ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–-ஸ்ரீ மன் நாராயணனே பர ப்ரஹ்மம் -ஸ்ருதி ஸ்ம்ருதி பரிபாடல் பிரமாணங்கள் -ஸ்ரீ புருஷ ஸூக்தம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8– ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6-என்கிறபடியே பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை

நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம் இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

ஸ்ரீ நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே-ஸ்ரீ ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

———————–

ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-10-5-3-

—————–

தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
ஸ்ரீ நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மை யிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனை யிட்டல்லது சொல்லப் போகாது.
கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிற தன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக்கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண் கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————-

நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -ஸ்ரீ திருப்பல்லாண்டு -4-

நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12-

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -ஸ்ரீ பெரியாழ்வார்-1-8-11 – –

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே – -2 3-2 – –

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

நம்பி நீ பிறந்த நல் நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் -3-7-5 –

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –

நாராயணன் செய்த தீமை என்றும் எமரர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ – 3-8 2- –

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின் நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 1-

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 7-

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-2 –

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –

ஓவாதே நமோ நாரணா என்பன் –
பிரயோஜனம் பெற்றவாறே குலையும் ஐஸ்வர்ய காமற்கு
அங்கி கைப் பட்டவாறே குலையும் உபாசகர்க்கு
இது தானே பிரயோஜனம் ஆகையாலே -பிரபன்னர்க்கு குலையாது
ஓவாதே –இது மாறினால் எனக்கு சத்தை குலையும் –

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1 6-

கண்ணா –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி சுலபன் ஆனவனே
நான்முகனைப் படைத்தானே –
இப்படி சுலபனானவன் தான் யார் என்னில் -பிரம்மாவை திரு உந்தியில் ஸ்ருஷ்ட்டித்தவன்
காரணா –
பிரம்மாவுக்கும் முன்புண்டான ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிணவனே
கரியாய் –
காரணத்வமும் -சௌலப்யமும் அன்றிக்கே -துர்லபனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
காரணா -நான் முகனைப் படைத்தானே -கண்ணா -கரியாய் -என்று அந்வயம்
இது என் ஸ்வரூபம் –உம்முடைய ஸ்வரூபம் இருந்தபடி என் -என்ன –
அடியேன் நான் –
உனக்கு அனந்யார்க்க சேஷ பூதனான நான் –
ஆனாலும்-தேகம் கிடைக்கையினாலே இதுக்கு தாரகம் என் என்னில் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-
பசிப்பது எப்போதோ என்னில் –
ஓவாதே –
மறவாதே
நமோ நாராயணா என்று எண்ணா நாளும்-
நமோ நாராயணா -என்கையாலே –
தேக ஆத்மா அபிமானத்தையும் குலைத்து கொண்டு -திரு நாமத்தை அனுசந்திக்கிறார் –
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு –
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு-
அவை தத்துறுமாகில் -என்கையாலே -அவை கூடாது
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-என்கையாலும் –
ஓவாதே நமோ நாராயணா -என்கையாலும் -கூடாது –
கூடில் -நாளும் அது -பட்டினியும் அது –
நாள் மலர் கொண்டு நண்ணுகைக்கு பிரமாணம் -வேதம்
நாடாத மலர் நாடி –
த்ருஷ்டாதிர்ஷ்டம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாயம் உபேயம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாசகருக்கு உபாயம் -தங்கள் கையிலே -உபேயம்-ஈஸ்வரன்
உண்ணா நாள் -உன பாதம் நண்ணா நாள் — உண்ணும் நாள் உன பாதம் நண்ணும் நாள் –
பசி ஆவது -பசிப்பது என்ற படி
ஓவாதே நண்ணும் நாள் பசி கெடுவது —
ஓவாதே எண்ணா நாள் -இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொள்ளா நாள் -அவன் கொள்ளா நாள் –
அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே-
தத்துறுகை-தட்டுப் படுகை
இத்தால் மாறுமாகில் என்றபடி
தத்துறுமாகில் – மாறாட்டு படுமாகில் என்னவுமாம் –
மாறாட்டு படுகையாவது -அநந்ய பிரயோஜனமாகம் அன்றிக்கே –
பிரயோஜனாந்தரங்களை கணிசிக்கை –

————-

நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை 1-

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–10-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே–ஸ்ரீ நாச்சியார் திரு மொழி-2-1-

இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

———–

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-4-

————–

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –-ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி–2-9-1-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் –!–3-8-1-

வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

——————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —ஸ்ரீ முதல் திருவந்தாதி-—–5-

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி 1-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

——————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

———

பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என–ஸ்ரீ சிறிய திருமடல்

—————

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–ஸ்ரீ திருவாய் மொழி -1-2-10-

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில்,நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே–4-4-7-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அழித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே –7-5-3-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதோர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே -8-6-10–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-9-3-1-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

———

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -2-

———————–

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-1-7-

கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இனி இந்த சாமா நாதி கரண்யமானது ஜெகதீஸ்வரயோக சரீராத்ம நிபந்தம் என்று சொல்லுகிறது –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இந்த சரீரத்தை இவ்வாத்மா நியந்தருதயா வியாபித்து இருந்தால் போலே எம்பெருமானும் அபாதித பிராமண ஸித்தமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகங்களையும்
தத் ஆராப்தங்களான ஸமஸ்த வஸ்துக்களையும் நியந்தருதயா வியாபித்து இருக்கும் -இப்படி காரிய காரண உபய அவஸ்திதா சித்தவஸ்துவில் காட்டிலும்
பத்த முக்த நித்ய சித்த த்ரிவித சேதனரில் காட்டிலும் விலக்ஷண ஞான ஆனந்த அமல ஸ்வரூபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந அபரிமித குண விபூதிகனாய்
அகில புவனா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் சர்வ ஜகத் ஆத்மாவாய் -சர்வ ஜகச் சரீரனாய் ஸ்வதா ஏவ அகர்ம வச்யனாகையாலே
ஸ்வ சரீர பூத சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துகத ஸூக துக்க விகாராதி சர்வ தோஷைரா சம்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் –

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம/ ஆனந்தோ ப்ரஹ்ம / எஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் / பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச /
மநோமய பிராண சரீரோபாரூபஸ் சத்யா சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாமஸ் சர்வ கந்தஸ் சர்வ ரஸஸ் ஸர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர/
தஸ்ய நாம மஹத் யஸ /அத பரா ஸ்ரோத்ரம் தத் பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூஷ்மம் தத் ஸ்வயம் யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா /
அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ அபிபாஸஸ் சத்யகாமஸ் சத்ய சங்கல்ப /
ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ/
சர்வே நிமேஷா ஐஜ்ஞிரே வித்யுத புருஷாததி/ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் /ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே /
நீல தோயத மத்யஸ்தா வித்யுலேகே வபாஸ்வாரா /மஹா ரஜநம் வாச /அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ /ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம்/
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா /யத்ரர்ஷப பிரதமஜா யே புராணா/தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் /
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய/ யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமன் /பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச /
ஷரம் பிரதானம் அம்ருதாசாரம் ஹாரா ஷராத்மாநாவீசதே தேவ ஏக /ச காரணம் கரணாதி பாதிப
/த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பர்ஷஸ்வ ஜாதே-தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந்யோ அபிசாக சீதி/
சமாநே வ்ருஷே புருஷோ நிமக்நோ அநீசயோ சோசதி முஹ்யமாந ஜுஷ்டம் யதா பஸ்யத் யன்யமீசமஸ்ய மஹிமாநமிதி வீத சோக /
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா/போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா /
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க்ரம்ய /ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தீ பவதி /ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி /
சோஸ்நுதே சர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதேதி /
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்த ரோயம் ஆத்மா ந வேத
யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத/
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண /அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஐநாநாம் சர்வாத்மா /ச தேவ சோம்யேதமக்ர ஆஸீத் /
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே /ப்ரஹ்ம வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / சர்வானி ஹவா இமாநி பூதாந் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே /
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாநோ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி /
ந தஸ்யேசே கஸ்ஸந /பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் / யச்ச கிஞ்சிஜ் ஜக தயஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித/
ச ப்ரஹ்மா ச சிவா சேந்த்ர சோஷர பரம ஸ்வராட் –இத்யாதியாய்
அவிகாரய ஸூத்தாய /ஸூத்தே மஹா விபூதியாக்யே /ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் /ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் /
சமஸ்தா சக்த யஸ் சைநா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர் மஹத் /
பூஷணாஸ்த்ரா ஸ்வரூபஸ்தம் /ந பூத சங்க சமஸ்தா நோ தேஹோஸ்ய பரமாத்மன/தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீவத்ச வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய ஸாஸ்வதோ த்ருவ/
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ /தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய/
திவ்யம் ஸ்தானம் அஐரஞ்சாப்ரமேயம் துர் விஜ்ஜேயஜ் சாகமைர்கம்ய மாத்யம் /
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுரா சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ/
கலா முஹுர்த்தாதி மயஸ்ச கால /காலம் ச பசதே/ பூ பிராணிந சர்வ ஏவ குஹாச யஸ்ய/ சர்வம் ஸமாப்நோஷி ததோ அசி சர்வ /தாநி சர்வானி தத்வபு /
தத் சர்வம் வை ஹரேஸ்தநு /ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூப யதோ அவ்யய / ஜகத் சர்வம் சரீரம் தே /ஜகாத் வியாபார வர்ஜம் பிரகரணாத சந்நிஹிதத் வாச்ச/
போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச /ஜகத் வியாபார வர்ஜம் சமாநோ ஜ்யோதிஷா/ இதம் ஞானம் உபாச்ரித்ய மாமா சாதரம்யா மாகதா சரக்கேபி நோப ஜா யந்தே பிரளயே ந வ்யதந்தி ச /விஷ்ணோஸ் ஸகாசா நுத் பூதம் —
இத்யாதி ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –
ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின —
—————–

அவதாரிகை –

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

—————————————————–

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1

——————————————————-

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது

ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது

உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –

உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே

அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உயர் வேத நேர் கொண்டு உரைத்து
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்

பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்

தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது

அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இறே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே-ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாக
ஆ பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி

அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

———————————————————

1. ஸ்ரீ மன் நாராயணனே உலகனைத் தையும் படைத்து அளித்து அழிக்கும் ஜகத் காரணன்.

“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் த்வாதஸாதித்யா ருத்ரா வஸவ:”
[நாராயணோபநிஷத்]

[நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறான்(பிரமனுக்கு அந்தர் யாமியான) நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான். (கஸ்யபருக்கு அந்தர்யாமியான) நாராயணனிடமிருந்தே இந்திரன் உண்டாகிறான்….நாராயணனிடமி ருந்து(இவ்வண்ணமாக) பன்னிரு ஆதித்யர்களும், பதினொரு உருத் திரர்களும் எட்டு வஸுக்களும் தோன்றினார்கள்]

“ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந” [மஹோபநிஷத்]

[நாராயணன் ஒருவனே(ப்ரளய காலத்தில்) இருந்தான். பிரமனுமில்லை சிவனுமில்லை.]

“மா அயோயே மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!…
விதியின்மக்களும் மாசுஇல் எண்மரும் பதினொரு கபிலரும் தாமாஇருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழுலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதரவலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை ப்பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்”[பரிபாடல் -3]

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” [நான்..திருவ-1]

“போதுதங்கு நான்முகன் மகன் அவன் மகன்சொலில் மாதுதங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”
[திருச்சந்தவிருத்தம்-72]

“கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளுர்தி கழல்பணிந்து ஏத்துவரே”
[திருவாய்மொழி-2-2-10]

2. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துலகையும் வியாபிக்கும் அந்தர்யாமியாகவும் , அதனாலேயே அனைத்துமாகச் சொல்லத்தக்கவனாகவும் இருப்பவன்.

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:|
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ||
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா |
அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||–[தைத்திரீய நாராயணவல்லி]

[நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா, இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவுமாக எந்தெந்தப் பொருள்கள் உள்ளனவோ, அவையனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து விளங்குபவன் நாராயணனே]

ப்ரஹ்மா நாராயண: ஸிவஸ்ச நாராயண:…நாராயண ஏவேதம் ஸர்வம்” [நாராயணோப நிஷத்]

[பிரமனும் நாராயணனே. சிவனும் நாராயணனே. நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்]

ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-

யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-

வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி / தண்ணீர் /-வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
-புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –

ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ….
பூவனும் நாற்றமும் நீ” [பரிபாடல்-1]

“இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை”
“அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்”
[பரிபாடல்-3]
“கெடுஇல் கேள்வியில் நடு ஆகுதலும்”              [பரிபாடல்-2]

“ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்” [திருவாய்-4-7-6]

“நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” திருவாய் -6-9-1]

3. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனாகவும் எல்லாம் வல்ல ஸர்வசக்தனாக வும் இருப்பவன்.

“அத புருஷோ ஹவை நாராயணோகாமயத- ப்ரஜாஸ்ருஜேயேதி | நாராயணாத் ப்ராணோ ஜாயதே மந: ஸர்வேந்த்ரியாணி ச | கம் வாயு: ஜ்யோதிராப: ப்ருதிவீ விஸ்வஸ்ய தாரிணி || [நாராயணோபநிஷத்து]

[புருஷன் எனப்படும் நாராயணன்
‘அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டிக்கக் கடவேன்’ என்று ஸங் கல்பித்தான். நாராயணனிடமிருந் தே ப்ராணன் உண்டாகிறது; மனமும் எல்லா இந்திரியங்களும், ஆகாயமும், வாயுவும், அக்னியும், நீரும், அனைத்தையும் தரிக்கும் பூமியும் உண்டாகின்றன.]

“யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:” [முண்டக..-1-1-10]

[எந்தப் பரமாத்மா அனைத்தையும் அறிகிறானோ, அனைத்தையும் அடைந்திருக்கிறானோ அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டியாகிற தவம் ஸங்கல்பமயமாயிருக்கிறது.]

“பராஸ்ய ஸக்தி: விவிதைவ ஸ்ருயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச” [ஸ்வேத..6-7]

[இந்தப் பரமாத்மாவினுடைய சக்தியும் ஜ்ஞானமும் செயலும் மேலானதாகவும், பலவிதமாகவும், இயல்வானதாகவும் உள்ளன.]

“நூறு ஆயி ம் கை ஆறுஅறி கடவுள் நின்னைப் புரைநினைப்பின் நீஅலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ!”

“நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபிணோயே!”
“இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை” [பரிபாடல் 3]

“எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதேகொண்டு  எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன்” [திருவாய் -3-10-8]

4. ஸ்ரீ மன் நாராயணனே தலைசிறந்த மோக்ஷத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிப்பவன்.

“உதாம்ருதத்வஸ்யேஸந: ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ— இஷ்டம் மநிஷாண”[புருஷஸூக்தம்]

[மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே; லக்ஷ்மிதேவியும், பூமி தேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள் உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தையும் பெறக் கடவோம்.]

“தத்விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய:”
[ரிக் வேதம் மண்டலம் -5-22-5]

[விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.]

“மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!”         [பரிபாடல்-3]

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதில் பெறல் உரிமை”                   [பரிபாடல் -15]

“வீடு முதலாம்”        [திருவாய்-2-8-1]

“சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று வீடு தரும் நின்று நின்றே”     [திருவாய்-3-9-9]

“இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்”[திருவாய்-10-10-11]

5. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய், தாழ்ந்த குணங்கள் எதுவும் இல்லாதவ னாய் இருப்பவன்.

நிஷ்கலங்கோ நிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸுத்தோ தேவ ஏகோ நாராயண: ந த்விதீயோஸ்தி கஸ்சித்||”-[நாராயணோபநிஷத்]

[ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய்,சுத்தனா ய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.]

“தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண:|.. உத்பவ: ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:||”-[ஸுபாலோபநிஷத்]

[அனைத்தையும் தரிப்பவனும், அனைத்தையும் விதிப்பவனும், செய்பவனும், சிறந்த விகாரங்க ளையுடையவனும், பரமபதத்திலிரு க்கும் தேவனான நாராயணன் ஒருவனே; பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே.]

நின் ஒக்கும் புகழ் நிழலவை…. எண்ணிறந்த புகழவை”[பரிபாடல்1]

“வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்”                 [பரிபாடல்-2]

“நின் புகழ் உருவின கை”[பரிபாடல்-3]
“சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை”            [பரிபாடல்-13]

“அன்பது மேஎய் இருங்குன்றத்தான்”[பரிபாடல்-15]

“நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்”                 [பரிபாடல் திரட்டு]

“தாவா விழுப்புகழ் மாயோன்”[தொல்காப்பியம் பூவைநிலை]

“தேயா விழுப்புகழ் தெய்வம்”[முல்லைக்கலி-3]

“புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை”    [புறநானூறு-56]

“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன[புறநாநூறு-57]

“ஈறில வண்புகழ் நாரணன்”[திருவாய்-1-2-10]

“உயர்வற வுயர்நல முடையவன்யவனவன்”[திருவாய்-1-1-1]
“வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்”[திருவாய்-8-1-8]
“தோற்றக்கேடவை இல்லவன்”[திருவாய்-3-6-6]

6. ஸ்ரீ மன் நாராயணனே தேவர்களுக் கெல்லாம் முதல்வனான தேவாதி தேவன்.

“அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:”[யஜூஸ்ஸம்ஹிதா-5-5]

[தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்]

“தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்”             [ஸ்வேதாஸ்வர]

[தேவதைகளுக்குள் மேலான தேவதையாயிருப்பவன் அந்தப் பரமாத்மாவே]

“அமரர்க்கு முதல்வன் நீ”[பரிபாடல்]

“மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ”[திருவாய்-8-1-3]

“தேவாதிதேவனை” [திருப்பாவை8]

7. ஸ்ரீ மன் நாராயணனே எவராலும் அளத்தற்கரியவன்.

“ந ஸந்தருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்சநைநம்”
[தைத்திரீய நா..1-10]

[அந்தப் பரமாத்மாவின் உருவம் எவனுடைய கண்ணுக்கும் புலனா காது; எவனும் அவனைக் கண்ணால் பார்த்ததில்லை.]

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”[தை-ஆந-9]

[எந்தப் பரமாத்மாவிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அவனை அறிய முடியாமல் திரும்பி வருகின்றனவோ.]

“அன்னமரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?”
[பரிபாடல்-1]

“நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ”
[பரிபாடல்-4]
“அளப்பரியவை”    [பரிபாடல்-4]

“இலனது உடையனிது என நினவரியவன்”    [திருவாய்-1-1-3]

“யானுமேத்தி ஏழுலகும் முற்றும் ஏத்திப் பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்”    [திருவாய்-4-3-10]

8. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துயிர்களுக்கும் எல்லா உறவுமாய் இருக்கும் உறவினன்.

“மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:|”              [ஸுபால உப]

[தாய், தந்தை ஸகோதரன் முதலான எல்லா உறவாகவும், புகலிடமாகவும், உபாயமாகவும், நண்பனாகவும், ப்ராப்யமாகவும் இருப்பவன் நாராயணனே]

“அன்னை என நினைஇ நின் அடிதொழுதனெம்”  [பரிபாடல்-18]

“எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மண்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமோய் இருங்குன்றத்தான்”
[பரிபாடல்-15]

“பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ பேசில்”               [பெரிய திருவ-5]

“தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் அவை அல்லனாய்”
[திருவாய்-3-6-9]

9. ஸ்ரீ மன் நாராயணனே வேதங்களின் முழுமுதல்வனாக முழங்கப்படுபவன்.

“த்வே வித்யே வேதிதவ்யே…பரா சைவாபரா ச | தத்ராபரா ரிக்வேதோ யஜூர்வேத: ஸாமவேத: அதர்வவேத:||
[முண்டக 1-1-4-5]

[பரமாத்மாவைக் காட்டும் இரண்டு வித்யைகளை ஜீவன் அறிய வேண்டும். பக்தியானது மேலான வித்யை. வேதங்கள் இரண்டாவதான வித்யை. அந்த வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நாலு வகைப் படுகின்றன.]

“வாய்மொழிப் புலவ”
“நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ”

“நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்”                       [பரிபாடல்-1]

வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்”
“என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே”

“கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு”  [பரிபாடல்-2]

“மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து  வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்”

“பதினாயிரம் கை முதுமொழி முதல்வ”

“முன்னைமரபின் முதுமொழி முதல்வ”

“தொல் இயல் புலவ”

“வேதத்து மறை நீ”   [பரிபாடல்-3]

“அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை”

“பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்”
[பரிபாடல்-13]

“நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்”           [பரிபாடல்-15]

“உளன் சுடர் மிகு சுருதியுள்”
[திருவாய்-1-1-7]

“மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”        [திருவாய்-3-1-10]

“நம்முடைய நாயகனே! நான்மறையின் பொருளே”
[பெரியாழ்திரு 1-5-3]

“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே”[பெரியாழ்திரு4-3-11

“அரன் நாரணன் நாமம் உரை நூல்மறை”     [முதல் திருவ 5]

“போதில் மங்கை பூதலக்கிழத்திதேவி … என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”  [திருச்சந்த -72]

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————————————————-

ஸ்ரீ புருஷ ஸூக்தம்

ஸ்ரீ புருஷஸூக்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூக்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் – அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையையும் சொல்லி சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது

#சகஸ்ர_சீர்ஷம்_தேவம்_விஸ்வாஷம் #விஸ்வ_சம்புவம்
#விஸ்வம்_நாராயணம்_தேவம்_அக்ஷரம்_பரமம்_ப்ரபும் –1-

#சகஸ்ர_சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூக்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
#விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
#விஸ்வ_சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
#விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
#நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதைகதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
#தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
#அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
#பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
#ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்

——————————–

#விச்வத_பரமம்_நித்யம்_விஸ்வம் #நாராயணம்_ஹரிம்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்_தத் #விஸ்வ_முபஜீவதி–2

#பதிம்_விஸ்வஸ்_யாதமேஸ்வரம் #சாஸ்வதம்_சிவமச்யுதம்
#நாராயணாம்_மஹாஜ்ஜேயம் #விச்வாத்மநாம்_பாராயணம் -3

#விச்வத_பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் –இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
#நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
#விச்வத_பரமம்_விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
#நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் –சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
#ஹரிம்_நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
#தத்_விஸ்வ_முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வாஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
#பதிம்_விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –

“#யாதமேஸ்வரம்”

ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்

சாஸ்வதம்”

ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே

“சிவம்”

மங்கள கரமாய் இருப்பவன்

“சாஸ்வதம் சிவம்”

எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன

“அச்யுதம்”

நழுவ விடாதவன் –வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –

“அச்சுதன்-
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –

“நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் –ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் – பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் –
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் – விச்வாத்மநாம் கடக சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் – ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்

“பாராயணம்”

பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க –பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –

——————————————————————–

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4

யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5″

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“நாராயண பரம் ப்ரஹ்ம”

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே –த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –

“தத்துவம் நாராயண பர”

நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –

நாராயண பரோ ஜ்யோதிர்”

ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக

“ஆத்மா நாராயண பர”

ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் – தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
“யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-“
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –

—————————————-

“அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6”

எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே

“அநந்தம்”

கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அநு வாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே

“அநந்தம்”

தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் – விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் –
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு

“அவ்யயம்”

குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி –விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
“கவிம்”

நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்

“கவிம்”

வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே

“சமுத்ரேந்தம்”

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –

“சமுத்ரேந்தம்”

குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே

“சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்”

சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்

“ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம்”

சிந்தையன்
-தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –

————————————————————————–

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8

தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9″

அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்”

தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –

“சாப்யதோ முகம்”

தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்

“அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி”

கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –

“அங்குஷ்ட மாத்ர புருஷ –”

கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்

“ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்”

அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –

“ஆயதனம் மஹத்”

நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்

“தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்”

அந்த ஹ்ருதயத்தில் நடுவிலு நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது

“தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்”

அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்

“அஜர”

எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி

“கவி”

எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –

——————————————————————–

“தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10″

“தஸ்ய மத்யே”

தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்

“வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித”

ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா “தஸ்ய சிகா வன்ஹி சிகா”
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –

“நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா”

நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –

“நீவார ஸூகவத் தன்வீ”

நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்

“பீதாபா”

மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்

“பீதாபா”

என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்

“ஸ்யாத் தநூபமா”

உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

———————————————-

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11″

“தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித”

ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை

“ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்”

அனைவருக்கும் அந்தர்யாமி –அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே –ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்

“சோஷர”

-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி

“பரமஸ் ஸ்வராட்”

கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான

———————————————————————-

“ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12″

பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –

“ருதம்”

சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே

“சத்யம்”

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம – ஏக ரூபி -ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் –

“பரம் ப்ரஹ்மம்”

பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்

“புருஷம்”

நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்

“க்ருஷ்ண பிங்களம்”

கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று –ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்

“ஊர்த்வ ரேதம்”

ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்

“விருபாக்ஷம்”

மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் –சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் –யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே

“விஸ்வ ரூபாய வை நம”

உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading