உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் -உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு –61-
—————————————————————————————
உலகு இறந்த ஊழியும் அழிந்து கிடந்த பிரளய காலத்திலும்
புந்தியிலாய-சங்கல்ப ஞானத்தினால் படைக்கப் பட்ட
புணர்ப்பு -படைப்புகளாம்
ரக்த சம்பந்தமே யாகும்
பெற்றவனை ஒழிய வளர்ப்பவன் இல்லை என்றது ஆயிற்று
இவை அறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே
இப்போது உபாயம் அறிவானும் அவனே என்று
கீழ்ப் பாசுரத்துடன் சேர்த்து பொருள் –
————————————————————————————————————————————————
புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மணமருவ மால் விடை ஏழ் செற்று–கணம் வெருவ
ஏ ழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-
———————————————————————————
ஸ்ருஷ்டித்து தூரச்தனாய் நில்லாமல்
களைகளைப் பிடுங்கி ரஷிப்பவனும் அவனே
தோள் என்றது கை
தவழ்ந்து போய் மருதம் முறித்ததால் கைகளின் மேல் ஏறிட்டு கூறுகிறார்
கணம் கூட்டம் -வேறுபாடி இன்றி அனைவரும் வெருவ
சூழ் அரவப் பொங்கணையான் தோள்
பரிமளம் குளிர்த்தி -பொருந்திய திரு அரவப் படுக்கையும் பொறாத சௌகுமார்யம்
இப்படி அல்லாடி திரிகிறான் -வயிறு எரிகிறார்-பொங்கும் பரிவு
எல்லா செயல்களையும் தோளின் மேல் ஏறிட்டு அருளுகிறார்-
——————————————————————————————————————————————————————-
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேளவனது இன்மொழியே கேட்டு இருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்–63-
————————————————————————————-
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேளவனது –
சகல வித பந்துவான அப்பெருமான்
விஷயமாகவே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே –
இன்மொழியே கேட்டு இருக்கும்
நா நாளும்
கோள் நாகணையான்-
மிடுக்கை உடைய திருவநந்த ஆழ்வானை படுக்கையாக
உடைய அப்பெருமானது
குரை கழலே
ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த திருவடிகளையே
கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்
சப்தாதி விஷயங்களை வெட்க்கப் படாமல்
விரும்புவாரைப் போல் நான் விரும்ப மாட்டேன்
நயம் -நயக்கப் படுவது நயம் -ஆசைப் படத் தக்க விஷயாந்தரங்கள்
நயந்தரு பேரின்பம் எல்லாம் -இராமானுச நூற்றந்தாதி
எல்லா இந்த்ரியங்களும் அவன் மேல் ஊன்ற பட்ட படியை
ஹர்ஷத்துடன் அருளிச் செய்கிறார்
ஒரே உறுதியாக இருக்கவே நானும் நாமம் கொண்டு இதர விஷயங்களை காறி உமிழ்ந்தேன்-
——————————————————————————————————————————————————–
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் -வியவேன்
திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என்மேல் வினை–64-
————————————————————————
விஷயாந்தரங்கள் துர்வாசனையால்
தம்மை இழுக்க மாட்டாது என்கிறார் இதில்
அவன் அனுக்ரஹத்தை பூரணமாக பெற்று இருக்கிறேன் –
நயவேன் பிறர் பொருளை
பரமபுருஷன் உடைய ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று விருமப மாட்டேன்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத -என்பதால் எம்பெருமானை- பிறர்- என்கிறார்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -கண்ணி நுண் சிறுத் தாம்பு
கௌஸ்துப ஸ்தானமான ஆத்மவஸ்துவை -என்னது -என்று அபிமானித்ததால்
இராவணன் செயல் உடன் ஒக்கும்
நள்ளேன் கீழாரோடு
சம்சாரிகளோடே ச்நேஹம் கொள்ள மாட்டேன்
மாரீசன் போல்வார் உடன் ச்நேஹம் கொள்ள மாட்டேன்
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் –
சரிந்த ஸ்ரீ வைஷ்ணவர்களோடு அல்லால்
மற்றவர்கள் உடன் கால ஷேபம் செய்ய மாட்டேன்
உய்வேன் -உசாவேன் என்றபடி வார்த்தையாடி போது போக்குதல்
உசாத்துணை -ஸ்ரீ வைஷ்ணவர்களே
திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
ஸ்ரீ யபதியை தவிர வேறு தேவதாந்தரங்களை
தெய்வமாக கொண்டு துதிக்க மாட்டேன்
வியவேன்
இப்படி இருக்க ஹேதுவான சத்வ குணம் என்னிடம் தான் உள்ளது
என்று அஹங்கரித்து என்னைப் பற்றி
நானே ஆச்சர்யம் பட மாட்டேன்
திருமாலை அல்லது வியவேன் -என்றுமாம்
வருமாறு என் என்மேல் வினை
இப்படியானபின்பு
அவன் அனுக்ரஹத்துக்கு இலக்கான என்மேல்
அவன் நிக்ரஹ ரூபமான பாபம்
வரும் விதம் எது -வர மாட்டா -என்றபடி
அவசியம் அனுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் -சாஸ்திர வாக்கியம்
வருமாறு என் நம் மேல் வினை -என்றும் பாடம்
தம்முடன் சம்பந்தித்ததவர்களையும் கூட்டிக் கொண்டு அருளுகிறார்
ஒருமையில் பன்மை வந்த வழு வமைதி-
———————————————————————————————————————————————————-
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிகட் செல்லார் -நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்
கரியானை கை தொழுதக் கால்–66-
—————————————————————————————-
ஆழ்வார் தாம் ஒருங்கு பட்ட நிலையை அருளிச் செய்த அநந்தரம்
நாமும் அந்த நிலை பெற இலகுவான உபாயம் காட்டி அருளுகிறார்
வினையால் அடர்ப்படார்
நல்வினை தீ வினை இரண்டாலும்
நெருக்குப் பட மாட்டார்கள்
பொன் விலங்கு புண்யம் இரும்பு விலங்கு பாபம்
வெந்நரகில் சேரார்
கொடிய சம்சாரம் ஆகிய நரகத்திலே மீண்டும் சென்று
சேர மாட்டார்கள்
அவன் உடன் கூடி இருத்தல் ஸ்வர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை –
தினையேனும் தீக்கதிகட் செல்லார் –
சிறிதேனும் கெட்ட வழியிலே போக மாட்டார்கள்
தர்ம புத்திரன் நரக தர்சனம் பண்ணினவோபாதியும் கூடாது இவர்களுக்கு
அஸ்வத்தாமா ஹத குஜ்ஞ்ஞர
நினைதற்கு அரியானை
ஸ்வ பிரயத்தனத்தால்
நினைக்க கூடாதவனும்
சேயானை
நெஞ்சுக்கு விஷயமாகாத படி
தூரச்தனாக இருப்பவனும்
ஆயிரம் பேர்
ஆயிரம் திரு நாமங்களை உடையவனும்
செங்கண் கரியானை கை தொழுதக் கால்
சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவையும் உடையவனுமான பெருமானைக் குறித்து
அஞ்சலி பண்ணினால்
————————————————————————————————————————————————————————————
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் -வேலைக்கண்
ஓராழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்–66-
——————————————————————————–
காலை எழுந்து உலகம் கற்பனவும்
உயர்ந்தவர்கள் சத்வம் வளரக் கூடிய விடியல் காலையில் துயில் எழுந்து அப்யசிப்பனவும்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே
கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
படித்து அறிவு நிரம்பிய
வைதிகோத்தமார்கள்
சாஷாத் கரிக்க ஆசைப்படுவனவும்
கீழ் வேதம் -கர்ம காண்டம்
மேல் வேதம் -ப்ரஹ்ம காண்டம் உபநிஷத்
மேலைத் தலை மறையோர் -வேதாந்திகள் என்றபடி
எவை என்றால் –
வேலைக்கண் ஓராழியான் அடியே
திருப் பாற் கடலிலே
ஒப்பற்ற திரு வாழியை உடையவனாய்
பள்ளி கொண்டு இருக்கும் பெருமான் உடைய
திருவடிகளேயாம்
ஓதுவதும்
மகான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஒர்ப்பனவும்
மனனம் பண்ணப் பெறுவனவும்
எவை என்றால்
பேராழி கொண்டான் பெயர்
பெரிய கடல் போன்ற திரு மேனியைக் கொண்ட
அப்பெருமான் உடைய
திரு நாமங்களே யாம்-
—————————————————————————————————————————————————————————————
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனையே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு–67-
—————————————————————————–
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு
பொங்கிக் கிளறுகின்ற மகா சமுத்ரம் நோக்கியே
ஆறுகளானவை செல்லும்
ஒண் பூ உயரும் கதிரவனையே நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது
உக்கத ஸ்தானத்தில் ஆகாசத்தில்
இருக்கிற சூரியனைக் கண்டே மலரும்
-உயிரும் தருமனையே நோக்கும்
பிராணனும் யமதர்ம ராஜனையே
சென்று சேரும்
இவை போலவே
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
ஞானமானது
அழகிய தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு
வல்லபனான பெருமான் ஒருவனையே சென்று பற்றும்
பகவத் விஷயம் அல்லாத ஞானம் செருப்பு குத்த கற்றது போலேயாம்
தொக்கிலங்கி யாரு எல்லாம் பறந்தோடி தொடு கடலே
புக்கன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டு அம்மா உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -பெருமாள் திருமொழி
முமுஷுப்படி திரு மந்திர பிரகரணம் -73-இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்றதாயிற்று
இதற்கு மா முனிகள் உணர்வு -ஞான மாயனான ஆத்மா
திருமாலுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை இப்பாட்டு உணர்த்தும் என்று காட்டி அருளுகிறார்
ஆக
எம்பெருமானைப் பற்றிய ஞானமே ஞானம்
ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்
மிதுன சேஷத்வமே ஜீவாத்மா லஷணம் -தாமரையாள் கேள்வன் என்பதால்
ஸ்ரீ வைஷ்ணவ பிராணன் யமனை கிட்டி சேராதே சங்கை உண்டே
உயிரும்-பகவத்பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் -அப்பிள்ளை உரை
ஆத்மா வேறு பிராணன் வேறு -சித்தாந்தம்
ஸ்ரீ வைஷ்ணவ ஆத்மா எம்பெருமானைச் சேர்ந்தாலும்
பிராணன் யமனைச் சென்று சேரும் என்பர் சிலர்
மற்றும் சிலர்
யாமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷா ஹ்ருதி ஸ்தித -என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும்
எம்பெருமானையே யமனாகவும் தருமனாகவும் சொல்லி இருப்பதாலே
அங்கு எம்பெருமானே பொருள் என்பர் சிலர்-
————————————————————————————————————————————————————————————————————
உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்–68-
—————————————————————————————
உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
இப்படிப் பட்ட உன்னுடைய பெருமையை
காலதத்வம் உள்ளதனையும் இருந்து ஆராய்ந்தாலும்
அறியக் கூடியவர் ஆர்
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
உனது திவ்யாத்மா ஸ்வரூபத்தை
தான் அறியக் கூடியவர் ஆர்
விண்ணகத்தாய்
பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவனே
மண்ணகத்தாய்-
இந்த மண்ணுலகில் திரு வவதரிப்பவனே
வேங்கடத்தாய்-
திருமலையில் நின்று அருளுபவனே
நால் வேதப் பண்ணகத்தாய்
பண் நால் வேதத்து அகத்தாய்
ஸ்வர பிரதானமான நான்கு வேதங்களாலும்
அறியப் படுபவனே
நீ கிடந்த பால்
ஆர்த்த ரஷணத்துக்காக
நீ பள்ளி கொண்டு இருக்கப் பெற்ற திருப் பாற் கடலை தான்
உணர்வார் ஆர்
யாரும் இல்லை
சர்வஞ்ஞன் உன்னாலும் உணர முடியாதே
தனக்கும் தன் தன்மை அறிவரியான்-
——————————————————————————————————————————————————————–
பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல்அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் –69-
——————————————————————————–
சமத்காரமான கேள்வி
எத்திறம் என்று நினைந்து ஈடுபடும்படியான
ஏழு பிராயத்தில் கோவர்த்தனம் குடையாக பிடித்த
செயலை விட ஆச்சர்யமான
அகடிதகட நா சாமர்த்தியமான செயல்
பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர்-
வேலை நீருள்ளதோ
பிரளய சமுத்ரத்தில் தோன்றிய ஆலம் தளிரா
விண்ணதோ
பிடிப்பு ஒன்றும் இல்லாத ஆகாசத்தில் தோன்றியதா
மண்ணதோ
பிரளயத்தில் கரைந்து போன மண்ணில் நின்றும் தோற்றியதா
சர்வஞ்ஞன் உன்னாலும் கண்டு பிடித்து சொல்ல முடியாத கேள்வி
அதிமாநுஷ சே ஷ்டிதங்களில் குதர்க்கம் பண்ணுதல் தகாது
அல்பபுத்திக்கு அசம்பாவிதமாக தோற்றினாலும்
விசித்திர சக்தனான
அவன் செயல்களில் துராபேஷங்கள் செய்ய அதிகாரம் இல்லை-
———————————————————————————————————————————————————————————-
சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை-நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –70-
————————————————————————————-
சொல்லும் தனையும்
சொல்லக் கூடிய சக்தி உள்ள வரையிலும்
தாமத்தால்
மந்த்ரம் இல்லாத கிரியைகளாலும்
தவறாமல் சரிந்தே போகக் கூடியது உடல்
இதம் சரீரம் பரிணாம பேதலம் பதத்யவச்யம் ச்லதசந்தி ஜர்ஜரம்
அப்படி உடலால் செய்ய முடியாவிடில் வாயாலே திரு நாமங்களை சொல்லலாமே
தொழுவதற்கு சக்தி இல்லா விடில்
திருநாமங்கள் சொல்லும் சக்தி உள்ள வரையில்
புகழ்ந்தீர்கள் ஆகில் அது மிகவும் நன்று
————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply