Archive for the ‘ஸ்தவம்’ Category

ஸ்ரீ ஷட்பதீ –வண்டு- ஸ்தோத்ரம்–ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள்–

June 16, 2024

திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,

மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

என்கிறார்.

வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.

நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |

பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.

மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.

ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத் தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!

ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.

ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்று வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலததில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!

————

ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத:
(1)

அவிநய – மபநய விஷ்ணோ

தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |

பூத – தயாம் விஸ்தாராய

தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||

ஹே விஷ்ணு
எனது பணிவின்மையைப் போக்கு
மனதை அடங்கச் செய்
ம்ருக த்ருஷ்ணாம்-தாகம் கொண்ட மான் போல்-புலன்கள் ஓடுவதைத் தவிர்த்து -சம தம பிரார்த்தனை–பேராசையையும் தவிர்த்து அருள்
எல்லா ஜீவ ராசிகளிடமும் தயையை வரச் செய்
சம்சாரக்கடலில் இருந்து அக்கரை சேர்த்து அருள்

——–

திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
(2)

திவ்ய – துநீ மகரந்தே

பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |

ஸ்ரீபதி பதாரவிந்தே

பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும்
ஸச் சித் ஆனந்தம் ஆகியவற்றை வைசனையாகக் கொண்டதும்
உலகில் துன்பத்தைப் போக்குவதுமான
ஸ்ரீயப்பதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்

———-

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க:
(3)

ஸத்யபி பேதாபகமே

நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |

ஸாமுத்ரோ ஹி தரங்க:

க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||

ஜீவாத்மாவான எனக்கும் பரமாத்மாவான உனக்கும் இடையில் வேற்றுமை இல்லை எனினும்
ஹே ஸ்வாமிந்
அடியேன் உனக்கு சேஷ பூதனே
யானும் நீ என்னுடைமையும் நீயே
அலை தானே ஸமுத்ரத்தை அண்டி இருக்கும்
கடல் அலையை அண்டி இருக்காதே

———–

உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசி த்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார:
(4)-அந்தாதி அமைப்பில் ஸ்லோகம்

உத்த்ருத நக -நகபிதநுஜ

தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |

த்ருஷ்டே பவதி ப்ரபவதி

ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||

கோவர்த்தன மலையைத் தூக்கியவரே
இந்திரனின் இளையவராக உம்மை ஆக்கிக் கொண்டவரே
அசுரக் கூட்டத்தை அழித்தவரே
ஸூர்ய ஸந்த்ரர்களைக் கண்களாகக் கொண்டவரே
தங்கள் கண்களுக்கு எதிரே வந்து காட்சி அருளும் பொழுது எவருக்குத் தான் உலகியலிகளின் தாழ்மை தோற்றாது

——————

மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (
5)

மத்ஸ்யாதிபி – ரவதாரை –

ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |

பரமேச்வர பரிபால்யோ

பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||

மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கி வந்து அருளி
பூமியைக் காத்து அருளும் தங்களால்
ஸம்ஸார தாபத் த்ரயங்களால் மருண்ட அடியேன்
உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்து அன்றோ

———

தாமோதர குண மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே
(6)

தாமோதர குண மந்திர

ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |

பவ – ஜலதி – மதந மந்தர

பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||

தாமோதரன்
குணங்களுக்கு கோயிலானவனே
அழகிய தாமரையை ஒத்த திரு முகம் கொண்டவனே
கோவிந்தா
ஸம்ஸாரக் கடலைக் கடையும் மந்த்ர மலை போன்றவனே i
எனது பெரும் துன்பத்தைப் போக்கி அருள்வாய்

————

நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது
(7)

நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ

இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||

ஹே நாராயணா
கருணைக் கடலே
உனது திருவடித் தாமரைகளை சரணம் அடைகிறேன்
என்ற இந்த ஆறு சொற்கள் எப்போதும் என்னிடம் தங்க அருள்வாய்

————

இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக் கவலையும் கிரஹ தோஷமும் நீங்கும்.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

June 16, 2024

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

கோதை மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

————

ஸ்ரீ குருவாயு புரே நாத குரு வாக் விபவேதவா
குருஷே விஹ்ருதிம் நித்யம் இதி டோலாயதே மநஸ்
–1-

அலகிலா விளையாட்டுடையவன் -அகில புவந ஸ்தேம பங்காதி லீலே -வேதத்தில் இவன் விளையாட்டு
குந்துமணி உரலில் அலசி -குழந்தைகள் உடன் சேர்ந்து விளையாடி -உடன் சேர்ந்து ப்ரதக்ஷிணமாக சென்றான்

இவனே அவன் -என்று மனஸ்ஸு மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுகிறது

———

குரு மருந் முநி ப்ருந்த நுதாங்க்ரய குரு வராக்ருதி மஸ்ய ஸமேயுஷே
குரு மருந் நகரோத்தம வாஸிநே குரு மருத் ப்ரதமாய நமோ நம
–2-

குருவும் வாயுவும் முனிக் கூட்டங்களும் வணங்கும் -10-5-கண்ணன் கழலிணை பதிகம் குருவாயூர் -நாராயண சங்கீர்த்தனம் இங்கு பிரஸித்தம் –
கெடும் இடராய -முன்னும் -திருவட்டாறு மங்களா சாசனம் பின்பும் -ரஸிக்கலாம்
குரு வராக்ருதி-அழகிய திருமேனி -பாதாள அஞ்சனக்கல் -மஹா லஷ்மி திருவடி பட்டு உருவான கல்லில் தானே யாக ஆசைப்பட்டு தானே வடித்து -பிரமதேவனுக்கு கொடுத்து -பின்பு இங்கு வந்தான்-

ப்ரஸ்னி ஸூதபஸ் பிரஸ்நிகர்ப்பன் பூஜிக்க
அதிதி கஸ்யபர் வாமனன் பூஜிக்க
தேவகி வாசுதேவன் கிருஷ்ணன் பூஜிக்க

கண்ணன் உத்தவருக்குக் கொடுக்க
ப்ருஹஸ்பதி குருவை நாட வாயுவும் சேர்ந்து இங்கு ப்ரதிஷ்டை-உங்கள் பெயரையே ஊருக்கும் தனக்கும் தானே வைத்துக் கொண்டான்-

குரு மருத் ப்ரதமாய-மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் இவனே

———————

குரு ஸிஷ்ய சவும்ய குரு பூஜந ஆஸ்ரயம் குரு ஸித்த கஞ்சிதபி தே ஸமாஸ்ரயம்
குரு பீம ஸேந ரண ரங்க பீஷணம் குரு பீம ஸேந குரு பத்த நாதிபம்
-3-

மனமே இவனை ஸமாஸ்ரயம் பண்ணு
பாபங்கள் விலகும்

———–

குரு கந்த வாஹ நகரீ விஹாரிணம் குரு வம்ஸ ஜாத விஜயஸ்ய சாரதிம்
குரு மாக மஸ்ய பரமம் புராதநம் குருமாந சாந்தர நிஸம் ஸூபாஸ்ரயம்
–4-

விளையாடும் தெய்வம் -நாம் அனைவரையும் பார்த்துக் கொண்டு இருக்கும் சாரதி -ஆகமம் காட்டும் புராதனப் பெருமாள் -சாந்தி அளிக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்-

—-

குருணா விநஷ்ட நிஜ பால காங்க்ஷிணா வருணா லயாந்தர வதீர்ய சோதித
அருணா தரம் தமுபநீய யோ ததவ் கருணா ரஸவ்க பரிதம் தமாஸ்ரயே
-5-

இழந்தவற்றை மீட்டுக் கொடுப்பவன்
ஸாந்தீப புத்ரனை உடலுடன் மீட்டுக் கொடுத்து அருளினவன் -பஞ்சஜனன் உடலுக்குள் தேடி யம லோகம் சென்று
செவ்விதழ் கொண்ட புத்ரன் -பூத பவ்ய பவத் பிரபு -அன்றோ
கருணைக்கடல் -தஞ்சம் அடைவோம் –

—————-

ஸ்ரீ ஜீவ மாருத புராதிப யுஷ்ம தீயா த்ருஷ்டா மயா ப்ரதி க்ருதா வபி திவ்ய மூர்தி
சாந்தா கபீர மதுரா ஸ்ரம ஹாரிணீ மாம் ஹே ஜீவ மாருத இதீவ கிலாபி தத்தே
–6-

ஸ்ரீ ஜீவ மாருத புரம் -சிறந்த காற்று -பிராணவாயு நிறைந்த புரம்
யுஷ்ம தீயா த்ருஷ்டா மயா ப்ரதிக்ருதா வபி திவ்ய மூர்தி –நீயே தேடி வந்து காட்சி அருளி
சாந்தா கபீர மதுரா ஸ்ரம ஹாரிணீ-தர்சனத்தாலே நிம்மதி இத்யாதி அருளி
மாம் ஹே ஜீவ மாருத -பக்தனே அழாதே
இதீவ கிலாபி தத்தே –அருளிய உனக்கு நமஸ்காரம்-

—————-

திஷணா மம விவாஸ ஸ்வய மதுநா விதி நேயம் குருதே ரதி மநிஸம் ப்ருஸ முரரீ க்ருத லாஸ்யா
திஷணா நில நகரோத்தம தில காயித தாம்நே நிகிலாகம ஸிர ஸித்தி தபத பங்கஜ பூம்நே
-7-

திஷண அநில-குரு வாயு
ஆனந்த கூத்தாடி பாடுகிறார்
திருவடியை உபநிஷத்தில்
இங்கு திருமேனி வைத்து ஒளி வீசுகிறாய்

————-

குரு மாருத பத்தநைக தாம்நே நிகமாந்தோதி தநைஐ கீர்தி பூம்நே
பவுகாதிக ஸர்வ காம ஸீம்நே-ஸ்ப்ருஹ யத் யேக்ஷ ஸதேஹ க்ருஷ்ண நாம்நே
–8-

நிகமாந்தோதி தநைஐ கீர்தி பூம்நே –புகழை வேதாந்தம் சொல்லும்
பவுகாதிக ஸர்வ காம ஸீம்நே -உயர்ந்த விருப்பங்கள் எல்லை நிலம் இவனே -அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் காணாவே -பூமா

நாயகி பாவத்தில் ஸ்தோத்ரம் -கண்ணன் என் காதலன் என்கிறார் –

—————

துர்வாதி நாமிஹ கலாவபி நாஸ்திகாநாம் கர்வாப நோதந விதவ் படுதாம் ததாநே
ஸர்வாபி வாஞ்சித விதாந ஸூபர்வ வ்ருஷே குர்வாஞ்சநேய குரு பத்தந ராஜி லீயே
–9-

நாஸ்திக வாதிகள் கர்வத்தை அடக்கி
கொம்பு முளைத்த தேங்காய் வ்ருத்தாந்தம் -இன்றும் காண்கிறோம்
நம்மை ஆக்கி தன்னைத் தந்து அருளும் கற்பகம்

—————-

குரு கந்த வாஹ நகரீ விஹாரிணே கரவை நமாம் ஸி மம ஸித்த ஹாரிணே
நிஜ பாத பக்த ஸூப சங்க காரிணே கருணாம் ரமாம் ச ஹ்ருதி நித்ய தாரிணே
–10-

லீலை செய்பவனே
உள்ளம் கவர் கள்வனே
பக்தர்களுக்கு ஸத் ஸங்கம் ஏற்படுத்தி அருளி
கருணா தேவியையும் ஸ்ரீ மஹா லஷ்மியையும் திரு மார்பில் நித்ய வாசம் செய்து அருளி
உனக்கு நமஸ்காரங்கள்

————-

ஹ்ருதய ஸதீ கதிரிஷ்டா தவ சேத் ஸ்ருணு மம கிரமதி ஹித ஸ்ருதி லக்நாம்
குத ரதி மிஹ ஸூர நுதி ததி மஹிதே திஷண ஸமீரண பத்தந நாதே —
11-

இருதயமே கேள்
தேவர் கூட்டம் வணங்கும் குருவாயூர் அப்பன் மீது காதல் பக்தி வளர்த்துக் கொள்

—————-

ஜீவ கிமேபிர் யத்நை ஜீவந மாத்ரே அபி நாத்ர பர்யாப்தை
ஜீவ ஸதாஸ் ரித்ய முதா ஜீவ ஜகத் ப்ராண பத்தந ப்ராணம் –
-12-

ஜீவாத்மாவுக்கு அறிவுரை
யத்னம் எடுத்து -பலன் கிட்டாமல்
அஹங்காரம் விட்டு
ஜகத் பிராணன் -குருவாயூர் -அடி பணிந்து உஜ்ஜீவி

————

மாயா தே ஸததம் தநோதி லலிதம் மாம் மந்த யந்தி பவே மாயா தே தயிதா தயா ரசமயீ ஸா மாம பாயாத் புநஸ்
மா யாயா இதி சாகமாக தவதீ ரஷாம் விதத்தே பராம் மாயா வல்கித மஞ்ஜூ மந்த ஹஸிதம் மாம் வீஷ்ய தத்தே பவாந்
–13-

உனது மாயை கட்டுகிறது
உன்னை மறைக்கிறது
மாயா ஆகிய மஹா லஷ்மி அடியேனைக் காத்து உனது திருவடிகளில் சேர்க்கிறாள்
நீ சிரித்துக் கொண்டே இரண்டையும் பார்க்கிறாய்-இந்த சிரிப்புக்கு நமஸ்காரங்கள்

——–

ஸ்ரீ ராமானுஜ தர்சநே ஜல நிதே யாஸ்தி ஸ்திதிஸ் தாத்ருஸீ
ஸ்ரீ ராமானுஜ தர்சநே தவ மம ஸ்வாமிந் க்ருபா வாரிதே
ஸ்ரீ ராமானுஜ தர்சநே மம ரதிம் ஸம் வர்த யேதாஸ் ஸதா
ஸ்ரீ ராமானுஜயா தநோது வஸதிம் ஜாயா தவாஸ் மத க்ருஹே
–14-

சந்திரன் -சந்தமாமா -ரமாவின் அநுஜன் -பார்த்து கடல் பொங்கும்
பல ராமனுடைய தம்பி -நீயே–கருணைக் கடலைப் பார்த்து -மனசாகிய சந்திரன் பொங்கும்
ராமானுஜர் ஸம்ப்ரதாயத்தில் நம்பிக்கை வளர அனுக்ரஹம் பண்ணி அருள்வாய்
விஜய லஷ்மி உள்ளத்தில் குடி கொள்ள வேண்டும்

——–

ஸ்வாமிந் நுத்தவ பூஜிதாமல மஹா ஸுந்தர்ய பூர்ணாக்ருத
ஸ்ரீ மந் நுத்தவதாம் விலோசந வதாம் நித்யம் கிலாத்ர ஆஸ்ரித
அஸ்மாகம் பவத் அங்க்ரி சக்த மநஸாம் ஹே ப்ராண பூத ப்ரபோ
ஸ்ரீ வாசஸ்பதி கந்த வாஹ நகரீ வாஸாஸ்து துல்யம் நம
-15-

ஸ்வாமி
உத்தவரால் பூஜிக்கப்பட்டவரே
கண்ணுக்கு விருந்தாக காட்சி அருளி
உன்னைக் காணாத கண் ஒரு கண்ணா
கண் இமைத்துக் காண்பாரும் இழப்பாரே
நீயே எங்களுக்கு பிராணன்

————–

கோதா சிந்தந தஸ் ஸதா கலு பவாந் தத்த்வம் கதோ வர்த்ததே
கோதா கார யுதோ ததாதி யதிதோ காமீத்ரு ஸீம் மாத்ருஸே
கோதாயா ஹி வரம் வரம் கடயதாத் ஸ்வாமிந் ஸூதாயா மம
கோதாநவ்க பலம் ஸக்ருத் கில பவத் ஸஞ்சிந் தநம் சவுதி ந
–16-

கோதா என்னும் தமது பெண்ணுக்கு கல்யாணம் பண்ண பிரார்த்தனை
கோதாவையே நினைத்து –நல் வார்த்தைகளை கோ தருபவள் -நீயும் கோதாவானாய் -அஞ்சேல் என்கிறாய்
கோ தானம் பண்ணும் பலனையும் அளிக்கிறாய்
உயர்வான வரன் அனுக்ரஹம் பண்ணி அருள்

—————

பீதாம் பரம் த்ருதவதா புருஷோத்தமேந
கீதாம் பரேண பவதா பவதா பஹந்த்ரீம்
கீதாம் பரேண சமரேந ததா விதே அபி
நீதாம் பராம் நிகமதோ அபி வதந்தி சந்தஸ்
–17-

போர்க்களத்தில் கீதை அருளி
யாரும் திருட வில்லையே
மது கைடபர் வேதம் திருட மீட்டுக் கொடுத்தாய்
ஆகவே கீதை வேதத்தை விட ஸ்ரேஷ்டம்

——————

புரா துரங்கா நந பூமி காவான் வேதா நதா ஸ்த்வம் விதயே ஹிதாய
ஜாதோ நியந்தாத துரங்க மாநாம் கீதாமியம் ஸாது கதா பரத்வம்
–18-

மேலும் ஒரு காரணம்
ஹயக்ரீவராக நான்முகனுக்கு அருளி
குதிரைகளை கட்டுப்படுத்தும் சாரதியாக நீ கீதை அருளினாயே

—————

குரு மருத் புஜி தே சகரே புரா ஸ்வ ஐநகேத மதாத் கில நர்த்தனம்
குரு மருந் நகரே புநரத்ய தத் நிகில லோக முதே பரமேததே
–19-

காளிய நர்த்தனம் முன்பு
சகரம் -விஷம் கலந்த பாம்பு -கோபிகள் அஞ்ச
இங்கு குருவாயூர் அப்பனாக -நகரத்தில் ஆடி -விஷம் இல்லாத -கரம் -விஷம்
அனைவருக்கும் ஸந்தோஷம் இங்கேயே

————–

குரு மருந் நகரே யதி நோ ரத குரு மருத் புஜி சக்த ததா தவ
குரு ந தல்ப ஸூகம் பவிதா தத குரு மருந் நகரே நிரதஸ் ஸதா
–20-

வாதாசலம் -காற்றையே உண்ணும் ஆதிசேஷன்
ஆகவே காற்று அடர்த்தியாய் உள்ள இங்கு நித்ய வாஸம்

———–

குரு ஹநுமத் குரு நகரே குர்வீம் ப்ரீதிம் ஸமே யுஷே பவதே
உர்வீ தல வைகுண்டே மவ்ர் வீவ நதா ஜயம் யாம
–21-

உர்வீ தல வைகுண்டே-பூலோக வைகுண்டம்
வணங்கி வெற்றி பெறுவோம்

————

குரு பங்க்தி நிவாஸ நிர்மலம் ஹ்ருதயம் ஸம் வஹதா கவீந்து நா
குரு வாயு புரீஸ விம்சதி ரசிதா ஸ்ரீ நிதி நாஸ் ஸதாம்
–22–

குரு பரம்பரை த்யான பூர்வகமாக
தூய்மையான உள்ளத்தால் ஸ்தோத்ரம்-

———-

மேல் சாந்தி * (தலைமை அர்ச்சகர்) அதிகாலை 2:30 மணிக்கு *ஸ்ரீ கோவிலுக்குள்* (( கருவறை)) நுழைந்து மதியம் 12:30 மணிக்கு
மதிய பூஜைகள் முடியும் வரை ஒரு குவளை தண்ணீர் கூட அருந்துவதில்லை .
வேத பாரம்பரியத்தின் இந்த முழுமையான தூய்மை குருவாயூர் கோயிலின் தனிச் சிறப்பாகும்.
ஆரம்ப கால வரலாறு
*நாரத புராணம்* அதன் அத்தியாயமான *குருபவனபுர மகாத்ம்யா*வில் கூறுகிறது: “அரசன் ஜனமேஜய, தன் தந்தையான பரீக்ஷித்தின் (பாம்பின் தலைவனான தக்ஷகனால் கொல்லப்பட்ட) மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக
, *சர்ப்பயக்ஞம்* (பாம்பு யாகம்) செய்தார். இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாம்புகள் உயிருடன் எரிக்கப்பட்டன,
ஜனமேஜயன் பயங்கரமான தொழுநோயால் பாதிக்கப்பட்டார், இதை உணர்ந்த தத்தாத்ரேயர் அவர் முன் தோன்றினார்
பரிகாரம் – குருவாயூர் கோவிலில் பகவான் கிருஷ்ணரின் கருணையை நாடுங்கள்.
முனிவர் விவரித்தார், பகவான் மகா விஷு தானே இந்த *மூர்த்தியை* முதலில் வணங்கினார். பத்ம கல்பத்தின் தொடக்கத்தில்
பிரம்மாவுக்கு உருவம் கொடுத்தார். *வராஹ கல்பத்தின்* தொடக்கத்தில், குழந்தை இல்லாத தம்பதிகள், சுதேபா &
ப்ரிஷ்னா பிரம்மாவிடம் ஒரு மகனுக்காக பிரார்த்தனை செய்தனர். பிரம்மா அவர்களுக்கு இந்த மூர்த்தத்தை அளித்தார், அவர்கள்
உண்மையான பக்தியுடன் மூர்த்தியை வழிபட்டால் அவர்களின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார் . இதை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள், அந்த அளவுக்கு மகாவிஷ்ணுவே
அவர்கள் முன் தோன்றினார். ஒரு வரமாக, அவர்கள் ஒரு மகனுக்காக மூன்று முறை அவரிடம் பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து மூன்று பிறவிகளில் அவர்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தார் . மேலும், அவர்கள் மூன்று பிறவிகளிலும் தெய்வீக மூர்த்தியை வழிபடும் பாக்கியத்தைப் பெறுவார்கள்
.
அதன்படி, முதல் பிறப்பில், சுதேபா மற்றும் பிரிஷ்னா பிரிசிகர்பாவை மகனாகப் பெற்றனர். அவர்களின் இரண்டாவது பிறவியில், காஸ்யபர் & அதிதியாக,
தம்பதிகள் அதே மூர்த்தியை வணங்கி தங்கள் மகனான வாமனனைப் பெற்றனர். வசுதேவர் மற்றும் தேவகி அவர்களின் மூன்றாவது மற்றும் மிகவும் மங்களகரமான பிறப்பில்,
அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார் .
கம்சனைக் கொன்ற பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குச் சென்றார், அங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, இந்த மூர்த்தத்தை நிறுவி வழிபட்டார். அவர் (வைகுண்டத்திற்கு) திரும்புவதற்கான நேரம் வந்தபோது , ​​பகவான் கிருஷ்ணர் இந்த உருவத்தை உத்தவாவிடம் ஒப்படைத்தார், (பின்னர் வெளிப்படுத்தியபோது,​​பகவான் இல்லாத போது *கலியுகத்தில்* மனிதகுலத்திற்கு
ஏற்படப்போகும் கதியைப் பற்றிய அவரது அச்சம் ) . கலியுகத்தின் தீமைகளிலிருந்து தம் பக்தர்களைக் காக்கவும், மனித குலத்தை ஆசீர்வதிக்கவும்
இந்த மூர்த்தத்தில் வெளிப்படுவேன் என்று பகவான் உத்தவரிடம் உறுதியளித்தார் .
அவர் புறப்பட்டவுடன், துவாரகை கடலில் மூழ்கிவிடும் என்று அவர் உத்தவனை மதிப்பிட்டார்; எனவே, அவர்
பிரஹஸ்பதி (கடவுள்களின் குரு) உடன் கலந்தாலோசித்து சமமான புனிதமான இடத்தில் மூர்த்தியை நிறுவ வேண்டும்.
அதன்படி, குருவானவர் வாயுவுடன் (காற்று-கடவுள்) துவாரகைக்கு புறப்பட்டார், அங்கு அவர்கள் கண்ட அந்த உருவம் அலைகளால் கடலில் வீசப்பட்டது. வாயு
படத்தை எடுத்துச் சென்றார், இருவரும் அதை நிறுவ ஒரு புனித இடத்தைத் தேடத் தொடங்கினர். அவர்கள் பின்னர் பரசுராம முனிவரால் இணைந்தனர், அவர்கள்
தாமரைகள் (ருத்ரதீர்த்தம்) ஏரிக்கு வந்தனர், அங்கு சிவபெருமானும் பார்வதியும் அவர்களைப் பெறக் காத்திருந்தனர். அந்த இடம் நாராயணனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பொறிக்கப்பட்டதாக சிவா அவர்களிடம் கூறினார்;
அதனால் அவரும் பார்வதி தேவியும் எதிர் கரைக்கு மாறுவார்கள். கடவுளின் தெய்வீக கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட கோவிலில் குருவும் வாயுவும் சிலையை நிறுவினர்
. குருவும் வாயுவும் இணைந்து கோயிலை நிறுவியதால், அந்த இடம் குருவாயூர்புரா என்று அழைக்கப்பட்டது, இது பின்னர் குருவாயூர் என்று சுருக்கப்பட்டது.
இந்தக் கதையால் தூண்டப்பட்ட ஜனமேஜயன், குருவாயூர் கோயிலுக்குச் சென்று, நான்கு மாதங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டார். ஒரு இரவு நேரத்தில்
உறங்கிக் கொண்டிருந்த அவர், பகவான் கிருஷ்ணரின் உடல் மீது குணப்படுத்தும் ஸ்பரிசத்தை உணர்ந்தார், மேலும் அவரது நோய் (தொழுநோய்) இனி இல்லை! . மன்னன் ஜனமேஜய
பகவான் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடி, தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினான் .

நவீன வரலாறு
கிபி 1789 இல், முஸ்லீம் கொடுங்கோலன் திப்பு சுல்தான், இந்துக்களை முஸ்லீம்களாக மாற்றும் நோக்கத்துடன், குருவாயூர் அமைந்துள்ள கோழிக்கோடு இராச்சியத்தின் மீது படையெடுத்தார்.
அழிவைக் கண்டு, அந்த உருவம் பூமிக்கடியில் மறைக்கப்பட்டு, *உற்சவ மூர்த்தி* வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு கோவிலுக்கு தீ வைத்தான், ஆனால் அது
ஒரு வான குரலால் காப்பாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து சரியான நேரத்தில் மழை பெய்தது. இந்த தெய்வீக தலையீட்டால் மிகவும் பயந்து, திப்புவும் அவரது வலிமைமிக்க இராணுவமும் குருவாயூரில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், கோழிக்கோடு மற்றும் ஆங்கிலேயர்களின் கூட்டுப் படையால் திப்பு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நவம்பர் 30, 1970 அன்று குருவாயூர் கோவிலில் கட்டுக்கடங்காத தீ விபத்து ஏற்பட்டது. இது ஐந்து மணி நேரம் சுற்றிலும் சீற்றமாக இருந்தது, ஆனால் ஸ்ரீ கோவில் (சன்னதி
சன்னதி), கொடி ஊழியர்கள் மற்றும் அனைத்து துணை தெய்வங்களும் பாதிக்கப்படவில்லை. தீயால் சுற்றுப்புறம் முழுவதும் எரிந்தது. *ஸ்ரீ கோவில்* 3 கெஜ தூரத்தில் இருந்தது, ஆனால்,
*ஸ்ரீ கோவிலின்* மூலையில் தொங்கிக் கொண்டிருந்த காய்ந்த மலர் மாலைகளைக் கூட உக்கிரமான நெருப்பு தீண்டவில்லை! .

குருவாயூர் கோயில் கட்டிடக்கலை
குருவாயூர் கோயில் கேரளாவின் வாஸ்துவித்யா கோயிலின் சுருக்கம். இது இரண்டு *கோபுரங்களுடன்* கிழக்கை நோக்கி உள்ளது, ஒன்று கிழக்கில் (*கிழக்கேநாடா*) மற்றொன்று
மேற்கில் (*பதிஞ்சரெனடா*).
இந்த *கோபுரங்களுக்கு* இடைப்பட்ட பகுதி முழுவதும் ஓடுகளால் கூரை வேயப்பட்டு *ஆனப்பந்தல்* என்று அழைக்கப்படுகிறது. இதன் மையத்தில்
*நலம்பலம்* என்று அழைக்கப்படும் சதுர வடிவ தூண் மண்டபம் உள்ளது, அதன் வெளிப்புறச் சுவர் எண்ணெய் விளக்குகளின் காட்சியகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. *நாலாம்பலத்தின்* தென்புறத்தில் சாஸ்தா அல்லது ஐயப்பன் சன்னதி உள்ளது
.
இந்த சன்னதியின் வடகிழக்கு பகுதியில் *கூத்தம்பலம்* உள்ளது, இங்கு பழங்காலத்தில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. *நாலாம்பலத்தின்* முன் மற்றும் கிழக்குப் பகுதியில்
*பெலிக்கல்* மற்றும் *தீபஸ்தம்பங்கள்* – தீபத் தூண்கள் அமைந்துள்ளன. கோவிலில் இதுபோன்ற பல விளக்குத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு கோபுரங்களிலும் இருக்கும் *தீபஸ்தம்பங்கள்*
சிறப்பு வாய்ந்தவை.
கிழக்குப் பக்கம் உள்ள *தீபஸ்தம்பம்* 24 அடி உயரமும், திரிகளைப் பிடிக்க பதின்மூன்று வட்ட வடிவ கொள்கலனையும் கொண்டது. மேற்கு கோபுரத்தில் உள்ள மற்ற இரண்டில் ஒன்று
மர வடிவில் உள்ளது. த்விஜஸ்தம்ப – இது 70 அடி உயரமுள்ள, முழுவதுமாக தங்கத்தால் மூடப்பட்ட ஒரு கொடிக் கம்பம்.
சதுர வடிவிலான *ஸ்ரீ கோவிலில்* இரண்டு படிக்கட்டுகள் மற்றும் உள்ளே மூன்று அறைகள் உள்ளன. உட்புற அறையானது *கர்பக்ரிஹா* (பகவான் கிருஷ்ணரின் மூர்த்தி
இங்கு வைக்கப்பட்டுள்ளது) என்று அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கதவுகளும் கூரையும் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். *கர்பக்ரிஹத்தில்* உள்ள அனைத்து பொருட்களும் தங்கத்தில் உள்ளன.
வெளி அறைக்கு *முகமண்டபம்* என்று பெயர். ஸ்ரீ கோவிலின் சுவர் பழமையான (17 ஆம் நூற்றாண்டு) சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோவிலின் முன்புறம்
*நமஸ்கார மண்டபம்* சதுர வடிவில் பிரமிடு கூரையுடன் உள்ளது. இதனைச் சுற்றிலும் *நாலம்பலம்* அல்லது *சுத்தம்பலம்* எனப்படும் தூண் சதுர மண்டபம் உள்ளது.
*நாலாம்பலம்* சுவரில் எண்ணெய் விளக்குகளின் காட்சியகம் பொருத்தப்பட்டுள்ளது . ஸ்ரீ கோவிலின் வடகிழக்கு பகுதியில் *மணிகிணறு* என்ற கோயில் கிணறு உள்ளது. கோயிலின் வடக்குப் பகுதியில்
தேவியின் உபசன்னதியான *எடத்திருத்திக் காவு* அமைந்துள்ளது.
*ஊட்டுப்புரா*, *பிரசாதவுட்டு* தலமும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இங்கு, பக்தர்களுக்கு தினசரி மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோயில்
குளம் *ருத்ரதீர்த்தம்* கோயிலின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது.

பூஜைகள்
*கர்பக்ரஹத்தில்* (மத்திய சன்னதி) முதன்மையான தெய்வம் மகா விஷ்ணு, ஆதி
சங்கராச்சாரியார் வகுத்த குறிப்பிட்ட பூஜை முறைகளின்படி வணங்கப்பட்டு சேவை செய்யப்படுகிறார். இருப்பினும், பக்தர்கள், பகவானை உன்னிகிருஷ்ணா அல்லது பாலகிருஷ்ணா என்று அழைக்கின்றனர். *மூர்த்தம்* *பதலாஞ்சன சிலையில்* செதுக்கப்பட்டுள்ளது, இது
மிகவும் புனிதமானது.
• நிர்மால்ய தரிசனம் (காலை 3 முதல் 3.20 வரை) . இதுவே அன்றைய முதல் தரிசனம். முந்தின இரவின் மலர்களாலும் , மாலைகளாலும் பகவான் இன்றும் அலங்கரிக்கப்படுகிறார்
. இரவு பூஜை (வழிபாடு) முடிந்ததும், கதவுகள் மூடப்பட்டதும், தேவர்கள் (தேவர்கள்) வந்து மூர்த்தியை வணங்குகிறார்கள்.
தேவர்களால் பூஜிக்கப்பட்ட பகவானின் தரிசனம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எரியும் விளக்குகள், மணியோசைகள் மற்றும் சங்குகள்,
பக்தர்களின் “நாராயணா”, “குருவாயூரப்பா”, “கோவிந்தா” போன்ற தன்னெழுச்சியான உரத்த கோஷங்களுக்கு மத்தியில், உங்கள் மனம் பக்தியின் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும்.
• தைலாபிஷேகம், வகாச்சார்த் & சங்காபிஷேகம் (காலை 3.20 முதல் அதிகாலை 3.30 வரை) .
முந்தைய நாளின் அலங்காரங்களை நீக்கிய பின், இஞ்சி எண்ணெயில் மூர்த்தியை குளிப்பாட்டும் சடங்கு நடைபெறுகிறது . பிறகு `வகச்சார்த்’ அதாவது மூர்த்தியை `வாக’ பொடி தூவுவது. `வாக’ எனும் மரத்தின் கோர்க்கை
பொடியாக்கி பயன்படுத்தப்படுகிறது. இது நிகழ்த்தப்பட்ட பிறகு, `அபிஷேகம்’ (மூர்த்தத்தை நீராடுதல் சடங்கு), ஒரு `சங்கு’ (சங்கு) புனித நீர் கொண்டு.
• அலங்காரம் & மலர் நிவேத்யம் (காலை 3.30 முதல் காலை 4.15 வரை) . குளித்த பிறகு, மூர்த்தியை மெல்லிய துணியால் துடைத்து, பின்னர் மாலைகள், காது
ஆபரணங்கள், கஸ்தூரி திலகம் மற்றும் சிவப்பு இடுப்பில் அலங்கரிக்கப்படும். கையில் வெண்ணெய் மற்றும் புல்லாங்குழல் வாசிக்கும் பகவான் இங்கே உன்னிகிருஷ்ணனாக (குழந்தை கிருஷ்ணனாக) காட்சியளிக்கிறார்,
கோகுலத்தில் அவர் விளையாடிய நாட்களை நினைவூட்டுகிறது. `அலங்காரம்’ (அலங்காரம் அல்லது அலங்காரம்)க்குப் பிறகு, `மலர்’ (பொருத்தப்பட்ட அரிசி) `நைவேத்யம்’, வாழைப்பழம் மற்றும் வெல்லம் ஆகியவை பகவானுக்குப் படைக்கப்படுகின்றன
.
• உஷா நைவேத்யம் & உஷா பூஜை (காலை 4.15 முதல் காலை 4.30 வரை) .சமைத்த அரிசி மற்றும் `நைபாயசம்’ (வெல்லத்தில் சமைத்த அரிசி) பிரசாதம் `உஷா’ ஆகும்.
நைவேத்யம்’ (காலை பிரசாதம்). இந்த நேரத்தில் ‘உஷா பூஜை’ (காலை வழிபாடு) நடத்தப்படுகிறது.
• எதிர்ரெட்டு பூஜை (காலை 4.30 முதல் காலை 6.15 வரை) . இப்போது பகவானும் சூரியனும் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, `வெள்ளை நைவாத்யம்’
(வெள்ளை பிரசாதம் அதாவது சமைத்த அரிசி) சமர்ப்பித்து பூஜை செய்யப்படுகிறது; அதே நேரத்தில், கோவிலில் உள்ள உப தெய்வங்களுக்கு இணை அர்ச்சகர்கள் கலந்து கொள்கின்றனர். கோவில் சமையலறையில் ‘கணபதி ஹோமம்’ செய்யப்படுகிறது
.
• சிவேலி (காலை 6.15 முதல் காலை 7.00 வரை) . பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஸ்ரீகோவில் (சன்னதி) திறக்கப்படுகிறது. MOORTY பின்னர்
சீவேலிக்கு (ஊர்வலம்) செல்கிறது. உத்ஸவமூர்த்தி (ஊர்வல மூர்த்தி) யானையின் மீது ஏற்றப்பட்டு கோவிலை மூன்று முறை சுற்றி வருகிறது. பகவான் இந்தப் பயிற்சியைச்
செய்ய வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் அவருடைய வான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்பதை அவரே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
• பாலாபிஷேகம், நவாபிஷேகம், பந்திராதினைவேத்யம் & பூஜை (காலை 7 முதல் 9 மணி வரை). அடுத்து வருவது
`பாலாபிஷேகம்’ அல்லது `க்ஷீராபிஷேகம்’ (பால் ஸ்நானம்) என்ற தொடரில் முதலில் வரும் `அபிஷேகங்கள்’. பின்னர், ஒன்பது வெள்ளிப் பாத்திரங்களில் நீர் நிரப்பி,
பூஜைகள் செய்து, நவாபிஷேகம் செய்யப்படுகிறது . நிழல் 12 அடி உயரத்தில் இருக்கும் போது `பந்திராடி பூஜை’ செய்யப்படுகிறது.
• தர்ஷன் (காலை 9 மணி முதல் 11.30 மணி வரை). பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
• UCHA POOJA (மதியம் பூஜை – 11.30 AM to 12.30 PM) . நண்பகல் 12 மணியளவில் நடத்தப்படும் இது அன்றைய மிக முக்கியமான மற்றும் விரிவான பூஜையாகும். ` நைவேத்யம்
‘ (பிரசாதம்) சமைத்த அரிசி மற்றும் `பால்பயாசம்’ (பால் மற்றும் சர்க்கரையில் சமைக்கப்பட்ட அரிசி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு பிராமணர் கோவில் சமையலறையில் அமர்ந்து
நன்றாக உணவளிக்கிறார். இந்த சடங்கில் இந்த வழக்கம் கட்டாயமாகும்.
• கோவில் மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். இக்காலத்தில் பகவான் ஓய்வெடுக்கிறார்.
• SIVELI (4.30 PM to 5 PM) .பகவானின் இரண்டாவது ஊர்வலம் இந்த நேரத்தில் நடைபெறுகிறது.
• தர்ஷன் (மாலை 5 மணி முதல் மாலை 6.15 மணி வரை). பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
• தீபாராதனை (மாலை 6.15 முதல் மாலை 6.45 வரை) . கோவிலில் உள்ள அனைத்து தீபங்களும் ஏற்றப்பட்டு, எண்ணெய் தீபம் மற்றும் கற்பூர தீபங்களால் பகவானை வழிபடுகின்றனர். சங்குகள்
ஊதப்படுகின்றன, மேளம் அடிக்கப்படுகின்றன, மணிகள் ஒலிக்கப்படுகின்றன மற்றும் குழாய்கள் வாசிக்கப்படுகின்றன. முழு மகிமையுடன் பகவானின் காட்சி வெகு தொலைவில் இருந்து தெரியும். விளக்குகளுக்கு மத்தியில் பகவான்
மிகவும் அற்புதமாகத் தெரிகிறார், நம்பிக்கை இல்லாதவனுக்குக் கூட இரண்டாவது எண்ணம் வரும்.
• தரிசனம் (மாலை 6.45 முதல் இரவு 7.30 வரை) . பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
• அத்தாழ பூஜை & அத்தாழ நைவேத்யம் (மாலை 7.30 முதல் 8.15 மணி வரை) . இரவு ஆராதனை `அத்தாழ பூஜை’, அப்போது செய்யப்படும் பிரசாதம்
`அத்தாழனைவேத்யம்’. இந்த நேரத்தில் `அப்பம்’ மற்றும் `ஆடா’ (இனிப்பு சாதம் தயாரித்தல்), வெற்றிலை மற்றும் பாக்கு ஆகியவை வழங்கப்படுகின்றன.
• அத்தாழ சீவேலி (இரவு 8.45 முதல் இரவு 9.00 வரை) . இரவு ஊர்வலம், பகலின் மூன்றாவது மற்றும் கடைசி ஊர்வலம் நடைபெறுகிறது.
• திரிபுகா & ஒளவாயனா (9.PM to 9.15 PM) . ஒன்பது நாற்றமுள்ள ஈறுகளை வெள்ளித் தட்டில் வைத்து மையச் சன்னதி மற்றும் கோவிலைப் புகைப்பது
`திரிபுகா’ எனப்படும் . ஓலை வாயனா என்பது ஒரு நாளின் வருமானம் மற்றும் செலவுகளை பகவானுக்கு முன்பாக வாசிப்பது வழக்கம்.
• ஸ்ரீ கோவில் இரவு 9.15 மணிக்கு மூடப்படும்.
திருவிழாக்கள்
உல்சவம் (வருடாந்திர விழா) :
இது *கும்ப* (பிப்-மார்ச்) மாதத்தில் நடத்தப்பட்டு 10 நாட்கள் நடைபெறும். சுமார் 70 அடி உயரமுள்ள கொடிமரத்தின் (துவஜஸ்தம்பம்) மேல் கோயில் கொடி ஏற்றப்படுவது
திருவிழாவைக் குறிக்கிறது. 1ம் தேதி யானை பந்தயம் நடக்கிறது. அடுத்த 6 நாட்களில் காலை, மதியம் மற்றும் இரவு யானைகள் ஊர்வலம் நடைபெறும்
. காலையில், ஸ்ரீபூத பலி (பகவானின் வான ஊழியர்களுக்கு பிரசாதம்) உள்ளது.
இந்த நாட்களில் மேல்பத்தூர் ஆடிட்டோரியத்தில் (கோயிலுக்கு வெளியே) நடனம், இசை, மத விவாதங்கள் போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன . 8வது நாளில், ‘உற்சவபலி’ (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) அல்லது
பகவானின் படைவீரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு ஆடம்பர விருந்து காத்திருக்கிறது. பள்ளிவேட்டை அல்லது பகவானின் வேட்டையாடும் பயணம் 9வது நாளில் நடைபெறுகிறது.
இந்த வேட்டை காமம் (ஆசை), க்ரோதா (கோபம்) மற்றும் நம் வாழ்வில் நம்மைப் பாதிக்கும் பிற தீமைகளின் அழிவின் அடையாளமாகும். அதன் பிறகு
, மந்திரங்கள் முழங்க, ஆராட்டுக்காக பகவானின் திடம்பு ருத்ரதீர்த்தம் (கோவில் குளம்) க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தங்கள் பாவங்களைப் போக்க பகவானின் நாமத்தை உச்சரித்து நீராடுகிறார்கள் . பின்னர் பகவதி சன்னதியில் உச்ச பூஜை (அதாவது, நண்பகல் வழிபாடு – இந்த நாளில் மட்டுமே இரவில் நடக்கும்) நடைபெறுகிறது. இறுதியாக,
பகவான் 11 முறை வலம் வந்து கருவறைக்குத் திரும்புகிறார். பின்னர் திருவிழாவின் முடிவைக் குறிக்கும் வகையில் கோயில் கொடி இறக்கப்பட்டது.
விஷு :
மலையாளப் புத்தாண்டு தினமான விஷு, *மேடம்* மாதம் 1ஆம் தேதி (ஏப்ரல் நடுப்பகுதியில்) வருகிறது.
இந்த நாளில் விடியற்காலையில் ஒருவர் முதலில் பார்க்கும் பொருள்களின் சுபநிகழ்ச்சியைப் பொறுத்தே அந்த ஆண்டுக்கான அதிர்ஷ்டம் அமையும் . அதன்படி, *கொன்ன* மலர்கள், பச்சை அரிசி, தங்கம், வெற்றிலை மற்றும் காய்கள், மஞ்சள் வெள்ளரி மற்றும் காசுகள் அடங்கிய *கனி* (சகுனம்)
முந்தைய இரவே *இஷ்ட-தேவா* முன் வைக்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் முதல் பார்வையில் அவர்களைப் பார்க்கிறான்
. குருவாயூரில் *கனி* தரிசனம் செய்வது மிகவும் புண்ணியமாகும், எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் இரவில் தங்கி, கண்களை மூடிக்கொண்டு,
*கனி* மற்றும் மகிமை வாய்ந்த பகவான் மீது கண்களை பதித்து, வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு தரிசனத்திற்காக கதவுகள் திறக்கப்படுகின்றன.
வைஷ்கா:
*மேடம்* (ஏப்ரல்-மே) அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த அமாவாசை வரையிலான சந்திர மாதம். இந்த மாதத்தில் துறவு அல்லது ‘விரதம்’ கடைபிடிப்பது
விஷ்ணுவுக்கு மிகவும் புனிதமானது.
அஷ்டமி ரோகிணி :
*சிங்கம்* மாதம் (ஜூலை-ஆகஸ்ட்), *ரோகிணி நக்ஷத்திரத்தின்* கீழ், சிரவண மாதத்தின் 8வது நாளான, பகவான் கிருஷ்ணர்
பிறந்த நாள் அதாவது ஜென்மாஷ்டமி. அனைத்து ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்களிலும் மிகவும் விசேஷமான நாளான, குருவாயூர் தேவஸ்வமே ஒரு நிறமாலை (மாலைகள் மற்றும் விளக்குகள் நிறைந்தது),
அந்த நாளில் பகவானுக்கு மிகவும் விருப்பமான உணவாக கருதப்படும் *அப்பம்* (அரிசி பச்சரிசி மற்றும் வெல்லம்) உடன் பக்தர்கள் திரள்வார்கள்.
குசேலரின் நாள் :
இது *தனு* (டிசம்பர்-ஜனவரி) முதல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. குசேலன் ஒரு வறுமையில் வாடிய பிராமணன், பால்ய நண்பன் மற்றும்
பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தன். ஒரு நாள், அவர் தனது மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரின் உதவியை நாடச் சென்றார். அவர்
தனது நண்பருக்கு வழங்குவதற்காக வறண்ட அரிசியை தன்னுடன் எடுத்துச் சென்றார் . துவாரகாவை அடைந்ததும், அவரை கிருஷ்ணர் அன்புடன் வரவேற்றது மட்டுமல்லாமல், வீட்டில் இருப்பதை உணர வைத்தார், ஆனால் அவருக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்றும் கேட்கப்பட்டது.
பகவான் அவருக்கு பெரும் செழிப்பை அருளினார்!
மற்ற முக்கிய விழாக்கள்: மண்டலம், ஏகாதசி, செம்பை இசை விழா & நாராயணீயம் நாள்.
குருவாயூர் மகாத்மாக்கள்
குருவாயூரில் பகவான் கிருஷ்ணரின் தரிசனம் பெற்ற புகழ்பெற்ற மகாத்மாக்கள் சங்கராச்சாரியார், மேல்பத்தூர் நாராயண பட்டாத்திரி, பூந்தானம்
நம்பூதிரி, வில்வமங்கலம் சுவாமியார், குருரம்மா, இளவரசர் மனதேவன் மற்றும் கூடலூர் குஞ்சிக்காவு நம்பூதிரி.
1. சங்கராச்சாரியார்
ஒருமுறை சங்கராச்சாரியார் சிருங்கேரிக்கு வான்வழிப் பயணத்தில் இருந்தார். குருவாயூர் கோவிலுக்கு மேலே இருக்கும் போது, ​​அவர் *ஸ்ரீபூத பலி* (வான ஊழியர்களுக்கு உணவளிக்கும்) ஊர்வலத்தைப் பார்த்து சிரித்து
, பகவானைப் புறக்கணித்து கோயிலைக் கடக்க முயன்றார். திடீரென்று அவர் கீழே விழுந்தார், ஊர்வலம் வடமேற்கு மூலையில் நின்றது
. அவர் விரைவில் குணமடைந்தார் மற்றும் பகவான் கிருஷ்ணரை அவரது அனைத்து அரச குடும்பத்திலும் பார்த்தார். அவரது வீழ்ச்சிக்கான காரணத்தை உணர்ந்த சங்கராச்சாரியார், பகவான் முன் சாஷ்டாங்கமாக வணங்கி,
கோவிந்தா அஷ்டகம் எனப்படும் கோவிந்தனைப் புகழ்ந்து எட்டு ஸ்லோகங்களைச் சொல்லி அவரைப் புகழ்ந்தார்.
இந்த நிகழ்வின் நினைவாக வடமேற்கு முற்றத்தின் மேல் கூரையில் சிறிய திறப்பு உள்ளது .
பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி, சங்கராச்சாரியார் குருவாயூர் கோவிலில் 41 நாட்கள் *பஜனம்* செய்தார். இந்த காலகட்டத்தில், அவர்
*குருவாயூர் க்ஷேத்ரா-ஆச்சாரஸ்* (கோயில் மரபுகள்) என்ற குறிப்பிட்ட குறியீட்டை நிறுவினார். *மண்டல விளக்கு* (41 நாட்கள் விளக்கு ஏற்றுதல்) பாரம்பரியம் அவரால் தொடங்கப்பட்டது.
2. மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி .
திருநாவைக்கு அருகில் உள்ள மேல்பத்தூர் பிராமணர் வீட்டில் பிறந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையைத் தேடினார். எழுத்தச்சன், புகழ்பெற்றவர்
மலையாளக் கவிஞரும் சமஸ்கிருத அறிஞரும் அவரிடம் சொன்னார் – “மீனுடன் தொடங்குங்கள்)” . பட்டாத்திரி அதை சரியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டார் , பாகவதத்தில் *தசகங்கள்* (பத்து ஸ்லோகங்களின் குழுக்கள்) தொடரில்
விவரிக்கப்பட்டுள்ளபடி, மீன் தொடங்கி பகவான் மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை வழங்க முடிவு செய்தார் . குருவாயூர் கோவிலை அடைந்து, மூர்த்தத்தின் முன் தினமும் ஒரு *தசகத்தை* இயற்றத் தொடங்கினார். ஒவ்வொரு *தசகத்தின்* கடைசி *ஸ்லோகத்திலும்* உள்ள பல்லவி , பிணிகள் மற்றும் துன்பங்களை நீக்க பகவானிடம் பிரார்த்தனை ஆகும் . *கலி* நாளில் நூறு *தசகங்களில்* தன் படைப்பை இயற்றினார். இந்த வேலை *நாராயணீயம்* என்று அழைக்கப்படுகிறது, அதன் பிறகு அவர் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியை அடைந்தார். *நாராயணீயம்* என்பது குருவாயூர் பகவானைப் போற்றுவதாகும். *நாராயணீயம்* என்பது *மகா பாகவதத்தின்* சுருக்கம் மற்றும் அதன் பாராயணம் (வாசிப்பு) திட்டவட்டமான பலன்களை அளிக்கிறது; இது ஒரு பயனுள்ள நம்பிக்கை சிகிச்சை. இது ஒரு தூய கிருஷ்ண பக்தராக ஆக்குகிறது, இது முக்கியமாக நமது தற்போதைய வாழ்க்கையைப் பற்றியது – ஆரோக்கியம் (உடல்நலம் மற்றும் நோய்களிலிருந்து விடுதலை) மற்றும் சௌக்கியம் (மகிழ்ச்சி). குருவாயூர் கோவிலில், *நாராயணீயம்* மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அளவுள்ள எந்தப் படைப்பும் வேறு எந்தக் கோயிலின் குலதெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படவில்லை . பகவான் கிருஷ்ணரைப் படிப்பதன் மூலமோ அல்லது அதன் பாடலைக் கேட்பதன் மூலமோ காட்சிப்படுத்தவும் வழிபடவும் இது பக்தருக்கு வாய்ப்பளிக்கிறது. அது சந்ததியினரின் இதயத்தில் உள்ள குருவாயூரில் பிரகாசிக்கிறது . குருவாயூர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் *நாராயணீயம்* தினம் கொண்டாடப்படுகிறது. 3. பூந்தானம் நம்பூதிரி . பூந்தானமும் மேல்பத்தூரும் சமகாலத்தவர்கள். பூந்தானம் என்பது குடும்பப் பெயர். அவர் 20 வயதில் ஒரு வாரிசை மணந்தார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பூந்தானம் குருவாயூர்ப் பெருமானுக்குப் பரிகாரம் செய்யத் தொடங்கினார் ; 1586 இல் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் ஒரு கொண்டாட்டத்திற்கு அழைத்தார், தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர், ஆனால் விழாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குழந்தை இறந்தது. துக்கமடைந்த பூந்தனம் குருவாயூரில் தஞ்சம் அடைந்து *குமாரஹரணம்* என்ற புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மெல்ல மெல்ல பூந்தனம் ஞானமடைந்து, “சின்ன கிருஷ்ணன் நம் இதயத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, ​​நமக்குச் சொந்தக்காரன் ஏன் வேண்டும் ?” . பல சந்தர்ப்பங்களில் அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார். *ஞானப்பனா* மற்றும் *அஞ்சனா ஸ்ரீதரா…* பாடலை பூந்தானம் பகவானின் உதவியால் எழுதினார். பூந்தானம் தனது 90 ஆண்டுகால வாழ்நாள் முழுவதையும் பாகவதம் படிப்பதிலும், இறைவனின் பெருமைகளை எளிய மலையாளத்தில் பாடுவதிலும் கழித்தார். பகவானைப் போற்றிப் பல பக்திப் பாடல்களை இயற்றினார் . 4. வில்லுவமங்கலம் சுவாமியார் . வில்வமங்கலம் என்பது குடும்பப் பெயர். அவர் ஒரு அலைந்து திரிந்த புனிதர். மூர்த்தியிலிருந்து வேறுபடுத்தி பகவானை நேரில் தரிசிக்கும் அற்புத வரம் அவருக்குக் கிடைத்தது . குருவாயூர் சன்னதியில் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை கண்டார்.

5. குறூரம்மா .
குழந்தை இல்லாத விதவையாக இருந்த குரூரம்மா, குருவாயூரில் பக்தராகக் குடியேறினார். வில்வமங்கலத்தின் வழிகாட்டுதலால், குருவாயூர் உன்னிகிருஷ்ணனைத்
தன் மகனாகத் தத்தெடுத்தாள்; மற்றும் பகவான் ஒரு சிறிய பிராமணக் குழந்தையாக அவள் வீட்டிற்கு வந்தார். குருஊரம்மா அந்தக் குழந்தையைத் தன் மகனாகப் பாவித்து, அவனை நேசித்தாள், அவனுடன் விளையாடினாள்,
அவன் குறும்பு செய்யும் போது அவனை ஏளனம் செய்தாள், அவனுடைய குழந்தைத்தனமான வெறித்தனங்களைப் பார்த்து அழுதாள். *கனி காணும் நேரம்* என்ற பக்தி பாடல் இவரால் இயற்றப்பட்டது.
6. மனவேதன் .
கோழிக்கோடு இளவரசர் மனவேதன் 1595 இல் பிறந்தார் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் வில்வமங்கலத்தின் சீடரானார். பகவானின் பக்தியாலும்
, வில்வமங்கலத்தின் வழிகாட்டுதலாலும், அரண்மனையிலிருந்து குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஏலாழி மரத்தடியில் நின்றிருந்த பகவானை உன்னிகிருஷ்ணராகக் கண்டார்
. தற்போதுள்ள கூத்தம்பலம் இத்தலத்தில் அமைந்துள்ளது. இளவரசன் கிருஷ்ணநாட்டத்திற்கு எட்டு நாடகங்களைத் தொடராக எழுதினார்.
குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக கோவிலில் கிருஷ்ணநாட்டம் தொடர்ந்து அரங்கேறத் தொடங்கியது . இவ்வாறு
குருவாயூரின் புகழை கேரளா முழுவதும் பரப்ப கிருஷ்ணநாட்டம் என்ற நடன நாடகம் மற்றொரு ஊடகமாக மாறியது .
7. கூடலூர் குஞ்சிக்காவு நம்பூதிரி .
குஞ்சிக்காவு சிறுவயதில் ராமன் என்று அழைக்கப்பட்டார். அவர் தனது தாயாரின் தினசரி பாராயணம் (பாராயணம்) பாகவதம் மற்றும் ராமாயணம் மூலம் புராணங்களைக் கற்றுக்கொண்டார்
மற்றும் சமஸ்கிருதத்தை சொந்தமாகக் கற்றுக்கொண்டார். அவர் முன்பு தனது *புராண-பாராயணத்தை* தனது வீட்டில் தொடங்கினார் மற்றும் ஒரு ஆன்மீக-பக்தராக மெதுவாக பிரபலமானார். இந்த நிஜ உலகை அடிக்கடி மறந்து
, தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்களையும் பிருந்தாவனம் கோபியாகவே பார்த்தான். விலங்குகள் உட்பட அனைவரின் முன்பும் அவர் சுற்றி வந்து வணங்கத் தொடங்கினார்.
*ஸ்ரீ கோவிலில்* இருந்து தான் விரும்பியதை எடுத்துச் செல்வார். குருவாயூர் கோவிலில் அவர் *புராணபாராயணத்துக்கு* அமர்ந்திருந்த இடம் இன்றும்
*குஞ்சிக்காவு மூலை* என்று அழைக்கப்படுகிறது.
8. மல்லியூர் சங்கரன் நம்பூதிரி
*பாகவத-ஹம்சம்* பிரம்மஸ்ரீ மல்லியூர் சங்கரன் நம்பூதிரி கிருஷ்ண பக்தியின் வாழும் புராணக்கதை. இவர்
மல்லியூரில் உள்ள வேத பிராமண குடும்பத்தில் பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் ஆர்ய அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூத்த மகனாக 02 பிப்ரவரி 1921 அன்று பிறந்தார் .
அவர் பிறப்பிலேயே நோய்வாய்ப்பட்டிருந்தார். கடுமையான நோய்களும் கடுமையான வறுமையும் அவரது குழந்தைப் பருவத்தை பரிதாபமாக்கியது. இத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும், அவர் ஒரு விசுவாசமான கிருஷ்ணபக்தராக வளர்ந்தார்.ஏழை
பெற்றோர்கள் எப்படி அவருக்கு வேத கல்வியை வழங்க முடிந்தது. பாரம்பரிய *பிராமண-உபநயனம்* (தீட்சை)
(8) வயதில் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் (14) வயதுக்கு முன் “சமவர்தனம்” செய்யப்பட்டது.
பிரம்மஸ்ரீ மல்லியூர் கோவில்-பூஜாரியாக பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமத் பாகவதத்தில் பண்டிதராக இருந்த அவர், பின்னர் *பாகவத் கதை-கதானம்* (
பாகவதம்-கதைகளின் சடங்கு விவரிப்பு) க்கு சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்தார். பகவானே சங்கரன் நம்பூதிரிக்கு பாகவதப் புத்தகத்தை வழங்கினார்.
அவரது “பாகவதம்-அமிர்தம்” விரைவில் கிருஷ்ண பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றது. பின்னர், மல்லியூர் வேதக் கோவில்களில் “பகவத-சப்தஹம்” இயக்கத்தைத் தொடங்கினார்
, இது நடைமுறையில் கேரளாவை “பகவதிமயமாக்கியது”.
பாகவதம் வேதங்களின் சாரம்; மேலும் அது “அத்யாத்மதீபா” என்று அழைக்கப்படுகிறது, சுயத்தின் ஒளி. இது முழு மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும், மேலும்
மூன்று வகையான துன்பங்களை நீக்குகிறது, அதாவது, “ஆதிதைவிகா” (கர்மா அல்லது விதியால் ஏற்படும் பேரழிவுகள்), “அதிபூதிகா”, (மற்ற உயிரினங்களால் ஏற்படும் தடைகள்) மற்றும் “ஆத்மா”
(வரும் தொல்லைகள் ) ஒருவரின் சொந்த இயல்பிலிருந்து) . ஒருவர் பாகவதத்தைப் படிக்கவோ கேட்கவோ விரும்பும்போது, ​​பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய இதயத்தில் தோன்றுகிறார் என்பது உண்மை.
சுக முனிவர் ஏழு நாட்களில் பரீக்ஷித் மன்னனுக்கு பாகவதத்தை விவரித்தார். முதல் நாள், “வராஹவதாரம்” வரை, இரண்டாம் நாள் “ஜடாபாரதம்” வரை,
மூன்றாவது “அமிர்தமாதானம்” வரை, நான்காவது “கிருஷ்ணாவதாரம்” வரை, ஐந்தாம் தேதி “ருக்மணிகல்யாணம்” வரை, ஆறாம் நாள். “உத்தவசம்வாதா” வரை இருந்தது
மற்றும் கடைசி நாள் பாகவதம் முடிந்தது. ஏழு நாட்களுக்கு ஒரே வரிசையில் பாகவதத்தை வாசிப்பது
பாகவதசப்தாஹம் எனப்படும் . பிரம்மஸ்ரீ மல்லியூர் மற்றும் சீடர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு
கிருஷ்ண பக்தியின் அமிர்தத்தை ஊட்டி ஆயிரக்கணக்கான *பகவதசப்தாஹம்களை* வெற்றிகரமாக முடித்துள்ளனர் .
பிரம்மஸ்ரீ மல்லியூருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் *பாகவத-ஹம்சம்* (குருவாயூர் பாகவத விஜானன சமிதியால்)
மற்றும் *பகவதசேவா-ரத்னம்* (குருவாயூர் கோவிலின் ஜனமாஷ்டமி விருது .காஞ்சி மடத்தின் தலைவர் தனிப்பட்ட முறையில் இதை வழங்க வந்தார்) ஆகியவை அடங்கும்.
மிகவும் பழமையான கற்களால் செதுக்கப்பட்ட கோவிலில் மல்லியூர் குலதெய்வம் *பீஜகணபதி*. (50) ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மஸ்ரீ மல்லியூர்
கோயிலின் மூலஸ்தான கணபதிக்கு முன்பாக சாளக்கிராமம் வைத்து பாகவதம் படித்து வருகிறார். ஒருவரின் *இஷ்ட-தேவதா*வை மற்றொரு
தெய்வத்தின் முன் வைத்து வழிபடுவது மிகவும் அரிதான வழக்கம் . இருப்பினும், மல்லியூர் தனது “குடும்ப தெய்வமான கணபதி” மற்றும் அவரது சொந்த *இஷ்ட-தேவதா, ஸ்ரீ கிருஷ்ணர்* ஆகியவற்றிற்கான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இதைச் செய்தார்.
மேற்கண்ட ‘ஆத்மிக்-சாதனா’வின் விளைவு ஒரு அதிசயம். வேத பிராமணர்களும் வேத-ஜோதிஷிகளும் இந்த கணபதி-தெய்வத்தில்
*கிருஷ்ணா-சைதன்யம்* என்ற மிக அரிய மேலோட்டத்தைக் கண்டறிந்துள்ளனர் . எனவே இந்த தெய்வம் ஒரு தனித்துவமான *வைஷ்ணவ-கணபதி* .
கேரளாவில் உயர்ந்த வைஷ்ணவ-ஆச்சார்யராக அவரது உயர்ந்த அந்தஸ்து இருந்தபோதிலும், பிரம்மஸ்ரீ மல்லியூர் மல்லியூர் பணிவு மற்றும் இரக்கத்தின் ஒரு படம். எப்போதும் சிரிக்கும்
ஆச்சார்யா, தம்மை தரிசிக்கும் அனைவருக்கும் உணவளிக்கிறார், அவர் பொருள்முதல்வாதத்திலிருந்து முற்றிலும் விடுபடுகிறார். உண்மையான வைஷ்ணவ பாரம்பரியத்தில், அவர் தனது இரு மகன்களிலும் (பரமேஸ்வரன்
நம்பூதிரி மற்றும் திவாகரன் நம்பூதிரி) “பகவத-தர்மம்” ; மேலும் அவர்கள் இருவரும் அவருக்கு *பகவதசப்தஹம்ஸ்* ல் உதவி செய்கிறார்கள்.

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சரம உபாய நிர்ணயம் -பிரமாணத் திரட்டு-

June 1, 2024

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||
–நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்குருமீடே நிஜமாதரேண சாஹம் |ய இஹாகில லோக ஜீவநாதர:சரமோபாய விநிர்ணயம் சகார ||-நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற
ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர்.

இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || 
என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே  ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.

உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ;  இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. (யஶ்ச ராமம்  நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை  ஸம்பந்தம்  நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.  இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.

உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21 (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22 (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

23. (விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில்  இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே  இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

 (கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.
ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,-34. “ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம்  கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்

18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று  சதுரராய்  கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.–35. ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத்  தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,–36 (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன  குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37.  (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38.  (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே-41. (மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.

ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.

சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி  ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ தாடீபஞ்சகம்-

May 28, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ முதலியாண்டான்

திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம்

அவதார ஸ்தலம் : பேட்டை

ஆசார்யன்எம்பெருமானார்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

முதலியாண்டான் அருளிச்செய்தவைதாடீ பஞ்சகம்ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)

ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார் (ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர்). மற்றும்  எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின்  த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். குறிப்பு: ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமுடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம்  முதலியாண்டானும்,  ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்
–தனியன்

1)யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடிநிலைகளாக (பாதுகைகளாக) அறியப்படுகிறாரோ, அந்த தாசரதி என்னும் திருநாமம் உடையவரான ஸ்ரீ முதலியாண்டானுடைய திருவடியிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

யச் சக்ரே பக்த நகரே தாடி பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய ஸச் ஸாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

2)யாரொருவர் பக்தநகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி) தாடீபஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தாரோ, அந்த ராமாநுஜருடைய ப்ரியசிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –

————————————————————————————————————————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர  யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

—————————————————————————————————————————————–

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

————————

போம் வழியைத் தரும் என்னும் இன்பமெல்லாம் புசித்து வழிபோய் அமுதவிரசையாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளிவிசும்பை
நண்ணி நலந்திகழ் மேனிதன்னைப்பெற்று
தாம் அமரர் வந்து எதிர்கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப
மாமணிமண்டபத்துச் சென்று
மாமலராள்கோன்
மடியில்வைத்துகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே…

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்

நாம் இறந்தபின்னர் நமது ஆத்மாவானது
பரமபதத்தை அடையும் சிறந்த வழியான அர்ச்சிராதி மார்க்கமாகச்செல்லுகிறது.அந்த வழியில் உள்ள இன்பம் முழுவதையும் அனுபவிக்கிறது.அமிர்தம் நிறைந்த விரஜாநதியில் நீராடிமகிழ்கிறது.ஸம்ஸாரதுன்பம் அனைத்தும் நீங்கியபடி அனைத்து மாசுகளும் கழித்துவிடுகிறது.அதன்பின்னர் பரமபதத்தையடைந்து தனது இயல்பான ஸ்வரூபம் ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ப்ரகாசத்துடன் கூடிய ஸத்வ உடலை(அப்ராக்ருத) எடுத்துக்கொள்கிறது.அதன்பின்னர் நித்யசூரிகளால் வரவேற்கப்பட்டபடி செல்கிறது.நன்கு அலங்கரிகப்பட்ட திருமாமணி மண்டபத்தில் வீற்றுள்ளவனும் தாமரைமலரில் அவதரித்த மஹாலக்ஷ்மியின்
நாயகனுமாகிய ஸ்ரீவைகுண்டநாதனை அடைகிறது.
அவன் அந்த ஆத்மாவையெடுத்து, தனது மடியில்வைத்து உச்சிமுகர்ந்து ஆனந்தம் அடையச்செய்கிறான்.
இப்படிப்பட்ட உயர்ந்த
பேறு என்பது நமக்கு
எம்பெருமானார் ஒருவரால் மட்டுமே அளிக்கக்கூடியது ஆகும்

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கமிருக்க
ஆனந்தமயமான மாமணி மண்டபத்துப்
படியாதுமில் படுக்கையாயிருக்கும் அனந்தன் பணாமணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகு மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை
நல்கு என் எதிராசா!

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்.

எனக்கு ஸ்வாமியாகவுள்ள எம்பெருமானாரே!
ஆதிசேஷன் கருடன் விஷ்வக்சேனர் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் போன்ற பலரும் மணிகள் முத்துக்கள் என்று தோன்றுவதுபோல் வரிசையாக நின்று வணங்கியபடி உள்ளனர். அங்குள்ள திருமாமணிமண்டபத்தில் ஆதிசேஷன் என்ற படுக்கைமீது அவனது படங்களில் உள்ள ரத்தினக்கற்கள் ஜொலிக்க எம்பெருமான் சயனித்துள்ளான்.அவனது வலது பக்கத்தில் அவனை எப்போதும் பிரியாத பெரிய பிராட்டியும் இடது பக்கத்தில் பூமாதேவியும் நீளாதேவியும் பொருந்தியுள்ளனர். இப்படிப்பட்ட மூன்று கொடிகளின் நடுவே மலர்ந்துள்ள தாமரை போன்று ஏழு உலகங்களும் ஆட்சி செய்தபடி உள்ள ஸ்ரீவைகுண்டநாதனை நான் விரைந்துசென்று வணங்கும்படி நீயே அருளவேண்டும்.

பெரியபெருமாளால் கூரத்தாழ்வானுக்குப் பெரியவீடு கிடைக்கப்பெற்று
ஆழ்வான் ஸம்பந்தத்தால்
தனக்கும் பேறு கிடைத்ததென்று
ஆனந்தக்கூத்தாடுதல்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

———–

பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசு….

-ஆசார்யஹ்ருதயம்
-🌸ஸ்ரீ அழகியமணவாளப்
பெருமாள் நாயனார்🌸

ஸகலபரிஜன சேவ்யனாய்க்கொண்டு தன் வீறுதோற்றப் பகலோலக்கமிருக்கையும்
ராஜ்யத்திலுள்ளார் தோஷகுணங்களறிகைக்காக ராத்ரியிலே பிறரறியாதபடி கறுப்புடுத்து
நகரசோதனம் செய்கையும் ராஜ்யத்தில் சிக்ஷைரக்ஷைகளுக்காகக் கார்யவிசாரம் செய்கையும் பின் துஷ்டஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடுகையும் அந்த ச்ரமமந் தீரப் பூந்தோப்புக்களிலே அபிமத விஷயங்களோடே விளையாடுகையுமாகிற ராஜநீதியானது உபயவிபூதியிலும் ஏகதேசமும் சேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவன்,பேரரசு விசும்பரசு ஓரரசு ஆகிற சௌலப்ய,பரத்வ,ப்ரணயித்வங்களாலே வந்த மூன்று முடிக்குரிய வான் இளவரசு…(ஸர்வேஸ்வரன்).

-🌺ஸ்ரீ மாமுனிகள் ஸ்ரீஸூக்தி🌸

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ குணரத்ன கோஸம்–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் வியாக்யானம்-

May 9, 2024

ஸ்ரீயப்பதியை -மிதுனத்தை ஸ்தோத்ரம் செய்வது -முக்திக்கு சிறந்த உபாயம் –
நமது இளைய புன் கவிதைகளைத் தொடுத்து ஸ்துதி செய்வதில் காட்டிலும் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அத்தைச் செய்வதால்
எம்பெருமான் திரு உள்ளம் விரைவில் கனியுமாதலால்
இப்படிப்பட்ட நன்மையை நாம் பெறுவதற்காகவே ஆளவந்தார் முதலிய நம் பூர்வாச்சார்யார்கள் பரம கருணையுடன்
அமுதினிலும் ஆற்ற இனிய பல ஸ்தோத்திரங்களை அனுக்ரஹித்து அருளி யுள்ளார்கள்
கூரத்தாழ்வான் அருளிச் செய்த பஞ்ச ஸ்தவங்கள் இருந்தாலும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த இந்த ஸ்லோகமும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவமும் போன்றவற்றுக்கு இணையானாய் எதுவும் இல்லை
இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியானஸ்ரீரங்கநாச்சியார் வியமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.
இதன் காம்பீர்யம் வாஸா மகோசரம் -சொல் தொடையும் பொருள் தொடையும் அமைந்து இருக்கும் அழகு அற்புதம் என்னலாம் அத்தனை-

பெரிய பிராட்டியாருடைய குணங்களாகிற ரத்னங்களுக்கு இந்தக்கரந்தம் பொக்கிஸம் போன்றதால் ஸ்ரீ குணரத்ன கோஸம் -என்று திரு நாமம் இட்டு அருளுகிறார்
இங்கு அனுபவிக்கப்படாத பிராட்டியின் திருக்கணங்கள் வேறே எங்கும் கிடைக்க மாட்டாது என்பதே தாத்பர்யம்
இதில் –தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
வைதக்த்ய வர்ண குண கும்பத கௌரவைம் யார் கண்டூல கர்ண ருஹா கவயேர தயந்தி -என்று
இது தன்னிலே தாமே அருளிச் செய்யும்படியான ஏற்றம் இது தனக்கே உரியதாகும்
பிராட்டியை முற்படத்தொழுது பிறகு பெருமாளைத் தொழ வேணும் என்கிற ஸாஸ்த்ரார்த்தம் ஆஸ்ரயண காலத்தைப் பற்றியது அன்றி ஸ்தோத்ர ரஸனையைப் பற்றியதன்று யாதலால் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வங்களுக்குப் பின்பு இத்தை அருளிச் செய்துள்ளார்
ஸ்தோத்ர ரத்னத்துக்குப்பின்பு சதுஸ் லோகி போலவும்
வைகுண்ட ஸ்த்வங்களுக்குப் பிறகு ஸ்ரீ ஸ்தவம் போலவும்
இங்கும் –

—————–

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே
–தனியன்

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை-
கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தம் என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய
அந்தப் பராசர பட்டரின் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் -திருவடிகளை அடைந்து
மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

————-

இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.

முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால் ஸ்துதிக்க தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள் ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார் –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின் பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார் –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில் அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ச்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீ ரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப் பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –

————

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:-எம்பெருமானுக்கு உண்டான ஸகல சேதன அசேதன வஸ்து ஸ்ருஷ்டி ஸ்ரமத்தை
அங்கீகாரிபி: ஆலோகை: -அங்கீ கார ஸூசகங்களான கதாஸா வீக்ஷணங்களினால்
ஸார்த்த யந்த்யை ஸ்ரீரியை-ஸபலமாக்குகின்ற பெரிய பிராட்டியாருக்கு
க்ருத: அஞ்ஜலி:–ஓர் அஞ்சலி செய்யப்பட்டது என்கை

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

இத்தால் ஸ்தோத்ரம் தொடங்கும் பொழுதே ஸாஸ்த்ரார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
ஜகத் வியாபாரத்தில் எம்பெருமானுக்கே அந்வயம் உள்ளது என்பது ஸத் ஸம்ப்ரதாயார்த்தம் அன்றோ
ஜகத் வியாபார ஸ்ரமம் எல்லாம் அவனுக்கே என்று பூர்வார்த்தத்தில் விளக்கப்பட்டு
பிராட்டியார் உடன் இருந்து அனுக்ரஹிக்குமவள் என்பது உத்தரார்த்தத்தில் விளக்கப்படுகிறது-

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்
–-ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம்-44-விரித்து அருளிச் செய்தவற்றையே இங்கு சுருக்கமாக அருளிச் செய்கிறார்

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–-ஸ்ரீ ஸ்தவம்1-(சார்தூல விக்ரீத மீட்டர் )

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆப வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

ஸ்ரீ தேசிகனும் ஸ்ரீ ஸ்துதியில் –யத் சங்கல்பாத் பவதி கமலே -என்ற ஸ்லோகத்தில் இந்த ஸித்தாந்தத்தையே அருளிச் செய்கிறார்

இது ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கியே அவதரித்த ஸ்லோகமாகையாலும்
இங்கு சார்த்யந்த்யை –என்ற வர்த்தமாந பிரயோகம் செய்து இருக்கையாலும்
எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்ட்டியைச் செய்து அருளும் போது பிராட்டி ஸாக்ஷிணி யாய் இருக்கிறாள் என்பது இனக்குச் சொல்லப்படுகிறது அன்று
இவ்வர்த்தம் மேலே யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -என்ற ஸ்லோகத்தின் முதல் பாதத்தில் சொல்லப்படுகிறது
இங்குச் சொல்லுகிறதாவது -ஸ்ரீ ரெங்கநாச்சியாரது திருக் கோலத்தின் அதிசயமே சொல்லப்படுகிறது
இவளுடைய ஸந்நிதியில் வந்து புகுமவர்களை இவள் காருண்ய திருஷ்ட்டியோடே கடைக்கணித்து அங்கீ கரித்து அருளுவதனால் எம்பெருமான் தன்னுடைய ஜகத் ஸ்ருஷ்டி ஸ்ரமம் சபலமானதாக்காத திரு உள்ளம் பற்றுகிறார்
இப் பொருளே சார்த்யந்த்யை என்கிற வர்த்தமான நிர்தேசத்துக்கு மிகவும் இணங்கும்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருடைய அங்கீ கார ஸூசக கடாக்ஷ அம்ருத தாரைகளுக்கு இலக்காவதே சேதன ஜன்ம ஸாபல்யம் என்று சொல்லிற்றாயிற்று

————-

கடந்த ஸ்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

உல்லாஸ பல்லவித -ஸப்த லோகங்களின் ப்ராதுர்ப் பாவத்தினால் தளிர் பெற்றதும்
பாலித சப்த லோகீ- நிர்வாஹ கோரகித–ஸம்ரக்ஷிக்கப்பட்ட ஏழு உலகின் நிர்வாகத்தால் சஞ்சாத கோரகமுமான
நேம கடாஷ லீலாம்-அரை குறையான கடாக்ஷ வீக்ஷண லீலையை யுடையவளாய்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்-ஸ்ரீ ரெங்க திவ்ய விமான பிரதேசத்துக்கு மங்கள தீப ஜ்வாலை போன்றவளாய்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம -பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் –

ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவத்தில் -யஸ்யா கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந ஸத்யஸ் ஸமுல்லஸித பல்லவம் உல்லாஸ -என்ற ஸ்லோக சாயையிலே இதுவும் அருளிச் செய்யப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது
ஆனால் ஆழ்வான் -அருளிச் செய்யும் ஸமுல்லஸித பல்லவம்-என்பது உலகில் அந்வயம்
இங்கு உல்லாஸ பல்லவித -என்று -கடாஷ லீலையில் அந்வயம்
பிராட்டி நேம கடாக்ஷ லீலையாலே உத்பத்தியும் ரக்ஷணமும் -உத்பத்தியின் பொழுது பல்லவமாயும் –
ரக்ஷணத்தில் கோரகத்தின் முகுளத்தின் அவஸ்தை –
பெண்மைக்குத் தக்கபடி புஷப அவஸ்தைக்கு செல்லாமல்–தளிர்ப்பதும் -அரும்புவதும் – முகுள அவஸ்தை –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் -நிர்வாஹம் அதன் அரும்பு-

ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு திரு விளக்கு ஏற்றி வைக்க பிரசக்தி இல்லாமையால் மங்கள தீபம் என்கிறது
ஸ்ரீ ரெங்க நாதனோடு கூட சாம்ராஜ்ய அபிஷிக்தையாய்க் கொண்டு மிதுனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்றவாறு
இப்படிப்பட்ட ஸ்ரீயை ஆஸ்ரயிக்கிறோம் என்றவாறு

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.

பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரிய பிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.

இவளே பெரிய பெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

—————

தன் மீது ஸ்ரீரங்க நாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
3–

அநுகல தநு காண்ட –அநு க்ஷணம் -அவன் திருத் தோள்கள்
ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோக ஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி-
மரம் போன்ற திருமாலினுடைய-கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள்- செழிப்பை உடையவளும்-
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-

உலகில் கொடியிலே பூங்கொத்தும் பூவில் படிந்த வண்டுகளுமாய் இருக்குமே
பிராட்டியாருடைய ஸ்தனங்கள் பூங்கொத்துக்கள் –திருக்கண்கள் புஷ்பங்கள் கரு விழிகள் வண்டுகள்
குளிச்சம் என்று பூங்கொத்து
ஸ்பார புஷ்பங்கள்- விகஸித்த புஷ்பங்கள்
த்வி ரேபம் -வண்டு -வண்டுக்கு வாசகமான ப்ரமா -என்னும் சொல்லில் இரண்டு ரேபங்கள் -ரகரங்கள் -இருப்பதால் த்வி ரேபம்

ரசயது மயி லஷ்மீ கல்பவல்லி கடாஷான்–நம்மை கடாக்ஷித்து அருளட்டும்-கடாக்ஷ வீக்ஷணம் செய்கிற சாமர்த்தியம் கல்பகக்கொடிக்கு இல்லையே -பெரிய பிராட்டியாருக்கே அசாதாரணம் -இங்கு பரிணாம அலங்கார பிரயோகம்

லோகத்தில் கொடி வ்ருக்ஷத்தின் மேல் படருவதால் வ்ருஷத்துக்கு அபிவிருத்தி இல்லை -கொடிக்குத் தான்
இங்கேயோ தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அபிமத ஜன சம்ச்லேஷ நிபந்தநம்

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக் கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்து விடும்.

——————

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.-

அமுதப் பெருக்கான கடாக்ஷ வீக்ஷணங்களாலே நம்மை அபிஷேகம் செய்து அருளப் பிரார்திக்கிறார் இதில்
மூன்று விசேஷங்களை முற்று பாதங்களால் அருளிச் செய்கிறார்

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:–4–

முராரே-ஸ்திர சர ரசநா தாரதம்யே-யத் ப்ரூ பங்கா பிரமாணம்-ஜங்கம ஸ்தாவராதி-ஸ்ருஷ்ட்டிகளுக்கு –
சந்தன பாரிஜாத மகிழ -கள்ளிச்செடி வேப்பமரம் -இத்யாதி—ஜங்கம பதார்த்தங்களில் தாரதமயமாவது தேவ மனுஷ்ய திர்யகாதி ரூபேண பேதங்களும்
ப்ரஹ்மாதி பிபீலிக அந்தமாகக் காணும் பலவகைப்பட்ட நீச உச்ச பாவங்கள்-உச்ச நீச பாவ பேதங்களுக்கு பிரமாணம் இவளது புருவ நெருப்பே –

ஆழ்வானும் -யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்-ஸ்ரீ ஸ்தவம் -முதல் ஸ்லோகம்
இவரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் – நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூவிப்ரம பேதத ஈசேஸி தவ்ய வைஷம்ய நிம் நோந்நதமிதம் ஜகத் -என்று அருளிச் செய்தவர்களும் இங்கு அனுசந்தேயம்


வேதாந்தாஸ் –முரபிதுரசி–யத் பாத சிஹ்நைஸ்-தத்வ சிந்தாம் தரந்தி-பரத்வ நிர்ணயம் வேதாந்தங்கள் செய்வதும்-ஸ்ரீயபதியான நாராயணனுக்கே பாராம்யத்தை நிஷ்கர்ஷித்தன
பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் திருவந்தாதி
இவளுடைய சம்பந்தத்தாலேயே எம்பெருமானுக்கும் பாராம்யத்தை விளைக்கும்படியான பெருமை வாய்ந்தவள் பிராட்டி -என்றதாயிற்று


முரபித் உரஸி -இறைவனது மார்பகத்தில்-இவளது–யத் சம்பந்தேந தத்வ சிந்தாம் தரந்தி என்னாமல்-யத் பாத சிஹ்னை-ப்ரணய கேலி பரிமாற்றம் –
லஷ்மீ சரணா லாஷங்க சாக்ஷி ஸ்ரீ வத்ஸ வக்ஷஸே –என்று அன்றோ நம் பூர்வாச்சார்யர்கள் பணிக்கும் பரிசு-

போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா–விஸ்வரூபம்
எடுத்து அனுபவிக்க இழிந்தாலும் அசத் கல்பமாகவே -ஆகும்படி அன்றோ

ஸ்தோத்ர ரத்னத்திலும் –ஸ்வ வைஸ்வ ரூப்யேண ஸதா அநு பூதயாபி அபூர்வவத் விஸ்மய மாத தாநயா -என்று அருளிச் செய்ததையே இங்கு சமத்காரமாக விவரித்து அருளிச் செய்கிறார்-

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-
ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இங்கு ஸ்தோத்ர முடிவிலும் –தச சத பாணி பாத -தொடங்கி யுள்ள ஸ்லோகம் முழுவதாலும் இவ்விஷயமே விவரிக்கப்படுகிறது-

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே
–55–

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–—அப்படிப்பட்ட பெரிய பிராட்டியின் அம்ருத ப்ரவாஹமாகிய
கடாக்ஷ வீக்ஷணங்கள் நம்மை ஆச்சா தானம் செய்ய வேணும் -பரிபூர்ண கடாக்ஷ பூதர் ஆவோம்

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்து கொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்து விடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.

இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும் போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும் போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

——————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.
–5-

தேவி யத் யாவத் தவ வைபவம் –ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா–வைபவத்தைப் பன்னி யுரைப்பதே ஸ்தோத்ரம் -வைபவம் இத்தகையது என்பதையே அறியப்பெறாதவன் அன்றோ அடியேன்-வைபவம் பற்றி ஸ்துதிக்க ஆசை கொள்ளவும் அதிகாரி அல்லேன்
ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய -ப்ரஹ்மாதிகளும் –பிரையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் -என்னப்பட்ட மேலாத் தேவர்களுக்கும்
ஸ்தோதும் கே வயமிதி யத ஜக்ருஹூ –ஸ்துதிக்க நாங்கள் எவ்வளவிலோம் -என்று தங்கள் அதிகாரம் இல்லாமையையே வாய் வெருவி இருக்க–
ஜக்ருஹு—இத்தையே பரிக்ரஹித்தார்கள் –
அப்யேவம் – காவாச வயம் -இத்தை அறிந்து குத்ஸித வாக்கை யுடைய அடியேன்
தவ தேவி வாங் மனஸ் பாஷா நபிஹ்ஞம் பதம் கவயிதம் ப்ரயதா மஹே -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத
தேவரீர் உடைய அபரிச்சேதமான ஸ்வரூப வைபவத்தை கவி பாட புகுகிறேன் அந்தோ –
ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்—-நல்ல வாக்குகள் நீசனான என் வாயில் புகுந்து கெடாமல் அவற்றின் பெருமை பொலிக –
விலக்ஷணமான நைச்ய அனுசந்தானம்

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூற வேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கி யிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால் தான் “விருப்பம்” என்றார்.

இவ்விதம் கூறி விட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும் போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டு விடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ஸ்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———————

நைச்ய அனுசந்தானம் கீழ்
இதில் ஸ்துதிக்க தாம் ஒருவரே அதிகாரி -சமத்கார அதிசயம் தோன்ற அருளிச் செய்கிறார்

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.
–6–

தேவி–தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-நானே ஸ்துதிக்க அதிகாரி -மற்று எவரும் இல்லை
ய -ஸ்தோதவ்யஸ்ய குணான் விஸ்த்ருணீதே தம் கவையோ ஸ்தோதார முசந்தி–ஸ்தோத்ரத்தில் இழியும் -ஸ்தோதா –
கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்பவன் அன்றோ
ததச்ச—இப்படி ஸ்தோதா உடைய லக்ஷணம் இருப்பதால் -தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி- அடியேனே அதிகாரி -என்றவாறு-
ஹே பகவதி அஸ்மத மர்ஷணீய பணிதி ஸ்வீகாரத தே ஷாந்த்யௌதார்ய தயாதயோ –
வாய் விட்டு சொல்லாத தகாதவற்றை அடியேன் சொல்ல – குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் –இளைய புன் கவிதைகளை மழலைச் சொல்லாக கேட்டு –
பரம ப்ரீதி அடைந்து -குற்றங்களை தண்டிக்காமல் -ஷமா உதாரம் தயா வாத்சல்யாதி-குணங்கள் விஸ்தரிக்கப்படும் அன்றோ
குண கண யஸ்மாத் ஸ்வாம் ப்ரதாம் ப்ரஸ்நுவீரத்–குணங்கள் விளங்கப் பெரும் என்றவாறு
இதில் அந்யத்ர அதி வியாப்தி வராதே -ஆகவே அடியேனே அதிகாரி

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்று விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந் நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?

அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.

இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:

1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.

2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்து விட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.

3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.

4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———————

நீர் நா வீறு பெற்று ஆச்சர்ய ஸ்துதி பண்ணுவராய் இருக்க இப்படி அருளிச் செய்யலாமோ என்ன
அடியேனுக்கு இயல்பான நா வீறு உண்டி
ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹஸேஸ்மிந் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உபக்ரமத்திலே விண்ணப்பம் செய்துள்ளேனே
தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண பலத்தாலே எனக்கு நா வீறு ஸித்திக்க வேணும் என்கிறார் ஆயிற்று –

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ–லஷ்மீ-ஸ்வயமேவ-மதுரை கடாஷை -ந ஸூக்திம் சமக்ரயது –நிர் ஹேதுக கடாக்ஷ வீக்ஷணம் —
ஸ்ரீ ரெங்கராஜா கமலா பதலாலி தத்வம் பத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹ ஹேஸ்மின்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
இதனாலே திரு நா வீறு -ஸூ க்திகள் அதிசயம் உண்டாகுமே
யாம் ஸூக்திம் வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் கண்டூல கர்ண குஹராஸ் -கவயோ சத்த தயந்தி —
கவிகள் ஆசைப்படும் படி அன்றோ வைதக்யம் -பொருள் பொலிவு -வர்ண குணம் -சொல் பொலிவு –
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு- -இவை அனைத்தும் சேர்ந்தவை
கண்டூல கர்ண குஹராஸ்–தினவு கொண்ட செவிகள் உடையராய்க் கொண்டு –
ஸ்ருண்வந்தி என்னாமல் தயந்தி -என்றது பாநார்த்தகமான தாது –
பண்டிதர்களுக்கு ஸூக்தி ஸ்ரவணமே -ஸூதா பான சமம் -அன்றோ –

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போது தான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.

ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல் வாக்கு ஆனது.

அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரி சமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழிய வல்லது.

————————-

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:-என்றாரே -கீழ் ஸ்லோகத்துக்கு விவரணமாய் இருக்கிறது இது
கீழ் பிராட்டியிடம் நேராக விண்ணப்பம் செய்யாமல் படர்க்கையாக அருளிச் செய்து -இதில் முன்னிலையாக வைத்து தேவரீர் இப்படிப்பட்ட வாக் விலாசத்தைப் பெருக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்
.–8–

ஹே ஸ்ரீ த்வமேவ மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம்–இதில் நேராக பிராட்டியுடன் சம்போதனம்-இதில் உள்ள ஸ்ரீ ஸம்போதனம் – -கீழே படர்க்கை -இங்கே முன்னிலையாக-
இப்படிப்பட்ட வாக் விலாசத்தை பஹு முகமாக அனுக்ரஹித்து அருள பிரார்த்தனை –
த்வமேவ –நீரே -அடியேனுடைய அநந்யத்வ அத்யாவஸ்யம் குலையாமல் –-ஏவ காரத்தாலலே தேவரீர் அருள மாட்டாது ஒன்றுமே இல்லையே –
எங்கள் குடியில் தேவதாந்தர பஜநம் பண்ணுவார் இல்லையே
இராமானுசன் அடிப் பூ என் தலை மிசையே மன்னவும் –தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைத் தானே போற்றும் குலம்
எந்தப்பிரார்த்தனைக்கும் பிராட்டியையே ஸ்துதிக்கத் தாக்கும் அன்றோ –
அநாக்ராதாவத்யம் -அக்ஷரம் பதம் வாக்ய தோஷ-ஸம்பந்த லேசமும் இல்லாமல்-
காதுக்குக் கடுவாய் இருத்தல் -அச் ஸீலமாய் இருத்தல் – ப்ரக்ருதி பங்காதி துஷ்டமாய் இருத்தல் -கூடாது என்கை
பஹூ குண பரீணாஹி -தோஷங்கள் இல்லாமை மட்டும் போதாதே -சப்த அர்த்த அலங்கார புஷ்டிகள் நிறைந்தவையாக இருக்க வேண்டுமே
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்று ஒருவன் பாடினானாம் -ஹாஸ்யாஸம் ஒன்றுக்கே இலக்கண இதில் குண பரிபோஷம் ஒன்றுமே இல்லையே
சப்த பொருள் அலங்காரங்கள் நிறைந்து இருக்க வேணும் என்கிறார்
மனசோ– சௌஹார்த்தம் -துஹா நம்-பிறர் நெஞ்சு நோவு படுமானால் இவற்றால் பயன் இல்லையே –கேட்பவர் நெஞ்சு கனிய வேண்டும் –
பரிசிதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும் அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ்பொருளை உடையதும் —
தாத்பர்யம் குரு முகமாகவே அறிய வேண்டுமே
இந்த விசேஷணம் பட்டர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கே தகும் -அது தன்னிலும் இந்தத் திவ்ய கிரந்தத்துக்கு விசேஷித்துத் தகும்
பதா நாம் சௌப்ராத்ராத் ஸ்ரவணயோ அநிமிஷ நிஷேவ்யம் –பத சேர்த்தி விலக்ஷணம் பொருந்து இருக்க வேணும் –கீழ்ச் சொன்ன அனைத்திலும் இது மிகச் சிறந்த அதிசயம்
ஹடாதாக்ருஷ்டாநாம் கதி பய பதாநாம் ரஸயிதா -என்னும்படி கவி சொல்ல வல்லார் பல உளரே
அப்படிப்பட்ட வர்களின் ரஸனைகளில் இந்த விசேஷம் காண வரிது
யா பதாநாம் பரா அந்யோந்ய மைத்ரீ சய்யேதி கத்த்யதே -என்னப்பட்ட சய்யா விசேஷம் ஸஹ்ருதய ஹ்ருதய ஏக வேத்யமாய் இருக்கும்
அது தான் -பதா நாம் சௌப்ராத்ரம் என்கிறது
அது உண்டாகில் ரசிகர்கள் விஸ்ராந்தி இன்றிக்கே அனுபவிப்பர்கள் ஆயிற்று
ஆக இப்படிப்பட்ட வாக் விலஸிதயத்தை அருள் புரிய வேணும் என்கிறார் ஆயிட்டு
விலஸிதம் -விலாஸம் -பர்யாயம்

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்க வேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்பட வேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

—————————-

அபேஷா நிர பேஷமாக அளிக்க வல்ல பெரிய பிராட்டியார் அபேக்ஷித்த பின்பும் அளிக்க மாட்டாமை இல்லையே
அங்கனமே ஆகுக என்று குளிர நோக்கித் தலை துலுக்கவே –
உள்ளமும் உடலும் பூரித்து ஸ்தோத்ரே ப்ரவ்ருத்தராகிறார்
முன்பே 230 ஸ்லோகன்களால் பூர்வ உத்தர ஸ்தகங்களால் ஸ்ரீ ரெங்கராஜனுடைய பெருமையை அருளிச் செய்தார்
இங்கு 61 ஸ்லோகங்களேயாய் சங்குசிதமாக இருந்ததே யாகிலும் -பெரிய பிராட்டியாருடைய ஒப்புயர்வற்ற பெருமையை சமத்காரமாக இங்கு அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ரெங்கநாதன் ஸந்நிதி வாசலிலே சடக்கென்ச் சென்று நின்று திருப்பள்ளி யுணர்த்தி ஒன்று கேட்டருளாய் என்று விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–
9-

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா –
பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்
பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்
அங்கெ சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்
தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ
ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் –
அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள்
திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்
வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெட்ரா நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்
பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு
ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –
ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்
இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி
த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்
தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-
தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –
த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர
தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக் கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

இங்கு பட்டர் பெரிய பெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரிய பெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக் கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகிய மணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப் போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ஸ்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக் கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.

எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ள போது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூற வில்லை, பெரியபெருமாள் கேட்டதனால் தான் கூறினார்.

—————–

ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருமேனியும் பூரிக்கும் படியாக ஸ்துதிக்கப் போவதாக பிரதி ஞாதமாயிற்று கீழ்
அதன்படியே ஸ்துதிக்க இழிந்தவராய் -மாநாதீநா மேய ஸித்தி -என்கிறபடியே ப்ரமேயம் ஸித்திப்பது பிரமாண அதீனமாகையாலே பிராட்டியும் வைபவமாகிய ப்ரமேயத்திற்கு சாதகமான பிரமாணத்தை மூதலிக்க வேண்டி
இதிஹாஸ புராணாதி உப ப்ரும்ஹணங்களினால் உப ப்ரும்ஹிதமான ஸ்ருதி தான் இவ் விஷயத்திற்கு பிரமாணம் என்று அருளிச் செய்கிறார் இதில்
குணரத்ன கோஸம் என்ற பிரபந்த திருநாமமும் அர்த்தாத் ஸூசிப்பித்து அருளுகிறார் முத்ர அலங்கார வகையில் இதில் –

தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

ஹே தேவி பிரதமே புமாம்ச பகவதீம் ஸ்ருதிம் -த்வத் சத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-வாரீர் ஸ்ரீ ரெங்க நாச்சியாரே – வியாச பராசர வாலமீகி பிரபுருதிகளும் -பராங்குச பரகால யதிவராதிகளுமான பூர்வ புருஷர்கள் –சுடர் மிகு சுருதியை தேவரீர் உடைய
கல்யாண குண ரத்னங்களை இட்டு வைக்கும் பண்டாரமாக அன்றோ -அருளிச் செய்கிறார்கள் –
இவை அவன் பெருமையையும் அதிகமாக சொன்னாலும்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுதே-தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவரீருடைய பெருமையுள்ளீடு தானே
திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -என்கிறபடியே
பிராட்டியுடைய சம்பந்தம் இல்லாமல் தேவன் தேவத்வத்தை பெற முடியாதே
ஆக தேவனுடைய பெருமைகளை சொல்லும் இடம் எல்லாம் தேவியின் பெருமையைச் சொல்லிற்றாகவே கொள்ளலாம் இறே
வான் திகழும் சோலை மதிள் அரங்கன் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றது
ஸகல திவ்ய தேசத்து எம்பெருமான்களுடையவும் மஹிமை ஸ்ரீ ரெங்கநாதனுடைய மகிமையின் உள்ளீடு போலே
தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவ தேவ திவ்ய மஹிஷியினுடைய பெருமையின் உள்ளீடு என்கிற பரமார்த்தமும் கண் அழிவற்றதாகையாலே இங்கனே அருளிச் செய்யக் குறையில்லை யாயிற்று

பகவதீம் -ஸ்ருதிக்கு இந்த விசேஷணம்-அபவ்ருமஷே யத்வ -நித்யத்வ -நிர்தோஷத்வாதி ப்ரயுக்தமான பூஜ்யதை இட்டு
பிரதமே புமாம்ச –முன் சொல்லிய மஹரிஷிகள் -ஆழ்வார்கள் -பூர்வர்கள்
இவர்கள் பிராட்டியுடைய திருக்கல்யாண குணங்களாகிற ரத்னங்களுக்குத் கோச க்ருஹமாக அருளிச் செய்கின்றார்கள் என்றது -பிராட்டியாருடைய குணங்கள் வேதத்தில் ஸூ ரஷிதமாகக் காணக்கிடைக்கும் என்கிறார்கள் என்றபடி
மானதீனா மேய சித்தி -பிரமாணங்கள் கொண்டே பிரமேய சித்தி அன்றோ –
ஸ்ரீ குண ரத்னகோசம் -இந்த ஸ்துதி என்று அர்த்தாத் ஸூசிப்பிக்கிறார் இதில்
தத் த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி-ரத்னங்களை வெளி வாசலில் இறைத்து வைக்க மாட்டார்கள் அன்றோ -உள்ளே ஆழ்ந்து பார்த்தாலே இருப்பதை அறிய முடியும்
அதே போல் வேதமாகிய பெட்டியையும் இதிஹாச புராணாதிகளாகிற திறவு கோலை இட்டுத் திறந்து பார்க்கும் அளவில் பிராட்டியுடைய பிரபாவம் வேதங்களில் எளிதாக்க காணக்கிடைக்கும் என்கை
அவை பிராட்டியாலே அவனுக்கு பெருமை என்பதை நிரூபணம் செய்வதாலும்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -இத்யாதி வாக்யங்களிலே ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டு இருக்கிறபடியால்
எம்பெருமானுக்குப் பெருமை சொல்லும் இடம் எல்லாம் பிராட்டியின் பெருமையையே சொல்லிற்று ஆயிற்று
சம் தர்க்கணம் ஆவது -சமீசிந தர்க்கம் -வேதார்த்த விசார ரூப மீமாம்சை
ஸூத்ரகாரர் தர்க்கத்தை வெறுத்தது பிரமாண அநு குணம் அல்லாத சுஷ்க தர்க்கத்தையே யாகும் -அது தோன்றவே இங்கு சாம் தர்க்கண -என்றது
புரஸ் ஸராணி–ஸ்ரீ லஷ்மி தந்த்ராதிகள் -அருளிச் செயல்கள் இத்யாதி களைச் சொன்னவாறு

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ் பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.

இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப் போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

———————-

கீழ் வேத பிரமாண விளக்கை அருளிச் செய்து
இதில் அந்த விளக்கில் வீட்டில் படும் பாட்டை அடைந்து அநர்த்தப்படுமவர்களை எடுத்து உரைத்து
இவர்கள் பிராட்டியாருடைய திவ்ய கடாக்ஷதிற்கு இறைப்பொழுதும் இலக்காகப் பெறாமையினால் தான் இப்படி அவப்பொருள்களைச் சொல்லி அநர்த்தப்படுகிறார்கள் என்கிறார்

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–11-

ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன -வேத பாஹ்யர்களைச் சொன்னார் ஆயிற்று
வேதம் அப்ரமாணம் என்னும் ஸூகத சார்வாகாதிகள் இங்கே விவஷிதர்கள்
இவர்களும் மேல் சொல்லப்படுபவர்களும் அவ்யபதேஸ்யர்கள் என்பதால் சிலர் சிலர் என்றே குறிப்பிடுகிற படி
கதிச அராஜகம் விச்வமேதத்-காபிலர் வாதம் -ஜகத்தை
அநாதம் என்கிறவர்கள் -அனுவதிக்கிறபடி -ஈஸ்வர ஸத்பாவம் இல்லை என்பர் -பிரதானம் காரணம் என்பர்
தத்வத்ரயத்தில் ஈஸ்வர ப்ரகரணத்தில் -காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள் –பிரதானம் அசேதனமாகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும் -ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும் அதுவும் சேராது – என்று அருளிச் செய்ததும் அவ்விடத்து வியாக்யானமும் இங்கே அனுசந்தேயம்

ராஜன்வத் கேசிதீசம் -(விஸ்வம் ஆ ஹூ-என்றபதமும் இங்கே அநு ஷங்கம் செய்து கொள்ள வேண்டும் )-இது காணாதர் மதம் –சாஸ்த்ரத்தால் அன்றிக்கே அனுமானத்தால் ஈஸ்வரன் -ஆனுமானிக ஈஸ்வரனுக்கு நிமித்த காரணத்வ மாத்திரம் இசைகிறார்கள்-
எனவே இவர்களும் யதார்த்த வித்துக்கள் அல்லர் –

அந்யே ஈசம் தம் குணி நமபி குணைஸ் தரித்ராணம் (ஆஹு)-குண தரித்ரன் என்னும் மாயா வாதிகள்
நிர்க்குணத்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகள் ஹேய குண அபாவத்தைச் சொல்லுகின்றன என்று நிஷ்கர்ஷிக்க மாட்டாமையாலே –

அந்யே பிஷவ் ஸூராஜம் பவம் (ஆஹு )-வெந்தார் என்பும் சுடுநீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு
உலகு எழும் திரியும் பிச்சாண்டியை ஈஸ்வரன் என்பர்

இதிச ஜடாஸ் தே -இப்படி பலவும் -என்பதால் இதி ச -ஜடாஸ்-கருவிலே திரு இல்லா – மூர்க்கர்கள்

தலாதலி அகார்ஷூ–கையால் தரையை அடித்து வாத யுத்தம் செய்பவர்கள்
கேசாகேசி -தண்டாதண்டி இத்யாதிகள் போலே தலாதலியும் கொள்ளக் கடவது
குடிமையைப் பிடித்துக் கொண்டும் தடியை வீசிக் கொண்டும் யுத்தம் புரிவது போல்
கையைத் தரையிலே அறைந்து வாதம் செய்வது இயல்பு

இவை எல்லாம் ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷ அபாவ நிபந்தம் என்கிறது
ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே யே தே ஷணம் லஷ்யம் நா சந்தே ஏவம் அகார்ஷு-ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழ் படர்ந்த கனகக் கொடி அன்றோ தேவரீர் –
உமது கடாக்ஷத்துக்கு க்ஷணம் காலமும் இலக்காகாத ஜடங்கள் அன்றோ
இப்படி ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் -என்றபடி –

மூன்றாம் பாதத்தில் உள்ள தே என்பது தச் சப்தத்தின் பிரதமாபஹு வசனம்
நான்காம் பாதத்தில் உள்ள தே என்பது யுஷ்மச் சப்தத்தின் ஷஷ்டி ஏக வசன அர்த்தம் –

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம் பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம் பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம் பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம் பொருளான பெரிய பெருமாளை அறிய இயலும்.

———————

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவதி-ந நு-லஷ்மி-சகல குண சம்பத்துள்ள பெரிய பிராட்டியாரே
யேபி தன்யா -யாரோ சில பாக்யவான்கள்
பக்தி சித்தாஞ்ஜநேந-பக்தியாகிய சித்த அஞ்சனத்தை உடைத்தாய் கொண்டு -சித்தாஞ்சனம் போன்ற பக்தி -என்றுமாம்
பஹு வ்ரீஹி -பக்தி சித்தாஞ்சனம் இவ யஸ்ய தத் -சித்தாஞ்சனம்போன்ற பக்தி
பக்தியாகிய சித்தாஞ்சனதாலே என்று கொடு -ஸ்வயம் விசேஷய்மாய்க் கொண்டு -அதை வில ஸதா என்பதிலே அந்வயிப்பாரும் உண்டு
அகத்தின் உள்ளே பக்தி ஸித்தாஞ்சநத்தினாலே விளங்கும் ஞானக்கண்ணாலே வீக்ஷமாணா -என்க-
மனஸி விலசத அஷ்ணா-மனசாகிற ஞானக் கண்ணாலே
ஸ்ருதி சிரஸி நிகூடம் தே மஹிமாநம்-வேதாந்தங்களிலே மறைந்து கிடைக்கும் உமது மஹிமைகளை
நிதிம் வீஷமாணா இவ-நிதியைக் காண்பாரைப் போலே காணா நின்றவர்களாகி
நிதி யாவர்க்கும் எளிதன்றே –
உபரி உபரி சஞ்சாதாம் -அத்ருஸ்யம் -ஸ்ரீ வராத ராஜ பஞ்சாத் -ஸ்ரீ மஹா லஷ்மீ வைபவமாகிற நிதி –
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்களோ
தே தைவீம் சம்பதந்தே அபிஜாதா –அன்னவர்கள் மோக்ஷ ஹேதுவான தைவ சம்பத்துக்கு இட்டுப் பிறந்தவர்கள்
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆஸூரீ மதா என்றும்
மாஸூசஸ் சம்பதம் தைவீம் அபி ஜாதோசி -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

————————–

பிராட்டியாருடைய வைபவ ப்ரதிபாதனத்திலே ஸ்ரீ ஸூக்தமானது இதம் பாரமாக ப்ரவ்ருத்தமானது என்றும்
புருஷ ஸூக்தாதிகளும் தத் வைபவ ப்ரதிபாதனத்திலே விஸ்ராந்தமாகிறது என்றும் அருளிச் செய்கிறார் இதில்
அஸ்யேசா நா ஜகத இதிதே-இத்யாதியால் ஸ்ருதியின் அநுவாதம்

அஸ்ய ஈஸாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக
:–13-

அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்-ஸ்ருதி அனுவாதம் – அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்னீ -மூலம்
அநுஸந்திக்கும் வைபவ அதிசயத்தை –
ஸ்ரீ ச் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முகயதே -சாகைகள் தோறும் பஹு முகமாக ஸ்ரீ ஸூக்தம் விஸதீகரியா நின்றதே
தாஞ்ச சாகா நுசாகம் ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-சர்வ ஜகத்துக்கும் ஸர்வேஸ்வரேஸ்வரன்
இவனே என்று புருஷ ஸூக்தம் ஓதா நிற்குமே
தம் உத்தர அநு வாக த்வத்கம் பதிம் அதி ஜகத் -அந்த ஸ்ரீ மன் நாராயணனை
நாராயண அநு வாகமானது உமது பர்த்தாவாக அன்றோ சொல்லிற்று
இதம் ஹி புருஷம் ஸூக்தம் சர்வ வேதேஷூ பட்யதே-
சர்வ ஸ்ருதிஷ்வனுகதம் -ஸூ க்தம் து பவ்ருஷம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸூ க்தமும் தைத்ரிய சாகை -மாத்யந்தி நாதி சகல சாகைகளிலும் உண்டே –

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:

1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக் கொண்டான்.

2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக் கொண்டேன்.

——————————-

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-

ஹே அஸ்மத் ஜநநி உத்பாஹூஸ் த்வாம் உபநிஷத ஸா வாஹநைகா நியந்தரீம்-உபநிஷத்துக்கள் மட்டும் அல்ல –
உத்பாஹு என்றது -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்ச்யதே –பிராமண வசனத்தை ஒட்டி –
அசவ் உபநிஷத் என்றது கீழ் ஸ்லோஹத்தில் சொன்ன உத்தரச்ச அநு வாகத்தை –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே–சிறை இருந்த உன்னுடைய ஏற்றம் சொல்லியே –
உயிர் தரிக்கின்றது ஸ்ரீ ராமாயணமும்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாச் சரிதம் மஹத் –
கருணா காகுஸ்தன் பெருமை பிராட்டி சந்நிதியாலேயே தானே நிலை பெற்றது
பிராணிநி -ஸ்ரீ சீதா சரித்திர ப்ரதிபாதமே ஜீவ நாடி –
ஸ்மர்த்தாரோஸ் யதமே -ஸ்ம்ருதி கர்த்தாக்கள் பராசாராதி மகரிஷிகளும்
சேதிஹாசை புராணை-இதிஹாச புராணங்களாலும்
வேதாந் த்வன் மஹிம்நி பிரமாணம் நிந்யூர்-வேதங்களை உம்முடைய வைபவத்துக்கு பிரமாணம் ஆக்கினார்கள்

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.

—————————————-

மாநாதீநா மேய ஸித்தி -யாகையாலே பிராட்டியாரின் வைபவமாகிற ப்ரமேயத்திற்கு இன்னின்னவை பிரமாணம் என்று காட்டி அருளினார் கீழே
இனி பிரமாண பிரதிபன்னமான பிராட்டியாரின் ஐஸ்வர்யத்தை அருளிச் செய்து போருகிறார்

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
ஆகுக்ராம நியாமகா தபிவிபோ ரா சர்வ நிர்வாஹகாத்-சிறிய கிராம நிர்வாகன் -சர்வ லோக நிர்வாகன் –
ஐஸ்வர்யம் யதிஹோத்த ரோத்தர குணம் அஸ்தி -உத்தர உத்தர ஐஸ்வர்யம்
துங்கம் -மேரு போன்ற உன்னதமான வஸ்து சமூகம்
மங்கள -சந்தன குஸூம ஹரித்ரா குங்குமாதிகளாய்க் கொண்டுள்ள மங்கள வஸ்து சமூகம்
முஜ்ஜ்வலம் -மணி த்யுமணி தீபாதிகளாய்க் கொண்டுள்ள பிரசுர பிரகாச யுக்தமான வஸ்து சமூகமும்
கரிமவத் -ஹிமவான் மந்தரம் மைநாகம் -மலைகளாய்க் கொண்டு குருத்வ யுக்தமானவை
புண்யம் -யாகாதிகளான பரலோக சாதன பூத ஸூஹ்ருத்துக்கள்
புன பாவனம்-பின்னையும் கங்கா சரஸ்வதி காவேரி -பிறப்புறுதிகளான பரிசுத்தி கரங்கள் சமூகம்
தன்யம்-நவ நிதி ரூபமாய்க் கொண்டு பாக்ய பலரூப வஸ்து சமூகம்
யத் அஸ்தி தததச்ச -யாது ஓன்று உள்ளதோ இப்படிப்பட்ட மேம்பட்ட வஸ்துக்கள் எல்லாம்
விஷண  புவஸ் தேபஞ்சஷா விப்ருஷ -தேவரீருடைய கடாக்ஷ கந்தளி தங்களான
ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

ஆழ்வானும் ஸ்ரீ ஸ்தவத்தில் –
ஐஸ்வர்யம் மஹதேவ வா அல்பமதவா –
ஐஸ்வர்யம் யத் சேஷ பும்ஸி –

என்ற இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்தவற்றையே இங்கு இவர் ஸங்க்ரஹித்ததாயிற்று

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

—————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி
ஏகோ மநுஷ்ய த்ருப்யத் தந்தாவளஸ்தோ–மத்த வாரணத்தில் வீற்று இருந்து
முக்தாத பத்ர ப்ரசலமணி கணாத்காரி மௌளிர் -முத்துக் கொற்றக் குடைக் கீழே -ரத்ன சரங்கள் கண கண ஒலிக்க திரு முடியை உடையவனாய்
ந தான் ஷோணி பாலான்-அச்சமயத்தில் தன்னை வணங்கின அரசர்களை
ஷணம் ந கணயதி ந தான் யத்-நொடிப்பொழுதும் லஷ்யம் செய்யாது இருக்கும் ஐஸ்வர்ய காஷ்டை யாது ஓன்று உண்டோ இதுவும்
அந்யோ மனுஷ்ய -வேறு ஒரு மனிதன்
க்ருபணம் யதா ததா -தந்த பங்க்தீ-தர்சயன் -பல் வரிசைகளைக் காட்டி தஸ்மை திஷ்டதே யதி யத் -தாரித்ய காஷ் டையை சொன்னவாறு
தத் தே நயனோ தஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண விஸ்தாரத்தாலும் சங்கோசத்தாலுமே -யாகும்
கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஓர் காவலராய் விண் தோய் வெண் குடை நிழலின் கீழ் விரி நீர் உலகாண்டு -பல ஸ்ருதி-
இவள் கடாக்ஷ உதஞ்சி தன்யஞ்சிதங்களும் தத் தத் கர்மானுகுணமாகவே யாகுமே –

யானை மீதே இருந்தாலும் யாசகத்வத்தைக் காட்டிக்கொண்டு இருப்பதை -தஸ்மை திஷ்டதே -என்ற பிரயோகம் காட்டும்
தந்த பங்க்தீ -ஏக வசனமாகக் கொள்ளும் பாடத்தை விட த்வி வசநாந்தமான பாடமே சிறக்கும்
கர்ம நிபந்தனமாகவே என்று ஸ்ருதி பல இடங்களிலும் பறையா நிற்க இங்கு பிராட்டி கடாக்ஷ நிபந்தம் என்றது -இதுவும் தத் தத் கர்ம அநு குணமாகவே யகுமாதலால் -பொருத்தமே

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.

வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.

பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.

ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.

———————–

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:
–17-

அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே
-பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப்புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப்புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி
-ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

———————–

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்
–18-

ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கேட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

——————

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:
–19-

ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்

உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

———————

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–2
0-

விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேச்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்சய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விச்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குணத்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே  கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

—————————

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:
–21–

ஹே மாத –
தத் விஷ்ணோ பரமம் பதம்  தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–அந்த திரு நாடு தேவரீருக்காகவே என்பர் வைதிகர்கள்
வைகுண்டேது பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர்ப் பாகவதைஸ் ஸஹ -என்று
திவ்ய தம்பதிகளுக்கும் ஆஸ்தானமாக இருந்தாலும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப -4-9-10- பிராட்டிக்கே பிரதான்யம் என்னக் குறை இல்லையே
யத்தூரே மனசோ -இப்படிப்பட்டது என்று நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாதது -யாருக்கு என்று இங்கு இல்லையாகிலும் –
ப்ரஹ்மாதீநாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மத வைகுண்டே திவ்ய லோகே -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
யதேவ தமஸ பாரே-பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளதோ
யத்யத்புதம்–அநு க்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம்
யத்காலா தபசேளிமம் -கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம்
ஸூரபுரீ யத் கச்சதோ துர்கதி-ஸ்வர்க்காதி லோகங்கள் துர்கதியாக அன்றோ இங்கு செல்பவர்களுக்கு
ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந -என்றபடி நரக நிர்விசேஷமாய் தோற்றுமே
சாயுஜ்யச்ய யதேவ ஸூதி -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
அதவா மத் கிராம் யத் துர்க்ரஹம்-திவ்ய தம்பதியின் திவ்ய அனுக்ரஹத்தால் எதையும் விவரிக்க வல்ல இவரே
தம்முடைய வாக்குக்கு எட்டாது என்கிறார் -ப்ரஹ்மாதிகள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது என்பது இதற்கு ஒரு சிறப்போ
பெரிய திருமொழி -6-3-4- சாந்தேந்து மென் முலையார் பாசுர வியாக்யானம்-ஐதிக்யம் –
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்ததாக பலகாலும் சொல்லும் -நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ
பட்டரும் வியவஹிக்கிறது என்று இருக்க ஒண்ணாது -அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு –
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிராயாய்த் தோற்றும் –
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும்
இப்படிப்பட்ட திரு நா வீறு பெற்ற தமக்கும் வருணிக்க நிலம் இல்லை என்பது விலக்ஷண வாக் விந்யாஸமே யாகும்
ஆக இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்
மேலே -23-ஸ்லோகத்தில் -பகவதி யுவயோராஹுரா ஸ்தானம் -என்று
திவ்ய தம்பதிகள் இருவருக்கும் உரித்ததாகச் சொல்வதோடு இது விரோதியாது –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———————-

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீ ரங்கேச்வர தேவி
இதம் அகிலம் சராசரம் தவ ஹேலாயா -தேவர் திருக்கையிலே விநியுக்தமாய் இரா நின்றது –
த்வம் ந்யஞ்சத் பிரு தஞ்சத்பி -கர்ம ஸூத்ரத்தோபாதி க்ரீடாகந்துகைரிப ஐந்துபி -லீலா விபூதி அன்றோ இது
போகே விபூதி பரா-த்ரிபாத் விபூதி போகத்தில் விநியுக்தமாய் இரா நின்றது -நலமந்தம் இல்லாதோர் நாடு-
யே ஸூ ரய சதா பச்யந்தி தே புண்யா பரிசார கர்மணி-நித்ய முக்தர்களில் கைங்கர்யங்களிலே விநியுக்தர்கள்–
ஆகிலும் பணி செய்வது க்ருஹணிக்கு இறே
வயம் கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே -புபுஷுக்கள் முமுஷுக்கள் -அஸ்மதாதிகள் -நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு ஒரு படி சேஷபூதர்
சேஷித்வே பரம புமான் –பரமபுருஷன் சேஷி -கைங்கர்ய பிரதிசம்பந்தி
ஏதே தவ ஸ்பாரணே பரிகரா ஹி -சகலமும் தேவரீருடைய பெருமையில் சொருகி நிற்கும் அத்தனை –
உமக்கு உறுப்பு இல்லாத வஸ்து உபய விபூதியிலும் இல்லையே –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

——————————–

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேஸ்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி–ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு அலங்காரமான தேவரீர்
யா புரீ ஆஜ்ஞா நுக்ரஹ பீம கோமல புரீ பாலா –எந்த திவ்ய நகரியானது ஆஜ்ஜையாலே பயங்கரர்களாயும்
அனுக்ரஹத்தாலே ஸுமயர்களாயும் உள்ள நகர பாலர்களை யுடைத்தாய் இரா நின்றதோ –
ஸ்மேரா ந நாஷி கமலைர் நமத புநாநாந் பேஜூஷாம் தம்ஷ்ட்ராக தாப்ரு குடிபிர் த்விஷ தோது நாநாந் -ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பாகவதருக்கு -அனுகூலர் -புன்முறுவல் -கடாக்ஷம் -புனிதம் ஆக்குவார்கள்
பிரதிகூலரை கோரப்பற்கள் தடி புருவ நெறிப்பு-கொண்டு பயங்கரராய் இருப்பார்கள் -போலே
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பரம புருஷார்த்தம் –
ய அயோத்த்யேதி அபராஜிதேதி விதிதா –அயோத்யா -யாரும் யுத்தம் பண்ணி ஆக்கிரமிக்க ஒண்ணாத –
அபராஜிதா -ஒருகாலும் பராஜயம் அடைய முடியாதே
நாகம் பரேண ஸ்த்திதா–பொன்னுலகு -ஹிரண்மயபுரி –
பரேண நாகம் புரி ஹேம மயயாம் வோ ப்ரஹ்ம கோ சோஸ்தி அபராஜி தாக்க்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
ஸூதா ச்யந்திபி அத்புத போக பூம கஹநைஸ் பாவைஸ் ஸாந்தரா -அங்குள்ள பதார்த்த விசேஷங்கள் –
ஸூதா ச்யந்திபி பாவைஸ்-அமுத பெருக்கு -பரம போக்யம் –
அத்புத போக பூம கஹநைஸ்-ஆச்சர்யமான ஸூ க அனுபவ பிரகர்ஷம்
ஸாந்தரா -இப்படிப்பட்டவைகளால் மிகுந்த
தாம் யுவயோஸ் ராஜதாநீம் விது -இப்படிப்பட்ட திவ்ய புரி –
திவ்ய தம்பதிகளுடைய ராஜ தானி யாக வேதாந்திகள் அறிகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

—————-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–

ஹே பகவதி ஸ்ரீர்-
தச்யாஞ்ச -கீழில் சொன்ன ராஜ தானியிலே
ஆஸ்தாந ரத்னம் -யுவயோராஹூ -திவ்ய தம்பதிகளுக்கு உரித்தான திரு மா மணி மண்டபம் ஒன்றை வேதாந்திகள்
இவ்வாறு சொல்கிறார்கள் -எப்படி எண்ணில்
த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்-தேவரீருடைய நிரவதிக திருவருள் போலே
நிரவதிகர்களான நித்ய முக்த திரள்கள் விஸ்ரமிப்பதற்கு உறுப்பான அவகாச விசேஷம்
தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை சங்கீர்ணம்-ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குதூஹலத்தாலே
வெண் கொற்றக் குடை சாமரம்-போன்ற உபகரணங்களை ஏந்தி ஆனந்த பரவசர்களாக
ஆனந்த நிக்நை-இது உகந்த விஷயத்தில் இருப்பதால் –
ஸ்நேஹாத் அஸ்தாந ரஷா வ்யஸந அபிர் சார்ங்க சக்ர அசி  முக்யை அபயம் -பொங்கும் பரிவாலே அஸ்தானே பய சங்கை –
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் -10-
அந்யதா ஞான ப்ரயுக்தம் திருநாட்டிலுமா என்றால் -ஸ்நேஹாத் -ஞான தசையில் ரஷ்ய ரக்ஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்-
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்குமே
ஆநத்தை கார்ணவம் -ஆனந்த ஏக ஆர்ணவம் -அபரிச்சின்னமான ஆனந்தமே யென்று சொல்லும் அத்தனை
ஒழிய வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
திவ்ய தம்பதிகளுடைய திவ்ய பாகத்துக்கு ஏகாந்தமான இடம் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

——————–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

ஹே தேவி
தத்ர -அத்திரு மா மணி மண்டபத்திலே -அனந்த போக விஸ்தீர்யம் -என்பதிலே இதுக்கு அந்வயம் –
திருவனந்த ஆழ்வான் திருமேனி விவரணம் மேலே –
ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் -புஷ்ப மாலை போன்ற ஸ்பர்சம் பரிமளம் -ஸுகுமார்யம் ஸுகந்த்யம் -மேலும்
ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்–பணங்களின் மணித்திரள்களின் நின்று தோன்றும் தேஜஸ் புஞ்சமே-
ஜ்யோதிர் மண்டலமே விதானம் – மேல்கட்டி
அநந்த போகம் விஸ்தீர்ய -திருமேனியை மெத்தையாக விரித்து
ததுபரி அது மேலே -நிவஸ்ய
விஸ்வம் ஏகாத பத்ரம் நயதா -மேலே காந்தேந -என்பதுக்கு விசேஷணம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர்
வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல –
ஈரரசு தவிர்த்து ரசித்து அருளும் எம்பெருமான்
அசந்க்யை தைஸ் தை சாந்தோதித குண விபவைர் த்வாம் அர்ஹதா -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு –
துல்ய சிலா வாயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோர் ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா
சாந்தோதித குண விபவைர்-நித்யோதித தசை என்றும் சாந்தோதித தசை என்றும் இரண்டு உண்டே –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
தன்னுடைய விஸ்வரூபத்தை அனுபவிக்கும் தசையே சாந்தோதித தசை
அசந்க்யேயை-எண்ணிறந்த திருக்குணங்கள் –
தைஸ் தை-அநீர்வசனீயன்கள்
காந்தேன ஸஹ -அழகிய மணவாளனுடன்
அந்யோன்ய அத்வைத நிஷ்டாக நரசகஹ நான் தேவி போகான் –பத்நாசி-பரஸ்பரம் வ்யக்தி பேதம் காண அரிதாம்படி
ஒரு நீராகக் கலந்து பரிமாறும் -இன்சுவையே வடிவெடுத்த திவ்ய போகங்களை அனுபவிக்கிறீர் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

—————————

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
–26-

வாமபி நாந்தரீயகதயா போக்யா-நாந்தரீயகம் -என்றது உபகரணம் –
புஷ்பாங்க ராகைஸ் சமம்–குஸூம சந்தனாதிகள் போலே
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்–ஏரியில் நீர் நிரம்பினால் உடைத்துக் கொண்டு போகாமைக்காக –
ஸாத்மிகைக்கு கலுங்கல் எடுத்து விட்டால் -உள்ளே தேங்குகிற நீரும் புற வெள்ளம் இடும் நீரும் ஒன்றே –
பரஸ்பரம் புத்தி பேதம் கொள்ளாதே -வெளியிலே தள்ளினார்கள் என்று வெறுக்காதே
பூரோத்பீடே தடாகஸ்ய பரீ வாஹ ப்ரதிக்ரியா -உத்தர ராமசரித ஸ்லோகம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரம் ததா–தேவீ பிரதான போக்யகோடி –
மற்றைய தேவிமார்கள் அவளை அனுசரித்து நிற்பார்கள்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தவனை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்-
யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே –தம்முடைய ஸ்தன புஜாதிகளான
அவயவங்களாகவே இவரும் அவர்களை நினைத்து இருப்பார்

தக்கார் பல தேவிமார் சால உடையீர் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் மால் ஓத வந்தனர் மனம் -முதல் திருவந்தாதி
இதுக்கு அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்பதை உப லக்ஷணம் ஆக்கி
சவ்பரி போலே ஒவ் ஒரு திவ்ய மஹிஷியுடன் ஒரு நீராக கலக்கிறான்
பட்டர் நிர்வாகம் -திவ்ய பூஷணம் திவ்ய பீதாம்பரம் -பரஸ்பரம் மாத்சர்யம் கொள்ளுமவை அல்லவே –
திருத்தோள் திருக்கண் அவயங்கள் ஒன்றில் ஈடுபடும் பொழுது மற்று ஓன்று ஸ்ர்த்தை கொள்ளாதது போலே
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -அசித்வத் பாரதந்தர்யம் -சீமா பூமி –
உபகரண கோடியில் அந்வயம் -ச பத்னீ ஸுஹார்த்த வைபவம் சொல்லிற்று ஆயிற்று

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

————-

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–

ஹே ஜனனி
தே சாத்யாஸ் ஸந்தி தேவா -ஸ்ருதியை பின்பற்றி -நித்ய முக்த பரிசாரர்களாக விளங்கா நிற்க
குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை- நித்ய நிர்த்தோஷ கந்தா -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே அழுத்தாமல் –
குண-அபஹதபாப் மத்வாதி குணங்கள் / வபுர்-திவ்ய மங்கள விக்ரஹம் -/ வேஷ-சங்கு சக்ராதிகள் தரித்த வேஷம்
வ்ருத்தமே -ஆஞ்ஞா அனுக்ரஹாதி வியாபாரம் / ஸ்வரூபை -ஞான ஆனந்த அமலத் வாதி ஆத்ம ஸ்வரூபம் /
பகவத் அனுபவ விபூதி அனுபவங்கள் -இவற்றில் வாசி இன்றிக்கே-பரம சாம்யா பன்னராய் இருக்குமவர்கள் –
போகைர்வா நிர்விசேஷாஸ்  -சிறிதும் பேதம் இல்லாமல் இருப்பவர்கள்
திவ்ய தம்பதிகள் உடனும் தம்முடனும் பரஸ்பரம் -பேதம் இல்லாமல்
அத ஏவ சவயச இவ -நண்பர்களை போலே இருப்பவர்கள்
சதாபி – ஸ்ரீ ரங்க பர்த்துஸ் தவச பத பரீசார வ்ருத்யை -மிதுனத்தில் நித்ய கைங்கர்யத்தின் பொருட்டே
யாயிற்று அவர்களுடைய சத்தை –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –
ப்ரேம ப்ரத்ராண பாவ-பிரேமத்தினால் கசிந்த நிலை கொண்டும்
ஆவிலஹ்ருதய-ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே நிலை கலங்கின நெஞ்சு கொண்டும் இருப்பவர்கள்
ஸ்நேஹாத் அஸ்தாநே ராஷா வ்யசநிகள் இறே
உற்றேன் உகந்து பணி செய்து –உள் கனிந்து எழுந்ததோர் அன்பினால் நெஞ்சு உருகி நிற்கும் அளவில்
கைங்கர்யம் செய்து அல்லது நிற்க முடியாமல்
பிரேம பலாத்காரத்தாலே அடிமை செய்து அது தன்னையே போகமாகக் கொண்டவர்கள் –

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———————-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

ஹே -சந்தர வதநே-மாதச் – ஸ்ரீ-அடியாரை உகப்பிக்க வல்ல திரு முக மண்டலம் உள்ள தாயாரே
நிஷ்கர்ஷ ஸமயே-சாஸ்த்ரார்த்தை நிஷ்கர்ஷித்து தெளிந்து சொல்லும் அளவில் –
பகவத இதம் ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம்
த்வதாச் லேஷாத் கர்ஷாத் கலு பவதி –தேவரீருடன் சேர்த்தியாலே தான் எம்பெருமானுக்கு ஸ்வா தந்தர்ய ஸ்வரூபம் சித்திக்கும்
கமிது இதமித் தந்தவ விபவ த்வம் ஆஸீ –தேவரீர் எம்பெருமானுக்கு வைபவம் –
திரு இல்லாத் தேவரை தேறேன்மின் தீவு -ஸ்ரீ யபதித்வமே பரத்வ லக்ஷணம்
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் பிதத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ ஸூக்தம் சிறிய பகுதியாக இருந்தாலும் –
ஸ்வரூப நிரூபக தர்மமாக அவனில் அந்தர்பவித்து இருப்பதால் கரை கட்டாக் காவேரியான வேதங்களில்
அவனைச் சொன்ன இடங்கள் அனைத்தும் தேவரீரையே சொல்லிற்றாகும் –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————–

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே
–29-

கமலே-ஈசம் -தவ ஸ்பர்சாத் மங்கள பதம் ஸ்ப்ருசதி -மங்கள ஸ்வரூபையான -உம்முடைய சம்பந்த நிபந்தனத்தாலே –
ஐஸ்வர்யம் யத சேஷ பும்சி யதிதம் ஸுந்தர்ய லாவண்ய யோ ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே
சதித் யுச்சதே தத் சர்வம் த்வத் அதீனம் ஏவ – ஸ்ரீ ஸ்தவம் –
இதம் தவ உபாதே ரூப நிபதிதம் ந -தேவரீருக்கு மங்களம் இதர சம்பந்த நிபந்தநம் அன்று -அத்தை விவரிக்கிறது மேலே –
ஸ்ரீரசி யத-யத த்வம் ஸ்ரீ ரசி -தத ஏவ இதம் தவ உபாதேர் நோப நிபதிதம் -என்று அந்வயம்
ஸ்வாபாவிகமான இதனை ஓவ்பாதிகம் என்ன ப்ரஸக்தியே இல்லையே
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம்
பரிமளத்தை இட்டே பு ஷ்பத்துக்கு சொல்கிறோம் -பரிமளத்துக்கு இப்படி ஒரு நிர்பந்தம் இல்லையே -ஸ்வத சித்தம் அன்றோ –
தாம் ஜிகதிஷூ ஏவம் த்வாத் ஏவம் ஸ்வ தத இதி ந ஹி கவயதே -பரிமளத்தின் சிறப்பை சொல்கிறவன்
அதுக்கு ஒரு காரணம் சொல்வது இல்லையே –

மங்களம் பகவான் விஷ்ணுர் மங்களம் மது ஸூதந -மங்களம் புண்டரீகாஷோ -மங்களம் கருடத்வஜ –
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாஞ்ச மங்களம் -உம்முடைய சம்பத்தாலே அவனுக்கு –
தேவரீருக்கு நிருபாதிகம் அன்றோ –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

———————-

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.
–30–

ஹே ஸ்ரீ தவ பூயாம்சோ-அபாங்கா- யதுபரி பதிதா தத் பரம்ப்ரஹ்மம் அபூத்–தேவரீருடைய விஞ்சிய கடாக்ஷ வீக்ஷணங்கள்
எந்த வியக்தியின் மீது விழுந்தனவோ அதுவே பர ப்ரஹ்மம் ஆனது
அமீ யத்ர த்வித்ராஸ் சச சத மகா திஸ் தததராத்–சில திவலையாக பிரசுரித்த இடம் ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகள் திக் பாலர்கள்
அத தத் உபயம் உசன் ஆம்நாய த்வாம் ப்ரணி ஜகௌ-இரண்டையும் பேசா நின்ற வேதம் தேவரீரையே பேசிற்றதாகுமே
பிரசஸ்திஸ் சா ராஜ்ஞோ  யதபிச புரீ கோச கதநம் –நகரத்தையும் அதில் உள்ள நிதியையும் வர்ணித்தால் அத்தை ஆள்கின்ற
மஹா பிரபுவையை தானே குறிக்கும் –
அப்படியே தேவரீருடைய கடாக்ஷ அதீன சத்தா சாலிகள் ஆனவர்களைச் சொல்லும் வேதமும்
தேவரீருடைய உத்கர்ஷ கீர்த்தனமே ஆகும்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–
31–

ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத  ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதா யத்தர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
நவிகுணம்-பவதி-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

——————————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப்படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி
மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ச்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –

சாம்யாபத்தி சாம்யா ஸ்ருதி
ஸஹ ஸ்ருதி -கூடவே இருந்து அனுபவம்
சாதாரம்ய ஸ்ருதி -மூன்றுமே உண்டே –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?

——————-

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி -/
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை -/
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் /க்ஷமை-பொறுமை /
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————————–

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-

ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ  -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய பாஷாணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–
36-

ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.

தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ப்ரணம தநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்
–38-

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே
–39-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————-

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–
40-

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–

ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–
42-

பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————————————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:
–43–

ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-

ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே -டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா  ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————-

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்
–45–

அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

————————-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–4
6–

ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ

பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்பலதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநகரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணிசரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதிசப்த ஸ்தானீயம்

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——————

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–
47-

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –

தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் / பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் /
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

——————

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

பிதா ஹிதபரன் -சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி -உண்டே
தாய் பிரிய பரம் -தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவில் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ –
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அலகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு -சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.

அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலா கற்றனையோ கரிய கோவே
பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்
எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்
கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்
யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————–

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தசமுகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——————————

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–

அவனுடைய சர்வபிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமிதஉம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைச்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் -ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ரா ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-

அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பாரா துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்

————————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————————

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-

ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.

பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .

——————-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-

தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.

சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————–

ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்

ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரேச விம்சதி–ஸ்ரீ கூரநாத பஞ்சாஸத்

March 9, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ சீராமப்பிள்ளை என்னும் வேத வியாஸ பட்டரின் திரு மகனாரான ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ கூரேச விம்சதி

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ கூரேச பஞ்சாஸாத்

——-

ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம் ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் ஸூப குணம் வாஸாம் ஜயி ப்ராதரம்
லோகார்ய ப்ரணவம் ததுக்தி ரஸிகம் ஸர்வஜ்ஞ பட்டாரகம்
வந்தே தம் புவி விம்சதிம் வ்யதநுத ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய ய
–ஸ்வாமி பற்றிய தனியன் இவர் வம்சத்தவர் அருளிச் செய்தது

ய-யாவர் ஒருவர்
புவி -உலகில்
ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய–கூரத்தாழ்வானைப் பற்றிய
விம்சதிம்-இருபது ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரத்தை
வ்யதநுத- –அருளிச் செய்தாரோ
தம் -அப்படிப்பட்ட
ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம்-ஸ்ரீ ரெங்கத்தில் விளங்குகிற நடுவில் திருவீதியை இருப்பிடமாகக் கொண்டவரும்
ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம் -வேத வியாஸ பட்டர் என்னும் ஸ்ரீ ராம மிஸ்ரரின் திருக்குமாரரும்
வாஸாம் ஜயி ப்ராதரம் –வாக் விஜயி பட்டரின் ஸஹோதரும்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் –ஸ்ரீ பராசர பட்டரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்
லோகார்ய ப்ரணவம்-லோகாச்சார்யராகிய நம்பிள்ளையிடம் பக்தியை யுடையவரும்
ததுக்தி ரஸிகம் –அந்த நம்பிள்ளையின் ஸ்ரீ ஸூக்திகளின் சுவை யறிந்தவரும்
ஸூப குணம் –நல்ல குணங்களைக் கொண்டவருமான
ஸர்வஜ்ஞ பட்டாரகம் –ஸர்வஜ்ஞ பட்டரை
வந்தே –வணங்கி ஸ்துதி செய்கிறேன்

கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் இருவருக்கும் ரெங்கநாதன் ராம மிஸ்ரர் இயற் பெயர்கள்
எம்பெருமானார் இவர்களுக்கு பராசர பட்டர் என்றும் வேத வ்யாஸ பட்டர் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்-இவரது சகோதரரே வாக் விஜயீ பட்டர்

———

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா
ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே
ஸ்ரீ மச் சட ப்ரமதநே ஸ்திர பாவ பந்தம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரு மந்வஹம் ஆஸ்ரயாமி
–1-

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே–திருவரங்க நாதனுடைய கருணை பொங்கிய திருக்கண் பார்வையினால் அடையப் பெற்ற ஸகல ஸத் குண ஸமூஹங்களாலே மிகவும் விளங்குகின்ற
ஸ்ரீ மச் சட ப்ரமதநே -ஸ்ரீ கிருஷ்ண பக்தியாகிற செல்வத்தைப் பெற்ற சடகோப முனிவரிடத்தில்
ஸ்திர பாவ பந்தம்–நிலை பெற்ற திரு உள்ளப் பிணைப்பை யுடையவரான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –கூரத்தாழ்வானாகிய ஆசார்யரை-திரு மறு மார்பன் -ஆழ்வானுக்கு தந்தையரால் இந்த திரு நாம கரணம்
அந்வஹம் –தினந்தோறும்
ஆஸ்ரயாமி –ஆஸ்ரயிக்கிறேன் -ஸேவிக்கிறேன்

ஆழ்வார் இடம் பக்தியை ஆழ்வானுக்கு முதல் யோக்யதையாக அருளிச் செய்கிறார்
சடவாயுவை ஹூங்காரத்தாலே ஒறுத்து ஒட்டிய ஆழ்வார்
சட -வஞ்சனை -வேதத்தை இல்லை செய்யும் பாஹ்யர் -விபரீத அர்த்தங்களை சொல்லும் குத்ருஷ்டிகள் -ஆகிய வஞ்சகர்களை நிரஸித்து அருளியவர் என்றுமாம்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே

இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள்
என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்

லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை
–இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை
–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும்

அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
–என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
-என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே
-என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே
ஸ்ரீ லஷ்மணே முநிவரே அர்ப்பித ஸர்வ பாரம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அன்வஹம் ஆஸ்ரயாமி
–2-

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே –ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளில் ஈடுபட்ட திரு உள்ளமுடையவரும்
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே -பெரிய நம்பிகள் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டரிடம் இருந்து பெறப்பட்ட மோக்ஷ உபாயம் யுடையவருமான
ஸ்ரீ லஷ்மணே முநிவரே –பகவத் ராமானுஜராகிய முனிவர் இடத்திலே
அர்ப்பித ஸர்வ பாரம் –ஒப்படைக்கப்பட்ட -தம்மைக் காக்கும் -பொறுப்பு அனைத்தையும் யுடைய
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –ஸ்ரீ வத்ஸ சிஹ்நர் என்னும் ஆச்சார்யரை
அன்வஹம் ஆஸ்ரயாமி –தினந்தோறும் ஸேவிக்கிறேன்

பெரிய நம்பிகளுடைய இயற்பெயர் ஸ்ரீ மத் பராங்குஸர் -பெரிய வண் குருகூர் நம்பி -என்பதனுடைய ஸங்க்ரஹம் என்பர்
யோ நித்யம் அச்சுத -ஸ்லோகத்தில் ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -ப்ரஸித்தம் அன்றோ -பர ஸமர்ப்பணம் சரணாகதனுக்கு ஏற்படும் ஸ்வ பாவம் தானே
லஷ்மீ வாந் லஷ்மண -ஸ்ரீ இவ ஸ்ரீ மான் -இளைய பெருமாள் தானே பெரிய திருமலை இவருக்குச் சாற்றிய திரு நாமம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய
–ஸூந்தர பாஹு ஸ்தவம்-129-

ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

ஆசார்ய வர்ய விபவஸ்ய ச ஸிஷ்ய வ்ருத்தே
ஸீமேதி தேஸிக வரை பரி துஷ்யமாணம்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அந்வஹம் ஆஸ்ரயாமி –
-3-

ஆசார்ய வர்ய விபவஸ்ய -மஹா ஆச்சார்யருக்கு உரிய பெருமையும்
ச ஸிஷ்ய வ்ருத்தே –சத் சிஷ்யருக்குத் தக்க நடத்தையும்
ஸீமேதி –இவரே எல்லை நிறமானவர் என்று
தேஸிக வரை –ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களாலே
பரி துஷ்யமாணம் –மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெற்றவரும்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம் –எப்போதும் உள்ளதாய் குற்றம் அற்றதுமான கருணையினால் குளிர்ந்து விளங்குகின்ற கடைக்கண் பார்வையை யுடையவருமான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் -கூரத்தாழ்வானை
அந்வஹம் ஆஸ்ரயாமி –தினமும் ஸேவிக்கிறேன்

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-சூர்ணிகை -203-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று பேர் அருளாளன் இடம் வேண்டிக் கொண்டதால் இவருடைய ஆத்ம குணம் தோன்றும்
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே -என்கிறோம்
எம்பெருமானார் திருமேனி ரக்ஷணம் இவர் சோழ ராஜன் இடம் அவரது காஷாய த்ரி தண்டங்களைத் தாங்கிச் சென்று பரத்வ நிர்ணயம் செய்து நம் தர்சனத்திக்காக தர்சனம் இழந்தார் அன்றோ

வ்யக்தீ குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத ய ஸ்ரயசே சஞ்சநாநாம்
கூரா தீசம் குரு தர தயா துக்த சிந்தும் த மீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச் சாத்ர சீலைக தாமா–வைகுந்த ஸ்தவம்-முடிவு தனியன்

வேதாந்தங்களிலே பொதிந்து கிடக்கிற பொருள்களை விஸதீ கரித்து அருள நினைத்து
சத் புருஷர்களின் ஸ்ரேயஸ்ஸுக்காக
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தை அருளிச் செய்தவராயும்

மிகுந்த கருணைக் கடலாயும்
சாஸ்த்ர ஸித்தமான ஆச்சார்ய லக்ஷண
சிஷ்ய லக்ஷணங்களுக்கு
முக்கிய வாஸஸ் ஸ்தானமாயும்
உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்துதிக்கிறேன்

ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்  –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள்  காண் -என்கின்றான் –பெரிய திருமொழி -8-1- வியாக்யானத்தில் அருளிச் செய்யப்பட ஐதிக்யம்

———-

ராமாநுஜார்ய மத ஸிந்து விதோ குத்ருஷ்டி
பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே தயாளோ
–4-

ராமாநுஜார்ய மத ஸிந்து –எம்பெருமானாருக்கு இஷ்டமான விசிஷ்டாத்வைத மதம் என்கிற கடலுக்குப் பொங்குதலை யுண்டு பண்ணும் சந்த்ரனே
விதோ குத்ருஷ்டி பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ –வேதத்துக்கு அவப்பொருள் கூறும் சங்கராதிகளாலும் வேதத்துக்குப் புறம்பான ஜைன புத்தாதிகளாலும் உண்டாக்கப்பட்ட அஞ்ஞானமாகிய இருளின் திரட்சியைப் போக்கும் ஸூர்யனே
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய –அடியேனுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பராசர பட்டருக்கு தந்தையானவரே
தயாளோ –தயையை யுடையவரே
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே –கூரத்தாழ்வானே தேவரீர் அடியேனுக்கு தஞ்சமாக வேணும்

கீழ் மூன்று ஸ்லோகங்களாலே தாம் ஆஸ்ரயிப்பதாகக் கூறி –
இதில் அவரையே ஸம் போதித்து அடியேனுக்கு உபாயமாக வேணும் என்று பிரார்திக்கிறார்
ஆச்சார்யரை சரண் அடைவது போல் பரமாச்சார்யாரையும் சரணம் அடைய வேண்டும் என்பதை
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-என்ற அநந்தரம்
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2–என்று மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்க ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணார விந்த
ஸேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூ பூர்ணாந்
பட்டார்ய வர்ய நிகமாந்த முனீந்த்ர லோக
குர்வாதி தேஸிக வராந் சரணம் ப்ரபத்யே
–5-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் –கூரத்தாழ்வான் தேவரீருடைய
சரணார விந்த ஸேவாம்ருதைக ரஸிகாந் –திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யமாகிய அம்ருதம் ஒன்றையே சுவைப்பவர்களும்
கருணா ஸூ பூர்ணாந் –தயையினால் மிகவும் நிறையப் பெற்றவர்களுமான
பட்டார்ய வர்ய –தேவரீர் திருக்குமாரராய் அடியேனுக்கு ஆசார்யரான ஸ்ரீ பராசர பட்டர் என்ன
நிகமாந்த முனீந்த்ர லோக குர்வாதி தேஸிக வராந் -அவரை ஆஸ்ரயித்த நஞ்சீயர் என்ன -அந்த நஞ்சீயர் சிஷ்யரான நம்பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை
சரணம் ப்ரபத்யே –சரணம் பற்றுகிறேன்

கீழ் ஆழ்வானைச் சரணம் பற்றியவர் அவருடைய உகப்புக்கு இலக்காகிய சிஷ்ய பரம்பரையும் சரணம் புகுகிறார்
லோக குரு –நம்பிள்ளைக்கு -கந்தாடை தோழப்பரால் உகந்து சாற்றப் பெற்ற நாமம்
தேசிக திசதி –உபதிசநீதி தேசிக வ்யுத்பத்தி -ஹித உபதேசம் பண்ணும் ஆச்சார்யனுக்குப் பெயர் ஆயிற்று
புருஷகார சரணாகதியாகவும் ஆழ்வானுக்கு ப்ரீதி கார்யமாகவும் சரணம் புகுகிறார்

மா முனிகளும் ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாநி மூர்த்நா என்றும் ஸ்ரீ வத்ஸ சிஹ்ந சரணம் யதிராஜ மீடே –
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாதாநு சிந்தந பர –என்று அருளிச் செய்துள்ளார் அன்றோ

——————

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய பராஸரஸ்ய
குர்யாம் மதந்வய குரோ குருதாம் கதஸ்ய
கூராதி பஸ்ய குண சிந்த மந்தரங்கை
–6-

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந –ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் தமது திருக்கைகளாலே எடுத்துச் சீராட்டப் பெற்றதனால்
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய –நன்றாகக் பெற்ற எல்லாப் பெருமைகளையும் யுடையவரும்
மதந்வய குரோ-அடியேனுடைய குலத்திற்குத் தலைவருமான
பராஸரஸ்ய -ஸ்ரீ பராசர பட்டருக்கு
குருதாம் கதஸ்ய –தமப்பனார் உகந்த தன்மையை அடைந்த
கூராதி பஸ்ய –கூரத்தாழ்வானுடைய
குண சிந்தநம் –குண அனுபவத்தை
அந்தரங்கை (ஸஹ )–நெருங்கிய நண்பர்களுடன் கூடி
குர்யாம் -செய்யக் கடவேன்

கீழ் ஆழ்வானுடைய சிஷ்ய பரம்பரைகளைச் சரணம் பற்றி இதில் அவர்களுடன் சேர்ந்து ஆழ்வானுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறார்
ஸதாச்சார்யனுடைய குண அனுசந்தானம் அன்றோ ஸச் சிஷ்யனுக்கு உத்தாரகம்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உசாத்துணையாக இருந்த ஞானமும்
பகவத் குணங்களில் ஆழங்கால் பட்டதால் ஆழ்வான் என்று உடையவரால் திரு நாமம் சாத்தப் பெற்றவரும்
வெள்ளித் தட்டையும் வீசி எறிந்து வைராக்யத்தையும் காட்டியதால்
நாலூரானுக்கும் பேற்றை பிராரத்த தயை போன்ற குணங்கள்
ஓரிருவர் அனுபவித்தாள் பரியாப்தி பிறவாமல் அந்தரங்கற்களான பலருடன் சேர்ந்து ஆனந்திக்க ஆசைப்படுவது யுக்தம் இறே
தமது ஆச்சார்யரான பராசர பட்டருக்கு பிதாவையும் ஆச்சார்யராகவும் இருக்கும் பெருமையும் அசாதாரணம் அன்றோ

பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று

காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம்
–திருவாசிரியம் முதல் பாசுர வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின்
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்17-

கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –

மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி

துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –

யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன –
இவர்களுடைய
பத லாலி தத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை –
புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ

மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –

—————

வைராக்ய பக்தி ஜலதே க்ருதி நஸ்ச ஸத்ய
ஸங்கல்பநஸ்ய ம்ருதி தாரிகணஸ்ய நாத
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந புரதஸ்தவ கந்து மேவ
நார்ஹோ அஹமேவமதுநா ப்ரலாபமி ஹந்த –
-7-

நாத ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
வைராக்ய பக்தி ஜலதே -வைராக்யத்துக்கும் பக்திக்கும் கடல் போன்றவரும்
க்ருதி நஸ் ச -பண்டிதரும்
ஸத்ய ஸங்கல்பநஸ்ய -நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தையும் சாதிக்க வல்லவரும்
ம்ருதித அரிகணஸ்ய –காமம் வெகுளி மயக்கம் போன்ற உட் பகைக்கூட்டத்தை அழித்தவருமாகிய
புரதஸ் தவ –தேவரீருடைய எதிரில்
கந்து மேவ -சென்று நிற்பதற்கும் கூட
ந அர்ஹோ அஹம் -குற்றங்கள் நிறைந்து குண லவ லேசமும் இல்லாத அடியேன் தகுந்தவன் அல்லன் -இப்படி இருக்க
ஏவம் அதுநா ப்ரலாபமி ஹந்த -இப்போது இங்கனம் ஸ்தோத்ரம் என்றிட்டு எதையோ பிதற்றுகிறேன் -கஷடம் அந்தோ -நைச்ய அனுசந்தானம் செய்கிறார்

க்ருதிந் -சப்தத்துக்கு தீ மான் ஸூரி க்ருதீ –க்ருதீ குசல -அமரகோசம் -பண்டிதன் -சமர்த்தன் –பண்டா ஞானம் -ஞானமுடையவன் என்றபடி

————

மயா விதூர மநஸாம் மதுராக்ருதீநாம்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அந்தர் கதோ அஸ்ய மஹோ விபயஸ் சராமி –
-8-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–வாரீர் கூரத்தாழ்வானே
மயா விதூர மநஸாம் –கபடத்திற்கு வெகு தூரத்தில் உள்ள மனதை யுடையவர்களும்
மதுராக்ருதீநாம் –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவர்களும்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம் –பொறாமை உலோபித்தனம் விஷய போகக்களிப்பு செருக்கு இவற்றால் அடியோடு விடப்பட்டவர்களுமான
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் –தேவரீர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினவர்களுக்குள்ளே
அஹம் அபி -அடியேனும்
அந்தர் கத –உட் பட்டவனாய்க் கொண்டு
விபயஸ் சாராமி -பயமற்றவனாய்த் திரிகிறேன்
அஹோ –ஆச்சர்யம்

ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமாநம் வ்யாஸஷ்டே –திருமேனி அழகே இவருடைய பெருமையை விளக்கும்
ஆழ்வானுடைய அடியவர்களின் பெருமையைச் சொன்னபடி
அவர்களில் ஒருவனாய்த் திரிகிறேனே

————-

கூராதிப த்ரி வித தாப நிதாந மேதத்
ஸம் ரஷ்ய ஹேயதர மேவ கலே பரம் ஹா
ஆத்ம ஸ்வரூபமதி நிர்மல மத்யுபேஷ்ய
தஸ்யா நுரூப பல ஸூந்ய இஹைவ வர்தே
–9-

ஹே கூராதிப –கூரத்தாழ்வானே
த்ரி வித தாப நிதாநம் அத ஏவ –மூன்று வித தாபங்களுக்கும் மூல காரணமாகையாலே
ஹேயதரம் –அடியோடே விடத்தக்கதான
ஏதத் -இந்த அசுத்தமான
மேவ கலே பரம் –சரீரத்தை மட்டுமே
ஸம் ரஷ்ய –நன்றாகக் காப்பாற்றி
அதி நிர்மலம் -மிகவும் பரி சுத்தமான
ஆத்ம ஸ்வரூபம் -பகவச் சேஷமான எனது ஆத்ம ஸ்வரூபத்தை
அதி யுபேஷ்ய -மிகவும் அலக்ஷியம் செய்து
தஸ்யா நுரூப பல ஸூந்ய -அத்தகைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தக்க மோக்ஷமாகிய பயன் பெறாதவனாய்
இஹைவ வர்தே –இவ்வுலகிலேயே இருக்கிறேனே
ஹா -கஷ்டம் -அந்தோ

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கிறது –
தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் ஆத்ம யாத்திரையில் அபேக்ஷையும் வேணும்
இவ்விரண்டும் இப்போது இல்லாவிட்டாலும் ஆழ்வான் சிஷ்யர்களோடு சேர்ந்து அவற்றையும் சம்பாதித்திக் கொண்டு ஆச்சார்ய அபிமானத்துக்கு இலக்காகி நிச்சயமாக முக்தி பெறலாம் என்று இந்த ஸ்லோகத்தினால் கருதினார் ஆயிற்று

————

ஜ்ஞாத்வாப் யக்ருத்ய கரணம் விஹிதா ப்ரவ்ருத்திம்
க்ரூர ப்ரமத்த இவ ஜாத்வநுதாபா ஸூந்ய
பாபாக்ருதிஸ் த்வதநு பந்தி ஷுஸஜ் ஐநேஷு
கூராதி பாஹமபி ஹ்ருஷ்ட மநாஸ் சராமி –
-10-

கூராதிப -கூரத்தாழ்வானே
யக்ருத்ய கரணம்-செய்யத் தகாத கார்யங்களை நாம் செய்கிறோமே என்றும்
விஹிதா ப்ரவ்ருத்திம் -ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட நல்ல கார்யங்களை நாம் செய்கிறோம் அல்லன் யென்றும்
ஜ்ஞாத்வா அபி -அடியேன் அறிந்து வைத்தும்
க்ரூர ப்ரமத்த இவ -கொலையாளியாக காம வெறியும் பிடித்தவன் போலே
ஜாது -ஒருக்காலும்
வநுதாபா ஸூந்ய -பச்சாதாபம் அற்றவனாய்
பாபாக்ருதிஸ் -மேலும் பாபாபிகளைச் செய்து -பாபமே வடிவு எடுத்தவனாக
அஹமபி -அடியேனும்
த்வதநு பந்தி ஷு ஸஜ் ஐநேஷு-தேவரீரைச் சேர்ந்த நல்லோர்கள் நடுவில்
ஹ்ருஷ்ட மநாஸ் -மனம் மகிழப்பெற்று
சராமி –ஸஞ்சரிக்கிறேன்
ஹா -கஷ்டம் அந்தோ

————

கூராந் வயஸ்ய தவ தோஷ சயஸ் தவேஹம்
ஸர்வ ஆத்மநாபி மத ஏவ ஹி வத்ஸலஸ்ய
ஸ்வாமிந் ஸ்ததாபி மம தத் கரேண து ஹந்த
தாபோ பவத் யஹரஹ கத முத்ஸஹேய –
-11-

ஸ்வாமிந் –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
தோஷ சயஸ் தவே–சொற் குற்றம் பொருள் குற்றமே வடிவெடுத்த தேவரீரைப் பற்றிய ஸ்தோத்ரம் செய்யும் விஷயத்தில்
கூராந் வயஸ்ய –அடியேன் போல் கூர குலத்தில் உதித்தவரும்
வத்ஸலஸ்ய-தோஷங்களைக் குணமாக நினைப்பவருமாகிய
தவ –தேவரீருக்கு
அஹம் –அடியேன்
ஸர்வ ஆத்மந-எல்லா வகையாலும்
அபி மத ஏவ ஹி –இஷ்டமானவனே அன்றோ
ததாபி -அப்படி இருந்தாலும்
மம து -எனக்கோ என்றால்
தத் கரேண -அத்தகைய ஸ்தோத்ரம் செய்வதில்
யஹரஹ -தினம் தோறும்
தாப பவதி –கஷ்டம் உண்டாகிறது
கத முத்ஸஹேய –எங்கனம் இதில் முயல்வேன்
ஹந்த -கஷ்டம்

நம் குலக்கொழுந்து வாயில் இருந்து ஏதாவது வருமோ -என்று எதிர்பார்த்து உள்ளீர் -குலக்கொழுந்தோ இறாய்க்கிறாரே என்று அன்றோ உள்ளீர்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந தவ பூரி தயாபகாயாம்
ஸ்நாத்வாதி நிர்மல மோபி மிதம்ப சோஹம்
நிந்த்யேஷு கர்ம நிசயேஷு நிரூட புத்தி
மஜ்ஜாம்யத ஸ்தமஸி ஹா தவ நிர் பரோஸ்மி
–12-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –வாரீர் ஆழ்வானே
தவ –தேவரீருடைய
பூரி தயா ஆபகாயாம் –பெரும் கருணை யாகிய ஆற்றில்
ஸ்நாத்வா–நீராடியதனால்
அதி நிர்மல மோபி -மிகப் பரி ஸூத்தனாய் இருந்த போதிலும்
மிதம்ப சோஹம் –நீசனான அடியேன்
நிந்த்யேஷு –இகழத்தக்க
கர்ம நிசயேஷு –பாப காரிய ஸமூஹங்களிலே
நிரூட புத்தி -வேரூன்றிய எண்ணம் யுடையவனாய்
தமஸி-தம குணம் நிறைந்த இந்த ஸம்ஸாரத்திலே
மஜ்ஜாமி -மூழ்கிறேன் -ஆகையால்
தவ -தேவரீருடைய
நிர் பரோஸ்மி -ரக்ஷணப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்
ஹா -ஐயோ

பெரியோர்கள் எதிரில் ஸ்வ தோஷங்களை விண்ணப்பம் செய்வதும் ஸ்தோத்ரங்களிலே அடங்குமே

தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–
வைகுண்ட ஸ்தவம்-90-

எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு
உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ஸ்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்

————-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அஸ்மாக மப்யநுசிதேஷு பவேச் சிகீர்ஷா
ஸா ஸர்வதா பவதி துக்கரீ தவைவ
தஸ்மாத் த்வமேவ ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –
-13-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந -ஆழ்வானே
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் அபி -தேவரீருடைய திருவடிகளை ஆஸ்ரயித்து இருந்த போதிலும்
அஸ்மாகம் –அடியோங்களுக்கு
யநுசிதேஷு –தகாத காரியங்களில்
சிகீர்ஷா -செய்ய வேண்டும் என்னும் ஆசையானது
பவேத் -உண்டாக்க கூடும்
ஸா -அந்த ஆசை
ஸர்வதா –எல்லா வகையிலும்
தவைவ-தவ ஏவ -தேவரீருக்கே
பவதி துக்கரீ –வருத்தத்தை உண்டு பண்ணுவதாக ஆகிறது
தஸ்மாத் –ஆகையால்
த்வமேவ –தேவரீரே
ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –அத் தீய செயகைகளைப் பற்றிய சிந்தனையைப் போக்கி அருள வேணும்

——–

கூராதி பால மதி வேல க்ருதேந கர்ம
மூலேந யத் ஸூகமவாப்த மதாபி துக்கம்
தச் சக்நுமோநு ந நிவாரயிதும் ச சோடும்
தத் சங்க மேவ விநிவர்த்தய தே ப்ரபாவாத்
–14-

கூராதிப-கூரேசரே
அதி வேல க்ருதேந -அடியேனால் எல்லை கடந்து செய்யப்பட
கர்ம மூலேந –தீ வினை என்னும் காரணமானது
அலம் -இனி வேண்டாம் –செய்தன போதும்
யத் அவாப்தம் -அதனால் எது அடையப்பட்டதோ
தத் ஸூகம் அபி -அது ஸூகம் என்று மேல் எழத் தோன்றினாலும்
துக்கம் -ஆராய்ந்து பார்த்தால் துக்கமே யாகும்
தத் -அந்தத் துக்கத்தை
நிவாரயிதும்-வராமல் தடுப்பதற்கும்
ச சோடும் -வந்தால் பொறுத்துக்க கொள்ளுவதற்கும்
சக்நுமோநு ந -அடியோங்கள் வல்லமை யுடையோமோ -அல்லோம் ஆகையால்
தே ப்ரபாவாத் –தேவரீருடைய மஹிமையினாலேயே
தத் சங்க மேவ -அது தீ வினையில் அடியோமுக்கு உண்டாகும் ஆசையை
விநிவர்த்தய -நன்றாகக் போக்கி அருள வேணும்

————-

ஸ்ம்ருத்வா மதீய விபரீத கதீஸ் ததைவ
பக்நாஸயோப் யத ச ஹ்ருஷ்ட மநஸ் சராமி
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் த்வதி வேல ஸீல
வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் விம்ருஸ்ய
–15-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–ஆழ்வானே
மதீய விபரீத கதீஸ்–அடியேனுடைய நியாய விருத்தமான நடத்தைகளை
ஸ்ம்ருத்வா –நினைத்து
பக்நா ஸ யோபி –நமக்கு நன்மை கிடைக்கப் போகிறது இல்லை என்று மனம் உடையப் பெற்றவனாக இருந்த போதிலும்
அஹம் -அடியேன்
அத ச -அதற்கு அடுத்த ஷணத்திலேயே
பவத -தேவரீருடைய
அதி வேல ஸீல வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் -எல்லை கடந்த நீர்மை பேர் அன்பு நல்ல மனமுடைமை கருணை முதலிய நற் குணங்களை
விம்ருஸ்ய து -ஆராய்ந்து பார்த்தாலோ என்றால்
ஹ்ருஷ்ட மநஸ் –நமக்கு கிடைப்பது உறுதி என்று மனம் மகிழப் பெற்றவனாய்
சராமி -ஸஞ்சரிக்கிறேன்

———–

கூராதி நாத குண சந்ததி சிந்தநேந
கஸ்யாஸயஸ் தவ ந யாதி பரம் ப்ரமோதம்
நிஸ் ஸம்ஸயத்வமத நிர் பயதாம் ச ஸம்யக்
வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் பரமாம் விரக்திம் –
-16-

கூராதி நாத –வாரீர் கூரேசரே
தவ -தேவரீருடைய
குண சந்ததி சிந்தநேந –குண ஸமூஹத்தை நினைப்பதனால்
கஸ்யாஸயஸ் -எவனுடைய மனம் தான்
பரம் ப்ரமோதம் -உயர்ந்த மகிழ்ச்சியையும்
நிஸ் ஸம்ஸயத்வமதம் -உய்வு பெறுவதில் ஸந்தேஹம் இல்லாமையும்
அத -மேலும்
நிர் பயதாம் -ஸம்ஸார பயம் இல்லாமையும்
ஸம்யக் வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் -நல்ல பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யத்தில் உண்டாகும் முயற்சியில் விருப்பத்தையும்
பரமாம் –மிக உயர்ந்த
விரக்திம்–இதர விஷயங்களில் பற்று இல்லாமையும்
ந யாதி -அடைய மாட்டாது

————

ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி
ஸ்ருத்வா ப்ர ஹ்ருஷ்ட மநஸா யதி சேகரேண
உக்தாம் ஸூபாக்ஷித ஸூதாம் ச நிஸம்ய நாத
த்வத் பந்து தாஸ்தி மம சேத் யபயஸ் சராமி
–17-

நாத –ஸ்வாமீ ஆச்சார்யனே
ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி –ஸ்ரீ ரெங்கநாதனால் தேவரீருக்கு அருளிச் செய்யப்பட்ட விடை வார்த்தைகளை
ஸ்ருத்வா –கேட்டு
ப்ர ஹ்ருஷ்ட மநஸா -ஸந்தோஷமுடையவரான
யதி சேகரேண -யதிராஜரான எம்பெருமானாராலே
உக்தாம் –அருளிச் செய்யப் பெற்ற
ஸூபாக்ஷித ஸூதாம் –அமுதம் போல் இனிய நல் வார்த்தையை
நிஸம்ய -கேட்டு
மம ச -அடியேனுக்கும்
த்வத் பந்துதா–தேவரீரோடு உறவானது
அஸ்தி இதி -இருக்கிறது என்று நினைத்து
யபயஸ் சராமி –ஸம்ஸார பயம் அற்றவனாய் அடியேன் திரிகிறேன்

ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளுக்கு எல்லாம் மோக்ஷம் அளிப்பதாக ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ததால்
எம்பெருமானாரும் சந்தோஷித்து உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தில் எறிந்து ஏற்றுக் கொண்ட ஐதிக்யம்
இவரும் பயம் கெட்டுத் திரிகிறார் என்கிறார்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவாதாப் யபிமாநி தோஹம்
இத்யா தரேண ஸததம் மயி ரங்க நாத
குர்வந் தயாம் ந விஜஹாதி க்ருதாக ஸம் மாம்
ரக்ஷத்யஹோ த்வயிது கீத்ருக நுக்ர ஹோஸ்ய
–18-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஆழ்வானே
பவதா அபி -தேவரீ ராலும்
அஹம் -அடியேன்
யபிமாநித–இவன் நம்முடையவன் என்று அபிமானிக்கப் பட்டவன்
இதி -என்ற காரணத்தினால்
ரங்க நாத-திருவரங்க நாதன்
யா தரேண –அன்புடன்
ஸததம் -எப்போதும்
தயாம் குர் வந்-தயை புரியுமவராய்
க்ருதாக ஸம் -பாபங்களை செய்திருக்கிற
மாம்-அடியேனை
ந விஜஹாதி -அது காரணமாக விடுவது இல்லை
ரக்ஷதி -அதற்கு எதிராக காப்பாற்றுகிறார்
யஹோ -ஆச்சர்யம்
அஸ்ய –இந்தத் திருவரங்க நாதனுக்குத் தான்
த்வயி–தேவரீர் திறத்தில்
கீத்ருக் அநுக்ரஹ–எத்தகைய அநுக்ரஹம்

பெரிய பெருமாளின் ஆழ்வான் மீது உள்ள அனுக்ரஹம் இவ்வாறு தமது அளவும் ஏறிப் பாய்வதே என்று ஆச்சார்யப் படுகிறார்

—————-

ஸ்ரீ வத்ஸ லக்ஷண சரீரவ ஸோபி நித்யம்
நாதாநு தப்த இவ ச ப்ரலபாமி தே அக்ரே
மைத்ர்யா ஸடஸ் ச கல ஏஷ இதீஹ மத்வா
மாமந் வஹம் ஸமபி ஷிஞ்ச க்ருபா கடாஷை
–19-

நாத ஸ்ரீ வத்ஸ லக்ஷண –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
அஹம் –அடியேன்
நித்யம் -எப்போதும்
சரீரவ ஸோபி -சரீர பரதந்த்ரனாய் அஃது ஒன்றையே பேணுமவனாய் இருந்த போதிலும்
அநு தப்த இவ -பச்சா தாபப்படுகின்ற நல்லவன் போலே
தே அக்ரே–தேவரீர் திரு முன்பே
ச ப்ரலபாமி -வந்து நிற்பதே யன்றிச் சிலவற்றைப் பிதற்றவும் செய்கின்றேன்
ஸடஸ் ச கல ஏஷ-இவன் வஞ்சகனாயும் துஷ்டனாகவும் இருக்கிறான் -இவனுக்குத் தாம் அல்லது வேறு கதியில்லை
இதி மத்வா –என்று திரு உள்ளம் பற்றி
இஹ மாம் -இப்போது அடியேனை
மைத்ர்யா -ஸ்நேஹத்துடன்
க்ருபா கடாஷை –கிருபையிதே கூடிய திருக்கண் பார்வை களாலேயே
அந் வஹம் அபி ஷிஞ்ச –தினம் தோறும் நீராட்டி அருள வேணும் –

————————

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ
விஜ்ஞ்ஞாபநம் த்வி ஹ மயோதித முக்தி மாத்ரம்
ஸார்த விசார்ய ஸஹ ஸாத்ய தவைவ பூர்த்யா
கூராதி போந்ந மய மாமிஹ ஸர்வ தாத்வம் –
-20-

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ –ஆபத்தை அடைந்து அதனால் இரங்கத் தக்க ஜனங்களை ரக்ஷிப்பதில் விரதம் பூண்டவரே
கூராதிப –கூரத்தாழ்வானே
இஹ -இப்போது
மயோதி தம் -அடியேனால் சொல்லப்பட்ட
உக்தி மாத்ரம் –அர்த்தம் இல்லாமல் வெறும் பேச்சான
விஜ்ஞ்ஞாபநம் து -விண்ணப்ப வார்த்தைகளையே
தவைவ பூர்த்யா -அடியேனுடைய தோஷ பூர்த்தியைப் பாராமல் -தேவரீருடைய குண பூர்த்தியினாலேயே மட்டுமே
ஸார்த்தம் விசார்ய -அர்த்தத்தோடு கூடியதாக எண்ணி
அத்ய இஹ –இப்போது இவ்விடத்தில்
ஸஹஸா–தாமதம் செய்யாமல்
த்வம் -தேவரீர்
மாம் -அடியேனை
உந்ந மய –உத்தரித்து அருள வேணும் -முக்தி நல்க வேணும் –

அடியேனுடைய இந்த விண்ணப்பமும் மனப்பூர்வகமாக செய்தது அன்று
வெறும் வேஷமே தான்
இருந்தாலும் தேவரீருடைய குண பூர்த்தியாலேயே அடியேனை இந்த சம்சாரக் கடலில் இருந்து எடுத்து
பரமபத அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இந்த கூரேச விம்சதியைத் தலைக்கட்டி அருளினார் ஆய்த்து-

———————————-

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் அருளிச் செய்த-ஸ்ரீ கூர நாத பஞ்சாஸத்

ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் சரணாப்ஜ யுக்மம்
ஸ்ரேயஸ் கரம் தநு ப்ருதா மகிலாக ஹந்தரு
நத்வா கரோமி விபுதா வலி துஷ்டயே அஹம்
கூராதிப ஸ்துதி மிமாம் குஸல ப்ரதாத்ரீம்
–மங்கள ஸ்லோகம்

தநுப்ருதாம் –உடல் எடுத்த மனிதர்களுக்கு
ஸ்ரேயஸ் கரம்–நன்மைகளை செய்ய வல்லதும்
அகில அக ஹந்தரு–எல்லாப் பாபங்களையும் அழிக்க வல்லதுமான
ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் –திருவேங்கட ராமானுஜ முனிவருடைய
சரணாப்ஜ யுக்மம்-திருவடித்தாமரை இணையை
நத்வா –வணங்கி
அஹம்-அடியேன்
விபுத ஆவலி துஷ்டயே –ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் சந்தோஷத்தின் பொருட்டு
இமாம் -இந்த
குஸல ப்ரதாத் ரீம் -க்ஷேமத்தை அளிக்க வல்லதான
கூராதிப ஸ்துதிம் –கூரத்தாழ்வானைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கரோமி -இயற்றுகிறேன்

இந்த கிரந்தத்தில் இறுதியில் -ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா பஞ்சா ஸத் கூர நாத்தஸ்ய ஸ்தோத்ரமீரிதம் உத்தமம் -என்ற ஸ்லோகத்தில் இதன் கர்த்தாவின் திரு நாமமும்
இவர் ஆச்சார்யர் ஸ்ரீ சைல லஷ்மண முனி -என்பவர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பார் ஜீயர் திருமடத்தை ஸ்தாபித்த முதல் ஜீயரான திருவேங்கட ராமானுஜ ஜீயர்
இவர் ஸ்ரீ வான மா மலை மடத்தைச் சேர்ந்தவர்
இவர் திருமாளிகை 2 ஸ்வாமி -திருவாழி அண்ணன் ஸ்வாமிக்குத் திருத் தகப்பனார்

——-

ஜய ஜய யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம
ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க
ஜய ஜய குமதேப வ்ராத ஹர்யஷ வித் வந்
மணி வர நிகமாந்தா கல்ப கூராதி நாத
–1-பல்லாண்டு பாடித் தொடங்குகிறார்

யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க –யதிராஜரான அம்பெருமானாருடைய திருவடித் தாமரை இணையில் இருந்து பெருகுகின்ற தேனைச் சுவைப்பதில் ஆசை கொண்ட திரு உள்ளமுடையவரே
குமதேப வ்ராத ஹர்யஷ–நீசச் சமயிகள் என்கிற யானைகளின் கூட்டங்களுக்கு ஸிம்ஹம் போன்றவரே
வித் வந் மணி வர –பண்டித ஸ்ரேஷ்டர்களிலே தலைவரே
நிகமாந்தா கல்ப –வேதாந்தங்களுக்கு அணி செய்தவரே-மங்கள ஸூத்ரம் போன்ற ஸ்தவங்களை அருளிச் செய்தவர் அன்றோ
கூராதி நாத –கூரத்தாழ்வானே
ஜய ஜய -ஜய ஜய –தேவரீர் எல்லோரினும் மேம்பட்டு விளங்க வேணும்

————

ஜயதி ஜகதி நைஜோத் வேல மேதா விசேஷாத்
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித க்ஷித கூர நாத –
-2-

ஜயதி ஜகதி
நைஜோத் வேல மேதா விசேஷாத் –தமக்கு இயற்கையாக ஏற்பட்டதும் எல்லை கடந்ததுமான அறிவின் மேன்மையினாலே
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால -நன்றாக அறியப்பட்ட போதாயன முனிவர் இயற்றிய வ்யாஸ ஸூத்ர வ்ருத்தியின் அர்த்த ஸமூஹத்தை உடையவரும் –
அது காரணமாக
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத –உண்டாக்கப்பட்ட யதிராஜர் திரு உள்ளத்தில் எல்லையற்ற உகப்பை யுடையவரும்
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித -தம்மை அடைந்த ஜனங்களை நன்றாகக் காப்பாற்றுவதில் விரதம் பூண்டவருமான
கூர நாத –ஜயதி -கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

————-

ஜயதி ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத்
உப நிஷது பகூடாந் ந்யாய தோர்த்தாந் விவ்ருண்வந்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ
சமித விமத வாத ஸாந்திமாந் கூர நாத –
-3-

ஜயதி
ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத் –திருமாலின் பரம் பொருட்டாண்மையை நிலை நாட்டுவதில் எல்லை கடந்த மகிழ்ச்சியினால்
உப நிஷது பகூடாந் –உப நிஷத்துக்களில் மறைந்து கிடக்கிற
அர்த்தாத் -அர்த்தங்களை
ந்யாயத -உபய மீமாம்ஸா யுக்திகளைக் கொண்டு
விவ்ருண்வந் –விளங்கா நின்றவராய்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ –வெல்லப்பட்ட சிவனுடைய பரத்வத்தைத் தம்மிடம் கேட்க விரும்பிய சோழ அரசனை யுடையவரும்
அது காரணமாக
சமித விமத வாத -ஓயச் செய்யப்பட சிவனே பரண் என்று கூறுமவர்களின் எதிர் வாதத்தை யுடையவரும்
ஸாந்திமாந் –பொறுமை யுடையவருமாகிய
கூர நாத –ஜயதி –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

———-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே பத்த தீஷா
கிமு புவமவ தீர்ண ஸ்ரீ பதி கிந்நு ஸைந்யேட்
உத ஸடரிபுரித் யுல்லிக் யமாநோ மஹத்பி
ஜயதி குரு வரேண்ய கூர நாதோ மஹாத்மா –
-4-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே –ஸம்ஸாரமாகிய கடலிலே ஆழ அழுந்தியவர்களை உயரத் தூங்குவதில்
பத்த தீஷா –நியமம் பூண்டவராய்
புவமவ தீர்ண –பூ உலகில் அவதரித்த
ஸ்ரீ பதி கிமு –திருவின் மணவாளனோ
கிந்நு ஸைந்ய ஈட–சேனை முதல்வரோ
உத ஸடரிபு -நம்மாழ்வாரோ
இவர்
இதி -என்று
மஹத்பி–பெரியோர்களால்
யுல்லிக் யமாந-ஊகிக்கப் படுமவரும்
குரு வரேண்ய –ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும்
மஹாத்மா–பரந்த மனமுடையவருமான
கூர நாத ஜயதி – கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

மூவரைச் சொன்னது திரு மகளுக்கும் உப லக்ஷணம் -திருமால் திரு மகள் சேனை முதலியார் நம்மாழ்வார் –உத்தர உத்தர கருணையில் மிக்கு
அனைவருமாகச் சேர்ந்தே கூரத்தாழ்வான் -காரேய் கருணை எதிராஜரை ஆஸ்ரயித்து அவருக்கு பவித்ரம் ஸ்தானீயம் ஆனார்

————

நிரவதிக தயாப்திர் நாயமாவிர்ப வேச் சேத்
இஹ புவி விமலாத்மா கூர நாதோ மஹீ யாந்
விவித விஷய நக்ரக் ராம ஜூடம் கதம் வா
பவ ஜல நிதி பூரம் நிஸ் தரே யுர்ஜ நவ்கா
–5-

நிரவதிக தயாப்திர் -எல்லையற்ற கருணைக்கு கடல் போன்றவரும்
விமலாத்மா-மலம் அற்ற மனம் படைத்தவரும்
மஹீ யாந்-அதனால் மிகப் பெரியவருமான
அயம் கூர நாதோ –இந்தக் கூரத்தாழ்வான்
இஹ புவி-இந்த உலகில்
ந ஆவிர்பவேத் சேத்-அவதரிக்கவில்லை என்றால்
விவித விஷய நக்ரக்ராம ஜூடம்-பலவகைப்பட்ட ஸப்தாதி விஷயங்கள் ஆகிய முதலைகளின் கூட்டங்களால் அடையப்பட்ட
பவ ஜல நிதி பூரம் –ஸம்ஸாரமாகிய கடல் வெள்ளத்தை
ஜந ஓகா–மனிதர்கள் திரள்கள்
கதம் வாநிஸ்தரேயுர்–எப்படித்தான் தாண்ட முடியும் –

கடலில் முதலைகள் இருக்குமே -சம்சாரக் கடல் என்றதால் இங்கு ஸப்தாதி விஷயங்களை முதலைகள் என்கிறார்
ஸ்வரூப நாசத்தை உண்டாக்கும் அன்றோ

————–

ஸூ சரித பரி பாகோஸ் மாத் ருசாம் கிந்நு பத்மா
கமிது ரகில நேது ப்ரேம ஸார க்ருதாத்மா
விலஸதி புவி கூரேசாத்ம நோதீர்ய மாண
ஜயதி விபுத வர்யை கூர நாத க்ருபாலு –
-6-

ய –யாவர் ஒருவர்
கூரேசாத்ம-கூரேசர் என்னும் உருவமுடையவராக
விலஸதி புவி -உலகில் விளங்குகிறாரோ
ஸ க்ருபாலு –கூர நாத -அந்த தயை மிக்க கூரத்தாழ்வான்
அஸ் மாகம் – நம்முடைய
ஸூ சரித பரி பாகஸ் –புண்ணியத்தின் பயனானது
க்ருதாத்மா கிந்நு-வடிவெடுத்து வந்தவரோ –
அல்லது
பத்மா கமிது-திருமகள் மணவாளனாய்
அகில நேது–ஸர்வேஸ்வரனாகிய எம்பெருமானுடைய
ப்ரேம ஸார –சிறந்த ப்ரீதியானது
க்ருதாத்மா கிந்நு -வடிவெடுத்து வந்தவரோ
இதி -என்று
விபுத வர்யை –ப்ராஹ்மண உத்தமர்களால்
உதீர்ய மாண –புகழப் பட்டவராய்க் கொண்டு
ஜயதி -மேம்பட்டுத் திகழ்கிறார்

ஆழ்வான் அவதரிக்க நாம் செய்த புண்ணியம் எல்லாம் சேர்த்தாலும் செய்ய முடியாமையைக் கருதி பகவானுடைய பேர் அன்பே ஆழ்வானாக அவதரித்ததோ என்று பெரியவர்கள் கூறுவதாக அருளிச் செய்கிறார்-

———–

அபஹ்ருத பவதாப (பை )பாவநை ப்ரேம சாந்த்ரை
அம்ருத ரஸ நிதாநை ஆத்ம பாஜாம் கடாஷை
அநு கலமுப குர்வன் ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா
ஜலதி துஹி த்ருஜாநே ப்ராஜதே கூர நாத –
-7-

கூர நாத –கூரத்தாழ்வான்
ப்ரேம சாந்த்ரை -அன்பு செறிந்தவைகளும்
பாவநை –பரிசுத்தியை உண்டாக்குமவைகளும்
அம்ருத ரஸ நிதாநை-மோக்ஷ ஆனந்துக்கு மூல காரணமானவைகளுமான
கடாஷை -தமது கடைக்கண் பார்வைகளாலே
ஆத்ம பாஜாம் –உடல் எடுத்த ஜீவாத்மாக்களுக்கு
ஜலதி துஹித்ரு ஜாநே–கடல் அரசன் பெண்ணான திருமகள் மணவாளனைக் குறித்து
ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா-நாம் எல்லாருக்கும் அடிமை என்னும் அறிவை
அநு கலமுப குர்வன் –க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு
அதனால்
அபஹ்ருத பவதாப (பை )-அவர்களுடைய ஸம்ஸார தாபத்தைப் போக்குமவராய்
ப்ராஜதே –விளங்குகிறார்-

ஞானக்கை தா என்றார் இறே ஆழ்வாரும்
சேஷத்வ ஞானத்தை உண்டாக்கி ஸம்ஸார தாபத்தைப் போக்கி மோக்ஷம் அடைவிப்பர் ஆழ்வான் என்கிறார் இதில்
ஆழ்வானுடைய கடாக்ஷமே இவற்றைச் செய்யுமே –

—————-

க்ருத குவலய மோத கோச பூத கலாநாம்
த்விஜ பதிரகிலாசா சோபயந் நைஜதாம்நா
ப்ரஸமித பரிதாப ப்ராப்ய விஷ்ணோ பதம்தத்
விலஸதி விபு தேட்ய கூர நாதவ்க்ஷதீ ச
–8-

க்ருத குவலய மோத –1-பூ மண்டலத்துக்கு மகிழ்ச்சியைத் தருமவராய் -2- நெய்தல் மலருக்கு மலர்ச்சியைத் தருமவனாய்
கோச பூத கலாநாம் –1- ஸாஸ்த்ரங்களுக்கு நிதியானவராய் -2-சந்த்ர கலைகளுக்கு நிதியானவனாய்
த்விஜ பதிர் -1- ப்ராஹ்மணர்களுக்குத் தலைவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையால் யாகம் செய்யும் ப்ராஹ்மணர்க்குத் தலைவனாய்
நைஜதாம்நா -1- தனது ஞான ஒளியாலே -2- தனது காந்தியாலே -நிலாவினால் –
அகில ஆசா –1-எல்லாத் திக்குகளில் உள்ளவர்களையும் -எ2-ல்லாத் திக்குகளையும்
சோபயந் -1-2- விளங்கச் செய்து கொண்டு
ப்ரஸமித பரிதாப -1- ஸம்ஸார தாபத்தைத் தணிப்பவராய் -2- வெயிலின் வெப்பத்தைத் தணிப்பவனாய்
விபுதேட்ய-விபூத ஈடய -1- ப்ராஹ்மணர்களாலே ஸ்துதிக்கத் தக்கவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையாலே யாகத்தில் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொள்ளுகிற தேவர்களால் ஸ்துதிக்கத் தக்கவனாய்
தத் -1-2- பிரஸித்தமான
ப்ராப்ய விஷ்ணோ பதம்–1- பரமபதத்தை அடைந்து -2- ஆகாசத்தை அடைந்து
கூர நாத ஓக்ஷதீ ச -1- கூரத்தாழ்வான் ஆகிற 2- சந்திரன்
விலஸதி -விசேஷமாகப் பிரகாசிக்கிறான்
ஆழ்வான் சந்திரன் போன்றவர் என்று கொண்டு உபம அலங்காரம்
ஆழ்வானையே சந்த்ரனாகக் கொண்டு ரூப அலங்காரம் -ரூபகம் -உருவகம்

———–

ஸூ ஜந ஹ்ருதய பத்மோல்லா ஸமாராத் விதந்வந்
குஜந குவலயாநாம் மீலநம் சாபி குர்வன்
உதய மதி கதோ அசவ் கூர நாதாம் ஸூமாலீ
துரித திமிர ஜாலம் தேஹ பாஜாம் ஹி நஸ்தி-
-9-

அசவ் கூர நாதாம் ஸூமாலீ -அந்த கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
உதய மதி கதோ -உதயத்தை அடைந்தவனாய்க் கொண்டு
ஆராத் –தூரத்தில் இருந்தே
ஸூ ஜந ஹ்ருதய -நல்லோர்களுடைய மனமாகிய
பத்மோல்லா ஸம் -தாமரையின் மலர்ச்சியை
விதந்வந்-செய்து கொண்டும்
குஜந குவலயாநாம் –தீயவர்களாகிய ஆம்பல் மலர்களினுடைய
மீலநம் சாபி குர்வன் –கூம்புதலையும் செய்து கொண்டும்
தேஹ பாஜாம்–உடல் எடுத்த மனிதர்களுடைய
துரித திமிர ஜாலம் –பாபங்களாகிய இருளின் திரட்சியை
ஹி நஸ்தி–நாஸம் செய்கின்றான் –

கீழ் சந்தனுக்கு ஒப்புமை சிலேடையில்
இங்கு அடை மொழிகளில் உள்ள பொருள்களை -ஒன்றை மற்ற ஒன்றாக உருவகம் க்ருத குவலய மோத –என்பதன் கண் குவலயம் என்பதற்கு பூ மண்டலம் என்றும் நெய்தல் மலர் என்றும் காட்டி அருளுகிறார்

————–

அம்ருத ஜநந பூமி ஸம்ஸ்ரிதா நந்த தாயீ
ஸகல ஸூகுண ரத்நா வாஸபூ பூர்ண ஸத்த்வ
விமதகத கவர்யைர் நாவிகைரப்ய லங்க்ய
ஸ்புரதி புவி கபீர கூர நாதாம் ருதாப்தி –
-10-

அம்ருத -1- மோக்ஷத்திற்கு -2-அம்ருதத்திற்கு
ஜநந பூமி –பிறப்பிடமாய்
ஸம்ஸ்ரிதா நந்த தாயீ –தன்னை அடைந்த 1- முமுஷுக்களுக்கு -2- இந்த்ராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமவராய்
ஸகல ஸூகுண ரத்ந ஆ வாஸபூ -எல்லா 1- நல்ல குணங்களாகிற 2- ரத்னங்களுக்கு இருப்பிடமாய்
பூர்ண ஸத்த்வ –1- சத்துவ குணம் நிறைந்தவராய் -2- முதலை முதலிய பிராணிகளால் நிறைந்ததாய்
விமத கதக வர்யைர் -1- வாதம் செய்யும் புறமதத்தவர்களாகிய 2- படகோட்டிகளாலே
அஸங்க்ய –1- எதிர்க்க முடியாதவராய் -2- தாண்ட முடியாததாய்
கபீர-1- ஆழ்ந்த மனமுடையவருமான -2- ஆழமுடையதுமான
நாவிகைரப்ய ல
கூர நாதாம் ருதாப்தி –1-கூரத்தாழ்வானாகிய -2- அமுதக்கடல் -பாற் கடல்
புவி -பூமியில்
ஸ்புரதி –விளங்குகிறது

——————

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரிதோஷயோ ஜடாஸ யோதயோ
கலங்க பாவ பாஸூரோ நிராக்ருதோக்ர சங்கம
விராஜ மாந விக்ரஹோ திவாபி மித்ர ஸந்நிதவ்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ விபாதி கூர ராட் விது
–11-

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரித-எப்போதும் வளர்ச்சியை அடைந்ததும்
அஷய –தேய்வில்லாததும்
அஜடாஸயோதயோ –ஜலா சயமான கடலில் தோன்றாததும் புத்திமான்களுடைய மனதில் தோன்றுவதும்
அகலங்க பாவ பாஸூரோ -மறு -குற்றம் -இல்லாமையால் பிரகாசிக்குமதும்
நிராக்ருதோக்ர சங்கம–சிவபெருமானுடைய -தலையோடு சேர்த்தியை மறுத்ததும்
மித்ர ஸந்நிதவ் -ஸூர்யனுடைய சமீபத்தில்
திவாபி-பகலிலும்
விராஜ மாந விக்ரஹோ –பிரகாசிக்கின்ற பிம்பத்தை -திருமேனியை உடையதும்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ –மேற்கு மலையை அடைந்து அஸ்தமியாததுமான
விபாதி கூர ராட் விது -கூரத்தாழ்வான் ஆகிய மதி சந்திரன் விளங்குகிறது

கீழ் 8 ஸ்லோகத்தில் சந்திரனுக்கு உள்ள தன்மை அனைத்தும் ஆழ்வான் இடம் உள்ளமையைக் காட்டி அருளி
இதில் அதில் உள்ள தீமைகள் ஒன்றுமே ஆழ்வான் இடம் இல்லை என்று கூறப்படுகிறது
ஸதா -என்பதை அனைத்திலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
ஜலாசய -என்பதே ஜடாசய என்றதாயிற்று டலயோ அபேத -தகரமும் லகாரமும் ஒன்றே -ஜலாசய -ஜலம் தங்கும் கடல் ஜடாசய -ஜடம் அறிவில்லாதவன்

———-

ப்ரஸாத மேயிவாந் ஸதா ப்ரகாம வீஷ்ய விக்ரஹ
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததி
ஸதோத்தராயணாந் விதோ விமுக்ததாம ஸக்ரஹ
த்ரயீ மயோத்ர கூர ராட் வாகரோ விராஜதே
–12-

ஸதா–எப்போதும்
ப்ரஸாத மேயிவாந் -1-அநுக்ரஹத்தை அடைந்தவராய் -2-உக்ரமாக அல்லாமல் தெளிவை அடைந்தவனாய்
ப்ரகாம வீஷ்ய விக்ரஹ -1- நன்றாக ஸேவிக்கத்தக்க திருமேனியை யுடையவராய் -2-கண் கூசாமல் காணத்தக்க பிம்பத்தை யுடையவனாய்
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் -மனிதர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குமவராய் –2- மனிதர்களுக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பை உண்டாக்குமவனாய்
ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததிம் -1- அறியாமைத் திரட்சியை அழிப்பவராய் -2- இருளின் திரட்சியை அழிப்பவனாய்
ஸதா -எப்போதும்
உத்தராயணாந் விதோ -1- உயர்ந்த வழியில் சேர்ந்தவராய் -2-உத்தராயணத்தில் சேர்ந்தவனாய்
விமுக்ததாம ஸக்ரஹ –1-தமோ குணமுடையவர்களால் பற்றப்படாதவராய் 2- ராகுவினால் பீடிக்கப்பட்டாதவனாய் -கிரஹணம் இல்லாதவனாய்
த்ரயீ மயீ -1- வேத விசாரம் செய்வதனால் வேத மயராய் -2- மொன்று வேதத்தையே உருவமாக யுடையவனாய் இருக்கிற
கூர ராட் வாகரோ –கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
அத்ர-இவ்வுலகில்
விராஜதே-மிகவும் விளங்குகிறான்–இதில் தீமை அற்ற ஸூர்யனாக ரூபணம்

—————-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ
பரீத வாக்ஜ ரீபரோ விரக்த முக்ய ஸம்ஸ்ரய
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி விசித்ரதாது பிர்யுத
விபாதி கூரராண் மஹீதர புமர்த்த ஸித்தயே –
-13-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ –தன்னுடையதாக ஹ்ருதயமாகிய குகையில் கிடந்தது உறங்குகிற புண்டரீகாக்ஷனாகிய -ஸ்ரீ யபதியான -ஸிம்ஹத்தை யுடையதும்
பரீத வாக்ஜ ரீபரோ –நிறைந்த ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிய அருவிகள் மிகப் பெற்றதும்
விரக்த முக்ய ஸம்ஸ்ரய–ஆசை அற்றவர்களுக்கு முக்கியமான புகலிடமானதும்
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி –சிறந்த ஸ்ரீ ஸூக்திகளாகிய
விசித்ரதாது பிர் –பலவகைப்பட்ட தாதுக்களோடு
யுத –கூடியதுமான
கூரராண் மஹீதர-கூரத்தாழ்வான் ஆகிய பர்வதமானது
விபாதி புமர்த்த ஸித்தயே -மோக்ஷ புருஷார்த்தம் ஸித்திப்பதன் பொருட்டு மிகவும் விளங்குகிறது
சந்த்ர ஸூர்யர்கள் குதிப்பதும் அஸ்தமிப்பதும் மலையிலே ஆகையாலே மலையாக ரூபணம் இதில்
மலை முழைஞ்சில் ஸிம்ஹம் -ஆழ்வான் திரு உள்ளத்தில் சீரியஸிம்ஹமான நரஸிம்ஹப் பெருமாள்
ஆழ்வானுக்குத் திருவாராதனப் பெருமாள் அழகிய சிங்கர் என்று பெரிய திருமுடி அடைவில் உள்ளமை காண்க

———-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ
த்ரயீ ஸிரோர்த புங்கிதா ஸூ யுக்தி ஸாய காவலீ
ஸ்ருஜந் குவாதி வித்விஷ ப்ரகாலயந் குரோ பதே
அபி ஷிக்த ஏஷ கூரராட் ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம்
–14-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ –யதிராஜருடைய ஸ்ரீ ஸூக்திகளாகிய அம்ருதத்தின் வெல்லத்தை எப்போதும் அனுபவிப்பதனால் செருக்குக் கொண்ட அறிவையுடையவராய்
த்ரயீ ஸிரோர்த புங்கிதா –வேதாந்த அர்த்தங்களை மூலமாகக் கொண்ட தொடுக்கப்பட்ட
ஸூ யுக்தி ஸாய காவலீ –நல்ல யுக்திகளாகிய பாணங்களின் வரிசைகளை
ஸ்ருஜந் -விடுமவராய்க் கொண்டு
குவாதி வித்விஷ –துர் வாதம் செய்யும் புற மத்தவராகிய பகைவர்களை
ப்ரகாலயந் –மிகவும் அழிப்பவராயும் -மறுப்பவராயும் –
குரோ பதே –ஆச்சார்யருடைய ஸ்தானத்திலே
அபி ஷிக்த –பட்டாபிஷேகம் செய்யப் பட்டவராயும் உள்ள
ஏஷ கூரராட் –இந்தக் கூரத்தாழ்வான்
ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் செல்வத்தை ஆளுகிறார்
ஆச்சார்ய ஸ்தானத்தில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைப் பரிபாலனம் செய்யும் வகையை அருளிச் செய்கிறார்

———–

கதாஹவோந் முகாந் பஹுந் கபர்தி துர்மதாஸ் ரயாந்
முதாக்ருதாக மஸ்ரமாந் விதாய வாதி ந பராந்
புதாத ரீக்ருதி க்ஷமை ஸ்வ வாக் ஜரீ பரை ரஸவ்
புதா வலீ ஸமீடி தஸ் சகாஸ்தி கூர பூபதி –
-15-

அஸவ் கூர பூபதி –அந்தக் கூரத்தாழ்வான் –
கதா ஆஹவ உந் முகாந் –வாதம் என்று போர் செய்வதற்காகத் தம்மை எதிர் நோக்கி நின்றவர்களும்
கபர்தி துர்மதாஸ் ரயாந் –சிவனுடைய கெட்ட மதத்தைப் பின்பற்றியவர்களுமாகிய
பஹுந் வாதி ந-பல வாதம் செய்யுமவர்களை
புத அதரீ க்ருதி க்ஷமை –புற மதப் புலவர்களை வெல்வதற்கு உரிய
ஸ்வ வாக் ஜரீ பரைர் -தமது ஸ்ரீ ஸூ க்திகளாகிற அதிகமான வெள்ளப் பெருக்கினால்
முதாக்ருத ஆகம ஸ்ரமாந் -பயன் அற்றதாகச் செய்யப்பட தமது சைவ ஆகமப் பயிற்சியை யுடையவர்களாக
விதாய –செய்து விட்டு
புதா வலீ ஸமீடி தஸ் -மத்யஸ்தரான பண்டிதர்களின் திறலினால் மிகவும் ஸ்துதிக்கப் பட்டவராய்
சகாஸ்தி –விளங்குகிறார்-

————-

விபூதிமைஹி கீப்த்ய ஜந்வி மோஹதாயி நீம் ப்ருசம்
விதாத்ரு முக்ய ஸேவிதாம் அஹந்தயா அதி தூஷிதாம்
ஸ்ருதீடி தாம நிந்தி தாம் ஸ்வரூப ஸேமுஷீ மதாம்
ஸ்ரியம் ஸமாஸ்ரயந் சவ் விபாதி கூர பூ பதி –
-16-

அசவ் கூர பூ பதி —அந்தக் கூரத்தாழ்வான்
விதாத்ரு முக்ய ஸேவிதாம்-பிரமன் முதலியவர்களாலே வஹிக்கப் பெற்றதும் -அதனால்
அஹந்தயா அதி தூஷிதாம் –அஹங்காரத்தால் மிகவும் கெடுக்கப்பட்டதும் -அதனால்
வி மோஹ தாயி நீம் ப்ருசம் –விஷயங்களே அனுபவிக்கத்தக்கவை என்ற அஞ்ஞானத்தை மிகவும் தரக்கூடியதுமான
விபூதிமைஹிகீம் -இந்த உலகத்தை
த்ய ஜந் –விட்டு ஒழிப்பவராய்க் கொண்டு
அநிந்தி தாம் -இகழப்படாததும்
ஸ்ருதீடி தாம –வேதத்தால் புகழப் பட்டதுமான
ஸ்வரூப ஸேமுஷீ மதாம் –ஜீவாத்ம ஸ்வரூப ஞானமுடையவர்களுடைய
ஸ்ரியம் –மோக்ஷமாகிய செல்வத்தை
ஸமாஸ்ரயந் விபாதி –அடைந்தவராய் விளங்குகிறார்

நித்ய ஸூரிகள் போல் இவ்வுலகிலே ஸ்வரூப ஞானம் பெற்று நீதி வானவர் போல் இருக்கும் கூரத்தாழ்வானைப் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்

——————–

ம்ருஷா மதம் விதாய தந் ம்ருஷா ஸ்வ யுக்திபிர் ஜகந்
ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி ராத்மநாம்
அநேக தாம ஸேக்ஷதாம் ப்ரகாஸயந் வ்யபோஹயந்
ப்ரமாத்ருஸேக ரஸ்துத ப்ரகாஸ தேத்ர கூரராட்
–17-

கூரராட் –கூரத்தாழ்வான்
ஜகந் ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி –உலகம் பொய் என்பதை மறுக்கிற அறிவை வெளிப்படுத்துகின்ற
ஸ்வ யுக்திபிர்-தம்முடைய யுக்திகளாலே
தத் ம்ருஷா மதம் -உலகம் பொய் என்கிற அந்த அத்வைத மதத்தை
விதாய ம்ருஷா –பொய்யாக ஆக்கி மறுத்து
ஆத்மநாம் –ஆத்மாக்களுடைய
அநேக தாம் –பன்மையை
ப்ரகாஸயந்-வெளிப்படுத்துமவராயும்
அஸேக்ஷதாம் -ஆத்மாக்கள் பகவானுக்கு அடிமையல்ல என்பதை
வ்யபோஹயந் –மறுத்து உரைப்பவராயும் ஆகி
ப்ரமாத்ருஸேக ரஸ்துத -உண்மை அறிவுடையவர்களில் தலைவர்களாலே புகழப்பட்டவராய்க் கொண்டு
ப்ரகாஸ தேத்ர -இவ்வுலகில் திகழ்கிறார்

கீழ் சைவ மத நிரசனம் இதில் அத்வைத மத நிரசனம்

————-

ஸ்ருதிம் த்ருட ப்ராமணயந் ஜகத் விதாத ரீஸ்வரே
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வ மப்யதோ நயந்
அணோர் ஜகந் நிதாந தாம போஹயந் விராஜதே
ஸ்வ ஸூ க்திபிர் ஸ்வ யுக்திபிர் ஸூதீவ ரோத்ர கூரராட்
–18-

ஸூதீவ ரோத்ர கூரராட் –புக்திமான்களில் சிறந்தவராகிய
ஜகத் விதாத ரீஸ்வரே–உலகத்தைப் படைத்த ஈஸ்வரனாகிய ஸ்ரீ மன் நாராயணன் விஷயத்தில்
ஸ்ருதிம் –வேதத்தை
த்ருட ப்ராமணயந் -அசைக்க முடியாத திடமான அத்தாட்சி நூலாகக் கொண்டு
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வம் –கணாதர் மதம் -வை சேஷிகர்களால் சொல்லப்பட்ட(பரம அணு வாதிகள் ) ஸ்ருஷ்டி கர்த்தாவான சிவன் அனுமான ப்ரமாணத்தினால் ஸித்திக்கிறான் என்ற விஷயத்தை
யதோ நயந் –கீழே தள்ளுகிறவராயும்
அணோர் -பரம அணுவுக்கு
ஜகந் நிதாந தாமபி –உலகத்தைக் குறித்து முதல் காரணமாய் இருத்தலையும்
ஸ்வ ஸூ க்திபிர் –தமது பேச்சுக்களாலும்
ஸ்வ யுக்திபிர் –தம்முடைய யுக்திகளாலும்
அபோஹயந் –மறுப்பவராயும்
விராஜதே –மிகவும் விளங்குகிறார்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -போன்ற ஸ்ருதி வாக்யங்களைக் கொண்டு ஸூவ மத ஸ்தாபனம்

———–

ஸிவாத் பரம் நஹீதி வை லிகேதிசோல பூபதே
வசஸ் ஸ்ருதேரநந்தரம் ததுத்தரம் வாஸோ லிகந்
அபாஹஸந் மஹீ ஸூரைர்ய ஈடிதோ மஹீ பதிம்
விபாதி கூரராட் குருஸ் ஸஸர்வ ஸாஸ்த்ர பாரக
–19-

ஸர்வ ஸாஸ்த்ர பாரக –எல்லா ஸாஸ்த்ரங்களையும் கரை கண்டா -நன்றாக அறிந்த
ய -யாவர் ஒருவர்
ஸிவாத் பரம் –சிவனை விட உயர்ந்த தத்வம்
நஹீதி வை –இல்லவே இல்லை என்றே
லிகேதி–நீர் எழுதும் என்று
சோல பூபதே வசஸ் –சோழ ராஜன் கூறிய வார்த்தையை
ஸ்ருதேரநந்தரம் –கேட்ட வுடனே
ததுத்தரம் வாஸோ -அத்தை எழுதாமல் அதன் விடையான வார்த்தையை
லிகந் –எழுதுமவராய்
மஹீ பதிம் –அச் சோழ ராஜன்
அபாஹஸந் –பரி ஹாஸம் -ஏளனம் -செய்தாரோ
மஹீ ஸூரைர்ய ஈடிதோ விபாதி கூரராட் குருஸ் ஸ -அந்த கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்துதிக்கப்பட்டு விளங்குகிறார்
த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுதிக் கையெழுத்திட்ட வ்ருத்தாந்தம் -சிவ சப்தம் எட்டுப்படி அளவு கொண்ட குறுணிக்கும் பெயர்
பதினாறு படியளவு கொண்ட பாதைக்கு குறுணியை விடப் பெரியது
நம் தரிசனத்துக்காக தம் தரிசனத்தை இழந்தார் -தர்சனம் சித்தாந்தம் -கண்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந

————–

யதீஸ்வர க்ரஹாகதாந் படாந் விலோக்ய பூபதே
ஸ்வயம் த்ரி தண்டிதாம் பஜந் ததீய ரக்ஷண இச்சயா
ஸிலீ முகால் பகீடயோர் நயம் ஸதார்ய ஸிஷ்யயோ
ப்ரதர்ஸயந் ஸ்வசர்யயா சகாஸ்தி கூர பூபதி —
20-யதீஸ்வர ஆஸ்ரம ஆகதாந் -பாட பேதம் –

கூர பூபதி –கூறத்துக்கு அரசரான ஆழ்வான்
யதீஸ்வர க்ரஹாகதாந் -யதீஸ்வரரான எம்பெருமானாரைப் பிடித்துப் போவதற்காக வந்த
படாந் விலோக்ய பூபதே –அரசனுடைய வேலையாட்களைப் பார்த்து
ததீய ரக்ஷண இச்சயா –அவருடைய ரக்ஷணத்தில் தாம் கொண்ட ஆசையினால்
ஸ்வயம் –தாமே
த்ரி தண்டிதாம் பஜந் –த்ரி தண்டத்தைக் கைப்பற்றியவராய்
ஸ்வசர்யயா–இத்தகைய தமது நடத்தையினால்
ஸிலீ முக அல்ப கீடயோர் –குளவிக்கும் சிறு புழுவுக்கும் உண்டான நியாயத்தை
ஸதார்ய ஸிஷ்யயோ –நல்ல ஆச்சார்யருக்கும் நல்ல சிஷ்யருக்கும் உள்ளதான
ந்யாயம் -நியாயத்தை
ப்ரதர்ஸயந் சகாஸ்தி –வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகிறார்
ஒரு குளவி சிறு புழுவைக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து அதை எப்போதும் கொட்டிக்கொண்டு இருந்தால் அப்புழு அக்குழவியின் உருவத்தையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்து அக்குளவியாகவே ஆகி விடும் என்னும் நியாயம்
எம்பெருமானாராலேயே வளர்க்கப் பட்ட கூரத்தாழ்வான் அவரையே தியானித்து தியானித்து அவரைப் போலவே திரிதாண்டா காஷாயங்களைத் தரித்து எம்பெருமானாராகவே ஆகி விட்ட படியால் இந்த நியாத்தைக் காட்டி அருளினார்

———–

நிரா கர்த்தும் மோஹம் நிகில ஐந சித்தாஸ் ரயம் அசவ்
தயா ஸிந்து ஸாந்த்ராத் நிரவதிக விஞ்ஞாந விபவாத்
மஹீ பாகே மாஸே மகர மஹிதாக்யே ஸமஜநி
ப்ரஸஸ்தே ஹஸ்தர்ஷே சுப குண நிதி கூர ந்ருபதி
–21-

சுப குண நிதி–நல்ல குணங்களுக்கு நிதியான
அசவ் கூர ந்ருபதி —-அந்த கூரத்தாழ்வான்
தயா ஸிந்து ஸந்–அக்குணங்களில் முக்கியமான தயைக்குக் கடலாய் இருந்து
ஸாந் த்ராத்-அதிகமான
நிரவதிக–எல்லையில்லாத
விஞ்ஞாந விபவாத் –தமது ஞானத்தின் பெருமையினாலே
நிகில ஐந சித்தாஸ் ரயம் -எல்லா மக்களுடைய மனத்தையும் பற்றி இருக்கிற
நிரா கர்த்தும் மோஹம் –அறியாமையை அகற்றுவதற்காக
மஹீ பாகே -இந்த பூ ப்ரதேசத்திலே
மகர மஹிதாக்யே -மகரம் -தை -எனப்படுகின்ற கௌரவிக்கப்பட்ட
மாஸே –மாதத்தில்
ப்ரஸஸ்தே-கொண்டாடப்பெற்ற
ஹஸ்தர்ஷே -ஹஸ்தம் என்னும் நக்ஷத்திரத்தில்
ஸமஜநி -திரு அவதரித்தார்
மகரம் -மங்களம் கரோதி -உத்பாதயதி இதி மகர
அலங்காரம் ததாதி இதி மகர -சோபையைத் தரும் மாதம்
ஹஸ்த நக்ஷத்ர அதி தேவதை ஸூர்யன்
திருமழிசைப் பிரான் போல் பரதத்வ நிர்ணயம் பண்ணவே இவரும் இந்த மாதத்தில் அவதரித்தார்
பேர் அருளாளன் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தார் போல் இவரும் வ்ருத்தி கிரந்தத்தை நினைவில் கொண்டு விண்ணப்பித்து உபகாரம் புரிந்தார்
ஆகவே இவரும் பேர் அருளாளன் போலவே தயா ஸிந்து

——————-

அநாத் ருஷ்யாம் ப்ரஹ்மாதி பிரபி ஸூரைரத்ம க்ருதிபிர்
ஸதாப் யேகா காராம் அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம்
அஹந்தா மஜ்ஞாநாம் ப்ரக்ருதி மநு ரூபாம் மம க்ருதே
பரா குர்வன் கூர ப்ரபு ரகில நிரூணாம் விஜயதே
–22-

கூர ப்ரபு-கூரத்தாழ்வான்
ப்ரஹ்மாதி பிரபி ஸூரை–பிரமதேவன் முதலிய தேவர்களாலும்
அநாத் ருஷ்யாம் –போக்க முடியாததும்
அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம் –வளர்வது தேய்வது என்னும் பேச்சைக் கூட அறியாததும்
ஸதாப்யே காகாராம் –ஸதாபி ஏக ஆகாரம் –பூரணமான வளர்ச்சி என்கிற ஒரே விதமான வடிவை யுடையதும்
மம க்ருதே -மமகாரத்துக்கு
ப்ரக்ருதிம் அநு ரூபாம்–ஏற்ற மூல காரணமானதுமான
அஜ்ஞாநாம்–அறிவிலிகளான
அகில நிரூணாம்–எல்லா மனிதர்களுடையவும்
அஹந்தாம் -அஹாங்காரத்தை
பரா குர்வன் ஸந் விஜயதே –போக்கடித்துக் கொண்டே வெற்றி பெறுகிறார்
கீழ் அஞ்ஞானம் போக்கவே ஆழ்வான் அவதாரம் -இதில் அதனால் உண்டாகும் அஹங்கார மமகாரங்களைப் போக்கும்படி கூறப்படுகிறது
ஸ்வரூப ஞானத்தை உண்டாக்குவதன் வாயிலாகப் போக்கி பகைவர்களை வென்று முடி சூடிய அரசர் போல் விளங்குகிறார் என்கிறார்-

அமோகைருத் கூலைரநு பதி ஸமுத்தை ரநுபமை
கடாஷை ப்ரேமார்த்ரை கலி மலம ஸேக்ஷம் வ்யபநயந்
ஜநாநாமா நந்தம் நிரவதிக மத்யாபி ஜநயந்
ஜயத்யேக்ஷ ஸ்ரீ மாந் மம குல குரு கூர ந்ருபதி
–23-

மம குல குரு–அடியேனுடைய குல குரு வானவரும்
ஸ்ரீ மாந்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையவருமான
யேக்ஷ கூர ந்ருபதி -இந்தக் கூரத்தாழ்வான்
அமோகை–வீணாகாதவையும்
அநுபமை -நிகரில்லாதவையும்
ப்ரேமார்த்ரை-அன்பினால் குளிர்ந்தவையும்
அநு பதி ஸமுத்தைர் –நிர் ஹேதுகமாக உண்டானவையும்
உத் கூலைர–கரை கடந்தவையுமான
கடாஷை –தமது கடைக்கண் பார்வை களாலேயே
கலி மலம் –கலியினால் உண்டாகிற தோஷத்தை
அஸேக்ஷம் வ்யபநயந் –மிச்சம் இல்லாமல் போக்குவராய்க் கொண்டும் -அதனால்
ஜநாநாம் -மக்களுக்கு
ஆநந்தம் நிரவதிகம் -எல்லையில்லா மகிழ்ச்சியை
அத்யாபி ஜநயந் -இன்றும் உண்டாக்குமவராய்க் கொண்டும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்
கீழ் அஹங்கார மமகாரங்களைப் போக்கியமையை அருளிச் செய்து இதில் அவை காரணமாக உண்டாகும் பாபங்கள் -கலியுகக் குற்றங்கள் அனைத்தையும் போக்கி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார் என்கிறார்
கடாக்ஷங்களுக்கு அனைத்து விசேஷணங்களையும் அருளிச் செய்து -ஆழ்வானுடைய கடாக்ஷம் தயை அசாதாரணம் என்கிறார்
இவ்வாசிரியர் ஆழ்வான் திருவம்சத்தவர் போலும் -மம குல குரு என்பதால் -மஹாந்த ப்ரமாணம்

—————

அவித்யா மஹாத்ம்யாத விதித நிஜாகார விபவாந்
அசேஷா நுத்தர்த்தும் பவ ஜலதி மக்நாந் ஜநிப்ருத
அசவ் கூராதீஸ ஸ்வயமவதரந் பூரிக்ருபயா
நயந் நாவம் விஷ்ணும் விகததர பண்யாம் விஜயதே –
-24-

அசவ் கூராதீஸ –அந்தக் கூரத்தாழ்வான்
அவித்யா மஹாத்ம்யாத் –தீ வினையின் மஹிமையால்
அவிதித நிஜாகார விபவாந் –அறியப்படாத தமது உண்மை வசிவமாகிய -பகவத் சேஷத்வமாகிய -பெருமையை உடையவர்களாய் –
அதனால்
பவ ஜலதி மக்நாந் –இவ்வுலக வாழ்வாகிய துன்பக்கடலில் மூழ்கி இருக்கிற
அசேஷாந் ஜநிப்ருத –பிறவி எடுத்த அனைவரையும்
உத்தர்த்தும்–உயரத் தூங்குவதற்காக
பூரிக்ருபயா-பெரும் கருணையினாலே
ஸ்வயமவதரந் -தாமே அவதரித்து நின்று
நாவம் விஷ்ணும் –விஷ்ணு என்னும் படகை
விகததர பண்யாம்-ஓடக்கூலி இல்லாமல்
நயந் -ஓட்டுமவராய்
விஜயதே –விளங்குகிறார்

ஸ்வரூப ஞானம் உண்டாக்கப் பெற்ற சம்சாரிகளைத் தானே படகு போல் இருந்து முகுந்தன் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பானே
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -அன்றோ

———-

பலாயத்வம் வேகாத் க்வசந கதகா காநந தலே
நிலீநா பூயாஸ்த ப்ரதிகதக மத்தேப ம்ருகராட்
ஜயீ நாநா தந்த்ர ப்ரவசந சணை ப்ரவ்ட வசநை
ஸமேத ஸிஷ்யவ்கை ரடதி வஸூதாம் கூர ந்ருபதி
–25-

ப்ரதிகதக மத்தேப ம்ருகராட் –எதிர்வாதம் செய்யுமவர்களாகிய மதம் பிடித்த யானைகளைக் கொள்ளும் ஸிம்ஹமாகிற
கூர ந்ருபதி -கூரத்தாழ்வான்
நாநா தந்த்ர ப்ரவசந சணை-பலவகையான ஸாஸ்த்ர அர்த்தங்களை விளக்குவதில் ஆற்றல் படைத்த
ப்ரவ்ட வசநை -கம்பீரமான தமது ஸ்ரீ ஸூக்திகளாலே
ஜயீ –உங்களை வெல்லுமவராய்க் கொண்டு
ஸமேத ஸிஷ்யவ்கை-தம்மைப் போன்ற சிஷ்ய ஸமூஹங்களோடு கூடியவராய்
அடதி வஸூதாம் –பூமியில் ஸஞ்சரிக்கிறார்
கதகா–வீண் வாதம் செய்யுமவர்களே
வேகாத்-விரைவாக
பலாயத்வம் க்வசந –எங்கேயாவது ஓடிப்போய் விடுங்கள்
காநந தலே –காட்டிடத்திலே
நிலீநா பூயாஸ்த –ஒளிந்து கொள்ளுங்கள்

ஆழ்வானை ஸிம்ஹமாகவும் -புறச் சமயிகளை மத யானைகளாகவும் உருவகம்

————–

ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடாய ஸமுஸல மாதாய ஸடஜித்
வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ ஜ்ரும்பித மத
ப்ரதாவந் நப்யேதி ப்ரதிகதக வாதாஹவ ருசிம்
நிருந்தந் கூரேஸ த்விரத ந்ருபதிர்ப்ரும் ஹிதரவை
–26-

ஹே கதகா –ஓ வாதம் செய்யுமவர்களே
ஸடஜித் வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ -திருவாய் மொழி முதலிய ஸ்ரீ ஸூக்தி திரளை எப்போதும் அனுபவிப்பதில் மிகவும் விருப்பமுடையதாயும்
ஜ்ரும்பித மத–வளர்ந்த மதத்தை யுடையதாயும் இருக்கிற
கூரேஸ த்விரத ந்ருபதிர்–கூரத்தாழ்வானாகிய உயர்ந்த யானை
ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடா ஆயஸ முஸலம் -உபநிஷத்துக்களாகிய இரும்பு உலக்கையை
ஆதாய -எடுத்துக் கொண்டு
ப்ரும் ஹிதரவை –பிளிறல்களின் ஒலிகளாலே
ப்ரதிகதக வாத ஆஹவ ருசிம் –எதிர்வாதம் செய்பவர்களின் -வாதப்போரில் உண்டான ருசியை
நிருந்தந் –தடை செய்து கொண்டு
ப்ரதாவந் அப்யேதி –உங்களை நோக்கி ஓடி வருகிறது
எங்காவது ஓடி விடுங்கள் -காட்டில் ஒழிந்து கொள்ளுங்கள் -என்று முன் ஸ்லோகத்தில் உள்ளதை இங்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
கதகா -என்பதையும் அத்யாஹாரம்-கூட்டிக் கொள்ள வேண்டும்
கீழ் கலி மிக்க செந்நெல் –வலி மிக்க சீயம் போல் ஸிம்ஹம்
இங்கு பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் ராமானுஜ முனி வெள்ளம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாத்தியார்கள் உங்கள் வாழ்வற்றதே -போல் மதயானையாக உருவகம்

அஸாரம் ஸம்ஸாரம் பஹுலதர துக்கா கரம் இமம்
விஸ்ருஜ்ய ஸ்ரீ மந்தம் பஜத விபுமாநந்தபரிதம்
உதாரஸ் ஸர்வேப்யோ விதரதி ஜநா ஸ்வேந ஸமதாம்
அஸாவித் யத்ரத் யாநுபதிஸதி கூராதிப குரு
–27-

ஹே ஜநா –ஓ மக்களே
கூராதிப குரு –கூரத்தாழ்வானாகிய ஆச்சாரியர்
பஹுலதர துக்கா கரம்–மிகவும் அதிகமான துன்பங்களுக்குப் பிறப்பிடமானதும்
அஸாரம் -ஸாரமான ஆனந்தம் சிறிதும் இல்லாததுமான
ஸம்ஸாரம் இமம் இந்த உலக வாழ்க்கையை
விஸ்ருஜ்ய –அறவே விட்டுத் தொலைத்து
ஆநந்த பரிதம் –ஆனந்தம் நிறைந்தவனாய்
விபும் -எல்லாம் வல்லவனான
ஸ்ரீ மந்தம் –திருவின் மணாளனான திருமாலை
பஜத –அடையுங்கள்
உதாரஸ் அசவ் –கொடையாளியாகிய அத் திருமால் ஸர்வேப்யோ -இன்னார் இனையார் என்று பாராமல் தன்னை அடைந்த அனைவருக்கும்
ஸ்வேந ஸமதாம் –தன்னோடே ஒப்புமையை -சமானமான ஆனந்தத்தை
விதரதி –அளிக்கிறான்
இதி -என்று
அத்ர த்யாம் -இவ்வுலகில் உள்ள மக்களைக் குறித்து
உபதிஸதி–உபதேசிக்கிறார்

தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் –பெரிய திருமொழி –11-3-5-

——————–

விரக்தா நாமக்ர்யோ விமல சரிதோ வைதிக வர
விநேதா ஆசாராணாம் விகத மத மோஹாதிம குண
அஸூயா நிர்முக்த ஸமதம முகாநந்த ஸூகுண
ஸதாஸ்ரோத்ரா நந்தம் கலயதி பரம் கூர ந்ருபதி
–28-

விரக்தா நாம் –ஆசை யற்றவர்களில்
அக்ர்யோ –முதல்வரும்
விமல சரிதோ –குற்றமற்ற நடத்தை யுடையவரும்
வைதிக வர –வேதத்தைப் ப்ரமாணமாகக் கொள்பவர்களில் சிறந்தவரும்
ஆசாராணாம்-அவ்வேதத்தில் கூறப்பட்ட ஆசாரங்களை
விநேதா –சிஷ்யர்கள் அனுஷ்ட்டிக்கும் படி செய்பவரும்
விகத மத மோஹ ஆதிம குண –செருக்கு அறியாமை முதலான கெட்ட குணங்கள் இல்லாதவரும்
அஸூயா நிர்முக்த –பொறாமையினால் விடப்பட்டவரும்
ஸம தம முகாநந்த ஸூகுண –மனவடக்கம் புலன் அடக்கம் முதலிய எல்லையில்லாத நற் குணங்களை உடையவருமான
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
ஸதா-எப்போதும்
ஸ்ரோத்ரா நந்தம் -செவிக்கு இனிமையை
கலயதி பரம் –மிகவும் உண்டாக்குகிறார்

ஆசிநோதி ஹி ஸாஸ்த்ரார்தாந் ஆஸாரேஸ்தாப யத்யபி ஸ்வயம் ஆஸரதே ஸோ அபிதீயதே –ஆசார்ய லக்ஷணம்

————

யதீயோஷா பாத்ரம் பஜதி மநுஜ ப்ரேம பததாம்
பரம் பத்மா பர்த்து பதித ஐந ஸூடாமணிரபி
யதீயா ஸ்ரீ ஸூக்தி நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி
ஸ ஜீயாத் கூரேஸ ஸகல ஸூப ஸந்தாந ஸரணி
–29-

யதீயோஷா பாத்ரம் –யாருடையதான பார்வைக்கு இலக்கான
மநுஜ-மனிதன்
பதித ஐந ஸூடாமணிரபி-ஜாதி ஆசாரங்களில் இருந்து நழுவி விழுந்தவர்களில் தலைவனாய் இருந்த போதிலும்
பரம் பத்மா பர்த்து–திருமகள் மணவாளனாகிய திருமாளுடைய
ப்ரேம பததாம் -அன்புக்கு இலக்காகும் தன்மையை
பஜதி -அடைகிறானோ
யதீயா ஸ்ரீ ஸூக்தி -யாருடையதான நல் வார்த்தையானது
நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி –எல்லா வேதாந்தப் பொருள்களுக்கும் விளக்க வுரை யாகிறதோ
ஸ -அந்த
ஸகல ஸூப ஸந்தாந ஸரணி –ஸகல மங்கள சமூஹத்திற்கும் வழியான -உபாயமான
ஸ ஜீயாத் கூரேஸ –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குக

—————-

விஸூத்த ஜ்ஞாநாப்தி விகத மமகார ஸ்வ பரயோ
விநேதா ஸர்வேஷா மதி விமல போதஸ்ய விதுஷாப்
விஹர்த்தா ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ
ப்ரஹர்த்தா அசவ்ம்யாநாம் பவதி பவிநாம் கூர ந்ருபதி
–30-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
விஸூத்த ஜ்ஞாநாப்தி –மிகத் தூய்மையான அறிவுக்கு கடலாகவும்
ஸ்வ பரயோ-தன்னிடத்திலும் பிற பொருள்கள் இடத்திலும்
விகத மமகார –யான் என்னுடையவன் இவை எல்லாம் எனது -என்று செருக்குக் கழியப் பெற்றவராகவும்
ஸர்வேஷாம் விதுஷாம் -அறிவுடையார் அனைவருக்கும்
அதி விமல போதஸ்ய –தமது அறிவைப் போன்றே மிகவும் நிர்மலமான -தூய்மையான அறிவை
விநேதா -நன்றாக அடைவிப்பராகவும்
ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ-ஸ்ரீ ரெங்கநாதனுடைய அன்பிற்கு மிகவும் இலக்காகிய யதிராஜருடைய திருவடிகளில்
விஹர்த்தா -விளையாடுமவராகவும்
அசவ்ம்யாநாம்-முரடர்களான
பவிநாம்-ஸம்ஸாரிகளை
ப்ரஹர்த்தா பவதி –துன்புறுத்துமவராகவும் இருக்கிறார் –

————-

புராணா நாம்பும் ஸாம் ஸரணி மநுயந் தத்த்வ விவ்ருதவ்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம் பரமதபாஸ்யந் நந்ருததாம்
பரா குர்வந் தத்த்வ ப்ரமிதபதயோ ஜீவ தமஸோ
ஸமிந்தே கூரேஸ ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம்
–31-

கூரேஸ–கூரத்தாழ்வான்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம்-மூல ப்ரக்ருதி ஜீவாத்மா பரமாத்மா என்ற மூன்றினுடையவும்
தத்த்வ விவ்ருதவ் -ஸத்யத்வத்தை விளக்குவதில்
புராணா நாம் பும் ஸாம் –பூர்வர்களான புருஷர்களுடைய
ஸரணி மநுயந் -வழியைப் பின் செல்லுமவராயும்
தத்த்வ ப்ரமிதபதயோ–உண்மைப் பொருள்கள் என்று வேதத்தின் மூலமாக அறியப்பட்ட பொருள்களாகிய
ஜீவ தமஸோ -ஜீவாத்மா மூலப்பிரக்ருதி என்ற இவற்றினுடைய
அந்ருததாம் –பொய்ப் பொருளாம் தன்மையை
பரா குர்வந் –மறுப்பவராய் -மறுப்பதில் வாயிலாக
பரமதம் –அத்வைத மதத்தை
அபாஸ்யந்–வெகு தூரத்தில் தள்ளுமவராயும்
ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம் — வேதாந்த வாக்ய ஸமூஹங்களை ரக்ஷிப்பவராய்க் கொண்டு
ஸமிந்தே –நன்றாக விளங்குகிறார்

பூர்வர்கள் -பராசர வ்யாஸ போதாய நாதி மஹரிஷிகள் என்ன -நம்மாழ்வார் நுதலிய ஆழ்வார்கள் என்ன -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆகிய ஆசார்யர்கள் என்ன –தத்வத்ரயமும் நித்யம் ஸத்யம் என்ற வேதாந்த வாக்கியங்கள் அனைத்தையும் காப்பாற்றிக் கொண்டு விளங்குகிறார்
தத்த்வ ப்ரமித பதயோ –என்ற இடத்திலுள்ள பதம் -கால் இடம் வஸ்து
தமஸ் -தமோ குணத்தை அதிகமாகப் பெற்ற மூல பிரக்ருதியைச் சொன்னவாறு –

—————-

ஸ்வரூபாபி வ்யக்திம் ஸ்ருதி ஸிகர ஸித்தாமபித தத்
நிரூப்யாம் வ்ருத்த்யை வாகில தநு ப்ருதாம்தாம் ச கதயன்
ததீ யார்ச்சா ஸீமாம் ஸ்வயமபி விதன்வந் யதி பதே
அசேஷம் கைங்கர்யம் ஜயதி ஸூமதி கூர ந்ருபதி
–32-

ஸூமதி கூர ந்ருபதி –நல்லறிவு படைத்த ஆழ்வான்
அகில தநு ப்ருதாம்–எல்லா ஸம்ஸாரி ஜீவர்களுடையவும்
ஸ்ருதி ஸிகர ஸித்தாம் –வேதாந்த ஸாஸ்த்ரத்தில் இருந்து தேறிய
ஸ்வரூபாபி வ்யக்திம் –இது வரையில் மறைத்து இருந்த ஸ்வரூபத்தை ப்ரகாசமான மோக்ஷத்தை
வ்ருத்த்யைவ –பகவத் கைங்கர்யத்தைக் கொண்டே
நிரூப்யாம்-அறுதியிடத் தக்கதாக
அபித தத் –கூறுமவராயும்
தாம் ச -அந்த வ்ருத்தியாகிய பகவத் கைங்கர்யத்தையும்
ததீ யார்ச்சா ஸீமாம் -பாகவத கைங்கர்யத்தைத் தனது எல்லையாக உடையதாக
கதயன்-சொல்லுமவராயும்
ஸ்வயமபி-தாமும்
யதி பதே -யதிராஜருடையதான
அசேஷம் கைங்கர்யம்-கைங்கர்யங்கள் அனைத்தையும்
விதன்வந் –பரக்கத் செய்பவராயும்
ஜயதி –மேம்ப்பட்டு விளங்குகிறார்

ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய் பரம் ஜ்யோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிபத்யதே
அபஹத பாப்மா விஜர விம்ருத்யு விசோக விஜிகத்ஸ அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப —
யதிபதே-ஷஷ்ட்டி விபக்தி -யாதிபதிக்கு அபிமதமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் தம் கைங்கர்யம் ஆகிய மூன்றையும் நேராகவே குறிக்கும் என்றுமாம்

———

நிரா லம்பம் கௌதஸ் குதம ஸாரம் நிஜ வச
ப்ரபஞ்சை வேதாந்த ப்ரசுர பணி தார்த்தா நநுக தை
பரா குர்வன் ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர் லஷ்மண முநே
பரிஷ் குர்வன் பாஷ்யம் ப்ரதயதி மதம் கூர ந்ருபதி
–33-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
வேதாந்த ப்ரசுர பணி தார்த்தாந் –உப நிஷத்துக்களில் ஒரு பொருளைப் பற்றிய பெரும்பாலான வாக்கியங்களின் அர்த்தங்களை
அநு கதை–பின்பற்றியவைகளும் -அதனால்
ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர்–பரிபக்குவமான தெளிந்த அறிவை உண்டாக்குமவைகளுமான
நிஜ வச ப்ரபஞ்சை -தம்முடைய வார்த்தைகளின் பரப்பினால் -விளக்கமான பேச்சுக்களினால்
நிரா லம்பம் -ஆதாரம் ஏற்றதும்
அஸாரம்–ஸாரமான பொருள் அற்றதுமான
கௌதஸ் குத மதம் -ஏன் ஏன் என்று கேட்க்கும் -விதண்டா யுக்தி மாத்ர வாதிகளின் மதத்தை
பரா குர்வன் -மறுப்பவராயும்
லஷ்மண முநே -பகவத் ராமானுஜருடைய
பரிஷ் குர்வன் பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யத்தைப் ப்ரகாசப்படுத்துமவராயும்
லஷ்மண முநே மதம் -ஸ்ரீ ராமானுஜ முனிவரின் மதத்தை
ப்ரதயதி -ப்ரஸித்தமாக்குகிறார் –

கிம் சாதன க்வ நிவசந் கிம் உபாதநாந
கஸ்மை பலாய ஸ்ருஜதீச இதம் சமஸ்தம்
இத்யாதி அநிஷ்டித குதர்க்கம் அதர்க்கயந்த
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்38-

பகவான் எதை சாதனமாகக் கொண்ட எவ்விடத்தில் இருந்து கொண்டு எப்பொருளை உதானமாகக் கொண்டு
எந்தப் பலனுக்காக இவ்வுலகங்களை எல்லாம் படைக்கிறான் -என்று இப்படி எல்லாம்
அமர்யாதமாகச் சிலர் செய்யும் குதர்க்கங்களைச் சிறிதும் பொருள் படுத்தாத வேதாந்திகள் –
எம்பெருமானே -தேவரீருடைய வைபவத்தை அப்ரமேயமாக அறிந்துள்ளார்கள்

யஸ் ஸர்வஞ்ஞஸ்
பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஸ்வே மஹிம்நி ப்ரதி டித
க்ரீடதோ பாலகஸ்யேவ சேடாம் தஸ்ய நிசாமய -விஷ்ணு புராணம் -1-2-18-

—————

பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித
ப்ரகாமமது ராக்ஷரைரபி நவை ஸ்வ வாக் கும்பநை
ஸதாவ்ய வஹரந்கலா ஸமிதி ஸாத்த்வி காக்ரேஸராந்
தநோதி பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் கூரப —
34-

கூரப –கூரத்தாழ்வான்
பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித –பவழம் போல் அழகிய உதடுகளில் விளங்குகிற அழகான புன் சிரிப்பை உடையவராய்
ப்ரகாமமது ராக்ஷரைர் –மிகவும் இனிமையான எழுத்துக்களைக் கொண்டவர்களும்
அபி நவை –இதற்கு முன்பு கேட்டிராதவைகளுமான
ஸ்வ வாக் கும்பநை –தமது சொற்களின் சேர்க்கைகளால்
ஸமிதி–வாதப்போரில்(ஸமித் -யுத்தம் -இங்கு வாத யுத்தம்)
ஸதா–எப்போதும்
கலா -ஸாஸ்த்ர அர்த்தங்களை
வ்ய வஹரந்–தெரிவித்துக் கொண்டு
ஸாத்த்வி காக்ரேஸராந் -ஸத்வ குணம் படைத்தவர்களின் தலைவர்களை
பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் –பலவகைப்பட்ட ஆஸ்சர்யங்களின் மிகுதியினால் சித்திரத்தில் எழுதப்பட்டவர் போல்
தநோதி –செய்கிறார்

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9- –

—————-

கதாஹவக்ருதோத் யமாந் கலிமலாநுலிப்தாஸயாந்
ததாக தமதாநுகாந் ததிதராந் த்விஷத்வாதி ந
முதாக்ருத பரிஸ்ரமாந் முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்
விதாய விபுதஸ்துதோ ஜயதி கூர நாதோ குரு –
-35-

கூர நாதோ குரு –கூர நாதர் என்னும் ஆச்சார்யர்
கலி மல அநுலிப்த ஆஸயாந்–காளியின் குற்றத்தினால் கெடுக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாய்
கத ஆஹவ க்ருதோத் யமாந் –வாதமாகிய போரிலே மூண்டவர்களான
ததாக தமதாநுகாந் –புத்தனுடைய மதத்தை பின்பற்றியவர்களையும் (ததாகத -புத்தன் )
ததிதராந் –அவர்களை விட வேறான
த்விஷத்வாதி ந –எதிரிகளாய் வாதம் செய்யுமவர்களையும்
முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்-மூடப்பட்ட தமது பேச்சின் வளர்ச்சியை யுடையவர்களாயும்
முதாக்ருத பரிஸ்ரமாந் –பயன் அற்றதாகச் செய்யப்பட தமது உழைப்பை யுடையவர்களாகவும்
விதாய –செய்து
விபுத ஸ்துதோ ஜயதி -ஸாத்விக பண்டிதர்களால் ஸ்துதிக்கப்பட்டவராய்க் கொண்டு மேம்பட்டு விளங்குகிறார்-

——————-

நிராக்ருதது ரீஹிதை நிகம ஸார ஸந்தர்ஸிபி
நிரஸ்தது ரிதாலிபி நிகில ஸம்ஸயச் சேதி பிர்
நிதாந்த்தை மதுரைஸ் ஸூபை நிகில சவுக்ய ஸம்பாதகை
நிஜைர் வசந கும்பநை ஜயதி கூர நாதோ குரு –
-36-

கூர நாதோ குரு –ஆழ்வானாகிய ஆச்சார்யர்
நிகம ஸார ஸந்தர்ஸிபி –வேதாந்தங்கள் ஸாரார்த்தங்களை அறிவிப்பனவும்
நிகில ஸம்ஸயச் சேதி பிர் –எல்லா சந்தேகங்களையும் அறுக்க வல்லனவும்
நிதாந்த்தை மதுரைஸ் –மிகவும் இனியனவாகவும்
ஸூபை –நன்மை பயப்பனவாகவும்
நிகில சவுக்ய ஸம்பாதகை –எல்லா விதமான சவுக்யத்தை உண்டாக்குவனவும்
நிராக்ருத துரீஹிதை –போக்கடிக்கப்பட்ட மாறுபட்ட கருத்துக்களை யுடையனவும்
நிரஸ்த துரிதாலிபி –மாறுபட்ட கருத்து உண்டாவதற்குக் காரணமான பாப ஸமூஹத்தைத் தூக்கி எறிவனவாவுமான
நிஜைர் –தம்முடைய
வசந கும்பநை –ஸ்ரீ ஸூக்திகளின் சேர்த்திகளால்
ஜயதி -வெற்றி பெறுகிறார்-

—————

கலிர் ஹதபவோ அபவத் கலுக்ஷ ஜாதமுந் மூலிதம்
தமஸ் ச ரஜஸா ஸமம் விலய மாப ஸத்த்வம் புந
ஸமேத் யுபசிதம் ந்ருணா முதயமேதி தீ வல்லரீ
மஹீதல முபாகதே மஹதி கூர நாதே குரவ்-
-37-

மஹதி கூர நாதே குரவ்–கூரத்தாழ்வானாகிற மஹாச்சார்யார்
மஹீதல முபாகதே –பூமியை அடைந்த அளவிலே
கலிர் ஹதபவோ –கலியுகமானது நாசம் செய்யப்பட உண்மையை யுடையதாக
அபவத்–ஆயிற்று –
எப்படி எனில்
கலுக்ஷ ஜாதம் –பாப ஸமூஹமானது
உந் மூலிதம் –வேரோடு களைந்து எறியப்பட்டது
தமஸ் ச ரஜஸா ஸமம் –தமோ குணம் ரஜோ குணத்தோடு
விலய மாப –அழிவை அடைந்தது
ஸத்த்வம் புந –ஸத்வ குணமோ என்னில்
ஸமேத் யுபசிதம் –வளர்ச்சியை மிகவும் அடைந்து கொண்டே இருக்கிறது
அதனால்
தீ வல்லரீ –அறிவு என்னும் கொடியானது
உதயமேதி –வளர்ச்சியை அடைகிறது

கலியும் கெடும் -கண்டு கொண்மின் –அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாயனாருக்கு ஆளாயினரே -க்ருதயுக தர்மமான ஸத்வ குணம் வளர்ந்து ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றனர்-

————-

தயாதி ஸூகுணா வலி தநுஜ வைரிணா ஸ்வாமிநா
நியாந்த்ரித நிஜாக்ருதி நிலயமேத்ய கூராதிபம்
ப்ரதி க்ஷண விஜ்ரும்பிதாக்ருதிரவாப்ய லஷ்யம் பரம்
ப்ரகாஸ மதி கச்சதி ப்ரதி ஹதாத்ம துலயாதிக
–38-

தநுஜ வைரிணா–அஸூர ஸத்ருவான
ஸ்வாமிநா–எம்பெருமானாலே
நியாந்த்ரித நிஜாக்ருதி –குறைக்கப்பட தத் தம் வடிவுகளை யுடைய
தயாதி ஸூகுண ஆவலி –தயை முதலிய நற் குணங்களின் கூட்டமானது
நிலயமேத்ய கூராதிபம் –கூரத்தாழ்வானாகிற ஒளி விடத்தை அடைந்து
ப்ரதி க்ஷண விஜ்ரும்பித ஆக்ருதிர் –க்ஷணம் தோறும் வளர்ந்த தத்தம் வடிவுகளை யுடையதாய்
அவாப்ய லஷ்யம் பரம் –வளர்ச்சியில் உயர்ந்த குறிக்கோளை அடைந்து
ப்ரதி ஹதாத்ம துலயாதிக–தன்னோடு ஓத்ததும் மிக்கதுமான குணத்தொகுதி மற்று ஓன்று இல்லாதாய்க் கொண்டு
ப்ரகாஸ மதி கச்சதி –விளக்கத்தை அடைகிறது
தயாதி –ஆதி சப்தத்தால் வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம் உதாரகுணம் போன்றவற்றையும் சொன்னவாறு-

————–

ஸ்ரீ யபதி உதாரதீ ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம்
விஹாய பரமேஸதாம் புவி யதாத்மநா ஆசார்யதாம்
அவாப்து மவதீர்ய தத் ஸமுப லப்தயே ஸிஷ்ய தாம்
அவாப யதி பூபதே விஜயதாம் ஸ கூராதிப —
39-

ஸ்ரீ யபதி உதாரதீ –உயர்ந்த திரு உள்ளம் கொண்ட ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம் –வேத வாக்ய ஸமூஹத்தினால் ஒரு மிடறாக ஸ்தோத்ரம் செய்யப்பட
விஹாய பரமேஸதாம் –மிக உயர்ந்த ஸர்வேஸ்வரத் வத்தை விட்டு ஒழித்து
ஆசார்யதாம் அவாப்தும் –ஆச்சார்யத்வத்தை அடைவதற்காக
புவி யதாத்மநா வதீர்ய –பூமியில் யாருடைய வடிவுடையவனாக அவதரித்து
தத் ஸமுப லப்தயே -அவ்வாச்சர்யத்வத்தைப் பூர்ணமாகப் பெறுவதற்காக
யதி பூபதே -யதிராஜரான எம்பெருமானாருக்கு
ஸிஷ்ய தாம் –சிஷ்யராக தன்மையை
அவாப்ய –அடைந்தானோ
விஜயதாம் ஸ கூராதிப –அந்தக் கூரத்தாழ்வான் வெற்றி பெற்றிடுக-

————-

வஸோபிர் அந்ருதேதரை அகில ஜீவ ஜீவாதுபிர்
முமுஷு ஜநதாமுதே முரரிபோர் மஹா வைபவம்
ஸ பாஷப நயநம் ப்ருவந் ஸ புல கோத்கமம் ஸாதரம்
ஸமித்த மதுரஸ்மிதோ ஜயதி கூர ப்ருத்வீ பதி
–40-

கூர ப்ருத்வீ பதி –கூரத்தாழ்வான்
அகில ஜீவ ஜீவாதுபிர் –எல்லா ஜனங்களுக்கும் ஜீவ ஒவ்ஷதமாய்
வஸோபிர் அந்ருதேதரை –பொய்யில்லாத-ஸத்யமான -வேத வாக்யங்களைக் கொண்டு -பொய்யில் பாடலான திருவாய் மொழி முதலியவற்றைக் கொண்டு
முரரிபோர்-முர அசுரனை அழித்த எம்பெருமானுடைய
மஹா வைபவம் –மிக உயர்ந்த பெருமையை
முமுஷு ஜநதாமுதே –முக்தி பெற விரும்பும் மக்களின் மகிழ்ச்சிக்காக
ஸ பாஷப நயநம் –கண்ணீர் பெருகும் கண்களோடும்
ஸ புல கோத்கமம் –மயிர் கூச் செறிதலோடும்
ஸமித்த மதுரஸ்மிதோ -மிக விளங்கிய இனிய புன் சிரிப்பை யுடையவராய்க் கொண்டு
ஸாதரம் –ப்ரீதியோடே
ப்ருவந் –பேசுமவராய்
ஜயதி –மேம்பட்டு விளங்குகிறார்-

————–

பவாக்ய மருமேதி நீவலந ஜாததாபாதுராந்
ஜநாந் ஹரி கதாம்ருதை மதுர ஸீதலைர் ஜீவயன்
ததீய பத ஸேக்ஷ தாதி யமபாரமுத்பாத யந்
விபாதி புவி கூரராட் விபுத சங்க ஸம்ஸேவித
–41-

கூரராட்–கூரத்தாழ்வான்
பவாக்ய மருமேதி நீவலந ஜாத–ஸம்ஸாரம் என்று பெயர் பெற்ற பாலை நிலத்தில் ஸஞ்சரிப்பதனால் உண்டான்
தாப ஆதுராந் –தாபத்தினால் வருந்திய
ஜநாந் –மக்களை
மதுர ஸீதலைர் –இனியவனாய்க் குளிர்ந்தவையுமான
ஹரி கதாம்ருதை –பகவத் கதைகளாகிற அமுதப் பெருக்குகளால்
ஜீவயன் –பிழைப்பிப்பவராயும்
ததீய பத ஸேக்ஷ தாதி யம் –ஜீவாத்மாக்கள் அவ்வெம்பெருமான் அடியார்களுடைய அடியவர்களுடைய திருவடிகளுக்கு அடியவர்கள் என்னும் அறிவை
அபாரம் உத்பாத யந் –அதிகமாக உண்டாக்குமவராயும்
விபுத சங்க ஸம்ஸேவித –வித்வத் கோசடியினால் ஸேவிக்கப் பெற்றவராய்
விபாதி புவி –பூமியில் விளங்குகிறார்

அழகிய மணவாளன் திருவேங்கடமுடையான் பேர் அருளாள பெருமாள் மூவரும் தமது அடியரான திருப்பாண் ஆழ்வார் தொண்டைமான் சக்ரவர்த்தி எம்பெருமானார் ஆகிய மூவரையும் முன்பே தமக்கு அடியவராய் இருக்கிற லோக ஸாரங்க மா முனிகள் -குறும்பறுத்த நம்பிகள் -திருக்கச்சி நம்பிகள் என்னும் மூவருக்கும் அடியவைகளாக ஆக்கி இவ்வர்த்தம் காட்டி அருளினார்கள் அன்றோ-

————

அஸத்பிர் அநுபத்ருதாம் அநிதமாதி வாணீம் ஸதீம்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் ஹரி பதாநு ஷக்தாம் பரம்
ஜநார்தன பரத்வ தீ ஜநித பாவ பத்தாஸயை
வஸோபி ருபலாலயந் ஜயதி கூர நாதோ குரு –
-42-

கூர நாதோ குரு –கூரேசர் என்றும் ஆசாரியர்
அநிதமாதி வாணீம் -இது தான் பிறந்த காலம் என்பது இல்லாத -அநாதியான -வேத வாக்கை
ஜநார்தன பரத்வ தீ ஜநித –எம்பெருமானையே பரம் பொருளாகக் கொண்டது வேதம் என்னும் அறிவினால் உண்டு பண்ணப்பட்ட
பாவ பத்த ஆஸயை –மனதில் ஊன்றிய கருத்தைத் தெரிவிக்கிற
வஸோபி–தமது ஸ்ரீ ஸூக்திகளினால்
ஸதீம் -பதி வ்ரதையாகவும்
அஸத்பிர் –அசத்துக்களான புறச் சமயிகளாலே
அநுபத்ருதாம்–தமக்குத் தோற்றிய படி எல்லாம் பொருள் சொல்லிக் கெடுக்கப் படாததாகவும்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் -மற்ற ஒரு தேவர்களின் காலில் குனியாததாகவும்
பரம்-மிகவும் மேம்பட்ட
ஹரி பதா அநு ஷக்தாம் –எம்பெருமான் திருவடிகளிலே ஆசை கொண்டதாகவும்
உபலாலயந் ஜயதி –உபதேசித்திக் கொண்டாடப்படுமவராய் மேம்பட்டு விளங்குகிறார்-

—————-

அநந்த குண மவ்க்திகை அகில சேதநா மோதகை
அநந்த நய ஸாகராத் ஸ்வயமுபாஹ்ருதைஸ் ஸோபநை
அநந்த பத ஸம்ஸ்ரிதாநபி விபூஷயன் ஸோபதே
ஹ்யநந்த குண ஸேவதிர் ஜயதி கூர நாதோ குரு
–43-

அநந்த குண ஸேவதிர் –எல்லையில்லா நற் குணங்களுக்கு நிதியான
கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
அநந்த நய ஸாகராத் –எல்லையில்லா ஸாஸ்திரங்களாகிய கடலில் இருந்து
ஸ்வயம் –தானாகவே
உபாஹ்ருதைஸ் –எடுக்கப்பட்டவைகளும்
அகில சேதந ஆமோதகை-மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்டுவனவும்
ஸோபநை–நல்லவைகளுமான
அநந்த –நற் குணம் நிறைந்த எம்பெருமானுடைய
குண மவ்க்திகை –நற் குணங்களாகிய முத்துக்களினாலே
அநந்த பத ஸம்ஸ்ரிதாந் –எம்பெருமான் திருவடிகளை பற்றிய பக்தர்களை
அபி விபூஷயன் ஸோபதே ஹ்யஜயதி – –நன்றாக அலங்கரிப்பவராய்க் கொண்டு பிரகாசித்து விளங்குகிறார்-

———————–

அவாங் மநஸ கோசர அமல தயா குணைகாஸ் பதம்
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ ஸ்வயம்
யதீஸ்வர மகா பஹம் நிகில தேஹிநாம் தர்சயந்
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி கூர நாதோ குரு –
-44-

அவாங் மநஸ கோசர அமல தயா குண ஏகாஸ் பதம் –வாக்குக்கும் மனஸ்ஸூக்கும் எட்டாத குற்றமற்ற தயையாகிய குணத்துக்கு ஒரே கொள் காலமாகிய
கூர நாதோ குரு –ஆழ்வான் என்னும் ஆச்சார்யர்
ஸ்வயம்-தாமாகவே -யாரும் வேண்டாமல் –
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ –நற் குலப்பிறப்பு முதலியவற்றால் உண்டான செருக்கினால் கெடுக்கப் பட்டவர்களை ,மோக்ஷம் அடைவிப்பதில் விரதம் பூண்டவராய்
நிகில தேஹிநாம் –எல்லா மக்களுக்கும்
யதீஸ்வரம் –யதிராஜரான எம்பெருமானாரை
அகா பஹம் –பாபம் போக்கி மோக்ஷம் அடைவிப்பராக -உத்தாரக ஆச்சார்யராக
தர்சயந் –காட்டுமவராய்க் கொண்டு
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி –உயர்ந்த ஜனங்களால் அடையப்பட்டு மேம்பட்டு விளங்குகிறார் –
தயா குண ஏக ஆஸ்பதம் என்பதால் ஆழ்வானுடைய தயை எம்பெருமானுடைய தயையைக் காட்டிலும் மேம்பட்டது என்றவாறு-

———

யதீஸிதுரதீ ஸதாம ஸஹதோ அபி ரங்க அம்ருதாத்
ஸ்வகைஸ் ஸம முகை
குண ஸ்வபத ஸிஷ்யதாமே யுஷா
குரோஸ் ஸமுபலப் தயா நிகில யாபி ரங்கஸ்ரியா
யதீஸமபி நந்த யந் ஜயதி கூர நாதோ குரு
–45-

கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
யதீஸிதுர் –யதிராஜரான எம்பெருமானுடைய
அதீ ஸதாமபி -மஹா ஆசார்யத்வத்தையும்
அஸஹதோ -பொறுக்காதவராய்
ஸ்வகைஸ் ஸம முகை குண –தம்முடையவையான சாந்தி முதலிய குணங்களினாலே
ஸ்வபத ஸிஷ்யதாம் –தம் திருவடிகளில் சிஷ்யராய் இருத்தலை
ஏயுஷ-அடைந்தவருமான
ராங்க அம்ருதாத் குரோஸ் –திருவரங்கத்து அமுதனார் என்ற ஆசார்யரிடம் இருந்து
ஸமுபலப் தயா -பெறப்பட்ட
நிகில யாபி ரங்கஸ்ரியா –ஸமஸ்த மான ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்தாலும்
யதீஸம் -எம்பெருமானாரை
அபி நந்த யந் ஜயதி –மிகவும் மகிழ்விப்பவராய் விளங்குகிறார்
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -31
குரும் பிரகாசயேத் தீ மான் –அமுத்தனாரைத் திருத்தி எம்பெருமானாருக்கு ஆளாக்கி பிரபன்ன காயத்ரியையும் அருளிச் செய்ய அருளினை பெருமை
ஆக 28 ஸ்லோகம் தொடங்கி இது வரை 18 ஸ்லோகன்களால் ஆழ்வானுடைய பெருமைகளை அருளிச் செய்தார் ஆயிற்று-

————

அநர்க விபுலாம் ஸூவ ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத
கிரீட கடகாதிபிர் விவித பூஷணைர் பூஷித
ஸமா வஹதி கூர ராட் அகில லோக நேத்ரோத்ஸ வம்
–47-

அநர்க விபுல அம் ஸூவ –விலை மதிப்பில்லாத பெரிய திருப்பரிவட்டங்களை அணிந்தவரும்
ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித –பளிச்சு என்று விளங்குகிற திருமண் காப்புக்களால் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ குறியை யுடையவரும்
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத –தாமரை மணி துளஸீ மணிகள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப் பட்டவரும்
கிரீட கடகாதிபிர் கிரீடம் காப்பு முதலிய
விவித பூஷணைர் பூஷித –பல வகையான திரு ஆபரணங்களால் பூஷிக்கப் பட்டவருயுமாய்க் கொண்டு
கூர ராட் –கூரத்தாழ்வான்
அகில லோக நேத்ரோத்ஸ வம் –மக்கள் அனைவரின் கண்களுக்கு ஸந்தோஷத்தை
ஸமாவஹதி –உண்டாக்குகிறார்

இது முதல் மேல் ஐந்து ஸ்லோகன்களால் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமும் திருத் தை திரு ஹஸ்த அவதார உத்ஸவ மகிமையையும் அருளிச் செய்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்-

—————-

மஹார்க மகுடோஜ்வல ஸ்புரது தாரீ ஹாராவலி
விலோல மணி குண்ட லோல் லஸித பீந கண்டஸ்தல
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித
விபாத மது ராக்ருதி ஜயதி கூரராட் தேஸிக
–47–

விபாத மது ராக்ருதி -மிக விளங்குகிற –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவரான
கூரராட் தேஸிக –கூரத்தாழ்வான் என்னும் ஆச்சார்யர்
மஹார்க மகுடோஜ்வல –பெரு விலையனான திரு அபிஷேகத்தினால் விளங்குமவராகவும்
ஸ்புரத் உ தாரீ ஹார ஆவலி –மின்னுகின்ற பெரிய முத்து மாலைகளின் வரிசைகளை அணிந்தவரும்
விலோல மணி குண்டல உல் லஸித பீந கண்டஸ்தல –அசைகின்ற ரத்ந குண்டலங்களாலே ஒளி வீசப் பெற்ற பருத்த கன்னங்களை யுடையவராகவும்
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித -பல நிறமுள்ள மலர்த் தொகுதிகளால் தொடுக்கப் பட்ட மாலைகளினால் அலங்கரிக்கப் பற்றவராகவும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்-

———————–

உபாருடே பாநாவுதய மதி ருஹ்யாநு திவஸம்
விசித்ரா மாந்தோ லீம் விவித மணிபிர் காஞ்சந மயீம்
அலங்குர்வந் வீதீ அநு பத க்ருதா கல்ப ஸூபகா
ஸமிந்தே கூரேஸோ மகர மஹ காலே அதிருசிர
–48-

கூரேஸோ–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே–தைமாத உத்ஸவ சமயத்தில்
யநு திவஸம் -ஒவ்வொரு நாளும்
உபாருடே பாநாவுதய -ஸூர்யன் உதயத்தை அடைந்த அளவில்
விவித மணிபிர்–பலவகையான ரத்னங்களால்
விசித்ராம் –பல வர்ணங்களை யுடையதான
காஞ்சந மயீம் -ஸ்வர்ண மயமான
ஆந்தோ லீம் –திருப் பல்லக்கை
அதிருஹ்ய –ஏறி வீற்று இருந்து
அதிருசிர –முற் கூறிய இருவகை அழகுகளும் மிகப்பெற்றவராய்
அநு பத க்ருத ஆகல்ப ஸூபகா –அடி தோறும் செய்யப்பட கோலம் வாழை மரம் பாக்குமரம் மாலிலைத் தோரணம் முதலிய அலங்காரங்களால் அழகு பெற்று இருக்கிற
வீதீ-திரு வீதிகளை தமது புறப்பாட்டினால்
அலங்குர்வந் ஸமிந்தே –அலங்கரித்துக் கொண்டு மிகவும் பிரகாசிக்கிறார்

———————–

ஸமாஸ்தாய ஸ்ரீ மாந் நிஸி புஜா போக்ய மதுலம்
மஹாயாநம் ப்ரஹ்ம ப்ரபமகில பூஷாஞ்சிததநு
த்ரயீ காதா ஸக்தைர் நிபிட ஸவிதோ வைஷ்ணவ வரை
சரந் ஸ்ரீ வத்சாங்கே ஜயதி விஸிகாம் கூர நகரே –
-49-ஸ்ரீ மாந் ஸ்ரீ வத்சாங்கே–திருவாளரான கூரத்தாழ்வான்
கூர நகரே –கூரம் என்னும் நகரத்தில்
நிஸி நிஸி–இரவுகள் தோறும்
ஸமாஸ்தாய புஜா போக்ய மதுலம்
அகில பூஷா அஞ்சிததநு –ஸமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்ட திருமேனியை யுடையவராய்
ப்ரஹ்ம ப்ரபம் -ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையதும்
அதுலம் -நிகரற்றதும்
புஜா போக்யம் மஹாயாநம் –தோளுக்கு இனியான் என்ற பெரிய வாஹனத்தை
ஸமாஸ்தாய –ஏறி வீற்றிருந்து
த்ரயீ காதா ஸக்தைர் –ருக் யஜுஸ் ஸாம வேதங்களைப் பாடுவதில் ஊற்றமுள்ள
வைஷ்ணவ வரை –ஸ்ரீ வைஷ்ணவ உத்தமர்களாலே
நிபிட ஸவிதோ –நெருக்கமுடைய ஸமீப ப்ரதேசத்தை யுடையராய்க் கொண்டு
சரந் ஜயதி விஸிகாம் –பெரிய தெருவில் எழுந்து அருளுமவராய் விளங்குகிறார் –
மஹா யாநம் -புஜா போக்யம் -இரண்டையும் சேர்த்து பெரிய தோளுக்கு இனியான் –மங்கள கிரி என்றுமாம்-

————

ஸதாம் பூலைந்தை குஸூம ஸஹிதை க்ஷய நிவஹை
குடாந் நாத்யை ரந்நைரபி நிஜ மஹாஸ்வாதா மஹிதை
க்ருதார்த்தா நாதந்வந் நிகில மநுஜாந் கூர ந்ருபதி
ஸ்வ ஜந்மர்ஷே ஹஸ்தே மகர மஹ காலே விஜயதாம்-
-50-

கூர ந்ருபதி–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே-தைமாத யுத்ஸவ சமயத்தில்
ஸ்வ ஜந்மர்ஷே –தமது திரு அவதார நக்ஷத்திரமான
ஹஸ்தே –ஹஸ்தத்திலே
நிஜ மஹாஸ்வாதா மஹிதை –தாம் அனுபவித்துச் சிறப்பிக்கப் பட்டவைகளான
ஸதாம் பூலை-வெற்றிலை பாக்குக்களோடு கூடியவைகளும்
குஸூம ஸஹிதை–புஷபங்களோடு கூடியவைகளுமான
கந்தை –சந்தனங்களாலும்
குடாந் ந ஆத்யை–சக்கரைப்பொங்கல் முதலான
அந்நைரபி –ப்ரஸாதங்களாலும்
பஷ்ய நிவஹை –பஷண ஸமூஹங்களாலும்
நிகில மநுஜாந் -மக்கள் அனைவரையும்
க்ருதார்த்தாந் ஆதந்வந் –தன்யர்களாக ஆக்குமவராய்க் கொண்டு
விஜயதாம்-வெற்றி பெற்று வாழ்க

ஜய ஜய -என்று முதலில் செய்த மங்களா ஸாஸனத்தை விஜயதாம் என்று நிகமித்து அருளிச் செய்கிறார்

————–

ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா
பஞ்சாஸத் கூர நாதஸ்ய ஸ்தோத்ர மீரிதம் உத்தமம்

ஸூத்த ஸத்வேந–ஸூத்த ஸத்த்வம் என்று கூறப்படும் வம்சத்தில் தோன்றியவராய்
மஹாத்மநா -பரந்த மனம் படைத்தவராய்
ஸ்ரீ மதா தொட்டார்யேண –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யால் நிறைந்தவருமான தொட்டாச்சார்யராலே
கூர நாதஸ்ய–கூரத்தாழ்வான் விஷயமான
பஞ்சாஸத் ஸ்தோத்ர மீரிதம் உத்தமம் –50 ஸ்லோகங்களைக் கொண்ட மிக உயர்ந்த ஸ்தோத்ரமானது விண்ணப்பிக்கப்பட்டது
கன்னட மொழியில் தொட்ட -என்பது பெரிய என்னும் பொருள் யுடையது


—————————————–

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

  1. அமானித்வம் – பணிவு
  • இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
  • முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
  1. அதம்பித்வம் – செறுக்கின்மை
  • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
  1. அஹிம்ஸா – வன்முறையின்மை
  • ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
  1. க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
  • எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
  • இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
  1. ஆர்ஜவம் – நேர்மை
  • ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
  • பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
  1. ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
  • எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
  1. சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

  • சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
  1. ஸ்தைர்யம் – மன உறுதி
  • “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
  1. ஆத்ம-வினிக்ரஹ: – சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
  • அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
  • எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
  1. இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
  • திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
  1. அனஹங்கார – தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
  • மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான்  அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
  1. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் – எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
  • ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
  1. அஸக்திர் – பற்றின்மை
  • எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
  1. புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க– குழந்தைமனைவி வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
  • அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
  • ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
  • இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
  1. இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம்  ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
  • கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
  1. மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
  • மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
  1. விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
  • ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
  1. அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
  • சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
  1. அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
  • தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
  1. தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
  • அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

முடிவுரை

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

—————–————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–-ஸ்ரீ மன் நாராயணனே பர ப்ரஹ்மம் -ஸ்ருதி ஸ்ம்ருதி பரிபாடல் பிரமாணங்கள் -ஸ்ரீ புருஷ ஸூக்தம்-

January 24, 2024

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8– ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6-என்கிறபடியே பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை

நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம் இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

ஸ்ரீ நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே-ஸ்ரீ ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

———————–

ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-10-5-3-

—————–

தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
ஸ்ரீ நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மை யிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனை யிட்டல்லது சொல்லப் போகாது.
கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிற தன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக்கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண் கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————-

நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -ஸ்ரீ திருப்பல்லாண்டு -4-

நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12-

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -ஸ்ரீ பெரியாழ்வார்-1-8-11 – –

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே – -2 3-2 – –

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

நம்பி நீ பிறந்த நல் நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் -3-7-5 –

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –

நாராயணன் செய்த தீமை என்றும் எமரர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ – 3-8 2- –

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின் நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 1-

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 7-

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-2 –

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –

ஓவாதே நமோ நாரணா என்பன் –
பிரயோஜனம் பெற்றவாறே குலையும் ஐஸ்வர்ய காமற்கு
அங்கி கைப் பட்டவாறே குலையும் உபாசகர்க்கு
இது தானே பிரயோஜனம் ஆகையாலே -பிரபன்னர்க்கு குலையாது
ஓவாதே –இது மாறினால் எனக்கு சத்தை குலையும் –

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1 6-

கண்ணா –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி சுலபன் ஆனவனே
நான்முகனைப் படைத்தானே –
இப்படி சுலபனானவன் தான் யார் என்னில் -பிரம்மாவை திரு உந்தியில் ஸ்ருஷ்ட்டித்தவன்
காரணா –
பிரம்மாவுக்கும் முன்புண்டான ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிணவனே
கரியாய் –
காரணத்வமும் -சௌலப்யமும் அன்றிக்கே -துர்லபனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
காரணா -நான் முகனைப் படைத்தானே -கண்ணா -கரியாய் -என்று அந்வயம்
இது என் ஸ்வரூபம் –உம்முடைய ஸ்வரூபம் இருந்தபடி என் -என்ன –
அடியேன் நான் –
உனக்கு அனந்யார்க்க சேஷ பூதனான நான் –
ஆனாலும்-தேகம் கிடைக்கையினாலே இதுக்கு தாரகம் என் என்னில் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-
பசிப்பது எப்போதோ என்னில் –
ஓவாதே –
மறவாதே
நமோ நாராயணா என்று எண்ணா நாளும்-
நமோ நாராயணா -என்கையாலே –
தேக ஆத்மா அபிமானத்தையும் குலைத்து கொண்டு -திரு நாமத்தை அனுசந்திக்கிறார் –
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு –
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு-
அவை தத்துறுமாகில் -என்கையாலே -அவை கூடாது
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-என்கையாலும் –
ஓவாதே நமோ நாராயணா -என்கையாலும் -கூடாது –
கூடில் -நாளும் அது -பட்டினியும் அது –
நாள் மலர் கொண்டு நண்ணுகைக்கு பிரமாணம் -வேதம்
நாடாத மலர் நாடி –
த்ருஷ்டாதிர்ஷ்டம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாயம் உபேயம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாசகருக்கு உபாயம் -தங்கள் கையிலே -உபேயம்-ஈஸ்வரன்
உண்ணா நாள் -உன பாதம் நண்ணா நாள் — உண்ணும் நாள் உன பாதம் நண்ணும் நாள் –
பசி ஆவது -பசிப்பது என்ற படி
ஓவாதே நண்ணும் நாள் பசி கெடுவது —
ஓவாதே எண்ணா நாள் -இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொள்ளா நாள் -அவன் கொள்ளா நாள் –
அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே-
தத்துறுகை-தட்டுப் படுகை
இத்தால் மாறுமாகில் என்றபடி
தத்துறுமாகில் – மாறாட்டு படுமாகில் என்னவுமாம் –
மாறாட்டு படுகையாவது -அநந்ய பிரயோஜனமாகம் அன்றிக்கே –
பிரயோஜனாந்தரங்களை கணிசிக்கை –

————-

நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை 1-

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–10-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே–ஸ்ரீ நாச்சியார் திரு மொழி-2-1-

இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

———–

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-4-

————–

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –-ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி–2-9-1-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் –!–3-8-1-

வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

——————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —ஸ்ரீ முதல் திருவந்தாதி-—–5-

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி 1-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

——————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

———

பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என–ஸ்ரீ சிறிய திருமடல்

—————

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–ஸ்ரீ திருவாய் மொழி -1-2-10-

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில்,நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே–4-4-7-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அழித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே –7-5-3-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதோர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே -8-6-10–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-9-3-1-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

———

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -2-

———————–

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-1-7-

கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இனி இந்த சாமா நாதி கரண்யமானது ஜெகதீஸ்வரயோக சரீராத்ம நிபந்தம் என்று சொல்லுகிறது –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இந்த சரீரத்தை இவ்வாத்மா நியந்தருதயா வியாபித்து இருந்தால் போலே எம்பெருமானும் அபாதித பிராமண ஸித்தமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகங்களையும்
தத் ஆராப்தங்களான ஸமஸ்த வஸ்துக்களையும் நியந்தருதயா வியாபித்து இருக்கும் -இப்படி காரிய காரண உபய அவஸ்திதா சித்தவஸ்துவில் காட்டிலும்
பத்த முக்த நித்ய சித்த த்ரிவித சேதனரில் காட்டிலும் விலக்ஷண ஞான ஆனந்த அமல ஸ்வரூபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந அபரிமித குண விபூதிகனாய்
அகில புவனா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் சர்வ ஜகத் ஆத்மாவாய் -சர்வ ஜகச் சரீரனாய் ஸ்வதா ஏவ அகர்ம வச்யனாகையாலே
ஸ்வ சரீர பூத சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துகத ஸூக துக்க விகாராதி சர்வ தோஷைரா சம்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் –

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம/ ஆனந்தோ ப்ரஹ்ம / எஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் / பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச /
மநோமய பிராண சரீரோபாரூபஸ் சத்யா சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாமஸ் சர்வ கந்தஸ் சர்வ ரஸஸ் ஸர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர/
தஸ்ய நாம மஹத் யஸ /அத பரா ஸ்ரோத்ரம் தத் பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூஷ்மம் தத் ஸ்வயம் யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா /
அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ அபிபாஸஸ் சத்யகாமஸ் சத்ய சங்கல்ப /
ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ/
சர்வே நிமேஷா ஐஜ்ஞிரே வித்யுத புருஷாததி/ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் /ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே /
நீல தோயத மத்யஸ்தா வித்யுலேகே வபாஸ்வாரா /மஹா ரஜநம் வாச /அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ /ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம்/
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா /யத்ரர்ஷப பிரதமஜா யே புராணா/தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் /
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய/ யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமன் /பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச /
ஷரம் பிரதானம் அம்ருதாசாரம் ஹாரா ஷராத்மாநாவீசதே தேவ ஏக /ச காரணம் கரணாதி பாதிப
/த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பர்ஷஸ்வ ஜாதே-தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந்யோ அபிசாக சீதி/
சமாநே வ்ருஷே புருஷோ நிமக்நோ அநீசயோ சோசதி முஹ்யமாந ஜுஷ்டம் யதா பஸ்யத் யன்யமீசமஸ்ய மஹிமாநமிதி வீத சோக /
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா/போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா /
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க்ரம்ய /ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தீ பவதி /ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி /
சோஸ்நுதே சர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதேதி /
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்த ரோயம் ஆத்மா ந வேத
யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத/
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண /அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஐநாநாம் சர்வாத்மா /ச தேவ சோம்யேதமக்ர ஆஸீத் /
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே /ப்ரஹ்ம வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / சர்வானி ஹவா இமாநி பூதாந் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே /
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாநோ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி /
ந தஸ்யேசே கஸ்ஸந /பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் / யச்ச கிஞ்சிஜ் ஜக தயஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித/
ச ப்ரஹ்மா ச சிவா சேந்த்ர சோஷர பரம ஸ்வராட் –இத்யாதியாய்
அவிகாரய ஸூத்தாய /ஸூத்தே மஹா விபூதியாக்யே /ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் /ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் /
சமஸ்தா சக்த யஸ் சைநா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர் மஹத் /
பூஷணாஸ்த்ரா ஸ்வரூபஸ்தம் /ந பூத சங்க சமஸ்தா நோ தேஹோஸ்ய பரமாத்மன/தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீவத்ச வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய ஸாஸ்வதோ த்ருவ/
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ /தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய/
திவ்யம் ஸ்தானம் அஐரஞ்சாப்ரமேயம் துர் விஜ்ஜேயஜ் சாகமைர்கம்ய மாத்யம் /
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுரா சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ/
கலா முஹுர்த்தாதி மயஸ்ச கால /காலம் ச பசதே/ பூ பிராணிந சர்வ ஏவ குஹாச யஸ்ய/ சர்வம் ஸமாப்நோஷி ததோ அசி சர்வ /தாநி சர்வானி தத்வபு /
தத் சர்வம் வை ஹரேஸ்தநு /ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூப யதோ அவ்யய / ஜகத் சர்வம் சரீரம் தே /ஜகாத் வியாபார வர்ஜம் பிரகரணாத சந்நிஹிதத் வாச்ச/
போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச /ஜகத் வியாபார வர்ஜம் சமாநோ ஜ்யோதிஷா/ இதம் ஞானம் உபாச்ரித்ய மாமா சாதரம்யா மாகதா சரக்கேபி நோப ஜா யந்தே பிரளயே ந வ்யதந்தி ச /விஷ்ணோஸ் ஸகாசா நுத் பூதம் —
இத்யாதி ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –
ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின —
—————–

அவதாரிகை –

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

—————————————————–

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1

——————————————————-

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது

ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது

உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –

உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே

அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உயர் வேத நேர் கொண்டு உரைத்து
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்

பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்

தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது

அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இறே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே-ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாக
ஆ பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி

அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

———————————————————

1. ஸ்ரீ மன் நாராயணனே உலகனைத் தையும் படைத்து அளித்து அழிக்கும் ஜகத் காரணன்.

“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் த்வாதஸாதித்யா ருத்ரா வஸவ:”
[நாராயணோபநிஷத்]

[நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறான்(பிரமனுக்கு அந்தர் யாமியான) நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான். (கஸ்யபருக்கு அந்தர்யாமியான) நாராயணனிடமிருந்தே இந்திரன் உண்டாகிறான்….நாராயணனிடமி ருந்து(இவ்வண்ணமாக) பன்னிரு ஆதித்யர்களும், பதினொரு உருத் திரர்களும் எட்டு வஸுக்களும் தோன்றினார்கள்]

“ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந” [மஹோபநிஷத்]

[நாராயணன் ஒருவனே(ப்ரளய காலத்தில்) இருந்தான். பிரமனுமில்லை சிவனுமில்லை.]

“மா அயோயே மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!…
விதியின்மக்களும் மாசுஇல் எண்மரும் பதினொரு கபிலரும் தாமாஇருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழுலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதரவலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை ப்பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்”[பரிபாடல் -3]

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” [நான்..திருவ-1]

“போதுதங்கு நான்முகன் மகன் அவன் மகன்சொலில் மாதுதங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”
[திருச்சந்தவிருத்தம்-72]

“கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளுர்தி கழல்பணிந்து ஏத்துவரே”
[திருவாய்மொழி-2-2-10]

2. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துலகையும் வியாபிக்கும் அந்தர்யாமியாகவும் , அதனாலேயே அனைத்துமாகச் சொல்லத்தக்கவனாகவும் இருப்பவன்.

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:|
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ||
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா |
அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||–[தைத்திரீய நாராயணவல்லி]

[நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா, இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவுமாக எந்தெந்தப் பொருள்கள் உள்ளனவோ, அவையனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து விளங்குபவன் நாராயணனே]

ப்ரஹ்மா நாராயண: ஸிவஸ்ச நாராயண:…நாராயண ஏவேதம் ஸர்வம்” [நாராயணோப நிஷத்]

[பிரமனும் நாராயணனே. சிவனும் நாராயணனே. நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்]

ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-

யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-

வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி / தண்ணீர் /-வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
-புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –

ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ….
பூவனும் நாற்றமும் நீ” [பரிபாடல்-1]

“இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை”
“அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்”
[பரிபாடல்-3]
“கெடுஇல் கேள்வியில் நடு ஆகுதலும்”              [பரிபாடல்-2]

“ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்” [திருவாய்-4-7-6]

“நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” திருவாய் -6-9-1]

3. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனாகவும் எல்லாம் வல்ல ஸர்வசக்தனாக வும் இருப்பவன்.

“அத புருஷோ ஹவை நாராயணோகாமயத- ப்ரஜாஸ்ருஜேயேதி | நாராயணாத் ப்ராணோ ஜாயதே மந: ஸர்வேந்த்ரியாணி ச | கம் வாயு: ஜ்யோதிராப: ப்ருதிவீ விஸ்வஸ்ய தாரிணி || [நாராயணோபநிஷத்து]

[புருஷன் எனப்படும் நாராயணன்
‘அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டிக்கக் கடவேன்’ என்று ஸங் கல்பித்தான். நாராயணனிடமிருந் தே ப்ராணன் உண்டாகிறது; மனமும் எல்லா இந்திரியங்களும், ஆகாயமும், வாயுவும், அக்னியும், நீரும், அனைத்தையும் தரிக்கும் பூமியும் உண்டாகின்றன.]

“யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:” [முண்டக..-1-1-10]

[எந்தப் பரமாத்மா அனைத்தையும் அறிகிறானோ, அனைத்தையும் அடைந்திருக்கிறானோ அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டியாகிற தவம் ஸங்கல்பமயமாயிருக்கிறது.]

“பராஸ்ய ஸக்தி: விவிதைவ ஸ்ருயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச” [ஸ்வேத..6-7]

[இந்தப் பரமாத்மாவினுடைய சக்தியும் ஜ்ஞானமும் செயலும் மேலானதாகவும், பலவிதமாகவும், இயல்வானதாகவும் உள்ளன.]

“நூறு ஆயி ம் கை ஆறுஅறி கடவுள் நின்னைப் புரைநினைப்பின் நீஅலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ!”

“நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபிணோயே!”
“இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை” [பரிபாடல் 3]

“எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதேகொண்டு  எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன்” [திருவாய் -3-10-8]

4. ஸ்ரீ மன் நாராயணனே தலைசிறந்த மோக்ஷத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிப்பவன்.

“உதாம்ருதத்வஸ்யேஸந: ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ— இஷ்டம் மநிஷாண”[புருஷஸூக்தம்]

[மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே; லக்ஷ்மிதேவியும், பூமி தேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள் உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தையும் பெறக் கடவோம்.]

“தத்விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய:”
[ரிக் வேதம் மண்டலம் -5-22-5]

[விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.]

“மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!”         [பரிபாடல்-3]

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதில் பெறல் உரிமை”                   [பரிபாடல் -15]

“வீடு முதலாம்”        [திருவாய்-2-8-1]

“சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று வீடு தரும் நின்று நின்றே”     [திருவாய்-3-9-9]

“இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்”[திருவாய்-10-10-11]

5. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய், தாழ்ந்த குணங்கள் எதுவும் இல்லாதவ னாய் இருப்பவன்.

நிஷ்கலங்கோ நிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸுத்தோ தேவ ஏகோ நாராயண: ந த்விதீயோஸ்தி கஸ்சித்||”-[நாராயணோபநிஷத்]

[ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய்,சுத்தனா ய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.]

“தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண:|.. உத்பவ: ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:||”-[ஸுபாலோபநிஷத்]

[அனைத்தையும் தரிப்பவனும், அனைத்தையும் விதிப்பவனும், செய்பவனும், சிறந்த விகாரங்க ளையுடையவனும், பரமபதத்திலிரு க்கும் தேவனான நாராயணன் ஒருவனே; பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே.]

நின் ஒக்கும் புகழ் நிழலவை…. எண்ணிறந்த புகழவை”[பரிபாடல்1]

“வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்”                 [பரிபாடல்-2]

“நின் புகழ் உருவின கை”[பரிபாடல்-3]
“சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை”            [பரிபாடல்-13]

“அன்பது மேஎய் இருங்குன்றத்தான்”[பரிபாடல்-15]

“நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்”                 [பரிபாடல் திரட்டு]

“தாவா விழுப்புகழ் மாயோன்”[தொல்காப்பியம் பூவைநிலை]

“தேயா விழுப்புகழ் தெய்வம்”[முல்லைக்கலி-3]

“புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை”    [புறநானூறு-56]

“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன[புறநாநூறு-57]

“ஈறில வண்புகழ் நாரணன்”[திருவாய்-1-2-10]

“உயர்வற வுயர்நல முடையவன்யவனவன்”[திருவாய்-1-1-1]
“வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்”[திருவாய்-8-1-8]
“தோற்றக்கேடவை இல்லவன்”[திருவாய்-3-6-6]

6. ஸ்ரீ மன் நாராயணனே தேவர்களுக் கெல்லாம் முதல்வனான தேவாதி தேவன்.

“அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:”[யஜூஸ்ஸம்ஹிதா-5-5]

[தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்]

“தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்”             [ஸ்வேதாஸ்வர]

[தேவதைகளுக்குள் மேலான தேவதையாயிருப்பவன் அந்தப் பரமாத்மாவே]

“அமரர்க்கு முதல்வன் நீ”[பரிபாடல்]

“மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ”[திருவாய்-8-1-3]

“தேவாதிதேவனை” [திருப்பாவை8]

7. ஸ்ரீ மன் நாராயணனே எவராலும் அளத்தற்கரியவன்.

“ந ஸந்தருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்சநைநம்”
[தைத்திரீய நா..1-10]

[அந்தப் பரமாத்மாவின் உருவம் எவனுடைய கண்ணுக்கும் புலனா காது; எவனும் அவனைக் கண்ணால் பார்த்ததில்லை.]

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”[தை-ஆந-9]

[எந்தப் பரமாத்மாவிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அவனை அறிய முடியாமல் திரும்பி வருகின்றனவோ.]

“அன்னமரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?”
[பரிபாடல்-1]

“நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ”
[பரிபாடல்-4]
“அளப்பரியவை”    [பரிபாடல்-4]

“இலனது உடையனிது என நினவரியவன்”    [திருவாய்-1-1-3]

“யானுமேத்தி ஏழுலகும் முற்றும் ஏத்திப் பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்”    [திருவாய்-4-3-10]

8. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துயிர்களுக்கும் எல்லா உறவுமாய் இருக்கும் உறவினன்.

“மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:|”              [ஸுபால உப]

[தாய், தந்தை ஸகோதரன் முதலான எல்லா உறவாகவும், புகலிடமாகவும், உபாயமாகவும், நண்பனாகவும், ப்ராப்யமாகவும் இருப்பவன் நாராயணனே]

“அன்னை என நினைஇ நின் அடிதொழுதனெம்”  [பரிபாடல்-18]

“எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மண்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமோய் இருங்குன்றத்தான்”
[பரிபாடல்-15]

“பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ பேசில்”               [பெரிய திருவ-5]

“தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் அவை அல்லனாய்”
[திருவாய்-3-6-9]

9. ஸ்ரீ மன் நாராயணனே வேதங்களின் முழுமுதல்வனாக முழங்கப்படுபவன்.

“த்வே வித்யே வேதிதவ்யே…பரா சைவாபரா ச | தத்ராபரா ரிக்வேதோ யஜூர்வேத: ஸாமவேத: அதர்வவேத:||
[முண்டக 1-1-4-5]

[பரமாத்மாவைக் காட்டும் இரண்டு வித்யைகளை ஜீவன் அறிய வேண்டும். பக்தியானது மேலான வித்யை. வேதங்கள் இரண்டாவதான வித்யை. அந்த வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நாலு வகைப் படுகின்றன.]

“வாய்மொழிப் புலவ”
“நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ”

“நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்”                       [பரிபாடல்-1]

வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்”
“என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே”

“கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு”  [பரிபாடல்-2]

“மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து  வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்”

“பதினாயிரம் கை முதுமொழி முதல்வ”

“முன்னைமரபின் முதுமொழி முதல்வ”

“தொல் இயல் புலவ”

“வேதத்து மறை நீ”   [பரிபாடல்-3]

“அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை”

“பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்”
[பரிபாடல்-13]

“நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்”           [பரிபாடல்-15]

“உளன் சுடர் மிகு சுருதியுள்”
[திருவாய்-1-1-7]

“மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”        [திருவாய்-3-1-10]

“நம்முடைய நாயகனே! நான்மறையின் பொருளே”
[பெரியாழ்திரு 1-5-3]

“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே”[பெரியாழ்திரு4-3-11

“அரன் நாரணன் நாமம் உரை நூல்மறை”     [முதல் திருவ 5]

“போதில் மங்கை பூதலக்கிழத்திதேவி … என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”  [திருச்சந்த -72]

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————————————————-

ஸ்ரீ புருஷ ஸூக்தம்

ஸ்ரீ புருஷஸூக்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூக்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் – அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையையும் சொல்லி சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது

#சகஸ்ர_சீர்ஷம்_தேவம்_விஸ்வாஷம் #விஸ்வ_சம்புவம்
#விஸ்வம்_நாராயணம்_தேவம்_அக்ஷரம்_பரமம்_ப்ரபும் –1-

#சகஸ்ர_சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூக்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
#விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
#விஸ்வ_சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
#விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
#நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதைகதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
#தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
#அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
#பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
#ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்

——————————–

#விச்வத_பரமம்_நித்யம்_விஸ்வம் #நாராயணம்_ஹரிம்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்_தத் #விஸ்வ_முபஜீவதி–2

#பதிம்_விஸ்வஸ்_யாதமேஸ்வரம் #சாஸ்வதம்_சிவமச்யுதம்
#நாராயணாம்_மஹாஜ்ஜேயம் #விச்வாத்மநாம்_பாராயணம் -3

#விச்வத_பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் –இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
#நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
#விச்வத_பரமம்_விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
#நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் –சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
#ஹரிம்_நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
#தத்_விஸ்வ_முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வாஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
#பதிம்_விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –

“#யாதமேஸ்வரம்”

ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்

சாஸ்வதம்”

ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே

“சிவம்”

மங்கள கரமாய் இருப்பவன்

“சாஸ்வதம் சிவம்”

எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன

“அச்யுதம்”

நழுவ விடாதவன் –வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –

“அச்சுதன்-
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –

“நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் –ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் – பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் –
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் – விச்வாத்மநாம் கடக சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் – ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்

“பாராயணம்”

பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க –பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –

——————————————————————–

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4

யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5″

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“நாராயண பரம் ப்ரஹ்ம”

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே –த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –

“தத்துவம் நாராயண பர”

நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –

நாராயண பரோ ஜ்யோதிர்”

ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக

“ஆத்மா நாராயண பர”

ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் – தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
“யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-“
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –

—————————————-

“அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6”

எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே

“அநந்தம்”

கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அநு வாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே

“அநந்தம்”

தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் – விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் –
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு

“அவ்யயம்”

குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி –விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
“கவிம்”

நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்

“கவிம்”

வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே

“சமுத்ரேந்தம்”

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –

“சமுத்ரேந்தம்”

குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே

“சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்”

சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்

“ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம்”

சிந்தையன்
-தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –

————————————————————————–

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8

தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9″

அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்”

தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –

“சாப்யதோ முகம்”

தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்

“அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி”

கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –

“அங்குஷ்ட மாத்ர புருஷ –”

கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்

“ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்”

அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –

“ஆயதனம் மஹத்”

நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்

“தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்”

அந்த ஹ்ருதயத்தில் நடுவிலு நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது

“தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்”

அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்

“அஜர”

எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி

“கவி”

எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –

——————————————————————–

“தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10″

“தஸ்ய மத்யே”

தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்

“வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித”

ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா “தஸ்ய சிகா வன்ஹி சிகா”
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –

“நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா”

நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –

“நீவார ஸூகவத் தன்வீ”

நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்

“பீதாபா”

மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்

“பீதாபா”

என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்

“ஸ்யாத் தநூபமா”

உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

———————————————-

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11″

“தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித”

ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை

“ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்”

அனைவருக்கும் அந்தர்யாமி –அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே –ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்

“சோஷர”

-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி

“பரமஸ் ஸ்வராட்”

கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான

———————————————————————-

“ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12″

பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –

“ருதம்”

சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே

“சத்யம்”

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம – ஏக ரூபி -ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் –

“பரம் ப்ரஹ்மம்”

பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்

“புருஷம்”

நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்

“க்ருஷ்ண பிங்களம்”

கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று –ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்

“ஊர்த்வ ரேதம்”

ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்

“விருபாக்ஷம்”

மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் –சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் –யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே

“விஸ்வ ரூபாய வை நம”

உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய திவ்ய கிரந்தம்

November 29, 2023

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-————————-

அத பரமைகாந்திநோ பகவதாராதன  ப்ரயோகம்  வக்ஷ்யே! 

பிறகு பரமைகாந்திகளினுடைய பகவானின் ஆராதன க்ரமத்தைச் சொல்லுகிறேன்.

பகவத் கைங்கர்யே கரதி! பரமைகாந்தி பூத்வா! ஸ்வஶேஷ பூதேநமயா!
ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை:| ஶ்வகீயை ரேவகல்யாணதமை:|
ஔபசாரிக ஸாம்ஸ்பர்ஶிகாப்வயஹாரிகை: போகைரகில பரிஜந பரிச்சாந்விதம்!
ஸ்வாத்மாநம் ப்ரீதம்| காரயிது முபக்ரமதே இத்யநுஸந்த்யாய தீர்த்தம் கத்வா|

ஶுசௌ தேஶே பாதௌ ப்ரதூல்யாசம்ய| தீரம் ஸம்ஶோத்ய|
ஶுசௌ தேஶே மூலமந்த்ரேண ம்ருத  மாதாய| த்விதா க்ருத்வா|
ஶோதித தீரே நிதாய| ஏகே நாதிக பாகேந தேஹமஹ ப்ரக்ஷாளநம் க்ருத்வா| நிஜம்யாசம்ய|
ப்ராணாயாம  த்ரய மாஸீநோ பகவந்தம் த்யாயநு| க்ருத்வாந்யம் ம்ருத்பாகமாதாய| வாமபாணி தலேத்ரிதா க்ருத்வா|

ப்ருதக் ப்ருதக் ஸம்ப்ரோக்ஷ்ய| அபிமந்த்ரைகேந திக்பந்தன அஸ்த்ர மந்த்ரேணகுர்யாது|
அந்யே நதீர்த்தஸ்ய பீடம் இதரேண காத்ரலேபநம் தத: பாணீ ப்ரக்ஷால்ய| உதகாஞ்சலி மாதாய|
தீர்த்தஸ்ய அர்க்யாந்த முதுக்ஷீப்ய|
பகவது வாம பாதாங்குஷ்ட விநிஸ்ஸ்ருத கங்கா ஜலம் தீர்த்த ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய|

மூல மந்த்ரேணாபி மந்த்ரிய உதகாஞ்ஜலி மாதாய| ஸப்த க்ருத்வோபி மந்த்ரியஸ்வ மூர்த்நிஸிம்சேத்| 
ஏவம் த்ரி: பஞ்ஜக்ருத்வ ஸப்த க்ருத்வோவா தக்ஷிணேந பாணிநா ஜலமாதாயாபி மந்த்ரிய|
பீத்வா ஆசம்ய ஸ்வாத்மாநம் ஸம்ப்ரோக்ஷ்ய|
தீர்த்தேநி மக்னோ பகவத் பாதாரவிந்த விந்யஸ்த ஶிரஸ்கோ யாவச்சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா|
உத்தீர்ய ஶுக்ல வஸ்த்ர தரோ த்ருதோத்தரீய ஆசம்ய| ஊர்த்வ புண்ட்ராம்ஸ்த தத்தந் மந்த்ரேண தாரயித்வா| 

————

பகவானுடைய கைங்கர்யமொன்றிலேயே ஆசையுடைய பரமைகாந்தியாயிருந்து
பகவாநேவ ……… உபக்ரமதே என்றநுஸந்தித்துத் தீர்த்தக் கரைக்குச் சென்று பரிசுத்தமான இடத்தில் கால்களை யலம்பி,
ஆசமனம் செய்து, கரையை யலம்பி விட்டுப் பரிசுத்தமான இடத்திலிருந்து மண்ணை எடுத்து, இரண்டு பாகங்களாகப் பிரித்து,
முன்னால் அலம்பப் பட்டிருக்கிற கரையில் வைத்து பெரியதாகிய ஒரு பாகம் மண்ணினால் உடம்பு முழுவதையும் தேய்த்து
அழுக்கைப் போக்கடித்துக் கொண்டு ஜலத்தில் முழுகி, ஆசமனம் செய்து, கரையில் உட்கார்ந்து
பகவானை த்யாநம் செய்து கொண்டு மூன்று ப்ராணாயமங்களைச் செய்து,

மற்றொரு பாகம் மண்ணை எடுத்து இடத்து உள்ளங்கையில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கொண்டு தனித்தனியே ப்ரோக்ஷித்து,
மூல மந்திரத்தினால் ஜபித்து, ஒரு பாகத்தை எடுத்து அஸ்திர மந்திரத்தினால் திக் பந்தனம் செய்ய வேண்டும்.
மற்றொரு பாகத்தினால் இனி ஆவாஹனம் செய்யப் போகிற தீர்த்தத்திற்குப் பீடம் கல்பிக்க வேண்டும். மற்றொரு பாகத்தினால் உடம்பு முழுவதையும் பூசிக் கொள்ள வேண்டும்.

பிறகு கைகளை யலம்பி, இரண்டு கைகளிலும் ஜலத்தை எடுத்து , தீத்த்தத்தில் முன் சேர்க்கப் பட்டிருக்கிற பீடத்தில்
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலிலிருந்து உண்டான கங்கா தீர்த்தத்தை ஆவாஹனம் செய்து, அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து,
மறுபடியும் இரண்டு கைகளிலும் தீத்த்தத்தை எடுத்து,ஏழு தடவை மூல மந்திரத்தை உச்சரித்துத் தன் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.
இப்படி மூன்று,ஐந்து அல்லது ஏழு தடவை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.

பிறகு வலது கையினால் ஜலத்தை எடுத்து அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து உட்கொண்டு, ஆசமனம் செய்து
தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு, ஜலத்தில் முழுகியிருந்து கொண்டு
பகவானுடைய திருவடிகளில் தன்னுடைய தலை வைக்கப் பட்டிருப்பதாக த்யானித்துக் கொண்டு
ஶக்தியுள்ள வரையில் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பிறகு கரையிலேறி பரிசுத்தமான வஸ்திரங்களை தரித்துக் கொண்டு, திரு மண் காப்புகளை
அந்தந்த மந்திரங்களினால் பகவானை த்யானித்துக் கொண்டு தரிக்க வேண்டும்.

—————

பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண
ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய|
பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா –
அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா|
ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந்
பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய !
ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

ஸுப்ரக்ஷாளித | பாணிபாத: ஸ்வாசாந்த: ஶசௌ தேஶே அதிமநோஹரே நிஶ்ஶபேத் புவம் ஸம்க்ருஹ்ருயதாம்|
ஶோஷணாதிபிர் விஶோத்ய| குரு பரம்பரயா பரம குரும் பகவந்த முபகம்ய தமேவ ப்ராப்யத்வேந| ப்ராபகத்வேந|
அநிஷ்ட நிவாரகத்வேந| யதாவஸ்தித ஸ்வரூப ரூபகுண | விபூதி லீலோபகரண| விஸ்தார மநு ஸந்த்யாய தமேவ| ஶரண முபகச்சேத்|
அகிலஹேயே த்யாதிநா| ஏவம் ஸரணமுபகம்ய| தத்ப்ரஸாதோப ப்ரஹ்மித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வர மாத்மந:
ஸ்வாமித்வேநாநுஸந்த்யாய அத்யர்த்த ப்ரியாவிரத விஶதத மப்ரத்யக்ஷ ரூபாநு த்யாயேந த்யாயந் நாஶீத|
ததஸ்ததநுபவ ஜநிதாதி மாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜா மாரபேத|

———-

பிறகு தேவதைகள், ரிஷிகள்,பித்ருக்கள் இவர்கள் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று
த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்து பரிசுத்தமான இடத்தில் வஸ்திரத்தைப் பிழிந்து ஆசமனம் செய்து விட்டு
(ஸ்நான காலத்தில்)ஆவாஹனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தன்னிடத்திலே அஷ்டாக்ஷரத்தினால்
ஆஹ்வானம் செய்து விட்டு ஆராதனம் செய்ய வேண்டிய இடத்திற்குப் போக வேண்டும்.

நன்றாகக் கை கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு பரிசுத்தமாயும் அழகாயும் ஓசை யில்லாததுமான இடத்தில்
தனக்கு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த பூமியை ஶோஷண தாஹன ப்லாவனங்களினால் சுத்தி செய்து
குரு பரம்பரையை முன்னிட்டுப் பகவானை த்யானம் செய்துகொண்டு அந்த பகவானையே
அடைய வேண்டிய ப்ரயோஜனமாகவும் அதை அடைவிக்கும் உபாயமாகவும்
அனிஷ்டங்களைப் போக்கடிப்பவனாகவும் அந்த பகவானுடைய உள்ளபடியான ஸ்வரூபம், ரூபம், குணங்கள், விபூதிகள்,
இவைகளின் விவரங்களை யெல்லாம் விஸ்தாரமாய் அனுஸந்தித்து,

“அகிலஹேய ப்ரத்யநீக”   என்றாரம்பிக்கும் கத்யத்தினால் ஶரணமாக வடைய வேணும்.
இப்படிச் ஶரணமாகவடைந்து அவனுடைய அனுக்ரஹத்தினால் வ்ருத்தி செய்யப்பட்ட மனோ தைர்யத்தை யுடையவனாய்
அந்த ஸர்வேஸ்வரனாகிய பகவானையே தனக்கு ஸ்வாமியாக அனுஸந்தானம் செய்து கொண்டு
மிகவும் ப்ரியமாகவும் இடைவிடாமலும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பதைப்போல் மிகவும் விஶதமாகவுமிருக்கிற
த்யானத்தினால் அனுஸந்தானம் செய்துகொண்டிருக்க வேண்டும்.
பிறகு அப்படிப்பட்ட அனுபவத்தினால் உண்டாக்கப்பட்ட ப்ரீதியினால் செய்விக்கப் படுகின்ற பரிபூர்ண கைங்கர்யமாகிய ஆராதனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

—————–

பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநா
நேநாத்மநா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை;| ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாந்
ஔபசாரிக ஸாம் ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாநதி ப்ரபூதாநதி|
ப்ரிய தமாநதி ஸமக்ராநத்யந்த பக்தி க்ருதாநகில பரிஜந பரிச்சதாந்வி தாயஸ்வஸ்மை|
ஸ்வ ப்ரீயதே ஸ்வயமே ப்ரதிபாதயிது முபக்ரமதே| இத்யநு ஸந்த்யாய|

ஸ்வ தேஹே பஞ்ஜோபநிஷந் மந்த்ராந் ஸம்ஹாரக்ரமேணந்யஸ்ய  ப்ராணேயாமேந ஏகேந தக்ஷிண பாணிநா|
நாபிதேஶே மூலமந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூதே சண்டவாய்வ்யாப்யாயித
நாபிதேஶஸ்த வாயுநா ஶரீர அந்தர் பஹிஶ்ச ஸர்வ தத்வமயம் |
தத்வ க்ரமேண விஶோஷ்ய| புந:ப்ராணேயாமே நைகேந ஹ்ருத்தேஶ மூலமந்த்ரம் ந்யஸ்ய|
மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந
ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாதாங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேஶயேத்|

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரதா யோக்யதாமாபாத்யா|
தஸ்மாதாதாய  தத்வாம பாதாங்குஷ்டா தஸ்தாத் மூலமந்த்ரேணாத்மாநம் விந்யஸ்ய,
தேவவாமபாதாங்குஷ்டநகஶிதாம்ஶுமண்டலாத்கலத் திவ்யாமாதாரஸை: ஆத்மாநம் அபிஷிஞ்ஜேத்|
ஏவமாத்மானம் அபிஷிச்ய| பகவத் ப்ரஸாதேந தத் அம்ருதமயம் ஸர்வ கைங்கர்யைக மநோஹரம்
ஸர்வ கைங்கர்யைக யோக்யம் ஶரீரம் லப்த்வா தஸ்மின் ஶரீரே பஞ்ஜோபநிஷன்மந்த்ரான் ஸ்ருஷ்டி க்ரமேண விந்யஸேத்|

ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்டியாத்மநே இதிமூர்த்தனி ஸ்ப்ருஶேத் |
ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே இதி நாஸிகாக்ரே
ஓம் ராம் நம: பராய விஶ்வாத்மநே இதி ஹ்ருதயே!
ஓம் வாம் நம: பராய நிவ்ருத்யாத்மநே இதி குஹ்யோ|
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மனே நம இதி பாதயோ|
ஏவம் ந்யாஸம் குர்யாத் தத்தத் ஶக்தி மயத் பூதம் தேஹம் த்யாயேத்|

————-

பகவாநேவ ………உபக்ரமதே என்றனுஸந்தானம் செய்து தன்னுடைய தேஹத்தில் பஞ்சோபநிஷத் மந்திரங்களை
ஸம்ஹாரக்ரமமாக ந்யாஸம் செய்து ஒரு ப்ராணாயாமம் செய்து வலது கையினால் தொப்புளில் மூல மந்திரத்தை ந்யாஸம் செய்து
‘மந்த்ரோத்பூத சண்டவாவ்யாப்யாயித நாபிதேஶஸ்தே வாயுநா ஶரீர மந்தர்பஹிஶ்ச தத்வக்ரமேண ஶோஷயாமி’ என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் ஶோஷணம் செய்யப்பட்டதாக த்யானித்து மறுபடியும் ப்ராணாயாமம் செய்து
மூல மந்திரத்தினால் ஹ்ருதயத்தில் ந்யாஸம் செய்து
“மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ
ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநம் ஶரீரம் தாஹயாமி”என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் கொளுத்தப் பட்டதாக த்யாநம் செய்து , பகவானுடைய
வலது காலின் கட்டை விரலின் கீழே தன்னுடைய ஜீவாத்மாவைச் சேர்த்துவிட வேண்டும்.

மற்றொரு ப்ராணாயாமம் செய்து பகவானுடைய அனுக்ரஹத்தினால் பகவானுடைய கைங்கர்யம் செய்வதற்கு
யோக்யத்தை யடைந்தவனாக த்யாநம் செய்து அந்தத் திருவடிகளின் கட்டை விரலின் கீழே இருக்கிறதாகவும்
அந்தக் கட்டை விரலிலிருந்து பெருகி வருகிற அம்ருத மயமான ஜலத்தினால் தன்னை அலம்பப் பட்டதாகவும்,
அந்த அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்யக் கூடிய யோக்யதையை யுடைய ஶரீரத்தை
யடைந்ததாகவும்,த்யானித்து அந்த ஶரீரத்தில் பஞ்சோபநிஷத்  மந்திரங்களை ஸ்ருஷ்டி க்ரமமாக ந்யாஸம் செய்ய வேண்டும்.
“ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே “ என்று தலையையும்,
“ஓம் யாம் நம: பராய புருஷாத்மநேநம:” என்று மூக்கையும்,
“ஓம் ராம் நம்பராய விஶ்வாத்மநே நம:” என்று மார்பையும்,
“ஓம் வாம்நம: பராய நிவ்ருதாத்மநே நம:”என்று குஹ்யத்தையும்,
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே நம:” என்று கால்களையும் தொட வேண்டும்.
அந்தந்த ஶக்தி ஸ்வரூபமான தேஹம் கிடைத்ததாக த்யானிக்க வேண்டும்.

—————

தரங்க முக நந்தினீ ஹேமாப்ஜ நாயிகா ஸமேத
ஸ்ரீ தேவநாத பர ப்ரஹ்மணே நம:
ஸ்ரீமதே மகுள பூஷண மஹா குரவே நம:
ஸ்ரீமதே பகவதே பாஷ்யகாராய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேஶிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹா தேஶிகாய நம:

—————

ஸ்ரீ அவதாரிகை

ஸ்ரீ பாஷ்யகாரரருளிச் செய்த நித்ய க்ரந்தத்திற்கு ஸதாசார்ய ஸம்ப்ரதாயாகதமாய்,
ஆசார்யோபதேஶத்தி னாலறியப்பட்ட அர்த்த விசேஷங்களை எளிதில் எல்லோரும் தெரிந்து
கொள்ளும் பொருட்டுத் தமிழில் ஒரு வ்யாக்யானம் செய்யப்படுகிறது.

அதில் பகவதாராதன ப்ரயோகம் மாத்திரம் ஸ்ரீ பாஷ்யகாரரினாலருளிச் செய்யப்பட்டிருப்பதினால்
அந்தப் பகவதாராதனம் ஸ்நாநாதிகளான பரிசுத்தியைக் கொடுக்கக்கூடிய கர்மங்களை யனுஷ்டிக்காமல் செய்ய முடியாதென்பது
ந ஹி ஶௌச மக்ருத்வைவ ஸமாராதனமஹர்தி’ 
ஸந்த்யாஹீநோஶுசிர்நித்ய மநர்ஹஸ்ஸர்வ கர்மஸு’ என்றிவை
முதலிய ப்ரமாணங்களினா லேற்படுகிறபடியினால் அப்படிப்பட்ட ஸ்நானம், ஸந்த்யாவந்தனம்,
முதலிய கர்மங்களை எல்லோரும் அறிந்தனுஷ்டிக்குமாறு அவைகள் தமிழில் ஸங்க்ரஹிக்கப் படுகின்றன.

ஒவ்வொரு தினத்தையும் ஐந்து காலமாகப் பிரித்து அந்தந்தக் காலங்களில் அந்தந்த க்ரியைகளை யனுஷ்டிக்க வேண்டும்.
அவைகளாவன:—அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம், என்பவை.
அபிகமனமாவது காலையிலும் ஸாயங்காலத்திலும் அனுஷ்டிக்க வேண்டியது.
அதாவது ஸ்நானம் முதலிய கர்மங்களைச் செய்துவிட்டுப் பகவானை ஆஶ்ரயிப்பது.
அதாவது அன்றையதினம் நடக்கவேண்டிய க்ருத்யங்கள் முழுமையும் குறைவற ஸரியாய் நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்திப்பது.
உபாதானமாவது பகவானுடைய ஆராதனத்திற்கு யுபயுக்தமான த்ரவ்யங்களை ஸம்பாதிப்பது.

அது வெளியிலிருக்கும் புஷ்பம், சந்தனம், முதலியவைகளை ஸம்பாதிப்பதும்,
‘அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்’ ‘எட்டுமாமலர்’ இத்யாதிகளிலும் சொல்லப்படுகிற
ஶாந்தி முதலிய குணங்களை ஸத்க்ரந்த காலக்ஷேபாதிகளினால் ஸம்பாதிப்பதும் என்று இருவகைப்படும்.
இஜ்யையாவது மாத்யாஹ்நிகஸ்நாநம் முதலாக ஆரம்பித்துப் பகவதாராதனம், முதலியவைகள் செய்து அனுயாகம் வரையில் செய்வது,
ஸ்வாத்யாயமாவது வேதம், இதிஹாஸ புராணங்கள், அருளிச்செயல்கள், த்வயம் முதலிய மந்திரங்கள்
இவைகளின் அர்த்தானுஸந்தானம் செய்து, பகவானிடத்தில் பக்தியையும் ஜ்ஞானத்தையும் நாளுக்கு நாள் வளரச் செய்வது.
இதற்குப் பிறகு ஸாயமபிகமனம் என்பது ஸாயம் ஸந்த்யாவந்தநமும் பகவானை ஸேவிப்பதும்.
யோகமாவது பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை நித்திரை வருமளவும் த்யானம் செய்து கொண்டிருத்தலும்,
நித்திரை வரும் பொழுதும் பகவானுடைய திருவடிகளில் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருப்பதாக
த்யானம் செய்துகொண்டு தூங்குதலும். இவைகளின் விவரங்கள் எழுதப் படுகின்றன

அபிகமனம்
தூக்கம் விழித்தல்–
ஸூர்யோதயத்திற்கு  ஒரு முஹூர்த்தகாலம் முன்னாலேயே தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு
ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரி: என்று சொல்லி க்ராஹ க்ரஸ்தே கஜேந்த்ர ருததி ஸரபஸம் தார்க்ஷ்ய
மாருத்ய தாவந் வ்யாகூர்ணந்மால்ய பூஷாவஸந பரிகரோமேக கம்பீர கோஷ: ஆபிப்ராணோ ரதாங்கம்
ஶரமஸி மபயம் ஶங்கசாபௌ ஸகேடௌ ஹஸ்தை: கௌமோதகீமபய வதுஹரி ரஸாவம்ஹஸாம் ஸம்ஹதேர்ந: நக்ராக்ராந்தே கரீந்த்ரே மருளித நயநே|
மூலமூலேதி சிந்நே நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதி புநஸ்தா த்ருஶோ மாத்ருஶேஷு!
இத்யேவம் த்யக்த ஹஸ்தே ஸபதி ஸுரகுணே! பாவ ஶூந்யே ஸமஸ்தே மூலம்
யத் ப்ராதுராஸீத்  ஸ திஸது பகவாந் மங்களம் ஸந்ததம் ந: |
ப்ராத:ஸ்மராமி  பவபீதி மஹார்தி ஶாந்த்யை: நாராயணம் கருடவாஹந மஞ்ஜநாபம்|
க்ராஹிபி பூத மதவாரண முக்தி ஹேதும் சக்ராயுதம் தருண வாரிஜ பத்ரநேத்ரம்  ||
ப்ராதர் நமாமி மநஸா வசஸா ச மூர்த்நா பாதாரவிந்த யுகளம் பரமஸ்ய பும்ஸ: |
நாராயணஸ்ய நரகார்ணவதாரணஸ்ய பாராயண ப்ரவண விப்ர பராயணஸ்ய|
ப்ராதர் பஜாமி பஜதா மபயம் கரந்தம் ப்ராகர் ஸர்வ ஜன்ம க்ருத பாபபயாபநுத்யை; |
யோக்ராஹ வக்த்ர பதிதாங்க்ரி கஜேந்த்ர கோர ஶோக ப்ரணாய மகரோத் த்ருத சங்க சக்ர: ||
ஶ்லோகத்ரயமிதம்  புண்யம் ப்ராதருத்தாய: ய” படேத்| லோக த்ரய குருஸ்தஸ்மை தத்யாதாத்ம பதம் ஹரி: ||
என்கிற ஶ்லோகங்களை ஹரி: என்னும் பதத்திற்கு விவரணம் செய்வதாக த்யானித்துக் கொண்டு அனுஸந்தானம் செய்யவேண்டும்.

அதாவது ஹரதீதி ஹரி: என்கிற வ்யுத்பத்தியினால் ஸகல பாபங்களையும் போக்கடிக்கிறவனென்றும்,
ஹரி: என்கிற அவதாரம் செய்து கஜேந்திரனுடைய துக்கத்தைப் போக்கடித்ததினாலும்
இந்த ஶ்லோகங்கள் ஹரி: என்னும் பதத்தினர்த்தத்தை விவரணம் செய்கின்றன. ஶக்தியுடையவனாயும் ஸாவகாசமுமிருந்தால், நூற்றெட்டுத் திருப்பதி விஷயமான த்யான ஶ்லோகங்களையும்,
தஶாவதார ஸ்தோத்திரங்களையும், பெரிய கத்யத்தையும், இன்னும் பகவத் பரங்களான ஸ்தோத்ராதிகளையும்
கேட்கிறவர்களுக்கு அதி மனோ ஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டியது.

பிறகு ‘பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநாநேநாத்மநா கர்த்ரா
ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷஸ் ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம் யோகாப்யாம் கர்ம ஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்’ என்று முதல் நாள் ஆரம்பிவிக்கப்பட்ட யோகத்தை முடித்து
ஸாத்விகத்யாகம் செய்து ‘அநேந யோகாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்றநுஸந்திக்கவேண்டியது.

பிறகு அந்தப் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டு தன்னுடைய வாழ்நாட்கள் வ்யர்த்தமாய்ப் போனதையும்,
பரம புருஷார்த்தமாகிய மோக்ஷம் தனக்குக் கிடைக்காமல் போனதையும் யோசித்து நிர்வேதப்பட வேண்டும்.
ப்ரபத்தி பண்ணிக் கொள்ளாதவனாயிருந்தால் இப்படி அகிஞ்சனனாய் எண்ணிறந்த பாபங்களுக்கு இருப்பிடமாய்
அந்தப் பாபங்களைப் பரிஹாரம் செய்துகொள்ளுவதற்கு மார்க்கத்தை யறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிற தன்னுடைய தீனதஶையைப் பார்த்து

”மாற்றமுளவாகிலும்”,
“சேமமேவேண்டித் தீவினை பெருக்கி”
“அமர்யாத: க்ஷூத்ர:” என்றிவை முதலிய இடங்களில் சொல்லுகிறபடியே
நிர்வேதப்பட வேண்டிய தவஶ்யம். ப்ரபன்னனாயிருந்தால் “இந்த ஹர்ஷம் விவேகியுமாய் ஹேயமான ஶரீராதிகளோடே
துவக்குண்டிருக்கிற இவனுக்கு நிர்வேதமிஶ்ரமாய் நடந்ததே யாகிலும் நிர்வேதமும் ஶோக நிவ்ருத்தியும்
பின்ன விஷயங்களாகையாலே விரோதமில்லை” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளிச்செய்யப்பட் டிருக்கிறபடியினாலும்,
இதன் வ்யாக்யானத்திலும் “பின்ன விஷயமாகையினாலே” என்பதற்கு உபாயம் துஷ்கரம் என்கிற துக்கமில்லாமையினாலும்
பலத்திற்கு விளம்பமில்லை என்பதினாலும் நிஸ்ஸம்ஶயனுமாயிருப்பதினாலும் ஸந்தோஷம் உண்டாகிறது.

நிர்வேதம் அப்பொழுதே பலங்கிடைப்பதற்கு விரோதியான ஶரீரம் அநுவர்த்திக்கையினாலும்
அதினால் ஸுகதுக்கங்கள், புண்ய பாபங்கள் உண்டாகின்றன வாகையினாலும் உண்டாகிறது.
ஆகையினால் விரோதமில்லை என்றருளிச் செய்யப்பட்டிருப்பதினாலும் நிர்வேதப்பட வேண்டியதவஶ்யம்.
அதுவும் ஸம்ஸாரத்தில் நிவ்ருத்தி பிறந்து கடுக மோக்ஷத்தை யபேக்ஷிக்கும் த்வரை யுண்டாவதற்காக என்று பூர்வாசார்யர்களின் திருவுள்ளம்.

பிறகு கேவலம் நிர்வேதத்தோடே முடியுமானால் ஸர்வகார்யங்களுக்கும் விரோதியாகையினால்
மேல் நடக்க வேண்டிய கைங்கர்யங்கள் ஸரியாக நடக்க வேண்டியதற்காக
“கதத்திற்கு ஶோகியாதே வருகிற நீருக்கு அணைகோலும் கணக்கிலே” “இனிப் பகவதாராதனாதிகளைச்செய்து காலத்தை
‘தரித்தெழுதி வாசித்துங்கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றும் ,
வர்தமாநஸ் ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்மநா|
ஸ்வார்ஜிதை கந்த புஷ்பாத்யை: ஶுபைஶ்ஶக்த்யநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யாகமயிஷ்யாமி  வாஸராந்|”
என்றும் சொல்லுகிறபடியே ஸபலமாகக் கழிக்கப் போகிறேன் என்கிற ஸாத்விக தைர்யத்தை யடைந்து
படுக்கையிலிருந்துகொண்டே ஶ்ரோத்ராசமனம் செய்துவிட்டு (வலது காதை வலது கையினால் தொட்டு)

க்ருதம் ச கரிஷ்யாமி |பகவந்நித்யேந பகவத் ப்ரீத்யர்தேந மஹாவிபூதி சாதுராத்ம்ய பகவத் வாஸுதேவ
பாதாரவிந்தார்சநே நாபிகமநாக்க்யேந பகவத் கர்மணா பகவந்தம் வாஸுதேவ மர்சயிஷ்யாமி”  என்று
ஸங்கல்பித்துக்கொண்டு, பகவதோ பலேந பகவதோ வீர்யேண பகவஸ்தேஜஸா பகவத:
கர்மணா பகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ வாஸுதேவஸ்ய” என்று அநுஸந்தானம் செய்து,
பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூப ஸித்தி ப்ரவ்ருத்தஸ்வஶேஷதைகரஸேந மயா ஸ்வகீயைஶ் சோக்கரணை:
ஸ்வராரநைக ப்ரயோஜநாய பரம புருஷ: ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம்பிகமநாக்யம் கர்மஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று ஸாத்விகத்யாகம் செய்து,

குருபரம்பரானு ஸந்தானபூர்வமாகப் பகவானைச் ஶரணமாக அடைந்து,
த்வயாராதனகாமோயம் வ்ருதம் சரிதுமிச்சதி| ஸங்கல்ப ஸித்த்யை பகவந் பூரயாஸ்ய மநோரதாந்” என்கிற ஶ்லோகத்தினால்
கைங்கர்யங்கள் நிர்விக்னமாய் ஸரிவர நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்தித்து ,
ஸத் ஸங்காத் பவநி ஸ்ப்ருஹோகுருமுகாத்  ஸ்ரீஶம்ப்ரபத்யாத்மவாந்| ப்ராரப்தம் பரிபூஜ்ய கர்ம ஶகலம் ப்ரக்ஷீணகர்மாந்தர|
ந்யாஸாதேவ நிரங்குஶேஶ்வரதயார்லூந மாயாந்வயோஹார்தாநுக்ரஹ லப்தமத்ய தமநித்வாராத் பஹிர்நிர்கத|
முக்தோர்சிர்ந பூர்வபக்ஷ ஷடு தங்க்மாஸாப்த வாதாம் ஶுமத் க்லௌ  வத்யுத்வருணேந்த்ர தாத்ருமஹித;
ஸீமாத்மஸிந்தாப்லுத: ஸ்ரீவைகுண்டமுப்யேத நித்ய மஜடம் தஸ்மின் பரப்ரஹ்ம ஸாயுஜ்யம் ஸமவாப்ய நந்தனி ஸமஸ்தேநைவ தந்ய:
புமாத்|ப்ராதர் நித்யாந் ஸந்தேயம் பரமார்தம் முமுக்ஷுபி: ஶ்லோக த்வயேந ஸம்க்ஷிப்தம் ஸுவ்யக்தம் வரதோ ப்ரவீத்” என்கிற
ஶ்லோகங்களையும் அதின் அர்த்தமாகிய தானடையப் போகிற புருஷார்த்தத்தின் பெருமைகளையும் அனுஸந்தானம் செய்து
அதிக ஸந்தோஷத்தை யடைந்தவனாய் பகவந் நாமங்கள் பூர்வாசார்யர்களருளிச்செய்த பகவத் ஸ்தோத்திரங்கள்
இவைகளை அதிமனோஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டும்.

ஸாவகாசமிருந்தால் வேதம் முதலியவைகளின் திருவை முதலியவைகள் செய்யலாம்.
பிறகு படுக்கையை விட்டெழுந்திருந்து “ஓம் நம: க்ஷீதிபராய” என்கிற மந்திரத்தை உச்சரித்து
பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீவராஹ நயினாரை ப்ரார்த்தித்து விட்டு வலது காலைத் தூக்கிப் பூமியில் வைத்து
“நமோஸ்து ப்ரிய தத்தாயை துப்யம் தேவி வஸுந்தரே! த்வம் மாதா ஸர்வலோகாநாம் பாதஸ்பர்ஸம் க்ஷமஸ்வமே” என்று
பூமிதேவியைப் ப்ரார்த்திக்க வேண்டும். பிறகு “விஷ்ணோ: க்ரமோஸி” என்றாரம்பிக்கும் மந்திரத்தினால்
திரிவிக்ரமனை த்யானம் செய்துகொண்டு நடக்க வேண்டும்.

ஸ்நானம் செய்தல்
(பகவச் ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஸ்நான விதி)

பிறகு பகவானுடைய ஸந்நிதித் துறை, பாகவதர்கள் ஸ்நானம் செய்யும் துறை, இவைகளுக்குச் சென்று
கரையை யலம்பி கை கால்களை யலம்பிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து
கையில் பவித்திரத்தைத் தரித்துக் கொண்டு மூன்று தடவை ப்ராணாயாமம் செய்யவேண்டும்.

ப்ராணாயாமம் செய்யும் விதம்
சுண்டு விரல் பவித்திர விரல் இவைகளினால் இடது பக்கம் மூக்கை அமுக்கிக் கொண்டு வலது பக்கத்தினால் தேஹத்திலிருக்கும் காற்றை வெளிவிட்டு,
கட்டை விரலினால் வலது மூக்கை மூடிக்கொண்டு இடது பக்கத்தினால் மூச்சை உட்கொண்டு அப்படியே இரண்டு துவாரங்களையும் மூடிக்கொண்டு,
வாய், கண், இவைகளை மூடிக்கொண்டு மனதில் பகவானை த்யானம் செய்து ஸப்த வ்யாஹ்ருதிகளையும்,
காயத்ரியையும், காயத்ரி ஶிரஸ்ஸையும் மூன்று தடவை உச்சரித்து கடைசியில்
வலது மூக்கினால் காற்றை வெளிவிட்டு வலது காதை ப்ரணவத்தினால் தொடவேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக் கொண்டு குரு பரம்பராநுஸந்தானம் செய்து
‘ஸ்ரீகோவிந்த’ என்றாரம்பித்து திதிவார நக்ஷத்திரங்களைச் சொல்லி
ஸ்ரீ பகவதாக்ஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்தம் கர்மண்யதா ஸித்த்யர்தம் ப்ராத ஸ்நானமகம் கரிஷ்யே’ என்று
ஸங்கல்பித்துக்கொண்டு க்ருதஞ்ச கரிஷ்யாமி என்று முன்போல் அநுஸந்திக்கவேண்டும்.

அதில் யோகாக்யேந என்பதற்கு பதிலாக ப்ராதஸ்நானாக்யேந என்றநுஸந்திக்க வேண்டும்.
இப்படியே மற்ற இடங்களிலும் அந்தந்தக் கர்மத்தை அநுஷந்திக்க வேண்டியது.
அப்படியே பகவதோபலேந என்கிற பல மந்திரத்தையும், பகவாநேவ என்கிற ஸாத்விகத்யாகத்தையும் செய்யவேண்டும்.

புண்ய தீர்த்தங்களைப் பற்றிய த்யான ஶ்லோகங்களைத் தெரிந்த வரையிலும் அநுஸந்திக்கிறது.
இப்படியே பகவத் பாகவதாசார்யர்களின் விஷயமாயும் அனுஸந்திக்கிறது.
இதற்குமேல் பாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் விதிக்கப் படுகிற ஸ்நானத்தின் விவரம் இந்த நித்யத்திலேயே மாத்யாஹ்நிக ஸ்நாந ப்ரகரணத்தில்
சொல்லப்படுகிறபடியினாலே அங்கு சொல்லி இருப்பதைப் போல செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்த பிறகு வலது காலை ஜலத்திலும் இடது காலைக் கரையிலுமாக வைத்து உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்து கரையில் நின்று கொண்டு-ஆசார்யர்கள் விஷயமாயும் பகவான் விஷயமாயும் த்யான ஶ்லோகங்களைச் சொல்லிக்கொண்டு
இரண்டு வஸ்திரங்களில் ஒன்றினால் தலைப் பாகத்தையும் மற்றொன்றினால் மற்றப் பாகங்களையும் துடைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வ்யாஹ்ருதி த்ரயங்களினால் உலர்ந்த வேஷ்டியை ப்ரோக்ஷித்து
தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேஶ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோஹஸ்தாப்யாம் ஆததே என்கிற மந்திரத்தைச் சொல்லி எடுத்து
உதூத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருஶே விஶ்வாய ஸூர்யம் என்று ஸூர்யனுக்குக் காண்பிவித்து,
அவதூதகும் ரக்ஷோ அவதூதாத்ராதய: என்கிற மந்திரத்தைச் சொல்லி உதறி,
ஆவஹந்தீ விதந்வாநாகுர்வாணாசீரமாத்மந: வரஸாம்ஸி மமகாவஶ்ச அந்நபாநேச ஸர்வதா| ததோ மே ஶ்ரிய மாவஹ என்கிற மந்திரத்தைச் சொல்லி,
உத்தரீயத்தைத் தலையில் சுற்றிக் கொண்டு யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக் காதில் சுற்றிக் கொண்டு
கௌபீனத்தைத் தரித்துக் கொண்டு, முழங்கால்களையும், கைகளையும் மண் ஜலம் இவைகளினா லலம்பிக்கொண்டு
வஸ்திரம், உத்தரீயம் இவைகளை உடுத்திக் கொண்டு கால்களை யலம்பி இரண்டு தரம் ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்து

ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்தம் மந்த்ரஸ்நானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து
ஆபோஹிஷ்டா மயோபுவ| தாநஊர்ஜ ததாந| மஹேரணாயசக்ஷஸே| யோவஶ்ஶிவதமோரஸ:| |
தஸ்யபாஜயதேஹத: உஶதீரிவமாதர: தஸ்மா அரங்க மாமவ| யஸ்யக்ஷயாயஜிந்வத| ஆபோஜநயதாசந: |என்கிற
மந்திரங்களினால் க்ரமமாய் கால், தலை, ஆகாசம் இவைகளிலும், தலை ஆகாசம், கால் இவைகளிலும்,
ஆகாசம், தலை, கால் இவைகளிலும் முறையே ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாநஸ ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவது ஆகாசத்தில் ஆயிரம் கோடி ஸூர்யன் உதயமானாற்போல
ப்ரகாசித்துக் கொண்டிருப்பவனாயும், ஶங்கம், சக்கரம், கதை, சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற
நான்கு திருக்கைகளையுடையவனாயும், கிரீடம், தோள்வளைகள் முதலிய ஸர்வாபரணங்களினா லலங்கரிக்கப்பட்டவனாயு மிருக்கிற பகவானையும்,
தாமரைப் புஷ்பங்களைப்பொல் ப்ரகாசித்துக் கொண்டும், ஶங்க சக்ராதி ரேகைகளோடு கூடிய திருவடிகளையும் ,
அந்தத் திருவடிகளிலிருந்து உத்பத்தியான கங்கை தன் தலையில் விழுந்து ப்ரும்மாந்திரத்தினால் உள் நுழைந்து
உள்ளும் வெளியுமாகத் தன்னுடைய ஸரீரம் அலம்பப்பட்டதாயும் த்யானம் செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்யும் பொழுது உபயோகித்திருந்த வஸ்திரத்தைப் பிழிந்து தனக்கு எதிரில் வைக்காமல் பக்கத்தில் வைத்துக் கொள்ளவேணும்.

பிறகு இந்த இடத்தில் ப்ரஸந்தானு ப்ரஸக்தியாக தர்ம ஶாஸ்திர க்ரமமான ஸ்நான விதி ஆஹ்நிகாதிகளில்
எழுதப்பட்டிருந்தபோதிலும் அனுஷ்டான பரம்பரையில் வராததினால் இங்கு எழுதவில்லை.
ஶக்தி இல்லாதவனா யிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும்.
தீட்டு முதலியவைகளினால் அசுத்தனாயிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யக்கூடாது.
ஶிரஸ்நானம் செய்ய ஶக்தி இல்லாமலிருந்தால் தொப்புள் வரையில் அலம்பி மேல் பாகங்களை ஈரத்துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கும் ஶக்தி இல்லாமலிருந்தால் ஶாஸ்திரங்களில் விதிக்கப் பட்டிருக்கும் மற்ற ஸ்நானங்களில்
தன் அதிகாரத்துக்குத் தகுந்ததான ஒன்றைச் செய்ய வேண்டும்.  ,

ஊர்த்வ புண்ட்ரம் தரித்தல்
தீர்த்த ஹரியில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து உத்தரணியினால் ஜலமெடுத்து
“வீர்யாய அஸ்த்ராயபட்” என்கிற அஸ்திர மந்திரத்தினால் இடது கையை அலம்பி, ப்ரணவத்தினால் திருமண்ணைக் கையில் எடுத்துவைத்து
‘கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம்  கரீஷிணீம்| ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம் த்வாமிஹோபஹ்வயேஶ்ரியம் என்று குழைத்து
அஸ்திர மந்திரத்தினால்   ரக்ஷையை எட்டுத் திக்குகளிலும் செய்து, ப்ரணவத்தினால் கலந்து, மூல மந்திரத்தினால் ஜபித்து,
ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை எழுதி, ஆள் காட்டி விரலினால் குழைத்து,

விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவாநி விமமேரஜாகும்ஸியோ அஸ்கபாய உத்தரகும் ஸதஸ்தம் விசக்ரமாணஸ்த்ரேதோருகாய:| |’ என்கிற மந்திரத்தையும்,-த்வாதஶாக்ஷரத்தையும் ஜபித்து, ‘விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி விஷ்ணோ: ஶ்நப்த்ரேஸ்தோ
விஷ்ணோஸ்யஸூரஸி விஷ்ணோர்த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவேத்வா|
உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஶதபாஹுநா|| பூமிர்தேநுர்தரணீ   பூததாரிணீ|
ம்ருத்திகே ஹநமேபாபம் யந்மயா த்ருஷ்க்ருதம் க்ருதம் | த்வயா ஹதேந பாபேந ஜீவாமி ஶரதஶ்ஶதம் |
ம்ருத்திகே தேஹி மே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்|| என்கிற மந்திரங்களை உச்சரித்து

ஆள்காட்டி விரலினால் கொஞ்சம் எடுத்து ப்ரணவத்தினால் சிரஸ்ஸில் தரித்து,
பவித்திர விரலினால் நெற்றி முதலிய இடங்களில் பகவானுடைய திருவடிகளைப் போன்ற ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக் கொள்ளவேண்டியது.
நெற்றியிலும் நடுவயிற்றிலும், மார்பிலும், முன் கழுத்திலும், வலது வயிற்றிலும், வலது கையிலும்,வலது கழுத்திலும்,
இடது வயிற்றிலும், இடது கையிலும், இடது கழுத்திலும், அடி முதுகிலும், பின் கழுத்திலுமாக க்ரமமாகத் தரிக்கவேண்டியது.
தரித்துக் கொள்ளும்போது கேஶவாதி பன்னிரண்டு நாமங்களையும் ‘ஓம் கேஶவாய நம:’என்று முறையே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக உச்சரித்துக்கொண்டு இட்டுக் கொள்ள வேண்டியது.
மிகுதி திருமணை த்வாதஶாக்ஷரத்தினால் ஶிரஸில் தரித்துக் கொள்ள வேண்டியது.

பகவானுடைய திருமேனி ஸம்பந்தமுடைய மஞ்சள் முதலியவைகள் சேர்ந்த ஸ்ரீசூர்ணத்தை எடுத்துக் குழைத்து
கீழ்க்கூறிய க்ரமப்படி புண்ட்ரங்களின் நடுவில் தரிக்கவேண்டியது.
ஶ்ரியை நம:, அம்ருதோத்பவாயை நம:,கமலாயை நம:, சந்த்ரஸோதர்யை நம:, விஷ்ணுபத்ந்யை நம:, வைஷ்ணவ்யை நம:, வராரோஹாயை நம:,
ஹரிவல்லபாயை நம:, ஶார்ங்கிண்யை நம:, தேவதேவ்யை நம,, மஹாலக்ஷ்ம்யை நம:, லோகஸுந்தர்யை நம:, ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம: என்று
முறையே உச்சரித்துக் கொண்டு தரிக்க வேண்டும். பிறகு ஒம் கேஶவாய நம: என்கிற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு புண்ட்ரங்களைக் க்ரமமாகத் தொட வேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக்கொண்டு சதுஶ்சக்ரம் நமஸ்யாமி கேஶவம் கநகப்ரபம்! நாராயணம் கநஶ்யாமம் சதுஶ்ஶங்கம் நமாம்யஹம்|
மாதவம் மணிபங்காபம் சிந்தயாமி சதுர்கதம்| சந்த்ரபாஸம் சதுஶ்ஶார்ங்கம் கோவிந்தமஹமாஶ்ரயோ
விஷ்ணும் சதுர்ஹலம் வந்தே பத்ம கிஞ்ஜல்க ஸந்நிபம்| சதுர்முஸலமப்ஜாகம் ஸம்ஶ்ரியே மதுஸூதநம்:
அக்னி வர்ணம் சது:கட்கம் பாவயாமி த்ரிவிக்ரமம்| வாமநம் பால ஸூர்யாபம் சதுர்புஜம் விபாவயே|
ஶ்ரீதரம்  புண்டரீகாபம் சது: பட்டஸமாஶ்ரயே| சதுர்முத்கரமப்யேமி  ஹ்ருஷிகேஶம் தடித்ப்ரபம்|
பஞ்சாயுதம் பத்ம நாபம் ப்ரணமாம்யர்கரோசிஷம்| தாமோதரம் சதுஷ்பாஶமிந்த்ரகோபநிபம் பஜே|
வாஸுதேவ முபாஸேஹம் பூர்ணேந்த்வயுத ஸந்நிபம்| என்று
அந்தந்தப் புண்ட்ரங்களுக்கு எதிரில் கையைக் கூப்பிக் கொண்டு ப்ரார்த்திக்க வேண்டும்.

பின்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த பன்னிரு திரு நாமப் பாட்டுக்களையு மநுஸந்திக்க வேண்டும்.
புண்ட்ரம் தரித்துக் கொண்டபிறகு கையலம்பக் கூடாது.
ஸாவகாசமில்லாமற் போனாலும், ஶக்தி இல்லாமற்போனாலும், நெற்றியிலும், பின்கழுத்திலும் அவஶ்யம் தரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு புண்ட்ரங்களையும் ஒரு பொழுதும் தவிரக்கூடாது.

பிறகு, “அஸ்மத் குருப்யோ நம: அஸ்மத் பரம குருப்யோ நம: அஸ்மத் ஸர்வ குருப்யோ நம: ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமதே மஹாபூர்ணாயநம: ஸ்ரீமத்யாமுநமுநயே நம: ஸ்ரீராமமி ஶ்ராய நம: 
ஸ்ரீபுண்டரீகாக்ஷாயநம: ஸ்ரீமந் நாதமுநயே நம: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாயநம: ஶ்ரியை நம: ஶ்ரீதராயநம:

அஸ்மத்தேஶிகமஸ்மதீயபரமாசார்யாந் அஶேஷாந் குரூந் ஸ்ரீமல்லக்ஷ்மண யோகிபுங்கவ மஹாபூர்ணௌ முநிம் யாமுநம்|
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம் ஸேநேஶம் ஶ்ரியமிந்த்ரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே|| ‘

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கியானடைவே – யவர் குருக்கள் நிரை வணங்கி, பின்னருளால்
பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி, நன்னெறியை யவர்க்குரைத்த
உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகளென்றிவர்களை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே’ என்றும்,

தன்னுடைய ஆசார்யனுடைய தனியன் முதலியவைகளையும்
விஸ்தாரமாக அனுஸந்திக்க வேண்டும். துளஸி மணி மாலை, தாமரை மணி மாலை, திருப் பவித்திரம், முதலியவைகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
திருவடி ஜோட்டை ஶிரஸில் தரித்துக்கொண்டு தர்ப்ப பவித்திரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்
கால் கைகளை யலம்பி, ஆசமனம் செய்து ஸ்ரீபகவதாஜ்ஞ்யா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்
ஸ்நாநாங்கம் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு
தேவதைகள், ருஷிகள், பித்ருக்கள், எல்லோரும் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.

ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்தான் தர்ப்பயாமி!
ஸர்வாம் தேவாம்ஸ் தர்ப்பயாமி! ஸர்வ தேவகணாம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வதேவ பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ தேவகண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
நுனி விரல்களால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக்கொண்டு இரண்டு கட்டை விரல்களிலும் மாட்டிக் கொண்டு
ஒம் க்ருஷ்ணத்வைபாய நாதயோயே ருஷ்ய: தாந் ருஷிம்ஸ்தர்ப்யாமி ! ஸர்வாந் ருஷீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வருஷிகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிகணபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
இரண்டு கைகளின் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை ப்ராசீனாவீதமாகத் தரித்துக்கொண்டு
ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வாந் அக்னிகவ்யவாஹ நாதயோ யே பிதர: தாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ பித்ருகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வபித்ருபத்நீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வ பித்ரு கண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று வலது கைக்கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

பிறகு ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பய தமேபித்ரூந் என்று
இரண்டு கைகளிலும் ஜலமெடுத்து ப்ரதக்ஷிணமாகச் சுற்றி இடது பக்கம் கரையில் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
என்று சொல்லி மூன்று தடவை ஜலத்தை இறைக்க வேண்டும்.
யஜ்ஞோபவீதத்தை க்ரமமாகத் தரித்துக் கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.

ஶிரஸ்நானம் செய்யாத பக்ஷத்திலும் தீட்டு முதலியவைகளுக்காக ஸ்நானம் செய்யும் போதும், தேவருஷி பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.
பகவாநேவ என்றாரம்பித்து, ப்ராத ஸ்நாநாக்யம் கர்மஸ்வஸ்மைவ ப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று
ஸாத்விக த்யாகம் செய்து அநேந ப்ராதஸ்நாநாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீத்யதாம் வாஸுதேவ: என்று
ப்ராத ஸ்நானத்தை முடிக்க வேண்டும்.

தத: ஸ்நாநார்த மாஸாந மாநீய கந்தாதிபி: அப்யர்ச்ய: |
பகவந்தம் ப்ரணம்ய: அநுக்ஞாப்ய: பாதுகே ப்ரதாய|
ஸ்நாநாஸநோ பவிஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண்யபநீய விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸ்நாநஸாடிகாம் ப்ரதாய| அர்க்ய பாத்ய ஆசமனீய பாதபீட ப்ரதாந தந்தகாஷ்ட ஜிஹ்வா|

நிர்லேகந கண்டூஷ முகப்ரக்ஷாளந| ஆசமன தர்ஶ ப்ரதர்ஶந ஹஸ்த ப்ரக்ஷாளந|
முகவாஸ தாம்பூல தைலாப்யங்க உத்வர்த்தனாமலகதோயம் கதப்லோத தேஹஶோதந
சாடிகா ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான கந்த புஷ்ப தூப தீப ஆசமன ந்ருத்த கீத வாத்யாதி ஸர்வ மங்களயுக்தா

அபிஷேக நீராஞ்ஜன ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமன கூர்ச்ச ப்ராஸாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்ஜந ஆசமன தேஹஶோதந ப்லோத
வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமனாநி தத்யாத்|  

பிறகு ஸ்நானாஸநத்தை ஸமர்ப்பிவித்து சந்தனம், புஷ்பம், முதலியவைகளினால் ஆஸனத்தை அலங்கரித்துப்
பகவானை ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பிவித்து ஸ்நானாஸநத்தில் பகவான் எழுந்தருளினபிறகு
வஸ்திரம், ஆபரணம், மாலை முதலியவைகளைக் கழற்றி விஷ்வக்ஸேனரிடத்தில் ஒப்புக் கொடுத்து ஸ்நானசாடிகை ஸமர்ப்பிவித்து
அர்க்யம் பாத்யம், ஆசமனீயம், பாதபீடம், தந்தகாஷ்டகம், ஜிஹ்வாநிர்லேகனம், கண்டூஷம், முகப்ரக்ஷாளநம்,
ஆசமனம், ஆதர்ஶப்ரதர்ஶநம், ஹஸ்தப்ரக்ஷாளனம், முகவாஸ தாம்பூலம், தைலாப்யங்கம், உத்வர்த்தனம்,
ஆமலகதோயம், கங்கதம், ப்லோத தேஹஶோதனசாடிகை, ஹரித்ரா லேபனம், ப்ரக்ஷாளனம், வஸ்திரம், உத்தரீயம்,
யஜ்ஞோபவீதம், பாத்யம், ஆசமனம், பவித்திரம், கந்தம், புஷ்பம், தூபதீபம், ஆசமனம், தேஹஶோதனம், வஸ்திரம்,
உத்தரீயம், யஜ்ஞோபவீதம், ஆசமனம் இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.

தத: அலங்காராஸநம் அப்யர்ச்ய: ப்ரணம்ய|
அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய| தத்ர உபவிஷ்டே பூர்வவத் ஸ்நாநீய வர்ஜம்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஶுத்தோதகாநி மந்த்ரேண கல்பயித்வா|
பகவதே அர்க்ய பாத்ய ஆசமனீயாதி தத்வா கந்த புஷ்ப பாதஸம்மர்தன வஸ்த்ர உத்தரீய பூஷண உபவீத ஆசமனீயாநி தத்வா|
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ர பூஷணாந்தம் தத்வா|

கந்தாதீந் தேவாநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரதாய| தூபதீப ஆசமனாந்தம் தத்யாத்|
அத பார்ஸ்வ பரிவாராணாம் கந்தாதிநேவ தத்யாத்| கந்த புஷ்ப ப்ரதாநாலங்கார ஊர்த்வ புண்ட்ராம் ஜநாதர்ஶ
தூப தீப ஆசமன த்வஜ சத்ர சாமர வாஹந ஶங்க சிஹ்ந காஹ்ள பேர்யாதி ஸகல ந்ருத்த கீத வாத்யாதிபி அப்யர்ச்ய |
மூல மந்த்ரேண புஷ்பம் ப்ரதாய ப்ரத்யாகாரம் புஷ்பம் ப்ரதாய|

த்வாதஶாக்ஷரேண விஷணு ஷடக்ஷரேண விஷ்ணு காயத்ரியா பஞ்சோபநிஷதை: புருஷ ஸூக்த ருக்பி:
புஷ்பம் ப்ரதாய அந்யைஶ்ச பகவந் மந்த்ரை: ஶக்தஶ்சேத் புஷ்பம் ப்ரதாய|
தேவ்யாதி பார்ஷதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா|

ப்ரணம்ய| ப்ரதி திஶம் ப்ரதக்ஷிணம் ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்ஜலிம் தத்வா|
புரத: ப்ரணம்ய| ஶ்ருதி ஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா|
ஸ்வாத்மாநம் நித்ய கிங்கரதயா நிவேத்ய ததைவ த்யாத்வா |
யதாஶக்தி மூல மந்த்ரம் ஜபித்வா| ஸர்வேப்யோ போக பூரணீம் மாத்ராம் தத்வா|

பிறகு அலங்காராஸநத்தைப் பூஜித்து பகவானை ப்ரணாமஞ்செய்து அனுமதி பெற்றுக் கொண்டு,
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளினபிறகு, முன்போலவே
ஸ்நாநீயம் தவிர அர்க்யம் பாத்யம் ஆசமனீயம் ஸர்வார்த்ததோயம் இவைகளைக்
கீழ்ச் சொல்லியதைப் போலப் பரிகல்பனம் செய்து கொள்ள வேண்டும்.

பகவானுக்கு அர்க்ய பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பிவித்து
கந்தம், புஷ்பம், பாதஸம்மர்த்தனம், வஸ்திரம், உத்தரீயம்,  பூஷணம், யஜ்ஞோபவீதம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.
மற்றெல்லா பரிவாரங்களுக்கும் ஸ்நாநம் வஸ்திரம் பூஷணங்கள் வரையில் ஸமர்ப்பித்துக்
கந்தம் முதலியவைகளைப் பகவானுக்கு ஸமர்ப்பிவித்த பிறகு ஸமர்ப்பிக்க வேண்டும்.

அதுவுமன்றிக்கே பரிவாரங்களுக்குக் கந்தம் முதலியவைகளை மாத்திரம் ஸமர்ப்பிக்க வேண்டியதாகவுமாம்.
(அர்க்ய பாத்ய ஆசமனாதிகள் வேண்டியதில்லை) கந்தம், புஷ்பம், அலங்காரம், ஊர்த்வ புண்ட்ரம், அஞ்ஜனம்,
ஆதர்ஶம், தூபம், தீபம், ஆசமனம், த்வஜம், சத்ரம், சாமரம், வாஹனம், சங்கம், சின்னம், காஹளனம், பேரி முதலிய
ஸகல நர்த்தனம், கீதம், வாத்யம், முதலிய உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் புஷ்பம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
இப்படியே த்வாதஶாக்ஷரம், ஷடக்ஷரம், விஷ்ணு காயத்ரி, பஞ்சோபநிஷத் மந்திரங்கள், புருஷ ஸூக்த ருக்குகள், இவைகளினாலும்,
மற்ற இதர பகவந் மந்திரங்களினாலும், ஶக்தி உள்ளவரையில் புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.
அப்படியே தேவி முதலியவர்களுக்கும் அவரவர்கள் மந்திரங்களினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

நாலு திக்குகளிலும் ப்ரணாமம் செய்து ப்ரதக்ஷிணம் செய்து புஷ்பாஞ்ஜலி ஸமர்ப்பிக்க வேண்டும்.
முன்பக்கத்தில் ப்ரணாமம் செய்து செவிக்கினிய ஸ்தோத்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.
பிறகு தன்னை, பகவானுடைய நித்யதாஸனாக அங்கீகரிக்க வேண்டுமென்று ஸமர்ப்பித்து, ஶக்திக்குத் தக்கபடி
திருவஷ்டாக்ஷரத்தை ஜபம் செய்து, ஸர்வ போகங்களையும் பூர்த்தி செய்யக் கூடிய மாத்திரையைத் தீர்த்தத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

———

முகவாஸ தாம்பூல ப்ரதாய| அர்க்யம் தத்வா | போஜ்யாஸநம் அப்யர்ச்ய | ப்ரணம்ய| அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய |
தத்ர உபவிஷ்டே பாத்ய ஆசமனீய அர்ஹணாநி தத்வா|
குடம் மாக்ஷிகம் ஸர்பி| ததி: க்ஷீரஞ்சேதி பாத்ரே நிக்ஷிப்ய விஶோத்ய |
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய: மதுபத் பவநத ஶிரா: ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மதா: |

பூத்வா ப்ரதாய ஆசமனம் தத்யாத் | யத்கிஞ்சித் த்ரவ்யம் பகவத்தேயம் தத்ஸர்வம் ஶோஷணாதிபிர் விஶோத்ய|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய தத்யாத் ததஶ்ச காம் ஸ்வர்ண ரத்னாதிகம் ச யதாஶக்தி தத்யாத்|
தத”: ஸுஸம்ஸ்க்ருதாந்ந மாஜ்யாட்யம் ததிக்ஷீர மதூநி பலமூல வ்யஞ்ஜநாநி மோதகாம்ச
அந்யாநி லோகே ப்ரியதமாநி ஆத்மநஶ்சேஷ்டாநி ஶாஸ்த்ராவிருத்தாநி ஸம்ப்ருத்ய ஶோஷணாதி க்ருத்வா|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய| அஸ்த்ர மந்த்ரேண ரக்ஷாம் க்ருத்வா|

ஸுரபி முத்ராம் ப்ரத்ருஶ்ய அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத்| 
அதிப்ரபூத மதி ப்ரிய தமமதி ஸமக்ர மத்யந்த பக்தி க்ருத மிதம் ஸ்வீகுரு |
இதி ப்ரணாம பூர்வகம் அத்யந்த ஸாத்வ ஸவிநயா வந்தோ பூத்வா நிவேதயேத்|
ததஶ்சாந் பாந தர்ப்பணே ப்ரதாய|

ஹஸ்த ப்ரக்ஷாளந ஆசமன ஹஸ்த ஸம்மார்ஜந சந்தன முகவாஸ தாம்பூலாநி தத்வா|
ப்ரணம்ய| புந: மந்த்ராஸநம் கூர்ச்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ய அநுஜ்ஞாப்ய  பாதுகே ப்ரதாய|
தத்ர உபவிஷ்டே கந்தமால்யாதிக மபோஹ்ய| விஶ்வக்ஸேநாய தத்வா|
பாத்ய ஆசமனீய கந்த புஷ்ப தூப தீப ஆசமன பூப பலா ஆசமனாநி தத்வா| முகவாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதிபி: அப்யர்ச்ய:| |
ப்ரதக்ஷிண த்வயம் க்ருத்வா| தண்டவத் ப்ரணம்ய  பர்யங்காஸநம் அப்யர்ச்ய| அநுஜ்ஞாப்ய| பாதுகே ப்ரதாய|

தத்ரோபவிஷ்டே பாத்யாசமநே தத்வா| மால்யபூஷண வஸ்த்ராணி அபநீய| விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸுகஶயநோசிதம் ஸுக:ஸ்பர்ஸம் வாஸ: தது சிதாநி பூஷணாதி உபவீதம் ச ப்ரதாய| ஆசமனீயம் தத்வா|
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகவாஸ தாம்பூலாதிபி: அப்யர்ச்ய|
ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைகரஸேந அநேநாத்மநா|

கர்த்ரா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த கரணை: ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாநௌபசாரிக
ஸாம்ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாந் அதிப்ரபூதாநதி ப்ரியதமாநதி ஸமக்ராநத்யந்த
பக்தி க்ருதாநகிர பரிஜந பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே ஸ்வயமேவ ப்ரதி பாதி தவாந் இத்யநுஸந்தாய பகவந்தம் அநுஜ்ஞாப்ய:

பகவந் நிவேதிதாத் ஹவிஶ்ஶேஷாத் விஶ்வக்ஸேநாய கிஞ்சிதுர்ருத்ய: நிதாயாந்யத்
ஸர்வம் ஸ்வாசார்ய ப்ரமுகேப்யோ வைஷ்ணவேப்ய:: ப்ரதாய பகவத்யாக ஶிஷ்டை: ஜலாதிபி: த்ரவ்யை: |
விஶ்வக்ஸேநம் அப்யர்ச்ய| பூர்வோத்ருதம் ஹவிஶ்ச தத்வா|
ததர்சநம் பரிஸமாப்ய: பகவந்தம் அஷ்டாங்கேந ப்ரணம்ய: ஶரணமுபகச்சேத்| மநோபுத்தி மாநேந ஸஹந்யஸ்ய தராதலே|

கூர்மவச் சதுர பாதாந் ஶிரஸ்தத்ரைவ பஞ்சமம் | ப்ரதக்ஷிண ஸமேதேந ஏவம் ரூபேண ஸர்வதா|
அஷ்டாங்கேந நமஸ்க்ருத்ய ஹ்யூப விஶ்யா க்ரதோவிபோ|
உரஸா ஶிரஸாசைவ வபுஷா மநஸா கிரா: பத்ப்யாம்  கரப்யாம் ஜாநுப்யாம் ப்ரணமோஷ்டாங்க உச்யதே|
இத்யுக்தாஷ்டாங்க ப்ரணாம: ஶரணாகதி ப்ரகாரஶ்ச பூர்வோக்த: தத:
அர்க்ய ஜலம் ப்ரதாய| பகவந்தம் அநுஜ்ஞாப்ய |பூஜாம் ஸமாபயேத்|

————-

பிறகு முகவாஸ தாம்பூலம் ஸமர்ப்பித்து, அர்க்யம் கொடுத்து போஜ்யாஸநம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
போஜ்யாஸநத்தைப் பூஜித்து பகவானிடத்தில் ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பித்து
அந்தப் போஜ்யாஸநத்தில் பகவான் எழுந்தருளிவிட்டதாக த்யானித்து பாத்யம், ஆசமனீயம், அர்க்யம்
இவைகளை ஸமர்ப்பித்து மதுபர்க்கம் ஸமர்ப்பிக்க வேண்டியது.

அதாவது வெல்லம், தேன், நெய், தயிர், பால் இவைகளைத் தனித்தனியே பாத்திரங்களில் வைத்து
ஶோஷணதாஹந ப்லாவனங்களைச் செய்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து அமுது செய்தருளப் பண்ண வேண்டும்.
பிறகு பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய பசுமாடு, ஸ்வர்ணம், ரத்னங்கள்,தனதான்யங்கள் இவைகள் முதலிய எல்லா வஸ்துக்களையும்
பகவானுக்கு எதிரில் வைத்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு நன்றாகவும் பரிசுத்தமாகவும் பாகம் செய்யப்பட்ட அன்னங்களையும், நெய், தயிர், பால், தேன், பழம், கிழங்குகள் முதலிய
வ்யஞ்ஜனங்களைத் தனக்கு இஷ்டங்களாயும் ஶாஸ்திரங்களுக்கு விரோதமில்லாமலுமிருப்பவைகளை ஸம்பாதித்துப் பகவானெதிரில் ஸமர்ப்பித்து
அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து, அஸ்திர மந்திரத்தினால் திக்பந்தனஞ்செய்து, ஸுரபி முத்திரையைக் காண்பித்து, அர்க்ய தீர்த்தத்தை எடுத்து
“அதிப்ரபூதம்………இதம் ஸ்வீகுரு” என்று ப்ரணாமம் செய்து ப்ரார்த்தித்து மிகுந்த விநய பக்தியுடன் தலைகுனிந்து நின்று ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு அநுபானம், தர்ப்பணம், இவைகளையும் ஸமர்ப்பித்து ஹஸ்த ப்ரக்ஷாளநம், ஆசமனம், ஹஸ்த ஸம்மார்ஜனம், சந்தனம், முகவாஸ தாம்பூலம்
இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும், பிறகு ப்ரணாமம் செய்து மந்திராஸநத்தைத் துடைத்துப் பூஜித்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து, அதில் பகவான் எழுந்தருளின பிறகு, முன் ஸமர்ப்பித்த சந்தனம், மாலை முதலியவைகளைக் களைந்து
விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து பாத்யம், ஆசமனீயம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், ஆசமனம், பக்ஷ்யம், பழம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும்.

முகவாஸ தாம்பூலம் ந்ருத்த கீத வாத்யங்களினால் ஆராதனஞ்செய்து, இரண்டு தடவை ப்ரதக்ஷிணம் செய்து
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பர்யங்காஸநத்தைத் துடைத்து பகவானிடத்தில் உத்திரவு பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளியதாக த்யானஞ்செய்து பாத்யம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பித்து
மாலை, பூஷணங்கள், வஸ்திரங்கள் இவைகளைக் களைந்து விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து
ஸுகஶயனத்திற்குத் தகுந்ததாய் ஸுகமான ஸ்பர்ஶத்தை உடையதான வஸ்திரம், பூஷணம், மாலை, உபவீதம் இவைகளை ஸமர்ப்பித்து
ஆசமனீயம் ஸமர்ப்பித்து சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், ஆசமனீயம், முகவாஸ தாம்பூலம் இவைகளை ஸமர்ப்பித்து,

“ ஸ்வநியாம்ய…….ப்ரதிவாதிதவாந்” என்று ஸாத்விகத்யாகஞ்செய்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு
பகவானுக்கு நிவேதனஞ்செய்யப்பட்ட ஹவிஸ்ஸின் மிகுதியிலிருந்து விஷ்வக்ஸேநருக்காகக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு
மற்றை எல்லா ஹவிஸ்ஸுக்களையும் தன்னுடைய ஆசார்யன் முதலான எல்லா வைஷ்ணவர்களுக்கும் ஸமர்ப்பித்து
பகவானுடைய ஆராதனத்தில் மிகுந்த தீர்த்தத்தினால் விஷ்வக்ஸேநருக்கு ஆராதனஞ்செய்து
முன்னமேயே எடுத்து வைத்திருக்கும் ஹவிஸ்ஸை நிவேதஞ்செய்து அந்த ஆராதனத்தை முடித்துப்
பகவானை ஸாஷ்டாங்கமாக ஸேவித்து ஶரணாகதி செய்ய வேண்டும்.

‘மனது, புத்தி, அஹங்காரம், இரண்டு கைகள், இரண்டு கால்கள், தலை இவைகளை ஆமைபோல் வைத்துக் கொண்டு ஸேவிப்பது’ என்றும்,
‘ப்ரதக்ஷிணங்களோடு கூடிய இப்படிப்பட்ட ஸாஷ்டாங்க ப்ரணாமத்தினால் பகவானை ஸேவித்து அவனெதிரில் உட்கார்ந்து’ என்றும்,
‘மார்பினாலும், தலையினாலும், ஶரீரத்தினாலும், மனதினாலும், வாக்கினாலும், கால்களினாலும்,
கைகளினாலும், முழங்கால்களினாலும், ப்ரணாமம் செய்வது ஸாஷ்டாங்க ப்ரணாமம்’ என்றும்
சொல்லப் படுகிறது என்று ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்யும் விதம் சொல்லப் பட்டது.
ஶரணாகதி செய்யும் விதமும் முன்னமேயே சொல்லப் பட்டது.
பிறகு அர்க்யம் ஸமர்ப்பித்துப் பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு ஆராதனத்தை முடிக்க வேண்டும்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த  ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

November 29, 2023

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாயதீர்த்தம் கத்வா

ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா

அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய

ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் அருளிச் செய்த -ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்ரீ வாநாத்ரி யோகி பிரபத்தி

September 21, 2023

ஸ்ரீ ஆதி சேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் பகவத் கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
முதல் பிரதான சிஷ்யர் -அஷ்ட திக் கஜங்களில் பிரதானம்

பாதுகா சில சமயம் பிரியலாம் –
பாதுகா சாயா -சில சமயம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம் –
பாத ரேகா இவர் என்பர்

பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே

இவர் கால் வைத்த காரணத்தால் சிஷ்ய ஸம்பத் பெருகியதால் பொன்னடிக்கால் ஜீயர் -செம் பொன் கழல் அடி -பொன்னடிக்கால் ஜீயர்
இவருக்கு அஷ்ட திக் கஜங்கள்
ஸ்ரீ சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
ஸ்ரீ சமரபுங்கவாசார்யர்,
ஸ்ரீ சுத்தசத்வம் அண்ணா,
ஸ்ரீ ஞானக்கண்ணாத்தான்,
ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை ,
ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்,
ஸ்ரீ கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா.

—————-

ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் அருளிய முக்யமான சம்ஸ்க்ருத அருளிச் செயல்கள்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் மங்களாசாஸனம்

இதற்கான மூலமும் மற்றும்
அதற்கான ஸ்ரீ தென்திருப்பேரை உ.வே. அரவிந்த லோசனன் ஸ்வாமி அவர்களின் எளிய தமிழ் மொழி பெயர்ப்பும் காண்போம்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி

முதல் 11 ஸ்லோகங்களில் சரண் அடைந்து
அடுத்து 3 ஸ்லோகங்கள் இவரே சரண் அடையத்தக்கவர்

——–

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–1-

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

——–

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வாநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே–2-

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

——–

தாராத்மஜாதி ஜநிதம் ஸூகமை ஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–3–

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

——–

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–4–

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

———-

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்ய மாரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வரம் வரஸ்ய யதீஸி துஸ்தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

——–

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதி ஸது தாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

—————

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–7–

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

———–

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–8–

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

———–

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்கவல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

———

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--10–

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

————

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம் நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--11–

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

——-

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு
ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக
இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர–13-

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ்வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே
ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே
சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

———

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

———————————–

பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”.
வானமாமலை ஜீயர், வானாத்ரி யோகி, ராமாநுஜ ஜீயர், ராமாநுஜமுனி என்று இவருக்கு பல திருநாமங்கள் உண்டு.
இவர் அழகிய மணவாள மாமுனிகளின் முதல் சிஷ்யர் மட்டுமல்லாது ப்ரதான சிஷ்யருமாவார்.

அழகிய வரதரான இவர் அழகிய மணவாள மாமுனிகளுக்கு க்ருஹஸ்தராய்
எழுந்தருளியிருந்த காலத்தே சிஷ்யரானார். முதல் சிஷ்யரும் இவர்தான்.
அழகிய வரதர் உடனே சந்யாஸாச்ரமம் ஏற்று வெகுகாலம் மாமுனிகளோடே தங்கி, கைங்கர்யம் செய்து வந்தார்.
மாமுனிகளின் சிறந்த சிஷ்ய செல்வத்துக்கு இவர் முதலடி இட்டமையால் இவருக்கு
பொன்னடிக்கால் ஜீயர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று.
இவர் பாரத தேசம் முழுவதும் பல இடங்களில் தோதாத்ரி மடங்களை நிறுவி நம் சம்பிரதாயத்தை விஸ்தாரம் செய்தார்.

மாமுனிகள் திருமலை திவ்யதேசத்து யாத்திரைக்கு முதல் முறையாக செல்ல,
அப்போது பெரிய கேள்வியப்பன் ஜீயர் ஸ்வப்னத்தில் ஒரு க்ருஹஸ்தர் சயனித்திருக்க
அவர் திருவடி நிலையில் ஒரு சந்யாசியையும் கண்டார்.
உடனே கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, அதற்கு அங்கிருந்தோர்கள்
“ஈட்டுப் பெருக்கர்” என்கிற அழகிய மனவாளாப்பெருமாள் நாயனார்  மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் என்று கூறினர்.

பல ஆசார்யர்கள் மாமுனிகளை தரிசிக்கப் பொன்னடிக்கால் ஜீயரே புருஷகரமாக இருந்தார்.
பல ஸ்ரீவைஷ்ணவர்கள் பொன்னடிக்கால் ஜீயரின் புருஷகாரத்தாலேயே மாமுனிகளை தர்சிக்க ,
பொன்னடிக்கால் ஜீயரும் மகிழ்வோடு அவர்களை ஆதரித்து, கைங்கர்யத்தையும் தந்து அருளினார்.

கந்தாடை அண்ணனும் அவர் திருமேனி சம்பந்திகளும் மாமுனிகளுக்குச் சிஷ்யர்கள் ஆன பின்னே ,
பொன்னடிக்கால் ஜீயரைத் தன் “ப்ராண ஸுக்ருத்” என்றும்,
தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருளினார்.
அப்பாச்சியாரண்ணா மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட,
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அவரை அமரச்செய்து ,
தன் திருவாழி – திருச் சக்கரத்தையும் (திருச் சங்கு – திருச் சக்கரம்) கொடுத்து
அப்பாச்சியாரண்ணாவுக்கு திருவிலச்சினை (சமாச்ரயணம்) செய்யுமாறு கட்டளை இட்டார் .
முதலில் பொன்னடிக்கால் ஜீயர் சங்கோஜத்துடன் இதை மறுத்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து மாமுனிகள் வலியுறுத்த அவ்வாரே அப்பாச்சியாரண்ணாவுக்கும்
அவருடன் வந்துருந்த சிலருக்கும் சமாச்ரயணம் செய்து  மாமுனிகள் கட்டளையை பூர்த்தி செய்துவித்தார்.
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் –
சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
சமரபுங்கவாசார்யர்,
சுத்தசத்வம் அண்ணா,
ஞானக்கண்ணாத்தான்,
ராமானுஜம் பிள்ளை ,
பள்ளக்கால் சித்தர்,
கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் அப்பாச்சியாரண்ணா.

மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவை ஸ்ரீரங்கத்தை விட்டுக் காஞ்சிபுரம் செல்லுமாறு பணிக்க,
அதைக் கேட்டு அவர் மனம் நொந்தார்.
உடனே மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயர் ஆராதித்த தன் பழைய ராமாநுஜனை
(தீர்த்த சொம்புக்கு நம் சம்ப்ரதாயத்தில் வழங்கப்படும் சொல்)
அப்பாச்சியாரண்ணாவை ஏற்கச்செய்து, தன்னைப்போல் இரண்டு அர்ச்சா திருமேனிகளை செய்து
ஒன்றை ஆசார்யரான பொன்னடிக்கால் ஜீயருக்கும்
மற்றொன்றை சிஷ்யரான அப்பாச்சியாரண்ணாவுக்கும் தந்தருளினார்.

பிறகு தெய்வ நாயகன் எம்பெருமான் (வானமாமலை) சேனை முதலியார் வாயிலாக
“பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலை எழுந்தருளி கைங்கர்யம் செய்ய வேண்டும்” என்று
ஒரு ஸ்ரீமுகத்தை மாமுனிகளுக்கு விண்ணப்பித்தார்.
உடனே இதை பொன்னடிக்கால் ஜீயருக்கு மாமுனிகள் தெரிவித்தார்.
அதன் பிறகு தன் முதலிகள் எல்லோரையும் (பொன்னடிக்கால் ஜீயர் உட்பட)
பெரிய பெருமாள் முன்னிலையில் தினம் 100 பாசுர க்ரமமாக 4000 திவ்யப்ரபந்தத்தை அந்வயிக்குமாறு பணிக்க,
அவ்வாறே பெரிய பெருமாள் திருச்செவி சாற்றுகிறார்
(பெரிய பெருமாள் கேட்கிறார்). “அணியார் பொழில் சூள் அரங்கநகரப்பா” என்று முதலிகள் (சிஷ்யர்கள்)
சேவிப்பதைக் கேட்டு பெருமான் மனம் குளிர தன் சந்நிதியிலிருந்து
அரங்கநகரப்பனை (ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்) பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி
வானமாமலை எழுந்தருளப்பண்ணுமாரு பணித்தார்.
மேலும் பொன்னடிக்கால் ஜீயருக்கு தனிப்ரசாதமும், ஸ்ரீசடகோபமும் அளித்தார்.
மாமுனிகள் மேற்கொண்டு பொன்னடிக்கால் ஜீயரை மடத்துக்கு வரச்செய்து
விசேஷ ததியாராதனை செய்து வானமாமலைக்கு வழி யனுப்பி வைக்கிறார்.

பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலையில் தங்கிப் பல கைங்கர்யங்களை செய்து வந்தது மட்டுமின்றி
அருகிலிருக்கும் நவ திருப்பதி, திருக்குறுங்குடி கைங்கர்யங்களையும் ஏற்றார்.
மேலும் பதரீகாச்ரமத்திற்கும் யாத்திரை சென்றார்.
இந்த மார்க்கத்தில் இவருக்கு பல சிஷ்யர்கள் கிடைத்து
அவர்களுக்கு காலக்ஷேபமும், கைங்கர்யங்களையும் நல்கினார்.

பொன்னடிக்கால் ஜீயர் மேலும் ஒரு நெடிய வடதேச யாத்திரை மேற்கொண்டார்.
அப்பொழுது மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்து பரமபதம் சென்று திருநாடு அலங்கரித்தார்.
பொன்னடிக்கால் ஜீயர் யாத்திரை முடித்துக் கொண்டு திரும்புகையில் திருமலையை அடைந்தபோது
விஷயம் தெரிந்து மிகவும் கலக்கமுற்றார்.
அதனால் சில காலம் திருமலையிலேயே தங்கி இருந்தார்.
மேலும் அங்கிருந்து தான் யாத்திரையின் பொது சேகரித்த செல்வங்களோடு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
அங்கு ஜீயர் நாயனாரையும் (பூர்வாச்ரமத்தில் மாமுனிகளின் திருப்பேரனார் ) சில ஸ்ரீவைஷ்னவர்களையும்
தண்டன் சமர்ப்பித்து தன் ஆசார்யனை பிரிந்து தான் வாடும் சோகத்தை பகிர்ந்துகொண்டார்.
அப்பொழுது மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்),
திருவாழி மோதிரம் மற்றும் பாதுகைகளும் பொன்னடிக்கால் ஜீயரிடம் சமர்ப்பிக்க பட்டன.
இப்பொழுதும் வானமாமலை ஜீயர்கள் உற்சவ காலங்களில்
மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிகிறார்கள்.
அதன் பிறகு வானமாமலையில் தொடர்ந்து கைங்கர்யங்களை மேற் கொண்டார்.

அக்காலத்தில் வானமாமலையில் ஸ்ரீவரமங்கை நாச்சியாருக்கு
உற்சவ விக்ரஹம் எழுந்தருளப் பண்ணவில்லை.
ஒரு முறை தெய்வநாயகன் பொன்னடிக்கால் ஜீயரின் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி
திருமலையிலிருந்து நாச்சியாரை எழுந்தருளப்பண்ணுமாறு ஆணையிட்டார்.
எனவே பொன்னடிக்கால் ஜீயர் திருமலைக்கு யாத்திரை புறப்பட்டு அடைந்தார்.
அப்பொழுது திருமலை நாச்சியார் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி
“அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளப்பண்ணி தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வெய்யும்”
என தன் சங்கல்பத்தை தெரிவித்தாள்.
இதே போல் திருமலை ஜீயர்களின் ஸ்வப்பனத்திலும் எழுந்தருளினாள்.
இதையேற்ற ஜீயர்கள் அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம் அர்ச்சா திருமேனியை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே தாயாரை எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்.
தெய்வ நாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போலே “மாமனாராக” கொள்கிறார்.
இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகின்றது.

இதன் பிறகு பல திருநக்ஷத்ரங்கள் வாழ்ந்து பல சத்தான உபதேசங்களை எல்லோருக்கும் நல்கி ,
பொன்னடிக்கால் ஜீயர் தன் ஆசார்யரான அழகிய மணவாளமாமுனிகளை த்யானித்து
தன் சரம திருமேனியைத் துறந்து திருநாடு அலங்கரித்தார் (பரமபதம் அடைந்தார்).
அவர் நியமித்த அடுத்த ஜீயர் ஸ்வாமிகளைத் தொடர்ந்து இன்றுவரை வானமாமலையில்
ஆசார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.

நாமும் பொன்னடிக்கால் ஜீயரின் திருவடியை இதேபோல் எம்பெருமான்
மற்றும் ஆசார்ய சம்பந்தத்துக்காகப் பிரார்த்திப்போம்!!!

மாமுனிகள் முதல்முறையாக திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றபோது,
பொன்னடிக்கால் ஜீயரும் உடன் சென்றார்.
இருவரும் அடிவாரத்தில் (அலிப்ரி) தங்கியிருந்தனர்.
அன்றிரவு திருப்பதி கோயில் ஜீயர் சுவாமியான பெரிய கேள்வியப்பன் ஜீயரின் கனவில், ஒரு குடும்பஸ்தர் படுத்திருக்க,
அவரது திருவடியில் ஒரு சந்நியாசி அமர்ந்திருப்பது போன்று கண்டார்.
மறுநாள், கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, மணவாள மாமுனிகளும், பொன்னடிக்கால் ஜீயரும்
திருமலைக்கு வந்திருப்பது தெரியவந்தது.

தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும்’
என்று, தமது சீடர்களிடம் மாமுனிகள் அருள்வது வழக்கம்.
அப்பாச்சியாரண்ணா என்பவர் மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட,
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அமரச்செய்து,
அப்பாச்சியாரண்ணாவுக்கு சமாச்ரயணம் (பஞ்ச சம்ஸ்காரம்) செய்யுமாறு கட்டளை இட்டார்.
அதனை, பொன்னடிக்கால் ஜீயரும் பூர்த்தி செய்தார்.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் கைங்கர்யத்துக்காக,
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து ஜீயர் புறப்பட எண்ணினார்.
அப்போது, பொன்னடிக்கால் ஜீயர் உட்பட மாமுனி களின் சீடர்கள் தினம் 100 பாசுரங்களாக, திவ்ய பிரபந்தத்தை சேவித்தனர்.
“அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா” என்று அவர்கள் சேவிப்பதைக்கேட்டு
ஸ்ரீ ரங்கநாதபெருமான் மனம் குளிர்ந்து, தனது சந்நிதியில் இருந்த அரங்க நகரப்பனை ( ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்),
பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி, அதனை நாங்குநேரிக்கு எழுந்தருளச் செய்யுமாறு பணித்தார்.
இந்த விக்கிரகத்தையும் இப்போது நாங்குநேரி வானமாமலை மடத்தில் தரிசிக்கலாம்.

வானமாமலையில் மட்டுமின்றி, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருக்குறுங்குடி மற்றும் நவ திருப்பதிகளிலும்
பல்வேறு கைங்கர்யங்களை ஏற்றார்.
பொன்னடிக்கால் ஜீயர் வடதேச யாத்திரை சென்றிருந்தபோது, மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்தார்.
இதையறிந்து பொன்னடிக்கால் ஜீயர் மிகவும் கலக்கமுற்றார்.
மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்), திருவாழி மோதிரம்
மற்றும் பாதுகைகள் பொன்னடிக்கால் ஜீயரிடம் வழங்கப்பட்டன.
வானமாமலை மடத்து ஜீயர்கள் உற்சவ காலங்களில் மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிவது
இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

கனவில் வந்த நாச்சியார்
அக்காலத்தில் வானமாமலையில் வரமங்கை நாச்சியாருக்கு உற்சவ விக்கிரகம் இல்லை.
பொன்னடிக்கால் ஜீயர், திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்தார்.
அப்போது, திருமலை நாச்சியார் அவர் கனவில் தோன்றி,
“அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளச் செய்து, அத்தலத்து எம்பெருமானான
தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வையும்” என தெரிவித்தாள்.
இதேபோல் திருமலைக் கோயில் ஜீயர்களின் கனவிலும் கூறினாள்.
இதையேற்ற ஜீயர்கள், அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம், நாச்சியாரின் விக்கிரகத்தை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே நாச்சியாரை, எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.
தெய்வநாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போல “மாமனாராக” கொள்கிறார்.
இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகிறது.

ஏராளமான உபதேசங்களை அருளிய, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியின் திருவரசை நாங்குநேரியில் தரிசிக்கலாம்.
அவர் நியமித்தபடி வானமாமலையில் ஆச்சார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.
தற்போது, 31ஆவது பட்டம் ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், வானமாமலை மடத்தை நிர்வகிக்கிறார்.

——————-

ஸ்ரீ வானமாமலை முதலாவது ஸ்வாமி விஷயமான மங்களாசாஸநம்‌, ப்ரபத்ததி
[“* மஹார்யர்‌ ?” என்ற தொட்டயாசார்யர்‌ அருளியவை-
பண்டித ரத்னம்‌, திருக்கண்ணபுரம்‌ செள. ஸ்ரீநிவாஸாசார்யர்‌ (சிரோமணி) இயற்றிய உரையுடன்‌

ஸ்ரீவரமஹாசலயோகி மங்களாசாஸகம்‌ ”, *
*ஸ்ரீவரமஹாசல யோக ப்ரபத்தி.” என்ற இரு, ஸ்தோத்திரங்களையும்‌ அருளிச்‌ செய்துள்ளார்
இவை இரண்டும்‌ அக்காலம்‌ முதலே வானமாமலை மடத்தில்‌ நித்ய ததியாரதன காலங்களில்‌ முதலில்‌ அநுஸந்திக்கப்பட்டுப்‌
பிறகு .ஸ்ரீ மணவாளமாமுனிகளின்‌ தினசர்யை முதலியன அநுஸந்திக்கப்படுகின்றன.
மேலும்‌ .ஸ்ரீ அரங்கநகரப்பன்‌ டோலோத்ஸவ காலங்களி.லும்‌ இவை யிரண்டும்‌ அநுஸக்திக்கப்படுகின்‌றன.
எனவே .ஸ்ரீவானமாமலை மடத்து ஸம்ப்ரதாயத்தை அநுஸரித்து வருமவர்களுக்கு, நித்யம்‌ அநுஸந்தேயங்கள்‌ இவை.
இவ,ற்றுக்கு ஸம்ஸ்‌கிருத பாஷையிலோ இதர -பரஷைகளிலோ இதுவரையில்‌ வ்யாக்யானம்‌ ஒருவரும்‌ எழுதியதாய்த்‌ தெரியவீல்லை.
ஆகையால்‌ மடத்து ஸம்ப்ரதாயமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுள்‌ ஸம்ஸ்க்ருத. பாஷையில்‌ அதிகம்‌ பரிசயமில்லாதவர்களுக்‌கும்‌
ஸ்த்ரீ பரலர்களுக்கும்‌ ௮.நுஸந்தானம்‌ செய்யும் போதே எளிதில்‌ அதன்‌ அர்த்தத்தை அறிந்து அ.நுஸந்திப்பதற்கு
அநுகுணமாக வர்த்தமான ஸ்வாமியின்‌ திருவுள்ளத்தைப்‌ பின் சென்று அடியேன்‌ இரண்டு கீரந்தங்களுக்கும்‌
எளிய நடையில்‌ தமிழில்‌ பதவுரையும்‌,
சில ஸ்லோகங்களில்‌ தாத்‌பர்யம்‌ துரவஹமாயிருப்பதால்‌ அதை நன்கு விளக்கும்‌ கருத்‌துரையுமாகச்‌ சேர்த்து உரையை எழுதினேன்‌.
தற்‌பொழுது ஸ்ரீமத்‌ பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீமதுபய வேதாந்தாசார்யரான வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீவானமாமலை ராமாநுஜ ஸ்வாமியின்‌ நியமனத்தாலும்‌ ஆதரவாலும்‌ இந்த உரை மடத்து வெளியீடுகளில்‌ ஒன்றாய்‌ வெளியிடப்பட்டிருக்கறது.
இந்த தொட்டய்யங்கார்‌ ஸ்வாமி தமது ஸ்வாமி விஷயமாய்‌ தினசர்யை என்ற கரந்தமும்‌ அருளிச்‌ செய்திருப்பதாய்த்‌ தெரிகிறது.

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌, தீபக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்ரப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முதிம்‌ |

ரம்யஜாமாத்ருயோகீந்த்ர – பாதரேகாமயம்‌ ஸதா |
ததாயத்தாத்மஸத்தாதிம்‌ ராமாநுஜமுநிம்‌ பஜே |

ஸ்ரீ வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை பற்றிய மங்களாசாஸனம் –
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான ஸ்ரீ தொட்டையங்கார் அப்பை என்னும் மஹாசார்யர் அருளிச்செய்தது

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக்கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையவராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

அவதாரிகை
ஸ்ரீமத்‌ வாதூலகுல திலகராய்‌ ஸ்ரீநிவாஸார்யர்‌ என்ற
அபர: நாமத்தையுடைய மஹார்யர்‌, கோயிலில்‌
ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க விருப்பமுற்று எழுந்தருள, ஸ்ரீ மாமுநிகளும்‌ இவரைத்‌ தமது ப்ரதம சிஷ்பரான
ஸ்ரீ வானமாமலை ராமாநுஐ ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி. பணித்தார்‌.
அவரும்‌ அவ்வாறே ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த மந்த்ர மந்த்ரார்த்த ரஹஸ்யாதி கிரந்தங்களையும்‌ ஸ்ரீபாஷ்ய பகவத்‌: விஷயாதிகளையும்‌ அவரிடம்‌ அதிகரித்துச்‌ சிறந்த. ஞானமுடையராய்‌ ஸ்வாசார்ய சுச்ரூஷா பரராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
பிறகு மாமுனிகள்‌ தமக்குண்டான அதிசய மெல்லாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உண்டாகவேண்டு மென்று இருக்குமவராகையாலே,
தம்மைப்‌ போலவே அவருக்கும்‌, அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து முதிர்ந்த ஞானமுடையவர்களில்‌ சிறந்த சிலரை ௮ஷ்ட திக்‌ கஜங்களாகக்‌ கல்பித்தருளினார்‌.
அவ்வெண்மர்‌ திருநாமங்களும்‌ “:ஸ்ரீமத் மஹார்ய ரண புங்கவ” என்ற ஸ்லோகத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது.

மாமுனிகள்‌ ஒரு காளல் தமது திக்கஜங்களோடு’ தம்மை ஸேவித்து நிற்கும்‌ வானமாமலை ஜீயரையும்‌
அவருடைய ஸம்ருத்தியையும்‌ கடாக்ஷித்து அதிஸந்துஷ்டராய்‌ எழுந்தருளியிருந்து,
மஹார்யரைக்‌ குறித்து, “*உமது ஆசார்‌யன்‌ விஷயமாய்‌ ஒரு ஸ்லோகம்‌ சொல்லிக்‌ காணும்‌” என்ன, அவரும்‌ அவசராய்‌,
“* ரம்ய ஜாமத்ரு…முநிம் பஜே ” என்று அருளிச் செய்ய அது தமது அபிமதத்திற்கு இசைந்து இருந்தபடி யாலே ஸந்தோஷிக்க,
மற்ற சிஷ்யர்களும்‌ இந்த ஸ்லோகத்தைக்‌ கேட்டு மாமுனிகளைப்‌ பார்த்து,
“*அடி.யோங்‌களுக்கு இற்றைக்கு ஓர்‌ மஹா நிதி ப்ராப்தமாயிற்று”’ என்று: கொண்டாட,
மாமுனிகளும்‌ தமது ஸ்ரீசைலேச தயாபாத்‌ரத்‌ தனியனோடு இந்த ** ரம்யஜாமாத்ரு யோ$ந்த்ர”” என்‌னும்‌ தனியனையும்‌
நியதமாகச்‌ சேர்த்து அநுஸந்திக்கும்படி.நியமித்துத்‌ தமது அம்சாவதாரமே வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ என்று
அவர்‌ வைபவத்தை ப்ரகாசப்படுத்தினார்‌.

பிறகு அந்த மஹார்யர்‌, மணவாளமுனிகளால்‌ அநேக ஸமயங்‌களில்‌ ஸூஸிப்பிக்கப்பட்ட தமது ஆசார்யன்‌ வைபவத்தையும்‌,
உபய வேதாந்த மந்த்ர ரஹஸ்யாதி விஷயமான ஸ்ரீ ஸுக்திகளையும்
ஞானத்தையும்‌, ஸெளலப்யம்‌, ஸெளசில்யம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலிய அவரது குணகணங்களையும்‌ கண்டு அதிசயித்து,
அக்குணங்களில்‌ ஆழ்ந்து பக்திபரவசராய்‌, மெய்மறந்து பல்லாண்டு பாடியல்லது நிற்கவொண்ணாத நிலையை எய்தி,
அவரது மங்களாசாஸநஈத்திலே ப்ரவ்‌ருத்தராகிறார்‌ இந்த கிரந்தத்திலே..
இந்த ராமாநுஜ முனி விஷயமான ப்ரபத்தி கிரந்தத்தை ‘ அருளிச்செய்தவரும்‌ இவரேயாவர்‌.
இவருக்குத்‌ தொட்டை அய்யங்கார்‌ அப்பை என்ற திருநாமமும்‌ உண்டு.

ரம்யோ பயந்த்ரு முநி வர்ய தயாநிவாஸம்‌
கருணாம்ருதாப்‌திம்‌ ஆத்மவக்தம்‌ ஆஜக்மஸித்த
பரிபூத சரித்ர போதம்‌ மகோஜ்ஞவரதாஹ்வயம்‌
யதிபதம்‌ ராமாநுஜம்‌ வந்தே -1-

பதவுரை:–
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய-அழகிய மணவாள மாமுனிகளது,
தயாநிவாஸம்‌-கருணைக்கு இருப்பிடமாயும்‌,
கருணாம்ருதாப்‌திம்‌-கருணையென்னும்‌ அம்ருதத்திற்கு உறை விடமான கடல்போன்றவரும்‌,
ஆத்மவக்தம்‌-தைர்யத்தை.யுடையவரும்‌, (ஆஜக்மஸித்த…போதம்‌) ஆஜக்மஸித்த -பிறப்பு முதலேயுண்டாகிய,
பரிபூத – மிகவும்‌ புனிதமான,
சரித்ர-ஆசரணையையும்‌,
போதம்‌-ஞானத்தையும்‌ உடையவரும்‌, மகோஜ்ஞவரதாஹ்வயம்‌-தமது பிதாவினால்‌ அழகிய வரதர்‌ என்ற திருபாமம்‌ சாற்றப் பெற்றவரும்‌,
யதிபதம்‌-யதிகட்கு இறைவருமான,
ராமாநுஜம்‌ – வாராசல ராமாநுஜ முனிவரரை,
வந்தே – வணங்குகின்றேன்‌.

அழகிய மணவாள மாமுனிகளின் தயையால் பெறப்பட்ட நற்குணக் கூட்டங்களுக்கு கடல்போல் இருப்பவரும், முனிவர்களுக்குத் தலைவரும், எங்கள் குலத்திற்கு நாதருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமிக்கு எப்பொழுதும் வணக்கம் உரித்தாகுக.

இந்த வாநாசல ராமாநுஜ முநிவர்‌, ஸ்ரீமணவாள் மாமுனிகள்‌ கிரஹஸ்த தாமத்தை அநுஷ்டித்துத்‌
திருக்குருகூரில்‌ எழுந்தருளியிருந்த காலத்திலேயே அவரது திருவடி.களில்‌ முதலில்‌ ஆஸ்ரயித்த முதலாவது சிஷ்யராவார்‌.
ஆகையால்‌ அவரது தயைக்கு இவரே உறைவிடமாயினர்‌.

இவர்‌ ஆத்மவானும்‌ ஆவர்‌. அதாவது ஓரிடத்திலும்‌ மழுங்‌காத தைர்யமென்னும்‌ குணத்தை உடையவர்‌.
இத்தால்‌ தம்மை ஆஸ்ரயித்தவர்களை உய்விக்க இவர்‌ யத்னம்‌ செய்‌தால்‌ அது விஷயத்தில்‌ தளர்வை எய்தார்‌ ‘எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌.

ஸ்ரீ ராமாயணத்தில்‌ ‘* ஆத்மவாந் கோ ஜிதக்ரோத: ” என்னுமிடத்தில்‌ இப் பதத்திற்ரு தைர்யவான்‌
என்ற அர்த்தமே கோவிந்தராஜரால்‌ கூறப்பட்டுள்ளது காண்க.

அல்லது ஆத்ம சப்தம்‌ ஸ்வபாவத்தைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அபிமுகனான சேதநனை ரக்ஷிக்கும்‌
ஆசார்ய ஸ்வபாவத்தைக்‌ கூறி, அத்தகைய ரக்ஷண ஸ்வபாவம்‌ வாய்ந்தவர்‌ என்றுமாம்‌.

அல்லது ஆத்ம சப்தம்‌ மனதைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அதிஈமாய்‌ தம வசத்திலாய மனத்தையுடையவர்‌ என்றுமாம்‌.
இத்தால்‌ இவரது வைராக்யமுடைமை கூறப்பட்டதாகும்‌.

இவர்‌ கருணை யாகிய அம்ருதம்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌.
இவரைக்‌ கடலாகக்‌ கூறியதால்‌ கடலில்‌ தண்ணீரை ஒருவராலும்‌ வற்றச் செய்ய முடியாதாப்‌ போலவே
இவர்‌ கருணையையும்‌ வற்றச்‌ செய்ய இயலாது என்பது ஸூஸிதமாம்‌.

கருணையை அம்ருதமாகக் கூறியதால்‌, அம்ருதம்‌ தன்னை அருந்தியவருக்கு அமரத்‌ தன்மை யளிப்பது போலவே,
இவரது கருணையும்‌ தமக்கு விஷயமானவர்களுக்கு அமரத்வத்தை(நித்பத்வத்தை) அளிக்குமென்பது தேறுகிறது.
நிற்க இப்‌ பொழுது இவர்‌ நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸத்தை எய்தி ராமாநுஜ முனி என்று திருநாமம்‌ உடையராயினும்‌,
தமது பால்யத்தில்‌ தமது பிதாவால்‌ மிகுந்த அழகு வாய்ந்துஇருந்தமை காரணமாக, இவர்‌ அழகிய வரதரென்று அழைக்‌கப்பட்டவரா யிருப்பர்‌.
பிறப்புடனே கூட உண்டாகிய மிகப்‌ பரிசுத்தமான அநுஷ்டானங்களையும்‌ ஞானத்தையும்‌ உடையவர்‌ இவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த யதித்‌ தலைவரான ராமாநுஜ முனியை வணங்குகின்றேன்‌

————

அவதாரிகை.–
முதல்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவர்‌ மணவாளமாமூனிகளின்‌ தயைக்குப்‌ பாத்ரமானவர்‌என்றார்‌.
இதில்‌ இவருக்கு உண்டாகிய வாத்ஸல்ய ஸெளலப்ய ஸெளஸீல்யாதி குணங்களுக்கு ஊற்றுவாய்‌ மாமுனிகள்‌ எனக்‌ கூறி,
இவரே எனது குலத்திற்கு நாதன்‌” எனவும்‌ கூறி வணங்குகின்றார்‌

ரம்யோ பயந்த்ரு, முநிவர்ய தயாநுபாவ
ஸம்ஸித்த-சன்ய ஸத்குணகண, ஓக
மஹார்ணவாய , யமிரர்ம்‌ வராய மாமக குலஸ்ய நாதாய
ராமாநுஜாய முநயே நம: அஸ்து -2-

பதவுரை:–
ரம்யோபயந்த்ரு…மஹார்ணவாய) ரம்யோ பயந்த்ரு- அழகிய மணவாளனென்னும்‌,
முநிவர்ய – யதித்‌ தலைவனது,
தயாநுபாவ -.கருணையின்‌ ப்ரபாவத்தினால்‌,
ஸம்ஸித்த-சன்ய்‌ ஸித்‌திக்கப்பெற்ற,
ஸத்குணகண-சிறந்த குணங்களின்‌ திரளாகிற,
ஓக-ப்ரவாஹத்திற்கு,
மஹார்ணவாய – புகலிடமாகிய ஸமுத்ரம்‌ போன்றவரும்‌, யமிரர்ம்‌-மனதை அடக்கியாளும்‌ யோகிகளுள்‌
வராய – தலைசிறந்தவரும்‌,
மாமக குலஸ்ய-எனது குலத்திற்கு,
நாதாய-யஜமானரும்‌,
ராமாநுஜாய – இராமாநுசன்‌ எனப்‌ பெயர்பூண்டவருமான; முநயே – முநிவரின்‌ பொருட்டு,
நம: – எனது நமஸ்காரம்‌,
அஸ்து – ஆயிடுக.

இந்த வாநாத்ரி முநிவர்‌ பிறப்பே தொடங்கி உண்டாகிய ஸதாசாரம்‌, ஞானம்‌ இவைகளையுடையராயும்‌
மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்த பின்னர்‌, அவரது கருணையின்‌ மஹிமையால்‌ உண்டாகிய வாத்ஸல்ய
ஸெளசில்ய ளெளலப்யாதி குணத்‌ திரள்‌ ப்ரவாஹமாகச்‌ சென்று சேரும்‌ பெருங்கடலாயினர்‌.
இவரை குணக்‌ கட.லாகக்‌ கூறியதால்‌, குணங்கள்‌ வற்றாத ஆகரம்‌ இவர்‌ என்றதாயிற்று
இவர்‌ இந்த்ரியங்களை அடக்கி .மனதைத்‌ தம்‌ நிலையிலே நிறுத்தும்‌ யோகிகளுள்‌ சிறந்த தலைவர்‌.
எனது குலத்தை நிர்வஹித்து ஈடத்திப்போரும்‌ நாதனுமாவார்‌-
இப்‌ பெருமை வாய்ந்த இவ்வாநாசல முனிவருக்கு நித்யமாக எனது நமஸ்காரம்‌ உரித்தாகுக

———–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவருக்கு உண்டாகிய ஸத்குணங்கள்‌ மணவாள மாமுனிகளின்‌ தயா ப்ரபாவத்தாகே என்றார்‌.
இதில்‌ இவருக்கு தாரக போஷகாதிகளும்‌ மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளே எனக்‌ கூறி,
இவர்‌;தமது குலத்திற்கு நாதரானமையை விளக்‌கிக்‌ கூறுகிறார்‌.

ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர பாதகம் ஜாத
ப்ருங்கம்‌ கருணாந்தரங்கம்‌ மதீய ஹ்ருத்‌
சந்த்ர காந்கோபல பூர்ண சந்தரம்‌
ராமாநுஜம்‌ முநிம்‌ கெளமி -3-

பதவுரை:–
ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
பாத – திருவடிகளாகிற,
கம்ஜாத – தாமரை மலர்களில்‌ படியும்‌,
ப்ருங்கம்‌ – வண்டு போன்றவரும்‌,
கருணாந்தரங்கம்‌- கருணையுடன்‌ கூடிய மனதை உடையவரும்‌,
மதீய- என்னுடையதான,
ஹ்ருத்‌ – மனதாகிற,
சந்த்ர காந்கோபல – சந்த்ர காந்தக்‌ கல்லுக்கு,
பூர்ண சந்தரம்‌ – கலைகள்‌ நிறைந்த சந்த்ரன்‌ போன்றவருமான,
ராமாநுஜம்‌ முநிம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ முநிவரை,
கெளமி – ஸ்துதிக்‌கின்றேன்‌.

அழகிய மணவாள மாமுனிகளுடைய திருவடித்தாமரைகளில் வண்டுபோல் இருப்பவரும், கருணை நிறைந்த மனதுடையவரும், அடியேனுடைய மனதாகிற சந்த்ரகாந்தக்கல்லுக்கு முழுமதி போன்றவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.

இவ்விராமா நுஜ முநிவர்‌ மணவாள மாமுனிகளினுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ படிந்த
வண்டு போன்றவர்‌ என்பதால்‌ அத்திருவடி. மலர்களையே . தமக்கு தாரக போஷகங்களாகக்‌ கொண்டவர்‌ எனக்‌ கூறியவாறு
வண்டுகளுக்கு மலரே தாரக போஷகங்களல்‌ஃவா?
இவர்‌ கருணையோடு கூடிய மனது வாய்ந்தவர்‌,
மேலும்‌ எனது மனதாகிற சந்த்ரகாந்தக்‌ கல்‌.லுக்கு கலாபூர்ணனான சந்திரன்‌ போன்றவர்‌.
இவரைச்‌ சந்திரனாகவும்‌ மனதைக்‌ கல்லாகவும்‌ கூறியதால்‌, கல்லையும்‌ உருகச் செய்யும்‌ சக்தி வாய்ந்தவர்‌
இம்‌ முனிவர்‌ என்றும்‌, அக்கல்‌ சந்திரனுக்கன்றி மற்றொன்றைக்‌ கண்டு உருகமாட்டாதது போலவே,
எனது கல் கெஞ்சம்‌ அவருக்கன்றி மற்றையோருக்குக்‌ கரையாது என்றும்‌,
கலாபூர்ண னான சந்த்ரனென்று ரூபகமாகக்‌ கூறியதால்‌ இவரும்‌ ௮ச் சந்த்ரனைப் போலவே கலா பூர்ணர்‌ (வித்யைகள்‌ நிரம்பியவர்‌ )
என்றும்‌ கூறப்பட்டதாகும்‌. இதனால்‌ இவர்‌ கல்வியின்‌ பெருமை காரணமாகத்‌ தம்‌ நெஞ்சம்‌ உருகியதாகக்‌ கூறப்‌ பட்டதாகும்‌.
கல்வி காரணமாகத்‌ தமது குலத்துக்கு நாதர்‌ என்று கீழில்‌ ஸ்லோகத்திற்கு இது விவரணமுமாகும்‌.
இவ்‌ வாறு சிறப்பு வாய்ந்த இராமாநுச முநியைத்‌ துதிக்‌ கின்றேன்‌

அவதாரிகை:–
இந்த ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கல்யாண குணங்களில்‌ சிலவற்றைக்‌ கூறி, இவர்‌
அழகிய மணவாள மாமுனிகளுக்கு அந்தரங்கராய்‌
**பஹி: சர: ப்ராண:”’ என்னுமா போலே அம்முனிவரின்‌ ப்ராண ஸ்தாந ருமாவார்‌ என்கிறார்‌.

வாத்ஸல்ய ஸெளசீல்ய ஞான ஆதி குண ஸாகரம்‌
ரம்ய ஜாமாத்ரு முநி ஜீவிதம்‌ ரமாநுஜ முநிம்‌ வந்தே -4-

பதவுரை :–
வாத்ஸல்ய -வாத்ஸல்ய குணமென்ன,
ஸெளசீல்ய – ஸெளசீல்ய குணமென்ன,
ஞான- ஞானமென்ன,
ஆதி – இவை முதலாய,
குண – குணங்கட்கு,
ஸாகரம்‌ – கடல்‌ போன்‌ றவரும்‌
ரம்ய ஜாமாத்ரு முநி – அழகிய மணவாள மாமுனிகட்கு,
ஜீவிதம்‌ – ப்ராணன்‌ போன்‌றவருமான,
ரமாநுஜமுகிம்‌ – ராமாநுஜ முனியை,
வந்தே – வணங்குகின்றேன்‌:

வாத்சல்யம், சீலம், ஞானம் முதலான நற்குணங்களுக்கு கடல் போன்று இருப்பவரும்,
அழகிய மாமுனிகளை தனக்கு ப்ராணனாக கொண்டிருப்பவருமான ராமாநுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்

வாத்ஸல்யமென்பது – தன்னை ஆஸ்ரயித்தவர்‌கள்‌ இழைத்த குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌
மிகப்‌ பெரியோரின்‌ ௮ற்புத குணமாம்‌. இக்‌ குணம்‌ எமது குற்றங்‌களைக்‌ கண்டும்‌ அஞ்சாது அப்பெரியோரை நாம்‌ அணுகு வதற்கு உறுப்பாகும்‌.
செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்ளுதல்‌ பெரியோரின்‌ இயல்பு.
ஸெளசீல்யமென்பது.. தான்‌ எவ்வளவு பெருமை யுடையவனாயினும்‌ தன்‌ மேன்மையைக்‌ கொஞ்சமும்‌
தன்‌ மனத்தால்‌ நினையாது மிகத்‌ தாழ்ந்தோருடனும்‌ புரையறக்‌ கலக்கும்‌ குண விசேஷமாகும்‌.
இஃது நாம்‌ கிட்ட விரும்பும்‌ பெரியோரின்‌ பெருமையைக்‌
கண்டு நாம்‌ அகல வேண்டாமைக்மு உரித்தாய குணம்‌,
ஞானமென்பது தன்னை ஆஸ்ரயித்தவர்களின்‌ அபே
க்ஷையை அறிய ஹேதுவாய குணம்‌.
ஆதி சப்தத்தால்‌ ஸ்வாமித்வம்‌, ப்ராப்தி-பூர்த்தி முதலிய குணங்களும்‌ கூறப்‌ பட்டனவாகும்‌.
இக்குணங்கட்கு இவரைக்‌ கடலெனக்‌ கூறியதால்‌ இவைகள்‌ வற்றாது நிரம்பி இருக்குமிடமென்று: கூறியதாகும்‌.
நிற்க இம்முனிவரை மாமுனிகளுக்கு ப்ராணன்‌ எனக்‌ கூறியதால்‌ இவரை க்ஷண காலமும்‌ விட்டுப் :
பிரிந்து
மாமுனிகள்‌ தரிக்கவல்லரல்லர்‌ என்றதும்‌,
(ஸ்ரீராம பிரானுக்கு இளைய பெருமாள்‌ போல்‌ ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌
எல்லா விதக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்யும்‌ அந்தரங்கர்‌ என்ற அம்சமும்‌ தோற்றுகின்றன.
இத்தகைய பெருமை வாய்ந்தவரை வணங்குகின்றேன்‌.

———————–

அந்தராளாஸ்ரம த்வயம்‌ யத்‌ அகாதர ஸம்வரீடம்‌ –
வாந மஹாசைல ராமாநுஜ மஹாமுமிம்‌ வந்தே-5-

அந்தராளாஸ்ரம த்வயம்‌ – ப்ரும்ஹசர்யத்‌திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ மத்தியிலுள்ள கார்ஹஸ்த்யம்‌,
வாநப்ரஸதம்‌ என்னும்‌ ஆஸ்ரமங்களிரண்டும்‌,
யத்‌-எந்த முனிவரது,
அகாதர – ஆதரவின்மையாலே,
ஸம்வரீடம்‌ – மிமுந்த லஜ்ஜையை உடையதாக,
(ஆயிற்றோ)
வாந மஹாசைல- (அந்த) வானமாமாலை,
ராமாநுஜ மஹாமுமிம்‌ – ராமானுஜர் என்னும்‌ மாமுனியை, வந்தே-நமஸ்கரிக்கின்றேன்‌.

எவருடைய அனாதரத்தால் பிரம்மச்சர்ய சந்யாஸாச்ராமங்களுக்கு நடுவிலுருக்கும்
மற்ற இரண்டு ஆச்ரமங்களும் வெட்கத்தை அடைந்தனவோ,
அந்த வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
(வானமாமலை ஜீயர் ஸ்வாமி பிரம்மச்சர்ய ஆச்ரமத்திலிருந்து நேரே சந்யாஸாச்ரமத்திற்கு ச்வீகாரம் செய்தவர்.
எனவே நடுவில் இருக்கும் ஆஸ்ரமங்கள் வெட்கம் அடைந்தனவாம். )

இங்கு “*வாந மஹாசைல ‘* எனக்‌ கூறியது எம்பெருமானை. ** வானமாமலையே அடியேன்‌ தொழ வந்‌தருளே ‘*
என்று நம்மாழ்வார்‌ அவனையே கூறியுள்ளார்‌,
அந்த வானமாமலை என்ற தழிழ்ப்‌ பதமே ஸம்ஸ்க்ருத பதமாக ** வாந மஹாசைல ”? என்று மஹார்யரால்‌ கூறப்பட்ட தாகும்‌.
எனவே அவ்வெம்பெருமானுக்கு உரிமை பூண்டவராய்‌ அவருடைய கல்யாண குணங்களையே அநவரதம்‌
அநு ஸந்தாநம்‌ செய்யுமவராகையாலே, **மஹா முநிம்‌’” என்றார்‌-
இந்த ஸ்லோகத்தின்‌ பீற்‌ பகுதியால்‌ இவரது சிறந்த வைராக்‌யம்‌ என்னும்‌ குணம்‌, மிகுந்த சமத்காரத்துடன்‌ கூறப்படுகிறது
அதாவது, இந்த ராமாநுஜ முநிவர்‌ தமது பிதாவால்‌ உபநயன ஸம்ஸ்காரம்‌ பெற்று ப்ரும்ஹ சர்‌யத்துடன்‌
வேத வேதாங்கங்களை நன்கு கற்றறிந்து வைராக்‌.யத்தை எய்தி, அதன்‌ மேலீட்டால்‌ ப்ரும்‌ஹசர்யத்திற்கும்‌
ஸந்யாஸத்திற்கும்‌ நடுவிலுள்‌௪ கார்‌ஹஸ்‌யம்‌, வான ப்ரஸ்‌தம்‌ என்ற இரண்டு ஆஸ்ரமங்களையும்‌ கண்ணெடுத்தும்‌ பாராது
இவர்‌ அநாதரவு செய்ததால்‌ அவைகள்‌ மிகுந்த வெட்கத்தை எய்தின என்‌கிறார்‌, மஹார்யர்‌ ரஸோக்‌ தியாலே,
வைகுண்ட என்றும்‌ சப்தம்‌ எம்பெருமானையும்‌, அவருக்கு வாஸ ஸ்தானமான பரமபதத்தையும்‌ கூறுவதுபோல
இங்‌கும்‌ வாநாசல என்ற பதம்‌ எம்பெருமானையும்‌ அவருடைய திருப்பதியான ஸ்ரீ வரமங்கல நகரையும்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌.
தற்காலத்தில்‌ வ்யவஹாராமம்‌ இவ்வாறே உண்டாயிருக்கலாம்‌.
“தேசிக சிகாமணிகளான எம்பெருமானார்‌ மணவாளமாமுனிகள்‌ போன்‌றவரும்‌ சிறிது காலம்‌
தர்மங்களை அதுஷ்டி.த்து நம்மை ஆதரித்திருக்க, அந்தோ நம்மை இவர்‌ கண்ணெடுத்து ஏற இறங்கவும்‌
பார்க்கவில்லையே” என்று இவரால்‌ ஏற்கப்படாத கீருஹஸ்‌ தாஸ்ரமம்‌ வெட்கமுற்றதாம்‌.
இது வாநப்ரஸ்தத்‌ திற்கும்‌ உபலஷணம்‌.
இத்தால்‌ அவ்விருவரிலும்‌ காட்டிலும்‌ வைராக்ய விஷயத்தில்‌ இவர்‌ சிறப்புற்றவர்‌ எனக்‌ கூறப்‌ பட்டதாகும்‌.
மணவாள மாமுனி கருஹஸ்த தர்மங்களை அநுஷ்டித்து வரும்‌ காலத்திலேயே அவரது ஸம்பந்தம்‌ பெற்ற இவர்‌,
தமது வைராக்யத்தின்‌ மேலீட்டால்‌ . ஸம் ஸாஸ்ரமத்தை எய்தினார்‌ என்பதை யதிந்தர ப்ரவண ப்ரபாவம்‌, ககநகிரிமுநி சரிதம்‌ முதலியவற்றில்‌ காணலாம்‌.
இச்‌ சிறந்த வைராக்யம்‌ பூண்ட இராமாநுஐ முநியை வணங்குகிறேன் என்கிறார்-

——————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ அழகிய மணவாள மா முனிகளின்‌ திருவடிகளில்‌ முதலிலேயே இவர்‌ ஆஸ்ரயித்து,
அவருடைய கருணை பாயும்‌ முதல்‌ இடமாயுமானவர்‌ இவர்‌ என்று கூறுகிறார்‌.
அதாவது இவரே அவரது முதல்‌ சிஷ்யர்‌. இவரது கால்‌ நலத்தாலே மற்றெல்லா சிஷ்யர்‌களும்‌
தம்மை ஆஸ்ரயித்துத்‌ தாம்‌ பெருமை எய்தியதாக
மாமுனிகளும்‌ நினைத்தன்றோ இவருக்கு “*பொன்னடிக்கால்‌ ஜீயர்‌ ‘” என்று திருநாமம்‌ சாற்றியதும்‌.
எனவே அவர்‌ கருணைக்கு முதல்‌ இலக்கு இவர்‌. மேலும்‌ காமம்‌, குரோதம்‌ என்ற தீக்குணங்கள்‌ தம்மிடம்‌ இல்லாததோடு
தம்மை ஆஸ்ரயித்த மற்றையாரின்‌ தீய குணங்களையும்‌ அகற்றுமவர்‌ இவர்‌, என்ற பெருமையையும்‌ கூறுகிறார்‌.

ரம்ய ஜாமாத்ரு யோந்த்ர ப்ரஸாத ப்ரதமாஸ்பதம்‌
காமாதி துரிதாபஹம்‌ ராமாநுஜ முநிம்‌ வந்தே–6-

பதவுரை :-

ரம்ய ஜாமாத்ரு யோந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌, :
ப்ரஸாத -அருளுக்கு,
ப்ரதமாஸ்பதம்‌ – முதலாவது ஸ்தானமாகியவரும்‌,
காமாதி துரிதாபஹம்‌ – காமம்‌ முதலான பாபங்‌களை அகற்றுமவருமான,
ராமாநுஜ முநிம்‌ – வாநாத்ரி ராமாநுஜ முநிவரை,
வந்தே-வணங்குகின்றேன்‌.

அழகிய மணவாளமாமுனிகளின் அருளுக்கு முதல் இலக்கானவரும்,
காமம் முதலிய தோஷங்களைக் களைபவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.

மற்றைய சிஷ்யர்கள்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ பெருமையை உணர்ந்து அவரை ஆஸ்ரயிப்பதற்கு
வெகுகாலம்‌ முன்னமேயே அவர்‌ கிருஹஸ்தாஸ்ரமத்தை யுடையராய்‌ திரு நகரியில்‌ எழுந்தருளியிருன்த போதே,
இந்த ராமாநுஜ முனிவர்‌ அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து அவரது கருணைக்கு முதல்‌ பாத்திரமாய்‌
அவர்‌ பாதரேகா ஸமராயிருந்து, பின்பு (மாமுனிகளை) ஆஸ்ரயித்த அண்ணன்‌, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌
முதலியோருக்கு ஆஸ்ரயணத்தில்‌ இவர்‌ புருஷகார மாயிருந்தமையாலும்‌ அவருடைய கருணைக்கு முதல்‌ விஷயம்‌ இவரே.
மேலும்‌ இவர்‌ வைராக்யசாலி யாகையால்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று சொல்லப்படும்‌
உடன்‌ பிறந்த சத்ருக்‌களாகிய ஆறு தீய குணங்களையும்‌ தாம்‌ அகற்றியதோடு தம்மைச்‌ சார்ந்தோரையும்‌
அத் தீய குணங்கள்‌ சாரா வண்ணம்‌ நீக்கும்‌ சக்தி வாய்க்தவர்‌.
**காமாத்‌ தீரோதோபிஜாயதே க்ரோதாத்‌ பவதி ஸம்மோஹ :’” இத்யாதிகளாலே காமாதிகளின்‌ கொடுமை ஸ்ரீ கீதையில்‌
கண்ணனால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது. இவைகளைப்‌ பாப வாசகமான துரித சப்தத்தாலே கூறியது,
அப் பாபத்துக்கு இத்‌ தீய குணங்கள்‌ காரணமாகையாலே. இப்படிப்பட்ட பெருமை வாய்‌ந்த ராமானுஜ முகியை வணங்குகின்றேன்‌.

————-

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவர்‌ ராக த்வேஷாதிகள்‌ அற்றவரெனக்‌ கூறினார்‌.
இந்த ஸ்லோகத்தில்‌ ராக த்வேஷங்களே, நமக்கு நிலமன்று; நாம்‌ இங்‌கிருக்க இயலாது?” என்று
இவரை விட்டுத்‌ தாங்களே கை வாங்கிள்‌’ என்றும்‌, இவர்‌ அழகிய குணங்களுக்கு உறைவிடமென்றும்‌,
உத்தம புருஷ லக்ஷணம்‌ வாய்ந்தவரென்றும்‌ அருளிச் செய்கிறார் –

ரமணிய குணாகரம்‌ ராக த்வேஷ விநிர் முக்தம்‌
ராஜீவ லோசனம்‌ ராமாநுஜ முநிம்‌ வந்தே–7-

பதவுரை:–

ரமணிய குணாகரம்‌ – அழகிய குணங்களுக்கு உற்பத்தி ஸ்தாநமாயும்‌,
ராக த்வேஷ விநிர் முக்தம்‌ – ராக த்வேஷங்களால்‌ விடப் பெற்றவரும்‌,
ராஜீவ லோசனம்‌ – தாமரைப்‌ பூவின்‌ இதழ் போல்‌ அழகிய நீண்ட கண்களை யுடையவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ யோகியை,
வந்தே – வணங்குகிறேன்‌.

நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், விருப்பு வெறுப்பு ஆகியவைகளிலிருந்து விடுபட்டவரும்,
தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.

இம்‌ முனிவர்‌ அனைத்து நற்குணங்கள்‌ உற்‌பவிக்கும்‌ கனியாவார்‌. -ராக த்வேஷங்களால்‌ விடப்பெற்றவர்‌.
அதாவது ௮வை இவரிடம்‌ முன்பிருந்து இவருடைய முயற்சியால்‌ அகற்றப்பட்டவையல்ல;
அவைகளே இவரைக்‌ கண்டு பயந்து ஓடுங்க, **இவர்‌ நமக்கு நிலமன்று” என்று இவரை விட்டு நீங்க.
இத்தால்‌ இவர்‌ ராக த்வேஷங்களின்‌ வாஸனையும்‌ அற்றவர்‌ எனக்‌ கூறப்பட்ட.தாகும்‌.
தாமரை இதழ் போன்ற அழகிய . திருக் கண்களை யுடையவர்‌ எனக்‌ கூறியதால்‌ இவரது மஹாபுருஷ லக்ஷண மும்‌,
அழகிய வரதர்‌ என்ற திரு நாமத்துக்குக்‌ காரணமான இவரது அழகும்‌ கூறப்பட்டனவாகும்‌.
இத்தகைய ராமாநுஜ முநியை: வணங்குகின்றேன்‌.
——————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது தோஷ.மின்மையும்‌ கல்யாணகுணங்களும்‌ ஸெளந்தர்யமுமாகி’யவை கூறப்பட்டன.
இதில்‌ இவரது வைராக்யத்தின்‌ பெருமை விஸ்தரிக்கப்படுகிறது.

ய வைராக்ய ஸம்பத்‌ பவ்காத்மஜே புரா உத்பத்திம்‌ அலபத
தத: ய சாந்தே – சாந்தரவே ஸம்ருத்தாம்‌ ருத்திம்‌ மிரந்தரம்‌ ௮காத்‌
ஸா இயம்‌ யம்‌ ஸமேத்ய புவநே நைகதா வித்யோததே ,
குரு வரம்‌ தம்‌ ராமாநுஐயோகீம்‌ வயம்‌ சச்வத்‌ பஸ்பேம—-8-

பதவுரை:–
ய – எந்த,
வைராக்ய ஸம்பத்‌ – வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌, பவ்காத்மஜே – வாயுவின்‌ புத்திரனான அநுமானிடம்‌,
புரா – முற்காலத்தில்‌,
உத்பத்திம்‌ – உற்பத்‌தியை,
அலபத – அடைந்ததோ,
தத: – அதன் பிறகு,
ய–எந்த வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
சாந்தே – அடக்கப்‌ பட்ட மனதையுடைய,
சாந்தரவே – சந்தநு மஹாராஜனின்‌ புதல்வனான பீஷ்மரிடம்‌,
ஸம்ருத்தாம்‌ – பூர்ணமான,
ருத்திம்‌ – ஸம்ருத்தியை,
மிரந்தரம்‌ – இடைவிடாது, நித்யமாக என்றபடி,
௮காத்‌ – அடைந்ததோ,
ஸா – அப்படிப்‌ பட்ட,
இயம்‌ – இந்த வைராக்யம்‌ என்னும்‌ ஐஸ்வர்யம்‌,
யம்‌ -எந்த ராமானுஜ முநியை,
ஸமேத்ய – அடைந்து,
புவநே -உலகில்‌,
நைகதா- அநேக விதமாக,
வித்யோததே – ப்ரகாசிக்‌கின்றதோ,
குரு வரம்‌ – ஆசார்யர்களுள்‌ சிறந்தவரான,
தம்‌ -அந்த,
ராமாநுஐயோகீம்‌ – இராமானுஜ முநியை,
வயம்‌ -நாம்‌,
சச்வத்‌ – அடிக்கடி,
பஸ்பேம-பார்க்கக் கடவோம்‌,–கண்டு களிக்கக் கடவோம்‌ என்றவாறு.

வைராக்கியமாகிற செல்வமானது வாயுகுமாரனிடத்தில் உற்பத்தியை அடைந்தது. பின்பு அது சந்தனு புத்ரரான பீஷ்மரிடம் நன்கு வளர்ச்சியை அடைந்து அது இப்பொழுது வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை அடைந்து பலவிதமாகப் பிரகாசிக்கிறது. அந்த ஜீயர் ஸ்வாமியை நாம் எப்பொழுதும் கண்களால் கண்டு களிப்போம்

வைராக்யம்‌ என்பது உலகில்‌ மிகச்‌ சிறந்த ஓர்‌ ஐஸ்வர்யமாகும்‌ ; அது எல்லோருக்கும்‌ கிடைத்த லரிது.
அவ்வைஸ்வர்யம்‌ முதலில்‌ வாயு புத்ரனாகிய அநுமானிடமே. உண்டாயிற்று.
அதன்‌ பிறகு மனச்‌ சாந்தி பெற்ற சந்தநு மஹாராஜனின்‌ குமாரனாகிய பீஷ்மரிடம்‌ நிரந்தரமாக மிக விருத்தியைப்‌ பெற்றது.
இவ்‌ விருவரை யொழிந்த மற்றையோருக்கு இவ் வைஸ்வர்யம்‌ இருந்ததில்லை என்பதை
*:௮கீயத்ர பீஷ்மாத்‌ காங்கேயா தர்யத்ரச ஹ.நூமத: | ஹறிணீ குர மாத்ரேண சர்மண மோஹிதம்‌:ஐகத்‌ ‘” என்ற வசனத்தால்‌ அறிகிறோம்‌. :
இந்த ஸ்லோகத்‌தின்‌ கருத்து ** கங்கா புத்திரனான பீஷ்மனையும்‌ அநுமானையும்‌ தவீர்த்து மற்றைய உலகம்‌
மானின்‌ குளப்படி போன்ற ஸ்திரீகளின்‌ அவயவ விசேஷத்தாலே மோஹ முற்றதே யாகும்‌”’ என்பதாம்‌.
பீஷ்மரின்‌ வைராக்யம்‌ அநுமானது வைராக்யத்தை விடச்‌ சிறந்ததாகும்‌. ஏனெனில்‌,
மிகுந்த வீர்யத்தையும்‌ ஐஸ்வர்யத்தையும்‌ உடையராய்‌ எல்லா போக்‌யங்களையும்‌ அனுபவிக்கத்‌ தகுதி வாய்ந்த அரசிளங்‌ குமாரரல்லவா அவர்‌?
அத்தகையவர்‌ தமது பிதாவின்‌ விருப்‌பத்தை உணர்ந்து மேலும்‌ பிதா காம போகங்களை அநுபவிக்க வேண்டியதற்காகவே
தமது யெளவனப்‌ பருவத்திலும்‌ தமது போகத்தை சபத பூர்வமாகத்‌ துறந்து உலகறி யச்செய்து உயிருள்ளளவும்‌
ப்ரும்ஹசர்யத்தையே அநுஷ்‌டித்துப்‌ போந்த மஹா வைராக்யசாலி யாயிற்றே அவர்‌,
மேலும்‌ தமது ப்ராதாவான விசித்ர வீர்யன்‌ நிமித்தமாக ஸ்வயம்வரத்தில்‌ பலாத்காரத்தால்‌ கொண்டு வரப்பட்ட
காசி ராஜன்‌ மகள்‌ அம்பா என்பவள்‌, தான்‌ ஏற்கனவே   ஸால்வராஜனை வரித்திருப்பதாயும்‌
தனது மனம்‌ அவனையே விரும்புவதாகவும்‌ சொல்ல, பீஷ்மரும்‌ விசித்ர .வீர்யனும்‌ அவளை அவள்‌ விருப்பப்படி. செய்ய அநுமதித்தார்கள்‌.
ஆனால்‌ அவள்‌ ஸால்வனைச்‌ சந்தித்து தன்னை மணக்கும்படி கேட்க **பிஷ்மரால்‌ பலாத்கரித்து வீர்யத்தால்‌ கொண்டு போகப்பட்ட
உன்னை நான்‌ விவாஹம்‌ செய்து கொள்ள மாட்டேன்‌”” என்று திரஸ்கரித்து விட்டான்‌.
பிற்கு அவள்‌ பீஷ்மரிடம்‌ வந்து, “*“ஸால்வன்‌ நிராகரித்து விட்டபடியா லும்‌ நீரே வீர்யத்தால்‌ என்னைக்‌ கொண்டுவந்தபடியாலும்‌
நீரா வது என்னை விவாகம்‌ செய்துகொள்ள வேண்டும்‌; இல்லையேல்‌ தவம்‌ செய்தாவது உமது உயிரை மாய்க்கும்‌
உபா யத்தைக்‌ கைக்கொள்வேன்‌”” என்று சபதம்‌ பண்ணினவிடத்‌திலும்‌ உயிரையும்‌ மதியாது தாம்‌ முன்‌
பண்ணிய சபதத்‌தின்படி ப்ரும்ஹசர்யத்தைப்‌ பேணிப்‌ போந்த மஹாநுபாவருமாவர்‌ அவர்‌.
இப்படி அவ்விருவரிடமும்‌ காணப்பட்ட வைராக்யம்‌, இக்‌ கலி காலத்திலும்‌ விரக்தர்களில்‌ தலைவரான
இவரிடம்‌ காணப்படுவதால்‌ மிகவும்‌ ப்ரகாசிக்கிறது என்‌றார்‌.
காமக்ரோதாதி தோஷமே நிறைந்த இக்‌. கலியிலும்‌ ஒருவரிட.ம்‌ அந்த வைராக்ய மிருந்ததால்‌ அது அபிவருத்‌
தியை யடைந்து ப்ரகாசிக்கின்றது எனக்‌ கூறப்பட்டது.
அத்தகைய வைராக்யம்‌ பூண்ட ராமாநுஐ முநிவரை அடிக்கடி காணக்கடவோம்‌; கண்டு களிப்பெய்தக்‌ கடவோம்‌ – என ப்ரார்த்திக்கிறார்‌.
இக்காலத்தில்‌ அத்தகைய வைராக்யம்‌ ‘வாய்ந்தவரை தர்சிப்பதும்‌, அதிலும்‌ அடிக்கடி தர்சிப்பதும்‌
கிடைக்கக் கூடிய தல்லவாகையால்‌ அதை ப்ரார்த்திக்கிரார்‌

—————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது வைராக்‌யத்தின்‌ பெருமை கூறப்பெற்றது.
இதில்‌ சிறந்த பண்டிதர்‌களாலும்‌ மெச்சப்படும்‌ இவரது கரந்த வ்யாக்யான சக்தியும்‌
மிகவும்‌ தூய்மையான ஆசாரமும்‌ கூறப்படுகின்‌றன

யஸ்ய வ்யாகீயா விதக்த ஸுரி பரிஷத்‌ சித்த அபஹார ,க்ஷமா யத்‌ தைநந்தின ,
ஸத்க்ரியா யதிவராதி ஆசார ஸக்மாத்ருகா ப்வகந்தி ஸெளம்ய வரேச யோக
சரண த்வந்த அரவிந்த ஆஸ்ரயம்‌ அமலம்‌ ஞாநாதி பூர்ண
(ஆசயம்‌) தம்‌ ராமாநுஜயோவர்யம்‌ வந்தே–9-

பதவுரை:–
யஸ்ய – எந்த ராமாநுஜ முனிவருடைய,
வ்யாகீயா – உபய வேதாந்த கிரந்தங்களுக்கும்‌ மந்த்ர மந்த்‌ரார்த்தங்களுக்கும்‌ கூறப்படும்‌ தெளிவுரை வ்யாக்யானம்‌,
விதக்த – மிகவும்‌ ஸமர்த்தர்களான,
ஸுரி பரிஷத்‌ – பண்டித கோஷ்டியின்‌,
சித்த – மனத்தை,
அபஹார – கவர்வதில்‌,
க்ஷமா – தகுதி வாய்ந்ததாக ஆகிறதோ,
யத்‌ – எவரது,
தைநந்தின -ப்ரதி தினம்‌ அதுஷ்டிக்கப்பட வேண்டடிய, ஸத்க்ரியா-சிறந்த அதுஷ்டாநங்கள்‌,
யதிவராதி- எம்‌பெருமானார்‌ மூதலானாருடைய,
ஆசார-அநுஷ்டானங்களை
ஸக்மாத்ருகா:- ஸ்லாக்யமான மூல ப்‌ரமாணமாகக்‌ கொண்‌டனவாக,
ப்வகந்தி-ஆகின்‌றனவோ,
ஸெளம்ய வரேச யோக – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
சரண த்வந்த – இரு திருவடி. களாகிற,
அரவிந்த – தாமரை மலரை,
ஆஸ்ரயம்‌ – தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண டவரும்‌,
அமலம்‌-தோஷங்களற்றவரும்‌,
ஞாநாதி -ஞாநம்‌ பக்தி முதலியவற்றால்‌,
பூர்ண – நிறைந்த,
(ஆசயம்‌) மனத்தை யுடையவருமான,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜயோவர்யம்‌ – ராமானுஜ முனிவரை,
வந்தே -. நமஸ்கரிக்கின்றேன்‌.

யாருடைய வ்யாக்யானமானது வித்வத் ஜனங்களின் மனதை கவர்ந்திழுக்கக்கூடியதோ, யாருடைய நித்யானுஷ்டேயங்களான நற்கிரிசைகள் மற்ற யதிவரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனவோ, அத்தகையவரும், குற்றமற்றவரும், ஞானம் முதலிய நற்குணங்கள் நிறைந்தவரும், அழகிய மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரையினை ஆச்ரயித்தவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஸேவிக்கிறேன்.

ஸ்ரீ பாஷ்ய, ‘ பகவத் விஷய, மந்த்ரார்த்த ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு இம்‌ முனிவர்‌ அருளிச்‌ செய்யும்‌
தெளி பொருள்‌ விளக்கம்‌ (வ்யாகீயானம்‌),
மிகவும்‌ பாண்டித்‌ யம்‌ பெற்ற பண்டித ஸமூகங்களின்‌ மனதையும்‌ கொள்ளை கொள்ளும்‌ தன்மை வாய்ந்தது.
இது இந்த கரந்தகாரருக்‌கும்‌ மற்றும்‌ இவரைப் போன்ற மற்ற மஹா வித்வான்‌௧ளான அஷ்டதிக்கஜங்களுக்கும்‌
நேரே அநுபவ விஷயமாதலால்‌ இவ்வாறு கூறினார்‌. இவரது ஆசரணைகள்‌,யதிகட்சிறைவனான ஸ்ரீ ராமானுலமுநி முதலிய பெரியோர்களின்‌ அநுஷ்டாகங்களை த்‌ தமக்கு மூல ப்ரமாண (க்ரந்த) மாகக்‌ கொண்டவை யாகும்‌.
மாத்ருகா. என்பது முதலில்‌ ஒருவரால்‌ எழுதப்பட்ட (மூலபூதமான) முதலாவதான சுவடி;
அதுவே பின்னர்‌ பல சுவடிகளாக வெளிவருவதற்குக்‌ காரணமா யிருப்பதால்‌ அது அவ்வாறு மாத்ருகா எனக்‌ கூறப்படும்‌.
அதுபோலவே முன்னர்‌ எம்பெருமானார்‌ முதலிய யதிகள்‌ அனுஷ்டித்த அநுஷ்டானங்களே இவரது
ஸத்கர்மா நுஷ்டாகங்களுக்கு மூலங்களாகும்‌.
எனவே இவர்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டானங்களில்‌ எள்ளளவும்‌ பிற்ழாதவர்‌.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருப்பாத மலர்களையே தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவர்‌.
எனவே தோஷங்கள ற்றவர்‌. ஞானம்‌, பக்தி, விரக்தி என்னும்‌ குணங்கள்‌ நிறைந்த மனதையுடையயவர்‌.
இப்படிப்‌ பெருமை வாய்ந்து ப்ரஸித்தி பெற்ற ராமாநுஐ முநிவரை வணங்குகின்றேன்‌.

——————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ எல்லா க்ரந்தங்‌களுக்கும்‌ இவர்‌ அருளிச்‌ செய்யும்‌ பொருள்‌ விளக்கம்‌ பண்டிதர்களின்‌ மனதையும்‌ கவரும்‌ தன்மையது;
அநுஷ்டானமும்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களில்‌ நின்றும்‌ கொஞ்சமும்‌ நழுவாதது என்றார்‌.
இதில்‌ இவரது தெளிபொருள்‌ விளக்கத்‌தால்‌ இவரது கோஷ்டியின்‌ பக்கத்திலிருந்து இதைக்‌ கேட்‌டுக்‌
கொண்டிருக்கும்‌ பக்ஷிகளும்‌, ** பரதத்வம்‌ ஸ்ரீமந்நாரா யணனே ” என்று விளங்கச்‌ சொல்லும்‌ சக்தி
வாய்ந்தன வாகின்றன என்று தாம்‌ ஆச்சர்யமுறுகிறார்‌.

யத்‌ கோஷ்டி ஸவித ஸ்திதா சகுநா:௪- பரம்ஜ்யோதி: –
பரம்‌ தத்வம்‌ வேத ரஹஸ்ய ஸார படிதம்‌
ஸ்ரீபதி நாராயண:- ம்ச சதுராககாதி விபுதா ததீ சேஷ பூதா
இதி பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி தம்‌ ராமாநுஜம்‌ பஜே–10-

பதவுரை:–
யத்‌ – ஏந்த ராமாநுஜ முனிவருடைய,
கோஷ்டி – காலக்ஷேப கோஷ்டியின்‌,
ஸவித – பக்கங்களிலே,
ஸ்திதா:- இருக்கின்ற,
சகுநா:௪-பக்ஷிகளும்‌,
பரம்ஜ்யோதி: – பரஞ்சோதியென்றும்‌,
பரம்‌ தத்வம்‌-பர தத்வமென்றும்‌,
வேத ரஹஸ்ய -வேதங்களில்‌ ரஹஸ்யங்களான உ.பநிஷத்துக்களின்‌
ஸார – ஸாரமான நாராயணாநுவாகத்தில்‌,
படிதம்‌ -:**நாராயண பரம் ப்ரஹ்ம’” என்றும்‌,
** நாராயண பரோஜ்‌யோதி என்றும்‌, :
**தத்வம்‌ த்வம்‌ நாராயண: பர:? என்றும்‌, *,
சிவமச்யுதம்‌?” என்றும்‌ படிக்‌கப்பட்ட பொருள்‌,
ஸ்ரீபதி:- லக்ஷ்மீ வல்லபனான,
நாராயண:- நாராயணனே ஆவான்‌,
ம்ச — மேலும்‌,
சதுராககாதி-பிரமன்‌ முதலிய,
விபுதா:- தேவர்கள்‌,
ததீ—அந்த நாராயணனுக்கு,
சேஷ பூதா:- சரீரமாய்க் கொண்டு சேஷப் பட்டவர்கள்‌,
இதி – என்று,
பரஸ்பரம்‌ – ஒன்றுக்‌ கொன்று,
வ்யாகுர்வந்தி – வ்யாக்யானம்‌ செய்கின்றனவோ,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனியை,
பஜே – ஸேவிக்‌கிறேன்‌-

யாருடைய கோஷ்டியில் அருகில் இருக்கும் பக்ஷிகளானது “ஸ்ரீயப்பதியான நாராயணனே வேதாந்தப் பிரதிபாத்யன்,
பரம் ஜ்யோதி, பரம் தத்த்வம், எப்பொழுதுமுள்ளவன்” என்றும்,
“மற்ற நான்முகன் தொடக்கமான தேவர்கள் அவனுக்கு சேஷபூதர்கள்” என்று ஒன்றுக்கொன்று பேசுகின்றனவோ,
அந்த ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்

இந்த ராமாநுஜ முநிவர்‌ வைதிக வாக் யங்களில்‌
“*ஸதேவஸோம்ய இதமக்ர ஆஸீத்‌”,
ஆத்மாவா இதமக்ர ஆஸீத்‌”,
““ப்ரம்ஹவா இதமக்ர ஆஸீத்‌” என்று ஸாதாரணங்களான “ஸத்‌, ஆத்ம, ப்ருஹ்ம” சப்தங்களாலும்‌
,விசேஷமான நாராயண சப்தத்தாலும்‌ காரண வஸ்துவை கூறிக்‌, “காரணந்து த்யேய:” என்று அதையே
தத்வம்‌ எனக்‌ கூறுவதால்‌,
இவை வெவ்வேறு தத்வங்‌களா? அல்லது ஓன்றேயா? . என விசாரிக்கும்போது
வேதங்களின்‌ ஸாரங்களான உபகிஷத்துக்களிலும்‌ ஸார
மாகக்‌ கொள்ளப்படும்‌ நாராயணாநுவாகத்தில்‌
** ஆத்ம, ப்ரஹ்ம, ஜ்யோதி” முதலான சப்தங்களை நாராயண பதத்‌தோடு ஸமாகவிபக்தி (வேற்றுமை) கமாய்‌
** நாராயண பரம்‌ ப்ருஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:”” இத்யாதி வாக்யங்களால்‌
படிக்கப் பட்டிருப்பதால்‌ ஸாமாந்ய விசேஷ ந்யாயத்தாலே ஐகத்துக்‌குக் காரணமான பர தத்வம்‌ லக்ஷ்மீபதியாகிய நாராயணனே;
மற்றய ப்ரும்ஹ ருத்ரா திகள்‌ பரதத்வமன்று; அவர்கள்‌
ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து உண்டானவர்கள்‌,
அவனுக்கு சரீரமாய்க்‌ கொண்டு சேஷ பூதர்கள்‌ என்று உபநிஷத்து வாக்கயங்களை விளங்கக்‌ கூறி பரதத்வ ஸ்தாபனம்‌ செய்வது: அவரது வழக்கமாகலால்‌,
அவரது கோஷ்டியின்‌ பக்கங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்‌, ஞானத்திற்கு அடை வல்லாத பக்ஷிஜாதிகளும்‌, அந்த வாக்கியங்களைச்‌ சொல்லி
பரதத்வ’ஸ்தாபனம்‌ பண்ணாகின்‌ றன” என்கிறார்‌. இதனால்‌ ஞானத்திற்கு இட்டுப்‌ பிறவாத பகஷிகளும்‌ நன்கு அறிந்து கொள்ளும்படி விஷயங்களைக்‌ கற்பிக்கும்‌ விஷயத்தில்‌
இவ ருக்குள்ள ஆற்றல்‌ நன்கு . வெளியிடப்பட்டது.
இங்கு“* பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி ” எனக்‌ கூறியதால்‌ அப்பஷிகளிலும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஞானத்தில்‌ குறைந்தவர்கள்‌ இல்லை;
ஆயினும்‌ ‘*போதயந்த: பரஸ்பரம்‌” என்ற’ கணக்கலே’
“ஒன்றுக்கொன்று போதிக்கின்றன என்று கூறப்பட்டதாகும்‌.
ஸாமாந்ய விசேஷ பர்யவச மாவது *நிர்விசேஷம்‌.
ஸாமாந்யம்‌ ‘” என்கிறபடியே ஒரு ஸாமான்ய பதத்தை
விசேஷ போதக சப்தத்தைக்‌ கொண்டு விசேஷ விஷயமாக
இப்‌ பொருள்கொள்வது.
** பசுமா யஜேத ”’ என்று விதிவரக்‌ யத்தில்‌ நாற்கால்‌ ஐந்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ கூறும்‌ பசு சப்தத்திற்கு
**ச்சாகஸ்ய வபாயா:”” என்ற மந்த்ரத்தைக்‌ கொண்டு ௮ப்பசு என்பது **ஆடு” என நாமிர்த்தாரணம்‌ செய்வதாகும்‌.
இவ்வாறு ஞானஹீகர்களையும்‌ ஞாநவான்களாக்கும்‌
ராமாநுஜ முனிவரை வணங்குகின்றேன்‌.

—————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸமீபத்தில்‌ இருக்கும்‌ பக்ஷிகளுக்கும்‌ வ்யாக்யானம்‌ செய்யும்படி, சக்தியை விளைவித்து
இருக்கும்‌ இவரது ஞானத்தின்‌ பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய உபந்யாஸ கோஷ்டியில்‌’சேரவும்‌ வேண்டா; பக்கத்‌திலிருக்கவும்‌ வேண்டா.
இவரது கருணை அலை யெறியும்‌ கடைக்‌ கண்ணால்‌’கடாக்ஷிக்கப் பெற்றவர்களே
அர்த்த பஞ்சக ஞானம்‌ பெற்றவருள்‌ சிறந்தவர்கள் என்ற அதிசயத்தைக்‌ கூறி,
வானமாமலை எம்பெருமானுக்கு இவர்‌ செய்த சாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌
இவர்‌ அதிகம்‌ பெருமை வாய்ந்தவர்‌ என்கிறார்

யேகே௫ித்‌ யத்‌ காருண்ய ஸுதா தரங்க விலஸத்‌ நேத்ராஞ்சல
ப்ரேக்ஷிதா தே இமே அர்த்த பஞ்சக விதாம்‌ ஸங்கீயாவதாம்‌ முக்யா
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய மஹிதை த்ருவை கைங்கர்ய ஜாதை ,
பூயாச்‌ ஆஸ்ரித கல்பக அயம்‌ ராமாநுஜ முநி விஜயதே-11-

பதவுரை:–
யேகே௫ித்‌ – எந்தச்‌ சில மனிதர்கள்‌,
யத்‌ – எந்த முனிவரின்‌,
காருண்ய – கருணை யாகிற,
ஸுதா – அம்ருதத்தின்‌,
தரங்க – அலைகளாலே,
விலஸத்‌ – விளங்குகின்ற,
நேத்ராஞ்சல – கண்ணின்‌ கடையினாலே,
ப்ரேக்ஷிதா: – பார்க்கப்பட்டனரோ,
தே – அப்படி.பாக்யம்‌ பெற்ற,
இமே- இம்‌ மனிதர்கள்‌,
அர்த்த பஞ்சக விதாம்‌-ஐந்து அர்த்தங்களையும்‌ நன்கறிந்த, ஸங்கீயாவதாம்‌ -பண்டிதர்களுள்‌,
முக்யா: – தலை சிறந்தவர்கள்‌ ஆகிறார்கள்‌,
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய – ஸ்ரீ வானமாமலை எம்பெரு
மானுக்குச்‌ செய்தவையும்‌,
மஹிதை:-கொண்டாடத்தக்கவையும்‌,
த்ருவை:-சாச்வதங்களுமான,
கைங்கர்ய ஜாதை:-கைங்கர்‌யங்களின்‌ ஸமூகத்‌தினால்‌, பூயாச்‌-சிறப்பு வாய்ந்தவரும்‌,
ஆஸ்ரித கல்பக: – தன்னை ஆஸ்யரயித்தவருக்கு கல்பக வ்ருக்ஷம்‌ போல்‌ அபேக்ஷிதங்களைக்‌ கொடுக்குமவருமான,
அயம்‌-இந்த,.
ராமாநுஜ: – ராமானுஜன்‌ என்னும்‌,
முநி :-முனிவர்‌,
விஜயதே – மற்றெல்லோரிலும்‌ சிறந்து விளங்குகின்றார்‌.

.
காருண்யமாகிற அம்ருத அலைகள் விளங்காநிற்கும் எவருடைய கடைக்கண் பார்வைக்கு இலக்கானவர்கள்
அர்த்தபஞ்சக ஞானம் பெற்ற வித்வான்களில் தலைவராக ஆவாரோ,
அத்தகைய ராமானுஜ ஜீயர் ஸ்வாமி, சிஷ்யர்களுக்கு கற்பகவ்ருக்ஷம் போன்றும்,
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்குச் சிறந்த பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் சிறந்து விளங்குகின்றார்.

அர்த்த பஞ்சகமாவது:-
1) ஸ்வஸ்வரூபம்‌ எனப்படுவது, ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌,
(2) பரஸ்வரூபம்‌ எனப்படுவது, பரமாத்மாவின்‌ ஸ்வரூபம்‌,
(8) புருஷார்த்த ஸ்வரூபமெனப்படுவது, முமுக்ஷுக்களின்‌ விருப்பத்திற்கு விஷயமான மோக்ஷஸ்வரூபம்‌,
(4) உபாய ஸ்வரூபமெனப்‌படுவது, அம் மோகஷத்தை அடைய சாஸ்த்ரங்களால்‌ ஸாதனமாகக்‌ கூறப்பட்டவை,
(5) விரோதி ஸ்வரூபமெனப்படுவது மோக்ஷத்தைப்‌. பெற விரோதியாய்‌ இடைமறித்து நிற்‌கின்ற அவித்யை, கர்மா வாஸநா ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்‌ முதலியனவாகும்‌.
இவ்வர்த்த பஞ்சகத்தையே ஸகல வேத சாஸ்த்ர புராணங்களும்‌ கூறுகின்றன.
இவ்வர்த்த பஞ்சக ஞானமின்றி உஜ்ஜீவனமில்லை.
இத்தகைய அர்த்த பஞ்சக ஞாநமும்‌ வெகு கிலேசப்பட்டு சாஸ்த்ராப்யாஸங்களால்‌ ஸாதிக்கப்பட வேண்டி யிருக்க,
இந்த ராமாநுஜ முனிவருடைய கருணா பூர்ணமான கடாக்ஷ லேசத்தினாலே உண்டாகிறது. நிற்க
இவரது கருணா பூர்ணமான கடாக்ஷம்‌ தனக்கு விஷயமானவர்களை அர்த்த பஞ்சகங்களை
நன்குணர்ந்த பண்டிதர்களுள்‌ ப்ரதாநர்களாகவும்‌ ஆக்குகிறது என்று இவருடைய பெருமை கூறப்பட்டது.
இங்கு தாம்‌ நேரில்‌. கண்டறிந்ததுடன்‌ மற்றவருக்கும்‌ ப்ரத்யக்ஷிக்கலாம்‌ எனத்‌ தோற்றும்படி
“*இமே”” எனக்‌ கூறுவதால்‌, இதில்‌ அர்த்தவாதமில்லை என்கிறார்‌.
மேலும்‌ இந்த ஸ்வாமி ஸ்ரீ வானமாமலை எம்பெருமானுக்குச்‌ செய்‌துள்ள பல சாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌ போற்றத்‌தக்கவர்‌
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு கல்பக விருக்ஷம்‌போல்‌ அபேக்ஷிதங்களை அளிக்கவல்ல பெரியவர்‌.
எனவே இந்த வானமாமலை ராமாநுஐ முனிவர்‌ மற்றையோர்களில்‌ சிறப்புடையராய்‌ விளங்குகின்றார்‌.

————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரின்‌ கடாக்ஷம்‌ முக்தி ஸாதநமான அர்த்தபஞ்சக ஞானத்தை எல்லோருக்கும்‌
அளிக்க வல்லதென்று பொதுவாகக்‌ கூறியவர்‌, இதில்‌ மிகவும்‌ தண்ணியனாய்‌,
அஹங்கார மமகாரங்கள்‌ நிறைந்தவனான என்னை. உஜ்ஜீவிப்பிக்க முயற்சிக்கும்‌ பெரியோரிடித்திலும்‌
விமுகனாய்த்‌ திரிகின்ற மேட்டு மடையான என்னிடமும்‌ இக்‌ கருணை பாலிபாயா நின்றது என்‌கிறார்‌.

அஸ்தி ஸ்காயு வஸா வபை மாம்ஸ நி௫தே அநித்யே விகாராஸ்பதே
அகஹமி தேஹே அஹம்மதிகரே – சப்தாதி ஸேவாப்ரே
ஸ்ரீமத்‌ வைஷ்ணவ மத்பர ஆர்ய விமுகே மயி அபி ய தயாம்‌ அகார்ஷீத்‌
வ்யோம மஹா௫ரே: மூல த்ரவ்யம்‌ தம்‌ ராமாநுஜம்‌ பஜே – 12-

பதவுரை:–
அஸ்தி – எலும்பு என்ன,
ஸ்காயு – சிறு நரம்புகள்‌ என்ன,
வஸா-வபை என்ன,
௮ஸ்ரஃரகீதமென்னடி
மாம்ஸ – மாம்ஸமென்ன,
நி௫தே – இவைகள்‌ செறிந்ததும்‌,
அநித்யே – அநித்யமானதும்‌,
விகாராஸ்பதே – பால்யம்‌ பெளவனம்‌,பருப்பது,இளைப்பது முதலிய வேறுபாடுகளுக்கு உறைவிடமாயும்‌,
அகஹமி – உண்மையில்‌ அஹம்‌ என்னும்‌ பதத்திற்கு அர்த்தமல்லாததுமான,
தேஹே – சரீரத்திலே,
அஹம்மதிகரே – நானென்று அஹம்புத்தியைப்‌ பண்ணுமவனும்‌,
(ஆதலால்‌)
சப்தாதி ஸேவாப்ரே-சப்தாதி விஷயங்‌களில்‌ ப்ராவண்யத்தால்‌ அவைகளை அனுபவித்துப்‌ போருமவனும்‌,
(ஸ்ரீமத்‌ விமுகே) ஸ்ரீமத்‌ வைஷ்ணவ – பரம ஸாத்‌’விகர்களாய்‌ பகவத்‌ ஸம்பக்தத்திலே மூட்டும்‌ அடியார்களி டத்திலும்‌,
மத்பர – ஆர்ய – என்னை உஜ்ஜீவிப்ப திலேயே நோக்குள்ள ஆசார்யர்களிடத்திலும்‌,
விமுகே – வைமுக்‌யத்தை யுடையனான,
மயி அபி- என்னிடத்திலும்‌,
ய:-எந்த முனிவர்‌,
தயாம்‌-தயையை,
அகார்ஷீத்‌ – செய்தாரோ”
வ்யோம மஹா௫ரே: – வானமாமலை அப்பனுக்கு, பரிபணம்‌-
மூல த்ரவ்யம்‌, முதல்‌- போன்ற,
தம்‌ ராமாநுஜம்‌ – அந்த ராமாநுஜ முனிவரை,
பஜே – ஸேவிக்கின்றேன்‌.

எலும்பு. நரம்பு, கொழுப்பு, உதிரம், சதை இவற்றின் கூட்டுரவானதும், மாறுபாடுடையதும், அழியக்கூடியதுமான, இந்த நான் அல்லாத உடம்பில், நான் என்ற எண்ணத்தை உடையவனும், தன்னை நோக்கிக்கொண்டு போரும் ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பாராமுகமாக இருப்பவனுமாகிய அடியேன் இடத்திலும் எவர் அருள்புரிந்தாரோ, அத்தகைய வானமாமலை திவ்ய க்ஷேத்தரத்திற்கு நிதியான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்

இந்த ஸ்லோகத்தின்‌ மூன்று பாதங்களாலும்‌ தமது தண்மையைக்‌ கூறி,
நான்காவதால்‌. தம்மிடமும்‌ இம்‌ முனிவரது கருணை ஏறிப்‌ பாய்ந்தது என்கிறார்‌. அதாவது
நான்‌ எலும்பும்‌ சிறிய நரம்புகளும்‌ வபையும்‌ ரத்தமும்‌ மாம்ஸமுமாய்ச்‌ செறிந்தும்‌,
அநித்யமாயும்‌, . அடிக்கடி பருப்பது இளைப்பது முதலிய வேறுபாட்டுக்கு உறை விடமாயும்‌,
அஹம்‌ என்ற பதத்திற்கு அர்த்தமான ஆத்மா வல்லாததுமான சரீரத்தில்‌ ஆத்ம புத்தியைப்‌ பண்ணும்‌ ப்ரமத்தை யுடையவன்‌.
நிற்க இத்தகைய ப்ராந்த்தியால்‌ இந்த்ரியங்களுக்கு எப்பொழுதும்‌ இரை யிட்டுக்கொண்டு
ஹேயமான சப்தாதி விஷயங்களைக்‌ கொண்டே பொழுது போக்குமவன்‌.
ஸ்ரீ. வைஷ்ணவ ஸம்பத்து நித்யமாய்ச்‌ செல்‌லும் பரம பாகவதர்களைக் கண்டால்‌ முகத்தை மாறவைத்துச்‌ செல்‌லுமவன்‌.
அதிகம்‌ சொல்லி என்‌? என்னை அங்கீ கரித்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று ப்ரயத்கம்‌ செய்யும்‌
ஆசார்‌யர்களைக்‌ காணிலும்‌ அவர்களைக்‌ கண்ணெடுத்தும்‌ ஸேவிக்‌கப்‌ பெருத பாக்யஹீநனான தண்ணியன்‌.
இப்படிப்பட்ட என்னிடத்தும்‌ இவர்‌ தயையைச்‌ செய்து என்னைத்‌ திருத்தி ஆட்கொண்டவர்‌.
இவரை வானமாமலை எம்பெருமானது மூலதனம்‌ (முதல்‌) எனக்‌ கொள்ளவேண்டும்‌. ஏனெனில்‌ ?
மூலதனம்‌ உடையவன்‌ அந்த தநத்தைக்‌ கொண்டு தொழில்‌
வியாபாரம்‌ முதலியவற்றைச்‌ செய்து தனத்தைப்‌ பெருக்கிக்‌கொள்ளுவது வழக்கமல்லவா?
அதுபோலவே எம்பெருமானும்‌ இவரை அவதரிப்பித்து அம்முனிவராகிற மூலத்‌தனத்தைக்‌ கொண்டு அகேக ஜீவாத்மாக்களை
நல்வழிப்‌படுத்தி அவர்களைப்‌ பெறுகிறானாகையால்‌, அவ்வீசனது (பரிபணம்‌) ‘* மூலதனம்‌ ‘*, இம்‌ முனிவரர்‌ என்று கூறக்‌ குறையில்லை.
இப்படிக்‌ கூறியதால்‌ **சேதந லாபம்‌ ஈஸ்வரனுக்கு” எனப்படும்‌ ஸார தமமான ஸம்ப்ரதாயார்த்தம்‌ வெளியிடப்பட்டதாகும்‌.
இப்படி ஈஸ்வரனுடைய லாபத்திற்‌கும்‌ காரணமான இம்‌ முனிவரை ஸேவிக்கின்றேன்‌.
————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கருணை தம்மிடமும்‌ ஏறிப்‌ பாய்ந்தது எனக்‌ கூறினார்‌.
இதில்‌ இம் முனிவரிடம்‌ காணப்படும்‌ சிறந்த கல்வி, விரக்தி, மற்றுமுள்ள ஸெளலப்ய ஸெளஸீல்யாதிகள்‌,
பெரியோர்‌ வகுத்த வழியைப்‌ பேணிக்‌ காக்கும்‌ தன்மை, பகவத்‌ விஷயத்‌ திலுள்ள ப்ராவண்யம்‌,
இவைகளை விரித்து அருள்கிறார்

வித்யாகேளிக்குஹம்‌ விரக்தி லதிகா விச்‌ராந்தி கல்பத்ருமம்‌
ப்ரோக்மீலத்‌ குண திவ்ய ரத்ன படலீ நிக்ஷேப மஞ்ஜு5ஷிகாம்‌
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய பதவீ ரக்ஷைக தீக்ஷா குரும்‌
ஸ்ரீமத்வான மஹாசலேச நிரதம்‌ ராமாநுஜார்யம்‌ ஸ்ரயே .–13-

வித்யை விளையாடுமிடமாக இருப்பவரும், வைராக்யமாகிற கொடியானது ஓய்வெடுக்கும் கல்பகவ்ருக்ஷம் போன்றும், உயர்ந்த காந்தி பொருந்திய குணங்களாகிற் ரத்னங்களை வைக்கும் பெட்டி போன்றும் இருப்பவரும், எம்பெருமானால் நியமிக்கப்பட்ட ஆசார்ய பீடத்தை நிர்வஹிப்பதிலும் உறுதிபூண்டவரும், ஸ்ரீ வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுப்பட்டு இருப்பவருமான வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஆஸ்ரயிக்கிரேன்.

தன்னைப்‌ பேணி ஆதரித்த முனிவரின்‌ ப்ரபா வத்தைச்‌ சுருங்கக்‌ கூறுகின்றார்‌ இதில்‌.
இந்த ராமாநுஜ முனிவர்‌ *வித்யாஹ்யேதா: சதுர்தச” என்ற பதினான்கு வித்யைகளையும்‌ கரை கண்டவராகையாலே,
அவைகள்‌ இவரிடம்‌ களிநடம்‌ புரிகின்றன என்கிறார்‌.
இவர்‌ அவை களுக்கு ரங்கஸ்தலம்‌ (நடனமாடுமிடம்‌) போலும்‌,
மிகுந்த வைராக்ய முடையவராதலால்‌ கொடி. மரத்தைப்‌ பற்றிப் படர்வதுபோல்‌ இவரது வைராக்யமென்னும்‌ கொடி
தன்னிஷ்டப்படி மூடப்‌ படர்ந்து விஸ்ராந்தியைப்‌ பெற்று
இளைப்பாறும்‌ கற்பக வருக்ஷம்‌ போன்றவர்‌ இவர்‌.
மேலும்‌ ஆத்ம குணங்களாகிற சிறந்த ரத்நக்‌ குவியலை வைத்துப்‌ பூட்டிக்‌ காப்பாற்றும்‌ பேழை போன்றவர்‌.
இத்தால்‌ இவர்‌ எண்ணிறந்த குணங்களுக்கு உறைவிடமென்பது கூறப்‌பட்டது.
எம்பெருமானாராலே ஸ்தாபிக்கப்பட்ட விசிஷ்‌டாத்வைத ஸித்தாந்தத்தை ரக்ஷிக்கையாகிற முக்ய
தீக்ஷையில்‌ ஆசார்யனாய்‌ வழிகாட்டுமவர்‌ இவர்‌. இப்படி இந்த தர்சனத்திற்கு வழிகாட்டியா யிருப்பது மாத்திரமன்றி
அவ்வழியே ஒழுகி எப்பொழுதும்‌ வானமாமலை தெய்வ
நாயகனிடம்‌ நிரதிசய ப்ரீதி ரூபாபந்நமான பக்தி பூண்டவருமாவர்‌.
இத்தகைய குணக்‌ கடலான ராமாநுஜ முனிவரெனப்படும்‌ எனது ஆசார்யனை ஸேவிக்கின்றேன்‌.

—————

அவதாரிகை :–
வாநா மஹாத்திரி ராமாநுஜயோகி மங்களாசாஸமென்னும்‌ ப்ரபந்தத்தின்‌ கடைசியான இந்த ஸ்லோகத்தில்‌
வாநாசல ராமாநுஜ மூனிவரின்‌ பெருமைகள்‌ கீழ்க்‌ கூறியவை எல்லாம்‌ திரட்டிக்‌ கூறப்படுகின்‌றன

காந்தோபயந்த்ரு முநிவர்ய தயா நிவாஸம்‌
வைராக்ய முக்ய மஹநீய குண ௮ம்புராசிம்‌
ஸ்ரீதேவநாயக ,பத ப்ரணய ப்ரவீணம்‌ யதிபதிம்‌
ராமாநுஜம்‌ நித்யம்‌ ப்ரணமாமி–14-

பதவுரை:–
காந்தோபயந்த்ரு முநிவர்ய – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
தயா-கருணைக்கு,
நிவாஸம்‌ – உறைவிடமாயும்‌,
வைராக்ய முக்ய- வைராக்யம்‌ முதலிய,
மஹநீய-கொண்டாடத்‌ தகுந்த,
குண – குணங்கட்கு,
௮ம்புராசிம்‌ – கடலாயும்‌,
ஸ்ரீதேவநாயக – வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகனுடைய,
பத – திருவடிகளில்‌,
ப்ரணய – ப்ரீதி செய்யும்‌ விஷயத்தில்‌,
ப்ரவீணம்‌ – சிறந்தவரும்‌,
யதிபதிம்‌ – யதித் தலைவருமாகிய,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனிவரை, .
நித்யம்‌- எப்‌’பொழுதும்‌,
ப்ரணமாமி – நன்கு வணங்குகின்றேன்‌. ‘

அழகிய மனவாளமாமுனிகளின் தயைக்கு இருப்பிடமானவரும், வைராக்கியம் முதலிய நற்குணங்களுக்கு கடல் போன்றிருப்பவரும், ஸ்ரீதெய்வனாயகப்பெருமானுடய திருவடிகளில் மிகுந்த அன்புடயவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை எப்பொழுதும் வணங்குகின்றேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதல்‌ பாதத்தால்‌ ஸ்ரீமத்‌-வரவரமுநிகளின்‌ கருணைக்கு வாஸஸ்தான மென்று இவரது பெருமையை யறிவித்தார்‌.
அவ்வாசார்யனுடைய கடாக்ஷத்‌தால்‌ இவர்‌ வைராக்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ ஒருங்குகேரும்‌ குணக்கடலாயினர்‌ என்றார்‌;
இரண்டாம்‌ பாதத்‌தால்‌. ‘ கடலாக ரூபித்ததால்‌ வைராக்யாதி குணங்கள்‌ ஒரு நாளும்‌ இவரிடம்‌ குறைந்து காட்டிய தில்லை என்பது தேறும்‌…
மூன்றாமடியால்‌ இவ்வாத்ம குணங்களடியாக உண்டாகும்‌
ஸர்வேஸ்வரன்‌ விஷயமான இவரது நிரதிசய ப்ரீதியை நிரூபித்தார்‌.
நான்காமடியால்‌ கீழ்க்‌ கூறியபடி மாமுனிகளின்‌
கருணைக்குப்‌ பாத்திரமாய்‌
அதடியாக உண்டாகிய வைராக்‌யாதி குணங்களையுடையராய்‌,
அதடியாக உண்டாகிய பகவத்‌ ப்ரேமத்தை யுடையராகையாலே
யதிகட்கிறைவரானார்‌ என்று இவரது ப்ரபாவங்களைப்‌ பணித்து,
இத்தகைய பெருமை வாய்ந்த வானமஹாத்ரி யோகியாகிய ராமானுஜ. முனியை ப்ரதி தினம்‌
வணங்குகின்றேன்‌ எனக்‌ கூறி மங்களா
சாஸநத்தை முடிக்கிறார்‌.
இங்கு **ப்ரணமாமி’” என்ற வர்த்தமானத்தால்‌ தமது அதிகார மாந்த்யத்தைப்‌ பார்த்துத்‌ தான்‌
கலங்கியபோதெல்லாம்‌ ஆசார்யன்‌ திருவடிகளை இவர்‌:
வணங்குகின்றார்‌ என்று தேறுகிறது.
“ப்ர’? என்ற உபஸர்க்‌கத்தால்‌ வணக்கத்தில்‌ மநோ வாக் காயம்‌ என்ற கரணங்களின்‌ பூர்த்தி கூறப்பட்டது.
நித்யம்‌ என்பது ப்ரதி தினமும்‌ என்பதாகும்‌.
இந்த கிரந்தம்‌ மஙகளாசாஸநம்‌ என்ற பெயரால்‌
வழங்கப்பட்டு வருகிறதே;
இதில்‌ *’ஸ்வஸ்தி- பத்ரம்‌-மங்‌களம் என்பவை போன்ற பதங்கள்‌ காணப்படவில்லையே யென்று சிலர்‌ ஐயமுறலாம்‌.
எனினும்‌ “*நம:- ஜிதந்தே,தோற்றோம்‌, போற்‌றி, பல்லாண்டு ” என்னும்‌ இவை -பர்‌யாயம்‌ என்ற பெரியவாச்சான்‌ பிள்ளை
ஸ்ரீஸூக்தியை நன்கு உற்று அநுஸந்திக்குமவர்கள்‌ இந்த நூல்‌ மங்களாசாஸந ரூபந்தான்‌ என்று எளிதில்‌ உணரலாகும்‌.
இக்ரந்தத்திலும்‌ இம்‌ முனிவரது குணங்கட்கு தோற்று, வந்தே, நமோஸ்து, கெளமி, விஜயதே என்ற ஸ்வரூப
வாசியான பதங்களை மஹார்யர்‌ ப்ரயோகித்திருப்பதும்‌ காணத் தக்கது.

———–

ஸ்ரீ தொட்டை அய்யங்கார்‌ அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌ அருளிய  ஸ்ரீ வானமஹாசலயோகி ப்ரபத்தி தமிழ்‌ உரையுடன்‌

அவதாரிகை:–ஸ்ரீமத்‌ வானமாமலை ராமாநுஐ முனிவ”ரின்‌ அஷ்ட திக்கஜங்களில்‌ ஒருவராகிய தொட்டையங்கார்‌’
அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌, தமது ஆசார்யராகிய ராமாநுஜ முனிவரது கல்யாண குணங்களிலும்‌ விக்ரஹ ஸெளக்‌தர்‌ யத்திலும்‌ ஆழ்ந்தார்‌.

அவர்‌ பூர்வாச்ரமத்தில்‌ அழகிய வரதரிறே; எனவே முந்துற மங்களாசாஸகத்‌இல்‌ இழிந்தார்‌..
தாம்‌ ஸ்வாமியின்‌ கடாக்ஷ விஷயீகாரத்தைப்‌ பெற _,அவர்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌, இப் ப்ரபத்தியில்‌,

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--1-

பதவுரை :–

ஸத்ய: – அப்‌பொழுதே,
ப்ரபுத்த- நன்றாக மலர்ந்த,
ஸரஸீருஹ – தாமரைப் பூவோடு,
துல்ய – ஒப்பான,
சோபெள – காந்தியை யுடை யதுகளும்‌,
ஸம்பச்யதாம்‌ – நன்றாய்‌ ஸேவிப்பவர்களுடைய,
தயநயோ: – கண்களுக்கு,
முதம்‌-சந்தோஷத்தை,
ஆததாகெள – உண்டு பண்ணுமவைகளாயும்‌,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
ஸாகர-ஸமுத்ரத்திலிருந்து,
ஸமுத்தரண – கரையேற்றுவதில்‌,
ப்ரவீணெள-மிக சாமர்த்யம்‌ வாய்ந்தவைகளுமான,
வாநாத்ரியோகி சரணெள–வானமாமலை ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வாநாத்ரி ராமாநுஐ முனிவரின்‌ திருவடிகளைப்‌ பற்றும்‌ மஹார்யர்‌ அதன்‌ பெருமைகளை விளக்குகிறார் மூன்று பாதங்களாலே.
முதல்‌ பாதத்தில்‌ அப்‌ பொழுதே முழுதும்‌ அலர்ந்த செவ்வித்‌ தாமரை மலர்களோடொத்த சோபையை உடையன அத்திருவடிகள்‌ என்கிறார்
இதனால்‌ ம்ருதுத்‌ தன்மை, ஸ்கந்தம்‌, குளிர்த்தி இவைகளை யுடையது அத்திருவடிகள்‌ என்று அதன்‌ போக்யதை உணர்த்தப்பட்டது.
இரண்டாம்‌ பாதத்தில்‌ அத்‌.திருவடி௧ளை நன்கு ஸேவிக்குமவர்களின்‌ கண்களுக்குக்‌ களிப்பூட்டுமவை அவையென்கிறார்‌.
இதனால்‌ அவற்றின்‌ அழகு கூறப்‌பட்டதாகும்‌.
மூன்றாவது பாதத்தில்‌ அவை ஸம்ஸாரமென்‌னும்‌ ஸமுத்ரத்தில்‌ ஆழ்ந்து கடக்கும்‌ ஸம்ஸாரிகளை
அவற்‌றில்‌ நின்றும்‌ கரையேற்றுவதில்‌ மிகுந்த ஸாமர்த்ய்ம்‌ பெற்‌றவை என்றார்‌.

இத்தால்‌ மென்மை, குளிர்த்தி, நாற்றம்‌, அழகு போன்‌.ற குணங்களை யுடையனவாய்‌
இம்மையில்‌ போக்யதையால்‌ களிப்பூட்டுவது மாத்திரமின்றி
மறுமையில் மோக்ஷத்தையும்‌ அளிக்கும்‌ பெருமை வாய்ந்தவைஅவை யெனக்‌ கூறி,
அவைகளைத்‌ தமக்கு உபாயமாகப்‌ பற்றுகிறேன்‌ என்றார்‌.
இங்குக்‌ கூறப்பட்ட பற்றுதல்‌ மாந ஸீகமே யாயினும்‌ அமையும்‌ கார்யகரமாகைக்கு.

————–

அவதாரிகை:–
முன்‌ ஸ்லோகத்தில்‌ ராமாநுஜ: முனிவரது ஸம்ஸார உத்தாரகத்வம்‌ கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌” அதற்குக்‌ காரணமாகிய காம க்ரோதாதி: துஷ்ட குணங்களில்லாமை,
சத் குணங்களுக்கு உறைவிடமாயிருத்தல்‌ முதலிய பெருமையையும்‌,
ஸ்ரீ மணவாள மாமுனிவரின்‌ இன்னருளால்‌ அப்பெருமையை இவர்‌ பெ.ற்றமையையும்‌ கூறி,
இத்தகைய ப்ரபாவம்‌ வாய்ந்த ராமாநுஜ முனிவ:ரின்‌ திருவடிகள்‌,
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கல்பக வ்ருஷம்‌ போன்றவை எனக்‌ கூறி
அவைகளைச்‌ சரணம்‌. புகுகிறார்‌.

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே--2-

பதவுரை:–
காந்தோ பயந்தருமுநி வர்ய – அழகிய மண:வாள மாமுனிவரின்‌,
தயா – கருணையினால்‌,
ஆத்த பூம்ந- பெறப்‌ பட்ட பெருமையை யுடையவரும்‌,
காமாதி- காமம்‌ க்ரோதம்‌ முதலியவற்றை,
நிக்ரஹ கரஸ்ய- அடக்குமவரும்‌,
குணாம்பு ராசே: – சற் குணங்களுக்‌குக்‌ கடல் போன்றவருமான,
வநாத்ரி லக்ஷ்மண முநே : – வான மாமலை ராமாநுஜ முனிவரது
நத லோக –தன்னை. வணங்கும் ஜனங்களுக்கு,
கல்ப வ்ருஷாயமாண் -கற்பக வ்ருக்ஷம் போல்‌ ஆசரிக்கின்‌ற,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்‌

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதலடியில்‌ -இம்முனிவர்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌
அதனால்‌ பெற்ற அதிசயத்தை உடையவர்‌ என்றார்‌.
இரண்‌டாமடியில்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, *மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று கூறப்படும்‌ ஸஹஜ சத்ருக்களையும்‌
அடக்குமவரென்றும்‌, சற் குணங்கள்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌ என்வும்‌ கூறினார்‌.
இங்கு காமாதிகள்‌ சேரா வண்ணம்‌ துறத்துமவர்‌ எனப் பொதுவாசுக்‌ கூறியதனால்‌ –
தம்மை ஆஸ்ரயித்த பிறருடைய காமாதிகளையும்‌ துறத்தும்‌ ஆற்றல் வாய்ந்தவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌.
சற்குணங்‌களுக்குக்‌ கடலென்றதனால்‌ ஒரு நாளும்‌ வற்ருத சற்குண ஸம்பத்தர்‌ இவர்‌ என்றதாயிற்று.
இனி ஸ்லோகத்தின்‌ பிற்‌பகுதியால்‌ இப்படிப்‌ பெருமை வாய்க்த வநாசல ராமாநுஜ முனிவரது,
தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கற்பக வ்ருக்ஷம்‌ போன்றதான திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌.
இதில்‌ -நத லோக–தம்மை வணங்கிய ஜனங்களுக்கு”’ எனப்‌ பொதுவாகக்‌ கூறியதால்‌
தம்மை வணங்கியவரின்‌ பெருமை சிறுமைகளைப்‌ பார்த்துக்‌ கொடுக்கும்‌ புன்மை
திருவடிகளுக்கில்‌லாமை கூறப்பட்டதாகும்‌.
கற்பக வ்ருஷமென அவைகளைக்‌ கூறியதால்‌ நினைத்த மாத்திரத்திலே இம்மை மறுமைப்‌ பயன்களை
அர்த்தித்தார்‌ அர்த்தித்தபடியே கொடுக்கும்‌ பெருமையும்‌ கூறப்பட்டதாகும்‌.

——–

அவதாரிகை:–
இம் முனிவர்‌ மா முனிகளின்‌ கருணைக்‌குப்‌ பாத்திரமாய்‌, அதனால்‌ இவர்‌ பெற்ற மிகச்‌ சிறந்த
வைராக்ய . குணத்தை விரித்துக்‌ கூறுகிறார்‌, இந்த ஸ்லோகத்தில்‌.

தாராத்மஜாதி ஜநிதம் ஸூக மைஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--3–

பதவுரை:–
தாராத்மஜாதி-பெண்‌டிர்‌ மக்கள்‌ முதலியோரால்‌,
ஐநிதம்‌-உண்டு பண்ணப் பெற்றதும்‌;
ஐஹிகம்‌ – இம்மையில்‌ அநுபவிக்க வேண்டுமதான,
ஸுகம்‌ – சுகத்தை,
ய:-எந்த ராமாநுஜ முனிவர்‌
காராக்ருஹ – சிறைக்‌ கூடத்தில்‌,
ப்ரபவ – உண்‌டாகிய,
து:க ஸமம்‌-துக்கத்தோடு ஓத்ததாக,
விசார்ய-நிர்ணயம்‌ செய்து,
ஸெளம்யோ பயந்த்ரு முநி — அழகிய மணவாள முனிவரின்‌,
பாத யுகம்‌-இரு பாதங்களையும்‌,
சரித: – ஆஸ்ரயித்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வநாசல ராமாநுஐ முனிவரது திருவடி.களை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

இவ் வுலகில்‌ மற்றையோர்‌ ஸுகங்களென ப்ரமித்துக்‌ களிக்கும்‌, மனைவி மக்கள்‌ முதலியோரால்‌
உண்டாகக் கூடிய ஸுகங்கள்‌ சிறைக் கூடத்திலனுபவிக்கும்‌ துன்பத்தோ டொப்பானவை
என இம் முனிவர்‌ தீர்மானித்து, மாமுனிகளின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புக்கார்‌ என்கிறார்‌.
அது எவ்வாறு எனில்‌
சிறைக்‌ கூடமென்பது ஓருவன்‌ செய்த தீச் செயலுக்குத்‌ தக்கவாறு அரசனால்‌ சிக்ஷை விதிக்கப் பெற்று
அடைத்து வைத்திருக்கு மிடமாகும்‌.
அது போலவே ஸம்ஸாரமமும்‌ சிறைக்கூடமே யென்‌னத்‌ தட்டில்லை. எப்படி. எனில்‌
அவ்வவ ஜீவன்‌ முன்பிறவிகளில்‌ செய்த கன்ம: பலங்களை யநுபவிக்க வேண்டியே ஈசஸ்வரனும்
ஸம்ஸாரத்தில்‌ பிறக்கும்படி. செய்யப்படுவதால்‌ :-அதுவும்‌ சிறைக்கூடமே.
ஸம்ஸாரத்திலும்‌ சிலர்‌ நெடு நாள்‌ சுகவான்களாயும்‌ ஆரோக்யாதிகளை யுடையராயும்‌ ஸ்வதக்‌தரர்களாயும்‌ காணப்படவில்லையா ?
எனவே எவ்வாறு இது சிறையாகுமெனில்‌, நன்கு ஆராய்ந்தால்‌ அதன்‌ உண்மை புலனாகும்‌.
நாம்‌ ஸம்ஸாரத்தில்‌ சிறிது சகம்‌ பெற்றாலும்‌ அது அற்பமும்‌ அஸ்திரமுமாகையாலும்‌, அதுவே மேலும்‌.
பல பிறகளாகிய -சிறைகளுக்குக்‌ காரணமாவதாலும்‌,
அது மேலெழப்‌ பார்ப்பவர்களுக்கு ஸு கமாகத்‌ தோன்றினாலும்‌ உண்மையில்‌ துக்கமேயாகும்‌.
எனவே தான்‌ நிரூபணத்தில்‌ இழிந்த ஆழ்வார்கள்‌
“*பெண்டிரால்‌ சுகங்களுய்ப்பான்‌ பெரியதோ ரிடும்பை பூண்டு” என்றும்‌,
* ஒரு நாயகமாய்‌ ஒட உலகுடனாண்டவர்‌…பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ ‘” என்றும்‌
ஸம்ஸார ஸுகம்‌ துக்கமென்‌ பதையும்‌,
ஐச்வர்யம்‌ ௮ஸ்‌ திரமாகையால்‌ துக்காஸ்பதமென்‌பதையும்‌ கூறியுள்ளனர்‌.
சிறைக்கூடத்திலும்‌ அரசன்‌ உதாரனா யிருந்தால்‌ சிறிது ஸுகமெய்தலா மல்லவா?
அது போலவே தான்‌ . ஸம்ஸார ஸுகமும்‌ என்னத்‌ தட்டில்லை.
இப்படித்‌ தீர்மானித்த இம் முனிவர்‌ செய்தது என்‌ என்னில்‌?’
ஸாஸ்வதமான சுகத்தைப்‌ பெற அழகிய மணவாளமுனிவரின்‌ திருவடியைச்‌ சரணமாகப்‌ பற்றினார்‌.
அது போலவே யானும்‌ மாமுனியைச் சரணம்‌ புக்க, இம் முனிவரது திருவடிகளிலே:
எனது தலையை மடுக்கிறேன்‌ என்‌கிறார்‌.

——–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தில்‌ இவருக்கு உண்டாகிய விரக்தி கூறப்பட்டதல்லவா ?
இந்த.ஸ்லோகத்தில்‌ அந்த விரக்தி என்னும்‌ குணமானது கிளைத்‌துத்‌ தழைத்துப்‌ படர்ந்ததும்‌,இம்முனிவரிடமே எனக்‌ கூறப்‌ படுகிறது

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--4–

பதவுரை :–
ஆதெள – முதலிலே,
ஹநூமதி – ஆஞ்ச நேயரிடத்தல்‌,
ப்ரஸுூதா – உண்டானதும்‌,
பச்சாத்‌ -பிறகு,
குரு ப்ரவரம்‌ – குரு வம்சத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரான பிஷ்மரை ,
ஏத்ய- அடைந்து,
விவ்ருத்திம்‌ – மிகுந்த விருத்தி ,
ஆப்தா – ௮டைந்ததுமான,
விரக்தி லதா –விரக்தி யென்னும் கொடியானது,
யம்‌-எந்த ராமாநுஜ முனிவரை,
உபேத்ய – கட்டி யடைந்து,
சாகா ஸஹஸ்ரருசிராய முபேத்ய- ஆயிரக்கணக்கான =அகேகம்‌ மனதைக்‌ கவர்வதாக இருக்கிறதோ,
தாத்ருக்‌ – அப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி – வானகிரி முநிவரின்‌,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,.
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

விரக்தி என்பது: செவி, வாய்‌, கண்‌, மூக்கு உடலெனப்படும்‌ இந்திரியங்களுக்கு விஷயங்களாகிய,
சப்த ரஸ ரூப கந்த ஸ்பர்சங்களில்‌, அவ்விந்த்ரியங்கள்‌ புகாமல்‌ காத்தலே யாகும்‌.
இந்த விரக்தியை ஓர்‌ கொடியாக நிரூ பணம்‌ செய்கிறார்‌ மஹார்யர்‌.
ஓரு கொடி முதலில்‌ விதையிவிருந்து உண்டாகிக்‌ கொள்‌ கொம்பில்‌ படர்ந்து பின்‌ பெரிய மரத்தைச்‌ சார்ந்து
பூர்ணமாகப்‌ படர்வது போல்‌, இக்த விரக்‌திக் கொடியும்‌ இம்‌ முநிவரைப்‌ பற்றி அநேகக்‌ கிளைகளுடன்‌
பூர்ணமாகப்‌ படர்ந்து இலங்குகின்‌றது என்கிறார்‌.
இக் கொடி முன்பு த்ரேதாயுகத்தில்‌ அநுமானிடம்‌ முளைத்தது;
பின்னர்‌ குருவம்சத்‌ தரசனாகிய பீஷ்மரிடம்‌ விருத்தியை யடைந்தது.
இக் கலியுகத்தில்‌ இந்த ராமானுஜ முனியிடம்‌ நன்கு படர்ந்து அகேகம்‌ கிளைகளோடு கூடியதாய்‌
கண்டவர்‌ மனதையும்‌ ஆகர்ஷிக்குமதாய்‌ இருக்கிறது என்கிறார்‌.
அனுமானையுங்‌ காட்டில்‌ பீஷ்மரிடம்‌ வைராக்யம்‌ அதிகம்‌ என்பது, தமது உயிரையும்‌ த்ருணமாக மதித்து
அவர்‌ ப்ரும்ஹசர்யத்தைப்‌ போற்றி வந்ததாலாகு மென்பது கீழ்‌ மங்களாசார்ஸந உரையில்‌ விரிவாய்க்‌ கூறப்பட்டிருக்கிறது.
அந்த பீஷ்மரைக் காட்‌டி.லும்‌ ஸ்வாமி ராமாநுஐ முனிவரிடம்‌ ௮ந்த வைராக்யம்‌ அதிகம்‌ என்பது எவ்வாறு என்னில்‌?
காம க்ரோதாதிகளே நிறைந்த இக் கலி காலத்திலும்‌ காமப்‌ பயனைப்‌ பெறுவிக்கும்‌ கிரஹஸ்தாஸ்ரமத்தை பீஷ்மர்‌
தமது தந்தையின்‌ சுகாநுபவத்துச்காகத்‌ துறந்தது போலல்லாமல்‌,
**இல்லறம்‌ தமது ஆசார்யா நுவர்த்தன கைங்கர்யாதி களுக்கு விரோதி ‘ என்று ஒரு நிர்ப்பந்தமுமின்றி
தாமே அதைத்‌ துறந்து விரக்த்தியை ஏறிட்டுக் கொண்டதாலாகும்‌.
இங்கு “சாகர ஸஹஸ்ரருசரா ”’ என்று பல கிளைகளாய்க்‌ கிளைத்‌ததாலும்‌ இங்கு அது பூர்ணம்‌. அதாவது
இவரது விரக்தியின்‌ ‘பெருமையைக்‌ கண்டு கிரஹஸ்தர்களான இவரது சிஷ்யர்களும்‌ மிகுந்த வைராக்ய சாலிகளானார்கள்‌ என்பது வரமங்கைமுனி வைபவத்தில்‌ காணலாம்‌.
ஸ்வாமி யின்‌ ஞான புத்ரனான ராமானுஜம்‌ பிள்ளான்‌ மிகுந்த வைராக்ய முள்ளவராதலால்‌ ஓரு கால்
அவருடைய பத்னீ ஸர்வபூஷணா லங்க்ருதையாய்‌ எதிரில்‌ நிற்க,
**நீ எனக்கு ப்ரதி கூலையாகா நின்றாய்‌; பதிவ்ரதைக்குச்‌ சீலமன்றோ: பூஷணம்‌. இந்த பூஷணங்களால்‌ ஆவது என்‌?’” என்று க்ஷேபிக்க,
அவளும்‌ கடுகடுங்கி தனது ஆபரணங்களை யெல்லாம்‌ களைந்து பர்த்தாவிடம்‌ கொடுத்தாள்‌.
அவரும்‌ எல்லாவற்றையும்‌ வாங்கி உருக்கி வானமாமலை தெய்வ நாய்கப்‌ பெருமாளுக்குத்‌ திருமார்பு லக்ஷ்மியாய்‌ ஏறி யருளப்‌ பண்ணி,
தமது ஸ்வாமியின்‌ அநுமதியின்‌ பேரில்‌ ப்ரதிஷ்‌.டி.ப்பித்துச்‌ சாத்தியருளினர்‌” என்‌றதனால்‌
பல சிஷ்யர்கள்‌ இவரது வைராக்யத்தையே கடைப்பிடித்தனர்‌ என்பதும்‌: இதுக்குத்‌ தக்க சான்றாகுமல்லவா ?
ஆதலால்‌ அகேகங்‌ கினைகளு டன்‌ படர்ந்தது எனக்‌ கூறினர்‌. நிற்க
௮ந்த வானமாமலை ராமாநுஜ முனிவரிடம்‌ அக் காலத்தில்‌ ஸந்யாஸம்‌ பெற்ற: வைராக்யசாலிகள்‌ சிலரும்‌,
பிறகு காலதுவரையில்‌ அந்தப்‌ பட்டத்தை அலங்கரித்து வரும்‌ ஸ்வாமிகள்‌ பலரும்‌ வைராக்ய பூர்ணராய்‌
ஸந்யஸித்து அவரது கைங்கர்யங்களை அநுஷ்டித்து வருவது அவர்‌ மூலமே யாகையாலும்‌
அவ்‌ வைராக்யம்‌ அவரை யாஸ்ரயித்துப்‌ பல கிளைகளுடன்‌ படர்ந்தது என்னக்‌ குறையில்லை.
இத்தகைய வைராக்யம்‌ வாய்ந்த முனிவரின்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌. –

———-

அவதாரிகை:-
இந்த ஸ்லோகத்தில்‌, முன்‌ கூறப்பட்ட.
சிறந்த வைராக்ய ஸ்ரீ மாத்திரமின்றி
பகவத்‌ கைங்கர்ய ஸ்ரீயும்‌ இம்முனிவரிடம்‌ குடி கொண்டது என்கிறார்‌,

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்யம்‌  ஆரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வர வரஸ்ய யதீஸிதுஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

பதவுரை:–
யதீஸிதுஸ் – யதிகட்கு இறைவனாகிய,
வரவரஸ்ய ஸ்ரீவரவரமுனிவரது,
ப்ரீத்யை பரம்‌-ப்ரீதியை உத்தேசித்தே,
ய: – எந்த வாகாசல முனிவர்‌,
பணி நாதவத்‌ – ஆதி சேஷனைப் போலே,
வாநாசலஸ்ய – வானமாமலையான எம்‌ பெருமானுக்கு,
வர மண்டப – சிறந்த. மண்டபங்களென்ன,
கோபுர – கோபுரங்களென்ன,
ஆதி-.இவை முதலியவற்றின்‌,
கைங்கர்யம்‌ – திருப்பணியை,
ஆரசி தவான் – செய்தனரோ,
தத்‌ – அந்த,
வாநாத்ரி யோகி – வாநாசல முநிவரின்‌,
சரணெள- திருவடிகளை.
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

இதில்‌ இம் முனிவர்‌ யதிகட்கிறை யாகிய.ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருவுள்ளத்தைப்‌ பின்‌ சென்று
அவரது ப்ரீதிக்காகவே “*வானமாமலையே அடியேன்‌.தொழ வந்தருளே” என்ற ஆழ்வார்‌ பாசுரப்படியே
வான மா மலை எம்பெருமானுக்கு சிறந்த மண்டபங்கள்‌, கோபுரங்கள்‌,
ஆதி சப்தத்தால்‌ ப்ராகார வாஹநாதிகள்‌ என்ற. பலவற்றையும்‌ உண்டாக்கி,
பரமபத நாதனுக்கு அங்குப்‌ பரமபதத்தில்‌ சேஷன்‌ என்று கூறப்படும்‌ ஆதிசேஷன்‌
**சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாசுரப்படி அநேக கைங்‌ கர்யங்களையும்‌ செய்யுமாபோலே,
இவரும்‌ இங்கு அநேகம்‌ கைங்கர்யங்களைச்‌ செய்துள்ளார்‌ என்று இவருடைய அநந்‌த அவதாரத்தை ஸூஸிப்பிக்கிருர்‌.
இங்கு **ப்ரீத்யை பரம்‌ வரவரஸ்ய ” எனக்‌ கூறியதால்‌ இவர்‌ இந்த கைங்கர்‌யங்களுக்காக மா முனிகளைப்‌ பிரிய மனமில்லாவிட்டாலும்‌
அவருடைய உகப்புக்காக வானமாமலை எம்பெருமானின் கைங்கர்‌யங்களைச் செய்து அருளிய
ஞான பரிபூர்ணர்‌ என்று இதில்‌ கொண்டாடுகிறார்‌.

——–

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதிஸத்‌ உதாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

பதவுரை:–
பாஷாந்தரேண – வேறு பாஷையான திராவிட பாஷையாக,
பரிணாவத ஆகமாகாம்‌ – மாறுபாட்டை யடைந்த வேதங்களாயும்‌,
ஸ்ரவண அம்ருதாகாம்‌- காதுகளுக்கு அமுதம்‌ போன்றவைகளுமான,
ஸ்ரீ சடாரி வசஸாம்‌ அர்தான்- ஸ்ரீ சட கோபனின்‌ திருவாக்குக்களான திருவாய்மொழி முதலியவற்‌றின் அர்த்தங்களை,
உதாரதர:-மிக உதாரரான,
ய:-எந்த முனிவர்‌,
ஸதாம்‌ – ஸாத்விகர்களுக்கு,
உபாதி ஸத்‌-உபதேஸித்தனரோ,
தத்‌ – அப்படிப்‌ பட்ட,
வாநாத்ரி யோகி-வாநாத்ரி முனிவரது,
சரணெள – திரு வடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌..

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வேத வேத்யனான பரம புருஷன்‌ ஜீவ ராசிகளை உஜ்ஜிீவிப்பிக்க விரும்பி, தனது பெருமையைச்‌
சிறிதும்‌ பாராது-தன்னை ௮ழியமாறி மானீட சாதியிலும்‌ மற்றும்‌ திர்யக்‌ ஸ்தாவர ஜாதிகளிலும்‌ அவதரித்தது போலவே,
அவனை ப்ரதி பாதிக்கின்ற வேதமும்‌, சிலருக்கே ‘அதிகாரமுடையதாகையாலும்‌,,
அதன்‌ அர்த்தங்களும்‌ அநேக சாஸ்த்ர ஞாநா பேக்ஷமாய்‌ கிலேசப் பட்டே அறிய. வேண்டும்படி யிருக்கையாலும்‌,
தன்னால்‌ உலகைத்‌ திருத்த இயலவில்லையே என்று வருந்தி, வ்யாஸ பராசராதிகள்‌ பக்கலில்‌
“* வேத: ப்ராசேத ஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா ” என்கிறபடியே இதிஹாஸ புராணாதிகளாக அவதரித்தாப் போலே,
ஸம்ஸ்கிருத பாஷையை யறியாதாரும்‌ உஜ்ஜீவிக்க வேணு மென்ற க்ருபா அதிசயத்தாலே,
திராவிட வேதமாகவும்‌ பரிணாமத்தை யடைந்தது.
இப்படி மாறுபாட்டுடன்‌ உதித்தவை ஸ்ரீநடகோபன்‌ அருளிச் செய்த திரு வாய்மொழி முதலியனவாம்‌..
இது மற்றய ஆழ்வார்களின்‌.ப்ரபந்தங்களுக்கும்‌ உபலக்ஷணமாகும்‌.

அவையும்‌ நாதமுனி களுக்காக ஸ்ரீ சடகோபன்‌ முகமாக வெளி வந்தவையே.
இவற்றை ** ஸ்ரவண அம்ருதாநாம்‌. ” எனக்‌ கூறியது “*செவிக்‌கினிய செஞ்சொல்லே’? என்றதை அடி யொற்றிய படி.
அம்ருதம்‌ எனக்‌ கூறியதால்‌, இப்‌ரபந்தங்களே
**உள்ளத்தை மாசறுத்து”,
“*இருவினைப்‌ பாசங்கள்‌ நீக்கி”,
**வீடும்‌ தரும்‌”* என்ற விஷயம்‌ ஸூஸிப்பிக்கப்‌ பெற்றது.
இப்படிப்‌ பட்ட அர்த்த விசேஷங்களை ஸத்துக்களுக்கு உபதஸித்த உதாரர்‌ இம் முனிவர்‌.
இங்கு ஸத்துக்களாகிறுர்‌ **ஸந்த மேநம்‌ ததோ விது:” என்று கூறப்பட்ட வேதாந்த ஞான முடைய பெரியோர்கள்‌.
அப்படிப்பட்ட பெரியோர்களுக்கும்‌ இப்‌ ப்ரபந்தார்த்தங்களில் உண்டாகக் கூடிய
ஸம்சய விபர்யங்‌ களைத்‌ தமது உபதேசத்தால்‌ அறவே நீக்கும்‌ சிறந்த ஞானி இவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌.

இங்கு உதார : என்னாதே “உ தார தர:”” எனக்‌ கூறியதால்‌, பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்த ஆழ்வாருடையதும்‌
அதற்குப்‌ பாஷ்யமாக ஈடு முத லிய வ்யாக்யானங்களை அருளிச் செய்த ஆசார்யர்களுடையதுமான, ஓளதார்யங்களைக்‌ காட்டிலும்‌,
அந்த ஈடு முதலிய வ்யாக்யானங்களில்‌ நேராக அறிய முடியாத அர்த்தங்கள்‌ தெளிவு பெறும்படி.
அருளிச் செய்யும்‌ ஆற்றல் வாய்ந்த ஆசார்யர்கள்‌ இல்லாதிருந்த காலத்திலே இவர்‌ எல்லாருக்கும்
உப தேசிக்கையாலே இவர்‌ சிறந்த ஓளதார்யமுடையவர்‌ எனக்‌ கூறினார்‌.

இப்படிப்பட்ட அதிகாரி துர்லபமாயிருத்த படியால்தான்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை மாமுனிகளைப்‌
பகவத்‌ விஷயத்தையே பேணிப்‌ போரும்படி. நியமித்ததும்‌.
ஆகையல்‌“*உதாரதர:” என்னத்‌ தட்டி.ல்லை.
இங்ஙகனன்றியே தமது பீடத்தை உண்டாக்கித்‌ தமது பரம்பரையிலே இன்றளவும் அலங்கரிக்கும்‌ முனிவர்களை
யாவரையும்‌ ஸாதுக்களுக்கு உபதேகிக்கும்படி நித்யமாய்‌ நியமித்த ஒளதார்ய விசேஷத்‌தாலே ** உதாரதர:” எனக்‌ கூறினர்‌ எனவும்‌ கொள்ளலாம்‌.
ஆக இவ்வாறு உதாரரான வானமாமலை மூனிவரின்‌ சரணங்களைச்‌ சரணடைகின்றேன்‌:

—————

அவதாரிகை:–
கீழில்‌ இம்முனிவரின்‌ ஒளதார்யம்‌ பரக்கப்‌ பேசப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌, இவருடைய ** ராமானுஜன்‌ ” என்னும்‌ திரு நாமமே விஷத்தைப்‌ பேர்க்கும்‌ மந்த்ரம்‌ போலே
ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்க வல்லது என்றும்‌,
தன்னை உச்சரிப்பவர்‌களுக்கு பரம புருஷனோடு பரம ஸாம்யத்தையும்‌ (முக்தியையும் ) தரவல்லது என்றும்‌
திரு நாமத்தின்‌ பெருமையைக்‌ கூறி, இவர்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகிறார்‌.

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--7–

பதவுரை :–
ஆர்யா: – பெரியோர்‌,
அநு க்ஷணம்‌ .-ஷணந்தோறும்‌ செய்யப்படும்‌,
யத்‌-எந்த முனிவரது,
நாம கீர்த்தனம்‌ – திரு நாம ஸங்கீர்த்தனத்தை,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
போகி – ஸர்பத்தினுடைய,
விஷ- விஷத்தை,
நிர்‌ ஹரணாய -போக்குவதன்‌ பொருட்டாக
மந்த்ரம்‌-மந்தரமாக,
ஆஹு:-சொல்லுகிறார்களோ,
பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு,
பரேண -பராத் பரனான,
புருஷேண ௪ – புருஷனோடும்‌,
ஸாம்யதம்‌ – ஸாம்யத்தை கொடுக்கவற்றோ, (
தத்‌-௮ப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி-வாநாத்ரி முனிவரின்‌,
சரணெள-திருவடிகளை;
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே–பற்றுகிறேன்‌.

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இம்முனிவரது ராமானுஜன்‌ என்னும்‌ திரு நாமம்‌ ப்ரதி ஷணமும்‌ செய்யப்படுமானால்‌. அது ஒரு மந்த்ரத்தின்‌ கார்யத்தைச்‌ செய்ய வல்லது.
அடிக்கடி ஜபித்து அதன்‌ ஸித்திக்கு உறுப்பாகச் செய்ய வேண்டிய எண்ணிக்கையோடு கூடி ஸித்தியைத்‌ தரும்‌
கருட மந்த்ரமானது, ஸ்மரண மாத்ரத்தாலே எப்படி ஸர்ப்பாதி துஷ்ட ஜந்துக்களின்‌ விஷத்தை நீக்குமோ
அது போலவே அநவரதம்‌ சிந்திக்கப்படும்‌ இந்த ராமாநுஜன்‌ என்லும்‌ இவர்‌ திருநாமம்‌,
ஸம்ஸாரமாகிற. ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்கும்‌.
அது மாத்திரமேயன்றி பரம புருஷனான ஸ்ரீ மந் நாராயணனோடு ஸாம்யத்தையும்‌ அளிக்கும்‌ என்று பெரியோர்கள்‌ கூறுகிறார்கள்‌.
இங்கு ஸம்ஸாரத்தை ஸர்ப்பமாகக்‌ கூறியதால்‌ பாம்பு போலவே ஸம்ஸாரமும்‌ வக்ர கதியை உடையது என்வும்‌,
அப் பாம்பால்‌ தீண்டப்பட்டவன்‌ மூர்ச்சை யுறுவது போலவே இந்த ஸம்ஸார ஸ்பர்சம்‌ பெற்றவனும்‌
உண்‌மையை உணராது மயங்குகிறான்‌ என்றும்‌
அதை நீக்கும்‌ கருட மந்த்ரம்போல்‌ ஸம்ஸார ஸ்பர்சத்தால்‌ வந்த மயக்‌கத்தை நீக்கி உண்மை;உணர்வை அளிப்பது,
அடிக்கடி. உச்சரிக்கப்படும்‌ இந்த முனிவரது திரு நாமமே யாகையால்‌ அதை.மந்த்ரமாகக்‌ கூறுவர்‌
ஞானவான்களான பெரியோர்‌. “* மந்‌தாரம்‌ த்ராயத இதி மந்த்ர:’” என்ற வயுத்பத்திப்படி தன்னை அநுஸந்திப்பவனைக் காப்பாற்றுவது மந்தரம்‌அல்லவா? நிற்க
இத் திருநாமம்‌ நான்கே அக்ஷ்ரமுள்ளதாயினும்‌ திருவஷ்டாரம் போலவே பரம புருஷனாகிய ஸ்ரீ மந் நாராயணனோடு
**பரமம்‌ ஸாம்யம் உபைதி”என வேதத்தால்‌ கூறப்படும்‌ பரம ஸாம்யத்தையும்‌ தர வல்லது.
**நமோ நாராயண திரு மந்த்ரோயாளக:, வைமுண்டபுவமம்‌ சமிஷ்யதீதி” என்ற ப்ரமாணத்‌தின்டடியே
அஷ்டாஷர மஹா மந்த்ரம்‌ ஸ்ரீவைகுண்‌டத்தைக்‌ கொடுத்து
பரமனோடு பரம ஸாம்யத்தையும் கொடுட்பது போலவே இத் திருநாமமும்‌ என்று பணிப்பர்‌ பெரியோர்‌.
அப்படிப்‌ பெருமை வாய்ந்த திரு நாமத்தை யுடையவரான வானாத்ரி முநிவரின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌

———–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகங்களில்‌ ஞான வைராக்‌யாதிகளாலும்‌ திரு நாம ப்ரபாவத்தாலும்‌ வந்த இம் முனிவரது பெருமையைக்‌ கூறி, திருவடிகளில்‌ சரணம்‌ புக்கார்‌.
இனி மேல்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ ஸாஷாத்தாகத்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்தையே கூறி, அவற்றைச்‌ சரணம்‌ புகுகிறார்‌..
அதிலும்‌ இந்த முதல்‌ ஸ்லோகத்தில்‌ ஸ்வாமியின்‌ திருவடிகள்‌ கேவல ஸ்மரணத்தாலே ஜந்மாந்தரத்தில்‌ உண்டான
பாப ஸமூஹத்தையும்‌ நசிப்பிக்கும்‌ பெருமை வாய்ந்ததெனக்‌ கூறிச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--8–

பதவுரை :–
பும்ஸாம்‌ – மனிதர்களுடைய,
புராதந -பழைமையான,
பவ-ஐன்மங்‌களில்‌,
ஆர்ஜித-ஸம்பாதிக்கப்பட்ட,
பாப ராசி:, பாபங்‌களின்‌ திரளானது,
யயோ: – எந்தத்‌ திருவடிகளினுடைய,
ஸக்ருத்‌-ஏக மாவகவே செய்யப்படும்‌,
ஸம்ருத்யா ௮பி-௮நுஸந்தானத்தாலும்‌,
ப்ரளயம்‌-நாசத்தை,
ப்ரயாதி-௮டைகிறதோ,
ஸத்வந்திதெள-பெரியோர்களால்‌ ஈமஸ்கரிக்கப்‌ பெற்றதும்‌,
பரம-மிகச்‌ சிறந்த,
பாவந-பரி சுத்தத்‌ தன்மையையே,
ஏக வேஷெள-முக்கிய ஸ்வரூபமாயுடையதுமான,
வாநாத்ரி யோகி சரணெள-வாநாத்ரி முனிவரின்‌ திரு வடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்‌ரபத்யே- பற்றுகிறேன்‌.

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

இம் முனிவரின்‌ திருவடிகள்‌ புராதனமான அநேக ஜன்மங்களில்‌ ஸம்பாதித்து மனிதர்களால்‌ கூடு பூரிக்‌கப்பட்ட
பாப ஸமூஹங்களையும்‌ ஒருக்கால்‌ ஸ்மரித்த மாத்‌திரத்திலேயே நசிக்கும்படி. செய்கின்றது”என்‌கிறார்‌.

**மனத்‌தினால்‌ சிந்திக்கப்‌ போய பிழையும்‌ புகு தருவான்‌ நின்றனவும்‌ -என்று ஆண்டாளருளிச்‌ செய்ததை
இவர்‌ தமக்கு வகுத்த விஷயத்திலே யாக்கி யருளுகிறார்‌.

பும்‌ஸாம்‌ என்றது ஸ்த்ரிகளுக்கும்‌ உபலக்ஷணம்‌.-ஆசார்ய சரணாரவிந்த சிந்தனத்தில்‌ அதிகார நியமம் யில்லை யிறே.
“*பும்ஸாம்‌” எனக்‌ கூறியதால்‌ வர்ணாசஸ்ரமாதி அதிகார நியதியில்லாமை கூறப்பட்டது.
இது ஸர்வே பரப்மாந: ப்ர.தூயந்தே ‘* என்ற உபநிஷத்‌ வாக்‌யத்தை நினைப்பூட்டுகிறது.
மேலும்‌ இத்திருவடிகள்‌ **ஸந்த மேநம்‌ ததோ-விது:’” என்று கூறப்படும்‌ ப்ரும்ஹ ஞானிகளான
அப்பாச்சியாரண்ணா, ராமானுஜம் பிள்ளான்‌ போன்றவர்களால்‌ வணங்கப்‌ படுமவை,
மிகுந்த புனிதத்‌ தன்‌மையையே தமக்கு ஸ்வரூபமாகக்‌ கொண்டவை.
இத்தால்‌ நித்ய ஸித்தமான அபஹதபாப்மத்வாதி கல்யாண குணங்‌களை யுடையவனே தன்னை ஆஸ்ரயித்தவனுக்கு
அக்‌ குணாஷ்டக ப்ராதுர்பாவத்தைச்‌ செய்விக்கச்‌ சக்தனாமாம் போலே
இத் திருவடிகள்‌ ஸ்மரித்தவர்களின்‌ பா பங்களையும்‌ போக்குவிக்கும்‌ சக்‌தி வாய்ந்தவை யாயின என்று
முற்கூறியதற்குக்‌ காரணமும்‌ இத்தால்‌ ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்‌.
** பரமபாவந தைகவாஸெள *’ என்று பாடங்‌ கொண்டால்‌ “புனிதத்‌ தன்மைக்கு முக்கியமான உறைவிடம்‌ ” என்பதாகும்‌.
தாத்பர்யத்தில்‌ அதிக பேதமில்லை. இத்தகைய திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

———–

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ இத் திரு வடிகள்‌ தான்‌ வேண்டுமோ?

இவைகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாத தீர்த்தமே।தாப த்ரயமாகிற அக்னியை ௮ணைக்க வல்‌லது;
இவைகளின்‌ சம்பந்தம்‌ பெற்று உதிரும்‌ திருவடித்‌ துகளும்‌, உள்ளே உண்டாகும்‌ ரஜோ குணங்களையும்‌ சமகம்‌ ‘செய்யு மவையல்லவா ?
இத்தகைய பெருமை வாய்ந்த இம்‌ முனிவரின்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகன்றேன்‌ என்கிறார்‌.

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

பதவுரை :–
யத் தீர்த்த வாரி – எந்தத்‌ திருவடிகளில்‌ நின்றும்‌ கிரஹிக்கப்பட்ட ஸ்ரீபாததீர்த்தம்‌,
விமலம்‌ – பரி சுத்தமானதாய்க்‌ கொண்டு,
கலிகால -கலியுகமாகிற,
ஸமீரண – காற்றினாலே,
உத்த – வ்ருத்தி யடைந்த,
தாப த்ரய – ஆத்யாத்மித ஆதிபெளதிக ஆதி தைவங்கள் என்னும்‌ தாபங்கள்‌ மூன்றாகிற,
௮க்நி -நெருப்பை,
சமகம்‌ – அணைக்கத் தகுந்ததோ,
யத் ரேணு: – எந்தத்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததுளி,
அந்தர – மனதில்‌ உண்டாகும்‌,
ரஜ: – ரஜோகுணத்தை,
ப்ரசமாய ௪ – நீக்குவதன் பொருட்டு ஆகிறதோ,
ஏத்த் வாநாத்ரி யோகு சரணெள – இத்தகைய சக்தி வாய்ந்த
வாநாத்ரி முனிவரது இத் திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ட்ரபத்யே – பற்றுகிறேன்‌-

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்க வல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கல்மஷ மற்று பரிசுத்தமான, இம்முனிவரின்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததீர்த்தம்‌
கலி யுகமாகிய காற்றின்‌ ஸஹாயத்தினால்‌ அபிவ்ருத்தி யடையும்‌,
ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகம்‌ என்னும்‌ அக்நியை அணைக்கும்‌ சக்‌தி வாய்க்தது.
ஆத்யாத்மிகமென்பது சரீரதீதிலுண்டாகும்‌ நோய்களாலான துன்பங்களும்‌ நாசமும்‌.
ஆதிபெளதிகமென்பது கரடி. புலி காளை முதலியவற்‌றால்‌ ஏற்படும்‌ துன்பம்‌ நாசம்‌ முதலியன.
ஆதி தைவிகமென்‌பது இடி. மின்னல்‌ முதலியவற்றால்‌ தெய்வீகமாய்‌ ஏற்படும்‌ துக்கங்களும்‌ நாசங்களுமாகும்‌.
இவைகளை அக்நி யாக நிரூப ணம்‌ செய்ததால்‌ அக்நி தனக்கு ஆதாரமான விறகுகளையும்‌ அழிப்பது போல்‌
இதுவும்‌ ஆஸ்ரயத்தை அழித்தே தீருமென்‌பதைக்‌ தெரிவிக்கிறது.
கலி காலத்தை வாயுவாகக்‌ கூறியதால்‌ அக்நிக்கு அநுகூலமாய்‌ அதை வ்ருத்தி செய்விக்கும்‌ வாயுவைப் போல்‌
கலிகாலம்‌ அந்தத்‌ தாப த்ரயங்களுக்கும்‌ அநுகூலமாய்‌ அவற்றை வ்ருத்தி செய்கிறது என்ற அம்சம்‌ கூறப்பட்ட தாகும்‌.
தாப த்ரயத்தை அக்நியாய்க்‌ கூறியதால்‌ இது சீக்‌கிரம்‌ பரவும்‌ ஸ்வபாவமுடையது என்றும்‌
தாமதித்தால்‌ அணைக்கக்‌ கூடாதவை எனவும்‌ தோற்றுகிறது.
எனவே அத்தகைய தீயை யணைக்கும்‌ தன்மை வாய்ந்தது இந்த முனிவ:ரின்‌ ஸ்ரீபாத தீர்த்தம்‌.
இப்படி ப்ரபாவம்‌ வாய்த்த ஸ்ரீபாத தீர்த்தம்‌ இன்றளவும்‌ நாம்‌ பெறும்படி யிருப்பதும்‌ நமது பாக்ய வசமேயாகும்‌. நிற்க
இத் திருவடிகளின்‌ துகளும்‌ மனிதனின்‌ உள்ளத்து உண்டாகும்‌ ரஜோ குணத்தைப்‌ “போக்கும்‌ தன்மை பெற்றதாயிருக்கிறது.
ஒரு ரஜஸ்௭ு மற்றொரு ரஜஸ்ஸைப்‌ போக்குிறபடி என்னே?
இப்படிப்‌ பெருமை வாய்ந்த இத் திருவடிகளைச்‌ சரண்‌ புகுகின்றேன்‌.

———

அவதாரிகை :–
கீழ்‌ திருவடிகளின்‌ ஸ்மரண ப்ரபாவமும்‌ தீர்த்த ப்ரபாவமும்‌ ரஜஸ் ப்ரபாவமும்‌ கூறப்‌பட்டன.
இந்த ஸ்லோகத்தில்‌ பெரியோர்களும்‌ இந்தத்‌ திரு
வடி.களில்‌ வந்து ஆஸ்ரயிப்பதால்‌ வந்த பெருமையைப்‌ பேசி அவற்றைச்‌ சரண்‌ புகுகிறார்‌.

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–10–

பதவுரை
வாதூல வம்ச திலக: – வாதூல குலத்‌திற்கு அலங்காரமான: திலகம்‌ போன்றவரும்‌,
வாத்ஸல்ய ஸிந்து: – வாத்ஸல்யமென்னும்‌ குணத்திற்கு கடல்‌ போன்றவரும்‌,
அகில ஆத்ம குண சமதமாதி களான எல்லா ஆத்ம குணாங்களாலும்‌,
உபபந்ந; – நிறைந்‌த தாயும் இருக்கிற,
வரதார்யவர்ய : –வரதாசர்ர்யர்‌ என்று திருநாமமுள்ள அப்பாச்சி யாரண்ணா என்பவர்‌,
யயோ : – எந்தத் திரு வடிகளில்‌,
சகலம் – எல்லாவிதமான,
நிஜ பரம்‌-“தம்முடைய பாரத்தை,
நிக்ஷிப்தவான்‌ – வைத்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வானமாமலை முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே –

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கந்தாடைத்‌ திருவம்சத்திற்குத்‌ திலகம்‌ போன்றவரும்‌,
கோயிலண்ணனின்‌ சிறிய தகப்பனார்‌ குமாரரூம்‌,
திருமஞ்சனம்‌ அப்பா என்பவருக்கு தெளஹித்‌தராயும்
ஆய்ச்சியின்‌ குமாரருமாய்‌, -வாத்ஸல்யமென்‌ னும்‌ குணத்திற்குக்‌ கடல்போன்றவரும்‌
சமதமாதி அநந்தாத்ம குண பரிபூர்ணருமான அப்பாச்சியா ரண்ணா என்று வழங்கும்‌ திருநாமமுடையவருமான்‌ வரதாசார்யர்‌ என்பவர்‌,
இம் முனிவரது திருவடிகளையே பற்றி அவைகளிலே தமது பரத்தை எல்லாம்‌ ஸமர்ப்பித்து நியஸ்த பரராயிருந்தார்‌.
அதாவது ஆகிஞ்சந்யம்‌ அநந்ய கதித்‌வம்‌ இவைகளை முன்னிட்டு இந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளையே உபாயமாகப்‌ பற்றிப்‌ பின்பு
ஸ்வ ரக்ஷணத்‌தில்‌ அந்வயமின்றி ஓடத்தில்‌ ஏறியவன்‌, தன்னைக்‌ காப்பாற்‌றும்‌ பொறுப்பை ஓடக்காரனிடம்‌ விட்டு விட்டுக்‌
கரை சேரும்‌ காலத்தையே சிந்தித்துக்‌ கொண்டிருப்பதுபோல்‌ இத் திரு வடி.களிலே தமது பொறுப்பை ஓப்புவித்தபடியால்‌,
**கூவிக் கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ ”” என்று இருந்தார்‌.
ஆசார்யரும்‌ ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அப்புறப்படுத்துமவனாகையால்‌ ஓடக்காரனாகவே கொள்ளப்படலாம்‌.
எனவே சிறந்த குடிப்‌ பிறப்பும்‌ ஆத்மகுணமும்‌ நிறைந்த பெரியோரும்‌ தமது பாரத்தை ஒப்புவிக்கும் பெருமையை யுடையரான வாநாத்ரி முனிவரின்‌
திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌, போரேற்று நாயனார்‌ என்று சொல்லப்படும்‌ ஸமரபுங்க வாசாரியர்‌ என்‌ற
மற்றொரு பெரியோரால்‌ அர்ச்சிக்கப்பட்டது இம்முனி
வரின்‌ திருவடி என்று .அதன்‌ பெருமையைக்‌ கூறி,
அத்‌திருவடிகளையே சரணம்‌ புகுகிறார்‌.

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம்நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–11–

பதவுரை
ஸத்வருத்த – சிறந்த ஸதாசாரங்களுக்கு,
ஸம்பவபுவா – உத்பத்தி ஸ்‌தானமாயும்‌,
சம – மன அடக்கத்திற்கும்‌,
தாந்தி – மற்‌றைய இந்த்ரியங்களின்‌ அடக்கத்திற்கும்‌,
ஸீம்நா – எல்லை நிலமாயும்‌,
ஸத்வந்‌ தீதே – ஸாதுக்களால்‌ வணங்கப் பெற்றவரும்‌, நிகமாஞ்சல-வேதாந்தங்களின்‌,
ஸார–ஸாரார்த்தங்களால்‌, (அறிந்தமையால்‌-வந்த)
பூம்நா – பெருமையை யுடையவருமாயிருக்கிற,
ஸமர புங்கவ தேசிகேக – ஸமர புங்கவர்‌ என்னும்‌ ஆசார்யனாலே,
ஸம் பூஜஷிதெள -நன்கு! பூஜிக்கப்பட்ட,
வாநாத்ரி யோகி சரணெள – வாநாசல முநிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே -பற்றுகிறேன்‌.

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

போரேற்று நாயனார்‌ எனப்படும்‌ ஸமர புங்கவாசார்யர்‌, சிஷ்டர்களின்‌ மிகச்‌ சிறந்த ஆசாரங்களுக்கு விளையும்‌ பூமி எனப்‌ போற்றப்படுமவர்‌.
மனதை அடக்கி யாளுகையாகிற :*: சம’”மென்னும்‌ குணத்திற்கும்‌,
மற்றய கண்‌ முதலிய வெளி இந்த்ரியங்களை அடக்க யாளுகையாகிற.** தமம்‌ ” எனப்படும்‌ குணத்திற்கும்‌
எல்லை நிலமென்றும் மெச்சப்படுமவர்‌;
ஞானிகளான ஸாதுக்களும்‌ வணங்கும்‌ பெருமை வாய்ந்தவர்‌.
** வேதாந்த வாக்யங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ நன்கு உணர்ந்தவர்‌ ‘” ஏன்னும்‌ அதிசயம்‌ வாய்க்‌கப்‌ பெற்றவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஸமர புங்கவராலும்‌ இம்முனிவரது திருவடிகள்‌ நன்கு பூஜிக்கப்‌ பெற்றன என்றால்‌
இதனில்‌ மிக்க பெருமையும்‌ உண்டோ ?’
அப்படிப்பட்ட இம்முனிவரின்‌ திருவடிகளை அடைக்கல மாகப்‌ பற்றுகிறேன்‌.
ஸதாசாரங்களும்‌ சமதமாதி குணங்‌களும்‌ ஞானிகள்‌ வணங்கும்‌ பெருமையும்‌ வாய்ந்து,
வேதாந்த.ஸாரார்த்த ஞானமு முடைய ஸமரபுங்கவரும்‌ இவர்‌ திருவடி.களை ஆஸ்ரயித்து அவற்றை பூஜிப்பர்‌ என்றால்‌,
இம்முனிவரிடம்‌ ஸதாசார ஞான வைராக்யாதி குணங்கள்‌ எவ்வளவு பூர்ணமாக இருக்க வேண்டுமென்பது,
கைமுதிக நியாயத்‌தாலே ஸித்தமான தொன்றன்றோ?
இத்தால்‌ “ஒப்பற்ற ஞான வைராக்யாதிகளை யுடைவர்‌ இத்த ராமாநுஜ முனிவர்‌’” என்றது ஸூஸிப்பிக்கப்‌ பட்டதாகும்‌.

——-

அவதாரிகை:–
இப்படித்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்‌தைக்‌ கூறிப்‌ பின்னும்‌ இந்த வாநாத்ரி முனிவரின்‌ வைராக்‌யம்‌ பக்தி ஞானம்‌ என்ற குணங்களில்‌
ஓவ்வொரு குண விஷயத்திலும்‌ ஒருவரிருவரை உபமானமாகக்‌ கூறி
**இவருக்கு ஓப்பாமவர்‌ உலகில்‌ ஒருவரும்‌ இலர்‌” என்கிறார்‌.

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

பதவுரை:–
வாநாத்ரி லஷ்மணமுநே –வாநாத்ரி ராமாநுஐ முனிவரது,
வைராக்யம்‌ – வைராக்யம்‌ என்னும்‌ குணம்‌,
யதி(வர்ண்யதே)-நிரூபணம்‌ செய்யப்படுமேயாலால்‌,
வாயு – வாயு தேவனுடையவும்‌,
சந்தனு- சந்தனு மஹாராஜனுடையவும்‌,
ஸுத-புத்ரர்களான அறுமானை

எம்பெருமானார்‌, மணவாள மாமுனிகள்‌ இவர்களின்‌ ஞாநத்‌தின்‌ ரீதியை இவரது ஞானம்‌ உடையதாக ஆகும்‌.
பூர்வாசார்யர்களின்‌ ஞானத்தோடொத்த ‘ ஞானத்தை: உடையவர்‌ எனத்‌ தேறிற்று.
இப்படிப்பட்ட ஞான பக்தி வைராக்யங்களை யுடையராய்‌ இருப்பதால்‌ உலகில்‌ இம்‌.முனிவர்க்கு ஓப்பாவார்‌ ஒருவருமில்லை என்கிறார்‌.
இங்கு.கீழே ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஓவ்வொன்றுக்கும்‌ உபமானமாக சிலரைக்‌ கூறியிருக்க

கோவாஜகத்யா ம்ஸம:–உலகில்‌ ஓப்பாவார்‌ மார்‌? எனக்‌ கேட்பது அஸம்பாவித மன்றோ?
எனச்‌ சிலர்க்கு சங்கை பிறக்கக்கூடுமல்லவா ? அதற்குப்‌ பரிஹாரம்‌ என்‌? என்னில்‌,.
வைராக்யத்திற்கு அனுமான்‌ பீஷ்மர்‌ இருவரையும்‌,
பக்திக்கு நம்மாழ்வார்‌ “முதலிய பல ஆழ்வார்களையும்‌,
ஞானத்திற்கு நாதமுனிகள்‌ முதலிய பல ஆசார்யர்களையும்‌ இவர்‌ உபமானமாகக்‌ கூறிய தால்‌,

ஓவ்வொரு குணத்திற்கே இவர்‌ குணப்‌ பெருமையால்‌ பலரை உபமானமாகக்‌ கொள்ளவேண்டி. யிருப்பது தெளிவு…
எனவே எல்லா குணங்களும்‌ சேர்ந்து திரண்டு இருக்கும்‌ இவரைப்‌ போன்ற அக்‌ குணங்களுக்கு ஆஸ்ரய மில்லாமை.
ஸித்திப்பதால்‌ இவருக்கு ஓப்பாவார்‌ யார்‌ என்றார்‌.
௮ன்‌றியே
இவரது வைராக்ய பக்தி ஞானங்களுக்கு தெய்வாம்சம்‌. பகவதாஞ்ஞையால்‌ ஆழ்வார்களும்‌ ஆசார்‌யர்களுமாய்‌
அவதரித்த நித்ய ஸூரிகளும்‌ ஒப்பாமதொழிய-இவ் வுலகில்‌ கர்மமடியாகப்‌ பிறந்தார்‌ ஓப்பாவரோ? என்றுமாம்‌.
அல்லது ௮க்காலத்திலுள்ளார்‌ ஒப்பாமதொழிய இக்‌.காலத்தவர்‌ ஒருவராவது இவரோடு ஓப்பாமவர்‌ உளரோ என்றுமாம்‌.
** ஐகத்யாம்‌”” (இவ்வுலகில்‌) எனக்‌ கூறிய தால்‌, அவ்வுலகில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ உள்ளவர்‌ ஒப்பாவர்‌ எனத்‌ தேறுகிறதல்லவா ?
எனவே கீழ்க்‌ கூறியவாறு ஆழ்வார்கள்‌ ஆசார்யர்கள்‌ உபமானமாசக்‌ கொள்‌ளப்படுவதில்‌ ஆக்ஷேபம்‌ ஏதுமில்லை என்பதும்‌ உணரத்‌ தக்கது.

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஒப்பாவார்‌ ஒருவருமில்லை என்றார்‌.
‘இந்த ஸ்லோகத்தில்‌ பகவத்‌ கைங்கர்ய விஷயத்திலும்‌, பகவத்‌ பஜந விஷயத்திலும்‌, பாகவத ஸேவா விஷயத்திலும்‌
ஆசார்ய சரண கமலார்ச்சன விஷயத்திலும்‌ ஓவ்வொன்‌றுக்கும்‌ ஓரொருவரை உபமானமாகக்‌ கூறி,
இவரது ஒப்பற்ற தன்மையை நிரூபணம்‌ செய்து, இவரே சிறந்த குணங்கட்‌கெல்லாம்‌ முக்கியமான உறைவிடம்‌ என்கிறார்‌.

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர--13-

பதவுரை :–
௮ஸ்ய-இந்த முநிவருடையதாய் ,- முனிவர்‌ செய்த என்றபடி,
வானசைல – வானமாமலை என்ற திருநாமமுள்ள,
கமலாகாந்தஸ்ய -லக்ஷ்மீ வல்லப விஷயமான,
கைங்கர்யம்‌ – மண்டப ப்ராகாராதி நிர்மாண ரூபமான திருப் பணிகள்‌,
நிரூப்யதே யதி ..ஆராயப்படுமாயின்‌,
சேஷக்ரமாத்‌ – ஆதிசேஷனுடைய**சென்றால்குடையாம்‌” என்ற கைங்கர்ய க்ரமத்தை அதுஸரித்ததாக,
ஸ்யாத்‌ – ஆகும்‌.
பஜே – அநத எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌,
தத் பக்த பூஜாவிதெள-அவ்‌ வெம்பெருமானிடம்‌ பக்தி பூண்ட பாகவதர்களை ஆராதிக்‌கும்‌ விஷயத்திலும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
ப்ரீதி: -சந்தோஷமானது,
நிரூப்யதே சேத்‌-ஆராயப்படின்‌,
குலசேகரஸ்ய (இவ) குலசேகர ஆழ்வாருடையது (போல),
ஸ்யாத்‌-ஆகும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
(சார்ய) -ஆசார்யனுடைய,
அங்கரிஸசரோருஹ – தாமரை போன்ற திருவடிகளின்‌,
அர்ச்சகவீதெள-அர்ச்சு ப்ரகாரத்‌தில்‌,
உஜ்வலா : – நன்கு விளங்குகின்ற,
தா : தா:-அந்தந்த
ப்ரக்ரியா : – ப்ரகாரங்கள்‌, அநுஷ்டானங்களென்றப்டி,
யதி நிரூப்யக்தே – ஆராயப்படுமானால்‌,
மஞ்ஜுகவே:((இவ)-ஸ்ரீமதுரகவிகளுடையது போன்றதாக, (ஸ்யாத்‌)ஆகும்‌,
(ஆகையால்‌) வாநாத்ரியோகீஸ்வர : – வாநாசல முநிவர்‌, குணைகஸதகம்‌-குணங்கட்கொல்லாம்‌ முக்யமான உறை விடமாக

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ் வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

இம்முனிவர்‌ வானமாமலை எனத்‌ திருநாமம்‌ பூண்ட ஸ்ரீ ய :பதிக்குச்‌ செய்தருளிய பலவித கைங்கர்யங்‌களையும்‌ ஆராயின்‌,
அவை பலவாகையாலே, **சென்றால்‌.குடையாம்‌”, “நிவாஸசையாஸநக” என்கிற வசனங்களின்‌ படி
பல கைங்கர்யங்களையும்‌ செய்து போரும்‌ ஆதிசேஷ.னுடைய ரீதியை(கிரமத்தை) அநுஸரித்ததாகக்‌ கூறலாம்‌..
அவ்வானமாமலை எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌ அவனது பக்தர்களை பூஜிக்கும்‌ விஷயத்திலும்‌
இவரது ஆர்வத்தை ஆராய்ந்தால்‌ குலசேகர ஆழ்வாருடைய ஆர்‌வத்தை யொத்ததாகக்‌ கூறலாம்‌.
ஆசார்ய சரணாரவிந்தத்தை அர்ச்சிக்கும்‌ கிரமத்தில்‌ ஒப்புயர்வற்ற இம்‌ முனி’வரின்‌ அந்தந்த ப்ரகார விசேஷங்கள்‌
ஆராயப்படுமானால்‌: அவ்வவ அநுஷ்டானங்கள்‌ ஸ்ரீமதுரகவி யாழ்வாருடையன: போன்றனவாகும்‌.
எனவே இம்முனிவர்‌ சிறந்த குணங்களுக்குக்‌ கொள்கலமாவார்‌ என்கிறார்‌.
இங்கு **வாநசைல கமலா:- காந்தஸ்ய ‘? என்ற இடத்தில்‌ வானசைல என்று ஊரைச்‌ சொல்லி,
“*கமலாகாந்தஸ்ய’” என்று அங்கு எழுந்தருளி யிருக்கும்‌ எம்பெருமான்‌ எனக்‌ கொள்வது
**வானமா மலையே”” என்று எம்பெருமானையும்‌ ** சிரீவரமங்கலககர்‌ ‘? சிரீவரமங்கை என்று திருப்பதியையுங்‌ கூறிய ஸ்ரீ ஸூக்திகளோடு பொருந்தாது.
அன்றியே இந்த சப்தம்‌ * வைகுண்டோவிஷ்டரஸ்ரவா :” என்று எம்‌பெருமானுக்கும்‌,
* வைகுண்டேது பரே லோகே ?’ என்று: ஸ்தானத்திற்கும்‌ பேராகக்‌ கொள்ளப் படுமா போலே
அத்‌ திருப்பதிக்கும்‌: பேராகக்‌ கொள்ளப்படினும்‌ குற்‌றமில்லை-
இந்த ந்யாயத்தைக்‌ கொண்டுதான்‌ வானமா மலை என்று அவ்‌வூருக்கும்‌ பேராகத்‌ தற்காலம்‌ எல்லோரா லும்‌ வழங்கப்‌
பெற்று வருகிறது என்பது உணரத்தகும்‌.
இவ்விராமானுஐ .முனி பல சைங்கர்யங்களைச்‌ செய்ததால்‌, ஆதிசேஷனின்‌ கைங்கர்யத்தை யநுஸரித்தது இவரது கைங்கர்யம் என்கிறார்‌.
சேஷக்ரமாத்‌” என்பதற்கு “*சேஷக்ரம மநுஸ்ருத்ய ‘”என்று “ல்யப்லோபே பஞ்சமீ” எனக்‌ கொண்டு அர்த்தம்‌கூறப்பட்டது.
பகவத்‌ பஜனத்திலும்‌ ஸ்ரீவைஷ்ணவ பூஜா விஷயத்திலும்‌ மற்றை ஆழ்வார்களை விட்டு ஸ்ரீகுலசேகரரை
இவர்‌ உபமானமாகக்‌ கொள்வான்‌ என்‌? என்னில்‌,
அவ்வாழ்‌வாருடைய பஜந ப்ரகாரம்‌ விலக்ஷண்மல்லவா? பகவத்‌ ஸம்பத்‌தம்‌ பெற்ற தேசமே அமையும்‌-;

அத்தேசத்திலும்‌ ஞானத்‌திற்கு அடைவில்லாத திர்யக்‌ ஸ்தாவர ஜங்கமங்களும்‌ அமையும்‌ என்று நினைத்து
** குருகாய்ப்‌ பிறப்பேன்‌,” *மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையனாவேன்‌ ‘?,
“*தம்பகமாய்‌ நிற்கும்‌ தவ முூடையேன்‌ ஆவேன்‌ ,
“படியாய்க்‌ கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேன்‌ ”’ என்றாரல்லவா?
அது போலவே ‘இம்முனிவரும்‌ அவனுகந்த திருப்பதியில்‌ “ஏதேனுமாவேன்‌”என்‌ற அத்யவஸாயம்‌ பெற்றவர்‌ என்றபடி.
பாகவதர்களை ஆராதிக்கும்‌ விஷயத்திலும்‌ ““ஆரங்கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரெனக்‌ குடப்பாம்பில்‌ கையிட்ட” ஸ்ரீகுலசேகராழ்வாரைப்‌ போலே
ஸ்ரீவைஷ்ணவ விஷயத்தில்‌ கூறப்படும்‌ தோஷலே சத்தையும்‌ ஸஹியாது பரிந்து அவர்களை பூஜிக்குமவர்‌ என்று தோற்று கைக்காக இந்த உபமானம்‌
இனி இம் முனிவர்‌ தமது ஆசார்‌யனான மணவாளமாமுனிகளின்‌ திருவடிகளை அர்ச்சிக்கும்‌ க்ரமங்களும்‌,
அந்தந்த ப்ரகாரங்களும்‌ மதுரகவி நிலையை ஓத்ததாகும்‌. அதாவது–
அவர்‌ **தேவுமற்றறியேன்‌ ” என்று ஆழ்வாரையே தெய்வமாகப்‌ பற்றினாப் போலே
இவரும்‌ “*ஆசார்யதேவோ பவ” என்கிறபடியே ஆசார்ய ப்ரபத்தி யையே தேவனாகக்‌ கொண்டு அர்ச்சிக்கும்‌ நிலையாகும்‌,
ஆயின்‌ இவருக்கு பகவத்‌ கைங்கர்யத்தில்‌ ப்ரவ்ருத்தி சேருவது எங்‌கனே என்னில்‌ ?
ஆசார்ய முகோல்லா ஸார்த்தமாகச்‌ செய்கையாலே சேரும்‌.
இதுதான்‌ **ப்ரீத்யை பரம்‌ வர வரஸ்ய’” என்றவிடத்தே கூறப்பட்டதாகும்‌.
கவி :’” என்றது மதுரகவி என்றபடியாம்‌.

———

அவதாரிகை :–
ஆக இவ்வளவும்‌ வர வாநாத்ரி முனிவரது ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌, பகவத் கைங்கர்யம்‌,
பகவத் பாகவத ப்ராவண்யம்‌, ஆசார்ய பாதார்ச்சனம்‌ முதலியவற்றை உபமான முகத்தாலே சிறப்பித்துக்‌ கூறி
அவ்வழியாலே இவர்‌ ப்ரபாவத்தைக்‌ கூறியவர்‌ எம்பெருமானே நர நாரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தாப்‌ போலே,

ஞானப்ரதானம்‌ செய்து உலகினை உய்விக்க விரும்‌பிய ஆதிசேஷனே அநேகாவதாரம்‌ செய்தவர்‌ என்றும்‌
ஸ்ரீமந் மணவாள மாமுனிகளாகவும்‌ அவரது சிஷ்யரான வானமா மலை ராமானுஜ முநிவராயும்‌ அவரித்தவரும்‌ அவரே என்‌றும்‌
இவரது அநந்தாவதாரத்வத்தை அருளிச்‌ செய்து அவ்‌வழியாலே
அவரது ஓப்புயர்வில்லாப்‌ பெருமையை உணர்த்துகிறார்‌ இந்தக்‌ கடைசி ஸ்லோகத்தால்‌.

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

லக்ஷ்மீபதி: – லக்ஷ்மீ வல்லபனான எம்பெருமான்‌,
ஆத்மாகம்‌-தன்னை (ப்ராயேண்‌) –
அநேகம்‌ தடவை, சிஷ்யாசார்யதநுத்வயம்‌ -சிஷ்பனென்னும்‌ ஆசார்யனென்னும்‌ இரு
சரீரங்களையுடையவனாக,
நிரபஜத்‌ – பகுத்தான்‌,
ஏக: – அவ்‌ விருவரில்‌ ஒருவன்‌,
புரா – முற்காலத்தில்‌
கரஸம்ஞக: –
நர நாராயணன்‌, நரநாராயணர்களென்கிற சிஷ்யாசார்யர்களாக அவதரித்தது போலவே
திருவநந்தாழ்வான்‌ மாமுனிகளும்‌ வானமாமலை “ ராமனுஜ முனிவருமாய்க்கொண்டு
சிஷ்யாசார்யர்களாக அவதரித்தார்‌ எனக்‌ கொள்வதே
தகுதியுடையதாகும்‌.
ஸ்ரீ மணவாளமாமூனிகளையும்‌. இந்த ராமானுஜ முனிவரையும்‌ ஈச்வராம்சமாகச்‌ சொல்லுமிடங்‌
களில்‌
“ஸாக்ஷ£ந்‌ நாராயணோதேவ:”’ என்று ஆசார்ய
ஸாமாந்யத்தையும்‌ பகவதம்சமாகக்‌ கூறும்‌ ஸாமாந்ய வசனத்தைக்‌ கொண்டே. சொன்னதாகக்‌ கொள்ள வேண்டும்‌.
இல்லாவிடில்‌ எம்பெருமானார்‌ முதலியோருக்குக்‌ கூறப்படும்‌ சேஷாவதாரத்வம்‌ ஸித்தியாது.
இந்த மஹார்யரென்றும்‌ தொட்டை ஐயங்கார்‌ அப்பை, இந்த “*மங்களாசாஸசம்‌ ப்ரபத்தி என்ற இரு கரந்தங்கள்‌ போலவே
தமது ஆசார்யரான வானமாமலை ராமானுஜ ஜீயர்‌ விஷயமான *: தினசர்யை ‘” என்னும்‌ கீரந்தமும்‌ அருளிச்‌ செய்திருக்கிறார்‌
என்‌பது ஸ்ரீ வரமங்கைமுகி வைபவத்தால்‌ அறியப்படுகிறது.
இந்த ப்ரபந்தங்களை ராமானுஜம்‌ பிள்ளான்‌ அருளிச்செய்ததாகவும்‌ சிலர்‌ கூறுவர்‌.

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்