Archive for the ‘நம்பிள்ளை’ Category

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி – –2-1–வாயும் திரையுகளும்-சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)

பூர்வ அனுபூத -முன்னால் அனுபவித்த
முரவைரி குண அபி வ்ருத்த -பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற
பாஹ்ய சங்கம ருசி (-1-10-) –தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)

———————————————————————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-

1-நித்ராதிச் சேதகத்வாத்-
மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—
தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்

2-அரதி ஜநநதோ-
கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–
ஒரு காலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்

3-அஜஸ்ர சங்ஷோப கத்வாத் –
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–
சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்

4-அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-
திவாராத்ரி விபாகமற எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
காரார் திருமேனி காணும் அளவும்

5-விலய விதரணாத்-
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–
முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்

6-கார்யஸ்ய தைந்யாதி கிருதத்வாத் –
நாண் மதியே! நீ இந்நாள் மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–
கார்ஸ்ய தைந்யாதிகளைப் பண்ணுகையாலும்

7-சிந்தா ஷோபாத்–
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—
மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்

8-வி சம்ஜ்ஜீகரணத–
மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–
ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்

9-உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–
காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்

10-த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –
நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று
வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்

———

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

வாயும் திரை யுகள் பிரவேசம் –
முதல் பத்தில் கைங்கர்ய புருஷார்த்தத்தை உபஷேபித்தார்-
இரண்டாம் பத்தில் அதின் களை அறுக்கிறார் –
கீழ்த் திருவாய் மொழியில் பரத்வ ஸுவ்லப்யங்களையும் வடிவு அழகையும் அனுபவித்து
அத்தால் பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அப்போதே அது கிடையாமையாலே ஆர்த்தராய்
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்
தன் பரிசரத்தில் உள்ள பஷிகளையும் தன்னைப் போலே பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவைகளுக்குமாகத் தான் நோவு படுகிறார் –

——-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

முதல் பாட்டு
கிட்டா நின்றுள்ள அலைகளானவை மேலே தாவிப் போகா நிற்கிற கழிக் கரையிலே இருக்கிற
பற்றிற்று விடாத நாராய்
என்னுடைய தாய் உறங்கிலும்
தேவ லோகம் உறங்கிலும்
நீ உறங்காயோ -ஐயோ இது என்ன தஸை
ப்ரேம வியாதியும் வை வர்ண்யமும் மேலே பரம்பும் படி எண்ணெய் போலே நீயும்
ஸ்ரீ யபதியாலே நெஞ்சு பறி யுண்டாய் ஆகாதே -என்கிறாள் -வாயும் திரையுகள் -இத்யாதியால் –

——–

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

இரண்டாம் பாட்டு
தீக்ஷணமான வாக்கையுடைய அன்றில் பஷியே
அபஹ்ருதமான மனஸ்ஸை யுடையையாய்க் கொண்டு தீர்க்கமான யாமங்கள் எல்லாம்
படுக்கையிலே சேராதே சிதிலை யாகா நின்றாய்
என்னைப் போலே நீயும் அநந்த சாயியான அவனுடைய திருவடிகளிலே பட்டுக்
குளிர்ந்த திருத்துழாய் மாலையை ஆசைப் பட்டாயாகாதே -என்கிறாள் -கோட்பட்ட இத்யாதியால் –

———

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

மூன்றாம் பாட்டு
வாராய் கனையா நின்றுள்ள கடலே
ஆசைப்பட்ட பொருள் இழவோடே இரவும் பகலும் நீ முற்றக் கண் உறங்கா இருந்தாய்
பின்னையும் ஹ்ருதயம் நீராய் உருகிக் கூப்பிடா நின்றாய்
அக்னியை முழுக்கத் தென்னிலங்கையை உண்ணப் பண்ணினவனுடைய திருவடிகளை ஆசைப்பட்ட
நான் அபேக்ஷித்தத்தை அபேக்ஷித்தாயோ
நீ வாழ்ந்திடுக -என்கிறாள் காமுற்ற இத்யாதியாலே

——–

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

நாலாம் பாட்டு –
சமுத்ரத்தையும் பர்வதத்தையும் ஆகாசத்தையும் துழாவிக் கொண்டு என்னைப் போலே
சந்த்ர ஸூர்யர்களைக் கொண்டு இருக்கும் இரவும் பகலும் உறங்குகிறாய் இல்லை –
குளிர்ந்த வாடையே
வலி மிக்கு இருந்துள்ள ஆயுத ஸ்ரேஷ்டமான திருவாழியை யுடைய ஸ்வாமியைக் காண்பானாய்
நீ ஸரீரத்திலே பஹு சாலமாக வியாதியை அடைந்தாய் ஆகாதே -என்கிறாள் -கடலும் இத்யாதியால் –

———

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

அஞ்சாம் பாட்டு –
கல்பங்கள் தோறும் இவ்வுலகுக்கு வேண்டும் நீரை முகந்து கொண்டு தோழியையும் என்னையும் போலே
கரைந்து நீராய் நெகிழ்கிற மேகமே -நீ வாழ்ந்திடுக
நீயும் மது ஸூதனனுடைய விரோதி நிரசன சீலத்திலே அகப்பட்டு
அவன் இடத்தில் உண்டான ஆசா பாசத்தாலே நையா நின்றாய் ஆகாதே -என்கிறாள் -நைவாய இத்யாதியால்

————

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

ஆறாம் பாட்டு –
நைவே ஸ்வ பாவமாக இருக்கிற என்னைப் போலே கலா மாத்ரமான சந்திரனே –
நீ இந்நாள் மை போலே இருக்கிற ஆகாஸத்தில் இருளைப் போக்க மாட்டிற்று இல்லை –
மழுங்கிக் குறையா நின்றாய் -ஐயோ இது என்ன தசை
ஐந்து வாயையுடைய அரவணை மேலே கண் வளரா நின்றுள்ள திருவாழியை யுடைய ஸ்வாமியின்
மெய்யான வார்த்தையைக் கேட்டு உன் வடிவில் தேஜஸ்ஸை இழந்தாய் ஆகாதே -என்கிறாள் -நைவாய -இத்யாதியால்

——-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

ஏழாம் பாட்டு
எங்களுக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு நெஞ்சை இழந்தோமாய்க் கொண்டு
எங்களுடைய ஆற்றாமையை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டாய் அழுகிற எங்களைப் பற்ற
நீ நடுவே வந்து சத்ருக்கள் படியிலும் க்ரூரமாய் அநேக காலம் விரோதத்திலே நிலை நிற்பாயோ
நெருங்கின இருளே -நீ வாழ்ந்திடுக -என்கிறாள் -தோற்றோம் இத்யாதியால்

———

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

எட்டாம் பாட்டு –
இருளினுடைய வைரம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய பெரிய நீரை யுடைய கழியே
கெட்டு ஓடிய ஞானத்தை அடைந்து ராத்ரியும் பகலும் உறங்கிலும் நீ உறங்குகிறாய் இல்லை
ஐயோ உருளுகிற சகடத்தை உதைத்த உபகாரகருடைய கிருபையில் உண்டான பேராசையாலே
தரைப்பட்டு நோவு பட்டாய் ஆகாதே -என்கிறாள் -இருள -இத்யாதியால்

——–

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

ஒன்பதாம் பாட்டு-
நோவத் தொடங்கினால் நொந்து தலைக் கட்டுகை அன்றிக்கே இருக்கிற ப்ரேம வியாதியானது
மிருதுவாய் இருந்துள்ள ஆத்மாவைக் குருத்து வற்றாக உலர்த்த
நந்தா விளக்கே –
நீயும் தய நீயையாய் இருந்துள்ள செந்தாமரை போலே விஸ்த்ருதமான கண்களையும்
சிறந்த கனி போலே இருக்கிற திருவதரத்தை யுமுடைய எம்பெருமான்
சாத்தி அருளின அழகிய ஒளியை யுடைய திருத்துழாயை ஆசைப்பட்டு
வேவா நின்றாய் ஆகாதே என்கிறாள் -நொந்தாரா -இத்யாதியால் –

———

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

பத்தாம் பாட்டு –
வெந்து முடியாத ப்ரேம வியாதி யானது ஸூகுமாரமான ஆத்மாவை வெந்த இடம் விறகாக எரிக்கா நிற்க
இரவும் பகலும் ஓயாத படி உன் விஷயத்திலே தானே அபி நிவேசிக்கப் பண்ணி –
நிராசனாய் ஒழிந்தாய் -முகம் காட்டாதே கடக்க நின்றாய் –
கேசியின் வாயைக் கிழித்து
யாமளார்ஜுனங்களுக்கு நடுவே போய்
மஹாபலி அபஹரித்த பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி உப கரித்ததும் அஸாந்தமான உத்யோகத்தை யுடையவனே
இனி மேல் என்னைக் கை விடாதே கிடாய் என்று
வந்து ஸம்ஸ்லேஷித்த ஈஸ்வரனை பிரார்த்திக்கிறார் -வேவேரா -இத்யாதியால்

———

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

நிகமத்தில்
நழுவாமல் இருக்கிற எல்லாப் பொருளுக்கும் காரணமாய் இருக்கிற பரஞ்சோதியின் பொருட்டுத்
தானே அபர்யாப்தமான அபி நிவேசத்தை யுடைய குருகூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஓர் ஆயிரமாகச் சொன்னவற்றுள் இந்தப் பத்தையும் ஒரு பாட்டும் விடாதே அனுசந்திப்பார்
வைகுந்தத்தை விடார் கண்டீர்
இது நிச்சயம் என்று யுக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -சோராத -இத்யாதியால் –

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம்–11-

அவதாரிகை –

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே-
1-அனன்யார்யக சேஷத்வம் -2–அநந்ய சரணத்வம் -3–அநந்ய போக்யத்வம் -4–ததேக நிர்வாகத்வ
5–சம்ச்லேஷத்தில் தரிக்கை -6–விச்லேஷத்தில் தரியாமை -கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே –
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு-மயக்கம் உற்று –
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -11-

வியாக்யானம்–

வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –

ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் -ஆச்சார்ய ஹிருதயம் -132

செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-10–பொருமா நீள் படை–சாரங்கள் —

May 21, 2021

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

———–

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

————–

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

———-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

————–

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

———

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

——–

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

———–

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

———–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

———

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

————-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -10-

அவதாரிகை –

சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு
ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்
இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற
இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும்
ஸ்வபாவன் என்று அவனுடைய
நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –
பொருமா நீள் படையில் அர்த்தத்தை
பெருமாழி சங்கு டையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய்–10–

வியாக்யானம்–
பெருமாழி சங்கு டையோன் பூதலத்தே வந்து –
சத்ருக்கள் மேலே பொரா நிற்கிற
திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
திவ்ய ஆயுதங்களை உடைய சர்வேஸ்வரன்
எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே
சஷூர் விஷயமாம் படி வந்து
பொரு மா நீள் படை என்று துடங்கி
கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை கடாஷித்து
அருளிச் செய்தபடி –

தருமாறு ஓர் ஏது அறத் தன்னை –
நிர்ஹேதுகமாக
தன்னை உபகரிக்கிற
உபாயத்தை –

ஓர் ஏது அறத் தன்னை -தருமாறு-
ஒரு ஹேது இன்றிக்கே
நிர்ஹேதுகமாக
பல ஸ்வரூபனான தன்னையே
தருகிற பிரகாரத்தை –

திறமாகப் பார்த்துரை செய் மாறன் –
அதாவது
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் என் கண்ணுள்ளே வரும் -என்கிற
பக்திக்கும் பரிகணைனைக்கும் ஒக்க முகம் காட்டும்
படிக்கு மேலே
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -என்று
சஹித சஹித
சங்கத
என்று கரை சேர்த்த நிர்ஹேதுக கிருபையை
அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து

அந்த பிரகாரத்தை அருளிச் செய்த ஆழ்வார் உடைய
பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் –
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை
வெளியிட்ட ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி
என் சிரஸ் சார்ந்து பஜித்திடுக –
திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று
என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக–

இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
தாம் ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை
அருளிச் செய்து அருளினார் –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

இத்தம் ஸ்ரீ யபதி க்ருத ஸ்வ ஸமஸ்த தேஹ
சம்ஸ்லேஷ லக்ஷண பலஸ்ய ஸூ துர் லபஸ்ய
பக்த்யாதி வத் ஸ்வ கணநே அபி ச தத் ப்ரஸாதாத்
நிர்ஹேதுக த்வம வதத் தசமே சடாரி -10-பொரு மா நீள்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்
விகணந ஸூலபம்
வ்யக்த பூர்வ உபகாரம்
ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும்
ஸ்வயமுத யஜூஷம்
பந்த மாத்ரோபயாதம்
சிந்தாஸ் துத்யாதி லஷ்யம்
நத ஜன சததஸ் லேக்ஷிணம்
தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே -10-பொரு மா நீள்

1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்-ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணித்
திரு வுலகு அளந்து அருளினை போது அத்யாச்சர்யமாக எல்லாராலும் காணப்படுமவனாய்

2-விகணந ஸூலபம் -எண்ணிலும் வரும் -ஓன்று இரண்டு தொடங்கி இருபத்தஞ்சு இருபத்தாறு -என்று சொன்னால்
இருபத்தாறாவாவன் நான் என்று தன்னைச் சொன்னதாகக் கொண்டு ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –

3-வ்யக்த பூர்வ உபகாரம் எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –
இன்று உபகரிக்கை இன்றிக்கே பூர்வ பூர்வர்களுக்கும் உபகாரகனாய்

4-ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும் -நெஞ்சமே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கொண்டாய் -மனஸ்ஸூ
தன்னிடத்தில் தானே ஐகாக்ர்யத்தை பஜிக்கைக்கு ஹேது பூதனுமாய் –

5-ஸ்வயமுத யஜூஷம்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -எண்ணிக்கை இன்றியே தானே வருவானுமாய் –

6-பந்த மாத்ரோபயாதம்-தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் ஈசன் -மாதா பிதாக்களைப் போலே
சம்பந்த மாத்திரத்தாலே வந்து உதவுமவனாய் –

7-சிந்தாஸ் துத்யாதி லஷ்யம் -சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -சிந்தா ஸ்துதி ப்ரணாமங்களுக்கு லஷ்யமுமாய்

8-நத ஜன சததஸ் லேக்ஷிணம்-இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் -ஆஸ்ரிதரை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிவில்
தரிக்க மாட்டாதவனாய் –

9-தர்சி தார்ச்சம் -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற -அதுக்கு உதாஹரணமாக தான் திருக் குறுங்குடியிலே
நின்று அருளின படியைக் காட்டுமவனாய் –

10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறவாதபடி மனசிலே ஜாகரூகனுமாய் இருக்கிற
ஸ்ரீ பெருமாளை அனுசந்தித்து

ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே – தன்னைத் தந்த கற்பகம் -என்கிறபடியே தன்னை அனுபவிக்க விதரணம் பண்ணுகிற
அவனுடைய மஹா உதார குணத்தால் -பொரு மா நீள் படை -என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அதி ஸந்துஷ்டரானார் -என்கிறார் –

—————

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம் -11-

இப்படி பிரதம சதகத்தில் பத்து சதகங்களாலும் பிரதி பாதிதங்களான அர்த்தங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார்
1-ஆதா வித்தம் பரத்வாத்–சர்வ ஸ்மாத் பரனாகையாலும்

2-அகில சமதயா–சர்வ சமனாகையாலும்

3-பக்த ஸுலப்ய பூம்நா–ஆஸ்ரித ஸூலபனாகையாலும்

4-நிஸ் சேஷாகஸ்சஹத்வாத்–சர்வ அபராத சஹனாகையாலும்

5-க்ருபண ஸூகட நாச்சாக்ய–ஸூ சீலனாகையாலும்

6-சம்ராத நத்வாத் –ஸ்வா ராதனாகையாலும்

7-ஸ்வாது ஸ்வோபாச நத்வாத்–ஸூக ரூப உபாசகனாகையாலும்

8-ப்ரக்ருதி ருஜு தயா–ருஜு பிரகிருதி ஆகையாலும்

9-சாத்ம்ய போக ப்ரதத்வாத் –சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கையாலும்

10-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-9–இவையும் அவையும் உவவையும்–சாரங்கள் —

May 21, 2021

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

————

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

——–

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

————

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

———

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

———–

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

———-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

————

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

————

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

———-

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

———–

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -9-

இதில் எம்பெருமான் உடைய
சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்
தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான
நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்
அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும்
இவன் ஒருவனுடனே
சர்வ இந்த்ரியங்களாலும்
சர்வ காத்ரங்களாலும்
பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற
இவையும் அவை யில் அர்த்தத்தை
இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஆர்ஜவம் உடன் -கலந்தார் -சொல்லி –
நம்முடன் கலப்பனோ -திருஷ்டாந்தம் -தம்முடன் கலந்து -அவர்கள் ஓர் ஓர் பிரகாரம் -இங்கு போலே அங்கு இல்லையே

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9–

வியாக்யானம்-–

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
சர்வேஸ்வரன்
ஹ்ருஷ்டனாய்
சாத்மிக்க சாத்மிக்க
சர்வ அவயவங்களிலும்
சம்ச்லேஷிக்கும் ரசம் தன்னை பெற்று
பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்-செறிப்பு -கலக்கம் -தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சராமோ வாநரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே
1-அருகல் இலானே
2-ஒழிவிலன் என்னோடு உடனே –
3-கண்ணன் என் ஒக்கலையானே-
4-மாயன் என் நெஞ்சின் உளானே
5-என்னுடைத் தோள் இணையானே
6-என்னுடை நாவின் உளானே
7-கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
8-என் நெற்றி உளானே
9-என் உச்சி உளானே –
என்று -10-தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
பிராட்டி- திருவடி – திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று
அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை
கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் யுடைய
ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –
பொரு -என்று ஒப்பாய்
அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி -9-இவையும்

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -9-இவையும்

1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –

2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-

3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –

4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –

5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்

6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்

7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –

8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்

9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –

10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்

ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –

——————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-8–ஓடும் புள்ளேறி–சாரங்கள் —

May 21, 2021

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

————–

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

———–

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

———

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

———–

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

———–

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

———–

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

———-

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

———–

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

———–

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே —1-8-10-

———-

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -8-

அவதாரிகை –

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற
ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்த
ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும்
ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத்த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி
இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன்
என்கிற –ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8–

வியாக்யானம்–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி –
சஞ்சலமாய்
நின்றவா நில்லா நெஞ்சும் –
அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே
செவ்வை கெட நடக்கும்
குடிலரோடு கூடிக் கலந்து –

நெடுமால் அடிமை கொள்ளும் நிலை —
சர்வ ஸ்மாத் பரனானவன்
அடிமை கொள்ளும் ஆர்ஜவ ஸ்வபாவத்தை –

நாடறிய ஒர்ந்து –
நாட்டார் அறியும் படி ஆராய்ந்து –

அவன் -தன் செம்மை-
தெனதே தம நுவ்ரதா-
ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா –
என்னும் படியான அவனுடைய ஆர்ஜவத்தை

உரை செய்த –
அருளிச் செய்த –
அதாவது
ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும்
நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அருளிச் செய்தார் -என்கை-
இப்படி உரை செய்த –
மாறன் என –
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த
ஆழ்வார் என்று அனுசந்திக்க –

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –
ஸ்வரூப அனுரூபமான
சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி
சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி
நிலை நிற்கும் –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந -8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்
சந்தர்ஸ்ய –வெளிப்படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்

1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்

2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்

3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்

4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்

5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்

6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்

7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்

8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்

9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –

10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற

நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-7–பிறவித் துயர் அற–சாரங்கள் —

May 21, 2021

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

———–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

———-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

——–

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

———-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

———

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

———–

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

——–

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

———–

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

———–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

———–

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -7-

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயண ரச்யதையை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே
அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று
ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே
பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும்
ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே
ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை
பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு–7–

வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் –
ஜன்ம சம்பந்தம் அற்று
நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே
நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுஹ்ரகிக்கும் ஸ்வ பாவனான
ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –

ஏவம் விதனானவன்
அறவினியன் பற்றும் அவர்க்கு என்று-
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி –

மற்றும் அவனுடைய போக்யதைக்கு அனுகுணமாகும் படி
ஆழிப் படை அந்தணனை -என்றும்
ஒண் சுடர்க் கற்றையை என்றும்
விடுவேனோ என் விளக்கை -என்றும்
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –என்றும்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -என்றும்
அருளிச் செய்தவையும் தத் சேஷங்களாகக் கடவது –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு-
குணைர் விருருசே ராம-என்னும்படி
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று
இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று
நெஞ்சே
சீக்ர கதியாகச் சென்று பற்று –
முந்துற்ற நெஞ்சாய்
அங்கே பற்றும் படி ஓடு-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -7-பிறவித்துயர் –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –

1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-

2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –

3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –

4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –

5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-

6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –

7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்

8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –

9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்

10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற

ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –

————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-6–பரிவதில் ஈசனைப் பாடி–சாரங்கள் —

May 21, 2021

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

———-

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

———–

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

———

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

——–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

———

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

———-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

———–

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

————-

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

——–

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

——-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

————

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -6-

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்
ஸ்ரீ யபதியான பரி பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்
ஷூத்ர உபகரணான இவனால்
பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை –பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் –

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு–6–

வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் –
ஹேய பிரத்ய நீக கல்யாணை
கதானான சர்வேஸ்வரன் யுடைய
ஸ்வ ஆராதன ஸ்வ பாவத்தை –

பண்புடனே பேசி –
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம்
ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி –புரிவதும் புகை பூவே –
என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே
பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-
வாமனன் சீரை இராமானுசன் உரைத்தான் -வாமனன் சீலன் ராமானுசன் -அவன் சீலம் இவருக்கும் என்றதுபோலே

அரியனலன் ஆராதனைக்கு என்று –
இப்படி பத்ர புஷ்பாதிகளாலே –
ஸ்வ ஆராதனாகையாலே ஆஸ்ரயிக்கும் இடத்தில்
சபர்யா பூஜிதஸ் சமயக் -என்னும்படி-சபரிக்கு எளியவன் -அன்றோ –
ஸபர்யைக்கு அருமை இல்லாதவன் என்றபடி -ச பர்யை-நல்ல கைங்கர்யத்துக்கு எளியவன் என்றுமாம் –

உரிமையுடன் ஓதி யருள் மாறன் –
அந்தரங்கமான
சிநேகத்தோடு அருளிச் செய்த ஆழ்வார்-திருக்கைத் தல சேவை பராங்குச நாயகிக்கு மட்டுமே உண்டே
அதாவது –
எது ஏது என் பணி என்னாது அதுவே யாட் செய்யுமீடே -என்றும்
உள் கலந்தோர்க்கு ஓர் அமுதே -என்றும்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்றும்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-என்றும்
அவனைத் தொழுதால் -என்றும்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றும்
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் செய்தவை -என்கை –

ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –
இப்படி உபதேசிக்கையாலே
இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்
பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை
ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமஸ்ய
பக்தி பரம் பஹு மதா தத ஏவ சோ அயம்
ஸ்வாராத இத்யுபதிதேச முநிஸ்து ஷஷ்டே-6-பரிவதில் –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

அக்ரீதைரர்ச்ய பாவாத்
அநியத விவிதாப் யர்ச்சநாத்
அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத்
ஸ்வ விஷய நியதேஷ் வாதராத்
ஸ்வாது பூம்நா
பாதா சக்த ப்ரசக்தேஸ்
சக்ருது பசத நே மோக்ஷணாத்
தர்ம ஸவ்ஸ்த்யாத்
ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத்
ஸூகரபஜநதாம் மாதவஸ்யாப்யதத்த–6-பரிவதில்

1-அக்ரீதைரர்ச்ய பாவாத் -நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே -அர்த்தவ்யயம் பண்ணி சம்பாதிக்க வேண்டாத படி
ஸூலபமான புஷ்ப சலிலாதிகளால் பூஜிக்கப் படுமவனாகையாலும் –

2-அநியத விவிதாப் யர்ச்சநாத் -எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே -அதிகாரி நியமம் இல்லாதபடி
பஹு விதிமான பூஜனத்தை யுடைத்தாகையாலும்

3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்புமில் ஈசன் -இது யோக்யம் -இது அயோக்யம் -என்னாதே நாம் செய்கிறது
அல்பமானாலும் அத்தாலே ப்ரீதனாகையாலும் –

4-ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத் -வணங்கி வழிபடும் ஈசன்-பிரஹ்வீ பாவத்தால் தானே ஆவர்ஜிக்கப் படுமவனாகையாலும்

5–ஸ்வ விஷய நியதேஷ் வாதராத் -உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்
இடத்திலே ஆதர யுக்தனாகையாலும்

6–ஸ்வாது பூம்நா -அமுதிலும் ஆற்ற இனியன் -அத்யந்த போக்யனாகையாலும்

7-பாதா சக்த ப்ரசக்தேஸ் -தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே-தன் திருவடிகளைத் தலையாலே வணங்கினவர்கள்
இடத்திலே மிகவும் பிரசாதத்தைப் பண்ணுமவனாகையாலும் –

8-சக்ருது பசத நே மோக்ஷணாத்-அவனைத் தொழுதால் இத்யாதி -ஒருகால் உபசத்தி பண்ணினார்க்கு விரோதி நிரசன பூர்வகமாக
அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கையாலும்

9-தர்ம ஸவ்ஸ் த்யாத்-தருமவரும் பயனாய்-தர்மங்களினுடைய பரம பல ரூபனாய் இருக்கையாலும்

10-ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -விரோதிகளை நிரசிக்கும் இடத்தில்
ஒரு க்ஷணத்தில் தானே போக்குகையாலும் –

ஸூகர பஜநதாம் மாதவஸ் யாப்யதத்த– ஸ்ரீ எம்பெருமான் ஸ்வாராதன் -என்று பரிவதில் ஈசனை என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளுகிறார் என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-5–வள வேழுலகின் முதலாய–சாரங்கள் —

May 21, 2021

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

———–

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

———

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-

————

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

———–

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

————

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

———–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-

————

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -5-

அவதாரிகை –

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக
சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை
அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து
ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று
த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி
தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை
வளம் மிக்க -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-

வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை –மன்னுயிரின் தண்மை –
அதாவது –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரி நிர்வாகத்தால் வந்த
சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய்
அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை
கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –

உளமுற்று –
எம்பெருமான் யுடையவும்
தம்முடையவும்
உத்கர்ஷ அபகர்ஷங்கள்
திரு உள்ளத்திலே பட்டு

அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில்
நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி-1-5-1-
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் -1-5-7-ஆராய்ந்து
இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –

தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்
ந கல்வத்யைவ
யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே
நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை
பண்ண எண்ணுகிற ஆழ்வாரை

நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும்
ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விச்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை

மால் –
தன் செல்லாமையைக் காட்டி
ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் –
நெடுமாலே –
மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –

நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான
நித்ய விசதக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-

பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ச்நிக்தநோபாதியாக ச்நேஹித்து மங்க விடாமல்
அலாப்ய லாபமாக ஹர்ஷத்துடனே
சங்கதாராக பண்ணினான்
திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி
இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

————

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸ்வ ஆலிங்க நாதி சபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிரதி போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாமத பஞ்சமே அபூத்-5-வள வேழ் உலகு –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்–5-வள வேழ் உலகு –

1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –

2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்

3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –

4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –

5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –

6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்

7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்

8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்

9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்

10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-

————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-4–அஞ்சிறைய மட நாராய்–சாரங்கள் —

May 21, 2021

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

———-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

———–

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

—————

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

———————

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

————

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

————-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

———-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

———–

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

———

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

———

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -4-

அவதாரிகை –

இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று
தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து
அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே
பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான
அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை
கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று
தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே
சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம் -4-அஞ்சிறைய

வியாக்யானம்–

அஞ்சிறைய புட்கள் தமை-
விலஷணமான பஷங்களை உடைய பஷிகளை
அஞ்சிறைய மட நாராய் -என்று இ றே அருளிச் செய்தது –

புட்கள் -என்றது –
இனக் குயில்காள் –
மென்னடைய அன்னங்காள் –
நன்னீலமக அன்றில்காள் –
வண் சிறு குறுகே-
ஆழி வரி வண்டே –
இளங்கிளியே
சிறு பூவாய் –
என்று இப்படி அருளிச் செய்தவற்றை —

யாழியானுக்கு நீர் –
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இ றே –

நீர் –
வ்யூஹத்தையும் பேதித்துக் காண வல்ல நீங்கள் –

என் செயலைச் சொல்லும் என விரந்து-
என் செயலை தர்சிப்பியுங்கோள் என்று அர்த்தித்து –

என் செயலாவது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -என்றும்
என்நீர்மை -என்றும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது -என்றும்
மல்கு நீர் கண்ணேர்க்கு -என்றும்
அவராவி துவரா முன் -என்றும் –
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்தமை –
என் பிழையே நினைத்து அருளி
அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
என்று ஒரு வாய்ச் சொல் -என்று
அவன் அபராத சஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும் இதில் ஸூசிதம் –
இப்படி ஆற்றாமையை ஆவிஷ்கரித்து –
விஞ்ச நலங்கியதும் –
மிகவும் நலம் குலைந்ததும்

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –
ஆழ்வார் இங்கே
இவ்விடத்திலே
கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே
அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்
பக்தி அதிசயம் –
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

வளம் -பெருமையும் சம்பத்தும்
நலங்குதல் -நலம் கேடு
மலங்குதல் -திண்டாட்டம் –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே -4-அஞ்சிறைய

தத் காங்ஷித –ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து

————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -4-அஞ்சிறைய

1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்

2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –

3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-

4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-

5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-

6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்

7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –

8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-

9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-

10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –

ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———–

ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -5-

1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –

2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –

3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –

4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –

5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –

6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –

7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த

8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –

9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –

10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –

ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –

—————-————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-3–பத்துடை யடியவர்க்கு எளியவன்–சாரங்கள் —

May 21, 2021

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

——–

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

——–

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

———-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

————–

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

————-

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

———–

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

————

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

———–

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

———–

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

————-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -3-

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு
பஜிககத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை
பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை–3-

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால் –

பத்துடையோர்க்கு -பக்திமான்களுக்கு
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
பத்துடை அடியவர் -என்றார் இ றே –
ஏவம் வித பக்தி உக்தருக்கு

என்றும் –
சர்வ காலத்திலும் –

பரன் –
யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் –
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-
என்றும் சொல்லப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன்

எளியனாம் –
வாயு ஸூநோ -என்றும்
இமௌஸ்ம -இத்யாதிப் படியே -எளியனாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் மத்துறு கடை வெண்ணெய் களவினில்

உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
என்னும்படி கட்டவும் அடிக்கவும் படி எளியனாம் -ஸூலபனாம் –

அது எத்தாலே என்னில் –
பிறப்பால் –
அவதாரத்தாலே
பல பிறப்பாய் ஒளி வரும் என்றத்தை நினைக்கிறது –

முத்தி தரும் –
அவதரித்த இடத்தே
பஷிக்கும்
ரஷஸ் ஸூக்கும்
மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

மா நிலத்தீர் –
அவன் அவதரிக்கைக்கு ஈடான இந்த மகா பிருதிவியில்
உள்ளவர்களே –

மூண்டவன் பால் -பத்தி செய்யும்-
விதி ப்ரேரிதராய் அன்றிக்கே அத்யந்த
அபி நிவேச யுக்தராய்
பரத்வ சௌலப்யத்வாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளிலே
பக்தியைப் பண்ணுங்கோள்-

என்று உரைத்த-
என்று அருளிச் செய்த –
இத்தால் -நன்று என நலம் செய்து அவனிடை -என்றத்தை
அனுபாஷித்த படி –

பத்தி செய்யும்-என்று உரைத்த-மாறன் தன் இன் சொல்லால் போம் –
அவதார சௌலப்யத்தை முன்னிட்டு
ஆஸ்ரயிங்கோள் -என்று ஆழ்வார்
ஸ்ராவ்யமாக அருளிச் செய்த
இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே
நிவ்ருத்தமாம் –

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த
ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம்
பண்ணின படி –
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இறே-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரணத்ரயதஸ் த்ருதீயே –3- பத்துடை அடியவர்

—————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–3- பத்துடை அடியவர்

1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –

2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –

அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்

4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்

5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்

6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்

7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்

8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-

9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –

10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்

எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

—————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-2–வீடு மின் முற்றவும்–சாரங்கள் —

May 21, 2021

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

————

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

————-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

————–

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

—————

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

————-

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

———-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

————

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

———–

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

———

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

————

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -2-

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே
அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அனுவதித்து -என்றுமாம் –
அது எங்கனே என்னில்
கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு
பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை
வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி
பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்
அஹங்கார ஹேதுக்களாய்
உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இ றே
வீடுமின் முற்றவும் வீடு செய்து –என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்
அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இ றே இருப்பது
அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்
சர்வ ஸ்மாத் பரனான
நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் ––
வீடு செய்மின்
இறை யுன்னுமின் நீரே
என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இ றே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு –நலத்தால் அடைய –என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்
என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் –
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்
பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்
நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்
தர்ச நீயமான
உதாரமான
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே
இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழு படி –
இடைக்காதர் வள்ளுவர் ஔவையார் -குரு முநிவர் -பாசுரங்களே பீஜம் -என்கிறார்கள்

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று
சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை
ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே
பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்-

பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216
கிரியை -வினைச் சொல்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இ றே
வீடுமின் –என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதயத்திலே -சூர்ணிகை -219–நாயனாரும் அருளிச் செய்தார் –

த்யாஜ்யம் -வீடு மின் முற்றவும் -தோஷம்- மின்னின் நிலையில -பரித்யாகம் நீர் நுமது -என்று பிரித்து -மேலே –
உபாதேயம் வீடு உடையான் -குணம் எல்லையில் அந்நலம்-சமர்ப்பணம் -இறை சேர்மினே -என்று கொள்ள வேண்டும்
இத்தை பக்தி பரமாக யோஜித்து-பாஷ்யகாரர் பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு
பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்-இவரும் அப்படியே அருளிச் செய்தார்–

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் –

———————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

—————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்