ்து –
நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று
ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வ த்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் –
போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
பிறர் நன் பொருள்
உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்
இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்
அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்

நன் பொருள் தன்னையும்
இவ்வஸ்துவைக் கிடீர் நான் ஆசைப்பட்டுப் போந்தது -அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ
அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌச்துபத்தை அன்றோ நான் களவு கண்டது
ஆத்மான மஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம் -பிபர்த்தி கௌச்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்கிறபடியே
அறவனை யாழிப் படையானை -என்று சொல்லும் படியான ப்ரஹ்ம ஸ்வத்தை யன்றோ நான் அபஹரித்தது
பரம தார்மிகனாய் பவித்ரா பாணியாய் இருப்பான் ஒரு சிஷ்டனுடைய த்ரவ்யத்தை யன்றோ நான் அபஹரித்தது
அகார்த்தாயைவ ஸ்வம் -என்று அபியுக்த பிரயோகம் உண்டாகையாலே -அ இதி ப்ரஹ்ம -என்று
அகார வாச்யன் பிரமம் ஆகையாலே ப்ரஹ்ம ஸ்வம் இ றே இது –

பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
ஸ்வம்மும் -விலஷணமாய் -ஸ்வாமி யும் விலஷணமுமாய் இருக்க வன்றோ நான் இவ்வாத்மவஸ்துவை அபஹரித்தது
இவ்வாதம அபஹாரம் ஸ்வ தந்த்ரனுக்கும் தேஹாத்மா அபிமாநிக்கும் உண்டாமதாகையாலே இத்தால் தேஹாத்மா அபிமானம் சொல்லிற்று
அப்போது நம்பினான் பிறர் நன் பொருள் தன்னையும் என்று தேஹ ரஷண சேஷமாக-பர த்ரவ்யேஷ் வபித்யானம் -என்கிறபடியே
அந்ய த்ரவ்யங்களையும் ஆசைப்பட்டுப் போந்தேன் என்றுமாம்
அங்கு நன் பொருள் என்றது அவர்கள் நினைவாலே சொல்லுகிறது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
அவ்விடம் தன்னிலும் மேல் எழுந் த்ரவ்யங்களை யாசைப்பட்ட வளவன்றிக்கே அவர்கள் சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும்
மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது

நம்பினேன் மடவாரையும்
தேஹமே ஆத்மா வென்று இருக்கையாலே ஆத்மஜ்ஞானம் பிறந்தால் பரமாத்மாவே புருஷார்த்தம் ஆமா போலே
உடம்புக்கு உடம்பே போக்யம் ஆகையாலே பர ஸ்திரீ சரீரங்களே போக்யங்கள் என்று ஆசைப்பட்டுப் போந்தேன்
மடவாரையும்
ஆத்மகுண பூர்ணைகளாய் பாதிவ்ரத்ய தர்ம நிரதைகளான சாத்விகளை யாய்த்து நான் ஆசைப்பட்டது
நம்பினேன் மடவாரையும்
அன்றிக்கே சாமான்யத்தில் ஸ்திரீகளையும் ஆசைப்பட்டுப் போந்தேன்
மடவார் –
அவர்கள் புருஷ வசீகாரம் பண்ணுவது தந்தாமுடை மடப்பத்தைக் காட்டி யாய்த்து
சதிரிள மடவார் என்று ஆழ்வார் பாடே கேட்டு வைக்கையாலே மடவார் என்கிறார்
மடவார்-
அதிலும் ஓன்று இரண்டை யாசைப்படுகை யன்றிக்கே பல விஷயங்களையும் ஆசைப்பட்டேன்
ஒன்றிலே துவக்கலாவது அதில் போக்யதை உண்டாகில் இ றே -அது இல்லாமையாலே பல விஷயங்களையும் ஆசைப்பட்டுப் போந்தார் யாய்த்து
அதுவும் அன்றிக்கே பூய ஏவாபி வர்த்ததே -என்று இக்காமம் தான் அபிவ்ருத்தம் ஆகையாலே தத் அனுரூபமான விஷய பஹூத்வமும் அபேஷிதம் இ றே
ஆகையாலே
அஸ்வதந்த்ரமான ஆத்மாவை ஸ்வதந்தரமாக நினைத்து இருந்தேன்
அநாத்மாவான தேஹத்திலே ஆத்மபுத்தி பண்ணினேன்
அபுருஷார்த்தங்களான அர்த்த காமங்களிலே புருஷார்த்த புத்தி பண்ணினேன் -என்றார் யாய்த்து
இவ்வபிப்ர யோகங்களாலே இவை ஒவ் ஒன்றே போரும் அநர்த்த ஜநகமாகைக்கு-ஆயிருக்க இவை எல்லாவற்றையும் அனுஷ்டித்துப் போந்தேன்
இவ்வனுஷ்டானம் உமக்கு எப்போது உண்டாய்த்து என்ன
முன் எலாம்
முற்காலம் அடைய
அநாதிர் பகவான் கால -என்று காலம் நித்யம் ஆகையாலும் அனுஷ்டாதாவான சேதனன் நித்யன் ஆகையாலும் தத் உபகரண
பூத கரண களேபரங்களும் பிரவாஹதயா நித்யங்கள் ஆகையாலும்
இவ்வநர்த்த புத்திக்கு அடியான அவித்யா கர்ம வாசனைகள் நித்யங்கள் ஆகையாலும் இதுவே எனக்கு யாத்ரையாய்ப் போந்தது
அக்ருத்யங்கள் ஓன்று இரண்டாகிலும் ஆஸ்வசிக்கலாம்-காலம் பரிமிதம் ஆகிலும் கண்டு தரிக்கலாம் –
அநாதி காலம் அபரிமிதமான அனர்த்தங்களை அனவரதம் அனுஷ்டித்துப் போந்தேன் என்று தாத்பர்யம் –

கீழ் தம்முடைய புன்மை சொன்னார் -மேல் தாம் ஆழ்வாராலே அங்கீ க்ருதரான பிரகாரம் சொல்கிறார்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று-
நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே
மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று
இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்
இம்மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் –
அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தச்கர சஞ்சரணம் இல்லாமையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே
அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு
நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்

செம் பொன் மாடம்
ஆழ்வாருக்கு -களை கண் மற்றிலேன் -என்றும் -ஆராவன்பின் அடியேன் -என்றும் சொல்லுகிற பகவத் விஷயத்தில் அத்யுன்னதமான
அத்யவசாய அனுராகங்கள் போலே யாய்த்து மாடங்களின் ஒக்கமும் திண்மையும் பொற்கு எனவும் -ஔஜ்ஜ்வல்யமாய் இருக்கிற படி

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
ஆழ்வாருடைய மயர்வற மதி போலே யாய்த்து இத்தேசத்திலும்
இருள் அற்று ஒளியேயாய் இருக்கும் படி
அத்தேசிகரும் ஆழ்வாரோட்டை ஆசக்தியாலே பொலிந்து நிற்குமவர்கள் ஆய்த்து
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
மாற்று மினுங்கின பொன்னாலே சமைந்த மாடமாய் -அதுதான்
அத்யர்க்கா நலதீப்தம் தத்ச்தானம் விஷ்ணோர் மஹாத்மன-என்ற பரமபத தேஜஸ்ஸூ போலே பார்க்கவும் அணுகவும் ஒண்ணாத படி இருக்கை
அன்றிக்கே கண் படைத்தார்க்கு எல்லாம் காணலுமாய் கிட்டவுமாம் படி ஸ்ப்ருகணீயமான தேசம்
செம் பொன் மாடம்
துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு
உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து –
ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –

நம்பிக்கு அன்பனாய் –
அர்த்த காமாதிகளை நம்பிப் போந்த நான் ஆழ்வாருக்கு அன்பனாய் விட்டேன்
அர்த்த காமங்களின் போக்யதையும் ஆழ்வார் பாடே காங்கையாலே அவர்க்கே அன்பனாய் விட்டேன்
கீழ பாட்டிலே அன்னையாய் அத்தனையாய் எண்கையாலே மாதா பிதா என்னும் இடம் சொன்னார்
இதில் யுவதய விபூதி என்னும் இடம் சொல்லுகிறார் -(நன் பொருள் மடவார் என்பதால் )

அடியேன்
ஸ்வ தந்த்ரனாய்ப் போந்த நான் நம்பிக்கு சேஷம் ஆனானேன்
ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிராமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது
நம்பிக்கு அன்பனாய் அடியேன்
ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்
இனி வாசி அங்கு ததீய சஹமான தத் விஷயமாய் இருக்கும்
இங்கு ஆழ்வாருக்கேயாய் இருக்கும் –
சதிர்த்தேன் –
சதிரன் ஆனேன் -மோஷயிஷ்யாமி என்றவன் முழங்கைத் தண்ணீர் பார்த்து இராதே ஆழ்வாருடைய ப்ரபாவத்தையிட்டு வென்றேன் –
நம்பிக்கு ஆள் உரியனாய் சதிர்த்தேன்
மாற்பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு என்கிறபடியே ஆழ்வாருக்கு அன்பனாய் அந்ய விஷயங்களை வென்றேன்
நம்பிக்கு அன்பனாய் அடியேனே
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் ஆழ்வாராய்த்து –
அவர் தாமே யானே நீ என்னுடைமையும் நீயே என்று தத் விஷயத்திலே சமர்ப்பித்தால் போலே
மடவாரையும் நம்பினேன் சதிர்த்தேன்
அவர்கள் சதிர் இள மடவார் ஆகையாலே இளிம்பு பட்ட நான் ஆழ்வாரை யண்டை கொண்டு சதிரனாய் விட்டேன் -(பத த்ரயம் அந்வயம் ஆனேன் -என்கிறார் –அடியேன் -சேஷத்வ ஞானம் பிரணவம் -அன்பனாய் -நாராயணாய / நம்பி மத்யம பத அர்த்தம் -எனக்கு நான் அல்லேன் -ரக்ஷணம் பூர்ணர் அறிந்து அநந்ய உபாயத்வம் )

இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து பின்னையும் வாஸனா ருசிகள் ஆகிற
மண் பற்று விடாமல் விரஜை அளவும் போக வேண்டும்படி இருக்கை யன்றிக்கே இன்றே சவாசனமாக விட்டேன்
இன்றே
அன்று அப்படி யானேன்
இன்று இப்படி யானேன்
நடுவில் இதுக்கு என் கையில் கிடப்பதொரு ஹேதுவைக் கண்டிலேன்
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிக்கே இருக்க வாழ்வு இனிதாம் படி விழுந்தது என்று விஸ்மிதர் ஆகிறார்
இன்றே
அன்று ஈஸ்வரனும் கூட நிற்கச் செய்தே சம்சரித்துப் போந்தேன்-
இன்று ஆழ்வார் சந்நிதி மகாம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –4- நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 26, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்

உமக்கு இந்த நன்மைக்கு அடி என் என்னில் -சத்துக்களாலும் கர்ஹிதனான வென்னை பித்ராதிகள் செய்வதும் செய்து உபகரித்தான் என்கிறார்
இப்படி ஆழ்வார் உம்மை விஷயீ கரிக்கைக்கு நீர் இட்ட பச்சை என் என்னில் -சத்துக்களும் கைவிடும்படி தண்ணியன் ஆனேன் என்கிறார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4-

 

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
பரத்துக்க அசஹிஷ்ணுக்களாய் -பர சம்ருத்த ஏக ப்ரயோஜனராய்
பூர்வ பாஷி பிரசன்னாத்மா -என்றும் விமலமதி என்றும் இத்யாதிகளில் சொல்லுகிற படிகளையும் உடைய கூரத் ஆழ்வான் ஆண்டாள் பிராட்டியும் போல்வார்
வேதங்கள் கோஷித்ததையும் கைப்படுத்திக் கொண்டு இருக்குமவர்கள்
அந்தணர் மாடு -என்கிறபடியே வேதைக தனராய் இ றே இருப்பது
த்ரவந்தி தைத்யா- என்கிறபடியே வேதங்களும் ஏவிற்றுச் செய்யும் படி போலே காணும் இவர்கள் வேண்டப்பாடு –

புன்மையாகக் கருதுவர் ஆதாலில்-
புன்மையும் புன்மைக்கு ஆஸ்ரயம் ஆகையும் அன்றியே புன்மையே தானாகவே கருதுவார்கள்
ஆதலில் -அதுவே ஹேதுவாக –

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்-தன்மையான்
நம்மை ஒழியப் புறம்பு இவனுக்கு எங்கும் புகலில்லை என்று சர்வ வித பந்துவுமானார்
ப்ரியத்துக்குக் கடவ மாதாவும் -ஹிதத்துக்குக் கடவ பிதாவும் ஹிதைஷியான ஆச்சார்யனும் ஆகையை ஸ்வ பாவகமாக யுடைய ஆழ்வார்
மாத்ருதேவோ பவ -இத்யாதிகளில் படியை யுடைய ஆழ்வார் –

சடகோபன் என் நம்பியே-
தன் குற்றத்தைப் போக்கும் அளவன்றியே என் குற்றத்தைப் போக்கும் படி நிரபேஷர் –

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

நான் என்றது தான் முன்பு உம்மை எவ்வளவாக நினைத்து என்ன இது இ றே முன்பு என்னுடைய ஸ்திதி என்கிறார் –

நன்மையால் மிக்க –
ஆத்ம குண உபேதராய்-அறிவுடையாரில் ஆழ்வாரை ஒழிந்தார் அடையக் கை விடும் படி யன்றோ என்னுடைய ஸ்திதி இருக்கும் படி
நன்மை என்கிறது குண தோஷ ஆஸ்ரயமாய் இருந்தால் தோஷ அம்சத்தைக் கை விட்டு குண அம்சத்தைக் கைக் கொள்ளுகை-
அதில் மிகுகை யாவது குணம் என்று பேரிடலாவது ஒன்றும் இன்றிக்கே தோஷமேயாய் இருந்தால் அது தான் பற்றாசாகக் கைக் கொள்ளுகை –

நான்மறையாளர்கள்
அதுக்கு அடியாக ஹித அனுசந்தானம் பண்ணிப் போந்த வேதங்களிலே வாசனை பண்ணி இருக்குமவர்கள்
நாலு வகைப்பட்ட வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லவர்கள்
அவர்கள் ஆகிறார் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளாராதல் -கூரத் ஆழ்வான் ஆதல்

புன்மையாகக் கருதுவர்
புன்மை என்று ஒரு குணமாய் அதுக்கு ஆச்ரயமான தர்மியுமாய் இருக்கையும் அன்றிக்கே புன்மை தான் ஒரு வடிவு கொண்டது என்று இருப்பர்கள்

ஆதாலில்
அதுவே ஹேதுவாக

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்
நாம் அல்லது இவ்வளவில் ரஷகர் இல்லை என்று எனக்கு சர்வ விதமான பந்துவானவர்
ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று
புறம்பு எங்கும் புகழ் காணாதே மீண்டு வந்த காகத்தோ பாதி புறம்பு இவனுக்குப் பற்றாசில்லை என்று சர்வவித ரஷகரானவர்
பிரியமே செய்யக் கடவ தாய் செய்வதும் -ஹிதமே செய்யக் கடவ பிதா செய்வதும் –
ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளும் நாயகன் செய்வதும் செய்யுமவர்
தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த வத்தா -என்று பகவத் விஷயத்தில் அவர் சொல்லுமத்தை ஆழ்வார் விஷயத்திலே இவர் சொல்லுகிறார் –

தன்மையான்
அக்னிக்கு ஔ ஷண்யம் போலேயும்
ஜலத்துக்கு சைத்யம் போலேயும்
இஸ் ஸ்வ பாவத்தை நிரூபகமாக யுடையவர்

சடகோபன் என் நம்பியே-
தாய் செய்வது தமப்பன் செய்ய மாட்டான் -தமப்பன் செய்வது தாய் செய்ய மாட்டான் -புறம்பு உள்ளார் செய்வது இருவரும் செய்ய மாட்டார்கள்
எல்லார் செய்யுமதும் செய்ய வல்ல பூர்த்தியை யுடையவர்
ஆராய்ந்தால் அடி இன்றிக்கே போத்கனாய் இருக்கிற அபூர்ண விஷயங்களை ஆழ்வாருக்கு திருஷ்டாந்தமாகச் சொன்னவிடம் தப்பச் செய்தேன்
இனிச் சொல்லலாவது ஓன்று உண்டு -என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்தாறு நிறம்பும் படியான பூர்த்தியை உடையவர் என்னும் அத்தனை –

————————————————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம்-

தேவு மற்று அறியேன் -பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மை -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள்
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்
பிதாஹா மாஸய ஜகதோ மாதா -என்றும் -உலக்குக்கோர் முந்தைத் தாய் தந்தையே என்கிறபடியே
ரிஷிகளும் ஆழ்வார்களும் அவன் தானும் ஏக கண்டமாக சர்வ லோகங்களுக்கும் மாதா பிதாவாக சர்வேஸ்வரனை சொல்லா நிற்க
நீரும் அந்த லோகத்திலே ஒருவராய் இருக்க இப்படி பந்துவானவனை ஆஸ்ரயித்தல்-அதுவும் அன்றிக்கே
வாஸூ தேவஸ் சர்வமிதி ச மகாத்மா -என்றும் -பெரு மக்கள் -என்றும் -சிறு மா மனிசர் -என்றும் –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனும் ஆழ்வார் தாமும் கொண்டாடும் படியான விலஷண வர்க்கத்திலே
சிலரை ஆஸ்ரயித்தல் செய்யாதே ஆழ்வாரையே நீர் ஆஸ்ரயிக்கைக்கு ஆழ்வார் உமக்குச் செய்த உபகாரம் எது என்ன –
என் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்
என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ
எனக்குப் பூரணரான உபகாரகர் என்று இப்பாட்டிலே அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்-ஆழ்வாருடைய பூர்த்தியை உபபாதித்த படி –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-
ததீயரை நலத்தால் மிக்கார் என்று ஆழ்வார் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாலே தாமும் -நன்மையால் மிக்க என்கிறார்
தீமை போன அளவாதல் -நன்மை யுண்டான அளவாதல் அன்றிக்கே நன்மையால் அதிசயித்தவர்கள் –
இதுக்கு அவ்வருகான நன்மை இல்லாதபடியான நன்மையிலே நிலை நின்றவர்கள் –
ஒருவனுக்கு ஸூ துராசார என்கிறபடியே நன்மை கலசாத பொல்லாங்கு ஆவது -மநஸா நிஷ்ட சிந்தனம் -என்றும் -கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து என்றும் –
சினத்தினால் செற்றம் நோக்கி வாளா தீ விளி விளிவன் -என்றும் சொல்லுகிறபடியே நிர் நிபந்தனமாக பகவத் விபூதி பூதரோடே சிறு பாறு என்று போருகை
நன்மை யாவது -அவர்கள் பக்கல் அபகார விபரீதனாய் இருக்கையும் தன் பக்கலிலே நிர் நிபந்தனமாக அபகார பரர் அளவில் உபேஷித்து இருக்கையும்
நன்மையால் மிகுகை யாவது -அபகாரிஷ்வபி சதா சாதுஸ் சாத்வேவ வர்த்ததே -என்கிறபடியே அந்த அபகாரபரர் அளவிலும் உபகாரகனாய்ப் போருகை –
அதாகிறது அவர்கள் அளவில் குறை காணாது ஒழிகை இ றே
இப்படி இருக்கிறவர்கள் ஆகிறார் –பிராட்டி கூரத் தாழ்வான் போவார்கள் இ றே
ஏகாஷி ஏக கரணி தொடக்கமான ராஷசி வர்க்கம் ஓவாமல் இருந்து தர்சன பர்த்சநாதிகளைப் பண்ணி இருக்கச் செய்தேயும்
இவர்களை நலிய வேணும் என்ற திருவடியோடே மறுதலைத்து
கார்யம் கருணா மார்யேண-என்றால் போலே ஐந்தர வியாகரண பண்டிதனான நீ பின்னையும் உன் ஜன்மம் விடாமல் வார்த்தை சொன்னாயீ-
இவர்களுடைய கண்ண நீர் கண்டால் கற்றவனால் கருணை பண்ண வன்றோ வடுப்பது -நாட்டில் குற்றம் செய்யாமல் இருக்கிறார் ஆரேனும் உண்டோ
இவர்கள் தாம் குற்றம் செய்யில் அன்றோ இவ்விகாரம் வேண்டுவது -அவர்கள் ஏதேனும் வித்யதிக்ரமம் பண்ணினார்களோ
நீ கற்ற பரப்பில் நாயன் சொன்னது அடியான் செய்கை குற்றம் என்று ஒரு வசனம் கிடந்ததோ
இவர்கள் ராவண பரிகரமாய்-அவனுக்கு கை வழி மண்ணான -அடியாருமாய் -அவனுடைய ஆஜ்ஞா பரிபாலமுசீலைகளுமாகா நின்றால்-அவன் சொன்னதை மறுக்கலாமோ
பெருமாள் உன்னை என்னைக் கண்டு வா வென்று விட்டாரோ ஸ்திரீ வதம் பண்ணி வா வென்று விட்டாரோ
அப்படிச் சொன்னாராகில் அவர் குற்றம் ஆகிறது -நீ சொன்னாயாகில் அந்த வித்யதிக்ரமம் உன்னதாகிறது என்று
குண கர்ஹணம் பண்ணி ராஷசிகளை ரஷிப்பித்தாள் இ றே பிராட்டி
ஆகையால் இ றே இவள் கோஷ்டியைப் பற்ற ராம கோஷ்டி லகுதரை யாயிற்று
அவயவங்களிலே ஹானி பிறக்கும் படி அபசாரம் பண்ணின நாலூரானும் நான் புக்க லோகம் புக வேணும் என்று இ றே ஆழ்வான் அபேஷித்தது
இப்படிக்கு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானும் க்ருத்யோத்பாதனம் பண்ணித் தன்னை நலிய விட்ட புரோஹித வர்க்கத்தை மறித்தும் அந்த க்ருதியை போய் நலிய
சர்வேஸ்வரனை அபேஷித்து அவர்களை நோக்கியும்
மத் பிதுஸ் த்வத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய பிரணச்யது-என்று ஹிரண்ய அபராதத்தை ஷமிப்பித்தும்
இப்படி அபகாரிகள் பக்கல் உபகாரகராய்ப் போந்தார்கள் –

நான் மறையாளர்கள்
நாலு வகைப்பட்ட வேதங்களை ஆண்டு போருமவர்கள் –
இப்பிரமான வாக்யங்களை தத்வ ஹித புருஷார்த்த பிரதிபாதகமான வாக்யங்கலோடே சேர்த்து அனுசந்திக்கும் படி வேத நிர்வாஹகர் ஆனவர்கள் –
நன்மையால் மிக்க நான்மரையாளர்கள்
இவர்களுக்கு இவ்வாத்மகுணம் உண்டாகைக்கு ஊற்று வாய் வேத சம்பந்தம் யாயிற்று
மாதா பித்ரு சஹாஸ்ரேப்யோ வத்சவதரம் சாஸ்திரம் -என்றும் -நலங்களாய நற் கலைகள் -என்றும் குற்றம் செய்தாரை எவ்வளவிலும்
கைவிட மாட்டாத இத்தோட்டை சம்பந்தம் ஆயிற்று –
இதுக்கடி இக்கலைகளைக் கல்லாதவர்கள் இ றே இந்நன்மை பெறாதவர்கள் –
கற்றிலேன் கலைகள் பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை -என்கிறபடியே இதடியாக விறே பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டித் திரி தந்தது –
இது கல்லாதவர்கள் ஆகையாலே லங்கா வாசிகளான ராஷசர் ரிபூணாமபிவத்சலரான பெருமாளோடு வெறுப்புக் கொண்டது
கல்லாதவர் இலங்கை இ றே
இது கற்றவர்களுக்கு பலம் அபகாரிகள் பக்கலிலே உபகாரம் பண்ணுகை
இது கல்லாதவர்களுக்கு பலம் உபகாரிகள் பக்கலிலே அபகாரம் பண்ணுகை
இது தான் மறையாகையாலே துஷ்பிரக்ருதிகளுக்கு ஸ்வ அர்த்தத்தை போதிப்பியாது இ றே -(அக்னி ஹோத்ரம் இருந்ததே வேதம் இருந்ததே -கல்லாதவர் சொல்வது எங்கனம் என்னில் -மறை என்பதால் விசுவாசம் இல்லாதார்க்கு உட் கருத்து காட்டாதே என்றபடி )

நன்மையால்மிக்க நான் மறையாளர்கள் –என்கிற இரண்டாலும்
ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிற இரண்டையும் சொல்லுகிறதாயிற்று
அன்றிக்கே -(சம தர்சனம் பண்டிதர் அறிவான் -ப்ரஹ்ம நிஷ்டம் –
ஸ்ரோத்ரியம் -வேதார்த்தம் அறிந்தவன் -)

நன்மையால் மிக்க நான்மறை -(நன்மையால் மிக்க -வேதத்துக்கு )
நித்யதையாலும் நிர் தோஷதையாலும் அஜ்ஞ்ஞாரானவர்களுக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை அடைய பிரமாணாந்தர நிரபேஷமாக அறிவிக்குமதாகையாலும்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சர்வாதிக வஸ்துவையே பிரதி பாதிக்கிற தாகையாலும் பிரமாணாந்த்ரங்களில் காட்டில்
பிரமாண ஸ்ரீ யால் அதிசயிதமான வேதார்த்த ஜ்ஞானம் உடைய மஹாத்மாக்கள் என்னவுமாம் –
புன்மையாகக் கருதுவர்
அப்படி பிறருடைய குறை காண மாட்டாதவர்கள் உட்பட என்னுடைய தோஷ அதிசயத்தாலே என்னை அநாதரிக்கும் படி யாயிற்று –
புன்மையாகக் கருதுவர்
நன்மையால் மிக்கவர்கள் என்னுடைய புன்மையின் மிகுதியாலே புறக்கணித்து இருப்பர்கள்
நான்மறை யாளர்கள் புன்மையாகக் கருதுவர்
அந்த வேதார்த்தங்களைத் திருத்தி அனுசந்திக்கிறவர்களுக்கு என்னுடைய குற்றத்தின் மிகுதியாலே ஒரு குணம் கண்டு திருத்தப் போச்சதில்லை –
நான்மறையாளர்கள்-இத்யாதி
அவர்களிலே ஒருவர்க்கு ஆளாகப் பெற்றிலேன் –

புன்மையாகக் கருதுவர்
புன்மை என்றும் நான் என்றும் வேறு இன்றிக்கே
என்னதாவி என்னும் வல்வினை -என்கிறபடியே புன்மை தானாகவே நினைப்பர்கள்
தர்ம ப்ராசுர்யத்தாலே தர்மியை தர்ம வ்யபதேசம் பண்ணக் கடவது இ றே
கருதுவர்
தம்முடைய புன்மை அன்றிக்கே அவர்களுடைய அநாதரம் காணும் இவரை வருத்துகிறது
ஹாதோஸ்மி யதி மாமேவம் பகவா நபி மந்யதே
ஆதாலில்-என்ற ஸ்ரீ பரதாழ்வானைப் போலேயும்
தி கஸ்து தஜ்ஜன்ம யத் சாது பஹிஷ்க்ருதம் ஸ்யாத் -என்ற அக்ரூரனைப் போலேயும்
மஹாத்மபிர்மாமவ லோக்யதாம் நய -என்கிறபடியே மஹத்துக்கள் உடைய அங்கீகாரம் புருஷார்த்தமாய் -அத்தால் அநாதரமும் அப்படியே இ றே
கருதுவர்
அவர்களுக்கு வாசி வாய் விட்டுச் சொல்லாமை -(நன்மையால் மிக்காமல் இருந்தாள்  வாய் விட்டு பேசி இருப்பார்கள்  )
நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர்
அவர்கள் சர்வஜ்ஞ்ஞர் ஆகையாலே வஸ்து கதியை யதாவாக அறிந்து இருப்பவர்கள் இ றே

ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே
கீழ் சாத்விக வர்க்கம் கை விட்டபடி சொல்லிற்று -மேல் ஆழ்வார் கைக் கொண்டபடி சொல்லுகிறது
இப்படி எல்லாரும் கை விட்ட இவனை நம்மை ஒழியக் கைக் கொள்ளுவார் இல்லை என்று என் பக்கலிலே மாத்ருத்வ வத்சலரானார்
யத்வா சரண்யம் சரண்ய ஜநஸ்ய புண்யம் -என்று இ றே ஆழ்வாரைச் சொல்லிற்று
அன்னையாய் அத்தனாய்
அத்தனாகி என்னை யாகி என்று பகவத் விஷயம் போலே முற்பட ஹித பரனாய் பின்பு ப்ரியபரனாகை அன்றிக்கே-முற்பட ப்ரியபரராய் பின்பு ஹித பரரானார் (கிருத்யத்தை பின் சொல்லி பிரியமான பகவத் விஷயம் முதலில் சொல்லி என்றபடி )
அப்படியே ஆளவந்தாரும் உட்பட மாதா பிதா என்று மாத்ருத்வத்தை யாய்த்து முந்துற அனுசந்தித்தது
அன்னையாய் அத்தனாய்
முற்பட பகவத் பிரபாவத்தை உபதேசித்து ஆனந்தரம் அதிகாரி வேஷத்தை உபதேசித்தார்-
உம்முயிர் வீடுடையான் –பத்துடை யடியவர்க்கு எளியவன் –பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர்–நந்நீர் தூயப் புரிவதுவும் புகை பூவே -என்று உபதேசித்தது இ றே-கழிமின் தொண்டீர் கள் கழித்துத் தொழுமின் -என்றது
அன்னையாய் அத்தனாய்
குருர் பிதா குருர் மாதா -என்று லாஷணிகமாய் வருவது அன்றிக்கே- (பேச்சுக்காக சொல்லாமல் )-என்னுடைய புன்மையில் புரை இல்லாதாப் போலே-அவருடைய மாதா பித்ருத்வத்திலும் புரை இல்லை –

என்னை யாண்டிடும் தன்மையான்
ஸ்வாமி க்ருத்யமும் அநுஷ்டித்தார் -பகவத் விஷயத்தை அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் -என்று அனுசந்தித்தாப் போலே
இவரும் ஆழ்வார் விஷயத்திலே அவற்றை அனுசந்திக்கிறார்
என்னை யாண்டிடும் தன்மையான்
தாம் திருவாய் மொழி அருளிச் செய்கிற போது என்னைப் பட்டோலை எழுதச் சொல்லி அருளிச் செய்தார் -உசிதமான கைங்கர்யத்தைக் கொண்டார்
என்னை யாண்டிடும்
பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய் வாரீர் என்று உபதேசித்தார் என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் நண்ணி என்று நான் விட்டுப் போந்த விஷயத்தை-நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணினார்
தன்மையான்
இது சஹஜ ஸ்வ பாவம் ஆய்த்து ஆழ்வாருக்கு-ஆழ்வார் அடியாக அடிமை கொள்ளுகையாலே பகவத் விஷயத்துக்கு ஔ பாதிகம்
சடகோபன் –
என்னுடைய சாட்யத்தைப் போக்கி என்னை ரஷித்தவர்
என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன்
அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் -என்று ஆழ்வார் தம்மை ஆண்டு போருமவர்கள் ததீயராம் படி யானால்-என்னை ஆழ்வார் ஆண்டு போரச் சொல்ல வேண்டா வி றே
என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன்
என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடியவர்-
என் நம்பியே
அவரே அன்றோ என் குறைவை நிறைக்கும் படியான நிறைவை யுடையவர்
என் குறை யாகிற பாழ்ந்தாறு நிறையும் போது அவருடைய பூர்த்தியே வேண்டாவோ
சத்வ நிஷ்டர்க்கு பஹிஷ்டனான வென்னைத் தாம் அங்கீ கரித்தும் அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த வென்னைக்
கைங்கர்யம் கொண்டும் போந்த பூர்த்தியை யுடையவர் ஆழ்வாரே யன்றோ என்று ஸ்வ சித்தாந்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –