Archive for the ‘ஸ்தவம்’ Category

மதுர மா வண்டு பாட மா மயிலாட ரங்கத்தம்மான்

July 14, 2025

அமலனாதிபிரானில் நானகாவதுபாசுரத்தில் மூன்றா மடி மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் என்பது. இங்குக் கூறிய வண்டும மயிலும் ஸ்ரீரங்கநாதனே யென்று பட்டர் திருவுள்ளம் பற்றுகிறார். அவர் அருளிச்செய்த ஸ்ரீரஙகராஜ ஸ்தவத்தில் ( லோ.1-10) லக்ஷ்மீகல்பலதோத்துங்கஸ்த நஸ்தபகசஞ்சல:, ஸ்ரீரங்கராஜப்ருங்கோ மே ரமதாம் பாநஸாம்புஜே என்ற சுலோகத் தில் ஸ்ரீரங்கநாதன் வண்டாகவும்,மேலே (ச்லோ.-2-44 ) பரலயஸமயஸுபதம… அநு சிகிநி சிகீவ க்ரீட்ஸி ஸ்ரீஸமக்ஷ என்ற சுலோகத்தில் அப்பெருமானே மயிலாக வும கூறப்பட்டிருப்பது காண்க.

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே –ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக

வண்டு தாமரை மலரைக் கண்டால் உள் புகுந்து அதி மோகத்தோடே ரமியா நிற்குமே –
எனவே -ஸ்தபக சஞ்சல–என்றும் –அம்புஜே ரமதா -என்றும் சொல்லிற்று –

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–
44-

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

பிரளயத்தில் ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -ஆண் மயில் பல நிறங்களுடன் கூடிய அழகிய தோகையை
பெண் மயிலுக்கு விரித்துக் காட்டுவது போலே
நீயும் பெரிய பிராட்டியார் இடம் காண்பித்தாய்-

ஸ்ருதிகள் படி நிமித்த காரணத்வம் மாத்திரம் அன்றிக்கே உபாதான காரணத்வமும் உண்டாகையாலே
பிரளயத்தில் நாம ரூப விபாகம் இன்றிக்கே ஸூன்யமாய் -நிர் வியாபாரமாய் இருக்க

தேவரீர் சரிர ஏக தேச சேதன அசேதனங்களை ஸ்வ இச்சையால்-ஜகத் ரூபேண பரிணமிப்பியா நின்று கொண்டு –
விஸ்தரிப்பியா நின்று கொண்டு மயில் தனது நா நா வர்ணமான தோகையை விரித்து தன் பேடைக்கு முன்
க்ரீடிக்குமா போலே
தேவரீரும் பிராட்டி முன்பு க்ரீடிக்கிறீர் -என்கிறார் –

சித்திரம் என்பதால் தார்ஷ்டாந்தித்தில் சத்வாதி குண பேதமும் ஸூஸிதம்

——————

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே
—-4-

மதுர மா வண்டு பாட
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன

மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-

வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய ஸூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-

கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவே கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி-அந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக வண்டுகள் ஆனவை கலவியால் வரும் அருமை இல்லாமையாலே பாட்டை மதுரமாம் படியாக –தென்னா தெனா -என்று முரலா நிற்க சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்-இவ் ஊரில் வர்த்திக்குமவர்களுக்கு சாரஸ்யமும் செருக்குமேயாய் யிருக்கும் யத்தனை-பராவஸ்தனான போது நித்ய முக்தரும் தன்னை அனுபவித்து ஹாவு ஹாவு ஹாவு என்று களிப்பார்கள்-அவதீர்ணன் ஆனபோது காயந்தி கேசித் க்ருத்யந்தி கேசித் -என்று முதலிகள் ஆடுவது பாடுவது ஆவார்கள்
அர்ச்சா ரூபியாக கோயிலிலே கண் வளர்ந்து அருளப் புக்கவாறே வண்டுகளும் மயில்களும் பாடுவது ஆடுவதாக நிற்கும்

ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே  – ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட – பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண – இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யாஜ்ஞவல்க்ய க்ருத ஸ்ரீ ஸரஸ்வதீ ஸ்தவம்

June 23, 2025

யாஜ்ஞவல்க்ய உவாச
க்ருபாம் குரு ஜக³ன்மாதர்‌-மாமேவம் ஹததேஜஸம்‌ ।
கு³ருஶாபாத் ஸ்ம்ருதிப்⁴ரஷ்டம் வித்³யாஹீனம் ச து³:கி²தம்‌ ॥ 1 ॥

ஜ்ஞானம் தே³ஹி ஸ்ம்ருதிம் வித்³யாம் ஶக்திம் ஶிஷ்ய ப்ரபோ³தி⁴னீம்‌ ।
க்³ரந்த²கர்த்ருத்வ ஶக்திம் ச ஸுஶிஷ்யம் ஸுப்ரதிஷ்டி²தம்‌ ॥ 2 ॥

ப்ரதிபா⁴ம் ஸத்ஸபா⁴யாம் ச விசாரக்ஷமதாம் ஶுபா⁴ம்‌ ।
லுப்தம் ஸர்வம் தை³வ யோகா³-ன்னவீபூ⁴தம் புன: குரு ॥ 3 ॥

யதா²ங்குரம் ப⁴ஸ்மனி ச கரோதி தே³வதா புன: ।
ப்³ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யோதீரூபா ஸனாதனீ ॥ 4 ॥

ஸர்வவித்³யாதி⁴தே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம: ।
விஸர்க³ பி³ந்து³மாத்ராஸு யத³தி⁴ஷ்டா²னமேவச ॥ 5 ॥

தத³தி⁴ஷ்டா²த்ரீ யா தே³வீ தஸ்யை வாண்யை நமோ நம: ।
வ்யாக்²யாஸ்வரூபா ஸா தே³வீ வ்யாக்²யாதி⁴ஷ்டா²த்ருரூபிணீ ॥ 6 ॥

யயா வினா ப்ரஸங்க்³யாவான் ஸங்க்³யாம் கர்தும் ந ஶக்யதே ।
காலஸங்க்³யா ஸ்வரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம: ॥ 7 ॥

ப்⁴ரம ஸித்³தா⁴ந்தரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம: ।
ஸ்ம்ருதிஶக்தி ஜ்ஞானஶக்தி பு³த்³தி⁴ஶக்தி ஸ்வரூபிணீ ॥ 8 ॥

ப்ரதிபா⁴கல்பனாஶக்திர்‌-யா ச தஸ்யை நமோனம: ।
ஸனத்குமாரோ ப்³ரஹ்மாணம் ஜ்ஞானம் பப்ரச்ச² யத்ர வை ॥ 9 ॥

ப³பூ⁴வ மூகவத்ஸோஸ்பி ஸித்³தா⁴ந்தம் கர்து மக்ஷம: ।
ததா³ஷ்ஜகா³ம ப⁴க³வா-னாத்மா ஶ்ரீக்ருஷ்ண ஈஶ்வர: ॥ 1௦ ॥

உவாச ஸ ச தாம் ஸ்தௌஹி வாணீ மிஷ்டாம் ப்ரஜாபதே ।
ஸ ச துஷ்டாவ தாம் ப்³ரஹ்மா சாஜ்ஞயா பரமாத்மன: ॥ 11 ॥

சகார தத்ப்ரஸாதே³ன ததா³ ஸித்³தா⁴ந்த முத்தமம்‌ ।
யதா³ப்யனந்தம் பப்ரச்ச² ஜ்ஞானமேகம் வஸுந்த⁴ரா ॥ 12 ॥

ப³பூ⁴வ மூகவத்ஸோஸ்பி ஸித்³தா⁴ந்தம் கர்து மக்ஷம: ।
ததா³ தாம் ச ஸ துஷ்டாவ ஸந்த்ரஸ்த: கஶ்யபாஜ்ஞயா ॥ 13 ॥

தத ஶ்சகார ஸித்³தா⁴ந்தம் நிர்மலம் ப்⁴ரம ப⁴ஞ்ஜனம்‌ ।
வ்யாஸ: புராணஸூத்ரம் ச பப்ரச்ச² வால்மீகிம் யதா³ ॥ 14 ॥

மௌனீபூ⁴த ஶ்ச ஸஸ்மார தாமேவ ஜக³த³ம்பி³காம்‌ ।
ததா³ சகார ஸித்³தா⁴ந்தம் தத்³வரேண முனீஶ்வர: ॥ 15 ॥

ஸம்ப்ராப்ய நிர்மலம் ஜ்ஞானம் ப்⁴ரமாந்த்⁴ய த்⁴வம்ஸதீ³பகம்‌ ।
புராணஸூத்ரம் ஶ்ருத்வா ச வ்யாஸ: க்ருஷ்ணகலோத்³ப⁴வ: ॥ 16 ॥

தாம் ஶிவாம் வேத³ த³த்⁴யௌ ச ஶதவர்ஷம் ச புஷ்கரே ।
ததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய ஸத்கவீந்த்³ரோ ப³பூ⁴வ ஹ ॥ 17 ॥

ததா³ வேத³விபா⁴க³ம் ச புராணம் ச சகார ஸ: ।
யதா³ மஹேந்த்³ர: பப்ரச்ச² தத்த்வஜ்ஞானம் ஸதா³ஶிவம்‌ ॥ 18 ॥

க்ஷணம் தாமேவ ஸஞ்சிந்த்ய தஸ்மை ஜ்ஞானம் த³தௌ³ விபு⁴: ।
பப்ரச்ச² ஶப்³த³ஶாஸ்த்ரம் ச மஹேந்த்³ர ஶ்ச ப்³ருஹஸ்பதிம்‌ ॥ 19 ॥

தி³வ்ய வர்ஷ ஸஹஸ்ரம் ச ஸ த்வாம் த³த்⁴யௌ ச புஷ்கரே ।
ததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய தி³வ்யவர்ஷஸஹஸ்ரகம்‌ ॥ 2௦ ॥

உவாச ஶப்³த³ ஶாஸ்த்ரம் ச தத³ர்த²ம் ச ஸுரேஶ்வரம்‌ ।
அத்⁴யாபிதாஶ்ச யே ஶிஷ்யா யைரதீ⁴தம் முனீஶ்வரை: ॥ 21 ॥

தே ச தாம் பரிஸஞ்சித்ய ப்ரவர்தந்தே ஸுரேஶ்வரீம்‌ ।
த்வம் ஸம்ஸ்துதா பூஜிதா ச முனீந்த்³ரை ர்மனு மானவை: ॥ 22 ॥

தை³த்யேந்த்³ரை ஶ்ச ஸுரைஶ்சாபி ப்³ரஹ்ம விஷ்ணுஶிவாதி³பி⁴: ।
ஜடீ³பூ⁴த ஸ்ஸஹஸ்ராஸ்ய: பஞ்சவக்த்ர ஶ்சதுர்முக:² ॥ 23 ॥

யாம் ஸ்தோதும் கி மஹம் ஸ்தௌமி தாமேகாஸ்யேன மானவ: ।
இத்யுக்த்வா யாஜ்ஞவல்க்ய ஶ்ச ப⁴க்தினம்ராத்ம கந்த⁴ர: ॥ 24 ॥

ப்ரணனாம நிராஹாரோ ருரோத³ ச முஹுர்முஹு: ।
ஜ்யோதீரூபா மஹாமாயா தேன த்³ருஷ்டா7ப்யுவாச தம்‌ ॥ 25 ॥

ஸுகவீந்த்³ரோ ப⁴வேத்யுக்த்வா வைகுண்ட²ம் ச ஜகா³ம ஹ ।
யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ ஸ்தோத்ரமேதத்து ய: படே²த்‌ ॥ 26 ॥

ஸ கவீந்த்³ரோ மஹாவாக்³மீ ப்³ருஹஸ்பதிஸமோ ப⁴வேத்‌ ।
மஹா மூர்க²ஶ்ச து³ர்பு³த்³தி⁴ர்‌-வர்ஷமேகம் யதா³ படே²த்‌ ।
ஸ பண்டி³தஶ்ச மேதா⁴வீ ஸுகவீந்த்³ரோ ப⁴வேத்³த்⁴ருவம்‌ ॥ 27 ॥

இதி ஶ்ரீ தே³வீ பா⁴க³வதே மஹாபுராணே நவமஸ்கந்தே⁴
ஸரஸ்வதீஸ்தவம் நாம பஞ்சமோத்⁴யாய: ।
ஸரஸ்வதீ கடாக்ஷ ஸித்³தி⁴ரஸ்து ।

இத³ம் மயாக்ருதம் பாராயணம்
ஶ்ரீஸத்³கு³ரு சரணாரவிந்தா³ர்பணமஸ்து ।

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ யாஜ்ஞவல்க்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸரஸ்வதீ தேவியார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக்கண்ணபுர மஹிமை–ஸ்ரீ சௌரி ராஜ ஸ்தவம்-

May 14, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், சன்னாநல்லுõர் அருகே நான்கு கிலோமீட்டார் தொலைவில் திருக்கண்ணபுரம் உள்ளது. வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் சிறப்பு! பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீர கோபுரம்! 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். சௌரிராஜப் பெருமாள்: திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். 

பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. நடையழகு! *இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. சக்கரத்தின் பெருமை! *அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். முனையதரையன் பொங்கல் வந்த கதை… *முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் : தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பூலோக வைகுந்தம் ! திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. திருவிழாக்கள்: 15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. துயர் துடைக்கும் ஊர்! ‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” திருவாய்மொழி 9-10-10 (3665) திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன

ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

 மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம் உத்பாலவதாக விமானம் காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு.-விமான தரிசனம் செய்ய முடியாத கோயில்! விமான தரிசனம் சுவாமியை தரிசனம் செய்த பலன்களைத் தரக்கூடியது. கோயில்களில் கருவறைக்கு மேல் இருக்கும் விமானத்தை சுவாமியின் வடிவமாகவே கருதுவர். ஆனால் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. உத்பலாவதகம் எனப்படும் இவ்விமானத்தில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்தை தரிசனம் செய்ய முடியாத வகையில் சுற்றிலும் உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது

ராமபக்தரான விபீஷணருக்கு தனிசன்னதி உள்ளது. மனித அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவிற்கு சேவை செய்த விபீஷணர், அவரது தெய்வ நடையைக் காண வேண்டுமென அவரிடம் வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே நடந்து காட்டினார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் விபீஷணருக்கு, விஷ்ணு நடையழகு காட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கிறது. சுவாமியின் நடையழகை தரிசிப்போரின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1. முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

2. சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர்.

3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும்.

7. இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும்.

8. சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும்.

9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும்.

11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும்.

14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான்.

16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார்.

ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து... செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய் தீர மருந்துண்டோ சொல் தோழீ என்ன உண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள் தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும் சுக்கைத் திகழத் தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடி கட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்து வைத்து ஓம் நம: என்னும் உமியைத் தூவி திருநீர்மலை யென்னும் நெருப்பை மூட்டி திருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து அமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந் நோய் தீருமம்மா ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து நாராயணனே நமக்கே பறை தருவானென்று பாடிப்பறை கொள்ளும் மருந்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் மருந்து செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள் பகரும் மருந்து அணியனார் செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளை யென்றும் நோயில்பட வொட்டாத மருந்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்து உன்னுள்ளம் நோய் தீர்வதற்கு இதுவேஉகந்த மருந்தம்மா காளமேக புலவரும் திருக்கண்ணபுரமும் கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கன மழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவ பக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்‘ என்றனர். காளமேகம் பார்த்தான். ‘சரி, உங்கள் பெருமாளைத் தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ…‘ என்று சொல்லி ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்‘ என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்.? என் கடவுப்ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்‘ என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து ‘அதெப்படி?‘ என்றார்கள். ‘ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே‘ என்று புதிரை விடுவித்தான். ’சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னான். கண்ண புர மாலே …..கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் …..அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம் …..உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ …..எண்ணத் தொலயாதே. கண்ண புர கோயில் கதவடைத்து… கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் என்னும் சிரக்கப் புரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று. திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள் பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது: உத்திரத்துக்கு ஓர் நாள் உரோகணிக்குப் பத்தாம் நாள் சித்திரைக்கு நேரே சிறந்த நாள் – எத்திசையும் கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ் சவுரி நார யணன்பிறந்த நாள்.- திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும் திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள்.திருவாரூர் – தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல் வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத் தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார். ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலை ஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளை யிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார். சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார். இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற் சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்: இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி முனையா கலவி முயங்கியவா றெல்லாம் நினையாயோ நெஞ்சத்து நீ. *

திருக்கண்ணபுரத்தின் சிறப்பை கூறும் பாடல்கள்: பாடல் 1: கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும் என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் .. முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும் முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும் தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும் மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான் செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான் சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான் சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான். கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர வேறோர் வலைச்சி வலை வீசிட நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … * கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன். திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன் எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். கண்ணபுரம்… நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன் நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன் உத்பலாவதக விமானத்தை நினைப்பேன் உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். கண்ணபுரம்… கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன் கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன். பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன் பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். கண்ணபுரம்.. எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன். ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன். கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன். கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்

    திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம் உபய வேதாந்த வித்வான் டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய ஸ்ரீசௌரிராஜஸ்தவத்தின் பகுதி ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாதகேசம்

    உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்! சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸீந்தரம்!! பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்! பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்!

    1-திருமேனி ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்! ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!! அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி, பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச்சக்கரம், ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சசௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக.

    2-யாவர்க்கும் அரியன் தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்! ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸீரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!! தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும், மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக்கொண்ட திருமார்பை உடையவனும், நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும், திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக.

    3-திருமேனி அழகு, ஒளி நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா! ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீலவர்ண இவ ஸாநுமாந் புவி!! பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன். ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய், சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுளகில் விளங்குகிறாய்.

    4-திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல் நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர்கøணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி! ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தரஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபி ரஹோ ப்ரவிபாதி தீப்தா!! நீலபர்வதத்தின் கொடுமுடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தரஹாரம், ஸ்ரீகௌஸ்துபம் முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்!

    5-திருவடிகள் யத்பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீஸீதாஸ் ஸதயம் ஸகோதா: ஸம்வாஹயந்தி ஸீகுமாரதரை:கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!! ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸீவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸீகுமாரமான தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர். ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக.

    6-திருவடிகள் யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்! சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!! காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர். சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருளவேணும்.

    7-திருவடிகள் யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத்வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:! யச்சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பதயுகம் தவ தந் நதாஸ்ம:!! உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தையுடையவனாவன்,(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர். உன்னையே சரணாகாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத்திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர். அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

    8.திருப்பாதுகைகள் சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே! ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!! ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன. தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக.

    9.பாதபத்ம பீடம் சௌரே!! ஸீகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந! தத்தே கிமப்ஜம், பதபத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!! ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரைமலர், (உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன?

    10-திருவடிகளின் சோதி யத்வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:! புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!! ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு, அலர்ந்த தாமரையின் வடிவம்போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்!

    11-திருவடி நகங்கள் சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:1 ஜ்யோத்ஸ்நாஸ் தரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும் புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டுபண்ணும்வனவுமான நகங்களிலிருந்து வெளிவருகிறது சந்திரிகையாகிய ஒளி: இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின் வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்!

    12-திருத்தொடைகள் சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!! ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக்கவர வல்லன. உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன.

    13-அரை (கடி), இடை தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே! அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற்குன்றுகளை அவமதிக்கின்றன; உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது.

    14-இடது திருக்கை வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்! ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சயவஸிஹ தேவ!! தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும். (அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும்.

    15-வலது திருக்கை நநு வதாந்யதமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீகரணோத்யதாம்! ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!! பெருமானே! மிகச்சிறந்த கொடைவள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும் ஸ்வாதீனமாக வாங்கிக்கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடுகூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன?

    16-வலது திருக்கை உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே! வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!! ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன்போல் வலது திருக்கையைக்குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய்.

    17-வலது திருக்கை ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீபுத்ர்யவேக்ஷ்ய! அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்கயேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!! ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக்கொள்ள விரும்புவதுபோல் நீ உனது வலது திருக்கரத்தை நீட்டிக் குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய். அதை வஸீவின் திருமகளான பத்மிநிதேவி நன்கு பார்த்து, ‘நம்போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்துகொள்ளப்போகிறாரா?’ என்ற சங்கையால் உனது ஸமீபத்தை ஒருபொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்?

    18-திருநாபி தவத்-திவ்ய-ஸீந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே! ஸ்ங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!! ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம், ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க்கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய் விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம்.

    19-திருநாபி மலர் த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந்நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய! தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக்கை,வலக்கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதிமூடியும் உள்ள நிலையில் உள்ளது. ஸ்ரீலக்ஷ்மிதேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்குதானோ இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம். சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு.

    20-திருநாபி மலர் த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்! த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம்ஹி சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ரஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர். அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது; இதனால் துஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது.

    21-திருவயிறு த்வயா நிகீர்ணம் ப்ரளயேப்யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:! குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!! ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு, மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக்கொள்ள விரும்புகிறதா, என்ன?

    22-அரை வடம் உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:! கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ்பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள், நீ அண்டங்களை விழுங்கியபோது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது.

    23-திருவரை கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந! தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிகவிசித்ர இவாத்ய சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக்கட்டிச் சுற்றி நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ, நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த தாதுப் பொருட்களால் விளங்குவதுபோல் பிரகாசிக்கிறாய்!

    24-திருக்கைகள் ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:! இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரசயந்தி தியம் ந:!! உழல்தடிபோல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும், செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம்.

    25-திருமார்பில் பிராட்டி ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநகப்ரபா! கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரியதமா இவ சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறைபோல் விளங்குகின்றது உனது திருமார்பு. அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமிதேவி. உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்) உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன?

    26-திருமார்பில் பிராட்டி கமலாலயா ஹி கலிதாவஸதா ருசிரம் கடவாட- ஸீத்ருடம் விபுலம்! ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!! தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவுபோல் மிகத் திண்ணியதும் விசாலமுமான ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை. அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான்.

    27-ஸ்ரீகௌஸ்துபம் வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி- தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:? ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான உன்திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத்தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி) தரித்துக்கொண்டிருக்கிறாயா,என்ன?

    28-திருமார்பில் முத்துவடங்கள் நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர=மௌக்திக-ஹாரா:! தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!! கறுப்பான மணிப்பாறைபோல் விளங்கும் உன்திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்துவடங்கள் மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலையருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன.

    29-திருப்பூணுல் த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து சௌரே த்வத்-யஜ்ஞஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந்த்வலோக-த்ருப்தா:!1 ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன்திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக்கொண்டு, மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன.

    30-வனமாலை ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா! கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!! ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிறமலர்கள் வாய்ந்ததும் உனது திருக்கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக உன்னைச் செய்துகொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத்தான் கவர்வதில்லை.

    31-பாஞ்ச சந்நியம் சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்! பரிஹஸதீவாக்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!! ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக்கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும் பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும் அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வதுபோல் இருக்கிறது.

    32-சக்ராயுதம் த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ! சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!! தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன?

    33.ப்ரயோக சக்கரம் ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய! ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ணபுரேச!! திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான். எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோகநிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே.

    34-பாஞ்சசந்நியம் ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ணபுரீச! ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப் ய சங்க ஏவ லஸதீவ கராப்ஜே!! திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே. உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும்.

    35-திருவதரம் குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத்ஸ்மிதாதஹஹ! பக்தகோசராத்! பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!! பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு), பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக). இது உனது புன்முறுவலால், குந்தமலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய் இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல்

    36.புன்முறுவல் த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:! பீஜபூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்புபோலே வெளுப்பானவை உன் பற்கள். நீ புன்முறுவல் செய்யும்போது உன் அதரத்தின் சிவப்பால் இப்பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப்போல் அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன.

    37-திருச்செவிகள் ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே! ஸபுஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதிபிம்ப்யமாநே!! கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ்பாகத்தில் குண்டலங்கள் அணிந்த உன் திருச்செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன.

    38-திருக்கண்கள் சபர-ஸ்புரிதாபிபாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ! மம பாபததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபிவர்ஷணாத்!! உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன. இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும்.

    39-திருப்புருவங்கள் அநீகபஸ் தே கலு கார்யஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய! தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!! உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார். அப்புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும்.

    40-திருநெற்றி தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:! தாபத்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!1 ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திருநெற்றியிலிருந்து வெளிவருகின்றது காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம். தாபத்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது.

    41-திலகம் புவிசந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்! இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!! தேவனே! இப்புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில் நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய். பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காககஇதை தரித்திருக்கிறாயா, என்ன?

    42-திருமுக மண்டலம் பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே! லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!! ஸ்ரீசௌரிராஜனே! இளம்பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது, உனது திருமுக மண்டலத்தைப் பூர்ணசந்திரனாக மதித்து, பயத்தினால், உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன?

    43-திவ்யபீடம் அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகேநார்யமகோடி- பாஸா! ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம். அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது, இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது).

    44-திருக்குழல் சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே! தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் த்ம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!! ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப்பட்டையிலிருந்து வெளிவந்த நுõல்கள் எவையோ, கறுத்துத்திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப்பட்டவையாகித் தலைக்கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன.

    ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே- உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!! *

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ கண்ணபுரநாயகி ஸமேத ஸுவ்ரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ புருஷ ஸூக்த வ்யாக்யானம்‌-ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்–

    April 15, 2025

    ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌, துருவன்‌ பரந்தாமனை ஸ்தோத்திரம்‌ செய்‌யும்‌ ப்ரகரணத்தில்‌, புருஷ ஸூக்த மந்த்ரங்களை அனுஸரித்து ஸ்தோத்‌ரம்‌ செய்வதாகக்‌ காணப்படுகிறது. அவ்விடத்தில்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரும்‌, “எங்களாழ்வான்‌ *” என்று கீர்த்தி பெற்றவருமான ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌. விசேஷமாக வியாக்யானம்‌ செய்திருக்கிறார்‌.
    அதை அனுஸரித்து செய்தருளிய வியாக்யானம்‌ –

    “யோநூசாந த்‌,விஜம்‌ க,த்வா ஹதவாந்‌ அர்.த்த,லோப,த: | ஸ படேத்‌ பெளருஷம்‌ ஸூக்தம்‌ ஜலஸ்த்த,: சிந்தயங்‌ ஹரிம்‌ |”-எவனொருவன்‌ ஸாங்கமாக வேதாத்யனம்‌ செய்த ப்ராஹ்மணனை அடைந்து, பணப் பேயாட்பட்டு. அவனைக்‌ கொன்றானோ, அவன்‌ ஜலத்தில்‌ நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷஸு9க்தத்தைப்‌ படிக்கக் கடவன்‌.] என்றும்‌,
    “ஜப்த்வாத, பெளருஷம்‌ ஸூக்தம்‌ முச்யதே கு,ருதல்பக_:’”[குரு பத்தியுடன்‌ சேர்ந்தவன்‌ புருஷ ஸூக்தத்தை ஜபித்து, அந்த மஹா பாபத்தினின்றும்‌ விடுபடுகிறான்‌.] என்றும்‌,
    “ப்‌, ரஹ்ம யஜ்ஜஞே த்‌,விஐ: ஸூக்தம்‌ பெளருஷம்‌ சிந்தயந்‌ ஹரிம்‌ |
    ஸ ஸர்வாந்‌ ஜபதே வேதாந்‌ ஸாங்க உபாங்காந்‌ த்‌;விஜோத்தம: lI”

    [தினந் தோறும்‌ செய்ய வேண்டிய பஞ்ச மஹா யஜ்ஞத்தில்‌ ஒன்றான
    ப்ரஹ்ம யஜ்ஞத்தில்‌ ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்‌தைப்‌ படிக்கும்‌ பிராம்மணன்‌ ஸாங்கோபாங்கமான எல்லா வேதங்‌களையும்‌ ஐபித்தவனாகிறான்‌.] என்றும்‌ பெரியோர்கள்‌ இதன்‌ பெருமையைப்‌ பேசி யிருக்கிறார்கள்‌. – செளநக பகவானும்‌ புருஷ
    ஸூுக்தத்தின்‌ ருக்குகளினால்‌ ஸ்ரீமன் நாராயணனை ஆராதனம்‌ பண்ண வேண்டுமென்று உபதேசித்து,“ அர்ச்சிதம்‌ ஸ்யாத்‌ ஜக,தி;தம்‌’”என்று அதனால்‌ ஸகல லோகங்களையும்‌ ஆராதனம்‌ செய்யப் பட்டதாகிறது என்றும்‌ வெளியிட்டிருக்கிறார்‌.-மேலும்‌, “புருஷ ஸூக்தத்தின்‌ ருக்குகளைக் கொண்டு நெய்யினால்‌ அக்னியில்‌ ஹோமம்‌ செய்பவன்‌
    ஸம்ஸாரத்துக்குக்‌ காரணமான பாபங்களை விட்டு மோக்ஷத்தை அடைவான்‌”’ என்றும்‌, ஜகத் காரணனாய்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்‌, ஸகல கல்யாண குண பூர்ணனாய்‌, தேவாதி தேவனாயிருக்கிற ஸ்ரீமந் நாராயணனை, புருஷ ஸுூ9க்தத்தினால்‌ : தியானம்‌ செய்பவன்‌ மோக்ஷத்தை யடைந்து, “ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌
    ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா””
    [முக்தி யடைந்தவன்‌, ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ கூட அவனுடைய ஸகல கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌] என்றபடி ப்ரம்மாநந்தத்தை அடைகிறான்‌ என்றும்‌ இதன்‌ மஹிமை விஸ்தாரமாக வெளியிடப் பட்டிருக்கிறது.

    ——————–

    ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

    புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

    ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
    பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

    த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
    ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

    தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
    ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

    யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
    வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

    ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
    தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

    தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
    தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

    தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
    பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

    தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
    சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

    தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
    காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

    யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
    முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

    ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
    ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

    நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
    பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

    நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
    பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

    வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
    ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
    ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
    நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

    தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
    தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

    யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
    தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

    உத்தரானுவாகம்‌.
    1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
    தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.

    வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
    தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

    ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
    தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

    யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
    பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

    தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
    ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

    ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
    யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

    ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

    ———

    ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
    [புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.
    “ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
    [“ஸஹஸ்ர சீர்ஷா””
    என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.
    (ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
    ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.

    பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌
    ‘சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.
    (ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
    இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
    (இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
    வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
    தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
    ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
    காணா கண்‌ கேளா செவி,-
    என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
    பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

    (புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
    “ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
    ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

    [பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
    “யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
    தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

    [ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

    (ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
    (பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌. (தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

    இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌
    என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

    ———-

    2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

    (புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
    “இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. “யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌,
    ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.
    (யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”*
    என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முத லியஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது. இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
    பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படு கின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
    புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
    ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

    [புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

    ———-

    ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
    பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
    3-
    [இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
    ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

    (ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய
    மஹிமா?…
    ) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
    **யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.
    (பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌ “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

    அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
    ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
    [அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

    ————-

    த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
    ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
    ..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌
    ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
    த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

    (த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
    (உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
    (அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
    (இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
    (ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் -புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

    ————

    தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
    ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
    –5-
    [அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
    தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
    ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
    [(“தஸ்மாத்‌ விராட்‌…
    ” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

    அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. (விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ “அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதி புருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

    ——————

    யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
    வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
    [தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
    “யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
    [யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது. பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. (யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
    யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
    இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
    என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
    ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
    ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி
    கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது. முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
    ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
    நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
    யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
    ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
    [பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த
    ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட்ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”]=இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌
    பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
    “*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
    பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

    ————

    ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
    தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
    இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறுதண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன. இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌. (த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌
    அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன. (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகியயூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிர மனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

    ————

    தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
    தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
    [முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌
    பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌. (புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய
    ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌. எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌
    என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலையுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

    ———–

    தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
    பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
    [ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற
    மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது. “ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான
    வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

    ————

    தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
    சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
    [எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
    பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
    யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

    ———–

    தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
    காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
    [அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு
    சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

    —————

    யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
    முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌
    எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

    ————

    ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
    ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணான்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப்படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்க ளெல்லாவற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌ தார் . (பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌. இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌
    போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌.. “ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌. இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌. போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே. பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
    ‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
    முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌
    உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

    ————-

    சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
    முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
    [மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. (சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌. (சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே. (ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

    ———-

    நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
    பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
    15-
    [நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது) தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

    ———–

    வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
    ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
    ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
    நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
    16-
    [எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
    வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லு
    கின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌
    மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை. இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-(மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

    ————-

    தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
    தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
    [எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.
    “யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

    நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

    நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று
    பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
    மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
    நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
    சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
    ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

    —————–

    யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
    தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
    என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது. (யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
    ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
    அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
    ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

    ————-

    உத்தரானுவாகம்‌.
    1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
    தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
    அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
    தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. (ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌ ‘விஸ்வகர்மா’ முதலிய சப்தங்கள்‌ நாராயணனையே குறிக்கின்றன வென்று அறிகிறோம்‌. (தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

    ——–

    வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
    தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
    “அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌
    16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

    ———-

    ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
    தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
    என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
    ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌. (கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய
    ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த
    படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

    (அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
    *ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

    (தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

    எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
    பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
    ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

    ———–

    யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
    பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
    –4-
    [எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
    வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
    வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
    ‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.
    (யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌. (பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம:
    என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌
    . இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

    ———–

    ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
    யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

    [பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய
    ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
    திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
    “*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

    ————–

    ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-(தே): உமக்கு.-

    1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
    2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
    3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
    4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
    5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
    6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
    7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
    8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
    9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
    10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
    11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
    12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
    13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
      14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
    14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

    (லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

    (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

    (பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
    **யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

    “லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
    ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

    எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

    (அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
    “சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
    விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

    “ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
    தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
    என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
    கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

    (நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

    பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது. (இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே'” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

    இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
    விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

    புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
    கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

    இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

    முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

    கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

    இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா,
    ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

    ——————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பெரும் பூதூர்‌ வந்த வள்ளல்‌ மாலை-ஸ்ரீ எதிராஜ சதகம்-ஸ்ரீ ராமானுஜ மாலை–

    December 8, 2024

    உடையவராக மலரடிக் காட்படுவோர்க் கரும் பொன்‌
    உடையவராக ரந்தந்தளிப்பானுறும்‌ வாதியர் வாழ்வு
    உடையவராகந் துறந்து முக்கோல் கைக் கொண்டோங்கி நற்பேர்‌
    உடையவராக விங்கெய்து எதிராசனை யுன்னு நெஞ்சே.

    அம் பெருமானார் வயிற்றினாங் கருவி னாடாமல்
    எம் பெரு மானார் இணை யடியை–நம்பாத்
    துதித்திருப்பாய்‌ நின்றன்‌ றொழிலால் இடர்கள்‌
    விதித்திருப்பாய்‌ நின்‌ற நெஞ்சமே.

    யதிக் கோன்‌ கருணைக்‌ கிலக்காகி முத்தி
    பதிக் கோவலனடியைப்‌ பற்ற–விதிக்கு
    மறை யந்த வாசிரியர்‌ வண் பதஞ்சேர்ந் துய்வோத்
    துறை யந்த வாசிரியத்‌ தான்‌.

    பர சமய மெனும் வெய்ய கண்டக தருக்குலம்‌ பாழ்பட நிலத்திலங்கைப்‌ பற்று ௬டர்‌ வடிவாய பரசு வெனவும் பரம பாவனமுடைக் கமல மானரசனுயர்‌ மதநிலை பெறச்செய்‌து எடுத்ததொரு வம் பொன்‌ வெற்றித்‌ துவசமே யாமெனவும் ஓளிர்‌ துய்ய திரிவேணு தண்டமு மகன் மார்பி’ னுருவொடுற்றூ
    விரவுமெழின்‌ மறை நாலெனத் திகழ கிற்குமுப வீதமுஞ்‌ சிகையு நேராய்‌
    விரி புண்டரக்‌ குறியும்‌ வேறுதய வாதித்த விசயமென வார்த்த செம்மைப்‌
    புரியாடையும்‌ பொருவி லெதிராசரிரு சரண புண்டரிகமும்‌ பணிகுவாம்‌
    புகரிலா வரியைக்க ணலர் மீது மங்கை யடி புனைதமிழ்‌ நிதந் தழையவே.

    ஈடரிய வியாச முனி தேர்ந்து ரைக்கு மிலகு வேதாந்த ஸூத்‌ திரங்களுக்குத்
    தேடரிய பாடியந் தான்‌ றமிழ் வேதத்தின்‌ செழும் பொருள்கள் நேர்மை யுடன் ஆய்ந்த ளித்தோன்‌
    பீடமையுங்‌ கண்ண பிரானருளிச்‌ செய்த பிறங்கு திருக்‌ கீதைக்குப்‌ பாடியத்தை
    வீடளிக்கு மத் தமிழ் வேதத்தி னாலே மிலைச்சியரு ளுடையவர் தா டொழுது வாழ்வாம்‌.

    தேசமெல்லாம் உகந்திடவே பெரும் பூதூரில்‌ சித்திரையில்‌ ஆதிரை நாள் வந்து தோன்றிக்‌
    காசினி மேல்‌ வாதியரை வென்று அரங்கர்‌ கதியாக வாழ்ந்தருளும்‌ எதிராசா! முன்‌
    பூசுரர் கோன்‌ திருவரங்கத் தமுதனார்‌ உன்‌ பொன்னடி மேல்‌ அந்தாதி யாகப் போற்றிப்‌
    பேசிய நற் கலித்‌ துறை நூற்றெட்டுப் பாட்டும்‌ பிழை யறவே எனக் கருள் செய்‌ பேணி நீயே.

    காலன்‌ குறுகான்‌ கடும் பிறவி சாராது
    மாலின்‌ தனிச் சுகத்தின்‌ மன்னிடலாம்‌-சீலமுறும்‌
    பாவமிலா நெஞ்சே !நீ பண் பனி ராமாநுசனாம்‌
    நாவலன் செந் தாமரைத்தாள் நாடு.–தனியன்‌

    தத்துவங்கண்‌ மூன்றுந்‌ தனி மந்திர மூன்றும்‌
    இத்தகைய வென்றுணர்ந்த வென்னெஞ்சே! –நித்த நித்தம்‌
    சாற்றுதி ராமாநுசனாஞ்‌ சாந்த குண நாவன் சீர்‌
    போற்றுதி யன்‌னான் சரணப்‌ பூ.-தனியன்‌

    உலகாக்கியே யுணவாக்கியே யுலை வாக்கியே யுலவா நலத்‌
    தல மாக்கியே தணவாத வைந்‌ தாகும் பொரு டகையோ துறும்‌
    கலை யாக்கியே காத்தாளுவான்‌ கவி நாதவென்‌ கடு வாணவ
    வலை நீக்கியே வழி காட்டியாள்‌ வர யோகியே வர யோகியே. –காப்பு

    என் சந்த மீசன் சந்த மா விருள் சந்த மவ்‌ விருணீக்குறும்‌
    மன் சந்தமீ மகிழ் சந்தமும்‌ மறை மத்தமும்‌ மது வித்தையைத்‌
    தன் சந்தமார்‌ தயை விம்மலாற்‌ றரை வீசு தாயானான் மிளிர்‌
    தென் சந்தமார்ந்‌திட வேத்தினேன்‌ திருக் கோவலூர்‌ திருக் கோவலூர்—காப்பு

    பூமாநிறம்‌ பொரு மா முதற்‌ பொன்னாரவிந்‌தப் பூ நலம்‌
    நாமாறிலா வகை யுற்றுற நாராயணன்‌ தனையும் விடுத்
    தாமாறி லோதிட வந்த பூதூரானை நீ யகமுன்னலில்‌
    ஏமாறிடாதே நெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–1-

    ஆருயிர முக மாறி யீராறாயிர நாமாறிவான்‌
    பேராயிரம்‌ பெம்மானதாம்‌ பேறாக்கிட வந்தானவன்‌
    சேராயிரம்‌ பேராசைதே வற்றாரிலாச்‌ சேறாழ்ந்தனம்‌
    ஏராயிர மெணியேத்துவா யெதிராசனே யெதிராசனே–2-

    மூலத்துமா யாவாணவ முதுநோயினான்‌ மொத்தாடினாம்‌
    சாலத்துமா பதி காணருந்‌ தண்டாமஞ்சார்ந்‌ துறவாயினாம்‌
    ஆலத்துவாய்‌ பவன் மெல்லணை யாகும் பிரா னெனினந் தமக்கு
    ஏலத் துய ரென்னெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–3-

    கடன் வெஃகுமா கமலைக் கிணை யாகக் கழ றுதலுக் கிணைத்
    திடன் மண்டு நூல்‌ கடன் மாந்தினோன்‌ றெளி யாதவப்‌ பிரகாசனென்‌-
    றிடு மன்னவ னிடமோதினா னிரண்டென்றவ னிருள் நீக்கினான்‌
    எடல் வேறு சீரினை நெஞ்சமே யெதிராசனே யெதிராசனே–4-

    காத்தூட்டுவான்‌ பொறி மாவுடன்‌ கலந்தோடியோர்‌ காட்டிற்குளே.
    நாத்தூக்குதே நாரம்மிலேம்‌ நாமென்செய்கே மெனவந்தவர்‌
    தீர்த்தங்கொளத்‌ தினமீய்ந்தனை திருவாதிரைத்‌ தினம் வந்தனை
    ஏத்தற்கெனா லெண்ணாசுதீ ரெதிராசனே யெதிராசனே.–5-

    புகை புக்கினும்‌ போகாக்குறும்‌ பொறை சூழுமா விந்தத்திலே
    பகை புக்குணு மாயாமதப்‌ பாவக்குழு விற்கெட்டிடா
    வகை புக்கி யெம்‌ மவர் வாழ்ந்திட வரதன் வழி வந்தாண்டவன்‌
    எகை புக்கு நீ தொழு நா துதி யெதிராசனே யெதிராசனே.–6-

    பரவாதிக ளேவற்பசா சங்கட்கெலாம்‌ படுதொண்டராப்‌
    புரமோதிடப்‌ போவேற்கெலாம்‌ புணையாகிமீப்‌ புரமேற்றினாய்‌
    குருவேகுரு பரனேபரன்‌ குளிர்வாசமாங்‌ கோயிற்பிரான்‌
    எருதேறினான்‌ காணானடிக்‌ கெதிராசனே யெதிராசனே.–7-

    மன்னாவிகண்‌ மாயாச்சுக மதுபெற்றிடப்‌ பேயின்றலைத்
    தன்னாரவிந்‌ தம்மிட்டனை தகையாமண மகனாயினை
    பன்னாளும் வெந்‌ தவமாற்றினாம்‌ பலியாத நின்‌. பத தாமரை
    என்னாமன்மூ கற்காக்கிளை யெதிராசனே யெதிராசனே.–8-

    முக் கோலமா முநியாயினை முநி யிந்திர னென வோங்கினை
    அக் கோல மாயாவாதிகோ லடியுண்ணுமுக்‌ கோலீந்தனை
    செக் கோலக்கூறைக் கட்டினாய்‌ திருக்கச்சி நம்‌ பிக்கன்பினாய்‌
    எக்காலுமெற்‌ கேயத்தமா-மெதிராசனே யெதிராசனே.-9-

    அன்பென்பதோ ரணுவும் மிலே ன துசொல்லவு மருளும்மிலேன்‌
    துன்பென்பதோ தொலையாவிலேன்‌ தொலையாயெனச்‌ சொலவும்‌மிலேன்‌
    முன்புள்ளவா ணவநீக்கியுன்‌ முத்தர்க்கடிப்‌ பொடி யாக்குவாய்‌
    என்னின்பமே யென்றெய்வமே யெதிராசனே யெதிராசனே.–10-

    தன் கண்ணுளே னானாற்பவந்‌ தணியேனென வென்றம்பிரான்‌
    ‘நின் கண்ணுளே யுறவாக்கினா னீயாரிய னிலைகாட்டினாய்‌
    மன் கண்ணுள மநுவிட்டுமென்‌ வடிவின்னதாம்‌ வழி காட்டியும்‌
    என் கண்ணுள நவை நீக்கிலே னெதிராசனே யெதிராசனே.–11-

    உன் சொல்லையா முறுதிக்கொளா துலைவாகுவோ மென்றோவருள்‌
    மன் சொல்லினோ ராறுப் பொருண்‌ மா கச்சி நம்‌பிக்கண்கொடுப்‌
    பின் சொல்லு பா டியமாதியாற்‌ பேணிப் புர நீ தருண் மாதவ
    என் சொல்லி யானிசை கூறுகே னெதிராசனே யெதிராசனே.-12

    ஏனித்தனை நாளாவெனை யெண்ணாதபா தகனாயினை
    நீ நித்தமென்‌ றிடின்யான்புரி நிலை யுற்ற தீ நெறி யெண்ணியே
    நானித்தனை நாணாகினே னனிபீதியா லொளி வெய்தினேன்‌
    ஈனத்தன் யா னென்செய்குவே னெதிராசனே யெதிராசனே.–13-

    கலை மாது வாழ்த்‌ தெடு பாடியக்‌ கவிநாத செந்‌ தமிழ் வேதமாம்‌
    அலை மீதெழு மம்மான் விழு மதிமோக மெல்‌லணை யாகிய
    தலைவாகுருத் திரளுக்கெலாந்‌ தழலேமதத் தூலக்கெலாம்‌
    இலையாயருட்‌ கெதிராயினே னெதிராசனே யெதிராசனே.–14-

    அருளாளனீய்ந் தருள் வித்தமே யதியாள வந்‌த வரத் தமே
    தெருளா மலர்ந்‌ திடவாக்கிய தெளி வேத வேதிய கோட்டியூர்‌
    பெரியோனிடங்‌ கழலோய்ந்திடம்‌ பெயர்ந்தேமநுப்‌ பெற்றப்பினர்‌
    எரி வீழ்கிலா தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே.–15-

    வட வேங்கடத்‌ தப்பற்கு நல்‌ வளை யாழி தந்‌தனை தென்குறுங்‌
    குடி நாரணக்‌ கோமாற்கு மந்‌ திரமோதி வான்‌ குறை நீக்கினை
    செடி தீரு நா ரணனைக் களிச்‌ செல்வச் சுதனாப் பெற்றனை
    இடி சேரு தீப்‌ பெறுவானரு ளெதிராசனே யெதிராசனே.–16-

    நாயெத்தனைத்‌ துதி கூறினு நன்றாகுமோ நாயேன்றுதி
    பேயத்தனைப்‌ பெண் கொண்டவன்‌ புவியத்தனைப்‌ பிழை கொண்டவன்‌
    காயத்தனைத் தாணென்றவன்‌ காண் பூப் பொனே கதி யென்றவன்‌
    ஏயத்தினை யுருவானவ னெதிராசனே யெதிராசனே.–17-

    பத்தாறுவே டத்தானுமே பற்றாமன்மாழ்‌ குறுவான்மகி
    ழத் தானு வெண்‌ கோடிப்‌ புனைந்‌ தகன் மா நிலத் தாவிக் குழு
    வைத் தாழ்விலா வின்பாகுவை யத்தான் மகிழுற வீந்தருள்‌
    எய்த்தேன் விடா தெனையாள்குவா யெதிராசனே யெதிராசனே.–18-

    பல்லாயிரங்‌ கலை தேர்ந்தவ ராசீவக மத பண்டித
    வல்லாருட னோர்வேலையே வலியாயிர வதநங் கொடோர்‌
    சொல்லாடி வென்‌ற மணக் குழுச்‌ செக்கிற்றிரித் தரசன் முனே
    எல்லாருங்கண்‌ டிறும் பூ துறு மெதிராசனே யெதிராசனே.–19-

    முகமொன்றிலா யிரவாநந முந்தக் கொடோர்‌ பலபாடையால்‌
    அகமொன்று நா நா பேதமா வறையும்மதத்‌ தவரீட்டமிக்‌
    ககமொன்று நீட்‌ கழு மாமரங்‌ கவ்விக் கிடந் திடவா துவெல்‌
    இகமொன்று வானக மீந்தரு ளெதிராசனே யெதிராசனே–20-

    இன்தென்கலை யினிதோதின தெதுவோவது வன்றோமுனோ
    மன்நின்பமா நூற்றெட்டென வழங்கும் பதி யவை மாசற
    நன்றின்பமாப்‌ புதிதாக்கிட நாடெங்கினு மோடோடிவா
    தென்றெங்கு நன்‌ றீவானெழு மெதிராசனே யெதிராசனே–21-

    திருமாமுத லடியார் பவந்‌ தொலை யக்குலை தேவில்லெலாம்‌
    ஒருமா முதற்‌ காமாறு நன்‌றுறவாக்கியே யொரு தேவனைத்‌
    தெரியாது பற்‌ பல வெண்ணி மாழ்‌ குநர்க்கு உண்மையைத் தெளிவாக்‌கிய
    எரி நாளில் வந்‌ தவன் றம்பியே யெதிராசனே யெதிராசனே–22-

    சைவப் பெருஞ்‌ சைலாசநி சமணப் பனி தணி ஞாயிறு :
    பொய்யொப்பிலா மாயா மதப்‌ பொதி சுட்டெரி தீப் புண்ணியர்‌
    கை யொப்பிலா புத்தப் பணி கருகும்பெருங்‌ ககராட்டென
    எய்தற்கரும்‌ பேறானவா வெதிராசனே யெதிராசனே.–23-

    பொறியைப் பொலி யாதாக்கினாய்‌ புலனைச் சலி யாதாக்கினாய்‌
    வெறியைச் செயுங்‌ கரணக் கரி வீவட்புலி வீறாக்கினாய்‌ ்‌
    கறியைச் செயுங்‌ காமாதிகால்‌ கடி துண்ணு கட்‌ செவியாயினாய்‌
    எறியைச் செயு மெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.–24-

    பன் மா மத மாயாவிருள்‌ பாறச் சிவப்‌ புடை சுற்றியே
    கன் மா மனம்‌ வாக்காக்கையை கலித்தாமெனு முக்கோல் கொடு
    தன் மா மலர்ப்‌ பதஞ் சார்குவார்‌ சதிரான விண்‌ணாடேறுவார்‌
    என்னாதனே பொன்னாதனா ரெதிராசனே யெதிராசனே–25-

    உனை யேத்திலார்‌ பவமோ யுமோ வுனை வாழ்த்திலார்‌ நரகோயுமோ-
    தனையே தனக்‌ கிணையானவன்‌ றரைவானுன தாணைக்குளே
    நினையே நினைந்‌ தீந்துள்ளது நெறி தேர்ந்தவர்‌ நினை வுள்ள காண்‌
    எனை யேன்று கொண்‌டுன்பத்தியீ யெதிராசனே யெதிராசனே.–26-

    காமக் கொடுங்‌ கண்மாந்தினேன்‌ கதமாகுவெந்‌ தடி மேவினேன்‌
    வாமப் பெரு மத மச்சர மாகுங் கலைப்‌ பூண் மேவினேன்‌
    சீமத் தன் மாக்‌ களவாடி தீத் திறனானவ னக மேறினேன்‌
    ஏமத்தனென்‌ றிகழா தரு ளெதிராசனே யெதிராசனே–27-

    ஆசாரமோ சரகுண்ணி நல்‌ லநுட்டானமோ வூர்க்கோலமாம்‌
    காசாசையோ நீரட்டையாங்‌ கனியாசவே சரியேசரி
    பாசாசரோ பகர்தற் கொணொப்‌ பர தேசிகா பரிவோடெனை
    ஏசாதுகாத் தருள் பூதூர்வா ழெதிராசனே யெதிராசனே–28-

    எல்லே யிளங்‌ கிளியேயெனு மெமதம்மையா நீ தம்மண்ணரே
    அல்லும் பகலும் மாழ்கிவீ ழாழ்வார் விடும்‌ வரி வண்டரே
    சொல்லாது கொண்‌மின் காணெனாச்‌ சொன்னார் தமெம்‌ பெருமா வுனை
    யில்லாதவ ரில்லாதவ ரெதிராசனே யெதிராசனே–29-

    வஞ்சத்திலோ கடலானவன்‌ வளர் பொய்யிலோ மலையானவன்‌
    பஞ்சத்தினும்‌ பதருந்தராப்‌ பழிலோபகாஞ்‌ சிரமானவன்‌
    நஞ்சத்தினு நனிதீயன்யா னானும் பிறப்‌பற வெண்ணினேன்‌
    எஞ்சத்துளே னெனை யாள்குவா யெதிராசனே யெதிராசனே–30-

    ஒன்றேனுநன்‌ றுணராதவ னொரு போதுமே பணியாதவன்‌
    பொன்றாத மூ வாசைச் சுழிப்‌ புரண்டாடு புன்‌ புலையர்க்குளேன்‌
    நன்றீ துதீ தென்றோதுநூ னனி யோதிலேனினை யோதிலேன்‌
    என்றாலு நீ யெனை விட்டிடே லெதிராசனே யெதிராசனே-31

    பெண்ணாயினார்‌ கண்ணோயினும்‌ பிறழன்னரல்‌ குன்னோயினும்‌
    அண்ணாந்தெழுங்‌ குயநோயினு மவர் வாயழகுடனோயினும்‌
    பண்ணா வுடல்‌ பல கோடியான்‌ படு பீழை பாரதமாகுமே
    எண்ணாதெனை யினிதாளுவா யெதிராசனே யெதிராசனே–32-

    என் போல யா ரியானென்றவ னென்போல யா ரென தென்றவன்‌
    என் போல யார்‌ பழி செய்தவ னென் போலயார்‌ நன்றற்றவன்‌
    இன் பாநல மொன்றேனு நன்‌ றியலோடு தேர்ந்‌ திலனையனே
    என் பாவமோ வென் சன்மமோ வெதிராசனே யெதிராசனே–33- .

    என்றீமைகண்‌ டெமன்வெள்கினா னெழுத்தாடுவான்‌ கழுத்தாடினான்‌
    நன்றாம் விதி குன்றாயினா னாராயண னலிவெய்தினான்‌
    நின்றாகுமைந் தாம்பூதமு நெடு மூச்சு விட்‌ டுடல் சேர்ந்தன
    இன்றாகு நின்‌ னடி வந்தநா ளெதிராசனே யெதிராசனே–34-

    மண்ணுற்றவான்‌ நழையாவிகண்‌ மகன்றந்தைமா துலனாயினேன்‌
    கண்ணுற்றகா தலனாதியாக்‌ கழறும் பிறப்‌ பினிலோய்ந்தனன்‌
    எண்ணற்றதாய்‌ பெற்றேங்கின ளினிதீனுவா ளெவளும்மிலேன்‌
    எண்ணற்க வென்‌ பிழையாரிய வெதிராசனே யெதிராசனே-35-

    நானோ நினை நினைவிட்டிலே னாராயண னடியார்களா
    நீ நோவு செய்‌ யுபகாரமே நினையாதவன்‌ பதையாதவன்‌
    ஆனாலு நின்‌ னடியாரெனை யட பையலே யென்றார்கள் காண்‌
    ஏனோ நின தாளெற்கிலை யெதிராசனே யெதிராசனே–36-

    செய்ந் நன்றிகொன் றுளனாயினேன்‌ திருமாலடி யரை நோக்கிடின்‌
    கைந் நின்றுகூம்‌ பிக்கால் விழாக்‌ கடையீனனாய்க்‌ கழுதைப் பிறப்‌
    பைந் நின்ற நன்‌ றென்னே யுளே னருளாழியா ரியநாதனே
    எந்நின்ற சீர்‌ நிறை வேதனே யெதிராசனே யெதிராசனே–37-

    வட வேங்கடத் தவன் றொண்டனா வான் கானிலே யமுதங் கொடுன்‌
    னிடம் வந்தனத்‌ துடன் பாத்தளித்‌ தினிதே கிடச்‌ சென்மாதவ
    கடனஞ்சினுங்‌ கடையேனெனைக்‌ கை விட்டிடிற்‌ கதி விட்டனன்‌
    எடலென் பிழை யருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–38-

    ஈரொன்பது நாள் வாது செய்‌ யிகலெக்கிய னிகல்பட்டரோ
    நீரென்பதே நிசமாகுமந் நிமலற்குமிச்‌ சீவற்குமே
    சீரொன்றிரண்‌ டெனுமின்மினிற்‌ றிகழ் வாக்கியஞ்‌ சிதை வாதலில்
    ஏரொன்‌றினை யார் தேர்குவ ரெதிராசனே யெதிராசனே–39-

    நியோ பரன்‌ பாயாகியே நிலை காலமு நிற்கின்றனை
    நாயேங்களவ்‌ வேதச் சிர நல் வாக்கியப்‌ பொருடேர்‌துமோ
    ஆயாதுவே தாந்தப் பொரு ளகம் வந்தவா றலறிச் சொனார்‌
    ஏயாதவ கிரி வாசனே யெதிராசனே யெதிராசனே–40-

    ஒன்றே யுல கென்றாரதி னுட்டோன்றுறு பொருடேர்கிலார்‌
    ஒன்றே யுல காதற்குள வேதென்னெனி லதுவுஞ் சொல்வார்‌
    அன்றாதியா மரவாகிய வையாவெழுந்‌ தருளாயெனில்‌
    இன்றேனு நன்‌ னெறி தேர்கிலே மெதிராசனே யெதிராசனே–41–

    பரமே பெருஞ்‌ சதமாயிடின்‌ பதமேதெதிற்‌ பதிவாரெவர்‌
    சிரமாகிய சுருதிப் பொரு டெரிவாரெவர்‌ தெரியாரெவர்‌
    வரமாகுபத் திகளே துநீ வனை பாடிய மலையாவிடின்‌
    இரவேது நற்‌ பகலேது காணெதிராசனே யெதிராசனே–42-

    நீயேயவ தரியாவிடி னிகிலத்துளே நிறை சீவர்கள்‌
    ஓயா துதந் தமையேபர மென்றெண்ணியோ வாமாலராய்‌
    ‘ஆயாவிர ணியராகியே ழாகக்கணி நிரயத்திலே
    ஈயாவிழுந் தெரியாகுவா ரெதிராசனே யெதிராசனே–43-

    ஈசோகமென்‌ பவர்யாருமி ராமாநுசற்‌ கினிதாகியே
    தாசோகமென்‌ பவராக்கிமுத்‌ தாபத்தினைத்‌ தணிவித்தனை
    ஆசாறிடு மைந்தாம் பொரு ளறிவித்திடுந்‌ திருமந்திரம்‌
    ஏசாறிடா தீந்தாய் கொலெ மெதிராசனே யெதிராசனே–44-

    அட்டாக்கரப்‌ பொருணீசொலா யானாலெமைப்‌ பரனைத் துணைக்‌
    கட்டானதைப்‌ பகையானதைக்‌ கதியானதைத்‌ தெளிவேங்கொலோ
    சிட்டாதிபா சித்தாதிபா செறிபன்மத விருளாதவா
    இட்டாவெனை விட்டாலிலே னெதிராசனே யெதிராசனே–45-

    உன்னன்பர்கள்‌ வைராகமு முறுபத்தி ஞாநக் கோவையும் .
    பொன்னன்பர்பால்‌ மனமுள்ளவர்‌ புரி நீதியும்‌ பொல்லாக்கொடு
    மன்னானவன்‌ வழி போகலு மகியார் தெளி வுற வெண்கலை
    என்னே யசைத்‌ தனை யோதுமி னெதிராசனே யெதிராசனே–46-

    உறங்கா விலிப்‌ பரிசத்தினா லுடல் பூக்கு நல்‌ லொளி யோங்கலே
    கறங்கா மனப்‌ பொன்னாச்சியார்‌ கனி வெண்ணியே களி கன்னலே
    பிறங்காத வெம்‌ பார்க்கின்னிருளே காந்தமின்‌ றெனப் பேணி வாழ்‌
    விறங்காது காத்‌ தருணாதனே யெதிராசனே யெதிராசனே–47-

    அளவற்ற சங்‌கர வாதிய ரளவற்ற மாயா வாதியர்‌
    அளவற்ற காபில வாதிய ரளவற்ற கெளமாராதியர்‌
    அளவற்ற வஞ்‌ஞாநங்கெடுத்‌ தரவிந்த நின்‌ னடி மேவினர்‌
    இளவர்க்குளே னேதும்மிலே னெதிராசனே யெதிராசனே–48-

    முன்னாரியர்‌ பத தாமரை முடி கொண்ட யான்‌ முடி பெற்ற பின்‌
    என் பாதசம்‌ பந்தம்முளோ ரவர் பாதமே யினர்பின்னரும்‌
    மன்னாகுபே ரின்பீசுக மலிவீடுறற்‌ கென்மாசுள :
    என்றோது நங்‌ கருணாகர வெதிராசனே யெதிராசனே–49-

    வடுகா வெனு நின்றாசனார்‌ வழி பட்டு வாழ்த்‌ துறுதேவனே
    படுகாடெனுங்‌ காளத்தி சேர்‌ பத்தர்க்கு நல்‌ லமுதேயிலைத்‌
    தொடுவேன் கொலோ வென்றேங்கினார்‌ தூங்கோங்கு தாமரைத் தாளனே
    எடுவேம் பிறப்‌ பினில் விட்டிடே லெதிராசனே யெதிராசனே–50-

    தன்னாரியன்‌ வெள்ளாட்டியாச்‌ சமைந்தானுணுந் தற்போதமே
    தென்னன் கிழிச்‌ சென்றான் மக டெளிவாகுபா வைக்கானவா
    பன்னாளுமத் திரு நாரணப்‌ பதி மேவி யாண்‌ டருடந்தவா
    என் னாதனே யென் தேவனே யெதிராசனே யெதிராசனே–51-

    அந்தோ பல வாஞ்சீவரு மம்மானடிக்‌ கேயன்‌ றியில்‌
    சிந்தாகுலத்‌ தோடே பல தெய்வங்களைத் தொழுதோய்ந்தனர்‌
    முந்தாகிய முறைமைப்படி முன்றொண்டரா கிடவைத்தனை
    எந்தா யெனை யேனீக்குதி யெதிராசனே யெதிராசனே–52-

    ததி தொண்டையூர்‌ கொண்டிக்கு விண்‌ டாரும்மெனத்‌ தன் கையினால்
    பதி கொண்டதோர்‌ முறி போக்கினை பரனாகு வேங்‌ கட நாதனும்‌
    விதி கொண்டனன்‌ வீடு ஈந்தனன்‌ விழை மங்கையும்‌ வீடுற்றனள்‌
    எதி நாதனே கதி நீ யெனக்‌ கெதிராசனே யெதிராசனே–53-

    மண் மா மலர்‌ மகிழீசனு மகிழாதுனைத்‌ தருமீசனும்‌
    தண் மா முநி போகங்கொளுந்‌ தனியீசனுந் தடை யின்றியே
    விண் மா நிலச்‌ செல்வங்கணின்‌ விதி நிற்பவா வெளியிட்டனர்‌
    எண் மா பத கன்னென்னையா ளெதிராசனே யெதிராசனே–54-

    குரு பூர்த்தியா வரு மூர்த்தி யெங்‌ குடியாவுநின்‌ னடியே யுள
    ஒரு பூர்த்தியா வுறு ஞாநமு மோரார்த்தியா யுறு பத்தியும்‌
    தரு பூர்த்தியாம்‌ வைராகமுஞ்‌ சாராததோர்‌ சடன் மேதை கூழ்‌
    எரு பூர்த்தியா விட்டாள்குவா யெதிராசனே யெதிராசனே–55-

    போகத்திலே பொலி தீயன் யான்‌ பொதி வேத வேதாந்தத் துறும்‌
    யோகத்திலே கண்டுற்றதோ ரொளி மசுகப்‌ பொருளுற்ற நின்‌
    பாகத்திலே படியாத யான்‌ பரமாகுமப்‌ பொருணச்சலெற்‌
    கேகத்திலே நாணுக்குதே யெதிராசனே யெதிராசனே–56-

    கழி ஞாநமாஞ்‌ சடகோபனார்‌ கலியுங் கெடுங்‌ காண்மின்னெனாப்‌
    பழி ஞாநமில்‌ பதிகத் தினாற்‌ பரிவாக நின்‌ படி பாடினார்‌
    வழிபாடு செய்‌ துய்வாக நின்‌ வடிவாக்கியாள்‌ விழியாக்கியே
    இழி வாக்கிடா தெமை யாட்கொளா யெதிராசனே யெதிராசனே–57-

    ஒரு மூலமந் திரவாச்சிய னோவாவவா வதிகாரங்கண்‌ :
    யுரு மூல மந்‌ திரமீந்த நீ யெற்கோவருள்‌ செய்வாயெனப்‌
    பெரு மாசையா லென் மாசினாற்‌ பெட் புற்று பேதுற்றோய்ந்தனன்‌
    இரு மாசை முற்‌றுற நோக்கியா ளெதிராசனே யெதிராசனே -58-

    சுரு வஞ்ஞனா லாகாத விச்‌ சகமுற்றுநின்‌ றாளேத்திட
    ஒரு வஞ்சமு மில்லாமலே யொளி வேத மந்‌ திர மோதினை
    கருமஞ்செயாப்‌ பிரபத்தியே கழியாச்‌ சுக நெறி யென்றனை
    இரு மஞ்சிலா வெற்கஞ்சலீ யெதிராசனே யெதிராசனே–59-

    முது சாம மா மறை யுச்சியின்‌ மொழியின் படிப்‌ பர சீவர்கள்‌
    பொதுவாகுமா நந்தத்திலெப்‌ போதுந்தகா தொருபேதமென்‌
    பதுவாகுமவ்‌ வசியின்பதம்‌ பரிந்தன்னதே பண்பென் றனை
    இது யாவருந்‌ தெளிவுற்றன ரெதிராசனே யெதிராசனே–60-

    தத்தொம்பதப்‌ பொருளாய் கிலார்‌ தானே பர மென்றாய் கிலா
    வித்தைக்குளாய்ப்‌ பிறரேளன வேதைக்குளாய் வெள்குற்றனர்‌
    தத்தென்னிறற்‌ பரமென்றனை தொம்மென்னிறா சனையென்றனை
    இத் தன்மையா ரிசை செய்குவ ரெதிராசனே யெதிராசனே–61-

    நீயே குரு பரனென்றவர்‌ நினை தாளினைப்‌ பணியாதவன்‌
    நாயேனை நாரணன்றொண்டெனி னானாவனோ வென்றேங்குவன்‌
    தாயேயரு டந்தாயொரு தானானவென்‌ற நமானவா
    ஏயேயென விகழாதரு ளெதிராசனே யெதிராசனே–62-

    மன்னாகுதி நினை நன்றென மதியென்றவா சகமெண்ணியே
    தன்னாகுமுண்‌ மையை நாடியச்‌ சாமிக்கு நாஞ்‌ சொத்தாகுதும்‌
    என்னா நினைந்‌ தின்பெய்திடா திறையானென விழிவெய்தினர்‌
    இன்னாவிலா துன் பாதமீ யெதிராசனே யெதிராசனே–63-

    மாயாமத வலைசிக்கியே மாய்ந்தார் பலர்‌ மதி சூடியை
    நீயோ துதற்‌ பரமென்றெணி நீராய் நிலத்‌ தவிந்தார் சிலர்‌
    ஈயாதிழி பல தேவரை யிறையோனெனா விறந்தார் சிலர்‌
    ஏயாதவாத்‌ திரிவாசவா வெதிராசனே யெதிராசனே–64-

    எம்மான்றரி சநமோங்கவே யென்னென்னவோ வினல்மேயினை
    அம்மானு நின்‌ னாட்சிக்குளே யானா துவைத் தனனாதலால்‌
    சும்மா விருந்‌ திடினாயினேன்‌ சுகிக்கற்கொரு சூட்சிக்கிலேன்‌
    இம் மானிட னினை யேத்தல் செய்‌ யெதிராசனே யெதிராசனே–65-

    அத்தா நினக்‌ கடியோமென வடியோமடிக்‌ குடிலுய்ந்தன
    பித்தானவன்‌ பிழை செய்தவன்‌ பெரியோரை நிந்தனை யிட்டவன்‌
    மொத்தாடுமைம்‌ புலவாசையே மூவாத பேறாக் கொண்டவன்‌
    எத்தாலுமீ டேறற்கிலே னெதிராசனே யெதிராசனே–66-

    ஒரு நாளு நின்‌ பேர் வேண்டிலே னொரு நாளு நின்‌ னூர் போற்றிலேன்‌
    ஒரு நாளு நின்‌ னருவெண்ணிலே னொரு நாளு நின்‌ குணம் பன்னிலேன்‌
    ஒரு நாளு நின்‌ விசயஞ் சொலி யுற்றாருட னுடல் பூத்திலேன்‌
    இரு நாளு நின்‌ னொருபத்தியீ யெதிராசனே யெதிராசனே–67-

    அருளாளனார்‌ தந்தாளும் பேரருளாளனார்‌ தந் தேசிகா
    இருளாகு முத்‌ தடை மேவினே னிதினாலென தியானாயினேன்‌
    ஒரு நாளு மீ தொழிவாகிலே னுன் காருணி யத்தாலென
    திருணீங்கிட வருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–68-

    மெய் வந்திலா நாவானினை மெய் போலவே துதி செய்தனன்‌
    கைவந்திலாக்‌ கயவன்னெனைக்‌ கடுத்தே விடிற்‌ றடுப்பாரிலை
    ஐவந்த நின்‌ னடியார்கள் கண்‌ ணெச்சிற் கழு விட வென்றனை
    எய்யாது வைத்‌ தருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–69-

    நின் பாத மெண்‌ ணி மலர்க்குளே நெடு நீசன் யானிற்கின்றது
    புன்பாலதாம்‌ பைங்கூழ்க்குளேர்‌ புல்லாடவன்‌ போலாகுவேன்‌ :
    அன்பாலெனை யவரேளன மாடிக்களித்‌ திடவாக்குவாய்‌
    என்பாவவாக்‌ காற் போற்றினே னெதிராசனே யெதிராசனே–70-

    அருளென்ப தோ ரணுவும் மிலே னடியார் முனந் தடி போலவே
    மருளென்பது மாமய்ப்பானெணி மகிழோடு சேவித்தும்மிலேன்‌
    தெருளேது மற்‌ றவனாகிடம்‌ பத்துக்குளே தெளிவெய்தினன்‌
    இருளேது மற்‌ றவனாக்கியா ளெதிராசனே யெதி ராசனே–71-

    நின் னாமமாந்‌ துவயத்தையே நீரன்னமா நிலை கொள்ளுநா
    ளெந்நாளெனா வேங்குங்குணத் தெம்மான் களென்‌றனையும் மொருச்‌
    சின்னானெனச்‌ சிறு புன்னகை செய்வாரெனி லுய்வேனையா
    எந் நாளு நீ யே காப்பு காணெதிராசனே யெதிராசனே–72-

    நான் வேண்டியா நீ யாள்குவாய்‌ நாய் வேண்டியா மழை பெய்வது
    தான் வேண்டி வந்‌ தவனீ தலத்‌ தவராண வந்‌ தமை நீக்கியே
    வான் வேண்டியீந் தவனீயெனை வாங்காணொனா தகல் வாய் கொலோ
    ஏன் வேண்டலென்‌ னன்னாய் மிகை யெதிராசனே யெதிராசனே–73-

    சித் அசித்தெனுந்‌ திரு மேனியுட்‌ டிகமும் பிரான்‌ றிருநாதனென்‌
    றிதமுற்றவே தாந்தம் மெலா மிசைவிப்பதை யறிவிப்பதாய்‌
    பதமுற்ற பாந்‌ தட்காதியாம்‌ பர நீ யெழுந்‌ தருளாயெனில்‌
    எது முற்றவோர்ந்‌ துலகுய்யுமா லெதிராசனே யெதிராசனே–74-

    ஐந்தாகு பேதத்தாவிக ளைந்தாகு மெம்‌மான் மேனிகள்‌
    ஐந்தாறதா மவனைப் பெற வவையுட்கடை யாறே நலம்‌
    நந்தாதிர்கோள்‌ பவ சாகர நமரங்காளென்‌ றருள் செய்தனை
    எந்தாய் பிறந்‌ துய்ந்தோமிலை யெதிராசனே யெதிராசனே–75-

    அனை யாற்றகி லாப்பாவமே யடியேன்புரிந்‌ துளனாதலில்‌
    உனை யொப்புளா ரெவரென்பவ மொழிக்குந்திற முடையாரையா
    புனை மாதவ னிந் நாளெனைப்‌ புரந்தே யருள்‌ புரிவானெணி
    எனை யுன்னிடம்‌ விட்டானரு ளெதிராசனே யெதிராசனே–76-

    அடியேனடி யேனென்ற சொ லறிவேனதன்‌ படியே யிலேன்‌
    செடியே யுள னொரு நாளுமச்‌ செய்கைக் கிணங்‌கிலன்‌ றீயன்யான்‌
    படியாக் கிடந்‌ துன்னாணை நான்‌ பார்ப்பேன் கொலோ வென்பேனலால்‌
    எடுதீயனென்‌ வடிவாக்கியா ளெதிராசனே யெதிராசனே–77-

    சுக சாரணர்‌ போலேவயி ணவவேடனா கினனேயலால்‌
    அகமாரகத் தோடேநலோ ரகம்வேம்வினை யுடையேனையா
    மகனாகிடி லென்செய்குவார்‌ மாதாபிதா மகன்‌ றீயனேல்‌
    இகம் யாவும் வானகம் யாவுமீ யெதிராசனே யெதிராசனே–78-

    உயிர் பாரதந்‌ திர சேடமே யுரு வென்ற மந்‌ திரமோ வறிந்
    தயர் வெய்திடா தறிந்தே யுள னநுட்டானமோ வறியேனையா
    பயமற்றவன்‌ பவமற்றவன்‌ பரிவற்றவன்‌ பரனே யிதென்‌
    இயலுற்றிட வருடந்தரு ளெதிராசனே யெதிராசனே–79-

    என்னாலடி யார்க்கேற்ற நன்‌ னடை மேவிட வியலாது காண்‌
    உன்னால் வரு வித்தாள் கருணைக்கொப்பிலா வொரு மாதவா
    பன்னாளுமுன்‌ பதம் விட்டிலார்‌ பார்த்தார் குளிர்‌ நோக்காலெனை
    இன்னாதுள முதலூதிய மெதிராசனே யெதிராசனே–80-

    தக்கானல னே யாயினுந்‌ தண் வெண் மணி லுன் போலவே
    பொக்காக்குள மிட்டுண் மடிப்‌ பொறி மாவுடன்‌ பெருமானை யான்‌
    எக்காலுமி.லக்காகவே விடும்பாக்கிய முடையேனையா
    இக்காலெனை நீங்காதரு ளெதிராசனே யெதிராசனே–81-

    இடும்பாக்கிய முடையேனெனு மிழிஞன் சொலை யெண்ணேலெணி
    விடும்பாக்கிய னாக்காதுயிர்‌ விமலக் குணம்‌ மிளிர்வானருள்‌
    தொடும்பாக்கிய னாக்கிப் பெரு நீ தொண்டர்க் கடி யானாக்கியே
    எடும்பாக்கிய னாதற்கரு ளெதிராசனே யெதிராசனே–82-

    நம வென்ற சொற்‌ சொலவுந் தகா நரனாயினு மதனுட்பொதி
    தமதென்ற துந்‌ தாமென்றதந் தகுமா வெனதீ தடிந்தாவது
    உமதன்பினா லுறுமென்ற வுத்‌ தமராய் மொழி யுலவாதுளேன்‌
    எமன் வெள்கிட வெனையாக்கியா ளெதிராசனே யெதிரஈசனே–83-

    நானுங்கரை மரஞ்சேறலுன்‌ னளினப்பத நாவாயினைத்‌ .
    தானுஞ் சொல லாற்றான்மகிழ்ந் துளன் காண்டமி யேனையனே
    வானும் புவி தானும் மறை யோனும் வழுத் திடுமாப்புக
    வீனுங் குண கணனே யரு ளெதிராசனே யெதிராசனே–84-

    எழு பத்து நான்‌ கெனும் தூம்பினா லியன் மந்திர வமுதானதைத்
    தொழு பத்துறுந்‌ தொண்டர்க்கு வீடாக்கிக் களி துகளற்றவா
    வழு வத்தனை யேனும் மிலா வாரித் தட வருண்மாரியே
    இழி வெத்தனை யுளனாண்டருளே யெதிராசனே யெதிராசனே–85-

    ஆழ்வார்கள் செந்‌ தமிழ் வேத நூ லருளும் பொருள் அறிவித்திலர்
    ஊழ் வாங்கிட வரங்கத்தமா னுன் சீடனா வுற வெண்ணியாம்‌
    வாழ்ந்தோங்குற வர யோகியாய்‌ வந்தே தமிழ்‌ மறையின் பொருள்‌
    ஈந்தாண்டருள் தந்தாய் கொல் எம் எதிராசனே யெதிராசனே–86-

    இதமாம் வட கலை வேத நூ லிலகும் பொரு ளெல்லாமு நின்‌
    பதமாகிட வுன் பாடிய நூலாதியிற்‌ பகர்ந்தாய் பினர்ச்‌
    சிதமாகிடா வெம் போலி கட்‌ கினிதாம் வர முநி யோகியாய்‌
    இதமாகு தென்‌ கலை யீந்தரு ளெதிராசனே யெதிராசனே–87-

    உயர் மாக்குலத் தவர்க் காரண முரை ஸூத்திரப்‌ பொருள் யாவையும்‌
    அயல் மாழ்குற மா பாடிய மதனாலருள்‌ செய்தாய் கொடும்‌
    மயல் மாய்ந்துள வாழ்வார் மறைப்‌ பிரசாதமே மகிழ்ந்‌ துண்ணுவான்‌
    இயலீடுக ளீவானருளெ திராசனே யெதிராசனே–88-

    எம்போலிய ரீடேற வென்‌ றியலுங் கரு ணையினான் மணத்
    தம்போருகத் தாயாரடிக்‌ கடியார் மறைப்‌ பொருளைச் சொலச்‌
    செம் பாகுவே செங் கன்னலே செங் கண்டுதே னே பாலதே
    எம் மா முநி யெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.(89)

    உலகாரிய னருணூநீபொரு ளோதாரெனின்‌ முன்னூற்றமி
    ழிலகாரணங்‌ கடலிற் கரை யின்கன்னல தாகும் மெனா
    அலவாவதன்‌ பொருட்டெங்குல வடிகாளென வடியோந் தொழ
    எலமாக வந் தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே. (90)

    சமக்காரமாத் திரமீந்துமுன்‌ றமிழாரணப்‌ பொருள் யாவையும்‌
    எமக்கேனரு ளீந் தாயிலை யென்றான்‌ கொலவ்‌ வீசன் மிகத்‌
    தமக்காகவோர்‌ தனியன் செய வவற்கோதினை தமிழின் பொருள்‌
    எமக்கான வெங்‌ குல தெய்வமே யெதிரஈசனே யெதிராசனே–91-

    தென்னாரணங்‌ கொண்டாடிடு சீர் பெற்ற தன்‌றோ திவ்வியம்‌.
    என் போத மா தவமற்றவை யின்பாகநன்‌ றாக்கிக்களி
    அன்பே யெம தருளே யுணு மமுதே மறைக்‌ கதிராசனாம்‌
    இன்பே யெமை யெற்றா தரு ளெதிராசனே யெதிராசனே–92–

    திரு மா மலைக்‌ கேகுந் தடங்‌ காட்டேற்றமா ரவனைக்களி
    பெரு மா வுப காரன்னெனாப்‌ பேணிப் பெருங்‌ களி தூங்கினை
    வரு மா வுறங்‌ காவில்லிகைப்‌ பரிசத்துமா மகிழ்வெய்தினை
    இரு மாவுற வருளையனே யெதிராசனே யெதிராசனே–93-

    உனையுங் கொல நஞ்சிட்ட விவ்‌ வுலகென்றிடி விதன் கண்ணினே
    புனை ஞாநவை ராகத்தினிற்‌ பொலிவாரெவ ரருளையனே
    நினை நிற்கப ராதம் புரி நிருபன்புழு நெளியாயினான்‌
    எனையோரிக முற மாண்டன ரெதிராசனே யெதிராசனே–94-

    இம் மாதரி சநத்திற்குயிர்‌ கண்ணீந்திடு பெரியாரருள்‌
    தம் மா மதத் தருமம் மெணிதீ தாசன் செயாச்‌ சடன் யானையா
    அம்மா விவ னென்னாதுத னருண் மேவினர்‌ சரணத் துகள்‌
    எம் மா வினை யிறுவானரு ளெதிராசனே யெதிராசனே–95-

    முதன்‌ மூன்று நல்‌ லாழ்வார்கள் செய்‌ முன்னூல் படித்‌ தறியேனினம்‌
    இதன் மீதவ ரருளுங் கலை யென வோவது தெளியேனினம்‌
    மதன்விண்டிடு கலவிக்குமா மறவெவ்வினை மாலைக்குமே
    இதமாகிடு கடையேனையா ளெதிராசனே யெதிராசனே–96-

    நாலாயிர மென்பாரத னாலாகிட லெனவோ சொலேன்‌
    மேலார் வழி கேட்டன்னவை விள்வான்வழி மேவேனலேன்‌
    ஆலால மன்‌ னார் கேண்மையி லன்பாயினே னாண்டாண்டெலாம்‌
    ஏலாதழிந்‌ தொழிந்தேனரு ளெதிராசனே யெதிராசனே –97-

    பலதேரினும்‌ பத்தர்க்குகப்‌ பாகும் பணி யொன்றும்மிலேன்‌
    நலமாகிடு மென்றேனொரு நாளுஞ்செயே னானாயினேன்‌
    அலதேலொரு வகையேனுநல்‌ லவனாகிட வெண்ணற்கிலேன்‌
    இலையென்செய வல்லேனையா வெதிராசனே யெதிராசனே—98-

    உன்றாண்மல ருறுகேசர னெனையாட்கொளா யெனில் யானையா
    நின்றாகிட வலனென்பது நீயுஞ் சொல லாகாயையா
    கன்றாகவென் ௧றை யுண்டுநின்‌ காந்றாமறைத் தேன்வாக்கியே
    இன்றாகிட வேனும்மரு ளெதிராசனே யெதிராசனே–99-

    சீருற்றொளி ரிராமாநுச செயஞாநவா ரியனார் சரண்‌
    தாருற்றொளிர்‌ பரன் கையினிற்‌ றருதாதவென்‌று எனை யாண்டருள்
    நீருற்றொளிர்‌ திருக் கோவலூர்‌ நில வெம்பெரு மானாரவர்‌
    ஏருற்றொளிர்ந்‌ திடவோதினா ரெதிராசனே யெதிராசனே–100–

    இனிதாகு நின்‌ பத தாமரை யினையூரிடை யுடை வாழியே
    தனிதான்றகு முக்கோல்தடங்‌ கையஞ்சலி கைவாழியே
    பனிதான்பர மன் வாழ் விழி யகடாநந முடி வாழியே :
    எனையோதி யென்‌ றிடு மாபர னினியாரொடென்‌ றும் வாழியே–101-

    பின்முனா முத்தர்‌ நித்தர்கள் வாழியே
    பேணு நூற்றெட்டெம்‌ மான்றாயர் வாழியே
    தன்முன்றானெனு மாதியிலாத் தமிழாரணங் கடழைப்புடன்‌ வாழியே
    என் முன்னின்ற விறை வெண்மண்வாழியே
    இலகு மஞ்சட்‌ பொடி மணி வாழியே
    பொன் முன்றந்த மநு மூன்றைந்தேதி விபூதிரண்டும்‌ பொலிவுற வாழியே–102-

    ———-

    ஸ்ரீ ராமானுஜ மாலை

    இராமாநுஜ னடியை யென்றென்றும்‌ போற்றும்‌
    இராமாநுஜன்‌ றன்னை யேத்த–வராதார
    நற் சீனி வாசனையே நாடீச்சம்‌ பாடிகுரு
    நற் சீனி வாசனையே நத்து. –தனியன்‌

    இன்பம்‌ பமுதெனவே யெண்ணிறந்தோ ரிப்புவியி
    லன்போடு செப்பு மறநெறியைத்–துன்னு
    மிராமா நுஜன்மே லியம்புபா மாலைக்‌
    கராமா னளி படைகள்‌ காப்பு. –காப்பு.

    பூவிற்‌ றிகழ் மாது புட்கரமாய்ச்‌ சேர் மாலைப்‌
    பாவிற்‌ புகழோங்கப்‌ பாடினா–னாவிற்கு
    நற்சுவையு நற்கதியு நல்குமிரா மாநுஜன் செம்‌
    பொற் பதத்தை நெஞ்சே புகல்‌.–1-

    நள்ளிருளி னெஞ்சே நண்ண விடா வென் குருவைக்‌
    கொள்ளாரி னின்று குறையறவே–கொள்ளுகின்ற
    அன்பனிரா மாநுஜனல்‌ லம் புயமாம்‌ பாதங்க
    ளன்றித்‌ துதியா தறி. –2

    நெஞ்சே யடி பணிந்தே னின்னை யென்றும்‌ பேய்ப் பிறவி
    யஞ்சப்‌ புலர்த்தி யருளவே–விஞ்சு புக
    ழாரிய னிராமா நுஜ முனிக்‌ கன்பு செயுஞ்‌
    சீரியர் காற்‌ கீழிற்‌ செறி–3-

    என்னைப்‌ பொருளா யிருளா னது சுரந்த
    முன்னை வினை வேர றுக்கு முன்னவனைப்‌–பன்னப்‌
    பணித்த விராமா நுஜன்பரன்‌ பாதங்‌
    கணித்துத் துதி மனமே காண்‌–4-

    எனக்குற்ற செல்வ மிராமா நுஜனென்‌
    மனத்துற்றுப்‌ போற்றுதற்கு மாயா–தெனக்குற்ற
    அன்பனவ னாமத்தை யாதரவாய்‌ நன்னெஞ்சே
    துன்பணுகா வென்றே துணி–5-

    இயலும்‌ பொருளு மிசைவாகச்‌ சேர்த்து
    மயல் கொண்டு வாழ்த்தி மதித்துப்‌–பயிலுங்‌
    கவி யிரா மாநுஜன் மேற்‌ காதலித்து நெஞ்சே
    புவி மாயம்‌ விட்டுப்‌ புகல்‌–6-

    மொழியும்‌ புகமுடையான்‌ முக் குறும்பாம்‌ வஞ்சக்
    குழியைக்‌ கடக்கு நங்‌ கூரன்‌–வழி கூடுஞ்‌
    சீரிரஈ மாநுஜணனொண்‌ செங்கமல மல்லாமற்‌
    சேரிரா நெஞ்சே திறம்‌–7-

    வருத்துகின்ற மா விருளை மாற்று சீர்‌ வேதக்‌
    குருத்தையுஞ்‌ செந்தமிழுங்‌ கூட்டி -யருத்தத்‌ திரித்தன்‌ றெரித்தத்‌ திரு விளக்கை நம்மி
    லிருத்துமிரா மாநுஜனை யேத்து–8-

    இறையவனைக்‌ காண விதயத்தி னுள்ளே
    நிறை தீப மேற்றற்கு நெஞ்சத்‌ துறைய வைத்‌
    தாளுமிரா மாநுஜனா மாரியனை வாழ்த்திமெத்த
    நாளுந்‌ துதியவனை நன்று–9-

    மன்னிய பேரிருளை மாற்றின பின்‌ மா மலரா
    டன்னோடு காட்டுந்‌ தமிழ்த்தலைவன்‌–பொன்னடியைப்‌
    போற்றுமிரா மாநுஜன்றாட்‌ பூண்டவர்க டம்பெருமை
    யேற்றற்கு நெஞ்சே யிசை–10-

    சீரிய நான்மறையைச்‌ செந்தமிழா லாதரித்தப்‌
    பாரியலும்‌ பாண் பெருமாள்‌ பாதமலர்த் -தாரியலைச்‌
    சூடுமிரா மாநுஜனைச்‌ சூழ்ந்தவர் தங்‌ காரியங்க
    ணாடுதற்‌ கேலா நமக்கு–11-

    சீர்த்தித்‌ திரு மழிசைச்‌ சேர் கோனின்‌ றாளகத்தி
    லார்த்தி கெட வாழ்த்துகின்ற வான்றவன்‌ சீர்ப் பாதம்
    போற்று மிரா மாநுஜன் செம்‌ பொன்னடியை யெந்நாளு
    மேற்றுவாய்‌ நெஞ்சே யினி–12-

    பசுந் துளவத்‌ தேன் மாலைப்‌ பைந் தமிழிற்‌ பெய்யும்
    பசு மறையின்‌ பாமாலைப்‌ பாதத்‌–திசையுறவே
    சாத்துமிரா மாநுஜன்‌ றண்கமலச்‌ சேவடியை
    யேத்துபவர்‌ தம் பதமே யெண்ணு.–13–

    கதியி னிலைக்கவெங்‌ கானங்கள்‌ யாவுங்‌
    கொதிக்கத்‌ தவஞ்செய்வர்‌ கூடிப்‌–பதிக்குத்
    தருமிரா மாநுஜனற்‌ றாட் கமல மேத்தும்‌
    பெருமிதமாத்‌ தாசர்கடாள்‌ பேணு–14-

    காதற்‌ பெருஞ்சுழியிற்‌ காதலித்துப்‌ பேணாத
    தாதரடி சேரத்‌ தருசிந்தை-யாதரவா
    யோதும் ராமாநுஜன் சீ ரோங்கு நறை கமலப்‌
    போது தொழு நெஞ்சே புரிந்து–15-

    தலமனைத்து மோங்கு கலி தாவுகின்ற நாளிற்‌
    பலங்கொடு காக்கும்‌ பதுமன்‌–மலர் சூடு
    மாதி னருளை மதி யிரா மாநுஜனா
    மாதவனை நெஞ்சே வழுத்து–16-

    முனியார்‌ துயரங்கண்‌ முந்தியு மின்பங்‌
    கனியா ரவர்மன மாதே–தனியானைத்
    தண்ணிரா மா நுஜனைச்‌ சார்ந்தவர் தஞ்‌ செங்கமல
    நண்ணுதற்கு நன்னெஞ்சே நாடு–17-

    அரிய திருமறையை யன்புடனே யீந்த
    பெரிய குருகூரன்‌ பேணி–யுரிமையொடு
    பாதமேற்‌ சாத்திப்‌ பரப்பிரம மாலடியை
    யோதுமிரா மாநுஜனை யோர்ந்து–18-

    தென் குருகை நாதன்‌ திருவாய்‌ மலர்ந் தருளுந்‌
    தென்றமிழை யாதரித்‌துச்‌ சேவை செயப்‌ –பன்னரியத்‌
    துன்பமது வந்தணுகாத் துய்ய விரா மாநுஜன்‌ றண்‌
    ணின்புதரு பாத மிறைஞ்சு–19-

    பெருஞ்செல்வந்‌ தந்தையொடு பேணு நற் றாயு
    மரு குருவு மாகி வரு மாறன்‌–றருமறையை
    நீணிலத்தோர்‌ தங்கட்கு நேருமிரா மாநுஜன்றான்‌
    வாணிலத்து மாயுமே வண்டு–20-

    யதிகளுக்கு நாதன்‌ யமுனைத்‌ துறைவன்‌
    கதி தன்னைக்‌ கற்பிக்குங்‌ கர்த்த–னதி யுசித .
    பாதனிரா மாநுஜனைப்‌ பன்னு மறையவர் தம்‌
    பாதங்க ணெஞ்சே பணி–21-

    கார்த்திகை வீரனொடு கக்குகனன்‌ முக்கண்ணா ்‌
    மூர்த்தியு மோட முதுகிட்டுத் –தார்க்கியன் மேற்‌
    பாவும்‌ பரனைப்‌ பணி யிரா மாநுஜனைத்‌
    தாவுமே யென் மனதிற்‌ றான்‌–22-

    வைப்பாய வான் பொருளை வைத்து மனத்தகத்தே
    யெப்போது மேத்துகின்ற வென் குருவை–யொப்பா
    ரிரு நிலத்தி லில்லா விராமா நுஜன் றன்‌
    பெரு நெறியை நெஞ்சே பெறு–23-

    தீவினையாற்‌ பற்பலவாந்‌ தேகங்க ளெய்தினதா
    னோவினையிற்‌ பட்டுமிக நொந்திருக்கும்‌- வீவினையை
    நீக்குமிரா மாநுஜன்றா னீணிலதீதிற்‌ றோற்றின பின்‌
    போக்குவித்தான்‌ பொய்ச் சமயப்‌ பூட்டு–24-

    கருணை யிரா மாநுஜ விக்‌ காண்டஞ்சூழ்‌ பூவிற்‌ :
    றரு நின்‌ னருளினது தன்மை–யொருவருமே
    நோக்கொணொா வல்லமையை நூல் வல்லோர்‌ செப்புதற்கு
    நாக்கு கடா மேலுமோ நன்கு–25-

    திக்குற்ற கீர்த்தி யிரா மாநுஜனைச்‌ செய் வினையா
    மெய்க் குற்ற நீக்க நினை மேவு நல்லோ–ரெக்குற்ற
    வாளராய்த் தோன்றி வரு பிறப்பை மாய்ப்பதற்‌ :
    காளரா யெண்ணுவரே யாய்ந்து–26-

    இரங்கி யிரா மாதுஜன்றா ளென்றனது நெஞ்சந்
    திரங் கொண்டு பாவத்‌ திகைக்க–வரங்கொண்டு
    சேதிக்க வந்தெழுந்த செம்மலடி யல்லாது
    வாதிக்க வாகா மதித்து–27-

    நெஞ்சிற்‌ கறை கொண்ட நீசன்‌ றனைக் காய்ந்து
    தஞ்சமெனப்‌ போற்றி நிதஞ்‌ சார்ந்தவர்கட்‌–கஞ்சலென
    நங்கள்‌ பெருமா ணவிலுமிரா மாநுஜன்றான்‌ :
    கங்கில் புக ழாளனெனக்‌ காண்‌–28-

    கூட்டும்‌ விதி யென்று கூடுமோ தென் குருகைப்‌
    பாட்டென்னும்‌ வேதப்‌ பசுந்தமிந்தா–னாட்டமுடன்‌ ்‌
    வீட்டின் கண்‌ வைக்கு மிரா மாநுஜன் சொன்‌ மெய் யுணர்ந்தோ
    ரீட்டங்க ளெய்திடுவ ரின்பு. —29-

    இன்பந்‌ தருமோக்க மெய்திடுவை யெண்ணிறந்த
    துன்பந்‌ தரு நிரயத்‌ தொல்லுலகின்‌–மன் பல்‌
    லுயிர்கட்‌ கிறை யிரா மாநுஜனென்‌ றோத
    வுயிர்த் துணையா நெஞ்சே யுணர்‌–30-

    ஆண்டுகனா டிங்களிலே யாய் நிகழுங்‌ காலமதி
    லீண்டூ பல யோனி யுழ லின்‌ நிமனங்‌–காண்டகுதோ
    ளண்ணலடி சேருமிரா மாநுஜனை யண்டினவர்க்‌
    கெண்ணரிய பேரின்ப மேத்து–31-

    பொருந்தும்‌ பொறையும்‌ புகழு நற்‌ றேசுந்
    திருந்திய செல்வமுஞ்‌ சேர–வருந்தவன்றன்‌ .
    வண்மையினா லீய வருமிரா மாநுஜன்றான்‌
    றிண்ண நமக்‌ கென்றே தெளி–32-

    அலர் மகளின்‌ கேள்வன்றன்‌ னாழி படர்‌ தண்டு
    மில கொளி சேர்‌ சங்குடனே யேன்ற–பல படையும்‌
    பூதலக்‌ காப்பினொடு போற்று மிரா மாநுஜனை
    யாதரவாய்ப்‌ பன்ன வறி–33-

    இராமா நுஜனை யிரவு பக னித்த
    மராவுமதி பெற்றவர்க ளன்பிற் –றராதவற்றை
    விண்ணினொடு மண்ணினும்‌ வேண்டா திரு நெஞ்சே
    நண்ணிடுவை யின்ப நமக்கு–34-

    அடலுறு நல்‌ லாழிகர னாருயிர்த்தே, வின்சொற்
    கடல் போல நற்பொருளைக்‌ காட்டி–விடலரிய
    தீ நெறிக் கண்‌ வீழ்விக்காத்‌ திண்ணி ரா மாநுஜன்றன்‌
    பா நெறிக் கண்‌ ணெஞ்சே பரசு–35-

    நானிலத்து மானுடத்தை நாடா னொரு தெய்வ
    மானித்துப்‌ போற்ற மனமில்லான்‌–றானித்தம்‌
    பொன்னரங்க மென்றே புகலி ரா மாநுஜன்‌ சொல்
    லென்னரங்கங்‌ கொள்ள விசை–36-

    படியிற்‌ புகழ் பெற்ற பண்புடையார்‌ கூறக்‌
    குடி கொண்டு வாழுங்‌ குணத்தன்‌–கடி கொண்ட
    மா மலர்த்தாள்‌ வைத்தி ராமாநுஜனைப்‌ போற்றுபவர்க்‌
    காமலத்தைப்‌ போக்குமே யாய்ந்து–37-

    புண்ணியர்க ணித்தம்‌ புரளாது நற்றுளபக்‌
    கண்ணி யிடு மால் பதத்தைக்‌ கண்டு தொழும்‌–பண்டையர்கள்‌
    போற்று மிராமாநுஜ நின்‌ பூ மலர்த் தாள்‌ சென்னியில் வைத்
    தேற்ற மனத்‌ துள்ள விசை–38-

    ஆர் தரமோ விந்த வயர் தரு மாவுலகிற்‌
    சேரிருளின்‌ வெந்துயரஞ்‌ சேதிக்கத் –தார் மருவு
    மீறிலிரா மாநுஜனை யென்றுந்‌ துதித்தவர்க்குக்‌
    கோ றிடுவன்‌ பாவக்‌ குணம்‌–39-

    அங்கையி னெல்லி யருங்கனி போற்‌ றோற்றுவிக்கு
    நங்கை மலர்‌ சூடுகின்ற நாதன்றன்‌–பொங்கு புகழ்ச்
    செம்மலி ராமாநுஜனாஞ்‌ சேம வைப்பை. நித்த நித்தந்‌
    தம்மிலிடு வார் பவம் போந்‌ தான்‌–40-

    பொருளொடு தன்‌ மக்களுடன்‌ பூங்குழலாட்‌ பூவு
    மருள் கொண்‌டிளை நெஞ்சே மற்று–மிருள் கொண்ட
    வெந் துயர நீங்குமிரா மாநுஜன்றன்‌ மெய்ப்பதமு
    வந்து தரி னென்றே மதி–41-

    வீடுடனே சொற் பொருளு மேவு நல வின்ப சுகந்
    தேடுந்‌ தருமந்‌ திகழ் கண்ணன்‌–றாடமக்கா
    மென்றுரைத்த வள்ளலி ராமாநுஜனா மிந்நிலத்தி
    லென்று மின்ப மீகுவனென்‌ றேத்து–42-

    மண் மிசையே யோனிகளில்‌ வந்து பிறந்‌ தெங்களிறை
    கண்ணுற்று நிற்கினுமே காண்கில்லா–மண்ணிலத்தோர்க்‌
    கண்ணலிரா மாநுஜன்வந்‌ தாதரித்துப்‌ பின்பவர் தா
    ளண்ணடுமை கொண்டார்‌ நலம்‌–43-

    ஆயிழையார்‌ கொங்கை யெனு மாரளற்றிற்‌ றங்கு மிக
    மாயு நல்‌ லாவிக்கு வாழ்வு தர– நாயகனா
    யெல்லா வுயிர்கட்கு மேலுமிரா மாநுஜனாத்
    தொல்லோ னருளினது தோய்வு–44-

    ௬ரக்குந்‌ திருவுடனே சொல்லு முணர்வும்‌
    பறக்கு மிரு வினையின்‌ பற்றுந் –தரைக்கு
    ளுறு கலியைப்‌ போக்கு மிரா மாநுஜனென்‌ றோதப்‌
    பெறு வரிவை மெய்யெனவே பேசு–45-

    நல்லார்‌ பரவுமிரா மாநுஜன்‌ றன்‌ னாமநம்பிக்‌
    கல்லா ரகலிடத்துக்‌ காமிப்பா–ரல்லாது
    சொல்லார்‌ திரு மொழியைச்‌ சோதித் தவற்கு நிதம்‌
    பல்லார் பல்‌ லாண்டு பரிந்து–46-

    பேறொன்று மற்றில்லைப்‌ பேசுஞ்‌ சரணன்றி
    யாறொன்று மின்றி மற்‌றச் சரணந்‌–தேறுமவர்க்‌
    கெற்கு முனை தந்த வெழிலிரா மாநுஜனைக்‌
    கற்குபவர்க்‌ கில்லை பவங்‌ காண்‌–47-

    கூறுஞ்‌ சமயங்‌ குலையக் குவலயத்தே
    மாறன்‌ மறை தேர்‌ மதியுள்ளான்‌–றேற
    மனத்திற்‌ புக விரா மாநுஜனை யென்றுங்‌
    கனத்திற்‌ கருதிடுவாய்‌ காண்‌–48-

    நாடா தெனது மன நாடா தெனது கர
    நாடா தெனது புய நானிலத்தி–னாடத்‌
    தெரிக்கு மிரா மாநுஜன்றான்‌ செய்த கவி யொன்றிற்‌
    கரிக்கும்‌ பவங்கள்‌ கனிந்து–49-

    இறைஞ்சப்‌ படு பொருள் ஈசனரியென்‌
    றறத்தை மொழியு நல்‌ லண்ணற்‌–றிறத்த
    விரு வினையைப்‌ போக்கி யிதயத்தி னுள்ளே
    வரு மிரா மாநுஜனை வாழ்த்து–50-

    மாதவர்க ணித்தம்‌ வணங்கு திரு மாதின்‌ _
    காதலனை நற்றோழி காமுறுவேற்‌–கேதமில்லாத்‌
    தேன்றுளப மாலை தரத் தென் குருகை நாதன் மகிழ்க்‌
    கோன்றிரு ராமாநுஜற்குக்‌ கூறு–51-

    நிகரின்றி நின்ற நின தருளை யன்றி
    புகலொன்று மில்லை புகற்‌ புன்மை–யகலு நெறிச்
    செப்பு மிராமாநுஜற்குச்‌ சேர்ந்தடுமை யானபின்‌ 3
    றப்பும்‌ பொருளென்னோ சாற்று–52-

    குலத்தின் கட்‌ டோன்றின து தர்ம்ம நெறி புன்மைப்
    பலத்த மதங்கள்‌ பறந்து–குலைந்திடவே
    வந்துதித்த வெங்களி ராமா நுஜனைக்‌ கண்ட பின்‌ :
    னெந்த வித மாயிற்றோ வெண்ணு–53-

    தாழா தெனது சென்னித் தாழா தென துகரத்
    தாழா தெனது தோட்‌ டாரணியிற்‌ –றாழ
    மற்றொன்றும்‌ வேண்டா மதியிரா மாநுஜன்‌ றன்‌
    பொற்றாளை வைத்தாளப்‌ போற்று–54-

    இராமா நுஜன் றன்‌ னிணையடிகள்‌ பற்றா
    தராதி மனங்க ளகன்று–பராகமா
    யார் கலியிற்‌ றேங்கி யரு நரகில்‌ வீழ்வர் கொலோ
    பார் மகட்குப்‌ பாரமெனப்‌ பார்த்து–55-

    அடியைத்‌ தொழுத நல்‌ லைவர்கட்‌ காக
    முடியப்‌ பரித்தேரை முன்ன–மடிய விட்‌
    டாதரித்தக்‌ கண்ணனடி யண்டுமி ராமாநுஜ வெற்‌
    காதரித்தக்‌ கண்டிரா தாக்கு–56-

    பார்த்தா னறு சமையம்‌ பாரிற்‌ பதைத்து விடப்‌
    போர்த்தான்‌ புகழைப்‌ புகுந்தெமது –தீர்த்தா
    னிரு வினைக ளெம் மிராமாநுஜன் றாட்‌ செய்யும்‌
    பெருமிதமா மற்புதத்தைப்‌ பேசு–57-

    பற் பல்‌ லுயிர்களுடன்‌ பல்லுலகி யாவுமே
    சொற் பரன்றா மென் றவிந்தச்‌ சோதனையைத்‌ -தொல்லுலகி
    னாட்டு மிரா மாநுஜனை நானிலத்திற்‌ சேர்‌ந்தவர்கட்‌
    கோட்டுமே தீ நெறியை யுன்னு–58-

    நாட்டுஞ்‌ சமய நசிந்தனவே நாரணனைக்‌
    காட்டு மறையுங்‌ களித்தனவே–வாட்டமிலாத்
    தென் மறைகள்‌ வாழ்ந்தனவே செப்புமிரா மாநுஜன் செய்க்‌
    கன்மடப்‌ போக்கியல்பு கண்டு–59-

    தொண்டர்‌ குலாவு மிரா மாநுஜனைத் துய்ய மறை
    யண்டங்க மஞ்சிட்‌ டனனாகி–மண்டலத்திற்‌
    றோற்றிக்‌ கதிர் விடவே சூழ்பவன்றன்‌ கட்பார்வைக்‌
    காற்றுகைம்‌ மாறென்‌ னறி –60-

    கோக்குலத்து மன்னர்களைக்‌ கூர் மழுவா லிவ் வுலகிற்‌
    போக்கிய தேவனைப்‌ போற்று நல–மாக்கிய வண்‌.
    கீர்த்தி யிரா மாநுஜனைக்‌ கேட்க மன மற்றவர் தஞ்‌ :
    சீர்த்தி யுரை யாதெனவே செப்பு–61-

    மற்றொரு பேறு மதியா தரங்கனடி
    யுற்றவரே தனக்‌ குற்றவராய்ப்‌–பெற்றவனை
    நற்றவர்கள்‌ போற்று மிரா மாநுஜனை நானிலத்தே
    பெற்ற பின்‌ னல்லவோ பேழ்‌–62-

    தேடரிய வேதச்‌ சுடரொளியா லஞ்ஞான
    மோடத் துரத்தினா னோங்காரங்‌–கூடாரைச்‌
    செற்று மிரா மாநுஜன் றன்‌ செவ்வை தரு நற் கமலம்
    பற்றுபவர்‌ நெஞ்சே பணி–63-

    கொழுந்து விட்‌ டோடு வெங்‌ கோள் வினைக ளெம்மை
    யழுந்தி விடா தாட் கொள்ளு மன்பன்‌–தொழு தவத்தோ
    னெம் மிரா மாநுஜன் றா னின்போடு வீற்றிருந்‌
    தெம் பொருளாய்‌ நின்றவனை யேற்று–64-

    பெருந் தேவரைப் பரவப்‌ பேணு நல்‌ லெண்ணத்
    திருந்தே னிரு வினைக ளேகப்‌–பொருந்தா
    நிலை யுடைய புல்லரிட நின்று பிரி நெஞ்சே
    நிலை யிரா மாநுஜற்கு நேர்‌–65–

    உணருடைய ஞானிக ளுய்யு திரு தென் சொன்‌
    மணந்தரு மின்னிசை கண்‌ மன்னப்‌–புணர்ந்த பொன்‌
    மார்பன்‌ பொருந்து பதி வாழ்த்தி யிறைஞ்சி நிற்கு
    மார்க்க மிரா மாநுஜன் றன்‌ வாழ்வு–66-

    பிடியைக்‌ களிறு போற்‌ பின் பற்றி யானின்‌
    னடியைத் தொடர வளிப்பாய்ப்‌–படியி
    லறு சமயப்‌ பூண்டதனை யாளுமவர்‌ சிந்தைப்
    பெறு மிரா மாநுஜ நற்‌ பேறு–67-

    பண்டரு மாறன்‌ பசுந் தமிழ்கள்‌ பாழ் மதங்கள்‌
    விண்டிட்டு மெய்ம்மை விளங்கிடவே–யண்டத்து
    வேதக்‌ கொழுந்தேந்த மேதினியில்‌ வீற்றிருக்கு
    நாதனி ரா மாநுஜனை நற்று–68-

    வாழ்வற்‌ றது தொல்லை வாதியர்க்கு மன்னு மறை
    தாழ்வற்‌ றது மிக்கத் தாரணியிற்‌-. -கூழற்‌
    றது குற்ற மெல்லா மறத்தைத் தருமென்‌
    னது விரா மாநுஜன்‌ றண்‌ ணன்பு–69-

    சரண மடைந்தவர் தஞ்‌ சத்துருவை முன்ன
    மரண மடைவித்த மாயன்‌–முரகரியை
    வாழ்த்தக்‌ கரணங்கண்‌ மாநிலத்தி லென்றென்றுந்
    தாழ்த்துமிரா மாநுஜனைச்‌ சாற்று–70-

    யாரு மெனக்கு நிக ரின்றென்று பாண்டவர் தந்‌
    தேரினின்று சொன்ன செழும் பொருளைப்‌–பாருலகிற்‌
    செப்பு மிரா மாநுஜனைச்‌ சென்று தொழ வாவி கிந்தைத்
    தப்புவிக்கு மார் நரகந்‌ தான்‌–71-

    சிந்தை கரணஞ்‌ சிதைந்தனவே யென்று முனா
    ளந்தமின்றித்‌ தாழ வவையேற்குத்‌-தந்தருள
    வெந்தை யிரா மாநுஜனா யீங்குதித்த பேரடியைச்‌
    சந்ததமுஞ்‌ சிந்தை தனிற்‌ சார்‌–72-

    என்னியல்பைப்‌ பார்த்து மிக வெண்ணில்லாப்‌ பற் குணத்தா
    யென்னை யினி நோக்கி யெனக்கு நலந்‌–தன்னை
    யளியாத தென் னென்பா ராருலகி னல்லோர்‌
    களி யிரா மாநுஜனைக்‌ கண்டு–73-

    சார்ந்த தென்‌ சிந்தை யுன்‌ தாளிணைக் கீழன்பு மிகக்‌
    கூர்ந்தது நின்‌ பாதக்‌ குணங்களுக்குத்‌ தீர்ந்ததென்‌
    செய்கை யிரா மாநுஜன் றாட்‌ சேவடிக்கு முன் வினையு
    முய்கையரி தன்‌ றனவே யுன்னு–74-

    சமயக்‌ கலகரைச்‌ சாய்த்து மிக வுய்ய
    வமையு மறையு மளித்‌துத்‌–தமரவன்ற
    னுள்ளங்க ணெய்த் தேத்த வோங்கு புகழ் தரு மா
    வள்ளலிரா மாநுஜனை வாழ்த்து–75-

    தேரார்‌ மறையின்‌ நிற மறியாத்‌ தீயவரைக்‌
    கூராழி கொண்டு குறை. கோபால–னேரார்‌
    குணத்திரா மாநுஜன்றான்‌ கொள்ளு மெழின் மறையின்‌ மணத் திருந்‌ தாரை மதி–76-

    ஈந்தனனே யின்னருளா லெண்ணின்‌ மறைப் பொருளை
    யேய்ந்தனனே கீர்த்தி தனை யிப்படியிற் –காய்ந்தனனே
    யென் வினைகள்‌ வேர் பறிய வீங்கி ரா மாநுஜன் றன்‌
    னன்மை தரு பாதமே நச்சு–77-

    பொய்ப் பொருளை யென்னிற்‌ பொருந்தாம லுன்றனது
    மெய்ப் பொருளைப்‌ போற்றி விசுவமதி–லுய்யு
    மருத்துந்‌ தரு மிரா மாநுஜ நின்‌ சேவடியாற்‌
    கருத்தினது கள்ளங்‌ கழற்று–78-

    நல்லார்‌ பரவு மிரா மாநுஜன் றன்‌ னாம நம்ப
    வல்லார்‌ திறத்தை மறந்திடார்க்‌–கெல்லா
    விடத்தினு மென்று நித மெத் தொழும்புஞ்‌ செய்யத்‌
    திடத்திருக்கு நெஞ்சே தெளி–79-

    சோர்வின்றி நின் றனக்குத்‌ தொண்டு பட்‌ டார்களிடஞ்‌
    சார்வின்றி நின்ற வெற்குத்‌ தாளிணைகள்‌–பேர்வின்‌றி வாய்ப்பக்‌ கருணை யிரா மாநுஜன்‌ றண்‌ ணேரடிகட்‌
    கேய்ப்ப தொன்‌ நின்றே யினி–80-

    தெரிவரிய ஞானத்தைச்‌ சேர்ந்தொமுகப்‌ பேணாத்‌
    திரு வற்ற வஞ்ஞானஞ்‌ சேரு–மரு வினையைப்‌
    போக்கு மிரா மாநுஜனைப்‌ போற்றினா னன்னெஞ்சே
    யாக்கிடுவ னற் பதவி யாய்ந்து–81-

    சீர் கொண்ட பேரறத்தைச்‌ செய்பவர் தம்‌ புண்ணியத்தாற்
    பார் கொள்ளு முன் றன்‌ பதயுகமா–மேர் கொண்ட
    வீட்டை யிரா மாநுஜன்றான்‌ மேன்மை பெற வீகுமவன்‌ பாட்டை யறி மனமே பார்த்து–82-

    கண் டுகொண்டே னுன் றன்‌ கருணை தனை நித்த நித்தந்‌
    தொண்டு கொண்டேன்‌ றொண்டரது துய்யத்தாள்‌
    விண்டு கொள வன்பவந்தா னெம்மிரா மா நுஜனை யேத்திட்டா
    லென்னுலப்பு நெஞ்சே யினி–83-

    ஓதிய வேதத்தி னுச்சியின்‌ மீதிலகு
    சோதியை நாதனெனச்‌ சூழாதப்‌–பேதமையைத்
    தீர்த்த விரா மாநுஜனைச்‌ சேர்ந்தொழுகு தொண்டர்‌ துகள்‌
    போர்த்து நித நன்னெஞ்சே போற்று–84-

    பற்றாத மாநுடரைப்‌ பற்றிய தீப்‌ பற்றை விடா
    துற்றா ரெனவுழன்‌ றோடாது–கற்றார்‌
    பரவு மிரா மா நுஜனைப்‌ பற்றுபவர்‌ பெற்றா
    லரணமக்கு நெஞ்சே யறி–85-

    பெரியவர்க ணன் மொழியைப்‌ பெட்புடனே சொல்லற்‌
    குரிய மனதீதோ டிணங்கத்‌–தெரிவரிய
    மானத் தரு மிரா மாநுஜன்‌ றண்‌ ணற் பதத்தைத்
    தானமாய்‌ புன்னெஞ்சே சாற்று–86-

    தென் மொழியை யுண்டு திறந்‌ தேர்ந்து தடித்ததனா
    லன்பு மிகச்‌ சீயமிரா மாநுஜன்‌ றன்‌–னின்மொழிக்கு
    வாதியராம்‌ வேங்கை கடம்‌ வாதனை கணிக்க வந்த
    பாதநித நெஞ்சே பணி–87-

    மாட்சித் தரு மிரா மாநுஜனே நின்னை யன்றிச்‌
    சாட்சியொடு சாற்றுதற்குத்‌ தாழ்வில்லா–வாட்சி பெறு
    மேற்ற மென்‌றே கொண் டிருக்கு மென்‌ சிந்தை தனக்‌
    காற்று திறந்‌ தந்தளிப்ப தார்‌–88-

    நினையார்‌ பிறவி தம்மை நீக்குகின்ற நாத
    னெனை யாள வந்த விறையைப்‌–புனையா
    ரிராமா நுஜன்மே லின்பு தரு பாக்க
    ளராவும்‌ பவமதனை யாய்ந்து–89-

    ஆகமத்தார்‌ கூறு மவப் பொருள்க ஞண்மை யுள
    தாக மிகப் பயவா தண்டத்துக்‌–காகநதிச்‌
    சேரு மரங்கனெனச்‌ சீவர்க்குச்‌ செப்பு பொருள்‌
    பாரு மிரா மாநுஜன் றன்‌ பண்பு–90-

    புண்ணிய நோன்பு பொருந்துமிலேன்‌ போற்றி செய
    நுண்ணருங்‌ கேள்வி நுவன்றுமிலே–னெண்ணரிய
    கீர்த்தி யிரா மாநுஜ நீ கேள்விகண்‌ ணெஞ்சில் புகுந்
    தார்த்தி கெட வந்தருள்வை யாய்ந்து–91-

    கட்டப்‌ பொருளாங்‌ கயவர் சொலும்‌ புன் மறையின்‌
    பெட்டைக்‌ கெடுத்தவர் தம்‌ பேதமையை– வெட்டிப்‌
    பவத்தை யிரிக்கு மிரா மாநுஜன் றன்‌ பாதத்‌
    துவமித்தற்‌ கூடொணா வுய்த்து–92-

    தவந் தருஞ்‌ செல்வந்‌ தகவுந்‌ தரு மெம்‌
    பவந் தருந்‌ தீ வினைகள்‌ பாற்றித்‌–திவந்தருந்
    தீதிலிரா மா நுஜனைச்‌ சேர்ந்தவர் க டம்பதத்தை
    யோதிடுவாய்‌:நெஞ்சே யுணர்ந்து–93-

    உண்ணின்‌ நுயிர்கடமக்‌ குற்றனவே செய்‌ துயர்வு
    பண்ணும்‌ பரனும்‌ பரிவுடனே–யெண்ணு நன்‌
    மாடளிப்பன்‌ றண்ணி ரா மாநுஜனிம்‌ மேதினி யிற்‌
    றேடரிய வேததந் தெரித்து–94-

    வளரும்‌ பிணி கொண்ட வல் வினையான்‌ மிக்கக்‌
    கிளருந்‌ துணிவுங்‌ கெடுத்துத்‌–தளரு நிலை
    யாய்ந்திரா மாநுஜன்று னன்போ டுவந்து பவஞ்‌
    சாய்ந்திரா தென் கொலோ சாற்று–95-

    போந்த தென்‌ னெஞ் சென்னும்‌ பொன் வண்‌ டுனதடியிற்‌
    காந்தெளி தேனுண்‌ டகங்களிக்க–வீந்தருள
    வேண்டு மிரா மாநுஜனே வேறொன்று காட்டி மயக்‌
    காண்டிடினுஞ்‌ செல்லா தறி–96-

    மயக்கு மிரு வினையாம்‌ வல்லி தனைப்‌ பூண்டு
    துயக்கும்‌ பிறவித்‌ துயரி–லுயக் கொண்டு
    நல்க விரா மாநுஜவித்‌ நானிலத்தி னின்னை யுன்ன
    லல்லா திழுக்கெனவே நாட்டு–97-

    உன் றன்‌ குணங்களையே யுன்னி யென்‌ னாவிருந்‌
    தென்று மிரா மாநுஜவென்‌ றேத்த நித–நன்று தர
    கையுந்‌ தொழுங் கண்‌ கருதிடுமே காணுதற்க
    வைய மதனின்‌ மதித்து–98-

    இருக்குமிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடமெண்‌ சோலைப்‌
    பொருப்பிட மா மாயனுக்குப்‌ போற்‌றி –யிருக்குமிட
    மாயனி ரா மாநுஜ நின்‌ மா மனத்‌ தின்றவன்றான்‌
    றாயகமா யென்னகத்திற்‌ சார்வு–99-

    அங்கயல்‌ சூழு மணி யரங்க நாதனொடு
    பங்கயமாம்‌ பாவைப்‌ பழிச்சுதுந்‌– துங்கமதாய்தீ
    தங்கிய பத்தித்‌ தலை மிசையே கீர்த்தி மிகப்‌
    பொங்கு மிரா மாநுஜன் றண்‌ பூ–100-

    பூதலமுந் தான் வாழிப்‌ பூ மகளுந்‌ தான் வாழி
    வேதமுதன்‌ மற்றெவையும்‌ வீறுதற்கு–நாதனருட்‌
    பெற்ற விரா மாநுஜனும்‌ பெட்பொடு சொன் மாலைக்‌
    கற்றவரும்‌ வாழி நிதங்‌ காண்‌–101-

    வாழி யிரா மாநுஜனும்‌ வாழி யவன்‌ பாமாலை
    வாழியதைக்‌ கற்ற வரு மாநிலத்தில்‌–வாழியவன்‌
    நற்றவரும்‌ வாழி யரு ணண்ணினரும்‌ வாழி யவன்‌
    சொற்ற மொழி வாழித்‌ தொடர்ந்து–102-


    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

    December 5, 2024

    நாயிந்தே நாயிந்தே
    த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
    இதம் வேத மூல ப்ரமாணாத்
    ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
    ஸோ அபி சாக்ரோஸ ஏவ
    க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
    கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
    ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
    ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

    மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
    புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
    தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
    அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

    யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
    யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
    யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
    ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
    ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
    மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
    பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
    மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
    ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
    தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

    நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
    ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
    ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
    பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

    முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
    மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
    வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
    கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
    கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
    கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
    மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
    நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
    கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
    வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
    பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
    குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
    மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
    தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
    நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
    ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
    அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
    ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
    தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
    சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
    நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
    தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
    திருவடிகளை யுடையனான தேவரீர்

    ஸூதா வல்லீ ஸமேதனாய்
    திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
    ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
    பக்தோசிதனே

    பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
    சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
    மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
    கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
    வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

    வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
    தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
    ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
    ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
    ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
    அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
    ஓம் ஜய விஜயீ பவ
    ஸ்வாமீ எச்சரிக்கை

    —————

    திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

    ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
    ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
    ஓம் சங்கு சக்ர தராய நம
    ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
    ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

    ஓம் கிரீடிநே நம
    ஓம் அனா மயாய நம
    ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
    ஓம் கோமலா க்ருதயே நம
    ஓம் ப்ரஸன்ன வதனாய நம

    ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
    ஓம் உஜ்வலாய நம
    ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
    ஓம் வன மாலிநே நம
    ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

    ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
    ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
    ஓம் ஸிம்ஹ முகாய நம
    ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
    ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

    ஓம் ஜகதாம் கர்த்ரே நம
    ஓம் கோப்த்ரே நம
    ஓம் விஷ்ணவே நம
    ஓம் ப்ரேணத்ரே நம
    ஓம் அநிந்திதாய நம

    ஓம் தம்ஷ்ட்ரிணே நம
    ஓம் கேஸரிணே நம
    ஓம் நர கேஸரிணே நம
    ஓம் விபவே நம
    ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

    ஓம் பீமாய நம
    ஓம் கதா தராய நம
    ஓம் அதீஸ்வராய நம
    ஓம் வ்யக்தனனாய நம
    ஓம் மஹோரஸ்காய நம

    ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
    ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
    ஓம் உன்னதஸ்ருதயே நம
    ஓம் உத்ததாய நம
    ஓம் உதக்ர நாஸாய நம

    ஓம் உச்சண்ட காலாய நம
    ஓம் உத்தம மஸ்தகாய நம
    ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
    ஓம் சிவ ஸேவிதாய நம
    ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

    ஓம் வய க்யாத நம
    ஓம் அவ்யக்தாய நம
    ஓம் புருஷோத்தமாய நம
    ஓம் ஸிம்ஹ காமிநே நம
    ஓம் ஈஸாநாய நம

    ஓம் நிதயே நம
    ஓம் அச்யுதாய நம
    ஓம் அவ்யயாய நம
    ஓம் பிங்க லாஷாய நம
    ஓம் ப்ருது க்ரீவாய நம

    ஓம் விமலாய நம
    ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
    ஓம் முக்திதாய நம
    ஓம் புகதிதாய நம
    ஓம் சாந்தாய நம

    ஓம் தாந்தாய நம
    ஓம் ஆனந்த கந்த லாய நம
    ஓம் மந்தார மாலாபரணாய நம
    ஓம் அஷ்ட பாஹவே நம
    ஓம் மஹா உதாராய நம

    ஓம் ஸநகாதி நுதாய நம
    ஓம் தேவராஜ பூஜிதாய நம
    ஓம் ஈஸ்வராய நம
    ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
    ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

    ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
    ஓம் ஹ்ருதி வாஸிநே நம
    ஓம் ஹநுமத் வந்திதாய நம
    ஓம் லோக சங்கராய நம
    ஓம் சங்கர ப்ரியாய நம

    ஓம் பக்த அர்ச்சிதாய நம
    ஓம் பக்தி தாயினே நம
    ஓம் ஸூப தாயினே நம
    ஓம் சடாலம் க்ருதாய நம
    ஓம் அவ்யக்ராய நம

    ஓம் உக்ர சாஸநாய நம
    ஓம் உத்ததாய நம
    ஓம் விஸ்தீர்ண வதனாய நம
    ஓம் தீன ரஷகாய நம
    ஓம் ஸூர ரக்ஷகாய நம

    ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
    ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
    ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
    ஓம் ஹேமாங்காய நம
    ஓம் ஹேம குண்டலாய நம

    ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
    ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
    ஓம் மாலாபரணாய நம
    ஓம் தைத்ய ராஜவஸா நம
    ஓம் ந்ருணாம் சரணாய நம

    ஓம் உத்தமாய நம
    ஓம் அநுத்தமாய நம
    ஓம் தேவாய நம
    ஓம் ராஜா நம
    ஓம் ஆஜாநு பாஹு காய நம

    ஓம் ஜகதாம் போஷணாய நம
    ஓம் பூத பாவனாய நம
    ஓம் பத்ரி வாஹனாய நம
    ஓம் வேதாந்த வேத்யாய நம
    ஓம் அவ்யக்ராய நம

    ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
    ஓம் ஸம் ஸ்துதாய நம
    ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
    ஓம் பரமார்த்தயா நம
    ஓம் மஹாஷாய நம

    ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
    ஓம் பக்த ரக்ஷகாய நம
    ஓம் அபராஜிதாய நம
    ஓம் அஷோப்யாய நம
    ஓம் அநந்தாய நம

    ஓம் பராய நம
    ஓம் பரம் நம
    ஓம் அநேக ரூபாய நம
    ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
    ஓம் அக்ருத்ரிமாய நம

    ஓம் ஹிரண்யாய நம
    ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
    ஓம் ப்ரபவே நம

    ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

    ——————————-

    ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

    அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
    ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

    பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
    ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

    சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
    ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

    ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
    உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

    பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
    புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

    ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
    ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

    வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
    கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

    மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
    ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

    அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
    வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

    ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
    விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

    பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
    மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

    மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
    ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

    ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
    ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

    ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
    ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

    ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
    வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

    வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
    மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

    ————–

    ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

    ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

    ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

    எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

    கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

    நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

    கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

    கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

    ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

    வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

    ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

    ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

    பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

    ——————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

    ஸ்ரீ பகவான் -ஞானாதி ஷட் குண வர்ணனைகள்-நம் பூர்வாச்சார்யர்கள் விளக்கம்–

    October 18, 2024

    ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

    நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
    நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

    ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

    யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
    தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே-மங்கள ஸ்லோகம்

    யோ வேத்தி யுகபத் -உள்ளுவார் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
    ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
    ஸதா -எப்போதும் –
    ஸ்வத -இயல்பாகவே
    தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
    ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
    உவமானம் நான்காவதாக நையாயிகர்
    லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
    மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
    யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
    அபின்ன நிமித்த காரணம்
    நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
    வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
    எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

    அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
    ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
    கட்டைப் போல் -நையாயிகன்

    தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
    அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

    மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
    நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

    ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
    கண்டிக்க ஸ்லோகங்கள்-

    ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

    அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

    குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
    பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
    இரண்டாவது இல்லையே

    அஞ்ஞானம் அநிர் வசனீயம்
    ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
    கயிறு பாம்பு போல்

    ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
    ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

    விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
    விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
    ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
    தன்னைத் தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
    ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

    ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
    இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
    ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
    அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
    ஞானம் அஞ்ஞான விரோதி

    அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
    ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

    நாத முனி
    ஆதி முனி
    ஓதும் முனி
    கீதா முனி
    தாத முனி
    தூத முனி
    ரெங்க நாத முனி
    பாத முனி முனி
    போத முனி
    பேத முனி
    அபேத முனி
    மோத முனி
    வேத முனி

    ——–

    நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
    நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–
    1-

    ஜ்ஞான –
    ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
    அதாவது –
    ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
    அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
    ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

    ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
    தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
    வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
    வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

    பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
    வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

    தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
    ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
    நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
    நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்
    -2-

    தத்தவ ஜ்ஞான –
    தத்வ ஜ்ஞானம் ஆவது –
    அவதார விஷய ஜ்ஞானமும்
    ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
    ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
    த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன
    -ஸ்ரீ கீதை -4-9-என்று
    தானே அருளிச் செய்தான் இறே –

    தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
    அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
    யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
    பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
    அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
    ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி-

    பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
    ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
    லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
    யோகாய நாத முநயே யமிநாம் வராய-
    3-

    பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
    பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
    அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
    ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
    உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
    அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

    நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
    சிராய மே கூலம் இவ அஸி லப்த
    த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
    அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா
    —24-

    பகவந் –
    ஜ்ஞானாதி குண பூரணரான
    தேவருடைய பேறு என்னும் இடம்
    நான் சொல்ல வேண்டுமோ -என்கை

    தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
    ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
    பணா மணி வ்ராதம யூக மண்டல
    பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி
    –39-

    ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
    இருவருமாய்ப் பரிமாறும் போது
    அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு
    ஆஸ்ரயமாய் இருக்குமவன் –
    ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே
    துகைத்துப் பரிமாறலாம் படியான
    தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –

    அவிவேகக நாந்த திங்முகே
    பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
    பகவன் பவது ர்த்தி நே பத
    ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—
    49-

    பகவன்-
    இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில்
    ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும்
    தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை
    என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை –
    இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –

    தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
    மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
    விதி நிர்மிதமே ததந்வயம்
    பகவன் பாலய மா ஸம ஜீஹப
    —51-

    பகவன் –
    இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –

    அவபோதி தவா நிமாம் யதா
    மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
    க்ருபயைதத நனய போக்யதாம்
    பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—
    54-

    பகவன் –ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால்
    ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால் பூரணன் -என்கை –

    பக்திமபி ப்ரயச்ச-யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்-அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –

    —————————————-

    ஓம் பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
    அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் பத்ம வநாலயாம்
    பகவதீம் ஸ்ரியம் தேவீம்
    நித்ய அநபாயிநீம் நிரவத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம்
    அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
    அசரண்ய சரண்யாம் அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

    பகவன் நாராயண –
    பகவச் சப்தத்தாலே(-ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் ஸக்தி தேஜஸ்-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-அகில ஹேய ப்ரத்யநீகமும் சொல்லும் -இவனுக்கே முக்யார்த்தம் -மற்றவர்களுக்கு கௌண -இவன் சம்பந்தத்தால் லேசம் இருந்தாலும் பகவத் ஸப்த பிரயோகம் பண்ணுகிறோம்-சினத்தினால் செற்ற –மனத்துக்கு இனியான்   )
    மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
    சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
    நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
    ஐஸ்வர் யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீ ய
    ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
    வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
    ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
    ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
    பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
    ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
    பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
    தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
    சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
    ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது –

    இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குண பூர்ணனுமாய்(ஸமஸ்த கல்யாண குண ஆர்ணவம் -குணக் கடல் )
    பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் -என்கிறது-

    நாராயண –
    பகவச் சப்தத்திலே சர்வமும் இல்லையோ
    இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்

    அந்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
    பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு(ஸர்வத்ர ப்ருஹத் -இருப்பதிலேயே பெரியதாகியும் -ஆஸ்ரிதரை பெரியவராக்கி -அளவிலும் – குணங்களாலும் -ப்ருஹத்
    ப்ரஹ்ம சப்தம் பிரக்ருதிக்கும் -ஆத்மாவுக்கும் பத பிரயோகம்
    முடிவில் பெரும் பாழ் -நிர்தோஷ ஆத்மா முக்தனையும் ப்ரஹ்ம ஸப்தம் பிரயோகம் )

    அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
    யோக ரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
    அத்தாலே விசேஷிக்கிறது-

    (காரணப் பெயர் –பாசக -சமையல் காரர் –நாற்காலி போல் –யவ்க்கிகம்
    இடுகுறிப் பெயர் -குடம் மாடு -புத்தகம் -பிரித்து அர்த்தம் கொள்ளாமல் இதுக்கு இந்தப் பெயர் -ரூடி -பிரசித்த
    யோக ரூடம் -இரண்டும் -பங்கஜம் -சேற்றில் இருந்து தோன்றியவையும் -தாமரை -யோகமும் ரூடியும் உண்டே – நாற்காலி -பூனைக்கும் நான்கு கால்கள் இருந்தாலும் -பிரசித்த அர்த்தம் குறிப்பிட்ட வஸ்துவுக்கே
    ஆக மூன்றுமே உண்டு-நாராயணன் யோக ரூடி -உலகில் உள்ள அனைத்துக்கும் இருப்பிடம் -காரணப் பெயர் -குறிப்பிட்ட வ்யக்திக்கே பிரயோகம் -ஆகவே ரூடி -)

    (நார -அயன -பதங்கள் சேர்ந்து -நாராயண -ஆனதே
    சூரப்ப -நகம் -சூர்ப்பணகை -முரம் போன்ற நகம் கொண்டவள் -இவளுக்கு மட்டுமே இவ்வாறு
    தஷிணாயனம்
    உத்தராயணம் -இங்கு மட்டும் ண)

    ஆக –பகவன் நாராயண -என்று
    சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
    உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனைச் சொல்லிற்று ஆயிற்று –

    (பகவான் நாராயண
    குண விபூதி புஷ்கல பரம் -ஸ்ருத ப்ரகாசகர்
    ஈறில வண் புகழ் நாரணன் என்றும்
    நாரணம் முழு ஏழு உலகுக்கும் நாதன் என்றும் சொல்லுமா போல்)

    ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
    வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
    ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய சௌர்ய பராக்ரம சத்ய காம சத்ய
    சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத் அசங்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

    ஸ்வா பாவிக
    ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை

    அநவதிக அதிசய
    நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
    பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
    அவற்றில்

    ஜ்ஞான –
    யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
    தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
    எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –

    பல –
    சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்

    ஐஸ்வர்ய
    சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்

    வீர்ய
    சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம் வேராத அநாயாமை
    எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரதை என்னவுமாம்

    சக்தி –
    ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
    அகடிதகடனா சாமர்த்தியம் என்னவுமாம்
    ஜகத் உபாதான சக்தி என்னவுமாம் –

    தேஜஸ் –
    பராபிபவன  சாமர்த்தியம்-

    ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
    ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
    விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
    நிகில ஜகத் உதய விபவ லய லீல சத்ய காம சத்ய சங்கல்ப பர ப்ரஹ்ம பூத

    முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
    மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

    சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

    புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –3-பர ப்ரஹ்ம பூத –ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
    ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
    ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

    ஜ்ஞான –
    ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறது –யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -(ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்தி) என்கிறபடியே
    சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
    அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கர்மீ பவித்து இருந்துள்ள அசங்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
    நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –

    பல –
    அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே
    தரிக்கும் தாரண சாமர்த்தியம்

    ஐஸ்வர்ய –
    அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

    வீர்ய –
    அதாவது -ஸ்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
    அநாயாச ரூபமான அவிகாரித்வம்
    யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
    மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-

    சக்தி
    அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
    ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
    அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்-உபாதான சக்தி யாகவுமாம்

    தேஜஸ் –
    அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
    ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
    தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்

    இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

    இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே

    ——————–

    ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலம் அதுலம் ஐஸ்வர்யம் அகிலம்
    விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச
    பரம் தேஜஸ் ச இதி ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம்
    குணா நாம் நிஸ்ஸீம் நாம் கணநவி குணாநாம் பிரசவ பூ –15-

    ஹே வரத
    ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் -சிறந்த ஞானம் என்ன
    அதுலம் பலம் -ஒப்பற்ற பலம்
    அகிலம் ஐஸ்வர்யம் -அநவதிகமான ஐஸ்வர்யம் என்ன
    விமர்யாதம் வீர்யம் -எல்லை அற்ற வீர்யம் என்ன
    பரமா சக்திரபி ச-ஸ்ரேஷ்டமான சக்தி என்ன
    பரம் தேஜஸ் ச -சிறந்த தேஜஸ்ஸூ என்ன
    இதி -ஆகிய இவையாகிற
    பிரதமஜம் ப்ரவர குண ஷட்கம் -முதல் மூர்த்தியான ஸ்ரீ பர வாஸூ தேவ மூர்த்தி இடம் உள்ள சிறந்த ஆறு குணங்களானவை
    நிஸ்ஸீம் நாம்-எல்லை அற்றதுகளும்
    கணநவி குணாநாம்-எண்ணக் கூடாததுகளுமான
    குணா நாம் பிரசவ பூ -கல்யாண குணங்களுக்குப் பிறப்பிடம் –

    இந்த ஆறு குணங்களும் இன்ன இன்ன காரியத்தில் விநியோகம் என்னும் இடம்
    ஸ்ரீ ரெங்க ராஜ சத்வ உத்தர சதகம் -யுகபத நிகமஷை -இத்யாதி சப்த ஸ்லோகங்களில் விசதம்

    த்வ அநந்த குணஸ்யாபி ஷட் ஏவ ப்ரதமே குணா –இந்த ஆறுமே அஸங்க்யேயங்களான குண கணங்களுக்கு ஊற்றுவாய்
    பிரதமஜம் -என்று குணங்களுக்குள் முதன்மையானது என்றுமாம்
    நிஸ்ஸீம் நாம்-ஒரு பெரிய ராசியாகவும் எண்ண முடியாதவை —
    ஒரு கூடை மண் ஒரு வண்டி மணல் போலே கூட முடியாதவை என்றவாறு –

    ————–

    பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
    ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-

    பகவாந் — அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர்
    பகஹா — ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர்

    (அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்},
    (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா},

    563-பகவான் -குற்றம் அற்றதாய் குணங்களே நிரம்பிய ஸ்வரூபம் ஆனதால் பூஜிக்கத் தக்கவர் –
    564-பகஹா -முன்னால் கூறியபடி ஜ்ஞானம் முதலிய ஆறு குணங்களை உடையவர் –

    563-பகவான் –
    பூஜைக்கு உரியவன் -உயர்வற உயர்நல உடையவன்

    ஏவம் அஸேஷ தோ₃ஷ வித்₃வேஷி கல்யாண ஸ்வரூப தயா பரம பூஜ்யோ
    ப₄க₃வான் ॥(அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண ஏக குண நிதி )

    தீதில் சீர் நலம் திகழ் நாரணன்-உணர் முழு நலம் -அந்தமில் ஆதி அம் பகவன்
    கணக்கறு நலத்தனன் அந்தமிலாதியம் பகவன் -1-3-5-

    குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

    ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

    ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

    —————

    1. ஓம் பகவதே நம:

    ‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

    ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

    ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.

    ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்

    பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

    வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

    ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

    இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    ———–

    1. பகவான் – வழிபாட்டுக்குத் தகுதியானவர்

    இந்த நாமத்திற்கு பின்வரும் அர்த்தங்கள் உள்ளன:

    • வணக்கத்திற்கு உரியவர்
    • ஆறு குணங்கள் அல்லது ஷட் குணங்கள் நிறைந்தவர். ஞானம் (அறிவு), சக்தி (ஆற்றல்), பலா (வலிமை), ஐஸ்வர்யா (இறையாண்மை அல்லது செல்வம்), வீரியம் (வீரம்), மற்றும் தேஜஸ் (பிரகாசம் அல்லது பிரகாசம்)
    • எல்லா உயிர்களின் தோற்றத்தையும் முடிவையும் அறிந்தவன்

    பகவான் பின்வரும் 6 தெய்வீக குணங்களை போதுமான அளவில் பெற்றிருக்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் விளக்குகிறார். அவர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.74) மேற்கோள் காட்டுகிறார்:
    ஐஸ்வர்யஸ்ய ஸமாக்ரஸ்ய தர்மஸ்ய யஷஸஸ் ஶ்ரியா |
    ஞான வைராக்யயோஹ்ஸ் சைவ ஷன்னாம் பக இதீரணா ||
    பக என்பது ஐஸ்வர்யம் (செல்வம்), தர்மம் (நீதி), யஷா (புகழ்), ஸ்ரீ (செழிப்பு), ஞானம் (அறிவு) மற்றும் இறுதியாக வைராக்யம் (இரக்கம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஆறு குணங்களும் பகவை வரையறுக்கின்றன, பகவை உடையவன் பகவான்’.

    ஸ்ரீ சங்கரர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.78) மற்றொரு ஸ்லோகத்தின் அடிப்படையில் கூடுதல் விளக்கத்தை அளிக்கிறார்:
    உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானம் ஆகதிம் கதிம்;
    வேட்டி வித்யாம் அவித்யாம் ச ச வாச்யோ பகவான் இதி
    எல்லா உயிரினங்களின் தோற்றம் மற்றும் முடிவு, வருகை மற்றும் வெளியேறுதல் மற்றும் அறிவு மற்றும் அறியாமை ஆகியவற்றை அறிந்தவர் என்பதால் அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்.

    அனைத்து மங்களகரமான குணங்களையும் கொண்ட அவரது இன்றியமையாத இயல்பு காரணமாக அவர் வழிபாட்டிற்கு தகுதியானவர் என்று ஸ்ரீ பட்டர் நாமத்தை விளக்குகிறார். ‘பக’ என்ற சொல்லுக்கு ஆறு பண்புகளைக் குறிக்கும் சிறப்புப் பொருள் உண்டு, ஆனால் ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை விளக்குவதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்தவில்லை. மாறாக, “வணக்கத்திற்குரியவர்” என்று விளக்கம் தருகிறார். அமரகோஷத்தில், “பஜ்யத இதி பகஹ்” என்ற குறிப்பு உள்ளது, இது ஸ்ரீ பட்டரின் விளக்கத்திற்கு பொருத்தமானதாகத் தெரிகிறது.

    உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
    மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
    துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. [2899]
    இதயமே, எழுந்திரு, உயர்ந்த நன்மையை விட உயர்ந்தவனும், எப்போதும் இல்லாத வானங்களின் இறைவனுமான, எல்லா சந்தேகங்களையும் நீக்கி, தூய அறிவை வழங்குபவனின் பாதங்களை வணங்கு.

    பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
    கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
    வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
    உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. [ 2925 ]
    வேதங்களின் வழிமுறையை ஏற்றுக்கொண்டு, அவரை உணர்தல் மூலம் அறிந்து கொள்ளுங்கள், அவர் ஆதியும் முடிவும் இல்லாத இறைவன் (பகவான்) எல்லையற்ற பண்புகளைக் கொண்டவர். எல்லா சந்தேகங்களையும் கைவிட்டு, அவரிடம் சரணடையுங்கள், ஏனென்றால் அவர் ஆறு சிந்தனைப் பள்ளிகளில் உள்ள மோதல்களைத் தீர்க்கிறார்.

    ஸ்ரீ வைஷ்ணவ பள்ளிகளில் பழமையானது பாகவத மற்றும் பஞ்சராத்ர பள்ளிகள். பாஞ்சராத்ர பள்ளியின் வணக்கத்திற்குரிய பகவான் ‘வாசுதேவா’ என்ற பரா வடிவமாக இருக்கிறார் – இந்த நாமம் சர்வ வியாபக அல்லது அனைத்து வியாபகத்தையும் குறிக்கும். வாசுதேவரின் ஷட்-குணங்களின் காரணமாக, அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்:
    ஞான-சக்தி-பல ஐஸ்வர்ய-வீர்ய-தேஜஸ் அஸ்யாஷே ஷதா |
    பகவான் சாப்தவாச்யாநி வினா ஹேயைர்குணாதிபிஹ ||

    பகவான் இந்த ஆறு குணங்களுடன் (அதாவது ஞானம், சக்தி, பலா, ஐஸ்வர்யம், வீரியம் மற்றும் தேஜஸ்) முழுமை பெற்றவர், மேலும் அவர் அனைத்து ஹேய குணங்களும் இல்லாதவர், எனவே அவர் பகவான் என்று குறிப்பிடப்படுகிறார்.


    564-பகஹா
    நல்ல குணம் உடையவன் -குண பூரணன்-ஹா அடைந்தவர் அர்த்தம் இங்கு

    கு₃ணதோ(அ)பி ததா ₂,
    ப₄க₃ஹா ।
    ஐஸ்வர்யஸ்ய சமகர்ஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீயஸ் ஞான வைராக்ய யோச்சைவ ஷண்ணாம் பக இதீரனா–ஸ்ரீ விஷ்ணு புராணம்
    ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி செல்வம் ஞானம் வைராக்யம் ஆறுக்கும் பக என்று பெயர்

    தம் ஹந்தி-க₃ச்ச₂தீதி; ஹந்திர் க₃மந கர்மா ।

    அத்ர வைஷ்ணவே ஷஷ்டே ₂(அ)ஸே ப₄க₃வச் ச₂ப்₃த₃ நிர்வசந ப்ரகரணம் லேக்₂யம் ॥(ஆறாவது அம்சம் விரித்து உரைக்கும்-அங்கே கண்டு கொள்ளவும் )

    வண் புகழ் நாரணன் -1-2-10-

    நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

    சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

    அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

    ——————

    1. ஓம் பகக்னே நம:

    ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை

    ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்

    ஹந்தீதி அழிப்பதால்

    பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.

    ————-

    1. பகஹா – அவர் மங்களகரமான பண்புகளை உடையவர்

    ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஹா’ என்ற பின்னொட்டினால் அழிப்பவர் அல்லது நீக்குபவர் என்று விளக்குகிறார். ‘க்ரோதஹா – கோபத்தை அழிப்பவர்’ மற்றும் ‘காமஹா – ஆசைகளை அழிப்பவர்’ மற்றும் ‘துஷ்கிருதிஹா – தீயவர்களை அழிப்பவர்’ போன்ற நாமங்களை நாம் முன்பு பார்த்திருக்கிறோம். இதே ஒப்புமையால் சங்கரர் ‘ஐஸ்வர்யாதிகம் சம்ஹார ஸமயே ஹந்தி இதி பகஹா – பிரபஞ்சம் கரையும் அல்லது பிரளயத்தின் போது பகாவின் கீழ் வரும் 6 பண்புகளை அழிக்கிறார்’ என்கிறார். உயர்ந்த குணங்கள் உட்பட அனைத்தும் இறுதிப் பிரளயத்தில் செல்ல வேண்டும், பகவானைத் தவிர வேறு எதுவும் இந்த இறுதிச் செயலில் தப்பிப் பிழைக்காது.

    பகஹாவிற்கு ஸ்ரீ பட்டரின் விளக்கம் ஆறு பண்புகளைக் குறிக்கும் பக என்ற பொருளைப் பயன்படுத்துகிறது, மேலும் ஸ்ரீ சங்கரரின் கடைசி நாமத்திற்கு (VP 6.5.74) பயன்படுத்தும் அதே விஷ்ணு புராணக் குறிப்பை இங்கே மேற்கோள் காட்டுகிறார். ஸ்ரீ பட்டர் தம் விளக்கத்தில் “ஹந்தி எனப் போகிறது” என்ற பொருளைப் பயன்படுத்தி, இந்த ஆறு தெய்வீக குணங்கள் பகவானுக்கு வழி காட்டுகின்றன.

    ஸ்ரீ கிருஷ்ண தத்த பரத்வாஜும் இதே விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறார் – பாகம் மஹாத்ம்யம் ஜிஹிதே கச்சதி ப்ராப்நோதி இதி பகஹா.

    ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த யோசனையின் ஒரு வித்தியாசமான விளக்கத்தைத் தருகிறார் – ‘பாகா’ என்பது பொருட்களின் பரந்த தன்மையைக் குறிக்கிறது, மேலும் ‘ஹா’ என்பது இந்த பரந்த தன்மையின் சுருக்கத்தைக் குறிக்கிறது. பிரளய நேரத்தில் அனைத்தையும் தன்னுள் சுருக்கிக் கொண்டு தனது படைப்பின் பரந்த தன்மையைக் குறைப்பதால் அவர் பக-ஹா என்று அழைக்கப்படுகிறார்.

    சுவாமி சின்மயாஆனந்தா, இந்த அர்த்தத்தில், இது விஷயங்களை “அழித்தல்” அல்ல, ஆனால் முதலில் அவரிடமிருந்து வந்த விஷயங்களை தன்னிடமே உள்வாங்குதல் என்று சுட்டிக்காட்டுகிறார்.

    செல்வம், புகழ் போன்றவற்றின் நிலையற்ற தன்மையே இங்கு நமக்குப் புகட்டப்படுவதாகவும், இதைப் புரிந்துகொண்டு இவற்றில் உள்ள பற்றுதலை நீக்கும் அளவுக்கு இந்த நாமத்தின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்றும் தர்மச் சக்கரம் எழுத்தாளர் கவனிக்கிறார். .

    ஆறு குணங்கள் –

    123- மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
    124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
    125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
    126-பா நு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
    127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
    128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-

    123-மஹா தபா –

    சிறந்த ஞானம் உடையவன் –அதிகமாக பூஜிக்கத்தக்க ஞானம் யுடையவன்

    தத்ர வராரோஹ இத்யேத தந்தைர்நாமபி ப்ரயாஸ பரத்வம் யுக்தம்
    கிமேகம் தைவதம் லோகே கிம் வா அப் யேகம் பராயணம் இதி
    ப்ராப்ய ப்ரஸ்நயோஸ் -தத் ப்ரதி வசனயோஸ் ச ப்ராயேணா மீஷ் மேவ விஸ்ராந்தி

    அத ஸ்து வந்த கம் கம இத்யாதீநாம் உபாய -ப்ரஸ்ன ப்ரதி வசநாநாம் அதிகார வ்யூஹ

    தத்ர வாஸூ தேவ பரத்வேந வ்யாக்யாத
    இதா நீம் ஸங்கர்ஷண

    இதுவரையில் அடையத்தக்க பர வஸ்து எது என்கிற வினாவுக்குத் தக்கபடி
    பர ஸ்வரூபம் பெரும்பாலும் கூறப்பட்டது
    இனி வ்யூஹத்தைக் கூறுவது
    அந்த வ்யூஹம்
    வாஸூ தேவன்
    சங்கர்ஷ்ணன்
    ப்ரத்யும்னன்
    அநிருத்தன்
    என நான்கு வகைப்படும்

    அவற்றுள் வாஸூ தேவன் பர ரூபத்தில் சேர்ந்ததனால் தனித்துச் சொல்ல வேண்டியது இல்லை
    ஆதலால் இதற்கு மேல் ஸங்கர்ஷண வ்யூஹம் சொல்லப்படுகிறது-

    மஹா தபா
    யஸ்ய ஞான மயம் தப -இதி மஹத் பூஜ்யம் ஞானம் அஸ்யேதி
    ஷட் குணா வ்யாக்யாஸ் யந்தே
    தேஷு ஞான பல சங்கர்ஷணஸ்ய குணவ் வ்யூடவ்
    ஞானம் -ச ப்ராசீன பவ பரிஸ் ராந்தி ஸாந்தயே சஞ்ஜி ஹீர்ஷா லக்ஷண மாத்ர –

    யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டக-1-1-ஞான மயமான தபம் கொண்டவன்

    தொடர்ந்து ஆறு குணங்களும் கூறப்பட உள்ளன
    இவற்றில் ஞானம் பலம் இரண்டும் சங்கர்ஷனின் தன்மையாக உள்ளன

    இங்கு ஞானம் என்பது அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று தவிக்கும் ஜீவர்களைக் கரை ஏற்றும் செயலுக்குத் தக்க ஞானம்

    ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
    ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
    சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்

    சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
    அடியார் பிறவித் துயரைப் போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-

    ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –

    சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் மஹா தபஸே நம

    ————

    ஓம் மஹாதபஸே நம:

    மஹத் மிகச்சிறந்த

    ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும்

    தபோ ‘தப’ என்றால்

    ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்

    மஹாதபா:பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ‘யஸ்ய ஞானமயம் தப:’ (முண்டக உபநிஶத் 1.1.9)

    முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ

    இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

    ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின்

    ப்ரதாபோ வா வீரத்தின்

    தபோ காந்தி (ஒளி)

    மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்

    மஹாதபா:எனவே, பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    முதல் விளக்கத்தில் ‘தப’ என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் ‘தப’ என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

    123. மஹாதபஹ்

    மஹாதபா என்றால் சிறந்த அறிவை உடையவர் என்று பொருள். தபஸ் என்றால் பொதுவாக தவம் என்று பொருள், அது அறிவு என்றும் பொருள். உயர்ந்த தவம் இறுதி அறிவிற்கு வழிவகுக்கிறது, எனவே இரண்டும் சாராம்சத்தில் ஒத்ததாக இருக்கின்றன.

    இந்தச் சூழலில் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘மஹத் ஸ்ரீஜ்ய விஷயம் தபோ ஞானம் அஸ்ய இதி மஹாதபாஹ் – அவருக்கு படைப்பின் உச்ச ஞானம் இருப்பதால் அவர் மஹாதபா‘ என்று விளக்குகிறார்.

    இது முண்டக உபநிடதத்திலும் பிரதிபலிக்கிறது, இது ‘யஸ்ய ஞானமயம் தபஹ் – யாருடைய தபஸ் என்பது அறிவின் தன்மை.

    ததா ச ஸ்ரீ ஸாத்வதே

    ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
    ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
    பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
    ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
    நாநா ஆக்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் (இஹ லோக பர லோக ஐஸ்வர்யம் அளிக்கும் )- சாத்துவத சம்ஹிதை

    ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
    அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
    அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
    இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
    இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
    வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
    முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

    தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
    மத்ஸ்ய கூர்மாதயா
    அந்யே து ருஷ்யாதி விஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந –யதா
    பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா

    அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
    இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
    யதா அர்ச்சாவதார
    இதி சதுர்த்தா

    நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் -தத் அபேத உபதேசாத்
    ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்(நம் போல்வாரும் புல்லும் கூட விட்டுப்பிரியாமலே இருக்குமே )
    அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

    சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

    புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

    நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநாஸூ அபரி கண நாத்
    தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச(இவர்களும் படைக்கப்பட்டவர்களாகவே எண்ணப்படுகிறார்கள் )
    ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
    ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்(ஒரு லேச பிரபாவம் பெற்றவர்கள் )
    ப்ராதுர் பாவ விசேஷ அதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
    பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே

    அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்(அவதாரங்களில் இருந்து வேறுபட்டு உடைமையாக )
    தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

    ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
    வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
    தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
    சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
    ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
    அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
    பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

    இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
    விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

    இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் (ஆறாவது வேற்றுமை -அவனுடைய சேஷன் )தத் அம்ச பூதஸ் ஸந
    விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
    அம்ச ஸப்தஸ் ச ஏதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

    அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

    ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதி இதரஸ்ய

    யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
    சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
    தேவஸ்ய அனலசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
    யுகங்களின் முடிவில்
    சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
    இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

    அத்ர அந்தர ஸப்தோ பேத வசந
    இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்(இனிப்பில் வேறுபாடு )

    ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

    ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
    ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
    ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
    ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
    மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
    ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

    அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
    அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச

    புநரபி தாத்ருஸ லக்ஷணம்
    ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வத் ஆகாராந்தரம்  ஆக்ருத
    யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
    ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

    ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
    அப்யயை பிரபவாக்யைஸ் து கௌண முக்யை ஸூரேஸ்வரை
    இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

    ததா முமுஷுபிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் –ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நிஷேதஸ் ச

    ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
    யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
    முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

    யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
    அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
    ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
    வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
    ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
    ஜ்ஞாத் வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
    வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
    தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

    கோக்குல மன்னரை –போற்றும் புனிதன் ராமானுஜன்

    ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
    து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போகோப கரண தயா
    பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

    இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
    விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீநம் அவ திஷ்டதே
    வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
    நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
    காலோபி யந் நியந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
    வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
    பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக

    முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
    ஜீமுதாச்சா அகிலா நாகா து அப்சரோ கண உத்தம
    ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
    வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
    சந்த்ர அர்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
    சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
    பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
    மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

    அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
    ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி ஸாம்ய பண்டித ந்யாய பண்டிதம் அந்யாயாம்
    ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

    ———–

    இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
    பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
    மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
    மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

    வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
    பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
    சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
    பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
    அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

    சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
    பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
    அநிருத்தன் ———-127-128———2 திரு நாமங்கள்

    முதல் 6-ஞானம் பலம் -சங்கர்ஷணனுக்கு –
    அடுத்த 4 சங்கர்ஷணன் -ஸம்ஹாரம்
    அடுத்த 2-ப்ரத்யும்னன் -ஸ்ருஷ்ட்டி
    அடுத்த 4-அநிருத்தன் -ஸ்திதி
    அடுத்த 8 -வாசுதேவன்

    ———-

    124- ஸ்ர்வக –
    எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது

    தாரண ஸாமர்த்தய லக்ஷணேந பாலேந ஆத்மவத் தாரயன் ஸம் ஹ்ருதான் ஸர்வான் கச்சதீதி
    ஸர்வக
    அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த ஷு ட
    ஏவம் ஸங்கர்ஷணாத் தி ஸங்கர்ஷணம் நாம நிருச்யதே —அஷ்டாத்யாயீ -3-2-48-–செல்லுதல் என்ற பொருள் கொண்ட கம் என்பதன் பின் ட என்பதை இணைத்துக் கொள்கிறது -எப்போது என்றால்
    அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த -போன்ற சொற்களுடன் கூடும் போது ஆகும் –

    கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
    தாரண சாமர்த்தியம் -பலம் –சங்கர்ஷணன் -556-
    அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று உயிர் படைத்தான் -4-10-1-
    தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –

    சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
    சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் -சம்ஹரிக்கப்பட்டவை எல்லாவற்றையும் தம்மிடம் வைத்துத் தாங்கும் வன்மை
    இது கீழ் சொல்லிய ஞானத்துக்கு முக்கிய அங்கம் –ஸ்ரீ பராசர பட்டர்-

    ஆத்ம வடிவில் அனைவரையும் சென்று அடைபவன்
    சங்கர்ஷம-556-அவன் தன்னில் அனைவரையும் வரவழைக்கிறான் என்றபடி

    காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -கார்யமாதலால் காரணங்களில் எங்கும் வியாபித்து இருப்பவர் -சங்கரர் –

    எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் சர்வகயா நம

    ————

    ஓம் ஸர்வகாய நம:

    ஸர்வத்ர எங்கும்

    கச்சதீதி செல்வதால்

    ஸர்வக: பகவான் ‘ஸர்வக’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்

    வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்

    ஸர்வத்ர எங்கும், எதிலும்.

    அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் ‘ஸர்வக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    —————

    சர்வகா 

    ‘சர்வகா‘ என்றால் அனைவரையும் சென்றடைபவன் என்று பொருள். ‘சர்வத்ர கச்சதி இதி சர்வ-கா‘ என்றால் எல்லாவற்றையும் வியாபித்திருப்பவர் அல்லது எங்கும் செல்பவர். பகவான் அனைவரையும் சென்றடைகிறார், எல்லா இடங்களிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார்.

    ஸ்ரீ ஆதிசங்கரர் அதை மேலும் விளக்குகிறார், ‘காரணத்வேன வியாப்தத்வாத் சர்வத்ரா – அவர் எங்கும் இருப்பது அவர் எல்லா இடத்தையும் ஆக்கிரமித்ததன் விளைவு.

    நாராயண ஸூக்தம் சொல்வது போல் – ‘அந்தர் பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடங்களிலும் உறுதியாக நிற்கிறார்.’

    தனது சம்கர்ஷண வியூகத்தில் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.


    125- ஸர்வ வித் –
    எல்லாவற்றையும் அடைபவன் –ஸ்ருஷ்டிக்க -ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யுமனுக்கு -இதில் ஐஸ்வர்யம் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்

    அதஸ் ஸம் ஹ்ருதான் ஸிஸ்ரு ஷு –ப்ரத்யும்ந –ஸர்வ கார்ய விந்ததி ஸ்ருஷ்டயா லபதே இதி
    ஸர்வ வித்
    இதமத்ர ஜகத் க்ரியா ஸ்க்த் யுல்லாஸ ரூபம் ஐஸ்வர்யம்

    யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –சர்வ வித் -ஞான பூர்த்தி

    நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
    பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
    ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
    முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7–

    சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
    கிரியா சக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம்-மற்றும் பலம்-வீர்யம் -கூறப்படுகிறது -விசித்திரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை இங்கு கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

    எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி இருப்பவர் -ப்ரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -எல்லா இடங்களிலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி பிரகாசிப்பவர் -சங்கரர் –

    அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் சர்வ வித் நம

    ————

    ஓம் ஸர்வவித்பானவே நம:

    ஸர்வம் அனைத்தையும்

    வேத்தி அறிவதனாலும்

    விந்ததீதி வா அடைவதனாலும்

    ஸர்வவித் பகவான் ‘ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார்.

    பாதீதி பானு: ஒளி வீசுவதால் ‘பானு’ என்று அழைக்கப்படுகிறார்.

    தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்’ (கதோபநிஷத் 2.2.15)

    கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

    ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.

    இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

    ‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

    ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).

    இத்யாதிஸ்ம்ருதேஸ்சஇத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

    ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும்

    பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும்

    ஸர்வவித்பானு: பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ———

    சர்வ-வித்

    சர்வவித்‘ என்றால் அனைத்தையும் அறிந்தவர் என்று பொருள். ‘சர்வம் வேத்தி விந்ததா இதி வா சர்வ-வித்‘ – அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் பெறுபவர். முதல் விளக்கத்தில், பகவான் அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் அறிந்தவர். அவர் உள் ஆன்மா.

    சர்வவித்தின் மற்றொரு விளக்கம் என்னவென்றால், அவர் ‘பிரத்யும்னா’ என்ற செயல்பாட்டைச் செய்கிறார் மற்றும் ‘சம்கர்ஷனா’ வடிவத்தில் தன்னுள் உறிஞ்சப்பட்ட அனைத்து ஜீவாக்களையும் மீட்டெடுக்கிறார் அல்லது பெறுகிறார்.


    126-பாநு-
    விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்

    வீர்யம் -ஸுர்யம் -பராக்ரமம்
    தனக்கு விகாரம் இல்லாமல் செய்வதே வீர்யம்-நித்ய நிர்விகார தத்வம்

    ஸர்வ நிர்மாணே அப் யவி குர்வாணோ பாதீதி
    பாநு

    உணாதி ஸூத்ரம் –தா பாப் யாம் நு –ஒளிர்தல் என்னும் பொருள் கொண்ட பா என்பதுடனும்
    அளித்தல் என்னும் பொருள் கொண்ட தா என்பதடுடனும்
    நு என்பது சேர்க்கிறது

    ஸ ஏஷ ஸ்வயம் உத்வபவ் –அவன் தானாகவே ஒளிர்கிறான்

    இதம் அவிகார ஆகாரம் வீர்யம் –தனது வீர்யம் காரணமாக மாறுபடாமல் உள்ளான்

    வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
    பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
    செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

    எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

    பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் பானுவே நம

    ————

    பானுஹ்

    பானுஹ்‘ என்றால் பிரகாசிப்பவன் என்று பொருள். ‘பாதி இதி பானுஹ்‘ – அவரது படைப்பு மற்றும் பராமரிப்பு இருந்தபோதிலும், அவர் மாறாமல் இருக்கிறார் மற்றும் குறையாமல் தொடர்ந்து பிரகாசிக்கிறார். பகவத் கீதையில் (அத்தியாயம் 15, சுலோகம் 12) பகவான் கூறுகிறார், ‘யதாதித்ய கடம் தேஜஹ் ஜகத் பாஷயதே அகிலம் யத் சந்திரமஸி யத் ச அக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம்‘ சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பின் பிரகாசம் எனது முழு பூமியையும் ஒளிரச் செய்கிறது. அவற்றில் இருப்பு.

    127-விஷ்வக்சேன
    யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்-அவன் எஜமானனுடன் உள்ளதால் சேனன் ஆகிறான்

    அநிருத்தன் -சக்தி- தேஜஸ் -ஜகத் ரக்ஷணம்-இரண்டும் வேண்டுமே –

    அத ஸ்தாபகோ –அநிருத்தோ–
    விஷ்வக் ஸேந
    இநேந ஸ்வாமிநா ஸஹ வர்தத இதி ஸேநா (தலைவர் உடன் கூட இருப்பதால் சேனா )-ஸேஸ் வரேதி
    யாஸ்க
    அநேந ரக்ஷக வந்தோ ஜந்தவோ விஷ் வஞ்சோ -அஸ் யேதி
    இயமத்ர ஸாமர்த்ய ஸரீரா ஸக்தி

    ரஷிக்க சேனை உடையவன் –
    அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
    ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
    அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
    இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –

    எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
    ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -எதையும் ரக்ஷிக்கும் திறம் –இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

    போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுர சேனை சிதறி ஓடும்படி செய்தவர் -தன்னுடைய யோக சக்தியால் செய்பவர் -சங்கரர் –

    பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் விஷ்வக் ஸேனாய நம

    ————

    ஓம் விஶ்வக்ஸேனாய நம:

    விஶ்வக் அவ்யயம் ‘விஶ்வ’ என்ற சொல்லிற்கு

    ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள் |

    விஶ்வ எங்கும்

    கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று

    தைத்யஸேனா அஸுரப் படைகளை

    யஸ்ய எவர்

    ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்

    விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ‘விஶ்வ’ என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்


    விஷ்வக்-சேனா

    ‘விஷ்வக்-சேனா’ என்றால் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக எல்லா திசைகளிலும் தனது படையை வைத்திருப்பவர் என்று பொருள். வைஷ்ணவ மரபில் விஷ்வக்சேனர் என்பது மகாவிஷ்ணுவின் படையின் உச்ச தளபதியின் பெயர். இந்த நாமம், தேஜஸ் மற்றும் சக்தி ஆகிய இரண்டு குணங்களைக் கொண்ட பாதுகாவலரான அநிருத்த வியூஹாவைக் குறிக்கிறது.

    விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் இரண்டாவது பூர்வாங்க சரணம் கூறுகிறது:

    யஸ்ய த்விரதா வக்த்ராத்யாஹ் பரிஷத்யாஹ் பரஸ்ஶதம்
    விக்னம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேநம் தமாஶ்ரயே’

    ஒருவரின் பாதையில் இருந்து தடைகளை அகற்ற அழைக்கப்படுவதால், இது விஷ்வக்சேனருக்கு ஒரு அஞ்சலி. இந்த நாமம் அவனுடைய சக்தி அல்லது அவனது திறனைக் குறிக்கிறது. அனிருத்தன் என்றால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதவன் என்று பொருள். இந்த நாமம் இறைவனின் குணத்தையும் குறிக்கிறது, அதன் மூலம் அவர் தனது பக்தர்களைக் காக்க எப்போதும் இருக்கிறார்.

    திரௌபதி, பிரஹலாதா, கஜேந்திரன், அம்ப்ரீஷ் போன்றோரின் பக்தர்களின் அழைப்பை அவர் காப்பாற்றுகிறார்.

    ஸ்ரீ ஆதிசங்கரர், எதிர்க்கும் அசுரப் படையை போரில் எங்கும் ஓடச் செய்ததால், பகவான் விஷ்வக்சேனர் என்று அழைக்கப்படுகிறார் என்று விவரிக்கிறார்.


    128-ஜனார்த்தன –
    விரோதிகளை சம்ஹரிப்பவன் –தேஜஸ் -சொல்லும் -பராபிபவன சாமர்த்தியம்

    வற்கலா ஜனார்த்தன பெருமாள் -ஜனி பிறப்பை அளிக்கும் ஜனார்த்தனன்-

    ரஷா ப்ரதி பஷான் ஜநான் அநபேஷோ அர்த்தயதீதி
    ஜனார்த்தந-

    தஸ்யு த்ராணாத் ஜனார்த்தன -உத்யோக பர்வம்–71-6- –தீயவர்கள் இடம் ரக்ஷிப்பதால் ஜனார்த்தனன்
    இதன் மூலம் யாருடைய உதவியும் இன்றி எதிரிகளை அளிக்கும் தேஜஸ் சொல்லப்படுகிறது

    இதம் அநபேஷா லக்ஷணம் –தேஜஸ்
    ப்ரதி மூர்தி குணா நாம் வ்யவஸ்தேயம் இயதாம் ஆவிஷ் காராத்
    பகவதஸ் ஸர்வத்ரா நாவரண குணத்வாத் —

    மூலே ஹி ஸ்ரூயதே–ஞாநேந ஐஸ்வர்யேன சக்த்யா (முதல் மூன்றையும் சொன்னது அடுத்த மூன்றுக்கும் உப லக்ஷணம் )இதி சர்வே பகவத அநூநா பூர்ணா –மூல ஸம்ஹிதை -பூரணமான ஞானாதி குணங்கள் கொண்டவன்

    இதி ஏஷ ஆத்மா சதுர்வித
    ஸர்வஞ்ஞ-ஸர்வ தர்சீ ஸர்வேஸ்வர ஸர்வ ஸக்திஸ் ஸம் ருத்தி மான் வா அக்ரன் திர நூந ஆப்தோ வஸீ ஸ்வாதீநோ அநாதி ரநந்தோ
    வ்யபகத (ஒழிக்கப்பட்ட )நித்ரா பய க்ரோத தந்த்ரோ வ்யபகதேச்சா தம க்லம வியாதிர் நிர்தோஷா நிர நிஷ்டோ நிரவத்யோ யே பகவந்தம் வாஸூ தேவ மேவம் விது
    ந தே விதுரிதி பகவான் வாஸூ தேவோ அநந்த ஏவ அபரிமிதோ அனந்தத்வேந அபரிமிதத்வேந பவதி(
    முடிவற்ற அளவற்ற )-இதி ப்ரதி பர்யாயம் 

    தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
    அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
    செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

    ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-

    மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –

    அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
    ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் ஜனார்த்தனாய நம

    ————

    ஓம் ஜனார்தனாய நம:

    ஜனான் துர்ஜனான் ‘ஜன’ என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்

    அர்தயதி ஹினஸ்தி அவர்களை ‘அர்தனம்’ செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார்

    நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார்

    ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை

    அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக

    நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த

    யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால்

    ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ————–

    ஜனார்தனா

    ஜனார்தனா என்ற நாமத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு.

    •   தீயவர்களை அழிப்பவர்;
    •   பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்காக அணுகுபவர்; மற்றும்
    •   துன்மார்க்கரிடமிருந்து பக்தர்களைக் காப்பவர்.

    ஸ்ரீ ஆதி சங்கரர் பின்வரும் இரண்டு விளக்கங்களைத் தருகிறார்.

    •  முதல் விளக்கம் – தீயவர்களை அழிப்பவர். ‘ஜனன் துர்ஜனான் அர்தயாதி ஹினஸ்தி நரகாதீந் கமயதி இதி வா ஜனார்தனஹ் – தீயவர்களை அழிப்பவன் அல்லது அவர்களை நரகத்திற்குத் தள்ளுபவன்.’ பேய்களை வெல்ல அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை.
    • மற்றொரு விளக்கம் ‘அர்ட்’ என்ற மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது, இது பிச்சை எடுப்பது, கேட்பது – கதௌ யசநே ச ஜனைஹ் அர்த்யதே யச்யதே – தம் பக்தர்கள் எதைப் பெற விரும்புகிறாரோ அதை அணுகுபவர்.

    ஸ்ரீ பராசர பட்டர் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி மூன்றாவது அர்த்தத்தை தருகிறார்.-‘தஸ்யு-த்ரானாத் ஜனார்தனா ( உத்யோக பர்வா 71.6) – தஸ்யுஸிலிருந்து (பேய்கள்) மக்களைப் பாதுகாப்பதால் அவர் ஜனார்தனா ஆவார்.’-

    பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் பிரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப்பட்டு இருந்தாலும்
    அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்து உரைத்தது-

    ——–

    174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
    175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
    176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
    177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
    சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
    178-மஹாத் யுதி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –

    174-மஹாபல-
    மிக்க வலிமை உடையவன் –

    ஸஹாய அபேஷ கர்த்ரந்தர வ்யாவர்தகம் மஹத்₃ப₃ல மஸ்யேதி –
    மஹா ப₃ல ।
    அநேந ஹ்யய மபரிமித க்ரியோ(அ)ப்ய அநாகலித ஶ்ரம꞉ ஸ்வே மஹிம்நி திஷ்ட₂ன் அவதீ₄ரிதாத் –
    ஆ₄ராந்தரோ து₃ர்வார வ்யாபார ஸந்தத ஸக்தி ஸமுல்லாஸ꞉
    ஸரீரமிவ ஸகலம் பி₃ப₄ர்தி ।
    *ப₃ஹுல யன் ப₃ஹு ம், இதி ச மௌல ꞉ ।
    ஏதல் லேஸோ ஜீவந ஸமீரண- கி₃ரித₄ராதௌ₃ ॥(தண்ணீர் காற்று மண் மலை இவனது பலத்தில் ஏக தேசத்தால் தாங்கும் வலிமை கொண்டதாகும் )

    பஹு ளயன் பஹுளம் –மவ்ல ஸம்ஹிதை –பல பொருள்களையும் உண்டாக்கி என்றபடி

    திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் -திறம்பாமல் மலை எடுத்தேன் என்னும் -திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் என்னும் -5-6-5-

    வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
    செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
    இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

    பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

    மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
    அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

    ———

    ஓம் மஹாபலாய நம:

    பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 

    பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 

    மஹாபல: பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ——

    மஹாபலா – அளவிட முடியாத வலிமை கொண்டவர் – சர்வ வல்லமை படைத்தவர்

    ஸ்ரீ ஆதி சங்கரரின் வியாக்கியானம் “பலிநமபி பலவத்வத் மஹாபலஹ் – அவர் வலிமை மிக்கவர்களை விட வலிமையானவர் என்பதால் மஹாபலஹ் என்று அழைக்கப்படுகிறார். உண்மையில் அவர் அனைவருக்கும் பலத்தின் ஆதாரமாக இருக்கிறார். கீதை (7.11) சொல்வது போல் ‘பலம் பலாவதாம் சாஹம் – நான் வலிமையானவர்களின் பலம்’.

    இந்த குணத்திற்கு பல உதாரணங்களைத் தருகிறார். மகாபலியை வெல்வதற்காக ராவணன் பாதாள லோகம் சென்றான். மகாபலியின் வாயில் காப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பகவான், தற்காலிகமாக தன்னை கண்ணுக்கு தெரியாதவராக ஆக்கிக் கொண்டார். நரசிம்ம பகவானால் வதம் செய்யப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதில் இருந்து விழுந்ததால் வீட்டு வாசலில் கிடந்த ஹிரண்யகசிபுவின் குண்டலத்தை ராவணன் நகர்த்த முயன்றான்.ராவணனின் கைகள் குண்டலத்தின் கீழ் சிக்கியது. பகவான் காட்சியில் தோன்றி, முயற்சியின்றி ராவணனை உதைக்க ராவணன் வெகுதூரம் பறந்து சென்றான்.

    175-மஹா புத்தி –
    எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –

    அஸவர்ஜ்ஞ காரணமத வ்யவச்சே₂த₃மாஹ – மஹத் ஜ்ஞாநமஸ்யேதி
    மஹா பு₃த்₃தி₄꞉ ।
    இத₃ம் சாஸ்ய அசேஷ தேஸ கால ஸ்வ பாவ –விப்ரக்ருஷ்ட அவிப்ரக்ருஷ்ட விஷயம் ஸார்வஜ்ஞாத்-(மிச்சம் இல்லாமல் தேச கால வஸ்து இவற்றால் கட்டுப்படாத ஞானம் )
    அவிஸய விபர்யா ஸதயா யதா₂ர்த₂ம்,-(உள்ளவற்றை உள்ளபடி அறிந்த ஞானம்)
    க்லேஸ கர்ம விபாகா ஸயாத்₃ யபராமர்ஸாத் –ஸ்வ பா₄விகத் வாந்-(இயற்கையாகவே) -நித்யம் ச சக்ஷுராதி₃கரண நிரபேக்ஷம்
    ச தத₃பேக்ஷம் ச ஸ்வாதந்த்ர்யேண, (ஸ்வ தந்த்ர ஸங்கல்ப சக்தியால் )புண்ட₃ரீகாக்ஷத்வ(ஆனாலும் தாமரைக் கண்ணன் -நாம் அனுபவிக்க-ஸாஸ்த்ரத்தால் திருத்த ஒண்ணாத நம்மை வைமுக்யம் மாற்றி -ஈடுபாடு உண்டாக்கி -உபாயமாகக் கொடுத்து -உபாயமாகப் பற்றினார்க்கு போக்யமாய் இருக்குமே  )ஸூசி ஶ்ரவஸ்த்வாதே ₃꞉ ।
    ந ச ரூப ரஸாதி₃க்₃ரஹணே கரண நியம:, ஸர்வேண ஸர்வ கார்ய ஸக்தே (எல்லாப் புலன்களாலும் எல்லாம் அனுபவிப்பான் )꞉ ;
    ஸர்போ (அ)பி ஹி திர்யக்ஷு சக்ஷுஷைவ பஶ்யதி ஶ்ருணோதி ச
    கத₂மித₃ம் ஸர்வ ஸக்தே ꞉ து₃ஶ்ஸகம் ?

    யதோ₂க்தம் ஜயாயாம்,
    * ஸர்வத꞉ ஶ்ருதி மாம்-ஶ்சாஸௌ யதா₂ த்₃ருக்  ச்₂ராவ கோரக₃꞉ இதி ।
    கர தல ஆமலக விலோகதவத் அபரோக்ஷம் ச வைஸைத்₃யாத், அமோக₄ம் ச ஸர்வ நிர்வஹணாத்(வீணாகாத ஞானம்-அனைத்தையும் நிர்வஹி க்கிறானே  )।

    யதா–விஸ்வதஸ் சஷு உத விஸ்வதோ முக –தைத்ரியம் நாராயண வல்லி -1-12-
    அவன் கண்களையும் முகத்தையும் எங்கும் கொண்டவன்

    பஸ்யதி அசஷு ச ஸ்ருணோதி அ கர்ண–ஸ்வேதாஸ்வரா -3-19- கண்கள் உதவி இன்று காண்கிறான் -காதுகள் உதவி இன்றி கேட்கிறான்

    ஸர்வதா அஷி ஸீரோ முகம் –ஸ்ரீ கீதை -13-13-எங்கும் கண்களும் தலையும் முகமும் உள்ளது

    ஆஹுஶ்ச நாத₂முநிமிஶ்ரா꞉, –யோ வேத்தி 1-யுகபத் 2-சர்வம் 3-ப்ரத்யஷேண 4-சதா 5-ஸ்வத இதி (பல விசேஷணங்கள்)।
    யத் கேசித் ஸர்வஜ்ஞமவஜஜ்ஞிரே ,–நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

    எந்த ஹரி அனைத்தையும் ப்ரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறானோ

    பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
    விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

    ஸர்வஞ்ஞனான இவனை ஏளனம் பண்ணும் தொனியில்
    ஏகே து ப்ரமாணேந சர்வஜ்ஜோ யேந கல்ப்யதே நூநம் ஸ சஷுஷா சர்வன் ரஸாதீன் ப்ரதிபத்யதே
    ஒரு பிரமாணத்தின் மூலம் மட்டுமே அனைத்தும் அறிந்த ஸர்வேஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்று
    அறிய முடிகிறது என்றால் அப்படிப்பட்டவன் தனது கண்கள் மூலமாகவே ருசி பார்ப்பது மற்றும்
    இதர இந்திரியங்களை செய்யும் செயல்களை செய்பவன் என்று கொள்ளலாம் என்றும்
    மேலும்

    இதி, தத்₃
    பவ் ₃த்₃தா₄த்₃ யநுமித ஸர்வஜ்ஞ விஷயம் (அனுமானத்தால் புத்த மத சர்வஞ்ஞத்வம் ); தத் ப்ரகரணாத், அந்யதா₂ ஸாஸ்த்ர விரோதா₄ச்ச ।
    நித்யஸ் சேத அர்த்த வாதத்வம் தத் பரே ஸ்யாத் அநித்யதா 
    ஸர்வேஸ்வரன் நித்தியமாக உள்ளவன் என்பது புகழ்ச்சிக்காகவே
    அர்த்தவாதம் என்றால் அவன் நித்யன் அல்லன் ஸர்வஞ்ஞன் என்பவை இல்ல என்றதாகும் –

    இதி ஸாஸ்த்ரீய
    ஸர்வஜ்ஞத்வ வ்யுதா₃ஸநம் அத ஏவ அந்ய பரோக்தம் து₃ருக்தம் வா ;
    சக்ஷு꞉ஶ்ரவ ꞉- ப்ரப்₄ருதிஷு காக உலூக க்₃ருதா₄தி₃ஷு(கழுகு கூர்மை கண் -காகம் ஏக கண் போல் )மந்த்ர ஸித்₃தௌ₄ஷத₄தப ꞉ ப்ரபா₄வாதி₃ஸம்ஸ்க்ருதேஷு ச கரணாநாம்
    ஜ்ஞாந கார்ய வ்யதிஹார தந்த்ர தாப்ர கர்ஷ தாரதம்ய த₃ர்ஸ நாத் ;
    ஸார்வஜ்ஞய ஸாஸ்த்ரஸ்ய அயோக்₃யார்த₂தா(அ)பி து₃ர்வதா₃ ।(இது தவறே ஆகும் -)

    கு₃ணாந்தர வைசித்ரயே(அ)ப்யேஷைவ தி₃க் ।
    அஸ்ய லவோ (சிறிய பகுதியாலேயே-சுடர் ஞான இன்பம் அன்றோ இவன்  )ப₃த்₃த₄முக்த நித்யேஷு சைதந்யம் ॥

    எக் காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
    இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
    புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்லிக்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
    இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்-

    ஸ்ரீ ஹரி அனைத்தையும் பிரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறான் –
    நாகங்கள் கண்களாலே கேட்டு -காகம் ஒரே கண்ணால் காண்பது -ஆந்தை இரவில் காண்பது -கழுகு தூரத்தில் இருப்பதை காண்பது
    நித்யர்களுக்கு உள்ள ஞானமும் இவனது ஞானத்தில் ஒரு அணு அளவே

    ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

    உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

    ————

    ஓம் மஹாபுத்தயே நம:

    புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும்

    புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால்

    மஹாபுத்தி:பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ———

    மஹாபுத்தி – எல்லையற்ற அறிவை உடையவர்.

    ஸ்ரீஆதிசங்கரர் இந்தச் சொல்லை ‘புத்திமாதம் அபி புத்திமத்வாத் மஹாபுத்திஹ் – அவர் கூர்மையை விட அறிவில் கூர்மையானவர்’ என்று விளக்குகிறார்.

    பகவத் கீதை அத்தியாயம் 7 வது 10வது வசனத்தில், ‘புத்திர் புத்திமாதம் அஸ்மி – நான் புத்திஜீவிகளில் இருக்கும் புத்தி’ என்று பகவான் கூறுகிறார்.

    ஸ்ரீ பராசர பட்டர் அவர் மஹாபுத்தி என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருடைய அறிவு அவரது புலன்களையோ அல்லது வெளிப்புற உதவியையோ சார்ந்து இல்லை.

    புலன் உறுப்புகள் எதுவும் தேவையில்லாமல் அவர் ஒரே நேரத்தில் பார்க்கிறார், கேட்கிறார் மற்றும் உணருகிறார். இது போன்ற ஸ்ருதிகளின் பல பகுதிகள் ஆதரிக்கின்றன

    • விஷ்வதாஷ்சக்ஷுருதா விஷ்வதோமுகஹ் – எல்லாப் பக்கங்களிலும் கண்களையும், எல்லாப் பக்கங்களிலும் முகங்களையும் உடையவன் (தைத்ரிய நாராயண உபநிஷத் 1.12). பகவான் தனது அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தியாகும், எனவே அவர் மொத்தத் தொகையான மகாபுத்தி.
    • பஸ்யாத்_யசக்ஷு ச ஸ்ருநோதி அகர்ணஹ் – அவர் கண்கள் இல்லாமல் பார்க்கிறார் மற்றும் காதுகள் இல்லாமல் கேட்கிறார் (ஸ்வேதாஸ்வர உபநிஷத் 3.19);
    • ஸர்வதோக்ஷி சிரோமுகம் – அவருக்கு கண்கள், தலைகள், வாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன (பகவத் கீதை 13.13).

    ஆச்சார்ய நாதமுனி கூறுகிறார் – ‘யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேந ஸதா ஸ்வதஹ் – அவர் நேரடியாகப் புலனுணர்வு மற்றும் அவரது விருப்பத்தின் மூலம் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்’ (நியாயதத்வா). பெயர் உருவான தாது வார்த்தை ‘புத்த ஞானே’ என்பது அறிவது, புரிந்துகொள்வது. பகவான் அவருடைய அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தி ஆவார், எனவே அவர் மகாபுத்தி ஆவார்.

    பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளின் நடத்தையும் அவர் அவற்றில் முதலீடு செய்த அறிவைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்தந்த நிலைகளிலும் சுற்றுப்பாதைகளிலும் நிலைநிறுத்தப்படுவது, பகவானின் மகா புத்தி அல்லது செயலில் உள்ள மகாபுத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    நான்கு அந்த கரணங்களில் அல்லது மனிதனின் உள்ளார்ந்த திறன்களில் புத்தி மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டுகிறார். ‘அஹம்காரம்’ (ஈகோ) எடுத்துச் செயலைச் செயல்படுத்துவதற்கு முன், ‘சித்தம்’ (சிந்தனை) வழங்கிய அனைத்து முந்தைய அனுபவங்களின் நினைவுகளையும் கணக்கில் கொண்டு, ‘மனஸ்’ (மனம்) வழங்கிய விருப்பங்களுக்கு இடையே புத்தி தேர்வு செய்கிறார். புத்தி மோசமான தேர்வு செய்தால், அது அல்ப புத்தி அல்லது அற்ப புத்தியின் அடையாளம். புத்தி எப்பொழுதும் உன்னதமான விருப்பங்களைச் செய்தால், அது மஹாபுத்தியாகும், அதைத்தான் பகவான் உருவகப்படுத்துகிறார்.


    176- மஹா வீர்ய –
    மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
    ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
    அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

    த₃தி₄பா₄வம் ஆபத்₃ய மாந து₃க்₃தா₄தி₃காரணேப்₄யோ (பால் தயிர் ஆவது போல் )பே₄த₃கம் ஸத்யபி ஹேது அவிகார லக்ஷணம் மஹத்₃ வீர்ய மஸ்யேதி
    மஹாவீர்ய ꞉ ।
    அக₃ரு ம்ருக₃மத₃ கஸ்தூரிகா- குஸும் ஆமோத₃வத் ஸம்நிதி₄மாத்ரேண நிர் மர்யாத₃கார்ய காரீ ஹ்யயம் । யதா₂

    தஸ்ய சந்நிதி மாத்ரேண கந்த ஷோபாய ஜாயதே -மனசோ ந உப கர்த்ருத்வாத் ததா அசவ் பரமேஸ்வர —
    நறு மணம் என்பது மனிதனின் அருகில் உள்ள போது அவனை இழுக்கிறது
    இதே போல் எம்பெருமான் கஷ்டப்படாமல் சங்கல்பத்தாலே செயல் புரியுமவன்-

    இந்தத் திறனில் ஓர் அனுவின் அளவு அவர்களிடம் உள்ளதால் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் உள்ளனர் –

    இதி-ஏதத₃ணுர் யோகீ₃ஶ்வர ப்ரம்ருதிஷ்வஷு அப்₄யத்வம் (இவனது வீர்ய லேசத்தால் யோகிகள் )॥

    பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
    அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
    இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

    உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் கரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

    மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

    ————

    ஓம் மஹாவீர்யாய நம:

    மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)

    உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான

    அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்

    வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான ‘வீர்யம்’ ஆதலால்

    மஹாவீர்ய:பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

    ————-

    மஹா வீர்யா – மகத்தான சக்தி கொண்டவர்

    அவர் மஹாவீர்யா, ஏனென்றால் அவர் காலப்போக்கில் மாறும் எல்லாவற்றையும் போல மாறாமல் இருக்கிறார். மலர்கள் எந்த முயற்சியும் இல்லாமல் தங்கள் சுற்றுப்புறங்கள் அனைத்திற்கும் நறுமணத்தை கொடுப்பது போல், பகவான் தனது அனைத்து செயல்களையும் சிறிய முயற்சியுடன் செய்கிறார், இது அவரது வீரியத்தின் அறிகுறியாகும்.

    ஸ்ரீஆதிசங்கரர் கூறுகிறார் – ‘ஜகதுத்பத்தி காரணம் அவித்யாலக்ஷணம் வீர்யம் அஸ்ய இதி மஹாவீர்யஹ் – இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்குப் பின்னால் உள்ள அறியப்படாத சக்தி, பகவானின் அதீத வீரியத்திற்கு ஆதாரமேயன்றி வேறில்லை.

    வீரியம் என்பது அனைத்து சுறுசுறுப்பு அல்லது படைப்புத் தூண்டுதலின் சாராம்சம் என்றும், படைப்பிற்கான அனைத்து ஆற்றல்களும் அவரிடமிருந்து மட்டுமே வெளிப்படும் உந்து சக்தியாக இருப்பதால் அவர் மகாவீர்யா ஆவார்.

    எவ்வளவு கடினமாக இருந்தாலும் தன் குறிக்கோளை அடையும் குணம் வீரியம் என்று  விளக்குகிறார்கள். பகவானின் முதல் சாதனை, பிரகிருதி அல்லது ஆதிப் பொருளில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது, அவருடைய வீரியத்தின் விளைவாகும்.

    தர்மச் சக்கரத்தில் உள்ள வியாக்கியானத்தில், வீரியம் அல்லது படைப்பாற்றல் கொண்ட ஒருவர், இந்த படைப்பாற்றலை மற்ற அனைவரின் நலனுக்காக கடத்த இந்திரியங்களின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பகவான் ஒருவரே மஹா வீர்யர் என்று அழைக்கப் படுவார்.


    177-மஹா சக்தி –
    மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
    கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

    பஸூ பதிமதாவக₃தாே ந ஸக்தி விகல நிமித்த மாத்ர வ்யாவர்திகா மஹதீ।
    ஸக்திரஸ்யேதி
    மஹா ஸக்தி꞉ ।(பாசுபத நிரசனம் -நிமித்த மாத்திரம் என்பர் -தான் உலகம் ஆகாது என்பர்-உபாதான காரணமாகவும் உள்ள மஹா சக்தி -செய்தேனும் ஆவேனும் யானே என்னும்  )
    ஸா ஹி ஸாத₄ந க்₃ராம விநியோக₃ லக்ஷணா ஸ்வ ஸரீர ஏகதேஸ –
    ஶீக்ருத ப்ரக்ருதி பரிணாம யோக்₃யதா லக்ஷணா ஸத்யா (அ)ஸத்யா வா ஸாமக்₃ரயா
    ஸர்வதா₃ ஸர்வ ஸம்பாதி₃நீ ।
    ஊர்ணநாபி₄ப்ரப்₄ருதே ꞉ கீடஸ்யாபி நிமித்தஸ் யைவ உபாதா₃நா –
    ஸக்திர் அதர்க்யா , கத₂மியம் ஸர்வஜ்ஞ ஸக்திஸ் தர்க்யா ? அஸ்யா விப்ருட் ப்ரதா₄ந த₃தி₄- து₃க்₃தா₄தௌ₃ ப்ரதி க்ஷண பரிணாமித்வம் ॥

    தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
    சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
    பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
    சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
    சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
    தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

    மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

    மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

    ————

    ஓம் மஹாஶக்தயே நம:

    மஹதி சிறந்த

    ஶக்திஸாமர்த்யம் ‘ஶக்தி’ அல்லது திறமை உடையவர்

    அஸ்யேதி எனவே

    மஹாஶக்தி:பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், ‘ஶக்தி’ என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

    ————

    மஹாசக்தி – அவர் உலகத்தின் காரணம்

    ஸ்ரீ ஆதி சங்கரர் அடிப்படை அர்த்தத்தை விவரிக்கிறார், ‘மஹாதீ சக்தி: சாமர்த்யம் அஸ்ய அஸ்தி இதி மஹாசக்தி: அவர் மஹாசக்தி, ஏனென்றால் அவர் செயல்படும் ஆற்றலுடன், அத்தகைய செயல்களுக்குத் தேவையான திறன்களைக் கொண்டவர்.

    ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார், மகாசக்தி என்ற நாமம் பகவான் இந்த உலகத்திற்கு வெறும் உணர்வு காரணமல்ல, ஆனால் இந்த உலகத்திற்கு ஜடக் காரணமும் கூட, அதாவது, அவர் படைப்பின் மூளை மட்டுமல்ல, அவரே காரணமும் ஆவார். இது பிரகிருதியிலிருந்து இந்த உலகத்தை உருவாக்கியது.

    கிரியா சக்தி (செயலின் சக்தி), இச்சா-சக்தி (ஆசையின் சக்தி) மற்றும் மூன்று சக்திகளின் தொடர்புக்கு காரணமானவர் என்பதால் அவர் மகாசக்தி என்று குறிப்பிடுகிறார். ஞான சக்தி (அறிவின் சக்தி). இந்த மூன்று சக்திகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் செல்கின்றன.

    ஒரு சிலந்தி தனக்குள்ளிருந்து வலையை உருவாக்குவது போல, இறைவன் தனக்குள் இருந்து உலகைப் படைக்கிறான்.

    முந்தைய நாமத்தின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டபடி, அவர் உலகின் நன்மைக்காக வலிமை மிக்க சக்தியைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்த சக்தியின் ஒவ்வொரு நிகழ்வும் அவருடைய மகாசக்தியை நமக்கு நினைவூட்ட வேண்டும்


    178-மஹா த்யுதி –
    மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்—பர நல் மலர் ஜோதி -ஜோதியாய் ஜோதி கீழ் உபாதான காரணத்வம் -இதில் சஹகாரி காரணத்வம்

    ஸஹ கார்யபேஷா காரண வை லக்ஷண்ய கரம் தத₃ந பேக்ஷா லக்ஷணம் தேஜோ மஹத₃ஸ்யேதி
    மஹாத்₃யுதி꞉ ।
    யத் பா₃ஹ்யாந்தர தமோ விரோதி₄ ஸ்வ பர வர்க₃யோ꞉ க்ரமேண ரமணீயம் பீ₄ஷணம் ச ப₄வதி (அழகாகவும் பயங்கரமாயும் )।
    அஸ்ய பி₃ந்து₃ர்  த்₄யு மணி மாணிக்யாதௌ₃ ப்ரகாஸ ꞉ ।

    ஷட்ஸு சாமீஷு மஹத்த்வ விஸேஷேண (ஆறிலும் மஹத் அடைமொழி )நைதேஶே யத கு₃ணா꞉ கல யைவ பராவரம் கார்ய கலாபம் ப்ரவர்த்ய 
    அஸேஷேண லப்₃தா₄மிஷா மஹோத₃தா₄விவ மஹௌகா₄ ப ₄க₃வத் யநந்தே மாந்தீதி நிவேத்₃யதே ।
    அதி ப்ரதி₂தேயம் ப்ரகியா(மிகவும் பிரசித்தம் அன்றோ )

    பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியா ச –ஸ்வேதாஸ்வர–6-8-
    இவனுடைய சக்தி என்பது உயர்ந்ததும் பல விதமாகவும் காணப்படுகிறது
    இவை இவனுக்கு இயற்கையாகவே உள்ளது
    இப்படியாகவே இவனுக்கு ஞானம் பலம் ஸ்ருஷ்டிக்கும் திறன் போன்ற பலவும் உள்ளன

    தேஜோ பல ஐஸ்வர்ய மஹா வபோத ஸூ வீர்ய சக்தியாதி குணைக ராசி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85-
    தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் ஞானம் வீர்யம் மற்றும் சக்தி – ஆகிய பலவற்றுக்கும் இவனே இருப்பிடம் ஆவான்

    ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்சி அசேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-
    தாழ்வான குணங்கள் என்பதற்கு எதிர்த்தட்டாகவும்
    பூர்ணமாகவும் உள்ள ஞானம் பலம் சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்பதாகவும் உள்ள குணங்களே பகவான் என்ற பதம் மூலம் உணர்த்தப்படுகின்றது

    இத்யாதௌ₃ ।
    ப ₄க₃வச் சா₂ஸ்த்ராணி
    காத்ஸ்ந்யேந இத₃மர்தா₂நி ।
    ஏஷு ஷட்ஸ்வேவ ஸௌஶீல்ய வாத்ஸல்யாத₃யோ (அ)க₃ணித கு₃ணா꞉ கேநாபி ப்ரயோஜ(கே )ந அநந்தர் –
    பா₄வ்யந்தே ॥

    பகவத் ஸாஸ்த்ரம் இந்த பூரணமான ஆறு குணங்களும் இயற்கையாகவே இருப்பதையே காட்டும்
    ஸுசீல்யாதி குணங்கள் இவற்றுக்குள்ளேயே அமைந்தவை –

    173-தொடங்கி -178- வரை உள்ள ஆறு திரு நாமங்களிலும்
    மஹா அடைமொழி –
    எம்பெருமான் குணங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியே எத்தனை பெரிய செயல்களாக
    இருந்தாலும் அல்பமாகவே முடிக்கும் படி ஆகும் என்பதைக் காட்டும்
    பெரிய கடலில் நதி போலவே ஆகும் என்று காட்டும்

    சோதியாய சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -திருச்சந்த -34-
    பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

    படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
    ஸூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
    இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது

    இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
    பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
    இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

    உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

    மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

    ————

    ஓம் மஹாத்யுதயே நம:

    மஹதி மிகச்சிறந்த

    த்யுதிர் ஒளி

    பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும்

    ச அஸ்யேதி உடையவராதலால்

    மஹாத்யுதி:பகவான் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

    ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

    ஜ்யோதிஶாம் ஜ்யோதி:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

    ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

    இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

    ————

    மஹா த்யுதிஹ் – பெரும் தேகம் அல்லது பிரகாசம் கொண்டவர்

    ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘மஹாதீ த்யுதிஹ் பாஹ்யாப்யந்தரா ச அஸ்ய அஸ்தி இதி மஹாத்யுதிஹ் – அவர் அகத்திலும் வெளியிலும் மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவர்’ என்று வரையறுக்கிறார்.

    இந்த நாமத்தின் தோற்றம் தாது த்யுத தீப்தௌ என்பதிலிருந்து பிரகாசிப்பது. த்யோததே இதி த்யுதிஹ் என்றால் பிரகாசிப்பவர் என்று பொருள். த்யுதி, த்யோதாயிதா வா த்யுதி – பொருட்களை பிரகாசிக்கச் செய்பவன் த்யுதி.

    உபநிடதங்கள் அவரை ‘ஸ்வயம் ஜோதிஹ் – அவர் தனது சொந்த புத்திசாலித்தனத்தின் ஆதாரம்’ என்றும் ‘ஜோதிஷாம் ஜோதிஹ் – அவர் அனைத்து ஒளிகளையும் ஆற்றும் ஒளி’ என்றும் அழைக்கிறது. ‘தஸ்ய பாசா சர்வம் இடம் விபாதி – இங்குள்ள அனைத்தும் அவரது பிரகாசத்தால் பிரகாசிக்கின்றன’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார், இந்த நாமம் பகவானின் எந்தவொரு செயலுக்கும் வெளிப்புற உதவி தேவையில்லை என்பதை குறிக்கிறது, மேலும் அவரது தோற்றத்தில் உள்ள பெரிய தேஜஸ் (தேஜஸ்) இதை வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்திசாலித்தனம் நம்மில் உள்ள வெளி இருட்டையும் அக இருளையும் நீக்க வல்லது. சூரியனின் தேஜஸ் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளின் பிரகாசம் ஆகியவை இறைவனின் தேஜஸின் ஒரு சிறிய பகுதியாகும். இறைவனின் இந்த தேஜஸ் அவரது பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் அவரது எதிரிகளை மிகவும் பயமுறுத்துகிறது (நாம நரசிம்ம-வபுவின் விளக்கத்தை நாம் நினைவுகூரலாம், அவருடைய நரசிம்ம அவதாரத்தில் இந்த விஷயத்தை நாம் வலியுறுத்தினோம்). இதை ஆதரிக்கும் ஸ்ருதி குறிப்புகள்:

    • ஸ்வயம் ஜ்யோதிஹ் – அவரை பிரகாசிக்க வெளிப்புற வழிகள் தேவையில்லாமல் அவர் தூய்மையான பிரகாசமாக இருக்கிறார் (பிருஹதாரண்யக உபநிஷத் 4.3.9),
    • ஜோதிஷ்ஆம் ஜோதிஹ் என்றால் விளக்குகளுக்கு மத்தியில் ஒளி (முண்டக உபநிஷத் 2.2.9).

    ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மொத்தம் 43 பெயர்கள் ‘மஹா’ என்ற வார்த்தையில் தொடங்குவதாக சுட்டிக்காட்டுகிறார். இவற்றில், கடைசி ஆறு நாமங்கள் பகவானின் அதிபதி, வலிமை, அறிவு, வீரியம், சக்தி, பிரகாசம் ஆகிய குணங்களைக் குறிப்பிடுகின்றன. இந்த ஆறு குணங்களின் கலவையே பகவானை மஹாமாயா அல்லது அவரது விளையாட்டு அல்லது லீலா போன்ற அற்புதமான செயல்களைச் செய்பவராக ஆக்குகிறது.

    இந்த உலகில் ஜொலிப்பவை அனைத்தும் அவருடைய பிரகாசத்தால்தான் –

    யஸ்தே திவி ஸூர்யே மஹிமா ஸம்பபுவ|
    தஸ்மை தே மஹிம்நே ப்ரஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா ||
    யஸ்தே நக்ஷத்ரேஷு சந்த்ரமஸி மஹிமா ஸம்பபுவ |
    தஸ்மை தே மஹிம்நே ப்ர்ஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா || (யஜூர் 23-2, 23-4)

    இறைவனை வழிபடுவோருக்கு இயற்கையாகவே இந்த த்யுதியின் ஒரு பகுதி இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிறது என்பதை தர்மச் சக்கரம் விளக்குகிறது (முகம் என்பது மனதின் குறியீடு – அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் வாசகம்).

    ————-

    227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –

    227-விஸ்வாத்மா –
    எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து

    தைஶ் ச தத் கார்ய ஜ்ஞாந க்ரியா ஸாமர்த்₂ய அநந்த்யம் லக்ஷ்யதே இத் யபி₄யுக்தா꞉ ;
    ஔசித்யாத்₃ பஹு ஸாஸ்த்ர ஸங்க₃தேஶ்ச ॥
    ஆப்₄யாம் ஜ்ஞாந ஸஹ நாப்₄யாம் விஶ்வ வ்யாபநாத்
    * விஶ்வாத்மா; யதா₂

    ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா –புருஷ ஸூக்தம் —அனைத்து திசைகளிலும் பூமியை வியாபித்து

    யேந ஏஷ பூத திஷ்டதி அந்தராத்மா –தைத்ரியம் –
    யார் எங்கும் வியாபித்து உள்ளானோ அவனே அனைத்தின் அந்தர்யாமியாகவும் உள்ளான்

    யேந ஸர்வம் இதம் ப்ரோதம் –தைத்ரியம்
    ப்ரக்ருதி காலம் சம்சார ஜீவன் முக்த ஜீவன் மற்றும் நித்ய ஸூரிகள் பலருக்கும் இவனே அந்தராத்மா
    அனைத்தும் இவனால் பரவப்பட்டு உள்ளன-ஆகியும் ஆக்கியும் -அவையுள் தனி முதல் அம்மான்

    அஹமாத்மா குடாகேச ஸர்வ பூதா –கீதை -10-20-
    சோம்பலை வென்ற அர்ஜுனா -அனைத்து உயிரிகளின் இருதயத்தில் நானே உள்ளேன்

    உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

    ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

    உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

    உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

    ————

    ஓம் விஶ்வாத்மனே நம:

    விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

    விஶ்வாத்மாபகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ————

    விஷ்வாத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா
    அவர் விஷ்வாத்மா, ஏனென்றால் அவர் தனது அறிவினாலும் பலத்தினாலும் முழு பிரபஞ்சத்தையும் வியாபித்துள்ளார்.

    ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘விஸ்வஸ்ய ஆத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா‘ என்று விளக்குகிறார். உயிரற்ற பொருட்களை உயிருள்ள உயிரினங்களாக மாற்றும் முக்கிய சாரம் அவர். அவர் சர்வ வியாபி, எங்கும் இருப்பவர் மற்றும் சர்வ அந்தர்யமி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறார். அதனால்தான் சஹஸ்ரநாமத்தில் முதல் பெயர் விஸ்வம். அவர் பிரபஞ்சத்தை மைக்ரோகாஸ்மிக் மற்றும் மேக்ரோகோஸ்மிக் மட்டத்தில் அடையாளப்படுத்துகிறார்.

    “அஹம் ஆத்மா குடாகேஷ ஸர்வபூதாஷாயஸ்திதா –10-20- அர்ஜுனா! நான் அனைத்து உயிர்களின் இதயத்திலும் வசிக்கும் ஆன்மா”.

    நமது வெளித்தோற்றத்தில் உள்ள வேறுபாட்டையோ, எண்ணங்களில் உள்ள வேறுபாட்டையோ பார்க்காமல், எல்லா உயிரினங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை உணர்வதில்தான் இந்த நாமத்தின் உண்மையான முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்று தர்ம சக்கரத்தில் எழுதியவர் குறிப்பிடுகிறார். தோற்றம் அல்லது நம் எண்ணங்களில், காமம், க்ரோதா, லோபம், மோகம், மாதா மற்றும் மாத்சார்யம் மட்டுமே நம்மில் வளர்ந்து வளர்கின்றன. நம் உள்ளத்தின் பின்னால் உள்ள ஒற்றுமையைக் காணக் கற்றுக் கொள்ளும்போதுதான், அவருடைய தயாவைப் பெறத் தகுதி பெறுவோம்.

    இதைத்தான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்கு உபதேசித்தார். ஒருவன் தன் மனைவியை நேசிக்கும் போது அவளுடைய தோற்றத்தை அல்ல, அவளில் உள்ள ஆத்மாவையே நேசிக்க வேண்டும். அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்.

    —————————

    454-சர்வஜ்ஞ -குறைவற்ற தன் மேன்மையை முற்றும் அறிந்தவர் –
    455-ஜ்ஞானமுத்தமம் -பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அனைவரும் அறியக் காரணம் ஆனவர்

    • 454-ஸர்வஞ்ஞ-
      எல்லாமாகத் தன்னை அறிந்தவன்-ஞானம் உத்தமம் மேல் ஞானமாயும் –இங்கு ஞாதாவாகவும் -இருப்பவன் –ததா₂ ஸர்வாத்மநா(ஆ)த்மாநம் ஜாநாதீதி
      ஸர்வஜ்ஞ
      யுஞ்ஞானாம் ச ஸ்வமாத்மானம் பரஸ்மின் அவ்யயே பதே –
      அனைத்திற்கும் தான் ஆத்மாவாக அறிந்தும்
      தனது ஆத்மாவை அழியாத பரம பதத்துடன் இணைத்தும் உள்ளவன்இவர் சம்பந்தத்தால் தான் ஸ்ரீ வைகுண்டம் ஞானத்துக்கு தடுப்பே இல்லாமல் இருக்கும் கலங்காப் பெரு நகரம்கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -2-2-10-
      நிறைந்த ஞான மூர்த்தி
      மீண்டும் 821 வரும்தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –————
      1. ஓம்ஸர்வஜ்ஞாயநம:
      ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை————
    • சர்வஜ்ஞா – எல்லாம் அறிந்தவர்
    • ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘ஸர்வஶ்ச அஸௌ ஜ்ஞாஷ்ச இதி ஸர்வஜ்ஞாஹ் – அவரே எல்லாமும், அனைத்தையும் அறிந்தவர், எனவே அவர் சர்வஜ்ஞா’ என்று அழைக்கப்படுகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (2.4.6) ‘இடம் ஸர்வம் யதயம் ஆத்மா – இங்குள்ள அனைத்தும் பரமாத்மா’ என்கிறது.ஸ்ரீ பராசர பட்டர் எல்லாவற்றிலும் அந்தர்யாமி என்றும், அதனால் அவர் சர்வஜ்ஞா என்றும் அவர் அறிவார் என்று விளக்குகிறார். அவர் சிறந்த தர்மம், சிறந்த வழிமுறை மற்றும் சிறந்த குறிக்கோள் என்பதை அவர் அறிவார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் பெரிய திருமொழியை (4.9.6) ஆதரித்து மேற்கோள் காட்டுகிறார் – ‘உலகத்து எல்லாம் அறிவீர் – உலகில் நடக்கும் அனைத்தையும் அவர் அறிவார்’.ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ருதி பற்றி பல குறிப்புகளை கொடுத்துள்ளார் –
      • யாஹ் சர்வஜ்ஞா ஸர்வவித் – அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் அறிந்தவர் ( முண்டக உபநிஷத் 1.9);
      • ச சர்வஜ்ஞா ஸர்வோ பவதி – அவர் சர்வஞானம் மற்றும் அவர் அந்தர்யாமி ( பிரஷ்ண உபநிஷத் 10);
      • ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ ஸர்வஜ்ஞঃ ஏஷோ அந்தர்யமேஷ்ய யோநிঃ ஸர்வஸ்ய ப்ரபவ்யாப்யாயௌஹி பூதாநாம் – இதுவே அனைத்திற்கும் இறைவன். இவரே அனைத்தையும் அறிந்தவர். இது உள் கட்டுப்படுத்தி. இதுவே அனைத்திற்கும் ஆதாரம். இதுவே உயிரினங்களின் ஆரம்பமும் முடிவும். ( மாண்டுக்ய உபநிஷத் 6);
      • ——
      • 455-ஜ்ஞாநமுத்தமம்-
        மேலான ஞானமாய் இருப்பவன் –ஜ்ஞாயதே (அ)ஸ்மின் ஸர்வ꞉ பரோ வைஷ்ணவோ த₄ர்ம இதி
        ஜ்ஞாநமுத்தமம்படந்தம் அநிசம் சாஸ்திரம் பாஞ்சராத்ர புரஸ்சரம் –
        பாஞ்சராத்ரம் உள்ளிட்ட அனைத்து ஸாஸ்த்ரங்களையும் படிப்பவன்திரு மந்த்ரத்தை உபதேசித்து –
        இவனே பகவச் சாஸ்திரம் ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை வெளியிட்டான்
        மிக்க ஞான மூர்த்தியாய் வேத விளக்கு -4-7-10-இங்கு ஞானம் -அடுத்து ஸூவ்ரதஸ்-அனுஷ்டானம்-ஸ்ரோத்ரியனாயும் ப்ரஹ்ம நிஷ்டனாயும் இருக்க வேண்டுமேஎல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –————–
        1. ஓம்ஞானமுத்தமாயநம:
        ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்தஅஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாதஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியதுஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததானப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.
      • ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.இதிஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.—————
        1. ஞானம்-உத்தமம் – அவருக்கு மிகப்பெரிய அறிவு உள்ளது
      • இதை ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ஞானமுத்தமம் இதி ஏதத் சவிஷேஷணம் ஏகம் நாமம்; ஞானம் ப்ரகிருஷ்டம் ஆஜன்யம் அநவச்சின்னம் சர்வஸ்ய ஸாதகதம் இதி ஞானமுத்தமம் – அவனது ஞானமானது ஆரம்பம் இல்லாத, எல்லையற்ற, அனைத்தையும் அடையும் திறன் கொண்ட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது, எனவே அவர் ஞானம்-உத்தமம் என்று அழைக்கப்படுகிறார்.வைஷ்ணவ தர்மம் – சர்வ பரோ வைஷ்ணவோ தர்மா ஜ்ஞாயதே அஸ்மின் இதி ஞானம் – உத்தமம் – அனைத்து தர்மங்களிலும் மேலான தர்மத்தை வெளிப்படுத்தியவர் பகவான் என்று ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார். அவர் உத்தம ஞானம் – பத்தாந்தம் அனிஷம் சாஸ்திரம் பஞ்சராத்ர புரஸ்-சாரம் என்று பகவானால் பஞ்சராத்ரத்தை வெளிப்படுத்தியதையும் அவர் குறிப்பிடுகிறார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் திருவாய் மொழி (4.7.10) – மிக்க ஞான மூர்த்தியாகிய வேத விளக்கு – தூய அறிவின் சிறந்த சின்னம், வேதங்களின் ஒளி.ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் அதர்வ வேதத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து குறிப்பிடுகிறார் – “சூத்ரம் சூத்ரஸ்ய யோ வேதம், ச வேத ப்ராஹ்மணம் மஹத்” – எவன் பரம ஞானத்தைப் பற்றி அறிந்திருக்கிறானோ, அவன் அறிந்து கொள்ள வேண்டிய மிகப் பெரியதை அறிவான்.தைத்ரிய உபநிடதம் (2.1) கூறுகிறது ‘சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ஹ – பிரம்மன் என்பது சத்தியம், பிரம்மமே ஞானம், பிரம்மனே நித்தியம்’.பகவான் ஞானம்-உத்தமம், ஏனெனில் அவர் எல்லாம் அறிந்தவர் மற்றும் அனைத்து காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறார்.

    தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
    நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
    ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
    த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-

    ஹே ரங்கேச

    தோஷ –குற்றம் என்ன

    உபதா –உபாதி என்ன

    அவதி -எல்லை என்ன

    சம –சத்ருச வஸ்து என்ன

    அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

    சங்க்யா–எண்ணிக்கை என்ன

    நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

    மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

    துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
    சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

    த்வாம் -தேவரீரை

    பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

    கணக் கறு நலத்தனன் –
    உயர்வற உயர் நலம் உடையவன் –
    திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
    முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

    ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

    பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

    ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

    வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

    சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

    தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
    பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
    அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

    இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

    குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

    ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
    ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

    ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
    பிரமாணங்களைக் காட்டி அருளி

    ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
    காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

    ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

    இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
    நார சப்தார்த்தங்கள் ஆகையால்
    நிர் துஷ்டங்களாய் –
    நிருபாதிகங்களாய் –
    நிரவதிகங்களாய் –
    நிஸ் சமாப்யதிகங்களாய்-
    நிஸ் சங்க்யங்களாய்-
    மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
    பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
    ஞானாதி ஷட் குணங்களும்
    ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

    ——————–

    ஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

    யுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே
    நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
    கர தலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்
    தத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-

    ஹே ரங்காதி ராஜ

    த்வம் -தேவரீர்

    அக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்

    ஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்

    அஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்

    நியமம் –ஒரு வியவஸ்தையோ

    அநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே

    ப்ராப்ய-அடைந்து

    அநிசம்–எப்போதும்

    அசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்

    யுகபத் -ஏக காலத்தில்

    கரதலவத்–உள்ளங்கையைப் பார்ப்பது போலே

    பஸ்யசி–சாஷாத் கரிக்கிறீர்

    ஸ்வ பிரகாசம்–ஸ்வமேவ பிரகாசிப்பதும்

    அவரணம் –ஆவரணம் அற்றதும்

    அமோகம்–யதார்த்தமுமான

    தத் -அந்த சாஷாத் காரத்தை

    ஞானம் ஆம்நாசிஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –

    அனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று
    எளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-

    ஞானம் -என்பதை விளக்குகிறார் –

    சஷுராதி த்வாரத்தால் ஆதல் –
    தர்ம பூத ஞானத்தால் யாதல் –
    இந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும்
    அந்ய இந்திரிய விஷயங்களையும்
    இப்படி சர்வத்தையும்-
    க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக
    ஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை
    ஸ்வ ப்ரகாசமாயும் –
    ஆவரண ரஹிதமாயும் –
    யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –

    ——————

    நயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது
    கரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-

    ஹே ரெங்க பதே

    நயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்

    த்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்

    அத-பின்னையும்

    கரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்

    காம காரிண–இஷ்டப்படி செய்கின்ற

    தே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு

    கடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –

    கண்களால் கேட்க முடியும்
    காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –

    தேவரீர் திருச் செவியால் பார்க்கிறது –
    திருக் கண்களால் கேட்க்கிறது-
    இப்படி கரணங்களால் யதேஷ்டமான
    தேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்
    போனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –

    ———————-

    சார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்
    சாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
    அப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்
    யத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-

    ஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்

    ஜகத்–இந்த உலகத்தை

    அஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்

    சார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –

    யத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்

    அப்ரேர்ய அந்யை–பிறரால் ஏவப்படாதவராய்

    ஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ அதீனரான தேவரீர்

    சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட

    விஸ்வம் இச்சா லேசத-சகலத்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே

    அகணயந்-அவலீலையாய் நினைத்தவராய்

    யுகபத் –ஏக காலத்திலேயே

    அப்ரதிஹதி -தடையின்றி

    ஆவிச் சகர்த்த-படைத்தீரோ

    சா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது

    காரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை

    சாங்க்ய யுக்தாத்–சாங்க்யரால் சொல்லப்பட்ட

    சாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்

    பரயதி–வேறு படுத்து கின்றது –

    சாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் –

    நீயோ சர்வஞ்ஞன்
    ஸத்ய ஸங்கல்பன் –
    சர்வ காரணன் –

    இப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-

    சாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்

    நிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்

    இவர்கள் பக்ஷம் நிரசித்து
    பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்
    புண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே
    விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்
    தேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய்
    சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்

    அபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்

    ——————–

    கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
    சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
    இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
    ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

    ஹே ரங்க ராஜ

    அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

    தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

    ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

    சதா -எப்போதும்

    யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

    சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

    இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

    கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

    ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

    உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

    ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

    சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

    ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

    ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
    தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
    தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

    சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

    சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

    ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

    சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

    சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

    சிலந்தி த்ருஷ்டாந்தம்

    ———————

    ஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருச க்ரிய அபி
    அகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்
    வபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்
    தவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-

    ஹே ஈச

    ஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்

    ப்ருச க்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்

    அகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே

    அசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்

    வபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்

    இதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –

    தவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்

    இதம் -இக் குணமானது

    பர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது

    வாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி

    ஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே
    சர்வ ஜகத்தையும் தேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது
    அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு
    காரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –

    —————–

    ம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்
    நிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி
    பிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே
    ச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-

    ஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே

    த்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே

    ஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே

    நிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே

    சகல அர்த்தாந்–சகல பதார்த்தங்களையும்

    விக்ருனோஷி–விகாரப் படுத்துகின்றீர்

    இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ

    தத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று

    வதந்தே–வைதிகர்கள் சொல்லுகின்றனர்

    ச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை
    வியாவர்த்திக்க உரியது
    விநிவாரயம் -வியவ

    வீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு
    சன்னிஹிதருடைய மனஸ்ஸூக்களை விகரிக்குமா போலே

    தேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்

    அத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்

    —————-

    ஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா
    ரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்

    ஹே ரங்க தந

    ஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்

    ஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு

    இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத
    காரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்

    ஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று விளங்குகின்றது

    இக் குணமானது

    ப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்

    பிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –

    சிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –

    தேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான
    சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்
    ஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு
    இந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்

    ————–———————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி–ஒன்றான ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்வாமிகளுடைய திருப் பேரானார் அருளிச் செய்த ஸ்லோகம்-

    October 11, 2024

    ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
    ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

    ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
    வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே

    வாழி திருநாமம்
    திருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே
    தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
    தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
    மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்
    மலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே
    ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
    அருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

    பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
    பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
    ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
    எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
    பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே
    பகர்வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
    ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
    அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

    ——

    1-ஸ்ரீ வாதூல வரத நாராயண குரு ஸ்வாமிகள் -ஒண்ணான அண்ணன் ஸ்வாமி –
    புரட்டாசி -கன்னி-உத்திரட்டாதி திரு அவதாரம் -1371-
    ஸ்ரீ பரம பதம் -சித்திரை த்ருதீயை திதி

    2–ஸ்ரீ கோயில் கந்தாடை ஆயன் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -மார்கழி உத்தரட்டாதி

    3-ஸ்ரீ ஸ்வாமி கோயில் அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் -புரட்டாசி உத்தரட்டாதி

    4–(11th Swami as per Chart )ஸ்ரீ குமார கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் –ஆவணி மிருக சீர்ஷம் –
    ஸ்ரீ பரம பதம் –பிலவங்க வருஷம் -1547-மார்கழி கிருஷ்ண சதுர்த்தசி திதி-

    5-(12th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -பங்குனி ஆயில்யம்
    ஸ்ரீ பரம பதம் -விச்வாவஸு -1605-மார்கழி சுக்ல பக்ஷ சப்தமி திதி-

    6th (13th Swami as per Chart) ஸ்ரீ ஸ்வாமி குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஆடி சித்திரை
    ஸ்ரீ பரம பதம் -சுக்ல வருஷம் -1629-மார்கழி -சுக்ல பக்ஷ தசமி திதி

    7–(14th Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி வேதலப்பை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி திருவோணம்
    ஸ்ரீ பரம பதம் -விளம்பி -1658-கார்த்திகை சுக்ல சதுர்தசி திதி

    8-(15a Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி குமார அண்ணன் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மாசி புனர்பூசம்

    9-(15b Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி ரோஹிணி
    ஸ்ரீ பரம பதம் -பிங்கள -1677-ஆடி பவ்ர்ணமி திதி

    10–(16a Swami as per Chart ) ஸ்ரீ கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆனி -சதயம் –
    ஸ்ரீ பரமபதம் -ஸர்வஜித் –1707-வைகாசி -கிருஷ்ண பஞ்சமி திதி

    11th- (17a Swami as per Chart)ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி உத்திராடம்

    12th (17b Swami as per Chart) ஸ்ரீ குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வித்வத் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி அனுஷம்
    ஸ்ரீ பரமபதம் -சுக்ல வருஷம் –1749-ஆவணி சுக்ல திரயோதசி திதி –

    13–(18th Swami as per Chart) ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -வைகாசி பூரம்
    ஸ்ரீ பரமபதம் -விரோதி -1769-மார்கழி -கிருஷ்ண பஞ்சமி

    14–(19th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய அண்ணன் ஸ்வாமிகள் -சித்திரை -ரோஹிணி
    ஸ்ரீ பரமபதம் -யுவ -1815-மார்கழி -சுக்ல -துவாதசி -திதி

    15–(20th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மார்கழி பூராடம்
    ஸ்ரீ பரமபதம் -ஈஸ்வர -1817-மார்கழி கிருஷ்ண த்ருதீயை திதி

    16-(21st Swami as per Chart)ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி மூலம்

    17 (22nd Swami as per Chart) ஸ்ரீ குமார அண்ணன் ஸ்வாமிகள் –ஸ்ரீ வரதாச்சார்ய ஸ்வாமிகள் -ஆங்கீரஸ வருஷம் பங்குனி ரேவதி
    ஸ்ரீ பரமபதம் -சாதாரண வருஷம் -1850-ஆவணி சுக்ல தசமி திதி

    18-(23rd Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஸோப கிருது வருஷம் -வைகாசி கேட்டை –
    ஸ்ரீ பரமபதம் -கர -1891–3rd nov -ஐப்பசி சுக்ல த்விதீயை திதி

    19-(24th Swami as per Chart)-ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -பவ வருஷம் -ஆவணி பூசம் [20-Jun-1874]
    ஸ்ரீ பரமபதம் -பரிதாபி -ஆனி -சுக்ல அஷ்டமி -[22-Jun-1912]

    20 (25th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -சாதாரண வருஷம் -ஆனி சித்திரை -[17-Jun-1910]
    ஸ்ரீ பரமபதம் -[04-Dec-1992]-ஆங்கீரச கார்த்திகை சுக்ல தசமி –

    21 (26th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -தாது வருஷம் மாசி திருவாதிரை -[20-Feb-1937]

    22-(27th Swami as per Chart.)வர்த்தமான ஸ்வாமிகள் -ஸ்ரீ அண்ணன் திருவேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் -விரோதி வருஷம்-ஐப்பசி -உத்ராடம் [28-Oct-1949]

    —————

    ஸ்ரீ பராங்குஸ நுதிம் ய ஆதநோத் தத் பாதாப்ஜ பிரபத்தி சோதித
    தம் வாதூல குல பூஷணம் தயா வாரிதம் வரத தேசிகம் பஜே

    ஸ்ரீ மந் பராங்குச நிரங்குச தத்த்வ போத வாத்ஸல்ய பூர்ண கருணா பரிணாஹ ரூப
    ஸுசீல்ய சாகரம் அநந்த குணாகரம் த்வாம் ஸம்ஸார தாப ஹரணம் வ்ருணே அஹம் –1-

    காஸார ஸம்யமி முகா கமலா ஸஹாய பக்தா ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த
    யஸ்யா பவந் அவயவா இவ பாரதந்தர்யாத் தஸ்மை நமோ வகுள பூஷண தேஸிகாய–2-

    பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன்

    ஸ்ரீ ரங்கராஜ பத பங்கஜ ஸங்க ஸீலம் ஸ்ரேய பரம் மதுர பூர்வ கவேர பூர்வம்
    நாதார்ய யாமுன யதீஸ்வர பாகதேயம் நாதம் குலஸ்ய மம நவ்மி பராங்குசார்யம் –3-

    பாப க்ரியா ஸூ நிரதாஸ் ஸ்ருணு தாஸ் மதுக்தம் தாப த்ரயேண பவிந பரிதப்யமாநா
    ஆபத் தநம் மதுரிபோர் பவ தாம வித்யா ஸ்வாப ப்ரஹாண நிபுணஸ் ஸரணம் ஸடாரி –4-

    நித்யோத முக்த உததத் குணகோ முமுஷு வ்யாஸாதி வத் பகவதா கிமநு ப்ரவிஷ்ட
    அத்ர்யாதி ஸூநுரிஹ வர்ண யுக க்ரமாத் கிம் ஆஸீத் புராண புருஷ ஸச வைரி யோகீ –5-

    கர்மேதி கேஸித பரே மதிரித்ய தாந்யே பக்திம் பரே ப்ரபதநம் ப்ரவத ந்த்யுபாவம்
    ஆம் நாய ஸார சதுராஸ் த்வமித அநு பாவம் த்வாமேவ யாந்தி ஸரணம் ஸடஜித் முநீந்த்ர –6-

    பக்தாத் யுபாய ரஹித பதிதோபவாப் தவ் த்வத் பாத ஸேவ நரஸே அபி சதுர் பலோ அஹம்
    இத்தம் ஸதீஹ ஸட கோப தயைக மூர்த்தே க்ருத்யம் கிமஸ்தி மம ஸம்ஸ்ருதி மோசநாய –7-

    த்வத் திவ்ய ஸூக்தி பரி ஸீலந மாத்ர மேவ நிஸ்ரேய ஸாதி கமநே நிரபேஷ ஹேது
    தச் சாஸ்தி மே ந ஸட வைரி குரோர் மஹாத்மந் உஜ்ஜீவநம் கதமஹோ மம ஜாக டீதி –8-

    த்வந் நாம கீர்த்தந மக்ருத்ரிம மாதநோதி யஸ் தஸ்ய ஸம் ஸரண நிஸ் தரணம் கடேத
    துர் வாஸநா கலுஷி தஸ்ய நமே அஸ்தி புத்தி தத்ராபி கேஸர விபூஷ கிமாத்ம நீநம் –9-

    த்வத் கிங்கரத் வரஸிகாஸ்தவ தாஸ தாஸ தாஸ்ய ஏக ரஸ்ய முதி தாஸ் ச பஜந்தி முக்திம்
    தத்ராப்யஹம் ஸகநவாந் ந ஸடாரி யோகிந் அத்யாஹிதம் கதமபைது பவோத்தி தம் மே -10-

    த்வத் விக்ரஹே க்ஷண மதோ தவ ஸம் ஸ்ம்ருதிஸ் ச
    முக்த்யை பவேதி திவ தந்தி பரங்குஸார்ய
    நித்ரா ப்ரமாத மலி நீக்ருத மாந ஸஸ்ய
    தத்ராபி ஸக்திரிஹ மே ந கதம்ப வேயம்–11

    ஏவம் கதா சிதபி குத்ரசித ஸ்த்யுபாய
    நைவாக நாசந விதவ் மமதாவ கஸ்ய
    ஆகஸ்மிகீம் தவ க்ருபாமப ஹாய மாயா
    கோலா ஹல ப்ரஸம நீம் குருகா புரீஸ –12-

    அவ்யாஜ பந்தும் அவிஸேக்ஷம் அஸேஷ ஐந்தோ
    உத்வேல வத்ஸல தயா க்ருபயா ச பூர்ணம்
    த்வாமாம நந்தி ஸட வைரி முநே ததஸ் தே
    ஹாதும் ந யுக்தம பராதி நமப்யஹோ மாம் –13-

    யாவச் ச யச்ச துரிதம் ஸகலஸ்ய ஐந்தோ
    தாவச் ச தத்தத திகம் ச மமாஸ்தி ஸத்யம்
    ஏதத் வச கதமபூத் ஸததாந் ருதோக்தி
    ஸீ லஸ்ய மே ஸட ரிபோ ததிதம் விசித்ரம் -14

    ஸாஸ்த்ரேண யத் விஹித மா சரணீய மேதத்
    ஸர்வைர் நிஷித்த மிஹ யத் ததுபேக்ஷணீயம்
    இத்யாதி கம் ஸடரிபோ ஸதஸி ப்ரவீமி
    ஹை ஸந்தநோமி ரஹஸி ஸ்வ வஸோ விருத்தம் –15-

    ப்ரச்சந்ந பாதக ஸதா வ்ருத சேதஸோ மே
    ஸம் ப்ரீணிதா ப்ரணதி பூமி கயாசித்
    ஸத்கார மாதரப ரேண பரா வரஜ்ஞா
    குர்வந்தி ஹந்த ஸட வைரி முநே ஹ தோஸ்மி –16-

    பத்ப்யாம் ஸபே தவ ஸடாரி முநீந்த்ர யோ அபூத்
    உத்தாம தோஷ கண நாந்திம கோடி நிஷ்ட
    ஸோ அபி ப்ரக்ருஷ்ட விபவோ யத பேஷயா ஸ்யாத்
    தஸ்மாச் ச பாப பரிதோ அஹமிதோ ந பாப –17-

    பூர்வை ஸ்வ நைச்யம் அநு ஸம்ஹித மார்ய வர்யை
    மாமேவ வீஷ்ய மஹதாம் ந ததஸ்தி தேஷாம்
    நைச்யம் த்விதம் ஸடரிபோ மம ஸத்யமேவ
    மத்தஸ் பரோ ந மலிநோ யத ஆவிரஸ்து –18-

    உக்த்வா ஸ்வ தோஷ விஷயம் வசனம் த்வத க்ரே
    ஸம்ஸாரா பீருரிவ தேந வஞ்சகோ அஹம்
    ஸாமர்த்ய மேவ ஸட கோப விபாவ யாமி
    ஸம் வீஷ்ய கம் குண மிஹாஸி மயி ப்ரசந்ந –19-

    கிந்து க்ரியா ஸமபி ஹார க்ருதாபராத
    ஹந்தாநு தப்ய புநரப்ய பராத காரீ
    பத்மாஸ கஸ்ய பரிஹாஸ ரஸோசி தோ அஹம்
    ஏதத் விலோக்ய ஸட கோப மயி ப்ரஸீத –20-

    காம ப்ரமோஹ மத மத்ஸர மந்யுலோபை
    பராம்பரீத உதிதை பரி பீட்யமாநம்
    தைவாத் த்வதீ க்ஷண பதம் தயயா ஸடாரே
    பாஹி ப்ரபந்ந மிமமுந்ந மதாக ஸம் மாம் –21-

    கார்யா க்ருபா ஸூமதிபிர் கலு துக்கி தேஷு
    துக்கீ மயா ந ஸத்ரு ஸோப்ருஸ துக்க பாஜாம்
    தஸ்மாத் தவாகி லஜநேஷு சயா அநு கம்பா
    மய்யே வதாம் ஸட ரிபோ நிப்ருதம் நிதே ஹி –22-

    விஸ்வோ பகாரக மகார்ணவ தாரகம் த்வாம்
    அப்ராப்ய ஹை ஸடரிபோ ஹத ஏவ பூர்வம்
    அத்யத்வதீய க்ருபயா ப்ரதி லப்த ஸத்த்வ
    த்வத் ஸேவ நாம் ருதர ஸேந ஸூகீ பவாநி –23

    அத்ராப்ய முத்ர கரண த்ரிதய ப்ரவ்ருத்த்யா
    த்வத் பாத பங்கஜ ஜூஷாம் விதுஷாம் ப்ரஸாதம்
    நித்யம் லபே மஹி ந சாந்யத பேஷிதம் ந
    ப்ரத்யக்ர கேஸர பரிஷ்கிருத காரி ஸூநோ –24-

    வாதூல வேங்கட பதிம் வரதார்ய ஸூநும்
    அஸ்மத் குரும் தவ பத ப்ரவணம் ஸமீஷ்ய
    அஞ்ஞம் க்ருதாகஸம் அநாதம் அகிஞ்சநம் மாம்
    த்வத் கிங்கரம் ஸட ரிபோ ஸததம் குருஷ்வ –25

    ————————————————————————————————————-

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ (ப்ரதம -த்விதீய-த்ருதீய-சதுர்த்த-பஞ்சம-ஷஷ்டம) ஜிதந்தே ஸ்தோத்ரம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

    September 25, 2024

    ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
    நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !-1-

    தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
    சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

    ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
    அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

    ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
    த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4-

    ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
    ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

    நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
    நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

    கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
    யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

    அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
    பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

    காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
    சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9-

    த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
    நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

    விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
    ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

    துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
    யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12-

    ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
    காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13-

    இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
    கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14-

    ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

    கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ || 15-

    யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

    மத் பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16–

    அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

    த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி || 17–

    க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

    யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18–

    ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

    ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19-

    உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

    அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.-

    ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

    ——-

    த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

    ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

    பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1-

    நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

    நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2-

    ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

    ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3-

    கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

    அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4-

    க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

    அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5-

    க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

    விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6-

    பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

    வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7-

    யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

    தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8–

    மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

    த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9-

    பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

    அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10-

    ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

    பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11-

    கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

    த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12-

    மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

    த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13-

    ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

    த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14-

    பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

    ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

    அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

    க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15-

    தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

    த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16-

    காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

    நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17-

    லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

    அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18-

    நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

    ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19-

    வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

    அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

    ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20-

    க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

    மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21-

    உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

    விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22-

    ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

    விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

    கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23-

    ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

    ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24-

    ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

    கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25-

    கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

    சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26-

    கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

    சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28-

    ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

    நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29-

    நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

    ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30-

    சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

    நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31-

    நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

    பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32-

    பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

    அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

    வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33-

    வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

    விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34-

    மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

    இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35-

    ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

    புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36-

    ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

    போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

    தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37-

    இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

    யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

    நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

    ————-

    த்ருதீய ஜிதந்தே ஸ்தோத்ரம்-

    ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
    நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !-1-

    விஞ்ஞாபநம் இதம் தேவ ஸ்ருணு த்வம் புருஷோத்தம
    நர நாராயணாப்யாம் ஸ ஸ்வத த்வீபந வாஸிபி –2-

    நாரதாத்யைர் முநி கணைர் ஸநகாத்யைஸ் ச யோகிபி
    ப்ரஹ்மே ஸாத்யைஸ் ஸூர கணைர் பஞ்ச கால பராயணை –3-

    பூஜ்யஸே புண்டரீகாக்ஷ திவ்ய மந்த்ரைர் மஹர்ஷிபிர்
    பாக்ஷண்ட தர்ம ஸங்கீர்ணே பகவத் பக்தி வர்ஜிதே -4-

    கலவ் ஜாதோஸ்மி தேவேஸ ஸர்வ தர்ம பஹிஷ் க்ருதே
    கதம் த்வாமஸமாசார பாபப்ரஸவ பூரஹம் –5-

    அர்சயாமி தயா ஸிந்தோ பாஹி மாம் சரணா கதம்
    தாபத்ரய தவாக்நவ் மாம் தஹ்ய மாநம் ஸதா விபோ –6-

    த்ராஹிமாம் புண்டரீகாக்ஷ கேவலம் க்ருபயா தவ** .**
    ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி து**:க ஸந்தப்த தேஹிநாம் .**

    பாலயாசு த்ருசாதேவ தவ காருண்ய கர்ப்பயா** .**
    இந்த்ரியாணி மயா ஜேதுமசக்யம் புருஷோத்தம** .**

    சரீரம் மமதேவேச வ்யாதிபி**: பரிபீடிதம் .**
    மநோமே புண்டரீகாக்ஷ விஷயாநேவ தாவதி** .**

    வாணீ மம ஹ்ருஷீகேச மித்யா பாருஷ்ய தூஷிதா** .**
    ஏவம் ஸாதந ஹீநோஹம் கிம் கரிஷ்யாமி கேசவ** (?) .**

    ரக்ஷமாம் க்ருபயா க்ருஷ்ண பவாப்த பதிதம் ஸதா** .**
    அபராத சதம்சைவ ஸஹஸ்ரமயுதம் ததா** .**

    அர்புதம்சாப்யஸங்க்யேயம் கருணாப்தே க்ஷமஸ்வமே** .**
    யச்சாபராதம் க்ருதவாநஜ்ஞாநாத் புருஷோத்தம** .**

    மத்பக்த இதி தேவேச தத்ஸர்வம் க்ஷந்துமர்ஹஸி** .**
    அஜ்ஞாத்வாதப்யசக்தத்வாதாலஸ்யாத்துஷ்ட பாவநாத்** .**

    க்ருதாபராதம் க்ருபணம் க்ஷந்துமர்ஹஸி மாம் விபோ** .**
    அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தேஹர்நிசம் மயா** .**

    தாநி ஸர்வாணி மேதேவ க்ஷமஸ்வ மதஸூதந** .**
    யஜ்ஜந்மந**: ப்ரப்ருதிமோஹவசம்கதேந-**

    நாநாபராதசதமாசரிதம் மயாதே
    அந்தர்பஹிஸ்ச ஸகலம் தவ பஸ்யதோமே**-**

    க்ஷந்தும் த்வமர்ஹஸி ஹரே கருணா வசேந
    கர்மணாமநஸா வாசா யாசேஷ்டா மம நித்யச**: .**

    கேசவாராதநே ஸாஸ்யாத் ஜந்ம ஜந்மாந்தரேஷ்வபி** .**

    இதி த்ருதீயஜிதந்தா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

    ——

    சதுர்த்த** (நான்காவது ) ஜிதந்தா ஸ்தோத்ரம்


    ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந
     .**
    நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ** .**

    நமஸ்தே வாஸுதேவாய சாந்தாநந்த சிதாத்மநே** .**
    அத்யக்ஷாய ஸ்வதந்த்ராய நிரபேக்ஷாய சாஸ்வதே** .**

    அச்யுதாய விகாராய தேஜஸாம் நிதயே நம**: .**
    ப்ரதாநபுருஷேசாய நமஸ்தே புருஷோத்தம** .**

    க்லேசகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட பூர்ண ஷாட்குண்ய மூர்த்தயே*.**
    த்ரிபிர்ஜ்ஞாந பலைஸ்வர்ய வீர்ய சக்த்யாந்தராத்மநே** .**


    த்ரியுகாய நமஸ்தேஸ்து நமஸ்தே சதுராத்மநே** .**
    சது**: பஞ்ச நவவ்யூஹ தச த்வாதச மூர்த்தயே .**


    அநேக மூர்த்தயேதுப்யமமூர்த்தாயைக மூர்த்தயே** .**
    நாராயண நமஸ்தேஸ்து புண்டரீகாயதேக்ஷண** .**


    ஸுப்ரூலலாட ஸுநஸ ஸுஸ்மிதாதர பல்லவ** .**
    பீநவ்ருத்தாயத புஜ ஸ்ரீவத்ஸக்ருதலக்ஷண** .**


    தநுமத்ய விசாலாக்ஷ பத்மநாபநமோஸ்துதே** .**
    விலாஸ விக்ரமாக்ராந்த த்ரைலோக்ய சரணாம்புஜ** .**


    நமஸ்தே பீதவஸந ஸ்பரந்மகர குண்டல** .**
    ஸ்பரத்கிரீடகேயூர ஹாரகஸ்துப பூஷண** .**


    பஞ்சாயுத நமஸ்தேஸ்து நமஸ்தே பஞ்ச காலிக** .**
    பஞ்சகால பரைகாந்தி யோகக்ஷேம வஹப்ரபோ** .**


    நித்யஜ்ஞாந பலைஸ்வர்ய போகோபகரணாச்யுத** .**
    நமஸ்தேப்ரஹ்ம ருத்ராதி லோகயாத்ராபரிச்சத** .**


    ஜந்மப்ரப்ருதி தாஸோஸ்மி சிஷ்யோஸ்மி தநயோஸ்மிதே** .**
    த்வம்ச ஸ்வமி குருர்மாதா பிதாச மம மாதவ** .**

    அபித்வாம் பகவன் ப்ரஹ்மந் ஸர்வ சக்ரோமஹர்ஷய**: .**
    த்ரஷ்டும் யஷ்டுமபிஸ்தோதும் நஹிஸ்மர்துமநீஷதே** .**

    தாபத்ரய மஹாக்ராஹ பீஷணே பவஸாகரே** .**
    மஜ்ஜதாம் நாதநரேஷ ப்ரணதஸ்த்வத்பதார்பிதா** .**

    அநாதாய ஜகந்நாத சரண்ய சரணார்த்திநே** .**
    ப்ரஸீத ஸீததே மஹ்யம் நமஸ்தே பக்த வத்ஸல** .**

    மந்த்ர ஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் யதர்ச்சநம்** .**
    தத்க்ஷந்தவ்யம் ப்ரபந்நாநாமபராத ஸஹோஹ்யஸி** .**

    அஜ்ஞாநாத்யதி வா ஜ்ஞாநாதசுபம் யந்மயாக்ருதம்** .**
    க்ஷந்தவ்யம் ததஷேஷேண தாஸ்யேந ச க்ருஹாணமாம ்**.**

    ஸர்வேஷு தேச காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத** .**
    கிம்கரோஸ்மி ஹ்ருஷீகேச பூயோ பூயோஸ்மி கிங்கர** .**

    இதி சதுர்த்த ஜிதந்தா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

    ———-

    பஞ்சம** (ஐந்தாவதுஜிதந்தா ஸ்தோத்ரம்

    ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந .**
    நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ** .**

    நமஸ்தே வாஸுதேவாய சாந்தாநந்த சிதாத்மநே** .**
    அஜிதாய நமஸ்துப்யம் ஷாட்குண்ய நிதயே நம**: .**

    மஹாவிபூதி ஸம்ஸ்தாய நமஸ்தே புருஷோத்தம** .**
    ஸஹஸ்ர சிரஸேதுப்யம் ஸஹஸ்ர சரணாயதே** .**

    ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ர நயநாயதே** .**
    அச்யுதாய நமஸ்துப்யம் ஏகமூர்த்தாயதே நம**: .**

    அநேகமூர்த்தயே துப்யமக்ஷராயசதே நம**: .**
    வ்யாபிநே வேதவேத்யாய நமஸ்தே பரமாத்மநே** .**

    சிந்மாத்ர ரூபிணே துப்யம் நமஸ்த்ரையந்த மூர்த்தயே** .**
    அணிஷ்டாய ஸ்தவிஷ்டாய மஹிஷ்டாயச தே நம**: .**

    நேதிஷ்டாய யவிஷ்டாய கநிஷ்டாய ச தே நம**: .**
    பஞ்சாத்மநே நமஸ்துப்யம் ஸர்வாந்தர்யாமிநே நம**: .**

    கல்பநா க்ரோடரூபாய ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த ஹேதவே** .**
    நமஸ்தே குணரூபாய குணரூபாதி வர்த்திநே** .**

    வ்யஸ்தாயச ஸமஸ்தாய ஸமஸ்த வ்யஸ்த ரூபிணே** .**
    ஆதிமத்யாந்த சூந்யாய தத்வஸ்தாய நமோ நம**: .**

    ப்ரணவ ப்ரதிபாத்யாய நம**: ப்ரணவரூபிணே .**
    லோக யாத்ராப்ரஸித்த்யர்த்தம் ஸ்ருஷ்டி ப்ரஹ்மாதிரூபிணே*
    .**

    நமஸ்துப்யம் ந்ருஸிம்ஹாதி மூர்த்தி பேதாய விஷ்ணவே** .**
    விபாகை**:கர்மபி:க்லேசைரஸ்ப்ருஷ்ட வபுஷே நம: .**

    நமோப்ரஹ்மண்ய தேவாய தேஜஸாம் நிதயே நம**: .**
    நித்யஸாதாரணாநேக லோகரக்ஷா பரிச்சத** .**

    ஸச்சிதாந்ந்த ரூபாய வரேண்யாய நமோ நம**: .**
    யஜமாநாய யஜ்ஞாய யஷ்டவ்யாய நமோநம**: .**

    இஜ்யாபலாத்மநே துப்யம் நம இஜ்யாதி சீலிநே** .**
    நம**:பரம ஹம்ஸாய நமஸ்ஸத்வ குணாய ச .**

    ஸ்திதாய பரமவ்யோம்நி பூயோ பூயோ நமோ நம**: .**
    ஸம்ஸார விஷயாவர்த்த ஸங்குலே ச மஹாபயே** .**

    அபாரேத்துஸ்தரேகாதே பதிதம் கர்மபி**: ஸ்வகை: .**
    அநாதமகதிம் பீரும் தயயா பரயா ஹரே** .**

    மாமுத்தர தயாஸிந்தோ ஸிந்தோரஸ்மாத்ஸுதஸ்தராத்** .**
    மந்த்ரஹாநிம் க்ரியாஹாநிம் ஹாநிம்வாந்யாம் த்வதர்ச்சநே** .**

    க்ஷமஸ்வ மம தேவத்வம் அபராத ஸஹோஹ்யஸி** .**
    அபராத ஸஹஸ்ரபாஜநம் பதிதம் பீம பவார்ணவோதரே** .**

    அகதிம்சரணாகதிம் ஹரே**! க்ருபயாகேவலமாத்மஸாத்குரு .**
    ஜந்ம ப்ரப்ருதி தாஸோஸ்மி சிஷ்யோஸ்மி தநயோஸ்மிதே** .**

    த்வம்ச ஸ்வாமி குருர்மாதா பிதாச மம மாதவ** .**
    மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்தி ஹீநம் யதர்ச்சிதம்** .**

    தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ தீநமாமாத்மஸாத்குரு** .**
    நாஹம்ஹிதம் விஜாநாமி த்வாம்வ்ரஜாம்யேவ கேவலம்** .**

    புத்த்யைவம் நய கோவிந்த முக்த்யுபாயேந வர்த்மநா** .**
    த்வமேவ வேத்ஸி ச்ரேயோமே நேதமேததிதீதிச** .**
    புத்தியோகம்ச மேதேஹி யேநத்வாமுபயாம்யஹம்** .**

    இதி பஞ்சம ஜிதந்தாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

    ———-
    ஷஷ்டம** (ஆறாவதுஜிதந்தா ஸ்தோத்ரம்

    ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந .**
    நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ** .**

    ஸ்ரீமத்வாரவதீநாம வர்ததாம் விஜயீ பவான்** .**
    திவ்யம் த்வதீயமைஸ்வர்யம் நிர்மர்யாதம் விஜ்ரும்பிதம்

    தேவீபூஷாயுதைர்நித்யைர்முக்தைர்மோக்ஷைகலக்ஷணை**: .**
    ஸத்வோத்தரைஸ்த்வதீயைஸ்ச ஸங்கஸ்தாபிரஸஸ்தவ** .**

    ப்ராக்த்வார கோபுரவர ப்ராஸாத மணிமண்டபா**: .**
    சாலிமுத்க திலாதீநாம் சாலாசைல குலோஜ்வலா**: .**

    ரத்நகாஞ்சந கசேய க்ஷமக்ரமுக சாலிக**: .**
    சய்யாக்ருஹாணி பர்யங்கவர்யோ**:ஸ்தூலாஸநாநிச .**

    கநத்கங்கண ப்ருங்கார பதத்க்ரஹ களாசிகா**: .**
    சத்ரசாமர முக்யாங்க ஸந்து நித்யாபரிச்சத** .**

    அஸ்துநிஸ்துலமவ்யக்ரம் நித்யமப்யர்ச்சநம் தவ** .**
    பக்ஷேபக்ஷே விஜ்ரும்பந்தாம் மாஸி மாஸி மஹோத்ஸவா**: .**

    மணிகாஞ்சந சித்ராணி பூஷணாத்யம்பராணிச** .**
    காஷ்மீர ஸாரகஸ்தூரி கர்பூராத்யநுலேபநம்** .**

    கோமளாநிச தாமாநி கஸுமைஸ்ஸரபோத்கமை**: .**
    தூபா**:கர்ப்பூர தீபாஸ்ச ஸந்துநித்யா பரிச்சதா: .**

    ந்ருத்த கீதயுதம் வாத்யம் நித்யமத்ர விவர்ததாம்** .**
    ச்ரோத்ரேஷுநஸ்ஸுதாதாரா**: கல்பதாம் காஹளஸ்வநை: .**

    கந்தமூல பலாத்ரவ்ய காலேகாலே விவர்ததாம்** .**
    ஸூபாபூப க்ருத க்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி**: .**

    கநஸார சிரோதக்ரம் க்ரமுகாஷ்டதளாந்விதம்** .**
    விமலாநிச தாம்பூல தளாநி ஸ்வீகுரு ப்ரபோ** .**

    ப்ரீதி பீதியுதோபூயாந்நித்யம் பரிஜநஸ்தவ** .**
    பக்திமந்திப புஞ்ஜந்து பரஜாந பதைஸ்ஸஹ** .**

    தரணீதந ரத்நாநி விதரந்து சிரம்தவ** .**
    கைங்கர்யமகிலம் ஸர்வே குர்வந்து க்ஷோணிபாலகா**: .**

    ப்ரேமதிக்த த்ருசம் ஸ்மேரம் ப்ரேக்ஷமாணஸ்த்வதாநநம்** .**
    மஹாந்தஸ்ஸந்ததஸ் ஸந்தோ மங்களாநி ப்ரயுஞ்ஜதாம்** .**
    பாபமேவ பவந் நித்யம பாலயன் குசலீ பவான்** .**

    இதி ஷஷ்டம ஜிதந்தா ஸ்தோத்ரம்

    ———-

    (த்வயா விநா நமேகிஞ்சித் மாம்விநா தவகஸ்ததா.**
    தஸ்மான்மாமாத்மஸாத்கர்த்தும் ப்ரஸீத பரமேஸ்வர**.**

    பூம ஸ்கலித பாதாநாம் பூமிரேவாவலம்பநம்**.**
    த்வயி விப்ரதிபந்நாநாம் த்வமேவ சரணம் விபோ**.**

    ஜ்ஞாநதோஜ்ஞாநதோவாபி யதோக்த மக்ருதம் மயா**.**
    தத் ஸர்வம் பூர்ணமேவாஸ்து ஸுத்ருப்தோபவ ஸர்வதா**.**

    ஓமச்யுத ஜகந்நாத மந்த்ரமூர்த்தே ஸநாதந**.**
    ரக்ஷமாம் புண்டரீகாக்ஷ க்ஷமஸ்வாஜ ப்ரஸீத ஓம்**.)—

    இதி ஜிதந்தா ஸ்தோத்ராணி ஸம்பூர்ணம்

    ————

    ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
    யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

    ———–

    அவதாரிகை –
    ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
    தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
    ஓதிப் போருமா போலே -இதுவும் –
    ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
    இதிஹாச புராணங்களிலும்
    மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

    வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
    எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
    கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
    ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
    ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
    இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
    ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

    ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
    தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

    இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

    ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
    இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
    இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
    ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
    ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
    இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
    அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

    இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
    ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
    நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
    எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
    அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

    சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
    பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
    எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
    ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

    அவன் பக்கலிலே புக்கதாகையாலே
    இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
    பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
    இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

    இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
    ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
    ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –

    ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
    என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

    அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
    வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
    ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

    அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
    சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
    ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
    பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
    இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
    இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
    ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
    சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே
    -என்கிறார்-பட்டர்

    ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
    ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
    சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

    இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
    ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

    ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
    த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம்
    -என்றும்
    மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
    யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

    பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
    யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
    பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
    தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
    உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
    ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

    ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
    பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
    ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன
    -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
    த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
    ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
    இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
    இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
    அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
    வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
    ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
    அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
    இப்பிரபந்தம் –

    ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
    மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது –
    என்று பட்டர் நிர்வாஹம் –

    முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
    மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

    சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
    பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
    முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
    சாதித்தால் போலே இது –
    என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

    ———————————————

    ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

    முதல் ஸ்லோகத்தாலே –
    ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
    இவன் பிரார்த்திக்கும் படியாக
    ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

    ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
    நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

    ஜிதந்தே –
    யாதானும் பற்றி நீங்கும் விரதம்
    -திருவிருத்தம் -95- என்கிறபடியே
    விஷயாந்தரங்களை பற்றி
    எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
    ஈஸ்வரன் –தான் ஒட்டி வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
    விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
    ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
    அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
    யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
    இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
    தன் அழகைக் காட்டி ஜெயித்து
    இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
    தோற்றார் ஆர் -என்று கேட்டருள
    தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
    ஜெயஸ்தவ-என்கிறான் –
    த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
    பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
    பந்தம் அடியான சங்கல்பம் அவனது
    அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
    சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
    நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

    புண்டரீ காஷா ! –
    அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
    சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
    திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
    ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
    விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

    நமஸ்தே
    ஆரதை ஆர் வென்றார் -என்னில்
    ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
    என்னை ஜெயித்து
    நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
    அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

    நமஸ்தே
    நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
    எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
    அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
    பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

    நமஸ்தே
    விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
    என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
    எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
    இது வகைப் பொருள் –

    நமஸ்தே அஸ்து
    அப்படி எனக்காகை தவிர்ந்து
    உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
    மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
    ருசியைப் பிறப்பித்து
    தன் பேறாக உபகரியா நிற்க
    மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
    ருசியை விளைப்பித்து
    ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

    கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
    வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
    மடி பிடித்தால் போலே இங்கும்
    ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
    கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
    அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
    கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
    ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
    புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
    திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

    விஸ்வ பாவந ! –
    மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
    விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
    உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
    இல்லாததை உண்டாக்கினவனுக்கு
    உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
    முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

    ஹ்ருஷீ கேஸ ! –
    ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
    இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
    விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
    அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
    ஹ்ருஷீகாணீந்த்ரியாண் யாஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
    இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
    இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
    யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

    மஹா புருஷ !-
    சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
    புருஷ
    புரு பஹூ ஸநோதீதி -புருஷ
    -என்னும்படியே
    மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
    அன்றிக்கே
    உன்னையும் உன் உடைமையையும் –பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
    அர்த்தியாய்க் கொடுக்கை –
    ஸ சர்வாநர்த்திநோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

    பூர்வஜ !
    கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
    ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
    பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
    ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
    அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
    சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
    ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
    அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
    பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
    தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
    அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
    ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
    உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
    உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
    ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
    போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
    திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
    இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
    அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
    வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
    நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

    ———————————————

    ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

    கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
    உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
    உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

    புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
    தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
    ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
    அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
    சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
    நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

    மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
    ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

    அது போலே -உபாயங்களிலும் வந்தால்
    கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
    கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
    தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
    சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
    ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
    அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

    த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
    ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
    இப் பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
    ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
    முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

    தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
    சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

    தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
    என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
    தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
    தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
    விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
    த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
    இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

    சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
    சர்வ சாதாரணமான திருவடிகளை –
    இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
    ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
    இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
    விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
    அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
    நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
    ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

    ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
    சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
    சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
    வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
    ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

    பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
    ஆஸ்ரயண வேளையில் –யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
    எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
    பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

    ஸர்வதா –
    ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
    ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
    பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
    ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
    அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

    சரணம் வ்ரஜாமி –
    உபாயமாக அடைகின்றேன்-
    கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
    சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
    வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

    இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
    ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
    வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
    அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
    ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
    ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

    வ்ரஜாமி –
    வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
    தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
    உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
    அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

    தவ –
    அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்
    -என்றும்
    கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
    தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
    அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

    முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
    இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது

    விவரண அபேஷை என் என்னில் –
    மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
    சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
    கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
    சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
    த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
    ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

    ————————————————————————

    ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

    கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
    அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
    அதில் –
    இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
    ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
    காரணந்து த்யேய
    -என்கிறபடியே
    உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
    சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
    யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
    ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
    முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
    அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

    ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
    அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத
    —3–

    ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
    லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
    லோக
    -சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
    ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

    த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
    ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
    ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
    ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
    சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
    ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
    ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
    ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
    வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
    தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

    ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
    ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
    பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
    ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
    இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
    தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

    இத்தால் –
    அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
    அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

    சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
    இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

    ஸம்ஹாரகஸ் ததா –
    ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
    புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
    இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
    நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
    இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

    அத்யஷஸ்ச –
    காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
    ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
    அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
    ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
    புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
    ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
    அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
    வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
    இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

    அநுமந்தா ச –
    விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
    அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
    எத்தாலே -என்னில் –
    சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
    சர்வ சக்தியான நாம் உளோம் இறே
    இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
    இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
    ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

    குண மாயா ஸமாவ்ருத –
    முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
    இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
    குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
    பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
    இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
    தன் உடைமையான இவன் –
    குண வஸ்யனாய் –
    பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
    இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
    ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

    முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
    இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
    ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
    சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
    அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

    ——————————————————————–

    ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

    கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
    காரணந்து த்யேய – என்றும்
    யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
    முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
    உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
    பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

    ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
    தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
    உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
    இத்தால் –
    ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

    ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
    த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

    நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
    இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

    ஸம்சார ஸாகரம் –
    ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
    ஷட் பாவ விகாரங்களும்
    புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
    ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
    ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
    அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

    பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
    தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
    புகலாம் இத்தனை போக்கி
    புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
    இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

    கோரம் –
    கொடிதாய் இருக்கை -அதாவது
    சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
    ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
    இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
    ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
    அஹங்கார சித்திக்கும்
    விஷயாந்தர போகத்துக்கும்
    சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

    அநந்த க்லேஸ பாஜநம் –
    தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
    உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
    நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
    முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

    த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
    தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
    கொடுமை சொல்லிற்று கீழ் –
    இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
    த்வாம் –
    ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
    அவதாரணத்தாலே-
    ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
    உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
    த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
    உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
    மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
    ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

    சரணம் -என்று
    உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
    வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
    வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
    பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
    ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
    இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

    நிஸ்தரந்தி –
    உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

    மநீஷிண –
    மனோ ஜேதார–மநீஷிண –
    விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
    சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
    ஜெயித்து இருக்குமவர்கள் –
    சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
    சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

    முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
    நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
    அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
    அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

    ————————————————————————–

    ஸ்லோகம் -5-அவதாரிகை –

    த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
    உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
    உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

    ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
    அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

    ஆகையாலே
    இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
    இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
    கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
    ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
    வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

    ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
    ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

    ந தே ரூபம் –
    ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
    ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
    இஸ் ஸ்லோகத்தால்
    ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
    தே -என்று
    நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
    நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
    ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

    தே ரூபம் ந தே –
    உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
    ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
    ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
    மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
    கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

    சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
    இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
    இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
    எத்தாலே என்னில் –
    இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
    ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
    எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
    ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
    ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
    அஜ்ஞனுமாய்
    ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
    அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
    உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
    நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
    ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
    தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

    ந சாகாரோ –
    திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
    பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
    வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
    ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
    விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
    இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
    இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
    பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
    வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
    ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

    ந ஆயுதாநி –
    இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
    வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
    எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
    கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
    சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
    பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
    பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
    யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
    அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
    ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
    பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
    நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

    ந ச ஆஸ்பதம்-
    பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
    தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
    ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
    அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

    ததா அபி புருஷாகாரோ –
    இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
    எப்போதும் குலையாதே இருக்கும் –
    புருஷ ஏவேதம் சர்வம் –
    ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
    வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
    இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

    பக்தாநாம் த்வம் –
    பக்தர்களுக்காய் இருப்பது –
    அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
    நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
    இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
    பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
    பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

    ப்ரகாஸஸே –
    ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
    இதிஹாச புராணங்களிலே –
    யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
    பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
    நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
    இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
    ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
    ( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

    முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
    ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
    அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
    அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
    நிர்வாஹக க்ருத்யம் இறே –

    ———————————————————————–

    ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

    ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
    ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
    கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
    வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
    ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
    முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
    உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

    நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
    நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

    நைவ கிஞ்சித் பரோஷம் தே –
    தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
    உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
    யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
    சர்வஜ்ஞன் என்றும்-

    ப்ரத்யஷோ அஸி ந க
    ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
    ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
    யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
    (நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
    யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

    அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
    ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
    தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
    பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
    வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
    இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
    ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
    பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
    அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
    இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
    தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

    கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
    ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
    ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
    அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
    த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
    இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
    ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
    அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
    மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
    வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
    காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
    தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
    கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

    நைவ கிஞ்சித ஸித்தந்தே –
    தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
    பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
    சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
    சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
    சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
    தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
    இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
    நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

    ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
    கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
    ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
    க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
    அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

    ஆக
    பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
    உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
    கண்ணும் காலும் உடையாய் நீ
    உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
    சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
    பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
    அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
    இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

    இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
    இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
    ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
    ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
    ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
    அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
    அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
    ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

    சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
    ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

    ————————————————————————–

    ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

    கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
    பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
    முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
    நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

    கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
    யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

    கார்யாணாம் காரணம் பூர்வம் –
    அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
    ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
    பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
    யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
    அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
    மஹதாதி கார்யங்கள் இருப்பது –
    அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
    அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
    தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

    (ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
    ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
    வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
    அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

    ஆக –
    பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
    கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
    தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
    அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
    பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
    இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
    தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
    கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
    (கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

    வசஸாம் வாச்ய முத்தமம் –
    லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
    பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
    (சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
    எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
    அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
    தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
    சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
    சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
    ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

    இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
    தேவதைகளோடு
    ஆராதகரான மனுஷ்யரோடு
    ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
    சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
    வசஸாம் வாச்ய முத்தமம் –
    என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
    பரமே வ்யோமன் -என்றும்
    தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

    யோகாநாம் பரமாம் ஸித்திம் –
    என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
    த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
    இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
    நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
    தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

    பரமம் தே பதம் –
    தே பரமம் பதம் –
    சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
    உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
    உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

    விது –
    ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
    நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
    இருப்பதொரு நாடு உண்டு என்றும்
    அந்த தேசத்தே
    ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
    இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
    சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

    அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
    அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
    இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
    கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
    ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
    உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

    சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

    ——————————

    ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

    கீழ் ஸ்லோகத்திலே
    பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
    அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
    அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
    சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
    சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
    ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
    அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

    அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
    பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

    பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
    சம்சாரம் ஆகிறது ஏது –
    அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
    1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
    அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
    அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
    சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
    அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
    என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
    யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
    பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
    அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
    அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
    மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

    புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
    பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
    புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
    புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
    அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
    அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

    பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
    சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

    இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
    ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
    அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
    ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
    தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
    ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
    திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
    அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
    காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
    பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
    மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
    சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
    நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
    ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

    அஹம் பீதோ அஸ்மி
    சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
    அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
    சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
    ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
    அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
    பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
    களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
    நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
    அத்யவசிதரான ஆழ்வார்
    அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
    அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
    முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

    தேவேஸ
    அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
    அங்கே களித்துத் திரியா நிற்க –
    அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
    பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
    ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
    இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
    விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
    அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

    பாஹி மாம் –
    மாம் பாஹி –
    யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
    அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
    ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

    பாஹி
    சரீர சம்பந்தத்தை அறுத்து
    அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

    புண்டரீகாஷ ! –
    உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
    நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
    தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
    கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
    பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
    முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
    பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

    (யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
    ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
    1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
    புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
    சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
    இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
    2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
    3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
    இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
    4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
    அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
    கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
    கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
    கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
    அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
    அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
    அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

    ந ஜாநே ஸரணம் பரம் –
    பரம் சரணம் ந ஜாநே –
    உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
    நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
    மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
    நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
    அதுக்கு ஹேது என் -என்னில்
    சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
    நமஸ்தே அஸ்து -என்றும்
    ஹ்ருஷீ கேஸ -என்றும்
    அனுசந்தித்தவன் இறே
    மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

    ஸங்க்ரஹ பஷத்தில்
    இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

    ———————————————————-

    ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

    ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
    ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
    அதுக்கு மேல்
    அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
    புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
    வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
    அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
    அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
    முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
    இத்தால்
    உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
    சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
    இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

    காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
    சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

    காலேஷ்வபி ச –
    புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
    அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
    அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
    தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
    கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
    நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
    பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

    சர்வேஷ் வபி –
    அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
    மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
    (மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
    அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
    சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

    திஷூ-
    சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
    தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
    பிரதமத்திலே பாவனமாய்
    பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
    பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
    மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

    சர்வாஸூ ச –
    இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
    சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

    சரீரே ச-
    கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
    சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
    விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
    சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

    கதௌ ச-
    ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
    சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
    சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
    சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

    கதௌ-
    சரீராந்தர க தௌ –
    அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
    முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
    முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
    வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

    மே மஹத் பயம் –
    இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
    தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
    பயம் வர்த்தியா நின்றது –

    பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
    முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
    தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

    அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
    ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
    முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
    த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
    மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

    மஹத் பயம் வர்த்ததே –
    பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
    விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
    சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
    விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
    அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

    அச்யுத –
    இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
    ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
    யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
    த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
    அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
    த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

    சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
    சேஷமாகக் கடவது
    அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

    ——————————————————————————

    ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

    உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
    அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
    விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
    பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

    இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
    அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
    த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
    அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
    இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

    அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
    ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
    த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
    யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
    ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

    த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
    நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

    த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
    தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
    ப்ராபகமுமானவோ பாதி
    பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

    த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
    பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
    ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
    கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
    பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
    சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

    குஸலஸ்யா நிமித்தம் –
    மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
    பிரதம ஸூஹ்ருதம்
    சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
    பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
    உபாய சித்தி ஹேதுவாய்
    அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
    பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

    மே நாஸ்தி –
    அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
    அது என் -என்னில் –
    ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
    இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
    ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
    இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
    அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

    ஜன்மாந்த ரேஷ்வபி –
    அழகைக் காட்டி மீட்டதுவும்
    ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
    அதன் பலமானாலோ என்னில்
    விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
    என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
    அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

    யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
    ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
    யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
    யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
    தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
    த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
    அந்வயம் –

    நிகமன பேதத்திலே
    யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
    தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
    ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
    என்றபடி –

    சங்க்ரஹ பஷத்தில் –
    பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
    விவரணமாய் இருக்கிறது –

    ———————

    ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

    ப்ராப்ய ப்ராபகங்களும்
    அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
    நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
    செய்ய வேண்டுவது என் -என்னில்
    பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
    யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
    பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
    எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

    விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
    ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

    விஜ்ஞானம்-
    விலஷணமான ஜ்ஞானம்
    சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
    சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
    ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
    சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

    யதிதம் விஜ்ஞானம்-
    பரமான சித்தமுமாய்
    ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
    வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
    ஆநந்த மய -என்றும்
    ரஸோ வை ச -என்றும்
    சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

    யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
    முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
    தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
    ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

    பிரயோஜநாந்தர பரர்க்கும்
    சாதநாந்தர நிஷ்டருக்கும்
    உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

    யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
    ஸ்தானம் -என்று -ஸ்திதி –
    அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

    யதிதம் –
    என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
    ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
    வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
    நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

    ஆர்ஜிதம் –
    பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
    ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
    அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
    புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
    அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

    ஜன்மாந்தரே –
    இஜ் ஜன்மம் நசித்தாலும்
    இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
    இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

    மே –
    எனக்கு இதுவே புருஷார்த்தம்
    தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

    தேவ –
    அர்த்திப்பார் உண்டானாலும்
    நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

    தேவ –
    சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
    லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

    தஸ்ய –
    ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
    ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
    சொல்லுகிறது –

    பரிஷய -மாபூத் –
    ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
    அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
    ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

    கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
    பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
    ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
    இவற்றின் உடைய ரஸயதையாலே-

    உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
    போக்ய அதிசயத்தாலே
    தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

    சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
    முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
    மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
    என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

    சங்க்ரஹ பஷத்தில்
    இஸ் ஸ்லோகம்
    நமஸ்தே -என்கிற பதத்தை
    ஸமரித்துக் கிடக்கிறது

    ————————————————————————-

    ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

    துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
    ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
    அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
    இன்னம்
    ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
    கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
    சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
    தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
    மநோ ரதம் மாத்ரமே யானாலும்
    ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

    துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
    யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

    துர்க்க தாவபி ஜாதாயாம் –
    துர்க்கதி -யாவது
    மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
    அதாகிறது –
    அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
    ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
    இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

    த்வத் கத –
    ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
    தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

    மே மநோ ரத –
    இழிந்த துறையிலே சபலனுமாய்
    அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

    மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
    அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

    சித்தி இன்றிக்கே இருக்க
    மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
    ஊர்வசி யோடே அனுபவித்து
    புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
    வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
    அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
    புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

    அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
    பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
    பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
    உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
    அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

    யதி நாஸம் ந விந்தேத –
    இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
    யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
    பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

    1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
    2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
    3-ஜ்ஞான சித்தியோபாதியும்
    4-இம் மநோ ரத சித்தியும்
    பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

    தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
    இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
    என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
    ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
    ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
    ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
    இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

    கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
    இதில் அந்த சித்தியும் வேண்டா
    தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
    அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
    ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
    ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

    நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
    நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
    பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

    நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
    யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
    ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
    மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
    ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
    யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
    என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

    ——————————————————————————

    ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

    இஸ் ஸ்லோகத்தால் –
    நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

    கீழ் –
    பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
    சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
    இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
    அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
    ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
    இப்படி
    வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
    ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
    அவை வ்யாஹத பாஷணம் அல்ல
    அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
    அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
    உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
    ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
    இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

    முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
    என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

    ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
    காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

    ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
    தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
    நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
    உன்னுடைய திருவடிகளிலே
    ஸ்திதமான என்னுடைய சித்தம்
    வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
    ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
    நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
    ருசியைப் பிறப்பித்து
    புகுர நிறுத்தின படியாலே
    நிருபாதிக சேஷித்வமும்
    நிரதிசய போக்யத்வமும்
    எனக்கு அநு  பூதம் இறே –

    காமயே –
    சங்கத்தளவு அன்று -என்கை
    தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
    கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
    ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
    தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
    எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
    பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
    அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

    தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
    ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

    ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
    ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
    தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
    காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

    தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
    தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
    அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

    யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
    கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

    ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
    யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
    குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
    அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
    விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

    மம சித்தம் –
    என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
    நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

    காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
    து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
    வைஷ்ணத்வம் -ஆவது –
    பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
    தத் அநுகூல வ்ருத்தியாதல் –

    ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
    அநு சஞ்சரன் -என்றும்
    யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
    சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
    வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

    குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

    சர்வ ஜன்மஸூ-
    நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
    சரீர சம்யோகம் இறே

    சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
    ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

    சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
    தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

    இத்தால்
    ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

    அதவா –
    சர்வ ஜன்மஸூ–
    அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
    பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
    ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
    அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

    ————————————————————–

    ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

    இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
    இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
    அடியேனாக வேணும் -என்று
    ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

    இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
    கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

    இத்யேவம் –
    இதி -என்றும்
    ஏவம் -என்றும்
    அர்த்தத்தின் உடையவும்
    சப்தத்தின் உடையவும்
    ஸ்வரூபம் சொல்லுகிறது –

    இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
    இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

    அநயா ஸ்துத்யா –
    ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
    இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

    மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
    அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

    ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
    திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

    தேவம்-
    சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
    நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

    திநே திநே –
    அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
    இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
    இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
    நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

    கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
    நான் கிங்கரானாக வேணும் என்று
    சர்வேஸ்வரன் திருவடிகளிலே
    ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

    இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
    விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
    தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
    அவர்களை நினைத்து
    அவர்களைப் போலே
    ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

    எது போலே -என்னில்
    ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
    பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
    தோல் கன்றை மடுவிக்க
    பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

    ——————————————————————

    ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

    ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

    கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ || 15

    பதவுரை —
    அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
    ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
    ச ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
    கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
    பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

    ————-

    யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

    மத் பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

    பதவுரை —
    புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
    அஹம் — அடியேன்,
    அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
    அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
    தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
    மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
    க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

    ————–

    அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

    த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி || 17

    பதவுரை —
    ஹே தேவா = ஸ்வாமிந்,
    த்வாம் — தேவரீரை,
    ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
    மே — அடியேனுக்கு,
    அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
    ப்ரீதிஹி – நஶையானது,
    அத்யைவ –- இப்போதே,
    நஶ்யது – ஓழியக் கடவது,
    ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
    த்வயி –- தேவரீரிடத்தில்,
    ப்ரீதிஹி -– அன்பாவது,
    வர்ததாம் – வளர்ந்தோங்குக .

    ———-

    க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

    யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

    பதவுரை –-
    தேவேஶ = தேவாதிராஜனே,
    அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
    அஹம் க்வா -– அடியேன் எங்கே,
    ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
    மாதவா -– ஸ்ரீய:பதியே,
    மம -– அடியேனுக்கு,
    யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
    தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
    ( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
    ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

    ————-

    ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

    ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

    பதவுரை –-
    தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
    ஸோஹம் -– அடியேன்,
    தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
    ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
    ( அதஹ = ஆகையினாலே )
    க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
    மே –- அடியேன் திறத்தில்,
    ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

    ——————

    உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

    அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

    பதவுரை –
    புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
    அஹரஹ -– நாள் தோறும்,
    மயா –- அடியேனால்,
    உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
    க்ருதாந் –- பண்ணப்பட்ட,
    இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
    ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

    ————————

    ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

    ——-

    த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

    ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

    பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

    பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
    புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

    பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
    இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
    பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
    உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
    “ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
    தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
    இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
    “ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

    பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
    மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
    தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
    பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

    ‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
    ‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

    —————

    நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

    நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

    பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
    கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
    நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
    தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

    ————–

    ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

    ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

    கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

    அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

    ஷோபநை: = அழகிய வாய் ,
    ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
    ( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
    ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
    பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
    கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
    கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
    ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
    அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

    பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
    திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

    ——————-

    க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

    அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

    க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

    விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

    கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
    மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
    இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
    க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
    க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
    துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
    அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
    அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

    பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
    எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
    அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
    அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
    மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
    கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
    ( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
    உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
    விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
    த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

    ——————

    பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

    வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

    பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
    மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
    அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
    உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
    ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
    பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
    ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
    புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

    த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
    யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
    வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
    தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
    காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
    த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

    ——————-

    யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

    தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

    மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
    யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
    யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
    ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
    இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
    பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
    ( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
    அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
    ‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

    —————–

    மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

    த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

    மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
    செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
    உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

    “ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
    இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
    “ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
    ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

    கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
    த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
    அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

    தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
    வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

    கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

    —————

    பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

    அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

    ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
    பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
    க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
    ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
    அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
    அதந்ய: = அகிஞ்சநன் ,
    கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
    ஆன பின்பு ,
    க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

    —————-

    ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

    பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

    கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

    த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

    ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
    பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
    க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
    வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
    ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
    பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
    அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
    தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
    மாம் = அடியேனை ,
    கருணோததே = கருணைக் கடலே ,
    கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
    ப்ரபோ = எம்பெருமானே ,
    த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
    பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
    தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
    மாம் = அடியேனை ,
    த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
    ( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
    ( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
    என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

    —————

    மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

    த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

    த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
    புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
    ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
    த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
    த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

    ————————————

    ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

    த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

    அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
    த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
    தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
    யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
    த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

    கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
    இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

    இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
    இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

    கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
    அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
    ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
    யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
    ( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

    ————-

    பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

    ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

    அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

    க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

    ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
    உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
    அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
    பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
    பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
    அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
    அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
    ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
    அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
    க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
    மாம் = அடியேனை ,
    க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

    ———————

    தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

    த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

    தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
    புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
    ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
    ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
    ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
    மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
    த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
    மம = அடியேனுக்கு ,
    தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

    —————–

    காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

    நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

    தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
    பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
    காமயே = ஆசைப் படா நின்றேன்,
    ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
    மாம் = அடியேனை,
    நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
    கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
    பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

    ——————-

    லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

    அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

    நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

    ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

    வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

    அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

    ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

    திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
    ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
    அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
    அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
    குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
    த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
    பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
    நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
    ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
    ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
    வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
    உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
    யுதம் = கூடியிருப் பதே,
    வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
    வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
    ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
    அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
    ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
    அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
    ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
    வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
    கதா = எப்போது ,
    சஷூஷா = கண்களால் ,
    த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

    —————–

    க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

    மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

    லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
    ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
    க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
    மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
    விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
    கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
    சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

    ————

    உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

    விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

    ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

    விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

    கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

    உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
    சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
    பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
    ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
    விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
    ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
    விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
    கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
    ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
    ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
    உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
    மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
    கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
    அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
    ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
    ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
    கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

    ———————–

    ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

    ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

    ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

    கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

    ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
    ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
    ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
    ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
    பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
    ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
    மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
    கதா வா = யெப்போது தான் ,
    மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

    —————-

    கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

    சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

    ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
    ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
    கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
    சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
    யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
    கதா = யெப்போது ,
    வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

    ———————-

    கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

    சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

    ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
    கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
    அஹம் = நான்,
    பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
    சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
    கதா = யெப்போது,
    சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

    ————–

    ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

    நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

    ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
    அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
    வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
    ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

    விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
    தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
    பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
    பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
    நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

    ———–

    நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

    ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

    ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
    ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
    அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
    ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
    பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

    —————-

    சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

    நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

    சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
    ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
    நவ வ்யூஹங்களென்ன ,
    ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
    கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
    ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
    அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
    விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
    விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
    சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
    நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

    ——————-

    நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

    பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

    பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
    பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
    தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
    பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
    த்வமேவ = தேவரீரே ,
    அவ்ய்ய: = நிரபாயமான ,
    கதி: = உபாயமாக வாகிறீர்

    —————-

    பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

    அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

    வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

    பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
    நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
    நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
    அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
    அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
    விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
    அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
    ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
    வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
    பரம் = ஸர்வாதிகனாய் ,
    ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
    த்வாம் = தேவரீரை ,
    அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
    ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

    ————

    வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

    விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

    வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
    த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
    கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
    விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
    விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
    த்வாம் = உன்னை ,
    சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

    ————-

    மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

    இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

    ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
    அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
    கதாசந = ஒரு காலும் ,
    ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
    மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
    ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
    தவ = தேவரீருடைய ,
    ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
    இச்சாமி = விரும்புகின்றேன்
    ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
    கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

    ————–

    ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

    புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

    ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
    அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
    தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
    ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
    தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
    கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

    —————

    ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

    போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

    தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

    ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
    அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
    மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
    தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
    போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
    க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
    மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
    அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
    க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
    தேவ = ஸர்வாதிகனே ,
    தீநம் மாம் = ஏழையான என்னை ,
    ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

    —————-

    இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

    யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

    நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

    சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
    தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
    யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
    இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
    மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
    ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
    ஸ்வாத்மாநம் = தன்னை ,
    நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
    விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

    ———-

    த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

    ——————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

    June 27, 2024

    ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
    ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
    என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

    கோதை -மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

    ———–

    குரு வாயூர் புரி வாஸா குரு க்ஷேத்ர சாரதே
    குரு சித்த ஹ்ருதா வாஸா குரு கிஞ்சித் கிருபா மயி
    -1-

    ஆச்சார்யர் திரு உள்ளம் விரும்பி -அனைத்தையும் செய்து அருள்கிறான் அன்றோ -இதுவே சரம பரம புருஷார்த்தம் அவனுக்கு
    கருணா சாகரம் -அருள் மா கடல்-அடியேனுக்கு லவ லேச கிருபையை அளித்து அருள்வாய் என்கிறார்-

    ———-

    குருர் யூத குண குரு வாயூர் ஆஞ்சநேய குரு குண வாயு போஜன வா
    குரு மண்டலம் குண கதனம் ந அலம் குரு தவ அதி கதா அஹம்
    –2-

    உன்னை அடியேனால் ஸ்துதிக்க முடியுமோ –
    வாசஸ் பதியாலும் -திருவடியாலும் -சொல்லின் செல்வனாலும்
    2000 நாக்குகள் கொண்ட ஆதி சேஷனாலும் –
    வாக்கு வன்மை ஸாமர்த்யம் அளவு இருந்தாலும் முடியாதே
    உனது அருளை வாங்கிக் கொண்டு உன்னையே ஸ்துதிப்பேன்
    நீயே பாடிக்கொள்ள வேண்டும்
    சின் முத்ரை -கட்டை விரல் பரமாத்மா இறங்கி வந்து தொடலாமே

    ———–

    குரு ததா கதி பத்தந நாயகம் குரு ததா கதி
    மறு புகீவ பவே பகவான் ஆவி குரு ஸூகவே ஸதாம்
    –3-

    பாலை வனத்தில் கிடைத்த அமுதம் அன்றோ நீ
    பிரம்மன் தபஸ் -தொடங்கி உத்தவர் குருவும் வாயுவும் -பல பக்தர்கள் தபஸ் செய்து பெற்ற அமுதம்
    கண்களால் பேருக்கு உள்ளத்துக்குள் க்ஷேமமாக வைக்க வேண்டிய அமுதம்

    ———

    வாசஸ்பதி சந் ஸததம் க்ருஹஸ்த ஸதாம் கதி குரு
    வாசஸ்பதி சா அபி ஸூவ பக்தனாக்ய கதம் ஆகநோதி
    –4-

    பேசவும் உழைக்கும் ஆற்றலையும் அளிப்பவன் -சொல் வீரனாகவும் -செயல் வீரனாக்கி அருள்பவன்
    வாசஸ்பதி-பேச்சாற்றல் உள்ள ப்ருஹஸ்பதி
    ஸதாகதி-வாயு

    ————-

    தாப ஜால பாப ஜால சாப ஜால பீடித -ஜீவ ராஸி அத்ர நாம
    ஜீவ வாயு பத்த நேந்த்ர பாத ஸேவனம் விநா தஸ்ய வித்யதே கதிம்
    –5-

    சாமரம் சந்தஸ் பாடி குருவாயூரப்பனுக்கு சாமரம் வீசுவதை அனுபவிக்கிறார்
    தாபத்த்ரயங்கள் -பாபக் கூட்டங்கள் –சாபங்களால் பீடிக்கப்பட்டு
    குருவாயு ஜீவ வாயு -oxyjen
    அஹல்யை சாபம் மஹாபலி அர்ஜுனன் மரம் மதுகைடபர் ருத்ரன் தேவர்களின் துர்வாச சாபம் போக்கி அருளியவன்

    ——-

    குருவத் மாம் பாபினம் குருவத் நிரய குரு அக்னி மித்ர புர நாதன் விநா பவந்தம் ந ஆலம்பனம் சரணம் அபி —6-

    ஒரே புகலிடம் –குரு அக்னி மித்ரன் வாயு –
    குரு பூஜை -அக்னி பூஜை-அக்னி ஹோத்ரம் -மித்ர ஸூர்ய பூஜை -சந்தியாவந்தனம் -ஸூர்ய மண்டல மத்யவர்த்தி வந்தனம்
    மூன்றுமே செய்யாமல்

    ——

    ஜீவ சமீரந நகர வராந்தக ஜீவனம் ஏகம் ஜகதாம்
    ஜீவ ததேக குரு க்ஷேத்ர ஜீவனம் அத்ர பரத்ர சே அபி ஸ்யாத்
    -7-

    உள்ளூத்துக்கு உள்ளே வைக்க இம்மை மறுமை பலன் பெறுவோம்

    ———–

    சேஷாசலே ஸர்வேஷாம் சகலம்–8-

    திருமலை அப்பனே குருவாயூரப்பன்
    ஆதி சேஷன் வாயு -பல பரீஷை -மேரு மலை -பிடித்து பறக்க வைக்க
    மேல் பகுதி பறக்க -அதுவே ஏழுமலை சேஷாசலம் -சேஷாத்ரி -சேஷ கிரி
    மருதா -காற்றால் வந்தது
    வேகமாக வீசும் வாயு குரு வாயு
    நிலத்தில் இருந்து வரங்களை அளிக்க இங்கு
    ப்ரஹஸ்பதி வாயு இருவர் மூலம் -இங்கு நித்ய வாஸம்

    ———

    ஹநுமதி ப்ரீதி உபாகதம் ஸத் ஸ்வேதா பர ஸூ
    இத்யாதியாத் ஸர்வான் அநுக்ரஹான் பரிபாலயன்-
    -9-

    திருவடிக்கு விசேஷ அனுக்ரஹம்
    அவர் பெற்றோர்களுக்கு கௌரவம்
    அஞ்சனா தேவி ஒரு வடிவம் அங்கு
    குருவாயூர் அப்பன் இங்கு

    ————

    விஷய சமீரந பட்டன நாயகா தாமக சோபன பாத பயோஜம் வசதி
    மனஸ கதாசிக தத் குரு தத் குரு சகலம் –1
    0-

    திருவடிகளை நெஞ்சு தாமரையில் வைத்து இருக்க நீயே அருள வேண்டும் -இதுவே சகலத்துக்கும் போதுமே

    ——–

    கருணாகரதா தவ கில மஹிதா
    மயி அபி பாபி
    கருணா கர ஸூத முக
    கவிதா லீலை
    –11-

    இதில் தான் இயற்றிய காரணம்
    ஆகாரம் சுரங்கம்
    பாபிக்கும் அனுக்ரஹம் செய்தால் உலகம் அறியுமே
    உன்னைப்போல் பெயர் கொண்ட மகன் சொல்ல ஸ்துதிக்கிறேன்

    ———-

    மணி பாதுகையா மதுரம் பகவான் சன்யோஜத்வம் பாத சரோஜம்
    மணி பாதுகையா மம ஹ்ருதயே மம கில அன்யே தன்யம் மம ஆத்மாஜம்
    –12

    மணி பாதுகையுடன் திரு உள்ளத்தில் பதிக்க பிரார்த்தனை
    ஆழ்வாருடன் அவன் வந்து லீலைகளை பண்ணி அருள் என்கிறார்

    மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு -பாதுகையை அணிந்து நாச்சியாரும் பிரார்த்தித்தார் அன்றோ

    ——–

    மணி பாதுகையே மம கன்யகை மாத்திரம் சம்யோஜிய வரம்
    மம குரு நந்தன ரெங்கம் மாநஸம் அம்புஜ லோசன
    சீக்ரம் –13

    உனது திருவடியுடன் சேர்த்து வைப்பது போல் நல்ல மாப்பிள்ளை லௌகிக வைதிக ஸ்ரேஷ்டராக -திருவடி ஸ்தானம் போல்

    ——–

    கோதாயாம் அஸ்யா ஸஹஜா பூர்வம் தயையா ஏவம்
    பிரார்த்தனை வர்ணா தேவம் வாசயதீபம்
    –14-

    பிரார்த்தனை -சக்தி வாய்ந்தது
    லீலை செய்து காட்டுகிறாய் -என்னைக் குறித்து ஸ்துதி செய்து கொள்கிறாய்

    ———

    உத்தவ நயனே நந்த ஸூ பாஷ்பம் ஜலயதி யஸ்தே ஸூந்தர வர்ஷமா
    தன் மம நயன த்வந்த கதா ரஷ்யதி பகவன் தத் பத
    –15-

    உத்தவர் தரிசித்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது போல்
    அடியேனுக்கு கண்ண நீர் வந்து நீ எப்பொழுது கண்டு மகிழப் போகிறாய்

    ———-

    பிரார்த்தனையின் விளைவால்
    பாகவதர் -வந்து -கூட்டிச் செல்லும் பொழுது
    நோவு சாத்த
    மீண்டும் திரும்பி

    பகவான் பவதோ மங்கள மங்கள விக்ரஹ ஸேவா
    ஆகா மத்யே மார்க்கம் தேன விருத்தம்
    –16-

    ஸேவிக்காமல் திரும்பி
    கல்யாணம் நடந்த பின்பே ஸேவை பெற்றார் 1984-
    இருந்த இடத்திலேயே பாட பேற்றைப் பெற்றார்

    —–

    கடயதி வாஞ்சித பக்த
    தர்சனம் ஏவது
    –17

    கேட்டவுடன் அருளும் ஸ்வ பாவம்
    நம்பிக்கை உள்ளது -பின்பு தருவாய் மஹா விசுவாசம் உள்ளது
    தர்சனம் பண்ணாமலேயே பேற்றை அருளுவாய் என்று காட்டவே செய்கிறாய்

    ———

    பிரதி க்ருஹ பகவான் நமத கிஞ்சித் வாஹம் –தத்ர விதாய –18

    பக்தர் கொடுத்த படம் பார்த்து -கண்ணனுக்கு ஆனந்தம் உள்ளத்துக்கு ஆனந்தம்
    தர்சிக்க முடியாத வருத்தம் நீங்குகிறது

    ———

    நலாஸ்ய மூலம் -சரணாம் பத்ம ப்ரூஸம் கர பங்க –ஹ்ருதாயாம்புஜ–19-

    பேசுகிறான் –
    வலது திருக்கரம் -தண்டு திருவடியில் கவ்வி -திருக்கையில் ஏந்தி
    தத்வம் உணர்த்துகிறார்
    உள்ளத் தாமரை பிடித்து -கவ்விக் கொள்ளும் கள்வன் நீ –

    யுக்தம் –விஷய லோலா –ஸ்வயமேவ அனுக்ரஹம் –20-

    நாமாக அவனிடம் போகாமல் திரும்பி இருக்க -அனுக்ரஹத்தால் ஸ்வயமேவ -ஸ்வாமி சொத்தைக் கொள்ளுவது போல்
    செய்து அருளுகிறாய்

    ——–

    ஸ்வயம் ஹ்ருதயாம்புஜ –மஹிமா
    ஆதார விதா –ஸ்பர்ச
    –21-

    இனி அல்ப சிந்தனை உள்ளத்தில் வராதே -திருவடியால் அமுக்கி – திருக்கையில் பிடித்து அருளி
    மனதை நீ இயக்க -தூய்மை ஆனதே

    ——–

    ஸ்ரீ நிதி –22

    படிப்பாருக்கும் கேட்ப்பார்க்கும் செல்வங்கள் கிட்டும் பலன் பிரார்த்தனை கிட்டும் -குரு பெரிய பக்தியும் கிட்டும் –

    —————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –