அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
———-
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-
———–
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-
—————
என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-
———————
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-
————
அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-
————-
என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-
———-
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
———–
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-
———
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-
———
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -4-
அவதாரிகை –
இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று
தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து
அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே
பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான
அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை
கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று
தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே
சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —
அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம் -4-அஞ்சிறைய
வியாக்யானம்–
அஞ்சிறைய புட்கள் தமை-
விலஷணமான பஷங்களை உடைய பஷிகளை
அஞ்சிறைய மட நாராய் -என்று இ றே அருளிச் செய்தது –
புட்கள் -என்றது –
இனக் குயில்காள் –
மென்னடைய அன்னங்காள் –
நன்னீலமக அன்றில்காள் –
வண் சிறு குறுகே-
ஆழி வரி வண்டே –
இளங்கிளியே
சிறு பூவாய் –
என்று இப்படி அருளிச் செய்தவற்றை —
யாழியானுக்கு நீர் –
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இ றே –
நீர் –
வ்யூஹத்தையும் பேதித்துக் காண வல்ல நீங்கள் –
என் செயலைச் சொல்லும் என விரந்து-
என் செயலை தர்சிப்பியுங்கோள் என்று அர்த்தித்து –
என் செயலாவது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -என்றும்
என்நீர்மை -என்றும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது -என்றும்
மல்கு நீர் கண்ணேர்க்கு -என்றும்
அவராவி துவரா முன் -என்றும் –
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்தமை –
என் பிழையே நினைத்து அருளி
அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
என்று ஒரு வாய்ச் சொல் -என்று
அவன் அபராத சஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும் இதில் ஸூசிதம் –
இப்படி ஆற்றாமையை ஆவிஷ்கரித்து –
விஞ்ச நலங்கியதும் –
மிகவும் நலம் குலைந்ததும்
மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –
ஆழ்வார் இங்கே
இவ்விடத்திலே
கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே
அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்
பக்தி அதிசயம் –
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –
வளம் -பெருமையும் சம்பத்தும்
நலங்குதல் -நலம் கேடு
மலங்குதல் -திண்டாட்டம் –
———–
ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–
தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே -4-அஞ்சிறைய
தத் காங்ஷித –ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து
————–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-
த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -4-அஞ்சிறைய
1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்
2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –
3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-
4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-
5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-
6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்
7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –
8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-
9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-
10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –
ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
———–
ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -5-
1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –
2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –
3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –
4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –
5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –
6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –
7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த
8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –
9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –
10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –
—————-————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply