Archive for September, 2024

ஸ்ரீ ஆழ்வார்கள் கண்ட திருவல்லிக்கேணி -ஸ்ரீ உ வே திருமலை நல்லான் சக்ரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-

September 18, 2024

ஸ்ரீ மந்நாதப்பெருமாள் -ஸ்ரீ வேதவல்லித் தாயார் -ஸ்ரீ ப்ருகு மஹரிஷியின் திருக்குமாரத்தியாக ஸ்ரீ மஹா லஷ்மி ஆவிர்பவிக்க
மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி திருக் கல்யாணம்

மாக மாஸே மஹா தேஜாஸ் த்வாதஸ்யாம் ஸஹரிஸ் ஸ்வயம்
ப்ராது ராஸ ப்ருகோ தஸ்ய ஹ்யாஸ்ரமே புண்ய கர்மணஸ்
யதோ மந்நாத இத்யாஹ வேத வல்லீ ஸூசிஸ்மிதா
ததோ மந்நாத இத்யேவ விஸ்ருதோ புவந த்ரய —
என்றபடி
மிக்க ஒளியை யுடைய மஹா விஸ்ணு -புண்யம் செய்த ப்ருகு மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் மாசி மாத த்வாதசியில் தாமே தோற்றி அருளினார்
எக் காரணத்தால் வெளுத்த புன்னகை யுடன் வேத வல்லித் தாயார் மந் நாதா -என்று கூறினாளோ அக் காரணத்தாலே இந்தத் திரு நாமத்துடன் உலகெங்கும் பிரஸித்தி பெற்று விளங்குகிறான் –

அத்திரி மஹ ரிஷி இங்கு மோக்ஷம் பெற தவம் செய்ய
ஐம் புவனத்தில் இருந்த முனிவருக்குப் பணிவிடை புரிந்து இருந்த விகட மஹரிஷி -பார்க்க முனிவரைக் காண வந்த மாரீச முனிவர் வாயிலாக அத்திரி முனிவருக்குப் பிரத்யக்ஷமாக வந்து அருள் புரிய போவதை வசிஷ்டர் மூலம் அறிந்து இங்கு வந்து அத்தரி முனிவருடன் வசிக்க
விமானம் வந்து இறங்க
ஸத தர்ச விமாநஸ்ய மத்யே பாஸ்கர ரோசிஷ
ஆஸீநம் பரமம் தேவம் நரஸிம்ஹம் ஸ்வரூபிணம்

அத்ரி முனிவர் சாஷாத்கரித்து வாயார வாழ்த்தினார்

——–

த்ரேதா யுகத்தில் சசபதர் முனிவர் பாண்டரம் மலையில் தவம் செய்ய
இந்த்ரன் ஏவ ஹேலை அப்சரஸ் தவத்தைத் கலைத்து
இருவருக்கும் ஆண் மகன் பிறக்க
மலைக்குகையில் விட்டு இருவரும் பிரிய
இறைவன் அருளால் சொரிந்த தேனைப் பருகி வளர
அங்குள்ள முனிவர்கள் மதுமான் பெயர் இட்டு அனைத்துக் கலைகளையும் கற்பித்து
அவன் பக்திமானாகி கார்க்க்ய முனிவரைச் சந்திக்க
ராமபிரான் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுவதை அறிந்து ஸோகிக்க
எம்பெருமான் கார்க்க்ய முனிவர் உருவத்துடன் தோன்றி இங்கே தவம் செய்ய அறிவிக்க
காகுத்தா உன்னைக் காணுமாறு அருளாய் என்று வேண்டி தவம் செய்ய ப்ரத்யக்ஷமாகி
யாத்ருகாஸீத் புரா ராம ராஜ்ஜோ தசரதஸ்ய ஹி
ப்ராத்ருபிஸ் ஸஹிதஸ் தாத்ருக் ஸ ஸீதஸ் ப்ரத்ய த்ருஸ்ய
–என்று
அனைத்து சஹோதர்களுடனும் சீதாப் பிராட்டியாருடனும் நித்ய வாஸம் செய்து அருள்கிறான்

வ்யாஸ பகவான் ஆத்ரேய மகரிஷியிடம் ஸூமதி மன்னர் ப்ருந்தாரண்ய ஷேத்ரத்தில் தவம் செய்து கொண்டு இருக்கிறார் இருக்கிறார்
வலக் கைச் சங்கம் இடக்கை தான முத்திரையுடன் கூடிய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி பிரதிஷ்டை பண்ணி தானும் திருவாராதனை செய்து ஆத்ரேயர் கையில் கொடுத்து வைகாநஸ ஆகமப்படி ஆராதித்து தவம் செய்து இருக்க நியமிக்க
அவரும் நெடும் காலம் ஆராதித்து பரம பதம் எய்தினார்
ஸூ மதி மன்னன் திரு வேங்கடம் சென்று பார்த்த சாரதி வேஷத்தைக் காட்டி அருளப் பிரார்த்திக்க
ப்ருந்தாரண்யத்தில் ஸேவை சாதிப்பதாக அருள் புரிய
ஸ்ரீ பார்த்த சாரதியை
ஸ்ரீ ருக்மிணிப்பிராட்டி
ஸ்ரீ பலராமன்
ஸ்ரீ அநிருத்தன்
ஸ்ரீ பிரத்யும்நன்
ஸ்ரீ ஸாத்விகி
இவர்களுடன் சேவை சாதிக்க
நாமும் இன்றும் அந்த திவ்ய சேவையை அனுபவிக்கிறோம்

ஸ இதா நீம் அபி முநே த்ருஸ்யதே தத்ர மாநவை
ருக்மிணி ச அநிருத்தேந ப்ரத்யும்னநே ச ஸேவிதே
ஹலாயுதேந ஸஹிதஸ் ததா ஸாத்யகி நா ஸஹ
பார்த்த சாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜகதீ பதி

ஸப்த ரோமா மஹ ரிஷி கருடா ரூடனான வரதராஜப் பெருமாளை வைகாநஸ விதிப்படி ஆராதித்து வந்து மோக்ஷம் அடைய
இன்றும் நாம் அந்த சேவையை அனுபவிக்கிறோம்

ஸோபி ஸம் ப்ரதி ஸர்வேஷாம் ப்ராணிநாம் கோசரீ பவந்
வரதோ நாம தேவேஸே த்ருஸ்யதே தத்ரைவ ஹரி

முத்கல முனிவர் தவம் செய்ய
இங்குள்ள கைரவணி புஷ்கரணியில் நீராட
அழகிய மீன் பரிவாரங்களுடன் தோன்ற
உன்னால் எனது தவத்துக்கு இடையூறு ஏற்படும் -உனது பரிவாரங்களுடன் வேறு இடம் சென்று விடு என்ன அன்று முதல் இங்கு மீன்களே இல்லை
இந்த்ர தீர்த்தம்
ஸோம தீர்த்தம்
மீன தீர்த்தம்
அக்னி தீர்த்தம்
விஷ்ணு தீர்த்தம்
என மேலும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன

துர்வாஸ முனி ஹேம கூட மலையில் மத்த வாரணம் சிகரத்தில் தபஸ் செய்ய
விஸ்வா வஸூ வான வெளியில் செல்ல
அவன் நிழல் இவர் மேல் பட இவர் சரீரமில்லாதவனாகக் கடவை என சபிக்க
இங்கு தவம் செய்து சாபம் நீங்கப் பெற்றான்

ப்ருந்தாரண்ய நிவாஸாய பல ராமாநுஜாயஸ
ருக்மிணீ பிராண நாதாயா பார்த்த ஸூதாய மங்களம்

வந்து உதைத்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று  
—-16–

ஒரு வல்லித் தாமரையாள் சென்று   ஒன்றிய சீர் மார்வன்
வெண் திரைகள் வந்து உதைத்த செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் –
திருவல்லிக் கேணியான் எந்தை –என்று அந்வயம்

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களை யுடைய தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாகப் பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

—————————————————————————————–

வியாக்யானம் –

வந்துதித்த வெண் திரைகள் –
வந்து உதையா நின்றுள்ள
வெள்ளத் திரைகளாலே தள்ளப் படுகிற –

செம்பவள வெண் முத்தம் –
சிவந்த பவளங்களும்
நீர்மையை உடைத்தான முத்துக்களும் –

அந்தி விளக்காம் மணி விளக்காம் –
சந்த்யைக்கு பிரகாசஹமான
மங்கள தீபத்தை யுடைத்தான –

எந்தை
எனக்கு ஸ்வாமி-

ஒரு வல்லித் தாமரையாள் –
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்

ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே
கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை

அவன் புருஷோத்தமன்
ஆனாப் போலே
இவள் நாரீணாம்   உத்தமை –

தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
மலர்மகள் விரும்புகையாலே
சர்வாதிகத்வம் ஆகை-

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே
  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே சஷ்டி –
பிரஜைகள் பார்த்து இருக்க
பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே
தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

தயா அவலோகிதா தேவா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
பின்னை சர்வேஸ்வரன் இவர்கள் உடைய அலமாப்பைப் பாராய் என்று
திரு உள்ளத்தாலே நினைத்த படி தோற்ற
பின்னை அவளாலே பார்க்கப் பட்டார்கள்

முன்பு கடாஷியா விட்டது என் என்னில் –
தன் ஸ்வரூபத்தை பெற்று பிறரை ரஷிக்க வேணுமே –

பிரதேஹி ஸூ பகே ஹாரம் -யுத்த -131-80-என்று
அவன் நினைவும் சொலவும் அறிந்து  இறே
ஒருவரைக் கடாஷிப்பதும்
ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதும்

இவள் பிரிந்து இருக்கையாலே
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு
பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்

ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்

நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு -திருவாய்மொழி -9-2-1-

திருவல்லிக் கேணியான் எந்தை –
திரு வல்லிக் கேணியிலே  எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –

எந்தை
பெறாப் பேறு பெற்றாப் போலே

ஒரு வல்லித் தாமரையாள் சென்று ஒன்றிய சீர் மார்வனுமாய்
திருவல்லிக் கேணி யானுமானவன்
எந்தை –
அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்-

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
பஸ்யதாம் சர்வ
-பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

ஒன்றிய மார்பு
தாமரை விட்டுப் பிரிந்தால் போல் திரு மார்பை விட்டுப் பிரியாதவள்
சீர் மார்பு
அழகும் மாரத்தவமும் தாமரையை விட மேலுள்ள சீர்மை

மா மலராள் செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள் பல் நாள் —பூதத்தாழ்வார்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -நம்மாழ்வார்

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

படிக் கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் (கோதாய் )கழித்தார் ஆரோ என்னில்
வடிக் கோல வாள் நெடுங்கண் மா மலராள் –
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய்
சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
செவ்வியை உடைத்தாய்
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு
காலம் எல்லாம் அகலாள்
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும்
கால் வாங்க மாட்டாமையும்

அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ கோலத்தால் இல்லை குறை –
அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்(இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து )
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற
விஷயம் என்று அறிந்த பின்பும்

ஸ்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் –
இவளுக்கு விசிஷ்டம் -(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரைப் பற்றும் )

இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
அடிக்கோலி -என்கிறது

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால்
கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது –
எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார்
குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே
அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –

கோல இத்யாதி –
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு
குறைவற்று இருக்கையாலே –
இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –

கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் –
பரப்பு உண்டாகையாலே
இவ் விஷயத்தை அனுபவிப்பாருக்கு பிரியமே உள்ளது –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக்
 கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர –
பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –
ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ள போது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ள போதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும் போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

———————————

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு

இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

(பேய்காள் (31)-என்றார்
மேல் யுக்தி பிரதி யுக்திகள்
வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –

ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
மா நகர பெருமை மயிலைக்கு
மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை

வாயும் பேசவில்லை அசையும் இல்லை
இங்கு ஒரே கேள்வி
திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படி யிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்

நீளோதம்-பெரிய ஓதம் –

தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )

இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-

வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-

(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )

(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )

நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும்
ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-

(பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )

(வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
அஸ்தானே பய சங்கை
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )

பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளம் உடைய
இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
இதுக்கு அடி
மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

—————

(சிங்க வேள் குன்றம் இருந்தவாறும் -திருவேங்கடத்திலும் நின்றவாறும் -திரு எவ்வுள்ளில் கிடந்தவாறும் அனுபவித்து
அனைத்து திருக்கோலங்களும் சேவித்து
கரி ரக்ஷணம் அனுபவித்து -திரு நறையூர் திருவாலி குடந்தை -கோவல் நகர் -முதலான தோற்றி
அவை எல்லாவற்றிலும் உள்ள
அபிநிவேசத்துடன் இங்கே வந்து அனுபவிக்கிறார் )

பிராட்டிமாரோடே கூட வந்து
விரோதி நிரசன சீலனாய்
பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்
சர்வ ஸ்வாமியான
சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்
பண்ணும் விருப்பத்தை
திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு
அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய்
போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-

———————————————————————-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

நடந்தது -எல்லை நடந்து -அளந்த என்றவாறு

———————————————————————————

வியாக்யானம் –

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி –
முன்பு பண்டு ஒரு நாள்
நப்பின்னை பிராட்டியாரோடும்
அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியாரோடும்-( ஸ்ரீ ருக்மிணித் தாயாரோடும் )
விரும்பிக் -கலந்து

அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு –
அவர்கள் உடன் கூட இருந்த போதும்
அசுர வர்க்கத்துக்கு ஒரு காலும் இரக்கம் இல்லாத வனுக்கு –

உறையுமிடமாவது
நித்ய வாஸம் பன்னுகைக்கு ஸ்தானம் ஆவது –

இரும் பொழில் சூழ் —
பரந்த பொழிலாலே சூழப் பட்ட –

நன்றாய புனல்-
நல்ல ஜல சம்ருத்தியை உடைத்தான –

நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் –
திரு நறையூர் –
இப்படிப்பட்ட நன்மைகளை உடைய திருவாலி -திருக் குடந்தை –
தடாகங்கள் திகழா நின்றுள்ள திருக் கோவலூர் –
இவை துடக்கமானவற்றில் –

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
திரு நறையூரிலே நின்றான்
திருவாலியிலே இருந்தான்
திருக் குடந்தையிலே சாய்ந்தான்
திருக் கோவலூரிலே நடந்தான் –

இடம் மா மலையாவது நீர் மலையே –
மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை
வாஸஸ் ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
(மா விசேஷணம் மற்ற மலைகளுக்கு வியாவ்ருத்தம் )

உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ
விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனான தேசம் திரு நீர் மலை-

————-

நெறி எல்லாம் எடுத்து உரைத்த ஸ்ரீ கீதாச்சார்யன் இன்றும் நாம் சேவிக்கும்படி-
ஸ்ரீ பார்த்த சாரதி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
நின்றும் நடந்தும் கிடந்தும் இருந்தும் பரந்தும் ஐவர் சேவை –
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் பலராமன் சாத்விகி அநிருத்தன் பிரத்யும்னன் இப்படியும் ஐவர்
நம்மாழ்வார் -தேர் கடவிய பெருமான் கனை கழல் சேவிக்கப் பெறுவேன் -நம்மாழ்வார் மங்களாசாசனம்
பெற்றே புறப்பாடு இன்றும் -திருத்தேர் புறப்பாடும் நம்மாழ்வார் சந்நிதிக்கு அருகிலே –

கீழே இவரை வசீகரித்த ராம கிருஷ்ண அவதாரமும்
கிடை அழகையும்
சிங்க வேழ் குன்றம் ஸ்ரீ நரசிம்மம்
திரு வேங்கடத்தில் கஜேந்திர வ்ருத்தாந்தம் கஜேந்திர வரணும் இங்கே சேவை
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் -ஐவரும்
மன்னாதன் -சயனம் தகிரு எவ்வுள் போலே
இப்படி இரண்டு வித சங்கதி )

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –
ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி
எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –

இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார்
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி-( இண்டை கொண்டு பாசுரம் கீழே பார்த்தோம் )
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே-

ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும்
என்று இடர் பட -(மீனமர் பொய்கை பாசுரம்)
அவ்விடர் தீர்க்கைக்காக-
அது இடர் பட்ட மடுவின் கரையிலே-
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து-
அத்தை ஆற்றி-

இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று
சாய்ந்து அருளினான் கண்டேனே -என்கிறார் –
(மன்னாதன் தானே இங்கே முன்னம் )

——————————————

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
–2-3-1-

சிற்றவை-நடுவில் ஆய்ச்சி -மாற்றுத் தாய்-
தேவை–ஸ்வாமியை –

——————

வியாக்யானம் –

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் –
விற் பெரு விழா வாயிற்று
சத்ரு நிரசனம் பண்ண நினைக்கிறான் ஆகையாலே -பெருக்கக் கோலினான் -ஆயிற்று –
அத்தைக் கோலின கம்சனும்

அவனுக்கு பலமாய் மலை துள்ளினாற் போலே
பெரிய கிளர்த்தியோடே கூடின மல்ல வர்க்கமும் –

அவர்கள் பார்க்கிலும் கண் பாராதே இடையற வீசும்படி
மதிப்பித்து ( மதமூட்டி ) வழியிலே நிறுத்தின ஆனையும்

அத்தை தள்ளினாலும் அது தன்னை உயிர்ப்புள்ளது போலே
நடத்த வல்ல -பாகனும் –

வீழ செற்றவன் தன்னை-
ஏகோத் யோகத்திலே நிரசித்தாற் போலே
வினை செய்த சடக்கு-
(வார் கெடா -கஞ்சனை குஞ்சி பிடித்து -வரிசையாக நம்மாழ்வார் -இங்கு அக்ரமம் )

புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை –
திரிபுர தஹந அபதாநத்தாலே சஞ்சாத அபிமாநனான -ருத்ரன்
பிதாவுமாய் -லோக குருவுமாய் -இருக்கிறவன் தலையை அறுத்து -பாதகியாய் இருக்கும் –
மதிப்பனாய் இருக்கிறவன் எளி வரவு பட ஒண்ணாதே -என்று அத்தைப் போக்கி
அத்தாலே லோகத்துக்கு எல்லாம் தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை- வெளி -இட்டவன் –

தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷதாம் ப்ரயா சித விஷ்ணு பிரஸாதாத் –
சர்வேஸ்வரன் பிரஸாதத்தாலே
ஸூஸ்ரோணி
அவனைக் கிட்டுகையாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது இறே-என்கிறான்-

(மாத்ஸ்ய புராணம் -வாம அங்குஷ்ட நகத்தால் கிள்ளப்பட்டது -கபாலித்தவம் பவிஷ்யதி சாபம் –
பூ தல புண்ய க்ஷேத்ரம் போனேன் ஹிமாசலம் சென்றேன் -பதரி விசால் பெருமானைப் பிரார்த்தித்தேன்
ரத்தம் வியர்வை கபாலம் பட்டு வெடிக்க ஸ்வப்ன தனம் போல் கபாலம் தொலைந்தது
இதனாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது என்று பார்வதி இடம் சொன்னானே )

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு –
பற்றலர் -உண்டு -சத்ருக்கள்
அவர்கள் முடிந்து போம் படி
ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்றவாறே
குதிரைகளை நடத்தும் கோலைக் கையிலே கொண்டு –

பார்த்தன் தன் தேர் முன்னின்றானை –
ரதியைச் சீறினால்
சாரதியை இறே அழியச் செய்வது
அவனை பின்னே இட்டு -தன்னை அம்புக்கு இலக்காக்கி –
நின்றவனை

சிற்றவை பணியால் முடி துறந்தானை-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

(ஒவ் ஒரு பாசுரத்துக்கும் ஸ்வா பதேசமும் அருளிச் செய்கிறார் )
விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –
ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் செய்யுமவனானவனை –

திருவல்லிக்கேணிக் கண்டேனே
திருவல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார்

அவன் பாரிப்புக்குத் தக்க பெரு விழவு
மல் –ஆகு பெயரால் மல்லரைக் குறிக்கும்
சிவன் உறும் துயர்களைக் களைந்தவனும் கண்ணனே
அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி -நம்மாழ்வார்
கொல்லா மாக்கோல் கொலை செய்து –
பார்த்தன் தேரின் மேல் நிற்றலே பற்றலர்களை வீயச் செய்யுமே
யத்ர யோகேஸ்வர கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர் தர
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம

படையெல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற விசயன் தேர் ஊர்ந்தானை -என்றும் இவரே அருளிச் செய்கிறார்
பற்றலர் -த்விஷ்தன்னம் ந போக்த்வயம்
ஸ்நேஹம் இல்லாதவர்கள் என்றுமாம்
சேராக்குலை கொண்ட ஈர் ஐந்து தலையான் இலங்கையை ஈடழித்த கூர் அம்பன்
கையில் கோல் கொண்டு
-கையும் கோலுமாகக் கையார் சக்கரத்தனைக் கண்ட அழகைப் பேசுகிறார்
கோல் குதிரையை ஓட்டும் சம்மட்டி ‘
கோல் கொள்ள -சாரதியாய் இருப்பதை-மாதலி முன்பு தேர் கோல் கொள்ள -ஆண்டாள்
இப்பாசுரத்தில்
விரோதிகளை போக்கும் இறைவனது திறனும்
தற்பெருமை பாராட்டுவாருக்கும் தயங்காது உபகரித்தமையும்
அடியாருக்காக தனது பரத்வ நிலைமை மாறி இழி தொழில் செய்வதையும்
போலி அன்புடையாருக்கும் எயிற்று செய்யும் தியாகமும் முறையே பேசப்பட்டன

———————————————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
–2-3-2-

மயிலாப்பூர் படைவீடு
திரு வல்லிக்கேணி ஆரண்யம்

கனி-நிரதிசய போக்யம்
நந்தனார் களிற்றை-வேழ போதகம் -யானைக்குட்டி
யாளுடை யப்பனை-அடிமை கொண்ட உபகாரகன்
மா-செல்வம் நிறைந்த மாதவன் கேசவன் பார்த்தசாரதி உள்ளடக்கிய செல்வம்

———————————————————–

வியாக்யானம் –

வேதத்தை –
த்ரை குண்ய விஷயா வேதா –
என்கிறபடியே எல்லார்க்கும் ஹிதம் சொல்லப் போந்த
வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்

வேதத்தின் சுவைப் பயனை –
வேதோக்தமான கர்மங்களை அநுஷ்டித்து
ராஜசராயும் தாமசராயும் சாத்விகராயும் உள்ளாருக்கு
அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பனண்ணுமவன் –
(அ சாஸ்திரம் படி செய்பவர் அசுரர்
சாஸ்திரம் முக் குணம் உள்ளோருக்கும் )

விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை-
கர்ம பாவனை யாதல் உபய பாவனை யாதல் அன்றிக்கே
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –

நந்தனார் களிற்றை-
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை-
பூமியில் உள்ளார் -காரணந்து த்யேய -என்கிறபடியே
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய்  உள்ளவனை –

யமுதை-
அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –

என்னை யாளுடை யப்பனை-
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை
அடிமை கொண்ட உபகாரகனை –

ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை-
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
என்று பிராட்டி ப்ராதான்யமேயான ஊராகையாலே
பிராட்டி பரிகரமே யாயிற்று –

நா நயோர் வித்யதே பரம் -என்று
அவள் விபூதியும் ஈஸ்வர விபூதியுமாய்
இரண்டு கூறாய் இறே இருப்பது –
(தேவர் திர்யக் மனுஷ -புருஷன் ஹரி -ஸ்த்ரீ தன்மை ஸ்ரீ லஷ்மீ -மைத்ரேயருக்கு )

மயிலாப்பூர் என்று படை வீட்டுக்கு பேர் –
திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

அறியாதவற்றை அறிவிப்பதால் வேதம்
புலம் என்றும் இதனாலேயே வேதத்திற்குப் பெயர்
புலமும் பூவனும் நாற்றமும் நீ -பரி பாடல்
வேதத்தின் சுவைப் பயனை -பயனைத் தருபவனையே -பயனாகச் சொல்லுவது ஆகு பெயர்
நான்கு வேதப் பயன் என்கோ –

கர்ம பாவனையில் இருப்பவர்களுக்கு முதலில் காயாக -காலம் செல்லச் செல்லக் கனியாகவும்
ப்ரஹ்ம பாவனையில் உள்ளாருக்கு அப்பொழுதே கனி யாவான்
விழுங்கும் கனி -ரஸ புஞ்சமாய் இருப்பான் அன்றோ
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் –ஆர்வத்தால் பாரித்த முனி
விழுமிய முனிவர் விழுங்குவதால் கோதில் இன்கனி
நாமும் அனுபவிக்கலாம் படி நந்தன் குமரன் -நந்தனார் கழிற்றை
உலகம் எல்லாம் கண்ணன் படைப்பு என்பதை -குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை -காரணந்து த்யேய –
இத்தால் பிராப்ய ஸ்வரூபம் -அமுதை -என்கிறார்
என்னை ஆளுடை அப்பன் -மன்னாதானை மங்களா ஸாஸனம்

—————————————

நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
-2-3-3-

விஞ்சை வானவர் -வித்யாதரர்
வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை

————————————————————–

வியாக்யானம் –

வஞ்சனை இத்யாதி –
தாய் வடிவு  கொண்டு வஞ்சிக்க வந்த
பூதனை கதறிக் கொண்டு போய்
பூமியிலே விழும்படியாக
விஷம் நிரம்பின முலை வழியே
அவளுடைய பிராணன்கள் போம் படி அமுது செய்த –

நாதனை –
தனக்கு சேராத வடிவு கொண்டு
உலகத்துக்கு பிராணனான தன்னை நலிய வந்தவளை
முடித்து தன்னைத் தந்தவன்
ஸ்தந் யம்தத் -(விடமும் அமுதமும் சமம் -பிராணன் உடன் சேர்ந்து குடித்தார் -ரசமாக இருந்ததாம்
ஜகத் குருவுக்கு -விஷ்ணு புராணம்
பன்னிரண்டு மைல் நீளமாக உடல் விழுந்ததாம் வில் கடை தூரம் அன்று –
கொழு மோர் கொடுத்தாள் தாய் பரிந்து இவன் அச்சம் தீர்க்க )

தானவர் கூற்றை –
ஆசூர வர்க்கத்துக்கு ம்ருத்யு வானவனை

வித்யாதரர் சாரணர் ஸித்தர் உள்ளிட்ட
தேவ வர்க்கம் அடைய விஸ்மிதராய்
ஸ்தோத்ரம் பண்ணும்படி –

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –

கண்ணனை வஞ்சம் செய்ய என்னாமல் வஞ்சம் செய்ய என்றது அனைவரையும் வஞ்சம் செய்து அன்றோ வந்தாள்
பரிவின் காரணமாக தன்னை வஞ்சனை செய்யவே என்று ஆழ்வார் திரு உள்ளம்
தாயுருவாகி -உள்ளம் பேயாயாகவே இருந்தும் உருவம் மாத்ரம் தாய் போல் இருந்தாள்
கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாள் –மண் சேர்ந்தாள் என்கிறார் இவ்வாழ்வாரே மேல்
அவள் பால் உயிர் செகவுண்ட திருவாய் மொழி
விஷம் கலந்த பால் ஜகத் குருவான கண்ணனுக்கு ரசிக்கத் தக்கதாய் இருந்தது -பராசரர்
விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -நம்மாழ்வார்
பேய் சேராத தாய் உருக்கொண்டால் போல்
புருஷோத்தமன் பெண்ணுருவாகி அசுரரை வஞ்சித்தான்
பேயின் வஞ்சனை தோற்றது
இறைவனின் வஞ்சனை வென்றது
தன்னடியாருக்குத் தாயுருவாகி அமுதம் ஊட்டினான்
வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார்
புருஷோத்தமனான தன் படிக்குச் சேராத ஸ்த்ரீ வேஷத்தை ஏறிட்டுக் கொண்டு
ஆண் பிள்ளைச் சோறாள்வி –பெண் வேடம் பூண்ட புருடன்
பெண் வேஷம் என்னா ல் தரிக்கப் பட்டது -அவதாரங்கள் போல் அன்றிக்கே வேஷம் என்று ஸ்பஷ்டம்
அமுதம் அன்று அளித்தானை இன்று கண்டார் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்
திருப் பாற்கடலிலே அமுதம் அளித்தானைத் திருவல்லிக் கேணிக் கரையிலே கண்டேன் என்கிறார்
அஞ்சுவை அமுதம் அளித்தானைக் கண்டேன் –சவுந்தர்யத்தாலே கண்ணுக்கு இனியதாயும் –
ஸ்துதிப்பதால் நாவுக்கு இனியதாயும்
திருமேனியின் போக்யத்தையைக் காட்டக் கண்டேன் என்கிறார்

————————

(பூதனை நிரசனத்து அளவு இன்றிக்கே த்ரை லோக இந்திரன் கல் மழை பொழிய –
கடுங்கால் மாரி கல்லே பொழிய -கோவர்த்தன விருத்தாந்தம் அனுபவம் இதில் )

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே
–2-3-4-

———————————————————————

வியாக்யானம் –

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் –
திரு ஆய்ப்பாடியில் உள்ளார் த்ரை லோக்ய ஈஸ்வரனான
இந்த்ரனுக்காக வருஷார்த்தமாக ஆண்டுக்கு ஒரு
விருந்திடக் கடவர்களாய் –

நாம் பிறந்து வளருகிற ஊரிலே
புரோடாசத்தை நாய் தின்றாற் போலே
ஒரு தேவதை வந்து புஜிக்க யாவது என் -என்று
நீங்கள் செய்யப் புகுகிறது தான் என்ன -என்று கேட்டான் –

நாங்கள் இந்தரனுக்கு வருஷார்த்தமாக விருந்திடப் புகுகிறோம் என்றார்கள்

இந்த மலை யன்றோ நமக்கும் பசுக்களுக்கும்
ஒதுங்க இடமும் தந்து -புல்லும் தருகிறது
ஆரேனுக்குமோ பிரத்யுபகாரம் பண்ணுவது இம் மலைக்கு இடுங்கோள் -என்றான் –

முகத்தைப் பார்த்து ஓன்று சொன்னால் மறுக்கலாம் படி அன்றே இருப்பது –
ஒன்றாகக் கொடு வந்து குவித்தார்கள் –
(வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று –அழகைக் கண்டவள் ஏது என்று அறிய மாட்டாளே )

இந்த்ரன் இத்யாதி –
இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த
எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே
மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

அவன்
பசி க்ராஹத்தாலே கோபித்து மஹா வர்ஷமாக வர்ஷிப்பிக்க –
அத்தாலே இடையரானவர்கள் தளர்ந்து

ரஷகரான எங்களோடே
எங்கள் உடைய ரஷ்யமான பசுக்களும் தளராதபடி
நோக்கி அருள வேணும் -என்ன –

இத்தால்
புறம்புண்டான ரஷ்ய ரஷக பாவமும்
அப்ரயோஜகம் என்றபடி –

அந்தமில் –
அந்த மழையின் அளவு அல்லாத
பெரிய மலையாலே
மழையைத் தடுத்து –

(தேவதாந்த்ர பிரசாதம் தனது அநந்யார்ஹ பக்தர்களுக்கு கூடாதே -தானே உண்டான் -அவனுக்கு எல்லாம் ஆகுமே )

அப்படியே
பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -என்கிற
என்னுடைய சம்சாரம் ஆகிற வருஷத்தை
பரிகரிக்க வந்தவன்..

பகைவனது வில் விழவை அழித்தமை கீழே
இடையரது விழாவைச் சீர் திருத்தினமை இங்கு
ஆ நிரைகளுக்கு ஆயர்கள் ரக்ஷகர் அல்லர்
ஆயர்களுக்கு இந்த்ரன் ரஷகன் அல்லன்
காக்கும் இயல்வினன் கண்ணன் -அனைவருக்கும் ரஷகன் இவனே

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் சென்று சேரும் இடம் திருவேங்கடம் -நம்மாழ்வார்
இவரோ மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார்
அறியாமை என்னும் மேகங்கள் சூழ்ந்து அறிவு ஒளியை மறைத்து துன்ப வர்ஷம் பொழிய -தளர்ந்த அடியேனை ரக்ஷிக்கவே திருவல்லிக்கேணியான்

——————

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுபவித்து -ஸ்ரீ பூமா நீளா தேவி நாயகனாய் இருந்து
வைத்தும் தூது சென்றான் என்று ஈடுபடுகிறார்

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
–2-3-5-

நற் புவி-ஷமை பிருத்வி சமாயா –
தன் துணை யாயர் பாவை-தன்னையே துணை இவளுக்கு மட்டும் தந்தை சுல்கம் வைத்து பற்றினான்

———————————————————-

வியாக்யானம் –

இன் துணைப் பதுமத் தலர்மகள் –
நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற
பதுமத்தலர் மகள் உண்டு –
தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார்
அவளுக்கு இன்பனானவன் –

தனக்குமின்பன் —
எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற
பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –

நற் புவி தனக்கிறைவன் –
சர்வேஸ்வரனான தனக்கும் கூட
பொறைக்கு உவத்தாய் இருக்கிற
பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )

தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை-
தன்னையே துணையாக உடையாளான
ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் –
(சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )

மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை –
இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை-
ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக
அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது –
இங்கே வந்து அறிவிப்பதாய் –
இப்படி ஆஸ்ரித விஷயத்தில்
தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை
(தூது இயங்கும் என் துணை -என்பதால் )
எனக்கு அறிவித்தவன் –

எந்தை –
எனக்கு ஸ்வாமியாய் –

தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.

ஆஸ்ரித பாரதந்தர்ய திருக்குண த்தில் இழிகிறார்
ஆயர் பாவை -கும்பன் திருமகளானாலும் ஆயர்கள் அனைவரும் தமது மகளாகப் பேணிக் கொண்டு இருப்பதால்
பாவை அத்யந்த பாரதந்தர்யம்
ஸ்ரீ வல்லப ஏவம் பூத பூமி நீளா நாயக
இவர்கள் பக்கல் முறையுடன் பரிமாறுகையும்
அவள் பக்கல் முறை கெடப் பரிமாறுகையும்
இம்முறை கேடு தனக்கு இவர்கள் தங்களை எழுதிக் கொடுத்து இறே இருப்பது
நிழல் போல்வனர்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தந
உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித பரமேஸ்வர
மிதுனத்தை பூமி நீளா தேவிமார் சேவிப்பதைச் சொல்லும்
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
இருவடைய அபிமானத்துக்குக் கீழே த்ரிபாத் விபூதியாக
அடங்கிக் கிடக்குமே

வன் துணை வானவர்க்காய் -தன்னைப் பேணாதே அம்புக்கும் இலக்காகிக் கொண்டு நின்ற எளிமை தனது வம்சத்துக்கே நாதன் இவன்

———————————

தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2
-3-6-

அரசர் தம் அரசன் ராஜ ராஜன் -துரியோதனன் அவன் நினைவால்
அணி யிழை-அப்படிப்பட்டவள் இப்படி மூன்று நாள்கள் இருக்கும் பொழுதும்
அலக்கண் -துக்கத்தை
இந்திர புத்ரன் -அர்ஜுனன் -வாலி -அங்கு
சூர்ய புத்ரன் -கர்ணன் -சுக்ரீவன் -அங்கு

——————————————————-

வியாக்யானம் –

அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு  கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –

எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதியம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

அவிவேகம் அந்தகன் சிறுவனாதலால்
செல்வச் செருக்கு -ராஜாதி ராஜன் தம்பியாதலால்
ப்ரபுத்வம் யுவராஜா யாதலால்
யவ்வனம் இளையவன் ஆதலால்
நான்கு குறும்புகள் சேர்ந்தவன்
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் -பெரியாழ்வார்

———————

(ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தில் ஆசை கொண்டு தேர் தட்டிலும் குரு பரம்பரையில் இடம் பிடித்தான்
சிற்றவை பணியால் முடி துரந்தானே -கீழே பெருமாள் மங்களாசானம் இதில் விரித்து ச குடும்பமாக

ப்ருந்தாரண்ய துளசிக் காடு -நிவாஸாய –
கைரவணி புஷ்கரணி –மீன்கள் இல்லாதது
துர்வாசர் சாபத்தால் விஸ்வகர்மா-உடல் அற்று கீழே விழ சபித்து -அ ரஜ நதிக்கரையில் –
சாபம் போக இங்கு தபஸ் அங்கங்கள் பெற்றார்
ஆர்த்ரேயர் வியாசர் இருவரும் -வியாசர் எழுந்து அருளப்பண்ணிய வேங்கட கிருஷ்ணம்
வலது திருக்கையில் பாஞ்ச ஜன்யம்
இடது திருக்கையில் தான ஹஸ்தம் வைகுண்டம் ஹஸ்தம் ஞான முத்திரை
ஒரு திருவடி முன் வைத்து பார்த்தனை கடாக்ஷித்து -சாட்டை வைத்து பார்த்தசாரதி சேவை
சேஷ பீடத்தில் ஒட்டியாணம் நாகாபரணம் தரித்து ஹிரண்ய மீசை
சுமதி அரசன் -இரண்டு தோள் அமுது
அத்ரி முனிவர் தபஸ் -அத்ரி குமாரர் ஆர்த்ரேயர் நரசிம்மர் )

ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் நடுவில் வழி பரிப்பாரைப் போல் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -சிற்றவை –
நெஞ்சுக்குள் புகுந்து பாடல் பெறுகிறார் இங்கு –

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
—2-3-7–

காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-

————————-

வியாக்யானம் –

பரதனும் தம்பி சத்ருக்கனனும்-
ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க –என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )

இலக்குமனோடு மைதிலியும் –
இதுவும் இங்கனே  ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் )
ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை-
தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –
கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்
ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )

இராவணாந்தகனை –
இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின
அபதானம் ஒன்றுமே ஆயிற்று –

யெம்மானை –
அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
குரவம் கமழா நிற்பதாய்
ஸ்ரமஹரமான
பொழிலின் ஊடே
குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

இக்குளிர் பொழிலின் வளம் தான்
பரதாதி நித்ய ஸூரிகளையும்
குயில் முதலிய பறவைகளையும்
ஆழ்வாராதிகளையும்
கவி பாட வைக்கும் முக்கோட்டை

குரவம் கமழ நாசிக்கும்
குளிர்ச்சியால் உடலுக்கும்
குயில் பாட செவிக்கும்
மயில் ஆல கண்ணுக்கும்
ஸ்துதிப்பதால் நாவிற்கும்
இவ்வாறு ஐம் பொறிகளுக்கும் இன்பம் பயக்கும் பொழில்

முடி துறந்த பெருமாள் முதல் பாசுரம்
முடி சூடிய பெருமாள் இதில்

——————————

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
—-2-3-8-

ஒள்ளியவாகி-அழகாக
ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்

—————————————————————

வியாக்யானம் –

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –
பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்
சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –
இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை
சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –

வாயில் ஓர் ஆயிர நாமம் –
அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி
இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –

நால் இரண்டு -திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
நாராயண -ஹரி என்றுமாம்
விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –

ஒள்ளியவாகிப் போத –
வயிற்றில் பிறந்தவன் சொல்லுகையாலே
இனிதாய் இருக்குமே –

வாங்கு
அவ்விடத்தில் –

அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி –
பள்ளியில் ஓதும் பருவத்தில் சொல்லுவது எல்லாம் பிரியமாய் இருக்கும் –
தன் வயிற்றில் பிறந்தவன் சொல்லிற்று எல்லாம் இனிதாய் இருக்கும் –
சத்ருவே சொன்னாலும் சிரசா வஹிக்க வேண்டுமத்தை சொல்லிற்று –
அசஹ்ய அபசார ப்ராசுர்யத்தாலே
திரு நாமம் கேட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
முனிந்தான் ஆயிற்று –

பிள்ளையை-
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை
கை விட்டான் அவன் –
திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து
இருக்கிறபடியாலே –பிள்ளையை –என்கிறார்

சீறி வெகுண்டு தூண் புடைப்ப-
கோபத்தாலே செய்வது அறியாதே
தூணைத் தட்ட –

பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் –
பிறை போலே இருந்த எயிற்றையும்
அக்நி போலே இருந்த கண்களையும்
புறப்பட விடா நின்றுள்ள பெரிய வாயையும்- உடைய -( இவையாய் பிலவாய் )

தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே
நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன்
என்னும் இடத்தை வெளி இட்டான் –

——————————

ஆண் பிள்ளை ஐவருக்கும் பெண் பிள்ளைக்கும் சிறுக்கனுக்கும் உதவியது அன்றிக்கே
திர்யக்குக்கும் ஒரு திரியக்கால் வந்த நோவுக்கு அரை குலையத் தலை குலைய வந்த
மஹா குணத்தில் கட்டுண்டு அனுபவிக்கிறார்

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
-2-3-9-

———————————————

வியாக்யானம் –

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த –
நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே
இடர் பட்டுத் திரிந்த விது –
பூத்த தடாகத்தைக் கண்டு –
ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே
வந்து இழிந்த –

கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ  –
காட்டிலே ஸ்வ சஞ்சாரம் பண்ணக் கடவ யானையானது
கை எடுத்துக் கூப்பிடும்படியாக
முதலை யானது இதின் காலைக் கதுவ –
முதலைக்கு தன்னிலமாய்
இதுக்கு வேற்று நிலமாயிற்று –

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –
ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம்
போம்படியாக
பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படியாக
திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
வண்டுகள் அமர்ந்த சோலையையும்
மாடங்களையும் உடைத்தான
மயிலாப்பூரில் திருவல்லிக்கேணிக் கண்டேனே –

——————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே
—2-3-10-

பாண்டிய தேச அரசர் வம்சம் -தென்னன்
நின்றானை-ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை –
இவர் பாடலே இவனுக்கு அரண் -ஆகவே மதிள் மங்கை நாட்டில் இருக்க வேண்டுமே
சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
சொல் மாலை -ஸப்த சந்தர்பமான

——————————-

வியாக்யானம் –

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
நித்யமாய்
குளிர்ந்து இருந்துள்ள பொழிலும்
நீர் நிலங்களும்
அரணாகப் போரும்படியான மதிள்களும்
மாடங்களும்
மாளிகைகளும்
மண்டபங்களும்-

தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை –
இன்னமும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் எல்லாம்-( நன் மயிலை-சொல்லாத நல்லவைகளும் )
உண்டாம்படி யாயிற்று
தொண்டமான் சக்கரவர்த்தி ஏற்றிற்று –

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் –
அரணாகப் போரும்படியாய்
நன்றாய் இருக்கிற மாடங்களை உடைய
திருமங்கைக்கு ப்ரதானர் –

காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்-
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –

சுகமினி தாள்வர் வானுலகே –
நித்ய அனுபவம் பண்ணலாம் படியான
நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணித்த
தொண்டையர் பல்லவர் கோன்
சித்ர கூடத்துக்கும் திருவேங்கடத்துக்கும் பொற் பூ சமர்பித்தான்

முக்தி இன்பத்தை விட கலியன் ஒலி இன்பம் மிக்கது -தெள்ளியீர் பதிகம் –

ஆள்வர் வானுலகே
முடியுடை வானவர்
ஸ்வராட் -கிங்கரத்வாதி ராஜ்ஜியம் -அடி சூடும் அரசு
குடி இருப்பரோபாதி யாயிற்று பரமபதத்தில் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு
பிராப்தி தேசம் நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்
அடியாரது வைகுந்தம்
அவனது வையம்

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று
–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இனியான் நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

——–

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர்
–94-

(இ – ள்.) திரிந்து உழலும் – (ஐம்புலவாசைகளிற்) சென்று அலைகின்ற,
சிந்தைதனை – உங்கள் மனத்தை,
செவ்வே நிறுத்தி – (அவ்வாறு செல்லவொட்டாது) நேராக நிறுத்தி,
திருவல்லிக்கேணியான் – திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய,
கண்ணன் – கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,
சீர் – கீர்த்தியை,
புரிந்து புகன்மின் – விரும்பிக் கூறுங்கள்;
புகன்றால் – அவ்வாறு புகழ்ந்து கூறினால், (அது), –
கரு வல்லிக்கு – கர்ப்பமாகிய கொடிக்கு,
மருந்து ஆம் – (நசிக்கச் செய்யும்) ஒளஷதமாம்;
மா கதிக்கு – சிறந்த முத்தி யுலகத்துக்கு,
ஏணி ஆம் – (ஏறிச் செல்லுதற்குஉரிய) ஏணியாகும்; (எ – று.)

மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணியி லெழுந்தருளிய திருமாலின்
கீர்த்தியை யெடுத்துக்கூறினால், அது கொழுந்தோடிப்படர்கின்ற கர்ப்ப பரம்பரைகளை நீக்கி முத்தி
நெறியிலேறுதற்கு எளியஉபாயமாகு மென்பதாம்.

கருவல்லிக்கு மருந்து – பிறப்புக்களை இனி உண்டாகவொட்டாது தடுக்குந் திவ்யௌஷதம்,
கீழிடத்திலிருந்து மேலிடத்திலேறுதற்கு ஏணி இன்றியமையாக் கருவியாதல் போல
நில வுலகத்திலிருந்து மேலுலகமாகிய முத்தி யுலகத்தி லேறுதற்குக் கண்ணபிரானது புகழ்கள்
இன்றியமையாத உபாயமாமென்பது, ‘ஏணியாம் மாக் கதிக்கு’ என்றதன் கருத்து. கண்ணன் – பார்த்தசாரதியுமாம்.

இது – தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு சேவை சாதித்த தலம்;
இத் தலத்துப் புஷ்கரிணி – அல்லிப் பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணி யென்று வட மொழியிலும்,
திருவல்லிக்கேணி யென்று தென் மொழியிலும் பெயர் பெறும்.
இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரே இத் தலத்திற்கும் பெயராயிற் றென்க.
இது மயிலையை யடுத்திருத்தலால், மயிலைத் திருவல்லிக்கேணி யெனப் பெயர் பெறும்;
இம் மயிலையே பேயாழ்வாரது திருவவதார ஸ்தலமாம்.

———–

பேயார் திரு மழிசைப் பெம்மான் அருள் கலியன்
வாயாரச் சொன்ன வளம் கவியில் -மேயான்
திருவல்லிக்கேணியான் சீர் அருளே வாளாம்
கரு வல்லிக் கால் அறுக்கும் கால்

எறி கடல் வந்து அலைக்கும் எழில் அல்லிக்கேணி கண்ட
அறிவுடை ஆழ்வார் பாடல்கள் அனைவரும் அறிய வான்றோர்
முறையிலே பிறழாது ஏகி மூண்ட பேர் அன்பினாலே
சிறியனேன் உரை செய்தேனால் சீர் திருமலை நல்லானே

———–——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நல்லான் சக்ரவர்த்தி ராமகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
அரி திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் வைபவம் /ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

September 16, 2024

திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்

அவதார ஸ்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: வடக்குத் திருவீதிப் பிள்ளை

ஶிஷ்யர்கள்:  கூர குலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப் பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட் குழி ஜீயர், திருக் கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)

அருளிச் செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருவரங்கத்திலே திருக்குமாரராய் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். அயோத்தியில் பெருமாளும் இளையபெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட் பார்வைக்கும் வழி காட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றை பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது திருத் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச் சிறப்பு யாதெனில் இவ் விருவரும் தங்கள் வாழ் நாளில் நைஷ்டிக ப்ரஹ்ம சர்யம் அனுட்டிக்கப் போவதாய் ஶபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஶிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஶிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஶித்து வந்தார். மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப் பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஶங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஶங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஶங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதஶையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேஶிக்குமாறு உத்தர விடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருமவை மிக முக்கியமானவை .

  • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
  • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
  • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணர வேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ் வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணி ப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

ப்ரமாண ரக்ஷணம் செய்ததோடன்றி ப்ரமேய ரக்ஷணமும் செய்து கொடுத்த வள்ளல் இவரே. திருவரங்கத்தில் அனைத்தும் நலமாக நடந்து வந்து கொண்டிருக்கும் வேளையிலே தான் திடீரென்று துலுக்கர்களின் படையெடுப்பு செய்தி காட்டுத் தீ போல் பரவியது. கோயில்களிலே இருக்கும் செல்வங்களை சூறையாடும் துலுக்க மன்னர்களின் போக்கை அறிந்தவர் அனைவரும் இச் செய்தியை அறிந்து துன்புற்று நிற்க, அக்காலத்தின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் எழுந்தருளி இருந்த பிள்ளை உலகாரியர் அரங்கனை காக்கும் திருப் பணியில் ஈடுபட்டார். பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு , இவர் உத்ஸவ பேரரான நம்பெருமளுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டார். தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது நம்பெருமாளுடன் இவர் பயணமானார். காடுகள் வழியாக நம்பெருமாள் எழுந்தருளிச் செல்லும் போது  சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களை திருடினர். சற்றே முன்னே சென்று கொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவியுற்று வந்து திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணி கொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபரணங்களை மீளவும் ஸமர்ப்பித்தனர்.

மதுரையில் ஆனை மலைக்குப் பின்புறம் உள்ள ஜ்யோதிஷ்குடி என்ற சிறு க்ராமத்தைச் சென்றடையும் நேரத்தில், வயோதிகத்தால் திரு நோவு சாற்றிக் கொண்ட பிள்ளைலோகாசாரியர், திருநாட்டிற்கு எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.அச் சமயம் பிள்ளை லோகாசாரியர் தனது சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை நினைத்து, அவரே தமக்கடுத்து ஸம்ப்ரதாய தலைவர் ஆக வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். கூர குலோத்தம தாஸர் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களை அழைத்து, திருமலை ஆழ்வாரை அவரது அரசாங்க பணியிலிருந்து விடுவித்து தரிஶன ப்ரவர்த்தகர் ஆகும் படிக்குத் திருத்திப் பணி கொள்ளுமாறு நியமித்தார். இறுதியாய் தனது சரம திருமேனியை துறந்து இன்பமிகு விண்ணாடு என்று போற்றப்படும் பரமபதத்தை அலங்கரித்தார்.-ஜ்யோதிஷ்குடி – பிள்ளை உலகாரியன் பரமபதம் அடைந்த இடம்

பிள்ளை உலகாரியன் மற்றும் சீர் வசன பூஷண ஶாஸ்த்ரத்தைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு விஶதவாக் ஶிகா மணியான மணவாள மா முநிகள் உபதேஶ ரத்தின மாலையை அருளினார். இதில் மணவாளமாமுநிகள் ஆழ்வார்கள் திருவவதார விஷயமாகவும், ஆசார்யர்கள் திருவவதார விஷயமாகவும், ஆசை உடையோருக்கெல்லாம் ஸத் ஸம்ப்ரதாயத்தைத் திறந்து வைத்த எம்பெருமானாரின் பேரிரக்கத்தின் விஷயமாகவும் , திருவாய்மொழி வ்யாக்யானங்களின் திருவவதார விஷயமாகவும் விளக்கி, பின்னர், பிள்ளை உலகாரியரின் திருவவதாரம் விஷயமாய் ஸாதிக்கத் துவங்கி, சீர் வசன பூஷணத்தின் பெருமைகள் மற்றும் அது கொண்டுள்ள சீரிய அர்த்தங்களின் பெருமைகள் தனை விளக்கி, இறுதியாய், அவ்வர்த்தங்கள் காட்டும் பாங்கிலே நாம் வாழ வேண்டும் என்றும் அவ்வாறாக வாழ்ந்தோமே ஆனால், எந்தை எதிராசரின் (எம்பெருமானாரின்) இன்னருளுக்கு இலக்காகுவோம் என்றும் உபதேஶிக்கிறார். மேலும் பூர்வாசார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் மீது நம்பிக்கை வைக்காது , நம் புரிதலை கொண்டும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் நாமாகவே இவை தான் அர்த்தங்கள் என்று உரைக்க முற்பட்டால், நாம் மூர்க்கர் என்று ஆவோம் என்று ஸாதிக்கிறார். மூர்க்கர் போன்ற அப ஶப்தங்களை ஒரு போதும் உபயோகிக்காத அழகிய மணவாளமாமுநிகளே இவ்வாறாக ஸாதித்துள்ளார் என்றால், பூர்வர்களின் நிலைக்கு மாறாக நடப்பது அத்தனை பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். இதுவே ஸ்ரீ வசன பூஷணத்தின் ஸாரம் என்றும் பெரிய ஜீயர் தனது அரிய உபதேஶ ரத்தின மாலை பிரபந்தத்தில் எடுத்துக் காட்டுகிறார் .

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளுவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

ஸ்ரீ வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் உபகார ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் விசுவாசத்துடன் பிள்ளை லோகாசாரியர் இடத்தில் இருத்தல் வேண்டும். பிள்ளை உலகாரியன் இல்லையேல், நம்பெருமாளையோ எம்பெருமானார் தரிசனத்தின் ஆழ்பொருள்களையோ  நாம் காணவே முடியாது .

எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆசார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் – 006 – உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல?

அயோத்தியில் பெருமாளும் இளைய பெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது தம்பி  அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட்பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றைப் பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலேயே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச்சிறப்பு யாதெனில் இவ்விருவரும் தங்கள் வாழ்நாளில் நைஷ்டிக ப்ரஹ்மசர்யம் அனுட்டிக்க போவதாகச் சபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

சம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் கனவில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேசித்து வந்தார். ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று பெயர் சூட்டிக் கொண்டான்). கிபி 1321 ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.  

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். இவனது வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதை தோறும் சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப் பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோவில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்து போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று அழைக்கப் பெறும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.  

படையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு.  அமைதியாய் வேதவாய் மொழி அந்தணர்களை வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம்.  ஆக்கிரமிக்கும் படை –  ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து,  திருவரங்கம் வாழ் மக்களுக்கு சொல்லொணாத் துயரம் தருகிறது. அரங்கன் தங்கள்  குலதனம் என்று எப்போதும் வாழும்   ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்ய பரர்கள், அச்சமயத்தில் வாழ்ந்திருந்த  வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர் பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்றப் பாடுபடுகின்றனர்.  

பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு,  உற்சவரின் அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார்  சில வீரர்களுடன்,  சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.  

திருக்கோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியரும் அவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடு பல்லக்கில் எழுந்தருளிப் பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டு வழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்துச் சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு  தள்ளாடும் பருவம் – நூற்றை தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.   

தன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்களுக்குப் பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தைச்  சென்றடைந்தார்கள்.  வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம்  ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்றதாகக் கோவில் ஒழுகு உரைக்கிறது.  இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.  

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118 ஆவது வயதில் உலகாரியர்  திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளி படுத்தி திருவரசு எழுப்பினார்கள்.  அப்படி உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல என்கிறாள் திருவல்லிக் கேணி பெண்பிள்ளை.

திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம்  என சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக்  திருப்பதிக்கு செல்கிறார்.  உலுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்த பிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்ய காலத்திற்குச் சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக் கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு).  

(பிள்ளை லோகாச்சாரியர் 1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் திருநாடு அடைந்ததாக வரலாறு குறிக்கிறது.  இதில் கால வேறுபாடுகள் வரலாற்றில் இருந்தாலும் நமது இந்துக்கள் வரலாறு முகலாயர் வரலாறு போல தெளிவாக எழுதப் பெறவில்லை.  சிலர் அவர் 1311 ஆம் ஆண்டு தமது 106ஆம் அகவையில் திருநாடு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  அதில் இப்படிப் பல குழப்பங்களை அன்றைய வரலாற்று அறிஞர்கள் வேண்டும் என்றே எழுதி நம் இந்து குருமார்களின் பல சாதனைகளைச் சந்தேகிக்க வைத்து விட்டனர்.)

மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று பயிலத் துவங்கினார் , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு சம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதசங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேசங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கிப் பயணித்துக் காட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” (பெண் பிள்ளை வாக்கியம் 2ஐ இங்கு நினைவு கூர்க) என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதசையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேசிக்குமாறு உத்தரவிடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருபவை மிக முக்கியமானவை .

இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துக்களில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும். 

  • தத்துவத் திரயம் – வடமொழியில்
  • முமுக்‌சுப் படி – மணிப்பிரவாள நடையில்
  • வசன பூசணம் – தமிழில் வைணவம், ஆழ்வார்கள் குறித்து
  • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
  • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
  • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணரவேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேர் இரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:பிள்ளை லோகாசாரியரின் தனியன்: 

வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம்                      வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்  இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்:

———–

ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

—————————–

முதல் -10-ஸ்லோகங்களால் ஸ்ரீ ரெங்க நாதன் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ விஷ்வக் சேனர் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் /ஸ்ரீ பட்டர் / ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம் பிள்ளை / ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை /
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் / ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் -இவ்வாறு குரு பரம்பரை ஸ்தோத்தம் செய்து அருளி
11-ஸ்லோகம் தொடங்கி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை ஸ்லோகம் செய்து அருளுகிறார் –

காவேரி புலி நாந்தராள லஹரி கல்லோல மாலா லசித்
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ் நித்ரா நிபத்தாதரம்
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமலஜே நாராதிதம் ஸ்ரீ சகம்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத
–1–

காவேரி புலி நாந்தராள-ஸ்ரீ காவேரி மணல் திட்டிலே
லஹரி கல்லோல மாலா லசித் -சிறிய பெரிய அலைகளால் தீண்டப் பட்டு –
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ்-திரு அனந்தாழ்வான் மேலே திருப் பள்ளி கொண்டு அருளி –
நித்ரா நிபத்தாதரம்-யோக நித்திரை செய்து அருளி
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமல ஜே நாராதிதம் ஸ்ரீ சகம் -ஸ்ரீ கஸ்தூரி திலகம் பூண்டு -சத்ய லோகத்தில் சதுர் புஜ பிரமனால்
ஆராதிக்கப் பட்டு -பெரிய பிராட்டியார் உடன்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத –ஸ்ரீ கௌஸ்துபம் பூண்டு திரு ஆர மார்பன் –
ஸ்வ பாவிக -பராத் பரன் -நமக்கு அருளை பொழியட்டும் –

—————————-

நாத லோக பால நதியா மருத் வ்ருதா
புளிநம் ஜகாம நளிநம் விஹாய யா
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா
கருணா தரங்க விததீர பாங்க ஜா
–2-

நாத லோக பால நதியா மருத் வ்ருதா-புளிநம் -திருக் காவேரி மணல் திட்டின் மேலே -ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்துக்காகவே
ஜகாம நளிநம் விஹாயயா -தாமரை மலர் வாசம் விட்டு வந்து அருளி
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா-கருணா தரங்க விததீர் அபாங்க ஜா -ஸ்ரீ ரெங்கநாதன் மேலே அளவு கடந்த பிரியத்துடன் இருப்பவள்
கடாக்ஷித்து அருளும் அருள் அலைகள் நம்மிடம் வீசட்டும் –

—————————————–

யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ
ஸ்பந்தஸ் ஸூரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா
வைகுண்ட ஸூரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே
–3-

யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ –தாமரைக் கரங்களில் -ஸ்வர்ண ஒளிமயமாக திருப் பிரம்பின்
ஸ்பந்தஸ் ஸூ ரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா-சிறு அசைவாலேயே அசுரர்கள் நிரசனத்தால் தேவர்கள் பயங்களைப் போக்கி அருளி
வைகுண்ட ஸூ ரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம-நித்ய ஸூரிகள் தலைவராக இருந்து
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே –ஸூ த்ரவதி பதியாக இருந்து -உலகோரை மகிழ்விக்கிறார்

————————————-

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே
ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்
மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது
–4–

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே –ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே –ஸமஸ்த வித பாபங்களையும் ஆஸ்ரிதர்க்குப் போக்கி அருளுபவர் –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி நிலைகளான ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரே சரண் ஆவார் -அவர் திருவடிகளை மீண்டும் மீண்டும் அடியேன் தலையால் வணங்கி
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்-மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது-அவர் திரு முடியில் சாத்தி இருக்கும்
வகுள மாலை கந்தம் அடியேன் வாக்குக்கும் மொழிக்கும் மனம் அருளிச் செய்ய வேண்டி ஸ்துதிக்கிறேன் –
வகுளாபரணர் அன்றோ -அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என்றவர் திருவடிகளை பற்றி தம் வாக்குக்கும் அமுதூட்ட சரண் அடைந்து பிரார்த்திக்கிறார்

——————————————————–

விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய
சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம்
ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம்
ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம
–5-

ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம் -ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம –ஸ்ரீ பாஷ்யகாரர் -யதிராஜா ஸார்வ பவ்ம்யர் –
பர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் நன்றாகக் காட்டி அருளி
விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய -சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம் -விகசித்து -ஸ்ரீ பாஷ்யம் மூலமாக
ஸ்தாபித்து அருளியவர் நம்மை ரஷித்து அருளட்டும் –

—————————————————–

கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண –
6-

கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா –ஸ்ரீ கூரேசர் ஸ்ரீ எம்பார் திருவடிகளில்
கைங்கர்யத்தால் விளைந்த உகந்த திரு உள்ளம் உடைய
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண -ஸ்ரீ பராசர பட்டர் வேதாந்தியான
ஸ்ரீ நஞ்சீயர் உடன் -அடியேனை கடாக்ஷித்து அருள் பொழியட்டும்

———————————–

யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம்
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்
–7-

யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம் -சரஸ்வதி -சகல கலா வல்லவள் நாக்கு நுனி நாட்டிய அரங்கத்தில் ஆட விரும்பி
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்-நம் பூர்வாச்சார்யர்கள் -திராவிட வேதாந்தாசார்யர்கள்
ஆழ்வார்கள் அருளிச் செயல் வியாக்கியானங்களை உகப்புடன் நமக்க அருளிச் செய்ய அருளி
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே -ஸ்ரீ கலிகன்றி தாசர் –நம்பிள்ளை -ஸ்ரீ கந்தாடை தோழப்பர்
லோகாச்சார்யார் என்று உகந்து சூட்டி அருளி -பின்பு நஞ்சீயர் நம்பிள்ளை என்று அன்புடன் சூட்டி அருளப் பட்டவரும்
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்—ஸ்ரீ கிருஷ்ண என்பவரான ஸ்ரீ -வடக்கு திரு வீதிப் பிள்ளை யுடைய
ஆச்சார்யருமான அவர் அடியேனை கடாக்ஷித்து வாக் வன்மை அருளட்டும் –

——————————————————

அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா
–8-

அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ-அந்த ஸ்ரீ நம்பிள்ளை திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற கொடிக்கு மரம் போன்றவரும்
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா -ஸ்ரீ கிருஷ்ண என்ற திரு நாமம் உடையவரும்
வடக்குத் திரு வீதியில் வாழ்பவருமான அவர் அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –
முடும்பை நம்பிகள் திரு வம்சம் -ஸ்ரீ ஈடு படுத்தி அருளியவர் -மட் அம்பி -மண் பானையில் தண்ணீர் என்பதே முடும்பை என்பர் –

————————————————————–

வத்ஸான் வவாய வரணீய பய பயோதே
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ்
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்
லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்
–9–

வத்ஸான் வவாய வரணீய பய பயோதே—
பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றிய -குல விளக்கான –
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ் –உலகில் ஒளி மிக்கு விளங்கிய ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் சந்திரன் போலேயும்-
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்-லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்–ஸ்ரீ வடக்கு திரு வீதி பிள்ளையும்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் -இருவரையும் தியானிக்கிறேன் –

——————————————————

வாணீ புண்ய ஸூதா பாகம் ஷட ஜித ஸ்வைரம் விகாஹ் யாதராத்
ஆநீயாம்ருத மத்ர சக்ர துருபவ் பா நீயஷாலாத்மகம்
யவ் வாக் பூஷண தேசிகேந்த்ர ஹ்ருதயாபிக்ய பிரபந்த த்வயம்
தவ் வந்தே புவ நார்ய ஸூந்தர வரவ் க்ருஷ்ணாத் மஜவ் தேஷி கவ்
–10-

ஸ்ரீ நம்மாழ்வார் உடைய இனிய திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ அவற்றில் ஆழ்ந்து
நாம் பருகும் படி -ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -என்ற இரண்டு
வடக்கு திருவீதி பிள்ளை திருக் குமாரர் இருவரையும் வணங்குகின்றேன் –

—————————————–

மது ரிபு மஹி லாயா ஸ்பிதவீஷா சரோஜாத்
மதுரக்பாணி திப்ருங்கீ நிர்கதா காசி தோஷா
புவன குரு பாதாப்ஜ த்வன்ட்வ நிர்யன் மரந்டான்
அநுதினம நு பூயா அனந்த சாந்த்ரா மமாஸ்து
–11-

அடியேனுடைய ஸ்ரீ ஸூ க்திகள் இனிமையையாயும் திவ்யமாயும் இருப்பது ஸ்ரீ மது சூதனன் திவ்ய மஹிஷியான
ஸ்ரீ மஹா லஷ்மி கடாக்ஷத்தின் பயனாக வந்தாலே தானே –
அவை மேலும் வன்மையும் திடமும் அடைய அடியேன் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் மேல் ஸ்தோத்ரம் பண்ணி
அவருடைய ஸ்ரீ ஸூ க்திகளை நித்யமும் அனுசந்திக்கிறேன் –

—————————————————–

மணி பிரவாளாந் ஜித ஸூக்தி ஸூநை
விபூஷி தாஷேஷ சஹஸ்ர ஷாகம்
அகல்பயத் கந்ஜந கல்ப வ்ருக்ஷம்
க்ருஷ்ண ஷிதவ் லோக குரூத்த மாக்யம்
–12–

ஒப்பில்லா கற்பக வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்உடைய -மணி பிரவாள – திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –
செழும் கற்பகத்தை -கற்பகச் சோலை -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கற்பக வல்லிம்–என்னை ஆள வந்த கற்பகம் -என்பர்கள் –

————————————–

தேவீஷூ பத்ம நிலயா தயிதா பபூவ
பக்தேஷூ ஸோ அபி வகுளங்க முநிர் வரேண்ய
ஆர்யேஷூ நிர்மல குணஸ் த்வய மந்தரங்க
ரங்காதி பஸ்ய ந்ருபதே ஜகதார்ய நாமா
–13–

மலர் மகளான பெரிய பிராட்டியாரை போலவும் வகுளாபரணரான ஸ்ரீ நம்மாழ்வாரை போலவும்
ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களில் நிர்மல குணம் உடைய ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை அந்தரங்கமாக கொண்டு அருளுபவர் ஸ்ரீ ரெங்க நாதர்

—————————————————-

ஹ்ருதய முகுர பிம்பம் யத் த்வ ஹங்கார பங்க
ஸ்தகித விமல ரூபம் ஸ்வோக்தி ஷூத் தாம்பு பூரை
புவன குருவர ஸ்தச்சோத யித்வா ஜனாநாம்
சிதசித திபதீம் த்ரீன் தர்ஷயன் பாதி தத்ர–
14-

அஹங்காரம்-போன்ற அஞ்ஞானங்கள் -மனக் கண்ணாடியில் அழுக்கு போலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
தம் ஸ்ரீ ஸூக்திகளால் இவற்றை அகற்றி -தத்வ த்ரயம் ஞானமும் ஸ்வரூப யாதாம்ய ஞானமும் அருளுபவர்

———————————————–

ஜனி ஜலதி பரீ தாகரா லீநா ஆத்ம பங்க்த்யை
த்ரிவித விஷய த்ருஷ்ணா ராக்ஷஸீ பீடிதாயை
புவன குருவரோ அதாத் ஸ்ரீ மதீம் ஸூ க்தி பூஷாம்
பவந ஜ இவ தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து
–15-

பவந ஜ இவ–திருவடியை போலே
தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து -ஸ்ரீ சீதா பிராட்டிக்கு பெருமாள் உடைய கணை யாழி கொடுத்து அருளியது போலே –
சம்சாரிகள் -பூமி தங்கள் பெண்ணாசை போன்ற ராக்ஷஸிகள் -இவற்றில் இருந்து ரஷிக்க பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணம் –

———————————————————————————-

பணி தி கிரண ஜாலைர் மாநயன் மாந சாப்ஜம்
சர நமுஷித தோஷா அரூட காடாந்த கார
அபர இவ வபுஷமாநம் ஷூ மா லீ ஜனாநாம்
பதமிவ புவ நார்யோ பாசயன் பாதி விஷ்ணோ –16-

ஸூர்யன் இருளை போக்கி ஒளி தருமா போலேயும் தாமரையை விகசிக்க செய்யுமா போலேயும் -இவரது திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
நம் அந்தகாரம் போக்கி -அகங்கார மமகாரங்கள் ஆகிய தோஷங்களை விலக்கி-ஹ்ருதய தாமரை விகசிக்க செய்து
அந்தர்யாமி பகவானை சாஷாத்கரிக்கவே செய்யுமே –
வகுளா பூஷண பாஸ்கரர் -இராமானுஜ திவாகரர்-ஆச்சார்யர்கள் கடாக்ஷம் கொண்டே அவன் அருள்வான் –
நீரில் உள்ள தாமரையை தானே ஆதித்யன் உலர்த்தக் கடவன் –

—————————————————

அந்தர் விலோசனம் அனந்த தமோ நி கூடம்
ஆலோக்ய ஐந்து நிவஹஸ்ய தயாரித்த்ரா சேதா
உன்மீலயந்நு பஹி தேந ரஹஸ்ய த்ரயார்த்த
தீபேன யோ ஜயதி லோக குரும் தமீடே –1
7-

பரம காருணிகரான பிள்ளை லோகாச்சார்யார் தம் தயை உந்த ரகசிய த்ரய அர்த்தங்களை முமுஷுப்படி இத்யாதி
திவ்ய அஷ்டாதச ரகசியங்கள் மூலமாக நம் ஹிருதய அந்தகாரங்களைப் போக்கி
யாதாம்ய ஞானம் பெரும் படி செய்து அருளினார் -அவர் திருவடிகளைப் பற்றுவோம் –

——————————————

புவன குருத்தம சதுர ரெங்கபுர அபணிக
கலி ரிபு தாச வர்யா கலிதாமல ஸூ க்தி மணீந்
குண பண ஸங்க்ரஹேண நிபுணாய ததாதி ஹிதான்
அத புனரேவ வ்ருத்தி முப யாந்தி விசித்ரமிதம்–
18-

நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் விசேஷார்த்தங்களை சாத்விக சிஷ்யர்களுக்கு வழங்கி மேலும் மேலும் பிள்ளை லோகாச்சார்யார் கீர்த்தி வளருவது
நல்ல நகைக் கடை வியாபாரி நல்ல நகைகளை நல்ல முறையில் வியாபாரம் செய்து விருத்தி அடைவது போலே உள்ளது என்றவாறு –
பெருமாள் ஜடாயு மஹாராஜருக்கு சத்யத்தாலே லோகங்களை வென்றதாலேயே மோக்ஷம் கொடுத்ததாக சொல்லிய -அரசன் சங்கை போக்கிய – ஐதிக்யம் –

————————————————–

த்ருட மபவத வித்யா வல்லரீ வாசநா அத்பி
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி
சதருரப்ருதா ச ஷேத்ரினோ பக்நமூலா
–19-

ஷேத்ரினோ -ஜீவாத்மா உடைய
அவித்யா வல்லரீ-அவித்யை -கொடி போல –
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே –கர்ம வசப்பட்டு மேலும் மேலும் விருத்தி அடைய
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி — பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்கிற
சூறாவளிக் காற்றாலே கர்மங்கள் தொலைக்கப் பட்டு
பக்நமூலா சதருரப்ருதா ச -அந்த கொடியானது வேருடன் அழியுமா போலே வாசனை ருசி உடன் அழித்து முடிக்கும் –

————————————————————————

யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம்
ஜகத் குரு வலா ஹக படு வவர்ஷ பூமவ் ஜலம்
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா
ப்ரவாஹ பஹுலா அபவத் நிகம மௌலி வித்யா நதீ
–20-

ஜகத் குரு வலா ஹக -லோகாச்சார்யார் -நம் பிள்ளை -ஆகிய மேகம் /பிள்ளை லோகாச்சார்யார் ஆகிய மேகம்
யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம் -யதிராஜர் ஸ்ரீ ஸூ க்திகள் -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற அமுதாக கடலை முற்றப் பருகி
படு வவர்ஷ பூமவ் ஜலம் -பூமியில் பொழியுமா போலே பொழிந்து
நிகம மௌலி வித்யா நதீ–வேதாந்த நதியாக ஓட
ப்ரவாஹ பஹுலா அபவத் -வெள்ளமாக -பரவுமா போலே
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா -பரவி ஆஸ்ரிதர்கள் மலர்ந்தார்கள்

நம்மாழ்வார் -மேகம் -அவன் சமுத்திரம் என்பர் சம்பிரதாயத்தில் -அதே போலே
நஞ்சீயர் / யதிராஜர் / நம்பிள்ளை / பிள்ளை லோகாச்சார்யார் இங்கு -லோகாச்சார்யார்கள் இருவரும் என்பதால்
ஸ்ரீ ராமானுஜர் திரு உள்ளக் கருத்துக்களையே கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்றவாறு –

————————————————————

படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா
பவப் ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா
–21-

படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே–அநேக பிரபந்தங்களால் -பூர்வர்கள் பலரும் முன்பே அருளிச் செய்து
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம் -ரகஸ்ய த்ரய விவரங்களை விளக்கி இருந்தாலும்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா -பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த
அஷ்டாதச ரகசியங்களும் -ஸூ ர்யன் இருட்டை போக்குமா போலே
பவப்ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா -சம்சாரத்தில் உழன்று மாரி மாரி பல பிறவி எடுத்து
உழலும் அஞ்ஞான அந்தகாரத்தை நன்றாக போக்கி அருளிற்றே-

————————————————————–

அகம்ய மஹிமா ஜநைர் நிகம மௌலி காந்தார பூ
விஹார ரசிகோ வ்ருஷ ஷிதிப்ருதோ வசன் கந்தரே
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன
ஷமோக்தி நகரோ மஹான் ச ஜகதார்ய கண்டீரவ
–22–

அகம்ய மஹிமா ஜநைர்-எவராலும் எளிதில் அரிய முடியாத மஹிமையை யுடைய
நிகம மௌலி காந்தார பூ -விஹார ரசிகோ -வேதாந்தம் ஆகிற காட்டுக்குள் அனுபவித்து உகந்து சஞ்சரிக்க
வ்ருஷ ஷிதிப்ருதோ -வசன் கந்தரே-தர்மம் ஆகிற மலையிலே -முழஞ்சிலே வசிக்கும் –திருவேங்கட திரு மலையிலே –
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன -ஷமோக்தி நகரோ –இவர் ஸ்ரீ ஸூ க்திகள் சிம்மத்தின் திரு உகிர்கள்
யானையின் தலையை உடைத்து -தெள்ளிய சிங்கம் ஹிரண்யன் ஆகம் பிளந்தால் போலே –
மஹான் ச ஜகதார்ய கண்டீரவ -மகத்தான பிள்ளை லோகாச்சார்யார் உடைய ஸ்ரீ ஸூக்திகள் பண்ணி அருளிற்று
எங்கள் இராமானுஜ முனி வேழம் –வலி மிக்க சீயம் போலே -யாதாம்ய ஞானம் அருளிற்று என்றவாறு –

———————————————————–

விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி
–23-

விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
விஷாந்தரங்களில் நசை அற்று ஸ்ரீ கிருஷ்ணனே உண்ணும் சோறு -இத்யாதி -எல்லாமாகப் பற்றிய
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான -நம்மாழ்வாரைப் போலே முக்கிய ஆச்சார்யராக -பிள்ளை லோகாச்சார்யரும்
-அவர் அருளிச் செய்த நான்கு திவ்ய பிரபந்தங்கள் போலே இவர் அருளிச் செய்த அஷ்டாதச திவ்ய கிரந்தங்களும்
நம்மாழ்வார் கண்ணனே எல்லாமாகக் கொண்டது போலவே இவரும் வடக்கு திரு வீதிப் பிள்ளையையே எல்லாமாக கொண்டவர் –
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே இந்த பஞ்சாஷத்தும்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி -இத்தால் பிள்ளை லோகாச்சார்யர் உடைய சிறப்பையும்
அவர் அருளிச் செய்த திவ்ய கிரந்தங்களில் சிறப்பையும் அருளிச் செய்கிறார் –

———————————————–

சுலுகித பவ சிந்தும் சித்த ஜக்ரோத தைத்ய
ப்ரமத நபடுபுத்தும் ஸ்ரீ ஜகத் தேசி கேந்திரம்
த்ரவிட பணிதஷம் தக்ஷிணா ஷானி ஷண்ணம்
கலஷத நயமன்யம் மன்யதே மே மனஸ் த்வாம்
–24–

அகஸ்திய முனி சமுத்திர ஜலத்தை ஆசமனமாக உறிஞ்சி வாதாபி அசுரனை நிரசித்தால் போலே பிள்ளை லோகாச்சார்யாரும்
சம்சார ஆர்ணவம் -காம க்ரோத -அசுரர்களை நிரசிக்க அஷ்டாதச ரகஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்தார் என்றதாயிற்று –

————————————————

ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -அப்யரதி ப்ரியா தே –
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-
லோகா வலீ விமல லோசன கோசராங்க –
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி
–25-

ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -மன்மதன் போல அழகானவர் –
மன்மதன் தாதை கிருஷ்ணன் -இவர் தாதை கிருஷ்ணன் என்னும் வடக்குத் திரு வீதி பிள்ளை
அப்யரதி ப்ரியா தே -அவனுக்கு ரதி மனைவி உமக்கோ அரதி-உலக விஷயாந்தரங்களில் ப்ரீதி அற்று -இருப்பதால்
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-வசந்த ரித்து மது அவனுக்கு பிடிக்கும் -நீரோ மது அசுரனை நிரசித்த கண்ணன் மேலே ஆசை கொண்டவர்
அவன் சிவனை கண்டால் பயப்படுவான் -பவ-சிவனின் பெயர் -பவ சம்சாரம் உம்மைக் கண்டு அஞ்சும் –
லோகா வலீ விமல லோசன கோசராங்க -அவன் அங்கம் இல்லாமல் அநங்கன் ஆனான் -நீரோ அனைவரும் கண்டு மகிழும் படி
-அனைவர் கண்களுக்கும் விருந்தாகும் படி -இருக்கிறீர்
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி-கிருஷ்ணர் தாதை என்பது மட்டுமே உங்களுக்குள் பொருத்தம் –

———————————————

த்ருஷ்ட்வா தே புவநார்ய ஸூந்தர வபு கேசித் பாவம்போதி நிதிம்
சந்தீர்ணா ஷ்ரவணாம் ருதம் தவ குணம் ஷ்ருத்வா ஸக்ருத் கேசந
அன்யே கே அபி ஸூ தா சகோதர பீத்வா அப வன் நிர்மலா
தஸ்மாத் ஸம்ஸ்ருதி வர்த நீ ஷிதி தலே ஷீனா பபூவ ஷணாத்
–26–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -தம் திருமேனி அழகாலும் -குணங்களாலும் -ஸ்ரீ ஸூக்திகளாலும் சம்சாரம் கடலை தாண்டுவித்து அருளுகிறார் –
ஆகையால் க்ஷணம் பொழுதில் சம்சாரம் அழிந்தது -உம்முடைய ஸ்வரூப ரூப குண திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலே -என்கிறார் –

———————————————————————

தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித்
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ
பவன குருவர ஸ்ரீ பத்ம நா பஸ்ய பாதே
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான
–27–

தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித் –உமது திருவடித் தாமரை பலத்தால் ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ -திரு வனந்த புரத்திலே நித்ய வாசம் செய்யப் பட்டவராய்
பவன குருவர ஸ்ரீ பத்ம நாபஸ்ய பாதே-பிள்ளை லோகாச்சார்யார் திரு அருளாலே திரு பத்ம நாபன் திருவடி தாமரைகளை அடையப் பெற்று –
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான -அனைவரும் பார்த்து புகழும் படி ஆனார்

சப்த காதை திவ்ய பிரபந்தம் அருளப் பெற்றவர் –
கூர குலோத்தமை தாசரும் விளாஞ்சோலை பிள்ளையும் -பிள்ளை லோகாச்சார்யார் ஆணைப் படி
திருவாய் மொழிப் பிள்ளையை சம்பிரதாயத்துக்கு கொண்டு வந்தார்கள் -விளாஞ்சோலைப் பிள்ளைக்கு அந்திம கைங்கர்யமும்
திருவாய் மொழிப் பிள்ளை செய்வித்தார் -பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு செய்தால் போலே –

————————————-

சஞ்சீவநீ சரண ரேணு கணாவலீ தே
சம்சார தக்ஷக முக ஷத முக்த ஐந்தோ
லோகார்ய வர்ய கருணாம்ருத சாரணீ து
சமவில்லதாம் கலயதே ஹ்ருதயே ப்ரரூடாம்
–28-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடி துகள்களே-சம்சார விஜ ஜந்துவால் கடி பட்டவர்களுக்கு மருந்து ஆகும் –
ஐந்தலை நாகத்தால் கடி பட்டது போலே பஞ்ச இந்த்ரியங்களால் இழுப்புண்டு இருப்போர்க்கு மருந்தாகும்
கடி பட்டு பாம்பு கடி உண்ட பாம்பு -அனந்தாழ்வான் ஐதிக்யம்
அவரது கருணை அமிர்த ஆறே இருதயத்தில் மலரும் ஞானச் செடிக்கு நீராகி பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்து அடைய உதவும் –

————————————————-

ஷிஷ்யேஷூ வாக் பூஷண போஷி தேஷூ
ஜகத் குரோ தே கருணா அபி ஷே காத்
ச கூரவம் ஷோத்தம தாச நாமா
மாந்யோ குருணாம பவந் மஹிம்நா
–29-

உம்முடைய கருணாம்ருதத்தால் அன்றோ ஸ்ரீ கூர குலோத்தம தாசர் -ஸ்ரீ வசன பூஷண அர்த்தங்களில் ஆழ்ந்து
-திருவாய் மொழிப் பிள்ளைக்கு அவற்றை அருளி ரகஸ்ய கிரந்த குரு பரம்பரையில் உமக்கும்
திருவாய் மொழிப் பிள்ளைக்கும் நடு ஸ்தானம் பெற்று உலகம் புகழும் படி ஆனார் –

———————————————–

ரூபம் புராண மணிபி ஷ்ருதி வஜ்ர தீப்தம்
பத்மா பதேர் முனி ஜன ஸ்தத லந்ஜகார
தத்ர த்வயா விரசித்தம் து மணி ப்ரவாள
வாக் பூஷணம் ஹி நிதராம் புநார்ய பாதி
–30-

ஸ்ரீ பராசர ஸ்ரீ வியாசாதிகள் புராண ரத்தினங்களை கொண்டு வேத மயனான ஸ்ரீ யபதிக்கு அலங்கரித்தனர்
அவன் திருமேனியில் மிக்க தேஜஸ் இதன் ஸ்ரீ வசன பூஷணம் -மணி பிரவாளமாக -திகழ்கிறதே –

——————————————-

காமம் பவந்து குரவோ விவிதாக மார்த
விஜ்ஞ்சான விஷ்வ விதிதா விஹித பிரபந்தா
த்வத் ஸூ க்தி மௌக்தி ககனோ யதலன் ஐகார
ரங்காதி பஷ்ருதியுகம் புவநார்ய கிம் தை
–31-

உமது திவ்ய ஸூக்திகள் ஸ்ரீ ரெங்கநாதன் திருக் காதுக்கு அணியாக இருக்க -மற்றைய ஆச்சார்ய
ஸ்ரீ ஸூக்திகள் நமக்கு எதற்க்காக -ரகஸ்ய த்ரயார்த்தமே சரமம் என்றவாறு –

—————————————

ஸ்ருதி நிகரக பீர கான நந்தர்
விஹரண விஷ் ருத புத்திநாத் வயைவ
ப்ரபதன சரணிர் விஷோதி தாச பூத்
புவன குரோ புவி லோக சாத நீயா
–32-

வேதத்தில் பிரபத்தி சொல்லப் பட்டு இருந்தாலும் அரிய அறியதாய் இருக்க நீர் உம்முடைய ஸ்ரீ ஸூக்திகளால் பிரபன்னர் சர்வாதிகாரம்
-சர்வ காலத்திலும் தேசத்திலும் -நின்ற நின்ற நிலைகளில் செய்யலாம் -அதிகாரி நியமமே உண்டு -என்று அருளிச் செய்தீரே

————————————————-

த்வயி விலசதி ரெங்கே சேஷ தல்பேந பும்ஸா
ஜகதி குருவர ஸ்ரீ த்ருஷ்ட்டி பூராபி ஷிக்தே
கதமிவ புவ நார்ய த்வாம் விநா அந்நியம் பஜந்தே
சதிதி நகர பிம்பே கே ப்ரதீபம் வஹந்தி
–33-

அரவணையில் பள்ளி கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கநாதன் பூர்ண கடாக்ஷம் பெற்று தேஜஸ் உடன் விளங்கும் நீர் –
வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரர் -ராமானுஜ திவாகரர் போலேயும் இருக்க
பூர்ண சந்த்ரன் போலேயும் ஸூ ர்யன் போலேயும் இருக்க மற்றவர்கள் வெறும் தீபம் போலே தானே -நஹி நிந்தை நியாயம் –
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு வெங்கதிரோன் குல விளக்கு வேண்டாமே என்றுமாம் –

——————————————

அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம்
ததநு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ
ரசயதி ஸூக நித்ராம் ராகவாணாம் குலேந்திர
–34–

ராகவாணாம் குலேந்திர –ராகு குல தனமான ஸ்ரீ அரங்க நாதன்
அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ — க்ரமேண உபகார பரம்பரைகள் பல செய்து அருளி -கரண களேபரங்கள் கொடுத்து அருளி
-சாஸ்திரங்கள் கொடுத்து அருளி –ரகஸ்ய த்ரயங்கள் கொடுத்து அருளி –
அவதாரங்கள் பண்ணி அருளி -அனுஷ்டானங்கள் மூலம் காட்டி அருளி -ஆழ்வார்கள் மூலம் அருளிச் செயல்களைக் கொடுத்து அருளி –
நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்கள் மூலம் வியாக்கியானங்களை கொடுத்து அருளி -இவ்வளவும் செய்து அருளி
தத நு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ -அரவணை மேல் உறங்குவான் போலே யோக நித்திரை செய்து அருளி
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம் -பிள்ளை லோகாச்சார்யரை தோன்று வித்து -பின்பு தானே
ரசயதி ஸூ க நித்ராம் -நன்றாக -ஸூ கமாக ரசித்து உறங்குகின்றான் –

————————————————–

பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத
புலி நதட மவாப்ய த்வாம் புவம் சாபயித்வா
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த–
35–

பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத –புலி நதட மவாப்ய -ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பிராட்டியார் உடன்
காவேரி மணல் திட்டிலே வந்து சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடந்து
த்வாம் புவம் சாபயித்வா-உம்மை தோன்று வித்த பின்பு தானே அன்றோ
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே —தனது அபேக்ஷிதம் கிட்டப் பெற்றான் –
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த-இதனாலே தானே அவன் திருமுகத் தாமரையும் நன்றாக மலர்ந்து விகாசம் அடைந்து உள்ளது –

——————————————————–

பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான்
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா
–36-

பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம் -பலவித துக்க சூழலில் அகப்பட்டு உழலும்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்-த்வயம் போலவே இரண்டு திருக் கரங்களைக் கொண்டு உஜ்ஜீவிக்க
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான் -அனைவரும் அறியும் படி த்வயார்த்தம் தெளிவித்து கரை ஏறும் படி
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா -பரம காருண்யரான பிள்ளை லோகாச்சார்யார்
ஸ்ரீ ஸூக்திகளை அஷ்டாதச ரகஸ்யங்களாக அருளிச் செய்தார் –

——————————————————-

வக்த்ரேந்தோர் புவ நார்ய வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம்
–37-

வக்த்ரேந்தோர் புவ நார்ய- வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ -பரம காருண்யரான -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் உடைய
சந்திரன் போன்ற குளிர்ந்த திருக் கண் கடாக்ஷத்தாலே -உதித்த அஷ்டாதச ரகஸ்ய ஸ்ரீ ஸூ க்திகள் என்ற அமுத வெள்ளமானது
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத -18-கால்வாய்கள் மூலம் -சம்சார பூமியில் -நதி மாத்ருகம் –
மழை நீர் தேவ மாத்ருகம் என்றும் ஆறுகள் நீர் நதி மாத்ருகம் -என்றும் சொல்வர் –
இந்த நதி மாத்ருகம் ஜீவர்கள் உஜ்ஜவிக்க அன்றோ வந்தது –
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா -இவர் அருளிச் செய்த இந்த நதி மாத்ருகத்தால் அன்றோ
சம்சாரம் கரை என்ற ஜீவர்கள் உணர்ந்தார்கள்
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம் -இதனால் அன்றி காள மேக ஸ்யாமளனான
ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு அறிந்து உஜ்ஜீவித்தோம் என்றவாறு-

————————————————————-

க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத்
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி
–38-

க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத் –கோபம் கடலிலே விழுந்து மறைந்ததே -/ காமங்களும் ஒழிந்தனவே
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர -டம்பம் பாம்பு போலே காட்டிலே மறைந்ததே –
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா-அஹங்காரம் டம்பம் -கார்யம் – கோபம் காமம் காரணம்
-அனைத்தும் மூலையிலே ஒடுங்கிப் போயினவே
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி –நல்ல ஞானம் உள்ளவர்கள் வணங்கும்
பிள்ளை லோகாச்சார்யார் தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைப் பெய்தினரே –

———————————————-

தயா முத முபாக மத்த மஷமஷமா பூஷிதா
விரக்தி ரபிஷோ பதே விமல வித்யயா அலங்க்ருதா
முஹுஸ் ஸூமதி சம்ஸ்க்ருதா லஸதி விஷ்ணு பக்கத்து குணா
விவேக ஜனகம் ஜகத் குரு முபாஷ் ரிதா பாந்த்யமீ –
39–

நீர் அருளிய விவேக ஞானத்தால் விஷ்ணு பக்தி வளர்ந்து -விரக்தி மிக்கு -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் வர பெற்றோம் –

—————————————————

ஜகத் குரு வரா நிஷாம் சரண சம்ப்ருதா பூ ஸூ ரா
முமுஷூ ஜனஷேகராஸ் த்விதி ந சித்ர மத்ராவ நவ்
விவிஸ்ய சிதசித் ப்ரபூம் ஸ்தவ க்ருபாஞ்ஜநோத் யத்ருஷா
நிவ்ருத்தி பதகாமி நீ சபதி பாமி நீ கா அப்யபூத–40-

வையத் தேவர்கள் தேவரீர் திருவடியை ஆஸ்ரயித்து தத்வ த்ரய ஞானம் பெற்று உந்து போனார்கள் –
திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாயார் போன்ற பல பெண்மணிகளும் அன்றோ உமது கடாக்ஷ பலத்தால் தத்வ த்ரய ஞானம் பெற்று
நிவ்ருத்த தர்மம் -பிரபத்தி -மார்க்கம் மூலம் உந்து போனார்கள் -உம்முடைய திருவடி பலம் என்னே –

———————————————–

சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு
–41-

சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா –நான்முகன் பத்னி சரஸ்வதி உம் தாமரை திரு முகம் அடைந்தாள்
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி -ஸ்ரீ லஷ்மீ தேவி போலவே உம்முடைய பக்தி லஷ்மி திரு உள்ளம் நிறைய இருக்கிறாள் –
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா-நீல கண்டன் பத்னி பார்வதி தேவி போலே உலக விஷய விரக்தி உம்மிடம் பொலிகின்றதே –
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு –இப்படி இருக்க -உம்மை நைஷடிக்க ப்ரஹ்மச்சாரி என்று சொல்வது எங்கனம்
ஸ்வாமி உடைய வித்யா பக்தி விரக்தியை கொண்டாடும் படி –

—————————————————–

ஜகத் குருவர ஷிதவ் ஷபித கல்மஷவ் காம் கலாம்
சதுர்த்த புருஷார்த்த தாமபி கலவ் விதத்ய த்வயி
க்ருதவ தரனே புன க்ருத யுக க்ரம ஷோபதே
நகோபி புவி த்ருஷ்யதே நரக வர்த்தமகாமீ நர
–42-

தேவரீர் திருவவதரித்த பின்பு -சாஸ்த்ர யாதாம்ய ஞானம் பிறந்து மோக்ஷம் ஒன்றே புருஷார்த்தமாக கொண்ட பின்பு கலி கெட்டு க்ருத யுகம் போலே ஆனதே –
நரகமும் புல் மூடி ஒழிந்தே-போனதே — கலியும் கெடும் கண்டு கொண்மின் –நலியும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து பெரிய க்ருத யுகம் பற்றிப் பேரின்ப பெறுக

——————————————————

ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம்
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம்
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே–
43–

ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே –பக்தி மூலம் தமஸ் அந்தகாரம் நீக்கி அவனை அடைவதோ
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம் –பிரபத்தி மூலம் பிரபல கர்மாக்களை நிர்மூலம் ஆக்கி அவனை அனுபவிப்பதோ
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம் -இரண்டுமே சாதனங்கள் -என்றாலும் நீர் திருவவதரித்த பின்பு அன்றோ
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே-அவன் திருவடித் தாமரைகளை பற்றி அஞ்ஞானம் அந்தகாரங்கள்
களையப் பெற்று சர்வ பாபங்களையும் போக்கப் பட்டு –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -பிரபத்தியில் அசக்தனுக்கு இது -என்று
நீர் பஞ்சம உபாயம் அருளிச் செய்து காட்டிக் கொடுத்தீர் அன்றோ –

———————————————-

குருர் பவதி தேஹி நாம் புவனதே ஷிகஸ் யாதராத்
அபாங்கலவ விப்ருஷ பரிபதந்தி யஸ்யாங்ககே
ஷூபானி கில தம் பஜந்த்யத கலா சமுஜ்ஜ்ரும்பதே
பவந்தி நவ சம்பதோ பஜதி மோக்ஷ லஷ்மீ ஸ்வயம்
–44-

உமது கடாக்ஷ லேசத்தாலே -ஆச்சார்யாக விரும்பி சிஷ்யர்களுக்கு சாஸ்த்ர ஞானம் உபதேசித்து -பாபங்களை போக்கி
மோக்ஷ லஷ்மியையும் அருளும் படி அன்றோ ஆகிறார்கள்-

———————————————-

ஷ்ருனோமி யதி வைதிகான் மகவிதீன் ஜகத் தேஷிக
ப்ரக்ருஷ்ட ஜன சேவிதான் அஹஹ மே மனா கம்பதே
அஹேதுக யார சைரவாதி தீன ஜீவான் முதா
ரமாபதி ரிதி த்வயா ரசிதஸூக்திபிர் மோததே
–45–

உபாயாந்தரங்களை பின் பற்றி கர்ம யோகாதிகளை பண்ணி பக்தி மார்க்கம் வழியாக எம்பெருமானை அடைவதில் உள்ள
கஷ்டங்களை நினைத்து வருந்தி இருக்கும் உள்ளத்தை -உம்முடைய நிர்ஹேதுக கிருபையால்
ஆச்சார்ய அபிமானம் -பஞ்சம -உபாய சீர்மையை அருளிச் செய்து
அவனே நம்மை அடையும் படி செய்து அருளினீரே –

—————————————-

ஆ சக்ர வாலமவநவ் புவ நார்ய சர்வே
ஷம் சந்தி மங்கள குணான் விபூத ப்ரியாம் சதே
தேஷூ த்வதீய கருணாம் ப்ரகுணாம் து மன்யே
ரஷாம் யயா கலயஸே பவபீத ஐந்தோ
–46–

சகல உலகத்தாருக்கும் -சக்கரவாள மலைப் பிரதேசம் -உள்ளாறும் தேவரீர் உடைய அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டாடினாலும்
தேவரீருடைய பரம காருண்யமே -அஷ்டாதச ரகசியங்களை அருளிச் செய்து -நிர்ஹேதுகமாக அவனே தன் சொத்தை தன்னிடம் சேர்த்துக் கொள்வான் –
என்று அருளிச் செய்து சம்சார பயத்தை நீக்கும் படி பண்ணி அருளினீரே -ஸ்ரீ நிவாஸன் தயை போலே இதுவே சிறந்த கல்யாணம் குணம் என்கிறார் –

—————————————–

ஸூ க்ருத லவவி ஹீனம் ஷூத்த பாவைர் விமுக்தம்
துரிதஷத நிகேதும் தூரயாதம் தயாயா
புநரபி ஜன மேநம் வீக்ஷஸே ரஷிதம் தவம்
புவன குருர சீத்தம் கோ அபி வாத்சல்ய சிந்து
–47–

குண ஆர்ணவம் நீர் -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு அருளி
-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் கை விட்டாலும் –
அபார காருண்யத்தாலே நிர்ஹேதுகமாக கைக் கொண்டு அருளி லோகாச்சார்யராக இருக்கிறீர்

————————————–

விமத குமதி பீடா மானஸே சம்ரரூடா
த்ருட மமுமிஹ ஜீவம் க்ருந்ததி க்ரூர வ்ருத்தயா
அம்ருத ரஸ சகீ பிஸ்தாம் நிவார்யாஷூ த்ருக்பி
விரசய விதி ஷக்தம் ஸ்ரீ ஜகத் தேஷி கேந்திர
–48-

கெட்ட புத்திகள் மூலம் தூண்டப்பட்ட கொடிய செயல்களால் தாழ்ந்து உள்ளவர்களை
உம்முடைய கடாக்ஷ லேசத்தாலே மீட்டு நாரணனுக்கு ஆளாக்கி அருளிச் செய்தீர் –

—————————————————

தோஷா யேன க்ருதா முராரி கருணா சாரா பகாரோ தகா
ஷைலேந்திரா ஷதஷோ வசந்தி ந குணஸ்யானோர ணுர்த் த்ருஷ்யதே
லோகாச்சார்ய ஜனம் தமே நமலசம் ரஷேத் பவாம்ஷ் சேத் தத
பத்மா காந்ததயா தயோ வர குணாஸ்தஸ்மிம்ஸ்து தேப்யோ நம –
49–

நாம் அபராத சக்க்ரவர்திகளாக இருப்பதால் –மலை போன்ற அபராதங்கள் -எம்பெருமான் தண்டனைக்கு பாத்திரம் ஆகிறோம் –
ஆச்சார்யர் திருத்தி பணி கொள்வதால் -நம்மால் அவனை அணுக முடிகிறது -சம்சார போகி சந்தஷ்டந் ஜீவ ஜீவாதே நம -என்றவாறு –

————————————–

யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம
–50-

யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக –உம்முடைய குல தைவம் பெருமாளால் ஆராதிக்கப் பட்ட ஸ்ரீ ரெங்க நாதன்
-ஸ்ரீ ரெங்க நாயகி கேள்வன் -என் திருமகள் சேர் மார்பன் –
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ –உமது வாஸஸ் ஸ்தானமோ காவேரி நடுவில் உள்ள
பூ லோக வைகுண்டம் -திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி –உம்முடைய திருத் தகப்பனாரோ உபய வேதாந்த ச்ரேஷ்டரான வடக்குத் திரு வீதி பிள்ளை
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம -உம்முடைய திரு சகோதரரே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்
-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் அருளிச் செய்தவர் –
நீரோ பிள்ளை லோகாச்சார்யார் -மிகப் பொருத்தமாக சாத்திய திரு நாமம் -உமக்கு யார் நிகர் ஆவார் –

——————————————–

காவேரீ யுகலாம் புபூர லலிதே புண்யந்தரீ பே அஸ்ம் யஹம்
லோகார்யோ வ்ரஜ தத் விஜேதி வரத ப்ரோவாச பக்தாய ஹி
இத்யேவம் குரு ஸூ க்தி பிர் குருவர த்வாம் மன்யமான ஸ்த்வஹம்
வந்தே வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம் -51-

வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம்–திருக் ஹஸ்தி நகரில் பெரும் தேவி சமேதனாக சேவை சாதிக்கும்
ஸ்ரீ வரதாச்சார்யனே – -மணல் பாக்கத்து நம்பியிடம் அருளிச் செய்த படியே -அவனே பிள்ளை லோகாச்சார்யராக திருவவதரித்தார்
இரண்டு ஆற்றுக்கு நடுவில் சென்று குறையும் ஸ்ரீ வசன பூஷணம் கேட்டுக் கொள்ள சொல்லி அருளினான் –
சேதனர்கள் உஜ்ஜீவனத்துக்காகவே இப்படி வந்து அவதரித்து ஸ்ரீ வசன பூஷணம் முதலியவற்றை அருளிச் செய்தான் பேர் அருளாளன் –

————————————————

வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம் ராமானுஜம் மத்குரும்
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை
–52-

வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே -வேதாந்தங்களில் விதித்த கர்ம யோகங்களுக்கு சக்தன் அல்லேன்
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய -வாக் இத்யாதி இந்திரியங்கள் பட்டி மேய்கின்றன
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம்-பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையே தாரகமாக கொண்டு அத்தாலே ஷாந்தியையே தனமாக கொண்டவருமான
ராமானுஜம் மத்குரும் -அடியேன் ஆச்சார்யரான -ஆத்ரேய ராமானுஜர் -கிடாம்பி ராமானுஜ பிள்ளான் -உடைய சிஷ்யன் என்றதையே கொண்டு
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை-அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ மன் நாதமுனிகளை பார்த்து தம்மை அங்கீ கரித்து அருளும் படி ஸ்தோத்ர ரத்னத்தின் அருளிச் செய்தது போலே இங்கும் –

———————————————————–

ப்ரணம்ய சரணவ் தவ ப்ரணததே அஹினாம் காமதவ்
இதம் கிமபி வாஞ்ஜிதம் புவன தேஷிக பிரார்த்தயே
அஸார பணி திஷமா சரணமத்ய ஹித்வா மன
ப்ரயாது பதவீம் ஷூபாம் வசன பூஷண அலங்க்ருதாம் –
53-

தேவரீர் திருவடி அபேக்ஷிதர் அபேக்ஷித்தவை எல்லாம் தர வல்லது –சம்சாரத்தில் பிரயோஜனாந்தரங்கள் பலவற்றிலும் அளந்து அவதி படாமல்
தேவரீர் அருளிச் செய்த ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதில் திட விசுவாசம் உடையவனாய் தேவரீர் ஆக்கி அருள வேணும் –

—————————————————–

இத்தம் ஜகத் குரு வர ப்ரவணந ஸர்வ
தந்த்ர ஸ்வதந்த்ர கவிதார்க்கிக ஸிம்ஹநா நாம்
ஸ்ரீ வேங்கடேஷ கவிநா கலிதாம் ஸ்துதிம் யே
ஸ்நிக்தா படந்தி புவி யாந்தி பராம் ஷ்ரியம் தே –5
4–

நிகமத்தில் பலமாக இந்த ஸ்தோத்ரம் கற்பவர்களுக்கு ஆச்சார்ய அபிமானம் கிட்டி பரம புருஷார்த்தம் பெறுவார் என்று அருளிச் செய்கிறார் –

———————————————

கவிதார்க்கிக சிம்ஹாயா கல்யாண குண ஷாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேஷாய வேதாந்த குரவே நாம –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் பொன்னடி மேவுவோம் மெய்மையே-ஸ்ரீ வகுள மாலை–1937-May-June-

September 12, 2024

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவோமே

ஸாது
சந்திம் இச்சந்தி சாதவ -அன்பு பெருகும் சந்தியில் -நல்லன்பர் சாதுக்களாவார்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -இவன் அவனது திருநாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி செய்யும் நிலமே சடகோபர் தத்வம்
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்துக்கள் ஆவார்
ஸ்ரீ பாதுகை பெற்று மீண்ட பரதாழ்வானை பரத்வாஜர் -பேறு பெற்றீரோ -பரனை ஒன்றினீரோ -பரத்வாஜர் உசாவுகிறார்
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமான் –ஸ்ரீ வால்மீகி பகவான் புகழ்ந்தார்

ப்ரபந்ந ஐந கூடஸ்தர்
ஆத்யஸ்தன குல பதேர்
குல தனம்
குல தைவதம்
-என்று ஆர்ய ஜனங்கள் புகழ்ந்து போற்றுவதுக்கு மூலம் இவர் ஸ்ரீ ஸூக்தியே –

விண்ணுளார் போற்றித் தொழும் ஸ்ரீ வைகுந்தக் கோனுடைய திருப் பாதுகைக்கு ஸ்ரீ சட கோபன் என்று அன்றோ திரு நாமம் –
நிதி-பரன் என்பது பிரதம பர்வம் -சடகோபன் என்பது சரம பர்வம் –

தன் திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனை -அபய ப்ரதான ஸாரம்

ஸ்ரீ சடகோபன் நிற்கும் பாத பீடத்தளவும் சென்று -பரமபத ஸோபநம்

வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
மந்திரம் கொள் மறை முனிவன் -காயத்ரி கண்ட -ருஷி விஸ்வத்துக்கு மித்ரர்
அதன் பொருளை விரித்து அருளியவர் வால்மீகி கவி 24 அக்ஷரங்கள் கொண்ட -காயத்ரியை விளக்கும் ஸ்ரீ ராமாயணமும் 24 ஸ்லோகங்கள் கொண்டது
ஸரணாகதி ஸாஸ்த்ரமும் அதுவே
ஸரணாகதி தர்மத்தை விளக்கும் மறைகளுக்கு எல்லாம் காயத்ரியே தாய்
அத்தாய் மந்த்ரம் கண்ட இவரே ரிஷி
அதன் அர்த்தம் விரித்து அருளிய இவரே கவி
காயத்ரியே விஸ்வ ஜநநீ
பக்தைர் பாகவத சஹா என்றது ஆழ்வார் ஆச்சார்யர்களையே

மறைச்சிரம் மருவும் ஆன்antrumஅன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறனை அமிழ்தின் இணையடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழு மூதுவர் உலகு வாழ
நிறை யரித் திருவாய் ஓது நிதி எனும் நிலை விரித்தனமே

———

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர் புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

மகிழம் பூ

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம்[6]வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.

  • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.

இந்தப் பூவின் சிறிய உருவம் பற்றியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடிய ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

பேரிலேயே-மகிழ்”ச்சி தரும் “மகிழ”ம்பூ

பண்ணும் தமிழும் தவம் செய்தன!  பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! – என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!

மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்)  என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் “வகுளா பிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!”

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்

துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?

உளவோ பெருமான் உனக்கு?

கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற – நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம். 

மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இயம்புதல்-ஒரு பொருட் பலசொற்கள்-

September 12, 2024

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான் எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7– 

எண் திசையும் அறிய இயம்புகேன்-
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –

எண் திசையும் அறிய இயம்புகேன்
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு எல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –

எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்
மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்
ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன்
என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே
தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்
தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே
அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்
இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

அறிய வியம்புகேன் –
“அறியச் சொன்ன வாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப் போலே
நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார்.

“தமிழ்ச் சடகோபன்” என்றது
தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

———

அருள் கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள் கொண் டாயிரமின் தமிழ் பாடினான்
அருள் கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.

இவ்வுலகினில் என்பதை ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதிலும் ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு,
ஆழ்வாருடைய அருள் இந்த லோகத்திற் காட்டிலும் பெரிது என்றுரைப்பதும் ஒக்கும்.

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் செய்த படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலை கடலிடையில் துயில்வோன்
அலைகடல் குறு முனி கையில் அடக்கம்
குறு முனியோ எனில் கலசப் பிறவியோன்
கலசமோ புவிதனில் கண்டதோர் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ சிவபிரான் பாகத்து ஒடுக்கம்
சிவனோ திருமால் திருவடி ஒடுக்கம்
திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டருள் பெரியோர் தூய சடகோபர்
சடகோபர் அருள் சகத்தினும் பெரிதே -என்றார் பாகவத கவிவரர்

அன்றி, இவ்வுலகிலே என்று ஏழாம் வேற்றுமையாகவே கொண்டு,
“அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்ற சொல்லமைப்பு நயத்திற்கேற்ப
‘பாசுரம் மிக்கது பரமபதத்திலே, அருள் மிக்கது இவ்வுலகத்திலே’ என்றுரைப்பதும் சிறக்கும்.
அதாவது-
“கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றபடி-திருவாய்மொழியை
நித்யஸுரிகள் விசேஷமாக ஆதரிப்பதனால் திருவாய்மொழியின் பெருமை பரமபதத்தில் ஓங்குகின்றது;
அத்திருவாய்மொழியை அருளிச்செய்வதற் குறுப்பான ஆழ்வாருடைய அருள் மாத்திரமே இவ்வுலகில் நிலாவுகின்றது என்றபடி.

————–

ஒரு பொருட் பலசொற்கள் : சொல்லுதல், பேசுதல், கூறுதல், சாற்றுதல், மொழிதல், என்னுதல், கிளத்தல், பன்னுதல், நுவலுதல், உரைத்தல், நவிலுதல், பகர்தல், நொடித்தல், செப்புதல், அறைதல், மாறுதல், விள்ளுதல், விளம்புதல், புகலுதல், இசைத்தல், கழறுதல், இயம்புதல், கரைதல்

  1. ஒலித்தல்- ஓசை கடிமனை யியம்ப (புறநா.36)
  2. வாத்தியம் ஒலித்தல்- வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்த பு.வள்.92)
  3. சொல்லுதல் (பிங். )
  4. துதித்தல்- ஞானக்கொடிதனை… இயம்புவோமே
  5. உரைத்தல் -அர்த்தம் சொல்லுதல்
  6. ஓதுதல் காதில் சொல்லுவது
  7. உரளுதல்
  8. கத்துதல்
  9. பொழிதல் -சொற் பொலிவு
  10. கூப்பிடுதல்
  11. இனிமையாகக் கூறுதல்
  12. இயம்புதல் வேட்கை அணி“ ஆகும்.
  13. வேட்கை – விரும்புதல், ஆசைப்படுதல்
  14. இயம்புதல் வேட்கை அணி“ ஆகும்.
  15. வேட்கை – விரும்புதல், ஆசைப்படுதல்
  16. அசைத்தல் -அசை அழுத்தத்துடன் சொல்லுதல்
  17. அறைதல் –அடித்து வன்மையாகப் பேசுதல்
  18. இசைத்தல் -ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
  19. இயம்புதல் -இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
  20. எண்ணுதல் -என்று சொல்லுதல்
  21. கத்துதல் -குரல் எழுப்பிச் சொல்லுதல்
  22. கரைதல் -அழைத்துச் சொல்லுதல்
  23. கழறுதல் இடித்துச் சொல்லுதல்
  24. கிளத்தல் இன்னது என்று எடுத்துச் சொல்லுதல்
  25. கிளத்துதல் –குடும்ப வரலாறு சொல்லுதல்
  26. குயிலுதல் -குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்
  27. குழறுதல் -நா தழுக்கத் தழுக்கச் சொல்லுதல்
  28. கூறுதல் -கூறுபடுத்திச் சொல்லுதல்
  29. சாற்றுதல் -பலர் அறியச் சொல்லுதல்
  30. செப்புதல் -வினாவுக்கு விடை சொல்லுதல்
  31. நவிலுதல் -நாவினால் ஒலித்துப் பயிலுதல்
  32. நுதலுதல் -நூலின் நுண் பொருள் சொல்லுதல்
  33. நொடித்தல் -கதை சொல்லுதல்
  34. பகர்தல் -பண்டங்களை பகுத்து விலை சொல்லுதல்
  35. பறைதல் -மறை ரஹஸ்யம் வெளிப்படச் சொல்லுதல்
  36. பன்னுதல் -நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்
  37. பனுவுதல் –செய்யுளால் புகழ்ந்து சொல்லுதல்
  38. புகலுதல் -விரும்பிச் சொல்லுதல்
  39. புலம்புதல் -தனக்குத் தானே சொல்லுதல்
  40. பேசுதல் -ஒரு மொழியில் சொல்லுதல்
  41. மாறுதல் -உரையாட்டில் மாற்றிச் சொல்லுதல்-
  42. மிழற்றுதல் –குழந்தையைப் போல் சொல்லுதல்
  43. மொழிதல் -சொற்களை விளக்கிச் சொல்லுதல்
  44. வலத்தல்–கேட்ப்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்
  45. விடுதல்-மெள்ள வெளிப்படச் சொல்லுதல்
  46. விதத்தால் -சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்
  47. விள்ளுதல் வெளியிட்டு -இடைவெளியுடன் சொல்லுதல்
  48. விளத்துதல் -விவரித்துச் சொல்லுதல்
  49. விளம்புதல் -அறிவிப்பு செய்தல்

ஸ்ரீ யாதவாப்யுதயம்–23- சர்க்கம் -ஸ்லோகார்த்தங்கள்–ஸ்ரீ கிருஷ்ணன் தூது செல்லுதல் -மஹா பாரத யுத்தம் -விஸ்வ ரூப தர்சனம் -பரீக்ஷித் உஜ்ஜீவனம் -தர்ம ப்ரதி போதநம் –

September 12, 2024

ஸ்ரீ யாதவாப்யுதயம்–23- சர்க்கம் -ஸ்லோகார்த்தங்கள்–ஸ்ரீ கிருஷ்ணன் தூது செல்லுதல் -மஹா பாரத யுத்தம் -விஸ்வ ரூப தர்சனம் -பரீக்ஷித் உஜ்ஜீவனம் -தர்ம ப்ரதி போதநம் -ஸ்ரீ மத் பாகவதம் -1-7-17-1-11-21-2484-2542-62 ஸ்லோகங்கள்-குருஷேத்ர யுத்தத்தில் ஆரம்பித்து பாண்டவர்கள் பட்டாபிஷேகத்துடன் நிறைவேறும்

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ–

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———–

அதாதிகார ஸ்யவநாத் யஸ் இந்த்ரா பஞ்சா பவன் பாண்டு ஸூதா ப்ருதிவ்யாம்
ஜயார்திநஸ் தே ஜகத் ஏக நாதம் ப்ரபேதிரே சத்த்வ தநா ஸ தாரா
–1-

அதன் பின் முற்காலங்களில் இந்த்ரர்களாய் இருந்திட்டாராய்
இத்தலத்தில் பாண்டவர்களாய் இப்போது விளங்குவர்கள்
தமது மனைவி திரௌபதியுடன் தரணி நாதன் கண்ணன் தனை
எதிரிகளாம் கௌரவரை வென்றிடற்குச் சரண் அடைந்தனரே–சத்த்வகுணமே மூலமாக யுடையவர்கள்

தமோ பஹைஸ் தத்த்வ விதாம் ருஷீணாம் வாக்யைர் த்ரீ வேதம் அநு ஸஞ்ஜிஹாநை
கிருஷ்ணம் யதாவத் க்ருதிநோ விதந்த தஸ்யா பவத் ப்ராண சம ஸகாய
–2-

நல் வினையோர் பாண்டவர்கள் மும்மறைகளில் தேர்ந்தவர்களாய்
நல்லறிவுடை முனிவர்களின் நல்லறிவுரைகளினாலே
உள்ள படியே கண்ணன் தன்னை உணர்ந்தவர்களாய் அவனுடைய
உள்ளத்திலே இடம் பெற்று ஒத்த தோழராய் ஆகினரே –2-மம ப்ராணா ஹி பாண்டவா

தத் ஆஸ்ரயாஸ் தத் ப்ரணிதேய க்ருத்யா தேநைவ நாதேந ஸதா ஸநாத
அபாரயன் யோகிபிர் அப்ய ஜய்யான் பாஹ்ய அந்தரான் ஜேதும் அராதி வர்க்கான்
–3-

அவன் தன்னையே நாடியராய் அவனுடைய அறிவுரையைத்
தவறாமல் செயல் படுத்தி வருபவராய் தேவ தேவன்
அவன் தன்னையே நாதனாய் யுடையராய் பாண்டவர்கள்
தவசிகளும் வெல்லா உள் வெளிப்பகையை வென்றனரே

ப்ரதிகிரியா ப்ராக் பவ துஷ் க்ருதா நாம் ப்ராணோ பரோதாபி நிருத்த பாப
தீராஸ் த்ரிலோகீ ஸூஹ்ருத ப்ரஸாதாத் விபாக ரம்யா விபத ப்ரஸேஹு
–4-

உயிர் பற்றிய கவலையை விட்டு தீ வினையையும் அறவே ஒழித்து
உயர்ந்தவராம் பாண்டவர்கள் உலகுக்கு எலாம் நலம் தனை
செயும் பரமனின் அருள் தன்னால் துன்பங்களை முன் செய்த
தீய வினையின் பலன்களாக நினைத்திட்டுப் பொறுத்தனரே-

அலங்கயன் விஸ்வ பதே ப்ரஸாதாத் வ்ருத்திம் பராசீம் இவ வீத ராக
அராதி பிஸ் சத்மவிதி ப்ரவீணை ஆபாதி தாம் அக்னி ஜலாதி பீடாம் –5-

கபடர்களாம் கௌரவர்களின் கபட தீ நீர் விடம் முதலாம்
விபத்துக்களை வைராக்யத்தால் பரன் அருளால் அகற்றிட்டரே-

கலிங்க நீதிம் கலஹை கதாநாம் கரணம் ச பார்த்தேந நிபத்த வைரம்
ஆஸ்தாய துச்சாஸந பூர்வ ஜன்மா தர்மோத்தரான் ஜேதும் இயேஷ பார்த்தான்
-6-

துச்சாதனன் அண்ணனான துரியோதனன் தீய திட்டம்
கச்சிதமாக இடும் சகுனியின் உக்தியினால் அர்ச்சுனன் மேல்
உச்ச பகையுடைக் கர்ணன் தனை முன் வைத்து அற நெறியில்
உச்சிதமுடைப் பாண்டவர்களை வென்றிடற்கு விரும்பினனே —

ஸ ராஜ ஸூய க்ரது தர்ம பத்நீம் பீமேந காண்டீவப்ருதா ச மாந்யம்
த்யூ தச்சல ப்ராபிதா தாஸ பாவாம் ஸாத்வீம் முதா பர்யபவத் ஸபாயாம்
–7-

தர்மனுக்குப் பத்னியாய் இராச ஸூய வேள்வி தனைப்
புரிந்தவளும் பீமனுக்கும் பார்த்தனுக்கு பதிவிரதையாம்
திரௌபதியை சூதாட்டத் திட்டத்தால் அடிமையாக்க
அரங்கினிலே சூழ்ச்சி செய்து அக்ரமமாய் அவமதித்தனே

அநந்ய நாதாம் ஸ்திதிம் ஆப்நுவத்யா நாத ஸ்வ ஸம்போதந நாம கர்பம்
சுஸ்ராவ துராந்தரிதோபி ஸுவ்ரி ப்ராக் ரோஷநம் பார்த்த பதி வ்ரதாய
–8-

பாண்டவர்கள் பதி வ்ரதை பாஞ்சாலி தனைக் காக்க
ஈண்டு யாரும் இலா நிலையால் எங்கோ உள்ள கண்ணன் தன்னை
வேண்டித் திரு நாமங்களை உருக்கமாகக் கதறிடவதை
ஆண்டவனும் கேட்டு அவளுக்கு அருளினானே அங்கு இருந்தே

மித்யா விசாராத் மிஷதாம் குரூணாம் ப்ரபு ஸதாம் பாண்டவ தர்ம பத்நீம்
துச்சாஸந வ்யாகுலித உத்தரீயாம் அக்ஷய்ய கௌசேயவதீம் அகார்ஷீத் –9-

பிதா மகருடன் துரோணாதிகள் பயனில்லாத ஆராய்ச்சியில்
பதிந்திருந்து பேசாமலே பார்த்து இருக்கவே துச்சாதனன்
பதிவிரதையின் துகில் உரிக்க முயன்ற போது நன்மை செய்யும்
நாத்தனாவான் பட்டாடைகள் மேன்மேல் வர அருள் புரிந்தனனே

அவாப்து காமாஸ் ப்ரபலைர் அமித்ரைஸ் அக்ஷஸ் சலேநாபஹ்ருதம் ஸ்வ ராஜ்ஜியம்
நிஷிப்த கர்த்த வ்யபார பபூவு சத்த்வாதிகா ஸாத்வத (ஸாத்விக )யூத நாதே
–10-

கபடத்தால் பரிபோன தமது நாட்டை மீண்டும் பெற
அப்பாண்டவர் சாத்விகர்களின் நாதனான கண்ணனிடம்
அப்பாரத்தை சமர்ப்பித்தனர் பதின்மூன்று ஆண்டுகளுக்
குப் பின்னர் நியாயமான கார்யத்தைச் செய்வதற்கே-

ஸ்வா தந்தர்ய கந்த த்விரதாங்குசேந ஸ்வே நைவ சீலேந விநீயமாந
அநந்ய லப்யம் பிரதிலம்பிதோபூத் ப்ரபு ஸ்வயம் பாண்டவ தூத பாவம்
–11-

எங்கும் ஈசனாம் அக்கண்ணன் அடங்கா மத களிருக்கு
அங்குசம் போலே பணிவு என்னும் அருமையான பண்புக்கு
அடங்கியவனாய் வேறு யாரும் வேண்டா மிகத் தாழ்வான
பாண்டவர்க்குத் தூதன் எனும் பதவியைப் பெற்றானே

ஸ தாத்ருஸீம் ஆத்ரியத த்ரி தாமா ப்ரேஷ் க்ரியாம் ப்ரேஷித தேவ ப்ருந்த
நநு ப்ரபூணாம் நிரபேஷ பூம்நாம் ப்ரஸாதநம் பக்த ஜநே குணத்வம் –12-

பரமபதம் மண்டலம் பாற் கடலாம் முவ்விடத்தைத்
தரிக்கின்ற மா பரனும் தேவர்களைப் பணியாட்களாய்
உரியனுமாய் இருக்குமிவன் இத்தூதன் பணி ஏற்றனன்
பெருமை நாடா மகான்களுக்கு பத்தர் அடிமை பேர் அணியாம்–பக்த பராதீனனாவதே தனக்குப் பரம பூக்ஷணம் என்று இருக்குமவன்

அபி ப்ரபூத அநு குண க்ரியாப்ய ஸ்லாகா பதம் தத்வ விதாம் பபூவ
அநந்ய தந்தரஸ்ய விபோஸ் ததே தத் நாதோசிதம் நந்த்ருஷு பாரதந்தர்யம் –13-

பிறர்க்காக அழிப்பு காத்தல் படைத்தலாம் தன் செயலை விட
சிறந்ததாக பக்தர்க்காய் செய்வதுவே தத்து வங்கள்
அறிந்திட்ட பெரியோர்கள் அதிகமாகப் புகழ்கின்றனர்
அற பணிந்தார்க்கு அதீனமாதல் நாதனுக்கு நியாயமேயாம்

தபஸ் யத புத்ர ஸமுத்பவ அர்த்தம் மார்க்கா கதம் மோசயத பிசாசம்
அஜன் மநோ ஜன்ம ப்ருதச்ச ஸுவ்ரே ஸ்வாமித்வ ஸம்வாதி பபூவ தூத்யம்
–14-

மகனைப் பெற தவம் புரிய கயிலை செல்கையில் ஒரு பேய்க்கு
முக்தி தன்னை அளித்திட்ட பரமனுக்கு தூது என்பது
தகவற்றது ஆகாதவனுடை ஸுசீல்ய குணத்தாலே–பேய் -கண்டாகர்ணன்

ஸ ரோஷ ஸீராயுத ஹேதி ஸக்த்யா ஸா சீக்ருதாம் கௌரவ ராஜதாநீம்
அத்யாபி கங்கா ஸலில ப்ரவாஹே ப்ரக் ராந்த பாதாம் இவ ஸம் ப்ரபேதே –
-15-

சுயம்வரத்தில் துரியோதனன் மகள் தன்னை அபஹரித்த
சாம்பனையைக் கௌரவர்கள் சிறை பிடித்ததும் பலராமன்
அத்தினாபுரம் தன்னைக் கங்கையில் இழுத்திட்டான் சினத்தினால்
அக்கண்ணன் தூதுக்காய் அந்நகருக்குச் சென்றிட்டான் —

ஸாம்ப3ம் கௌரவ்ய புத்ரீஹரண நியமிதம் ஸாந்தவநார்த்தீ2 குரூணாம்
யாதஸ்தத்3வாக்ய ரோஷோத்3 த்4ருத கரிநக3ரோ மோசயாமாஸ ராம: |
தே கா4த்யா: பாண்3வேயை ரிதி யது3 ப்ருதனாம் நாமுசஸ்த்வம் ததானீம்
தம் த்வாம் து3ர்போ3த4 லீலம் பவனபுரபதே தாப சா’ந்த்யை நிஷேவே
|| (நாராயணீயம்-83 – 10)

துரியோதனின் பெண்ணை அபகரித்தால் சாம்பனைக் கட்டிப் போட்டு விட்டார்கள் கௌரவர்கள்.
அவர்களுடன் நல்ல வார்த்தைகள் பேசுவதற்காகச் சென்றான் ஸ்ரீ நம்பி மூத்த பிரான்
ஆனால் கௌரவர்கள் பேசிய பேச்சால் ஸ்ரீ நம்பி மூத்த பிரான் கோபம் அடைந்து ஹஸ்தினாபுரத்தையே
மேலே கிளப்பி விடுவித்தான். கௌரவர்கள் பாண்டவர்கள் கையால் மடிய வேண்டியவர்கள் என்பதால்
தாங்கள் அப்போது யாதவ சேனையை அங்கு அனுப்பவில்லை.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! யாராலும் இன்னதென்று கூற முடியாத லீலைகளைப் புரியும் தாங்கள்
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

கத்யோதவத் தர்சித கஞ்ச தீப்தீந் ப்ராஞ்ஞா த்ருசோ பூமி ப்ருத ஸபாயாம்
ப்ராப்தோயதோ பாநுர் இவ த்ரி தாமா ப்ரச் சாத யாமாஸா குரூந் ஸ்வ தாம்நா
–16-

பர ப்ரஹ்மம் கண்ணன் தன்னை மதிக்காமல் இருக்க எண்ணிய
கௌரவர்களை த்ருதராஷ்ட்ரன் ஸபைக்குள்ளே ஸூர்யன் போல்
தோன்றியவரை மின்மினி போல் சிறு ஒளியுடையராக்கி விட்டு
அவர்கள் உளது தெரியாதபடி ஆக்கிட்டான் தன் சக்தியால்

கழல் மன்னர் சூழக்*  கதிர் போல் விளங்கி* எழலுற்று மீண்டே*  இருந்து உன்னை நோக்கும்*சுழலை பெரிது உடைத்*   துச்சோதனனை* அழல விழித்தானே!  அச்சோ அச்சோ* ஆழி அங் கையனே!  அச்சோ அச்சோ–1-8-5

ததா கமேந பிரதிபன்ன ஹர்ஷா தத் தர்சநேதா ஹித பார வஷ்யா
அதர்கித பர ஸ்ம்ருத வைர பந்தா வ்ருத்திம் த்விஷந்தோ விதாதுர் யதாஹம்
–17-

அவன் வரவைக் கண்டதுமே ஆனந்தம் உற்றவராய்
அவனிடத்து இருந்த நீள் பகை தன்னை உடன் மறந்த
அவ்வரிகள் தக்கவாறு அவனிடத்தே உறவாடினார் –அவ்வரிகள் -அந்த எதிரிகள்

உலூ கலே பக்த குணே ச பத்தம் குணோத்தரே கோப வதூ ஸ்தநே ச
இயேக்ஷ பந்தும் ஜகத் ஏக பந்தும் துர்யோதநோ துஸ் த்யஜ ம்ருத்யு பாச —
18-

உள்ளன்பினால் கட்டுண்டான் உரலோடும் -கோபியரின்
கள்ளமில்லா பாசத்தால் கட்டுண்டான் மார்போடும்
நல் குணமில்லா துரியோதனன் எதால் அவனைக் கட்டிடுவான்
தள்ளவியலா எமன் கயிற்றால் தான் கட்டுண்ணப் போகிறானே

ப்ரகாஸயன் கிஞ்சித் இவா ப்ரமேய ப்ரபாவம் ஆத்மீயம் அநந்ய வேத்யம்
முஹு ப்ரதீபா சரணோத் ஸூகாநாம் மோகா ஸதாம் மூடதியாம் அகார்ஷீத்
–19-

பிறர் அறிய இயலாதவன் மேன்மையினை அக்கண்ணன்
சிறிது புலப்படச் செய்து தனை வதைக்க ஆர்வமுடை நல்
அறிவில்லா அவர் விருப்பம் அறும் படியே செய்திட்டேனே -விஸ்வ ரூபம் எடுத்து அவர்கள் அழியும் படி செய்து அருளினான்

யுத்3தோ4த்3யோகே3த2 மந்த்ரே
மிலதி ஸதி வ்ருத: ப2ல்கு3னேன த்வமேக:
கௌரவ்யே த3த்த சைன்ய: கரிபுர மக3மோ
தௌ3த்யக்ருத் பாண்டவார்த்த2ம் |
பீஷ்மத்3ரோணாதி3 மான்யே தவ கலு வசனே
தி4க்ருதே கௌரவேண
வ்யாவருண்வன் விச்’வரூபம் முனிஸத3ஸி புரீம்
சோ’ப4யித்வாSS க3தோபூ4: ||
(நாராயணீயம்-86 – 5)

பிறகு போருக்கு வேண்டிய பிரயத்தனமும் , அதற்கான மந்திராலோசனையும் நடை பெற்றன.
ஸ்ரீ அர்ஜுனன் தாங்கள் ஒருவரையே துணையாக வேண்டினான்.
துரியோதனன் மொத்த யாதவ சேனையின் உதவியைப் பெற்றான்.
பிறகு ஸ்ரீ பாண்டவர்களின் தூதுவனாக ஹஸ்தினாபுரம் சென்றீர்கள். ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ துரோணர் போன்றவர்களால்
வெகுமானிக்கபடும் தங்கள் வாக்கு, துரியோதனனால் நிராகரிக்கப் பட்டது.
அங்கே சபையில் விச்வ ரூபத்தை எடுத்துக் கொண்டு பட்டணத்தைக் கதி கலங்கச் செய்து விட்டுத் திரும்பி வந்தீர்கள் அல்லவா?

ஸ்வ வேதிதம் ஸம்ஸதி தார்த்தராஷ்ட்ரே சந்திஸ் ஸதோ தர்ம ஸூதஸ்ய வாக்யம்
அநாததாநே முரபிந் நிவ்ருத்த ஸ அநு க்ரஹோ விக்ரஹம் அந்வ மம்ஸ்த –20-

அவையில் தான் எடுத்துரைத்த தர்மபுத்ரன் உடன்பாட்டை
கௌரவர்கள் ஏற்காததால் முராசுரனை வதைத்த பிரான்
தூதின் நின்று பின் வாங்கி சண்டைக்கு அனுமதித்தனனே

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–
2-1-1-

நராம் ச ஜூஷ்டேந தநஞ்ஜயேந ப்ரதீ பவன் சாரதிர் ஆத்மநா ச
தநுர் ப்ருதா தோத்தர ப்ருத ச பேஜே ப்ருதக்த்வம் ஐக்யம் ச யதா ப்ரமாணம் –21–

நரன் நாரணர் அர்ஜுனனும் கண்ணனுமாய் இருக்கின்றனர்
சீடனாக இருந்திட்ட நரன் தேரின் முதலாளியும்
குருவான நாரணரோ தேரோட்டியும் ஆகி யுள்ளனர்
கண்ணனுடன் அர்ஜுனனும் இணை பிரியா நண்பராவார்
இருவரிலே குருவான நாராயணர் சாரதியானார்
சீடனாக இருந்தவன் தேருடைத் தலைவனானான்
இருவர்களும் மாறுபட்ட இடமிருப்பதால் வேறுபாடும்
இருவர்களும் சேர்ந்து இருப்பதால் ஐக்கியமும் தோன்றிடுதே –

ரதாதி ரூடம் ச ரதம் ச ரக்ஷன் யதார்த்ததோ தர்சயதி ஸ்ம யந்தா
த்ரயந்த சிந்தா நிரபேஷம் ஈஷ தத் தாத்ருசம் தத்த்வ விபாகம் ஆத்யம் –22

தேர் ஏறிய அர்ச்சுனனனையும் தேரினையும் காப்பவனாம்
பார்த்த சாரதி மறை தன்னில் பகர்ந்திட்ட தத்வங்களின்
பிரிவுகளாய் சேதனனும் அசேதனனும் ஈஸ்வரனும்
இருக்கின்ற மூன்றினையும் அறிவித்தான் நேராகவே

புரஸ் ஸ்திதே கோப்தரி விஸ்வ ஹேதவ் பஸ்சாத் அவஸ்தயிநி தத் ப்ரவர்த்தயே
அநந்ய யோகாத் ஸ ரதோ பபார ப்ராதீத வேத்யாம் ப்ரணவ ப்ரவ்ருத்திம்–23-

தேர் தன்னைப் பார்ப்பவருக்கு முதன் முதலில் தெரிகின்றவன்
காரணமாய் அனைத்துக்கும் காப்பவனும் கண்ணன் தான்
பார்த்தன் பின் தோன்றியனாய் பரமனுக்கு உட்பட்டவன்
தேர் தன்னை மறை வல்லோர் ப்ரணவம் எனத் தெளிகிறார்கள்-

ப்ரபுர் பபவ் ப்ரக்ரஹ தோத்ர பாணி காலாத்மநா பாவித பாச தண்ட
யதா ததா தேவ கணேந மேநே சாந்தம் பலம் சாந்த நவ ப்ரதாநம் –24-

கடிவாளமும் சாட்டையும் கையிலுடைய இக்கண்ணன்
ஈட்டி பாசக் கயிற்றினையும் ஏந்திய எமன் போல் தோன்றிய
அச்சமயமே தேவேந்திரன் கங்கை மைந்தன் தலை வகிக்கும்
அச்சேனை அழிந்தது என அறுதியிட்டது அச்சமயமே –

துரந்தர ஸ்வர்க்க நிகேத நாநாம் துர் யோத்தி தைர் தூ சரிதா ரஜோபி
ரராஜ மத்யே ரத யூத பாநாம் கோஷ்டே பஸூநாம் இவ கோப வேஷ –25-

தேவர்களைக் காக்கின்ற சுமை தன்னை ஏற்றுள்ள
தேவ தேவன் துரகதங்கள் கிளர்ந்திட்ட தூள் படிந்த
தேகமுடன் மகா ரதர்கள் சூழ்ந்தவனாய் கோக்களிடை
கோபனைப் போல் போர்க்களத்தின் நடுவினிலே தோன்றினனே

ஸமுத்ர ஸங்காத நிபே நிருபாணாம் ஸைன்ய த்வயே ஸம் யதி ஸம் ப்ரவ்ருத்தே
அஸ்தாந காருண்ய வஸாத் நிவ்ருத்தம் தனஞ்ஜய வீத சுசம் விதேநே –26

இரு கடல்களின் கொந்தளிப்பாய் இரு படைகளும் போர் செய்ய
இருக்கின்ற நிலை தன்னில் இரக்கமாகா ஸமயத்தில்
அருச்சுனனோ திடீரென்று உறவினரைக் கொல்ல மனம்
வருந்திடவும் அக்கண்ணன் வருத்தத்தைப் போக்கிடனனே –

கீத உபதேஸம் –27-32-

பலாத் அபி ஸ்வாது தம ப்ரரோஹம் ப்ரோத்ஸாஹநே ஸக்யுர் இவோத் யதஸ் ஸ
ஜகத் ஹிதார்தாய ஜகவ் தயாவாந் அந்யைர் அவிஜ்ஜேயம் அநந்ய தர்மம் –27-

கருணைக் கடலாம் கண்ணன் தன் தோழனுக்கு ஊக்கத்தைத்
தருபவன் போல் உலகத்தின் நன்மைக்கு என உடல் பயனிலும்
பெரிதான பகவானிடம் பற்றுடைய பக்தியோகம்
பெருக்கின்ற தர்மத்தை கீதை முகமாய் உபதேசித்தானே-

சிரந்தந ஸ்நேஹ தயாதி மூலம் சிந்தார்ணவம் நிஸ் தரதோ துரந்தம்
க்ரீடிநஸ் கேஸவ ஸூக்திர் ஆஸீத் காலோசித காசந போத பாத்ரீ —
28-

பிறப்பினின்று தொடர்ந்து வந்த நட்ப்பு கருணை போர் தன்னில்
இறப்பதுவும் அதர்மமோ எனும் அச்சம் குலம் கழிவதில்
வருத்தத்தின் மூலமான வரையில்லா சிந்தையெனும்
பெரும் கடலைக் கடக்க பரமன் பகர்ந்துவே கப்பலானதே-

அபங்குரைர் தவ்த பல அநு ஷங்காத் வித்யா சரைர் விஸ்வ குரோர் உபாத்தை
விவேக தத்வா விஷமான் அஜை ஷீத் அந்தஸ் ஸ்திதாந் ஜிஷ்ணுர் அராதி சங்காந்
–29-

வில்லேந்தி வெளிப்பகைவரை வெல்வதற்கு முன்னாக வெற்றி சீலன் காண்டீவன் உள் பகைவரை விவேகம் எனும்
வில்லேந்தி குருவான கண்ணனிடம் கற்றிட்ட வித்யைகளாம் அம்புகளால் வெற்றி தனை அடைந்தனனே
உள் பகைவர் அடங்காவையால் உறிய கீதையின் அறிவுரைகளாம்
அம்புகளும் பரிசுத்த பலன்களுடன் சேர்ந்து இருப்பதால்
உள் பகைவரை அறிவு எனும் உத்தமமான அம்புகளால்
அடியோடு வென்றிட்டான் அக்கண்ணனின் அருளாலே-

உபக்ந பூதாம் ஸ்ருதி வல்லரீணாம் உபாஸ்த துஷ்யந் உபதேஸ முத்ராம்
நகாம் சுபி ஷிப்த தம கலங்காம் நாதஸ்ய பார்த்தோ நத பூர்வ பாக –30-

அருச்சுனனும் முன் வணங்கி அமர்ந்திட்டு இருப்பவனாய்
மறைக் கொடிக்குக் கொழு கொம்பு போன்றதாயும் நகங்கள் ஒளி
பரவி இருள் என்னும் அறியாமையை புறந்தள்வதும் கண்ணனுடைத்
திருக்கையின் உபதேஸ முத்திரையை ஊர்ந்து நோக்கித் தெளிந்து வந்தனே

விபக்த ஸாமாந்ய விசேஷ தர்மா ப்ராதுர் பபூவ உபநிஷத் ப்ரபோர்யா
ஸ ஏவ தாம் வ்யாஸ முநிஸ் ஸமீசீம் பர்ய க்ரஹீத் பாரத வேத வக்தா –31-

இவ் வுலகத்தின் அற நெறியையும் உயர் முக்தி நெறிகளையும்
செவ்வையாக எடுத்து உரைக்கும் கீதை என்னும் துணை மறையை
அவ்வீஸ்வரன் உபதேஸித்தான் அவனே வ்யாஸ முனிவராய்
அவ்வுரையை பாரதத்திலே அடக்கிட்டு வைத்தனனே

அபஞ்ஐ நீயாம் பர தர்ம சத்தாம் (சக்தாம் )அநஸ்வரீம் பாரத ஸூர்ய தீபம்
விதுஸ் ஸ்ருதிநாம் அநகாம் வயஸ்யாம் கீதாம் அசம்மூட ஐநாவி கீதம் –32-

முக்தி தர்மம் வடிவெடுத்தால் போன்றதாயும் பாரதம் எனும்
செஞ்சுடரோன் ஒளிகளிலே சற்றும் அழியா ஒளியாகவும்
மறைமகனின் குற்றமற்ற பாங்கியுமாம் கீதை தன்னை
அறிவிலார் அல்லாதார் எவராலும் பழிக்க இயலா

கபி த்வஜஸ் தஸ்ய விபோர் அபஸ்யத் ததர்ப்பிதம் சஷுர் அவாப்ய திவ்யம்
விரிஞ்ச பூர்வைர் அபி துர் நிரீஷம் விஸ்வாஸ்ரயம் ரூபம் அசேஷ மூர்த்தே -33-

கண்ணனாகவே அளித்திட்ட திவ்ய கண்ணால் அனைத்தினையும்
தன்னுடலில் யுடையதான நான்முகனும் காண இயலா
அண்டங்கள் அனைத்திற்கும் ஆதாரமாம் அவ்வுருவத்தைக்
கண்டிட்ட அருச்சுனனும் வியப்புடனே கண்டிட்டனனே

தஸ்மிந் அபி க்யாப்த ஸமஸ்த லோகே ஸ தத் ஸ்வரூபேண விகல்ப்ய மாநே
விடம்பி தாந் கோபுர தாரி பிம்பை தேவான் விபோர் ஐக்ஷத திவ்ய தேஹே –34-

உலகெல்லாம் பரவியுள்ளதால் இவ்வுருவே பரமாத்மனோ
அலதுயவன் திரு மேனியோ எனப்புரியா மூர்த்தியிலே
எலா தேவரும் இருப்பதனை உற்று நோக்கி கோபுரத்தில்
சிலைகளினைப் போல் இருக்கும் தேவர்கள் என உணர்ந்தனனே-

ப்ரக்யாத தீஷிதம் ப்ரணதார்த்தி பங்கே பார்த்தஸ் ததா தைத்ய ரிபும் ப்ரபந்ந
விநாஸ யாமாஸ பலம் ரிபூணாம் விபத் ப்ரதீ கார பரேண சக்யா –35-

பக்தர்களின் துயர் விலக்க ப்ரதிஜ்ஜை யுடையவன் என
தக்கவறியும் அர்ச்சுனன் அவன் தாள் பணிந்து தமக்கு இழைக்கும்
மிக்க கொடும் செயல்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் நோக்குடனே
அக் கொடியவரின் சேனைகளை அழிப்பதற்குத் தொடங்கினனே –

ஸ்வ ஹஸ்த பத்மாஞ்சித தோத்ர பாச ஸ்வச் சந்த லீலா ஸஹ தர்ம சாரீ
கதா கதைர் அப்ரதிமை ஸ சக்ரே ஜய ஸ்ரீயோ ஜைத்ர ரதேந டோலாம்
–36-

தன் விருப்பம் எனும் லீலா தேவிக்கு உடன்பட்டு
தன்மங்களைச் செய்கிறானாய் தாமரை என திருக்கைகளில்
தண்டகலினம் கொண்டு வெற்றி தரும் தேரில் இங்கும் அங்கும்
ஸஞ்சரிப்பவனாய் ஜய லஷ்மியை ஊஞ்சலில் ஆட்டினனே –

ஸ விஸ்மய ஸம்யதி ஸவ்யஸாசீ தத் தாத்ருசா சாரதி நா ஸமேத
மநோஜவா நாம் நிஜஸாயகாநாம் அக்ரே சரம் ஸ்யந்தனம் அந்வ பஸ்யத்
–37-

இடக்கையாலும் சரம் வீசும் அர்ஜுனனும் அப்படித் தேர்
விடும் சாரதி யுடன் போரில் மநோ வேகமாய் விரைந்தே சென்
றிடும் தனது சரத்துக்கு முன் தேர் செல்வதை உவந்திட்டனே-

யதா ந்யச்ச த்யயம் இந்த்ரியாச்வாந் ஜீவ ஆஸ்ரய தேஹ ரதே நிபத்தான்
ததார்ஜுன ஸ்யந்தந துர்யநேதா பபூவ நான்யேந நிதர்ச நீய –38-

ரதமான தேஹத்தில் இந்திரியங்களை உள்ளிருந்து
இருடீகேசன் ஆள்வது போல் அர்ஜுனன் தேர் குதிரைகளை
செலுத்தி வந்த அவனுக்கு நிகரானவன் யாருமில்லை –

யதேக தேசே நிகிலம் ததந்யத் தத் தேஹ பாகேஷு ச ஸம் விபக்தம்
ரத ஏக தேச தம் அவேஷ்ய பார்த ப்ரா புத்த தம் சாரதிம் அப்ரதர்க்யம் –
-39-

எந்தப் பரமனின் ஒரு பக்தியில் எலாம் ஒடுங்கி இருந்திடுமோ
எந்தப் பரமனின் அங்கங்களில் அவையவைகள் பிரிந்து இருக்குமோ
அந்தப் பரமன் தன் தேரின் ஒரு பகுதியில் கிரீடி கண்டு
இந்தத் தேரின் பாகனின் நிலை அறிதற்கு அரிது என உணர்ந்தான்-

நிவர்த்திதம் வைரி ஜநோபமர்த்தாத் ந்யஸ்தம் ரதே சக்ரம் உபாததாந
நத ப்ரதிஜ்ஞ அநுபரோத ஹேதோ ஆத்ம ப்ரதிஜ்ஞம் அஜஹாத் ஸ்வ தந்த்ர -40-

எதிரிகளை அழித்திடற்கு ஆயுதமே எடுக்கேன் எனும்
சத்தியத்தை தன் பக்தர் பிதாமகரின் ஸத்யத்தை
ஸத்யமாக்க தன் கையிலே திருவாழியைக் கொண்டிட்டானே –

ப4க்த்தோத்தம்ஸேSத பீ4ஷ்மே
தவ த4ரணி பரக்ஷேப க்ருத்யைக ஸக்தே
நித்யம் நித்யம் விபி4ன்த3தி அயுத ஸமாதி4க2ம்
ப்ராப்த ஸாதோ3 ச பார்த்தே2|
நிச்’சஸ்த்ர தவ ப்ரதிக்ஞாம் விஜ ஹத3ரிவரம்
தா4ராயன் க்ரோத4 சா’லீவ
ஆதா4வன் ப்ராஞ்ஜலிம் தம் நத சி’ரஸா மதோ2
வீக்ஷ்ய மோதா3த3 பாகா3 : ||
(ஸ்ரீ நாராயணீயம்-86- 7)

பக்த சிரோன்மணியாகிய ஸ்ரீ பீஷ்மர், தாங்கள் செய்ய விரும்பியபடியே பூ பாரத்தை ஒடுக்கலானார்.
ஒவ்வொரு நாளும் பதினாயிரத்துக்கும் அதிகமான வீர்களைக் கொன்று குவித்தார்.
அதைக் கண்ட ஸ்ரீ அர்ஜுனன் மனம் சோர்ந்து விட்டான். போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று தாங்கள்
செய்திருந்த பிரதிக்ஞையை உதறித் தள்ளினீர்கள், கோபத்துடன் சக்ராயுதத்தை எடுத்துக்கொண்டு
ஸ்ரீ பீஷ்மரை நோக்கி ஓடினீர்கள்! தலையைக் குனித்து அஞ்சலி செய்து கொண்டிருந்த
ஸ்ரீ பீஷ்மரைக் கண்டதும் சந்தோஷத்துடன் திரும்பிச் சென்று விட்டீர்கள் அல்லவா?

த்விஷத் ப்ரயுக்தம் துரபோஹம் அஸ்த்ரம் புஜாந்தராலேந விபுஸ் ப்ரதிச்சந்
விதாய வைகல்பிக வைஜயந்திம் பிரச்சாதிதம் ப்ராணயதி ஸ்ம பார்த்தம் –4
1–

பகதத்தன விட்ட வைஷ்ணவ அஸ்த்ர சக்தியை அர்ஜுனனால் அடக்கப்பட மாட்டாது என்று தயை புரிந்து அர்ஜுனனை தனது திரு மேனியால் மறைத்து அத்தைத் தனது திருமார்பில் கொண்டான்
அது வனமாலை போல் பொலிந்தது -இவ்வாறு அவ்வாபத்தின் நின்றும் அர்ஜுனனை ரக்ஷித்து உயிர் அளித்து அருளினான் –

நிவேசிதாம் தஸ்ய பதே ச பூஜாம் நிஸாம்ய கங்காம் இவ சந்த்ர மௌலவ் (சம்பு )
அநந்ய ஸாமாந்யம் அமம்ஸ்த ஸக்யூஸ் சங்கோச வைதேசிகம் ஈஸ்வரத்வம்–42-

கண்ணனுடைய திருவடிகளில் தானிட்ட புஷபங்கள்
கங்கையைப் போல் சிவனுடைய திருமுடியில் அர்ஜுனனே
கண்டிட்டுத் தன் தோழன் கண்ணனுடைய இறைமையானது
இன்னொருவர் இடத்தினிலே இல்லாததை உணர்ந்திட்டானே –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததோ

திவாகரே அநஸ்தமிதே அதி காடம் தமஸ் ஸ்ருஜஸ் தாமஸ மோஹநார்த்தம்
ப்ரபந்ந ரஷா பிரதிபன்ன தீஷா ஸத்யாபி ஸந்தம் விததே ஸஹாயம் –43–

தன்னிடத்து சரண் புகுந்த தன் பக்தன் தன் சபதம்
தன்னை நிறைவேற்றிடற்கு ஸூர்யனின் அந்திமத்தின்
முன்பேயே நல்லிருளைப் படைத்திட்டான் திருக் கண்ணனே

ஸூரைர் அசேஷைர் அபி ஜாத ரோஷைர் ஸ துர் ஐயான் பீஷ்ம முகான் ஜிகாய
ஸஹாய ஸக்த்யா யுதி ஸவ்ய ஸாஸீ கிம் துஷ்கரம் கேஸவம் ஆஸ்ரிதாநாம் –44-

சினம் மிகுந்த தேவராலும் வெல்ல வாகா கங்கை மகன்
அனையோரை அர்ஜுனனே அன்பனான கண்ணனுடைத்
துணையாலே போரினிலே ஜயித்திட்டான் கேசவனின்
துணையுடையார் எவராலும் செய்யவாகாதும் உண்டோ தான் –

ஸ்வப்நஸ் கிம் ஆஸீத் அத வேந்த்ர ஜாலம் பபூவ கந்தர்வ புரீ கிமேஷா
இதீவ சங்காம் விததே ப்ரலீநா பதாகிநீ கௌரவ பாண்டவாநாம் —
45-

மா பெரிய பாண்டவரின் கௌரவரின் சேனைகள் எலாம்
மாண்டனதால் இது வென்ன ஸ்வப்நமா மாய வித்தையா
வானத்தில் உள்ள கந்தர்வ நகரா வென வியப்பளித்ததே-

ஆக்ருஷ்ட தேவா ஸூர ஸாம் பராயை ஓஜஸ் விநாம் ஸஸ்த்ர ப்ருதாம் உதந்தை
ப்ராயஸ் ததா ப்ரத்யவஹார லீலாம் ஆகாலிகீம் விஸ்வ புக் அந்வ புங்க்த
–46

ஸுராஸுரர்களின் போர்களுக்குப் போட்டியாக செயல்களினை
வீரர்கள் செய்திடவும் உலகமெலாம் அழிக்கின்ற
பெருமாளின் அகாலத்துப் பிரளயம் போல் ஆனதுவே –

ஜிகாம்ஸூ அஷ்டா தச சம்ப தந்தீ அஷவ் ஹிணீர் அத்புத பீம ரூபா
ஸ்வ தந்த்ர யாமாஸ மித ப்ரதீபாந் ஸூத்ரா வசக்தான் இவ தாரு மர்த்யான் –47-

அச்சத்தையும் வியப்பினையும் விளைத்திட்டு சண்டையிடும் அவ்
அஷவ்ணிகள் பதினெட்டையும் அழித்திடற்கு விரும்பியவனாய்
அவ் வொவ்வொரு வீரர்களை ஒரு நூலில் கோத்திட்ட
தன் கட்டில் உள பதுமைகள் போல் ஆட்டி வைத்தனனே –

க்ருஷீ வலஸ் ஸ்தாவர ஜங்கமாநாம் க்ஷேத்ரே குரூணாம் சம கால பாகாந்
அநீக சாலீந் புஜ சாலி வர்கைஸ் பலோப பன்னாந் ப்ரபு இத்ய லாவீத் –48-

குரு க்ஷேத்ரமாம் விளை வயலில் குடியானனாம் திருக் கண்ணன்
ஒரு காலில் விளைந்த சேனைகளாம் பயிரை எலாம்
அறுத்திடற்கு திறம் கொண்ட கரங்களால் அறுத்து ஒழித்தனனே –

நிஸ் தீர்ய ஸங்க்ராம மஹா ஸமுத்ரம் ஸம்ஸார போதேந பரேண சக்யா
தனஞ்ஜயஸ் தத் பதம் ஏவ பேஜே நிர் தூத நீஹார திவாகராபா –49-

ஸம்ஸாரக் கடல் கடக்க கப்பல் போல் பரமன் துணை
கொண்டவனாய் அர்ஜுனனும் கடும் பனியைப் போக்கிட்டு
மின்னிடும் அரி போல் ஆகிப் பரமன் அடியைப் பணிந்தானே-

திரௌணிஸ் ததா ஸுவ்ப்திகம் ஆததாந க்ருபேண ஸார்தம் க்ருத வர்மணா ச
ஹதா ஹிதைஸ் பாண்டு ஸூதைர் அவாப்தம் ஸைன்யவ் அசேஷம் சமயாம் பபூவ –50-

விரோதிகளை மாய்த்திட்ட பாண்டவர்களின் எஞ்சியவரை
த்ரோணருடைய மகன் அஸ்வத்தாமன் க்ருபர் க்ருதவர்மா
வரோடுமுடன் நடுவிரவில் உறக்கத்தில் உள்ள போது
விரோதமுடன் அழித்திட்டான் மிச்சமேதும் இல்லாமலே-

இத்தம் தச அஷ்டவ் ச நிபாத்ய பூமவ் அஷவ்ஹிணீ அத்புத பீம ரூபா
ஸதாம் பதிஸ் சத்த்வ ஸம்ருத்தி ரோகாத் உல்லாகிதாம் ஆதநுதேவ ப்ருத்வீம் –51

நல்லோரின் நாதனான நம் கண்ணன் பயம் விளைக்கும்
எல்லாப் படையினரையும் அழித்திட்டு பூமிக்கு
நல்லவர்களின் வளத்திற்குத் தடையான பாரம் எனும்
இல்லல் தன்னை நீக்கிட்டு இவ்வுலகை ஸூத்த மாக்கினான் –

விபுஸ் ஸ்வ ஸங்கல்ப ஹதான் வி நக்நந் தர்மை கதாநேந தனஞ்ஜயேந
ப்ரதோத ஸந்தம் சிதயோக ஹார்ஷீத் பாஞ்சால கன்யா பரிபூதி ஸல்யம் –52-

ப்ரபு கண்ணன் மனத்தால் முன்னமே தான் கொன்றவர்களை
தர்மத்திலே நோக்குடைய தனஞ்சயனால் அழிக்க வைத்து
திரௌபதிக்கு நேர்ந்திட்ட இகழ்ச்சியாம் அம்புதன்னை பறித்து எறிந்தான் தன்னுடைய சாட்டை எனும் இடுக்கியினால் –

பர அஸ்த்ர விஸ்ரம் ஸிதம் உத்தராயா பத்மாஸநாத் யைர் அபி பூஜிதேந
கங்கா தரண்யோ ப்ரபவேந கர்பே பஸ் பர்ச பாதேந பரா வரேஷ –53-

அஸ்வத்தாமா என்னும் எதிரியுடைய ஓர் அஸ்த்ரம்
பொசிக்கிட்ட உத்தரையின் கர்ப்பத்தை உயிர்ப்பிக்க
திசைமுகன் முதலானார்கள் தொழுதிட்டும் பூமிக்கும்
கங்கைக்கும் பிறப்பிடமுமாம் தன் பதங்களால் தொட்டு அருளினான் –

விப் லோஷிதம் த்ரவ்ணி சரேண பாலம் சஞ்சீவ யந் பாத ரஜஸ் ப்ரபாவாத்
வதூ க்ருத ஷுத்ர சிலா விசேஷம் ராமாநுஜோ ராமம் இவான்வகார்ஷீத் –54

அந்த சிசுவைத் தன் பாதத் தூசி தன்னால் உயிர்ப்பித்ததால்
அந்தக் கண்ணன் கால் தூளால் ஒரு கல்லைப் பெண்ணாகிய
முந்தைய தசரத ராமனை ஓத்திட நினைத்தான் போலும் –

தஸ்ய ஸ்ருதி ஸ்ரேணி சிரோ த்ருதா நாம் ஸ்பர்ச பிரஜே சாதிபிர் ஈப்ஸிதோபூத்
பரீக்ஷித் உத்தான பரீ ஷிதா நாம் அகச்சிதாம் அங்க்ரி ரஜஸ் கணா நாம் –55-

எல்லாவித பாபத்தையும் அகற்றிடற்கு வல்லனவும்
எல்லாவித உபநிடங்களுக்கும் ஏற்றனவும் பரீட்சித்தை
உள்ளவனாய் ஆக்கினதும் ஆகிய செயல்கள் புரிந்ததால்
வல்லவனான அடித்துகள்கள் பிரமனாதிகள் விரும்பினரே

அஜா ததீ நாம் (அஜஸ் ததா நாம்) த்ருபத ஆத்ம ஜாயா காலஸ்ய தீப்தாம் இவ கட்க ரேகாம்
விபக்ஷ ஸம்ஹார மஹா புஜங்கீம் வேணீம் ப்ரியை ஸம் யமயாம் பபூவ –56-

புறக்கணித்தும் திடமுள்ளதும் யமன் வாளின் ஒளி போன்றும்
செறுநர்களைக் கொல்லும் மா சர்ப்பத்தினை போன்றதுமாம்
திரௌபதியின் கரும் தூங்கல் தொங்குவதை அவளுடைய
பர்த்தாக்களைக் கொண்டே யவன் முடிந்திட்டு அருளினனே-

பிதா மஹாய பிரததாந பார்த்த சர ப்ரயுக்த சயனம் யத் அக்ர்யம்
யோகாஸநம் யோஜித சித்த தைர்யம் ததேவ பர்யாப்த குணம் ததா ஆஸீத் –5
7–

அம்புகளால் அர்ஜுனன் பிதா மகற்கு அமைத்திட்ட
அம்பு பள்ளி தம் மனத்தினை ஒரு நிலையில் வைத்திடற்குச்
செம்மையான பண்புகள் எலாம் நிறை யோக இருக்கை யானதே-

விந்யஸ்ய தர்ம தநயே விஜய அதிகாரம் ஸக்ய அர்ஜுநேந யஸஸேவ தநுர் தராணாம்
ததமவ் ச தைத்ய மதநோ யுதி பாஞ்ச ஜன்யம் வ்ருஷ்ண் யந்தகாதி பரி சேஷித பூமி பார –58-

அரக்கர்களை அழித்து வரும் அக்கண்ணன் வில்லாளி
அர்ஜுனனாம் தன் தோழனின் ஆற்றலினால் தர்ம புத்ரன்
வெற்றியாளி என விளங்க வைத்திட்டு யாதவர்கள்
திரள் புவி சுமை எனும் நிலையில் தன் சங்கை ஊதிட்டானே

ப்ரத்யாதி நாய ரதம் ஆத்த ஜயஸ் ஸ ஜன்யாத் தன்ய அவலோகந தனஞ்சய தர்ச நீய
சாரத்ய ஸம்வித வதீ ரித ஹேதி ஜுஷ்ட ஸேநா பராக பரிதூ ஸர குந்தல ஸ்ரீ –59-

தேரோட்டியாய் இருக்க முடிவு செய்ததினால் விட்டப்போர்
கருவிகள் எல்லாம் மீண்டு அடைய சேனைகளின் தூள் படிந்த தன்
உருவம் எல்லாம் அழகுற்ற வெற்றி பெற்ற அர்ஜுனனின்
தேர் தன்னை போரினின்று திருப்பிட்டனன் கண்ணனுமே

ஆலிங்க்ய காடம் அவகாட ரஸம் ரணாப்தவ் வீர வ்ரணை க்ருத விபூஷணம் இந்த்ர ஸூநும்
அந்நிய அவதார பரி கல்பந கேலி லோபாத் ஐக்யம் நிநாய நிஜம் அம்சம் இவான்யநிஷ்டம் –60-

போர்க்களத்தின் மகிழ்ச்சியிலே மூழ்கினனாய் வீரன் பெறும்
போர் வடுக்களை அணிகளாய்ப் பெற்றவனாம் அர்ஜுனனை
ஆரத்தழுவி பின் வரும் தன் அவதார லீலைகளின்
காரணத்தால் அவனிடமுள்ள தன் அம்சத்தை மீட்டிட்டான் –

ரண புவி சர தல்பே லீலயா ஸாயிதேந ஸ்வ பத ஸமுதிதாயாஸ் ஸூநுநா ஸித்த ஸிந்தோ
அநதி சிர விலம்பாத் ஆப்து காமம் தரித்ரீம் கலிம் இவ சமயிஷ்யன் க்யாப யாமாஸா தர்மான் –61-

போர்க்களத்தில் வில் படுக்கையில் படுத்திருக்கும் தன்னுடைய
சீரடியினில் தோன்றிட்ட சுர நதி மகன் மூலமாக
தாரணியில் வர உள கலி தன் கொடுமையைக் குலைத்திடற்கு
ஏராளமாம் அறங்களையும் வெளியிட்டுப் பரப்பினனே –

அப்ரத்யூஹித ஸார்வ பவ்ம விபவைர் அப்யர்ச்சித பாண்டவை ப்ரத்யா வ்ருத்தி மஹோத்ஸவேந முதிதாம் ப்ராப்தஸ் புரீம் த்வாரகாம்
ப்ரத்யக்ஷம் ப்ரதயாம் பபூவ விஹரன் ப்ரீத ப்ரியாபி ஸமம் ஸூத்த ஸாம பாதகமைர் அதிகதாம் ஸ்வா தீநதாம் ஸ்ரீ பதி –62-
ஸ்ரீ மத் பாகவதம் -1-9-49-11-30-

தடைகள் எலாம் நீங்கிடவே நிலையான ஆளுமை தனை
அடைந்திட்ட பாண்டவர்களால் ஆராதனை செய்யப் பெற்று தன்
னுடை மா நகர் துவாரகையில் உவப்புடன் புகுந்திட்டு தன்
னுடைத் தாரங்களுடன் மறை இசையினிலே களித்து இருந்தனனே –

———-

சுபம்

————

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இருபத்து நான்கின் மாஹாத்ம்யம்

September 9, 2024

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ–

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———–

காவ்ய ரத்னம் -என்று தேசிகனே -கவி தார்க்கிக்க ஸிம்ஹம்
கிருஷ்ணனுக்கு ப்ரீதி ஏற்படும் -ஷேம பலன் அளிக்கும் இந்த காவ்யத்தின் இறுதி ஸ்லோகம்

———————————–

இருபத்து நான்கு படிகள்

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம். இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்யஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை. இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும், ‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான். இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்யதேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர். கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக் காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்கமங்களநிதிம் கருணாநிவாஸம், ஸ்ரீவேங்கடாத்ரிசிகராலயகாளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைலசிகரோஜ்ஜ்வலபாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு. கோவிலில் நடை மிகவும் அழகு. திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும். பெருமாள் கோவிலில் குடை விசேஷம். திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம். 

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு. அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன. இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது. க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது. இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார். 

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை:
|| என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது. அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார். வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான். அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம். அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம். வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன், “வந்தே ஹஸ்திகிரீசஸ்ய வீதீசோதககிங்கராந்” என்று அருளிச்செய்தார். தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம். அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்தநிரஸநபூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து. இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று? ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று, அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள். மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான். இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார். வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து, இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார். ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்? நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது. 

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம். ‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம். இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது. அத்த யூரான் புன்னையூர்வான் அணிமணியின் துத்தீசேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீமறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும் இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம். இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம் தேவப்பெருமாளுக்கே. இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார். காலையானதும் எழுந்து விடுகிறார். பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி. இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவத்தை சொல்லுகிறேன், கேண்மின்.

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது. குடை இருபத்துநான்கு சாண் கொண்டது. வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள். த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன. அனந்த ஸரஸ்ஸில் இருபத்துநான்கு படிகள். கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது. கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன. இவையும் இருபத்துநான்கே. இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது. ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதற்கு காரணம் இருபத்துநான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார். அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன. ‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர். இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச்செய்திருக்கிறார். இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர். ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர். ‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர். திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து, ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள், சேதனன் என்பவன் ஜீவன், இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா. தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும். அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக. இப்படி அறிந்தவன்தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான். இந்த அசேதனம் இருபத்துநான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன. ‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்துநான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும். இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்யதேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும் வாசாமகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான். அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது. இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால் இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா. ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள். எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான். எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.

இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள். அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான். யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான். ஒன்று யதோக்தகாரி. இரண்டாவது தேவப் பெருமான். ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார். ஸ்வாமி தேசிகன் இதை ஏகம் வேககதீமத்யே ஹஸ்திசை லேசத்குச்யதே. உபாயப்பலபாவேன் ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒருச்லோகத்தை பார்ப்போம். இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை. வ்யாஸஸூத்ரத்துக்கும் ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார். அவரது மற்றொரு ச்லோகத்தின் கருத்தை எழுதிகிறோம். தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன். அதை பொருத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார். முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார். இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார். மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை. ஆக அப்பொழுது வணங்கப்ரஸக்தி இல்லையே. ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார். அந்த ஸ்லோகம் இதோ – 

வபூ: ப்ராது ர்வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் | நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அதிகார சங்கிரகம் –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

September 7, 2024

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————-

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே யாவதரிக்கும் ஆயன் நிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

சுவாமி தேசிகர் இப்பாசுரங்களை வகைப்படுத்தி அருளியது போல இன்பத்தில்,இறைஞ்சுதலில், இசையும் பேற்றில்,இகழாத பல்லுறவில், இராகமாற்றில், தன் பற்றில், வினை விலக்கில், தகவோக்கத்தில், தத்துவத்தை உணர்த்துதலில், இவைகளோடு மேற்சொன்ன அனைத்தையும் நமக்குள் உட்புகுத்தி நம்மை தகுதிப் படுத்திய தன்மை குறித்துப் பாடுகிறார் மதுரகவிகள்.

அர்த்த பஞ்சகம் எனப்படும் (1)ஆன்மாவின் இயல்பு (2)ஆண்டவனின் இயல்பு (3)ஆன்மா அடையும் பயன் (4)அப்பயனை அடைவதற்கான வழி (5)அப்பயனை அடையப் பகையாய் உள்ளவை …

இது போன்ற, தான் அறிந்த, உணர்ந்த அறிய விஷயங்களை, மனித குலத்தின் மீதான தன் கரிசனத்தால், அவர்களுக்கு உபதேசிக்க நினைத்தார் நம்மாழ்வார்..

ஒரு சில ஆசிரியர்கள் பலகாலம் மாணவர்களை அலைக்கழித்தே போதிப்பார்கள்..

இராமனுஜரை திருக்கோட்டியூர் நம்பி எனும் ஆச்சார்யன் 18 முறை நடையாய் நடக்க விட்டுத்தான் திருமந்திரத்தை அருளினார்…யாருக்கும் சொல்லக்கூடாது எனும் நிபந்தனையோடு…ஆனால் இராமனுஜரோ தன் பொருட்டான கவலை இன்றி பிறர் பொருட்டான நன்மை கருதி கோபுரம் ஏறி, திரு எட்டெழுத்து மந்திரத்தைக் கூவினார்..

தாயான சீதைக்கும் , மகனான பிரஹலாதனுக்கும். தம்பியான விபீஷணனுக்கும், இவருக்கும் [நம்மாழ்வார் ], இவரடி பணிந்தாருக்கும்[இராமானுஜர் ] மட்டுமே இவ்வாறான, மற்றவர் மீது கருணை கொள்வதே தனக்கான பெரும்பேறாகக் கருதி, தாங்களே மனமுவந்து உதவும் குணம் உள்ளதாக பெரியோர்கள் கூறுவர்.

திருக்குறள்…

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.

….. கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள், கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் என்கிறது…

பிறருக்கு உபதேசிப்பதால் தனக்கு யாதொரு பயனும் இல்லை என்றாலும், அதற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுத்தாலும், அறிவு மட்டுமன்றி அதை செயல்படுத்தும் திறனும் கொண்டவர் நம்மாழ்வார்.

குயில்கள் யாருக்காகவும் எதற்காகவும் தன் கூவுதலைக் கைவிடுவதில்லை.அது எப்போதும் போல அதிகாலையில் [ 3.45 am ] தன் விருப்பம் போல் எதிர் பலன் நோக்காமல் செயல்படுகிறது.

அவ்வாறான குயில்களால் ஆரவாரம் செய்யும் சோலைகளையுடைய திருநகரியிலே எழுந்தருளியிருக்கும் என் ஆழ்வாரே..

உம்முடைய சிறந்த திருவடிகளின்பால் பற்று கொள்ளவே முயற்சி செய்கின்றேன்…

என்று உருகுகிறார் மதுரகவிகள்..

திருவாய்மொழி கல்லாரை இருகால் மாடுகளாக்கி,

தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே …

….என்று முக்கூடற்பள்ளு சொல்கிறது.

பராங்குச தாசர் மதுரகவிகளைத் தியானித்துக்கொண்டு ’இன்பத்தில்’ என்ற வார்த்தையைக் கூறி முதல் பாசுரத்தை இனிய ராகத்துடன் பாடினார். 

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – 1

நாதமுனிகள்  பாடலை ஆழ்ந்து அனுபவித்தார்.  யசோதைப் பிராட்டி, உடம்பில் உறுத்தும்படி பல முடிகளுடன்,  நீளம் போதாமல் அந்தச் சிறிய தாம்புக் கயிற்றால் கண்ணன்  தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட அந்த மாயக் காட்சியை மனக் கண்ணில் கண்டார். ஆனந்தக் கண்ணீர் பெருகி இந்த இன்பத்தின் சுவை என்னது ? அறுசுவை அடிசிலா ? நெய் சுவை தேறலா ? கனியின் சுவையா ? பாலின் சுவையா ? என் ஆரா அமுதமே ! பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் தருகிறது.  இந்த அமுது ஊறும் இன்பத்தைத் தரும் தென் குருகூர் நம்பியின் நாமம் மேலும் என் நாவுக்கு இன்பமாக இருக்கிறது ! கண்ணீர் அருவியாகப் பெருகி ஆனந்த ரூபமான அனுபவித்தார். 

பராங்குச தாசர் ‘இறைஞ்சுதலில்’ என்ற வார்த்தையைக் கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார். 

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே – 2

குருகூர் நம்பி, சடகோபன் என்ற திருப்பெயர்களைப் பல தடவை துதித்துப் பார்த்த போது அமுது ஊறும் என் நாவுக்கே எனது போல இன்பச் சுவையை உணர்ந்தார்.  புகல் ஒன்று இல்லாத தனக்குக் குருகூர் சடகோபனைச் சரணம் அடைந்தால்,  பெருமாளின் அடிக்கீழ் அமர்ந்து புகும் பேற்றைப் பெற்றேனே! என்று எண்ணிப் பூரிப்படைந்தார். மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே, தேவு மற்றறியேன் குருகூர் நம்பியே தஞ்சம் என்று சரணம் அடைந்து உள்ளம் உருகினார். 

பராங்குச தாசர் ‘இசையும் பேற்றில்’(1) என்ற வார்த்தையைக் கூறிவிட்டு அந்தாதியின் அடுத்த பாடலை பாடினார். 

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. 3

வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற பேறு அதனால் தேவபிரானுடையக் கரிய கோலத் திருவுருவம் காண்கிறேன். இனி ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்து உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது ? இனி குருகூர் சடகோபனுக்கே தான் அடியேன் என்று உளமார ஏற்றுக்கொண்டு கைகூப்பி நின்றார். 

’இகழாத பல்லுறவில்’ என்ற வார்த்தையை உச்சரித்துவிட்டு பராங்குச தாசர் நான்காம் பாடலைப் பாடினார். 

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான்  சடகோபன் என் நம்பியே.  4

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து அத்தா! சடகோபன் குணம் நிறைந்த என் தலைவராக ஏற்றுக்கொண்டேன். என்னை விட்டு நீங்காத பலவிதச் சம்பந்தம் பெற்றேன் என்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். 

பராங்குச தாசர் ‘இராகம் மாற்றில்’(2) என்று கூறிவிட்டு, அடுத்த பாசுரத்தை இசையுடன் பாடினார். 

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே. 5

நாதமுனிகளுக்கு அந்தப் பாடல் இன்ப வெள்ளமாக உள்ளே சென்றபோது அவர் உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது.  ‘சாமர்த்தியம் பெற்றேன் !’ என்று கூறி.  கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பங்களான தகாத விஷயங்களில் பற்றுதலை ஒழித்து,  திருகுருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே! என்றார்.  

’தன் பற்று’ என்று கூறிவிட்டு,  பராங்குச தாசர் ஆறாம் பாடலைப் பாடினார்.  

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே. 6

நாதமுனிகளின் உள்ளத்தில் சடகோபனே எங்கும் பரவியிருந்தார். குருகூர் சடகோபன் அன்புடன் நாதமுனிகளைப் பற்றியிருக்கப் பூரிப்புடன் ‘இன்று முதல் ஏழேழு பிறவியிலும் என் ஆசாரியனான குருகூர் சடகோபன் புகழ் பாடுவேன்!  அதற்கு அருள் செய்தவரும் அவரே. என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப் இன்தமிழில் என் நாமுதல் புகுந்து என் வாய்மூலம் பாட வைத்து எக்காலத்திலும் இகழ்ச்சி இன்றி ஆதரவு செய்வார்!’ என்றார் தீர்மானமாக. 

பராங்குச தாஸர் நாதமுகளை வணங்கி ‘வினை விளக்குதல்’ என்ற சொல்லைக் கூறிவிட்டு, ஏழாம் பாடலைப் பாடினார். 

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே.  7

’காரியார் புதல்வரான மாறன் தானாகவே என்னைப் அன்புடன் பற்றியதால் தீவினைகள் தீர வழி செய்தார்! உலக மக்கள் பலருக்கு இந்த விஷயம் சென்று சேர வேண்டும் அல்லவா ? அதனால் திசை எட்டும் அறியும்படி புகழ்ந்து பேசப் போகிறேன்!’ என்றார். 

பராங்குச தாசர் ‘தகவு ஒக்கம்’(3) என்று கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.   8

பெருமாளின் கருணை  அபிவிருத்தியை கொண்டாடும்படி அடியார்கள் இன்புறக் குருகூர் சடகோபன் வேதத்தின் பொருளை இனிய தமிழில் அருளினார். இந்தப் பூவுலகில் இந்த அருள் ஒன்று மட்டுமே மிகவும் பெரியது. வேதத்தின் சாரமான கண்ணனின் கீதை, அதன் சாரமாக அமைந்த குருகூர் நம்பியின் ஆயிரம் பாடல்கள் கிடைக்க வேண்டும் என்று சடகோபனைத் தியானித்து அருளாழி அம்மானை வேண்டிக்கொண்டார். 

’தத்துவத்தை உணர்த்துதல்’ என்று கூறிய பராங்குச தாசர் அடுத்த பாசுரத்தைப் பாடினார். 

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.   9

சடகோபனுக்கே அடிமை செய்து, அவர் திருவடிகளின் மீது ஏற்பட்ட பக்தியின் பயனாக வேதத்தின் உண்மைப் பொருள்களை அறிந்துகொண்டு நெஞ்சுள் நிலை நிறுத்தி அவனுடைய உணர்வு கொண்டுணர்ந்தே இருந்த மதுரகவிகள் போல அடியேனுக்கும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

’தன்மையாக்கில்’ என்ற வார்த்தைக்குப் பிறகுப் பத்தாவது பாசுரத்தைப் பாடினார். 

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே.  10

திருத்துவதால் எந்தப் பயன் இல்லாத போதிலும், திருத்தி ஆட்கொண்டு தன்னைப் போல் ஆக்குகிறார் பெருமாள்.  இதுவே அவருடைய சுபாவம். அந்தச் சுபாவத்தையே நமக்கும் சடகோபன் அருளுகிறார் என்று நாதமுனிகள் மனம் முழுவதும் குருகூர் சடகோபனின் திருவடிகளைத் தியானித்தார். அந்தச் சமயம் பராங்குச தாசர் கடைசி பாசுரம் 

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன்  தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.   11

என்று பாடி முடிக்க நாதமுனிகள் ஆனந்தக் கண்ணீர் மல்கப் பராங்குச தாசர் பிள்ளையின் திருவடி தொழுது பராங்குச தாசரே மதுரகவிகள் என்ற பெயருக்கு ஏற்றார் போலப் பத்துப் பாசுரங்களும் அதன் உட்பொருளையும் உங்களால் உபதேசம் பெற்றது என் பாக்கியம் என்று மேற்கூறிய பத்து வார்த்தைகளையும் நாதமுனிகள் வரிசையாகக் கூறினார். (4)

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் 

என்று கூறிவிட்டு மேலும் 

அன்பர்க்கே அவதாிக்கு மாயன் நிற்க
அரு மறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே.. 

என்று கூறினார்(5) . நாதமுனிகள் கூறிய இந்தச் செய்யுளின் பொருள் பற்றி அறிந்துகொள்ள,(9) உலக வாழ்கையில் பொருள்களின் மீது நாம் எப்படிப் பற்று வைத்துள்ளோம் என்று அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

இந்த உலகில் ஒருவன் ஏதோ ஒரு பொருளின் மீது பற்று வைத்து நாளடைவில் அப்பற்று பெருகி அளவற்றதாக மாறினால் அப்பற்று அப்பொருளுடன் நின்றுவிடாமல், அதனோடு சம்பந்தம் பெற்ற எல்லாப் பொருள்களிலும் படர்ந்து பெருகிச் செல்லும் என்பதை நாம் அனுபவத்தால் அறியலாம்.  இதே போல் பெருமாள் மீது உள்ள அளவு கடந்த பற்றின் வெளிப்பாடே நான் அவரின் பாதுகைகளை ஆதரத்துடன் தலையில் வைத்துக்கொள்வதும், அவர் சூடிக் களைந்த மாலைகளை நாம் சூட்டிக்கொள்வதும், அவர் நீராட்டிய தீர்த்தத்தைப் பருகுவதும், அவர் காலடி பட்ட பிருந்தாவனம் போன்ற இடங்களில் அம்மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வதும் இதற்குக் காரணம். எப்படி பெருமாள் சம்பந்தம் பெற்ற பாதுகைகள், மாலைகள், தீர்த்தம் முதலியவற்றை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலத் தான் பகவானின் சம்பந்தம் பெற்ற ஆசாரியர்களும், அடியார்களும். 

மதுரகவிகள் தாம் வாழ்ந்த காலத்திலேயே கண்ணன் இப்பூமியிலே அன்பர்களுக்கு அருள் புரிய மாயனாக இருந்தான். ஆனால் அவரிடம் ஈடுபடாமல் மதுரகவிகள் குருகூர் நம்பியையே(6)  தேடிக்கொண்டு அவரையே கதியாகப் பற்றித் தன் குருபக்தியை வெளிப்படுத்தி, அவர் சம்பந்தப்பட்ட பெருமாளைப் பற்றினார். 

மேற்கொண்டு நாம் இந்தக் கதையில் பயணிக்கச்  சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் நேயர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. பரம்பொருளான நாராயணனைச் சாஸ்திரம் பரபிரம்மம் என்று கூறும், சம்பிரதாயம் பெருமாள் என்று கூறும். எல்லா ஜீவன்களும் பெருமாளைப் பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறும் ,சம்பிரதாயம் ஆசாரியனைப் பற்ற வேண்டும் என்று கூறும். சாஸ்திரம் பகவான் எல்லா ஜீவராசிகளிடமும் பாரபட்சம் காண்பிக்க மாட்டான் என்று கூறும், ஆசாரியனையும், அடியார்களையும்(7) பற்றியவனிடத்தில் பெருமாளுக்கு அபிமானம் அதிகம் என்கிறது நம் வைணவ சம்பிரதாயம். 

நாதமுனிகள் பராகுச தாசரை பார்த்து “பெருமாள் அடியவர்களிடத்தே தனிப்பட்ட அன்பு காட்டக் காத்துக்கொண்டு இருக்க, தென்குருகூர் நம்பியான சடகோபன் இப்பகவானுக்கு அடிமைப்பட்ட பாகவதர்களிடத்தே பக்தி கொண்டார். 

சத்ருக்னன் பரதனையே பற்றி ராம சௌந்தரியத்தை ஜயித்தது போல் மதுரகவியார் தேவுமற்றியேன் என்று சடகோபனைத் தவிர வேறு தெய்வத்தை அறிய மாட்டேன் என்று இருந்தார்.  ஆசாரியனை அடைதல் என்ற சம்பிரதாய மதுரகவிகள் வம்சத்தில் தோன்றிய உங்களுடைய அடியவனாக அடியேனை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.

“நாதமுனிகளே! சடகோபனின் பாசுரங்களை மீட்டுத் தரப்போகும் உங்களுக்கே நாங்கள் அடியவர்கள்.  நிச்சயம் உங்களுக்கு மதுரகவிகள், சடகோபன் அருள் பூரணமாக உண்டு. தாங்கள் தேடி வந்த பாசுரங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடியேனும் எங்கள் வசமும், இந்தப் பூவுலகமும் காத்துக்கொண்டு இருக்கிறது. சென்று வாருங்கள்!” என்று வணங்கி விடைகொடுத்து அனுப்பினார். 

சடகோபனின் அடியார் மதுரவியாரின் வம்சத்து அடியார் சம்பந்தம்  பெற்ற பின் பெருமாளின் பரிபூரண அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா ?  அடியார் சம்பந்தத்துடன் சிறுத்தாம்பு என்ற சாவியுடன் புறப்பட்டார் நாதமுனிகள். 

—————-

ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”

* குருப்யஸ்தத் குருப்யஸ்ய நமோவாக மதீமகே |
வ்ருணீமகே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ ||

அர்த்தம் —— அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

* பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
வையமெலாம் மறை விளங்க வாள் வேலேந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே– ——————அதிகார ஸங்க்ரஹம்——-

அர்த்தம்– பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மிக்க குளிர்ச்சியான
தாமிரவருணி நதிக்கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குருகேசன் )
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தூய உள்ளமுடைய
குலசேகர ஆழ்வார், நம்முடைய திருப்பாணாழ்வார் , தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமழிசையில் வந்து அவதரித்த, திருமழிசைப் பிரான், உலகம் எங்கும்
வேதங்களின் ஒலி ,சப்தம் விளங்க—வாள் ஆயுதமும், வில் ஆயுதமும்
ஏந்திய திருமங்கை மன்னன் –ஆகிய ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய (அருளிய )
இனிமையான பாசுரங்களை நாம் நன்கு தெளிந்து ஓதி, அத்யயனம் செய்து,
எளிதில் பொருள் தெரிந்து கொள்ள இயலாத வேதங்கள், உபநிஷத்துக்கள் –
இவைகளின் உண்மையான பொருள்களைத் தெரியாத இடங்களில், தெளிந்து(குழப்பமே இல்லாமல், தெளிவாக ) அறிந்தோம்

செய்ய தமிழ்மாலைகள்
1.பொய்கை ஆழ்வார்—–முதல் திருவந்தாதி ——————————–100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் ——–2ம் திருவந்தாதி——————-————————–100 பாசுரங்கள்
3. பேயாழ்வார் ———-3ம் திருவந்தாதி ———————————————100 பாசுரங்கள்
4. ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்–ருக் வேத ஸாரம் —————– 100 பாசுரங்கள்
—-திருவாசிரியம் –யஜுர் வேத ஸாரம் ———- 7 பாசுரங்கள்
—பெரிய திருவந்தாதி –அதர்வண வேத ஸாரம்– 87 பாசுரங்கள்
—திருவாய்மொழி——ஸாமவேத ஸாரம் ———- 1102 பாசுரங்கள்
5. பெரியாழ்வார் —-பெரியாழ்வார் திருமொழி —————————– 473 பாசுரங்கள்
6. குலசேகரப் பெருமாள்—பெருமாள் திருமொழி ————————– 105 பாசுரங்கள்
7. திருப்பாணாழ்வார் ——அமலனாதிபிரான் ——————————— 10 பாசுரங்கள்
8. தொண்டரடிப் பொடி ஆழ்வார் ————திருமாலை —————————45 பாசுரங்கள்
———–திருப்பள்ளியெழுச்சி ——— 10 பாசுரங்கள்
9. திருமழிசை ஆழ்வார் ——————நான்முகன் திருவந்தாதி ———- 96 பாசுரங்கள்
————திருச்சந்த விருத்தம்———————— 120 பாசுரங்கள்
10. திருமங்கை மன்னன் ——————பெரிய திருமொழி ———————-1084 பாசுரங்கள்
——- திருக்குறுந்தாண்டகம் ———————- 20 பாசுரங்கள்
————திருநெடுந்தாண்டகம் ————————- 30 பாசுரங்கள்
—————திருவெழுகூற்றிருக்கை ————– 1 பாசுரம்
————–சிறிய திருமடல் —————————– 40 பாசுரங்கள்
————–பெரிய திருமடல்———————-——– 78 பாசுரங்கள்
ஆக ———————————————————————————– 3,708 பாசுரங்கள் இந்தச் செய்யத் தமிழ் மாலைகள் 3708 பாசுரங்களை,
அர்த்தங்கள் நன்கு புரியும்படி பாராயணம் (படித்து/சொல்லி ) செய்து, வேதங்களும் ,உபநிஷத்துக்களும் சொல்லும்
கடினமான அர்த்தங்களை ,நன்கு தெளிந்தோம் —என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்

* இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராக மாற்றில் தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில் அன்பர்க்கே அவதரிக்கு மாயனிற்க
அரு மறைகள் தமிழ்ச்செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே .

அர்த்தம்—- ஆயன்—-அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் —பக்தர்களுக்காகவே அவதாரம் செய்பவன்
கண்ணன் , நிற்க—–ஸ்ரீ க்ருஷ்ணன் தயாராக இருக்க —– எதற்கு—-? தனது பக்தர்கள்ளுக்கு ஆனந்த ரூபமான அனுபவத்தைக் கொடுக்க
சரணம் என்று இறைஞ்சுபவரைக் காக்க புருஷார்த்தத்தை உணர்த்த இகழ்ச்சியே இல்லாத பலவித ஸம்பந்தத்தை உணர்த்த ,
உலக விஷயங்களில் வைத்துள்ள பற்றுதலை–அதாவது, தகாத விஷயங்களில் பற்றை அழிக்க, தன் விஷயத்தில் பற்றுதலை உண்டாக்க
பாபங்களை ஒழிக்க கருணையை வெளிப்படுத்த. தத்துவ விளக்கங்களைச் சொல்ல
தன்னுடைய சுபாவத்தை அருள —ஆகியஇந்தப் 10 விஷயங்களுக்காகத் தயாராக இருந்தான்.
ஆனாலும், அவரை ஏறெடுத்தும் பாராமல், குற்றமில்லாக் கவியான மதுரகவி ஆழ்வார் , அறிவதற்கு மிகக் கடினமான
வேதங்களின் பொருளைத் தமிழில் அருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளையே சரணமாகப் பற்றினார்.

இவர் துன்பற்ற மதுரகவி (குற்றமில்லா மதுரகவி )
இவருக்குத் தோன்றிய வழி— இதுவே தொல்வழி —தொன்மையான வழி/ பழமையான வழி — என்றும்,
நல்வழி–ஸம்ஸார பந்தத்திலிருந்து வெளியே வர மிக நல்ல வழி என்றும் நமக்கு காண்பித்தார் .
யாருக்கு—? எது தொன்மையான வழி என்று துணிந்து வருவார்க்கும், ஸம்ஸாரம் என்கிற காட்டிலிருந்து
விடுதலை பெறத் துணிந்தவர்கட்கும் நாயகன் கிருஷ்ணன் ,அருளுவதற்குத் தயாராக இருந்தாலும்,
மதுரகவிகள் நம்மாழ்வாரான ஆசார்யன் திருவடிகளைச் சரணம் என்று வந்து அடைந்தார்– இதை அனுஷ்டித்து நமக்கு காண்பித்தார்.

மதுரகவி ஆழ்வார் அருளியது—கண்ணிநுண் சிறுத்தாம்பு–10 பாசுரங்கள். இந்தப் 10 பாசுரங்களின் பொருளை,
இந்த ஒரே பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இப்படிப் 10 விஷயங்களாலே ஸ்ரீ நம்மாழ்வார் , பகவானைச் சரணடைந்தார்.
மதுரகவிகளோ, ஆசார்யனை—ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடைந்தார். மோக்ஷத்துக்கு உபாயம் ஆசார்யனே —ஆசார்ய பரம்பரையை அநுசந்திக்க வேணும்

பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் | ஆசார்ய வத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
என்று ஆசார்யவத்தையே ஸர்வருக்கும் மோக்ஷ காரணமென்று அறுதியிட்டார்கள் .
முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானானளவுஞ் செல்ல அநுசந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.

வ்யாக்யானம் :—–
ஸ்ம்ருதி சொல்கிறது—பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் |
ஆசார்ய வத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால் தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது

க்ஷத்ர பந்து சரிதம் :—- ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் சொல்லப்படுகிறது ——–
க்ஷத்ர பந்து ஒரு அரசன்–எப்போதும் பாபச் செயல்களையே செய்துவந்தான்.
அதனால் ராஜ்யத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்து வந்தான்.
பிறரைத் துன்புறுத்தி ,ஜீவ ஹிம்ஸை செய்வதே வழக்கமாக இருந்தது. ஒருநாள், நட்ட நடுப்பகல் உச்சி வெய்யிலில்,
வழி தவறி வந்த முனிவரைப் பார்த்து, இரங்கினான். தண்ணீர் தாகத்தால் தவித்த அவர், தண்ணீர் அருந்த அருகில் உள்ள
குளத்தில் இறங்கும் போது அதில் விழுந்துவிட, க்ஷத்ரபந்து அவரைக் காப்பாற்றி,
அவரது பசிக்குத் தாமரைக் கிழங்குகளைக் கொடுத்து, உபசரித்தான். முனிவர் , அவனது வ்ருத்தாந்தத்தைக் கேட்க,
அவன் தனது பாப கார்யங்களை எல்லாம் சொல்லித் திருந்தவும் இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்ல,
அந்த முனிவர், ”கோவிந்தா, கோவிந்தா” என்றாவது சொல்லிக் கொண்டிரு என்று புத்திமதி சொன்னார்.
க்ஷத்ர பந்துவும், அப்படியே சொல்லக் சொல்ல, பாபச் செயல்களை ஒழித்து, மோக்ஷத்துக்கான உபாயத்தைச் செய்து மோக்ஷம் அடைந்தான்.

உபதேச பரம்பரையில் உள்ளது——-
க்ஷத்ர பந்து ஒரு கெட்ட அரசன். கெட்ட நடத்தை உடையவன். உறவினர்கள்,அரசனைக் காட்டில் தள்ளி விட்டார்கள்.
அங்கும் கெட்ட வழியில் முனிவர்களைத் துன்புறுத்தினான். ஒரு நாள், அந்த வழியில் நாரதர் வந்தார்.அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
அவர், ”ஹே —அரசனே–உன்குடும்பத்தாரைக் காப்பாற்ற, நிறைய பாபச் செயல்களை செய்கிறாய் ;
இதில் ஒரு பங்கையாவது உன் குடும்பத்தார் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வார்களா — என்று கேட்டு வா ” என்று சொல்லி அனுப்பினார்.
நாரதரின் தர்சனத்தால் ,சிறிதளவு ஞானம் உண்டான க்ஷத்ர பந்து, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்த அரசன், ”எல்லோரும் மறுக்கிறார்கள்; நிறையப் பாபங்களைச் செய்திருக்கிறேன்; என்னைக் காத்தருள்க —என்று நாரதரை வேண்ட,
அவர், அவனுக்கு மோக்ஷ உபாயங்களை உபதேசித்து, அவன் மோக்ஷம் அடையுமாறு செய்தார்.

புண்டரீகனின் சரிதம் :— ஸ்ரீ பாத்மோத்தர புராணம் சொல்கிறது—— இவன் ப்ராம்மணன் —பெரிய செல்வந்தன். வேதாத்யானம் செய்தவன்.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தவன். புண்ய தீர்த்தங்களில் நீராடியவன். பக்தி யோகத்தில் இழிந்தும்,
பகவானின் அருள் கிட்டவில்லை.ஒரு சமயம் நாரதரைத் தரிசிக்க, அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்து, நல்வழிகாட்ட,
இந்த பிராம்மணன் , அஷ்டாக்ஷர மந்த்ர ஜபத்தால், பகவானின் அருளை பெற்று மோக்ஷம் அடைந்தான்.இப்படியாக,
ஆசார்யன் அருளினால்தான் மோக்ஷம் சித்திக்கும் என்று தெளிந்தது.மோக்ஷம் அடையத் தீராத ஆசை உடையவன்,
தனது ஆசார்ய பரம்பரையை ,பகவான் வரையிலும் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனே முதல் ஆசார்யன்
தம் இமம் ஸர்வ ஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் என்றும்,
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : என்றும் ,
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ என்றும், குருரஸி கதிச்ச ஸி ஜகதாம் என்றும் , சொல்லுகிறபடியே
ஸர்வ லோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் —-
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும்
2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகத விஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹித ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ,
3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளை யிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,
4.க்ருஷ்ண த்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற
வ்யாஸாதிகளை அனு ப்ரவேசித்து மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,
5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,
6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு முதலிப்பித்தும்
7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச என்கிறபடியே
அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்
8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ர ஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும்
அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்
9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ சாட்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்
10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் .

இத்தைக் கணிசித்து :
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம்–
எம்பெருமானே , எல்லா உலகங்களுக்கும் முதல் ஆசார்யன் –பரமாசார்யன் என்பதை பல உதாரணங்களிலிருந்து உணரலாம்.

தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் (மஹாபாரதம்–ஸபா பர்வம்) எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும்,
முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் ,
பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
( ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் .
வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : —-விஷ்ணு புராணம் (5–1–14) எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன்,
எனக்கும் குரு —ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் சொல்கிறது—–தனக்கென்று ,எந்த ஆசார்யனும் இல்லாத , பரமாசார்யன் –நாராயணன்.
(இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே ).
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ —–நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி,
க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம் குருரஸி கதிச்ச ஸி ஜகதாம்—-

ஸ்தோத்ர ரத்னம் (60 ) பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
ஸ்தோத்ர ரத்னம் (60 ) முழு ச்லோகம்
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் –ஒன்பதுவிதமான உறவுகள் பகவான் நாம் 1.பரமாத்மா ஜீவாத்மா 2.யஜமானன் கிங்கரர்கள் –வேலையாட்கள் 3.பிதா புத்ரன் /புத்ரி 4.ஆசார்யன் சிஷ்யன்
5.பதி பத்னி 6.போக்தா –அனுபவிப்பவன் போக்யம் –அனுபவிக்கப்படும் பொருள் 7.ரக்ஷிப்பவன் ரக்ஷிக்கப்படுபவர்
8.நியமிப்பவன் நியமிக்கப்படுபவன் 9.சேஷீ சேஷன் –சேஷபூதன் இப்படிப்பட்ட எல்லா லோகங்களுக்கும் பரமாசார்யனான எம்பெருமான்,

நமக்குச் செய்த உபாயங்களை, ஸ்வாமி தேசிகன் இப்போது சொல்கிறார்.
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும்
இவன் முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் —-

வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவுக்குத் தொடக்கத்திலே வேதங்களைக் கொடுத்தான், ,காணாமல் போன வேதங்களைக் கண்டுபிடிப்பதாக வாக்குக் கொடுத்து,
அப்படியே கண்டுபிடித்து, வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, அவன் மூலமாகவே , வேத சாஸ்த்ர ஞானத்தை உலகத்தாருக்கு வழங்கியும்,

2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : (பாரதம்–சாந்தி பர்வம் )என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹித  ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ——,
வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர்கள் ,—இவர்கள்–தானாகவே ஞானிகள், நிவ்ருத்தி தர்மத்தில் இழிபவர்கள்—–
இவர்கள் மூலமாக நன்மைகளைச் செய்தும்,

3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளை யிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,

வ்யாக்யானம் —- மற்றும், நாரதர், பராசரர், சுகப்ரம்மம் , சௌனகரிஷி இன்னும் பல மஹரிஷிகள் மூலமாக,
அத்யாத்ம ஸம்ப்ரதாயமான ஜீவாத்மா –பரமாத்ம விஷயமான உபதேச க்ரமம் அழியாதபடி செய்தும்,

4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து
மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,

வ்யாக்யானம் —–
.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ
பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? (விஷ்ணு புராணம் ) க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும்
வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே , மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் (மஹாபாரதம் —ஆதிபர்வம் )
மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும் போது, பீஷ்மர், கைகளைக் கூப்பிய வண்ணம் பேசினார்.
பகவான் நாராயணன், வ்யாஸாதி மஹரிஷிகளிடம் அநுபிரவேசித்து, சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்ம ஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும்,

5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,

வ்யாக்யானம்—- பகவான் நாராயணனே, ஹம்ஸ , மத்ஸ்ய ,ஹயக்ரீவ,நரநாராயண, கீதாசார்ய க்ருஷ்ண அவதாரங்கள் எடுத்து,
தத்வங்களையும்,ஹிதத்தையும், புருஷார்த்தத்தையும் ப்ரகாசமாக எடுத்துச் சொல்லியும்——

ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—–
இவர்கள், தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்ம யோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.
பகவான் மிகவும் கருணையுடன் ஹம்ஸ ரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவ பர—சரீர ஆத்ம பாவ ரூபத்தை உபதேசித்தார்.

மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும்.
உலகங்கள் யாவும் ,கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,
அப்போது, அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்த போது,
அவர், ஜல தர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து,
அவராலேயே, கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய் சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி, ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து,
வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்

ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது—
ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில் தங்கத் தூள்கள் ஒட்டுவதுபோல,
மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளி கொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழி காணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும், அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித் தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் ) அபஹரித்துக் கொண்டு
பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்து வைத்தனர். ப்ரஹ்மா பதறினான்; நான்கு வேதங்களின் உதவி இல்லாமல்,
ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான், பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து,
பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப, இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது,
ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார்.
அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட, பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.

நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார் இவரால்,
தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க, அப்ஸரஸ்களை அனுப்ப,
நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல, இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் .

கீதாசார்யன் —– குருக்ஷேத்ர யுத்தத்தில், அர்ஜுனனுக்கு, பகவான் அருளிய உபதேசங்கள்—18 அத்தியாயங்கள்– பகவத் கீதை
என்கிற மிக உயர்ந்த, தத்வ விளக்கம்–இதனாலும் பகவான் ஆசார்யன்

6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு மூதலிப்பித்தும்

வ்யாக்யானம்——– தான் அருளிய எல்லாவற்றையும், பீஷ்மர் முதலான ஞானிகள் மூலமாக வெளியில் பரவச் செய்தான்

7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச
என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்

வ்யாக்யானம்–விளக்கம்–
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் —-மஹாபாரதம்—சாந்தி பர்வம்– பகவான் நாராயணனே,
பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.

8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை
ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்

வ்யாக்யானம்—விளக்கம்–
பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத —-விஷ்ணு தர்மம் சொல்கிறது—
கலியுகத்தில் அந்தந்த ஜீவன்களுக்குள் புகுந்து, அச்யுதன், தனக்கு விருப்பமானத்தைச் செய்கிறான், என்பதற்கு ஏற்ப,
பராங்குச (நம்மாழ்வார் முதலாக ), பரகால ( திருமங்கை ஆழ்வார்) என்கிற பத்து அவதாரங்களை எடுத்தான்.
இப்படி, பகவான் செய்த உபகாரம் என்ன ? மேகங்கள், சமுத்ரத்திலிருந்து, நீரை உறிஞ்சி எடுத்து, அந்த நீரை,
எல்லா ஜீவன்களுக்கும் மழையாகப் பொழியுமாப்போலே ,வேதங்களின் சாரத்தை எல்லாம் எடுத்து, எல்லோருக்கும் எளிதில் புரியும்படி,
நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகத் தமிழில் அளித்தான்.

9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ ஸாக்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ் சாஸ்த்ர பாணினா ஏ என்றும்

வ்யாக்யானம்—–விளக்கம் — இப்படியாகத் தான் ஸங்கல்பித்த –ஏற்படுத்திய நல்ல பாதைக்கு, நாராயணனை, மற்ற பரிவார தெய்வங்களோடுச் சமமாக நினைப்பவர்கள்,வேத நெறிப் படையாக வாழ்க்கையை வாழாத- பாஷாண்டிகள்,நாராயணனைத் தாழ்வாக எண்ணுபவர்கள், —
இவர்களைப்போல் உள்ளவர்களால், இடைஞ்சல்–தடங்கல் ஏற்படாதிருக்க, பகவான் செய்தது என்னவெனில் ?
ஏ சாக்ஷாத் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான்
உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ ——— (ஜயாக்ய ஸம்ஹிதை )
நாராயணன், மனுஷ்ய சரீரத்தை எடுத்து, ஸம்ஸாரத்தில் மூழ்கி இருக்கிற ஜீவாத்மாக்களை, சாஸ்த்ரம் என்கிற
கையினால், கருணையுடன், தானே , கரையேற்றுகிறான்.

10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :

வ்யாக்யானம்—-விளக்கம் —– ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில்கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே ————பெரியாழ்வார் திருமொழி
அவன் பகவான், நாராயணன்—பீதாம்பரதாரி—என்னுள்ளே வந்தான்—எப்படி ? பிரமகுருவாக வந்தான் —வந்து ஹ்ருதயத்திலே புகுந்தான்—
புகுந்தவன் , என் சிரஸ்ஸில் திருவடியை வைத்து , அது அழியாத அடையாளமாக ஆயிற்று— என்று இப்படி விவரிக்கிறார்—
பகவான், ஆசார்ய ரூபமாக வந்து, ப்ரஹ்மோபதேசம் செய்கிறானாம்.
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம் —விளக்கம் ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது—-
இந்தக் கலியுகத்தில், நாராயணனையே உபாயமாகவும் உபேயமாகவும்
கொண்ட விஷ்ணு பக்தர்கள், தமிழ் பேசும் பிரதேசத்தில் ,தாமிரவருணி, வைகை,பாலாறு, காவேரி, மேற்கே கடலில் கலக்கும் மகாநதி (பெரியாறு )
இந்த நதிகளின் கரைகளில் பிறப்பார்கள். ஸ்ரீ உடையவர் வரை ஆசார்ய பரம்பரை இவ்வாசார்யர்களில் ,
ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள் . இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார்.
இவருக்கு ஸ்ரீ மதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும்
யோக தசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் .
நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான் . ஈச்வரப்பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகம ப்ராமாண்யமும் புருஷ நிர்ணயமும் , ஆத்ம ஸித்தி–ஈச்வர ஸித்தி –ஸம்வித் ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும் ,
கீதார்த்த ஸங்க்ரஹமும் ,சதுச்லோகியுமாக எட்டு.
ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான் . என்னாச்சான் பிள்ளைகள் நால்வர்.
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்.பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண்பிள்ளைகள் இருவர்.

வ்யாக்யானம்—-விளக்கம்—- கலியுகத்தில் ,நதிதீரங்களில் ,ஆசார்யர்கள் ,அவதரிப்பார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னதை ,மேற்கோள் காட்டியவர்,
இப்போது ஆசார்யர்களைப் பற்றிக் கூறுகிறார்.
முதலில் ஸ்ரீமந் நாதமுனிகள் . இவர் ஈச்வரமுனியின் குமாரர். இவர், ந்யாயதத்வம், யோகரஹஸ்யம் என்கிற இரண்டு பொக்கிஷ க்ரந்தங்களை அருளினார்.
இவருக்கு, மதுரகவி ஆழ்வாரின் உபதேச பரம்பரையும், திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, யோகத்தில் இழிந்ததால்,
நேரிடையாகவே ஸ்ரீ நம்மாழ்வாரை ,ஆசார்யனாகப் பெரும் பாக்யத்தைப் பெற்றார்.
நாதமுனிகள் குமாரர் ஈச்வர பட்டாழ்வான். இவருடைய பிள்ளை ஆளவந்தார்.
ஸ்ரீ ஆளவந்தார் அருளியவை–ஆகமப்ரமாண்யம்,புருஷ நிர்ணயம், ஆத்ம ஸித்தி ,ஈச்வர ஸித்தி ,ஸம்வித் ஸித்தி ,
கீதார்த்த ஸங்க்ரஹம் , ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி –ஆகிய எட்டு.
பிள்ளை , சொட்டை நம்பி. சொட்டை நம்பியின் பிள்ளை எண்ணாச்சான்.இவரது பிள்ளைகள் நால்வர்.
அதில் ஒருவரான பிள்ளையப்பரின் குமாரர் தோழப்பர். இவருக்கு இரண்டு பெண்கள்.

நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள்,உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான்
வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் என்பர் .

உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர்.
அவர்களாகிறார், மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை.

மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர் .அவர்களாகிறார், ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்
திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி

வ்யாக்யானம்—விளக்கம்—
ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் என்றால், அவரது திருவடிகளைப் பற்றிய சிஷ்யர்கள் என்று பொருள்.
நாதமுனிகளை ஆச்ரயித்தவர்கள்–உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,
நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான் , வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் ஆகிய எண்மர்

உய்யக்கொண்டாரை ஆச்ரயித்தவர்கள்—-மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை ஆகிய ஐவர்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவர்கள்—-ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் ,
சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி ஆகிய ஐவர்

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர் .அவர்களாகிறார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான், சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் ,
தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர்

வ்யாக்யானம்—-விளக்கம்– நாதமுனிகள் திருப்பேரரான ஆளவந்தாரை -ஆச்ரயித்தவர்கள்—-பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி,
திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான்,சிறியாண்டான் ,
திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் ,
மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர் .

பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார், எம்பெருமானார், மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி

வ்யாக்யானம்—-விளக்கம்–
பெரியநம்பிகளை ஆச்ரயித்தவர்கள்—-எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பிகள் ஆகிய அறுவர் .
எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ரகஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்.
திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்.
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும், அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார்.
திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத் ராமாயணம் கேட்டருளினார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும் , வேதார்த்த ஸங்க்ரஹமும் , ஸ்ரீ கீதாபாஷ்யமும்
சிறிய கத்யமும், பெரிய கத்யமும் ஸ்ரீ வைகுண்ட கத்யமும் ,நித்யமும் ஆக ஒன்பது.
இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளை, தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது

வ்யாக்யானம்—–விளக்கம் —
எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரஹஸ்யார்த்தங்களையும் ,
திருமாலையாண்டானிடத்திலே திருவாய்மொழிஅர்த்தங்களையும்,கற்றார்.
ஆளவந்தாராழ்வார் பக்கலில் திருவாய்மொழியும் , ஸ்தோத்ர ரத்னம், அருளிச் செயலும், கற்றார்.
திருமலை நம்பிகளிடம் , ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்டார்.
இவர் அருளிய க்ரந்தங்கள் —— ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம் , வேதார்த்த ஸங்க்ரஹம் , கீதா பாஷ்யம்,
ஸ்ரீரங்க கத்யம் ( சிறிய கத்யம் ), ஸரணாகதி கத்யம் ( பெரிய கத்யம் ), ஸ்ரீவைகுண்ட கத்யம்,நித்யம் ஆக ஒன்பது க்ரந்தங்கள் .
எம்பெருமானாரின் சிஷ்யர்களை, அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்துகொள்ளவேண்டும்.

ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்றார்கள்
குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதவும் ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு பக்தியில் தாரதம்யத்தாலேயிறே .
பகவத் விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும்
என்னுமிடம் கட —ஜாபாலாதி ச்ருதிகளிலும்
ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம் .
இங்ஙனல்லார்க்கு இப்படி ஞான ஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞானதாரதம்யத்தாலே கண்டுகொள்வது.
மிகவும் குணாதிகரனான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு நிஷ்ட்டை குலையாது என்னுமிடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம் .
பெற்றது குணமாக உபதேசித்தால் , சிஷ்ய பாபம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம் ,
வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை மறந்து , தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு
ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது.
இப்படி, அப்ரகாசப்ரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்கிற பலங்களை
ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை,
இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை.
ஆகையால், சர்வாவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும் மகாரத்னகர்ப்பமான மாணிக்கச் செப்புப்போலே
இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற
சிஷ்யகுணபூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே , மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம் .
இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம் ஸாமான்யமாகவுமாம் மந்த்ர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரகஸ்யங்களுக்கும் ப்ரதர்சனபரம் .
தான் இந்த ரகஸ்யங்களை அநுஸந்திக்கும்போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதிபலப்ராப்தம் .
இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம் , ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்

வ்யாக்யானம்——விளக்கம்—- சேஷ ஸம்ஹிதை கூறுகிறது.
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ புத்திசாலியானவன் ,
தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம் போலப் பாதுகாக்க வேண்டும்.
இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும்.
ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும், குருவிடம் அவன் வைத்துள்ள
அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோ அதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும்
ஆசார்யபக்தி பரிவாஹத்தால் ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது. சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.
ஜாபாலை என்கிற ஸ்திரீயின் குமாரன்–ஸத்யகாமன் . இவன், ப்ரஹ்மவித்யைக் கற்க ஆசார்யரை அணுகினான்
ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து, இவனுக்கு, உபதேசித்தார்.
ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை.

ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால்
அந்தத் தகுதியில்லா சிஷ்யன் செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன.
இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து, ப்ரஹ்மா
அவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார்.
இதன் பலன் அவருக்கு, பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின.
பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார். பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.

ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,
போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர்மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்; சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு,
ஆசார்யன் உபதேசிக்கலாகாது; சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .

ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——கௌதம தர்ம ஸுத்ரம் -சொல்கிறது-
பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்து விட்டால்,அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்க வேண்டும்.

என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன் அமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

வ்யாக்யானம் —விளக்கம்
இந்த ஆத்மா, எம்பெருமானுக்கு ”சேஷன்” என்கிற ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாவைக் காப்பாற்றிய என் ஆசார்யனை
சரணம் என்று அடைந்து, அவரது ஆசார்யர்களை வரிசைக் க்ரமமாக நமஸ்கரித்து, பின்பு கருணையுடன்
ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த வள்ளலான ஸ்ரீ பாஷ்யகாரர் , பெரியநம்பி ஆசார்யன், ஆளவந்தாராகிய ஆசார்யன் ,
மணக்கால்நம்பி என்கிற ஆசார்யன், ப்ரபத்தி மார்க்கத்தை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார்,
அவரது ஆசார்யன் நாதமுனிகள், அவரது ஆசார்யன் சடகோபன் என்கிற ஸ்ரீ நம்மாழ்வார், பிறகு ஸ்ரீ விஷ்வக் ஸேனர் ,
இனிமையான அமுதம் போன்ற பெரியபிராட்டியார், இவர்களை முற்பட நமஸ்கரித்து,
எம்பெருமானின் திருவடிகளை அடைகின்றேன்

ஏதே மஹ்யம் அபோட மன்மத ஸார உன்மாதாய நாதாதய : த்ரய்யந்த ப்ரதிநந்தனீய விவித உதந்தா : ஸ்வதந்தாமிஹ |
ஸ்ரத்தாதவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா : ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவீ வைதேஸிகா தேஸிகா : ||

வ்யாக்யானம்—விளக்கம்
வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் .

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ— க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந — ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||

வ்யாக்யானம்—-விளக்கம் ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை,அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் ,
திசைகள் தோறும் உள்ள வெற்றித் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது.அந்தத் தூண்களில் உள்ள கொடிகள்,
மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப் போலே விரட்டித் தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல்மார்க்க தர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது.

ஆரணநூல் வழிச்செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்த பிரான் என்றநகீர்த்தி
இராமாநுசமுனி இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே

வ்யாக்யானம்—-விளக்கம் வேதங்களின்உட்கருத்தை விளக்கும் நூல் ”ப்ரஹ்மஸுத்ரம் ”.
அது கூறும் உண்மையான வழியை ,தவறான வாதங்களை சொல்லிப் பலரும் அழித்தபோது,
அவற்றையெல்லாம்,வாழைத் தோப்பை நாசம் செய்யும் ஒப்பற்ற யானையைப் போல , உபகாரகர் ,
உலகுக்கு பொருத்தமான அலங்காரமான சிறந்த புகழை உடைய இராமாநுச முனி என்னும் ஸ்ரீ பாஷ்யகாரர்
இனிமையான தன்னுடைய ஸ்ரீ ஸூக்திகளால் சாய்த்தார்.ஸ்ரீ பாஷ்யகாரரின் இன்சொற்களிலும்
அவரது சிறந்த குணங்களிலும் எங்கள் மனம் முழுதும் ஈடுபட்டுள்ளது .
இனி நாங்கள், வேறு சாஸ்த்ரங்களையும்கர்மாக்களையும் ,தீயச் செயல்களையும் மனதால்கூட நினைக்கமாட்டோம் .

நீளவந்தின்று விதிவகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம்பொன்றி விழுந்துழலாது
ஆள வந்தாரென வென்று அருள்தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோம் இனி அல்வழக்கே

வ்யாக்யானம்—-விளக்கம்
நாம், நீண்ட நெடுங்காலமாக சம்ஸாரப் பிடியில் சிக்கி இருக்கிறோம்.இந்தப் பிறவிக்குப் பிறகும் கர்மவினையின் காரணமாக ,
வேறொருப் பிறவியை எடுத்து அல்லல்படாமல், நம்மைக்காக்க ,ஆளவந்தார் அவதரித்தார்.
அவர் எதிர்வாதம் செய்பவர்களை வென்று, கருணை புரிந்தார் , அத்தகு கல்யாண குணங்களை உடைய ஆளவந்தாருக்குத் தாஸரான நாம்,
இனிமேலும் ஸத்தில்லாத –அஸத்தான சாஸ்த்ரங்களைப் படிக்கமாட்டோம் .

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த
வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே

வ்யாக்யானம்—விளக்கம் திருச்ச்சின்னம் வாத்யம்போலும் ,வலம்புரிச் சங்குபோலும் நல்ல பக்திமான்களான
கீழையகத்தாழ்வான் ,மேலையகத்தாழ்வான் ஆகிய இரண்டு சிஷ்யர்களுக்கு, தாள வித்யையைச் சொல்லிக்கொடுத்து,
தமிழ்வேதமெனப் போற்றப்படும் திவ்யப்ரபந்தத்தின் இனிமையான கானத்தையும் உபதேசித்து,
மஹா உதாரகுணவள்ளலும் யோகமார்க்கத்தை உலகில் பரவச் செய்தவருமான ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளைத் தினமும் ஸேவித்து வாழ்வோம் .

நான்கு வகையான இந்தப்பூமியில் நமக்குச் சமமானவர் யார் உள்ளார்கள் ? எவருமில்லை !

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

42ஆம் அழகியசிங்கர்

September 4, 2024
1. அவதாரம் இந்த பெரிய ஆச்சார்யன் ஜனவரி 21, 1879 இல் பிறந்தார். இது தாய் உத்திரஆதம் ஒரு பஹுதா+அன்யா (பல வழிகளில் வேறுபட்டது) சம்வத்சரத்தில் (ஆண்டு). புத்தங்கொட்டகம் சுவாமி, கோஷ்டியூர் ஸ்வாமி போன்ற மகா புருஷர்களின் ஒரு பெரிய சபை அந்த ஆண்டில், சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது.42வது அழகியசிங்கர்

அவர் பிறந்த இடம் பாகு நதி (செய்யாறு நதி) கரையில் வேத பண்டிதர்களுக்காக மிகவும் மதிப்பிற்குரிய ஆறாவது அழகிய சிங்கரால் நிறுவப்பட்ட ஒரு அக்ரஹாரம் ஆகும். இந்த ஆச்சார்ய சார்வபௌமன் 1499-1513 CE வரை அஹோபில மடத்தின் பீடத்தை அலங்கரித்து, அஹோபிலத்தில் உள்ள ஒரு குகைக்குள் நுழைந்தார், திரும்பவே இல்லை. அவர் இன்றும் அந்த குகைக்குள் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனுக்கு ஆராதனை செய்வதாக கூறப்படுகிறது.
அக்ரஹாரம் ஆறாவது அழகிய சிங்கரால் ந்ருசிம்மபுரம் என்று வழங்கப்பட்டது, பின்னர் இஞ்சிமேடு என்று அறியப்பட்டது. இதில் வரதராஜனின் சந்நிதி உள்ளது.

நமது ஆச்சார்யரின் கோத்திரம் பரத்வாஜ கோத்திரம். இவருடைய தந்தையின் பெயர் ஸ்ரீ ஆதிவர் ஆச்சார் சுவாமிகள். இவரது மகனுக்கு ஸ்ரீரங்கத்தின் இறைவன் ரங்கநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.இந்த ஆச்சார்யருக்கு ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மனின் ஜயமான கடாக்ஷம் இருந்தது
மற்றும் மிக இளம் வயதிலேயே ஸ்ரீமத் ராமாயணம் மற்றும் ஸ்தோத்திர பாதங்களின் புனருச்சரணத்தில் (அவர் கேட்டதை துல்லியமாக பாராயணம் செய்வதில்) அசாதாரண திறமையை வெளிப்படுத்தினார்.
தந்தையான ஸ்ரீ ஆதிவர்ஆச்சார் ஸ்வாமிகள், கர்ப்பாஷ்டமத்தின் போது உபநயனம் மற்றும் பிரம்மோபதேசம் செய்தல் (கருவுற்றது முதல் 8 ஆண்டுகள் வரை) மற்றும் பஞ்ச சம்ஸ்காரம் HH தி 37 வது பட்டம் கலத்தூர் அழகிய சிங்கர், ஸ்ரீவண்ணன் சதகோபா ஸ்ரீரங்கன்சதகோபா ஸ்ரீரங்கன்சதகோபா ஸ்ரீரங்கன்ஆசிரியர்.
நாதத்தூர் அம்மாள் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது சுவாமி தேசிகனை முன்பு காஞ்சி வரதராஜனின் கோவிலில் ஆசீர்வதித்தது போல், அந்த சிறுவனின் அசாதாரண பிரகாசத்தை உணர்ந்து, அவனை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தூணாக ஆக்கும்படி ஆசீர்வதித்தார்.

2. வித்யா கிரஹணம் ஸ்ரீ ரங்கநாதன் தனது பதின்மூன்று வயதிற்குள் வேதாத்யாயனத்தை முடித்தார். அவர் தனது அதியபாக ஸ்வாமிகளால் ஒரு பிரம்மச்சாரிக்குத் தேவையான ஸ்ரீ அஷ்டாக்ஷர ஜபம் மற்றும் பிரம்ம யக்ஞம், சமிதாதானம் போன்றவற்றில் தீட்சை பெற்றார்.
ஸ்ரீ ரங்கநாதன் தனது வேதாத்யாயணத்தை முடித்தபோது, ​​ஒரு தனிப்பட்ட துக்கம் ஏற்பட்டது, அது அவரை உலுக்கியது. அவரது அன்பான தந்தை தனது ஆசார்யரின் திருவடியை அடைந்தார். அவரது பரம்பரை நிலச் சொத்துக்கள் இழக்கப்பட்டன.
அவர் தனது தாத்தாவின் வீட்டிற்கு (அம்மாவின் தந்தை) சென்றார். அங்கு, காவ்யங்கள் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்து, அலங்கார சாஸ்திரம் வரை ஆய்வுகளை முடித்தார். அவருக்கு இப்போது பதினாறு வயதாகிறது, மற்றொரு தனிப்பட்ட சோகம் அவரைத் தாக்கியது. அவரது தாயார் தனது ஆச்சார்யரின் திருவடிகளை அடைந்தார்.
ஸ்ரீ ரங்கநாதன் தனது தாயாரின் கைம்காரியங்களை வர்ஷாஅப்திகம் வரை செய்து, அதன்பின் தகுந்த ஆச்சார்யர்களின் கீழ் சாஸ்திரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான தனது தேடலைத் தீவிரமாகத் தொடர்ந்தார்.

நியா, தர்க்க சாஸ்திரம் பற்றிய ஆய்வு 
ஸ்ரீ பாஷ்யத்தில் காலக்ஷேபம் செய்வதற்கு முன், நியாய மற்றும் தாரக சாஸ்திரங்களைப் படிப்பது அவசியம். இரண்டு பெரிய மகான்கள் மற்றும் சிறந்த அறிஞர்கள் ஸ்ரீ ரங்கநாதனின் நியாய மற்றும் தர்க்க சாஸ்திரங்களைப் படிக்கும் தாகத்தைத் தணித்தனர். (1) சாது: சாஸ்திர கல்ப தரு, கும்பகோணத்தின் ஸ்ரீ அம்மாசத்திரம் சேஷாச்சார் சுவாமிகள்
மற்றும் (2) மைசூர் பண்டித ரத்னம் தர்க்க தீர்த்தம் கஸ்தூரி ரங்கஆச்சார் சுவாமிகள்.

ஸ்ரீ ரங்கநாதனின் தனிப்பட்ட நோயின் காரணமாக அம்மாசாத்திரம் சுவாமியிடம் நியாய சாஸ்திரம் படிப்பது தடைபட்டது. ஸ்ரீ ரங்கநாதன் கஸ்தூரி ரங்கஆச்சார் சுவாமிகளிடம் தர்க்கம் படிக்க மைசூர் சென்றார். பின்னர் உடல்நிலை சரியில்லாமல், படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது.
வாரணாசி/காசியின் ஸ்ரீ சீதாராம சாஸ்திரியின் கீழ் கல்வி கற்க கஸ்தூரி ரங்கஆச்சார் சவுமியின் ஆலோசனையின் அடிப்படையில் ஸ்ரீ ரங்கநாதர் காசிக்குச் சென்றார். வாரணாசியில் தர்க்கம் படிப்பை முடித்த பிறகு, காசியில் பிளேக் நோய் தாக்கியதால் ஸ்ரீ ரங்கநாதனுக்கு செல்ல வேண்டியிருந்தது.
அவர் இஞ்சிமேடு திரும்பினார், திருமணம் செய்து கொண்டு, சுவாமி தேசிகன் செய்தது போல் உஞ்சிவிருத்தி மூலம் தனது வாழ்வாதாரத்தை மேற்கொண்டார்.

ஸ்ரீ ரங்கநாதன் எதிர்பாராத தடங்கல்களால் (விக்னங்கள்) இன்னும் நியாய சாஸ்திரம் படிப்பை முடிக்கவில்லை.ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் நடத்துவதற்கான முயற்சிகள் கிரந்த சாதுஷ்டியத்தைக் கற்க வேண்டும் என்ற தீவிர ஆசையால் உந்தப்பட்டு, ஸ்ரீ ரங்கநாதன் இப்போது ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் ஆசீர்வாதத்திற்காக 37வது பட்டமான ஸ்ரீ வீரராகவ சதகோப யத்இந்திர மஹா தேசிகனை அணுகினார். ஸ்ரீ ரங்கநாதனுக்கு அந்த காலக்ஷேபம் மூலம் ஆசிர்வதிக்க HH ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஒப்புக்கொண்டார்,

ஆனால் HH விரும்புபவர் நியாய சாஸ்திரம் பற்றிய தனது இடைநிறுத்தப்பட்ட படிப்பை முடிக்க விரும்பினார். இந்த அழகிய சிங்கர் 11 மாதங்கள் மட்டுமே பீடத்தை அலங்கரித்ததால், இந்த மஹா தேசிகனின் கீழ் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஸ்ரீ ரங்கநாதனால் நிறைவேற்ற முடியவில்லை.

ஸ்ரீ ரங்கநாதனின் நியாய சாஸ்திரம் முடிந்ததும், 37வது பட்டம் அழகிய சிங்கர் தனது ஆச்சார்யரின் திருவடியை அடைந்தார். ஸ்ரீ ரங்கநாதன் அந்தச் செய்தியைக் கேட்டு மயக்கமடைந்து இரண்டு நாட்கள் உபவாசம் செய்து புரிசை ரங்கஆச்சார் சுவாமிகள் ஆறுதல் கூறினார்.

37வது பட்டம் அழகிய சிங்கர் (1899-1905) ஸ்ரீ வைகுண்டம் ஏறிய பிறகு அஹோபில மடம் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் பீடாதிபதி இல்லாமல் இருந்தது. 37வது பட்டம் ஜீயரின் வைகுண்ட பிராப்தியின் போது ஸ்ரீ ரங்கநாதனுக்கு வெறும் இருபது வயதுதான். ஸ்ரீ ரங்கநாதனுக்கு தனது ஆச்சார்யரின் இழப்பு மற்றும் அவரது வித்யா கிரஹநாம் (அவரது படிப்பை முடித்தது) தொடர்ந்த விக்னங்கள் குறித்து வருத்தமடைந்தார்.

சாஸ்திரம் பற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஸ்ரீமுஷ்நாமத்திற்குப் பயணம் செய்யுங்கள். 37வது பட்டம் அழகிய சிங்கரின் அன்பான சீடரான ஸ்ரீ ஸ்வர்ணம் கிருஷ்ணாமாச்சார் ஸ்வாமி என்ற பேரறிஞர் அப்போது ஸ்ரீமுஷ்ணத்தின் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரத்தில் வசித்து வந்தார். இந்த சதாச்சார்யரின் கீழ் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசையால் உந்தப்பட்டு ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ முஷ்ணத்திற்கு வந்தார். ஸ்ரீ ரங்கநாதனின் சிஷ்யனாவதற்கு ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி முதலில் தயங்கினார். ஸ்ரீ முஷ்ணம் ஸ்வாமிகள், ஸ்ரீ ரங்கநாதனின் கீழ் படிக்காமல் அழகிய சிங்கர்களிடம் படிக்க வேண்டும் என்று எண்ணினார்.

அஹோபில பீடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. இறுதியாக, ஸ்ரீ ரங்கநாதனின் விருப்பத்தின் தீவிரத்தால் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமிகள் நெகிழ்ந்து, அவரைத் தம் சிஷ்யனாகக் கொள்ள மனம் வருந்தினார். ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி தனது திறமையான மாணவருக்கு கிரந்த-சாதுஷ்டயம், நியாய சித்தாஞ்சனம், நியாய பரிசுத்தி, சதா திஷாநி, சங்கர பாஷ்யம், சித்தி பிரமநந்தியம் மற்றும் அத்வைதிக சொற்பொழிவுகள் (பரிபாஷை) ஆகியவற்றின் நுணுக்கங்களை கற்பித்தார்.

அடுத்து, ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமிகள் ஸ்ரீ ரங்கநாதனுக்கு மத்வ மாதா கிரந்தங்களைப் பற்றி உபதேசித்தார். 8 ஆண்டுகளில், திறமையான சிஷ்யன் தனது ஆச்சார்யனிடமிருந்து சர்வ கிரந்த கிரஹணம் முடித்தார். ஸ்ரீ ரங்கநாதன் 28 வயதில் வித்வத் சதாஸில் (அறிஞர்களின் கூட்டம்) கலந்துகொள்ள முழுத் தகுதி பெற்றுள்ளார்.

ஆண்டு 1907. அவர் இந்த நேரத்தில் 42 வது பட்டம் அழகிய சிங்கர் ஆவதற்கு 22 ஆண்டுகள் இருந்தது. எதிர்கால அஹோபில மாடாதிபதியாக மாஓலன் அவரை ஆசீர்வதிப்பார் என்று அவருக்குத் தெரியாது.3. பல்வேறு வித்வத் சதங்களில் பங்கேற்பு 1905 வாக்கில், திருக்குடந்தை அழகிய சிங்கர் அஹோபில மாதா ஆஸ்தானத்தில் பீடாதிபதி இல்லாத 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த பீடாதிபதியாக (38வது பட்டம்) 37வது பட்டம் அழகிய சிங்கரைப் பெற்றார்.

38 வது பட்டம் அழகிய சிங்கர் திருக்குடந்தை அழகிய சிங்கர் என்று அழைக்கப்பட்டார் மற்றும் அவர் 3 ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் (மே 1909 CE) ஆட்சி செய்தார். ஸ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் ஸ்வாமியிடம் தனது படிப்பை முடித்த ஸ்ரீ ரங்கநாதன், திருக்குடந்தை அழகிய சிங்கரின் திருவடிகளை வணங்குவதற்காக ந்ருசிம்மபுரத்திற்கு (ஆதனூர் திவ்ய தேசத்திற்கு அருகில்) சென்றார்.

அவர் திருக்குடந்தை அழகிய சிங்கரின் காலக்ஷேப கோஷ்டியில் கலந்து கொண்டார், அங்கு அழகிய சிங்கரின் மிகக் கடினமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். மகிழ்ச்சியடைந்த அழகிய சிங்கர், இஞ்சிமேடு ரங்கநாதர் ஸ்வாமியின் ஆழ்ந்த புலமையை அங்கீகரித்து, வேதாந்தக் கடலில் சிரமமின்றி நீந்தியவர் என்று போற்றினார். இஞ்சிமேடு ஸ்வாமிகள் ஸ்ரீமத் அழகிய சிங்கருக்கு தனது பிராணமங்களைச் சமர்ப்பித்துவிட்டு ஸ்ரீமுஷ்ணத்திற்குத் திரும்பி, ஆசார்யரின் பக்கத்தில் சிருஷ்டியை நிகழ்த்தினார்.

இஞ்சிமேடு ரங்கநாதர் சுவாமிக்கு முப்பது வயதாக இருக்கும் போது (1909 CE) இந்த அழகிய-சிங்கர் தனது ஆச்சாரியரின் புனித பாதங்களை அடைந்தார்.இஞ்சிமேடு சுவாமிகள் தனது முப்பதுகளில் சாஸ்திரங்களின் சிக்கலான அர்த்தங்களின் ஆழமான கட்டளையின் மூலம் சாஸ்திர விவாதங்களில் பல அறிஞர்களை வென்றார்.

திருவனந்தபுரம் திருநாங்கூர் (நவராத்திரி சபா) மற்றும் ஸ்ரீ பெரும்பூதூரில் வித்வத் சதங்களில் நன்கு அறியப்பட்ட அறிஞர்களுடன் நடந்த விவாதங்களின் போது வெற்றிக் கொடியை ஏற்றினார். இஞ்சிமேடு சுவாமியின் அறிவார்ந்த கடுமையை திருவனந்தபுரம் மகாராஜா அங்கீகரித்து கௌரவித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ராயல் சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராகப் பிற்காலத்தில் இஞ்சிமேடு ஸ்வாமிக்கு முக்கியமான பதவி வழங்கப்பட்டது.

விஜய நகர ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக வேண்டும் என்ற வித்யாரான்யாரின் கோரிக்கையை சுவாமி தேசிகன் நிராகரித்தது போல் இஞ்சிமேடு சுவாமியும் அதை நிராகரித்தார். இஞ்சிமேடு சுவாமிக்கு அபரிமிதமான வைராக்யம் இருந்தது மற்றும் உஞ்சிவ்ருத்தி (அக்ரஹாரங்கள் வேண்டுதல்) மூலம் தனது வாழ்வாதாரத்தைத் தொடர்ந்தார்.

அவர் தனது ஆச்சார்யன், ஸ்வர்ணம் சுவாமியுடன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் குடியேறினார். இந்த காலகட்டத்தில், இஞ்சிமேடு சுவாமிகள் பல சம்பிரதாய சதாக்களில் (திருக்குடந்தை தேசிக உத்ஸவ சதங்கள், மன்னார்கோயில் சதாக்கள், கொடியாளம் சதாக்கள் போன்றவை) நடுவராக இருந்து பல பாராட்டுகளைப் பெற்றார். பதினான்கு வருடங்கள் ஓடின.

ஆண்டு 1923 கி.பி1909-1923 CE க்கு இடையில், HH 39வது பட்டம் அழகிய சிங்கர், SrivanN SaThakopa Sri ParAnkusa YadhIndhra Maha Desikan (aasthAnam: 1909-1915 CE) மற்றும் HH The 40th Pattam Azhagad.Shagan மஹா தேசிகன் (ஆஸ்தானம் : 1913-1923 CE) அஹோபில மாதா சிம்ஹாஸனத்தை அலங்கரித்தார். 1923 CE வந்தபோது, ​​அடுத்த அழகிய-சிங்கர், HH 41வது பட்டம், ஸ்ரீவன்என் சதாகோப ஸ்ரீ லக்ஷ்மி-நரசிம்ம சதகோப யத்இந்திர மஹா தேசிகன் அரியணை ஏறினார். அவர் 18 ஆண்டுகள் 9 மாதங்கள் (அக்டோபர் 1941 வரை) ஆட்சி செய்தார்.

41வது பட்டம் அழகிய சிங்கர் பீடாதிபதியானவுடன், இஞ்சிமேடு ரங்கனாதாச்சார்ய ஸ்வாமிகளை ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாக வருமாறு அழைத்தார். இந்த அழைப்பை இன்ஜிமேடு சவுமி நன்றியுடன் ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் ஸ்ரீமத் அழகிய சிங்கருக்கும் மாலோலனுக்கும் சேவை செய்து வந்தார்.

4. கிரந்த நிர்மாணம் (ஸ்ரீ சூக்திகளின் உருவாக்கம்) ஸ்ரீமத் அழகிய சிங்கர்களின் கிரந்த நிர்மாணம் பற்றிய கண்ணோட்டம்,
கிரஹஸ்தாஸ்ரமத்திலோ அல்லது சன்யாஸ்ரமத்திலோ ஒரு சதாசார்யனின் உயர் முன்னுரிமைப் பணிகளில் ஒன்று, அனுஷ்டானம், சமப்பிரமாணம் மற்றும் சமயப்பிரமாண நூல்களை இயற்றுவது .
ஸ்வாமி தேசிகன் 130க்கும் மேற்பட்ட ஸ்ரீ சூக்திகளின் ஆசீர்வாதத்தின் மூலம் இந்த முக்கியமான பணிக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். அழகிய சிங்கர்களில் சிலர் செழிப்பாக உள்ளனர், மற்றவர்கள் சில கிரந்தங்களைத் தயாரித்து, அதற்குப் பதிலாக ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்கு காலக்ஷேபங்கள் மூலம் கிரந்த சாதுஷ்டியங்கள் மற்றும் பிற ஆசார்ய ஸ்ரீ சூக்திகள் அல்லது குத்ருஷ்டிகளுடன் வாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தரிசனங்கள். மற்றவர்கள் மாலோலனுக்கு நித்ய ஆராதனத்தில் கவனம் செலுத்தி, சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பிரபத்தி செய்ய மாலோலனின் கட்டளையின்படி கிராமங்கள், நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு (ஆஸ்ஏது ஹிமாசல பர்யந்தம்) பயணம் செய்தனர்.கிரந்தங்களின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவண்ணன் சதாகோப ஸ்ரீமன் நாரயனா யத்இந்திர மஹா தேசிகன், 2வது பட்டம் அழகிய சிங்கர், இவர் அஹோபில மடத்தின் நிறுவனர் ஸ்ரீ ஆதிவன்என் சதாகோப ஜீயரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 வது பட்டம் அழகிய சிங்கர் தனது ஆச்சார்யரின் கட்டளைக்கு பதிலளித்து, திருவாராதன க்ரமம், நியாச தசக வியாக்கியானம், சந்தியா வந்தனா பாஷ்யம் மற்றும் பலர் போன்ற அறுபது கிரந்தங்களை இயற்றினார்.ஏறக்குறைய 39 ஆண்டுகள் ஆட்சி செய்த 11 வது பட்டம் அழகிய சிங்கர், சிம்ஹாசனத்தில் தனது நேரத்தை பயன்படுத்தி தர்சன கிரந்தங்கள் (கிரந்த சாதுஷ்டம்கள்) மற்றும் சம்பிரதாய உத்கிராந்தங்கள் (பூர்வாச்சருடைய வர்ணனைகள்) பற்றிய விரிவான காலக்ஷேபங்களை வழங்க விரும்பினார்.

17வது பட்டம் அழகிய சிங்கர் அஹோபில மாதா பீடத்தில் ஏறக்குறைய 36 வருடங்கள் தங்கியிருந்து ஸ்ரீரங்கம் பாஷ்யகர் சந்நிதியில் பன்னிரண்டு முறை ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம், பத்து முறை பகவத் விஷயம் காலக்ஷேபம் மற்றும் பல தடவைகள் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் நடத்தினார் கள். ஸ்வாமி தேசிகன் தனது வாழ்நாளில் முப்பது முறை ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் நடத்தியது நினைவிருக்கலாம். இந்த அழகிய-சிங்கர் எந்த கிரந்தத்தையும் தானாக எழுதவில்லை.

27வது பட்டம் அழகிய சிங்கர், வைதிகர்களுக்கு அனுஷ்டானங்கள் (ஸ்ரீ ஜெயந்தி நிர்ணயம், சங்கரமண நிர்ணயம், நத்தி ராஜ்ஓ தோஷ நிர்நயம், தாஸ்அவத்ஆரா தீர்கா சோயத்ரா, ந.தி.நா.காயத்ரி) பற்றி இருந்த சந்தேகங்களை நீக்குவதற்காக பல நிர்ணய கிரந்தங்களை இயற்றினார் அசி நிர்நயம்). இந்த நிர்ணய கிரந்தங்கள் இன்றும் அனுஷ்டாக்களுக்கு விளக்குகள்.
மூல கிரந்தங்கள், காவ்யங்கள் மற்றும் பல ஸ்தோத்திர கிரந்தங்கள் (தேவாரஜ ஸ்தவம், ஸ்ரீ லக்ஷ்மி- ந்ருசிம்ம ஸ்தவம், ஸ்ரீ வீரராகவ ஸ்தவம், ஸ்ரீ ந்ருசிம்ம மங்களம், விஹாகஈஸ்வர ஸ்தவம், ஸ்ரீவான் சதாரி காத்யம் மற்றும் பல) இயற்றினார். அவர் உண்மையில் ஒரு மறுமலர்ச்சி ஆச்சார்யன்.

30வது பட்டம் அழகிய சிங்கர் பல பல்லாண்டு/மங்கலம் கிரந்தங்களை (ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மன், ஸ்ரீனிவாசன், ஆராவமுதன், ரங்கநாதன் மற்றும் கீதாஆச்சார்யன்/பார்த்தசாரதி பெருமாள் ஆகியோருக்கு) இயற்றினார். மாலோலனுக்குப் புகழ்பெற்ற சுப்ரபாதத்தையும் அவர் எங்களுக்கு அருளினார், இது மாலோலனின் வெள்ளி மண்டபத்திற்கு முன் தினமும் காலையில் ஸ்ரீமத் அழகிய சிங்கர்களால் பாராயணம் செய்யப்படும். ஒப்பிலியப்பன் கோயில் டீன் ஏஜ் ஆக. தேவன்ஆர்விலகம் குடும்பத்திற்கு இது ஒரு குடும்ப தானம்.

அத்திப்பட்டு அழகிய சிங்கர், 34 வது பட்டம் ஜீயர் மற்றொரு அறிஞர் கிரந்த நிர்மாதா ஆவார். அவருடைய ஸ்ரீ சூக்திகளில் சில:
(1) ஸ்வாமி தேசிகனின் அதிகார ஸாரவாலி
(2) நியாய விம்சதி வியாக்கியானம்
(3) பிரம்ம சூத்ர அர்த்த மஞ்சரி
(4)தேவர்ராஜா சஹஸ்ர கானி தாண்டகம்.
இந்த அழகிய சிங்கர் தமிழ் மொழியிலும் ஒரு திறமையான கவிஞர். அவருடைய ஸ்ரீ ஸூக்தி, ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹன் அடைக்கலப் பாட்டு இன்றும் ஸ்ரீ சந்நிதியில் நித்யாஅனுசந்தானத்தின் போதும், ஸ்ரீ மடம் சிஷ்யர்களின் இல்லங்களிலும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் பாராயணம் செய்யப்படுகிறது.

37 வது பட்டம் அழகிய சிங்கர் இளையவல்லி வம்சத்தைச் சேர்ந்தவர் மற்றும் சப்த தந்திர வாச்சஸ்பதி என்று அழைக்கப்பட்டார். பதினாறு கிரந்தங்கள் இயற்றினார். அவர்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீ ஆதிவன் சதாகோப யத்இந்திர மஹா தேசிக வைபவம், ஆச்சார்ய சப்ததி, நியாய சித்த அஞ்சன கிரந்த கந்தம் மற்றும் ஸ்வாமி தேசிகன் மஹோத்ஸவ வைபவம் ஆகியவை திருவாஹிந்திரபுரத்தில் ஸ்வாமி புரட்டாசியில் ஒரு வருடத்தில் நடந்த உத்ஸவத்தை நடத்துகின்றன கானின் திருமாழிகை.

41வது பட்டம், ஸ்ரீவண்ணன் சதகோப ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹ சதகோப யத்இந்திர மஹா தேசிகன், ஸ்ரீ இஞ்சிமேடு ரங்கநாதர் சுவாமிகளை சன்யாச ஆஸ்ரமத்தில் துவக்கி, 42வது பட்டம் ஜீயராக நியமித்தவர் என்பதால், அவர்தான் நமக்கு முக்கியமானவர். அவர் தனது சொந்த சடங்குகளில் சிறந்த வேத அறிஞர். 41 வது பட்டம் அழகிய சிங்கர் காருக்குறிச்சி அழகிய சிங்கர் என்று அழைக்கப்பட்டார்,
மேலும் பின்வரும் கிரந்தங்களை நமக்கு அருளினார்:
(1) ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ தியான சோபானம் ஸ்ரீ பகவத் தியான சோபானம்
(2) ஸ்ரீ வேத பாடஸ்தி
(2) ஸ்ரீ வேதபாதஸ்தி
(3) ஸ்ரீ வேதம் ஸ்தவம்
(4) ஸ்ரீ நித்ய ப்ரார்த்தன் காரிகாவலி
(5) ஸ்ரீ ஆச்சார்ய தினச்சார்யா
மற்றும் (6) ஸ்ரீ மஹா லக்ஷ்மி காத்யம் அத்திப்பட்டு அழகிய சிங்கரின் வைபவம்.

HH 42வது அழகிய சிங்கரின் கிரந்தங்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னோடியாக இருந்த அழகிய சிங்கர்களின் இசையமைப்பின் வளமான பின்னணியுடன், HH 42வது அழகிய சிங்கர், தத்வ தீகை, 41வது மலகாத்ய சிங்கர் பட்டம் பற்றிய அறிமுகங்களுடன் பின்வரும் 8 கிரந்தங்களையும் நமக்கு அருளினார்.
அவர் நிறுவிய ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியாவின் முன்னோடி இதழான வேதாந்த திபிகையில் பல கட்டுரைகள். HH 42வது பட்டம் ஜீயர் எழுதிய 8 கிரந்தங்கள்:நியாச நிஷ்ட மீமாம்ஸா
அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு முன் கிரஹஸ்தராக பாரத சமர்ப்பணம் செய்தார் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் ஸ்வாமி அவர்களால் சடங்குகளைச் செய்தார்.
உக்தி நிஷ்டாபாரணம்,உக்திநிஷ்ட ஆபரநோத்தி ஓதம்
ஸ்ரீ சந்நிதியில் நடைமுறையில் உக்தி நிஷ்டையைக் கையாள்வது,கீத அர்த்த சங்கிரஹா வியாக்கியானம்,கிருத்திகா தீப கால நிர்நயம்,
ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள உபகர்மாவுக்கான தேதிகளை நிர்ணயிப்பதில் மிகவும் குழப்பம் ஏற்பட்டபோது, ​​இந்த ஆண்டு (விஷு, 2001) கைக்கு வந்த உபகர்ம கால நிர்ணயம் .
ஸ்ரீ ரஹஸ்யத்ரயா வியாக்யா: ஸ்ரீ சார போதினி, மற்றும்விசிஷ்டா அத்வைத வேதாந்த கோசம்இந்த மஹா ஆச்சார்யரின் (பிரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கர், புரிசை கிருஷ்ணாமாச்சார் ஸ்வாமி, பெருக்காரணை ஸ்வாமிகள் மற்றும் பலர்) காலக்ஷேபம் செய்த பல திறமையான சிஷ்யர்கள்,
இந்த மஹா தேசிகனின் சிறந்த நுண்ணறிவுகளைப் படம்பிடித்து சேமித்து, தங்களுடைய சொந்தமாக நம்மை ஆசீர்வதித்துள்ளனர்.

5. ஆஸ்ரம ஸ்வீகாரம்: முன்னுரை ஸ்ரீ உ.வே. இஞ்சிமேட்டு ரங்கநாதர் சுவாமிகளுக்கு கிபி 1929 இல் ஐம்பது வயது, 30 வயது முதல் 50 வயது வரை, அவர் சம்பிரதாய பிரவச்சனம், சதாஸ் அன்வியம்/அத்யாக்ஷம் (பங்கேற்பு மற்றும் நிதானம்) மற்றும் ஸ்ரீ மடம் முதல் 44 ஆண்டுகள் வரை ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் 50 வது ஆண்டுகள். ஆஸ்தான வித்வானாகப் பதவி வகித்த காலத்தில் அவர் விஜய யாத்திரையின் போது 41வது ஜீயருடன் அடிக்கடி பயணம் செய்தார்.42வது அழகியசிங்கர்களுடன் HH 41வதுஸ்ரீ இஞ்சிமேடு ஸ்வாமிகள் ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்த காலத்தில், சேட்லூர் நரசிம்மஆச்சார் ஸ்வாமி (திருவாஹிந்திரபுரம்) என்ற ஸ்ரீ வைஷ்ணவப் பண்டிதர் ஒருவர் ஆச்சார்ய நிஷ்டையின் மகத்துவத்தைப் போற்றி, நிஷ்டாமி உக்தியை நடைமுறைப்படுத்திய ஒரு சந்தர்ப்பம் உண்டு. பல நூறு ஆண்டுகள்.

ஆச்சார்ய நிஷ்டை என்பது பிரபத்தியின் நான்கு முறைகளில் ஒன்றாகும், இங்கு சரநாகதனின் பிரபத்தி ஒரு சதாசார்யரால் செய்யப்பட்ட பிரபத்தியின் கீழ் உள்ளது. உக்தி நிஷ்டை, பிரபன்னன் தனது ஆச்சார்யனால் உச்சரிக்கப்பட்ட பிரபத்தி வாக்கியங்களை திரும்பத் திரும்பச் சொல்லும் செயலைச் சுற்றி வருகிறது.
ஒரு முக்கிய ஸ்ரீ மடம் சிஷ்யர் சேட்லூர் ஸ்வாமிகளால் கீழே இறக்கப்பட்டதைக் கண்டு வேதனையடைந்தார், மேலும் எங்கள் பூர்வாச்சாரியார்களால் நிறுவப்பட்ட ஒரு முக்கிய மற்றும் கால மரியாதைக்குரிய நடைமுறையாக உக்தி நிஷ்டையின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தவும், குழப்பத்தை நீக்கவும் உதவுமாறு இஞ்சிமேடு ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சவாலை ஏற்றுக்கொள்வது குறித்து காருக்குறிச்சி அழகியசிங்கரிடம் இஞ்சிமேடு சவுமி ஆலோசனை செய்து உக்தி நிஷ்டையின் மகிமையைப் பாதுகாப்பதற்காக இந்த கிரந்த லேகான கைம்கார்யத்தில் (கிரந்தம் எழுதும்) ஈடுபடும் பாக்கியம் பெற்றார். சிந்தாமாநி,
நியாசொல்லாசம்,
நியாச ரீதி மற்றும் பின்வரும் மூன்று கிரந்தங்களை இயற்றினார்:
நியாச நிஷ்டா மீமாம்ஸா,
உக்தி நிஷ்டாபாரணம்,
மற்றும்உக்தி நிஷ்டாபரணஓதிஓதம்

அவர் அடுத்ததாக 41வது அழகிய சிங்கரின் புனிதப் பாதங்களில் அவர்களை வைத்து மூன்று கிரான்ட்களுக்கு ஒப்புதல் கோரினார். உக்தி நிஷ்டையைப் பாதுகாப்பதில் புலமையின் தரத்தில் HH அழகிய சிங்கர் மகிழ்ச்சியடைந்தார்,
அவருடைய ஆட்சிக்குப் பிறகு ஸ்ரீ மடத்தின் அரியணை ஏறுவதற்கு இஞ்சிமேட்டு ஸ்வாமி மிகவும் பொருத்தமான வாரிசாக இருப்பார் என்று அவர் மனதில் முடிவு செய்தார். இஞ்சிமேடு ஸ்வாமி இந்த கிரந்தங்களை முடித்தபோது அவருக்கு சுமார் 46 வயது இருக்கலாம்.

6. சின்ன அழகிய சிங்கராக ஆஸ்ரம ஸ்வீகாரம் (ஏப்ரல் 1929) நான்கு ஆண்டுகள் ஓடின. இஞ்சிமேடு சுவாமி ஐம்பது வயதை எட்டினார். HH 41வது அழகிய சிங்கர் 1929 CE இல் நோய்வாய்ப்பட்டார் மாலோலனின் நித்யா ஆராதனம் மற்றும் சம்பிரதாயா அபிவர்த்தனம் (வளர்ச்சி) ஆகியவற்றில் அவருக்குப் பின் பொருத்தமான ஒருவரை நியமிப்பது குறித்து அவர் கவலைப்பட்டார்.
இஞ்சிமேடு ஸ்வாமியை விட வேறு யாரையும் அவரால் நினைக்க முடியவில்லை. ஸ்ரீ மடம் சிஷ்யர்களை ஆசிர்வதிக்கவும், அவிச்சின்னப் பரம்பரை (ஆதிவான் சடகோப ஜீயர் தொடங்கி ஆச்சாரியார்களின் உடைக்கப்படாத பரம்பரை) வளரவும் இஞ்சிமேடு ஸ்வாமியை அவர் தனது வாரிசாகக் கேட்டுக்கொண்டார்.
இஞ்சிமேடு ஸ்வாமிக்கு பிரியா பார்யாயி (அன்புள்ள மனைவி) மற்றும் ஒரு இளம் மகளும் இருந்தனர். அவரது மனைவிக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், இஞ்சிமேடு ஸ்வாமியால் தனது ஆச்சார்ய நியமத்தை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.
அஹோபிலத்தில் உள்ள ஸ்ரீ மடத்தின் ஸ்தாபக ஜீயருக்கு மாலோலன் வழங்கிய பிரேக்ஷா மந்திரத்தை காருக்குறிச்சி அழகிய சிங்கர் மூலம் பெற்று சின்ன ஜீயர் ஆனார். சில நாட்களுக்குப் பிறகு, HH 41வது ஜீயரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெரிய ஜீயர் (HH 41 வது ஜீயர்) மற்றும் சின்ன ஜீயர் (HH 42 வது ஜீயர்) இருவரும் கடமைகளைப் பகிர்ந்து கொண்டனர்
மற்றும் ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்காக மாலோலனின் கைம்காரியம் மற்றும் கால்காஷேபம் செய்தனர்.பெரிய மற்றும் சின்ன ஜீயர்களின் கூட்டு ஆட்சி 12 ஆண்டுகள் சுமூகமாக (1929 முதல் 1941 வரை) தொடர்ந்தது.

HH 41வது படிப்படியாக வலுவிழந்து, சின்ன ஜீயர் சிஷ்யருக்கு விஸ்வரூப மங்கள ஹரத்தி, அபிகமன ஆராதனம், தீர்த்த வினியோகம் மற்றும் ஸ்ரீ சதாரி ஆசீர்வாதங்களை செய்தார். காலக்ஷேபம் சமயங்களில், பெரிய அழகிய சிங்கர் சில வார்த்தைகளுடன் தொடங்குவார், சின்ன அழகிய சிங்கர் அங்கிருந்து காலக்ஷேபங்களை முடிப்பார்
(1) ஸ்ரீ பாஷ்யம்
(2) ஸ்ருத ப்ரகாசியாகி வர்ணனை
(3) ஆச்சார்ய ராமனுஜரின் கீதா பாஷ்யம்
(4) கீதையில் சுவாமி தேசிகனின் தாத்பர்ய சந்திரிகை விளக்கவுரை
(5) பகவத் விசயம் (பிள்ளையார்/திரு ஆறாயிரம்பாடியின் திருவாய்மொழி விளக்கவுரை)
(6)ஈடு முப்பாட்டாராயிரப்படி வடக்கு திருவீதிப் பிள்ளைகள்
(7)பஞ்ச ராவிய த்யாஸ்ய நூல்கள் ஐந்து) ஸ்வாமி தேசிகனின் முழு சில்லாராய் ரஹஸ்யங்கள்,
(9) ஸ்வாமி தேசிகனின் ந்யாய சித்த அஞ்சனம்/எஸ்டி
(10) எஸ்டியின் நியாய பரிசுத்தி
(11) எஸ்டியின் தத்வ முக்த கலாபம்
(12) எஸ்டியின் சர்வ அர்த்த சித்தி
(13) ஆதிக்ரனா
14) ஸ்வாமி தேசிகன் மற்றும் நிகாமந்த குருவின் ஸ்ரீ சூக்திகளின் அடுத்த தலைமுறை வர்ணனையாளர்களால் இந்த ஸ்ரீ சூக்திகளில் எந்த ஒரு வாக்கியத்தையும் தவறவிடாமல் அதிகார தீகஅம்ருதம்,
அதிகார கல்ப தரு,
மஹாஆச்சார்யரின் சதா-துஷணி சண்டமாருதம்,
தத்வ தீகை மற்றும் பல-

7) ஆஸ்தான ஸ்வீகாரம் (அக்டோபர் 24, 1941) 
42வது ஜீயர் சன்யாச ஆஸ்ரமத்தில் நுழைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
மரியாதைக்குரிய ஜீயருக்கு இப்போது 62 வயது. அவரது சாஸ்திர ஜென்~ஆனம் மற்றும் அனுஷ்டான பலம் மற்றும் வைராக்யம் ஆகியவை பழம்பெருமை வாய்ந்தவை.
1941 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 41 வது ஜீயரின் உடல்நிலை மோசமடைந்தது,
அதே ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஜீயர் தனது ஆச்சார்யரின் திருவடியை அடைந்தார். 42 வது ஜீயர் பீடாதிபதியானார்.
HH 42 வது ஜீயர் வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், தேசிக பிரபந்த சேவைகளுடன் HH 41 வது ஜீயருக்கு பதின்மூன்று நாள் கைம்காரியங்களை நிகழ்த்தினார்
மற்றும் கைம்காரியத்தில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சால்வை மற்றும் ஏராளமான தக்ஷிணைகளை வழங்கி கௌரவித்தார்.

ஜீயர் பட்டாபிஷேகம் & கார்த்தவ்ய பிரதிஞை (1941) 
41வது ஜீயர் ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஏறிய 14வது நாளில், 42வது ஜீயர் காவிரி நதியின் புனித நீரில் ஸ்ரீ வைஷ்ணவப் பண்டிதர்கள் நிறைந்த சபாயில் நீராடினார். சுவாமி, கோஷ்டிபுரம் சுவாமி மற்றும் பலர்.
அது ஒரு மஹோத்ஸவம். பட்டாபிஷேகம் தேதி விஷு சம்வத்சரம், ஐப்பசி 9, சுக்ல பக்ஷ பஞ்சமி (ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்குப் பிரியமான வெள்ளிக்கிழமை) 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 42வது ஜீயர் ஸ்ரீ மலோலனின் ஆராதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆறு தசாப்தங்களுக்கு முன்பு இருந்தது.

காத்தவ்ய பிரதிஞை 
சின்ன ஜீயராக இருந்த காலத்தில், இந்த மதிப்பிற்குரிய ஆச்சார்யன் பீடாதிபதியாக இருந்த காலத்தில் தான் என்ன சாதிக்க விரும்புகிறாரோ என்று கணிசமான அளவு யோசித்தார்.
அவர் இப்போது அந்த விருப்பங்களை வெளிப்படுத்தினார் மற்றும் மாலோலனின் ஆசீர்வாதத்துடன் அவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூடியிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் முன் (கார்த்தவ்ய பிரதிஜ்ஞை) சபதம் செய்தார்.
42 வது ஜீயரின் ஆட்சியை பொற்காலமாக வரையறுத்த இந்த ஏழு பெரிய கைம்காரியங்கள்:
ஸ்ரீ வைஷ்ணவ இளைஞர்களின் க்ஷேமத்திற்காக வேத-பிரபந்த-சாஸ்திர பாடசாலையை நிறுவுதல்.
(கடந்த ஆறு தசாப்தங்களில் பல ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களைப் பயிற்றுவித்த புகழ்பெற்ற மதுராந்தகம் பாடசாலையாக இது வளரும்).
ஆண்டுக்கு ஒரு முறையாவது அறிஞர்களின் வருடாந்திர மாநாட்டின் மூலம் சம்பிரதாய வித்வான்களின் ஞா~ஆனத்தை மேம்படுத்துதல்.
(அழகிய சிங்கர்களின் நடுநிலை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களின் இந்த கூட்டம் புகழ்பெற்ற மாலோல சதாக்கள் ஆகும்).
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் கங்கா (பிரயாக் மற்றும் பலர்) கரையில் ஸ்ரீ மடம் கிளைகளை நிறுவுதல் மற்றும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களின் ஜென்~ஆனம் மற்றும் ஆஸ்திக்யத்தை மேம்படுத்துவதற்காக சம்பிரதாய வித்வான்களை நியமித்தல்.
Rg மற்றும் சாம சாக்கைச் சேர்ந்த ஸ்ரீ மடம் சிஷ்யர்களின் நலனுக்காக ஆஹ்னிகா கிரந்தங்களை உருவாக்குதல்.
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய சாரம் பற்றிய வர்ணனையை முடித்து ஸ்ரீ சூக்தியாக (சார போதினி) வெளியிடுதல்.
ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் ஆஸ்திகத்தை வளர்க்க “ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியா” என்ற பெயரில் ஒரு புதிய மாத இதழின் உருவாக்கம்.
நாட்டில் நாஸ்திக்யம் வளர்ந்து ஆஸ்திக்யம் குறைந்து வருவதால், ஒருவரின் ஸ்வதர்மங்களைப் புரிந்துகொள்ள உதவும் உபன்யாசம்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வித்வான்களை அனுப்புவது. (இது ஆறு தசாப்தங்களுக்கு முன்பு).

புத்தன்கோட்டம் ஸ்வாமியின் அஞ்சலி 
HH 42 வது ஜீயர் ஒரு சிறந்த அறிஞரான ஸ்ரீ உ.வே. இந்த உன்னதமான மற்றும் முன்னோடியான பணிகளை நிறைவேற்ற உதவுவதற்காக புத்தங்கொட்டகம் ஸ்ரீனிவாசாச்சார் சுவாமிகள் அவரது அமைச்சராக இருந்தார்.
பட்டாபிஷேக நிகழ்விற்காக அவர் இயற்றிய 8 ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு சிறப்புக் கவிதையைப் படித்த புத்தங்கொட்டகம் ஸ்வாமிகள் மிகவும் மனம் நெகிழ்ந்தனர்.
ஸ்ரீ புத்தங்கோட்டகம் ஸ்வாமிகள் தனது புதிய ஆச்சார்யருக்கு வணக்கம் செலுத்தத் தேர்ந்தெடுத்த சிறப்பு மரியாதை வார்த்தைகள்:
ஆஜன்ம சுத்த சரிதா: (பிறப்பிலிருந்தே பழுதற்ற நடத்தையில் ஒன்று),

அகில சத்குணத்யா: (அனைத்து மங்களகரமான குணங்களின் இருப்பிடம்),
கமானியா சீல: (உன்னதமானவர்களில்) ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானம்),
முன்இந்திர: (முனிவர்களின் ராஜா).ஸ்லோகம் ஒன்றில், ஸ்ரீ மந்திரி ஸ்வாமிகள் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் தனது பகல் மற்றும் இரவுகளை எவ்வாறு செலவிடுகிறார் என்பதை விவரித்தார்:
யஸ்ஸந்ததம் வகுலபூஷண வாங்மரந்தை:ஸ்ரீ பாஷ்ய ஸூக்தி ஸுரசிந்துஜ்~நராவகாஹை:வேதாந்த தேசிக வச்சோ அம்ருத தாராய சகாலம் நயந்தி அனுதினம் காமனீய சீல:-4த் ஆச்சலத்தின்.
(பொருள்): ஸ்வாமி நம்மாழ்வாரின் ஸ்ரீ சூக்திகளின் மகரந்தத்தை ருசித்து, ஆச்சார்ய ராமஅனுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தின் அமிர்தப் பெருங்கடலில் நீந்தி, ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ சூக்தி வாக்கியங்களின் அம்ருதப் பொழிவில் திளைக்கிறார்
இந்த உன்னத ஆத்மா.HH 42 வது ஜீயரின் கவிஞர்/அரசர் அடுத்த ஸ்லோகத்தில் இந்த முனிவர்களின் அரசனுக்கு நிகரானவர் யாரும் இல்லை என்று கூறுகிறார்
(நிஸ்ஸம்ஓயம் முன்இந்திர:). ஜீயரின் பல்வேறு உன்னத அம்சங்களை அவர் வியாசா முனிவர், பக்த பிரஹலாதன் மற்றும் முனிவர் சுக பிரம்மம் ஆகியோருடன் ஒப்பிடுகிறார். இந்த ஸ்லோகத்தில்.

8. திவ்ய தேச மங்களாசாசனங்கள் நமது ஆச்சாரியர் திருவரங்கச் செல்வன் என்று அழைக்கப்பட்டார். 1941 இல் அவரது பட்டாபிஷேகத்திற்குப் பிறகு 42 வது ஜீயர் விஜயம் செய்த முதல் திவ்ய தேசம் ஸ்ரீ ரங்கம் ஆகும். அவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தசாவதார சந்நிதியை தனது இல்லமாக ஆக்கி, திருவெள்ளரையில் (ஸ்ரீ புண்டரிகாவல்லி சம்மேத ஸ்வேதூர். உத்ஹன்) மங்களாசாசனம் செய்தார் (உறையூர் வள்ளி/வாச லக்ஷ்மி சமேத அழகிய மணவாளன்) அடுத்து பெரியாழ்வார் திருவெள்ளறைப் பெருமாளை கண்ணனாக (கண்ணனே திருவெள்ளாரை நின்றாய்) காட்சியளித்து, அங்கே கண்ணனுக்கு காப்பிடல் விழா நடத்தினார். திரு உறையூர் என்பது திருப்பாணா ஆழ்வாரின் அவதார ஸ்தலம். இந்த மூன்று மங்களாசாசனங்களும் ஜீயரின் பட்டாபிஷேகத்திற்குப் பிறகுதான்.இப்போது, ​​HH ஜீயர் சோழநாட்டு திருப்பதிகளின் மங்களாசாசனங்களைத் தயாரித்தார். அடுத்த வரிசையில் நடுநாட்டு திருப்பதிகள் இடம் பெற்றன. தொண்டை நாடு திருப்பதிகள் அடுத்தடுத்த மங்களாசாசன க்ஷேத்திரங்களாகும். அபிமான ஸ்தலங்கள் (வடுவூர், ராஜா- மன்னார் கோயில், மதுராந்தகம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் பலர்), ஸ்ரீ மடம் சந்நிதிகள் (ஊரகடம், திருவெண்ணை நல்லூர், ஆத்தனூர், புள்ளாம்பூத்தம்-குடி, அஹோபிலம், திருவெள்ளூர்) ஆகியவையும் இந்த கிராமத்தில் அடங்கும்.முடிந்த போதெல்லாம், ஜீயர் பூர்வாச்சாரியாரின் அவதார ஸ்தலங்களுக்கும் (ஸ்ரீ பெரும்பூதூர், துப்புல்/திருத்தங்கா மற்றும் பலர்) ஸ்ரீ மடம் ஆச்சாரியார்கள் பிறந்த தலங்களுக்கும் (அத்திப்பட்டு, களத்தூர், திருவள்ளியூர் ஆதிரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குறிச்சி மற்றும் பலர்), ஸ்ரீ மடம் ஜீயர்களால் நிறுவப்பட்ட பல அக்ரஹாரங்கள் (உரகடம் /மூன்றாம் அழகிய சிங்கர்,இஞ்சிமேடு/ஆறாம் ஜீயர் மற்றும் பலர்). இந்த எல்லா க்ஷேத்திரங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஸ்ரீ மடம் பூர்வாச்சார்ய கிராமங்களிலும், திவ்ய தேசங்களிலும், பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பரண்யாசம் சடங்குகள் பல ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்கு நடந்தன.ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கருக்கு அருமையான பாடும் குரல் இருந்தது மற்றும் ராக லட்சணங்களில் நல்ல அறிவு இருந்தது. ஹம்சத்வனி அவருக்கு மிகவும் பிடித்த ராகங்களில் ஒன்று. அவர் இனிமையான குரலில் மங்களாசாசனங்களைச் செய்து ஸ்தோத்திரங்களை இனிமையாக வழங்கினார். பாசுரங்கள், ஸ்வாமி தேசிக ஸ்தோத்திரங்கள் திவ்ய தீசங்களின் எம்பெருமானுக்கு முன்பாக ஓதப்பட்டது. மங்களாசாசனம் த்வஜ ஸ்தம்பத்தில் சாஷ்டாங்கமாக “சமஸ்த பரிவார ஸ்ரீமதே நாராயனாய நம:” என்ற மந்திரத்துடன் தொடங்கியது. குரு பரம்பரைக்கு வணக்கம் கூறும் சாஸ்திரத்தின் படி பாலி பீடத்தில் அடுத்த நிறுத்தம் இருந்தது (பாலி பீட சம்ஐபிஈ து நாமமேத் குரு பரம்பரம்). பலி பீடத்தில் ஆச்சார்ய வந்தனம் மற்றும் அஹங்கார-மாமகாரங்களின் தோஷங்களை நீக்குவதற்கான பிரார்த்தனை இவ்வாறு செய்யப்படுகிறது. அடுத்து பெருமாள் சந்நிதியில் பிரதக்ஷிணம் மற்றும் மங்களாசாசனம் நடந்தது. தாயார் சந்நிதி மங்களாசாசனம் அடுத்து வந்தது. ஸ்ரீ தேவராஜப் பெருமாள் சந்நிதியில், திருக்கச்சி நம்பியைப் போலவே திருவாலவட்ட கைம்காரியத்தை ஜீயர் நிகழ்த்தினார். அஹோபிலத்தில், ஜீயர் குகைக்கோயிலில் மூலவருடன் மாலோலன் உத்சவரின் சேர்த்தி சேவையை, அவரது ஆராதன மூர்த்தியுடன் கொண்டாடினார். அங்கு இருவருக்கும் ஆராதனை செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் ஒரு சில பாக்யசாலிகளுக்கு சரணாகதியை நிகழ்த்தினார். அங்கிருந்த ஜீயர் மூலம் மந்திரராஜ பாத ஸ்தோத்திரம் ஓதப்பட்டது. ஜீயர் தனது 24 ஆண்டுகால ஆதனா அலங்காரத்தில், மாலோலனின் கட்டளைப்படி பல சிஷ்யர்களுக்கு உபய அனுஷ்டானங்களை அருளினார்.

9. மலோலா வித்வத் சதாக்கள் ஸ்ரீரங்கம் தாசாவதாரா சந்நிதியில் கார்த்தவ்ய பிரதிக்ஞையின் முதல் மாலோலா சதாக்களில் ஒருவரின் மரணதண்டனையின் ஒரு பகுதியாக. ஜீயரின் திருநக்ஷத்திரத்தில் (தை உத்தராடம்) இந்த சதங்கள் கூட்டப்பட்டது. விசிஷ்டாத்வைத வேதாந்த வாக்கிய அர்த்தங்கள் விவாதிக்கப்பட்டன. அடுத்த தை உத்தராடத்தில் இரண்டாவது மாலோல வித்வத் சதஸ் காஞ்சிபுரத்தில் நடந்தது. மூன்றாவது கொடியாலம் கிராமத்தில் இருந்தது. அஹோபில மடத்தின் முதல் ஜீயர் பிறந்த இடமான திருநாராயணபுரம், மாலோல வித்வத் சதஹஸ்களுக்கு மற்றொரு தலமாக விளங்கியது. பெங்களூர் துளசி தோட்டம் மற்றொரு மாலோலா சதாக்களுக்கான சிறப்புத் தளமாகும். ஹைதராபாத், திருநின்றவூர் (பக்தவத்சலப் பெருமாள் மற்றும் மத்சாவித்திரி தாயார்) மற்ற சதாக்களின் தலங்கள். ஜீயரின் இந்த கார்த்தவ்ய பிரதிக்ஞையை நிறைவேற்றுவதன் மூலம் விசிஷ்டாத்வைத வேதாந்த ஞான ஆனமும் ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களுக்கான அங்கீகாரமும் நிறைவேற்றப்பட்டது. HH 43வது அழகிய சிங்கரின் (தேவன்ஆர்விலகம் அழகிய சிங்கர்) ஆஸ்ரம ஸ்வீகாரத்திற்குப் பிறகு, சின்ன மற்றும் பெரிய அழகிய சிங்கர்கள் இருவரும் சேர்ந்து சதாக்களை நடத்தினர். அப்படிப்பட்ட ஒரு கூட்டு அமர்வுகள் கர சம்வத்சரத்தில் (1952 CE) நந்தன சம்வத்சாரத்தின் போது (1953 CE), பெரிய அழகிய சிங்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் சதங்களில் நேரில் ஆஜராகவில்லை, மேலும் அவர் ஓய்வெடுக்கும் இடத்திலிருந்து வித்வான்களை ஆசீர்வதித்தார் மற்றும் சின்ன அழகிய சிங்கரை சதாக்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும்படி கூறினார். இது தாய் மொழியில் இருந்தது. அடுத்த மாதம் பெரிய ஜீயர் பரம பாதம் ஏறினார்.

10. சதுர் மாஸ்யம்ஸ் 
ஹெச். இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தின் பாதி சின்ன ஜீயர். அந்தக் காலத்தில், சின்ன ஜீயரின் சாதுர்மாஸ்யத் தலங்கள் பெரிய ஜீயரின் தலங்களாகவே இருந்தன.
ஜீயர் பீடம் ஏறிய பிறகு, பெரும்பாக்கத்தில் (தக்ஷிண அஹோபிலம்), திருவெள்ளூர், சிங்காநல்லுர் (திருவெள்ளூர், சிங்காநல்லுார்) (திருவெள்ளூர், திருவண்ணாமலை) சமஸ்கிருதராமன் சன்னதியில் சாதுர்ம ஆஸ்யம் நடந்தது. கிருஷ்ணா நதி) மற்றும் பிற இடங்கள்.

11. வேத பாடசாலையின் ஸ்தாபனம் 
அக்டோபர் 24, 1951 இல் ஜீயர் ஸ்ரீ மடம் பீடத்தை ஏறினார்.
அடுத்த மாதம், ஸ்ரீரங்கத்தில் திருநாகையால் கட்டப்பட்ட தசாவதார சந்நிதியில் வேதபாடசாலையை ஜீயர் தொடங்கி வைத்தார்.
சமஸ்கிருத பாடசாலை அடுத்ததாக மதுராந்தகத்தில் துவாயம் விளக்கு திருப்பதியில் உருவாக்கப்பட்டது.
திருக்கோட்டியூர் சௌமிய நாரயனாச்சார் சுவாமிகள் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.
42வது ஜீயரால் பயிற்சி பெற்ற பத்து அறிஞர்கள் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
அடுத்து அதே தளத்தில் பிரபந்த பாடசலை சேர்க்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெருவாழ்ந்தான் (எனது தாயின் பிறந்த இடம்) அருகே ஒரு கிராமத்தை HH ஜீயர் வாங்கி, மதுராந்தகம் பாடசலையின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அங்குள்ள நிலங்களிலிருந்து வருவாயைத் திருப்பினார்.
அடுத்த தலைமுறை விசிஷ்டாத்வைத வேதாந்த அறிஞர்களைப் பயிற்றுவிப்பதற்காக மதுராந்தகம் பாடசாலையின் பாதுகாப்பை தொலைநோக்குடைய ஜீயர் உறுதியளித்தார்.
ஹெச்.ஹெச் 43 வது ஜீயர் தனது கிரஸ்தா ஆஸ்ரமத்தின் போது இங்கு அதிபராக இருந்தார்.

12. ந்ருசிம்ம ப்ரியா இதழின் ஸ்தாபனம் 
கிபி 1941 ஆம் ஆண்டு இதே கார்த்திகையின் போது, ​​ஜீயர் மாம்பலத்தின் மகரிஷி வாசுதேவாச்சார் ஸ்வாமிகளை ஸ்ரீ மடத்தின் புதிய மாத இதழின் ஆசிரியராக வருமாறு அழைத்தார். மாலோலன்). ஜீயர் தனது சொந்த ஆசானா அனுசந்தானத்துடன் இந்த இதழை ஆசீர்வதித்தார்:
ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா ஶ்ரீந்ருஸிம்ஹ கருணோட்டிதா ஶ்ரீந்ருஸிம்ஹ கடாக்ஷேன ஜீயதாசந்த்ரா-தாரகம் ந்ருஸிம்ஹபாத பக்தானாம் கேஹே கீஹே சாதா வாஸேத் ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா ஹையேஷா ந்ருஸிம்ஹப்ரியா
(பொருள்): ஸ்ரீ ந்ருஸிம்ஹனின் எல்லையற்ற நாளிலிருந்து பிறந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா என்ற இந்த ஜர்னல் கடாக்ஷ மற்றும் சங்கல்ப பலங்களுடன் மேலும் மேலும் வளர்ந்து நட்சத்திரங்களும் சந்திரனும் இருக்கும் வரை பிரகாசிக்கட்டும்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவின் நாமதேயத்துடன் கூடிய இந்த இதழ் ஸ்ரீ நரசிம்மனின் மனைவியான மஹா லக்ஷ்மியுடன் நமது சிஷ்யர்கள் மற்றும் அபிமானிகளின் அனைத்து வீடுகளிலும் வாழட்டும்!
ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியா ஜர்னல் HH தி இஞ்சிமேட்டு ஜீயரின் மங்களாசாசனத்துடன் செழித்து செழித்து, இந்த ஆண்டு ஷஷ்டியப்த போற்றி (60 வயது) மைல் கல்லைக் கடந்துள்ளது.
புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களின் சிறந்த கட்டுரைகள் இங்கு தங்களுடைய நிரந்தர வீடுகளைக் கண்டறிந்துள்ளன.
பங்காற்றிய சில அறிஞர்கள் பின்னர் அழகிய சிங்கர்களாக ஆனார்கள் (தேவனார் விளாகம் ஜீயர், முக்கூர் அழகிய சிங்கர் மற்றும் இத்தானிம் ஜீயர்).

13. இஞ்சிமெட்டு ஜீயரின் விருப்பமான ஸ்தோத்திரங்கள் 
ஸ்ரீ மஹாபாரதத்தில் உள்ள ஸ்ரீ பீஷ்ம ஸ்துதி (I.9.33-42) ஜீயரின் தினசரி பிரார்த்தனை (நித்யஅனுசந்தானம்) ஆகும்.
இந்த பத்து ஸ்லோகங்களும் பிருஷ்மரின் கிருஷ்ண பக்திக்கு சான்றாகும்.
குரு க்ஷேத்திரப் போர்க்களத்தில் தனக்கு முன்னால் நிற்கும் ஸ்ரீ பார்த்தசாரதியின் மீது (பீஷ்மர்) தன் மனதையும், பேச்சையும், கண்களையும் ஒருமுகப்படுத்தி, இறைவனைப் புகழ்ந்து, தன் ஆத்மாவை இறைவனின் பாதத்தில் வைத்தார்.
ஸ்வச்சந்த ம்ருத்யுவின் ஆத்ம ஜோதி. அவர் விரும்பும் வரை மரணத்தைத் தடுத்து நிறுத்துங்கள்), பீஷ்மர், கீதாஆச்சார்யரின் புனித பாதங்களுக்குள் நுழைந்தார்.
ஸ்ரீ பீஷ்ம ஸ்துதியின் பத்தாவது மற்றும் இறுதி ஸ்லோகம் பொருள் நிறைந்தது:
தமிமஹாமஜம் ஸரீரபாஜாம்ஹ்ருதி-ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதாநம்ப்ரதித்ருசமிவ நைகதார்கம்ஏகம் சமாதிகதோ ⁇ஸ்மி வித்யுத-பேதாமோஹ:
(பொருள்): நித்திய/பிறப்பற்ற இறைவன், தன் படைப்புகள் அனைத்தின் இதயங்களிலும் பிரகாசிக்கும் உன்னதமானவன் என்பதை அடியென் இப்போது உணர்ந்து கொண்டான்;
என் அறிவாற்றல் இப்போது துரத்தப்பட்டது. வானத்தில் உள்ள சூரியன் மட்டுமே கண்ணால் உணரப்படுகிறது.
இந்த ஒரு பொருளைப் பார்க்கும் கண்கள் பல, ஆனால் பல கண்களால் பார்க்கப்படும் ஒரே சூரியன். சூரியனின் உருவம் (பிரதி-பிம்பம்) பலரால் வெவ்வேறு பொருட்களாகக் காணப்படுவது போல, சூரியனில் எந்த மாற்றமும் இல்லை,
பல இதயத் தாமரைகளில் வசிப்பவராகக் காணப்பட்ட இறைவன் இன்னும் அதே உன்னதமானவர் என்பதை அடியேன் இப்போது தெளிவாக புரிந்து கொண்டார்.
இருப்பது. இந்த ஞாஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னம், சதுஸ்லோகி, ஸ்வாச்சார்ய தியான ஸ்லோகம் (ஸ்ரீமுஷ்நாம் ஸ்வர்ணம் ஸ்வாமி), சூழ் விசும் பாசுரம் – ஸ்வாமி நம்மாழ்வாரின் முகில் பாசுரம், சரநாகதி காத்யம், ஸ்வாமி தேசிகன் ஆகியோருக்கு மீண்டும் வழங்கப்பட்டது ஜீயர்.

14. தேவனார்விளாகம் சுவாமியை அவரது வாரிசாக நியமித்தல் 
பெரிய மடாதிபதிகளுக்கு நல்ல நேரத்தில் வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கும் திறமை உண்டு. சம்பிரதாயம் வளர இந்த உன்னத செயலில் மாலோலன் அவர்களுக்கு உதவுகிறார். HH 42வது ஜீயர் ஒரு சிறந்த அறிஞரும், ஆத்ம குண சம்பூர்ணருமான தேவனார் விலகம் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹாச்சார் ஸ்வாமியைத் தம் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார். இந்த ஸ்வாமிதான் என்னுடைய பஞ்ச சம்ஸ்கார ஆச்சார்யன். அவருடைய தேஜஸ், வித்வத், பணிவு, அனுஷ்டானம் ஆகியவை முன்மாதிரியானவை. இவரது தந்தை 27வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் மகளின் ஸ்விகார புத்திரர் ஆவார். 26வது அழகிய சிங்கரின் மகன் இது அனைத்தும் குடும்பத்தில் உள்ளது. பாஸ்டனில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மன், அவருக்குப் பின் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரால் தேர்ந்தெடுக்கப்பட்ட HH 43வது ஜீயர் பற்றிய தகவல் தரும் கட்டுரைகளைத் தொடர்கிறார். எனவே அஸ்மத் ஆச்சார்யன் பற்றி ஒரு சுருக்கமான சுருக்கத்தை தருகிறேன்:

HH 43வது அழகிய சிங்கரின் சுருக்கமான சரிதம்
அவதாரம்:1901 CE, பிளாவா கார்த்திகை, பூராடம்வித்யா கிரஹநாம்:திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரியில் நியா மீமாம்சா சிரோமணி பட்டம் பெற்றவர்
பஞ்ச சம்ஸ்காரம்:HH 40வது பட்டம் அழகிய சிங்கர்
ஸ்ரீ பாஷ்ய கிரந்த காலக்ஷேபம்:HH 40வது ஜீயருடன் துவங்கி, HH 41வது ஜீயரின் கீழ் முடிக்கப்பட்டது
பிரபத்தி/உபாய அனுஷ்டானம்:HH 41வது அழகிய சிங்கரிடமிருந்துபிரபத்திக்குப் பிறகு கிரஹஸ்தராக நடத்துதல்:
“ஸ்நானம்-சந்தியா- ஜபோ-ஹோமோ-தேவதானாம் ச பூஜானம்! வைஸ்வதேவ்அதி தேயம் ச ஷட்கர்மணி தினே தினே”. பகவத் ஆராதனம், காலக்ஷேபம் அவரது புனித பாதங்களைத் தேடுபவர்களுக்கு அவரது நாட்களை நிரப்பியது.மதுராந்தகத்தில் பயிற்றுவிப்பாளர்:
திருக்கோட்டியூர் ஸ்வாமிகளின் வைகுண்ட பிராப்திக்குப் பிறகு மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீ மடம் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றினார்.
ஸ்ரீ பாஷ்யாதி, அஹ்னிகா கிரந்தங்கள் வித்யாஆர்திகளுக்கு அங்கு அவர் கற்பித்தார்.
சன்யாசாஸ்ரம் ஸ்வீகரநாம்:விக்ருதி தாய் 27 (பிப்ரவரி 9, 1951 CE) அன்று ஸ்ரீ உ.வே. ஸ்ரீமடத்தின் 43வது ஜீயராக தேவனார் விளாகம் ஸ்வாமி லக்ஷ்மிநருசிம்மச்சார் சுவாமிகள் ஆனார்.
பட்டாபிஷேகம்:மார்ச் 13, 1953 சி.இ.
வைகுண்ட ப்ராப்தி:நவம்பர் 24, 1957 நைமிசாராண்யத்தில்.
பிடித்த பாசுரங்கள்:திருவிநகர் காளியன் மற்றும் சுவாமி நம்மாழ்வாரின் பாசுரங்கள்.

15. இஞ்சிமெட்டு அழகிய சிங்கர் பரம பதம் ஏறிய ஆண்டு நந்தன சம்வத்சரம். மாதம் தாய். ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அடுத்த மாதத்திற்கான மாலோலா சதாஸ் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.
அந்த சதாக்கள் மற்றும் பிற நித்ய நிர்வாஹ கைம்கார்யங்கள் மற்றும் ஆராதன-காலக்ஷேப-உபாய அனுஷ்டானம் கடமைகளின் திட்டமிடலுக்கு முழுப் பொறுப்பாக HH 43வது அழகிய சிங்கருக்கு உத்தரவிடப்பட்டது.
நாளுக்கு நாள், எச்.எச்.இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் உடல் பலவீனமடைந்து வந்தார். அவன் மனம் எப்போதும் மாலோலனைச் சுற்றியே இருந்தது.
அவர் சரநாகதி காத்யம் மற்றும் த்வயம் ஆகியவற்றை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தார்.
சிஷ்யர்கள் ஸ்ரீ பீஷ்ம ஸ்துதி மற்றும் ஸ்வாமி ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னம் ஆகியவற்றைப் படித்துக் கொண்டிருந்தனர்.
பாராயணங்களால் ஸ்ரீமத் அழகியசிங்கரின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தன. திருவெள்ளூர் திவ்ய தேசத்தில் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தனது இறுதி நாட்களை ஸ்ரீமன் நாரயணனின் லீலா விபூதியில் கழித்தார்.
ஸ்ரீமத் அழகிய சிங்கர் நித்ய கைம்காரியத்திற்காக ஸ்ரீமன் நாரயனுடன் இணைவதற்காகத் தனது இறுதி மூச்சை விட்டபோது, ​​சின்ன அழகிய சிங்கர் (தேவனார் விளாகம் அழகிய சிங்கர்) “சூழ்விசும்பனி முகில்-” பாசுரம் தசத்தை ஓதினார்.
திருவெள்ளூர் வீரராகவனின் பெரிய கோயில் மணி முழக்கமிட்டு, இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் தன்னடிச்சோதிக்கு வந்ததை உலகுக்கு அறிவிக்கும் வகையில், பிரம்மோற்சவம், பெருமாள் மேரிஆதாய், பிரம்மோற்சவத்தின் தென்கரையில் ஏந்திச் செல்லப்பட்டது
திருவெள்ளூர் நிரந்தர ஓய்வுக்காக வீரராகவனின் புஷ்கரணி (ஹ்ருத் பாபனாசினி). HH அழகிய சிங்கர் மேலும் மூன்று முந்தைய அழகிய சிங்கர்களின் (33வது, 34வது மற்றும் 35வது அழகிய சிங்கர்கள்) BrundhAvanams உடன் இணைந்தார்.

16. இஞ்சிமெட்டு அழகிய சிங்கரின் தனியனும் அவரது ஆத்ம குணங்களும் ஸ்ரீ உ.வே. வித்வான் புரிசை நடதூர் கிருஷ்ணமாச்சார் சுவாமிகள் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் ஒரே பேரன் ஆவார். புரிசை ஸ்வாமி ஒரு சிறந்த சம்பிரதாய அறிஞர் மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம பிரியாவின் தற்போதைய ஆசிரியர் ஆவார். அவர் தனது மரியாதைக்குரிய தாத்தாவுக்காக ஒரு நகரும் தனியனை இயற்றினார்:

SrirangEsa YathIndhunA kAruNayA asou syAth Ithi prEkshithamkhAyatha Srinarasimha Kaarijamunid-paadhAmbhujEndhinthiramDhAnthi-KshAnthi DayAdhibhi: SubhaguNai: BhAntham BhhrEshamsrayE

இங்கே, புரிசை சுவாமிகள், 1887 ஆம் ஆண்டில், எட்டு வயது சிறுவனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் நிகழ்ச்சியின் மூலம் களத்தூர் அழகிய சிங்கரின் (35வது பட்டம்) கருணையுள்ள அனுக்ரஹத்தைப் பற்றி குறிப்பிடுகிறார், பின்னர் அவர் ஸ்ரீ மடத்தின் 42 வது பட்டம் ஜீயராக நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆனார். பின்னர் (1929) எட்டு வயது சிறுவனின் தேஜஸ் மற்றும் புத்திசாலித்தனத்தால் கலத்தூர் ஜீயர் தாக்கப்பட்டார், மேலும் இந்த சிறுவன் பகவத் ராமஅனுஜ சம்பிரதாயத்தை அபரிமிதமாக வளர்ப்பான் என்பதை உடனடியாக உணர்ந்தான். நாதூர் அம்மாள் ஸ்ரீ வேங்கடநாதனின் (அப்போது 5 வயது சிறுவன்) மகத்துவத்தை அங்கீகரித்து குழந்தையை ஆச்சார்ய சார்வபௌமனாக ஆசீர்வதித்தது போல, கலத்தூர் ஜீயர் 8 வயது ரங்கநாதனை ஆசீர்வதித்தார். தனியனின் முதல் வரி, “ஸ்ரீரங்கேச- யத்இந்துனா கருநாய அஸௌ ஸ்யாதிதி ப்ரேக்ஷிதம்”.முதல் வரியில் உள்ள வார்த்தைகளின் தேர்வு “சியாத்” மற்றும் “ப்ரேக்ஷிதம்” ஆகும். இந்த இரண்டு அர்த்தமுள்ள வார்த்தைகளின் தேர்வு அதிகார சாரவாளியில் சுவாமி தேசிகனின் ஸ்ரீ சூக்தி பத்தியால் தாக்கம் பெற்றுள்ளது, அங்கு அவர் நாதூர் அம்மாளிடம் இருந்து பெற்ற ஆசீர்வாதங்களைக் குறிப்பிடுகிறார்:“ஸ்ரீமத்பியம் ஸ்யாத்-ஆசாவித்யானுபஹ்தி வரதாஆச்சார்ய ராமஅநுஜாப்யாம் சம்யக் த்ருஷ்டேன”.புரிசை ஸ்வாமி முதல் வரிக்கு ஸ்வாமி தேசிகனிடமிருந்து பிரபலமான வார்த்தையான “ஸ்யாத் அஸௌ இதி” என்பதைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிடுகிறார். “சம்யக் த்ருஷ்டேனா” என்பதற்குப் பதிலாக, புரிசை ஸ்வாமி இதே போன்ற பொருளைக் கொண்ட வார்த்தையைத் தேர்ந்தெடுத்தார்: “ப்ரேக்ஷிதம்”.இரண்டாவது வரி, “க்யாதா-ஸ்ரீந்ருசிம்ஹாக் அரிஜாமுனிடி- பாதஅம்போஜிந்த்இந்திரம்” என்பது மற்றொரு அழகிய சிங்கரின் (காற்றுக்குறிச்சி அழகிய சிங்கர் என்று அழைக்கப்படும் 41 வது ஜீயர்) ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. 41வது ஜீயர், இஞ்சிமேடு ஸ்வாமியின் பாண்டீத்யத்தின் (புகழ்பெற்ற புலமை) மதிப்பின் அடிப்படையில் இஞ்சிமேடு ஸ்வாமியை பட்டத்துக்குத் தேர்ந்தெடுத்ததால், “பண்டித பக்ஷபாதி” என்ற பட்டத்தைப் பெற்றார்.இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் 41வது ஜீயரின் தாமரை பாதங்களிலிருந்து தேனை அருந்திய தேனீயைப் போல மகிழ்ச்சியுடன் தனது நேரத்தைக் கழித்தார் என்பதை தனியனின் இரண்டாவது வரி ஒப்புக்கொள்கிறது. 41வது ஜீயர் சுவாமி நம்மாழ்வாருக்கு (அவரது ஆச்சாரியரான 34வது பட்டம் அத்திப்பட்டு அழகிய சிங்கருக்கு) மதுர கவி போல இருந்தார். புரிசை சுவாமிகளின் கூற்றுப்படி, 42வது ஜீயர், 41வது ஜீயருக்கு (சுவாமி நம்மாழ்வார்) மதுர கவி போல இருந்தார். இஞ்சிமேட்டு அழகிய சிங்கரே தம் 41வது ஜீயரின் புனிதமான திருவடியில் (தாமரை) சஞ்சாரத்துடன் கூடிய தேனீ என அவரது அனுபவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:”யத்பரிசாரணாதாத்தௌ ப்ரஹ்மநுபவஓப்யஹோ மாயா அத்ரைவ”புரிசை ஸ்வாமி, ஸ்ரீ பாஷ்யம் பற்றிய புகழ்பெற்ற வர்ணனையான 42வது அழகிய சிங்கரின் ஸ்ரீ சாரபோதினியிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறார். 41வது அழகிய சிங்கரால் தமக்கு அருளப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மர் ஆராதனத்தின் மூலம் இந்த பூமியில் பரிபூர்ண பிரம்ம அனுபவத்தை தாம் அனுபவித்ததாக இங்கு வணக்கத்திற்குரிய ஜீயர் கூறுகிறார்; இந்தச் சூழலில் 42வது ஜீயர் தம்மை தேனீ குடிப்பதால் மகிழ்ச்சியான தேனீயுடன் ஒப்பிடுகிறார். அவரது ஆச்சார்யனின் தாமரை.தனியனின் முதல் இரண்டு வரிகள் இதுவரை காலத்தூர் அழகிய சிங்கரிடமிருந்து பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் கருக்குறிச்சி அழகிய சிங்கரின் சன்யாஸ்ரம ஸ்வீகரநாமம் ஆகியவற்றைக் கொண்டாடியது. இப்போது, ​​தனியனின் கடைசி இரண்டு பாதங்களில் உள்ள இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் அருளும் ஆத்ம குணங்களை நோக்கி புரிசை ஸ்வாமி தனது கவனத்தைத் திருப்புகிறார்.“தாந்தி-க்ஷாந்தி-தயாஅதிபி: சுபாகுநாயர்-பந்தம் பூதஅக்ரேசரம்
ஸ்ரீமத்ராங்கசத்அரி-யோகி-ந்ருபதிம் ஸ்ரீயோநிதிம் சம்ஸ்ரே”
நான்காவது பாதம், சிஷ்யர்கள் யோகிகளின் சக்கரவர்த்தியின் திருவடியில் அடைக்கலம் தேடுகிறார்கள் என்று கூறுகிறது மற்றும் சகலா ஸ்ரேயஸ், ஸ்ரீவன்என் சடகோப ஸ்ரீரங்க சதகோப யத்இந்திர மஹா தேசிகனின் இருப்பிடம்.மூன்றாவது பாதம் இந்த கலிநா குணங்கள் என்ன என்பதைக் குறிக்கிறது. அவற்றில் சில: தாந்தி (இந்திரியங்களின் மீதான கட்டுப்பாடு), க்ஷாந்தி (எல்லையற்ற சகிப்புத்தன்மை/பொருமை), DayA (அனைவருக்கும் அசாதாரண இரக்கம் மற்றும் கருணை). அவர் இவைகளுடனும் மற்ற மங்களகரமான சத்குநாமங்களுடனும் ஜொலிக்கிறார் (சுப குணை: பாந்தம்). இந்த சுப குணங்கள் அவரை யோகி-ந்ருபதி அல்லது யோகிகளின் ராஜாவாக ஆக்குகின்றன. ஆச்சார்ய சார்வபௌமன் பாத்திரத்துடன் தொடர்புடைய சகலா கல்யாண குணங்களின் வசிப்பிடமாக இருப்பதுடன், அவரது புத்திசாலித்தனமான புத்திசாலித்தனம், சாஸ்திர ஜென்~ஆனம், காலக்ஷேப சைலி (காலக்ஷேபம் ஸ்டைல்) ஆகியவை அவரை ஒரு சிறந்த பண்டித ஸ்ரீஷ்டாரின் முன்னணி அறிஞராகக் குறித்தன. (BhdhAgrEsar).புரிசை ஸ்வாமிகள் இந்த அழகான தனியானில் மிகவும் மரியாதையுடனும் பணிவுடனும் தனது மதிப்பிற்குரிய தாத்தா மற்றும் ஆச்சார்யரின் உன்னத குணங்களின் சாரத்தை பொருத்தமான முறையில் படம்பிடித்தார்.அடுத்த சில இடுகைகளில், 42வது ஜீயரை அறிந்தவர் மற்றும் ஸ்ரீ மடம் ஆச்சாரியார்களின் நட்சத்திர மண்டலத்தில் ஒளிரும் நட்சத்திரமாக அவரைப் போற்றிய சமகால ஸ்ரீவைஷ்ணவ ஷோலர்களின் தனிப்பட்ட அஞ்சலிகளை அடியேன் உள்ளடக்கும்.அடியேனின் தாத்தா 1888 CE இல் HH 36வது அழகிய சிங்கரான ஸ்ரீவன்என் சடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யத்இந்திர மஹா தேசிகனிடமிருந்து தனது பஞ்ச-சம்ஸ்காரத்தைப் பெற்றார்; அவரது பரண்யாசம் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரைச் சேர்ந்தவர். அடியேனின் தந்தை 39வது பட்டம் மன்னார் கோயில் அழகிய சிங்கரிடமிருந்து பஞ்ச சம்ஸ்காரத்தையும், 44வது ஜீயர், ஸ்ரீவன்என் சடகோப வேதாந்த தேசிக யத்இந்திர மஹா தேசிகனிடம் பரண்யாசம் பெற்றார். அடியேனின் சொந்த சமாஸ்ரயாணம் 43 வது ஜீயர், ஸ்ரீ தேவனார் விலாகம் அழகிய சிங்கர் ஆகியோரிடமிருந்து வந்தது மற்றும் பரண்யாசம் ஆசிகள் கடந்த ஆண்டு 45 வது ஜீயர், ஸ்ரீவண்ணன் சடகோப நாராயண யதிந்திர மஹா தேசிகனிடமிருந்து வந்தது. மூன்று தலைமுறைகளாக (1888-2000 CE) 112 வருட கால இடைவெளியில் அடியேன் நினைவுகூரக்கூடிய தொடர்புகளுடன் நமது ஆச்சார்ய பரம்பரையில் இந்த கட்டுரைகளை இடுகையிடுவது உண்மையில் அடியேன் பாக்கியமாக உணர்கிறேன்.17. ஸ்ரீ உ.வே இயற்றிய மங்கள ஸ்லோகங்களில் ஒன்றான 42வது ஜீயரின் ஆத்ம குணங்களுக்கு அஞ்சலிகள். 42வது ஜீயருக்கு ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்கள் செலுத்திய காணிக்கையை பதிவு செய்வதற்கு முன் புரிசை ஸ்வாமியை நினைவுகூர வேண்டும்:ஜித-கர்ணச்ச தானாதியோ ஜித-ராமஸ்ச்ச பாஷாநாத்
தாந்தி-க்ஷாந்தி-தாயா பூர்ணஸ்தஸ்மை பவத்து மங்கலம்
(பொருள்): கர்ணனை தானத்திலும் பெருந்தன்மையிலும் வென்றவருக்கும், சிஷ்யர்கள் மற்றும் அறிஞர்களுடன் சம்பாஷணத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனை வென்றவருக்கும் எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். இந்திரிய-நிக்ரஹம், சகிப்புத்தன்மை, தயவு போன்ற ஐஸ்வர்ய பண்புகளின் உறைவிடமாக விளங்கும் இஞ்சிமேட்டு அழகிய சிங்கருடன் அனைத்து மங்களங்களும் இருக்கட்டும்.வைகுண்ட வாசி ஸ்ரீமத் புத்தங்கொட்டகம் ஸ்வாமி இந்த ஸ்வாமி ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார் மற்றும் 42 வது ஜீயரின் பிரதிஜ்ஞையை வதம் செய்வதற்கான மந்திரியாகக் கருதப்பட்டார். அவர் தனது ஆச்சார்யரின் வயதுடையவர். ஜீயரின் பட்டாபிஷேக மஹோத்ஸவத்தின் போது, ​​அவர் 42வது ஜீயரின் ஆத்ம குணங்களைக் கொண்டாடும் வகையில் ரத்தின மாலையை (ரத்ன மாலை) வழங்கினார். அங்கு புத்தங்கொட்டகம் ஸ்வாமி இந்த அழகிய சிங்கரை வணங்குகிறார்: சம்யமி வரோ ராஜா = சன்யாசிகளின் ராஜா ஆஜன்மசுத்த சரிதா = தூய்மையான வாழ்க்கை கொண்டவர் மற்றும் களங்கமற்ற செயல்கள் அகில சத்குநாத்யா: = அனைவரையும் அழகுபடுத்தியவர் மங்களகரமான பண்புகள் VrutthE VyAsEna துக்யா: மற்றும் பலர் = நடத்தல், வியாச முனிவருக்கு சமம் மற்றும் பக்தியில் பிரஹ்லாதாவுக்கு சமம் மாலோலன், விவாதக்காரர்களின் ராஜா, அது எப்போது ஸ்ரீ வியாஷ்நவம்/பகவத்தைப் பாதுகாக்க வந்தார் ராமஅனுஜ சித்தானம். ஸ்வாமிகள் கூற்றுடன் முடிக்கிறார்: ஜீயரின் ஸ்ரீமடத்தின் ஆஸ்தான ஸ்வீகாரநாமத்தால் அனைத்து வேதங்களும் மகிழ்ச்சியடையட்டும், மகரிஷிகளின் பக்தி வார்த்தைகள் நிலைத்து உலகைக் காக்கட்டும்! இந்த தேசத்தின் நடைமுறை வர்ணாஸ்ரம தர்மங்களை வரையறுத்து, ராஜ லட்சுமி அற்புதமாக பிரகாசிக்கட்டும்!வைகுண்ட வாசி மகரிஷி சுவாமி மகரிஷி சுவாமிகள் உ.வே. 42வது ஜீயரால் ஸ்ரீ ந்ருஸிம்ஹ பிரியாவின் முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ வாசுதேவாச்சார்ய ஸ்வாமிகள். அவர் கூறுகிறார்: “அனைத்து வைதிக சிரேஷ்டர்களும் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் வைராக்யம், ஞான ஆனம், அனுஷ்டான சம்பத் மற்றும் உன்னதமான ஆத்ம குணங்களுக்காக அவரை வணங்குகிறார்கள்”.வைகுண்ட வாசி HH 44 வது ஜீயர் (முக்கூர் அழகிய சிங்கர்) முக்கூர் ஜீயர் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் தர்ம பத்னியின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். அவர் ஸ்ரீ மடம் மற்றும் ஸ்ரீ காரியத்தின் ஆஸ்தான வித்வான் ஆவார். 42 வது ஜீயருக்கு அந்தரங்க கைம்காரியம் செய்ய அவர் ஆசீர்வதிக்கப்பட்டார், ஏனெனில் இதானிம் ஜீயர் அத்தகைய கைம்காரியத்தை பின்னர் செய்ய ஆசீர்வதிக்கப்பட்டார். சம்பாஷநாம் திறமைகள், அபூர்வ சித்தாந்த விஷயங்களைப் பற்றிய ஆழமான ஞான ஆனம், மதுராந்தகம் பாடசாலை, ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியா மற்றும் மாலைஓள சதாக்களை நிறுவுவதில் தொலைநோக்கு.ஸ்ரீ வைகுண்ட வாசி முக்கூர் ஸ்வாமிகளின் காணிக்கை ஸ்வாமிகள் எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் உறவுகள் குறித்து நமது ஆச்சாரியார்கள் கூறிய பல குறிப்புகளுடன் தொடங்குகிறது. இந்த சூழலில் அவர் சுவாமி தேசிகனின் ரஹஸ்ய பதவியின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார்:மூன்ரிலொரு மூன்ரு மூவீரன்டு முன்அங்கும்
தோன்ரத் துளயும் துயர்
(பொருள்): மூன்று பதங்கள் கொண்ட அஷ்டாக்ஷரம், ஆறு பதங்கள் கொண்ட த்வயம், 12 பதங்கள் கொண்ட சாரம ஸ்லோகம் என்ற அர்த்தங்களால் ஒருவனின் மனம் பிரகாசிக்கும்போது, ​​ஒருவனுக்கு சம்சாரிக் துக்கங்கள் நீங்கும்.மூன்று ரஹஸ்யங்களும் அவற்றின் பாதங்களும் 3, 3 முறை 2 மற்றும் 3 முறை 2 சதுரம் என தொடர்புடையவை.இங்கிருந்து ஸ்ரீ முக்கூர் ஸ்வாமியின் வளமான கற்பனையானது HH இஞ்சிமெட்டு அழகிய சிங்கர் (42), HH தேவன்ஆர்விலகம் அழகிய சிங்கர் (43) மற்றும் HH முக்கூர் அழகிய சிங்கர் (44) ஆகியோரின் பட்டங்களின் பின்னால் உள்ள “எண் கோட்பாடு” மீது கவனம் செலுத்துகிறது.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹாச்சார் ஸ்வாமிகள் மூன்று அழகிய சிங்கரின் பீட எண்களை மூன்று ரஹஸ்யங்களுடன் தனக்கே உரித்தான முறையில் தொடர்புபடுத்துகிறார்:42வது பட்டம் = 4+2= 6 பதம் ரஹஸ்யம்: த்வயம்43வது பட்டம் = 4×3= 12 பதம் ரகசியம்: சரம ஸ்லோகம்44வது பட்டம் = 4+4= 8 அக்ஷர ரஹஸ்யம் : திரு அஷ்டஅக்ஷரம்.HH 42வது அழகிய சிங்கர் துவாயத்தின் அவதாரம்த்வயத்தின் சக்ருத்-உச்சாரணம் (ஒருமுறை கூட பாராயணம்) மோட்ச-சாதனத்திற்கு வழி வகுக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, 42வது அழகிய சிங்கரின் தியானம், சக்தி வாய்ந்த த்வ்ய மந்திரத்தின் இடத்தில் நிற்கும் அவரது தனியானை ஓதுவதன் மூலம், த்வயத்தின் செழுமையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு, மோட்சத்திற்கான பாதையில் நம்மை அமைக்க உதவும்.ஸ்ரீரங்கத்தில் திருவரங்கச் செல்வன், ஸ்ரீ ரங்கநாதனின் உறுதிமொழியை முன்பு ஆசார்ய சார்வபௌமன், ஸ்ரீ ராமஅனுஜர் கேட்டனர். நமது 42வது பட்டம் அழகியசிங்கருக்கு பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீ ரங்கநாதனின் பெயர் இருந்தது. அவர் சன்யாசாஸ்ரமத்தில் நுழைந்தது ஸ்ரீ ரங்கநாதனின் திவ்ய தேசத்தில் நடந்தது. ஆஸ்ரமத் திருநாமத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தவர் ரங்கநாதனும் (ஸ்ரீரங்க சடகோபன்) ஆவார். த்வயத்துக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையேயான தொடர்புகள் ஆச்சார்ய ராமனுஜருக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் செல்கிறது.HH 42வது அழகிய சிங்கர், “த்வயம் விளைந்த திருப்பதி”/ மதுராந்தகத்தில் வித்வான்களின் தலைசிறந்த ரத்தினங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாடசாலையை நிறுவினார், அங்கு ஆச்சார்யா ராமஅனுஜார் தனது ஆச்சாரியரான பெரிய நம்பியரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றார்.HH அவர்களின் 100வது ஆண்டு விழா, 42வது அழகிய சிங்கரின் சக்கரவர்த்தி திருமஹனின் (திருவெள்ளூர் ஸ்ரீ வீரராகவன்) புனித பாதத்தில் நடந்தது, அவர் த்வய மந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கினார்.ஆகவே, தவயம் மந்திர ரத்னம் என்று போற்றப்பட்டால், நமது 42வது பட்டம் அழகியசிங்கர் (4+2=6 பாத த்வயம்) நம் அனைவருக்கும் ஆச்சார்ய ரத்னம்.42ஆம் அழகியசிங்கரின் தனியன்
1. அவதாரம் இந்த பெரிய ஆச்சார்யன் ஜனவரி 21, 1879 இல் பிறந்தார். இது தாய் உத்திரஆதம் ஒரு பஹுதா+அன்யா (பல வழிகளில் வேறுபட்டது) சம்வத்சரத்தில் (ஆண்டு). புத்தங்கொட்டகம் சுவாமி, கோஷ்டியூர் ஸ்வாமி போன்ற மகா புருஷர்களின் ஒரு பெரிய சபை அந்த ஆண்டில், சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது.42வது அழகியசிங்கர்அவர் பிறந்த இடம் பாகு நதி (செய்யாறு நதி) கரையில் வேத பண்டிதர்களுக்காக மிகவும் மதிப்பிற்குரிய ஆறாவது அழகிய சிங்கரால் நிறுவப்பட்ட ஒரு அக்ரஹாரம் ஆகும். இந்த ஆச்சார்ய சார்வபௌமன் 1499-1513 CE வரை அஹோபில மடத்தின் பீடத்தை அலங்கரித்து, அஹோபிலத்தில் உள்ள ஒரு குகைக்குள் நுழைந்தார், திரும்பவே இல்லை. அவர் இன்றும் அந்த குகைக்குள் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனுக்கு ஆராதனை செய்வதாக கூறப்படுகிறது. அக்ரஹாரம் ஆறாவது அழகிய சிங்கரால் ந்ருசிம்மபுரம் என்று வழங்கப்பட்டது, பின்னர் இஞ்சிமேடு என்று அறியப்பட்டது. இதில் வரதராஜனின் சந்நிதி உள்ளது. நமது ஆச்சார்யரின் கோத்திரம் பரத்வாஜ கோத்திரம். இவருடைய தந்தையின் பெயர் ஸ்ரீ ஆதிவர் ஆச்சார் சுவாமிகள். இவரது மகனுக்கு ஸ்ரீரங்கத்தின் இறைவன் ரங்கநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.இந்த ஆச்சார்யருக்கு ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மனின் ஜயமான கடாக்ஷம் இருந்தது மற்றும் மிக இளம் வயதிலேயே ஸ்ரீமத் ராமாயணம் மற்றும் ஸ்தோத்திர பாதங்களின் புனருச்சரணத்தில் (அவர் கேட்டதை துல்லியமாக பாராயணம் செய்வதில்) அசாதாரண திறமையை வெளிப்படுத்தினார். தந்தையான ஸ்ரீ ஆதிவர்ஆச்சார் ஸ்வாமிகள், கர்ப்பாஷ்டமத்தின் போது உபநயனம் மற்றும் பிரம்மோபதேசம் செய்தல் (கருவுற்றது முதல் 8 ஆண்டுகள் வரை) மற்றும் பஞ்ச சம்ஸ்காரம் HH தி 37 வது பட்டம் கலத்தூர் அழகிய சிங்கர், ஸ்ரீவண்ணன் சதகோபா ஸ்ரீரங்கன்சதகோபா ஸ்ரீரங்கன்சதகோபா ஸ்ரீரங்கன்ஆசிரியர். நாதத்தூர் அம்மாள் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது சுவாமி தேசிகனை முன்பு காஞ்சி வரதராஜனின் கோவிலில் ஆசீர்வதித்தது போல், அந்த சிறுவனின் அசாதாரண பிரகாசத்தை உணர்ந்து, அவனை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தூணாக ஆக்கும்படி ஆசீர்வதித்தார்.2. வித்யா கிரஹணம் ஸ்ரீ ரங்கநாதன் தனது பதின்மூன்று வயதிற்குள் வேதாத்யாயனத்தை முடித்தார். அவர் தனது அதியபாக ஸ்வாமிகளால் ஒரு பிரம்மச்சாரிக்குத் தேவையான ஸ்ரீ அஷ்டாக்ஷர ஜபம் மற்றும் பிரம்ம யக்ஞம், சமிதாதானம் போன்றவற்றில் தீட்சை பெற்றார். ஸ்ரீ ரங்கநாதன் தனது வேதாத்யாயணத்தை முடித்தபோது, ​​ஒரு தனிப்பட்ட துக்கம் ஏற்பட்டது, அது அவரை உலுக்கியது. அவரது அன்பான தந்தை தனது ஆசார்யரின் திருவடியை அடைந்தார். அவரது பரம்பரை நிலச் சொத்துக்கள் இழக்கப்பட்டன. அவர் தனது தாத்தாவின் வீட்டிற்கு (அம்மாவின் தந்தை) சென்றார். அங்கு, காவ்யங்கள் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்து, அலங்கார சாஸ்திரம் வரை ஆய்வுகளை முடித்தார். அவருக்கு இப்போது பதினாறு வயதாகிறது, மற்றொரு தனிப்பட்ட சோகம் அவரைத் தாக்கியது. அவரது தாயார் தனது ஆச்சார்யரின் திருவடிகளை அடைந்தார். ஸ்ரீ ரங்கநாதன் தனது தாயாரின் கைம்காரியங்களை வர்ஷாஅப்திகம் வரை செய்து, அதன்பின் தகுந்த ஆச்சார்யர்களின் கீழ் சாஸ்திரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான தனது தேடலைத் தீவிரமாகத் தொடர்ந்தார்.நியா, தர்க்க சாஸ்திரம் பற்றிய ஆய்வு ஸ்ரீ பாஷ்யத்தில் காலக்ஷேபம் செய்வதற்கு முன், நியா மற்றும் தாரக சாஸ்திரங்களைப் படிப்பது அவசியம். இரண்டு பெரிய மகான்கள் மற்றும் சிறந்த அறிஞர்கள் ஸ்ரீ ரங்கநாதனின் நியாய மற்றும் தர்க்க சாஸ்திரங்களைப் படிக்கும் தாகத்தைத் தணித்தனர். அவை:(1) சாது: சாஸ்திர கல்ப தரு, கும்பகோணத்தின் ஸ்ரீ அம்மாசத்திரம் சேஷாச்சார் சுவாமிகள் மற்றும் (2) மைசூர் பண்டித ரத்னம் தர்க்க தீர்த்தம் கஸ்தூரி ரங்கஆச்சார் சுவாமிகள். ஸ்ரீ ரங்கநாதனின் தனிப்பட்ட நோயின் காரணமாக அம்மாசாத்திரம் சுவாமியிடம் நியாய சாஸ்திரம் படிப்பது தடைபட்டது. ஸ்ரீ ரங்கநாதன் கஸ்தூரி ரங்கஆச்சார் சுவாமிகளிடம் தர்க்கம் படிக்க மைசூர் சென்றார். பின்னர் உடல்நிலை சரியில்லாமல், படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. வாரணாசி/காசியின் ஸ்ரீ சீதாராம சாஸ்திரியின் கீழ் கல்வி கற்க கஸ்தூரி ரங்கஆச்சார் சவுமியின் ஆலோசனையின் அடிப்படையில் ஸ்ரீ ரங்கநாதர் காசிக்குச் சென்றார். வாரணாசியில் தர்க்கம் படிப்பை முடித்த பிறகு, காசியில் பிளேக் நோய் தாக்கியதால் ஸ்ரீ ரங்கநாதனுக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் இஞ்சிமேடு திரும்பினார், திருமணம் செய்து கொண்டு, சுவாமி தேசிகன் செய்தது போல் உஞ்சிவிருத்தி மூலம் தனது வாழ்வாதாரத்தை மேற்கொண்டார். ஸ்ரீ ரங்கநாதன் எதிர்பாராத தடங்கல்களால் (விக்னங்கள்) இன்னும் நியாய சாஸ்திரம் படிப்பை முடிக்கவில்லை.ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் நடத்துவதற்கான முயற்சிகள் கிரந்த சாதுஷ்டியத்தைக் கற்க வேண்டும் என்ற தீவிர ஆசையால் உந்தப்பட்டு, ஸ்ரீ ரங்கநாதன் இப்போது ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் ஆசீர்வாதத்திற்காக 37வது பட்டமான ஸ்ரீ வீரராகவ சதகோப யத்இந்திர மஹா தேசிகனை அணுகினார். ஸ்ரீ ரங்கநாதனுக்கு அந்த காலக்ஷேபம் மூலம் ஆசிர்வதிக்க HH ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஒப்புக்கொண்டார், ஆனால் HH விரும்புபவர் நியாய சாஸ்திரம் பற்றிய தனது இடைநிறுத்தப்பட்ட படிப்பை முடிக்க விரும்பினார். இந்த அழகிய சிங்கர் 11 மாதங்கள் மட்டுமே பீடத்தை அலங்கரித்ததால், இந்த மஹா தேசிகனின் கீழ் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஸ்ரீ ரங்கநாதனால் நிறைவேற்ற முடியவில்லை. ஸ்ரீ ரங்கநாதனின் நியாய சாஸ்திரம் முடிந்ததும், 37வது பட்டம் அழகிய சிங்கர் தனது ஆச்சார்யரின் திருவடியை அடைந்தார். ஸ்ரீ ரங்கநாதன் அந்தச் செய்தியைக் கேட்டு மயக்கமடைந்து இரண்டு நாட்கள் உபவாசம் செய்து புரிசை ரங்கஆச்சார் சுவாமிகள் ஆறுதல் கூறினார். 37வது பட்டம் அழகிய சிங்கர் (1899-1905) ஸ்ரீ வைகுண்டம் ஏறிய பிறகு அஹோபில மடம் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் பீடாதிபதி இல்லாமல் இருந்தது. 37வது பட்டம் ஜீயரின் வைகுண்ட பிராப்தியின் போது ஸ்ரீ ரங்கநாதனுக்கு வெறும் இருபது வயதுதான். ஸ்ரீ ரங்கநாதனுக்கு தனது ஆச்சார்யரின் இழப்பு மற்றும் அவரது வித்யா கிரஹநாம் (அவரது படிப்பை முடித்தது) தொடர்ந்த விக்னங்கள் குறித்து வருத்தமடைந்தார்.சாஸ்திரம் பற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஸ்ரீமுஷ்நாமத்திற்குப் பயணம் செய்யுங்கள். 37வது பட்டம் அழகிய சிங்கரின் அன்பான சீடரான ஸ்ரீ ஸ்வர்ணம் கிருஷ்ணாமாச்சார் ஸ்வாமி என்ற பேரறிஞர் அப்போது ஸ்ரீமுஷ்ணத்தின் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரத்தில் வசித்து வந்தார். இந்த சதாச்சார்யரின் கீழ் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசையால் உந்தப்பட்டு ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ முஷ்ணத்திற்கு வந்தார். ஸ்ரீ ரங்கநாதனின் சிஷ்யனாவதற்கு ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி முதலில் தயங்கினார். ஸ்ரீ முஷ்ணம் ஸ்வாமிகள், ஸ்ரீ ரங்கநாதனின் கீழ் படிக்காமல் அழகிய சிங்கர்களிடம் படிக்க வேண்டும் என்று எண்ணினார். அஹோபில பீடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. இறுதியாக, ஸ்ரீ ரங்கநாதனின் விருப்பத்தின் தீவிரத்தால் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமிகள் நெகிழ்ந்து, அவரைத் தம் சிஷ்யனாகக் கொள்ள மனம் வருந்தினார். ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி தனது திறமையான மாணவருக்கு கிரந்த-சாதுஷ்டயம், நியாய சித்தாஞ்சனம், நியாய பரிசுத்தி, சதா திஷாநி, சங்கர பாஷ்யம், சித்தி பிரமநந்தியம் மற்றும் அத்வைதிக சொற்பொழிவுகள் (பரிபாஷை) ஆகியவற்றின் நுணுக்கங்களை கற்பித்தார். அடுத்து, ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமிகள் ஸ்ரீ ரங்கநாதனுக்கு மத்வ மாதா கிரந்தங்களைப் பற்றி உபதேசித்தார். 8 ஆண்டுகளில், திறமையான சிஷ்யன் தனது ஆச்சார்யனிடமிருந்து சர்வ கிரந்த கிரஹணம் முடித்தார். ஸ்ரீ ரங்கநாதன் 28 வயதில் வித்வத் சதாஸில் (அறிஞர்களின் கூட்டம்) கலந்துகொள்ள முழுத் தகுதி பெற்றுள்ளார். ஆண்டு 1907. அவர் இந்த நேரத்தில் 42 வது பட்டம் அழகிய சிங்கர் ஆவதற்கு 22 ஆண்டுகள் இருந்தது. எதிர்கால அஹோபில மாடாதிபதியாக மாஓலன் அவரை ஆசீர்வதிப்பார் என்று அவருக்குத் தெரியாது.3. பல்வேறு வித்வத் சதங்களில் பங்கேற்பு 1905 வாக்கில், திருக்குடந்தை அழகிய சிங்கர் அஹோபில மாதா ஆஸ்தானத்தில் பீடாதிபதி இல்லாத 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த பீடாதிபதியாக (38வது பட்டம்) 37வது பட்டம் அழகிய சிங்கரைப் பெற்றார். 38 வது பட்டம் அழகிய சிங்கர் திருக்குடந்தை அழகிய சிங்கர் என்று அழைக்கப்பட்டார் மற்றும் அவர் 3 ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் (மே 1909 CE) ஆட்சி செய்தார். ஸ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் ஸ்வாமியிடம் தனது படிப்பை முடித்த ஸ்ரீ ரங்கநாதன், திருக்குடந்தை அழகிய சிங்கரின் திருவடிகளை வணங்குவதற்காக ந்ருசிம்மபுரத்திற்கு (ஆதனூர் திவ்ய தேசத்திற்கு அருகில்) சென்றார். அவர் திருக்குடந்தை அழகிய சிங்கரின் காலக்ஷேப கோஷ்டியில் கலந்து கொண்டார், அங்கு அழகிய சிங்கரின் மிகக் கடினமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். மகிழ்ச்சியடைந்த அழகிய சிங்கர், இஞ்சிமேடு ரங்கநாதர் ஸ்வாமியின் ஆழ்ந்த புலமையை அங்கீகரித்து, வேதாந்தக் கடலில் சிரமமின்றி நீந்தியவர் என்று போற்றினார். இஞ்சிமேடு ஸ்வாமிகள் ஸ்ரீமத் அழகிய சிங்கருக்கு தனது பிராணமங்களைச் சமர்ப்பித்துவிட்டு ஸ்ரீமுஷ்ணத்திற்குத் திரும்பி, ஆசார்யரின் பக்கத்தில் சிருஷ்டியை நிகழ்த்தினார். இஞ்சிமேடு ரங்கநாதர் சுவாமிக்கு முப்பது வயதாக இருக்கும் போது (1909 CE) இந்த அழகிய-சிங்கர் தனது ஆச்சாரியரின் புனித பாதங்களை அடைந்தார்.இஞ்சிமேடு சுவாமிகள் தனது முப்பதுகளில் சாஸ்திரங்களின் சிக்கலான அர்த்தங்களின் ஆழமான கட்டளையின் மூலம் சாஸ்திர விவாதங்களில் பல அறிஞர்களை வென்றார். திருவனந்தபுரம் திருநாங்கூர் (நவராத்திரி சபா) மற்றும் ஸ்ரீ பெரும்பூதூரில் வித்வத் சதங்களில் நன்கு அறியப்பட்ட அறிஞர்களுடன் நடந்த விவாதங்களின் போது வெற்றிக் கொடியை ஏற்றினார். இஞ்சிமேடு சுவாமியின் அறிவார்ந்த கடுமையை திருவனந்தபுரம் மகாராஜா அங்கீகரித்து கௌரவித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ராயல் சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராகப் பிற்காலத்தில் இஞ்சிமேடு ஸ்வாமிக்கு முக்கியமான பதவி வழங்கப்பட்டது. விஜய நகர ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக வேண்டும் என்ற வித்யாரான்யாரின் கோரிக்கையை சுவாமி தேசிகன் நிராகரித்தது போல் இஞ்சிமேடு சுவாமியும் அதை நிராகரித்தார். இஞ்சிமேடு சுவாமிக்கு அபரிமிதமான வைராக்யம் இருந்தது மற்றும் உஞ்சிவ்ருத்தி (அக்ரஹாரங்கள் வேண்டுதல்) மூலம் தனது வாழ்வாதாரத்தைத் தொடர்ந்தார். அவர் தனது ஆச்சார்யன், ஸ்வர்ணம் சுவாமியுடன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் குடியேறினார். இந்த காலகட்டத்தில், இஞ்சிமேடு சுவாமிகள் பல சம்பிரதாய சதாக்களில் (திருக்குடந்தை தேசிக உத்ஸவ சதங்கள், மன்னார்கோயில் சதாக்கள், கொடியாளம் சதாக்கள் போன்றவை) நடுவராக இருந்து பல பாராட்டுகளைப் பெற்றார். பதினான்கு வருடங்கள் ஓடின. ஆண்டு 1923 கி.பி1909-1923 CE க்கு இடையில், HH 39வது பட்டம் அழகிய சிங்கர், SrivanN SaThakopa Sri ParAnkusa YadhIndhra Maha Desikan (aasthAnam: 1909-1915 CE) மற்றும் HH The 40th Pattam Azhagad.Shagan மஹா தேசிகன் (ஆஸ்தானம் : 1913-1923 CE) அஹோபில மாதா சிம்ஹாஸனத்தை அலங்கரித்தார். 1923 CE வந்தபோது, ​​அடுத்த அழகிய-சிங்கர், HH 41வது பட்டம், ஸ்ரீவன்என் சதாகோப ஸ்ரீ லக்ஷ்மி-நரசிம்ம சதகோப யத்இந்திர மஹா தேசிகன் அரியணை ஏறினார். அவர் 18 ஆண்டுகள் 9 மாதங்கள் (அக்டோபர் 1941 வரை) ஆட்சி செய்தார்.41வது பட்டம் அழகிய சிங்கர் பீடாதிபதியானவுடன், இஞ்சிமேடு ரங்கனாதாச்சார்ய ஸ்வாமிகளை ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாக வருமாறு அழைத்தார். இந்த அழைப்பை இன்ஜிமேடு சவுமி நன்றியுடன் ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் ஸ்ரீமத் அழகிய சிங்கருக்கும் மாலோலனுக்கும் சேவை செய்து வந்தார்.4. கிரந்த நிர்மாணம் (ஸ்ரீ சூக்திகளின் உருவாக்கம்) ஸ்ரீமத் அழகிய சிங்கர்களின் கிரந்த நிர்மாணம் பற்றிய கண்ணோட்டம்,
கிரஹஸ்தாஸ்ரமத்திலோ அல்லது சன்யாஸ்ரமத்திலோ ஒரு சதாசார்யனின் உயர் முன்னுரிமைப் பணிகளில் ஒன்று, அனுஷ்டானம், சமப்பிரமாணம் மற்றும் சமயப்பிரமாண நூல்களை இயற்றுவது . ஸ்வாமி தேசிகன் 130க்கும் மேற்பட்ட ஸ்ரீ சூக்திகளின் ஆசீர்வாதத்தின் மூலம் இந்த முக்கியமான பணிக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். அழகிய சிங்கர்களில் சிலர் செழிப்பாக உள்ளனர், மற்றவர்கள் சில கிரந்தங்களைத் தயாரித்து, அதற்குப் பதிலாக ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்கு காலக்ஷேபங்கள் மூலம் கிரந்த சாதுஷ்டியங்கள் மற்றும் பிற ஆசார்ய ஸ்ரீ சூக்திகள் அல்லது குத்ருஷ்டிகளுடன் வாதங்களில் ஈடுபட்டுள்ளனர். தரிசனங்கள். மற்றவர்கள் மாலோலனுக்கு நித்ய ஆராதனத்தில் கவனம் செலுத்தி, சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பிரபத்தி செய்ய மாலோலனின் கட்டளையின்படி கிராமங்கள், நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு (ஆஸ்ஏது ஹிமாசல பர்யந்தம்) பயணம் செய்தனர்.கிரந்தங்களின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவண்ணன் சதாகோப ஸ்ரீமன் நாரயனா யத்இந்திர மஹா தேசிகன், 2வது பட்டம் அழகிய சிங்கர், இவர் அஹோபில மடத்தின் நிறுவனர் ஸ்ரீ ஆதிவன்என் சதாகோப ஜீயரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 வது பட்டம் அழகிய சிங்கர் தனது ஆச்சார்யரின் கட்டளைக்கு பதிலளித்து, திருவாராதன க்ரமம், நியாச தசக வியாக்கியானம், சந்தியா வந்தனா பாஷ்யம் மற்றும் பலர் போன்ற அறுபது கிரந்தங்களை இயற்றினார்.ஏறக்குறைய 39 ஆண்டுகள் ஆட்சி செய்த 11 வது பட்டம் அழகிய சிங்கர், சிம்ஹாசனத்தில் தனது நேரத்தை பயன்படுத்தி தர்சன கிரந்தங்கள் (கிரந்த சாதுஷ்டம்கள்) மற்றும் சம்பிரதாய உத்கிராந்தங்கள் (பூர்வாச்சருடைய வர்ணனைகள்) பற்றிய விரிவான காலக்ஷேபங்களை வழங்க விரும்பினார்.17வது பட்டம் அழகிய சிங்கர் அஹோபில மாதா பீடத்தில் ஏறக்குறைய 36 வருடங்கள் தங்கியிருந்து ஸ்ரீரங்கம் பாஷ்யகர் சந்நிதியில் பன்னிரண்டு முறை ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம், பத்து முறை பகவத் விஷயம் காலக்ஷேபம் மற்றும் பல தடவைகள் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் நடத்தினார் கள். ஸ்வாமி தேசிகன் தனது வாழ்நாளில் முப்பது முறை ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் நடத்தியது நினைவிருக்கலாம். இந்த அழகிய-சிங்கர் எந்த கிரந்தத்தையும் தானாக எழுதவில்லை.27வது பட்டம் அழகிய சிங்கர், வைதிகர்களுக்கு அனுஷ்டானங்கள் (ஸ்ரீ ஜெயந்தி நிர்ணயம், சங்கரமண நிர்ணயம், நத்தி ராஜ்ஓ தோஷ நிர்நயம், தாஸ்அவத்ஆரா தீர்கா சோயத்ரா, ந.தி.நா.காயத்ரி) பற்றி இருந்த சந்தேகங்களை நீக்குவதற்காக பல நிர்ணய கிரந்தங்களை இயற்றினார் அசி நிர்நயம்). இந்த நிர்ணய கிரந்தங்கள் இன்றும் அனுஷ்டாக்களுக்கு விளக்குகள். மூல கிரந்தங்கள், காவ்யங்கள் மற்றும் பல ஸ்தோத்திர கிரந்தங்கள் (தேவாரஜ ஸ்தவம், ஸ்ரீ லக்ஷ்மி- ந்ருசிம்ம ஸ்தவம், ஸ்ரீ வீரராகவ ஸ்தவம், ஸ்ரீ ந்ருசிம்ம மங்களம், விஹாகஈஸ்வர ஸ்தவம், ஸ்ரீவான் சதாரி காத்யம் மற்றும் பல) இயற்றினார். அவர் உண்மையில் ஒரு மறுமலர்ச்சி ஆச்சார்யன்.30வது பட்டம் அழகிய சிங்கர் பல பல்லாண்டு/மங்கலம் கிரந்தங்களை (ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மன், ஸ்ரீனிவாசன், ஆராவமுதன், ரங்கநாதன் மற்றும் கீதாஆச்சார்யன்/பார்த்தசாரதி பெருமாள் ஆகியோருக்கு) இயற்றினார். மாலோலனுக்குப் புகழ்பெற்ற சுப்ரபாதத்தையும் அவர் எங்களுக்கு அருளினார், இது மாலோலனின் வெள்ளி மண்டபத்திற்கு முன் தினமும் காலையில் ஸ்ரீமத் அழகிய சிங்கர்களால் பாராயணம் செய்யப்படும். ஒப்பிலியப்பன் கோயில் டீன் ஏஜ் ஆக. தேவன்ஆர்விலகம் குடும்பத்திற்கு இது ஒரு குடும்ப தானம்.அத்திப்பட்டு அழகிய சிங்கர், 34 வது பட்டம் ஜீயர் மற்றொரு அறிஞர் கிரந்த நிர்மாதா ஆவார். அவருடைய ஸ்ரீ சூக்திகளில் சில: (1) ஸ்வாமி தேசிகனின் அதிகார ஸாரவாலி (2) நியாய விம்சதி வியாக்கியானம் (3) பிரம்ம சூத்ர அர்த்த மஞ்சரி (4)தேவர்ராஜா சஹஸ்ர கானி தாண்டகம். இந்த அழகிய சிங்கர் தமிழ் மொழியிலும் ஒரு திறமையான கவிஞர். அவருடைய ஸ்ரீ ஸூக்தி, ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹன் அடைக்கலப் பாட்டு இன்றும் ஸ்ரீ சந்நிதியில் நித்யாஅனுசந்தானத்தின் போதும், ஸ்ரீ மடம் சிஷ்யர்களின் இல்லங்களிலும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் பாராயணம் செய்யப்படுகிறது.37 வது பட்டம் அழகிய சிங்கர் இளையவல்லி வம்சத்தைச் சேர்ந்தவர் மற்றும் சப்த தந்திர வாச்சஸ்பதி என்று அழைக்கப்பட்டார். பதினாறு கிரந்தங்கள் இயற்றினார். அவர்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீ ஆதிவன் சதாகோப யத்இந்திர மஹா தேசிக வைபவம், ஆச்சார்ய சப்ததி, நியாய சித்த அஞ்சன கிரந்த கந்தம் மற்றும் ஸ்வாமி தேசிகன் மஹோத்ஸவ வைபவம் ஆகியவை திருவாஹிந்திரபுரத்தில் ஸ்வாமி புரட்டாசியில் ஒரு வருடத்தில் நடந்த உத்ஸவத்தை நடத்துகின்றன கானின் திருமாழிகை.41வது பட்டம், ஸ்ரீவண்ணன் சதகோப ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹ சதகோப யத்இந்திர மஹா தேசிகன், ஸ்ரீ இஞ்சிமேடு ரங்கநாதர் சுவாமிகளை சன்யாச ஆஸ்ரமத்தில் துவக்கி, 42வது பட்டம் ஜீயராக நியமித்தவர் என்பதால், அவர்தான் நமக்கு முக்கியமானவர். அவர் தனது சொந்த சடங்குகளில் சிறந்த வேத அறிஞர். 41 வது பட்டம் அழகிய சிங்கர் காருக்குறிச்சி அழகிய சிங்கர் என்று அழைக்கப்பட்டார், மேலும் பின்வரும் கிரந்தங்களை நமக்கு அருளினார்: (1) ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ தியான சோபானம் ஸ்ரீ பகவத் தியான சோபானம் (2) ஸ்ரீ வேத பாடஸ்தி (2) ஸ்ரீ வேதபாதஸ்தி (3) ஸ்ரீ வேதம் ஸ்தவம் (4) ஸ்ரீ நித்ய ப்ரார்த்தன் காரிகாவலி (5) ஸ்ரீ ஆச்சார்ய தினச்சார்யா மற்றும் (6) ஸ்ரீ மஹா லக்ஷ்மி காத்யம் அத்திப்பட்டு அழகிய சிங்கரின் வைபவம்.HH 42வது அழகிய சிங்கரின் கிரந்தங்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னோடியாக இருந்த அழகிய சிங்கர்களின் இசையமைப்பின் வளமான பின்னணியுடன், HH 42வது அழகிய சிங்கர், தத்வ தீகை, 41வது மலகாத்ய சிங்கர் பட்டம் பற்றிய அறிமுகங்களுடன் பின்வரும் 8 கிரந்தங்களையும் நமக்கு அருளினார். அவர் நிறுவிய ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியாவின் முன்னோடி இதழான வேதாந்த திபிகையில் பல கட்டுரைகள். HH 42வது பட்டம் ஜீயர் எழுதிய 8 கிரந்தங்கள்:நியாச நிஷ்ட மீமாம்ஸா
அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு முன் கிரஹஸ்தராக பாரத சமர்ப்பணம் செய்தார் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் ஸ்வாமி அவர்களால் சடங்குகளைச் செய்தார்.உக்தி நிஷ்டாபாரணம்,உக்திநிஷ்ட ஆபரநோத்தி ஓதம்
ஸ்ரீ சந்நிதியில் நடைமுறையில் உக்தி நிஷ்டையைக் கையாள்வது,கீத அர்த்த சங்கிரஹா வியாக்கியானம்,கிருத்திகா தீப கால நிர்நயம்,
ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள உபகர்மாவுக்கான தேதிகளை நிர்ணயிப்பதில் மிகவும் குழப்பம் ஏற்பட்டபோது, ​​இந்த ஆண்டு (விஷு, 2001) கைக்கு வந்த உபகர்ம கால நிர்ணயம் .ஸ்ரீ ரஹஸ்யத்ரயா வியாக்யா: ஸ்ரீ சார போதினி, மற்றும்விசிஷ்டா அத்வைத வேதாந்த கோசம்இந்த மஹா ஆச்சார்யரின் (பிரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கர், புரிசை கிருஷ்ணாமாச்சார் ஸ்வாமி, பெருக்காரணை ஸ்வாமிகள் மற்றும் பலர்) காலக்ஷேபம் செய்த பல திறமையான சிஷ்யர்கள், இந்த மஹா தேசிகனின் சிறந்த நுண்ணறிவுகளைப் படம்பிடித்து சேமித்து, தங்களுடைய சொந்தமாக நம்மை ஆசீர்வதித்துள்ளனர்.5. ஆஸ்ரம ஸ்வீகாரம்: முன்னுரை ஸ்ரீ உ.வே. இஞ்சிமேட்டு ரங்கநாதர் சுவாமிகளுக்கு கிபி 1929 இல் ஐம்பது வயது, 30 வயது முதல் 50 வயது வரை, அவர் சம்பிரதாய பிரவச்சனம், சதாஸ் அன்வியம்/அத்யாக்ஷம் (பங்கேற்பு மற்றும் நிதானம்) மற்றும் ஸ்ரீ மடம் முதல் 44 ஆண்டுகள் வரை ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் 50 வது ஆண்டுகள். ஆஸ்தான வித்வானாகப் பதவி வகித்த காலத்தில் அவர் விஜய யாத்திரையின் போது 41வது ஜீயருடன் அடிக்கடி பயணம் செய்தார்.42வது அழகியசிங்கர்களுடன் HH 41வதுஸ்ரீ இஞ்சிமேடு ஸ்வாமிகள் ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்த காலத்தில், சேட்லூர் நரசிம்மஆச்சார் ஸ்வாமி (திருவாஹிந்திரபுரம்) என்ற ஸ்ரீ வைஷ்ணவப் பண்டிதர் ஒருவர் ஆச்சார்ய நிஷ்டையின் மகத்துவத்தைப் போற்றி, நிஷ்டாமி உக்தியை நடைமுறைப்படுத்திய ஒரு சந்தர்ப்பம் உண்டு. பல நூறு ஆண்டுகள். ஆச்சார்ய நிஷ்டை என்பது பிரபத்தியின் நான்கு முறைகளில் ஒன்றாகும், இங்கு சரநாகதனின் பிரபத்தி ஒரு சதாசார்யரால் செய்யப்பட்ட பிரபத்தியின் கீழ் உள்ளது. உக்தி நிஷ்டை, பிரபன்னன் தனது ஆச்சார்யனால் உச்சரிக்கப்பட்ட பிரபத்தி வாக்கியங்களை திரும்பத் திரும்பச் சொல்லும் செயலைச் சுற்றி வருகிறது. ஒரு முக்கிய ஸ்ரீ மடம் சிஷ்யர் சேட்லூர் ஸ்வாமிகளால் கீழே இறக்கப்பட்டதைக் கண்டு வேதனையடைந்தார், மேலும் எங்கள் பூர்வாச்சாரியார்களால் நிறுவப்பட்ட ஒரு முக்கிய மற்றும் கால மரியாதைக்குரிய நடைமுறையாக உக்தி நிஷ்டையின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தவும், குழப்பத்தை நீக்கவும் உதவுமாறு இஞ்சிமேடு ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார்.இந்த சவாலை ஏற்றுக்கொள்வது குறித்து காருக்குறிச்சி அழகியசிங்கரிடம் இஞ்சிமேடு சவுமி ஆலோசனை செய்து உக்தி நிஷ்டையின் மகிமையைப் பாதுகாப்பதற்காக இந்த கிரந்த லேகான கைம்கார்யத்தில் (கிரந்தம் எழுதும்) ஈடுபடும் பாக்கியம் பெற்றார். சிந்தாமாநி, நியாசொல்லாசம், நியாச ரீதி மற்றும் பின்வரும் மூன்று கிரந்தங்களை இயற்றினார்:நியாச நிஷ்டா மீமாம்ஸா,உக்தி நிஷ்டாபாரணம், மற்றும்உக்தி நிஷ்டாபரணஓதிஓதம்அவர் அடுத்ததாக 41வது அழகிய சிங்கரின் புனிதப் பாதங்களில் அவர்களை வைத்து மூன்று கிரான்ட்களுக்கு ஒப்புதல் கோரினார். உக்தி நிஷ்டையைப் பாதுகாப்பதில் புலமையின் தரத்தில் HH அழகிய சிங்கர் மகிழ்ச்சியடைந்தார், அவருடைய ஆட்சிக்குப் பிறகு ஸ்ரீ மடத்தின் அரியணை ஏறுவதற்கு இஞ்சிமேட்டு ஸ்வாமி மிகவும் பொருத்தமான வாரிசாக இருப்பார் என்று அவர் மனதில் முடிவு செய்தார். இஞ்சிமேடு ஸ்வாமி இந்த கிரந்தங்களை முடித்தபோது அவருக்கு சுமார் 46 வயது இருக்கலாம்.6. சின்ன அழகிய சிங்கராக ஆஸ்ரம ஸ்வீகாரம் (ஏப்ரல் 1929) நான்கு ஆண்டுகள் ஓடின. இஞ்சிமேடு சுவாமி ஐம்பது வயதை எட்டினார். HH 41வது அழகிய சிங்கர் 1929 CE இல் நோய்வாய்ப்பட்டார் மாலோலனின் நித்யா ஆராதனம் மற்றும் சம்பிரதாயா அபிவர்த்தனம் (வளர்ச்சி) ஆகியவற்றில் அவருக்குப் பின் பொருத்தமான ஒருவரை நியமிப்பது குறித்து அவர் கவலைப்பட்டார். இஞ்சிமேடு ஸ்வாமியை விட வேறு யாரையும் அவரால் நினைக்க முடியவில்லை. ஸ்ரீ மடம் சிஷ்யர்களை ஆசிர்வதிக்கவும், அவிச்சின்னப் பரம்பரை (ஆதிவான் சடகோப ஜீயர் தொடங்கி ஆச்சாரியார்களின் உடைக்கப்படாத பரம்பரை) வளரவும் இஞ்சிமேடு ஸ்வாமியை அவர் தனது வாரிசாகக் கேட்டுக்கொண்டார். இஞ்சிமேடு ஸ்வாமிக்கு பிரியா பார்யாயி (அன்புள்ள மனைவி) மற்றும் ஒரு இளம் மகளும் இருந்தனர். அவரது மனைவிக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், இஞ்சிமேடு ஸ்வாமியால் தனது ஆச்சார்ய நியமத்தை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அஹோபிலத்தில் உள்ள ஸ்ரீ மடத்தின் ஸ்தாபக ஜீயருக்கு மாலோலன் வழங்கிய பிரேக்ஷா மந்திரத்தை காருக்குறிச்சி அழகிய சிங்கர் மூலம் பெற்று சின்ன ஜீயர் ஆனார். சில நாட்களுக்குப் பிறகு, HH 41வது ஜீயரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெரிய ஜீயர் (HH 41 வது ஜீயர்) மற்றும் சின்ன ஜீயர் (HH 42 வது ஜீயர்) இருவரும் கடமைகளைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்காக மாலோலனின் கைம்காரியம் மற்றும் கால்காஷேபம் செய்தனர்.பெரிய மற்றும் சின்ன ஜீயர்களின் கூட்டு ஆட்சி 12 ஆண்டுகள் சுமூகமாக (1929 முதல் 1941 வரை) தொடர்ந்தது. HH 41வது படிப்படியாக வலுவிழந்து, சின்ன ஜீயர் சிஷ்யருக்கு விஸ்வரூப மங்கள ஹரத்தி, அபிகமன ஆராதனம், தீர்த்த வினியோகம் மற்றும் ஸ்ரீ சதாரி ஆசீர்வாதங்களை செய்தார். காலக்ஷேபம் சமயங்களில், பெரிய அழகிய சிங்கர் சில வார்த்தைகளுடன் தொடங்குவார், சின்ன அழகிய சிங்கர் அங்கிருந்து காலக்ஷேபங்களை முடிப்பார் (1) ஸ்ரீ பாஷ்யம் (2) ஸ்ருத ப்ரகாசியாகி வர்ணனை (3) ஆச்சார்ய ராமனுஜரின் கீதா பாஷ்யம் (4) கீதையில் சுவாமி தேசிகனின் தாத்பர்ய சந்திரிகை விளக்கவுரை (5) பகவத் விசயம் (பிள்ளையார்/திரு ஆறாயிரம்பாடியின் திருவாய்மொழி விளக்கவுரை) (6)ஈடு முப்பாட்டாராயிரப்படி வடக்கு திருவீதிப் பிள்ளைகள் (7)பஞ்ச ராவிய த்யாஸ்ய நூல்கள் ஐந்து) ஸ்வாமி தேசிகனின் முழு சில்லாராய் ரஹஸ்யங்கள், (9) ஸ்வாமி தேசிகனின் ந்யாய சித்த அஞ்சனம்/எஸ்டி (10) எஸ்டியின் நியாய பரிசுத்தி (11) எஸ்டியின் தத்வ முக்த கலாபம் (12) எஸ்டியின் சர்வ அர்த்த சித்தி (13) ஆதிக்ரனா 4) ஸ்வாமி தேசிகன் மற்றும் நிகாமந்த குருவின் ஸ்ரீ சூக்திகளின் அடுத்த தலைமுறை வர்ணனையாளர்களால் இந்த ஸ்ரீ சூக்திகளில் எந்த ஒரு வாக்கியத்தையும் தவறவிடாமல் அதிகார தீகஅம்ருதம், அதிகார கல்ப தரு, மஹாஆச்சார்யரின் சதா-துஷணி சண்டமாருதம், தத்வ தீகை மற்றும் பலர்.7) ஆஸ்தான ஸ்வீகாரம் (அக்டோபர் 24, 1941) 42வது ஜீயர் சன்யாச ஆஸ்ரமத்தில் நுழைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மரியாதைக்குரிய ஜீயருக்கு இப்போது 62 வயது. அவரது சாஸ்திர ஜென்~ஆனம் மற்றும் அனுஷ்டான பலம் மற்றும் வைராக்யம் ஆகியவை பழம்பெருமை வாய்ந்தவை. 1941 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 41 வது ஜீயரின் உடல்நிலை மோசமடைந்தது, அதே ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஜீயர் தனது ஆச்சார்யரின் திருவடியை அடைந்தார். 42 வது ஜீயர் பீடாதிபதியானார். HH 42 வது ஜீயர் வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், தேசிக பிரபந்த சேவைகளுடன் HH 41 வது ஜீயருக்கு பதின்மூன்று நாள் கைம்காரியங்களை நிகழ்த்தினார் மற்றும் கைம்காரியத்தில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சால்வை மற்றும் ஏராளமான தக்ஷிணைகளை வழங்கி கௌரவித்தார்.ஜீயர் பட்டாபிஷேகம் & கார்த்தவ்ய பிரதிஞை (1941) 41வது ஜீயர் ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஏறிய 14வது நாளில், 42வது ஜீயர் காவிரி நதியின் புனித நீரில் ஸ்ரீ வைஷ்ணவப் பண்டிதர்கள் நிறைந்த சபாயில் நீராடினார். சுவாமி, கோஷ்டிபுரம் சுவாமி மற்றும் பலர். அது ஒரு மஹோத்ஸவம். பட்டாபிஷேகம் தேதி விஷு சம்வத்சரம், ஐப்பசி 9, சுக்ல பக்ஷ பஞ்சமி (ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்குப் பிரியமான வெள்ளிக்கிழமை) 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 42வது ஜீயர் ஸ்ரீ மலோலனின் ஆராதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு தசாப்தங்களுக்கு முன்பு இருந்தது.காத்தவ்ய பிரதிஞை சின்ன ஜீயராக இருந்த காலத்தில், இந்த மதிப்பிற்குரிய ஆச்சார்யன் பீடாதிபதியாக இருந்த காலத்தில் தான் என்ன சாதிக்க விரும்புகிறாரோ என்று கணிசமான அளவு யோசித்தார். அவர் இப்போது அந்த விருப்பங்களை வெளிப்படுத்தினார் மற்றும் மாலோலனின் ஆசீர்வாதத்துடன் அவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூடியிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் முன் (கார்த்தவ்ய பிரதிஜ்ஞை) சபதம் செய்தார். 42 வது ஜீயரின் ஆட்சியை பொற்காலமாக வரையறுத்த இந்த ஏழு பெரிய கைம்காரியங்கள்:ஸ்ரீ வைஷ்ணவ இளைஞர்களின் க்ஷேமத்திற்காக வேத-பிரபந்த-சாஸ்திர பாடசாலையை நிறுவுதல். (கடந்த ஆறு தசாப்தங்களில் பல ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களைப் பயிற்றுவித்த புகழ்பெற்ற மதுராந்தகம் பாடசாலையாக இது வளரும்).ஆண்டுக்கு ஒரு முறையாவது அறிஞர்களின் வருடாந்திர மாநாட்டின் மூலம் சம்பிரதாய வித்வான்களின் ஞா~ஆனத்தை மேம்படுத்துதல். (அழகிய சிங்கர்களின் நடுநிலை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களின் இந்த கூட்டம் புகழ்பெற்ற மாலோல சதாக்கள் ஆகும்).இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் கங்கா (பிரயாக் மற்றும் பலர்) கரையில் ஸ்ரீ மடம் கிளைகளை நிறுவுதல் மற்றும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களின் ஜென்~ஆனம் மற்றும் ஆஸ்திக்யத்தை மேம்படுத்துவதற்காக சம்பிரதாய வித்வான்களை நியமித்தல்.Rg மற்றும் சாம சாக்கைச் சேர்ந்த ஸ்ரீ மடம் சிஷ்யர்களின் நலனுக்காக ஆஹ்னிகா கிரந்தங்களை உருவாக்குதல்.ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய சாரம் பற்றிய வர்ணனையை முடித்து ஸ்ரீ சூக்தியாக (சார போதினி) வெளியிடுதல்.ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் ஆஸ்திகத்தை வளர்க்க “ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியா” என்ற பெயரில் ஒரு புதிய மாத இதழின் உருவாக்கம்.நாட்டில் நாஸ்திக்யம் வளர்ந்து ஆஸ்திக்யம் குறைந்து வருவதால், ஒருவரின் ஸ்வதர்மங்களைப் புரிந்துகொள்ள உதவும் உபன்யாசம்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வித்வான்களை அனுப்புவது. (இது ஆறு தசாப்தங்களுக்கு முன்பு).புத்தன்கோட்டம் ஸ்வாமியின் அஞ்சலி HH 42 வது ஜீயர் ஒரு சிறந்த அறிஞரான ஸ்ரீ உ.வே. இந்த உன்னதமான மற்றும் முன்னோடியான பணிகளை நிறைவேற்ற உதவுவதற்காக புத்தங்கொட்டகம் ஸ்ரீனிவாசாச்சார் சுவாமிகள் அவரது அமைச்சராக இருந்தார்.பட்டாபிஷேக நிகழ்விற்காக அவர் இயற்றிய 8 ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு சிறப்புக் கவிதையைப் படித்த புத்தங்கொட்டகம் ஸ்வாமிகள் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். ஸ்ரீ புத்தங்கோட்டகம் ஸ்வாமிகள் தனது புதிய ஆச்சார்யருக்கு வணக்கம் செலுத்தத் தேர்ந்தெடுத்த சிறப்பு மரியாதை வார்த்தைகள்: ஆஜன்ம சுத்த சரிதா: (பிறப்பிலிருந்தே பழுதற்ற நடத்தையில் ஒன்று), அகில சத்குணத்யா: (அனைத்து மங்களகரமான குணங்களின் இருப்பிடம்), கமானியா சீல: (உன்னதமானவர்களில்) ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானம்), முன்இந்திர: (முனிவர்களின் ராஜா).ஸ்லோகம் ஒன்றில், ஸ்ரீ மந்திரி ஸ்வாமிகள் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் தனது பகல் மற்றும் இரவுகளை எவ்வாறு செலவிடுகிறார் என்பதை விவரித்தார்:யஸ்ஸந்ததம் வகுலபூஷண வாங்மரந்தை:ஸ்ரீ பாஷ்ய ஸூக்தி ஸுரசிந்துஜ்~நராவகாஹை:வேதாந்த தேசிக வச்சோ அம்ருத தாராய சகாலம் நயந்தி அனுதினம் காமனீய சீல:-4த் ஆச்சலத்தின்.(பொருள்): ஸ்வாமி நம்மாழ்வாரின் ஸ்ரீ சூக்திகளின் மகரந்தத்தை ருசித்து, ஆச்சார்ய ராமஅனுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தின் அமிர்தப் பெருங்கடலில் நீந்தி, ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ சூக்தி வாக்கியங்களின் அம்ருதப் பொழிவில் திளைக்கிறார் இந்த உன்னத ஆத்மா.HH 42 வது ஜீயரின் கவிஞர்/அரசர் அடுத்த ஸ்லோகத்தில் இந்த முனிவர்களின் அரசனுக்கு நிகரானவர் யாரும் இல்லை என்று கூறுகிறார் (நிஸ்ஸம்ஓயம் முன்இந்திர:). ஜீயரின் பல்வேறு உன்னத அம்சங்களை அவர் வியாசா முனிவர், பக்த பிரஹலாதன் மற்றும் முனிவர் சுக பிரம்மம் ஆகியோருடன் ஒப்பிடுகிறார். இந்த ஸ்லோகத்தில்.8. திவ்ய தேச மங்களாசாசனங்கள் நமது ஆச்சாரியர் திருவரங்கச் செல்வன் என்று அழைக்கப்பட்டார். 1941 இல் அவரது பட்டாபிஷேகத்திற்குப் பிறகு 42 வது ஜீயர் விஜயம் செய்த முதல் திவ்ய தேசம் ஸ்ரீ ரங்கம் ஆகும். அவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தசாவதார சந்நிதியை தனது இல்லமாக ஆக்கி, திருவெள்ளரையில் (ஸ்ரீ புண்டரிகாவல்லி சம்மேத ஸ்வேதூர். உத்ஹன்) மங்களாசாசனம் செய்தார் (உறையூர் வள்ளி/வாச லக்ஷ்மி சமேத அழகிய மணவாளன்) அடுத்து பெரியாழ்வார் திருவெள்ளறைப் பெருமாளை கண்ணனாக (கண்ணனே திருவெள்ளாரை நின்றாய்) காட்சியளித்து, அங்கே கண்ணனுக்கு காப்பிடல் விழா நடத்தினார். திரு உறையூர் என்பது திருப்பாணா ஆழ்வாரின் அவதார ஸ்தலம். இந்த மூன்று மங்களாசாசனங்களும் ஜீயரின் பட்டாபிஷேகத்திற்குப் பிறகுதான்.இப்போது, ​​HH ஜீயர் சோழநாட்டு திருப்பதிகளின் மங்களாசாசனங்களைத் தயாரித்தார். அடுத்த வரிசையில் நடுநாட்டு திருப்பதிகள் இடம் பெற்றன. தொண்டை நாடு திருப்பதிகள் அடுத்தடுத்த மங்களாசாசன க்ஷேத்திரங்களாகும். அபிமான ஸ்தலங்கள் (வடுவூர், ராஜா- மன்னார் கோயில், மதுராந்தகம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் பலர்), ஸ்ரீ மடம் சந்நிதிகள் (ஊரகடம், திருவெண்ணை நல்லூர், ஆத்தனூர், புள்ளாம்பூத்தம்-குடி, அஹோபிலம், திருவெள்ளூர்) ஆகியவையும் இந்த கிராமத்தில் அடங்கும்.முடிந்த போதெல்லாம், ஜீயர் பூர்வாச்சாரியாரின் அவதார ஸ்தலங்களுக்கும் (ஸ்ரீ பெரும்பூதூர், துப்புல்/திருத்தங்கா மற்றும் பலர்) ஸ்ரீ மடம் ஆச்சாரியார்கள் பிறந்த தலங்களுக்கும் (அத்திப்பட்டு, களத்தூர், திருவள்ளியூர் ஆதிரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குறிச்சி மற்றும் பலர்), ஸ்ரீ மடம் ஜீயர்களால் நிறுவப்பட்ட பல அக்ரஹாரங்கள் (உரகடம் /மூன்றாம் அழகிய சிங்கர்,இஞ்சிமேடு/ஆறாம் ஜீயர் மற்றும் பலர்). இந்த எல்லா க்ஷேத்திரங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஸ்ரீ மடம் பூர்வாச்சார்ய கிராமங்களிலும், திவ்ய தேசங்களிலும், பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பரண்யாசம் சடங்குகள் பல ஸ்ரீ மடம் சிஷ்யர்களுக்கு நடந்தன.ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கருக்கு அருமையான பாடும் குரல் இருந்தது மற்றும் ராக லட்சணங்களில் நல்ல அறிவு இருந்தது. ஹம்சத்வனி அவருக்கு மிகவும் பிடித்த ராகங்களில் ஒன்று. அவர் இனிமையான குரலில் மங்களாசாசனங்களைச் செய்து ஸ்தோத்திரங்களை இனிமையாக வழங்கினார். பாசுரங்கள், ஸ்வாமி தேசிக ஸ்தோத்திரங்கள் திவ்ய தீசங்களின் எம்பெருமானுக்கு முன்பாக ஓதப்பட்டது. மங்களாசாசனம் த்வஜ ஸ்தம்பத்தில் சாஷ்டாங்கமாக “சமஸ்த பரிவார ஸ்ரீமதே நாராயனாய நம:” என்ற மந்திரத்துடன் தொடங்கியது. குரு பரம்பரைக்கு வணக்கம் கூறும் சாஸ்திரத்தின் படி பாலி பீடத்தில் அடுத்த நிறுத்தம் இருந்தது (பாலி பீட சம்ஐபிஈ து நாமமேத் குரு பரம்பரம்). பலி பீடத்தில் ஆச்சார்ய வந்தனம் மற்றும் அஹங்கார-மாமகாரங்களின் தோஷங்களை நீக்குவதற்கான பிரார்த்தனை இவ்வாறு செய்யப்படுகிறது. அடுத்து பெருமாள் சந்நிதியில் பிரதக்ஷிணம் மற்றும் மங்களாசாசனம் நடந்தது. தாயார் சந்நிதி மங்களாசாசனம் அடுத்து வந்தது. ஸ்ரீ தேவராஜப் பெருமாள் சந்நிதியில், திருக்கச்சி நம்பியைப் போலவே திருவாலவட்ட கைம்காரியத்தை ஜீயர் நிகழ்த்தினார். அஹோபிலத்தில், ஜீயர் குகைக்கோயிலில் மூலவருடன் மாலோலன் உத்சவரின் சேர்த்தி சேவையை, அவரது ஆராதன மூர்த்தியுடன் கொண்டாடினார். அங்கு இருவருக்கும் ஆராதனை செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் ஒரு சில பாக்யசாலிகளுக்கு சரணாகதியை நிகழ்த்தினார். அங்கிருந்த ஜீயர் மூலம் மந்திரராஜ பாத ஸ்தோத்திரம் ஓதப்பட்டது. ஜீயர் தனது 24 ஆண்டுகால ஆதனா அலங்காரத்தில், மாலோலனின் கட்டளைப்படி பல சிஷ்யர்களுக்கு உபய அனுஷ்டானங்களை அருளினார்.9. மலோலா வித்வத் சதாக்கள் ஸ்ரீரங்கம் தாசாவதாரா சந்நிதியில் கார்த்தவ்ய பிரதிக்ஞையின் முதல் மாலோலா சதாக்களில் ஒருவரின் மரணதண்டனையின் ஒரு பகுதியாக. ஜீயரின் திருநக்ஷத்திரத்தில் (தை உத்தராடம்) இந்த சதங்கள் கூட்டப்பட்டது. விசிஷ்டாத்வைத வேதாந்த வாக்கிய அர்த்தங்கள் விவாதிக்கப்பட்டன. அடுத்த தை உத்தராடத்தில் இரண்டாவது மாலோல வித்வத் சதஸ் காஞ்சிபுரத்தில் நடந்தது. மூன்றாவது கொடியாலம் கிராமத்தில் இருந்தது. அஹோபில மடத்தின் முதல் ஜீயர் பிறந்த இடமான திருநாராயணபுரம், மாலோல வித்வத் சதஹஸ்களுக்கு மற்றொரு தலமாக விளங்கியது. பெங்களூர் துளசி தோட்டம் மற்றொரு மாலோலா சதாக்களுக்கான சிறப்புத் தளமாகும். ஹைதராபாத், திருநின்றவூர் (பக்தவத்சலப் பெருமாள் மற்றும் மத்சாவித்திரி தாயார்) மற்ற சதாக்களின் தலங்கள். ஜீயரின் இந்த கார்த்தவ்ய பிரதிக்ஞையை நிறைவேற்றுவதன் மூலம் விசிஷ்டாத்வைத வேதாந்த ஞான ஆனமும் ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களுக்கான அங்கீகாரமும் நிறைவேற்றப்பட்டது. HH 43வது அழகிய சிங்கரின் (தேவன்ஆர்விலகம் அழகிய சிங்கர்) ஆஸ்ரம ஸ்வீகாரத்திற்குப் பிறகு, சின்ன மற்றும் பெரிய அழகிய சிங்கர்கள் இருவரும் சேர்ந்து சதாக்களை நடத்தினர். அப்படிப்பட்ட ஒரு கூட்டு அமர்வுகள் கர சம்வத்சரத்தில் (1952 CE) நந்தன சம்வத்சாரத்தின் போது (1953 CE), பெரிய அழகிய சிங்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் சதங்களில் நேரில் ஆஜராகவில்லை, மேலும் அவர் ஓய்வெடுக்கும் இடத்திலிருந்து வித்வான்களை ஆசீர்வதித்தார் மற்றும் சின்ன அழகிய சிங்கரை சதாக்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும்படி கூறினார். இது தாய் மொழியில் இருந்தது. அடுத்த மாதம் பெரிய ஜீயர் பரம பாதம் ஏறினார்.10. சதுர் மாஸ்யம்ஸ் ஹெச். இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தின் பாதி சின்ன ஜீயர். அந்தக் காலத்தில், சின்ன ஜீயரின் சாதுர்மாஸ்யத் தலங்கள் பெரிய ஜீயரின் தலங்களாகவே இருந்தன. ஜீயர் பீடம் ஏறிய பிறகு, பெரும்பாக்கத்தில் (தக்ஷிண அஹோபிலம்), திருவெள்ளூர், சிங்காநல்லுர் (திருவெள்ளூர், சிங்காநல்லுார்) (திருவெள்ளூர், திருவண்ணாமலை) சமஸ்கிருதராமன் சன்னதியில் சாதுர்ம ஆஸ்யம் நடந்தது. கிருஷ்ணா நதி) மற்றும் பிற இடங்கள்.11. வேத பாடசாலையின் ஸ்தாபனம் அக்டோபர் 24, 1951 இல் ஜீயர் ஸ்ரீ மடம் பீடத்தை ஏறினார். அடுத்த மாதம், ஸ்ரீரங்கத்தில் திருநாகையால் கட்டப்பட்ட தசாவதார சந்நிதியில் வேதபாடசாலையை ஜீயர் தொடங்கி வைத்தார். சமஸ்கிருத பாடசாலை அடுத்ததாக மதுராந்தகத்தில் துவாயம் விளக்கு திருப்பதியில் உருவாக்கப்பட்டது. திருக்கோட்டியூர் சௌமிய நாரயனாச்சார் சுவாமிகள் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார். 42வது ஜீயரால் பயிற்சி பெற்ற பத்து அறிஞர்கள் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அடுத்து அதே தளத்தில் பிரபந்த பாடசலை சேர்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெருவாழ்ந்தான் (எனது தாயின் பிறந்த இடம்) அருகே ஒரு கிராமத்தை HH ஜீயர் வாங்கி, மதுராந்தகம் பாடசலையின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அங்குள்ள நிலங்களிலிருந்து வருவாயைத் திருப்பினார். அடுத்த தலைமுறை விசிஷ்டாத்வைத வேதாந்த அறிஞர்களைப் பயிற்றுவிப்பதற்காக மதுராந்தகம் பாடசாலையின் பாதுகாப்பை தொலைநோக்குடைய ஜீயர் உறுதியளித்தார். ஹெச்.ஹெச் 43 வது ஜீயர் தனது கிரஸ்தா ஆஸ்ரமத்தின் போது இங்கு அதிபராக இருந்தார்.12. ந்ருசிம்ம ப்ரியா இதழின் ஸ்தாபனம் கிபி 1941 ஆம் ஆண்டு இதே கார்த்திகையின் போது, ​​ஜீயர் மாம்பலத்தின் மகரிஷி வாசுதேவாச்சார் ஸ்வாமிகளை ஸ்ரீ மடத்தின் புதிய மாத இதழின் ஆசிரியராக வருமாறு அழைத்தார். மாலோலன்). ஜீயர் தனது சொந்த ஆசானா அனுசந்தானத்துடன் இந்த இதழை ஆசீர்வதித்தார்:ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா ஶ்ரீந்ருஸிம்ஹ கருணோட்டிதா ஶ்ரீந்ருஸிம்ஹ கடாக்ஷேன ஜீயதாசந்த்ரா-தாரகம் ந்ருஸிம்ஹபாத பக்தானாம் கேஹே கீஹே சாதா வாஸேத் ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா ஹையேஷா ந்ருஸிம்ஹப்ரியா(பொருள்): ஸ்ரீ ந்ருஸிம்ஹனின் எல்லையற்ற நாளிலிருந்து பிறந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா என்ற இந்த ஜர்னல் கடாக்ஷ மற்றும் சங்கல்ப பலங்களுடன் மேலும் மேலும் வளர்ந்து நட்சத்திரங்களும் சந்திரனும் இருக்கும் வரை பிரகாசிக்கட்டும்! ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவின் நாமதேயத்துடன் கூடிய இந்த இதழ் ஸ்ரீ நரசிம்மனின் மனைவியான மஹா லக்ஷ்மியுடன் நமது சிஷ்யர்கள் மற்றும் அபிமானிகளின் அனைத்து வீடுகளிலும் வாழட்டும்!ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியா ஜர்னல் HH தி இஞ்சிமேட்டு ஜீயரின் மங்களாசாசனத்துடன் செழித்து செழித்து, இந்த ஆண்டு ஷஷ்டியப்த போற்றி (60 வயது) மைல் கல்லைக் கடந்துள்ளது. புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்களின் சிறந்த கட்டுரைகள் இங்கு தங்களுடைய நிரந்தர வீடுகளைக் கண்டறிந்துள்ளன. பங்காற்றிய சில அறிஞர்கள் பின்னர் அழகிய சிங்கர்களாக ஆனார்கள் (தேவனார் விளாகம் ஜீயர், முக்கூர் அழகிய சிங்கர் மற்றும் இத்தானிம் ஜீயர்).13. இஞ்சிமெட்டு ஜீயரின் விருப்பமான ஸ்தோத்திரங்கள் ஸ்ரீ மஹாபாரதத்தில் உள்ள ஸ்ரீ பீஷ்ம ஸ்துதி (I.9.33-42) ஜீயரின் தினசரி பிரார்த்தனை (நித்யஅனுசந்தானம்) ஆகும். இந்த பத்து ஸ்லோகங்களும் பிருஷ்மரின் கிருஷ்ண பக்திக்கு சான்றாகும். குரு க்ஷேத்திரப் போர்க்களத்தில் தனக்கு முன்னால் நிற்கும் ஸ்ரீ பார்த்தசாரதியின் மீது (பீஷ்மர்) தன் மனதையும், பேச்சையும், கண்களையும் ஒருமுகப்படுத்தி, இறைவனைப் புகழ்ந்து, தன் ஆத்மாவை இறைவனின் பாதத்தில் வைத்தார். ஸ்வச்சந்த ம்ருத்யுவின் ஆத்ம ஜோதி. அவர் விரும்பும் வரை மரணத்தைத் தடுத்து நிறுத்துங்கள்), பீஷ்மர், கீதாஆச்சார்யரின் புனித பாதங்களுக்குள் நுழைந்தார்.ஸ்ரீ பீஷ்ம ஸ்துதியின் பத்தாவது மற்றும் இறுதி ஸ்லோகம் பொருள் நிறைந்தது:தமிமஹாமஜம் ஸரீரபாஜாம்ஹ்ருதி-ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதாநம்ப்ரதித்ருசமிவ நைகதார்கம்ஏகம் சமாதிகதோ ⁇ஸ்மி வித்யுத-பேதாமோஹ:(பொருள்): நித்திய/பிறப்பற்ற இறைவன், தன் படைப்புகள் அனைத்தின் இதயங்களிலும் பிரகாசிக்கும் உன்னதமானவன் என்பதை அடியென் இப்போது உணர்ந்து கொண்டான்; என் அறிவாற்றல் இப்போது துரத்தப்பட்டது. வானத்தில் உள்ள சூரியன் மட்டுமே கண்ணால் உணரப்படுகிறது. இந்த ஒரு பொருளைப் பார்க்கும் கண்கள் பல, ஆனால் பல கண்களால் பார்க்கப்படும் ஒரே சூரியன். சூரியனின் உருவம் (பிரதி-பிம்பம்) பலரால் வெவ்வேறு பொருட்களாகக் காணப்படுவது போல, சூரியனில் எந்த மாற்றமும் இல்லை, பல இதயத் தாமரைகளில் வசிப்பவராகக் காணப்பட்ட இறைவன் இன்னும் அதே உன்னதமானவர் என்பதை அடியேன் இப்போது தெளிவாக புரிந்து கொண்டார். இருப்பது. இந்த ஞாஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னம், சதுஸ்லோகி, ஸ்வாச்சார்ய தியான ஸ்லோகம் (ஸ்ரீமுஷ்நாம் ஸ்வர்ணம் ஸ்வாமி), சூழ் விசும் பாசுரம் – ஸ்வாமி நம்மாழ்வாரின் முகில் பாசுரம், சரநாகதி காத்யம், ஸ்வாமி தேசிகன் ஆகியோருக்கு மீண்டும் வழங்கப்பட்டது ஜீயர்.14. தேவனார்விளாகம் சுவாமியை அவரது வாரிசாக நியமித்தல் பெரிய மடாதிபதிகளுக்கு நல்ல நேரத்தில் வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கும் திறமை உண்டு. சம்பிரதாயம் வளர இந்த உன்னத செயலில் மாலோலன் அவர்களுக்கு உதவுகிறார். HH 42வது ஜீயர் ஒரு சிறந்த அறிஞரும், ஆத்ம குண சம்பூர்ணருமான தேவனார் விலகம் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹாச்சார் ஸ்வாமியைத் தம் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார். இந்த ஸ்வாமிதான் என்னுடைய பஞ்ச சம்ஸ்கார ஆச்சார்யன். அவருடைய தேஜஸ், வித்வத், பணிவு, அனுஷ்டானம் ஆகியவை முன்மாதிரியானவை. இவரது தந்தை 27வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் மகளின் ஸ்விகார புத்திரர் ஆவார். 26வது அழகிய சிங்கரின் மகன் இது அனைத்தும் குடும்பத்தில் உள்ளது. பாஸ்டனில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மன், அவருக்குப் பின் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரால் தேர்ந்தெடுக்கப்பட்ட HH 43வது ஜீயர் பற்றிய தகவல் தரும் கட்டுரைகளைத் தொடர்கிறார். எனவே அஸ்மத் ஆச்சார்யன் பற்றி ஒரு சுருக்கமான சுருக்கத்தை தருகிறேன்:HH 43வது அழகிய சிங்கரின் சுருக்கமான சரிதம்அவதாரம்:1901 CE, பிளாவா கார்த்திகை, பூராடம்வித்யா கிரஹநாம்:திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரியில் நியா மீமாம்சா சிரோமணி பட்டம் பெற்றவர்பஞ்ச சம்ஸ்காரம்:HH 40வது பட்டம் அழகிய சிங்கர்ஸ்ரீ பாஷ்ய கிரந்த காலக்ஷேபம்:HH 40வது ஜீயருடன் துவங்கி, HH 41வது ஜீயரின் கீழ் முடிக்கப்பட்டதுபிரபத்தி/உபாய அனுஷ்டானம்:HH 41வது அழகிய சிங்கரிடமிருந்துபிரபத்திக்குப் பிறகு கிரஹஸ்தராக நடத்துதல்:”ஸ்நானம்-சந்தியா- ஜபோ-ஹோமோ-தேவதானாம் ச பூஜானம்! வைஸ்வதேவ்அதி தேயம் ச ஷட்கர்மணி தினே தினே”. பகவத் ஆராதனம், காலக்ஷேபம் அவரது புனித பாதங்களைத் தேடுபவர்களுக்கு அவரது நாட்களை நிரப்பியது.மதுராந்தகத்தில் பயிற்றுவிப்பாளர்:திருக்கோட்டியூர் ஸ்வாமிகளின் வைகுண்ட பிராப்திக்குப் பிறகு மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீ மடம் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றினார். ஸ்ரீ பாஷ்யாதி, அஹ்னிகா கிரந்தங்கள் வித்யாஆர்திகளுக்கு அங்கு அவர் கற்பித்தார்.சன்யாசாஸ்ரம் ஸ்வீகரநாம்:விக்ருதி தாய் 27 (பிப்ரவரி 9, 1951 CE) அன்று ஸ்ரீ உ.வே. ஸ்ரீமடத்தின் 43வது ஜீயராக தேவனார் விளாகம் ஸ்வாமி லக்ஷ்மிநருசிம்மச்சார் சுவாமிகள் ஆனார்.பட்டாபிஷேகம்:மார்ச் 13, 1953 சி.இ.வைகுண்ட ப்ராப்தி:நவம்பர் 24, 1957 நைமிசாராண்யத்தில்.பிடித்த பாசுரங்கள்:திருவிநகர் காளியன் மற்றும் சுவாமி நம்மாழ்வாரின் பாசுரங்கள்.15. இஞ்சிமெட்டு அழகிய சிங்கர் பரம பதம் ஏறிய ஆண்டு நந்தன சம்வத்சரம். மாதம் தாய். ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அடுத்த மாதத்திற்கான மாலோலா சதாஸ் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த சதாக்கள் மற்றும் பிற நித்ய நிர்வாஹ கைம்கார்யங்கள் மற்றும் ஆராதன-காலக்ஷேப-உபாய அனுஷ்டானம் கடமைகளின் திட்டமிடலுக்கு முழுப் பொறுப்பாக HH 43வது அழகிய சிங்கருக்கு உத்தரவிடப்பட்டது.நாளுக்கு நாள், எச்.எச்.இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் உடல் பலவீனமடைந்து வந்தார். அவன் மனம் எப்போதும் மாலோலனைச் சுற்றியே இருந்தது. அவர் சரநாகதி காத்யம் மற்றும் த்வயம் ஆகியவற்றை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தார். சிஷ்யர்கள் ஸ்ரீ பீஷ்ம ஸ்துதி மற்றும் ஸ்வாமி ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னம் ஆகியவற்றைப் படித்துக் கொண்டிருந்தனர். பாராயணங்களால் ஸ்ரீமத் அழகியசிங்கரின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தன. திருவெள்ளூர் திவ்ய தேசத்தில் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தனது இறுதி நாட்களை ஸ்ரீமன் நாரயணனின் லீலா விபூதியில் கழித்தார். ஸ்ரீமத் அழகிய சிங்கர் நித்ய கைம்காரியத்திற்காக ஸ்ரீமன் நாரயனுடன் இணைவதற்காகத் தனது இறுதி மூச்சை விட்டபோது, ​​சின்ன அழகிய சிங்கர் (தேவனார் விளாகம் அழகிய சிங்கர்) “சூழ்விசும்பனி முகில்-” பாசுரம் தசத்தை ஓதினார். திருவெள்ளூர் வீரராகவனின் பெரிய கோயில் மணி முழக்கமிட்டு, இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் தன்னடிச்சோதிக்கு வந்ததை உலகுக்கு அறிவிக்கும் வகையில், பிரம்மோற்சவம், பெருமாள் மேரிஆதாய், பிரம்மோற்சவத்தின் தென்கரையில் ஏந்திச் செல்லப்பட்டது திருவெள்ளூர் நிரந்தர ஓய்வுக்காக வீரராகவனின் புஷ்கரணி (ஹ்ருத் பாபனாசினி). HH அழகிய சிங்கர் மேலும் மூன்று முந்தைய அழகிய சிங்கர்களின் (33வது, 34வது மற்றும் 35வது அழகிய சிங்கர்கள்) BrundhAvanams உடன் இணைந்தார்.

16. இஞ்சிமெட்டு அழகிய சிங்கரின் தனியனும் அவரது ஆத்ம குணங்களும் 
ஸ்ரீ உ.வே. வித்வான் புரிசை நடதூர் கிருஷ்ணமாச்சார் சுவாமிகள் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் ஒரே பேரன் ஆவார். புரிசை ஸ்வாமி ஒரு சிறந்த சம்பிரதாய அறிஞர் மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம பிரியாவின் தற்போதைய ஆசிரியர் ஆவார். அவர் தனது மரியாதைக்குரிய தாத்தாவுக்காக ஒரு நகரும் தனியனை இயற்றினார்:
SrirangEsa YathIndhunA kAruNayA asou syAth Ithi prEkshithamkhAyatha Srinarasimha Kaarijamunid-paadhAmbhujEndhinthiramDhAnthi-KshAnthi DayAdhibhi: SubhaguNai: BhAntham BhhrEshamsrayEஇங்கே, புரிசை சுவாமிகள், 1887 ஆம் ஆண்டில், எட்டு வயது சிறுவனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் நிகழ்ச்சியின் மூலம் களத்தூர் அழகிய சிங்கரின் (35வது பட்டம்) கருணையுள்ள அனுக்ரஹத்தைப் பற்றி குறிப்பிடுகிறார், பின்னர் அவர் ஸ்ரீ மடத்தின் 42 வது பட்டம் ஜீயராக நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆனார். பின்னர் (1929) எட்டு வயது சிறுவனின் தேஜஸ் மற்றும் புத்திசாலித்தனத்தால் கலத்தூர் ஜீயர் தாக்கப்பட்டார், மேலும் இந்த சிறுவன் பகவத் ராமஅனுஜ சம்பிரதாயத்தை அபரிமிதமாக வளர்ப்பான் என்பதை உடனடியாக உணர்ந்தான். நாதூர் அம்மாள் ஸ்ரீ வேங்கடநாதனின் (அப்போது 5 வயது சிறுவன்) மகத்துவத்தை அங்கீகரித்து குழந்தையை ஆச்சார்ய சார்வபௌமனாக ஆசீர்வதித்தது போல, கலத்தூர் ஜீயர் 8 வயது ரங்கநாதனை ஆசீர்வதித்தார். தனியனின் முதல் வரி, “ஸ்ரீரங்கேச- யத்இந்துனா கருநாய அஸௌ ஸ்யாதிதி ப்ரேக்ஷிதம்”.முதல் வரியில் உள்ள வார்த்தைகளின் தேர்வு “சியாத்” மற்றும் “ப்ரேக்ஷிதம்” ஆகும். இந்த இரண்டு அர்த்தமுள்ள வார்த்தைகளின் தேர்வு அதிகார சாரவாளியில் சுவாமி தேசிகனின் ஸ்ரீ சூக்தி பத்தியால் தாக்கம் பெற்றுள்ளது, அங்கு அவர் நாதூர் அம்மாளிடம் இருந்து பெற்ற ஆசீர்வாதங்களைக் குறிப்பிடுகிறார்:“ஸ்ரீமத்பியம் ஸ்யாத்-ஆசாவித்யானுபஹ்தி வரதாஆச்சார்ய ராமஅநுஜாப்யாம் சம்யக் த்ருஷ்டேன”.புரிசை ஸ்வாமி முதல் வரிக்கு ஸ்வாமி தேசிகனிடமிருந்து பிரபலமான வார்த்தையான “ஸ்யாத் அஸௌ இதி” என்பதைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிடுகிறார். “சம்யக் த்ருஷ்டேனா” என்பதற்குப் பதிலாக, புரிசை ஸ்வாமி இதே போன்ற பொருளைக் கொண்ட வார்த்தையைத் தேர்ந்தெடுத்தார்: “ப்ரேக்ஷிதம்”.இரண்டாவது வரி, “க்யாதா-ஸ்ரீந்ருசிம்ஹாக் அரிஜாமுனிடி- பாதஅம்போஜிந்த்இந்திரம்” என்பது மற்றொரு அழகிய சிங்கரின் (காற்றுக்குறிச்சி அழகிய சிங்கர் என்று அழைக்கப்படும் 41 வது ஜீயர்) ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. 41வது ஜீயர், இஞ்சிமேடு ஸ்வாமியின் பாண்டீத்யத்தின் (புகழ்பெற்ற புலமை) மதிப்பின் அடிப்படையில் இஞ்சிமேடு ஸ்வாமியை பட்டத்துக்குத் தேர்ந்தெடுத்ததால், “பண்டித பக்ஷபாதி” என்ற பட்டத்தைப் பெற்றார்.இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் 41வது ஜீயரின் தாமரை பாதங்களிலிருந்து தேனை அருந்திய தேனீயைப் போல மகிழ்ச்சியுடன் தனது நேரத்தைக் கழித்தார் என்பதை தனியனின் இரண்டாவது வரி ஒப்புக்கொள்கிறது. 41வது ஜீயர் சுவாமி நம்மாழ்வாருக்கு (அவரது ஆச்சாரியரான 34வது பட்டம் அத்திப்பட்டு அழகிய சிங்கருக்கு) மதுர கவி போல இருந்தார். புரிசை சுவாமிகளின் கூற்றுப்படி, 42வது ஜீயர், 41வது ஜீயருக்கு (சுவாமி நம்மாழ்வார்) மதுர கவி போல இருந்தார். இஞ்சிமேட்டு அழகிய சிங்கரே தம் 41வது ஜீயரின் புனிதமான திருவடியில் (தாமரை) சஞ்சாரத்துடன் கூடிய தேனீ என அவரது அனுபவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:”யத்பரிசாரணாதாத்தௌ ப்ரஹ்மநுபவஓப்யஹோ மாயா அத்ரைவ”புரிசை ஸ்வாமி, ஸ்ரீ பாஷ்யம் பற்றிய புகழ்பெற்ற வர்ணனையான 42வது அழகிய சிங்கரின் ஸ்ரீ சாரபோதினியிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறார். 41வது அழகிய சிங்கரால் தமக்கு அருளப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மர் ஆராதனத்தின் மூலம் இந்த பூமியில் பரிபூர்ண பிரம்ம அனுபவத்தை தாம் அனுபவித்ததாக இங்கு வணக்கத்திற்குரிய ஜீயர் கூறுகிறார்; இந்தச் சூழலில் 42வது ஜீயர் தம்மை தேனீ குடிப்பதால் மகிழ்ச்சியான தேனீயுடன் ஒப்பிடுகிறார். அவரது ஆச்சார்யனின் தாமரை.தனியனின் முதல் இரண்டு வரிகள் இதுவரை காலத்தூர் அழகிய சிங்கரிடமிருந்து பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் கருக்குறிச்சி அழகிய சிங்கரின் சன்யாஸ்ரம ஸ்வீகரநாமம் ஆகியவற்றைக் கொண்டாடியது. இப்போது, ​​தனியனின் கடைசி இரண்டு பாதங்களில் உள்ள இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் அருளும் ஆத்ம குணங்களை நோக்கி புரிசை ஸ்வாமி தனது கவனத்தைத் திருப்புகிறார்.“தாந்தி-க்ஷாந்தி-தயாஅதிபி: சுபாகுநாயர்-பந்தம் பூதஅக்ரேசரம்
ஸ்ரீமத்ராங்கசத்அரி-யோகி-ந்ருபதிம் ஸ்ரீயோநிதிம் சம்ஸ்ரே”
நான்காவது பாதம், சிஷ்யர்கள் யோகிகளின் சக்கரவர்த்தியின் திருவடியில் அடைக்கலம் தேடுகிறார்கள் என்று கூறுகிறது மற்றும் சகலா ஸ்ரேயஸ், ஸ்ரீவன்என் சடகோப ஸ்ரீரங்க சதகோப யத்இந்திர மஹா தேசிகனின் இருப்பிடம்.மூன்றாவது பாதம் இந்த கலிநா குணங்கள் என்ன என்பதைக் குறிக்கிறது. அவற்றில் சில: தாந்தி (இந்திரியங்களின் மீதான கட்டுப்பாடு), க்ஷாந்தி (எல்லையற்ற சகிப்புத்தன்மை/பொருமை), DayA (அனைவருக்கும் அசாதாரண இரக்கம் மற்றும் கருணை). அவர் இவைகளுடனும் மற்ற மங்களகரமான சத்குநாமங்களுடனும் ஜொலிக்கிறார் (சுப குணை: பாந்தம்). இந்த சுப குணங்கள் அவரை யோகி-ந்ருபதி அல்லது யோகிகளின் ராஜாவாக ஆக்குகின்றன. ஆச்சார்ய சார்வபௌமன் பாத்திரத்துடன் தொடர்புடைய சகலா கல்யாண குணங்களின் வசிப்பிடமாக இருப்பதுடன், அவரது புத்திசாலித்தனமான புத்திசாலித்தனம், சாஸ்திர ஜென்~ஆனம், காலக்ஷேப சைலி (காலக்ஷேபம் ஸ்டைல்) ஆகியவை அவரை ஒரு சிறந்த பண்டித ஸ்ரீஷ்டாரின் முன்னணி அறிஞராகக் குறித்தன. (BhdhAgrEsar).புரிசை ஸ்வாமிகள் இந்த அழகான தனியானில் மிகவும் மரியாதையுடனும் பணிவுடனும் தனது மதிப்பிற்குரிய தாத்தா மற்றும் ஆச்சார்யரின் உன்னத குணங்களின் சாரத்தை பொருத்தமான முறையில் படம்பிடித்தார்.அடுத்த சில இடுகைகளில், 42வது ஜீயரை அறிந்தவர் மற்றும் ஸ்ரீ மடம் ஆச்சாரியார்களின் நட்சத்திர மண்டலத்தில் ஒளிரும் நட்சத்திரமாக அவரைப் போற்றிய சமகால ஸ்ரீவைஷ்ணவ ஷோலர்களின் தனிப்பட்ட அஞ்சலிகளை அடியேன் உள்ளடக்கும்.அடியேனின் தாத்தா 1888 CE இல் HH 36வது அழகிய சிங்கரான ஸ்ரீவன்என் சடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யத்இந்திர மஹா தேசிகனிடமிருந்து தனது பஞ்ச-சம்ஸ்காரத்தைப் பெற்றார்; அவரது பரண்யாசம் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரைச் சேர்ந்தவர். அடியேனின் தந்தை 39வது பட்டம் மன்னார் கோயில் அழகிய சிங்கரிடமிருந்து பஞ்ச சம்ஸ்காரத்தையும், 44வது ஜீயர், ஸ்ரீவன்என் சடகோப வேதாந்த தேசிக யத்இந்திர மஹா தேசிகனிடம் பரண்யாசம் பெற்றார். அடியேனின் சொந்த சமாஸ்ரயாணம் 43 வது ஜீயர், ஸ்ரீ தேவனார் விலாகம் அழகிய சிங்கர் ஆகியோரிடமிருந்து வந்தது மற்றும் பரண்யாசம் ஆசிகள் கடந்த ஆண்டு 45 வது ஜீயர், ஸ்ரீவண்ணன் சடகோப நாராயண யதிந்திர மஹா தேசிகனிடமிருந்து வந்தது. மூன்று தலைமுறைகளாக (1888-2000 CE) 112 வருட கால இடைவெளியில் அடியேன் நினைவுகூரக்கூடிய தொடர்புகளுடன் நமது ஆச்சார்ய பரம்பரையில் இந்த கட்டுரைகளை இடுகையிடுவது உண்மையில் அடியேன் பாக்கியமாக உணர்கிறேன்.17. ஸ்ரீ உ.வே இயற்றிய மங்கள ஸ்லோகங்களில் ஒன்றான 

42வது ஜீயரின் ஆத்ம குணங்களுக்கு அஞ்சலிகள். 42வது ஜீயருக்கு ஸ்ரீ வைஷ்ணவ அறிஞர்கள் செலுத்திய காணிக்கையை பதிவு செய்வதற்கு முன் புரிசை ஸ்வாமியை நினைவுகூர வேண்டும்:
ஜித-கர்ணச்ச தானாதியோ ஜித-ராமஸ்ச்ச பாஷாநாத்
தாந்தி-க்ஷாந்தி-தாயா பூர்ணஸ்தஸ்மை பவத்து மங்கலம்
(பொருள்): கர்ணனை தானத்திலும் பெருந்தன்மையிலும் வென்றவருக்கும், சிஷ்யர்கள் மற்றும் அறிஞர்களுடன் சம்பாஷணத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனை வென்றவருக்கும் எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
இந்திரிய-நிக்ரஹம், சகிப்புத்தன்மை, தயவு போன்ற ஐஸ்வர்ய பண்புகளின் உறைவிடமாக விளங்கும் இஞ்சிமேட்டு அழகிய சிங்கருடன் அனைத்து மங்களங்களும் இருக்கட்டும்.

வைகுண்ட வாசி ஸ்ரீமத் புத்தங்கொட்டகம் ஸ்வாமி இந்த ஸ்வாமி ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார் மற்றும் 42 வது ஜீயரின் பிரதிஜ்ஞையை வதம் செய்வதற்கான மந்திரியாகக் கருதப்பட்டார். அவர் தனது ஆச்சார்யரின் வயதுடையவர்.
ஜீயரின் பட்டாபிஷேக மஹோத்ஸவத்தின் போது, ​​அவர் 42வது ஜீயரின் ஆத்ம குணங்களைக் கொண்டாடும் வகையில் ரத்தின மாலையை (ரத்ன மாலை) வழங்கினார்.
அங்கு புத்தங்கொட்டகம் ஸ்வாமி இந்த அழகிய சிங்கரை வணங்குகிறார்:
சம்யமி வரோ ராஜா = சன்யாசிகளின் ராஜா
ஆஜன்மசுத்த சரிதா = தூய்மையான வாழ்க்கை கொண்டவர் மற்றும் களங்கமற்ற செயல்கள்
அகில சத்குநாத்யா: = அனைவரையும் அழகுபடுத்தியவர் மங்களகரமான பண்புகள் VrutthE VyAsEna துக்யா: மற்றும் பலர் = நடத்தல், வியாச முனிவருக்கு சமம் மற்றும் பக்தியில் பிரஹ்லாதாவுக்கு சமம் மாலோலன், விவாதக்காரர்களின் ராஜா, அது எப்போது ஸ்ரீ வியாஷ்நவம்/பகவத்தைப் பாதுகாக்க வந்தார் ராமஅனுஜ சித்தானம். ஸ்வாமிகள் கூற்றுடன் முடிக்கிறார்:
ஜீயரின் ஸ்ரீமடத்தின் ஆஸ்தான ஸ்வீகாரநாமத்தால் அனைத்து வேதங்களும் மகிழ்ச்சியடையட்டும்,
மகரிஷிகளின் பக்தி வார்த்தைகள் நிலைத்து உலகைக் காக்கட்டும்!
இந்த தேசத்தின் நடைமுறை வர்ணாஸ்ரம தர்மங்களை வரையறுத்து, ராஜ லட்சுமி அற்புதமாக பிரகாசிக்கட்டும்!

வைகுண்ட வாசி மகரிஷி சுவாமி மகரிஷி சுவாமிகள் உ.வே. 42வது ஜீயரால் ஸ்ரீ ந்ருஸிம்ஹ பிரியாவின் முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஸ்ரீ வாசுதேவாச்சார்ய ஸ்வாமிகள்.
அவர் கூறுகிறார்: “அனைத்து வைதிக சிரேஷ்டர்களும் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் வைராக்யம், ஞான ஆனம், அனுஷ்டான சம்பத் மற்றும் உன்னதமான ஆத்ம குணங்களுக்காக அவரை வணங்குகிறார்கள்”.

வைகுண்ட வாசி HH 44 வது ஜீயர் (முக்கூர் அழகிய சிங்கர்) முக்கூர் ஜீயர் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் தர்ம பத்னியின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். அவர் ஸ்ரீ மடம் மற்றும் ஸ்ரீ காரியத்தின் ஆஸ்தான வித்வான் ஆவார்.
42 வது ஜீயருக்கு அந்தரங்க கைம்காரியம் செய்ய அவர் ஆசீர்வதிக்கப்பட்டார், ஏனெனில் இதானிம் ஜீயர் அத்தகைய கைம்காரியத்தை பின்னர் செய்ய ஆசீர்வதிக்கப்பட்டார்.
சம்பாஷநம் திறமைகள், அபூர்வ சித்தாந்த விஷயங்களைப் பற்றிய ஆழமான ஞான ஆனம், மதுராந்தகம் பாடசாலை, ஸ்ரீ ந்ருசிம்ம ப்ரியா மற்றும் மாலைஓள சதாக்களை நிறுவுவதில் தொலைநோக்கு.

ஸ்ரீ வைகுண்ட வாசி முக்கூர் ஸ்வாமிகளின் காணிக்கை ஸ்வாமிகள் எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் உறவுகள் குறித்து நமது ஆச்சாரியார்கள் கூறிய பல குறிப்புகளுடன் தொடங்குகிறது. இந்த சூழலில் அவர் சுவாமி தேசிகனின் ரஹஸ்ய பதவியின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார்:
மூன்றிலொரு மூன்ரு மூவீரன்டு முன்அங்கும்
தோன்றத் துளயும் துயர்
(பொருள்): மூன்று பதங்கள் கொண்ட அஷ்டாக்ஷரம், ஆறு பதங்கள் கொண்ட த்வயம், 12 பதங்கள் கொண்ட சரம ஸ்லோகம் என்ற அர்த்தங்களால் ஒருவனின் மனம் பிரகாசிக்கும்போது, ​​ஒருவனுக்கு சம்சாரிக் துக்கங்கள் நீங்கும்.மூன்று ரஹஸ்யங்களும் அவற்றின் பாதங்களும் 3, 3 முறை 2 மற்றும் 3 முறை 2 சதுரம் என தொடர்புடையவை.
இங்கிருந்து ஸ்ரீ முக்கூர் ஸ்வாமியின் வளமான கற்பனையானது
HH இஞ்சிமெட்டு அழகிய சிங்கர் (42),
HH தேவன்ஆர்விலகம் அழகிய சிங்கர் (43)
மற்றும் HH முக்கூர் அழகிய சிங்கர் (44)
ஆகியோரின் பட்டங்களின் பின்னால் உள்ள “எண் கோட்பாடு” மீது கவனம் செலுத்துகிறது.
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹாச்சார் ஸ்வாமிகள் மூன்று அழகிய சிங்கரின் பீட எண்களை மூன்று ரஹஸ்யங்களுடன் தனக்கே உரித்தான முறையில் தொடர்புபடுத்துகிறார்:
42வது பட்டம் = 4+2= 6 பதம் ரஹஸ்யம்: த்வயம்
43வது பட்டம் = 4×3= 12 பதம் ரகசியம்: சரம ஸ்லோகம்
44வது பட்டம் = 4+4= 8 அக்ஷர ரஹஸ்யம் : திரு அஷ்டஅக்ஷரம்.

HH 42வது அழகிய சிங்கர் துவாயத்தின் அவதாரம்
த்வயத்தின் சக்ருத்-உச்சாரணம் (ஒருமுறை கூட பாராயணம்) மோட்ச-சாதனத்திற்கு வழி வகுக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே, 42வது அழகிய சிங்கரின் தியானம், சக்தி வாய்ந்த த்வ்ய மந்திரத்தின் இடத்தில் நிற்கும் அவரது தனியானை ஓதுவதன் மூலம், த்வயத்தின் செழுமையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு, மோட்சத்திற்கான பாதையில் நம்மை அமைக்க உதவும்.
ஸ்ரீரங்கத்தில் திருவரங்கச் செல்வன், ஸ்ரீ ரங்கநாதனின் உறுதிமொழியை முன்பு ஆசார்ய சார்வபௌமன், ஸ்ரீ ராமஅனுஜர் கேட்டனர்.
நமது 42வது பட்டம் அழகியசிங்கருக்கு பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீ ரங்கநாதனின் பெயர் இருந்தது. அவர் சன்யாசாஸ்ரமத்தில் நுழைந்தது ஸ்ரீ ரங்கநாதனின் திவ்ய தேசத்தில் நடந்தது. ஆஸ்ரமத் திருநாமத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தவர் ரங்கநாதனும் (ஸ்ரீரங்க சடகோபன்) ஆவார்.
த்வயத்துக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையேயான தொடர்புகள் ஆச்சார்ய ராமனுஜருக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் செல்கிறது.
HH 42வது அழகிய சிங்கர், “த்வயம் விளைந்த திருப்பதி”/ மதுராந்தகத்தில் வித்வான்களின் தலைசிறந்த ரத்தினங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாடசாலையை நிறுவினார்,
அங்கு ஆச்சார்யா ராமஅனுஜார் தனது ஆச்சாரியரான பெரிய நம்பியரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றார்.HH அவர்களின் 100வது ஆண்டு விழா, 42வது அழகிய சிங்கரின் சக்கரவர்த்தி திருமஹனின் (திருவெள்ளூர் ஸ்ரீ வீரராகவன்) புனித பாதத்தில் நடந்தது,
அவர் த்வய மந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கினார்.
ஆகவே, தவயம் மந்திர ரத்னம் என்று போற்றப்பட்டால், நமது 42வது பட்டம் அழகியசிங்கர் (4+2=6 பாத த்வயம்) நம் அனைவருக்கும் ஆச்சார்ய ரத்னம்.

42ஆம் அழகியசிங்கரின் தனியன்

SrirangEsa YathIndhunA kAruNayA asou syAth Ithi prEkshithamkhAyatha Srinarasimha Kaarijamunid-paadhAmbhujEndhinthiramDhAnthi-KshAnthi DayAdhibhi: SubhaguNai: BhAntham BhhrEshamsrayE-

ஸ்ரீ ஜடாயு பூமியின் மையம் இயற்கை பூங்கா/ஸ்ரீ குருவாயூரில் யானை ஸமூஹம்

September 4, 2024

ஸ்ரீ ஜடாயு பூமி மையம் , 
ஜடாயு இயற்கை பூங்கா அல்லது 
ஜடாயு பாறை என்றும் அழைக்கப்படுகிறது , 
இது இந்தியாவின் கேரளாவின் 
கொல்லம் மாவட்டத்தில் உள்ள 
சடையமங்கலத்தில் 
உள்ள ஒரு 
பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும் 

SRI JADAYU PARA sti KODHANDA RAMA KSHETHRA Trust–Jadayu (sadaayu)MANGALAM -KOLLAM 691534–REGno 56/10/IV-PH-91-8590912137-Email-jadayutemple@gmail.com

இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 350 மீ (1200 அடி) உயரத்தில் உள்ளது. ஜடாயு நேச்சர் பார்க், உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது,

இந்த சிற்பம் 200 அடி (61 மீ) நீளம், 150 அடி (46 மீ) அகலம், 70 அடி (21 மீ) உயரம் மற்றும் 15,000 சதுர அடி (1,400 மீ 2 ) பரப்பளவைக் கொண்டுள்ளது. ராஜீவ் அஞ்சல் அவர்களால் செதுக்கப்பட்டது . 

இந்த ராக்-தீம் இயற்கை பூங்கா, BOT மாதிரியின் கீழ் கேரள மாநிலத்தில் முதல் பொது-தனியார் கூட்டாண்மை சுற்றுலா முயற்சியாகும் . இந்த பூங்கா கொல்லம் நகரத்திலிருந்து சுமார் 38 கிமீ (24 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 46 கிமீ (29 மைல்) தொலைவிலும் உள்ளது .

முடிந்ததும், இது 17 ஆகஸ்ட் 2018 அன்று பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாறியது

ஜடாயுவின் பெயரால் அழைக்கப்பட்ட சடையமங்கலம் (ஜடாயுமங்கலம்) நகருக்கு அருகில் அமைந்துள்ள பூங்கா . ஜடாயு இராமாயணத்தில் (ஒரு இந்து இதிகாசம்) ஒரு தெய்வீகக் கடவுள், அவர் கழுகு வடிவத்தைக் கொண்டிருந்தார்.

இதிகாசத்தின் படி, ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்த முயன்ற போது , ​​ஜடாயு அவளை மீட்க முயன்றார். ஜடாயு ராவணனுடன் வீரத்துடன் போரிட்டார், ஆனால் ஜடாயு மிகவும் வயதானவராக இருந்ததால், ராவணன் விரைவில் அவரை தோற்கடித்து, அவரது இறக்கைகளை வெட்டினார், ஜடாயு சடையமங்கலத்தில் உள்ள பாறைகளில் விழுந்தார். ராமனும் லக்ஷ்மணனும் சீதையைத் தேடும் போது, ​​தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்த ஜடாயுவை நேரில் பார்த்தனர், அவர் ராவணனுடனான போரை அவர்களுக்கு அறிவித்து, ராவணன் தெற்கு நோக்கிச் சென்றதைக் கூறினார் 

பரிமாணங்கள்

அம்சம்
உயரம்21 மீ
மாடி பகுதி1,400 மீ 2
நீளம்61 மீ
அகலம்46 மீ
இறக்கை மற்றும் வால் இறகுகளின் எண்ணிக்கை52
காது முதல் காது வரை தலையின் தடிமன்
தலையின் உயரம்
கண்ணிலிருந்து கண்ணுக்கு தூரம்
சிலையின் மொத்த எடை
ஒவ்வொரு கோலின் நீளம்
கொக்கின் நீளம்
கொக்கின் உயரம்
கொக்கின் அகலம்
கண்ணின் உயரம்

அட்வென்ச்சர் ராக் மலையில் உள்ள பூங்கா, 5 டிசம்பர் 2017 அன்று திறக்கப்பட்டது.

ஜடாயு ராவணனுடனான போருக்குப் பிறகு ஒரு குகையில் தஞ்சம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு ஆயுர்வேத மற்றும் சித்த குகை ரிசார்ட் கட்டுமானத்தில் உள்ளது மற்றும் ஜடாயுவின் கதைகளுடன் இணைந்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும். 

இந்த பூங்கா 4 ஜூலை 2018 அன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனால் திறந்து வைக்கப்பட்டது . பூங்காவின் முதல் கட்டம் ₹ 100 கோடி (US$12 மில்லியன்) மதிப்புடையது மற்றும் சாகச மண்டலம் 3 கிமீ (1.9 மைல்) சுற்றளவு கொண்டது

இந்த பூங்கா கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது . பூங்காவிற்குள் செல்ல சிறப்பு போக்குவரத்து தேவையில்லை.

ஜடாயுவின் சிற்பம் இருக்கும் உச்சியை அடைய, பார்வையாளர்கள் மலையின் மீது 826 படிகள் நடைபாதையில் செல்லலாம் அல்லது கேபிள் காரில் செல்லலாம்.

கேபிள் கார் வழிக்கு கூடுதல் கட்டண டிக்கெட் தேவை.

மேலே செல்லும் வழியில் ஒரு பாதுகாப்பு திரையிடல் செயல்முறை உள்ளது.

கேமராக்கள் மற்றும் பைகள் அனுமதிக்கப்படுகின்றன. உணவு அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இல்லை.

மேலே வடிகட்டப்பட்ட தண்ணீர் இலவசம். வழி முழுவதும் பல கஃபேக்கள் உள்ளன.

அருங்காட்சியகத்திற்கு வெளியே உள்ள ஜடாயுவுக்கு அஞ்சலி செலுத்தும் தகடு, கே. ஜெயக்குமார் மொழிபெயர்த்த கவிதையில், கேரள முதல்வர் பினராயி விஜயனால் அர்ப்பணிக்கப்பட்டது

ஜடாயு இயற்கை பூங்காவில் உள்ள தகடு, ஸ்ரீ பினராயி விஜயனால் அர்ப்பணிக்கப்பட்டது
ஜடாயு இயற்கை பூங்காவில் உள்ள தகடு, ஸ்ரீ பினராயி விஜயனால் அர்ப்பணிக்கப்பட்டது

“இந்த மலையின் உச்சியில் சிறிது நேரம் நின்று சிந்தித்துப் பாருங்கள், இங்கே ஜடாயு விழுந்துவிட்டார். தன் கொக்குகளாலும், கொக்காலும் தடுக்க முயன்றார், வஞ்சகத்தால் கைப்பற்றிய அன்னிய குட்டிச் சின்னம் ஒரு மகளின் விலைமதிப்பற்ற முத்து…

கொல்லத்தின் சமீபத்திய சுற்றுலாத்தலமான ஜடாயு பூமியின் மையத்தில் உலகின் மிகப்பெரிய பறவை சிற்பத்தை நீங்கள் நிச்சயமாகக் கண்டு மயங்குவீர்கள். நான்கு மலைகள் முழுவதும் 65 ஏக்கர் பரப்பளவில், இதுவே மாநிலத்தின் முதல் BOT (கட்டமைத்து இயக்குதல்-பரிமாற்றம்) சுற்றுலா ஆகும்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் செல்லும் வழியில், மலையின் உச்சியில் தங்கியிருக்கும் ஜடாயுவின் நினைவுச்சின்னம் உங்கள் கவனத்தை வெகு தொலைவில் இருந்து கூட ஈர்க்கிறது. ஜடாயு இந்திய இதிகாசமான ராமாயணத்தில் இருந்து ஒரு பழம்பெரும் பறவை.

உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் ஜடாயு பூமியின் மையத்தின் மையப்பகுதி ஜடாயுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் ‘ உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம்’ ஆகும். இந்த நினைவுச்சின்னம் 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரம் கொண்டது, பரந்த 15,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான ராஜீவ் அஞ்சால் வடிவமைத்து செதுக்கப்பட்ட இந்த தலைசிறந்த படைப்பு ஒரு காட்சி அற்புதம் மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது. சிற்பத்திற்குள், ஜடாயுவின் அற்புதமான கதையையும், கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைக் காணலாம்.

கேபிள் கார் மூலம் மலை உச்சியை அடையலாம். ஜடாயு பாறையில் பயணிப்பவருக்கு பல அனுபவங்கள் காத்திருக்கின்றன. அத்தகைய ஒரு அருங்காட்சியகம் மற்றும் சிற்பத்தின் உள்ளே 6D தியேட்டர் உள்ளது. நீங்கள் இங்கிருந்து ஹெலி-டாக்ஸி அனுபவத்தைப் பெறலாம்!

அனைத்து சாகச ஆர்வலர்களே, இது உங்களுக்கான சரியான வார இறுதிப் பயணம்! இயற்கையின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளின் பின்னணியில் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அது பர்மா பிரிட்ஜ்கள், கமாண்டோ வலைகள், லாக் வாக், செங்குத்து ஏணி, புகைபோக்கி ஏறுதல் அல்லது பக்க ஜூலா என எதுவாக இருந்தாலும், உங்கள் தேர்வைத் தேர்ந்தெடுத்து, அட்ரினலின் உடல் முழுவதும் விரைந்து செல்லட்டும்.

இப்போது த்ரில் கூட்டுவது பெயின்ட்பால் மண்டலம்!

இந்த பிரத்தியேக அனுபவங்களைத் தவிர, இந்த இடத்தில் ஆயுர்வேதம், முகாம், மலையேற்றம், நேரலை சமையலறை மற்றும் உங்கள் பயணத்தை சிறப்பானதாக மாற்றும் வசதிகள் உள்ளன.

கேரளாவில் உள்ள வேறு எந்த சுற்றுலா மையங்களும் வழங்க முடியாத தனித்துவமான அனுபவத்தைப் பெற இந்த இடத்திற்குச் செல்லுங்கள்!

பார்வையிடும் நேரம்: 10:00 முதல் 17:00 மணி வரை

தொடர்பு விவரங்கள்:
ஜடாயு பூமியின் மையம்
சடையமங்கலம் PO
கொல்லம், கேரளா – 691534
தொலைபேசி : +91 474 2477077
Mob: +91 9778414178
மின்னஞ்சல். enquiry@jatayuearthscenter.in, info@jatayuearthscenter.in
இணையதளம் : http://www.jatayuearthscenter.in

அங்கு செல்வது:
அங்கமாலி (எர்ணாகுளம் மாவட்டம்) மற்றும் கேசவதாசபுரம் (திருவனந்தபுரம் மாவட்டம்) ஆகியவற்றை இணைக்கும் பிரதான மத்திய (எம்சி) சாலையில் சடையமங்கலம் அமைந்துள்ளது. மாநிலத்தின் முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

அருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் சுமார் 52 கிமீ தொலைவில் உள்ளது
அருகிலுள்ள ரயில் நிலையங்கள்: கொல்லம் சந்திப்பு, சுமார் 35 கிமீ மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் சுமார் 55 கிமீ

ஜடாயு பூமியின் மையத்தின் மையப்பகுதி ஜடாயுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் ‘ உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம்’ ஆகும். இந்த நினைவுச்சின்னம் 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரம் கொண்டது, பரந்த 15,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான ராஜீவ் அஞ்சால் வடிவமைத்து செதுக்கப்பட்ட இந்த தலைசிறந்த படைப்பு ஒரு காட்சி அற்புதம் மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது. சிற்பத்திற்குள், ஜடாயுவின் அற்புதமான கதையையும், கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைக் காணலாம்

அட்வென்ச்சர் ராக் ஹில்லில் த்ரில்ஸ் த்ரில் தேடுபவர்களுக்கும் அட்ரினலின் பிரியர்களுக்கும், அட்வென்ச்சர் ராக் ஹில் ஒரு முழுமையான மகிழ்ச்சி. இந்த உற்சாகமான ஈர்ப்பு பெயிண்ட்பால், லேசர் டேக், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், பாறை ஏறுதல், ராப்பல்லிங், போல்டரிங் மற்றும் பல செயல்பாடுகளை வழங்குகிறது . 6D திரையரங்கில் ஜடாயுவுடன் பறக்கும் அனுபவத்தில் மூழ்குங்கள் . 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அட்வென்ச்சர் ராக் ஹில் டிசம்பர் 5, 2017 அன்று திறக்கப்பட்டது, முடிவில்லாத உற்சாகத்தையும் சாகசத்தையும் வழங்குகிறது. பயணிகள் ரோப்வேயில் ஒரு அழகிய பயணம் ஜடாயு பூமியின் மையத்தின் மூச்சடைக்கக்கூடிய அழகை ரசிக்க, தென்னிந்தியாவின் முதல் அதிநவீன ரோப்வேயான பயணிகள் ரோப்வேயில் வசீகரிக்கும் பயணத்தைத் தொடங்குங்கள். ஒரு மணி நேரத்திற்கு 400 பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரோப்வே 560 மீட்டர் தூரத்தை உள்ளடக்கி, அடிப்படை நிலையத்திலிருந்து மேல் நிலையத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. அங்கிருந்து, அற்புதமான பறவை சிற்பம் மற்றும் சாகச மண்டலத்தை நீங்கள் ஆராயலாம், சுற்றியுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகளின் பரந்த காட்சிகளை ரசிக்கலாம்.

கேவ் ரிசார்ட்டில் புத்துணர்ச்சி உற்சாகம் நிறைந்த ஒரு நாளுக்குப் பிறகு, ராவணனுடனான போரைத் தொடர்ந்து ஜடாயு தஞ்சம் அடைந்த குகையால் ஈர்க்கப்பட்ட மயக்கும் குகை ரிசார்ட்டில் தளர்வு காத்திருக்கிறது. பண்டைய குணப்படுத்தும் மரபுகளில் ஆழமாக வேரூன்றிய ஆயுர்வேத மற்றும் சித்த சிகிச்சைகளை புத்துயிர் பெறுவதில் ஈடுபடுங்கள் . ஒவ்வொரு திருப்பத்திலும் அமைதியைத் தழுவி, இயற்கையின் அமைதியான அழகின் மத்தியில் ஓய்வெடுங்கள். கட்டிடக்கலை அற்புதங்கள் ஜடாயு பூமியின் மையம் ஒரு சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அசாதாரண கட்டிடக்கலைக்கு சான்றாகவும் உள்ளது . பறவை சிற்பம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இறகுகள், கண்கள், கொக்கு மற்றும் தாளன்கள் உள்ளிட்ட சிக்கலான விவரங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் கான்கிரீட் மற்றும் ஃபைபர் மூலம் கட்டப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடியது மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய சிற்பம் ஒரு உண்மையான அற்புதம். பூங்கா இயற்கை நிலப்பரப்புடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, அதன் கட்டுமானத்தில் மூங்கில், மண் மற்றும் கல் போன்ற சுற்றுச்சூழல் நட்பு பொருட்களைப் பயன்படுத்துகிறது. கூடுதலாக, சூரிய ஆற்றல் பூங்காவின் தேவைகளை ஆற்றுகிறது, மேலும் ஒரு விரிவான கழிவு மேலாண்மை அமைப்பு கரிம கழிவுகளை மதிப்புமிக்க உரமாக மாற்றுகிறது. ஜடாயு பூமியின் மையம் கலை, கலாச்சாரம், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைவுக்கு ஒரு சான்றாகும், பார்வையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குகிறது. ராஜீவ் அஞ்சல் மற்றும் அவரது குழுவினரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் படைப்பாற்றலுக்கு இது ஒரு சான்றாக உள்ளது, அவர்கள் ஒரு சாதாரண மலையை மகிழ்ச்சியின் அதிசய பூமியாக மாற்றியுள்ளனர்.

ஸ்ரீ குருவாயூரில் யானை ஸமூஹம்
38 யானைகள் உண்டு
4 பெண் யானைகள் –
லஷ்மி-55வயசு
நந்தினி 70
ரஷ்மி -55
தேவி -50
33 ஆண் யானைகள் .-எல்லாம் 50 வயசு
ராதாகிருஷ்ணா லஷ்மி நாராயணா
செந்தாமரை ரவுசல்
பாலு
பலராமன்
சித்தார்த்தன்
அனந்த நாராயணன்
விநாயகன்
பாலகிருஷ்ணன்
காய் கிருஷ்ணன்
பீதாம்பரம்
கோபாலகிருஷ்ணா
கோபீ கிருஷ்ணா
ஸ்ரீ கிருஷ்ணா –27 வயஸில்
நவநீத கிருஷ்ணா
கோகுல் கிருஷ்ணா–32வயசு
ஐயப்பன் குட்டி–24 வயசு
தேவதா
தாமோதரன்
கீர்த்தி

1 -மக்நா யானை -தந்தம் இல்லா யானை -சிறிய துஷஸ் கொண்டது –

சராசரியாக ஒவ்வொரு யானையும் 5000 kg எடை கொண்டது
ஒவ்வொரு வேளையும் 2 kg உண்ணும்


ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கட மஹாத்ம்யம்-ஸ்ரீ கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு–

September 3, 2024

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————-

கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன் உலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே
— ஸ்ரீ அதிகார சங்கிரகம் -43-

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸ்தான்வே சிரிம் பீடஸ்ய ஸத்வபிஸ் தே பிஷ்ட்வா சாதயாமஸி –ரிக் வேதம்
மனிதா
நீ செல்வம் இல்லாதவனாகவோ
எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ
உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ
சுற்று உள்ளாராம் ஒதுக்கப்பட்டவனாகவோ -இருக்கிறாயா
வருந்தாதே
அலர் மேல் மங்கை உறை மார்பனான திருவேங்கடமுடையானுடைய திருமலையைச் சென்று அடைவாய்
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா கோவிந்தா ஓலமிட்டு இந்த திருமலைக்குச் சென்றால் உன்னைக் காத்து அருளுவார்
திருப்பதி வந்தால் திருப்பம் வரும் அன்றோ

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே

கந்தனையும் சேனாபதி முதல்வனாகிய திருமலை அன்றோ

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

போக ஸ்ரீநிவாசன் -11 மாதங்களில் -சயனம் -நித்ய திருமஞ்சனம்
மார்கழி மாசம் மட்டுமே கண்ணனுக்கு ஆகும் இங்கு

கண்ணனுக்கு நேராகக் காட்டும் ஸ்ரீ வைகுண்டம்
வேதங்களே மலை
ஏழு காண்டங்கள் -ஏழு மலை –தேவர்கள் மிருகம் உருவம் எடுத்து இங்கு உலாவுகிறார்கள் -அன்னமாச்சார்யார்
பசுவும் கன்றுமாக பிரம்மனும் சிவனும் -பால் சொரிந்த வரலாறு -வேங்கடா சால மஹாத்ம்யம்

1-பிரபத்யே தம் கிரிம் ப்ராய ஸ்ரீ நிவாச அனுகம்பயா
இஷூ சார ஸ்ரவந்த்யா இவ யன்மூர்த்யா சர்க்கராயிதம் –

கருப்பஞ்சாறு போன்ற திருமலை -சக்கை கழிந்து மோஷைக ஹேது திருவங்கடமலை -ஸ்திரம்-
சம்சாரிகள் மேலே இரங்கி தானும் நடுங்குவதால் அனுகம்பா என்கிறார் –

ஞானம் இச்சா கிரியை –/கிருபையால் /நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேணுமே -சங்கல்ப அனுகுணம் /
தயை -பர துக்க துக்கித்தவம் / பர துக்க நிராகரண இச்சா-கிரியை -தேசிகன் /
தம் கிரிம் பிரபத்யே –ஸ்ரீ நிவாஸா அனுகாம்பாயா–உச்சைகி நீச வர நீர்மை ஸ்வபாவம் -தயா தேவி -ஈஷூ சாரம் -கரும்பு ரசம் –

ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ் சாறாகப் பெருகி உள்ளது.
இது ஆறு போன்று ஓடிச் சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது.
இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.

ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால்,
அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.

கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்வது போல் –
ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு,
சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்

இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம்.
இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம்
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து.

இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள
நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

க்ருத யுகம் -நரசிம்மன்–த்ரேதா -சக்ரவர்த்தி திருமகன் -ராகவ ஸிம்ஹம் -த்வாபர -யாதவ ஸிம்ஹம் -கலவ் வேங்கட நாயகா -வேங்கட ஸிம்ஹம்-கீத உபதேசம்-சரம ஸ்லோக அபிநயம்-மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்
 திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

யசோதாப் பிராட்டியே வகுள மாலிகை –
திருக்கல்யாணம் விபவ அவதாரத்தில் காணாத குறை தீர இங்கு கண்டாள்
கண்ணாக இருந்து– பார்வையும் அளித்து– கண்ணினால் பார்க்கப்படுபவனே அவனே –கண்ணன் பெயரை நிலை நிறுத்திக் கொள்கிறான்

நிர்வாஹகன்
மண்ணும் விண்ணும்உடன் உண்ட -கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
மணியை வானவர் கண்ணனை -நிர்வாஹகன்
-கடாக்ஷ லேசத்தாலே நிர்வஹிக்கிறான் –

எங்கும் உளன் கண்ணன் -கண் -இடம் -ராஸலீலை -பிரம்மனின் அஹங்காரம் முடித்த விருத்தாந்தம் -ஆஸ்ரித பாரதந்த்ர்யம்–பிரதான கல்யாண குணம் -கையாளாய் -பவ்யனாய் –

திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்

திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.

திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

————–—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –