இவற்றினுடைய சத்தையை சார்த்தமாக உபாதானம் பண்ணி ஸ்ருஷ்டித்து –
ஸ்ருஷ்டித்த அநந்தரம்-
இனிமேல் அவை பட்டது படுகின்றன என்று இராதே
சிறியத்தை பெரியது நலிந்து மஹாபலி போல்வார் பருந்து இறைஞ்சினால் போலே அபஹரிக்க-
ஸ்ரீ யபதியானவன் தன் மேன்மை பாராதே
தன்னை அழித்து ரஷித்த செயலை அனுசந்தித்து
சேதனராய் இருப்பார்க்கு இவனுக்கு மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்க இறே
செய்ய அடுப்பது-என்றார் கீழே –
இவர்கள் தாங்கள் சேதனரான பின்பு இதிலே உருப்படாது ஒழிவார்களோ-என்று
லௌகீகரைப் பார்த்தார்
அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் –
விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –
நான் என்றும் என்னது என்றும் –
பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு
இது இருந்தபடி என்
ஏகஸ்மிந் நப்யதிக்ராந்தே முஹுர்ர்த்தே த்யாந வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மாக்ரந்திதம் ப்ருசம்-
(பகவத் த்யானம் இல்லாமல் ஒரு முஹூர்த்தம் சென்றாலும் திருடர்களால் திருடப்பட்டவன் போல்
உறக்கக் கதறுவதே தகுந்தது)-என்கிறபடியே –
பகவத் தியானத்துக்கு விச்சேதம் பிறந்தால் அதுக்குப் பரிஹாரமாகத் திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகை –
சீரிய தனம் அபஹ்ருதமானால் எல்லாரும் அறியக் கூப்பிடுமா போலே
கீழ்ப் பிறந்த விச்சேதத்துக்குக் கூப்பிடக் கடவது இறே
அப்படித் தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க –
அவர்கள் அது தானும் அறியாது இருக்க
அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை-
தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–
உலகு-இப்பூ மண்டலத்தை
படைத்து -ஆதி காலத்திலேயே உண்டாக்கி
இடந்து -ஸ்ரீ வராஹ கல்பத்தில் அண்ட பித்தியில் இருந்து குத்தி எடுத்து
உண்டு -பிரளய காலத்தில் அமுது செய்து
உமிழ்ந்து-அவாந்தர ஸ்ருஷ்ட்டி காலத்தில் வெளிப் படுத்தி
அளந்து -திரிவிக்ரம அவதாரத்தில் திருவடிகளால் அளந்து
தேர்ந்து -அதற்கும் மேலே ரக்ஷண உபாயத்தை சிந்தை செய்து
அளிக்கும் -ரக்ஷிக்கும் படியான
முதல் பெரும் கடவுள் -ஆதி காரணனும் பரதேவதையுமான ஸ்ரீமன் நாராயணன்
நிற்ப -ஆஸ்ரயணீயனாக இருக்க -அவனை விட்டு –
புடை பல அவனுடைய விபூதியாக சொல்லப்பட்டனவாய் -பலவகைப் பட்டவனாய்
தானறி தெய்வம் -ஆஸ்ரயிக்கும் தான் அறிந்த சில தேவதைகளை
பேணுதல் -ரக்ஷகனாக ஆதரிக்கை
தனாது புல் அறிவு -தன்னுடைய கீழான புத்தியை
ஆண்மை பொருந்தக் காட்டி-பெரியோர்கள் மனத்தில் படும்படி காண்பித்து
ஈன்றோள் இருக்க-பெற்றவள் இருக்கும் போது-அவளைக் கவனியாமல்
மணை நீர் ஆட்டி -அசேதனமான மணைக்கு நீராட்டுவது போல் இருக்கிறது
செய்கை-அத் தேவதைகளின் செய்கைகள்
கொல்வன முதலா-ஹிம்ஸிக்கை முதலிய
அல்லன முயலும்-செய்யத் தகாத கார்யங்களைச் செய்கையாகிற
இனைய-இப்படிப்பட்ட தன்மையை உடையவை
அளி-அத்தேவதைகள் அளிக்கும் பலமாவது
துன்பு -துன்பத்துடன் கூடிய
இன்பு-ஸூகமாகவே இருக்கும் -ஆகையால் அத் தேவதைகளை ஆஸ்ரயிக்கை
தொல் மா மாயப் பிறவி யுள் -அநாதியாய்-பெரியதாய் -ஆச்சர்ய கரமான சம்சாரத்தில் நின்றும்
நீங்கா-நீங்குகை அன்றிக்கே
பல் மா மாயத்து -பலவாய் பெரியதாய் மோகத்தை உண்டாக்கக் கூடிய சப்தாதி விஷயங்களில்
அழுந்து மா நளிர்ந்தே –நன்றாக அழுந்துகைக்கு இடமாகும்
ஒ! ஒ! உலகினது இயலவே–உலகின் ஸ்வபாவம் என்னே –
ஒ! ஒ!
இருந்தார் இருந்த இடங்களிலே செவிப்படும்படி கூப்பிடுகிறார்
உலகினது இயலவே
ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே
இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே –
இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே –
நீர் இங்கனே ஓ என்று இட்டு நெடு வாசி படக் கூப்பிடுகைக்கு லோகமாகத் தான் செய்தது என் என்னில் –
ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி
இரா நின்றார்கள்
உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி –
பின்னை கர்ப்பத்தில் தரித்து –
பிரசவ வேதனையை அனுபவித்து –
அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்
அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே
அவளை விட்டு
ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே
இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே
இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே
வகுத்த விஷயத்தை விட்டு
அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்
நீர் -ஈன்றோள் -என்று தாயாக நினைக்கிறது தான் ஆரை என்னில்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப
இவை அடங்கலும் போக மோக்ஷ ஸூந்யமாய்த் தமோ பூதமாய்-
ஆஸீதிதம் தமோ பூதம் -என்றபடி
அசித் கல்பமாய் இழந்து கிடக்கிற போது
இவற்றினுடைய தசையைக் கண்டு -ஐயோ என்று இரங்கி
பஹு ஸ்யாம் என்று ஸ்ருஷ்டித்து
ஸ்ருஷ்டமான அநந்தரம்
பிரளயம் கொள்ள நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாக எடுத்து
திரிய பிரளயம் வரும் என்று முற்கோலி
திரு வயிற்றிலே வைத்து உள்ளே கிடந்து தளராதபடி
வெளிநாடு காண உமிழ்ந்து
எல்லை நடந்து மீட்டு –
இப்படி சர்வ வித ரக்ஷணங்களையும் பண்ணச் செய்தே
பின்னையும் தன்னை விஸ்வசித்து அருகே கிடந்தவனை –
மடி தடவினவனைப் போலே அநு தபித்து-
ஒன்றும் செய்யாதானாய் மேன்மேல் என ரக்ஷண உபாயங்களை சிந்தித்து –
ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –
ஆரோ வருவார் -என்று
குஹேநே சார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசாந் பஹுந்
ஆசயா யதிவா ராம புநஸ் சப்தா பயேதி தி -அயோத்யா -59-3-
பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன் )
என்கிறபடியே அவசர பிரதீஷனாய் நிற்க
இவ்வோ உபகாரங்களை பண்ணிற்றிலனே யாகிலும் ஆஸ்ரயிக்கைக்கு முட்டுப் பொறுக்கும்
அத்விதீய பரதேவதை இவன் அல்லது இல்லை என்கை
யயாதி சாதன அனுஷ்டானம் பண்ணி ஸ்வர்க்கத்திலே இந்திரனோடே அர்த்தாசநத்திலே இருக்கச் செய்தே –
கர்ம பூமியில் புண்ய க்ருத்துக்கள் யார் -என்று அவனைக் கேட்க –
ஒரு தேவதை முன்பே பொய் சொல்லிற்றாக ஒண்ணாது என்று –
நான் வர்த்தித்த காலத்தில் என்னை எல்லார்க்கும் மேலாகச் சொல்லுவார்கள் -என்ன –
ஆத்ம பிரசம்ஸை பண்ணினாய் –
த்வம்ச என்று பூமியிலே விழும்படி சபித்தான் என்று இவ்விடத்தை
ஸ்ரீ பட்டர் வாசித்துப் போந்த காலத்திலே
இந்திரன் தன்னை ஆஸ்ரயித்துப் பெற்ற உத்கர்ஷமாய் இருக்க அர்த்தாசநத்திலே இருந்தது பொறுக்க மாட்டாமை –
ஆத்ம பிரசம்ஸை பண்ணினாய் -என்றறொரு வ்யாஜத்தை இட்டுத் தள்ளினானாய் இருந்தது –
இது தான் வேத உப ப்ரும்ஹணார்த்தமாக ப்ரவ்ருத்தமான மஹா பாரதத்தில்
எவ் வர்த்தத்தினுடைய விசதமமாக ருஷி எழுதினான் -என்று கேட்க
தான் தன்னோடு ஓக்க உத்கர்ஷத்தைக் கொடுக்க வல்லதுவும் –
அத்தைப் பொறுக்க வல்லதுவும்
பரதேவதையான பின்பு ஆஸ்ரயிக்கப்படுமதுவும்
பரதேவதை – அல்லாதார் ஆஸ்ரயணீயர் அல்லர் என்னும் இடம் பிரகாசிகைக்காக -என்று அருளிச் செய்தார்
அவனை விட்டால் சுருக்கம் ஒழிய அவனோடே தோள் தீண்டியாய் இருப்பாரை ஆஸ்ரயிக்கப் பெறினுமாம் இறே
புடை பல தானறி தெய்வம் பேணுதல்
ஒரு புடைகளிலே -அர்த்தவாதித்து
அவனுடைய விபூதியைப் பேசுகிற இடத்திலே அவனுடைய உத் கர்ஷத்துக்காக
இவ்வருகே சிலருக்கு சில மினுக்கம் சொல்லுமே –
அத்தைக் கொண்டு கிடந்த இடம் அறியாமே
ஒதுங்கிக் கிடைத்தவற்றை யாயிற்று ஆதரிப்பது –
அது தன்னிலும் ஒரு தேவதையே இவனுடைய சர்வ அபேக்ஷிதங்களையும் கொடுக்க மாட்டாதே –
ஒருவனாய் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கிறான் அன்றே –
அது வேண்டில் –
ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் தனம் இச்சேத் ஹுதாசநாத்
ஈஸ்வராத் ஞானம் அந்விச்சேத் இச்சேத் கதிம் இச்சேத் ஜனார்த்தநாத் -ப்ரஹ்மாண்டம்
(ஆரோக்யத்தை சூரியனிடம் இருந்தும் -பணத்தை அக்னியிடம் இருந்தும்
ஞானத்தை ஈஸ்வரனிடம் இருந்தும் விரும்பக் கடவன்
மோக்ஷத்தை ஜனார்த்தனிடம் இருந்து விரும்பக் கடவன்)–என்னக் கடவது இறே
ஆக விபூதி காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் –
புத்ர காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் –
பசு காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் என்று இங்கனே ஒன்றுக்கு ஒருவராய் பலராய் இருக்கும் –
தான் அறி தெய்வம்
பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற
தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது
பேணுதல்
அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை
பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று
கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று
அத் தேவதைகளுக்கு ஈஸ்வரத்வம் சம்பாதித்துக் கொடுக்கையும்
தானது–
இவன் சொன்ன போதாக அவை ஆஸ்ரயணீயங்கள் ஆகிறனவும் அல்ல –
இவன் தான் அங்கே சில பெற்றான் ஆகிறானும் அல்லன்
இத்தால் பலித்தது ஆயிற்று –
விசேஷஞ்ர்க்கு தன் அறிவில் குறைவை பிரகாசிப்பித்தானாம் அத்தனை –
தானது–புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி-
தன்னுடைய ஞானத்தில் அல்பதையை விசேஷஞ்ஞர்க்கு தேறும்படி தெரிவிப்பித்து
பலம் பெரும் போது பர தேவதையை ஆஸ்ரயித்துப் பெற வேணுமே
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய–ப்ருஹதாரண்யம் -6-5-6-
(கேட்கத்தக்கதும் நினைக்கத் தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்கத் தக்கது )என்றும்
(வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாய -புருஷ ஸூக்தம்
வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம் மாதிரி அறிபவன் இப் பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது)
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி நாந்யப் பந்தா -என்றும்
உபாசன வாக்யங்களிலே சொன்னபடியே
காரண வஸ்துவை உபாசிக்கின்றது அன்று இறே
கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை
ஆட்டை அறுத்துத் தா
பிரஜையை அறுத்துத் தா -என்பன சிலவும்
நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டு பரிமாற வேண்டுவன சிலவும் இவையாயிற்று செயல்கள் —
ஆஸ்ரயணங்கள் தாமே நரகமாய் இருந்ததே –
இப்படி ஆஸ்ரயித்துப் பெரும் பலத்தைப் பார்த்தால்
அதை பெருமதில் பெறாது ஒழிகை நன்றாய் இருக்குமே
இன்பு துன்பு அளி
ஸூக துக்க மிஸ்ரமான பலத்தை யாயிற்று தருவது –
நிஷ்க்ருஷ்ட ஸூகமான மோக்ஷம் அவற்றுக்கு இல்லையே
ஆக –
செய்ததாயிற்று என் என்னில் –
தன்னோடு ஒத்து இருப்பான் ஒருவனாய் –
பவ உபகரண பூதனாய் –
நித்ய சம்சாரியாய் இருப்பான் ஒருவனை ஆஸ்ரயித்துப் பலம் பெறப் பார்த்த இது தான்
நித்ய சம்சாரி யாக்கைக்கு கிருஷி பண்ணினான் ஆயிற்று
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து –
பழையதாய் காரணமாய் இருக்கிற மா மாயம் உண்டு —
இம் மாயை
தேவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை –7-14-
இது ஒருவரால் கடக்க ஒண்ணாது -என்று அவன் அருளிச் செய்த பிரகிருதி –
இப் பிரக்ருதி சம்பந்த நிபந்தந ஜென்மங்களில் புக்கு மீள விரகு இன்றிக்கே பலவகைப்பட்ட இருக்கிற
மா மாயம் உண்டு -சப்தாதி விஷயங்கள் -அவற்றிலே
நளிர்ந்தே அழுந்துமே
எடுத்தது அனையும் தரை அளவும் அழுந்தா நின்றன
உலகினது இயல்வே
வகுத்த விஷயத்தைப் பற்றி
நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து
அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –
இது என்ன படு கொலை என்கிறார்
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply