கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –
சர்வேஸ்வரன் தொடங்கி –
ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது –
அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்
ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய வென்று-
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –
என்று ஆயிற்று இருப்பது –
ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி –
அது தன்னைப் பலவாகி-
ஆயிரமாக்கி –
அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் –
இவர் அவ்வளவு அமையாமல்
முதலிலே கல்பத்தை விவஷித்து
அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-
யாவகை உலகமும் யாவரும் இல்லா-எவ்வகைப்பட்ட லோகங்களும் -எவ்வகைப்பட்ட பிராணிகளும் இல்லாதவாறு
மேல் வரும் பெரும் பாழ் காலத்து -முன்னவே கழிந்து போன மிகவும் நீண்ட உலகம் அழிந்து கிடந்த பிரளய காலத்தில்
இரும் பொருள்க்கு- எல்லாம்-எண்ணற்ற ஜீவ ராசிகளுக்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி-அடைவதற்கு அரியனாய்-ஒப்பற்றவனாய் -ஸஹாயம் அற்றவனாய் காரண வஸ்துவாக தானே நின்று
தெய்வ நான் முக கொழு முளை-தேவதை யாகிய பிரமன் என்னும் பூரணமான அங்குரத்தையும்
முக் கண் ஈசனோடு தேவு பல ஈன்று -மூன்று கண்களையுடைய ருத்ரனுடன் -பல தேவதைகளையும் படைத்து
நுதலி-இவர்களை ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்காக சங்கல்பித்து
மூ உலகம் விளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் படைத்த திரு நாபியை யுடையவனாய்
மாய -ஆச்சர்ய சக்தி யுக்தனாய்
கடவுள் -பரதேவதையாய்
மா முதல் அடியே–பரம காரண பூதனான எம்பெருமான் திருவடிகளை
ஊழி தோற் ஊழி ஓவாது -கல்பங்கள் தோறும் இடைவிடாமல்
வாழிய வென்று யாம் தொழ இசையும் கொல்?-வாழ வேண்டும் என்று நாம் மங்களா சாசனம் செய்து ஸ்துதிக்க நேர் படுமோ –
ஊழி தோறு ஊழி —
கல்பம் தோறும் கல்பம் தோறும் –
ஓவாது –
அது தான் நித்ய அக்னி ஹோத்ரமாக ஒண்ணாது –
ஒரு ஷணமும் இடை விடாதே
இத்தால் மேல் எல்லாம் கூடிச் செய்யப் புகுகிறது என் என்னில்
வாழிய வென்று-என்னும் அத்தனை –
சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து
ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து
அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்
யாம்
ஆயுர் ஆசாஸ்தே -(யஜுர் அஷ்ட -3-5-நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன் )-என்று
கண்டது அடைய எனக்கு என்று போந்த
நாம்
இப்போது அது தவிர்ந்து
தொழ
தொழுகை யாகிறது மங்களா சாசனம் பண்ணுகை யாயிற்று –
இசையும் கொல்?
எனக்கு என்று போந்த அது தவிர்ந்து உனக்கு என்கையாகிறது நெடு வாசி இறே –
கூடாத இப் பேற்றோடே கூடுவார்க்கு
இப்படி பிரார்த்திக்கிறது அவனுடைய எந்தச் செயலை அனுசந்தித்து என்னில்
யாவகை -இத்யாதி
முன்பே உள்ளதொரு வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணின அளவு அன்றிக்கே –
முதலிலே அழிந்து கிடந்த வஸ்துவை அடி தொடங்கி உண்டாக்கி
நமக்குப் பண்ணி அருளிய மஹா உபகாரகத்துக்கு –
யாவகை உலகமும்
இங்கன் இட்டு மூன்று லோகம் கழிந்து மேலே ஒரு லோகம் குடி வாங்கக் கடவதாய்-
அவ் வருகு ஓன்று குடி இருக்கக் கடவதாய் இருபத்தொரு பிரளயம் உண்டு இறே –
அப்படி அன்றிக்கே எவ் வகைப்பட்ட லோகங்களும் –
அன்றிக்கே
யாவரும் இல்லா
எல்லாரும் ஓக்க லயிக்கச் செய்தே –
மார்க்கண்டேயாதிகள் -நித்யத்வம் -என்று அலைவாரும் உண்டு இறே
அங்கனும் ஒருவரும் இன்றிக்கே
மேல்
மேல் என்றது -பண்டு -என்றபடி –
வரும்
வரும் என்றது போன என்றபடி –
பண்டு போன
பெரும் பாழ் காலத்து
கர்க்ஷகன் உவர்த் தரையை உவர் கழிய நீர் நிறுத்துமா போலே –
விளைக்கைக்கு இவற்றினுடைய துர் வாசனையை அழிக்கைக்காக
ஒரு ப்ரஹ்மாவினுடைய ஆயூஸ்ஸூ அத்தனையும் அழித்திட்டு வைத்து இருக்குமாய்த்து
இரும் பொருள்க்கு எல்லாம்
தேவ மனுஷ்யாதி ரூபமாய் -அஸங்யேயமாய் =அசித் ஸம்ஸ்ருஷ்டங்களான ஜீவ வஸ்துக்களுக்கு எல்லாம்
அரும் பெறல்
இவ்வளவில் வந்து முகம் காட்டுவான் ஒருவனைக் கிடையாது இறே –
ஆகையால் பெறுதற்கு அரிய
தனி வித்து ஒரு தான் ஆகி
நிமித்த உபாதான சஹகாரி காரண த்ரயமும்
தானே யாய்
வித்து -என்கையாலே –
காரண வஸ்து என்கை –
தனி -என்கையாலே
ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத்-1-
(நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் பிரமனும் இல்லை சிவனும் இல்லை )-
என்றபடி அத்விதீயன் -என்கை
ஒரு -என்கையாலே
இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –
தான் ஆகி –
கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்
இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி –
இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக
ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே
ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்
ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் –
இது அதுக்கு த்ருஷ்டாந்தம்
தெய்வ நான் முக-
இதர சஜாதீயனான சதுர்முகன் ஆகிற
கொழு முளை ஈன்று –
இவ் வருகில் கார்ய வர்க்கத்தை அடைய உண்டாக்குகைக்கு
ஈடான சக்தியை யுடைய ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து
அவன் ஒருவனும் மூன்று காரியமும் செய்ய மாட்டான் இறே -அதற்காக
முக் கண் ஈசனோடு தேவு பல
சம்ஹார ஷமனான ருத்ரனோடே கூட
மற்றும் காரியத்துக்கு வேண்டும் தேவதைகள் பலரையும் உண்டாக்கி –
இவை பலரும் தேவைக்கு எல்லாம் அவன் பண்ணி அருளிய வியாபாரம் என்னில்
நுதலி
(ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது)
பஹுஸ்யாம் –என்று சங்கல்பித்து
நுதலி -என்றது –
கருதி என்றபடி –
மூ உலகம் விளைத்த உந்தி
கீழும் மேலும் நடுவுமான உண்டான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திரு உந்தி யாயிற்று
அவனை ஒழியவே தானே இவை அடைய உண்டாக்கிற்றாயிற்று திரு உந்தி
திரு உந்தி என்ற ஒரு பத்மமாய்
அது அடியாக ஆயிற்று லீலா விபூதி அடைய உண்டாக்கிற்று
மாய கடவுள்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை
மா முதல் அடியே
மா முதல் மாயக் கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக் கடவுள் என்னுதல் –
மாயக் கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக் கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி –
திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்
அடியே வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்
உன் சேவடி செவ்வி திருக்காப்பு –என்றபடி
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply