ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –199–210–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

பரித்யஜ்ய –சூரணை -199-

அநந்தரம்-த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார்-

———————————————

த்யாகம் ஆவது –
உக்த உபாயங்களை அநு சந்தித்து சுக்திகையிலே ரஜதா புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
விபரீத திசா கமனம் பண்ணுவாரைப் போலேயும் –
அநு பாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்கிற புத்தி
விசேஷத்தோடே த்யஜிக்கை –சூரணை-200-

இதுவும் த்யாகமும் ல்யப்பும் உபசர்க்கமுமாய் -த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே –
அதில் த்யாக வேஷத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் விடத்தில் சொல்லுகிற  த்யாகம் ஆவது -கேவலம் விடுகை அன்று –
கீழ் சொல்லப் பட உபாயங்களின் படியை அநு சந்தித்து –
ரஜதமல்லாத சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
ஸ்வ கார்ய சித்திக்கு உடலான ஒரு திக்கிலே போகக் கோலி தத் விபரீதமான
திக்கை அதுவாக நினைத்து போவாரைப் போலேயும் –
பகவத் ப்ராப்தி உபாய அபேஷரான நாம் -உபாயம் அல்லாதவற்றில் உபாய புத்தி பண்ணினோம்
என்கிற புத்தி விசேஷத்தோடே விடுகை -என்றபடி-

———————————————————————-

பரி -என்கிற உபசர்க்கத்தாலே -பாதகதிகளை விடுமா போலே –
ருசி வாசனைகளோடும்
லஜ்ஜையோடும் கூடே
மறுவலிடாத படி விட வேணும் என்கிறது –சூரணை -201-

இனி உபசர்க்கார்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
பரி சாகல்யே -என்று சாகல்ய பரமாக கொள்ளும் அளவில் அது சர்வ -சப்தத்திலே
உக்தம் ஆகையாலே -அபேஷிதம் அல்லாமையாலே -மிகுதிக்கு வாசகமான -பரி-என்கிற இந்த
உபசர்க்கத்தாலே -ப்ரஹ்மஹத்யா -சூராபானம் ஸ்தேயம் குர்வங்கனாமாக -என்கிற பாதகங்கள்
முதலானவற்றை விடும் அளவில் அவற்றில் புனர் அன்வயதுக்கு உருப்பான ருசி வாசனைகளோடு
கூடே -நாம் இதைச் செய்வதே -என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு விடுமா போலே –

(மிகுதிக்கு வாசகமான–அவ்யயாநாம் அநேகார்த்தத்வாத் –என்கிற நியாயத்திலே -பரி சேஷ என்று சேஷத்வத்துக்கு வாசகமான என்றபடி)

அத பாதக பீதஸ் த்வம் -என்று தர்ம தேவை பாதகமாகச் சொன்ன உபாயாந்தரங்களை விடும் அளவில் –
புத்தி பூர்வகமாக அவற்றில் ப்ரவர்த்திக்கைக்கு உறுப்பான ருசியும் –
அபுத்தி பூர்வகமாக மூளுகைக்கு உறுப்பான வாசனையும் ஆகிற அவற்றோடே கூட
பகவத் ஏக சாதன தைக வேஷமான  ஸ்வ ஸ்வரூபத்துக்கு அத்யந்த வ்ருத்தமானவற்றை நாம் செய்வதே –
என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு மீளவும் அவற்றில் அந்வயம் வாராத படி விட வேண்டும் என்று
சொல்லுகிறது -என்கை –

———————————————————————–

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே
உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202

இனி லயப் அர்த்தத்தை அருளி செய்கிறார் –

அதாவது –
பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் –
என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற
நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

—————————————————————

சசால சாபஞ்ச முமோச வீர -என்கிறபடியே இவை அநு பாயங்களான மாத்ரம் அன்றிக்கே
கால் கட்டு -என்கிறது –சூரணை -203-

இப்படி விட்டே பற்ற வேணும் என்கிற அதன் கருத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -யோ வஜ்ர பாதாச நிசன்னி பாதான் ந சுஷுபே சசால சாபஞ்ச முமோச வீர -என்கிற
ஸ்லோகத்தில் -ராவணன் ராம சரங்களால் மிகவும் ஈடு பட்டு நிலை கலங்கிப் போக
பார்த்த அளவிலும் -கையில் வில் இருக்கும் அளவும் பெருமாள் போக ஒட்டாமையாலே –

பின்பு பொகட்ட வில்லு கையில் இருந்த  போது பிரதி பஷ ஜெயத்துக்கு சாதனம்
ஆகாத மாத்ரம் அன்றிக்கே- கச்ச நு ஜாமி-என்று பின்பு பண்ணின அனுமதி -பெருமாள்
அப்போது பண்ணக் காணாமையாலே -போகவும் ஒண்ணாத படி கால் கட்டு ஆனமையை
சொல்லுகிற படியே -உபாயாந்தரங்களான இவற்றிலே -ஈஷத்  அந்வயம் கிடக்கிலும் -இவை-

——————————————————————–

சக்கரவர்த்தி போலே இழைக்கைக்கு  உறுப்பு –சூரணை-204-

இன்னமும் இவற்றில் அந்வயம் இழவுக்கு உடலாம் என்னுமத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
முன்பே வர பிரதானத்தைப் பண்ணி வைத்து -இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று
ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று -ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற
பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே –
ஆபாசமான உபாயாந்தரங்களில் அன்வயித்து நிற்கை ஆகிறது –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயதோடே கூடி
வாழுகை யாகிற பேற்றை இழைக்கைக்கு உறுப்பாய் விடும் -என்கை-

————————————————————–

சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -சிலர் -அதர்மங்கள் புகுரும் –
என்றார்கள் –சூரணை -205-

இனி இங்கு சொன்ன சர்வ தர்ம பரித்யாகத்தின் கருத்து அறியாதார் சொல்லும்
தூஷணத்தை பரிஹரிக்கைக்காக தத் பஷத்தை உத்ஷேபிக்கிறார் –

அதாவது
த்யாஜ்யமான தர்மம் தான் -இதம் குரு இதம் மாகர்ஷீ -என்று விதி  நிஷேததாத்மகமாய்
இருக்கையாலே -சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -விஹித அனுஷ்டானத்தோபாதி
நிஷித்த பரிஹாரமும் ஒக்கத் தள்ளுண்ணும் அளவில் -அடைத்த கதவைத் திறந்தால்-நிஹீன பதார்த்தங்கள்
புகுருமா போலே -அதர்மங்களான நிஷித்த பிரவ்ருத்திகள் புகுரும் என்று சிலர் சொன்னார்கள்-என்கை-

—————————————————

அது கூடாது -அதர்மங்களை செய் -என்று சொல்லாமையாலே –சூரணை -206-

அத்தை பரிஹரிக்கிறார் –

அதாவது
சர்வ தர்மங்களையும் விடச் சொன்ன இத்தால் அதர்மங்கள் புகுரும் என்கிற இது
சம்பவியாது -தர்மங்களை விடச் சொன்ன மாத்ரம் ஒழிய -அதர்மங்களை செய் -என்று
சொல்லாமையாலே -என்கை –

—————————————————–

தன் அடையே சொல்லிற்று ஆகாதோ என்னில் –சூரணை -207-

அதர்ம நிவ்ருத்தியும் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே அத்தை விடச் சொன்னால் –
அதர்மத்தை செய் என்னும் இடம் அர்த்தாத் உக்தமாகாதோ -என்கிற
பிரதிவாத யுக்தியை அனுவதிக்கிறார் –

————————————————–

ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருதியைக் காட்டாமையாலே –சூரணை -208-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்மங்களை விடச் சொன்ன இத்தால் -அதர்மங்களை செய்-என்னும் இடம் தன்னடையே
சொல்லிற்று ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்யாதி அங்க சஹிதமாய் பிரதானமாய் இருந்துள்ள
விஹித அனுஷ்டானத்தை காட்டுமது ஒழிய -சாமான்யேன அதர்ம நிவ்ருத்தி மாத்ரத்தைக் காட்டாமையாலே -என்கை

———————————————————

காட்டினாலும் அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை –சூரணை -209-

அதர்ம நிவ்ருத்திக்கு தர்ம சப்த வாச்யத்வம் விசேஷண பூதமான இது தன்னையும்
காட்டாதோ -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
அப்படி காட்டிற்று ஆகிலும் அது இவ் இடத்தில் விவஷிதம் அல்லாமையாலே-அத்தை ஒழிந்த
விஹித அனுஷ்டான ரூப தர்மங்களானவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை -என்கை –

———————————————————–

தன்னையும் -ஈஸ்வரனையும் -பலத்தையும் பார்த்தால் அது புகுர வழி இல்லை –சூரணை -210-

இங்கன் ஒதுக்குகிறது என் கொண்டு -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது
அதர்ம அனுஷ்டானம் சேஷிக்கு அநிஷ்டம் ஆகையாலே -அவனுக்கு அதிசயகரமாவது
ஒழிய அநிஷ்டகரனாகை சேராதபடியான ஸ்வரூபத்தை உடைய தன்னைப் பார்த்தாலும் –
சஹாயாந்தர சம்சர்க்க அசஹை ஆகையாலே இத்தலையில் ஸ்வ யத்ன நிவ்ருத்தி ஒழிய
பிரவ்ருத்யம்சத்தில் ஒன்றையும் பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும் –
இவனுடைய பிரவ்ருத்திக்கு பலம் அவனுடைய ப்ரீதி ஆகையாலே தாத்ருசமான பலத்தைப் பார்த்தாலும் –
இம் மூன்றுக்கும் விருத்தங்களான அவை புகுர வழி இல்லை என்கை –

ஆகையால் தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்தியை காட்டிறிற்று ஆகிலும் அத்தை ஒழிந்தவற்றை
சொல்லிற்றாகக்  கொள்ள வேணும் என்று கருத்து –

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading