ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் —
யஸ்ய ப்ரஸாத கலயா
பதிர ஸ்ருனோதி
பங்கு பிரதாவதி
ஜவேந வக்தி ச மூக
அந்த ப்ரபஸ்யதி
ஸூதம் லபதே ச வந்த்யா
தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி
ராமானுஜரை சம்பிரதாயத்துக்கு வரவழைக்க ஆளவந்தார் ஆ முதல்வன் மானசீகமாக கடாக்ஷித்து சரணம்
யஸ்ய ப்ரஸாத கலயா –அருள் வெள்ளத்தால்
பதிர ஸ்ருனோதி -காது கேட்க்காதவன் கேட்ப்பான் –
வேறே சம்ப்ரதாயம் கேட்டு வீணாக்கப் போகாமல் கேட்க வேண்டாதத்தை கேட்பது
பங்கு பிரதாவதி -நொண்டி ஓடுவான் -எங்கும் செல்லாமல் –
(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” என்கிறபடியே -(தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் )
எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.
ஜவேந வக்தி ச மூக -ஊமையும் பேசுகிறான் -நவக்ரந்தங்கள் வெளி வந்தனவே
அந்த ப்ரபஸ்யதி -குருடனும் நன்றாக பார்க்கிறான் -பார்க்க வேண்டாதவற்றை பார்ப்பவன் குருடன்
ஸூதம் லபதே ச வந்த்யா -மலடியும் பிள்ளைகளை பெறுகிறாள் -சிஷ்ய கூட்டங்கள் சேரப் பெற்றார்
12000 ஸ்ரீ வைஷ்ணவர் 700 சந்யாசிகள் கிடைக்கப் பெற்றார்
தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி -தேவாதி ராஜா வரதா சரணம் அடைகிறேன் –
——–
காஞ்சிபுரத்தின் மகிமையை ஆளவந்தார் நன்றாகவே அறிவார். அதாவது,
‘புரீணாமபி ஸர்வாஸாம் ஸ்ரேஷ்ட்டா பாப்ஹரா ஹி ஸா’ என நகரங்கள் அனைத்திலும் சிறந்ததாய்
பாவத்தைப் போக்கடிப்பதாக, புண்ணியத்தை வளரச் செய்வதாக இருக்கிறது காஞ்சிபுரம்.
முக்தி தரும் ஏழு தலங்களுள் ஒன்றானது என்று எண்ணிக்கொண்டே வந்தார்.
ஆனால், யாதவப் பிரகாசரின் பிடிவாத வேதாந்த பாடங்களும், அவரின் துர்நடத்தையும் கண்டு
மிகவும் மன வருத்தம் கொண்டு, கூடவே ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் எண்ணம் கொண்டு
இவ்வாறு சொல்லத் தொடங்கினார்:
‘‘அஸந்த ஏவாத்ர ஹி ஸம்பவந்தி
ஹஸ்திகாயாமிவ ஹவ்யவாஹ:
அத்ரைவ ஸந்தோ யதி ஸம்பவந்தி
தத்ரைவ லாபஸ்ஸர ஸீருஹாணாம்’’
இதன் பொருள்,
‘‘நெருப்புச் சட்டியில் உள்ள நெருப்பு போல, இவ்வுலகில் துஷ்டர்களே உள்ளனர்.
இதிலே நல்லோர்களாகச் சிலர் காணப்படுகின்றனர். இது எப்படி உள்ளதெனில்,
நெருப்புச் சட்டியிலேயே தாமரை புஷ்பங்கள் பூத்தது போலாகும்’’ என்பதாகும்.
பிறகு ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்தார்.
பேரருளாளனை சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, ஸ்ரீஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நோக்கி,
‘‘இவர்களில் அந்த இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்) யார்?’’ என்று கேட்டார்.
திருக்கச்சி நம்பிகள் மிக அழகாக ‘‘அதோ சிவந்து நெடுகி வலியராய் நீண்ட கைகளுடன்
நடுவே வருகிறாரே அவர்தான் ஸ்ரீராமானுஜர்’’ என்று காட்டியருள,
ஸ்ரீஆளவந்தாரும் மானசீகமாக கடாட்சம் செய்து அருளினார்.
தன்னுடைய கம்பீர நயனங்களாலே மீண்டும், மீண்டும் செவ்வரியோடே, மதுரப்பார்வையினால் பார்த்தருளி
‘ஆம் முதல்வன் இவன்’ என்று விசேஷமாக உகந்து கடாட்சித்து அருளினார்.
அதாவது, நம் வைஷ்ணவ தரிசனத்திற்கு ஏற்ற முதல்வன் இவன்தான் என்று கூறினார்.
உடனே ஸ்ரீஆளவந்தார் வேகமாக விரைந்து
மீண்டும் பேரருளாளன் சந்நதிக்கு வந்து நமஸ்
கரித்தார். எல்லா சிஷ்யர்களும் எழுந்தருளி
யிருந்தனர். அப்போது ஸ்லோகம் ஒன்றை உரக்கச் சொன்னார்:
‘‘யஸ்ய ப்ரஸாத கலயா பதிர: ச்ருணோதி பங்கு:
ப்ரதாவதி ஜவேனசவக்தி மூக:று
அந்த: ப்ரபச்யதி ஸுதம் வபதேச
வந்த்யா, தம்தேவமேல வரதம் சணம்
கதோஸ்மிறுறு’’
அதாவது, ‘‘எந்த பேரருளாளனுடைய அனுக்ரஹத்தின் காரணமாக செவிடன் கேட்கும் சக்தியுடையவனாக ஆகிறானோ,
காலில்லாதவன் வேகமாக நடக்க வல்லவனாக ஆகிறானோ, ஊமை பேசவல்லவனாக ஆகிறானோ,
மலடியும் பிள்ளையைப் பெறுகிறாளோ, அந்த தேவப் பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்.”
பிறகு, ‘‘ஒரு விண்ணப்பம்,’’ என்றும் பிரார்த்தனை செய்தார்.
‘‘நம் ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு ஸ்ரீ ராமானுஜரைத் தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.
ஏனெனில், ஒரு அத்வைதியாகக்கூட இல்லாமல் வெறும் பிடிவாதம் பண்ணக்கூடிய வேதாந்தியான
யாதவப் பிரகாசரிடம் படிப்பதும் அவரிடம் மறுப்பு சொல்லி வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதிப்பதும் என்று
இப்படியே காலம் கழிந்தால், ஸ்ரீராமானுஜருடைய அவதார காரியம் என்ன ஆவது என்கிற ஆதங்கத்தில் அவ்வாறு பிரார்த்தித்தார்.
பிறகு, ஸ்ரீஆளவந்தார் தம் முதலிகளுடனும், சிஷ்ய கணங்களுடனும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.
திருக்கச்சி நம்பியிடம் பிரியாவிடை பெற்றபோது, ‘‘அடியேனுக்கு நல்வார்த்தை கூறலாகாதா?’’ என்ற போது,
ஸ்ரீஆளவந்தார் சில நல்ல வார்த்தைகளைக்கூறி சமாதானப்படுத்தி, ஆனந்தக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகளை ஆரத்தழுவி சமாதானம் செய்தார்.
‘‘ஸ்ரீராமானுஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும்,’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
இதற்கிடையில் காஞ்சிபுரத்திலேயே ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்த பல்லவ மன்னனின் பெண்ணுக்கு பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.
மிகுந்த கவலையோடு இருந்த பல்லவ மன்னன் பல வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து பார்த்தும் பலனில்லாமல் போயிற்று.
இந்தக் கவலையினால் ராஜ்ய நிர்வாகத்தை சரிவர நடத்த இயலவில்லை.
மேலும், பற்பல மந்திரவாதிகளை அழைத்து வந்து தம் பெண்ணைக் காண்பித்தார்.
அப்படியும் பலனில்லாது போயிற்று. நாளுக்கு நாள் மன்னனுக்கும், ராணிக்கும் கவலை பெருகியபடி இருந்தது.
அவரது கன்னிகையோ நாளுக்குநாள் மெலிந்து கொண்டே வந்தாள். முகம் வெளிறிப்போய்,
எதுவுமே சாப்பிட முடியாது நோயால் பீடிக்கப்பட்டு, எதிலுமே நாட்டமில்லாமல் ‘ஹாய், ஹோய்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இதனாலேயே பல்லவ மகாராணி கல்யாணி கவலைப்பட்டு கவலைப்பட்டு, பரலோகம் சென்றடைந்தாள்.
பல்லவ மன்னனுக்கு எல்லாமே சூன்யமாகப் போனது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் அரசனிடம், யாதவப் பிரகாசரைப் பற்றி கூறி,
அவர் இங்கு எழுந்தருளினால், ராஜகுமாரிக்கு விடிவு கிடைக்கும் என்று உறுதியாக மந்திரிமார்கள் கூற,
அவரை உடனே அழைத்து வருமாறு பல்லவ அரசன் ஆணையிட்டான்.
ஆணையை மேற்கொண்டு யாதவப் பிரகாசர், ஸ்ரீராமானுஜரை அழைத்துக்கொண்டு, தன் சிஷ்யர்கள் புடைசூழ
பல்லவராஜனின் அரசவைக்கு ஏகினார். பல்லவ அரசன் இவரைப் பலவாறு மன்றாடி கேட்டுக் கொண்டு தம் கன்னிகையை சரிசெய்யுமாறு கூறினான்.
உடனே, யாதவப் பிரகாசரும் ஏதோ ஜெபிப்பதுபோல் சில மந்திரங்களைக்கூறி சிறிது தீர்த்தத்தை அவள்மீது தெளிக்க,
யாருக்குமே அடங்காத, ஏன் பதிலேகூட சொல்லாத பிரம்மராட்சஸ் இவருக்கு மட்டுமே பதில் கூறியது.
‘‘நீ ஏன் இங்கு வந்தாய்?’’ என வினவியது.
யாதவப் பிரகாசரோ, தன்னுள் தேங்கிய பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
சற்றே தள்ளி நின்று, ‘‘நீ யார்? ஏன் இவளைப் பிடித்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்ன செய்தால் விட்டு விடுவாய்?’’
என்று பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
‘‘ஹே… யாதவனே, நீ ஜெபிக்கும் மந்திரம் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயோ?’’ என்று கூறி
அவர் ஜெபித்த மந்திரத்தை அப்படியே கூறியது.
‘‘உன் ஜெபத்திற்கும், மந்திரத்திற்கும் நீ தெளித்த ஜலத்திற்கும், இவளை விட்டுவிட்டுப் போவேனோ?
அவ்வளவு சக்தி, உனக்கும், உன் மந்திரத்திற்கும் உன் ஜெபத்திற்கும் கிடையாது,’’ என்று கர்ஜித்தது.
‘‘அட! நான் சொன்ன மந்திரங்களை அப்படியே சொல்கிறாயே! அப்படியானால் நீ உண்மையில் யார்?’’ என்று தவிப்புடன் கேட்டார்.
‘‘இது மட்டுமா? உன்னுடைய முன் ஜென்மமும், என் முன் ஜென்மமும் எனக்குத் தெரியும்,’’ என்றது.
‘‘அப்படியானால், நான் யார்? நீ யார் என்று கூறலாகாதோ?’’
‘‘இதோ பார்! உன் போன ஜென்மத்தில் மதுராந்தகம் என்ற இடத்திலுள்ள ஒரு ஏரிக்கரையிலுள்ள புற்றில்
உடும்பு என்ற ஜந்துவாக நீ இருந்தாய். அப்போது ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருமலை திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும்போது மதுராந்தகம் வந்தடைந்தனர்.
சற்று இளைப்பாற எண்ணி, ஏரியில் நீராடி, பகவத் ஆராதனங்களை முடித்துக் கொண்டு வந்த ஆகாரத்தை உண்டு
ஏரியில் கைகளை அலம்பினார்கள். அந்த நீரை நீங்கள் பருகியதால், அந்தக் கருணையால் இப்போது
வேதாந்தம் பேசும்படியான ஒரு வித்வத்துவ ஜென்மத்தை கிடைக்கப் பெற்றிருக்கிறீர்கள்.
அதன் காரணமாகத்தான் உனக்கு சிஷ்யனாக, இதோ எதிரில் அவதாரமாக நிற்கும் ஸ்ரீ ராமானுஜரையும் பெற்றிருக்கிறாய்.
நான் செய்த தவறு என்னவெனில் என்னுடைய அந்தணப் பிறவியில் வேதத்தை தவறாக உச்சரித்ததும்,
யாகத்தில் மந்திரத்தை தவறாகச் சொன்னதுமே ஆகும். அதனாலேயே இப்படி பிரம்ம ராட்சஸ் ஆனேன்.’’
‘‘நீ சொன்ன வரையில் சந்தோஷம். ஆனால், இந்த ராஜ கன்னிகையை விட்டு விட்டுப் போ,’’ என்று யாதவப் பிரகாசர் கூறினார்.
‘‘நீ சொன்னால், நான் போக வேண்டுமோ? நான் போவேனா என்ன?’’ என்று பிரம்மராட்சஸ் கோரமான குரலில் கர்ஜித்தது.
‘‘சரி, யார் சொன்னால் இவளை விட்டுவிடுவாய்?’’ என்று யாதவப் பிரகாசரும் விடாமல் கேட்டார்.
அப்போது கண்களில் நீர் மல்க பிரம்மராட்சஸ் சாந்தமாகப் பேசத் தொடங்கியது.
‘‘உம்மிடம் பாடம் பயிலும் மாணவரான நித்யஸுரிகளில் ஒருவர், அதோ உள்ளாரே,’’ என்று கூற
‘‘அது யார்?’’ என்று யாதவப் பிரகாசரும் வினவ,
ஸ்ரீ ராமானுஜரைக் காட்டி, ‘‘இவர் என் தலையை, தன் காலால் தீண்டி,
‘‘நு போவுதி’’ என்று கூறினால் அவளை விட்டு விடுகிறேன்,’’ என்று கம்பீரமாகவும், அமைதியாகவும் கூறியது.
யாதவப் பிரகாசர் இளையாழ்வாரை (ஸ்ரீராமானுஜரை) நோக்கி பிரம்மராட்சஸ் சொன்னதுபோல் செய்யவும் என்று கூறியவுடன்,
அப்படியே, தன் காலால் அவளைத் தீண்டி, ‘இவளை விட்டுப்போ’ என்று கூறிய மறுகணமே அவளை விட்டு பிரம்மராட்சஸ் நீங்கி,
நீங்கியதற்கு அடையாளமாக, அங்குள்ள மரத்தாலான கம்பத்தின் கணுவை முறித்துவிட்டுச் சென்றது.
யாதவப் பிரகாசரும், அந்த சமயத்தில் ஸ்ரீராமானுஜரை மனதாரப் புகழ்ந்து கொண்டாடி சிஷ்ய கணங்களுடன் தன் மடத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில், அப்படி புகழ்ந்தாரே தவிர, ஸ்ரீராமானுஜர் மேல் இந்த சம்பவத்தால்,
அதிகமான பொறாமையும் கோபமும் யாதவப் பிரகாசருக்கு உண்டாயிற்று.
அதேசமயம், இந்த சம்பவத்திற்குப் பிறகு இளையாழ்வாரின் புகழ் மேலும் ஓங்கியது.
———————–
ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்
சித்திரை புனர்வஸு – ஸ்ரீ முதலியாண்டானின் திருநக்ஷத்திரம்
தனியன்
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||
அர்த்தம்:
யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ,
தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.
வைபவச் சுருக்கம்:
ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் (கிபி 1027) பிரபவ வருடத்தில்
பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில்
சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்ரம் வாதூல கோத்ரத்தில்
எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.
எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.
எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால்
எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.
ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச்
சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.
எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.
முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.
——–
முக்த ஸ்லோகங்கள்
முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோகம்
புரா ஸூத்ரைர் வ்யாஸ ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுல தர தாமேத்ய ஸ புந
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஜஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர —
ஸ்ரீ வேத வியாஸர் திருவவதரித்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இயற்றி வேதாந்த பொருளை விளக்கி அருளினார்
அவரே தாமே மீண்டும் ஸ்ரீ நம்மாழ்வாராக திரு அவதரித்து செவிக்கு இனிய செஞ் சொற்களாலே அவற்றை விவரித்து அருளினார்
இந்த உபய வேதாந்தங்களையும் உபபத்திகளாலே ஏக ஸாஸ்த்ரமாக்கி அருளுவதற்காகவே
அவரே மீண்டும் ஸ்ரீ ராமானுஜராக திரு அவதரித்து அருளினார் –
—————–
ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–ஸ்லோகம்–1-
எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத்
திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ,
அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய்,
கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி
அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக் கொண்டிருக்கிறான்.
ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||–ஸ்லோகம்–2-
ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய்,
வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான்
வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.
ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||–ஸ்லோகம்–3-
ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய்,
ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.
யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்–ஸ்லோகம்–4–
பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ,
ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்
——–
ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்
வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||–ஸ்லோகம்:
மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை
எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு
வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.
—–
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் — அருளிச் செய்தவை
ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே
சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வின்யச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் –1-
காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ்,
மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும்,
இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும்,
ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.
——
கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முக்தஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருசி பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம் –2-
கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும்,
முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும்,
தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும்,
தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே!
உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?
————-
கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப் நேஷ்யாமி திவசான் –3-
காவிரிக் கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும்,
மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே!
உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி
மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?
————–
கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷோ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-
எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்?
அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான
காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்?
ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான
ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?
———–
பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் நஹ –5-
பாக்கு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இறே
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ
——————————-
ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் –6-
அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம்.
ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.
———–
அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி –7–
உண்மையில் உமது அருகில் வாராத ஒரு நாயின் சம்பந்தமான
பொய்யான அபவாதத்தினால் சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன் வெகு சமீபத்திலே வந்த போது
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்
————————-
பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது என்று கூறினால் கருணை கொண்ட தாய்,
எப்படி குழந்தையை நோக்கி ஓடி வருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க
ஓடி வந்து அருள் செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.
———-
ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்ஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி —
ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புருஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply