Archive for the ‘முமுஷுபடி –’ Category

ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –160–184–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

இனி உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் –

உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது –சூரணை -160-

ப்ராப்யமாவது –
ஸ்ரீ யபதியாய்-சர்வ ஸ்வாமியாய் -இருக்கிற சர்வேஸ்வரன் திரு அடிகளில் பண்ணும் கைங்கர்யம் –

———————————————————

பிராபக வர்ணம் அநந்தரம் ப்ராப்யம்  சொல்லுகிற இதுக்கு அபிப்ராயம் அருளிச் செய்கிறார் 

ப்ராப்யாந்தரத்துக்கு அன்று என்கை-சூரணை -161-

பூர்வ வாக்யத்தில் பிரதி பாதிதமான சாதனம் பல சதுஷ்டய சாதாரணம் ஆகையாலே –
கீழ் பண்ணின பிராபக வர்ணம் ப்ராப்யாந்தரதுக்கு அன்று என்னும் இடம் சொல்லுகை -இப்போது
ப்ராப்யம் சொல்லுகிற  இதுக்கு பிரயோஜனம் என்றபடி –

——————————————————

ப்ராப்யாந்தரங்களை விட்டு இந்த ப்ராப்யத்தை அபேஷிக்க வேண்டுவான் என் என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தை பற்றினார் போலே
உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்தியை அர்த்திக்கிறது –சூரணை -162-

அதாவது
உபாய வர்ணம் பண்ணுகிற அளவில் அநந்ய சரணத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக கர்ம ஞான பக்திகளாகிற உபயாந்தரங்களை விட்டு சரமமான சித்தோ உபாயத்தைப் பற்றினாப் போலே –
உபேய பிரார்த்தனை பண்ணுகிற அளவிலும் அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு சரமமான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது -என்கை –

——————————————————

நினைவறியும் ஈஸ்வரன் பக்கல் பிரார்த்தனை மிகை என்று இருப்பார் பண்ணும்
பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-

இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ -என்னில்–சூரணை -163-

இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில் -என்று
தனியாக ஏதும் இல்லை-

——————————————-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் –சூரணை -164–

அதாவது
ருக்ணதை ஆகையாலே சோற்றில் ஆசை அற்று கிடந்த பிரஜை ரோகம் தீர்ந்து –
பசி விளைந்து -சோறு-என்று அபேஷிக்கும் பாசுரம் கேட்டால் பெற்ற தாய் உகக்குமாப் போல் –
அநாதி காலம் ப்ராப்யாந்தர ப்ராவண்யம் ஆகிற நோய் கொண்டு இந்த ப்ராப்யத்தில்
நசை அற்றுக் கிடந்தவன் -இதிலே ருசி பிறந்து -தன் பக்கலிலே வந்து -இத்தை
அபேஷிக்கிற பாசுரம் கேட்டவாறே -சேஷியான அவன் திரு உள்ளம் உகக்கும் –
அதுக்காக அர்த்திக்கிறான் இத்தனை -என்கை-

———————————————-

இனி இவ் வாக்யத்துக்கு பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம்
பற்றி பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –
அதுக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –

ஸ்ரீ மதே-பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ளவனுக்கு –சூரணை -165-

பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்து உள்ளவனுக்கு என்று இங்கும் ஸ்ரீ சப்தத்துக்கு
பூர்வ வாக்யத்தில் சொன்ன வ்யுத்புத்தி த்வ்யமும் -அதில் அர்த்தமும் -மதுப்பர்த்தமான
நித்ய யோகமும் அனுசந்தேயம் –

———————————————————-

இரண்டு இடத்திலும் நித்ய யோகம் ஒத்து இருக்கச் செய்தே அவ்வவதச அநு குணமாக
இவள் இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் – 

அவன் உபாயமாம் இடத்தில் தான் புருஷ காரமாய் இருக்கும் –
அவன் ப்ராப்யனாம் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் -கைங்கர்ய வர்த்தகையுமாய் -இருக்கும் –சூரணை -166-

அதாவது
அவன் சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட ப்ராப்திகளுக்கு உபாயமாம் இடத்தில்
சஹாயாந்தர சம்சர்க்கத்தை சஹியாமையால்-தானுபாய பாவத்தில் அன்வயம் இன்றிக்கே 
சாபராத சேதனருடைய அபராதங்களைப் பார்த்து அவன் சீரும் அளவில் -அத்தை சஹித்து
அங்கீகரிக்கும் படியாக பண்ணும் புருஷாகாரமாய் இருக்கும் –

அவன் சேதனருக்கு கைங்கர்ய பிரதி சம்பந்திதயா ப்ராப்யனாம் இடத்தில்
அவனோபாதி கைங்கர்ய பிரதி சம்பந்தயாய்க் கொண்டு தான் ப்ராப்யையுமாய் –
இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை அவன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி
உகப்பிக்கையாலே கைங்கர்ய வர்தகையுமாய் இருக்கும் -என்கை-

இது தன்னை பரந்தபடியில் -பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தம் சேதனருடைய அபராதத்தையும் –ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் கண்டு -இவர்கள் அவனுடைய குரோதத்துக்கு விஷய பூதராய் நசித்துப் போகாதே -இவனைக் கிட்டி உஜ்ஜீவித்துப் போக வேணும் -என்று சாபராதமான சேதனரை ஈஸ்வரனோடு சேர்க்கைக்கான என்றுமொக்க விடாதே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

இங்குத்தை ஸ்ரீ மச்  சப்தம் -கைங்கர்ய பிரதி சம்பந்த்வத்தை  பற்றவும் -இவர்கள் பண்ணும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாக படுத்துகைக்காகவும் -அனுபவ விச்சேதத்தில் தனக்கு சத்தா ஹானி பிறக்கும் படி இருக்கையாலே -நிரந்தர சம்ஸ்லேஷதுக்காகவும் -அவனை ஷண காலமும் பிரியாதே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டயாய்  இருக்கும் -இருப்பைச் சொல்கிறது -என்று விஸ்தரேண அருளிச் செய்தார் 

———————————————————

திரு மந்த்ரத்தில் உத்தர பதத்துக்கு இவ்  உத்தர வாக்கியம் விவரணமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

இதிலே திரு மந்த்ரத்திலே சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –சூரணை-167-

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடத்தை சாப்தமாக பிரதிபாதிக்கிற
இந்த வாக்யத்திலே -நாராயணா -என்று கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடம் ஆர்த்தம்  ஆகையாலே -அவிசதமாக சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது -என்கை-

அங்கு -நாராயணனுக்கே அடிமை செய்ய பெறுவேனாக வேணும் -என்கிற இவ்வளவு ஒழிய அடிமை கொள்ளுமவன் ஸ்ரீ மானாகாக வேணும் -என்றும்
அடிமை செய்பவன் நிர்மமனாக வேணும் -என்றும் சொல்லாமையாலும் -அவை இரண்டும்
இங்குச் சொல்லுகையாலும் இறே அந்த பதத்துக்கு இவ் வாக்கியம் விவரணம் ஆயிற்று –

————————————————-

இம் மிதுனத்திலே  அடிமை செய்ய வேணும் என்ற நிர்பந்தம் தான் ஏன் –என்ன
அருளிச் செய்கிறார்

இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்கை முறை –சூரணை -168-

அதாவது
பவாம்ஸ் து சஹா வைதேஹ்யா கிரி ஸாநிஷூ ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் தே -என்று
பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே –
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை இவ் வாத்மாவுக்கு ஸ்வரூப ப்ராப்தம்-என்கை
மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால் மிதுன கைங்கர்யம் இறே ஸ்வரூப ப்ராப்தம் –

———————————————————–

இன்னும் அச் சேர்த்தியிலே அடிமை செய்யும் அளவில் உள்ள வாசியை அருளிச் செய்கிறார் 

அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் இச் சேர்த்தியிலே –சூரணை -169-

அதாவது –
ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் உபேஷியாமல் கைங்கர்யம் கொண்டு அருளும் படி
பண்ணுமவள் இவள் ஆகையாலே –
சீதாமுவாச சீதாசமஷம் காகுத்ஸ்தமிதம் வசனம் அப்ரவீத் -என்று
இவள் முன்னிலையாக தம்முடைய ஸ்வரூப அநு ரூபமான அடிமையை
அபேஷித்துப் பெற்ற இளைய பெருமாளைப் போலே -இவன் ப்ரார்த்திக்கிற அடிமை தான்
சித்திப்பதும் -மாதா பிதாக்கள் இருவருமான சேர்த்தியிலே ஸூஸ்ருஷை பண்ணும்
புத்ரனுக்குப்  போலே -செய்கிற அடிமை ரசிப்பதும் -பிராட்டியும் அவனும் ஆன சேர்த்தியிலே என்கை –

————————————————-

இனி இரண்டாம் பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நாராயணாய -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்

நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு –சூரணை-170-

நாரயணத்வம்-உபய விபூதி நாதத்வம் ஆகையாலே -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு -என்கிறார் –கைங்கர்ய ப்ரதி சம்பந்தியாவான் சேஷி இறே –

————————————————

கைங்கர்யம் தான் அனுபவ ஜனித ப்ரீதி கார்யம் ஆகையாலும் -அந்த ப்ரீதி தான்
அனுபாவ்ய விஷய அதீனை ஆகையாலும் -அனுபாவ்ய விஷயம் சொல்ல வேண்டுகையாலே அருளிச் செய்கிறார் –

இதில் திரு மேனியையும் குணங்களையும் சொல்லும்–சூரணை -171-

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற இப் பதத்தில் கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாய் இருக்கும் அனுபவத்துக்கு விஷயமான திவ்ய மங்கள விக்ரகத்தையும் -கல்யாண குணங்களையும் -சொல்லும் -என்கை –
சதா பஸ்யந்தி-என்றும் –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
திவ்ய மங்கள விக்கிரகமும் கல்யாண குணங்களும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்கிற ஸ்வரூபதோ  பாதி –
கைங்கர்ய வர்தகங்களுமாய்-போக்யங்களுமாய் இறே இருப்பது –

குணங்கள் என்று சாமான்யேன சொல்லுகையாலே -ஞான சக்த்யாதிகளோடு –
வாத்சல்யாதி குணங்களோடு -ஸௌர்யாதி  குணங்களோடு -வாசி அற எல்லா குணங்களும் –அனுபாவ்யங்களாய் இருக்கையாலே -பூர்வ வாக்யத்தில் -நாராயண  பதத்தில் -உபாய வர்ணத்துக்கு உபயுக்த்தயா அநு சந்தேயங்களான குண விசேஷங்களும் -இப் பதத்தில் ப்ராப்யதயா அநு சந்தேயங்கள் –

ஆஸ்ர்யமான ஸ்வரூபத்துக்கு ஆகார த்வயம் உண்டாய் இருக்கிறார் போலே -ஆஸ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகார த்வ்யமும் உண்டாய் இறே இருப்பது –
இவை எல்லாம் பரந்தபடியில் அருளிச் செய்தார்

—————————————————–

இனி இப் பதத்துக்கு தாத்பர்யம் இன்னதிலே என்கிறார் –

சேஷித்வத்திலே நோக்கு –சூரணை -172-

அதாவது –
அநுபாவ்யத்வம் அவிசிஷ்டம் ஆகையாலே சகல குணங்களும் பிரதிபாதிதமாய் இருந்ததே ஆகிலும் சதுர்த்தி அம்சத்தில் சொல்லுகிற வ்ருத்தி விசேஷத்துக்கு மிகவும் அந்தரங்கமாய் இருப்பது சேஷித்வம் ஆகையாலே அது இப்  பதத்துக்கு நோக்கு -என்கை-

—————————————————–

இந்த சேஷித்வ கதனத்துக்கு  பிரயோஜனம் அருளிச் செய்கிறார் –

ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் இறே ரசித்து இருப்பது –சூரணை -173-

அதாவது
சர்வம் பரவசம் துக்கம்-என்றும் –
சேவா ஸ்வ வ்ருத்தி -என்றும்-சொல்லுகிற படி
நிஷித்தமான அப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் போல் அன்றிக்கே –
சாயா வா சத்வ மநு கச்சேத்-என்றும்
சா கிமர்த்தம் ந சேவ்யதே-என்றும் சொல்லுகிற படியே
விஹிதமான ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் இறே இவன் ரசிப்பது -என்கை –

——————————————–

இனி இப் பதத்தில் விபக்தி அம்சத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

இந்த சதுர்த்தி கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –சூரணை -174-

அதாவது –
சேஷத்வ ஞான கார்யமான உபாய பரிக்ரஹதுக்கு அநந்தரம் ப்ராப்தமாய் உள்ளதாகையாலே – தாதர்யா பிரதி பாதகம் அன்றிக்கே -இந்த சதுர்த்தி பரிக்கிரஹித்த உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தைப் பிரதி பாதிக்கிறது -என்கை –

கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கை ஆவது -கைங்கர்ய பிரார்த்தனையைப் பிரதி பாதிக்கை கைங்கர்யம் ஆவது -பகவன் முக விகாச ஹேதுவான வ்ருத்தி விசேஷம் –
இக் கைங்கர்யம் தான் -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்றும்
நம இத்யேவ வாதின -என்றும் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிற படியே -வாசிக காயிக ரூபமாய் இருக்கும்-

(ஏதத் சாம காயன் நாஸ்தே–தொடங்கி அஹம் விஸ்வம் புவநம் அபய பவாம் என்னும் அளவும்
இந்த ஸாம கானத்தைப் பாடிக்கொண்டே இருக்கும்
ஹாவு ஹாவு ஹாவு என்று ஆச்சர்யப்படும்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று போக்யதையைப் பலகாலும் சொல்லா நிற்கும்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று தனது அப்ரதான போகத்தருவத்தையும் பலகாலும் சொல்லா நிற்கும்
நான் ஸூஹ்ருதத்துக்கு முற்பாடானாக நின்றேன் என்றும்
நித்ய ஸூரிகளுக்கு முன்னே நடுவாக நின்றேன் என்னும்
நான் எல்லா புவனத்தையும் அமுக்கி மேலானேன் என்றும் இப்படிகளால் ஆச்சர்யப்பட்டு ஸ்தோத்ரம் பண்ணினபடி சொல்கிறது)

(யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி–ஸர்வேச்வரன் யாதொரு நினைவாலே நடக்கிறான்-அந்த நினைவோடு கூட நடவா நிற்பன்)

——————————————-

இக் கைங்கர்யம் பிரார்தன ஆதீனம் ஆகையாலே -காதாசித்தம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

கைங்கர்யம் தான் நித்யம் –சூரணை -175-

அதாவது
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலும் –
அகிஞ்சித்கரஷ்ய சேஷத்வ அநு பாபத்தி -என்கிறபடி கிஞ்சித்காரபாவத்தில் அது தான்
அநு பபன்னம் ஆகையாலும் கைங்கர்யம் ஆத்மாவுக்கு நித்யம் -என்கை
ஆகையால் இறே -நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷ இஷ்யாமி -என்றும்
நித்ய கிங்கரோ பவானி -என்றும்
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது-

————————————————

நித்தியமாய் இருக்குமாகில் பிரார்த்திக்க வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –

நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் –சூரணை -176-

அதாவது –
விஷயம் உத்துங்கமாய் இருக்கையாலும் -ஆஸ்ரய பூதனான சேதனன் அத்யந்த
பரதந்த்ரனாய் இருக்கை யாலும் -பிரார்த்தனா விசேஷம் இல்லாத போது கைங்கர்யம்
சித்தியாமையாலும் -நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் -என்கை-

———————————————

இது நித்ய பிரார்த்தனை அநீயமாக்கைக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு
ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும் –சூரணை -177-

அதாவது
ந கிஞ்சித் குர்வதச் சேஷத்வம் -என்கிறபடியே
சேஷிக்கு அதிசயகரம் இல்லாத வஸ்துக்கு சேஷத்வம் இல்லாமையாலே –
சேஷியான ஈஸ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விசேஷங்களாலே
ப்ரீதி ரூபமான அதிசயத்தை விளைக்க சேஷ பூதனானவனுக்கு தன் ஸ்வரூப லாபமாய்
அவனுடைய முகோல்லாசானுபவதுக்கு உறுப்பாய் இருக்கையாலே ப்ராப்யமுமாயுமாய் இருக்கும் -என்கை
ஆகையால்-நித்ய ப்ராதனநீயமாய் இருக்கும் என்று கருத்து–

—————————————————————

நம-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –சூரணை-178-

அநந்தரம் சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நம -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
நமஸ்-சப்தம் சாமான்யேன அஹங்கார மமகாரங்களை  கழிக்கையாலே-
திரு மந்த்ரத்தில் மத்யம பதமான -நமஸ் சப்தம் போலே -ஸ்வரூப உபாய புருஷார்த்த –
விரோதிகள் மூன்றையும் கழிக்க வற்றாய் இருந்ததே ஆகிலும் -இங்கு -அங்கன் இன்றிக்கே கைங்கர்ய பிரார்தன அனந்தரோக்தம் ஆகையாலே -இந்த கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது -என்கை-

————————————————

கைங்கர்யத்துக்கு களை எது -என்ன -அருளிச் செய்கிறார் –

களை யாவது தனக்கு என்னப் பண்ணும் அது –சூரணை -179-

தனக்கு என்னப் பண்ணுகையாவது-போக்தாஹம்  மம போகோயம்-என்கிறபடியே
இத்தை தன்னுடைய ரசத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை –
பகவன் முக விகாச ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி
ஒழிய -இதில் போக்த்ருத்வ பிரதி பத்தியும் -மதீயத்வ பிரதி பத்தியும் -நடக்குமாகில் –
அபுருஷார்தமாய் இறே இருப்பது –

—————————————————–

இன்னம் இந்த கைங்கர்ய ப்ராப்திக்கு விரோதிகள் ஆனைவையும் இதிலே தள்ளுண்ணும் என்கிறார் –

இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் –சூரணை -180-

அதாவது
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந் நமஸ்சிலே-
அநாத் மன்யாத்ம புத்திர் யா அஸ்வே ஸ்வ மிதி யா மிதி
அவித்யா தரு சம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம் -என்கின்றபடியே

அநாத்மன்யாத்மா புத்யாதிகளை -வடிவாக உடைத்தாய் -கர்மோத்புத்தி காரணமாய் இருந்துள்ளஅவித்யையும் -தத் கார்யமான கர்மங்களும் –
தத் கார்யமாக வரும் பிரகிருதி சம்பந்தமும் -எல்லாம் கழி உண்ணும் -என்கை –

ஆகை இறே -த்வய விவரணமான கத்யத்தில் நமஸ் சப்தார்த்தை அநு சந்தித்து அருளுகிற அளவிலே –
மநோ வாக் காயை  -இத்யாதி சூர்ணையாலே-அக்ருத்ய கர்ணாத்யகில கர்ம நிவ்ருத்தியையும்  –
அநாதி கால ப்ரவ்ருத்த -இத்யாதி சூர்ணையாலே -அவித்யா நிவ்ருத்யையும் –
மதீயாநாதி இத்யாதி சூர்ணையாலே -பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியையும் –
பாஷ்யகாரர் பிரசாதித்து அருளிற்று –

(மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥)

(அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥)

(மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய ।)

———————————————————

ஆனாலும் இதுக்கு பிரதான அர்த்தம் கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி ஆகையாலே –
அத்தை உபபாதிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் கைங்கர்யம் பண்ணும் போது நாம் எப்படியாக வேணும் என்ன -அருளிச் செய்கிறார் –

உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்னும்படியே ஆக வேணும் –சூரணை -181-

அதாவது –
கைங்கர்யம் பண்ணும் அளவில் -உனக்கே நாம் ஆள் செய்வோம் –திருப்பாவை -29-என்று
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கும் இருப்பைத் தவிர்ந்து –
உனக்கே உகப்பாக நாங்கள் அடிமை செய்ய வேணும் -என்கிறபடியே –
சேஷிக்கே உகப்பாக பண்ண வேணும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திரு வாய் மொழி –2-9-4-என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது –

(சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்–29-)

(மனக்கே ஆட்செய்எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்துஇடை வீடுஇன்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.–2-9-4)

—————————————————

இனி இந்த கைங்கர்யத்துக்கு விக்னங்களை அருளிச் செய்கிறார் –

சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே –சூரணை -182-

அதாவது –
அவனுடைய விக்ரஹ சௌந்தர்யமும் சித்த அபஹாரியாய் கை சோரப்
பண்ணுகையாலே -கைங்கர்யத்துக்கு விக்னம் –

இந் நமஸுக்கு கீழே சதுர்த்தியில் சொன்ன கைங்கர்யமும் -அபிமத விஷய
பரிசர்யை போலே ஸ்வ ரசத்துக்கு உடலாய் இருக்கையாலே அவனுடைய முக மலர்த்தியே
பிரயோஜனம் ஆக இருக்கும் அதுக்கு அதுவும் விக்னம் -என்கை-

——————————————————

இப்படி ஆகையால் இவ் விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனை இடை விடாமல்
நடக்கும்படியே அருளிச் செய்கிறார் –

கைங்கர்ய பிரார்த்தனை போலே -இப் பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு –சூரணை -183-

அதாவது –
சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனை காதா சித்தம் அன்றிக்கே –
நித்தியமாய் செல்லுமா போலே -இப் பதத்தில் சொல்லுகிற கைங்கர்ய விரோதி
நிவ்ருத்த பிரார்த்தனையும் -இங்கு இருக்கும் காலத்தோடு -ப்ராப்ய பூமியில்
போன காலத்தோடு வாசியற எல்லா காலமும் நடக்கக் கடவதாய் இருக்கும் -என்கை .

——————————————————–

கந்தல் கழிந்த அந் நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்வ உதயம் உண்டாமோ என்ன -அருளிச் செய்கிறார் –

மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு-திரு வாய் மொழி -9-3-4–என்னா நின்றது இறே –சூரணை -184-

அதாவது –
உன்னுடைய அனுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு ஸ்வ போக்த்ருத்வ புத்தியை விளைத்து -ஸ்வரூபத்தை அழியாதபடி சாத்மிப்பிக்கும் பேஷஜம் ஆனவனே -என்று நித்ய ஸூரிகள் பேசும் பாசுரமாக சொல்லா நின்றது இறே -என்கை –

(மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-)

ஆகையால் -அவ் விஷய வைலஷண்ய பிரயுக்தமாய் வரும் ஸ்வ போக்த்ருத்வ புத்தி
அங்கும் விளைகையாலே -இப் பதத்தில் பிரார்த்தனை என்றும் உண்டு என்னும் இடம்
சித்தம் என்றது ஆயிற்று –
ஆகை இறே முக்தருக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில் -நம இத்யேவ வாதின -என்றது –

ஆக –
புருஷகாரதையும்
தந் நித்ய யோகத்தையும்
தத் உத்பாவிதமான வாத்சல்யாதி குணங்களையும்
அந்த குண பிரகாசமான திவ்ய மங்கள விக்ரகத்தையும்
குண விக்ரக விசிஷ்ட வஸ்துவினுடைய உபாயத்வத்தையும்
அவ் உபாய ஸ்வீகாரத்தையும்
தத் பலமான கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் அத்தையும்
அவ் வஸ்துவினுடைய சர்வ சேஷித்வத்தையும்
தத் விஷய கைங்கர்யத்தையும்
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும்
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –144–159–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

சரணவ்-திரு அடிகளை –சூரணை -144–

இனி -சரணவ்-என்கிற பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
தனியாக இல்லை

————————————————-

இத்தால் சேர்த்தி அழகையும் -உபாய பூர்த்தியையும் -சொல்லுகிறது –சூரணை -145

இந்த த்வி வசனத்தால் சொல்லுகிற அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சரணவ்–என்று இரண்டு திரு அடிகளையும் சொல்லுகிற இத்தால்-
இணைத் தாமரை அடி-பெரிய திரு மொழி –1-8-3-என்கிற படி இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகையும் -த்வி வசனம் -இரண்டுக்கு மேல் மற்று ஓன்று புகுர
சஹியாமையாலே சஹாயாந்தர நிரபேஷமான உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது -என்கை –

(நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-)

————————————————-

பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது -திண் கழலாய் இருக்கும் –சூரணை -146

இனி உபாயத்வ ஏகாந்தமான இதன் குணாதிக்யத்தை அருளிச் செய்கிறது –

அதாவது
ஸ்ரீ மத் பதத்திலே புருஷகார பூதையாக  சொன்ன பிராட்டியும் அவள் தானே சிதகுரைக்கிலும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-என்னும் படி
நாராயண -பதத்தில் சொன்ன -குண விசிஷ்டனான அவனும்
கைவிடிலும் -திரு அடிகள் தன் வை லஷண்யத்தாலே-துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது-

வண் புகழ் நாரணன் திண் கழல் -திரு வாய் மொழி -1-2-10-என்கிறபடியே
பற்றினாரை நழுவ விடாதே திண்மையை  உடைத்தாய்  இருக்கும் -என்கை-

(சிதகுரைக்கிலும்–சிதகு–குற்றம் உரைக்கிலும்)

(தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

(எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே)

—————————————————

சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை –சூரணை -147

பிரஜை முலையிலே  வாய் வைக்குமா போலே –
இந்த குணாதிக்யத்தை பற்றவும் அன்றிக்கே -இவன் தன் ஸ்வரூப அநு குணமும் திரு அடிகளிலே
இழிகை என்னும் அத்தை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
சேஷி பக்கல் ஆஸ்ரயிக்க இழியும் சேஷ பூதன்
தன் ஸ்வரூப அநு குணமாக இழியும் துறை திரு அடிகள்-
ஸ்தந்த்ய பிரஜை தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க
தனக்கு வகுத்ததாய் உள்ள முலையிலே வாய் வைக்குமா போலே –

——————————————————–

இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் –
குண பிரகாசமுமாய் –
சிசுபாலனையும் -அகப்பட திருத்தி சேர்த்து கொள்ளும்
திரு மேனியை நினைக்கிறது –சூரணை -148-

திரு அடிகளை சொன்ன இது -திரு மேனிக்கு உப லஷணம் என்கிறார் மேல் –

அதாவது
சரணவ் -என்று விக்ரக ஏகதேசமான திரு அடிகளைச் சொன்ன இத்தால் –
திரு இருந்த மார்வன்–மூன்றாம் திரு அந்தாதி –57-என்னும்படி ஸ்ரீ மத் -பதத்தில் சொன்ன
புருஷ கார பூதையான பிராட்டிக்கு இருப்பிடமாய் –
நாராயண பதத்தில் சொன்ன குணங்களுக்கு பிரகாசமாய் –என்கிறபடியே
பிரத்வேஷ பரனாய் நிந்தோக்திகளை பண்ணித் திரிந்த சிசுபாலனையும் -உள் பட –
அலவலைமை தவிர்த்த அழகன்-பெரிய ஆழ்வார் திரு மொழி-4-3-5-என்கிறபடி தன் அழகாலே
த்வேஷாதிகள் போம்படி திருத்தி -திரு அடி தாள் பால் அடைந்த -திரு வாய் மொழி -7-5-3-என்கிறபடி
சேர்த்து கொள்ளும் ஸ்வபாவத்தை உடைத்தான திவ்ய மங்கள  விக்ரகத்தை நினைக்கிறது -என்கை –

(திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியாராலே வஸிக்கப் பெற்ற திரு மார்பு யுடையவன் -லஷ்மீ க்ருஹ -லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ -இத்யாதி)

(நாழம்-தோஷம்
அலவலைமை=பஹு ஜல்பம்)

(பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-)

(பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 -5-)

(கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-)

————————————————————

சரணம்-இஷ்ட ப்ராப்திக்கு
அநிஷ்ட நிவாரணத்துக்கு
தப்பாத உபாயமாக –சூரணை -149-

அநந்தரம்-சரணம்-பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
உபாயே க்ருக ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷா உபாயார்தைக வாசக -என்கிறபடியே –
சரண -சப்தம் ரஷிதாவுக்கும் க்ருஹத்துக்கும் உபாயத்துக்கும் -வாசகமே ஆகிலும் –
இவ் இடத்தில் உபாயத்துக்கே வாசகம் ஆகையாலும் –
உபாய க்ருத்யம்-இஷ்டாநிஷ்ட ப்ராப்த பரிஹார கரணம் ஆகையாலும் –
இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக -என்று –
இப் பதத்துக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –

இஷ்ட அநிஷ்டங்கள் தாம்  இன்னவை என்னுமத்தை பரந்த படியிலே விஸ்தரேண அருளி செய்தார் –

(அநிஷ்டமாவது–நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து -என்றும் –அநாத்மன் யாத்மா புத்திரா -என்றும் சொல்லுகிறபடியே அனாத்மன்யாத்ம புத்தி ரூபமாயும் –
அஸ்வே ஸ்வ பிரதிபத்தி ரூபமாயும் இருக்கிற அவித்யையும்
அவித்யா கார்யமான ராகத்வேஷங்களும் -கரண த்ரயத்தாலும் கூடு பூரித்து வைக்கும் தத் கார்யங்களான புண்ய பாப ரூப கர்மங்களும்
கர்மத்வயத்தினுடைய பல போகார்த்தமாகப் பரிக்ரஹிக்கும் தேவ திர்யகாதி யான நாநா வித சரீரங்களும்
அச் சரீரங்களைப் பரிக்ரஹித்து அனுபவிக்கும் ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் தொடக்கமானவை –

இஷ்டமாகிறது -புண்ய பாப கர்ம விதூந நப்ரகாரமும் -ஹாரத்த மார்க்க விசேஷ பிரகாரமும் –ஹ்ருதய குஹா நிர்க்க மனனும்-
அர்ச்சிர்வாசரோத்தராயண ஸூ கள பஷாத்யாதி வாஹிக சத்காரமும் -சலில தகன பவ நாத்யாவரண சப்தகாதி லங்கநமும் -த்ரிகுணாதிரமணமும்-
விரஜாக்யாப்ரக்ருத நதீ விசேஷா வகாஹா நமும் -ஸூ ஷ்ம சரீர விமோசனமும் -அமானவா கர ஸ்பர்சமும் –
அபஹத பாப்மத்வாதி குணகண ததாஸ்ரைய ஸ்வரூப பிரகாசமும் -பஞ்சோப நிஷன்மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரஹமும் -ஜரமதீய திவ்ய சர பிராப்தியும் –
திவ்ய அப்சரஸ் சங்க சத்காரமும் -ப்ரஹ்ம அலங்கார லங்கரணமும் -ப்ரஹ்ம கந்த ரச தேஜ பிரவேசமும் –
திவ்ய கோபுர பிராப்தியும் -ஸூ ரி சங்க சத்காரமும் -ராஜ மார்க்க கமனமும் -ப்ரஹ்ம வேசம பிரவேசமும் -திவ்ய மண்டப பிராப்தியும்
திவ்ய பர்யங்க நிரீஷணமும் -சபத்நீக சர்வேஸ்வர தர்சனமும் -ஆனந்த மய பரமாத்மா சமீபஸ்திதியும்-பாதபீட பர்யங்கோத் சங்காரோகணமும் –
ஆலோகாலாபா லிங்க நாத்ய நுபவமும் -ஸ்வரூப குண விக்ரஹாத்ய நுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷமும்
நாநாவித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசித சர்வ பிரகார கைங்கர்ய கரணமும் –
இதில் பிரதானமான இஷ்டமாய் இருப்பது கைங்கர்யம் -அதுக்கு உப யுக்தங்கள் ஆகையாலே இஷ்டங்களாய் இருக்கும் மற்றும் உள்ளவை
ஆக
இப்படிக்கொத்த அநிஷ்டத்தை நிவர்ப்பித்து இஷ்ட ப்ராப்தியைப் பண்ணுகை உபாயமாகை யாகிறது –)

ஸ்ரீ ய பதி படியிலும் –

அநிஷ்டம் ஆகிறது அவித்யையும் –
அவித்ய ஆகாரமான ராக த்வேஷங்களும் –
புண்ய பாப ரூபமான கர்மங்களும் –
தேவாதி சதுர்வித சரீரங்களும் –
ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் –

இஷ்டம் ஆகிறது –
அர்ச்சிராதி மார்க்க கமநமும்-
பரமபத பிராப்தியும் –
பரமாத்ம தர்சனமும் –
குண அனுபவ கைங்கர்யங்களும் -என்று
சங்கரஹேண அருளி செய்தார் –
ஆகையால் இவ் இடத்திலும் அவை வக்தவ்யங்கள் –

——————————————————————

இத்தால் ப்ராப்யம் தானே ப்ராபகம் என்கிறது –சூரணை -150-

கீழே  நிர்தேசித்த வஸ்துவை உபாயமாக சொன்னதன் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
கீழ் சொன்ன விஷயத்தை உபாயமாக சொல்லுகிற இத்தால்
ப்ராப்ய வஸ்து தானே ப்ராபகம் என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

(கீழே  நிர்தேசித்த வஸ்து–ஸ்ரீ யபதியாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டனான -ஸ்ரீ மன் நாராயணன்)

——————————————————–

கீழ் சொன்ன மூன்றும் ப்ராப்யம் இறே–சூரணை -151

கீழ் பிராப்ய பிரசங்கம் உண்டோ -என்ன அருளி செய்கிறார் –

அதாவது
சமஸ்த பதமான பூர்வ பதத்தில் சொன்ன –
லஷ்மீ விசிஷ்டத்வமும் –
கல்யாண குண யோகமும் –
திவ்ய மங்கள விக்ரஹ உபேதத்வமும்-
ஆகிய மூன்றும்
ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே
சர்வான் காமான் அஸ்நுதே
சதா பஸ்யந்தி-என்று இவனுக்கு அனுபவ விஷயமாகச் சொல்லப் படுகிறவை ஆகையாலே
ப்ராப்யம் இறே -என்கை –

——————————————————-

இவன் செயல் அருதியாலே உபாயம் ஆக்குகிறான் இத்தனை-சூரணை -152-

ஆனால் இத்தை உபாயம் ஆக்குகிறது தான் என் -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
அகிஞ்சனனாய் -அநந்ய கதியாய் இருக்கிற இவன்-தன் செயல் மாட்சியாலே
போக்யமான பாலை மருந்து ஆக்குவாரைப் போலே
ப்ராப்யமானது தன்னை ப்ராபகம் ஆக்குகிறான் இத்தனை -என்கை-

———————————————————-

சரணவ் சரணம் -என்கையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தமான உபாயம் -என்கிறது –சூரணை -153-

இது தன்னாலே இவ் உபாயத்துக்கு ஓர் அதிசயம் சொல்லுகிறது -என்கிறார்

அதாவது
சரணவ் சரணம் –என்று ப்ராப்ய வஸ்து தன்னையே ப்ராபகமாகச் சொல்லுகையாலே –
ப்ராப்யம் வேறும் தான் வேறுமாய் இருக்கும்  உபாயாந்தரங்கள் காட்டிலும் -வ்யாவ்ருத்தமான
உபாயம் இது என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

—————————————————-

ப்ரபத்யே -பற்றுகிறேன் –சூரணை -154-

அநந்தரம்-க்ரியா பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
இப் பதம் -பத கதவ்-என்கிற தாது சித்தம் ஆகையாலே –
கதி வாசி யாகையாலும் -உத்தமன் -ஆகையாலும் -பற்றுகிறேன் -என்று
இதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

(உத்தமன் -ஆகையாலும்–உத்தம புருஷ தாது வாகையாலும்)

—————————————————–

வாசிகமாகவும் -காயிகமாகவும் -பற்றினாலும் பேற்றுக்கு அழிவு இல்லை -இழவு இல்லை –சூரணை-155-

ஞானான் மோஷம் -ஆகையாலே மானசமாக கடவது –
இது தான் மானசக வாசக காயிக ரூபையான த்ரிவித கதியையும் காட்டவற்று ஆகையாலே –
அதில் எந்த கரணத்தால் உண்டான பற்றுதலை சொல்லுகிறார் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது -பவ சரணம் -இத்யாதி படியே-ரஷிக்க வேணும் -என்று பிராதிக்கை ஆகிற கேவல வாசிகமாகவும் –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ -என்கிறபடியே -பகவத் பிரசாத ஹேது பூதமான
அஞ்சலியை பிரயோகித்தல் –நிஷாத காகாதிகளை போலே ரஷக வஸ்து இருந்த இடத்தே வருதல் செய்கை யாகிற –
கேவல காயிகமாகவும் பற்றினாலும் -பல சித்திக்கு அழிவு இல்லை –
ஞானான் மோஷ-என்கிறபடியே ஞானத்தால் மோஷம் -என்கையாலே -மானசமான பற்றுதல் ஆக கடவது -என்கை-

அதாவது -ஒரு புத்தி விசேஷம் –
இந்த புத்தி விசேஷம் தன்னை பரந்த படியிலே விஸ்தரேண அருளிச் செய்தார் –

ஸ்ரீ யபதி படியிலும் –
இந்த புத்தி விசேஷம் ஆகிறது -அனந்யார்ஹ சேஷத்வ -ஞான கார்யமாய் –
இதர உபாய வ்யாவ்ருத்தமாய் -பகவத் ரஷகத்வ அநுமதி ரூபமாய் -சக்ருத அனுஷ்டேயமாய்-
வ்யபிசார விளம்ப விதுரமாய் -சர்வாதிகாரமாய் -நியம ஸூன்யமாய் -அந்திம ஸ்ம்ருதி நிர பேஷமாய்-
ஸூசுகமாய் -யஜ்ஞா கர்ப்பமாய் -திருட அத்யவச்ய ரூபமாய்-இருப்பதொரு ஞான விசேஷம் -என்று
அருளிச் செய்தார் –

ஆகையால் இவ் இடத்தே அதுவும் அனுசந்தேயம் –

————————————————————

உபாயம் அவன் ஆகையாலும் -இவை நேரே உபாயம் அல்லாமையாலும் –
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –சூரணை -156-

இப்படி மானச மாத்ரமே அமையுமோ-சிந்தையாலும் -திரு வாய் மொழி -இத்யாதி படியே
த்ரிவித கரணத்தாலும் ஸ்வீகரிக்க வேண்டாவோ -என்ன அருளி செய்கிறார் –

அதாவது
பல சித்திக்கு உபாயம் -பற்றப் படும் ஈஸ்வரன் ஆகையாலும் –
கரண த்ரயத்தாலும் உண்டான பற்றுதல்கள் ஆன இவை ஆபாத ப்ரதீதியிலே உபாயம் போல்
தோற்றக் கழி உண்டு போம் அது ஒழிய சாஷாத் உபாயம் அல்லாமையாலும் –
பல சித்திக்கு அத்யாவசயாத்மகமான ஸ்வீகாரம் ஒன்றே அமையும் –
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை -என்கை-

(சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே)

அதவா-
இப்படி ஓர் ஒன்றில் ஒதுக்கிச் சொல்லுகிறது என் -த்ரிவித கரணத்தாலும்  பற்றுதலை சொன்னாலோ என்ன –
உபாயம்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-அப்போதைக்கு ஓர் ஒன்றே அமையும் -இம் மூன்றும்
வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை -என்கை-

நிர்பந்தம் இல்லை என்கையாலே இந்த ஸ்வீகாரம் த்ரிவித கரணத்தாலும் உண்டானாலும்
குறை இல்லை என்னும் இடம் தோற்றுகிற -இப் பிரபதனம் கரண த்ரயத்தாலும் உண்டாகவுமாம்-
ஏக கரணத்தாலே உண்டாகவுமாம் -பல சித்திக்கு குறை இல்லை –

அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயமும் வேணும் –
பல சித்திக்கு ஏக கரணமே அமையும் -உபாய பூர்த்திக்கு ஸ்ரீ யபதித்வமும் -வாத்சல்யாதி குண யோகமும் –
திவ்ய மங்கள விக்கிரகமும் -கரண த்ரயமும் -அபேஷிதமாய் இருக்கும் -என்று இறே பரந்த படியில் இவர்
தாம் அருளிச் செய்தார் –

(பரந்த படியில் இவர் தாம் –பிராட்டியுடைய புருஷகார பாவமும் -ஈஸ்வரனுடைய உபாய பாவமும் கார்யகரமாம் போது இவனுடைய பிரதிபத்தி வேணும் இறே –
இந்த பிரதிபத்தி ராஹித்யத்தாலே இறே நித்யங்களாய் இருக்கிற இவை இது பூர்வம் அகிஞ்சித் கரங்கள் யாய்த்து –
ஆகையாலே அவை இரண்டையும் கார்யகரமாம் படி பண்ணக் கடவதான இவனுடைய பிரதிபத்தி விசேஷத்தைச் சொல்லுகிறது –
பத்லு கதௌ-என்கிற தாதுவுக்கு அர்த்தம் -கதி -இவ்விடத்தில் கதியாக நினைக்கிறது –கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிற புத்தி விசேஷத்தை
இந்த புத்தி விசேஷம் ஆகிறது -அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநாத்யநந்தர பாவியாய் -சாத்திய சாதனா வ்யாவ்ருத்தமாய் –
சேவா நாம் குஹ்யமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் சக்ருதநுஷ்டேயமாய்-அவிளம்ப பல பிரதமாய் -சர்வாதிகாரமாய் -ஸ்வரூப அனுரூபமாய்
நியம விதுரமாய் -அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-ஸூ சகமாய் -யாச்ஞா கர்ப்பமாய் –த்ருடாத்யவ சாயமுமாய் இருப்பதொரு ஜ்ஞான விசேஷம் –
இந்த ஜ்ஞான விசேஷத்தில் பிரயோஜனாம்சம் இருப்பது ஒரு விசுவாசம் -கிரயோ வர்ஷதாராபி -என்கிறபடியே
திரைமேல் திரையாகப் பொறுக்க ஒண்ணாத படி வந்து மேலிடுகிற வியசன பரம்பரைகளாலும் யுக்த்யாபாச வசநாபாசங்களாலும் –
ஈஸ்வரன் பரீஷை தொடக்க மானவற்றாலும் இவ்வத்யவசாய விசேஷம் அப்ரகர்ப்யமான போது இறே பல சித்தி உள்ளது –

இப்பிரபதனம் கரண த்ரயத்தாலும் உண்டாக வுமாம் -ஏக கரணத்தாலும் உண்டாக வுமாம் பல சித்திக்கு குறை இல்லை –
அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயம் வேணும் -பல சித்திக்கு ஏக கரணமே அமையும்
உபாய பூர்த்திக்கு ஸ்ரீ யபதித்வமும் -வாத்சல்யாதி குண யோகமும் -திவ்ய மங்கள விக்ரஹமும் அபேஷிதமாய் இருக்கிறாப் போலே
அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயமும் அபேஷிதமாய் இருக்கும்
உபாய வரணத்துக்கு ஏகாந்தமான அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானமும் ப்ராப்ய ருசியும் தொடக்கமான குண விசேஷங்கள்
இன்னார்க்குப் பிறக்கக் கடவது என்கிற நியமம் இல்லாமையாலும்
இங்குப் பிறக்கிற பிரதிபத்தி விசேஷம் தனக்கு இதர சாதனங்கள் போலே அக்னி வித்யா சாபேஷதை இல்லாமையாலும்
உபாசனம் போலே த்ரைவர்ணி கர்க்கே அதிகாரமாய் இருக்கை யன்றிக்கே சர்வாதிகாரம் ஆகையாலே ஆச்ரயண விதுரமாய்க் கிடக்கிறது –

பிரபத்யே என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே நாட்கடலைக் கழிமின் என்று இருக்கும் நான் காலம் செல்ல விட அரிதாய் இருக்கையாலும்
சம்சாரத்தின் உடைய தோஷத்தையும் பகவத் விஷயத்தினுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்தால் இப்போதே
சம்சார சம்பந்தம் அற்று பகவத் விஷயத்தை லாபிக்க வேணும் என்னும் படியான த்வாதிரேகம் பிறக்கக் கடவதாகையாலும்
இவ்வுபாய விசேஷம் தான் அனந்யாஸ் சிந்தயந்த -என்கிறபடியே நிரதிசய ப்ரீதி ரூபமான உபாசனத்தளவன்றிக்கே அதிலும் காட்டில்
அத்யர்த்த ப்ரீதி ரூபமாய் இருக்குமாகையாலும் -த்வயமர்த்தா நுசந்தா நேன சஹ -என்கிறபடியே –
யாவச்சரீர பாதம் அனுவர்த்திக்கும் என்னும் இடம் ஸூ சிதமாகிறது –பல சித்திக்கு சக்ருத் கரணம் அமையும் –
கால ஷேபாதிகளுக்கு அசக்ருத் கரணம் அபேஷிதமாய் இருக்கும்
இப்படிக் கொள்ளாத போதே சக்ருதேவ பிரபன்னாய என்கிற பிரமாண்த்தோடு விரோதிக்கும் இறே
ஆக
பூர்வ வாக்யத்தாலே ஸ்வீகாரத்தையும் -ஸ்வீகார பிரகாரத்தையும் -ஸ்வீகார்ய வஸ்து விசேஷத்தையும் பிரதிபாதிக்கிறது —

—————————————————-

வர்த்தமான நிர்த்தேசம் -சத்வம் தலை எடுத்து அஞ்சின போது அனுசந்திக்கைகாக –சூரணை -157-

சக்ரு தேவஹி சாச்த்ராத்த  க்ருதோயம் தார யேன்னரம் சக்ருதேவ பிரபன்னாய -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே பிரபத்தி சக்ருத் கரணீயையாய் இருக்க வர்த்தமானமாகச் சொல்லுகிறது
எதுக்கு என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபோ –
நின் அடி இணை அடைந்தேன் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் –
என்கிறபடி சொல்லாதே -ப்ரபத்யே -என்று வர்த்தமானமாகச் சொல்லுகிறது –

பிரகிருதி யோடே இருக்கிற இவன் ரஜஸ் தமஸ் களாலே கலங்கி -உபாய உபாயங்களில்
ஏதேனும் ஒன்றில் அன்வயித்து -பின்னம் சத்வம் தலை எடுத்து -அனுதாபம் பிறந்து –
பயப்பட்ட காலத்திலேயே -பிராயச் சித்திரியம் -சாத்ர யத்புநஸ் சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
பிரபத்தி ஒழிய அதுக்கு பரிகாரமில்லாமை ஆகையாலும் -அது தான்
சக்ருத்  க்ருதமான பின்பு புன காரணம் -ஆகாமையாலும் -பூர்வ பிரபதனத்தை
அனுசந்திக்கைகாகக் கொழுந்து படக் கிடக்கிறது -என்கை –

(இவ்வாறு ஸ்வ கர்த்ருத்வமாக ஆழ்வாராதிகள் அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
புத்ர ப்ரேஷ்யஸ் ததா ஸிஷ்ய இத்யே வஞ்ச நிவேதயத் –ஸாண்டில்ய ஸ்ம்ருதியில்
ஆச்சார்யர் அனுஷ்டித்த ஸரணாகதியே முக்கியம் என்று சொல்லுகையாலே இதுவே ஸத் ஸம்ப்ரதாயம் என்று அனுஷ்ட்டித்துப் போருகிறார்கள்
அதுவும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று ஆழ்வார் அனுஷ்டித்ததே சிஷ்ய பரம்பரைக்கு எல்லாம் போரும் என்று சில ஆச்சார்யர்கள் நிர்வஹிப்பர்கள்

(ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது  இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி  உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-   அணி பொழில் திருவரங்கத்து அம்மானே  )

(அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-)

காலத்ரயேঽபி கரணத்ரயநிரமிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ப⁴க³வத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேঽர்தி²தா யத்-
க்ஷேம: ஸ ஏவ ஹி யதீந்த்³ர ப⁴வத்ச்²ரிதாநாம் –ஸ்ரீ யதிராஜ விம்சதி ॥ 18॥)

யதீந்த்ரரே முக் காலத்திலும் முக் கரணங்களாலும் பாபங்களை செய்பவனுக்கு பகவானின் ஷமா குணமே தான் தஞ்சமாகும்
அந்த ஷமை குணமும் ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே பிரார்த்திக்க பட்டது –
அதுவே உம்மை ஆச்ரயித்தவர்களுக்கு மோஷம் என்னும் ஷேமம் ஆகும்

கால த்ரேய அபி
பூத காலத்தில் உள்ள பாபம் மாத்திரம் அன்றிக்கே கால த்ரயத்திலும் உண்டான பாபங்களுக்கும் ஆய்த்து
பொறை கொள்ள வேணுமாய்த்து
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ஸ்வ -என்றதைச் சொன்னபடி –

கரண த்ரய
ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்கு பொறை கொள்ளுகை அன்றிக்கே கரணத்ரய
உபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறை கொள்ள வேணும்
இத்தால் மநோ வாக் காயை -என்றத்தைச் சொல்கிறது –

நிர்மிதாதி
இவை தான் சங்கல்பம் மாத்திரம் அன்றிக்கே பத்தும் பத்தாக செய்தவை என்கை

கால த்ரேய அபி –
பூத பவிஷ்யத் வர்த்தமான ரூபேண-மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கால த்ரயத்திலும்
கரண த்ரய –
மநோ வாக் காய ரூபேண மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கரண த்ரயத்தாலே
நிர்மிதாதி பாப க்ரியஸ்ய –
செய்யப்பட மஹா பாதக உபபாதங்களை உடையவனுக்கு

கால த்ரேய அபி –
ஒரு காலம் இல்லா ஒரு காலத்திலே யாகிலும் -சாதன அனுஷ்டானம் இன்றிக்கே எல்லாக் காலத்திலும்
பாபங்களையே யாய்த்து இவன் செய்வது
கரண த்ரய –
அது தான் ஒவ்வொரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் யாய்த்து பாபங்களைச் செய்வது

நிர்மிதாதி
சங்கல்பித்து விடுகை யன்றிக்கே அனுஷ்டான பர்யந்தமாகச் செய்வது –
அன்றிக்கே
ஆரம்பித்து விடுகை யன்றிக்கே முட்ட முடிய வாய்த்துச் செய்வது

பாப க்ரியஸ்ய
என்று அக்ருத்ய கரணத்தையும்
அதி பாப
என்று பகவத் அபராதிகளையும் சொல்லுகிறது –
இத்தால் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபச்சார ரூப
நாநா வித அநந்த அபசாரான்-என்றதைச் சொன்னபடி –

சரணம் பகவத் ஷமைவா
இப்படி இருந்துள்ள பாபத்தை யுடையவனுக்கு ஸ்ரீ எம்பெருமானுடைய அபராத சஹத்வம் ஆகிய
க்ஷமை ஒழிய வேறு புகல் இல்லை –

அதி பாப க்ரியஸ்ய-
பிராயச் சித்த அனுபவ விநாச்யங்களான பாபங்களை செய்கை மாதரம் அன்றிக்கே —
அவற்றால் நசியாத பாபங்களையும் யாய்த்துச் செய்வது

பிராயச் சித்த அனுபவ விநாச்யம் இல்லாத பாபம் உண்டோ என்னில்
கோக் நே சைவ ஸூ ராபே ஸ ஸ்தேய பக்ந வ்ரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி கருதக் நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நு பவேப்ய நாச்யம் -என்றும் சொல்லுகையாலே உண்டு –
அதில் க்ருதக் நதையாவது –
பிராயச்சித்த நாச்யம் யன்றிக்கே அனுபவ ஏக நாச்யமாய் இருக்கும் –

இனி பிராயச் சித்த அனுபவ நாச்யம் அல்லாததாய் –
புண்ய பாபங்களுடைய அனுஷ்டானத்துக்கு காரணமாய் உபாசக பர்யந்த
அனுதாவனமாய் இருப்பதொரு பாபம் உண்டு -அப்பாபத்தையும் யாய்த்து இவன் செய்வது –

கரண த்ரய என்கையாலே
இவன் செய்த குற்றம் எல்லாம் புத்தி பூர்வகம் என்கிறது —
நிர்மித என்கிறது பூத காலத்துக்கு சேருமே யாகிலும் -வர்த்தமான பவிஷ்ய காலங்களுக்கும் உப லஷணமாகக் கடவது –
கருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ச-என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
பூத கால அபராதங்கள் போலே வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் இன்னபடி செய்யக் கடவோம் என்று சங்கல்ப்பித்து
வைத்தவையாய் அவை தான் பாவன பிரகர்ஷத்தாலே அனுஷ்டித்தவை போலே தோற்றுகையாலே-நிர்மித -என்கிறார்

அதுவும் அன்றிக்கே –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹச்ர ஸோ யன்னமயா வ்யதாதி -ஸ்தோத்ர ரத்னம் -23-என்றும்
பூர்வம் யத் சமபூத்ததேவ ஹி புநர் —பவேத் -என்றும் சொல்லுகிறபடியே
வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் பூத காலத்தில் பண்ணின பாபங்களுக்கு சஜாதீயங்கள் யாகையாலே –
நிர்மித -என்கிறார் ஆகவுமாம் –

அங்கன் அன்றிக்கே –
கால த்ரயமாவது -ப்ராதர் -மத்யந்தி ந சாய்ந்த ரூபமான காலமாய் –
அபி -சப்தம் அநுக்த சமுச்சாயகமாய்
காலத் த்ரேயேஅபி என்று பஞ்ச காலத்திலும் என்னவுமாம் –

ப்ராஹ்மே முஹூர்த்தே ஸோத்தாய சிந்தயேத் ஆத்மனோ ஹிதம் -என்றும் –
ப்ராதர்த்யூத பிரசங்கே ந மத்யாஹ்னே ஸ்திரீ பிரசங்கே தாராத் ரௌ சோர பிரசங்கே ந என்றும் –
யத்சாயம் ப்ராதர்மத் யந்தி நம் ச -என்றும்
இத்யேவ மாதிகளாலே பகவத் த்யான ஆராதன குண அனுபவாதிகளுக்கு உபயுக்ததயா சாஸ்த்ர விஹிதமான
ப்ராதர் மத்யந்தி ந சாய்ந்த ரூபமான கால த்ரயத்திலே -என்னுமாம் –

பரேத் யுபச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்தி தோ பிரபுத்ய சரணம் கதவா பரம் குரு பரம்பராம் -என்று தொடங்கி
தத் ப்ரத்யுஷ சிஸ் நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணி கீ க்ரியா யதீந்திர சரணத் வந்தவ ப்ரவணே நைவ சேதஸாம்
அத ரங்க நிதிம் சமயக் அபிகம்ய நிஜம் பரப்பும் ஸ்ரீ நிதானம் சனைச் தஸ்ய சோதயித்வா பதத்த்வயம் ஆராத்ய ஸ்ரீ நிதிம்
பஸ்சாத் அனுயாகம் விதாய ச ததஸ் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரே ஷணே உத்தம் சித கரத் வந்தவம் உபவிஷ்ட முபஹ்வரே
ததஸ் ஸூ பாஸ்ரயே தஸ்மின் நிமக்னம் நிப்ருதம் மன யதீந்திர பிரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் -என்றும்

சாய்ந்த நம் தத க்ருத்வா சம்யகாராதனம் ஹரே -என்றும் இப்படி இறே இவர் விஷயமான தினசரியிலே
ஸ்ரீ அப்பா பஞ்ச கால பராயணத்வத்தை அருளிச் செய்தது –
இத்தால் -அக்ருத்ய கரணம் மாதரம் அன்றிக்கே க்ருத்ய அகர்ண ரூப பாபமும் உண்டு என்கிறது –

அங்கனும் அன்றிக்கே –
தேஹாத்மா அபிமானியாய் இருக்கும் காலமும் –
ஸ்வஸ்மிந ஸ்வா தந்த்ர்ய அபிமானியாய் இருக்கும் காலமும்
அந்ய சேஷமாய் இருக்கும் காலமும் என்று கால த்ரைவித்யம் சொல்லவுமாம்

அப்போது இம் மூன்று காலத்திலும்
தத்தத் அபிமான அனுகுணமாக சாத்திய சாதனங்களிலே ஸ்வயமே பிரவர்த்திக்கை நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப விரோதி யாகையாலும் –
தத்தத் அதிகார அணுகுண சாஸ்திர அதிக்கிரமம் வருகையாலும் பாபம் உண்டு என்று கொள்ள வேணுமாம்

அன்றிக்கே
தமக்கு பூர்வ காலத்திலும் சம காலத்திலும் தமக்கு உத்தர காலத்திலும் உள்ள சாபராத சேதனருக்கு என்றும் ஒக்க
பகவத் ஷமையே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு உபாயம் என்று அனுசந்திக்கிறார் ஆகவுமாம்

இப்படி இன்றிக்கே -கால த்ரயமாவது –
நாஸ்திகனாய்-சாஸ்திர வச்யன் அன்றிக்கே இருக்கும் காலமும்
ஆஸ்திகனாய் சாஸ்திர வச்யனாய் இருக்கும் காலமும் –
ஜ்ஞானாதிகனாய் ஸ்வரூப வச்யனாய் இருக்கும் காலமும் -என்று காலத்தை பேதித்து
இம் மூன்று வகைப்பட்டு இருந்துள்ள காலத்திலும் என்றும் சிலர் சொல்லுவார்கள் –

அவர்கள் பஷத்தில் நாஸ்திகனான தசையில் விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும் –
ஆஸ்திகனான தசையில் விதி பரதந்த்ரனாய் ஸ்வரூப விருத்தங்களைச் செய்கையாலும்
ஸ்வரூப வச்யனான தசையிலும் சாஸ்திர விசயத்தை இல்லாமையாலே விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும்
அபராதம் உண்டு என்பார்கள் -அது கூடாது –

ஸ்வரூப வச்யனான தசையில் சாஸ்திர வச்யதை இல்லாமையாலே விதி நிஷேத அதிக்கிரமம் பாபமாக மாட்டாது
அத ஏவ துஷ்க்ருதா சரணத்தால் அனுதாபம் பிறந்து ஸ்வரூப வச்யன் ஆகையாலே ஸ்வரூப விருத்தங்களைச் செய்து
அனுதபிக்க விரகு இல்லை –
சாஸ்திர வச்யனுக்கு சாமான்ய விசேஷ ந்யாயத்தாலே ஸ்வரூப விருத்தமான விதி அதிக்கிரமம் கூடும்
இவன் தனக்கு விதி நிஷேத அதிக்கிரமம் ஸ்வரூப விரோதியாய் ராக பிராப்தம் ஆகையாலே தவிர விரகு இல்லை

ஸ்வரூப வச்யனுக்கு சாஸ்திர வச்யதை இல்லை என்கிறதும் கூடாது -ஸ்வரூப வச்யனுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டு இறே-
அவர்களுக்கு விஷயம் ஸ்ரீ பகவத் இஷ்ட அநிஷ்டங்கள் என்று கொள்ளும் அளவில் அவற்றை நேர் கொடு நேரே அறியப் போகாமையாலே
சாஸ்திர முகமாகவே அறிய வேண்டும் -அப்போது சாஸ்திர வச்யதை தன்னடையே உண்டாமாகையாலே
நாஸ்திகத்வாதிகளை இட்டு கால த்ரைவித்யம் சொல்லுகை அசங்கதம்-
சாஸ்திர வச்யதை உண்டாகில் இறே விசேஷ சாஸ்திர வச்யதை உண்டாவது
ஸ்வரூப வச்யனுக்கும் விதி பாரவச்யம் உண்டு -ஆகை இறே த்யஜ -வ்ரஜ -என்று த்யாக சவீ காரங்களை விதித்தது

அனுகூலங்களாக தோற்றுகையாலே ராக பிராப்தங்களாய் இருக்கும் -ஆகையாலே நாஸ்திகத் வாதிகளை
இட்டு காலத்தைப் பிரிக்கும் போது
இரண்டு என்றே கொள்ள வேணும் -ஆகையாலே கால த்ரேயேபி என்றதுக்கு கீழ்ச் சொன்ன படியே பொருளாகக் கடவது –
பவிஷ்யத் காலம் சரணாகத யுத்தர காலமாகையாலே அதில் புத்தி பூர்வகம் கொள்ளும் அளவில்
சாஸ்திர விரோதம் வாராது என்னில் -வாராது
பூர்வம் மானசமாக சங்கல்பிதமான வற்றுக்கே உத்தர காலத்தில் ப்ராமாதிக அனுஷ்டானம் கூடுகையாலே –

அன்றிக்கே –
ஜாதேபி -கௌடில்யே சதி சிஷ்யாப்ய நகையன் -தத்வ சாரம் -என்கிறபடியே புத்தி பூர்வகமாக உத்தராகத்திலே
பிரவ்ருத்திக்கும் படி மாத்ருச கடின சித்தரும் உண்டாகையாலே பவிஷ்ய காலத்திலும் புத்தி பூர்வாகம் உண்டு என்னுமாம் –
அது ஷமா விஷயம் அன்றிக்கே சிஷா விஷயமாய் யன்றோ சொல்லப் படுகிறது என்னில் –
அந்த சிஷை தானும் -லகுர் தண்ட பிரபன்னச்ய ராஜ புத்ர அபராதவத் -என்கிறபடியே –
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வ ஸூ ந்தரே -என்னும்படியான பாபத்தை இஸ் சரீரத்தோடு அல்ப காலத்தில் அனுபவிக்கும் படி
பண்ணுகையாலே ஷமா கார்யமாகக் கடவது -ஆக கால த்ரயத்தாலும் சாபராதியான இச் சேதனனுக்கு

சரணம்
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் –

சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
அந்த பொறை தானும் தேவரீர் தம்மால் ஸ்ரீ யபதி திருவடிகளில் மநோ வாக் காயை -என்று தொடங்கி
சர்வான் அசேஷதஸ் க்ஷமஸ்வ -என்று பிரார்திக்கப்பட்டது யாது ஓன்று உண்டோ –
அது தேவரீரைப் பற்றி இருக்கும் ஆஸ்ரித ஜனங்களுக்குப் பிழைக்கலாம் படி தேவரீர் வைத்த தண்ணீர் பந்தல் இறே

த்வயைவ
அபிமான அந்தர் பூதருக்குக் கார்யம் செய்ய வேணும் என்று ஈஸ்வரனோடு மன்றாடும்படியான ஸ்வரூபத்தை யுடைய
தேவரீர் அன்றோ பிரார்த்தித்து அருளிற்று –
இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பமே–மெய் நின்று கேட்டு அருளாயே -என்று ஸ்ரீ பிரதம ஆச்சார்யர்
பிராரத்த படி கண்டால் அவர் அடி பணிந்த இவர்க்கும் இது அன்றோ அனுஷ்டானம் –

கமலாரமணே
அஹ்ருதயமான யுக்தியையும் சஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளும் அவளும்
அவள் தன்னையும் அதி சங்கை பண்ணி ஆஸ்ரிதரை நோக்குமவனான சேர்த்தியில் அன்றோ பிரார்தித்தது –

அர்த்தி தாயத்
தாமும் அவனுமாக அறிந்து நெஞ்சால் அபேக்ஷித்தது அளவும் அன்றிக்கே பின்புள்ளவருக்கும் இது கொண்டு
வழக்கு பேசலாம் படி பாசுரம் இட்டு அன்றோ பிரார்த்தித்தது
அர்த்தித்தார் கார்யம் செய்தே நிற்க வேண்டும் படி பல் காட்டி அன்றோ போந்தது

ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதாநாம்–
தேவரீருடைய ஸ்வ பாவத்தையும் அபிமான விஷய ஸ்வபாவத்தையும் பிரார்த்தனா பிரகாரத்தையும் அனுசந்தித்தால்
தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்களுக்கு ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே
நிர்ப்பரராய் இருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவே இறே –

பகவத் ஷமைவ-
ஆஸ்ரித கார்ய கரத்வோபயோகிகளான ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
பொறுத்தோம் என்கிற ஷமை தானே –
ஏவ காரத்தாலே மற்று ஓன்று இல்லை என்கிறது –சரணாகதி தானும் ஷமாவ்யஞ்சகம் இறே –
இத்தை இறே ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -61-என்று
ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்தது

சா ச –
எப்பேர்பட்ட அபராதங்களுக்கும் புகலிடமாக பிரசித்தமான அந்த ஷமை தானும்

த்வயைவ
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே -இவர்கள் துர்கதியில் நின்றும் நிவ்ருத்தராய் ஸ்வரூப அனுரூபமான
தாச்யத்திலே அன்வயித்து வாழும்படி எங்கனே என்று கரை புரண்ட கிருபையை உடைய தேவரீராலேயே
ஏவ காரத்தாலே
இன்று ஒருவன் அறிவுடையவனாய் பிரார்த்திக்க வேண்டாத படி ஸ்வ ஆஸ்ரித சகல சேதன விஷயமாக
தேவரீராலே பிரார்த்திக்கப் பட்டது என்கிறது

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக பிரபத்தி செய்து அருளுகையாலே
தனித்து ஒருவர் பிரபத்தி பண்ண வேண்டா என்கிறது –
இவ்வர்த்தம் ஸ்ரீ எம்பெருமானார் தம் சரம தசையிலே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று சேவித்து நிற்க அவ்வளவிலே
ஸ்ரீ பெரிய பெருமாளும் அருளப் பாடிட்டு ஓன்று சொல்வான் போலே இருந்தாயீ-என்ன
நாயந்தே அடியேன் சம்பந்தி சம்பந்திகளும் தேவரீர் ஷமைக்கு விஷயராய் உஜ்ஜீவிக்கும் படி கிருபை செய்து அருள வேணும் என்ன
ஸ்ரீ பெருமாளும் அப்படியே யாகக் கடவது என்று அனுக்ரஹித்தார் என்று பிரசித்தம் இறே

நாம் பிரார்த்தித்தமை யுண்டு -அவன் ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யா விடில் செய்வது என் என்ன –

கமலா ரமேண-
தேவரீர் சொல்லிற்றை மறுக்கும் விஷயத்திலேயோ தேவரீர் பிரார்த்தித்து
அவன் தேவரீர் பிரார்த்த படி செய்யா விடில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்கு முகம் கொடுப்பாளோ என்னுதல்

தேவரீர் பிரார்த்தனையை செய்விக்கும் சாஷி உண்டு என்னுதல் -கமலத்தில் திரு வவதரிக்கையாலே கமலை என்று
திரு நாமம் உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல்

கஸ்ஸ மஸ்ஸ கமௌ கமௌ லாதீதி கமலா என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே ஸூக பிரதனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஜ்ஞான பிரதனனான சேதனனையும் உபதேசத்தாலும் சௌந்தர்யாதி களாலும் -ஸ்வ வசமாக்கிக் கொள்ளும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல் –

அர்த்திதா
மநோ வாக் காயை -என்கிற சூர்ணிகையாலே பிரார்த்திக்கப் பட்டது

இதியத் –
என்கிறது யாதொன்று உண்டு

ச ஏவ
லிங்க வ்யத்யயம்-விதேய பிரதான்யத்தாலே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக தேவரீர் –
மநோ வாக் காயை -என்று தொடங்கி-
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச சர்வா ந சேஷாத ஷமஸ்வ -என்று
இருவருமான சேர்த்தியிலே பிரார்த்தித்த பிரார்த்தனை தானே

ஷேம
ரஷை-ரஷையாவது -ஸ்வ சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி ரஷகமாம் போலே தேவரீருடைய பிரார்த்தனையும்
தேவரீர் சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி தானே ரஷகம் ஆகிறது –

பவச்ச்ரிதா நாம் –
ஸ்வ அனுவ்ருத்தி நிரபேஷராய் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாரான தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -என்னுதல்

தேவரீர் சம்பந்தி பரம்பரையும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் விஷயீ காரம் பெற்ற தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னுதல்
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாகவே பகவத் ஷமை இவன் பிரார்த்திக்க வேண்டாத படி தன்னடையே யுண்டாம் என்கிறது –

இத்தால் ஸ்ரீ ஈஸ்வர சம்பந்திகளுக்கு ஸ்வ அபராதங்களை ஸ்ரீ ஈஸ்வரன் ஷமிப்பனோ ஷமியானோ என்று சம்சயிக்கவும் கூடும்
அஸ் சம்சயமும் இல்லை ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகளுக்கு என்கிறது –
ஏவ காரத்தாலே இதா நீந்தனை பிரார்த்தனை ரஷகம் என்கிறது

ஹி
இவ்வர்த்தம் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
அர்வாஞ்ச இத்யாதியால் பிரசித்தம் அன்றோ என்கிறார்

இத்தால் ஸ்ரீ ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறது
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே நம்முடைய யத்னம் சபலமாய்த்து என்று திரு உள்ளம் உகந்தபடி இருக்கக் கண்டு
ஸ்ரீ யதீந்திர
என்கிறார்
பவாச்ச்ரிதா நாம்
ஸ்வ யத்னமே ஸ்வ ஆஸ்ரிதர் ரஷகமாம் படி இருக்கிற தேவரீர் சம்பந்திகளுக்கு என்னவுமாம் –)

ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் ஸிம்ஹ ஸரீரத்திலே ஜந்துக்கள் போல்
பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கனம் பண்ண அவரோடே உண்டான குடல் துவக்காலே நாமும் உத்தீர்ணர் ஆவுதோம் என்று முதலியாண்டான் அருளிச் செய்வர்

———————————————————–

உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்கும்
இனிமையாலே விட ஒண்ணாமை யாலும்
நடக்கும் –சூரணை -158-

இன்னமும் இவ் வர்த்தமானத்துக்கு சில பிரயோஜனங்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பூர்வ வாசனையாலே அவசமாக உபாயாந்தரங்களிலே மனஸ் செல்லாமைக்காகவும்
இவ் அனுசந்தானத்தால் ஒழிய போது போக்க அரிதாகையாலே-கால ஷேபதுக்காகவும் –
இதனுடைய ரஸ்யத்தை யாலே விட மாட்டாமையலும்
இவ் அனுசந்தானம் இடைவிடாமல் நடக்க கடவதாய் இருக்கும் -என்கை-

———————————————————-

பேற்றுக்கு பல காலும் வேணும் என்று நினைக்கில் உபாயம் நழுவும் –சூரணை -159

இங்கன் அன்றிக்கே பல சித்திக்கு பல காலம் அனுசந்திக்க வேணும் என்றாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
கீழ் சொன்ன பிரயோஜனங்களுக்காக அன்றிக்கே பேற்றுக்கு உறுப்பாக பல காலும்
அனுசந்திக்க வேணும் என்று பிரபத்தி பண்ணில்
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் -சணல் கயிறு கண்ட ப்ரஹ்ம அஸ்தரம் போலே தன்னைக் கொண்டு நழுவும் -என்கை –

ஆக பூர்வ வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

———————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –130–143–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது –சூரணை -130

ஆக ஸ்ரீ மத் பதத்தில் பிரக்ருத்யம்சத்தை அருளி செய்தார் கீழ்-
பிரத்யயாம்சத்தை அருளி செய்கிறார் மேல் –

அதாவது
இம் மதுப்புத்தான் நித்ய யோக மதுப்பு ஆகையாலே -இத்தால்
புருஷகார பூதையான பிராட்டியும் ஈஸ்வரனுமான இவருடைய
சேர்த்தியும் எப்போதும் உண்டு என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-

(பிரக்ருத்யம்சத்தை அருளி செய்தார் கீழ்—ப்ரக்ருதி அம்சமான ஸ்ரீ மச் ஸப்தார்த்தை
பிரத்யயாம்சத்தை–மதுப்பர்த்தத்தை)

———————————————–

இவளோடு கூடிய வஸ்து வினுடைய உண்மை –சூரணை -131

இந் நித்ய யோகத்தை உபபாதிக்கிறார் –

அதாவது ஸ்ரீ ய பதிர் நிகில ஹேய பிரத்யநீக கல்யாணை கதாந ஸ்வேதர
சமஸ்து வஸ்து விலஷண ஞான ஆனந்த ஏக ஸ்வரூப -என்று
ஸ்வரூப நிரூபகமான ஞான ஆனந்தாதிகளுக்கு முன்னே –
ஸ்ரீ யபதித்வத்தை  சொல்லும்படி அவன் ஸ்வரூபத்துக்கு பிரதான
நிரூபகையாய் இருக்கையாலே -இவளோடு கூடிய வஸ்துவினுடைய சத்பாவம் இருப்பது -என்கை-

—————————————————–

ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் -சேதனன் உடைய  அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –சூரணை -132

ஆக ஸ்வரூப  அனுபந்தித்வ பிரயுக்தமான நித்ய யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி இவளுடைய குண பிரயுக்தமான நித்ய யோகத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு நிறுத்து அறுத்து தீர்க்கும் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேப்ய நாச்யம்-இத்யாதிப்படியே
கால தத்வம் உள்ள அனைத்தும் அனுபவியா நின்றாலும் -சிறிது வரை இட்டுக் காட்டக் கடவது
அல்லாதபடி பண்ணி வைத்த இச் சேதனனுடைய அக்ருத்ய கரண இத்யாதி அபராதத்தையும் கண்டு –
என்னாகப் புகுகிறதோ -என்னும் பயத்தாலே ஈஸ்வரனை விட்டு ஒரு ஷண காலமும் அகல மாட்டாள் -என்கை-

——————————————————–

சேதனனுக்கு இவை இரண்டையும் நினைத்து அஞ்ச வேண்டா –சூரணை -133

இத்தால் சேதனனுக்கு பலிக்கும் அதை அருளிச் செய்கிறார் –

அதாவது
இப்படி இவள் இருந்து நோக்குகையாலே -சேதனனுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமும்
ஸ்வ அபராதமும் ஆகிற இவை இரண்டையும் நினைத்து -என்னாய் விளையப் புகுகிறதோ  –
என்று அஞ்ச வேண்டா -என்கை–

——————————————–

இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது -காலம் பார்க்க வேண்டா -என்கிறது –சூரணை -134

இனி இம் மதுப்பின் தாத்பர்ய அம்சத்தை அருளிச் செய்கிறார் –
இப்படி புருஷகார உபாய வஸ்துக்களின் உடைய நித்ய யோகத்தை பிரதி பாதிக்கிற
இம் மதுப்பால்-இவ் விஷயத்தை ஆஸ்ரயிப்பாருக்கு-ஆஸ்ரயிக்கையில் ருசியே வேண்டுவது –
இரண்டு தலையும் கூடி இருக்கும் தசையிலே ஆஸ்ரயிக்க வேணுமே -என்று  ஆஸ்ரயணத்துக்கு காலம்
பார்த்து இருக்க வேண்டா என்கிறது -என்கை-

—————————————————-

இவள் சன்னதியால் காகம் தலைப் பெற்றது –
அதில்லாமையால் ராவணன் முடிந்தான் –சூரணை -135

இனி இவள் புருஷ காரத்வத்தின் அவஸ்ய அபேஷித்வத்தை அறிவிக்கைகாக –
இவள் சந்நதிக்கும் அசந்நதிக்கும் உண்டான வாசியை அருளிச் செய்கிறார் –

தேவ்யா காருண்யா ரூபய-என்கிறபடி கிருபை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்த்ர்யத்தை அமுக்கி கிருபையைக் கிளப்பும் அவளான இவள் சந்நிதியாலே –
அபராதத்தை தீரக் கழியச் செய்து -ப்ரஹ்ம அஸ்த்ரத்துக்கு இலக்காய்-தலை அறுப்பு உண்ணத் தேடின காகம் –
க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடி க்ருபா விஷயமாய் தலைப் பெற்றுப் போயிற்று –

அப்படி இருக்கிற இவள் சந்நிதி இல்லாமையாலே போக்கற்று செயல் மாண்டு நின்ற நிலை
ஒத்து இருக்க செய்தேயும் -காகத்தோபாதி அபராதம் இன்றிக்கே இருக்க –
ராம சரத்துக்கு இலக்காய் ராவணன் முடிந்தே போனான் -என்கை –

ஆகையால் ஆஸ்ரயிப்பாருக்கு இவள் சந்நிதியே வேணும் என்று கருத்து –
ஆக ஸ்ரீ மத் பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

———————————————————-

புருஷ கார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால்-தலை எடுக்கும்
குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் –சூரணை -136-

அநந்தரம் நாராயண பத அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
உபதேசத்தாலும் அழகாலும் கண் அழி வற வசீகரித்து கார்யம் கொள்ள வல்ல புருஷகார பலத்தாலே –
ஆஸ்ரயண உந்முகனான சேதனன் அநாதி காலம்  பண்ணின அபராதங்களைப் பார்த்துச் சீறி –
அங்கீகரியேன்-என்று இருக்கும் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் தலை மடிந்தால் அதன் கீழ்
தலை எடுக்கப் பெறாத செறிப்பு தீர்ந்து தலை எடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது -நாராயண பதம் -என்கை –

———————————————————-

அவை யாவன -வாத்சல்யமும்-ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும் -சௌலப்யமும் -ஞானமும் சக்தியும் –சூரணை -137

அவை தாம் எவை என்ன அருளிச் செய்கிறார் –
இவற்றில் வத்சத்தின்  பக்கல்  தேனு இருக்கும் இருப்பு -அதாவது –
அதனுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும் –
ஷீரத்தை கொடுத்து வளர்க்கையும் –
எதிரிட்டவரை கொம்பிலும் குளம்பிலும்  கொண்டு நோக்குகையும் -இறே

அப்படியே -ஈஸ்வரனும் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
பாலே போல் சீர் –பெரிய திரு அந்தாதி -58–என்கிற குணங்களாலே தரிப்பித்து –
கதஞ்சன ந த்யஜேயம்-என்றும் அபயம் சர்வ பூதேப்ய -என்றும் சொல்லுகிறபடி
அனுகூலர் நிமித்தமாகவும் -பிரதி கூலர் நிமித்தமாகவும் நோக்கும் –

(மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-)

(மித்ர பாவேந ஸ்லோகத்தில் அருளிச் செய்ததற்கு அனுகுணமாக ப்ரதிஜ்ஜை செய்கிறார் ஸத்ருத் ஏவ -இத்யாதி சரம ஸ்லோகத்தால்
ஸக்ருத் ஸ்ப்தத்துக்கு ஸஹஸா ஆதேசமாய் -ஸஹஸைவ ப்ரபந்நாய -என்றபடி -அதாகிறது
தன் அயோக்யதையைப் பாராமல் என் குணத்தையே விஸ்வஸித்து ப்ரபன்னனாகை -என்று ஆழ்வான் நிர்வாஹம்
கீழ் அநாதி காலம் சம ஸரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அனுபவம் பண்ணப் புகுகிறவனாகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும்
ஸ கர்த்த என்கைக்குப் போருமத்தனை அன்றோ என்று எம்பார் நிர்வாஹம்
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒருக்காலே அமையும் -பின்பு ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதையாலே என்று பட்டர் நிர்வாஹம்
ஸக்ருத் ஏவ என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அஸக்ருத் ஆவ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது
தவாஸ் மீதி சாயசதே–என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே அனவ்ரத பாவன ரூபமான பக்தியைச் சொல்லுகிறது – என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி –ஸர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன்
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டிக் கொடோம் -இவன் தான் அகலும் அளவிலும் இவன் கையிலும் காட்டிக் கொடோம்
ஏதத் விரதம் மம -நமக்கு அநு பால நீயமான ஸங்கல்பம் இது
அமோக ஸங்கல்பனான நமக்கு ஸங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத ஸங்கல்பம் இது)

ஸ்வாமித்வமாவது-இவள் விமுகனான தலையிலும் விடாதே நின்று -சத்தையை நோக்கிக் கொண்டு
போருகைக்கு ஹேதுவான ஒரு பந்த விசேஷம் -அதாவது உடையவனாய் இருக்குமிருப்பு –
அத்வேஷம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தமாக உண்டான ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம்
உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம் அடியாக –

சௌசீல்யமாவது -உபயவிபூதி யோகத்தாலும் -பெரிய பிராட்டியாரோடு சேர்த்தியாலும்-நிரங்குசமாய்  இருக்கிற
ஈஸ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து -அவன் எவ்விடத்தான் நான் யார் –திரு வாய் மொழி -5-1-7-என்று
பிற்காலிடாதபடி எல்லோரோடும் ஒக்க மேல் விழுந்து புரை அறக் கலக்கையும்-
அது தன் பேறாக இருக்கையும் –
எதிர் தலையிலே அபேஷை இன்றியிலே இருக்க கலக்கையும் –

(புரை அறக் கலக்கையும்–ஸ்வ உத் கர்ஷமும் பர நிகர்க்ஷமும் நெஞ்சில் தட்டாதபடி)

(எல்லோரோடும் ஒக்க மேல் விழுந்து தன் பேறாக புரை அறக் கலக்கை என்றது ஞானிகள் விஷயத்தில்
எதிர் தலையிலே அபேஷை இன்றியிலே இருக்க கலக்கை-என்றது ஸம் சாரிகள் விஷயத்தில்)

(அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.–5-1-7)

சௌலப்யமாவது -கண்ணுக்கு விஷயம் இன்றிக்கே இருக்கிற தான் கண்ணாலே கண்டு
ஆஸ்ரிக்கலாம் படி எளியனாய் இருக்கை-

ஞானமாவது -இச் சேதனனுக்கு கழிக்க  வேண்டும் அநிஷ்டங்களையும்
கொடுக்க வேண்டும்  இஷ்டங்களையும் நேராக அறிகைக்கு ஈடான ஸ்வ வ்யதிர்க்த சமஸ்த
பதார்த்தங்களையும் ஒரு காலே அபரோஷிக்க வல்ல அறிவு –

சக்தியாவது -ஹேயரான நித்ய சம்சாரிகளை உபாதேய தமரான நித்ய சம்சாரிகளோடு ஒரு கோர்வை ஆக்க வல்ல
அகடிதகடிந சாமர்த்தியம் –

இவற்றில்  வாத்சல்யாதிகள் நாலும் ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதிகம்
ஞானாதிகள்    இரண்டும் ஆஸ்ரித கார்ய ஆபாதிகம் –

நிகரில் புகழாய் -திரு வாய் மொழி -6-10-10-என்று தொடங்கி -வாத்சல்யாதிகள் நாலும் இறே –
ஆஸ்ரயணதுக்கு உடலாக ஆழ்வார் அருளிச் செய்தது –
ஞான சக்திகள் இரண்டும் சொன்ன இது -ப்ராப்தி பூர்த்திகளுக்கும் உப லஷணம் –
கார்யகரத்வதுக்கு அவையும் அபேஷிதங்கள் ஆகையாலே –

(அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.-6-10-10)

——————————————-

குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம் –
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –சூரணை -138-

இக் குணங்களுக்கு இவ் இடத்தில் விநியோகங்கள் எவை என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆஸ்ரயணோந்முகனான இச் சேதனன் தன் தோஷத்தை பார்த்து அஞ்சாமைக்கு உறுப்பு –
தோஷத்தை போக்யமாகக் கொள்ளும் வாத்சல்யம் –

நம் கார்யம் செய்யுமோ செய்யானோ -என்று சங்கியாதே கார்யம் செய்யும் என்று
விஸ்வசிக்கைக்கு உறுப்பு இழவு பேறு தன்னதாம் படியான ஸ்வாமித்வம் –

உபய விபூதிக்கும் கடவனாய் இருக்கும் பெருமைக்கு பிரகாசமான ஸ்வாமித்வத்தை
கண்டு ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாமைக்கு உறுப்பு தாழ நின்றவர்களோடு
புரை அறக் கலக்கும் ஸ்வபாவமான சௌசீல்யம்

அதீந்த்ரியம் என்று பிற்காலியாமல் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பு
தன் வடிவை சஷூர் விஷயம் ஆக்குகை ஆகிறது சௌலப்யம் –

சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கிறபடியே ப்ராப்தி விரோதியைப் போக்கி
ப்ராப்யனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு -ப்ராப்தா வான இவன் கீழ் நின்ற நிலையும்
மேல் போக்கடியும் அறிகைக்கும்-அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும் – ஏகாந்தங்களான ஞான சக்திகள்-என்கை-

——————————————————-

இங்கு சொன்ன சௌலப்யதுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்–சூரணை -139

சௌகர்ய ஆபாதங்களான குண சதுஷ்ட்யத்திலும் சௌலப்யம் பிரதானம் ஆகையாலும் –
அந்த சௌலப்ய காஷ்டையை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப் பதத்தில் ஆஸ்ரயண உபயோகியாய் சொன்ன சௌலப்யம்- ஆஸ்ரிதர் உகந்தது ஒன்றை திரு மேனியாகக்
கொண்டு -சதா சந்நிதி பண்ணி இருக்கும் அர்ச்சாவதாரம் என்கை –

——————————————–

இது தான் பர வ்யூஹ விபவங்கள் போல் அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படி இருக்கும் –சூரணை -140-

இது தன்னை உபபாதிக்கிறார் –

அதாவது –
இச் அர்ச்சாவதாரம் தான் தேச விப்ரக்ருஷ்ட்தையாலே கண்ணுக்கு விஷயம் ஆகாத
பர வியூஹங்களும் கால விப்ரக்ருஷ்ட்தையாலே கண்ணுக்கு விஷயமாகாதபடி போன
விபவமும் போல் அன்றிக்கே
ஆசன்னமாய் அநவரத சந்நிதி பண்ணிக் கொண்டு இருக்கையாலே -அநவரதம் கண்ணாலே
காணலாம்படி இருக்கும்-என்கை-

(நாம் இருக்கிற பூமி முதல் கொண்டு கீழ் சேஷ லோக பர்யந்தம் பூ லோகம் என்று வியாஹரிக்கப்படும்
இந்த பூமி முதல் கொண்டு ஸூர்ய லோகம் பர்யந்தம் லக்ஷ யோஜந பர்யந்த விப்ர க்ருஷ்டதையை யுடைத்தாய் இருக்கும்
புவர் லோகம் ஸூர்ய லோகம் முதல் கொண்டு சந்த்ர மண்டலம் பர்யந்தம் பதினாலு லக்ஷம் யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
ஸூவர் லோகம் துருவ மண்டலத்துக்கு மேலே கோடி யோசனையை யுடைத்தாய் இருக்கும்
மஹர் லோகம் அதற்கு மேல் இரண்டு கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
ஜனோ லோகம் அதுக்கு மேலே எட்டுக்கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
தபோ லோகம் அதுக்கு மேலே பன்னிரண்டு கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
ஸத்ய லோகம் அதுக்கும் மேல் கொஞ்சம் குறைச்சலாக இரண்டு கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
அதுக்கும் மேலே அந்த தமஸ்ஸு
அதுக்கும் மேலே அண்ட கடாஹம் கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
அதுக்கும் மேலே ஜல ஆவரணம் பத்துக்கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
இந்தப்பிரகாரம் அவ்யக்தம் பர்யந்தம் பத்துப் பத்துக் கோடி யோஜனை தூரமாய் உள்ளது என்று அறியத் தக்கது
இதுக்கும் மேலே ஸ்வயம் ப்ரகாசகமான பரமபதத்தில் பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டனாய்
ஸர்வ வியாபகனான பர வாஸூ தேவன் தீர்க்கமாய் அதி விசாலமான இந்த லோக ஸ்தியைப் பாரா நின்று கொண்டு ஹ்ருஷீ கேசனாய் எழுந்து அருளி இருக்கின்றான்
இதுவாய்த்து பரத்வம்)

——————————————————–

இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –சூரணை -141-

இக் குணங்கள் எல்லாம் அர்ச்சாவதாரத்திலே காணலாமோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது சௌகர்ய ஆபாதகமாகவும் கார்ய ஆபாதகமாகவும் சொன்ன
இக் குணங்கள் எல்லாம்-இவை காண்கையாலே அபேஷை உடைய நமக்கு
நம்முடைய பெருமாள்-உரிமையாக நம்பெருமாளை மா முனிகள் அருளும் ஸ்ரீ ஸூக்தி – பக்கலிலே காணலாம் -என்கை-

(நம்பெருமாள் என்னுமத்துக்கு ஐதிக்யம்
முன்பொரு காலத்திலே கலாபத்த்திலே க்ரூரராய் இருப்பார் சிலர் பெருமாளையும் அத்தேசத்திலுள்ள எம்பெருமான்களையும் வாரிக்கொண்ட போக
அப்போது பெருமாள் திருவடிகளுக்கு நல்லராய் இருக்கும் ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார் பெருமாளைப் பிரிய ஷமர் இன்றிக்கே
அங்கே சென்று அவனைக்கண்டு தம்முடைய பண்களாலே அவனை வசீகரிக்க அவனும் அதி ப்ரீதனனாய் உமக்கு வேண்டுவது என் என்ன
நம்முடைய பெருமாள் இங்கே வந்தார் அவரைத்தர வேணும் என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களைக் காட்ட-அப்போது அவர்கள் நடுவே தேடிக் காணாமையாலே கிலேசித்து இருக்க
அப்போது அவனுடைய பெண் பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளான இவரை தனது அந்தப் புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்செய்தியை அறிந்து அவன் அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் என்று காட்டிக் கொடுக்கக் கண்டு
இவர் தாம் நம் பெருமாள் என்று அணைத்து எடுத்துக் கொண்டு அதி த்வரையுடன் கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று ப்ரஸித்தம் இறே
அப்போது அனைவரும் பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
திருவாழி யாழ்வான் பின்னையும் -இவர் நம்முடைய பெருமாள் என்று மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அதுவே அவருக்கு நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் -)

(உபதேச ரத்ன மாலை வியாக்யானத்தில் பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்தவை -அன்புடையோர் சாத்துகை யாவது –
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -என்று அருளிச் செய்தார் இறே –)

(அன்புடையாரான பிள்ளை லோகாச்சார்யார் முமுஷுப்படியில் சாத்தினாரே
இவர் அன்றோ பரிவுடன் நம்பெருமாளை எழுந்து அருளப் பண்ணினவர் )

முன்பு ஒரு காலத்திலே ஒரு கலபையிலே க்ரூரராய் இருப்பார் சிலர்
ஸ்ரீ பெருமாளையும் அத் தேசத்தில் உண்டான ஸ்ரீ எம்பெருமான்களையும் கொண்டு போந்து –
கெட்டேன் -என்னும்படி -வாரி வடக்கே கொண்டு போக
(ஸ்ரீ ரெங்கத்தில் மூன்று படை எடுப்புக்கள் -1311-1323-உண்டே )
அப்பொழுது ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு போர நல்லராய் இருக்கிற
ஸ்ரீ ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார் (அரையர் ஸ்வாமி )
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -(7-2)–என்கிறபடியே ஸ்ரீ பெருமாளைப் பிரிய ஷமர் அன்றிக்கே

இது நிலம் கை துழாவிக் கொண்டு போய்
அங்கே சென்று அவனைக் கண்டு
தம்முடைய நுடங்கு கேள்வி இசை (3-4-6)-என்னலாம் படியான பண்களாலே
அவனைப் பண்படுத்த –
அவனும் அதி ப்ரீதனாய்
உமக்கு வேண்டுவது என் என்ன –
நம்முடைய ஸ்ரீ பெருமாள் இங்கே வந்தார் அவரைத் தர வேணும் -என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களையும் கொடு வந்து காட்ட –
அப்பொழுது அவர்கள் நடுவே தேடிக் காணாமல்
சிந்திக்கும் திசைக்கும் இத்யாதிப் படியே-( 7-2-) கிலேசித்து இருக்க –

அப்பொழுது அவனுடைய பெண் பிள்ளை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளான இவரைத்
தம் அந்தப்புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்சேதியை அறிந்த அவன்
அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் -என்று காட்டிக் கொடுக்கக் கண்டு

(ராமபிரியனை ராமானுஜர் மீட்டால் போல் இங்கும் –
இது நம்பெருமாளை அரையர் மீட்டது -காலத்தால் பின்னால் )

ஸ்ரீ ரெங்க நாத மம நாத (கத்யம்)-என்றும்
அரங்கமாளி என்னாளி -(திருமங்கை ஆழ்வார் )-என்றும்
என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர்-(நாச்சியார் -11) -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளை அதி ப்ரீதியுடன்
இவர் தாம் ஸ்ரீ நம் பெருமாள் -என்று அணைத்துக் கொண்டு
அதி த்வரையுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று பிரசித்தம் இறே

அப்போது அனைவரும் ஸ்ரீ பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
ஸ்ரீ ஆயி ஆழ்வார் பிள்ளையும் -இவர் நம்முடைய பெருமாளாம் -என்று
மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அவருக்கு அதுவே நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் –

(1371-நம்பெருமாள் -48- வருஷங்கள் பின்பு எழுந்து அருள -ஈரம் கொல்லி -வ்ருத்தர் –
கண் தெரியாதவர் -திருவாடை கந்தம்-நம்பெருமாள் பெயர் உறுதிப்படுத்தப் பட்டது-
திருவரங்க மாளிகையார் உத்சவர் இடைக்காலத்தில் –
அரையர் ஸ்ரீ சடகோபன் சாதிக்கும் நாள்கள் விசேஷம் –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் )

இனி ஸ்ரீ நம் ஆழ்வார் -என்ற
திரு நாமம் ஆகைக்கு அடி முற்காலத்திலே
ஸ்ரீ பெருமாள் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ நம் ஆழ்வார் என்று அபிமானித்து அருளி
பெரிய திரு அத்யயனத்துக்கும் அப்படியே திருமுகம் எழுதி
ஸ்ரீ திரு நகரிக்குப் போக விட்டு அருளுவர் என்றும் உண்டு இறே –

(ஆழ்வாரைக் கொண்டு வர சென்ற நாள் கார்த்திகை கார்த்திகை –
திரும்ப எழுந்த பண்ணும் வரை அத்யயன காலம் ஆனது
செங்கழு நீர் திருவாசி கொடுத்து நம்மாழ்வாரை எழுந்து அருளப் பண்ண சொல்லி
தாம் திருக்கைத்தலை சேவை அருளி உள்ளே எழுந்து அருளுவார்
ராமானுஜர் கருட மண்டபம் பக்கம் தனியாக சந்நிதி ஏற்படுத்தி நம்மாழ்வார் ப்ரதிஷ்டை செய்து அருளினார் – )

————————————–

திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சேல் என்ற கையும் –
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாய் நிற்கிற
நிலையே நமக்கு தஞ்சம் –சூரணை -142-

பெருமாள் பக்கலிலே இக் குணங்களுக்கு பிரகாசங்களாய் உள்ளவற்றைச் சொல்லி –
இவற்றுடனே நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம் -என்கிறார் –

அதாவது
கார்யகரத்வ உபயோகியான ஞான சக்திகளுக்கு பிரகாசகமாம் படி
திருக் கைகளிலே தரித்துக் கொண்டு இருக்கிற சங்கு சக்ராதி திவ்ய ஆயுதங்களும் –

வாத்சல்ய பிரகாசகமாம் படி வைத்து அஞ்சல் என்ற கையும் –
ஸ்வாமித்வ பிரகாசகமாக கவித்த முடியும் –
சௌசீல்ய ப்ரகாசகமான முகமும் முறுவலும் –
அனைவருக்கும் கண்டு பற்றலாம் படி சௌலப்ய ப்ரகாசகமான ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாக-
கொண்டு எழுந்து அருளி இருக்கிற நிலையே அநந்ய கதிகளான நமக்கு ரஷகம் -என்கை

——————————————————-

ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திரு மேனியிலே தோற்றும் –சூரணை -143-

உபாய உபேய நிஷ்டருக்கு அபேஷிதமான ஆகாரங்கள் இரண்டும் கீழ்ச் சொன்னபடியே
நிற்கிற திரு மேனியிலே தோற்றும் என்கிறார் –

அதாவது
ரஷண பரிகரமான திவ்ய ஆயுதங்களோடும் ரஷணத்துக்கு கவித்த முடியோடும் கூடி இருக்கையாலே –
ரஷகத்வம் தோற்றுகையாலும் –

அணியார் ஆழியும் சங்கும் ஏந்தும் -திரு வாய் மொழி -8-3-6-
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திரு வாய் மொழி -3-1-1–என்கிறபடி
அவை தானே அழகுக்கு உடலாய் -வைத்தஞ்சல் என்று கையும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்தில்
அழுந்தின திரு அடிகளும் -ஓர் ஒன்றே அழகுக்கு எல்லை நிலமாய் இருக்கையாலே போக்யத்வம் தோற்றுகையாலும் –

இரண்டும் திரு மேனியிலே பிரகாசிக்கும் -என்கை –
ஆக நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .

(உபாய உபேய நிஷ்டருக்கு–உபாய அத்யவசாய நிஷ்டரையும் –ஆர்த்த ப்ரபன்னரான ப்ராப்ய த்வரா நிஷ்டரையும் சொன்னவாறு
உபாய நிஷ்டருக்கு அபேக்ஷிதங்களானவை -வாத்சல்யாதிகளும் ஞான சக்தி யாதிகளும்
உபேய நிஷ்டருக்கு அபேக்ஷிதங்களானவை -திவ்ய ஆயுதங்கள்
அணியார் ஆழியும் சங்கும்–ஆபரண தயா பூர்ணமான திரு ஆழியும் திருப்பாஞ்ச ஜன்யமும்
இரண்டும் திரு மேனியிலே பிரகாசிக்கும்-என்றது ரக்ஷகத்வமும் போக்யத்வமும் ஆகிய இரண்டும் என்றவாறு)

(பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே8-3-6-)

(முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-)

———————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –116–129–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

அவதாரிகை –

பிரதம ரகஸ்யமான திரு மந்த்ரத்தினுடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம்-அதில்
மத்யம பதத்தாலும் த்ருதீய பதத்தாலும் பிரதி பாதிக்கப் பட்ட -உபாய உபேயங்களை விசதமாக
பிரதி பாதியா நின்றுள்ள த்வ்யத்தினுடைய அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

முன்பு அருளிச் செய்த மூன்று பிரபந்தங்களிலும் -யாத்ருச்சிக்கப்படி-பரந்தபடி-ஸ்ரீ யபதிப்படி –
திரு மந்திர அநந்தரம் சரம ஸ்லோகத்தை அருளிச் செய்து பின்பு த்வயத்தை அருளிச் செய்தவர் –
இப்போது முந்துற த்வயத்தை அருளிச் செய்வான் என்-என்னில் -இரண்டு பிரகாரமும் அருளிச் செய்யலாய்
இருக்கையாலே –

ஆச்சான் பிள்ளை -வாதி கேசரி ஜியர் முதலானோரும் இந்த பிரகாரம் இறே அருளிச் செய்தது –
இவ் விரண்டு பிரகாரமும் தனக்கும் கருத்து என் -என்னில் சரம ஸ்லோகம் முன்னாக த்வயத்தை சொல்லுகிறது –
விதி  அனுஷ்டான ரூபங்களாய் இருக்கையாலே -விதி முன்னாக அனுஷ்டானத்தைச் சொல்லுகை ப்ராப்தமாக
இருக்கையாலும் –
திருமந்தரம் ப்ராப்ய பரமாய்
சரம ஸ்லோகம் பிராபக பரமாய்
த்வயம் உபயத்தினுடையவும் அனுஷ்டான பிரதிபாதமாய் இருக்கையாலும்
த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தைச் சொல்லுகிறது –

திரு மந்த்ரத்தில் மத்யம த்ருதீய பதங்களுக்கு வாக்ய த்வயம் விவரணமாய் –
அது தனக்கு சரம ஸ்லோகத்தில் அர்த்த த்வயம் விவரணமாய் இருக்கும் ஆகாரத்தாலே –
ஆன பின்பு இரண்டு பிரகாரமும் -அனுசந்திக்கத் தட்டில்லை –

அதில் ஒரு பிரகாரத்தை மூன்று பிரபந்தங்களிலும் அருளிச் செய்தவர் ஆகையாலே –
மற்றை பிரகாரத்தையும் அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்த அநந்தரம் த்வ்யார்த்தத்தை அருளிச் செய்கிறார் –

————————————————————-

புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும் –
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும் –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் –
பேற்றுக்கு த்வரிக்கையும் –
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணனாய்-குண அனுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்காயும் –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –
திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும் –
ஆசார்ய ப்ரேமம் கனத்து இருக்கையும் –
ஆச்சார்யன் பக்கலிலும் -எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய் போருகையும் –
ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையவனாய் இருக்கும் பரம சாத்விகனோடே
சஹ வாசஹம் பண்ணுகையும்-
வைஷ்ணவ அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதம்-சூரணை-116-

அதில் பிரதமத்தில் வைஷ்ணவனாய் இருப்பான் ஒருவனுக்கு ஸ்வ அதிகார அர்த்தமாக
அவஸ்ய அபேஷிதமாய் உள்ளவற்றை ஸூக்ரகமாக அருளிச் செய்கிறார் –

புறம்புண்டான பற்றுக்களை வாசனையோடு விடுகையாவது –
பிதரம்  மாதரம்  தாரான்-இத்யாதி படியே-பாஹ்ய விஷய சங்கங்களை அடைய
மறுவலிடாதபடி ச வாசனமாக விடுகை

(இது ஸரணாகதி ப்ரகரணம் ஆகையால் ஸரணாகதி கத்யம் போல் இங்கும் -பிதரம்  மாதரம்  தாரான்-என்கிற வசனத்தை உதாஹரித்து அருளுகிறார்)

(பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணி ஸ் க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் –
லோக விக்ராந்த சரனௌ தேவ்ரஜம் விபோ–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -6)

எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகை யாவது –
வேறு ஓன்று தஞ்சம் என்கிற நினைவு கலசாத படி –
நிருபாதிக ரஷகனான சர்வேஸ்வரனையே தஞ்சம் என்று ஸ்வீகரிக்கை-

இவ் இரண்டு வாக்யத்தாலும் சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அர்த்தத்தை சொல்லுகிறதாகவுமாம்-
எங்கனே என்னில் –
புறம்புண்டான பற்றுக்களை அடைய -என்று -சர்வ தர்மான்-என்கிற பதத்தில் அர்த்தத்தையும் –
வாசனையோடு விடுகையும் -என்று -பரித்யஜ்ய -என்கிற பதத்தில் அர்த்தத்தையும் –
எம்பெருமானை  -என்று -மாம் -பதத்தில் அர்த்தத்தையும் –
ஏ-என்கிற ஏவகாரததாலே-ஏக -பதத்தில் அர்த்தத்தையும் –
தஞ்சம் -என்கையாலே -சரண் -பதத்தில் அர்த்தத்தையும் –
பற்றுகையும் -என்று -வ்ரஜ -பதத்தில் அர்த்தத்தையும் –
அடைவே சொல்லுகையாலே –

பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை யாவது -உபாய பல்குத்வமும் –
உத்தேச்ய துர்லப்த்வமும் -ஸ்வ கிருத தோஷ பூயத்ஸ்வமும் அடியாக வரும்
சங்க த்ரயமும் இன்றிக்கே பலம் தப்பாமல் சித்திக்கும் என்று விஸ்வசித்து இருக்கை –

பேற்றுக்கு த்வரிக்கை யாவது -இப்படி விஸ்வசித்து -பேறு சித்திக்கும் போது காண்கிறோம் -என்று
இருக்கை அன்றிக்கே -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்–திருவாய்மொழி -என்றும் –
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –திரு வாய் மொழி -என்கிறபடியே –
க்ரம ப்ராப்தி பற்றாமல் பதருகை-
ஆக இவை இரண்டாலும் -உபாய உபேய அதிகார அபேஷிதங்களான–மகா விசுவாசத்தையும் ப்ராப்ய த்வ்ரையும் சொல்லுகிறது –

(ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-8-7–)

(ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-)

இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்கை யாவது -பரம பதத்திலே போய் பகவத் அனுபவ
கைங்கர்யங்களைப் பண்ணுகை யாகிற பேற்றில் த்வரை நடவா இருக்கச் செய்தேயும் –
இச் சரீரத்தோடே இருக்கும் நாள் -தானுகந்த ஊர் –திரு நெடும்தாண்டகம் -என்கிறபடியே சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களிலே -கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லி –திருக் குறும் தாண்டகம் -என்று மண்டுகை யாகிற
ப்ராவண்யத்தை உடையனாய் -அவ்வோ திவ்யதேசங்களிலே நிற்கிறவனுடைய கல்யாண குண அனுபவமும் –
அதடியாக கரண த்ரயத்தாலும் அவன் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமும் கால ஷேப விஷயமாம் படி இருக்கை –

(அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-)

(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-)

இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை யாவது –
கீழ்ச் சொன்ன இவ் ஆகாரங்கள் எல்லாம் உடையராய் இருக்கும் வைஷ்ணவர்களை கண்டால் –
இந்தளத்திலே தாமரை பூத்தால் போலே -இந்த விபூதியிலே இங்கனேயும் சிலர் உண்டாவதே என்று
அவர்கள் வைபவத்தை அறிந்து -அவர்கள் அளவில் ப்ரீதி உக்தனாய் இருக்கை –
கீழ்  சொன்னவை எல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது –

(இவ் ஆகாரங்கள் எல்லாம் உடையராய் இருக்கும் வைஷ்ணவர்களை கண்டால்-என்றது
ஸர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக ம்பெருமானை உபாயமாகப் பற்றுகையும்
விச்வாஸ பாஹுல்யமும்
ப்ராப்ய த்வரையும்
திவ்ய தேசங்களில் ப்ராவண்யமும்
அங்குள்ள எம்பெருமானுடைய குண அனுபவ கைங்கர்யங்களே போது போக்காய் இருக்கையும் போன்றவை
இந்த விபூதியிலே இங்கனேயும் சிலர் உண்டாவதே-என்கையாலே இவ்வதிகாரிகளுடைய த்வர்பல்யமும் பிரார்த்தநீயத்வமும் தோற்றும்)

திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதன் ஆகையாவது -மந்த்ராந்தரங்களின் உடைய அருகும் மறந்தும் போகாதே
த்யாஜ்ய உபாதேயங்களைத் தெளிய அறிவிக்கும் திருமந்த்ரத்திலும் –
அதன் அர்த்தத்துக்கு விவரணமான த்வயத்திலும் நிஷ்டனாய் இருக்கை-

ஆச்சார்ய ப்ரேமம் கனத்து இருக்கை -யாவது
கீழ்ச் சொன்ன ஆகாரத்தை எல்லாம் உபதேசத்தாலே தனக்கு உண்டாக்கின ஆச்சார்ய
விஷயத்தில்-யஸ்ய தேவே பரா பக்திர் யேதா தேவே ததா குரௌ-என்கிறபடியே
ப்ரேமம் அதிசயித்து இருக்கை –

(யஸ்ய தேவே பரா பக்திர் யேதா தேவே ததா குரௌ–யாவன் ஒருவனுக்கு தேவர் பக்கலிலே பரமான பக்தி இருக்கிறதோ
அந்த தேவர் பக்கலிலே போலே குருவின் பக்கலிலும் அதே பரமமான பக்தி இருக்கிறதோ
அந்த மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அர்த்தங்கள் பிரகாஸியா நிற்கும்)

ஆச்சார்யன்  பக்கலிலும் -எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய் போருகை யாவது –
நித்ய சம்சாரியான தன்னை நித்ய ஸூரிகள் பேற்றுக்கு அர்ஹனாம் படி -இரும்பைப் பொன்னாக்குவாரைப் போலே –
திருத்தின ஆச்சார்யன் பக்கலிலும் -அத்வேஷாதிகளை விளைத்து கொண்டு வந்து ஆச்சார்ய விஷயத்தோடே சேர்த்த
எம்பெருமான் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி உடையனாய் போருகை –

ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் பரம சாத்விகனோடே சகவாசம் பண்ணுகை-யாவது
தான் கலங்கினாலும் கலங்காமல் நோக்குகைக்கு உறுப்பாகவும் –
கீழ்ச் சொன்ன ஆகாரங்கள் தனக்கு வர்திக்கைக்கு உறுப்பாகவும் –
தத்வ யாதாத்ம்ய ஞானமும் -அப்ராப்த விஷய விரக்தியும் -இவை தான் இரண்டும்
நமக்கு உண்டு என்று இறுமாப்பு அற்று இருக்கை யாகிற சாந்தியும் –
உடையனாய் இருக்கும் பரம சத்வ நிஷ்டனாய் இருப்பான் ஒரு பாகவதனோடே கூடே வசித்துப் போருகை –

வைஷ்ணவ அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதம் என்றது -இவை இத்தனையும்
வைஷ்ணவன் என்று இருப்பான் ஒரு அதிகாரிக்கு அவசியம் உண்டாக வேணும் -என்கை-

——————————————————————-

இந்த அதிகாரிக்கு ரகஸ்ய த்ரயமும் அனுசந்தேயம் –சூரணை-117-

இப்படி இருக்கும் இவனுக்கு அனுசந்தான விஷயம்-வகுத்து அருளிச் செய்கிறார் மேல்-

அதாவது –
கீழ் சொன்ன ஆகாரங்களை உடையனாய் இருக்கும் இவ் அதிகாரிக்கு அந்த ஞான அனுஷ்டானங்களுக்கு
வர்த்தகமான ரஹஸ்ய த்ரயமும் அனுசந்தான விஷயமாக வேணும் -என்கை-

————————————————————

எல்லா பிரமாணங்களிலும் தேஹத்தாலே பேறு என்கிறது –
திரு மந்த்ரத்திலே ஆத்மாவால் பேறு என்கிறது-
சரம ஸ்லோகத்திலே ஈஸ்வரனாலே பேறு என்கிறது –
த்வ்யத்தில் பெரிய பிராட்டியாரால் பேறு என்கிறது –சூரணை-118-

இனி த்வ்யத்தில் சொல்லுகிற அர்த்தத்தின் வீறுடைமையை அறிவிக்கைக்காக –
சாஸ்திரம் -திரு மந்த்ரம் -சரம ஸ்லோகம் இவற்றில் சொல்லுகிற பிரகாரங்களை அருளிச் செய்து கொண்டு சென்று –
பின்னை அது தன்னை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சேதனுடைய விசிஷ்ட வேஷத்திலே நோக்கான சகல சாஸ்திரங்களிலும் –
சாதன அனுஷ்டான போக்யமான தேஹத்தாலே இவனுக்கு புருஷார்த்த லாபம் என்கிறது –

நிஷ்க்ருஷ்ட வேஷத்திலே நோக்கான திரு மந்த்ரத்திலே இவன் ஸ்வ ரஷணத்தில் நின்றும்
கை வாங்கினால் ஒழிய ஈஸ்வரனுடைய ரஷகத்வம் ஜீவியாமையாலே -தத் பிரவ்ருத்தி விரோதியான
ஸ்வ பிரவ்ருதியை விட்டு இருக்கும் ஆத்மாவாலே புருஷார்த்த லாபம் என்கிறது –

(ஈஸ்வரனுடைய ரஷகத்வம்—ஸஹாயாந்தர ஸம் சர்க்க அசஹனாய் உபாய பூதனுடைய ரக்ஷகத்வம்
தத் பிரவ்ருத்தி-ஈஸ்வர ப்ரவ்ருத்தி)

ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தில் நோக்கான சரம ஸ்லோகத்தில் இவனுடைய ஸ்வீகாரமும் மிகையாம்படி
தானே கைக் கொண்டு ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு -தன் திரு அடிகளிலே
சேர்த்துக் கொள்ளும் ஈஸ்வரனாலே புருஷார்த்த லாபம் என்கிறது –

(ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமாவது -ஸகல சாஸ்திரங்களிலும் சாதன தயா விஹிதங்களான ஸர்வ தர்மங்களையும்
ஸ வாசனமாகத் த்யஜித்துத் தன்னைப் பற்றச் சொல்லுகை
ஸ்வீகாரமும் மிகையாம்படி–இவன் பண்ணும் ஸ்வீ காரமும் அநுபாயமாம்படி –அதிகமாம்படி -என்னவுமாம்
கைக் கொண்டு-அங்கீ கரித்து)

ஈஸ்வரனுடைய லஷ்மீ விசிஷ்ட வேஷத்திலே நோக்கான த்வயத்திலே -விசேஷண பூதையான
பெரிய பிராட்டியாராலே புருஷார்த்த லாபம் என்கிறது -என்கை-

—————————————————————–

பெரிய பிராட்டியாராலே பேறு ஆகையாவது -இவள் புருஷகாரம் ஆனால் அல்லது
ஈஸ்வரன் கார்யம் செய்யான் என்கை –சூரணை -119

உபாயம் ஈஸ்வரனாய் இருக்க -இவளாலே பேறு ஆகை யாது என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்கள் இரண்டும் பண்ணுவான் ஈஸ்வரனாய் இருக்க –
பெரிய பிராட்டியாராலே இவனுக்கு பேறு ஆகை ஆகிறது -இவனுடைய அபராதத்தைப் பாராதே
ரஷிக்கும் படி இவள் புருஷகாரம் ஆனால் ஒழிய ஈஸ்வரன் இவன் கார்யம் செய்யான் -என்றபடி –

———————————————

த்வயத்துக்கு அதிகாரி ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடையவன்-சூரணை -120-

கீழ் சாமான்யத்திலே வைஷ்ணவ அதிகாரிக்கு அபேஷிதங்கள் இறே சொல்லிற்று –
விசேஷித்து த்வயத்துக்கு அதிகாரியாமவனுக்கு அபேஷிதத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது சித்தோ உபாய வர்ண பிரதிபாதிகமான த்வயத்துக்கு அதிகாரி –
அகிஞ்சனோ அகதி -த்வமேவோ பாயபூதோமே பவ
அகிஞ்சனோ அநந்ய கதி சரண்யா -என்றும்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -என்றும் சொல்லுகிறபடி
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் ஆகிய இரண்டும் உடையவன் என்கை –

(அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய அகிஞ்சனோ அகதி த்வமே உபாயபூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி ரித்யுக்தா சா தேவேஸ்மின் பிரயுஜ்யதாம்)

(நான் அபராதங்களுக்கு எல்லாம் ஆலயமாகா நின்றேன்
அகிஞ்சனனாய் அகதிகனாகா நின்றேன்
நீ எனக்கு உபாயமாக வேணும் என்கிற பிரார்த்தனா ரூபா புத்தி ஸரணாகதி ஆகிறது
அது இந்தத் தேவன் பக்கலிலே பிரயோகிக்கப் படுவது)

(அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்
உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.-6-10-10)

———————————————————

இவை இரண்டும் பிரபந்த பரித்ராணத்திலே சொன்னோம்-சூரணை -121-

இவை இரண்டின் வேஷமும்  தான் எங்கனே என்ன-அருளிச் செய்கிறார் –
அதாவது
உபாயாந்தர ராஹித்யமாகிற ஆகிஞ்சன்யத்தின் வேஷமும் –
ரஷகாந்திர ராஹித்யமாகிற அநந்ய கதித்த்வத்தின் வேஷமும் –
பிரபந்த பரித்ராணம் ஆகிற பிரபந்தத்திலே ஸூஸ்பஷ்டமாகச் சொன்னோம் –
அதிலே கண்டு கொள்க-என்கை-

(முமுஷூவாய் -மோஷார்த்தமாக-சர்வேஸ்வரனைப் -பற்றி இருக்குமவனுக்கு அநந்ய கதித்வமும் -ஆகிஞ்சன்யமும் வேணும் –
அநந்ய கதித்வம் ஆவது –களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்கிறபடியே
சர்வேஸ்வரனை ஒழிய வேறு ஒரு ரஷகர் இல்லை என்று இருக்கை-

(களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே.–திருவாய் -5-8-8)

ப்ராதாக்கள் புத்ரர்கள் மாதா பிதாக்கள் ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரஷகராகக் குறை என் என்னில்
ப்ராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி பக்கலிலும் -ராவணன் பக்கலிலும் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் பக்கலிலும் கம்சன் பக்கலிலும் காணலாம் —
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி பக்கலிலும் ஹிரண்யன் பக்கலிலும் காணலாம் –

மாதா பிதாக்கள் யௌவன விரோதி என்று உபேஷித்தல்-ஷாம காலம் வந்தவாறே ஆள் பார்த்து தூற்றிலே பொகடுதல்-
விலை கூறி விற்றல் -ஆபத்து வந்தவாறே நெகிழ நினைத்தல்
அர்த்த ஷேத்ராதி களுக்காக எதிரிட்டுக் கொல்லுதல்-முடியும் அவஸ்தையிலே
சோர்வினால் பொருள் வைத்தது யுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
ஈஸ்வரனை ஸ்மரித்துக் கரை மரம் சேர ஒட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யா நிற்பர்கள்-
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் –

(சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-)

இவர்கள் ரஷகர் அல்லரோ யாகிலும் நாட்டாருக்குக் கண் காட்டியாய்ப் போருகிற சந்திர ஆதித்யர்கள் ரஷகராகக் குறை என் -என்னில்
அவர்களும் ஈஸ்வர ஆஜ்ஞைக்கு அஞ்சி தாங்கள் நினைத்த படி சஞ்சரிக்கப் பெறாதே
நாழிகை கூறிட்டு -பெரியாழ்வார் -4-1-8-உதிப்பது அஸ்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும்
ஹிரண்ய ராவணாதிகள் கையிலே அகப்பட்டு அவர்களுக்கு இழி தொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரஷகராக மாட்டார்கள்

(நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1- 😎

த்ரை லோக்யத்துக்கும் பாலகனான இந்த்ரனும் எப்போதோ நம்பதம் நழுவப் புகுகிறது என்று அஞ்சி சபோபஹதனாய்
இந்த்ரஜித்தின் கையிலே அகப்பட்டுக் கட்டுண்டு
மகாபலி போல்வார் கையிலே ஐஸ்வர் யத்தைப்  பறி கொடுத்து
கண்ணும் கண்ணீருமாய் கழுத்தும் கப்படமுமாய்க் -எளிவரவைக் காட்டும் வஸ்த்ரம் -கொண்டு திரிவான் ஒருவன் ஆகையாலே அவனும் ரஷகனாக மாட்டான் –

ப்ரஹ்மாவும் -மது கைடபர்கள் கையிலே அகப்பட்டு வேதங்களைப் பறி கொடுத்து -கண் இழந்தேன் -தனம் இழந்தேன் -என்று நிலம் துழாவு கையாலும்
ருத்ரன் கையிலே தலை அறுப்பு உண்கையாலும் ரஷகன் ஆகமாட்டான் –

ருத்ரனும் -சகல பிராணிகளையும் சம்ஹரிக்கையே தொழிலாக யுடையனாய்
விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தால் போலே இருக்கத்   தழல் நிற வண்ணனாய்-பெரிய திரு -6-1-3- தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அறுத்துத் தா பொரித்துத் தா –என்று கொடும் தொழிலைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்

(குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-)

தன்னை  ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் -என்று பிரதிஜ்ஞை பண்ணி
தன்னைத் தொழுத கைகளை கள்ளிக் காடு சீய்த்தால் போல் சீய்க்கக் கண்டு
உயிர் யுண்டாகில் உப்பு மாறி யுண்ணலாம் என்று நெற்றியிலே கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினன்   ஆகையாலும்

லோக குருவாய் தனக்குப் பிதாவான ப்ரஹ்மாவின் தலையைத் திருகிப் பாதகியாய் கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து கைத்தளையுமாய் கொண்டு
திரிவாரைப் போலே கையும் கபாலமுமாய் திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்கு தன்னை வெளியிட்டுக் கொண்டு திருவான் ஒருவன் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –

இனி அர்த்தம் ஆமோ என்று நிரூபித்தால் -கள்ளர் கொள்ளுதல் -காமம் கொள்ளுதல் -கோமுற்றார் கொள்ளுதல் –
ஜ்ஞாதி கொள்ளுதல் -வியாதி கொள்ளுதல் -பிறரோடு எதிரிட்டு விஷ பஷணம் பண்ணி தன்னைத் தானே முடித்துக் கொள்ளும்படி
பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரஷகம் ஆக மாட்டாது –

ஈஸ்வரன் -மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் -பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் -பெரிய திருமொழி -8-9-7-என்றபடி
தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகம் காட்டியும்
இன் சொல்லுச் சொல்லியும் ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ நின்ற வன்று தான் ஏறிட்டுக் கொண்டு
கழுத்திலே ஓலை கட்டித் தூது போயும் புருவம் நெரித்த உடத்திலே தேரை நடத்தியும் மார்விலே அம்பேற்றும்
சாவாமல் நோக்கியும் செத்தாரை மீட்டும்  நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தரிப்பாலே அகவையிலே நின்று
சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரஷகன் –

(பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே -8-9-7-)

இனி -ஆகிஞ்சன்யம் ஆவது -கர்ம ஜ்ஞான பக்திகளிலும்
அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் -அந்வயம் இன்றிக்கே
அவற்றுக்கு விபரீதங்களான வற்றாலே தான் பரிபூர்ணனாய் இருக்கிற இருப்பையும்
தன்னுடைய ஸ்வரூபம் சர்வ பிரகாரத்தாலும் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
நம்  கார்யத்துக்கு நாம் கடவோம் அல்லோம் -என்று இருக்கை-

இவை இரண்டையும்   யுடையனாய் ஈஸ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப்பரனாய் இருக்குமவனுக்கு
சரீர அவசான காலத்திலேயே ப்ராப்தி அணித்த வாறே -ந யாமி -என்று அருளிச் செய்த படியே –
ஈஸ்வரன் தானே சரக்காளாய் வந்து -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தேறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடே ஒரு கோவையாக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்து அருளும் —)

————————————————————

அதில் முற் கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திரு அடிகளை
உபாயமாகப் பற்றுகிறது –
பிற் கூற்றால் அச் சேர்த்தியிலே அடிமையை இரக்கிறது-சூரணை -122-

இனி த்வயத்துக்கு வாக்ய அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
இந்த த்வ்யத்தில் பூர்வ கண்டத்தாலே -ஸ்ரீ மத் -என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
நாராயண சரனௌ -என்று ஈஸ்வரன் திரு அடிகளை –
சரணம் ப்ரபத்யே -என்று உபாயமாகப் பற்றுகிறது –

உத்தர கண்டத்தாலே -ஸ்ரீ மதே -என்று பெரிய பிராட்டியாரையும் அவனுமான சேர்த்தியிலே
நாராயணாய-என்கிற சதுர்த்தியாலே கைங்கர்யத்தை அர்த்திக்கிறது -என்கை-

நமஸ்ஸூ கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பிரதிபாதகம் ஆகையாலே -அடிமையை இரக்கிறது -என்று இதிலே அந்தர்பூதம் –

——————————————————

ஸ்ரீ -என்று பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம்–சூரணை -123

இனி பிரதி பதம் அர்த்தம் அருளி செய்வதாக திரு உள்ளம் பற்றி ஸ்ரீ மத் பதார்த்தம்
அருளி செய்ய உபக்ரமிக்கிறார் –
ஸ்ரீ சப்தம் சம்பதாதிகளுக்கும் வாசகமாக லோகத்திலே நடந்து போரக் காண்கையாலே-அத்தை
வ்யாவர்த்திக்கைக்காக -ஸ்ரீ என்கிற இது பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம் -என்கிறார் –
ஆகை இறே -லஷ்மீ பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர் ஹரிபிரியா -என்ற திரு நாமங்களோடே சஹபடிதமாய் ஆயிற்று –

இது தான் எல்லா திரு நாமங்கள் போல் அன்றிக்கே -ஸ்ரீ ரிதி ப்ரதமம்
நாம லஷ்ம்யா -என்கிறபடியே இவளுக்கு பிரதம அபிதானமாய் இருக்கும் –
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -என்று அகாரம் ஈஸ்வரனுக்கு
பிரதம அபிதானம் ஆனால் போலே ஆயிற்று -இவளுக்கும் இது பிரதான அபிதானமாய் இருக்கும் படி –

இது அவனுடைய ரஷகத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வாபாவங்களைச் சொல்லக் கடவதாய் இருக்கும் –
இது இவளுடைய புருஷ காரத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வாபாவங்களைச் சொல்லக் கடவதாய் இருக்கும் –

—————————————————

ஸ்ரீ யதே ஸ்ரயதே –சூரணை -124

இனி இந்த ஸ்ரீ சப்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக ப்ரதமம் இதன் மேல் வந்த வ்யுத்புத்தி
த்வயத்தை அருளிச் செய்கிறார்-

அதாவது
ஸ்ரீ – சேவாயாம்-என்கிற தாதுவிலே -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ–ஸ்ரயத இதி ஸ்ரீ -என்று
சித்தமான கர்மிணி வ்யுத்புத்தியையும் -கர்த்தரி வ்யுத்புத்தியையும் சொன்னபடி –

——————————————–

இதுக்கு அர்த்தம்-எல்லாருக்கும் இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் –
இவள் தனக்கும் அவனைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும் -என்று –சூரணை-125-

இவ் வ்யுத்புத்தி த்வயத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
இவ்  உபய வ்யுதபுத்திக்கும் அர்த்தம் –
ஸ்ரீ யதே -என்று எல்லாரும் சேவிக்க படா நின்றாள் என்கையாலே –
சகல சேதனருக்கும் இவளைப் பற்றி தங்களுடைய சேஷத்வ ரூப ஸ்வரூப லாபமாய் –

ஸ்ரேயதே -என்று ஈஸ்வரனை சேவியா நின்றாள் என்கையாலே –
இவள் தனக்கும் ஈஸ்வரனைப் பற்றி தன்னுடைய ஸ்வரூப லாபமாய் இருக்கும் என்று -என்கை –

சேதன விஷயத்தில் சேஷித்வமும் ஈஸ்வர  விஷயத்தில் சேஷத்வமும் என்றும் உண்டாய் இறே இருப்பது –
ஆகையால் இந்த சேவ்யத்வ சேவகங்கள் இரண்டும் இவளுக்கு நித்தியமாய் செல்லா நிற்கும்-

(ஸ்ரீ” சப்தார்த்தம்–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

ஆக –
திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே
பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய் தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம் விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –

ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் –
வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி இவ் யுபாய ஸ்வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்

அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-

அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ்ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -ஸ்ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –

வ்யுத்பத்தித் த்வயத்தாலும் –
சேவிக்கப் படா நின்றாள் –
சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –
அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –

விஷ்ணு பத்நீ –
விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ –
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய்
பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
த்வம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –

ஆக –
மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –

புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ –
ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-

ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே –
சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே
ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –

அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் –
இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-

கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க –
அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –

பின்பு –
இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –

பின்பு
அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது –
நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –

நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து

இவை படுகிற நோவைக் கண்டு –
இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –

சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால் அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது

பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று
நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்

ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது

அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று –
நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –

தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –
ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –

ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –

சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –

அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்

ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-
ந கச்சின் ந அபராத்யதி -என்னும்

இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று
புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –

இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –

அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே –
அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –

நாயந்தே
இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –

ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று
நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி
தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –

அவனுடைய பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –

பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –

சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக் குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –

ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –

கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –

அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –

இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ –
சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –

ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது –
உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –

அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று
இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –

ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –)

(”ஸ்ரீ” சப்தார்த்தம்.” ஸ்ரீ ” என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்.
இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறு விதமாக அர்த்தம் கூறப்படுகின்றது.

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க,

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று)

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து,

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து,

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான
அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற
(அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி.

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் தான் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் எமை இன்னடி சேர்த்து அருளும்
திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே –2–

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் -சேதனம் அசேதனங்கள் ஆகிய அனைத்தும் தன்னை அடைந்து நிற்க
தான் அடைந்து -பிராட்டியாகிய தான் சர்வேஸ்வரனையும் சகல வஸ்துக்களையும் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து-சேதனர்கள் பயத்தால் கூறும் வார்த்தைகளை கேட்டும் அவற்றை எம்பெருமானை கேட்ப்பித்தும்
அகற்றும் வினை விலக்கி யிருதலை யன்புதனால் -சேதனர் எம்பெருமானார் இரண்டு பக்கங்களிலும் உள்ள அன்பினால்
எமை இன்னடி சேர்த்து அருளும் திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே

ஸ்ரீ -ஆறுவித வ்யுத்பத்திகள் உண்டே –
ஸ்ரேயதே அடையப்படுகிறாள் -ஸ்ரீயதே -அடைகின்றாள் –
அவனையும் அடைகிறாள் -சேதனர்களுக்குள் உள்ளும் புறமும் அடைகிறாள்
கேட்கிறாள்-கேட்ப்பிக்கிறாள்
கர்மங்களை நீக்குகின்றாள்-பரிபக்குவ நிலை கைங்கர்யம் செய்ய அருளுகிறாள்

இந்த மிதுனம் நம் மனத்தை விட்டு அகலாது நித்ய வாஸம் செய்து அருளுகின்றார்கள் என்றவாறு –

——————————————————

இப்போது இவளைச் சொல்லுகிறது  புருஷகாரமாக –சூரணை -126-

ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமும் ஆகிற ஆகார த்வயமும் உண்டானாப் போலே –
இவளுக்கும் புருஷகாரத்வமும் -ப்ராப்யத்வமும் ஆகிற ஆகார த்வயமும் உண்டு ஆகையாலே –
இதில் எவ் ஆகாரத்தை நினைத்து இவளை இப்போது சொல்லுகிறது -என்ன -அருளிச் செய்கிறார் –

புருஷகாரமாக -என்கையாலே உபாய வஸ்து விசேஷணமாய் இருக்கிற ஆகாரத்தை இட்டு
இவளுக்கும்  உபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பஷம் நிரஸ்தம்-

————————————————–

நீரிலே நெருப்பு கிளருமா போலே -குளிர்ந்த திரு உள்ளத்திலே -அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்குகாக –சூரணை -127-

ஈஸ்வரனுடைய நாராயணத்வ பிரயுக்தமான ஸ்வாபாவிக சம்பந்தாதி ஞானத்தை  உடையனாய் கொண்டு –
அவனை ஆஸ்ரயிக்கிற இச் சேதனனுக்கு இவளை புருஷகாரமாக  முன்னிட வேண்டுகிறது தான் என்-என்ன அருளிச் செய்கிறார் -அதாவது –

(ஸ்வாபாவிக சம்பந்தாதி ஞானத்தை–ஆதி ஸப்தத்தால்
ஸர்வ பூத ஸூஹ்ருத் வத்தையும் -ஸர்வ சமாஸ்ரயத்வத்தையும் சொல்லுகிறது)

சீதளமான ஜலத்திலே சென்று அணுக ஒண்ணாதபடி யான நெருப்பு கிளருமா போலே
ஸூஹ்ருதம் சர்வபூதானாம் சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே சர்வ பூத ஸூஹ்ருதத்வம் –
சமாஸ்ராயணீயத்வ சமத்வமாகிற ஸ்வபாவ விசேஷணங்களாலே பிரசன்னமாய் குளிர்ந்து இருக்கிற
திரு உள்ளத்திலே -பரி பூர்ண கஸி ஜனே ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா பவதி ச கதாசித் கலுஷதீ -என்கிறபடியே –

சேதனன் தீரக் கழியப் பண்ணின அபராதமடியாக ஷிபாமி ந ஷமாமி  -என்னும்படியான சீற்றம் பிறந்தால் – அவ் வபராதத்தை
பொறுப்பது கிமேதன் நிர்த்தோஷ க இஹா ஜகதி -(குண ரத்ன கோஸம் )இத்யாதி படியே -தன்னுடைய உபதேசாதிகளாலே அச் சீற்றத்தை ஆற்றி
தயையை ஜநிப்பிக்கும் இவளுக்காக -என்கை –

ஆகையாலே சம்பந்த ஞானம் பிறந்தவனுக்கும் -அபராத பயத்தால் -புருஷகார புரஸ்கரணம் அபேஷிதம் என்று கருத்து –

(கீதையில் யஞ்ஞ தபஸ்ஸுக்களுக்குப் போக்தாவாய்
ஸர்வ லோக மஹேஸ்வரனாய்
ஸர்வ பூதங்களுக்கும் ஸூ ஹ்ருத்தான
என்னை அடைந்து சாந்தி அடையா நிற்கும்
நான் எல்லோருக்கும் சமனாய் இருப்பேன்
எனக்கு ஜாத்யாதிகளால் நிஷ்க்ருஷ்டன் என்று வெறுக்கப்படுபவனும் இல்லை
உத்க்ருஷ்டன் என்று எனக்குப் பிரியனும் இல்லை
யாவர் சிலர் என்னை விசேஷித்து பக்தியால் பஜிக்கிறார்கள் அவர்கள் என் பக்கலிலேயாய் இருப்பார்கள்
நானும் அவர்கள் பக்கலிலேயாய் இருப்பன்)

(தாயே பிதாவைப் போலவே உன்னுடைய பிரியதமனானவன் பரிபூர்ணமான அபராதத்தை யுடைய ஜனத்தி பக்கலிலே
ஹிதத்தை நடத்த வேண்டுகையாலே ஒருக்கால் திரு உள்ளம் சீறா நிற்கும்)

(துஷ் க்ருதிகள் மூடராய் -நர அதமராய் -மாயையால் அபஹ்ருத ஞான ஸ்வ பாவத்தை யுடையராய் ஆஸூரமான
ஸ்வ பாவத்தை ஆஸ்ரயித்துக் கொண்டு என்னை அடையாது இருப்பார்கள்
ஆஸூர யோனிகளிலே எப்போதும் தள்ளா நிற்பன் என்ன அப்படி அன்று ஷமா குணங்களுக்கு விஷயமாக்கி அருள வேணும் என்னும்)

(ஸவ பஸேந யாகிலும் என்னுடைய பக்தனை யாவர் சில மனுஷ்யர் நிந்தையைப் பண்ணுகிறார்களோ அவர்கள்
நூறு கோடி பத்மம் இட்டு ஆராதித்தாலும் ஒரு காலும் அவர்களைப் பாரேன் -அவர்களை ஒரு காலும் ஷமியேன் -ஸ்ரீ வராஹ புராணம்
அவன் எவ்வாறு தீரக்கழிந்த அபசாரம் செய்தவனாக இருந்தாலும் -மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் –என்பதாய் உசித உபாயங்களால் தோஷங்களை விஸ்மரிப்பித்து எங்களுக்கு மாதாவாகா நின்றாய் -குணரத்ன கோசம் )

—————————————-

இவள் தாயாய் இவன் க்லேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்நியாய்-இனிய விஷயமாய் இருக்கையாலே
கண் அழிவற்ற புருஷகாரம்-சூரணை -128-

இத் தலையில் கார்யம் ஏறிட்டுக் கொண்டு அத்தலையை வசீகரித்தும் இரண்டு தலையும் பொருத்துகைக்கு
இவள் தான் கண் அழிவற்ற புருஷகாரமா என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
த்வம் மாதா  சர்வ லோகானாம் -என்றும் –
அகில ஜகன் மாதரம் -என்றும்
சொல்லுகிறபடியே இச் சேதனருக்கு இவள் மாதாவாய் –

தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார் -பெரிய ஆழ்வார் திரு மொழி -2-2-3-
என்கிறபடியே -அந்த சம்பந்தமடியாக இவர்களுடைய க்லேசம் கண்டால் சஹிக்க மாட்டாதே –என்கிறபடியே
அவன் தன்னை வைலஷண்யத்தை கண்டு பிச்சேறி தன் சொல் வழி நடக்கும் படி அபிமத விஷயமாய்
இருக்கையாலே -கண் அழி வற்ற புருஷகாரம்-என்கை-

(ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் –ஸர்வ லோகத்துக்கு நீ மாதா -தேவ தேவனான ஹரி பிதா –
உன்னாலேயும் அந்த விஷ்ணுவாலேயும் சராசராத்மகமான இந்த ஜகத்தானது போஷிக்கப்பட்டு இருக்கும்)

(தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன்
நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3-)

——————————————-

திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வருமவனை
பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா இறே-சூரணை-129-

எல்லாம் செய்தாலும் – நிரங்குச ஸ்வாதந்த்ரனான சர்வேஸ்வரன் சேதனருடைய
அபராதங்களை நிறுத்து அறுத்து தீத்துவன் -என்று நிற்கும் அளவில்-இவளாலே
பொறுப்பிக்கப் போமோ -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
தன்னை பத்து மாசம் தர்ஜன பர்ஜனம் பண்ணின அந்த ராஷசிகளுடைய அபராதங்களைக் கணக்கிட்டு –
சித்ரவதம் பண்ண உத்யோகித்து -நின்ற சொல் மிறுங்கனான திருவடியையும் உட்பட –
க குப்யேத -என்றும் –
ந கச்சின்ன அபராத்யதி -என்றும்
இத்யாதி உபதேசத்தாலே பொறுப்பிக்கும் அவள் –
மலராள் தனத்துள்ளான் –மூன்றாம் திரு அந்தாதி -3–என்றும்
மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் –பெரிய திரு மொழி -8-10-1–என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் –திரு வாய் மொழி -3-10-8-என்றும் சொல்லுகிறபடி

(தர்ஜன பர்ஜனம் பண்ணின–தர்ஜனமாவது ஆயுதங்களால் அடிக்கப் போகை
பர்ஜனமாவது -க்ரூர வாக்யங்களாலே மிரட்டுக்கை
சொல் மிறுங்கனான திருவடியை=சொல் வழியே போக வேண்டும்படியான மூர்க்கனான -சொல் கேளாதவனான என்றபடி
மர்க்கடமாகையாலே பிடித்தத்தை விடாது இறே
மண நோக்கம் -கல்யாண குணத்தை உண்டாக்கும் நோக்கம் என்றபடி
மண நோக்கமுண்டான்-என்று சொல்லுகையாலே -தத் அதீன சத்தாகத்வ ஏக தாரகத்வங்கள் தோற்றுகின்றன)

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-)

(வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே –8-10-1-)

(அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும் அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான் ஓர் துக்கம்இலனே.–3-10-8)

தன் யோக்யதையிலே குமிழ்  நீருண்டு
நின் அன்பின் வழி நின்று  சிலை பிடித்து எம்பிரான் ஏக- பெரிய ஆழ்வார் திரு மொழி -3-10-7-என்கிறபடி –
மாயா மிருகத்தின் பின்னே போ -என்னிலும் விளைவது அறியாதே அதன் பின்னே போம்படி
தன் சொல் வழி வருமவனை பொறுப்பிக்க வல்லவள் என்னுமிடம் -கிம்புநர் நியாய சித்தம் இறே -என்கை-

(மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-)

செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு -என்னும் படி இரண்டு தலைக்கும் தடுமாறாக உபகரித்து
தன் சொல் வழி போக வேண்டும் படியான திருவடியோடே மறுதலிக்கும் அவள் –
தான் முயங்கும் -என்னும்படியான போக்யதைக்குத் தோற்று -எத்தைச் செய்வேம் -என்று தலை தடுமாறி –
நின் அன்பின் வழி நின்று -அதனின் பின்னே படர்ந்தான் என்னும்படி விளைவது அறியாதே
முறுவலுக்கு தோற்று -சொல் வழி போம் அவனைப் பொறுப்பிக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே –
என்று இது தன்னை இவர் திரு தமையனாரும் அருளிச் செய்தார் இறே-

(வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-)

(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-)

(ராஜாவான ராவணனைப் பற்றி இருக்கையாலே பரதந்த்ரராய் அவனுடைய ஆஜ்ஜையாலே ப்ராவ்ருத்தராய் இருப்பாராய்
அவனுக்கு விதேயரான அடியார்களாய் இருப்பவர்களை ஸ்வாமி கார்யம் செய்தார்கள் என்று உகக்கைக்கு உறுப்பாய் இருக்கக்
கோபிப்பான் ஒருவன் உண்டோ -வானர உத்தமனாகையாலே உனது குரங்கு ஆட்டத்தின் மிகுதியே இறே இது –

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3|கார்யம் கருணமார்யேண   கஶ்சிந் நாபராத்4யதி ||-யுத்த  காண்டம்-ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44

நீ வதிக்கைக்கு யோக்யர் என்று கொண்டு இவர்கள் உனது நினைவால் பாபிகள் ஆகவும் எனது நினைவாலே ஸூபை களாகவுமாம்
அறிவுடையன் ஆனால் இவர்களுக்குக் கிருபை பண்ணுகை தான் ப்ராப்தம்
ஆர் தான் அபராதம் பண்ணாதார்
அவ்வருகு இவ்வருகு தோற்றித் திரிகிற யுனக்கு தாம ஸூஷ்மம் தெரியாதே
அயோத்யா ஜன பதத்தைத் துடிக்கப் பண்ணிப் போந்த பெருமாளை சாதித்து அன்றோ இங்கு வருவது
பெருமாள் திரு உள்ளத்திலே நோவுபட வார்த்தை சொன்ன என்னை நலிந்து அன்றோ இவர்களை நலிவது
ஓம் காண் பெருமாள் உம்மை விஜயம் சொல்லச் சொல்லி விட்டாரோ நலியச் சொல்லிச் சொல்லி விட்டாரோ)

———————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை –105–115–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 10, 2024

ஆய -என்கிற இத்தால் –
சென்றால் குடையாம் -என்கிறபடியே எல்லா அடிமைகளும்
செய்ய வேண்டும் என்று அபேஷிக்கிறது–சூரணை -105

ஆக நாராயண — பதத்தாலே -கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரன் படியை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி இதில் விபக்தி அம்சத்தாலே கைங்கர்யத்தை பிரார்திக்கிற படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
ஆய -என்கிற இந்த சதுர்தியாலே -சென்றால் குடையாம் –முதல் திரு அந்தாதி –53-என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
திருவனந்தாழ்வானை  போலே சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய வேணும் என்று அபேஷிக்கிறது -என்கை-

(ஆவிஸ்யு என்கிற அத்யா ஹ்ருதமான கிரியா பத்தத்தைக் கடாக்ஷித்து -எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும் என்று அபேஷிக்கிறது-என்று அருளிச் செய்கிறார்)

(சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-)

————————————————————–

நமஸ்ஸாலே  தன்னோடு உறவு இல்லை என்று வைத்து கைங்கர்யத்தை பிரார்த்திக்க கூடுமோ என்னில்-சூரணை -106

நமஸ்ஸாலே தனக்கு என்று ஒன்றை விரும்புகைக்கு ப்ராப்தி இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யம் சொல்லி இருக்க –
இக் கைங்கர்யத்தை தான் விரும்பி அபேஷிக்கை சம்பவியாது என்று
இருக்குமவர்கள் பண்ணும் ப்ரசனத்தை அனுவதிக்கிறார் –

————————————————–

படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்கிறபடியே கைங்கர்ய பிரார்த்தனை
வந்தேறி அன்று -ஸ்வரூப பிரயுக்தம் –சூரணை -107

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே –பெருமாள் திருமொழி –4-9-என்று
அத்யந்த பாரதந்த்ர்யத்தோடே கைங்கர்ய பிரார்த்தனையும் சொல்லுகிற படியே கைங்கர்ய பிரார்த்தனை –
ஸ்வ போக்த்வத்வ ரூப அஹங்கார பிரயுக்தமாய் கொண்டு வந்தேறியானது அன்று –
சேஷிக்கு அதிசயத்தை விளைத்து அல்லது தான் தரியாத
படியான தன் ஸ்வரூபத்தை பற்றி வந்தது -என்கை-

(சேஷிக்கு அதிசயத்தை விளைத்து-கிஞ்சித் காரம் செய்து-)

(சேஷத்வ லக்ஷணம்-பர கத அதிசய ஆதான இச்சையா உபாதே யாத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷக பர சேஷி)

(செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-)

—————————————————-

ஆகையால் வழு  இலா அடிமை செய்ய வேண்டும் நாம் (3-3-1-)-என்கிற பிரார்த்தனையைக் காட்டுகிறது –சூரணை -108

உக்தத்தை ஹேதுவாய் கொண்டு சதுர்த்தியின் கைங்கர்ய பிரார்த்தனா பிரகாசத்வத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கைங்கர்ய பிரார்த்தனை வந்தேறி அன்றிகே ஸ்வரூப பிரயுக்த–என்கிற பிரார்த்தனையை
இச் சதுர்த்தி பிரகாசிப்பிகிறது -என்கை-

(ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

—————————————————

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்-என்கிற படி
காண்பதற்கு முன்பு  உறக்கம் இல்லை –
கண்டால் -சதா பஸ்யந்தி -ஆகையால் உறக்கம் இல்லை –சூரணை-109

இனி இந்த கைங்கர்ய ப்ரார்தனை இடை விடாமல் நடக்கைக்கு உறுப்பான ப்ராப்ய ருசியை உடையார்
படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இமையோர்கள்  குழாம் தொழுவதும்  சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல் –திரு விருத்தம் –97-என்று
நித்ய ஸூரிகளுடைய திரளானது அநந்தரம் பண்ணுகிற சர்வேஸ்வரனை கண்கள் நிறையும் படி
கண்டு ஒழிய கழியாதபடியான காதலிலே நிலை நின்ற காதலிலே நிலை நின்றவர்களுக்கும்
கண்கள் உறங்குதல் உண்டோ -என்னுமா போலே
விஷயத்தை காண்பதற்கு முன் -ஞான சங்கோச ரூபமான உறக்கம் இல்லை –
கண்ட காலத்தில் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே
சதானுபவம் பண்ணுகையாலே உறக்கம் இல்லை -என்கை-

(எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-)

————————————————

பழுதே பல காலும் போயின -என்று இழந்த நாளுக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லை –சூரணை -110

இன்னும் ஒரு ஹேதுவினாலே இவனுக்கு உறக்கம் இல்லாமையை அருளிச் செய்கிறார் –
அதாவது
செங்கண் அடலோத வண்ணர் அடி அரவணை மேல் கண்டு தொழுதேன்
பல காலும் பழுதே போயின என்று அஞ்சி அழுதேன் –முதல் திரு அந்தாதி -16-என்று
விஷயத்தைக் கண்டு அனுபவித்தவாறே –
இப்படி அனுபவிக்கைக்கு உடலான அநேக காலம் எல்லாம் வியர்த்தமே போய் விட்டதே என்று –
இழந்த நாளை நினைத்து க்லேசித்து கூப்பிடுகிறவனுக்கு மேல் உள்ள நாளில் உறக்கம் வர வழி இல்லை -என்கை-

(செங்கண் -பரத்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்த கண்களை யுடையவராய்
அடலோத வண்ணர் அடி–ஆஸ்ரித விரோதி நிரஸனத்துக்கு உடலான பராபி பவந சாமர்த்தியத்தை யுடையவராய்
சமுத்திரம் போலே காம்பீர்யத்தையும் திருமேனி வர்ணத்தையும் யுடைய வரான எம்பெருமானுடைய திருவடிகளை)

(பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி—-16–)

———————————————————–

அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்னா நின்றார்கள் இறே-சூரணை -111

இன்னம் இவ் விஷயத்தில் அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தை இசைவிக்கிறார் –
அதாவது
என்னைப் பெறுகைக்காக திருப்பதிகளிலே நிற்பது -இருப்பது -கிடப்பதாக நிற்க-
அக் காலத்தில் நான் ஞான லாபமான ஜென்மத்தை உடையனாக பெற்றிலேன் –
அந்த ஜன்மம் உண்டான பின்பு -அவனை ஒரு காலும் மறந்திலேன் -என்று சொல்லா நின்றார்கள் இறே –

ஆக
ப்ராப்ய வை லஷண்ய ஞானம் பிறந்தார் படி இது ஆகையாலே –
இந்த கைங்கர்ய ப்ரார்தனை இடைவிடாமல் நடக்கும் என்று கருத்து –

(நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-)

(ஆக -கீழ்ச சொன்ன ஹேதுக்கள் எல்லாவற்றாலும் -அதாவது
சதுர்த்தியினாலே கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லுகையும் –
கைங்கர்யம் தான் இல்லாத போது சேஷத்வம் இல்லையாம் படியே சேஷத்வ உபஷ் டம்பகமாய் இருக்கையும்
இந்த சேஷத்வம் தான் ஆத்மாவுக்கு அசாதாரண நிரூபகமாய் இருக்கையும்
ஆத்மா தான் நித்யனாய் இருக்கையும்
ப்ராப்ய வை லக்ஷண்யம் அடியாக ப்ராப்ய ருசி யுடையராய் இருக்கையும்
ஆக பிராமண ப்ரமேய ப்ரமாதாக்களை அருளிச் செய்தார் ஆய்த்து)

—————————————————–

இவ் அடிமை தான் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்கிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் அனுவர்த்திக்கும் –சூரணை -112

இனி இந்த கைங்கர்யத்துக்கு தேச காலாதி நியமம் இல்லாமையை அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமான இந்த கைங்கர்யம் தான் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –திரு வாய் மொழி –3-3-1-என்று
ஒழிவில்லாத காலம் எல்லாம் சர்வ தேசத்திலும் உடனாய்
சர்வ அவஸ்தையிலும் பிரியாது நின்று -என்கிற படியே
சர்வ தேசத்திலும்
சர்வ காலத்திலும்
சர்வ அவஸ்தையிலும்
நடந்து செல்லும் என்கை –

(ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

——————————————————–

எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –சூரணை -113

பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –
திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –
இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –

அதாவது –
பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள ஸூத்ரம் போல் அன்றிக்கே –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –
எட்டு  திரு அஷரமாய்-
மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –

(திரு மந்த்ரத்தை மங்கள ஸூத்ரமாக நிரூபித்து
அதிலே த்வயமாகிற அச்சுத தாலியையும் முளைத் தாலியையும்
வயிர மணி ஸ்தானத்தில் 32- எழுத்துத்தான சரம ஸ்லோகத்தையும் சேர்த்து
ஆத்மாக்களுக்கு அநந்யார்ஹத்வ ப்ரகாசகமாகக் கட்டினான்)

——————————————————–

இத்தால் ஈஸ்வரன் ஆத்மாக்களுக்கு பதியாய் நின்று ரஷிக்கும் என்கிறது –சூரணை -114

இப்படி நிரூபித்து சொன்ன இத்தால் எவ்வர்த்தம் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
இத்தை மங்கள ஸூத்ரமாக சொன்ன இத்தால்-
ஈஸ்வரன் இத்தோடு அந்வயமுடைய ஆத்மாக்களுக்கு
பதியாய் நின்று ரஷிக்கும் என்று சொல்கிறது -என்கை-

——————————————————–

ஆக திரு மந்தரத்தால் –
எம்பிரானுக்கே உரியேனான நான்
எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும்
சர்வ சேஷியான நாராயணனுக்கே
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் –
என்றது ஆயிற்று –சூரணை -115

இனி இம் மந்தரத்தால் பிரதிபாதித்த அர்த்தத்தை ஸங்க்ரஹித்துச் சொல்லி
இத்தை நிகமித்து அருளுகிறார் –
ஆக என்று
கீழ் பரக்க அருளிச் செய்த எல்லாவற்றையும் தொகுத்து அருளிச் செய்கிறார் என்னும் இடம் தோற்ற

எம்பிரானுக்கே உரியேனான நான் -இதில்
எம்பெருமானுக்கு -என்று சதுர்த்யந்தமான பிரதம அஷரத்தில் அர்த்தத்தையும் –
அவதாரணத்தாலே-மத்யம அஷரத்தில் அர்த்தத்தையும்
உரியேனான நான் -த்ருதீய அஷரத்தில் அர்த்தத்தையும் -சொல்லுகையாலே –
பிரதம பதத்தை ஸங்க்ரஹித்த படி

எனக்கு உரியேன் அன்றிக்கே ஒழிய வேணும் -இதில்
எனக்கு உரியன் -என்று ஷஷ்டைந்தரமான மகார அர்த்தத்தையும் –
அன்றிக்கே ஒழிய -என்கையாலே நகார அர்த்தத்தையும்
வேணும் -என்கையாலே -இவ் அர்த்தம் சேதனனுக்கு பிரார்தநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கையாலே
மத்யம பதார்த்தைதை ஸங்க்ரஹித்த படி –

சர்வ சேஷியான  நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்ய பெறுவேனாக வேணும் -இதில்
சர்வ சேஷியான நாராயணனுக்கே -என்று கைங்கர்ய பிரதி பந்த சம்பந்தியையும் –
கைங்கர்ய பிரார்த்தனா பிரகாசிகையான சதுர்தியையும் –
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் -என்று
கைங்கர்ய பிரார்த்தானா பிரகாரத்தையும் –
த்ருதீய பதார்த்தை ஸங்க்ரஹித்தபடி

என்றதாயிற்று -என்றது
என்று சொல்லிற்று ஆயிற்று -என்கை –

விஸ்தரேண அருளிச் செய்தததை மீளவும் இப்படி ஸங்க்ரஹித்து அருளிச் செய்தது
திரு மந்திர அர்த்தத்தை எல்லோரும் அனுசந்திதிக்கைக்காக –

ஆகையால் எல்லார்க்கும் இவ் அர்த்தம் எப்போதும் அனுசந்தேயம்

(எப்போதும் -அத்யயன அநத்யயன கால நியமம் இன்றியிலே நித்யங்களைப் போலே எக்காலத்திலும் என்றபடி -)

(இப்படி அருளிச் செய்தலால் நவவித சம்பந்தமும் ஸூசிதமாயிற்று
அகாரத்தாலே பிதா புத்ர சம்பந்தமும்
அவ ரஷணே -தாது அர்த்த பலத்தாலே ரஷய ரக்ஷக சம்பந்தமும்
சதுர்த்தியாலே சேஷ சேஷி பாவ சம்பந்தமும்
உகாரத்தாலே பதி பார்யா சம்பந்தமும்
மகாரத்தாலே -ஞாதர் ஜ்ஜேய சம்பந்தமும்
நமஸ்ஸாலே -ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தமும்
நாராயண பாதத்தால் சரீர சரீரீ சம்பந்தமும்
அயன பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தமும்
ஆய பதத்தாலே போக்ய போக சம்பந்தமும் –சொல்லித் தலைக் கட்டுகிறது)

———————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை –95–104–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 10, 2024

நாராயணன் என்றது நாரங்களுக்கு அயநம்  என்ற படி–சூரணை-95

அநந்தரம் நாராயண பத அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
நாராயண பதம் தான் -நாரணாம் அயநம் ய ச நாராயண -என்றும் –
நாரா அயநம் யஸ்ய ச நாராயண -என்றும்
தத் புருஷ பஹூ வ்ரீஹி ரூப சமாச த்வய சித்தம் ஆகையாலே –
அதில் தத் புருஷனில் அர்த்தத்தை முந்துற அருளிச் செய்கிறார்

(பேறு பலம் புருஷார்த்தம் ப்ராப்யம் உபேயம் பர்யாய சொற்கள்
புருஷனாலே அர்த்திக்கப் படுவதே புருஷார்த்தம் -அஜீரணம் தொலைந்த பிள்ளை பசி சொல்ல சொல்லத் தானே
கஞ்சி தொடங்கி கிரமமாக தருவது போலே – )

———————————————————

நாரங்கள் ஆவன நித்ய வஸ்துக்களினுடைய திரள் –சூரணை -96

நாரங்கள் ஆகிறவை தாம் எவை -என்ன அருளிச் செய்கிறார் –
நார பதம் –
நர -என்றும்-நார -என்றும் -நாரா -என்றுமாய் –
ரிங்க்ஷயே-என்கிற தாதுவிலே -ர -என்ற பதமாய் -ஷயிக்கும் வஸ்துவைச் சொல்லி –
நகாரம் அதை நிஷேஷித்து –
நர -என்று ஷயம் இல்லாத நித்ய வஸ்துவைக் காட்டி –

சமூஹார்த்தத்திலே -அன்-பிரத்யமும் -ஆதி வ்ருத்யுமாய் -நார -என்று நித்ய வஸ்து சமூகத்தைச் சொல்லி –

நாரா -என்று பஹூ வசனம் ஆகையாலே -சமூக பாஹூள்யத்தைச் சொல்லுகையாலே –
நித்ய வஸ்துகளினுடைய திரள் -என்கிறார் –

இதில் -நித்ய -என்கையாலே -நர -சப்தார்த்தமும் –
வஸ்துக்கள்-என்கையாலே -நார -சப்தார்த்தமும் –
அவற்றின் உடைய -திரள்-என்கையாலே பஹூ வசநார்த்தமும் சொல்லப் பட்டது இறே-
(கறவை கணங்கள் பல போல மூன்றும் இங்கும் )

————————————————–

இவை ஆவன
ஞான ஆநந்த அமலத்வாதிகளும் –
ஞான சக்தியாதிகளும் –
வாத்சல்ய சௌசீல்யாதிகளும் –
திரு மேனியும் –
காந்தி சௌகுமார்யாதிகளும் –
திவ்ய பூஷணங்களும்-
திவ்ய ஆயுதங்களும் –
பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும் –
நித்ய ஸூரிகளும் –
சத்ர சாமராதிகளும் –
திரு வாசல் காக்கும் முதலிகளும் –
கணாதிபரும்-
முக்தரும் –
பரம ஆகாசமும் –
பிரகிருதியும் –
பத்தாத்மாக்களும் –
காலமும் –
மஹதாதி விஹாரங்களும் –
அண்டங்களும் –
அண்டத்துக்கு உள் பட்ட தேவாதி பதார்த்தங்களும் —சூரணை-97-

தாத்ருசங்களானவை தாம் எவை-என்ன -அருளிச் செய்கிறார்
ஞான ஆநந்த அமலத்வாதிகள் -ஆவன –
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –
ஆதி சப்த்தத்தாலே -அனந்த்தத்வத்தைச் சொல்லுகிறது –

ஞான சக்த்யாதிகள் -ஆவன –
நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான சமஸ்த கல்யாண குணங்களுக்குப்
பிரதானமாய் இருந்துள்ள -ஞான சக்தி பல ஐஸ்வர்யம் வீர்ய தேஜஸ் களாகிற ஷட் குணங்கள் –

வாத்சல்ய சௌசீல்யாதிகள் -ஆவன
அந்த ஷட் குண்ய ஆயத்தமான -வாத்சல்ய சௌசீல்ய ஸ்வாமித்வ
சௌவ்லப்யாதி அஸங்க்யேய கல்யாண விசேஷங்கள்-

திரு மேனி -ஆவது –
அசாதாரணமான திவ்ய மங்கள விக்ரகம் –
ஏக வசனம் ஜாத் அபிப்ராயமாய்-நித்யமான திவ்ய விக்ரகத்தையும் –
ஐச்சிகமாக பரிகிரஹிக்கும் விக்ரஹாந்தரங்களையும் சொல்லுகிறது –
அல்லாத போது ஒரே சமூகமாக எண்ணி வருகிற பிரகரணத்துக்குச் சேராது –
இது தான் நடுவில்  திரு வீதி பிள்ளை பட்டர்-ஆச்சான் பிள்ளை -இவர்கள் அருளிச் செய்த
பிரபந்தங்களிலே ஸூஸ்பஷ்டம் –

காந்தி சௌகுமார்யாதிகள் -ஆவன –
அந்த விக்ரக குணங்களான -சௌந்தர்ய சௌகுமார்ய லாவண்ய யவ்வனாதிகள் –

திவ்ய பூஷணங்கள் -ஆவன –
ஆபரண சூரணையிலே பாஷ்யகாரர் அருளிச் செய்தபடியே –
க்ரீடாதி நூபுரமந்தமாக -அத் திருமேனிக்குச் சாத்தும் அசங்க்யேயமான திரு ஆபரணங்கள் –

திவ்ய ஆயுதங்கள் -ஆவன –
அழகுக்கும் ஆஸ்ரய விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருந்துள்ள –
சங்கு சக்கர கதா அஸி சார்ங்காதி அசங்க்யேய ஆயுத விசேஷங்கள் –

பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சியார் -ஆவார் –
ஸ்ரீ வல்லப ஏவம் பூமி நீளா நாயக –
தேவி த்வாமனு நீளயா சஹா மஹீ தேவ்யா சஹஸ்ரம் ததா-ஸ்ரீ பட்டர் -என்கிறபடியே -பிரதான மஹிஷியான
பெரிய பிராட்டியார் முதலாக -தத் சமானைகளான பூமி நீளை களும் -மற்றும் அநேகராக சொல்லப் படுகிறவர்களும்-
லஷ்மீ ப்ரப்ருதி  மகிஷி வர்க்கங்களும் -என்று இறே ஆச்சான் பிள்ளை பரந்த படியில் அருளிச் செய்தது –

நித்ய ஸூரிகள் -ஆவார் –
அநந்த கருட விஷ்வக் சேனாதிகளாய் இருந்துள்ள அசங்க்யேயரான ஸூரி ஜனங்கள் –

சத்ர சாமராதிகள் -ஆவன-
கைங்கர்ய உபகரணங்களான சத்ர சாமர தால வ்ருந்த ப்ருங்கார பதத் க்ருஹாதிகள் –

திரு வாசல் காக்கும் முதலிகள்-ஆவார் –
சண்ட பிரசண்ட -பத்ர ஸூபத்ர-ஜய விஜயாதிகள்-(தாதா விதாதா )
கணாதிபர்-ஆவார்-குமுத குமுதாஷ-புண்டரீக வாமன-சங்கு கர்ண சர்வ நேத்ர ஸூமுக ஸூப்ரதிஷ்டாதிகள் –
(கோயில் காப்பார்களும் வாசல் காப்பார்களும் )

முக்தர் -ஆவார் –
கரை கண்டோர் -என்கிறபடியே சம்சார சாகரத்தைக் கடந்து அக்கரைப் பட்டு –
நித்ய ஸூரிகளோடு சாமானகாரராய் -நிகில கைங்கர்ய நிரதராய் இருக்கும் -அசங்க்யேயரான சேதனர்-

(கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-)

பரம ஆகாசம் -ஆவது –
பஞ்ச உபநிஷத் மயமான பரம பதம் -இது தான் பஞ்ச உபநிஷத்மயம்
ஆகையாலே -சமுகாத் மயமாய் இறே இருப்பது -ஆகையால் சமூக கணனைக்கு விரோதம் இல்லை –
பஞ்ச உபநிஷத் மயமாகையாலே பரம பதமும் சமூகாத் மயமாய் இருக்கும் -என்று இறே
ஆச்சான் பிள்ளை அருளி செய்தது –
பஞ்ச உபநிஷத்கள் -பரமேஷ்டி-புமான் -விச்வன்-நிவ்ருத்தன் -சர்வன் –

ஆக –
ஞான ஆநந்த அமலத்வாதிகளும் -என்று தொடங்கி-இவ்வளவும்
ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் –
நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான கல்யாண குணங்களையும் –
அக் குணங்களுக்கு பிரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் –
விக்ரஹ குணமான சௌந்த்ர்யாதிகளையும் –
அந்த சௌந்தர்யாதிகளோபாதி பூத்தால் போலே சாத்தின திவ்ய ஆபரணங்களையும் –
அவ் ஆபரணங்களோடு விகல்ப்பிக்கலாம் படியான திவ்ய ஆயுதங்களையும் –
இவை இத்தனையும் காட்டில் எரித்த நிலவாகாத படி அருகே இருந்து அனுபவிக்கிற நாச்சிமாரையும் –
அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற நித்ய ஸூரிகளையும் –
அவர்களுக்கு கைங்கர்ய உபகரணங்களான சத்ர சாமராதிகளையும் –
இச் சேர்த்திக்கு என்ன வருகிறதோ -என்று வயிறு எரிந்து நோக்கும் திரு வாசல் காக்கும் முதலிகளும் –
அப்படி மங்களாசாசன பரராய் -திரு படை வீட்டுக்கு அடைய காவலாய் இருக்கிற கணாதிபரையும்-
நிவ்ருத்த சம்சாரராய் -அவர்களோடு ஒரு கோர்வையாய் அடிமை செய்கிற முக்தரையும் –
அவ் அடிமைக்கு வர்த்தகமான பரம பதத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

லீலா விபூதியில் உள்ளவற்றை அருளிச் செய்கிறார் மேல் –
பிரகிருதி -ஆவது –
குண த்ரயாத் மகதயா சமூஹாத்மிகையாய் இருக்கும் மூல பிரகிருதி –
குண த்ரயாத்மிகை ஆகையாலே மூல பிரகிருதியும் சமூஹாத்மிகையாய் இருக்கும் -என்று இறே
இதற்கும் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –

பத்தாத்மாக்கள்-ஆவார் –
உரை மெழுகில் பொன் போலே இப் பிரக்ருதிக்குள்ளே உரு மாய்ந்து
கிடக்கிற ஆத்மாக்கள் –

காலம்-ஆவது –
அஹோத்ராதி விபாக யுகததயா சமூஹமாய் இருக்கும் அசித் விசேஷம் –
அஹோத்ராத்ராதி விபாகங்கள் அநேகம் ஆகையாலே காலமும் சமூஹாத் மகமாய இருக்கும் –
என்று இறே இதுக்கும் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –
ஆக இவ்வளவும் ஸ்வரூபேன நித்யங்களான வஸ்துக்களைச் சொல்லிற்று –

மேலே பிரவாஹா ரூபேண நித்யங்களைச் சொல்லுகிறது –
ஸ்வரூபேண நித்யத்வமாவது -சத்தான பதார்த்ததினுடைய -உத்பத்தி விநாச அத்யந்த அபாவம் –
பிரவாஹா ரூபேண நித்யத்வமாவது -உத்பத்தி விநாச யோகியாகா நிற்கச் செய்தேயும்
பூர்வ காலத்தில் உண்டான நாம ரூப லிங்காதிகளுடைய அனந்யதா பாவம் –

இதில் மகாதாதி விகாரங்கள் -ஆவன –
மகத் தத்வம் தொடங்கி ப்ருத்வி அளவாக உண்டான இருபத்து மூன்று தத்வமும் –

அண்டங்கள் ஆவன –
இம் மகாதாதிகளாலே -ஆரப்தங்களாய் அண்டா நாந்து சஹஸ்ராணாம்
சஹஸ்ரான்ய யுதானி ச -என்கிற படியே அசங்க்யேயமாய் இருக்கிற அண்ட விசேஷங்கள்-

அண்டத்துக்கு உள் பட்ட தேவாதி பதார்த்தங்கள்-ஆவன –
அண்டார்ந்தார் வர்திகளான
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள்-

ஆக நார பதம் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————

அயநம் -என்றது இவற்றுக்கு ஆஸ்ர்யம்  என்றபடி –சூரணை -98-

மேலே அயன -பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அயன சப்தம் ஆஸ்ரய வாசியாகையாலே இவற்றுக்கு அயநம் என்றது
இவற்றுக்கு ஆஸ்ரயம் என்றபடி -என்கை –

——————————————————

அங்கன் இன்றிக்கே இவை தனை ஆஸ்ரயமாக உடையன் -என்னவுமாம் –சூரணை -99–

பஹூ வ்ரூஹி சமாச அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இவற்றுக்கு ஆஸ்ரயம் என்று தத் புருஷனாக சொல்லுகை அன்றிக்கே –
இவை தன்னை ஆஸ்ரயமாக உடையன் -என்று பஹூ வ்ரிஹியாக சொல்லவுமாம் -என்கை

இவற்றுக்கு ஆஸ்ரயம் -என்கிற இடத்தில் குணங்களையும் சொல்லிற்றே ஆகிலும்
இவை தன்னை ஆஸ்ரயமாக உடையன் -என்கிற இடத்தில் குணங்களை ஒழிய சொல்ல வேணும் –
அக் குணங்களுக்கு வ்யாப்யத்வம் சொல்லும் அளவில் -ஆத்மாஸ்ரயமும் அனவஸ்தையுமாகிற
தோஷங்கள் வருமாகையால் -தன் குணங்களிலே ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டனாயே வியாபிக்க வேணும் –
நிர் குணமாய் வஸ்து இராமையாலே –
அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபக குணங்களாய் அறுகையாலே ஆத்மாஸ்ர்ய தோஷம் உண்டாகும் –
அதுக்கு மேலே தன் குணங்களிலே குணி வியாபிக்க என்று புக்கால் -தத் ஆஸ்ர்யமான குணங்களையும் குணி
வியாபிக்க வேணும் -அந்த வ்யாபகனுடைய குணங்களையும் குணி வியாபிக்க வேணும் –
ஆகையாலே -அனவஸ்தாதுஸ்தமாம் -என்ற இது தன்னை ஸூஸ்பஷடமாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே-

——————————————-

இவை இரண்டாலும் பலித்தது பரத்வ சௌ லப்யங்கள் –சூரணை -100-

இவ் உபய சமாசத்தாலும் பலிதாம்சத்தை அருளி செய்கிறார் -இது தொடங்கி -அதாவது –
நாரங்களுக்கு அயநம் -நாரங்களை அயநமாக உடையவன் -என்கிற இவை இரண்டாலும் – பலித்த அர்த்தம் –
தன்னை ஒழிந்த சமஸ்த வஸ்துக்களுக்கும் தான் ஆதாரமாய் இருக்கை யாகிற பரத்வமும் –
இப்படி பெரியனான தான் சகல சேதன அசேதனங்களிலும்  தன்னை அமைத்து கொண்டு
புக்கு இருக்கை யாகிற ஸௌலப்யமும் என்கை-

(தத் புருஷ ஸமாஸத்தால் பரத்வமும் பஹு வ்ரீஹியால் ஸுலபயமும் என்கிற நியமம் மட்டும் இன்றிக்கே
தத் புருஷ சமாசத்தாலே பரத்வ ஸுலபயன்களும் பஹு வ்ரீஹியாலேயே ஸுலப்ய பரத்வமும் பலிக்கும் -என்று அருளிச் செய்வர்)

——————————————-

அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும் -ஆகவுமாம் –சூரணை -101-

இன்னமும் ஒரு பிரகாரத்தாலே இந்த சமாச த்வய பலிதங்களை அருளிச் செய்கிறார்-
அதாவது –
பஹூவ்ரீஹியும் தத் புருஷனுமாகிற உபய சமாசத்தாலும் பலித்தது –
அந்தர்யாமி ப்ரஹ்மணாதிகளில் -சொல்லலுகிற படியே -அகில சேதன அசேதனங்களிலும்
அந்தராத்மதயா அவஸ்திதனாய் கொண்டு நியந்தாவாய் இருக்கை யாகிற -அந்தர்யாமித்வமும் –

இண் கதவ் -என்கிற தாதுவிலே யாதல் –
அயகதவ் -என்கிற தாதுவிலே யாதல்
சித்தமான அயன பதத்திலே – கரணே வ்யுத்புத்தியாலும்  -கர்மணி வ்யுத்புத்தி யாலும் –
பிரகாசிதமான உபாயத்வமும் உபேயத்வமும் -என்கை –

(அயனம் ஆஸ்ரயம் கீழே பார்த்தோம் –
இங்கு நாரங்கள் இதை அடைகின்றன இத்தால் அடைகின்றன -என்று கொண்டு
நாராயணனால் என்று கரணே –உபாயம்
நாராயணனை-கர்மணி- அடைகின்றனர் உபாயம் )

பஹூவ்ரீஹி யோஜனை சொல்லுகிற இடத்தில் யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை
குணங்களை ஒழிந்த வஸ்துக்களுக்கு வாசகமாக கொண்டாப் போலே –
தத் புருஷ யோஜனையிலும் -அயன சப்தத்தை உபாய உபேய வாசியாக
கொள்ளும் அளவில் யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை அசேதனங்களை ஒழிந்த
சேதன வஸ்துக்களுக்கு வாசகமாக கொள்ளக் கடவது –

நாரஸ்த்விதி சர்வ பும்ஸாம் சமூஹா பரிகச்யதே கதிராலபம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத -என்றும்
நார சப்தேன ஜீவானாம் சமூஹா ப்ரோச்யதே புதை தேஷாமயான பூதத்வான் நாராயண இஹோச்யதே -என்றும்
இத்யாதிகளாலே இவ் அர்த்தம் சொல்லப் படா நின்றது இறே –

————————————————–

எம்பிரான் எந்தை -என்கையாலே
ஈஸ்வரனே எல்லா உறவு முறையும் என்றும் சொல்லும் –சூரணை -102-

கர்மணி வ்யுத்புத்தி சித்தமான ப்ராப்யத்வத்துக்கு சங்கோசம் இல்லாமையாலே –
சர்வ பிரகார விசிஷ்டமாய் இருக்கை யாலும் –
பந்து லாபமும் -ப்ராப்யமுமாய் இருக்கை யாலும் –
ஈஸ்வரனுடைய சர்வ வித பந்துத்வமும் இப் பதத்திலே சொல்லும்படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே
ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

(எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-)

——————————————————–

நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காய் இருக்கும் –சூரணை -103-

இப்படி பந்து பூதனாய்க் கொண்டு இத் தலைக்கு அவன் செய்யுமது எது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
நாம் தன்னோடு ஓட்டற்று பிறர்க்கு நல்லராய் இருந்த காலத்திலும்
அவன் நமக்கு நல்லானாய் இருக்கும் என்கை –

——————————————————–

இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்து -சத்தையே பிடித்து –
நோக்கிக் கொண்டு போரும்-சூரணை -104-

இப்படி நாம் அந்ய பரரான அன்றும் -நமக்கே யாய் இருந்து அவன் செய்து போருமது தான் எது –
என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
நேர்கொடுநேர் தங்கள் பக்கல் வந்து அபேஷிதங்களை வாங்கி ஜீவியாதே துர்மானத்தாலே
பட்டினியே திரியும் அவர்களையும் விடமாட்டாமையாலே -அசலறியாத படி -ராத்திரி மடத்திலே புஜிப்பாரை போலே –
தன் பக்கல் தலை சாயோம் -என்று இச் சேதனர் ஸ்வாதந்த்ர்யமடித்து திரியா நிற்க –
இவர்கள் கண் காணாதபடி அந்தராத்மாவாய் கொண்டு -உள்ளே மறைந்து இருந்து –
இவர்கள் சத்தையே தொடங்கி ரஷித்துக் கொண்டு போரும் என்கை-

————————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை –76–94–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 10, 2024

உகாரத்தை விவரிக்கிறது நமஸ்
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம் –
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி -நார பதம் என்றும் சொல்லுவார்கள் –சூரணை -76-

விவரிக்கிற படி தான் எங்கனே என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்ய சேஷத்வத்தை கழிக்கிற  இடத்தில் -அந்யரில் அந்ய தமனாக சொல்லப்பட்ட தன்னை
வெளியாக சொல்லிக் கழிக்கையாலே உகாரத்தை விவரிக்கிறது நமஸ் –

ரஷகனான ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும் –
ரஷ்ய பூத சேதன அசேதனங்களையும்
ரஷண உபயோகியான -குணாதிகளையும்-
ரஷண பிரகாரத்தையும் –
விசதமாகச் சொல்லுகையாலே
அகாரத்தை விவரிக்கிறது -நாராயண பதம்

(ந கிஞ்சித் குர்வத சேஷத்வம் )அகிஞ்சித்கரச்ய சேஷத்வ அனுபபத்தி -என்கிறபடியே
கிஞ்சித் காரம் இல்லாத போது சேஷத்வ சித்தி இல்லாமையாலே தத் சித்திக்கு உறுப்பான
கிஞ்சித் காரத்தை பிரதிபாதிக்கிற சதுர்த்தி –
சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்ம வஸ்துவைச் சொல்லுகிற மகாரத்தை விவரிக்கிறது –

மகார வாச்யனான ஆத்மாவின் உடைய நித்யத்வம் -ஏக ரூபவத்வம் -பஹூத்வம்
தொடக்கமானவற்றை பிரதிபாதிக்கையாலே மகாரத்தை விவரிக்கிறது நார பதம் என்றும் சொல்லுவார்கள் -என்கை-

(அந்யரில் அந்ய தமனாக-அந்நியரில் ஒருவனாக
வெளியாக-வேறாக
கழிக்கையாலே-அந்நியரில் ஒருவனாகச் சொல்லப்பட்ட ஸ்வ சேஷத்வத்தைக் கழிக்கையாலே
ரஷகனான ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும் –-ஸர்வ அந்தர்யாமித்வ ஸர்வ வியாபியான ஸ்வரூபத்தையும்
குணாதிகளையும்—ஆதி ஸப்தத்தாலே -விக்ரஹத்தைச் சொல்கிறது
ரஷண பிரகாரத்தையும் –மாத்ருத்வாதி பிரகாரத்தையும்
தத் சித்திக்கு உறுப்பான–சேஷத்வ ஸித்திக்கு உறுப்பான)

————————————————-

அடைவே விவரியாது ஒழிகிறது விரோதி போய் அனுபவிக்க வேண்டுகையாலே –சூரணை -77-

அஷர க்ரமத்தில் விவரியாதே வ்யுத் க்ரம்மமாக விவரிப்பான் என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
அஷர க்ரமத்தில் விவரியாது ஒழிகிறது
அகார விவரணமான நாராயண பதத்தில் -பகவத் அனுபவத்துக்கு விரோதியான
அஹங்கார மமகாராதிகள் நமஸ்ஸாலே கழி உண்டு போய்
பின்னை அனுபவிக்க வேண்டுகை ஆகையாலே -என்கை-

(நாராயண பதத்தில் -பகவத் அனுபவத்துக்கு-என்றது நாராயண பதத்தில் சொல்லுகிற பகவத் அனுபவத்துக்கு
அஹங்கார மமகாராதிகள்-ஆதி ஸப்தத்தாலே ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயத்தைச் சொல்லுகிறது
அனுபவிக்க வேண்டுகை ஆகையாலே-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான நாராயணனை அனுபவிக்க வேண்டுகையாலே என்றபடி)

——————————————–

நமஸ் -ந என்றும் ம என்றும் இரண்டு பதம் –சூரணை-78-

இனி மத்யம பதமான நமஸ்ஸுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக அதில் அவாந்தர பத பேதத்தை
அருளிச் செய்கிறார் –

(ஸூ மத்யமா -இடையாளொடும் இளையவனோடும்
ஓன்று பணித்தது உண்டு
மதுரகவி நிஷ்டை-சித்திரை நடு நக்ஷத்ரம் )

————————————

ம -என்கிற இத்தால் தனக்கு உரியன் -என்கிறது
ந -என்று அத்தை தவிர்கிறது–சூரணை -79

இவ் இரண்டு பதங்களுக்கு அர்த்தம் எது என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
ம -என்று ஷஷ்ட்யந்தமான இம்மகாரத்தாலே –
மகார வாச்யனான ஆத்மாவுக்கு கீழ் சொன்ன தாதர்த்ய பிரதி கோடியான ஸ்வார்த்தத்வம் தோற்றுகையாலே-
தனக்கு உரியவன் -என்னும் அத்தைச் சொல்லுகிறது –
ந -என்று நிஷேத வாசியான நஞ்ஞாலே அத்தைக் கழிக்கிறது என்கை –

(அவனுக்கே நான் பிரதிகோடி-எனக்கே நான் என்றும் எனக்கே அவன் என்றும் உண்டே -த்வம் மே -அஹம் மே -பட்டர்
தாதார்த்தம்-பரரார்த்யம் -பரனுக்காகவே இருப்பது -பாரார்த்தியம் த்வம் -ஆண்டாள் – )

(தாதர்த்ய பிரதி கோடியான ஸ்வார்த்தத்வம்-சேஷத்வ விரோதியான ஸ்வ ஸ்வாதந்தர்யம்)

——————————————

நம-என்கிற இத்தால் -தனக்கு உரியன் அன்று -என்கிறது –சூரணை -80

உபய பதத்தாலும் சொன்ன அர்த்தத்தை சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் –

அதாவது –
பத  க்ரமத்தில் அர்த்தம் சொல்லாதே -வ்யுக்த் கர்மமாக சொல்லுகிறது –
நிஷேத்யத்தை சொல்லி நிஷேதிக்க வேண்டுகையாலே –
க்ரமத்தில் சொல்லும் போது-வீடுமுன் முற்றவும் -என்னுமா போலே –
நிஷேத பூர்வகமாக நிஷேத்யத்தை சொல்லுகிறது என்று யோஜிக்க வேணும் –
அது தானும் பரந்த படியில் இவர் தாமே அருளிச் செய்கிறார் –

————————————————-

பிறருக்கு உரியனான அன்று தன் வைலஷண்யத்தை காட்டி மீட்கலாம் –
தனக்கு என்றும் அன்று யோக்யதையும் கூட அழியும் –சூரணை -81-

தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்று அந்ய சேஷத்வத்தை நிஷேதித்த உகாரத்தை விவரிக்கிறது ஆகில் –
பிறருக்கு உரித்தது அன்று என்றையும் விவரியாமல் -தனக்கு உரியன் அன்று -என்று இத்தையே விவரிப்பான் என்?-
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –
அந்ய சேஷ பூதனான அன்று சேஷத்வத்துக்கு இசைகை ஆகையாலே –
அந்யரில் காட்டில் தனக்கு உண்டான
சர்வ காரணத்வ சர்வ ரஷகத்வ சர்வ சேஷித்வாதியான-வை லஷண்யத்தை காட்டி –
அந் நிலையில் நின்றும் மீட்கலாம் –
தனக்கு உரியவன் என்று நிற்கும் அன்று -த்வம்மே -என்றால் -அஹம்மே – என்னும் அது ஒழிய
சேஷத்வத்துக்கு இசையாமையாலே -மீட்க்கைக்கு யோக்யதையும் கூட இல்லையாய் விடும் என்கை-

(சேஷித்வாதியான–ஆதி ஸப்தத்தாலே -ஸ்ரீ யபதித்தவமும் ஸமஸ்த கல்யாண குணாத்மகமும் சொல்லப்படுகிறது
அந் நிலையில் நின்றும்-அந்நிய சேஷபூதனாய் இருக்கும் இருப்பில் நின்றும்)

—————————————-

இத்தால் விரோதியை கழிக்கிறது–சூரணை -82

இந் நமஸ்ஸால் செய்கிற அம்சம் தான் எது -என்ன அருளிச் செய்கிறார் –

(இந் நமஸ்ஸால்-ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவர்த்தகமான இந்த நமஸ்ஸால்)

———————————–

விரோதி தான் மூன்று–சூரணை -83

இது தான் ஒன்றோ பலவோ -என்ன அருளிச் செய்கிறார்-

———————————

அதாவது
ஸ்வரூப விரோதியும்
உபாய விரோதியும்
ப்ராப்ய விரோதியும் –சூரணை -84-

அம் மூன்று தான் எது -என்ன அருளி செய்கிறார் –
இத்தால் பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு விரோதியும் –
இப் பதத்தில் ஆர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு விரோதியும் –
உத்தர பதத்தில் சொல்லுகிற ப்ராப்யத்துக்கு விரோதியும் என்கை –
இந் நமஸ் தான் காகாஷி நியாயத்தாலே பூர்வோத்தர பதங்களில் சொல்லுகிற
ஸ்வரூப ப்ராப்யங்கள் உடைய விரோதிகளைக் கழிக்கக் கடவதாய் இறே இருப்பது –

(பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு–திரு மந்திரத்தில் பிரதம பதமான ப்ரணவத்தில் -லுப்த சதுர்த்தியில் சொன்ன பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூபத்துக்கு
இப் பதத்தில் ஆர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு-இந்த நமஸ் பகவானாகிற ஸித்த உபாயத்துக்கு வாக்யார்த்தமான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி யாகிற அர்த்த பலத்தால் ஸித்திக்கிற)

—————————————————

ஸ்வரூப விரோதி கழிகையாவது-யானே நீ என்னுடைமையும் நீயே என்று இருக்கை-
உபாய விரோதி கழிகையாவது -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று இருக்கை-
ப்ராப்ய விரோதி கழிகையாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை –சூரணை -85-

இவ் விரோதி த்ரயமும் கழிகையாவது தான் எது ? என்ன அது தன்னை அடைவே அருளிச் செய்கிறார் –
ஸ்வரூப விரோதி இத்யாதி -அதாவது ஸ்வரூபத்துக்கு –
யானே நீ என்னுடைமையும் நீயே-திரு வாய் மொழி -2-9-9–என்று
ஆத்ம ஆத்மீயங்கள் இரண்டும் அத்தலைக்கு ப்ரகாராதயா சேஷம் என்று இருக்கை-

(யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-)

உபாய விரோதி -இத்யாதி -அதாவது உபாயத்துக்கு விரோதி ஸ்வ ரஷணே ஸ்வான்வயம் ஆகையாலே –
அது கழிகையாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்-திரு வாய் மொழி -5-8-8-என்று –
துக்கத்தைப் போக்குவாய் -போக்காது ஒழியாய்-வேறு ஒரு ரஷக வஸ்துவை உடையேன் அல்லேன் என்று இருக்கை –

(களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-)

ப்ராப்த விரோதி -இத்யாதி -அதாவது ப்ராப்யத்துக்கு விரோதி ஸ்வ பிரயோஜன புத்தி ஆகையாலே –
அது கழிகையாவது –
மற்றை நம் காமங்கள் மாற்று –(திருப்பாவை -29)-என்று
உன் உகப்புக்கு புறம்பான எங்களுடைய ஆசையைப் போக்கு என்று இருக்கை -என்கை-

(சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)

———————————————

ம -என்கை ஸ்வரூப நாசம் –
நம-என்கை ஸ்வரூப உஜ் ஜீவனம் –சூரணை -86-

இப்படி ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் -மூன்றுக்கும் விரோதி ஆகிறது
இவனுடைய அஹங்கார மமகாரங்கள் ஆகையாலே –
அதனுடைய க்ரௌர்யத்தையும் தந் நிவ்ருத்தியில் உண்டான நன்மையையும் அருளிச் செய்கிறார் –
அதாவது –

சேதனஸ்ய யதா மம்யம் ஸ்வ ஸ்மின் ஸ்வீயே ச வஸ்து நி மம
இத்ய ஷரத்வந்த்வம் ததா மம்யச்ய வாசகம் -என்கிறபடியே
ம -என்கிற இதில் அஹங்கார மமகாரங்கள் இரண்டும் உண்டாகையாலே –
அதிலே அந்விதன் ஆகை-இவ் ஆத்மாவின் உடைய ஸ்வரூபத்துக்கு நாசம் –

நம -என்று அதில் அந்வயம் அற்று இருக்கை -ஸ்வரூபத்துக்கு உஜ்ஜீவனம் -என்கை –

த்வ்யஷரஸ்து பவேன் ம்ருதயுஸ் த்ர்யஷரம் பிராமண
பதம் மமேதி த்வ்யஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச சாஸ்வதம் -என்னக் கடவது இறே-
(மம இரண்டு அக்ஷரம் மிருத்யு ந ம ம மூன்று அக்ஷரம் அம்ருதம் )

————————————

இது தான் ஸ்வரூபத்தையும் -உபாயத்தையும் -பலத்தையும் -காட்டும் –சூரணை -87-

இப்படி ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளைக் கழிக்கிற அளவு அன்றிக்கே
இந் நமஸ் தான் ஸ்வரூபாதி த்ரயத்தையும் பிரகாசிப்பிக்கும் என்கிறார் –

(நம தொழுகை -தொழுது எழு என் மனனே –
தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -முதலிலும் நடுவிலும் இறுதியிலும் தொழுகை உண்டே
மூன்றும் ஸ்வரூபம் உபாயம் பலம் மூன்றையும் காட்டும்
தொழும் சொல் -திருவாய் மொழி பாடுவித்த ப்ராப்யம் –
கீழே இரண்டு பாசுரங்கள் தொழும் என்றும் ஓன்று நம என்றும் இருப்பதைக் காட்டி அருளுகிறார்
இது நம பிரகரணம் ஆகையால் )

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-ஸ்வரூபம் காட்டும் )

(துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-உபாயம்  காட்டும்)

(உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-பலம் காட்டும்–தொழும் சொல் -திருவாய் மொழி பாடுவித்த ப்ராப்யம் –)

———————————————–

தொலை வில்லி மங்கலம் தொழும்-என்கையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –
வேம்கடத்து உறைவார்க்கு நம -என்கையாலே -உபாயம் சொல்லிற்று –
அந்தி தொழும் சொல் -என்கையாலே பலம் சொல்லிற்று-சூரணை -88-

இது தன்னை உபபாதிக்கிறார் -மேல் மூன்று வாக்யத்தாலே –
தொலை வில்லி மங்கலம் -இத்யாதி –
அதாவது
தொலை வில்லி மங்கலம் தொழும் –திருவாய்மொழி -6-5-1-என்று அவன் உகந்து அருளின
நிலத்தளவும் செல்ல சேஷமாயிருக்கும் படியைச் சொல்லுகிற அளவில் –
தொழும் -என்று நமஸ்காரத்தைச் சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று என்கை-

(துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-ஸ்வரூபம் சொல்லிற்று )

வேம்கடத்து இத்யாதி –
அதாவது –
வேம்கடத்து உறைவார்க்கு நம -திருவாய்மொழி -3-3-6–என்று
திரு வேம்கடமுடையானுக்கு சேஷம் நான்-எனக்கு உரியன் அல்லன்-
என்று ஸ்வ ரஷணத்திலே ப்ராப்தி அல்லாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தைச் சொல்லுகையாலே-
அவனே உபாயம் என்னும் இடம் சித்திக்கையாலே -உபாயம் சொல்லிற்று –

(வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—உபாயம் சொல்லிற்று –)

அந்தி தொழும் சொல் -இத்யாதி –
அதாவது –
அந்தி தொழும் சொல் -திருவாய்மொழி -10-8-7–என்று தாஸ்ய ரசம் அதிசயித்தால்-அதனுடைய
சரம தசையிலே சொல்லக் கடவ-தொழும் சொல் -என்று நம சப்தத்தத்தை சொல்லுகையாலே பலம் சொல்லிற்று -என்கை-

(உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-பலம் சொல்லிற்று)

———————————————-

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும்-அனுசந்தேயம்-சூரணை-89-

இப்பதத்திலே ததீய சேஷத்வமும் ஆர்த்தமாக அனுசந்தேயம் ஆகையாலே -அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நானுற்றதும்  உன் அடியார்க்கு அடிமை -பெரிய திரு மொழி -8-10-3-
என்று திரு மந்த்ரம் கற்றதால் நானுற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்னும் -இவ் அர்த்தத்திலே
என்கிறபடியே –
அஹங்கார மமகாரங்கள் நிவ்ருத்தமாய் -பகவத் சேஷத்வம் உள்ளபடி பிரகாசிக்கிற இந் நமஸிலே-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் அனுசந்திக்க வேணும் -என்கை-

(மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-)

———————————————————-

இது அகாரத்திலே என்றும் சொல்லுவார்கள்-
உகாரத்தில் என்றும் சொல்லுவார்கள் –சூரணை -90-

இப்படி ஆர்த்தமாக அனுசந்திக்கப் படும் -பாகவத சேஷத்வம் தான்-
இந்த நமஸில் அன்றிக்கே -ஸ்தலாந்தரங்களிலே சொல்லுவாரும்
உண்டு ஆகையாலே -அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சதுர்த்தியாலே -ஆத்மாவினுடைய பகவத் சேஷத்வத்தைச் சொல்லுகையாலே –
பகவத் சேஷத்வ காஷ்டையான -இந்த பாகவத சேஷத்வ அனுசந்தானம் -அகாரத்திலே-என்றும் –
சிலர் சொல்லுவார்கள் –

அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ததீய சேஷத்வ பர்யந்தமாக நிற்க்கையாலே-
அனந்யார்ஹத்வ பிரதிபாதகமான -உகாரத்திலும் -என்றும் சிலர் சொல்லுவார்கள் -என்கை-

ஆர்த்தம் ஆகையாலே -அவ்வவ ஸ்தலங்களிலும் சொல்லலாய் இருந்ததே  ஆகிலும் –
கந்தல் கழிந்த இடத்திலே சொல்லுகையே உசிதம் என்று கருத்து –

———————————————————

ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் –
அசித்து பிறர்க்கேயாக இருக்கும் –
ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாக இருக்கும் -என்று முற்பட்ட நினைவு –
அங்கன் இன்றிக்கே –
அசித்தைப் போலே -தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் -என்கிறது நமசால்-சூரணை -91-

இந்த நமஸ்ஸுக்கு பூர்வத்தில் பிறந்த பிரதிபத்தியைப் -பற்ற இதில் பிறந்த பிரதிபத்திக்கு உண்டான
வாசியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத-என்கிறபடியே –
ஸ்வாதந்த்ர்யமே ஸ்வரூபமான ஈஸ்வரன் ஸ்வார்த்த பரனாயே இருக்கும் –

சைதன்ய ரஹிதம் ஆகையாலே -தனக்கே என்கைக்கு யோக்யதை இன்றிக்கே
பாரதந்த்ர்ய ஸ்வரூபமாய் இருக்கும் அசித்து -பரார்த்தமாயே இருக்கும் –

சதுர்த்தியில் சொன்ன சேஷத்வத்தையும்-
மகாரத்தில் சொன்ன ஞாத்ருத்வத்தையும் –
உடையனான ஆத்மா ஞாத்ருத்வ பலத்தாலே -ஸ்வார்த்ததைக்கும்-
சேஷத்வத்தாலே பரார்த்தைக்கும் பொதுவாய் இருக்கும் என்று –
நமஸுக்கு பூர்வ பதத்தில் பிறந்த பிரதிபத்தி –

அப்படி இன்றிக்கே
பரார்தைக வேஷமான அசித்தைப் போலே –
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -திருவாய்மொழி -2-9-4-
என்கிறபடியே –
அத் தலைக்கே ரசமாம்படி விநியோகம் கொள்ள வேணும் -என்று
அபேஷிக்கிறது இந் நமஸ்சாலே என்கை –

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-)

( பரார்த்தமாயே இருக்கும் –பர ப்ரயோஜன அர்த்தமாயே இருக்கும்
உடையனான–ஸ்வரூபமாக யுடையனான
பூர்வ பதத்தில் பிறந்த பிரதிபத்தி-பூர்வ பதமான ப்ரணவத்தில் பிறந்த
ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் –ஸ்வார்த பரனாகவே இருக்கும்
அசித்து பிறர்க்கேயாக இருக்கும் – சைதன்ய ரஹிதமாகையாலே தனக்கு என்பதற்கு யோக்யதை இன்றிக்கே
பிறர்க்கேயாய் இருக்கும் -பரதந்த்ர ஸ்வரூபமாய் இருக்கும்
ஆத்மா –சதுர்த்தியில் சொன்ன சேஷத்வத்தையும் மகாரத்தில் சொன்ன ஞாத்ருத்வத்தையும் ஸ்வரூபமாக யுடையனான ஆத்மா
தனக்கும் –ஞாத்ருத்வ பலத்தாலே ஸ்வார்த்ததைக்கும்
பிறர்க்கும் –சேஷத்வ பலத்தாலே பிரார்த்தைக்கும்
பொதுவாக இருக்கும்
அத் தலைக்கே ரசமாம்படி –ரஸ வஹமாம் படி
விநியோகம் கொள்ள வேணும்–யதேஷ்ட விநியோக அர்ஹமாகத் திரு உள்ளம் பற்றி அருள வேணும்)

—————————————————–

அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –சூரணை -92

(நம் சேஷத்வத்தை நோக்க வேணும் என்று அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்றவாறு-
ஆஸ்ரயண தசை வேறே போக தசை வேறே – )

தனக்கேயாக -என்றதை உபபாதிக்கிறார் –

அதாவது –
இத்தால் அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே
போக்தாவான ஈஸ்வரன்-
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி-
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி –
இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது –
நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று
நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –

(காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-)

(இனி என்றது -அவன் இவனை சேஷியாக வைத்து விநியோகம் கொள்ளவுமாம் -சேஷனாக வைத்து விநியோகம் கொள்ளவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை -அவன் முக மலர்த்திக்குத் த்வாரமாவதுவே இவனுக்கு உத்தேச்யம் என்னும்படி
அத்யந்த பாரதந்தர்யம் இந்த நமஸ்ஸாலே ஸித்தித்த அநந்தரம்
எம்பெருமான் இவனை சேஷியாக வைக்க இசைந்து இருக்கை இவனுடைய ஸ்வரூபமான பாரதந்தர்யத்துக்கு எல்லை நிலம்
அவன் தன்னை இவனுக்கு சேஷம் ஆக்குகை அவனுடைய நிராங்குச ஸ்வா தந்தர்யத்துக்கு எல்லை நிலம்)

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே -திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் –
கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து –மாயனால் -என்கிறார் –

கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது-
என் உயிரைக் குறை இல்லாதபடி உண்ணச் செய்தேயும்-அவன் குறைவாளனாய்-விருப்பம் உள்ளவனாய்
போகையாலே-இத்தலையில் இன்னம் சிறிது குறைந்தது உள்ளது-என்று இருக்கிறார் –
அன்றிக்கே
இப்போது இருந்து துக்கப் பட்டு காண்கையாலே-சிறிது தொங்கிற்று உண்டு -என்று இருக்கிறார் -என்னுதல்
ஒரு முற்றறிவினன்-சர்வஞ்ஞன் –இல்லாதது ஒன்றிலே இத்தனை காதல் செய்யக் கூடாது-என்று இருக்கிறார் –

————————————–

அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் –சூரணை -93-
(லுப்த வியக்த சதுர்த்திகளால் )

இப்படி அழிக்கைக்கு ஹேது என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஈஸ்வரன் மேல் விழுந்து விநியோகம் கொள்ளுகிற தசையிலே இவன்
நைச்சயம் பாவித்து -இறாய்த்து -அவன் போகத்தை அழிக்கைக்கு ஹேது –
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்கையாலே கீழே பிரணவத்தில் சொல்லிற்று –
சதுர்த்தியிலே கிங்கர ஸ்வபாவனாகச் சொல்லுகையாலே -மேலில் பதத்திலும் சொல்லும் என்கை –

———————————————————-

இந் நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன் –
இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்-
இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்களும் உண்டு –
இது இன்றிக்கே இருக்கப் பண்ணும் யஞ்ஞாதிகளும் ப்ராயச்சித்தாதிகளும் நிஷ் பிரயோஜனங்கள்-
இது தன்னாலே எல்லா பாபங்களும் போம் –
எல்லா பலன்களும் உண்டாம் –சூர-ணை -94-

இனி இப் பாரதந்த்ர்ய பிரதிபத்தி யினுடைய வைபவத்தைப் பலபடியாக அருளிச்
செய்யா நின்று கொண்டு இப் பதத்தை நிகமித்து அருளுகிறார் மேல் –

இந் நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன் –என்றது
தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்னும் இவ் அத்யந்த பாரதந்த்ர்ய
பிரதிபத்தி பிறந்த போதே தன்னுடைய ஹிதத்துக்கு உடலாக செய்ய வேண்டுவது
எல்லாம் செய்து தலைக் கட்டினவன் என்கை-

இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்-என்றது
இப் பாரதந்த்ர்ய பிரதிபத்தி இல்லாத போது –
கிம் தேன ந க்ருதம் பாபம் கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா- -என்கிறபடியே
சகல துஷ் க்ருதங்களும் இவனால் செய்யப் பட்டதாய் விடும் என்கை –

இந் நினைவிலே எல்லா ஸூஹ்ருதங்களும் உண்டு -என்றது
இது உண்டாகவே எல்லா ஸூஹ்ருதம் பண்ணினால் பிறக்கும்
ப்ரீதி ஈஸ்வரனுக்கு விளைக்கையாலே -இந்த பாரதந்த்ர்ய பிரதிபத்தியிலே
சகல ஸூஹ்ருதமும் உண்டு என்கை-

இது இன்றிக்கே இருக்க பண்ணும் யஞ்ஞாதிகளும் ப்ராயச்சித்தாதிகளும் நிஷ் பிரயோஜனங்கள்-என்றது
இந்த பாரதந்த்ர்ய பிரதிபத்தி இன்றிக்கே இருக்கச் செய்தே -ஈஸ்வர ப்ரீதியர்த்தமாக இவன் பண்ணும்
யாகாதி கர்மங்களும் -தந் பாப விமோசன அர்த்தமாக பண்ணும் க்ருச்சர சந்த்ராயனாதிகள் ஆகிற
ப்ராயசித்தாதிகளும் -ஈஸ்வர ப்ரீதிக்கும்-ஸ்வ பாப விமோசனத்துக்கும் உடல் ஆகாமையாலே
நிஷ் பிரயோஜனங்கள் -என்கை

இது தன்னாலே எல்லா பாபங்களும் போம் –
எல்லா பலன்களும் உண்டாம் -என்றது –
இந்த பாரதந்த்ர்ய பிரதிபத்தியாலே ஈஸ்வரன் இவன் அளவிலே
அனுக்ரஹ அதிசயத்தைப் பண்ணுகையாலே அவனுடைய
நிக்ரஹத்மகமான சகல பாபங்களும் போம் –

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -என்கிறபடியே
இவனுக்கு எத்தைச் செய்வோம் என்று மேன்மேலும் உபகரிக்கையாலே –
சம்சார நிவ்ருத்தி தொடக்கமாக கைங்கர்ய ப்ராப்தி பர்யந்தமாக சகல
பலன்களும் உண்டாம் என்கை

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)

ஆக மத்யம பத அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -58–75–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 9, 2024

ஸ்தான பிரமாணத்தாலே உகாரம் அவதாரணர்த்தம்
(ஸ்தானம் ஆகிற பிரமாணத்தால் )-சூரணை -58

அநந்தரம் மத்யம அஷரமான உகாரத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் –

அதாவது –

ததேவ பூதம் தாது பவ்யமா இதம் -என்றும்
ததே வாக்விச் ததத் வாயுஸ் தத் ஸூர்யச் தது சந்த்ரமா -என்றும் இத்யாதிகளிலே
ஏவகார ஸ்தானத்திலே உகாரத்தை பிரயோகிக்கக் காண்கையாலே-ஸ்தான பிரமாணத்தாலே
உகாரம் அவதாரணத்தை அர்த்தமாக உடைத்தாய் இருக்கும் என்கை

————————————————————

இத்தால் பிறர்க்கு சேஷம் அன்று என்கிறது-சூரணை -59-

அவதாரணத்துக்கு அர்த்தம் அயோக வியச்சேதம் ஆதல் -அந்ய யோக வியச்சேதம் ஆதல் –
ஆகையாலே இவ் அவதாரணத்தால் சொல்லுகிறது எது ?-என்ன அருளிச் செய்கிறார் –
(ராமன் வில்லலாளியே அயோக விவச்சதேம்
ராமனே வில்லாளி -அந்யோக விவச்சதேம் )

அதாவது

அவதாரண வாசகமான இவ் உகாரத்தால் கீழ் ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ் ஆத்மா வஸ்து –
அந்யருக்கு சேஷம் அன்று என்னும் இடத்தை சொல்லுகிறது -என்கை

சதுர்த்தியாலே ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே -அந்ய சேஷத்வம் ப்ரஸ்துதம் ஆமோ ?-என்னில்
லோகத்தில் ஒருவனுக்கு சேஷமான க்ருக ஷேத்திர புத்ர தாஸாதிகள்-வேறே சிலருக்கும் சேஷமாய் இருக்கக் காண்கையாலே –
அப்படிப்பட்ட அந்ய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ ?-என்ற சங்கை உதிக்கும் இறே-
ஆகையால் தாத்ருசமான அந்ய சேஷத்வம் இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது -உகாரம்

(யோகமாவது– ஸம்பந்தம்
அயோகமாவது –ஸம்பந்த அபாவம்
வியவச்சேதமாவது –போக்குமை
அந்ய யோகமாவது –அந்நியரோடு உண்டான ஸம்பந்தம்
வியவச்சேதமாவது–இல்லை என்கை
ஏவஞ்ச
அயோக வியச்சேதம் ஆவது -ஸம்பந்தம் உண்டு என்கை
அந்ய யோக வியச்சேதம் ஆவது –அந்நியரோடு ஸம்பந்தம் இல்லை என்கை)

(கீழ் –அகாரத்திலே
ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ் ஆத்மா வஸ்து –அந்யருக்கு சேஷம் அன்று -அக்னி இந்த்ராதி தேவர்களுக்கு
சதுர்த்தியாலே ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே -அகாரத்திலே தாதார்த்யே வந்த லுப்த சதுர்த்தியாலே நிருபாதிகமான ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே
அந்ய சேஷத்வம்–நிருபாதிகமான அந்நிய சேஷத்வம் சேஷமான -ஓவ்பாதிக சேஷமான
சேஷமாய் இருக்கக் –உபாதி வஸாத் சேஷமாய் இருக்கை
அப்படிப்பட்ட அந்ய சேஷத்வம் –ஸோபாதிக அந்நிய சேஷத்வம் போல் அன்ரிக்கே நிருபாதிக அந்நிய சேஷத்வம்
இந்த ஸ்தலத்திலும் –தாதார்த்ய சதுர்த்தியிலும்
ஆகையால் –ஸோ பாதிகமான அந்நிய சேஷத்வம் போல் நிருபாதிகமான அந்நிய சேஷத்வம் உண்டோ என்கிற சங்கை உதிக்கையாலே
தாத்ருசமான அந்ய சேஷத்வம் –அப்படிப்பட்ட சங்கா விஷயமான அந்நிய சேஷத்வம்
இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது -உகாரம்-இந்த சதுர்த்தியிலே)

—————————————-

பெரிய பிராட்டியாருக்கு சேஷம் என்கிறது என்றும் சொல்வார்கள் –சூரணை -60

அங்கன் இன்றிக்கே இவ் உகாரத்தாலே -லஷ்மி சேஷத்வம் சொல்லுகிறது என்பாரும் உண்டு என்கிறார் –
அதாவது

அகாரச் சித் ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே
உகாரச் சித் ஸ்வரூபயா- ஸ்ரீ யோ வாசி ததா விது
மகாரஸ்து தயோர்தாஸ
இதி பிரணவ லஷணம் -என்றும்

(அகாரமானது சித் ஸ்வரூபனான விஷ்ணுவுக்கு வாசகமாக இச்சிக்கப் படா நின்றது
உகாரத்தை சித் ஸ்வரூபையான ஸ்ரீ க்கு வாசகமாக அறியா நின்றார்கள்
மகாரம் அவர்களுக்கு தாஸனான ஆத்மாவாகச் சொல்லப்படுகிறது
இது ப்ரணவத்த்துக்கு லக்ஷணம்)

அகாரேனோ ஸ்யதே விஷ்ணுஸ் சர்வ லோகேஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணுனா லஷ்மீ ருகாரேநோஸ்யதே சதா
மகாரஸ்து தயோர் விபர ஸ்ரீ நாராயண யோஸ் சதா ஆத்மனஸ் சேஷ பூதஸ்ய வாசக ஸ்ருதி சோதித-என்றும்
இத்யாதிகளாலே பகவத் சாஸ்த்ரத்திலே-ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனங்கள்

(ஸர்வ லோகத்துக்கும் ஈஸ்வரனாய் வியாபகனான ஹரியானவன் அகாரத்தாலே சொல்லப்படா நின்றான்
அந்த விஷ்ணுவாலே எப்போதும் திரு மார்பிலே தரிக்கப் பட்டு இருக்கிற லஷ்மியானவள் உகாரத்தாலே சொல்லப்படுகிறாள்
மகாரமானது அந்த ஸ்ரீ நாராயண மிதுனத்துக்கு எப்போதும் சேஷ பூதனான ஆத்மாவுக்கு வாசகமாக ஸ்ருதியிலே சொல்லப்பட்டது)

அகாரத்தை பகவத் வாசகமாகவும்
உகாரத்தை லஷ்மி வாசகமாகவும்
மகாரத்தை தத் உபய பூத சேஷ பூத ஜீவ வாசகமாகவும்- சொல்லுகையாலே

உகாரத்தை அவதாரண வாசகமாகக் கொள்ளாதே -லஷ்மி வாசகமாகக் கொண்டு
இவ் உகாரத்தாலே பெரிய பிராட்டிமாருக்கு சேஷம் என்கிறது என்றும் நிர்வஹிப்பர்கள் என்கை –

(அக்ரத –இத்யாதி –முன்னே பெருமாள் எழுந்து அருளினார் -ஸூ மத்யமையான பிராட்டி நடுவே எழுந்து அருளினாள்
பின்னே கையும் வில்லுமாகக் கொண்டு இளையபெருமாள் எழுந்து அருளினார்
இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் -பிரணவம் கால் கொண்டு நடந்தால் போல் இருக்கிறது என்று
பூர்வாச்சார்யரான சோமாசி யாண்டான் நிர்வாகமாக அருளிச் செய்வார்கள்)

————————————————-

அதிலும் அந்ய சேஷம் கழிகையே பிரதானம் –சூரணை-61-

அத்தை பற்றவே பூர்வ யோஜனையே முக்கியம் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பெரிய பிராட்டியாருக்கு சேஷம் ஆகை ஆகிற அதிலும் காட்டிலும் கீழ் சொன்ன
பகவத் சேஷத்வத்துக்கு விரோதியான அந்ய சேஷத்வம் கழிகையே பிரதான அபேஷிதம் என்கை

————————————————–

தேவர்களுக்கு சேஷமான ப்ரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே -ஈஸ்வர சேஷமான
ஆத்ம வஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷம் ஆக்குகை-சூரணை -62

அந்ய சேஷத்வம் இப்படி க்ரூரமோ என்ன க்ரௌர்யத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது –

ஆராத்யரான இந்த்ராதி தேவர்களுக்கு யோக்யதா சேஷமாக கல்பிதமான ப்ரோடாசத்தை
தர்சன ஸ்பர்சநாதிகளுக்கு அநர்ஹகாம் படி நிஹீனமாய் இருக்கிற நாய்க்கு இடுமா போலே இருப்பதொன்று –
ப்ராப்த சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷமான ஆத்ம வஸ்துவை சர்வ பிரகாரத்தாலும் ஹேயமான
சம்சாரிகளுக்கு சேஷம் ஆக்குகை என்கை –

(சம்சாரிகளுக்கு–ஸர்வ பிரகாரத்தாலும் ஹெயமான இந்திராதி தேவர்களுக்கு -சர்வ பிரகாரத்தாலும் –ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களாலும்)

—————————————————

பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம் –சூரணை -63-

இப்படி குரூரமான அந்ய சேஷத்வம் கழிகையே ஆத்மாவுக்கு பிரதான அபேஷிதம் -என்று
கீழ் சொன்ன அர்த்தத்தை ஸ்த்ரீ கரிக்கிறார் –
அதாவது –

லஷ்மி சேஷத்வத்திலும் காட்டிலும் பிரதானம் என்ற அளவே அன்று –
பகவான் தனக்கு சேஷமாய் இருக்கும் அதிலும் காட்டிலும் அந்ய சேஷத்வம் கழிகையே
ஆத்மாவுக்கு பிரதான அபேஷிதம் என்கை-

————————————————————–

மறந்தும் புறம் தொழா மாந்தர் என்கையாலே –சூரணை-64-

இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் –
அதாவது

யம கிங்கரர் சம்வாதத்தை திரு மழிசைப் பிரான் அருளி செய்த –
திறம்பேன்மின் கண்டீர் -என்கிற பாட்டிலே பாகவத லஷணம் சொல்லும் அளவில் –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -என்று
ஸவாமி உடைய திரு நாமத்தை மறந்தார்கள் ஆகிலும் மற்று ஒரு விஷயத்தில்
சேஷ வ்ருத்தி பண்ணாதவர்கள் என்று சொல்லுகையாலே என்கை –

(திருவடி தன் நாமம் மறந்து-என்றது திருமந்திரத்தை மறந்தும் என்றதாய் பகவத் சேஷத்வ ஞானம் இல்லாவிடில் என்றபடி -)

(திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை –இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-)

—————————————–

இத்தால் தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது-சூரணை -65

ஈஸ்வர சேஷமான ஆத்மா வஸ்துவுக்கு ஸ்வ சேஷத்வ பர சேஷத்வங்கள் இரண்டும்
அந்ய சேஷத்வம் ஆகையாலே -உபயததையும் இவ் உகாரம் கழிக்கின்றது என்று சொல்லி நிகமிக்கிறார்
அதாவது

அந்ய சேஷத்வ நிவர்தகமான இவ் உகாரத்தாலே -அந்யரில் அந்ய தமத்வம் அவிசிஷ்டமாகையாலே
இவ் ஆத்மா வஸ்து தனக்கு உரித்த தன்று –
தன்னை ஒழிந்த சம்சாரிகளுக்கும் உரித்த தன்று என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-

(அந்ய தரம் -இருவரைச் சொல்லும் பொழுது அந்ய தமம்-பலரைச் சொல்லும் பொழுது )

(உபயததையும்-ஸ்வ சேஷத்வ பர சேஷத்வம் இரண்டையும்
அந்யரில் அந்ய தமத்வம் அவிசிஷ்டமாகையாலே-பகவத் அந்நியரில் ஒருவனாய் இருக்கை தனக்கு சமானமாகையாலே
உரித்த தன்று –-சேஷமாய் இருக்கை யோக்யமன்று
அந்நிய சேஷத்வ நிவர்த்தகமான இவ்வுகாரத்தாலே
தனக்கும் -அந்நியரில் அந்நிய தமனான தனக்கும்
பிறருக்கும் -தன்னை ஒழிந்த சம்சாரிகளுக்கும்
சேஷம் அன்று என்னும் இடம் சொல்கிறது)

———————————————————–

மகாரம் இருப்பத்தஞ்சாம் அஷரமாய்-ஞான வாசியுமாய் -இருக்கையாலே ஆத்மாவைச் சொல்லுகிறது –சூரணை -66-

ஆக உகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
அநந்தரம் த்ருதிய அஷரமான மகார அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
அதாவது

பூதானி ச கவர்க்கேன சவர்க்கேன இந்த்ரியாணி ச டவர்க்கேன தவர்கென
ஞான கந்தா தயச்தாதா மன பகாரேனை வோக்தும் பகாரேன த்வஹன்க்ருதி
பகாரேன பகாரேன மகான் பிரகிருதி உச்யதே ஆத்மாது ச மகாரேன பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித -என்கிறபடியே
(இந்த்ரியாணி-கர்ம இந்திரியங்கள் -ஞான -ஞான இந்திரியங்கள் -)
ப்ருதிவ்யாதி பிரகிருதி அந்தமான இருபத்து நாலு தத்துவத்துக்கும் வாசகமாய் இருந்துள்ள –
ககாராதி பகாரந்தமான இருபத்து நாலு அஷரமும் போல் அன்றிக்கே –

மகாரம்
இருபத்தஞ்சாம் அஷரமாய்
மன ஞானே -என்கிற தாதுவிலே ஆதல்
மனு அப போதனே என்கிற தாதுவிலே ஆதல்
நிஷ்பன்னம் ஆகையாலே
ஞான வாசியுமாய் இருக்கையாலே

பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி -என்கிறபடியே
பஞ்ச விம்சகனாய் –
விஞ்ஞானாத்மா புருஷ விஞ்ஞா தாரமரே கேன விஜாநீயாத் -என்கிறபடியே
ஞான ஸ்வரூபனாய்-ஞான குண கணுமாய் இருக்கிற ஆத்மாவைச் சொல்லுகிறது -என்கை-

———————————————————–

இது தான் சமஷ்டி வாசகம்–சூரணை -67

கீழ் சொன்ன சேஷத்வம் சர்வ சாதாரணம் ஆகையாலே  த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும்
இதிலே சொல்ல வேண்டும் ஆகையாலே அருளிச் செய்கிறார் –
அதாவது
இப்படி ஆத்ம வாசகமான  இம் மகாரம் தான் ஆத்ம சமஷ்டிக்கு வாசகம் என்கை-

(சர்வ சாதாரணம் ஆகையாலே -என்றது ஸர்வாத்ம சாதாரணம் ஆகையாலே)

(இப்படி என்றது -பகவத் அநந்யார்ஹ சேஷத்வேநவும் –பஞ்ச விம்சத்வேநவும் –ஞான ஆனந்த ஸ்வரூபத்வேநவும் –ஞான ஆனந்த குணகத்வேநவும் -என்றபடி)

——————————————————–

ஜாத் ஏக   வசனம்–சூரணை -68

ஏக வசனம்  சமஷ்டி வாசகமோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

அதாவது –
வ்ரீஹி  சமூகத்தை சொல்லுகிறவன் இது ஒரு நெல் என்றால் –
அந்த ஏக வசனம் ஜாதி பரமாப் போலே
இதுவும் ஆத்ம ஜாதி பரமான ஏக வசனம் என்கை –

(சமஷ்டி வாசகம் என்றது ஆத்ம ஸமூஹ வாசகம்)

—————————-

இத்தால் ஆத்மா ஞாதா என்று தேஹத்தில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று–சூரணை -69

இம் மகாரத்தால் ஆத்மாவினுடைய எவ் வாகாரம் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
பஞ்ச விம்ச அஷரமாய் -ஞான வாசியுமாய் இருந்துள்ள இம் மகாரத்தால் –
சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மா  ஞான ஆஸ்ர்ய  பூதன் ஆவான் என்று
அசேதனமான தேஹத்தில் காட்டில்
ஆத்மாவின் வியாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று -என்கை-

(சித்துக்கும் அசித்துக்கும் சேஷத்வம் பொது தானே –
ஞாத்ருத்வமே ஆத்மாவுக்கு சரீரத்தில் வாசி என்றவாறு)

—————————————————

தேஹத்தில்  வியாவ்ருத்தி தத்வ சேகரத்தில் சொன்னோம்–சூரணை -70-

தேவோஹம் மனுஷ்யோஹம் ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று
தேஹத்தில் அஹம் புத்தி வியவஹாரங்கள் நடவா நிற்க –
அஹம் அர்த்த பூதனான ஆத்மா
தேஹத்தில் வியாவ்ருத்தன் என்று சொல்லுகிறபடி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –

அநேக ஹேதுக்களாலே தேஹத்தின் உடைய அநாத்மவத்தை சாதியா நின்று கொண்டு
ஆத்மாவின் உடைய தத் வியாவ்ருத்தியை
தத்வ சேகரம் ஆகிற பிரபந்தத்திலே வியக்தமாய் சொன்னோம் –
அதிலே கண்டு கொள்க என்கை-

—————————————

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே
சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது –
அல்லாத போது -உயிரினால் குறைவிலம் -என்கிறபடியே த்யாஜ்யம் –
அது தோன்ற சேஷத்வத்தைச் சொல்லி பின்னை ஆத்மாவைச் சொல்லுகிறது–சூரணை -71

தர்மி ஸ்வரூப கதன பூர்வகமாக தத் தர்மமான சேஷத்வத்தை சொல்லுகை ப்ராப்தமாய் இருக்க –
இப் பிரணவம் தன்னிலே ப்ரதமம் சேஷத்வத்தை சொல்லி
பின்னை ஆத்மாவை சொல்லுவான் என் -என்கிற சங்கையிலே
அப்படி சொல்லுகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது
மணத்துக்கு ஆஸ்ரயம் என்று பூவை விரும்புமா போலேயும் –
ஒளிக்கு ஆஸ்ரயம் என்று ரத்னத்தை விரும்புமா போலேயும் –
சேஷத்வதுக்கு ஆஸ்ரயம் என்று ஆயிற்று ஆத்மாவை ஆதரிக்கிறது –

சேஷத்வம் ஆஸ்ரயம் அல்லாத போது -உயிரினால் குறைவிலம் –திருவாய் மொழி -4-8-10-என்று
பகவத் சேஷத்வ ரஹிதமான ஆத்மாவால் அபேஷை உடையோம் அல்லோம் என்கிறபடியே –
த்யாஜ்யனாய் விடும் அத்தனை –
இப்படி இருந்துள்ள சேஷத்வத்தின் ஊற்றம் தோன்ற -சேஷத்வத்தை முந்துற சொல்லி
பின்னை ஆத்மாவை சொல்லிற்று என்கை-

(உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்துகந்த
தடம் புனல சடை முடியன் தனியொரு கூறமர்ந்து றையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே –4-8-10-)

(உயிரினால் குறைவிலமே –இந்த ஆத்மா தொலைந்து போகட்டும் என்றபடி–நித்ய வஸ்து தானே
எம்பெருமான் உடைய விருப்பத்துக்கு உடலாவதே ஆத்மாவின் ஸ்வரூபம் என்று கூட்டின படி –
சேஷத்வ பஹிர்ப்பூத ஜ்ஞானந்த மயனையும் சஹியாதார் த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே -நாயனார்)

———————————————-

ஆக
பிரணவத்தால்- கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திரு மொழி -8-9-3-
என்கிறபடி ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று –சூரணை-72-

பத த்ரயாத்மகமான இப் பிரணவத்தால் சொல்லித்   தலைக் கட்டின அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –

கீழ் சொன்ன எல்லா வற்றிலும் -பிரணவத்தால் –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு –என்று சதுர்த்தி அந்தமான அகாரத்தையும்
அடியேன் -என்று சேஷத்வ ஆஸ்ரய வாசியான மகாரத்தில் அர்த்தத்தையும் –
ஒருவருக்கு உரியேனோ-என்று அந்ய சேஷத்வ நிவர்தகமான உகாரத்த அர்த்தத்தையும்
சொல்லா நின்று கொண்டு
பிரணவ அர்த்தத்தை அனுசந்தித்த திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திப் படியே –
ஜீவ பரர்களுக்கு உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தத்தைச் சொல்லிற்று என்கை-

(விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-)

———————————–

இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றது ஆயிற்று –சூரணை -73-

இன்னமும் பொய்கையார் உடைய ஸ்ரீ ஸூக்தி யாலே-(67-) சேஷத்வ பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும்
இடம் தோற்ற இந்த ஜீவ பர சம்பந்தத்தை அருளிச் செய்கிறார் இத்தால் –
அதாவது –

இப் பிரணவத்தால்
தாமரையாள் கேள்வன் -என்று அகார வாச்யனாய் -சேஷத்வ பிரதி சம்பந்தியான ஸ்ரீ யபதியையும் –
ஒருவனையே நோக்கும் -என்று சதுர்த்தி உகாகரங்களால் சொல்லுகிற அனந்யார்ஹ சேஷத்வ
பிரயுக்தமான ஆத்மாவினுடைய ததேக பரததையும் –
உணர்வு -என்று அந்த சேஷத்வ ஆஸ்ரயமாக மகாரத்தில் சொல்லப்பட்ட
ஞானைக நிரூபணியனான-ஆத்மாவையும் சொல்லுகிற ஸூக்தியில் படியே
ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று ஆயிற்று -என்கை –

(பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு —67-)

—————————————–

அகாரத்தாலும் மகாரத்தாலும் -ரஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லிற்று –
சதுர்த்தியாலும் உகாரத்தாலும் -ரஷண ஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று –சூரணை -74-

அகாரத்தில் ப்ரர்த்யயார்த்த பிரதானமாக பிரணவ அர்த்தத்தை யோஜித்தார் கீழ் –
அதில் தாத்வர்த்த பிரதானமாக ப்ரணவதுக்கு இன்னமும் ஒரு யோஜனை அருளிச் செய்கிறார் –
அதாவது

அகாரத்தாலே ரஷகனான ஈஸ்வரனைச் சொல்லிற்று –
மகாரத்தாலே தத் ரஷ்யமான ஆத்மா வஸ்துவைச் சொல்லிற்று –
சதுர்த்தியாலே ரஷிக்கைக்கு ஹேதுவான சேஷத்வம் ஆகிற ப்ராப்தியைச் சொல்லிற்று –

இப்படி ரஷிக்கிறதுக்கு பலம் – இவ் ஆத்மா வஸ்து அத் தலைக்கு அனந்யார்ஹமாக விநியோகப் படுகையாலே
அனந்யார்ஹ சேஷ வாசியான உகாரத்தாலே -ரஷண பலத்தைச் சொல்லிற்று என்கை –

—————————————-

இனி மேல் பிரணவத்தை விவரிக்கிறது –சூரணை -75-

ஆக இம்மந்த்ரத்தில் பிரதம பதமான பிரணவ அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி மேலில் பதங்களுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக மந்திர சேஷமும் இதுக்கு விவரணமாய்
இருக்கும் படியை முந்துற அருளி செய்கிறார் –

இவ் இடத்தில் விவரணம் ஆகிறது –
ப்ரஸ்துதமான அர்த்தத்துக்கு உபயுக்தமான அர்த்தத்தைச் சொல்லிக் கொண்டு -பூர்வோக்தமான அர்த்தத்தை
விசதீகரிக்கை என்று தீப பிரகாசத்திலும் –
உக்த்தார்தத விசதீகார யுக்த்தார்த்தாந்தர போதனம் மதம் விவரணம்
தத்ர மஹிதானாம் மநீஷிணாம்-என்று
ரஹஸ்ய த்ரயார்த்த விவரண க்ரமம் அருளிச் செய்த பிரபந்த்தத்திலும்
விவரண லஷணத்தை (வாதி கேசரி மணவாள )ஜீயர் அருளி செய்தார் இறே-

————————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -35–57-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 9, 2024

இதில் அகாரம் சகல சப்தத்துக்கும் காரணமாய்
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே
சகல ஜகத்துக்கும் காரணமாய்
சர்வ ரஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது –சூரணை-35–
(அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு )

இனி இவ் அஷய த்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அகார அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
அதாவது –

இவ் அஷர த்ரயத்திலும் வைத்து கொண்டு பிரதம அஷரமான அகாரம்
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச பிரபஞ்சம் வேத சப்தேப்ய எவாதவ் தேவாதீநாஞ் சகர ச -என்கிறபடியே
லௌகிக சகல சப்தங்களுக்கும் வேதம் காரணமாய்

பிரணவாத்யா சதத வேதா ஓங்கார பிரபவா வேதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அந்த வேதங்களுக்கும் பிரணவம் காரணமாய் –

தஸ்ய பிரக்ருதி லீநஸ்ய -என்கிறபடியே
அந்த பிரணவம் தனக்கும் தான் காரணமாய் இருக்கையாலே –

அகாரோ வை சர்வா வாக் சமஸ்த சப்த மூலாத்வாத காரஸ்ய ஸ்வபாவாத -என்கிறபடியே
சகல சப்தத்துக்கும் காரணமாய்

சர்வேஸ்வரன் சமஸ்த வஸ்து சரீர தயா சர்வ ரஷகனாய் இருக்கும் படியை பிரதி பாதிக்கிற
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே –

யதோ வா இமானி பூதாநி ஜாயந்தி யே
ந ஜாதானி ஜீவந்தி ச ஏவ ஸ்ருஜ்யஸ் ச ச சரக்க கர்த்தா
ச ஏவ பாத்யத்தி ச பால்யதே ச -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

எல்லா ஜகத்துக்கும் காரணமாய்
எல்லாருக்கும் ரஷகனாய் இருக்கும் எம்பெருமானைச் சொல்லுகிறது என்கை-

இத்தால்
இவ் அஷரத்தில் -பிரக்ருத் யர்த்தமான-காரணத்வமும்
தாத்வர்த்தமான ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

(பிரக்ருத் யர்த்தமான-ப்ரணவ ஸம் ஜிக அகாரார்த்தமான
காரணத்வமும்-நிமித்த ஸஹகாரி உபாதான ரூப த்ரிவித காரணமாய்
தாத்வர்த்தமான –-அவ ரக்ஷணே -அவ் என்கிற தாது அர்த்தமான ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று)

இவ் அகாரத்துக்கு நாராயண பத ஸங்க்ரஹ தயா ரஷக வாசித்வம் சொல்லும் போதும்
தாது சித்த வேஷத்தை அவலம்பித்தே சொல்ல வேணும் இறே

——————————————–

ரஷிக்கை யாவது
விரோதியை போக்குகையும்-
அபேஷிதத்தைக் கொடுக்கையும் –சூரணை-36

ரஷிக்கை யாவது தானெது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார்

அதாவது
ரஷகவம் தான் அநிஷ்ட நிவர்த்தகத்வ இஷ்ட பிராபகத்வ ரூபேண த்விவிதமாகையாலே
ஈஸ்வரன் சேதனரை ரஷிக்கையாவது
அவர்களுக்கு துக்க அவஹமான விரோதியைப் போக்குகையும்
ஸூக அவஹமான அபேஷித்ததைக் கொடுக்கையும் என்கை-

——————————————

இவை இரண்டும் சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும்-சூரணை -37

இவர்களுக்கு இவன் போக்கும் விரோதி எது –
கொடுக்கும் அபேஷிதம் எது என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது
சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் -என்றது
தத் தத் அதிகார அனுகுணமாக இருக்கும்-

(இவை இரண்டும் -போக்கும் விரோதியும் கொடுக்கும் அபேக்ஷிதமும் ஆகிய இவை இரண்டும்)

—————————————–

சம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள் -அபேஷிதம் அன்ன பாநாதிகள் –
முமுஷுகளுக்கு விரோதி -சம்சார சம்பந்தம் -அபேஷிதம் பரம பத ப்ராப்தி
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி -கைங்கர்ய ஹானி -அபேஷிதம் -கைங்கர்ய விருத்தி –சூரணை -38

இது தன்னை வியக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
தேக ஆத்மா அபிமாநாதிகளும்-சப்தாதி விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும் சம்சாரிகளுக்கு –
நிவர்த்யமான விரோதி
சத்ருக்களால் வரும் நலிவு தொடக்க மானவை –
பிராப்யமான அபேஷிதம்
சோறு தண்ணீர் முதலானவை என்கை –

(தேக ஆத்மா அபிமாநாதிகளும்–ஆதி ஸப்தத்தாலே ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானத்தைச் சொல்கிறது)

சத்ரு பீடாதிகள் என்ற  இடத்தில்  ஆதி சப்தத்தாலே
தேக மனோ வியாதி முதலானவற்றால் வரும் பீடைகளைச் சொல்லுகிறது –
அன்ன பாநாதிகள் என்கிற  இடத்தில் -ஆதி சப்தத்தாலே
ஸ்ரக் வஸ்த்ர ஆபரண அங்கராக அங்கந ஆலிங்க நாதிகளைச் சொல்லுகிறது –

(ஆதி யாவது மானஸீக துக்கம்
வியாதி யாவது -தேஹஜமான ஜ்வராதிகள்)

முமுஷுகளுக்கு இத்யாதி –

அதாவது
சம்சாரத்தில் அடிக் கொதித்து -பரம பதத்தில் ஆசைப் படா நிற்கும் முமுஷுகளுக்கு – நிவர்த்யமான  விரோதி –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய்க் கொண்டு –
இவ் விபூதியில் இருக்கை -ஆகிற சம்சார சம்பந்தம்-
ப்ராப்யமான அபேஷிதம் –
பகவத் அனுபவாதிகளுக்கு அனுகூலமான பரம பதத்தைப் பிராபிக்கை என்கை –

(சம்சாரத்தில் அடிக் கொதித்து-கால் கொதித்து -அதாவது விரோதி ஞானம் தலை எடுக்கை
பொய் நின்ற -உத்பத்தி விநாஸாதி யோகத்தாலே அசத்திய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில்
ஞானமும் –ஆத்ம ஞானமும்
பொல்லா ஒழுக்கும் –அந்த தேஹ ஆத்ம அபிமானம் அடியான ஸம்ஸார துஷ் காம ப்ரவ்ருத்தியும்
அழுக்கு உடம்புமாய்க் கொண்டு –இக்கர்மம் அடியாக வரக்கடவதுமான மாம்ஸ ஸ்ரக்காதி மல ரூப தேஹ சம்பந்தமும்
இந்நின்ற நீர்மை -இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
இனி யாம் உறாமை -நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை யுடையவர்களாய்
இன்று அங்கீ கார பலத்தை யுடைய நாங்கள் அணுகாதபடி
உயிர் அளிப்பான் -ப்ராணி பதார்த்தங்களுடைய அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கைக்காக
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –ரூப ப்ரகார வியவஸ்திங்களான ஸகல ஜாதிகளிலும் அவதீர்ணன் ஆனவனே
இமையோர் தலைவா -ஏவம் வித ஸுலப்ய விஸிஷ்டனான யுன்னை ஆஸ்ரிதரை ஸதா அனுபவிப்பிக்கைக்காக
ஸதா ஸ்தான பரரான அயர்வரும் பாமரர்களுக்கு அதிபதி யானவனே
அடியேன் செய்யும் விண்ணப்பம் மெய் நின்று கேட்டருளாய் -உனது திருவடிகளில் நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை -ஜகத் வியாபாரத்தில் பறக்கற்று நின்று கேட்டு அருள வேண்டும்
மெய் நின்று கேட்டருளாய்-அபரோஷிக்கும் படி நின்று என்னவுமாம்
கேட்டருளாய்–கேட்க்கை தானே அருள் என்று கருத்து
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பம் -என்று அன்வயம்
யாம் உறாமை என்று பன்மையாய் இருக்க அடியேன் என்ற ஒருமையாலே -விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவராய் பல லாபம் சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து)

முக்தருக்கும் இத்யாதி –
அதாவது –
நிவ்ருத்த சம்சாரராயும் -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராயும் -பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்ய பரராய் இருக்கும்
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி –
வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் திரு அடிகளிலே
ஸ்வரூப அனுரூபமாக பண்ணிக் கொண்டு போகும் கைங்கர்யத்துக்கு வரும் விச்சேதம்
அபேஷிதம் -உத்தரோத்தரம் அடிமை செய்து செல்லுகை யாகிற கைங்கர்ய விருத்தி என்கை-

(நிவ்ருத்த சம்சாரராயும் –என்கிற விசேஷணம் முக்தருக்கும்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராயும்–என்கிற விசேஷணம் நித்யருக்கும் –
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்ய பரராய் இருக்கும்-என்கிற விசேஷணம் இருவருக்குமாக யோஜிக்கவுமாம்
ஸ்வரூப அனுரூபமாக-சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப அனுரூபமாக)

ஆக இப்படி அதிகார அனுகுணம் விரோதியைப் போக்கி
அபேஷிதத்தைக் கொடுக்கை யாகையாலே
ஈஸ்வரனே சர்வ ரஷகன் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று-

————————————–

ஈஸ்வரனை ஒழிந்தவர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம்
பிரபந்த பரித்ரானத்திலே  சொன்னோம் –சூரணை -39

இப்படி ஈஸ்வரனேயோ பின்னை எல்லாரையும் ரஷிக்கிறவன்-
லோகத்திலே மாதா பிதா பிரகிருதி தேவதாந்திர பர்யந்தமாக ரஷகராய் போகிறவர்கள்
பலரும் இல்லையோ -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –

நிருபாதிக  பந்துவாய் -சர்வகாலமும் கைவிடாதே நோக்கி கொண்டு போரும் சர்வேஸ்வரனை
ஒழிந்த ஔபாதிக பந்துகளான மாதா பித்ராதிகளும் அர்வாசீ நரான தேவதாந்த்ரங்களும் –
ரஷகர் அல்லர் என்னும் இடம் –
ச ஹேதுகமாக பிரபன்ன பரித்ரானம் என்கிற பிரபந்தத்திலே சொன்னோம் –
அதில் கண்டு கொள்வது என்கை-

(அர்வாசீ நரான தேவதாந்த்ரங்களும்–தங்களுடைய ரக்ஷணத்தில் தங்களுக்கு சக்தி இல்லாதவர்களான)

(முமுஷூவாய் -மோஷார்த்தமாக-சர்வேஸ்வரனைப் -பற்றி இருக்குமவனுக்கு
அநந்ய கதித்வமும் -ஆகிஞ்சன்யமும் வேணும் –
அநந்ய கதித்வம் ஆவது –களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்கிறபடியே
சர்வேஸ்வரனை ஒழிய வேறு ஒரு ரஷகர் இல்லை என்று இருக்கை-
ப்ராதாக்கள் புத்ரர்கள் மாதா பிதாக்கள் ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரஷகராகக் குறை என் என்னில்
ப்ராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி பக்கலிலும் -ராவணன் பக்கலிலும் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் பக்கலிலும் கம்சன் பக்கலிலும் காணலாம் —
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி பக்கலிலும் ஹிரண்யன் பக்கலிலும் காணலாம் –

மாதா பிதாக்கள் யௌவன விரோதி என்று உபேஷித்தல்-ஷாம காலம் வந்தவாறே ஆள்பார்த்து தூற்றிலே பொகடுதல்-
விலை கூறி விற்றல் -ஆபத்து வந்தவாறே நெகிழ நினைத்தல்
அர்த்த ஷேத்ராதி களுக்காக எதிரிட்டுக் கொல்லுதல்-முடியும் அவஸ்தையிலே
சோர்வினால் பொருள் வைத்தது யுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
ஈஸ்வரனை ஸ்மரித்துக் கரை மரம் சேர ஒட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யா நிற்பர்கள்-
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் –
இவர்கள் ரஷகர் அல்லரோ யாகிலும் நாட்டாருக்குக் கண் காட்டியாய்ப் போருகிற சந்திர ஆதித்யர்கள் ரஷகராகக் குறை என் -என்னில்
அவர்களும் ஈஸ்வர ஆஜ்ஞைக்கு அஞ்சி தாங்கள் நினைத்த படி சஞ்சரிக்கப் பெறாதே
நாழிகை கூறிட்டு -பெரியாழ்வார் -4-1-8-உதிப்பது அச்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும்
ஹிரண்ய ராவணாதிகள் கையிலே அகப்பட்டு அவர்களுக்கு இழி தொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரஷகராக மாட்டார்கள்

த்ரை லோக்யத்துக்கும் பாலகனான இந்த்ரனும் எப்போதோ நம்பதம் நழுவப் புகுகிறது என்று அஞ்சி சபோபஹதனாய்
இந்த்ரஜித்தின் கையிலே அகப்பட்டுக் கட்டுண்டு
மகாபலி போல்வார் கையிலே ஐஸ்வர் யத்தைப்  பறி கொடுத்து
கண்ணும் கண்ணீருமாய் கழுத்தும் கப்படமுமாய்க் -எளிவரவைக் காட்டும் வஸ்த்ரம் -கொண்டு திரிவான் ஒருவன் ஆகையாலே அவனும் ரஷகனாக மாட்டான் –
ப்ரஹ்மாவும் -மது கைடபர்கள் கையிலே அகப்பட்டு வேதங்களைப் பறி கொடுத்து -கண் இழந்தேன் -தனம் இழந்தேன் -என்று நிலம் துழாவு கையாலும்
ருத்ரன் கையிலே தலை அறுப்பு உண்கையாலும் ரஷகன் ஆகமாட்டான் –

ருத்ரனும் -சகல பிராணிகளையும் சம்ஹரிக்கையே தொழிலாக யுடையனாய்
விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தால் போலே இருக்கத்   தழல் நிற வண்ணனாய்-பெரிய திரு -6-1-3- தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அறுத்துத் தா பொரித்துத் தா –என்று கொடும் தொழிலைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்
தன்னை  ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் -என்று பிரதிஜ்ஞை பண்ணி
தன்னைத் தொழுத கைகளை கள்ளிக் காடு சீய்த்தால் போல்சீய்க்கக் கண்டு
உயிர் யுண்டாகில் உப்பு மாறி யுண்ணலாம் என்று நெற்றியிலே கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினன்   ஆகையாலும்
லோக குருவாய் தனக்குப் பிதாவான ப்ரஹ்மாவின் தலையைத் திருகிப் பாதகியாய் கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து கைத்தளையுமாய் கொண்டு
திரிவாரைப் போலே கையும் கபாலமுமாய் திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்கு தன்னை வெளியிட்டுக் கொண்டு திருவான் ஒருவன் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
இனி அர்த்தம் ஆமோ என்று நிரூபித்தால் -கள்ளர் கொள்ளுதல் -காமம் கொள்ளுதல் -கோமுற்றார் கொள்ளுதல் –
ஜ்ஞாதி கொள்ளுதல் -வியாதி கொள்ளுதல் -பிறரோடு எதிரிட்டு விஷ பஷணம் பண்ணி தன்னைத் தானே முடித்துக் கொள்ளும்படி
பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரஷகம் ஆக மாட்டாது –

ஈஸ்வரன் -மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் -பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் -பெரிய திருமொழி -8-9-7-என்றபடி
தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகம் காட்டியும்
இன் சொல்லுச் சொல்லியும் ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ நின்ற வன்று தான் ஏறிட்டுக் கொண்டு
கழுத்திலே ஓலை கட்டித் தூது போயும் புருவம் நெரித்த உடத்திலே தேரை நடத்தியும் மார்விலே அம்பேற்றும்
சாவாமல் நோக்கியும் செத்தாரை மீட்டும்  நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தரிப்பாலே அகவையிலே நின்று
சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரஷகன் –

இனி -ஆகிஞ்சன்யம் ஆவது -கர்ம ஜ்ஞான பக்திகளிலும்
அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் -அந்வயம் இன்றிக்கே
அவற்றுக்கு விபரீதங்களான வற்றாலே தான் பரிபூர்ணனாய் இருக்கிற இருப்பையும்
தன்னுடைய ஸ்வரூபம் சர்வ பிரகாரத்தாலும் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
நம்  கார்யத்துக்கு நாம் கடவோம் அல்லோம் -என்று இருக்கை-

இவை இரண்டையும்   யுடையனாய் ஈஸ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப்பரனாய் இருக்குமவனுக்கு
சரீர அவசான காலத்திலேயே ப்ராப்தி அணித்த வாறே -ந யாமி -என்று அருளிச் செய்த படியே –
ஈஸ்வரன் தானே சரக்காளாய் வந்து -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தேறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடே ஒரு கோவையாக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்து அருளும் —)

————————————-

ரஷிக்கும் போது பிராட்டி  சந்நிதி வேண்டுகையாலே -இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம் –சூரணை -40

அநந்தரம் அர்த்த பலத்தாலே -இப்பதத்தில் அனுசந்திக்கப் படும் ஸ்ரீ யபதித்வத்தை அருளிச் செய்கிறார்
அதாவது

லஷ்ம்யா சஹா ஹ்ருஷிகேசா தேவ்யா காருண்யா ரூபயா ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே -என்கிறபடி
ரஷகனான சர்வேஸ்வரன் சேதனரை ரஷிக்கும் தசையிலே –
இவர்களுடைய அபராதங்களை கண்டாதல் –
தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே யாதல் –
உபேஷியாமல் செய்கைக்கும் உறுப்பான கிருபையை ஜனிப்பிக்கும்
புருஷகார பூதையான பிராட்டி ஸந்நிதி அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே
ரஷகனான அவனைச் சொல்லுகிற இவ் அவகாரத்திலே அவனுடைய லஷ்மி சம்பந்தமும்
அனுசந்தேயம் என்கை –

(சாலப் பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் கோலத் திரு மா மகளோடு கூட
அவளே கருணை ரூபம் -இவனது கருணையை கிளப்பி விடுகிறாள் -)

(கோலத் திரு மா மகளோடு ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே –6-9-3-
ஓர் உயிர் காப்பானே
ஓர் உயிர்கள் காப்பானே
பல நாள் ஓர் உயிர்கள் காப்பானே
பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப்
பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே)

லஷ்மி என்னாதே ஸ்ரீ என்றது –
ஸ்ரயத இதி ஸ்ரீ -என்கிறபடி அவனை நித்ய சேவை பண்ணுகையாலே -அவனோடு இவளுக்கு உண்டான
அவிநாபாவமும்-
ஸ்ரீ யத இதி ஸ்ரீ -என்கிறபடி
சேதனருக்கு இவள் நித்ய சேவ்யயாய்  இருக்கும் என்னும் அதுவும் தோற்றுகைக்காக-

——————————————————-

அத்ர பகவத் சேநாபதி மிஸ்ரர் வாக்யம்-
அவன் மார்பு விட்டு பிரியில்
இவ் அஷரம் விட்டு பிரிவது –சூரணை -41

இன்னும் இவ் அவகாரத்தில் ஈஸ்வரனுடைய லஷ்மி சம்பந்தம் நியமேன தோற்றும்
என்னுமத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிக்கிறார்-
அதாவது –

இவ்விடத்தில் ஞாநாதிகரான ஸ்ரீ சேனாபதி சீயர் அருளி செய்யும் வார்த்தை –
அகலகில்லேன் இறையும் என்று அவன் திரு மார்பில் நித்ய வாசம் பண்ணும் இவள்
அவன் மார்பை விட்டு பிரியல் ஆயிற்று -அவனுக்கு பிரதிபாதகமான இவ் அஷரத்தை விட்டு பிரிவது என்று -என்கை –

என்று -என்கிற
இத்தனையும் கூட்டாத போது கீழோடு இவ் வாக்யம் அந்வயியாது-

இத்தால் அவன் திரு மார்பில் சம்பந்தம் இவளுக்கு நித்யம் ஆகையாலே –
அவன் தோற்றும் இடத்தில் இவளும் தோற்றுகை நிச்சிதம் ஆகையால் –
அவன் திருமார்பில் அந்வயித்தோ பாதி
அவனுக்கு வாசகமான அகாரத்தில் அந்வயமும் இவளுக்கு நித்யம் என்றது ஆயிற்று-

—————————————–

பர்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும்
விடாதே இருக்கும் மாதாவைப் போலே
பிரதம சரம பதங்களை விடாதே இருக்கும் இருப்பு –சூரணை -42-

இன்னும் இவ் அர்த்தத்தை ஸ்த்ரீகரிக்கைகாக -ஈஸ்வர சேதன வாசகங்களான
அகார மகாரங்கள் இரண்டிலும் -இவளுக்கு உண்டான அநவரத அந்வயத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது

சேஷ பூதையான தன் ஸ்வரூபத்துக்கு சேரும்படி அவனை ரஸிப்பிக்கைக்காக
பர்த்தாவினுடைய படுக்கையையும் விடாதே –
ரஷகையான தன் ஸ்வரூபதுக்கும் போரும்படி தத் ரஷணம் பண்ணுகைக்காக
பிரஜையினுடைய தொட்டிலையும் விடாதே
இருக்கும் மாதாவானவளைப் போல் -இவளும்

பர்த்ரு பூதனான ஈஸ்வரனுக்கு பிரதிபாதகமாய் இருந்துள்ள
பிரதம பதமான அகாரத்தையும்-
பிரஜா பூதரான  சேதனருக்கு பிரதிபாதகமாய் இருந்துள்ள
சரம பதமான மகாரத்தையும்
தத் தத் விஷயத்திலே தனக்கு உண்டான சம்பந்தத்துக்கு ஈடாக
ரஸிப்பிக்கை ரஷிக்கை ஆகிற இவற்றைப்   பற்ற
விடாதே இருக்கும் இருப்பு என்கை

(க ம லா லாதேன ஆதேன-ஒருவரை ஒருவர் இடம் சேர்ப்பிக்கிறாள் )

(ரஷிக்கை யாவது –சைதன்யமாகிற ஸ்தநயத்தைக் கொடுத்து ரஷிக்கை
சைதன்யமாவது பகவத் ஆபீமுக்ய ஞானம் -சேஷத்வ பாரதந்தர்ய ஞானம் என்னவுமாம்
அபகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் -படுக்கை – பத்நீத் வேந -படுக்கையில் சம்பந்தம்
மகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் -தொட்டில் –மாத்ருத்வேந -தொட்டிலிலே சம்பந்தம்)

—————————————

ஸ்ரீ நந்த கோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே–சூரணை -43

கீழ் சொன்ன த்ருஷ்டாந்தத்தை ஒரு விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார்
அதாவது

பார்யையான தன் ஸ்வரூப அனுகுணமாக ரஸிப்பைக்கக்கு பர்த்தாவான ஸ்ரீ நந்த கோபரையும் விடாதே –
மாதாவான தன் ஸ்வரூப அனுகுணமாக ரஷிப்பிக்கைக்கு தன் புத்ரனான கிருஷ்ணனையும் விடாதே –
அம்பரமே -என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
மத்யே வர்த்திக்கும் யசோதை பிராட்டியைப் போலே
பிரதம சரம வாச்யரான ஈஸ்வர சேதனர்கள் இருவரையும் விடாதே இவளும் வர்த்திக்கும் படி என்கை-

(விசேஷ நிஷ்டமாக்கி-ஒரு விரக்தி விசேஷ நிஷ்டமாக்கி)

————————————-

ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவண ஓலை எழுதுவது –
ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே-சூரணை-44

அது போலே நாம் பிராட்டி அடிமையாய் இருக்கும் படி –
ஈஸ்வர  சேஷத்வ மாத்ரம் ஒழிய பிராட்டிக்கும் சேஷம் என்னும் இடம்
இவ்வாசகத்தில் இன்றிக்கே இருக்க செய்தேயும் இவளுக்கும் சேஷம் என்று
நாம் கொள்ளுகிற  படி எங்கனே -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –

லோகத்தில் ஒருவன் தாஸ தாஸிகள் முதலான அடிமையை
கொள்ளும் போது -தனக்கு என்றே எழுதிக் கொள்ளும் அது ஒழிய தன் க்ருஹிணிக்கு என்று அன்று
விலையோலை எழுதி கொள்வது –
ஆயிருக்க செய்தேயும் அடிமைத் தொழில் செய்வது க்ருஹிணிக்கு இறே –

அது போலே ஈஸ்வர சேஷம் என்னும் அளவை இவ் அகாரம் சொல்லிற்றே ஆகிலும் –
நாம் பிராட்டிக்கு அடிமையாய் இருக்கும் படி என்கை

(அடிமையை -சேஷ வஸ்துவை
கொள்ளும் போது-கிரமாகக் கொள்ளும் போது
ஆவண ஓலை-விலை ஓலை -விக்ரிய பத்ரம் -அடிமைச் சீட்டு
பிரஸ்துதமான அர்த்தம் -பிராட்டிக்கு அகாரத்தில் அந்வயம்)

(க்ருஹிணிக்கு இறே-க்ருஹிணிக்கு உகப்பாக அன்றோ
பதிக்கு சேஷமாவை எல்லாம் பத்னிக்கும் சேஷமாய் இருக்கும் என்கிற நியாயத்தாலே
நாமும் பிராட்டிக்கு சேஷமாய் இருக்கும்

அகாரத்திலே அர்த்த பலத்தாலே ஸ்ரீ சம்பந்தம் தோற்றுமா போலே
லுப்த சதுர்த்தியிலும் அர்த்த பலத்தால் ஸ்ரீ சேஷத்வம் தோற்றும் என்றதாயிற்று
அப்ரதாநேநயேந அந்வயிக்கை யாவது -ஈஸ்வரனைக் கொண்டு சேதனனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களைப் பண்ணி வைக்கை
ப்ரதாநேநயேந அந்வயிக்கை யாவது-ஸ்வயமேவ பண்ணுகை
ஆகையால் விஷ்ணு பத்நீத்தவ நிபந்தனம் பிராட்டி சேஷத்வம் என்னக் குறையில்லை)

——————————————-

ஆக பிரித்து நிலை இல்லை –சூரணை -45-

கீழ் சொன்ன ஹேதுக்களை எல்லாம் அனுவதித்து கொண்டு ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும்
ஒருகாலும் ப்ருதக்  ஸ்திதி இல்லாமையை அருளிச் செய்கிறார்-

————————————

பிரபையையும் பிரபாவையையும்-பிரபாவானையும்-
புஷ்பத்தையும் மணத்தையும் போலே –சூரணை -46

அந்த ப்ருதக் ஸ்திதி அத்யபாவத்துக்கு இரண்டு திருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
பிரபைக்கும் பிரபாவானுக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லாதாப் போலேயும்
புஷ்பத்துக்கும் பரிமளத்துக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லாதாப் போலேயும் -என்கை –

அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேன பிரபா யதா –
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேன பிரபா யதா -என்று
பிரபா பிரபாவான்களை போலே இருவருக்கும் பிருதக் ஸ்திதி இல்லை என்னும் இடம்
இருவர் வாக்காலும் சொல்லப் பட்டது இறே-

(உன்னுடைய ஐஸ்வர்யத்தாலும் தனத்தாலும் அந்நிய ஸ்த்ரீகள் போல் நான் ஒன்றாலே வஞ்சிக்காய்க்கு சக்யை அன்று காண்
பாஸ்கரனோடு பிரபை போல் ராகவனோடு நான் அநன்யயையாய் இருப்பேன்)

பிர ஸூநம் புஷ்யந்தீமபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ-என்கிற இடத்தில்
ஈஸ்வரனை புஷ்பத் ஸ்தாநேயாகவும்-பிராட்டியை பரிமள ஸ்தானே யாகவும் பட்டர் அருளிச்
செய்கையாலே புஷ்ப பரிமளங்களைப் போலே -இருவருக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லை
என்னும் இடம் அர்த்தாசித்தம்-

———————————–

ஆக இச் சேர்த்தி உத்தேச்யமாய் விட்டது-சூரணை -47

இந்த ப்ருதக் ஸ்திதி அத்யபாவத்தை அனுவதித்துக் கொண்டு -இச் சேர்த்தியே சேதனருக்கு
உத்தேச்யமாய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார்
அதாவது –

இச் சேர்த்தி உத்தேச்யம் என்கையாலே –
இவர்களை தனித் தனியே விரும்புகை உத்தேச்யம் அன்று என்ற படி –
இருவரையும் பிரித்து விரும்பினால் -ராவண சூர்பணகைகளைப் போலே அனர்த்தமே பலிக்கும் அத்தனை –

இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப்   போலே வாழல் ஆவது-
(தானே வலிய சிறை புகுந்தாள்-ஸ்ரீ விபீஷணனை சரணாகதன் ஆக்கவும் ராவணனை திருத்தவும் – )

————————————-

இதில் சதுர்த்தி ஏறிக் கழியும்–சூரணை -48

இனிமேல் இதில் விபக்த்யர்த்தம் அருளி செய்வதாக பிரதமம் விபக்தி தன்னை நிர்தேசிக்கிறார் –
அதாவது
இவ் அகாரத்தில் சதுர்த்தி ஏறி -சூபாம் சூலுக் -இத்யாதி சூத்ரத்தாலே லுப்தமாய் போம் என்கை-
(சப்தம் கழிந்தாலும் அர்த்தம் சித்திக்கும் )

————————————————–

சதுர்த்தி ஏறின படி என் ? என்னில்–சூரணை -49

விபக்த்யந்தரம் எல்லாம் கிடக்க இவ் அகாரத்திலே சதுர்த்தி ஏறின படி தான் எங்கனே -என்கிற
சங்கையை அனுவதிக்கிறார்

——————————————————-

நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே–சூரணை -50

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

அதாவது
இவ் அகாரம் சதுர்த்யந்தமான நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹம் ஆகையாலே –
இதிலும் சதுர்த்தி ஏறிற்று -என்கை –
இங்கன் அன்றாகில் இரண்டுக்கும் ஸங்க்ரஹ விவரணத்வம் சித்தியாது இறே

————————————————–

இத்தால் ஈஸ்வரனுக்கு சேஷம் என்கிறது–சூரணை -51

இத்தால் சொல்லுகிற அர்த்தம் தான் எது -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
இது தான் தாதர்த்யே சதுர்த்தீ-ஆகையாலே இச் சதுர்த்தியால்
ஈஸ்வரனுக்கு சேஷம் என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-
( தத் அர்த்தம் அவனே பிரதானம் பிரயோஜனம் -)

சேஷமாகையாவது சந்தன குஸூம தாம்பூலஅதிகளைப் போல் அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாய் இருக்கை

————————————–

சேஷத்வம் துக்க ரூபமாக வன்றோ நாட்டில் காண்கிறது என்னில் –சூரணை -52

சர்வம் பரவசம் துக்கம்-ஸூ வசம் ஸூகம் – சேவா ஸ்வ வ்ருத்தி-என்கிற லௌகிக நியாயத்தைக் கொண்டு
சேஷத்வத்தை துக்க ரூபமாக நினைத்து இருக்கும் அவர்கள் பண்ணும் பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

————————————————

அந்த நியமம் இல்லை –
உகந்த விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு
ஸூகமாக காண்கையாலே–சூரணை -53

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
அதாவது
நாடு தன்னிலே -பணிமின் திருவருள் -திருவாய்மொழி –4-1-5-இத்யாதி படியே
அபிமத விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு ஸூகமாக காண்கையாலே –
சேஷத்வம் ஆகில் துக்க ரூபமாய் இருக்கும் என்கிற நியமம் இல்லை -என்கை-

(பணிமின் திருவருள் என்னும்அம் சீதப்பைம் பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுஉண்டார்
துணிமுன்பு நாலப் பல்ஏழையர் தாம்இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.)

—————————————–

அகாரத்தாலே கல்யாண குணங்களை சொல்லுகையாலே இந்த சேஷத்வமும் குணத்தாலே வந்தது–சூரணை -54

அபிமத விஷயத்தில் சேஷத்வம் ஸூகமாகிறது –
அவ் விஷயத்தில் குணம் அடியாக வந்ததாகை யாலே அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது –

ஈஸ்வரனுடைய ரஷகத்வ பிரதிபாதகமான அகாரத்திலே -அந்த ரஷண உபயோகியான
கல்யாண குணங்களைச் சொல்லுகை ஆகையாலே –
ஈஸ்வர விஷயமான இந்த சேஷத்வமும் –
அந்த குணங்கள் அடியாக வந்தது என்கை –
ஆகையால் இதுவும் ஸூக ரூபமாக இருக்கக் குறை இல்லை என்று கருத்து-

(அகாரத்தால் ஜகத் காரணத்வமும் ரக்ஷகத்வத்வமும் சேஷித்வமும் உண்டே
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப பிரகிருத தாஸ்யம்
ஸ்ரீ சீதா பிராட்டி அநஸூயை சம்வாதம்
குணைர் தாஸ்யம் உபாகத-லஷ்மணன் -குணங்களை பெருமாள் இடம் இருந்து பிரிக்க முடியாதே )

(அபிமத விஷயத்தில் குணங்களாவன -அநு நய சம்ஸ்லேஷாதிகள்
ரக்ஷண உபயோகியான கல்யாண குணங்களாவன -காருண்ய வாத்சல்ய ஸ்வாமித்வ ஞான சக்தியாதிகள்)

——————————————-

சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் –சூரணை-55

ஆனால் ஔபாதிகமான இது ஸ்வரூபம் அன்றோ ?-என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
உகந்த விஷயத்தில் இதன் ஸூக ரூபத்துக்கு குண க்ருதவத்தை ஹேதுவாகச் சொல்லுகையாலே –
அந்த குண க்ருத்வத்வம் இங்கும்  உண்டு  என்னும் இடத்துக்கு சொன்ன இத்தனை ஒழிய –
அர்த்த ஸ்திதியை நிரூபித்தால்

ஸ்வத்வ மாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் பிராமணி ஸ்திதம் –
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மார-
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே  ஹ்யாத்மனா பரமாத்மன-
நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -இத்யாதிகளில் இத்தை
ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமாக சொல்லுகையாலே -சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்கை-

(ஸ்வத்வம் ஆத்மாவின் இடத்தில் உண்டாகா நின்றது
ஸ்வாமித்வம் ப்ரஹ்மத்தின் இடத்தில் உண்டாகா நின்றது
இருவருக்கும் சம்பந்தம் இதுவே -மற்ற ஓன்று எனக்கு அபிமதம் அன்று
உஜ்ஜீவனத்தில் உனக்கு ஆசை யுண்டானாலும் -உன் சத்தை தான் அழியாமல் கிடக்க வேண்டும் என்ற ஆசை யுண்டாகிலும்
ஆத்மாவினுடைய தாஸ்யத்தையும் ஹரியினுடைய ஸ்வாமித்வத்தையும் ஸ்வ பாவமாக நினை )

(சமஸ்தமான ஆத்மாக்களும் பரமாத்மாவுக்கு ஸ்வத தாஸ பூதராய் இருப்பார்கள்
அவர்களுக்கு பத்த தசையிலும் மோக்ஷ தசையிலும் வேறொரு ஸ்வரூபம் இல்லை)

————————————

சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை –சூரணை -56

சேஷத்வமே என்று அவதரிப்பான் என் ?-ஞான ஆனந்த ஸ்வரூபமான ஆத்ம வஸ்துவுக்கு
இல்லாத போதும் ஸ்வரூபம் இல்லையோ ?-என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
சேஷத்வம் இல்லாத போது ஆத்மா அபஹார ரூபமான ஸ்வாதந்த்ர்யா புத்தி நடக்கையாலே –
ஸ்வரூபம் அழிந்து விடும் என்னுமத்தை தர்சிப்பிக்கிறார் மேல் இரண்டு வாக்யத்தாலே –

(ஞானியான ஆத்மா சேஷம் என்று சொல்லாமல் சேஷனான ஜீவனே ஞான ஆனந்த ஸ்வரூபம் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை யாகுமே)

(அவதரிப்பான் என்—சேஷத்வமே என்று ஏவகார விஸிஷ்டமாகச் சொல்லுவான் என் என்றவாறு
இல்லாத போதும் ஸ்வரூபம் இல்லையோ–ஆத்மா எம்பெருமானுக்கு சேஷம் ஆகாத போது -ஞானத்தவ ஆனந்தத்வ ஸ்வரூபம் இல்லையோ
சேஷத்வம் இல்லாத போது-ஸ்வ விஷய பகவத் சேஹத்வ ஞானம் இல்லாத போது
ஆத்மா அபஹார ரூபமான –அஹம் -மம என்கிற
ஸ்வரூபம் அழிந்து விடும்-ஞானத்தவ ஆனந்தத்வ ஸ்வரூபம் அழிந்து விடும்)

—————————————

ஆத்மா அபஹாரமாவது ஸ்வதந்த்ரம் என்கிற நினைவு –
ஸ்வதந்த்ரமாம் போது இல்லையே விடும் –சூரணை -57

யோ அன்யதா சந்தமாத்மா நமன்யதா பிரதிபத்தி கிம்  தேன ந க்ருதம் பாபம் சோரேன் ஆத்மாபஹாரினா –
என்று சர்வ பாப மூலமாக சொன்ன ஆத்மா அபஹாரமாவது தன் ஸ்வரூபம் ஸ்வதந்த்ரம் என்கிற பிரபத்தி –
ஸ்வதந்த்ரமாம் அளவில் -அசந்நேவ-என்கிறபடியே ஸ்வரூபம் இல்லையாம் விடும் என்கை –

ஆகையால் சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்னத் தட்டில்லை என்று   கருத்து

ஆக பிரக்ருத்யர்த்தமான ஈஸ்வரனுடைய
காரணத்வமும்
தாத்வர்த்தமான ரஷகத்வமும்
அர்த்த பலத்தால் வந்த ஸ்ரீ யபதித்வமும்
பிரத்யய சித்தமான சேதன சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷத்வமும்
ஆகிற அகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -22–34-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 9, 2024

மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே -அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்
இதுக்குள்ளே உண்டு –சூரணை -22-

இனி ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகத்வம் ஆகிற இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம்
இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு உற்றிலேன்
தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் –
அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –

இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன-நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –
(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )

இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –
ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –
நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –
ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –
ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன

அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும்
அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –

(சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –
பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்
மற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பல உண்டே –
முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்
நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்
பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –
எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –
ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –
அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்
ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து
ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை
பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம்
தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –
கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும்
பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –
ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

——————————————————–

அதாவது ஐஞ்சு அர்த்தம்–சூரணை -23-

அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்  ஆகிறது எது ? என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வ ஸ்வரூப
பர ஸ்வரூப
புருஷார்த்த ஸ்வரூப
உபாய ஸ்வரூப
விரோதி ஸ்வரூபங்கள் -ஆகிற அர்த்த பஞ்சகமும் என்ற படி –

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் பிராப்துஶ்ச பிரத்யகாத்மனா பிராப்துபாயம் பலம் பிராப்தேஸ்
ததா ப்ராப்தி விரோதி ஸ் வதந்தி சகலா வேதாஸ் சேதிஹாஸ புராணக முநயச்ச மகாத்மானோ வேதவேதார்த்த வேதின-
என்கிறபடியே சகல வேத சாஸ்திரங்களும் பிரதிபாதிப்பது இவ் அர்த்த பஞ்சகத்தையும் ஆகையாலே –
தத் ஸங்க்ரஹமான இம் மந்த்ரத்துக்கும் பிரதிபாத்யம் இதுவே இறே-

இம் மந்த்ரம் தான்
பிரணவத்தாலே-பிரத்யகாத்ம ஸ்வரூபத்தையும் –
நமஸ்ஸாலே-விரோதுபாய ஸ்வரூபங்களையும் -( ம விரோதி -ந ம -உபாயம் )
நாராயண பதத்தாலே -பர ஸ்வரூபத்தையும் –
அதில் சதுர்த்தியாலே -பல ஸ்வரூபத்தையும் –
பிரதிபாதிக்கக் கடவதாய் இறே இருப்பது –

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸ புராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141])

அரும் பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி
முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் –
வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்

பர ஸ்வரூபம்:
உயர்வற உயர்நலம்
திண்ணன்வீடு
அணைவதரவணை
ஒன்றுந்தேவும்

ஜீவாத்ம ஸ்வரூபம்:
பயிலுஞ் சுடரொளி (3-7)
ஏறாளும் இறையோனும் (4-8)
கண்கள் சிவந்து (8-8)
கருமாணிக்க மலைமேல் (8-9)

விரோதி ஸ்வரூபம்:
வீடுமின் முற்றவும் (1-2)
சொன்னால் விரோதம் (3-9)
ஒருநாயகமாய் (4-1)
கொண்ட பெண்டிர் (9-1)

உபாயஸ்வரூபம்:
நோற்ற நோன்பிலேன் (5-7)
ஆராவமுதே (5-8)
மானேய் நோக்கு நல்லீர் (5-9)
பிறந்தவாறும் (5-10)

புருஷார்த்த ஸ்வரூபம்:
எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட
நோற்ற நாலும்
எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ் வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு.
முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும்,
ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும்,
மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும்,
அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும்,
அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.

————————————————————-

பூர்வாச்சார்யர்கள் இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு -தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –
இதில் அர்த்த ஞானம் பிறந்த பின்பு -பிறந்த பின் மறந்திலேன் -என்கிறபடியே -இத்தை ஒழிய வேறு ஒன்றால்
கால ஷேமம் பண்ணி அறியார்கள்–சூரணை -24

இம்மந்த்ரார்த்த வைபவத்தை அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது –
நாதயாமுன யதிவராதி களான நம் பூர்வாச்சார்யர்கள் –
அன்று நான் பிறந்திலேன் -திரு சந்த விருத்தம் -64 என்கிறபடியே –
இம்மந்த்ரத்தில் அர்த்தம் அறிவதற்கு முன் தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –

இதில் அர்த்த ஞானம் தங்களுக்கு உண்டான பின்பு –
பிறந்த பின் மறந்திலேன் -என்று
ஆழ்வார் திவ்ய ஸூக்தியில் சொல்லுகிற படி இம்மந்த்ரத்தை-மந்த்ரார்த்தை – ஒழிய
மற்று ஒன்றால் கால ஷேமம் பண்ணி அறியார்கள் என்கை –

வேத சாஸ்திரங்கள் ஆழ்வார் அருளிச் செயல்கள் இவற்றால் போது போக்கும் போதும் –
இம்மந்த்ரத்தை-மந்த்ரார்த்தை – உள் கொண்டே அனுசந்திக்கையாலே –
இத்தை ஒழிய வேறு ஒன்றால் கால ஷேமம் பண்ணி அறியார்கள் என்னத்  தட்டில்லை

நாதயாமுன யதிவராதி களான நம் பூர்வாச்சார்யர்கள் –ஆதி ஸப்தத்தாலே எம்பார் தொடங்கி திருவாய் மொழிப்பிள்ளை மணவாள மா முனிகள் பர்யந்தமானவர்கள்

———————————————————-

வாஸகத்தில் காட்டில் வாஸ்யத்தில் ஊன்றுக்கைக்கு அடி -ஈஸ்வரனே உபாயம் உபேயம் என்று
நினைத்து இருக்கை –சூரணை -25-

வாஸக சக்தி சர்வத்தையும் சாதித்து கொடுக்க வற்றாய் இருக்க -இதனுடைய வாஸ்யத்திலே இவர்கள்
ஊன்றுகைக்கு ஹேது  ஏது என்ன அருளி செய்கிறார் –

அதாவது –
சர்வ பலத்துக்கும் ஸ்வயம் சாதனமாயும் சாதனாந்தரங்களுக்கும் சஹ காரியாய் நின்று தலைக் கட்டி கொடுத்தும் போருகிற
இதனுடைய வாஸக சக்தி -தானே அமைந்து இருக்கச் செய்தே –
அதிலும் காட்டில் கீழ் சொன்ன படி இம் மந்த்ரத்தினுடைய வாஸ்யத்திலே பூர்வாச்சார்யர்கள் ஊன்றுகைக்கு அடி –
உபேயாந்த்ர பரராய் இத்தை சஹ  காரியாய் கொள்ளுதல் செய்யும் அவர்களை போல் அன்றிக்கே –
உபாய உபேயங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று பிரதிபத்தி பண்ணி இருக்கை என்ற படி –
(அத்தைத் தின்று அங்கேயே கிடக்குமே )

ஆக
திரு மந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி என்று -சூரணை -3 -தொடங்கி-
இவ்வளவும் வாய் வந்தபடி அனுசந்திக்க ஒண்ணாத படியான இதனுடைய கௌரவத்தையும் –
ஈஸ்வரனே தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று வெளி இட்டு அருளுகையாலே -வந்த ஏற்றத்தையும் –
சகல சாஸ்திரங்களிலும் -சகல மந்த்ரங்களிலும் -வாஸ்யம் தன்னிலும் காட்டில் இதனுக்கு உண்டான பெருமையையும் –
அக்ரமமாக தன் கார்யம் செய்யும் ஆதிக்யத்தையும் –
அபேஷித சகல பல ப்ரதத்வ ரூப மகாத்யத்தையும் –
கர்மாத் உபாய சக காரித்வ  ரூபமான உத்கர்ஷத்தையும் –
ஞாதவ்ய சகல அர்த்த பிரதிபாதகதயா வந்த மகாத்ம்யத்தையும் –
ஏதத் பிரதிபாதித்ய அர்த்த கௌரவ விசேஷத்தையும் -அருளிச் செய்கையாலே –
இம் மந்த்ரத்தின் உடைய வைபவத்தை எல்லாரும் அறியும் படி தர்சிபித்து அருளினார் ஆயிற்று –

———————————————

இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் –
ஸ்வரூபமும்–ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும்
ஸ்வரூபமும் உபாயமும் பலமும்
என்னவுமாம் –சூரணை -26-

(ஓம் நம ஸ்வரூபம் — நாராயணாயா ப்ராப்யம் –சேஷத்வம் ஓம் பாரதந்தர்யம் நம என்றபடி
பரன் யாருக்கு தந்திரமாக பிரதானமாக பிரயோஜனமாக கொள்கிறானோ அவனே பரதந்த்ரன் –
ஓம் ஸ்வரூபம் – நம உபாயம் — பலம் நாராயணாயா
இரண்டு படியாக அருளிச் செய்கிறார் )

இனிமேல் இம் மந்த்ரத்துக்கு வாக்யார்த்தம் இரண்டு படியாக அருளிச் செய்கிறார் –
அதாவது
இம்மந்த்ரம் தன்னில் சொல்லுகிற அர்த்தம் –
இவ் ஆத்மாவினுடைய சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஆகிற ஸ்வரூபமும் –
அந்த ஸ்வரூப அனுரூபமாய் இருந்துள்ள கைங்கர்யம் ஆகிற ப்ராப்யமும் –

அன்றிக்கே –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபமும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயமும்
உபாய லப்யமான  பலமும்–என்று சொல்லவுமாம் என்கை –

இதில் பிரதம யோஜனையில்-
பிரணவ நமஸ்ஸுகளால் ஸ்வரூபமும்
நாராயண பதத்தாலே ப்ராப்யமும் சொல்லுகிறது –

அனந்தர யோஜனையில் –
பிரணவத்தாலே-சேஷத்வமும்
நமஸ்ஸாலே -உபாயமும் –
நாராயண பதத்தாலே பலமும் –
சொல்லுகிறது –

(பிரணவத்தாலே-சேஷத்வமும்–ப்ரணவத்தாலே பகவத் அநந்யார்ஹ சேஷத்வமாகிற ஸ்வரூபமும்
நமஸாலே -உபாயமும் –பாரதந்தருமாகிற ஸ்வரூபமும் என்றபடி)

(சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்தர்ய போக்யதைகள்
சேஷத்வமாவது -இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்
பாரதந்தர்யம் -சேஷிக்கு இஷ்டமானபடியே விநியோகப்படுக்கை
போக்த்ருத்வமாவது -ஞாதவ்ய பலத்தாலே போக தசையில் வளர்கிற ரசங்களுக்கு தானே போக்தாவாய் இருக்கை
போக்யதையாவது பதார்த்த கதமான ரஸ வர்ணாதிகள்
போக்தாவுக்கே போக்யமாய் இருக்குமா போல் ஆத்மகதமான ஞானாதிகளும் ஈஸ்வரனுக்குப் போக்யமாய் இருக்கை)

———————————————

பலம் இருக்கும் படி ப்ரமேய சேகரத்திலும் -அர்ச்சிராதி கதியிலும் சொன்னோம் –சூரணை -27-

பல வேஷம் தான் இருக்கும் படி எங்கனே ? என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
இவ் ஆத்மாவுக்கு ப்ராப்யமான பலம் தான்
அர்ச்சிராதி மர்க்கத்தாலே பரம பதத்திலே போய்
பரிபூர்ண பகவத் அனுபவத்தைப் பண்ணி –
அவ் அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு பண்ணும்
அசேஷ சேஷ விருத்தி ஆகையாலே –

அது இருக்கும் படியை ஸங்க்ரஹேன
ப்ரமேய சேகரம் ஆகிற பிரபந்தத்திலும் –
விஸ்தரேன அர்சிராதி கதி ஆகிற பிரபந்தத்திலும் விசதமாக சொன்னோம் —
அவற்றிலே கண்டு கொள்க என்கை –

(ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)

—————————————

இது தான் எட்டு திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –சூரணை -28-

இனி இம் மந்த்ரத்துக்கு பிரதிபதம், அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
ப்ரதமம் இதனுடைய அஷர சங்க்யையையும் -பத சங்க்யையையும் அருளிச் செய்கிறார் –

அதாவது
இம் மந்த்ரம் தான் –
ஒமித்யேகாஷரம்-நாம இதி தவே அஷரே -நாராயணா யேதி பஞ்ச அஷ ராணி –
இதி அஷ்டாஷரம் சநதசா காயத்ரீ சேதி ஒமித்யக்ரே வியாஹரேத் நம இதி பச்சாத்
நாராயணா எத்யுபரிஷடாத்-என்கிறபடியே
எட்டு திரு அஷரமாய் -மூன்று பதமாய் இருக்கும் என்கை –

இதனுடைய அஷ்டாஷரத்வம்    சொல்லுகிற இடத்தில்
ஒமித்யே காஷரம் -என்று பிரணவத்தை ஓர் அஷரமாகவும்
நம இதி த்வ அஷரே -என்று நமஸ் இரண்டு அஷரமாகவும் –
நாராயணா யேதி பஞ்சாஷராணி -என்று நாராயணா பதத்தை அஞ்சு அஷரமாகவும்
ஸ்ருதி சொல்லுகையாலே –

சமஸ்த பதமான நாராயணா பதத்தில் நார பதத்தை பிரித்து ஷட் அஷரமாக்கி
பிரணவத்தை ஒழிய அஷ்டாஷரத்வம் சொல்லும் அவர்களுடைய பஷம் அவைதிகம் ஆகையாலே –
அநாத ரணீயமாக கடவது

(நாராயணாய -நார -அயனாய -என்று ஷட் அக்ஷரம் ஆக்குவது வைதிகம் அல்லாமையாளர் அநாதாரணீயம்)

———————————————————

மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது–சூரணை -29-

இதி பத த்ரயமும் எவ் அர்த்தத்தைச் சொல்லுகிறது என்னும் ஆ காங்ஷையிலே
மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது என்கிறார்

—————————————————

அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் -கைங்கர்யமும்–சூரணை -30-

அவ் வர்த்தங்கள் தம்மை விசதமாக அருளிச் செய்கிறார்
அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் -கைங்கர்யமும் -என்று

ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும் என்று
முதல் சொன்ன வாக்ய அர்த்தம் இத்தை நினைத்து  இறே

(சேஷத்வமாவது -யதேஷ்ட விநியோக அர்ஹத்வம்
பாரதந்தர்யமாவது -யதேஷ்ட விநியுஜ்ய மாநத்வம்
கைங்கர்யம் -பகவத் முக விகாஸ ஹேதுவான விருத்தி விசேஷம்)

—————————————————–

இதில் முதல் பதம் பிரணவம்-சூரணை -31-

பிரதம பதம் ஏது என்ன
ஒமித்யக்ரே வியாஹரேத் -என்று இறே ஸ்ருதி சொல்லிற்று –

ஸ்ம்ருதியும் -பிரணவாத்யம் நமோ  மத்யம் நாராயணா பதாந்திமம் மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத்
சர்வ சித்தி கரம் ந்ருணாம் என்றது இறே

————————————

இது அ என்றும் -உ என்றும் -ம என்றும் மூன்று திரு அஷரம்-சூரணை-32-

இனி பிரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக இதனுடைய அஷய த்ரய ஆத்மகதையை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப் பிரணவம் தான் அசம்ஹிதாகாரத்தாலே –
மூன்று அஷரமாய்-
மூன்று பதமாய் -மூன்று அர்த்த பிரகாசமாய் –

(அசம்ஹிதாகாரத்தாலே–பிரிந்து இருக்கையாலே -மூன்று அர்த்த பிரகாசமாய் இருக்கை
லுப்த சதுர்த்தி விபக்தி ஸஹிதமான அகாரம் -பகவத் சேஷத்வ ரூப அர்த்த ப்ரகாசகமாயும்
உகாரம் -அநந்யார்ஹ ஸம்பந்த அர்த்த ப்ரகாசகமாயும்
மகாரம் -அந்த சேஷத்வ ஆஸ்ரமாய் ஞாதாவாய் இருக்கிற ஜீவாத்ம ஸ்வரூப அர்த்த ப்ரகாசகமாயும் -என்றபடி)

சம்ஹிதாகாரத்தாலே –
ஏக அஷரமாய்-
ஏக பதமாய் –
ஏக பிரகாசமாய் -இறே இருப்பது –

(ஏகார்த்த ப்ரகாசகமாய் -ஜீவ ஸ்வரூப ஏக அர்த்த ப்ரகாசகமாய்)

——————————————-

மூன்று தாழி யிலே   தயிரை நிறைத்து கடைந்து வெண்ணெய் திரட்டினால் போல்
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது –சூரணை -33-

இந்த அஷர த்ரயத்தின் உடையவும் உத்பத்தி க்ரமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்

அதாவது –
பூரிதி ருக்வேதா தஜாயாத புவ இதி யஜுர்வேதாத் ஸூவரிதி சாமவேதாத்
தானி சுக்ரான் யப்யதபத் தேப்யோ அபிதப்  தேப்யஸ் த்ரயோ வர்ணா
அஜாயந்த அகார உகார மகார இதி தானே கதா சமபரத்த தேததோமிதி-என்றும் –

அகாரஞ்சாப் யுகாரஞ்ச மகாரஞ்ச பிரஜாபதி
வேத த்ரயான் நிரப்ருஹத் பூர்புவஸ் ஸ்வரிதீதி ச -என்றும் –

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே -ருக் யஜுர் சாம ரூபமான வேத த்ரயத்திலும் நின்றும் –
பூ புவ ஸூவ என்கிற வியாஹுதி த்ரயத்தையும் தோற்றுவித்து –
அந்த வியாஹுதி த்ரயத்தையும்
பொன்னோடு வைக்குமா போலே தன் சங்கல்பத்தாலே ஓட வைத்து –
அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்கள் ஆகிற அஷரங்கள் மூன்றும் அடைவே தோன்றும் படி பண்ணி –

இப்படி
சர்வேஸ்வரன் சமுத்தரித்த படியை திரு உள்ளம் பற்றி –
பாத்ர த்ரய கதமான தயிரை தனித் தனியே கடைந்து –
தத் சாரமான வெண்ணெயை வாங்கி திரட்டினால் போலே –
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது -என்கிறார்

(அந்த வியாஹுதி த்ரயத்தையும் தனித் தனியே இடையீடாகக் கொண்டு வேத த்ரயத்தில் நின்றும் ஸங்க்ரஹித்தான்
இடையீடாவது -வேத த்ரயத்தையும் ஒரு தட்டாகவும் இந்த அக்ஷர த்ரயத்தையும் ஒரு தட்டாகவும் நிறுத்துகை)

————————————–

ஆகையால் இது சகல வேத சாரம் –சூரணை -34-

இத்தால் பலித்ததை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அஷர த்ரயமும் ஒரோ வேதத்தின் உடைய சாரமாக சமுத்ரதம் ஆகையாலே
இவ் அஷர த்ரய யாத்மகமான பிரணவம் சகல வேத சாரம்-என்ற படி –

ஆக -இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் -என்று தொடங்கி-
இவ்வளவும்
இம்மந்த்ரத்தினுடைய வாக்யர்த்தத்தையும்
அஷர சங்க்யையையும்
பத சங்க்யையையும்
பத த்ரயமும்
அர்த்த த்ரய பிரதிபாதிகத்வம் என்னுமத்தையும்
அதில் பிரதம பதம் இன்னது என்னுமத்தையும்
அது தான் அஷர த்ரயாத்மகமாய் இருக்கும் என்னுமத்தையும்
அவ் வஷர த்ரயமும் வேத த்ரய சாரமாக உத்பன்னம் ஆகையாலே
தத் சமுதாயமான பிரணவம் சகல வேத சாரம் என்னுமத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –