மாம்-சர்வ ரஷகனாய் –
உனக்கு கை ஆளாய் –
உன் இசைவு பார்த்து –
உன் தோஷத்தை போக்யமாக் கொண்டு –
உனக்கு புகலாய்-
நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும் போதும் விடமாட்டாதே ரஷிக்கும்
என்னை –சூரணை-211-
அநந்தரம்-த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
நம்முடைய ரஷணம் இவன் பண்ணுமோ -பண்ணானோ -என்று சம்சயிக்க வேண்டாதபடி
சர்வருடைய ரஷணத்தில் தீஷிதனாய் -தன் பெருமையும் நம் சிறுமையும் பார்த்து நம்மோடு
கலப்பற்று இருக்குமோ -என்ன வேண்டாதபடி –
சேநயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய-என்று ஏவிக் கொள்ளலாம் படி உனக்கு கையாளாய் –
உன்னை ரஷிக்கையில் உண்டான நசையால்-ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்கிற படியே
ரஷ்ய பூதனான உன் இசைவு பார்த்து -நம் குற்றம் கண்டு இகழுமோ -என்று அஞ்ச வேண்டாத படி –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்மாதி யாகுலனான -உன் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
அசரண்ய சரண்யன் ஆகையால் ஜலம் ஔஷண்யத்தைப் பஜிக்குமா போலே அபராத ஷாமணம் பண்ணி
கடிப்பிக்கும் புருஷகார பூதரே -தாமரையாள் ஆகிலும் சித குரைக்குமேல்-என்கிறபடியே
குற்றத்தைக் காட்டி அகற்றும் போதும் விட ஷமண் அன்றிக்கே -என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து ஒருதலை நின்று ரஷிக்கும் என்னை-என்கை-
————————————————————-
இத்தால் பர வ்யூஹங்களையும்
தேவதா அந்தர்யாமித்வத்தையும்
தவிர்க்கிறது –சூரணை -212-
மாம்-என்று விபவ ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப் படுகிறவற்றை
அருளிச் செய்கிறார் –
அதாவது –
என்னை -என்று அவதரித்து
கண்ணுக்கு இலக்காகாய் அணுகி நிற்கிற தன்னை
வரணி யனாகச் சொன்ன இத்தால் -தேச விப்ரக்ருஷ்டதையாலே -காணவும் கிட்டவும்
ஒண்ணாத படி இருக்கிற பர வ்யூஹங்களையும் –
அசாதாரண விக்ரக யுக்தம் அன்றிக்கே -உபாயாந்தர நிஷ்டருக்கு உத்தேச்யமாய் இருக்கிற
அக்நி இந்த்ராதி தேவத அந்தர்யாமித்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது -என்கை –
—————————————————————–
தர்மம் சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே -சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று -என்கையாலே -சாஷாத் தர்மம் தானே என்கிறது –சூரணை -213-
தர்மங்களை எல்லாம் விட்டு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமான
தொரு அர்த்த விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
தர்ம சம்ஸ்தபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்கிறபடியே –
ஸ்வ ப்ராப்திக்கு உடலான தர்மத்தை ஸ்தாபிக்கப் பிறந்தவன் தானே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று மோஷ சாதனதயா சாஸ்தர சித்தங்களான
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று -என்று சொல்லுகையாலே –
அவை சாஷாத் தர்மங்கள் அன்று –
ஸ்தாப நீயமான சாஷாத் தர்மம் க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்று
சனாதன தர்மமான தானே என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –
———————————————————-
இத்தால் விட்ட ஸ்தானங்களில் ஏற்றம் சொல்லுகிறது –சூரணை -214-
இத்தால் என் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
இப்படி சொன்ன இத்தால் கீழ் விட்ட ஸ்தானங்களில் காட்டில் இந்த
சாதனத்துக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது -என்கை –
——————————————————-
அதாவது
சித்தமாய்-பரம் சேதனமாய்-சர்வ சக்தியாய்-
நிர் அபாயமாய்-ப்ராப்தமாய்-சஹாயாந்தர நிர் அபேஷமாய்-இருக்கை –சூரணை -215-
அது தான் எது -என்ன-அருளிச் செய்கிறார் –
இத்தால் கீழ் விட்ட சாதனங்களில் காட்டில் இதுக்கு ஏற்றம் ஆவது-
சேதன பிரவ்ருத்தியாலே தன ஸ்வரூப சித்தி யாம்படி இருக்கை அன்றிக்கே –
சனாதன தர்மம் ஆகையாலே -சித்தமாய் –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொல்லுகிற
சர்வஞ்ஞ விஷயம் ஆகையாலே
பரம சேதனமாய் –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியாய்
சேதன சாத்யமாய்
நடுவே அபாயங்கள் புகுருகைக்கு அவகாசம் உண்டாகும் படி இருக்கை அன்றிக்கே
சித்த வஸ்துவாய் இருக்கையாலே
நிர் அபாயமாய்
பர தந்த்ரனான இச் சேதனனுடைய ஸ்வரூபத்துக்கு அப்ராப்தமாய் இராதே
ப்ராப்தமாய் –
கீழ்ச் சொன்ன பரம சேதனத்வாதிகளாலே சஹாயாந்தர நிர் அபேஷமாய் இருக்கை -என்ற படி-
————————————————————–
மற்றை உபாயங்கள் சாத்தியங்கள் ஆகையாலே –
ஸ்வரூப சித்தியில் சேதனனை அபேஷித்து இருக்கும் –
அசேதனங்களுமாய்-அசக்தங்களாய் -இருக்கையாலே கார்ய சித்தியிலே
ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் அவற்றுக்கு எதிர் தட்டாய் இருக்கையாலே
இதர நிர பேஷமாய் இருக்கும்-சூரணை -216-
மற்றை உபாயங்கள் -என்று தொடங்கி- மேல் மூன்று வாக்யத்தாலே
அதாவது –
இத்தை ஒழிந்த உபாயங்கள் சேதன பிரவ்ருத்தியாலே சாதிக்கப் படுமவை யாகையாலே –
தம்முடைய ஸ்வரூப சித்தியில் பிரவ்ருத்தி கரனான சேதனனை அபேஷித்து இருக்கும் –
இவனுக்கு செய்ய வேண்டுமவை அறிகைக்கும்
அது தன்னை செய்து தலைக் கட்டுகைக்கும்
யோக்யதை இல்லாத அசேதனங்களுமாய் -அசக்தங்களுமாய் -இருக்கையாலே
சேதனனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமான கார்யத்தினுடைய சித்தியில் –
பலமத உபபத்தே -என்கிறபடியே பல பிரதத்வ உப யோகியான சர்வ சக்தித்வாதி
உபபத்தி உடையவனான ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் சித்தத்தவ -பரம சேதனத்வ-சர்வ சக்தித்வங்களாலே அவற்றுக்கு
எதிர் தட்டாய் இருக்கையாலே அந்ய நிர பேஷமாய் இருக்கும் -என்கை –
——————————————————————
இதில் வாத்சல்ய -ஸ்வாமித்வ-சௌசீல்ய -சௌலப்யங்கள் -ஆகிற
குண விசேஷங்கள் நேராக பிரகாசிக்கிறது –சூரணை -217-
இனி இப் பதத்தில் ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான குண விசேஷங்கள் எல்லாம்
பிரகாசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
அதர்ம புத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனனுக்கு குற்றம் பாராதே –
அபேஷித்த அர்த்தங்கள் அருளிச் செய்கையாலே -வாத்சல்யம் பிரகாசிக்கிறது –
தன்னுடைய பரத்வத்தை பலகாலம் அருளிச் செய்த அளவன்றிகே அர்ஜுனன்
பிரத்யஷிக்கும் படி பண்ணுகையாலே -ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது –
ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி
இவனோடு கலந்து பிரியமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி
பண்ணுகையாலே -சௌசீல்யம் பிரகாசிக்கிறது –
அப்ராக்ருதமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி பண்ணுகையாலே
சௌலப்யம் பிரகாசிக்கிறது -என்கை-
குண விசேஷங்கள் -என்றது ஆஸ்ரயணதுக்கு அபேஷிதங்கள் ஆனவை என்று
தோற்றுகைக்காக-
நேராக பிரகாசிக்கிறது -என்றது -ஸ்புடமாக பிரகாசிக்கிறது -என்றபடி-
—————————————————–
கையும் உழவு கோலும்
பிடித்த சிறு வாய் கயிறும்
சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும்
தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –சூரணை -218-
இவை எல்லாவற்றிலும் வைத்து கொண்டு மிகவும் அபேஷிதம் சௌலப்யம் ஆகையாலே
அவதார பிரயுக்தமான சௌலப்யத்து அளவு அன்றிகே -சாரத்திய அவஸ்திகனாய் நிற்கிற
சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பத்தமையை அருளிச் செய்கிறார் –
அதாவது –
குதிரைகளை பிரேரித்து நடத்துகைக்காக திருக் கையிலே தரித்த உழவு கோலும்
அவற்றை இடவாய் வலவாய் திருப்புகைக்காகவும்
நிறுத்தருள வேண்டும் இடத்தில் தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறு வாய் கயிறும் –
திருமுடியில் ஓன்று ஆச்சாதியாமல் நிற்க்கையாலே சேநா தூளியாலே புழுதி படைத்த திரு குழலும்
தேர் தடவிய பெருமான் கனை கழல் -திரு வாய் மொழி -3-6-10–என்கிறபடியே
சாத்தின சிறு சதங்கையும் தானுமாக தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை-என்னை-என்று காட்டுகிறான்-என்கை –
ஆக
த்ருதீய பதார்த்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
(கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-)
———————————————————–
ஏகம்–சூரணை -219-
அநந்தரம் சதுர்த்திய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -ஏகம்-என்று –
———————————————————–
இதில் -ஏக -சப்தம் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணத்தைக் காட்டுகிறது –சூரணை -220-
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் உபாய விசேஷத்தை சொல்லும் இடங்களில் பல இடங்களிலும் அவதாரண பிரயோகம்
உண்டு ஆகையாலே -உகாரம்-போலே இந்த சப்தமும் -ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணம் ஆகிற
அர்த்தத்தைக் காட்டுகிறது -என்கை-
————————————————————–
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே –
தமேவ சாத்யம்-
த்வமே வோபாய பூதோ மே பவ –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-என்றும்
சொல்லுகிறபடியே-சூரணை -221-
இவ் உபாயத்தை நிர்த்தேசித்த அநந்தரம் அவதாரண பிரயோகம் பண்ணின வசனங்கள்
பலவற்றையும் இதுக்கு உதாரணமாக அருளிச் செய்கிறார் –
அதாவது
மாமேவ யே ப்ரபத்யந்தே -பகவத் கீதை –7-14-என்று என்னையே யாவர் சிலர்
பிரபத்தி பண்ணுகிறார்கள் என்றும் –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -பகவத் கீதை -15-4–என்று
அந்த புருஷனையே பிரபத்தி பன்னுகிறேன் என்றும் –
த்வமே வோபாய பூதோ மே பவ -என்று நீயே எனக்கு உபாயமாக வேணும் என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திரு வாய் மொழி -5-7-10–என்று எனக்கு
உபாயம் தருகிற இடத்தில் -உன் திரு அடிகளையே உபாயமாக தந்தாய் -என்றும்
சொல்லுகிற இவ் இடங்களில் -மாமேவ -தமேவ -த்வமேவ -நின் பாதமே -என்று
ஸ்வீகார வஸ்து நிர்த்தேச அநந்தரம் அவதாரணத்தை சொல்லுகிற பிரகாரத்தில் -என்கை-
(ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-)
———————————————————————-
இத்தால் -வ்ரஜ-என்கிற ஸ்வீகாரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது –சூரணை -222-
ஏதத்-வ்யாவர்த்தம் எது -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
உபாயாந்தரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் பௌநருக்த்யம் பிரசங்கிக்கை ஆகையாலும் –
தேவதாந்த்ரங்கள் வ்யாவர்த்தமம் அளவில் -மாம்-என்று அசாதாரண ஆகாரத்தைச் சொல்லுகையாலே –
அது கீழே சித்தம் ஆகையாலும் -இந்த அவதாரணத்தால் -வ்ரஜ-என்று மேல் சொல்லுகிற -ஸ்வீகாரத்தில்
உபாய பாவத்தைக் கழிக்கிறது-என்கை –
இந்த ஸ்வீகாரம் தானும் அந்வய வ்யதிரேகத்தாலே சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே
இதன் சாதனத்வம் அவசியம் கழிக்க வேணும் இறே-
———————————————————
ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-
ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –
—————————————————–
ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-
அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்
அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது இது -என்கை-
(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)
————————————————————
அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-
இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –
அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-
(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)
———————————————————-
இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-
இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –
அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை–
——————————————————————
அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-
இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன் கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –
—————————————————-
இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-
ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –
இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –
——————————————————————-
கீழ் தானும் பிறருமான நிலையைக் குலைத்தான் –
இங்கு
தானும் இவனுமான நிலையைக் குலைக்கிறான்-சூரணை -229-
இனி -மாம் -என்கிற பதத்துக்கு கீழும் -இங்கும் -ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச் செய்கிறார் –
அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற இடத்தில் சகல உபாயங்களையும் விடச் சொல்லுகையாலே
பல பிரதானனான தானும் உபாயாந்தரங்களுமாய் கூடி நிற்கிற நிலையைக் குலைத்தான் –
ஏகம்-என்கிற இடத்தில் ச்வீகாரத்தில் உபாய பாவத்தை கழிகையாலே-உபாய பூதனான தானும்
தான் ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணி நிற்கிற இவனுமான நிலையைக் குலைக்கிறான் -என்கை
உபயாந்தரங்களை பிறர் என்றது -உன்னால் அல்லால் யாவராலும் –திரு வாய் மொழி –5-8-3-என்றால் போலே
(என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-)
———————————————————
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-
இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –
அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –
—————————————————–
அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231
ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-
—————————————————
மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-
சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –
———————————————————
சிற்ற வேண்டா–சூரணை -233
சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –
அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று இறே -என்கை –
(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)
————————————————————-
நிவ்ருத்தி கீழே சொல்லிற்று–சூரணை -234-
இதுதான் இஸ் ஸ்லோகம் தனக்குள்ளே சொல்லிற்று என்கிறார் –
அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி யினுடையவும் நிவ்ருத்தி யினுடையவும்
நிவ்ருத்தியே இவனுக்கு வேண்டுவது என்னும் இடம் கீழே சொல்லிற்று -என்கை –
———————————————————–
உபகார ஸ்ம்ருதியும் சைதன்யத்தாலே வந்தது –
உபாயத்தில் அந்தர்பவியாது –சூரணை-235-
ஆனால் உபகார ஸ்ம்ருதி தான் வேணுமோ -அது உபாயத்தில் முதலிடாதோ-என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது
என்னை தீ மனம் கெடுத்தாய் -திரு வாய் மொழி 2-7-8-
மருத் தொழும் மனமே தந்தாய் – திரு வாய் மொழி -2-7-7
இத்யாதியாலே இவ் உபாய விஷயத்தில் இவன் பண்ணும் உபகார ஸ்ம்ருதியும்
இவனுடைய சைதன்ய பிரயுக்தமாய் வந்தது இத்தனை -இது உண்டாகை யாலே அன்றோ
ஈஸ்வரன் கார்யம் செய்தது என்று உபாயத்தில் உள் புகாது -என்கை
ஆக சதுரத்த பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
(வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-)
(திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-)
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply