Archive for the ‘முதல் திருவந்தாதி’ Category

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-91-100–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஊனக் குரம்பையினுள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும்-ஏனத்து
உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்–91-

—————————————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கு
மாம்சத்தினால் ஆகிய
சரீரம் ஆகிற குடிசையில்
உள்ளே பிரவேசித்து
அதாவது
சரீரத்தின் தோஷம் எல்லாம் மனத்தில் படியும்படி
அதை நன்றாக ஆராய்ந்து
தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும்வேண்டா நாற்றமிகு உடல் –

இருள் நீக்கி
சரீரம் போக்கியம் என்று நினைக்கிற
அஞ்ஞானம் ஆகிற இருட்டைப் போக்கி

ஞானச் சுடர் கொளீஇ
தத்வ ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
சுடர் கொளுவி
நாடோறும்-
நாள் தோறும்

ஏனத்து உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
வராஹ ரூபியாகி
பிரளயம் கொண்ட பூமியைக் குத்தி
எடுத்துக் கொணர்ந்த
எம்பெருமான் உடைய திருவடிகளை
யுகாந்த காலத்திலும் சத்தை அழியாமல் பாதுகாத்து கொண்டு இருந்தான் என்பதால் -ஊழியான்-

மருவாதார்க்கு உண்டாமோ வான்
சேவியாதவர்களுக்கு பரமபதம் கிடைக்குமோ
கிடைக்க மாட்டாது

ஆக
சரீரம் பற்றிய அஞ்ஞானம் தொலைந்து
ஆத்மாவைப் பற்றின சத்ஞானம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை அடைந்து
வாழுமவர்கட்கே வானுலம் சித்திக்கும் என்றதாயிற்று –

——————————————————————————————————————————————————————————–

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே -ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு–92-

—————————————————————————————-

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
ஆகாசமாகியும்
அக்னியாகியும்
அலை எரிகிற கடலாகியும்
காற்றாகியும்
பஞ்ச பூதங்கள் ஐந்துக்கும் உப லஷணம்
இவற்றால் சமைத்த அண்டங்களுக்கு நிர்வாஹகன் என்றபடி

தேனாகிப் பாலாம் திருமாலே –
தேன் போன்றும்
பால் போன்றும்
பரம போக்யனான
எம்பெருமானே
பரம போக்யனான உன்னை ஞானிகள் உட்கொள்ள கருதா நிற்க
நீ வேறு ஒரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்வது என்னோ -என்றபடி

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே
இடைக்குலத்தில் பிறந்தவளான
யசோதை என்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
அள்ளி அமுது செய்ததினால் நிறைந்து விடுமோ
நிறைய மாட்டாது
உலகமுண்ட பெருவாயனான உனக்கு –

முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு
பிரளயம் நீங்கின காலத்தில்
பிரளய காலத்தில் உட்கொண்டு இருந்த இவ்வண்டத்தை
உள்ளே கிடந்து தளர்ந்து போகாதபடி
வெளியிட்ட உன் வயிறானது

அவாப்த சமஸ்த காமன் -உனக்கு பசி இல்லை
வெண்ணெய் உண்டது பசி நீங்க இல்லையே
ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் உட்கொண்டால் அல்லது தரிக்க மாட்டாமை

உண்டாய் உலகு ஏழு முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசருவ வலையாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே -திருவாய்மொழி

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாத படியான வ்யாமோஹத்தாலே
அமுது செய்தான் அத்தனை அன்றோ -அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி

தாழ் குலத்தார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் ஏழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே -என்றும்
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறிநீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே -என்றும்
திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகள்-

————————————————————————————————————————————————————————————————

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ -பொறி யுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா நின்
சேவடி மேல் ஈடழியச் செற்று–93-

——————————————————————————————————-

வயிறு அழல
என்ன தீங்கு நேருமோ என்று அனுகூலர்
வயிறு எரியும்படி

வாளுருவி வந்தானை யஞ்ச
வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அவன் உன் வடிவைக் கண்டு
நடுங்கும்படி

எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாயை மடித்துக் கொண்டு இருந்தது எதுக்காக

பொறி யுகிரால்
நாநா வர்ண நகங்களால்

பூவடியை யீடழித்த
புஷ்பத்தின் சுகுமாரத் தன்மையை
அடியோடு போக்கிய
மிகவும் ஸூ குமாரமான

பொன்னாழிக் கையா
அழகிய திரு ஆழியைக் கொண்ட
திருக் கையை உடையவனே –

பொன்னாழிக் கையால் -பாட பேதம்

நின் சேவடி மேல்-
உனது திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு

ஈடழியச் செற்று
கட்டுக் குலைந்து போம் படி கொன்று
பின்னையும் சீற்றம் மாறாமையால்

ஆஸ்ரிதற்கு பிராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு
ஆஸ்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே நமக்குத் தஞ்சம்
கொடியவாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஓன்று உண்டு ஓன்று உளது அறிந்து
உன்னடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -திருமங்கை ஆழ்வார்
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி
தரித்ரனானவன் தனிகனை அடையுமா போலே சீற்றம் உண்டு என்று ஆயத்து இவர் பற்றுகிறது —
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இ றே சீற்றம் -பெரியவாச்சான் பிள்ளை
அளவு கடந்த சீற்றமே தஞ்சம் என்று ஆஸ்ரிதர்களுக்கு காட்டத் தானே
எயிறு இலக வாய் மடித்தது-

—————————————————————————————————————————————————————————————————————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து -முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா–94

——————————————————————————

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
எழுந்து தீ விழுத்து இந்த ஏழ் உலகும் செற்று
அநியாயம் மேலிட்ட படியால்
எழுந்து
லௌகிக பதார்த்தங்களை எல்லாம்
அடியோடு அழிக்க பெரு முயற்சியோடு கிளம்பி
தீ விழித்து
உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி
நெருப்பு எழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும் செற்று
இந்த உலகங்களை எல்லாம் அழித்து
யுகாந்த காலத்தில் அக்கிரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்ரம் கொண்டு
உலகங்கள் அழித்து தன்னிடம் அடக்கிக் கொள்வான் –

மற்றிவை
பின்பு
பிரளயத்தில் அழிந்த இப்பதார்த்தங்கள்

சென்ற
என்னிடத்து அடங்கிக் கிடக்கின்றன என்று சொல்லி

யா வென்று வாய் அங்காந்து
ஆ என்று வாயைத் திறந்து

-முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
சகல ஜகாத்தையும்
வைதிகனான மார்கண்டேய மகரிஷிக்கு
முன்பு போலவே இருப்பதைக் காட்டி அருளிய
ஆச்சர்ய சக்தி உக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
காலகதியைக் கடந்துஎன்றும் பதினாறாக நீடூழி வாழ
பத்ர நதிக் கரையிலே தவம் புரிந்த மார்கண்டேயர்
நர நாராயணன் சேவை பெற்று
பின்பு பிரளயம் வந்தவாறே
ஆலிலை குழந்தை வயிற்றுக்குள் தன்னையும் உலகங்கள் எல்லாம் கண்டார்
எய்த்த மார்க்கண்டன் கண்டிட வமலைக்கும் உலகு அழியாது உள்ளிருந்தது என்னே -என்றும்
ஆலத்திலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த காலத்தில்
எவ்வகை நீ காட்டினாய் –வேதியர்க்கு மீண்டு -என்றும்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அருளுகிறார்

வேறு ஒருவனை
இறையேனும் ஏத்தாது என் நா
எனது நா வானது சிறிதும் துதிக்க மாட்டாது –

——————————————————————————————————————————————————————————————

நா வாயில் உண்டே நமோ நாராயணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே –மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே என்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம்–95-

—————————————————————————————–

நா வாயில் உண்டே
ஸ்தோத்ரம் பண்ண கருவியான நாக்கு
ஸ்ரமம் பட்டு தேட வேண்டாதபடி
ஒவ்வொருவர் வாயிலும் படைக்கப்பட்டு இருக்கின்றதே

நமோ நாராயணாய வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சஹஸ்ரநாம மந்த்ரம் போலே இடை இடையே
விட்டு விட்டு சொல்ல வேண்டாமல்
எளிதாக ஒரே மூச்சிலே சொல்லக் கூடிய
திரு அஷ்டாஷர மந்த்ரம் சித்தமாய் இருக்கின்றதே
நமோ நாரணா வென்று -பிழையான பாடம்

-மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே
கிழத் தன்மை அற்ற -திரும்பி வருதல் அல்லாத
பரமபிராப்யமான மோஷத்தில்
சென்று சேருவதற்கு ஏற்ற உபாயம் உண்டே

இப்படி இருக்கவும் உஜ்ஜீவியாமல்

என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம்
சிலர்
விநாசத்துக்கு காரணமான கெட்ட வழிகளிலே
போய் விழுகிற படி என்னோ

உபயோகம் அற்ற விஷயங்களை சொல்ல நாவைப் பயன்படுத்தி அனர்த்தப் படுகிறார்களே
நாராயாணா ஆதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த் நீதி
ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -சாஸ்திர வாக்கியம்
தாமுளரே தம்முள்ளம் உள்ளுள்ளதே தாமரையின்
பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே வாமன்
திருமருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி பாசுரம்

—————————————————————————————————————————————————————————–

திறம்பாது என்னெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் – புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கட் பிடி –96-

—————————————————————————–

திறம்பாது பிடி
தவறாமல் உறுதியாக கொள்

என்னெஞ்சமே

செங்கண் மால் கண்டாய்
புண்டரீ காஷனான எம்பெருமானே ஆவான்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் –
புண்ணியம் பாவம் எனப்படும்
இருவகைக் கர்மங்களுக்கும் நிர்வாஹகன்
எந்த ஆத்மாவை நல்ல கதி பண்ணுவிக்க கருதுகின்றானோ அவனைக் கொண்டு நல் வினையைச் செய்விக்கின்றான்
எந்த ஆத்மாவை அதோகதி அடைவிக்கக் கருதுகின்றானோ
அவனைக் கொண்டு தீ வினையை செய்விக்கின்றான்
என்ற வேத வக்யத்தின் படியே -அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் -என்று அருளிச் செய்கிறார்

புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான்வான் தானே
இந்த பூமியும்
அலை எறிகிற கடலும்
வாயுவும்
ஆகாசமும்
இவை தவிர உள்ள மகான் முதலிய தத்தவங்களும்
அந்த திருமாலே யாவான்

கண்டாய் கடைக்கண்
முடிவாக ஆராய்ந்து பார்க்கும் அளவில்
இதுவே உண்மை என்பதை
திறம்பாமல் பிடி – தவறாமல் உறுதியாக கொள்

சம்சாரிகள் எந்த வழியில் போனாலும் போகட்டும்
நெஞ்சே நீ மாத்ரம்
சர்வ நிர்வாஹகன் அவனே என்பதில் விப்ரதிபத்தி பண்ணாமல்
இதுவே பரமார்த்தம் என்று உறுதி கொண்டு இரு-

—————————————————————————————————————————————————————————————————-

பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -பொடி சேர்
அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப்பொன் –97-

———————————————————————————

கீழில்
அறம் பாவம் இரண்டும் அவன் இட்ட வழக்கு என்றார் அதன் விவரணம் இதில்
விஷய பிரவணமாய் திரிந்து கொண்டு இருந்த யானைக்கும் அருளினான்

ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ -திருச் சந்த விருத்தம் -94-
பஞ்ச கவ்யமும் அதன் பரி சுத்தமும் நீ என்றார் திரு மழிசை பிரான்
பிடி சேர் களிறு அளித்த பேராளா
பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆகிற
ஆண் யானையை
காத்து அருளின மஹானுபாவனே

உன்தன்அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே
உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
பாபிகளை பரிசுத்தன் ஆக்கும் படி
உன்னுடைய திருவருளைப் பெற்றாள் அன்றோ

-பொடி சேர் –
தான் பண்ணின பாபத்துக்கு பிராயச் சித்தமாக
பஸ்மத்திலே சாயுமவனாகி

அனல் கங்கை ஏற்றான்
அனற்கு அங்கை ஏற்றான்
அக்னிக்கு தனது அழகிய கையை ஏற்ற பாதகியான
ருத்ரனுடைய
அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப்பொன்
ஒளி பொருந்திய ஜடையின் மேலே
அவனுடைய சுத்தியின் பொருட்டு வந்து குதித்த
ஜலமயமான
கங்கை என்னும் பெயர் பூண்டுள்ள
சிறந்த பெண்
பெயர்ப்பொன்-தவறான பாடம்- மோனை இன்பம் குறையும்-

—————————————————————————————————————————————————————————————-

பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடு மாலும் -என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்–98-

———————————————————————

பொன் திகழும் மேனிப்
பொன் போலே விளங்குகின்ற உடலையும்

புரி சடை அம் புண்ணியனும்
பின்னிய சடை முடியை உடையனாய்
அழகிய சாதனா அனுஷ்டானம் ஆகிற
புண்ணியத்தை உடையனான ருத்ரனும்

நின்று உலகம் தாய நெடு மாலும் –
நின்று உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட சர்வேஸ்வரனும்

என்றும்
எக்காலத்திலும்

இருவர் அங்கத்தால் திரிவரேலும்
இருவாராக வெவ்வேற வடிவத்தோடு
இருந்தார்களே யாகிலும்

ஒருவன்
சடை புனைந்து
சாதனா அனுஷ்டானம் பண்ணும்
ஒருவனாகிய சிவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
நெடுமாலான மற்று ஒருவனுடைய
சரீரத்திலே
எப்போதும் சத்தை பெற்று இருப்பன் –
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமான் உடைய சரீர பூதன் ஆகையாலே தானே –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே -நம் ஆழ்வார்
புரிசடை புண்ணியன் -அவன் வேஷமே ஈஸ்வரன் அல்லன் என்பதைக் காட்டுமே
நின்று உலகம் தாய நெடுமால் -ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசி அற திருவடியை
நீட்டி தானே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினான்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய அங்கத்தில் ஏக தேசத்தில் என்றும்
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்ளலாம்-

—————————————————————————————————————————————————————————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99-

———————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான்
காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான்
காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன்
காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று
தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத்தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

—————————————————————————————————————————————————————————-

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்னெஞ்சே–ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை –100-

—————————————————————————————
-ஓரடியில் தாயவனைக் கேசவனைத்
தனது ஒப்பற்ற அடி வைப்பினாலே
லோகங்களை எல்லாம் அளந்து கொண்டவனும்
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனும்

தண் துழாய் மாலை சேர்
குளிர்ந்த திருத் துழாய் மாலை உடன் சேர்ந்தவனுமான

மாயவனையே மனத்து வை
எம்பெருமானையே
மனத்தில் உறுதியாக கொள்வாயாக
இப்படி அவனே உபாயம் என்று உறுதி கொண்டால்

ஓரடியும்
உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட ஒரு திருவடியும்

சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
சகடம் முறிந்து விழும்படி உதைத்த
பூ போன்ற திருவடியும்
ஆகிய

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே-
இரண்டு திருவடிகளையும்
சேவிக்கப் பெறலாம் காண்

மாயவனை மனத்து வைத்தால் -உபாயமாக கொண்டால்
ஈரடியையும் சேவிக்கப் பெறுவது எளிதாகும்
சாடுதைத்த திருவடி –அநிஷ்ட நிவ்ருத்தி
உலகளந்த திருவடி– இஷ்ட பிராப்தி

திரிவிக்ரமாவதாரமும்
கிருஷ்ணாவதாரமும்
இவ் வாழ்வார் ஈடுபட்ட துறைகள்
அதனால் இத்தை பேசி தனது திவ்ய பிரபந்தத்தை முடித்து அருளுகிறார்
மீண்டும் தாயவனைக் கேசவனை என்பதும் இதே நோக்கம்

உபாயமும் உபேயமும் எம்பெருமானே
சைதன்ய கார்யமான இந்த அத்யாவசியம் ஒன்றே நமக்கு வேண்டியது
என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-

————————————————————————————————————————————————————————————————

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று -1-

—————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-81-90–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஆளமர் வென்றி யடுகளத்துள் அந்நான்று
வாளமர் வேண்டி வரை நட்டு -நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை –81-

—————————————————————————————–

ஆளமர்
யுத்த வீரர்கள் நெருங்கி
இருக்கப் பெற்றதும்
கடல் கடையும் காலம் தேவாசுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியும் காலம்
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரர் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்

வென்றி
ஜெயத்தை உடையதுமான

யடுகளத்துள்
எதிர்த்தவரை கொல்லுகின்ற
யுத்த களத்திலே

அந்நான்று
அசுரர்களை தேவர்கள் மேல் விழுந்து நலிந்த
அக்காலத்திலே

வாளமர் வேண்டி
அனுகூலரான தேவர்கட்கு வெற்றி
உண்டாகும் படி
மதிப்புடைய யுத்தத்தை விரும்பி

அதற்கு ஏற்ப

வரை நட்டு –
தண்ணீரிலே அமிழக் கூடிய
மந்த்ர பார்வத்தை மத்தாக நாட்டி

நீளரவைச்சுற்றிக் கடைந்தான்-
உடல் நீண்ட வாசூகி நாகத்தை
கடை கயிறாக சுற்றி
அமுதம் உண்டாகும் படி திருப் பாற் கடலை கடைந்தவன் உடைய

பெயரன்றே தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை
திரு நாமம் எப்படிப் பட்டது என்றால்
சம்சாரிகளை வாரிப் பற்றாக
பிடித்துக் கொண்டு போய்
பழைமையாய் இருக்கிற சம்சாரம் என்னும் நகரத்து
தாண்டுவிக்கின்ற சாதனம்
நரகு -சம்சாரம்

பிரயோஜனாந்தர பரர்களுக்கும்
தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அருளிய அவன் திரு நாமமே உத்தாரகம்-

——————————————————————————————————————————————————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் பைம்பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் -இடையிடையின்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேலோருநாள்
மானமாய வெய்தான் வரை –82-

——————————————————————————-

படையாரும் வாள் கண்ணார் –
வேலாயுதம் போன்ற ஒளி பொருந்திய
கண்களை உடைய பெண்கள்
அறிவு ஒன்றும் இல்லாத பெண்களும் ஆஸ்ரயிக்கும் படி

பாரசிநாள்-
த்வாதசி அன்று –
சத்வோத்தரமான நாள்

பைம்பூம் தொடையலோடு ஏந்திய தூபம் –
வாடாத மலர்களைக் கொண்டு
தொடுத்த மாலையோடு கூட
திரு வேங்கடமுடையானுக்கு
சமர்ப்பிக்கும் படி ஏந்தி உள்ள
தூபமானது
தூபத்தின் கமழ்ச்சியே திருமலை எங்கும் பரவிக் கிடக்கிறது –

இடையிடையின் மீன் மாய
ஆகாசத்தில் நடுவே நடுவே தோன்றுகின்ற
நஷத்ரங்கள் மறையும்படி

மாசூணும்
மாசு ஏறும்படி பண்ணா நிற்கும்

வேங்கடமே
திருமலையே யாகும்

மேலோருநாள் மானமாய வெய்தான் வரை
முன் ஒரு காலத்திலே
ஸ்ரீ ராமாவதாரத்திலே
மாரீசன் ஆகிய மாய மான் இறந்து விடும்படி
அம்பு தொடுத்து விட்ட ராமபிரான்
நித்ய வாசம் செய்கின்ற மலை யாவது

———————————————————————————————————————————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -உரவுடைய
நீராழி உள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

———————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து
ஒருவராலும் அசைக்க முடியாத
கோவர்த்தன மலையே குடையாகவும்
தனது திருத் தோளே அந்தக் குடைக்கு காம்பாகவும் ஆக்கி
பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து

ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே
ஆயர்கள் வைத்திருந்த திரண்ட
ரிஷபங்கள் ஏழையும்
முடித்த விதம்
எங்கனே

-உரவுடைய நீராழி உள்கிடந்து-
மிடுக்கை உடைத்தான நீரை உடைய திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து

நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான்
எதிரியாக வந்த
மதுகைடபர் முதலிய ராஷசர்களின் மீது
அவர்கள் நீறாகும்படி
பெரிய சக்ராயுதத்தை திருக் கையிலே கொண்டு இருக்கிற உபகாரகனே
நிராசரர் -இரவில் திரிகின்றவர்கள் –

இப்படி கருதும் இடம் சென்று பொருது கை நிற்க வல்ல
திரு ஆழியான் திருக்கையிலே இருக்கச் செய்தேயும்
அவனைக் கொண்டு கார்யம் கொள்ளாமல்
உடம்பு நோவ கார்யம் செய்து அருளியது
ஆஸ்ரித பாரதந்த்ரயத்தாலே
பெறாப் பேறாக நினைத்து —
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -திருவாய்மொழி -3-1-9-

——————————————————————————————————————————————————————————–

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் யுலகளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

————————————————————————

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உபகாரகனே
உனது பெருமையை அறிவார் யாரும் இல்லை
சர்வஞ்ஞனான உன்னால் தான் அறிய முடியுமோ
உன்னால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்போல்வாரால் ஒருக்கால் அறியப் போகலாமே ஒழிய
சுய யத்னத்தால் உணர விரும்புவார்க்கு ஒருநாளும் காண முடியாதே

உராய் யுலகளந்த நான்று
எங்கும் சஞ்சரித்த படி அளந்த காலத்திலே
உராய் -உலாவி என்றபடி
சிறிதும் சிரமம் இன்றி -பட்டர் உடைய கருத்து
உராய் – உரசிக் கொண்டு -எல்லாரையும் தீண்டிக் கொண்டு
உரையாய் -மருவி உராய் சொல்லு என்றுமாம் –

வராகத்துஎயிற்று அளவு போதாவாறு என் கொலோ
வராஹ ரூபியான உன்னுடைய
திரு எயிற்றின் ஏக தேச அளவும்
போதாதாக இருந்த விதம்
எங்கனேயோ

எந்தை அடிக்களவு போந்த படி
எனது ஸ்வாமியான உன்னுடைய
திருவடிகட்கே அளப்பதற்குப் போந்திருந்த
பூமியானது-

——————————————————————————————————————————————————————————————————

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ —85-

———————————————————————————

படி கண்டு அறிதியே –
அவனது திருமேனியை
சேவித்து
அனுபவித்து அறிந்து இருக்கிறாயோ

பாம்பணையினான்
சேஷசாயி யான பெருமானுடைய

புட்கொடி கண்டு அறிதியே கூறாய்
கருடப் பறவை யாகிற த்வஜத்தை
சேவித்து
அனுபவித்து
அறிந்து இருக்கிறாயோ
சொல்லு –

வடிவில் பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
பஞ்ச இந்த்ரியங்களையும்
சரீரத்துக்கு உள்ளே அடங்கி இருக்கச் செய்து
திருவாராதன சாமக்ரியான
புஷ்பங்களையும்
தீர்த்தத்தையும்
தரித்துக் கொண்டு

நெறி நின்ற நெஞ்சமே நீ –
ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நிலைத்து நிற்கும் மனமே

இத்தால்
எம்பெருமான் கருடாரூடனாய் சேவை சாதிக்கும் நிலையில்
சேவிக்கப் பெறுதலிலும்
சேஷசாயியாய் சேவை சாதிக்கும் நிலையிலும்
சேவிக்கப் பெறுதலிலும்
தமக்கு ஆசை கொண்டு இருக்கும் படியை வெளியிட்டு அருளுகிறார்-

—————————————————————————————————————————————————

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா -வாசல்
கடை கழியா வுள்புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றியினி–86-

———————————————————————

குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
கோவர்த்தன மலையை
வேரோடு பிடுங்கி எடுத்து
மேலே வந்து சொரிகிற மழையை
மேலே விழாமல் தடுத்த
குணசாலியே
பனி மறைத்த -என்றும் பாட பேதம்

கழியா வுள்புகாக்
வெளிப் பட்டு போகாமலும்
உள்ளே புகாமலும்

காமர் பூங்கோவல்
விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரிலே

வாசல் கடை
திரு வாசலுக்கு வெளியிலே

இடை கழியே
நடுக் கட்டான
இடை கழியிடத்தையே
ரேழி-வெளியிலே சம்சாரிகளும்
உள்ளே உபாசகனான ரிஷியும்
அநந்ய பிரயோஜனரான மூவர் நின்ற இடமே உகந்து சேரும் இடமாக பற்றினான்

பொய்கை பூதம் பேயாழ்வார் நாங்கள் மூவரும் தங்கி இருந்ததனால்

பற்றி
விரும்பிய இடமாகக் கொண்டு

நீயும் திருமகளும்
நீயும் பிராட்டியுமாக

இனி

நின்றாயால்
நின்று அருளினாய் -ஆச்சர்யம் –

பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனை தொழுத நன்னாடு –
இவ்வரலாற்றுக்கு மூலமாய் இருக்கும் இப்பாட்டு
இஃது என்ன திருவருள்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய நீல மேக ச்யாமளமான திருமேனியையும்
மின்னல்கொடி பரந்தால் போன்ற திருமகளாரையும்
நெஞ்சு என்னும் உட்க் கண்ணால் கண்டு
அனுபவித்த படியை
இத்தால் வெளியிட்டு அருளினார் ஆயிற்று
இடையரோடும் பசுக்களோடும் நெருக்கி நின்றால் போலே ஆயிற்று இங்கு மூவரையும் நெருக்கி நின்று அருளினான்

கீழ் பாட்டில் நெஞ்சமே நீ அவனைசாஷாத் கரித்து அனுபவிக்கப் பெற்றாய் இல்லை -என்றாரே
அப்படி சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவர் இருந்த இடம் தேடி பிராட்டியுடன் வந்து கலந்தான்
இவர் தம்முடைய திரு உள்ளத்தை குறித்து
சாஷாத் கரிதில்லை -என்னத் தரியான் இ றே-பெரியவாச்சான் பிள்ளை –
முன்னே நடந்த திருக்கோவல் இடை கழி நெருக்கத்தை
மீண்டும் அனுபவிப்பித்து அருளினான் போலும்-

————————————————————————————————————————————————————————————————–

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் -கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு –87-

—————————————————————————————-

இனியார் புகுவார் எழு நரக வாசல்
ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனிமேல் யாவர் பிரவேசிப்பார்
ஒருவரும் இல்லை ஒ யம கிங்கர்களே
ஏழு நரகங்கள் -கொடிய நரகங்கள்
பெரும் களிற்று வட்டம் /பெரு மணல் வட்டம் /எரியின் வட்டம்
புகையின் வட்டம் /இருளின் வட்டம் /பெரும் கீழ் வட்டம் /அரிபடை வட்டம்
என்று ஓர் இடத்திலும்
கூட சாலம் கும்பீ பாகம் அள்ளல் அதோகதி யார்வம்பூ செந்து என்ற ஏழும் தீ நரகப் பெயர்
என்று ஓர் இடத்திலும்
ரௌரவம் /மகா ரௌரவம் /தமஸ் /நிக்ருந்தனம் /அப்ரதிஷ்டம் /அசிபத்ரம் /தப்த கும்பம்
என்றும் வேறு வகையாக கூறுவார்
அன்றிக்கே
எழு நரகம்
சம்சாரிகள் அடங்கலும் சென்று புகுகிற நரகம்
கிளர்த்தியை உடைய நரகம் என்றுமாம்

முனியாது மூரித்தாள் கோமின்
உங்கள் ஸ்தானத்துக்கு
அழிவு உண்டாவதாகச் சொல்லும் என் மேல்
கோபம் கொள்ளாமல்
இனி ஒருக்காலும் திறக்க முடியாத படி
பெரிய தாழ்பாளை போட்டுப்
பூட்டுங்கோள்

-கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே
காண்பதற்கு
விளாம் பழம் உதிர்ந்து விழும்படி
வத்சாசூரனை
எறி தடியாக எடுத்து எறிந்து
இரண்டு அசுரரையும் முடித்த
திருத் தோள்களை உடையனான
சர்வேஸ்வரன் உடைய
ஆபரண த்வனியை உடைய திருவடிகளை
சேவிப்பதற்கு சாதனம்
ஆபரண த்வனியில் ஈடுபட்டு கனை கழல் என்கிறார்

அவன் உகந்து வாழ்கிற திருக் கோவலூர் க்கு சமீபமான
இடத்தில் வசிப்பது தான் என்று

நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு
நன்றாக
அழகிய ஐம்பூ என்று பேர் படைத்த பரந்த
த்வீபத்தில் உள்ள பிராணிகள் அறிந்து விட்டன –
அறிந்த -அறிந்தன –விரைவில் பகவத் ஞானம் உண்டாகி விடும்
எதிர் கால செய்தியை இறந்த காலமாகவே அருளிச் செய்கிறார்

ஆழ்வார் திரு உள்ளம் ஆனந்த்தின் எல்லை கண்டது
நெருக்குண்டு இருக்கும் நிலைமை தாம் அனுசந்தித்தார்
உலகோரை உபதேசத்தாலே திருத்தி பணி கொண்டதும்
பாவனா பிரகர்ஷத்தாலே
அனைவரும் அவனுக்கு ஆட்பட்டதாக கருதி
கம்பீரமாக அருளிச் செய்கிறார்
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் நடமாடும் ஜம்பூத்வீபமே நாடு மற்றவை காடு
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை போலே –

————————————————————————————————————————————————————————————–

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் -சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு–88-

———————————————————————

நாடிலும் நின்னடியே நாடுவன்
மனத்தினால் தேடும் பொழுது
உனது திருவடிகளையே தேடுவேன்

நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் –
எப்பொழுதுவாய் விட்டு ஏதாவது
சொல்லும் போதும்
உனது புகழ்களையே பாடுவேன்

சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
ஏதாவது ஒன்றைத் தலையிலே
அணிவதாய் இருந்தாலும்
அழகிய திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உன்னுடைய அழகிய திரு வடிகளையே
சிரோ பூஷணமாக கொள்பவனான

என்னாகில் என்னே எனக்கு
எனக்கு
எது எப்படி யானால் என்ன

உண்டியே உடையே உகந்தோடும் மண்டலத்தவர்கள்
அநாதி கால துர்வாசனையை எளிதில் அகற்றப் போமோ
தம்மைப் பார்த்தார்
நல்லபடியாக ஈடேறப் பெற்றோமே
நாடிலும் நின்னடியே நாடுவன்-மநோ வ்ருத்தியையும்
நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் -வாக் வ்ருத்தியையும்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு -சரீர வ்ருத்தியையும்
சொல்லி மூன்றும் பகவத் விஷயத்தில் அவஹாஹித்த படியை அருளிச் செய்தார் ஆயிற்று
என் ஆகில் என்
இங்கு இருந்தால் என்ன
பரம பதத்தில் இருந்தால் என்ன என்றுமாம்-

——————————————————————————————————————————————————————

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் -புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம்–89-

————————————————-

எனக்கு
எம்பெருமான் நிர்ஹேதுக கடாஷத்துக்கு
பாத்ரபூதனான எனக்கு

ஆவார் ஆர் ஒருவரே
ஒப்பு ஆகுவார் எவர் ஒருவர் இருக்கின்றார்
யாரும் இல்லை

எம்பெருமான்
அந்த சர்வேஸ்வரனும்

தனக்காவான் தானே மற்றல்லால் –
தானே தனக்கு ஆவான் அல்லால் -மற்று
தானே தனக்கு ஒப்பாவானே அல்லாமல்
அவன் தானும்
எனக்கு ஒப்பாக வல்லானோ –
இப்படி சொல்லும்படி உமக்கு வந்த ஏற்றம் என் என்ன

புனக்காயாம் பூ மேனி
தனக்கு உரிய நிலத்திலே தோன்றின
காயம் பூ வின் நிறமும்

காணப் பொதியவிழும் பூவைப் பூ
காணக் காண கட்டவிழா நிற்கும்
பூவைப் பூவின் நிறமும்

மா மேனி காட்டும் வரம்
வரம் -சிறந்ததான
அவனது கரிய திருமேனியை எனக்கு காட்டா நிற்கும்

ஆகையாலே போலியான பொருள்களைக் கண்டும் அவனை கண்டதாகவே நினைத்து மகிழ்கிற எனக்கு
ஒருவரும் ஒப்பாகார் என்றபடி

இதுவும் கீழ்ப் பாட்டின் சேஷம்
ஹர்ஷப் பெருக்கால் அருளிச் செய்கிறார்
அவன் அடிமையில் ஈடுபட்டு அதன் மூலமாக செருக்கு கொள்ளுதல்
அடிக் கழஞ்சு பெறுதலால்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மற்றையோரும் அருளிச் செய்தவை
இது ஹேயம் அன்று உபாதேயம்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –
பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே அனுசந்தேயம்-

———————————————————————————————————————————————————————————————–

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே -உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை
ஒரரியாய் நீ இடந்த தூன்–90-

—————————————————————————————-

வரத்தால் வலி நினைந்து
ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தினால்
தனக்கு உண்டான பலத்தை பெரிதாக மதித்து
வரம் கொடுத்தவர்கள் ஸ்ரீ மன் நாராயணன் ஆதீனம் என்று உணர வில்லையே –

மாதவ
திருமாலே

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உனது திருவடிகளை தனது தலையினாலே
வணங்காமல் இருந்தான் என்ற காரணத்தினாலோ
இல்லையே
பக்தனான பிரஹ்லாதனை நலிந்தான்
என்ற காரணத்தினாலே அன்றோ

-உரத்தினால்
உனது மிடுக்கினாலே

ஈரரியாய்
இரண்டு கூறாக கிழித்துப் போட வேண்டிய
சத்ருவாகி
பெரிய சத்ரு என்றுமாம்

நேர் வலியோனாய
எதிர்த்து நின்று போர் செய்யும் வலியை உடையனாகிய

விரணியனை
ஹிரண்யாசூரனை

ஒரரியாய் நீ இடந்த தூன்
ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாகி
நீ உனது நகங்களால் குத்தி கீண்டதானது
சரீரத்தை
ஓரரி – ஓர்தல் த்யாநித்தல் -த்யானிக்கப் படுகிற நரசிங்கம்

விமுகனாய் இருந்த காரணம் இல்லையே
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று சீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-பெருமாள் அருளினாரே
தனக்கு உயிர் நிலையான பாகவதர்களுக்கு தீங்கு என்றால் கொண்ட சீற்றம் உண்டே
கோபமாஹாரயத் தீவரம்
ததோ ராமோ மஹாதேஜா ராவனேண க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபச்ய வசமே யிவான்
பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப்
பிள்ளையை சீறி வெகுண்டு நலிந்தான் என்றவாறே
நம்மளவில் எத்தனை தீம்பனாய் இருந்தாலும் பொறுத்து இருப்போம்
நம்முடைய சிருக்கனை நலிந்த பின் பொறுத்து இருக்கவோ –
கேள்வி மட்டும் இங்கே
உத்தரம் அருளிச் செய்ய வில்லை
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -68 ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
இது போலே
பெரிய திருவந்தாதி பாசுரத்தில்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாக்கால் பேராளா
மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து –
இதற்கு அதிமாநுஷ ஸ்தவத்தில்
த்வன் நிர்மிதா ஜடரகாச தவ த்ரீலோகீ கிம் பிஷனாதியம்ருதே பவதா துராபா -என்று அனுவதித்து
மத்யே கதாது ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதமிவ ஸ்ருதிரஞ்சித ஸ்யாத்-என்று உத்தரம் அருளிச் செய்தார்
இது போலே ஆழ்வார் வெளிப்படையாக அருளிச் செய்த
மழுங்காத –சுடர் சோதி மறையாதே -என்பதற்கும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் சூத்ரம் இயற்றி அருளினார் –
—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-71-80–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று  நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —71-

——————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
பிணி மூப்பு
வியாதியையும் கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி
மரணத்துக்கும் உப லஷணம்
ஜரா மரணம் மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை
நன்றாக அடியோடு தொலைந்து ஒழியும்படி விட்டும்
கை வலய மோஷத்தைப் பெற்றாலும்
நான்கூழி
நான்கு யுகங்களில் உள்ள -காலதத்வம் உள்ள வரையிலும் –

நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் –
ஸ்திரமாக நின்று
பூமி தொடங்கி ப்ரஹ்ம லோகம் வரையிலும்
ஸ்வா தீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும்
பரமைச்வர்யம் கிடைத்தாலும்
உம்மை தொகை அதில் தமக்கு விருப்பம் இல்லாமை காட்டி அருளி

என்றும் விடலாழி நெஞ்சமே
என்றுமே விடாமல் இரு
ஆழி நெஞ்சே -நீயே பகவத் விஷயத்தில் ஆழ்ந்து உள்ளேயே
நான் பிரார்த்திக்க வேண்டியது இல்லை
ஏதோ சொல்லி வைத்தேன்

வேண்டினேன் கண்டாய்
உன்னைப் பிரார்த்திக்கிறேன் காண்
பகவத் விஷயம் அறிந்த நெஞ்சுக்கு உபதேசிக்கிறார்
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போலே

அடலாழி கொண்டான் மாட்டன்பு
தீஷணமான திரு வாழியைக் கையில் ஏந்திய –
கை கழலா நேமியான் –
பெருமான் இடத்தில்
ப்ரீதியை-

————————————————————————————————————————————————————

அன்பு ஆழியானை யணுகு என்னும் நா வவன்தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் -முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்–72-

————————————————————————————

ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது
கரணங்கள் தனித் தனியாக ஆசார்ய பதம் வகித்து
உபதேசிக்க முற்படுகிற படியை பேசி அருளுகிறார் இதில்

அன்பு ஆழியானை யணுகு என்னும்
பகவத் பக்தியே வடிவு எடுத்தது போன்று
இருக்கிற என் நெஞ்சானது
சர்வேஸ்வரனை கிட்டி அனுபவி என்று
எனக்கு உபதேசிக்கிறது –
அன்பு ஒரு வஸ்து நெஞ்சு வேற வஸ்து இல்லாமல்
அன்பு தானே நெஞ்சாக
அறிவுக்கு ஆஸ்ரயமான ஆத்மாவை விஞ்ஞான சப்தம் சொல்வது போலே

நா வவன்தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் –
வாக்கானது அவனது சௌந்தர்ய சாகரமான
திருத் தோள்களைப் பேசி துதி என்று
உபதேசிக்கின்றது
பண்பு ஆழி -அழகுக்கு கடல் போன்ற
பண் பாழி -அழகையும் வலிமையையும் உடைய தோள் என்றவாறு

முன்பூழி காணானைக் காண் என்னும் கண்
கண்களானவை
நாம் அவனை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்புஇருந்த
காலத்தில் உள்ள
வைமுக்யத்தை நிலைமையை
நெஞ்சாலும் எண்ணாத பெருமானை சேவி
என்று உபதேசிக்கின்றன
மகா பாதகன் -அபராதகன் -இன்று ஆஸ்ரயித்தால் நேற்று வரையில் எப்படி இருந்தான்
முற்கால பாபங்களை சிறிதும் ஆராயதவன் -காணான்
எம்பெருமான் -என்றவாறு –

செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
காதுகள் ஆபரணமான ஹாரம் முதலியவற்றை
அணிந்து கொண்டு இருக்கிற
அப்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை கேள்
என்று தூண்டுகின்றன –

————————————————————————————————————————————————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான்–73-

———————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ
ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு
அன்றியே
நிந்திப்பதனாலும் நிந்தி
சிசுபாலாதிகளைப் போலே

பூந்துழாயானை –

அன்றிக்கே
இகழ்வாய்-
அநாதாரித்தாலும் அநாதரி
அன்றிக்கே
கருதுவாய்-
ஆதரித்தாலும் ஆதரி
உனக்கு இஷ்டப் பட்டபடி செய்
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்கு ஒரு குறையும் வாராது காண்

நெஞ்சே
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண
நின்றவா நில்லா நெஞ்சு
கருதுவாய் என் நெஞ்சே என்றும் பாட பேதம்

-திகழ் நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்
விளங்குகின்ற ஜல பூர்த்தியை உடைய சமுத்ரமும்
பர்வதங்களும்
பரம்பிய ஆகாசமும்
வாயுவும்
தேவாதி சரீரங்களும்
அந்தந்த சரீரங்களில் உள்ள பிராணன் களும்
ஆகிய இவற்றை எல்லாம்
தரித்து கொண்டு இருப்பவன் அவ்வெம்பெருமானே காண்
தான் என்ற சொல்லுக்குள் அடங்கும்படி எல்லா வற்றையும் தனக்கு விசேஷணம் ஆகக் கொண்டு உள்ளான் என்றுமாம்
சர்வ தாரகத்வத்தை சொல்லி
நம்முடைய புகழ்வு இகழ்வு எல்லாம் அவனுக்கு அப்பிரயோஜகம் –

——————————————————————————————————————————————————————————–

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் -கூற்றொருபால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு –74-

—————————————————————————————–

ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரத்வத்தையும்
ருத்ரனின் அபரத்வத்தையும் சொல்லி
சிவனும் எம்பெருமான் உடைய ரஷணத்தில் அடங்கினவன் என்கிறார்

ஏற்றான்
ரிஷபத்தை வாகனமாக உடையவனும்
தமோ குணமே வடிவு எடுத்ததாயும்
மூடர்களுக்கு உவமையாக சொல்லத் தக்கதாயும்

புள்ளூர்ந்தான்
கருடனை வாகனமாக உடையவனும்
வேத ஸ்வரூபி

எயில் எரித்தான்
திரிபுர சம்ஹாரம் பண்ணினவனும்
தன்னை ஆஸ்ரயித்தவர்களின் குடி இருப்பை எரித்தவன்

மார்விடந்தான்
இரணியனது மார்பை பிளந்தவனும்
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் விரோதியை மார்பை பிளந்து ஒழித்தவன்

நீற்றான்
சாம்பலை பூசிக் கொண்டு இருப்பவனும்
தான் பிராயச் சித்தி என்று தோன்றும்படி
நீறு பூசின சர்வாங்கம் உடையவன்

நிழல் மணி வண்ணத்தான் –
நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனும்
ஸ்ரமஹரமான குளிர்ந்த வடிவை உடையவன்

கூற்றொருபால்மங்கையான்
தனது ஒரு பக்கத்தில்
பார்வதியை தரித்துக் கொண்டு இருப்பவனும்
உடலின் பாதி பாகத்தை ஸ்திரீ ரூபம் ஆக்கிக் கொண்டவன்

பூ மகளான்
பெரிய பிராட்டியை திவ்ய மகிஷியாக உடையவனும்
உலகுக்கு எல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாக கொண்டவன்

வார் சடையான்
நீண்ட ஜடையைத் தரித்து உள்ளவனும்
சாதனா அனுஷ்டானம் பண்ணுவது உலகோருக்கு தெரியும் வண்ணம் சடை புனைந்தவன்

நீண் முடியான்
நீண்ட கிரீடத்தை அணிந்து உள்ளவனும்
சர்வேஸ்வரத்வ ஸூசகம்

கங்கையான்
ஜடை முடியில் கங்கையை தரித்து கொண்டு இருக்கும் ருத்ரன்
பரிசுத்தன் ஆவதற்காக கங்கையை தரித்தவன்

நீள் கழலான் காப்பு
நீண்ட திருவடிகளையும் உடையவனான
சர்வேஸ்வரன் உடைய
ரஷணத்தில் அடங்கினவன்
அந்த கங்கைக்கு உத்பத்தி ஸ்தானமான திருவடியை உடையவன்

மாறி மாறி சொல்லி அருளியது வாசி நன்றாக விளங்குவதற்காக-

———————————————————————————————————————————————————————

காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி–75-

—————————————————————————————————–

திருமாலே
உன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
பிரதிபந்தகங்கள் நீங்கப் பெற்று
பிரகிருதி சம்பந்தமும் நீங்கி
திவ்ய லோக பிராப்தியும்
வாய்க்கப் பெறுவார்கள் -என்கிறார் இதில்
கர்மவச்யர் ஆகார் -பரம சாம்யா பத்தியை பெறுவார் என்றவாறு

காப்பு உன்னை உன்னக் கழியும்
பிரதிபந்தங்கள்
பரம புருஷனான உன்னை
ரஷகனாக அனுசந்திக்கும் அளவில்
விட்டு நீங்கும் –
காப்பு -பிரதிபந்தகம்-தடை
பாப சாஷியாக பதினால்வர் நியமிக்கப் பட்டு
சூர்யன்/சந்தரன்/வாயு /அக்னி /த்யுலோகம் /பூமி /ஜலம்
ஹ்ருதயம் /யமன் /அஹஸ் /ராத்திரி /இரண்டு சந்த்யைகள்/தர்ம தேவதை
இப்படிப் பட்ட கர்ம சாஷிகளும் ஆராயக் கடவர் அல்லர் -என்றபடி

அருவினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும்
போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
உன்னை நினைக்கும் அளவில்
அவிழ்ந்து போம்
ஆப்பு -யாப்பு -கட்டு -கரும பந்தம்

-மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை
உன்னை த்யானிப்பவர்களுக்கு
கிழத் தனம் முதலிய ஷட்பாப விகாரங்களும் இல்லை யாம்
உளதாகை/பிறக்கை/மாறுகை/வளர்க்கை/மூப்பு-குறுகை/அழிகை-ஆகிய ஷட் பாவங்களும் இல்லை

திருமாலே
ஸ்ரீ யபதியே

நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தை -வழி காண்பர் –
கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-

——————————————————————————————————————————————————————————————–

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் -பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76

——————————————————————————

வழி நின்று நின்னைத் தொழுவார்
பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள்

வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் –
உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற
ஸ்வரூப ஆவிர்பாவத்தை
உடையராகவே ஆவார்கள்
வழுவா மொழி -வேதம்
அதில் சொல்லப் பட்ட மூர்த்தி யாவது -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம்
ஞ்ஞாநாநந்த விகாசம்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருமங்கை ஆழ்வார் –

பழுதொன்றும்வாராத வண்ணமே
ஒரு குறையும் இல்லாதபடி

விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்
உலகளந்த மகானுபாவன் எழுந்து அருளி இருக்கிற
திருமலையே
ஆஸ்ரிதர்களுக்கு மோஷம் அளிக்கக் காண்கிறோம் அன்றோ
கைமுதிக நியாயம்
அவன் எழுந்து அருளி இருக்கும் திரு மலையே கொடுக்க வல்லது என்றால்
அவன் கொடுத்து அளிப்பான் என்பது சித்தமே

எம்பார் நாள்தோறும் சிற்றம் சிறு காலையில்ஓவாதே இந்த பாசுரம் அனுசந்திப்பாராம் -பெரியவாச்சான் பிள்ளை –

—————————————————————————————————————————————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77-

————————————————————————

எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்து அருளி
இருக்கும் படிகளை நாம் அனுசந்தித்தால்
நமது இடர் எல்லாம் நீங்கி விடும் -என்கிறார் இதில்
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதும் ஆனபடிகளை நாம் சொல்ல
நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்கள் எல்லாம் தன்னடையே போம்

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்
திருமலையும்
வைகுண்ட மா நகரும்
திரு வெஃகாவும்

அஃகாத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
பூ மாறாத நீர் நிலைகளை உடைய
சிறந்த திருக் கோவலூர் என்கிற
திவ்ய தேசமும்

ஆகிய
நான்கு இடத்தும்
நான்கு திருப்பதிகளிலும்
வரிசை கிரமமாக

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால்
எம்பெருமான்
நிற்பதும்
வீற்று இருப்பதும்
பள்ளி கொண்டு இருப்பதும்
நடப்பதுமாய்
இருக்கிறான் என்று அனுசந்தித்தால்

கெடுமாம் இடர்
துக்கங்கள் எல்லாம்
விட்டோடிப் போய் விடும்
விண்ணகர் பரமேஸ்வர விண்ணகர் வீற்று இருந்த திருக் கோலம் என்பதால்
அத்தை சொன்னதாகவும் கொள்ளக் குறை இல்லை-

—————————————————————————————————————————————————————————

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த -படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-

———————————————————————-

இடரார் படுவார்
அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்
துக்கத்தை அனுபவிக்க யாரால் முடியும்
என்னால் முடியாது -என்கிறார்

எழு நெஞ்சே
எழுந்திரு

வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை விழுங்குவதாக
தொடர்ந்து வந்த
பெரிய நெஞ்சில் இரக்கம் இன்றியே
கொடுமை பூண்ட முதலையை
தப்பிப் போகாதபடி எண்ணிக் கொன்றவனும்

-படமுடைய பைந்நாகப் பள்ளியான் –
படத்தையும்
பசுமை நிறத்தையும் உடைய
திரு வநந்த ஆழ்வானை
திருப் பள்ளி மெத்தையாக உடையவனுமான எம்பெருமான் உடைய

பாதமே கை தொழுதும்
திருவடிகளை தொழுவோம்

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு
கொய்யப்பட்ட புன்னையின்
அழகிய மலர்களைக் கொண்டு

நாம் அவனை ஆஸ்ரயிக்கவே துக்கங்கள் எல்லாம் போம்
துக்கப் படுக்கைக்கு ஆள் இல்லை
ஒருகால் துக்கம் வந்தாலும் அது முதலை பட்டது படும்-

—————————————————————————————————————————————————————–

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
மண் தா என இரந்து மா வலியை-ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து –79-

————————————————————————————

எம்பெருமான் தனது ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டாவது கார்யம் செய்து அருளுபவன்
என்று மூதலிக்க வேண்டி இருக்க
சம்சாரத்தில் அவனை கொண்டாடுபவர் இல்லையே
வஞ்சகன்/ சர்வஸ்பஹாரி /தனக்கு தானம் கொடுத்தவனை பாதாளத்தில் தள்ளினவன் என்பரே
மகாபலியை அஹங்காரி/ ஆசூர பிரகிருதி என்று நினைக்காமல்
ஔதார்ய குணம் ஒன்றாலே கொல்லாமல் விட்டு அருளினானே

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானை
பழிக்கிறார்களே அன்றி
தன்னது அல்லாததை தன்னதாக அபிமானித்துக் கொடுத்த
அந்த மாவலியை
பழிப்பவர்கள் யாரும் இல்லையே
இஃது என்ன அநியாயம் –

மண் தா என இரந்து மா வலியை-
மாவடி நிலத்தை எனக்குத் தா என்று
மாவலி இடத்தில் யாசித்து

ஒண் தாரை நீர் அங்கை தோய
அழகிய நீர் தாரை
தனது அழகிய திருக் கையிலே
வந்து விழுந்ததும்

வடுத்து நிமிர்ந்திலையே
கடுக ஓங்கி வளரவில்லையோ
மாவலி தாரை வார்த்த உதகமும்
ப்ரஹ்மாதிகள் திருவடி விளக்கின உதகமும்
ஏகோதகம் என்னலாம் படி அத்தனை விரைவாக நீ வளர வில்லையோ –

நீள் விசும்பில் ஆரங்கை தோய
பரம்பின மேல் உலகில்
வாழ்கின்ற ப்ரஹ்மாதிகள் உடைய
அழகிய கைகள் ஸ்பர்சித்து
திருவடி விளக்கும்படி –

நீள் விசும்பிலார் அங்கை தோய
விசும்பில் உள்ள தேவர்கள் உனது திருத் தோளில் வந்து அணையும்படியாகவும்

நீள் விசும்பில் ஆரம் கை தோய –
பரந்த விசும்பில் உனது திரு மார்பில் அணிந்திருந்த
முத்தா ஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி
ஓங்கி -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த -விடத்தரவை
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள் –80-

————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு
நெருங்கிய கொடிய சத்துருவான
கருடனுக்கு

ஆற்றேன் என்று ஓடி
நேரே நின்று பிழைத்து இருக்கத் தக்க
வல்லமை உடையேன் அல்லேன் என்று
சொல்லிக் கொண்டு
விரைந்து ஓடிப்போய்

படுத்த பெரும் பாழி
எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு
விரித்த
பெருமை பெற்ற
படுக்கை யாகிற சேஷனை

சூழ்ந்த –
சுற்றிக் கொண்ட

விடத்தரவை
விஷத்தை உடைய ஸூ முகன்
என்கிற சர்ப்பத்தை
தேவேந்தரன் சாரதி மாதலி தனது புத்திரி குணகேசி என்பவளுக்கு வரம் தேடி
நாரத மகரிஷி உடன் புறப்பட்டு
பாதள லோகம் போகவதி நகரம் அடைந்து
ஐராவத குலத்தில்-ஆர்யகன் பௌத்ரன் -வாமனன் தௌஹித்ரன் -சிக்ரன் புத்திரன் -ஸூ முகன் நாக புத்ரன்
ஆர்யகன் இவனை கருடன் பஷித்து இவன் தந்தையை யும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக கருடன் சொல்லி இருப்பதை சொல்ல
மாதலி அந்த சுமுகனைஉபேந்திர மூர்த்தி உடன் இருந்த தேவேந்தரன் இடம் கூட்டிச் செல்ல
உபேந்த்ரன் இவனுக்கு அமிர்தம் தரலாம் இஷ்ட பூர்த்தி உண்டாகும் சொல்ல
வலது திருக்கை பாரம் கூட தாங்க முடிய வில்லை கருடனுக்கு
அபராத ஷாமணம் செய்து கொள்ள

வல்லாளன் கைக்கொடுத்த
வலிமை உடைய கருடன் கையிலே
அடைக்கலப் பொருளாக
தந்து ரஷித்த
கருடா சுகமா சொல்லி
குசலப் பிரச்னம் பண்ணுவான் ஆயினான்

மாமேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்
சிறந்த திருமேனி உடைய
எம்பெருமானுக்குத் தவிர
மற்ற தேவதாந்தரங்கட்கு
அடிமை ஆவாரோ –

————————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-61-70–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் -உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு –61-

—————————————————————————————

உலகு இறந்த ஊழியும் அழிந்து கிடந்த பிரளய காலத்திலும்

புந்தியிலாய-சங்கல்ப ஞானத்தினால் படைக்கப் பட்ட

புணர்ப்பு -படைப்புகளாம்

ரக்த சம்பந்தமே யாகும்
பெற்றவனை ஒழிய வளர்ப்பவன் இல்லை என்றது ஆயிற்று
இவை அறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே
இப்போது உபாயம் அறிவானும் அவனே என்று
கீழ்ப் பாசுரத்துடன் சேர்த்து பொருள் –

————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மணமருவ மால் விடை ஏழ் செற்று–கணம் வெருவ
ஏ ழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-

———————————————————————————
ஸ்ருஷ்டித்து தூரச்தனாய் நில்லாமல்
களைகளைப் பிடுங்கி ரஷிப்பவனும் அவனே
தோள் என்றது கை
தவழ்ந்து போய் மருதம் முறித்ததால் கைகளின் மேல் ஏறிட்டு கூறுகிறார்

கணம் கூட்டம் -வேறுபாடி இன்றி அனைவரும் வெருவ

சூழ் அரவப் பொங்கணையான் தோள்
பரிமளம் குளிர்த்தி -பொருந்திய திரு அரவப் படுக்கையும் பொறாத சௌகுமார்யம்
இப்படி அல்லாடி திரிகிறான் -வயிறு எரிகிறார்-பொங்கும் பரிவு
எல்லா செயல்களையும் தோளின் மேல் ஏறிட்டு அருளுகிறார்-

——————————————————————————————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேளவனது இன்மொழியே கேட்டு இருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்–63-

————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்

கேளவனது –
சகல வித பந்துவான அப்பெருமான்
விஷயமாகவே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே –

இன்மொழியே கேட்டு இருக்கும்
நா நாளும்
கோள் நாகணையான்-
மிடுக்கை உடைய திருவநந்த ஆழ்வானை படுக்கையாக
உடைய அப்பெருமானது

குரை கழலே
ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த திருவடிகளையே

கூறுவதே

நாணாமை நள்ளேன் நயம்
சப்தாதி விஷயங்களை வெட்க்கப் படாமல்
விரும்புவாரைப் போல் நான் விரும்ப மாட்டேன்
நயம் -நயக்கப் படுவது நயம் -ஆசைப் படத் தக்க விஷயாந்தரங்கள்
நயந்தரு பேரின்பம் எல்லாம் -இராமானுச நூற்றந்தாதி
எல்லா இந்த்ரியங்களும் அவன் மேல் ஊன்ற பட்ட படியை
ஹர்ஷத்துடன் அருளிச் செய்கிறார்
ஒரே உறுதியாக இருக்கவே நானும் நாமம் கொண்டு இதர விஷயங்களை காறி உமிழ்ந்தேன்-

——————————————————————————————————————————————————–

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் -வியவேன்
திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என்மேல் வினை–64-

————————————————————————

விஷயாந்தரங்கள் துர்வாசனையால்
தம்மை இழுக்க மாட்டாது என்கிறார் இதில்
அவன் அனுக்ரஹத்தை பூரணமாக பெற்று இருக்கிறேன் –
நயவேன் பிறர் பொருளை
பரமபுருஷன் உடைய ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று விருமப மாட்டேன்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத -என்பதால் எம்பெருமானை- பிறர்- என்கிறார்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -கண்ணி நுண் சிறுத் தாம்பு
கௌஸ்துப ஸ்தானமான ஆத்மவஸ்துவை -என்னது -என்று அபிமானித்ததால்
இராவணன் செயல் உடன் ஒக்கும்

நள்ளேன் கீழாரோடு
சம்சாரிகளோடே ச்நேஹம் கொள்ள மாட்டேன்
மாரீசன் போல்வார் உடன் ச்நேஹம் கொள்ள மாட்டேன்

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் –
சரிந்த ஸ்ரீ வைஷ்ணவர்களோடு அல்லால்
மற்றவர்கள் உடன் கால ஷேபம் செய்ய மாட்டேன்
உய்வேன் -உசாவேன் என்றபடி வார்த்தையாடி போது போக்குதல்
உசாத்துணை -ஸ்ரீ வைஷ்ணவர்களே

திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
ஸ்ரீ யபதியை தவிர வேறு தேவதாந்தரங்களை
தெய்வமாக கொண்டு துதிக்க மாட்டேன்

வியவேன்
இப்படி இருக்க ஹேதுவான சத்வ குணம் என்னிடம் தான் உள்ளது
என்று அஹங்கரித்து என்னைப் பற்றி
நானே ஆச்சர்யம் பட மாட்டேன்

திருமாலை அல்லது வியவேன் -என்றுமாம்

வருமாறு என் என்மேல் வினை
இப்படியானபின்பு
அவன் அனுக்ரஹத்துக்கு இலக்கான என்மேல்
அவன் நிக்ரஹ ரூபமான பாபம்
வரும் விதம் எது -வர மாட்டா -என்றபடி
அவசியம் அனுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் -சாஸ்திர வாக்கியம்
வருமாறு என் நம் மேல் வினை -என்றும் பாடம்
தம்முடன் சம்பந்தித்ததவர்களையும் கூட்டிக் கொண்டு அருளுகிறார்
ஒருமையில் பன்மை வந்த வழு வமைதி-

———————————————————————————————————————————————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிகட் செல்லார் -நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்
கரியானை கை தொழுதக் கால்–66-

—————————————————————————————-

ஆழ்வார் தாம் ஒருங்கு பட்ட நிலையை அருளிச் செய்த அநந்தரம்
நாமும் அந்த நிலை பெற இலகுவான உபாயம் காட்டி அருளுகிறார்

வினையால் அடர்ப்படார்
நல்வினை தீ வினை இரண்டாலும்
நெருக்குப் பட மாட்டார்கள்
பொன் விலங்கு புண்யம் இரும்பு விலங்கு பாபம்

வெந்நரகில் சேரார்
கொடிய சம்சாரம் ஆகிய நரகத்திலே மீண்டும் சென்று
சேர மாட்டார்கள்
அவன் உடன் கூடி இருத்தல் ஸ்வர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை –

தினையேனும் தீக்கதிகட் செல்லார் –
சிறிதேனும் கெட்ட வழியிலே போக மாட்டார்கள்
தர்ம புத்திரன் நரக தர்சனம் பண்ணினவோபாதியும் கூடாது இவர்களுக்கு
அஸ்வத்தாமா ஹத குஜ்ஞ்ஞர

நினைதற்கு அரியானை
ஸ்வ பிரயத்தனத்தால்
நினைக்க கூடாதவனும்

சேயானை
நெஞ்சுக்கு விஷயமாகாத படி
தூரச்தனாக இருப்பவனும்

ஆயிரம் பேர்
ஆயிரம் திரு நாமங்களை உடையவனும்

செங்கண் கரியானை கை தொழுதக் கால்
சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவையும் உடையவனுமான பெருமானைக் குறித்து
அஞ்சலி பண்ணினால்

————————————————————————————————————————————————————————————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் -வேலைக்கண்
ஓராழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்–66-

——————————————————————————–

காலை எழுந்து உலகம் கற்பனவும்
உயர்ந்தவர்கள் சத்வம் வளரக் கூடிய விடியல் காலையில் துயில் எழுந்து அப்யசிப்பனவும்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே

கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
படித்து அறிவு நிரம்பிய
வைதிகோத்தமார்கள்
சாஷாத் கரிக்க ஆசைப்படுவனவும்
கீழ் வேதம் -கர்ம காண்டம்
மேல் வேதம் -ப்ரஹ்ம காண்டம் உபநிஷத்
மேலைத் தலை மறையோர் -வேதாந்திகள் என்றபடி

எவை என்றால் –

வேலைக்கண் ஓராழியான் அடியே
திருப் பாற் கடலிலே
ஒப்பற்ற திரு வாழியை உடையவனாய்
பள்ளி கொண்டு இருக்கும் பெருமான் உடைய
திருவடிகளேயாம்

ஓதுவதும்
மகான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்

ஒர்ப்பனவும்
மனனம் பண்ணப் பெறுவனவும்
எவை என்றால்

பேராழி கொண்டான் பெயர்
பெரிய கடல் போன்ற திரு மேனியைக் கொண்ட
அப்பெருமான் உடைய
திரு நாமங்களே யாம்-

—————————————————————————————————————————————————————————————

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனையே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு–67-

—————————————————————————–

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு
பொங்கிக் கிளறுகின்ற மகா சமுத்ரம் நோக்கியே
ஆறுகளானவை செல்லும்

ஒண் பூ உயரும் கதிரவனையே நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது
உக்கத ஸ்தானத்தில் ஆகாசத்தில்
இருக்கிற சூரியனைக் கண்டே மலரும்

-உயிரும் தருமனையே நோக்கும்
பிராணனும் யமதர்ம ராஜனையே
சென்று சேரும்
இவை போலவே

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
ஞானமானது
அழகிய தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு
வல்லபனான பெருமான் ஒருவனையே சென்று பற்றும்
பகவத் விஷயம் அல்லாத ஞானம் செருப்பு குத்த கற்றது போலேயாம்

தொக்கிலங்கி யாரு எல்லாம் பறந்தோடி தொடு கடலே
புக்கன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டு அம்மா உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -பெருமாள் திருமொழி

முமுஷுப்படி திரு மந்திர பிரகரணம் -73-இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்றதாயிற்று
இதற்கு மா முனிகள் உணர்வு -ஞான மாயனான ஆத்மா
திருமாலுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை இப்பாட்டு உணர்த்தும் என்று காட்டி அருளுகிறார்

ஆக
எம்பெருமானைப் பற்றிய ஞானமே ஞானம்
ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்
மிதுன சேஷத்வமே ஜீவாத்மா லஷணம் -தாமரையாள் கேள்வன் என்பதால்

ஸ்ரீ வைஷ்ணவ பிராணன் யமனை கிட்டி சேராதே சங்கை உண்டே
உயிரும்-பகவத்பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் -அப்பிள்ளை உரை
ஆத்மா வேறு பிராணன் வேறு -சித்தாந்தம்
ஸ்ரீ வைஷ்ணவ ஆத்மா எம்பெருமானைச் சேர்ந்தாலும்
பிராணன் யமனைச் சென்று சேரும் என்பர் சிலர்
மற்றும் சிலர்
யாமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷா ஹ்ருதி ஸ்தித -என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும்
எம்பெருமானையே யமனாகவும் தருமனாகவும் சொல்லி இருப்பதாலே
அங்கு எம்பெருமானே பொருள் என்பர் சிலர்-

————————————————————————————————————————————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்–68-

—————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
இப்படிப் பட்ட உன்னுடைய பெருமையை
காலதத்வம் உள்ளதனையும் இருந்து ஆராய்ந்தாலும்
அறியக் கூடியவர் ஆர்

உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
உனது திவ்யாத்மா ஸ்வரூபத்தை
தான் அறியக் கூடியவர் ஆர்

விண்ணகத்தாய்
பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவனே

மண்ணகத்தாய்-
இந்த மண்ணுலகில் திரு வவதரிப்பவனே

வேங்கடத்தாய்-
திருமலையில் நின்று அருளுபவனே

நால் வேதப் பண்ணகத்தாய்
பண் நால் வேதத்து அகத்தாய்
ஸ்வர பிரதானமான நான்கு வேதங்களாலும்
அறியப் படுபவனே

நீ கிடந்த பால்
ஆர்த்த ரஷணத்துக்காக
நீ பள்ளி கொண்டு இருக்கப் பெற்ற திருப் பாற் கடலை தான்
உணர்வார் ஆர்

யாரும் இல்லை
சர்வஞ்ஞன் உன்னாலும் உணர முடியாதே
தனக்கும் தன் தன்மை அறிவரியான்-

——————————————————————————————————————————————————————–

பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல்அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் –69-

——————————————————————————–

சமத்காரமான கேள்வி
எத்திறம் என்று நினைந்து ஈடுபடும்படியான
ஏழு பிராயத்தில் கோவர்த்தனம் குடையாக பிடித்த
செயலை விட ஆச்சர்யமான
அகடிதகட நா சாமர்த்தியமான செயல்
பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர்-

வேலை நீருள்ளதோ
பிரளய சமுத்ரத்தில் தோன்றிய ஆலம் தளிரா

விண்ணதோ
பிடிப்பு ஒன்றும் இல்லாத ஆகாசத்தில் தோன்றியதா
மண்ணதோ
பிரளயத்தில் கரைந்து போன மண்ணில் நின்றும் தோற்றியதா

சர்வஞ்ஞன் உன்னாலும் கண்டு பிடித்து சொல்ல முடியாத கேள்வி
அதிமாநுஷ சே ஷ்டிதங்களில் குதர்க்கம் பண்ணுதல் தகாது
அல்பபுத்திக்கு அசம்பாவிதமாக தோற்றினாலும்
விசித்திர சக்தனான
அவன் செயல்களில் துராபேஷங்கள் செய்ய அதிகாரம் இல்லை-

———————————————————————————————————————————————————————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை-நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –70-

————————————————————————————-

சொல்லும் தனையும்
சொல்லக் கூடிய சக்தி உள்ள வரையிலும்

தாமத்தால்
மந்த்ரம் இல்லாத கிரியைகளாலும்

தவறாமல் சரிந்தே போகக் கூடியது உடல்
இதம் சரீரம் பரிணாம பேதலம் பதத்யவச்யம் ச்லதசந்தி ஜர்ஜரம்
அப்படி உடலால் செய்ய முடியாவிடில் வாயாலே திரு நாமங்களை சொல்லலாமே

தொழுவதற்கு சக்தி இல்லா விடில்
திருநாமங்கள் சொல்லும் சக்தி உள்ள வரையில்
புகழ்ந்தீர்கள் ஆகில் அது மிகவும் நன்று

————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-51-60–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே -களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான் திருநாமம் எண் –51-
களியில்-அஹங்காரத்தால்

—————————————————————————————————–

எம்பெருமான் உடைய திரு நாமங்களை
பரம போக்யமாக வாயாலே சொல்லவே
அப்பெருமான்
ப்ரஹ்லாதன் உடைய விரோதிகளைப் போக்கி
தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கி
தன்னையும் தந்து அருள்வான்
நெஞ்சமே
நீ திருவடி இணையை சேவித்து அனுபவிப்பதற்கு
தெளிவு கொண்டு இருந்தால்
அவன் பிரசன்னனாய் அருள் புரிவான்
நீ தெளி வுற்று இருக்கிறாய் எனபது
நன்கு விளங்குமாறு ஸ்ரீ நரசின்ஹா மூர்த்தியின் திரு நாமங்களை
எண்ணிக் கொண்டு இரு –

——————————————————————————————————————————————————

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் -நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கை தொழுவர் சென்று –52-

ஒரு மாலையால் ஒப்பற்ற புருஷ ஸூ கத மாலை கொண்டு

——————————————————————————————

அஹங்காரம் கொண்ட
முப்பத்து மூவர் அமரர்களும்
எம்பெருமானை அடி பணிந்தே சிறப்பு உற்று இருக்கின்றனர்
முப்பத்து மூவரை எடுத்துக் காட்டினது
முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரையும்
எடுத்துக் காட்டினதுக்கு பர்யாயம்
பெரிய திருவந்தாதியில்
இருநால்வர்
ஈரைந்தின் மேல் ஒருவர்
எட்டோடு ஒரு நால்வர்
ஓர் இருவர் -என்று நம் ஆள்வார் அருளிச் செய்கிறார்-

————————————————————————————————————————————————-

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –53-

————————————————————————————

திருவனந்தாழ்வான் போலே
எல்லா கைங்கர்யங்களையும் எல்லா காலங்களிலும் செய்ய
திரு உள்ளம் கொண்ட ஆள்வார்
அவன் செய்யும் அடிமைகளை எடுத்து காட்டுகிறார்
சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான் –

இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்

நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்

நீள் கடலுள் என்றும் புணையாம்-
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்

புணையாம் -திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்

அணி விளக்காம் –
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்

மணி விளக்காம் என்றுமாம்

பூம் பட்டாம்-
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்

புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்

பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்

ஆளவந்தார் -செய்யா ஆசனம் இத்யாதி
சென்றால் குடையாம் கடல் புணையாம் திருத் தீவிகையாம்
நின்றால் இரு திருப் பாதுகையாம் நித்திரைக்கு அணையாம்
குன்றா மணி ஒளி ஆசனமாம் புணை கோசிகையாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசர்க்கு அரவரசே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -திருவரங்கத்து மாலை

———————————————————————————————————————————————————————

அரவம் அடல் வேழம் மான் குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மல் குன்றம் -காவின்றி
விட்டிறுத்து மேய்தொசித்து கீண்டு கூத்தாடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன்–54-

—————————————————————————–

திருப் படுக்கையிலும் பொருந்த மாட்டாமல்
லீலி விபூதியில் பிறந்து
களை பிடுங்கி
விபூதியை பாது காத்து அருளும் திவ்ய சேஷ்டிதங்களை
அனுசந்திக்கிறார்
முறை நிரைநிரை அணி அலங்காரம்

அரவம் விட்டு -காளியனை கொள்ளாமல் விட்டு அடித்ததும்
அடல் வேழம் இறுத்து -பொருவதாக வந்த குவலயா பீடம் தந்தம் முறித்து உயிர் தொலைத்தும்
ஆன் மேய்த்து -பசுக்களை வயிறு நிரம்ப மேய்த்ததும்
குருந்தம் ஒசித்து -அசூராவேசமுடைய குருந்த மரத்தை ஒடித்துப் பொகட்டும்
புள்வாய் கிண்டும் -பகாசுரன் வாயைக் கிழித்தும்
குரவை கோத்தும் -ராசக்ரீடையை இடைப் பெண்கள் உடன் கை கோத்து ஆடியும்
குடம் ஆடி -குடங்களைக் கொண்டு ஆடியும்
முலை உண்டு -பூதனை முலையை உயிர் உடன் உறிஞ்சி உண்டும்
மல் அட்டும் -கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களை கொன்றும்
குன்றம் எடுத்தும் -கோவர்த்தன மலையை குடையாக எடுத்தும்
இவை அனைத்தும் தாமரைக் கண்ணன் அவன் திவ்ய சேஷ்டிதங்கள்-

—————————————————————————————————————————————————————————–

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் –55-

———————————————————————————

பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்
இடைத்தனத்தில் குறைவின்றி பூரணமாய் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
அன்றிக்கே
ஒரு பாகவதன் பேரை அபாகாவதன் தரிப்பது
அவனையும் யம கோஷ்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது
ஒரே சொல்லாக கொண்டு நாயனார் ஆழி மழைக் கண்ணா-திருப்பாவை வ்யாக்யானத்தில் அருளிச் செய்தபடி

யமபடர்கள் பாகவதர்கள் இடம் அஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார்
குணாகுணங்களை ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்
அவர்களை கண்டால் அனுவர்தித்து இருங்கள் என்று நியமித்தான்
பிராட்டியே சிதைகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்வார் என்னுமவன்

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்–நான் முகன் திருவந்தாதி

கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினையும் செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் -திருவாய்மொழி

வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -திருச் சந்த விருத்தம்

ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூல
பரிஹர மதுசூதன பிரபன்னான் ப்ரபுரஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

————————————————————————————————————————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க -நேரே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன்–56-

———————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை ஆரே அறிவார் அது நிற்க –
எம்பெருமான் பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டு அறிய முடியாதது
அவன் திரு நாமங்களை வாயில் வந்தபடி எல்லாம் சொல்லி கூப்பிடுமது செய்யலாம் அத்தனை ஒழிய
ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்ம வித் -என்றது எல்லாம் அளவிட்டு அறிந்தமையை சொன்னது அன்று
கன்றுக் குட்டி அம்மே -சப்தம் செவிப்பட்டதும் தாய் பசு இரங்கி நிற்பது போலே
திருநாமத்தை வாய் விட்டு பிதற்றினால் அவன் வந்து அருள் புரிவான்
பெம்மான் -பெருமான் மருவி
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன்

—————————————————————————————————————————————————————————————–

அயனின்ற வல்வினையை யஞ்சினேன் யஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் -நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது –57-

——————————————————————————–

திருமந்த்ரத்தின் பொருளை விவரிக்கும் இப்பாசுரம் பாடினதால்
அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவனம் பெற்றேன்

நயம் நின்ற
திருமந்த்ரார்த்தை நயப்பித்தலில் நோக்கமாய் உள்ள -என்றுமாம்
எம்பெருமான் உடைய ஸ்வரூபம்
ஜீவாத்மாவின் ஸ்வரூபம்
அடைவதற்கு உபாயம்
அடைந்து பெற வேண்டிய பேறு
விரோதி ஸ்வரூபம்
ஆகிய அர்த்த பஞ்சக அர்த்தங்களும் திருமந்த்ரார்த்தம்
இதுவே இந்த பிரபந்தத்தாலும் விவரிக்கப் படுகின்றன-

————————————————————————————————————————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே -பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை–58-

———————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும்
புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டு
தூபத்தை ஏந்திக் கொண்டு
எம்பெருமானை வணங்கி
உஜ்ஜீவிப்பொம்

எழு
நீ புறப்பட்டு

வாழி நெஞ்சே –
உனக்கு இந்த ஸ்வ பாவம் நித்யம் ஆயிடுக –

நாம் இப்படி சொல்ல காரணம் என்ன வென்றால்

பழுதின்றி
முறைப்படி
குருகுல வாசம் செய்து
ஆச்சார்யர் மூலமாகவே கற்று

மந்திரங்கள் கற்பனவும்
பகவத் மந்த்ரங்களை அப்யசிக்கின்றனவும்

மாலடியே கை தொழுவான்
சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுவதற்க்கே யாம் –

ஆனபின்பு

அந்தரம் ஒன்றில்லை அடை
நாம் ஆறி இருக்க அவகாசம் இல்லை
அப் பெருமானை விரைவிலே சென்று கிட்டு
திரு உள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்
நெஞ்சு உடனே அனுகூலிக்கவே வாழி நெஞ்சே என்கிறார்

———————————————————————————————————————————————————————————–

அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் –59-

————————————————————————————

அடைந்த
அடியே பிடித்து பற்றிக் கிடக்கிற

அருவினையோடு
போக்குவதற்கு அருமையான பழ வினைகளும்

அல்லல்
அந்த பழ வினைகளின் பயனாக வரும் மனத் துன்பங்களும்

நோய்
சரீர வியாதிகளும்

பாவம்
இப்போது செய்கிற பாவங்களும்

மிடைந்தவை-
இப்படி பலவகையாக ஆத்மாவை தெரியாதபடி
மூடிக் கிடகின்றவை

மீண்டு ஒழிய வேண்டில்-
வாசனையோடு விட்டு நீங்க வேண்டுமானால்

நுடங்கிடையை
மெல்லிய இடையை உடைய பிராட்டியை
நமஸ் சிறையில் வைத்து நநமேயம் என்று இருந்த

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய
முன் இரு காலத்தில்
இலங்கா புரியில் சிறை வைத்த இராவணன்
உடைய மிடுக்கு அழியும்படி

முன்னொரு நாள் தன் விலங்கை வைத்தான் சரண்
முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீ ராமனாக திருஅவதரித்து
திருக்கையிலே எடுத்து பிடித்தவனான
பெருமானே உபாயமாவான் –

இத்தால்
எம்பெருமானுக்கு போக்யமாய் உள்ள ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று செருக்கு உற்று இருக்குமவர்கள்
ராவணன் பட்ட பாடு படுவார்கள்
என்னும் இடமும்
ஆத்மவஸ்து அவனுடையது என்று அனுகூலித்து இருக்குமவர்களுக்கு வரும் விரோதிகளை
பிராட்டியின் துயரத்தை பரிஹரித்து அருளினது போலே
பரிஹரித்து அருளுவான் என்னும் இடமும் தெரிவிக்கப் பட்டன-

—————————————————————————————————————————————————————————–

சரணாம் மறை பயந்த தாமரை யானோடும்
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த உலகு –60-

—————————————————————————–

சரணாம் மறை
சரண் ஆம் மறை –
எல்லார்க்கும் ஹிதம் உரைக்கும் வேதத்தை

பயந்த தாமரை யானோடும்
எம்பெருமான் இடத்தில் நின்றும் தான் அடைந்து
நாட்டில் உள்ளவர்களுக்காக வெளிப்படுத்தின
பிரமனோடு கூட

மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-
மரணம் அடையும் தன்மையை உடைய
நித்தியமான ஸ்வரூபத்தை உடைய
ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும்

அரணாய
அரண் ஆய -ரஷகமான விதங்களை

பேராழி கொண்ட பிரான் அன்றி
பெரிய திரு ஆழியை திருக்கையில் கொண்ட
எம்பெருமான் அறிவனே அல்லது

மற்று அறியாது ஓராழி சூழ்ந்த உலகு
அவனிலும் வேறான
கடல் சூழ்ந்த இவ் உலகில் உள்ளார்
அறியமாட்டார்கள் –

பலனை அனுபவிப்பனும் எம்பெருமானே
அதற்கு உபாய அனுஷ்டானம் செய்பவனும் அவனே
ஸ்வாமியின் கார்யமே ஒழிய சொத்தின் கார்யம் அல்லவே
பரம புருஷ ஜ்ஞாநினம் லப்த்வா -ஸ்ரீ பாஷ்யம்
இந்த அர்த்தம் வேதாந்த சித்தம் என்று காட்டி அருள சரணா மறை பயந்த -என்கிறார்

அரணாய -சிலர் தப்பாக எம்பெருமானுக்கு விசேஷணம் என்பர்
இது அரணானவற்றை இரண்டாம் வேற்றுமை தொகை-

ஆழி சூழ்ந்த உலகமானது மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய் இருக்கிற
பேராழி கொண்ட பிரானை அன்றி மற்றது ஒன்றையும் அறியாது -என்றும் பொருள் சொல்லலாமே என்றாராம் ஒருவர்
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்து இருப்பதால்
இப்பொருள் இணங்காது என்று கொண்டு
நஞ்சீயர் -உலகம் எனபது உயந்தோர் மாட்டே என்பதால்
சிறந்த மகா ஞானிகள் என்று கொண்டு இந்த அர்த்தத்தை இசைந்தாராம்
இதைக் கேட்ட பட்டர்
இங்கு ஓராழி சூழ்ந்த விசேஷணம் இருப்பதால்
கடலால் சூழப் பட்ட மகான்கள் என்று சொல்லப் போகாது
அதனால்
கடல் சூழ்ந்த இவ் உலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது
பேராழி கொண்ட பிரானே அறிவான் என்றே பொருள் கொள்ள வேணும் என்று
உபபாதித்து உரைத்து அருளினாராம்
இங்கனே நிர்வஹித்து பட்டர் அருளிச் செய்த போது
நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டு இருந்தார்கள்
ஆனாலும் ஒரு கால் இதனை நஞ்சீயர் மறந்து விட
நம்பிள்ளை நினைவு படுத்தி அருளினார் -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து உள்ளார்-

———————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-41-50–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு –41-

—————————————————————————–

எம்பெருமான் உடைய வாத்சல்ய குணத்தில் ஈடுபட்டு பேசுகிறார்

என்னெஞ்சே -என்றும்
எனது மனமே எப்போதும்
புறனுரையே யாயினும் –
மேலுக்கு சொல்லுகிற வார்த்தையாய் இருந்தாலும்
மித்ர பாவேனசம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –
நமது ஆபி முக்யத்தை மாத்ரமே பார்த்து
உறங்குகிற குழந்தையை அனைத்துக் கொண்டு கிடக்கும் தாயை போலே
தான் அறிந்த சம்பந்தமே காரணமாக
நம்மை விடாமல்
சத்தையை நோக்கிக் கொண்டு துணையாக போருமவன்
நன்மை என்று பேரிடலாவது தீமை உண்டா என்று பார்த்து
ஸூ க்ருதங்களை ஏறிட்டு
மடிமாங்காய் இட்டு கார்யம் செய்பவன்

பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித்து இரு
சக்கரபாணி எம்பெருமான் விஷயமாக
பேசும் பேச்சையே
அனுசந்தித்துக் கொண்டு இரு

அப்படி இருந்தால்

இன்று முதலாக
இன்று தொடங்கி

குன்றனைய குற்றம் செய்யினும்
மலை போன்ற பெருத்த குற்றங்களைச் செய்தாலும்

குணம் கொள்ளும்
அவற்றை எல்லாம் எம்பெருமான் குணமாகவே
திரு உள்ளம் பற்றுவன்

என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார்
அக்ருத ஸூ க்ருதகஸ் ஸூ துஷ்க்ருதா சுபகுண லவலேச தேசாதிக
அசுபகுண பரஸ் சஹஸ்ரா வ்ருத வரதமுருதயம் கதிம் த்வாம் வ்ருனே -ஸ்ரீ வராத ராஜ சத்வம் -92-
குற்றங்களை குணமாக கொண்டால் பிராந்தன்
பிரேமத்தின் கனத்தால் வரும் பிரமை எல்லாம் அடிக் கழஞ்சு பெருமே
ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம் -என்றானே
நோன்பு நோற்கை
காமன் காலில் விழுதல்
மடலூர்கை
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு
அன்பு கடந்த பிரேமம்
தோஷம் காணாது இருப்பதே அஞ்ஞானம்
கண்டு குணமாக கொள்வது வாத்சல்யம்
பக்த வத்சலன் -பட்டர் பாஷ்யம் -ஓர் அடியான் கிடைக்கப் பெற்ற பெருமையினால்
மற்றது ஒன்றிலும் ஆசை கொள்ளாது எல்லாவற்றையும் மறந்து இருக்கை –
சஹாஸ்ராம்சு -சர்வதோமுகமான ஞானம் உடையவன்
அவிஞ்ஞாதா -அடியார்கள் குற்றங்களை அறியாதவன்
தோஷ அதர்சித்வம் -ப்ரீதியின் பிரதம பர்வம்
தோஷ போக்யத்வம் -ப்ரீதியின் சரம பர்வம்
தோஷங்களை காணா விடில் ஷமிக்க பிரசக்தி தானும் இல்லை இ றே
எம்பெருமான் உடைய பிரணய ரசம் இருகரையையும் அழியப் புக்கால்
அணையிட்டும்
ஆணையிட்டும்
தடுக்க வல்லார் இல்லை கிடீர்
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தட்டும்
அவனுடைய கல்யாண குணபிரசரம் ஒரு தட்டுமாய் இருக்கும் -என்று பிள்ளான் அருளிச் செய்யும்

தோஷ போக்யத்வத்தை மங்க ஒட்டு உன் மா மாயை

தன் கன்றின் உடம்பில் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ –
எம்பெருமான் உடைய தோஷ போக்யத்வ குணத்தை சாக்ரஹமாக இல்லை செய்யுமவர்கள்
நிர்க்குண ப்ரஹ்மவாதி கோடியிலே அந்தர்பவிக்கை அழகிது
என்று எண்ணுவார் இடரைக் களைவான் -பிள்ளை பணிக்கும் –

————————————————————————————————————————————————————————————-

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் -திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

————————————————————————————

 

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
மூவருடன் கலந்து பரிமாறும் போது
குற்றங்களை குணமாக கொள்ளுவதற்கு அடி சொல்லிற்று இத்தால் –

பாலோதம் சிந்தப்
திருப்பாற் கடலிலே
சிறு திவலைகள் ஆனவை சிதறி
விழுந்து ஸூ கப்படுத்த

பட நாகணைக் கிடந்த
படம் எடுத்த பாம்பணையில் பள்ளி கொண்ட

மாலோத வண்ணர் மனம்
பெரிய கடல் போன்ற வடிவை உடையனான
எம்பெருமானது

திருமகள் மேல்
பெரிய பிராட்டியார் மேல்
காதல் கொண்ட திரு உள்ளமானது

திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
பெரிய பிராட்டி ஒருத்தியின் மேலே
அற்றுத் தீர்ந்து இருக்கிற விதம் என்னோ

தீர்ந்தவாறு என் கொல் -மூவரிடம் அன்வயித்து
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
மண் மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
ஆய மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பாராம்

சௌபரி-மாந்தாதா உடைய 50 பெண்கள் உடன் பரிமாரினது போலே
பட்டர் நிர்வாஹம்
திருமகள் உடன் கலந்து பரிமாறும் பொழுது
மற்ற பிராட்டிமார்கள் போகத்துக்கு உபகரணமாய் இருப்பார்கள்
பெரிய பிராட்டியார் அவர்களை தம்முடைய அவயவங்களாகக் கொண்டு -தோள்கள் முலைகள் போலே -ரமிப்பிபார்

அற்றுத் தீருகை ஒன்றிலே ஆழம் கால் பட்டு இருக்கை
தாமரைக் கண்களுக்கே அற்றுத் தீர்ந்தும் -திருவாய்மொழி-

————————————————————————————————————————————————————————————————————-

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் -புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாந்தொழா நிற்பார் தமர்–43-

————————————————————–

பிராட்டிமார்கள் புருஷகார பலத்தால்
குற்றங்களை குணமாக கொள்வான்
ஸ்வரூபத்துக்கு சேர கிஞ்சித்கார கைங்கர்யங்களில் அன்வயிக்கலாம்
அப்படி அன்வயிக்கவே
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தீமைகள் தொலைந்து
மனஸை பற்றிய அஜ்ஞ்ஞானம் விஷய ராகம்
தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுப் போம்
இவற்றுக்கு மூல காரணமான துஷ் கருமங்களும் கிட்டாதபடி தொலைந்து போம்

தனமாய தானே கைகூடும்
நன்மைகள் கைகூடும்
ஸ்வரூப அனுரூபமான செல்வம் ஆகிய
பரமபக்தி போல்வன தனக்குத் தானே வந்து கைபுகுரும்
நின்னையே தாள் வேண்டி நீள் செல்வம் வேண்டாத அடியவர்கள் –

புனமேய பூந்துழாயான்-
சர்வ ரஷகன் -தனிமாலை இட்டு

அடிக்கே போதொடு நீரேந்தி தாந்தொழா நிற்பார் தமர்
திருவடிகளிலே
திருவாராதன உபகரணங்கள் கொண்டு பணிமாற-

—————————————————————————————————————————————————————————

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-

—————————————————————————————

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே  தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் –
ஆஸ்ரிதர் உகந்த ரூப
நாமங்களையே கொண்டு தன்னை அமைத்து
அர்ச்சாவதார ரூபியாய் அடிமை கொள்வான்
தமருகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே  அவ்வண்ணம் ஆழியானாம

தமருகந்தது எவ்வண்ணம் தப்பான பாடம்

எந்த குணங்களையோ -சேஷ்டிதங்களையோ

அனுசந்தித்து அநவரத பாவனை பண்ணுகிறார்களோ
அவற்றையே கொண்டு இருப்பான்
அர்ச்சாவதார சௌலப்யம் காட்டி அருளுகிறார் –
எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தி அருளா நிற்க
சில பிள்ளைகள் காலாலே மணலிலே கீறி உம்முடைய பெருமாள் என்று காட்ட
பாத்தரத்தை வைத்து தண்டனிட்டு அருளினார்
கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள்
திருவீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து
பெரிய திருப் பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையாலே முகந்து எடுக்க
தத்காலத்திலே மாதுகரத்துக்கு எழுந்து அருளிய உடையவர்
அவ்விடத்திலே அது கேட்டருளி
தெண்டனிட்டு
அவர்களுடைய பிரசாதத்தை பாத்ரத்தில் ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்

எங்கள் ஆழ்வான் – திருக் குருகைப் பிரான் பிள்ளான் சிஷ்யர் –
அவர் பாடே ஆயர் தேவு சென்று நாவற் பழம் வேண்ட
நீ யார் என்று அவர் கேட்க
ஜீயர் மகனான ஆயர் தேவு என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களை குடி இருக்க ஓட்டுகிறிலன் என்றார்
நஞ்சீயர் திரு வாராதன பெருமாள்- ஆயர் தேவு-சலங்கை  அழகியார்

——————————————————————————————————————————————————————————-

ஆமே யமரர்க்கு அறிய அது நிற்க
நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

——————————————————————————————–

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான்
அந்த எம்பெருமான் உடைய குணங்களை
தேவர்களால் அறிய முடியாது
எம்பெருமான் திருவருளால் தெளியக் காண வல்ல
நாமே அறிய வல்லோம்
அன்றிக்கே
தேவர்களாலும் அறிய மாட்டாத பொழுது
நாமோ அறியக் கடவோம்
என்று நைச்யம் பாராட்டி அருளிச் செய்கிறார் என்றுமாம்-

ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்த்த குழவியாய் வாளரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் –மூன்றாம் திருவந்தாதி -77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்டவரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து -நான்முகன் திருவந்தாதி -44-

இக்கதை இதிஹாச புராணங்களில் இருப்பதாக தெரியவில்லை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி
சக்கரத்தால் தலை கொண்டாய் -என்றும்
எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –
இவையும் ஆழ்வார்களால் மாத்ரம் அருளிச் செய்யப் படுபவை-

———————————————————————————————————————————————————————–

பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர -புண் புரிந்த
வாகத்தான் தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46

————————————————————————————————

பிரமனுக்கு அருள் புரிந்தமை கீழே சொல்லி
இதில் ருத்ரனுக்கு அருள் புரிந்து அருளியதை காட்டி அருளுகிறார்
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர
-புண் புரிந்த வாகத்தான்
தனது நகத்தால் கீறி புண் படுத்திக் கொண்டவன்
தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார்
தாள் பணிபவர் உபய விபூதியையும் ஆள்வார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்ணூடே -திருவாய்மொழி பாசுரம் போலே

————————————————————————————————————————————————————————————–

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் –47-

——————————————————————————————–

எம்பெருமான் தாள் பணிதல்
யாருக்கு கைகூடும் என்ன
இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவர்களுக்கே என்கிறார்
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
அடக்கி ஆளுதல் அறிய விஷயம் காட்ட
மதக் களிறு என்கிறார்
யானை நீர் நிலைகளில் புக்கு முதலை வாயில் அகப்படுமே
விஷயாந்தரங்கள் -நீர் நிலைகள்
வாரி –நீர்
நீர் விடாயை பிறப்பிப்பது போலே
விஷயாந்தரங்களும் விடாயை பிறப்பிக்கும்

மீண்டும் சேரி திரியாமல் செந்நிறீஇ -என்றது
பலாத் காரம் செய்தாகிலும் அடக்கி ஆள வேணும்

கூரியமெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போல்வாரே
திருவடிகளை காண்பர்-

———————————————————————————————————————————————————–

கழல் ஓன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும்
செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்–48-

————————————————————————–

கழல் ஓன்று எடுத்து
ஒரு சேவடியை மேல் உலகங்களிலே
செல்ல நீட்டி

ஒரு கை சுற்றி
ஒரு திருக்கையாலே நமுசி பிரக்ருதிகளை
சுழற்றி எரிந்து
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே –

ஓர் கை மேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும் செருவாழி ஏந்தினான்
மற்றொரு திருக்கையிலே
இவனுக்கு என்ன நேரிடுமோ என்று தவிக்கிற தேவர்களும்
பிரதிகூலரான அசுரர்களும் அஞ்சும்படியாக
எதிரிகள் மேலே அழலை உமிழ்கின்ற யுத்த
சாதனமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமான் உடைய

சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ்
திருவடிகளில் சென்று கிட்டும்படியாக
பொருந்துவாயாக
இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்-

—————————————————————————————————————————————————————————————–

மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் -முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49-

——————————————————————————————

மகிழ் அலகு ஒன்றே போல்
மகிழம் விதையே
காணி ஸ்தானத்திலும்
கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்பது போலே

மாறும் பல் யாக்கை
மாறி மாறி பல வகையான சரீரங்கள்

நெகிழ
தன்னடையே விட்டு நீங்கும்படி

முயல்கிற்பார்க்கு அல்லால் –
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது –
கூடாத கார்யம்

————————————————————————————————————————————————————-

அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் -பெரியனாய்
மாற்றாது வீற்று இருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது –50-

—————————————————————————————–

விஷயாந்தரங்களில் பற்று அற்று
அன்புடன் அவனை ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு
அவனை காண்பதில் அருமை இல்லை என்கிறார்
ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும்
விஷயாந்தரங்களில் போக ஒண்ணாத படி அடக்கி
பகவத் ஆராதனைக்கு உரிய நல்ல மலர்களை சேகரித்து கொண்டு
மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்
மாவலியின் மதம் ஒழித்த பெருமானை
கண்டு அனுபவிப்பது எளிதாகும்

———————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-31-40–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
அரியுருபும் ஆளுருவுமாகி –எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை –31-

——————————————————————————————————–

புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
வலம்புரி -சங்கு ஒரு கை
சத்தியபாமை -பாமை போலே
எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டே
சில அவதாரங்களில் மறைந்தும்
சில அவதாரங்களில் வெளித் தோன்றியும்
காரணார்த்த மாகவாம்

அரியுருபும் ஆளுருவுமாகி —
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த
நெருப்பு நிறமாய் இருக்கும் ஆதலால் ஹிரண்யன் –
மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை
இதை ஆராய்ந்து பார் நெஞ்சே –
பிரஹ்லாதன் இடத்தில் உள்ள வாத்சல்யத்தாலே
செய்து அருளின செயல்
இத்தை அனுசந்தித்தால் இவனை விட்டு வேறு ஒரு விஷயத்தை
ஒரு நொடிப் பொழுதாகிலும் நினைக்க வழி உண்டோ-

———————————————————————————————————————————

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிரவாய்
நாகத்தணையான் நகர்–32-

—————————————————————————————

இமையாத கண்ணால்
ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்
உட் கண்ணாலே

இருள் அகல
அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நீங்கும் படியாக

நோக்கி
தன் ஸ்வரூபத்தையும்
பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்
உள்ளபடி கண்டு

அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
அமையா -திருப்தி பெற்று அடங்கி இராதே
பொறிகள் ஐந்தும் புலன் ஐந்தும்
செவி வாய் கண் மூக்கு உடல் பஞ்ச இந்த்ரியங்களையும்
சப்தம் ரூபம் ரசம் கந்தம் ஸ்பர்சம் பஞ்ச விஷயங்களுக்கும்
பட்டி மேய்க்க விடாமல் அடக்கி ஆளாதே
நமையாமல் -அடக்காமல்

ஆகத்து அணைப்பார்
மாதர்கள் தேகத்தை அனைத்துக் கொண்டு
கண்டபடி திரிபவர்கள்

ஆயிரவாய் நாகத்தணையான் நகர்
எம்பெருமானது ஸ்ரீ வைகுண்டம்

அணைவரே
அணைவர் அணைவரா-இரண்டு வகையிலும் பொருள்
எம்பெருமான் தானாகவே கடாஷிக்கும் பொழுது
அவனை விலக்காதவர்களுக்கு
உஜ்ஜீவிக்க வழி உண்டு
இதில் ஆகத்து அணைப்பார் -எம்பெருமானாலே அந்தரங்கமாக விஷயீ கரிப்பப் பெற்றால்
கிருபா வைபவ உக்தி -இதுவே ஆழ்வார்களுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அபிமதமாய் இருக்கும் –

————————————————————————————————————————————————————-

நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறைப்பயந்த பண்பன் -பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

———————————————————————

நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
திரு நாபி கமலத்திலே
பிரமனுக்கு இருப்பிடத்தை ஏற்படுத்தி அருளையும்
அந்தரங்கருக்கு அருகிலே மாளிகை அமைக்குமா போலே

பகர மறைப்பயந்த பண்பன் –
யோக்யர்கள் எல்லாம் ஓதும்படி
வேதத்தை உபகரித்த குணசாலியான எம்பெருமானுடைய
மத்ஸ்ய ஹம்ச அவதார முகேன

-பெயரினையே
திரு நாமங்களையே

புந்தியால் சிந்தியாது
மனத்தினால் எண்ணாமல்

ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –
ஜபம் செய்வதும்
உரு சொல்வதும் மான
சந்தா வந்தனம் போன்ற கர்மானுஷ்டன்களால்
உண்டாக போகிற பிரயோஜனம் என்ன –
ஒன்றும் இல்லையே
எம்பெருமானை உள்ளீடகக் கொள்ளாத இவற்றால் –
அந்தரங்க பகவத் பக்தியே முக்கியம் –

—————————————————————————————————————————————————————–

என்னொருவர் மெய்யன்பர் ஏழு உலகுண்டு ஆலிலையில்
முன்னொருவனாகிய முகில் வண்ணா -நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறு–34-

————————————————-

என்னொருவர் மெய்யன்பர்
ஏழு உலகுண்டு ஆலிலையில் முன்னொருவனாகிய முகில் வண்ணா –
நின்னுருகிப்பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால்
ஒருத்தி வந்து முலை தந்து
பட்ட பாடு கண் எதிரே காணா நிற்கச் செய்தே

பேரமர்க்கண்-
கண்ணபிரானை கொள்ளக் கருதி அதற்கு முயன்ற இடம்

பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
ஒன்றுடன் சண்டை செய்யும் பெரிய கண்களை உடைய யசோதை என்றுமாம்
இன்னும் ஒருத்தி கிட்ட தான் வர முடியுமா
அஞ்சாமல் கிட்டி வந்து முலை கொடுக்கத் தான் முடியுமோ
இதை எங்கனே மெய் என்னக் கொள்ளலாம்
விஷத்துக்கு மாற்றாக அமுதம் போன்ற ஸ்தநயம் கொடுத்தவள்
அவள் போன்ற மெய்யான பக்தர்களுக்கு விஸ்வாசம் இருக்கும்-

———————————————————————————————————————————————————–

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ -தேறி
நெடியோய் அடியடைதற்கு அன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண்–35-

————————————————————————

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
நிரம்பின பக்தி இல்லாதவர்களாய்
சேஷத்வ ஞானத்தை மாத்ரம் உடையவராய்
தங்கள் உடைய ச்நேஹத்தால்

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ –
சொல்லும் வார்த்தைகளை
நீ குற்றமாக கொள்ளாதே

-தேறி -நெடியோய் அடியடைதற்கு அன்றே-
பெருமை பொருந்திய உன்னுடைய திருவடிகளை
தேறி -தெளிந்து வந்து –
சிசுபாலனுக்கு
கிட்டுகைக்கு காரணமாக விட்டதன்றோ

ஈரைந்து முடியான் படைத்த முரண்
இராவணன் புத்தி பூர்வகமாக
பண்ணிய தப்புக் கார்யம்
நம் போல்வாரின் போலியான ஆனுகூல்யமே
அவன் திருவடி அடைய தடை உண்டோ -என்றவாறு
ஹிரண்யன் ஹிரண்யாஷன்
இராவணன் சிசுபாலன்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த
சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன்

ஆறிய அன்பு இல் அடியார் -தம்மை சொல்லிக் கொள்கிறார் நைச்சாயனுசந்தானம்
தன்மையில் வந்த படர்க்கை-

—————————————————————————————————————————————————–

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே -இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை–35-

—————————————————————————–

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே
சம்சாரிகளின் மிடுக்கை தொலைக்கலாம்
என்று அல்லவோ

முன்னம் தரணி தனதாகத் தானே -இரணியனைப்
முற்காலத்தில்
பூமி எல்லாம் தன்னுடையது என்று
அஹங்காரம் கொண்டு இருந்த ஹிரண்யா ஸூரனை

புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
புண்படுத்திப் பிளந்த
கூர்மையான நகங்கள் பொருந்திய
அழகிய திருவாழியைக் கொண்ட
திருக்கையினால் நீ

மண்ணிரந்து கொண்ட வகை
மாவலியிடத்தில்
பூமியை யாசித்து பெற்றதானது –
கொல்லாமல் -விட்டு பங்கமும் படுத்தாமல் -யாசித்து பெற்றது
தன்னுடைய இந்த -சௌலப்யம் உணர்ந்து
சம்சாரிகள் அஹங்காரம் விட்டு ஒழிந்து ஆட்படக் கூடும் எண்ணும் திரு உள்ளத்தாலோ –

——————————————————————————————————————————————————————-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மாலுகந்த ஊர்–37-

——————————————————————————————-

மூன்று பாசுரங்களாலே திரு மலையை அனுபவிக்கிறார்
வகையறு –
அல்ப பலன்களையும்
பரம புருஷார்த்தத்தையும்
உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறிதி இடுவதற்கு உறுப்பான –

நுண் கேள்வி வாய்வார்கள்-
ஸூ ஷ்மார்த்த
ஸ்ரவணம்
உடையவர்களான

நாளும்
நித்யமும்

புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-
தூப தீபங்களையும்
புஷ்பங்களையும்
தீரத்தையும்
தரித்துக் கொண்டு –

திசை திசையின்
பல திக்குகளில் நின்றும்

வேதியர்கள்
வைதிகர்கள்

சென்று இறைஞ்சும்
வந்து சேர்ந்து வணங்கும் இடமான

வேங்கடமே
திரு வேங்கட மலையானது

வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர்
பாரத போரிலே
வெளுத்த பாஞ்ச ஜன்யம் ஊதிய
வயாமோகமே வடிவு கொண்டவனே
உகந்து அருளின திவ்ய தேசமாம்-

——————————————————————————————————————————-

ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியை -காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம் என்னும் மாலதிடம்–38-

————————————————————————————–

திருவேங்கட மலையே அமரர்கள் அதிபதி
திரு உள்ளம் உகந்து எழுந்து அருளி இருக்கும் இடம் என்கிறார் –
ஊரும் வரி அரவம்
மலைப்பாம்புகள்
இயற்கையாக திரிகின்ற பாம்புகள் என்றும்
யானைகளை விழுங்கும் பாம்புகள்
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -திருமங்கை ஆழ்வார்
நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் அனுசந்தேயம்
இடி கொள் வேழத்தை எயிற்றோடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என வடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாமித்து ஏற
படிகடாமெனப் தாழ்வரை கிடப்பான பாராய் -கம்பர் சித்ரகூடபடலம் -34-
ஒண் குறவர் மால் யானை
ஒண் குறவர் -இவைகள் உடைய பாட்டன் பாட்டனில்
ஒருத்தன் பூமியில் இறங்கினான் என்னும்
பழி இன்றிக்கே இருக்கை-வம்ச பரம்பரையாக திருமலையிலே நித்ய வாசம் பண்ணுபவர்கள்
பட்டி மேயும் யானைகளின் மீது

பேர எறிந்த பெரு மணியை –
பெரிய மாணிக்கக் கட்டியை எறிய
நமக்கு கல் போலே அங்கு குறவர்களுக்கு மாணிக்கங்கள்
காருடைய மின்னென்று புற்றடையும்
யானையை மேகமாகவும்
ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து
பின்னால் வரப் போகும் இடிக்கு அஞ்சி
புற்றினுள்ளே புகா நிற்கும்
பாம்புகள் மேகம் கண்டு யானையாக பிரமித்தது மேலே திருமொழி பாசுரத்தில்

வேங்கடமே
மேலசுரர் -மேல் சுரர் -நித்ய சூரிகள்
எம் என்னும் மாலதிடம்
எம்மது என்று மேல் விழுந்து ஆஸ்ரியத் தக்க பெருமையான இடம்
ஆஸ்ரியத் தக்கவனான அவன் இடம் என்றுமாம்

திவ்ய தேசத்தில் உள்ள சராசரங்கள் எல்லாம் மெய்யன்பருக்கு உத்தேச்யமாய் இருக்குமே
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –
வேங்கடக் கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே –
செண்பகமாய் பிறக்கும் திரு உடையேன் ஆவேனே
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே
பொற்குடவாம் அரும் தவத்தேன் ஆவேனே
கானாறாய்ப் பாயும் கருத்துடையன் ஆவேனே
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே –

பாம்பாகவும்
குறவராகவும்
யானையாகவும்
புற்றாகவும் -இருக்கலாமே-

—————————————————————————————————————————————————————————————

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச -கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39-

—————————————————————————-

எம்பெருமான் உடைய பல
சேஷ்டிதங்களை அனுசந்தித்து இனியராகிறார்

இடந்தது பூமி –
மகா வராஹமாக உத்தரித்து

எடுத்தது குன்றம்
கோவர்த்தன மலையை குடையாக எடுத்து

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச
கஞ்சனை கொன்று ஒழித்து

-கிடந்ததுவும் நீரோத மா கடலே
திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து அருளி

நின்றதுவும் வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது –
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாக
தனது பெருமை பொலிய நின்றான்
பிறர் கார்யமே பொழுது போக்காக செய்து அருளுபவன் நீர்மைவருணிக்க முடியாதே
நாமோ
பெருமாளை உகந்தோம் என்று சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்று நாளும் பத்தும் பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சூது சதுரங்கம் பொருதல் உறங்குதல் செய்வுதோம்
ஒன்றிலும் ச்நேஹம் இல்லை
பல பல கார்யங்களில் நெஞ்சு செலுத்திக் கிடக்கிறோம் -என்றபடி

மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
அது தன்னிலே தோள் கீழ் இறங்கார்-கொக்குக்கு ஒன்றே மதி போல் –

———————————————————————————————————————————————————————————–

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று–40-

————————————————————————————-

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
பெரிய வில்லையும்
அம்புகளையும் உடையரான
குறவர்களின் உடைய கையில் பிடித்து இருந்த
சிவந்த நெருப்புக்கு

வெருவிப் புனம் துறந்த வேழம்
பயப்பட்டு கொல்லையை விட்டு
நீங்கின யானையானது

இரு விசும்பில் மீன் வீழக்
பரந்த ஆகாசத்தில் நின்றும்
நஷத்ரம் விழ

கண்டு அஞ்சும்
அதனைப் பார்த்து
நாம் அப்பால் போக முடியாதபடி கைக் கொள்ளியை
குரவர்கள் எறிந்தார்கள் என்று பிரமித்து
பயப்படும்படியான

வேங்கடமே
திருவேங்கடமானது

மேலசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று
முன்பு ஒரு கால் ஹிரண்யா ஸூ ரனை முடித்து
ப்ரஹ்லாதன் விரோதி ஒழிந்தான் என்று உகந்த
பெருமாள் உடைய திருமலையாம்

அஸ்தானே பய சங்கை பண்ணி
எம்பெருமானுக்கு மங்களா சாசனம்
பண்ணும் மகான்களின் இருப்பை நினைவுஊட்டும் செயல் —

———————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-21-30–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு -என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே யறி–21-

——————————————————————-

தம்முடைய திரு உள்ளத்தை நோக்கி
எம்பெருமான் உடைய சௌசீல்ய திருக் குணத்தை
அருளிச் செய்கிறார்
உலகளந்த சரித்ரம் சொல்லி
இப்படிப்பட்ட அவனுடைய மேன்மையைப் பார்த்து
நெஞ்சே நீ பின் வாங்க வேண்டா என்கிறார்
நம்முடைய விரோதிகளை போக்கி அருள
திருக்கையிலே திரு ஆழி உண்டே
நம் கூக்குரல் கேட்டு சடக்கென ஓடி வந்து காத்தருள
வாகனமும் உண்டே -என்கிறார்-

—————————————————————————————————————–

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -வெறி கமழும்
காம்பேய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயை
தாம்பே கொண்டார்த்த தழும்பு -22-

————————————————————————————–

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
உனது சௌலப்ய திருக் குணத்தை அறியாதார் யார்

பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் –
பல நிறங்களையும் கொண்ட
சிறகுகளை உடைய
கருடாழ்வானை
ஏறி நடத்தும் பெருமானே

காம்பேய் மென்தோளி
மூங்கிலை ஒத்த -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் –
மெல்லிய தோள்களை உடைய யசோதையினாலே

வெறி கமழும் கடை வெண்ணெய் உண்டாயை
கடையப் பட்டு
பரிமளம் வீசப் பெற்ற வெண்ணெயை
களவிலே அமுது செய்து அருளிய உன்னை

சீரார் கலை யல்குல் சீரடிச் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
எராரிடை நோவ எத்தனையோர் போதுமே
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாராருறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கி யறிவுற்று
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்
வாராத்தான் வைத்தது காணாள் வயிறடித்து இங்கு
ஆரார புகுத்துவார் ஐயர் இவரல்லால்
நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண வுரலோடே
தீரா வெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -சிறிய திருமடல்

தாம்பே கொண்டார்த்த தழும்பு
கையிலே கிடைத்த தொரு தாம்பைக் கொண்டு

சௌலப்யம் பரத்வம் உள்ள இடத்தில் தான் பாராட்டத் தகும்
மேரு பரத்வம் உண்டு இங்கு  சௌலப்யம் இல்லையே
இரண்டும் அவன் இடம் ஸ்வா தினம் என்று காட்டி அருள பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -என்கிறார்
செந்தாமரைக் கண் பரதவ லஷணம் இதுவும்

வெறி கமழும் -விசேஷணம் -வெண்ணெய்க்கும்- காம்பேய் மென்தோளி யசோதைக்கும்-

———————————————————————————————————————————————————————————–

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடித் -தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

—————————————————————————————–

ஒரு தழும்பு இருந்தால்
மறைக்க முடியும்
கையிலும்
காலிலும்
விரலிலும் ஆக உடம்பு முழுவதும்
ஆஸ்ரியர்க்காக செய்து அருளிய சேஷ்டிதங்கள்
ஸ்ரீ ராம
ஸ்ரீ கிருஷ்ண
ஸ்ரீ நரசிம்ஹ
அவதாரங்களில் ஏற்பட்ட தழும்புகள் உண்டே –
சகாதசம் ஜ்யாகிண கர்க்கசைச் சபை சதுர்ப்பி ராஜா நுவிலம்பி பிர்ப்பிஜை –ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம்

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
ஸ்ரீ ராமபிரான் -தர்மோ விக்ரஹவான் அதர்ம விதரம் தன்வீ ஸ தந்வீத ந -தசாவதார ஸ்தோத்ரம் தேசிகன்
புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலைவா –
நாண் தழும்பு ஸ்ரீ ராமாவதாரம்

தழும்பிருந்த தாள் சகடம் சாடித் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தழும்பு

தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
பெரிய பிராட்டியார் அகலகில்லே இறையும்என்று உறையுமவள்
ஜகத்துக்கு பிரளயமோ என்று அஞ்சி நடுங்கும்படி

வீங்கோத வண்ணர் விரல்
கை தாள் விரல் மூன்றினோடும்
அன்வயிக்கத் தக்கது
கடல் வண்ணன் உடைய கை
கடல் வண்ணன் உடைய தாள்
கடல் வண்ணன் உடைய விரல்
கை தாள் விரல் இவற்றை எழுவாயாகக் கொண்டு
தழும்பை சுமந்து இருக்கின்றன என்றுமாம்-

———————————————————————————————————————————————————————————

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே
ஒண்கோத வண்ணா வுரை –24-

———————————————————————————

மூன்று தழும்புகள் -சாரங்க நாண்
சகடம் உதைத்த -இரணியன் மார்பிடந்த -வீரச் செயல்களை விளக்கும்
தாம்பால் உண்டான தழும்போ பரிஹாசாஸ்பதமாய் இருக்கும் இ றே
வெண்ணெய் திருடினதும் இல்லை
ஆய்ச்சி பிடித்ததும் இல்லை கட்டினதும் இல்லை அடித்ததும் இல்லை
தழும்பு உண்டானதும் இல்லை என்று
முழு பூசணியை மறைக்கப் பார்த்தான்
அவாப்த சமஸ்த காமனாய்
சர்வஞ்ஞனாய்
சர்வசக்தனாய்
உள்ள நீ குறையாளன் போலே களவு செய்து தண்டிக்கப் பட்டு
கட்டை அவிழ்க்க உபாயம் அறியாதவனாய் இருந்தாயே
என்ன ஆச்சர்யம்
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று –
குரல் ஓவாது ஏங்கி நினைந்து
அயலார் காண விருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை
இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலை தேக்கி வைத்தால் போலே காணும்-

————————————————————————————————————————————

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலத்– திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
யிடந்தானை ஏத்தி எழும்–25-

——————————————————————————-

கிருஷ்ணன் ஓயாமல் ஏங்கி அழுதது போலே
தாமும் கிருஷ்ணன் உடைய சீலகுணத்தை
ஓயாமல் பேச உத்சாகம் கொண்டு அருளிச் செய்கிறார் இதில்

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்ஏத்தி எழும்
நெஞ்சு சிந்தனை உடன் நில்லாமல்
வாக்கின் தொழிலையும் ஏற்றுக் கொண்டதே
முடியானே மூ வுலகும் தொழுது ஏத்த -திருவாய்மொழி -3-8-1-

மேல் உரை கொண்டு -மேலான சொற்களைக் கொண்டு என்றுமாம்
வரை மேல் மரகதமே போல திரை மேல்கிடந்தானை-
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு இருப்பது
வெண் நிறமான தொரு மலையிலே
மரகதக் கல்லைப் பதித்தால் போலே
அபூத உவமை

கீண்டானைக் –
இரணியன் மார்பையும்
கேசியின் வாயையும் கீண்டானே
அன்றிக்கே
கேழலாய் கீண்டானை இடந்தானை
அண்டபித்தியில் ஒட்டின பூமி கீண்டு இடந்தவன் என்றுமாம்

திரை மேல் கிடந்தானை கீண்டானை
உறங்குவான் போல் யோகு செய்து
ரஷிப்பதில் நோக்கு
அப்படி ரஷிப்பவனை நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கிறது-

———————————————————————————————————————————————————————————–

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் -தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை–26-

———————————————————————————–

விபவம் அனுபவித்தார் இதுவரை
பின்னானார் வணங்கும் சோதியாக
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையாக வடிவமைந்த -என்று
சொல்லப் படுகிற திருவேங்கட மலை யை அனுபவிக்கிறார்
அவனை விட அவன் சம்பந்தம் பெற்ற திருமலையே உத்தேச்யம்
பிரயோஜனாந்தர பரர்களையும் அநந்ய பிரயஜோனரையும் வாசி அற வினைகளைப் போக்கி
பலனைப் பெறுவிக்குமது என்கிறார் –

எழுவார்-
எழுந்து போவாரையும்
மேன்மேலும் ஆசைப் பெருக்கம் உடையவர்களையும் சொல்லும்
ஐஸ்வர் யத்தை தர வேணும் பிரார்த்தித்து பெற்று போவாரையும்
மேலும் ஐஸ்வர்யம் கேட்பாரையும்
வினைச் சுடரை நந்துகை -ஐஸ்வர்ய பிராப்திக்கு விரோதியான பாபங்களைத் தொலைத்து
ஐஸ்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை

விடை கொள்வார்-
விட்டு நீங்குகிறவர்கள்
ஆத்மானுபவதுக்கு விரோதியான பாவங்களை தொலைத்து
கைவல்ய அனுபவத்தை நிறைவேற்றுகை –

ஈன் துழாயானைவழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
பரமைகாந்திகளான பகவத் பக்தர்கள்
இவர்கள் வினைச் சுடரை நந்துவிக்கையாவது
மாறி மாறி பல பிறப்பும் பிறக்கும்படியான தீ வினைகள் தொலைத்து முக்தராக்கை

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே-
வேண்டுவார் வேண்டிய படி
அநிஷ்ட நிவ்ருதிக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
செய்விக்க வல்ல திருவேங்கடம்
பாவங்களை நெருப்பாக ரூபிவித்து -நந்துவிக்கும் -நெருப்பை அணைக்கும் என்கிறார்

வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –
ஒரு நெருப்பை அணிவிக்கும்
ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்கிறார்
மனச் சுடரை –
நித்யர்களை இங்கே வந்து சௌலப்ய குணம் அனுபவிக்க தூண்டும் -என்றவாறு-

——————————————————————————————————————————————————————————————-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று-கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-

கார்க்கோடு -கம்பீரமாக முழங்குவதில் மேகத்தை ஒத்த சங்கு

————————————————————————————–

திருமலையை அனுசந்திதவர்
திருவேம்கடமுடையானையும்
அவன் விபவத்தில் செய்து அருளின வீரச் செயல்களையும் அனுபவிக்கிறார்
மலையால் குடை கவித்து
மாவாய் பிளந்து -கேசி குதிரை வாயை பிளந்ததுவும்
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானைப்போர்க்கோடு ஒசித்தனவும்
பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை
இந்த திருக்கைகளே பழைய வீரச் செயல்களை செய்து அருளின என்கிறார்-

———————————————————————————————————————————————————————————————–

கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின்னாகத்தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை–28-

——————————————————————————-

திருவேங்கடமுடையானை குறித்து
உனது திருமேனியில்
அழகும்
ஐஸ்வர் யமும்
சீலமும்
நிழல் இட்டுத் தோன்றுகின்றன -என்கிறார்

கைய வலம்புரியும் நேமியும் –
இத்தால் ஈச்வரத்வம்

கார் வண்ணத்து ஐய
இத்தால் அழகையும்

மலர்மகள் நின்னாகத்தாள்-
இத்தாலும் ஈச்வரத்வம்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் இ றே

செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை
இத்தால் சீலாதி குணங்கள்
வேதங்களே தனக்கு சிறந்த செல்வமாக கொண்டதால் செய்ய மறையான்
தாரகாசுரன் புத்ரர்கள் வித்யுன்மாலி -தாரகாஷன் -கமலாஷன் –
பிரம்ம வரத்தால் வானில் பறந்து -துன்புறுத்த சிவன்
பூமியை தேராக கொண்டு
சந்திர சூர்யர் தேர் சக்கரம்
நான்கு வேதங்கள் நான்கு குதிரைகள்
பிரமன் சாரதி
மகா மேரு வில்
ஆதி சேஷன் வில் நாண்
திரிபுரம் எரித்த விருத்தாந்தம்

நின்னாகத்து இறை –
அல்பம் -அல்ப பாகம் என்றவாறு
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -திருவாய்மொழி -4-8-1-
ஸ்வ பார்ஸ்வே தஷினே சம்போ நிவாஸ பரிகல்பித –
சிவன் தாபத்தால் திரு உள்ளம் உகந்து வலப்பக்கம் இடம் கற்பித்து தந்து அருளினான் –

———————————————————————————————————————————————————————————————————

நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயுமாவான் -பிறை மருப்பின்
பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி–29-

—————————————————————————–

எம்பெருமான் மேன்மையும் நீர்மையையும்
வெளியிடுகிறார்
இறையும் –
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் –
சர்வ ஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வைகுண்ட நாதத்வம் இங்கே விவஷிதம்
இறை என்று நித்ய விபூதி நாதத்வம் சொல்லும்

நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான்-
லீலா விபூதி நாதத்வம் சொல்லிற்று
பஞ்ச பூதங்களினால் ஆகிய பதார்த்தங்கள் நிறைந்த இடம்
இறையும் போலே ஆவானும் -சேர்த்துக் கொள்ள வேண்டும்

மேலே இவற்றுக்கு அடியான நீர்மை அருளிச் செய்கிறார்
பிறை மருப்பின் பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி
யானைக்கு வெளுத்த தந்தம்
பசுமை தாங்கிய கண்கள்
சாதாரணம் தானே
குழந்தை கிணற்றில் விழ
இது ஒரு கால் அழகும்
கை அழகும்
தலை அழகும்
முக அழகும்
என்னே -சொல்லி மாய்ந்து போவது போலே
எம்பெருமான் யானை அவயவ அழகில் கரைந்தமை தோற்ற
அந்த பகவத் சமாதியாலே ஆழ்வார் அருளிச் செய்கிறார்
நெஞ்சமே -விளி  வருவித்துக் கொள்ள வேண்டும்

————————————————————————————————————————————————————————————————-

தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை -எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து —30-

—————————————————————————-

ஆழ்வார் திரு உள்ளம் போலே நமது உள்ளம் ஈடுபட
அருளுகிறார்
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை –
பட்டிமேய ஒண்ணாத படி மனத்தை அடக்கி
எம்பெருமானோடு தமக்கு உள்ள உறவை
அறிந்து இருப்பவர்களின் மனமானது
மற்று எவரையும் பற்றாமல்
ஐம் புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே
பதறிக் கொண்டே மிக்க ஆவலுடன் சென்று கிட்டும் –

எளிதாகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து
ஒரு கன்றுக் குட்டியானது பல்லாயிரம்
பசுக்களின் பசுக்களின் திரளின் உள்ளே
தனது தாயை கண்டு பிடித்துக் கொள்வது எப்படியோ அப்படியே இதுவும்
இதற்கு சம்பந்த உணர்ச்சியே காரணம்
சம்பந்த ஞானம் இல்லாதவர்களுக்கு ஒரு நாளும் எம்பெருமானைக் கிட்டுதல் சாத்தியம் அன்று
அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸூ லபம் என்றார் ஆயிற்று
அடிக்கே -அடியே- இரண்டும் பாட பேதம்-

——————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-11-20–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தான் தொழா -பேய்முலை நஞ்சு
ஊணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண் கேளா செவி–11-

——————————————————————————————-

உலகம் தாயவன் -ஆஸ்ரித ரஷிப்பதில் தீஷை
முலை நஞ்சு உண்டது -துஷ்ட நிரசன தீஷை
ஜிஹ்வே கீர்த்தய கேசவம்
தம்முடைய இந்த்ரியங்கள் அவன் இடம் அவஹாஹித்த படிகளை பேசி ஹ்ருஷ்டர் ஆகிறார்-

—————————————————————————————————————————————————

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு–12

——————————————————————————————

தானே வந்து ரஷிக்குமவன் அன்றோ
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலாப் பன்றி யாய் திருவவதரித்து –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே செய்து அருளுபவன்
விலக்காமை ஒன்றே வேண்டும்
அத்தையே பற்றாசக் கொண்டு
என் ஊரைச் சொன்னாய்
பேரைச் சொன்னாய்
அடியாரை நோக்கினாய்
அவர்கள் விடாயைத் தீர்த்தாய்
ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்
மடி மாங்காய் இட்டு
பொன் வாணியன் பொன்னை உரைகல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்து
கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று போலே
யாத்ருச்சிகம்
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்
ஸூ க்ருத விசேஷங்களை கற்பித்துக் கொண்டு
ஒன்றை பத்தாக்கி நடத்திக் கொண்டு நன்மைகளை அருளுபவன்
வேறு ஒரு உபாயாதையும் அறியாதே
ஆறேனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
இது அறியாமல்
தைலதாரை போலே இடைவிடாத த்யான பக்தி செய்து அடையலாம்
என்றும் சொல்கிறார்களே என்று நிந்திக்கிறார்
ரத்னம் ஸ்வல்ப விலைக்கு மாற்றும் செம்பட்டவன்
உள்ள விலைக்கு மாற்றும் வியாபாரி
ஸ்வயம் போக்யமாக கொள்ளும் அரசன்
செம்படவன் -பக்தி கொண்டு அல்ப அஸ்த்ர பலன்கள் பெற்று போருமவர்கள்
வியாபாரி -பக்தியை மோஷ சாதனமாக கொள்பவர்கள்
அரசன் -பக்தியை ஸ்வயம் போக்யமாக கொள்ளுமவர்கள்
அதையே பலமாகக் கொள்ளாமல் அந்த பக்தியை உபாயமாக கொண்டு
கீழ் வகுப்பில் புகுவாரை ஆர் கொல் விலக்குவார்
வானத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று -இரண்டாம் திருவந்தாதி
அருள் வெள்ளம் புகப் புக்கால் தாங்கிக் கொள்ளவே
நமது நற்கிரிசைகள் உறுப்பு -என்றபடி
இந்த்ரியங்களையும்
பஞ்ச பூதங்களாலான சரீரத்தையும் சொல்லி
பக்தி உபாயத்வம் கழிக்கப் படுகிறது
என்பரே
ஏகாரத்தை அசையாகக் கொண்டு
பகவத் பிராப்திக்கு பக்தியை உபாயம் என்பர்
என்பாரும் உண்டு
இயல்வு -உபாயம்-

——————————————————————————————————————————————————————————————————

இயல்வாக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வாக
நீதியாலோதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றாரவர்–13-

————————————————————-

நித்யர்கள் அன்றோ நித்ய கைங்கர்யம் செய்ய யோக்யதை படைத்தவர்கள்
நம் போல்வார் பணிந்து உய்ய விரகு உண்டோ
வேதங்களை ஓதி
படிப்படியாக திருந்தி கிட்டும்படி
அவனே மூல ஸூ க்ருதமாக இரா நின்றான்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் எம்மான் திரிவிக்ரமனையே –
ஆதியாய் நின்றார் அவர் -இப்படி கிருஷிகள் பண்ணிக் கொண்டு
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா -ரகஸ்ய த்ரய சாரம்-

——————————————————————————————————————————————————————-

அவரவர் தாம்தாம் அறிந்த வாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி உருவே முதல் —14-

—————————————————————–

ஆதியாய் நின்றார் அவர் -என்றத்தை
விவரித்து அருளுகிறார்
ஸ்ரீ மன் நாராயண மூர்த்தியே பிரதானம்
உலகளந்த மூர்த்தி என்றது
சம்சாரிகளோடு
சூத்திர தேவதைகளோடு
வாசி அற எல்லாரும் தன்னுடைய
திருவடிகளின் கீழே துகை உண்ணுமாறு
வ்யாபித்தவன் –
இவனே முழு முதல் கடவுள் என்று மூதலித்தார் ஆய்த்து

அவரவர் -செய்து குணக்குறைவைக் காட்டும்

தாம்தாம் அறிந்த வாறு-
சாஸ்திரங்களையும்
சிஷ்டாசாரமும் அறியாமல்
ராஜச தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு-

———————————————————————————————————————————————————————————

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி வண்ணன் முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது –15-

———————————————

முதலாவார் மூவர் -பாட பேதம்
தளை தட்டும்
மூவரே சரியான பாடம்
மூவர் -அம்மூவரினுள்ளும் -என்று மாற்றுவர்
ஆழ்வார் பாசுரங்களை நம்முடைய ஸ்வாதந்த்ர்யம் கொண்டு மாற்றுதல் கூடாதே

மூரி -பெருமையும் வலிமையையும்

நாமநீர் –பெரிய நீர் -கடல் சூழ்ந்த
சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்
முதலாய நல்லான் அருளே நன்று
பல்லார் அருளும் பழுது-

——————————————————————————————————————————————————————————————

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி–16-

———————————————————————–

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி
அரவணை மேல் கண்டு
இன்று தொழுதேன் -நிகழ கால பகவத் சேவை கிடைக்க பெற்ற ஹர்ஷம்

பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்
என்கையால் இறந்த கால இழவை அனுசந்திக்கிறார்

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே
கண்டு தொழுதேன் என்ற பின்பு அஞ்ச வேண்டுவது என் என்னில்
இருப்பது இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்

கீழ் ஆறாம்பாட்டில்
ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான் -என்றும்
அன்று கருவரங்கத்துட் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -என்றும்
அருளினவர்
பழுதே பலகாலும் போயின வென்று அழுவதாக சொல்லுவான் என் என்னில்
இப்பிறவிக்கு முன்பே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களின் நாள்கள்

பேயாழ்வார் -சென்ற நாள் செல்லாத செங்கண் மால் –எந்நாளும் நாளாகும்
எல்லா காலமும் நல்ல காலம் இறந்த எதிர் காலம் நினைவு இன்று நிகழ கால ஆனந்தத்தால்
அஃது ஒரு சொல் சமத்காரம்

அடலோத வண்ணர் ஓதம்
திருமேனியில் பரவுகின்ற லாவண்யா தரங்கங்கள்
அனுபவிக்க வருமவர்களை அடர்த்து தள்ளக் கூடியது

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே

————————————————————————————————————————————————————————————————————————————————

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் -வடிவுகிரால்
ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்
ஊர்ந்தான் உலகளந்த நான்று–16

—————————————————————————

பழுதே பலபகலும் போயின -என்றத்தை விவரிக்கிறார்
உலகு அளந்த திவ்ய சரித்ரத்தில் ஈடுபட்டு இருந்தேன் ஆகில்
முக்தனாய் இருப்பேனே
என்பர் -என்பதால் பிறர் சொல்லிக் கேள்விப் பட்டேனே ஒழிய
நேரிலே சேவிக்கப் பெற்றேன் இல்லையே என்கிறார்

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே –
அடியவர்களுக்கு சிரோ பூஷணமாக அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு
கல்லும் காடும் மேடுமான உலகங்களை அளப்பதே -என்கிற வருத்தம் தோன்ற

முடியும் விசும்பு அளந்தது என்பர்
எங்கள் கண் முன்னே விளங்கி
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று
பாசுரம் பேசும்படியான திரு முடியை
அஹங்காரிகளும் பகவத் விஷய சுவடு அறியாதவர்களுமான தேவதைகள் உள்ள இடத்தில் நிமிர்ப்பதே

-வடிவுகிரால்ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்  ஊர்ந்தான் உலகளந்த நான்று –
ஹிரண்யனைப் பிளந்துஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு அருள் செய்த காலத்திலும்
ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானைக் காத்தருள பெரிய திருவடி மீது
அரை குலைய தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் சேவித்து வாழாது ஒழிந்தேனே -என்கிற அனுதாபம் தோன்ற அருளிச் செய்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால்–17

———————————————————————-

இங்கும்
இழந்த நாளைக்கு அனுதாபம் பட அருளிச் செய்கிறார்
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி
இடைக்குலத்தில் வந்து பிறந்த இடத்திலும்
இழந்தேன் இ றே என்று சோகிக்கிறார்

கிருஷ்ணாவதார சரிதங்களை பேசி
ஆனந்தமாக கால ஷேபம் செய்கிறார் என்னவுமாம்

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு
உறி வெண்ணெய்தோன்ற வுண்டான்
வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய்
மண்ணளந்த மால்
மருதிடை போனது ஒரு காலத்திலும்
மண் அளந்தது ஒரு காலத்திலும் ஆகிலும்
ஆழ்வார் உடைய ஞான வைச்யத்தாலே அனுசந்தான தோரணியில்
முன் பின் என்கிற வாசி இன்றியே
எல்லாம் ஓன்று சேர விளங்குகிற படியே
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய –
பொய்ம்மாயமருதான வசுரரை-

புள்ளின் வாய் கீண்டானும் -வெண்டளை பிறழும் பாடம்-

———————————————————————————————————————————————————————————

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
ஆலினிலைத் துயின்ற வாழியான்-கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று–19-

——————————————————————————–

தம்மைப் போலே இழவாமல்
நொடிப் பொழுதும் விடாது அனுபவிக்கப் அனுபவிக்கப் பெற்றவர்கள் உண்டோ
என்று ஆராய்ந்து பார்க்க
மா கடல் நீருள்ளான்-சமுத்திர ராஜனுடைய பாக்யமே பாக்கியம்
நீ நோற்ற நோன்பைச் சொல்லி அருள்
நானும் நோற்று அந்த பேறு பெற்று உஜ்ஜீவிக்க -என்கிறார்
உறங்குவான் போலே யோகு செய்து அருளுகின்றானே

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -ஸ்ரீ ரெங்க விமானம்
அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்தச் சயாயோ மாகத ஸூ குமாரை ரங்க பர்த்துர் மயூகை
சகல ஜகதிபா நச்யா மஜீ மூத ஜைத்ரம் புளகயதி விமானம் பாவனம் லோசநே ந

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
திருப்பாற்கடல் வெள்ளை நிறமாயினும்
எம்பெருமான் உடைய நிழலீட்டாலே கரும் கடல் ஆயிற்று
நான் விரஹத்தால் வெளுத்து இருக்க நீ நித்ய ஹர்ஷா பீடு தோற்ற மாமை பெற்று விளங்குகிறாயே
உவர்க்கும் கரும்கடல் நீருள்ளான் -உப்புக் கடலிலும் உள்ளவன் ஆகியே அத்தை விளித்ததாகவுமாம்

ஆலினிலைத் துயின்ற வாழியான்
-கோலக் கருமேனிச் செங்கண் மால்
கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
கண்படை -கண் வளர்ந்து அருளுகிற நிலை -யோகத் துயில் நிலை-

—————————————————————————————————————————————————————————————————

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் -நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20-

———————————————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலும்
ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரத்திலும்
எம்பெருமான் திருவடிகளை ஏத்தி இறைஞ்சப் பெற்ற பாக்ய சாலிகள் இருந்தனரே
அடியேன் இழந்தேனே

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
வசு தேவ தேவகிகள் கால் விலங்கு கழன்ற
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -திருமங்கை
வாமனன் என்று கொண்டால்
பெற்றார் -தன்னை ஆஸ்ரயிக்க்க பெற்றவர்கள் என்னுமாம்
தழை -கரும பந்தம்
அது நீங்கும்படி பரம பதத்தில் நின்றும் வந்ததைச் சொல்லிற்று ஆகவுமாம்

செற்றார் படி கடந்த செங்கண் மால்
செற்றார் -சத்ருக்கள்
படி -பூமி
மகாபலி போல்வார் தங்களது என்று அபிமானித்து இருந்த பூமி –

நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று
ஏத்துவராம் நின்று -ஏத்துவரால் நின்று -பாட பேதங்கள்
பிரயோஜனாந்த பரர்களும்
ஏத்தி இறைஞ்சும் படி ஆச்சர்யம் தொனிக்க அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-1-10–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

ஸ்ரீ யதோத்த காரி சந்நிதியில் -திரு வெக்கா திவ்ய தேசத்தின்
வலப்புறத்தில்
பொற்றாமரைப் பொய்கையிலே
ஐப்பசி திருவோணம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சமாக திருவவதரித்து அருளினார்
திரு பொய்கை ஆழ்வார்
தெண்ணீர் வயல் தொண்டை நாடு சான்றோர் உடைத்து
முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் காஞ்சி
காசி முதலிய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சிக்கு ஒவ்வாது
ஆரோடு ஈரெட்டு தொண்டை -22 திருப்பதிகள் கொண்டது தொண்டை நாடு
வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் பிரணமேத் புவி –
ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் தேஹளீசன்
யோக பலத்தால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்து இருந்து வையகத்தை வாழ்வித்து அருளினார்-

இன்கவி பாடும் பரம கவிகள்
செஞ்சொல் கவிகாள்
செந்தமிழ் பாடுவார்

—————————————————

எண் வகை வனப்பு சொல்லும்
தொல்காப்பியம் செய்யுளில்
அம்மை அழகு தொன்மை தோல்
விருந்து இயைபு புலன் இழைபு –
விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே -என்ற தொல்காப்பிய சூத்திர உரையில்
விருந்து தானும் பழங்கதை மேலதன்றி புதிதாக தாம் வேண்டியவாற்றால்
பல செய்யுளும் தொடர்ந்து வரத் தொடுத்துச் செய்யப்படும் தொடர் நிலை மேலது -என்றும்
அது முத் தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க
கலம்பகம் முதலாயினவும் சொல்லுப -என்று உரைத்துள்ளமை காண்க
திரு அந்தாதி மேன்கையாகிய அந்தாதி மேன்மையை உடைய அந்தாதி-

————————————————————-

முதலி ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு -வையத்
தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து-

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப்பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி -உபமானத்துக்கும் திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து -எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு -புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

—————————————————————————————————————————————————————————————–

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று–1-

——————————

வையம் தகளியா
தகளியாவது நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாய் இருக்கும் அகல்
வார் கடலே நெய்யாக

பிரபஞ்சத்தை நிருமிக்க வல்ல ஞான சக்தியாதிகளை உடையவன்
திவ்ய மங்கள விக்ராஹத்தோடு கூடியவன்
சர்வேஸ்வரன் என்றும்
அவனுக்கே அடிமை செய்வது புருஷார்த்தம் என்றும் விளக்கப்பட்டது
வாசிக கைங்கர்யம் இவர் செய்து அருளுகிறார்
இடையூறாக இருந்த சம்சார துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக என்கிறார்

அனுமானத்தால் சாதிக்கிறார் இல்லை
சாஸ்திர யோநித்வாத்
வேதத்துக்கு விருத்தம் இல்லாத அனுமானம் சாஸ்திர சம்மதம்

இடராழி நீங்குகவே யென்று
எம்பெருமானை துதியாமல் இருந்த வருத்தம் தீர
துதிக்க ஒட்டாமல் பிரதிபந்தகமாக இருந்த பாபங்கள் தொலைய
இப்பிரபந்தம் கற்று சம்சாரிகளும் துயர் தீர்ந்து வாழ
மூன்று படியாக உரைக்கலாம்

———————————————————————————————————————————————————————

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –2-

———————————–

அனுமானம் கொண்டுஅவனை சாதிக்க வேண்டிய வருத்தம் இல்லை
எல்லை அற்ற அதி மானுஷங்களான செயல்களே சாதித்துக் கொடுக்கக் கூடியவை என்கிறார் இதில்

த்வாம் சீலரூப சரிதை -ஆளவந்தார்
சித்ரைச்ச கைச்சிது சிதை பவதச் சரித்ரை -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
கேள்வி கேட்பதில் நோக்குடையது அல்ல
கடல் கடையும் போது திரையும் நுரையும் மாறாமல் இப்பொழுது தான் கடல் கடைந்தால் போலே தோற்றுகிறதே
உலகு அளக்கும் போது வைத்த அடி சுவடு மாறாமல்
வாமனன் மண் இது -என்னும்படி
இதோ தோன்றுகிறதே -என்று
பிரத்யஷமாக காட்டி அருளுகிறார்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமையால் ஸ்பஷ்டமாக தோற்றக் குறை இல்லையே ஆழ்வாருக்கு-

நேரிலே கண்டு மங்களா சாசனம் செய்யப் பெற்றிலோமே
திருவடிகளின் கீழே தலையை மடுக்கப் பெற்றிலோமே
இழவு விளங்க
ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
நம் ஆழ்வார்
மத்துறு கடை வெண்ணெய்அற களவினில் உரலிடை ஆப்புண்ட
சரிதையை
அனுசந்தித்ததும் –
எத்திறம் என்று மோஹித்தால் போலே
இவரும் -ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
கடலை கடைந்ததும் உலகை அளந்ததும் அனுசந்திக்க
எம்பெருமான் கடல் உலக சம்பந்தம் நினைவுக்கு வர
அன்று அது அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் -என்கிறார்
மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-
சேது பந்தனம் பண்ணி அருளி
பிராட்டியை கைக் கொண்டு மீண்ட பொழுது உடைத்தருளி
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்தரை கொள்ளுகின்ற -என்றபடி
தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி பள்ளி கொண்டு அருளிய கார்யங்கள்
உலகுக்காக செய்த செயல்கள்
ஆதியில் படைத்தருளி
ஸ்ரீ வராஹமாய் இடந்தருளி
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்தருளி
பின்பு வெளிப்பட உமிழ்ந்தருளி
செய்த செயல்கள் அனுசந்திக்கப் பட்டன
இப்படி அதிமாநுஷ சேஷ்டிதங்களை செய்து அருளினவன் ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ‘
இந்த செயல்களே அவனுடைய உண்மையை சாதித்து தர வல்லன -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————-

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ யளவு கண்ட நெறி –3

———————————

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –
உலகளந்த சரிதையில் ஈடுபட்டு அருளுகிறார்

அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி
அளப்பது -மாறி காலிடுதல்
ஓர் இடத்திலே நின்று கொண்டு இருப்பது அளத்தல் ஆகாதே
மாறி இடுவதற்கு அவகாசம் இல்லையே
சமத்காரமாக
நீ யளவு கண்ட நெறிஅறிகிலேன்-என்கிறார்

கழல் தலம் ஒன்றே நிலம் முழுதாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்கு அளக்கின்றதே -திரு விருத்தம் -58

அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையில் நின்றாரை அளந்தார் என்ன ஒண்ணாது இ றே
அடி மாறிலிடில் அன்றே அளந்ததாவது
இவன் இங்கே அளந்தானாக ஒன்றும் காண்கிறி லோமீ-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் அவ்விடத்தில்

சூருருவின் பேயளவு கண்ட பெருமான்
சம்போதனம் -விளி
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் நிகண்டு
தெய்வ நங்கை -யசோதை உருவில் வந்தவள்
அவள் ஆயுளின் அளவைக் கண்டுவிடுதல் முடித்தல்
தனது வல்லமையால் அளவிட்டு காண நினைப்பவர்கள் பூதனை பட்ட பாடு படுவார்கள்-

——————————————————————————————————————————————————————————-

நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி -அறிவானாம்
ஆலமர நீழலறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமமர் கண்டத் தரன் –4-

—————————————————————–
அகஸ்த்யர்
புலஸ்தியர்
தஷர்
மார்கண்டேயர் -நான்கு சிஷ்யர்களுக்கும்
தர்மோபதேசம் செய்த சிவன்
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞால
மளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு -நான் முகன் திருவந்தாதி -17-

அறிவானாம்
அறிந்து விட்டதாக செருக்கு உற்று இருக்கிறானே
இது என்ன அறிவு கேடு -என்கிறார்
அரன் -நெறி வாசல் தானேயாய் நின்றானை-அறிவானாம் -என்று அந்வயம்

நெறி -உபாயம்
வாசல் -உபேயம்
அன்றிக்கே நெறி வாசல் -ஸ்வரூபத்துக்கு ஏற்ற உபாயம் என்றுமாம்

ஆலமமர் கண்டத் தரன்
தமோ குணத்துக்கு தக்க செயலைச் செய்பவன் அன்றி
சாத்விகர் செய்யும் செயலை செய்ய வல்லவன் அன்றே-

———————————————————————————————————————————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று –5-

—————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அழிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று
இருவர் உடைய
நாமம்
ரூபம்
வாஹனம்
தொழில்
முதலியவற்றால் நன்கு விளங்கும்

சர்வ ரஷகன் இவன் சர்வ பஷன் அவன்

அட மாடே நிந்திக்கும் ரிஷபம் அவனுக்கு வாஹனம்
இவனுக்கு ஸூ பர்ணோசி கருத்மான் -வேதாத்மா விஹகேச்வர –
வேத ஸ்வரூபி பெரிய திருவடி

வேதம் இவனை பிரதிபாதிக்கும் ஆகம நூல் அவனுக்கு

அருளார் திருச் சக்கரம் இவன் திருக்கையில் சூலம் அவனது கையில்

ரூபமேவாச்ய ஏதன் மஹிமா நம் வ்யாசஷ்டே
உருவம் எரி கார் மேனி ஓன்று
காலாக்னி போலே அவன் உருவம்
காளமேகம் போல் செல்வ நாரணன் திரு உருவம்
ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் -திரு நெடும் தாண்டகம்

உபநிஷத் -அங்கான் யன்யா தேவதா -நாராயணன் அங்கி அரன் -அங்கம் -அதனால் மேனி ஓன்று என்கிறார்
ஓன்று சரீரம் என்றால் மற்று ஓன்று சரீரி தானே
அந்தர்யாமி ப்ராஹ்மணம்-ஸ்ரீ மன் நாராயணனே சர்வ சரீரி-

———————————————————————————————————————————————————————————-

ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை–6-

திசை -தன்மை பொருளில் இங்கே

——————————————

அரன் அறிவானாம் என்றீர்
நீர் பிரபந்தம் அருளிச் செய்து சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது எங்கனே என்ன
எம்பெருமான் திருவருளால் -அவனே காட்டக் கண்டு
ஜாயமானம் ஹி புருஷம்யம் பச்யேத் மது ஸூ தன
சாத்விகஸ் ஸ து விஜ்ஞேய ஸ வை மோஷார்த்த சிந்தக –

ஓத நீர் வண்ணனை -வடிவு அழகு நெஞ்சிலே ஊறப் பெற்றவர்
மறக்க சம்பாவிதம் அல்ல –
எப்போதும் கடாஷித்து விஷயீ கரிக்க அவனே திருவரங்கம் மேயான் -என்கிறார்-

கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன்-
அயோ நிஜார் கர்ப்ப வாசம் உண்டோ என்றால்
சீயும் நரம்பும் –நாற்றமும் மிக்கு இருக்கிற
கர்ப்பத் தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறக்க வில்லை
எங்கு நின்றும் ஆவிர்பவித்தாரோ அதுவே கர்ப்ப ஸ்தானம்
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே-என்னக் கடவது இ றே
இருள் தரும் மா ஞாலதுக்குள் வரும் முன்பே அவன் கடாஷித்தான்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-

————————————————————————————————————————————————————————–

திசையும் திசை யுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு–7-

—————————————————————–

பரம விலஷணமான அவனை அனுபவிக்க மாட்டாத
சூத்திர ஜனங்களை மயக்க
இவை எல்லாம் ஏற்படுத்தப் பட்டன -என்கிறார்
ஒவ்வொரு ஸ்தானத்திலும் ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தி
தெய்வத்துக்கு இசையும் கருமங்களையும் ஏற்படுத்தி
நான் முகன் -படைக்க
சிவன் -சம்ஹாரம் -காம தஹனம் -திரிபுரம் மூன்று எரித்தல்
இந்த்ரன் -மெய் காட்டிக் கொள்ளும் தொழில்
யமன் -உயிர் நீக்கும் தொழில்
மோகினி உருவம் கொண்டு மயக்கினால் போலே
அமுதம் விஷம் யானை சந்தரன் கல்பவ்ருஷம் அப்சரஸ் போன்ற
விசித்திர பொருள்களை படைத்தருள வல்லவன்
இவற்றையும் உண்டாக்கி மயக்கி -என்றவாறு-

————————————————————————————————————————————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும்  எரி கதிரோன் தன்னை -முயங்கு அமருள்
தேராழியால் மறைத்தது என் நீ திருமால்
போராழி க் கையால் பொருது –8-

———————————————

ஆஸ்ரித பஷ பாதி -என்கிறார்
நாழிகை கூறிட்டுக் காத்து -அரசர்கள் தம் முகப்பே நாழிகை போக படை பொருத–தேவகி தன் சிறுவன் -பெரியாழ்வார்
திருவாழி பிரகாசம் மழுங்கிப் போக கடவ ஒரு சாபம் ஏற்பட்டு இருந்தது என்றும்
அதனால் மறைத்தான் என்பர்

போராழி க் கையால் பொருது
பீஷ்மரை தேரில் இருந்து இறங்கி துரத்திக் கொன்ற

முயங்கு அமர் -பலர் திரண்டு நெருங்கி-

——————————————————————————————————————————————————————————————

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவில் நீ யளந்த மண்–9-

——————————————–
விரிதோட்ட-ஒளி விரிகின்ற திருக் குண்டலங்கள் அணிந்து இருந்தவனே

மகர நெடும் குழைக் காதனே விரி தோட -விகாரம் பெற்று விரி தோட்ட –
மலர்ந்த இதழ்களை உடைய தாமரை போன்ற சேவடி என்றுமாம்-
பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏராருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -திருமங்கை ஆழ்வார்-பெரிய திருமொழி -8-8-3-
தன்னை அழிய மாறியும் ரஷித்து அருளுபவன்
ஆபத்து வந்தால் தலையாலே சுமந்து நோக்குதல்
தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவன் அன்றோ நீ
ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ
என்று உகந்து அனுபவிக்கிறார்
உதாரனாய் இருப்பான் ஒருவன் நாலு பேருக்கு சோறிட நினைத்து
நாற்பது பேருக்கும் இட்டு
மிகும்படி சோறு உண்டாக்குவான் போலே
ரஷ்யத்தின் அளவன்று இ றே ரஷகனின் பாரிப்பு
இந்த பிரபந்தத்தில்
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் உலகளந்த ஞான்று வராகத்
தெயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்தபடி –84

——————————————————————————————————————————————————————————————–

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் -எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்கு அன்று இவ்
வுலகளவும் உண்டோ உன் வாய்-10-

—————————————————–

சிறிய வாயினால் பெரிய உலகங்களை எல்லாம் விழுங்க வல்ல
அகடிகடநா சாமர்தம் உள்ளவன் நீ

அலகு அளவு கண்ட சீர்
அலகு -நூறு ஆயிரம் பதினாறாயிரம் லஷம் கோடி சங்கம் மகா சங்கம் பத்மம்
அளவு காண்கை எண்களின் எல்லைக்கு மேல் பட்டு போதல்
அசங்க்யேய கல்யாண குணகனௌ மகார்ணவ -ஸ்ரீ பாஷ்யகாரர்
சீர் ஆழியாய்க்கு ஆழியான்
சமுத்ரம் போன்ற கல்யாண குணங்கள்
கல்யாண குணக்கடலும் சக்ராயுதத்தையும் உடையவன் –

————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்