முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-51-60–திவ்யார்த்த தீபிகை —

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே -களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான் திருநாமம் எண் –51-
களியில்-அஹங்காரத்தால்

—————————————————————————————————–

எம்பெருமான் உடைய திரு நாமங்களை
பரம போக்யமாக வாயாலே சொல்லவே
அப்பெருமான்
ப்ரஹ்லாதன் உடைய விரோதிகளைப் போக்கி
தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கி
தன்னையும் தந்து அருள்வான்
நெஞ்சமே
நீ திருவடி இணையை சேவித்து அனுபவிப்பதற்கு
தெளிவு கொண்டு இருந்தால்
அவன் பிரசன்னனாய் அருள் புரிவான்
நீ தெளி வுற்று இருக்கிறாய் எனபது
நன்கு விளங்குமாறு ஸ்ரீ நரசின்ஹா மூர்த்தியின் திரு நாமங்களை
எண்ணிக் கொண்டு இரு –

——————————————————————————————————————————————————

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் -நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கை தொழுவர் சென்று –52-

ஒரு மாலையால் ஒப்பற்ற புருஷ ஸூ கத மாலை கொண்டு

——————————————————————————————

அஹங்காரம் கொண்ட
முப்பத்து மூவர் அமரர்களும்
எம்பெருமானை அடி பணிந்தே சிறப்பு உற்று இருக்கின்றனர்
முப்பத்து மூவரை எடுத்துக் காட்டினது
முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரையும்
எடுத்துக் காட்டினதுக்கு பர்யாயம்
பெரிய திருவந்தாதியில்
இருநால்வர்
ஈரைந்தின் மேல் ஒருவர்
எட்டோடு ஒரு நால்வர்
ஓர் இருவர் -என்று நம் ஆள்வார் அருளிச் செய்கிறார்-

————————————————————————————————————————————————-

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –53-

————————————————————————————

திருவனந்தாழ்வான் போலே
எல்லா கைங்கர்யங்களையும் எல்லா காலங்களிலும் செய்ய
திரு உள்ளம் கொண்ட ஆள்வார்
அவன் செய்யும் அடிமைகளை எடுத்து காட்டுகிறார்
சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான் –

இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்

நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்

நீள் கடலுள் என்றும் புணையாம்-
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்

புணையாம் -திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்

அணி விளக்காம் –
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்

மணி விளக்காம் என்றுமாம்

பூம் பட்டாம்-
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்

புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்

பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்

ஆளவந்தார் -செய்யா ஆசனம் இத்யாதி
சென்றால் குடையாம் கடல் புணையாம் திருத் தீவிகையாம்
நின்றால் இரு திருப் பாதுகையாம் நித்திரைக்கு அணையாம்
குன்றா மணி ஒளி ஆசனமாம் புணை கோசிகையாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசர்க்கு அரவரசே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -திருவரங்கத்து மாலை

———————————————————————————————————————————————————————

அரவம் அடல் வேழம் மான் குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மல் குன்றம் -காவின்றி
விட்டிறுத்து மேய்தொசித்து கீண்டு கூத்தாடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன்–54-

—————————————————————————–

திருப் படுக்கையிலும் பொருந்த மாட்டாமல்
லீலி விபூதியில் பிறந்து
களை பிடுங்கி
விபூதியை பாது காத்து அருளும் திவ்ய சேஷ்டிதங்களை
அனுசந்திக்கிறார்
முறை நிரைநிரை அணி அலங்காரம்

அரவம் விட்டு -காளியனை கொள்ளாமல் விட்டு அடித்ததும்
அடல் வேழம் இறுத்து -பொருவதாக வந்த குவலயா பீடம் தந்தம் முறித்து உயிர் தொலைத்தும்
ஆன் மேய்த்து -பசுக்களை வயிறு நிரம்ப மேய்த்ததும்
குருந்தம் ஒசித்து -அசூராவேசமுடைய குருந்த மரத்தை ஒடித்துப் பொகட்டும்
புள்வாய் கிண்டும் -பகாசுரன் வாயைக் கிழித்தும்
குரவை கோத்தும் -ராசக்ரீடையை இடைப் பெண்கள் உடன் கை கோத்து ஆடியும்
குடம் ஆடி -குடங்களைக் கொண்டு ஆடியும்
முலை உண்டு -பூதனை முலையை உயிர் உடன் உறிஞ்சி உண்டும்
மல் அட்டும் -கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களை கொன்றும்
குன்றம் எடுத்தும் -கோவர்த்தன மலையை குடையாக எடுத்தும்
இவை அனைத்தும் தாமரைக் கண்ணன் அவன் திவ்ய சேஷ்டிதங்கள்-

—————————————————————————————————————————————————————————–

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் –55-

———————————————————————————

பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்
இடைத்தனத்தில் குறைவின்றி பூரணமாய் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
அன்றிக்கே
ஒரு பாகவதன் பேரை அபாகாவதன் தரிப்பது
அவனையும் யம கோஷ்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது
ஒரே சொல்லாக கொண்டு நாயனார் ஆழி மழைக் கண்ணா-திருப்பாவை வ்யாக்யானத்தில் அருளிச் செய்தபடி

யமபடர்கள் பாகவதர்கள் இடம் அஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார்
குணாகுணங்களை ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்
அவர்களை கண்டால் அனுவர்தித்து இருங்கள் என்று நியமித்தான்
பிராட்டியே சிதைகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்வார் என்னுமவன்

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்–நான் முகன் திருவந்தாதி

கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினையும் செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் -திருவாய்மொழி

வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -திருச் சந்த விருத்தம்

ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூல
பரிஹர மதுசூதன பிரபன்னான் ப்ரபுரஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

————————————————————————————————————————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க -நேரே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன்–56-

———————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை ஆரே அறிவார் அது நிற்க –
எம்பெருமான் பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டு அறிய முடியாதது
அவன் திரு நாமங்களை வாயில் வந்தபடி எல்லாம் சொல்லி கூப்பிடுமது செய்யலாம் அத்தனை ஒழிய
ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்ம வித் -என்றது எல்லாம் அளவிட்டு அறிந்தமையை சொன்னது அன்று
கன்றுக் குட்டி அம்மே -சப்தம் செவிப்பட்டதும் தாய் பசு இரங்கி நிற்பது போலே
திருநாமத்தை வாய் விட்டு பிதற்றினால் அவன் வந்து அருள் புரிவான்
பெம்மான் -பெருமான் மருவி
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன்

—————————————————————————————————————————————————————————————–

அயனின்ற வல்வினையை யஞ்சினேன் யஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் -நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது –57-

——————————————————————————–

திருமந்த்ரத்தின் பொருளை விவரிக்கும் இப்பாசுரம் பாடினதால்
அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவனம் பெற்றேன்

நயம் நின்ற
திருமந்த்ரார்த்தை நயப்பித்தலில் நோக்கமாய் உள்ள -என்றுமாம்
எம்பெருமான் உடைய ஸ்வரூபம்
ஜீவாத்மாவின் ஸ்வரூபம்
அடைவதற்கு உபாயம்
அடைந்து பெற வேண்டிய பேறு
விரோதி ஸ்வரூபம்
ஆகிய அர்த்த பஞ்சக அர்த்தங்களும் திருமந்த்ரார்த்தம்
இதுவே இந்த பிரபந்தத்தாலும் விவரிக்கப் படுகின்றன-

————————————————————————————————————————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே -பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை–58-

———————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும்
புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டு
தூபத்தை ஏந்திக் கொண்டு
எம்பெருமானை வணங்கி
உஜ்ஜீவிப்பொம்

எழு
நீ புறப்பட்டு

வாழி நெஞ்சே –
உனக்கு இந்த ஸ்வ பாவம் நித்யம் ஆயிடுக –

நாம் இப்படி சொல்ல காரணம் என்ன வென்றால்

பழுதின்றி
முறைப்படி
குருகுல வாசம் செய்து
ஆச்சார்யர் மூலமாகவே கற்று

மந்திரங்கள் கற்பனவும்
பகவத் மந்த்ரங்களை அப்யசிக்கின்றனவும்

மாலடியே கை தொழுவான்
சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுவதற்க்கே யாம் –

ஆனபின்பு

அந்தரம் ஒன்றில்லை அடை
நாம் ஆறி இருக்க அவகாசம் இல்லை
அப் பெருமானை விரைவிலே சென்று கிட்டு
திரு உள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்
நெஞ்சு உடனே அனுகூலிக்கவே வாழி நெஞ்சே என்கிறார்

———————————————————————————————————————————————————————————–

அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் –59-

————————————————————————————

அடைந்த
அடியே பிடித்து பற்றிக் கிடக்கிற

அருவினையோடு
போக்குவதற்கு அருமையான பழ வினைகளும்

அல்லல்
அந்த பழ வினைகளின் பயனாக வரும் மனத் துன்பங்களும்

நோய்
சரீர வியாதிகளும்

பாவம்
இப்போது செய்கிற பாவங்களும்

மிடைந்தவை-
இப்படி பலவகையாக ஆத்மாவை தெரியாதபடி
மூடிக் கிடகின்றவை

மீண்டு ஒழிய வேண்டில்-
வாசனையோடு விட்டு நீங்க வேண்டுமானால்

நுடங்கிடையை
மெல்லிய இடையை உடைய பிராட்டியை
நமஸ் சிறையில் வைத்து நநமேயம் என்று இருந்த

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய
முன் இரு காலத்தில்
இலங்கா புரியில் சிறை வைத்த இராவணன்
உடைய மிடுக்கு அழியும்படி

முன்னொரு நாள் தன் விலங்கை வைத்தான் சரண்
முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீ ராமனாக திருஅவதரித்து
திருக்கையிலே எடுத்து பிடித்தவனான
பெருமானே உபாயமாவான் –

இத்தால்
எம்பெருமானுக்கு போக்யமாய் உள்ள ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று செருக்கு உற்று இருக்குமவர்கள்
ராவணன் பட்ட பாடு படுவார்கள்
என்னும் இடமும்
ஆத்மவஸ்து அவனுடையது என்று அனுகூலித்து இருக்குமவர்களுக்கு வரும் விரோதிகளை
பிராட்டியின் துயரத்தை பரிஹரித்து அருளினது போலே
பரிஹரித்து அருளுவான் என்னும் இடமும் தெரிவிக்கப் பட்டன-

—————————————————————————————————————————————————————————–

சரணாம் மறை பயந்த தாமரை யானோடும்
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த உலகு –60-

—————————————————————————–

சரணாம் மறை
சரண் ஆம் மறை –
எல்லார்க்கும் ஹிதம் உரைக்கும் வேதத்தை

பயந்த தாமரை யானோடும்
எம்பெருமான் இடத்தில் நின்றும் தான் அடைந்து
நாட்டில் உள்ளவர்களுக்காக வெளிப்படுத்தின
பிரமனோடு கூட

மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-
மரணம் அடையும் தன்மையை உடைய
நித்தியமான ஸ்வரூபத்தை உடைய
ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும்

அரணாய
அரண் ஆய -ரஷகமான விதங்களை

பேராழி கொண்ட பிரான் அன்றி
பெரிய திரு ஆழியை திருக்கையில் கொண்ட
எம்பெருமான் அறிவனே அல்லது

மற்று அறியாது ஓராழி சூழ்ந்த உலகு
அவனிலும் வேறான
கடல் சூழ்ந்த இவ் உலகில் உள்ளார்
அறியமாட்டார்கள் –

பலனை அனுபவிப்பனும் எம்பெருமானே
அதற்கு உபாய அனுஷ்டானம் செய்பவனும் அவனே
ஸ்வாமியின் கார்யமே ஒழிய சொத்தின் கார்யம் அல்லவே
பரம புருஷ ஜ்ஞாநினம் லப்த்வா -ஸ்ரீ பாஷ்யம்
இந்த அர்த்தம் வேதாந்த சித்தம் என்று காட்டி அருள சரணா மறை பயந்த -என்கிறார்

அரணாய -சிலர் தப்பாக எம்பெருமானுக்கு விசேஷணம் என்பர்
இது அரணானவற்றை இரண்டாம் வேற்றுமை தொகை-

ஆழி சூழ்ந்த உலகமானது மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய் இருக்கிற
பேராழி கொண்ட பிரானை அன்றி மற்றது ஒன்றையும் அறியாது -என்றும் பொருள் சொல்லலாமே என்றாராம் ஒருவர்
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்து இருப்பதால்
இப்பொருள் இணங்காது என்று கொண்டு
நஞ்சீயர் -உலகம் எனபது உயந்தோர் மாட்டே என்பதால்
சிறந்த மகா ஞானிகள் என்று கொண்டு இந்த அர்த்தத்தை இசைந்தாராம்
இதைக் கேட்ட பட்டர்
இங்கு ஓராழி சூழ்ந்த விசேஷணம் இருப்பதால்
கடலால் சூழப் பட்ட மகான்கள் என்று சொல்லப் போகாது
அதனால்
கடல் சூழ்ந்த இவ் உலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது
பேராழி கொண்ட பிரானே அறிவான் என்றே பொருள் கொள்ள வேணும் என்று
உபபாதித்து உரைத்து அருளினாராம்
இங்கனே நிர்வஹித்து பட்டர் அருளிச் செய்த போது
நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டு இருந்தார்கள்
ஆனாலும் ஒரு கால் இதனை நஞ்சீயர் மறந்து விட
நம்பிள்ளை நினைவு படுத்தி அருளினார் -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து உள்ளார்-

———————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading