அவதாரிகை –
மத்யம ரகஸ்யமான த்வயத்தின் உடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம் –
அதில் பூர்வ வாக்யத்தில் சொல்லுகிற உபாய வர்ணம் சர்வேஸ்வரன் தானே விதிக்கையாலே –
தத் அபிமதம் -என்னும் அத்தையும் –
வரண அங்கமான சாதனாந்தர பரித்யாகத்தையும் –
வரணத்தில் சாதனத்வ புத்தி ராஹித்யத்தையும் –
சாப்தமாக -பூர்வ அர்த்தத்தாலே பிரதிபதிக்கையாலும் –
உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தையும்
உத்தர அர்த்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கையாலும் –
த்வயதுக்கு விவரணமாய் –
பஞ்சம வேத சார பூத கீதோ உபநிஷத் தாத்பர்யமாய் –
சரம ரஹஸ்யமாய்
இருந்துள்ள சரம ஸ்லோகத்தின் உடைய அர்த்தத்தை
சம்சயம் விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –
இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று -நம்பி தாமும் இதில் அர்த்தத்தின் உடைய
கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்து இறே -இவருடைய
ஆஸ்திக்ய ஆதா பரீஷார்த்தமாக பல கால் நடந்து துவளப் பண்ணி சூளுரவு கொண்டு -மாச உபவாசம் கொண்டு –
அருமைப் படுத்தி அருளிச் செய்து அருளிற்று –
(உடையவர் பெரிய நம்பி திருமாளிகைக்கு எழுந்து அருளி தண்டம் சமர்ப்பித்து ஆளவன்ஹார் திரவடிகளிலே சேவியாத இழவு எல்லாம் தீர்க்கும்படி
தேவரீர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பெற்றேன் -தேவரீர் திரு உள்ளத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை அடியேனுக்குப் பிரஸாதித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் அப்படியே யாகிறது என்று மந்த்ர ரத்னமான த்வயார்த்தைத்ப் ப்ரஸாதித்து அருளி இன்னமும் சில அர்த்த விசேஷங்கள் உண்டு
அவற்றை ஆளவந்தார் அபிமான பூத அந்தர் பூதரான திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை சென்று கேளும் என்று அருளிச் செய்ய
ராமானுஜரும் அப்படியே நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று சேவித்து ரஹஸ்யார்த்த விசேஷங்களை எல்லாம் பிரஸாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இவருடைய ஆஸ்திக ஆதர பரிஷார்த்தமாக 18 ஆர்த்தி நடத்தி திருமந்த்ரார்த்தை அருளிச் செய்தாராய் இருக்க
இங்கு சரம ஸ்லோக அர்த்தமாக அருளிச் செய்தது -அப்போதே அநந்தரம் வாரீர் எம்பெருமானாரே இன்னும் ஒரு சரம ரஹஸ்யார்த்த விசேஷம்
சொல்லுவதாகப் பாரா நின்றோம் -இவ்வளவில் நீர் திருப்பித்தராகா நின்றீர் -உம்முடைய அத்யவசாயத்தைச் சொல்லிக் காணீர் -என்ன
எம்பெருமானாரும் -தவறீர் அருளிச் செய்த அர்த்தத்தை மேல் ஓர் அர்த்தம் உண்டு என்று இருந்தேனாகில் அவிஸ்வாசி ஆவேன்
கேளாது இருந்தேனாகில் அருளிச் செய்த அர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லை விரகு அறியாமல் ஸ்ரோதவ்ய சாபேஷனாய் இரா நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இப்போது போய் ஏகாந்தமாக ஒருவராய் வாரும் என்ன எம்பெருமானாரும் ஒருவராய் வந்து நம்பி பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து நிற்க
நம்பியும் கையைப் பிடித்துக் கொண்டு போய் ஏகாந்தமான மேல் தளத்திலே படிக்கதவை விழ விட்டு எழுந்து அருளி இருந்து ஒருவருக்கும் செல்லாதபடி
திருவடிகளைத் தொடுவித்து சூழரவு கொண்டு தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸர்வ குஹ்ய தர்மமான சரம ஸ்லோகார்த்தத்தை அருளிச் செய்து
பகவத் விமுகரான நாஸ்திகர் செவிப்படாத படி பேணிக்கொண்டு போரும் என்று நியமித்து அருளி
இவரும் அப்படிப்பட்டவருக்குச் சொல்லக் கடவேன் அல்லேன் பகவத் ப்ரவணரான கூரத்தாழ்வானுக்குச் சொல்லாமல் நிற்க்க கூடாது என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இவ்வர்த்தம் கேட்க்கைக்கு அதிகாரம் உண்டாகில் ஸூஸ் ருஷை கொண்டு சொல்லும் என்று நியமித்து அருளினார்
18 தடவை நடத்தியது 18 அத்தியாயத்தில் அர்த்தம் ப்ரசாதிக்கைக்காக என்று கருத்து
ஆகவே இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று என்று அருளிச் செய்தது
இதில் அர்த்தத்தின் உடைய கௌரவத்தையும்–என்றது ஏதத் வை மஹோ உபநிஷதம் தேவா நாம் குஹ்யம் -என்ற கௌரவத்தையும்—என்றபடி)
நிஷ்க்ருஷ்ட சத்வ நிஷ்டனாய் –
பரமாத்மநி ரக்தனாய் –
அபராதமநி வைராக்கியம் உடையனாய் –
பிரமாண பரதந்த்ரனாய் –
பகவத் வைபவம் ஸ்ருதமானால் அது உபபன்னம் என்னும் படியான
விஸ்ரம்ப பாஹுள்யம் உடையனாய் –
ஆஸ்திக அக்ரேசனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில்
அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டானதுக்கு அதிகாரி ஆகையாலே –
அதிகாரி துர்லபத்வத்தாலும்
அர்த்த கௌரவத்தாலும் –
இத்தை வெளி இடாதே மறித்து கொண்டு போந்தார்கள்-எம்பெருமானார்க்கு முன்பு உள்ளார் –
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி கிருபை கரை புரண்டு இருக்கையாலே –
அர்த்தத்தின் சீர்மை பாராதே அனர்ததத்தையே பார்த்து வெளி இட்டு அருளினார் எம்பெருமானார் –
அப்படி உபதேசித்து விடுகிற மாதரமும் இன்றிக்கே -இவ் அர்த்தத்தை எல்லாரும் அறிந்து
உஜ்ஜீவிக்க வேணும் என்னும் பரம கிருபையாலே -இது தன்னை பல
பிரபந்தங்களிலும் -ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண இவர் அருளிச் செய்தது –
மற்று உள்ள பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் போல் அன்றிக்கே -ஸ்திரீ பாலர்களுக்கும் –
அதிகரிக்கலாம் படி தெளிய அருளிச் செய்தது இப் பிரபந்தத்தில் இறே –
————————————————————-
கீழே சில உபாய விசேஷங்களை உபதேசிக்க அவை துச் சகங்கள் என்றும் –
ஸ்வரூப விரோதிகள் என்றும் -நினைத்து சோக விசிஷ்டனான அர்ஜுனனைக்
குறித்து -அவனுடைய சோக நிவ்ருத்தி அர்த்தமாக -இனி இதுக்கு அவ் அருகு இல்லை –
என்னும் படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் என்று
இதுக்கு பேராய் இருக்கிறது–சூரணை -185-
இதில் பிரதமத்தில் இந்த ஸ்லோக அர்த்தத்தினுடைய கௌரவத்தை எல்லாருடைய
நெஞ்சிலே படுதுக்கைக்காக -இது தனக்கு சரம ஸ்லோகம் என்று திரு நாமம் ஆகைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இந்த ஸ்லோகத்துக்கு கீழே அநேக அத்யாயங்களிலே கர்ம ஞாநாதிகளான சில
உபாய விசேஷங்களை -ஸ்வ ப்ராப்தி லஷண மோஷ சாதனமாக விஸ்தரேண-
இந்திரிய ஜெயம் அரிதாகையாலும்
சாவதானமாக சிர காலம் சாதிக்க வேண்டி இருக்கை யாலும் –
(கர்ம ஞாநாதிகளான சில–உபாய விசேஷங்களை–இங்கு ஆதி பதத்தாலே அவதார ரஹஸ்ய ஞானமும் புருஷோத்தம வித்யையும் சொன்னவாறு)
அவை அனுஷ்டிக்க அசக்யங்கள் என்றும் –
ஸ்வ சரீரத்வ கதநாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ யத்ன
ரூபங்களான இவை விரோதிகள் என்று புத்தி பண்ணி -இவற்றாலே எம்பெருமானைப் பெற எனபது
ஓன்று இல்லை -இனி இழந்தே போம் இத்தனை ஆகாதே என்கிற சோகத்தால் ஆவிஷ்டனான அர்ஜுனனைக் குறித்து –
அவனுடைய அந்த சோகம் போகைக்காக –
ஸூசகத்வாலும் ஸ்வரூப அநு ரூபதையாலும் இனி இதுக்கு மேல் இல்லை –
என்னும்படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் -என்று இதுக்கு
திருநாமமாய் இருக்கிறது -என்கை-
—————————————————————-
இதில் பூர்வ அர்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச் செய்கிறார் –சூரணை-186-
அதாவது –
அர்த்த த்வயயாத்மகமான இந்த ஸ்லோகத்தால் பூர்வ அர்த்தத்தாலே இவ் உபாயதுக்கு
அதிகாரி ஆனவன் செய்யும் அம்சத்தை அருளிச் செய்கிறான்-
உத்தர அர்த்தத்தாலே -உபாய பூதனான தான் இவருக்கு செய்யும் அம்சத்தை
அருளிச் செய்கிறான் -என்கை-
—————————————————–
அதிகாரிக்கு க்ருத்யமாவது -உபாய பரிக்ரஹம் –சூரணை -187-
அதிகாரி க்ருத்யமாவது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
அதிகாரி ஆனவனுக்கு இங்குச் செய்யத் தக்கது
இவ் உபாயத்தை ஸ்வீகரிக்கை-என்கை-
—————————————
அத்தை சாங்கமாக விதிக்கிறான் –சூரணை -188
ஆனால் அவ்வளவை விதியாதே உபாயாந்தர பரித்யாகம் சொல்லுவான் என்ன -அருளிச் செய்கிறார்
அதாவது –
அந்த உபாய ஸ்வீகாரத்தை உபாயாந்தர பரித்யாகமாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான் -என்கை
ப்ரஷால்ய பாதா வாசா மேத் ஸ்நாத்வா விதி வதர்ச்ச யேத் ஸ்தித்வார்க்யம்
பானவே தத்யாத் த்யாத்வா தேவம் ஜபேன்மனும்-என்று
ஆசமநாதிகளுக்கு அங்கமாகச் சொன்ன -பாத ப்ரஷாலாநதி ஒழிய அவை அனுஷ்டிக்க
ஒண்ணாது போலே இங்கும் -ல்யபந்த பதத்தாலே அங்கமாகச் சொல்லுகிற உபாயாந்தர த்யாகத்தை
ஒழிய ஸ்வீகாரம் அநு பபன்னம் என்னும் இடம் சித்தம் இறே-
ஆகையால்-சர்வ தர்மான் பரித்யஜ்ய ஸ்தி தச்சேத்-என்று துஷ்கரத்வ புத்தியாலே –
ஸ்வத ப்ராப்தமான உபாயாந்தர பரித்யாகத்தை அனுவதித்து -சித்தோ உபாய ஸ்வீகாரத்தை
விதிக்கிறது என்கிற அநு வாத பஷம் ஆயுக்தம் -என்றது ஆயிற்று –
——————————————————-
ராக ப்ராப்தமான உபாயம் தானே வைதமானால் கடுக பரிக்ரகைக்கு உடலாய் இருக்கும் இறே –சூரணை -189-
ஆனால் ஸூசகத்வாதிகளாலே ராக ப்ராப்தமான இதுக்கு விதி தான் வேணுமோ -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
போக்யதையாலே ராக ப்ராப்தமான ஷீரத்தை பித்த ரோகத்துக்கு மருந்தாகக் கொடுக்கச்
சொல்லி விதித்தால் சீக்கிரம் கைக் கொள்ளுகைக்கு உடலாமா போலே -உபாயாந்தரங்களில் காட்டில் இதுக்கு
உண்டான வைலஷண்யத்தாலே -சேதனுடைய ராகத ப்ராப்தமாய் இருந்துள்ள உபாயம் தானே இத்தை
ஸ்வீகரி என்னும் விதி பிரயுக்தமுமானால் சீக்ரமாக ஸ்வீகரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே -என்கை-
————————————————————
இதில் பூர்வார்த்தம் ஆறு பதம்–சூரணை -190
இனி இதுக்கு பிரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாக -பூர்வார்த்த
பத சங்கையை அருளிச் செய்கிறார் –
————————————————
சூரணை -191
சர்வ தர்மான்-
எல்லா தர்மங்களையும் –
அதில் பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –
————————————————-
சூரணை -192
தர்மம் ஆவது பல சாதனமாய் இருக்குமது –
இது தான் தர்மமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் –
த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே -இம் மூன்றுக்கும் அர்த்தம்
அருளிச் செய்வதாக -ப்ரதமம் தர்ம லஷணத்தை அருளிச் செய்கிறார் –
—————————————————-
சூரணை -193
இங்குச் சொல்லுகிற -தர்ம -சப்தம் -த்ருஷ்ட பல சாதனங்களைச் சொல்லுகை அன்றிக்கே
மோஷ பல சாதனங்களைச் சொல்லுகிறது –
தர்ம சப்தம் த்ருஷ்ட பல சாதனத்திலும் வ்யாப்தம் ஆகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் –
அதாவது –
பூர்வ உபாயங்கள் தன்னை உபதேசிக்கிற போதே த்ருஷ்ட பல சாதனங்கள் வ்யாவ்ருத்தம் ஆகையாலும் –
மோஷ உபாயங்களை உபதேசித்து வருகிற பிரகரணம் ஆகையாலும் –
இவ் இடத்தில் சொல்லுகிற -தர்ம-சப்தம் –
புத்ர பச்வந்தாதி ஐ ஹிகமாகவும்
ஸ்வர்க்காதி ஆமுஷ்மிகமாயும் –
இருந்துள்ள த்ருஷ்ட பலங்களுக்கு சாதனங்கள் ஆனவற்றை சொல்லுகை இன்றிக்கே –
பகவத் ப்ராப்தி ரூபமான மோஷ பலத்துக்கு சாதனமாய் உள்ளவற்றைச் சொல்லுகிறது -என்கை-
———————————————————-
சூரணை -194
அவை தான் ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய் -பலவாய் இருக்கையாலே
பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது -என்கை –
இனி மேல் பஹு வசன அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்த மோஷ பல சாதனங்கள் தாம் பல -உப ப்ரஹ்ம உப ப்ரஹ்மணங்களாய்
இருந்துள்ள ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே விஹிதங்களாய்க் கொண்டு -அநேகங்களாய் இருக்கையாலே –
தர்மான்-என்று பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது –
————————————————————
சூரணை -195
அவை யாவன –
கர்ம ஞான பக்தி யோகங்களும் –
அவதார ரகஸ்ய ஞானமும் –
புருஷோத்தம வித்யையும் –
தேச வாசம்
திரு நாம சங்கீர்த்தனம் –
திரு விளக்கு எரிக்கை –
திரு மாலை எடுக்கை –
தொடக்கமான உபாய புத்தியா செய்யும் அவையும் –
அப்படி இருந்துள்ளவை தாம் எவை என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் பலவாக சொல்லப் பட்ட அவை யாவன –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜநகாதய
தஸ்மாத் அசக்தஸ் சததம் கார்யம் கர்ம சமாசார -என்று
ஸ்வதந்திர சாதனமாக உக்தமான கர்ம யோகமும்
(கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷
ஜநகாதய-ஜனகர் முதலானோர்
கர்மணைவ -ஞான யோகத்தால் அல்லாமல் கர்மயோகத்தாலேயே
ஹி ஸம் ஸித்திம் ஆஸ்திதா -ஆத்ம பிராப்தி யாகிய பயனைப் பெற்றார்கள் அன்றோ–.
லோக ஸங்க்ரஹம் ஏவ-சாமான்ய ஜனங்களை இசையை வைக்கும் வழியாகிய லோக ஸங்க்ரஹம் ஒன்றையே
ஸம் பஸ்யந் அபி -கருத்தில் கொண்டும்
கர்துமர்ஹஸி—-நீ கர்மத்தையே செய்வது தக்கது –
ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –)
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே-என்றும்
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரமிஹா வித்யதே-என்றும்
ஞாநாக்னிஸ் சர்வ கர்மாணி பச்மசாத் குருதே ததா -என்றும் சொல்லப்பட்ட
கர்ம சாத்தியமான ஞான யோகமும் –
(ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாத் ஜ்ஞாந யஜ்ஞ பரந்தப.–
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே—৷৷4.33৷৷
பரந்தப–எதிரிகளை அழிப்பவனே
த்ரவ்ய மயாத் –பொருள்களால் செய்யப்படும் கிரியைகளை முக்கியமாகக் கொண்ட
யஜ்ஞாத் –கர்மயோக அம்சத்தைக் காட்டிலும்
ஜ்ஞாந யஜ்ஞ .–கர்மயோகத்தில் உள்ள ஞான அம்சம்
ஸ்ரேயாந் –சிறந்தது
பார்த்த-குந்தீ புத்ரனே
ஸர்வம் -எல்லாப் பிரகாரங்களுடன் கூடியதாய்
அகிலம் -எல்லா அங்கங்களுடன் கூடியதான
கர்ம -கர்ம வடிவமான அம்சம்
ஜ்ஞாநே -ஸாத்யமான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தில்
பரி ஸமாப்யதே—முடிவடைகின்றது அன்றோ –
எதிரிகளை அழிப்பவனே -த்ரவ்ய சாத்தியமான கிரியைகளை முக்கியமாகக் கொண்ட கர்ம யோக
அம்சத்தைக் காட்டிலும் -கர்ம யோகத்தில் உள்ள ஞான அம்சமே சிறந்தது -குந்தீ புத்திரனே –
சர்வம் எல்லா பிரகாரங்களோடு கூடியதாய் -எல்லா அங்கங்களோடும் கூடியதான கர்ம ரூபமான அம்சம்)
(ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே.—
தத் ஸ்வயம் யோக ஸம் ஸித்த காலேநாத்மநி விந்ததி—৷৷4.38৷৷
இஹ -இவ்வுலகில்
ஜ்ஞாநேந ஸத்ருஸம் –ஆத்ம ஞானத்தை ஒத்ததாக
பவித்ரம் -சுத்தி அளிப்பதாக
ந வித்யதே.—வேறே ஒன்றும் இல்லையே
தத் –அத்தகைய ஞானத்தை
ஸ்வயம் யோக ஸம் ஸித்த -முற் கூறிய கர்மயோக ஸித்தி பெற்றவன்
காலேந-காலக் கிரமத்தில்
ஆத்மநி –தன் ஆத்மாவைப் பற்றி
விந்ததி—அடைகிறான் –
இவ் உலகில் ஆத்ம ஞானத்தை ஒத்ததாக சுத்தி அளிப்பது வேறு ஒன்றும் இல்லை –
அத்தகைய ஞான யோகத்தை கர்ம யோக சித்தி பெற்றவன் காலக் கிரமத்தில் தன் ஆத்மாவில் அடைகிறான்
கொளுத்தும் -அக்னி -பாவானத்வமும் உண்டே -புனிதமாக்கும் -மங்களம் உண்டாக்கும் -தானே நடக்கும் –)
(யதைதாம் ஸி ஸமித்தோக்நிர் பஸ்ம ஸாத்குருதேர்ஜுந—
ஜ்ஞாநாக்நி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத்குருதே ததா—-৷৷4.37৷৷
அர்ஜுந–அர்ஜுனா
ஸமித்தோக்நிர்-கொழுந்து விட்டு எரியும் நெருப்பு
ஏதாம் ஸி -விறகுகளை
யதா பஸ்மஸாத் குருதே—எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
ததா -அப்படியே
ஜ்ஞாநாக்நி -ஞானம் ஆகிற அக்னி
ஸர்வ கர்மாணி -எல்லாக் கர்மங்களாகிற விறகுகளையும்
பஸ்மஸாத் குருதே— சாம்பல் ஆக்குகிறது
அர்ஜுனா கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
அப்படியே ஞானம் ஆகிய நெருப்பு எல்லாக் கர்மங்கள் ஆகிய விறகுகளை சாம்பல் ஆக்குகிறது
கடலை தாண்டினால் திரும்ப வரலாமே சங்கை வந்தது -ஒரு வினாடி ஞானத்தால் இவை போகுமோ –
விறகு கட்டை போலே பாபங்கள் -திரும்பாதே -பஸ்மம் ஆகுமே -தீயினில் தூசாகும் செப்பு –)
பக்த்யா த்வனன்யாசக்யா-
மன்மனா பவ மத் பக்த -இத்யாதிகளாலே சொல்லப் பட்ட
கர்ம ஞான சஹ்ருதமான பக்தி யோகமும் -ஆகிற இவையும் –
(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷
பார்த்த –குந்தீ புத்ரனே
பூதாநி–எல்லாப் பொருள்களும்
யஸ்ய-எந்தப் பரம புருஷனுடைய
அந்தஸ்தாநி –உள்ளே இருக்கின்றனவோ
யேந -எவனால்
ஸர்வமிதம் -இவை அனைத்தும்
ததம்–வியாபிக்கப்பட்டுள்ளதோ
புருஷ ஸ பர து -அந்தப் பரம புருஷனோ என்னில்
பக்த்யா அநந்யயா.–வேறு பயன் கருதாத பக்தியினால்
லப்யஸ்–அடையத் தக்கவன்
குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்)
(பக்த்யாத் த்வ அநந்யா ஸக்ய அஹமேவ விதோர்ஜுந ஞாதும் த்ரஷ்டும் சதத்வேந பிரவேஷ்டும் ச பரத ருஷப
அநந்ய யான பக்தியாலேயே அறியவும் காணவும் அடையவும் ஸக்யன்)
(மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷
என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக
மந்மநா பவ -என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக
மத் பக்தோ பவ-அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி யுடையவனாக ஆவாயாக
மத் யாஜீ பவ–அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
மாம் நமஸ்குரு.–என்னை வணங்குவாயாக
மத் பராயண–என்னையே மேலான ஆஸ்ரயமாய்க் கொண்டவனாய்
ஏவம் -இவ்வண்ணமாக
ஆத்மாநம் யுக்த்வா –நெஞ்சைப் பழக்குவதன் மூலம்
மாமேவைஷ்யஸி —என்னையே அடைவாய்)
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யாக்வா
தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சொர்ஜுனா-என்று
விரோதி நிவ்ருத்தி பூர்வமான பகவத் ப்ராப்திக்கு சாதனமாகச் சொல்லப் பட்ட
அவதார ரகஸ்ய ஞானம்
(ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷
அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்
அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –)
ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் கருத க்ருத்யச்ச பாரத -என்று
அபிமத பல லாபத்தாலே -க்ருதக்ருத்யனாய் ஆகும் என்கிற புருஷோத்தம வித்யை –
(இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷
இதி = இதுவே-இவளை போல் இங்கு இதம்
குஹ்ய தமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத் தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே
அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த-இவளை போல் இங்கு இதம் -மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.-செய்த வேள்வியர் ஆவாய் –)
தேசோயம் சர்வ காம துக் -என்று சர்வ காம பல பிரதமாகச் சொல்லுகிற புண்ய ஷேத்திர வாசம் –
சர்வ பாப விசுத்தாத்மா யாதி பிரதம சனாதனம் -என்று
சர்வ பாப விமோசன பூர்வகமான பகவத் ப்ராப்தியை பலமாகச் சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனம் –
க்ருதேன வாத தைலேன தீபம் யோ ஜ்வாலயேன் நர விஷ்ணவே
விதிவத் பக்த்த்யா தஸ்ய புண்ய பலம் ஸ்ருணு விஹாய சகலம் பாபம்
சஹஸ்ர ஆதித்ய சன்னிப ஜ்யோதிஷ்மதா விமோநேன விஷ்ணு லோகே மகீயதே -என்று
பாப நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படுகிற திரு விளக்கு எரிக்கை –
அப்படி -விரோதி நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படும் -திரு மாலை எடுக்கை
முதலாக சாதனா புத்த்யா செய்யப் படும் அவையும் -என்கை-
(எப்பொழுதும் எழுந்து இருந்து நாம ஸஹஸ்ரத்தாலே ஸ்தோத்ரம் பண்ணுகிற புருஷனானவன் வாஸூ தேவனை ஆஸ்ரயித்து
வாஸூ தேவ பராயணனாய் ஸர்வ பாபங்களையும் விட்டு பரி ஸூத்தமான ஸ்வரூபத்தை யுடையனாய்க் கொண்டு
ஸ நாதனமான ப்ரஹ்மத்தைப் பிராபியா நிற்கும்
சாதன புத்தியா செய்யுமவை என்பதால் கைங்கர்ய புத்தியா பண்ணுமவற்றை வ்யாவிருத்திக்கிறது)
————————————————-
சர்வ சப்தத்தாலே அவ்வவ சாதன விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில்
அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது –சூரணை-196-
இனி சர்வ சப்தார்த்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
தர்ம விசேஷணமான-சர்வ சப்த்தாலே -பஹு வசநோக்தமான அவ்வோ சாதன
விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில் –
சந்த்யாஹின அசுசிர் நித்யம் அனர்ஹஸ் சர்வ கர்மஸூ -என்கிறபடியே
அயோக்யன் ஆகாமல் தன்னை அனுஷ்டிக்கையாலே அவற்றுக்கு யோக்யனாகையை
உண்டாக்கிக் கொடுக்கும் –
சந்த்யா வந்தன பஞ்ச மகா யஞ்ஞாதிகளான-நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது -என்கை –
(பஞ்ச மகா யஞ்ஞம் -ப்ரஹ்ம -தேவ -பிதா -பூத -மனுஷ்ய யஞ்ஞங்கள்)
————————————–
ஆக ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய் -நித்ய நைமித்திகாதி ரூபங்களான
கர்ம யோகாத்ய உபாயங்களை -என்ற படி –சூரணை -197-
உக்தத்தை நிகமிக்கிறார் –
அதாவது
கீழ் சொன்ன எல்லாவற்றாலும் சோதனா லஷண அர்த்தோ தர்ம -என்று
சோதனை யாகிற விதி வாக்யத்தை பிரமாணமாக உடைத்தான அர்த்தம் தர்மம் -என்கையாலே –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆகிற பிரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய் –
நித்யம் நைமித்திகம் முதலானவற்றை வடிவாக உடைதான கர்ம யோகம் தொடக்கமான
உபாயங்களை என்றபடி -என்கை –
————————————————————
இவற்றை -தர்மம் -என்கிறது பிரமித்த அர்ஜுனன் கருத்தாலே –சூரணை -198-
ஸ்வரூப வ்ருதத்வாத் அதர்மமாகச் சொல்ல வேண்டும் அவற்றை -தர்மம்-
என்கிறதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற உத்தேச்யத்துக்கு விரோதியாய் இருக்கையாலே –
அதர்ம சப்த வாச்யங்களாக -அப்ராப்தங்களாய் இருக்கிற இவற்றை தர்மம் என்று சொல்லுகிறது –
ஸ்வ தர்மமான யுத்தத்தை அதர்மம் என்றும்
இவற்றை தர்மம் என்றும்
பிரமித்த அர்ஜுனனுடைய நினைவாலே இத்தனை -என்கை –
(யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்கிறபடியே ஸாமான்ய விசேஷ ஞானவானான கிருஹனன் தர்மம் எண்டு சொல்கிறது)
ஆக-பிரதம பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .
——————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply