ஸ்ரீ கலியனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ திருக்குடந்தை உ. வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த நவ ரத்ன க்ரந்தங்களுக்கும் அடி இப்பதிக 9 பாசுரங்கள் -சமத்காரமாக ஸ்வாமியின் நவரத்ன க்ரந்தங்களும் இப்பதிக பாசுரங்களின் அடிப்படையில் அருளிச் செய்து இருப்பதாகக் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ ராமானுஜர் கலியன் சம்பந்தம் மூன்று பாடல்களில் அமுதனார் காட்டி அருளுகிறார் -இதில 7 பாசுரத்திலேயே திருமங்கை ஆழ்வாருக்கு இனியவராக ராமானுஜர் -பவிஷ்ய ஆச்சார்ய விக்ரஹம் சேவித்து இருப்பாரே கலியனும் –

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன்
மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-வாள் வீசி படித்துறை -நம் போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு – ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு – இவ் விராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை
வந் தெய்தினரே.–17-நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –-எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்--அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு-இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன்
மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88–மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் . எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று-ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி


பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை
முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-=வேதார்த்த ஸங்க்ரஹம் -அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய 

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும் அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும் எவ்விதமான தோஷமும் அற்றவனும் ஆனந்த ஸமுத்ரமுமாகவும் உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு- ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி -நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥–அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர-* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6—ஶரணாக³தி க³த்³யம் ॥-ௐ ப⁴க³வந் நாராயணாபி⁴மதாநு ரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்
நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம்
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே * பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே * ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த
வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-அழித்த அசுரர்கள் பட்டியல்-கீதா பாஷ்யம் தொடக்கம் -பூதனை -அகங்கார மமகார –கர்மங்களைப் போக்கவே அவதாரம்-பூபார அவதரண தேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாஸ்ரயணித்வாத் அவதிர்யோர்வ்யாம்
சகல மனுஷ நயன விஜயதாம் கத பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி
திவ்ய சேஷ்டிதானி குர்வன்-பூதநா சகட யமளார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த
அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை- விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-திருவாராதனம் யாகம் -யாக பூமி கச்சேத் நோக்கி போவதாக நித்ய கிரந்தம்-ததீயாராதனம் கண்ணாலே பார்க்கலாமே–பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய| பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா – அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா| ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய ! ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –திரு உள்ளமாகில் –ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –கலிகன்றி தாஸர் ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கேட்டு அருளிச் செய்த வியாக்யானங்கள் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading