நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —71-
——————————————————————–
நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
பிணி மூப்பு
வியாதியையும் கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி
மரணத்துக்கும் உப லஷணம்
ஜரா மரணம் மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை
நன்றாக அடியோடு தொலைந்து ஒழியும்படி விட்டும்
கை வலய மோஷத்தைப் பெற்றாலும்
நான்கூழி
நான்கு யுகங்களில் உள்ள -காலதத்வம் உள்ள வரையிலும் –
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் –
ஸ்திரமாக நின்று
பூமி தொடங்கி ப்ரஹ்ம லோகம் வரையிலும்
ஸ்வா தீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும்
பரமைச்வர்யம் கிடைத்தாலும்
உம்மை தொகை அதில் தமக்கு விருப்பம் இல்லாமை காட்டி அருளி
என்றும் விடலாழி நெஞ்சமே
என்றுமே விடாமல் இரு
ஆழி நெஞ்சே -நீயே பகவத் விஷயத்தில் ஆழ்ந்து உள்ளேயே
நான் பிரார்த்திக்க வேண்டியது இல்லை
ஏதோ சொல்லி வைத்தேன்
வேண்டினேன் கண்டாய்
உன்னைப் பிரார்த்திக்கிறேன் காண்
பகவத் விஷயம் அறிந்த நெஞ்சுக்கு உபதேசிக்கிறார்
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போலே
அடலாழி கொண்டான் மாட்டன்பு
தீஷணமான திரு வாழியைக் கையில் ஏந்திய –
கை கழலா நேமியான் –
பெருமான் இடத்தில்
ப்ரீதியை-
————————————————————————————————————————————————————
அன்பு ஆழியானை யணுகு என்னும் நா வவன்தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் -முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்–72-
————————————————————————————
ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது
கரணங்கள் தனித் தனியாக ஆசார்ய பதம் வகித்து
உபதேசிக்க முற்படுகிற படியை பேசி அருளுகிறார் இதில்
அன்பு ஆழியானை யணுகு என்னும்
பகவத் பக்தியே வடிவு எடுத்தது போன்று
இருக்கிற என் நெஞ்சானது
சர்வேஸ்வரனை கிட்டி அனுபவி என்று
எனக்கு உபதேசிக்கிறது –
அன்பு ஒரு வஸ்து நெஞ்சு வேற வஸ்து இல்லாமல்
அன்பு தானே நெஞ்சாக
அறிவுக்கு ஆஸ்ரயமான ஆத்மாவை விஞ்ஞான சப்தம் சொல்வது போலே
நா வவன்தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் –
வாக்கானது அவனது சௌந்தர்ய சாகரமான
திருத் தோள்களைப் பேசி துதி என்று
உபதேசிக்கின்றது
பண்பு ஆழி -அழகுக்கு கடல் போன்ற
பண் பாழி -அழகையும் வலிமையையும் உடைய தோள் என்றவாறு
முன்பூழி காணானைக் காண் என்னும் கண்
கண்களானவை
நாம் அவனை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்புஇருந்த
காலத்தில் உள்ள
வைமுக்யத்தை நிலைமையை
நெஞ்சாலும் எண்ணாத பெருமானை சேவி
என்று உபதேசிக்கின்றன
மகா பாதகன் -அபராதகன் -இன்று ஆஸ்ரயித்தால் நேற்று வரையில் எப்படி இருந்தான்
முற்கால பாபங்களை சிறிதும் ஆராயதவன் -காணான்
எம்பெருமான் -என்றவாறு –
செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
காதுகள் ஆபரணமான ஹாரம் முதலியவற்றை
அணிந்து கொண்டு இருக்கிற
அப்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை கேள்
என்று தூண்டுகின்றன –
————————————————————————————————————————————————————————————-
புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான்–73-
———————————————————-
புகழ்வாய் பழிப்பாய் நீ
ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு
அன்றியே
நிந்திப்பதனாலும் நிந்தி
சிசுபாலாதிகளைப் போலே
பூந்துழாயானை –
அன்றிக்கே
இகழ்வாய்-
அநாதாரித்தாலும் அநாதரி
அன்றிக்கே
கருதுவாய்-
ஆதரித்தாலும் ஆதரி
உனக்கு இஷ்டப் பட்டபடி செய்
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்கு ஒரு குறையும் வாராது காண்
நெஞ்சே
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண
நின்றவா நில்லா நெஞ்சு
கருதுவாய் என் நெஞ்சே என்றும் பாட பேதம்
-திகழ் நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்
விளங்குகின்ற ஜல பூர்த்தியை உடைய சமுத்ரமும்
பர்வதங்களும்
பரம்பிய ஆகாசமும்
வாயுவும்
தேவாதி சரீரங்களும்
அந்தந்த சரீரங்களில் உள்ள பிராணன் களும்
ஆகிய இவற்றை எல்லாம்
தரித்து கொண்டு இருப்பவன் அவ்வெம்பெருமானே காண்
தான் என்ற சொல்லுக்குள் அடங்கும்படி எல்லா வற்றையும் தனக்கு விசேஷணம் ஆகக் கொண்டு உள்ளான் என்றுமாம்
சர்வ தாரகத்வத்தை சொல்லி
நம்முடைய புகழ்வு இகழ்வு எல்லாம் அவனுக்கு அப்பிரயோஜகம் –
——————————————————————————————————————————————————————————–
ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் -கூற்றொருபால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு –74-
—————————————————————————————–
ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரத்வத்தையும்
ருத்ரனின் அபரத்வத்தையும் சொல்லி
சிவனும் எம்பெருமான் உடைய ரஷணத்தில் அடங்கினவன் என்கிறார்
ஏற்றான்
ரிஷபத்தை வாகனமாக உடையவனும்
தமோ குணமே வடிவு எடுத்ததாயும்
மூடர்களுக்கு உவமையாக சொல்லத் தக்கதாயும்
புள்ளூர்ந்தான்
கருடனை வாகனமாக உடையவனும்
வேத ஸ்வரூபி
எயில் எரித்தான்
திரிபுர சம்ஹாரம் பண்ணினவனும்
தன்னை ஆஸ்ரயித்தவர்களின் குடி இருப்பை எரித்தவன்
மார்விடந்தான்
இரணியனது மார்பை பிளந்தவனும்
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் விரோதியை மார்பை பிளந்து ஒழித்தவன்
நீற்றான்
சாம்பலை பூசிக் கொண்டு இருப்பவனும்
தான் பிராயச் சித்தி என்று தோன்றும்படி
நீறு பூசின சர்வாங்கம் உடையவன்
நிழல் மணி வண்ணத்தான் –
நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனும்
ஸ்ரமஹரமான குளிர்ந்த வடிவை உடையவன்
கூற்றொருபால்மங்கையான்
தனது ஒரு பக்கத்தில்
பார்வதியை தரித்துக் கொண்டு இருப்பவனும்
உடலின் பாதி பாகத்தை ஸ்திரீ ரூபம் ஆக்கிக் கொண்டவன்
பூ மகளான்
பெரிய பிராட்டியை திவ்ய மகிஷியாக உடையவனும்
உலகுக்கு எல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாக கொண்டவன்
வார் சடையான்
நீண்ட ஜடையைத் தரித்து உள்ளவனும்
சாதனா அனுஷ்டானம் பண்ணுவது உலகோருக்கு தெரியும் வண்ணம் சடை புனைந்தவன்
நீண் முடியான்
நீண்ட கிரீடத்தை அணிந்து உள்ளவனும்
சர்வேஸ்வரத்வ ஸூசகம்
கங்கையான்
ஜடை முடியில் கங்கையை தரித்து கொண்டு இருக்கும் ருத்ரன்
பரிசுத்தன் ஆவதற்காக கங்கையை தரித்தவன்
நீள் கழலான் காப்பு
நீண்ட திருவடிகளையும் உடையவனான
சர்வேஸ்வரன் உடைய
ரஷணத்தில் அடங்கினவன்
அந்த கங்கைக்கு உத்பத்தி ஸ்தானமான திருவடியை உடையவன்
மாறி மாறி சொல்லி அருளியது வாசி நன்றாக விளங்குவதற்காக-
———————————————————————————————————————————————————————
காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி–75-
—————————————————————————————————–
திருமாலே
உன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
பிரதிபந்தகங்கள் நீங்கப் பெற்று
பிரகிருதி சம்பந்தமும் நீங்கி
திவ்ய லோக பிராப்தியும்
வாய்க்கப் பெறுவார்கள் -என்கிறார் இதில்
கர்மவச்யர் ஆகார் -பரம சாம்யா பத்தியை பெறுவார் என்றவாறு
காப்பு உன்னை உன்னக் கழியும்
பிரதிபந்தங்கள்
பரம புருஷனான உன்னை
ரஷகனாக அனுசந்திக்கும் அளவில்
விட்டு நீங்கும் –
காப்பு -பிரதிபந்தகம்-தடை
பாப சாஷியாக பதினால்வர் நியமிக்கப் பட்டு
சூர்யன்/சந்தரன்/வாயு /அக்னி /த்யுலோகம் /பூமி /ஜலம்
ஹ்ருதயம் /யமன் /அஹஸ் /ராத்திரி /இரண்டு சந்த்யைகள்/தர்ம தேவதை
இப்படிப் பட்ட கர்ம சாஷிகளும் ஆராயக் கடவர் அல்லர் -என்றபடி
அருவினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும்
போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
உன்னை நினைக்கும் அளவில்
அவிழ்ந்து போம்
ஆப்பு -யாப்பு -கட்டு -கரும பந்தம்
-மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை
உன்னை த்யானிப்பவர்களுக்கு
கிழத் தனம் முதலிய ஷட்பாப விகாரங்களும் இல்லை யாம்
உளதாகை/பிறக்கை/மாறுகை/வளர்க்கை/மூப்பு-குறுகை/அழிகை-ஆகிய ஷட் பாவங்களும் இல்லை
திருமாலே
ஸ்ரீ யபதியே
நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தை -வழி காண்பர் –
கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-
——————————————————————————————————————————————————————————————–
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் -பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76
——————————————————————————
வழி நின்று நின்னைத் தொழுவார்
பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள்
வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் –
உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற
ஸ்வரூப ஆவிர்பாவத்தை
உடையராகவே ஆவார்கள்
வழுவா மொழி -வேதம்
அதில் சொல்லப் பட்ட மூர்த்தி யாவது -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம்
ஞ்ஞாநாநந்த விகாசம்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருமங்கை ஆழ்வார் –
பழுதொன்றும்வாராத வண்ணமே
ஒரு குறையும் இல்லாதபடி
விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்
உலகளந்த மகானுபாவன் எழுந்து அருளி இருக்கிற
திருமலையே
ஆஸ்ரிதர்களுக்கு மோஷம் அளிக்கக் காண்கிறோம் அன்றோ
கைமுதிக நியாயம்
அவன் எழுந்து அருளி இருக்கும் திரு மலையே கொடுக்க வல்லது என்றால்
அவன் கொடுத்து அளிப்பான் என்பது சித்தமே
எம்பார் நாள்தோறும் சிற்றம் சிறு காலையில்ஓவாதே இந்த பாசுரம் அனுசந்திப்பாராம் -பெரியவாச்சான் பிள்ளை –
—————————————————————————————————————————————————————————-
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77-
————————————————————————
எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்து அருளி
இருக்கும் படிகளை நாம் அனுசந்தித்தால்
நமது இடர் எல்லாம் நீங்கி விடும் -என்கிறார் இதில்
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதும் ஆனபடிகளை நாம் சொல்ல
நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்கள் எல்லாம் தன்னடையே போம்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்
திருமலையும்
வைகுண்ட மா நகரும்
திரு வெஃகாவும்
அஃகாத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
பூ மாறாத நீர் நிலைகளை உடைய
சிறந்த திருக் கோவலூர் என்கிற
திவ்ய தேசமும்
ஆகிய
நான்கு இடத்தும்
நான்கு திருப்பதிகளிலும்
வரிசை கிரமமாக
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால்
எம்பெருமான்
நிற்பதும்
வீற்று இருப்பதும்
பள்ளி கொண்டு இருப்பதும்
நடப்பதுமாய்
இருக்கிறான் என்று அனுசந்தித்தால்
கெடுமாம் இடர்
துக்கங்கள் எல்லாம்
விட்டோடிப் போய் விடும்
விண்ணகர் பரமேஸ்வர விண்ணகர் வீற்று இருந்த திருக் கோலம் என்பதால்
அத்தை சொன்னதாகவும் கொள்ளக் குறை இல்லை-
—————————————————————————————————————————————————————————
இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த -படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-
———————————————————————-
இடரார் படுவார்
அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்
துக்கத்தை அனுபவிக்க யாரால் முடியும்
என்னால் முடியாது -என்கிறார்
எழு நெஞ்சே
எழுந்திரு
வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை விழுங்குவதாக
தொடர்ந்து வந்த
பெரிய நெஞ்சில் இரக்கம் இன்றியே
கொடுமை பூண்ட முதலையை
தப்பிப் போகாதபடி எண்ணிக் கொன்றவனும்
-படமுடைய பைந்நாகப் பள்ளியான் –
படத்தையும்
பசுமை நிறத்தையும் உடைய
திரு வநந்த ஆழ்வானை
திருப் பள்ளி மெத்தையாக உடையவனுமான எம்பெருமான் உடைய
பாதமே கை தொழுதும்
திருவடிகளை தொழுவோம்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு
கொய்யப்பட்ட புன்னையின்
அழகிய மலர்களைக் கொண்டு
நாம் அவனை ஆஸ்ரயிக்கவே துக்கங்கள் எல்லாம் போம்
துக்கப் படுக்கைக்கு ஆள் இல்லை
ஒருகால் துக்கம் வந்தாலும் அது முதலை பட்டது படும்-
—————————————————————————————————————————————————————–
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
மண் தா என இரந்து மா வலியை-ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து –79-
————————————————————————————
எம்பெருமான் தனது ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டாவது கார்யம் செய்து அருளுபவன்
என்று மூதலிக்க வேண்டி இருக்க
சம்சாரத்தில் அவனை கொண்டாடுபவர் இல்லையே
வஞ்சகன்/ சர்வஸ்பஹாரி /தனக்கு தானம் கொடுத்தவனை பாதாளத்தில் தள்ளினவன் என்பரே
மகாபலியை அஹங்காரி/ ஆசூர பிரகிருதி என்று நினைக்காமல்
ஔதார்ய குணம் ஒன்றாலே கொல்லாமல் விட்டு அருளினானே
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானை
பழிக்கிறார்களே அன்றி
தன்னது அல்லாததை தன்னதாக அபிமானித்துக் கொடுத்த
அந்த மாவலியை
பழிப்பவர்கள் யாரும் இல்லையே
இஃது என்ன அநியாயம் –
மண் தா என இரந்து மா வலியை-
மாவடி நிலத்தை எனக்குத் தா என்று
மாவலி இடத்தில் யாசித்து
ஒண் தாரை நீர் அங்கை தோய
அழகிய நீர் தாரை
தனது அழகிய திருக் கையிலே
வந்து விழுந்ததும்
வடுத்து நிமிர்ந்திலையே
கடுக ஓங்கி வளரவில்லையோ
மாவலி தாரை வார்த்த உதகமும்
ப்ரஹ்மாதிகள் திருவடி விளக்கின உதகமும்
ஏகோதகம் என்னலாம் படி அத்தனை விரைவாக நீ வளர வில்லையோ –
நீள் விசும்பில் ஆரங்கை தோய
பரம்பின மேல் உலகில்
வாழ்கின்ற ப்ரஹ்மாதிகள் உடைய
அழகிய கைகள் ஸ்பர்சித்து
திருவடி விளக்கும்படி –
நீள் விசும்பிலார் அங்கை தோய
விசும்பில் உள்ள தேவர்கள் உனது திருத் தோளில் வந்து அணையும்படியாகவும்
நீள் விசும்பில் ஆரம் கை தோய –
பரந்த விசும்பில் உனது திரு மார்பில் அணிந்திருந்த
முத்தா ஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி
ஓங்கி -என்றுமாம் –
——————————————————————————————————————————————————————–
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த -விடத்தரவை
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள் –80-
————————————————————————–
அடுத்த கடும் பகைஞற்கு
நெருங்கிய கொடிய சத்துருவான
கருடனுக்கு
ஆற்றேன் என்று ஓடி
நேரே நின்று பிழைத்து இருக்கத் தக்க
வல்லமை உடையேன் அல்லேன் என்று
சொல்லிக் கொண்டு
விரைந்து ஓடிப்போய்
படுத்த பெரும் பாழி
எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு
விரித்த
பெருமை பெற்ற
படுக்கை யாகிற சேஷனை
சூழ்ந்த –
சுற்றிக் கொண்ட
விடத்தரவை
விஷத்தை உடைய ஸூ முகன்
என்கிற சர்ப்பத்தை
தேவேந்தரன் சாரதி மாதலி தனது புத்திரி குணகேசி என்பவளுக்கு வரம் தேடி
நாரத மகரிஷி உடன் புறப்பட்டு
பாதள லோகம் போகவதி நகரம் அடைந்து
ஐராவத குலத்தில்-ஆர்யகன் பௌத்ரன் -வாமனன் தௌஹித்ரன் -சிக்ரன் புத்திரன் -ஸூ முகன் நாக புத்ரன்
ஆர்யகன் இவனை கருடன் பஷித்து இவன் தந்தையை யும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக கருடன் சொல்லி இருப்பதை சொல்ல
மாதலி அந்த சுமுகனைஉபேந்திர மூர்த்தி உடன் இருந்த தேவேந்தரன் இடம் கூட்டிச் செல்ல
உபேந்த்ரன் இவனுக்கு அமிர்தம் தரலாம் இஷ்ட பூர்த்தி உண்டாகும் சொல்ல
வலது திருக்கை பாரம் கூட தாங்க முடிய வில்லை கருடனுக்கு
அபராத ஷாமணம் செய்து கொள்ள
வல்லாளன் கைக்கொடுத்த
வலிமை உடைய கருடன் கையிலே
அடைக்கலப் பொருளாக
தந்து ரஷித்த
கருடா சுகமா சொல்லி
குசலப் பிரச்னம் பண்ணுவான் ஆயினான்
மாமேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்
சிறந்த திருமேனி உடைய
எம்பெருமானுக்குத் தவிர
மற்ற தேவதாந்தரங்கட்கு
அடிமை ஆவாரோ –
————————————————————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply