Archive for the ‘ஸ்தவம்’ Category

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-1-

May 11, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

(துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்–திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம்-அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.-இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்-திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது-ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது-யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்-

ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||-பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

ஸ்ரீ வைஷ்ணவ சமாசார்ய நிஷ்கர்ஷம்
ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரித்திரம் போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்


ஆசார்யபதம்‌ எம்பெருமானாருக்கே உரியதொன்று. அவரே அபராவதாரமாய்‌ வரவர முனியாய்‌ வந்துதித்தார்‌. நம் பெருமாள்‌ இவருக்கு எம்‌பெருமானாரிடம்‌ இருந்த ப்‌ரேமத்தின்‌ கனத்தை யிட்டு யதீந்த்ர ப்ரவணர்‌” என்று தாமருளிச்‌ செய்த ஸ்ரீசைலேச தனியனில்‌ பெயரிட்டருளினார்‌. அத் திருநாமமே இந்த வைபவ நூலுக்கும்‌ அமைந்தது. பிள்ளை லோகார்ய ஜீயர்‌ இந்த திவ்ய க்ரந்‌தத்தை அருளிச்‌ செய்யாவிடில்‌ நம்பிள்ளைக்குப்‌ பின்னர்‌ தோன்றிய ஆசாரியர்களின்‌-குறிப்பாக பெரிய ஜீயரின்‌ வைபவங்களை அறியவே முடியாது போயிருக்கும்‌. ஆகவே நாம்‌ பிள்ளை லோகார்ய்‌ ஜீயர்‌ விஷயத்தில்‌ கனத்த உபகார ஸ்ம்ருதியை அநுஸந்திக்க ப்ராப்‌தமாகிறது.

மயர்வற மதிநலம் அருளப்‌ பெற்ற ஆழ்வார்கள்‌ அவர்களுக்குப்‌ பின்‌ அவதரித்த பூர்வாசாரியர்கள்‌ வைபவங்களை நம்பிள்ளையின்‌ திருவடியான பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்‌’? என்ற கரந்தத்தில்‌ வெளியிட்‌டு அருளினார்‌.
அந்த க்ரந்தம்‌ நம்பிள்ளை வைபவத்துடன்‌ முடிவடைகிறது, அதன்‌ தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த நூல்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை வைபவம்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியின்‌ அவதாரம்‌, நம்‌
பிள்ளை நியமனத்தால்‌ அது பிராசாரமடையாம லிருந்தது, நம்‌ பிள்ளை யருளால்‌ வடக்குத்‌ தி௫ வீதிப் பிள்ளைக்கு பிள்ளை லோகாசாரியர்‌, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ என்ற இரு குமாரர்களின்‌ அவதாரம்‌- அவர்கள்‌ ரஹஸ்‌ய க்ரந்தங்கள்‌ அருளிச்‌ செய்தமை, பிள்ளை லோகாசாரியர்‌ நம்பெருமாள்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை துலுக்கரால்‌ விளைந்த கலாபத்தில்‌ வலசையாய்‌ எழுந்தருளப்‌ பண்ணியது. ஆழ்வார்‌ திரு நகரி நம்மாழ்வார்‌ திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு ஏற்பட்ட ஆபத்து, நம்‌ பெருமாளுடன்‌ ஆழ்வார்‌ ஸமாகமம்‌, பிரிவு, இந்த விக்‌ரஹங்கள்‌ சேமமாகப்‌ பேணப்பட்ட வைபவங்கள்‌ எல்லாம்‌ இந்‌ நூலில்‌ முற்‌பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளன. திருவாய் மொழிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர்‌ நியமனப்படி கூர குலோத்தம தாஸரால்‌ திருத்தப்பட்டது.
பெருமாள்‌ கோவிலில்‌ சேம வைப்பாயிருந்த ஈடு முப்‌பத்தாறாயிரப்‌படியை தேவப் பெருமாளுடைய நியமனத்தால் திருவாய் மொழிப்‌ பிள்ளை பெறுதல்‌, திருவாய்மொழிப்பிள்ளை ஆழ்வார்‌ திருநகரியிபல் கோயிலை புநருத்தாரணம்‌ பண்ணி வலசையாக எழுந்தருளியிருந்த
ஆழ்வார்‌ திருமேனியை எழுந்தருளப் பண்‌ணி ப்ரதிஷ்‌டிப்பித்தல்‌,மணவாள மா முனிகளின்‌ அவதாரம்‌, அவர்‌ திருவாய்மொழிப்‌பிள்ளையிடம்‌ ஆச்ரயித்தல்‌ முதலான விஷயங்கள்‌ அடைவே பேசப்‌பட்டுப்‌ பின்னர்‌ மணவாளமாமுனிகளின்‌ வைபவம்‌ பரக்கப் பேசப்‌ பட்டுள்ளது-

பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத்  தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும்.  பிள்ளை லோகம் ஜீயர்,  இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||

கூரத்தாழ்வானே! தேவரீருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமாகிற அமுதத்தில் மிக்க ரஸிகர்களாய்‌, கருணை மிக்கரான பட்டர்‌ நஞ்ஜீயர்‌, நம்பிள்ளை, முதலான மஹாசாரியர்களை சரணமாகப் பற்றுகிறேன்‌.

(கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:

கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்

போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே

(1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]

ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரன்‌ ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந காமனாய்க் கொண்டு கலி காலத்திலே பராங்குச பரகால பட்டநாதாதிகளான ஆழ்வார்களையும்‌ நாத யாமுந யதிவராதிகளான ஆசார்யர்‌களையும்‌ அவதரிப்பித்தருளி தந் முகேந லோகத்தை ரக்ஷித்தருளின படியைப்‌ பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி முன்புள்ள ஆசார்யர்கள்‌ குரு பரம்பரா ப்ரபாவ ப்ரமுகங்களான ப்ரபந்தங்‌களாலே ப்ரதி பாதித்து உபகரித்தருளினார்கள்‌.

அவ்வள வன்றிக்கே விசேஷித்து அசேஷ சிதசித் வஸ்து சேஷியான அந்த ஸ்ரீய பதியினுடைய நியோகத்தாலே சேஷாவதாரமாக வவதரித்து பஹு முகமான தம்முடைய உக்த் யநுஷ்டானங்களாலே ஸர்வ சேதனரையும்‌ ரக்ஷித்துப் போந்த யதீந்த்ர ப்ரவணரான ஜீயருடைய ப்ரபாவத்தை அனைவருமறியும் படியாக அஸ்மதாசார்யருடைய ப்ரஸாதமடியாகவும்‌ கந்தாடை நாயனுடைய (கோயில் அண்ணன் ஸ்வாமிகளின் திருப்பேரனார்) ப்ரஸாதமடியாகவும்‌ அறிந்தவளவிலே ப்ரதிபாதிக்கிறது இப் பிரபந்தத்தாலே.

சத் சம்ப்ரதாயா சம்யுக்ததர் வைபவத்தை முன்புற பேசி பின்பு அவர் வைபவம் பேசுவதாக உபக்ரமிக்கிறார்-

(1) ஸ்ரீ வத் சிஹ்ந பவத சரணாரவிந்த சேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூபூர்ணாந் |
பட்டார்ய வர்ய நிகமாந்த முநீந்த்ர லோக குர்வாதி தேசிக வராந்‌ சரணம்‌ ப்ரபத்யே ॥
-என்று சுத்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்‌ நஞ்ஜீயர்க்கும்‌ நம் பிள்ளைக்குமே யுள்ள தொன்றாகையாலே, அந்த நம்பிள்ளை யடியாக வந்த ஆசார்யர்களுடைய சுத்த சம்ப்ரதாய பரம்பரா அந்வயமானது இவர்க்கு வந்தவாற்றை ப்ரதிபாதிப்பதாக ப்ரதமம்‌ பிள்ள லோகாசாரியருடைய வைபவத்தை ப்ரதிபாதிக்கிறது-எங்ஙனே யெனள்னில்‌;

கோதில் உலகாசிரியன்‌ கூர குலோத்தம தாதர்‌
தீதில்‌ திருமலை யாழ்வார்‌ செழுங் குரவை மணவாளர்‌
ஒதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான்‌ தாத ருடன்‌
போத மணமான முனி பொன்னடிகள்‌ போற்றுவனே

என்கிறபடியே ஆழ்வாருடைய அவதார மென்னலாம் படியான வைபவத்தை யுடைய நம் பிள்ளை, ஒரு நாள்‌ நித்யப்படி கால ஷேபம்‌ நிறைவேறி மத்யாஹ்ந காலத்திலே தனியே எழுந்தருளி யிருக்க, திருவடிகள்‌ ஸம்பந்தியான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை திருத் தாயாராயிருக்கிற அம்மி-தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவளைக்‌ கடாக்ஷித்தருளி “உம்முடைய க்ருஹ யோக ஷேமங்கள் என்‌” என்று கேட்டருள; “என்ன விண்ணப்பஞ்‌ செய்யப்‌ போகிறேன்‌? ஒரு பேய்ப் பிள்ளையா யிருக்கிறதே ” என்ன,‘அதெப்படி?’ என்ன, ‘ஒரு பெண்ணை விவாஹம் செய்வித்தீரே;அந்தப்‌ பெண்‌ பெரியவளானாள்‌; ஸஹ சயன கல்யாணம்‌ பாலே பண்ணி சயிக்க விட, உடனே பிள்ளை முறையிட, ‘அதென்‌?’ என்று எல்லாரும்‌ உள்ளே புக, உடம்பெல்லாம்‌ புழுக்க நீர் சொரிய விம்மி யழுது நிற்க, “இதேது பிள்ளாய்‌?” என்று கேட்டேன்‌-
அம்மா! இதுவொரு ஆடுகிற பாம்பாயிருந்தது; பயப்பட்டேன்‌;-இன்னுமப்படியே யிருக்கிறது” என்ன, ”இதுவுமொரு புதுமையோ”வென்று பெண்ணை அப்பாலே போக விட்டேன்‌, இன்னுமொரு நாள்‌ அந்தப்‌ படியே யாச்சுது” என்று வ்யாகுலப்‌பட, பிள்ளையும்‌ சிரித்தருளி, **அதற்கு உமக்கென் ?” என்ன,
*இப்படி யருளிச்‌ செய்யுமோ? பெண்‌ வாழ வேண்டாவோ? வம்சத்துக்குப்‌ பிள்ளை ணே்டாவோ?” என்று திருவடிகளிலே விழுந்து சோகிக்க, பிள்ளையும்‌, ‘அம்மீ! எழுந்திரு: நீ சோகிக்க வேண்டா; மணாட்டுப் பெண்‌ ருது ஸ்நாதையாய்‌ வருகிற போது இது வழியாயழைத்து வா? என்று அருளிச் செய்து விட அவளும்‌ அப்படியே அழைத்து வந்து விட, திருவோலக்கத்திலே பிள்ளையும்‌ அந்தப்‌ பெண்ணைக்‌ கிட்ட வழைத்தருளி அவள்‌ வயிற்றைத்‌ தம்‌ திருக் கைகளாலே ஸ்பர்சித்து, “*நம்மைப்‌ போலிருப்பானொரு பிள்ளையைப்‌ பெறக்‌ கடவாய் ” என்று ஆஸீர்‌வாதம்‌ பண்ணி விட்டு, அற்றை ஞாயிறு பாடு வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையை யழைத்தருளி, **உம்முடைய பயமும் தீர்ந்தது, விஹித விஷய வைராக்கியத்திற்கும் குறைவு வராது; ஆனால்‌ லோக மரியாதைக்கு நாம்‌ சொன்னதற்காக இன்றிராக்‌ கூடியிரும்‌’ என்றருளிச் செய்ய; அப்படியே கூடியிருந்த வளவில் ஆச்சியுங் கர்ப்‌பந் தரித்து லோக விலஷணமாய்‌ :’ததஸ்க த்வாதஸே மாஸேஎன்றபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்திலே ஐப்பசியில்‌ திருவோண நஷத்திரத்திலே பிள்ளை திருவவதரிக்க, அவருக்குப்‌ பன்னிரண்டாம்‌ நாள் நாம கரணத்திலே ”லோகாசார்யர்‌ பிள்ளை” என்று நம்பிள்ளை யுடைய திருநாமஞ் சாத்‌தி வளர்ந்து வந்து அப்த பூர்த்தி உத்ஸவத்திற்கு பெருமாளை ஸேவிப்பிக்கத் தக்கதாக நம்பிள்ளை முதலான பெரியோர்கள் எல்லோரும் மங்கள வாத்தியங்‌களுடனே திருப்பல்லக்கிலே எழுந்தருளிப் பண்ணுவித்துக்‌ கொண்டு சென்று ஸேவிக்க, நம் பெருமாளும்‌ போர வுகந்தருளி-தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, சந்தனம்‌, ஸூகந்தம்‌, திருமாலை ப்ரஸாதங்களும்‌ பட்டுச்‌ சிற்றாடையும்‌ ப்ரஸாதித்தருளி, நம்பிள்ளையை, அர்ச்சக முகேந “உம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடுத்‌தீரே; இனி தம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடும் ‘ என்று நியமிக்க, *’நாயன்தே நாயன்தே” என்று ஓமறைய, அப்படியே அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவவதாரஞ்‌ செய்தருளினார்‌.-

(1147 நம்பிள்ளை அவதாரம்
1167-பெரியவாச்சான்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை
1205-பிள்ளை லோகாச்சார்யார் –ஐப்பசி திருவோணம்–1325— திருநாடு
1207-அழகியமணவாள நாயனார் –மார்கழி அவிட்டம் -1309-திருநாடு அலங்கரித்தார் -)

ஒருநாள்‌ நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்‌கெழுத்தருள, அங்குள்ளாரெல்லாரும்‌ நம்பிள்ளை திருவடிகளிலே வந்து ஸேவிக்க, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌
ஆர்த்ர வஸ்த்ரததுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அவளருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப்‌ பார்த்து *இத்தப்‌ பெண்‌ ஆர்த்ர வஸ்த்ரத்துடனே நிற்பானென்‌?” என்ன, அவர்கள்‌. சொன்னபடி –
**தாலு நா ள்‌ தூரஸ்தையா யிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவரீர்‌ திருவடிகளிலே ஸேவிக்கிறாள்‌’” என்ன. அது கேட்டு நம்‌ பிள்ளையும்‌ உகந்து அவளை “பெண்ணே! இங்கே வா” என்றழைத்து திருக் கையாலே அவளுதரத்தை ஸ்பர்சித்து **நம்மைப்‌ போலோரு பிள்ளையைப்‌ பெறுவாயாக” என்று திருவுள்ளம்‌ பற்றி யருளினர்‌. அத்தைக்‌ கண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையும்‌-நமக்குக்குமாரனுண்டானால்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாம்‌’” என்றிருந்து ததநுகுணமாக *வர்த்திக்க, தத் ஸம்வத்‌ஸரத்தில்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌ கர்ப்பவதியாய்‌ததஸ்ச த்வாதசேமாஸே” என்கிறபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்தில்‌ க்ரோதந வருஷம்‌ ஐப்பசியில்‌ திருவோணத்தில்‌ ஒரு குமாரர்‌ திருவவதரிக்க ஸூதிகா செளச நிவ்ருத்தியான பன்னிரண்‌டாம் தாள்‌ நாம கரணத்திலே அக் குமாரருக்கு லோகாசாரியர்‌ என்று ஸ்வாசாரியரான நம்பிள்ளையின்‌ திருநாமம்‌ சாத்தி யருளினார்‌-பிள்ளையும்‌ அது கேட்டு, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையை யழைத்து, “க்ருஷ்ணரே! நாம்‌ பெருமாளின்‌ திருநாமம்‌ சாத்துவதாக உத்தேஸித்திருக்க, நீர்‌ நம்மைக்‌ கேளாமல்‌ இப்படிச்‌ செய்யலாமா?”’ என்ன, அவரும் நடுங்கி, பயப்பட்டு, நிருத்தரராய்‌ நிற்க, அவ்வளவிலே, முதலிகளெல்லாரும்‌ “தேவரீர்‌ திருநாமம்‌ சாத்துகையிலுள்ள ஆதரத்தாலே செய்தாரித்தனை; இன்னுமொரு குமாரர்‌ உண்டாம்படி ஆஸீர்வதித் தருள வேணும்‌‘ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும்‌ உகந்து, அப்படியே,-ஸத் புத்ரன்‌ இன்னுமொருவன்‌ உண்டாக”‘ என்று ஆசீர்வதித்து விட, வடக்குத்‌ திருலீதிப்‌ பிள்ளைக்கு அப்படியே பின்னையுமொரு குமாரர்‌ -திருவவதரிக்க, பிள்ளையும்‌ அதுகேட்டு ஸந்துஷ்டராய்‌, பத்துநாளும் கடத்த இரண்டாம்‌ நாள்‌ அவரை அழகிய மணவாளப்‌ பெ௫மாள்‌ நாயனார்‌” என்று நம்‌ பெருமாள் திரு நாமம் சாத்தி யருளினார்‌.

இப்படிப்பட்ட பெருமையை யுடையவருடைய அருளாலே அவதரித்தவராய்‌ ௮வதார விசேஷ மாயிருந்துள்ள பிள்ளை லோகாசாரியரும்‌, அவருடைய அருளே தாரசகமாக வளர்ந்த அவர்‌ திருத்‌ தம்பியரான அழகிய மணவாளப் பெருமான்‌ நாயனாரும்‌, தத்வ ரஹஸ்யந்‌ தொடங்கி அநேக ப்ரபந்தங்கள்‌ இட்டருளி ஸ்வரூபவர்த்தகராய்‌
தம்பியுடன்‌ தாசரதியானுனும் சங்க வண்ண
நம்பியுடன்‌ பின்னடைந்து வந்தானும்‌–பொங்கு புனல்‌
ஒங்கு முடும்பை யுலகாரியனும்‌ அறந்
தாங்கு மணவாளனுமே தான்‌

என்னும்படி ஸெளப்ராத்ரத்தை யுடையராய்‌ யெழுந்தருளி யிருக்‌கிற காலத்திலே ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே ஸாத்விகராயிருப்பார்‌ பலரும் ஆச்ரயித்து ஸத் ஸம்பந்‌தத்தை யுடையராய்‌ :ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப:””’ என்று ஆநந்த நிர்ப்பரா யிருத்தார்கள்‌.

அவர்களில்‌
கூர குலோத்தம தாஸ நாயனும்‌,
மணப் பாக்கத்து நம்பியும்‌
கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌,
கோட்டூரிலண்ணரும்‌,
விளாஞ்சோலைப் பிள்ளையும்‌,
ஸாத்‌விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ தொடக்கமான சில அம்மையார்களும்‌,

திருவடிகளிலே ஆச்ரயித்த வன்று தொடங்கி அந்தரங்க ஸேவை பண்ணிக் கொண்டு அந்தே வாஸிகளாய்‌ அகலாமலிருந்தார்கள்‌. இப்படி இவர்களாலே ஸேவ்யமனராயிருக்கிற
பிள்ளை, பின்பு தம்முடைய க்ருபையாலே இவர்களை யழைத்து அந்தரங்கமாகக்‌ திருவாய் மொழியாகிற திவ்ய ப்ரபந்தத்துக்கு ஆறாயிரப்டி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி முப்பத்தாரறாயிரப்படி, என்கிற வியாக்கியானங்கள்‌ ப்ரவ்ருத்த மானதற்குக் காரணம்‌ இன்னபடியும்‌ இன்னபடியு மென்று அருளிச்‌ செய்தருளினார்‌ .

அதா்வது– திராவிட வேத ஸாகரமான திருவாய் மொழிக்கு நிபுணராய்‌ ‘பூர்விகரா யுள்ளவர் அனேகர்‌ ஸ்வ ஸ்வ புத்தி விஸ்தாராநுகுணமாக லக்ஷணங்களுக்கு படிமாவென்றுகந்து வ்யாக்யான மிட்டு வைத்தார்கள்‌.அவ்வளவே யன்‌றிக்கே இவற்றினுடைய ஸஹஸ்ரசாகோபநிஷத்‌ ஸமாகமத்வம்‌ ப்ரகடிதமாம்படி ஒரு ப்ரபந்தமிட்ட ருளும்படி திருக் குருகைப் பிரான்‌ பிள்னாளை எப்பெருமானார்‌
கடாக்ஷிக்க, அவரும்‌ அவதார விசேஷமென்னும்படி ஆழ்வார்‌ திருவுள்ளத்தை அடி யொற்றிக்‌ கொண்டு; ஆறாயிரப்படி- என்கிற வியாக்யானஞ்‌ செய்தருளினார்‌

இன்பு, அவரும்‌ மற்றுமுள்ள பெரியோர்களும்‌ ‘இன்னம்‌ இவ்‌ வர்த்த விசேஷங்களுங்‌ கூட்டி அனைவர்க்கும்‌ ஸூக்ரஹமாக அர்த்தமாம்படி ஒன்பதினாயிரப்படியாக ஒரு ப்ரபந்தமிட்டு
வையும்‌”! என்று பட்டருக்கு நியமித்து வைகக ; அவரும்‌ அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்துக்‌ கொண்டு மாதவர்‌ என்னும் திரு நாமத்‌தை யுடையராய்‌, ஸகல சாஸ்த்ர வித்தமராய்‌, ஸந்யஸித்து
வேதாந்தி என்னுந்‌ திருநாமத்தை யுடையராய்‌, பின்பு பட்டர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்து ஸர்வஜ்ஞராம்‌ திருவடிகளுக்கு அந்தரங்‌கராயிருக்க, இவரை பட்டர்‌ *’நம்‌ ஜீயர்‌” என்று அபிமானித்துப்‌ பெருமாளைத்‌ தொழ வெழுந்தருள, பின்னும்‌ சில ஜீயர்களும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ நிறைந்து நிற்க, பெருமாள்‌ உகந்தருளி அர்ச்சக முகேத இவரைக் கையைப்‌ பிடித்து, ‘வாரீர்‌ நஞ்ஜீயரே!’!என்று அருள் பாடிட்டருளி ”பட்டர்‌ திருவுள்ளப் படிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானஞ் செய்யும்‌” என்று நியமித்தருள ஆறாயிரப்‌படிக்கு கனகாபிஷேக மென்னும்படி ஒன்பதினாயிரப்படி செய்‌தருளினார்‌. அன்று முதல்‌ இவருக்கு நஞ்சியர்‌ என்று இதுவே திருநாமமாயிற்று,

பின்பு பட்டருக்கு ப்ராப்ய பூமி அணித்தாக, நஞ்சீயர் சோகித்து சிந்தித்தபடி:- நாம்‌ வார்த்தக்யத்தை யடைந்தோம்‌ -ஸ்வாமி பட்டருக்குச்‌ சிறு வயஸ்ஸாகையாேலே தர்‌சந ஸ்‌திதிக்குக்‌ குறைவில்லை, உத்தரோத்தரம்‌ தழைக்கு மென்றிருந்தோம்‌; அது போய்‌ இப்படி யாவதே!!’ என்று திருமுடி மோதி பட்டர்‌ திரு முன்பே சென்று திருவடிகளைப் பிடித்துக் கொண்டு க்லேசிக்க-பட்டரும்‌ அவரைக் கிட்ட வர வழைத்தருளி :’நீர்‌ சோகிக்க வேண்டா; தர்சந ப்ரவர்த்தகனா யிருப்பானொரு பிள்ளையைப்‌ பெருவீர்‌” என்‌றருளிச் செய்யக் கேட்டு ஜீயரும்‌ ஸமாஹிதராய்‌ திருவுத்தரீயத் தலைப்பை முடிந்து கொண்டு (பட்டர்‌ திரு நாட்டைந்‌தவாறே) பட்டருடைய கைங்கர்யத்தை அதி விஜ்ரும்பணமாக நடப்பித்தருளி, பின்பு ஒன்பதினாயிரப்படியை இன்னம்‌ இருபத்தி நாலாயிரப்படி ,முப்புத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களுக்‌கு இடம்‌ கொடுக்கத் தக்க அர்த்த பூர்‌த்தியுடனே பட்டோலை கொண்டு நிறை வேற்றி, இத்தை தல்லவலேகத்கிலே ஏறி யருளப் பண்ணி அநேக மதமாக ப்ரவர்த்திப்பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ நல்ல லேகரி விசாரித்தருள:

அவ் வளலிலே -பருஷக சக்ரவர்‌த்தி திருமகன்‌ கோயில் அருகே குடி இருந்து அனவரதம் ஸத்வநிஷ்டராய்‌, பண்டித பாமர ஸாதாரணமாக எல்லாரும்‌ ஆதரிக்கும்‌ படியான வைபவத்தை யுடையராய்‌ உபாதாந பரராய் தேவ ராஜர்‌ என்று ஓருவருண்டு; அவரை யழைத்து அவருக்குபதேசித்து அவரைக் கொண்டு ஏறி யருளப்‌ பண்ணுவியும்‌* என்று ஸ்வப்நமாக; *’இது ஆழ்வாருடைய நியமனம்‌” என்று உகந்தருளி, மறு நாள்‌ -இப்படி யொருவருண்டோ?” என்று அருகு நிற்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக்‌ கேட்டருள, அவர்களும்‌ உண்டென்று உடனே தேவ ராஜரை யழைத்து வந்து விட, ப்ரதமத்திலே *ஆ முதல்வன் இவன்‌ என்று கடாஷித்தருளி -ஒரு முறியைக்‌ கொடுத்து எழுத்து எழுதிக்‌ காட்டுமென்ன, -அவரும் ‘நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌, பட்டர்‌ திருவடிகளே சரணம்‌” என்று எழுதக் கண்டருளி யிருக்க, தேவராஜரும்‌, திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கிருபை பண்ணி வருள வேணும்‌‘ என்று விண்ணப்பம்‌ செய்து கொள்ள; உகந்து க்ருபை பண்ணி யருளி, திருவாய்மொழியினர்த்தத்தை ஸங்க்ரஹேண ஸாதித்தருளி, பட்டோலையையும்‌ அலேகத்தையும்‌ ஸாதித்தருளி நன்றாக ஏறி யருளப் பண்ணிக் கொண்டு வாரும்‌’ என்று விடை கொடுத்தருள; அவரும்‌ அக்கரைக் கெழுந்தளுவதற்காகப்‌ புறப்பட, ஆறு பெரு வெள்ளப்பட நீஞ்ச வல்லவராகையாலே ஒரு சாலைப்‌ பிடித்துக் கொண்டு பட்டோலையும் அலேகத்தையும்‌ திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்ச, வெள்ளம்‌ அதிகமாக, போரத் தளர்ந்து பட்டோலையும்‌ அலேகமும்‌ திருப் பரிவட்டத்துடனே (பெருக்கிலே விழுந்து விட, இவர்‌ போர கிலேஸித்து நொந்து! மெள்ள அக்கரைப்‌பட்டு, ‘ஆசார்யாபசாரம்‌ வந்ததே?’* என்று விழுந்து புரள இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கண்டு தேற்றி இவர்‌ திரு மாளிகையிலே சேர்க்க, தேவிகளும்‌ கண்டு அநு சோகித்து இருவருமுபவாஸமாயிருக்க, ‘பெரு நாளுக்குத்‌ திருவாராதன மின்‌றிக்கே யிருக்க வொண்ணாது ”* என்று தேவிகளறிவிக்க , அப்படியா வென்று கைங்கர்யத்தை நியமித்துத்‌ தாமும்‌ நீராடி யருளித்‌ திருமண்காப்பு சாத்திக்‌ கொண்டு திருவாராதனத்துக்கு எழுந்தருளி உபக்ரமிக்க, அலஸையினாலே நித்ரைபட , அவ்வளலிலே கோயிலாழ்வாரிலே யிருக்கிற ஸ்ரீரங்கராஜர்‌ திருவாய் மலர்ந்தகுளி, *வாரிர்‌| தேவராஜரே! நீ சோகிக்க வேண்டா; ஸம்புடமேறி யருளப்‌ பண்ணும்‌;நாம் முன்‌ நிற்கிறோம்‌” என்ன, “ஸ்ரீய:பதியாய்‌’” என்று தொடங்கி, “விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினான்‌” என்னுமளவாக ஒரு ஸூர்ணையைப் ப்ரஸாதிக்கப்‌ பெற்றுத்‌ தெளிந்து, ஸூர்ண நெட்டுருவாயிருக்க அத்தை அப்போதே லிகித்தருளி, திருவுள்‌ளம் உகந்து பெருமாளை யமுது செய்தருளப் பண்ணித்‌ தாமும்‌ அமுது செய்தருளி ஸ்ரீகோசம் ஏறி யருளப் பண்ணத் தொடங்கி நிறைவேற்றி, ஸ்ரீ கோசத்தைக்‌ கொண்டு புறப்பட்டு ஜீயரை தெண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ கோசத்தையும்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ உகந்தருளி திருவுள்ளத்துக் குகப்பான பேரைக்‌ கூட்டிக்‌ கொண்டு கடாக்ஷித்‌தருள: தாம்‌ ஸந்திக்தமாக வைத்த ஒரோ விடங்களிலுள்ள வாக்யங்‌களும்‌ அர்த்தங்களும்‌ நன்றாக இசைத்திருக்கக் கண்டு எல்லாரும்‌ உகந்து தேவ ராஜரை உள்ளே யழைத்தருளி, *’இதென்ன அற்புதம்‌? இதென்ன சாதுர்யம்‌?” என்று கேட்க, அவர்‌ இஸ் ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட பிற்பாடு நடந்த செய்திகளை யெல்லாம்‌ நடந்த படியே தப்பாமல்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டருளி -ஜீயரும்‌ உகந்து எழுந்திருந்து தேவ ராஜரை *நம் பிள்ளையோ! என்று கட்டிக் கொண்டு எல்லாருங்கூடி யெழுந்தருளி பெருஞ்‌ செல்வத்தைத்‌ திருவடி தொழுது நிற்க; தேவராஐருக்கு நம்பிள்னை என்று அருள் பாடிட்டு தர்சந ப்ரவர்த்தகத்வாபிஷேகம்‌ பண்ணி யருளி ‘உம்முடைய புத்தி விஸ்தார அநு குணமாகத்‌ திருவாய்‌ மொழிக்கு வ்யாக்யானமாம்படி உபந்யஸித்து நம்மிராமானுசன்‌ தரிசனச்தை வளர்த்‌துக் கொண்டு போரும்‌” என்று நியமித்து-பட்டர்‌ சரம காலத்திலே தர்சந ப்ரவர்த்தகருக்கென்று ஸாதித்‌திருந்த மோதிரத்தை நம்‌பிள்ளை திரு விரலிலே யிட அவரை யெல்லாருங்‌ கொண்டாடி ப்ரதிபத்தி பண்ணினார்கள்‌. இப்படி தர்சந ப்ரவர்த்தகராய்‌ ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி அதிசயத்‌தை யுடையராய்‌, அத்புத வ்யாக்யான வைபவராய்‌ எழுந்தருளி யிருக்கிறபடிகைக்‌ கண்டு அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஆச்ரயித்து, நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ? நம்பிள்ளை கோஷ்டியோ?”’ : என்னும்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியுடனே வாழ்ந்தருளும் காலத்திலே யுண்டான அப்ரதிம வைபவங்கள்‌ அனேகமா யிருக்கும்‌.

இப்போது பெரிய வாச்சான்‌ பிள்ளைக்கு (1167-1262-95 ஸம்வத்சரங்கள் எழுந்தருளி இருந்தவர்)நம்பிள்ளை ஒன்பதினாயிரப் படியுடனே சில அர்த்த விசேஷங்களைக் கூட்டி ப்ரஸாதிக்க,அவர்‌ அன்றைக்கன்றாடம்‌ பட்டோலை கொண்டு எழுதி நிறைவேறின பின்பு எல்லாவற்றையுங்கொண்டு வந்து ஸமர்ப்பிக்க-கடாக்ஷித் தருளி உகந்தருளி நல்ல அலேகத்திலே ஏறி யருளப் பண்ணி பின்னும்‌ அநேக ஸ்ரீகோசங்களையுமுண்டாக்கி பஹு முகமாக ப்ரவர்‌த்‌திப்பிக்கும்படி நியமித்தருளி அப்படியே நடவா நிற்கச்‌ செய்தே

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் –43-அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி–இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும் வ்யாவர்த்திக்கிறது –

ஐயரையும்‌ (வடக்குத் திருவீதிப் பிள்ளை) சிறியானாழ்வானப்‌ பிள்ளையையும்‌ (ஈ யுண்ணி மாதவர்‌) அழைத்து ஒன்பதினாயிரப்படி வாசியுங்கோள் ‘” என்ன; பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌! அடியேனுங்‌கூட ஸேவித்து வருகிறேன்‌” என்ன, “ஆனால்‌ பெருக்காம்‌” என்றருளிச்‌ செய்து உகந்து ஸாதித்தருளி; அன்றைக்கன்றாடம்‌ ஸாதித்த வர்த்தத்னத ஸ்வார்த்தமாகப்‌ (பரார்த்தமாக இல்லாமல்) பட்டோலை கொண்டு ஐயர்‌-வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை- சேர்த்துக்‌ கட்டி வைக்க; ஒரு நாள்‌ நம்பிள்ளையை அமுது செய்தருள விண்ணப்பஞ் செய்ய; உடனே புறப்பட்டருளி தாமே திருவாராதனஞ் செய்கிறோமென்று முயன்ற வளவிலே பட்டோலைக் கட்டைக் காணா, ஒரு ஓலையை வாங்கி வாசித்தருளி,“இதென்னன்‌ புது?!” என்று கேட்க, ஐயர்‌, ”தேவரீர் ஸாதித்‌தருளின அர்த்தத்தை விஸ்மரியாமைக்குக்‌ குறிப்பாக இட்டு வைத்‌தேன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய; **ஆகில்‌ திருவாராதனம்‌ நீரே செய்யும்‌” என்று நியமித்து பட்டோலைக் கட்டை யிறக்கி நெடும்‌ போது சோதித்து, பெரியவாச்சான் பிள்ளையையும்‌ சிறியாழ்‌வான் அப் பிள்ளையையும்‌ “நீங்கள்‌ இந்த விரசைப்‌ பார்த்துக்‌ கொண்‌டிருங்கோள்‌” என்று சடக்கென வமுது செய்தருளித்‌ தாமுமங்கே யெழுந்தருளி பின்னும்‌ தேடும் போது கடாக்ஷித்தருளி, “யானைக்‌ கோலஞ் செய்தாப் போலிருக்கிறது’” என்று ஒருவர்க்கொருவர்‌ அருளிச் செய்து கொண்டு உகந்திருக்கச்‌ செய்த நம் ஐயரை யழைத்தருளி, : “நீர்‌ இப்படிச்‌ செய்ததென்‌? ஆச்சான்‌ பிள்ளை பண்ணலாமோ? நாமும்‌ பண்ணுவோமென்று ஆக்ரஹித்துச்‌ செய்தது போலே யிருக்கிறது’ என்று பிள்ளை சீறி யருள, ஐயர்‌ நடு நடுங்கி சோகித்து மோஹித்துத்‌ தெளித்து ‘ஐயா! அடியேன்‌ அப்படிச்‌ செய்திலேன்‌; விஸ்மரித்தால்‌ பார்த்துக் கொள்ளச்‌ செய்தேன்‌” என்ன, ”அதற்கு இருபத்தி நாலாயிரப் படியுண்டே,- என்ன, :’ ‘அவிவேகம்‌ வந்தது”’என்று; திருவடிகளிலே விழ, க்ஷமித்‌தோம்‌:’ என்‌றருளிச் செய்து, ‘ ‘நீர்‌ ஒரு அவதார விசேஷமென்றிருக்கிறோம் ; நாம்‌ ஜீயர்‌ ப்ரஸாதமாகச்‌ சொன்ன அர்த்தத்தில்‌ ஒரு-ச-து-போடாமல்‌ எழுதினீர்‌;(தீபா உத்பன்ன ஜ்வாலை போல் 9000 படியே 36000 படியாக விரிந்தது ) உம்முடைய ஸாமர்த்யத்தை என்னென்று சொல்லுவோம்‌?” என்று மிகவும்‌ ப்ரியப்பட்டு,மாதவருக்கு ஓர் அதிசயம்‌ வேணும்‌”! என்று “திருவுள்ளம்‌ தோன்ற நமக்கு ப்ராண ஸுஹ்ருத்தாம்‌; ஜீயருடைய பூர்வாச்ரமத்தின்‌ திருநாமத்தை யுடையராய்‌ நமக்கு- அபிமதரா யிருப்பர் ரொருவரா கையாலே அவரைக் கொண்டு இத்தை ப்ரவர்த்திப்போம்‌!? என்ன ஐயரும்‌ மிகவுமுகந்து “அப்படியே செய்தருள வேணும்‌”” என்று தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, உடனே பட்டோலைக் கட்டை யெடுத்துச்‌ சிறியாழ்வானப் பிள்ளை கையிலே ப்ரஸாதித்தருனி, “இத்தை நாலைந்து அலேகத்திலே ஒரு ஊர்த்வமாம்‌ படி பண்ணி இத்தை பஹு முகமாகப்‌ ப்ரவர்த்‌திப்பியும்‌” என்றை நியமித் தருள; “அதற்கு அடியேன்‌ வல்லேனோ? அதிகாரங் கிடைக்குமோ?”என்றாற் போலே சில விண்ணபஞ் செய்ய, :’அது உமக்கு பரமோ?-ஜீயர் கடாக்ஷம்‌ முன் நிற்கும்‌ திரு நாமமுடையீரன்றோ? ஒரைதிஹ்யமுண்டு–கேளும்‌, துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பர்‌ ஸ்வப்நத்‌திலே பேரருளாளப்‌ பெருமாள்‌,

ஜகத் ரஷா பரேந அநந்தோ ஜநிஷ்யத் யபரோ முநி: |
ததரஸ்ரயாஸ் ஸதா சாரா ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥

உலகத்தைக்‌ காப்பாற்றுவதில்‌ ஊற்றமுடைய திருவனந்‌தாழ்வான்‌ [ராமாநுஜ முநிவராக மட்டுமன்றி] மற்றொரு முநிவராகவும்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. [அப்போது] அவரை ஆச்ரயிக்குமவர்கள்‌ ஸதாசாரமும்‌ ஸத்துவ குணமும்‌ தத்துவ ஜ்ஞானமும் உடையரா யிருப்பர் –என்று அருளிச்‌ செய்திருப்பது முண்டு,-திருவனந்தாழ்வான்‌ எம்பெருமானருடைய அவதாரமானாப்‌போலே இன்னமும் ஓரு அவதாரமும் செய்யப்‌ போகிறார்‌ -அவர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ இத்தை ப்ரவர்‌த்‌திப்பிக்கப் புகுகிறார்‌ -நீர்‌ ஓராண்‌ வழியாய்‌ நடததிப் போரும்‌” என்று பட்டோலைக்‌ கட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அவரும்‌ அஞ்சு (5) ஸம்புடமாக ஏறி யருளப்‌ பண்ணித்‌ தம் குமாரருக்குப்‌ பிரஸாதித்தருளினார்‌.

நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகளுண்டாயிருக்க, மூத்த தேவிகள்‌ ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இளைய தேவிகள் ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இங்ஙனே நடந்து செல்கிற நாளில் ஒரு நாள்‌ மூத்த தேவியாரை யழைத்து, ‘*நீ நம்மை புத்தி பண்ணி யிருக்கும்படி. சொல்லிக் காண்‌” என்ன, அவளும்‌ அஞ்ஜலித்து லஜ்ஜாபயங்களநுவர்த்திக்க , வணக்க வொடுக்கமுடனே ‘தேவரிீர்‌ நம்பெருமாளுடைய அபராவதாரம்‌ அடியேனுக்கு ஆசார்யர்‌” என்றும்‌, திருவடிகளிலே பண்ணும்‌ கைங்கர்யங்கள்‌ ஸத்தா தாரகமான ஆசார்யாநுவர்த்தநம்‌ * என்றும்‌ நினைத்திருப்பன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘*நல்லது” என்று கேட்டு, இளைய தேவியாரை யழைத்து “நீ நம்மை நினைத்‌திருக்கும்படி யென்‌?” என்று கேட்டருள , அவளும்‌ லஜ்ஜாபயங்களுடனே ‘தேவரீர்‌ பர்த்தா,அடியேன்‌ பார்யை என்றன்றோ நினைத்திருக்கும்‌ படி என்று விண்ணப்பஞ்‌ செய்யக்‌ .கேட்டு, பிள்ளை மூத்த தேவிகளைப்‌ பெருமாள்‌ தளிகைக்கு ப்ரதி தினம்‌ செய்வதாக நியமித்து இளைய தேவியை தத் பரிசாரக க்ருத்யையாக நியோகித்து இப்படிச் செல்லுகிற வளவிலே மூத்த தேவி ருதுவாய்‌ தூரஸ்தையான போது இளைய தேவி தளிகைக்குச்‌ செய்தால்‌ எம்பெருமானைத்‌ திருவடி விளக்கி அமுது செய்வித்தருளித்‌ தமக்கபிமதராய்‌ உத்க்‌ருஷ்ட ஜந்ம ஜாதராய்‌ வேதகப் பொன் போலே யிருந்துள்ள பரம ஸத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவாக்ரகண்யர்‌ கர ஸ்பர்ஸமாக்கி அமுது செய்தருளுவர்‌. இத்தால்‌ இளைய தேவிகளுக்கு பாவ சுத்தி போராமையாலே பகவத் த்ருஷ்டி பூதமானாலும்‌ நியத ஸத் பாத கர ஸ்பர்சமும்‌ அவச்யாபேக்ஷிதமென்று கருத்து.

நம்பிள்ளைக்கு இளைய தேவிகளிடத்திலே ஒரு குமாரர்‌ திருவவதரிக்க, முதலிகள்‌ வந்து பிள்ளைக்கறிவிக்க, அருகிருந்த திருப்‌பேராச்சான்‌, ”அடியேனுக்கு ஒரு திருத் தமையனார்‌ திருவவதாரம்‌”!என்று உகந்தருளினார்‌. இத்தால்‌ ஆசார்ய புத்ரன்‌ அத்ய ஜாதனேயாகிலும்‌ பஹுமந்தவ்ய னென்று கருத்து. பிள்ளையும்‌ ஜாத கர்மம்‌ செய்து, பன்னிரண்டாம்‌ நாள்‌ நாம கரணத்திலே தூவி யம்புள்‌ என்று திரு நாமம்‌ சாத்தி யருளினார்‌.

நம்பிள்ளை பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ மடத்திலே யொரு நாள்‌ எழுந்தருளி யிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும, “ஆழ்வாருடைய அவஸ்தை யுண்டாய்ப் போர வேண்‌டியிரா நின்றது; ப்ராப்ய ஸித்திக்கு இப்போது ஸ்த்ர்யந்ந பாநாதிகளாலே கூடி யிருக்கிற , நாங்கள்‌ என்‌ செய்யக் கடவது?‘ என்று விண்ணப்‌பஞ் செய்ய பிள்ளையும்‌, ”இங்கு அவஸ்தை பிறந்ததே யாகிலும்‌ (பிறக்காமல் இருந்தாலும் )ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே ஸ்‌தூல சரீரம்‌ கழித்து ஸூக்ஷ்ம சரீர மோசநத்துக்கும்‌ கைங்கர்ய ப்ராப்திக்கும்‌ நடுவே அவ் வவஸ்‌தையைப்‌ பிறப்பித்து எம்பெருமான்‌ காரியம்‌ செய்யும்‌” என்‌றருளிச்‌ செய்தார்‌. இதுக்கு ப்ரமாணம்‌ ‘ந கலு பாகவதா யம விஷயம்‌ கச்சந்த்’‘[பாகவதர்களால் வைஷ்ணவர்கள்‌ யமனுடைய தேசத்தை யடையார்‌ ] என்றும்‌, அவன்‌ தமர்‌ எவ் வினையராகிலும்‌ எம் கோனவன்‌ தமரே என்றொழிவதல்லால்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்‌ பட்டறியார்‌ கண்டீர்‌ [முதல திகு. 53) என்னுமிதுவே யிறே. ஆகையால் இவ் வாத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தில்‌ ஊன்றிப் போரும்‌ எம்‌ பெருமான்‌ ஸ்‌தூல சரீர வியோகாதந்தரத்திலே அர்ச்சிராதி பத கமந காலத்திலே ஸ்வ சரீரோபேக்ஷயைப்‌ பிறப்பித்து ஸ்ரீமாலாகாரர்க்குத்‌ தன்‌ திருவடி வழகைக் காட்டினாப் போலே இவனுக்கும்‌ வடிவழகைக் காட்டி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை யுண்‌டாக்கிக்‌ கைக் கொண்டருளும்‌ படி.

நம்பிள்ளை பெரிய கோயில்‌ வள்ளலாரைக் குறித்து *குலந்தரும்‌[திருமொழி 1-1-9] என்கிற பாட்டில்‌ முதற்பதத்துக்குத்‌ தாத்பர்யமருளிச்‌ செய்ய வேணும்‌ என்ன, அவரும்‌, “’முருட்டுத் திருப்பதியனான வென்னை நம்பூர்‌ குலத்துக்கு சேஷமாக்கினால்‌ குலந்தரும்‌:’ என்றருளினார்‌. அதாவது, பண்டைக் குலத்தைத்‌ தவிர்த்து தொண்டக் குலத்திலே மாசில்‌ குடியிலே ஸ்ரேஷ்ட ஜந்ம ஜாதனாய்‌ ஆசார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோகார்‌ ஹனாகை–ஸ்ரீ வைஷ்ணவோத்தம குல மென்றநுஸந்திக்க வேணு மென்‌றபடி-

*அவதாரமிருக்கும்படி யென்‌?’ என்று முதலிகள்‌ நம்பிள்ளையைக்‌ கேட்க, பிள்ளையும்‌, *மெய் வெளுத்து நாக்கு வற்றி யிருக்கும்‌’என்றருளினார்‌. “முதலிகளும்‌ “அது வென்‌?‘ என்று கேட்சு, “அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்திருக்கும்‌; பெற்றாலும்‌ ப்ரயோஜநாந்தர பரராகையாலே மயிர்ப்பட்ட சோறென்று நாக்கு ‘வற்றி யிருக்கும்‌’? என்றருளினார்‌. ஆகையால்‌ ஆசார்யவானான
அநந்ய ப்ரயோஜநனா யிருக்குமதிகாரி எம் பெருமான்‌ தேடிப் பார்க்‌கிலும்‌ துர் லபனென்‌றபடி.

முதலிகளெல்லாருங் கூடி பெரிய கோயில்‌ வள்ளலாரை ஸ்ரீவைஷ்ணவர்களென்று இவர்களுக்குத்‌ திரு நாமமாகைக் கடி யென்‌?’,என்று கேட்க -ஸ்ரீ யபதி புத்ரராகையாலும்‌, ஸ்ரீ மான் பிதாவாகையாலும்‌, ஸ்ரீ மாதா வாகையாலும்‌ ஸ்ரீமானுடைய வைபவத்தை யறிகையாலும்‌ ஸ்ரீமான்‌ இவர்கள் வைபவ மறிகையாலும்‌, ஸ்ரீமத் பதத்திலே பிறக்கையாலும்‌, ஸ்ரீ புருஷகாரமாக வளர்கையாலும்‌ இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்களென்று நிரூபகமாய்த்து!” என்று அவரருளிச்‌ செய்தாரிறே.

நம் பிள்ளையைச்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ‘*ப்ரபந்நனுக்குத்‌ தஞ்சமாக விச்வஸித்திருக்குமர்த்தமேது?” என்று கேட்க பிள்ளையும்‌, “ஸகல ப்ரமாண ஸார தமமான மந்த்ர ரத்நார்த்தத்தையே
விச்வஸித்திருப்பான்‌. த்வயத்திலர்த்தத்தை விச்வஸித்திருந்‌ தானால்‌ எம்பெருமானைப் பற்றியிருக்கும்‌; ஆசார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி யிருக்கும்‌; இனி எம்‌பெருமானையே பற்றி யிருக்கை -தேவதாந்தர பஜந ஸமமென்று ஆசார்யன்‌ திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க, எம்பெருமாள்‌ இவனளவிலே பிச்சேறி யிருக்கும்‌. இவன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ பற்றி யிருக்க எம்பெருமானோபாதி ஆசார்யனும்‌ இவன்‌ மேல பிச்சேறி யிருக்கும்‌. இத்தால் , தத் தேசிக ததீய (பகவத் ஆச்சார்ய பாகவத மூன்றுக்கும் இம் மூன்று பதங்கள்)சரம நிஷ்டை யுண்டாகவே அம் மூவரும்‌ இவன்‌ விஷயத்திலே ஆஸக்தராவர்சுள்‌- என்‌றருளிச் செய்தார்‌,

நம்பிள்ளை யருளிச் செய்த வார்த்தை:– ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஈச்வரனுக்கு ஆத்ம ஸமாநர்‌; ப்ராண ஸமாநர்‌; திருஷ்டி ஸமாநர்‌,பாஹு ஸமாநர்‌; ஆபரண ஸமாநர்‌; ஆயுத ஸமாநர்‌; பாத ஸமாநர்‌”
பாத ரேகா ஸமாநர்‌; பாதுகா ஸமாநர்‌; சாயா ஸமாநர்‌; ஜிஹ்வா ஸமாநர்‌,

அதெங்ஙகனே யென்னில்‌;
*ஜ்ஞாநீத்வாத்மைவ மேமதம்‌ (கீதை 7-18)பகவத் ப்ராப்தி காமனான ஜ்ஞாநி எனது ஆத்மா வென்பது என் கருத்து] என்கிற அநந்ய ப்ரயோஜந ஜ்ஞானத்தைப்‌ பற்றவும்‌-ஆத்ம ஸமாநர்‌-என்னது உன்னதாவி உன்னது என்னதாவி – –;
*மம ப்ராணா ஹி பாண்டவா: (பாரதம்‌ உத்‌, 90-32)[பாண்டவர்கள்‌ எனது ப்ராண பூதர்கள்‌ அல்லவா ] என்கிற பராபிமானத்தைப் பற்றவும்‌ -ப்ராண ஸமாநர்‌-;
*யே ப்ரபந்நா மஹாதமாநஸ்தே மே நயந ஸம்பத: [ப்ரபந்நர்களான மஹாத்மாக்கள்‌ எனக்குக்‌ கண்ணான செல்வங்கள்‌ ] என்கிற பாமர ஜநோஜ்ஜீவந கர கடாக்ஷ த்‌ருஷ்டித்வத்தைப்‌ பற்றவும்‌–திருஷ்டி ஸமாநர்‌-;
*ராமஸ்ய தக்ஷிணோ பாஹு. (ராமா , ஆ, 34-13) [ராம பிரானுடைய வலது கை போன்றவர்‌ இளைய பெருமாள்‌] என்கிற ததிச்சா கத ப்ரவர்த்தந பாஹுத்வத்தைப்‌ பற்றவும்‌)–பாஹு ஸமாநர்‌;-
சாப மாதாயா ஆத்ம விபூஷணம்‌ [தமக்கு ஆபரணமாயிருக்கிற தநுஸ்ஸை வாங்கி] என்ற ஆபரணகோட்யந்தர்‌ பாவத்தைப்‌ பற்றவும்‌–ஆபரண ஸமாநர்‌;-;
*அலர்மகள்‌ கேளவன்‌ கையாழி-இடையே இராமானுசமுநி (இரா, நூற்‌ 33) என்கிற ப்ரதிபஷ நிரஸன சீல ஸுதர்சந ஸாம்யத்தைப்‌ பற்றவும்‌-ஆயுத ஸமாநர்‌=; *ஜங்கம ஸ்ரீவிமாநாநி ஹ்ருதயாநி மநீஷிணாம்‌ [ஜ்ஞானிகளின்‌ இதயங்கள்‌ எம்பெரூமானுக்கு நடமாடும்‌ ஸ்ரீவிமானங்கள்‌ –கர்ப்ப க்ருஹங்கள்‌ ] நடையாவுடைத்‌ திருநாரணன்‌ (திருவாய்‌ 3-7-4) என்கிற கௌரவத்தைப்‌ பற்றவும்‌-பாத ஸமாநர்‌–;
ஸ்ரீ ய:பதி பதத்வந்தத்வங்களுக்கு “சடகோபன்‌”! என்கிற பாதுகா த்வத்தைப்‌ பற்றவும்‌-பாதுகா ஸமாநர்‌–;
*நிழலும் அடி தாறுமானோம்‌
(பெரிய“திரு 31) என்கிற அவிநா பாவ ப்ராதீந ஸத்தாதிமத்தையைப்‌ பற்றவும்‌–பாத ரேகா ஸமாநர்‌-சாயா ஸமாநர்‌-;
*ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாமஸ்நாமி ஷட் ரஸங்களையும்‌ பக்தனுடைய ரஸநேந்தரியமான நாக்கிலே புஜிக்கிறேன்‌ ]என்ற ஸ்வாநுபவ ஸாதநத் வத்தைப்‌ பற்றவும்‌ -ஜிஹ்வா ஸமாநர்‌ -கண்டு தானே அருளுகிறான் -அனைத்தும் ஸ்ரீ பக்தாநாம் என்று இருப்பவன் அன்றோ-ஜிஹ்வாத் யகில அவயவ ஸமானர் களிறே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌.

ஸ்ரீவைஷ்ணவத்வமாவது-மூன்று ப்ரகாரமாயிருக்கும்‌,-எங்ஙனே யென்னில்‌ ஸத்கார யோக்யரென்றும்‌,
ஸஹவாஸ யோக்யரென்றும்‌, ஸதாநுபவ யோக்யரென்றும்‌.

இதில்‌ ஸத்கார யோக்யராவார்‌-ரூப தாம ப்ராதாத்யர்‌, உச்சாரண ப்ராதாந்யர்‌,அபிமானப்‌ ப்ராதாந்யர்‌, ஸஹவாஸ யோக்யராவார்‌–ஜ்ஞாத ப்ராதாந்யர்‌,அனுஷ்டான ப்ராதாந்யர்‌, அங்கீகார ப்ராதாந்யர்‌,
ஸதாநுபவ யோக்யராவார்‌ – ஆர்த்தி ப்ராதாந்யர்‌, அபிநிவேச ப்ராதாந்யர்‌- அபிருசி ப்ராதாந்யர்‌.

இதில்‌ த்யாஜ்யோபாதேயத்தைத்‌ தெளிய வறியாதவர்களாய்‌ ஸம்பந்த மாத்ரமே யானவர்கள்‌ நமஸ்கார யோக்யர்‌-தெளிந்த ஜ்ஞாநிகளான ஸ ப்ரஹ்‌ம சாரிகள்‌ *போதயந்த:பரஸ்பரம்‌ (கீதை 10-9) பண்ண யோக்யர்‌, ஆசார்யனும்‌, ஸதாசார்ய ஸத்ருசரும்‌ உத்தேச்ய தயா அநுவர்த்தநீய ரென்ற படி.

(நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான்
—திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே
–மா முனிகள் அருளிச் செய்தது)

இனி ஸ்ரீவைஷ்ண விஷயமாக த்ரிவித கரணங்களாலும்‌ அபராதம்‌ பண்ணாதொழிவான்‌. ப்ரஹ்ம ஹத்திக்கு சிகா யஜ்ஜோவீத தர விப்ர மாத்ரமே போருமாகையாலே பாகவதாபசாரத்துக்‌கும்‌ ரூப நாம தர வைஷ்ணவத்வ மாத்ரமே போரும்‌ -ப்ரஹ்மவிதக்‌ரேஸரை ப்ரபதந்நாதிகாரி விஷயாபாசாரம்‌ உடலும்‌ உயிரும்‌ பிரியும்‌படியாய்‌ ஸத்தாஹாநியாம்‌படி யாயுமிருக்கும்‌. *தஸ்ய ப்ரஹ்ம விதாகஸா [அந்த ப்ரஹ்ம ஜ்ஞாநியபசாரத்துக்கு] *ஸங்கே ப்ருஸம்‌ ப்ரஹ்ம விதோ வமாநாத்‌ [ப்ரஹ்ம ஜ்ஞானியை அவமதிப்பதாலே உண்டாயிற்றென்று சங்கை பண்ணுகிறேன்‌ ] என்றும்‌, *ஹந்தி ஸரோயம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹ ததிக்ரம: [மஹான்களிடத்தில்‌ அபசாரமானது புருஷனுடைய ஸமஸ்த மங்களங்களையும்‌ நாசமடைவிக்கும்‌] என்றும்‌ இந்த பாகவதாபசார விஷயமாக
ஸ்ருதி ஸ்ம்ருதி தீஹாஸ புராணாதிகளிலே ப்ரமாண சதங்கள்‌ கோஷியா நின்றதிறே, *வையத் தேவரான இவர்கள்‌ பாத தூளி பட்டு இவ் வுலகம்‌ பூதமாம்‌ படி) *ஸ்ரீதரஸன் தொல்‌ புகழ் பாடி ஸவிலாஸ ஸஞ்சாரம்‌ பண்ணி வருமது கண்டு; *த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா: [அசுரர்கள்‌ ஓடுகிறார்கள்‌, தேவர்கள்‌ வணங்குகிறார்கள்‌] என்றும்‌, *உன் தமர்க் கென்றும்‌ நமன் தமர்‌ கள்ளர்‌ போல்‌ (திருமொழி 8-10-7) என்றுஞ் சொல்லுகிறபடியே தூரே-இவர்களைக்‌ கண்ட மாத்திரத்தில்‌ க்ரூரரான அஸுர ராஷஸ யம படாதிசள்‌ காடேறி விழுந் தாடவும்‌, ஜ்ஞாநாதிகாரன தேவ ருஷி ஜாதியிலுள்ளார்‌ அஞ்ஜலித்து விரும்பி ஸேவிக்கும்‌ படியுமிறே இவர்கள்‌ வைபவமிருப்பது என்‌றருளினாரிறே

ஒருகால்‌ யதி ராஜ தாஸர்‌ பிள்ளை திருமாளிகைக்கு நம்பிள்ளை எமுந்தருளி அவருடைய ஸம்பத்தைக்‌ கண்டு உகந்தெழுந்தருளி யிருக்க ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ‘(இதுக்கடியென்‌?” என்று கேட்க,பிள்ளையும்‌, ‘த்ருஷ்டத்தில்‌ தனக்குண்டான ஸம்பத்தைத்‌ தனக்கே என்கை நரக ப்ராயம்‌; தனக்கும்‌ எம்பெருமானுக்கு மென்கை ஸ்வர்க்க ப்ராயம்‌; அவனுக்கும்‌ அவனடியாருக்கு மென்கை பரமபத ப்ராயம்‌” என்றருளினார்‌. ஆகையாலே தனக்குண்டான ஸம்பத்தைத்‌ ததீயருக்குமாக்கி நெய்யமரின்னடில்‌ நிச்சல்‌ பாலொடு (திரு வாய்‌ 8-8-2) என்கிற மாற்றிலி சோறிட்டுத்‌ திருமாலடியார்களைப்‌ பூசிக்கைக்கு அவ் வருகு பட்ட தொன்றுமில்லை யிறே என்று கருத்து-(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம் -கர்தவ்யம் இருவருக்கும் -இதனால் அது இல்லை)

இப்படி பிள்ளை *ஊரும்‌ நாடும்‌ உலகமுமெல்லாம்‌ கலி யிருள்‌ நீங்கிப்‌ பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருகும்படி எல்லாரையும்‌ திருத்தித்‌ திருமாலுக்கே யாக்கிச்‌ சிறிது காலம்‌ வாழ்ந்தருளி, திருமேனியிலே நோவு சாத்தி மிகவும்‌ அவஸந்நராய்‌ முதலிகளெல்லாரையும்‌ தண்டனிட்டு தீர்த்தங் கொண்டு, அமுது செய்யப் பண்ணி முதலிகள்‌ சேஷமும்‌ அங்கீ கரித்தருளி திருநாட்டுக்‌ கெழுந்தருளும் போது ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ ப்ரஹ்‌மவல்லி, சூழ்‌ விசும்பணிமுகில்‌ முதலாக ஸேவிக்க, கோயிலுக்கு நேரே நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ திருமடியிலே திருமுடியையும்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ திருமடியிலே திருவடிகளையும்‌ வைத்துக்‌ கண்‌ வளர்ந் தருளி நஞ்சியர்‌ திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ப்ரஹ்‌ம ரந்த்ரத்தாலே திருநாட்டுக் கெழுத்தருள; பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவிதிப் பிளளை பட்டர்‌, வடக்குத் திருவீதிப்‌ பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ முதலாக எல்லாரும்‌ கடலோசைப்‌ போலே பெரு மிடறு செய்து கூப்பிட்டுக் கொண்டு விழுந்து ஆசார்ய விரஹ அஸஹராய்‌ மோஹித்துக்‌ கிடந்து சதைர்‌ மோஹந்‌ தெளிந்து சோகாகுலராய்‌ கண்ணீர்‌ பெரு வெள்ள மிட்டுப்‌ பெருக பஹுதா ப்ரலாபித்துத்‌ தங்களிலே தேறி நின்று,பரியட்டம்‌ திருமாலை யுடனே பெருமாள்‌ பரிகர மனைத்தும்‌ வந்து ஸேவிக்க பிள்ளை குமாரர்‌ தூவியம் புள்ளைக்‌ கொண்டு ப்ரஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி யருளி ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும்‌ திருமுடி விளக்குவித்துக்‌ கொள்ள;

நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌ திருமுடி விளக்க வைத்துக்‌ கொள்ள, அவருக்கு தேரே ப்ராதாவா யிருப்பாரொருவர்‌ (இவரே சர்வஞ்ஞா பட்டர் -வாக் விஜய பட்டர் இவரது தமையனார் -இருவரும் வேத வ்யாஸ பட்டரின் திருக் குமாரர்கள் )பட்டரைப்‌ பார்தது, திருக் கலி கன்‌றி தாஸர்‌ பரம பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள்‌ கூர குலத்திலே பிறந்தவரொருவர்‌ தலை க்ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டது அவத்யமன்றோ? கூர குலத்துக்‌கு இழுக்கன்றோ?” என்ன, பட்டரும்‌ அவரைப்‌ பார்த்து ‘ அப்படியா! ஐயோ உங்கள்‌ கூர குலத்துக்கிழுக்காய்ப்‌ பிறந்தேனே; இக்‌ குறையை நீர்‌ என்றைக்குத்‌ தீர்த்துக்‌ கொள்ளக் கடவீர்‌?’” என்று வ்யதிரேகம்‌ சொல்லிப்‌ போக விட, அவர்‌ இத்தைப்‌ பொறுக்க மாட்டாமல்‌ பெருமாள்‌ ஸன்னிதியிலே சென்று லிண்ணப்பஞ்‌ செய்ய அத்தைப்‌ பெருமாளும் கேட்டு பட்டரை யழைத்து வர விட்டு அர்ச்சக முகேந” தாமிருக்க நீரிப்படிச்‌ செய்யலாமோ?” என்ன, பட்டரும்‌, “பெரிய திருவோலக்த்திலே அடியேன்‌ செய்த முறை கேட்டைப்‌ பொறுத்தருள வேணும்‌” என்று தண்டனிட பெருமாளும்‌ ‘இதென்‌ நினைத்துச்‌ சொல்லுகிறபடி?” என்று கேட்டருள, இவரும்‌, ‘-பிள்ளையையும்‌ அடியேனையும்‌ பாராதே ஸர்வஜ்ஞரான தேவரீரிப்படிக்‌ கேட்டருளுவதே! நாயன்தே! நம்பிள்ளை திருநாட்டுக் கெழுந்தருளினால்‌ அவர்‌ திருவடிகளில் ஆச்ரயித்த நான்‌ ஆழ்வானுடைய சேஷத்வ, பாரதந்தர்யத்துக்குகத் தகுதியாக கூர குலத்திலே பிறந்த பின்‌ தாஸ்ய க்ருதயமான மோவாயும்‌ முன்கையும்‌ வபதம்‌ பண்ணுவித்துக்‌ கொள்ள வேண்டியிருக்க, அத்தைச்‌ செய்யாதே சிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம்‌ ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டதுக்கு தேவரீர்‌ முனிந்தருளக்‌ கூடுமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய பெருமாளுமது கேட்டு இசைந்து ஸந்துஷ்டராய்‌ பட்டருக்கு தீர்த்தம்‌ திருமாலையுடனே பரியட்டமும்‌ ப்ரஸாதித்து உபலாளித்‌துத்‌ திருமாளிகை யேறப்‌ போக விட்டருளினார்‌. அதந்தரம்‌ பிள்ளைக்குப்‌ பெருக்கத்‌ திருவத்யயதம்‌ நடத்தி யருளினார்கள்‌.

லோகாசார்யன்‌ என்று திரு நாமம்‌ பெற்ற தன்னேற்றமும்‌-அரிய வருளிச்செயல்‌ பொருள்களறிந்துரைக்கப்‌ பெற்ற தன்னேற்றமும் – பரமபதம்‌ தம்‌ சிறுமுறிக்குச்‌ செல்லப் பெற்ற தன்னேற்‌றமும்‌ நம்பிள்ளைக்கன்றி மற்றொருவருக்கு மில்லையிறே.
இவர்‌ தனியன்‌,
வேதாந்த வேத்யாம்ருத வாரி ராஸோ : வேதார்த்த ஸாராம்ருத பூரமக்ர்யம்‌ |
ஆதாய வர்ஷந்தம் அஹம்‌ ப்ரபத்யே காருண்ய பூர்ணம்‌ கலி வைரி தாஸம்‌

[நஞ்சீயராகிய- அமுதக் கடலினிதும்‌ உயர்த்த வேதாந் தார்த்த சாரமாகிற அமுத வெள்ளத்தைக்‌ கொண்டு வர்ஷிக்குமவராய் கருணையால் நிறைந்துள்ள திருக்கலிகன்றி தாஸரை தஞ்சம் அடைகிறேன் –

நமாமி தெள மாதவ ஸிஷ்ய பாதெள யத் ஸந்நிதம்‌ ஸூக்தி மயம்‌ ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்ய ஸ்திதி மாத்ரி யந்தே வைகுண்ட ஸம்லார விமுக்த சித்தா: ॥

[யாதொரு நம்பிள்ளை யுடைய ஆழ்வாஸர் ஆசார்ய ஸ்ரீ ஸூக்திகளால் நிறைந்த ஸன்னிதியில்‌ அந்வயித்தவர்கள்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ ஸம்ஸாரத்திலும்‌ செல்லாத மனத்தினராய்‌ அந்த ஸன்னிதி யிலேயே நிலையான இருப்பை ஆதரிக்கிறார்களோ அந்த மாதவ (நஞ்சீயர்‌) சிஷ்யரான நம்பிள்ளையின்‌ திருவடிகளை வணங்குகிறேன்‌]

வார்த்த உஞ்ச வ்ருத்த்யாபி யதீய கோஷ்ட்யாம்‌ கோஷ்ட் யந்தராணாம்‌ ப்ரதமா பவந்தி |
ஸ்ரீமத் கலி த்வம்ஸந தாஸகாம்கே தஸ்மை கஸ்‌ஸ ஒக்தி மஹார்ணவாய

[யாதொரு நம்பிள்ளையின்‌ கால க்ஷேப கோஷ்டியில்‌ பிறக்கும்‌ வார்த்தைகளில்‌ பிஷையாவது பெற்றவர்‌ (சிறிதாவது பெற்றால்‌ அது கொண்டு) இதர கோஷ்டிகளில்‌ தலைவர்களாக ஆகிறார்களோ அந்த ஸ்ரீஸூக்தி மஹார்ணவரான (ஆழ்வாராசார்ய வசனங்கள்‌ நிறைந்த பெருங்கடலான) திருக்கலிகன்றி தாஸர்‌ என்ற திருநாமமுடைய அந்த நம்பிள்ளையை வணங்குகிறேன்‌ ]

நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்‌
வஞ்சக் குறும்பின்‌ வகை யறுத்தேன்‌ மாய வாதியர் தாம்‌
அஞ்சப் பிறந்தவன்‌ சீமாதவனடிக் கன்பு செய்யும்‌
தஞ்சத் தொருவன்‌ சரணாம் புயமென்‌ தலைக் கணிந்தே
-இயல்பா சாத்துமுறைப் பாடல்-

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரைப் பார்த்து உமக்கு ஆசார்ய விஷயத்தில்‌ க்ருஜ்ஞ்தை எத்தனை நாள்‌ நடக்கும்‌?” என்று கேட்க, பட்டரும்‌ “நம்பிள்ளை திருவடிகளில்‌ உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்‌மபாவி (ஆத்மாவுள்ளவரை–நித்யமாக) நடக்கும்‌ என்ன, அவரும்‌, ஆசார்ய விஷயத்தில்‌ உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவியோ! யாவதாத்ம பாவியோ!!” என்று ஈடுபட்டு திருவம்ச ப்ரபாவத்தாலே தெளிந்து பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஜ்ஞாநாதிகராய்‌ விட்டார்–

பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வைபவம் –
அனந்தரம்‌ பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகளைக்‌ கூட்டிக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தர்சதம்‌ நிர்வஹித்தருளா நிற்க, நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையைப்‌ பார்த்தருளி, ”குரு பரம்பரையையும்‌ த்வயத்தையும்‌ உபதேசித்தவர்‌களோடு கேட்டவர்களோடு வாசியற ‘உத்தேச்யர்‌’ என்று ப்ரஸாதித்தீர்‌. பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ உம்மை அநுவர்‌த்‌திக்கிறதற்கு என்‌ நினைந்திருப்பீர்‌?’” என்று கேட்டருள, ஆச்சான்‌ பிள்ளையும்‌, அடியேன்‌ அஹங்காரி யாகையலே(ஸாத்விக அஹங்காரம்) அடியேனுடைய அபிப்ராயத்தாலும்‌, ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்டென்று நினைத்திருப்பன்‌, ஈச்வரன்‌ பெற்ற பிறவியாகையாலே ஸ்ரீவைஷ்ணவன்‌ என்று நினைத்திருக்கும்‌. (இனி இவர்கள்‌ என்‌ நினைத்‌திருக்கிறார்கள்‌?! என்று கூசிக் கொண்டிருக்கும்‌. இவர்கள்‌ என்னைக் கண்டு அநுவர்த்‌திக்கையாலே இவர்கள்‌ பக்ஷத்தாலும்‌ ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்‌டென்றிருந்தது. ஆக, திரிவிதாபிப்ராயத்தாலும்‌ அடியேனுக்கு முப்புரி யூட்டின ஸ்ரீவைஷ்ணவத்வமுண்டென்று நினைத்திருப்பன்‌’ ”என்றருளினார்‌ ஆக, தரிவிதாபிப்ராயத்தாலும்‌ ஸ்வ வைஷ்ணவத்வம்‌ ஸித்தமாய்‌, ஸ்வ ஸ்லாக்யதா புத்தி ரஹிதமுமான புத்தி விசேஷம்‌ சொல்லப்பட்டது.

ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ திரள விருந்து “நாம்‌ லீலைக்கு விஷயமோ? இரக்கத்துக்கு விஷயமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘உடன்பட்டிருந்தோமாகில்‌ லீலைக்கு விஷயமாகிறோம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. [ஆச்சான்‌ பிள்ளையும்‌ -அஸ்ப்ருஷ்ட அஹங்காரரான நித்யரும்‌, நிவ்ருத்த அஹங்கரரான் முக்தரும்‌ அவன்‌ இனிமைக்கு விஷயமாகிறார்கள்‌. அஹங்கார மமகார வச்யராய்‌ இருந்து வைத்து அக் குறையுங்‌ கூட அறிய மாட்டாத ஸம்ஸாரிகள்‌ லீலைக்கு விஷயமாகிறார்கள்‌- ஸதாசார்ய ப்ரஸாதமடியான பகவத் ப்ரஸாதத்தாலே அஹங்கார மமகாரம்‌ அறிய வேணுமென்றிருக்கிற நாம்‌ (முமுஷு)௮வன்‌ இரக்கத்துக்கு விஷயமாகிறோம்‌ என்றருளிச் செய்தார்‌]. ஆக, ஸர்‌வ சேதனரைரயும்‌,சர்‌வேஸ்வரன்‌ அஹம்‌ மமதா புத்தி முக்தி விரக்தி யாஸக்தி விசேஷத்‌தாலே ஸ்வ மாதுர்ய காருண்ய லீலா விஷயமாக்கி விநியோகிக்கும் என்றபடி –

ஆச்சான்‌ பிள்ளை கோஷ்டியிலே சிலர்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌-எங்களுக்குத் தஞ்சமா யிருப்பதொரு வார்த்தை யருளிச் செய்ய வேணும்‌” என்ன, அவரும்‌, ‘*கலங்குகிறவனும்‌, கலக்குகிறதும்‌, கலங்கிக் கிடக்கிறவர்களும்‌, தெளிவிக்கறவனும்‌ தெளிகிறவனும்‌ தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது. இதில்‌ கலங்குகிறவன்‌-ஜீவாத்மா; கலக்குகிறது–அசித்து; கலங்கி இருப்பர்கள்‌–ஸம்ஸாரிகள்‌; தெளிவிக்கிறான்‌–ஆசாரியன்‌; தெளிகிறான்‌ சேதனன்‌; தெளிந்திருக்கிறான்‌–ஈச்வரன்‌, ஆகையாலே ஆசார்‌யோபதேசேந தெளிந்தவன்‌ கலங்குகிற தன்னையும்‌ கலக்குகிற ப்ரக்ருதியையும்‌ கலங்கிக் கிடக்கிற ஸம்ஸாரிகளையும்‌ தஞ்சமன்‌றென்று கை விட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும்‌ தெளிந்திருக்கும்‌ ஈஸ்வரனையும்‌ பற்றுகை காண்‌ இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்‌றருளிச் செய்தாராயிற்று.

ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ”ஸ்வரூப பாரதந்தர்‌யமிருக்கும்படி. என்‌” என்று கேட்க, அவர்‌ அருளிச் செய்தபடி– *ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில்‌ கந்தலற்று உபேயத்தில்‌ த்வரை விஞ்சி யிருக்கை காண்‌ பாரதந்தர்ய ஜ்ஞாநம்‌’”
என்றருளினார்‌. இத்தால்‌ நிவ்ருத்தி ப்ரேரகத்தோடு ப்ரவ்ருத்தி ப்ரேரகத்தோடு வாசியற பராதீனான ‘ இவ்வதிகாரிக்கு எல்லாம்‌ பர ப்ரேரிதமா மத்தனை யிறே.

(த்ரவ்ய குண கர்மம் -கமனம் செய்யும் கிரியையுடன் கூடியவன் –தியாகம் கிரியையுடன் கூடியவனாகி இருக்கும் கர்த்தா -பரித்யஜ்யம் -கிரியை வந்தாலே கர்த்ருத்வம் வருமே -மூன்று வித த்யாயகமும் வேண்டுமே –விடுவித்து பற்றுமவனே உபாயம் -செய்விக்கிறான் உணர்வே பாரதந்தர்யம்-மாஸூச -சோகப்படவும் கூடாதே –நின்றனர் இருந்தனர் கிடந்தனர் –நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் -இத்யாதி பிரவிருத்தியும் நிவ்ருத்தியும் அவன் ப்ரவர்த்திக்கவே நடக்கும் -)

ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ “ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யமோ? ப்ராப்யாநுபமான ஸ்வரூபமோ?”’ என்று கேட்க, அவரும்‌ ‘*முமுஷு தசையில்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம்‌; முக்த தசையில்‌ ப்ராப்யாநுரூமாயிருக்கம்‌ ஸ்வரூபம்‌” என்றருளிச் செய்தார்‌.

(போகத்திலே தட்ட மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -)

நாட்டிலிருத்து பெருமாளை ஸேவித்திருப்பார்‌ இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அந்யோந்யம்‌ விஸ்லேஷ பீருக்களாய்ப்‌ போருகிறவர்கள்‌ ஒரு கால்‌ ராக த்வேஷம்‌ கொண்டாடி, அதிலொருவர்‌ ஆச்சான் பிள்ளை ஸ்ரீபாதத் தேறச்‌ சென்று மற்றவருடைய குற்றம்‌ விண்ணப்பஞ்செய்ய; அருகிருந்த முதலிகளிலே சிலர்‌, “இப்படி சொல்லலாமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஆச்சான்‌ பிள்ளையும்‌, “அவர்கள்‌ சொல்லுகிறபடி கேளீர்‌: தண்ட தரனான யமன்‌“பரிஹர:’ (ஸ்ரீ வி.பு. 8-2-13; மதுசூதனனனடியார்களிடம்‌
போகாதீர்கள்‌ என்று தனதாட்களிடம்‌ என்றான்‌. **ந கஸ்சிந் நாபாரத்யதி” [ஸ்ரீரா-யு-44-மன்னிப்பதே பெரியோர்‌ பணி-௨லகில்‌ யார் தான்‌ குற்றம்‌ செய்தவரில்லை- என்றாள்‌ பிராட்டி; ஈஸ்வரன்‌ -செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ [அடியார்கள் குற்றம் செய்தாராகில்‌ அது நற்றமே-பெரியா..திரு. 4-6-1. என்றான்‌. ஆழ்வார்கள்‌, அவன்‌ தமர் ! எவ்வினையராகிலும்‌ எங் கோனன்‌ தமரே–(முதல்திரு, 35)என்றார்கள்‌. இப்படி யிருக்க, ”அவர்‌ குற்றம்‌ இவரை யொழியச்‌ சொல்லுவார்‌ யார்‌?” என்றருளினார்‌.
இத்தால்‌ சக்‌திமான்களுமுட்பட ததீய தோஷம்‌ சொல்லக் கூசுவர்கள்‌ என்றபடி,

ஆச்சான் பிள்ளை பாகவத வைபவம்‌ அருளிச் செய்யா நிற்கச்‌ செய்தே ஒருவர்‌ பகவத் வைபவஞ்‌ சொல்ல,-விசேஷஞ் சொல்லுகிற விடத்தே இது ஸாமாந்யம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. இத்தால்‌ பாகவத வைபவத்தை நிறுத்தி பகவத் வைபவம்‌ சொல்லுகை அனுப யுக்தமென்றபடி. (நாவ காரியம் பாசுர வியாக்யானங்களில் -இது போல் பல ஐதிஹ்யங்கள் உண்டு)

ஆச்சான்‌ பிள்ளை சிறிய தாயார்‌ பெரிய பிள்ளையும்‌ ஆச்சான் பிள்ளையை ஸேவித்துப்‌ போருகிற காலத்திலே,இவர்‌ சோகார்த்தராக, ஆச்சான்‌ பிள்ளை ‘*நீர்‌ சோகிக்கிற தென்‌?’। என்ன, அவரும்‌, :’அநாதிகால பாப வாஸனா பலாத்கார வசத்தாலே ஐந்மாதிகளிலே ஈஸ்வரன்‌ என்னை இன்னம்‌ தள்ளப்‌ போகிறானோ?” என்று பயப்படா நின்றேன்‌” என்ன, மேலருளிச் செய்த வார்த்தை: ”இது ஆர்‌ கேடு? என்‌றிருந்தாய்‌, உனக்கு ஸ்ருஷ்டிக்க வேணுமோ? அவதரிக்க வேணுமோ? பிறப்பில்‌ பல்‌ பிறவிப் பெருமான்‌ (திருவாய்‌, 2-9-5) என்றும் , *பொருளென்றிவ்‌ வுலகம்‌ படைத்தவன்‌ (திருவாய்‌, 2-10-11) என்றும்‌, *ஸம்பவாமி யுகே. யுகே” (கீதை 4-8) என்றும்‌ ஒருவனைப்‌ பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரைப் போல்‌ அகில ஜகத் ஸ்வாமி யாய்த்து அஸ்மத்‌ ஸ்வாமியாகைக் கன்றோ?” என்‌றருளினார்‌. “ஆகையால்‌ ஈச்வரனுக்கு ஒரு சேதனனைப்‌ பெறுகை அலப்ய லாபம்‌ என்றும்‌, எதிர் சூழல்‌ புக்குத்‌ தேடித் திரியுவன் தானே, “பேறும்‌ இழவும்‌ தன்னது” என்று ரக்ஷிக்குமென்று நிர்ப் பரராயிரும்‌”-என்றபடி-

அநந்தரம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி தொடக்கமான ஆழ்வார்களருளிச்‌ செயல்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌ செய்து லோகத்தை வாழ்வித்தருளினார்‌, இத்தை நினைத்திறே –பெரிய வாச்சான் பிள்ளை பின்‌புள்ள வைக்கும்‌ தெரிய வியாக்கி யானங்கள் செய்வால்‌ அரிய அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச்‌ செயல் ஆய்த்து அறிந்து (உபேதே ரத்‌-46) என்று உபதேச ரத்தின மாலையிலே ஜீயர்‌ அருளிச் செய்ததும்‌, பின்னையும் ரஹஸ்ய த்ரய விவரணம்‌, தத்வ த்ரய நிர்ணயம்‌ முதலான அநேக ரஹஸ்ய மருளிச்‌ செய்தருளினார்‌.

ஒருநாள்‌ பிள்ளை யுடைய ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்திருந்த வாதி கேஸரி கார்‌ஹஸ்த் யாஸ்ரம நிஷ்டராயிருக்கும் போது சாஸ்த்ர பரிசிலனை பண்ணுகிறவர்‌களைக் கண்டு ”படிக்கிறதென்‌?” என்று கேட்க அவர்களும்‌ “இவர்க்கு அஷராப்யாஸ மில்லை’ என்று அறிந்து ‘“முஸலகிஸலயம்‌ (உலக்கைக் கொழுந்து -உலக்கை துளிர்க்காதது போல் உமக்கு ஞானம் வராது )படிக்கிறோம்‌” என்று பரிஹசித்தொரு வார்த்தை சொல்ல, இவரும்‌ அத்தை யறியாதே.-இப்படி யொன்றுண்டோ என்று திகைத்து, அத்தை ஸ்வாசார்யரான பெரிய வாச்சான்‌ பின்ளைக்கு விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ மந்தஸ்மிதம்‌ செய்து, அவர்கள்‌ உமக்கு அக்ஷராப்யாஸ மில்லாமையாலே ”கழுக்காணி துளிர்க்குமோ? உமக்கத்தைக் கொண்டு காரியமென்‌?” என்று பரிஹஸித்து விட்டார்கள்‌’ என்றருளிச் செய்ய இவருமத்தைக்‌ கேட்டு லஜ்ஜாவிஷ்டராய்‌, சலம்‌ பிறந்து, திருவடிகளிலே விழுந்து, “அடியேனை வித்வானாகும்படி கடாக்ஷித்தருள வேணும்‌’” என்று ப்ரார்த்திக்க-அபய ப்ரத ராஜர்‌ (கவலைப்படாதீர் என்று உகந்து அருளிச் செய்ததால் இந்த திருநாம பிரயோகம் )உகந்து முப்பத்திரண்டு திரு நஷரத்திலே அக்ஷர சிஷைகளும்‌ பண்ணுவித்து காவ்ய நாடலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ர வித்தராம்படி சிஷித்தருள; இவரும்‌ அவர் கடாஷத்தாலே வித்வ ஜ்ஞாநாக்ர கண்யராய்‌ “’முஸல கிஸலயம்‌” என்று ஒரு காவ்யமிட்டு அவர்கள் கையிலே கொடுத்து வாய் மூடித் தலை யிறக்கிட்டு லஜ்ஜா விஷ்டராம்படி, பண்ணி யருளி, மஹா விரக்தாய்‌ ஆஸ்ரம ஸ்‌வீகாரம்‌ செய்து, பரவாதிகளை ஜெயித்து மிகவும்‌ சாஸ்த்ர நிபுணரா யிருக்கையாலே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ என்று ப்ரஸித்தரான இவர்‌ பூர்வர்கள்‌ செய்தருளிய திருவாய்மொழி வ்யாக்யானங்களை யெல்லாம்‌ திருக் கண் சாத்தி அவைகளிலே ஸார தமமான அர்த்த விசேஷங்களை ஸங்க்ரஹித்து எவர்க்கும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸூ வ்யக்தமாகவும்‌ தெரியும்படி திருவாய் மொழிக்கு த்வாதச ஸ்கந்த யுக்தமான ஸ்ரீபாகவத ப்ரக்ரியையயாலே பன்னீராயிரம்‌ உரை செய்தருளினார்‌. ஜீயரும்‌ உபதேசரத்தின மாலையில்‌ *அன்போடழகிய மணவாளச் சீயர்‌ என்று தொடங்கி–ஏதமில்‌ பன்னீராயிரம்‌ (45) என்றித்தையு மருளிச்‌ செய்தார் இறே -பின்னையும்‌ தீப ப்ரகாசம் ‘ தத்வ நிரூபணம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களையும்‌ அருளிச்‌ செய்து உபகரித்தருளினார்‌,

ஆச்சான் பிள்ளை குமாரர்‌ நாயனாராச்சான் பிள்ளையும்‌ தீபாதுத்‌பந்ந ப்ரதீபம் போலே தர்சநம்‌ நிர்‌வஹித்துக்‌ கொண்டு போர மதிப்புடையராய்‌ ஸகல வித்யாபாரங்கதர்‌’‘ என்கிற விருதை
யுடையவராய்‌, :*ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர்‌” என்று பெளண்டரீக யாகம்‌ செய்து ப்ரஸித்தராய்‌, தத்வ ஸங்க்ரஹம்‌, முக்த போகா வலீ: ஜ்நார்ணவம்‌, ஸாரீரம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டு உபகரித்தருளினார்‌ .

பெரிய வாச்சான்‌ பிள்ளை திரு நஷத்ரம் -ரோஹிணி -இவர் தனியன் –
ஸ்ரீ மத் க்ரூஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூந வே !-
யத் கடாஷண லக்ஷ்யாணாம்‌ ஸுலபஸ் ஸ்ரீதரஸ் ஸதா ॥

யாவரொருடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரானவருக்கு ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ எப்போதும்‌ ஸுலபனாயிருக்‌கிறானோ, யாமுனர்‌ குமாரராய்‌, ஸ்ரீமானான க்ருஷ்ணர்‌ என்கிற
திரு நாமத்தை யுடையரான அந்தப்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌-

நாயனாராச்சான் பிள்ளை திருநஷத்ரம்‌ சித்திரை-(சிலர் ஆவணி ரோஹிணி என்பர் ), இவர் தனியன்‌–
ஸ்ருத் யர்த்த ஸார ஜாநகம்‌ ஸ்ம்ருதி பால மித்ரம்‌ பத்மோல்லஸத்‌ பகவதங்க்ரி புராண பந்தும்‌ |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்‌ அஸ்மத் குரும்‌ பரம காருணிகம்‌ நமாமி ॥

வேதங்களின்‌ ஸாரார்த்தங்களை ப்ரதி பாதிப்பவராய்‌ ஸ்ம்ருதி களுக்கு பால மித்ரராய்‌ தாமரை போல்‌ ப்ரகாசிக்கும்‌ பகவச்‌ சரணங்களுக்குப்‌ புராதந பந்துவாய்‌, ஜாஞாந ஸாம்ராஜ்யத்தின்‌ அரசராய்‌ அபய ப்ரத ராஜரான பெரிய வாச்சான் பிள்ளையின்‌ குமாரராய்ப்‌ பரம காருணிகராய்‌ அஸ்மதாசார்யரான நாயனாராச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌ –

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திரு நக்ஷத்ரம்‌ மகம்‌-(ஆனி ஸ்வாதி என்பர் சிலர் –ப்ரஹ்ம தேசம் மன்னர் கோயிலிலே அவதரித்தவர் -குலசேகரப் பெருமாள் திருவரசு இருக்கும் தேசம் )-இவர்‌ தனியன்‌– ்‌
ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம் புஜம்‌ |ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தார போதகம்‌ ।
அஸ்மத் வித பரித்ராண ப்ரேமே ப்ரத்ராண மாஸநம்‌ | வாதி கேஸரிணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ ॥

ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திலே மிக அழுந்திக் கிடக்கும்‌ ஜீவர்‌களை உத்தரிப்பதற்கு ஓடமான (வாதி கேஸரி) அழகிய மணவாள ஜீயருடைய திருவடித்‌ தாமரைகளை ஆஸ்ரயிக்கிறேன்‌. (அஸ்மதாதிகளை ரக்ஷிப்பதில்‌) ப்ரீதியினல்‌ நிறைந்த மனதை யுடையரரன வாதி கேஸரியான அழகிய மணவாள ஜீயரை வணங்குகிறேன்‌.]

ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமால் வைபவம்‌-(ஈ உண்ணி -ஈந்த பின்பே உண்ணுபவர்கள் வாழ்ந்த தேசம் )
நம் பிள்ளை பக்கல்‌ ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பெற்ற ஈயுண்ணி மாதவப்‌ பெருமாள்‌ தம் குமாரரான ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ ப்ரஸாதித்து தர்சன ப்ரவர்‌த்தகர் ஆக்கி அருளினார்‌.ஸ்ரீபத்ம நாபப்‌ பெருமாளும்‌ தமக்கு அந்தரங்க சிஷ்யராய்‌, கோல வராஹ நாயனார்‌ என்ற திருநாமமுடைய நாலூர்‌ பிள்ளைக்குத்‌ தம்‌ பைத்ருக தநமான ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டின தர்‌ஸநார்த்தங்களெல்லாம்‌ ப்ரஸாதித் தருளினார்‌. நாலூர்‌ பிள்ளையும்‌ தம்‌ தல்ல மகனாரான நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ஸ்வாசார்‌யரான பத்ம நாபப் பெருமாள்‌ ப்ரஸாதித்த ஈடு முதலான அகிலார்த்‌தங்களையும்‌ ப்ரஸாதித்து தர்ஸந ப்ரவர்த்தகராம்படி கடாக்ஷித்‌ தருளினார்‌. நாலுராச்சான்‌ பிள்ளையும்‌ மணவாள மா முனிகளுக்கு நேரே ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌, திரு நாராயண புரத் தாயிக்கும்‌ -திருவாய்‌ மொழி யாச்சான்‌ பிள்ளைக்கும்‌ திருவாய் மொழியை ப்ரஸாதித்தருளினார்‌ என்னுமத்தை *ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை தாம் கொடுத்தார்‌ தம்‌ மகனார்‌ தங்கையில்‌, பாங்குடனே நாலூர்ப் பிள்ளைக்கவர் தாம்‌ நல்ல மகனார்க் கவர் தாம்‌ மேலோர்‌க்‌கு ஈந்தாரவரே மிக்கு என்று உபதேசரத்ந மாலையிலே (49) ஜீயர்‌ தாமே தெளிய வருளிச்‌ செய்தாரிறே –

ஈ யுண்ணி மாதவப் பெருமாள்‌ திரு நஷத்ரம்‌ ஹஸ்தம்‌.(சிலர் கார்த்திகை பரணி என்பர் ) இவர்‌ தனியன்‌–
வரதார்ய க்ருபா பாத்ரம்‌ ஸ்ரீமாதவ குரும்‌ பஜே |
குருகாதீஸ வேதாந்த ஸேவோந் மீலித வேதநம்‌ ॥

நம்மாழ்வார்‌ அருளிச் செய்த த்ரமிடோபநிஷத்தான திருவாய்மொழி கால க்ஷேபத்தால்‌ தெளித்த ஜ்ஞானமுடையவராய்‌ வரதார்யரென்ற நம்பிள்ளையின்‌ தயைக்கு கொள்கலமான்‌ ஈ யுண்ணிமாதவப்‌ பெருமாளை வணங்கிப்‌ போற்றுகிறேன்‌-

பத்ம நாபப்‌ பெருமாள்‌ திரு நக்ஷத்ரம்‌ ஸ்வாதி– இவர்‌ தனியன்‌–
யேந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூநோர்‌-வாணீ கணார்த்த பரிபோத ஸுதாபகாயாம்‌ |
ஸ்ரீமந் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீபம் மகாப குரவே நம ஆசராம : ॥

யார் ஓருவரால்‌ நம்மாழ்வாருடைய ஸ்ரீஸக்தி ஸமூஹத்‌திலுண்டான அர்த்த விசேஷங்களின்‌ தெளிவான அறிவாகிற அமுதக் கடலில்‌ ௮மிழ்‌ந்து தூய மனதினனாய் ஆகிறேனோ ஸ்ரீ யபதியான முகுந்தனின் திருவடிகளில் வண்டு போல்வரான அந்தப் பத்மநாபப் பெருமாள் பொருட்டு நமஸ்காரத்தைப்‌ பண்ணக் கடவோம்‌-

நாலூர் பிள்ளை திரு நக்ஷத்ரம்‌ புஷ்யம்‌, இவர்‌ தனியன்‌…
ஸ்ரீ பத்ம நாப குருத: ஸடஜிக்‌ முநீந்தர ஸ்ரீ ஸூக்தி பாஷ்ப மதிகம்ய ஸம்ருத்த போத: [ தந் தேவ ராஜ குரவே ஹ்யதி ஸச் சதுஷ் பூர்வாஸேத்த கோல வர தேஸிக மாஸ்ரயே தம்‌ ॥

ஸ்ரீ பத்ம நாபப்‌ பெருமாளிடமிருந்து நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்திகளின் பாஷ்யமான -விளக்கமான – ஈட்டை அதிகரித்‌து நிறைவான ஜ்ஞான முடையரான யாவரொருவர்‌ அந்த ஈட்டை நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ப்ரஸாதித்தாரோ , அந்த–நாலூரில்‌ வாஸத்தால்‌ ப்ரசாசிக்கிற கோல வர குருவை சரணம்‌ பற்றுகிறேன்‌-(மேல்பாடாகம் -காஞ்சி அருகில் இருக்கும் நாலூர்)

நாலுராச்சான்‌ பிள்ளை-மார்கழி பரணி திரு நக்ஷத்ரம் – தனியன்‌
நமோஸ்து தேவ ராஜாய சதுர்க்ராம நிவாஸிநே | ராமாநுஜார்ய தாஸஸ்ய ஸூதாய குண ஸாலிநே 1

ஸ்ரீராமாநுஜ தாஸரென்னும்‌ நாலூர்‌ பிள்ளையின் குமாரராய்‌ குண பூர்ணராம்‌ நாலூரில்‌ வாஸம்‌ பண்ணுமவரான தேவ ராஜர்‌ என்னும்‌ நாலூர் ஆச்சான்‌ பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்‌-

கோலாதிபாத்‌ பிது வாரப்ப ஸஹஸ்ர கிதேர் பாஷ்பம்‌ ஹி பூர்தந .. தேஸிக வர்ய குப்தம்‌ |
த்ரேதா ப்ரவர்த்ப புவிய: ப்ரதயாஞ்சகார ஸ்ரீ தேவ ராஐ குருவர்யமஹம்‌ பஜே தம்‌

யாவரொருவர்‌ பூர்வர்களான ஆரியர்களால்‌ ரஹஸ்ய மாகக்‌ காக்கப்பட்டிருந்த திருவாய்மொழியின்‌ வ்யாக்யாநமான ஈட்டை, தந்தையான கோலாதிபரேன்னும்‌ நாலூர்ப் பிள்ளை யிடத்தில்‌ நின்றும்‌ பெற்று மூவர்‌ மூலமாய் வெளிப்படுத்தி உலகத்தில்‌ ப்ரஸித்தி யடையப்‌ பண்ணினாரோ அந்த பரமாசாரியரான தேவ ராஜரை (நாலூரச்சான்‌ பிள்ளையை), நான்‌ போற்றி வணங்குகிறேன்‌ –

ஸ்ரீ சைல நாத குரு மாத்ருகுகணாருத்த மசப்யாந் ஸ்ரீஸூக்தி தேசிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌–
ங்யத்தஸ் ஸடாரி க்ருதி பாஷ்ய ஸூஸம் ப்ரதாயோ விஸ்தார மேதி லஹி வைஷ்ணவா . ॥

எந்த திருவாய்மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ ஸத் ஸம்ப்ரயமானது திரு வாய் மொழிப்பிள்ளை என்ன-திரு நாராயணத்தாய் என்ன–இந்த சிறந்த ஆச்சார்யர்களாலும் திருவாய் மொழி ஆச்சானாலும் மும்முகமாய் ப்ரகாசமாயிற்றோ அந்த ஸத் ஸம் பிரதாயம் தான் ஸ்ரீ வைஷ்ணவ பெரியார்கள் இடையே விஸ்தாரமாயிற்று

வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் –
அநந்தரம்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்சநம்‌ நிர்வஹித்தருளுகிற காலத்தில்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌ –ஆத்ம ஸ்வருபமிருக்கும்‌ படியென்‌?’” என்று விண்ணபஞ்செய்ய, அவரும்‌, –அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால்‌ ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்‌” என்றிறே” என்றருளினார்‌. இத்தால்‌ ‘ஈஸ்வரோஹம்‌-என்கிற அஹங்காரம்‌ பற்றற்றால்‌ ஆத்மாவுக்கு தாஸோஹம்‌ என்கிற சேஷத்வமே நிலை நின்ற அந்தரங்க நிரூபகம்‌ என்ற படி-பாகவத சேஷத்வ விதுரமான பகவச் சேஷத்வமும்‌ தேஹாத்மாபிமானம் போலே பொல்லாததா யிருக்கையாலே, –அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே (திருவாய்‌, 3-7-10) என்றிருக்க வேணுமென்‌றருளியும்‌, (அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டு கொண்டே.”–10-6-7-)

எல்லா வேதங்களையும்‌ எல்லா சாஸ்த்ரங்களையும்‌ எல்லா ஆழ்வார்கள்‌ பாசுரங்களையும்‌ எல்லா ஆசார்யர்கள்‌ வசநங்களையும்‌ ஆராயந்து பார்‌த்த விடத்தில்‌ ஒரு ஸ்ரீவைஷ்ண வனுக்கு நிலை நின்ற ஆசார்யாபிமானமொழிய மோஷோபாயமில்லை; நிலை நின்ற பாகவதபசாரமொழிய மோக்ஷ விரோதி யில்லையிறே. ‘*ஸ்வ ஸத்தையில்‌ நித்யத்‌வமும்‌ நிலை நின்ற பாகவதாபசார முண்டாமளவத்தனை யன்றோ ” என்று பிள்ளை பலகாலுமருளிச் செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌” என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை தம்‌ ஸ்ரீபாதத்து முதலிகளுக் கருளினார்‌.

இத்தால்‌, ஆசார்யாபிமானம்‌ நிலை நிற்கையாவது- கேட்ட அர்த்தத்தின்படி அநுஷ்டானமும்‌ கை புகுரப் பெற்று தத் விஷயமே ப்ராப்ய ப்ராபகங்களென்றும்‌, தத் விஷயத்தில மஹா விச்வாஸத்துடனிருக்கை. பாகவதாபசாரம்‌ :நிலை நிற்கையாவது-தீரக் கழியப் பண்ணியும்‌ நிரநுதாபமான பாகவதாபசாரம்‌ ஸ்வ ஸத்தையை விளக்குப்‌ பிணம் படுத்தி தக்த படமாக்கி உயிர்‌ மாட்டல்‌ செய்து நஸிப்பிக்கு மென்றபடி

இப்படி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டிருக்கற இவர்‌ தம்‌ குமாரரான பிள்ளை லோகாசார்யரையும்‌, அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரையும்‌ தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாகத் திருத்தி யருளி சில நாளைக்குப்‌ பின்பு பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருதாட்டுக் கெழுந் தருளினார்‌ . பிள்ளை லோகாசாரியரும்‌, உபய ஸம்பந்தமுடைய விலஷண விஷயத்தை இழந்தோமே” என்று பெருக்க வ்யாகுலப்‌பட்டு க்லேஸித்துத்‌ தம்மிலே தேறி நின்று பிள்ளைக்கு ப்ரஹ்மமேதத்‌தாலே சரம கைங்கர்யம்‌ செய்து பள்ளிப் படுத்தி அவப்ருதம்‌ கொண்டாடிப்‌ பெருக்கத்‌ திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.

வடக்குத் திருவீதிப் பிள்ளை திரு நஷத்ரம்‌ ஆனி-ஸ்வாதி–இவர்‌ தனியன்‌- –
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத் ப்ரஸாத ப்ரபாவேந ஸர்‌வ ஸித்திர பூந்‌ மம ॥

யாவரொருவருடைய அநுக்ரஹாதிசயத்தினுல்‌ எனக்கு ஸமஸ்த புருஷார்‌த்த ஸித்தியும்‌ உண்டாயிற்றோ அந்த ஸ்ரீக்ருஷ்ணரான வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளை எப்போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌-

பிள்ளை லோகாசார்யர் வைபவம்
அநந்தரம்‌ நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்‌படியான வைபவமுடையவராய்‌ நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே அவதார விசேஷமாய்த்‌ திருவவதரித்‌திருந்துள்ள பிள்ளை லோகாசார்யரும்‌, அவருடைய அருளே தாரகமாய்‌ வளர்ந்த அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ பால்யாத்‌ ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ இணைத்‌ தொட்டிலிட்டு வளர்ந்த இளைய பெருமாளையும்‌ பெருமாளையும்‌ போலவும்‌ பல தேவன் என்னும்‌ தன்னம்பியோடப்‌ பின்‌ கூடச் செல்வான்‌ (பெரியாழ்வார்‌ திரு- 1-8-5) என்கிற நம்பி மூத்த பிரானையும்‌ கிருஷ்ணனையும்‌ போலவும்‌,

தம்பி யுடன்‌ தாசரதி யானுனுஞ்‌ சங்க வண்ண
நம்பி யுடன்‌ பின்னடந்து வந்தானும்‌ –பொங்கு புனல்‌
ஒங்கு முடும்பை உலகாரியனும்‌ அறந்
தாங்கு மணவாளனுமே தான்‌

என்னும்‌படி ஸெளப்ராத்ருத்வத்தை யுடையரான இவர்களிலே பிள்ளை லோகாசார்யர்‌ தம்‌ பரம க்ருபையாலே பெண்ணும்‌ பேதையும்‌ அத்கரித்து. உஜ்ஜீவிக்கலாம்படி தனி ப்ரணவம்‌, தனி த்வ்யம்‌ தனி சரமம்‌, பரந்தபடி, ஸ்ரீய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌, ஸார ஸங்க்ரஹம்‌, தத்வ த்‌ரயம்‌, தத்வ சேகரம்‌, ப்ரபந்த பரித்ராணம்‌, ப்ரமேய சேகரம்‌, அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம்‌. நவவித ஸம்பந்தம்‌, நவரத்ந மாலை, ஸ்ரீவசன பூஷணம்‌ முதலான அநேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டருளி தம்பியோடு தாமும்‌ கூடி வாழ்ந்தருளுங்‌ காலத்திலே பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே பரம ஸாத்விகாரயிருப்பரான கூர குலோத்‌தம தாஸர்‌ நாயனும்‌ -மணப் பாக்கத்து நம்பியாரும்‌, கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ பிள்ளையும்‌, கோட்டூரில் அண்ணரும்‌, திருமலை யாழ்வாரும்‌, விளாஞ் சோலைப்‌ பிள்ளையும்‌-ஸாத்விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ முதலான சில அம்மைமார்களும்‌ திருவடிகளிலாஸ்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய்‌, ‘“ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப: ‘ என்று ஆநந்த நிர்ப்‌பரராய்‌ *ஓழிவில்‌ காலப் படியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ நித்ய ஸேவை பண்ணி தேவு மற்றறியா திருந்தார்கள்‌

(நம்பெருமாளை -1311-முதல் -1313-1323- பங்குனி ப்ரஹ்மோத்சவம் எட்டாம் நாள் -கிளம்பி -ப்ரஹ்மத்துக்கு வேர்க்க -விசிறச் சொல்லி -அம்மையார் விசிற)

இப்படி இவர்களுடைய ஐக கண்ட்யத்தாலே ப்ரவர்த்தமாய் ஸங்க்ரஹ விஸ்தார ரூபமாயிருக்குமென்று அருளிச்‌ செய்து
சீராருந் திருவத்தியூர்‌ தன்னில்‌ நின்றும்‌ சிறந்த மணப்பாக்கத் துறு நம்பியாரை
ஏராருங் கனவிலுபதேசத்தால்‌ முன்னெடுத்தருளி யெழிலரங்கத்தே போயிரு நீர்
சேராமலுக் கிதமங்கே ,சொல்வோந் தூய வுலகாரியன் பால்‌ சேர்ந்ததற் பின்‌ அவர்க்கு
நேராகக் கனவிலாங்கவ ருபதேசத்தால்‌ முன்னம்‌ விரித்த கலை வசன பூஷண மா நிதியே

என்கிறபடியே பரம ரஹஸ்யமான ஸ்ரீவசன பூஷணமாகிற திவ்ய ப்ரபந்தத்தைச்‌ செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்‌.

அநந்தரம்‌ நாயனாரும்‌ ”வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌’” என்னும்படியான ஸ்ரீவசந பூஷண ஸ்தாபநார்த்தமாக ஆசார்ய ஹ்ருதயத்தை யருளிச்‌ செய்து தோதவத்தித்‌ தூய மறையோரான பெற்றார்க்கு ப்ரஸாதித்து இப்படி முப்பத்தாறாயிரப்‌படி யினர்த்தத்தை ஸ்ரீ வசந பூஷண ஆசார்ய ஹ்ருதய ப்ரபந்ததங்களாலே தாத்பர்யமாகக்‌ கூட்டிப்‌ பின்னையு மருளிச்‌ செய்கையாலே-ஈட்டுத் தனியனிலே இவர்கள்‌ தனியனையு மநுஸத்திக்கிறது-அவரும்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்க்கு ப்ரஸாதித்தார்‌; அவரும்‌ திருநாராயண புரத்து ஆயிக்கு ப்ரஸாதித்தார்‌.

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
ஆங்கு அவர் தாள் சேர் பெற்றார் ஆய் மணவாள மா முனி
பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
-தோதவத்தி –ஆச்சார்ய அனுஷ்டானம் உள்ளோர் -நடுவில் உள்ளோர் மூலம் பெற்ற-நீதி -வருகிற முறை வழுவாமல்
பிரபன்ன ஜன கூடஸ்தர் -நம்மாழ்வார் -மாறன்
பெற்றார் -ஸ்ரீ நாயனார் ஸச் சிஷ்யர் என்பர்
ஸ்ரீ ஆய் ஸ்ரீ மா முனிகள் இருவரும் ஸ்ரீ பெற்றாருடைய திருவடிகளை பெற்றார்கள்

ஈட்டுத் தனியன்‌ வியாக்கியானத்தில்‌ ‘பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ அருளிச்‌ செய்துள்ளது: ”பிள்ளைலோகாசார்யர்‌, நாயனாராச்சான்‌ பிள்ளை, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ இவர்கள்‌ நால்வரும்‌ ஈட்டு ஸம்ப்ரதாயத்துக்கு ப்ரவர்த்தகராகாமலிருக்கச்‌ செய்தேயும்‌, பிள்ளை லோகாசாரியர்‌ ஈட்டின் வர்த்தத்துக்கு உபயுக்தமாக வகுள பூஷண சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரத்ரத்தை யருளிச்‌ செய்கையாலும்‌; நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருப்பத்தி நாலாயிரப்படி வயாக்யானத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும்‌; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவாய்‌ மொழியினுடைய சந்தை திரட்டான ஆசார்ய ஹ்ருதயமருளிச்‌ செய்கையாலும்‌ வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ பன்னீராயிரப்படியையும்‌, திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேசமும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ இவர்களுடைய தனியன்களும்‌ அநு சந்திக்கிறார்‌கள்‌ ‘நம்‌ ஆசார்யர்கள்‌” என்று பிள்ளை லோகாசாரியரும்‌ நாயனாரும்‌ ஈட்டை நேரே ஸேவிக்கா விடினும்‌ அதிலுள்ள அர்த்த விசேஷங்களைத்‌ தமது தமப்பனாரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை வாயிலாகக்‌ கேட்டே யிருப்பார்கள்‌-

இதற்கு ப்ரபந்த ப்ரதிபாத்யமான அர்த்த ஸம்ப்ரதாயம்‌ ஜீயருக்கு ஆய் வழியாக வந்தபடியை மேலே சொல்லுகிறது; இது ஜீயருடைய ஆசார்யரான திருமலை யாழ்வாரும்‌, அவருடைய திருத்‌
தமப்பனாரான அண்ணரும்‌ அதி பால்யத்திலே பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆச்ரயித்தவர் களாகையாலே பின்பு கொல்லி காவல தாஸரிடத்திலும்‌ கூர குலோத்தம தாஸரிடத்திலும்‌ ஜ்ஞாநோபஜீவநம்‌ பண்ணி உஜ்ஜீவித்தார்கள்‌. இப்படி ஸம்பந்த ஸம்பத்திகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி தம்பியோடு தாசரதி என்கிற படியே நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்படியான நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே தேவுமற்றறியா திருந்தார்கள்‌

இப்படி யெழுந்தருளி யிருக்கும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ பரம ரஹஸ்யமுமாய்‌ திவ்ய சாஸ்த்ரமுமான ஸ்ரீவசன பூஷணத்தை ஸர்வரும்‌ அதிகரித்து ஈடேறலாம்‌ படி யருளிச் செய்து லோகத்தை
வாழ்வித்தருள, அத்தைக் கண்டு பாகவதோச்ச்ராயம்‌ பொறுக்க மாட்டாத சில அஸூயாளுக்கள்‌ நம் பெருமாள்‌ பக்கலிலே சென்று, “பெருமாளே! பிள்ளை லோகாசார்யர்‌ ஸ்ரீவசனபூஷணமென்று
ஒரு ரஹஸ்ய க்ரந்தமிட்டு நம்‌ தர்சனத்தை யெல்லாம்‌ வ்யர்த்தமாக்‌கினார்‌” என்று பெருமாளுடனே கோள்‌ சொல்ல; அத்தைக்‌ கேட்ட பெருமாளும்‌ சீறி பிள்ளை லோகாசார்யரை யழைத்து விட, அவ்வளவிலே அவர்‌ நீராட எழுந்தருளி யிருக்க, நீராடி யெழுந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ இவ் விசேஷங் கேட்டு பெருமாள்‌ ஸந்நிதியில்‌ சென்றவாறே பெருமாளும்‌, அர்ச்சக முகேந , ‘நாயனாரே! நாம்‌ அநந்தமான அவதாரம்‌ பண்ணினது தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்த மன்றோ? நீங்கள்‌ ரஹஸ்ய க்ரந்தமிட்டு அத்தை வ்யர்த்தமாக்குகிறது என்‌?” என்று வினவி யருள; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌, ஸ்ரீவசந பூஷண ஸ்தாபதார்த்தமாகச்‌ செய்தருளின ஆசார்ய ஹருதயமாகிற ப்ரபந்தத்தை பெருமாள்‌ ஸ்ரோதாவாய்‌ தாம்‌ வக்தாவாக, ஸ்ரீதொண்டரடிப்‌ பொடி யாழ்வார்‌ திருமாலை சொன்னாற் போலே இவர்‌ ஆசார்ய ஹ்‌ருதயத்தை விண்ணப்பஞ் செய்து தலைக் கட்டினவாறே, பெருமாள்‌ மிகவுகந்தருளி. “இதுவும்‌ நாம்‌ செய்ததொன்றன்றோ?” என்று கோள்‌ சொன்னவர்களை வாரி யடித்துத்‌ தள்ளி விட்டருளி நாயனாருக்கு தம்‌ ஸர்வ பரிஜந பரிச்சதங்களோடே ப்ரஹ்ம ரதம்‌ ப்ரஸாதித்து ௨பலாலித்துத்‌ திருமாளிகை யேற போக விட்டருளினார்‌.-இவ் வைபவங் கேட்டுப்‌ பிள்ளை லோகாசார்யரும்‌ -வளர்த்ததனால்‌ பயன் பெற்றேன்‌ என்று அதி ஸந்தோஷத்துடனே ஆலிங்கித்துக்‌
கொண்டருளினார்‌

ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம்‌ நம் பெருமாளுடைய நியமனம் அடியாக அருளிச்‌ செய்யப்பட்டதென மணவாளமா முனிகள்‌ ஸாதித்தருளி யிருப்பதால்‌ இங்கு காணும்‌ ஐதிஹ்யம்‌ ப்ராமாணிகமா? என்ற ஐயம்‌ எழுகிறது பின்புள்ளார்‌ எக் காரணத்தனாலோ சேர்த்ததா யிருக்கலாம்‌ என்று தோன்றுகிறது -மணவாளமாமுனிகள்‌ தாமருளிச்செய்த ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யான அவதாரிகையில்‌ ஸாதித்தருஞம்‌ பங்க்திகள்‌ வருமாறு:ஸ்ம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே தத் உஜ்ஜீவநார்த்தமாக தாமும்‌ பல ப்ரபந்த்தங்கள் அருளிச்‌ செய்த பிள்ளை லோகாசார்யர்‌, ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான வர்த்தங்‌களில்‌ அவர்கள்‌ தாங்கள்‌ கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக வுபதேஸித்துப்‌ போந்தவையாய்‌ அருமை பெருமைகளைப் பற்ற-இதுக்கு முன்பு தாமும்‌ ப்ரகாசிப்பியாமலடக்கிக் கொண்டு போந்தவையுமான அர்த்த விசேஷங்களெல்லாத்தையும்‌, பின்புள்ளாருமிழக்க வொண்ணா தென்ற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேல்‌
பெருமாளும்‌ ஸ்வப்நத்திலே திருவுள்ளமா யருளுகையாலே, ஸ்ரீ வசந பூஷணமாகிற இப் ப்ரபந்த முகேந வெளியிட்டருளினார்‌.

முன்பே பேரருளாளப் பெருமாள்‌ (கச்சித் தேவப் பெருமாள்‌) தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற் பாக்கத்திலே இருப்‌பாரொரு நம்பியாரை விசேஷ கடாஷம்‌ பண்ணி யருளி, தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத்‌ தாமே யவர்க்கு ஸவப்ந முகேந வருளிச்செய்து, நீர்‌ போய்‌ இரண்டாற்றுக்கும்‌ நடுவே வர்த்தியும்‌; இன்னமும் உமக்கிவ் வர்த்தங்களெல்லாம்‌ விஸதமாக நாமங்கே சொல்லுகிறோம்‌” என்று திருவுள்ளமா யருளுகையாலே அவரிங்கே (திருவரங்கத்தே) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு, தமக்கு முன்பங்கருளிச் செய்த வர்‌த்தங்களையும்‌ அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமான தொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்‌ செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்‌து அந்தரங்கரான முதலிகளுந்தாமுமாக பிள்ளை ஒரு நாள்‌ அந்தக்‌ கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம்‌ ஏகாந்தமா யிருக்கையாலே ரஹஸ்யார்‌த்தங்களை யவர்களுக் கருளிச்‌ செய்து கொண்டெழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப்‌ பேரருளாளப் பெருமாளருளிச் செய்த வார்த்தா விசேஷங்களா யிருக்கையாலே, அவர்‌ போர வித்தராய்‌ உள்ளினின்றும்‌ புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்தலே விழுந்து, ்‌*அவரோ நீர்‌?” [அந்த பேரருளாகப்பெருமாள்‌ தானோ நீர்‌ என்ன, **ஆவது; ஏது” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள்‌ தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்‌ தருளினபடியையும்‌, இத் தேசத்திலே போர விட்டருளின படியையும்‌-இன்னமுமங்கே சொல்லுகிறோமென்‌ றருளிச்‌ செய்தபடியையும்‌, லிண்ணப்பஞ் செய்ய, கேட்டு மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌ அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக் கந்தரங்கராய்‌ வர்த்திக்கிற நாளிலே, பெருமாள்‌ அவர்க்கு ஸ்வப்நத்திலே ‘இவ் வர்த்தங்கள்‌
மறந்து போகாதபடி ‘இவற்றை யொரு ப்ரபந்தஸ்தமாகச்‌ சொன்‌னோமென்று நீர்‌ பிள்ளைக்குச்‌ சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள்‌ திருவுள்ளமா யருளினாரென்று விண்ணப்பம் செய்ய, ”ஆனால்‌ அப்படியே செய்வோம்‌” என்று” திருவுள்ளம்‌ பற்றி அநந்தர மிப்ரபந்த மிட்டருளினா ரென்று ப்ரஸித்தமிறே
, [இதுவரை மணவாளமாமுனிகளின்‌ ஸ்ரீவசநபூஷண வ்யாக்யாந அவதாரிகை பங்க்திகள் –

அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருப் பாவை முதலான சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யாதஞ்‌ செய்தருளினார்‌.இத்தை நினைத்திறே –தன்‌ சீரால்‌ வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தானுஞ்‌ சில– என்று ஜீயரும்‌ ௮நு சந்‌தித்தருளினார்‌. [உபதேச ரத்ன மாலை-47]-

பின்பு பிள்ளைலோகாசாரியரும்‌ நாயனாரும்‌ அதி விரக்தராய்‌ வாழ்ந்தருளுகிற காலத்திலே, நாயனார்‌ சிறிது காலமெழுந்தருளி யிருந்து அசிரேண பரமபதத்தை ப்ராபித்தருள, பிள்ளையும்‌ பாகவத விஸ்லேஷத்தாலே மிகவும்‌ சோகார்த்தராய்‌ அவர்‌ திருமுடியைத்‌ தம் மடியிலே வைத்துக்‌ கொண்டு
மா முடும்பை மன்னு மணவாள வண்ணலொடு
சேமமுடன்‌ வைகுந்தஞ் சென்றக்கால்‌–மாமென்‌று
தொட்டுரைத்த சொல்லுந் துயந் தன்‌னின் ஆழ்‌ பொருளும்‌
எட்டெழுத்து மிங்குரைப்பாரார்‌

என்கிறபடியே பல வகை புலம்பி திருமுத் துதிர்த்து முதலிகள்‌ தேற்றத்‌ தேறி நின்று நாயனாருக்குச்‌ சரம கைங்கர்யஞ்‌ செய்து திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.
இவர்‌ தனியன்‌
திராவிடாம்நாய ஹ்ருதயம்‌ குரு பர்வ க்ரமாகதம்‌ |
ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுநா ॥

க்ருஷ்ணரென்னும்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாராலே ஆசாரியகளுடைய பரம்பரா க்ரமமாய்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற க்ரந்தம்‌
அருளிச்‌ செய்யப்‌ பட்டது

(1323 தொடங்கி 48 ஆண்டுகள் கழித்து வந்தால் 12 ஆண்டுகள் பின்பே -சித்திரை திருநாள் தொடர்ந்து நடந்தது)

நம் பெருமாள் கோயிலை விட்டு வஸலையாக எழுந்தருளல்‌–
ஸர்வ சேதநரு முஜ்ஜீவிக்கும்படி சரம ப்ரமாண ப்ரமேய ப்ராமத்ரு வைபவங்களைப் ப்ரகாசப்‌பித்துக்‌ கொண்டு பிள்ளை லோகாசார்யர்‌ பெருமாளுக்கு ப்ராண பூதரா யெழுந்தருளி யிருக்குங் காலத்தில்‌ ஸ்ரீ ரங்கம்‌ (கலாபகாலத்தில் )துருஷ்காக்ராந்தமாய்க்‌ குடி யிருக்‌கப்‌ போகாமல்‌ பெருமாள்‌ நாய்ச்சி மாருடனே்‌ புறப்பட்டு, பெரிய பெருமாளுக்குத்‌ திரு முன்பே கல் காப்புச்‌ சாத்தி, முன்னே ஒரு விக்ரஹத்தை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து, சுற்றமெல்லாம்‌ பின்‌ தொடரத்‌ தொல் காநமடைந்து (பெருமாள்‌ திரு4-6) என்றும்‌ *தம்பியோடு தாமொருவர் தம்‌ துணைவி காதல்‌ துணையாக (பெரிய திரு 15-10-5) என்றுஞ் சொல்லுகிறபடியே பெருமாள்‌ தம்‌ அந்தரங்க பரிகரத்துடனே வலசையாக வெழுந்தருள; பிள்ளையும்‌, வாளும்‌ வில்லுங் கொண்டு பெருமாளைப்‌ பின் தொடர்ந்தடிமை செய்த இளைய பெருமாளைப் போலே *௨ருவார் சக்கரஞ் சங்கு சுமந்‌ திங்கும்‌ மோடொரு பாடுழல்வானோ ரடியான்‌ (திருவாய்‌ 8-3-7)
என்கிறபடியே அத் தலைக்கு மங்காளாசாஸந பரராய்த்‌ தாமும்‌ முதலிகளும்‌ ஸேவித்துக் கொண்டு சேர வெழுந்தருள, அநந்தரம்‌ பெருமாளும்‌, ப்ரவிஸ்யது மஹாரண்யம்‌ ராமோ ராஜிவ லோசந:?’ (ஸ்ரீராம -ஸம்க்ஷேபம்‌) என்றும்‌ ‘*வநம் ஸ பார்ய: ப்ரவிவேஸ ராகவஸ் ஸ லஷ்மணஸ் ஸுர்ய இவா ப்ரமண்டலம்‌ (ஸ்ரீரா. அயோ. 119-22) (ராம பிரான்‌ மனைவியுடனும்‌ லஷ்மணனுடனும்‌ சூரியன்‌ மேக மண்டலத்தைப்‌ புகுவது போல வநம் புகுந்‌தனர்‌-என்றுஞ் சொல்லுகிறபடியே ஹர்ய்ர்க்ஷ தரக்ஷா கிடி கட்க
பல்லூகாதி அநேசு வந ம்ருக ஸஞ்சார கர்ஜந பயங்கரமாய்‌ *சிலைக்‌ கை வேடர்‌ திரிகிற கடுங் கானமான கள்ளர் பற்றிலே எழுந்தருளுகிற வளவிலே சில தஸ்யுக்களுக்கு (திருவாபரணம் களவு போக தன்னைக் காட்டி யருளி) ஸர்வஸ்வதாநம்‌ பண்ணி யருள, அச் செய்தியைக் கேட்டு முன்னே யெழுந்தருளின பிள்ளை லோகாசார்யர்‌ மீண்டு எழுந்தருளி அவ்விடத்தில்‌ அவர்களுக்குத்‌ தாமும்‌ (ரஹஸ்யத்ரயர்த்தங்கள் பிரசாதித்து அருளி )ஸர்‌வஸ்வதாநம் பண்ணி யருளி அப்பாலே யெழுந்தருள, அவ்வளவிலே சில கள்ளர்‌ வந்து அவர்‌ பதம்‌ பணிந்து பச்சை கட்ட,
கலகமிகு பஞ்சமுடன்‌ கள்ளர் பற்றில்‌ கத்திருவிர் காரியப் பேரொருவர்‌ வந்து
பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல்‌ வாங்கி நீங்க
நல மிகுந்த தநமிதனை நம்பினோமேல்‌ நம்பெருமாளும் உம்பருடன்‌ நயந்து வாழும்
இலகு மிகு பெருஞ் செல்வ மில்லை யென்‌று ஏர் முடும்பை யுலகாரியனு முரை செய்தானே –
-என்கிறபடியே அவற்றை யுபேஷித்து:

உலகாரியன்‌ திருமலை யாழ்வாரைத் திருத்த நியமித்து திருநாடலங்கரித்தல்‌
ஜ்யோதிஷ்குடி என்கிற கிராமத்தில்‌ பெருமாளுடனே யெழுந்‌தருளி அங்கே திரு மேனி நோவு சாத்தி மிகவுந் தளர்ந்து கண்‌ வளர்ந்தருள, திருவடிகளுக்கு அந்தரங்கரான முதலிகள்‌ “எங்களுக்குத்‌ தஞ்சமேது?” என்று விண்ணப்பஞ் செய்ய, அப்போது திருமலை யாழ்வாரிடத்தில்‌ திருவுள்ளம்‌ ப்ரஸந்நமாய்க்‌ குடி.புகுந்து, ஒரு மிடறு செய்து, லௌகிக வைதிகங்களிலே அதி நிபுணராய்‌
மதுரை ராஜ்யாதிபத்யம்‌ பண்ணுகிறவர்‌ அத்தை விட்டு தர்சந ப்ரவர்த்தகராம்படி ஆசீர்‌வதித் தருளி, அவரை யநு வர்த்தித்து ரஹஸ்‌யங்களையும்‌ அர்த்தங்களையும்‌ நன்றாக ப்ரஸாதிக்கும்படி கூர குலோத்தம தாஸ நாயனாருக்கும்‌, –திருவாய் மொழியை ப்ரஸாதிக்கும்படி திருக் கண்ணங்குடிப்‌ பிள்ளைக்கும்‌ திருபுட்குழி ஜீயருக்கும்‌, –மூவாயிர வ்யாக்யாநத்துக்கு நாலூர்ப் பிள்ளைக்கும்‌,–
ஸப்த காதை முதலான சில அர்த்த விசேஷங்களை ப்ரஸாதிக்கும்படி விளாஞ் சோலைப் பிள்ளைக்கும்‌ நியமித்தருளி,

ஆனி தனில்‌ வளர்‌பஷத் தாறிரண்டாம் நாள்‌ தன்னில்‌, ஊனமிலில் வுலகாரு முடும்பையர் கோனுயர்‌ திவத்து, வானவர்கள்‌ தற் சூழ வைகுந் தக்குட்டனோடு தானினிது வீற்றிருக்கத்‌ திருவுள்ளமாய்‌, விளாஞ்சோலைப்‌ பிள்ளையைத்‌ திருவநந்த புரத்தலே திருமேனி யளவாக எழுந்தருளி யிருக்கும்படி நியமித்தருளி, பிள்ளை திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியிலே திருநாட்டுக் கெழுந்‌தருளினார்‌. முதலிகள்‌ சோகார்த்தராய்‌ மிகவும்‌ க்லேஸித்துத் தேறி, பெருமாள்‌ திருப்பரிவட்டம்‌ திருமாலை வரவிட, ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துத்‌ திருவத்யயநத்தைப்‌ பெருக்க நடத்தி யருளினார்கள்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திரு நக்ஷத்ரம்‌ ஐப்பசியில் திருவோணம்‌, அவர்‌ தனியன்‌,
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம்: ॥

ஸம்ஸாரமாகிற பாம்‌பினால்‌ கடிக்கப் பட்டிருக்கு ஜீவர்‌களுக்கு உஜ்ஜீவன ஒளஷதமாய்‌, வடக்குத்‌ திருவீதப் பிள்ளையின்‌ திருக் குமாரரான பிள்ளை லோகாசார்யரை அடி பணிகிறேன்‌-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அநந்தாழ்வான் மஹாத்ம்யம்—ஸ்ரீ மா முனிகள் மஹாத்ம்யம்–

May 4, 2026

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

https://acharya.org/mag/g/g0505.pdf–கீதாசார்யன் -505-ஐப்பசி 2020–மா முநிகழ் 650-திரு நஷத்ர மலர்

இயற்பெயர் அழகிய மணவாளன் -ஸந்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த திருநாமம் தொடரும் -பால்யாத் -ஸஹஜ -மஹாத்ம்யம் -அழகிய மணவாள மா முனிகள் -கொண்டாடுகிறோம்-கீதா உபதேசம் -62 திருநக்ஷத்ரம் -ஈடு ஸாதித்த மா முநி களுக்கும் 62 திருநக்ஷத்ரம்-எம் ஐயன் ராமானுஜன் -திருக்குமாரருக்கு திருநாமம் ஸாதித்து அருளினார்-

ராமாநுஜ ரஹச்யத்ரயம் மூலம் – நித்தியம்  -அனுசந்திக்க வேண்டியவை :1-திருமந்த்ரம் – திருவஷ்டாக்ஷரம்–ஓம் நமோ ராமாநுஜாய-2. த்வய மந்த்ரம்–ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே : /ஸ்ரீமதே  ராமாநுஜாய நம :  //3. சரமச்லோகம்–ஸர்வகர்மாணி  ஸந்த்யஜ்ய ராமாநுஜ இதி ஸ்மர /விபூதிம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம //

ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!

திருவானந்தாழ்வானுக்கு திருவேங்கடமுடையான் ஸாதித்த தனியனும் உண்டே-தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
–அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ஈட்டுப் பெருக்கர் கோயில் செல்வ அழகிய மணவாள மா முனிகள் -கோயில் செல்வமான பெரிய பெருமாளைக் கொண்டவரே -கோயிலுக்கு செல்வமான -ஸ்ரீ ரெங்க தனம் மா முனிகள் –

அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*

ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார்.

இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.-தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.-பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்

ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.

செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,-எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது-எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.-ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது-பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது-இந்த குணங்களோடு-சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.-ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை-தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

ஸ்ரீ மா முனிகள் திருவரங்கத்தில் தமது திருமடத்தில் எழுந்தருளி இருப்பதை -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் –ததஸ் தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் ப்ராங்முகம் ஸூக மாஸீநம் ப்ரஸாத மதுர ஸ்மிதம் -பூர்வ திநசர்யை – 18-கம்பத்தின் அடிக்கு அலங்காரமாக கிழக்கு நோக்கி இனிய புன்முறுவலுடன் வீற்று இருந்தார் -என்று அருளிச் செய்துள்ளார் -இன்றும் நாம் ஆதி சேஷனுடன் இருக்கும் இருப்பை உத்தம நம்பிக்கு சேவை ஸாதித்த விருத்தாந்தம்-சித்ர வடிவில் நாம் சேவித்துக் கொள்கிறோம் அன்றோ இந்த திருவுருவத்தை –

தம்முடைய திருக்கை சொம்பை உபாதானமாக்கி இரண்டு சிறிய திரு விக்ரஹங்கள் -ஓன்று ஆழ்வார் திரு நகரியில் மூன்று அங்குல உயர நின்ற திருக்கோலம் அஞ்சலித்த திருக்கையுடன் சேவை -மற்ற ஓன்று திருவரங்கத்தில் ஞான முத்திரையுடன் வீற்று இருந்த திருக்கோலம்-ஐப்பசி திரு மூலம் சாற்றுமுறை என்று மா முனிகள் நம்மாழ்வார் திருவடிகளில் எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் கண்டருளப்பண்ணி நம்மாழ்வாருக்குச் சாத்தியருளிய திருமண் காப்பை மா முனிகளுக்கு சாத்தி அருளும் அழகை இன்றும் சேவிக்கலாம் -திருவரங்கத்தில் பெரிய பெருமாளே கஜ துரக சித்ரா சாமர வாத்ய விசேஷங்களுடன் பெரிய கோயில் அர்ச்சகர்கள் கைங்கர்ய பரர்கள் வந்து அமுது செய்யப்பண்ணி நடத்துவது அசாதாரண சிறப்பாகும்-காஞ்சி புரத்திலும் மா முனிகள் பரமபதித்த 50 வருடத்துக்குள் சந்நிதியும் உருவாகி -தேவப்பெருமாள் சாற்றுமுறை அன்று இங்கு எழுந்தருளி நடை பெறும் வைபவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்-ஸ்ரீ பெரும்பூதூரில் எம்பெருமானார் பெரிய சேஷ வாகனத்திலும் மா முனிகள் சிறிய சேஷ வாகனத்திலும் எழுந்தருளி புறப்பாடு கண்டருளுகிறார்கள்-

பூர்வாச்சார்கள் என்னும் வ்யாபதேசம் மா முனிகள் அளவில் –மதுரேண ஸமாபயேத் -என்னும்படி விஸ்ராந்தமாயிருக்கும் அன்றோ-ஆழ்வார் ஆச்சார்ய பரம்பரை பொய்கையாழ்வார் தொடக்கி பொய்யில்லாத மா முனிகளுடன் தலைக் கட்டுகின்றது -இவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் பல பல ஸ்தோத்ர பிரபந்தகளை அருளிச் செய்துள்ளமையும் இவருக்கே அசாதாரணம்-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைகதாமநி -ஆதிசேஷன் இவர் அவதாரம்–இவை இவரது பரம விலக்ஷண திரு நாறு வீறு பற்றி அருளிச் செய்துள்ளார்கள் –விசதவாக் சிகாமணிகள் -என்று கொண்டாடுகிறோம்

நாந் ருக்வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண நா சாமவேத விதூஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம்
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்கடலுமீ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொலிச்
சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-

சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
மாறிச் சொல்லும் இடமும் உண்டு –

மாறிச் சொல்லுவதும் உண்டு என்னாமல் மாறிச் சொல்லும் இடமும் உண்டு –என்று அருளிச் செய்து-பாஷ்யக்காரரே -16-1 கீதா பாஷ்யத்தில் அந்தக்கரண நியமனத்தை தமமாகவும் பாஹ்ய கரண நியமனத்தை சமமாகவும் அருளிச் செய்துள்ளார்-தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )-இரண்டு படியும் ஹ்ருத் கதமாயிருக்கையாலே இவ்வாறு அருளிச் செய்துள்ளார்

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –சூர்ணிகை -162—அதாவது இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –இதுக்கு பிரயோஜனம் -என்று சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே-தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும் தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இறே இவனுக்கு –இத்தால் –லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று–ஜகத் சர்கே லீல ஏவ கேவலா பிரயோஜனம் -என்றும் பரஸ்ய ப்ரஹ்மணோ லீல ஏவ பிரயோஜனம் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி–கிரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய –என்று ஸ்ரீ பராசர பகவானும் அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ–மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும் நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும் அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இறே-

ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் |
|-திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்யர்கள் அருளிச் செய்த பட்டோலை-(ஸ்ரீ ஸைல தயா பாத்ரம் – மாசி 2013-)

February 1, 2026

ஸ்ரீ“ஆசார்யர்கள் அருளிச்செய்த பட்டோலை” என்னும் நூல் திருநாங்கூர்
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீவைகுந்த விண்ணகரம் திருமாளிகையிலுள்ள ரஹஸ்ய
க்ரந்த ஓலைச்சுவடியில் உள்ளது. பெரியபெருமாள் தொடங்கி சமீபகாலம் 200,300
வருஷங்களுக்கு முன் வரையுள்ள ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் அருளிச்செய்துள்ள
கிரந்தங்களின் அட்டவணை வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் சேராத
மற்றும் சில பல நூல்களும் இருக்கவேசெய்யும். சிறப்பாகச் சில இதில் குறிக்கப்
பட்டுள்ளன. உதாஹரணமாகப் “பெரியபெருமாள் ஸ்ரீஸைலேசதயாபாத்ரம் அருளிச்
செய்தார்” “நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்” என்பதை
எடுத்துக்கொள்ளலாம். நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்
என்பதில் அபிப்ராயபேதம் உள்ளது. அது மற்றொரு விஷயம். தனியாக
விமர்சிக்கவேண்டியது. அனேகமாகப் பெரும்பாலும் ஆசார்யர்களின் பௌர்வாபர்ய
க்ரமத்திலேயே (முன்பின் வரிசைக் கிரமப்படியே) நூல் அமைந்துள்ளது.
தற்செயலாக இந்த ஓலைச்சுவடியைப் பார்க்க
நேரிட்டது. இந்த நூல் பூர்த்தியாக இல்லை. மேலும் இப்போது வரை வெளிவந்துள்ள
நூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவ உலகில் இன்றுவரை
வெளிவராத பல நூல்களின் பெயர்களும் இதில் வந்துள்ளன. அவைகளை ஆராய்ந்து
கண்டுபிடித்து வெளியிடவும் ஒரு தூண்டுகோலாக இந்நூல் உபயோகப்படும் – இந்த
நோக்கத்திலேயே இது வெளியிட உத்தேசிக்கப் பட்டது. ஒருவர் அருளிச்செய்ததை
மற்றொருவர் அருளிச்செய்ததாகவும் இதில் சில பகுதிகள் உள்ளன. அவைகளை
ஆராய வேண்டும். குறிப்புக்கள் ப்ராக்கெட்டுக்குள் உள்ளன. குற்றம் களைந்து
நல்லதைக் கொள்ள வேணுமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

பெரியபெருமாள் ஸ்ரீசைலேசதயாபாத்ரம் அருளிச்செய்தார். (வேதாதி
ஸகல சாஸ்திர பிரவர்த்தகனான எம்பெருமான் பெரிய பெருமாளாகிய
அர்ச்சாரூபியானபோது இதை அருளினார் என்கை.)

பேரருளாளன் ஆறு வார்த்தை அருளிச்செய்தார்.

திருமழிசையாழ்வார் ஷண்மதத்துக்கும் க்ரந்தம் பண்ணினார். (இவர்
பல சமயங்களிலும் புக்குக் கடைசியில் பேயாழ்வாரால் திருத்திப்
பணிகொள்ளப்பட்டார். அவ்வப்போது அந்தந்த மதங்களில் கிரந்தங்கள்
பண்ணியிருக்கலாம். ஸ்ரீவைஷ்ணவத்தில் நான்முகன் திருவந்தாதி,
திருச்சந்தவிருத்தம் அருளிச்செய்தார்.)

பெரியாழ்வார் கல்பஸூத்ர வ்யாக்யானம் பண்ணினார்.
(திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிஅருளிச்செய்தார்.)

குலசேகரப்பெருமாள் முகுந்தமாலை அருளிச்செய்தார். (பெருமாள்
திருமொழி அருளிச்செய்தார். முகுந்தமாலை அருளிச்செய்த விஷயத்தில்
அபிப்ராயபேதம் இருக்கிறது.)

திருமங்கையாழ்வார் பரசமயகண்டனம் பண்ணினார். (பெரிய
திருமொழி திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய
திருமடல், பெரியதிருமடல், திருநெடுந்தாண்டகம் அருளிச்செய்தார்.)

நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்.
(திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி
அருளிச்செய்தார். இவர் ப்ரபந்நஜனகூடஸ்தர்.)

மதுரகவி கண்ணிநுண்சிறுத்தாம்பு அருளிச்செய்தார். (இங்கு மற்ற
ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களையும் குறித்துக் கொள்ளவேணும்.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி, ஆண்டாள் திருப்பாவை
நாச்சியார் திருமொழி; தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை,
திருப்பள்ளியெழுச்சி; திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் அருளிச்
செய்துள்ளனர்.)

நாதமுனிகள் ந்யாஸதத்த்வம் என்கிற த்ரமும், யோக ரஹஸ்யமும்
அருளிச்செய்தார். (ந்யாயதத்வம் என்கிற நூலும் நாதமுனிகள் அருளிச்
செய்தது. அதன் பல பகுதிகள் ஸ்ரீவேதாந்த தேசிகரால் மேற்கோளாகக்
காட்டப்பட்டுள்ளன. ஸ்ரீபாஷ்யத்திலும் சில ந்யாயதத்த்வ லோகங்கள்
மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ந்யாஸதத்த்வம் ஸூத்ரரூபமான க்ரந்தம்
என்று இந்நூலால் தெரியவருகிறது. நம்மாழ்வார் மூலமாக ப்ரபத்தி
மார்க்கத்தைப்பெற்றுப் பிரவர்த்தித்தவரானபடியால் ந்யாஸதத்வம் என்ற
நூல் அருளிச்செய்திருக்கலாமென்பதில் ஒளசித்யமுள்ளது. நாதமுனிகள்
கிரந்தமொன்றும் இன்றுவரை பூர்ணமாகக் கிடைக்கவில்லை.)

ஆளவந்தார் ஆகமப்ராமாண்யம், மஹாபுருஷ நிர்ணயம்,
ஸித்தித்ரயம், கீதார்த்த ஸங்க்ரஹம், சது:ச்லோகீ, ஸ்தோத்ரரத்னம்
அருளிச்செய்தார்.

திருக்கச்சிநம்பி வரதராஜாஷ்டகம் அருளிச்செய்தார்.

திருக்கோட்டியூர் நம்பி ப்ரமேயஸாரம், பத்துவார்த்தை அருளிச்
செய்தார்.

பெரியநம்பி ஸ்ரீவைஷ்ணவ தினசரிதம் அருளிச்செய்தார்.
(நூற்றெட்டுத் திருப்பதி விஷயமாகவும் நூல் அருளிச்செய்ததாக செவிவழிச்
செய்தி. பெரியதிருமலைநம்பிகள் எம்பெருமானாரது மாதுலர் (அம்மான்)
ஸ்வாசார்ய நியமனத்தால் எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணார்த்தம்
உபதேசித்தார். அவர் அருளிச்செய்ததாகப் “பெரியதிருமலை நம்பிகள்
அருளிச்செய்தஸ்ரீராமாயண ஸ்வாபதே, வ்யாக்,யாநம்” என்ற நூல்திருநாங்கூர் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீவைகுந்த விண்ணகரம் திருமாளிகை
யிலுள்ள பழைய கையெழுத்து பிரதியொன்றை அடியேன் சென்னை தங்க
சாலையிலுள்ள ஸ்ரீராமர் கோவில் ஜீர்ணோத்தாரணக் கமிட்டியார்
வெளியிட்ட மலரில் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.)

எம்பெருமானார் வேதாந்ததீபம், வேதாந்தஸாரம், வேதார்த்த
ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், கத்யத்ரயம், நித்யம்,
பத்மாஸனோபவிஷ்டம் இத்யாதி ஸ்லோகத்வயமும் அருளிச்
செய்தார். (பெரியதிருமொழிக்கு வாழிபரகாலன் என்ற தனியனும்,
பெரியதிருவந்தாதிக்கு முந்துற்ற நெஞ்சே, என்ற தனியனும் அருளிச்
செய்தார்.)

திருக்குருகைப்பிரான் பிள்ளான், நயப்ரகாசிகை (ந்யாயப்ராகாபரிகை?)
ஆறாயிரப்படி முதல் அருளிச்செய்துள்ளார்.

கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவம்,அதிமாநுஷ ஸ்தவம்,
ஸுந்தரபா ஸ்தவம், வரதராஜஸ்தவம், ஸ்ரீஸ்தவம்
யமகரத்னாகரம், தத்,வ்யாக்,யானம், நித்யம், லக்ஷ்மீநாத, யோநித்ய
மச்யுத, குருபரம்பரையும் அருளிச்செய்தார்.-(வாக்ய குருபரம்பரை, யமகரத்னாகரம் ஆழ்வான் அருளிச்செய்தார் என்ற விஷயத்தில் அபிப்ராயபேதம் உள்ளது.)

அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஞானஸாரம் ப்ரமேயஸாரம்
அருளிச்செய்தார்.

கோவிந்த ஜீயர் யதித ர்மஸமுச்சயம் அருளிச்செய்தார். (இவர் முன்பு
யாத,வப்ரகாமன் என்கிற பெயருள்ளவராய் அத்,வைத ஸந்யாஸியா
யிருந்தார். இவரிடந்தான் எம்பெருமானார் பூர்வாரமத்தில் அத்வைதம்
பயின்றார். பிறகு, எம்பெருமானாரிடம் இந்த யாதவப்ரகா ன் ஆ ரயித்து
கோவிந்தஜீயர் எனப் பெயர்பெற்றார்.)

எம்பார் – சரமகு.ருவிஷயம். ஸ்ரீ விஷ்ஞாபனஸப்ததி ரஹஸ்யம்
முதலானவை அருளிச்செய்தார்.

வங்கிபுரத்துநம்பி – நித்யம், திருப்பதிக்கோர்வை முதல் அருளிச்
செய்தார்.

பட்டர் அஷ்டம்லோ, ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்ரீகுணரத்னகோசம்,
க்ரியாதீ,பம், ஸ்லோகத்ரயம், ஸஹஸ்ரநாமபாஷ்யம், குருப்ரபாவ
தீபிகை, சரமப்ரமாணம் முதல் அருளிச்செய்தார். (இவரால் பல
திருமஞ்சனக்கட்டியங்களும் அருளிச்செய்யப்பட்டிருக்கின்றன. அவைகளை
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருமஞ்சனத்தின்போது பட்டர் ஸந்ததியார்
ஸேவிக்கக் கேட்கலாம்.)

ஸ்ரீராமப்பிள்ளை ஆர்த்தி முதலானவை அருளிச்செய்தார்.

அவர் குமாரர் பரா ரபட்டர் -க்ஷமாஷோட, சீ அருளிச்செய்தார்.

அவர் குமாரர் வேதவ்யாஸபட்டர் ஸ்ருதப்ரகாரிகை, ஸ்ருத
ப்ரதீ,பிகை, வேதார்த்த ஸங்க்ரஹ வ்யாக்யாநம், ஸுபாலோப
நிஷத், வ்யாக்,யாநம்,கபக்ஷயம், கத் யவ்யாக்யாதமும் அருளிச்செய்தார்.

அவர் குமாரரான நடுவில்திருவீதிபட்டர் பிஷ்டப நிர்ணயம்,
அஷ்டாக்ஷரதீ,பிகை, ரஹஸ்யத்ரயம், த்,வயபீடக்கட்டு, தத்த்வ
விவரணம், ஸ்ரீவத்ஸவிம்பதி முதலானவை அருளிச்செய்தார்.

முதலியாண்டான் ரஹஸ்யத்ரயமும், அஸ்மத்குரு தனியன் முதல்
அருளிச்செய்தார்.

அவர் குமாரர் கந்தாடையாண்டான் விஜ்ஞாபநஸ்துதி முதலானவை
அருளிச்செய்தார்.

பட்டர் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஸ்ரீரங்கநாராயணஜீயர், உபநிஷத்,
வ்யாக் யாநம், ஸ்தோத்ர வ்யாக், யாநம் அருளிச்செய்தார். (இவர்
அருளிய உபநிஷத் வ்யாக்,யாநப் பகுதிகள் ஈட்டின் ப்ரமாணத்திரட்டில்
எடுக்கப்பட்டுள்ளன. ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ஸ்ரீஸுக்தபாஷ்ய
கர்த்தாவாக எடுக்கப்பட்ட பெரிய ஜீயர் இவரே. ஸூத ர் ந பாதகம் அருளிய
கூரநாராயணஜீயர் இவரே.)

நஞ்ஜீயர் திருவாய்மொழி வ்யாக்,யானம் ஒன்பதினாயிரப்படி,
திருமொழி வ்யாக் யாநம் ஒன்பதினாயிரப்படி, திருப்பாவை வ்யாக்,
யாநம் ஈராயிரப்படி, திருவந்தாதிகளுக்கு வ்யாக்யாநாந்தரம், கண்ணி
வ்யாக்யா, திருப்பல்லாண்டுரை, ரஹஸ்யத்ரயம், ஸ்ரணாக தி
கத்,ய வ்யாக்யா, நித்யம், வேதார்த்த,ஸாரம், பரமார்த்த,விவேகம்,
சரமகு. ருரஹஸ்யமும் அருளிச்செய்தார். (இக் கிரந்தங்களில் சிலவே
கிடைக்கின்றன. கிடைக்காதவைகளை கிடைக்குமா என மேலும்
ஆராயவேண்டும்.)

ஸ்ரீஸேநாபதிஜீயர் சுத்தஸம்ப்ரதாயரத்னம், எழில்புதுவைமாலை
முதல் அருளிச்செய்தார். (முமுக்ஷப்படி மூலம் 41, அதன் வ்யாக், யாநங்
களில் இவருடைய வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.-ந்யாயகலாபஸங்க்ரஹம் இவர் அருளியது அச்சில் வந்துள்ளது.)

திருவரங்கத்தமுதனார் இராமாநுசநூற்றந்தாதி, திருப்பாவை
ஈராயிரப்படி, திருப்பதிக்கோர்வை, எம்பெருமானார் தாலாட்டு முதல்
அருளிச்செய்தார். (இராமாநுசநூற்றந்தாதியே கிடைக்கிறது. மற்றவை
கிடைக்கவில்லை. அமுதனார் திருமாளிகையில் ஓலைச்சுவடிகளில்
கிடைத்தாலும் கிடைக்கலாம். முயற்சி செய்யவேண்டும். அமுதனாரால்
திருமஞ்சனக் கட்டியங்களும் தமிழில் சில பாக்களும் அருளப்பட்டிருக்
கின்றன. அமுதனார் வம்சத்தவர்களிடம் இவைகள் உள்ளன.)

ஸோமாசியாண்டான் சரமோபாய விவரணம், கு,ருகு,ணாவலி,
கு,ருகு,ண விவரணம், ஷடர்த்த,ஸங்க்ஷேபம், நயத்,யுமணி b,பிகை
அருளிச்செய்தார். (எம்பெருமானாரின் சிஷ்ராய் ஸ்ரீபாஷ்யத்திற்கு
ஸ்ரீபாஷ்யவிவரணம்’ என்னும் முதல் வ்யாக்,யாநமருளியவர் இவரே. இந்த
ஸோமயாஜியாண்டானின் திருநாமம் ‘ராமமிஸ்ரர்’ என்பது.)

எங்களாழ்வான் ஸாரார்த்த,சதுஷ்டய விவரணமும் ஸ்ரீவிஷ்ணு
சித்தீயமும் அருளிச்செய்தார். (ஸ்ரீலிஷ்ணுசித்தீயம் – ஸ்ரீவிஷ்ணு
புராண வ்யாக்,யாநம், ஸாரார்த்த சதுஷ்டயம் வார்த்தாமாலையில்
உள்ளது.)

நம்பிள்ளை தனிப்ரணவம், திருவிருத்தஈடு, கண்ணிஈடு, க.த்யத்ரய
வ்யாக்,யா, ரஹஸ்யத்ரம், திருப்பல்லாண்டுஈடு முதல் அருளிச்
செய்தார்.

அம்மாள் சரமோபாயஸங்க்,ரஹம், ஸ்ரீபாஷ்யோபந்யாஸம்,
உபோத்,க தம், ப்ரமேயமாலை, தத்த்வஸாரம், யதிராஜவிஜய
ப ணம், தாடீபஞ்சகம், ஸாரார்த்தஸங்க்ரஹம், லோகத்,வயம்,
பரத்வாதி பஞ்சகமும் ரஹஸ்யமும் அருளிச்செய்தார். (அம்மாள்
நடாதூரம்மாள்,த டிபஞ்சகம் கூரத்தாழ்வான் அருளியது எனவும் கூறுவர்.)

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரம்,
ஆசார்யஸம்மதி முதல் அருளிச்செய்தார்.

பெரியவாச்சான்பிள்ளை திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி,
முவாயிரத்துக்கு வ்யாக்,யா, பரந்தரஹஸ்யம், ஸ்தோத்ர வ்யாக்,யா,
கத்,ய வ்யாக்,யா, பெருமாள் அபயப்ரதான வ்யாக்,யா, பிராட்டி
அப, யப்ரத,ான வ்யாக்,யா, மாணிக்கமாலை, நிக,மநப்படி, தி,வ்ய
பிரபந்த நுஸந்த நரஹஸ்யம், உபகாரரத்நம், ரஹஸ்யத்ரயம்,
தத்த்வத்ரயம், ஸகலப்ரமாணதாத்பர்யம், உப, யவிவரணம், நவரத்னமாலை, ப்ரமேயஸாரம், தத், யாக்,யானம், சது:ஸ்லோகீ வ்யாக் யா,
லோகத்,வயம்,ஏகஸ்லோ, தனிஸ்லோகீ, ஸங்க்ரஹப்படி,
ரீரோத்பத்யநுஸந்தாநம், விவேகம், ஜிதந்தா வ்யாக்,யாநம், திருக்
குருகூர்ரத்னம், ‘ராமம்மே க்கு ஸம்ஸ்க்ருதடீகை, இருபத்து
நாலாயிரப்படிக்கு உபந்யாஸம், ஸாமக் ரீபரம்பராநாசம், பலாரீரகை
கண்ட்,யம், ஸ்ரீரங்க ராஜஸ்தவ உரை, தத்த்வவிவேகம் முதலானவை
அருளிச்செய்தார். (சது: லோகீ வ்யாக்யானம் பெரியவாச்சான்
பிள்ளை சிறியதாகவும் அவர் குமாரர் நாயனாராச்சான்பிள்ளை
விரிவாகவும் அருளிச்செய்தனர்.)

அவருக்கு தத்தகுமாரரான நாயனாராச்சான்பிள்ளை, ரஹஸ்யத்ரயம்,
தத்த்வவிவரணம், முக்தபோக,ாவலீ, அணுத்வ புருஷகாரத்வ
ஸமர்த்த.னமான தத்த்வஸங்க்,ரஹம், அஷ்டாத, ஸம்வாத,ம்,
கைவல்ய நிர்ணயம், ஜ்ஞாநார்ணவம், சரமோபாய நிர்ணயம், பிஷ்ட
ப நிர்ணயம் முதலானவை அருளிச்செய்தார்.

அவர் சிஷ்யரான வாதிகேஸரி அழகியமணவாள ஜீயர் திருவாய்
மொழிக்குப் பன்னீராயிரப்படி, திருவிருத்தஸ்வாபதே, ம், திருவாய்
மொழிக்கு–ஸ்லோக ரூப சங்கதி தத்துவ தீபம் தீப பிரகாசிகை தத்வ தீப ஸங்க்ரஹம் தத்த்வநிரூபணம், ரஹஸ்யாம்ருதம்,
ரஹஸ்யத்ரயவிவரணம், அத்யாத்மசிந்தை, விவரணமாலை,
தத்த்வஸங்க்,ரஹ ஸாரார்த்தம், ரஹஸ்யத்ரயத்துக்கு ஸ்லோகரூப
விவரணம், தத்த்வபூஷணம், ப்ரதிஸ்லோகம் மணிப்ரவாள
வ்யாக், யாநமான கீதாஸாரம், இருபத்துநாலாயிரப்படிக்குப்
ப்ரமாணத்திரட்டு, ரஹஸ்யத்ரயார்த்த,சிந்தனம், ட கோபத், வயம்
ராமாநுஜ த்வயங்களுக்கு வ்யாக்,யாமம்,உபதே. மாலை,
முஸலகிஸலயம், சரமகுருசரிதை முதலானவை அருளிச்செய்தார்.

அவர் சிஷ்யர் உத்,பாஹு ரமணீயர், உபதேஸ, மாலை வ்யாக்,யா
அருளிச்செய்தார்.

அவர் குமாரரான பரகாலநல்லான் பரகாலநல்லான் ரஹஸ்யத்ரயம்,
மைவண்ணநறுங்குஞ்சி வ்யாக்,யா அருளிச்செய்தார். (பட்டர்
அருளியதாக வழங்கும் மைவண்ண நறுங்குஞ்சி வ்யாக்,யா இவர்
அருளியதே என ஷோட,மாத் யாயியில் ஸுதபூர்ந ஸ்த,ாபக ஸ்வாமி
நிர்ணயித்தது இதனால் வலியுறுத்தப்படுகிறது.)

வாதிகேஸரி சிஷ்யரான திருமாலையாண்டான் ரஹஸ்யத்ரயஸாரம்,
ப்ரமேயரத்னம் அருளிச்செய்தார்.

நம்பிள்ளை சிஷ்யரான பின்பழகிய பெருமாள் ஜீயர், குருபரம்பரா
ப்ரபாவம் மூவாயிரப்படி அருளிச்செய்தார். (ஆறாயிரப்படி என ப்ரஸித்தி.)

பிள்ளைலோகாசார்யர், அஷ்டாதச ரஹஸ்யம் அருளிச்செய்தார்.
இன்னமும் ஸம்ஸ்க்ருத தத்த்வவிவேகம், கத்யவ்யாக்யான சிறுபடி,
பெரியபடி, நாலுவார்த்தை, அவஸ்தாத்ரயமும் அருளிச்செய்தார்.
அஷ்டாதச ரஹஸ்யத்துக்கும் அடிவரவு – முமுக்ஷ்வாதி, தந்யாதி,
தத்வாதி ஸாதீந் சதுஸ்த்ரித் விஸங்க்,யாஸமேதாந்க்ரமேண | ப்ராதீ,ந்
நவாதீந் பரியாதீந் ததாதீந் ஜகு,: க்ருஷ்ண புத்ரப்ரணீதாந்
ப்ரபந்தாங் II(ஸம்ஸ்க்ருத தத்த்வவிவேகம் முதலியவை கிடைக்கவில்லை. ஆராயவேண்டும்.)

அவர் திருத்தம்பியார் அழகியமணவாளப்பெருமாள் நாயனார்,
திருப்பாவை ஆறாயிரப்படி, திருப்பல்லாண்டு வ்யாக்,யாநம்
திருவிருத்தம் ஆறாயிரப்படி, ஆசார்யஹ்ருதயம், அருளிச்செயல்
ரஹஸ்யத்ரயம், சரணாகதிமாலை, ஆசார்ய ஹ்ருதயப் பட்டோலையும்அருளிச்செய்தார். (ஆசார்யஹ்ருதய பட்டோலை என்பது எது என்பதை
ஆராயவேண்டும். ஆசார்யஹ்ருதயத்தில் தான் உதாஹரித்த மேற்கோள்கள்
இன்னார் இன்னார் அருளிச்செய்த இன்ன இன்னக்ரந்தங்களிலுள்ளவை
என்பதைக் குறித்திருக்கலாம்.)

கூரகுலோத்தமதாஸர் ஸ்ரீவசநபூஷணஸங்கதி முதலானவை
அருளிச்செய்தார்.

நாலூராச்சான்பிள்ளை திருமொழிக்கும் பெரியாழ்வார்
திருமொழிக்கும் உரை அருளிச்செய்தார்.

திருப்புட்குழி ஜீயர் உபதேசமாலை அருளிச்செய்தார்.

திருவாய்மொழிப்பிள்ளை பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதே,ம்,
வ்யாப்திரஹஸ்யம், சரணப்ரமாண ஸாரஸங்க்ரஹம் அருளிச்
செய்தார். (சரமப்ரமாண ஸாரஸங்க்,ரஹம் என்றிருக்கலாம்.)

பெரியஜீயர் பெரியாழ்வார் திருமொழி வ்யாக்,யாநம், நூற்றந்தாதி
வ்யாக்யாநம், ரஹஸ்யத்ரய வ்யாக் யாநம், தத்த்வத்ரய வ்யாக்யாநம்,
ஸ்ரீவசநபூஷண வ்யாக்,யாநம், ஆசார்யஹ்ருத,ய வ்யாக்,யாநம்,
யதிராஜ விம்சதி உபதேசரத்னமாலை திருவாய்மொழி நூற்றந்தாதி ஆர்த்தி பிரபந்தம்–ஈட்டுப்ரமாணத்திரட்டு, தத்வத்ரயப்ரமாணத்திரட்டு, பல
திருநாமங்கள், திருவாராதனக்ரமம், ‘நாதம் பங்கஜ…’ ‘திருவருள்
மால்… என்கிற தனியன் “லோக கு,ரும் கு,ருபி: ‘ இவை
முதலானவை அருளிச்செய்தார். (பெரியஜீயர் – மணவாள மாமுனிகள்)

மேல்நாட்டாயி தத்த்வத்ரய வ்யாக்,யா, ரஹஸ்யத்ரய வ்யாக்யா,
ஸ்ரீவசநபூஷண வ்யாக் யா, ஆசார்யஹ்ருத,ய வ்யாக்யா முதலானவை
அருளிச்செய்தார். (ஆயி- நந்யாசார்யர், நாலூராச்சான்பிள்ளையிடம்
இவரும், திருவாய்மொழிப்பிள்ளையும் ஈடுமுப்பத்தாறாயிரப்படி காலக்ஷேபம்
கேட்டனர்.)

பெரியபட்டர்பிரான் ஜீயர், அந்திமோபாய நிஷ்டை, முதலானவை
அருளிச்செய்தார்.

திருநாராயணபுரத்தில் ஸ்ரீக்ருஷ்ணகுமாரர்ஆசார்யர்கள் வார்த்தாமாலை
அருளிச்செய்தார். (இந்த ஸ்ரீக்ருஷ்ணகுமாரர் என்பவர் யார் என
விமர்சிக்கவேண்டும்.)

அப்புள்ளார் காலப்ரகாரிகை முதலானவை அருளிச்செய்தார்.

நாலூராச்சான்பிள்ளை திருமொழி வ்யாக் யாநம் அருளிச்செய்தார்.
(47ம் எண்ணில் குறிக்கப்பட்டவரும் இவரும் ஒருவரா? வேறா? என
விமர்சிக்கவேணும்)

அழகியமணவாளப்பெருமாள் நாயனார் குமாரர் க்ருஷ்ணாசார்யர்
விரோதி பரிஹாரம், கு.ருபரம்பராப்ரபாவம் முதலானவை அருளிச்
செய்தார். அவருக்குத் திருவாய்மொழி ஆசார்யர் என்றும் திருநாமம்.
(இந்த அழகியமணவாளப்பெருமாள் நாயனார் பிள்ளைலோகாசார்யர் திருத்
தம்பியாரிலும் வேறானவர்.அவர் பரமவிரக்தராய் நைஷ்டி,கப்,ரஹ்ம
சாரியாகவே எழுந்தருளியிருந்தார் எனப் பிரஸித்தி.–நாயனாராச்சான் பிள்ளையின் திருநாமம் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பதே.
ஆகையால் அவர் குமாரர் பாட்டனாரான பெரியவாச்சான்பிள்ளையின்
திருநாமமான க்ருஷ்ணாசார்யர் என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம்.)

பின்பழகியநயினார்நாயன், விஸ்தாரமாக கு.ருபரம்பராப்ரப ாவம்
அருளிச்செய்தார்.

பெரியபட்டர்பிரான் ஜீயர்திருவடிகளில் ஆஸ்ரயித்த அழகியமணவாள
தாஸர் நாயன், கு.ருபரம்பராப்ரப ாவம் மூவாயிரப்படி அருளிச்
செய்தார்.

ஆத்தான் எம்பெருமானார், உபதே,ர மாலை வ்யாக்,யா அருளிச்
செய்தார்.

எறும்பியப்பா ஜீயர் விஷயமாக பூர்வோத்தர தி,நசரி, திருப்பள்ளி
யுணர்த்தல், வரவரமுநி ப தகம், வரவரமுநிகாவ்யம், சரமோபாய
தாத்பர்யம், சரமகு,ருநிர்ணயம், ஸந்மார்க்கதர்ப்பணம், விலக்ஷண
மோக்ஷாதிகாரம் முதலானவை அருளிச்செய்தார்.

அப்பிள்ளை ஐந்து திருவந்தாதிக்கும் உரை, யதிராஜவிம்ஸதி
வ்யாக்,யாநம், பெரியாழ்வார் திருமொழி உரை, பெரியபெருமாள்
முதல் வாழித்திருநாமமும் அருளிச்செய்தார்.

ப்ரதிவாதி, ப யங்கரம் அண்ணா பெரிய பெருமாள் முதல் நம்மாழ்வார்
அளவாக ப்ரபத்தி மங்களாபாஸநம் அருளிச்செய்தார். (இவர்,
மேலும் வரவரமுநி தகம், அஷ்டம்லோகிக்கு ஸம்ஸ்க்ருத வ்யாக்,யாநம்,
108 திவ்யதேய எம்பெருமான்களுக்கும் ஸுப்ரபாதம் ப்ரபத்தி மங்களா
மாஸநம் முதலானவை அருளிச்செய்துள்ளார் என்பதாக பூர்வர்கள் அருளிய
இவரது வைப வநூல்களில் காணப்படுகிறது. வரவரமுனி ஸதகம்
அஷ்டம்லோகி வ்யாக் யா, ஸ்ரீவேங்கடே ப்ரபாதம், ப்ரபத்தி மங்களா
மாஸநங்கள் அச்சில் வந்துள்ளன.)

ஜீயர் திருப்பேரனாரான ஜீயர் நாயனார் உபதே,ர ரத்னமாலை
ல்லோகம், நக்ஷத்ரமாலை அருளிச்செய்தார்.

கந்தாடையண்ணன் திருப்பேரனார், ஸ்ரீபராங்குச பஞ்சவிம்பதி முதல்
அருளிச்செய்தார்.

அனந்தாண்பிள்ளை அநந்தாசார்யர் ஸ்ரீவசநபூ,ஷண மீமாம்ஸை
அருளிச்செய்தார்.

ானமாமலை ஜீயர் திருவாராதனக்ரமம் அருளிச்செய்தார்.
(மணலாளமாமுனிகள் ஏற்படுத்திய அஷ்டதி,க்க,ஜங்கள் திருநாமம்.
1.வானமாலை ஜீயர், 2. திருவேங்கட ஜீயர், 3.பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்,4கோயில் கந்தாடையண்ணன், 5. எறும்பியப்பா, 6. அப்பிள்ளை,அப்புள்ளார், 8. ப்ரதிவாதி,பயங்கரம் அண்ணா என்பது.)

ஞானத்,ருஷ்டிஅழகப்பங்கார், ஸாரார்த்த ரத்னமாலை, ஈட்டுக்குப்
பாட்டுத்தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும்
உபந்யாஸம், பத்துப்பத்துக்கும் உபந்யாஸம், உபோத்,க தோபந்யாஸம்,
நிக,மந உபந்யாஸம், ஈட்டுப்ரமாணத்திரட்டுக்கு உரை, திருப்பாவை
தாத்பர்யம், திருப்பாவைக்கருத்து, திருமந்த்ரயோஜனை, த்வய
யோஜனை உபந்யாஸம், மூவாயிரத்துக்கும் பரமாணத்திரட்டு,
ரஹஸ்யத்ரய ஸ்ரீவசநபூ ஷண ஆசார்யஹ்ருத,ய ப்ரமாணத்திரட்டு
அருளிச்செய்தார். (நம்பிள்ளை ஈடு அருளிச்செய்தாப்போலே) இவர்
அருளிச்செய்யக்கேட்டு கேட்டபடியே அப்பு முதலானோர்
அரும்பதம் அருளிச்செய்தனர். 68 அப்புவரும்பதம், 69 பிள்ளை
யரும்பதம், 70 அய்யங்கார் அரும்பதம், 71 ராமாநுஜய்யங்கார்
அரும்பதம். இவ்வளவு முடியவும் (பூர்ணமாகவும்) 72 தொட்டை
யரும்பதம் 3 பத்துக்கும், 73 அழகர் அரும்பதம் 3 பத்துக்கும் “சக்கரத்
தண்ணலே” என்கிற பாட்டளவும். (இக்காலம் அரும்பதகாலம்
என்னலாம்.)

அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும்,
தத்த- த்ரய ரஹஸ்யத்ரய ஸ்ரீ வசனபூஷண ஆச்சார்ய ஹ்ருதயஅரும்பதங்களும், அதுகளுக்கு உபந்யாஸங்களும் பரந்தபடிக்குக
கடி னவாக்யார்த்தம் தீ,பப்ரகாபிகையரும்பதமும் அருளிச்செய்தனர்.

அவர் திருத்தமையனார் (திருத்தமப்பனார்?) ஆத்தான், குன்றத்தூர்|
அப்பனுக்கு ஸாதிக்க அவரும் அரும்பதம் அருளிச்செய்தார்.

அவர் திருத்தமப்பனார் பெரியராமாநுஜம்பிள்ளை கந்தாடை
நாயனுக்கு ஸாதிக்க அவரும் ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்
செய்தார்.

அழகப்பங்கார் குமாரர் பெரிய சடகோபாசாரியர் ஈடுப்ராஸங்கி,க
ப்ரமாணத்திரட்டு, திருக்கச்சி நம்பிசரிதம் முதல் அருளிச்செய்தார்.

ஆத்தான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த வேதரந்தி ராமாநுஜ ஜீயர்
திவ்ய ரி ப்ரபாவதி, பிகை முதல் அருளிச்செய்தார்.

திருக்குடந்தையண்ணா கடி னப்ரதீ,பிகை அருளிச்செய்தார்.

அவர்குமாரர்கூட,கோபாசார்யர்அருஞ்சொல்விளக்கமும், மூவாயிரம்
அருஞ்சொல் விளக்கமும் அருளிச்செய்தார்.

அரும்பதம் அப்பு குமாரர்அழகப்பங்கார், ப்ரதிபதம் உபந்யாஸங்கள்
அருளிச்செய்தார்.

77-பிள்ளைலோகார்ய ஜீயர், உபதோ ரத்தமாலை வ்யாக்,யா
ஸ்ரீபைலேமேத்யாதி, தனியன்களுக்கு வ்யாக்,யா, செய்யதாமரைத்
தாளிணைவ்யாக்,யா, ஏகல்லோவ்யாக்யா, பராங்கு திவ்யசரிதம்,
பரகால தி, யசரிதம்,ராமாநுஜ தி யசரிதம், யதீந்த்ரப்ரவண
ப்ரபராவம், தி,யப்பந்தாநுஸந்தனம்,ஸத்ஸம்ப்ரத,ாயமாலை
ஸகலப்ரமாண ஸங்க்ரஹம் 10000 ராமாநுஜரஹஸ்யத்ரயம், வாக்ய
கு. ருபரம்பரைக்கு வ்யாக்,யாநம் அருளிச்செய்தார். (இவர் ராமாநுஜ
நூற்றந்தாதி வ்யாக்,யாநமும் அருளிச்செய்தார். ஸ்ரீவைஷ்ணவ
ஸமாயாசார நிஷ்கர்ஷமும் இவர் அருளிச்செய்ய இவரது சிஷ்யரால்ஏடுபடுத்தப்பட்டது

சோளங்கிபுரம் தொட்டயாசார்யர் சண்ட,மாருதம், பாரா ர்ய
விஜயம், பஞ்ச விஜயமும் அருளிச்செய்தார்.

ஸ்ரீநிவாஸ கூ டகோப ஜீயர் வேத,ாந்த பரிபாஷை முதல் அருளிச்
செய்தார்.

தொட்டயாசார்யரிருவரும், தூப்பில் பிள்ளை க்ருதிகளுக்கு
ஸம்ஸ்க்ருதமாயும் மணிப்ரவாளமாயும் வ்யாக்,யாநங்கள், பாஷ்ய
தீபிகை, யதீந்த்,ரமததீ,பிகை, ஸ்ரீபாஷ்ய உபந்யாஸம் முதல்அருளிச்செய்தார் (ஸ்ரீவேதாந்த தே,பிகர் வைப வபரமான ஆசார்யவிஜய
சம்பூ தொட்டயாசார்யர் அருளிச்செய்தது. இவ்விடத்தில் தூப்பில் பிள்ளை
என்று ப்ரஸித்,த ரான வேத,ாந்த தே.பலிகர் நூற்றுக்கணக்கான க் ரந்தங்கள்
ஸம்க்ருதம் தமிழ் இருமொழிகளிலும் அருளிச்செய்துள்ளார். ஸ்ரீ.உ.வே.
ஜகதாசார்யஸிம்பாஸநாதிபதி மகாவித்வான் காஞ்சிப்ர.ப.அண்ணங்கராசார்ய
ஸ்வாமி தே மிக க்,ரந்த,மாலா என்ற பெயரில் தே கர் க்ருதிகளையெல்லாம்
ஒருசேர அச்சிட்டு வெளியிட்டுள்ளார். வேதாந்த தே கர் திருக்குமாரர்
நயினாராசார்யர் அதி,கரண ஸாராவலீ வ்யாக்,யாநம் முதல் அருளிச்
செய்தார்.)

81-ஷஷ்டி ப்ரப,ந்த நிர்மாதாவான ஸ்ரீமந்நாராயண வண்சடகோபஜீயர்,
புருஷகார மீமாம்ஸை, ஸந்த்யாவந்த ன பாஷ்யம், ரஹஸ்யத்ரய
ஜீவாது முதல் அருளிச்செய்தார். (இவர்ஸ்ரீஅஹோபில மட,ஸ்தாப
கரான ஆதிவண் சடகோப ஜீயாது சிஷ்யர், மடத்தின் இரண்டாவது
பட்டத்தை அலங்கரித்தவர்.)

கோயிலண்ணன் வரத நாராயணர் ஜீயர் ஸத்,கு,ரு தீ,பிகாவலி
முதலானவை அருளிச்செய்தார்.

எறும்பியப்பா திருவம்சயரான அப்பாவிப்பிள்ளை ரஹஸ்யம் அஷ்டாதச ஸம்வாதம் அருளிச் செய்தார்

84-பட்டம் தாதய்யங்கார் வம்யரான நம்பாக்கம் ஐயன் புருஷஸுக்த
பாஷ்யம், ஸம்ப்ரதராய சந்த்,ரிகையும் அருளிச்செய்தார்.

தத்,வம்யரான பாலஸரஸ்வதி ரஹஸ்யத்ரய பிகை முதல்
அருளிச்செத்யார்.

86-அவர் குமாரர் ராமாநுஜ தே.கன் ஸ்ரீபாஷ்யாதி கரணோபந்யாஸம்,
ஸ்ரீபராங்கு பாது,காபஞ்சாமத், கே,ாதரஸ்துதி, வரவரமுநிபாது கா
வைப,வம், ஆசார்யாள் த்யானங்கள், ஜாக்,ருஹி, ஆழ்வார் அந்தாதி,மண்டப சதுஷ்டயஸ்தோத்ரம் முதல் அருளிச்செய்தார். (மண்டப
சதுஷ்டயமாவது – புஷ்ப, த்யாக,. பேரக,,ஜ்ஞான மண்டபம்; புஷ்ப
மண்டபம் திருமலை, த்யாக, மண்டபம் பெருமாள் கோவில், போக, மண்டபம்
திருவரங்கம் பெரியகோவில், ஜ்ஞானமண்டபம் (மேலக்கோட்டை)
திருநாராயணபுரம்).

87-அவர் திருத்தம்பியார் ஸ்ரீகிருஷ்ண தேரிகன், ரஹஸ்யத்ரயார்த்தா
ஸந்தரநஸ்லோகங்கள் ரஹஸ்யத்ரயஸித்தாந்தம், ரஹஸ்யத்ரய
ஸங்க்,ரஹவிவரணம் ரஹஸ்யத்ரயதீபிகை, ஒருநாயகோபந்யாஸம்
திருவாய்மொழி ஸங்க்ரஹம் முதல் அருளிச்செய்தார்.

88-ஸ்ரீபைல மூன்று ஜீயர்களும் எறும்பியிலப்பாவும்…. .

இத்துடன் இந்நூல் பூர்த்தியாகாமல் முடிவடைகிறது. இதன் மூல ஓலைப்
பிரதியிலும் இவ்வளவேயிருக்கவேணும். அல்லது பூர்த்தியாய் பிரதி எழுதுவதற்குமுன்
அந்த ப்ரதி திருப்பிக் கொடுக்கப்பட்டிக்கும். பாலஸரஸ்வதி என்பவர் இன்றைக்கு
சுமார் 200 வருஷங்களுக்கு முற்பட்டவராகலாம். ஸுப்ரஸித்,த,ரான திருமழிசை
அண்ணாவப்பங்கார் ஸ்வாமி இவரது புநரவதாரம் என்பர். இந்த நூலில் பலரின் திருநாமங்களும், பல க்,ரந்த,ங்களின் பெயர்களும் விடுபட்டிருக்கிறது.
இன்றுவரை க், ரந்த,நிர்மாணம் செய்துவருமவர்களின் திருநாமங்களும்
க்,ரந்த,ங்களின் பெயர்களும் இதன் தொடர்ச்சியாகத் தெரிந்தவளவு சேர்த்துக்
கொள்ளவேணும். இந்நூலின் முயற்சி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில்
ஆசார்யர்கள் ஸம்ஸ்க்ருதமொழியிலும் தமிழ்மொழியிலும் எவ்வளவு க்,ரந்தங்கள்
எவ்வளவு பிரிவுகளில் செய்துள்ளனர். இன்றுவரை எவ்வளவு செய்துவருகின்றனர்.
ஸ்ரீவைஷ்ணவ வளர்ச்சி எவ்வளவுவரை ஏற்றமாயுள்ளது இவைபோன்றவைகளை
ஆராய்ந்தின்புறுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. இந்த க்,ரந்த,ங்களை
யெல்லாம் தேடி ஆராய்ந்து கிடைக்குமவைகளை அச்சிட்டு வெளியிடுவது
லோகோபகாரமானவொரு தொண்டாகும்.

குறிப்புகளுடன் கூடிய ஆசார்யர்கள் அருளிச்செய்த பட்டோலை முற்றிற்று.

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


ஸ்ரீ ஸ்வாமி எம்பார் வைபவம்-ஸ்ரீ மதுரமங்கலம்-திரு அவதார ஸ்தலம்.-

January 29, 2026

விஶ்வாவஸூ ௵ தை ௴ புனர்பூசம் ஸ்ரீ எம்பார் ஆயிரமாவது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் –திரு அவதார ஸ்தலம் :  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

ஸ்ரீ ராமானுஜ பதாச்சாய கோவிந்தா ஆஹ்வான பாயிநீ
ததாயத்த ஸ்வரூபாஸா ஜீயான் மத் விஸ்மரஸ் தலீ

புஷ்யே புனர் வஸூ தினே ஜாதம் கோவிந்த தேஸிகம்
ராமானுஜ பதாம்புஜ ராஜ ஹம்ஸம் ஸமாஸ்ரயே

மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார்–குழந்தை பிறந்த உடனேயே ஆச்சார்யரான பட்டர் தொழும் எம்பார் -வாழித்திருநாமம் –பட்டரை எம்பெருமானாராகவே திரு உள்ளம் பற்றி இருக்கும் முதலிகள் -கூரத்தாழ்வானால் தனக்கும் பேறு -அர்வாஞ்சோ இத்யாதி போல் இருவரும் -இல்லை எனக்கு எதிர் -சாத்விக அஹங்காரம் -பட்டருக்கும் எம்பாருக்கும் இருக்குமே-

ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல் நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –அதாவது – இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் – சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ – என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

பெரிய திருவடி அம்சம் இவர் என்பர் -எண்ணற்கரிய வைபவம் இவருக்கு –திருவடி பெருமாளுக்கு போல் எம்பெருமானாருக்கு எம்பார் -=கருடத்வஜன் -பார்த்த சாரதியை எம்பெருமானார் -அவர் கருடனான எம்பாரை சிந்திக்க -அவர் த்வய மந்த்ரம் சொல்லி குழந்தைகளைக் கூட்டி வர -த்வயம் பரிமளித்ததே -பெருமாளுக்கு திருவடி போல் கைங்கர்யம் செய்ய ஆசை கொண்டு பெரிய திருவடி எம்பராகி எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தார் அன்றோ –

சிஷ்யன் ஆச்சார்யன் தேஹம் ரக்ஷணம் பண்ணக் கடவன் -ஆச்சார்யன் சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணக் கடவன் -எம்பார் எம்பெருமானை யாதவப்ரகாசரிடம் இருந்து ரஷித்த விருத்தாந்தமும் திருமலை நம்பி மூலம் எம்பாருடைய ஆத்ம ரஷணம் பண்ணி அருளியதும் பிரஸித்தம் அன்றோ –

திருமலை நம்பி இவருக்கு சமாஸ்ரயணம் பண்ணி இவருக்கு ஆச்சார்யராக இருக்க எம்பெருமானாரை ஆச்சார்யராக கொள்ளுவான் என் என்னில் -தாரை வளர்த்துக் கொடுத்த பின்பு-விற்ற மட்டுக்கு புல்லிடுவார் உண்டோ -என்றாரே –

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா  நபாயிநீ |
ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஸ்ரமஸ்தலீ 
||–ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப் பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்ப வராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.–எம்பார் நமக்கு நிழல் தருபவர் -எம் விஸ்ரமஸ்தலீ 

திருமழிசை ஆழ்வாரும் எம்பாரும் ஒரே சந்நிதியில் ஸ்ரீ ரெங்கத்தில் இன்று சேவிக்கலாம் -ஒரு பிறவியிலே இரு பிறவியானார்கள் -இருவரும் பல சம்ப்ரதாயம் இருந்து விட்டு வந்தவர்கள் –
எம்பாரின் திருநக்ஷத்ரமும் எம்பெருமானாரை திரு நக்ஷத்ரமும் அடுத்தடுத்து -குரு பரம்பரையிலும் அடுத்தடுத்து -உள்ளார்கள் -நமக்கு காக்கும் நிழலாக இருப்பவர்

சாயா -பல அர்த்தங்கள்-மதுரம்- தாப ஹரத்வம் -தொடர்ந்து வரும் நிழல்–சாயா க்ரஹம் –உருவாக்குவது ஸூர்யன்-ராமானுஜ திவாகரன் அன்றோ- -ராகு கேது -சாயா கிரஹங்கள் -ஸாத்ருஸ்யம் -பிரதிபிம்பம் -ஸன்யா தேவி ஸூர்யன் பத்னி -வைஸ்வந்த மனு -யமன் -யமி -மூவரும் பிறந்தார்கள் -வெப்பம் தங்கள் விஸ்வகர்மா தந்தையிடம் சென்று-பெண் குதிரையாகஇருக்க ஸூர்யன் ஆண் குதிரையாக இவர்களுக்கு அஸ்வினி குமாரர்கள் பிறந்தார்கள் -பிரதிபிம்பம் இங்கு வைத்துப் போனாள் -சனி பகவான் பிறந்தார் -மெதுவாக நகரம் -30 வர்ஷம் -குரு ஒரே வருஷம் –

அறிவோமாய் வல் வினை தீர்ப்பான் நிழலும் அடி தாறுமானோம்-பெரிய திருவந்தாதி -தொடர்ந்து சேஷப்பட்டு இருக்கும்-நிழல் அநந்யார்ஹ சேஷத்வம் –அடி தாறு-பாதுகையும் ரேகையும் -சாயாயிவ -பூமி தேவியும் நீளா தேவியும் பெரிய பிராட்டியாருக்கு நிழல் போல்வனர்-மரத்தின் நிழல் தஞ்சமாக இருக்கும் –வாஸூ தேவ தருச்சாயா-கற்பக வ்ருஷ வாஹனம் -பாஹுச்சாயா அவஷ்டாப்யாம் ஸீதா தேவி – -எம்பார் நிர்வாஹகங்கள் -வார்த்தா மாலை -கால ஷேபம் செய்து இளைப்பாறலாம் -ராகு கேது -மனம் வேறுபாடு -உள்ளங்கை நாயனார் -பரம விரக்தரானார் அன்றோ –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -வைராக்ய நிதி -ஆகவே சாயா க்ரஹமும் பொருந்தும்-நிஜம் அல்ல நிழல் என்ற எண்ணம் -பெரிய நம்பி உடன் கூரத்தாழ்வான் சென்ற ஐதிக்யம் –பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை அப்பன் -எம்பெருமானாரை விட்டு தனித்து இல்லாமல் இருந்தார் அன்றோ-
சாத்ருஸ்யம் -இருவரும் இன்றும் அர்ச்சா திருமேனிகளில் சாத்ருஸ்யம் சேவிக்கிறோம் -அருளிச் செயலில் அனுபவத்திலும் சாத்ருஸ்யம் -காண்கிறோம் –

பெருமாள் ஆச்சார்ய சிஷ்ய ரக்ஷணம் மூன்றையும் செய்து அருளியவர் எம்பார்-தர்மம் ரக்ஷணம் -வேசி வ்ருத்தாந்தம்-எவ்வுலகத் எவ்வவையும் காக்கும் எம்பெருமானுக்கு மூன்று ஆபத்துக்கள் வந்து கழிந்தன என்று எம்பார் அருளிச்செய்வார்.பாஞ்சாலியும், கஜேந்திரனும், ப்ரஹ்லாதனும் எம்பெருமானை அழைத்த போது, எம்பெருமானுக்கு தான் ஆபத்து ஏற்பட்டது என்பது எம்பாரின் திருவுள்ளம்.ஆகவே எம்பெருமான் இவர்களுக்கு, இருக்குமிடங்களில் இவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கி, தனக்கு வந்த ஆபத்தையும் போக்கிக் கொண்டான் என்று எம்பார் அருளிச்செய்வார்.

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-எம்பார் அருளி செய்யும் வார்த்தை –ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளிச் செய்வர் –
அதாவது-திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வர தத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே-ஆழ்வாரும் –எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது – பிழைக்கின்றது அருள் (திருவாய்-9-4-3 )-என்று இறே அஞ்சுகிறது பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று-
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பிப் போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

முதல் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
இரண்டாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் யாளி வாஹனமும்
மூன்றாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
நான்காம் நாள் காலையில் ஸிம்ஹ வாஹனமும் மாலையில் ஹம்ஸ வாஹனமும்
ஐந்தாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் சந்திர பிரபை வாஹனமும்
ஆறாம் நாள் காலையில் குதிரை வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஏழாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் யானை வாஹனமும்
எட்டாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஒன்பதாம் நாள் திருத்தேரும்
திருவவதார திரு நக்ஷத்ரம் காலையில் சாற்று முறையும் மாலையில் மங்களகிரி வாஹனமும் இரவில் புஷ்ப பல்லக்கு வாஹனமும்
அடுத்த நாள் காலையில் சாற்று முறை தீர்த்த கோஷ்டியும் ஸ்கந்தப் பொடி உத்ஸவமும் நடைபெறும்

தை புஷ்ப பிரஸாதம் வருஷா வர்ஷம் எம்பெருமானார் எம்பாருக்கு அனுப்பி அருள்கிறார்

விஷ்ணு த்வீதீயர்-கருட பஞ்சாசத் தேசிகர் –ஏக -பார்த்தசாரதி எம்பெருமானாராக -த்வீதீயர் -எம்பார் -பெரிய திருவடி அம்சம் -குருபரம்பரையிலும் எம்பெருமானருக்கு அடுத்த ஸ்தானம் -இவருக்கே -இவர் திருவடி நிலையில் பட்டரையும் நாம் ஸேவிக்கலாம்

ஆச்சார்ய அபிமான துங்கனாக -எம்பார்
எம்பெருமானாரை ரஷித்துக் கூட்டி வந்ததால் தேவப்பெருமாளின் அபிமானம் பெற்றவர்
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே-பிராட்டியார் அபிமானம் ஸ்பஷ்டம்
பெரிய திருமலை நம்பி ராமானுஜர் அபிமானம் இவர் சரித்ரத்திலே ஸ்பஷ்டம் –

ஞானக்கை தா –முதலியாண்டான் -எம்பார் -இவரும் ஒரு முதலியாண்டான் சிஷ்யரை கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள-அபராத ஷாபனம் கொள்ள -கீழே விழுந்தவனை இருவரும் கைக்கொள்ள கரையேறுவது ஸூலபம் அன்றோ -என்றாராம்

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்-பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —கைவல்ய கோஷ்டியில் –மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார்
 அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே-சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே-சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே – அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம்
 என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே- அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –


வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க , அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய்  இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-

வைராக்யம் -ராஸிக்யம் -ஒவ்வொன்றிலும் ஸீமா பூமியாக இருந்தவர் என்பதை விளக்கும் ஐதிஹ்யங்கள் பலவுண்டு

நம்பனை நரஸிம்ஹனை — -பிரகலாதன் -கஜேந்திரன் -திரௌபதிக்கு ஆடை சுரந்தது -மூன்று பரீஷைகளிலும் தேறின தத்வம்-என்பாராம் எம்பார் ஸ்வாமிகள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் 

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்
-2-1 1- –

இவ் விடத்தை  ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே
அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –

ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
36–ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே
-38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

பத்து நிர்வாஹகங்கள் திருவாய்மொழியில் உண்டு -அர்த்தபஞ்சக பாரமாக ஒவ்வொன்றிலும் இரண்டு நிர்வாஹகங்கள்

மிக்க இறை நிலை பற்றிய இரண்டு நிர்வாஹகங்கள்–2-4-5-/4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
 –2-4-5-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது-அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது – அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.- பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

மெய்யா உயிர் நிலையும் –4-5-வீற்று இருந்து -4-6-தீர்ப்பாரை யாம் இனி–மோர் உள்ளதனையும் சோறோ -அசங்கதி ஏவ சங்கதி -என்பாராம் எம்பார்அசங்கதி ஏவஎம்பெருமான் சேராததால் வந்த துக்கம் தன்னடையே வந்தது என்றவாறு

மெய்யா உயிர் நிலையும்8-8-சரீர ஆத்ம பாவம் -ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர் -அன்றிக்கே-ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே – இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறியகலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

தக்க நெறி–வீடுமின் முற்றவும் -அவதாரிகை –தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது-அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே- உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

தக்க நெறி5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்–பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய, அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.– உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்-எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

விரோதி ஸ்வரூபம்ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

விரோதி ஸ்வரூபம்மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
 –3-2-8-சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

வாழ்வு-தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
.–3-2-10-இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.-‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.

இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

வாழ்வு-4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில். இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே – திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம் லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால் ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல் கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்

கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.-ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் – அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்-இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.-ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும். ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

—-

என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
– 6-8-

ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
-5 -4-11 –

ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் –ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது – இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –-கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம
–யுத்த -18-33-

ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்து சடக்கென -இது ஆழ்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதி காலம் சம்சரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்-ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவ்ர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு-

1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
–6-7-5-

ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.
-(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )


இவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும், மேலும் அவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரே தஞ்சம் என்று அடைந்து அவருக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர்-கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயர்  கொண்ட இவர் எம்பெருமானின் குணங்களில் உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருக்க,  இவருக்கு இராமானுசரே, எம்பார் என்னும் பெயரைச் சூட்டி, அவருக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலியவற்றை அருளினார்.-தையில் மகத்திற்கு” ஏற்றமளித்த திருமழிசை ஆழ்வாரும், தன் வாழ்க்கையில் முதல் 1000  ஆண்டுகள் (இவர் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர்) பிற மதங்களில் புகுந்து, பின் சைவ மதத்தில் சேர்ந்து, சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சிவனைப் பாடியும் போற்றியும் வணங்கிவர, எம்பெருமான் பேயாழ்வாரைக் கொண்டு இவரைத் திருத்திப் பணிகொள்ள விருப்பப்பட்டு, பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்பட்டு, திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ள, ஆழ்வாரும் எம்பெருமானே பரதெய்வம் என்பதை நன்கு உணர்ந்து, பின்னர் 3700 வருடங்கள் எம்பெருமானுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைப்போல், கோவிந்தப் பெருமாளான எம்பாரும் சிவனைப் போற்றும் சைவராய் இருக்க, இவர் பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்

இராமானுச முனிக்கும் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷத்தால் விரோதிகள் கழிந்தன.  அதாவது, இவரது ஸ்ரீவைஷ்ணவத் தொண்டின்மீது பொறாமை கொண்ட பலர் இவரை கொன்று விடத் துணிய, ஆசாரியர்களின் அருளாலும், சீடர்களின் உதவியாலும்,  விரோதிகள் இவரை விட்டு விலக, இவர்  ஸ்ரீவைஷ்ணவத்துக்கே  விளக்காய் இருந்து, அது எங்கும் பரவி, உலகோர் அனைவருக்கும் எம்பெருமானே அடையப்பட வேண்டியவன் என்ற அறிவைப் பெற்று உய்யும்படி செய்தவர். இப்படி உலகோர் உய்ய உதவி செய்த இராமானுசர், தம் சகோதரரான கோவிந்தப் பெருமாள் சைவராய் இருப்பதைப் பொறுக்க மாடாமல்,தம் ஆசாரியரான ஆளவந்தாரைப் பிரார்த்தித்து, நமக்கு உசாத் துணை (உதவி) உண்டாக வேண்டுமே என்று மனதில் விசாரித்தார். ஏனென்றால்,  கோவிந்தப்பெருமாள் சாஸ்திரங்களைப் புரையறக் (குறைவின்றி) கற்றவர்; நமக்கு ஹிதம் (நன்மை) கோருபவர்; அவரை நம்மோடு சேர்ப்பார் யாரோ? இப்போது அவர் வேறு தெய்வ வழிபாடு உடையவராக இருக்கிறார். அவரைப் பாங்காக்குபவர்  (திருத்துபவர்)  யாரோ என்று புழுங்கினார்  பிறகு, இதைச் செய்யத் தக்கவர்,தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பியே என்று தெரிந்து, அவர் பக்கலுக்கு (பக்கம்) ஒரு ஸ்ரீவைஷ்ணவரை நியமித்து, “வட்டமணி கோவிந்தரைத் திருத்தித் தேவரீர் திருவடிக்கு அடிமை கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பிக்கும்படி அவரிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.   கோவிந்தருக்கும் பெரிய திருமலை நம்பியே தாய்மாமன் ஆவார்.

இளையாழ்வாரின் ஆணையின்படியே அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலைக்குச் சென்று பெரிய திருமலை நம்பிகளிடம் விவரத்தைச் சொல்ல, அவரும் “இது நம்முடைய கடமை என்றிருந்தோம்;ராமானுஜ முனியின் எண்ணமும் கலந்ததே” என உகந்து (மகிழ்ந்து) உடனே அவ்வைஷ்ணவரையும் தம்மைச் சேர்ந்தாரையும் அழைத்துக்கொண்டு காளஹஸ்திக்கு எழுந்தருளி, குளக்கரையில் அமர்ந்திருந்தார்.  அப்போது லிங்கம் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரான கோவிந்தப்பெருமாள் அங்கு நீர்கொண்டு செல்ல வந்தார். அச்சமயம் பெரிய திருமலை நம்பிகள், “கொன்றைச் சடையானைக் குளிர நீராட்டினால், உனக்குண்டாகும் பயனென்ன? என்று கூறினார். அதுகேட்டு முறுவலித்து, எதுவும் பதில் பேசாமல் போனார் கோவிந்தர். அதுகண்டு திருமலை நம்பிகள் இந்தி நம்மால் ஒன்றும் ஆகாது; இனிஅவனை ( கோவிந்தரை)  எம்பெருமான் தான் திருத்தி அருளவேண்டும் என்று பிரார்த்தித்து,  திருமலைக்குத் திரும்பினார் –

சிலநாள் கழித்துத் திருமலை நம்பிகள் மறுபடியும் காளஹஸ்திக்கு வந்து ஆளவந்தார் அருளிய “ஸ்தோத்ர ரத்னத்தில்” இளையாழ்வாரை (இராமானுசர்) வசீகரித்த  “நாராயணனே பிரமன், சிவன், இந்திரன் இவர்களிலும் மேலானவனாயும்,வினையின் நீங்கியவனாயுமுள்ள முக்தாத்மா ஆகிய இவர்களெல்லாரும் எந்த உன் பெருமைக் கடலில் துளிகள் ஆகின்றனரோ, அந்த உன்னிடத்தில் இயற்கையானதும், எல்லையற்ற பெருமையை உடையதுமான ஐஸ்வர்யத்தை எவன்தான் பெறாதவன் ஆவான்? என்கிற 11ஆவது ஸ்லோகத்தை ஒரோலையில் எழுதி, கோவிந்தர் வரும் வழியில் போட்டு வைத்தார் -எதிர்பார்த்தபடி கோவிந்தரும் அவ்வழியே வந்தவர், அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு,அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்.  மறுபடியும் நீர்கொண்டு திரும்பும்போது, அந்த ஒளியைத் தேடி எடுத்து மறுபடியும் வாசித்துப் பார்த்தார். அதன் பொருள் அவரை மாற்றியிருக்க வேண்டுமென அவர் தோற்றம் காட்டிற்று.  அவ்வோலையைக் கையில் கொண்டு, “உங்களிடமிருந்து நழுவிய பொருள் இதுவோ?”என்று நம்பிகளிடம் கேட்க, நம்பியும், “எங்கள் பொருள் நழுவுவதல்ல” (எங்கள் பொருளான எம்பெருமான் ஒழிக்க ஒழியா உறவு உடையவன் ஆகையாலே, நாங்கள் விட்டாலும் தான் விடான் ஆகையாலேயே, எங்களைவிட்டு நழுவாது) என்று இப்படிப் பலபடி பதிலுக்குப் பதிலாக அருளி, அவர் மனத்தில் மாற்றம் உண்டாக்கினார்.  கோவிந்தர் அதற்கும் பதில் கூறாமல் சென்றார் 

நம்பிகள் மறுபடியும் திருமலை சென்று பெருமாள் திருவடி தொழுது மீண்டும் காளஹஸ்திக்கு வந்து சோலையில் தம் சிஷ்ய கோடிகளோடு திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார்.  அப்போது கோவிந்தர் ஒருமாதிரி மரத்தினின்றும் பூப்பறித்துக் கொண்டிருந்தார்  அச்சமயம், பெரிய திருமலை நம்பிகள் “திண்ணன் வீடு” என்ற பதிகத்துக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்  நாலாம் பாட்டில், “தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன்” என்றவரை விஸ்தாரமாகப் பொருள் விரித்து, “தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனை ஆகுமே” என்று சொன்னதும் கோவிந்தர், முன்னுள்ள பாட்டுக்களின் பொருள் நெஞ்சில் உறுத்தி இருந்தமையால்,  சடக்கென மரத்தினின்றும் குதித்து, “தகாது தகாது என்று சொல்லிக் கொண்டே,  பூக்கூடையை வீசி எறிந்துவிட்டு, தான் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு, நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் “அந்தோ! லோக நாயகன் என்று முடி சூடியவன் இருக்க, நாயகனை உபாசிக்கும் வேடமுடைய விரிசடையானை (பரமசிவனை) விரும்பினேனே! அழகான தாமரைக் கண்ணன் இருக்கத் தழல் (நெருப்பு) வீசும் பொறிக்கண்ணனை பூசித்தேனே! கல்லெடுத்துக் கல்மாரி காத்த கையன் இருக்க, கபாலம் ஏந்திய கையை வணங்கினேனே! திருவிருந்த மார்பன் இருக்க, திருவில்லாத் தேவனை நாடினேனே! என்று இப்படியெல்லாம் நொந்துகொண்டு, “இந்த ஆத்மாவை அடிமைகொண்டு வாழச் செய்யவேண்டும் என்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கிடந்தார் 

அவரை முடி பிடித்து எடுத்து, குளிர நோக்கித் தடவிக் கொடுத்தார் நம்பிகள். மேலும் நல் வார்த்தைகள் சொல்லி, “ஆளவந்தார் கிருபைக்குக் குறை ஏதும் இல்லை” என்று எண்ணி நெஞ்சு நெகிழ்ந்தார்.  இவ்விவரம் அறிந்த காளஹஸ்தி நாதனை உடையார் பலரும் ஓடிவந்து நம்பிகளைப் பார்த்து, “அம்மான் பொடித் தூவினீரோ?” என்றார்கள்.  அதற்கு நம்பிகள், “அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.-அவர்களும் கோவிந்தரின் கையைப் பிடித்து, “வாரும் கோவிந்தரே”! என்றழைக்க, “என் கையை இனித் தொடவேண்டாம்; உங்களோடு எனக்கு இனி உறவில்லை” என்று கருவூலச் சாவி, இலச்சினை, மோதிரம் முதலியவற்றை அவர்களிடம் வீசிவிட்டு நம்பிகளின் பின் போனார். அவர்களும், “நேற்றே காளஹஸ்தி நாதன்” எங்கள் கனவில், தேவாம்சங்களான இவர் (கோவிந்தர்) முதலானவர்கள் பாஷண்ட, பௌத்த (பிற சமயங்கள்) நாஸ்திகங்களைப் போக்கித் திருமாலிடம் உறவை வளர்க்கத் தோன்றியவர்கள் என்று கூறியிருந்ததற்கு ஏற்ப நடந்தது” என்று சொல்லிப் போனார்கள்.

பெரிய திருமலை நம்பிகளும் கோவிந்தப் பெருமாளைத் திருமலைக்கு அழைத்துச் சென்று, பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஸ்ரயனம்) முதலிய செய்து அவரைத் திருத்தி,  அடிமை கொண்டு, திராவிட வேதங்களையும் (திவ்யப்ரபந்தங்கள்) மற்றும் சம்பிரதாய இரகசியங்களையும் தெளிவுற அருளிச் செய்து கொண்டிருந்தார்.  கோவிந்தப் பெருமாளும் அவர் திருவடியள்ளது வேறு அறியாதவராக வாழ்ந்திருந்தார்.

உடையவரின் தம்பியும் “எம்பார்” என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊறு (தீங்கு) விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.

மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார்.

ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார்.   நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.

உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் (சோளிங்கூர் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “-உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக் கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அணைத்துக் கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல,  எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.

முக்காலத்திலும் எம்பெருமானாரையே (இராமானுசர்) நோக்கி அவர் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்றிருந்த கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள்(பெரியவள் ஆனாள்);அவளோடு தனித்திருக்க வேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம், இருட்டும் தனியாய் இருக்கும் போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன்  என்றாராம். பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து,”கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்-கோவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார்.-இதுகண்ட அவர் தாய் இப்படிச்செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்;அப்படி இருக்கும் போது, அவன்முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்து கொண்டு எம்பெருமானார், “இல்லறமில்லேன் துறவறம் இல்லை” (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை “எம்பார்” என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

ஸ்வாமி எம்பாருக்கு ஒரு குறை இருந்ததாம்–ராமானுஜ-என்றழைத்து அத்திருநாமத்தின் அமுதச்சுவையை பருக தமக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம்-இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாமி எம்பாரை அழைத்து அழகான திருவாழி திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தமது உபபாத்ரத்தை அவருக்குத் தந்தருளி, “இத்தை நமது பெயரால் அழைப்பீராக” என்று நியமிக்க, எம்பாரும் அப்பாத்திரத்தை நிதியெனப் பெற்றுக்கொண்டு அதை  “ராமானுஜம்” என்று அழைத்து வந்தார். அது முதலாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்ரத்தை  ராமானுஜம் என்றே அழைத்து வருகின்றனர்

ஆசார்ய கைங்கர்யமே பரம  பிரயோஜனமாக தம்மைப்  பேணாமையும், ஆசார்ய விஷயத்தில் விற்கவும் பெறும்படி பணிந்திருக்கையும், ஆசார்யன் திறத்தில் நிழல்போல பரதந்தரனாய் இருப்பும், ஆசார்யனைப் பிரிந்தறியாத அனுஷ்டானமும் எம்பாருக்கே அமைந்த சிறப்புகள்.

பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும் அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!(“தூவிரிய”பதிகம், 3.6.2)–அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.. எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர். அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா  செய்யப்போகிறது. வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை. வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்

சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்குபுகழ் 
மங்கையர்க்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும் 
தங்குமனம் நீ எனக்குத் தா.  –பெரிய திருமொழித் தனியன் இட்டவர் இவர்.

பற்பமெனத் திகழ் பைங்குழலும் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புறி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலை யழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!–வடிவழகுப் பாட்டு) இயற்றி, அவரைப் புகழ்ந்தவர் இவர்.

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ச்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநு பவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹாவிஹாரபடுநா ஸ்ரீசைல் ச்ருங்கோல்லஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹநந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்மபேதநமஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதிஸார்வ பெளமஹரிணா வர்த்தே ப்ருசம் நிர்ப்பய .
-இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் வி ஹரிக்கும். தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதியிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்’‘ என்ற மஹாபாரத ச்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத ” என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச்சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ச்ருங்கோல்லஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்லது ஸிம்ஹமேயாகும்.அப்படியே இந்த ராமாநுஜஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கடமுடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணாவவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலைமேய, கோணாகணையாய்’ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க. அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங்காட்டில் சஞ்சரிக்குமே யொழியச்சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹபக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்கவல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்றுவ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவபர பேதத்தை ஸாதிக்கவல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது. ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’-

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன – தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –இரு நூற்று பத்தாம் வார்த்தை

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

எம்பார் சரம தசையிலே -கணியனூர் சிறியாச்சான் -சட்டம்பள்ளி ஜீயர் ஈச்சம் பாடி ஜீயர் போன்ற சிஷ்யர்களுக்கு உடையவர் சாதித்து அருளிய அர்த்தங்களை ஸாதித்தருளி அவர்களுக்கு பட்டர் திருவடியைக் காட்டிக் கொடுத்து உடையவருடைய திருவடித்தாமரைகளை தியானித்துக் கொண்டு அவர் திருவடி சேர்ந்தார்


எண்ணற்கரிய எம்பார் ! எம்பெருமானுடைய மற்றொரு திருவுருவமாகவே அத்விதீயரான கருடன் போற்றப்படுகிறார். வேதாந்தாசாரியர் கருட பஞ்சாஶத்தில் ஒரு ச்லோகத்தில் ஏக: என்று கருடனை அத்விதீயர் அதாவது ஒப்பற்றவர் என்றும்; விஷ்ணோ: த்விதீய: என்று பகவானுக்கு அடுத்தவர் என்றும் அவர் ( பகவான்) தாமே கொண்ட மற்றோர் வடிவம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார். கருடாம்ஶரான எம்பாரும் ஆசார்யர்களுக்குள்ளே ஒப்புயர்வற்றவர். அதனால் தான் அவரைப் பெறுதற்கு ஸகலவித முயற்சிகளையும் எம்பெருமானார் செய்தார். ( திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தராம் எம்பாரைத் திருத்திப் பணி கொண்டார்.. ஆசார்ய ப்ரஸாதமாக திருமலை நம்பிகளிடமிருந்து எம்பாரைப் பெற்று தம்முடன் அழைத்துக் கொண்டு வந்தார் ) ..

விஷ்ணுவிற்கு அடுத்தவர் கருடன் என்றதாலே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு பொருளும் இங்குள்ளது. விஷ்ணுவே; அதாவது ஸ்ரீபார்த்தஸாரதியே இராமானுசராகத் தோன்றினார் என்பது ஸம்ப்ரதாயம். கேஶவாசார்யர் ( இராமானுசரின் திருத்தகப்பனார் ) திருவல்லிக்கேணியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவருக்குத் தானே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குறுதி தந்தான் பார்த்தஸாரதி எம்பெருமான். அதன் படியே ‘ சித்திரையில் செய்ய திருவாதிரையில்’ ‘ சிறந்த பெரும்பூதூரில் சீமான் இளையாழ்வாராக’ வந்து தோன்றினான் இறைவன். ஆக விஷ்ணுவே; அதாவது கண்ணனே இராமானுசரென்ப. ‘ஸ்ரீபதிர் வா இதி ஸாத்த்விகை: விதர்க்க்யாய மஹா ப்ராஜ்ஞை: பாஷ்யகாராய மங்களம்’ என்றதும் காண்க. அறிவாளிகள் ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாகவே எம்பெருமானாரைக் குலாவுகின்றனர். ஶமிதோதய ஶங்கராதி கர்வ: என்கிற யதிராஜ ஸப்ததி ஶ்லோகத்தாலும் இராமானுசர் கண்ணனே என்பது விஶதம். கருடன் எப்படி விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானமோ; அவ்விதமே கருடாம்ஶரான எம்பாரும் விஷ்ணுவினுடைய அம்ஶ பூதரான எம்பெருமானாருக்கு அடுத்த ஸ்தானத்தை வஹிக்கிறார். ஆம் ஓராண்வழி குருபரம்பரையில் எம்பெருமானாருக்கு அடுத்தவர் எம்பாரே ! ஆக விஷ்ணோ: த்விதீய: என்பது எம்பாரையே நமக்கு உணர்த்தி நிற்கும் என்றவாறு.

இன்னமும் கேளீர்! எம்பெருமானார் மிகச் சிறந்த மந்திரவாதியாகத் திகழ்கிறார். விஷத்தை முறிப்பதற்குரிய மந்த்ரங்களிலே நல்ல தேர்ச்சி பெற்றவராய்; நிபுணராக அவர் போற்றப்படுகிறார். தேசிகன் சாதிக்கிறார்.. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்³ர: ஸம்ஸார ஜிஹ்மக³ முகை²: ஸமுபஸ்த்தி²தம் ந: l விஶ்வக்ததம் விஷய லோப⁴ விஷம் நிஜாபி⁴: கா³டா³நுபா⁴வ கருட³ த்³வஜ பா⁴வநாபி⁴: உலகவின்பங்களிலே பற்றுதல் என்பது ஒரு கொடிய விஷம். அது எங்கிருந்து புறப்படுகிறதெனின்; ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் வாயிலிருந்து புறப்பட்டு நாற்திசையிலும் அது பரவியிருக்கிறதாம். விஷத்தைத் தணிப்பதற்காக ‘க³ருட³ம் ஆத்மாநம் த்⁴யாயீத’ என்று மந்திர சாத்திரங்களிற் சொல்லியபடி தன்னை கருடனாக எண்ணிக் கொண்டு கருட த்வஜனான பகவானை எண்ணிடவே நமக்கு நன்மை உண்டாம். எம்பெருமானாராகிற கருடத்வஜர் ( கருளக் கொடி உடையவனான எம்பெருமான் ) எம்பாராகிற கருடனைச் சிந்தித்து; அவரையே கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பராசர பட்டர் & வேத வியாஸ பட்டர் ஆகியோருக்கு (ஸம்ஸார ஸர்ப்பத்தின் கொடிய விஷம் துன்புறுத்தாமைக்காக) ஆசார்யனாக நியமித்தமை ப்ரஸித்தமிறே! ஆழ்வான் திருமாளிகைக்கு எம்பெருமானார் எழுந்தருளுகிறார். எம்பார் உள்ளே சென்று ஆழ்வான் திருக்குமாரர்களை ( குழந்தைகளை ) கைகளில் ஏந்தி வருகிறார்..உடையவர் எம்பாரிடம் குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கிறதே ! என் செய்தீர் என்று வினவவும்; குழந்தைகளுக்குக் காப்பாக ( ரட்சையாக) துவயத்தைச் சொல்லி குழவிகளைக் கொண்டு வந்தேன் என்றார் எம்பார். ஸத் மந்த்ர வித்- ஆகையால் குழந்தைகளிடமிருந்து புறப்பட்ட த்வயத்தின் பரிமளத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார் உடையவர்.

இதிலே ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. விஷத்தை முறிப்பவர்கள் தங்களை கருடனாக எண்ணிக் கொண்டு; கருடத்வஜனாம் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் மேற்சொன்ன ஐதிஹ்யத்தில் கருடத்வஜனாம் விஷ்ணுவின் அவதாரமான உடையவர் கருடனாகிற எம்பாரை த்யானித்து ( நினைத்து ) அவரைக் கொண்டு கூரேச புத்திரர்களை ஸம்ஸார ஸர்ப்பம் தீண்டாதவாறு ரக்ஷித்தார். இந்த முரணில் உள்ள ஸ்வாரஸ்யம் ரசிக்கத் தகுந்ததாம். மேலும் பிற மதங்களாகிற சேற்றில் அழுந்தி அல்லலுற்ற எம்பெருமானை ரக்ஷித்தவர் எம்பெருமானார். கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: என்பர் தேசிகன். எம்பெருமானைக் காப்பாற்றுகிற எம்பெருமானாரையே விந்தியமலைத் தொடர் காடுகளிலிருந்து ரட்சித்தவர் எம்பார் !

இன்னொன்றும் கேளீர் ! வீர ஸுந்தரனால் தொந்தரவிற்காளான பெண்பிள்ளை ஒருத்திக்கு அபயம் கொடுத்து தம்முடைய மடத்திலே இடமளித்திருந்தார் எம்பார். இதனால் வீர ஸுந்தரனாலே நமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணிய உடையவர் அவளை மடத்திலிருந்து வெளியே அனுப்பச் சொல்லுகிறார். சரணம் என்று வந்தவளை ரட்சித்தால் அந்த தருமமே நம்மைக் காக்கும் என்று உறுதியாக அவளைக் காத்து நிற்கிறார் எம்பார். விந்திய மலைத் தொடரில் எம்பாரைப் பார்த்து உடையவர் சரணம் என்று சொல்லாமலிருக்கச் செய்தே அவரை ரட்சித்த பெருந்தகையாம் எம்பார் சரணம் என்று வந்தவளையா கை விடுவர் ! பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை அகற்றி அந்த ஜீவனுக்கு இரங்கியதாகட்டும்.. வைராக்கியத்திலாகட்டும்.. பகவத் குணாநுபவத்திலாகட்டும்..ஆசார்ய பக்தியிலாகட்டும்.. எம்பாருக்கு நிகர் எம்பாரே ! அவர் தம் திருநட்சத்திர நன்னாளான இன்று அன்னாரை வணங்கி மகிழ்வோமாக !


(மதுரமங்கலம்)எம்பார் ஸ்வாமிகளின்  (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர் ) அவதார ஸ்தலம்.

தூரம் : சென்னையில் (கிண்டியில்) இருந்து 57 KM-வழி : சென்னை – பெங்களூர் ஹைவேயில் சுங்குவார் சத்திரம் ( 49  KM )அடைந்தவுடன் வலது புறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சுமார் 8  KM தொலைவில் மதுரமங்கலம் உள்ளது. – மழலைமங்கலமாக இருந்த இவ்வூர் காலப்போக்கில் மதுர மங்கலமாக மருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு  உள்ள  ஸ்ரீ வைகுண்டப்  பெருமாள்.

மூலவர்         : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-உத்சவர்        : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-தாயார்           : கமலவல்லி-புஷ்கரணி    : கருட புஷ்கரணி

எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின்  அவதாரமாகக் கருதப்படுகிறார்.  ஆகையாலே  இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி  என்றழைக்கப்படுகிறது.   இக் கோவில் சுமார் 1000  ஆண்டு பழமையானது என்றும்  தொண்டை மண்டல மன்னர் சுபர்ணா என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.-சித்திரை மாதத்தில் ஸ்ரீ வைகுண்டப்  பெருமாளுக்குப் பிரமோத்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி

கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்தபிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.

பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார்

கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார்.இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.

கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல் 

திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 

தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்

மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குனஸிந்தவே |-மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர்நித்ய மங்களம் ||

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மா வளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே

பாரத்வாஜே வதீர்ணாய புண்டரீகாசக்ஷ ஜன்மனே
அஸ்மத் குலஸ்ய நாதாய கோவிந்தார்யாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண குருணா ராமா வ்ரஜ யோகினே
தத்தாய உதக பூர்வம் ஸ்யாத் கோவிந்தார்யாய மங்களம்

பட்டார்யாய ஸ்வ சிஷ்யாய வேதாந்த த்வய தாயினே
ப்ரபத்திம் ஸோபதி ஸதே கோவிந்தார்யாய மங்களம்

ஆத்மா வ்ரஜ கோவிந்த தத் தனூஜம் குருகாதிபம்
ஸ்வ வம்ஸா க்ரியம் க்ருதவதே கோவிந்தார்யாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண வ்யாக்யாதி ஸூக்தம் ஸ்ம்ருத்வ சடத்விஜ
தம் குரும் ஸம்ஸ்ரிதாயாஸ்து கோவிந்தார்யாய மங்களம்

ஸடாரி ஸூக்தி ஸ்ரோதவ்யே ஸதா ஸந்துஷ்ட சேதஸே
வைராக்யம் ஸோபதிஸதே கோவிந்தார்யாய மங்களம்

ராமாநுஜார்யாத் வேதாந்த த்ரமிட உபநிஷத் கிராம்
ரஹஸ்யார்த்தாநர்த்த வதே கோவிந்தார்யாய மங்களம்

மங்களம் தேஸி கேந்த்ராய மங்களம் குண ஸிந்தவே
மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருகை நாதனும் ஸ்ரீ கூரநாதனும்-ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்-

January 29, 2026

ஆழ்வார் திறத்திலே கூரத்தாழ்வானுடைய ஈடுபாடு அபரிமிதம்.-ஆழ்வானுடைய பஞ்ச ஸ்தவம் முழுவதும் ஆழ்வாரருளிச் செயல் மயம். ஆயினும் அவருடைய இரண்டு ஸ்லோகங்கள் போதும்.

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தின் இரண்டாவது ஸ்லோகமிது. இதன் பொருள் வருமாறு-யாதொரு நம்மாழ்வார் திருவடி பிணையானது, பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமா யிருக்கின்றதோ, யாதொரு திருவடியிணையே ஸர்வ காலமும் ஸாத்விகர்களுக்கு ஸகலைஸ்வர்யமுமாக இருக்கின்றதோ, யாதொரு திருவடி யிணையே புகலொன்றில்லா தவர்களுக்குத் தஞ்சமா யிருக்கின்றதோ, அப்படிப்பட்ட பரம பாவநமான நம்மாழ்வாருடைய திருவடி யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்.-

தத்வகுளாபரணங்க்ரியுக்மம் ஸம்ச்ரயேம்]  மகிழ்மாலை மார்பினன் என்று தாமே பேசிக் கொள்ளலாம்படி வகுளமாலையை நிரூபகமாக வுடையரான நம்மாழ்வாருடைய அப்படிப்பட்ட திருவடித் தாமரை யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம். எப்படிப்பட்ட தென்னில், சில விசேஷணங்களை யிட்டு அத் திருவடிகளின் அதிசயத்தை விளக்குகிறார்.

[யத்த்ரைவித்ய வ்ருத்த ஐநமூர்த்த விபூஷணம்] த்ரைவித்ய வ்ருத்தர்களாகிறார் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார். அவர்களுடைய சிரஸ்ஸுக்கு பூஷணமாக இருக்குமாய்த்து ஆழ்வார் திருவடிகள்;

மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே? என்றும் குருகூர் நம்பி! முயல்கின்றேனுன்றன் மொய்கழற் கன்பையே-என்றும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அத்திருவடிகளையே யிறே தங்கள் தலைக்கு அணியாகக் கொள்வது;

கோலமா மென் சென்னிக்கு உன் கமல்மன்ன குரைகழலே என்றும் –அரசமர்ந்தானடி சூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே என்றும் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாகக் கொள்ள நினைப்பாரிற் காட்டிலும் அந்த பகவத் பாதாரவிந்த ஸ்வரூபியான ஆழ்வாருடைய திருவடிகளை சிரோ பூஷணமாகக் கொள்ளுமவர்களிறே சீரியராவர்.

த்ரை வித்ய வ்ருத்த சப்தம் முக்கியமாக நம்மிராமாநுசனையே கருத்தில் கொண்டதாகும் . ருக் யஜூஸ் ஸாமங்களாகிற வேத வித்யா த்ரயத்திலும் வல்லவ ரென்றபடி –சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வறநெறி யாவும் தெரிந்த விராமாநுசனைப் போன்ற மஹநீயர்களைக்கொள்க.

[ஸாத்விக ஐநஸ்ய நித்யம் யதேவ ஸம்பந்] தனத்தாலு மேதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று என்றிறே ஸாத்விகர்கள் அத்யவஸித்திருப்பது. லௌகிகர்கள் ஸம்பத்தாக நினைத்திருக்கும் வஸ்துவானது வஸ்து ஸ்திதியில் விபத்தாயிருக்கும்மாயிற்று. உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்ய முடையார் இட்ட வழக்காயிருக்குமென்கை.

* பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடேக இந்யாதி. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்’ என்றருளிச் செய்த ஆளவந்தார் போல்வாரை யாயிற்று இங்கு [ஸாத்விக ஐந மென்கிறது.

[நித்யம்] இந்த விபூதியில் உள்ள போதோடு அந்த விபூதியில் செல்லும் போதோடு வாகியற ஸர்வ காலத்திலு மென்றபடி.அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் என்னுமா போலே

(யத்வா சரண்யம் அசரண்ய நஸ்ய] அநாதர்களுக்குப் புகலிடமாயிருக்கும்- ஆழ்வார் திருவடிகள். எம்பெருமான் தன்னாலும் திருத்த வொண்ணா தென்று கைவிடப் பட்டவர்களாயிற்று அசரண்யர்கள்; அப்படிப்பட்டவர்களையும் வலியப் பிடித்திழுத்துத் திருத்திப் பணி கொண்டவர் ஆழ்வாரே யிறே
[புண்யம்] புநாதீதி புண்யம். பரம பாவன மென்றபடி. *பொய் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி ஸகலாத்மாக்களையும் பரிசுத்தமாக்க வல்ல தென்கை. புண்யம் ஸுந்தரமென்று பர்யாயமுமாகையாலே அழகிய திருவடிகளென்பாருமுளர். பாவநார்த்தகத்வமே பாங்கு. ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கினபடி சொல்லிற்றாயிற்று.

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–3-என்பது அந்யாத்ருசமான விந்யாஸம். இந்த ஸ்லோகம் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் மூன்றாவது ஸ்லோகமாகும்.

இந்த ஸ்லோகத்தாலே ஆழ்வார்க்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார் ஆழ்வான். ஆழ்வாரை ஒரு கடலாக ரூபணம் பண்ணிப் பேசுகிறாரிதில். பயோ நிதியாக ரூபணம் பண்ணுகைக்குப் பொருத்தமான ஒளசித்யங்களை நான்கு விசேஷணங்களினால் நிரூபிக்கிறார். பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகளெல்லாம் ஆழ்வார் பக்கலில் குறையற்றிருக்கிற படியை ஒவ்வொரு விசேஷணமும் மூதலிக்கின்றது.

(பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸார ரஸௌகபூர்ண :] கடலானது ரஸெளக சப்த வாச்யமான ஜல ப்ரவாஹத்தாலே பரிபூர்ணமாயிருக்கும்; ஆழ்வாரோ வென்னில், ஸ்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயாநக ரெளத்ர பீபத்ஸ பக்தி ரஸங்களாலே பரிபூர்ணரா யிரா நின்றார். இப்படிப்பட்ட ரஸ விசேஷங்கள் ஆழ்வார் பக்கலிலே விளைந்தமைக்கு நிதாநமே தென்னில், விலக்ஷணமான பக்தி விசேஷத்தாலே ஆச்சரியமான பாவ பந்தங்களுண்டாகி அந்த பாவ பந்தங்கள் தலை தலைத்து நாநா ரஸ பரிபாகங்களாயின வென்கிறார்.

[பக்தி ப்ரபாவ] ஆழ்வாருடைய பக்திக்கு ஒப்புச் சொல்லலாவதில்லை; *காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி யென்று முதலில் கடல் போலேயாய், பிறகு*கொண்ட வென் காத லுரைக்கில் தோ ! மண்டிணி ஞாலமு மேழ் கடலும் நீள் விசும்புங் கழியப் பெரிதால்‘ என்றாய், அநந்தரம் *சூழ்ந்ததனிற் பெரிய வென்னவா என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய் ஆக விப்படி மேன்மேலும் பெருகிச் செல்லு தான பக்தியின் ப்ரபாவத்தினாலே. (பவத் அத்புத பாவபந்த/ உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே. அதாவது – அந்த பக்தி தானே ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமித்து தலைமகள் பாசுரமாகவும் தாய் பாசுரமாகவும் தோழி பாசுரமாகவும் பேசும்படிக் கீடான பலவகைப்பட்ட ஆச்சர்ய பாவ பந்தங்களை யுண்டாக்கி நிற்கு மென்கை. [ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண:] அப்படிப் பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரஸத்தை வளரச் செய்யுமாயிற்று.

*உயர்வற வுயர் நலம் வீடுமின் முற்றவும் பத்துடை யடியவர்க் கெளியவன் பிறவித்துயரறம் பொருமாநீள்படை என்னுமிவைபோல்வனவான திருவாய்மொழிகளில் ஸாதாரண பக்தி ரஸம் விளங்கு மத்தனையல்லது ப்ரணய ரஸம் விளங்கமாட்டாதிறே.

*அஞ்சிறையமடநாராய் மின்னிடை மடவார்கள் * வேய்மருதோளிணை* முதலான திருவாய்மொழிகளிலே யாயிற்று அத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸாரம் விளங்குவது. அப்படிப்பட்ட ப்ரணயம் மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீஸூக்திகளில் நவ ரஸமும் பொலிய நிற்குமிறே.

நவரஸங்களுள் ஸ்ருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயானகம் சாந்தி (பக்தி) ஆகிற இந்த ரஸங்கள் ஒரோ திருவாய்மொழிகளில் பரதானமாகப் பொதிந்திருக்கும்; மற்ற ஹாஸ்ய பீபத்ஸ ரௌத்ரரஸங்கள் ஓரோவிடங்களிலே மறைய நின்று சிறிது சிறிது தலைகாட்டி நிற்கும்.

*வீடுமின்முற்றவும் சார்வேதவநெறிக்கு * கண்ணன் கழலிணை முதலான திருவாய்மொழிகளிலே பக்திரஸம் தலையெடுத்திருக்கும்.

மின்னிடை மடவார்கள் நங்கள் வரிவளை * வேய்மரு தோளிணை முதலான திருவாய்மொழிகளிலே ஸ்ருங்கார ரஸம் தலையெடுத்திருக்கும்.

மாயாவாமனனே புகழு நல்லொருவன் * நல்குரவுஞ் செல்வும் முதலான திருவாய்மொழிகளிலே அத்புதரஸம்.

உண்ணிலாவிய வைவரால் இத்யாதிகளிலே பயாநக ரஸம்.

* ஊரெல்லாந்துஞ்சி × வாயுந்திரை யுகளும் ஆடியாடி யகங்கரைந்து இத்தியாதிகளிலே கருணரஸம்.

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் வீற்றிருந்தேழுலகும் * இத்தியாதிகளிலே வீரரஸம்,

ஆக இங்ஙனே நாநா ரஸங்கள் பொதிந்த ஸ்ரீஸூக்தி ராசிகளை யருளிச் செய்யும் முகத்தாலே ரஸௌக பரிபூர்ண ராயிருப்பராய்த்து ஆழ்வார்.

வேதார்த்த ரத்ந நிதி: கடல் ரத்நாகரமாகையாலே ரத்ந நிதியாயிருக்கும்.பராங்குச பயோ நிதியும் அப்படியே யிருக்கிறபடி ஓதம் போல் கிளர் வேத மென்றும்.ஸ்ருதி ஸாகர மென்றும் சொல்லுகிறபடியே கடல் போன்றுள்ள வேத சாஸ்த்ரங்களிலே அல்ப ஸாரமாயும் ஸாரமாயும் ஸார தரமாயு மிருக்கின்ற அர்த்தங்கள் போக ஸார தமங்களாகவுள்ள அர்த்தங்களே ரத்நமாகும்.

த்ரைகுண்ய விஷயா வேதா:என்கிறபடியே எல்லாம் கலந்த கட்டியாயிருக்கும் வேதங்கள். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிற மூன்று குணங்களிலும் ஊன்றினவர்களுக்கு அபேக்ஷிதங்களான விஷயங்களை யெல்லாம் வெளியிடுமவையிறே வேதங்கள்,

மாற்றங்களாய்ந்து கொண்டு மதுசூதபிரானடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன சொற்களிலே ஸாரதமமான பொருள் தவிர வேறொன்றும் அவகாசம் பெறாமையாலே எல்லாம் ரத்னங்களாயிருக்கும். அப்படிப்பட்ட ரத்நங்களுக்கு நிதியாயிருப்பராய்த்து ஆழ்வார் *வேதத்தமிழ் செய்த மாறனிறே.

[அச்யுத திவ்யதாம மாலுங் கருங்கடலே! என்னோற்றாய்? வையக முண்டு ஆலினிலை துயின்ற வாழியான்-கோலக் கருமேனிச் செங்கண்மால் கண் படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப் பெற்றும் (முதல் திருவந்தாதி) என்கிறபடியே எம்பெருமானுக்கு திவ்யாலயமாயிருக்கும் கடல்; ஆழ்வாரும் அப்படியேயாயிருப்பர்.

கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல்-ஏபாவம்! வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்? கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண்சங்கதை வாளாழியா னொருவன் அடியேனுள்ளானே என்கிறபடியே ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாயிருப்பரிறே. இவையு மவையு முவையுமென்கிற திருவாய்மொழியிலே விசதமாகக் காணலாம்.

[அஸீம பூமா] ப்ருஹத்த்வ மென்றபடி. ஸ்ரீபாஷ்யத்தி லருளிச் செய்தபடியே ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமா யிருக்குமிறே ப்ருஹத்த்வம். பெரிய மலை. பெரிய குளம், பெரிய மாளிகை என்றால் அங்கே விவக்ஷிதமான பெருமை ஆகாரத்தி னாலாகும். பெரிய மனிசர் என்று சில மஹா புருஷர்களைச் சொல்லுவோமாகில் குணங்களினாலாகிய பெருமையே அங்கு விவக்ஷிதமாகும்.

ஆக இப்படி இருவகைப் பட்டபெருமையில் ஆகார ப்ரயுக்தமான பெருமை கடலுக்கு ஆனாப் போலே குண ப்ரயுக்கு மான பெருமை ஆழ்வார்க்காயிற்று. “அருள்கொண்டாயிர மின்தமிழ் பாடினானருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே என்னும்படியாய் எல்லை காண வொண்ணாத க்ருபாகுண மொன்றின் பெருமை போதுமே.

ஆக நான்கு விசேஷணங்களினால் நம்மாழ்வார்க்கும் கடலுக்கும் ஸாதர்மியம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று. இப்படிப்பட்ட பராங்குச பயோதி: ஜீயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணு மென்றதாயிற்று.

———-

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப் பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ஸ்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநுபவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹந ந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்ம பேதந மஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பெளம ஹரிணா வர்த்தே ப்ரும் நிர்ப்பய .

இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் விஹரிக்கும்.

தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதி யிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்ற மஹாபாரத ஸ்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத “ என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாட வல்லது ஸிம்ஹமே யாகும்.அப்படியே இந்த ராமாநுஜ ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கட முடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணா வவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோணாகணையாய்‘ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க.அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங் காட்டில் சஞ்சரிக்குமே யொழியச் சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.

(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹ பக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்க வல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்று வ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவ பர பேதத்தை ஸாதிக்க வல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது.

ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் -ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ வார்த்தா மாலையில் வார்த்தை -441-

December 17, 2025

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ ஸூக்திகள்-

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே-“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே-உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’
என்றருளிச் செய்து,
இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.-இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.

அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,-இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||

எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது) என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.-இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்-வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே–நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;-பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே-அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.-அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.-நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,-கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம் உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் – ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் – பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –மண் பிடி எடுத்து காட்டுகிறார் – பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

——————–

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலைநம்பி

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்யதேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?“-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்று என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் –ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் – –

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது-அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள் )
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை வெளிமானால் வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தாவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நம் வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீ அப்பன் பிரணதார்த்திஹராச்சார்யர் ஸ்வாமிகளுடைய தனியன்-வாழித் திருநாம பாசுரங்கள்–

December 17, 2025

நம் வர்த்தமான ஸ்வாமி -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் ஸ்வாமிகள் தனியன்

வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

————–

மார்கழியில் விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
மாவளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேரருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகரப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்துதித்தான் வாழியே
ஆர்வமுடன் அருளிச்செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க் கோதை சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்துதித்த வள்ளல் வாழியே
தெண் திரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தானுகந்த எதிராசன் கழல் தொழுமவன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

அப்பன் ப்ரணதார்த்தி ஹராசார்யர் நாள் பாட்டு
கண்ணபுரம் கண்ணனையே கருத்தமைத்து ஓங்கிடு நாள்
கந்தாடை குலம் விளங்கக் காசினியில் தோன்றிடு நாள்
அண்ணிக்கும் அமுதூறும் ஆழ்வார்கள் அனுக்ரஹித்த
அருளிச்செயல் அனுதினமும் ஆதரிக்க வந்திடு நாள்
அண்ணல் அருளாளன் அடி தொழு நம் தேசிகராம்
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் அவதாரம் செய்திடு நாள்
வண்மை மிகு வாதூல குலமோங்க வந்திடு நாள்
மார்கழியில் விசாகம் சேர் மா வளரும் நன்னாளே

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக் கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

ஐப்பசி சுக்ல பக்ஷ சதுர்தசி – கோவில் கந்தாடை வதுல தேசிக அப்பன் ராமானுஜாச்சார் ஸ்வாமி தீர்த்தம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

—————

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மணம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

———

நாள் பாட்டு

சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

———

வெண்பா

மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கஜேந்திர ரக்ஷண பர சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-56-57-58-59-

September 28, 2025

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய சரண கிசலயே சம்வஹத்ப்ய அபஹ்ருத்ய
ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந
ஆஷிப்ய உரஸ் ச லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்
தேவ ஸ்ரீ ரெங்க தாம கஜபதி குஷிதே வியாகுல ஸ்தாத் புரோ ந
–56-

கஜபதி குஷிதே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூவின போது

சம்வஹத்ப்ய–திருவடி வருடா நின்ற

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய –ஸ்ரீ தேவிமாருடைய தாமரைக் கைகளில் நின்றும்

சரண கிசலயே –தளிர் போன்ற திருவடிகளை

அபஹ்ருத்ய–இழுத்துக் கொண்டும்

ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி –ஸ்ரீ ஆதி சேஷன் திரு மேனியை திடீர் என்று துறந்தும்

லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய செப்பன்ன மென் முலைகளில்
விளங்கா நின்ற குங்கும குழம்புகளில் நின்றும்

ஆஷிப்ய உரஸ்–திரு மார்பை மீட்டுக் கொண்டும்

ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந–துடிக்கின்ற இமைகளை உடைய திருக் கண்களை மலர மலர விழித்தவராய்

ஸ்ரீ ரெங்க தாம வியாகுல ஸ்தாத் புரோ ந–நிலை கலங்கி நின்ற ஸ்ரீ பெரிய பெருமாள்
நம் கண் முகப்பே எழுந்து அருளி நிற்க வேணும் –

பஞ்ச இந்திரியங்களின் வாயில் அகப்பட்ட நம்மை -அங்கு போன்ற நிலைமையுடன் வந்து
கண் முகப்பே தோன்றி ரஷித்து அருள வேணும் –

ஸ்ரீ கஜேந்திரன் கூக்குரல் கேட்டு நிலை குலைந்த படியை வர்ணிக்கிறார்

ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் இடத் தாமரைப் பூக்களைத் தேடித் திரிந்து ஒரு தாமரை மடுவில் இழிந்து
அங்கு பலவத்தான ஒரு நீர்ப் புழுவாலே இழிப்புண்டு அத்தை ஆயிரம் வருஷம் யுத்தம் பண்ணி
ஸ்ராந்தியாலே ஸ்வ பிரயத்தன நிவ்ருத்தி பிறந்து ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட்ட போது தளிர் போன்ற
திருவடிகளைப் பிடியா நின்றுள்ள ஸ்ரீ பிராட்டிமார் திருக்கைகளில் நின்றும் பலாத்கரித்து இழுத்தும் –
ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை அப்பொழுதே விட்டும் திருக் கண்களை மலர விழித்தும்-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு முலைத்தடத்தில் குங்குமக் குழம்பில் நின்றும் திரு மார்பைப் பேர்த்தும்-
இப்படி வ்யாகுலரான ஸ்ரீ பெரிய பெருமாள் ஆ பன்னரான எங்கள் முன்னே நிரந்தரமாக இருக்கக் கடவது என்கிறார் –

————–

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-

கரி ப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்

அஸ்வீக்ருத ப்ரணீத மணி பாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்

கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று ஸ்ரீ திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –

அவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்

பதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற

பகவத் த்வராய நம–ஸ்ரீ எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்

நம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –

நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று
ஸ்ரீ கஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது
ஸ்ரீ சேனை முதலியார் கை கொடுக்க அத்தைப் பிடித்துக் கொள்ளாமலும்
அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க அத்தை அங்கீ கரியாமலும்
அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே
வாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள ஸ்ரீ பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி
த்வரித்த அந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்

————–

யம் பஸ்யன் விஸ்வ துர்யாம் தியம் அஸக்ருத் அதோ மந்தாரம் மந்ய மாந
ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி தம் தார்ஷ்ட்யம் அத்யஷிபஸ் த்வம்
கிஞ்ச உதஞ்சந் உதஸ்தா தமத கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே
தேவ ஸ்ரீ ரெங்க பந்தோ பிரணமதி ஹி ஜனே காந்தி சீகீ தசா தே –58-

ஸ்ரீ ரெங்க பந்தோ

கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் ஓங்கும் அளவில்

யம் தார்ஷ்ட்யம்-வேகம் நிறைந்த யாது ஒரு ஸ்ரீ திருவடியை

யம் பஸ்யன்–பாரா நின்றவராய் -பார்த்து –

அஸக்ருத்-ஒழிவில்லாமல்

விஸ்வ துர்யாம்–உலகங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற

தியம் அதோ –தனது சங்கல்ப ரூப ஞானத்தையும்

மந்தாரம் –வேகம் அற்றதாக எண்ணா நின்றவராய் இருந்தும்

மந்ய மாந அபி -ஸ்ரீ பெரிய திருவடியுடைய அப்படிப்பட்ட வேகமும் போராது என்று பண்ணி

த்வம் ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி–தேவரீர் அதட்டுவதும் தட்டுவதும் காலால் உதைத்துமான கார்யங்களினால்

தம் அத்யஷிபஸ் –அந்த ஸ்ரீ கருடனை வெருட்டி ஒட்டினீர்

மிஞ்ச -அன்றியும்

தம் தார்ஷ்யம் -அந்த ஸ்ரீ கருத்மானையும்

உதஞ்சந் சந் உதஸ்தா–உயரத் தூக்கிக் கொண்டு கிளம்பினீர்

இந்தச் செய்தியை ஆராயும் இடத்து

பிரணமதி ஜனே தி தசா –ஆஸ்ரித ஜன விஷயத்தில் உமது நிலைமை

காந்தி சீகீ–வெருவி பயந்து ஓடுகின்றவனுடைய நிலைமையாய் இரா நின்றது –

ஸ்ரீ பெரிய திருவடி சங்கல்பத்தை விட வேகமாக சென்றாலும் பொறாமல் தூக்கி சென்றாயே –
ரக்ஷண பாரிப்பு இருந்தபடி-

ஸ்ரீ பெரிய திருவடி வேகத்தை நிரூபித்து
தேவர் ஸமஸ்த ஜெகன் நிர்வாஹகமான சங்கல்ப ரூப ஞானத்தையும்
மந்த கதியாக அடுத்து அடுத்து நிச்சயித்து இருக்கச் செய்தேயும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூப்பீடு உயர்வற –

அப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய திருவடி வேகமும் போறாதே
அவரையும் ஹுங்காரத்தாலும் திருக்கைகளாலும் திருவடிகளாலும்
ஆஸ்பாலனம் முதலானவற்றால் ப்ரேரிப்பித்து
பின்னையும் அவரையும் இடுக்கிக் கொண்டு ஸ்ரீ தேவர் எழுந்து அருளிற்று –

இப்படி ஆஸ்ரித ஜன விஷயத்தில் தேவருக்கு உண்டான அவஸ்தை
பயத்ருதன்–பயத்தால் ஓடுமவன் – படியாய் அன்றோ இருந்தது என்கிறார் –

———————-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —59-

ஸ்ரீ ரெங்கேசய

அநு கஜ கர்ஷம்–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே

திக் மாம் இதி–கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு

ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை
அடைவு கெட அணிந்து கொண்டவராய் –

வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந–பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில்
விசாலத்தோடு கூடியவராய்

ஆஜ கந்த-எழுந்து அருளினீர்

இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்

சரணம் மம அஸி –அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்

வன் காற்று அறைய ஒருங்கே மரிந்து கிடந்தது அலர்ந்த மீன்கள் கமலத் தடம் போல்
பொலிந்தன–எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம்

பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை
அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின
தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பாஞ்சராத்ரம்–ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்-ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

September 17, 2025

கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹ மேதிநம்
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பாஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
-புராணம் வேதம் வேதாந்தம் சாங்க்யம் யோகம் ஸாஸ்திரங்கள் அனைத்தும் இதம் எதிரில் இரவாகின்றன
பஞ்சாயுத அம்சமான ஒவ்பகாயனர் சாண்டில்யர் பரத்வாஜர் கௌசிகர் மௌஞ்யாயனர் -ஐவருக்கும் ஐந்தும் தினங்களில் தானே உபதேசித்து அருளினார் –
ஆகமம் பரதம் சில்பம் வைத்தியம் ஜ்யோதிஷ மேவ ச
பஞ்ச சாஸ்த்ராணி ஸம் யோகாத் பாஞ்சராத்ரம் இதி ஸ்ம்ருதம்

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸந்ந வதந ஈஷணம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரிம் ஸூவர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத்தாம் விசிந்தயேத்
விசத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஸ்ம ரூபிணாம்
–ஸுநகபகவான்

108 ஸம்ஹிதைகள் கொண்டதும் பாஞ்சராத்ர ஆகமம் -இவற்றுள் ரத்ன த்ரயம் -சாஸ்வத பவ்ஷ்கர ஐயாக்ய ஸம்ஹிதைகளால் திருநாராயண புரம் திருவரங்கம் காஞ்சிபுரம் இவற்றில் திரு ஆராதனம்-திருவேங்கடமுடையான் வைகாநஸ ஆகமத்தினால் திருவாராதனம் கண்டு அருளுகிறான்

த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா
-சரணாகதி தீபிகா–32–வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள் வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–

பாஞ்சராத்ர மரபில் இருந்து உருவான ஆகமநூல்களை பாஞ்சராத்ர ஆகமம் என ஒற்றை நூல்தொகையாக பிற்காலத்தில் ஒருங்கிணைத்தனர். பாஞ்சராத்ர ஆகம முறை இன்றைய வைணவத்தின் முதன்மையான வழிபாட்டு நெறிமுறைத் தொகுதியாக நீடிக்கிறது.-பாஞ்சராத்ர என்ற சொல் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில்( 7.1.10 என்ற வரிகளில்) உள்ளது. வேதச்சொல் தெளிவுறும் பொருட்டு ஒரு முனிவர் பாஞ்சராத்ரம் என்னும் சடங்கைச் செய்ததை அது குறிப்பிடுகிறது.-சதபதபிராமணம் (13.6) பாஞ்சராத்ரச் சடங்கின் முதன்மைத்தெய்வம் நாராயணன் என்று குறிப்பிடுகிறது. மகாபாரதத்தின் நாராயணியப் பகுதி (மகாபாரதம் சாந்திபர்வத்தில் உள்ள நாராயணன் புகழ்பாடும் பகுதி.) ஏழு ரிஷிகளைக் குறிக்கிறது, அவர்கள் வேதச்சடங்காகிய பாஞ்சராத்ரத்தைச் செய்தனர் எனக் கூறுகிறது. ஆனால் இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லுக்கு நேர்ப் பொருள் ஐந்து இரவுகள். இச் சொல் பலவாறாக விளக்கப்படுகிறது.-வைணவ ஆகம நூல்களில் ஒன்றாகிய நாரதீய சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவு நிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப் பெயர் என்று சொல்லப்படுகிறது-வைணவ ஆகம நூலான ஈஸ்வர சம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந் நூல்கள் பேசுவதனால் இப்பெயர் எனச் சொல்கிறது-நாராயணன் ஐந்து இரவுகளிலாகச் செய்த பெருவேள்வியின்படி இப்பிரபஞ்சமாகத் தான் மாறினார் என்ற தொன்மம் சாண்டில்ய சூத்திரங்களில் உள்ளது. நாராயணன் என்னும் முனிவரை அது குறிப்பிடுகிறது என்று ஒரு தரப்பு உண்டு-

செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்””
(மூன்றாம் பரிபாடல்: 81-82)-செங்கட் காரி – சிவந்த கண்களை யுடைய வாசுதேவன், கருங்கண் வெள்ளை – கரிய கண்களை யுடைய சங்கருடணன், பச்சை – பிரத்யும்னன், பைங்கண் மால் – பசிய உடம்பினையுடைய அநிருத்தன் என்று பொருள் கொள்கின்றனர்-

இது அருவமான தத்துவத் தெய்வம் உருவம் கொண்ட வழிபாட்டுத்தெய்வங்களாக ஆவதற்கான தத்துவ அடிப்படையையும், அழகியல் அடிப்படையையும், சடங்கு முறைகளையும் வகுத்தளிக்கிறது.-வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. இன்று புழக்கத்திலுள்ள வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இருந்திருக்கலாம், அவை இப்போது கிடைப்பதில்லை. பாஞ்சராத்ர மரபு பின்னர் பாஞ்சராத்ர ஆகமம் ஆக மாறியது.வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் தொன்மையானவை, முக்கியமானவை. இவை ரத்ன த்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகம சம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை-பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்ம சம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் பௌஷ்கர சம்ஹிதையின் மாறுபாடான பரமேஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஜெயாக்ய சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
மேல்க்கோட்டை செல்வநாராயண சுவாமி கோவிலில் ஈஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
திருவெள்ளறையில் உள்ள புண்டரிகாக்ஷ சுவாமி கோயிலில் பத்ம சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீபிரஸ்ன சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
கௌடிய வைஷ்ணவர்கள் பிரம்ம சம்ஹிதையையும் நாரதிய சம்ஹிதையையும் பின்பற்றுகிறார்கள்.
கேரளத்தில் திருவல்லா ஸ்ரீவல்லபா கோவில் துர்வாச சம்ஹிதை மற்றும் அஹிர்புத்னிய சம்ஹிதையை பின்பற்றுகிறது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் நூல்கள் சம்ஹிதைகள் அல்லது தந்திரங்கள் எனப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுப்பின்றன.
ஆலயவழிபாடு
பிராசாத (ஆலயம்)
பிரதிமா (சிலை)
பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
பூஜா (வழிபாடு)
பிராயச்சித்தம் (பிழையீடு)
உத்ஸவம் (விழா)
ஆசாரம் (நெறி)
மந்திரம் (மந்திரங்கள்)
யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
தீக்ஷை (நோன்பு)
தனிநபர் கைக்கொள்ளவேண்டிய நெறிகளை பாஞ்சராத்ர ஆகம முறை பஞ்சகால பிரகிரியைகள் என வகுக்கிறது
அபிகமனா (காலைநேரத் தூய்மைநெறிகள்)
உபதானா (வழிபாட்டுமுறைகள்)
இஜ்ய- (நோன்புகள்)
ஸ்வாத்யாயம் (மெய்யியல் கல்வி)
யோகம் (தியானம் போன்றவை)
தாப சம்ஸ்காரம்: தோள்பட்டையில் சூட்டுக்கோலால் சுட்டு விஷ்ணுவின் சங்குசக்கர முத்திரைகொண்ட பாதங்களை தழும்பாக்கிக்கொள்ளுதல்
புண்ட்ர சம்ஸ்காரம்: திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
நாம சம்ஸ்காரம்: திருமால் மற்றும் வைணவ ஆசாரியார்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்ளுதல்
மந்திர சம்ஸ்காரம்: வைணவ ஆசிரியர்களிடமிருந்து தியானத்துக்கான மந்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்/
யாக சம்ஸ்காரம்: வேள்விகள், பூசைகளை கற்றுக்கொள்ளுதல்

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்
ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய
ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே.
நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும்,
இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது
மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்!
ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக
தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

———-

“ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது
நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

——-

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
“சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

——–

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள்,
உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது
வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

——-

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்–ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்-

மூலம் – அப்போது,
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும்,
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும்
சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே
ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

பௌஷ்கர ஸம்ஹிதை –
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –
எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும்,
அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை –
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர்,
அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை –
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) –
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின்
அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா –
என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) –
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும்
எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு,
தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவு தடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில்
என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும்
கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில்
உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத் தன்மை
ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) –
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) –
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய்
என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) –
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ,
அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை
மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் –
தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர் பார்த்திருப்பது தான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த
பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும்,
சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என்னில் முன்னம் பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே -திருவாய்மொழி 9-6-10

———

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).
குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).
இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

——–

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனு தினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய
புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த
பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!
தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய்
சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற
ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.!
சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை
அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!)
நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய
எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது.
இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.
இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!
இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!
எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை
இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!
இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள
மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவை எவை யென்று இந்த
பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும்
கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம்
மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய
ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)
1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

—-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.
படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச” என்று
மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளே சொல்லக் கூடாது.
உரத்த குரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார்.
புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

—–

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!
இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!
இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?
கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!
இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!
நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள்
அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!)
சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

———-

தியான ஸ்நானம்
மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

——

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

———

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி
செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான
ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட
ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

———-

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம்,
நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

——-

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

———

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை
உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி
நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும்,
ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக
உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

:பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள் உள்ளனவோ,
இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும்,
நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்க வேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும்,
அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள்
மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன்,
மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய இந்த அக்னியைத் தியானிக்க வேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள் இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும்.
இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய் தியானிக்கவும்.

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத் தியானிக்கவும்.
பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.
பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.
பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.
பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.
இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.
பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

———

ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

ஸ்ரீ வைகானஸ ஆகமம் என்பது ஸ்ரீ பகவச் சாஸ்திரமாகும்.
ஸ்ரீ விகநஸ முநிவரால் சொல்லப்பட்டதால் ஸ்ரீ வைகானஸ சூத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ விகனஸரின் ஸம்பந்தமுற்றோர் ஸ்ரீ வைகானஸர் என்று அழைக்கப்படுவர்.
இவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மாநஸ புத்திரர். இவருக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீவைகானஸ சாஸ்திரத்தை உபதேசித்தார்.

ஸ்ரீ வைகானசர்கள் பிற்புரிமையால் வரும் சமூகத்தைச் சேர்ந்துள்ளனர். யாவரும் அந்தணர்கள்.
இவர்கள் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் சம்பந்தப்படாதவர்கள்.
அவர்கள் இராமாநுஜரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் திவ்யப் பிரபந்தங்களை அவர்கள் அத்யயனம் செய்வதில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதும் இல்லை.
பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீiக்ஷயை இவர்கள் பெறுவதில்லை.
அத்தகைய தீiக்ஷயை இவர்கள் கர்ப்ப வாசத்தின்போதே மந்திர ஸம்ஸ்காரத்தால் பெற்றுவிடுகிறார்கள்.

இவர்கள் கொள்கை லக்ஷ;மி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது.
இராமாநுஜ ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பிராட்டியை ஈச்வர கோடியில் சேர்க்கிறார்கள்.
கைவல்யமும் மோக்ஷமே என்று கருதுகின்றனர்.

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.
ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால்
இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற
ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால்
பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.
ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால்
இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும்
நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் :-
பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை,
அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம்,
யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது.
இவையனைத்தும்
ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன),
யோகம் (கடவுளை அடையும் வழி),
கிரியா (ஆலய – பிம்ப நிர்மாணங்கள்),
சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் 108 என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என்று மூன்று ஸம்ஹிதைகளும் பகவானால் சொல்லப் பட்டதால் ரத்ன த்ரயம் என்றும்,
மூல ஸம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது.
பௌஷ்கரத்தின் விரிவை பாரமேச்வர ஸம்ஹிதையும்,
ஸாத்வத்தின் விரிவை ஈச்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்தின் விரிவை பாத்ம ஸம்ஹிதையும் தெரிவிக்கிறது.
இவற்றுள் ஜயாக்யம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

மேலும்
1. அஹிர் புத்ந்ய ஸம்ஹிதை
2.ஈச்வர ஸம்ஹிதை
3. ஜயாக்ய ஸம்ஹிதை
4. பாத்ம ஸம்ஹிதை
5. பாரமேச்வர ஸம்ஹிதை
6.லக்ஷ;மீ தந்த்ரம்
7. விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
8. ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதை
9. ஸாத்வ ஸம்ஹிதை முதலிய ஸம்ஹிதைகளும் உள்ளன.

ஸ்ரீ பாஞ்சராத்ர – ஸ்ரீ வைகானஸ ஆகமங்களின் வேறுபாடுகள்

1. வைகானஸ ஆகம விதிகளின்படி வைகானஸ ப்ராம்மணர்களே கருவறையிலுள்ள
இறைவனுடைய திருமேனியை தீண்ட உரிமை பெறுகிறார்கள்.

2. வைகானஸ அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற பஞ்ச ஸம்ஸ்கார தீiக்ஷ பெறுவதில்லை.

3. குரு பரம்பரையில் ஸம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதில்லை.

4. வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

5. பலி பீடத்தின் பின்னால் கொடி மரம் இருக்கும்

6. விஷ்ணு, புருஷன், சத்யன், அச்யுதன், அநிருத்தன் முதலியோர்களை வழிபடுகின்றனர்.

மற்றும் கோயில் அமைப்புக்களிலும்
திருவாராதன முறையிலும்,
மூர்த்தியின் அமைப்பிலும் ,
நூப தீபங்கள் சமர்ப்பிப்பதிலும் வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் வேறுபடுகின்றன.

————

நிர்மமே சார முத்யர்த்த ஸ்வயம் விஷ்ணு ரஸ அனுகூலம்
தத் பர வ்யூஹ விபவ ஸ்வபாவாதி நிரூபணம்
பாஞ்சராத் வயம் தந்த்ரம் மோக்ஷ ஏக பல லக்ஷணம்
ஸூ தர்சனாஹ்வயோ யோசவ் சங்கல்போ வைஷ்ணவா பரா
ஸ ஸ்வயம் பிபிதே தேந பஞ்சத பஞ்ச வக்த்ராக –அஹிர்புத்ய ஸம்ஹிதா ஸ்லோகம்

ஸூரி ஸூஹ்ருத் பாகவதா ஸாத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகா தன்மயச் ச பாஞ்ச ராத்ரிக இத்யபி
ஏவமாதி ப்ராக்யாபி ஆக்யேய கமலாசன –ஸ்ரீ பத்ம ஸம்ஹிதா ஸ்லோகம் || (2-87)” -பாகவதருக்கு பர்யாய சப்தங்கள்

பஞ்ச கால வியவஸ்தியை வேங்கடேச விபாசித
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸித்தாந்த வியவஸ்தேயம் சமர்த்தித – ஸ்ரீ பாஞ்சராத்ர ரஷா ஸ்லோகம் –

இதம் மஹா உபநிஷதம் சதுர் வேத சமான விதம்
சாங்க்ய யோக க்ரதான்தேந பஞ்ச ராத்ர அனு சப்தித்தம் –(ஸ்ரீ மஹா பாரதம் 339,112).

ராத்ரா – கதி -மார்க்கம்
ராத்ரம் ச ஞான வசனம் ஞான பஞ்ச விதம் ஸ்மர்தம்
தேநேதம் பாஞ்ச ராத்ரம் ஹி ப்ரவதந்தி மனிஷினா
தத்வம் –முக்த பிரதம் –பக்தி பிரதம் -யோகம் -வைஷயிகம் -விஷயாந்தர போகம் என்றவாறு

புராணம் வேத வேதாந்தம் ததா சாங்க்ய யோக ஜம்
பஞ்ச பிரகாரம் விஞ்ஞானம் யத்ர ராத்யேதேபிஜஜ || -பவ்ஷ்கர ஸம்ஹிதை

பாஞ்சராத்ரம் – ஏகாயான சாகை -சாந்தோக்ய சாரம் -என்பர் தேசிகர் தத்வ முக்த கலாபத்தில்

—————–——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வானமாமலை முதலாவது ஸ்வாமி விஷயமான மங்களாசாஸநம்‌, ப்ரபத்தி–ஸ்ரீ மஹார்யர்‌ என்ற ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளியவை-பண்டித ரத்னம்‌, ஸ்ரீ திருக் கண்ணபுரம்‌ ஸ்ரீ செள. ஸ்ரீநிவாஸாசார்யர்‌ (சிரோமணி) இயற்றிய உரையுடன்‌-

July 25, 2025

ஸ்ரீ வர மங்கா ஸமேத தேவ நாயக ஸ்வாமி நம :
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –
ஸ்ரீ மத்‌ வரவரமுநயே நம :
ஸ்ரீ மத் வாசாசல முநயே நம :

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌, தீபக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்ரப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முதிம்‌ |

ஸ்ரீ ஆதி சேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் பகவத் கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
முதல் பிரதான சிஷ்யர் -அஷ்ட திக் கஜங்களில் பிரதானம்

பாதுகா சில சமயம் பிரியலாம் –
பாதுகா சாயா -சில சமயம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம் –
பாத ரேகா இவர் என்பர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே–பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

இவர் கால் வைத்த காரணத்தால் சிஷ்ய ஸம்பத் பெருகியதால் பொன்னடிக்கால் ஜீயர் -செம் பொன் கழல் அடி -பொன்னடிக்கால் ஜீயர்
இவருக்கு அஷ்ட திக் கஜங்கள்
ஸ்ரீ சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
ஸ்ரீ சமரபுங்கவாசார்யர்,
ஸ்ரீ சுத்தசத்வம் அண்ணா,
ஸ்ரீ ஞானக்கண்ணாத்தான்,
ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை ,
ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்,
ஸ்ரீ கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா.

—————-

அவதாரிகை
ஸ்ரீமத்‌ வாதூலகுல திலகராய்‌ ஸ்ரீநிவாஸார்யர்‌ என்ற அபர நாமத்தை யுடைய மஹார்யர்‌, கோயிலில்‌ அழகிய மா முனிகளை ஆஸ்ரயிக்க விருப்பமுற்று எழுந்தருள, மா முனிகளும்‌ இவரைத்‌ தமது ப்ரதம சிஷ்யரான வானமாமலை ராமாநுஐ ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்து மந்த்ர மந்த்ரார்த்த ரஹஸ்யாதி கிரந்தங்களையும்‌ ஸ்ரீபாஷ்ய பகவத்‌ விஷயாதிகளையும்‌ அவரிடம்‌ அதிகரித்துச்‌ சிறந்த ஞானமுடையராய்‌ ஸ்வாசார்ய சுச்ரூஷா பரராய்‌ எழுந்தருளி
யிருந்தார்‌. பிறகு மா முனிகள்‌ தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உண்டாக வேண்டுமென்று இருக்குமவராகையாலே, தம்மைப்‌ போலவே அவருக்கும்‌, அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து முதிர்ந்த ஞானமுடையவர்களில்‌ சிறந்த சிலரை ௮ஷ்ட திக்‌ கஜங்களாகக்‌ கல்பித்தருளினார்‌. அவ் வெண்மர்‌ திருநாமங்களும்‌ “:ஸ்ரீமந் மஹார்ய ரண புங்கவ” என்ற ஸ்லோகத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது. மாமுனிகள்‌ ஒரு நாள்‌ தமது திக்கஜங்களோடு’ தம்மை ஸேவித்து நிற்கும்‌ வானமாமலை ஜீயரையும்‌ அவருடைய ஸம்ருத்தியையும்‌ கடாக்ஷித்து அதி ஸந்துஷ்டராய்‌ எழுந்தருளியிருந்து, மஹார்யரைக்‌ குறித்து,-உமது ஆசார்‌யன்‌ விஷயமாய்‌ ஒரு ச்லோகம்‌ சொல்லிக்‌ காணும்‌” என்ன,
அவரும்‌ அவசராய்‌, “* ரம்ய ஜாமத்ரு…முநிம் பஜே ” என்று அருளிச் செய்ய அது தமது அபிமதத்திற்கு இசைகந்திருந்தபடியாலே ஸந்தோஷிக்க, மற்ற சிஷ்யர்களும்‌ இந்த ஸ்லோகத்தைக்‌ கேட்டு மா முனிகளைப்‌ பார்த்து, அடியோங்‌களுக்கு இற்றைக்கு ஓர்‌ மஹா நிதி ப்ராப்தமாயிற்று”’ என்று கொண்டாட, மாமுனிகளும்‌ தமது ஸ்ரீ சைலேச தயா பாத்‌ரத்‌ தனியனோடு இந்த ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர”” என்‌னும்‌ தனியனையும்‌ நியதமாகச்‌ சேர்த்து அநுஸந்திக்கும்படி. நியமித்துத்‌ தமது அம்சாவதாரமே வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ என்று அவர்‌ வைபவத்தை ப்ரகாசப் படுத்தினார்‌.

பிறகு அந்த மஹார்யர்‌, மணவாள முனிகளால்‌ அநேக ஸமயங்‌களில்‌ ஸூஸிப்பிக்கப்பட்ட தமது ஆசார்யன்‌ வைபவத்தையும்‌, உபய வேதாந்த மந்த்ர ரஹஸ்யாதி விஷயமான
ஸுஷ்ம ஞானத்தையும்‌, ஸெளலப்யம்‌, ஸெளஸீல்யம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலிய அவரது குண கணங்களையும்‌கண்டு அதிசயித்து, அக் குணங்களில்‌ ஆழ்ந்து பக்திபரவசராய்‌, மெய் மறந்து பல்லாண்டு பாடி யல்லது நிற்க வொண்ணாத நிலையை எய்தி, அவரது மங்களாசாஸநத்திலே ப்ரவ்‌ருத்தராகிறார்‌ இந்த கிரந்தத்திலே.. இந்த ராமாநுஜ முனி
விஷயமான ப்ரபத்தி கிரந்தத்தை ‘ அருளிச் செய்தவரும்‌ இவரேயாவர்‌. இவருக்குத்‌ தொட்டை அய்யங்கார்‌ அப்பை என்ற திருநாமமும்‌ உண்டு.

ரம்யோ பயந்த்ரு முநி வர்ய தயா நிவாஸம்‌,ராமாநுஜம்‌ யதிபதம்‌ கருணாம்ருதாப்‌திம்‌ வந்தே மநோஜ்ஞ வரதாஹ்வயம்‌ ஆத்மவந்தம்‌ ஆ ஜந்ம ஸித்த பரிபூத சரித்ர போதம்‌ –1-

பதவுரை:–
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய–அழகிய மணவாள மாமுனிகளது,
தயா நிவாஸம்‌-கருணைக்கு இருப்பிடமாயும்‌,
கருணாம்ருதாப்‌திம்‌-கருணை யென்னும்‌ அம்ருதத்திற்கு உறை விடமான கடல் போன்றவரும்‌,
ஆத்மவந்தம்‌-தைர்யத்தை.யுடையவரும்‌, (ஆஜந்ம ஸித்த…போதம்‌)
ஆ ஜந்ம ஸித்த – பிறப்பு முதலே யுண்டாகிய,
பரிபூத – மிகவும்‌ புனிதமான,
சரித்ர-ஆசரணையையும்‌,
போதம்‌-ஞானத்தையும்‌ உடையவரும்‌,
மநோஜ்ஞ வரதாஹ்வயம்‌-தமது பிதாவினால்‌ அழகிய வரதர்‌ என்ற திருநாமம்‌ சாற்றப் பெற்றவரும்‌,
யதிபதம்‌-யதிகட்டு இறைவருமான,
ராமாநுஜம்‌ – வாநாசல ராமாநுஜ முனி வரரை,
வந்தே – வணங்குகின்றேன்‌.

இந்த வாநாசல ராமாநுஜ முநிவர்‌, ஸ்ரீமணவாள மாமுனிகள்‌ கிரஹஸ்த தர்மத்தை அருஷ்டித்துத்‌ திருக்குருகூரில்‌ எழுந்தருளியிருந்த காலத்திலேயே அவரது
திருவடி.களில்‌ முதலில்‌ ஆஸ்ரயித்த முதலாவது சிஷ்யராவார்‌.-ஆகையால்‌ அவரது தயைக்கு இவரேஉறைவிடமாயினர்‌. இவர்‌ ஆத்மவானும்‌ ஆவர்‌. அதாவது ஓரிடத்திலும்‌ மழுங்‌காத தைர்யமென்னும்‌ குணத்தை உடையவர்‌. இத்தால்‌-தம்மை ஆஸ்ரயித்தவர்களை உய்விக்க இவர்‌ யத்னம்‌ செய்‌தால்‌ அது விஷயத்தில்‌ தளர்வை எய்தார்‌ ‘எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌.

ஸ்ரீ ராமாயணத்தில்‌ ‘* ஆத்மவாந் கோ ஜித க்ரோத: ” என்னுமிடத்தில்‌ இப் பதத்திற்ரு தைர்யவான்‌-என்ற அர்த்தமே கோவிந்தராஜரால்‌ கூறப்பட்டுள்ளது காண்க. அல்லது ஆத்ம சப்தம்‌ ஸ்வபாவத்தைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அபிமுகனான சேதநனை ரக்ஷிக்கும்‌
ஆசார்ய ஸ்வபாவத்தைக்‌ கூறி, அத்தகைய ரக்ஷண ஸ்வபாவம்‌ வாய்ந்தவர்‌ என்றுமாம்‌. அல்லது ஆத்ம சப்தம்‌ மனதைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அதீநமாய்‌ தம்‌ வசத்திலாய மனத்தை யுடையவர்‌ என்றுமாம்‌. இத்தால்‌ இவரது வைராக்ய முடைமை கூறப்பட்டதாகும்‌.

இவர்‌ கருணையாகிய அம்ருதம்‌ நிறைந்த கடல்‌ போன்றவர் இவரைக்‌ கடலாகக்‌ கூறியதால்‌ கடலில்‌ தண்ணீரை ஒருவராலும்‌ வற்றச்செய்ய முடியாதாப்‌ போலவே இவர்‌ கருணையையும்‌ வற்றச்‌ செய்ய இயலாது என்பது ஸூசிதமாம்‌. கருணையை
அம்ருதமாகக் கூறியதால்‌, அம்ருதம்‌ தன்னை அருந்தியவருக்கு அமரத்‌ தன்மை யளிப்பது போலவே, இவரது கருணையும்‌ தமக்கு விஷயமானவர்களுக்கு அமரத்வத்தை
(நித்பத்வத்தை) அளிக்குமென்பது தேறுகிறது
. நிற்க இப்‌பொழுது இவர்‌ நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸத்தை எய்தி ராமாநுஜ முனி என்று திருநாமம்‌ உடையராயினும்‌,
தமது பால்யத்தில்‌ தமது பிதாவால்‌ மிகுந்த அழகு வாய்ந்திருந்தமை காரணமாக, இவர்‌ அழகிய வரதரென்று அழைக்‌கப் பட்டவராயிருப்பர்‌. பிறப்புடனே கூட உண்டாகிய மிகப்‌ பரிசுத்தமான அநுஷ்டானங்களையும்‌ ஞானத்தையும்‌ உடையவர்‌ இவர்‌. இத்தகைய பெருமை வாய்ந்த யதித்‌ தலைவரான ராமாநுஜ முனியை வணங்குகின்றேன்‌.

——-

அவதாரிகை.–
முதல்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜமுநிவர்‌ மணவாள மா முனிகளின்‌ தயைக்குப்‌ பாத்ரமானவர்‌ என்றார்‌. இதில்‌ இவருக்கு உண்டாகிய வாத்ஸல்ய ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களுக்கு ஊற்றுவாய்‌ மாமுனிகள்‌ எனக்‌ கூறி, இவரே எனது குலத்திற்கு நாதன்‌” எனவும்‌ கூறி வணங்குகின்றார்‌.

ரம்யோ பயந்த்ரு முநிவர்ய தயாநுபாவ ஸம் ஸித்த ஸத் குண கணஓக மஹார்ணவாய ராமாநுஜாய முநயே யமிநாம்‌ வராய மாமக நாதாய குலஸ்ய நம அஸ்து நித்யம் –2-

பதவுரை:–(ரம்யோ பயந்த்ரு…மஹார்ணவாய)
ரம்யோ பயந்த்ரு- அழகிய மணவாள னென்னும்‌,
முநிவர்ய – யதித்‌ தலைவனது,
தயாநுபாவ -.கருணையின்‌ ப்ரபாவத்தினால்‌,
ஸம் ஸித்த-நன்றாய்‌ ஸித்‌திக்கப் பெற்ற, ஸத் குண கண-சிறந்த குணங்களின்‌ திரளாகிற,
ஓக-ப்ரவாஹத்திற்கு,
மஹார்ணவாய – புகலிடமாகிய ஸமுத்ரம்‌ போன்றவரும்‌,
யமிநாம்‌-மனதை அடக்கியாளும்‌ யோகிகளுள்‌
வராய – தலை சிறந்தவரும்‌,
மாமக குலஸ்ய-எனது குலத்திற்கு,
நாதாய-யஜமானரும்‌,
ராமாநுஜாய – இராமாநுசன்‌ எனப்‌ பெயர் பூண்ட வருமான;
முநயே – முநிவரின்‌ பொருட்டு,
நம: – எனது நமஸ்காரம்‌,
அஸ்து – ஆயிடுக.

இந்த வாநாத்ரி முநிவர்‌ பிறப்பே தொடங்கி உண்டாகிய ஸதாசாரம்‌, ஞானம்‌ இவைகளை யுடையராயினும்‌ மணவாள மா முனிகளை ஆஸ்ரயித்த பின்னர்‌, அவரது கருணையின்‌ மஹிமையால்‌ உண்டாகிய வாத்ஸல்ய ஸவ்ஸீல்ய ஸவ்லப்யாதி குணத்‌ திரள்‌ ப்ரவாஹமாகச்‌ சென்று சேரும்‌ பெருங்கடலாயினர்‌. இவரை குணக்‌ கட.லாகக்‌ கூறியதால்‌, குணங்கள்‌ வற்றாத ஆகரம்‌ இவர்‌ என்றததாயிற்று. இவர்‌ இந்த்ரியங்களை அடக்கி மனதைத்‌ தம்‌ நிலையிலே நிறுத்தும்‌ யோகிகளுள்‌ சிறந்த தலைவர்‌. எனது குலத்தை நிர்வஹித்து நடத்திப் போரும்‌ நாதனுமாவார்‌-இப்‌ பெருமை வாய்ந்த இவ் வாநாசல முனிவருக்கு நித்யமாக எனது நமஸ்காரம்‌ உரித்தாகுக.

—————-

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவருக்கு உண்டாகிய ஸத் குணங்கள்‌ மணவாள மாமுனிகளின்‌ தயா ப்ரபாவத்தாலென்றார்‌. இதில்‌ இவருக்கு தாரக போஷகாதிகளும்‌ மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளே எனக்‌ கூறி, இவர்‌ தமது குலத்திற்கு நாதனானமையை விளக்‌கிக்‌ கூறுகிறார்‌.

ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர பாத கம்ஜாத ப்ருங்கம்‌ கருணாந்தரங்கம்‌ ராமாநுஜம்‌ முநிம்‌ நவ்மி மதீய ஹ்ருத்‌ சந்த்ர காந்தோ பல பூர்ண சந்தரம்‌ –3-

பதவுரை:–(ஸ்ரீரம்ய ஜாமாத்ரு…… ப்ருங்‌ தம்‌) ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
பாத – திருவடிகளாகிற,
கம்ஜாத – தாமரை மலர்களில்‌ படியும்‌,
ப்ருங்கம்‌ – வண்டு போன்றவரும்‌,
கருணாந்தரங்கம்‌-கருணையுடன்‌ கூடிய மனதை உடையவரும்‌,
மதீய- என்னுடையதான,
ஹ்ருத்‌ – மனதாகிற,
சந்த்ர காந்தோ பல – சந்த்ரகாந்தக்‌ கல்லுக்கு,
பூர்ண சந்தரம்‌ – கலைகள்‌ நிறைந்த சந்த்ரன்‌ போன்றவருமான,
ராமாநுஜம்‌ முநிம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ முநிவரை,
நவ்மி – துதிக்‌கின்றேன்‌.

இவ் விராமாநுஜ முநிவர்‌ மணவாள மாமுனிகளினுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ படிந்த வண்டு போன்றவர்‌ என்பதால்‌ அத் திருவடி மலர்களையே . தமக்கு தாரக போஷகங்களாகக்‌ கொண்டவர்‌ எனக்‌ கூறியவாறாம்‌.-வண்டுகளுக்கு மலரே தாரக போஷகங்களல்‌லவா? இவர்‌ கருணையோடு கூடிய மனது வாய்ந்தவர்‌, மேலும்‌ எனது மனதாகிற சந்த்ர காந்தக்‌ கல்‌லுக்கு கலா பூர்ணனான சந்திரன்‌ போன்றவர்‌. இவரைச்‌ சந்திரனாகவும்‌ மனதைக்‌ கல்லாகவும்‌ கூறியதால்‌, கல்லையும்‌ உருகச் செய்யும்‌ சக்தி வாய்ந்தவர்‌ இம்‌ முனிவர்‌ என்றும்‌, அக் கல்‌ சந்திரனுக்கன்றி மற்றொன்றைக்‌ கண்டு உருக மாட்டாதது போலவே, எனது கல் நெஞ்சம்‌ அவருக்கன்றி மற்றையோருக்குக்‌ கரையாது என்றும்‌, கலா பூர்ணனான சந்த்ரனென்று ரூபகமாகக்‌ கூறியதால்‌ இவரும்‌ ௮ச் சந்த்ரனைப் போலவே கலா பூர்ணர்‌ (வித்யைகள்‌ நிரம்பியவர்‌ ) என்றும்‌ கூறப்பட்டதாகும்‌. இதனால்‌ இவர்‌ கல்வியின்‌ பெருமை காரணமாகத்‌ தம்‌ நெஞ்சம்‌ உருகியதாகக்‌ கூறப்‌ பட்டதாகும்‌. கல்வி காரணமாகத்‌ தமது குலத்துக்கு நாதர்‌ என்று கீழில்‌ ஸ்லோகத்திற்கு இது விவரணமுமாகும்‌. இவ்‌வாறு சிறப்பு வாய்ந்த இராமாநுச முநியைத்‌ துதிக்‌கின்றேன்‌.

——————

அவதாரிகை:–இந்த ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கல்யாண குணங்களில்‌ சிலவற்றைக்‌ கூறி, இவர்‌ அழகிய மணவாள மாமுனிகளுக்கு அந்தரங்கராய்‌ -பஹி: சர:ப்ராண: என்னுமா போலே அம் முனிவரின்‌ ப்ராண ஸ்தாநீயருமாவார்‌ என்கிறார்‌.

வந்தே வாத்ஸல்ய ஸெளசீல்ய ஞாநாதி குண ஸாகரம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி ஜீவிதம்‌
ராமாநுஜ முநிம்‌ –
4-

பதவுரை :–
வாத்ஸல்ய -வாத்ஸல்ய குணமென்ன,
ஸெளசீல்ய – ஸெளசீல்ய குணமென்ன,
ஞான- ஞானமென்ன,
ஆதி – இவை முதலாய,

குண – குணங்கட்கு,
ஸாகரம்‌ – கடல்‌ போன்‌றவரும்‌
ரம்ய ஜாமாத்ரு முநி – அழகிய மணவாள மாமுனிகட்கு,
ஜீவிதம்‌ – ப்ராணன்‌ போன்‌றவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ முனியை, வந்தே – வணங்குகின்றேன்‌-

வாத்ஸல்யமென்பது – தன்னை ஆஸ்ரயித்தவர்‌கள்‌ இழைத்த குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌ மிகப்‌ பெரியோரின்‌ ௮ற்புத குணமாம்‌. இக்‌ குணம்‌ நமது குற்றங்‌களைக்‌ கண்டும்‌ அஞ்சாது அப் பெரியோரை நாம்‌ அணுகுவதற்கு உறுப்பாகும்‌. செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்ளுதல்‌ பெரியோரின்‌ இயல்பு.-ஸெளசீல்யமென்பது–தான்‌ எவ்வளவு பெருமை யுடையவனாயினும்‌ தன்‌ மேன்மையைக்‌ கொஞ்சமும்‌ தன்‌ மனத்தால்‌ நினையாது மிகத்‌ தாழ்ந்தோருடனும்‌ புரையறக்‌ கலக்கும்‌ குண விசேஷமாகும்‌.
இஃது நாம்‌ கட்ட விரும்பும்‌ பெரியோரின்‌ பெருமையைக்‌ கண்டு நாம்‌ அகல வேண்டாமைக்கு உரித்தாய குணம்‌-ஞானமென்பது தன்னை ஆஸ்ரயித்தவர்களின்‌ அபேக்ஷையை அறிய ஏதுவாய குணம்‌. ஆதி சப்தத்தால்‌ ஸ்வாமித்வம்‌, ப்ராப்தி பூர்த்தி முதலிய குணங்களும்‌ கூறப்‌பட்டனவாகும்‌. இக் குணங்கட்கு இவரைக்‌ கடலெனக்‌
கூறியதால்‌ இவைகள்‌ வற்றாது நிரம்பி இருக்குமிடமென்று கூறியதாகும்‌-
நிற்க -இம் முனிவரை மா முனிகளுக்கு ப்ராணன்‌ எனக்‌ கூறியதால்‌ இவரை க்ஷண காலமும்‌ விட்டுப் பிரிந்து மா முனிகள்‌ தரிக்க வல்லரல்லர்‌ என்றதும்‌, (ஸ்ரீராமபிரானுக்கு இளைய பெருமாள்‌ போல்‌ ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்‌ எல்லா விதக்‌ கைங்கர்யங்களையும்‌
செய்யும்‌ அந்தரங்கர்‌
என்ற அம்சமும்‌ தோற்றுகின்றன-இத்தகைய பெருமை வாய்ந்தவரை வணங்குகின்றேன்‌.

————

கீழ்‌ ஸ்லோகத்தில்‌ வாச்ஸல்ய ஸெளசீல்யாதி குணங்களுக்குக்‌ கடலென்றும்‌, மாமுனிகளை்‌ விட்‌டகலாதவர்‌ என்றும்‌ இவரது பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய வைராக்கியமென்னும்‌ முக்‌கிய குணம்‌ கூறப்படுகிறது.

வந்தே வாந மஹாசைல ராமாநுஜ மஹாமுமிம்‌ யத்‌ அநாதர ஸம் வ்ரீடம்‌ அந்தராளாஸ்ரம த்வயம்‌-5-

பதவுரை:–
அந்தராளாஸ்ரம த்வயம்‌ – ப்ரும்ஹசர்யத்‌திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ மத்தியிலுள்ள கார்ஹஸ்த்யம்‌,வாநப்ரஸதம்‌ என்னும்‌ ஆஸ்ரமங்களிரண்டும்‌,
யத்‌-எந்த முனிவரது,
அநாதர – ஆதரவின்மையாலே,
ஸம் வ்ரீடம்‌ – மிகுந்த லஜ்ஜையை உடையதாக, (ஆயிற்றோ);
வாந மஹாசைல-(அந்த) வானமாமாலை,
ராமாநுஜ மஹா முமிம்‌ – ராமானுஜனென்னும்‌ மா முனியை,
வந்தே-நமஸ்கரிக்கின்றேன்‌-.

இங்கு “வாந மஹாசைல ‘ எனக்‌ கூறியது-எம்பெருமானை. ** வானமாமலையே அடியேன்‌ தொழ வந்‌தருளே ‘* என்று நம்மாழ்வார்‌ அவனையே கூறியுள்ளார்‌,
அந்த வானமாமலை என்ற தழிழ்ப்‌ பதமே ஸம்ஸ்க்ருத பதமாக ** வாந மஹா சைல ”? என்று மஹார்யரால்‌ கூறப்பட்டதாகும்‌. எனவே அவ்வெம்பெருமானுக்கு உரிமை பூண்டவராய்‌ அவருடைய கல்யாண குணங்களையே அநவரதம்‌ அநு ஸந்தாநம்‌ செய்யுமவராகையாலே, **மஹாமுநிம்‌’” என்றார்‌–இந்த ஸ்லோகத்தின்‌ பிற்‌ பகுதியால்‌ இவரது சிறந்த வைராக்‌யம்‌ என்னும்‌ குணம்‌, மிகுந்த சமத்காரத்துடன்‌ கூறப்படுவது காணலாகும் -அதாவது, இந்த ராமாநுஜ முநிவர்‌ தமது பிதாவால்‌ உபநயன ஸம்ஸ்காரம்‌ பெற்று ப்ரும்ஹசர்‌யத்துடன்‌ வேத வேதாங்கங்களை நன்கு கற்றறிந்து வைராக்‌யத்தை எய்தி, அதன்‌ மேலீட்டால்‌ ப்ரும்‌ஹசர்யத்திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ நடுவிலுள்‌ள கார்‌ஹஸ்‌யம்‌, வானப்ரஸ்‌தம்‌ என்ற இரண்டு ஆஸ்ரமங்களையும்‌ கண்ணெடுத்தும்‌ பாராது இவர்‌ அநாதரவு செய்ததால்‌ அவைகள்‌ மிகுந்த வெட்கத்தை எய்தின என்‌கிறார்‌, மஹார்யர்‌ ரஸோக்‌தியாலே,-வைகுண்ட என்றும்‌ சப்தம்‌ எம்பெருமானையும்‌, அவருக்கு வாஸ ஸ்தானமான பரம பதத்தையும்‌ கூறுவதுபோல இங்‌கும்‌ வாநாசல என்ற பதம்‌ எம்பெருமானையும்‌ அவருடைய
திருப்பதியான ஸ்ரீ வரமங்கல நகரையும்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. தற்காலத்தில்‌ வ்யவஹாராமும்‌ இவ்வாறே உண்டாயிருக்கலாம்‌. “தேசிக சிகா மணிகளான எம்பெருமானார்‌ மணவாள மா முனிகள்‌ போன்‌றவரும்‌ சிறிது காலம்‌ க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்து நம்மை ஆதரித்திருக்க,-அந்தோ-நம்மை இவர்‌ கண்ணெடுத்து ஏற இறங்கவும்‌ பார்க்கவில்லையே” என்று இவரால்‌ ஏற்கப்படாத கிருஹஸ்‌தாஸ்ரமம்‌ வெட்கமுற்றதாம்‌. இது வாநப்ரஸ்தத்‌திற்கும்‌-உப லஷணம்‌. இத்தால்‌ அவ்விருவரிலும்‌ காட்டிலும்‌ வைராக்ய விஷயத்தில்‌ இவர்‌ சிறப்புற்றவர்‌ எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌. மணவாள மாமுனி கிருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்து வரும்‌ காலத்திலேயே அவரது ஸம்பந்தம்‌
பெற்ற இவர்‌, தமது வைராக்யத்தின்‌ மேலீட்டால்‌ . ஸந்யாஸாஸ்ரமத்தை எய்தினார்‌ என்பதை யதிந்தர ப்ரவண ப்ரபாவம்‌, ககநகிரிமுநி சரிதம்‌ முதலியவற்றில்‌ காணலாம்‌. இச்‌ சிறந்த வைராக்யம்‌ பூண்ட இராமாநுஐ முநியை வணங்குகின்றேன்

———

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ அழகிய மணவாள மா முனிகளின் திருவடிகளில்‌ முதலிலேயே இவர்‌ ஆஸ்ரயித்து, அவருடைய கருணை பாயும்‌ முதல்‌ மடையுமாவர்‌ இவர்‌ என்று கூறுகிறார்‌. அதாவது இவரே அவரது முதல்‌ சிஷ்யர்‌. இவரது கால்‌ நலத்தாலே மற்றெல்லா சிஷ்யர்‌களும்‌ தம்மை ஆச்ரயித்துத்‌ தாம்‌ பெருமை எய்தியதாக மாமுனிகளும்‌ நினைத்தன்றோ இவருக்கு “*பொன்னடிக்கால்‌ ஜீயர்‌ ‘” என்று திருநாமம்‌ சாற்றியதும்‌. எனவே அவர்‌ கருணைக்கு முதல்‌ இலக்கு இவர்‌. மேலும்‌ காமம்‌, கரோதம்‌ என்ற தீக்குணங்கள்‌ தம்மிடம்‌ இல்லாததோடு தம்மை அடுத்த மற்றையாரின்‌ அத் தீய குணங்களையும்‌ அகற்றுமவர்‌ இவர்‌ என்ற பெருமையையும்‌ கூறுகிறார்‌.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர ப்ரஸாத ப்ரதமாஸ்பதம்‌
ராமாநுஜமுநிம்‌ வந்தே காமாதி துரிதாபஹம்‌-6-

பதவுரை :-
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌, :
ப்ரஸாத -அருளுக்கு,
ப்ரதமாஸ்பதம்‌ – முதலாவது ஸ்தானமாகியவரும்‌,
காமாதி துரிதாபஹம்‌ – காமம்‌ முதலான பாபங்‌களை அகற்றுமவருமான, ராமாநுஜமுநிம்‌ – வாநாத்ரி-ராமாநுஜ முநிவரை,
வந்தே-வணங்குகின்றேன்‌.

மற்றைய சிஷ்யர்கள்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ பெருமையை உணர்ந்து அவரை ஆஸ்ரயிப்பதற்கு வெகு காலம்‌ முன்னமேயே அவர்‌ கிருஹஸ்தாஸ்ரமத்தை யுடையராய்‌ திருநகரியில்‌ எழுந்தருளியிருந்த போதே, இந்த ராமாநுஜ முனிவர்‌ அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து அவரது கருணைக்கு முதல்‌ பாத்திரமாய்‌ அவர்‌ பாத ரேகா ஸமராயிருந்து, பின்பு (மா முனிகளை) ஆஸ்ரயித்த அண்ணன்‌, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌ முதலியோருக்கு ஆஸ்ரயணத்தில்‌ இவர்‌ புருஷகாரமா யிருந்தமையாலும்‌ அவருடைய கருணைக்கு முதல்‌ விஷயம்‌ இவரே. மேலும்‌ இவர்‌ வைராக்ய சாலியாகையால்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று சொல்லப்படும்‌ உடன்‌ பிறந்த சத்ருக்‌களாகிய ஆறு தீய குணங்களையும்‌ தாம்‌ அகற்றியதோடு தம்மைச்‌ சார்ந்தோரையும்‌ அத் தீய குணங்கள்‌ சாரா வண்ணம்‌ நீக்கும்‌ சக்தி வாய்க்தவர்‌. **காமாத்‌ க்ரோதோபி ஜாயதே க்ரோதாத்‌ பவதி ஸம்மோஹ :’”இத்யாதிகளாலே காமாதிகளின்‌ கொடுமை ஸ்ரீ கீதையில்‌ கண்ணனால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது. இவைகளைப்‌ பாப வாசகமான துரித சப்தத்தாலே கூறியது, அப் பாபத்துக்கு இத்‌ தீய குணங்கள்‌ காரணமாகையாலே. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ராமானுஜ முநியை வணங்குகின்றேன்‌.

————-

கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவர்‌ ராக த்வேஷாதிகள்‌ அற்றவரெனக்‌ கூறினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ராக த்வேஷங்களே, “இவர் நமக்கு நிலமன்று; நாம்‌ இங்‌கிருக்க இயலாது?” என்று இவரை விட்டுத்‌ தாங்களே கை வாங்கின’ என்றும்‌, இவர்‌ அழகிய குணங்களுக்கு உறைவிடமென்றும்‌, உத்தம புருஷ லக்ஷணம்‌ வாய்ந்தவரென்றும்‌ கூறுகிறார்

ராமாநுஜ முநிம்‌ வந்தே ரமணிய குணாகரம்‌
ராக த்வேஷ விநிர்முக்தம்‌ ராஜீ வதல லோசனம்‌-7-

பதவுரை:–
ரமணிய குணாகரம்‌ – அழகிய குணங்களுக்கு உற்பத்தி ஸ்தாநமாயும்‌, ராக த்வேஷ விநிர்முக்தம்‌ – ராக த்வேஷங்களால்‌ விடப் பெற்றவரும்‌,
ராஜீ வதல லோசனம்‌ – தாமரைப்‌ பூவின்‌ இதழ் போல்‌ அழகிய நீண்ட கண்களை யுடையவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ யோகியை,
வந்தே – வணங்குகிறேன்‌.

இம்‌ முனிவர்‌ அழகிய நற்குணங்கள்‌ உற்‌பவிக்கும்‌ கனியாவார்‌. ராக த்வேஷங்களால்‌ விடப்பெற்றவர்‌. அதாவது ௮வை இவரிடம்‌ முன்பிருந்து இவருடைய முயற்சியால்‌ அகற்றப் பட்டவையல்ல; அவைகளே இவரைக்‌ கண்டு பயந்து ஓடுங்க, **இவர்‌ ஈமக்கு நிலமன்று” என்று இவரை விட்டு நீங்க. இத்தால்‌ இவர்‌ ராக த்வேஷங்களின்‌ வாஸனையும்‌ அற்றவர்‌ எனக்‌ கூறப்பட்ட.தாகும்‌. தாமரை இதழ் போன்ற நீண்ட திருக்கண்களை யுடையவர்‌ எனக்‌ கூறியதால்‌ இவரது மஹா புருஷ லக்ஷணமும்‌, அழகிய வரதர்‌ என்ற திருநாமத்துக்குக்‌ காரணமான இவரது அழகும்‌ கூறப்பட்டனவாகும்‌. இத்தகைய ராமாநுஜ முநியை:
வணங்குகின்றேன்‌.

—————–

அவதாரிகை:-
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது தோஷமின்மையும்‌ கல்யாண குணங்களும்‌ ஸெளந்தர்யமுமாகியவை கூறப்பட்டன. இதில்‌ இவரது வைராக்யத்தின்‌
பெருமை
விஸ்தரிக்கப்படுகிறது.

உத்பத்திம்‌ பவநாத்மஜே அலபத யா வைராக்ய ஸம்பத்‌ புரா
சாந்தே சாந்தநவே நிரந்தரம்‌ அகாத்‌ வ்ருத்திம்‌ ஸம்ருத்தாம்‌ தத
ஸா இயம்‌ ஸம் ப்ரதி யம்‌ ஸமேத்ய புவநே வித்யோததே நைகதா
தம்‌ ராமாநுஐ யோகிநம்‌ குருவரம்‌ பஸ்யேம ஸஸ்வத்‌ வயம்‌
-8-

பதவுரை:–
யா – எந்த,
வைராக்ய ஸம்பத்‌ – வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
பவநாத்மஜே – வாயுவின்‌ புத்திரனான
அநுமானிடம்‌,
புரா – முற்காலத்தில்‌,
உத்பத்திம்‌ – உற்பத்‌தியை,
அலபத – அடைந்ததோ,
தத: – அதன் பிறகு,
(யா)எந்த வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
சாந்தே – அடக்கப்‌ பட்ட மனதையுடைய,
சாந்தநவே – சந்தநு மஹாராஜனின்‌
புதல்வனான பீஷ்மரிடம்‌,
ஸம்ருத்தாம்‌ – பூர்ணமான,
ருத்திம்‌ – ஸம்ருத்தியை,
நிரந்தரம்‌ – இடைவிடாது, நித்யமாக-என்றபடி,
அகாத்‌ – அடைந்ததோ,
ஸா – அப்படிப்‌ பட்ட,
இயம்‌ – இந்த வைராக்யம்‌ என்னும்‌ ஐஸ்வர்யம்‌,
யம்‌ -எந்த ராமானுஜ முநியை,
ஸமேத்ய – அடைந்து,
புவநே -உலகில்‌,
நைகதா- அநேக விதமாக,
வித்யோததே – ப்ரகாசிக்‌கின்றதோ,
குருவரம்‌ – ஆசார்யர்களுள்‌ சிறந்தவரான,
தம்‌ -அந்த,
ராமாநுஐ யோகிநம்‌ – இராமானுஜ முநியை,
வயம்‌ -நாம்‌,
சச்வத்‌ – அடிக்கடி,
பஸ்யேம-பார்க்கக் கடவோம்‌-கண்டு
களிக்கக் கடவோம்‌ என்றவாறு.

வைராக்யம்‌ என்பது உலகில்‌ மிகச்‌ சிறந்த ஓர்‌ ஐஸ்வர்யமாகும்‌ ; அது எல்லோருக்கும்‌ கிடைத்தலரிது. அவ்வைஸ்வர்யம்‌ முதலில்‌ வாயு புத்ரனாகிய அநுமானிடமே உண்டாயிற்று- அதன்‌ பிறகு மனச்‌ சாந்தி பெற்ற சந்தநு மஹாராஜனின்‌ குமாரனாகிய பீஷ்மரிடம்‌ நிரந்தரமாக மிக விருத்தியைப்‌ பெற்றது. இவ்‌ விருவரை யொழிந்த மற்றையோருக்கு இவ்வைஸ்வர்யம்‌ இருந்ததில்லை என்பதை *:௮ந்யத்ர பீஷ்மாத்‌ காங்கேயா தந்யத்ர ச ஹ.நூமத: | ஹறிணீ குர மாத்ரேண சர்மண மோஹிதம்‌: ஐகத்‌ ‘” என்ற வசனத்தால்‌ அறிகிறோம்‌. : இந்த ஸ்லோகத்‌தின்‌ கருத்து ** கங்கா புத்திரனான பீஷ்மனையும்‌ அநுமானையும்‌ தவிர்த்து மற்றைய உலகம்‌ மானின்‌ குளப்படி போன்ற ஸ்திரீகளின்‌ அவய விசேஷத்தாலே மோஹமுற்றதேயாகும்‌”’ என்பதாம்‌. பீஷ்மரின்‌ வைராக்யம்‌ அநுமானது வைராக்யத்தை விடச்‌ சிறந்ததாகும்‌. ஏனெனில்‌, மிகுந்த வீர்யத்தையும்‌ ஐஸ்வர்யத்தையும்‌ உடையராய்‌ எல்லா போக்‌யங்களையும்‌ அனுபவிக்கத்‌ தகுதி வாய்ந்த அரசிளங்‌ குமாரரல்லவா அவர்‌? அத்தகையவர்‌ தமது பிதாவின்‌ விருப்‌பத்தை உணர்ந்து மேலும்‌ பிதா காம போகங்களை அநுபவிக்க வேண்டியதற்காகவே தமது யெளவனப்‌ பருவத்திலும்‌ தமது போகத்தை சபத பூர்வமாகத்‌ துறந்து உலகறியச் செய்து உயிருள்ளளவும்‌ ப்ரும்ஹசர்யத்தையே அநுஷ்‌டித்துப்‌ போந்த மஹா வைராக்யசாலி யாயிற்றே அவர்‌,-மேலும்‌ தமது ப்ராதாவான விசித்ர வீர்யன்‌ நிமித்தமாக ஸ்வயம்வரத்தில்‌ பலாத்காரத்தால்‌ கொண்டு வரப்பட்ட காசி ராஜன்‌ மகள்‌ அம்பா என்பவள்‌, தான்‌ ஏற்கனவே ஸால்வராஜனை வரித்திருப்பதாயும்‌ தனது மனம்‌ அவனையே விரும்புவதாகவும்‌ சொல்ல, பீஷ்மரும்‌ விசித்ர வீர்யனும்‌ அவளை அவள்‌ விருப்பப்படி செய்ய அநுமதித்தார்கள்‌.ஆனால்‌ அவள்‌ ஸால்வனைச்‌ சந்தித்து தன்னை மணக்கும்படி கேட்க பிஷ்மரால்‌ பலாத்கரித்து வீர்யத்தால்‌ கொண்டு போகப்பட்ட உன்னை நான்‌ விவாஹம்‌ செய்து கொள்ள மாட்டேன்‌ என்று திரஸ்கரித்து விட்டான்‌. பிறகு அவள்‌ பீஷ்மரிடம்‌ வந்து, “*“ஸால்வன்‌ நிராகரித்து விட்டபடியாலும்‌ நீரே வீர்யத்தால்‌ என்னைக்‌ கொண்டு வந்த படியாலும்‌ நீராவது என்னை விவாகம்‌ செய்து கொள்ள வேண்டும்‌; இல்லையேல்‌ தவம்‌ செய்தாவது உமது உயிரை மாய்க்கும்‌ உபா யத்தைக்‌ கைக் கொள்வேன்‌”” என்று சபதம்‌ பண்ணின விடத்‌திலும்‌ உயிரையும்‌ மதியாது தாம்‌ முன்‌ பண்ணிய சபதத்‌தின்படி ப்ரும்ஹசர்யத்தைப்‌ பேணிப்‌ போந்த மஹாநுபாவருமாவர்‌ அவர்‌. இப்படி அவ்விருவரிடமும்‌ காணப்பட்ட வைராக்யம்‌, இக்‌ கலிகாலத்திலும்‌ விரக்தர்களில்‌ தலைவரான இவரிடம்‌ காணப்படுவதால்‌ மிகவும்‌ ப்ரகாசிக்கிறது என்‌றார்‌. காம க்ரோதாதி தோஷமே நிறைந்த இக்‌ கலியிலும்‌ ஒருவரிட.ம்‌ அந்த வைராக்ய மிருந்ததால்‌ அது அபிவருத்‌தியை யடைந்து ப்ரகாசிக்கின்றது எனக்‌ கூறப்பட்டது.அத்தகைய வைராக்யம்‌ பூண்ட ராமாநுஐ முநிவரை அடிக்கடி காணக்கடவோம்‌; கண்டு களிப்பெய்தக்‌ கடவோம்‌ -என ப்ரார்த்தக்கிறார்‌. இக்காலத்தில்‌ அத்தகைய வைராக்யம்‌ வாய்ந்தவரை தர்சிப்பதும்‌, அதிலும்‌ அடிக்கடி தர்சிப்பதும்‌ கிடைக்கக் கூடியன வல்லவாகையால்‌ அதைப் ப்ரார்த்திக்கிறார்‌ மஹார்யர்‌.

—————

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது வைராக்‌யத்தின்‌ பெருமை கூறப் பெற்றது. இதில்‌ சிறந்த பண்டிதர்‌களாலும்‌ மெச்சப்படும்‌ இவரது கிரந்த வ்யாக்யான சக்தியும்‌ மிகவும்‌ தூய்மையான ஆசாரமும்‌ கூறப்படுகின்‌றன.

வ்யாக்யா யஸ்ய விதக்த ஸூரிபரிஷச் சித்த அபஹார க்ஷமா
யத்‌ தைநந்தின ஸத்க்ரியா யதிவராதி ஆசார ஸந் மாத்ருகா
தம்‌ ராமாநுஜயோ வர்யம்‌ அமலம்‌ ஞாநாதி பூர்ண ஆஸ்ரயம்‌
வந்தே ஸெளம்ய வரேச யோகி சரண த்வந்த அரவிந்த ஆஸ்ரயம்‌ -9-

பதவுரை:–
யஸ்ய – எந்த ராமாநுஜ முனிவருடைய,
வ்யாக்யா – உபய வேதாந்த கிரந்தங்களுக்கும்‌ மந்த்ர மந்த்‌ரார்த்தங்களுக்கும்‌ கூறப்படும்‌ தெளிவுரை வ்யாக்யானம்‌,
விதக்த – மிகவும்‌ ஸமர்த்தர்களான,
ஸூரிபரிஷத்‌ – பண்டித கோஷ்டியின்‌,
சித்த – மனத்தை,
அபஹார – கவர்வதில்‌,
க்ஷமா – தகுதி வாய்ந்ததாக ஆகிறதோ,
யத்‌ – எவரது,
தைநந்தின – ப்ரதிதினம்‌ அநுஷ்டிக்கப்பட வேண்டிய,
ஸத்க்ரியா-சிறந்த அநுஷ்டாநங்கள்‌, யதிவராதி- எம்‌பெருமானார்‌ முதலானாருடைய,
ஆசார-அநுஷ்டானங்களை
ஸந் மாத்ருகா:- ஸ்லாக்யமான மூல ப்‌ரமாணமாகக்‌ கொண்‌டனவாக,
பவந்தி-ஆகின்‌றனவோ,
ஸெளம்ய வரேச யோகி – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
சரண த்வந்த – இரு திருவடிகளாகிற,
அரவிந்த – தாமரை மலரை,
ஆஸ்ரயம்‌ – தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவரும்‌,
அமலம்‌-தோஷங்களற்றவரும்‌,
ஞாநாதி -ஞாநம்‌ பக்தி முதலியவற்றால்‌,
பூர்ண – நிறைந்த,
(ஆசயம்‌)-மனத்தை யுடையவருமான,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜயோ வர்யம்‌ – ராமானுஜ முனிவரை,
வந்தே – நமஸ்கரிக்கின்றேன்‌.

ஸ்ரீ பாஷ்ய, ‘ பகவத் விஷய, மந்த்ரார்த்த ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு இம்‌ முனிவர்‌ அருளிச்‌ செய்யும்‌ தெளி பொருள்‌ விளக்கம்‌ (வ்யாகீயானம்‌) மிகவும்‌ பாண்டித்‌யம்‌ பெற்ற பண்டித ஸமூகங்களின்‌ மனத்தையும்‌ கொள்ளை கொள்ளும்‌ தன்மை வாய்ந்தது. இது இந்த கிரந்தகாரருக்‌கும்‌ மற்றும்‌ இவரைப் போன்ற மற்ற மஹா வித்வான்‌௧ளான அஷ்ட திக் கஜங்களுக்கும்‌ நேரே அநுபவ விஷயமாதலால்‌ இவ்வாறு கூறினார்‌.-இவரது ஆசரணைகள்‌,
யதிகட்கிறைவனான ஸ்ரீ ராமானுஜமுநி முதலிய பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களைத்‌ தமக்கு மூல ப்ரமாண(க்ரந்த) மாகக்‌ கொண்டவை யாகும்‌. மாத்ருகா என்பது முதலில்‌ ஒருவரால்‌ எழுதப்பட்ட (மூல பூதமான) முதலாவதான சுவடி; அதுவே பின்னர்‌ பல சுவடிகளாக வெளி வருவதற்குக்‌ காரணமா யிருப்பதால்‌ அது அவ்வாறு மாத்ருகா
எனக்‌ கூறப்படும்‌. அது போலவே முன்னர்‌ எம்பெருமானார்‌ முதலிய யதிகள்‌ அனுஷ்டித்த அநுஷ்டானங்களே இவரது ஸத் கர்மாநுஷ்டாகங்களுக்கு மூலங்களாகும்‌. எனவே இவர்‌
பெரியோர்களின்‌ அநுஷ்டானங்களில்‌ எள்ளளவும்‌ பிறழாதவர்‌. ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருப்பாத மலர்களையே தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவர்‌. எனவே தோஷங்களற்றவர்‌. ஞானம்‌, பக்தி, விரக்தி என்னும்‌ குணங்கள்‌ நிறைந்த மனதை யுடையவர்‌. இப்படிப்‌ பெருமை வாய்ந்த ப்ரஸித்தி பெற்ற ராமாநுஐ முநிவரை வணங்குகின்றேன்‌.

—————-

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ எல்லா க்ரந்தங்‌களுக்கும்‌ இவர்‌ அருளிச்‌ செய்யும்‌ பொருள்‌ விளக்கம்‌ பண்டிதர்களின்‌ மனதையும்‌ கவரும்‌ தன்மையது;-அநுஷ்டானமும்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களில்‌ நின்றும்‌ கொஞ்சமும்‌ நழுவாதது என்றார்‌. இதில்‌ இவரது தெளி பொருள்‌ விளக்கத்‌தால்‌ இவரது கோஷ்டியின்‌ பக்கத்திலிருந்து இதைக்‌ கேட்‌டுக்‌ கொண்டிருக்கும்‌ பக்ஷிகளும்‌, ** பர தத்வம்‌ ஸ்ரீமந் நாராயணனே ” என்று விளங்கச்‌ சொல்லும்‌ சக்தி வாய்ந்தனவாகின்றன என்று தாம்‌ ஆச்சர்யமுறுகிறார்‌.

யத்‌ கோஷ்டி ஸவித ஸ்திதா:சகுநா:ச தத்வம்‌ பரம்‌ ஸாஸ்வதம்
ஜ்யோதிர் வேத ரஹஸ்ய ஸார படிதம்‌ பரம்ஜ்யோதி: நாராயண: ஸ்ரீபதி:
கிம் சாந்யே சதுராநநாதி விபுதா:தத் சேஷபூதா:இதி
வ்யாகுர்வந்தி பரஸ்பரம்‌ யதிவரம் ராமாநுஜம்‌ தம்‌ பஜே –10-

பதவுரை:–
யத்‌ – எந்த ராமாநுஜ முனிவருடைய,
கோஷ்டி – காலக்ஷேப கோஷ்டியின்‌,
ஸவித – பக்கங்களிலே,
ஸ்திதா:- இருக்கின்ற,
சகுநா:ச -பக்ஷிகளும்‌,
பரம்ஜ்யோதி: – பரஞ்சோதியென்றும்‌,
பரம்‌ தத்வம்‌-பர தத்வமென்றும்‌,
வேத–வேத ரஹஸ்ய வேதங்களில்‌ ரஹஸ்யங்களான உ.பநிஷத்துக்களின்‌
ஸார – ஸாரமான நாராயணாநுவாகத்தில்‌,
படிதம்‌ -**நாராயண பர ப்ரஹ்ம’” என்றும்‌, ** நாராயண பரோஜ்‌யோதி என்றும்‌, : Bb. **தத்வம்‌ த்வம்‌ நாராயண பர:? என்றும்‌, *, ஸாஸ்வதம் சிவமச்யுதம்‌?” என்றும்‌ படிக்‌கப்பட்ட பொருள்‌,
ஸ்ரீபதி:- லக்ஷ்மீ வல்லபனான,
நாராயண:- நாராயணனே ஆவான்‌,
கிம் ச — மேலும்‌
சதுராநநாதி-பிரமன்‌ முதலிய,
விபுதா:- தேவர்கள்‌
தத் -அந்த நாராயணனுக்கு,
சேஷபூதா:- சரீரமாய்க் கொண்டுசேஷப் பட்டவர்கள்‌,
இதி – என்று,
பரஸ்பரம்‌ – ஒன்றுக்‌கொன்று, வ்யாகுர்வந்தி – வ்யாக்யானம்‌ செய்கின்றனவோ,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனியை,
பஜே – ஸேவிக்‌கிறேன்‌-

இந்த ராமாநுஜ முநிவர்‌ வைதிக வாக்யங்களில்‌
*ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்‌”, ஆத்மா வா இதமக்ர ஆஸீத்‌”, ““ப்ரம்ஹவா இதமக்ர ஆஸீத்‌” என்று ஸாதாரணங்களான “ஸத்‌, ஆத்ம, ப்ருஹ்ம’‘ சப்தங்களாலும்‌-விசேஷமான நாராயண சப்தத்தாலும்‌ ஜகத் காரண வஸ்துவைக் கூறிக்‌, “காரணந்து த்யேய:” என்று அதையே உபாஸ்ய தத்வம்‌ எனக்‌ கூறுவதால்‌, இவை வெவ்வேறு தத்வங்‌களா? அல்லது ஓன்றேயா? . என விசாரிக்கும் போது-வேதங்களின்‌ ஸாரங்களான உபநிஷத்துக்களிலும்‌ ஸாரமாகக்‌ கொள்ளப்படும்‌ நாராயணாநுவாகத்தில்‌ ** ஆத்ம, ப்ரஹ்ம, ஜ்யோதி’‘ முதலான சப்தங்களை நாராயண பதத்‌தோடு ஸமாந விபக்தி (வேற்றுமை) கமாய்‌ ** நாராயண பரம்‌
ப்ருஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:””
இத்யாதி வாக்யங்களால்‌ படிக்கப்பட்டிருப்பதால்‌ ஸாமாந்ய விசேஷ ந்யாயத்தாலே ஐகத்துக்‌குக் காரணமான பர தத்வம்‌ லக்ஷ்மீ பதியாகிய நாராயணனே;-மற்றய ப்ரும்ஹ ருத்ராதிகள்‌ பர தத்வமன்று; அவர்கள்‌ ஸ்ரீம்ந் நாராயணனிடமிருந்து உண்டானவர்கள்‌, அவனுக்கு
சரீரமாய்க்‌ கொண்டு சேஷ பூதர்கள்‌ என்று உபநிஷத்து வாக்கியங்களை விளங்கக்‌ கூறி பர தத்வ ஸ்தாபனம்‌ செய்வது:அவரது வழக்கமாகலால்‌, அவரது கோஷ்டியின்‌ பக்கங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்‌, ஞானத்திற்கு அடைவில்லாத பக்ஷி ஜாதிகளும்‌, அந்த வாக்கியங்களைச்‌ சொல்லி பர தத்வ’ஸ்தாபனம்‌ பண்ணா நின்‌றன” என்கிறார்‌. இதனால்‌ ஞானத்திற்கு இட்டுப்‌ பிறவாத பஷிகளும்‌ நன்கு அறிந்து
கொள்ளும்படி விஷயங்களைக்‌ கற்பிக்கும்‌ விஷயத்தில்‌ இவருக்குள்ள ஆற்றல்‌ நன்கு . வெளியிடப்பட்டது. இங்கு * பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி ” எனக்‌ கூறியதால்‌ அப் பஷிகளிலும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஞானத்தில்‌ குறைந்தவர்கள்‌ இல்லை;-ஆயினும்‌ ‘*போதயந்த: பரஸ்பரம்‌” என்ற’ கணக்கிலே’-“ஒன்றுக்கொன்று போதிக்கின்றன என்று கூறப்பட்டதாகும்‌.
ஸாமாந்ய விசேஷ நியாயமாவது *நிர் விசேஷம்‌ ந ஸாமாந்யம்‌ ‘” என்கிறபடியே ஒரு ஸாமான்ய பதத்தை விசேஷ போதக சப்தத்தைக்‌ கொண்டு விசேஷ விஷயமாக்கி இப்‌பொருள் கொள்வது. ** பசு நா யஜேத ”‘ என்று விதி வாக்‌யத்தில்‌ நாற்கால்‌ ஐந்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ கூறும்‌-பசு சப்தத்திற்கு **ச்சாகஸ்ய வபாயா:”” என்ற மந்த்ரத்தைக்‌ கொண்டு ௮ப் பசு என்பது **ஆடு” என நிர்த்தாரணம்‌ செய்வதாகும்‌.
இவ்வாறு ஞான ஹீநர்களையும்‌ ஞாந வான்களாக்கும்‌ ராமாநுஜ முனிவரை வணங்குகின்றேன்‌.

————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸமீபத்தில்‌ இருக்கும்‌ பக்ஷிகளுக்கும்‌ வ்யாக்யானம்‌ செய்யும்படி, சக்தியை விளைவிக்கும்‌ இவரது ஞானத்தின்‌ பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய உபந்யாஸ கோஷ்டியில்‌ ‘சேரவும்‌ வேண்டா; பக்கத்‌ திலிருக்கவும்‌ வேண்டா. இவரது கருணை அலை யெறியும்‌ கடைக்‌ கண்ணால்‌’கடாக்ஷிக்கப் பெற்றவர்களே அர்த்த பஞ்சக ஞானம்‌ பெற்றவருள்‌ சிறந்தவர்களாவர் என்ற அதிசயத்தைக்‌ கூறி, வானமாமலை எம்பெருமானுக்கு இவர்‌ செய்த ஸாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌
இவர்‌ அதிகம்‌ பெருமை வாய்ந்தவர்‌
என்று கூறுகிறார்-

யத்‌ காருண்ய ஸுதா தரங்க விலஸத்‌ நேத்ராஞ்சல ப்ரேக்ஷிதா:
யேகேசித்‌த இமே அர்த்த பஞ்சக விதாம்‌ முக்யாஸ் து ஸங்கீயாவதாம்‌
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய மஹிதை:கைங்கர்ய ஜாதை:த்ருவை:
பூயாந் ஆஸ்ரித கல்பக: விஜயதே ராமாநுஜ: அயம்‌ முநி
-11-

பதவுரை:–
யேகேசித்‌ – எந்தச்‌ சில மனிதர்கள்‌,
யத்‌ – எந்த முனிவரின்‌,
காருண்ய – கருணையாகிற,
ஸுதா – அம்ருதத்தின்‌,
தரங்க – அலைகளாலே,
விலஸத்‌ – விளங்குகின்ற,
நேத்ராஞ்சல – கண்ணின்‌ கடை யினாலே,
ப்ரேக்ஷிதா: – பார்க்கப் பட்டனரோ,
தே – அப்படி பாக்யம்‌ பெற்ற,
இமே- இம்‌ மனிதர்கள்‌,
அர்த்த பஞ்சக விதாம்‌-ஐந்து அர்த்தங்களையும்‌ நன்கறிந்த,
ஸங்கீயாவதாம்‌ -பண்டிதர்களுள்‌,
முக்யா: – தலை சிறந்தவர்கள்‌ ஆகிறார்கள்‌,
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய – ஸ்ரீ வான மா மலை எம்பெருமானுக்குச்‌ செய்தவையும்‌,
மஹிதை:-கொண்டாடத்தக்கவையும்‌,
த்ருவை:-ஸாஸ்வதங்களுமான,
கைங்கர்ய ஜாதை:-கைங்கர்‌யங்களின்‌ ஸமூகத்‌தினால்‌,
பூயாந் -சிறப்பு வாய்ந்தவரும்‌,
ஆஸ்ரிதகல்பக: – தன்னை ஆஸ்யரயித்தவருக்கு கல்பக வ்ருக்ஷம்‌
போல்‌ அபேக்ஷிதங்களைக்‌ கொடுக்குமவருமான,
அயம்‌-இந்த,.
ராமாநுஜ: – ராமானுஜன்‌ என்னும்‌,
முநி -முனிவர்‌,
விஜயதே – மற்றெல்லோரிலும்‌ சிறந்து விளங்குகின்றார்‌.

அர்த்த பஞ்சகமாவது:- (1) ஸ்வ ஸ்வரூபம்‌ எனப்படுவது, ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌, (2) பர ஸ்வரூபம்‌ எனப்படுவது, பரமாத்மாவின்‌ ஸ்வரூபம்‌, (3) புருஷார்த்த ஸ்வரூப மெனப்படுவது, முமுக்ஷுக்களின்‌ விருப்பத்திற்கு விஷயமான மோக் ஷஸ்வரூபம்‌, (4) உபாய ஸ்வரூபமெனப்‌படுவது, அம் மோஷத்தை அடைய சாஸ்த்ரங்களால்‌ ஸாதனமாகக்‌ கூறப்பட்டவை, (5) விரோதி ஸ்வரூபமெனப்படுவது ,மோக்ஷத்தைப்‌. பெற விரோதியாய்‌ இடைமறித்து நிற்‌கின்ற அவித்யை,ருசி வாஸநா ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்‌ முதலியனவாகும்‌. இவ் வர்த்த பஞ்சகத்தையே ஸகல வேத சாஸ்த்ர புராணங்களும்‌ கூறுகின்றன. இவ்வர்த்த பஞ்சக ஞானமின்றி உஜ்ஜீவனமில்லை. இத்தகைய அர்த்த பஞ்சக ஞாநமும்‌ வெகு கிலேசப்பட்டு சாஸ்த்ராப்யாஸங்களால்‌ ஸாதிக்கப்படவேண்டி யிருக்க, இந்த ராமாநுஜ முனிவருடைய கருணா பூர்ணமான கடாக்ஷ லேசத்தினாலே உண்டாகிறது. நிற்க- இவரது கருணா பூர்ணமான கடாக்ஷம்‌ தனக்கு விஷயமானவர்களை அர்த்த பஞ்சகங்களை நன்குணர்ந்த பண்டிதர்களுள்‌ ப்ரதாநர்களாகவும்‌ ஆக்குகிறது என்று இவருடைய பெருமை கூறப்பட்டது. (த இமே முக்யா:)இங்கு தாம்‌ நேரில்‌. கண்டறிந்ததுடன்‌ மற்றவருக்கும்‌
ப்ரத்யக்ஷிக்கலாம்‌ எனத்‌ தோற்றும்படி “*இமே”” எனக்‌ கூறுவதால்‌, இதில்‌ அர்த்தவாதமில்லை என்கிறார்‌. மேலும்‌ இந்த ஸ்வாமி ஸ்ரீ வானமாமலை எம்பெருமானுக்குச்‌ செய்‌துள்ள பல ஸாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌ போற்றத்‌ தக்கவர்‌. தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு கல்பக விருக்ஷம்‌ போல்‌ அபேக்ஷிதங்களை அளிக்கவல்ல பெரியவர்‌. எனவே இந்த வானமாமலை ராமாநுஐ முனிவர்‌ மற்றையோர்களில்‌
சிறப்புடையராய்‌ விளங்குகின்றார்‌.

—————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரின்‌ கடாக்ஷம்‌ முக்தி ஸாதநமான அர்த்தபஞ்சக ஞானத்தை எல்லோருக்கும்‌ அளிக்க வல்லதென்று பொதுவாகக்‌ கூறியவர்‌, இதில்‌ மிகவும்‌ தண்ணியனாய்‌, அஹங்கார மமகாரங்கள்‌ நிறைந்தவனான என்னை. உஜ்ஜீவிப்பிக்க முயற்சிக்கும்‌ பெரியோரிடித்திலும்‌ விமுகனாய்த்‌ திரிகன்ற மேட்டு மடையான என்னிடமும்‌ இக்‌ கருணை பாலிபாயா நின்றது என்கிறார்‌.-

அஸ்தி ஸ்நாயு வஸா ௮ஸ்ர மாம்ஸ நிசிதே அநித்யே விகாராஸ்பதே அநஹமி
தேஹே அஸ்மிந் நஹம் யஹம்மதிகரே சப்தாதி ஸேவாப்ரே
ஸ்ரீமத்‌ வைஷ்ணவ மத்பர ஆர்ய விமுகே மயி அபி அகார்ஷீத்‌ தயாம்‌
யஸ்தம் வ்யோம மஹாகிரே:பரிபணம்‌ ராமாநுஜம்‌ தம்‌ பஜே
–12-

பதவுரை:–
அஸ்தி – எலும்பு என்ன,
ஸ்நாயு – சிறு நரம்புகள்‌ என்ன,
வஸா-வபை என்ன,
௮ஸ்ர-ரக்தமென்ன
மாம்ஸ – மாம்ஸமென்ன,
நிசிதே – இவைகள்‌ செறிந்ததும்‌,
அநித்யே – அநித்யமானதும்‌, விகாராஸ்பதே – பால்யம்‌ யவ்வனம்‌,பருப்பது,இளைப்பது முதலிய வேறுபாடுகளுக்கு உறைவிடமாயும்‌, அநஹமி – உண்மையில்‌ அஹம்‌ என்னும்‌
பதத்திற்கு அர்த்தமல்லாததுமான,
தேஹே – சரீரத்திலே,
அஹம்மதிகரே – நானென்று அஹம் புத்தியைப்‌ பண்ணுமவனும்‌, (ஆதலால்‌) சப்தாதி ஸேவாப்ரே-சப்தாதி விஷயங்‌களில்‌ ப்ராவண்யத்தால்‌ அவைகளை அனுபவித்துப்‌ போருமவனும்‌, (ஸ்ரீமத்‌ விமுகே) ஸ்ரீமத்‌ வைஷ்ணவ – பரம ஸாத்‌விகர்களாய்‌ பகவத்‌ ஸம்பந்தத்திலே மூட்டும்‌ அடியார்களிடத்திலும்‌,
மத்பர – ஆர்ய – என்னை உஜ்ஜீவிப்ப திலேயே நோக்குள்ள ஆசார்யர்களிடத்திலும்‌,
விமுகே – வைமுக்‌யத்தை யுடையனான,
மயி அபி- என்னிடத்திலும்‌,
ய:-எந்த முனிவர்‌,
தயாம்‌-தயையை,
அகார்ஷீத்‌ – செய்தாரோ”
வ்யோமமஹாகிரே: – வானமாமலை அப்பனுக்கு,
பரிபணம்‌-மூலத்ரவ்யம்‌,
முதல்‌- போன்ற,
தம்‌ ராமாநுஜம்‌ – அந்த ராமாநுஜ முனிவரை,
பஜே – ஸேவிக்கின்றேன்‌.

இந்த ஸ்லோகத்தின்‌ மூன்று பாதங்களாலும்‌ தமது தண்மையைக்‌ கூறி, நான்காவதால்‌. தம்மிடமும்‌ இம்‌முனிவரது கருணை ஏறிப்‌ பாய்ந்தது என்கிறார்‌. அதாவது நான்‌ எலும்பும்‌ சிறிய நரம்புகளும்‌ வபையும்‌ ரத்தமும்‌ மாம்ஸமுமாய்ச்‌ செறிந்தும்‌, அநித்யமாயும்‌, அடிக்கடி பருப்பது இளைப்பது முதலிய வேறுபாட்டுக்கு உறைவிடமாயும்‌, அஹம்‌ என்ற பதத்திற்கு அர்த்தமான ஆத்மா வல்லாததுமான சரீரத்தில்‌ ஆத்ம புத்தியைப்‌ பண்ணும்‌
ப்ரமத்தை யுடையவன்‌. நிற்க- இத்தகைய ப்ராந்த்தியால்‌ இந்த்ரியங்களுக்கு எப்பொழுதும்‌ இரை யிட்டுக்கொண்டு ஹேயமான சப்தாதி விஷயங்களைக்‌ கொண்டே பொழுது போக்குமவன்‌. ஸ்ரீ. வைஷ்ணவ ஸம்பத்து நித்யமாய்ச்‌ செல்‌லும் பரமபாகவதர்களைக் கண்டால்‌ முகத்தை மாற வைத்துச்‌ செல்‌லுமவன்‌. அதிகம்‌ சொல்லி என்‌? என்னை அங்கீ கரித்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று ப்ரயத்நம்‌ செய்யும்‌ ஆசார்‌யர்களைக்‌ காணிலும்‌ அவர்களைக்‌ கண்ணெடுத்தும்‌ ஸேவிக்‌கப்‌ பெறாத பாக்ய ஹீநனான தண்ணியன்‌. இப்படிப்பட்ட என்னிடத்தும்‌ இவர்‌ தயையைச்‌ செய்து என்னைத்‌ திருத்தி
ஆட்கொண்டவர்‌. இவரை வானமாமலை எம்பெருமானது மூலதனம்‌ (முதல்‌) எனக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌ ? மூல தனம்‌ உடையவன்‌ அந்த தநத்தைக்‌ கொண்டு தொழில்‌ வியாபாரம்‌ முதலியவற்றைச்‌ செய்து தனத்தைப்‌ பெருக்கிக்‌ கொள்ளுவது வழக்கமல்லவா? அதுபோலவே எம்பெருமானும்‌ இவரை அவதரிப்பித்து அம்முனிவராகிற மூல
தனத்தைக்‌ கொண்டு அநேக ஜீவாத்மாக்களை நல்வழிப்‌படுத்தி அவர்களைப்‌ பெறுகிறானாகையால்‌, அவ்வீசனது(பரிபணம்‌) ‘* மூலதனம்‌ ‘*, இம்‌ முனி வரர்‌ என்று கூறக்‌ குறையில்லை. இப்படிக்‌ கூறியதால்‌ **சேதந லாபம்‌ ஈஸ்வரனுக்கு” எனப்படும்‌ ஸார தமமான ஸம்ப்ரதாயார்த்தம்‌வெளியிடப் பட்டதாகும்‌. இப்படி ஈஸ்வரனுடைய லாபத்திற்‌கும்‌ காரணமான இம்‌ முனிவரை ஸேவிக்கின்றேன்‌.

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கருணை தம்மிடமும்‌ ஏறிப்‌ பாய்ந்தது எனக்‌ கூறினார்‌.-இதில்‌ இம்முனிவரிடம்‌ காணப்படும்‌ சிறந்த கல்வி, விரக்தி,மற்றுமுள்ள ஸெளலப்ய ஸெளசில்யாதிகள்‌, பெரியோர்‌ வகுத்த வழியைப்‌ பேணிக்‌ காக்கும்‌ தன்மை, பகவத்‌ விஷயத்‌திலுள்ள ப்ராவண்யம்‌, இவைகளை விரித்துக்‌ கூறுகிறார்

வித்யாகேலிக்குஹம்‌ விரக்தி லதிகா விஸ்ராந்தி கல்பத்ருமம்‌
ப்ரோந்மீலத்‌ குண திவ்ய ரத்ன படலீ நிக்ஷேப மஞ்ஜுஷிகாம்‌
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய பதவீ ரக்ஷைக தீக்ஷா குரும்‌
ஸ்ரீமத் வ்யோம மஹாசலே ச நிரதம்‌ ராமாநுஜார்யம்‌ ஸ்ரயே
-13

பதவுரை:–
வித்யாகேலிக்குஹம்‌, வித்யைகளுக்கு (சாஸ்‌திரங்களுக்கு ) விளையாடு மிடமானவரும்‌,
விரக்தி-வைராக்யமாகிற,
லதிகா-கொடிக்கு,
விஸ்ராந்தி – விஸ்ராந்தியைக்‌ கொடுக்கும்‌,
கல்பத்ருமம்‌ – கல்பக வ்ருக்ஷமானவரும்‌,
ப்ரோந்மீலத்‌ – ந ன்றாக – ப்ரகாசிக்கிற, குண – கல்யாண குணங்களாகிற,
திவ்ய ரத்ன – ஸ்லாக்யமான ரத்நங்களுடைய,
படலீ – ஸமூஹத்திற்கு,
நிக்ஷேப மஞ்ஜுஷிகாம்‌-வைத்துக்‌
காப்பாற்றும்‌ பெட்டியாயும்‌,
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய – ஸ்ரீராமாநுஜ முனிவரது,
பதவீ – மார்க்கமாகிற விசிஷ்டாத்வைத ஸித்தாந்த மார்க்‌கத்தை,
ரக்ஷைக தீக்ஷா – ரக்ஷிப்பதாகிற முக்ய தீக்ஷையில்‌,
குரும்‌ – ஆசார்யனாயும்‌,
ஸ்ரீமத் வான மஹாசலேச – லக்ஷ்மீ வல்லபனான வான மா மலை எம்பெருமானிடத்து,
நிரதம்‌ – மிகுந்த அன்பு பூண்டவருமான, ராமாநுஜார்யம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ ஆசார்யனை,
ஸ்ரயே -ஆஸ்ரயிக்கின்றேன்‌.

தன்னைப்‌ பேணி ஆதரித்த முனிவரின்‌ ப்ரபாவத்தைச்‌ சுருங்கக்‌ கூறுகின்றார்‌ இதில்‌. இந்த ராமாநுஜமுனிவர்‌ *வித்யாஹ்யேதா: சதுர்தச” என்ற பதினான்கு வித்யைகளையும்‌ கரை கண்டவராகையாலே, அவைகள்‌ இவரிடம்‌ களிநடம்‌ புரிகின்றன என்கிறார்‌. இவர்‌ அவைகளுக்கு ரங்கஸ்தலம்‌ (நடனமாடுமிடம்‌) போலும்‌, மிகுந்தவைராக்ய முடையவராதலால்‌ கொடி. மரத்தை மூடப்‌ படர்வது போல்‌ இவரது வைராக்யமென்னும்‌ கொடி தன்னிஷ்டப்படி மூடப்‌ படர்ந்து விஸ்ராந்தியைப்‌ பெற்று இளைப்பாறும்‌ கற்பக வருக்ஷம்‌ போன்றவர்‌ இவர்‌. மேலும்‌ ஆத்ம குணங்களாகிற இந்த ரத்நக்‌ குவியலை வைத்துப்‌ பூட்டிக்‌ காப்பாற்றும்‌ பேழை போன்றவர்‌. இத்தால்‌ இவர்‌ எண்ணிறந்த குணங்களுக்கு உறைவிடமென்பது கூறப்‌பட்டது. எம்பெருமானாராலே ஸ்தாபிக்கப்பட்ட விசிஷ்‌டாத்வைத ஸித்தாந்தத்தை ரக்ஷிக்கையாகிற முக்ய தீக்ஷையில்‌ ஆசார்யனாய்‌ வழிகாட்டுமவர்‌ இவர்‌. இப்படி இந்த தர்சனத்திற்கு வழிகாட்டியா யிருப்பது மாத்திரமன்றி
அவ்வழியே ஒழுகி எப்பொழுதும்‌ வானமாமலை தெய்வ நாயகனிடம்‌ நிரதிசய ப்ரீதி ரூபாபந்நமான பக்தி பூண்டவருமாவர்‌. இத்தகைய குணக்‌ கடலான ராமாநுஜ முனிவரெனப்படும்‌ எனது ஆசார்யனை ஸேவிக்கின்றேன்‌.

————–

அவதாரிகை :–
வாந மஹாத்திரி ராமாநுஜ யோகி மங்களாசாஸமென்னும்‌ ப்ரபந்தத்தின்‌ கடைசியான இந்த ஸ்லோகத்தில்‌ வாநாசல ராமாநுஜ முனிவரின்‌ பெருமைகள்‌
கீழ்க்‌ கூறியவை எல்லாம்‌ திரட்டிக்‌ கூறப்படுகின்‌றன-

காந்தோ பயந்த்ரு முநி வர்ய தயா நிவாஸம்‌ வைராக்யமுக்ய மஹநீய குண ௮ம்புராசிம்‌
ஸ்ரீதேவராயக பத ப்ரணய ப்ரவீணம்‌ ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி நித்யம்‌-14-

பதவுரை:–
காந்தோ பயந்த்ரு முநி வர்ய – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
தயா-கருணைக்கு,
நிவாஸம்‌ – உறைவிடமாயும்‌,
வைராக்யமுக்ய- வைராக்யம்‌ முதலிய,
மஹநீய-கொண்டாடத்‌ தகுந்த,
குண – குணங்கட்கு,
௮ம்புராசிம்‌ – கடலாயும்‌,
ஸ்ரீதேவராயக – வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகனுடைய,
பத – திருவடிகளில்‌,
ப்ரணய – ப்ரீதி செய்யும்‌ விஷயத்தில்‌,
ப்ரவீணம்‌ – சிறந்தவரும்‌,
யதிபதிம்‌ – யதித் தலைவருமாகிய, ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனிவரை, .
நித்யம்‌- எப்‌பொழுதும்‌,
ப்ரணமாமி – நன்கு வணங்குகின்றேன்‌. ‘

இந்த ஸ்லோகத்தின்‌ முதல்‌ பாதத்தால்‌ ஸ்ரீமத்‌ வரவரமுநிகளின்‌ கருணைக்கு வாஸஸ்தான மென்று இவரது பெருமையை யறிவித்தார்‌. அவ்வாசார்யனுடைய கடாக்ஷத்‌தால்‌ இவர்‌ வைராக்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ ஒருங்குகேரும்‌ குணக்கடலாயினர்‌ என்றார்‌; இரண்டாம்‌ பாதத்‌தால்‌. ‘ கடலாக ரூபித்ததால்‌ வைராக்யாதி குணங்கள்‌ ஒரு.நாளும்‌ இவரிடம்‌ குறைந்து காட்டியதில்லை என்பது தேறும்‌…-மூன்றாமடியால்‌ இவ்வாத்ம குணங்களடியாக உண்டாகும்‌
ஸர்வேஸ்வரன்‌ விஷயமான இவரது நிரதிசய ப்ரீதியை நிரூபித்தார்‌. நான்காமடியால்‌ கீழ்க்‌ கூறியபடி மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌ அதடியாக உண்டாகிய வைராக்‌யாதி குணங்களை யுடையராய்‌, அதடியாக உண்டாகிய பகவத்‌ ப்ரேமத்தை யுடையராகையாலே யதிகட்கிறைவரானார்‌ என்று இவரது ப்ரபாவங்களைப்‌ பணித்து, இத்தகைய பெருமை வாய்ந்த வானமஹாத்ரி யோகியாகிய ராமானுஜ.முனியை ப்ரதி தினம்‌ வணங்குகின்றேன்‌ எனக்‌ கூறி மங்களாசாஸநத்தை முடிக்கிறார்‌. இங்கு **ப்ரணமாமி’” என்ற வர்த்தமானத்தால்‌ தமது அதிகார மாந்த்யத்தைப்‌ பார்த்துத்‌ தான்‌ கலங்கிய போதெல்லாம்‌ ஆசார்யன்‌ திருவடிகளை இவர்‌:வணங்குகின்றார்‌ என்று தேறுகிறது. “ப்ர’? என்ற உபஸர்க்‌கத்தால்‌ வணக்கத்தில்‌ மநோ வாக் காயம்‌ என்ற கரணங்களின்‌பூர்த்தி கூறப்பட்டது. நித்யம்‌ என்பது ப்ரதி தினமும்‌ என்பதாகும்‌. இதில்‌ *’ஸ்வஸ்தி- பத்ரம்‌-மங்‌களம் என்பவை போன்ற பதங்கள்‌ காணப்படவில்லையே யென்று சிலர்‌ ஐயமுறலாம்‌.-எனினும்‌ “*நம:- ஜிதம்தே,தோற்றோம்‌, போற்‌றி, பல்லாண்டு ” என்னும்‌ இவை -பர்‌யாயம்‌ என்ற பெரியவாச்சான்‌ பிள்ளை ஸ்ரீஸூக்தியை நன்கு உற்று அநுஸந்திக்குமவர்கள்‌ இந்த நூல்‌ மங்களாசாஸந ரூபந்தான்‌ என்று எளிதில்‌ உணரலாகும்‌. இக் கிரந்தத்திலும்‌இம்‌ முனிவரது குணங்கட்கு தோற்று, வந்தே, நமோஸ்து,நவ்மி, விஜயதே என்ற ஸ்வரூப வாசியான பதங்களை
மஹார்யர்‌ ப்ரயோகித்திருப்பதும்‌ காணத் தக்கது.

——————-

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி

முதல் 11 ஸ்லோகங்களில் சரண் அடைந்து
அடுத்து 3 ஸ்லோகங்கள் இவரே சரண் அடையத்தக்கவர்

அவதாரிகை:–
ஸ்ரீமத்‌ வானமாமலை ராமாநுஐ முனிவரின்‌ அஷ்ட திக் கஜங்களில்‌ ஒருவராகிய தொட்டையங்கார்‌’அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌, தமது ஆசார்யராகிய ராமாநுஜ முனிவரது கல்யாண குணங்களிலும்‌ விக்ரஹ ஸெளந்தர்‌யத்திலும்‌ ஆழ்ந்தார்‌. அவர்‌ பூர்வாஸ்ரமத்தில்‌ அழகிய வரதரிறே; எனவே முந்துற மங்களாசாஸநத்‌தில்‌ இழிந்தார்‌..
தற்பொழுது தாம்‌ ஸ்வாமியின்‌ கடாக்ஷ விஷயீகாரத்தைப்‌ பெற அவர்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌, இப்ரபந்தத்தில்‌,

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–1-

பதவுரை :–
‘ ஸத்ய: – அப்‌பொழுதே,
ப்ரபுத்த- நன்றாக மலர்ந்த,
ஸரஸீருஹ – தாமரைப்பூவோடு,
துல்ய – ஒப்பான,
சோபெள – காந்தியையுடையதுகளும்‌, ஸம்பச்யதாம்‌ – நன்றாய்‌ ஸேவிப்பவர்களுடைய,
நயநயோ: – கண்களுக்கு,
முதம்‌-சந்தோஷத்தை,
ஆததாகெள -உண்டு பண்ணுமவைகளாயும்‌,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
ஸாகர-ஸமுத்ரத்திலிருந்து,
ஸமுத்தரண – கரையேற்றுவதில்‌,
ப்ரவீணெள-மிக சாமர்த்யம்‌ வாய்ந்தவைகளுமான,
வாநாத்ரியோகி சரணெள -வானமாமலை ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வாநாத்ரி ராமாநுஐ முனிவரின்‌ திருவடிகளைப்‌ பற்றும்‌ மஹார்யர்‌ அதன்‌ பெருமைகளை விளக்குகிறார்‌ மூன்று பாதங்களாலே. முதல்‌ பாதத்தில்‌ அப்‌பொழுதே முழுதும்‌ அலர்ந்த செவ்வித்‌ தாமரை மலர்களோடொத்த சோபையை உடையன அத்திருவடிகள்‌ என்கிறார்‌-
இதனால்‌ ம்ருதுத்‌ தன்மை, ஸூகந்தம்‌, குளிர்த்தி இவைகளையுடையது அத்திருவடிகள்‌ என்று அதன்‌ போக்யதை உணர்த்தப்பட்டது. இரண்டாம்‌ பாதத்தில்‌ அத்‌திருவடி௧ளை நன்கு ஸேவிக்குமவர்களின்‌ கண்களுக்குக்‌ களிப்பூட்டுமவை அவை யென்கிறார்‌. இதனால்‌ அவற்றின்‌ அழகு கூறப்‌ பட்டதாகும்‌. மூன்றாவது பாதத்தில்‌ அவை ஸம்ஸாரமென்‌னும்‌ ஸமுத்ரத்தில்‌ ஆழ்ந்து கடக்கும்‌ ஸம்ஸாரிகளை அவற்‌றில்‌ நின்றும்‌ கரையேற்றுவதில்‌ மிகுந்த ஸாமர்த்ய்ம்‌ பெற்‌றவை என்கிறார் . இத்தால்‌ மென்மை, குளிர்த்தி, நாற்றம்‌,
அழகு போன்‌ற குணங்களை யுடையனவாய்‌ இம்மையில்‌ போக்யதையால்‌ களிப்பூட்டுவது மாத்திரமின்றி மறுமையிலும் மோக்ஷத்தையும்‌ அளிக்கும்‌ பெருமை வாய்ந்தவைஅவை யெனக்‌ கூறி, அவைகளைத்‌ தமக்கு உபாயமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌. இங்குக்‌ கூறப்பட்ட பற்றுதல்‌ யாயினும்‌ அமையும்‌ கார்ய கரமா கைக்கு.

——–

அவதாரிகை:–
முன்‌ ஸ்லோகத்தில்‌ ராமாநுஜ:முனிவரது ஸம்ஸார உத்தாரகத்வம்‌ கூறப்பட்டது. இந்த ஸ்லோகத்தில்‌ அதற்குக்‌ காரணமாகிய காம குரோதாதி: துஷ்ட குணங்களில்லாமை, நற்குணங்களுக்கு உறைவிடமாயிருத்தல்‌ முதலிய பெருமையையும்‌, ஸ்ரீ மணவாள மாமுனிவரின்‌ இன்னருளால்‌ அப்பெருமையை இவர்‌ பெற்றமையையும்‌ கூறி, இத்தகைய ப்ரபாவம்‌ வாய்ந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகள்‌, தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கல்பக வ்ருஷம்‌ போன்றவை எனக்‌ கூறி அவைகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வாநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே–2-

பதவுரை:–
காந்தோ பயந்தரு முநிவர்ய – அழகிய மணவாள மாமுனிவரின்‌,
தயா – கருணையினால்‌,
ஆத்த- பெறப்‌ பட்ட
பூம் ந – பெருமையை யுடையவரும்‌, காமாதி- காமம்‌ க்ரோதம்‌ முதலியவற்றை, நிக்ரஹகரஸ்ய- அடக்குமவரும்‌, குணாம்புராசே: – நற்குணங்களுக்‌குக்‌ கடல் போன்றவருமான,
வநாத்ரி லக்ஷ்மண முநே : – வானமாமலை ராமாநுஜ முனிவரது
நதலோக–தன்னை வணங்கிய ஜனங்களுக்கு,
கல்பவ்ருஷாயமாண் -கற்பக வ்ருக்ஷம் போல்‌ ஆசரிக்கின்‌ற,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்‌.

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதலடியில்‌ -இம்முனிவர்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌ அதனால்‌ பெற்ற அதிசயத்தை உடையவர்‌ என்றார்‌. இரண்‌டாமடியில்‌ காமம்‌, குரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌,மாத்ஸர்யம்‌ என்று கூறப்படும்‌ ஸஹஜ சத்ருக்களையும்‌
அடக்குமவரென்றும்‌, நற்குணங்கள்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌ எனவும்‌ கூறினார்‌. இங்கு காமாதிகள்‌ சாரா வண்ணம்‌ துறத்துமவர்‌ என பொதுவாசுக்‌ கூறியதனால்‌ -தம்மை ஆஸ்ரயித்த பிறருடைய காமாதிகளையும்‌ துறத்தும்‌ ஆற்றல்‌ வாய்ந்தவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌. நற்குணங்‌களுக்குக்‌ கடலென்றதனால்‌ ஒருநாளும்‌ வற்றாத நற்குண ஸம்பந்நர்‌ இவர்‌ என்றதாயிற்று. இனி ஸ்லோகத்தின்‌ பிற்‌பகுதியால்‌ இப்படிப்‌ பெருமை வாய்க்த வாநாசல ராமாநுஜ முனிவரது, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கற்பக வ்ருக்ஷம்‌
போன்றதான திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌. இதில்‌ **நதலோக”’ **தம்மை வணங்கிய ஜனங்களுக்கு”’ எனப்‌ பொதுவாகக்‌ கூறியதால்‌ தம்மை வணங்கியவரின்‌ பெருமை சிறுமைகளைப்‌ பார்த்துக்‌ கொடுக்கும்‌ புன்மை திருவடிகளுக்கில்‌லாமை கூறப்பட்டதாகும்‌. கற்பக வ்ருஷமென அவைகளைக்‌ கூறியதால்‌ நினைத்த மாத்திரத்திலே இம்மை மறுமைப்‌ பயன்களை அர்த்தித்தார்‌ அர்த்தித்தபடியே கொடுக்கும்‌ பெருமையும்‌ கூறப்பட்ட தாகும்‌.

—————–

அவதாரிகை:–
இம்முனிவர்‌ மாமுனிகளின்‌ கருணைக்‌குப்‌ பாத்திரமாய்‌, அதனால்‌ இவர்‌ பெற்ற மிகச்‌ சிறந்த வைராக்ய குணத்தை விரித்துக்‌ கூறுகிறார்‌ இந்த ஸ்லோகத்தில்‌.

தாராத்மஜாதி ஜநிதம் ஸூகமை ஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–3–

பதவுரை:–
தாராத்மஜாதி -பெண்‌டிர்‌ மக்கள்‌ முதலியோரால்‌,
ஐநிதம்‌-உண்டு பண்ணப் பெற்றதும்‌; ஐஹிகம்‌ – இம்மையில்‌ அநுபவிக்க வேண்டுமதான,
ஸுகம்‌ – சுகத்தை,
ய:-எந்த ராமாநுஜ முனிவர்‌
காராக்ருஹ – சிறைக்‌ கூடத்தில்‌,
ப்ரபவ – உண்‌டாகிய,
து:கஸமம்‌-துக்கத்தோடு ஓத்ததாக,
விசார்ய-நிர்ணயம்‌ செய்து,
ஸெளம்யோ பயந்த்ரு முநி -அழகிய மணவாள முனிவரின்‌,
பாதயுகம்‌-திருப் பா தங்களையும்‌,
ஸ்ரித: – ஆஸ்ரயித்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வாநாசல ராமாநுஐ முனிவரது திருவடி.களை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

இவ்வுலகில்‌ மற்றையோர்‌ ஸுகங்களென ப்ரமித்துக்‌ களிக்கும்‌, மனைவி மக்கள்‌ முதலியோரால்‌ உண்டாகக் கூடிய ஸுகங்கள்‌ சிறைக் கூடத்திலனுபவிக்கும்‌
துன்பத்தோ டொப்பானவை ** என இம் முனிவர்‌ தீர்மானித்து, மா முனிகளின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புக்கார்‌ என்கிறார்‌. அது எவ்வாறு எனில்‌ ? சிறைக்‌கூடமென்பது
ஓருவன்‌ செய்த தீச் செயலுக்குத்‌ தக்கவாறு அரசனால்‌ சிக்ஷை விதிக்கப் பெற்று அடைத்து வைத்திருக்கு மிடமாகும்‌. அது போலவே ஸம்ஸாரமமும்‌ சிறைக்கூடமே யென்‌னத்‌ தட்டில்லை. எப்படி எனில்‌ அவ்வவ ஜீவன்‌ முன் பிறவிகளில்‌ செய்த கன்ம பலங்களை யநுபவிக்க வேண்டியே ஈஸ்வரனால் ஸம்ஸாரத்தில்‌ பிறக்கும்படி. செய்யப்படுவதால்‌ அதுவும்‌ சிறைக்கூடமே. ஸம்ஸாரத்திலும்‌ சிலர்‌ நெடுநாள்‌ சுகவான்களாயும்‌ ஆரோக்யாதிகளை யுடையராயும்‌ ஸ்வதந்தரர்களாயும்‌ காணப்படவில்லையா ? எனவே எவ்வாறு இது சிறையாகுமெனில்‌, நன்கு ஆராய்ந்தால்‌ அதன்‌ உண்மை புலனாகும்‌. நாம்‌ ஸம்ஸாரத்தில்‌ சிறிது சுகம்‌ பெற்றாலும்‌ அது அற்பமும்‌ அஸ்திரமுமாகையாலும்‌, அதுவே மேலும்‌ பல பிறகளாகிய சிறைகளுக்குக்‌ காரணமாவதாலும்‌, அது மேலெழப்‌ பார்ப்பவர்களுக்கு ஸுகமாகத்‌ தோன்றினாலும்‌ உண்மையில்‌ துக்கமேயாகும்‌. எனவே தான்‌ நிரூபணத்தில்‌ இழிந்த ஆழ்வார்கள்‌ “*பெண்டிரால்‌ சுகங்களுய்ப்பான்‌ பெரியதோரி டும்பை பூண்டு” என்றும்‌, * ஒரு நாயகமாய்‌ ஒட உலகுடனாண்டவர்‌…பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ ‘” என்றும்‌ ஸம்ஸார ஸுகம்‌ துக்கமென்‌பதையும்‌, ஐஸ்வர்யம்‌ ௮ஸ்‌ திரமாகையால்‌ துக்காஸ்பதமென்‌பதையும்‌ கூறியுள்ளனர்‌. சிறைக்கூடத்திலும்‌ அரசன்‌ உதாரனாயிருந்தால்‌ சிறிது ஸுகமெய்தலா மல்லவா? அது போலவே தான்‌ ஸம்ஸார ஸுகமும்‌ என்னத்‌ தட்டில்லை.-இப்படித்‌ தீர்மானித்த இம் முனிவர்‌ செய்தது என்‌ என்னில்‌?’ஸாஸ்வதமான சுகத்தைப்‌ பெற அழகிய மணவாள முனிவரின்‌ திருவடியைச்‌ சரணமாகப்‌ பற்றினார்‌. அது போலவே யானும்‌ மாமுனியைச் சரணம்‌ புக்க, இம் முனிவரது திருவடிகளிலே:எனது தலையை மடுக்கிறேன்‌ என்‌கிறார்‌.

——–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தில்‌ இவருக்கு உண்டாகிய விரக்தி கூறப்பட்டதல்லவா ? இந்த ஸ்லோகத்தில்‌ அந்த விரக்தி என்னும்‌ குணமானது கிளைத்‌துத்‌ தழைத்துப்‌ படர்ந்ததும்‌,இம் முனிவரிடமே எனக்‌ கூறப்‌படுகிறது.

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–4–

பதவுரை :–
ஆதெள – முதலிலே,
ஹநூமதி – ஆஞ்ச நேயரிடத்தல்‌,
ப்ரஸுூதா – உண்டானதும்‌,
பச்சாத்‌ -பிறகு,
குருப்ரவரம்‌ – குரு வம்சத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரான பிஷ்மரை ,
ஏத்ய- அடைந்து,
விவ்ருத்திம்‌ – மிகுந்த வ்ருத்தியை ,
அப்தா – ௮டைந்ததுமான,
விரக்தி லதா -விரக்தி யென்னும் கொடியானது,
யம்‌-எந்த ராமாநுஜ முனிவரை,
உபேத்ய – கட்டியடைந்து,
சாகாஸஹஸ்ர – ஆயிரக்கணக்கான அநேகம்‌ கிளைகளால் மனதைக்‌ கவர்வதாக இருக்கிறதோ,
தாத்ருக்‌ – அப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி – வானகிரி முநி வரின்‌,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,.
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

விரக்தி என்பது: செவி, வாய்‌, கண்‌, மூக்கு உடலெனப்படும்‌ இந்திரியங்களுக்கு விஷயங்களாகிய, சப்த ரஸ ரூப கந்த ஸ்பர்சங்களில்‌, அவ் விந்த்ரியங்கள்‌ புகாமல்‌ காத்தலே யாகும்‌. இந்த விரக்தியை ஓர்‌ கொடியாக நிரூபணம்‌ செய்கிறார்‌ மஹார்யர்‌. ஓரு கொடி முதலில்‌ விரையிவிருந்து உண்டாகிக்‌ கொள்‌ கொம்பில்‌ படர்ந்து பின்‌ பெரிய மரத்தைச்‌ சார்ந்து பூர்ணமாகப்‌ படர்வது போல்‌, இந்த விரக்திக் கொடியும்‌ இம்‌ முநிவரைப்‌ பற்றி அநேகக்‌ கிளைகளுடன்‌ பூர்ணமாகப்‌ படர்ந்து இலங்குகின்‌றது என்கிறார்‌. இக் கொடி
முன்பு த்ரேதாயுகத்தில்‌ அநுமானிடம்‌ முளைத்தது; பின்னர்‌ குருவம்சத்‌ தரசனாகிய பீஷ்மரிடம்‌ விருத்தியை யடைந்தது.
இக் கலியுகத்தில்‌ இந்த ராமானுஜ முனியிடம்‌ நன்கு படர்ந்து அநேகம்‌ கிளைகளோடு கூடியதாய்‌ கண்டவர்‌ மனதையும்‌ ஆகர்ஷிக்குமதாய்‌ இருக்கிறது என்கிறார்‌. அனுமானையும் காட்டில்‌ பீஷ்மரிடம்‌ வைராக்யம்‌ அதிகம்‌ என்பது, தமது உயிரையும்‌ த்ருணமாக மதித்து அவர்‌ ப்ரும்ஹசர்யத்தைப்‌ போற்றி வந்ததாலாகு மென்பது கீழ்‌ மங்களாசாஸந உரையில்‌ விரிவாய்க்‌ கூறப்பட்டி ருக்கிறது. அந்த பீஷ்மரைக் காட்‌டிலும்‌ ஸ்வாமி ராமாநுஐ முனிவரிடம்‌ ௮ந்த வைராக்யம்‌ அதிகம்‌ என்பது எவ்வாறு என்னில்‌? காம க்ரோதாதிகளே நிறைந்த இக்கலி காலத்திலும்‌ காமப்‌ பயனைப்‌ பெறுவிக்கும்‌
கிரஹஸ்தாஸ்ரமத்தை பீஷ்மர்‌ தமது தந்தையின்‌ சுகாநுபவத்துக்காகத்‌ துறந்தது போலல்லாமல்‌, **இல்லறம்‌ தமது ஆசார்யாநுவர்த்தன கைங்கர்யாதிகளுக்கு விரோதி ‘? என்று ஒரு நிர்ப்பந்தமுமின்றி தாமே அதைத்‌ துறந்து விரக்த்தியை ஏற்றுக் கொண்டதாலாகும்‌. இங்கு “சாகா ஸஹஸ்ர ருசரா ”’ என்று பல கிளைகளாய்க்‌ கிளைத்‌ததாலும்‌ இங்கு அது பூர்ணம்‌. அதாவது இவரது விரக்தியின்‌ ‘பெருமையைக்‌ கண்டு கிரஹஸ்தர்களான இவரது சிஷ்யர்களும்‌ மிகுந்த வைராக்யசாலி களானார்கள்‌
என்பது வர மங்கை முனி வைபவத்தில்‌ காணலாம்‌. ஸ்வாமியின்‌ ஞான புத்ரனான ராமானுஜம்‌ பிள்ளான்‌ மிகுந்த வைராக்ய முள்ளவராதலால்‌ ஓரு நாள்‌ அவருடைய பத்னீ ஸர்வபூஷணா லங்க்ருதையாய்‌ எதிரில்‌ நிற்க, **நீ எனக்கு ப்ரதி கூலையாகா நின்றாய்‌; பதி வ்ரதைக்குச்‌ சீலமன்றோபூஷணம்‌. இந்த பூஷணங்களால்‌ ஆவது என்‌?’” என்று
க்ஷேபிக்க, அவளும்‌ நடுநடுங்கி தனது ஆபரணங்களை யெல்லாம்‌ களைந்து பர்த்தாவிடம்‌ கொடுத்தாள்‌. அவரும்‌ எல்லாவற்றையும்‌ வாங்கி உருக்கி வானமாமலை தெய்வ நாயகப்‌ பெருமாளுக்குத்‌ திருமார்பு லக்ஷ்மியாய்‌ ஏறியருளப்‌ பண்ணி, தமது ஸ்வாமியின்‌ அநுமதியின்‌ பேரில்‌ ப்ரதிஷ்‌டிப்பித்துச்‌ சாத்தி யருளினர்‌” என்‌றதனால்‌ பல சிஷ்யர்கள்‌ இவரது வைராக்யத்தையே கடைப் பிடித்தனர்‌ என்பதற்குத்‌ தக்க சான்றாகுமல்லவா ? ஆதலால்‌ அநேகங்‌ கிளைகளுடன்‌ படர்ந்தது எனக்‌ கூறினர்‌. நிற்க ௮ந்த வானமாமலை
ராமாநுஜ முனிவரிடம்‌ அக் காலத்தில்‌ ஸந்யாஸம்‌ பெற்ற: வைராக்யசாலிகள்‌ சிலரும்‌, பிறகு நாளதுவரையில்‌ அந்தப்‌ பட்டத்தை அலங்கரித்து வரும்‌ ஸ்வாமிகள்‌ பலரும்‌ வைராக்ய பூர்ணராய்‌ ஸந்யஸித்து அவரது கைங்கர்யங்களை அநுஷ்டித்து வருவது அவர்‌ மூலமே யாகையாலும்‌ அவ்‌ வைராக்யம்‌ அவரை யாஸ்ரயித்துப்‌ பல கிளைகளுடன்‌ படர்ந்தது என்னக்‌ குறையில்லை. இத்தகைய வைராக்யம்‌ வாய்ந்த முனிவரின்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌.

———-

அவதாரிகை:-இக்த ச்லோகத்தில்‌, முன்‌ கூறப்பட்ட. சிறந்த வவராக்யஸ்ரீ மாத்திரமின்றி பகவத்‌ கைங்கர்ய ஸ்ரீயும்‌ இம்முனிவரிடம்‌ குடிகொண்டது என்கிறார்‌,

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்ய மாரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வரம் வரஸ்ய யதீஸி துஸ்தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

பதவுரை:–
யதீசிது: – யதிகட்கு இறைவனாகிய,
வரவரஸ்ய -ஸ்ரீவரவர முனிவரது,
ப்ரீத்யை பரம்‌-ப்ரீதியை உத்தே.சித்தே,
ய: – எந்த வாநாசல முனிவர்‌,
பணிகாதவத்‌ – ஆதி சேஷனைப் போலே, வாநாசலஸ்ய – வானமாமலையான எம்‌ பெருமானுக்கு,
வரமண்டப – சிறந்த.
மண்டபங்களென்ன,
கோபுர – கோபுரங்களென்ன,
ஆதி-இவை முதலியவற்றின்‌,
கைங்கர்யம்‌ – திருப்பணியை,
ஆரசிதவான்‌ – செய்தனரோ,
தத்‌ – அந்த,
வாநாத்ரியோகி – வாநாசல முநிவரின்‌, சரணெள- திருவடிகளை.
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

இதில்‌ இம்முனிவர்‌ யதிகட்கிறையாகிய. ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருவுள்ளத்தைப்‌ பின்‌ சென்று அவரது ப்ரீதிக்காகவே “*வானமாமலையே அடியேன்‌ தொழவந்தருளே” என்ற ஆழ்வார்‌ பாசுரப்படியே வானமாமலையாய எம்பெருமானுக்குச் சிறந்த மண்டபங்கள்‌, கோபுரங்கள்‌, ஆதி சப்தத்தால்‌ ப்ராகார வாஹநாதிகள்‌ என்ற பலவற்றையும்‌ உண்டாக்கி, பரமபத நாதனுக்கு அங்குப்‌ பரமபதத்தில்‌ சேஷன்‌ என்று கூறப்படும்‌ ஆதிசேஷன்‌
**சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாசுரப்படி அநேக கைங்‌கர்யங்களையும்‌ செய்யுமாபோலே, இவரும்‌ இங்கு அநேகம்‌ கைங்கர்யங்களைச்‌ செய்துள்ளார்‌ என்று இவருடைய அநந்‌த அவதாரத்தை ஸூ ஸிப்பிக்கிறார்‌. இங்கு **ப்ரீத்யை பரம்‌ வரவரஸ்ய ” எனக்‌ கூறியதால்‌ இவர்‌ இந்த கைங்கர்‌யங்களுக்காக மாமுனிகளைப்‌ பிரிய மனமில்லாவிட்டாலும்‌
அவருடைய உகப்புக்காக வானமாமலை யப்பனின்‌ கைங்கர்‌யத்தை ஏற்றுக் கொண்டார் எனத் தெரிகிறது. இங்ஙனன்றாகில் “ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு…
தேசாந்தரத்திலிருக்க மனந்தான் பொருந்தமாட்டாது”
என்று உபதேச ரத்னமாக உபதேசித்த மாமுனிகளின் அடிச் சுவட்டைப் பின்பற்றும் பாத ரேகா ஸமரான இவர் அவரை விட்டிருக்கவும் வல்லரோ? “வரம்” என்று பாடமான போது சிறந்த என்று பொருளாய் கைங்கர்ய பதார்த்தத்தில் அந்வயித்து சிறந்த கைங்கர்யத்தை எனக் கொள்ளத் தகும்; இப்பொழுது தூராந் வயமாகும். இங்கு உபமானமாகக் கூறப்பட்ட ஆதி சேஷனுக்கும் இவருக்கும் வாசி யுண்டு. அவர் நித்ய ஸூரிகளில் தலைவராகையாலே தமது ஸங்கல்ப மாத்திரத்தினாலேயே தமது திருமேனியைக் குடை, சிங்காஸநம் முதலிய உபகரணங்களாக அமைத்துக் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்தியையும் எம்பெருமானுடைய அவ்வவ நிலைகளுக்கு அநுகுணமாகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார். நமது ஸ்வாமியோ மநுஷ்யாவதாரத்திற்குச் சேர மெய் வருந்திப் பொருளீட்டி அநேக பரிச்ரமங்களோடு நெடு நாட்களில் செய்ய வேண்டி யிருந்தபடியால் அவர் கைங்கர்யங்களிலும் இவர்
திருப்பணிகளே மேலானவை என்னத் தட்டில்லை. ஆயினும் அவரைப் போல் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ததற்கு மாத்திரமே அவர் உபமானமாவார். இத்தகைய கைங்கர்ய நிஷ்டையை யுடைய கைங்கர்ய லக்ஷ்மீ ஸம்பந்நரான வானகிரி முனிவரைச் சரணம் புகுகிறேன் என்கிறார்

——–

அவதாரிகை:
இம்முனிவர் ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவுள்ளக் கருத்துப்படி கைங்கர்யங்களைச் செய்ததுமன்றி, பாஷாந்தரமான த்ராவிட பாஷையாகப் பரிணாமத்தை அடைந்து நம்மாழ்வார் திருமுகத்திலிருந்து வெளி வந்த திருவாய்மொழி முதலிய த்ராவிட வேதங்களின் அர்த்தங்களை அறிய விருப்பங்கொண்ட ஸாத்விகர்களுக்கும், அவற்றைத் தமது ஒளதார்யத்தால் உதவிய மஹோபகாரகர்‌, ஞான பரிபூர்ணர்‌ என்று இதில்‌ கொண்டாடுகிறார் –

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதி ஸது தாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

பதவுரை:–
பாஷாந்தரேண – வேறு பாஷையான திராவிட பாஷையாக,
பரிணாவதாகமாகாம்‌ – மாறுபாட்டை யடைந்த வேதங்களாயும்‌,
ச்ரவணாம்ருதாகாம்‌- காதுகளுக்கு
அமுதம்‌ போன்றவைகளுமான,
ஸ்ரீ சடாரிவசஸாம்‌ – ஸ்ரீ சடகோபனின்‌ திருவாக்குக்களான திருவாய்மொழி முதலியவற்‌றின்
அர்த்தான் -அர்த்தங்களை,
உதார தர:-மிக உதாரரான,
ய:-எந்த முனிவர்‌,
ஸதாம்‌ – ஸாத்விகர்களுக்கு,
உபாதிசத்‌-உபதேஸித்தனரோ,
தத்‌ – அப்படிப்‌பட்ட,
வாநாத்ரி யோகி-வானகிரி முனிவரது,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌..

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வேத வேத்யனான பரம புருஷன்‌ ஜீவ ராசிகளை உஜ்ஜீவிப்பிக்க விரும்பி, தனது பெருமையைச்‌ சிறிதும்‌ பாராது தன்னை ௮ழியமாறி மானிட சாதியிலும்‌
மற்றும்‌ திர்யக்‌ ஸ்தாவர ஜாதிகளிலும்‌ அவதரித்தது போலவே, அவனை ப்ரதி பாதிக்கின்ற வேதமும்‌, சிலருக்கே அதிகாரமுடையதாகையாலும்‌,, அதன்‌ அர்த்தங்களும்‌
அநேக சாஸ்த்ர ஞாநா பேக்ஷமாய்‌ கிலேசப்பட்டே அறிய. வேண்டும்படி யிருக்கையாலும்‌, தன்னால்‌ உலகைத்‌ திருத்த இயலவில்லையே என்று வருந்தி, வ்யாஸ பராசராதிகள்‌ பக்கலில்‌ “* வேத: ப்ராசேதஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா ” என்கிறபடியே இதிஹாஸ புராணாதிகளாக அவதரித்தாப் போலே, ஸம்ஸ்கிருத பாஷையை யறியாதாரும்‌ உஜ்ஜீவிக்கவேணு மென்ற க்ருபாதிசயத்தாலே, திராவிட வேதமாகவும்‌ பரிணாமத்தை யடைந்தது. இப்படி மாறுபாட்டுடன்‌ உதித்தவை ஸ்ரீசடகோபன்‌ அருளிச் செய்த திருவாய்மொழி முதலியனவாம்‌.. இது மற்றய ஆழ்வார்களின்‌ ப்ரபந்தங்களுக்கும்‌ உபலக்ஷணமாகும்‌. அவையும்‌ நாதமுனி களுக்காக ஸ்ரீ சடகோபன்‌ முகமாக வெளிவந்தவையே.-இவற்றை ** ச்ரவணாம்ருதாநாம்‌. ” எனக்‌ கூறியது “*செவிக்‌கினிய செஞ்சொல்லே’? என்றதை அடியொற்றியபடி. அம்ருதம்‌ எனக்‌ கூறியதால்‌, இப்‌ரபந்தங்களே *உள்ளத்தை மாசறுத்து”,“இருவினைப்‌ பாசங்கள்‌ நீக்கி”, *வீடும்‌ தரும்‌”
என்ற விஷயம்‌ ஸூஸிப்பிக்கப்‌ பெற்றது. இப்படிப்‌ பட்ட அர்த்த விசேஷங்களை ஸத்துக்களுக்கு உபதேஸித்த உதாரர்‌ இம்முனிவர்‌. இங்கு ஸத்துக்களாகிறார்‌ *ஸந்தமேநம்‌ ததோ விது:” என்று கூறப்பட்ட வேதாந்த ஞானமுடைய பெரியோர்கள்‌. அப்படிப்பட்ட பெரியோர்களுக்கும்‌ இப்‌ப்ரபந்தார்த்தங்களி லுண்டாகக் கூடிய ஸம்சய விபர்யங்‌களைத்‌ தமது உபதேசத்தால்‌ அறவே நீக்கும்‌ சிறந்த ஞானி இவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌. இங்கு உதார : என்னாதே “உ தார தர:”” எனக்‌ கூறியதால்‌,-பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்த ஆழ்வாருடையதும்‌ அதற்குப்‌ பாஷ்யமாக ஈடு முதலிய வ்யாக்யானங்களை அருளிச் செய்த ஆசார்யர்களுடையதுமான, ஓளதார்யங்களைக்‌ காட்டிலும்‌, அந்த ஈடு முதலிய வ்யாக்யானங்களில்‌ துரூஹங்களுமான அர்த்தங்கள்‌ தெளிவு பெறும்படி. அருளிச் செய்யும்‌ ஆற்றல் வாய்ந்த ஆசார்யர்கள்‌ இல்லாதிருந்த காலத்திலே இவர்‌ எல்லாருக்கு முபதேசிக்கையாலே இவர்‌ சிறந்த ஓளதார்யமுடையவர்‌ எனக்‌ கூறினார்‌. இப்படிப்பட்ட அதிகாரி துர்லபமாயிருத்த படியால் தான்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை மாமுனிகளைப்‌ பகவத்‌ விஷயத்‌தையே பேணிப்‌ போரும்படி. நியமித்ததும்‌. ஆகையால்‌-“உதார தர:” என்னத்‌ தட்டில்லை. இங்ஙகனன்றியே தமது பீடத்தை உண்டாகத்‌ தமது பரம்பரையிலே இன்றளவு அலங்கரிக்கும்‌ முனிவர்களை யாவரையும்‌ ஸாதுக்களுக்கு உபதேஸிக்கும்படி நித்யமாய்‌ நியமித்த ஒளதார்ய விசேஷத்‌தாலே ** உதார தர:” எனக்‌ கூறினர்‌ எனவும்‌ கொள்ளலாம்‌. ஆக இவ்வாறு உதாரரான வானமாமலை முனிவரின்‌ சரணங்களைச்‌ சரணடைகின்றேன்‌:

—————

அவதாரிகை:–
கீழில்‌ இம் முனிவரின்‌ ஒளதார்யம்‌ பரக்கப்‌ பேசப்பட்டது. இந்த ஸ்லோகத்தில்‌, இவருடைய** ராமானுஜன்‌ ” என்னும்‌ திருநாமம்‌ விஷத்தைப்‌ பேர்க்கும்‌ மந்த்ரம்‌ போலே ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்க வல்லது என்றும்‌, தன்னை உச்சரிப்பவர்‌களுக்கு பரம புருஷனோடு பரம ஸாம்யத்தையும்‌ (முக்தியை)தரவல்லது என்றும்‌ திருநாமத்தின்‌ பெருமையைக்‌ கூறி,இவர்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகிறார்‌.

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–7–

பதவுரை :–
ஆர்யா: – பெரியோர்‌,
அநுக்ஷணம்‌ .-அநு ஷணந்தோறும்‌ செய்யப்படும்‌,
யத்‌-எந்த முனிவரது,
நாம கீர்த்தனம்‌ – திருநாம ஸங்கீர்த்தனத்தை
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
போகி – ஸர்பத்தினுடைய,
விஷ- விஷத்தை,
நிர்‌ஹரணாய -போக்குவதன்‌ பொருட்டாகிய,
மந்த்ரம்‌-மந்தரமாக,
ஆஹு -சொல்லுகிறார்களோ,
பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு,
பரேண -பராத்பரனான,
புருஷேண ச – புருஷனோடும்‌,
ஸாம்யதம்‌ -ஸாம்யத்தை கொடுக்கவற்றோ
தத்‌-௮ப்படிப்பட்ட,
வாநாத்ரியோகி-வாநாத்ரி முனிவரின்‌,
சரணெள-திருவடிகளை;
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே–பற்றுகிறேன்‌.

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இம்முனிவரது ராமானுஜன்‌ என்னும்‌ திருநாமம்‌ ப்ரதி ஷணமும்‌ கீர்த்தனம் செய்யப்படுமானால்‌. அதுஒரு மந்த்ரத்தின்‌ கார்யத்தைச்‌ செய்ய வல்லது. அடிக்கடி ஜபித்து அதன்‌ ஸித்திக்கு உறுப்பாகச் செய்ய வேண்டிய எண்ணிக்கையோடு கூடி ஸித்தியைத்‌ தரும்‌ கருட மந்த்ரமானது, ஸ்மரண மாத்ரத்தாலே எப்படி ஸர்ப்பாதி துஷ்ட ஜந்துக்களின்‌ விஷத்தை நீக்குமோ அது போலவே அநவரதம்‌ சிந்திக்கப்படும்‌ இந்த ராமாநுஜன்‌ என்னும்‌ இவர்‌ திருநாமம்‌,ஸம்ஸாரமாகிற. ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்கும்‌. அது “மாத்திரமே யன்றி பரம புருஷனான ஸ்ரீமந் நாராயணனோடு ஸாம்யத்தையும்‌ அளிக்கும்‌ என்று பெரியோர்கள்‌ கூறுகிறார்கள்‌. இங்கு ஸம்ஸாரத்தை ஸர்ப்பமாகக்‌ கூறியதால்‌ பாம்பு போலவே ஸம்ஸாரமும்‌ வக்ர கதியை உடையது என்‌றும்‌, அப் பாம்பால்‌ தீண்டப்பட்டவன்‌ மூர்ச்சை யுறுவது போலவே இந்த ஸம்ஸார ஸ்பர்சம்‌ பெற்றவனும்‌ உண்‌மையை உணராது மயங்குகிறான்‌ என்றும்‌ அதை நீக்கும்‌ கருட மந்த்ரம் போல்‌ ஸம்ஸார ஸ்பர்சத்தால்‌ வந்த மயக்‌கத்தை நீக்கி உண்மை உணர்வை அளிப்பது, அடிக்கடி. உச்சரிக்கப்படும்‌ இந்த முனிவரது திருநாமமே யாகையால்‌ அதை மந்த்ரமாகக்‌ கூறுவர்‌ ஞானவான்களான பெரியோர்‌. “* மந்‌தாரம்‌ த்ராயத இதி மந்த்ர:’” என்ற வயுத்பத்திப்படி தன்னை அநுஸந்திப்பவனைக் காப்பாற்றுவது மந்தரம்‌ அல்லவா? நிற்க இத் திருநாமம்‌ நான்கே அக்ஷ்ரமுள்ளதாயினும்‌ திருவஷ்டாஷரம் போலவே பரம புருஷனாகிய ஸ்ரீ மந் நாராயணனோடு**பரமம்‌ ஸாம்யாமுபைதி”என வேதத்தால்‌ கூறப்படும்‌ பரம ஸாம்யத்தையும்‌ தர வல்லது. **நமோ நாராயணேதி மந்த்ரோ பாஸக:, வைமுண்ட புவநம்‌ கமிஷ்யதீதி” என்ற ப்ரமாணத்‌தின் படியே அஷ்டாஷர மஹா மந்த்ரம்‌ ஸ்ரீவைகுண்‌டத்தைக்‌ கொடுத்து குணாஷ்டகத்தாலே பரமனோடு பரம ஸாம்யத்தையும்‌ கொடுட்பது போலவே இத் திருநாமமும்‌ என்று பணிப்பர்‌ பெரியோர்‌. பும்ஸாம்‌ என்‌றதனால்‌ அதிகாரி நியதி இல்லை என்‌ற படி. அப்படிப்‌ பெருமை வாய்ந்த திருநாமத்தை யுடையவரான வானாத்ரி முநிவரின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌

———–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகங்களில்‌ ஞான வைராக்‌யாதிகளாலும்‌ திரு நாம ப்ரபாவத்தாலும்‌ வந்த இம் முனிவரது பெருமையைக்‌ கூறி, திருவடிகளில்‌ சரணம்‌ புக்கார்‌.
இனி மேல்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ ஸாஷாத்தாகத்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்தையே கூறி, அவற்றைச்‌ சரணம்‌ புகுகிறார்‌..
அதிலும்‌ இந்த முதல்‌ ஸ்லோகத்தில்‌ ஸ்வாமியின்‌ திருவடிகள்‌ கேவல ஸ்மரணத்தாலே ஜந்மாந்தரத்தில்‌ உண்டான
பாப ஸமூஹத்தையும்‌ நசிப்பிக்கும்‌ பெருமை வாய்ந்ததெனக்‌ கூறிச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--8–

பதவுரை :–
பும்ஸாம்‌ – மனிதர்களுடைய,
புராதந -பழைமையான,
பவ-ஐன்மங்‌களில்‌,
ஆர்ஜித-ஸம்பாதிக்கப்பட்ட,
பாப ராசி:, பாபங்‌களின்‌ திரளானது,
யயோ: – எந்தத்‌ திருவடிகளினுடைய,
ஸக்ருத்‌-ஏக மாவகவே செய்யப்படும்‌,
ஸம்ருத்யா ௮பி-௮நுஸந்தானத்தாலும்‌,
ப்ரளயம்‌-நாசத்தை,
ப்ரயாதி-௮டைகிறதோ,
ஸத்வந்திதெள-பெரியோர்களால்‌ ஈமஸ்கரிக்கப்‌ பெற்றதும்‌,
பரம-மிகச்‌ சிறந்த,
பாவந-பரி சுத்தத்‌ தன்மையையே,
ஏக வேஷெள-முக்கிய ஸ்வரூபமாயுடையதுமான,
வாநாத்ரி யோகி சரணெள-வாநாத்ரி முனிவரின்‌ திரு வடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்‌ரபத்யே- பற்றுகிறேன்‌.

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

இம் முனிவரின்‌ திருவடிகள்‌ புராதனமான அநேக ஜன்மங்களில்‌ ஸம்பாதித்து மனிதர்களால்‌ கூடு பூரிக்‌கப்பட்ட
பாப ஸமூஹங்களையும்‌ ஒருக்கால்‌ ஸ்மரித்த மாத்‌திரத்திலேயே நசிக்கும்படி. செய்கின்றது”என்‌கிறார்‌.

**மனத்‌தினால்‌ சிந்திக்கப்‌ போய பிழையும்‌ புகு தருவான்‌ நின்றனவும்‌ -என்று ஆண்டாளருளிச்‌ செய்ததை
இவர்‌ தமக்கு வகுத்த விஷயத்திலே யாக்கி யருளுகிறார்‌.

பும்‌ஸாம்‌ என்றது ஸ்த்ரிகளுக்கும்‌ உபலக்ஷணம்‌.-ஆசார்ய சரணாரவிந்த சிந்தனத்தில்‌ அதிகார நியமம் யில்லை யிறே.
“*பும்ஸாம்‌” எனக்‌ கூறியதால்‌ வர்ணாசஸ்ரமாதி அதிகார நியதியில்லாமை கூறப்பட்டது.
இது ஸர்வே பரப்மாந: ப்ர.தூயந்தே ‘* என்ற உபநிஷத்‌ வாக்‌யத்தை நினைப்பூட்டுகிறது.
மேலும்‌ இத்திருவடிகள்‌ **ஸந்த மேநம்‌ ததோ-விது:’” என்று கூறப்படும்‌ ப்ரும்ஹ ஞானிகளான
அப்பாச்சியாரண்ணா, ராமானுஜம் பிள்ளான்‌ போன்றவர்களால்‌ வணங்கப்‌ படுமவை,
மிகுந்த புனிதத்‌ தன்‌மையையே தமக்கு ஸ்வரூபமாகக்‌ கொண்டவை.
இத்தால்‌ நித்ய ஸித்தமான அபஹதபாப்மத்வாதி கல்யாண குணங்‌களை யுடையவனே தன்னை ஆஸ்ரயித்தவனுக்கு
அக்‌ குணாஷ்டக ப்ராதுர்பாவத்தைச்‌ செய்விக்கச்‌ சக்தனாமாம் போலே
இத் திருவடிகள்‌ ஸ்மரித்தவர்களின்‌ பா பங்களையும்‌ போக்குவிக்கும்‌ சக்‌தி வாய்ந்தவை யாயின என்று
முற்கூறியதற்குக்‌ காரணமும்‌ இத்தால்‌ ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்‌.
** பரமபாவந தைகவாஸெள *’ என்று பாடங்‌ கொண்டால்‌ “புனிதத்‌ தன்மைக்கு முக்கியமான உறைவிடம்‌ ” என்பதாகும்‌.
தாத்பர்யத்தில்‌ அதிக பேதமில்லை. இத்தகைய திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

———–

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ இத் திரு வடிகள்‌ தான்‌ வேண்டுமோ?

இவைகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாத தீர்த்தமே।தாப த்ரயமாகிற அக்னியை ௮ணைக்க வல்‌லது;
இவைகளின்‌ சம்பந்தம்‌ பெற்று உதிரும்‌ திருவடித்‌ துகளும்‌, உள்ளே உண்டாகும்‌ ரஜோ குணங்களையும்‌ சமகம்‌ ‘செய்யு மவையல்லவா ?
இத்தகைய பெருமை வாய்ந்த இம்‌ முனிவரின்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகன்றேன்‌ என்கிறார்‌.

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

பதவுரை :–
யத் தீர்த்த வாரி – எந்தத்‌ திருவடிகளில்‌ நின்றும்‌ கிரஹிக்கப்பட்ட ஸ்ரீபாததீர்த்தம்‌,
விமலம்‌ – பரி சுத்தமானதாய்க்‌ கொண்டு,
கலிகால -கலியுகமாகிற,
ஸமீரண – காற்றினாலே,
உத்த – வ்ருத்தி யடைந்த,
தாப த்ரய – ஆத்யாத்மித ஆதிபெளதிக ஆதி தைவங்கள் என்னும்‌ தாபங்கள்‌ மூன்றாகிற,
௮க்நி -நெருப்பை,
சமகம்‌ – அணைக்கத் தகுந்ததோ,
யத் ரேணு: – எந்தத்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததுளி,
அந்தர – மனதில்‌ உண்டாகும்‌,
ரஜ: – ரஜோகுணத்தை,
ப்ரசமாய ௪ – நீக்குவதன் பொருட்டு ஆகிறதோ,
ஏத்த் வாநாத்ரி யோகு சரணெள – இத்தகைய சக்தி வாய்ந்த
வாநாத்ரி முனிவரது இத் திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ட்ரபத்யே – பற்றுகிறேன்‌-

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்க வல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கல்மஷ மற்று பரிசுத்தமான, இம்முனிவரின்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததீர்த்தம்‌
கலி யுகமாகிய காற்றின்‌ ஸஹாயத்தினால்‌ அபிவ்ருத்தி யடையும்‌,
ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகம்‌ என்னும்‌ அக்நியை அணைக்கும்‌ சக்‌தி வாய்க்தது.
ஆத்யாத்மிகமென்பது சரீரதீதிலுண்டாகும்‌ நோய்களாலான துன்பங்களும்‌ நாசமும்‌.
ஆதிபெளதிகமென்பது கரடி. புலி காளை முதலியவற்‌றால்‌ ஏற்படும்‌ துன்பம்‌ நாசம்‌ முதலியன.
ஆதி தைவிகமென்‌பது இடி. மின்னல்‌ முதலியவற்றால்‌ தெய்வீகமாய்‌ ஏற்படும்‌ துக்கங்களும்‌ நாசங்களுமாகும்‌.
இவைகளை அக்நி யாக நிரூப ணம்‌ செய்ததால்‌ அக்நி தனக்கு ஆதாரமான விறகுகளையும்‌ அழிப்பது போல்‌
இதுவும்‌ ஆஸ்ரயத்தை அழித்தே தீருமென்‌பதைக்‌ தெரிவிக்கிறது.
கலி காலத்தை வாயுவாகக்‌ கூறியதால்‌ அக்நிக்கு அநுகூலமாய்‌ அதை வ்ருத்தி செய்விக்கும்‌ வாயுவைப் போல்‌
கலிகாலம்‌ அந்தத்‌ தாப த்ரயங்களுக்கும்‌ அநுகூலமாய்‌ அவற்றை வ்ருத்தி செய்கிறது என்ற அம்சம்‌ கூறப்பட்ட தாகும்‌.
தாப த்ரயத்தை அக்நியாய்க்‌ கூறியதால்‌ இது சீக்‌கிரம்‌ பரவும்‌ ஸ்வபாவமுடையது என்றும்‌
தாமதித்தால்‌ அணைக்கக்‌ கூடாதவை எனவும்‌ தோற்றுகிறது.
எனவே அத்தகைய தீயை யணைக்கும்‌ தன்மை வாய்ந்தது இந்த முனிவ:ரின்‌ ஸ்ரீபாத தீர்த்தம்‌.
இப்படி ப்ரபாவம்‌ வாய்த்த ஸ்ரீபாத தீர்த்தம்‌ இன்றளவும்‌ நாம்‌ பெறும்படி யிருப்பதும்‌ நமது பாக்ய வசமேயாகும்‌. நிற்க
இத் திருவடிகளின்‌ துகளும்‌ மனிதனின்‌ உள்ளத்து உண்டாகும்‌ ரஜோ குணத்தைப்‌ “போக்கும்‌ தன்மை பெற்றதாயிருக்கிறது.
ஒரு ரஜஸ்௭ு மற்றொரு ரஜஸ்ஸைப்‌ போக்குிறபடி என்னே?
இப்படிப்‌ பெருமை வாய்ந்த இத் திருவடிகளைச்‌ சரண்‌ புகுகின்றேன்‌.

———

அவதாரிகை :–
கீழ்‌ திருவடிகளின்‌ ஸ்மரண ப்ரபாவமும்‌ தீர்த்த ப்ரபாவமும்‌ ரஜஸ் ப்ரபாவமும்‌ கூறப்‌பட்டன.
இந்த ஸ்லோகத்தில்‌ பெரியோர்களும்‌ இந்தத்‌ திரு
வடி.களில்‌ வந்து ஆஸ்ரயிப்பதால்‌ வந்த பெருமையைப்‌ பேசி அவற்றைச்‌ சரண்‌ புகுகிறார்‌.

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–10–

பதவுரை
வாதூல வம்ச திலக: – வாதூல குலத்‌திற்கு அலங்காரமான: திலகம்‌ போன்றவரும்‌,
வாத்ஸல்ய ஸிந்து: – வாத்ஸல்யமென்னும்‌ குணத்திற்கு கடல்‌ போன்றவரும்‌,
அகில ஆத்ம குண சமதமாதி களான எல்லா ஆத்ம குணாங்களாலும்‌,
உபபந்ந; – நிறைந்‌த தாயும் இருக்கிற,
வரதார்யவர்ய : –வரதாசர்ர்யர்‌ என்று திருநாமமுள்ள அப்பாச்சி யாரண்ணா என்பவர்‌,
யயோ : – எந்தத் திரு வடிகளில்‌,
சகலம் – எல்லாவிதமான,
நிஜ பரம்‌-“தம்முடைய பாரத்தை,
நிக்ஷிப்தவான்‌ – வைத்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வானமாமலை முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே –

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கந்தாடைத்‌ திருவம்சத்திற்குத்‌ திலகம்‌ போன்றவரும்‌,
கோயிலண்ணனின்‌ சிறிய தகப்பனார்‌ குமாரரூம்‌,
திருமஞ்சனம்‌ அப்பா என்பவருக்கு தெளஹித்‌தராயும்
ஆய்ச்சியின்‌ குமாரருமாய்‌, -வாத்ஸல்யமென்‌ னும்‌ குணத்திற்குக்‌ கடல்போன்றவரும்‌
சமதமாதி அநந்தாத்ம குண பரிபூர்ணருமான அப்பாச்சியா ரண்ணா என்று வழங்கும்‌ திருநாமமுடையவருமான்‌ வரதாசார்யர்‌ என்பவர்‌,
இம் முனிவரது திருவடிகளையே பற்றி அவைகளிலே தமது பரத்தை எல்லாம்‌ ஸமர்ப்பித்து நியஸ்த பரராயிருந்தார்‌.
அதாவது ஆகிஞ்சந்யம்‌ அநந்ய கதித்‌வம்‌ இவைகளை முன்னிட்டு இந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளையே உபாயமாகப்‌ பற்றிப்‌ பின்பு
ஸ்வ ரக்ஷணத்‌தில்‌ அந்வயமின்றி ஓடத்தில்‌ ஏறியவன்‌, தன்னைக்‌ காப்பாற்‌றும்‌ பொறுப்பை ஓடக்காரனிடம்‌ விட்டு விட்டுக்‌
கரை சேரும்‌ காலத்தையே சிந்தித்துக்‌ கொண்டிருப்பதுபோல்‌ இத் திரு வடி.களிலே தமது பொறுப்பை ஓப்புவித்தபடியால்‌,
**கூவிக் கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ ”” என்று இருந்தார்‌.
ஆசார்யரும்‌ ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அப்புறப்படுத்துமவனாகையால்‌ ஓடக்காரனாகவே கொள்ளப்படலாம்‌.
எனவே சிறந்த குடிப்‌ பிறப்பும்‌ ஆத்மகுணமும்‌ நிறைந்த பெரியோரும்‌ தமது பாரத்தை ஒப்புவிக்கும் பெருமையை யுடையரான வாநாத்ரி முனிவரின்‌
திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌, போரேற்று நாயனார்‌ என்று சொல்லப்படும்‌ ஸமரபுங்க வாசாரியர்‌ என்‌ற
மற்றொரு பெரியோரால்‌ அர்ச்சிக்கப்பட்டது இம்முனி
வரின்‌ திருவடி என்று .அதன்‌ பெருமையைக்‌ கூறி,
அத்‌திருவடிகளையே சரணம்‌ புகுகிறார்‌.

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம்நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–11–

பதவுரை
ஸத்வருத்த – சிறந்த ஸதாசாரங்களுக்கு,
ஸம்பவபுவா – உத்பத்தி ஸ்‌தானமாயும்‌,
சம – மன அடக்கத்திற்கும்‌,
தாந்தி – மற்‌றைய இந்த்ரியங்களின்‌ அடக்கத்திற்கும்‌,
ஸீம்நா – எல்லை நிலமாயும்‌,
ஸத்வந்‌ தீதே – ஸாதுக்களால்‌ வணங்கப் பெற்றவரும்‌, நிகமாஞ்சல-வேதாந்தங்களின்‌,
ஸார–ஸாரார்த்தங்களால்‌, (அறிந்தமையால்‌-வந்த)
பூம்நா – பெருமையை யுடையவருமாயிருக்கிற,
ஸமர புங்கவ தேசிகேக – ஸமர புங்கவர்‌ என்னும்‌ ஆசார்யனாலே,
ஸம் பூஜஷிதெள -நன்கு! பூஜிக்கப்பட்ட,
வாநாத்ரி யோகி சரணெள – வாநாசல முநிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே -பற்றுகிறேன்‌.

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

போரேற்று நாயனார்‌ எனப்படும்‌ ஸமர புங்கவாசார்யர்‌, சிஷ்டர்களின்‌ மிகச்‌ சிறந்த ஆசாரங்களுக்கு விளையும்‌ பூமி எனப்‌ போற்றப்படுமவர்‌.
மனதை அடக்கி யாளுகையாகிற :*: சம’”மென்னும்‌ குணத்திற்கும்‌,
மற்றய கண்‌ முதலிய வெளி இந்த்ரியங்களை அடக்க யாளுகையாகிற.** தமம்‌ ” எனப்படும்‌ குணத்திற்கும்‌
எல்லை நிலமென்றும் மெச்சப்படுமவர்‌;
ஞானிகளான ஸாதுக்களும்‌ வணங்கும்‌ பெருமை வாய்ந்தவர்‌.
** வேதாந்த வாக்யங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ நன்கு உணர்ந்தவர்‌ ‘” ஏன்னும்‌ அதிசயம்‌ வாய்க்‌கப்‌ பெற்றவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஸமர புங்கவராலும்‌ இம்முனிவரது திருவடிகள்‌ நன்கு பூஜிக்கப்‌ பெற்றன என்றால்‌
இதனில்‌ மிக்க பெருமையும்‌ உண்டோ ?’
அப்படிப்பட்ட இம்முனிவரின்‌ திருவடிகளை அடைக்கல மாகப்‌ பற்றுகிறேன்‌.
ஸதாசாரங்களும்‌ சமதமாதி குணங்‌களும்‌ ஞானிகள்‌ வணங்கும்‌ பெருமையும்‌ வாய்ந்து,
வேதாந்த.ஸாரார்த்த ஞானமு முடைய ஸமரபுங்கவரும்‌ இவர்‌ திருவடி.களை ஆஸ்ரயித்து அவற்றை பூஜிப்பர்‌ என்றால்‌,
இம்முனிவரிடம்‌ ஸதாசார ஞான வைராக்யாதி குணங்கள்‌ எவ்வளவு பூர்ணமாக இருக்க வேண்டுமென்பது,
கைமுதிக நியாயத்‌தாலே ஸித்தமான தொன்றன்றோ?
இத்தால்‌ “ஒப்பற்ற ஞான வைராக்யாதிகளை யுடைவர்‌ இத்த ராமாநுஜ முனிவர்‌’” என்றது ஸூஸிப்பிக்கப்‌ பட்டதாகும்‌.

——-

அவதாரிகை:–
இப்படித்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்‌தைக்‌ கூறிப்‌ பின்னும்‌ இந்த வாநாத்ரி முனிவரின்‌ வைராக்‌யம்‌ பக்தி ஞானம்‌ என்ற குணங்களில்‌
ஓவ்வொரு குண விஷயத்திலும்‌ ஒருவரிருவரை உபமானமாகக்‌ கூறி
**இவருக்கு ஓப்பாமவர்‌ உலகில்‌ ஒருவரும்‌ இலர்‌” என்கிறார்‌.

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

பதவுரை:–
வாநாத்ரி லஷ்மணமுநே –வாநாத்ரி ராமாநுஐ முனிவரது,
வைராக்யம்‌ – வைராக்யம்‌ என்னும்‌ குணம்‌,
யதி(வர்ண்யதே)-நிரூபணம்‌ செய்யப்படுமேயாலால்‌,
வாயு – வாயு தேவனுடையவும்‌,
சந்தனு- சந்தனு மஹாராஜனுடையவும்‌,
ஸுத-புத்ரர்களான அறுமானை

எம்பெருமானார்‌, மணவாள மாமுனிகள்‌ இவர்களின்‌ ஞாநத்‌தின்‌ ரீதியை இவரது ஞானம்‌ உடையதாக ஆகும்‌.
பூர்வாசார்யர்களின்‌ ஞானத்தோடொத்த ‘ ஞானத்தை: உடையவர்‌ எனத்‌ தேறிற்று.
இப்படிப்பட்ட ஞான பக்தி வைராக்யங்களை யுடையராய்‌ இருப்பதால்‌ உலகில்‌ இம்‌.முனிவர்க்கு ஓப்பாவார்‌ ஒருவருமில்லை என்கிறார்‌.
இங்கு.கீழே ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஓவ்வொன்றுக்கும்‌ உபமானமாக சிலரைக்‌ கூறியிருக்க

கோவாஜகத்யா ம்ஸம:–உலகில்‌ ஓப்பாவார்‌ மார்‌? எனக்‌ கேட்பது அஸம்பாவித மன்றோ?
எனச்‌ சிலர்க்கு சங்கை பிறக்கக்கூடுமல்லவா ? அதற்குப்‌ பரிஹாரம்‌ என்‌? என்னில்‌,.
வைராக்யத்திற்கு அனுமான்‌ பீஷ்மர்‌ இருவரையும்‌,
பக்திக்கு நம்மாழ்வார்‌ “முதலிய பல ஆழ்வார்களையும்‌,
ஞானத்திற்கு நாதமுனிகள்‌ முதலிய பல ஆசார்யர்களையும்‌ இவர்‌ உபமானமாகக்‌ கூறிய தால்‌,

ஓவ்வொரு குணத்திற்கே இவர்‌ குணப்‌ பெருமையால்‌ பலரை உபமானமாகக்‌ கொள்ளவேண்டி. யிருப்பது தெளிவு…
எனவே எல்லா குணங்களும்‌ சேர்ந்து திரண்டு இருக்கும்‌ இவரைப்‌ போன்ற அக்‌ குணங்களுக்கு ஆஸ்ரய மில்லாமை.
ஸித்திப்பதால்‌ இவருக்கு ஓப்பாவார்‌ யார்‌ என்றார்‌.
௮ன்‌றியே
இவரது வைராக்ய பக்தி ஞானங்களுக்கு தெய்வாம்சம்‌. பகவதாஞ்ஞையால்‌ ஆழ்வார்களும்‌ ஆசார்‌யர்களுமாய்‌
அவதரித்த நித்ய ஸூரிகளும்‌ ஒப்பாமதொழிய-இவ் வுலகில்‌ கர்மமடியாகப்‌ பிறந்தார்‌ ஓப்பாவரோ? என்றுமாம்‌.
அல்லது ௮க்காலத்திலுள்ளார்‌ ஒப்பாமதொழிய இக்‌.காலத்தவர்‌ ஒருவராவது இவரோடு ஓப்பாமவர்‌ உளரோ என்றுமாம்‌.
** ஐகத்யாம்‌”” (இவ்வுலகில்‌) எனக்‌ கூறிய தால்‌, அவ்வுலகில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ உள்ளவர்‌ ஒப்பாவர்‌ எனத்‌ தேறுகிறதல்லவா ?
எனவே கீழ்க்‌ கூறியவாறு ஆழ்வார்கள்‌ ஆசார்யர்கள்‌ உபமானமாசக்‌ கொள்‌ளப்படுவதில்‌ ஆக்ஷேபம்‌ ஏதுமில்லை என்பதும்‌ உணரத்‌ தக்கது.

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஒப்பாவார்‌ ஒருவருமில்லை என்றார்‌.
‘இந்த ஸ்லோகத்தில்‌ பகவத்‌ கைங்கர்ய விஷயத்திலும்‌, பகவத்‌ பஜந விஷயத்திலும்‌, பாகவத ஸேவா விஷயத்திலும்‌
ஆசார்ய சரண கமலார்ச்சன விஷயத்திலும்‌ ஓவ்வொன்‌றுக்கும்‌ ஓரொருவரை உபமானமாகக்‌ கூறி,
இவரது ஒப்பற்ற தன்மையை நிரூபணம்‌ செய்து, இவரே சிறந்த குணங்கட்‌கெல்லாம்‌ முக்கியமான உறைவிடம்‌ என்கிறார்‌.

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர--13-

பதவுரை :–
௮ஸ்ய-இந்த முநிவருடையதாய் ,- முனிவர்‌ செய்த என்றபடி,
வானசைல – வானமாமலை என்ற திருநாமமுள்ள,
கமலாகாந்தஸ்ய -லக்ஷ்மீ வல்லப விஷயமான,
கைங்கர்யம்‌ – மண்டப ப்ராகாராதி நிர்மாண ரூபமான திருப் பணிகள்‌,
நிரூப்யதே யதி ..ஆராயப்படுமாயின்‌,
சேஷக்ரமாத்‌ – ஆதிசேஷனுடைய**சென்றால்குடையாம்‌” என்ற கைங்கர்ய க்ரமத்தை அதுஸரித்ததாக,
ஸ்யாத்‌ – ஆகும்‌.
பஜே – அநத எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌,
தத் பக்த பூஜாவிதெள-அவ்‌ வெம்பெருமானிடம்‌ பக்தி பூண்ட பாகவதர்களை ஆராதிக்‌கும்‌ விஷயத்திலும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
ப்ரீதி: -சந்தோஷமானது,
நிரூப்யதே சேத்‌-ஆராயப்படின்‌,
குலசேகரஸ்ய (இவ) குலசேகர ஆழ்வாருடையது (போல),
ஸ்யாத்‌-ஆகும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
(சார்ய) -ஆசார்யனுடைய,
அங்கரிஸசரோருஹ – தாமரை போன்ற திருவடிகளின்‌,
அர்ச்சகவீதெள-அர்ச்சு ப்ரகாரத்‌தில்‌,
உஜ்வலா : – நன்கு விளங்குகின்ற,
தா : தா:-அந்தந்த
ப்ரக்ரியா : – ப்ரகாரங்கள்‌, அநுஷ்டானங்களென்றப்டி,
யதி நிரூப்யக்தே – ஆராயப்படுமானால்‌,
மஞ்ஜுகவே:((இவ)-ஸ்ரீமதுரகவிகளுடையது போன்றதாக, (ஸ்யாத்‌)ஆகும்‌,
(ஆகையால்‌) வாநாத்ரியோகீஸ்வர : – வாநாசல முநிவர்‌, குணைகஸதகம்‌-குணங்கட்கொல்லாம்‌ முக்யமான உறை விடமாக

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ் வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

இம்முனிவர்‌ வானமாமலை எனத்‌ திருநாமம்‌ பூண்ட ஸ்ரீ ய :பதிக்குச்‌ செய்தருளிய பலவித கைங்கர்யங்‌களையும்‌ ஆராயின்‌,
அவை பலவாகையாலே, **சென்றால்‌.குடையாம்‌”, “நிவாஸசையாஸநக” என்கிற வசனங்களின்‌ படி
பல கைங்கர்யங்களையும்‌ செய்து போரும்‌ ஆதிசேஷ.னுடைய ரீதியை(கிரமத்தை) அநுஸரித்ததாகக்‌ கூறலாம்‌..
அவ்வானமாமலை எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌ அவனது பக்தர்களை பூஜிக்கும்‌ விஷயத்திலும்‌
இவரது ஆர்வத்தை ஆராய்ந்தால்‌ குலசேகர ஆழ்வாருடைய ஆர்‌வத்தை யொத்ததாகக்‌ கூறலாம்‌.
ஆசார்ய சரணாரவிந்தத்தை அர்ச்சிக்கும்‌ கிரமத்தில்‌ ஒப்புயர்வற்ற இம்‌ முனி’வரின்‌ அந்தந்த ப்ரகார விசேஷங்கள்‌
ஆராயப்படுமானால்‌: அவ்வவ அநுஷ்டானங்கள்‌ ஸ்ரீமதுரகவி யாழ்வாருடையன: போன்றனவாகும்‌.
எனவே இம்முனிவர்‌ சிறந்த குணங்களுக்குக்‌ கொள்கலமாவார்‌ என்கிறார்‌.
இங்கு **வாநசைல கமலா:- காந்தஸ்ய ‘? என்ற இடத்தில்‌ வானசைல என்று ஊரைச்‌ சொல்லி,
“*கமலாகாந்தஸ்ய’” என்று அங்கு எழுந்தருளி யிருக்கும்‌ எம்பெருமான்‌ எனக்‌ கொள்வது
**வானமா மலையே”” என்று எம்பெருமானையும்‌ ** சிரீவரமங்கலககர்‌ ‘? சிரீவரமங்கை என்று திருப்பதியையுங்‌ கூறிய ஸ்ரீ ஸூக்திகளோடு பொருந்தாது.
அன்றியே இந்த சப்தம்‌ * வைகுண்டோவிஷ்டரஸ்ரவா :” என்று எம்‌பெருமானுக்கும்‌,
* வைகுண்டேது பரே லோகே ?’ என்று: ஸ்தானத்திற்கும்‌ பேராகக்‌ கொள்ளப் படுமா போலே
அத்‌ திருப்பதிக்கும்‌: பேராகக்‌ கொள்ளப்படினும்‌ குற்‌றமில்லை-
இந்த ந்யாயத்தைக்‌ கொண்டுதான்‌ வானமா மலை என்று அவ்‌வூருக்கும்‌ பேராகத்‌ தற்காலம்‌ எல்லோரா லும்‌ வழங்கப்‌
பெற்று வருகிறது என்பது உணரத்தகும்‌.
இவ்விராமானுஐ .முனி பல சைங்கர்யங்களைச்‌ செய்ததால்‌, ஆதிசேஷனின்‌ கைங்கர்யத்தை யநுஸரித்தது இவரது கைங்கர்யம் என்கிறார்‌.
சேஷக்ரமாத்‌” என்பதற்கு “*சேஷக்ரம மநுஸ்ருத்ய ‘”என்று “ல்யப்லோபே பஞ்சமீ” எனக்‌ கொண்டு அர்த்தம்‌கூறப்பட்டது.
பகவத்‌ பஜனத்திலும்‌ ஸ்ரீவைஷ்ணவ பூஜா விஷயத்திலும்‌ மற்றை ஆழ்வார்களை விட்டு ஸ்ரீகுலசேகரரை
இவர்‌ உபமானமாகக்‌ கொள்வான்‌ என்‌? என்னில்‌,
அவ்வாழ்‌வாருடைய பஜந ப்ரகாரம்‌ விலக்ஷண்மல்லவா? பகவத்‌ ஸம்பத்‌தம்‌ பெற்ற தேசமே அமையும்‌-;

அத்தேசத்திலும்‌ ஞானத்‌திற்கு அடைவில்லாத திர்யக்‌ ஸ்தாவர ஜங்கமங்களும்‌ அமையும்‌ என்று நினைத்து
** குருகாய்ப்‌ பிறப்பேன்‌,” *மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையனாவேன்‌ ‘?,
“*தம்பகமாய்‌ நிற்கும்‌ தவ முூடையேன்‌ ஆவேன்‌ ,
“படியாய்க்‌ கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேன்‌ ”’ என்றாரல்லவா?
அது போலவே ‘இம்முனிவரும்‌ அவனுகந்த திருப்பதியில்‌ “ஏதேனுமாவேன்‌”என்‌ற அத்யவஸாயம்‌ பெற்றவர்‌ என்றபடி.
பாகவதர்களை ஆராதிக்கும்‌ விஷயத்திலும்‌ ““ஆரங்கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரெனக்‌ குடப்பாம்பில்‌ கையிட்ட” ஸ்ரீகுலசேகராழ்வாரைப்‌ போலே
ஸ்ரீவைஷ்ணவ விஷயத்தில்‌ கூறப்படும்‌ தோஷலே சத்தையும்‌ ஸஹியாது பரிந்து அவர்களை பூஜிக்குமவர்‌ என்று தோற்று கைக்காக இந்த உபமானம்‌
இனி இம் முனிவர்‌ தமது ஆசார்‌யனான மணவாளமாமுனிகளின்‌ திருவடிகளை அர்ச்சிக்கும்‌ க்ரமங்களும்‌,
அந்தந்த ப்ரகாரங்களும்‌ மதுரகவி நிலையை ஓத்ததாகும்‌. அதாவது–
அவர்‌ **தேவுமற்றறியேன்‌ ” என்று ஆழ்வாரையே தெய்வமாகப்‌ பற்றினாப் போலே
இவரும்‌ “*ஆசார்யதேவோ பவ” என்கிறபடியே ஆசார்ய ப்ரபத்தி யையே தேவனாகக்‌ கொண்டு அர்ச்சிக்கும்‌ நிலையாகும்‌,
ஆயின்‌ இவருக்கு பகவத்‌ கைங்கர்யத்தில்‌ ப்ரவ்ருத்தி சேருவது எங்‌கனே என்னில்‌ ?
ஆசார்ய முகோல்லா ஸார்த்தமாகச்‌ செய்கையாலே சேரும்‌.
இதுதான்‌ **ப்ரீத்யை பரம்‌ வர வரஸ்ய’” என்றவிடத்தே கூறப்பட்டதாகும்‌.
கவி :’” என்றது மதுரகவி என்றபடியாம்‌.

———

அவதாரிகை :–
ஆக இவ்வளவும்‌ வர வாநாத்ரி முனிவரது ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌, பகவத் கைங்கர்யம்‌,
பகவத் பாகவத ப்ராவண்யம்‌, ஆசார்ய பாதார்ச்சனம்‌ முதலியவற்றை உபமான முகத்தாலே சிறப்பித்துக்‌ கூறி
அவ்வழியாலே இவர்‌ ப்ரபாவத்தைக்‌ கூறியவர்‌ எம்பெருமானே நர நாரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தாப்‌ போலே,

ஞானப்ரதானம்‌ செய்து உலகினை உய்விக்க விரும்‌பிய ஆதிசேஷனே அநேகாவதாரம்‌ செய்தவர்‌ என்றும்‌
ஸ்ரீமந் மணவாள மாமுனிகளாகவும்‌ அவரது சிஷ்யரான வானமா மலை ராமானுஜ முநிவராயும்‌ அவரித்தவரும்‌ அவரே என்‌றும்‌
இவரது அநந்தாவதாரத்வத்தை அருளிச்‌ செய்து அவ்‌வழியாலே
அவரது ஓப்புயர்வில்லாப்‌ பெருமையை உணர்த்துகிறார்‌ இந்தக்‌ கடைசி ஸ்லோகத்தால்‌.

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

லக்ஷ்மீபதி: – லக்ஷ்மீ வல்லபனான எம்பெருமான்‌,
ஆத்மாகம்‌-தன்னை (ப்ராயேண்‌) –அநேகம்‌ தடவை, சிஷ்யாசார்யதநுத்வயம்‌ -சிஷ்பனென்னும்‌ ஆசார்யனென்னும்‌ இரு சரீரங்களையுடையவனாக,
நிரபஜத்‌ – பகுத்தான்‌,
ஏக: – அவ்‌ விருவரில்‌ ஒருவன்‌,
புரா – முற்காலத்தில்‌
கரஸம்ஞக: –
நர நாராயணன்‌, நரநாராயணர்களென்கிற சிஷ்யாசார்யர்களாக அவதரித்தது போலவே
திருவநந்தாழ்வான்‌ மாமுனிகளும்‌ வானமாமலை “ ராமனுஜ முனிவருமாய்க்கொண்டு சிஷ்யாசார்யர்களாக அவதரித்தார்‌ எனக்‌ கொள்வதே தகுதியுடையதாகும்‌.
ஸ்ரீ மணவாளமாமூனிகளையும்‌. இந்த ராமானுஜ முனிவரையும்‌ ஈச்வராம்சமாகச்‌ சொல்லுமிடங்களில்‌
“ஸாக்ஷ£ந்‌ நாராயணோதேவ:”’ என்று ஆசார்ய ஸாமாந்யத்தையும்‌ பகவதம்சமாகக்‌ கூறும்‌ ஸாமாந்ய வசனத்தைக்‌ கொண்டே. சொன்னதாகக்‌ கொள்ள வேண்டும்‌.இல்லாவிடில்‌ எம்பெருமானார்‌ முதலியோருக்குக்‌ கூறப்படும்‌ சேஷாவதாரத்வம்‌ ஸித்தியாது.இந்த மஹார்யரென்றும்‌ தொட்டை ஐயங்கார்‌ அப்பை, இந்த “*மங்களாசாஸசம்‌ ப்ரபத்தி என்ற இரு கரந்தங்கள்‌ போலவே தமது ஆசார்யரான வானமாமலை ராமானுஜ ஜீயர்‌ விஷயமான *: தினசர்யை ‘” என்னும்‌ கீரந்தமும்‌ அருளிச்‌ செய்திருக்கிறார்‌ என்‌பது ஸ்ரீ வரமங்கைமுகி வைபவத்தால்‌ அறியப்படுகிறது.இந்த ப்ரபந்தங்களை ராமானுஜம்‌ பிள்ளான்‌ அருளிச்செய்ததாகவும்‌ சிலர்‌ கூறுவர்‌.

————————-————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்