ஸ்ரீ நம்மாழ்வார் -நம் குலபதே-நம் சடகோபனை பாடினாயோ –
பாடினார் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அருள் மாரி–ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -படைத்தான் கவி –திருமாலவன் கவி –வேதம் தமிழ் செய்த மாறன் —
சடாரி உபநிஷதாம் உப காந மாத்ர போக –ஸ்ரீ மன் நாத முனிகள்
யம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை–
குருகூர் சடகோபன் பண்ணிய தமிழ் வேதம் பணிப் பொன் போலே சர்வாதிகாரம் —
ஓ ஒ உலகின் இயல்வே என்று இதர புருஷார்த்தங்களையும் உபாயாந்தரங்களையும் வெறுத்து –
பரம புருஷ ஏக பரமாய் இருக்குமே —
சம்ஸ்க்ருத வேதம் கட்டிப் பொன் போலே-ஸமஸ்த புருஷார்த்தங்களையும் உபாயாந்தரங்களையும் சொல்லுமே –
ஆகவே இவை சுடர் மிகு சுருதி -வேதாந்த பரமாய் இருக்குமே
ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட
சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திருவிருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திருவாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்
வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்
சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்
———————-
அவதாரிகை —
ஸ்ரீ திருவாசிரியமாகிற திவ்ய பிரபந்த தர்சியாய் -தேசிகராய் இருக்கிறவரை -நிர்மலமான ஹ்ருதயத்தில் வைத்து
விஸ்ம்ருதி இன்றிக்கே நிரந்தர மங்களா சாசனம் பண்ணுங்கோள் –என்கிறது
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்—(ஸ்ரீ யஜ்ஜ மூர்த்தி )- அருளிச் செய்த தனியன்-
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-
காசினியோர் தாம் -இப்பூமியில் உள்ள மநுஷ்யர்கள்
வாழ -உய்யும் பொருட்டு
கலி யுகத்தே -கலி யுகத்திலே
வந்து -பரமபதத்தில் நின்றும்
உதித்து-அவதரித்து
ஆசிரியப் பா வதனால் -ஆசிரியப்பா என்னும் பாட்டுக்களாலே
அரு மறை நூல் விரித்தானை-சிறந்த வேதமாகிய ஸாஸ்த்ரத்தை பரப்பியவரும்
தேசிகனை -எல்லாருக்கும் ஆசார்யரும்
திகழ வகுளத் தாரானை-விளங்கா நின்றுள்ள மகிழம் பூ மாலையை அணிந்தவருமான
பராங்குசனை -நம்மாழ்வாரை
மாசடையா மனத்து வைத்து -அழுக்கு அற்ற மனஸ்ஸிலே வீற்று இருக்கச் செய்து
மறவாமல் வாழ்த்துதுமே-மறவாதபடி மங்களா ஸாஸனம் பண்ணக் கடவோம்
காசினியோர் தாம் வாழ –
நேரே கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத பூமியில் உண்டான மனுஷ்யர் ஜீவிக்க –
(கண்டதே காட்சி -லோகாயுத மதஸ்தர் மலிந்த )
கலி யுகத்தே வந்து உதித்து–
கலவ் புந பாபரதாபி பூதே பக்தாத்மநா ச உத்பபூத –ஸ உத் பபூவ
(பாபத்திலேயே ஈடுபட்ட மனிதர்கள் நிறைந்த கலி காலத்திலே அந்த பகவான் பக்த ரூபியாகத் தோன்றினார்)–என்கிறபடியே
ஞானத்துக்கு அடைவு இல்லாத கலி காலத்தில் யுக வர்ண க்ரம அவதாரம் என்னலாம் படி
ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தார் யாயிற்று
(க்ருத யுகம் -ஸ்ரீ தத்தாத்ரேயன் -ஸ்ரீ பரசுராமன் ப்ராஹ்மண வர்ணம்
த்ரேதா யுகம் –ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -ஷத்ரிய வர்ணம்
த்வாபர யுகம் -முடி உரிமை இல்லா வைஸ்ய பிராயர் ஸ்ரீ வாசுதேவ -சாஷாத் வைஸ்யரான
ஸ்ரீ நந்த கோபன் இளம் குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனாகவும்
கலி யுகம் -சதுர்த்த வர்ணம் -காரியாருக்கும் உடைய நங்கையாரும் திருக் குமாரராக )
வந்து உதித்து
லோகாந்தரத்தில் நின்றும் இங்கே வந்து திருவவதரித்தார் என்னுமது தோற்றுகிறது –
முன்னம் வந்து உதித்து–(உபதேச ரத்ன -7)-என்கிறபடியும் –
வகுள பூஷண பாஸ்கர ( ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4-) உதயம் இறே
மேலே வகுளத் தாரானை-என்று இறே இருக்கிறது –
(ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-)
(யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)
திரு அவதரித்துச் செய்த கார்யம் இன்னது என்கிறது மேல்
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை-
தமிழுக்கு வெண்பா இத்யாதி அநேகம் பாக்கள் உண்டாய் இருக்கவும்
ஆசிரியப்பாவாலே யாயிற்று திருவாசிரியம் செய்து அருளினது
அரு மறை நூல் விரிக்கை யாவது
அரிய வேதம் ஆகிற சாஸ்திரத்தை விஸ்திருதமாக்கி –
அதுவே நிரூபகமாம் படி யானவரை –
அரு மறை நூலை வண் தமிழ் நூல் –திருவாய்-4-5-10-ஆக்கினவரை –
(உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-)
தேசிகனை பராங்குசனை
வேதார்த்த தர்சியான-சாஷாத்கரித்த – ஸ்ரீ பராங்குச தேசிகரை –
திகழ வகுளத் தாரானை
விளங்கா நின்ற திரு மகிழ் மாலையைத் திரு மார்பிலே உடையவரை
தண் துளபத் தாரானை -என்னுமா போலே –
தாமம் துளபமோ வகுளமோ -என்னக் கடவது இறே
சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமாம் பாராங்குசனோ நாரணனோ
தாமம் துளபமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளதோ பெருமான் உனக்கு –
மாசடையா மனத்து வைத்து
மாசற்றார் மனத்துளானை –திருமாலை -22-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாமே–திருவாய் -9-2-4-இத்யாதிகள் படியே
நிர்மலமான மனஸ்ஸிலே வைத்து
வண் குருகைக் கோனாரும் நம்முடைக் குடி வீற்று இருந்தார் -என்னும்படி ச ஹ்ருதயமாக வைத்து –
விஷய வைராக்யமுடைய பரம ஹம்ஸராகையாலே மானஸ பத்மாஸனத்தில் இறே இருப்பது
(பேசிற்றே பேச லல்லால் பெருமை யொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்-திருமாலை -22-)
(புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-)
வகுளத் தாரானை மாசடையா மனத்து வைத்து
நாள் கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன் —திருவாய் -4-10-11-என்னும்படியான நம்மாழ்வாரை
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -18-என்னும்படி
ஸூபாஸ்ரயமாகக் பாவித்து பக்தி பண்ணி வைத்து
(ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-)
(எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –)
மறவாமல் வாழ்த்துதுமே-
விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்
அவரும்
ஊழி தொரு ஊழி ஓவாது வாழிய வென்று யாம் தொழ இசையுங்கொல்–ஸ்ரீ திருவாசிரியம் -4-என்றார் இறே
இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே
ஸூபாஸ்ரயம் என்னுமத்தையும்
மங்களாஸான விஷயம் என்னுமத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –
—————
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை
ஸ்ரீ திருவிருத்தத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
(மயர்வற மதி நலம் அருளினான் என்கிறபடியே )
அவனுடைய நித்ய விபூதி யோகத்தையும் லீலா விபூதி யோகத்தையும் அனுசந்தித்து –
நித்ய விபூதியில் உள்ளார் நிரதிசய அனுபவமே யாத்ரையாய் இருக்கிற படியையும்
அது உண்டு அறுக்கைக்கு ஈடான ஆரோக்யத்தை உடையராய் இருக்கிற படியையும்
இவ் வருகு உள்ளார் கர்ம பரதந்த்ரராய் –இதர விஷயங்களில் பிரவணராய் -தண்ணியதான தேஹ
யாத்திரையே போகமாய் இருக்கிறபடியையும் அனுசந்தித்து –
ப்ராதாக்களில் சிலர் ஜீவிக்க ஒருவன் குறைய ஜீவிக்கப் புக்கால் தன் குறையை அனுசந்தித்து வெறுக்குமா போலே
ஸ்ரீ சர்வேஸ்வரனுடன் நித்ய அனுபவம் பண்ணுவார்களோடு ஓக்க தமக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
தாம் அத்தை இழந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –
இதுக்கு அடி தேஹ சம்பந்தம் -என்று பார்த்து
இத்தைக் கழித்துக் கொள்ளலாம் வழி தன் பக்கல் ஒன்றும் காணாமையாலே
இந்த பிரகிருதி ப்ராக்ருதங்களினோட்டை சம்பந்தத்தை அறுத்துத் தர வேண்டும் என்று
அவன் திருவடிகளில் விண்ணப்பம் செய்தார்
இது பின்னை பொய்ந்நின்ற ஞானமும் –இத்யாதி முதல் பாட்டுக்கு கருத்து அன்றோ என்னில்-
முதலிலேயும் இப்பாசுரத்தை அருளிச் செய்து
முடிவிலேயும் -அழுந்தார் பிறப்பாம் பொல்லா அரு வினை -100-என்று
உபக்ரம உபஸம்ஹாரங்கள் ஏக ரூபமாய் இருக்கையாலே
இப்பிரபந்தத்துக்கு தாத்பர்யமும் அதுவே –
தாம் நினைத்த போதே தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையால்
பிறந்த ஆற்றாமை ஆவிஷ்கரித்த படி நடுவில் பாட்டுக்கள் அடைய –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இவர் அபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப் போகாது -அதுக்கு அடி
சர தல்பத்திலே கிடந்த ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு சிறிது வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தால் போலே
இவரை இடுவித்து சில பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்து சம்சாரத்தைத் திருத்த நினைத்தவன் ஆகையால் –
இங்கே வைக்கலாம் படி அல்லவே இவருடைய த்வரை-
இவர் தாம் நிர்பந்தம் பண்ணுகிறதும்
அவ்வருகே போய் குண அனுபவம் பண்ணுகைக்காக இறே
இவை தன்னை அனுபவிப்போம் என்று பார்த்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
தேஹத்தினுடைய தன்மையை – தண்மையை – அனுசந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையே யாகிலும்
அவ்வருகே போய்-பரமபதத்தில் சென்று – அனுபவிப்பதும் ஓர் அனுபவம் உண்டு என்று தோற்றாதபடி
ஒரு வைஸ்யத்தைப் பிறப்பிக்க
அவற்றிலே அந்ய பரராய் அனுபவிக்கிறார் –
————————
ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –
இனி இவ்வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –
ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி
ரூபம் தன்னையும் விட்டு உபமானத்திலே இழிந்து
அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–
செக்கர் மா முகில் உடுத்து -சிவந்த பெரிய மேகத்தை அரையிலே கட்டி
மிக்க செம் சுடர்-மிகவும் சிறந்த கிரணங்களை யுடைய
பரிதி சூடி-சூரியனை தலையிலே தரித்து
அம் சுடர் மதியம் பூண்டு-அழகிய குளிர்ந்த கிரணங்களை யுடைய சந்திரனை அணிந்து
பல சுடர் புனைந்த -நக்ஷத்ரங்களாகிற அநேக தேஜஸ்ஸூக்களைத் தரித்து உள்ளதாய்
பவள செம் வாய்-பவளங்களைப் போன்ற சிவந்த இடங்களை உடையதாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்-விளங்கும்படியான பச்சை நிறத்தை உடைத்தான் மரகத மலையானது
கடலோன் கை மிசை-கடலுக்கு அதிபதியான வருணனுடைய திரைகளாகிற கையின் மேலே –
கண் வளர்வது போல்-நித்திரை செய்வது போலே
பீதக ஆடை முடி பூண் முதலா-பீதாம்பரம் கிரீடம் கண்டிகை முதலான
மேதகு பல் கலன் அணிந்து -பொருந்தி தகுதியாய் இருக்கிற பல ஆபரணங்களையும் அணிந்து
சோதி வாயவும் –ஒளிவிடா நின்றுள்ள திருப்பவளமும்
கண்ணவும்-திருக் கண்களும்
சிவப்ப -சிவந்து இருக்கும்படியாகவும்
மீது இட்டு-போட்டியில் வெற்றி கொண்டு
பச்சை மேனி மிக பகைப்ப-பச்சை நிறமானது மிகவும் விளங்குபடியாகவும்
நச்சு வினை -எதிரிகளை அழிக்கையில்-விஷத்தைப் போன்ற செயல்களை உடையனாய்
கவர் தலை -கவிழ்ந்து இருந்துள்ள தலைகளை உடையனாய்
அரவின் அமளி ஏறி-ஆதி சேஷனாகிற படுக்கையில் ஏறி
எரி கடல் நடுவுள் -அலை எறியும்படியான கடலின் நடுவே
அறி துயில் அமர்ந்து-ஜகத் ரக்ஷண சிந்தை யாகிற யோக நித்திரையை அடைந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள்-அனைத்து தேவர்கள் கூட்டங்களும்
கை தொழ கிடந்த-கை கூப்பி வணங்கும் படி பள்ளி கொண்டு இருப்பவனும்
தாமரை வுந்தி -எல்லா உலகத்தின் உத்பத்திக்கும் காரணமான நாபீ கமலத்தை யுடையவனும்
தனி பெரு நாயக-ஒப்பற்ற சர்வாதிகனுமாய் இருப்பவனுமான எம்பெருமானே
மூ வுலகு அளந்த சேவடியோயே –மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை யுடையவனே-
செக்கர் மா முகில் உடுத்து
ஆனையைக் கண்டார் -ஆனை-ஆனை -என்னுமா போலே –
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமையாலே ஏத்துகிறார்
ஸ்யாமமான நிறத்துக்குப் பரபாகமான சிவப்பை யுடைத்தாய் -கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம்படியான –
மா -தலைப்பும் கொச்சமும் வைத்து உடுக்கலாம் படியான பெரிய அளவு –
அளவை யுடைத்தாய் -ஸுவ் குமார்யத்துக்குச் சேர்ந்து குளிர்ந்து இருக்கிற முகிலை அரையிலே பூத்தால் போலே உடுத்து
படிச்சோதி ஆடையொடும் –கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்னும்படி –
மிக்க செம் சுடர் பரிதி சூடி –
திவி ஸூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்திதா
யதி பா சத்ருசீ சா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்மந –ஸ்ரீ கீதை –11-2-என்று சொல்லுகிறபடியே
(ஆயிரம் சூர்யர்களுடைய ஒளியானது ஒரே காலத்திலே ஆகாயத்திலே தோன்றிற்றாகில்
அந்தப் புருஷனுடைய ஒளிக்கு அது ஸமானம் ஆகலாம்)
சஹஸ்ர கிரணங்கள் என்றால் போலே ஒரு ஸங்க்யை உண்டு இறே ஆதித்யனுக்கு —
அப்படி பரிச்சின்ன கிரணன் அன்றிக்கே அநேக ஆயிரம் கிரணங்களை யுடையான் ஒரு ஆதித்யன் வந்து
உதித்தாலே போல் ஆயிற்று திரு அபிஷேகம் இருப்பது –
பச்சை மா மலை போல் மேனியை யுடைய எம்பெருமான் -மிகச் சிவந்து இருந்துள்ள
கிரணங்களை யுடைய பரிதியைச் சூடி –
அம் சுடர் மதியம் பூண்டு
தன்னுடைய -ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள பிரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கிற
ஆதித்யனைப் போலே அன்றிக்கே
சீதளமான கிரணங்களை யுடையவனாய் –
குறைதல் -நிறைதல்-மறு உண்டாதல் இன்றிக்கே -வைத்த கண் வாங்காதே கண்டு
இருக்க வேண்டும்படியான அழகை யுடைய சந்திரனைப் பூண்டு
(பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு இது கழுத்துக்கு ஆபரணம் -கண்டிக ஆபரணம் )-
பல சுடர் புனைந்த
மற்றும் பல நக்ஷத்ரங்களையும் -( க்ரஹங்களையும் -போன்ற) ஜோதிகளையும்
ஆபரணங்களாகப் )பூண்டு
பவள செவ்வாய்
பவளமாகிய சிறந்த வாயை யுடைத்தாய் –
உபமேயத்தில் வந்தால் பவளம் போல் சிவந்த அதரத்தை யுடையவன் என்கிறது –
இங்கே பவளம் போலே சிவந்த இடங்களை யுடைத்தாய் என்கிறது –
திகழ பசும் சோதி மரகத குன்றம் கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
தனக்கு இவ்வருகு உள்ளவை எல்லாம் -( இதர மலைகள் எல்லாம் )கீழாம் படி மிகைத்து உஜ்ஜவலமாகா நின்றுள்ள
ஸ்யாமமான தேஜஸ்ஸை யுடைத்தான மரகத கிரியானது –
கடலுக்கு அதிபதியான வருணனுடைய திரைக் கையிலே கண் வளர்ந்து அருளுவது போலே
சாய்வது போல் என்ன அமைந்து இருக்க
உபமானத்திலும் கூசி
கண் வளர்வது போல் -என்கிறார் –
திருமலை நம்பி எம்பெருமானார்க்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற இடத்தில்–
( மென்மையான காதை உடையவர் என்று சொல்லும் இடத்தில் ) பொன்னாலே தோடு பண்ணினால் இட
ஒண்ணாத படியான காதை யுடையராய் இருக்குமவரை அறிந்து இருக்கை யுண்டோ -என்றாராம் –
(இங்கு உபமானத்தைச் சொல்லும் இடத்தில் உபமேயத்தைப் போலே
அங்கு உபமேயத்தைச் சொல்லும் போது உபமானத்தை இட்டுச் சொன்னார் என்று கருத்து )
பீதக ஆடை –
செக்கர் மா முகில் உடுத்து -என்கிறது
முடி –
செஞ்சுடர் பரிதி சூடி -என்கிறது
பூண் –
அஞ்சுடர் மதியம் பூண்டு -என்கிறது
முதலா மேதகு பல் கலன் அணிந்து –
பல சுடர் புனைந்த என்றத்தை
மேதகு
ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை –
மேன்மைக்குத் தக்கபடி என்றபடி –
மேவித் தகுதியாக என்றுமாம்
கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாய் இருந்துள்ள பல ஆபரணங்களையும் அணிந்து –
அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாய் இருக்கை
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6-
ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து
பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் –
(நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன் )
ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே
இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்
சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப
த்ருஷ்டாந்தத்தில் ஒன்றைச் சொல்லி இங்கே இரண்டைச் சொல்லுவான் என் என்னில் –
அதுக்காக இறே -பவளச் செவ்வாய் என்று கீழே
சிவந்த இடங்கள் என்கிறது –
மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப
கீழ்ச் சொன்னவற்றாலும் -அவற்றை நெருக்கிற தன்னாலும் ஒன்றை ஓன்று ஸ்பர்த்தித்து-
ஸ்யாமமான நிறமும் மிகவும் உஜ்ஜவலமாக –
அவற்றை அடைய நெருக்கி உள்ளே இட்டுக் கொள்ளப் பார்த்ததான அத்தையும் அழித்து ப்ரசரிக்க
திருமேனி தேஜஸ் மிகவும் பிரகாசிக்க என்றபடி –
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போலே -என்ற உபமானத்துக்கு இது உபமேயம்
நச்சு வினை
வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் –மூன்றாம் திருவந்தாதி -66-என்கிறபடியே –
தனி இடத்திலும் எதிரிகளாய் வருவாரும் முடியும்படியான நச்சுத் தொழிலை யுடைத்தாய் இருக்கை –
கவர் தலை
பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –
அரவின் அமளி ஏறி
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை உடையனான திரு அனந்தாழ்வானாகிற படுக்கையில் ஏறி
படுக்கையிலே ஏறுகிற இது தான் தம் பேறாக இருக்கையாலே –
ஸ்ரீ நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை சாதாரமாகப்
பார்த்து ஏறி அருளுமா போலே பெரிய ஆதாரத்தோடு யாயிற்று ஏறி அருளுகை –
அமளி -படுக்கை –
எறி கடல் நடுவுள்
ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற கடலிலே
அறி துயில் அமர்ந்து
அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி –
அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்-
சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்
அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும்
இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் –
த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் –
திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழ
நாட்டுக்கு ஆஸ்ரயணீயராக ப்ரசித்தரானவர்கள் தங்கள் பஃன அபிமானராய்த் தொழா நிற்பார்கள்
ப்ரஹ்மாதிகள் தொடக்கமாக அநேக தேவதா சமூகமானது தங்கள் இறுமாப்பைப் பொகட்டு சாய்ந்து அருளின அழகிலே
தோற்று எழுத்து வாங்கி நிற்பார்கள் –
இவர்கள் இப்படியே தொழா நின்றால் அவன் செய்வது என் என்னில்
கிடந்த
கடலிலே இழிந்த கொக்குத் திரள்கள் விக்ருதமாம் காட்டில் அக்கடலுக்கு ஒரு வாசி பிறவாது இறே-
ஏக ரூபமாய் சாய்ந்து அருளுமாயிற்று –
சில தொழா நிற்கக் கிடந்தோம் என்கிற துணுக்கும் பிறவாதாயிற்று -ஐஸ்வர்யச் செருக்காலே –
இவருக்கு இரண்டும் ஸ்வரூப அந்தர் கதமாயிற்று –
கேழ்த்த சீர் அரன் முதலாகக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால்
உன் தொல் புகழ் மாசூணாதே –திருவாய் -3-1-7-
தாமரை வுந்தி
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவனாய்
இப்படி இருப்பார் அவ்வருகு யாரேனும் உண்டோ என்ன
தனி பெரு நாயக
இத்தால் அவ்வருகு இல்லை என்னும் இடத்தைச் சொல்லுகிறது
அவ்வருகு இல்லையாகில் தன்னோடு ஓக்க சொல்லலாவார் உண்டோ என்னில்
தனி
அத்விதீய நாயகன் –
புறம்பேயும் சிலரை நாயகராகச் சொல்லுவது ஓவ்பசாரிகம்
ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித-
ப்ரஹ்மாம் மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சித் உபாஸ்ரித-பாரதம் -ஆஸ் –118-37-
(தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை ) -என்றால் போலே
ஆபேஷிகமான ஐஸ்வர்யத்தை உடையராய் இறே இவர்கள் இருப்பது –
இவ்வருகு உள்ளார்க்கு எல்லாம் தான் நிர்வாஹகனாய் இருக்கிறாவோபாதி
தனக்கு அவ்வருகு ஒரு நிர்வாஹகனை
உடையான் அல்லாத அத்விதீய பர தேவதை
தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –
நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –
மூ வுலகு அளந்த
தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்
சேவடியோயே –
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-
கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .