வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-
—————
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-
———–
மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-
———
தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-
————
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-
———–
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-
————–
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-
————
உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-
————
மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-
————
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-
———–
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-
————
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -5-
அவதாரிகை –
இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக
சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை
அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து
ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று
த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி
தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை
வளம் மிக்க -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-
வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-
வியாக்யானம்–
வளம் மிக்க மால் பெருமை –மன்னுயிரின் தண்மை –
அதாவது –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரி நிர்வாகத்தால் வந்த
சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய்
அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை
கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –
உளமுற்று –
எம்பெருமான் யுடையவும்
தம்முடையவும்
உத்கர்ஷ அபகர்ஷங்கள்
திரு உள்ளத்திலே பட்டு
அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில்
நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி-1-5-1-
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் -1-5-7-ஆராய்ந்து
இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –
தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்
ந கல்வத்யைவ
யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே
நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை
பண்ண எண்ணுகிற ஆழ்வாரை
நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும்
ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விச்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை
மால் –
தன் செல்லாமையைக் காட்டி
ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் –
நெடுமாலே –
மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –
நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான
நித்ய விசதக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-
பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ச்நிக்தநோபாதியாக ச்நேஹித்து மங்க விடாமல்
அலாப்ய லாபமாக ஹர்ஷத்துடனே
சங்கதாராக பண்ணினான்
திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி
இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-
————
ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–
ஸ்வ ஆலிங்க நாதி சபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிரதி போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாமத பஞ்சமே அபூத்-5-வள வேழ் உலகு –
——–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–
ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்–5-வள வேழ் உலகு –
1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –
2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்
3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –
4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –
5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –
6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்
7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்
8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்
9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்
10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்
ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-
————–————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply