ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
———————————-
கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன் உலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே — ஸ்ரீ அதிகார சங்கிரகம் -43-
அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸ்தான்வே சிரிம் பீடஸ்ய ஸத்வபிஸ் தே பிஷ்ட்வா சாதயாமஸி –ரிக் வேதம்
மனிதா
நீ செல்வம் இல்லாதவனாகவோ
எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ
உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ
சுற்று உள்ளாராம் ஒதுக்கப்பட்டவனாகவோ -இருக்கிறாயா
வருந்தாதே
அலர் மேல் மங்கை உறை மார்பனான திருவேங்கடமுடையானுடைய திருமலையைச் சென்று அடைவாய்
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா கோவிந்தா ஓலமிட்டு இந்த திருமலைக்குச் சென்றால் உன்னைக் காத்து அருளுவார்
திருப்பதி வந்தால் திருப்பம் வரும் அன்றோ
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-
வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே
கந்தனையும் சேனாபதி முதல்வனாகிய திருமலை அன்றோ
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||
போக ஸ்ரீநிவாசன் -11 மாதங்களில் -சயனம் -நித்ய திருமஞ்சனம்
மார்கழி மாசம் மட்டுமே கண்ணனுக்கு ஆகும் இங்கு
கண்ணனுக்கு நேராகக் காட்டும் ஸ்ரீ வைகுண்டம்
வேதங்களே மலை
ஏழு காண்டங்கள் -ஏழு மலை –தேவர்கள் மிருகம் உருவம் எடுத்து இங்கு உலாவுகிறார்கள் -அன்னமாச்சார்யார்
பசுவும் கன்றுமாக பிரம்மனும் சிவனும் -பால் சொரிந்த வரலாறு -வேங்கடா சால மஹாத்ம்யம்
1-பிரபத்யே தம் கிரிம் ப்ராய ஸ்ரீ நிவாச அனுகம்பயா
இஷூ சார ஸ்ரவந்த்யா இவ யன்மூர்த்யா சர்க்கராயிதம் –
கருப்பஞ்சாறு போன்ற திருமலை -சக்கை கழிந்து மோஷைக ஹேது திருவங்கடமலை -ஸ்திரம்-
சம்சாரிகள் மேலே இரங்கி தானும் நடுங்குவதால் அனுகம்பா என்கிறார் –
ஞானம் இச்சா கிரியை –/கிருபையால் /நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேணுமே -சங்கல்ப அனுகுணம் /
தயை -பர துக்க துக்கித்தவம் / பர துக்க நிராகரண இச்சா-கிரியை -தேசிகன் /
தம் கிரிம் பிரபத்யே –ஸ்ரீ நிவாஸா அனுகாம்பாயா–உச்சைகி நீச வர நீர்மை ஸ்வபாவம் -தயா தேவி -ஈஷூ சாரம் -கரும்பு ரசம் –
ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ் சாறாகப் பெருகி உள்ளது.
இது ஆறு போன்று ஓடிச் சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது.
இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.
ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால்,
அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.
கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்வது போல் –
ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு,
சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்
இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம்.
இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம்
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து.
இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள
நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
க்ருத யுகம் -நரசிம்மன்–த்ரேதா -சக்ரவர்த்தி திருமகன் -ராகவ ஸிம்ஹம் -த்வாபர -யாதவ ஸிம்ஹம் -கலவ் வேங்கட நாயகா -வேங்கட ஸிம்ஹம்-கீத உபதேசம்-சரம ஸ்லோக அபிநயம்-மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள்
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-
யசோதாப் பிராட்டியே வகுள மாலிகை –
திருக்கல்யாணம் விபவ அவதாரத்தில் காணாத குறை தீர இங்கு கண்டாள்
கண்ணாக இருந்து– பார்வையும் அளித்து– கண்ணினால் பார்க்கப்படுபவனே அவனே –கண்ணன் பெயரை நிலை நிறுத்திக் கொள்கிறான்
நிர்வாஹகன்
மண்ணும் விண்ணும்உடன் உண்ட -கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
மணியை வானவர் கண்ணனை -நிர்வாஹகன்
-கடாக்ஷ லேசத்தாலே நிர்வஹிக்கிறான் –
எங்கும் உளன் கண்ணன் -கண் -இடம் -ராஸலீலை -பிரம்மனின் அஹங்காரம் முடித்த விருத்தாந்தம் -ஆஸ்ரித பாரதந்த்ர்யம்–பிரதான கல்யாண குணம் -கையாளாய் -பவ்யனாய் –
திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்
திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்
கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.
வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.
திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.
கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
————–—————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply