Archive for January, 2023

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 7-திருநாமங்கள்–426– -605- வரை –

January 20, 2023
  1. விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம் |

அர்த்தோSனர்த்தோ மஹாகோஶோ மஹாபோகோ மஹாதன: ||

இந்த நாற்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விஸ்தார:, 427. ஸ்தாவரஸ்தாணு:, 428. ப்ரமாணம், 429. பீஜமவ்யயம் |
  2. அர்த்த:, 431. அனர்த்த:, 432. மஹாகோஶ:, 433. மஹாபோக:, 434. மஹாதன: ||

———–

  1. அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |

நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||

இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |
  2. நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: ||

—–

  1. யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி:|

ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||

இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி:|
  2. ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம்||

—-

  1. ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத்|

மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||

இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத்|
  2. மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண:||

———

  1. ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்|

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||

இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |
  2. வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||

—-

  1. தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம்|

அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||

இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம்|
  2. அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண:||

——

  1. கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர:|

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||

இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |
  2. ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||

—–

  1. உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |

ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||

இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
  2. ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||

——-

  1. ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |

வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||

இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |
  2. வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||

—–

  1. ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம:|

அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||

இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம:|
  2. அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||

  1. அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |

ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||

இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |
  2. ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||

—–

57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: 

த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||

இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |

534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||

—-

  1. மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ

குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர:  ||

இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |
  2. குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||

———

  1. வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத:

வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||

இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத: |
  2. வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||

  1. பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:

ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||

இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |
  2. ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||

——

61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |

திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||

இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |

571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||  

  1. த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக்|

ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||

இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578.  பேஶஜம், 579. பிஶக்|
  2. ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||

  1. ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய:|

கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||

இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
  2. கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய:||

  1. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |

ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ:|
  2. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

————-

  1. ஓம்விஸ்தாராயநம:

விஸ்தீர்யந்தே விரிவடைகின்றன

ஸமஸ்தானி அனைத்து

ஜகந்த்யஸ்மின்னிதி உலகங்களும் எவருக்குள்ளே

விஸ்தார: அவர் (பகவான்) ‘விஸ்தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களும் பகவானுக்குள்ளே விரிவடைகின்றன.  எனவே, பகவான் ‘விஸ்தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்ஸ்தாவரஸ்தாணவேநம:

ஸ்திதிஶீலத்வாத் என்றும் நிலையாக இருப்பதை தனது தன்மையாகக் கொண்டிருப்பதால்

ஸ்தாவர: பகவான் ‘ஸ்தாவர:’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்திதிஶீலானி என்றும் நிலையாக இருக்கும்

ப்ருதிவ்யாதீனி பூமி முதலியனவும்

திஶ்டந்த்யஸ்மின்னிதி (தாம்) எவருக்குள் நிலைபெற்றிருக்கின்றனவோ, எவரால் தாங்கப்படுகின்றனவோ

ஸ்தாணு: (அந்த) பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தாவரஸ்சாஸௌ ஸ்தாவரமாகவும்

ஸ்தாணுஸ்ச ஸ்தாணுவாகவும் இருப்பதால்

ஸ்தாவரஸ்தாணு: பகவான் ‘ஸ்தாவரஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் நிலையாக இருப்பதை தனது இயற்கையாக (தன்மையாக) கொண்டிருப்பதால் ‘ஸ்தாவர:’ என்று அழைக்கப்படுகிறார். என்றும் நிலையாக இருக்கும் பூமி முதலியனவும் (தாமே) பகவானிடம்  நிலைபெற்றிருக்கின்றன. எனவே,  அவர் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார். தான் நிலையானவராகவும், பூமி முதலான மற்ற நிலையானவற்றிற்கும் தான் ஆதாரமாய் (அவற்றை) தாங்கி இருப்பதாலும் பகவான் ‘ஸ்தாவரஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ப்ரமாணாயநம:

ஸம்விதாத்மனா நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால்

ப்ரமாணம் பகவான் ‘ப்ரமாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘ப்ரமாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்பீஜயாவ்யயாயநம:

அன்யதா வேறேதும்

பாவ பற்றுதல்கள்

வ்யதிரேகேன இன்றி

காரணமிதி (இந்தப் ப்ரபஞ்சத்திற்கும், பிறவிகளுக்கும்) காரணமாய் இருத்தலால்

பீஜமவ்யயம் பகவான் ‘பீஜமவ்யயம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸவிஶேஶேணமேகம் இது பகவானை குறிக்கும் தனித்துவமான (பீஜம், அவ்யயம் என்று பிரிக்காது)

நாம ஒரே திருநாமமாகும்.

பகவான் பற்றுதல்களோ, தூண்டுதலோ இல்லாது இந்தப் ப்ரபஞ்சத்திற்கு (பிறவிகளுக்கு) ஒரே காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் ‘பீஜமவ்யயம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஒரே திருநாமமான இது  பகவானை தனியாகக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு திருநாமமாகும்.

————

  1. ஓம்அர்த்தாயநம:

ஸுகரூபத்வாத் பேரின்பமே வடிவானவராய் இருத்தலால்

ஸர்வைரர்த்யத இதி அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார்

அர்த்த: எனவே, பகவான் ‘அர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்பமே வடிவானவராய் இருத்தலால் பகவான் அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார். எனவே, பகவான் ‘அர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைரர்த்யத = ஸர்வை: + அர்த்த்யத

உன்னை அருத்தித்து வந்தோம் (திருப்பாவை 25 – ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்று தொடங்கும் பாசுரம்)

———–

  1. ஓம்அனர்த்தாயநம:

ந வித்யதே இல்லை

ப்ரயோஜனம் பலன்கள்

ஆப்தகாமத்வாத் அஸ்யேதி தன்னிறைவு பெற்றவரானபடியால்

அனர்த்த: பகவான் ‘அனர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அடையப்படவேண்டிய பலன்கள் என்று ஒன்றும் இல்லை. அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே அவர் ‘அனர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரிடமிருந்து பலன்களை பெறுவதற்காக நாம் அவரை அருத்திக்கிறோம். தன்னிறைவு பெற்றபடியால் அவருக்கு யாரையும் அருத்திக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அடையவேண்டிய அர்த்தங்களும் (அதாவது பொருள் முதலானவைகள்) எதுவுமில்லை.

————

  1. ஓம்மஹாகோஶாயநம:

மஹாந்த: மிகப்பெரியதான (எளிதில் கடக்க இயலாத)

கோஶா உறைகளான

அன்னமாதய: அன்னம் (உணவு) முதலான

ஆச்சாதகா நாம் அறியவொட்டாமல் நம்மிடமிருந்து பகவானை மறைக்கின்றன

அஸ்யேதி எனவே

மஹாகோஶ: பகவான் ‘மஹாகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அன்னம், ப்ராணம் முதலான உறைகள் (திரைகள் என்றும் கொள்ளலாம்) நாம் அறியவொட்டாமல் பகவானை நம்மிடமிருந்து மறைக்கின்றன. இவ்வாறு மிகப் பெரிய கோஶங்களால் (திரைகளால்) மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் பகவான் ‘மஹாகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்மஹாபோகாயநம:

மஹான் மிகச்சிறந்த

போக: ஸுகரூப ‘போகம்’ அதாவது இன்பமே வடிவாய்

அஸ்யேதி இருப்பதால்

மஹாபோக: பகவான் ‘மஹாபோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப (போக) வடிவாய் இருப்பதால் பகவான் ‘மஹாபோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹாதனாயநம:

மஹத் மிகச்சிறந்த

போகஸாதனலக்ஷணம் இன்பத்தைக் குறிப்பதாக

தனமஸ்யேதி செல்வத்தை  உடையவராதலால்

மஹாதன: பகவான் ‘மஹாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் பேரின்பமே அவரது மிகப்பெரிய செல்வமாகும். அத்தகைய இன்பத்தை செல்வமாக உடையவராதலால் பகவான் ‘மஹாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |

நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||

இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |
  2. நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: ||

—————-

  1. ஓம்அநிர்விண்ணாயநம:

ஆப்தகாமத்வாத் தன்னிறைவு பெற்றவரானபடியால்

நிர்வேதோஸ்ய வெறுப்புக்கள் (த்வேஶங்கள்)

ந வித்யத இதி அவரிடம் காணப்படுவதில்லை

அநிர்விண்ண: எனவே பகவான் ‘அநிர்விண்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவர். மேலும், இதனால், தன்னிறைவு பெற்றவரானபடியால் அவரிடம் வெறுப்புக்களோ, உதாசீனமோ காணப்படுவதில்லை. எனவே அவர் ‘அநிர்விண்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஸ்தவிஶ்டாயநம:

வைராஜரூபேண விராட் வடிவத்தில்

ஸ்தித: இருப்பதால்

ஸ்தவிஶ்ட: பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரபஞ்சம் முழுவதையும் வ்யாபிக்கும்) விராட் வடிவத்தில் இருப்பதால் பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்னிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ (முண்டக உபநிஶத் 2.1.4)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த விராட்டினுடைய (விராட் புருஷனாக பரந்து விரிந்துள்ள பரப்ரஹ்மத்தின்) தலை ஸ்வர்கலோகமாகும். கதிரவனும், முழுமதியும் அதன் கண்கள்.

அக்னிர்மூர்தா என்ற இடத்தில், அக்னியை ஸ்வர்கலோகம் என்றே பொருளுரைத்திருக்கின்றனர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்அபுவே நம:

அஜன்மா பிறப்பற்றவராதலால்

அபூ: பகவான் ‘அபூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பற்றவராதலால் பகவான் ‘அபூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை “அபூ:” என்றோ அல்லது “பூ:” என்றோ பதம் பிரிக்கலாம். ஆச்சார்யாள் இரண்டு பதங்களுக்கும் உரை அளித்துள்ளார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் “அபூ:” என்று அர்ச்சிப்பதே வழக்கத்தில் உள்ளது.

ஓம் புவே நம:

அதவா அல்லது

பவதீதி அனைத்துமாய் இருப்பதால்

பூ: பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (அனைத்துமாய்) இருப்பதால் பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூ ஸத்தாயாம்’ பூ என்ற வேர்ச்சொல்லிற்கு ‘ஸத்’ அதாவது இருப்பது என்று பொருள் (அந்த பொருளில் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்) இத்யஸ்ய ஸம்பதாதித்வாத் க்விப் இது ஸம்பதாதி கணத்தில் ‘க்விப்’ என்ற விகுதி சேர்ந்துள்ளது.

மஹீ வா பூமியை (பூ என்று அழைப்பர்)

பூ: எனவே, பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமியை ‘பூ’ என்று அழைப்பார்கள். எனவே, பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தர்மயூபாயநம:

யூபே வேள்வியின் யூபஸ்தம்பத்தில்

பஶுவத் அந்த வேள்வியில் பலி கொடுக்கப்படும் மிருகத்தை (எவ்வாறு கட்டி வைத்துள்ளனரோ அவ்வாறே)

தத்ஸமாராதன ஆத்மகா பகவானுக்கு திருப்தியளிக்கும்

தர்மாஸ்தத்ர தர்மமானது

பத்யந்த இதி பகவானிடம் கட்டிவைக்கப்பட்டுள்ளது

தர்மயூப: எனவே, பகவான் ‘தர்மயூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வாறு வேள்வியில் பலியிடப்படவுள்ள மிருகம் அந்த வேள்வியின் யூபஸ்தம்பத்தில் கட்டிவைக்கப்படுமோ, அவ்வாறே பகவானை திருப்திப்படுத்தும் தர்மமானது அவரிடம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பகவான் ‘தர்மயூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்மஹாமகாயநம:

யஸ்மின் அர்ப்பிதா எவருக்கு அர்ப்பணித்து

மகா யஞா ‘மகா’ அதாவது வேள்வியானது

நிர்வாண லக்ஷண ஃபலம் நிர்வாணமாகிய முக்தியை

ப்ரயச்சந்தோ அளிக்கின்றன

மஹாந்தோ ஜாயந்தே எனவே அவை சிறப்பானதாக அறியப்படுகின்றன

ஸ மஹாமக: எனவே பகவான் ‘மஹாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அர்ப்பணித்து செய்யப்படும் வேள்வியானது (மகா) மிகச்சிறந்த (மஹா) பலனாகிய முக்தியை அளிக்கின்றன. எனவே பகவான் மஹாமக: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹா (மிகச்சிறந்த) + மகா (வேள்வி) = மஹாமக:

———-

  1. ஓம்நக்ஷத்ரநேமயேநம:

நக்ஷத்ரதாரகை: ஸார்த்தம் சந்த்ரஸூர்யாதயோ க்ரஹா: |

வாயுபாஶமயைர்பந்தைர் நிர்பத்தா த்ருவஸம்ஞிதே ||

அனைத்து விண்மீன்கள், கோள்களுடன் கூட கதிரவன், வெண்மதி ஆகிய அனைத்தும் காற்றென்னும் கயிற்றால் துருவ நட்சத்திரத்துடன் கட்டப்பட்டுள்ளன.

ஸ ஜ்யோதிஶாம் சக்ரம் (மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும்

ப்ராமயம்ஸ் தாராமயஸ்ய நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும்

ஶிஶுமாரஸ்ய ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின்

புச்சதேஶே வால்பகுதியில்

வ்யவஸ்திதோ த்ருவ: துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது.

தஸ்ய ஶிஶுமாரஸ்ய அந்த ஶிஶுமார மண்டலத்தின்

ஹ்ருதயே இதயப் பகுதியில்

ஜ்யோதிஸ்சக்ரஸ்ய விண்கோள்களின் வட்டத்தின்

நேமிவத் விளிம்பில்

ப்ரவர்த்தக: அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய்

ஸ்திதோ நிலைபெற்றிருக்கும்

விஶ்ணுரிதி பகவான் விஶ்ணு

நக்ஷத்ரநேமி: ‘நக்ஷத்ரநேமி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் வால்பகுதியில் துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. அந்த ஶிஶுமார மண்டலத்தின் இதயப் பகுதியில் விண்கோள்களின் வட்டத்தின் விளிம்பில் அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் நிலைபெற்றிருக்கும் பகவான் விஶ்ணு ‘நக்ஷத்ரநேமி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶுமாரவர்ணனே ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் ‘விஶ்ணுர்ஹ்ருதயம்’ பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம்

இதி ஸ்வாத்யாயப்ராஹ்மணே ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில்

ஶ்ரூயதே கூறப்பட்டுள்ளது.

ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் என்று கூறப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்நக்ஷத்ரிணேநம:

சந்த்ரரூபேண முழுமதியின் வடிவினராய் இருப்பதால்

நக்ஷத்ரீ பகவான் ‘நக்ஷத்ரீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமதியின் வடிவினராய் இருப்பதால் பகவான் ‘நக்ஷத்ரீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நக்ஷத்ராணாம் அஹம் ஶஶி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்நக்ஷத்திரங்களில் (நான்) சந்திரன்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————–

  1. ஓம்க்ஷமாயநம:

ஸமஸ்தகார்யேஶு அனைத்துவித செயல்களிலும்

ஸமர்த்த: திறமை மிக்கவராதலால்

க்ஷம: பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துவித செயல்களிலும் திறமை மிக்கவராதலால் பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ஷமத இதி வா பொறுமை மிக்கவராதலால்

க்ஷம: பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொறுமை மிக்கவராதலால் பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ஷமயா ப்ருதிவீ ஸம:’ (வால்மீகி இராமாயணம் 1.1.18)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் இராமர்) பொறுமையில் பூமிக்கு இணையானவர்.

இதி வால்மீகிவசனாத் | இவ்வாறு வால்மீகி முனிவர் இராமாயணத்தில் கூறியுள்ளார்.

————-

  1. ஓம்க்ஷாமாயநம:

ஸர்வவிகாரேஶு அனைத்து விகாரங்களும்

க்ஷபிதேஶு அழியும் பொழுது

ஸ்வாத்மநாவஸ்தி இதி தனது இயற்கையான தன்மையோடு நிலைபெற்றிருப்பதால்

க்ஷாம: பகவான் ‘க்ஷாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் இங்கு படைக்கப்பட்ட அனைத்து விகாரங்களும் அழியும் பொழுது தனது இயற்கையான தன்மையோடு பகவான் நிலைபெற்றிருப்பதால் அவர் ‘க்ஷாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ஷாயோ ம:’ (பாணினி சூத்ரம் 8.2.53)

இதி நிஶ்டாதகாரஸ்ய மகாராதேஶ:  | மேற்கண்ட பாணினி ஸூத்ரத்தின் படி முடிவிலுள்ள ‘த’காரம் ‘ம’ காரமாய் திரிந்துள்ளது.

————

  1. ஓம்ஸமீஹனாயநம:

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் படைப்பு முதலிய காரியங்களுக்காக

ஸம்யக் நல்ல (மங்களகரமான)

ஈஹத இதி ஆசை (அல்லது விருப்பம்) கொள்வதால்

ஸமீஹன: பகவான் ‘ஸமீஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய நற்காரியங்களுக்காக (‘நான் பலவாறாக படைப்பேன்’ என்பது போன்ற) மங்களகரமான ஆசை (விருப்பம்) கொள்கிறார். எனவே அவர் ‘ஸமீஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் = ஸ்ருஶ்டி + ஆதி + அர்த்தம். ஸம்யக் (நல்ல, மங்களகரமான) + ஈஹத (ஆசை) = ஸமீஹன

—————

  1. யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி:|

ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||

இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி:|
  2. ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம்||

—————-

  1. ஓம்யக்ஞாயநம:

ஸர்வயக்ஞ அனைத்து வேள்விகளின்

ஸ்வரூபத்வாத் வடிவாக திகழ்வதால்

யக்ஞ: பகவான் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து வேள்விகளின் வடிவாக இருக்கிறார். எனவே அவர் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துஶ்டிகாரகோ (அனைத்து தேவர்களுக்கும்) திருப்தியை (இன்பத்தை)

யக்ஞாகாரேண வேள்விகளின் வடிவாய் இருந்து

ப்ரவர்த்தத வளர்க்கிறார்

இதி வா யக்ஞ: எனவே, பகவான் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேள்விகளின் வடிவில் அனைத்து தேவர்களுக்கும் மகிழ்ச்சியை வளர்க்கிறார். எனவே அவர் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு:’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளதுவிஶ்ணுவே வேள்வியாவார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்இஜ்யாயநம:

யஶ்டவ்யோப்யயம் ஏவ இதி (அந்த யக்ஞங்களின் மூலம்) வழிபடப்படுபவரும் பகவான் ஒருவரே

இஜ்ய: எனவே, அவர் ‘இஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யக்ஞங்களின் வடிவாக உள்ளது மட்டுமன்றி, அந்த யக்ஞங்களால் வழிபடப்படுபவராகவும் உள்ளார். எனவே அவர் ‘இஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஏவ என்ற சொல் யக்ஞங்களால் பகவான் ஒருவர் மட்டுமே வழிபடப்படுகிறார், மற்றோர் யவரும் அல்லர் என்பதை குறிக்கிறது.

யே யஜந்தி மகை: புண்யைர்தேவதாதீன்பித்ருனபி |

ஆத்மானமாத்மனா நித்யம் விஶ்ணுமேவ யஜந்தி தே || || (ஸ்ரீ ஹரி வம்சம்)

ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் புண்ணியமான வேள்விகளால் தேவர்களையும், முன்னோர்களையும் (பித்ருக்கள்) வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைத்திற்கும் (தமது, அந்த தேவர்கள் மற்றும் பித்ருக்களின்) உள்ளுறை ஆத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணுவையே (அந்த வேள்விகளின் மூலம்) வழிபடுகின்றனர்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்மஹேஜ்யாயநம:

ஸர்வாஸு அனைத்து

தேவதாஸு தேவர்களை

யஶ்டவ்யாஸு வழிபடப்படும்

ப்ரகர்ஶேண மிகவும் சிறப்பாக (மிக உயர்வாக)

யஶ்டவ்யோ வழிபடப்படுகிறார்

மோக்ஷஃபலதாத்ருத்வாத் முக்தியை பலனாக அளிக்கவல்லவராகையால்

இதி மஹேஜ்ய: எனவே, பகவான் ‘மஹேஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குறிப்பிட்ட பலனை வேண்டி வேள்விகளால் பற்பல தேவர்கள் வழிபடப்படுகின்றனர். ஆயினும், எவராலும் முக்தியை பலனாக அளிக்க இயலாது. அதை அளிக்கவல்ல பகவானை அனைவரும் மிகவும் சிறப்பாக வழிபடுகின்றனர். எனவே, பகவான் ‘மஹேஜ்ய:’ (அனைவரைக் காட்டிலும் சிறப்பாக வழிபடப்படுகிறார்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை அளிக்க வல்லவராதலால் வழிபடப்படும் அனைத்து தேவர்களைக் காட்டிலும் பகவானே உயர்ந்தவர். எனவே அவர் மஹா (உயர்ந்த) + இஜ்ய: (வழிபடப்படுபவர்) = மஹேஜ்ய:

———-

  1. ஓம்க்ரதவேநம:

யூபஸஹிதோ யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும்

யக்ஞ: வேள்விக்கு

க்ரது: ‘க்ரது’ என்று பெயர். அந்த ‘க்ரது’ வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘க்ரது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் வேள்விக்கு ‘க்ரது’ என்று பெயர். அந்த ‘க்ரது’ வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘க்ரது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஸத்ராயநம:

ஆஸத்யுபைதி சோதனாலக்ஷணம் விதிவடிவான தர்மத்தை அடைபவர்களை

ஸத்ரம் ‘ஸத்ரம்’ என்று அழைப்பர். அவர்களின் உள்ளுறை ஆன்மாவான பகவானும் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விதிவடிவான தர்மத்தை அடைபவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸதஸ் ஸத்புருஶர்களான யோகிகளை அல்லது ‘ஸத்’ என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தை

த்ராயத காப்பதால்

இதி வா ஸத்ரம் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்புருஶர்களான யோகிகளையும், ‘ஸத்’ என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தையும் காப்பதால் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஸதாம்கதயேநம:

ஸதாம் முமுகஷூணாம் ‘ஸத்’ அதாவது முக்தியை விழைவோருக்கு

நான்யா கதிரிதி ஒரே புகலிடமாக இருப்பதால்

ஸதாம் கதி: பகவான் ‘ஸதாம் கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு ஒரே புகலிடமாக இருப்பதால் பகவான் ‘ஸதாம் கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்யா = ந + அன்யா

—————

  1. ஓம்ஸர்வதர்ஶினேநம:

ஸர்வேஶாம் அனைத்து

ப்ராணினாம் உயிரினங்களின்

க்ருதாக்ருதம் செய்யும் (அல்லது செய்யாது விடும்) செயல்கள் ஸர்வம் அனைத்தையும்

பஶ்யதி அறிகிறார் (காண்கிறார்)

ஸ்வாபாவிகேன போதேனேதி தனது இயற்கையான தன்மையால் (வேறொன்றின் உதவியின்றி)

ஸர்வதர்ஶீ எனவே பகவான் ‘ஸர்வதர்ஶீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து உயிரினங்களின் செயல்களையும் அறிகிறார் (காண்கிறார்). எனவே அவர் ‘ஸர்வதர்ஶீ’ என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

க்ருதாக்ருதம் = செய்யத்தகுந்ததை செய்தல், செய்யவேண்டியதை செய்யாமலிருத்தல், செய்யத் தகாத செயல்களை செய்யாதிருத்தல் மற்றும் செய்யத் தகாத செயல்களை செய்தல் ஆகிய அனைத்தையும் பகவான் அறிகிறார்.

————-

  1. ஓம்விமுக்தாத்மனேநம:

ஸ்வபாவேன இயற்கையாகவே

விமுக்த ஆத்மா அவருடைய ஆத்மா பற்றற்று இருப்பதால்

யஸ்யேதி விமுக்தாத்மா பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இயற்கையாகவே பற்றற்ற ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விமுக்தஸ்சாஸாவாத்மா பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால்

சேதி வா விமுக்தாத்மா பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள் 350)

————

  1. ஓம்ஸர்வஜ்ஞாயநம:

ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்

ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்

ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை

————

  1. ஓம்ஞானமுத்தமாயநம:

ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த

அஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாத

ஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியது

ஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததான

ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.

ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————

  1. ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத்|

மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||

இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத்|
  2. மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண:||

————-

  1. ஓம்ஸுவ்ரதாயநம:

ஶோபனம் மங்களகரமான

வ்ரதமஸ்யேதி விரதத்தை உடையவராதலால்

ஸுவ்ரத: பகவான் ‘ஸுவ்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அடியவர்களைக் காப்பதான) மங்களகரமான விரதத்தை உடையவராதலால் பகவான் ‘ஸுவ்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மிதி ச யாசதே |

அபயம் ஸர்வபூதேப்யோ தாதாம்யேதத் வ்ரதம் மம’ || (வால்மீகி இராமாயணம் 6.18.33)

வால்மீகி இராமாயணம் யுத்த காண்டத்தில், விபீஶண சரணாகதியின் பொழுது பகவான் ஸ்ரீராமர் கூறியது: ஒருமுறை ‘நான் உன்னுடையவன்’ என்று எவரொருவர் என்னை சரணடைகின்றனரோ அவர்களை நான் அனைவரிடமிருந்தும் (அனைத்து துன்பங்களிலிருந்தும்) காப்பேன். இதுவே எனது நோன்பாகும் (விரதமாகும்).

————-

  1. ஓம்ஸுமுகாயநம:

ஶோபனம் மிக அழகியதான

முகமஸ்யேதி திருமுகத்தை உடையவராதலால்

ஸுமுக: பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் அழகிய திருமுகத்தை உடையவராதலால் பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரஸன்னவதனம் சாருபத்மபத்ராயதேக்ஷணம்’ (ஸ்ரீவிஷ்ணு புராணம் 6.7.80)

ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான்) மலர்ந்த முகமும், அழகிய தாமரை இதழ்களைப் போன்ற திருக்கண்களும் (உடையவர்).

வனவாஸஸுமுகத்வாத் வா வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்ததால்

தாஶரதீ ராம: தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர்

ஸுமுக: ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்த தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்வபிதுர்வசனம் ஸ்ரீமானபிஶேகாத் பரம் ப்ரியம் |

மனஸா பூர்வமாஸாத்ய வாசா ப்ரதிக்ருஹீதவான் ||’  (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீராமர் தன்னுடைய தந்தையின் (வனவாசத்திற்கு செல்லும்படியான) கட்டளையை, தன்னுடைய பட்டாபிஷேக செய்தியைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு மனதில் ஏற்றுக்கொண்டார். பின்னர் வாக்கிலும் அவ்வாறே கூறினார்.

‘இமானி து மஹாரண்யே விஹ்ருத்ய நவ பஞ்ச ச |

வர்ஶாணி பரமப்ரீத: ஸ்தாஸ்யாமி வசனே தவ ||’ (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.24.17)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமர் கூறுகிறார்: இந்த பதினான்கு ஆண்டுகளை நான் மகிழ்ச்சியுடன் வனத்தில் கழித்துவிட்டு தங்களின் கட்டளையை நிறைவேற்றுவேன்.

‘ந வனம் கந்துகாமஸ்ய த்யஜதஸ்ச வஸுந்தராம் |

ஸர்வலோகாதிகஸ்யேவ மனோ ராமஸ்ய விவ்யதே || (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.19.33)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: வனத்திற்கு செல்வதோ, இராஜ்யத்தை இழப்பதோ பகவான் ஸ்ரீராமரின் மனதை சற்றும் சலனப்படுத்தவில்லை. அவர், இந்த உலகின் இன்ப, துன்பங்களை கடந்த ஒரு மஹாஞானியின் நிலையில் இருந்தார்.

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (கம்பராமாயணம்)

இதி ராமாயணே | இவ்வாறு ஸ்ரீமத் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வ அனைத்து

வித்யோபதேஶேன வா (வேதம் முதலான) வித்யைகளையும் உபதேசிப்பவராதலால்

ஸுமுக: பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைவருக்கும் பரம குருவாவார். வேதம் முதலான அனைத்து  வித்தைகளையும் உபதேசிப்பவராதலால் பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |

ஹ தேவமாத்மபுத்திப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

  1. ஓம்ஸூக்ஷ்மாயநம:

ஶப்தாதி ‘ஒலி’ முதலிய

ஸ்தூலகாரண ஸ்தூல (பருப்பொருள் உருவாவதற்கான) காரணங்கள்

ரஹிதத்வாத் அற்றவராக இருப்பதால்(லும்)

ஶப்தாதயோ ஒலி முதலான மூல தத்துவங்களே

ஹ்யாகாஶாதீனாம் ஆகாயம் தொடங்கி

உத்தரோத்தர ஒன்றின்பின் ஒன்றாக (காற்று, தீ, நீர், பூமி)

ஸ்தூலத்வ காரணானி பஞ்சபூதங்களாகிய பருப்பொருட்கள் உருவாக காரணமாக இருப்பதால்,

தத்பாவாத் அவற்றின் தாக்கங்கள் அற்றவராக இருப்பதால்

ஸூக்ஷ்ம: பகவான் ‘ஸூக்ஷ்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒலியிலிருந்தே ஆகாயம் பிறக்கிறது. ஆகாயத்திலிருந்து பஞ்சபூதங்களும் (அவற்றிலிருந்து அனைத்து) பருப்பொருட்களும் உருவாகின்றன. ஒலியே அனைத்து பருப்பொருட்களும் உருவாகக் காரணமாகும். அந்த ஒலி முதலான மூல தத்துவங்களின் தாக்கம் இல்லாதவராதலால் பகவான் ‘ஸூக்ஷ்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பருப்பொருட்கள் (ஸ்தூலம்) உருவாவதற்கான காரணங்களின் தாக்கம் அற்றவர் பகவான். எனவே அவர் என்றுமே ஸூக்ஷ்மமானவர்.

‘ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்’ (முண்டக உபநிஶத் 1.1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மம்) அனைத்தையும் வ்யாபிப்பது, மிகவும் நுண்ணியமானது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————-

  1. ஓம்ஸுகோஶாயநம:

ஶோபனோ மங்களகரமான

கோஶோ ஒலி (அல்லது முழக்கத்தை) உடையவராதலால்

வேதாத்மகோSஸ்யேதி நான்மறைகளின் வடிவான

ஸுகோஶ: பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்மறைகளின் வடிவான மங்களகரமான ஒலியை (முழக்கத்தை) உடையவராதலால் பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேககம்பீர இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான

கோஶத்வாத் குரலை உடையவராதலால்

ஸுகோஶ: பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான குரலை உடையவராதலால் பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸுகதாயநம:

ஸத்வ்ருத்தானாம் நன்னெறியை வழுவாது நடப்போருக்கு

ஸுகம் ததாதி இன்பத்தை அளிப்பதனால்

ஸுகத: பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நன்னெறியை வழுவாது நடப்போருக்கு இன்பத்தை அளிப்பதனால் பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸத்வ்ருத்தானாம் நன்னெறியை மீறுவோருக்கு (அதை பிழைப்போருக்கு)

ஸுகம் இன்பத்தை

த்யதி கண்டயதீதி ‘த்யதி’ அதாவது அழிக்கிறார்

ஸுகத: எனவே, பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நன்னெறியை மீறுவோரின் (அதை பிழைப்போருக்கு) இன்பத்தை அழிக்கிறார். எனவே, பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்லாதன், விபீஶணன் ஆகியோருக்கு இன்பத்தை அளிக்கிறார். ஹிரண்யகசிபு, இராவணன் ஆகியோரின் இன்பத்தை அழிக்கிறார்.

————

  1. ஓம்ஸுஹ்ருதாயநம:

ப்ரத்யுபகார கைமாறு

நிரபேக்ஷதய எதிர்பாராது

உபகாரித்வாத் தான் அனைவருக்கும் உதவி புரிகிறார்

ஸுஹ்ருத் எனவே, பகவான் ‘ஸுஹ்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கைமாறு எதிர்பாராது அனைவருக்கும் உதவி புரிகிறார். எனவே, பகவான் ‘ஸுஹ்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்மனோஹராயநம:

நிரதிஶய முழுமையான (அளவிடமுடியாத)

ஆனந்தரூபத்வாத் இன்பமே வடிவானவராய்

மனோ ஹரதீதி காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால்

மனோஹர: பகவான் ‘மனோஹர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமையான, அளவிடமுடியாத ஆனந்த வடிவினராய் காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால் பகவான் ‘மனோஹர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி’ (சாந்தோக்ய உபநிஶத் 3.23.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (என்றும் உள்ளதான அந்த) பரப்ரஹ்மத்திடம் காணப்படும் இன்பமே இன்பமாகும். மற்ற (அழியக்கூடிய, மாறக்கூடிய) இன்பங்கள் அனைத்தும் கீழானதாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்ஜிதக்ரோதாயநம:

ஜித: வெற்றி கொண்டுள்ளார்

க்ரோதோ கோபத்தை

யேன எவரொருவர்

ஸ ஜிதக்ரோத: அவர் (பகவான்) ‘ஜிதக்ரோத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்;

வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை

ஸ்தாபனார்த்தம் நிலைநிறுத்துவதற்காகவே

ஸுராரீன் ஹந்தி (தேவர்களின் பகைவர்களான) அஸுரர்களை அழிக்கிறார்

ந து கோபவஶாதிதி கோபத்தின் வசப்பட்டு அல்ல.

பகவான் கோபத்தை வென்றவர். தேவர்களின் பகைவர்களான அஸுரர்களைக் கூட அவர் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வரைமுறைகளை நிலைநிறுத்துவதற்காகவே அழிக்கிறாரே ஒழிய கோபாவேசப்பட்டு அல்ல. எனவே, பகவான் ‘ஜிதக்ரோத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்வீரபாஹவேநம:

த்ரிதஶ முப்பத்து முக்கோடி தேவர்களின்

ஶத்ரூன் பகைவர்களை (அஸுரர்களை) நிக்னன் அழித்து

வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை

ஸ்தாபயன் நிலைநிறுத்தவல்ல

விக்ரமஶாலி  சக்திபடைத்த (பலம்பொருந்திய)

பாஹுரஸ்யேதி திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால்

வீரபாஹு: பகவான் ‘வீரபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் பகைவர்களை (அஸுரர்களை) அழித்து வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நிலைநிறுத்தவல்ல சக்திபடைத்த (பலம்பொருந்திய) திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால் பகவான் ‘வீரபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்விதாரணாயநம:

அதார்மிகான் அறத்திற்கு புறம்பாக செல்வோரை

விதாரயாதி வெட்டித் துண்டாடுவதால்

இதி விதாரண: பகவான் ‘விதாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்திற்கு புறம்பாக செல்வோரை வெட்டித் துண்டாடுவதால் பகவான் ‘விதாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த மூன்று திருநாமங்களையும் ஒரு கோர்வையாக நாம் புரிந்து கொள்ளலாம். பகவான் அறத்திற்குப் புறம்பானோரை (அஸுரர்களை) அழிக்கிறார் (விதாரண:). அவரது புஜபலத்தைக் கொண்டு அழிக்கிறார் (வீரபாஹு:). அதையும் அவர் கோபம் மேலிடச் செய்வதில்லை. வேதங்களின் விதிமுறைகளை நிலைநிறுத்தவே செய்கிறார் (ஜிதக்ரோத:).

————–

  1. ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்|

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||

இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |
  2. வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||

—————

  1. ஓம்ஸ்வாபனாயநம:

ப்ராணின: அனைத்து உயிரினங்களையும்

ஸ்வாபயன் கனவில் உழல வைக்கிறார்

ஆத்மஸம்போதி ஆத்மாவைப் பற்றிய அறிவிலிருந்து (ஆத்மஞானத்திலிருந்து) அவைகளை

விதுரான் விலக்கி வைக்கிறார்

மாயயா குர்வன் மாயையின் மூலமாக

ஸ்வாபன: எனவே பகவான் ‘ஸ்வாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மாயையின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் ஆத்மஞானத்திலிருந்து விலக்கி வைத்து கனவினில் (கனவைப் போன்ற இந்த பிறவிப்பெருங்கடலில்) உழலவைக்கிறார். எனவே அவர் ‘ஸ்வாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸ்வவஶாயநம:

ஸ்வதந்த்ர: இந்த சுதந்திரமாக இருக்கிறார்

ஸ்வவஶ: பகவான் ‘ஸ்வவஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்து

ஸ்திதி காத்து

லயஹேதுத்வாத் அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமாய் இருப்பதால்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குக் காரணமாய் இருக்கிறார். எனவே அவர் சுதந்திரமானவர் (அவருக்கு எவரது உதவியும் தேவையில்லை). எனவே அவர் ‘ஸ்வவஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வவஶ: என்றால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று பொருள். அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் பகவான் சுதந்திரமானவர். தனக்கு ஒரு காரணமற்றவர். எனவே, அவர் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் (ஸ்வவஶ:).

————-

  1. ஓம்வ்யாபினேநம:

ஆகாஶவத் ஆகாயத்தைப் போன்று

ஸர்வகதத்வாத் அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிப்பதால்

வ்யாபீ பகவான் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆகாயம் எவ்வாறு இந்த உலகத்தை சூழ்ந்து வ்யாபிக்கிறதோ, அவ்வாறே பகவான் (அந்த ஆகாயம் உட்பட) அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிக்கிறார். எனவே, அவர் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆகாஶவத்ஸர்வகதஸ்ச நித்ய:’

(அந்தப் பரப்ரஹ்மமானது) ஆகாயத்தைப் போன்று வ்யாபிக்கிறது, என்றும் உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதால்

ஸர்வகார்யனாம் அனைத்து காரியங்களையும்

வ்யாபனாத்வா வ்யாபிப்பதால்

வ்யாபீ பகவான் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மூலகாரணமாய் இருப்பதன் மூலம் பகவான் (காரியங்களாக) அனைத்தையும் வ்யாபிக்கிறார். எனவே அவர் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்நைகாத்மனேநம:

ஜகதுத்பத்யாதிஶு இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான செயல்களை ஆற்றும்பொழுது

ஆவீர்பூத தோன்றி

நிமித்தஶக்திபிர் குறிப்பிட்ட சக்திகளுடன்

விபூதிபிர் தனது அதிசய சக்தியால் உருவங்களை தரித்து

அநேகதா பற்பல

திஶ்டன் விளங்குவதால்

நைகாத்மா பகவான் ‘நைகாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் ஆகிய செயல்களை ஆற்றும்பொழுது, அந்தந்த காரியங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சக்திகளுடன் பற்பல உருவங்களை தமது அதிசய சக்தியால் தரிக்கிறார். எனவே, அவர் ‘நைகாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகாத்மா என்றால் ந+ஏக+ஆத்மா, அதாவது பற்பல ஆத்மாக்கள் என்று பொருள்படும். பகவானே இவ்வாறு பற்பல ஆத்மாக்களாக உருவம் தரிக்கிறார்.

————-

  1. ஓம்நைககர்மக்ருதேநம:

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல்

ஸம்பத்தி பாதுகாத்து வளர்த்தல்

விபத்தி ஸம்ஹாரம் செய்தல்

ப்ரப்ருதே முதலான பற்பல

கர்மாணி செயல்களை

கரோதீதி செய்வதால்

நைககர்மக்ருத் பகவான் ‘நைககர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்து வளர்த்தல், (தகுந்த சமயத்தில்) அழித்தல் ஆகிய பற்பல செயல்களை செய்கிறார். எனவே அவர் ‘நைககர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைககர்மக்ருத் என்ற சொல் ந+ஏக+கர்ம+க்ருத் என்று பிரிந்து, பற்பல செயல்களை செய்பவர் என்று பொருள் தரும்.

————

  1. ஓம்வத்ஸராயநம:

வஸதி வசிக்கின்றன (இருக்கின்றன)

அத்ர இங்கு (காணப்படும்)

அகிலமிதி அனைத்து உலகங்களும் (ப்ரபஞ்சம்)

வத்ஸர: எனவே பகவான் ‘வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காணப்படும் ப்ரபஞ்சம் அனைத்தும் அவருக்குள்ளே வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே பகவான் ‘வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்வத்ஸலாயநம:

பக்த தனது அடியவர்களிடம்

ஸ்னேஹித்வாத் அளவுகடந்த அன்போடு இருக்கிறார்

வத்ஸல: எனவே பகவான் ‘வத்ஸல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஒரு தாய்ப் பசு எவ்வாறு தன் கன்றிடம் அன்பு காட்டுமோ அவ்வாறே) பகவான் தனது அடியவர்களிடம் அளவுகடந்த அன்போடு இருக்கிறார். எனவே அவர் ‘வத்ஸல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாய்ப் பசுவின் அன்பு: பசுவானது தூய்மையை விரும்பும் பிராணியாகும். புல்லில் அசுத்தம் இருப்பின் பசியிருந்தாலும் அந்த புல்லை பசுவானது உண்ணாது. ஆனால், அதே பசுவானது தனது கன்றுக்குட்டி ஒரு அசுத்தத்தில் வீழ்ந்தால் தனது நாவால் நக்கி அதை தூய்மையாக்கும். அவ்வாறே, பகவானும் சுயநலமின்றி, இந்த அசுத்தமான ஸம்ஸாரத்தில் மீண்டும் மீண்டும் அவதரித்து நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.

‘வத்ஸாம்ஸாப்யாம் காமபலே’ (பாணினி ஸூத்ரம் 5.2.98)

இதி லச்ப்ரத்யய: | இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ‘வத்ஸ’ என்ற சொல்லிற்கு ‘ல’ எனும் விகுதி சேர்ந்து ‘வத்ஸல’ என்ற வார்த்தை உண்டாகிறது.

————-

  1. ஓம்வத்ஸினேநம:

வத்ஸானாம் கன்றுகளை

பாலனாத் மேய்ப்பவராதலால்

வத்ஸீ பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கன்றுகளை மேய்த்துப் பாதுகாப்பவராதலால் பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜகத்பிதுஸ்தஸ்ய இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையானபடியால்

வத்ஸபூதா: ப்ரஜா அனைத்து உயிரினங்களும் அவரின் பிள்ளைகளாவோம்

இதி வா வத்ஸீ பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையாவார். அனைத்து உயிரினங்களும் அவரது பிள்ளைகள். எனவே அவர் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வத்ஸ என்ற சொல்லிற்கு கன்றுகள், குழந்தைகள் ஆகிய பொருள்கள் உண்டு. இவை இரண்டைக் கொண்டும் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

—————

  1. ஓம்ரத்னகர்ப்பாயநம:

ரத்னானி வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும்

கர்பபூதாநி அஸ்யேதி தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள

ஸமுத்ரோ கடல் (கடலின் வடிவாக இருப்பதால்)

ரத்னகர்ப்ப: பகவான் ‘ரத்னகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள கடலின் வடிவாக இருப்பதால் பகவான் ‘ரத்னகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்தனேஶ்வராயநம:

தனானாம் அனைத்து செல்வங்களுக்கும்

ஈஶ்வர: உரிமையாளராக (ஸ்வாமியாக) இருப்பதால்

தனேஶ்வர: பகவான் ‘தனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களுக்கும் உரிமையாளர் பகவானே. எனவே அவர் ‘தனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலில் காணப்படும் வைரம் முதலானவை மட்டுமல்ல. அனைத்து செல்வங்களும் பகவானுடையதுதான்.

—————-

  1. தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம்|

அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||

இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம்|
  2. அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண:||

————-

  1. ஓம்தர்மகுபேநம:

தர்ம அறத்தை

கோபயதீதி பரிபாலிக்கிறார் (காக்கிறார்)

தர்மகுப் எனவே பகவான் ‘தர்மகுப்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பரிபாலித்துக் காப்பவராதலால் பகவான் ‘தர்மகுப்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்த நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————

  1. ஓம்தர்மக்ருதேநம:

தர்மா(அ)தர்ம விஹீனோபி அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும்

தர்மமர்யாதாஸ்தாபநார்த்தம் அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு

தர்மமேவ அறச்செயல்களை மட்டுமே

கரோதீதி (தான்) செய்கிறார்

தர்மக்ருத் எனவே, பகவான் ‘தர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும், அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு, அறச்செயல்களை மட்டுமே புரிகிறார் (தான் செய்கிறார்). எனவே, பகவான் ‘தர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தர்மினேநம:

தர்மான் அறத்தை

தாராயதீதி தாங்குவதால்

தர்மீ பகவான் ‘தர்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தை தாங்குகிறார். எனவே அவர் ‘தர்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உதாரணமாக: அறத்தை நிலைநிறுத்துதல், அறவழியில் நடத்தல், அறச்செயல்களையே புரிதல்.

——–

  1. ஓம்ஸதேநம:

அவிததம் (என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான

பரம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான

ஸத் பகவான் ‘ஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான, பரப்ரஹ்மமான பகவான் ‘ஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸதேவ ஸோம்யேதம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ ஸௌம்யா!!! இதுவே (பரப்ரஹ்மமே அனைத்திற்கும்) முதலில் இருந்தது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்அஸதேநம:

அபரம் ப்ரஹ்ம (காரியத்தின் விளைவாக) இங்கு எல்லாமாய் தோற்றமளிக்கும் ‘அபர’ ப்ரஹ்மமான பகவான்

அஸத் ‘அஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சமாய் தோற்றமளிக்கும் காரிய ப்ரஹ்மமே (பகவானே) ‘அஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.4)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த பேதங்கள் (வேற்றுமைகள்) எல்லாம் (ஒரே பொருளைக் குறிக்கும்) வெவ்வேறு பெயர்களே. எனவே, அவை பெயரளவிலேயே என்று உணர்க.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்க்ஷராயநம:

ஸர்வானி பூதாநி இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும்

க்ஷரம் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் ‘க்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் ‘க்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்அக்ஷராயநம:

கூடஸ்த: என்றும் மாறாத பரம்பொருளே

அக்ஷரம் ‘அக்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

என்றும் மாறாத பரம்பொருளே ‘அக்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ஷர ஸர்வானி பூதாநி கூடஸ்தோSக்ஷர உச்யதே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.16)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: க்ஷர புருஶன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே (பரம்பொருளான பகவானே) அக்ஷர (மாற்றமில்லாத, அழிவில்லாத) புருஶன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

ஆச்சார்யாள் ‘க்ஷர’, ‘அக்ஷர’ ஆகிய இந்த இரண்டு திருநாமங்களையும் ஒரே வாக்கியமாக பொருளுரைத்திருக்கிறார். இரண்டு திருநாமங்களுக்கும் சேர்த்து இந்த ஸ்ரீமத்பகவத் கீதை வாக்கியத்தை மேற்கோள் காட்டியுள்ளார். இங்கு நான் இதை இரண்டு நாமங்களாகப் பிரித்து அளித்திருக்கிறேன்.

———–

  1. ஓம்அவிஞ்ஞாத்ரேநம:

ஆத்மனி ஆத்மாவிற்கு

கர்த்ருத்வாதி செயல் புரிகிறது போன்ற

விகல்பவிஞ்ஞானம் அறியாமை

கல்பிதமிதி கற்பனையாகும்

தத்வாஸனா (இந்த அறியாமையால்) விளையும் முன்வினையால் ஏற்படும் மனப்பதிவுகள்

அவகுண்டிதோ திரையிட்டிருக்கும்

ஜீவோ ஜீவாத்மாவை

விஞ்ஞாதா என்று அழைக்கின்றனர்.

தத்விலக்ஷணோ (அந்த ஜீவாத்மாவிலிருந்து) வேறுபட்டவரான

விஶ்ணு: பகவான் ஸ்ரீ மஹாவிஶ்ணு

அவிஞ்ஞாதா ‘அவிஞ்ஞாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆத்மாவிற்கு செயல்புரிதல் என்றுமே இல்லை. அறியாமையால் அவ்வாறு தமக்கு செயல் (மற்றும் செயல்வினை) இருப்பதாக ஒரு ஜீவாத்மா தவறாக கற்பனை செய்துகொள்கிறார். இதனால் கர்மவினையும், முற்பிறவி கர்மங்களின் வாசனை (மனப்பதிவும்) அந்த ஜீவாத்மாவை (அதன் உண்மையான தன்மையை அறியவொட்டாது) திரையிட்டு மறைக்கிறது. எனவே ஜீவாத்மாவை ‘விஞ்ஞாதா’ என்று அழைக்கின்றனர். இவ்வாறு அறியாமையோ, கர்மா வாசனையோ இல்லாது, அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணு ‘அவிஞ்ஞாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஸஹஸ்ராம்ஶவேநம:

ஆதித்யாதிகதா கதிரவன் முதலான (ஒளிவீசும் கோள்களின்)

அம்ஶவோSஸ்யேத்யயமேவ கிரணங்கள் (அம்ஶ) அனைத்தும் பகவானுடையதே

முக்ய: ஸஹஸ்ராம்ஶு: எனவே பகவான் அவற்றின்  முதன்மையானதான ‘ஸஹஸ்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலிய (ஆயிரக்கணக்கான) ஒளிவீசும் கோள்கள் உண்மையில் பகவானின் ஒளியையே பிரதிபலிக்கின்றன. அவற்றின் கிரணங்கள் அனைத்தும் பகவானின் சக்தியேயாகும். எனவே பகவான் ‘ஸஹஸ்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸ்ராம்ஶு என்றால் ஆயிரக்கணக்கான கதிர்கள் என்று பொருள். நாம் புறக்கண்களால் காணும் கதிரவன் போன்ற ஒளியை உமிழும் கோள்கள் அனைத்தும் பகவனிடத்திலிருந்தே தமது ஒளியைப் பெறுகின்றன. எனவே, இவற்றின் மூலமான பகவான் ஆயிரக்கணக்கான கதிர்கள் (ஸஹஸ்ராம்ஶு) உடையவராகிறார்.

‘யேன ஸூர்யஸ்தபதி தேஜஸேத்த:’ (தைத்ரீய ப்ராஹ்மணம் 3.12.79.7)

தைத்ரீய ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது: எவருடைய ஒளியினால் தான் ஒளியூட்டப்பட்டு கதிரவன் சுடர்விடுகிறானோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜ:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலகமுழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்று உணர்).

இதி ஸ்ம்ருதேஶ்ச ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது.

————

  1. ஓம்விதாத்ரேநம:

விஶேஶேண தனது தனிப்பட்ட சக்தியால்

ஶேஶ ஆதிசேடன்

திக்கஜ இந்தப் ப்ரபஞ்சத்தை எட்டு திக்கிலிருந்தும் தாங்கும் எட்டு யானைகள்

பூதரான் இந்த பூமியை தாங்கும் மலைகள்

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

தாத்ருண் தாங்கும் (இவற்றை)

ததாதீதி தாங்குவதால்

விதாதா பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், பூமியையும் அதிலுள்ள உயிரினங்களையும் சேர்த்து தாங்கும் ஆதிசேடன், எட்டு யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்), மலைகள் ஆகியவற்றை பகவான் தனது தனிப்பட்ட சக்தியால் தாங்குகிறார். எனவே, அவர் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்க்ருதலக்ஷணாயநம:

நித்ய என்றுமுள்ள

நிஶ்பன்ன முழுமையான

சைதன்ய அறிவுமயமான ஆன்மா (பரமாத்மா)

ரூபத்வாத் வடிவினராய் இருப்பதால்

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றுமுள்ள, முழுமையான, அறிவுமயமான ஆன்மாவின் வடிவினராய் (பரமாத்மாவாக) இருப்பதால் அவர் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருதானி இயற்றினார் (உருவாக்கினார்)

லக்ஷணானி ஶாஸ்த்ராணி ‘லக்ஷணம்’ அதாவது சாத்திரங்களை

அனேன இதி வா குற்றம் குறைகள் அற்றவையான

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, குற்றம், குறைகள் அற்றதான (லக்ஷணங்கள் என்றழைக்கப்படும்) பற்பல சாத்திரங்களை உருவாக்கியதால் (இயற்றியதால்) பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வேதா ஶாஸ்த்ரானி விஞ்ஞானம் ஏதத் ஸர்வம் ஜனார்தனாத்’ (ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமம் 139)

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது: வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் விஞ்ஞானம் அனைத்தும் பகவான் ஜனார்தனரே (ஜனார்தனராலேயே உருவாக்கப்பட்டவை).

இத்யத்ரைவ வக்ஷ்யதி | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது.

ஸஜாதீய தம்மை போன்றவற்றிலிருந்தும்

விஜாதீய தம்மை அல்லாத மற்ற பொருட்களிடமிருந்தும்

வ்யவச்சேதகம் லக்ஷணம் ‘லக்ஷணங்கள்’ அதாவது (அந்தந்த பொருட்களை) தனித்துக் காட்டும் வேறுபாடுகளை

ஸர்வபாவானாம் அனைத்து பொருட்களிலும்

க்ருதமனேனேதி வா உருவாக்கியதால்

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பொருட்களும் தத்தம் வகுப்பிலிருந்தும், மற்ற வகுப்பிலிருந்தும் வேறுபட்டு தோன்றுகின்றன. இந்த லக்ஷணங்களை (வேறுபாடுகளை) உருவாக்கியதால் பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஜாதீய வேறுபாடுகள்: தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவை தோற்றம் முதலியவற்றில் வேறுபட்டு உள்ளன.

ஸஜாதீய வேறுபாடுகள் – பூக்கள் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் மல்லிகையும், செம்பருத்தியும் உருவம், மணம் போன்ற வெவ்வேறு தன்மைகளை கொண்டுள்ளன. மனிதர்களுக்குள்ளேயும் உருவம் முதலிய வேறுபாடுகள் உள்ளன.

ஸ்ரீவத்ஸலக்ஷணம் ‘ஸ்ரீவத்ஸம்’ என்னும் மருவை

வக்ஷஸி தனது திருமார்பில்

தேன க்ருதமிதி வா கொண்டுள்ள காரணத்தினால்

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, ‘ஸ்ரீவத்ஸம்’ என்னும் மருவை தனது திருமார்பில் கொண்டுள்ளபடியால் பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர:|

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||

இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |
  2. ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||

—————

  1. ஓம்கபஸ்திநேமயேநம:

கபஸ்திசக்ரஸ்ய மத்யே ‘கபஸ்தி’ என்றழைக்கப்படும் சூரியமண்டலத்தின் நடுவே

ஸூர்யாத்மனா கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக (அந்த கதிரவனே உருவாக)

ஸ்தித இதி வீற்றிருப்பதால்

கபஸ்திநேமி: பகவான் ‘கபஸ்திநேமி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியமண்டலத்தின் நடுவே அந்த கதிரவனாக (கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக) வீற்றிருப்பதால் பகவான் ‘கபஸ்திநேமி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சூரியனை சூரியநாராயணராக வழிபடுவது நம் வழக்கத்தில் உள்ளது.

—————–

  1. ஓம்ஸத்வஸ்தாயநம:

ஸத்வம் குணம் சத்வ குணம்

ப்ரகாஶகம் ஒளிமயமான

ப்ராதான்யேன மேலோங்க

அதிதிஶ்டதி விளங்குவதால்

ஸத்வஸ்த: பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளிமயமான சத்வ குணம் மேலோங்க விளங்குவதால் பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வப்ராணிஶு அனைத்து உயிரினங்களுக்குள்ளும்

திஶ்டதீதி வா (உள்ளுறைந்து) வசிப்பதால்

ஸத்வஸ்த: பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் (உள்ளுறைந்து) வசிப்பதால் பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்ஸிம்ஹாயநம:

விக்ரமஶாலித்வாத் வீரம் பொருந்தியவராதலால்

ஸிம்ஹவத் (காட்டுக்கு அரசனான) சிங்கத்தைப் போன்று

ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காட்டிற்கு அரசனான சிங்கத்தைப் போன்று வீரம் பொருந்தியவராதலால் பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ந்ருஶப்தலோபேன ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயரில் ‘ந்ரு’ என்ற சொல் மறைந்து

‘ஸத்யபாமா பாமா’ இதிவத்வா சத்யபாமாவை (சத்ய என்பதை விடுத்து) பொதுவாக பாமா என்றழைப்பது போல

ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சத்யபாமா என்ற பெயரை, ‘சத்ய’ என்ற சப்தத்தை மறைத்து பொதுவாக பாமா என்று அழைப்பதைப் போல, ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயருடைய பகவான் ‘ந்ரு’ என்ற சப்தம் மறைந்து ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்பூதமஹேஶ்வராயநம:

பூதானாம் அனைத்து உயிரினங்களின்

மஹான் ஒப்புயர்வற்ற

ஈஶ்வர: இறைவன் (ஆள்பவர்) ஆனபடியால்

பூதமஹேஶ்வர: பகவான் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே அனைவரின் (அனைத்து உயிரினங்களின்) ஒப்புயர்வற்ற இறைவனாவார். எனவே, அவர் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூதேன ஸத்யேன ‘பூ’ என்றால் ஸத்யம் அதாவது என்றும் உள்ளவர்

ஸ ஏவ பரமோ அவர் ஒருவரே மேலான

மஹான் ஒப்புயர்வற்ற

ஈஶ்வர தனிப்பெரும் தெய்வம்

இதி வா பூதமஹேஶ்வர: எனவே, பகவான் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மையே உருவானவர், என்றும் உள்ளவர். ஒப்புயர்வற்ற தனிப்பெரும் தெய்வம் பகவான் ஒருவரே. எனவே, அவர் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூ ஸத்தாயாம்’. ‘பூ’ என்ற தாதுவிற்கு (வேர்ச்சொல்லிற்கு) ‘ஸத்’ என்று ஒரு பொருள் உள்ளது. ஸத் என்றால் இருப்பது. எனவேதான் என்றும் மாறாத உண்மையை ‘ஸத்யம்’ என்று கூறுகிறோம். இதன் அடிப்படையில், என்றும் இருப்பவரான பகவான் ஒருவரே மேலான பரம்பொருள். எனவே, அவரே ‘பூதமஹேஶ்வரன்’ என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

————

  1. ஓம்ஆதிதேவாயநம:

ஸர்வபூதானி அனைத்து உயிரினங்களுக்கும்

ஆதீயந்தேனேன மூல காரணமாய் இருப்பதால்

இதி ஆதி: பகவான் ‘ஆதி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிஸ்சாஸௌ இவ்வாறு ‘ஆதியாகவும்’

தேவஸ்ச இதி ‘தேவனாகவும்’ இருப்பதால்

ஆதிதேவ: பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மூல காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் ‘ஆதியாவார்’. இவ்வாறு ஆதியாகவும் தேவனாகவும் இருப்பதால் பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹாதேவாயநம:

ஸர்வான் அனைத்து

பாவான் பற்றுதல்களையும்

பரித்யஜ்ய விடுத்து

ஆத்மஞானயோக தனது ஆத்மஞான யோகமென்னும்

ஐஶ்வர்யே செல்வத்தால்

மஹதி தனது பெருமை

மஹியதே மென்மேலும் வளரப் பெற்றவராதலால்

தஸ்மாத் உச்யதே அவரை (பகவானை) அழைக்கின்றனர்

மஹாதேவ: ‘மஹாதேவ’ என்ற திருநாமத்தால்.

பகவான் அனைத்து பற்றுதல்களையும் விடுத்து தன்னைப் பற்றிய ஆத்மஞானயோகமென்னும் செல்வத்தால் தனது பெருமை மென்மேலும் வளரப் பெற்றவர். எனவே அவரை ‘மஹாதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

————

  1. ஓம்தேவேஶாயநம:

ப்ராதான்யேன அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய நிலையில் இருப்பதால்

தேவானாம் பகவான் அனைத்து தேவர்களுக்கும்

ஈஶோ தலைவராவார்

தேவேஶ: எனவே அவர் ‘தேவேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய (உயர்ந்த) நிலையில் இருப்பதால் பகவான் அனைத்து தேவர்களுக்கும் தலைவராவார். எனவே அவர் ‘தேவேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம்தேவப்ருத்குரவேநம:

தேவான் அனைத்து தேவர்களையும்

பிபர்தீதி பாதுகாப்பதால்

தேவப்ருத் ஶக்ர: ‘ஶக்ரனான’ இந்திரன் ‘தேவப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.

தஸ்யாபி அந்த இந்திரனையும்

ஶாஸிதேதி கட்டளையிட்டு வழிநடுத்தவதால்

தேவப்ருத்குரு: பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களைப் பாதுகாக்கும் இந்திரன் ‘தேவப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். அந்த இந்திரனையும் ஒரு குருவைப்போல கட்டளையிட்டு, வழிநடுத்துவதால் பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே தேவகுரு ப்ருஹஸ்பதியின் வடிவில் இந்திரனை வழிநடத்துகிறார் என்றும் கொள்ளலாம்

தேவானாம் தேவர்களைக் பரனாத் தாங்குகிறார் (காக்கிறார்)

ஸர்வவித்யானாம்  அனைத்து வித்தைகளையும்

நிகரணாத்வா அறிந்துள்ளார் ஆதலால்

தேவப்ருத்குரு: பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் தேவர்களைக் காக்கிறார் (தேவப்ருத்) . மற்றும் அனைத்து வித்தைகளையும் அறிந்துள்ளார் (குரு). எனவே அவர்  ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிகரணாத் என்றால் விழுங்குதல் குடித்தல் என்று பொருள். இங்கு அனைத்து வித்தைகளையும் கரைத்துக் குடித்தவர் என்று பொருள் கொள்ளலாம்.

—————-

  1. உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |

ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||

இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
  2. ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||

—————–

  1. ஓம்உத்தராயநம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்

பந்தனாத் தளைகளிலிருந்து

உத்தரதி (நம்மை) விடுவிக்கிறார்

இதி உத்தர: எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் தளைகளிலிருந்து (நம்மை) விடுவிக்கிறார். எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வ அனைவரைக் காட்டிலும்

உத்க்ருஶ்ட மேலானவராதலால்

இதி வா உத்தர: பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக்காட்டிலும் மேலானவராதலால், பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வஸ்மாதிந்த்ர உத்தர:’

அனைவரைக் காட்டிலும் பரம்பொருள் (இந்த்ர) உயர்ந்தவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு இந்த்ர என்ற பதம் பரம்பொருளான பரமாத்மாவையே குறிக்கிறது. தேவர்களின் தலைவரான இந்திரனை அல்ல.

————–

  1. ஓம்கோபதயேநம:

கவாம் ஆவினங்களை

பாலனாத் காப்பவராக (பசுக்களை மேய்ப்பவராக)

கோபவேஶதரோ இடையனாக (ஆயர்குலத்தவராக) தோன்றியதால்

கோபதி: பகவான் (கிருஷ்ணர்) ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது கிருஷ்ணாவதாரத்தில் ஆவினங்களை காப்பவராக, இடையனாக தோன்றியதால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கௌர்மஹீ: பூமாதேவியே ‘கௌ’ என்றும் அழைப்பர்

தஸ்யா: பதித்வாத்வா அவரின் (பூமாதேவியின்) கணவரானபடியால்

கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, ‘கௌ’ என்று அழைக்கப்படும் பூமாதேவியின் கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்கோப்த்ரேநம:

ஸமஸ்தபூதாநி அனைத்து உயிரினங்களையும்

பாலயன் காக்கிறார்

ரக்ஷகோ ஜகத: இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் காக்கிறார்

இதி கோப்தா எனவே, பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் காக்கிறார். எனவே பகவான் ‘கோப்தா’ என்று திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஞானகம்யாயநம:

ந கர்மணா வெறுமனே கடமைகளை ஆற்றுவதால் அல்ல

ந ஞானகர்மப்யாம் ஞானமும், செயலும் கலந்து செயல்படுவதால் அல்ல

வா கம்யதே அவரை (பகவானை) அடைவது

கிந்து ஆயினும்

ஞானேன (வேதங்கள், உபநிடதங்கள், அற நூல்களின் மூலம் பெறப்படும்) அறிவினால்

கம்யதே அவர் அடையப்படுகிறார்

இதி வா ஞானகம்ய: எனவே, பகவான் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடமைகளை ஆற்றுவதாலோ, ஞானமும், கர்மமும் கலந்து செயல்படுவதாலோ அடையமுடியாதவர் (அறியப்பட முடியாதவர்) பகவான். ஆயினும், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் அறநூல்கள் மூலம் பெறப்படும் தூய அறிவால் பகவானை அறியவும், அடையவும் முடியும். எனவே, அவர் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்புராதனாயநம:

காலேன காலத்தால்

அபரிச்சின்னத்வாத் வரையறுக்கப்படாதவர், ஆதலால்

புராபி (அனைவருக்கும்) மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே

பவதீதி இருப்பவர்

புராதன: பகவான் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காலம் என்னும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். காலத்தால் வரையறுக்கப்படாதவர். எனவே, அவர் அனைவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே (எவரும் தோன்றும் முன்னரே) இருப்பவர். எனவே அவர் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஶரீரபூதப்ருதேநம:

ஶரீர (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) உடலை

ஆரம்பக தோற்றுவிக்கும்

பூதானம் (நீர், நிலம், நெருப்பு போன்ற) பூதங்களை

பரணாத் தாங்குகிறார்

ப்ராணரூபதர: (அவற்றின்) உயிராக இருந்து

ஶரீரபூதப்ருத் எனவே, பகவான் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு உயிரினத்தின் உடலும் பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களால் ஆனது. அந்த பஞ்சபூதம் முதலிய தத்துவங்களையும் அவற்றின் உயிராக இருந்து பகவான் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்போக்த்ரேநம:

பாலகத்வாத் (அனைவரையும்) காப்பாற்றுவதால்

போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் காக்கும் கடவுளாவார். அனைவரையும் காப்பாற்றுவதால் அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமானந்த உயரிய ஆனந்தத்தை

ஸந்தோஹ அளவிடமுடியாத

ஸம்போகாத்வா அனுபவிப்பவராதலால்

போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் எப்பொழுதும் உயர்ந்த, அளவிடமுடியாத ஆனந்தத்தை இடைவிடாது அனுபவிக்கிறார். எனவே அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் பஞ்சமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (போக்தா என்னும் இந்த திருநாமம் வரையில்) ஐநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———-

  1. ஓம்கபீந்த்ராயநம:

கபிஸ்சாஸா(வ்) கபி அதாவது பன்றியின் உருவத்துடன் இருப்பதோடு

இந்த்ரஸ்சேதி இந்திரனாகவும் (அதாவது சிறந்தவராகவும்) இருப்பதால்

கபிர்வராஹ: ‘கபி’ என்றால் வராஹம் அதாவது பன்றி

வாராஹம் அந்த பன்றியின்

வபுராஸ்தித: (ஹிரண்யாக்ஷனைக் கொல்ல வராஹ அவதாரம் எடுத்த பொழுது) உடலைத் தாங்கியவராதலால்

கபீந்த்ர: பகவான் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொல்ல பன்றியின் உருவத்தில் (கபி) அவதரித்தார். இவ்வாறு கபியாகவும் (பன்றியின் வடிவோடு அவதரித்தவரும்) இந்த்ரனாகவும் (அனைவரைக் காட்டிலும் சிறந்தவராகவும்) இருப்பதால் பகவான் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கபீனாம் ‘கபி’ அதாவது வாநரானாம் குரங்குகளின்

இந்த்ர: (சேனைக்குத்) தலைவராக இருந்ததால்

கபீந்த்ர: ராகவோ வா பகவான் ஸ்ரீராமர் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இராமாவதாரத்தின் பொழுது ‘கபி’ அதாவது குரங்குகளின் சேனைக்குத் தலைவராக இருந்தபடியால் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்பூரிதக்ஷிணாயநம:

பூரய: பஹ்வய: ‘பூரய:’ என்றால் நிறைய

யக்ஞதக்ஷிணா: வேள்வியின் காணிக்கைகள்

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு

தர்ஶயதோ அளிக்கின்றனர்

யக்ஞம் குர்வதோ வேள்விகளை புரியும் பொழுது

வித்யந்த இதி முடிவில்

பூரிதக்ஷிண: எனவே பகவான் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு புரியப்படும் வேள்விகளின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை பகவானுக்கு (அவரின் ப்ரதியான வேள்வியை புரியும் அந்தணர்களுக்கு) அளிக்கின்றனர். எனவே, பகவான் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்திற்கு மாற்று உரையாக “பகவான் தாமே அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு பற்பல வேள்விகளை புரிந்து, அவற்றின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை மற்றவருக்கு வழங்கினார். எனவே, அவர் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.

————-

  1. ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |

வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||

இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |
  2. வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||

——————

  1. ஓம்ஸோமபாயநம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்

பந்தனாத் ஸோமம் பிபதி ‘ஸோமரஸத்தை’ பருகுகிறார்

ஸர்வயக்ஞேஶு அனைத்து வேள்விகளிலும்

யஶ்டவ்ய (அந்தந்த வேள்விகளால்) வழிபடப்படும்

தேவதாரூபேணேதி தெய்வங்களின் வடிவாக

ஸோமப: எனவே பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளிலும், அந்த வேள்விகளால் வழிபடப்படும் தெய்வங்கள் (தேவதைகளின்) வடிவில் பகவானே ஸோமரஸத்தைப் பருகுகிறார். எனவே, அவர் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு

தர்ஶயன் (வேள்விகளில்) தோன்றும்

யஜமானரூபேண வா (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால்

ஸோமப: பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால், பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்அம்ருதபாயநம:

ஸ்வாத்மாம்ருதரஸம் தனது ஆத்மானந்தமாகிய அமுதத்தை

பிபன் (எப்பொழுதும்) பருகுபவராகையால்

அம்ருதப: பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது ஆத்ம ஆனந்தத்திலேயே பகவான் எப்பொழுதும் திளைக்கிறார். அந்த ஆத்மானந்தமாகிய அமுதத்தை எப்பொழுதும் பருகுகிறார். எனவே அவர் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸுரை: அஸுரர்களால்

ஹ்ரியமானம் கவரப்பட்ட

அம்ருதம் அமுதத்தை

ரக்ஷித்வா (அந்த அஸுரர்கள் அதை பருகிவிடாது) காத்து

தேவான் தேவர்களுக்கு

பாயயித்வா அந்த அமுதத்தை வழங்கி

ஸ்வயமப்ய பின்னர் தானும்

பிபதிதி வா பருகியதால்

அம்ருதப: பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (பாற்கடலை கடையும் பொழுது) அஸுரர்களால் கவரப்பட்ட அமுதத்தைக் காத்து, அதை தேவர்களுக்கு அளித்து, பின்பு தானும் அந்த அமுதத்தைப் பருகியதால் பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மோஹினி அவதார சரித்திரம்: துர்வாஸர் தான் அளித்த மஹாலக்ஷ்மியின் மாலையை அவமதித்த இந்திரனுக்கும் (தேவர்களுக்கும்) நரை மற்றும் மூப்பு உண்டாகுமாறு சாபம் அளிக்கிறார். இதனால் அஸுரர்கள், தேவர்களைத் தோற்கடித்து ஸ்வர்கத்தை கைப்பற்றினர். பகவானின் ஆணையின் படி அஸுரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வந்தவுடன் அஸுரர்கள் அதைத் அபகரித்துச் சென்றனர். நரை, மூப்புடன் கூடிய தேவர்களால் அவர்களை எதிர்க்க இயலவில்லை. அவர்களின் நிலையை உணர்ந்த பகவான் ஒரு அழகிய பெண்ணின் வடிவைத் தாங்கி அஸுரர்களிடம் சென்று தானே அமுதத்தை பகிர்ந்து அளிப்பதாய் கூறுகிறார். அவரது அழகில் மயங்கிய அஸுரர்கள் அவரிடமே அந்த அமுதத்தை அளித்து அதைப் பகிர்ந்தளிக்கும் படி வேண்டினர். அஸுரர்கள் தம் அழகில் மயங்கி இருக்கும் வேளையில், பகவான் அனைத்து அழுத்தத்தையும் தேவர்களுக்கே பகிர்ந்து அளித்து, தானும் உண்டார்.

மேலும், தேவர்களைப் போல உருவம் தாங்கி தேவர்களின் வரிசையில் வந்த ஸ்வர்பானு என்ற அஸுரனை, சந்திரனும், சூரியனும் கைகாட்ட, தமது அகப்பையால் அவனது தலையைக் கிள்ளி அவனை ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்களாக மாற்றினார்.

————-

  1. ஓம்ஸோமாயநம:

ஸோம ரூபேண திங்களின் வடிவில்

ஒளஶதி செடி, கொடி மற்றும் மூலிகைகளை

போஶயன் அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதால்

ஸோம: பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் திங்களின் (வெண்மதியின்) வடிவில் செடி, கொடிகள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பாதுகாக்கிறார். எனவே அவர் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உமயா பார்வதியோடு

ஸஹித கூடிய

ஶிவோ வா பகவான் பரமசிவனாய் (பரமசிவனின் வடிவினராய்) இருப்பதால்

ஸோம: பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பார்வதியோடு கூடிய பரமசிவனின் வடிவினராய் இருப்பதால் பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ+உமா = ஸோம

‘ஓம் நம: ஸோமாய ச ருத்ராய ச…’ (ஶத ருத்ரீயம் எட்டாம் அனுவாகம்)

————

  1. ஓம்புருஜிதேநம:

புரூன் பஹூன் ‘புரு’ அதாவது பற்பலரை

ஜயதீதி வெற்றி கொண்டவராகையால்

புருஜித் பகவான் ‘புருஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்பலரை (‘புரு’) வெற்றி கொண்டவராகையால் பகவான் ‘புருஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்புருஸத்தமாயநம:

விஶ்வரூபத்வாத் புரு: இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘புரு’ என்றழைக்கப்படுகிறார்.

உத்க்ருஶ்டத்வாத் ஸத்தம: அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் அவர் ‘ஸத்தம:’ என்றும் அழைக்கப்படுகிறார்.

புருஶ்ஸ்வாஸௌ ‘புரு’ வாகவும்

ஸத்தமஸ்சேதி ‘ஸத்தம’ மானவராயும் இருப்பதால்

புருஸத்தம: பகவான் ‘புருஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘புரு’ என்றழைக்கப்படுகிறார். அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் ‘ஸத்தம:’ என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ப்ரபஞ்ச வடிவில் புருவாகவும், அனைவரைக் காட்டிலும் சிறந்தவரான ‘ஸத்தம:’ மானவராயும் இருப்பதால் பகவான் ‘புருஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்விநயாயநம:

விநயம் தண்டம் ‘விநயம்’ என்றால் தண்டனையைக் குறிக்கும்

கரோதி அளிக்கிறார் (செய்விக்கிறார்)

துஶ்டாநாமிதி தீயோருக்கு

வினய: எனவே பகவான் ‘வினய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தினின்று பிழறும் தீயோருக்கு தண்டனை (விநயம்) அளிக்கிறார். எனவே அவர் ‘வினய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினய என்ற சொல்லிற்கு திருத்துவது என்று ஒரு பொருள். இங்கு ஆச்சார்யாள் அந்தப் பொருளில் உரை அளித்துள்ளார். தண்டனை அளிப்பதன் மூலம் பகவான் தீயோரையும் திருத்துகிறார்.

—————-

  1. ஓம்ஜயாயநம:

ஸமஸ்தானி அனைத்து

பூதாநி ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்)

ஜயதீதி வெற்றி கொள்கிறார்

ஜய: எனவே பகவான் ‘ஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) வெற்றி கொள்கிறார். எனவே பகவான் ‘ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஸத்யஸந்தாயநம:

ஸத்யா உண்மையானது (என்றும் தவறுவதில்லை)

ஸந்தா ஸங்கல்ப: ‘ஸந்தா’ அதாவது அவரின் எண்ணங்கள் (அல்லது விருப்பங்கள்)

அஸ்யேதி ஸத்யஸந்த: எனவே பகவான் ‘ஸத்யஸந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் என்றும் உண்மையானவை (அவை என்றும் தவறுவதில்லை). எனவே அவர் ‘ஸத்யஸந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.1.5)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவானின்) எண்ணங்கள் என்றும் ஈடேறப்பெறுபவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்தாஶார்ஹாயநம:

தாஶோ தானம் ‘தாஶ’ என்ற சொல்லிற்கு தானம் என்று பொருள்

தமர்ஹதீதி அதற்குத் (தானங்களை ஏற்பதற்கு) தகுதி உடையவராதலால்

தாஶார்ஹ: பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தானத்தை ‘தாஶ’ என்றழைப்பர். அனைத்து தானங்களையும் ஏற்கும் தகுதி (அருகதை) உடையவராதலால் பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தஶார்ஹகுல ‘தஶார்ஹ’ குலத்தில்

உத்பவத்வாத்வா உதித்தவராகையால்

தாஶார்ஹ: பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் ‘தஶார்ஹ’ குலத்தில் உதித்தார். எனவே அவர் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸாத்வதாம்பதயேநம:

ஸாத்வதம் நாம தந்த்ரம் ‘ஸாத்வத’ என்று ஒரு தந்திரம் உள்ளது ‘தத்கரோதி ததாசஶ்டே’ (அந்த ஸாத்வத தந்திரத்தை) படைத்தவர்கள் அல்லது அதற்கு உரை (வ்யாக்யானம்) எழுதியவர்கள் என்ற பொருளில்

இதி ணிசி க்ருதே ‘ஸாத்வதம்’ என்ற வார்த்தையோடு ‘ணிசி’ யும்

க்விப்ப்ரத்யயே ‘க்விப்’ விகுதியும் சேர்ந்து

ணிலோபே ச ‘ணி’ என்ற விகுதியை விடுக்கும் பொழுது

க்ருதே பதம் ஸாத்வத் ‘ஸாத்வத்’ என்ற பதம் பிறக்கிறது.

தேஶாம் பதி: அத்தகைய (ஸாத்வத தந்திரத்தை உருவாக்கிய, அதற்கு உரை எழுதிய) ஸாத்வதர்களின் தலைவராக

யோகக்ஷேமகர இதி அவர்களுக்கு யோகத்தையும் (இல்லாததை அளித்தும்), க்ஷேமத்தையும் (உள்ளவற்றைக் காத்தும்) அளித்து அவர்களை காத்து வழிநடத்துவதால்

ஸாத்வதாம் பதி: பகவான் ‘ஸாத்வதாம் பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாத்வதம் என்ற பெயருடைய ஒரு தந்திரம் உள்ளது (தந்திரம் என்பது ஆகமம், ஸாஸ்த்ரம் போன்ற ஒரு வழிமுறையாகும். பொதுவாக, உருவ வழிபாடு மற்றும் திருக்கோயில்களை நிர்மாணித்தல் போன்றவை இவற்றில் விளக்கப்பட்டுள்ளது). அவற்றை உருவாக்கியவர்கள் மற்றும் அவற்றின் உரை ஆசிரியர்கள் ‘ஸாத்வதர்கள்’ என்று அழைக்கப்படுவர். அத்தகைய ஸாத்வதர்களின் பதியாக (தலைவராக) அவர்களுக்கு இல்லாதவற்றை அளித்தும் (யோகம்), இருப்பவற்றைக் காத்தும் (க்ஷேமம்) அவர்களை காத்து வழிநடத்துவதால் பகவான் ‘ஸாத்வதாம் பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலும் ஆச்சார்யாள் ‘ஸாத்வத’ என்ற பதத்திலிருந்து ‘ஸாத்வத்’ என்ற பதம் எவ்வாறு பிறக்கிறது என்பதற்கு இலக்கண விதிமுறைகளையும் விளக்கியுள்ளார்.

————

  1. ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம:|

அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||

இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம:|
  2. அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||

—————

  1. ஜீவாயநம:

ப்ராணான் ‘ப்ராணனை’ (உயிரை, உயிர்மூச்சை)

க்ஷேத்ரஞ்ஞ ரூபேண அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் ‘க்ஷேத்ரஞ்ஞராய்’

தாரயன் தாங்குவதால்

ஜீவ உச்யதே பகவான் ‘ஜீவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் ‘க்ஷேத்ரஞ்ஞராய்’  அவற்றின் (அந்த ஜீவராசிகளின்) ‘ப்ராணனை’ (உயிரை, உயிர்மூச்சை) தாங்குவதால் பகவான் ‘ஜீவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. வினயிதாஸாக்ஷிணேநம:

வினயித்வம் வினயிதா ‘வினயிதா’ என்றால் பணிவு என்று பொருள்

தாம்  ஸாக்ஷாத் தானே நேரடியாக

பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்)

ப்ரஜானாமிதி அனைத்து உயிரினங்களிடமும்

வினயிதாஸாக்ஷி எனவே பகவான் ‘வினயிதாஸாக்ஷி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் (அவற்றுக்கு தம்மிடம்) உள்ள பணிவை தானே நேரடியாக அறிகிறார். எனவே அவர் ‘வினயிதாஸாக்ஷி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதவா அல்லது

நயதேர்கதிவாசினோ ‘கதி’ அதாவது நடையை (செல்லும் வழியை) குறிக்கும் “நீ” என்ற வேர்ச்சொல்லிற்கு

ரூபம் வினயிதா வினயிதா என்று ஒரு வடிவம் உண்டு,

அஸாக்ஷி அஸாக்ஷாத்த்ருஶ்டா ‘அஸாக்ஷி’ அதாவது எதையும் பார்க்காதவர்

ஆத்மாதிரிக்தம் ஆத்மாவைத் தவிர மற்றொரு

வஸ்து ந பஶ்யதீத்யர்த்த: பொருளைக் காணாதவர் என்று பொருள். இவ்வாறு வழிநடத்துபவர் (வினயிதா), மற்றும் ஆத்மாவைத் தவிர்த்து மற்றொரு பொருளைக் காண்பதவர் (அஸாக்ஷி) என்று இரு திருநாமங்களாகக் கொள்ளலாம்.

அல்லது, ‘கதி’ அதாவது வழி என்ற பொருளில் ‘வினயிதா’ என்ற திருநாமத்தாலும், ஆத்மாவைத்தவிர மற்றொருப் பொருளைப் பார்க்காதவர் என்ற பொருளில் ‘அஸாக்ஷி’ என்ற திருநாமத்தாலும் பகவான் அழைக்கப்படுகிறார் (என்றும் பொருள் கொள்ளலாம்).

இங்கு, இரண்டு திருநாமங்களாக ஆச்சார்யாள் உரை அளித்திருந்தாலும், தனது ஸஹஸ்ரநாம கணக்கில் இதை ஒரே திருநாமமாகத் தான் கணக்கிட்டுள்ளார். ஆகவே, முதல் உரையையே பிரதானமாகக் கொள்ளவேண்டும்.

————

  1. முகுந்தாயநம:

முக்திம் மோக்ஷத்தை

ததாதி இதி அளிப்பதால்

முகுந்த: பகவான் ‘முகுந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் ‘ப்ருஶோதரா’ வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும்.

அக்ஷரஸாம்யான்நிருக்திவசனாத் எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும்

நைருக்தானாம் நிருக்திகாரர்கள் பகவானை

முகுந்த இதி நிருக்த: முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.

முக்தியை அளிப்பதால் பகவான் ‘முகுந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஸோதரா வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும். எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும் நிருக்திகாரர்கள் பகவானை முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.

நிருக்தி: வேதாங்கங்கள் ஆறினுள் ஒன்று. இந்த வேதாங்கம், வெவ்வேறு வார்த்தைகளின் சேர்க்கைகளையும், அவை உருவான விதத்தையும் விளக்குவதாகும்.

————–

  1. அமிதவிக்ரமாயநம:

அமிதா அபரிச்சின்னா ‘அமித’ அதாவது அளவிடமுடியாத

விக்ரமாஸ்வய: பாதவிக்ஷேபா விக்ரம அதாவது மூன்றடிகளைக் கொண்டவர்

அஸ்ய அமிதவிக்ரம: எனவே, பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மூன்றடிகள் அளவிடமுடியாதவை. எனவே, அவர் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிதம் அளவிடமுடியாத

விக்ரமணம் ஶௌர்யமஸ்யேதி வா பராக்ரமம் (பலம், சூரத்தனம்) உடையவராதலால்

அமிதவிக்ரம: எனவே, பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அளவிடமுடியாத பராக்ரமம் உடையவராதலால் பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் பொருளில் விக்ரம என்பதை ‘நடை’ அல்லது ‘அடிகள்’ என்றும், இரண்டாவது பொருளில் விக்ரம என்றால் பராக்ரமம் என்றும் பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யாள்.

————-

  1. அம்போநிதயேநம:

அம்பாம்ஸி ‘அம்ப’ அதாவது

தேவாதயோSஸ்மின்னிதீயந்த தேவர்களும், மற்றோரும் பகவானுக்குள் வசிப்பதால்

இதி அம்போநிதி: பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்குள் ‘அம்ப’ என்றழைக்கப்படும் தேவர்களும், மற்றவர்களும் வசிக்கின்றனர். எனவே, அவர் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தானி வா ஏதானி சத்வார்யம்பாஸி | தேவா மனுஶ்யா பிதரோSஸுரா:’

இங்கு நால்வகைப்பட்டோர் ‘அம்பர்கள்’ என்றழைக்கப்படுகின்றன. தேவர்கள், மானிடர்கள், பித்ருக்கள் மற்றும் அஸுரர்கள்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸாகரோ வா கடலின் வடிவாக இருப்பதால்

அம்போநிதி: பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, கடலின் வடிவாக இருப்பதால் பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸரஸாஸ்மி ஸாகர:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.24)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நீர்நிலைகளில் நான் கடல்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————-

  1. அனந்தாத்மனேநம:

தேஶத: இடம்

காலதோ காலம்

வஸ்துஸ்ச பொருள் (உருவம் முதலியன) போன்ற

அபரிச்சின்னத்வாத் எல்லைகள் அற்றவராதலால்

அனந்தாத்மா பகவான் ‘அனந்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இடம், காலம், பொருள் போன்ற எல்லைகள் அற்றவராதலால் (இவற்றால் கட்டுப்படுத்த இயலாதவர் ஆதலால்) பகவான் ‘அனந்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு ஜீவனும் இந்த மூன்றினால் கட்டுப்பட்டுள்ளவர். ஒரு இடத்தில் இருப்போர் மற்றொரு இடத்தில் இருப்பதில்லை. ஒரு காலகட்டத்தில் இருப்பவர் என்றும், எக்காலத்திலும் இருப்பதில்லை (இது ப்ரஹமா முதலான தேவர்களுக்கும் பொருந்தும்). ஒரு உருவில், ஒரு பொருளாய் இருப்பவர் மற்றொரு பொருளாய், மற்றொரு உருவத்தில் இருப்பதில்லை. பகவானுக்கு இத்தகைய எல்லைகள் இல்லை. அவர் எல்லாவிடத்திலும், எக்காலத்திலும், எல்லாமுமாய் இருப்பவர் என்பதையே இந்த திருநாமம் குறிக்கிறது.

————–

  1. மஹோததிஶயாயநம:

ஸம்ஹ்ருத்ய (ப்ரளய காலத்தில்) அழித்து

ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும்

ஏகார்ணவம் ஜகத்க்ருத்வா இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் நீர்மயமாகும்படி செய்து

அதிஶேதே அதன் மீது பள்ளிகொண்டுள்ளார்

மஹோததி மிகப் பெரியதானதொரு கடலில்

மஹோததிஶய: எனவே பகவான் ‘மஹோததிஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களையும் அழித்து இந்தப் ப்ரபஞ்சத்தை நீர்மயமாகும்படி செய்கிறார். அந்த மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடலில் பள்ளிகொண்டு அருள்கிறார். எனவே அவர் ‘மஹோததிஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹோததி = மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடல் + ஶயதி – பள்ளி கொள்ளுதல் = மஹோததிஶய:

————-

  1. அந்தகாயநம:

அந்தம் கரோதி முடிப்பதனால் (அழிப்பதனால்)

பூதாநாமிதி அனைத்து உயிரினங்களையும்

அந்தக: பகவான் ‘அந்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத்கரோதி ததாசஶ்டே’ (சுராதிகணவார்த்திகம்) இதி ணிசி இந்த வார்த்திக ஸூத்ரத்தின் படி ‘ணி’ விகுதி (அந்த என்ற பதத்தோடு) சேர்கிறது.

‘ண்வுல்த்ருசௌ’ (பாணினி ஸூத்ரம் 3.1.133) இதி

யுவாரநாகௌ’ (பாணினி ஸூத்ரம் 7.1.1) இதி அகாதேஶ: இந்த பாணினி ஸூத்ர விதிகளின்படி ‘அந்த’ என்ற பதத்தோடு ‘அக’ என்ற விகுதி சேர்ந்து ‘அந்தக:’ என்ற சொல் உருவாகிறது.

(அவரவரது கால முடிவிலும், ப்ரளயத்தின் பொழுதும்) அனைத்து உயிரினங்களையும் முடிப்பதால் (அழிப்பதால்) பகவான் ‘அந்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யாள் வார்த்திகம் மற்றும் பாணினி ஸூத்ரங்களின் படி ‘அந்தக:’ என்ற சொல் எவ்வாறு உருவாகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

  1. அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |

ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||

இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |
  2. ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||

—————

  1. ஓம் அஜாய நம:

ஆத் அகரத்தினால் (அ என்னும் எழுத்தால்) குறிக்கப்படும்

விஶ்ணோரஜாயத பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால்

காம: மன்மதன்

அஜ: ‘அஜ’ என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகரத்தினால் குறிக்கப்படும் பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால் மன்மதன் ‘அஜ’ என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமசிவனாரின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் தன் உடலை இழக்கிறான். பின்னர் பகவான் கண்ணனாக அவதரித்தபொழுது பகவானுக்கும் ருக்மிணி பிராட்டியருக்கும் மகனாக ப்ரத்யும்னன் என்ற பெயரோடு பிறந்தான். பின்னர் மயாசுரனை அழித்து ரதியை மணந்தான். எனவே, மன்மதன் பகவானின் பிள்ளையாவான்.

“காமனைப் பயந்த காளை” (திருவாய்மொழி 10.2.8)

————–

  1. ஓம் மஹார்ஹாய நம:

மஹ: பூஜா ‘மஹ’ என்றால் பூஜை (வழிபாடு) என்று பொருள்

தத் அர்ஹத்வாத் அதற்குத் தகுதியுடையவராதலால்

மஹார்ஹ: பகவான் ‘மஹார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹ என்றால் பூஜை (வழிபாடு). அர்ஹ என்றால் அருகதை உள்ளவர். பகவான் எவ்விதமான பூஜையையும் (வழிபாட்டையும்) ஏற்பதற்குத் தகுதி (அருகதை) படைத்தவர். எனவே, அவர் ‘மஹார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு யானை எளிய தாமரையை ஏந்தி ‘ஆதிமூலமே’ என்று அலறிய பொழுது பகவான் ஓடி வந்து அதை ஏற்றுக்கொண்டார். ஒரு யானையின் எளிய பூவை ஏற்ற அவரே, யுதிஷ்டிரனின் ராஜஸூய யாகத்தில் ‘அக்ர’ பூஜையையும் ஏற்றார். இராமாவதாரத்தில் குகனின் அன்புக்கும், சபரியின் பக்திக்கும், அனுமனின் தொண்டிற்கும் கட்டுப்பட்டார். கிருஷ்ணாவதாரத்தில் ஒரே நேரத்தில் ஒரு அரசனின் ராஜபோக உபசரிப்பையும், ஒரு ஏழை அந்தணன் அன்று இரந்து பெற்ற பழங்களையும் ஏற்று, இருவருக்கும் அருள் புரிந்தார். வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளின் அளிக்கும் சிறந்த பூஜையை ஏற்கும் அவரே, ஆய்ச்சிகளின் எளிய அன்பிற்கும் வெண்ணைக்கும் கட்டுப்படுகிறார். எனவே, பகவான் எத்தகைய பூஜையையும் ஏற்கத் தகுதி படைத்தவராவார். பகவத்கீதையில் பகவான் கூறியபடி “ஒரு இலையோ (துளசி), பூவோ, பழமோ அல்லது தண்ணீரோ பக்தியோடு அளித்தால் அதை மிகச்சிறந்த பூஜையாக பகவான் ஏற்கிறார்”.

———–

  1. ஓம் ஸ்வாபாவ்யாய நம:

ஸ்வபாவேந ஏவ இயற்கையாகவே

அபாவ்யோ உருவாவதில்லை (பிறப்பதில்லை)

நித்யநிஶ்பன்னரூபத்வாத் என்றும் நிறைவுடையவராக இருப்பதால்

இதி ஸ்வாபாவ்ய: எனவே பகவான் ‘ஸ்வாபாவ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றுமே இயற்கையாகவே நிறைவுடையவர் (நிறைவானவர்). எனவே அவர் என்றும் உருவாவதில்லை (பிறப்பதில்லை). எனவே பகவான் ‘ஸ்வாபாவ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அபாவ்ய: என்றால் மாறுபாடற்றவர் என்றும் ஒரு பொருள் உள்ளது.

———-

  1. ஓம் ஜிதாமித்ராய நம:

ஜிதா வெல்கிறார்

அமித்ரா பகைவர்களை

அந்தர்வர்தினோ உட்பகைவர்களையும்

ராகத்வேஶாதயோ விருப்பு வெறுப்புக்கள் போன்ற

பாஹ்யாஸ்ச புறப்பகைவர்களையும்

ராவணகும்பகர்ணஶிஶுபாலாதயோ இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்ற

யேனாஸௌ ஜிதாமித்ர: எனவே பகவான் ‘ஜிதாமித்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உட்பகைவர்களான விருப்பு, வெறுப்புகளையும், புறப்பகைவர்களான இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்றோரையும் (எளிதில்) வெல்கிறார். எனவே அவர் ‘ஜிதாமித்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ப்ரமோதனாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸா தனது இயற்கை ஸ்வரூபமான அம்ருதத்தை

ஸ்வாதான்னித்யம் தினமும் சுவைத்து

ப்ரமோததே இன்புறுகிறார்

ப்ரமோதன: எனவே, பகவான் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான ஸ்வரூப அம்ருதத்தை தினமும் சுவைத்து இன்புறுகிறார். எனவே அவர் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்யாயினாம் தன்னை த்யானிப்பவர்களை

த்யானமாத்ரேன (தன்னை) த்யானித்த அக்கணமே

ப்ரமோதம் கரோதீதிவா மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்)

ப்ரமோதன: பகவான் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னை த்யானிப்பவர்களை அவர்கள் (தன்னை) த்யானித்த அக்கணமே மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்), ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஆனந்தாய நம:

ஆனந்த: இன்பத்தை

ஸ்வரூபமஸ்யேதி தனது இயற்கையாக உடையவர்

ஆனந்த: பகவான் ‘ஆனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இன்பமே தனது இயற்கை வடிவாக உடையவர். எனவே அவர் ‘ஆனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதானி மாத்ராமுபஜீவந்தி’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.32)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்தின்) ஆனந்தத்தின் ஒரு துளி அளவிலேயே ஏனைய ஜீவன்கள் உயிர்வாழ்கின்றன.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம் நந்தனாய நம:

நந்தயதீதி (அனைவரையும்) மகிழ்விப்பதால்

நந்தன: பகவான் ‘நந்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் மகிழ்விப்பதால் பகவான் ‘நந்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் நந்தாய (அனந்தாய) நம:

ஸர்வாபிருபபத்திபி: அனைத்தும் அடையபெற்றிருக்கிறார்

ஸம்ருத்தோ முழுமையாக

நந்த: எனவே பகவான் ‘நந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தும் (அனைத்து சித்திகளும்) முழுமையாக அடையப்பெற்றிருக்கிறார். எனவே அவர் ‘நந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியில் பிறந்தோரும் சித்திகள் அடையப்பெற்றிருக்கலாம். ஆனால் பகவான் அனைத்தையும் பூரணமாக அடையப்பெற்றுள்ளார்; அவற்றை இயற்கையாகவே அடையப்பெற்றுள்ளார்.

ஸுகம் வைஶயிகம் விஷய சுகங்கள் (புலனின்பங்கள்)

நாஸ்ய வித்யத இதி அவருக்கு இல்லை

அனந்த: எனவே பகவான் ‘அனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை போன்று விஷய சுகத்தை அனுபவிப்பதில்லை. எனவே அவர் ‘அனந்த:’ (இன்பமில்லாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யோ வை பூமா தத் ஸுகம் நால்பே ஸுகமஸ்தி’ (சாந்தோக்ய உபநிஶத் 23.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எது முழுமையானதோ அதுவே சிறந்த இன்பமாகும். மற்ற (விஷயசுகங்கள் போன்ற) தாழ்ந்த இன்பங்கள் இன்பங்களாகா.

ஆச்சார்யாள் இந்த திருநாமத்தை ‘நந்த:’ (இன்பத்தை அனுபவிப்பவர்) மற்றும் ‘அனந்த:’ (இன்பத்தை அனுபவிக்காதவர்) என்று இரண்டு வகையாகப் பிரித்துப் பொருளுரைத்திருக்கிறார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் ‘நந்த:’ என்ற திருநாமமே ப்ரதானமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

———–

  1. ஓம் ஸத்யதர்மணே நம:

ஸத்யா உண்மையான தர்ம அறத்தை (உடையவர் ஆதலால்)

ஞானாதயோSஸ்யேதி ஞானம் முதலான

ஸத்யதர்மா பகவான் ‘ஸத்யதர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஞானம் முதலான அறத்தை உண்மையாக (என்றும் நிலையாக) உடையவர் ஆதலால் அவர் ‘ஸத்யதர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் த்ரிவிக்ரமாய நம:

த்ரயோ மூன்று

விக்ரமாஸ் அடிகளால்

த்ரிஶுலோகேஶு மூன்று உலகங்களையும்

க்ராந்தா பரவினார்

யஸ்ய ஸ த்ரிவிக்ரம: எனவே பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது மூன்று அடிகளால் மூவுலகங்களையும் பரவி இருந்ததால் அவர் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘த்ரீணி பதா விசக்ரமே’  அவர் மூன்றடிகள் நடந்தார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு மூன்று உலகங்கள் என்பது ‘ஜாக்ரத’ (விழிப்பு நிலை), ‘ஸ்வாபன’ (கனவு நிலை) மற்றும் ‘ஶுஶுப்தி’ (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான ‘துரீய’ நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார்.

த்ரயோ லோகா: மூவுலகங்களையும்

க்ராந்தா அளந்தார்

யேனேதி வா த்ரிவிக்ரம: எனவே பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வாமன அவதாரத்தில்) மூவுலகங்களையும் அளந்ததால் பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரிரித்யேவ த்ரயோ லோகா: கீர்த்திதா முனிஸத்தமை: |

க்ரமதே தாம்ஸ்த்ரிதா ஸர்வாஸ்த்ரிவிக்ரம இதி ஶ்ருத: || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.52)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது: தவசீலர்கள் ‘த்ரி’ (மூன்று) என்ற பதத்தினால் மூவுலகையும் குறிப்பர். அம்மூன்று உலகங்களையும் தாங்கள் தாண்டுவதால் தாங்கள் ‘த்ரிவிக்ரமன்’ என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

———-

57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: 

த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||

இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |

534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||

———-

531. ஓம் மஹர்ஶயே கபிலாச்சார்யாய நம:

‘மஹர்ஶி கபிலாச்சார்ய:’ என்ற இந்த பதம்

ஸவிஶேஶணம் பகவானை (பகவானின் ஸ்ரீகபிலாவதாரத்தை) தனித்துக் குறிப்பதான

ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.

மஹாம்ஸ்சாஸாவ்ருஶிஸ்சேதி எவரொருவர் மிகச்சிறந்தவராகவும் (மஹான்) முனிவராகவும் (ரிஷி) உள்ளாரோ

மஹர்ஶி: அவரை ‘மஹரிஷி’ என்று அழைப்பர்.

க்ருத்ஸனஸ்ய முழுமையாக (பூரணமாக)

வேதஸ்ய தர்ஶனாத் வேதத்தை உணர்ந்ததால் (உணர்ந்ததாலும் அவர்கள் மஹரிஷிகள் என்று அழைக்கப்படுவர்).

அன்யே து வேதைகதேஶ (அவ்வாறு முழுமையாக வேதங்களை அறியாது) வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் அறிந்தோரை

ரிஶய: ரிஷிகள் என்று மட்டும் அழைப்பர்.

கபிலஸ்சாஸௌ ‘கபிலர்’ என்ற பெயருடனும்

ஸாங்க்யஸ்ய ஶுத்ததத்வ ‘ஸாங்க்யம்’ எனும் தூய்மையான தத்துவத்தை

விஞ்ஞானஸ்ய அறிந்தவரும்

ஆச்சார்யஸ்சேதி (அதனால்) ஆசார்யருமான

கபிலாசார்ய: பகவான் ‘கபிலாசார்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘கபிலர்’ என்ற பெயருடன் ஸாங்க்ய தத்துவ ஆச்சார்யராக விளங்கினார். வேதத்தை, ஒரு பகுதியை மட்டும் பயிலாது, முழுமையாக உணர்ந்ததனாலும், மிகச்சிறந்தவரானதாலும் ‘மஹர்ஶி’ என்ற அடைமொழியுடன் பகவான் ‘மஹர்ஶி கபிலச்சார்யர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இது பகவானை தனித்துக் குறிப்பதான திருநாமமாகும்.

‘ஶுத்தாத்மதத்வவிஞ்ஞானம் ஸாங்க்யமித்யபிதீயதே |’

தூய்மையான ஆத்ம தத்துவத்தை விளக்கும் அறிவிற்கு ஸாங்க்யம் என்று பெயர்.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.

‘ரிஶி ப்ரஸூதம் கபிலம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 5.2)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ரிஷியாகப் பிறந்த கபிலர்…

இதி ஶ்ருதேஸ்ச | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘ஸித்தானாம் கபில முனி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.26)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சித்தர்களில் (நான்) கபில முனி

இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை) போன்ற ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.

கபிலாவதார சுருக்கம்: பகவான் கர்த்தம ப்ரஜாபதிக்கும், ஸ்வயம்புவ மனுவின் மகளான தேவஹூதிக்கும் மகனாக ‘கபிலர்’ என்ற பெயருடன் தோன்றினார். தனது தாயாரான தேவஹூதிக்கு ‘ஸாங்க்ய’ யோகத்தை விளக்கினார். பகவான் கபிலாவதாரமும், அவரது போதனைகளும், அவர் பரப்பிய ஸாங்க்ய யோகமும் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் அத்யாயம் 21ல் இருந்து, அத்யாயம் 33 வரை விவரிக்கப்பட்டுள்ளது.

——–

532. ஓம் க்ருதஜ்ஞாய நம:

க்ருதம் கார்யம் ஜகத் ‘க்ருத’ அதாவது காரியமான (விளைவான) இந்தப் ப்ரபஞ்சத்தை

ஞ ஆத்மா ‘ஞ’ ஆத்மாவை குறிக்கும்

க்ருதம் ச காரியமான இந்தப் ப்ரபஞ்சமாகவும்

தஜ் ஞஸ்சேதி ஆத்மாவாகவும் இருப்பதனால்

க்ருதஜ்ஞ: பகவான் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காரிய வடிவான இந்தப் ப்ரபஞ்சமாகவும் (க்ருத), அந்தப் ப்ரபஞ்சத்தை அறியும் ஆத்மாவாகவும் (ஞ) இருப்பதனால் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

533. ஓம் மேதினீபதயே நம:

மேதின்யா பூம்யா: ‘மேதினி’ என்றால் பூமியைக் குறிக்கும்

பதி: பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால்

மேதினீபதி: பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேதினி என்றழைக்கப்படும் பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால் பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

534. ஓம் த்ரிபதாய நம:

த்ரீணி மூன்று

பதான்யஸ்யேதி அடிகளை உடையவராதலால்

த்ரிபத: பகவான் ‘த்ரிபத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூன்று அடிகளை உடையவராதலால் பகவான் ‘த்ரிபத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘த்ரீணி பதா விசக்ரமே’ – அவர் மூன்றடிகள் நடந்தார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முன்பே கூறியிருந்தபடி, மூன்று அடிகள் என்பது ‘ஜாக்ரத’ (விழிப்பு நிலை), ‘ஸ்வாபன’ (கனவு நிலை) மற்றும் ‘ஶுஶுப்தி’ (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான ‘துரீய’ நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார். அடுத்த திருநாமத்தில் இது ஸ்பஶ்டமாக விளக்கப்பட்டுள்ளது.

———–

535. ஓம் த்ரிதஶாத்யக்ஷாய நம:

குணாவேஶேன குணங்களின் மேலீட்டால்

ஸஞ்ஜாதாஸ் பிறப்பதான

திஸ்ரோ தஶா அவஸ்தா மூன்று நிலைகளை

ஜாக்ரதாதய: ஜாக்ரத் முதலான

தாஸாம் அத்யக்ஷ அவற்றை மேற்பார்வையிடுகிறார்

இதி த்ரிதஶாத்யக்ஷ: எனவே, பகவான் ‘த்ரிதஶாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குணங்களின் மேலீட்டால் உருவாகும் ஜாக்ரத் (விழிப்பு நிலை) முதலான மூன்று நிலைகளையும் பகவான் மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் ‘த்ரிதஶாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

536. ஓம் மஹாஶ்ருங்காய நம:

மத்ஸ்யரூபி பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் (மீனாக அவதரித்த காலத்தில்)

மஹதி ஶ்ரிங்கே தனது மிகப்பெரிய கொம்பில்

ப்ரளயாம்போதௌ நாவம் ப்ரளய நீரில் (ஸத்யவ்ரதனின்) படகை

பத்வா கட்டிக்கொண்டு

சிக்ரீட இதி விளையாடியவராதலால்

மஹாஶருங்க: பகவான் ‘மஹாஶருங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் ஸத்யவ்ரதனின் படகை தனது மிகப்பெரிய கொம்பில் (ஶ்ரிங்கத்தில்) கட்டிக்கொண்டு ப்ரளய நீரில் விளையாடியவராதலால் அவர் ‘மஹாஶருங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

537. ஓம் க்ருதாந்தக்ருதே நம:

க்ருதஸ்ய க்ருத, அதாவது காரிய வடிவான இந்த ப்ரபஞ்சத்தை

அந்தம் ஸம்ஹாரம் கரோதீதி அந்தம் அதாவது (ப்ரளய காலத்தில்) அழிக்கிறார்

க்ருதாந்தக்ருத் எனவே பகவான் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காரிய வடிவான ப்ரபஞ்சத்தை (‘க்ருத’) ப்ரளய காலத்தில் அழிக்கிறார் (‘அந்த க்ருத்’). எனவே அவர் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருதாந்தம் ம்ருத்யும் ‘க்ருதாந்தம்’ என்று அழைக்கப்படும் மரணத்தை

க்ருந்ததீதி வா வெட்டுகிறார் (அழிக்கிறார்)

க்ருதாந்தக்ருத் எனவே பகவான் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ‘க்ருதாந்தம்’ என்று அழைக்கப்படும் மரணத்தை வெட்டுகிறார் (அழிக்கிறார்). எனவே, அவர் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த விளக்கத்தை இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம். தனது அடியவர்களுக்கு மரணம் இல்லாத நிலையை அளிக்கிறார் (அவர்களது மரணத்தை வெட்டுகிறார்). அல்லது, ம்ருத்யு தேவதையையே மஹாப்ரளயத்தில் அழிக்கிறார்.  

————-

  1. மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ

குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர:  ||

இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |
  2. குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||

——————

  1. ஓம் மஹாவராஹாய நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகப்பெரியவரும்

வராஹஸ்சேதி பன்றி வடிவெடுத்தவருமாதலால்

மஹாவராஹ: பகவான் ‘மஹாவராஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகப்பெரியவர் (மிகவும் மஹிமை பொருந்தியவர் என்றும் கொள்ளலாம்). பன்றி வடிவெடுத்தவர். எனவே அவர் ‘மஹாவராஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகப்பெரிய வராஹ உருவம் எடுத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

—————

  1. ஓம் கோவிந்தாய நம:

கோபிர்வாணீபிர் ‘கோ’ என்றால் வாக்கு (அதாவது வேதங்கள்) என்று பொருள்

விந்ததே அடையப்படுவர்

கோவிந்த: எனவே பகவான் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘கோ’ ஶப்தத்தால் குறிக்கப்படும் வேதங்களால் (மட்டுமே) அடையப்படுபவர். எனவே அவர் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேத்தி அறியப்படுபவர்

வேதாந்தவாக்யைரிதி வா வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே)

கோவிந்த: எனவே பகவான் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே) அறியப்படுகிறார். எனவே அவர் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கோ’ என்றால் வேதங்களைக் குறிக்கும் என்பது இந்த இரண்டு விளக்கங்களும் பொது. முதல் விளக்கத்தில் ‘கோ’ + ‘விந்ததி’ = கோவிந்த:. இரண்டாவது விளக்கத்தில் ‘கோ’ + ‘வேத்தி’ = கோவிந்த:.

‘கோபிரேவ யதோ வேத்யோ கோவிந்த: ஸமுதாஹ்ருத:’

ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது: வேதங்களைக் கொண்டே (வேத, வேதாந்த வாக்யங்களைக் கொண்டே) அவரை அறிந்துகொள்ள முடியும். எனவே அவர் ‘கோவிந்த:’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஸ்ரீவிஶ்ணுதிலகே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது.

——–

  1. ஓம் ஸுஶேணாய நம:

ஶோபனா அழகான

ஸேனா கணாத்மிகா படைக்கூட்டங்களை (சேனைகளை) யஸ்யேதி

ஸுஶேண: உடையவராதலால் பகவான் ‘ஸுஶேண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகான படைக்கூட்டங்களை (சேனைகளை) உடையவராதலால் பகவான் ‘ஸுஶேண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் கனகாங்கதினே நம:

கனகமயானி பொன்மயமான

அங்கதானி அஸ்யேதி தோள்வளைகளை உடையவராதலால் (அணிந்திருப்பவர்)

கனகாங்கதி பகவான் ‘கனகாங்கதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பொன்மயமான தோள்வளைகளை அணிந்திருப்பவர். எனவே அவர் ‘கனகாங்கதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் குஹ்யாய நம:

ரஹஸ்யோபநிஶத் ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே

வேத்யத்வாத் அறியப்படுபவராதலால்

குஹ்ய: பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே அறியப்படுபவராதலால் பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குஹாயாம் ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில்

நிஹித வீற்றிருக்கிறார்

இதி வா குஹ்ய: எனவே பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் அனைவரது இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில் வீற்றிருக்கிறார் (மறைந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்). எனவே பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் கபீராய நம:

ஞானைஶ்வர்ய அறிவு, செல்வம்

பலவீர்யாதிபிர் பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும்

கம்பீரோ மேன்மையுடையவர் ஆதலால்

கபீர: எனவே பகவான் ‘கபீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறிவு, செல்வம், பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும் மேன்மையுடையவர் ஆதலால் பகவான் ‘கபீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் கஹனாய நம:

துஶ்ப்ரவேஶத்வாத் அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால்

கஹன: பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால் பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரய மூன்று நிலைகளிலும் (ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி) உள்ள

பாவ அபாவ விருப்பங்கள் மற்றும் விருப்பமற்ற தன்மைகளை

ஸாக்ஷித்வாத் ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால்

கஹனோ வா பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி ஆகிய மூன்று நிலைகளில் உள்ள நமது விருப்பு மற்றும் விருப்பமற்ற தன்மைகளை ஒரு ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் குப்தாய நம:

வாங் வாக்கிற்கும்

மனஸா மனதிற்கும்

அகோசரத்வாத் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால்

குப்த: பகவான் ‘குப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால் பகவான் ‘குப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏஶ ஸர்வேஶு பூதேஶு கூடோத்மா ந ப்ரகாஶதே’ (கடோபநிஶத் 1.3.12)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம் சக்ரகதாதராய நம:

‘மனஸ்தத்வாத்மகம் சக்ர புத்திதத்வாத்மிகாம் கதாம் |

தாரயன் லோகரக்ஷார்த்தமுக்த: சக்ரகதாதர: ||’

மனத்தை குறிக்கும் சக்ரத்தையும், புத்தியை குறிக்கும் கதையையும் உலகத்தின் (உலகத்தோரின்) நலனுக்காக தனது திருக்கைகளில் ஏந்தியுள்ளார். எனவே, அவர் (பகவான்) ‘சக்ரகதாதர:’ என்று அழைக்கப்படுகிறார்.

 இதி சக்ரகதாதர:

இந்த ஸ்லோகத்தின் படி பகவான் ‘சக்ரகதாதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத:

வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||

இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத: |
  2. வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||

————-

  1. ஓம் வேதஸே நம:

விதாதா அனைத்தையும் படைப்பவராதலால்

வேத பகவான் ‘வேத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத் ‘ப்ருஶோதரா’ கணத்தை சேர்ந்த சொல்லாதலால்

ஸாதுத்வம் ‘வேத’ என்ற இந்த சொல் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.

அனைத்தையும் படைப்பவராதலால் பகவான் ‘வேத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ‘வேத’ என்ற திருநாமம் நான்காவது ‘த’ வை உடையது. மறைகளைக் குறிக்கும் ‘வேதம்’ மூன்றாவது ‘த’ வை உடையது.

————

  1. ஓம் ஸ்வாங்காய நம:

ஸ்வயமேவ (பகவான்) தானே

கார்யகரணே செயல்களைச் செய்கையில் உதவிபுரியும்

அங்க அங்கமாகிய

ஸஹகாரீதி ‘ஸஹகாரி’ அதாவது உபகரணங்களாய் இருப்பதால்

ஸ்வாங்க: பகவான் ‘ஸ்வாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு செயலைப் புரிவதற்கும் மூன்று காரணங்கள் தேவை. முதலாவது மூல காரணம் (உபாதான காரணம் – ஆங்கிலத்தில் Raw Material). இரண்டாவது அந்த செயலைப் புரிபவர் (நிமித்த காரணம் – Doer). மூன்றாவது அந்த செயலைப் புரிவதற்கு துணை புரியும் கருவிகள் (ஸஹகாரி காரணம்). பகவான் தானே (ஸ்வயம்) ஒரு காரியத்தின் அங்கமாக, அதன் ஸஹகாரி காரணமாக இருப்பதால் அவர் ‘ஸ்வாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காரியம் எனப்படுவது பரப்ரஹ்மத்தின் படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

————-

  1. ஓம் அஜிதாய நம:

ந கேனாபி அவதாரேஶு ஜித எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர்

இதி அஜித: ஆகையால், அவர் ‘அஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர், ஆகையால், அவர் ‘அஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ஓம் க்ருஶ்ணாய நம:

க்ருஶ்ண: க்ருஶ்ணத்வைபாயன: ‘க்ருஶ்ணத்வைபாயனர்’ என்றழைக்கப்படும் வ்யாஸ பகவானே ‘க்ருஶ்ணர்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘க்ருஶ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் |

கோ ஹ்யன்ய: புண்டரீகாக்ஷான்மஹாபாரதக்ருத்பவேத் ||’

(ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.4.5)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் வேத வ்யாஸரை ப்ரபு ஸ்ரீமந்நாராயணனாகவே அறிவாயாக. தாமரைக் கண்ணனான பகவானைத் தவிர வேறு யாரால் மஹாபாரதம் என்னும் இதிஹாஸத்தை இயற்றி இருக்க முடியும்?

இதி விஶ்ணு புராண வசனாத் | இந்த ஸ்ரீவிஶ்ணு புராண வாக்கியத்தின் படி (பகவான் வேத வ்யாஸரே க்ருஶ்ணர், க்ருஶ்ணரே வ்யாஸர்).

————-

  1. ஓம் த்ருடாய நம:

ஸ்வரூபஸாமர்த்யாதே: அவரது இயற்கையான தனித்தன்மை (ஸ்வரூபம்) மற்றும் ஸாமர்த்தியம் முதலிய குணங்களுக்கு

ப்ரத்யுச்யபாவாத் (ப்ரத்யுச்ய அபாவாத்) குறைவு என்பதே இல்லை

த்ருட: எனவே பகவான் ‘த்ருட:’  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இயற்கையான தனித்தன்மையும், அவரது ஸாமர்த்யம் முதலிய குணங்களுக்கும் என்றுமே குறைவு உண்டாவதில்லை. எனவே அவர் ‘த்ருட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் ஸங்கர்ஶணோச்யுதாய நம:

ஸம்ஹார ஸமயே இந்தப் ப்ரபஞ்சத்தின் முடிவில் அதை அழிக்கும் ஸம்ஹார காலத்தில்

யுகபத்ப்ரஜா: அனைத்து உயிரினங்களையும் ஒருசேர

ஸங்கர்ஶதீதி அவற்றின் அழிவை நோக்கி இழுப்பதால்

ஸங்கர்ஶண: பகவான் ‘ஸங்கர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ந ச்யோததி என்றும் அழிவதில்லை

ஸ்வரூபாதி அவரது இயற்கையான தன்மை முதலியவை

இதி அச்யுத: எனவே பகவான் ‘அச்யுத:’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸங்கர்ஶணோச்யுத: இதி நாமைகம் ஸ விஶேஶணம் இவ்வாறு ‘ஸங்கர்ஶணராகவும்’ ‘அச்யுதராகவும்’ இருப்பதால் ‘ஸங்கர்ஶணோச்யுத:’ என்ற இந்த இரண்டு பதங்களும் சேர்ந்த இந்த திருநாமம் பகவானை விசேஷமாக குறிப்பதாகும்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சம் முடியும் தறுவாயில், ப்ரளய காலத்தில், அனைத்து உயிரினங்களையும் அவற்றின் முடிவை நோக்கி இழுக்கிறார். எனவே அவர் ஸங்கர்ஶணர் என்று அழைக்கப்படுகிறார். அவரது இயற்கையான தன்மை முதலியவை என்றுமே குறைவுபடாது இருப்பதால் ‘அச்யுதர்’ என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ‘ஸங்கர்ஶணராகவும்’ ‘அச்யுதராகவும்’ இருப்பதால் பகவான் ‘ஸங்கர்ஶணோச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ஸம்ஹார காலத்திலும் (ஸங்கர்ஶணராய் இருக்கும் பொழுதும்) தனது மேன்மை குறையாமல் அச்யுதராய் இருக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

————–

  1. ஓம் வருணாய நம:

ஸ்வரஶ்மீனாம் தனது கிரணங்களை

ஸம்வரணாத் மூடிக்கொள்வதால்

ஸாயங்கத: ஸூர்யோ மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் இருக்கும் பகவான்

வருண: ‘வருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் பகவான் தனது கிரணங்களை மூடிக்கொள்கிறார் (ஸம்வரணம் செய்கிறார்). எனவே அவர் ‘வருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘இமம் மே வருணம் ஶ்ருதீ ஹவம்’

இதி மந்த்ரவர்ணாத் | இந்த மந்திரத்தில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

————-

  1. ஓம் வாருணாய நம:

வருணஸ்யாபத்யம் வருணனின் புதல்வர்களான

வசிஶ்டோ(S)கஸ்த்யோ வா வசிஶ்டரும், அகஸ்தியரும் (அவர்களின் அந்தராத்மாவான பகவான்)

வாருண: ‘வாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வசிஶ்டர் மற்றும் அகஸ்தியரின் வடிவில் வருணனின் புதல்வர்களாக இருப்பதால் அவர் ‘வாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் வ்ருக்ஷாய நம:

வ்ருக்ஷ இவ மரங்களைப் போன்று

அசலதயா ஸ்தித இதி அசையாது நிலைபெற்று இருப்பதால்

வ்ருக்ஷ: பகவான்  ‘வ்ருக்ஷ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மரங்களைப் போன்று அசையாது நிலைபெற்று இருப்பதால் பகவான்  ‘வ்ருக்ஷ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஶ்டத்யேக:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு மரத்தைப் போன்று அசையாது (மரம் எவ்வாறு அசையாது ஓரிடத்தில் நிலைபெற்று இருக்கிறதோ, அவ்வாறே) தன்னுடைய இயற்கையான மேன்மையில் (அந்த பரப்ரஹ்மம்) நிலைபெற்று இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம் புஶ்கராக்ஷாய நம:

ஹ்ருதய புண்டரீகே அனைவரின் உள்ளத்தாமரைகளிலும்

சிந்தித: த்யானிக்கப்படுவதால்

புஶ்கராக்ஷ: பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் (குறிப்பாக யோகிகளின்) உள்ளத்தாமரைகளிலும் த்யானிக்கப்படுவதால் பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வரூபேண தனது இயற்கையான வடிவில்

ப்ரகாஶத இதி வா ஒளிவீசுவதால் (ஒளியுடன் திகழ்வதால்)

புஶ்கராக்ஷ: பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான வடிவில் மிகுந்த ஒளியுடன் பிரகாசிப்பதால் அவர் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் மஹாமனஸே நம:

ஸ்ருஶ்டிஸ்தித்யந்தகர்மாணி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை

மனஸைவ கரோதீதி (வேறு கரணங்கள் இன்றி) தனது மனதாலேயே புரிவதால்

மஹாமனா: பகவான் ‘மஹாமனா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை வேறு கரணங்கள் இன்றி தனது மனதாலேயே புரிகிறார். எனவே அவர் ‘மஹாமனா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மனஸைவ ஜகத்ஸ்ருஶ்டிம் ஸம்ஹாரம் ச கரோதி ய: |’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் தனது மனதாலேயே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் புரிகிறாரோ (செய்கிறாரோ)…

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

—————-

  1. பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:

ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||

இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |
  2. ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||

—————-

  1. ஓம் பகவதே நம:

‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.

ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்

பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. ஓம் பகக்னே நம:

ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை

ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்

ஹந்தீதி அழிப்பதால்

பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.

————-

  1. ஓம் ஆனந்தினே நம:

ஸுகஸ்வரூபத்வாத் ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால்

ஆனந்தீ பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால் பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸம்பத்ஸம்ருதத்வாத் அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால்

ஆனந்தீ வா பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது,  அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால் பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் வனமாலினே நம:

பூததன்மாத்ரரூபாம் ஐம்பூதங்களின் நுண்வடிவான  தன்மாத்திரைகளின் பிரதிநிதியான

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ எனும் பெயர் கொண்ட

வனமாலாம் வஹன் வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால்

வனமாலீ பகவான் ‘வனமாலீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஐம்பூதங்களின் ஸூக்ஷ்ம வடிவான  தன்மாத்திரைகளின் பிரதிநிதியான ‘வைஜயந்தி’ எனும் பெயர் கொண்ட வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால் பகவான் ‘வனமாலீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ஹலாயுதாய நம:

ஹலமாயுதம் கலப்பையை ஆயுதமாக (தரித்திருந்ததால்)

அஸ்யேதி ஹலாயுத: பகவான் ‘ஹலாயுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

பலபத்ராக்ருதி: பலராமனின் வடிவாக

பலராம அவதாரத்தின் பொழுது பகவான் கலப்பையை ஆயுதமாகத் தரித்திருந்ததால் அவர் ‘ஹலாயுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் ஆதித்யாய நம:

அதித்யாம் அதிதி தேவியின் புதல்வராக

கஶ்யபாத் காஶ்யப மஹரிஶி மூலமாக

வாமனரூபேண வாமனரின் வடிவில்

ஜாத பிறந்தபடியால்

ஆதித்ய: பகவான் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வாமன அவதாரத்தில் காஶ்யப மஹரிஶி மூலமாக அதிதி தேவியின் புதல்வராக தோன்றினார். எனவே அவர் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ஜ்யோதிராதித்யாய நம:

ஜ்யோதிஶி ஒளி வடிவாய்

ஸவித்ருமண்டலே சூரிய மண்டலத்தினுள்

ஸ்திதோ வீற்றிருப்பதால்

ஜ்யோதிராதித்ய: பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரிய மண்டலத்தினுள் ஒளி வடிவாக வீற்றிருப்பதால் பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஸஹிஶ்ணவே நம:

த்வந்த்வானி இருமைகளை

ஶீதோஶ்ணாதீனி குளிர், வெப்பம் போன்ற

ஸஹத பொறுத்துக் கொள்வதால்

இதி ஸஹிஶ்ணு: பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குளிர், வெப்பம் போன்ற இருமைகளை பொறுத்துக் கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 144வது திருநாமத்தில் ‘ஸஹிஶ்ணு:’ என்ற பதத்திற்கு ஆசார்யாள் “ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று பொருளுரைத்திருந்தார்..

———–

  1. ஓம் கதிஸத்தமாய நம:

கதிஸ்சாஸௌ அனைவருக்கும் புகலிடமாகவும் ஸத்தமஸ்சேதி

அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால்

கதிஸத்தம: பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் புகலிடமாகவும், அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால் பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்திலும் உயர்ந்த புகலிடம் பகவானே என்றும் பொருள் கொள்ளலாம்

————-

61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |

திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||

இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |

571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||  

———

567. ஸுதன்வனே நம:

ஶோபனமிந்த்ரியாதிமயம் அழகானதும், இந்த்ரியங்களின் (உட்புலன், வெளிப்புலன் ஆகியவற்றின்) வடிவானதுமான

ஶார்ங்கம் ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய

தனுரஸ்யாஸ்தீதி வில்லை ஏந்தியிருப்பதால்

ஸுதன்வா பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகானதும், (கண், காது, செவி, மனம் போன்ற) இந்த்ரியங்களின் வடிவானதுமான ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய வில்லை (தனது கைகளில்) ஏந்தியிருப்பதால் பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

568. கண்டபரஶுவே நம: (அகண்டபரஶுவே நம:

ஶத்ரூணாம் எதிரிகளை

கண்டனாத் (வெட்டி) அழிப்பதால்

கண்ட: ‘கண்ட:’ என்று அழைக்கின்றனர்

பரஶுரஸ்ய கோடரியை

ஜாமத்க்ன்யா பகவான் பரசுராமரின் கையிலுள்ள

க்ருதேரிதி அந்தக் கோடரியை ஏந்தியிருப்பதால்

கண்டபரஶு: பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது பரசுராம அவதாரத்தில், எதிரிகளை வெட்டி அழிப்பதால் ‘கண்ட:’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் கோடரியை ஏந்தியிருப்பதால் பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகண்ட: எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத

பரஶுரஸ்யேதி வா கோடரியை கையில் ஏந்திருப்பதால்

அகண்டபரஶு: பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத கோடரியை கையில் ஏந்திருப்பதால் பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

569. தாருணாய நம:

ஸன்மார்க நல்வழியின் (அறவழியின்)

விரோதீனாம் எதிரிகளுக்கு

தாருணத்வாத் அச்சமூட்டுபவராக இருப்பதால்

தாருண: பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியின் (அறவழியில் நடப்போருக்கு) எதிரிகளுக்கு தாம் அச்சமூட்டுபவராக இருப்பதால் பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

570. த்ரவிணப்ரதாய நம:

த்ரவிணம் செல்வத்தை

வாஞ்சிதம் விழையும்

பக்தேப்ய: அடியவர்களுக்கு

ப்ரததாதீதி (அவர்கள் வேண்டும்) செல்வத்தை அளிப்பதால்

த்ரவிணப்ரத: பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செல்வத்தை விழையும் அடியவர்களுக்கு, அவர்கள் விழையும் செல்வத்தை அளிப்பதால் பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

———-

571. திவஸ்ப்ருஶே நம:

திவ: ஆகாயத்தை (அல்லது ஸ்வர்க்கத்தை)

ஸ்பர்ஶனாத் தீண்டுவதால் (தொடுவதால்)

திவ:ஸ்ப்ருக் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

ஆகாயத்தை (ஸ்வர்க்கத்தை) தொடுவதால் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

————-

572. ஸர்வத்ருக்வ்யாஸாய நம:

ஸர்வத்ருஶாம் ஸர்வஞானானாம் ‘ஸர்வத்ருக்’ அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்)

விஸ்தாரக்ருத் விரிவாக எடுத்துரைத்த

வ்யாஸ: ஸர்வத்ருக்வ்யாஸ: பகவான் வேத வ்யாஸரே ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

‘ஸர்வத்ருக்’ அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்) விரிவாக எடுத்துரைத்த பகவான் வேத வ்யாஸரே ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவானே வ்யாஸராக அவதரித்தார் என்பதை நாம் முன்பே ‘க்ருஷ்ண:’ என்ற (55௦ வது) திருநாமத்தில் பார்த்தோம்.

அதவா அல்லது

ஸர்வா ச ஸா அனைத்துமாய் இருப்பதாலும்

த்ருக் சேதி அனைத்தையும் அறிவதாலும்

ஸர்வத்ருக் ஸர்வாகாரம் ஞானம் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். ஸர்வஸ்ய அனைவரின்

த்ருஶ்டித்வாத் வா பார்வையாகவும் இருப்பதால்

ஸர்வத்ருக் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்துமாய் இருப்பதாலும் அனைத்தையும் அறிவதாலும் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். அனைவரின் பார்வையாகவும் (அனைத்தையும் பார்ப்பவராக) இருப்பதாலும் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார்.

ரிக்வேதாதி ரிக் வேதம் முதலாய்

விபாகேன சதுர்த்தா வேதா வ்யஸ்தா: க்ருதா: வேதங்களை நான்காக வகுத்தார்

ஆத்யோ வேத முதலாம் வேதமான ரிக் வேதத்தை

ஏகவிம்ஶதிதா க்ருத: 21 பிரிவுகளாகவும்

த்விதீய இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை

ஏகோத்தரஶததா க்ருத: 101 பிரிவுகளாகவும்

ஸாமவேத: ஸாமவேதத்தை

ஸஹஸ்ரதா க்ருத: 1000 பிரிவுகளாகவும்

அதர்வவேதோ அதர்வவேதத்தை

நவதா ஶாகாபேதென க்ருத: ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார்.

ஏவம் அன்யானி ச இவ்வாறு மற்ற

புராணானி புராணங்களையும்

வ்யஸ்தான்யனேனேதி பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால்

வ்யாஸ: ப்ரஹ்மா நான்முகக் கடவுளான ப்ரஹ்மா ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார்).

ரிக் வேதம் முதலாய் வேதங்களை நான்காக வகுத்தார். முதலாம் வேதமான ரிக் வேதத்தை 21 பிரிவுகளாகவும், இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், ஸாமவேதத்தை 1000 பிரிவுகளாகவும், அதர்வவேதத்தை ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார். இவ்வாறு மேலும் மற்ற (பதினெண்) புராணங்களையும் பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார்).

இவ்வாறு ‘ஸர்வத்ருக்’, ‘வ்யாஸ:’ ஆகிய பதங்களுக்கு வேறு பொருள்களையும் ஆச்சார்யாள் அளிக்கிறார். ஆயினும், இந்த இரண்டு பதங்களும் ஒன்று சேர்ந்த ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற ஒரே திருநாமமாகவே இதை கணக்கில் கொள்ள வேண்டும்.

———–

573. வாசஸ்பதயே(அ)யோனிஜாய நம:

வாசஸ்பதிரயோனிஜ: பகவான் ‘வாசஸ்பதிரயோனிஜ:’ என்று அழைக்கப்படுகிறார்.

வாசோ வித்யாயா: ‘வாச:’ என்றால் வித்தை அல்லது கல்வி என்று பொருள் பதி: அதன் அதிபதியாக இருப்பதால்

வாசஸ்பதி: ‘வாசஸ்பதி:’ என்றும்

ஜனன்யாம் ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து

ந ஜாயத இதி பிறவாதபடியால்

அயோனிஜ: ‘அயோனிஜ:’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இதி இது

ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான

ஏகம் நாம ஒரே திருநாமமாகும்.

வாக்கிற்கு (கல்விக்கு) அதிபதியாக இருப்பதால் ‘வாசஸ்பதி:’ என்றும், ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறவாத படியால் ‘அயோனிஜ:’ என்றும் பகவான் அழைக்கப்படுகிறார். இந்த இரண்டு பதங்களும் சேர்ந்து ஒரே திருநாமமாக ‘வாசஸ்பதிரயோனிஜ:’ என்று பகவான் அழைக்கப்படுகிறார்.

———–

  1. த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக்|

ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||

இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578.  பேஶஜம், 579. பிஶக்|
  2. ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||

—————-

  1. ஓம் த்ரிஸாம்னே நம:

தேவவ்ரத தேவவ்ரதம் என்னும்

ஸமாக்யாதைஸ் பெயருடைய

த்ரிபி: மூன்று

ஸாமபி ஸாமங்களால்

ஸாமகை: ஸாமகானம் செய்பவர்களால்

ஸ்துத இதி போற்றித் துதிக்கப்படுவதால்

த்ரிஸாமா பகவான் ‘த்ரிஸாமா’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவவ்ரதம் என்னும் பெயருடைய மூன்று ஸாமங்களால் ஸாமகானம் செய்பவர்களால் போற்றித் துதிக்கப்படுவதால் பகவான் ‘த்ரிஸாமா’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ஸாமகாய நம:

ஸாம ஸாமவேதத்தை

காயதீதி பாடுவதால்

ஸாமக: பகவான் ‘ஸாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாமவேதத்தை பாடுவதால் பகவான் ‘ஸாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஸாம்னே நம:

‘வேதானாம் ஸாமவேதோஸ்மி’ (ஸ்ரீமத்பகவத் கீதை 10.22)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதங்களில் யான் ஸாமவேதம்.

இதி பகவத்வசனாத் பகவானின் இந்த பகவத்கீதையின் கூற்றின்படி

ஸாமவேத: ஸாம ஸாமவேத வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் ‘வேதங்களில் யான் ஸாமவேதம்’  என்று கூறியுள்ளார். எனவே ஸாமவேத வடிவினாரான பகவான் ‘ஸாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் நிர்வாணாய நம:

ஸர்வது:க அனைத்துவித துன்பங்களும்

உபஶம லக்ஷணம் அற்று இருப்பதன் அடையாளமாக

பரமானந்தரூபம் உயரிய ஆனந்தமே வடிவினராய் இருப்பதால்

நிர்வாணம் பகவான் ‘நிர்வாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வித துன்பங்களும் (துக்கங்களும்) அற்று இருப்பதன் அடையாளமாக உயரிய ஆனந்தமே வடிவானவராதலால் பகவான் ‘நிர்வாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் பேஶஜாய நம:

ஸம்ஸார இந்தப் பிறவியென்னும்

ரோகஸ்ய பிணிக்கு (நோய்க்கு)

ஒளஶதம் அருமருந்தாய் இருப்பதால்

பேஶஜம் பகவான் ‘பேஶஜம்’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவியென்னும் பிணிக்கு (நோய்க்கு) அருமருந்தாய் இருப்பதால் பகவான் ‘பேஶஜம்’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் பிஶஜே நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பிணியை

நிர்மோக்ஷகாரிணீம் போக்கவல்ல அருமருந்தாகிற

பராம் வித்யாம் மேலான வித்தையை (அறிவை)

உபதிதேஶ அனைவருக்கும் உபதேசித்தார்

கீதாஸ்விதி ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ என்னும்

பிஶக் எனவே பகவான் ‘பிஶக்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியை போக்கவல்ல அருமந்தாகிற ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ என்னும் உயரிய வித்தையை (அறிவை) அனைவருக்கும் போத்தித்தபடியால் (உபதேசித்த படியால்) பகவான் ‘பிஶக்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பிஶக்தம் த்வா பிஶஜா ஶ்ருணோமி’

அனைவரைக் காட்டிலும் சிறந்த மருத்துவரைப் பற்றி கேட்பாயாக

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம் ஸந்யாஸக்ருதே நம:

மோக்ஷார்த்தம் முக்தியை அடையும் பொருட்டு (அதை விழைவோருக்கு)

சதுர்த்தம் ஆஶ்ரமம் நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸ ஆஸ்ரமத்தை (அதாவது வாழும் வழிமுறையை)

க்ருதவானிதி உருவாக்கியவராதலால்

ஸந்யாஸக்ருத் பகவான் ‘ஸந்யாஸக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு, அதை அடையும் வழிமுறையாக நான்காவது ஆஸ்ரமமான ‘ஸந்யாஸ ஆஸ்ரமத்தை’ உருவாக்கியவராதலால் பகவான் ‘ஸந்யாஸக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் ஶமாய நம:

ஸந்யாஸினாம் துறவறம் பூண்டவர்களுக்கு (ஸன்யாஸிகளுக்கு)

ப்ராதான்யேன முதன்மையான (முக்கியமான)

ஞானஸாதனம் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக

ஶமம் (மன) அமைதியை

ஆசஶ்ட உபதேசித்ததால்

இதி ஶம: பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைவோருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமத்தை (துறவறத்தை) ஏற்படுத்தினார் (ஸந்யாஸக்ருத்). அவ்வாறு துறவறம் பூண்டோரின் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக மன அமைதியை (ஶம) உபதேசித்ததால் அவர் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“யதீநாம் ப்ரஶமோ தர்மோ நியமோ வனவாஸினாம் |

தானமேவ க்ருஹஸ்தானாம் ஶுஶ்ரூபா ப்ரஹ்மசாரிணாம் ||”

துறவிகளுக்கு மன அமைதியும், வனவாசிகளுக்கு கட்டுப்பாடும் (நியமம்), இல்லறத்தோருக்கு தானமும் மற்றும் ப்ரஹ்மச்சாரிகளுக்கு (குரு) சேவையும் தர்மமாகும்.

இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் (வேதங்களில்) கூறப்பட்டுள்ளது.

‘தத்கரோதி ததாசஶ்டே’ (சுராதிகணவார்த்திகம்)

இதி ணிசி பசாத்யசி க்ருதே ரூபம் ஶம இதி |

இந்த இலக்கண விதியின் படி “ஶம”என்ற சொல் உருவாகிறது.

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

ஶமயிதேதி வா அழிப்பதால்

ஶம: பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களையும் (ப்ரளய காலத்திலும், அந்தந்த ஜீவனின் கால முடிவிலும்) அழிப்பதாலும் பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் ஶாந்தாய நம:

விஶயஸுகேஶ்வ(அ)ஸங்கதயா விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) சேராது இருப்பதால்

ஶாந்த: பகவான் ‘ஶாந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) நாட்டமில்லாமல் அவற்றோடு சேராது  இருப்பதால் பகவான் ‘ஶாந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் நிஶ்டாய நம:

ப்ரளயே ப்ரளய காலத்தில்

நிதராம் முழுமையாக

தத்ரைவ அவரிடமே

திஶ்டந்தி உறைவதால்

பூதாநிதி உயிரினங்கள் (ஜீவராசிகள்)

நிஶ்டா பகவான் ‘நிஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) முழுமையாக பகவானிடம் (லாயமடைந்து) உறைவதால் பகவான் ‘நிஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் ஶாந்தயே நம:

ஸமஸ்தாவித்யா (ஸமஸ்த அவித்யா) அனைத்து வகை அறியாமைகளும்

நிவ்ருத்தி: விலகி இருப்பதே

ஶாந்தி: ‘ஶாந்தி:’ என்று அழைக்கப்படுகிறது.

ஸா ப்ரஹ்மைவ (அந்த அறியாமைகளற்ற நிலையானது) பரப்ரஹ்மத்தின் இயற்கையான தன்மையாகும். எனவே, பரப்ரஹ்மமான பகவான் ‘ஶாந்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகை அறியாமைகளும் அற்ற தன்மையே ‘ஶாந்தி:’ என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு, அறியாமை அற்ற நிலையானது பரப்ரஹ்மமான பகவானின் இயற்கையான தன்மையாகும். எனவே அவர் ‘ஶாந்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் பராயணாய நம:

பரமுத்க்ருஶ்டமயனம் ஸ்தானம் (பரம் உத்க்ருஶ்டம் அயனம்) அயனம் என்றால் அடையப்படும் இடம் (ஸ்தானம்) என்று பொருள். மிக உயரிய அடையப்படக்கூடிய இடமாக

புனராவ்ருத்தி மீண்டு வருதல்

ஶங்காரஹிதம் இதி என்ற ஐயமின்றி இருப்பதால்

பராயணம் பகவான் ‘பராயணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மீண்டு வருதல் என்ற ஐயத்திற்கு இடமின்றி, மிக உயரிய ஸ்தானமாக (அடையக்கூடிய இடமாக) இருப்பதால் பகவான் ‘பராயணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புல்லிங்கபக்ஷே பஹுவ்ரீஹி: இந்தத் திருநாமத்தை ஆண்பாலாகக் கருத்துமிடத்தில் எவர் உயரிய ஸ்தானமாக இருப்பவரோ என்று பொருள் கொள்ள வேண்டும்.

————

  1. ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய:|

கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||

இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
  2. கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய:||

————

  1. ஶுபாங்காய நம:

ஸுந்தராம் அழகியதான

தனும் உடலை

தாராயன் தரித்திருப்பவராதலால்

ஶுபாங்க: பகவான் ‘ஶுபாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகவும் அழகிய உடலைத் தாங்கியவர் (உடையவர்) ஆதலால் பகவான் ‘ஶுபாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஶாந்திதாய நம:

ராக விருப்பு

த்வேஶாதி வெறுப்புகள்

நிர்மோக்ஷலக்ஷணம் விலகிய தன்மைக்கு அடையாளமான

ஶாந்திம் (மன)அமைதியை (பொறுமையை)

ததாதீதி அளிப்பவர் ஆதலால்

ஶாந்தித: பகவான் ‘ஶாந்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விருப்பு, வெறுப்புக்கள் அற்ற தன்மையின் அடையாளமான மன அமைதியையும், பொறுமையையும் அளிப்பவர் ஆதலால் பகவான் ‘ஶாந்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஸ்ரஶ்ட்ரே நம:

ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில்

ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)

ஸஸர்ஜேதி படைப்பதால்

ஸ்ரஶ்டா பகவான் ‘ஸ்ரஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைப்பின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) படைப்பதால் பகவான் ‘ஸ்ரஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. குமுதாய நம:

கௌ பூம்யாம் ‘கு’ என்றால் பூமியில் (பூமாதேவியிடம்)

மோதத இதி வா மகிழ்கிறார்

குமுத: பகவான் ‘குமுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘கு’ என்று அழைக்கப்படும் பூமியிடம் (பூமாதேவியிடம்) மகிழ்கிறார். எனவே பகவான் ‘குமுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. குவலேஶாய நம:

கோ: க்ஷிதேர் ‘கு’ என்று அழைக்கப்படும் பூமியை

வலனாத் ஸம்ஸரணாத் ‘வல’ அதாவது சூழ்ந்திருப்பதால்

குவலம் ஜலம் நீரிற்கு ‘குவலம்’ என்று பெயர்

தஸ்மின் அதில் (நீரில்)

ஶேத இதி சயனித்து இருப்பதால்

குவலேஶய: பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கு’ என்று அழைக்கப்படும் பூமியை அதாவது சூழ்ந்திருப்பதால் நீரிற்கு ‘குவலம்’ என்று பெயர். அதில் (நீரில்) சயனித்து இருப்பதால் பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶயவாஸவாஸிஶ்வகாலாத்’ (பாணினி ஸூத்ரம் 6.3.18)

இதி அலுக் ஸப்தம்யா: |

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இந்த சொல் உருவாயுள்ளது.

குவலஸ்ய பதரி ஃபலஸ்ய ‘குவல’ என்றால் இலந்தைப் பழம்

மத்யே அதன் நடுவில்

ஶேதே சயனித்து இருக்கிறான்

தக்ஷக: ‘தக்ஷகன்’

ஸோபி தஸ்ய அந்த தக்ஷகனும்

விபூதிரிதி வா ஹரி: பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும்.

குவலேஶய: எனவே, பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘குவல’ என்றழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் நடுவில் தக்ஷகன் சயனித்து இருக்கிறான். தக்ஷகனும் பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும். எனவே பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உரையின் படி தக்ஷகனுக்கு ‘குவலேஶய:’ என்று பெயர். அவன் பகவானின் ஒரு வெளிப்பாடு ஆதலால் பகவானுக்கே அந்த திருநாமம் பொருந்தும்.

கௌ பூம்யாம் ‘கு’ என்றால் பூமி

வலதே ஸம்ஸ்ரயதே இதி அந்த பூமியில் (ஊர்ந்து) செல்வதால்

ஸர்ப்பாணாம் பாம்புகளின்

உதரம் குவலம் வயிற்றுப் பகுதி குவலம் என்று அழைக்கப்படுகிறது,

தஸ்மிந் ஶேஶோதரே ஆதிசேடனது மடியில் (வயிற்றில்)

ஶேத இதி சயனித்து இருப்பதால்

குவலேஶய: பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கு’ என்றழைக்கப்படும் பூமியில் ஊர்ந்து செல்வதால் பாம்புகளின் வயிற்றுப்பகுதியை ‘குவலம்’ என்று  அழைப்பார்கள். அத்தகைய பாம்பான ஆதிசேடனின் வயிற்றில் (குவலயத்தில்) சயனித்து இருப்பதால் பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. கோஹிதாய நம:

கவாம் ஆவினங்களை

வ்ருத்யர்த்தம் வளர்ப்பதற்காக (அவற்றை காப்பதற்காக)

கோவர்தனம் கோவர்தன மலையை

த்ருதவானிதி (கையில்) ஏந்தினார்

கோப்யோ ஹிதோ அந்த ஆநிரைகளின் நலத்தை பேணி

கோஹித: எனவே  பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (இந்திரன் வ்ருந்தாவனத்தின் மீது கல்மாரி பொழிந்த பொது) ஆநிரைகளின் நலத்தை பேணி, அவற்றைக் காக்க கோவர்தன மலையை கையில் ஏந்தினார். எனவே அவர் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோர்பூமே: ‘கோ’ என்றழைக்கப்படும் பூமியின்

பாராவதரணேச்சயா (பார அவதரண இச்சயா) பாரத்தைக் குறைக்கும் பொருட்டு தனது இச்சையால்

ஶரீரக்ரஹணம் குர்வன்வா உடலை ஏற்றுக் கொள்வதால்

கோஹித: பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கோ’ என்றழைக்கப்படும் இந்த பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு (ஒவ்வொரு அவதாரத்தின் பொழுதும்) தனது இச்சையால் ஒரு உடலை ஏற்றுக் கொள்வதால் பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. கோபதயே நம:

கோர்பூம்யா: ‘கோ’ என்றழைக்கப்படும் பூமிக்கு

பதி: கணவரானபடியால்

கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கோ’ என்றழைக்கப்படும் பூமிக்கு கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பதி என்றால் தலைவன் அல்லது அரசன் என்றும் பொருள். அவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது பூமிக்குத் தலைவன் அல்லது பூமியின் அரசன் என்றும் இந்த உரையை கொள்ளலாம்.

————–

  1. கோப்த்ரே நம:

ரக்ஷகோ காப்பாற்றுகிறார்

ஜகத இதி பூமியை (பூமியில் உள்ளோரை)

கோப்தா எனவே பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியை (அதில் உள்ளோரைக்) காப்பதால் பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வமாயயா தனது மாயையால்

ஸ்வமாத்மானம் தனது ஆத்மாவை, அதாவது தனது உண்மையான தன்மையை

ஸம்வ்ருணோதீதி வா மறைத்துக் கொள்கிறார்

கோப்தா எனவே பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது மாயையால் தன் இயற்கையான தன்மையை (ஆத்மாவை) அனைவரிடமிருந்தும் மறைத்துக் கொள்வதால் பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. வ்ருஶபாக்ஷாய நம:

ஸகலான் காமான் அனைத்து ஆசைகளையும்

வர்ஶுகே பொழியும்

அக்ஷிணீ அஸ்யேதி திருக்கண்களை உடையவராதலால்

வ்ருஶபாக்ஷ: பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் அனைத்து ஆசைகளையும் (விருப்பங்களையும்) மழையைப்போல பொழியும் திருக்கண்களை உடையவராதலால் பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶபோ தர்ம: ‘வ்ருஶ’ என்றால் தர்மம் (அறம்)

ஸ ஏவ வா த்ருஶ்டிர் அஸ்யேதி தனது பார்வையாக கொண்டிருப்பதால்

வ்ருஶபாக்ஷ: பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் அறத்தை தனது பார்வையாக கொண்டிருப்பதால் பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறமே கண்ணாக – அறத்தின் வழியிலேயே நடக்கிறார் என்று பொருள்.

————

  1. வ்ருஶப்ரியாய நம:

வ்ருஶோ தர்ம: ‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை)

ப்ரியோ யஸ்ய  எவருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ

வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை) விரும்புபவராதலால் பகவான் ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வா ப்ரியஸ்ய’ (வார்த்திகம்) இதி பூர்வநிபாதவிகல்பவிதானாத் பரநிபாத:

இங்கு ஆசார்யாள் இந்த சொல்லிற்கு உரித்தான இலக்கணக் குறிப்பை அளிக்கிறார்.

வ்ருஶஸ்சாஸௌ ‘வ்ருஶ’ அதாவது அறமே வடிவானவராகவும்

ப்ரியஸ்சேதி வா ப்ரியமானவராகவும் (அனைவராலும் விரும்பப்படுபவராகவும்) இருப்பதால்

வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறமே வடிவானவராகவும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும் இருப்பதால் பகவான் ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |

ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ:|
  2. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

————-

  1. அநிவர்த்தினே நம:

தேவாஸுரஸங்க்ரமான் தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில்

ந நிவர்த்தத இதி எப்பொழுதும் பின்வாங்காதவர் ஆதலால்

அநிவர்த்தீ பகவான் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் (தேவர்களின் சார்பாக போராடும் பொழுது) பகவான் எப்பொழுதும் பின்வாங்குவதில்லை  ஆதலால், அவர் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶபரியத்வாத் அறவழியை விரும்புபவர் ஆதலால்

தர்மான் ந நிவர்த்தத இதி வா அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை)

அநிவர்த்தீ எனவே, பகவான் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியை விரும்புபவர் (வ்ருஶபரிய:) ஆதலால் பகவான் அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை). எனவே, அவர் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. நிவ்ருத்தாத்மனே நம:

ஸ்வபாவதோ இயற்கையாகவே

விஶயேப்யோ விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்)

நிவ்ருத்த நாட்டமின்றி திரும்பும்

ஆத்மா மனோSஸ்யேதி ஆத்மா அதாவது மனதை உடையவராதலால்

நிவ்ருத்தாத்மா பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மனது (ஆத்மா) இயற்கையாகவே விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) நாட்டமின்றி அவற்றை விட்டு விலகித் திரும்புகிறது. எனவே அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஸங்க்ஷேப்த்ரே நம:

விஸ்த்ருதம் பரந்து, விரிந்துள்ள

ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை

ஸம்ஹாரஸமயே ப்ரளய காலத்தில்

ஸூக்ஷ்மரூபேண அதன் நுண்வடிவாய்

ஸங்க்ஷிபன் சுருக்குவதால்

ஸங்க்ஷேப்தா பகவான் ‘ஸங்க்ஷேப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரந்து, விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் அதன் நுண்வடிவாய் சுருக்குவதால் பகவான் ‘ஸங்க்ஷேப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. க்ஷேமக்ருதே நம:

உபாத்தஸ்ய படைக்கப்பட்ட பொருட்களை

பரிரக்ஷணம் கரோதீதி காப்பதால்

க்ஷேமக்ருத் பகவான் ‘க்ஷேமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைக்கப்பட்ட பொருட்களை காப்பதால் பகவான் ‘க்ஷேமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஶிவாய நம:

ஸ்வநாம தன்னுடைய திருநாமத்தை

ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே

பாவயன் புனிதப்படுத்துவதால்

ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய திருநாமத்தை நினைத்த மாத்திரத்திலேயே (நினைப்போரின் பாவங்களை அழித்து அவர்களை) புனிதப்படுத்துவதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஶஶ்டம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஶிவ: என்னும் இந்த திருநாமம் வரையில்) அறுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

————

  1. ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:

ஸ்ரீவத்ஸ ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும்

சிஹ்னமஸ்ய சின்னம் (குறி)

வக்ஷஸி திருமார்பில்

ஸ்திதமிதி இருப்பதால்

ஸ்ரீவத்ஸவக்ஷா: பகவான் ‘ஸ்ரீவத்ஸவக்ஷா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் சின்னம் (மறு) அவரது திருமார்பில் இருப்பதால் பகவான் ‘ஸ்ரீவத்ஸவக்ஷா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

  1. ஸ்ரீவாஸாய நம:

அஸ்ய அவரது

வக்ஷஸி திருமார்பில்

ஸ்ரீரனபாயினி அவரை விட்டு என்றும் பிரியாத திருமகளானவள்

வஸதீதி வசிப்பதால்

ஸ்ரீவாஸ: பகவான் ‘ஸ்ரீவாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமார்பில், அவரை விட்டு என்றும் நீங்காத திருமகள் நித்ய வாசம் செய்கிறாள். எனவே, பகவான் ‘ஸ்ரீவாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஸ்ரீபதயே நம:

அம்ருதமதனே அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது

ஸர்வான் அனைத்து

ஸுரா(அ)ஸுராதீன் தேவர்கள் மற்றும் அஸுரர்களை

விஹாய விடுத்து

ஸ்ரீரேனம் பதித்வேன திருமகளால் தனது பதியாக (கணவனாக)

வரயாமாஸேதி வரிக்கப்பட்டதால்

ஸ்ரீபதி: பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது திருமகள் அனைத்து தேவர்கள் மற்றும் அஸுரர்களை விடுத்து பகவானேயே தனது பதியாக (கணவனாக) வரித்தாள். எனவே, பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ: பராஶக்தி: ‘ஸ்ரீ’ என்றால் பராசக்தியைக் குறிக்கும்

தஸ்யா: பதிரிதி வா அந்த பராசக்தியின் (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால்

ஸ்ரீபதி: பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்ரீ’ என்றால் பராசக்தியைக் குறிக்கும் அந்த பராசக்தியை (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே’ (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 6.8)

ஸ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது உயர்ந்த சக்தியானது (வேதங்களில்) பலவாறாக கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஸ்ரீமதாம்வராய நம:

ரிக்யஜு: ஸாமலக்ஷணா ரிக், யஜுர் மற்றும் ஸாமவேதங்கள்

ஸ்ரீர்யேஶாம் அவரது ஸ்ரீ, அதாவது செல்வங்களாகும்

தேஶாம் அவர்களை (விட)

ஸர்வேஶாம் அனைவரின்

ஸ்ரீமதாம் ஸ்ரீமான்களாகிய

விரிஞ்ச்யாதீனம் ப்ரஹ்மா முதலான

ப்ரதானபூத: மேலானது

ஸ்ரீமதாம்வர: எனவே பகவான் ‘ஸ்ரீமதாம்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே பகவானின் செல்வங்களாகும். (இவ்வாறு வேதங்களை அறிந்த) ஸ்ரீமான்களாகிய ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் (அவர்களை விட) பகவானின் செல்வம் (வேத ஞானம்) மேலானது. எனவே அவர் ‘ஸ்ரீமதாம்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ரிச: ஸாமானி யஜூஶி | ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே ஸத்புருஷர்களின் (நல்லோரின்) அழியாத செல்வங்களாகும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 6-திருநாமங்கள்–308– -425- வரை –

January 20, 2023
  1. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ:|

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. 308.இஶ்ட:, 309.அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|
  2. 31க்ரோதஹா,315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: ||

————

  1. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:|

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |
  2. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: ||

————–

  1. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||

இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
  2. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||

————

  1. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:|

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |
  2. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: ||

———–

  1. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத்|

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத்|
  2. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ:||

——-

  1. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:|

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |
  2. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய:||

—–

40-விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |

மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||

இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விக்ஷர:, 364. ரோஹித:, 365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
  2. மஹீதர:, 370. மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||

——

  1. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |
  2. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

————-

  1. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:|

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ:|
  2. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

—————

  1. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய:|

வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||

இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400. அனய:|
  2.             வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||

————-

  1. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:|

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

——-

  1. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ:|

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |
  2. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

—-

  1. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ:|

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. 308.இஶ்ட:, 309.அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|
  2. 31க்ரோதஹா,315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: ||

————–

  1. ஓம் இஶ்டாய நம:

பரமானந்தாத்மகத்வேன ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால்

ப்ரிய அனைவராலும் விரும்பப்படுகிறார்

இஶ்ட: எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஞ்யேன வேள்விகளின் மூலம்

பூஜித இதி வா வழிபடப்படுகிறார்

இஶ்ட: எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்விகளுக்கு ‘இஶ்ட:’ என்று பெயர். அனைத்து வேள்விகளாலும் பகவான் ஒருவரே வழிபடப்படுகிறார். எனவே, அவர் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் அவிஶிஶ்டாய நம:

ஸர்வேஶாமந்தர்யாமித்வேன அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

அவிஶிஶ்ட: பகவான் ‘அவிஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘அவிஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ஶிஶ்டேஶ்டாய நம:

ஶிஶ்டானாம் விதுஶாம் ‘ஶிஶ்டர்கள்’ அதாவது கற்றரிந்தோரால்

இஶ்ட: விரும்பப்படுகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றரிந்தோரால் (ஶிஶ்டர்களால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்டா கற்றறிந்தோரை (ஞானிகளை)

இஶ்டா அஸ்யேதி வா விரும்புகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றறிந்த ஞானிகளை பகவான் மிகவும் விரும்புகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரியோ ஹி ஞானினோSத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.17)

பகவானும் கீதையில் கூறுகிறார்: ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியவன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஶிஶ்டை: அடியவர்களால் (ஶிஶ்டர்களால்)

இஶ்ட: பூஜித இதி வா (இஶ்டி என்றால் வழிபாடு) வழிபடப்படுகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களால் (ஶிஶ்ட:) வழிபடப்படுகிறார் (இஶ்ட:). எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஶிகண்டினே நம:

ஶிகண்ட: கலாபோSலங்காரோSஸ்யேதி மயில் தோகையால் (தனது திருமுடியை) அலங்கரித்துக் கொண்டவராதலால்

ஶிகண்டீ: பகவான் ‘ஶிகண்டீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

யதோ கோபவேஶதர: ஏனெனில், (கண்ணனாக அவதரித்த பொழுது) அவர் இடையனின் வேடம் பூண்டிருந்தார்.

பகவான் கண்ணனாக அவதரித்த பொழுது, இடையனின் வேடம் பூண்டிருந்தார். அப்பொழுது தனது திருமுடியில் மயில் தோகை அணிந்து அலங்கரித்துக் கொண்டார். எனவே, அவர் ‘ஶிகண்டீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிகண்ட என்றால் மயில் தோகை. அதை அணிந்துள்ளவர் ஶிகண்டீ.

—————–

  1. ஓம்நஹுஶாயநம:

நஹ்யதி கட்டிவைக்கிறார்

பூதானி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)

மாயயாSதோ மாயையினால்

நஹுஶ: பகவான் ‘நஹுஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) மாயையினால் கட்டிவைத்துள்ளார். எனவே, அவர் ‘நஹுஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நஹ பந்தனே ‘நஹ’ என்ற வேர்ச்சொல் ‘கட்டுதல்’ அல்லது ‘கட்டி வைத்தல்’ என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

————–

  1. ஓம்வ்ருஶாயநம:

காமானாம் (நியாயமான) ஆசைகளை

வர்ஶணாத் மழைபோல பொழிவிப்பதால்

வ்ருஶ: தர்ம: அறத்திற்கு ‘வ்ருஶ:’ என்று பெயர். அறமே வடிவினராய் இருப்பதால் பகவான் ‘வ்ருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் நியாயமான ஆசைகளையும் மழைபோல பொழிவிப்பதால் (நிறைவேற்றுவதால்) அறத்தை ‘வ்ருஶ:’ என்று அழைக்கிறோம். பகவானே அறம். அறமே பகவான். எனவே, அவர் ‘வ்ருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶோ ஹி பகவான்தர்ம: ஸ்ம்ருதோ லோகேஶு பாரத |

நைகுண்டகபதாயானைர்வித்தி மாம் வ்ருஶமுத்தமம் || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.88)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ பரதகுலத்தோனே!!! அனைவருக்கும் நன்மை தரக்கூடிய புனிதமான தர்மத்தை ‘வ்ருஶ’ என்று அழைப்பார்கள். எனவே, வேதத்தின் ‘நிகண்டுகளில்’ (அந்த அறமே உருவான) என்னை உத்தமமான ‘வ்ருஶ’ என்று .அழைக்கின்றனர்.

நிகண்டு = அகராதி

 ————

  1. ஓம்க்ரோதக்னேநம:

ஸாதூனாம் தனது அடியவர்களின்

க்ரோதம் சினத்தை

ஹந்தீதி அழிப்பதால்

க்ரோதஹா பகவான் ‘க்ரோதஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் சினத்தை அழிப்பதால் பகவான் ‘க்ரோதஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதன் விஷயங்களைக் (புலனின்பங்களைக்) கருதும்பொழுது அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தினால் சினம். (ஸ்ரீமத் பகவத்கீதை 2.62).

பகவான் சினத்தை அழிக்கிறார் என்றால், அதன் வித்தான பற்றுதலையும் சேர்த்தே அழிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

———————-

  1. ஓம்க்ரோதக்ருத்கர்த்ரேநம:

அஸாதுஶு அறமற்ற தீயோரின்

க்ரோதம் சினத்தை

கரோதீதி தூண்டிவிடுகிறார் (வளர்க்கிறார்)

க்ரோதக்ருத் எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பின்பற்றாத தீயோரின் சினத்தைத் (அவர்கள் மென்மேலும் தவறிழைத்து துன்பப்படும்படி) தூண்டி வளர்க்கிறார். எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி கர்ம செயப்படுவது ‘செயல்’ என்று அழைக்கப்படுகிறது

ஜகத்தஸ்ய (அவ்வாறு செயப்பட்டதான) இந்த உலகத்தின்

கர்த்தா காரணமானதால் (அதை உருவாக்கியவராதலால்) பகவான் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்யப்படுவது ‘செயல்’ என்றும் அதை செய்பவர் ‘கர்த்தா’ என்றும் அழைப்பர். இந்த உலகத்தை உருவாக்கியதால் பகவான் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யோ வை பாலாக ஏதைஶா புருஶாணா கர்த்தா யஸ்ய வை தத்கர்ம ஸ வேதிதவ்ய (உபநிஶத் வாக்கியம்)

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: ஓ பாலகனே!!! யார் இந்த புருஷர்களை (அனைத்து உயிரினங்களையும்) உருவாக்குகிறாரோ, யாரால் இங்கு அனைத்து செயல்களும் செய்யப்படுகிறதோ அவரை (அந்த பரப்ரஹ்மத்தை) அறிந்து கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

க்ரோதக்ருதாம் மிகுந்த சினத்தோடு (தன்னை எதிர்க்கும்)

தைத்யாதீனாம் அசுரர் முதலானோரை

கர்த்தா சேதக வெட்டி அழிக்கிறார்

க்ரோதக்ருத்கர்த்தா எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

இத்யேகம் வா நாம இது (க்ரோதக்ருத்கர்த்தா) ஒரே திருநாமமாகும்.

மிகுந்த சினத்தோடு தன்னை எதிர்க்கும் அசுரர் முதலானோரை வெட்டி அழிக்கிறார். எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு கர்த்தா என்னும் சொல் வெட்டுதல் என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இரண்டு திருநாமங்களாக பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும் ஆதிசங்கரர் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்று ஒரே திருநாமமாகத்தான் கணக்கிட்டுள்ளார்.

—————

  1. ஓம்விஶ்வபாஹவேநம:

விஶ்வேஶாமாலம்பனத்வேன இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக விளங்குவதால்

விஶ்வபாஹு: பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக (கீழே விழுவோரைத் தாங்கும் கைகளைப் போல) தாங்குகிறார். எனவே, அவர் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வே இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும்

பாஹவோSஸ்யேதி அவருக்கு கரங்களாய் இருப்பதால்

விஶ்வபாஹு: பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும் அவரது (அவரிட்ட கடமைகளை நிறைவேற்றும்) கரங்களாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வதோ இந்த ப்ரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும்

பாஹவோSஸ்யேதி வா அவரது கரங்கள் உள்ளன

விஶ்வபாஹு: எனவே, பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் பகவானின் கரங்கள் உள்ளன. எனவே, அவர் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வதோபாஹு:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.3)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து கரங்களின் உரிமையாளராவார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——————

  1. ஓம்மஹீதராயநம:

மஹீம் பூஜாம் தரணீம் வா ‘மஹீ’ என்றால் பூஜை அல்லது பூமி என்று பொருள்

தரதீதி இந்த இரண்டையும் தாங்குகிறார் (நமது பூஜைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தாங்குகிறார்; பூமியை அதன் ஆதாரமாய் இருந்து தாங்குகிறார்)

மஹீதர: எனவே பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘மஹீ’ என்றழைக்கப்படும் பூஜைகளையும் (அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமும்), பூமியையும் (அதன் ஆதாரமாய் இருப்பதன் மூலமும்) தாங்குகிறார். எனவே அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:|

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |
  2. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: ||

———

  1. ஓம்அச்யுதாயநம:

ஶட்பாவவிகாரரஹிதத்வாத் பகவான் ஆறு வகையான மாறுதல்களற்றவர்

அச்யுத: எனவே, அவர் ‘அச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறுவகையான மாறுதல்களற்றவர் (அஸ்தி – உண்டாதல், ஜாயதே – பிறத்தல், வர்த்ததே – வளர்தல், பரிணமதே – வளர்தலின் முடிவை அடைதல், அபக்ஷீயதே – தேய்தல், நஶ்யதி – அழிதல்). எனவே அவர் ‘அச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முன்பு 100-வது திருநாமத்தில் (அச்யுத:) ஆசார்யாள் “பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை” என்று உரை அளித்திருந்தார்.

————

  1. ஓம்ப்ரதிதாயநம:

ஜகதுத்பத்யாதிகர்மபி: இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் முதலிய செயல்களால்

ப்ரக்யாத: புகழ்பெற்று விளங்குபவர்

ப்ரதித: எனவே, அவர் ‘ப்ரதித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் (காத்தல் மற்றும் அழித்தல்) முதலிய செயல்களால் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார். எனவே, அவர் ‘ப்ரதித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ப்ராணாயநம:

ஸூத்ராத்மனா இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக (மாலைகளில் மணியைக் கோர்க்கும் ஸூத்ரம் போல)

ப்ரஜா: உயிரினங்களுக்கு

ப்ராணயதீதி உயிரை (ப்ராணனை) அளிப்பதால்

ப்ராண: பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக, அனைத்து ஜீவராசிகளுக்கும் (உயிரினங்களுக்கும்) உயிர் அளிப்பவராக உள்ளார். எனவே, அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ராணோ வா அஹமஸ்மி’

நானே ப்ராணனாக இருக்கிறேன்.

இதி பஹ்வ்ருசா | இது பஹ்வ்ருச ஶ்ருதியின் கூற்றாகும்.

முன்பு, 66-வது திருநாமத்தில் ஆச்சார்யாள் “பகவான் அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்கிறார்” என்று விளக்கமளித்திருந்தார்.

————

  1. ஓம்ப்ராணதாயநம:

ஸுராணாமஸுராணாம்  தேவர்கள் (ஸுரர்கள்) மற்றும் அசுரர்களின்

ப்ராணம் பலம் ‘ப்ராணன்’ அதாவது பலத்தை

ததாதி தருகிறார் (தேவர்களுக்கு)

த்யதி வேதி குறைக்கிறார் (அசுரர்களுக்கு)

ப்ராணத: எனவே, பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கு ப்ராணனை (பலத்தை) அளிக்கிறார், அசுரர்களுக்கு ப்ராணனை (பலத்தை) கெடுக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 65-வது திருநாமத்தில் ஆசார்யாள் “அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று விளக்கியிருந்தார்.

த: என்ற சொல்லிற்கு ததாதி – தருதல், த்யதி – வெட்டுதல் முதலிய பல பொருட்கள் உள்ளன. இங்கு ஆசார்யாள் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றிணைத்து இங்கு உரை அளித்துள்ளார். தேவர்களுக்கு பலத்தை அளிக்கும் அவரே, அசுரர்களின் பலத்தை குறைக்கிறார். பாற்கடலைக் கடையும் பொழுது அசுரர்களை வாசுகியின் தலைப்பாகத்தை இழுக்கச் செய்து அவர்களின் பலத்தை குறைத்தார். தேவர்களின் பக்கலில் மழையைப் பொழியச்செய்து அவர்களின் சோர்வை நீக்கி பலத்தைப் பெருகச்செய்தார்.

————-

  1. ஓம்வாஸவானுஜாயநம:

அதித்யாம் கஶ்யபாத் அதிதிக்கும் காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக

வாஸவஸ்யானுஜோ வாஸவனான இந்திரனின் தம்பியாக (வாமனனாக)

ஜாத இதி பிறந்தததனால்

வாஸவானுஜ: பகவான் ‘வாஸவானுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அதிதிக்கும், காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக இந்திரனின் தம்பியாக (வாமனனாக) அவதரித்தார். எனவே, அவர் ‘வாஸவானுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்அபாம்நிதயேநம:

ஆபோ தண்ணீரானது

யத்ர எங்கு

நிதீயந்தே ஸ: நிறைந்திருக்குமோ

அபாம்நிதி: அந்த சமுத்திரத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘அபாம்நிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தண்ணீரால் நிறைந்திருப்பதால் கடலானது ‘அபாம்நிதி:’ என்று அழைக்கப்படுகிறது. அந்த கடலும் பரப்ரஹ்மத்தின் ஒரு வடிவேயாகும். எனவே, பகவான் ‘அபாம்நிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸரஸாமஸ்மி ஸாகர:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: நீர்நிலைகளில் நான் கடல்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

—————-

  1. ஓம்அதிஶ்டானாயநம:

அதிதிஶ்டந்தி நிலைபெற்றிருக்கின்றன

பூதானி அனைத்து உயிரினங்களும்

உபாதான காரணத்வேன மூலப்பொருளாய் இருப்பதால்

ப்ரஹ்மேதி பரப்ரஹ்மமான பகவானிடத்தில்

அதிஶ்டானம் எனவே, பகவான் ‘அதிஶ்டானம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மூலப்பொருளாய் இருப்பதால், அனைத்துமே பகவானிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. எனவே அவர் ‘அதிஶ்டானம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மத்ஸ்தானி ஸர்வபூதானி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.4)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைப்பெற்றன

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

அதிஶ்டானம் என்றால் ஆதாரம் அல்லது வசிக்கும் இடம் என்று பொருள். பகவானிடமிருந்தே நாம் அனைவரும் தோன்றுகிறோம். அவரே நமது மூலப்பொருளாவார். எனவே, அவர் அனைத்திற்கும் அதிஶ்டானமாய் இருக்கிறார்.

—————

  1. ஓம்அப்ரமத்தாயநம:

அதிகாரிப்ய: அந்தந்த அதிகாரிகளை (செயல் புரிபவர்களை)

கர்மானுரூபம் அவரவரது வினைகளுக்கேற்ப

ஃபலம் ப்ரயச்சன் உரிய பலன்களை வழங்குகிறார்

ந ப்ரமாத்யதீதி அதனின்று (உரிய பலன்களை வழங்குவதிலிருந்து) ஒரு பொழுதும் தவறுவதில்லை

அப்ரமத்த: எனவே பகவான் ‘அப்ரமத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொரு அதிகாரிக்கும் (செயல் புரிபவருக்கும்) அவரவரது வினைகளுக்கேற்ப உரிய பலன்களை வழங்குவதிலிருந்து ஒரு பொழுதும் தவறுவதில்லை. எனவே, அவர் ‘அப்ரமத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அப்ரமத்த என்றால் கவனத்துடன் இருப்பவர் (அல்லது கவனக்குறை ஏதுமில்லாதவர்) என்று பொருள். பகவான் வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்று பொருள்.

—————-

  1. ஓம்ப்ரதிஶ்டிதாயநம:

ஸ்வே தன்னுடைய

மஹிம்னி மகிமையிலேயே

ஸ்தித: நிலைபெற்றுள்ளார் (தன்னுடைய மகிமையினாலேயே புகழ் பெற்றுள்ளார்)

ப்ரதிஶ்டித: எனவே அவர் ‘ப்ரதிஶ்டித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய மஹிமையிலேயே நிலைபெற்றுள்ளார் (அனைத்திற்கும் ஆதாரமான அவருக்கு வேறு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் தேவையில்லை. தானே தனக்கு ஆதாரமாய் இருக்கிறார்). எனவே, அவர் ‘ப்ரதிஶ்டித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ பகவ: கஸ்மின் ப்ரதிஶ்டித: இதி ஸ்வே மஹிம்னி’ (சாந்தோக்ய உபநிஶத் 7.28.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) எதில் நிலைபெற்றுள்ளார். தன்னுடைய புகழில் (மஹிமையில்)

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

  1. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||

இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
  2. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||

————

  1. ஓம்ஸ்கந்தாயநம:

ஸ்கந்ததி ‘ஸ்கந்தனம்’ செய்கிறார்

அம்ருதரூபேண கச்சதி அமுதமாக பொங்கி பிரவகிக்கிறார்

வாயுரூபேண ஶோஶயதீதி காற்றின் வடிவில் உலர்த்துகிறார்

வா ஸ்கந்த: எனவே, பகவான் ‘ஸ்கந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமுதமாய் பொங்கி பிரவகிக்கிறார். காற்றின் வடிவில் உலர்த்துகிறார். எனவே, பகவான் ‘ஸ்கந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்கந்த என்ற சொல்லிற்கு ப்ரவாஹம் மற்றும் உலர்த்துதல் ஆகிய பொருள்கள் உண்டு.

————

  1. ஓம்ஸ்கந்ததராயநம:

ஸ்கந்தம் தர்மபதம் ‘ஸ்கந்தம்’ என்றால் அறவழி என்று பொருள்

தாரயதீதி (அந்த அறவழியை) ஏற்கிறார், தாங்குகிறார்

ஸ்கந்ததர: எனவே பகவான் ‘ஸ்கந்ததர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்கந்தம்’ எனும் அறவழியைத் தாங்குகிறார் (அறவழியையே ஏற்கிறார்). எனவே, பகவான் ‘ஸ்கந்ததர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்துர்யாயநம:

துரம் வஹதி பாரத்தை சுமக்கிறார்

ஸமஸ்தபூதஜன்மாதி லக்ஷணாமிதி அனைத்து உயிரினங்களின்  பிறப்பிறப்பென்னும்

துர்ய: எனவே, பகவான் ‘துர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (அனைத்து உயிரினங்களின் உள்ளுறை ஆன்மாவாக இருந்து) அனைத்து உயிரினங்களின் பிறப்பிறப்பென்னும் பாரத்தை சுமக்கிறார். எனவே, அவர் ‘துர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்வரதாயநம:

அபிமதான் விரும்பிய

வரான் வரங்களை

ததாதீதி வாரி வழங்குவதால்

வரத: பகவான் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை வாரி வழங்குகிறார். எனவே, அவர் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் காம் வரம் என்றால் பசுக்கள்

தக்ஷிணாம் ததாதீதி அவற்றை தானமாக அளிக்கிறார்

யஜமானரூபேணேதி வா வேள்விகள் மற்றும் நற்காரியங்களில் தலைவராய் (யஜமானராய்)

வரத: எனவே, பகவான் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேள்விகள் மற்றும் நற்காரியங்களின் தலைவராய் இருந்து பசுக்களை (வரங்களை) தானம் அளிக்கிறார். எனவே, அவர் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கௌர்வை வர:’ வர என்றால் பசுக்கள்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்வாயுவாஹனாயநம:

மருத: ஸப்த ஏழு வகையான காற்றுகளை

ஆவஹாதீன் ‘ஆவஹ’ முதலிய

வாஹயதீதி செலுத்துவதனால் (அல்லது அந்த காற்றுகளில் பயணிக்கிறார்)

வாயுவாஹன: எனவே, பகவான் ‘வாயுவாஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆவஹ முதலிய ஏழு வகையான காற்றுகளை செலுத்துகிறார் (அல்லது அந்த ஏழு காற்றுகளின் மூலம் பயணிக்கிறார்). எனவே, அவர் ‘வாயுவாஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு வகையான காற்றுகள் – பூமிக்கும், மேகங்களுக்கும் இடையில் உள்ள காற்று ஆவஹ, மேகங்களுக்கு, சூரியனுக்கும் இடையில் உள்ளது ப்ரவஹ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அனுவஹ, சந்திரனுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் இடையில் ஸம்வஹ, நக்ஷத்திரங்களுக்கும் மற்ற கிரஹங்களுக்கும் இடையில் விவஹ, கிரஹங்களுக்கும் ஸப்தரிஶி மண்டலத்திற்கும் இடையில் பராவஹ மற்றும் ஸப்தரிஶி மண்டலம் மற்றும் த்ருவ நக்ஷத்திரத்திற்கு இடையில் உள்ளது பரிவஹ எனப்படும்.

————–

  1. ஓம்வாஸுதேவாயநம:

வஸதி வசிக்கிறார்

வாஸயதி ஆச்சாதயதி மறைத்து  வைக்கிறார்

ஸர்வமிதி வா அனைத்து உயிரினங்களுக்குள்ளும்

வாஸு: இவை ‘வாஸு:’ என்ற சொல்லிற்குப் பொருளாகும்.

தீவ்யதி ‘திவ்’ எனும் வேர்ச்சொல்லிற்கு க்ரீடயதி விளையாடுதல்,

விஜிகீஶதே வெற்றிகொள்ளுதல்,

வ்யவஹரதி இந்தப் ப்ரபஞ்சத்தின் அனைத்து காரியங்களையும் நடத்துதல்,

த்யௌததே ஒளிவீசுதல்,

ஸ்தூயதே துதிக்கப்பெறுதல்,

கச்சதீதி எங்கும் செல்வது என்று பொருள்.

வாஸுச்சாஸௌ ‘வாஸு’ வாகவும்

தேவஸ்சேதி ‘தேவனாகவும்’ இருப்பதனால்

வாஸுதேவ: பகவான் ‘வாஸுதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாஸு’ என்ற சொல்லிற்கு அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறைதல் (வசித்தல்) மற்றும் அனைத்தையும் (தன் மாயையினால்) மறைத்து வைத்தல் என்று பொருள். ‘தேவன்’ என்றால் விளையாடுதல், வெற்றிபெறுதல், அனைத்து காரியங்களையும் நடத்துதல், ஒளிவீசுதல், துதிக்கப்பெறுதல் மற்றும் எங்கும் செல்லுதல் என்று பொருள். பகவான் ‘வாஸு’ வாகவும் தேவனாகவும் (இந்த இரண்டாலும் குறிக்கப்படும் அனைத்துப் பண்புகளையும் உடையவராக) இருப்பதால் ‘வாஸுதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சாதயாமி ஜகத் ஸர்வம் பூத்வா ஸூர்ய இவாம்ஶுபி: |

ஸர்வபூதாதிவாசஸ்ச்ச வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 341.41)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனின் வடிவில் எனது கிரணங்களால் இந்த உலகனைத்தையும் மூடுகிறேன் மற்றும் அனைத்து உயிரினங்களும் உறையும் இடமாக இருக்கிறேன். எனவே, நான் ‘வாஸுதேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறேன்.

வாஸனாத் ஸர்வபூதானாம் வஸுத்வாத் தேவயோனித: |

வாஸுதேவஸ்ததோ வேத்ய:… || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.3)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: தனது மாயத்திரையினால் அனைத்து உயிரினங்களையும் மறைப்பதனாலும், தனது மகிமைமிக்க ப்ரகாசத்தினாலும் (ஒளியினாலும்), தேவர்களின் பிறப்பிடமாக இருப்பதனாலும் (அவர்களை தோற்றுவிப்பதாலும்) பகவான் ‘வாஸுதேவன்’ என்று அறியப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வஸத்யத்ரேதி வை யத: |

தத: ஸ வாஸுதேவேதி வித்வித்பி: பரிபட்யதே || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.12)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரமாத்மா அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்துப் பொருட்களிலும் வசிக்கிறார் (உறைகிறார்). எனவே, கற்றறிந்தோர் அவரை வாஸுதேவன் என்று அழைக்கின்றனர்.

ஸர்வாணி தத்ர பூதானி வஸந்தி பரமாத்மனி |

பூதேஶு ச ஸ ஸர்வாத்மா வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.80)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உயிரினங்களும் அந்த பரம்பொருளுக்குள் வசிக்கின்றன. அந்த பரமாத்மாவும் அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கிறார். எனவே, அவர் வாஸுதேவன் என்று அழைக்கப்படுகிறார்.

இதி ச விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

————

  1. ஓம்ப்ருஹத்பானவேநம:

ப்ருஹந்தோ பானவோ யஸ்ய சந்த்ரஸூர்யாதிகாமின: |

தைர்விஶ்வம் பாஸயதி ய: ஸ ப்ருஹத்பானுருச்யதே ||

எவருக்கு கதிரவன் மற்றும் திங்களுக்குள் செல்லக்கூடியதான மிகச்சிறந்த (மிகத் தீவிரமான) கிரணங்கள் உள்ளனவோ (எவர் அந்த கதிரவனுக்கும், திங்களுக்கும் கூட ஒளி வழங்குகிறாரோ), எவர் அந்த கிரணங்களால் அனைத்துப் ப்ரபஞ்சத்திற்கும் ஒளி வழங்குகிறாரோ அந்த பரமாத்மா ‘ப்ருஹத்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஆதிதேவாயநம:

ஆதி: காரணம் அனைத்திற்கும் ‘ஆதியாக’ அதாவது அனைத்திற்கும் காரணமாக இருப்பதனாலும்

ச சாஸௌ மற்றும்

தேவஸ்ச்சேதி தேவனாக இருப்பதனாலும்

ஆதிதேவ: பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

த்யௌதனாதி குணவான் தேவ: (முன்பு வாஸுதேவ: என்ற திருநாமத்தில் கூறப்பட்ட) ஒளிமிக்கவர் போன்ற குணங்களால் நிறைந்தவர் ‘தேவனாவார்’..

அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதனாலும் (ஆதி) தேவனாக இருப்பதாலும் பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு தேவன் என்ற சொல்லிற்கு முன்திருநாமமான வாஸுதேவ: என்பதில் கூறப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

————-

  1. ஓம்புரந்தராயநம:

ஸுரஶத்ரூணாம் தேவர்களின் எதிரிகளின் (அதாவது அஸுரர்களின்)

புராணாம் இருப்பிடங்களை (நகரங்களை)

தாரணாத் அழிப்பதனால்

புரந்தர: பகவான் ‘புரந்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களின் எதிரிகளான அஸுரர்களின் நகரங்களை (இருப்பிடங்களை) அழிக்கிறார். எனவே, அவர் ‘புரந்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாசம்யம புரந்தரௌ ச’ (பாணினி ஸூத்ரம் 6.3.69)

இதி பாணினினா நிபாதநாத் | இந்த பாணினியின் ஸூத்திரத்தின் படி ‘தார’ என்ற விகுதி ‘தர’ என்று குறுகியுள்ளது.

————-

  1. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:|

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |
  2. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: ||

————

  1. ஓம்அஶோகாயநம:

ஶோகாதிஶட்பிர்வர்ஜித: சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர் ஆதலால்

அஶோக: பகவான் ‘அஶோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர். எனவே அவர் ‘அஶோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தாரணாயநம:

ஸம்ஸாரஸாகராத் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று

தாரயதீதி (நம்மைத்) தாண்டுவிப்பதால்

தாரண: பகவான் ‘தாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று தாண்டுவிக்கிறார். எனவே, அவர் ‘தாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் தாண்டுவித்தல் என்ற பொருளில் வருகிறது.

———-

  1. ஓம்தாராயநம:

கர்ப (ஒரு தாயின் கர்ப்பத்தில்) உருவாதல்

ஜன்ம பிறத்தல்

ஜரா மூப்பு

ம்ருத்யு இறத்தல்

லக்ஷணாத் பயாத் (இவற்றால் நமக்கு ஏற்படும்) அச்சங்களைப்

தாரயதீதி போக்குகிறார்

தார: எனவே பகவான் ‘தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது கர்ப்பவாசம், பிறத்தல், மூப்படைதல் மற்றும் இறப்பு ஆகிய (அதாவது பிறப்பு இறப்பென்னும் இந்தப் பிறவி சுழற்சிகளால் உருவாகும்) அச்சங்களைப் போக்குகிறார். எனவே, அவர் ‘தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் காத்தல் என்ற பொருளில் வருகிறது.

—————-

  1. ஓம்ஶூராயநம:

விக்ரமணாத் மிகுந்த வீரமும், துணிவும் உடையவராதலால்

ஶூர: பகவான் ‘ஶூர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகுந்த வீரமும், துணிவும் உடையவர். எனவே, அவர் ‘ஶுர: ‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஶௌரயேநம:

ஶூரஸ்யாபத்யம் ஸூரரின் மகனான

வஸுதேவஸ்ய வஸுதேவரின்

ஸுத: மகனாகப் பிறந்ததால்

ஶௌரி: பகவான் ‘ஶௌரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸூரரின் மகனான வஸுதேவருக்கு மகனாக (ஸூர வம்ஸத்தில்) பிறந்ததால் ‘ஶௌரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுதேவரின் தந்தையின் பெயர் ‘ஸூரர்’. அவரது பேரனாதலால் பகவான் ‘ஶௌரி:’ என்று அழைக்கபடுகிறார்.

————

  1. ஓம்ஜனேஶ்வராயநம:

ஜனானாம் ஜந்தூனாம் ‘ஜனங்கள்’ அதாவது அனைத்து உயிரினங்கள்

ஈஶ்வரோ அவை அனைத்தையும் ஆட்சி செய்பவராக இருப்பதால்

ஜனேஶ்வர: பகவான் ‘ஜனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் ஆளும் ஈஶ்வரராய் இருப்பதால் பகவான் ‘ஜனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்அனுகூலாயநம:

ஆத்மாவேன ஹி உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார்

ஸர்வேஶாம் அனைவரின்

அனுகூல: எனவே, பகவான் ‘அனுகூல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்,

ந ஹி ஸ்வஸ்மின் ப்ராதிகூல்யம் தனக்குக் கெடுதலை விளைவிக்கும் செயல்களை

ஸ்வயமாசரதி தானே எவரும் புரிவதில்லை.

பகவான் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார். எவரும் தனக்கு தானே கெடுதல் தரும் செயல்களைப் புரிவதில்லை. எனவே, பகவானும் நமக்கு உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் நமக்கு நன்மைகளையே செய்கிறார் (கெடுதல்களை அல்ல). எனவே, அவர் ‘அனுகூல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஶதாவர்த்தாயநம:

தர்மத்ராணாய அறத்தைக் காக்கும் பொருட்டு (அல்லது அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு)

ஶதம் நூற்றுக்கணக்கான

ஆவர்த்தனானி ப்ராதுர்பாவா அஸ்யேதி ‘ஆவர்த்தனங்கள்’ அதாவது அவதாரங்களை எடுக்கிறார்

ஶதாவர்த்த: எனவே பகவான் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தைக் காத்து, நிலைநிறுத்தும் பொருட்டு நூற்றுக்கணக்கான அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. இங்கு ஆவர்த்தனம் என்ற சொல் ‘அவதாரம்’ என்ற பொருளில் விவரிக்கப்பட்டுள்ளது
  2. ஆதிசங்கர பகவத்பாதாள் பகவானுக்கு தசாவதாரம் என்றில்லை; நூற்றுக்கணக்கான அவதாரங்கள் உள்ளன என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.
  3. நாமெல்லாம் நன்கறிந்த ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்லோகம் இது: “பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஶ்க்ருதாம்தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

நாடிஶதே நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில்

ப்ராணரூபேண ப்ராணவாயுவின் வடிவில்

வர்தத இதி வா வசிக்கிறார்

ஶதாவர்த்த: எனவே, பகவான் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில் ப்ராணவாயுவின் வடிவில் வசிக்கிறார். எனவே, அவர் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது உடலில் 72000 நாடிகள் இருப்பதாக கூறுகின்றனர். மரண காலத்தில் நமது ஆத்மா இவற்றுள் எந்த நாடியின் வழியாகவும் வெளியேறலாம். ஆனால், முக்தி அடைவோரின் ஆத்மா ஸுஶும்னா எனும் நாடியின் வழியே நமது உச்சந்தலையிலுள்ள ப்ரஹ்மரந்தரத்தின் வழியே புறப்பட்டு செல்லும்.

————

  1. ஓம்பத்மினேநம:

பத்மம் தாமரையை

ஹஸ்தே கைகளில்

வித்யத இதி ஏந்தியுள்ளார்

பத்மீ எனவே பகவான் ‘பத்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது கையில் தாமரையை ஏந்தியுள்ளார். எனவே அவர் ‘பத்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்பத்மநிபேக்ஷணாயநம:

பத்மநிபே தாமரையை ஒத்த

ஈக்ஷணே த்ருஶாவஸ்யேதி ‘ஈக்ஷணை’ அதாவது இரண்டு கண்களை உடையவராதலால்

பத்மநிபேக்ஷண: எனவே பகவான் ‘பத்மநிபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை (தாமரை இதழ்களை) ஒத்த இரு கண்களை உடையவராதலால் அவர் ‘பத்மநிபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத்|

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத்|
  2. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ:||

————–

  1. ஓம்பத்மநாபாயநம:

பத்மஸ்ய (இதயத்) தாமரையின்

நாபௌ மத்யே கர்ணிகாயாம் நாபிக்குள் அதாவது அதன் நடுவில் உள்ள கர்ணிகையில்

ஸ்தித இதி வீற்றிருக்கிறார்

பத்மநாப:  எனவே பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது இதயத்தாமரையின் நடுவில் அதன் கர்ணிகையில் வீற்றிருக்கிறார் (தியானத்தின் உயர் நிலையில் அங்கு நமக்கு அவர் காட்சி தருகிறார்). எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

48வது திருநாமத்தில் தனது நாபியில் ஜகத் காரணமான தாமரையை உடையவர் என்று ஆச்சார்யர் உரை அளித்திருந்தார்

196வது திருநாமத்தில் தாமரையைப் போன்ற அழகிய நாபியை (தொப்புட்குழியை) உடையவர் என்று உரை அளித்திருந்தார் .

இங்கு, இதயத்தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார் என்று பகவத்பாதாள் உரை அளித்துள்ளார்

———–

  1. ஓம்அரவிந்தாஷாயநம:

அரவிந்த தாமரையை

ஸத்ருஶே ஒத்த

அக்ஷிணீ அஸ்யேதி அழகிய இரு திருக்கண்களை உடையவர்

அரவிந்தாக்ஷ: எனவே பகவான் ‘அரவிந்தாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை ஒத்த அழகிய இரு திருக்கண்களை உடையவராதலால் அவர் ‘அரவிந்தாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பத்மநிபேக்ஷண:” என்ற 345-வது திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால்  புனர் யுக்தி தோஷம்  இல்லை.

————-

  1. ஓம்பத்மகர்பாயநம:

பத்மஸ்ய ஹ்ருதயாக்யஸ்ய உள்ளத் தாமரையின்

மத்யே நடுவில்

உபாஸ்யத்வாத் (ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால்) வணங்கப்படுகிறார்

பத்மகர்ப: எனவே பகவான் ‘பத்மகர்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால் தத்தம்) இதயத் தாமரையின் நடுவில் வழிபடப்படுகிறார். எனவே, பகவான் ‘பத்மகர்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைவரின் இதய கமலத்திலும் பகவான் வீற்றிருந்தாலும், த்யானத்தில் தேர்ச்சி பெற்றோரால் மட்டுமே அவரை காண இயலும்.

———–

  1. ஓம்ஶரீரப்ருதேநம:

போஶயன் ஊட்டமளித்து வளர்க்கிறார்

அன்னரூபேண அன்னத்தின் (உணவின்) வடிவிலும்

ப்ராணரூபேண வா மூச்சுக்காற்றின் (ப்ரணவாயுவின்) வடிவிலும்

ஶரீரிணாம் ஶரீராணி உடல்படைத்த ஆத்மாக்களின் (உயிரினங்களின்) உடல்களை

தாரயதீதி தாங்குகிறார்

ஶரீரப்ருத் எனவே பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உணவாகவும், ப்ரணவாயுவாகவும் அனைத்து உயிரினங்களின் உடல்களையும் ஊட்டமளித்து, வளர்த்துத் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வமாயையா தனது ஆச்சர்யமான மாயையினால்

ஶரீராணி பற்பல உடல்களை (சரீரங்களை)

பிபர்தீதி வா ஏற்றுக் கொள்கிறார் (தரிக்கிறார்)

ஶரீரப்ருத் எனவே பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தனது மாயையினால் பற்பல சரீரங்களை (உடல்களை) ஏற்கிறார் (தரிக்கிறார்). எனவே, பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்மஹர்த்தயேநம:

மஹதீ மிகச்சிறந்த

ருத்திர் விபூதிர் அஸ்யேதி ‘ருத்தி’ அதாவது செல்வச் செழிப்பு உடையவர்

மஹர்த்தி: எனவே பகவான் ‘மஹர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செல்வச் செழிப்பு அளவிடமுடியாதது, மிகச்சிறந்தது.  எனவே, அவர் ‘மஹர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ருத்தாயநம:

ப்ரபஞ்சரூபேண இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில்

வர்த்தமானத்வாத் இருப்பதனால்

ருத்த: பகவான் ‘ருத்த:’ என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில் இருப்பதனால் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்வ்ருத்தாத்மனேநம:

வ்ருத்த: புராதன ‘வ்ருத்த:’ அதாவது மிகப் பழமையான

ஆத்மா யஸ்யேதி ஆத்மாவாக இருப்பதால்

வ்ருத்தாத்மா பகவான் ‘வ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே ஆதியானவர். அனைவருக்கும் முன்பே இருக்கும் அவரே மிகப் பழமையான ஆத்மாவாவார். எனவே அவர் ‘வ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்மஹாக்ஷாயநம:

மஹதீ அக்ஷிணீ மிகச்சிறந்த திருக்கண்களை உடையவர்

மஹாந்த்யக்ஷீணி வா அஸ்யேதி  மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர்

மஹாக்ஷ: எனவே பகவான் ‘மஹாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த, மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர். எனவே, அவர் ‘மஹாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்கருடத்வஜாயநம:

கருடாங்கோ கருடனின் உருவம் பொரித்த

த்வஜோ யஸ்யேதி கொடியை உடையவர் ஆதலால்

கருடத்வஜ: பகவான் ‘கருடத்வஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருடனின் உருவம் பொரித்த கொடியை கொண்டுள்ளார். எனவே, அவர் ‘கருடத்வஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருடக் கொடி என்பது (ஸ்ரீவத்ஸம், மார்பில் திருமகள் போன்றே) பகவான் நாராயணருக்கே உரித்த அடையாளமாகும். பழமையான சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது (உதாரணமாக பாடல் எண். 1 – “சேவல் அம் கொடியோய்!”)

—————-

  1. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:|

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |
  2. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய:||

———

  1. ஓம்அதுலாயநம:

துலோபமானமஸ்ய  அவருக்கு ஈடிணையானவர் எவரும்

வித்யத இதி இல்லை

அதுல: எனவே, பகவான் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஈடிணையானவர் எவருமில்லை. எனவே அவர் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந தஸ்ய ப்ரதிமாஸ்தி யஸ்ய நாம மஹத்யஶ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

புகழ்பெற்ற திருநாமங்களை உடைய அந்த பரப்ரஹ்மத்திற்கு ஈடானவர் எவரும் இல்லை.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோSன்ய:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பார்த்தன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை. எனில், உனக்கு மேல் வேறுயாவர்?

——————

  1. ஓம்ஶரபாயநம:

ஶரா: ஶரீராணி உடலை “ஶரா” என்று அழைக்கின்றனர்

ஶீர்யமாணத்வாத்தேஶு அழியக்கூடியதால்

ப்ரத்யகாத்மதயா (அனைவரையும் காக்க வேண்டும் என்ற) தன்னலத்தோடு

பாதீதி அதனுட்புகுந்து (அனைத்து உடல்களுக்குள்ளும் புகுந்து) உறைவதால்

ஶரப: பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களுமே அழியக்கூடியவை. எனவே அவற்றை ‘ஶர’ என்று அழைக்கின்றனர். அந்த ‘ஶரங்களுக்குள்’ புகுந்து ஆன்மாவாக உறைவதால் பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்பீமாயநம:

பிபேத்யஸ்மாத்ஸர்வமிதி அனைவரும் பகவானிடம் அச்சம் கொண்டுள்ளனர்

பீம: எனவே பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரும் பகவானிடம் (அவரது பராக்ரமம் மற்றும் மேன்மையினால்) அச்சம் கொண்டுள்ளனர். எனவே, பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீமாதயோSபாதானே’ (பாணினி ஸூத்ரம் 3.4.74)

இதி பாணினிஸ்ம்ருதே: இந்த பாணினி ஸூத்ரத்தை நினைவில் கொள்ளவேண்டும் (பீம என்ற பெயர் காரணத்தை விளக்க)

ஸன்மார்கவர்த்தினாம் நன்னெறியில் நடப்போர்

அபீம: அவரிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்னெறியில் நடப்போருக்கு அவர் அச்சம் அளிப்பதில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு இருவகையாய் பொருளுரைத்திருந்தாலும், ‘பீம:’ என்பதே ஆன்றோரால் திருநாம வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்ஸமயஜ்ஞாயநம:

ஸ்ருஶ்டிஸ்திதிஸம்ஹாரஸமயவித் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிவதற்கான சரியான சமயத்தை (நேரத்தை) அறிந்துள்ளார்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முத்தொழில்களான படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை புரிவதற்கான சரியான நேரத்தை அறிந்துள்ளபடியால் பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶட்ஸமயாஜ்ஜானாதீதி வா ஆறு காலங்களையும் (இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம் மற்றும் பின்பனிக்காலம்) சரிவர அறிந்துள்ளபடியால்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறு ருதுக்களை (ஆறு காலங்களை) சரிவர அறிந்துள்ள படியால் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆறு காலங்களை அறிதல் மட்டுமே பொருளன்று. ஆச்சார்யாள் நேரடியாய் குறிப்பிடாவிடினும் அந்த ஆறு காலங்களை தக்க நேரத்தில் வரும்படி செய்பவரும் பகவான்தான் என்ற உட்பொருளிலேயே இந்த விளக்கம் அளித்திருப்பார் என்று எண்ணுகிறேன்..

ஸர்வபூதேஶு அனைத்து உயிர்களிடத்தும்

ஸமத்வம் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நோக்கில் இருப்பது

யஜனம் பகவானின் வழிபாடு

ஸாத்வஸ்யேதி வா மிகச்சிறந்த

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுகளில் மிகச்சிறந்தது எதுவெனில், அனைத்து உயிர்களிடத்தும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது ஒரு நோக்கில் அவை அனைத்தையும் சமமாக நடுத்துவதேயாகும். எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் ‘ஸமமாக’ நடத்துவதே அவருக்கு செய்யப்படும் ‘யஜ்ஞம்’.

‘ஸமத்வமாராதனமச்யுதம்’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: சமத்துவமே (அனைத்து உயிரினங்களையும், மனிதர்களையும் ஒன்றாக நடத்துவதே) பகவான் அச்சுதருக்கு செய்யப்படும் சிறந்த வழிபாடாகும்.

இதி ப்ரஹலாதவசனாத் | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பக்த ப்ரஹ்லாதனின் கூற்றாகும்.

——–

  1. ஓம்ஹவிர்ஹரயேநம:

யஜ்ஞேஶு வேள்விகளில்

ஹவிர்பாகம் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஹரதீதி ஏற்றுக்கொள்வதால்

ஹவிர்ஹரி: பகவான் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளும் பகவானைக் குறித்தே செய்யப்படுகின்றன. அவர் அனைத்து வேள்விகளிலும் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.24)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே (வேள்விகளின்) தலைவன்.

ஹர என்ற சொல்லிற்கு கவர்தல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல பொருட்கள் உண்டு. இங்கு, கவர்கிறார் என்பதை விட வேள்வியின் நாயகனாய் இருந்து ஆகுதிகளைப் பெறுகிறார் என்பதே சிறந்த பொருளாக இருக்கும்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும் 

இனி ஆச்சார்யாள், இந்த இரண்டு சொற்களையும் (ஹவி:, ஹரி:) தனித்தனியே பிரித்தும் பொருளுரைக்கிறார். இவ்வாறு, விளக்கியிருந்தாலும் திருநாமக் கணக்கில் ‘ஹவிர்ஹரி:’ என்று ஒரு திருநாமமாகவே ஆச்சார்யாள் கணக்கிட்டுள்ளார்.

அதவா அல்லது

ஹூயதே ஹவிஶேதி வேள்விகளில் ஆகுதி கொடுக்கப்படுவது

ஹவி: ‘ஹவிஸ்’ எனப்படும்.

அல்லது, பகவானே ஆகுதிப் பொருளாக இருப்பதால் அவர் ‘ஹவி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அபத்னன் புருஶம் பஶும்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(வேள்வியில்) புருஶ ரூபமான பசுவை (ஆகுதிப் பொருளை) கட்டி வைத்தனர்

இதி ஹவிஶ்டம் ஶ்ரூயதே இந்த புருஶ ஸூக்தத்தில் பரமபுருஶனே ஆகுதிப் பொருளாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ம்ருதி மாத்ரேண அவரை நினைத்த அளவிலேயே

பும்ஸாம் மனிதர்களின் பாபம் பாவங்களையும்

ஸம்ஸாரம் வா பிறவிச்சுழல்களையும்

ஹரதீதி அழிப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை நினைத்த அளவிலேயே மனிதர்களின் பாவங்களையும், பிறவிச்சுழல்களையும் நீக்குகிறார். எனவே பகவான் ‘ஹரி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஹரித்வர்ணத்வாத் வா பச்சை நிற மேனியனாய் இருப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பச்சை நிற மேனியனாய் இருப்பதால் பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹராம்யகம் ச ஸ்மர்த்ருணாம் ஹவிர்பாகம் க்ரதுஶ்வஹம் |

வர்ணஸ்ச மே ஹரி: ஶ்ரேஶ்டஸ்தஸ்மாத் ஹரிர் அஹம் ஸ்ம்ருத: ||

என்னையே எண்ணுவோரின் பாபங்களை அழைக்கிறேன், வேள்விகளில் வழங்கப்படும் ஆகுதிகளை ஏற்கிறேன்,  மிகச்சிறந்த பச்சை வண்ணனாக இருக்கிறேன். எனவே, என்னை அனைவரும் ‘ஹரி’ என்று அழைக்கின்றனர்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு பகவான் கூறியுள்ளார் (இந்த ஸ்லோகம் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் இருப்பதாக கூறுகின்றனர்).

பச்சை மா மலைபோல் மேனி….(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

ஹரிர் ஹரதி பாபானி (ப்ரஹலாதன் அருளிய ஹர்யஶ்டகம்)

————

  1. ஓம்ஸர்வலக்ஷணலக்ஷண்யாயநம:

ஸர்வைர்லக்ஷணை: அனைத்து குறியீடுகளிலும் (விளக்கங்கள்)

ப்ரமாணைர்லக்ஷணம் ஞானம் ஜாயதே மிகச்சிறந்தது ப்ரமாணங்களை (வேதங்கள் மற்றும் வேதாந்தங்கள்) அறிவதனால் பிறக்கும் உண்மையறிவாகும்

யத்தத்வினிர்திஶ்டம் அந்த அறிவால் விளக்கப்படும்

ஸர்வலக்ஷணலக்ஷணம் தத்ர ஸாது:  மேன்மையான பரம்பொருளே (பரமாத்மாவே) ‘ஸர்வலக்ஷணலக்ஷணம்’ ஆகும்

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எனவே பகவான் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தஸ்யைவ பரமார்த்தத்வாத் ஏனெனில், பகவான் ஒருவரே அறியப்படுபொருளாவர்.

இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து இலக்கணைகள் மற்றும் குறியீடுகளில், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்று அதன் விளைவான அறிவால் விளங்கும் பொருளே மிகச்சிறந்ததாகும். அவ்வாறு, நமது உண்மையறிவால் அறியப்படும் பொருட்களிலேயும் பரம்பொருளான பகவானே மிகச்சிறந்தவராவார். எனவே, அவர் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்லக்ஷ்மீவதேநம:

லக்ஷ்மீரஸ்ய திருமகள்

வக்ஷஸி அவரது திருமார்பில்

நித்யம் வஸதீதி என்றும் இணைபிரியாது வசிப்பதால்

லக்ஷ்மீவான் பகவான் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

திருமகள் பகவானது திருமார்பில் என்றும் இணைபிரியாது வசிப்பதால் அவர் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸமிதிஞ்ஜயாயநம:

ஸமிதிம் யுத்தம் ‘ஸமிதி’ அதாவது போரில் (போர்களில்​)

ஜயதீதி என்றும் வெற்றி பெருவதால்

ஸமிதிஞ்ஜய: பகவான் ‘ஸமிதிஞ்ஜய:’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து போர்களிலும் வெல்கிறார். எனவே அவர் ‘ஸமிதிஞ்ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |

மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||

இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விக்ஷர:, 364. ரோஹித:, 365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
  2. மஹீதர:, 370. மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||

————

  1. ஓம்விக்ஷராயநம:

விகத: இல்லை

க்ஷரோ நாஶோ ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு)

யஸ்யாஸௌ எவருக்கு

விக்ஷர: (அந்த) பகவான் ‘விக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அழிவோ, தேய்வோ கிடையாதோ. எனவே அவர் ‘விக்ஷர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ரோஹிதாயநம:

ஸ்வச்சந்ததயா தன்னிச்சையால்

ரோஹிதாம் மூர்த்தி: சிவந்த வடிவானவராய்

மத்ஸ்யவிஶேஶமூர்த்தி: வா வஹன் ரோஹிதம் எனப்படும் ஒருவகை மீனாக அவதரித்ததால்

ரோஹித: பகவான் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னிச்சையால் சிவந்த வடிவினராய் ரோஹிதம் என்ற ஒரு வகை மீனாக (தனது மச்சாவதாரத்தில்) தோன்றியமையால் அவர் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோஹிதம் என்றால் சிவப்பு என்றும் பொருள், ஒரு வகை மீன் என்றும் பொருள். இதை இரண்டு அர்த்தங்களாகவும் கொள்ளலாம் (சிவந்த வடிவினர் மற்றும் மீனாய்த் தோன்றியவர்). அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து சிவந்த வடிவான மீனாய்த் தோன்றியவர் என்றும் கொள்ளலாம்.

————-

  1. ஓம்மார்க்காயநம:

முமுக்ஷவஸ்தம் முக்தியை விழைவோர்

தேவம் பரமாத்மாவை (பகவானை)

மார்கயந்தி இதி தேடுகின்றனர்

மார்க்க: எனவே, பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமாத்மாவான பகவான் முக்தியை விழைவோரால் தேடப்படுகிறார். எனவே, அவர் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமானந்தோ மிக உயர்ந்ததான இன்பத்தை

யேன ப்ராப்யதே தரவல்லதான

ஸ மார்க்க இதி வா மார்க்கமாய் (வழியாக) இருப்பதால்

மார்க்க: பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த இன்பத்தை (முக்தியை) தரவல்ல மார்க்கமாய் தானே இருப்பதால் பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஹேதவேநம:

உபாதானம் (இந்த ப்ரபஞ்சத்தின்) மூலப்பொருளாகவும்

நிமித்தம் ச காரணம் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும்

ஸ ஏவேதி அவரே இருப்பதால்

ஹேது: பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்கும் மூலப்பொருளாயும், உருவாக்குபவராயும் தானே இருப்பதால் பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூலப்பொருள் உபாதான காரணமென்றும், அதை உருவாக்குபவர் நிமித்த காரணம் என்றும் அழைக்கப்படுவர். உதாரணமாக, மண், தங்கம், நூல், இரும்பு ஆகியவை உபாதான காரணங்கள். அதைக் கொண்டு பானை, சங்கிலி, சேலை, சுத்தியல் ஆகியவற்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணி (உழைக்கும்) குயவர், பொற்கொல்லர், நெசவாளி, கருமார் ஆகியோர் நிமித்த காரணங்கள். இந்தப் ப்ரபஞ்சத்திற்கு இரண்டுமே பகவான் தான்.

————-

  1. ஓம்தாமோதராயநம:

தமாதிஸாதனேனோதாரோத்க்ருஶ்டா புலனடக்கம் முதலிய முயற்சிகளால் ‘உதாரமாகும்’ அதாவது நமக்குள் தோன்றும்

மதிர்யா தயா அறிவால்

கம்யத இதி அறியப்படுவதால்

தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தமம்’ என்ற புலனடக்கம் முதலிய முயற்சிகளால் நம்முள்ளே தோன்றும் அறிவால் (ஞானத்தால்) அறியப்படுவதால் பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தாம’ – தமத்தால் முதலான முயற்சிகள் + உதர – அவற்றால் மேலெழும் அறிவு. இதனால் அறியப்படுபவர் தாமோதரன்.

‘தமாத்தாமோதரோ விபு:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.8)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:

புலனடக்கமும், பெரும் ஒளியும் கொண்டிருப்பதால் பகவான் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

யஶோதயா யசோதையால்

தாம்னோதரே கயிற்றால் வயிற்றுப் பகுதியில்

பத்த இதி வா கட்டப்பட்டதால்

தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


‘ததர்ஶ சால்பதந்தாஸ்யம் ஸ்மிதஹாஸம் சா பாலகம் |
(வெண்ணையைக் களவாடி பிடிபட்ட பொழுது, அவரது தாய்) யசோதை பகவானின் வயிற்றை சுற்றி கயிறால் கட்டி வைத்தாள். எனவே, பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தயோர்மத்யகதம் பத்தம் தாம்னா காடம் ததோதரே |

ததஸ்ச தாமோதரதாம் ஸ யயௌ தாமபந்தனாத் ||’ (ப்ரஹ்ம புராணம் 13-14)

ப்ரஹ்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆயர்குல மக்கள், தனது தெற்றுப்பல் தெரியும் புன்சிரிப்புடனும், இடையில் உரலுடன் கட்டிய கயிற்றுடனும் அந்த பாலகன் (பாலகிருஷ்ணன்) இரு மருத மரங்களுக்கிடையில் தவழ்ந்து செல்வதைக் கண்டனர். இடையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்…

‘தாமானி லோகநாமானி தானி யஸ்யோதராந்தரே |

தேன தாமோதரோ தேவ: ஸ்ரீதர: ஸ்ரீஸமாஶ்ரரித: ||’

அனைத்தும் உலகங்களையும் ‘தாமம்’ என்று அழைப்பர். அவை பகவானின் திருவயிற்றில் (உதரத்தில், ப்ரளய காலத்தில்) இருக்கின்றது. எனவே, ஸ்ரீதரன், திருமாமகள் கேள்வனான பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸவசனாத்வா தாமோதர: |

ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்ஸஹாயநம:

ஸர்வானபிபவதி அனைவரையும் அடக்கி, தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார்

க்ஷமத இதி வா  அனைவரையும் (அவர்களின் செய்கைகளை) பொறுத்துக் கொள்கிறார்

ஸஹ: எனவே, பகவான் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் அடக்கி தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார். அனைவரின் (தவறான) செய்கைகளைப் பொறுத்துக் கொள்கிறார். எனவே அவர் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹீதராயநம:

மஹீம் இந்த பூமியை

கிரிரூபேண மலைகளின் வடிவில்

தரதீதி தாங்குவதால்

மஹீதர: பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த பூமியை மலைகளின் வடிவில் தாங்குகிறார். எனவே, அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யர், முன்பு மஹீதரா என்ற 317வது திருநாமத்தில் பூமிக்கும், பூஜைக்கும் ஆதாரமாக இருந்து தாங்குகிறார் என்று பொருளுரைத்திருந்தார்.

‘வனானி விஶ்ணுர்கிரயோ திஸஸ்ச’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: காடுகள், மலைகள் மற்றும் திசைகளெல்லாம் பகவான் விஶ்ணுவே.

இதி பராஶரோக்தே | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பராசர மஹரிஷியின் கூற்றாகும்.

———–

  1. ஓம்மஹாபாகாயநம:

ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி

தாரயன் தேஹம் பல்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு

மஹாந்தி உத்க்ருஶ்டானி ‘மஹா’ அதாவது மிகச்சிறந்ததான

போஜனானி பாகஜன்யானி உணவுவகைகளை

புங்க்தே இதி உண்கிறார்

மஹாபாக: எனவே, பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னிச்சைப்படி வெவ்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு (அவருக்குப் படைக்கப்படும்) பல்வேறு சிறந்த உணவுகளை உட்கொள்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹான் மிகவும்

பாக: பாக்யம் ‘பாக’ அதாவது சிறந்ததான

அஸ்ய அவதாரேஶு அவரது அவதாரங்கள்

இதி வா மஹாபாக: எனவே பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த (பெரும் பாக்கியம் படைத்த) அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்வேகவதேநம:

வேகோ ‘வேக’ என்றால்

ஜவ்ஸதத்வான் விரைவாகச்  செல்பவர்

வேகவான் எனவே, பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிக விரைவாகச் செல்பவராதலால் பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அனேஜதேகம் மனஸோ ஜவீய:’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)

ஈசாவாஸ்ய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஆத்மாவானது சலனமற்றது. எனினும், மனதைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியது.

————

  1. ஓம்அமிதாஶணாய நம:

ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில்

விஶ்வமஶ்னாதீதி இந்தப் ப்ரபஞ்சத்தை  உண்கிறார்

அமிதாஶன: எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரளயத்தின் பொழுது) அழிக்கும் காலத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தை  உண்கிறார். எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |
  2. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

—————-

373-ஓம்உத்பவாய நம:

ப்ரபஞ்சோத்பத்தி இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

உபாதான காரணத்வாத் மூலப்பொருளாய் இருப்பதால்

உத்பவ: பகவான் ‘உத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(குடத்திற்கு மண் போல) இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு மூலப்பொருளாய் (உபாதான காரணம்) இருப்பதால் பகவான் ‘உத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஷோபணாயநம:

ஸர்ககாலே ப்ரபஞ்சத்தின் தோற்றத்தில்

ப்ரக்ருதிம் புருஶம்  ப்ரக்ருதி மற்றும் புருஷனுக்குள்

ப்ரவிஶ்ய உட்புகுந்து

ஷோபயாமாஸேதி அந்த ப்ரக்ருதி, புருஷர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார்

ஷோபண: எனவே பகவான் ‘ஷோபண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ப்ரக்ருதியினுள்ளும் (மாறக்கூடிய இயற்கை), புருஷனுக்குள்ளும் (மாற்றமில்லாத ஜீவாத்மா) புகுந்து அவர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார். எனவே அவர் ‘ஷோபண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாங்கிய யோகத்தின்படி இந்தப் ப்ரபஞ்சமானது ப்ரக்ருதி (மூலப்பொருள்) மற்றும் புருஷனின் இணைப்பால் உண்டாகிறது. இவை தனித்திருந்தால் பிரளயம், ஒன்றிணையும் பொழுது படைப்பு.

ப்ரக்ருதிம் புருஶம் சைவ ப்ரவிஶ்யாத்மேச்சயா ஹரி: |

ப்ரவிஶ்ய ஷோபயாமாஸ ஸர்க்ககாலே வ்யயாவ்யயௌ || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.29)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அழிவற்றவரான பரமாத்மா ஹரி இந்தப் ப்ரபஞ்சத்தை படைக்கும் காலத்தில் தனது சுய விருப்பாலே மாறுதலை அடையக்கூடியதான ப்ரக்ருதிக்குள்ளும், மாறுதலற்ற ஆத்மாவிற்குள்ளும் (புருஷனுக்குள்ளும்) உட்புகுந்து அவர்களை (படைப்புத் தொழிலில் இயங்கும்படி) தூண்டினார்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. ஓம்தேவாயநம:

யதோ தீவ்யதி க்ரீடயதி ஸர்காதிபி: எவர் படைத்தல் முதலான தொழில்களை விளையாட்டாய் (லீலையாக) செய்கின்றாரோ

தேவ: அந்த பகவான் (ஸ்ரீ ஹரி) ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய செயல்களை விளையாட்டாக (லீலையாக) புரிகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘அலகிலா விளையாட்டுடையார்…’ – கம்ப இராமாயணம் கடவுள் வாழ்த்துப் பாயிரம்

தேவ: என்ற சொல் ‘திவ்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. ‘திவ்’ என்பதற்கு வடமொழியில் க்ரீடா (விளையாட்டு), விஜிகீஶ (வெற்றியை விழைதல்), வ்யவஹார (செயல்  புரிதல், இயக்குதல்), த்யுதி (ஒளி விடுதல்), ஸ்தூய (துதிக்கப்பெறுதல்) மற்றும் கச்சதி (செல்லுதல்) ஆகிய பல பொருள்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் வைத்து ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு உரை எழுதியுள்ளார்.

விஜிகீஶதேS(அ)ஸுராதீன் அசுரர்களை வெற்றி கொள்கிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அசுரர்களை வெல்கிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

வ்யவஹரதி ஸர்வபூதேஶு அனைத்துயிர்களையும் இயக்குகிறார் (செயல் புரியத் தூண்டுகிறார்)

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்துயிர்களையும் இயக்குகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆத்மதயா த்யோததே அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தூயதே ஸ்துத்யை: பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸர்வத்ர கச்சதி தஸ்மாத் எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘ஏகோ தேவ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் ஒருவரே தேவனாவார்

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘ தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

———-

  1. ஓம்ஸ்ரீகர்ப்பாயநம:

ஸ்ரீர்விபூதிர் ‘ஸ்ரீ’ என்றால் செல்வம்

யஸ்யோதராந்தரே அவருடைய திருவயிற்றில்

ஜகத்ரூபா இந்தப் ப்ரபஞ்சமாகிய

யஸ்ய கர்ப்பே ஸ்திதா  கர்ப்பத்தினுள் இருக்கிறது

ஸ்ரீகர்ப்ப: எனவே பகவான் ‘ஸ்ரீகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்ரீ’ எனப்படும் ப்ரபஞ்சமாகிய செல்வம் பகவானது திருவயிற்றில் கர்ப்பமாய் இருக்கிறது (ப்ரளய காலத்தில்). எனவே, பகவான் ‘ஸ்ரீகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்பரமேஶ்வராயநம:

பரமஸ்சாஸா மிகவும் மேலானவர்

ஈஶானஶீலஸ்சேதி ஆளுமையுடையவர்

பரமேஶ்வர: எனவே பகவான் ‘பரமேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் மேலானவர் மற்றும் ஆளுமையுடையவராதலால் பகவான் ‘பரமேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸமம் ஸர்வேஶு பூதேஶு திஶ்டந்தம் பரமேஶ்வரம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 13.27)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேஸ்வரன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———-

  1. ஓம்கரணாயநம:

ஜகதுத்பத்தௌ இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

ஸாதகதமம் மிகச்சிறந்த சாதனமாய் (கருவியாய்) இருப்பதால்

கரணம் பகவான் ‘கரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்குக் மிகச்சிறந்த கருவியாய் இருப்பதால் பகவான் ‘கரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதகம் என்றால் கருவி. ஸாதக தமம் என்றால் மேலான (மிகச்சிறந்த) கருவி என்று பொருள்

———-

  1. ஓம்காரணாயநம:

உபாதானம் (இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும்

நிமித்தம்  (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால்

காரணம் பகவான் ‘காரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால் பகவான் ‘காரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்ற திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், திருநாமம் வெவ்வேறாயிருப்பதால் புனர் யுக்தி தோஷம் இல்லை.

———–

  1. ஓம்கர்த்ரேநம:

கர்த்தா பகவான் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார்

ஸ்வதந்த்ர: ஏனெனில், அவர் (ப்ரபஞ்சத்தின் படைப்பு முதலான செயல்களை) தன்னிச்சையால் சுதந்திரமாய் புரிகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலிய செயல்களை தன்னிச்சையாய், சுதந்திரமாய் புரிகிறார். எனவே அவர் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்விகர்த்ரேநம:

விசித்ரம் பலவிதமான (ஆச்சர்யமான) புவனம் உலகங்களைப்

க்ரியதே இதி படைப்பதனால்

விகர்த்தா ‘விகர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸ ஏவ பகவான் விஶ்ணு: அந்த பகவான் விஶ்ணு ஒருவரே.

பற்பல ஆச்சர்யமான உலகங்களைப் படைப்பதனால் பகவான் விஶ்ணுவே ‘விகர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்கஹனாயநம:

ஸ்வரூபம் அவருடைய தன்மை

ஸாமர்த்யம் திறமை

சேஶ்டிதம் வா செயல்கள் ஆகியவற்றை

தஸ்ய ஞாதும் ந ஶக்யத இதி ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது

கஹன: எனவே பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுடைய தன்மை, திறமை மற்றும் செயல்களை ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்குஹாயநம:

கூஹதே ஸம்வ்ருணோதி ‘குஹ’ அதாவது மறைக்கிறார்

ஸ்வரூபாதி தன்னுடைய தன்மை முதலானவற்றை

நிஜமாயயேதி தன்னுடைய மாயையினால்

குஹ: எனவே பகவான் ‘குஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய தன்மை முதலானவற்றை தன் மாயையினால் மறைத்து வைக்கிறார். எனவே அவர் ‘குஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: யோகமாயையால் மறைக்கப்பட்டு நான் எல்லோருக்கும் காட்சி அளிப்பதில்லை.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———–

  1. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:|

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ:|
  2. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

————-

  1. ஓம்வ்யவஸாயாயநம:

ஸம்வின்மாத்ர ஞானமே ஸ்வரூபத்வாத் வடிவானவராய் இருப்பதால்

வ்யவஸாய: பகவான் ‘வ்யவஸாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானமே வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘வ்யவஸாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்வ்யவஸ்தானாயநம:

யஸ்மின் வ்யவஸ்திதி: எவர் ஒழுங்கு செய்பவரோ

ஸர்வஸ்யேதி அனைவரையும்

வ்யவஸ்தான: அந்த பகவான் ‘வ்யவஸ்தான:’ என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் (அனைத்தையும்) அவரவரது தகுதிக்கேற்ப ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்துகிறார்?

லோகபாலாத்யதிகார அனைத்து லோக பாலகர்களையும் (இந்த ப்ரபஞ்சத்தைக் காக்க பகவானால் நியமிக்கப்பட்டவர்கள்) அவரவரது அதிகாரங்களை வரையறுப்பதன் மூலம், (அனைத்து உயிரினங்களையும்)

ஜராயுஜ அதன் முழு உருவிலேயே பிறப்பவை (ஆங்கிலத்தில் இவற்றை Mammals என்கிறோம்),

அண்டஜ முட்டையிலிருந்து பிறப்பவை

உத்பிஜ்ஜ விதையிலிருந்து பிறப்பவை (என்று வரையறுக்கிறார்) (மனிதர்களை)

ப்ராஹ்மண அந்தணர்கள்

க்ஷத்ரிய மறவர்

வைஶ்ய வணிகர்

ஸூத்ர தொழிலாளிகள்

அவாந்தர வர்ண இவையனைத்திலும் சேராதவர் (என்று வரையறுக்கிறார்)

ப்ரஹ்மசாரி (வேதம் பயிலும்) மாணவன்

க்ருஹஸ்த இல்லறத்தோர்

வானப்ரஸ்த உலக வாழ்க்கையின் கடமைகளை முடித்து வனம் சென்றோர்

ஸந்யாஸ லக்ஷணாஶ்ரம துறவு பூண்டோர்

தத்தர்மாதிகான் (இத்தகைய நால்வகை வாழ்வு முறையினோரையும்) அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தினாலும்

விபஜ்ய கரோதி இதி வா பிரித்து வைப்பதனால்

வ்யவஸ்தான: பகவான் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த உலகத்தைக் காக்க அவரால் நியமிக்கப்பட்ட லோக பாலகர்களை அவரவரது அதிகாரங்களின் மூலமும், உயிரினங்களை கருப்பையிலிருந்து தோன்றுவது, முட்டையிலிருந்து தோன்றுவது மற்றும் விதையிலிருந்து தோன்றுவது என்று மூவகையாகவும், மனிதர்களை அந்தணர், மறவர், வணிகர், தொழிலாளி மற்றும் இவையெதிலும் சேராத ஐந்தாவது வகையினர் என்று அவரவரின் தொழில் மூலமும், மாணவர், இல்லறத்தோர், வனவாழ்வை மேற்கொண்டோர் மற்றும் துறவி ஆகியோரை அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தாலும் ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருத்யல்யுடோ பஹுலம்’ (பாணினி ஸூத்ரம் 3.3.223)

இதி பஹுலக்ரஹணாத் கர்த்தரி ல்யுட் ப்ரத்யய:

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ‘வ்யவஸ்தான:’ என்ற இந்த திருநாமம் உருவாகிறது.

————-

  1. ஓம்ஸம்ஸ்தானாயநம:

அத்ர பூதானாம் அனைத்து உயிரினங்களும்

ஸம்ஸ்திதி: ப்ரளயாத்மிகா ப்ரளய (அழியும்) காலத்தில் அவரிடம் சென்று ஒன்றுகின்றன

ஸம்ஸ்தான: எனவே, பகவான் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழியும் காலமான ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் பகவானிடம் சென்று ஒன்றுகின்றன. எனவே , அவர் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸமீசீனம் மிகவும் சிறந்த

ஸ்தானமஸ்யேதி வா இருப்பிடமாதலால்

ஸம்ஸ்தான: பகவான் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்திலும் மிகச் சிறந்த இருப்பிடமாவார். எனவே, அவர் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸ்தானதாயநம:

த்ருவாதீனாம் ‘துருவ’ பதம் முதலான

கர்மானுரூபம் அவரவரது செயல்களுக்கேற்ப

ஸ்தானம் பதவிகளை

ததாதீதி அளிக்கிறார்

ஸ்தானத: எனவே பகவான் ‘ஸ்தானத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரவரது செயல்களுக்கேற்ப துருவ பதம் முதலிய பதவிகளை வழங்குகிறார். எனவே, பகவான் ‘ஸ்தானத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்த்ருவாயநம:

அவினாஶித்வாத் அழிவற்றவராதலால்

த்ருவ: பகவான் ‘த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழிவற்றவராதலால் (நிலையானவராதலால்) பகவான் ‘த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

  1. ஓம்பரர்த்தயேநம:

பரா மேலான

ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்பரமஸ்பஶ்டாயநம:

பரா மேலான

மா ஶோபா ‘மா’ அதாவது அழகு

அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்

ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்துஶ்டாயநம:

பரமானந்தைக பேரின்பமே

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்

துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை  ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

—————

  1. ஓம்புஶ்டாயநம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்

புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸுபேக்ஷணாயநம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது

ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதி ஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய:|

வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||

இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400. அனய:|
  2.             வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||

————–

  1. ஓம்ராமாயநம:

நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்

யோகினோ யோகிகளை

ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்

ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தமில் பேரின்ப வடிவினராய், யோகிகளை மனமகிழச் செய்பவராதலால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |

இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே  || (பத்ம புராணம்)

எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி பத்மபுராணே | இவ்வாறு பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி

ரமணீயம் மிக அழகிய

வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்

தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்

ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் – கம்ப ராமாயணம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே (திருவாய்மொழி 7.5.1)

ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் (ஸ்ரீ ராம ராம ராமேதி…

———-

  1. ஓம்விராமாயநம:

விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம்

ப்ராணினாம் அஸ்மின் இதி அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்

விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம்விரதாயநம:

விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்

ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)

விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.

ஒரு சில பதிப்புகளில் இந்த திருநாமம் ‘விரஜ:’ என்று வழங்கப்பட்டுள்ளது. பதம் வேறாயினும் பொருள் ஒன்றே.

———–

  1. ஓம்மார்காயநம:

யம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்

அம்ருதத்வாய கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ

யோகினோ முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்

ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்

மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அறிவதாலேயே யோகிகள் முக்தியை அடைகின்றனர். முக்தி அடைவதற்கு பகவான் ஒருவரே வழி. எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்நேயாயநம:

மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக

ஜீவ: ஜீவாத்மா

பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு

நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்

நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரறிவான ஞானத்தின் வழியே ஒரு ஜீவாத்மா பரமாத்ம தன்மையை அடைகிறான் (பகவானே அவனை அவ்வாறு அழைத்துச் செல்கிறார்). எனவே, பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே ஜீவனை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார் என்பது அடுத்த திருநாமத்தால் விளங்கும். இந்த திருநாமம் ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பரமாத்மாவின் செயல்பாடுகளை விளக்குவதே ஆகும். எனவே இந்த திருநாமம் மேலாக ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பகவானையே குறிக்கிறது.

—————

  1. ஓம்நயாயநம:

நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்

நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

நேதா தலைவராய் இருந்து.

(முன்திருநாமத்தில் குறிப்பிட்டவாறு) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை பரமாத்ம தன்மை (தன்னிடம்) வந்தடையுமாறு தலைவராய் இருந்து வழி நடத்திச் செல்வதால் பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மார்கோ வழியாகவும்

நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்

நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்

இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்

பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.

பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்அநயாயநம:

நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை

இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானுக்கு (அவருக்கு) மேலான தலைவர் வேறொருவரும் இல்லை. எனவே அவர் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு ஞானம் முதிர்ந்தால் பரமாத்ம தன்மையை அளிக்கிறார் பகவான். ஆனால், அவருடைய பரமாத்ம தன்மையை வேறெவரும் அவருக்கு அளித்தனரா என்ற கேள்வி நமக்குள் பிறக்கலாம். அதை போக்குவதற்காக, அவருக்கு வேறொரு தலைவர் இல்லை என்று விளக்குகிறது இந்த திருநாமம். பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.

இதி நாம்னாம் சதுர்த்தம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (அனய: என்னும் இந்த திருநாமம் வரையில்) நானூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———

  1. ஓம்வீராயநம:

விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்

வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால் பகவான் ‘வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:

விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்

வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்

ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்

ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பலம்பொருந்தியோரான நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் மிகுந்த பலமுடையவராதலால் பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்தர்மாயநம:

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

தாரணாத் தாங்குவதால்

தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் தாங்குவதால் பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அணுரேவ தர்ம:’

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: (அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன

தர்மைர் தர்மத்தாலே

ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)

தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) தர்மத்தாலே வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்) பகவான் ‘தர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்தர்ம விதுத்தமாயநம:

ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்

ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்

யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ

ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே

ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள்

உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்

இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருதிகளான வேதங்களும் ஸ்ம்ருதிகளும் பகவானின் ஆணைகளே. அவரே, அதில் குறிப்பிட்டுள்ள அறங்களை முழுமையாக அறிந்தவர்களுள் சிறந்தவராவார். எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:|

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்துநான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

————–

  1. ஓம்வைகுண்டாயநம:

விவிதா வெவ்வேறு

குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு

ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது

விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்

விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்

வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவானபொழுது (அதன் தொடக்கத்தில்)

விஶ்லிஶ்டானி (ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த

பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை

பரஸ்பரம் ஒன்றோடொன்று

ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து

தேஶாம் கதிம் அவற்றின் போக்கை

ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா ஸம்ஸலேஶிதா பூமிரத்பிர்வ்யோம ச வாயுனா |

வாயுஸ்ச தேஜஸா ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 342.80)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.

இதி ஶாந்தி பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஓம்புருஶாயநம:

ஸர்வஸ்மாத்புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்

ஸர்வபாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்

புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ யத்பூர்வோஸ்மாத்ஸர்வஸ்மாத்ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்

ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)

புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்ப்ராணாயநம:

ப்ராணிதி உயிர்வாழ்கிறார்

க்ஷேத்ரக்ஞரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)

ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்

சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்

ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஓம்ப்ராணதாயநம:

கண்டயதி அழிக்கிறார்

ப்ராணினாம் உயிரினங்களின்

ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)

ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்

ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ப்ரணவாயநம:

ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்

ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’

‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ரணம்யதே வணங்கப்படுவதால்

இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’  

அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ஸனத்குமாரவசனான் | இது ஸனத்குமாரரின் கூற்றாகும்.

————

  1. ஓம்ப்ருதவேநம:

ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்

விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்

ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் விரிவடைந்து இருப்பதால் பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

———–

  1. ஓம்ஹிரண்யகர்ப்பாயநம:

ஹிரண்யகர்ப்பஸம்பூதிகாரணம் ஹிரண்யகர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான

ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது

யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ

ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்

ஹிரண்யகர்ப்ப: எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவும் பகவானின் கர்ப்பத்திலிருந்து அவரது சக்தியால் உருவான பொன்மயமான முட்டையிலிருந்தே தோன்றுகிறார். எனவே, பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஶத்ருக்னாயநம:

த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்

ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை

ஹந்தீதி கொல்வதால்

ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(முப்பத்து முக்கோடி) தேவர்களின் எதிரிகளான அஸுரர்களை கொல்வதால் பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்வ்யாப்தாயநம:

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்

ஸர்வகார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)

வ்யாபனாத் பரவி இருப்பதால்

வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்த என்றால் எங்கும் பரவி இருத்தல். இந்த ப்ரபஞ்சத்தில் நாம் காணும், கேட்கும், உணரும் அனைத்துமே காரியங்கள் (அதாவது செயல் விளைவுகள்). பகவானே அனைத்திற்கும் (இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கும்) மூல காரணம். காரணமானது காரியத்தை முழுவதுமாய் பரவி இருக்கும். எனவே, பகவானும் அனைத்தையும் (அனைத்திலும்) பரவி இருக்கிறார் என்பது ஆச்சார்யாளின் உரையாகும்.

————–

  1. ஓம்வாயவேநம:

வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்

வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மணத்தை உண்டாக்குவதால் பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்மண்ணில் தூய நாற்றம் நான்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————–

  1. ஓம்அதோக்ஷஜாயநம:

அதோ ந க்ஷீயதே ஜாது யஸ்மாத்தஸ்மாத் அதோக்ஷஜ: (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.10)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘அதோக்ஷஜ:’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

த்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது

ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது

தயோர்யஸ்மாத் அஜாயத மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்

வைராஜரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்

அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்ஷம் என்றழைக்கப்படும் ஆகாயத்திற்கும், அத என்றழைக்கப்படும் பூமிக்கும் இடையே தனது விராட் ரூபத்தில் தோன்றுவதால் பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (பூமி) + அக்ஷ (ஆகாயம்) + ஜ (பிறத்தல்) = அதோக்ஷஜ

அதோப்ருதே உள்முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது

ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்

அக்ஷகணே இந்திரியங்களை

ஜாயத இதி வா தோன்றுகிறார்

அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவரொருவர் தமது இந்திரியங்களை (புலன்களை) நுகர்ச்சியை நோக்கி அவை ஓடுவதை தவிர்த்து, அதன் எதிர்திசையான உள்முகமாய் உயர்ந்ததை நோக்கி திருப்புகிறாரோ, அவருக்கு பகவான் (அவர் உள்ளத்தில்) தோன்றுகிறார். எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜ

————–

  1. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ:|

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |
  2. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

—————

  1. ஓம்ருதவேநம:

காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்

ருதுஶப்தேன ‘ருது’ என்ற

லக்ஷ்யத இதி குறிக்கிறது

ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸுதர்ஶனாயநம:

ஶோபனம் மங்களமான

நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்கவல்லது

தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுபே மங்களகரமான

தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்

பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்

த்ருஶ்யதே காட்சி அளிக்கிறார் பக்தைரிதி வா தனது அடியவர்களுக்கு

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை என்றும் கொள்ளலாம்.

—————–

  1. ஓம்காலாயநம:

கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)

ஸர்வமிதி வா அனைத்தையும்

கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்இயங்குனவற்றில் காலம் நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.

————

  1. ஓம்பரமேஶ்டினேநம:

பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான

ஸ்வே மஹிம்னி தன்னுடைய (இயற்கையான) மகிமையால்

ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்

ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்

ஶீலமஸ்யேதி தன்மையுடையவராதலால்

பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் ஒரு சிறிய வெற்றிடம் இருக்கும். அதை இதய ஆகாயம் என்று கூறுவர். பகவான் அந்த இதய ஆகாயத்துள் தன்னுடைய இயற்கையான, மிகச்சிறந்த மகிமையால் என்றும் நிலைபெற்றிருக்கிறார். எனவே அவர் ‘பரமேஶ்டி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவர் அங்கே தனது இயற்கையான பெருமையினால் (மஹிமையினால்) வீற்றிருக்கிறார். அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).

‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).

———–

  1. ஓம்பரிக்ரஹாயநம:

ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்

பரிதோ எல்லாவிடங்களிலும்

க்ருஹ்யதே  அடையப்படுகிறார்

ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிதோ எங்கும்

ஞாயதே இதி வா அறியப்படுகிறார்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் அறியப்படுகிறார் . எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ

பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்

பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்உக்ராயநம:

ஸூர்யாதீனாமபி கதிரவன் முதலானோருக்கும் கூட

பயஹேதுத்வாத் அச்சத்தை தருபவராக இருப்பதால்

உக்ர: பகவான் ‘உக்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலானோருக்கும் கூட அச்சத்தை தருபவராக இருப்பதால் பகவான் ‘உக்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீஶாதேதி ஸூர்ய:’ (தைத்ரீய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (இந்த பரப்ரஹ்மனிடத்திருந்து உருவான அச்சத்தினால்) கதிரவன் உதிக்கின்றான்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

  1. ஓம்ஸம்வத்ஸராயநம:

ஸம்வஸந்தி வசிக்கின்றனர்

பூதாநி அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்)

யஸ்மின் இதி எவருக்குள்

ஸம்வத்ஸர: அந்த பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) பகவானுக்குள் வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்தக்ஷாயநம:

ஜகத்ரூபேண இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில்

வர்த்தமானத்வாத் பரந்து, விரிந்து வளர்வதால்

தக்ஷ: பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்து வளர்வதால் பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வகர்மாணி அனைத்து செயல்களையும்

க்ஷிப்ரம் கரோதி இதி வா விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால்

தக்ஷ: பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து செயல்களையும் விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தக்ஷ என்ற சொல்லிற்கு உள்ள பல பொருள்களில் விரைவாக செயல்படுதல், வளர்தல் (தக்ஷதே) ஆகியவையும் உள்ளன. ஆச்சார்யாள் இந்த இரு பொருள்களிலும் உரை அளித்துள்ளார்.

————

  1. ஓம்விஶ்ராமாயநம:

ஸம்ஸாரஸாகரே இந்தப் பிறவிப்பெருங்கடலில்

க்ஷுத்பிபாஸாதி பசி, தாகம் முதலிய

ஶடூர்மிபிஸ் ஆறு வகையான துன்பங்களால்

தரங்கிதே அலைக்கழிக்கப்பட்டும்

அவித்யாத்யைர்மஹாக்லேஶைர் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும்

மதாதிபிருபக்லேஶைஸ்ச (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும்

வஶீக்ருதானாம் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற (ஆத்மாவானது)

விஶ்ராந்திம் (இவற்றலிருந்து விடுபடுவதான) அமைதியை

காங்க்ஷமானானாம் விரும்பும்பொழுது

விஶ்ராமம் மோக்ஷம் முக்தி என்னும் பேரின்பத்தை

கரோதீதி அளிப்பவராதலால்

விஶ்ராம: பகவான் ‘விஶ்ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவிப்பெருங்கடலில் பசி, தாகம் முதலிய ஆறு வகையான துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டும் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற ஆத்மாவானது அமைதியை விரும்பும்பொழுது முக்தி என்னும் பேரின்பத்தை அளிப்பவராதலால் பகவான் ‘விஶ்ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்விஶ்வதக்ஷிணாயநம:

விஶ்வஸ்மாத் இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும்

தக்ஷிண: ஶக்த: ‘தக்ஷிண’ அதாவது (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர்

விஶ்வதக்ஷிண: ஆதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் ஆதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வேஶு இவ்வுலகிலுள்ள

கர்மஸு அனைத்துக் செயல்களையும்

தாக்ஷிண்யாத்வா விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால்

விஶ்வதக்ஷிண: பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைத்துக் செயல்களையும் விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 5-திருநாமங்கள்–201– -307- வரை –

January 20, 2023

22-அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா||

——————-

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. குரு:, 210.குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
  2. நிமிஶ:, 215.அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||

————–

  1. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:|

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண:|
  2. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

—————–

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

————–

  1. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு:|

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
  2. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

————–

  1. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |

ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 

இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி:|
  2. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன:  |

—————

28. வ்ருஶாஹீ வ்ருஶபோ விஶ்ணுர் வ்ருஶபர்வா வ்ருஶோதர: 

வர்த்தனோ வர்த்தமானஸ்ச விவிக்த: ஶ்ருதிஸாகர: || 

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

256. வ்ருஶாஹீ, 257. வ்ருஶப:, 258. விஶ்ணு:, 259. வ்ருஶபர்வா, 260. வ்ருஶோதர:  |

261. வர்த்தன:, 262. வர்த்தமான:, 263. விவிக்த:, 264. ஶ்ருதிஸாகர:  ||

————–

  1. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு:

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுபுஜ:, 266.துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு: |
  2. நைகரூப:, 272.ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன: ||

———————

30-ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன:

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |
  2. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: ||

——-

  1. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர:|

ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||

இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர:|
  2. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம:||

————

  1. பூதபவ்யபவன்னாத: பவன: பாவனோSனல: |

காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: ||

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதபவ்யபவன்னாத:, 291.பவன:, 292. பாவன:, 293. அனல: |
  2. காமஹா, 295.காமக்ருத், 296. காந்த:, 297. காம:, 298. காமப்ரத:, 299. ப்ரபு: ||

———–

  1. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஶன:|

அத்ருஶ்யோSவ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||

இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யுகாதிக்ருத், 301. யுகாவர்த்த:, 302. நைகமாய:, 303. மஹாஶன:|
  2. அத்ருஶ்ய, 305. வ்யக்தரூப:, ச, 306. ஸஹஸ்ரஜித், 307. அனந்தஜித் ||

22-அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா||

—-

201.ஓம் ஸந்தாத்ரே நம:

கர்மஃபலைஅவரவரது வினைப்பயன்களை

புருஶான் அவரவரோடு

ஸந்தத்த இணைக்கிறார் (கூட்டுவிக்கிறார்)

இதி எனவே

ஸந்தாதா பகவான் ‘ஸந்தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவே, அவர் ‘ஸந்தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எத்தனை பிறவி எடுத்தாலும் தத்தம் வினைப்பயனை அவரவர்களே தான் அனுபவிக்க வேண்டும். ஒருவரது வினைப்பயனை மற்றவர் அனுபவித்தல் இயலாது.

————-

202.ஓம் ஸந்திமதே நம:

ஃபலபோக்தா அந்தந்த பலனை அனுபவிப்பவரும்

ச ஸ ஏவேதி அவரேயாதலால்

ஸந்திமான் பகவான் ‘ஸந்திமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லை. பற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரே. எனவே, பகவான் ‘ஸந்திமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

203.ஓம் ஸ்திராய நம:

ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்) எப்பொழுதும் மாறாத உருவத்துடன் இருப்பவராதலால்

ஸ்திர: பகவான் ‘ஸ்திர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் ‘ஸ்திர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

204.ஓம் அஜாய நம:

அஜதி ‘அஜ’ என்றால்

கச்சதி செல்வது மற்றும்

க்ஷிபதி அழித்தல் என்று பொருள்

இதி வா பகவான் இவ்விரண்டும் செய்வதால் (நல்லோரிடம் செல்கிறார், தீயோரை அழிக்கிறார்)

அஜ: அவர் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரிடம் செல்கிறார்; தீயோரை அழிக்கிறார். எனவே, அவர் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

205.ஓம் துர்மர்ஶணாய நம:

மர்ஶிதும் ஸோடும் ‘மர்ஶண’ என்றால் ஸஹித்துக் கொள்ளுதல் என்று பொருள்

தானவாதிபிர் ந ஶக்யதே அஸுரர்களால் (பகவானை ஸஹித்துக் கொள்ள) இயலாது

இதி எனவே

துர்மர்ஶண: பகவான் ‘துர்மர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துர்மர்ஶண: என்றால் ஸஹிக்க முடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக் கொள்ள இயலாது. எனவே, அவர் ‘துர்மர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

206.ஓம் ஶாஸ்த்ரே நம:

ஶ்ருதி  ஸ்ம்ருத்யாதிபிஶ்ருதிகளைக் (வேதங்களைக்) கொண்டும், (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளைக் கொண்டும்

ஸர்வே ஶாமனுஶிஶ்டிம் கரோதீதி அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால்

ஶாஸ்தா பகவான் ‘ஶாஸ்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளை யிட்டு, வழி நடத்தி ஆள்வதால் பகவான் ‘ஶாஸ்தா’ என்ற திரு நாமத்தால் அழைக்க ப்படுகிறார்.

—————

207.ஓம் விஶ்ருதாத்மனே நம:

விஶேஶேண சிறப்பாக

ஶ்ருதோ அறிகிறார்

யேன ஸத்ய ஞானாதி லக்ஷணதன்னுடைய ஸத்யம் (மெய்), அறிவு முதலிய குணங்களால்

ஆத்மாதோ ஆத்மாவின் தன்மையை

விஶ்ருதாத்மா எனவே, பகவான் ‘விஶ்ருதாத்மா’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் ‘விஶ்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————

208.ஓம் ஸுராரிக்னே நம:

ஸுராரிணாம் (ஸுர + அரிணாம்) தேவர்களின் எதிரிகளை (அஸுரர்களை)

நிஹந்த்ருத்வாத் அழிக்கிறார்

ஸுராரிஹா எனவே, பகவான் ‘ஸுராரிஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் ‘ஸுராரிஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. குரு:, 210.குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
  2. நிமிஶ:, 215.அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||

 

209.ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்

குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————-

210.ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்

குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———————-

211.ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதிதாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

நாராயண பரோ ஜ்யோதி:’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்

தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

212.ஓம் ஸத்யாய நம:

ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்

தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி

வேதங்களிலும்உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

213.ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால்

ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

214.ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது

அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

215.ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும்

ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.

பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.

அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.

முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.

இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

———-

216.ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய

ஸ்ரஜம் மாலையை

நித்யம் என்றும் (எக்காலத்திலும்)

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)

ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள்  இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம்  எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

———

217.ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்

பதிஅவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)

வாசஸ்பதி‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்

புத்திரஸ்யேத்யுதாரதீஅறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

—————

  1. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:|

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண:|
  2. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

———-

218.ஓம் அக்ரண்யே நம:

அக்ரம் ப்ரக்ருஶ்டம் ‘அக்ரம்’ என்றால் மிகச்சிறந்த என்று பொருள்

பதம் இருப்பிடம்

நயதி வழிநடத்திச் செல்கிறார்

முமுக்ஷூனிதி முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை)

அக்ரணீ: பகவான் ‘அக்ரணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை), அந்த முக்திக்கான மிகச்சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்கிறார். எனவே, அவர் ‘அக்ரணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரணீ – ‘க்’ என்ற சொல் வடமொழியில் வரும் மூன்றாவது ‘க’ வாகும்.

———-

219.ஓம் க்ராமண்யே நம:

பூதக்ராமஸ்ய (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய) ஐம்பூதங்களை

நேத்ருத்வாத் நியமித்து ஆள்வதால்

க்ராமணீ: பகவான் ‘க்ராமணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நியமித்து ஆள்வதால் பகவான் ‘க்ராமணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஐம்பூதங்களுக்குள், அவற்றின் கலவையால் உருவாக்கப்படும் அனைத்து ‘அசித்’ பொருட்களும் அடக்கம்.

———–

220.ஓம் ஸ்ரீமதே நம:

ஸ்ரீகாந்தி‘ஸ்ரீ’ என்றால் ஒளி என்று பொருள்

ஸர்வாதிஶாயின்யஸ்யேதி அனைவரைக் காட்டிலும் மேலான ஒளியை உடையவராதலால்

ஸ்ரீமான் பகவான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமான பொருளாகக் கொண்டு ‘ஸ்ரீமான்’ என்று விளக்கியிருந்தார் .

பின்னர் 178வது திருநாமத்தில், அனைத்து செல்வங்களுடன் திருமகள் உறைதலைப் பிரதானமாய்க் கொண்டு ‘ஸ்ரீமான்’ என்று உரை தந்திருந்தார்.

இங்கோ, அவரது மேனி ஒளியைக் கொண்டு உரை அளித்துள்ளார்.

————

221.ஓம் ந்யாயாய நம:

ப்ரமாண உண்மையான அறிவை விளக்கும் சான்றுகளை

அனுக்ராஹக சார்ந்து

அபேதகாரகஸ் தர்கோ அத்வைதமென்னும் ‘அபேத’ தத்துவத்தை விளக்கும் தர்க்கமாய் இருப்பதால் (தர்க்கம் = வாதம், எதிர்வாதம் மூலம் உண்மையை அறியும் அறிவி)

ந்யாய: பகவான் ‘ந்யாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரமா’ என்றால் அறியப்படவேண்டிய உண்மைப் என்று பொருள். அதை நமக்கு அறிவிப்பவை ‘ப்ரமாணங்கள்’ எனப்படும். அத்தகைய ப்ரமாணங்களைச் சார்ந்து, வாத-எதிர்வாதம் மூலம் தர்க்க ரீதியாக அபேத (அத்வைத) தத்துவத்தை விளக்கும் முறைக்கு ‘ந்யாயம்’ என்று பெயர். பகவானே இந்த ‘ந்யாய’ வடிவினராய் இருப்பதால் அவர் ‘ந்யாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது ஸனாதன தர்மத்தில் ஆறு வகைப் ப்ரமாணங்கள் உள்ளன. அவையாவன,

1.ப்ரத்யக்ஷம் (நேரடியாய் நம் புலன்களின் மூலம் அறிவது)

  1. அனுமானம்(நம் முன்னனுபவத்தைக் கொண்டு அறிவது. உதாரணமாக, புகையுள்ள இடத்தில் நெருப்பும் இருக்கும். முன்பு நாம் நெருப்பையும், புகையையும் ஒன்று சேரப் பார்த்திருப்பதால் இவ்வாறு அறிகிறோம்)
  2. உபமானம்(நாம் அறிந்த ஒன்றைக் கொண்டு, அறியாத ஒன்றை அறிய முயல்வது)
  3. அர்த்தாபத்தி(யூகித்து அறிவது; ஒருவர் மாட்டு வண்டியில் காலைப் பயணித்தார். அடுத்த ஊரை அடைவதற்கு அரை நாள் ஆகும். எனவே, அவர் அடுத்த ஊரை அடைந்திருக்க வேண்டும்)
  4. அனுபலப்தி(எதிர்மறை வாதங்களைக் கொண்டு ஒன்றை அறிவது. உதாரணமாக, “இங்கு தங்கத் தட்டு இல்லை” என்று ஒருவர் கூறினால், அவர் ‘தங்கம்’ என்ற பொருளையும், ‘தட்டு’ என்ற பொருளையும் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம்)
  5. ஶப்தம்(சொல் அல்லது கூற்று: ஒருவர் அல்லது ஒரு நூல் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. வேதங்கள், உபநிடதங்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்)
  6. ————

222.ஓம் நேத்ரே நம:

ஜகத்யந்த்ர இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை

நிர்வாஹகோ வழிநடத்துபவராக இருப்பதால்

நேதா பகவான் ‘நேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை வழி நடத்துபவராக இருப்பதால் பகவான் ‘நேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

223.ஓம் ஸமீரணாய நம:

ஶ்வஸனரூபேண மூச்சுக்காற்றின் வடிவில்

பூதானி அனைத்து உயிரினங்களையும்

சேஶ்ட்யதீதி நடமாடச் செய்வதால்

ஸமீரண: பகவான் ‘ஸமீரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூச்சுக்காற்றின் (ப்ராண வாயுவின்) வடிவில் அனைத்து உயிரினங்களையும் நடமாடச் செய்வதால் பகவான் ‘ஸமீரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————————-

224.ஓம் ஸஹஸ்ர மூர்த்னே நம:

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

மூர்த்தானோSஸ்யேதி தலைகள் உடையவராக இருப்பதால்

ஸஹஸ்ர மூர்த்தா பகவான் ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராக இருப்பதால் பகவான் ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

225.ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

விஶ்வாத்மா பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

226.ஓம் ஸஹஸ்ராஷாய நம:

ஸஹஸ்ராண்யக்ஷீண்யக்ஷாணி (ஸஹஸ்ராணி அக்ஷீணி அக்ஷாணி) ஆயிரக்கணக்கான கண்களும் (அக்ஷீணி), புலனுறுப்புக்களும் (அக்ஷாணி)

வா யஸ்ய ஸ எவரிடம் உள்ளனவோ அவர் (அந்த பகவான்)

ஸஹஸ்ராக்ஷ: ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலனுறுப்புக்களும் உள்ளதால் அவர் ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

227.ஓம் ஸஹஸ்ரபதே நம:

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

பாதா அஸ்யேதி திருப்பாதங்களை உடையவராதலால்

ஸஹஸ்ரபாத் பகவான் ‘ஸஹஸ்ரபாத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான திருப்பாதங்கள் உடையவராக இருப்பதால் பகவான் ‘ஸஹஸ்ரபாத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸஹஸ்ரசீர்ஶா புருஶ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த (பரம)புருஶன் ஆயிரக்கணக்கான தலைகளை உடையவர்; அவருக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலன்களும், பாதங்களும் உள்ளன.

இங்கு ஆயிரம் என்றால் எண்ணிலடங்கா என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

————-

228.ஓம் ஆவர்த்தனாய நம:

ஆவர்த்தயிதும் சுழற்றுவது (சுழற்றுவதை)

ஸம்ஸார சக்ரம் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை

ஶீலமஸ்யேதி இயற்கையான குணமாக (கொண்டுள்ளபடியால்)

ஆவர்த்தன: பகவான் ‘ஆவர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால், பகவான் ‘ஆவர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

229.ஓம் நிவ்ருத்தாத்மனே நம:

ஸம்ஸாரபந்தான் ஸம்ஸாரத் தளைகளில்

நிவ்ருத்த ஆத்மா கட்டுப்படாத ஆத்மா (ஆத்மாவை உடையவராக இருப்பதால்)

ஸ்வரூபமஸ்யேதி இயற்கையாகவே

நிவ்ருத்தாத்மா பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும், இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னி ரனிலோ தரணீ தர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீ தர: ||

————–

230.ஓம் ஸம்வருதாய நம:

ஆச்சாதிகயா (பரம் பொருளை நம்மிடமிருந்து) மறைக்கும் தன்மையுடைய

அவித்யயா அறியாமையால்

ஸம்வ்ருதத்வாத் மூடப்பட்டுள்ளார்

ஸம்வ்ருத: எனவே, பகவான் ‘ஸம்வ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு, அறியாமையால் (அஞ்ஞானத்தால்) மூடியுள்ள படியால் அவர் ‘ஸம்வ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி, அஞ்ஞானத்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா தளைப்பட்டிருக்கிறான். ஞானத்தால் பரப்ரஹ்மத்தை உணர்ந்து மோக்ஷமடைகிறான். இங்கு, பரம்பொருளை அஞ்ஞானம் சூழ்ந்தது என்று பொருளல்ல (பகவானை அஞ்ஞானம் தீண்டாது). நமது அஞ்ஞானமானது (அறியாமையானது) பகவானை நம்மிடமிருந்து மூடி மறைத்துள்ளது என்று பொருள் கொள்ளவேண்டும்.

————

231.ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:

ஸம்யக் எல்லோரையும், எல்லாவிடங்களிலிருந்தும்

ப்ரமர்த்தயதீதி அழிக்கிறார்

ருத்ரகாலாத்யாபிர் ருத்ரன், காலன் (காலம்)

விபூதிபிர் இதி ஆகிய உருவங்களை தரித்து

ஸம்ப்ரமர்த்தன: பகவான் ‘ஸம்ப்ரமர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ருத்ரன், காலன் (காலம்) ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும், அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும், அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்) அழிக்கிறார். எனவே, அவர் ‘ஸம்ப்ரமர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

232.ஓம் அஹ:ஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் சரியாக ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்)

ப்ரவர்த்தநாத் உருவாக்குகின்ற

ஸூர்யகதிரவனின் வடிவானவராய் இருப்பதால்

அஹ: ஸம்வர்த்தக: பகவான் ‘அஹ: ஸம்வர்த்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் ‘அஹ: ஸம்வர்த்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

233.ஓம் வஹ்னயே நம:

ஹவிர் யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் – தேவர்களின் உணவு)

வஹநாத் தேவர்களுக்குக் கொண்டு செல்லும்

வஹ்னி: அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஹ்னி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் – தேவர்களின் உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஹ்னி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

234.ஓம் அனிலாய நம:

அனிலய(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதித்வாத் தொடக்கமும், முடிவும் இல்லாமையால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். காற்றிற்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. எனவே, காற்றின் வடிவில் இருக்கும் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதானாத்வா அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது

அனில: எனவே பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது. எனவே, பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநநாத்வா (மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனில: என்றால் ஓரிடத்தில் நிலையில்லாதது (காற்று) என்று பொருள். இந்த திருநாமத்தையும் அவ்வாறே ஆச்சார்யர் விளக்கியுள்ளார். இதிலுள்ள வெவ்வேறு அர்த்தங்களால், வாயுவின் வெவ்வேறு குணங்களைக் கொண்டு பகவானை வர்ணித்துள்ளார் ஆதிசங்கரர்.

——-

235.ஓம் தரணீதராய நம:

சேஶதிக்கஜாதி ரூபேண ஆதிசேடன், எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) ஆகிய வடிவிலும்

வராஹரூபேண ச வராஹ அவதாரத்தின் பொழுதும்

தரணீம் பூமியை

தத்த இதி தாங்குவதால்

தரணீதர: பகவான் ‘தரணீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார். மேலும், பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார். எனவே, பகவான் ‘தரணீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு:|

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
  2. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

236.ஓம் ஸுப்ரஸாதாய நம:

ஶோபனமிக மங்களமான

ப்ரஸாதோ அவரது கருணை

யஸ்ய அபகாரவதாமபி தன்னை (பகவானை) அவமதித்து, தவறிழைத்த

ஶிஶுபாலாதீனாம் சிசுபாலன் முதலானோருக்கும்

மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி முக்தியை அளிப்பதால்

ஸுப்ரஸாத: பகவான் ‘ஸுப்ரஸாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருணை மிகவும் மங்களகரமானது. அவரை அவமதித்து, தவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியது. எனவே, அவர் ‘ஸுப்ரஸாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

237.ஓம் ப்ரஸன்னாத்மனே நம:

ரஜஸ்தமோப்யாம் ரஜோ மற்றும் தமோ குணங்களால்

அகலுஶித மாசடையாதது (தீண்டப்படாதது)

ஆத்மா ஆன்மாவையும்

அந்த:கரணமஸ்யேதி மனதையும் உடையவராதலால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆன்மாவும், மனதும், உருவமும் சுத்தஸத்வ வடிவானது. ரஜோ, தமோ குணங்களால் மாசடையாதது. எனவே அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த:கரணம் என்றால் உள்ளுறுப்புகள் என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு மனம் என்று பொருள் கொள்வதே ஏற்புடையதாகும். 

கருணார்த்ர ஸ்வபாவத்வா கருணையே வடிவானவராக இருப்பதால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது

ப்ரஸன்னஸ்வபாவத்வா மகிழ்ச்சியான இயல்புடையவராதலால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

காருணிக இத்யர்த்தமிகவும் கருணையுள்ளவர் என்று இதற்குப் பொருள்.

மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எனவே, அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யாள் இங்கு ‘மகிழ்ச்சியான ஸ்வபாவமுடையவர்’ என்று உரை தந்துள்ளார். மேலும், இதற்கு ‘பரம காருணிகர்’ என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும் பொழுது, தனது கருணையால் தன் அடியவர்கள் மகிழ்வதைக் கண்டு தான் மகிழ்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

அவாப்தஸர்வகாமத்வாத்வா தனது அனைத்து ஆசைகளும் ஈடேறப்பெற்றவர்

ப்ரஸன்னாத்மா (ஆதலால்) பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக) இருக்கும். எனவே, அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————-

238.ஓம் விஶ்வத்ருஶே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை

த்ருஶ்ணோதீதி காக்கிறார்

விஶ்வத்ருக் (எனவே) பகவான் ‘விஶ்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞித்ருஶா ப்ராகல்பே பலமானவர், துணிச்சல் மிக்கவர் என்ற பொருள்படும் ‘ஞித்ருஶா’ என்ற தாதுவிலிருந்து ‘த்ருக்’ என்ற விகுதி உருவாகியுள்ளது.

இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கிக் காப்பதால் பகவான் ‘விஶ்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

239.ஓம் விஶ்வபுஜே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை

புங்க்தே புனக்தி (ப்ரளய காலத்தில்) உண்கிறார்

பாலயதீதி வா (மற்றெல்லா நேரங்களிலும்) காத்தருள்கிறார் 

விஶ்வபுக் எனவே, பகவான் ‘விஶ்வபுக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் உண்கிறார். மற்றெல்லா காலங்களிலும் அதை காக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வபுக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புங்க்தே மற்றும் புனக்தி (வடமொழியில் நான்காவது ‘ப’) என்ற சொல்லிற்கு உண்பது, அனுபவிப்பது என்று பல பொருள்கள் உண்டு. பெரும்பாலும் இந்த சொல் உண்பதைக் குறிப்பதால்  இந்தப் ப்ரபஞ்சமே பரம்பொருளின் அனுபவத்திற்காகவே ஏற்பட்டதாகும். எனவே, ப்ரபஞ்சத்தை அனுபவிப்பவர் என்ற பொருள் கொண்டாலும் தகும்.

———————

240.ஓம் விபவே நம:

ஹிரண்யகர்ப்பாதிரூபேண ‘ஹிரண்யகர்ப்பர்’ முதலான

விவிதம் பல்வேறு

பவதீதி உருவங்களை ஏற்பதால்

விபு: பகவான் ‘விபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஹிரண்யகர்ப்பர்’ முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் ‘விபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நித்யம் விபும்’ (முண்டக உபநிஶத் 1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) எப்பொழுதும் உள்ளது, அனைத்துமாகத் தோற்றமளிப்பது.

இதி மந்த்ரவர்ணாத் | இந்த (உபநிடத) மந்திரத்தின் படி (பகவான் ‘விபு’ என்று அழைக்கப்படுகிறார்).

————

241.ஓம் ஸத்கர்த்ரே நம:

ஸத்கரோதி நற்காரியம் புரிகின்றார்

பூஜயதீதி (நல்லோரை) வணங்குகிறார்

ஸத்கர்த்தா (எனவே) பகவான் ‘ஸத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரை வணங்குகிறார். எனவே, அவர் ‘ஸத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

242.ஓம் ஸத்க்ருதாய நம:

பூஜிதைரபி (அனைவராலும்) வணங்கத்தக்கவர்களாலும்

பூஜிதவணங்கப்படுகிறார்

ஸத்க்ருத: (எனவே) பகவான் ‘ஸத்க்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் வணங்கப்படும் தேவர்கள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கி, வழிபடுகின்றனர். எனவே, பகவான் ‘ஸத்க்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

243.ஓம் ஸாதவே நம:

ந்யாய ப்ரவ்ருத்ததயா அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால்

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதயதீதி வா உருவாக்குகிறார்

ஸாத்யபேதான் (இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறாகக் காட்சியளிக்கும்) பொருட்களுக்குள் பேதங்களை

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்) ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உபதானாத் மூலப் பொருளாய் (மூல காரணமாய்) இருக்கிறார்

ஸாத்யமாத்ரஸாதகோ வா (இங்கு பலவாகத் தெரியும்) அனைத்துப் பொருட்களையும் உருவாகும்

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

244.ஓம் ஜான்ஹவே நம:

ஜனான் அனைத்து ஜீவராசிகளையும்

ஸம்ஹாரஸமயே அழியும் காலத்தில்

அபஹ்னுதே அபனயதீதி தன்னுள் லயமடையச் செய்வதால்

ஜஹ்னு: பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ப்ரளய காலத்தில் (இந்தப் ப்ரபஞ்சம் அழியும் காலத்தில்) அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள்ளே லயமடையச் செய்கிறார்.  எனவே, அவர் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனான் + அபஹ்னுதே = ஜஹ்னு:

ஜஹாத்யவிதுஶோ (ஜஹாதி அவிதுஶோ) ஞானமற்றோரை விடுத்து

பக்தான் நயதீதி பக்தர்களை வழிநடத்திச் செல்கிறார்

பரம்பதமிதி வா (தன்னுடைய) பரமபதத்திற்கு (வைகுண்டத்திற்கு)

ஜஹ்னு: பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னிடம் பக்தியில்லாத, ஞானமற்றோரை விடுத்து, தனது பக்தர்களை தன்னுடைய மேலான பரமபதத்திற்கு வழிநடத்திச் செல்வதால் பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

245.ஓம்நாராயணாய நம:

நர ஆத்மா ‘நர’ என்றால் ஆத்மா என்று பொருள்

ததோ ஜாதான்யாகாஶாதீனி அந்த ஆத்மாவின் பிறப்பிடமான ஆகாயம் முதலியவை

நாராணி ‘நாரம்’ என்று அழைக்கப்படும்

கார்யாணி தானி அயம் காரணாத்மனா வ்யாப்னோதி (அந்த ஆகாயம் என்னும்) காரியத்தை (அதன் காரணமாய் இருந்து) பரவி இருப்பதால்

அதஸ்ச தான்யயனமஸ்யேதி அதற்கு (நாரங்களுக்கு) இருப்பிடமாக (அயனமாக) இருப்பதால்

நாராயண: பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஜாமிளனுக்கு முக்தியளித்த திருநாமம். திருமங்கையாழ்வாரை ஆட்கொண்ட திருநாமம். நாராயண நாமத்தின் பெருமையை விவரிக்க இயலாது.

நரம் என்னும் ஆத்மாக்களின் பிறப்பிடமாக இருப்பதால் ஆகாயம் முதலானவை ‘நாரங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த நாரங்களை, அவற்றின் காரணமாக இருப்பதால், பகவான் பரவியிருக்கிறார் (வ்யாபித்திருக்கிறார்). எனவே, அவர் அவற்றின் இருப்பிடமாகிறார் (அயனம்). எனவே, பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா |

அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்த நாராயண: ஸ்தித:’ || (நாராயண உபநிஶத் 13.1-2)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாம் பார்த்தும், கேட்டும் அறிந்து கொள்ளும் (எல்லையற்ற) இந்தப் ப்ரபஞ்சத்தை உள்ளும், புறமுமாக பகவான் நாராயணர் பரவியுள்ளார் (வ்யாபித்துள்ளார்).

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நரஜ்ஜாதானி தத்வானி நாராணீதி ததோ விது: |

தான்யேவ சாயன தஸ்ய தேன நாராயண: ஸ்ம்ருத: || (மஹாபாரதம்)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: நரனிலிருந்தே அனைத்து தத்துவங்களும் உருவாகின்றன. எனவே, அவை ‘நாரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாரங்களைத் தனது முதல் இருப்பிடமாகக் (அயனமாகக்) கொண்டுள்ளதால், பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இந்த மஹாபாரத ஸ்லோகத்தின் படி (பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நாராணாம் ஜீவானாம் அனைத்து ஜீவராசிகளும் ‘நாரங்கள்’ ஆகும்

அயனத்வாத் ப்ரளய இதி வா ப்ரளய காலத்தில் (இந்த நாரங்களாகிய ஜீவராசிகள் அனைத்தும்) சென்றடையும் இடமாக இருப்பதால்

நாராயண: பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாரங்கள் என்றழைக்கப்படும் ஜீவராசிகள் அனைத்தும் ப்ரளய காலத்தில் பகவானுக்குள்ளே சென்று ஒடுங்குகின்றன. இவ்வாறு, நாரங்களின் இலக்காக (அயனமாக) இருப்பதால், பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நாராணாமயன யஸ்மாத்தஸ்மான் நாராயண: ஸ்ம்ருத:’ (ப்ரஹ்மவைவர்த்த புராணம்)

ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: நாரங்களின் இருப்பிடமாதலால் பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ப்ரஹ்மவைவர்த்தாத் | இவ்வாறு ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூனவ: |

தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: || (மனு ஸ்ம்ருதி 1.10)

மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: நரனான பகவானிடமிருந்து உருவானதால் தண்ணீருக்கு ‘நாரம்’ என்று பெயர். அந்த நாரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளதால், பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்.

நாராயணாய நம இத்யயமேவ ஸத்ய:

ஸம்ஸாரகோரவிஶஸஹரணாய மந்த்ர: |

ஶ்ருண்வந்துமவ்யமதயோ யதயோSஸ்தராகா

உச்சைஸ்தராமுபதிஶாம்யஹமூர்த்த்வபாஹு: || (நரஸிம்ஹ புராணம்)

நரஸிம்ஹ புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ நல்லறிவு கொண்டோரே!!! பற்றுதலற்ற துறவிகளே!!! நீங்கள் கேளுங்கள். நான் என் கைகளை உயர்த்தி உரத்த குரலில் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ‘நாராயணாய நம:’ என்னும் இந்த மந்திரமே (அனைத்திலும் சிறந்த) உண்மையாகும். இந்தப் பிறவியென்னும் கொடிய நஞ்சினை அழிக்க வல்லதாகும்.

இதி நாரஸிம்ஹ புராணே | இவ்வாறு நரஸிம்ஹ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

246.ஓம் நராய நம:

நயதீதி நர: ப்ரோக்த: பரமாத்மா ஸனாதன: |

அனைவரையும் (நற்பேற்றுக்கு) வழிநடத்தி அழைத்துச் செல்வதால், என்றும் உள்ள அந்த பரமாத்மா ‘நரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனம் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி பகவான் ‘நரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

  1. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |

ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 

இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி:|
  2. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன:  ||

—————

  1. ஓம் அஸங்க்யேயாய நம:

யஸ்மின் எவரிடம் (பகவானிடம்)

ஸங்க்யா நாம ரூப பேதாதி‘ஸங்க்யா’ அதாவது பெயர் (நாம), உருவம் (ரூப) முதலிய வேறுபாடுகள்

ந வித்யத இதி காணப்படுவதில்லையோ

அஸங்க்யேய: எனவே, பகவான் ‘அஸங்க்யேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸங்க்யா’ என்றால் எண்ணிக்கை என்று பொருள். உலகில் அனைத்தையும் நாம் பெயர் (நாமம்) மற்றும் உருவத்தாலேயே (ரூபம்) வேறுபடுத்துகிறோம். பகவானிடம் இத்தகைய நாம, ரூப வேறுபாடுகள் இல்லையாதலால், பகவான் ‘அஸங்க்யேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் அப்ரமேயாத்மனே நம:

அப்ரமேய புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறியமுடியாத

ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி ஆத்மா, (அவரது இயற்கையான உருவம்) உடையவர் ஆதலால்

அப்ரமேயாத்மா பகவான் ‘அப்ரமேயாத்மா’  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆத்மாவின் தன்மையை (அல்லது அவரது இயற்கையான உருவத்தை) நமது புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறிய இயலாது. எனவே, பகவான் ‘அப்ரமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————–

  1. ஓம் விஶிஶ்டாய நம:

அதிஶேதே விஞ்சியவர்

ஸர்வமதோ அனைத்தையும் (அனைவரையும்)

விஶிஶ்ட: (எனவே) பகவான் ‘விஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (அறிவு, பலம், செல்வம், வீரம் முதலிய) அனைத்திலும், அனைவரையும் (அனைத்தையும்) விஞ்சியிருப்பதால் அவர் ‘விஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் ஶிஶ்டக்ருதே நம:

ஶிஶ்டம் ஶாஸனம் ‘ஶிஶ்டம்’ என்றால் ஆணையிடுதல் அல்லது ஆள்வது என்று பொருள்

தத் கரோதீதி அதை புரிவதால் (அனைவரையும் ஆணையிட்டு ஆள்வதால்)

ஶிஶ்டக்ருத் பகவான் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் (அனைவரையும்) ஆணையிடுபவராய் (ஆணையிட்டு ஆள்பவராய்) இருப்பதால், பகவான் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்டான் தனது அடியவர்களை

கரோதி பாலயதீதி வா காக்கிறார் (கரோதி என்றால் காப்பது என்றும் பொருள்)

ஶிஶ்டக்ருத் எனவே, பகவான் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களை (ஶிஶ்டர்களை) காக்கிறார். எனவே, அவர் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்ட – அடியவர்கள் + கரோதி  காப்பது = ஶிஶ்டக்ருத்

ஸாமான்யவசனோ தாதுர்விஶேஶவசனோ த்ருஶ்ட:  குரு காஶ்டானீத்யாஹரனே யதா, தத்விதிதி வா ஶிஶ்டக்ருத் |

பொதுவான பொருளை விடுத்து சிறப்புப் பொருளை குறிப்பதற்கு இங்கு ‘க்ரு’ என்ற வேர்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “குரு காஶ்டானி” என்ற வாக்கியத்தில் ‘க்ரு’ என்ற வேர்ச்சொல் ‘எடுத்துச் செல்லுதல், கொண்டு செல்லுதல்’ என்ற பொருளில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே இங்கும் ‘க்ரு’ என்ற வேர்ச்சொல் இந்த திருநாமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

———————-

  1. ஓம் ஸித்தார்த்தாய நம:

ஸித்தோ நிர்வ்ருத்த: முழுமையடைகின்றன (ஸித்த:)

அர்த்த்யமானோSர்த்தோSஸ்யேதி அவர் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுவதனால்

ஸித்தார்த்த: பகவான் ‘ஸித்தார்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தான் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுகிறார். எனவே, அவர் ‘ஸித்தார்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யகாம:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளதுவிரும்பிய அனைத்தையும் அடைகிறார். 

————-

  1. ஓம் ஸித்தஸங்கல்பாய நம:

ஸித்தோ நிஶ்பன்னபூர்த்தியாகிறது (ஸித்த:)

ஸங்கல்போSஸ்யேதி அவரது எண்ணங்களும், முடிவுகளும்

ஸித்தஸங்கல்ப: எனவே, பகவான் ‘ஸித்தஸங்கல்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் (முடிவுகளும்) எப்பொழுதும் பூர்த்தியாகிறது. எனவே, அவர் ‘ஸித்தஸங்கல்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளதுஅனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெறுகிறார்.

முன் திருநாமத்தில் (ஸித்தார்த்த:) விரும்பிய பொருளை அடைபவர் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த திருநாமத்தில் (ஸித்தஸங்கல்ப:) தனது அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெறுபவர் என்று பொருள் கொள்ள வேண்டும். 

———

  1. ஓம் ஸித்திதாய நம:

ஸித்திம் ஃபலம் பலன்களை (ஸித்தி)

கர்த்ருப்யசெயல் புரிபவர்களுக்கு

ஸ்வாதிகாரானுரூபதோ (ஸ்வ அதிகாரான் அனுரூபதோ) அவரவரது செயல்களுக்குத் தக்கவாறு

ததாதீதி அளிப்பதால்

ஸித்தித: பகவான் ‘ஸித்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவருக்கும், அவர்களது செயல்களுக்குத் தக்க பலன்களை அளிக்கிறார். எனவே, அவர் ‘ஸித்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் ஸித்திஸாதனாய நம:

ஸித்தே: க்ரியாயா: ‘ஸித்தி’ என்றால் செயல் (க்ரியா)

ஸாதகத்வாத் அதை புரிபவராகவும், அதைப் புரிபவர்களுக்கு உதவுபவராகவும் இருப்பதால்

ஸித்திஸாதன: பகவான் ‘ஸித்திஸாதன:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘ஸித்தியை’ (அதாவது செயல்களைப்) புரிகிறார். செயல்களைப் புரிபவர்களுக்கு (அவர்களைத் தூண்டி) உதவுபவராகவும் இருக்கிறார். எனவே, அவர் ‘ஸித்திஸாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக ஸாதனம் என்றால் கருவி, வழி என்று பல பொருள்கள் உண்டு. இங்கு, பகவான் ஸித்திக்கு (செயல்களுக்கு) ஸாதனமாய் இருக்கிறார் என்று பொருள்.

———

  1. வ்ருஶாஹீ வ்ருஶபோ விஶ்ணுர் வ்ருஶபர்வா வ்ருஶோதர: 

வர்த்தனோ வர்த்தமானஸ்ச விவிக்த: ஶ்ருதிஸாகர: || 

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்ருஶாஹீ, 257. வ்ருஶப:, 258. விஶ்ணு:, 259. வ்ருஶபர்வா, 260. வ்ருஶோதர: |
  2. வர்த்தன:, 262. வர்த்தமான:, 263. விவிக்த:, 264. ஶ்ருதிஸாகர: ||
  1. ஓம் வ்ருஶாஹிணே நம:

வ்ருஶோ தர்ம: புண்யம் ‘வ்ருஶ’ என்றால் தர்மம் (அறம்) அல்லது நற்கருமம் (புண்யம்) என்று பொருள்

ததேவாஹஅவரே (இந்த அறம், மற்றும் நற்கரும வடிவான பகவானே) ‘அஹ’ என்றழைக்கப்படும் பகலாக இருக்கிறார்

ப்ரகாஶஸாதர்ம்யாத் ஒளி வடிவானவராய் இருப்பதால் (பகவான் பகலுக்கு ஸமமானவர்)

வ்ருஶாஹீ எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவான் அறம் மற்றும் நற்கரும (வ்ருஶ) வடிவினராய் இருக்கிறார். ஒளிபடைத்தவராய் இருப்பதால் அவரே பகலாகவும் இருக்கிறார் (அஹி). எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ (வ்ருஶ + அஹி) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வாதஶாஹப்ரப்ருதிர்வ்ருஶாஹபன்னிரு வேள்விகள் ‘வ்ருஶாஹ’ என்று அழைக்கப்படுகின்றன

ஸோSஸ்யாஸ்தீதி அவை (அந்த பன்னிரு வேள்விகள்) பகவானிடமே நிலைபெற்றிருக்கின்றன

வ்ருஶாஹீ எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பன்னிரு வேள்விகள் ‘வ்ருஶாஹ:’ என்று அழைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் பகவானிடமே நிலைப்பெற்றிருக்கின்றன. எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ராஜாஹ: ஸகிப்யஶ்டச்’ (பாணினி சூத்ரம் 5.4.91)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ராஜா, அஹி, ஸகி முதலிய சொற்கள் ஒரு ‘தத்புருஶ’ சொற்றொடரின் பின் வரும்பொழுது அதனுடன் ‘டச்’ என்ற விகுதி சேர்க்கப்படுகிறது. 

இதி டச் ப்ரத்யய: ஸமாஸாந்த: |

பாணினி ஸூத்ரத்தின் படி ‘வ்ருஶாஹ’ என்ற சொல்லின் இறுதியில் ‘டச்’ விகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

———-

  1. ஓம் வ்ருஶபாய நம:

வர்ஶத்யேஶ மழைப்போல பொழிகிறார்

பக்தேப்யபக்தர்களின்

காமானிதி விருப்பங்களை

வ்ருஶப: எனவே பகவான் ‘வ்ருஶப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பக்தர்களுக்கு, அவர்கள் விரும்புவதை மழை போன்று பொழிகிறார். எனவே, அவர் ‘வ்ருஶப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் விஶ்ணவே நம:

விஶ்ணு: பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்ணுர்விக்ரமனாத்’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.13)

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸோக்தேஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி (பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்ற ஸ்ரீவ்யாஸரின் கூற்றின்படி பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் வ்ருஶபர்வணே நம:

வ்ருஶரூபாணி அறமே வடிவானதாய்

ஸோபானபர்வான்யாஹுபடிக்கட்டுகள் (பர்வா என்றால் படிக்கட்டு) கூறப்பட்டுள்ளன

பரம் தாம பரமபதமான பகவானின் இருப்பிடத்தை

ஆருருக்ஷோர் ஏறிச் செல்வதற்கு

இத்யதோ வ்ருஶபர்வா எனவே, பகவான் ‘வ்ருஶபர்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் பரமபதமான இருப்பிடத்தை அடைய அறமே வடிவான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன (வேதங்கள் ‘வர்ணாஸ்ரம தர்மமான’ இந்தப் படிக்கட்டுக்களைப் பற்றி விளக்குகின்றன). எனவே, பகவான் ‘வ்ருஶபர்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் வ்ருஶோதராய நம:

ப்ரஜா (ப்ரஜைகளான) அனைத்துயிர்களையும்

வர்ஶதீவ மழை பொழியுமா போல பிறப்பிக்கிறார்

உதரமஸ்யேதி தனது வயிற்றிலிருந்து

வ்ருஶோதர: எனவே, பகவான் ‘வ்ருஶோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வயிற்றிலிருந்து அனைத்து உயிர்களையும் மழையானது நீரைப் பொழிவது போல உருவாக்குகிறார் (பிறப்பிக்கிறார்). எனவே, அவர் ‘வ்ருஶோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் வர்த்தனாய நம:

வர்த்தயதீதி (அனைவரையும், அனைத்து உயிரினங்களையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார்

வர்த்தன: எனவே, பகவான் ‘வர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களையும் (அனைவரையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார். எனவே அவர் ‘வர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் வர்த்தமானாய நம:

ப்ரபஞ்ச ரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்

வர்தத இதி (அனைத்து திசைகளிலும், அனைத்து பரிமாணங்களிலும்) வளர்கிறார்

வர்த்தமான: எனவே, பகவான் ‘வர்த்தமான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் அனைத்து திசைகளிலும், அனைத்துப் பரிமாணங்களிலும் முடிவின்றி வளர்கிறார். எனவே, அவர் ‘வர்த்தமான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் விவிக்தாய நம:

இத்தம் வர்த்தமானோSபி பகவான் இவ்வாறு (ப்ரபஞ்சமாய்) வளர்ந்தாலும்

ப்ருதகேவ திஶ்டதீதி தான் எதனுடனும் கலவாது தனித்தே இருக்கிறார்

விவிக்த: எனவே, அவர் ‘விவிக்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் படைத்து, அனைத்துமாய் வ்யாபித்து, இந்தப் ப்ரபஞ்சமாகவே விரிந்து வளர்ந்தாலும், தான் எதனுடனும் கலவாது தனித்து இருக்கிறார். எனவே, அவர் ‘விவிக்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விவிக்த: என்றால் தனித்திருப்பவர் என்று பொருள்.

———–

  1. ஓம் ஶ்ருதிஸாகராய நம:

ஶ்ருதய: ஶ்ருதிகள் (வேதங்கள்)

ஸாகர கடலுக்குள்ளே

இவாத்ர நிதீயந்தே எவ்வாறு செல்வக்குவியல்கள் (முத்துக்களும், பவளங்களும்) நிறைந்திருக்குமோ

இதி (அவ்வாறு வேதங்கள் பகவான் என்னும் கடலுக்குள் இருக்கின்றன) எனவே,

ஶ்ருதிஸாகர: பகவான் ‘ஶ்ருதிஸாகர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலுக்குள் முத்துக்கள், பவளங்கள் போன்ற செல்வக்குவியல்கள் நிறைந்துள்ளன. அதுபோன்றே, பகவான் என்னும் கடலுக்குள் வேதங்கள் என்னும் செல்வக்குவியல் நிறைந்துள்ளது. எனவே, பகவான் ‘ஶ்ருதிஸாகர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு:

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுபுஜ:, 266.துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு: |
  2. நைகரூப:, 272.ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன: ||

  1. ஓம் ஸுபுஜாய நம:

ஶோபனா நன்மை தருவதான (அழகான)

புஜா திருத்தோள்களை கொண்டிருக்கிறார்

ஜகத்ரக்ஷகரா: உலகத்தை (உலகத்தோரை) காப்பதற்காக

அஸ்யேதி ஸுபுஜ: எனவே, பகவான் ‘ஸுபுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகத்தையும், உலகத்தோரையும் காப்பதற்காக நன்மை தருவதான, அழகான திருத்தோள்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘ஸுபுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶோபனம் என்றால் காந்தி (ஒளி), நன்மை, அழகு, அலங்காரம், அணிகலன் என்று பல பொருள்கள் உண்டு. இவை அனைத்துமே பகவானின் தோள்களுக்குப் பொருந்தும்.

———

  1. ஓம் துர்த்தராய நம:

ப்ருதிவ்யாதீனபி இந்த பூமி முதலான

லோகதாரகான்யன்யைர் அனைவரையும் தாங்கக்கூடிய

தாரயிதுமஶக்யானி பிறரால் தாங்குவதற்கு கடினமானவற்றையும்

தாரயன் தாங்குகிறார்

ந கேனசித் தாரயிதும் ஷக்ய இதி ஆனால், ஒரு பொழுதும் தான் பிறரால் தாங்க இயலாதவராய் இருப்பதால்

துர்த்தர: பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தாங்கக் கூடியதானதும், பிறரால் தாங்குதற்குக் கடினமானதுமான பூமி முதலியவற்றைத் தாங்குகிறார். ஆனால், ஒரு பொழுதும் பிறரால் தாங்க இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

து:கேன கடினமானது

த்யானஸமயே த்யானிக்கும் பொழுது

முமுக்ஷுபிர் முக்தியை விழைபவர்கள்

ஹ்ருதயே (தங்கள்) மனத்தினுள்

தாரயத இதி (பகவானின் உருவத்தை) தாங்குவதற்கு

துர்த்தர: எனவே, பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைபவர்கள், த்யானிக்கும் பொழுது பகவானின் உருவத்தை தத்தம் மனத்தினுள் தாங்குவது மிகக் கடினமானது. எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

து: என்றால் கடினமானது. தர என்றால் தாங்குவது. பகவான் கடினமானவற்றை எளிதில் தாங்குகிறார். அவரை பிறர் தாங்குவது இயலாது. த்யானத்தின் பொழுதும் அவரது உருவத்தை நம் மனத்தினுள் அவ்வளவு எளிதில் தாங்கி விட முடியாது. இவ்வாறு, பல காரணங்களினால் பகவான் ‘துர்த்தர:’

———

  1. ஓம் வாக்மினே நம:

யதோ நி:ஸ்ருதா எவரிடமிருந்து தோன்றினவோ

ப்ரஹ்மமயீ வாக் (பரப்ரஹ்மமே சொல் வடிவாய் இருக்கும்) வேதங்கள்

தஸ்மாத் பகவான்

வாக்மீ ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடமிருந்தே வேதங்கள் தோன்றின. எனவே, அவர் ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் மஹேந்த்ராய நம:

மஹாம்ஸ்சாஸாவிந்தரஸ்சேதி மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன்

மஹேந்த்ர: பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஈஶ்வரானாமபி ஈஶ்வர: அனைத்து ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரர்.

மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன் ஆதலால், பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இந்தப் ப்ரபஞ்சத்தில் சக்தி படைத்த ஈஸ்வரர்கள் (ஆளுநர்கள்) பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆளும் ஈஸ்வரனாக பகவான் இருக்கிறார் என்று இதற்குப் பொருள்.

————

  1. ஓம் வஸுதாய நம:

வஸு தனம் வஸு என்றால் செல்வம் என்று பொருள்

ததாதீதி (செல்வத்தை) அனைவருக்கும் அளிப்பதால்

வஸுத: பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் செல்வத்தை (வஸுவை) அளிக்கிறார் (ததா). எனவே, பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரு (268, 269) திருநாமங்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு செல்வத்தை அளிக்கும் பல ஈஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் செல்வத்தை பகவானே அளிக்கிறார் (வஸுத:). எனவே, அவர் அந்த ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரராக இருக்கிறார் (மஹேந்த்ர:) என்று பொருள் கொள்ளலாம்.

————–

270. ஓம் வஸவே நம:

தீயமானம் கொடுக்கப்படும்

தத் வஸ்வபி அந்த செல்வமாக

ஸ ஏவேதி வா அவராகவே இருப்பதால்

வஸு: பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவ்வாறு பிறருக்கு அளிக்கப்படும் செல்வமும் பகவானன்றி வேறொன்றுமில்லை. அந்த செல்வமாகவும் தானே இருப்பதால், பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சாதயத் மறைத்துக் கொள்கிறார்

ஆத்மஸ்வரூபம் தனது இயற்கையான உருவத்தை

மாயயேதி வா மாயையினால்

வஸு: எனவே, பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், மாயையினால் தனது இயற்கையான உருவத்தை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். எனவே, அவர் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தரிக்ஷ ஏவ ஆகாயத்தில் மட்டுமே

வஸதி வசிக்கிறார்

நான்யத்ரேதி வேறெங்கும் (வசிப்பதில்லை)

அஸாதாரணேன வசனேன இவ்வாறு தனிச்சிறப்புடைய

வஸனேன இருப்பிடத்தை கொண்டிருப்பதால்

வாயுர்வா வஸு: காற்றிற்கு (வாயு பகவானிற்கு) ‘வஸு’ என்று பெயர் (அவரது உள்ளுறை ஆத்மாவாக – அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாயு பகவான் ஆகாயத்தில் மட்டுமே வசிக்கிறார். வேறெங்கும் வசிப்பதில்லை. இவ்வாறு, தனிச்சிறப்புடைய இருப்பிடத்தைக் கொண்டிருப்பதால் அவருக்கு ‘வஸு’ என்று பெயர். அந்த வாயு பகவானிற்கும் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) இருப்பதால் பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வஸுரந்தரிக்ஷஸத்’ (கடோபநிஶத் 2.5.2)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘ஆகாயத்தில் வசிப்பவர் வஸு’

————-

271. ஓம் நைகரூபாய நம:

ஏகம் ரூபமஸ்ய ஓரு குறிப்பிட்ட உருவம் என்பதை

ந வித்யத இதி அவர் ஏற்பதில்லை

நைகரூப: எனவே, பகவான் ‘நைகரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒரு குறிப்பிட்ட உருவம் என்று ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அவர் ‘நைகரூப:’ (பல உருவங்கள் கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகரூப: என்பதை ந + ஏக + ரூப: என்ற பிரிக்கவேண்டும். ஒரு உருவம் கிடையாது என்பது இதன் பொருள். அத்வைதத்தின் படி, பரப்ரஹ்மம் எந்த ஒரு உருவமும் அற்றவர். மாயையின் வசப்பட்டே அவருக்கு உருவம் உள்ளதாக நாம் கற்பித்துக் கொள்கிறோம்.

விஶிஶ்டாத்வைதத்தில், பகவானுக்கு பல்வேறு உருவங்கள் உண்டு. அவை அனைத்தும் உண்மையே. எனவேதான், அவருக்கு “ந ஏக ரூப:” என்ற திருநாமம் பொருந்தும் என்று பொருள் கூறுவர். பல்வேறு உருவங்கள் இருப்பதால், ஒரு உருவத்தை மட்டும் அவரது உருவம் என்று கொள்ளலாகாது என்பது இதன் பொருள்.

‘இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தக் கடவுளானவர் (பரப்ரஹ்மம்) மாயையினால் பல்வேறு உருவங்கள் கொள்வதாக உணரப்படுகிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘ஜ்யோதீம்ஶி விஶ்ணு:’ (விஶ்ணு புராணம் 2.12.37)

விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஒளிகளும் விஶ்ணுவே.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச | இத்தகைய ஸ்ம்ருதிகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

———–

272 ஓம் ப்ருஹத்ரூபாய நம:

ப்ருஹன்மத் மிகப்பெரிய

வராஹாதிரூபமஸ்யேதி வராஹம் முதலிய பல்வேறு உருவங்களை எடுப்பதால்

ப்ருஹத்ரூப: பகவான் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், வராஹம் முதலிய அவதாரங்களை எடுக்கும் பொழுது மிகப்பெரிய திருமேனியை (உருவத்தை) ஏற்கிறார். எனவே, அவர் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

273- ஓம் ஶிபிவிஶ்டாய நம:

ஶிபய: பஶவ: ‘ஶிபி’ என்றால் மிருகங்கள் என்று பொருள்

தேஶு விஶதி ப்ரதிதிஶ்டதி அவற்றில் நிலைகொண்டுள்ளார் (விஶதி என்றால் நிலைபெற்றிருத்தல் என்று பொருள்)

யஞ்யரூபேணேதி வேள்வியின் வடிவில்

ஶிபிவிஶ்ட: யஞ்யமூர்த்தி: எனவே, வேள்வியின் வடிவினரான பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்வியின் வடிவினரான பகவான், அந்த வேள்வியில் ஆகுதியாகக் கொடுக்கப்படும் மிருகங்களுக்குள் வேள்வியின் பொருட்டு நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு: பஶவ: ஶிபிர்யஞ்ய ஏவ பஶுஶு ப்ரதிதிஶ்டதி’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளதுவிஶ்ணுவே வேள்வியாவார். அந்த வேள்வியில் ஆகுதி கொடுக்கப்படும் மிருகங்களுள் வேள்வியே நிலைபெற்றுள்ளது.

விஶ்ணுவே வேள்வியாதலால், அந்த யாக மிருகங்களில் அவரே நிலைபெற்றுள்ளார் என்பது இதன் பொருள்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஶிபயோ ரஶ்மயஸ்தேஶு ‘ஶிபி’ என்றால் கிரணங்கள் என்றும் பொருள்

நிவிஶ்ட இதி வா அவற்றுள் உறைவதால்

ஶிபிவிஶ்ட: பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிபி என்றால் கிரணங்கள் என்றும் பொருள். கதிரவன் மற்றும் வெண்மதியின் கிரணங்களில் உள்ளுறைந்து இருப்பதால் பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶைத்யாச்சயனயோகாஸ்ச ஶீதீ வாரி ப்ரசக்ஷதே |

தத்பானாத்ரக்ஷணாஸ்சைவ ஶிபயோ ரஶ்மயோ மதா: ||

தேஶு ப்ரவேஶாத்விஶ்வேஶ: ஶிபிவிஶ்ட இஹோச்யதே |

குளிர்ச்சியாய் இருப்பதாலும், பகவான் அதில் துயில்கொள்வதாலும், நீரை ‘ஶி’ என்று அழைப்பார்கள். அதை (கதிரவனின் கிரணங்கள்) பருகுவதாலும், (வெண்மதியின் கிரணங்கள்) பாதுகாப்பதாலும், (கதிரவன் மற்றும் வெண்மதியின்) கிரணங்களை ‘ஶிபி’ என்று அழைப்பர். அந்த கிரணங்களுள் (ஶிபிக்குள்) பிரவேசித்து உள்ளுறைவதால் விஶ்வேஶ்வரரான பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

274- ஓம் ப்ரகாஶனாய நம:

ஸர்வேஶாம் அனைத்தையும்

ப்ரகாஶனஶீலத்வாத் ஒளிவிடச் செய்வதால்

ப்ரகாஶன: பகவான் ‘ப்ரகாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்தையும் ஒளியூட்டுகிறார். நமக்கு ஒளியை வழங்கும் கதிரவன், வெண்மதி, தீ போன்ற அனைத்துமே பகவானிடமிருந்தே தத்தம் ஒளியைப் பெறுகின்றன. எனவே, பகவான் ‘ப்ரகாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

30-ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன:

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |
  2. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: ||

——-

275- ஓம் ஒஜஸ்தேஜோத்யுதிதராய நம:

ஓஜ: ப்ராணபலம் ‘ஓஜஸ்’ என்றால் ப்ராணன் மற்றும் பலத்தைக் குறிக்கும்

தேஜ: ஶௌர்யாதயோ குணா: ‘தேஜஸ்’ என்றால் சூரத்தனம் முதலிய குணங்களைக் குறிக்கும்

த்யுதிர்தீப்தி: ‘த்யுதி’ என்றால் ஒளியைக் குறிக்கும்

தா: தாரயதீதி இவை அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதால்

ஒஜஸ்தேஜோத்யுதிதர: பகவான் ‘ஒஜஸ்தேஜோத்யுதிதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுள் ‘ஓஜஸ்’ என்றழைக்கப்படும் ப்ராண சக்தி, பலம், ‘தேஜஸ்’ என்றழைக்கப்படும் சூரத்தனம் முதலிய குணங்கள் ‘த்யுதி’ என்றழைக்கப்படும் ஒளி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ளார். எனவே, அவர் ‘ஒஜஸ்தேஜோத்யுதிதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதவா, அல்லது

ஒஜஸ்தேஜ இதி நாமத்வயம் ‘ஒஜஸ்’ மற்றும் ‘தேஜஸ்’ என்று இரண்டு நாமங்களாய்ப் பிரித்தால்,

‘பலம் பலவதா சாஹம்’ (ஸ்ரீ பகவத்கீதை 7.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந்தீர்ந்த வலிமை நான்.

‘தேஜஸ்தேஜஸ்வினாமஹம்’ (ஸ்ரீ பகவத்கீதை 7.10)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளபடி அவர் பலவான்களுக்குள் பலமாகவும், ஒளிபொருந்தியோருள் ஒளியாகவும் இருக்கிறார் (எனவே, ‘ஓஜஸ்தேஜ:’ என்று அழைக்கப்படுகிறார்).

த்யுதிம் ஞானலக்ஷணாம் தீப்திம் ‘த்யுதி’ என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும்

தாரயதீதி அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்)

த்யுதிதர: பகவான் ‘த்யுதிதர:’ திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘த்யுதி’ என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும் அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்), பகவான் ‘த்யுதிதர:’ திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும், ஆதிசங்கரர் தனது முதல் விளக்கமான ‘ஓஜஸ்தேஜோத்யுதிதர:’ என்பதையே பிரதானமான விளக்கமாகக் கொண்டுள்ளார். ஆயிரம் திருநாமக் கணக்கில், இது ஒரே திருநாமமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது.

———–

276- ஓம் ப்ரகாஶாத்மனே நம:

ப்ரகாஶஸ்வரூப ஒளிமயமான

ஆத்மா யஸ்ய : ஆத்மாவைக் (திருமேனியைக்)​கொண்டவர் எவரோ

ப்ரகாஶாத்மா (அந்த பகவான்) ‘ப்ரகாஶாத்மா’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒளிமயமான ஆத்மாவை (திருமேனியை) உடையவராதலால் அவர் ‘ப்ரகாஶாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

277- ஓம் ப்ரதாபனாய நம:

ஸவித்ராதி கதிரவன் முதலான விபூதிபி: உருவங்களைத் தரித்து

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்திற்கு

ப்ரதாபயதீதி வெப்பமளிப்பதால்

ப்ரதாபன: பகவான், ‘ப்ரதாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவன் முதலிய உருவங்களை தரித்து, இந்தப் ப்ரபஞ்சத்திற்கு வெப்பத்தை அளிக்கிறார் (அல்லது இந்தப் ப்ரபஞ்சத்தினை வெம்மையினால் சுட்டெரிப்பதால்). எனவே, அவர் ‘ப்ரதாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

278- ஓம் ருத்தாய நம:

தர்மஞானவைராக்யாதிபிரூபேத்வாத் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால்

ருத்த: பகவான் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடம் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் அவர் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருத்த: என்றால் செல்வசெழிப்பு (செல்வசெழிப்புள்ளவர்) என்று பொருள். தர்மம் (அறம்), ஞானம் (அறிவு) மற்றும் வைராக்யம் (பற்றின்மை) ஆகியவையே உண்மையான செல்வங்களாகும். இவை அனைத்தும் நிறைந்திருப்பதால் பகவான் ‘ருத்த:’ என்று அழைக்கப்படுகிறார்.

———–

279- ஓம் ஸ்பஶ்டாக்ஷராய நம:

ஸ்பஶ்டம் உதாத்தம் ‘ஸ்பஶ்டம்’ என்றால் மிகத் தெளிவாக (உரக்க) என்று பொருள்

ஓம்காரலக்ஷணம் ஓம்காரமென்னும்

அக்ஷரமஸ்யேதி சொல்லால் உரைக்கப்படுகிறார் (உணர்த்தப்படுகிறார்)

ஸ்பஶ்டாக்ஷர: எனவே, பகவான் ‘ஸ்பஶ்டாக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஓம்காரத்தால் (உரத்து) தெளிவாக உணர்த்தப்படுகிறார். எனவே, அவர் ‘ஸ்பஶ்டாக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

280. ஓம் மந்த்ராய நம:

ரிக்யஜு:ஸாமலக்ஷணோ ரிக், யஜுர், ஸாம வேதங்களின் (அவ்வேதங்களிலுள்ள மந்திரங்களின்) வடிவில் இருப்பதால்

மந்த்ர: பகவான் ‘மந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ரிக், யஜுர், ஸாம வேதங்களின் வடிவில் (அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் வடிவில்) இருப்பதால் அவர் ‘மந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

281. ஓம் சந்த்ராம்ஶவே நம:

ஸம்ஸாரதாபதிக்மாம்ஶு இந்தப் பிறவியென்னும் கதிரவனின்

தாபதாபித வெப்பத்தினால் தாக்கப்பட்டு தவிக்கும்

சேதஸாம் மனிதர்களுக்கு

சந்த்ராம்ஶுரிவ வெண்மதியின் கிரணங்கள் எவ்வாறு மக்களை குளிர்விக்குமோ அவ்வாறே அனைவரையும் குளிர்வித்து

ஆஹ்லாதகரத்வாத் மகிழ்விப்பதால்

சந்த்ராம்ஶு பகவான் ‘சந்த்ராம்ஶு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் கதிர்களால் துன்புறுவோரை வெண்மதியானது எவ்வாறு தன் கிரணங்களால் குளிர்விக்குமோ, அவ்வாறே, இந்தப் பிறவியென்னும் கதிரவனின் வெப்பத்தால் தாக்கப்பட்டுத் துன்புறுவோரை பகவான் குளிர்வித்து மகிழ்ச்சியூட்டுகிறார். எனவே, அவர் ‘சந்த்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திக்ம என்றால் வெப்பம். இங்கு கதிரவனைக் குறிக்கும்.

———

282. ஓம் பாஸ்கரத்யுதயே நம:

பாஸ்கரத்யுதி கதிரவனின் ஒளியை

ஸாதர்ம்யாத் ஒத்தவராய் (ஒத்த ஒளியை உடையவராய்) இருப்பதால்

பாஸ்கரத்யுதி பகவான் ‘பாஸ்கரத்யுதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனை ஒத்த ஒளி படைத்தவராய் இருப்பதால் பகவான் ‘பாஸ்கரத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர:|

ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||

இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர:|
  2. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம:||

———–

  1. ஓம் அம்ருதாம்ஸூத்பவாய நம:

மத்யமானே கடையும்பொழுது

பயோனிதாவம்ருதாம்ஸோஸ்சந்த்ரஸ்ய பாற்கடலை அம்ருதத்தின் தன்மையைக் கொண்ட வெண்மதி

உத்பவோ தோன்றினார்

யஸ்மாத்ஸ: எவரால் (எந்த பரம்பொருளின் சக்தியால் வெண்மதி தோன்றினாரோ) அவர்

அம்ருதாம்ஸூத்பவோ அந்த பகவான், ‘அம்ருதாம்ஸூத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(தேவர்களுக்கு அமுதம் கிடைப்பதற்காக) பாற்கடலைக் கடையும்பொழுது பகவானின் சக்தியாலேயே, அந்த பாற்கடலிலிருந்து அம்ருதத்தின் தன்மையுடன் கூடிய சந்திரன் (வெண்மதி) தொன்றினார். எனவே, பகவான் ‘அம்ருதாம்ஸூத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அம்ருத + அம்ஸு + உத்பவ: = அம்ருதாம்ஸூத்பவ:

———

284. ஓம் பானவே நம:

பாதீதி நன்றாக ஒளிவிடுவதால்

பானு: பகவான் ‘பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

285. ஓம் ஶஶபிந்தவே நம:

ஶஶ இவ முயலைப் போன்ற வடிவுடைய

பிந்துர்லாஞ்சனம் ‘பிந்து’ அதாவது குறியை

அஸ்யேதி உடையதால்

ஶஶபிந்துஸ்சந்த்ர: வெண்மதி (சந்திரன்) ஶஶபிந்து என்று அழைக்கப்படுகிறார்

தத்வத் அது போன்றே (அந்த வெண்மதியைப் போன்றே)

ப்ராஜா: அனைத்து உயிரினங்களையும்

புஶ்ணாதீதி போஶித்து வளர்ப்பதால்

ஶஶபிந்து: பகவான் ‘ஶஶபிந்து:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முயலைப் போன்று குறியீடு இருப்பதால் வெண்மதியை (சந்திரனை) ‘ஶஶபிந்து’ என்று அழைப்பார்கள். அந்த வெண்மதியைப் (சந்திரனைப்) போன்றே அனைத்து உயிரினங்களையும் போஶித்து வளர்ப்பதால் பகவான் ‘ஶஶபிந்து:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புஶ்ணாமி சௌஶதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ரஸ வடிவமுள்ள சோமமாகி (வெண்மதி) பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

286. ஓம் ஸுரேஶ்வராய நம:

ஸுராணாம் தேவானாம் ‘ஸுரர்’ என்றால் தேவர்கள் என்று பொருள்

ஶோபனதாத்ருணாம் (அந்த தேவர்களுக்கும் மற்றும்) அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும்

ச ஈஶ்வர: அரசராக இருப்பதால்

ஸுரேஶ்வரபகவான் ‘ஸுரேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும் அரசராக (ஈஶ்வரனாக) இருக்கிறார். எனவே, அவர் ‘ஸுரேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

287. ஓம் ஔஶதாய நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பெரும்பிணிக்கு

பேஜத்வாத் மருந்தாக இருப்பதால்

ஒளதம் பகவான் ‘ஒளஶத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியைத் தீர்க்கும் மருந்தாக இருக்கிறார். எனவே, அவர் ‘ஒளஶத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

288. ஓம் ஜகதஸ்ஸேதவே நம:

ஜகதாம் இந்த பிறவியென்னும் பெருங்கடலை

ஸமுத்தாரணஹேதுத்வாத் கடப்பதற்கு உதவி புரிபவராகவும்

அஸம்பேதகாரணத்வாத்வா ஒன்றை ஒன்று கலவாமல் பிரித்து வைப்பவராகவும்

ஸேதுவத் ஒரு பாலத்தைப் போல (பாலம் எவ்வாறு ஒரு நீர் நிலையின் இரு பக்கங்களையும் பிரிக்கிறதோ அவ்வாறே)

வர்ணாஶ்ரமாதீனாம் வர்ணாஶ்ரமங்களை

ஜகத:ஸேது: பகவான் ‘ஜகத:ஸேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலைத் தாண்ட உதவும் பாலமாக இருக்கிறார். மேலும், ஒரு பாலம் எவ்வாறு நீர் நிலையின் இரு பக்கங்களை பிரிக்கிறதோ அவ்வாறே பகவானும் இவ்வுலகில் வர்ணாஶ்ரம தர்மங்கள் ஒன்றுக்கொன்று கலவாமல் பிரித்து வைக்கிறார். எனவே, அவர் ‘ஜகத:ஸேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏஶ ஸேதுர்விதரண ஏஶாம் லோகானாமஸம்பேதாய (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த மக்களை ஒருவருக்கொருவர் கலவாத வண்ணம் (பரப்ரஹ்மம்) ஒரு பாலமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

289. ஓம் ஸத்யதர்மபராக்ரமாய நம:

ஸத்யா அவிததா உண்மையாகவும்

தர்மா: ஞானாதயோ குணா: (தர்மம் என்றால்) ஞானம் முதலிய குணங்களும்

பராக்ரமஸ்ச யஸ்ய ச வீரமும் ஒருங்கே உள்ளவராதலால்

ஸத்யதர்மபராக்ரம: பகவான் ‘ஸத்யதர்மப்ராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மை, ஞானம் முதலிய குணங்கள் மற்றும் வீரம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறார். எனவே, அவர் ‘ஸத்யதர்மபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. பூதபவ்யபவன்னாத: பவன: பாவனோSனல: |

காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: ||

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதபவ்யபவன்னாத:, 291.பவன:, 292. பாவன:, 293. அனல: |
  2. காமஹா, 295.காமக்ருத், 296. காந்த:, 297. காம:, 298. காமப்ரத:, 299. ப்ரபு: ||

—-

  1. ஓம் பூதபவ்யபவன்னாதாய நம:

பூதபவ்யபவதாம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் (ஆகிய முக்காலங்களிலும்)

பூதக்ராமாணாம் உயிர்த்தொகுதிகளுக்கு

நாத: எஜமானனாய் இருக்கிறார்

தைர்யாச்யதே அவர்களால் வணங்கப்படுகிறார் (அர்ச்சிக்கப்படுகிறார்)

தானுபதபதி (நல்வழியில் அவர்கள் நடவாதபொழுது) அவர்களை அல்லலுக்கு உட்படுத்துகிறார்

தேஶாமீஶ்டே ஶாஶதீதி வா அவர்களை ஆணையிட்டு ஆள்கிறார்

பூதபவ்யபவன்னாத: எனவே, பகவான் ‘பூதபவ்யபவன்னாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்காலங்களிலுமுள்ள உயிர்த்தொகுதிகளால் (உயிரினங்களால்) வணங்கப்படுகிறார். தவறான வழியில் நடக்கும் பொழுது அல்லல்களுக்கு உட்படுத்துகிறார். அனைவருக்கும் எஜமானனாய் ஆணையிட்டு ஆள்கிறார். எனவே, அவர் ‘பூதபவ்யபவன்னாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் பவனாய நம:

பவத தூய்மையாக்குகிறார்

இதி எனவே

பவன: பகவான் ‘பவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் தூய்மையாக்குகிறார். எனவே பகவான் ‘பவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பவன: பவதாமஸ்மி’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

  1. ஓம் பாவனாய நம:

பாவயதீதி அனைவரையும் செலுத்துகிறார்

பாவன: எனவே, பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் செலுத்துவதால் (காற்றையும் வீசும்படி செய்வதால்) பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பீஷாஸ்மாத்வாத: பவதே (தைத்ரிய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது,

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——————-

  1. ஓம் அனலாய நம:

அனான் ப்ராணான் ‘அன’ என்றால் ப்ராணனை (மூச்சுக்காற்றைக்) குறிக்கும்

ஆத்மவத்வேன லாதீதி உள்ளுறை ஆத்மாவாக அதை உள்ளிழுப்பதால்

ஜீவ: ஜீவாத்மாவை

அனல: ‘அனல’ என்று அழைப்பார்கள். (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறல்ல என்பதால்) பகவான் ‘அனல’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஜீவாத்மாவின் வடிவில் மூச்சுக்காற்றை (ப்ராணனை) உள்ளிழுக்கிறார் (அனைவரையும் வாழவைக்கிறார்). எனவே, அவர் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே. ஆச்சார்யாள் இதை முன்னுரை பகுதியில் பல ஶ்ருதி, ஸ்ம்ரிதி, புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி விரிவாக விளக்கியுள்ளார்.

னலதேர் கந்தவாசினோ ‘னல’ என்றால் மணத்தைக் குறிக்கும்

‘நஞ்’பூர்வாத்வா அதற்கு எதிர்மறையாய் (‘அ’ என்ற சொல் சேர்வதன் மூலம்)

அனல: பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘னல’ என்றால் மணத்தைக் (வாசனை) குறிக்கும். எவ்வித மணமும் அற்றவர் என்பதால் பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எதிர்மறைப் பொருளைக் குறிக்க ‘னல’த்தின் முன் ‘அ’ சேர்ந்து, ‘அனல:’ என்று உருவாகிறது.

‘அகந்தம் அரசம்’ (பரப்ரஹ்மம்) மணமற்றது, சுவையற்றது.,

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

பரப்ரஹ்மத்தை சுவைத்தோ, முகர்ந்தோ உணர இயலாது என்பதே இதன் உட்பொருளாகும்.

ந அலம் பர்யாப்தமஸ்ய வித்யத இதி வா அவருக்கு முடிவு, எல்லைநிலம் என்பதே கிடையாது (அலம், பர்யாப்தம் என்றால் முடிவு என்று பொருள்)

அனல: எனவே பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு முடிவோ, எல்லை என்பதோ கிடையாது. எனவே, அவர் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் காமக்னே நம:

காமான் ஹந்தி அனைத்து ஆசைகளையும் வேரறுக்கிறார்

முமுக்ஷூணாம் முக்தியை விழைவோருக்கும்

பக்தானாம் பக்தர்களுக்கும்

ஹிம்ஸகானாம் துன்பங்களைத் தரவல்ல (எதிரியான)

சேதி காமஹா எனவே, பகவான் ‘காமஹா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பக்தர்கள், மற்றும் முக்தியை விழைவோர்களுக்கு, அவர்களுக்குத் தடங்கலாய், எதிரியாய் உள்ள காமங்களை (ஆசைகளை) வேரறுக்கிறார். எனவே, பகவான் ‘காமஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் காமக்ருதே நம:

ஸாத்விகானாம் ஸத்வ குணமுடையோரின்

காமான் (நியாயமான) ஆசைகளை

கரோதீதி நிறைவேற்றுகிறார் (பூர்த்தி செய்கிறார்)

காமக்ருத் எனவே, பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பக்தர்களின் முன்னேற்றப் பாதைக்கு இடையூறாய் இருக்கும் ஆசைகளை வேரறுக்கும் அந்த பகவானே) ஸத்வ குணமுடையோரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுகிறார். எனவே, (காமஹந்தாவான) பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காம: ப்ரத்யும்ன: காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை

தஸ்ய ஜனகத்வாத்வா பிறப்பித்த தந்தையாதலால்

காமக்ருத் பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை பிறப்பித்த தந்தையாதலால் பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காமனின் மறு அவதாரம்: மன்மதன் (காமன்), தேவர்களுக்காக, சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் வெகுண்ட சிவன் தனது நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். அவ்வாறு எரிந்த காமன், பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்த பொழுது அவருக்கும், ருக்மிணிக்கும் மகனாகப் (ப்ரத்யும்னனாகப்) பிறந்தான். அவனால் தனக்கு மரணமேற்படும் என்றறிந்த ஸம்பராஸுரன் என்ற அஸுரன் ப்ரத்யும்னனை அவன் பத்து நாள் குழந்தையாக இருந்த பொழுதே துவாரகையிலிருந்து தூக்கி சென்றான். அங்கு, மாயாவதி (அதாவது முற்பிறப்பில் மன்மதனின் மனைவி ரதி) என்னும் தனது பணிப்பெண்ணிடம் அக்குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்தான். அக்குழந்தையைப் பார்த்ததும் தன் முற்பிறப்பு நினைவு பெற்ற மாயாவதி அக்குழந்தையை வளர்த்தாள். தக்க வயதடைந்ததும் ப்ரத்யும்னனைக் கொண்டு ஸம்பராஸுரனை வதம் செய்வித்து, பின்னர் ப்ரத்யும்னனையே மணந்தாள் மாயாவதி. அனைவரும் பின்னர் துவாரகைக்குத் திரும்பினர். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் 55-வது அத்தியாயத்தில் விரிவாக .கூறப்பட்டுள்ளது.

 கடுவினைக் களையலாகும் காமனைப் பயந்த காளை

இடவகைக் கொண்டதென்பர் எழிலணி அனந்தபுரம் (திருவாய்மொழி 10.2.7)

————-

  1. ஓம் காந்தாய நம:

அபிரூப அழகிய வடிவு படைத்தோருக்குள்

தம: மிகச்சிறந்தவராதலால்

காந்த: பகவான் ‘காந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரழகு படைத்தோர் பலர். அவர்கள் அனைவரைக் காட்டிலும் சிறந்த பேரழகு கொண்டவராதலால் பகவான் ‘காந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் காமாய நம:

காம்யதே விரும்பப்படுகிறார்

புருஶார்த்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை

அபிகாங்க்ஷிபிர் (அடைய) விரும்போவோராலும்

இதி எனவே

காம: பகவான் ‘காம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை அடைய விரும்புவோராலும் (அவற்றை வழங்கக்கூடியவர் பகவான் ஒருவரே என்பதால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘காம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் காமப்ரதாய நம:

பக்தேப்ய: தன் அடியவர்களின்

காமான் (நியாயமான) ஆசைகளை

ப்ரகர்ஶேண அவர்கள் விரும்பியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில்

ததாதீதி வழங்குவதால்

காமப்ரத: பகவான் ‘காமப்ரத:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் நியாயமான விருப்பங்களை, அவர்கள் வேண்டியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில், பகவான் நிறைவேற்றுகிறார். எனவே, அவர் ‘காமப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ப்ரபவே நம:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்தவராய்

பவனாத் இருப்பதால்

ப்ரபு: பகவான் ‘ப்ரபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்தவராய் (சிறந்த தேவனாய்) இருப்பதால் பகவான் ‘ப்ரபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

  1. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஶன:|

அத்ருஶ்யோSவ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||

இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யுகாதிக்ருத், 301. யுகாவர்த்த:, 302. நைகமாய:, 303. மஹாஶன:|
  2. அத்ருஶ்ய, 305. வ்யக்தரூப:, ச, 306. ஸஹஸ்ரஜித், 307. அனந்தஜித் ||

———–

  1. ஓம் யுகாதிக்ருதே நம:

யுகாதே: காலபேதஸ்ய யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை

கர்த்ருத்வாத் உருவாக்குவதால்

யுகாதிக்ருத் பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை உருவாக்குவதால் பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யுகானாம் யுகங்களை

ஆதிம் தொடக்கத்தில்

ஆரம்பம் கரோதீதி வா துவங்கிவைக்கிறார்

யுகாதிக்ருத் எனவே பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, கல்பத்தின் தொடக்கத்தில் யுகங்களின் சுழற்சியைத் தொடங்கி வைக்கிறார். எனவே, பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் த்ருதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (யுகாதிக்ருத் என்னும் இந்த திருநாமம் வரையில்) முன்னூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

—————–

  1. ஓம் யுகாவர்த்தாய நம:

யுகானி க்ருதாதீனி ‘க்ருதயுகம்’ (முதலாம் யுகமான ஸத்ய அல்லது க்ருத யுகம்) தொடக்கமாக நான்கு யுகங்களை

ஆவர்த்தயதி மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார்

காலாத்மனேதி காலத்தின் வடிவாய்

யுகாவர்த்த: எனவே பகவான் ‘யுகாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலத்தின் வடிவினரான பகவான், க்ருதயுகம் முதலிய நான்கு யுகங்களை மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார். எனவே, பகவான் ‘யுகாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் நைகமாயாய நம:

ஏகா மாயா ந வித்யதே ஒன்றல்ல அவரது மாயைகள்

பஹ்வீர்மாயா எண்ணற்ற மாயைகளை

வஹதீதி உருவாக்குகிறார்

நைகமாய:  எனவே, பகவான் ‘நைகமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மாயைகள் ஒன்றிரண்டல்ல. எண்ணிலடங்கா மாயைகளை உருவாக்குவதால் அவர் ‘நைகமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந லோபோ நஞ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.73)

இதி நகாரலோபோ ந பவதி இந்த பாணினியின் ஸூத்ரத்தின்படி, எதிர்மறையைக் குறிக்கும் ‘நஞ’ விலிருந்து ‘ந’காரம் நீக்கப்படுவதில்லை

ஞகாரானுபந்தஸ்யாபி காரத்தை தவிர்த்து தனியே இருப்பினும் 

‘ந’காரஸ்ய ப்ரதிபோதவாசினோ வித்யமானத்வாத் ‘காரம் எதிர்மறையான பொருளையே குறிக்கும் என்று (நாம்அறியவேண்டும்.

நைகமாய: என்ற திருநாமத்தை ந+ஏக+மாய என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இங்கு ‘ந’காரம், ஒன்றல்ல (ந ஏக:) (ஒன்றின் எதிர்மறையான) பல என்ற பொருள் தருகிறது.

———–

  1. ஓம் மஹாஶனாய நம:

மஹத் அஶனம் அஸ்யேதி அளவிடமுடியாத அளவு உணவை உட்கொள்கிறார்

மஹாஶன: எனவே, பகவான் ‘மஹாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

கல்பாந்தே கல்பத்தின் முடிவில்

ஸர்வக்ரஸனாத் அனைத்தையும் உண்கிறார்.

பகவான் மஹாகல்பத்தின் முடிவில் இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தையும் உண்கிறார். எனவே, அவர் ‘மஹாஶன:’ (அளவிடமுடியாத உணவை உண்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுது 1000 சதுர்யுகங்களால் ஆனது (மனிதர்களின் காலக்கணக்கின்படி 432,00,00,000 (432 கோடி) வருடங்கள். அவரது ஒரு பகல் முடியும்பொழுது பூமி, புவர்லோகம், ஸ்வர்கலோகம் (தேவர்கள் வாழும் ஸ்வர்கம்) ஆகியவை அழிகின்றன. அவரது ஒரு இரவு நேரமும் 432 கோடி வருடங்களாகும் (ஆக, ப்ரஹ்மாவின் ஒரு நாள் என்பது நம் கணக்கில் 864 கோடி வருடங்கள்). இவ்வாறான 360 நாட்கள் அவரது ஒரு ஆண்டு. அவ்வாறு 100 ஆண்டுகள் ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் (31104000,00,00,000 ஆண்டுகள்). ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் முடிந்ததும் ஈரேழு பதினான்கு உலகங்களும் (இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும்) பகவானால் உட்கொள்ளப்படுகின்றன (அழிக்கப்படுகின்றன). பின்னர் 31104000,00,00,000 ஆண்டுகள் ஒன்றுமில்லாத வெறுமையில், பரப்ரஹ்மம் மட்டுமே இருக்கிறார். பின்னர் ப்ரஹ்மாவையும், ஈரேழு பதினான்கு உலகங்களோடு ப்ரபஞ்சத்தையும் மீண்டும் முன்போலவே படைக்கிறார். இந்த சுழற்சி ஆரம்பம், முடிவு ஏதுமின்றி இடைவிடாது நடைபெறுகிறது (this cycle is eternal).

————

  1. ஓம் அத்ருஶ்யாய நம:

ஸர்வேஶாம் அனைத்து

புத்தீந்த்ரியாணாம் அறிவுப்புலன்களால் (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்)

அகம்ய: அணுக இயலாதவராதலால்

அத்ருஶ்ய: பகவான் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து அறிவுப் புலன்களாலும் அறிய முடியாதவராய், அவற்றால் அணுக இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் வ்யக்தரூபாய நம:

ஸ்தூலரூபேண மிகப் பெரிய தனது வடிவால்

வ்யக்தம் ஸ்வரூபமஸ்யேதி அவரது உருவம் நன்றாக புலப்படும் வகையில் இருப்பதால்

வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் புலன்களுக்கு விஷயமாகாத இறைவன், அனைத்துமாய் விரிந்து பரந்திருக்கும் வடிவில் அனைவருக்கும் புலப்படும் வகையில் இருக்கிறார். எனவே அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ப்ரகாஶமானத்வாத் ஒளியாய் சுடர்விடுகிறார்

யோகினாம் யோகிகளுக்குள்

வ்யக்தரூப இதி வா தனது உருவில்

வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானிகள் மற்றும் யோகிகளுக்குள் பகவான் ஒளியாய் தனது இயற்கை வடிவத்தில் சுடர்விடுகிறார். எனவே, அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஸஹஸ்ரஜிதே நம:

ஸுராரீனாம் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான அஸுரர்களை

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

யுத்தே ஜயதீதி போர்க்களத்தில் வெல்பவராதலால்

ஸஹஸ்ரஜித் பகவான் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான ஆயிரக்கணக்கான அஸுரர்களை போர்க்களத்தில் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் அனந்தஜிதே நம:

ஸர்வாணி பூதானி அனைத்து ஜீவராசிகளையும்

யுத்தக்ரீடாதிஶு போர்க்களம் மற்றும் விளையாட்டுகளில்

ஸர்வத்ராசிந்த்யஶக்திதயா சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால்

ஜயதீதி வெல்கிறார்

அனந்தஜித் எனவே, பகவான் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (தேவாதி தேவர்கள் உட்பட) அனைத்து ஜீவராசிகளையும் போர்க்களம், மற்றும் விளையாட்டுக்களில் நம் சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 4-திருநாமங்கள்–101– -200- வரை –

January 20, 2023

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:–101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

——————

12. வஸுர் வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶ கர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

  1. வஸு:, 105.வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
  2. அமோக:, 111.புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

————–

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர் விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர் வராரோஹோ மஹா தபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:

  1. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
  2. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

————–

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

123-ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |127-வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

———–

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

  1. லோகாத்யக்ஷ:, 134.ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
  2. சதுராத்மா, 138.சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||

—————

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. ப்ராஜிஷ்ணு:, 142.போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
  2. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

—————

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:

  1. உபேந்த்ர:, 152.வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
  2. அதீந்த்ர:, 158.ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||

————–

  1. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது:|
  1. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல:||

————

  1. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

  1. மஹாபுத்தி:, 174.மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
  2. அநிர்தேஶ்யவபு:, 178.ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

————–

  1. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
  2. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

———–

  1. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
    1. மரீசி:, 190.தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
    2. ஹிரண்யநாப:, 195.ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

    ———–

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205.துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

————-

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:–101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

101.ஓம் வ்ருஶாகபயே நம:

வர்ஶணாத் மழைப் போன்று

ஸர்வகாமானாம் அனைத்து ஆசைகளையும் நமக்கு அள்ளித் தருவதால்

தர்மோ தர்மத்தை

வ்ருஶ: ‘வ்ருஶ’ என்று குறிக்கின்றனர்.

காத் தோயாத் ‘கா’ என்றால் தண்ணீரைக் குறிக்கும்

பூமிமபாதிதி அந்த கடல் நீருக்குள் அகப்பட்டுக் கிடந்த பூமியை இடர்ந்து எடுத்து வந்ததால்

கபிர்வராஹ: வராஹப் பெருமானை ‘கபி’ என்று அழைக்கின்றனர்.

வ்ருஶரூபத்வாத் இவ்வாறு, (அனைத்து ஆசைகளையும் வாரி வழங்கும்) தர்மத்தின் உருவமாகவும்,

கபிரூபத்வாத் பூமியை நீரினின்று இடர்ந்து எடுத்து வந்த வராஹ ரூபமாயும் (இரண்டும் சேர்ந்து இருப்பதால்)

வ்ருஶாகபி: பகவான் ‘வ்ருஶாகபி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார். அந்த வராஹப் பெருமானே, தர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார். இவ்வாறு, தர்மத்தின் உருவமாயும், வராஹமாயும் இருப்பதால் பகவான் ‘வ்ருஶாகபி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶ  தர்மம்;  – தண்ணீர்; கபி  அந்த தண்ணீரிலிருந்து பூமியை இடர்ந்து எடுத்த வராஹப் பெருமான். வ்ருஶாகபி  தர்மமே உருவாயுள்ள வராஹப் பெருமான்.

கபிர்வராஹ: ஶ்ரேஶ்டஸ்ச தர்மஸ்ச வ்ருஶ உச்யதே |

தஸ்மாத்வ்ருஶாகபி ப்ராஹ காஶ்யபோ மாம் ப்ரஜாபதி: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.89)

‘கபி’ என்றால் பன்றியை (வராஹத்தை) அல்லது உத்தமமான ஒன்றைக் குறிக்கும் (மிகச்சிறந்த உத்தமமான வராஹம் என்றும் கொள்ளலாம்). தர்மத்தை ‘வ்ருஶ’ என்ற சொல் குறிக்கும். எனவே, கஶ்யபப் ப்ரஜாபதி என்னை ‘வ்ருஶாகபி’ என்ற திருநாமத்தால் அழைத்தார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

102.ஓம் அமேயாத்மனே நம:

இயானிதி இப்படிப்பட்டதென்று

மாதும் பரிச்சேதும் ‘மா’ என்றால் தீர்மானித்தல்

ந ஶக்யத இயலாது

ஆத்மா யஸ்யேதி எவருடைய தன்மையை

அமேயாத்மா பகவான் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மா என்றால் தீர்மானித்தல், அனுமானித்தல். பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாது. எனவே, பகவான் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமேயாத்மா =  – இயலாது + மா – இன்னதென்று அறிந்துகொள்ள + ஆத்மா – பகவானின் தன்மை.

———

103.ஓம் ஸர்வ யோக விநி:ஸ்ருதாய நம:

ஸர்வஸம்பந்தவினிர்கத: பகவான் எவருடனும் எந்த வித சம்பந்தமும், தொடர்புமின்றி இருப்பதால்

ஸர்வயோகவிநி:ஸ்ருத: அவர் ‘ஸர்வயோகவிநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவர் ‘ஸர்வயோகவிநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஸங்கோ ஹ்யயம் புருஶ:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் (பகவான்) எதனுடனும் தொடர்பின்றியே இருக்கிறார்.

(நானா ஶாஸ்த்ரோக்தாத் யோகாதபகதத்வாத் வா) 

நானாஶாஸ்த்ரஅல்லது, பல்வேறு சாஸ்திரங்களால்

உக்தாத் விளக்கப்பட்டுள்ள

யோக யோக சாதனங்களால்

அதபகதத்வாத் வா அவர் அறியப்படுவதால், பகவான் ‘ஸர்வ யோக விநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்தி, கர்ம, ஞானம் போன்ற) யோக சாதனங்களால் அவர் அறியப் படுவதால், பகவான் ‘ஸர்வ யோக விநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

12. வஸுர் வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶ கர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

  1. வஸு:, 105.வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
  2. அமோக:, 111.புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

104. ஓம் வஸவே நம:

வஸந்தி ஸர்வ பூதான் யத்ர எவருக்குள் அனைத்து ஜீவ ராசிகளும் வசிக்கின்றனவோ (வாழ்கின்றனவோ),

தேஶ்வயமபி வஸதீதி வா எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் (அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக) வசிக்கின்றாரோ

வஸு: அந்த பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்பட) பகவானுக்குள் வசிக்கின்றன. அனைத்து ஜீவ ராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) வசிக்கின்றார். இவ் விரண்டு காரணங்களுக்காகவும், பகவான் ‘வஸு:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

‘வஸூனாம் பாவகஸ்சாஸ்மி’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

வஸுக்களில் நான் தீ.

இத்யுக்தோ வா இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்) குறிப்பிட்டுள்ளபடி

வஸு: அக்னியின் (தீயின்) வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஸ்ரீமத் பகவத் கீதை விபூதி யோகம் என்னும் 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி) அனைத்துமாய் இருக்கும் பரம் பொருள், எட்டு வஸுக்களுள் அக்னியின் வடிவாக இருக்கிறார். எனவே, பகவான் ‘வஸு:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

——-

105.ஓம் வஸு மனஸே நம:

வஸுஶப்தேன ‘வஸு’ என்றால்

தன வாசினா செல்வம் (தனம்) என்று பொருள்

ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே (எனவே, வஸு என்ற சொல்) அனைத்திலும் சிறந்தவற்றைக் குறிக்கும்.

ப்ரஶஸ்தம் மனோ ‘மிகச்சிறந்த மனதை’ உடையவராதலால்

யஸ்ய  வஸு மனா: பகவான் ‘வஸுமனா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ராக விருப்பு

த்வேஶாதிபி வெறுப்புக்கள்

க்லேஶைர் போன்ற துன்பங்களாலும்

மதாதிபிர் கர்வம் போன்ற

உபக்லேஶைர் துன்பங்களாலும்

யதோ ந கலுஶிதம் விகாரமடையாத

சித்தம் மனமுடையவராதலால்

ததஸ்தன்மன: ப்ரஶஸ்தம் அவரது மனம் ‘மிகச் சிறந்ததாகும்’.

‘வஸு’ என்ற சொல் செல்வம் (தனம்) என்ற பொருளின் மூலம், சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறது. விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால், பகவான் ‘மிகச் சிறந்த மனமுடையவர்’ என்ற பொருளில் ‘வஸுமனா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

106.ஓம் ஸத்யாய நம:

அவிததரூபத்வாத் உண்மையே வடிவாக இருப்பதால்

பரமாத்மா ஸத்ய: பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

அவிதத என்றால் ‘பொய்யல்லாத ஒன்று’ அதாவது உண்மை என்று பொருள்.

உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம’ (தைத்ரீய உபநிஶத் 2.1.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மமானது என்றுமுள்ள ஸ்வரூபமானது (ஸத்யம்), அறிவு ஸ்வரூபமானது (ஞானம்), வரையறுக்கப் படாத ஸ்வரூபமானது (அனந்தம்).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

மூர்த்த புலன்களால் அறியப்படும் ஸ்தூல உருவங்களாகவும்

அமூர்த்தாத்மகத் வாத் வா புலன்களால் அறியப்படமுடியாத ஸூக்ஷ்ம உருவங்களாகவும் இருப்பதால்

ஸத்ய: (அனைத்துமாகவும் இருப்பதால்) பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும், ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸச்ச த்யச்சாபவத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ப்ரஹ்மம்) ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் ஆனார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத் இதி ப்ராணா: ‘ஸ’ என்ற சொல் ப்ராணனைக் குறிக்கும்,

தி இதி அன்னம் ‘த்’ என்ற சொல் அன்னத்தைக் குறிக்கும்,

யம் இதி திவாகரஸ்தேன ‘ய’ என்ற சொல் சூரியனைக் குறிக்கும்

ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய: ப்ராணன் (மூச்சுக்காற்று), அன்னம் (உணவு) மற்றும் சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்) பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘ஸ’ என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), ‘த்’ என்ற அன்னம் (உணவு) மற்றும் ‘ய’ என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸதிதி ப்ராணாஸ்தீத்யன்னம் யமித்யஸாவாதித்ய:’ (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5.6)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: ‘ஸ’ என்றால் ப்ராணன், ‘த்’ என்றால் அன்னம், ‘ய’ என்றால் சூரியன்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்ஸு ஸத்புருஷர்களுக்கு (ஸாதுக்களுக்கு)

ஸாதுத்வா நன்மையே (ஸாது) வடிவானவராய் காட்சி அளிப்பதால்

ஸத்ய: பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால், அவர் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

107.ஓம் ஸமாத்மனே நம:

ஸம ஆத்மா அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்

யஸ்ய அவரது மனம்

ராக விருப்பு

த்வேஶாதிபிர் வெறுப்பு போன்றவைகளால்

அதூஶித களங்கப்படாது இருப்பதால்

: ஸமாத்மா பகவான் ‘ஸமாத்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸர்வபூதேஶு அனைத்து ஜீவராசிகளையும்

ஸம ஏக ஒன்றாகவே சமமாக எண்ணும்

ஆத்மா வா ஆத்மா பகவான் என்பது இதன் பொருளாகும்.

பகவானின் மனம் விருப்பு, வெறுப்புக்கள் என்ற களங்கங்கள் அற்றது. எனவே, அவர் அனைத்து ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்று) ஒன்றாகவே பார்க்கிறார். எனவே, பகவான் ‘ஸமாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸம ஆத்மேதி வித்யாத்’

அந்த ஆத்மன் ஸமமானவர் என்று அறிவாயாக.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

108.ஓம் ஸம்மிதாய நம: /ஓம் அஸம்மிதாய நம:

ஸர்வைர் அனைத்து

அப்யர்தஜாதை: பதார்த்தங்களிலும்

பரிச்சின்ன: (நீக்கமற நிறைந்திருப்பதால்) பகவானை அறியமுடியுமாதலால்

ஸம்மித: பகவான் ‘ஸம்மித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸம்மித: என்றால் அளவிடமுடிந்தவர் என்று பொருள்.

பகவான் அனைத்துப் பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டு) அவரை அளவிடமுடியும், அறியமுடியுமாதலால் அவர் ‘ஸம்மித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைர் அனைத்து

அபரிச்சின்னோSமித (அனைத்திலும் நிறைந்திருந்தாலும் இவை மட்டும்தான் என்று) பகவானை அளவிடமுடியாததால்

இதி அஸம்மித: பகவான் ‘அஸம்மித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாது, அளவிடமுடியாது. எனவே, பகவான் ‘அஸம்மித:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸம்மித: என்றால் அளவிடமுடியாதவர் என்று பொருள். ஸமாத்மாஸம்மித ஸம: என்று இந்த ஸ்லோகத்தில் வருகிறது. இதை ஸமாத்மா + ஸம்மித: என்றும் பிரிக்கலாம், ஸமாத்மா + அஸம்மித: என்றும் பிரிக்கலாம். எனவே, ஆசார்யாள் இதற்கு இரண்டு விளக்கங்களையும் அளித்துள்ளார். ஆனால், பொதுவாக ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் ஸஹஸ்ரநாமத்தை நாமாவளியாக உரைக்கும்பொழுது, ‘அஸம்மித:’ (பகவான் அளவிடமுடியாதவர்) என்ற திருநாமத்தை உரைப்பதே வழக்கத்தில் உள்ளது.

———

109.ஓம் ஸமாய நம:

ஸர்வகாலேஶு அனைத்து காலங்களிலும்

ஸர்வவிகார எவ்வித மாறுபாடுகளும்

ரஹிதத்வாத் அற்றிருப்பதால்

ஸம: பகவான் ‘ஸம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும் எவ்வித மாறுபாடுகளுக்கும் உட்படுவதில்லை. எனவே, அவர் ‘ஸம:’ (எப்பொழுதும் மாறாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ‘ஸம’ என்பதற்கு எக்காலத்திலும் அவர் மாற்றமின்றி சமமாகவே இருக்கிறார் என்று பொருள்

மயா ‘ம’ என்றால்

லக்ஷ்ம்யா மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்

ஸஹ வர்தத இதி வா (மஹாலக்ஷ்மியுடன்) எப்பொழுதும் கூடியிருப்பதால்

ஸம: பகவான் ‘ஸம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ம என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மியுடன் என்றும் கூடியிருப்பதால் பகவான் ‘ஸம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ  உடன் + ம  மஹாலக்ஷ்மி = ஸம:

———–

110.ஓம் அமோகாய நம:

பூஜித: (தன்னை) வழிபட்டாலோ

ஸ்துத: துதித்தாலோ

ஸம்ஸ்ம்ருதோ வா (மனதார) நினைத்தாலோ

ஸர்வஃபலம் அனைத்துப் பலன்களையும்

ததாதி வா வாரி வழங்குவதால்

ந வ்ருதா கரோதீதி அவற்றை வீணாக்காது

அமோக: பகவான் ‘ அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடு, துதி மற்றும் அவரை மனதாற நினைத்தல் ஆகிய நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை (பகவான் அவற்றை வீணாக விடுவதில்லை). அவற்றிற்குண்டான நற்பலன்களை அவர் வாரி வழங்குகிறார். எனவே, பகவான் ‘அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவிதத உண்மையான, என்றுமே நிறைவேறக்கூடிய​

ஸங்கல்பாத் வா எண்ணம் (அல்லது விருப்பம்) உடையவராதலால்

அமோக: பகவான் ‘ அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், விருப்பங்களும் எப்பொழுதும் ஈடேறுகின்றன. எனவே, பகவான் ‘அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமோக என்ற சொல்லிற்கு, பலன்கள் மற்றும் வெற்றி என்று இரு பொருள்கள் உண்டு. முதல் அர்த்தம் ‘பலன்கள்’ (பலனளிப்பவர்) என்ற பொருளிலும் இரண்டாவது அர்த்தம் ‘வெற்றி பெருபவர்’ (தன் எண்ணங்கள் ஈடேறுவதில் தோல்வியைக் காணாதவர்) என்ற பொருளிலும் விளக்கப்பட்டிருக்கிறது.

‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மத்தின்) அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெருகின்றன

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

111.ஓம் புண்டரீகாஷாய நம:

ஹ்ருதயஸ்தம் (ஒவ்வொருவருடைய இதயத்தினுள்ளும்)

புண்டரீகம் (உள்ள) தாமரையில்

அஶ்னுதே வ்யாப்னோதி நிறைந்து

தத்ரோபலக்ஷித (அந்த இதயத் தாமரையில்) காட்சி அளிப்பதால்

இதி புண்டரீகாக்ஷ: பகவான் ‘புண்டரீகாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னை த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் ‘புண்டரீகாக்ஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புண்டரீக  இதயத்தாமரை + அஶ்னுதே – காட்சி அளிக்கிறார் = புண்டரீகாக்ஷ:

”யத்புண்டரீகம் புரமத்யஸக்ஸ்தம்’

(அந்தப் பரப்ரஹ்மம்) இதயத் தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

புண்டரீகாகாரே தாமரை இதழ்களை ஒத்த

உபே இரண்டு

அக்ஷிணீ திருக்கண்களை

அஸ்யேதி வா உடையவராதலால்

புண்டரீகாக்ஷ: பகவான் ‘புண்டரீகாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இரண்டு திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால், அவர் ‘புண்டரீகாக்ஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புண்டரீக – தாமரை (இதழ்கள்) + அக்ஷிணீ – இரண்டு திருக்கண்கள் = புண்டரீகாக்ஷ:

———–

112.ஓம் வ்ருஶகர்மணே நம:

தர்மலக்ஷணம் தர்மத்தின் உருவமாக (தர்மத்திற்கு விளக்கமாக)

கர்மாஸ்யேதி அவருடைய செயல்கள் இருப்பதால்

வ்ருஶகர்மா பகவான் ‘வ்ருஶகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செயல்கள் அனைத்தும் தர்மமே வடிவானவை. எனவே, அவர் ‘வ்ருஶகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶ – தர்மம் கர்மா – செயல்கள் = வ்ருஶகர்மா

———–

113.ஓம் வ்ருஶாக்ருதயே நம:

தர்மார்த்தம் தர்மத்திற்காக (தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டு)

ஆக்ருதி: ஶரீரம் உடலை (‘ஆக்ருதி’ என்றால் உடல் என்று பொருள்)

யஸ்யேதி  அவர் தரிப்பதால் (எவர் தரிக்கிறாரோ அந்த பகவான்)

வ்ருஶாக்ருதி: பகவான்          ‘வ்ருஷாக்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மத்திற்காகவும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம் எடுக்கிறார்). எனவே, அவர் ‘வ்ருஶாக்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶ – தர்மம் ஆக்ருதி – உடல் = வ்ருஶாக்ருதி:

‘தர்மம் ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

——–

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர் விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர் வராரோஹோ மஹா தபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:

  1. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
  2. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

114.ஓம் ருத்ராய நம:

ஸம்ஹாரகாலே இந்தப் ப்ரபஞ்சம் அழியும் ப்ரளய காலத்தில்

ப்ரஜா: அனைத்து ஜீவராசிகளையும்

ஸம்ஹரன் அவர்களை அழித்து

ரோதயதீதி (அவ்வாறு அழிக்கும் காலத்தில் அவர்களை) அழவைப்பதால்

ருத்ர: பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோதயதி என்றால் அழவைத்தல். ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்) அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார். எனவே, அவர் ‘ருத்ரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் வாக்கு அல்லது ஒலி

ராதி ததாதீதி வா ‘ராதி’ என்றால் தருபவர்

ருத்ர: பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியை) வழங்குவதால் பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் – வாக்கு + ராதி – தருபவர் = ருத்ர

ருர்துக்கம் “ரு” என்றால் துக்கம் மற்றும் துன்பத்தைக் குறிக்கும்

துக்ககாரணம் வா (அனைவரின் துன்பங்களையும் அவற்றை உருவாக்கும் அஞ்ஞானம், மோஹம் போன்ற) காரணங்களையும் த்ராவயதி வா (அவற்றை அழித்துத்) துரத்திவிடுவதால்

ருத்ர: பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் (அனைத்துத்) துன்பங்களையும், அஞ்ஞானம், மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரு – துக்கம், துன்பம் + த்ராவயதி – ஓட்டிவிடுபவர் = ருத்ர

ரோதனாத் அழவைப்பதாலும்

த்ராவணாத்வாபி தூர விரட்டுவதாலும்

ருத்ர இதயுச்யதே பகவான் ‘ருத்ரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் ‘ருத்ரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆதிசங்கரர் எவரை அழவைப்பவர், எதை ஓட்டுபவர் என்று கூறவில்லை. எனவே, இதை மேற்சொன்ன துக்க காரணங்களை அழவைத்தும், ஒட்டியும் விடுகிறார் என்று சேர்த்து பொருள் கொள்ளலாம். ஏனெனில், அடுத்து அவர் அந்த காரணத்தை விளக்கும் சிவபுராண ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

‘ருர்துக்கம் துக்கஹேதும் வா தத் த்ராவயதி ய: ப்ரபு: |

ருத்ர இதயுச்யதே தஸ்மாச்சிவ: பரமகாரணம்’ || (ஸம்ஹிதா 6 அத்யாயம் 9.14)

‘ரு’ என்றால் துன்பங்களும், அதன் மூலகாரணங்களுமாகும். அவற்றை தூர ஓட்டுவதால் அனைத்திற்கும் காரணமான பகவான் சிவன் ‘ருத்ரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶிவபுராணவசனாத் இவ்வாறு ஶிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி அத்வைதத்தில் சிவ-விஶ்ணு பேதங்கள் இல்லை. அனைத்தும் பரப்ரஹ்மமே. ஆதிசங்கரர் இதை முன்பே பூர்வ பாகத்தில் பல மேற்கோள்களைக் காட்டி ஸ்தாபித்துள்ளார். எனவே, சிவனைக் குறிக்கும் அனைத்தும் நாராயணனையேக் குறிக்கும்.

————

115.ஓம் பஹுஶிரஸே நம:

பஹுனி எண்ணிலடங்கா

ஶிராம்ஸி தலைகள்

யஸ்யேதி உடையவராதலால்

பஹுஶிரா: பகவான் ‘பஹுஶிரா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(பரப்ரஹ்மமான புருஶருக்கு) பல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.

இதி மந்த்ரவர்ணாத்  இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்) கூறியுள்ளபடி.

(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடி) எண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் ‘ பஹுஶிரா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்துமாக இருப்பதால் அனைத்துமே பகவானின் தலைகளாகும். எனவே, அவருக்கு எண்ணிலடங்கா தலைகள் உள்ளன.

———-

116.ஓம் பப்ரவே நம:

பிபர்த்தி தாங்குகிறார்

லோகானிதி அனைத்து உலகங்களையும் (இந்தப் ப்ரபஞ்சத்தையும்) 

பப்ரு: பகவான் ‘பப்ரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களையும், இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான் ‘பப்ரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

117.ஓம் விஶ்வயோனயே நம:

விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும்

காரணத்வாத் மூலகாரணமாக இருப்பதால் 

விஶ்வயோனி: பகவான் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு ‘ஓம் விஶ்வரேதஸே நம:’ என்ற 88வது திருநாமத்திற்கும் ஆச்சார்யாள் இதே உரையை எழுதியுள்ளார் (விஶ்வஸ்ய காரணத்வாத்). அங்கு ‘ரேதஸ்’ (தந்தையின் வீர்யம்), இங்கு ‘யோனி’ (தாயின் கரு). மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் இவை இரண்டும் வெவ்வேறாக இருக்கும். ப்ரபஞ்சம் பகவானிடமிருந்து நேரடியாகத் தோன்றுவதால், ப்ரபஞ்சத்திற்கு (ரேதஸ், யோனி ஆகிய) இந்த இரண்டுமே பகவான்தான். எனவே, இரண்டு திருநாமங்களுக்கும் ஒரே உரை தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால் புனருக்தி தோஷம் கிடையாது.

—————–

118.ஓம் ஶுசிஶ்ரவஸே நம:

ஶுசீனி தூய்மையானவை (தூய்மைபடுத்த வல்லவை)

ஶ்ரவாம்ஸி கேட்பது

நாமானி அவரது திருநாமங்கள்

ஶ்ரவணீயான்யஸ்யேதி கேட்கத் தகுந்தவை (கேட்பதற்கு உகந்தவை)

ஶுசிஶ்ரவா: (எனவே) பகவான் ‘ஶுசிஶ்ரவா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானது. அவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவை. எனவே, பகவான் ‘ஶுசிஶ்ரவா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுசி  தூய்மையானது + ஶ்ரவா  அவரைப் பற்றிக் கேட்பது = ஶுசிஶ்ரவா:

———–

119.ஓம் அம்ருதாய நம:

ந வித்யதே அடைவதில்லை

ம்ருதம் மரணம் ‘ம்ருதம்’ என்றால் மரணம்

அஸ்யேதி எனவே

அம்ருத: பகவான் ‘அம்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு மரணம் என்பதே கிடையாது. எனவே, அவர் ‘அம்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜரோSமர:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.25)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மமான பகவான்) மூப்பற்றவர், இறவாதவர்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————

120.ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:

ஶாஶ்வதஸ்சாஸௌ நிரந்தரமானவர்

ஸ்தாணுஸ்சேதி நிலையானவர்

ஶாஶ்வதஸ்தாணு: (எனவே) பகவான் ‘ஶாஶ்வதஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் உள்ளார், என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார். எனவே, அவர் ‘ஶாஶ்வதஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

121.ஓம் வராரோஹாய நம:

வர அழகிய 

ஆரோஹோSஅங்கோSஸ்யேதி இடையை (மடியை) உடையவராதலால் 

வராரோஹ: பகவான் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இடைப்பகுதி மிக அழகானது. எனவே, அவர் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆரோஹ என்றால் இடைப்பகுதி (அல்லது மடி)

வரம் மிகச்சிறந்த

ஆரோஹணம் ஏற்றம் (ஏற்றமான இடம்)

யஸ்மின்னிதி வா எவருடையதோ

ஆரூடனாம் எங்கு சென்றால்

புனராவ்ருத்யஸம்பவாத் (இந்த ஸம்ஸாரத்தினுள்) திரும்பி வருதல் இல்லையோ

வராரோஹ: பகவான் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை. அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் – மிகச்சிறந்த + ஆரோஹணம் – ஏறுதல் = வராரோஹ:

புனராவ்ருத்தி + அஸம்பவாத் = புனராவ்ருத்யஸம்பவாத்

‘ந ச புனராவர்த்ததே’ (சாந்தோக்ய உபநிஶத் 8.15.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த உத்தமமான இடத்தை அடைந்தவன்மீண்டும் இங்கு வருவதில்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யத் கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.6)

ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எதனை எய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

122.ஓம் மஹாதபஸே நம:

மஹத் மிகச்சிறந்த

ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும்

தபோ ‘தப’ என்றால்

ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்

மஹாதபா: பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யஸ்ய ஞானமயம் தப:’ (முண்டக உபநிஶத் 1.1.9)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின்

ப்ரதாபோ வா வீரத்தின்

தபோ காந்தி (ஒளி)

மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்

மஹாதபா: எனவே, பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் விளக்கத்தில் ‘தப’ என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் ‘தப’ என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

————–

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

123-ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |127-வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

—————-

123.ஓம் ஸர்வகாய நம:

ஸர்வத்ர எங்கும்

கச்சதீதி செல்வதால்

ஸர்வக: பகவான் ‘ஸர்வக’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்

வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்

ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் ‘ஸர்வக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

124.ஓம் ஸர்வவித்பானவே நம:

ஸர்வம் அனைத்தையும்

வேத்தி அறிவதனாலும்

விந்ததீதி வா அடைவதனாலும்

ஸர்வவித் பகவான் ‘ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார்.

பாதீதி பானு: ஒளி வீசுவதால் ‘பானு’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்’ (கதோபநிஷத் 2.2.15)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும்

பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும்

ஸர்வவித்பானு: பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

125.ஓம் விஶ்வக்ஸேனாய நம:

விஶ்வக் அவ்யயம் ‘விஶ்வ’ என்ற சொல்லிற்கு

ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள் |

விஶ்வ எங்கும்

கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று

தைத்யஸேனா அஸுரப் படைகளை

யஸ்ய எவர்

ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்

விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வ’ என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

—————-

126.ஓம் ஜனார்தனாய நம:

ஜனான் துர்ஜனான் ‘ஜன’ என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்

அர்தயதி ஹினஸ்தி அவர்களை ‘அர்தனம்’ செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார்

நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை

அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக

நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த

யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

127.ஓம் வேதாய நம:

வேதரூபத்வாத் வேதமே வடிவாக இருப்பதால்

வேத: பகவான் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதயதீதி வா அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால்

வேத: பகவான் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் பகவான் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தேஶாமேவானுகம்பார்த்தமஹமஞானஜம் தம: |

நாஶயாம்யாத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.11)

ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———

128.ஓம் வேதவிதே நம:

யதாவத் உள்ளவாறு

வேதம் வேதங்களையும்

வேதார்த்தம்  அந்த வேதங்களின் உட்பொருளையும்

வேத்தீதி அறிவதால்

வேதவித் பகவான் ‘வேதவித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும், அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார். எனவே, பகவான் ‘வேதவித்’ (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.15)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேதமுணர்ந்தோன் யானே.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஸர்வே வேதா: ஸர்வேவேத்யா: ஸஶாஸ்த்ரா:

ஸர்வே யஞ்யா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண: |

விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோ

யே தேஶாம் ஸர்வயஞ்யா: ஸமாப்தா: || (மஹாபாரதம்)

அனைத்து ஸாஸ்திரங்கள், வேதங்கள், அறியக்கூடிய (அறிய வேண்டிய) அனைத்தும், அனைத்து யாகங்களும், பூஜிக்கப்படும் அனைத்தும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனே ஆவார். ஓ அரசனே!!! பகவான் ஸ்ரீக்ருஷ்ணரை உள்ளபடி உணர்ந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியவர் ஆவர் (அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியதற்கு இணையான பலனை அவர்கள் அடைகின்றனர்).

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————–

129.ஓம் அவ்யங்காய நம:

அவ்யங்க: பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஞானாதிபி: (ஏனெனில்) ஞானம் முதலிய குணங்கள்

பரிபூர்ணோS(அ)விகல எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக உள்ளதால்

த்யுச்யதே பகவான் இவ்வாறு (அவ்யங்க: என்று) அழைக்கப்படுகிறார்.

அவரிடம், ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால், பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யங்கம் என்றால் குறைபாடு; அவ்யங்க: என்றால் குறைபாடுகள் இல்லாதவர். அவிகல = முழுமையாக

வ்யங்கோ வ்யக்திர் உருவம் (அறிதல்)

ந வித்யத அவர் அடைவதில்லை

இதி அவ்யங்கோ வா எனவே, பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு நமது பார்வையாலோ, மற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவே, பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அவ்யக்தோSயம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 2.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: தெளிதற்கரியான்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———–

130.ஓம் வேதாங்காய நம:

வேதா வேதங்கள்

அங்கபூதா யஸ்ய அவரது அங்கங்களாக இருப்பதால்

ஸ வேதாங்க: பகவான் ‘வேதாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘வேதாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

131.ஓம் வேதவிதே நம:

வேதான் வேதங்களை

வின்தே விசாரயதி ஆராய்கிறார்

இதி வேதவித் எனவே, பகவான் ‘வேதவித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை ஆராய்கிறார். எனவே, பகவான் ‘வேதவித்’ (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

128வது திருநாமத்தில் வேத – வேதங்களை + வித் – அறிகிறார் = வேதவித். இந்தத் திருநாமத்தில் வேத – வேதங்களை + வின் (விசாரயதி) = வேதவித்.

———

132.ஓம் கவயே நம:

க்ராந்ததர்ஶீ ஊடுருவிப் பார்க்கிறார்

கவி: எனவே, பகவான் ‘கவி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸர்வத்ருக் அனைத்தையும் காண்கிறார்.

பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார். எனவே, அவர் ‘கவி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹ்மத்தைத் தவிர) இங்கு காண்பவர் வேறு இல்லை.

இத்யாதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘கவிர்மனீஶி’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹ்மம்) அனைத்தையும் அறிபவன், மனதை ஆள்பவன்.

இத்யாதி மந்த்ரவர்ணாத் | இவ்வாறு மந்திரங்களும் கூறுகின்றன.

————–

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

  1. லோகாத்யக்ஷ:, 134.ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
  2. சதுராத்மா, 138.சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||

133.ஓம் லோகாத்யஷாய நம:

லோகான் அனைத்து உலகங்களுக்கும் (அதிலுள்ள ஜீவராசிகளுக்கும்)

அத்யக்ஷயதீதி தலைவரான படியால்

லோகாத்யக்ஷ: பகவான் ‘லோகாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸர்வேஶாம் அனைத்து

லோகானாம் உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்)

ப்ராதான்யேனோபத்ருஶ்டா முதன்மையான ஸ்தானத்திலிருந்து மேற்பார்வையிடுகிறார்.

பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக ‘லோகாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

134.ஓம் ஸுராத்யக்ஷாய நம:

லோகபாலாதி இந்த உலகிற்கு (மழை, வெயில் முதலிய) தேவையானவற்றை அளிக்கும் பொறுப்பில் உள்ள

ஸுராணாம் (இந்திரன், வருணன், அக்னி, சூர்யன் முதலான) தேவர்களை

அத்யக்ஷ: மேற்பார்வையிடுகிறார்

ஸுராத்யக்ஷ: எனவே, பகவான் ‘ஸுராத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார். எனவே, பகவான் ‘ஸுராத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

135.ஓம் தர்மாத்யக்ஷாய நம:

தர்மா(அ)தர்மோ (அனைவரும் செய்யும்) அறச்செயல்களையும், அறமல்லாத செயல்களையும்

ஸாக்ஷாத் ஈக்ஷதே சரிவர நோக்குகிறார் (பார்க்கிறார்)

அனுரூபம் அவற்றிற்கு (அந்தந்த செயல்களுக்கு) ஏற்ற

ஃபலம் பலன்களை

தாதும் வழங்குவதற்காக

தஸ்மாத் எனவே

தர்மாத்யக்ஷ: பகவான் ‘தர்மாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும், அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காக, சரிவர நோக்குகிறார். எனவே, அவர் ‘தர்மாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்னிரண்டு திருநாமங்களில் அத்யக்ஷ என்ற சொல் மேற்பார்வையிடுதல் என்ற பொருளில் வருகிறது. இந்தத் திருநாமத்தில் ‘பார்த்தல்’ என்ற பொருளில் வருகிறது.

தர்ம: + அதர்ம: = தர்மோதர்ம:

———–

136.ஓம் க்ருதாக்ருதாய நம:

க்ருதஸ்ச பகவான் அனைத்து செயல்களையும் செய்கிறார்

கார்யரூபேண காரிய ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில்

அக்ருதஸ்ச பகவான் எந்த செயல்களும் புரிவதில்லை

காரணரூபேணேதி காரண ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில்

க்ருதாக்ருத: எனவே அவர் ‘க்ருதாக்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார். ஆனால், அவர் செயல்களற்று இருக்கிறார். அனைத்தும் அவரே (காரியம்). எனவே, அனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம். ஆனாலும், பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்) அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லை. எனவே, அவர் செயல்களற்றும் இருக்கிறார். எனவே, பகவான் ‘க்ருதாக்ருத:’ (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தத் திருநாமம் புரிந்துகொள்ள சற்று கடினமானது. இரண்டு நேரெதிர் சொற்களை சேர்த்து ஒரே திருநாமமாக பீஷ்மாச்சார்யார் தந்துள்ளார். ஆதிசங்கர பகவத்பாதரும் இதற்கு, உபநிஶத்துக்கள் பரப்ரஹ்மமான பகவானை எவ்வாறு வர்ணிக்கின்றனவோ, அவ்வாறே விளக்கம் அளித்துள்ளார். இதைப் புரிந்து கொள்ள (மேலும் அத்வைத சாரத்தையும் அறிந்து கொள்ள) உபநிஶத்துக்களையும் அதன் விளக்கங்களையும் நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

————

137.ஓம் சதுராத்மானே நம:

ஸர்காதிஶு படைத்தல் முதலான காரியங்களுக்காக

ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர நான்கு வெவ்வேறு

ஆத்மானோ மூர்த்தயோ உருவங்கள்

யஸ்ய ஸ: எவர் எடுக்கிறாரோ, அந்த பகவான்

சதுராத்மா ‘சதுராத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘சதுராத்மா’ (நான்கு வடிவினர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ்ததைவாகிலஜந்தவ: |

விபூதயோ ஹரேரேதா ஜகத: ஸ்ருஶ்டிஹேதவ: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.31)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ப்ரஹ்மா, தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகள், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் படைக்கும் காலத்தில் பகவான் ஹரியின் தோற்றங்களாகும்.

விஶ்ணோர்மன்வாதய: கால: ஸர்வபூதானி ச த்விஜ: |

ஸ்திதேர்நிமித்தபூதஸ்ய விஶ்ணோரேதா விபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.32)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

விஶ்ணு, மனு முதலானோர், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் காக்கும் காலத்தில் பகவான் விஶ்ணுவின் தோற்றங்களாகும்.

ருத்ர: காலோSந்தகாத்யாஸ்ச ஸமஸ்தாஸ்சைவ ஜந்தவ: |

சதுர்தா ப்ரளயாயைதா ஜனார்தனவிபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.33)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ருத்ரன், காலம், யமன் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் அழிக்கும் ப்ரளய காலத்தில் பகவான் ஜனார்தனரின் தோற்றங்களாகும்.

இதி வைஶ்ணவபுராணே – இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———

138.ஓம் சதுர்வ்யூஹாய நம:

வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |

ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||

பகவான் ஜனார்தனர் (வேதங்களிலும், மற்ற ஶ்ருதிகளிலும்) மிகவும் புகழப்பெற்ற தனது வடிவத்தை வாஸுதேவர் முதலிய நான்கு வடிவங்களாக வகுத்துக் கொண்டு படைப்பு முதலிய செயல்களைப் புரிகிறார்.

இதி வ்யாஸவசனாத் ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி

சதுர்வ்யூஹ: பகவான் ‘சதுர்வ்யூஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் ‘சதுர்வ்யூஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யூஹ என்றால் வகுத்தல், அல்லது பிரித்துக் கொள்ளுதல் என்று பொருள்.

——–

139.ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:

தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ நான்கு தெற்றிப் பற்களை

யஸ்யேதி எவரிடம் உள்ளதோ

சதுர்தம்ஶ்ட்ர: (அந்த பகவான்) ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ந்ருஸிம்ஹவிக்ரஹ: ஸ்ரீநரஸிம்ஹ மூர்த்தி.

பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் ‘சதுர்தம்ஶ்ட்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது

ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தோற்ற ஒப்புமையால் கொம்புகளை

தம்ஶ்ட்ரேத்யுச்யதே பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள்

சதுர்தம்ஶ்ட்ர: பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சத்வாரி ஶ்ருங்கா:’ (ரிக்வேதே)

ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது:

(அவருக்கு) நான்கு கொம்புகள் உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

140.ஓம் சதுர்புஜாய நம:

சத்வாரோ நான்கு

புஜா திருத்தோள்களை

அஸ்யேதி உடையவராதலால்

சதுர்புஜ: பகவான் ‘சதுர்புஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் ‘சதுர்புஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த நான்குத் திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தி இருக்கும் பகவானின் திருஉருவம் மிகவும் பிரபலாமானது.

————

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. ப்ராஜிஷ்ணு:, 142.போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
  2. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

141.ஓம் ப்ராஜிஶ்ணவே நம:

ப்ரகாஶ ஒளிவடிவானவர்

ஏகரஸத்வாத் மாற்றமில்லாதவர்

ப்ராஜிஶ்ணு: எனவே, பகவான் ‘ப்ராஜிஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாற்றமில்லாத, ஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் ‘ப்ராஜிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

142.ஓம் போஜனாய நம:

போஜ்யரூபாதயா அனுபவிக்க வேண்டிய பொருளாக

ப்ரக்ருதிர் மாயா ‘ப்ரக்ருதி’ என்று அழைக்கப்படும் இந்த மாயை

போஜனம் (அந்த மாயையின் வடிவாக இருப்பதால்) பகவான் ‘போஜனம்’ என்ற திருநாமத்தால்

இத்யுச்யதே அழைக்கப்படுகிறார்.

ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளது. எனவே, ப்ரக்ருதி ‘போஜனம்’ (அனுபவிக்கப்படும் பொருள்) என்றழைக்கப்படுகிறது. பகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால், அவர் ‘போஜனம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

143.ஓம் போக்த்ரே நம:

புருஶ ரூபேண புருஷனின் வடிவில்

தாம் புங்க்தே பகவான் (அந்த ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் பொருள்களை) அனுபவிக்கிறார்

இதி போக்தா எனவே அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானே. எனவே, அவரே ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரண்டு திருநாமங்களை ஆதிசங்கரர் ப்ரக்ருதி-புருஶ தத்துவத்தைக் கொண்டு விளக்குகிறார். அனைத்தும் பரம்பொருளே. ப்ரக்ருதியின் வடிவில் அனைத்து அனுபவங்களாயும் இருப்பவரும் பகவானே. அவரே, புருஶனின் (அதாவது ஆத்மாவின் வடிவில்) அனைத்தையும் அனுபவிக்கிறார்.

பொது வழக்கில் போஜனம் என்றால் உண்ணும் உணவைக் குறிக்கும், போக்தா என்றால் உண்பவரைக் குறிக்கும். ஆனால், உண்மையில் நாம் அனைத்துப் புலன்களாலும் அனுபவிக்கும் எல்லா பொருட்களுக்குமே ‘போஜனம்’ என்றுதான் பெயர்.

—————-

144.ஓம் ஸஹிஶ்ணவே நம:

ஹிரண்யாக்ஷாதீன் ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை)

ஸஹதே வெற்றி கொள்கிறார்

அபிபவதீதி அடக்குகிறார்

ஸஹிஶ்ணு: எனவே பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹதே என்றால் வெல்பவர்; அபபவதி என்றால் அடக்குபவர்.

———————-

145.ஓம் ஜகதாதிஜாய நம:

ஹிரண்யகர்பரூபேண ‘ஹிரண்யகர்பரின்’ வடிவில்

ஜகதாதாவுத்பத்யதே இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் உதித்தார்

ஸ்வயமிதி தாமே வந்து

ஜகதாதிஜ: எனவே, பகவான் ‘ஜகதாதிஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் ‘ஜகதாதிஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

146.ஓம் அனகாய நம:

அகம் பாபங்கள்

ந வித்யதேSஸ்யேதி அவரைத் தீண்டுவதில்லை

அனக: எனவே, பகவான் ‘அனக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார். இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘அனக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக – பாபங்கள்; அனக – பாபங்களற்றவர்

‘அபஹதபாப்மா’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) பாவங்களற்றவர்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

147.ஓம் விஜயாய நம:

விஜயதே வெற்றிகொள்கிறார்

ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) ஞானம், வைராக்யம், செல்வம் போன்ற குணங்களால்

விஶ்வமிதி இந்த உலகனைத்தையும்

விஜய: எனவே, அவர் ‘விஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான, அபரிமிதமான ஞானம், வைராக்யம், செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார். எனவே, அவர் ‘விஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

148.ஓம் ஜேத்ரே நம:

யதோ ஜயத்யதிஶேதே விஞ்சி நிற்கிறார்

ஸர்வபூதானி அனைத்து ஜீவராசிகளையும்

ஸ்வபாவதோSதோ தன்னுடைய இயற்கையான தன்மையால்

ஜேதா அவர் (அந்த பகவான்) ‘ஜேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார். எனவே, அவர் ‘ஜேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முந்தைய திருநாமத்தில் குணங்களால் மேன்மை. இங்கு, அவரது இயற்கையான தன்மையாலேயே மேன்மை.

—————–

149.ஓம் விஶ்வயோனயே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சமே

யோனிர்யஸ்ய எவருடைய கர்ப்பப்பையாக (அனைத்தையும் தோற்றுவிக்கும் இடமாக) உள்ளதோ

விஶ்வஸ்சாஸௌ இந்தப் ப்ரபஞ்சமாயும்

யோனிஸ்சேதி வா அதன் தோற்றுவாயாகவும் (காரணமாயும்) இருப்பதால்

விஶ்வயோனி: பகவான் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளது. அதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார். எனவே, அவர் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும், அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 117-வது திருநாமத்தில், ‘விஶ்வயோனி:’ என்பதற்கு “ப்ரபஞ்சத்தின் காரணம்” என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, ப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டு, மற்ற உயிர்களைப் படைக்கிறார்) என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.

——————

150.ஓம் புனர்வஸவே நம:

புன: புன: மீண்டும் மீண்டும்

ஶரீரேஶு உடல்களுக்குள்

வஸதி வசிக்கிறார்

க்ஷேத்ரஞ்யரூபேணேதி (இந்த உடலை அறியும்) க்ஷேத்ரக்ஞரின் வடிவில்

புனர்வஸு: எனவே, பகவான் ‘புனர்வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே, அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார். எனவே, அவர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார். எனவே, அவர் ‘புனர்வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தில் எண்ணிறந்த ஜீவராசிகள் உள்ளன. தினந்தோறும் மென்மேலும் பிறக்கின்றன. பகவான் அந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறார்.

————————-

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:

  1. உபேந்த்ர:, 152.வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
  2. அதீந்த்ர:, 158.ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||

151.ஓம் உபேந்த்ராய நம:

இந்த்ரம் இந்திரனுக்கு

உபகதோSநுஜத்வேனேதி தம்பியாக அவதரித்தார் (இந்திரனுக்குத் தம்பி ஒருவர் கிடைத்தார்)

உபேந்த்ர: எனவே, பகவான் ‘உபேந்த்ரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்திரனுக்குத் தம்பியாக அவதரித்ததால் பகவான் ‘உபேந்திரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்திரன் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் பிறந்தவன். அவனது ஸ்வர்கலோகம் மஹாபலியால் அபகரிக்கப் பட்டது. அதிதியின் வேண்டுதலின்படி பகவான் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனனாகத் தோன்றினார். எனவே, அவர் இந்திரனின் தம்பியாவார்.

உபகதோSநுஜத்வேனேதி = உபகத: (தோன்றினார்) + அனுஜத்வேனேதி (தம்பியாக)

யத்வா அல்லது

உபரி உயர்ந்தவர் (மேம்பட்டவர்)

இந்த்ரஇந்திரனைக் காட்டிலும்

உபேந்த்ர: எனவே, பகவான் ‘உபேந்த்ரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்திரனைக் காட்டிலும் உயர்ந்தவராக (மேம்பட்டவராக) இருப்பதால், பகவான் ‘உபேந்திரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மமோபரி யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபிரீஶ்வர: |

உபேந்த்ர இதி க்ருஷ்ண த்வாம் காஸ்யந்தி புவி தேவதா: || (ஹரிவம்ஶம் 2.19.46)

இந்த ஆநிரைகள் (பசுக்கள்) தங்களை எனக்கு மேலே, எனக்கும் தலைவராக ஆக்கியுள்ளன. எனவே, தேவர்கள் இனி தங்களை உபேந்திரன் என்ற திருநாமத்தால் உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.

இதி ஹரிவம்ஶே – இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

152.ஓம் வாமனாய நம:

பலிம் மஹாபலியிடமிருந்து

வாமனரூபேண வாமனராக

யாசிதவான் (மூன்றடி மண்) தானமாக யாசித்ததால்

இதி வாமன: பகவான் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், குள்ள வடிவம் கொண்டவராய் (வாமனராய்) அவதரித்து மஹாபலியிடமிருந்து மூன்றடி மண் யாசித்ததால், அவர் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன் வேள்விகள் மூலம் பெற்ற ஆயுதங்களினாலும், தனது தான தர்மத்தின் நற்பலன்களினாலும் அனைவரையும் வென்றான். தேவேந்திரனையும் தோற்கடித்து ஸ்வர்கலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களின் தாயான அதிதியின் வேண்டுதலை ஏற்ற பகவான், அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனர் என்ற பெயருடன், குள்ள வடிவினராகத் தோன்றினார். நரஸிம்ஹ அவதாரத்தில் தான் ப்ரஹ்லாதனுக்கு அவனது வம்சத்தில் எவரையும் இனி கொல்ல மாட்டேன் வாக்களித்திருந்தபடியால், மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து, ஏழுலகங்களையும் அளந்து தனதாக்கினார். ஸ்வர்கத்தை மீண்டும் இந்திரனுக்கு அளித்தார். வந்திருப்பது பகவான் என்று தெரிந்தும், இல்லை என்று சொல்லாமல் தானம் அளித்த மஹாபலியை பாதாள உலகிற்கு அரசனாக நியமித்து, அவனுக்குக் காவலாக தானே இருந்தும் வருகிறார். மேலும், மஹாபலியே அடுத்த மன்வந்தரத்தில் இந்திரனாக நியமிக்கப்படுவான் என்ற வரத்தையும் அளித்தார். இந்த சரித்திரம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் (எட்டாவது ஸ்கந்தம்) விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஸம்பஜனீய நன்றாகப் போற்றத்தகுந்தவர்

இதி வா வாமன: எனவே, பகவான் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து போற்றுதலுக்கும் உரியவர். அவ்வாறு, நன்கு போற்றத் தகுந்தவராதலால் பகவான் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மத்யே வாமனமாஸீனம் விஶ்வேதேவா உபாஸதே | (கதோபநிஶத் 2.2.3)

கதோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

விஶ்வேதேவர்கள் (இந்த்ரியங்கள்) ஹ்ருதயத்தில் இருக்கின்ற வணங்கத்தக்கவரை (பரப்ரஹ்மத்தை, ஆத்மாவை) வழிபடுகின்றன. 

இதி மந்த்ரவர்ணாத் – இந்த உபநிஷத மந்திரத்தின் படி (வாமனர் என்றால் வணங்கத்தக்கவர், போற்றத்தக்கவர் என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது).

——–

153ஓம் ப்ராம்ஶவே நம:
ஸ ஏவ அவரே (வாமனனாய்க் அவதரித்த அவரே
ஜகத்ரயம் மூவுலகையும் க்ரமமாணதாவி அளந்தபொழுது 
ப்ராம்ஶுரபூத் இதி மிக உயர்ந்ததால் (அளவில் உயரமாக வளர்ந்ததால்
ப்ராம்ஶு: பகவான் ப்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாமனனாய் அவதரித்துமூவுலகையும் தாவி அளக்கும் பொழுது த்ரிவிக்ரமனாய் உயர்ந்து வளர்ந்ததால் பகவான் ப்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாமனன் (முந்தைய திருநாமம்என்றால் குள்ளமானவர் என்று பொருள்ப்ராம்ஶு என்றால் உயரமானவர் என்று பொருள்வாமனனாய் குள்ளமாக இருந்த பகவான் த்ரிவிக்ரமனாய் உயர்ந்தார்.
ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில்முன்பேநாம் க்ருதாக்ருத:’ என்று நேரெதிர் பொருள் கொண்ட இரண்டு சொற்கள் ஒரே திருநாமமாய் பீஷ்மாச்சார்யாரால் உரைக்கப்பட்டதைக் கண்டோம்இங்கும் (வாமன:, ப்ராம்ஶு🙂 என்று இரண்டு நேரெதிர் பொருள் கொண்ட திருநாமங்கள் அடுத்தடுத்து வருகின்றனஇவ்வாறேமேலும் பல இடங்களில் இவ்வாறு நேரெதிர் பொருள் கொண்ட திருநாமங்கள் அடுத்தடுத்து வருவதைக் காணலாம் (உதாரணமாக பயக்ருத் – பயநாஶன:, காமஹாகாமக்ருத்க்ரோதஹாக்ரோதக்ருத் …).
தோயே து பதிதே ஹஸ்தே வாமனோSபூதவாமன: |
ஸர்வதேவமயம் ரூபம் தர்ஶயாமாஸ வை ப்ரபு: ||
பூபாதௌ த்யௌஶிரஸஸ்சாஸ்ய 
சந்திராதித்யௌ ச சக்ஷுஶீ | (ஹரிவம்ம் 3.71.43-44)
ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:-(மஹாபலி மூன்றடி மண் வழங்குவேன் என்று தாரை வார்த்தநீர் வாமனரின் கையில் விழுந்த உடனேயேஅவர் அவாமனர்‘ (குள்ளமாய் இருந்த அவர் வளர்ந்து விட்டார்ஆகினார்அப்பொழுது பகவான் தன்னுடைய (அனைத்து தேவதைகளையும் தன்னுள்ளே அடக்கியவிஶ்வரூபத்தைக் காட்டினார். (அந்த விஶ்வரூபத்தில்பூமியே அவரது பாதங்கள்ஆகாயமே அவரது தலைகதிரவனும்வெண்மதியுமே அவரது திருக்கண்களாய் இருந்தன.
இத்யாதிவிஶ்வரூபம் தர்ஶயித்வா இவ்வாறு பகவானின் விஶ்வரூபம் (ஹரிவம்ஸத்தில்வர்ணிக்கப்பட்டுள்ளது.
தஸ்ய விக்ரமதோ பூமிம் சந்த்ராதித்யௌ ஸ்தானாந்தரே |
நபப்ரக்ரமமாணஸ்ய நாப்யாம் தௌ ஸமவஸ்திதௌ ||
திவமாக்ரமமாணஸ்ய ஜானுமூலே வ்யவஸ்திதௌ | (ஹரிவம்ம் 3.72.29)
 ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:-பகவான் த்ரிவிக்ரமனாய் பூமியை அளக்கும் பொழுது கதிரவனும்வெண்மதியும் அவரது மார்புக்கு அருகில் இருந்தனர்வானத்தை அளக்கும் பொழுது அவரது தொப்புள் (வயிற்றுப்பகுதியிலும்ஸ்வர்கத்தை அளக்கும் பொழுது அவரது முட்டிக்கு அருகிலும் இருந்தனர் (பகவான் அவ்வாறு வளர்ந்தார்).
இதி ப்ராம்ஶுத்வம் தர்ஶயதி ஹரிவம்ஶே இவ்வாறு பகவான் (த்ரிவிக்ரமனாய்உயரஉயர வளர்ந்தது ஹரிவம்ஸத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
—————

155.ஓம் ஶுசயே நம:

ஸ்மரதாம் அவரை நினைப்பது

ஸ்துவதாம் துதிப்பது

அர்ச்சயதாம் ச வழிபடுவது

பாவனத்வாத் (இவை அனைத்தும் நம்மிடையே உள்ள பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி) நம்மை தூய்மையாக்குகின்றன

ஶுசி: எனவே, பகவான் ‘ஶுசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நினைத்தலும், துதித்தலும் மற்றும் வழிபடுதலும் நம்மிடையே உள்ள பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி நம்மை தூய்மையாக்குகின்றன. எனவே, பகவான் ‘ஶுசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுசி என்றால் தூய்மை.

ஆதிசங்கரரின் இந்த உரைக்கு நேரடியான தமிழாக்கம் போல உள்ளது திருப்பாவையின் இந்த வரிகள்: “தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!!!”

——–

156.ஓம் ஊர்ஜிதாய நம:

பலப்ரகர்ஶஶாத்வாத் எண்ணற்கரிய பலமுடையவராதலால்

ஊர்ஜித: பகவான் ‘ஊர்ஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நினைத்தற்கரிய பலம் பொருந்தியவர். எனவே, அவர் ‘ஊர்ஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

157.ஓம் அதீந்த்ராய நம:

அதீத்யேந்த்ரம் இந்த்ரனுக்கும் மேலான

ஸ்திதோ நிலையில் இருப்பவர்

ஞானைஸ்வர்யாதிபிஞானம், செல்வம் முதலிய குணங்களால்

ஸ்வபாவஸித்தைரிதி தன்னுடைய இயல்பான

அதீந்த்ரிய: பகவான் ‘அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய இயற்கையான ஞானம், செல்வம் முதலிய குணங்களால் இந்த்ரனுக்கு மேம்பட்டவர். எனவே, அவர் ‘அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

158.ஓம் ஸங்க்ரஹாய நம:

ஸர்வேஶாம் அனைத்து ஜீவராசிகளையும்

ப்ரதிஸம்ஹாராத் (ப்ரளய காலத்தில்) அழிப்பதால்

ஸங்க்ரஹ: பகவான் ‘ஸங்க்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ஸங்க்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

159.ஓம் ஸர்காய நம:

ஸ்ருஜ்யரூபதயா படைக்கப்பட்டுள்ள அனைத்தின்  வடிவாகவும்

ஸர்கஹேதுத்வாத்வா படைப்பின் காரணமாய் இருப்பதாலும்

ஸர்க: பகவான் ‘ஸர்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைப்பின் காரணமாயும், (படைக்கப்பட்டுள்ள) ஸ்ருஷ்டியின் வடிவாகவும் தானே இருப்பதால், பகவான் ‘ஸர்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

160.ஓம் த்ருதாத்மனே நம:

ஏகரூபேண ஒரே வடிவாய்

ஜன்மாதிரஹிததயா பிறப்பொன்றுமின்றி

த்ருத ஆத்மா யேன ஸ (ஆத்மாவைக்) கொண்டுள்ளபடியால்

த்ருதாத்மா பகவான் ‘த்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பொன்றுமின்றி, என்றும் மாறாத ஒரே வடிவத்தைக் உடையவராதலால், பகவான் ‘த்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ருத என்றால் தரித்தல்; ஆத்மா – அவ்வாறு தரித்தவரைக் குறிக்கும். பகவான் என்றும் மாறாத வடிவை தரித்திருக்கிறார் என்பது இந்தத் திருநாமத்தின் பொருளாகும்.

—————-
161.ஓம் நியமாய நம:

ஸ்வேஶு அவரவரை

ஸ்வேஶ்வதிகாரேஶு அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்)

ப்ரஜா அனைவரையும்

நியமயதீதி நியமிக்கிறார்

நியம: எனவே, பகவான் ‘நியம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரையும், அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்) நியமிப்பதால், பகவான் ‘நியம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–
162.ஓம் யமாய நம:

அந்தர்யச்சதீதி அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால்

யம: எனவே, பகவான் ‘யம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால், பகவான் ‘யம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நியம: – வெளியிலிருந்து அவரவரை தத்தம் பதவியில் நியமிப்பதன் மூலம் ஆள்கிறார். யம: – அந்தர்யாமியாய் இருந்து அவர்களை உள்ளிருந்தும் ஆள்கிறார்.

————–

  1. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது:|
  1. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல:||

163.ஓம் வேத்யாய நம:

நி:ஶ்ரேயஸார்த்திபிர் மிகச்சிறந்த பலனான (மோக்ஷத்தை) விரும்புவர்களால்

வேதனார்ஹத்வாத் அறியப்படுபவர்

வேத்ய: எனவே, பகவான் ‘வேத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த பலனான மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார்.எனவே, அவர் ‘வேத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நி:ஶ்ரேயஸ் – உயர்ந்த பலன்; ஆர்த்தி – விழைபவர்கள்; வேதனார் – அறியப்படுபவர்

———-

164.ஓம் வைத்யாய நம:

ஸர்வவித்யானாம் அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்)

வேதித்ருத்வாத் அறிபவராதலால்

வைத்ய: பகவான் ‘வைத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்) அறிபவராதலால் பகவான் ‘வைத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீக்ருஷ்ண அவதாரத்தில் ஸாந்தீபனி முனிவரிடத்தில் அறுபத்து நான்கே நாட்களுள் ஆயக்கலைகள் அனைத்தையும் பயின்றார் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது.

————

165.ஓம் ஸதாயோகினே நம:

ஸதா எப்பொழுதும்

அவிர்பூத (தன் ஞானத்தால்) ப்ரகாசிக்கும்

ஸ்வரூபத்வாத் உருவமுடையவர்

ஸதாயோகி பகவான் ‘ஸதாயோகி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் ‘ஸதாயோகி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. 166.ஓம் வீரக்னே நம:

தர்மத்ராணாய தர்மத்தைக் காப்பதற்காக

வீரான் அஸுரான் அஸுர வீரர்களை

ஹந்தீதி கொல்கிறார்

வீரஹா பகவான் ‘வீரஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ‘ வீரஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினாஶாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய (ஸ்ரீமத் பகவத்கீதை)

——–

167.ஓம் மாதவாய நம:

மாயா ‘மா’ என்றால்

வித்யாயாஅனைத்து வித்தைகளும் (கல்வியும்)

பதி(அனைத்து வித்தைகளின்) தலைவராதலால்

மாதவ: பகவான் ‘மாதவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மா’ என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் ‘மாதவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 72-வது திருநாமத்தில் ‘மாதவ:’ என்பதற்கு “மஹாலக்ஷ்மியின் கணவர்”, “மது வித்யையின் மூலம் அறியப்படுபவர்”, “மௌனத்தாலும், த்யானத்தாலும், யோகத்தாலும் அறியப்படுபவர்” என்று மூன்று விளக்கங்களை அளித்திருந்தார் ஆச்சார்யர்.

மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈஶோ யதோ பவான் |

தஸ்மான்மாதவநாமாஸி தவ: ஸ்வாமீதி ஶப்தித: || (ஹரிவம்ஶம் 3.88.49)

ஹரிவம்த்தில் கூறப்பட்டுள்ளது:

பகவான் ஹரியை அறியும் வித்தைக்கு ‘மா’ என்று பெயர். தாங்கள் அதன் ஸ்வாமி; “தவ” என்ற சொல் ஸ்வாமியை (தலைவனைக்) குறிக்கும். எனவே, தாங்கள் மாதவ: என்ற திருநாமத்தால் அறியப்படுகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

——–

168.ஓம் மதவே நம:

யதா மது எவ்வாறு தேனானது

பராம் ப்ரீதிம் (தன் சுவையின் மூலம் அதை சுவைப்பவர்களுக்கு) சிறந்த இன்பத்தை

உத்பாதயதி தருகிறதோ

அயமபி ததேதி அவ்வாறே பகவானும் (தன் பக்தர்களுக்கு) இன்பமளிக்கிறார்

மது: எனவே, அவர் ‘மது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர், இன்பமளிப்பவர். எனவே, அவர் ‘மது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

169ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் ஶப்தம் முதலிய (கேட்டல்தொடுதல்பார்த்தல்சுவைத்தல்முகர்தல் ஆகிய
இந்த்ரியானாம் ஐம்புலன்களுக்கும் 
அவிஶய இதி விஶயம் ஆகாதவர் (அவற்றிற்கு எட்டாதவர்
அதீந்த்ரிய: பகவான் அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான்ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்எட்டாதவர்எனவேஅவர் அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157-வது திருநாமம் அதீந்த்ர:’ (அதி இந்த்ரன்); இந்தத் திருநாமம் அதீந்த்ரிய: (அதி இந்த்ரியம்)
—————
170ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாவிகளுக்குக் கூட 
மாயாகாரித்வாத் மாயையை விளைவிப்பவர் 
மஹாமாய: எனவேபகவான் மஹாமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவிசாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோமீறவோ இயலாதுஎனவேபகவான் மஹாமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மம மாயா துரத்யயா (ஸ்ரீமத் பகவத்கீதை 7.14)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: எனது தேவமாயை கடத்தற்கரியது.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
————–
171ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 
உத்பத்தி படைத்து 
ஸ்திதி காத்து 
லயார்த்தம் அழிப்பது (ஆகிய முத்தொழில்களை
உத்யுக்தத்வாத் மிகுந்த உற்சாகத்துடன் செய்வதால் 
மஹோத்ஸாஹ: பகவான் மஹோத்ஸாஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல்காத்தல்அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார்எனவேஅவர் மஹோத்ஸாஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
172ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 
பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 
மஹாபல: பகவான் மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
  1. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

  1. மஹாபுத்தி:, 174.மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
  2. அநிர்தேஶ்யவபு:, 178.ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

173.ஓம் மஹாபுத்தயே நம:

புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும்

புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால்

மஹாபுத்தி: பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

174.ஓம் மஹாவீர்யாய நம:

மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)

உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான

அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்

வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான ‘வீர்யம்’ ஆதலால்

மஹாவீர்ய: பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————-

175.ஓம் மஹாஶக்தயே நம:

மஹதி சிறந்த

ஶக்திஸாமர்த்யம் ‘ஶக்தி’ அல்லது திறமை உடையவர்

அஸ்யேதி எனவே

மஹாஶக்தி: பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், ‘ஶக்தி’ என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————

176.ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி மிகச்சிறந்த

த்யுதிர் ஒளி

பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும்

ச அஸ்யேதி உடையவராதலால்

மஹாத்யுதி: பகவான் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

ஜ்யோதிஶாம் ஜ்யோதி:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

177.ஓம் அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததிதி இவ்வாறானது, இத்தகையது

நிர்தேஶ்டும் தீர்மானிக்க

யன் ந ஶக்யதே இயலாத

பரஸ்மை மிக உயர்ந்த

ஸ்வஸம்வேத்யத்வாத் அறிந்து கொள்ள முடியாத

அநிர்தேஶ்யம் ‘அநிர்தேஶ்யம்’ என்று அழைப்பர்

வபுரஸ்யேதி (அத்தகைய) திருமேனியைக் கொண்டவராதலால்

அநிர்தேஶ்யவபு: பகவான் ‘அநிர்தேஶ்யவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்தகையது என்று தீர்மானிக்க இயலாத, நம்மால் அறிந்துகொள்ள முடியாது உயர்ந்த வஸ்துவிற்கு ‘அநிர்தேஶ்யம்’ என்று பெயர். அத்தகைய, (நம்மால் அறிந்துகொள்ள இயலாத) திருமேனியைக் கொண்டவராதலால் பகவான் ‘அநிர்தேஶ்யவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வபு: என்றால் திருமேனி (உடல்) என்று பொருள்.  உதாரணமாக, இரணியன் தனக்கு எவ்வாறெல்லாம் மரணம் வரக்கூடாது என்று சிந்தித்து பல வரங்களை கேட்டுப் பெற்றான். ஆயினும், அந்த வரங்களுக்கு பங்கம் வராதவண்ணம், நரம் கலந்த சிங்க உருவாக பகவான் அவதரித்து அவனை வதைத்தார். அவரது உருவம் (அதற்கு முன்பு வரை) சாதாரண புலன்களால் உணர்ந்து அறியாத ஒன்றாக இருந்தது.

———

178.ஓம் ஸ்ரீமதே நம:

ஐஸ்வர்யலக்ஷணா செல்வங்களின் வடிவான

ஸமக்ரா அனைத்து

ஸ்ரீர் திருமகள்

யஸ்ய எவரிடம் (வசிக்கிறாளோ)

அவர் (பகவான்)

ஸ்ரீமான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவே, பகவான் ‘ஸ்ரீமான்’ (திருவுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் இருப்பதால் அவர் ‘ஸ்ரீமான்’ என்று விளக்கியிருந்தார் ஆச்சார்யர். இங்கு, அனைத்து செல்வங்களுடன் திருமகள் அவருடன் இருப்பதால் ‘ஸ்ரீமான்’. அங்கு வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமாய் கூறப்பட்டது. இங்கோ, செல்வங்களுடன் உறைதல் பிரதானமாய் கூறப்பட்டுள்ளது.

————

179.ஓம் அமேயாத்மனே நம:

ஸர்வைஅனைத்து

ப்ராணிபிர் ஜீவராசிகளாலும்

அமேயா அளவிடமுடியாத

புத்திராத்மா ஞானம் (புத்தி), மற்றும் தன்மை (ஆத்மா)

யஸ்ய ஸ எவரிடம் உள்ளதோ (பகவானிடம் உள்ளதால்)

அமேயாத்மா அவர் (பகவான்) ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஞானத்தையும், தன்மையையும் யாராலும் அளவிட முடியாது. எனவே, அவர் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் ஞானமும் தன்மையும் அனைத்து ஜீவராசிகளைக்காட்டிலும் உயர்ந்ததாக, அளவிட முடியாததாக இருப்பதாலும் அவர் ‘அமேயாத்மா’.

———–

180.ஓம் மஹாத்ரித்ருஶே நம:

மஹாந்தம் மிகப் பெரிய அத்ரிம் கிரிம் மலைகளை (‘அத்ரி’ என்றால் மலை என்று பொருள்) மந்தரம் மந்தர மலை கோவர்த்தனம் ச கோவர்த்தன மலை அம்ருதமதனே பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுதும் கோரக்ஷணே ச ஆநிரைகளைக் காத்த பொழுதும் த்ருத்வான் இதி தாங்கிய படியால் மஹாத்ரித்ருக் பகவான் ‘மஹாத்ரித்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் ஶாந்தோயம் இங்கு ‘மஹாத்ருத்ருஶ்’ என்ற சொல் ‘மஹாத்ரித்ருக்’ என்று மருவியுள்ளது. பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுது மந்தர மலை, ஆநிரைகளைக் காத்த பொழுது கோவர்தனம் ஆகிய மிகப்பெரிய மலைகளைத் தாங்கியவரானதால் பகவான் ‘மஹாத்ரித்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்தர மலையைத் தாங்கியது: துர்வாசரின் சாபத்தால் முதுமையை அடைந்த தேவர்கள், பகவானின் ஆணைப்படி அஸுரர்களுடன் சேர்ந்து, மந்தர மலையை தூணாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது, மந்தர மலை பாற்கடலுக்குள் அழுந்தியது. தேவர்களின் வேண்டுதலை ஏற்ற பகவான் லக்ஷம் யோஜனை ஓடுள்ள ஒரு கூர்மமாக (ஆமையாக) அவதரித்து மந்தர மலையைத் தாங்கினார். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 8-வது ஸ்கந்தம் 7வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 1வது அம்சம் 9வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆநிரைக் காத்தது: பகவான், இந்திரனின் அகந்தையை அடக்க, ஆயர்கள் அவனுக்கு செய்யும் வேள்வியைத் தடுத்து நிறுத்தினார். கோபம் கொண்ட இந்திரன் ப்ருந்தாவனத்தின் மீது 7 நாட்கள் விடாமல் மழை பொழிந்தான். இதனால் துன்பமடைந்த ஆயர்களையும், ஆநிரைகளையும் காக்க பகவான் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் 7 நாட்கள் தாங்கினார். தன் கர்வம் தொலைந்த இந்திரன் பகவானைப் பணிந்து, அவரால் மன்னிக்கப்பட்டு மீண்டும் ஸ்வர்கத்தை அடைந்தான். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 10-வது ஸ்கந்தம் 24 மற்றும் 25வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 5வது அம்சம் 11, 12வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

————–

  1. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
  2. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

—–

  1. ஓம் மஹேஶ்வாஸாய நம:

மஹான் மிகச்சிறந்த இஶ்வாஸ வில்லை இஶுக்ஷேபோ அம்புகளை எய்யக்கூடிய யஸ்ய ஸ உள்ளவர் (ஆதலால்) மஹேஶ்வாஸ: பகவான் ‘மஹேஶ்வாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மழைநீர்ப் போல அம்புகளை வர்ஶிக்கக்கூடிய ‘ஸார்ங்கம்’ என்னும் மிகச்சிறந்த வில்லை உடையவராதலால் அவர் ‘மஹேஶ்வாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் மஹீபர்த்ரே நம:

ஏகார்ணவ ப்ரளய ஜலத்தில் (ஸமுத்ரத்தினுள்) ஆப்லுதாம் அழுந்தி வருந்தியிருந்த தேவீம் மஹீம் ச பூமாதேவியை பபாரேதி (அந்த ஸமுத்ர ஜலத்திலிருந்து) வெளிக்கொணர்ந்து, தாங்கியபடியால் மஹீபர்த்தா பகவான் ‘மஹீபர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் ஸமுத்ர ஜலத்தினுள் அழுந்தி, வருந்திக்கொண்டிருந்த பூமாதேவியை அதனின்று வெளிக்கொணர்ந்து, தாங்கிய படியால் பகவான் ‘மஹீபர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமாதேவியைக் காத்த வரலாறு: ஹிரண்யாக்ஷன் என்னும் அஸுரன் பகவானிடம் பகை கொண்டு, அவரது மனைவியான பூமாதேவியை ப்ரளய ஜலத்தினுள் வைத்தான். வராஹ அவதாரம் எடுத்த பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொன்று, பூமாதேவியை ப்ரளய கால ஸமுத்ர ஜலத்திலிருந்து மீட்டார். திருவிடந்தை போன்ற தலங்களில், பூமாதேவியை தனது மடியில் தாங்கிய வராஹ ஸ்வாமியை நாம் தரிசிக்கலாம்.

நாச்சியார் திருமொழி: பாசிதூர்ந்து கிடந்த பார்மகளை பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர்…

———-

183. ஸ்ரீநிவாஸ

யஸ்ய எவருடைய

வக்ஷஸ்ய திருமார்பில்

அநபாயினி அவரைவிட்டு என்றும் அகலாது

ஸ்ரீர்வஸதி மஹாலக்ஷ்மி வசிக்கிறாளோ

ஸ்ரீநிவாஸ: (அவர்) பகவான் ‘ஸ்ரீநிவாசன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நித்யைவேஶா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி (ஸ்ரீவிஶ்ணு புராணம்)மஹாலக்ஷ்மித் தாயார் பகவானின் மார்பை விட்டு என்றும் அகலாது வசிக்கின்றபடியால்அவர் ஸ்ரீநிவாசன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறை மார்பா (திருவாய்மொழி)

———–

184.ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் வைதிகானாம் ‘ஸத்துக்கள்’ – வேதத்தையும், அதில் கூறியுள்ள தர்மங்களையும் பின்பற்றுபவர்கள்

ஸாதூனாம் அத்தகைய ஸாதுக்களின்

புருஶார்த்தசாதன (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நால்வகை நலன்களையும்

ஹேதுவழங்குபவராய் இருப்பதால்

ஸதாம்கதி: பகவான் ‘ஸதாம்கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் ‘ஸதாம்கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்றால் காரணம், உதவி செய்பவர் என்று பொருள். சாதுக்களுக்கு அவரே கதி. எனவே, அவர்களுக்கு அனைத்தையும் பகவானே வழங்குகிறார்.

———-

185.ஓம் அநிருத்தாய நம:

ந கேனாபி ஒருபொழுதும் இயலாது

ப்ராதுர்பாவேஶு (அவர்) தோன்றுமிடத்து

நிருத்த இதி தடுத்தல்

அநிருத்த: எனவே, பகவான் ‘அநிருத்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாது. எனவே, அவர் ‘அநிருத்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை மட்டுமல்ல, அவரது ஸங்கல்பத்தையும் எவராலும் தடுக்க இயலாது.

————

186.ஓம் ஸுரானந்தாய நம:

ஸுர தேவர்களுக்கு

ஆனந்தயதீதி ஆனந்தத்தை அளிப்பதால்

ஸுரானந்த: பகவான் ‘ஸுரானந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் ‘ஸுரானந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது அனைத்து அவதாரங்களுமே தேவர்களின் துயர் துடைக்க, அவர்களது வேண்டுதலின்படியே நிகழ்கின்றன.

———– 

187.ஓம் கோவிந்தாய நம:

நஶ்டாம்வை தரணீம் பூர்வமவிந்தத்யத்குஹாகதாம் |

கோவிந்த இதி தேனாஹம் தேவைர்வாக்பிரபிஶ்டுத:’ || 

(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.70)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: நான் முற்காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை மீட்டு வந்தேன். எனவே, தேவர்கள் தங்கள் வாக்கால் என்னை ‘கோவிந்தா’ என்றழைத்து துதித்தனர்.

இதி மோக்ஷதர்மவசனாத் இந்த (மஹாபாரத) மோக்ஷ தர்மக் கூற்றின்படி

கோவிந்த: பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 ப்ரளய காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை அதனின்று மீட்டுத் தூக்கி எடுத்து வந்ததால் பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு பூமி என்று பொருள்.

 அஹம் கிலேந்திரோ தேவானாம் த்வம் க்வாமிந்த்ரதாம் கத: |

கோவிந்த இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஶ்யந்தி புவி ஶாஶ்வதம்’ || (ஹரிவம்ஶம் 2.19.45)

ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் தேவர்களின் இந்திரன். தாங்கள் பசுக்களுக்கு  இந்திரனாக உள்ளீர்கள். எனவே, பூமியில் அனைவரும் தங்களை ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் தங்களைத் துதிப்பார்கள்.

இதி இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி

கோவிந்த: பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 எவ்வாறு, இந்திரன் தேவர்களின் தலைவனோ, அவ்வாறே பகவான் (தனது க்ருஷ்ணாவதாரத்தில்) ஆநிரைகளுக்குத் தலைவராவார். எனவே, பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு ஆநிரை என்று பொருள்.

கௌரேஶா து யதோ வாணி தாம் ச விந்தயதே பவான் |

கோவிந்தஸ்து ததோ தேவ முனிபிகத்யதே பவான்’ || (ஹரிவம்ஶம் 3.88.50)

ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

‘கௌ’ என்ற சொல் வாக்கைக் (வாணி) குறிக்கும். தாங்கள் அதில் வன்மை பொருந்தியவர். எனவே, ஓ பகவானே!!! முனிவர்கள் தங்களை ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

இதி ச ஹரிவம்ஶே இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி

கோவிந்த: பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் சிறந்த வாக்குவன்மை பொருந்தியவர். எனவே, முனிவர்கள் அவரை ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி ஆகிய பொருள்.

———-

188.ஓம் கோவிதாம் பதயே நம:

கௌர்வாணி ‘கௌ’ என்றால் சொல் (இங்கு வேதம் என்று பொருள்)

தாம் விந்ததீதி கோவிதவேதத்தை நன்கு கற்றறிந்தவர்களை ‘கோவித:’ என்று அழைப்பர்

தேஶாம் அவர்களின்

பதிர்விஶேஶேணேதி (வேதமறிந்தோரை வழி நடத்தும்) தலைவரானபடியால்

கோவிதாம்பதி: பகவான் ‘கோவிதாம்பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 வேதமறிந்தோரை ‘கோவித:’ என்று கூறுவர். அத்தகையோரை வழிநடத்தும் தலைவராக இருப்பதால், பகவான் ‘கோவிதாம்பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி, ஆகிய பொருள். அதிலும், குறிப்பாக (மிகச் சிறந்த வாக்கான) வேதங்கள் என்ற பொருளில் உரை அளித்துள்ளார்.

———–

    1. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
      1. மரீசி:, 190.தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
      2. ஹிரண்யநாப:, 195.ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

       

      1. தேஜஸ்வினாமபி தேஜஸ்வாத் மரீசி: அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் ‘மரீசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

       

      தேஜஸ்வினாமபி ஒளிபொருந்தியவற்றுள்

      தேஜஸ்வாத் (அதனுள் இருக்கும்) ஒளியாய் இருப்பதால்

      மரீசி: பகவான் ‘மரீசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் ‘மரீசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை பகவானிடமிருந்து ஒளியைப் பெற்று, தாங்கள் ஒளிவிடுகின்றன. பகவான் ஒருவரே, ஸ்வயம் ப்ரகாசமாய், இயற்கையான ஒளியோடு இருக்கிறார். 

      ‘தேஜஸ்தேஜஸ்வினாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.36)

      ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

      இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

      ————-189.ஓம் மரீசயே நம:

    2. -190.ஓம் தமனாய நம:
    3. ஸ்வாதிகாராத் தங்களுடைய அதிகாரத்தினால்ப்ரமாத்யதி விளைந்த செருக்கினால்ப்ரஜா திரியும் மக்களை

      தமயிதும் அழிப்பதை

      ஶீலமஸ்ய தன்னுடைய இயற்கையாகக் கொண்டிருப்பதால்

      வைவஸ்வதாதிரூபேணேதி (விவஸ்வான் என்னும் சூரியனின் புத்திரனான) யமன் முதலிய வடிவத்தில்

      தமன: பகவான் ‘தமன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘தமன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராய் இருப்பினும் பகவானின் காலம் (காலன்) என்னும் சக்தியிடமிருந்து தப்ப இயலாது.

      189.ஓம் மரீசயே நம:

    1. 191.ஓம் ஹம்ஸாய நம:
  1. அஹம் ஸ இதி ‘நானே அவர்’ (நானே ப்ரஹ்மம்) என்று

    தாதாத்ம்யபாவினதன்னுடைய ஆத்ம பாவனையில் இருப்பவரின்

    ஸம்ஸாரபயம் ஹந்தீதி பிறவி பயத்தை போக்குவதால்

    ஹம்ஸ: பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (அஹம்ஸ: என்னும் இடத்தில்) ஹம்ஸ: என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

    ஹந்தி கச்சதி ‘ஹந்தி’ என்றால் செல்வது என்று பொருள்

    ஸர்வஶரீரேஶ்விதி வா அனைத்து உடல்களுக்குள்ளும்

    ஹம்ஸ: பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹம் ஸஶுசிஶத் (கடோபநிஷத் 2.5.2)

    கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஆகாயத்தில் சூரியனாக இருக்கிறது

    இதி மந்த்ரவர்ணாத் | இந்த கடோபநிஷத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.

    ——————-

    ————–192.ஓம் ஸுபர்ணாய நம:

    ஶோபன அழகிய

    தர்மாதர்ம ரூப தர்மம், அதர்மம் வடிவான

    பர்ணத்வாத் இறக்கைகளை உடையவர்

    ஸுபர்ண: பகவான் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

     பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

     த்வா ஸுபர்ணா (முண்டகோபநித் 3.1.1)

    முண்டகோபநித்தில் கூறப்பட்டுள்ளது: இரண்டு பறவைகள் (ஆத்மா, பரமாத்மா ஆகிய இந்த இரண்டு பறவைகளும் இந்த உடல் என்னும் மரத்தினுள் இருக்கின்றன).

    இதி மந்த்ரவர்ணாத் | இந்த முண்டகோபநிஶத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.

    ஶோபனம் அழகிய

    பர்ணம் இறக்கைகள்

    யஸ்யேதி வா உடையவர் எவரோ அவர்

    ஸுபர்ண: ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இங்கு பொதுவாக அழகிய இறக்கைகளை உடையவர் என்று கூறியிருந்தாலும், ஆதிசங்கரர் தனது ஸ்ரீமத்பகவத்கீதையின் மேற்கோளினால், பகவான் பறவைகளும் கருடனாய் இருப்பதைக் குறிக்கிறார்.

    ஸூபர்ணபததாமஸ்மி‘ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

    ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பறவைகளில் கருடன்

    இதி ஈஶ்வரவசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

—————

  1. ம்.புஜேன தோள்களினால் (கைகளினால்)கச்சதாம் செல்லும் ப்ராணிகளில் (அதாவது ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில்)உத்தமோ சிறந்தவராக இருப்பதால்

    புஜகோத்தம: பகவான் ‘புஜகோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேஷன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘புஜகோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பாம்புகள் கால்களின்றி தமது உடலால் ஊர்ந்து செல்வதால் அவை ‘புஜகம்’ என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீமத் பகவத்கீதை 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி பகவான் ஒருதலை பாம்புகளில் வாஸுகியாகவும், பலதலைகள் கொண்ட பாம்புகளில் (நாகர்களில்) அநந்தன் என்றழைக்கப்படும் ஆதிசேஷனாகவும் உள்ளார்.

    1. 194.ஓம் ஹிரண்யநாபாய நம:

    ஹிரண்யமிவ பொன்னைப்போன்று

    கல்யாணி அழகிய

    நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால்

    ஹிரண்யநாப: பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹிதரமணீய நன்மையளிக்கவல்லதும் (ஹிதம்), அழகியதுமான (ரமணீய)

    நாபித்வாத்வா தொப்புளை உடையவராதலால்

    ஹிரண்யநாப: பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அந்த தொப்புளிலிருந்தே நான்முகக் கடவுளான ப்ரஹ்மா தோன்றுகிறார். அதிலிருந்தே, அனைத்து படைப்பும் உருவாகிறது. படைப்பில்லையேல் நாம் நற்கதி அடைய இயலாது. எனவே, பகவானின் தொப்புள், நமக்கு மிகப்பெரிய நன்மையை செய்கிறது.

    1. 195.ஓம் ஸுதபஸே நம:

    வதரிகாஶ்ரமே பத்ரிகாச்ரமத்தில்

    நரநாராயணரூபேண நரன் மற்றும் நாராயணன் வடிவத்தில்

    ஶோபனம் அழகிய, மங்களகரமான

    தபஸ்சரதீதி தவம் புரிவதால்

    ஸுதபா: பகவான் ‘ஸுதபா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் ‘ஸுதபா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பத்ரிகாஸ்ரமத்தில் இன்று நாம் காணும் மூர்த்தி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளால் ஸ்தாபிக்கபட்டதாகும். இன்றும், அங்கு கேரள நம்பூதிரி வகுப்பினரே தலைமை அர்ச்சகராக உள்ளனர்.

    மனஸஸ்சேந்த்ரியாணாம் ச ஹ்யைகாக்ரயம் பரமம் தப:’

    மனம் மற்றும் புலன்களின் அடக்கமே சிறந்த தவமாகும்.

    இதி ஸ்ம்ருதேஇவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.

     

    ——————-

    196.ஓம் பத்மநாபாய நம:

    பத்மமிவ தாமரையைப் போன்று

    ஸுவர்துலா அழகிய வட்டவடிவமான

    நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால்

    பத்மநாப: பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

    ஹ்ருத்பத்மஸ்ய ஒவ்வொருவருடைய இதய கமலத்தின்

    நாபௌ மத்யே நாபியில், அதாவது அந்தத் தாமரையின் நடுவில்

    ப்ரகாஶனத்வா பகவான் ஒளியோடு வீற்றிருப்பதால் பத்மநாப: பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

    ————–197.ஓம் ப்ரஜாபதயே நம:

    ப்ராஜானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும்

    பதிபிதா பதியாக, அதாவது தந்தையாக இருப்பதால்

    ப்ரஜாபதி: பகவான் ‘ப்ரஜாபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் ‘ப்ரஜாபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இந்த உலகைப் படைப்பவர் நான்முகக்கடவுளான ப்ரஹ்மா. அவரே, அனைவருக்கும் தந்தை. பகவானோ, அந்த நான்முகனுக்கும் தந்தை. முன்பு 69-வது திருநாமத்தில், அவர் அரசன், நாம் அனைவரும் அவரது ப்ரஜைகள் என்று ஆச்சார்யர் உரை தந்திருந்தார்.

  2. 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

    ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||

    இந்த இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

    1. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
    2. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

    இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).

    1. 190.ஓம் தமனாய நம:

    ஸ்வாதிகாராத் ப்ரமாத்யதி ப்ரஜா தமயிதும் ஶீலமஸ்ய வைவஸ்வதாதிரூபேணேதி தமன: 

    தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘தமன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 191.ஓம் ஹம்ஸாய நம:

    அஹம் ஸ இதி தாதாத்ம்யபாவினஸம்ஸாரபயம் ஹந்தீதி ஹம்ஸ: 

    நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹந்தி கச்சதி ஸர்வஶரீரேஶ்விதி வா ஹம்ஸ:

    அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 192.ஓம் ஸுபர்ணாய நம:

    ஶோபன தர்மாதர்ம ரூப பர்ணத்வாத் ஸுபர்ண:

    பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஶோபனம் பர்ணம் யஸ்யேதி வா ஸுபர்ண:

    அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 193.ஓம் புஜகோத்தமாய நம:

    புஜேன கச்சதாம் உத்தமோ புஜகோத்தம:

    ஊர்ந்து செல்லும் பிராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேடன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘புஜகோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 194.ஓம் ஹிரண்யநாபாய நம:

    ஹிரண்யமிவ கல்யாணி நாபிரஸ்யேதி ஹிரண்யநாப:

    பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹிதரமணீய நாபித்வாத்வா ஹிரண்யநாப:

    அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 195.ஓம் ஸுதபஸே நம:

    வதரிகாஶ்ரமே நரநாராயணரூபேண ஶோபனம் தபஸ்சரதீதி ஸுதபா:

    நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் ‘ஸுதபா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 196.ஓம் பத்மநாபாய நம:

    பத்மமிவ ஸுவர்துலா நாபிரஸ்யேதி பத்மநாப: 

    தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

    ஹ்ருத்பத்மஸ்ய நாபௌ மத்யே ப்ரகாஶனத்வா பத்மநாப: 

    பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 197.ஓம் ப்ரஜாபதயே நம:

    ப்ராஜானாம் பதிபிதா ப்ரஜாபதி:

    பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் ‘ப்ரஜாபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  3. ——-

 

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205.துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

 

  1. 198.ஓம் அம்ருத்யவே நம:

ம்ருத்யுர் ‘ம்ருத்யு’ என்றால்

வினாஶஸ் மரணம், அல்லது அழிவு

தத்தேதுர் வாஸ்ய (தத் ஹேதுர் வாஸ்ய) அந்த மரணம் அல்லது அழிவின் காரணமும் கூட

ந வித்யதே பகவானைத் தீண்டுவதில்லை

இதி அம்ருத்யு: எனவே, பகவான் ‘அம்ருத்யு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மரணம் மட்டுமல்ல, அதன் காரணம் கூட பகவானைத் தீண்டுவது இல்லை. எனவே, அவர் ‘அம்ருத்யு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. 199.ஓம் ஸர்வத்ருஶே நம:

ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகள்

க்ருதாக்ருதம் செய்பவை, மற்றும் செய்யாதவை

ஸர்வம் ஆகிய அனைத்தையும்

பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்)

ஸ்வாபாவிகேன தனது இயற்கையான

போதேனேதி ஞானத்தால்

ஸர்வத்ருக் எனவே, பகவான் ‘ஸர்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகள் செய்பவை, செய்யாதவை ஆகிய அனைத்தையும் தன் இயற்கையான ஞானத்தால் அறிகிறார். எனவே, அவர் ‘ஸர்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்பவை – செய்யத் தகுந்ததை செய்தோமா, செய்யத் தகாததைச் செய்தோமா

செய்யாதவை – செய்யத் தகுந்ததை மறந்தோமா, செய்யத் தகாததை செய்யாதிருந்தோமா

——————-

200.ஓம் ஸிம்ஹாய நம:

ஹின்ஸதீதி அழிப்பதால்

ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தக்க காலத்தில், குறிப்பாக பாவிகளையும், அதர்மிகளையும் அழிக்கிறார். எனவே, அவர் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹிம்ஸ: என்னும் இடத்தில்) ஸிம்ஹ: என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் (ப்ருஷோராதி சூத்திரம்) மூலம் கிடைக்கிறது.

இதி நாம்னாம் த்விதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸிம்ஹ: என்னும் இந்த திருநாமம் வரையில்) இருநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 3-திருநாமங்கள்52- -100- வரை –

January 20, 2023

6-அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

—————–

  1. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:|

ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன:|

60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

———–

  1. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |

ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. 64.ஈஶான:, ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||

—————

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
  2. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

—————

10.   ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. ஸுரேஶ:, 86.ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ: |
  2. அஹ:, 91.ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

——————–

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத:  ||

இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத: 101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

————–

6-அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

52-ஓம் த்வஶ்ட்ரே நம:

ஸம்ஹாரஸமயே ஸர்வபூத தனூகாரணத்வாத் த்வஶ்டா: 

ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில் ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் தனூகாரணத்வாத் குன்றச் செய்வதால் (அழியச் செய்வதால்) த்வஶ்டா: பகவான் ‘த்வஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் ‘த்வஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வக்ஷதேஸ் இங்கு, ‘த்வக்ஷ்’ எனும் வேர்ச்சொல் தனூகரண குன்ற செய்வது அல்லது அழிப்பது அர்தாத் என்ற பொருளில் வருகிறது த்ருச் ப்ரத்யய: அதனுடன் ‘த்ருச்’ என்ற விகுதி சேர்ந்து ‘த்வஷ்டா’ என்ற திருநாமம் அமைகிறது.

—————–

  1. ஓம் ஸ்தவிஶ்டாய நம:

அதிஶயேன ஸ்தூல ஸ்தவிஶ்ட: 

அதிஶயேன மிகுந்த ஸ்தூல பருத்திருப்பதால் ஸ்தவிஶ்ட: பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தும் அவரே, அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருப்பவரும் அவரே. அவரைக் காட்டிலும் பருத்தப் பொருள் வேறொன்றுமில்லை என்ற கருத்தில் இந்த திருநாமம் அமைக்கப்பட்டுள்ளது.

———————-

54.ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:

புராண: ஸ்தவிர: வயோவசனோ வா ஸ்திரத்வாத் த்ருவ: ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்

புராண: ஸ்தவிர: ‘ஸ்தவிர:’ என்றால் மிகப்பழமையானது என்று பொருள்.

‘த்வேகம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம’ இதி பஹ்வ்ருசா

பஹ்வ்ருசரின் கூற்றின்படி: இந்தப் பழமையானதற்கு ஒரே திருநாமம் உள்ளது.

வயோவசனோ வா (அல்லது ஸ்தவிர என்றால்) வயது முதிர்ந்த என்ற பொருளும் கொள்ளலாம் ஸ்திரத்வாத் த்ருவ: நிலைபெற்றுள்ளதால் ‘த்ருவ:’ ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம் பகவானின் இவ்விரு பண்புகளையும் ஒன்று சேர்த்து ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்படுகிறது.

மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————–

  1. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:|

ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன:|

60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||

55.ஓம் அக்ராஹ்யாய நம:

கர்மேந்த்ரியைர் ந க்ருஹ்யதே இதி அக்ராஹ்ய:

கர்மேந்த்ரியைர் வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் ந க்ருஹ்யதே அறிந்துகொள்ளவோ (உணரவோ) இயலாததால் இதி அக்ராஹ்ய: பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ’ (தைத்ரீய உபநிஶத் 2.9)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எதனிடமிருந்து மனதுடன் சொற்கள் அடைய முடியாமல் திரும்புகின்றனவோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——–

56.ஓம் ஶாஶ்வதாய நம:

ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு பவதீதி ஶாஶ்வத:

ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு ‘ஶஷ்வத்’ என்றால் அனைத்து காலங்களிலும் பவதீதி தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) ஶாஶ்வத: பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶாஶ்வதம் ஶிவம் அச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எக்காலத்திலும் உள்ளவர், மங்களமானவர், தன்னிலையினின்று வழுவாதவர்…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

57.ஓம் க்ருஶ்ணாய நம:

க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |

விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

“க்ருஶி” என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள்,  ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனாத் ஸச்சிதானந்தாத்மக: க்ருஶ்ண:

இதி வ்யாஸ வசனாத் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் (மஹாபாரதத்தில் உள்ள) கூற்றின்படி ஸச்சிதானந்தாத்மக: ஸச்சிதானந்த சொரூபனான (அறிவும், இன்பமும் என்றும் நிலைபெற்றுள்ள) பகவான் விஶ்ணுவே க்ருஶ்ண: ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் க்ருஶ்ணரின் திருநாமமே ஆனந்தம்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதும் ஆனந்தம்; அதை அன்றாடம் உச்சரிப்போரின் வாழ்க்கையிலும் ஆனந்தமே; அவரது சரித்திரமும், லீலைகளும் அவரது பெயருக்கேற்ப ஆனந்தமே உருவாக உள்ளது. அவரது சரித்திரமே ஆனந்தம், படிப்பவருக்கும் ஆனந்தம், கேட்பவருக்கும் ஆனந்தம். க்ருஶ்ணனே ‘ஆனந்த மயன்’ என்றால் அது மிகையாகாது.

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா க்ருஶ்ண:

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா பகவான் கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் க்ருஶ்ண: ‘க்ருஷ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருஶாமி ப்ருதிவீம் பார்த்த பூத்வா கார்ஶ்ணாயஸோ ஹல: |

க்ருஶ்ணோ வர்ணஸ்ச மே யஸ்மாத்தஸ்மாத் க்ருஶ்ணோSஹமர்ஜுன’ || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.79)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்:

ஒ அர்ஜுனனே (பார்த்தனே)!!! நான் கரிய நுனி கொண்ட கலப்பையைப் போல பூமியை உழுகிறேன். மற்றும், கருமையான திருமேனியைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் ‘க்ருஶ்ணன்’ என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————

58.ஓம் லோஹிதாக்ஷாய நம:

லோஹிதே அக்ஷிணீ யஸ்யேதி லோஹிதாக்ஷ: 

லோஹிதே சிவந்த அக்ஷிணீ திருக்கண்கள் யஸ்யேதி உடையவர் ஆதலால் லோஹிதாக்ஷ: பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸாவ்ருஶபௌ லோஹிதாக்ஷ:

அவர் உயர்ந்தவர்; சிவந்த திருக்கண்களை உடையவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

59.ஓம் ப்ரதர்தனாய நம:

ப்ரளயே பூதானி ப்ரதர்தயதி ஹினஸ்தீதி ப்ரதர்தன: 

ப்ரளயே ப்ரபஞ்சத்தின் அழிவுக் காலத்தில் (ப்ரளயம்) பூதானி ஜீவராசிகளை ப்ரதர்தயதி ஹினஸ்தீதி அழிப்பதால் (ப்ரதர்தன என்றால் அழிப்பது என்று பொருள்) ப்ரதர்தன: பகவான் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

60.ஓம் ப்ரபூதாய நம:

ஞான ஐஶ்வர்யாதி குணை: ஸம்பன்ன: ப்ரபூத: 

ஞான ஐஶ்வர்யாதி குணை: ஞானம், செல்வம் முதலிய குணங்கள் ஸம்பன்ன: நிரம்பியவராதலால் ப்ரபூத: பகவான் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

61.ஓம் த்ரிககுப்தாம்னே நம:

ஊர்த்வாதோமத்யபேதேன திஸ்ருணாம் ககுபாமபி தாமேதி த்ரிககுப்தாம இத்யேகமிதம் நாம

ஊர்த்வாதோமத்யபேதேன மேல், நடு, கீழ் என்று பிரிக்கப்படும் திஸ்ருணாம் மூன்று ககுபாமபி இடங்களையும் தாமேதி தமது இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் த்ரிககுப்தாம பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இத்யேகமிதம் நாம (த்ரிககுப், தாம என்று இரண்டாகப் பிரிக்காமல் ‘த்ரிககுப்தாம’ என்ற) இது ஒரே திருநாமமாகும்.

ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

62.ஓம் பவித்ரே நம:

யேன புனாதி யோ வா புனாதி ரிஶிர்தேவதா வா தத் பவித்ரம் 

யேன புனாதி எவர் மூலமாக (அனைத்தும், அனைவரும்) தூய்மை படுத்தப்படுகின்றனரோ யோ வா புனாதி (அல்லது) எவர் அனைத்தையும் தூய்மையாக்க வல்லவரோ ரிஶிர்தேவதா வா தத் அந்த முனிவரையோ, தேவதையையோ பவித்ரம் ’பவித்ரம்’ என்று அழைப்பர். பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புவ: சம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 3.2.185)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல என்ற பொருளில் (அந்த செயலின் காரணியைக் குறிக்கும் வகையில்), பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

‘கர்தரி சர்ஶிதேவதயோ’ (பாணினி ஸூத்ரம் 3.2.186)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல ஒரு ரிஷியையோ அல்லது தேவதையையோ குறிக்கும் வகையில், பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

இதி பகவத்பாணினிஸ்மரணாத் இத்ரப்ரத்யய: | இந்த பாணினி சூத்திரங்களின் படி ‘பூ’ (புனிதம்) என்ற சொல்லுடன் இத்ர என்ற விகுதி சேர்ந்து ‘பவித்ர’ என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

இந்த இரு சூத்திரங்களின் படியும், பவித்ர என்ற சொல் பகவானைக் குறிக்கும். அவர் தூய்மைபடுத்தும் காரணியாகவும் இருக்கிறார், தானே அனைவரையும் தூய்மை படுத்துபவராகவும் இருக்கிறார்.

பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

63.ஓம் மங்களாய பரஸ்மை நம:

அஶுபானி நிராசஷ்டே தனோதி ஶுபஸந்ததிம் |

ஸ்ம்ருதிமாத்ரேன யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்களம் விது: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

எவரொருவரை நினைத்த மாத்திரத்திலேயே (தன்னை நினைக்கும்) மனிதனின் அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றை அதிகரிக்கிறாரோ, அந்த பரப்ரஹ்மத்தை “மங்களம்” என்று அழைக்கின்றனர்.

இதி விஶ்ணு புராண வசனாத் கல்யாணரூபத்வாத்வா மங்களம் பரம் ஸர்வபூதேப்ய: உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம மங்களம் பரம் இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்

இதி விஶ்ணுபுராண வசனாத் இந்த ஸ்ரீ விஶ்ணுபுராண வாக்கியத்தின்படி கல்யாணரூபத்வாத்வா அனைத்து நற்குணங்களும் நிறைந்திருப்பதால் மங்களம் பகவான் ‘மங்களம்’ என்று அழைக்கப்படுகிறார். பரம் ‘பரம்’ என்றால் ஸர்வபூதேப்ய: அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் (பகவான்) உயர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. மங்களம் பரம் ‘மங்களம் பரம்’ என்ற இத்யேகமிதம் நாம ஒரே திருநாமம் ஸவிஶேஶணம் இந்த இரண்டு கருத்தையும் ஒன்றிணைத்த சிறப்பான திருநாமமாகும்.

பகவான் விஶ்ணு தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, நினைப்பவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளையும், நல்லனவற்றையும் அதிகரிக்கிறார். இத்தகைய மங்களமான அனைவருக்குள்ளும் சிறந்தவராகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘மங்களம் பரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

  1. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |

ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. 64.ஈஶான:, ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||

64.ஓம் ஈஶானாய நம:

ஸர்வபூத நியந்த்ருத்வாத் ஈஶான: 

ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் நியந்த்ருத்வாத் ஆட்சி செய்வதால் (அடக்கி ஆள்வதால்) ஈஶான: பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

65.ஓம் ப்ராணதாய நம:

ப்ராணான் ததாதி சேஷ்ட்யதீதி ப்ராணத:

ப்ராணான் ததாதி ப்ராணனைத் தருவதால் சேஷ்ட்யதீதி நடமாட வைப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோ ஹ்யேவான்யாத் க: ப்ராணயாத்’ (தைத்ரீய உபநிஶத் 2.7)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஹ்ருதய ஆகாசத்திற்குள் இந்த பரப்ரஹ்மம் இல்லையென்றால்) யார்தான் மூச்சை இழுப்பார். யார்தான் மூச்சை வெளியிடுவார்கள்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராண + ததாதி = ப்ராணத:

யத்வா, ப்ராணான் காலாத்மனா த்யதி கண்டயதீதி ப்ராணத:

யத்வா, அல்லது ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) காலாத்மனா காலத்தின் உருவில் த்யதி கண்டயதீதி (த்யதி என்ற சொல்லுக்கு கண்டயதி அதாவது) அழிப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காலத்தின் உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராண + த்யதி = ப்ராணத:

ப்ராணான் தீபயதி ஷோதயதீதி வா ப்ராணத: 

ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) தீபயதி ஷோதயதீதி வா (தீபயதி  என்ற சொல்லுக்கு ஷோதயதி அதாவது) ஒளி கொடுத்துப் பிரகாசிக்கச் செய்வதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராண + தீபயதி = ப்ராணத:

ப்ராணான் ததாதி லுனாதீதி வா ப்ராணத: 

ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) ததாதி லுனாதீதி வா (ததாதி  என்ற சொல்லுக்கு லுனாதி என்ற பொருள் கொண்டு அதாவது) வெட்டுவது அல்லது அழிப்பது ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராண + ததாதி (லுனாதி) = ப்ராணத:

————-

66.ஓம் ப்ராணாய நம:

ப்ராணிதீதி ப்ராண  க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா

ப்ராணிதீதி மூச்சை ஸ்வாசிப்பவர் ப்ராண: ‘ப்ராண’ என்று அழைக்கபடுவர் க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் பரமாத்மாவே அவர்களை அவ்வாறு வழிநடத்துவதால், பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணஸ்ய ப்ராணம்’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.18)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(அந்த பரமாத்மா) ப்ராணனுக்கே ப்ராணனாய் இருப்பவர்.

அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முக்யப்ராணோ வா| பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப் ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.

காற்று இருந்தும், அதை உள்ளிழுத்து வெளியிடும் புலன் இருந்தும், பகவான் நமது அந்தர்யாமியாக இல்லாவிடில், நம்மால் ஸ்வாசிக்க முடியாது (அதாவது, உயிர் வாழ முடியாது) என்பது இதன் உட்பொருளாகும்.

—————

:67.ஒம்ஜ்யேஶ்டாய நம:

வ்ருத்ததமோ (வயதில்) மிகவும் பெரியவரை அல்லது மூத்தவரை ஜ்யேஶ்ட: ‘ஜ்யேஶ்ட’ என்று அழைக்கிறோம்.

‘ஜ்ய ச’ (பாணினி சூத்ரம் 5.3.61)

இத்யதிகாரே பாணினி ஸூத்ரத்தில் ‘ஜ்ய’ என்ற சொல்லை விளக்குகையில்

‘வ்ருத்தஸ்ய ச’ (பாணினி ஸூத்ரம் 5.3.62)

இதி வ்ருத்த ஶப்தஸ்ய இவ்வாறு ‘வயது முதிர்ந்தவர்’ என்ற பொருளில் ஜ்யாதேஶவிதானாத் ‘ஜ்ய’ என்ற சொல்லிற்கு பாணினி விளக்கம் அளிக்கிறார்.

அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால் பகவான் ‘ஜ்யேஷ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் (அனைத்திற்கும் காரணமாய் இருக்குமவர், அனைவரைக்காட்டிலும் மூத்தவர்).

————-

68.ஒம் ஶ்ரேஶ்டாய நம:

ப்ரஶஸ்ய தமமிகவும் புகழ்பெற்று விளங்குவதால் (அல்லது புகழ்பெற்று விளங்குவோர் அனைவரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பதால்) ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶ்ரேஶ்ட’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக்காட்டிலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் ‘ஶ்ரேஷ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரஶஸ்யஸ்ய ஶ்ர:’ (பாணினி சூத்ரம் 5.3.60)

இதி ஶ்ராதேவிதானாத் இவ்வாறு ‘ஶ்ர’ என்ற சொல்லிற்கு மேம்பட்ட புகழை உடையவர் என்று பாணினி விளக்கியுள்ளார்.

‘ப்ராணோ வாவ ஜ்யேஷ்டஸ்ய ஶ்ரேஷ்டஸ்ய’ (சாந்தோக்ய உபநிஶத் 5.1.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த ப்ராணனே (முக்கிய ப்ராணனாக இருப்பவரே) அனைவரைக்காட்டிலும் வயது முதிர்ந்தவர். அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முக்யப்ராணோ வா, அந்த முக்கியப் ப்ராணரே ஶ்ரேஶ்டஸ்ய’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2.4.7) அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர் (என்று) இத்யதிகரண ஸித்தத்வாத் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் இந்த கூற்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஸர்வகாரணத்வாத்வா ஜ்யேஶ்:, ஸர்வாதிஶயத்வாத்வா ஶ்ரேஶ்ட:

அனைத்திற்கும் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் ‘ஜ்யேஶ்டர்’. அனைத்திலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் ‘ஶ்ரேஶ்டர்’.

————-

69.ஒம் ப்ரஜாபதயே நம:

ஈஶ்வரத்வேன பகவான் அனைவருக்கும் அரசானாய் இருந்து ஸர்வாஸாம் அனைத்து ஜீவராசிகளையும் ஆள்வதால் ப்ரஜானாம் பதி: அவர் ப்ரஜைகளுக்குத் தலைவர், ‘ப்ரஜாபதி‘ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் பகவான் என்னும் அரசனின் குடிமக்கள் (ப்ரஜைகள்). பகவானே இந்த ப்ரஜைகளின் அரசன் (பதி). எனவேபகவான் ப்ரஜாபதி‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

70.ஒம் ஹிரண்யகர்ப்பாய நம:

ஹிரண்மயாண்டர்வர்த்தித்வாத் இந்தப் ப்ரபஞ்சம் எதிலிருந்து உருவானதோ அந்த பொன்மயமான முட்டைக்குள் இருந்ததால் ஹிரண்யகர்ப்போ ப்ரஹ்மா விரிஞ்சி: நான்முகக்கடவுளான ப்ரஹ்மா ஹிரண்யகர்ப்பர்‘ என்று அழைக்கப்படுகிறார். ததாத்மா, அந்த நான்முகக்கடவுளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் தாங்கும் இந்தப் ப்ரபஞ்சமானது ஒரு பொன்மயமான முட்டைக்குள்ளிருந்து பிறக்கிறதுஅந்த பொன்மயமான முட்டையின் உள்ளே நான்முகக்கடவுளான ப்ரஹ்மா இருக்கிறார்எனவேபொதுவாக அவர் ஹிரண்யகர்ப்பர்‘ என்று அழைக்கப்படுகிறார்பகவானோ அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்த்ராத்மாவாக இருந்து அவரை வழிநடத்துகிறார்எனவே பகவான் ஹிரண்யகர்ப்பர்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஹிரண்யகர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே’ (ரிக் வேதம் 10.121.1)

முதன்முதலில் அந்த ஹிரண்யகர்ப்பர் மட்டுமே இருந்தார்

இதி ஶ்ருதே: | இவ்வாறு ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

—————-

71.ஒம் பூகர்ப்பாய நம:

பூகர்ப்பே யஸ்ய எவருடைய கர்ப்பத்தில் இந்த பூமியும் மற்றுமுண்டான ஸகல ஸ்ருஷ்டியும் உள்ளதோ ஸ பூகர்ப்ப: அந்த பகவான் பூகர்ப்ப‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியையும், ப்ரபஞ்சத்தையும், மற்றுமுண்டான ஸகலவிதமான ஸ்ருஷ்டிகளையும் ப்ரளய காலத்தில் பகவான் தன் வயிற்றினுள் வைத்துக் காக்கிறார். இந்த பூமி (ப்ரபஞ்சம் மற்றும் அனைத்து ஸ்ருஷ்டியும்) பகவானின் கர்ப்பத்தில் உள்ளது எனக்கொள்ளலாம். எனவே பகவான் ‘பூகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

72.ஒம் மாதவாய நம:

மாயா: ‘மா’ என்ற சொல் ஶ்ரியமஹாலக்ஷ்மியைக் குறிக்கும் தவதவ‘ என்ற சொல் பதிகணவனைக் குறிக்கும் மாதவ: பகவான் மஹாலக்ஷ்மியின் கணவராதலால் அவர் மாதவன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மா‘ என்றழைக்கப்படும் திருமகளின் (மஹாலக்ஷ்மியின்) கணவராதலால் அவர் மாதவன்‘ என்று அழைக்கப்படுகிறார்.

மதுவித்யாவபோத்யத்வாத்வா மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் மாதவ: பகவான் மாதவன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் உரைக்கப்பட்டுள்ள) மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் பகவான் மாதவன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மௌனாத்த்யானாஸ்ச யோகாஸ்ச வித்தி பாரத மாதவம் |’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.4)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:

மௌனத்தாலும் (கண்டவற்றைப் பற்றி பேசாது பகவானைப் பற்றி), த்யானத்தாலும்யோகத்தாலும் பகவான் மாதவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இதி வ்யாஸவசனாத்வா மாதவ: |

ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் மாதவன் என்று அழைக்கப்படுகிறார்.

————–

73.ஒம் மதுஸூதனாய நம:

மதுநாமானமஸுரம் மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை ஸூதிதவான் அழித்ததால் (வதம் செய்ததால்) இதி மதுஸூதன: பகவான் மதுஸூதனன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை அழித்ததால் (வதம் செய்ததால்பகவான் மதுஸூதனன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கர்ணமிஶ்ரோத்பவம் சாபி மதுநாமமஹாஸுரம் |

ப்ரஹ்மணோபசித்திம் குர்வன் ஜகான புருஷோத்தம: ||

தஸ்ய தாத வதாதேவ தேவதானவமானவா😐

மதுஸூதன இத்யாஹுர் ரிஷயஸ்ச ஜனார்தனம் || (மஹாபாரதம்)

(பகவானின்) காதிலிருந்த அழுக்கிலிருந்து ‘மது’ என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய அஸுரன் தோன்றினான். (அவனால் பீடிக்கப்பட்ட) ப்ரஹ்மாவிற்கு அடைக்கலம் தந்த பகவான் அந்த அஸுரனைக் கொன்றொழித்தார். ஓ தந்தையே! அந்த வதத்தின் காரணத்தால் ஜனார்த்தனராகிய பகவானை தேவர்கள், அஸுரர்கள், மானிடர் மற்றும் முனிவர்கள் ‘மதுஸூதனன்’ என்ற பெயரினால் அழைத்தனர்.

இதி மஹாபாரதே |

இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————–

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
  2. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

74.ஓம் ஈஶ்வராய நம:

ஸர்வ ஶக்தி மத்தயா மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் ஈஶ்வர: பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்திகளுக்கு எல்லைகளே கிடையாது. அவ்வாறு, மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 36-வது திருநாமத்தில் ‘ஈஶ்வர:’ என்பதற்கு ஐஸ்வர்யம் உடையவர் என்று பொருள். இங்கு, சக்திமிக்கவர் என்று பொருள்.

————-

75.ஓம் விக்ரமிணே நம:

விக்ரம: ‘விக்ரம’ என்றால் ஸௌர்யம் சூரத்தனம் என்று பொருள் தத்யோகாத் அத்தகைய சூரத்தனம் உடையவராதலால் விக்ரமீ பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகுந்த சூரத்தனம் படைத்தவராக இருப்பதால் பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாம் பொதுவாக வீர, தீர, சூரன் என்று கூறுவது உண்டு. இவற்றின் பொருள் என்ன? வீரம் மிக்கவன் வீரன்; எதிரிகளிலும் வீரர்கள் இருப்பார்கள்; அவ்வாறு பல வீரர்கள் ஒன்றே திரண்டு வந்து எதிர்த்தாலும் தன் தைர்யத்தை இழக்காதவன் தீரன். அத்தகைய எதிரிகள் பலர் எதிர்ப்பினும், அவர்கள் அனைவரையும் வெல்பவன் சூரன். பகவான் சூரர்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவர்.

————

76.ஓம் தன்வினே நம:

தனுரஸ்யாஸ்தீதி (ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால்  தன்வீ பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ரீஹ்யாதித்வாதினிப்ரத்யய: | (தனுஸ் என்ற இந்த சொல்), ‘வ்ரீஹ்யாதி’ சொற்றொடர்களில் வருவதால் இங்கு தனு என்ற சொல்லுடன் ‘இனி’ என்ற விகுதி சேர்கிறது (வ்ரீஹ்யாதிப்யஸ்ச – பாணினி ஸூத்ரம் 5.2.116).

ராம: ஶஸ்த்ரப்ருதாமஹம் (ஸ்ரீமத் பகவத்கீதை 10.31)

படைதரித்தோரில் நான் இராமன்”

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

——-

77.ஓம் மேதாவினே நம:

மேதா ‘மேதா’ என்றால் பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை ஸா யஸ்யாஸ்தி ஸ பகவானிடம் இத்தகைய வல்லமை உள்ளதால் மேதாவீ பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஸ்மாயாமேதாஸ்ரஜோ வினி:’ (பாணினி சூத்ரம் 5.2.121)

இந்தப் பாணினி ஸுத்ரத்தின்படி மேதா என்ற சொல்லுடன் வினி என்ற விகுதி சேர்ந்து ‘மேதாவீ’ என்றாகிறது.

பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை வல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

78.ஓம் விக்ரமாய நம:

விசக்ரமே தாவி (அளந்தார்) ஜகத் விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை (ஏழு உலகங்களையும்) தேன எனவே விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன், இந்த்ரனிடமிருந்து ஸுவர்க்கத்தை அபகரிக்க, பகவான் வாமனனாய்த் தோன்றி, மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அனைத்து உலகங்களையும் தாவி அளந்தார் என்பது பிரசித்தம். வாமனன் என்று அழைக்கப்பட்ட அவரே, தாவி அளந்தபின் த்ரிவிக்ரமன் என்று அழைக்கப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

வினா கருடேன பக்ஷினா வினா என்றால் கருடப் பறவையைக் குறிக்கும் க்ரமாத்வா அதன் மீதேறி வருவதால் விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வி(வினா) + க்ரம(க்ரமாத்வா) = விக்ரம

——–

79.ஓம் க்ரமாய நம:

க்ரமனாத் (இங்கும், அங்கும்) நடக்கிறார், செல்கிறார் க்ரமஹேதுத்வாத் அனைத்து ஜீவராசிகளும் செல்வதற்கு (இயங்குவதற்கு) உதவி புரிகிறார் வா எனவே க்ரம: பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ராந்தே விஶ்ணும் (மனு ஸ்ம்ரிதி 12.121)

மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

விஶ்ணுவை (அவரது) இயக்கத்தினால் (அறியவும்)

அனைத்து இடங்களிலும் செல்வதாலும், அனைவரும் செல்வதற்கு (இயங்குவதற்கு) துணை புரிவதாலும், பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

80.ஓம் அனுத்தமாய நம:

அவித்யமான அறியப்படவில்லை (காணவில்லை) உத்தமோ சிறந்தவர் யஸ்மாத் எவரைவிட அவர் அனுத்தம: (அந்த பகவான்) ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை விட மேலானவர் எவரும் இல்லை; எனவே, பகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அ – இல்லை + உத்தம – மேலானவர் = அனுத்தம

‘யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

அவரை விட வேறானதோ, மேலானதோ வேறொன்றும் இல்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோன்ய: (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத்கீதையில் (அர்ஜுனன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணரைப் பார்த்து கூறியது): உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?

இதி ஸ்ம்ருதேஶ் | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை முதலியஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.

———-

81.ஓம் துராதர்ஶாய நம:

தைத்யாதிபிர்தர்ஶயிதும் அசுரர்கள் முதலிய தீயோரால் ந க்யத இதி அடக்கமுடியாதவராக இருப்பதால் துராதர்ஶ: பகவான் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்ஶ என்றால் அடக்குதல். துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள். பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாது. எனவே, அவர் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

82.ஓம் க்ருதக்ஞாய நம:

ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகளின் புண்யாபுண்யாத்மகம் கர்ம நல்ல (புண்ய) மற்றும் தீய (பாப, அபுண்ய) வினைகளை க்ருதம் செய்கின்ற ஜானாதீதி (உள்ளதை உள்ளபடி) அறிகின்றபடியால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார். எனவே, பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருத (செய்த நல், தீவினைகள்) + ஜானாதி = க்ருதக்ஞய

பத்ரபுஶ்பாத்யல்பமபி (துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை ப்ரயச்சதாம் (அவருக்கு) அர்ப்பணிப்போருக்கு மோக்ஷம் (அதற்கு ப்ரதியாக) முக்தியையே ததாதீதி வா தந்தருள்வதால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாக) முக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு க்ருதக்ஞய என்ற திருநாமத்திற்கு நன்றியுடையவர் என்று ஆதிசங்கரர் பொருள் உரைக்கிறார். எளிய பொருட்களை அவருக்கு அளித்தாலும், மிக்க நன்றியுடன் கிடைத்தற்கரிய முக்தியையே தந்தருள்கிறார் பகவான்.

——–

83.ஓம் க்ருதயே நம:

புருஶப்ரயத்னஅனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு க்ருதி‘க்ருதி’ என்று பொருள் க்ரியா வாசெயல்களுக்கு ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் தத் ஆதாரதயா வா அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பதால் லக்ஷ்யதே க்ருத்யேதி வா ‘க்ருதி’ என்றால் பகவானையே குறிக்கும் க்ருதி: பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு ‘க்ருதி’ என்று பொருள். அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் ‘க்ருதி’ என்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறது. எனவே, பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

84.ஓம் ஆத்மவதே நம:

ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் ஆத்மவான் பகவான் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ பகவ: கஸ்மின்ப்ரதிஶ்டித இதி ஸ்வே மஹிம்னி’ (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1) சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த பகவான் எங்கு நிலைக்கொண்டிருக்கிறார்? அவரது மஹிமையிலேயே.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

10.   ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. ஸுரேஶ:, 86.ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ: |
  2. அஹ:, 91.ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

85.ஓம் ஸுரேஶாய நம:

ஸுரானாம் தேவானாம் ஸுரர்கள் என்றால் தேவர்கள்

ஈஶஅவர்களை ஆள்பவர்

ஸுரேஶ: பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸூபபதோ வா (நன்மை என்ற பொருள்படும்) ‘ஸு’ என்ற பதத்தின் பின்னே

ராதாது: (வழங்குதல் என்ற பொருள்படும்) ‘ரா’ என்ற விகுதி சேர்ந்து

ஷோபனதாத்ருணாம் நன்மைகளைத் தருபவர்களுள்

ஈஶ: தலைசிறந்தவர்

ஸுரேஶ: (ஆதலால்) பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——-

86.ஓம் ஶரணாய நம:

ஆர்த்தானாம் துன்புற்றிருப்போரின்

ஆர்த்தி ஹரணத்வாத் துன்பங்களைத் தீர்ப்பதால்

ஶரணம் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆதிசங்கர பகவத்பாதர் ‘பக்தர்களின் துயர்களைக் களைபவர்’ என்று கூறாது ‘துன்புற்றோரின் துன்பங்களைக் களைபவர் என்று கூறியுள்ளார்’. இதன் தாத்பர்யம் என்னவெனில், பக்தர்களோ, அல்லவோ, பகவான் அனைவரது துயரங்களையும் களைகிறார். அனைவரின் துயரங்களையும் போக்கும் அவர், தன் அடியவர்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்று நாமே சற்று சிந்தித்துப் பார்த்து, பகவானிடம் தூய பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

———-

87.ஓம் ஶர்மணே நம:

பரமானந்தரூபத்வாத் அளவிடற்கரியா, உயர்ந்த ஆனந்த வடிவினராய் இருப்பதால்

ஶர்ம: பகவான் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆனந்தமே வடிவானவர். தன் அடியவர்களுக்கும் அளவிடற்கரியா ஆனந்தமாகிய முக்தியை அளிப்பவர். எனவே, அவர் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

88.ஓம் விஶ்வரேதஸே நம:

விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

காரணத்வாத் காரணமாய் இருப்பதால்

விஶ்வரேதா: பகவான் ‘விஶ்வரேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வரேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வாறு ஒரு குழந்தை தந்தையின் ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உருவாகிறதோ, அவ்வாறே, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும், பகவானின் சக்தியிலிருந்து தோன்றுகிறது. எனவே, பகவான், விஶ்வரேதா என்று அழைக்கப்படுகிறார்.

————–

89.ஓம் ப்ரஜாபவாய நம:

ஸர்வா: ப்ரஜா அனைத்து ஜீவராசிகளும்

யத்ஸகாஶாதுத்பவந்தி அவரிடமிருந்தே உருவாகின்றதால்

ஸ ப்ரஜாபவ: பகவான் ‘ப்ரஜாபவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் அவரிடமிருந்தே உருவாகின்றதால் பகவான் ‘ப்ரஜாபவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

90.ஓம் அஹ்னே நம:

ப்ரகாஶரூபத்வாத் மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால்

அஹ: பகவான் ‘அஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘அஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

91.ஓம் ஸம்வத்ஸராய நம:

காலாத்மனா ஸ்திதோ காலத்தின் உருவில்

விஶ்ணுபகவான் விஶ்ணு இருப்பதால் 

ஸம்வத்ஸர: அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால்

இத்யுக்தஅழைக்கப்படுகிறார்.

பகவான் விஶ்ணு காலத்தின் உருவில் இருப்பதால் அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

92.ஓம் வ்யாலாய நம:

வ்யாலவத் ஒரு பாம்பினைப்போல

க்ரஹீதும் அவரைப் பிடிப்பதற்கு 

அஶக்யத்வாத் இயலாதவராக இருப்பதால்

வ்யால: பகவான் ‘வ்யால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு பாம்பு வளைந்து, நெளிந்து வேகமாக நம் பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லை. எனவே, பகவான் ‘வ்யால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யால என்ற சொல்லிற்கு பாம்பு என்பது நேரிடைப்பொருள். இங்கு, ஆச்சார்யர் பகவானுக்கு பாம்பைப் போன்று எவருக்கும் எளிதில் வசப்படாத குணத்தை வைத்துப் பொருள் உரைக்கிறார்.

—————-

93.ஓம் ப்ரத்யயாய நம:

ப்ரதி இதி: ‘ப்ரதி’ என்றால்

ப்ரக்ஞ்யா அறிவு மயமானவர் என்று பொருள்

ப்ரத்யய: அந்த அறிவு மயமான பரம்பொருள் ‘ப்ரத்யய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறிவுமயமாகவே இருப்பதால் பகவான் ‘ப்ரத்யய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ (ஐத்ரேய உபநிஶத் 3.5.3)

ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

அறிவே ப்ரஹ்மமாகும் (பரம்பொருளாகும்).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————–

94.ஓம் ஸர்வதர்ஶனாய நம:

ஸர்வாணி அனைவரும் 

தர்ஶனாத்மகானி அக்ஷிணி அவருடைய பார்ப்பதற்குரிய கண்களாக இருப்பதால் 

யஸ்ய ஸ பகவான் 

ஸர்வதர்ஶன‘ஸர்வதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஸர்வாத்மகத்வாத் அவர் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவானபடியால்.

பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார். எனவே, அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார். இவ்வாறு, அனைத்தும், அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான் ‘ஸர்வதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஸ்வதஸ்சக்ஷு:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.

‘விஶ்வாக்ஷம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்துமே அவரது கண்கள்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத:  ||

இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத: 101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

95.ஓம் அஜாய நம:

ந ஜாயத எவர் பிறப்பதே இல்லையோ

இதி அஜ: அந்த பகவான் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார். எனவே, அவர் பிறப்பதில்லை. இவ்வாறு, பிறப்பே இல்லாத பகவான் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந ஜாதோ ந ஜனிஶ்யதே’

(பரப்ரஹ்மம்) முன்னர் பிறந்ததுமில்லை; இனி பிறக்கப்போவதுமில்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந ஹி ஜாதோ ந ஜாயோSஹ ந ஜனிஶ்யே கதாசன |

க்ஷேத்ரக்ஞய: ஸர்வ பூதானா தஸ்மாதஹமஜ: ஸ்ம்ருத: || 

(ஶாந்தி பர்வம் 342.74)

நான் முன்பு பிறந்தேனுமல்ல; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனி ஒருகாலத்திலும் பிறக்கப்போவதுமில்லை. நான் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறேன். அவற்றை (அந்த ஜீவராசிகளை) அறிகிறேன். எனவே, என்னை ‘அஜ:’ (பிறப்பற்றவன்) என்று கூறுகிறார்கள்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் (ஶாந்தி பர்வத்தில்) கூறப்பட்டுள்ளது.

————

96.ஓம் ஸர்வேஶ்வராய நம:

ஸர்வேஶாம் அனைத்து

ஈஶ்வராணாம் ஈஶ்வரர்களுக்கும் (அனைவரையும் ஆள்பவர்களுக்கும்)

ஈஶ்வரஈஶ்வரனாக இருப்பதால் (அந்த ஈஶ்வரர்களையும் ஆள்பவராக இருப்பதால்)

ஸர்வேஶ்வர: பகவான் ‘ஸர்வேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உலகில் சாதாரணமாக தலைவர்கள், அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும், தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறு, ப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால், பகவான் ‘ஸர்வேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

‘ஏஶ ஸர்வேஶ்வர:’ (மாண்டூக்ய உபநிஶத் 6)

இவர் (பரப்ரஹ்மம்) அனைத்தையும் ஆள்பவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

97.ஓம் ஸித்தாய நம:

நித்ய எக்காலத்திலும் (என்றென்றும்)

நிஶ்பின்ன ரூபத்வாத் முழுமையானவராகவும், பூரணமானவராகவும், குறைபாடற்றவராகவும் இருப்பதால்

ஸித்த: பகவான் ‘ஸித்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும், எல்லாவற்றிலும் முழுமையானவராகவும், அனைத்தையும் அடையப்பெற்றவராகவும், குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் ‘ஸித்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸித்தி என்றால் அடையப்படக்கூடியவை. ஸித்தன் என்றால் அவை அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள். பகவான் அனைத்தையும் எல்லா காலங்களிலும், முழுமையாக அடைந்துள்ளதால் அவர் ஸித்த: என்று அழைக்கப்படுகிறார்.

———–

98.ஓம் ஸித்தயே நம:

ஸர்வவஸ்துஶு அனைத்துப் பொருட்களிலும் (அனைவருக்குள்ளும்)

ஸம்வித்ரூபத்வாத் ஞான வடிவாய் இருப்பதாலும்

நிரதிஶயரூபத்வாத் அனைத்திலும் சிறந்தவராய் இருப்பதாலும்

ஃபலரூபத்வாத் வா அனைவருக்கும் அவரவரது வினைப்பயங்களுக்கு ஏற்ப அடையப்படக்கூடிய பலனாயும் இருப்பதால்

ஸித்தி: பகவான் ‘ ஸித்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வர்காதீனாம் சுவர்க்கலோகம் முதலிய பலன்கள்

வினாஶித்வாத் நிரந்தரமானவை அல்ல; அவை (கல்பத்தின் முடிவில்) அழியக்கூடியவை 

அஃபலத்வம் எனவே, அவை உண்மையில் பலன்களே அல்ல (பகவானே அடையத் தகுந்த, நிரந்தர பலனாவார். மற்றவை எல்லாம் அழியக்கூடியவை. அவற்றில் பற்றுக் கொள்ளுதல் கூடாது என்பதே இந்த வாக்கியத்தின் தாத்பர்யமாகும்).

பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் ‘ஸித்தி:’ (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.

———

99-ஓம் ஸர்வாதயே நம:

ஸர்வபூதானாம் அனைத்து ஜீவராசிகளின்

ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய் இருப்பதால்

ஸர்வாதி: பகவான் ‘ஸர்வாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

100.ஓம் அச்யுதாய நம:

ஸ்வரூபஸாமர்த்யான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து)

ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை

ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை

இதி அச்யுத: எனவே, பகவான் ‘அச்யுதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே, அவர் ‘அச்யுதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார். 

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ததா ச பகவத்வசனம் | மேலும், பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:

‘யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா’

நான் என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே, நான் “அச்யுதன்” ஆவேன்.

இதி | இவ்வாறு பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.

இதி நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத: என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 2-திருநாமங்கள்1- -51- வரை –

January 20, 2023

அத ஸஹஸ்ரநாம

(இனி) சஹஸ்ரநாம உரை தொடங்குகிறது

அத்ர நாமஸஹஸ்ரே இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்யாதி ஶப்தாநாமர்தாந்தரே ஆதித்ய முதலான நாமங்கள் ப்ரஸித்தானாமாதித்யாத்யர்த்தானாம் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும் தத்விபூதித்வேன அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடு ஆனதாலும் ததபேதாத்  அந்த பரம்பொருளினின்று வேறானதில்லையாதலாலும் (ப்ரஹ்மம் ஒன்றே என்பது அத்வைதக் கொள்கையாகும்எனவேஅந்தப் பரம்பொருளினின்று வேறானது எதுவுமில்லை) தஸ்யைவ ஸ்துதிரிதி ப்ரஸித்தார்த்தக்ரஹனேSபி தத்ஸ்துதித்வம் அந்த திருநாமங்களின் ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது |

இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்ய முதலான நாமங்கள் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும், அவையும் (அந்த சூரியன் முதலானவையும்) அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் (விபூதியின்) வெளிப்பாடேயாகும். பரம்பொருளுக்கும், இந்த உலகில் நாம் காணும் மற்ற பொருள்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லாததால், அந்த (ஆதித்ய முதலான) திருநாமங்களின் (சூரியன் முதலான) ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் | ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், பருப்பொருள், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய ஐந்து வடிவங்களாகவும் தாங்களே இருக்கிறீர்.

ஜ்யோதீம்ஶி விஶ்ணுர்புவனானி விஶ்ணுர்வனானி விஶ்ணுர்கிரயோ திஶஸ்ச | நத்ய: ஸமுத்ராஸ்ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்ய || (விஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-நக்ஷத்திரங்கள் விஶ்ணு, உலகம் விஶ்ணு, வனம், மலைகள், திசைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் விஶ்ணுவேயாகும். ஹே அந்தணரில் சிறந்தோரே! இங்கு உள்ளவை, அல்லவை அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளே ஆகும்.

இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யானாம் அஹம் விஶ்ணு: (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21) ஆதித்தியர்களில் நான் விஶ்ணு

இத்யாரப்ய இது தொடக்கமாக

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |-விஶ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.42)

அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி பர்யந்தம் கீதாயாம் இது (1௦.42 ஸ்லோகம்) ஈறாக, ஸ்ரீமத் பகவத்கீதையிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்மைவேதம் விஶ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12) இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.1.10) இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இதி ஸ்ருதிஸ்ச இவ்வாறு ஸ்ருதியிலும் (வேதங்களிலும்) கூறப்பட்டுள்ளது.

புனருக்தி தோஷம்: ஸஹஸ்ரநாமம் எனும்போது ஆயிரம் நாமங்களை கூறவேண்டும். ஒரே நாமத்தை ஆயிரம் முறை கூறலாகாது. ஆனால், ஸஹஸ்ரநாமத்தில் சில திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன (உதாரணத்திற்கு விஶ்ணு). அவற்றிற்கு உரை எழுதும் பொழுது அர்த்தத்தில் வேறுபாடு காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவை தனித்த திருநாமமாக ஏற்றுக்கொள்ள படமாட்டாது (ஆயிரம் எண்ணிக்கையும் வராது). இதை புனருக்தி தோஷம் என்பர். எனவே, இங்கு ஆதிசங்கர பகவத்பாதர், தமது சஹஸ்ரநாம உரையில் அவ்வாறு புனருக்தி தோஷங்கள் இல்லை என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார்.

மேலும், இவ்வாறு பலமுறை வரும் திருநாமங்களுக்கு உரை எழுதுகையில், முதன் முறை வரும்பொழுதே அதன் மற்ற பொருள்களையும் கொடுத்துள்ளார். அந்த பொருட்களில் ஒரு சிலவற்றை அதே திருநாமம் பின்னர் வரும்பொழுது எடுத்தாள்கிறார். இதை புனருக்தி தோஷமாக கருத இயலாது. முதன் முறை வரும் திருநாமத்திற்கு (அவர் கூறியுள்ள பல பொருட்களில்) முதல் பொருளையும், மற்ற பொருள்களை பின்வரும் இடங்களுக்குமாக நாம் கருதவேண்டும். 

விஷ்ண்வாதிஷப்தானாம் புனருக்தானாமபி வ்ருத்திபேதே-நார்த்தபேதான்ன பௌனருக்த்யம் |

விஶ்ணு முதலிய திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வரும்போதும், அந்த திருநாமத்தின் பொருளில் (ஒவ்வொரு இடத்திலும்) வேறுபாடுகள் உள்ளதால் புனருக்தி தோஷம் இல்லை.

ஸ்ரீபதிர்மாதவ இத்யாதீனாம் வ்ருத்யேகத்வேSபி ஶப்தபேதான்ன பௌனருக்த்யம் |

ஸ்ரீபதி, மாதவ முதலிய திருநாமங்களின் பொருள் ஒன்றை இருப்பினும் அந்த நாமங்கள் வெவ்வேறாய் இருப்பதனால் புனருக்தி தோஷம் இல்லை.

அர்த்தைகத்வேSபி ந பௌனருக்த்யம் தோஷாய, நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய கிமேகம் தைவதமிதி ப்ருஶ்டேரேக-தைவதவிஶயத்வாத்|

இந்த விஶ்ணு சஹஸ்ரநாமமே, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற கேள்வியிலிருந்து ஒரே பரம்பொருளின் விஷயமாகப் பிறந்தது. எனவே, பல திருநாமங்களின் பொருள் ஒன்றாய் இருப்பினும் புனருக்தி தோஷம் வருவதில்லை.

யத்ர ஃபுல்லிங்கஶப்தப்ரயோகஸ்தத்ர விஶ்ணுர்விஶேஶ்ய:

(இந்த சஹஸ்ரநாமத்தில்) ஆண்பால் திருநாமங்கள் பரப்ரஹ்மத்தின் விஶ்ணு ஸ்வரூபத்தையும்

யத்ர ஸ்திரீலிங்கஶப்தஸ்தத்ர தேவதா விஶேஶ்யதே

பெண்பால் திருநாமங்கள் மற்ற பரப்ரஹ்மத்தின் மற்ற தேவதை ஸ்வரூபத்தையும்

யத்ர நபும்ஸகலிங்கஶப்தஸ்தத்ர ப்ரஹ்மேதி விஶேஶ்யதே |

(ஆண்பாலும் இல்லாமல் பெண்பாலும் இல்லாமல்) பொதுவான திருநாமங்கள் (நேரடியாக) பரப்ரஹ்மத்தை குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டும்.

யத: ஸர்வாணி பூதானி (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 11) எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ…

இத்யாரப்ய ஜகதுத்பத்தி ஸ்திதிலயகாரணஸ்ய ப்ரஹ்மண ஏக தைவதத்வேனாபிஹிதத்வாதாதாவுபயவிதம் ப்ரஹ்ம விஶ்வஶப்தே-நோச்யதே

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் 11) இது தொடக்கமாக இந்த உலகின் தோற்றம், காத்தல் மற்றும் அழிவின் காரணமாய் உள்ள ப்ரஹ்மமே ஒரே முழுமுதற் கடவுளாக (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) கூறப்பட்டுள்ளது. எனவே (காரண  மற்றும் காரிய) ப்ரஹ்மம் முதலில் “விஶ்வ” எனும் திருநாமத்தால் (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) அழைக்கப் படுகிறார்.

—————-

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||
——–

  1.  பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |அவ்யய: புருஶ: சாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி😐
  2. அவ்யய: 14.புருஶ: 15.சாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர ஏவ ச ||

—————

3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||

இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யோக: 19.யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
  2. நாரஸிம்ஹவபு: 22.ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||

————–

  1. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |

ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபு ரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸர்வ: 26.ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
  2. ஸம்பவ: 32.பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

—————

  1. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
    அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

    இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

    37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
    42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: |

————————

  1. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

——————

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||
இவற்றில் விஸ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். 

ஓம் விஶ்வஸ்மை நம:

விஶ்வம் என்ற இந்த முதல் திருநாமத்திற்கு ஆதிசங்கரர் கீழ்கண்ட 5 விளக்கங்களை அளித்துள்ளார்.

ஜகத: காரணத்வேனவிஶ்வம்இத்யுச்யதே ப்ரஹ்ம |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

1. விஶ்வஸ்ய ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம ஆதௌ து விஶ்வமிதி கார்யஶப்தேன காரணக்ரஹனம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி உபபன்னா ஸ்துதிர்விஶ்ணோரிதி தர்ஶயிதும்

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பரப்ரஹ்மமான பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்), முழுமுதல் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம். இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன (ஏனெனில், ப்ரஹ்மாவும் பரப்ரஹ்மமான விஶ்ணுவே)

விஶ்வஸ்ய ஜகத: விஶ்வம் என்று அழைக்கப்படும் இந்த பிரபஞ்சத்தின் காரணத்வேன காரணமாய் இருப்பதால் விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தை விஶ்வம் என்று அழைக்கின்றனர் |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதௌ து முழுமுதல் விஶ்வமிதி கார்யஶப்தேன விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்காரணக்ரஹனம் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் உபபன்னா ஸ்துதிர்விஷ்ணோரிதி தர்ஶயிதும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன |

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம்பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா, அல்லது பரஸ்மாத் புருஶான்ன பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் (அ)பின்னமிதம் ஒன்றியே (அதனின்று வேறுபடாதுவிஶ்வம் இந்த பிரபஞ்சமானது இருப்பதால் பரமார்த்ததஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம விஶ்வம் என்று பரப்ரஹ்மத்தை அழைக்கின்றனர் |

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மைவேதம் விஷ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஷ்வம் (முண்டக உபநிஶத் 2.1.1௦)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இத்யாதி ஸ்ருதிப்யஸ்தத்பின்னம் ந கிஞ்சித் பரமார்த்தத: சதஸ்தி |

இந்த (முண்டகோபனிஷத்) ஸ்ருதி வாக்கியங்களின் மூலம், ப்ரஹ்மத்தைத் தவிர்த்து (இந்த பிரபஞ்சத்தில்) வேறொன்றும் இல்லை என்பது விளங்கும்.

அதவா அல்லது விஶதீதி புகுவதனால் விஶ்வம் இந்த ப்ரபஞ்சத்தினுள் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத் ஸ்ருஶ்டா ததேவானுப்ராவிஶத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ (பரப்ரஹ்மம்) அவற்றைப் படைத்து அதிலேயே நுழைந்தார்.

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) வாக்கியம் கூறுகின்றது.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கிஞ்ச ஸம்ஹ்ருதௌ பிரளய காலத்தில் விஶந்தி சென்று லயமடைவதால் ஸர்வாணி பூதான்யஸ்மின்னிதி இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் விஶ்வம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

‘யத் ப்ரயந்த்யபிஸம்விஶந்தி’ (தைத்ரீய உபநிஶத் 3.1)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ இறப்பவை அனைத்தும் எதை (எந்த ப்ரஹ்மத்தை) சென்றடைகின்றனவோ…

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) ஸ்ருதி வாக்கியம் கூறுகின்றது.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ததா ஹி ஸகலம் ஜகத் அனைத்து பிரபஞ்சத்தையும் கார்யபூதமே விஶத்யத்ர சாகிலம் அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும் விஶதீத்யுபயதாபி பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும் விஶ்வம் ப்ரஹ்ம இதி பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம்விஶ்வம் பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இனி ஆச்சர்யாள் அளிக்கும் பற்பல மேற்கோள்களிலிருந்து ஒரு சிலவற்றை இன்று காண்போம்.

‘அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மாத்’ (கடோபநிஶத் 1.2.14) இத்யாரப்ய கடோபநிஷத்தில் (அந்த ப்ரஹ்மானது) தர்மத்திற்கும் வேறான, அதர்மத்திற்கும் வேறான என்று (ப்ரஹ்மத்தை) விவரிக்கத் தொடங்குமிடத்து,

‘ஸர்வே வேதா யத்பதமாமனந்தி

தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி

தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவீம்யோமித்யேதத்’ || (கடோபநிஶத் 1.2.15)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எல்லா வேதங்களும் எந்த இலக்கைப் பற்றி பேசுகின்றனவோ, எதற்காக அனைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசை கொண்டு ஸாதகர்கள் ப்ரஹ்மச்சர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த இலக்கை உனக்கு சுருக்கமாக உரைக்கிறேன்: அது “ஓம்” என்பதே ஆகும்.

‘ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம் |

ஏதத்த்யேவாக்ஷரம் ஞாத்வா யோ எதிச்சதி தஸ்ய தத்’ || (கடோபநிஶத் 1.2.16)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஓம்) என்ற இந்த ஒரு எழுத்தே சகுணப்ரஹ்மம், இந்த எழுத்தே நிர்குண ப்ரஹ்மம். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது (கிடைக்கிறது).

இதி காடகே இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஏதத்வை சத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.2) 

ப்ரஶ்ன உபநிஶத் கூறப்பட்டுள்ளது: ‘ஹே சத்யகாமனே!! இந்த ஓம்காரமே பர (நிர்குண) மற்றும் அபர (ஸகுண) ப்ரஹ்மமாகும்’.

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ய: புனரேதம் த்ரிமாத்ரேனோமித்யேதேனைவாக்ஷரேன பரம் புருஶமபித்யாயீத’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.5)

எவரொருவர் மூன்று மாத்திரை அளவுள்ள இந்த ஓம் எனும் அக்ஷரத்தால் பரம புருஶனை த்யானிக்கின்றனரோ (அவர்கள் முக்தியை அடைகின்றனர்).

இதி ப்ரஶ்னோபநிஶதி இவ்வாறு  ப்ரஶ்னோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஒமிதி ப்ரஹ்ம | ஒமிதீதம் ஸர்வம் |’ (தைத்ரீய உபநிஶத் 1.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்ற ப்ரணவமே ப்ரஹ்மமாகும். ஓம் என்ற ப்ரணவமே அனைத்துமாகும்’.

இதி யஜுர்வேதாரண்யகே இவ்வாறு யஜுர் வேத ஆரண்யகத்தில் (தைத்ரீய உபநிஶத்தில்) கூறப்பட்டுள்ளது.

‘தத்யதா ஷங்குனா ஸர்வாணி பர்னாணி ஸந்த்ருண்ணான் யேவமோங்காரேன ஸர்வா வாக் ஸந்த்ருணா | ஓம்கார ஏவேதம் ஸர்வம்’ (சாந்தோக்ய உபநிஶத் 2.23.3)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘எவ்வாறு இலைகள் அதன் மத்தியில் உள்ள காம்பால் தாங்கப்படுகின்றனவோ, அவ்வாறே அனைத்து ஒலிகளும், வார்த்தைகளும் தாங்கப்படுகின்றன. எனவே, இங்கு அனைத்தும் ஓம்காரமே!!’

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத: |

அபூர்வோSனந்தரோSபாஹ்யோSநபர: ப்ரணவோSவ்யய’ || (மாண்டுக்ய காரிகா 1 | 26)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அபர (சகுண) மற்றும் பர (நிர்குண) ப்ரஹ்மம் ஆகும். ஓம் என்ற இந்த ப்ரணவத்திற்கு தொடக்கம் (காரணம்) இல்லை, அது தனித்தன்மை வாய்ந்தது, அதனின்றி வேறொன்றும் இல்லை, எந்த காரண காரியங்களுடனும் தொடர்பு அற்றது.

‘ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்தததைவ ச |

ஏவம் ஹி ப்ரணவம் ஞ்யாத்வா வ்யஶ்னுதே ததனந்தரம்’ || (மாண்டுக்ய காரிகா 1 | 27)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவுமாகும். இந்த பிரணவத்தை இவ்வாறு அறிபவர் ஐயமின்றி அதையே (அந்த பிரணவமாகிய பரப்ரஹ்மத்தையே) அடைவர்.

‘ப்ரணவம் ஹீஶ்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதயே ஸ்திதம் |

ஸர்வவ்யாபினமோங்காரம் மத்வா தீரோ ந ஶோஶதி’ || (மாண்டுக்ய காரிகா 1 | 28)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைவரின் இதயத்தினுள்ளிருக்கும் இறைவனாக அறிவாய். இதை இவ்வாறு உணரும் பகுத்தறிவுடையவர் எக்காலத்திலும் வருத்தமுறுவதில்லை.

‘அமாத்ரோSனந்தமாத்ரஸ்ச த்வைதஸ்யோபஷம: ஶிவ: |

ஒம்காரோ விதிதோ யேன ஸ முனிர்நேதரோ ஜன:’ || (மாண்டுக்ய காரிகா 1 | 29)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

ஒலியற்றதும், அனைத்து ஒலியாக இருப்பதையும், இருமைகள் அற்றதாயும், மங்களகரமானதாயும் (ஓம் என்னும்) இந்த ப்ரணவத்தை அறிபவரே முனிவராவர். மற்றையோர் (முனிவர்) அல்ல.

இத்யந்தா மாண்டூக்யோபநித் இது ஈறாக மண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஓம் தத்ப்ரஹ்ம | ஓம் தத்வாயு: | ஓம் ததாத்மா | ஓம் தத்ஸத்யம் | ஓம் தத்ஸர்வம் | (நாராயண உபநிஶத் 68)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ஓம் என்னும்) ப்ரணவமே ப்ரஹ்மம், ப்ரணவமே வாயு (காற்று), ப்ரணவமே ஆத்மா, ப்ரணவமே உண்மைப்பொருள், ப்ரணவமே அனைத்துமாகும்.

இத்யாதி ஶ்ருதிபி: இவ்வாறு ஸ்ருதிகளான வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

‘ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.13)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

‘ஓம்’ என்ற ப்ரஹ்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

‘யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விந்தி யத்யதயோ வீதராகா: |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

எந்த நிலையை (ஓம் என்னும் அக்ஷரத்தை) வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், (மற்ற உலகியல் விஷயங்களில்) விருப்பமற்ற முனிவர் எதனுட் புகுவர், எதை விரும்பி ப்ரஹ்மச்சர்ய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

‘ரஸோSஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: |

ப்ரணவ: ஸர்வவேதேஶு ப்த: கே பௌரும் ந்ருஶு’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 7.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் ப்ரணவம்; வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

‘மஹர்ஶீனாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் |

யக்ஞானாம் ஜபயக்ஞோSஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

மஹரிஷிகளில் நான் ப்ருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம்.

‘ஆத்யம் ச த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மின் ப்ரதிஶ்டிதா |

ஏகாக்ஷரம் பரம் ப்ரஹ்ம ப்ராணாயாம: பரம் தப:’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.11)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்றெழுத்துடைய ப்ரஹ்மமே (ப்ரணவமாகிய ஓம்காரமே) ஆதியில் இருந்தது; இதில் (இந்த ப்ரணவத்தில்) மூன்று வேதங்களும் நிலைபெற்றிருந்தன. ஓரெழுத்தான ஓம்காரமே பரப்ரஹ்மம், ப்ராணாயாமமே சிறந்த தவமாகும்.

‘ப்ரணவாத்யாஸ்த்ரயோ வேதா: ப்ரணவே பர்யவஸ்திதா: |

வாங்க்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத்ப்ரணவமப்யஸேத்’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.9)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வேதங்களும் ப்ரணவத்தில் தொடங்கி ப்ரணவத்துடனே முடிகின்றன. அனைத்து சொற்களும் ப்ரணவ ரூபமேயாகும், எனவே ப்ரணவத்தையே நாம் உபாசிக்க வேண்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஶ்ச்ச விஶ்வஶப்தேனோங்காரோSபிதீயதே வாச்யவாசகயோரத்யந்தபேதாபாவாத் விஶ்வமித்யோங்கார ஏவ ப்ரஹ்மோத்யர்த்த: |

இவ்வாறு ஸ்ம்ருதிகளிலிருந்தும் ‘விஶ்வ’ எனும் நாமத்திற்கு ஓம்காரம் என்ற பொருளே நிரூபிக்கப்பட்டுள்ளது. சொல்லும், பொருளும் இணைபிரியாது இருத்தல்லால், விஶ்வம் அல்லது ஓம்காரமே ப்ரஹ்மம் என்பதே இதன் தேர்ந்த கருத்தாகும்.

‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலானிதி சாந்த உபாஸீத’ || (சாந்தோக்ய உபநிஶத் 3.14.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

ஐயமின்றி இங்கு அனைத்தும் ப்ரஹ்மமேயாகும்; அனைத்தும் அதனின்றே உருவாகி, அதனுள்ளேயே லயமடைந்து, அதிலேயே செயல்புரிகின்றன, எனவே, அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இவ்வாறு, அமைதியான மனத்துடன் ப்ரஹ்மத்தை உபாஸிப்போமாக!!

இதி ஏததுக்தம் பவதி யஸ்மாத் ஸர்வமிதம் விகாரஜாதம் ப்ரஹ்ம தஜ்ஜத்வாத்தல்லயத்வாத்ததனத்வாச்ச | ந ச ஸர்வஸ்யைகாத்-மத்வே ராகாதய: ஸம்பவந்தி | தஸ்மாச்சாந்த உபாசீத இதி ஶ்ருதே: |

இந்த ஸ்ருதி வாக்கியத்திலிருந்து, “இங்குள்ள அனைத்தும் மாற்றங்களும் ப்ரஹ்மத்தில் இருந்தே உருவாவதாலும், ப்ரஹ்மத்திலேயே லயமடைவதாலும், ப்ரஹ்மத்திலேயே அனைத்து செயல்களையும் புரிவதாலும், (இங்குள்ள) அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இங்கு அனைத்தும் (இரண்டின்றி) ஒன்றாகவே இருப்பதால், இதில் (ப்ரஹ்மத்தில்) விருப்பு, வெறுப்பாகிய தோஷங்கள் இல்லை. எனவே, அமைதியான உள்ளத்துடன் இந்த ப்ரஹ்மத்தை உபாசிப்பாயாக.” என்ற கருத்து புலனாகிறது.

ஶ்ரூயதாம் தர்மஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம் |

ஆத்மன: ப்ரதிகூலானி பரேஶாம் ந ஸமாசரேத்’ || (விஶ்ணுதர்மம் 3.255.44)

விஶ்ணுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைவரும் தர்மத்தின் சாரத்தை கேளுங்கள்; கேட்டதை உங்கள் உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்துங்கள் – எந்த செயல் நமக்கு விரோதமானதோ, எதிரிடையானதோ, அதை (அந்த செயலை) மற்றவருக்கு எதிராக நாம் செய்தல் கூடாது.

‘ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோSர்ஜுன |

ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகி பரமோ மத:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.32)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்மசமத்துவம் பற்றி சம பார்வை செலுத்துவானாயின், அவன் பரம யோகியாகக் கருதப்படுவான்.

‘நிர்குண: பரமாத்மாத்ர தேஹே வ்யாப்ய வ்யவஸ்தித: |

தமஹம் ஞானவிஞ்யேயம் நாவமன்யே ந லங்கயே’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 8)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதிலும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன்.

‘யத்யாகமைர்ன விந்தேயம் தமஹம் பூதபாவனம் |

க்ரமேயம் த்வாம் கிரிம் சேமம் ஹனூமானிவ சாகரம்’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 9)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை (பரமாத்மாவை) நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப்போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டி இருப்பேன்.

‘பத்தவைராணி பூதானி த்வேஶம் குர்வந்தி சேத்தத: |

ஶோச்யான்யஹோSதிமோஹேன வ்யாப்தானீதி மநீஶிணாம் ||

ஏதே பின்னத்ருஶா தைத்யா விகல்பா: கதிதா மயா |

க்ருத்வாSப்யுபகமம் தத்ர சக்ஷேப ஶ்ரூயதா மம ||

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |

த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||

ஸமுத்ஸ்ருஜ்யாஸுரம் பாவம் தஸ்மாத்யூயம் ததா வயம் |

ததா யத்னம் கரிஶ்யாமோ யதா ப்ராப்ஸ்யாம நிர்வ்ருதிம் ||’  (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.82 – 85)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): பிறருடன் பகைமை பாராட்டி அவரை வெறுக்கும் மனிதரைக்கண்டு அறிஞர்கள் “ஒ!! இவர்கள் இவ்வாறு மோக வசப்பட்டுள்ளனரே!” என்று வருந்துவர். ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)! தன்னிலிருந்து பிறரை வேறொன்றாகப் பார்ப்பவரே வெறுப்பையும், பகைமையையும் அடைகின்றனர். எனவே, அவற்றை (வெறுப்பையும், பகைமையையும்) விட்டொழிக்க வேண்டும். நானறிந்த நல்லனவற்றை உங்களுக்குக் கூறுகின்றேன், கேளுங்கள். இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் விரிவாக்கமாகும். இங்கு அவரைத்தவிர வேறொன்றும் இல்லை.  அறிவுடையோர் இங்கு அனைத்தையும் தமது ஆத்மாவின் வெளிப்பாடாகவே, வேறுபாடின்றி காண முயல வேண்டும். எனவே, நாம் நமது அஸுர தன்மையை விட்டொழித்து, இவ்வாறு (வேறுபாடின்றி காண்பதற்கு) முயற்சி செய்ய வேண்டும். இதுவே, நமக்கு அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.

ஸர்வத்ர தைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய|| (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)!! அனைத்தையும் ஒன்றாகவே (வேறுபாடுகள், வெறுப்புக்கள் இன்றி) பார்க்கப் பழகுங்கள். இதுவே பகவான் ஸ்ரீ அச்யுதருக்கு நாம் செய்யும் ஆராதனையாகும்.

ந மந்த்ராதிக்ருதம் தாத ந ச நைஸர்கிகோ மம |

ப்ரபாவ ஏ ஸாமான்யோ யஸ்ய யஸ்யாச்யுதோ ஹ்ருதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.4)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹலாதன் தனது தந்தை ஹிரண்யகசிபுவிடம் கூறினான்) தந்தையே!! இது (தன்னைக் கொல்ல தன் தந்தை ஹிரண்யகசிபு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது) மந்திர சக்தியினாலும் நிகழவில்லை. இது என்னிடமுள்ள இயற்கையான சக்தியினாலும் அல்ல. பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலைநிறுத்தியவருக்கு இவை அனைத்தும் மிக எளிதானதாகும்.

அன்யேஶாம் யோ ந பாபானி சிந்தயத்யாத்மனோ யதா |

தஸ்ய பாபாகமஸ்தாத ஹேத்வபாவான்ன வித்யதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.5)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, அவர்களுக்குக் கேடொன்றும் நினைக்காதவனைப் பாவங்கள் தீண்டுவதில்லை. (துன்பத்தை விளைவிக்கும்) மூல காரணம் இல்லாததால் அவனுக்குத் துன்பங்களும் விளைவதில்லை.

கர்மணா மனஸா வாசா பரபீடாம் கரோதி ய: |

தத்பீஜம் ஜன்ம ஃபலதி ப்ரபூதம் தஸ்ய சாஶுபம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.6)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

மனதாலும், செயலாலும், வாக்காலும் பிறருக்குத் துன்பம் இழைப்பவன், அந்த பாபமென்னும் விதையின் பயனாய் மறுபிறப்பு மற்றும் பெருந்துன்பன்களைப் பயனாய் (பழமாய்) அடைகிறான்.

சோஹம் ந பாபமிச்சாமி ந கரோமி வதாமி வா |

சிந்தயன்ஸர்வபூதஸ்தமாத்மன்யபி ச கேவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.7)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் எவருக்கும் துன்பம் இழைப்பதில்லை. அவ்வாறு பேசுவது கூட கிடையாது. நான் எப்பொழுதும், என் நெஞ்சினுள்ளும் அனைத்துயிர்களுக்குள்ளும்  வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கேசவனைத் த்யானிக்கின்றேன்.

ரீரம் மானஸம் துக்கம் தைவம் பூதபவம் ததா |

ஸர்வத்ர ஸுபசித்தஸ்ய தஸ்ய மே ஜாயேத குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.8)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு அனைத்தையும் சமநோக்குடன் பார்க்கும் எனக்கு சரீரம், மனம், வாக்கு ஆகியவற்றுக்கு தெய்வங்களாலோ, இயற்கையாலோ என்ன துன்பம் வரக்கூடும்?

இந்த உலகில் பிறக்கும் அனைவரும் மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறோம்இவை தாபத் த்ரயங்கள் என்று அழைக்கப்படும்அவையாவன ஆதி தைவிகம் (தேவர்களால் வரும் துன்பங்கள்), ஆதி பௌதிகம் (இயற்கை உபாதைகள்), ஆத்யாத்மிகம் (நமது பூர்வ கர்ம வினைகளால் ஏற்படுவன).

ஏவம் ஸர்வேஶு பூதேஶு பக்திரவ்யபிசாரிணீ |

கர்தவ்யா பண்டிதைர்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.9)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு, பகவான் ஸ்ரீ ஹரியானவர் எவ்வுயிரிலும் நிறைந்துள்ளார் என்பதை உணர்ந்து கற்றறிந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

சாம சோபப்ரதானம் ச பேததண்டௌ ததாபரௌ |

உபாயா: கதிதா: ஸர்வே மித்ராதினாம் ச ஸாதனே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.35)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நண்பர்களையும், எதிரிகளையும் அடக்கியாள்வதற்கு (எனது குருமார்கள்) நான்கு உபாயங்களைக் கூறினார்கள். அவையாவன – சாம (நயம்பட பேசுதல்), பேத (இருவரிடையே கலகத்தை உண்டாக்குதல்), தான (பொருள், பணம் முதலியவற்றால் வசப்படுத்துதல்), தண்டம் (வலிமையால் அடக்குதல்).

தானேவாஹம் ந பஶ்யாமி மித்ராதீம்ஸ்தாத மா க்ருத: |

ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதனை: கிம் பிரயோஜனம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.36)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆனால் தந்தையே, தாங்கள் சினமடையாது கேட்கவேண்டுகிறேன். எனக்கு நண்பர்கள் என்றோ எதிரிகள் என்றோ யாரும் தெரிவதில்லை (எந்த பாகுபாடும் இல்லை என்று பொருள்). ஹே பெருந்தோளுடையோரே!! எப்பொழுது (நண்பனையும்பகைவனையும் அடக்கியாள வேண்டும் என்ற) அடையவேண்டியது ஒன்றும் இல்லையோ, அப்பொழுது அத்தகைய முயற்சியால் என்ன பயன்?

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |

பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.37)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தந்தையே!! ஜகன்னாதனான பகவான் ஸ்ரீ கோவிந்தன் அனைத்துயிர்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்தும், இந்த பிரபஞ்சமாகவே வ்யாபித்தும் இருக்கையில், (சிலரை) நண்பனென்றும், (சிலரை) பகைவரென்றும் கருதுவது பயனற்றது.

ஜடானாமவிவேகானாமஸுரானாமபி ப்ரபோ |

பாக்யபோஜ்யானி ராஜ்யானி சந்த்யனீதிமதாமபி ||

தஸ்மாத்யதேத புண்யேஶு ய இச்சேன்மஹதீம் ஶ்ரியம் |

யதிதவ்யம் ஸமத்வே ச நிர்வாணமபி சேச்சதா || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.44-45)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

பிரபுவே (தந்தையே)!!! அரசாளும் பேறு அறிவிலிகளுக்கும், கோழைகளுக்கும், அரசாளத் தகுதியற்றவருக்கும் கூட அவர்களின் முன்ஜென்ம கர்மவினைக்கேற்பக் கிடைக்கக் காண்கிறோம். எனவே, புகழையும், பேற்றையும் விழைபவர்கள் நற்செயல்களைப் புரியவேண்டும். (இந்த சம்ஸாரத் தளையிலிருந்து) முக்தியை விழைபவர்கள் அனைத்துயிர்களையும் (தன்னுயிர்போல) சமநோக்குடன் பார்க்க வேண்டும்.

தேவா மனுஷ்யா: பவ: பக்ஷிவ்ருக்ஷசரீஸ்ருபா:  |

ரூபமேததனந்தஸ்ய விஶ்ணோர்பின்னமிவ ஸ்திதம் ||

ஏதத் விஜானதா ஸர்வம் ஜகத் ஸ்தாவரஜங்கமம் |

       த்ரஶ்டவ்யமாத்மவத் விஶ்ணுர்யதோSயம் விஶ்வரூபத்ருக் ||

ஏவம் ஞாதே ஸ பகவானனாதி: பரமேஶ்வர: |

       ப்ரஸீதத்யச்யுதஸ்தஸ்மின் ப்ரஸன்னே க்லேஶஸம்க்ஷய: ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.46-48)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தேவர்கள், மனிதர், மிருகங்கள், பறவைகள் மற்றும் பாம்பு முதலான அனைத்தும் எல்லையற்ற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமாகும். அதுவே (அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமே) இங்கு வெவ்வேறாகத் தெரிகின்றது என்பதை அறிபவன் இங்குள்ள அசையும், மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் தனக்கு நிகராகவே பார்க்கவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் பிரபஞ்சத்தையே தன் உருவமாகக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீ விஶ்ணுவேயாகும். இவ்வாறு அறிவதன் மூலம் தனக்கொரு தொடக்கம் இல்லாதவரும், அழிவற்றவருமான பரமேஸ்வரன் மனமகிழ்கிறார். அவர் மனமகிழ்ந்தால் நமது அனைத்துத் துன்பங்களும் அழிந்துவிடும்.

பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே |

       வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: || (ஸ்ரீ பகவத்கீதை 7.19)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:–பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மஹாத்மா கிடைத்தற்கரியவன்.

இத்யாதிவசனைச்ச | இத்தகைய வாக்கியங்களால் இதுவே (பகவான் விஶ்வம் என்று அழைக்கப்படுகிறார்) என்பது புலனாகிறது

ஹிம்ஸாதிரஹிதேன ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி தர்யிதும் விஷ்வஶப்தேன ப்ரஹமாபிதீயத இதி வா |

அல்லது, மற்ற உயிர்களுக்குத் துன்பமின்றி விஷ்வமாகிய இந்த பிரபஞ்சத்திற்கு நமது போற்றுதலும், வணக்கங்களும் உரித்தாக வேண்டும். இதைக் குறிப்பதற்காகவே, பரப்ரஹ்மத்தை “விஶ்வம்” என்று அழைக்கின்றனர்.

மத்கர்மக்ருன்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |

       நிர்வைர: ஸர்வபூதேஶு ய: ஸ மாமேதி பாண்டவ || (ஸ்ரீ பகவத்கீதை 11.55)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-என்தொழில் செய்வான், எனைத் தலைக்கொண்டோன், என்னுடைய அடியான், பற்றெலாம் இற்றான், எவ்வுயிரிடத்தும் பகைமை யிலாதான், யாவன், பாண்டவா, அவனென்னை எய்துவான்!!!

இதி | இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.

ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:

ஸமமதிராத்மஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே |

ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சித்துச்சை:

ஸ்திதமனஸம் தமவேஹி விஶ்ணுபக்தம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.2௦)

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(யமதர்மராஜன் தனது யமதூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தமது வர்ணத்தின் கடமைகளிலிருந்து பிறழாதவரோ, எவர் தமது நண்பர் மற்றும் பகைவரிடத்தில் சமனோக்குடையவரோ, எவர் எதையும் (மற்றவரிடமிருந்து களவு வழியில்) பறிக்காமலும், மற்றுயிரைத் துன்புறுத்தாமலும், (இன்பமாயினும், துன்பமாயினும்) எல்லா காலங்களிலும் நிலையான அறிவு படைத்தவரோ, அவரை பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனாக அறிவீர்களாக.

விமலமதிராமத்ஸர பிரஶாந்த:

ஸுசிசரிதோSகிலஸத்த்வமித்ரபூத: |

ப்ரியஹிதவசனோSஸ்தமானமாயோ வஸதி

ஸதா ஹ்ருதி தஸ்ய வாஸுதேவ: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.24)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-(யமதர்மராஜன் தனது யம தூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தூய்மையான மனதுடையவரோ, வன்மம் அற்றவரோ, அமைதியான உள்ளம் கொண்டவரோ, அப்பழுக்கற்ற குணமுடையவரோ, அனைத்துயிர்களுக்கும் நண்பரோ, அனைத்துயிர்களுக்கும் இன்பமும், நன்மையையும் தரும் மொழிகளை கூறுபவரோ, அகந்தையும், மமதையும், மாயையும் அற்றவரோ அவரது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ வாசுதேவர் வசிக்கின்றார்.

வஸதி ஹ்ருதி ஸநாதனே ச தஸ்மின்

பவதி புமாஜ்ஜகதோSஸ்ய ஸௌம்யரூப: |

க்ஷிதிரஸமதிரம்யமாத்மனோSந்த

கதயதி சாருதயைவ சாலபோத || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.25)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவ்வாறு சால மரத்தின் இளமையானது அதனுள்ளே நிரம்பியிருக்கும் சாற்றினை பறைசாற்றுகின்றதோ, அதைப்போலவே அனைவருக்கும் பிரியமான ஒருவர், தனது மனத்தினுள் நித்தியமான பகவான் ஸ்ரீ விஶ்ணு வசிப்பதை பறைசாற்றுகிறார்.

சகலமிதமஹம் ச வாஸுதேவ

பரமபுமான்பரமேஸ்வர: ஸ ஏக |

இதி மதிரசலா பவத்யனந்தே

ஹ்ருதயகதே வ்ரஜ தான்விஹாய தூராத் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவரொருவர் பரமபுருஶரும், அனைத்தையும் ஆள்பவருமான பகவான் ஸ்ரீ வாசுதேவரே இந்த உலகம் அனைத்துமாக இருப்பதை தமது தூய அறிவால் உணர்ந்து, தமது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ அனந்தரை நிலைநிறுத்தியவரோ அவரை விட்டு நீங்கள் விலகிச் செல்லுங்கள்.

யமநியமவிதூதகல்மஶானாமனுதினமச்யுதஸக்தமானஸானாம் |

அபகதமதமானமத்ஸரானாம் வ்ரஜ பட தூரதரேன மானவானாம் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.26)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-ஒ (யம) தூதர்களே!!! எவரொருவரின் குற்றங்கள் மனம் மற்றும் புலனடக்கத்தின் மூலம் நீங்கிவிட்டனவோ, எவரொருவர் எப்பொழுதும் பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலை நிறுத்தியவரோ, எவரொருவர் மமதை, அகந்தை மற்றும் வன்மங்கள் அழியபெற்றவரோ அத்தகைய மனிதரிடமிருந்து விலகியே இருங்கள்.

இத்யாதிவசனைர்வைஷ்ணவலக்ஷணஸ்யைவம்பிரகாரத்வாச்ச ஹிம்ஸாதிரஹிதேன விஶ்ணோ: ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி |

இந்த புராண வாக்கியங்களிலிருந்து, மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற குற்றங்கள் இல்லாமல் இருத்தலும், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை போற்றுவது, தொழுவது போன்ற  நற்செயல்களைப் புரிவதுமே ஒரு வைணவனுக்கு (பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனுக்கு) அடையாளம் என்பது விளங்கும்.

ஶ்ரத்தயா தேயம் அஶ்ரத்தயா (அ)தேயம் (தைத்ரீய உபநிஶத் 1.11.3)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு தானத்தையும் ஈடுபாட்டுடன் கொடுக்கவேண்டும். ஈடுபாடு இல்லாமல் எந்த தானத்தையும் கொடுக்கக்கூடாது.

ஶ்ரத்தயாக்னி ஸமித்த்யதே அர்ப்பணிப்பாலேயே (ஈடுபாட்டாலேயே) நெருப்பானது சுடர்விடுகின்றது

இத்யாதிஸ்ருதேஇது போன்ற வேத வாக்கியங்களாலும்,

ஶ்ரத்தாபூதம் வதான்யஸ்ய ஹதமஶ்ரத்தயேதரத் |

கொடையளிப்பவர் (கொடையளிப்பதில் உள்ள) ஈடுபாட்டாலேயே தூய்மையடைகிறார். ஈடுபாடில்லாமல் (கொடையளித்தால், அதனால் நற்பயன்கள் ஏதும் கிட்டாமல்) நஷ்டமடைகிறார்.

இமம் ஸ்தவமதீயான ஶ்ரத்தா பக்தி ஸமன்வித: (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 132)

ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமத்தின் ஃபல ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமமென்னும்) இந்த துதியை ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் படிப்பவர் (ஆத்ம சுகம்மன அமைதிதிருமகளின் கருணைதைரியம்வேத அறிவு மற்றும் மேன்மையை அடைகின்றனர்)

ஶ்ரோத்ரியம் ஶ்ராத்தமதீதமவ்ரதமதக்ஷிணம் யஞ்யமன்ரித்விஜாஹுதம் |

ஶ்ரத்தயா தத்தமஸம்ஸ்க்ருதம் ஹவிர்பாகாடேதே தவ தைத்யஸத்தம ||

ஹே அசுரர்களின் தலைவனே!!! தகுந்த வேத மந்திரங்கள் இன்றி நிறைவேற்றப்படும் நீத்தார் கடனும், தவமின்றி கற்கப்படும் கல்வியும், தக்க காணிக்கையின்றி நிறைவேற்றப்படும் வேள்வியும், தகுந்த ரிக் வேத வல்லுனர்கள் இன்றி உண்டாக்கப்படும் வேள்வித்தீயும், ஈடுபாடின்றிக் கொடுக்கப்படும் கொடையும், தூய்மையின்றி வேள்வித்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களும், ஆகிய இந்த ஆறும் உன்னைச் சேர்ந்தவையாகும்.

புண்யம் மத்த்வேஶிணா யச்ச மத்பக்தத்வேஶிணாம் ததா |

க்ரயவிக்ரயஸக்தானா புண்ய யச்சாக்னிஹோத்ரிணாம் ||

 ஶரத்தயா ச யத்தான யஜதாம் தததா ததா |

தத்ஸர்வம் தவ தைத்யேந்தர மத்ப்ரஸாதாத்பவிஶ்யதி ||

ஓ அசுரர்களின் தலைவனே!!! என்னையும், எனது பக்தர்களையும் வெறுப்போர் செய்யும் நற்செயல்களின் பலனும், செய்முறையின்றித் தவறுதலாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரத்தின் பலனும், ஈடுபாடின்றி செய்யப்படும் வேள்வி மற்றும் தானத்தின் பலனும் எனது அருளால் உன்னை வந்து அடையும்.

(மேற்கண்ட மூன்று ஸ்லோகங்களின் தேர்ந்த பொருள்: மேற்கூறிய செயல்கள் யாவும் அசுரத்தன்மை வாய்ந்தவையாகும்இவ்வாறு தவறாகச் செய்வதால் நமக்கு நற்பயன் எதுவும் கிட்டாது)

ஶ்ராத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்த க்ருதம் ச யத் |

அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || (ஸ்ரீ பகவத்கீதை 17.28)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-எவ்வித ஈடுபாடுமின்றி (அசிரத்தையுடன்) செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா, இம்மையிலும் பயன்படா.

இத்யாதிஸ்ம்ருதிபிஸ்ச ஶ்ரத்தயா ஸ்துதிநமஸ்காராதி கர்த்தவ்யம் அஶ்ரத்தயா ந கர்த்தவ்யம் |

மேற்கண்ட ஸ்ம்ருதி வாக்கியங்களிலிருந்து (நாம் அறியவேண்டியது என்னவெனில், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) போற்றுவதும், தொழுவதும் ஈடுபாட்டுடன் செய்யப்படவேண்டும். ஈடுபாடின்றி செய்வது கூடாது.

ஓம்தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: | (ஸ்ரீ பகவத்கீதை 17.23)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

“ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் ப்ரஹ்மத்தைக் குறிப்பதென்பர்.

இதி பகவத்வசனாத் ஸ்துதிநமஸ்காராதிகம் கர்மாஸாத்விகம் விகுநமபி ஶ்ரத்தாபூர்வகம் ப்ரஹ்மனோSபிதானத்ரயப்ரயோகேன ஸகுணம் ஸாத்விகம் ஸம்பாதிதம் பவதி |

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த கீதை ஸ்லோகத்திலிருந்து, “பகவானைப் போற்றுவது, திருவடித்தொழுவது போன்ற செயல்களை தூய்மையற்ற மனதுடனோ, அல்லது குறைபாடுகளுடனோ செய்தாலும், ப்ரஹ்மத்தின் இந்த (ஓம், தத், ஸத் என்ற) மூன்று பெயர்களை ஈடுபாட்டுடன் ஓதுவதன் மூலம் ஒருவர் நற்குணங்களை அடைகிறார்” என்பது புலனாகிறது.

ஆத்மானம் விஶ்ணும் த்யாத்வாS(அ)ர்ச்சன ஸ்துதி நமஸ்காராதி கர்த்தவ்யம் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு, போற்றுதல்களும், வழிபாடும், திருவடித்தொழுதலும் ஆத்மார்த்தமாகவே (அவரை நமது ஆத்மாவின் உருவமாகவே எண்ணிப்) புரிதல் வேண்டும்.

நாவிஶ்ணு: கீர்த்தயேத்விஶ்ணும் நாவிஶ்ணும் விஶ்ணுமர்ச்சயேத் |

நாவிஶ்ணு: ஸம்ஸ்மரேத் விஶ்ணு நாவிஶ்ணுர்விஶ்ணுமாப்னுயாத் ||–(ஸ்ரீ மஹாபாரதம்)

இதி மஹாபாரதே கர்மகாண்டே |-ஸ்ரீ மஹாபாரதம் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது:

நாம் விஶ்ணுவாக மாறாது (நமக்குள் இருக்கும் ஆத்மா, பரமாத்மாவான விஶ்ணுவே என்று உணராது) பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் புகழ் மாலைகளைப் பாடவேண்டாம், அவருக்கு வழிபாடுகள் செய்யவேண்டாம், நாமே விஶ்ணு என்று உணராது அவரைப் பற்றி நினைக்கவேண்டாம். நாம் விஶ்ணுவாக நம்மை உணராவிடில், நாம் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை அடைய முடியாது.

ஸர்வான்யேதானி நாமானி பரஸ்ய ப்ரஹ்மனோSநக | (ஸ்ரீ விஶ்ணு தர்மம் 1.123.13)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தூய்மையானவரே!!! இந்த அனைத்துத் நாமங்களும் பரப்ரஹ்மத்தின் திருநாமங்களே ஆகும்.

யம் யம் காமமபித்யாயேத்தம் தமாப்னோத்யஸம்யம் |

ஸர்வகாமானவாப்னோதி ஸமாராத்ய ஜகத்குரும் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒரு அடியவர், எந்தெந்தப் பொருளை அடைய விழைகிறாரோ, ஐயமின்றி அப்பொருளையே அடைகிறார். அந்த உலகிற்கு குருவான (பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) வழிபடுவதன் மூலம் (அடியவரது) அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன.

தன்மயத்வேன கோவிந்தமேத்யேதத் தால்ப்ய நான்யதா |

தன்மயோ வாஞ்சிதான் காமான் யதவாப்னோதி மானவ: || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தால்ப்யரே!!! (பரமாத்மா) ஸ்ரீ கோவிந்தருடன் ஐக்கியமடைந்து, அவர் மயமாக மாறுவதன் மூலமே ஒருவரால் அவரை அடையமுடியும். எவரொருவர் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறாரோ அவரால் அனைத்துப் பொருட்களையும் அடையமுடியும். இதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இல்லை.

இதி விஶ்ணுதர்மே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது,

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |

ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

இதி பகவத்கீதாயாம் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது,

அஹம் ஹரி: ஸர்வமிதம் ஜனார்தனோ நான்யத்தத: காரணகார்யஜாதம் |

ஈத்ருங் மனோ யஸ்ய ந தஸ்ய பூயோ பவோத்பவா த்வந்த்வகதா பவந்தி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.22.87)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

“நானே ஸ்ரீ ஹரியாவேன். இந்த உலகனைத்தும் பகவான் ஜனார்தனரே!! அந்த பரமாத்மாவைத் தவிர்த்து இங்கு எதுவும் செயலோ, காரணமோ இல்லை”. இவ்வாறான அறிவு படைத்தவரை பிறப்பு, இறப்பினால் உண்டாகும் இருமைகள் என்ற நோய் பற்றுவதில்லை.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது,

குரோர்யத்ர பரீவாதோ நிந்தா வாபி ப்ரவர்த்ததே |

கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோSன்யத ||

தஸ்மாத் ப்ரஹ்மைவாசார்யஸ்வரூபேணாவதிஷ்டே ||

(ஸ்ரீ விஶ்ணு தர்மம் 3.233.92)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

எங்கு குருவின் (ஆசார்யரின்) நிந்தை மற்றும் அவமதிப்பு நிகழ்கிறதோ அங்கு நமது காதுகளை மூடிக்கொள்ளவேண்டும். அல்லது, அங்கிருந்து வெகு தொலைவு சென்றுவிட வேண்டும். ஏனெனில், அங்கு ப்ரஹ்மமே குருவின் (ஆசார்யரின்) வடிவில் இருக்கிறது.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது,

வரம் ஹுதவஹஜ்வாலாபுஞ்சஸ்யாந்தர்வ்யவஸ்திதி: |

ந செளரிசிந்தாவிமுகஜனஸம்வாஸவைஷஸம் ||

எங்கு பகவான் ஸ்ரீ ஹரியை நினைக்காத மக்கள் உள்ளனரோ, அங்கு வசிப்பதைக் காட்டிலும், கொழுந்து விட்டெரியும் தீயின் சுடர்களுக்குள் வசிப்பது மேலானதாகும்.

இதி காத்யாயனவசனாத் ‘யத்ர தேஶே வாஸுதேவநிந்தா தத்ர வாசோ ந கர்தவ்ய: | இந்த காத்யாயனரின் வாக்கின் மூலம், எங்கெங்கெல்லாம் பகவான் ஸ்ரீ வாசுதேவரின் நிந்தனை நடக்கிறதோ, அங்கெங்கெல்லாம் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதா ஹ்யர்தா: ப்ரகாந்தே மஹாத்மன: ||

எவர் பகவானிடத்திலும், (அந்த பகவானிடம் பக்தி புரிவது போன்றே) தனது குருவினிடத்திலும் பக்தி உடையவரோ, அவருக்கே மேற்கூறிய அர்த்தங்கள் அனைத்தும் தெளிவாகப் புரியும்.

இதி ஶ்வேதாஶ்வதரோபநிஶன்மந்த்ரவர்ணாத் ஹரௌ குரௌ ச பரா பக்தி: கார்யேதி | இந்த ஶ்வேதாஶ்வதரோபநிஶத் வாக்கியத்தின் மூலம், பகவான் ஸ்ரீ ஹரியினிடத்திலும், அந்த பகவானுக்கு சமமாக குருவினிடத்திலும் பக்தி கொள்ளுதல் வேண்டும் (என்று புலனாகிறது).

அவஶேனாபி யன்நாம்னி கீர்த்திதே ஸர்வபாதகை: |

புமான் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர்வ்ருகைரிவ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |

தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||

எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்துவிடுகின்றன.

கலிகல்மஶமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |

ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத் க்ருஷ்ணஸ்ய ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரை      ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் அழிந்துவிடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மதை: க்ருதம் |

பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||

எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் எரிக்கப்படுகின்றன.

சேயம் வதனவல்மீகவாஸினி ரசனோரகீ |

யா ந கோவிந்த கோவிந்த கோவிந்தேதி ப்ரபாஶதே ||

எவரது நாக்கு ‘கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!’ என்று கூறுவதில்லையோ அந்த நாக்கு வாயென்னும் புற்றுக்குள் வாழும் பாம்பாகும்.

பாபவல்லி முகே தஸ்ய ஜிஹ்வாரூபேன திஷ்டதி |

யா ந வக்தி திவா ராத்ரௌ குணான் கோவிந்தஸம்பவான் ||

எந்த நாக்கு பகலும், இரவும் பகவான் ஸ்ரீ கோவிந்தரின் குணங்களைப் போற்றப்பாடவில்லையோ, அது (அந்த) மனிதனின் வாயினுள் நாக்கின் வடிவத்தில் இருக்கும் பாவக்குவியலாகும்.

ஸக்ருதுச்சரிதம் யேன ஹரிரித்யக்ஷரத்வயம் |

பத்த: பரிகரஸ்தேன மோக்ஷாய கமனம் ப்ரதி ||

எவரொருவர் ஒருமுறையேனும் “ஹரி” என்ற இந்த இரு அக்ஷரங்களை (எழுத்துக்களை) உச்சரிக்கின்றாரோ அவர் மோக்ஷத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஶ்வமேதாவப்ருதேன துல்ய: |

தசாஶ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

ஏவமாதிவசனைஶ்ரத்தாபக்த்யோரபாவேSபி நாமஸங்கீர்த்தனம் ஸமஸ்தம் துரிதம் நாசயதீத்யுக்தம் கிமுத ஶ்ராத்தாதிபூர்வகம் ஸஹஸ்ரநாமஸங்கீர்த்தனம் நாசயதீதி |

மேற்கண்ட (இதிஹாஸபுராண) வாக்கியங்களிலிருந்து ஈடுபாடு மற்றும் பக்தி இன்றி செய்யப்படும் நாம சங்கீர்த்தனமே அனைத்துப் பாவங்களையும் ஒழித்துவிடும் என்று புலனாகிறது. எனில், ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் கூறப்படும் சஹஸ்ரநாமசங்கீர்த்தனம் அவற்றை (அந்தப் பாபக்குவியல்களை) அழித்துவிடும் என்று கூறவும் வேண்டுமா?

மனஸா வா அக்ரே ஸங்கல்ப்யத்யத வாசா வ்யாஹரதி

முதலில் மனதிற்குள் முடிவெடுக்கிறார். பின்னர் வாக்கினால் (அதையே) பேசுகிறார்

யத்தி மனஸா த்யாயதி தத்வாசா வததி

மனம் எதை நினைக்கின்றதோ, வாக்கு அதையே பேசுகின்றது

இதி ஸ்ருதிப்யாம் ஸ்மரணம் த்யானம் ச நாமஸங்கீர்த்தனேSந்தர்பூதம் |

மேற்கண்ட இந்த இரு வேதவாக்கியங்களால் (மனதால்) நினைத்தல், மற்றும் த்யானித்தல் ஆகிய இரண்டும் நாம சங்கீர்த்தனத்திற்குள் அடங்கும் என்பது புலனாகிறது.

யஸ்மின்ன்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச்சிந்தனே

விக்னோ யத்ர நிவேஶிதாத்மமனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக: |

முக்திம் சேதஸி ய: ஸ்திதோSமலதியாம் பும்ஸாம் ததாத்யவ்யய:

கிம் சித்தம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.56)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

எவரிடம் தங்கள் மனதை லயித்தவர்களுக்கு, நரகவாசம் இல்லையோ, சுவர்க்கத்தைப் பற்றிய நினைவுகளும் (அவர்களது முக்திப்பாதைக்குத்) தடைக்கற்களோ, அந்த ப்ரஹ்மாவின் ஸத்யலோகமும் துச்சமானதோ, எந்த அழிவற்றக் கடவுளானவர் தனது அடியவர்களின் தூய்மையான மனதிற்குள் வசித்து அவர்களுக்கு முக்தியை அளிப்பவரோ, அந்த பகவான் ஸ்ரீ அச்யுதரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பாவங்கள் அழிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? (முக்தியையே அளிக்க வல்லவரால் பாவங்களை அழிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை).

இதி விஶ்ணுபுராணாந்தே ஸ்ரீபராஶரேணோபஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுபுராணத்தின் முடிவில் ஸ்ரீபராசர மஹரிஷி (அந்தப் புராணத்தின் மூலக்கருத்தாக) முடிவுரையாகக் கூறுகிறார்.

ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |

இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா ||

ஸ்ரீ மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் கடைந்தெடுத்து, அதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தால் முடிவில் பகவான் ஸ்ரீமன் நாராயணரையே த்யானிக்க வேண்டும் என்பதே (அனைத்து சாஸ்திரங்களின் முடிவான கருத்தாகப்) புலனாகும்.

இதி ஸ்ரீமஹாபாரதாந்தே பகவதா ஸ்ரீவேதவ்யாஸேண உப ஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீமஹாபாரதத்தின் முடிவில் ஸ்ரீவேதவ்யாஸர் கூறுகிறார்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வஸம்ஸ்திதை: |

ஒமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஹரிவம்ஶம் 3.89.9)

ஸ்ரீஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது:

நீங்கள் அனைவரும் ஸத்வ குணத்தில் நிலைநின்று, எப்பொழுதும் பகவான் ஸ்ரீ ஹரியையே த்யானியுங்கள். ஒ அந்தணர்களே!!! ‘ஓம்’ என்று உச்சரித்து, பகவான் ஸ்ரீ கேசவரைத் த்யானிப்பீர்களாக.

கைலாசயாத்ராயாம் ஹரிரேகோ த்யாதவ்ய இத்யுக்தம் மகேஸ்வரேணாபி |

இவ்வாறு ஸ்ரீஹரிவம்சம் கைலாச யாத்திரை பகுதியில் பகவான் சிவனும் ‘பகவான் ஸ்ரீ ஹரி ஒருவரையே த்யானிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

ஏதத்ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:’ இத்யாதிக்யமுக்தம் |

இந்த வாக்கியங்களில் இருந்து “அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் கருதுகிறேன்” என்பதே (என்னும் பீஷ்மரின் கருத்தே) அனைத்திலும் மேலானதாக கூறப்படுகிறது.

‘கிமேகம் தைவதம் லோகே’ இத்யாரப்ய ‘கிம் ஜபன் முச்யதே ஜந்து:’ இதி ட்ப்ரஶ்னேஶு ‘யத: ஸர்வாணி’ இதி ப்ரஶ்னோத்தராப்யாம் யத்ப்ரஹ்மோக்தம் தத்விஶ்ப்தேனோச்யத இதி வ்யாக்யாதம் |

‘உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?’ என்று தொடங்கி ‘யாரை நாம சங்கீர்த்தனம் செய்யவேண்டும்’ வரைக் (யுதிஷ்டிரனால்) கேட்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு விடையாக ‘எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ’ என்று (பீஷ்மாசார்யார்) எந்த ப்ரஹ்மத்தை பற்றி விவரித்தாரோ அந்த ப்ரஹ்மமே ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தினால் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

————–

  1. ஓம் விஶ்ணவே நம:

தத்கிமித்யாகாங்க்ஷாயாமாஹ விஶ்ணு:’ இதி |

பிறகு, ‘அந்த விஶ்வம் யார்?’ என்று அறிய முற்படும்பொழுது (அந்த விஶ்வமே) ‘விஶ்ணு’ என்று (பீஷ்மாசார்யார்) கூறுகிறார்.

ததா ச ரிக்வேதே – ரிக் வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமு ஸ்தோதாரபூர்வ்யம் யதாவித ரிதஸ்ய கர்ப்பம் ஜனுஶா பிபர்தன ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஶ்ணோ ஸுமதிம் பஜாமஹே

இத்யாதிஶ்ருதிபி: விஶ்ணோ: நாமஸங்கீர்த்தனம் ஸம்யக்ஞானப்ராப்தயே விஹிதம் |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களில் பூரண ஞானத்தைப் பெற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் நாமசங்கீர்த்தனமே வழிமுறையாக கூறப்பட்டுள்ளது.

தமேவ ஸ்தோதாரபுராணம் யதா ஞானேன ஸத்யஸ்ய கர்ப்பம் ஜன்மஸமாப்திம் குருத |

ஒ துதிகள் செய்வோரே!!! உண்மையே உருவமாம் அந்த பழம்பெரும் கடவுளின் (பகவான் ஸ்ரீ விஶ்ணுவின்) உண்மைத் தன்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சியை முடித்து விடுங்கள் (அதனின்று விடுதலைப் பெறுங்கள்).

ஜானந்தஆஅஸ்ய விஶ்ணோநாமாபி ஆவதத அன்யே வதந்து மா வா ஹே விஶ்ணோ வயம் தே ஸுமதிம் சோபனம் மஹபஜாமஹே இதி ஶ்ருதேர் அபிப்ராய: |

ஒ துதிகள் செய்வோரே!!! இந்த விஶ்ணுவின் நாமங்களை அறிந்துகொண்டு அதை உச்சரிப்பீராக. ஒ விஶ்ணுவே!!! மற்றவர்கள் இதை (இந்த நாமங்களை) ஓதினும், ஒதாவிடினும், நாங்கள் உங்களது அழகு, ஒளி மற்றும் பேரறிவைப் போற்றி பாடுவோம். இதுவே மேற்கண்ட வேத வாக்கியத்தின் உள்ளுறைப் பொருளாகும்.

வேவேஶ்டி வ்யாப்னோதீதி ‘வேவேஷ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பவரின் விஶ்ணு: திருநாமம் “விஶ்ணு” வாகும் விஶ்வ்யாப்யத்யபிதாயினோ ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் பொருள் “எங்கும் பரவியிருத்தலாகும்” நுக்ப்ரத்யயான்தஸ்ய அதனுடன் “நுக்” என்ற விகுதி சேர்ந்து ரூபம் விஶ்ணு ரிதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது. |

‘வேவேஶ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேகாலவஸ்துபரிச்சேத ஶூன்ய இத்யர்த்த: |

இடம், தன்மை, காலம் போன்ற எல்லைகள் இல்லாதவர் என்று பொருள்.

வ்யாப்தே மே ரோதஸி பார்த்த க்ராந்திஸ்சாப்யதிகா ஸ்திதா |

ஒ பார்த்தனே!!! இந்த பூமியும், ஆகாயமும் என்னுள் நிலைபெற்றுள்ளது, அவை எனது விரிவாக்கமாகும்.

க்ரமணாச்சாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிசம்ஞித: ||

ஒ பார்த்தனே!!! இவ்வாறு பரந்து, விரிந்திருப்பதனால் நான் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே (ஶாந்தி பர்வம் 342.42-43)

இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஷ்யதே ஶ்ரூயதேSபி வா |

அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ||

நாம் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்த எத்தனை உலகங்களும், பிரபஞ்சங்களும் உள்ளனவோ, அவற்றுள் எல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணர் உள்ளும், புறமும் நீக்கமற பரவியுள்ளார்.

இத்யாதிஶ்ருதேர்ப்ருஹண்நாராயணே (13.1.2) 

இவ்வாறு ப்ருஹண்நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரணபுருஶமகாரணம் பரம் ப்ரஹ்ம சோகமோஹவினிர்முக்தம் விஶ்ணும் த்யாயன்ன ஸீததி’

அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கு ஒரு காரணமின்றியும், எவ்வித துயரமும், பற்றுதலுமின்றியும், அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற பரந்து, நிறைந்துள்ள பரப்ரஹ்மமான ஸ்ரீமன்நாராயணனாகிய, விஶ்ணுவைத் த்யானிப்பவர் துயருறுவதில்லை.

இத்யாத்மபோதோபநிதி (1)

இவ்வாறு ஆத்மபோத உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

விஶதேர்வா ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் மற்றொரு பொருள் “உட்புகுதலாகும்” நுக்ப்ரத்யயாந்தஸ்ய அதனுடன் “நுக்” என்ற விகுதி ரூபம் விஶ்ணுர் இதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது |

அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்து இருப்பதால், பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்மாத்விஶ்டமிதம் ஸர்வம் தஸ்ய ஶ  க்த்யா மஹாத்மன: |

தஸ்மாதேவோச்யதே விஶ்ணோர்விஶேர்தாதோப்ரவேநாத் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.1.54)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த பரமாத்மாவின் சக்தியானது இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உட்புகுந்துள்ளது. ‘விஶ்’ என்ற வேர்சொல்லிற்கு ‘உட்புகுதல்’ என்று பொருள். எனவே, அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஸ்ரீ விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

—————–

  1. ஓம் வஶட்காராய நம:

யதுத்தேஶேனாத்வரே எவரைக்குறித்து ஶட் வேள்விகளில் “வஶட்” என்று சொல்லி க்ரியதே ஆகுதி செய்யப்படுகிறதோ ஸ ஶட்கார: அவரே “வஶட்காரர்” ஆவார் |

அனைத்து வேள்விகளிலும் பகவானைக் குறித்தே ‘வஶட்’ என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான் ‘வஶட்கார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யக்ஞ்யோ வை விஶ்ணு: | (தைத்ரிய சம்ஹிதை 1.7.4)-வேள்விகள் விஶ்ணுவேயாகும்.

இதி ஸ்ருதேர்யக்ஞ்யோ வஶட்கார: | இந்த ஸ்ருதி வாக்கியத்தின் படி எந்த வேள்வியில் “வஶட்” என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறதோ அந்த வேள்வியே வஶட்காரமாகும் (வேள்விகள் விஶ்ணுவே என்பதால்விஶ்ணு ஶட்காரர் எனப்படுகிறார்).

யேன வஶட்காராதிமந்த்ராத்மனா வா தேவான்ப்ரீனயதி ஸ வஶட்கார: | தேவதா வா‘ப்ரஜாபதிஸ்ச வஶட்காரஸ்ச’ இதி ஸ்ருதே: |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களின்படி, வஶட்கார மந்திர உருவமாக எந்த தெய்வத்தை திருப்தி செய்கிறார்களோ அவர் (அந்த தெய்வமே) வஶட்காரர்.

சதுர்பிஸ்ச சதுர்பிஸ்ச த்வாப்யாம் பஞ்சபிரேவ ச |

ஹூயதே ச புனர்த்வாப்யாம் ஸ மே விஶ்ணு: ப்ரஸீதது ||

நான்கு (ஒஶ்ராவய), நான்கு (அஸ்து ஸ்ரௌஶட்), இரண்டு (யஜ), ஐந்து (யே யஜாமஹே) மற்றும் இரண்டு (வஶட்) எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களினால் எவரைக் குறித்து வேள்விகள் செய்கின்றோமோ அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணு என்னிடம் மகிழ்ச்சி அடையட்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச |-இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களின் படியும் பகவான் ஸ்ரீ விஶ்ணு ‘வஶட்கார’ என்று அழைக்கப்படுகிறார்.

———————-

  1. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:

பூதம்  கடந்த காலம் பவ்யம்  எதிர் காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து) முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபுஎவரொருவர் தலைவரோ (ப்ரபுவோ பூதபவ்யபவத்ப்ரபு: அவர் “பூதபவ்யபவத்ப்ரபு” ஆவார்.

முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் “பூதபவ்யபவத்ப்ரபு:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ர ப்ரதி யோகிக மைஶ்வர்ய மஸ்யேதி ப்ரபுத்வம் |

(ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும் கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.

——————

  1. ஓம் பூதக்ருதே நம:

ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.||

(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தமோகுணமாஸ்தாய  (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

  1. ஓம் பூதப்ருதே நம:

ஸத்வகுணமதிஷ்டாய ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு பூதானி அனைத்து உயிர்களையும் பிபர்த்தி வளர்த்துபாலயதி காத்துதாரயதி தாங்கி போஷயதீதி ஊட்டமளிப்பதால் வா பூதப்ருத் ‘பூதப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்து, காத்து, தாங்கி, ஊட்டமளிப்பதால் ‘பூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

  1. ஓம் பாவாய நம:

ப்ரபஞ்சரூபேண அனைத்துலகங்களின் வடிவாக பவதீதி வெளிப்படுவதால் கேவலம் முழுவதுமாக பவதீத்யேவ வா ப்ரபஞ்சமாகவே உருவாவதால் பாவ: “பாவ:” என்று அழைக்கப்படுகிறார் | பவனம் வெளிப்படுவது அல்லது உருவாவது பாவ: ‘பாவ:’ என்று அழைக்கப்படுவது (எதனால்) ஸத்தாத்மகோ வா அவரின்றி வேறுதுவுமில்லை என்பதால் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாக, அவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் “பாவ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் பூதாத்மனே நம:

பூதானாமாத்மாந்தர்யாமீதி அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் பூதாத்மா பூதாத்மா” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் “பூதாத்மா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏஷ தா ஆத்மாந்தர்யாம்யம்ருத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.3-22)

உனக்குள் உள்ளுறைந்திருக்கும் இந்த ஆத்மா அழிவற்றதாகும்.

இதி ஸ்ருதே: | இவ்வாறு வேதங்களில் (உபநிஶத்துக்களில்) கூறப்பட்டுள்ளது.

——————-

  1. ஓம் பூதபாவனாய நம:

பூதானி அனைத்து உயிர்களையும் பாவயதீதி உருவாக்குவதால் ஜனயதி பிறப்பித்து வர்த்தயதீதி வா வளர்ப்பதால் பூதபாவன: “பூதபாவன” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால், அதாவது பிறப்பித்து, வளர்ப்பதால் “பூதபாவன” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————————-

  1.  பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |அவ்யய: புருஶ: சாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி😐
  2. அவ்யய: 14.புருஶ: 15.சாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர ஏவ ச ||
  1. ஓம் பூதாத்மனே நம:

பூத ஆத்மா யஸ்ய பூதாத்மா கர்மதாராயோ வா 

ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர் போன்ற திருநாமங்களைக் கூறும்பொழுது அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவரோ என்ற ஐயத்தை தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால் பீஷ்மாச்சார்யார்) போக்குகிறார். பகவான் ஸ்ரீ விஶ்ணு தூய்மையானவர், அனைவருக்கும் உள்ளுறையும் ஆத்மாவானவர்.  அவர் படைப்பது முதலான அனைத்து செயல்களையும் தம் கடமையாகக் கருதிச் செய்கிறார். எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘பூதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ஓம் பூதாத்மனே நம:

எட்டாவது திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் நான்காவது ப, “பாஸ்கரன்” என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்). இந்த திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் முதல் ப, “பூ” என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்).

பூதக்ருதாதிபிர்குணதந்த்ரத்வம் பூதக்ருத் (ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர்) போன்ற திருநாமங்களில் அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவர் ப்ராப்தம் என்ற குற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ப்ரதிஷித்யதே போக்குகிறார் பூதாத்மா இதி தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால்).

பூத தூய்மையான ஆத்மா ஆத்மா யஸ்ய யவரோ பூதாத்மா அவரே “பூதாத்மா”கர்மதாராயோ வா (படைப்பது முதலான அனைத்து செயல்களையும்) கடமையாகச் செய்கிறார் (எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை).

“கேவலோ நிர்குணஸ்ச” (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

(அவர்) தனிப்பட்டவர், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு, ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

குணோபராகச்வேச்சாதபுருஶஸ்யேதி கல்ப்யதே |

அந்த புருஶருக்கு (ஆத்மாவிற்கு), குணங்களுடன் தொடர்பு அவரது இச்சையால் உருவாகிறது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

——————

  1. ஓம் பரமாத்மனே நம:

பரமஸ்சாஸாவாத்மா சேதி பரமாத்மா  கார்ய காரண விலக்ஷணோ நித்ய சுத்த முக்த ஸ்வபாவ:

அனைத்திற்கும் மேம்பட்ட ஆத்மாவாக இருப்பதனால் பகவான் ‘பரமாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தூய்மையாகவும், அறிவுடையவராகவும், பற்றுதலின்றியும் இருப்பதை தமக்கு இயற்கையாக உடையவர்.

பரமஸ்சாஸாவாத்மா சேதி எவரொருவர் அனைத்திற்கும் மேம்பட்டவரோ மற்றும் ஆத்மாவானவரோ பரமாத்மா அவரே பரமாத்மா. கார்யகாரணவிலக்ஷணோ செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு நித்ய எப்பொழுதும் சுத்த தூய்மையாகவும் புத்த அறிவுடையவராகவும் முக்த பற்றுதலின்றியும் ஸ்வபாவ: இயற்கையாக உடையவர் |

———–

12-ஓம் முக்தானாம் பரமாகதயே நம:

முக்தானாம் முக்தி அடைந்தவர்களுக்கு பரமா ப்ரக்ருஷ்டா (பரமா என்றால்) மிகவும் மேலான கதிர்கந்த்வ்யா (கதி என்றால்) அடையக்கூடிய இலக்கு தேவதா எந்த தெய்வமோ புனராவ்ருத்த்யசம்பவாத்தத்கதஸ்யேதி எவரை ஒருமுறை சென்று அடைந்தால் மீண்டு வருவதென்பது இல்லையோ முக்தானாம் பரமா கதி: அவரே “முக்தானாம் பரமா கதி” |

எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலான இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே ||’ (ஸ்ரீமத் பகவத்கீதை 8.16)

குந்தி மகனே!!! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

இதி பகவத்வசனம் | இவ்வாறு, பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறுகிறார்.

—————-

  1. ஓம் அவ்யயாய நம:

ந வ்யேதி நாஸ்ய வ்யயோ விநாஶோ விகாரோ வா வித்யத இதி அவ்யய:

ந வ்யேதி பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் நாஸ்ய வ்யயோ விநாஷோ விகாரோ அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் வா வித்யத இதி அவ்யய: அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்று அழைக்கப்படுகிறார் |

பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜரோSமரோSவ்யய:’–“மூப்பற்றவர், இறவாதவர், அழிவில்லாதவர்”–இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

—————

  1. ஓம் புருஶாய நம:

‘புருஶ:’ என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை “புனருக்தி” தோஷமாக கருத இயலாது.

புரம் ஶரீரம் தஸ்மின் ஶேதே புருஶ:

புரம் ஶரீரம் “புரம்” என்றால் உடல் தஸ்மின் அதற்குள் ஶேதே (அந்தராத்மாவாக) சயனித்திருப்பதால் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நவத்வாரம் புரம் புண்யமேதைர்பாவை: ஸமன்விதம் |

வ்யாப்ய ஶேதே மஹாத்மா யஸ்தஸ்மாத் புருஶ உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 210|37)

அந்த மஹாத்மாவானவர் ஒன்பது ஓட்டைகளை உடைய இந்த உடலெங்கும் நிறைந்து, சயனித்திருக்கிறார். எனவே, அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யத்வா அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் ஆஸீத் புரா பூர்வமேவேதி விக்ரஹம் க்ருத்வா வ்யுத்பாதித: புருஶ:

யத்வா அல்லது அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு ஆஸீத் இருத்தல் புரா பூர்வமேவேதி ‘புரா’ என்றால் அனைத்திற்கும் முன்னமிருந்தே விக்ரஹம் க்ருத்வா இணைத்துப் பார்த்தால் வ்யுத்பாதித: கிடைக்கும் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு, புரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் ‘புருஶ’ என்ற சொல் கிடைக்கும். இதன் பொருள், அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூர்வமேவாஹமிஹாஸமிதி தத் புருஶஸ்ய புருஶத்வம்’

நான் இங்கு முன்னமிருந்தே இருக்கிறேன். இதுவே, அந்த “புருஶரின்” இயல்பாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

அதவா புருஶு பூரிஶு உத்கர்ஶஶாலிஶு ஸத்வேஶு ஸீததீதி புருஶ:

அதவா அல்லது புருஶு புருஶு என்றால் பூரிஶு பல்வேறு உத்கர்ஶஶாலிஶு உயர்ந்த குணமுடைய ஸத்வேஶு ஜீவாத்மாக்களினுள்ளே ஸீததீதி இருப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டு, பல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி ஃபலானி ஸனோதி ததாதீதி வா புருஶ:

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு ஃபலானி (கேட்பவர்க்குத் தகுந்தபடி) வெவ்வேறு பலன்களை ஸனோதி ததாதீதி சனோதி, அதாவது வாரி வழங்குபவர் வா என்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

புரூனி + நோதி = புருஶ:

புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டு, கேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி புவனானி ஸம்ஹாரஸமயே ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு புவனானி உலகம் ஸம்ஹாரஸமயே (அவற்றை) அழிக்க வேண்டிய காலத்தில் ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா அவற்றை அழிப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

புரூனி + ஸ்யதி = புருஶ:

புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டு, அழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூர்ணத்வாத் பூரணாத்வா ஸதனாத்வா புருஶ:

பூர்ணத்வாத் தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும் பூரணாத்வா (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும் தனாத்வா நிலைத்து நிற்பதனாலும் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூரணாத்ஸதனாச்சைவ ததோSஸௌ புருஷோத்தம:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.11)

நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் அவரே புருஷோத்தமராவார்.

இதி பஞ்சமவேதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

———————-

  1. ஓம் ஸாக்ஷிணே நம:

ஸாஷாத் அவ்யவதானேன ஸ்வரூப  போதேன ஈக்ஷதே பஶ்யதி ஸர்வமிதி ஸாக்ஷி 

ஸாக்ஷாதவ்யவதானேன “ஸாக்ஷாத்” என்றால் வேறு எவற்றின் துணையுமின்றி ஸ்வரூப போதேன தன்னுடைய இயற்கையான ஞானத்தால் (அறிவால்) ஈக்ஷதே பஶ்யதி உள்ளதை உள்ளவாறு காண்கிறார் ஸர்வமிதி அனைத்தையும் (அனைவரையும்) ஸாக்ஷி அவர் ‘ஸாக்ஷி’ என்று அழைக்கப்படுகிறார் |

வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயே) அனைத்தையும் (அனைவரையும்) உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்) பகவான் “ஸாக்ஷி” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு காண்பதற்கு கண்களின் துணை வேண்டும், கேட்பதற்கு காதுகள் வேண்டும். பகவானுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், அவருக்கு கண்களே இல்லையென்றோ, காதுகளே இல்லையென்றோ பொருள் அல்ல. அவர் ஞானத்தாலேயே அனைத்தையும் அறிவதால் அவருக்கு இவற்றின் துணை கொண்டு தான் காண வேண்டும் என்ற நியதி கிடையாது.

ஸாக்ஷாத்த்ரஶ்டரி ஸம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 5.2.91)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

“ஸாக்ஷாத்” என்ற சொல், ஒரு வ்யக்தியைக் குறிக்கும் பொழுது, ‘இணி’ என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.

எனவே இந்த திருநாமத்தை நாமாவளியாகக் கூறும்பொழுது “ஓம் சாக்ஷிணே நம:” என்று “இணி” என்ற விகுதியுடன் கூட்டி உச்சரிக்கப்படுகிறது.

——————

  1. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:

க்ஷேத்ரம் சரீரம் ஜானாதீதி க்ஷேத்ரஜ்ஞ்ய 

க்ஷேத்ரம் சரீரம் “க்ஷேத்ரம்” என்றால் இந்த உடலைக் குறிக்கும் ஜானாதீதி அறிகிறார் க்ஷேத்ரஜ்ஞ்ய அவர் ‘க்ஷேத்ரஜ்ஞ்ய’ என்று அழைக்கப்படுகிறார் |

இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் “க்ஷேத்ரஜ்ஞ” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதோSனுபஸர்கே க:’ (பாணினி சூத்ரம் 3.2.3)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஒரு சொல்) அகாரத்தில் / ஆகாரத்தில் முடிந்து, அதற்கு ஒரு வினைச்சொல் முன்னே இல்லாவிடில், “க” என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.

க்ஷேத்ர ஜானாதி: இந்த கூட்டலில், இடையில் க விகுதி சேர்வதால்தான் க்ஷேத்ரஞ்ய என்ற சொல் கிடைக்கிறது.

‘க்ஷேத்ரஞம் சாபி மாம் வித்தி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 13.2)

ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:

க்ஷேத்ரஞ்யன் நானே என்றுணர்.

‘க்ஷேத்ராணி ஹி சரீராணி பீஜம் சாபி சுபாசுபம் |

தானி வேத்தி ச யோகாத்மா தத: க்ஷேத்ரஞ்ய உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 351.6)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

இந்த உடலே ‘க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்படுகிறது (இங்கு, உடலை நிலம் என்றும் பொருள் கொள்ளலாம்). நற்செயல் மற்றும் தீச்செயல்கள் இதன் விதைகளாகும். யோகத்தில் நிலைபெற்ற ஆத்மா இதனை உள்ளபடி அறிகிறான், எனவே, அவன் “க்ஷேத்ரஞன்” என்று அறியப்படுகிறான்.

————–

  1. ஓம் அக்ஷராய நம:

ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷர: பரமாத்மா

ஸ ஏவ ந எவர்க்கு இல்லை க்ஷரதி அழிவு (அல்லது தேய்வு) இதி அவர் அக்ஷர: அக்ஷர: என்று அழைக்கப்படுகிறார் பரமாத்மா அந்த பரமாத்மா |

எவருக்கு, ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு) இல்லையோ, அந்த பரமாத்மா “அக்ஷர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஷ்னாதேர் “அஷ்” என்ற சொல்லுடன் அஷ்னோதேர் வா அல்லது, “அஷு” என்ற சொல்லுடன் ஸரப்ரத்யய “ஸர” என்ற விகுதி அந்தஸ்ய கடைசியில் சேர்வதன் மூலம் ரூபமஷர இதி “அக்ஷர” என்ற சொல் பிறக்கிறது |

ஏவகாராத் இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் “ஏவ” என்ற சொல் க்ஷேத்ரஞ்யாக்ஷரயோரபேத: க்ஷேத்ரஞன் (பொது வழக்கில் க்ஷேத்ரஞன் என்றால் ஜீவாத்மாவைக் குறிக்கும்) மற்றும் அக்ஷர (பரமாத்மா) இவற்றுள் வேறுபாடுகள் இல்லை என்ற பரமார்த்தத: மிக உயர்ந்த அத்வைத உண்மையைக் குறிக்கிறது.

தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

சகாராத்வ்யாவஹாரிகோ இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் “சகாரம்” பொது வழக்கில் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே உள்ள பேதஸ்ச வேறுபாடுகளைக் குறிக்கிறது, ப்ரஸித்தேர் பொதுவழக்கில் பிரபலமாய் இருப்பதால் மட்டுமே அப்ரமாணத்வாத் இது ஆதாரமான உண்மையாகிவிடாது ||

இங்கு சங்கர பகவத்பாதர் “ஏவ ச” என்ற சொற்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிற்கும் இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறித்தாலும், முடிவில் அத்வைதமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை என்று குறிப்பிடுகிறார்.

————–

3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||

இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யோக: 19.யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
  2. நாரஸிம்ஹவபு: 22.ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||
  1. ஓம் யோகாய நம:

‘ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |

ஏகத்வபாவனா யோகா: க்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||’

மனம் உட்பட அனைத்து அறிவுப்புலன்களையும் (ஞானேந்த்ரியங்கள்) ஒடுக்கி, க்ஷேத்ரஞ்யான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி இருத்தலே யோகம் எனப்படும்.

தத் இவ்வாறு (மனம், புலன்களை அடக்கி யோகத்தில் ஒன்றுவதன் மூலம்) அவாப்யதயா அடையப்படுவதால் யோக: அவர் ‘யோக:’ என்று அழைக்கப்படுகிறார் |

மனம், மற்றும் அறிவுப்புலன்களை அடக்கி, அவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும். இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால், பகவான் “யோக:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————–

  1. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:

யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |

யோகம் யோகத்தை விதந்தி கற்று விசாரயந்தி ஆராய்ந்து ஜானந்தி அறிந்து லபந்த இதி வா அதை அடைந்த யோகவிதஸ்தேஶாம் யோகத்தை உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளின் நேதா தலைவர் ஞாநினாம் (அத்தகைய) அறிவிற்சிறந்த யோகிகளின் யோகக்ஷேமவஹனாதிநேதி நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்று அவற்றை நிர்வகித்து அவர்களை வழிநடத்துவதால் யோகவிதாம் நேதா அவர் “யோகவிதாம் நேதா” என்று அழைக்கப்படுகிறார் |

யோகத்தை கற்று, ஆராய்ந்து, உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்கு, அவர்களின் நன்மை, தீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் “யோகவிதாம் நேதா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேஶாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 9.22)

ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:

அந்த நித்திய யோகிகளின் நன்மை, தீமைகளை நான் பொறுப்பேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————

  1. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:

ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |

ப்ரதானம் ‘ப்ரதானம்’ என்றால் ப்ரக்ருதிர்மாயா ‘ப்ரக்ருதி’ அல்லது மாயையைக் குறிக்கும்; புருஶோ ‘புருஶ’ என்றால் ஜீவஸ் ஜீவாத்மாவைக் குறிக்கும் தயோரீஶ்வரஇவை இரண்டையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் ப்ரதானபுருஶேஶ்வர: அவர் ‘ப்ரதானபுருஶேஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார் |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் “ப்ரதானபுருஶேஶ்வர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களும் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், ஐந்து அறிவுப்புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகிய 24 தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே உறையும் ஜீவாத்மா 25வது தத்துவமாவார். மனம் உட்பட, முதல் 24 தத்துவங்களும் அசித் (அறிவற்றவை). ஜீவாத்மா மட்டுமே அறிவுடையவர். இந்த சித் (ஜீவாத்மா), மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் ஈஸ்வரன் பகவான்.

————–

  1. ஓம் நாரஸிம்ஹவபுஶேநம:

நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|

நரஸ்ய மனிதர் ஸிம்ஹஸ்ய சிங்கம் சாவயவா ஆகிய இந்த இரண்டின் உடலுறுப்புகளும் யஸ்மின் எங்கு லக்ஷ்யந்தே சேர்ந்து உள்ளதோ தத்வபுர்யஸ்ய ஸ அத்தகைய உடல் உள்ளவர் நாரஸிம்ஹவபு: ‘நாரஸிம்ஹவபு:’ என்று அழைக்கப்படுகிறார் |

(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் ‘நாரஸிம்ஹவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம் ஸ்ரீமதே நம:

யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |யஸ்ய எவருடைய வக்ஷஸி திருமார்பில் நித்யம் எப்பொழுதும் வஸதி வாழ்கின்றாளோ ஸ்ரீ: திருமகள் ஸ அவர் ஸ்ரீமான் ‘ஸ்ரீமான்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு ‘ஸ்ரீமான்’ என்பது ஒரு அடைமொழி மட்டுமே. பகவானுக்குத்தான் அது பொருத்தமான திருநாமமாகும். திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் பகவான், இந்தத் திருநாமத்தின் தூய தமிழாக்கமான ‘திருவாழ்மார்பர்’ என்ற பெயருடனேயே சேவை சாதிக்கிறார்.

—————

  1. ஓம் கேஶவாய நம:

அபிரூபா: கேஶா யஸ்ய ஸ கேஶவ: |

அபிரூபாமிகவும் அழகியதான கேஶா தலைமுடியுடன் யஸ்ய இருப்பதால்  அவர் கேஶவ: ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறார்|

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கேஶாத்வோSன்யதரஸ்யாம்’ (பாணினி ஸூத்ரம் 5.2.109)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:-“கேச” என்ற சொல்லின் பின்னே வரும் “வ:” என்ற விகுதி, புகழ்ச்சியைக் குறிக்கிறது.

யத்வா கஸ்ச அஸ்ச ஈஶஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶேன வர்தந்தே ஸ கேஶவ|

யத்வா அல்லது கஸ்ச ‘க’ என்று அழைக்கப்படும் ப்ரஹ்மா அஸ்ச ‘அ’ என்று அழைக்கப்படும் விஶ்ணு ஶஸ்ச ‘ஈசன்’ என்று அழைக்கப்படும் சிவன் த்ரிமூர்த்தய: ஆகிய இந்த மும்மூர்த்திகளும் யத்வஶேன எவருடைய ஆணைக்குட்பட்டு வர்தந்தே இருக்கின்றனரோ  அவர் கேஶவ: கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அத்வைதத்தின்படி மும்மூர்த்திகளும் ஞானமே வடிவான பரப்ரஹ்மத்தின் உருவங்களாகும்.
  2. க+அ+ஈஶ+வ (வஷேன, வர்தந்தே) = கேஶவ:

கேஶிவதாத்வா ‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் கேஶவ: பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

கேசி என்பவன் பகவான் கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன். இவன், குதிரை வடிவில் வந்து பிருந்தாவனத்தில் மக்களை துன்புறுத்த, பகவான் தனது கைகளை அவன் வாயினுள் நுழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.

யஸ்மாத்வயை துஶ்டாத்மா ஹதகேசீ ஜனார்தன |

தஸ்மாத்கேஶவநாம்னா த்வம் லோகே க்யாதோ பவிஶ்யஸி ||’ (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.16.23)

இதி விஶ்ணுபுராணே ஸ்ரீக்ருஶ்ணம் ப்ரதி நாரதவசனம் |

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் நாரத முனிவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறுகிறார்:

ஒ ஜனார்தனா!!! தங்களுடைய கரங்களால் இந்த தீய எண்ணம் கொண்ட கேசி கொல்லப்பட்டான். எனவே, நீங்கள் உலகில் கேசவன் என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குவீர்கள்.

ப்ருஶோதராதித்வாச்சப்தசாதுத்வகல்பனா | (பாணினி சூத்திரம் 6.3.109)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ப்ருஷோதரா வர்க்கத்தை சேர்ந்த சொற்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி பொருந்தாது இருப்பினும், முனிவர்களும், பெரியோர்களும் இந்த பெயரை உச்சரித்திருந்தால் அதை (இலக்கண விதிகளின்படி ஆராயாமல்) அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புணர்ச்சி விதிகளின்படி கேசி + வ, கேசவ என்ற சொல்லாக உருவாகாது. எனினும், நாரதர் முதலிய முனிவர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் இந்த நாமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிவிலக்கை மேற்கண்ட பாணினி சூத்திரம் நமக்கு அளிக்கிறது.

——————

  1. ஓம் புருஶோத்தமாய நம:

புருஶானாம் உத்தம: புருஶோத்தம: |

புருஶானாம் புருஶர்களில் உத்தமதலைசிறந்தவர் புருஶோத்தம: ‘புருஷோத்தம:’ என்று அழைக்கப்படுகிறார் |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘புருஶோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தில் புருஶ என்ற பெயர்ச்சொல்லும், உத்தம என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து புருஶோத்தம: என்று உருவாகியுள்ளது. பொதுவாக, ஒரு சமூகத்திலிருந்து ஒன்றை மட்டும் உயர்த்திக் கூறும்பொழுது (புருஶர்களில் உத்தமன்) இவ்வாறு இணைக்கக்கூடாது என்பது பாணினி ஸூத்ரத்தில் உள்ள ஒரு விதியாகும். அந்த விதி இங்கு பொருந்தாது என்று ஆதிசங்கரர் ‘ந நிர்த்தாரணே’ (பாணினி ஸூத்ரம் 2.2.10) என்ற பாணினி ஸூத்திரத்தின் விளக்குகிறார்.

ததா ச இதை விளக்கும் வண்ணம் பகவத் வசனம் ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.

யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: |

அதோSஸ்மி லோகே வேதே ச ப்ரதிதபுருஶோத்தம: || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.18)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஶனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும், வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

இந்த விளக்கத்தின் தேர்ந்த பொருளாவது: பகவான் புருஶர்களைக் காட்டிலும் உயர்ந்தவர், புருஶர்களில் உத்தமர் என்று கூறுவது பிறப்பாலோ, பண்பாலோ அல்லது செயலாலோ அல்ல. அவரது இயற்கையான வல்லமையாலேயே அவர் புருஶர்களுக்குள் உத்தமாராக இருக்கிறார்.

——————————

  1. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |

ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபு ரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸர்வ: 26.ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
  2. ஸம்பவ: 32.பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
  1. ஓம் ஸர்வஸ்மை நம:

அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |

ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹா பாரதம் உத்தியோக பர்வம் 7.11)

மஹா பாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:

அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலை பெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ‘ஸர்வ’ என்று அழைக்கின்றனர்.

இதி இந்த பகவத் வ்யாஸ வசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் ‘ஸர்வ’ என்று அழைக்கப் படுகிறார் |

மஹா பாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின் படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும் அறிவதாலும், பகவான் ‘ஸர்வ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————–

  1. ஓம் ஶர்வாய நம:

ஶ்ருணாதி ஸம்ஹார ஸமயே ஸம்ஹரதி ஸகலா: ப்ரஜா: இதி ஶர்வ:

ஶ்ருணாதி ‘ஶ்ருணாதி’ என்றால் ஸம்ஹார ஸமயே பிரளய (அழிக்கும்) காலத்தில் ஸம்ஹரதி கொல்வதால் ஸகலாப்ரஜாஅனைத்து உயிர்களையும் இதி ஶர்வ:’ பகவான் ‘ஶர்வ:’ என்று அழைக்கப் படுகிறார்.

பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான் ‘ஶர்வ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————–

  1. ஓம் ஶிவாய நம:

நிஸ் த்ரை குண்ய தயா ஶுத்தத்வாத் ஶிவ:

நிஸ் த்ரை குண்ய தயா முக்குணங்களின் சேர்க்கை இன்றி ஶுத்தத்வாத் தூய்மையானவராக இருப்பதால் ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்று அழைக்கப் படுகிறார்.

முக் குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஶிவ என்றால் தூய்மை என்று ஒரு பொருள் உண்டு

‘ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ:’ (கைவல்ய உபநிஶத் 8)

கைவல்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அவரே ப்ரஹ்மா (நான்முகக்கடவுள்), அவரே சிவன்…

இதி இங்கு அபேத (அனைத்தும் ஒன்றே என்ற) அத்வைத உபதேஶா தத்துவத்தின் படி ஶிவா ‘ஶிவ’ ஆதி முதலிய நாமபிர் நாமங்களாலும் ஹரிரேவ பகவான் ஹரி ஒருவரே ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் |

கைவல்ய உபநிஶத்தில் சிவபெருமானைப் போற்றிக் கூறும் வாக்கியமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சிவனை போற்றும் அனைத்தும் பகவான் ஹரியையே போற்றும் என்பது அத்வைதத் தத்துவம். இதை ஆசார்யர் தொடக்கத்திலேயே விளக்கி யுள்ளார். எனவே, சிவ முதலிய திருநாமங்களும் பகவான் ஹரியையே போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.

————————

  1. ஓம் ஸ்தாணவே நம:

ஸ்திரத்வாத் ஸ்தாணு:

ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப் படுகிறார்.

(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ‘ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————–

  1. ஓம் பூதாதயே நம:

பூதானாம் ஆதி காரணத்வாத் பூதாதி: 

பூதானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதி காரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால் பூதாதி: பகவான் ‘பூதாதி:’ என்று அழைக்கப் படுகிறார்.

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———–

  1. ஓம் நிதயேSவ்யயாய நம:

ப்ரளய காலேஸ்மின் ஸர்வம் நிதீயத இதி நிதி: அவ்யய: அவினஶ்வரோ  நிதிரித்யர்த்த:

ப்ரளய காலேஸ்மின் அழிக்கும் (ப்ரளய) காலத்தில் ஸர்வம் அனைத்தும் நிதீயத (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதால் இதி அவர் நிதி: ‘நிதி:’ என்று அழைக்கப் படுகிறார்.

‘கர்மண்யதிகரணே ச’ (பாணினி ஸூத்ரம் 3.3.93)

இதி கி ப்ரத்யய:-இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இங்கு ‘கி’ விகுதி கூட்டப் பட்டுள்ளது.

ஸ ஏவ இப்பொழுது நிதிர்விஶேஶ்யதே ‘நிதி’யை மேலும் ப்ரத்யேகமாக அடையாளப் படுத்திக் காட்டுகிறார்.

அவ்யய: அவினஶ்வரோ எக்காலத்திலும் அழிவே இல்லாத நிதிரித்யர்த்தநிதி என்று இதற்குப் பொருள்.

அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதா லும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் “நிதி: அவ்யய:” என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————–

  1. ஓம் ஸம்பவாய நம:

ஸ்வேச்சயா ஸமீசீனம் பவனமஸ்யேதி ஸம்பவ:

ஸ்வேச்சயா (கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் ஸமீசீனம் புகழோடு பவனமஸ்யேதி பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) ஸம்பவ: அவர் ‘சம்பவ:’ என்று அழைக்கப் படுகிறார்.

(நம்மை போன்று கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் புகழோடு பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) பகவான் ‘ஸம்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

‘தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:…அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத் வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.

அத துஶ்ட விநாஶாய ஸாதூனாம் ரக்ஷணாய ச |

ஸ்வேச்சயா ஸம்பவாம் யேவம் கர்ப துக்க விவர்ஜித: ||’

தீயன செய்வோரை அழிக்கவும், நல்லோரைக் காக்கவும், நான் எனது விருப்பத்தின் படி கர்ப்பமும் அதைச் சார்ந்த துன்பங்களும் இன்றி பிறக்கிறேன்.

இதி  | இவ்வாறு, பகவானின் மற்றொரு வாக்கும் உள்ளது.

மேற்கண்ட ஸ்லோகம் எந்த இதிஹாஸ, புராணத்தில் உள்ளது என்ற குறிப்பு இல்லை. ஆனால், இதன் பொருள் பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒத்தே உள்ளது.

————–

32-ஓம் பாவனாய நம:

ஸர்வேஶாம் போக்த்ருணாம் ஃபலானி பாவயதீதி பாவன:

ஸர்வேஶாம் அனைத்து போக்த்ருணாம் அனுபவிப்பவர்களுக்கு ஃபலானி (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை பாவயதீதி உருவாக்குவதால் பாவன: அவர் ‘பாவன:’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிப்பவர்களுக்கு, (அவர்களின் விருப்பம்மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை உருவாக்குவதால் பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வஃபலதாத்ருத்வம் பகவானே அனைத்துப் பலன்களையும் வழங்குகிறார் என்பது,

‘ஃபலமத உபபத்தே:’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 3.2.38)-அனைத்துப் பலன்களும் ப்ரஹ்மத்தினிடத்தினின்றே தோன்றுகின்றன.

இத்யத்ர ப்ரதிபாதிதம் இதனால் (மேற்கண்ட ப்ரஹ்ம ஸூத்ரத்தினால்) நிரூபிக்கப்பட்டுள்ளது.

—————–

  1. ஓம் பர்த்ரே நம:

ப்ரபஞ்சஸ்ய அதிஶ்டானத்வேன பரணாத் பர்தா

ப்ரபஞ்சஸ்ய இந்த ப்ரபஞ்சத்தை அதிஶ்டானத்வேன தனது சக்தியால் பரணாத் தாங்குவதால் பர்தா பகவான் ‘பர்தா’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை தனது சக்தியால் தாங்குவதால் பகவான் ‘பர்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————–
34-ஓம் ப்ரபவாய நம:

ப்ரகர்ஶேண மஹாபூதானி அஸ்மாஜ் ஜாயந்த இதி ப்ரபவ:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்த மஹாபூதானி அனைத்து பொருட்களும்உயிரினங்களும் அஸ்மாஜ் ஜாயந்த எவரிடமிருந்து தோன்றுகின்றனவோ இதி அவர் ப்ரபவ: ‘ப்ரபவ’ என்று அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த (அல்லது ஆச்சர்யப்படும் வகையில்) அனைத்து பொருட்களும், உயிரினங்களும் அவரிடமிருந்து தோன்றுகின்றபடியால் பகவான் ‘ப்ரபவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பவோ ஜன்மாஸ்யேதி வா ப்ரபவ: 

ப்ரக்ருஶ்டோ (அல்லது) மிகப் பெருமையான பவோ ஜன்மாஸ்யேதி வா பிறவிகள் (அவதாரங்கள்) எடுப்பதால் அவர் ‘ப்ரபவ’ என்று அழைக்கப் படுகிறார்.

அல்லது, அவரது பிறவிகள் (அவதாரங்கள்) மிகவும் பெருமை பெற்று விளங்குவதால் பகவான் ‘ப்ரபவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————-

  1. ஓம் ப்ரபவே நம:

ஸர்வாஸு க்ரியாஸு ஸாமர்த்த்ய அதிஶயாத் ப்ரபு: 

ஸர்வாஸு அனைத்து க்ரியாஸு செயல்களிலும் ஸாமர்த்த்ய திறமை அதியாத் மிகுந்து இருப்பதால் ப்ரபு: அவர் ‘ப்ரபு’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து செயல்களிலும் அவரது திறமை மிகுந்து இருப்பதால் பகவான் ‘ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம் ஈஶ்வராய நம:

நிரூபாதிகம் ஐஶ்வர்யம் அஸ்யேதி ஈஶ்வர: 

நிரூபாதிகம் பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை ஶ்வர்யம் தனக்கு செல்வமாக அஸ்யேதி கொண்டிருப்பதால் ஈஶ்வர: அவர் ‘ஈஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.

(நிர்குண ப்ரஹ்மமாக) பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை தனக்கு செல்வமாக கொண்டிருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் ஸ்வயம்புவே நம:

ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |

ஸ்வயமேவ (தான் மட்டும்) தனியொருவராய் பவதீதி இருப்பதால் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

(வேறொரு காரணமின்றிதான் மட்டும்) தனியொருவராய் இருப்பதால், பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ’ (மனு ஸ்ம்ரிதி 1.7)

மனுஸ்ம்ரிதியில் மனு பகவான் கூறுகிறார்அவர் தானே (தன்னிச்சையாலே) வெளிப்பட்டார்

இதி இவ்வாறு மானவம் வசனம் மனு மனுஸ்ம்ரிதியில் கூறியுள்ளார் |

ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |

ஸர்வேஶாமுபரி அனைவருக்கும் மேலே பவதி இருப்பதாலும் ஸ்வயம் பவதீதி வா தன்னிச்சையால் தோன்றுவதாலும் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் மேலே இருப்பதாலும், தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |

யேஶாமுபரி பவதி எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மா) யஸ்சோபரி பவதி எவர் மேலானவரோ (பரமாத்மா) ததுபயாத்மனா இப்படி இருவாறாகவும் ஸ்வயமேவ அவரே பவதீதி வா தோன்றுவதால் ஸ்வயம்பூ: அவர் ‘ ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிபூ: ஸ்வயம்பூ: (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளதுஎல்லாமாக இருப்பவர்; தானே தோன்றியவர்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி அதவா அல்லது ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ என்றால் பரமேஶ்வரஅந்த பரம்பொருள் ஸ்வயமேவ தன்னிச்சையாலே ஸ்வதந்த்ரோ சுதந்திரமாக பவதி இருப்பவர் ந பரதந்த்ர(என்றுமே) பிறருக்கு அடங்கி இருப்பவரல்ல.

‘பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ:’ (கதோபநிஶத் 2.1.1)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதுஈஸ்வரன் இந்த்ரியங்களை வெளிநோக்கு உடையனவாக (படைத்திருப்பதன் மூலம்) நாசப்படுத்திவிட்டார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படியும் (மேலே கூறப்பட்ட ஈசாவாஸ்ய உபநிஶத் மந்த்ரத்தின் படியும் பகவான் ஸ்வயம்பூ என்று அழைக்கப்படுகிறார்). 

—————–

  1. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
    அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

    இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

    37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
    42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: |

38-ஓம் ஶம்பவே நம:

ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |

ஶம் ‘ஶம்’ என்றால் ஸுகம் சுகம் அல்லது இன்பம் பக்தனாம் தனது அடியவர்களுக்கு பாவயதீதி உருவாக்குவதால் (அளிப்பதால்) ஶம்பு: அவர் ‘ ஶம்பு:’ என்று அழைக்கப்படுகிறார் |

தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்) பகவான் ‘ஶம்பு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ஆதித்யாய நம:

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶ: ஆதித்ய: |

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ சூர்யமண்டலத்தின் நடுவே ஹிரண்மயதங்கமயமான புருஶபுருஶராய் வீற்றிருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அன்றாட சந்த்யா வந்தனத்தில் வரும் ஒரு பகுதி: த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட.

த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |

த்வாதஸாதித்யேஶூ பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணுர்வா ‘விஶ்ணு’ என்ற பெயருடைய ஆதித்யனாக பகவான் இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதித்யானாமஹம் விஶ்ணு:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

ஆதித்யர்களில் நான் விஶ்ணு.

இத்யுக்தே இவ்வாறு பகவான் கூறியுள்ளார்.

பன்னிரண்டு ஆதித்யர்களின் பெயர்கள்: சக்ர, அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஶா, விவஸ்வான், சவிதா, மித்ர, வருண, அம்சுமான், பக மற்றும் விஶ்ணு.

அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |

அதிதேர் ‘அதிதி’ என்றால் அகண்டிதாயா மஹ்யா பரந்து விரிந்துள்ள இந்த பூமி அயம் அந்த நிலமகளின் பதிரிதி வா கணவன் ஆதலால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

‘அதிதி’ என்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும். அந்த நிலமகளின் கணவன் ஆதலால், பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘இயம் வா அதிதி:’ ‘மஹீம் தேவீம் விஶ்ணுபத்னீம்’

‘இது (இந்த பூமி) அதிதி’

‘இந்த பூமிதேவியானவள் விஶ்ணுவின் மனைவியாவாள்’

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |

யதா எவ்வாறு ஆதித்ய சூரியன் ஏக ஏவாநேகேஶூ ஒன்றாக இருப்பினும் ஜலபாஜனேஶூ வெவ்வேறு நீர்நிலைகளில் அனேகவத் பலவாறாக ப்ரதிபாஸதே பிரதிபலிக்கின்றதோ, ஏவமனேகேஶூ தான் ஒருவர் மட்டுமே இருப்பினும் ஶரீரேஶூ பல்வேறு உடல்களில் ஏக ஏவாத்மானேகவத் ஒரே ஆத்மாவானது பல ஆத்மாக்களாக ப்ரதிபாஸத பிரதிபலிப்பதால் இதி ஆதித்ய ஸாதர்ம்யதா இவ்வாறு (பிரதிபலிப்பதில்) சூரியனை ஒத்து இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

ஒரே சூரியன், பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறது. அது போன்றே, ஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார். இவ்வாறு, சூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம் புஶ்கராக்ஷாய நம:

புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |

புஶ்கரேண தாமரை இதழ்களை உபமிதே ஒத்த அக்ஷிணீ கண்களை யஸ்யேதி உடையவராதலால் புஶ்கராக்ஷ: அவர் ‘புஷ்கராக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார் |

தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் ‘புஷ்கராக்ஷ’ (தாமரைக்கண்ணன்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் மஹாஸ்வனாய நம:

மஹான் ஊர்ஜித: ஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய ஸ மஹாஸ்வன: |

மஹான் ஊர்ஜித‘ மஹத்’ என்றால் மிக உயர்ந்த ஸ்வனோ நாதோ வா ‘ஸ்வனம்’ என்றால் ஒலி ஷ்ருதிலக்ஷணோ வேதங்களாகிய யஸ்ய எவருக்கு உள்ளதோ  மஹாஸ்வன: அவர் ‘ மஹாஸ்வன:’ என்று அழைக்கப்படுகிறார் |

வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸன்மஹத்’ (பாணினி ஸூத்ரம் 2.1.61)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ஸத், மஹத் (மஹான்) போன்ற வார்த்தைகள் தனிப்பட்ட ஒருவரைக் குறிக்கும் பொழுது அவரது மேன்மையை சுட்டிக் காட்டுகிறது.

‘ஆன்மஹத: ஸமானாதிகரணஜாதீயயோ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.46)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி: மஹத் என்ற சொல்லின் பின்னே, ஒன்றை மற்றொண்டுடன் தொடர்பு படுத்தும் சொல் வந்தால், மஹத் என்னும் சொல்லில் உள்ள ‘த’காரம் ‘ஆ’காரமாக மாறுகிறது.

எனவேதான், மஹத்+ஸ்வன: = மகாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

இத்யாத்வம் | இவ்வாறு, மஹத்+ஸ்வன: = மஹாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

‘அஸ்ய மஹதோ பூதோ நி:ஸ்வஸிதமேதத் ரிக்வேதோ யஜுர்வேத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.10)

அந்த பரப்ரஹ்மம் (தனது) மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், மற்றும் வெளியிடுதலே ரிக்வேதம் மற்றும் யஜுர்வேதமாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————-

  1. ஓம் அநாதிநிதனாய நம:

ஆதிர்ஜன்ம: நிதனம் விநாஶ: தத்த்வயம் யஸ்ய ந வித்யதே ஸ அநாதிநிதன: |

ஆதிர்ஜன்ம‘ஆதி’ என்றால் பிறப்பு நிதனம் விநாஶ‘நிதனம்’ என்றால் அழிவு தத்த்வயம் இந்த இரண்டும் யஸ்ய ந வித்யதே எவருக்கு இல்லையோ  அநாதிநிதன: அவர் ‘அநாதிநிதன’ என்று அழைக்கப்படுகிறார் |

எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் ‘அநாதிநிதன’ (பிறப்பு, இறப்பு அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் தாத்ரே நம:

ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |

ஆனந்தாதிரூபேண ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு விஶ்வம் இந்த பிரபஞ்சத்தைத் பிபர்தீதி தாங்குவதால் தாதா அவர் ‘தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் ‘தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் விதாத்ரே நம:

கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |

கர்மணாம் செயல்களையும் தத்ஃபலானாம் அதன் பலன்களையும் ச கர்த்தா உருவாக்குவதால் விதாதா அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார் |

செயல்களையும், அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் தாதவ உத்தமாய நம:

அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்ய: ப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |

அனந்தாதீனாமபி ஆதிசேஷன் முதலானவர்களையும் தாரகத்வாத் தாங்குபவர் விஶேஶேண குறிப்பாக, அவர்களுக்குத் தாங்கும் சக்தியைத் ததாதீதி வா தருபவர் தாதுருத்தம இதி ‘தாதுருத்தம’ என்று அழைக்கப்படுகிறார் நாமைகம் இது ஒரே திருநாமமாகும் விஶேஶேணம் பகவானின் தனிப்பட்ட சக்தியால் ஸமானாதிகரண்யேன முன்னர் கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்புடையதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

ஸர்வதாதுப்ய: (இந்த ப்ரபஞ்சத்தையும், அதிலுள்ளவைகளையும் தாங்கும் ஆதிசேஷன் முதலான) அனைத்துத் தாதுக்களைக் (தாங்குபவர்களைக்) காட்டிலும் ப்ருதிவ்யாதிப்ய: பூமி முதலானவைகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: சிறந்தவர் என்பதே இந்த திருநாமத்தின் தேர்ந்த பொருளாகும்.

(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ள) ஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தை) தாங்கும் சக்தியை அளித்து, அவர்களையும் (அந்த சக்தியை அளிப்பதன் மூலம்) தாங்குவதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன், பூமி முதலானோர் ‘தாதா’; அவர்களையும் தாங்குவதால் பகவான் தாதுக்களில் சிறந்தவர், ‘தாதுருத்தம:’.

தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன |

தாதுர் அனைத்தையும் படைக்கும் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (நான்முகக்கடவுள்) ப்ரஹ்மாவை விட மேலானவர் (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன இவ்வாறு, மேலே கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்பு கொள்ளாமல், இந்த திருநாமத்திற்கு இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.

(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்) நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாது, உத்தம என்று) இரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ இந்த ப்ரபஞ்சம் அனைத்திற்கும் காரணமாகவும், அதில் நடைபெறும் செயல்களாகவும் உள்ள அறிவாக இருப்பதால் தாது: அவர் தாது (அனைத்திற்கும் காரணம்) என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் தாது என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி பரப்ரஹ்மம் ஒன்றே தத்துவம். இந்த ப்ரபஞ்சம் அனைத்துமே அந்த ப்ரஹ்மம் மாயையில் பட்டு ப்ரதிபலிப்பதால் உருவாகிறது. இந்த ப்ரஹ்மம் சின்மயமாக (அறிவு வடிவாக) உள்ளது.

உத்தம: ஸர்வேஷாம் அனைத்து உத்கதானாம் சிறப்புடையவர்கள் மற்றும் சிறந்த பதார்த்தங்களைக் காட்டிலும் அதிஶயேனோத்கதத்வாத் மிகச்சிறந்தவரானபடியால் உத்தம: அவர் ‘உத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவரையும், அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் ‘ உத்தமர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

———-

  1. ஓம் அப்ரமேயாய நம:

ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத் நாப்யுபமான ஸித்த: நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதிஶயாபாவாத் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஶஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா |

ஶப்தாதி ரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்யபரம்பொருள் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.  எனவே, ஒலி முதலியவற்றை அறிய உதவும் நமது புலனுறுப்புக்களால் அவரை அறிய இயலாது | நாப்யனுமானவிஶயதத்வ்யாப்த லிங்காபவாத் எவ்வித குறியீடோ, குறிப்பிட்டதொரு உருவமோ இல்லாததால் அவரை அனுமானித்தும் அறிந்துகொள்ள முடியாது (உதாரணமாகநேரடியாக தெரியாவிடினும் புகை இருப்பதன் மூலம் நெருப்பை நாம் அனுமானிக்கலாம்பரம்பொருளை அவ்வாறும் அறிய முடியாது) | நாப்யுபமான ஸித்த:, நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் அவரை பிரிக்க (பகுக்க) முடியாது, (அவருக்கு) வேறொரு ஒப்புமை இல்லை. எனவே, எடுத்துக்காட்டின் மூலமும் அவரை அறிய முடியாது | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் அவரை சில சூழ்நிலைகளைக் (காரணங்களைக்) கொண்டும் அறிய முடியாது, ஏனெனில், அவரைத் தவிர வேறொன்றைக் கொண்டும் அந்த சூழ்நிலைகளுக்கு விளக்கம் அளிக்க இயலாது (அவரைக் கொண்டே விளக்கம் அளிக்க வேண்டுமெனில், அவற்றால் அவரை எவ்வாறு அறிய முடியும்?) | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் அவர் அனைத்திலும் உள்ளார் என்று ஏற்றுக்கொள்வதால், அவரை (இவை அனைத்துமில்லை) என்ற நீக்க வாதத்தாலும் வர்ணிக்க இயலாது (பரப்ரஹ்மம் இது இல்லை, இது இல்லை என்று அனைத்தையும் நீக்கி, முடிவில் எது உள்ளதோ அதுவே என்று விவரிப்பது நீக்க வாதம்) | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய எனவே, அவரை (நாம் காணும், அறியும்) எதுவும் இல்லை என்ற நீக்க வாதத்தை விளக்கும் ஆறு சான்றுகளாலும் விளக்க இயலாது | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதியாபாவாத் அவரை, சாத்திரங்களைக் கொண்டும் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள இயலாது. ஏனெனில், அவர் சாத்திர விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டும், அவற்றிலிருந்து மேம்பட்டும் இருப்பவர் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? உண்மை இவ்வாறிருக்க, அவரை சாத்திரங்களைக் கொண்டே அறிய இயலும் என்று கூறுவது ஏன்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா ஒளிமயமான அவர் (வேதம் முதலிய) சான்றுகளுக்கு அப்பாற்பட்டு இருப்பினும், (புலன்களுக்கு அறியமுடியாத வகையில்) இந்த உலகனைத்தையும் (அதன் உள்ளிருக்கும் ஆத்மாவாக) கட்டுக்குள் வைத்திருப்பதால், அவர் (மறைமுகமாக) சாத்திரங்களில் (அவரைப்பற்றிக்) கூறியள்ளதற்கு சாட்சியாக இருக்கிறார். எனவே, மற்ற எவ்வகையிலும் அவரை அறிய முடியாது, அத்தகைய சாட்சியாக மட்டுமே அவரை அறியமுடியமாதலால் அவர் ‘அப்ரமேயர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நாம் நமது புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக் கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும் மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால், சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் ‘அப்ரமேய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

  1. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:

ஹ்ருஶீகாணிந்த்ரியாணி தேஶாம் ஈஶ: ஹ்ருஶீகேஶ:

ஹ்ருஶீகாணிந்த்ரியாணி ‘ஹ்ருஷீகம்’ என்றால் இந்த்ரியங்கள் தேஶாம் : அவற்றை அடக்கி ஆள்கிறார் க்ஷேத்ரஞ ரூபபாக் (அனைத்திலும் உள்ளுறைந்து) அனைத்தையும் உள்ளபடி அறிவதால் ஹ்ருஶீகேஶ: அவர் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்து, அனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார். எனவே, பகவான் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா இந்த்ரியாணி யஸ்ய வஶே வர்த்தந்தே ஸ ஹ்ருஶீகேஶ:

யத்வா அல்லது இந்த்ரியாணி புலன்கள் யஸ்ய எவரின் வஶே கட்டுப்பாட்டுக்குள் வர்த்தந்தே உள்ளதோ ஸ பரமாத்மா அந்தப் பரம்பொருள் ஹ்ருஶீகேஶ:  ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா ஸூர்யரூபஸ்ய சந்த்ரரூபஸ்ய ச ஜகத்ப்ரீதிகரா ஹ்ருஶ்டா: கேஶா ரஶ்மய:  ஸ ஹ்ருஶீகேஶ:

யஸ்ய வா அல்லது ஸூர்யரூபஸ்ய கதிரவனின் வடிவிலும் சந்த்ரரூபஸ்ய  குளிர்நிலவின் வடிவிலும் ஜகத்ப்ரீதிகரா உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் ஹ்ருஶ்டா: ஹ்ருஷ்டா என்றால் மகிழ்ச்சி கேஶா தனது கிரணங்களால் ரஶ்மய: ‘ரஶ்மி’ என்றால் கிரணங்கள்  அவர் ஹ்ருஶீகேஶ: அவர் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும், தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் ‘ஹ்ருஷீகேஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸூர்ய ரஸ்மிர் ஹரிகேஶ: புரஸ்தாத்’

கதிரவனின் முன்னே பகவான் ஹரியின் ஒளிக்கிரணங்கள் (கேஶ) உள்ளன.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹ்ருஶ்டகேஶம் என்னும் இடத்தில்) ஹ்ருஶீகேஶன் என்ற பெயர் ப்ருஶோதராதி ஸூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ப்ருஶோதராதி ஸூத்ரம்: எவரேனும் பெரியவர் ஒருவர் ஒரு பெயரையோ, சொல்லையோ குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தி இருந்தால், அந்த சொல் இலக்கண முறைப்படி அமையாது இருப்பினும், முன்னோர் கூறிய வடிவிலும், பொருளிலுமேயே நாம் பயன்படுத்த வேண்டும்.

யதோக்தம் மோக்ஷ தர்மே | எவ்வாறு மோக்ஷ தர்மத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதோ,

ஸூர்யா சந்த்ரமஸௌ சஷ்வதம் ஶுபி: கேஶஸம்ஞிதை: |

போதயன் ஸ்வாபயம்ஸ்சைவ ஜகதுத்திஶ்டதே ப்ருதக் ||-(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.66)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனும், திங்களும் தங்களுடைய “கேஶ” என்னும் கிரணங்களால் இந்த உலக மக்களை துயில் எழுப்பியும், துயிலுறச் செய்தும் (அந்தக் கிரணங்களிலிருந்து) வேறுபட்டு உதிக்கின்றன.

போதனாத்ஸ்வாபனாஸ்சைவ ஜகதோ ஹர்ஶணம் பவேத் |

அக்னிஶோமக்ருதைரேவம் கர்மபி: பாண்டுநந்தன ||

ஹ்ருஶீகேஶோ மஹேஶானோ வரதோ லோகபாவன: ||-(மஹாபாரதம் சாந்தி பர்வம் 342.67)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: மக்களைத் துயிலெழுப்பியும், துயிலுறச்செய்தும் அவர்களை (கதிரவனும், திங்களும்) மகிழச் செய்கின்றனர். ஒ பாண்டுவின் மைந்தனே!!! இவ்வாறு, தீயையும் (இது கதிரவனுக்கு அடைமொழி), திங்களையும் தத்தம் கடமைகளைச் செய்விப்பதால் இந்தப் பிரபஞ்சத்தின் காரணமாய், அனைவருக்கும் வரங்களை வழங்குபவரான அந்த பரம்பொருளை ‘ஹ்ருஷீகேஷன்’ என்று அழைக்கின்றனர்.

இதி | இவ்வாறு (பகவான் ஹ்ருஶீகேஶன் என்று அழைக்கப்படுகிறார்).

—————————

48.ஓம் பத்ம நாபாய நம:

ஸர்வஜகத்காரணம் பத்மம் நாபௌ யஸ்ய ஸ பத்மநாப:

ஸர்வ ஜகத் காரணம் அனைத்துலகின் தோன்றுமிடமாக பத்மம் தாமரை நாபௌ யஸ்ய எவருடைய தொப்புளில் இருக்கிறதோ  பத்மநாப: அவர் ‘பத்மநாபன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதம்’

பிறப்பற்ற (அந்தப் பரம்பொருளின்) தொப்புளில் ஒன்று (ஒரு தாமரை) உள்ளது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

—————-

49.ஓம் அமரப்ரபவே நம:

அமரானாம் ப்ரபு: அமரப்ரபு:

அமரானாம் தேவர்களின் ப்ரபு: தலைவர் அமர ப்ரபு: பகவான் ‘அமர ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமர ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————————

50.ஓம் விஶ்வ கர்மணே நம:

விஶ்வம் கர்மம் க்ரியா யஸ்ய ஸ விஶ்வகர்மா

விஶ்வம் அனைத்து ஜீவராசிகளும் கர்மம் க்ரியா கர்ம என்றால் செயல் யஸ்ய எவருடையதோ  விஶ்வ கர்மா அந்த பகவான் ‘விஶ்வ கர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் அந்தப் பரம் பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வ கர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி ஜகத்கர்ம விஶ்வம் கர்ம யஸ்யேதி  வா விஶ்வகர்மா

க்ரியத இதி ஜகத் கர்ம உருவாக்கப் படுவதால் இந்தப் பிரபஞ்சத்தையே ‘கர்மம்’ என்று கூறலாம் விஶ்வம் கர்ம இந்தப் பிரபஞ்சமெனும் செயல் யஸ்யேதி  எவருடையதோ வா விஶ்வகர்மா அந்த பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வ கர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

விசித்ர நிர்மாணஶக்திமத்வாத்வா விஶ்வகர்மா 

விசித்ர ஆச்சரியமான நிர்மாண க்திமத்வாத்வா படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் விஶ்வகர்மா பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சரியமான படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு ஆச்சரியமான பலவற்றையும் மிக சாதாரணமாகவே அவர் படைக்கிறார்.

த்வஶ்ட்ரா ஸாத்ருஶ்யாத்வா விஶ்வகர்மா 

த்வஶ்ட்ரா த்வஶ்டா எனப்படும் தேவர்களுக்கு ஸாத்ருஶ்யாத்வா சமானமானவராக இருப்பதால் விஶ்வகர்மா பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வஶ்ட்ரா எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான் ‘விஸ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

த்வஶ்டா எனும் தேவர்களை விஸ்வ கர்மா என்றும் அழைப்பதுண்டு.

——————

51.ஓம் மனவே நம:

மனனாத் மனு:

மனனாத் நினைப்பதால் (எண்ணுவதால்) மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்தையும்) நினைப்பதால் (மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துமே அந்த பகவான் ஒருவரே (அத்வைத தத்துவம்). அவரின்றி வேறொன்றுமில்லை. எனவே, நினைப்பவரும் அவரே, நினைக்கப்படுபவரும் அவரே.

‘நான்யோSதோSஸ்தி மந்தா’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-(பரப்ரஹ்மத்தைத் தவிர) நினைப்பவர் வேறொருவர் இல்லை.

மந்த்ரோ வா மனு:

மந்த்ரோ வா மந்திரங்களின் வடிவில் இருப்பதால் மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்திரங்களின் வடிவில் இருப்பதால் பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஜாபதிர் வா மனு:

ப்ரஜாபதிர் வா (இந்த மனித குலத்தை) நான்முகக் கடவுள் பிரமனின் வடிவில் இருந்துப் படிப்பதால் மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதக் குலத்தைப் (நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 1-

January 20, 2023

குரு (வியாஸ) வணக்கம்:

க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|

வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||

அனைத்து உலகிற்கும் (அனைத்துலக மக்களுக்கும்) நன்மையையே வேண்டுபவரே! வேதமெனும் தாமரைக்கு (அதை மலர்விக்கும்) கதிரவன் போன்றவரே! பற்றற்று தவ நெறியில் நிலைத்திருப்பவரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸரே! உம்மை வணங்குகிறேன்!!

ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|

ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||

ஆயிரக்கணக்கான முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கை கால்களும் ஆயிரக்கணக்கான உருவங்களும் கொண்ட புருஷோத்தமனான பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட, புகழ் வாய்ந்த, (ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமெனும்) துதிக்கு, பிறப்பு மற்றும் மூப்பென்னும் பிணிகளைப் போக்க, இந்த விளக்கவுரை (பாஷ்யம்) எழுதப்படுகிறது.

——————–

ஶுக்லாம் பரதரம் விஶ்ணும் ஸஶிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஶாந்தயே ||

வெண்மையான (தூய்மையான) ஆடை தரித்தவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், வெண்மதியைப் போன்ற நிறமுடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத் தீர்க்க தியானிப்போம்.

வ்யாஸம் வஶிஶ்ட நப்தாரம் ஷக்தே பௌத்ரம் அகல்மஷம் |

பராஶராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் ||

வஶிஶ்டரின் கொள்ளுப் பேரரும், ஷக்தியின் பேரரும், பராஶரரின் புதல்வரும், சுகரின் தந்தையும், மாசுகளற்றவரும், தவத்தில் சிறந்தவருமான முனிவர் வியாசரை வணங்குகிறேன்.

வ்யாஸாய விஶ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஶ்ணவே |

நமோ வை ப்ரஹ்மநிதயே வாஶிஶ்டாய நமோ நம: ||

வியாஸரே விஶ்ணு வடிவானவர்; அந்த பகவான் விஶ்ணுவே வ்யாஸராக அவதரித்தார். பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவரும், அந்த பர ப்ரஹ்மமே ஒரு நிதியாய் திரண்டார் போன்ற வடிவினரும், வஶிஶ்டரின் குலத்திலே தோன்றிய வியாஸரை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

அவிகாராய ஶுத்தாய நித்யாய பரமாத்மனே |

ஸதைக ரூப ரூபாய விஶ்ணவே ஸர்வ ஜிஶ்ணவே ||

எவ்வித மாறுபாடுகளும் அற்றவராய், தூய்மையானவராய், என்றும் (எக்காலத்தும்) நீங்காது இருப்பவராய், எப்பொழுதும் (மாறுபாடில்லாத) ஒரே வடிவத்தை உடையவராய், அனைத்தையும் வெல்பவரான அந்த பரமாத்மா விஶ்ணுவை (த்யானிக்கின்றேன்).

யஸ்ய ஸ்மரண மாத்ரேன ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |

விமுச்யதே நமஸ்தஸ்மை விஶ்ணவே ப்ரப விஶ்ணவே ||

ஓம் நமோ விஶ்ணவே ப்ரப விஶ்ணவே

எவரை நினைத்த மாத்திரத்தில் பிறப்பு இறப்பென்னும் இந்த தளைகளிலிருந்து ஒருவர் விடுபடுகிறாரோ, அந்த பகவான் விஶ்ணுவிற்கு எனது வணக்கங்கள். அந்த பகவான் விஶ்ணுவிற்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்கள்.

—————

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

 தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் அனைத்து மங்களங்களையும் அதிகரிக்க வல்லதும்  அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி) பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்க வல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை ச ஸர்வஷ ஸர்வ ப்ரகாரை: அனைத்தும் ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன் ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம் அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும் (இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்க வல்லதுமான எந்த ஒரு உபாயத்தையும் பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால் புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்) ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:-கேட்பவரின் மனதை தூய்மை படுத்த வல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும் ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

2. யுதிஷ்டிர உவாச:
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யே கம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயூர் மானவா: ஶுபம்||யுதிஷ்டிரர் கூறுகிறார்:
உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்? எவர் எவர் அடையத்தகுந்த இலக்காவார்? மக்கள் நன்மை அடைய யாரை துதிக்க வேண்டும்? யாரை வழிபட வேண்டும்?இந்த முதல் ஸ்லோகத்தில் நான்கு கேள்விகளை யுதிஷ்டிரர் கேட்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.1. முதல் கேள்வி – கிமேகம் தைவதம் லோகேகிமேகம் தைவதம்: தேவ இத்யர்த்த: ஸ்வார்த்தே தத்தித ப்ரத்யய விதானாத்
இங்கு ‘தேவன்’ (கடவுள்) என்பதைக் குறிக்கவே ‘தைவதம்’ என்ற சொல் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.லோகே லோகன ஹேதுபூதே ஸமஸ்த வித்யாஸ்தானே உக்தம் ‘யதாஞ்யா ப்ரவர்தந்தே ஸர்வே’ இதி ப்ரதம: ப்ரஶ்ன:

அனைத்து வித்யைகளிலும் ஞான ஸ்வரூபமாய் விவரிக்கப்படும் ஒரே கடவுள் யார்? ‘யவருடைய ஆணையினால் அனைத்து ஜீவ ராசிகளும் படைக்கப்படுகின்றன’ என்று அவரைப் பற்றி குறிப்பிடுகின்றனர். இது முதல் கேள்வியாகும்.

இந்த நிறத்தில் உள்ளவை ஸ்ருதி (வேதம் மற்றும் உபநிஶத்) வாக்யங்கள். 

கிம்வாப்யேகம் பராயணம்: அஸ்மின்லோகே ஏகம் பராயணம் ச கிம்? ஒரே ஒப்புயர்வற்ற இலக்கானவர் யார்? அதாவது இந்த உலகத்தின் (உலக மக்களின்) ஒரே இலக்கு – அடையப்படக்கூடிய இடம் / இலக்கு யார்?

பரம் மிகச்சிறந்த அயனம் சென்று ப்ராப்தவ்யம் அடையக்கூடிய ஸ்தானம் இலக்கு யஸ்மின் நிரீக்ஷதே கருதப்படுவது (யாதெனின்) –

“பித்யதே ஹ்ருதய க்ரந்திஷ் சிந்த்யதே ஸர்வ ஶம்ஶயா| க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே||  ](முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:–“காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால் இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப் படுகிறது. அனைத்து சந்தேகங்களும் நீக்கப் படுகின்றன. ஜீவாத்மாவின் அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன”

இதி ஶ்ருதே: ஹ்ருதய க்ரந்திர் பித்யதே|–என்ற ஸ்ருதி வாக்கியத்தின் படி யாரை உணர்ந்தறிவதன் மூலம் நம் மனதிலுள்ள ஐயப்பாடுகள் அனைத்தும் விலகுகின்றன (ஐயப்பாடுகள் என்னும் முடிச்சுகள்  அவிழ்ந்து போகின்றன)?

யஸ்ய விஞ்ஞான மாத்ரேண ஆனந்த லக்ஷணோ மோக்ஷ: ப்ராப்யதே யாரை அறிந்த உடனேயே ஆனந்த மயமான முக்தி (மோக்ஷம்) கிடைக்கிறதோ,

யத் வித்வான்ன விபேதி குதஸ்ஶ யாரை அறிந்தவன் எந்த பயமும் கொள்வதில்லையோ 

யத் ப்ரவிஶ்டஸ்ய ந வித்யதே புணர் பவ: எவருக்குள் (முக்தி அடைந்து அத்விதீயமாய்) ஐக்கியமானவர் மீண்டும் பிறப்பதில்லையோ 

யஸ்ய ச வேதனாத் ததேவ பவதி,  ‘ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி (முண்டக உபநிஶத் 3.2.9)’ இதி ஶ்ருதே:| ‘எவன் ப்ரஹ்மத்தை அறிகிறானோ, அவன் ப்ரஹ்மமாகவே மாறி விடுகிறான்’ என்ற வேத வாக்கியத்தின் படி யாரை அறிவதின் மூலம் மனிதன் அவராகவே (அறியப்படும் பொருளாகவே) மாறி விடுகிறானோ

யத் விஹாயாபர: பந்தா ந்ருணாம் நாஸ்தி, ‘நான்ய: பந்தா வித்யதேSயனாய (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 9.15)’ இதி ஶ்ருதே:| ‘மோக்ஷத்திற்கு வேறொரு வழி இல்லை’ என்ற ஸ்வேதாஶ்வதர உபநிஶத் வாக்கியத்தின் படி எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ

ததுக்தமேகம் பராயணம் லோகே யத்தத் கிமிதி த்விதீய: ப்ரஶ்ன: | இவ்வாறு உலகத்தின் ஒரே பரம இலக்காக (மார்கமாக) கூறப்படுபவர் யார்? இது இரண்டாவது கேள்வி.

3. மூன்றாம்  கேள்வி – ஸ்துவந்த: கம்

4. நான்காம் கேள்வி – கம் அர்ச்சந்த:

கம் கதம் தேவம் எந்த தெய்வத்தின்

ஸ்துவந்த: குண ஸங்கீர்த்தனம் குர்வந்த: ஸ்துதி – அதாவது குண கீர்த்தனம் செய்வது மற்றும்

கம் கதம் தேவம் எந்த தெய்வத்திற்கு 

அர்ச்சந்த: பாஹ்யமாப்யந்தரம் சார்ச்சனம் பஹுவிதம் குர்வந்த: பல வழிகளால் அர்ச்சனம் அதாவது உள்ளும் (மனதினுள்ளும்) புறமும் (வெளி புலன்களான கை கால் வாக்கு முதலியவற்றாலும்) வழிபாடு செய்வதால்

மானவா மனு ஸுதா: மனிதர்களுக்கு 

ஶுபம் கல்யாணம் ஸ்வர்காதி ‍ஃபலம் 

ப்ராப்னுயு: லபேரந்நிதி சுபம் – அதாவது சுவர்க்கம் முதலிய நற்பலன்கள் கிடைக்கின்றன? 

புன: ப்ரஶ்னத்வயம் இவை மற்றும் இரு கேள்விகளாகும்.

கோ தர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத: |

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

(யுதிஷ்டிரர் கூறுகிறார்):-எது அனைத்து தர்மங்களிலும் மிக சிறந்ததென்று தாங்கள் (பீஷ்மர்) கருதுகிறீர்கள்? யாரை ஜபிப்பதால் (நாம சங்கீர்த்தனம் செய்வதால்) மக்கள் ஜன்ம, ஸம்ஸார தளைகளிலிருந்து விடுபடுகிறார்கள்?

5. ஐந்தாம் கேள்வி – கோ தர்ம ஸர்வதர்மானாம் பவத: பரமோ மத:

கோ தர்ம: பூர்வோக்தலக்ஷண: முன்சொன்ன (தர்மம் என்றால் என்னவென்ற) அடையாளங்கள் பொருந்திய

ஸர்வ தர்மானாம் ஸர்வேஷாம்  தர்மானாம் மத்யே அனைத்து தர்மங்களிலும்,

பவத: பரம: ப்ரக்ருஶ்டோ (பீஷ்மராகிய) தாங்கள் மிக சிறந்த தர்மம்

மத: அபிப்ரேத என்று எதை கருதுகிறீர்கள்?

இதி பஞ்சம: ப்ரஶ்ன: இது ஐந்தாவது கேள்வியாகும்.

ஆறாம் கேள்வி –  கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத்

கிம் ஜபன் கிம் ஜப்யம் ஜபன் உச்சோபாம்ஷுமானஸலக்ஷணம் ஜபம் குர்வன் யாரை (மூன்று வகையான) ஜபம்* செய்வதால் 

ஜந்து: ஜனனதர்மா பிறப்பையடைந்த ஒரு ஜீவன்

அனேன ஜந்து ஷப்தேன ஜபார்ச்சனஸ்தவநாதிஷு யதா யோக்யம் சர்வ ப்ரானினாமதிகாரம் சூசயதி இங்கு ‘ஜந்து’ என்ற சொல்லினால் ஜபம், அர்ச்சனம் மற்றும் ஸ்லோகங்களில் (மனிதர்கள் மட்டுமல்லாது) அனைத்து ஜீவராசிகளுக்கும் தத்தம் தகுதியைப் பொறுத்து உரிமை உள்ளது என்று குறிப்பிடப் படுகின்றது 

ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ஜன்ம அஞ்ஞான விஜ்ரும்பிதானாம் அவித்யாகார்யானாமுபலக்ஷணம் ‘ஜன்ம’ என்ற சொல் அஞ்ஞானத்தினால் உண்டாகும் அறியாமையைக் குறிக்கின்றது. ‘ஸம்ஸாரம்’ என்பது அந்த அறியாமையின் மற்றொரு பெயராகும்*

ஸம்ஸாரோSவித்யா தாப்யாம் ஜன்ம ஸம்ஸாராப்யாம் யத்பந்தனம் தஸ்மாத் ஜன்ம-ஸம்ஸார-பந்தங்களிலிருந்து விடுபடுகிறான்?

முச்யதே முக்தோ பவதீதி இந்த ஜன்மம் மற்றும் ஸம்ஸாரத்தின் தளைகள், அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவை ஜபம் செய்வதால் எவ்வாறு உடைக்கப்படுகின்றது 

ஷஷ்ட: ப்ரஶ்ன: இது ஆறாவது கேள்வியாகும் |

முச்யதே ஜன்ம ஸம்ஸார பந்தனாதிதீதமுபலக்ஷணம் இதரேஷாம் ஃபலானாமபி ஏதத் க்ரஹணம் மோக்ஷஸ்ய ப்ராதான்யக்யாபனார்த்தம் |

‘ஜன்ம-ஸம்ஸார வடிவான பந்தத்திலிருந்து எப்படி விடுதலை கிடைக்கிறது?’ என்று கேட்பது மோக்ஷத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதற்கேயாகும். மோக்ஷத்தை சொல்வதன் மூலம் மற்ற பலன்களும் இதற்குள் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.

கிமேகமிதி ஷட் ப்ரஷ்னா: கதிதா: | தேஷு பாஷ்சாத்யோSநந்தரோ ஜப்யவிஷய: ஷஷ்ட: ப்ரஷ்னோSனேன ஸ்லோகேன பரிஹ்ரியதே |

இங்கு (யுதிஷ்டிரர்) ‘ஒரே கடவுள் யார்?’ என்று தொடக்கமாக கேட்ட ஆறு கேள்விகளில், கடைசி ‘யாரை ஜபம் செய்யவேண்டும்’ என்று கேட்கப்பட்ட ஆறாம் கேள்விக்கு முதலில் இந்த கீழ்க்கண்ட ஸ்லோகத்தின் மூலம் (பீஷ்மர்) விடையளிக்கிறார்.

ஸ்ரீபீஷ்ம உவாச:

ஜகத்ப்ரபும் தேவதேவமனந்தம் புருஶோத்தமம் |

ஸ்துவன்னாமஸஹஸ்ரேன புரு: ஸததோத்தித: || 

(பீஷ்மர் கூறுகிறார்):–உலகின் நாயகனாய், கடவுட்கெல்லாம் கடவுளாய், எல்லைகளற்று இருப்பவனான, பரம் பொருளை, எவனொருவன் (அந்த பரம் பொருளின்) ஆயிரம் திவ்ய நாமங்களை சொல்லி அன்றாடம் வழிபடுகின்றானோ அவன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

ஸர்வேஷாம் பஹிரந்த: ஷத்ரூனாம் பய ஹேதுர் பீஷ்ம: அனைத்து உள் மற்றும் புற எதிரிகளை பயமடைய செய்வதால் பீஷ்மர் என்று பெயர் பெற்றவரான தேவ வ்ரதர் 

மோக் ஷதர்மாதீனாம் ப்ரவக்தா ஸர்வஞ்ய: அனைத்தும் அறிந்தவர் மற்றும் மோக்ஷ தர்மத்தை போதிக்க வல்லவரும் ஆவார்

ஜகத் ஸ்தாவர ஜங்கமாத்மகம் தஸ்ய உலகிலுள்ள அனைத்து ஸ்தாவரம் (அசையாதன) மற்றும் ஜங்கமம் (அசைவன) ஆகியவற்றின் 

ப்ரபு ஸ்வாமினம் ஸ்வாமியானவரும்

தேவதேவம் தேவானாம் ப்ரஹ்மாதீனாம் தேவம் ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனானவரும்

அனந்த தேஷத: காலதோ வஸ்துதஷ்சாபரிச்சின்னம் தேசம் (இடம்), காலம் மற்றும் வஸ்து (பொருள் அல்லது உருவம்) ஆகிய எல்லைகள் அற்றவரும்,

புருஷோத்தமம் க்ஷராக்ஷராப்யாம் கார்யகாரணாப்யாமுத்க்ருஷ்டம் கார்ய காரண ரூபமாய் அழியும் மற்றும் அழியாதன அனைத்திற்கும் மேற்ப்பட்டவருமான புருஷோத்தமனின்

நாம ஸஹஸ்ரேன நாம்னா ஸஹஸ்ரேன குணங்களை குறிக்கும் ஆயிரம் திருநாமங்களையும், 

ஸ்துவன் குணான் சங்கீர்த்தயன் சங்கீர்த்தனம் 

ஸததோத்திதோ நிரந்தரமுத்யுக்த: தினமும் செய்யும் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

புருஶ பூர்ணத்வாத் புரி ஶயனாத்வா புருஶ:–பூர்ணமானதாகவும், புரி என்று சொல்லப்படும் உடலுக்குள் சயனித்து (உறைந்து) இருப்பதாலும், ஜீவாத்மாவிற்கு ‘புருஶன்’ என்ற பெயர் உண்டு.

‘ஸர்வ து:காதிகோபவேத்’ இதி ஸர்வத்ர சம்பத்யதே ||–அடுத்து வரும் ஸ்லோகத்திலுள்ள ‘ஸர்வ து:காதிகோபவேத்’ – ‘அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்’ என்ற தொடரை பீஷ்மர் கூறும் அனைத்து விடைகளிலும் (ஸ்லோகங்களிலும்) சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.

உத்தரேன ஸ்லோகேன சதுர்த்த: ப்ரஶ்ன: சமாதீயதே–அடுத்த ஸ்லோகத்தால் நான்காவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

தமேவ சார்ச்சயன்நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |

த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||

அந்த பிறப்பு இறப்பற்ற பரம புருஶனை எப்பொழுதும் உள்ளும், புறமும், பூஜிப்பவனும், முக்கரணங்களாகிய வாக்கு (துதித்தல்), மனம் (தியானித்தல்) மற்றும் உடலால் (நமஸ்கரித்தல்) வணங்குபவனும் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

தமேவ சார்ச்சயன் பாஹ்யார்ச்சனம் குர்வன் புறமாலும் (வாக்கு மற்றும் உடலாலும்) பூஜிப்பதாலும்

நித்யம் சர்வேஷு காலேஷு அனைத்து காலங்களிலும் 

பக்திர் பஜனம் தாத்பர்யம் தயா பக்த்யா பக்தி நிறைந்து

புருஶமவ்யயம் விநாஷக்ரியாரஹிதம் அந்த பிறப்பு, இறப்பு மற்றும் அழிவற்ற பரமபுருஶனை

தமேவ ச த்யாயன் ஆப்யந்தரார்சனம் குர்வன் உள்ளாலும் (மனதாலும்) அவரை த்யானிப்பதாலும்

ஸ்துவன் பூர்வோக்தேன முன்னர் கூறிய (சஹஸ்ரநாமம் போன்ற துதிகளால்) 

நமஸ்யன் நமஸ்காரம் குர்வன், பூஜாஷேஷ பூதமுபயம் ஸ்துதிநமஸ்காரலக்ஷணம் முறையான பூஜையால் துதிப்பதாலும் நமஸ்கரிப்பதாலும் 

யஜமான: பூஜக: ஃபலபோக்தா அந்த பூஜையின் பலனை அனுபவிக்கும் எஜமானன் (பூஜிப்பவன்) அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்

அதவா, அர்ச்சயன்னித்யனேனோபயவிதமர்ச்சனமுச்யதே அல்லது இப்படியும் நாம் புரிந்து கொள்ளலாம்: ‘அர்ச்சயன்’ என்ற சொல்லால் உள்ளும் (மனதாலும்) புறமும் (வாக்கு, உடலாலும்) செய்யப்படும் இருவகை அர்ச்சனைகள் குறிக்கப்படுகிறது

த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச்சேத்யனேன மானசம் வாசிகம் காயிகம் சோச்யதே  ‘த்யாயன்’, ‘ஸ்துவன்’, ‘நமஸ்யம்’ இவற்றால் முக்கரணங்களாகிய மனம், வாக்கு, உடலால் செய்யப்படும் பூஜைகள் குறிக்கப்படுகிறது.

த்ருதீயம் பிரஶ்னம் பரிஹரதி உத்தரைஸ் த்ரிபி: பாதை:–அடுத்த மூன்று பாதங்களால் மூன்றாவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

அநாதிநிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |

லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||

அநாதியானவரும், எங்கும் வ்யாபித்திருப்பவரும், அனைத்து உலகங்களுக்கும் நியமன அதிகாரிகளுக்கும் ஸ்வாமியான, மஹேச்வரரான, இந்த உலகத்தை ஆள்பவரான அந்த பரம்பொருளை எப்பொழுதும் துதிக்கும் மனிதன் (ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம்) ஆகிய மூவகை துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

அநாதி நிதனம் ஷட் பாவ விகார வர்ஜிதம் உருவாதல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், அழிதல் ஆகிய ஆறு வகை விகாரங்களற்றபடியால் ‘அநாதியானவரும்’

விஶ்ணும் வ்யாபன ஷீலம் எங்கும் வியாபித்திருப்பதால் ‘விஶ்ணு’ என்று அழைக்கப்படுபவரும்

ஸர்வம் லோக்யதே இதி லோகோ த்ருஷ்யவர்கோ லோகஸ்தஸ்ய நியந்த்ருணாம் ப்ரஹ்மாதீநாமபீஷ்வரத்வாத் ஸர்வலோக மஹேஶ்வர: தம் கண்ணுக்கு தெரியும் (மற்றும் தெரியாத) அனைத்து பதார்த்தங்களுக்கும், இந்த உலகிலுள்ள அனைத்து பதார்த்தங்களுக்கும் நியாமகராக விளங்கும் பிரம்மா முதலானோருக்கும் ஸ்வாமியான படியால் ‘அனைத்து உலகத்திற்கும் மஹேச்வரன்’ என்று அழைக்கபடுபவரும்

லோகம் த்ருஷ்ய வர்கம் ஸ்வாபாவிகேன போதேன சக்ஷாத்பஷ்யதீதி லோகாத்யக்ஷ: தன் இயற்கையான ஞானத்தால் அனைத்தையும் அறிகின்றபடியால் அனைத்துலகங்களிலும் ஆளுமை செலுத்த வல்லவருமான அந்த பரம்பொருளை

தம் நித்யம் நிரந்தரம் எப்பொழுதும்

ஸ்துவன் ஸர்வது:காதிகோபவேத் இதி த்ர்யானாம் ஸ்தவனார்ச்சனஜபானாம் சாதாரணம் ஃபலவசனம் துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான். இவ்வாறு இங்கு துதித்தல், அர்ச்சனை செய்தல் மற்றும் ஜபம் செய்தல்ஆகிய மூன்றிற்கும் ஒரே பலன் உரைக்கப்பட்டுள்ளது.

ஸர்வான்யாத்யாத்மிகாதீனி து:கான்யதீத்ய கச்சதீதி ஸர்வது:காதிகோ பவேத் ஸ்யாத்.

(இவ்வாறு துதிப்பதால் ஒருவன்) ஆத்யாத்மிகம் (தன் கர்மவினைகளால் ஏற்படும் துயரங்கள்), ஆதிபௌதிகம் (புயல், மழை போன்ற இயற்கை உபாதைகளால் ஏற்படும் துயரங்கள்), ஆதிதைவிகம் (நம்மை சோதிக்கும் பொருட்டு தேவதைகள் ஏற்படுத்தும் துயரங்கள்) ஆகிய மூவகை துயரங்களையும் முழுமையாக தாண்டுகிறான் அல்லது மூவகை துயரங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுகின்றான்.

புனரபி தமேவ ஸ்துத்யம் விஶிநஶ்டி–இதுவரை கூறப்பட்ட துதி, ஜபம் மற்றும் பூஜைக்கு உரியவரான அந்த பரம்பொருளின் விஶேஶணங்கள் (சிறப்பான லட்சணங்கள், அடுத்த ஸ்லோகத்தில்) மீண்டும் உரைக்கப்படுகிறது.

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |

லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||

எவரொருவர் உலகத்தை படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பிராமணர்கள், தவம் மற்றும் வேதங்கள் (ஸ்ருதிகள்) ஆகியவற்றிற்கும் நன்மையை விரும்புபவரோ, அனைத்து தர்மங்களையும் அறிந்தவரோ, அனைத்து ஜீவராசிகளின் புகழை  அதிகரிப்பவரோ, அனைத்துலகையும் ஆள்பவரோ, மிக வுயர்ந்த உண்மை யானவரோ, அனைத்திற்கும் உற்பத்திஸ்தானமாய் விளங்குபவரோ அந்த பரமேஸ்வரனை துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

ப்ரஹ்மண்யம் ப்ரஹ்மணே ஸ்ரஶ்ட்ரே ப்ராஹ்மணாய தபஸே ஶ்ருதயே ஹிதம் எவரொருவர் உலகத்தை படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பிராமணர்கள், தவம் மற்றும் வேதங்கள் (ஸ்ருதிகள்) ஆகியவற்றிற்கும் நன்மையை விரும்புபவரோ,

ஸர்வான் தர்மான் ஜானாதீதி ஸர்வ தர்மஞ்ய அனைத்து தர்மங்களையும் அறிந்தவரோ, 

தம் லோகானாம் ப்ராணிநாம் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும்,

கீர்த்தய: யஶாம்ஸி ஸ்வ ஶக்த்யானு ப்ரவேஶேன, வர்தயதீதி தம் தன்னுடைய சக்தியால் பிரவேசித்து (உள்நுழைந்து) அவற்றின் புகழை (கீர்த்தியை) அதிகரிப்பவரோ 

லோகைர்நாத்யதே லோகானுபதாபயதே ஶாஸ்தே லோகானாமீஶ்ட இதி வா லோகநாத: தம் அனைத்துலக ஜீவராசிகளாலும் ப்ரார்த்திக்கபடுபவரோ, அவற்றை ஆள்பவரோ,

மஹத் ப்ரஹ்ம விஶ்வோத் கர்ஶேண வர்த்தமானத்வாத் மஹத் பூதம் பரமார்த்த ஸத்யம் தன்னுடைய அபரிமிதமான சக்தியினால் முக்காலங்களிலும் (குறிப்பாக எதிர்காலத்திலும்) இருப்பதால் மிகவுயர்ந்த உண்மையானவரோ 

ஸர்வ பூதானாம் பவ: ஸம்ஸாரோ யத் ஸகாஶாதுத்பவதீதி ஸர்வ பூத பவோத்பவ: தம் எவருடைய இருப்பின்மூலமே அனைத்து ஜீவராசிகளின் உற்பத்தியும் ஸம்ஸாரத்தின் உற்பத்தியும் உண்டாவதால் அனைத்திற்கும் உற்பத்திஸ்தானமாய் விளங்குபவரோ அந்த பரமேஸ்வரனை துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

பஞ்சமம் பிரஶ்னம் பரிஹரதி (கோ தர்ம ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:)

இப்பொழுது, “பீஷ்மர் அனைத்து தர்மங்களிலும் சிறந்ததாக எதைக் கருதுகிறார்” என்ற ஐந்தாவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

ஏஶ மே ஸர்வதர்மானாம் தர்மோSதிகதமோ மத: |

யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா||

அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் (பீஷ்மர்) கருதுகிறேன்.

பீஷ்மரின் பதில்: துதிகள் மற்றும் அர்ச்சனைகள் நிறைந்த நாம ஸங்கீர்த்தனமே சிறந்த தர்மம்.

ஸர்வேஷாம் சோதனாலக்ஷணானாம் தர்மானாமே (வேதங்கள் மற்றும் ஸ்ருதிகளில் உரைக்கப்பட்டுள்ள) விதிமுறைப்படியுள்ள அனைத்து தர்மங்களிலும்,

வக்ஷ்யமானோ   தர்மோSதிகதமோ சிறந்த தர்மமாக

இதி மே மம நான்

மத: அபிப்ரேத: கருதுகிறேன்

யத் பக்த்யா தாத்பர்யேன உள்ளன்புடன் பக்திபூர்வமாக

புண்டரீகாக்ஷம் ஹ்ருதய புண்டரீகே ப்ரகாஶமானம் வாஸுதேவம் அனைவரின் இதய கமலத்திலும் வீற்றிருக்கும் தாமரைக் கண்ணனான பகவான் வாஸுதேவரை

ஸ்தவைர் குண ஸங்கீர்த்தன லக்ஷணை: ஸ்துதிபி: (அந்த பகவானது) திருநாமங்களை போற்றும் துதிகளால்

ஸதார்சேத் ஸத்காரபூர்வகமர்சனம் கரோதி எப்பொழுதும் அர்ச்சனை மற்றும் விதிப்படி பூஜை

நர: மனுஷ்ய ஒரு மனிதன் செய்வதையே 

இதி யத் ஏஶ தர்ம இதி ஸம்பந்த: சிறந்த தர்மமாக (நான் கருதுகிறேன்).

அஸ்ய ஸ்துதி லக்ஷணஸ் யார்ச்சனஸ் யாதிக்யே கிம் காரணம்? உச்யதே இந்த துதிகள் வடிவான அர்ச்சனை அதிக முக்கியத்துவம் பெறுவதன் காரணம் என்ன? பதில் பார்ப்போம்.

ஹிம்ஸாதி புருஶாந்தரதிரவ்யாந்தர தேஶ காலாதி நியமான(அ)பேக்ஷத்வம் ஆதிக்யே காரணம் |

(இந்த துதிகள் வடிவான அர்ச்சனையில்) (ஜீவ)ஹிம்சை போன்ற பாப கர்மங்களுக்கு இடமில்லை. மற்றும் மனிதர், திரவியங்கள், இடம், காலம் போன்ற நியமங்களும் இல்லை

ஜப யக்ஞத்தின் (நாம ஸங்கீர்த்தனத்தின்) ஏற்றம்:

இன்னார் இந்த இடத்தில இந்த பொருளை கொண்டுதான் கடவுளை துதிக்கவேண்டும் என்பதில்லை. அனைவரும் எப்பொழுதும் துதிக்கலாம்துதி வடிவான வழிபாட்டின் (நாம ஸங்கீர்த்தனத்தின்) மேன்மையை விளக்கும் ஒரு சில இதிஹாஸ, புராண மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுகிறார். 

த்யாயன் க்ருதே யஜன் யஞ்யைஸ் த்ரேதாயாம் த்வாபரேS(அ)ர்ச்சயன் |

யதாப்னோதி ததாப்னோதி கலௌ ஸங்கீர்த்தய கேஶவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.2.17)

விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: க்ருத யுகமான சத்ய யுகத்தில் தியானத்தாலும் தவத்தாலும், திரேதா யுகத்தில் யாக யஞ்யங்களாலும், த்வாபர யுகத்தில் பூஜைகள் செய்வதாலும் மனிதனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலனை கலியுகத்தில் கேசவனான பகவான் கிருஷ்ணரின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான்.

ஜப்யேனைவ து ஸம்சித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஷம்ஷய: |

குர்யாதன்யன்ன வா குர்யான்மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே || (மனு ஸ்ம்ருதி 2.87)

மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: இதில் எந்தவித சந்தேஹமும் இல்லை – ஒரு பிராஹ்மணன் எந்த கர்மங்களை செய்கிறானோ அல்லவோ, அவன் (நாம) ஜபத்தால் மட்டுமே பூர்ண சித்தி யடைகிறான். எனவே தான், பிராஹ்மணன் ‘மைத்ர’ (அனைவரின் மித்திரன் அல்லது நண்பன்) என்று அழைக்கப் படுகிறான்.

ஜபஸ்து ஸர்வ தர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |

அஹிம்சயா ச பூதானாம் ஜபயஞ்ய: ப்ரவர்த்ததே || (மஹாபாரதம்)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து தர்மங்களிலும் ஜபமே மிகச்சிறந்த தர்மமாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜப யஞ்யம் பிராணிகளை ஹிம்ஸிக்காமலேயே பூரணமடைகிறது.

யஞ்யானாம் ஜப யஞ்யோஸ்மி (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

பகவானும் கீதையில் கூறுகிறார்: யஞ்யங்களில் நான் ஜப யஞ்யம்…

ஏதத் ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:’ இத்யுக்தம் ||8||

மேற்சொன்ன (இதிஹாச புராண) கருத்துக்களை ஆராய்ந்துதான் பீஷ்மர் ‘இந்த (ஜபம் துதி முதலான நாம ஸங்கீர்த்தனமாகிய) தர்மமே அனைத்து தர்மங்களிலும் மிக சிறந்தது’ என்று கூறுகிறார்.

த்விதீயம் பிரஶ்னம் ஸமாதத்தே (கிம்வாப்யேகம் பாராயணம்)  –

இப்பொழுது, “ஒரே ஒப்புயர்வற்ற இலக்கானவர் யார்? அதாவது இந்த உலகத்தின் (உலக மக்களின்) ஒரே இலக்கு – அடையப்படக்கூடிய இடம் / இலக்கு யார்?” என்ற இரண்டாவது கேள்விக்கு ஸ்ரீபீஶ்மாச்சார்யார் விடையளிக்கிறார்.

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத் தப: |

பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

எவரொருவர் அனைத்திலும் உத்தமமான (ஞான) ஒளி மயமானவரோ, எவரொருவர் அனைவரையும் ஆள்பவரோ, எவரொருவர் பரப்ரஹ்மமோ, அவரே பரமமான இலக்காவார்.

(எவரொருவர்) பரமம் ப்ரக்ருஷ்டம் உத்தமம்-மஹத் ப்ருஹத் மிகப்பெரிய (அல்லது மிகச்சிறந்த)-தேஜ: சைதன்யலக்ஷணம் ஸர்வாவபாசகம் ஞான ஒளி மயமான(வரோ),

யேன ஸூர்யஸ்தபதி தேஜசேத்த: | (தைத்ரிய பிராஹ்மணம் 3.12.9)

எவருடைய ஒளியினால் பிரகாசிக்கப்பட்டு சூரியன் ஒளிவிடுகின்றானோ

தத் தேவோ ஜ்யோதிஶாம் ஜ்யோதி: (ப்ரஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

அவரை தேவர்கள் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக (வணங்குகிறார்கள்)

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்திரதாரகம் (முண்டக உபநிஶத் 2.2.10)

அந்த ப்ரஹ்மத்தை சூரியனால் விளக்க இயலாது (சூரிய ஒளி கொண்டு அறிய இயலாது) நிலவும், நக்ஷத்திரங்களும் விளக்க இயலாது.

இத்யாதி ஶ்ருதே இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் வாக்யங்களாலும்

யதாதித்யகதம் தேஜ: (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும்

இத்யாதி ஸ்ம்ருதேஶ்ஸ்ச இது போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது.

பரமம் தப: தபத ஆக்ஞாபயதீதி தப: எவரொருவர் அனைவரிலும் சிறந்த ஆணை செலுத்துபவரோ (அல்லது ஆள்பவரோ),

ய இமம் ச லோகம் பரம் ச லோக(க்ம்) ஸர்வாணி ச பூதனை யோSந்தரோ யமயதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.1)

எவரொருவர் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்தது ஆட்சி செலுத்துகிறாரோ

இத்யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸர்வ நியந்த்ருத்வம் ஶ்ரூயதே இந்த ஸ்ருதி வாக்கியத்தின் மூலம் அந்தர்யாமி ப்ராஹ்மனத்தில் அவர் அனைவரையும் ஆட்சி செய்பவர் என்பது கூறப்பட்டுள்ளது.

பீஶாஸ்மாத்வாத: பவதே பீஶோதேதி ஸூர்ய: | பீஶாஸ்மா தக்னிஶ்ஸ் சேந்த்ரஸ்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம: (தைத்ரிய உபநிஶத் 2.8.1)

இத்யாதி தைத்ரியகே தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளபடி

இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது, இவரிடம் உள்ள பயத்தினாலேயே சூர்யன் உதிக்கிறது, இவரிடம் உள்ள பயத்தினாலேயே அக்னி, இந்திரன் மற்றும் ஐந்தாவதுதான ம்ருத்யு தேவதை ஆகியவர்கள் (தத்தம் வேலைகளை செய்ய) ஓடுகிறார்கள்.

தபதீஶ்ட இதி வா தப: தஸ்யைஶ்வர்யம் மனவச்சின்னமிதி மஹத்வம் அனைவரையும் ‘தபிக்கிறார்’ அல்லது ஆள்கிறார் எனவே அவரை ‘தப’ என்று அழைக்கிறார்கள். மற்றும் அவரது ஐஸ்வர்யமானது (சக்தியானது) அளவிடமுடியாதது எனவே அவர் ‘மஹத்’, மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுகிறார்.

ஶ ஸர்வேஶ்வர: (மாண்டுக்ய உபநிஶத் 6) அவரே ஸர்வேஸ்வரன்

இத்யாதி ஶ்ருதே இது போன்ற வேத வாக்கியங்களிலும் இதுவே கூறப் பட்டுள்ளது.

(அவர்) பரமம் ஸத்யாதி லக்ஷணம் ப்ரஹ்ம ஸத்யம் முதலான (குணங்களினால்) விளங்குவதினால் ‘ப்ரஹ்மம்’ என்று அழைக்கப்படுகிறார்

மஹநீயதா மஹத் பரமம் ப்ரக்ருஷ்டம் புனராவ்ருத்தி ஷங்கா ரஹிதம் தனித் தன்மை வாய்ந்ததும் (அங்கே அடைந்தபின் இந்த பூமியில் மீண்டும் பிறப்பெடுத்து) திரும்பிவருதல் முதலிய சந்தேகங்கள் அற்றதும்

பராயணம் பரம் அயனம் பராயணம் உன்னதமான இருப்பிடமானதால் (அதற்கு) ‘பராயணம்’ என்று பெயர்.

பரம க்ராஹனாத் ஸர்வத்ர அபரம் தேஜ: ஆதித்யாதிகம் வ்யாவர்த்யதே| ஸர்வத்ர யோ தேவ இதி விஷேஷ்யதே ச – இந்த ஸ்லோகத்தில் எல்லாவிடத்திலும்  ‘பரம’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளதால் சூர்யன் முதலிய வேறு ஒளிமயமானவைகள் ஒதுக்கப்படுகின்றன. எல்லாவிடத்திலும் (நாராயணனான) அந்த கடவுளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது –

யோ தேவ: பரமம் தேஜ: பரமம் தப: பரமம் ப்ரஹ்ம பரமம் பராயணம் ஸ ஏகம் ஸர்வ பூதானாம் பராயணமிதி வாக்யார்த்த:

எந்த கடவுள் மிகச்சிறந்த ஒளியானவரோ, மிகச்சிறந்த ஆளுனரோ, மிகச்சிறந்த ப்ரஹ்மமானவரோ மற்றும் மிகச்சிறந்த இலக்கனவரோ (இருப்பிடமானவரோ) அவரொருவரே அனைத்து ஜீவராசிகளும் சென்றடையும் சிறந்த இருப்பிடமாவார். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் இதுவேயாகும்.

இதானீம் ப்ரதம ப்ரஶ்னஸ் யோத்தரமாஹ (கிமேகம் தைவதம் லோகே) –

இப்பொழுது “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” முதல் கேள்விக்கு விடையளிக்கிறார்.

பவித்ரானாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||

எவரொருவர் பவித்ரமான (புனிதமான) பொருட்களை காட்டிலும் புனிதமானவரோ, மங்களத்தை (சுகத்தை) அடையும் வழியாகவும் அதை தந்தருள்பவராகவும் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பவரோ, தனது பரமமான ஒளியாலே அனைத்து தேவர்களுக்கும் தெய்வமாக இருப்பவரோ, அழிவற்றவரோ, அனைத்தும் (அனைவரும், அனைத்து ஜீவராசிகளும்) தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவரோ, அவரே (அந்த நாராயணனே) முழு முதற் கடவுளாவார்.

பவித்ரானாம் பவித்ரம் பாவநானாம் தீர்த்தாதீனாம் பவித்ரம் | யார் பவித்ரமான (புனிதமான) பொருட்களை காட்டிலும் புனிதமானவரோ, அதாவது அனைவரையும் புனிதபடுத்தகூடிய புண்ணிய தீர்த்தங்கள் முதலானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்|

ஏன் பகவானை புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர் என்கிறோம்? அதற்கு ஆச்சார்யாள் இரண்டு காரணங்களை அளிக்கிறார். ஒன்று, தன்னை த்யானிப்பவர், தரிசிப்பவர், வழிபடுவோர், நினைப்போர் ஆகிய அனைவரின் பாவங்களையும் அடியோடு அழிக்கிறார். இரண்டாவது, நமது கர்ம வினைகளை  அதன் வேரான அறியாமையோடு (அஞ்ஞானம்) அழிக்கிறார்.

பரமஸ்து புமான் பரமபுருஶனான பரமாத்மா த்யாதோ தன்னை த்யானிப்பவர் த்ருஷ்ட: தரிசிப்பவர் கீர்த்தித: (அவரது புகழை) பாடுபவர் ஸ்துத: துதிப்பவர் ஸம்பூஜித: பூஜிப்பவர் ஸ்ம்ருத: ஸ்மரிப்பவர் (அவரை நினைப்பவர்) ப்ரணத: மற்றும் வணங்குபவர்களின் பாப்மன: ஸர்வாநுன்மூலயதீதி அனைத்து பாவங்களையும் அடியோடு அழிக்கிறார் பரமம் பவித்ரம் எனவே அவர் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்.

ஸம்ஸாரபந்தஹேதுபூதம் (பிறப்பு இறப்பென்னும் இந்த) ஸம்சார பந்தம் உருவாவதற்கு காரணமாயுள்ள புண்யா(அ)புண்யாத்மகம் கர்ம புண்ய பாப கர்மங்கள் தத்காரணம் சாஞானம் (ச அஞ்ஞானம்மற்றும் அந்த கர்மங்கள் உருவாவதற்குக் காரணமாயுள்ள அறியாமை (அஞ்ஞானம்) ஸர்வம் ஆகிய அனைத்தையும்  நாஷயதி ஸ்வயாதாத்ம்யஞானேனேதி தனது ஸ்வரூப ஞானத்தின் மூலம் அழிப்பதினால் வா பவித்ரானாம் பவித்ரம் அவர் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவராவார்.

இனி பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார் ஆதிசங்கரர்.

ரூபமாரோக்ய மர்தாம்ச்ச போகான் சைவானுஷங்கிகான் |

ததாதி த்யாயதோ நித்ய மபவர்க ப்ரதோ ஹரி: ||

பகவான் ஸ்ரீ ஹரியானவர் தன்னை த்யானிப்பவர்களுக்கு முக்தியை அளிப்பதோடல்லாமல், அழகு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் இடைவிடாத உலக இன்பங்களையும் அளிக்கிறார்.

சிந்த்யமான: ஸமஸ்தானாம் க்லேஷானாம் ஹானிதோ ஹி ய:|

ஸமுத்ஸ்ருஜ்யாகிலம் சிந்த்யம் சோSச்யுத: கிம் ந சிந்த்யதே ||

எவரொருவர் தன்னை த்யானிப்பவர்களின் அனைத்து துன்பங்களையும் அழிக்கின்றாரோ, மற்ற சிந்தனைகளை யெல்லாம் தவிர்த்து, அந்த அச்யுதரை மட்டும் ஏன் சிந்திக்க கூடாது?

த்யாயேன் நாராயணம் தேவம் ஸ்நானாதிஷு ச கர்மஷு |

ப்ராயச்சித்தம் ஹி ஸர்வஸ்ய துஷ்க்ருதஸ்யேதி வை ஸ்ருதி: || (ஸ்ரீ கருட புராணம் 1.230.28)

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஸ்ருதிகளும் இவ்வாறு கூறுகின்றன: குளித்தல் முதலான அனைத்து (நித்ய) கர்மங்களையும் செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ நாராயணனை த்யானிக்க வேண்டும். இதுவே, நாம் அன்றாடம் செய்யும் தீய – பாப செயல்களுக்கு பரிகாரமாகும்.

ஸம்ஸார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைகபேஷஜம் |

கிருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஷ்ருத்வா முக்தோ பவேன்னர: ||

ஸம்ஸாரம் என்னும் பாம்பு தீண்டி மயக்கமுற்றிருக்கும் மனிதருக்கு ஒரே மருந்தானது ‘கிருஷ்ண’ என்னும் விஶ்ணுவின் திருநாமமாகும். இதை கேட்ட மாத்திரத்தில் ஒரு மனிதன் (ஸம்ஸாரமென்னும் பாம்பின் விஷத்திலிருந்து) விடுபடுகின்றான்.

கிமேகம் தைவதம் லோகே?”, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார்.

அதிபாதக யுக்தோSபி த்யாயன் நிமிஷ மச்யுதம் |

பூயஸ் தபஸ்வி பவதி பங்க்தி பாவன பாவன: ||

எப்பேர்பட்ட பாவங்களை செய்தவரும் ஒரு நிமிடம் (தூய மனதுடன்) பகவான் அச்யுதரை த்யானிப்பதின் மூலம் (தானும் புனிதமடைவதுடன்) மிகபெரிய தபஸ்விகளையும், வேதங்களை கற்ற சிறந்த பிராமணர்களையும் புனிதமாக்குகிறான்.

ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |

இதமேகம் சுநிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா || (ஸ்ரீ லிங்க புராணம் 2.7.11)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்து, மீண்டும் மீண்டும் விசாரம் செய்து பார்த்ததில், பகவான் ஸ்ரீமன் நாராயணனை அன்றாடம் த்யானிப்பதே அவை அனைத்தின் (அனைத்து சாஸ்த்ரங்களின்) முடிவான கருத்தாகும்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: சத்வ ஸம்ஸ்திதை: |

ஓமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஸ்ரீ ஹரி வம்சம் 3.89.9)

ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ப்ராம்மணோத்தமர்களே! நீங்கள் ஸத்வ குணத்தில் நிலைபெற்று பகவான் ஸ்ரீ ஹரியை மட்டும் த்யானியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ (என்ற பிரணவ மந்திரத்தை) ஜபித்து ஸ்ரீ கேசவனை த்யானியுங்கள்.

பித்யதே ஹ்ருதய க்ரந்திஷ் சிந்த்யதே ஸர்வ ஷம்ஷயா|

க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே|| (முண்டக உபநிஶத் 2.2.8)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால் இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது. அனைத்து சந்தேகங்களும் நீக்கப்படுகின்றன. ஜீவாத்மாவின் அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன

யந் நாம கீர்த்தனம் பக்த்யா விலாபன மனுத்தமம் |

மைத்ரேயாசேஷ பாபானாம் தாதூனாமிவ பாவக: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.20)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! நெருப்பானது எவ்வாறு தங்கம் முதலிய தாதுக்களில் உள்ள அசுத்தங்களை களைகிறதோ, அவ்வாறே, (அந்த ஸ்ரீமன் நாராயணனின்) அவரின் பக்தி பூர்வமான நாம சங்கீர்த்தனம் (அவ்வாறு துதிப்பவனின்) அனைத்து பாவங்களையும் சிறந்த முறையில் களைகிறது.

அவஶேனாபி யந் நாம்னி கீர்த்திதே ஸர்வ பாதகை: |

புமான் விமுச்யதே த்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர் வ்ருகைரிவ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

த்யாயன் க்ருதே யஜன் யஞ்யைஸ் த்ரேதாயாம் த்வாபரேSர்ச்சயன் |

யதாப்னோதி ததாப்னோதி கலௌ சங்கீர்த்தய கேஶவம்–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.2.17)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: க்ருதயுகமான சத்யயுகத்தில் தியானத்தாலும்-தவத்தாலும், திரேதாயுகத்தில் யாக யஞ்யங்களாலும், த்வாபரயுகத்தில் பூஜைகள் செய்வதாலும் மனிதனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலனை கலியுகத்தில் கேசவனான பகவான் கிருஷ்ணரின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான்.

ஹரிர் ஹரதி பாபானி துஶ்ட சித்தைரபி ஸ்ம்ருத: |

அனிச்சயாபி ஸம் ஸ்ப்ருஶ்டோ தஹத்யேவஹி பாவக: || (ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணம் 1.11.100)

ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு தெரியாமல் தீண்டினாலும் நெருப்பானது சுடுமோ, அவ்வாறே, பகவான் ஹரியை த்யானிப்பதால் துர்புத்தி யுடையவனின் பாவங்கள் கூட அழிக்கப் படுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |

தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||

எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை (நாம சங்)கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்து விடுகின்றன.

யஸ்மின் ந்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச் சிந்தனே

விக்னோ யத்ர நிவேஶிதாத்ம மனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக:|

முக்திம் சேதஸி ய: ஸ்திதோsமலதியாம் பும்ஸாம் ததாத் யவ்யய:

கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.57)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவிடம் மனதை ஒருமுகப்படுத்தியவன் நரகத்தை அடைவதில்லை; அப்படிப்பட்டவனுக்கு ஸ்வர்க லோகம் கூட இடையூறாகவே தோன்றும்; எவனுடைய மனதும் ஆத்மாவும் விஶ்ணு மயமாகவே உள்ளதோ அவனுக்கு பிரஹ்ம லோகம் கூட துச்சமாகவே இருக்கும்; ஏனெனில், தூய உள்ளம் படைத்தோரின் ஹ்ருதயத்தில் குடி கொள்ளும் பிரபு ஸ்ரீவிஶ்ணு அவர்களக்கு முக்தியையே அளிக்கிறார். அப்படிப்பட்ட அச்யுதரை த்யானிப்பதால் பாவங்கள் அழிந்து போவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

ஷமாயாலம் ஜலம் வஹ்னேஸ்தமஸோ பாஸ்கரோதய: |

ஷாந்தி: கலௌ ஹ்யகௌகஸ்ய நாமசங்கீர்த்தனம் ஹரே: ||

நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரைப் போலவும், இருளை போக்குவதில் சூரியனைப் போலவும், கலியுகத்தில் பாபத் திரள்களை ஸ்ரீ ஹரி நாம சங்கீர்த்தனம் போக்குகிறது.

ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம் |

கலௌ நாஸ்தயேவ நாஸ்தயேவ நாஸ்தயேவ கதிரன்யதா || —(ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணம் 1.41.15)

ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹரி நாமமே, ஹரி நாமமே, ஹரி நாமமே எனது வாழ்க்கையாகும். இதை தவிர கலியுகத்தில் வேறு புகலிடம் இல்லவே இல்லை, இல்லவே இல்லை, இல்லவே இல்லை.

ஸ்துத்வா விஶ்ணும் வாஸுதேவம் விபாபோ ஜாயதே நர: |

விஶ்ணோ: ஸம்பூஜநான் னித்யம் ர்வ பாபம் ப்ரனஶ்யதி ||

எங்கும் நிறைந்துள்ள பகவான் வாசுதேவனான ஸ்ரீ விஶ்ணுவை நித்யம் துதிப்பதால் ஒரு மனிதன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான். பகவான் ஸ்ரீ விஶ்ணுவை தினமும் பூஜை செய்வதன் மூலம் அனைத்து பாவங்களும் அழிகின்றன.

ஸர்வதா ஸர்வகார்யேஷு நாஸ்தி தேஶாம் அமங்கலம் |

ஶாம் ஹ்ருதிஸ்தோ பகவான் மங்களாயதனோ ஹரி: ||–(ஸ்ரீ ஸ்கந்த புராணம் 5.3.157.7)

ஸ்ரீ ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவரின் ஹ்ருதயத்தில் அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடமான பகவான் ஸ்ரீ ஹரி வாசம் செய்கிறாரோ, அவருக்கு எந்த ஒரு காரியத்திலும் (செயலிலும்) அமங்களங்கள் ஏற்படுவதில்லை.

நித்யம் ஸஞ்சிந்தயேத்தேவம் யோக யுக்தோ ஜனார்தனம் |

ஸாஸ்ய மன்யே பரா ரக்ஷா கோ ஹினஸ்த் யச்யுதாஶ்ரயம் ||

மனதை ஒருமுகபடுத்தி பகவான் ஸ்ரீ ஜனார்தனனை த்யானிக்கவேண்டும். இதுவே அனைவருக்கும் மிகச்சிறந்த காப்பாகும் (ரக்ஷையாகும்). எவரொருவர் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்துள்ளாரோ (பகவான் ஸ்ரீ ஹரியால் காக்கப்படுகிறாரோ), அவருக்கு யார் என்ன துன்பம் விளைவிக்க முடியும்?

கங்கா ஸ்நான ஸஹஸ்ரேஶு புஶ்கர ஸ்நான கோடிஶு |

யத் பாபம் விலயம் யாதி ஸ்ம்ருதே நஶ்யதி தத்தரௌ (தத் ஹரௌ||–(ஸ்ரீ கருட புராணம் 1.230.18)

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஆயிரம் முறை கங்கையில் புனித நீராடுவதாலும், கோடி முறை புஶ்கரத்தில் புனித நீராடுவதாலும் எவ்வளவு பாபங்கள் கழியுமோ, அவ்வளவு பாபங்கள் பகவான் ஸ்ரீ ஹரியை நினைப்பதால் (த்யானிப்பதால்) அழிகிறது.

முஹுர்த்தமபி யோ த்யாயேந்நாராயணம் அனாமயம் |

ஸோSபி ஸித்திம் அவாப்னோதி கிம்புனஸ்தத்பராயண: ||

எவரொருவர் அழிவற்ற பகவான் ஸ்ரீ நாராயணனை ஒரு முஹூர்த்த காலம் மட்டுமே தியானம் செய்கிறாரோ, அவரும் அனைத்து ஸித்திகளையும் அடைகிறார்; பிறகு, பகவான் ஸ்ரீ நாராயணனை எப்பொழுதும் சரணடைந்துள்ளாரோ அவரைப் பற்றி (அவர் அடையும் பலன்களைப் பற்றி) என்னவென்று கூறுவது?

ப்ராயச்சித்தான் யசேஶானி தப: கர்மாத்மகானி வை |

யானி தேஶாம் அஶேஶானாம் கிருஷ்ணானுஸ்மரணம் பரம் ||-(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.39)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தவம் மற்றும் கர்ம முறைகளாக கூறப்பட்டுள்ள அனைத்து வகை ப்ராயசித்தங்களைக் காட்டிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை த்யானிப்பதே (நமது பாவங்கள் தொலைவதற்கான) மிகச்சிறந்த ப்ராயச்சித்தமாகும்.

(இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஶ்ணுபுராணத்தின் மிகச்சிறந்த ஸ்லோகமாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்லோகம் அனைவராலும் நித்ய பாராயணம் செய்யத்தக்கதாகும்).

கலி கல்மமத்யுக்ரம் நரகார்த்தி ப்ரதம் ந்ருணாம் |

ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத்யத்ராபி ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலி யுகத்தில் நரகத்தை அடைவிக்க வல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ ஹரியை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் அழிந்து விடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மஷதை: க்ருதம் |

பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||

எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக் கணக்கான ஜன்மங்களாய் சேர்த்து வைத்த பாபக் கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் எரிக்கப்படுகின்றன.

யதாக்னிருத்ததஷிக: கக்ஷம் தஹதி சானில: |

ததா சித்தஸ்திதோ விஶ்ணுர் யோகிநாம் சர்வ கில்பிஷம் ||-(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.74)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு காற்றுடன் கூடிய நெருப்பானது உயர உயர எழுந்து வைக்கோல் பொதிகளை எரித்து விடுமோ, அவ்வாறே பகவான் ஸ்ரீ விஶ்ணு யோகிகளின் ஹ்ருதயத்தில் வீற்றிருந்து அவர்களின் அனைத்து தோஷங்களையும் அழிக்கிறார்.

ஏகஸ்மின்னப்யதி க்ராந்தே முஹூர்த்தே த்யான வர்ஜிதே |

தச்யுபிர் முஷிதேனேவ யுக்தமா கிரந்திதும் ப்ருஷாம்||

திருடர்களால் நமது பொருட்கள் திருடப்பட்டால் எவ்வாறு துக்கப்பட்டு அழுவோமோ, அவ்வாறு (பகவான் ஸ்ரீ ஹரியை) த்யானிக்காமல் ஒரு முஹூர்த்தம் நேரம் கழிந்தாலும் அழுது வருந்த வேண்டும்.

ஜனார்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்ய: ஸததம் மஹாமுனே |

து:க்கானி ஸர்வான் யபஹந்தி ஸாதயத்யசேஷ கார்யாணி ச யான்ன பீப்ஸதே ||

ஹே மஹா முனியே!! அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபுவும், அனைத்துலகத்திற்கும் குருவானவருமான பகவான் ஸ்ரீ ஜனார்தனனை நித்தம் த்யானிப்பதன் மூலம் ஒரு மனிதர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவதோடல்லாமல், அவரவர்கள் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

ஏவமேகாக்ரசித்த: ஸன் ஸம்ஸ்மரன் மதுசூதனம் |

ஜன்ம ம்ருத்யு ஜராக்ராஹம் ஸம்ஸாராப்திம் தரிஷ்யதி ||

இவ்வாறு ஒருமித்த மனதோடு பகவான் ஸ்ரீ மதுசூதனனை த்யானிப்பதால் ஒரு மனிதன், பிறப்பு, இறப்பு மற்றும் மூப்பு போன்ற முதலைகள் நிறைந்திருக்கும் ஸம்ஸாரம் எனும் பெருங்கடலைத் தாண்டுகிறான்.

கலாவத்ராபி தோஷாட்யே விஷயாஸக்தமானஸ: |

க்ருத்வாபி ஸகலம் பாபம் கோவிந்தம் ஸம்ஸ்மரண் சுசி: ||

இந்த தோஷங்கள் நிறைந்த கலியுகத்தில், ஒரு மனிதன், விஷயசுகத்தில் மனதை லயிக்க விட்டு பாவங்களை புரிந்திருந்தாலும், பகவான் ஸ்ரீ கோவிந்தனை த்யானிப்பத்தின் மூலம் தூய்மை அடைகிறான்.

வாசுதேவே மனோ யஸ்ய ஜபஹோமார்ச்சனாதிஷு |

தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ரவாதிகம் ஃபலம் ||(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.41)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! எவரொருவரின் மனது ஜபம், ஹோமம் மற்றும் அர்ச்சனை ஆகிய செயல்களை செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ வாசுதேவரிடம் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு (பகவானை த்யானிப்பதற்கு இடையூறாக இருக்குமென்பதால்) தேவேந்திர பதவி கூட இடராகவே தோன்றும்.

லோகத்ர்யாதிபதி மப்ரதிம ப்ரபாவமீஷத் ப்ரணம்ய சிரஸா பிரப விஶ்ணுமீஷம் |

ஜன்மாந்தர ப்ரளய கல்ப ஸஹஸ்ர ஜாதமாஷு ப்ரணாஷமுபயாதி நரஸ்ய பாபம் ||

ஆயிரம் மஹாகல்பங்களிலும், பிரளயங்களிலும், ஜன்ம ஜன்மங்களிலும் செய்த பாவங்கள் கூட, மூவுலகின் ஸ்வாமியும், தன்னிகரில்லா சக்திபடைத்தவரும், அனைவரையும் ஆள்பவரான பகவான் ஸ்ரீ விஶ்ணுவை சிறிது நேரம் தலை வணங்குவதாலேயே அழிந்து விடுகின்றன.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஷ்வமேதாவப்ருதேன துல்ய: |

தசாஷ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ண ப்ரணாமி ந புனர் பவாய ||–(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

அதஸீபுஷ்ப ஶங்காஷம் பீத வாஸஸம் அச்யுதம் |

யே நமஸ்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம் ||-(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.91)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஆளிபூவைப்போல (கருநீல) நிறம்படைத்தவரும், மஞ்சள்வர்ண பட்டாடை உடுத்தி யிருப்பவருமான பகவான் ஸ்ரீ அச்யுதன் கோவிந்தனை யார் வணங்குகிறார்களோ, அவர்களுக்கு எந்த வித பயமும் இல்லை.

ஷாட்யேனாபி நமஸ்கார: ப்ரயுக்தஸ் சக்ரபாணயே |

ஸம்ஸார ஸ்தூல பந்தானாமுத்வே ஜனகரோ ஹி ஸ: ||

சக்ரபாணியான பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு (மனதில் பக்தியின்றி) தவறான எண்ணத்தோடும் கர்வத்தோடும், செய்யப்படும் நமஸ்காரங்கள் கூட ஸம்ஸாரம் என்னும் மரத்தின் வேரை வெட்டிவிடும்.

இத்யாதிஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராண வசனேப்ய: |(இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண வசனேப்ய:)

இப்படிப்பட்ட வேத, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராண வாக்கியங்களிலிருந்து (பகவான் ஸ்ரீ விஶ்ணுவும், அவரது நாம ஸங்கீர்த்தனமும் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்  -புனிதம் என்பது நிரூபணமாகிறது).

“கிமேகம் தைவதம் லோகே?”, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 

“பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||”-என்று கூறுகிறார்.

இப்பொழுது அந்த ஸ்லோகத்தின் “மங்களானாம் ச மங்களம்” தொடங்கி மீதமுள்ள பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கிறார்.

மங்களானாம் ச மங்களம் மங்களம் சுகம் சுகம் மங்களம் என்று கூறப்படுகிறது தத் ஸாதனம் அதை அடையும் வழியாகவும் தஞ்ஞாபகம் ச அதை தருபவராகவும், தேஷாமபி பரமானந்த லக்ஷணம் பரம் மங்களமிதி அவர் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பதால் மங்களானாம் ச மங்களம் (பகவான் ஸ்ரீ விஶ்ணு) மங்களமானவைகளை காட்டிலும் மங்களமானவர் என்று அழைக்கப்படுகிறார்.

தைவதம் தேவதானாம் ச தேவானாம் தேவ: அனைத்து தேவர்களுக்கும் தேவர், த்யௌதனாதிபி: ஸமுத்கர்ஷேண வர்த்தமானத்வாத் தனது ஒளி (ப்ரகாசம்) முதலியவற்றால் அனைவரை காட்டிலும் மேலானவர்.

பூதானாம் ய: அவ்யய: வ்யயரஹித் அழிதலற்றவரும் பிதா ஜனகோ யோ தேவ: அனைத்து ஜீவராசிகளையும் தோற்றுவித்தவருமான கடவுளே, ஸ ஏகம் தைவதம் லோக இதி வாக்யார்த்த: இவ்வுலகில் ஒரே முழுமுதற் கடவுளாவார் என்பதே இந்த வாக்கியத்தின் பொருளாகும் (இதுவே யுதிஷ்டிரன் கேட்ட ‘கிமேகம் தைவதம் லோகே’ என்ற முதல் கேள்வியின் விடையாகும்).

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபி ஸர்வபூதாந்தராத்மா |

கர்மாத்யக்ஷ: சர்வபூதாதிவாஸ: சாக்ஷி சேதா கேவலோ நிர்குணச்ச || (ஸ்வேதாஷ்வர உபநிஶத் 6.11)

ஸ்வேதாஷ்வர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து இருக்கிறாரோ, எங்கும் நிறைந்து இருக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கிறாரோ, (அந்த ஜீவராசிகளின்) கர்மங்களை (கர்மங்களின் பலன்களை அளிப்பதன் மூலம்) நிர்வகிக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளையும் நிலைநிறுத்துகிறாரோ, அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறாரோ, அனைவருக்கும் தன்னுனர்வைத் தருகிறாரோ, அந்த நிர்குணமானவரே ஒரே தெய்வமாவார்.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |

தம்ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.

‘சேயம் தேவதைக்ஷத’ (சாந்தோக்ய உபநிஶத் 6.3.2)

‘ஏகமேவாத்விதீயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அந்த ஆதி முழு முதற்கடவுள் நினைத்தார்’; ‘அவர் இரண்டற்ற ஒருவராவார் (அத்விதீய)’

நனு கதம் ஏகோ தேவ: ஜீவ பரயோர்பேதாத்?

கேள்வி: ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபட்டவர்கள்; அவ்வாறிருக்க, கடவுள் ஒருவரே என்று எவ்வாறு கூறமுடியும்?

ந பதில்:அப்படி கூற இயலாது.

(ஆதி சங்கரர் தானே இந்த கேள்வியைக் கேட்டு, இதன் விடையாக தனது அத்வைத கொள்கையின் சாரத்தை கூறுகிறார். அத்வைதமாவது ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன் மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ – ‘ப்ரஹ்மம் ஒன்றே உண்மை. இவ்வுலகம் மற்றும் அதில் காணப்படும் அனைத்தும் கானல் நீர் போல் நிலையற்றது. ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. அந்த ப்ரஹ்மத்தை தவிர இரண்டாவது தத்துவமே இல்லை என்பதாகும்).

‘தத்ஸ்ருஷ்டா ததேவானுப்ராவிஷத்’ (தைத்ரிய உபநிஶத் 2.6)

தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: தானே அவற்றை படைத்து, அதனுள் பிரவேசித்தார்

‘ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய:’ (ப்ரஹதாரண்ய உபநிஶத் 1.4.7)

ப்ரஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அவர் இந்த உடலில் நகம் முதற்கொண்டு (தலை வரை) எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்’

இத்யாதி ஸ்ருதிப்யோSவிக்ருதஸ்ய பரஸ்ய புத்தி தத்வ்ருத்திசாக்ஷித்வேன பிரவேஷஷ்ராவணாதபேத: |

இந்த ஸ்ருதி வாக்கியங்கள் ‘மாறுதலற்ற அந்த பரமாத்மாவே புத்தி மற்றும் அதன் விரிவான இந்த சரீரத்தில் சாக்ஷி ரூபமாய் உள்நுழைந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்’ என்று கூறுகின்றன. எனவே, ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேற்றுமை கிடையாது (இரண்டும் ஒன்றே).

ப்ரவிஷ்டானாமிதரேதரபேதாத் பராத்மைகத்வம் கதமிதி சேத்?

கேள்வி: உள்நுழைந்தார் என்றால் (உள்ளே இருப்பதான) ஜீவத்மாவும்(சாட்சியாக உள்நுழைந்த) பரமாத்மாவும் ஒன்று என்று எவ்வாறு கூறுவது?

ந பதில்:அப்படி அல்ல

‘ஏகோ தேவ: பஹுதா சந்நிவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)

தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: ஒருவரே கடவுள்; அவரே பலவாறாக நிலை பெற்றிருக்கிறார்.

‘ஏக: சன் பஹுதா விசார:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.11)

தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: அந்த ஒருவரே பலவாறாக எண்ணப்படுகிறார்.

‘த்வமேகோSஸி பஹுனனுப்ரவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)

தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: தாங்கள் ஒருவரே பலவற்றிலும் உள் நுழைந்திருக்கிறீர்

இத்யேகஸ்யைவ பஹுதா பிரவேஷஷ்ரவணாத் பிரவிஷ்டானாம் ச ந பேத: |

இந்த ஸ்ருதி வாக்கியங்களில் ஒருவரே பலவாறாக மாறி, பலவற்றின் உள்நுழைந்தார் என்று கூறப்படுகின்றது. எனவே, உள்நுழைந்த பரமாத்மாவிற்கும், உள்ளே உறையும் ஜீவாத்மாவிற்கும் வேறுபாடுகள் கிடையாது.

‘ஹிரண்யகர்ப்ப:’ (ரிக் வேதம் 10.121.1) இத்யஷ்டௌ மந்த்ரா: |

ரிக் வேதத்தில் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று தொடங்கி எட்டு மந்திரங்கள் உள்ளன.

‘கஸ்மை தேவாய’ (தைத்ரீயகம்)

இத்யத்ர ஏகார லோபேநைகதைவத பிரதிபாதக ஸ்தைத்ரீயகே |

‘கஸ்மை தேவாய’ என தொடங்கும் தைத்திரீயக ஸ்ருதியிலும் (இந்த வாக்கியத்தின்) தொடக்கத்தில் ஏகாரம் மறைந்து இருக்கிறது (அதாவது அந்த ஸ்ருதியில் கஸ்மை என்பதற்கு பதில் ஏகஸ்மை என்று பொருள் கொள்ள வேண்டும்)எனவே, இந்த மந்திரமும் ஒன்றே தெய்வம் என்றே கூறுகின்றன.

அக்னிர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ |

ஏகஸ் ததா ஸர்வ பூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதி ரூபோ பஹிச்ச ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எவ்விதம் உலகில் உள்ள ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது.

வாயுர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதி ரூபோ பபூவ |

ஏகஸ் ததா ஸர்வ பூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதி ரூபோ பஹிச்ச ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எவ்விதம் உலகில் உள்ள ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது

ஸூர்யோ யதா ஸர்வ லோகஸ்ய சக்ஷூர்னலிப்யதே சாக்ஷுஷைர் பாஹ்யதோஶை: |

ஏகஸ் ததா ஸர்வ பூதாந்தராத்மா ந லிப்யதே லோகது:கேன பாஹ்ய: ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து உலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியன், (அந்த ஒளியை கொண்டு பார்க்கப்படும்) பார்வையில் உள்ள குறைகளாலும் வெளியே (காட்சிப் பொருட்களில்) உள்ள குறைகளாலும் எவ்வாறு பாதிக்கபடுவதில்லையோ, அவ்விதம், எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா உலகத்தினுடைய துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. (அந்த ஆத்மா) அனைத்தையும் கடந்தும் உள்ளது.

ஏகோ வஷீ ஸர்வ பூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய: கரோதி |

தமாத்மஸ்தம் யேSனுபஶ்யந்தி தீராஸ்தேஶாம் ஶாஸ்வதம் நேதரேஶாம் ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எந்த ஒன்று அனைத்தையும் தன வசத்தில் வைத்துள்ளதாகவும், எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக இருந்துகொண்டும் தன்னுடைய ஒரு ரூபத்தை பலவாறாக வெளிப்படுத்துகிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான ஸுகம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ

பஹூனாம் யோ விததாதி காமான் |

தமாத்மஸ்தம் யேSனுபஷ்யந்தி தீராஸ்

தேஶாம் ஶாஸ்வதீ நேதரேஶாம் || (கடோபநிஷத் 2.2.9 – 2.2.13)-கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எந்த ஒன்று அழிவனவற்றுள் அழியாததாகவும், உயிரினங்களுக்குள் உயிராகவும் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான அமைதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

இதி காடகே (அக்னிர்யதைகோ தொடக்கமாக) இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீதேகமேவ ததேகம் ஸன்ன வ்யபவத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.11)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் அந்த ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. தனித்து இருந்ததினால் அந்த ப்ரஹ்மம் கர்மங்களை புரியவில்லை.

நான்யததோSஸ்தி த்ரஷ்டா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதை (அந்த ப்ரஹ்மத்தை) தவிர பார்ப்பதற்கு எதுவும் இல்லை

இத்யாதி ப்ருஹதாரண்யகே இவ்வாறு ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

அனேஜதேகம் மனஸோ ஜவீய: (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஆத்ம தத்துவம் சலனமற்றது. அனைவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறது. மனத்தைக் காட்டிலும் வேகமாக செல்கிறது.

தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபஶ்யத: (ஈஶாவாஸ்ய உபநிஶத் 7)

ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்ற அவருக்கு மோகம் எது? சோகம் எது? (ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?)

இதி ஈஶாவாஸ்யே இவ்வாறு ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸின்னான்யத்கிஞ்சன மித் (ஐத்ரேய உபநிஶத் 1.1)

ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் இந்த ஆத்மா (ப்ரஹ்மம்) ஒன்றே இருந்தது; வேறு எந்த (செயல் புரியும்) வஸ்துவும் இல்லை.

ஸர்வேஶாம் பூதானாமந்தர: புருஶ: ஸ ம ஆத்மேதி வித்யாத் (ஐத்ரேய ஆரண்யகம் 3.4.10)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு அறிந்துகொள்வாய் – அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறையும் புருஶனே எனக்குள்ளும் ஆத்மாவாக இருக்கிறார்.

ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி (ரிக் வேத ஸம்ஹிதா 1.22.164.46)

ரிக் வேத ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: அந்த (ப்ரஹ்மம்) ஒன்றையே ப்ராஹ்மணர்கள் (ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்கள்) பலவாறாகக் கூறுகிறார்கள்.

ஏகம் ஸந்தம் பஹுதா கல்பயந்தி (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த (ப்ரஹ்மம்) ஒன்றையே பலவாறாக (இருப்பதாக) கற்பனை செய்கிறார்கள்.

த்யாவாபூமி ஜனயன்தேவ ஏக: | (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த கடவுள் ஒருவரே இந்த உலகம் மற்றும் ஸ்வர்க்கத்தை உருவாக்கினார்.

ஏகோ தாதார புவனானி விஷ்வா  (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் தானே அனைத்து உலகங்களையும் தாங்குகிறார்.

ஏக ஏவாக்னிர்பஹுதா ஸமித்த: (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: பலவகையாய் எரியும் நெருப்பானது ஒன்றே (அதைப்போல பலவாறாக தெரியும் ப்ரஹ்மமும் ஒன்றே)

இதி ரிக்வேதே (ஆத்மா வா இதமேக தொடக்கமாக) இவ்வாறு ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸிதேகமேவாத்விதீயம் (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே ஸோம்ய!! தொடக்கத்தில் அந்த (ப்ரஹ்மம்) ஒன்றே இருந்தது

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |

ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னை தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

வித்யா வினய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி |

சுனிஸ்ஶைவ ஶ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஶின: || (ஸ்ரீமத் பகவத்கீதை 5.18)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயை தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமபார்வையுடையோர்.

அஹமாத்மா குடாகே ஸர்வபூதாயஸ்தித: |

அஹமாதிஶ்ச்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.20)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: அர்ஜுனா!! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் யானே

யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமனுபஶ்யதி |

தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா || (ஸ்ரீமத் பகவத்கீதை 13.30)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான ப்ரஹ்மத்தை அடைகிறான்.

ஸர்வதர்மான்பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ |

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஶுச: || (ஸ்ரீமத் பகவத்கீதை 18.66)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லா பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப் படாதே.

இதி கீதோபநித்ஸு இவ்வாறு ஸ்ரீ பகவத் கீதையில் (கீதோபநிஶத்தில்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஹரிவம்ஶம், ஸ்ரீவிஶ்ணு புராணம் போன்ற இதிஹாஸ, புராண நூல்களிலிருந்தும், மனு ஸ்ம்ருதியிலிருந்தும்    சில மேற்கோள்களை இன்று காண்போம்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வ ஸம்ஸ்திதை: |

ஓமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.89.9)

ஸ்ரீ ஹரி வம்த்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ப்ராம்மணோத்தமர்களே! நீங்கள் ஸத்வகுணத்தில் நிலைபெற்று பகவான் ஸ்ரீ ஹரியைமட்டும் த்யானியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ (என்ற பிரணவ மந்திரத்தை) ஜபித்து ஸ்ரீ கேசவனை த்யானியுங்கள்.

ஆஸ்ச்சர்யம் கலு தேவானாமேகஸ்த்வம் புருஶோத்தம |

தன்யச்சாஸி மஹா பாஹோ லோகே நான்யோSஸ்தி கஸ்ஶன || (ஸ்ரீ ஹரி வம்ஶம்)

ஸ்ரீ ஹரி வம்த்தில் கூறப்பட்டுள்ளது: ஒ புருஷோத்தமா!! அனைத்து தேவர்களைக் காட்டிலும் தாங்கள் ஒருவரே ஆச்சர்யமானவராவீர். ஒ நெடுந்தோளுடையவனே!! அனைத்துலகிலும் தங்களுக்கு சமமானவரோ மேம்பட்டவரோ ஒருவரும் இல்லை.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

பவதி மனோர்மாஹாத்ம்யக்யாபினீ ஸ்ருதி: யத்வை கிஞ்ச மனுரவதத்தத்பேஷஜம் (தைத்ரிய சம்ஹிதை 2.10.2)

‘மனு கூறிய அனைத்தும் (மனிதர்களுக்கு) மருந்து போன்றதாகும்’ என்ற ஸ்ருதி வாக்கியம் மனுவின் மேன்மையை கூறுகிறது.

மனுனா சோக்தம் அந்த மனுவானவர் (மனுஸ்ம்ருதியில்) கூறுகிறார்:

ஸர்வபூதஸ்தமாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி |

ஸம்பஶ்யன்னாத்மயாஜீ வை ஸ்வாராஜ்யமதிகச்சதி || (ஸ்ரீ மனு ஸ்ம்ருதி 12.91)

ஸ்ரீ மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறைந்திருக்கும் தனது ஆத்மாவையும், அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆத்மாவிற்குள் உறைவதை அறிந்து ஆத்ம யக்ஞம் செய்யும் மனிதன் (ப்ரஹ்ம சாயுஜ்யம் எனும்) விடுதலையை அடைகிறான்.

ஸ்ருஶ்டி ஸ்தித் யந்தகரனீம் ப்ரஹ்ம விஶ்ணு ஶிவாத்மிகாம் |

ஸ ஸம்ஞாம் யாதி பகவானேக ஜனார்தன: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.2.66)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பகவான் ஜனார்தனர் ஒருவரே படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலை புரியக்கூடிய பிரம்மா, விஶ்ணு, மற்றும் சிவன் ஆகிய மூன்று வடிவங்களையும், பெயர்களையும் கொள்கிறார்.

தஸ்மான்ன விஞ்ஞானம்ருதேSதி கிஞ்சித் க்வசித் கதாசித் த்விஜ வஸ்து ஜாதம் |

விஞ்ஞானமேகம் நிஜ கர்ம பேதாத் விபின்னசித்தைர்பஹுதாப்யுபேதம் ||

ஞானம் விஶுத்தம் விமலம் விஶோகமசேலோபாதி நிரஸ்தசங்கம் |

ஏக: ஸதைக: பரம: பரே: ஸ வாஸுதேவோ ந யதோSஸ்தி கிஞ்சித் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.12.43 – 2.12.44)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இதனால் ஓ ப்ராமணனே!! அறிவை தவிர மற்றொரு வஸ்து எப்பொழுதும் இருந்ததில்லை. இந்த ஒரு அறிவே (தத்தம்) கர்மங்களின் வேறுபாடுகளால் வெவ்வேறு மனது படைத்தவர்களுக்கு வேறு வேறாகத் தெரிகிறது. அந்த அறிவானது சுத்தமானதாகவும், அப்பழுக்கற்றதாகவும், துன்பங்களற்றதாகவும், பேராசை முதலிய (தீய) குணங்கள் கலவாததாகவும் இருக்கிறது. அந்த ஒரே உண்மையானது அனைத்திலும் சிறந்த பரமேஸ்வரன் ஸ்ரீ வாஸுதேவனாவார். அவரைத் தவிர வேறொன்றும் இல்லை.

யதா ஸமஸ்ததேஹேஶு புமானேகோ வ்யவஸ்தித: |

ததா ஹி கோ பவான் ஸோSஹமித்யேதத்விஃபலம் வச: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.13.91)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களிலும் உள்ளுறையும் ஆத்மா ஒன்றே எனும்போது, நான் யார்? நீ யார்? எனும் கேள்விகள் வீணானவையாகும்.

சிதநீலாதி பேதேன யதைகம் த்ருஷ்யதே நப: |

ப்ராந்த த்ருஶ்டிபிராத்மாபி ததைக: ஸன்ப்ருதக் ப்ருதக் ||

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு (தோற்ற மயக்கத்தால்) ஒரே ஆகாயமானது வெண்மை, நீலம் போன்ற பல்வேறு நிறங்களில் தோற்றமளிக்கிறதோ, அவ்வாறே, மயக்கத்தினால் மனிதர்களுக்கு ஒரே ஆத்மாவானது பலவாறாகத் தோற்றமளிக்கிறது.

ஏக: ஸமஸ்தம் யதிஹாஸ்தி கிஞ்சித்ததச்யுதோ நாஸ்தி பரம் ததோSன்யத் |

ஸோSஹம் ஸ ச த்வம் ஸ ச ஸர்வமேததாத்மஸ்வரூபம் ||

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே (இவ்வுலகத்தில்) அனைத்தும் பகவான் ஸ்ரீ அச்யுதரே. அவரைத் தவிர மற்றொன்று இல்லை. நானும் அவரே, நீயும் அவரே; அனைத்துமே அவரது ஆத்ம ஸ்வரூபமே. எனவே வேறுபாடுகளை நீக்குவாயாக.

இதீரிதஸ்தேன ஸ ராஜவர்யஸ்தத்யாஜ பேதம் பரமார்த்ததிருஶ்டி: | (ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.16.22 – 2.16.24)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு (ஜடபரதரால்) உபதேசிக்கப்பெற்று, உயர்ந்த உண்மையை அறியபெற்றவரான அரசரில் சிறந்தவர் (ரஹூகுணர்) வேறுபாடுகளை துறந்தார்.

யமனோக்தம் (ஸ்ரீ விஶ்ணு புராணத்தில்) யமன் கூறுகிறார்:

ஸகலமிதமஹம் ச வாஸுதேவ: பரமபுமான் பரமேஶ்வர: ஸ ஏக: |

இதி மதிரசலா பவத்யனந்தே ஹ்ருதயகதே வ்ரஜ தான் விஹாய தூராத் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (யமன் தனது கிங்கரர்களிடம்) கூறியது: இங்கு அனைத்தும், நான் உட்பட, அந்த ஒரே பரம்பொருளான பகவான் ஸ்ரீ வாசுதேவரே ஆவோம். எவரொருவர், இந்த (அனைத்தும் வாசுதேவரே என்ற) திட நம்பிக்கையுடன், தனது ஹ்ருதயத்திற்குள் உறையும் பகவான் ஸ்ரீ அனந்தருடன் ஒன்றி விடுகின்றனரோ, அவர்களை விட்டு நீங்கள் தூர ஒதுங்கிச் செல்லுங்கள்.

யதாஹ வஸுதா ஸர்வம் ஸத்யமேவ திவௌகஸ: |

அஹம் பவோ பவந்தஸ்ச ஸர்வம் நாராயணாத்மகம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.1.30)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பிரம்மா தேவர்களைப் பார்த்துக்) கூறியது: ஒ தேவர்களே!! பூமாதேவி கூறிய அனைத்தும் உண்மையே. நான், மகாதேவர் (பரமசிவன்) மற்றும் நீங்கள் அனைவரும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வடிவங்களே ஆவோம். அவரது சக்தியானது பாதிக்கப்படுபவர்களிலும், பாதிப்பவர்களிலும் ஏற்ற, இறக்கத்துடன் தெரிகின்றது.

பவானஹம் ச விஶ்வாத்மன்னேக ஏவ ஹி காரணம் |

ஜகதோSஸ்ய ஜகத்யர்த்தே பேதேனாவாம் வ்யவஸ்திதௌ || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.9.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமரைப் பார்த்துக்) கூறியது: ஒ பிரபஞ்சத்தின் ஆத்மாவே (பலராமனே)!! தாங்களும், நானும் இந்த பிரபஞ்சத்தின் ஒரே காரணம் ஆவோம். இந்த பிரபஞ்சத்திற்காகவே நாம் வெவ்வேறு உருவத்தில் பிறந்துள்ளோம்.

த்வயா யதபயம் தத்தம் தத்தத்தமகிலம் மயா |

மத்தோ விபின்னமாத்மானம் த்ரஶ்டும் நார்ஹசி ங்கர || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.33.47)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனைப் பார்த்துக்) கூறியது: எவருக்குத் தாங்கள் அபயம் (பாதுகாப்பு) அளித்துள்ளீர்களோ, அவர்களை நானும் காக்கிறேன். ஹே சங்கரரே!! தங்கள் தங்களை என்னிடமிருந்து வேறாக எண்ணாதீர்கள்.

யோSஹம் ஸ த்வம் ஜகச்சேதம் ஸாதேவாஸுரமானும் |

அவித்யாமோஹிதாத்மான: புருஶா பின்னதர்ஶின: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.33.47)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனைப் பார்த்துக்) கூறியது: நான் எதுவாக இருக்கிறேனோ, தாங்கள், மற்ற தேவர்கள், மனிதர்கள் உட்பட உலகனைத்தும் அதுவாகவே உள்ளது. எந்த மனிதனுடைய புத்தியானது அறியாமையால் கலக்கமடைந்துள்ளதோ, அவனே அனைத்தையும் வெவ்வேறாகப் பார்க்கிறான்.

இதி ஸ்ரீ விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக ஹரிவம்ஶம் மற்றும் ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவன் மும்மூர்த்திகளின் ஐக்கியத்தைப் பற்றி கூறியுள்ள சில மேற்கோள்களை    காண்போம்.

விஶ்ணோரண்யம் து பஶ்யந்தி யே மாம் ப்ரஹ்மானமேவ வா |

குதர்க்க மதயோ மூடா: பஶ்யந்தே நரகேஶ்வத: || (ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணம்)

ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவனார் கூறுகிறார்: எவரொருவர் என்னையும், ப்ரஹ்மாவையும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவிடமிருந்து வேறாகப் பார்க்கிறார்களோ, அந்த ஏமாற்றும் எண்ணம் கொண்ட மூடர்கள் தாழ்ந்த நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.

யே ச மூட துராத்மானோ பின்னம் பஷ்யந்தி மாம் ஹரே: |

ப்ரஹ்மாணம் ச ததஸ்தஸ்மாத் ப்ரஹ்மஹத்யாஸம் த்வகம் || (ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணம்)

ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவனார் கூறுகிறார்: மற்றும் எந்த துர்புத்தி படைத்த ஒருவன் என்னையும் ப்ரஹ்மாவையும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவிடமிருந்து வேறாகப் பார்க்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மஹத்திக்கு சமமான பாபம் வந்தடைகிறது.

இதி ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணே மகேஶ்வரவசனம் இவ்வாறு ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவன் கூறுகிறார்.

ததா ச ஹரிவம்ஶே கைலாஸ யாத்ராயாம் மகேஶ்வர வசனம் மற்றும் ஸ்ரீ ஹரி வம்சம் கைலாஸ யாத்திரையின் பொழுது பரமசிவன் கூறுகிறார்.

ஆதிஸ்த்வம் ஸர்வபாவானாம் மத்யமந்த்ஸ்ததா பவான் |

த்வத்த: ஸர்வமபூத் விஶ்வம் த்வயி ஸர்வம் ப்ரலீயதே || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.52)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: அனைத்து ஜீவராசிகளின் தொடக்கம், நடு மற்றும் கடைசி தாங்களே (தங்களிடமிருந்தே அனைத்தும் பிறக்கின்றன, வளர்கின்றன, மற்றும் தங்களிடமே அனைத்தும் முடிவில் லயமடைகின்றன). இந்த உலகம் அனைத்தும் தங்களிடமிருந்தே தோன்றி தங்களிடமே லயமடைகிறது.

அஹம் த்வம் ஸர்வகோ தேவ த்வமேவாஹம் ஜனார்தன |

ஆவயோரந்தரம் நாஸ்தி ஶப்தைரர்தைர்ஜகத்ரயே || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.60)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ ஜனார்தனா!! எங்கும் நிறைந்திருக்கும் தேவனே!! நானே தாங்கள், தாங்களே நான். மூவுலகம் அனைத்திலும் நம்மிருவருக்கும் சொல்லிலும் (பெயரிலும்), பொருளிலும் ஒரு வித வேறுபாடும் இல்லை.

நாமானி தவ கோவிந்த யானி லோகே மஹாந்தி ச |

தான்யேவ மம நாமானி நாத்ர கார்யா விசாரணா || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.61)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ கோவிந்தா!! இந்த உலகத்தில் தங்களுக்கு என்னவெல்லாம் பிரபலமான திருநாமங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் என்னுடையதும் கூட. இதில் ஆராய்வதற்கு ஒன்றுமில்லை.

த்வதுபாஸா ஜகன்னாத சைவாஸ்து மம கோபதே |

யஸ்ச த்வாம் த்வேஶ்டி போ தேவ ஸ மாம் த்வேஶ்டி  ந ஸம்சய || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.62)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ கோபதியே!! ஒ ஜகன்னாதனே!! யார் தங்களை வழிபடுகின்றனரோ, அவர்கள் என்னையும் வழிபடுகின்றனர். எவரொருவர் தங்களை வெறுக்கின்றனரோ, அவர்கள் என்னையும் வெறுக்கின்றனர். இதில் எந்த சந்தேஹமும் இல்லை.

த்வத்விஸ்தாரோ யதோ தேவ ஹ்யஹம் பூதபதிஸ்தத: |

ந ததஸ்தி விபோ தேவ யத்தே விரஹிதம்  க்வசித் || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.63)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ தேவனே!! ஏனெனில் பூதபதியான நானும் தங்களுடைய விரிவாக்கமேயாவேன். எனவே ஒ எங்கும் நிறைந்திருக்கும் தேவனே!! எங்கும் எதிலும் தங்களைத் தவிர்த்ததொரு பொருள் வேறெதுவும் இல்லை.

யதாஸீத் வர்த்ததே யச்ச யச்ச பாவி ஜகத்பதே |

ஸர்வம் த்வமேவ தேவேஶ வினா கிஞ்சித் த்வயா ந ஹி || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.64)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ ஜகத்பதியே!! ஒ தெய்வங்களுக்கும் தெய்வமே!! எது இருந்ததோ, எது இருக்கிறதோ, எது (எதிர்காலத்தில்) இருக்குமோ, அவை அனைத்தும் தாங்களே. தங்களை தவிர்த்து மற்றொன்று எதுவும் இல்லை.

இத்யாதிவாக்யான்யேகத்வப்ரதிபாதகானி மேற்சொன்ன அனைத்து (புராண, ஸ்ருதி) வாக்யங்களும் அனைத்தும் ஒன்றே என்ற ‘ஏகத்வத்தை’ விளக்குகின்றன.

அபி ச மேலும்

ஆத்மேதி தூபகச்சந்தி க்ராஹயந்தி ச (பிரஹ்ம ஸூத்ரம் 4.1.3)

ப்ரஹ்ம ஸுத்திரத்தில் கூறப்பட்டுள்ளது: (பரமாத்மாவை) ஆத்ம ஸ்வரூபத்தாலேயே அறியவும் அடையவும் முடியும்

ஆத்மேத்யேவம் சாஸ்த்ரோக்தலக்ஷண: பரமாத்மா ப்ரதிபத்தவ்ய: | இந்த ஸுத்திரத்தில் ஆத்மா என்பது வேதங்களால் அறியப்படும் பரமாத்மாவையே குறிக்கின்றது |

ததா ஹி பரமாத்ம ப்ரக்ரியாயாம் ஜாபாலா ஆத்மத்வேனைவைனமப்யுகச்சந்தி – மேலும் ஜாபால சாகையை (பிரிவை) பின்பற்றுபவரும் பரமாத்மாவை குறிக்கையில், ‘த்வம் வா அஹமஸ்மி பகவோ தேவதே அஹம் வை த்வமஸி’ ‘ஹே பகவானே!! ஹே தேவனே!! தாங்களே நான், நானே தாங்கள்’

இதி என்று கூறுவதன் மூலம், அவர்களும் (ஜாபால சாகையை சார்ந்தவரும் பரமாத்மாவை) ஆத்ம ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ததான்யேSபி மேலும்,

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹ (கடோபநிஷத் 2.1.10)

கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எது இங்கு ஜீவனாக உள்ளதோ அதுவே அங்கு ப்ரஹ்மமாக உள்ளது. எது அங்கு ப்ரஹ்மமாக உள்ளதோ, அதுவே இங்கு ஜீவனாக உள்ளது.

ஸ யஸ்சாயம் புருஶே| யஸ்சாஸாவாதித்யே | ஸ ஏக: (தைத்ரீய உபநிஶத் 2.8.12)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு ஆனந்தம் மனிதனிடத்தில் உண்டோ அந்த ஆனந்தமும், எந்த ஒரு ஆனந்தம் ஹிரண்யகர்பரிடம் உண்டோ, அந்த ஆனந்தமும் ஒன்றே.

ததாத்மானமேவாவதேஹம் ப்ரஹ்மாஸ்மீதி (ப்ருஹதாரண்ய உபநிஶத் 1.4.10)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அப்பொழுது அவர் தன்னை ப்ரஹ்மமாக இருப்பதாக உணர்ந்து, ‘நானே ப்ரஹ்மம் (அஹம் ப்ரஹ்மாஸ்மி)’ என்று கூறினார்.

ததேதத் ப்ரஹ்மாபூர்வமன பரமனந்தரம் அபாஹ்யமயம் ஆத்மா ப்ரஹ்ம (ப்ருஹதாரண்ய உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ப்ரஹ்மம் காரணம், காரியம் அற்றது. இதன் உள்ளும் புறமும் (இந்த ப்ரஹ்மத்தைத் தவிர) ஒன்றும் இல்லை. இந்த ஆத்மாவே ப்ரஹ்மம்.

ஸ வா ஏ மஹானஜ ஆத்மாஜரோSமரோSம்ருதோSபயோ ப்ரஹ்ம (ப்ருஹதாரண்ய உபநிஶத் 4.4.25)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த உயர்ந்த பிறப்பு, நரை, மூப்பு, மரணம், பயம் அற்ற, அழிவற்ற ஆத்மா ப்ரஹ்மமாகும்.

இத்யேவமாதய ஆத்மத்வோபகமா த்ரஶ்டவ்யா: | மேற்கூறியவை போன்ற, ப்ரஹ்மத்தை ஆத்மாவாகவே ஏற்றுக்கொண்டுள்ள பல வேத வாக்கியங்கள் ஆராயத்தக்கவையாகும்.

க்ராஹயந்தி ச போதயந்தி சாத்மத்வேனேஶ்வரம் வேதாந்த வாக்யாணி – மேலும் (கீழே கூறப்பட்டுள்ள) பல வேத வாக்கியங்கள் பரம்பொருளை (பரப்ரஹ்மத்தை) ஆத்மாவாகவே விவரிக்கின்றன.

 த ஆத்மாந்தர்யாம்யம்ருத: (ப்ருஹதாரண்ய உபநிஶத் 3.7.3.23)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: உனக்குள் உறையும் இந்த ஆத்மா அழிவற்றது.

யன்மனஸா ந மனுதே யேனாஹுர்மனோ மதம் | ததேவ ப்ரஹ்ம தவம் வித்தி நேதம் எதிதமுபாஸதே (கேனோபநிஷத் 1.5)

கேனோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எதை மனதால் ஒருவன் அறிவதில்லையோ, எந்த சைதன்யத்தால் மனம் அறியப்படுகிறது என்று கூறுகிறார்களோ, அதையே ப்ரஹ்மமாக நீ அறிவாயாக. எந்த இந்த தேவதையை ஸாதகர்கள் த்யானிக்கிறார்களோ, அது ப்ரஹ்மம் அல்ல.

தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8.16)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதுவே (ப்ரஹ்மமே) உண்மையாகும். அதுவே ஆத்மாவாகும். அந்த ப்ரஹ்மமே நீ (தத்வமஸி).

இத்யேவமாதீனி – இவ்வாறு (பல வேத வாக்கியங்கள் பரம்பொருளை ஆத்மாவாகவே விவரிக்கின்றன).

நானு ப்ரதீகதர்ஷனமிதம் விஶ்ணு ப்ரதிமான்யாயேன பவிஶ்யதி|  

கேள்வி: (இவ்வாறு ஆத்மாவை பரமாத்மாவாக நினைப்பது) விஶ்ணுவின் உருவத்தை விஶ்ணுவாக கருதி வழிபடுவதற்கு சமமாகும்.

ததயுக்தம், கௌநத்வபிரஸங்காத், வாக்யவைரூப்யாஸ்ச |  

பதில்: இவ்வாறு கூறுவது பரமாத்மா ஒரு உருவத்திற்கு கட்டுப்பட்டதாக கூறுவதாகும். இது சாஸ்திர வாக்கியத்திற்கு விரோதமானதாகும்.

யத்ர ஹி ப்ரதீகத்ரிஶ்டிர் அபிப்ரேயதே ஸக்ருதேவ தத்ர வசனம் பவதி | எங்கெல்லாம் உருவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளதோ அங்கே பரமாத்மாவுடன் ஒரு வழி உறவுதான் (அதாவது பரமாத்மா இதுவாக இருக்கிறார் என்று) கூறப்பட்டுள்ளது.

யதா – உதாரணமாக,

‘மனோ ப்ரஹ்ம’ (சாந்தோக்ய உபநிஶத் 3.18.1) மனம் ப்ரஹ்மம்

‘ஆதித்யோ ப்ரஹ்ம’ (சாந்தோக்ய உபநிஶத் 3.19.1) சூரியன் ப்ரஹ்மம் இதி.

இஹ புன: ஆனால் இங்கோ,

த்வமஹமஸ்மி அஹம் வை த்வமஸி நீ நானாக இருக்கிறாய். நானே நீயாக இருக்கிறேன். இத்யாஹ | இவ்வாறு,

அத: ப்ரதீகஸ்ருதிவைரூப்யாதபேதப்ரதிபத்தி: | ஜீவாத்மா, பரமாத்மாவுடன், இரு வழி (இரண்டுமே ஒன்றிலிருந்து ஒன்று வேறானது அல்ல) பரஸ்பர ஒற்றுமை தோன்றக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வேதம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையில் கூறுவதால், பரமாத்மாவும், ஜீவாத்மாவும் அபேதம் (அதாவது இரண்டும் ஒன்று) என்று கூறுவது விளங்கும். மேலும்,

பேததிருஷ்ட்யபவாதாச்ச | (ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வெவ்வேறு என்று கூறும்) பேதங்களை மறுப்பதன் மூலமும் இது (பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்று என்பது) தெளிவாகிறது. (இவ்வாறு பேதங்களை மறுக்கும் வேத வாக்கியங்கள்) எவை எனில்,

அத யோSன்யாம் தேவதாமுபாஸ்தே அன்யோSஸாவன்யோSஹமஸ்மீதி ந ஸவேதயதா பஶு: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் தான் வேறு, தான் வழிபடும் தெய்வம் வேறு என்ற எண்ணத்தோடு கடவுளை வழிபடுகின்றானோ, அவன் மிருகத்திற்கு சமமானவன் (மிருகங்களைப் போல குறைந்த அறிவுடையவன்).

‘ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பஶ்யதி’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் இங்கு (ப்ரஹ்மத்திற்கும் மற்றதற்கும்) வேறுபாடுகளைக் காண்கின்றானோ அவன் மறுபடியும் மறுபடியும் மரணங்களை அடைகிறான் (அதாவது முக்தி அடையாமல் மீண்டும் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து இறக்கிறான்).

யதோதகம் துர்கே வ்ருஶ்டம் பர்வதேஶு விதாவதி | ஏவம் தர்மான்ப்ருதக்பஶ்யம்ஸ்தானேவானுவிதாவதி (கடோ உபநிஶத் 2.1.14)

கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்விதம் மலையில் பெய்த நீர் மலைப்பகுதிகளில் ஓடி மறைகிறதோ, அவ்விதம் ஜீவர்களை வேறுபாட்டுடன் பார்ப்பவன் அவற்றை தொடர்ந்து சென்று மடிகிறான்.

த்விதீயாத் வை பயம் பவதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.2)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ப்ரஹ்மத்தைத் தவிர்த்து) இரண்டாவது ஒன்றைக் காணும்பொழுது நிச்சயமாக பயம் உருவாகிறது.

யதா ஹ்யேவைஶ ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே | அத தஸ்ய பயம் பவதி | தத்வேவ பயம் விதுஶோ மன்வானஸ்ய (தைத்ரீய உபநிஶத் 2.7)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுது இந்த அஞ்ஞானி இந்த ப்ரஹ்மத்தில் சிறிய வேற்றுமையைப் பார்க்கிறானோ, அப்பொழுது பயம் ஏற்படுகிறது. கற்றறிந்தும் ப்ரஹ்ம ஞானத்தை அடையாதவனுக்கு அந்த ப்ரஹ்மமே பயத்திற்கு காரணமாகிறது.

ஸர்வம் தம் பராதாத்யோSன்யத்ராத்மன: ஸர்வம் வேத (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் அனைத்தையும் (அனைவரையும்) ஆத்மாவிலிருந்து வேறாகப் பார்க்கிறானோ, அவன் அனைவராலும் ஒதுக்கப்படுகிறான்.

இத்யேவமாத்யா பூயஸி ஸ்ருதிர்பேதத்ருஶ்டிமபவததி | இவ்வாறு (மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்றும்) பல ஸ்ருதி வாக்கியங்கள் (ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வெவ்வேறு என்று கூறும்) பேதங்களை நிந்திக்கின்றன (மறுக்கின்றன).

ததா மேலும்,

ஆத்மைவேதம் (ஆத்மா ஏவ இதம்) ஸர்வம் (சாந்தோக்ய உபநிஶத் 7.25.2)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு அனைத்தும் ஆத்மாவே

ஆத்மனி விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதி

இதம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆத்மாவை அறிவதன் மூலம் இந்த அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இங்கு என்ன உள்ளதோ அது அனைத்தும் ஆத்மாவே.

ப்ரஹ்மைவேதம் (ப்ரஹ்ம ஏவ இதம்) விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.2.11)–முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு அனைத்தும் ப்ரஹ்மமே.

இதி ஸ்ருதி இவை ஸ்ருதி வாக்கியங்கள் (பேதங்களை மறுக்கிறது).

ததா ஸ்ம்ருதிரபி ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன –

யஞ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ |

யேன பூதான்யஶேஶேன த்ரஶ்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி || (ஸ்ரீ பகவத்கீதை 4.35)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

க்ஷேத்ரக்ஷேத்ரஞேஷ்வரைகத்வம் ஸர்வோபநித் ப்ரஸித்தம் த்ரக்ஷ்யஸீத்யர்த்த: அனைத்து உபநிஶத்களிலும் கூறியுள்ளப்படி ஜீவாத்ம, பரமாத்ம ஐக்கியத்தை உணர்வாய் என்பதே இதன் (மேற்கண்ட பகவத் கீதை ஸ்லோகத்தின்) அர்த்தமாகும்.

ஸர்வபூதேஶு ஏனைகம் பாவமவ்யயமீக்ஷதே |

அவிபக்தம் விபக்தேஶு தஞ்ஞானம் வித்தி ஸாத்விகம் || (ஸ்ரீ பகவத்கீதை 18.20)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

இதி அத்வைதாத்மஞானம் சம்யக்தர்னமித்யுக்தம் பகவதாபி |  இவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று) என்ற அத்வைத ஞானமே சரியானதென்று கூறுகிறார். தஸ்மாதாத்மன்யேவேஶ்வரே மனோ ததீத |  எனவே ஆத்ம ஸ்வரூபமான அந்த ஈஸ்வரனிடத்திலேயே நமது மனதை ஈடுபடுத்த வேண்டும்.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் |

ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஜீவ ராசிகள், இந்த்ரியங்கள், மூல பொருட்கள் மற்றும் ஜீவாத்மாவிற்குள் உள்ளுறையும் ஆத்மாவாகவும், பரமாத்மாவாகவும் ஆகிய இந்த ஐந்து நிலைகளிலும் தாங்களே நிலைபெற்றுள்ளீர்கள்.

இதி ச  என்று (ஸ்ரீ விஶ்ணு புராணத்தில்) கூறப்பட்டுள்ளது.

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |

விஷ்ட்ப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஶேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீ பகவத் கீதை 10.42)

ஸ்ரீ பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: அன்றி, இதைப் பலவாறாக தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி ச  என்று (ஸ்ரீ பகவத் கீதையில்) கூறப்பட்டுள்ளது.

அவித்யோபாதிபக்ஷ்யேSபி ப்ரமாண வாத: ஸமஸ்தி (அத்வைதத்திற்கு மாற்றான) அவித்யை ஒரு உபாதி என்று கூறும் ப்ரமாண வாதத்திலும் கூட இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

ஏக ஏவ மஹானாத்மா ஸோSஹகங்காரோSபிதீயதே |

ஸ ஜீவ: ஸோSந்தராத்மேதி கீயதே தத்வசிந்தகை: ||

அந்த ஒரே பெரியதான ஆத்மாவையே அஹங்காரம் என்று கூறுகிறார்கள். தத்வ ஞானத்தை அறிய விழைபவர்கள் இதையே (அந்த ஒரே ஆத்மாவையே) அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறையும் அந்தராத்மாவாக வர்ணிக்கிறார்கள்.

ததா விஶ்ணு புராணே ஸ்ரீ விஶ்ணு புராணத்திலும்,

விபேதஜனகேSஞானே நாமாத்யந்திகம் கதே |

ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமஸந்தம் க: கரிஷ்யதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.96)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வேறுபாடுகளை கற்பிக்கும் (அஞ்ஞானம்) அறியாமை அழிந்தபிறகு, ஆத்மாவிற்கும் ப்ரஹ்மத்திற்கும் இல்லாததான ஒரு பேதத்தை யார் கூறுவார்கள்?

பராத்மனோர்மனுஶ்யேந்திர விபாகோSஞானகல்பித: |

க்ஷயே தஸ்யாத்மபரயோர்விபாகோSபாக ஏவ ஹி || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ அரசனே! ப்ரஹ்மத்திற்கும், ஜீவாத்மாவிற்கும் பேதம் இல்லை. அந்த பேதத்தை உருவாக்குவது அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானம் அழிந்த பிறகு, பேதமும் மறைந்து விடுகிறது.

இதி (ஸ்ரீ விஶ்ணு புராணத்திலும்) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஶ்ணுதர்மே ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில்,

யதைகஸ்மின் கடாகாசே ரஜோதூமாதிபிர்யுதே |

நான்யே மலினதாம் யாந்தி தூரஸ்தா: குத்ரசித் க்வசித் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு குடத்தில் இருக்கும் ஆகாசமானது (வெளியானது) அந்த குடத்தில் இருக்கும் மாசுகளால் தூய்மை இழந்தாலும், (அந்த குடத்தின் வெளியே இருக்கும்) பரந்த ஆகாசமானது இதனால் மாசடைவதில்லை. அதைப்போலவே, ஒரு உடலினுள் இருக்கும் ஜீவாத்மாவானது, (அஞ்ஞானத்தினால் தூண்டப்பட்ட) இருமைகளால் பாதிக்கப்பட்டாலும், அதனால் மற்ற ஜீவாத்மாக்கள் பாதிக்கப்படுவதில்லை.

இதி (ஸ்ரீ விஶ்ணு தர்மத்திலும்) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.

ப்ரஹ்மயாஞ்யவல்க்யே ப்ரஹ்மயாஞ்யவல்க்யத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

ஆகாஶமேகம் ஹி யதா கடாதிஶு ப்ருதக்பவேத் |

ததாத்மைகோSப்யநேகேஶு ஜலாதாரேஶ்விவாம்ஶுமான் ||-(ப்ரஹ்மயாஞ்யவல்க்யம்)

ப்ரஹ்மயாஞ்யவல்க்யத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு ஒரே ஆகாயமானது குடம் முதலிய வெவ்வேறு உபாதிகளில் வெவ்வேறாகப் பிரதிபலிக்கிறதோ, எவ்வாறு ஒரே சூரியனானது, நீர் நிறைந்த பாத்திரங்களில் பிரதிபலிக்கிறதோ, அதைப் போலவே, ஒரே ஆத்மாவானது, பற்பல உபாதிகளால், வெவ்வேறாகத் தோற்றமளிக்கிறது.

க்ஷராத்மானாவீஷதே தேவ ஏக: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத்)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஒரே கடவுளானவர் அழியக்கூடிய வஸ்துக்களையும் (அதாவது அசேதன பொருட்களையும்), (அழியாத சேதனனான) ஆத்மாவையும் ஆள்கிறார்.

இதி ஶ்வேதாஶ்வரே இவ்வாறு ஶ்வேதாஶ்வர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

சாந்தோக்யே சாந்தோக்ய உபநிஶத்திலும்,

ஸ ஏகதா பவதி (சாந்தோக்ய உபநிஶத்) அது ஒன்றாகவே இருக்கிறது

இத்யாதி | என்று கூறப்பட்டுள்ளது.

ஸ தத்ர பர்யேதி அது எங்கும் பரந்து வ்யாபித்திருக்கிறது.

ஸ வா ஏ ஶ ஏதேன தைவேன சக்ஷுஷா மனஸைதான் காமான் பஶ்யன் ரமதே  அது (அந்த ஆத்மாவானது, ப்ரஹ்மமானது) தனது இந்த திவ்ய கண்களால் மனதின் மூலமாக, இந்த போகங்களை பார்த்து, அனுபவிக்கிறது

பரோSவிக்ருத ஏவாத்மா ஸ்வாத்மாயம் ஜீவ: (பிறப்பு, தேய்தல், இறப்பு முதலிய) விகாரங்கள் அற்ற அந்த பரமாத்மாவே நமது உள்ளுறை ஜீவாத்மாவாகும்.

இதி ஶ்ருதே இவ்வாறு வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஸ ஏஷ இஹா ப்ரவிஶ்ட: அது இங்கேயே (அனைத்திலும்) உள்ளுறைந்திருக்கின்றது.

இதி ப்ருஹதாரண்யகஸ்ருதி: | இவ்வாறு ப்ருஹதாரண்யக ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.

ஆத்மேத்யேவோபாஸீத (ப்ருஹதாரண்யக உபநிஶத்)

அது ஆத்மாவாகும்; இவ்வாறு அதை உபாஸிக்கவேண்டும்

ததேதத்ப்ரஹ்மாபூர்வம் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.11)

அந்த ப்ரஹ்மம் (தன்னைப் படைத்ததான மற்றொரு) காரணமற்றது

நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா நான்யோSதோSஸ்தி விஞ்ஞாதா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)

(அந்த ஆத்மா, ப்ரஹ்மத்தைத் தவிர) பார்ப்பவர் வேறொருவர் கிடையாது; அறிபவரும் வேறொருவர் கிடையாது

ஸ வா ஏஶ மஹானஜ ஆத்மா யோSயம் விஞ்ஞானமய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)

அந்த பிறப்பற்ற ஆத்மா அறிவு மயமானது

அத யோSந்யாம் தேவதாமுபாஸ்தே (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)

எவர் மற்ற தேவதைகளை வழிபடுகின்றனரோ

ஏததாத்ம்யமித ஸர்வம் (சாந்தோக்ய உபநிஶத் 6.8.7)

இவை அனைத்தும் ஆத்மாவின் உருவமேயாகும்

இத்யாதி இவ்வாறு மேலும் ஸ்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.

நிஸ்சரந்தி யதா லோஹபிண்டாத்தப்தாத்ஸ்ஃபுலிங்கா: |

ஸகாஶாதாத்மநஸ்தத்வத் ப்ரபவந்தி ஜகந்தி ஹி ||

எவ்வாறு நன்கு சுடப்பட்ட இரும்பிலிருந்து தீப்பொறிகள் வெளிவருகின்றனவோ, அவ்வாறே ஆத்மாவிலிருந்து பல்வேறு உலகங்கள் தோன்றுகின்றன.

இதி யாஞ்யவல்க்யே இவ்வாறு யாக்ஞவல்க்ய ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது.

அஜ: சரீரக்ரஹநாத் ஸ ஜாத இதி கீர்த்யதே |

அந்த பிறப்பற்றவரே சரீரத்தை ஏற்பதால் பிறப்பதாகக் கூறப்படுகிறார்.

இதி ப்ராஹ்மே இவ்வாறு ப்ரஹ்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்ப்பவத்ரஜ்ஜூகண்டஸ்து நிஶாயாம் வேஶ்மமத்யக: |

ஏகோ ஹி சந்த்ரோ த்வௌ வ்யோம்னி திமிராஹதசக்ஷுஶ: ||

இரவின் இருட்டில் மயங்கிய கண்களையுடையவனுக்கு, எவ்வாறு கயிறும் பாம்பு போல தோற்றமளிக்கிறதோ, எவ்வாறு இரண்டு நிலவுகள் தெரிகின்றனவோ…

ஆபாதி பரமாத்மா ச ஸர்வோபாதிஶு ஸம்ஸ்தித: |

நித்யோதித: ஸ்வயம்ஜ்யோதி: ஸர்வக: புருஶ: பர: ||

அவ்வாறே எங்கும் நிறைந்துள்ள, சுயப்ரகாசமுடைய ஒரே பரமாத்மாவானவர், அறியாமையால் மயங்கியவனுக்கு, பற்பல பொருட்களில் பலவாறாகத் தெரிகிறார்.

அஹங்காராவிவேகேன கர்தாஹமிதி மன்யதே |

(மேலும் அவ்வாறு அறிவு மயங்கியவன்) அஹங்காரத்தால் விவேகம் இழந்து தானே செயல் புரிவதாக நினைத்துக்கொள்கிறான்.

இதி இவ்வாறு மேலும் கூறப்பட்டுள்ளது.

ஏவமேவாயம் புருஶ: ப்ராஞ்யேநாத்மனா | ஸம்பரிஶ்வக்த:

(ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.21)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு இந்த புருஶன் அறிவுடைய ஆத்மாவுடன் சேர்வதால்…

ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி (சாந்தோக்ய உபநிஶத் 6.8.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ஸௌம்யா!! அப்பொழுது அவன் உண்மையுடன் ஒன்று சேர்கிறான்

இதி இவ்வாறு மேலும் கூறப்பட்டுள்ளது.

ஏவம் இவ்வாறாக (நமக்கு விளங்குவது என்னவென்றால்):

ஸ்வமாயயா ஸ்வமாத்மானம் மோஹயன் த்வைதமாயயா |

குணாஹிதம் ஸ்வமாத்மானம் லபதே ச ஸ்வயம் ஹரி: ||

பகவான் ஸ்ரீ ஹரியானவர், தனது மாயையாலே தன்னையே மோஹமடைய செய்துகொண்டு, பலவகை உருவத்தில், தனது குணங்களால் தன்னையே அனுபவித்துக்கொள்கிறார்.

ததா மேலும்,

க்ஷேத்ரஞ்யம் சாபி மாம் வித்தி (ஸ்ரீ பகவத்கீதை 13.2)

எல்லா க்ஷேத்திரங்களிலும், க்ஷேத்ரக்ஞ்யன் நானே என்றுணர்

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி (ஸ்ரீ பகவத்கீதை 15.10)

அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர்கள் காண்பதில்லை.

அஞ்ஞானேனாவ்ருதம் ஞானம் (ஸ்ரீ பகவத்கீதை 5.15)

அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது.

அவ்யக்தாதிவிஶேஶாந்தமவித்யாலக்ஷணம் ஸ்ம்ருதம்

மேலும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது: பெயர், மற்றும் உருவமற்ற மூலப் ப்ரக்ரிதி முதல், ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட அனைத்து பொருட்கள் ஈறாக, அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஆஸீதிதம் தமோபூதம் (மனு ஸ்ம்ரிதி 1.5)

மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது: இவை அனைத்தையும் முதலில் (அறியாமை என்னும்) இருள் சூழ்ந்திருந்தது.

வாசாரம்பணம் (சாந்தோக்ய உபநிஶத் 6.1.4)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து வேறுபாடுகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன

யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரம் பஶ்யதி | யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூத் தத் கேன கம் பஶ்யேத் தத் கேன கம் ஜிக்ரேத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.14)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எங்கு இருமைகள் உள்ளனவோ அங்கேதான் ஒருவர் மற்றொன்றைப் பார்க்கிறார். எங்கு அனைத்தும் ஆத்மா என்ற ஒன்றே உள்ளதோ அங்கு யார் எதை பார்க்க முடியும், எதை நுகர முடியும்?

யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத: |

தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபஶ்யத: (ஈசாவாஸ்ய உபநிஶத் 7)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?

யத்ர நான்யத் பஶ்யதி நான்யத் விஜானாதி (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எங்கு மற்ற எதையும் காணவும் அறியவும் முடியாதோ.

பேதோSயமஞானநிபந்தன:

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே அறியாமையின் காரணத்தால் வேறுபாடுகள் தோன்றுகின்றன

நேஹ நானாஸ்தி கிஞ்சன (கதோபநிஷத் 2.1.11)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு வேற்றுமை எதுவும் இல்லை

ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பஶ்யதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் இங்கு (ப்ரஹ்மத்திற்கும் மற்றதற்கும்) வேறுபாடுகளைக் காண்கின்றானோ அவன் மறுபடியும் மறுபடியும் மரணங்களை அடைகிறான் (அதாவது முக்தி அடையாமல் மீண்டும் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து இறக்கிறான்).

விஸ்வதஸ்சஶு: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.

யோனிமதிதிஶ்டத்யேகோ விஶ்வானி ரூபாணி யோநிஶ்ஸ்ச ஸர்வா:

யார் அந்த மூலத்தில் நிலைபெற்றிருக்கின்றாரோ அவரே (அந்த பரப்ரஹ்மமே) அனைத்து ரூபங்களும் யோனிகளும் ஆவார்.

அஜாமேகம் லோஹிதசுக்லகிருஶ்ணாம்

பஹ்வி: ப்ரஜா: ஸ்ருஜமானாம் ஸுரூபா: |

அஜோ ஹ்யேகோ ஜுஶமானோSனுஶேதே

ஜஹாத்யேனாம் புக்தபோகாமஜோSன்ய: || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.5)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: சிவப்பு, வெண்மை, கருமை நிறம் படைத்த பிறப்பற்ற ஒன்று தன்னைப் போலவே பலவற்றை ஸ்ருஷ்டிக்கிறது. அதன் அருகே பிறப்பற்ற ஒன்று படுத்துக்கிடக்கிறது. மற்றொரு பிறப்பற்ற ஒன்று அதை (அந்த சிவப்பு, வெண்மை, கருப்பு நிறமுள்ளதை) அனுபவித்துவிட்டு அதனை துறந்து சென்றது.

தேவாத்மஶக்திம் விததே

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த திவ்யமான ஆத்ம சக்தியை த்யானித்தார்கள்

ந து தத்த்விதீயமஸ்தி ததோSன்யத் விபக்தம் யத் பஶ்யேத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.23)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ஷுஷுப்தி நிலையில் ஆத்மாவைத்தவிர) இரண்டாவதான ஒரு பொருள் இல்லை. அங்கே அவன் (அந்த ஜீவாத்மா) எதையும் காண்பதில்லை, ஆனாலும் அனைத்தையும் காண்கிறான்.

ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.2)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ருத்ரர் ஒருவரே. (அவரைத்தவிர) மற்றொருவர் இல்லை.

இத்யாதி  இவ்வாறு (புராணங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது).

கௌடபாத காரிகை, ஸ்ரீ விஶ்ணு புராணம் மற்றும் சில உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை  விளக்குவதைக் காண்போம்.

மனோத்ருஶ்யமிதம் த்வைதம் யத்கிஞ்சித் ஸசராசரம் |

மனஸோ ஹ்யமனீபாவே த்வைதம் நைவோபலப்யதே || (கௌடபாத காரிகா 3.32)

கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: இங்கு பல்வேறான மாற்றங்களாகத் தெரியும் அனைத்தும் மனத்தால் கற்பிக்கப்பட்டவைகளாகும். மனம் தனது கற்பனைகளிலிருந்து ஒடுங்கி லயமடையும் பொழுதும் இந்த வேற்றுமைகளும் மறைந்து விடுகின்றன.

ப்ரபஞ்சோ யதி வித்யேத நிவர்தேத ந ஸம்ஶய: |

மாயாமாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத: || (கௌடபாத காரிகா 1.17)

கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: இதில் சந்தேகம் வேண்டாம். இங்கு பிரபஞ்சமாக தெரியும் அனைத்தையும் மனத்தால் நீக்கிவிட முடியும் (அனைத்தும் மனதின் கற்பனையே). ஏனெனில், இரண்டாகத் தெரியும் (வெவ்வேறாகத் தெரியும்) அனைத்தும் மாயையின் வடிவங்களாகும். (ஜீவாத்மாவும், பரமாத்மாவும்) ஒன்றே என்ற அத்வைதமே உண்மையாகும்.

யதா ஸ்வப்னே த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மன: |

ததா ஜாக்ரத்த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மன: || (கௌடபாத காரிகா 1.17)

கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு கனவில் பலவற்றை மனம் கற்பனை செய்கிறதோ, அதைப்போலவே, விழித்திருக்கும் பொழுதும் மாயையின் வசப்பட்டு பலவற்றை மனம் கற்பனை செய்கிறது.

இத்யாதி கௌடபாதே இவ்வாறு கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது.

தர்கேணாபி ப்ரபஞ்சஸ்ய மனோமாத்ரத்வமிஶ்யதாம் |

த்ருஶ்யத்வாத் ஸர்வபூதானாம் ஸ்வப்னாதிவிஶயோ யதா||

நாம் காணும் அனைத்தும் கனவில் காணும் உருவங்கள் போலவேயாகும். எனவே, ஒரு வாதத்திற்காக உலகமும், வெவ்வேறு பொருள்களும் உண்டு என்றாலும், அதுவும் மனதின் கற்பனையேயாகும்.

த்விதீயாத் வை பயம் பவதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.2)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ப்ரஹ்மத்தைத் தவிர்த்து) இரண்டாவது ஒன்றைக் காணும்பொழுது நிச்சயமாக பயம் உருவாகிறது.

ஞாதே த்வாத்மனி நாஸ்த்யேதத் கார்யகாரணதாத்மன: |

ஆத்மாவை அறிந்த பிறகு அந்த ஆத்மாவின் காரண காரியங்கள் அனைத்தும் (அதன் தேவை முடிந்துவிடும் என்பதால்) நின்று விடும்.

ஏகோ தேவ: ஸர்வபூதேஶு கூட: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே. அவர் அனைத்து ஜீவராசிகளிலும் மறைந்துள்ளார்.

அஸங்கோ ஹ்யயம் புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே. அவர் அனைத்து ஜீவராசிகளிலும் மறைந்துள்ளார்.

இதி ச இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |

த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.84)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பல்வேறு தோற்றங்களே ஆகும். எனவே, அறிவுடையவர்கள் தமக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வேறுபாடுகள் காணமாட்டார்கள்.

ஸர்வத்ரதைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே தைத்யர்களே (அசுரர்களே)!!! வேற்றுமைகளை கைவிடுங்கள். மற்றவரிடம் வேற்றுமை பாராமையே பகவான் அச்யுதரை வழிபடுவதாகும்.

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |

பரமாத்மனி கோவிந்தே மித்ரா(அ)மித்ராகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.18.37)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தந்தையே!!! பகவான் கோவிந்தர் எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளார். அவரே இந்த ப்ரபஞ்சமாக உள்ளார். அவரே பரமாத்மா. அவரிடம் நட்போ விரோதமோ கொள்ளுதல் என்ற பேச்சிற்கே இடமில்லை (ஏனெனில் அனைத்தும் அவராகவே உள்ளபோது நண்பன் எது, விரோதி எது? இரண்டாவதான ஒன்று இருந்தால் தானே இவ்வாறு தோன்றும்?).

இதி விஶ்ணுபுராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்வைத தத்துவத்தின் மஹா வாக்யங்கள் என்று கருதப்படும்  சாந்தோக்ய மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஶத் வாக்யங்களுடன் மற்ற பிற மேற்கோள்களையும் உதாஹரித்து அத்வைத ஸாரத்தை விளக்குவதைக் காண்போம்.

தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 1.4.2)-சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.

அஹம் ப்ரஹ்மாஸ்மி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)-ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நானே ப்ரஹ்மம்

இதம் ஸர்வம் யதயதாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே எவையெல்லாம் உள்ளதோ (மனத்தால் காட்சிகளாகக் கற்பிக்கப்பட்டுள்ளதோ) அவை அனைத்தும் ஆத்மாவே.

அயமாத்மா ப்ரஹ்ம (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஆத்ம ப்ரஹ்மமே

தரதி ஶோகமாத்மவித் (சாந்தோக்ய உபநிஶத் 7.1.3)-சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆத்மாவை அறிபவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான்.

தத்ர கோ மோஹ: க: ஶோக: ஏகத்வமனுபஶ்யத: (ஈஶாவாஸ்ய உபநிஶத் 7)-ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்ற அவருக்கு மோகம் எது? சோகம் எது? (ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?)

இத்யாதி ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராணலௌகிகேப்யஸ்ச | இத்தகைய வேத (ஸ்ருதி), ஸ்ருதி, இதிஹாஸ, புராண வாக்கியங்களிலிருந்தும், (லௌகிக) உலகியல் அறிவிலிருந்தும் (ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்று என்ற அத்வைதம்) தெளிவாகிறது.

ஸித்தேர்SதேSபி வேதஸ்ய ப்ராமாண்யமேஶ்டவ்யம் |  நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட விஷயங்களிலும் (ப்ரஹ்ம ஞானம்) வேதங்களை பிரமாணமாகக் கொள்ளவேண்டும்.

ஸ்வபக்ஷஸாதனைரகார்யமர்தஜாதமாஹ சேத் |

ததா பரோSபி வேத சேச்ருதி: பராத்மத்ருங் ந கிம் ||

தங்களது கொள்கையை விளக்கும் பொழுது மீமாம்ஸகர்கள் (மறைமுகமாக) வாக்கியங்கள் (வார்த்தைகள்) செயலைத் தவிர மற்ற அறிவை கொடுக்கும் என்றும், அதைப் படிப்பவர்களும் அவ்வாறே புரிந்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார்கள். அப்படியெனில் வேதங்கள் (அவற்றின் வாக்கியங்கள் மூலம்) பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை தரவல்லன என்று நிரூபணம் ஆகின்றதல்லவா?

இத்யபியுக்தைருக்தம் | இவ்வாறு கற்றறிந்த பெரியோர்கள் கூறுகின்றனர்.

அன்யான்விதஸ்வார்த்தே பதானாம் ஸாமர்த்யம் ந கார்யான்விதஸ்வார்த்தே, ததா ஸத்யர்த்தவாதானாமனன்வய-ப்ரஸங்காத் அன்வயபுத்தே: ஸ்துதித்வாத் | ந ஹி பவதி

பொருட்களை (பதார்த்தங்களை) விளக்கும் சொற்களும், காரியத்தை விட காரணமாகிய பொருளையே சிறப்பாகச் சொல்கின்றன (உதாரணமாக “பசுவைக் கொண்டு வா” என்று கூறும்பொழுது கொண்டு வருதலாகிய செயலானது பசு என்ற பதார்த்தத்தைக் கொண்டே சிறப்பு பெறுகிறது). அவ்வாறு இல்லாதிருப்பின் (அதாவது சொற்கள் காரியங்களைக் கூறுமாயின்), மீமாம்சகர்களின் அர்த்தவாதங்கள் (காரியத்தை செய் அல்லது செய்யாதே என்று கூறும் வாக்கியங்கள்) அர்த்தமற்ற அலங்கார சொற்களாகி விடும்.

வாயவ்யம் ஶ்வேதமாலபேத பூதிகாமோ வாயூர்வை க்ஷேபிஶ்டா தேவதா

இதி | ராகஸ்யைவ ப்ரவர்த்தகத்வம், ந நியோகஸ்ய |

“செல்வத்தை விழைபவர் வாயு பகவானுக்கு வெள்ளை நிற மிருகத்தை பலியிட வேண்டும். ஏனெனில் வாயு அதி வேகமாக செல்லக்கூடிய தேவதையாவார்”. இந்த வாக்கியத்தில் ‘இதை செய் (வெள்ளை மிருகத்தை பலியிடு)’ என்ற ஆணை ஒருவரை செயல்புரிய தூண்டுவதில்லை. அவரவரின் (ஸ்வர்க்கத்தை அடையவேண்டும், மிகுந்த செல்வத்தை அடையவேண்டும் போன்ற) விருப்பங்களே ஒருவரை செயல்புரிய தூண்டுகின்றன.

ததா ச ஸ்ருதி: மேலும் ஸ்ருதி வாக்கியங்களும் இவ்வாறு கூறுகின்றன:

அதோ கல்வாஹு: காமமாய ஏவாயம் புருஶ இதி ஸ யதா காமோ பவதி தத்க்ரதுர்பவதி யத்க்ரதுர்பவதி தத் கர்ம குருதே யத் கர்ம ததபிசம்பத்யதே |

இந்த மனிதன் ஆசையே உருவானவன் என்று கூறப்படுகிறது. அவன் எதை விரும்புகிறானோ அதை அடைய உறுதி கொள்கிறான். அந்த உறுதியினால் செயல் புரிகிறான், எந்த செயலைப் புரிகின்றானோ அதற்கேற்ப பலாபலன்களை அடைகின்றான்.

ததா ச ஸ்ம்ருதிரபி – மனுஸ்ம்ருதியிலும்,

அகாமஸ்ய க்ரியா காசித் திருஶ்யதே நேஹ கஸ்யசித் |

யத் யத்தி குருதே கர்ம தத்தத் காமஸ்ய சேஶ்டிதம் || (மனுஸ்ம்ருதி 2.4)

இந்த உலகில் ஆசையின்றி எவரும் செயல் புரிவதில்லை. எந்த எந்த கர்மம் செய்யபடுகின்றதோ அவை அனைத்தும் ஆசையின் விளைவாகவே செய்யப்படுகின்றன.

இதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

காம ஏ க்ரோத ஏ (ஸ்ரீ பகவத்கீதை 3.37)

இஃது விருப்பமும் சினமும்

இதி – இவ்வாறு (ஸ்ரீ பகவத்கீதையில்) கூறப்பட்டுள்ளது.

அன்யபராணாமபி மந்த்ரார்த்த வாதானாம் ப்ராமான்யம் அங்கீகர்த்தவ்யம் | தேஶாம் அப்ராமான்யகதநேன உரகத்வம் கதவான்னஹுஷ: | தத்கதம்?

எனவே மற்ற அர்த்த வாதமான விஷயங்களைக் கூறும்பொழுதும், மந்திரங்களின் ப்ரமாணத்தை (அதிகாரத்தை) நாம் ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறிய நஹுஷன் ஒரு பாம்பாய் பிறந்தான். இது எவ்வாறு?

ருயஸ்து பரிஶ்ராந்தா வாஹ்யமானா துராத்மனா |

தேவர்யோ மஹாபாகாஸ்ததா ப்ரஹ்மர்யோSமலா: || 8

பப்ரஸ்சு: ஸம்யம் தே து நஹும் பாபசேதஸம் |

ய இமே ப்ரஹ்மணா ப்ரோக்தா மந்த்ரா வை ப்ரோக்ஷனே கவாம் || 9

ஏதே ப்ரமாணம் பவத உதாஹோ நீதி வாஸவ |

நஹுஶோ நீதி தானாஹ ஸஹஸா மூடசேதன: || 10

பாப சிந்தனை உடைய நஹுஶனால் பல்லக்கை சுமக்குமாறு நியமிக்கப் பட்ட தூய்மையான குணம்படைத்த முனிவர்கள், ப்ரஹ்மரிஷிகள் மற்றும் தேவ ரிஷிகள் களங்கமான மனம் படைத்த அந்த நஹுஶனைப் பார்த்து தங்களது சந்தேகத்தைப் பற்றி விளக்கம் கேட்டனர். ‘ஹே இந்த்ரனே! வேதங்களில் பசுக்களை ப்ரோக்ஷிப்பதர்க்கு (மந்திர நீரைத் தெளித்து தூய்மை படுத்துவதற்கு) உரிய மந்திரத்தை தாங்கள் ப்ரமாணமாக ஏற்கிறீர்களா?’ அதற்கு அந்த மந்த புத்தியுடைய நஹுஷன் ‘இல்லை’ என்று பதிலுரைத்தான்.

ருய ஊசு: –

அதர்மே ஸம்ப்ரவ்ருத்தஸ்த்வம் தர்மம் ச விஜிக்ருக்ஷஸி |

ப்ரமாணமேததஸ்மாகம் பூர்வம் ப்ரோக்தம் மஹர்ஷிபி: || 11

அந்த முனிவர்கள் பதிலுரைத்தனர்: நீ அதர்மத்தின் வழி சென்று, தர்மத்தை துறக்க விரும்பிகிறாய். முற்காலத்தில் மஹரிஷிகள் அந்த மந்திரத்தை ப்ரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று எங்களுக்கு போதித்துள்ளனர்.

அகஸ்த்ய உவாச –

ததோ விவதமான: ஸன் ருஷிபி: சஹ பார்த்திவ: |

அத சாமஸ்ப்ருஷன்மூர்த்த்னி பாதேனாதர்மபீடித: || 12

அகஸ்த்யர் கூறினார்: அப்பொழுது அந்த ரிஷிகளுடன் விவாதம் செய்த வண்ணம் அதர்மம் தலையெடுத்து அந்த நஹுஷன் எனது தலையின் மீது அவனது காலை வைத்தான்.

தேனாபூத்ததசேதா: ஸ நி:ஸ்ரீகஸ்ச ஷசீபதே: |

ததஸ்தமஹமுத்விக்னமாவோசம் பயபீடிதம் || 13

ஹே இந்த்ரனே! இதனால் அவனது நற்புத்தி தொலைந்து அவனது செல்வங்கள் அவனை விட்டு விலகிச் சென்றன. புத்தியிழந்து பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நஹுஷனைப் பார்த்து நான் இவ்வாறு கூறினேன்.

யஸ்மாத் பூர்வை: க்ருதம் மார்கம் மஹர்ஷிபிரனுஷ்டிதம் |

அதுஷ்டம் தூஷயஸி வை யச்ச மூர்த்ன்ர்யஸ்ப்ருஷ: பதா || 14

யச்சாபி தவம்ருஷீன்மூட பிரஹ்மகல்பான் துராசதான் || 15

வாஹான் க்ருத்வா வாஹயஸி தேன ஸ்வர்காத்தபிரப: |

த்வம் ஸ்வபாபபரிப்ரஷ்ட: க்ஷீனபுண்யோ மஹீபதே || 16

தஸவர்ஷஸஹஸ்ராணி ஸர்ப்பரூபதரோ மஹீம் |

விசரிஷ்யஸி தீர்னஸ்ச்ச புன: ஸ்வர்கமவாப்ஸ்யஸி || 17

(அகஸ்த்யர் கூறுகிறார்) அடே மூடனே! நீ பல காலமாய் மஹரிஷிகளால் உபதேசிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மையான வழிமுறைகளை தவறென்று உரைத்தாய், எனது தலை மீது உனது கால்களை வைத்தாய், எவரை காண்பதுவும் மிகக்கடினமானதோ அத்தகைய உயர்ந்த மஹரிஷிகளை உனது பல்லக்கை சுமக்கச் செய்தாய். எனவே, ஒ அரசனே! இந்த குற்றங்களுக்காக, நீ உனது பாபங்களால் பீடிக்கப்பட்டு, உனது புண்ணியத்தையும் ஒளியையும் இழந்து, ஒரு பாம்பின் வடிவம் எடுத்து பூமியில் பத்தாயிரம் ஆண்டுகள் உழல்வாய். (பத்தாயிரம் ஆண்டுகளுக்கு) பின்னர் உன் சாபம் தீர்ந்து பிறகு ஸ்வர்கத்தை வந்து அடைவாய்.

இதி ஸ்ரீமஹாபாரதே – இவ்வாறு ஸ்ரீமஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

அத: ஷ்ரத்தேயமாத்மஞானம் எனவே ஆத்மஞானத்தை நம்பிக்கையுடன் ஒத்துக்கொள்ளவேண்டும்.

அஶ்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப |

அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மனி || (ஸ்ரீ பகவத் கீதை 9.3)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பகையைச் சுடுவோய்! அறத்தில் நம்பிக்கையில்லாத மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக ஸம்ஸார பாதைகளில் மீளுகின்றனர்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஐதரேயகே ச,

ஏஷ பந்தா ஏதத்கர்மைதத்ப்ரஹ்மைதத்ஸத்யம் தஸ்மான்ன ப்ரமாத்யைத்தன்னாதீயான்ன ஹ்யத்யாயன்பூர்வே யேSத்யாயம்ஸ்தே பராபபூவு: (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.1)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: இதுவே வழி, இதுவே கர்மம், இதுவே ப்ரஹ்மம் மற்றும் இதுவே உண்மையாகும். எனவே, இதைவிட்டு பிறழவோ, இதை துறக்கவோ வேண்டாம். முற்காலத்தில், இதை துறந்தவர்கள் தத்தம் வழியினின்று தவறினர்.

ததுக்தம்ருஶிணா ரிஷிகளும் இவ்வாறு கூறுகின்றனர்,

ப்ரஜா ஹ திஸ்ர அத்யாயமீயுர்ன்யன்யா அர்கமபிதோ விவிஶ்ரே | ப்ருஹத்ததஸ்தௌ புவனேஶ்வந்த: பவமானோ ஹரித ஆவிவே: (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.4)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்கள். மற்றவர்கள் அக்னி, அனைத்துலகங்களின் மத்தியில் இருக்கும் கதிரவனையும், உபாசித்தனர். பிறகு உலகை தூய்மைபடுத்தும் காற்று (வாயு) வீசத்தொடங்கியது (சிலர் அந்த வாயுதேவனை உபாசித்தனர்).

ப்ரஜா ஹ திஸ்ரோ அத்யாயமீயுரிதி யா வை தா இமா: பிரஜா: திஸ்ரோSத்யாயமீயுஸ்தானிமானி வயாம்ஸி வங்கா வகதாஶ்சேரபாதா: | (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்கள். எந்த மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்களோ, அவர்கள் பறவைகளாகவும், மரம், மூலிகைச் செடிகளாகவும், பாம்புகளாகவும் பிறப்பெடுக்கிறார்கள்.

இதி ஸ்ருதம் |  இவ்வாறு ஸ்ருதி கூறுகிறது.

வங்கா வனகா: வ்ருக்ஷா: | ‘வங்கா’ என்பது வனங்களில் வளரும் மரங்களாகும்.

வகதா: ஒஷதயச்ச | ‘வகதா’ என்பது மூலிகைச் செடிகளாகும்.

இரபாதா உர:பாதா: ஸர்பாதய: | ‘இரபாதா’ என்பது ‘மார்பையே கால்களாகக் கொண்ட பிராணிகளாகும்’, அதாவது பாம்புகளாகும் (பாம்புகள் ஊர்ந்து செல்வதால் அவற்றின் மார்பு பிரதேசமே அவற்றின் கால்களாகும்).

ததா ச ஈஶாவாஸ்யே அவித்வன்னின்தார்த்தே மந்தர: – மேலும், ஈசாவாஸ்ய உபநிஶத்தில் (தர்மத்தை பற்றிய) அறிவற்றவரை குறைகூறும் மந்திரம் இவ்வாறு உள்ளது –

அசுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா: |

தாக்ம்ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: ||
(ஈஶாவாஸ்ய உபநிஶத் 3)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

தங்களை அழித்துக்கொள்கின்ற மனிதர்கள் எவர்களோ, அவர்கள் அசூர்யா என்ற பெயருடைய அடர்ந்த இருளால் மூடப்பட்ட எந்த லோகங்கள் உண்டோ, அந்த லோகங்களை மரணத்திற்குப் பின் அடைகிறார்கள் (இங்கு லோகம் என்னும் சொல்லை சரீரத்தைக் குறிப்பதாகவும், அவர்கள் அசுர பிறப்பை அடைவார்கள் என்றும் கொள்ளலாம்).

அஸந்நேவ ஸ பவதி | அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் ||
(தைத்த்ரிய உபநிஶத் 2.6)

இதி தைத்த்ரியே

தைத்த்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எவனொருவன் ப்ரஹ்மத்தை பொய்யென்று நினைக்கின்றானோ அவன் தனது உண்மை தன்மையை இழக்கின்றான்.

ததா ஷகுந்தலோபாக்யானே

யோSன்யதா சந்தமாத்மானமன்யதா ப்ரதிபத்யதே |

கிம் தேன ன க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரினா ||

ஷகுந்தலோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது:

எவனொருவன் எங்கும் நிறைந்துள்ள ஆத்மாவை பலவென்று நினைத்து தனது ஆத்மாவை அழிக்கின்றானோ, அந்த திருடனால் எந்த பாபம் தான் செய்யப்படவில்லை?

இத்யலமதிப்ரசங்கேன – (நான் கூறவந்ததை கூறிவிட்டேன்) இனி மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை.

ஸஹஸ்ரநாமஜபஸ்ய அனுரூபம் மானசஸ்நானமுச்யதே – ஸஹஸ்ரநாம ஜபம் நமது உள்ளத்தை (ஆத்மாவை) தூய்மைபடுத்தும் ஸ்நானமாக வர்ணிக்கப்படுகிறது.

யஸ்மின் தேவாஸ்ச்ச வேதாஸ்ச பவித்ரம் க்ருத்ஸ்னமேகதாம் |

வ்ரஜேத்தன்மானஸம் தீர்த்தம் தத்ர ஸ்னாத்வாம்ருதோ பவேத் ||

அதுவே மானச தீர்த்தம்; மனதின் ஸ்நானம். எங்கு நீராடுவதால் தேவர்களும் வேதங்களும் புனிதமும், பூர்ணத்வமும், ஒருமையும் அடைகின்றார்களோ (அடைகின்றனவோ), அங்கு நீராடுவதால் அமரத்தன்மை கிடைக்கும்.

ஞானஹ்ருதே த்யானஜலே ராகத்வேமலாபஹே |

ய: ஸ்னாதி மானஸே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் ||

எவனொருவன் ஞானம் எனும் குளத்தில், த்யானம் என்னும் நீரால் நிறைந்த அந்த மனமென்னும் தீர்த்தத்தில் நீராடுகிறானோ, அவன் (தன் மனத்திலிருக்கும்) விருப்பு வெறுப்பென்னும் அழுக்குகளை களைந்து பரமகதியை அடைகிறான்.

ஸரஸ்வதி ரஜோரூபா தமோரூபா களிந்தஜா |

ஸத்வரூபா ச கங்கா ச ந யாந்தி ப்ரஹ்ம நிர்குணம் ||

ஸரஸ்வதி (நதி) ரஜோமயமானது, யமுனை தமோமயமானது மற்றும் கங்கை ஸத்வமயமானது. அதாவது (அவை குண சேர்க்கையுடன் இருப்பதால்) அவை (அவற்றில் நீராடுபவனை) நிர்குண ப்ரஹ்மத்திடம் அடைவிக்க முடியாது.

ஆத்மா நதி ஸம்யமதோயபூர்ணா ஸத்யஹ்ருதா ஷீலதடா தயோர்மி: |

தத்ராவகாஹம் குரு பாண்டுபுத்ர ந வாரினா ஷுத்யதி சாந்தராத்மா ||

ஆத்மாவே நதியாகும், புலனடக்கம் அதிலுள்ள நீராகும்; சத்தியமே ஆழமாகும்; நன்னடத்தையே அதன் கரைகளாகும்; கருணையே அதிலுள்ள அலைகளாகும்; ஹே பாண்டுபுத்ரனே!! இந்த (ஆத்ம) நதியில் நீராடுவாயாக. (மற்ற நதிகளிலுள்ள) வெறும் நீரினால் ஆத்மா தூய்மையடையாது.

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

மானசம் ஸ்நானம் விஶ்ணுசிந்தனம்

பகவான் ஸ்ரீவிஶ்ணுவை த்யானிப்பதே நமது மனத்திற்கும் ஆத்மாவிற்கும் ஸ்நானமாகும்.

இதி ஸ்ம்ருதௌ – இவ்வாறு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது.

ஜப்யேனைவ து ஸம்ஸித்யேத்  ப்ராஹ்மனோ நாத்ர ஸம்ஷய: |

குர்யாதன்யன்ன வா குர்யான்மைத்ரோ ப்ராஹ்மன உச்யதே ||

இதில் சந்தேஹமே இல்லை! ஜபத்தினால் மட்டுமே ஒருவன் பிராமணத் தன்மையை அடைகிறான். மற்ற கர்மங்களை செய்தாலும் செய்யாவிட்டாலும், அவன் ஜபத்தினால் மட்டுமே தூய்மை அடைகிறான். அதனால், ஒரு பிராமணன் ‘மைத்ர’ (அனைவரின் நண்பன்) என்று அழைக்கப்படுகிறான்.

இதி மானவம் வசனம் – இவ்வாறு மனு ஸ்ம்ருதியில் (2.87) கூறப்பட்டுள்ளது.

ஜபஸ்து ஸர்வதர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |

அஹிம்ஸயா ச பூதானாம் ஜபயஞ்ய: ப்ரவர்த்ததே ||

அனைத்து தர்மங்களிலும் ஜபமே மிகச்சிறந்த தர்மமாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜபயஞ்யம் பிராணிகளை ஹிம்ஸிக்காமலேயே பூரணமடைகிறது.

இதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யஞ்ஞானாம் ஜப்யஞ்ஞோSஸ்மி | (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)

யக்ஞங்களில் நான் ஜபயக்ஞ்யம்

இதி ஸ்ரீகீதாயாம் – இவ்வாறு ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோSபி வா |

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி: ||-(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)

ஸ்ரீ பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-தூய்மையாக இருக்கின்றானோ அல்லவோ, அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும், தாமரைக்கண்ணன் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் உள்ளும் புறமும் தூய்மையடைகிறான்.

இத்யாதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யதேகம் தைவதம் ப்ரஸ்துதம் தஸ்யோபலக்ஷணமுச்யதே – (மேலே) எந்த ஒரு கடவுளைப் பற்றி கூறப்பட்டதோ, அவரது குணதிசயங்களை (பீஷ்மர்) வர்ணிக்கிறார்.

யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதியுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 11 ||

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |

யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||

எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ, அவரிடமே (அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீமன்நாராயணனிடமே) கல்பத்தின் முடிவில், மஹாபிரளயத்தில் சென்று லயமடைகின்றன.

யத: யஸ்மாத் எவரிடமிருந்து ஸர்வாணி பூதானி பவந்தி உத்பவந்தி அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ ஆதியுகாகமே கல்பாதௌ கல்பத்தின் தொடக்கத்தில் (அதாவது முதல் யுகமான க்ருத யுகத்தில்) கல்பத்தின் தொடக்கத்தில் முதல் யுகமான க்ருத யுகத்தில் யாரிடமிருந்து அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ |

யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் விலயம் (கல்பம், யுகம் முடிவில்) ப்ரளய காலத்தில் யாந்தி விநாஶம் கச்சந்தி அழிவை அடைகின்றனவோ புன: பூய:, மறுபடியும் ஏவ இத்யவதாரணார்த்த:, நான்யஸ்மின்னித்யர்த்த: இங்கு ஏவ என்பதன் அர்த்தம் எந்த ஒருவரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ அந்த ஒருவரிடமே லயமடைகிறது, வேறொருவரிடம் இல்லை, யுகக்ஷயே மகாப்ரளையே மஹாப்ரளய காலத்தில் | மஹாப்ரளய காலத்தில் எவரிடம் (எவரிடமிருந்து தோன்றியதோ, அவரிடமே) அனைத்தும் சென்று லயமடைகிறதோ |

சகாரான்மத்யேSபி யஸ்மிம்ஸ்திஷ்டந்தி | (இந்த ஸ்லோகத்தில் வரும்) ‘ச’காரத்தின் அர்த்தம் என்னவெனில், (கல்ப, யுக தொடக்கம், மற்றும் ப்ரளயத்தின்) இடையினிலும் அவரிடமே நிலைபெற்று இருக்கின்றன என்பதாகும்.

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபிஸம்விஷந்தி|| (தைத்ரிய உபநிஶத் 3.1)

ஸ்ரீ தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றனவோ, எதனால் வாழ்கின்றனவோ, இறப்பவை எதனை சென்றடைகின்றனவோ…

தஸ்ய,  லோகப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |

விஶ்ணோ:, நாமஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||

ஹே பூவுலகின் அரசனே (யுதிஷ்டிரனே)! மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும், அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும், எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் – “நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான” – ஆயிரம் திருநாமங்களை என்னிடமிருந்து கேட்பாயாக; (அவற்றை நீ) ஒருமித்த சிந்தையுடன் க்ரஹித்துக் கொள்வாயாக.

தஸ்ய ஏவம் லக்ஷணலக்ஷிதஸ்ய ஏகதைவஸ்ய மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும் 

லோகப்ரதானஸ்ய லோகனஹேதுபி: வித்யாஸ்ஸ்தானை: பிரதிபாத்யமானஸ்ய அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும்,

ஜகன்னாதஸ்ய ஜகதாம் நாத: ஸ்வாமி மாயாஷபல: பரமாத்மா நிர்லேபஸ்ச தஸ்ய அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும்,

பூபதே மஹிபால பூவுலகின் அரசனே

விஶ்ணோ: வ்யாபனஷீலஸ்ய எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் 

நாமஸஹஸ்ரம் நாம்னாம் ஸஹஸ்ரம் ஆயிரம் திருநாமங்களை 

பாபபயாபஹம் அஶுபகர்மக்ருதம் பாபம் ஸம்ஸாரலக்ஷணபயம் சாபஹந்தீதி, நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான

த்வம் மே மத்த: ஶ்ருணு என்னிடமிருந்துக் கேட்பாயாக ஏகாக்ராமணா பூத்வாவதாரயேத்யர்த்த: ஒருமித்த சிந்தையுடன் அதை நீ க்ரஹித்துக் கொள்வாயாக

ஏகஸ்யைவ ஸமஸ்தஸ்ய ப்ரஹ்ணோ த்விஜஸத்தம |  

நாம்னாம் பஹுத்வம் லோகானாமுபகாரகரம் ஶ்ருணு ||–ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! எங்கும் நிறைந்துள்ள அந்த ஒரே பரப்ரஹ்மத்தின் பல திருநாமங்கள் உலகிற்கு (உலக மக்களுக்கு) நன்மை தருவனவாகும். அவற்றை கேட்பாயாக!!

நிமித்தக்தயோ நாம்னாம் பேதின்யஸ்ததுதீரனாத் |

விபின்னான்யேவ சாத்யந்தே ஃபலானி த்விஜஸத்தம ||-ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! இந்த திருநாமங்களை வெவ்வேறாக உச்சரித்துத் த்யானிப்பதர்க்கு அவற்றின் (வெவ்வேறான) நிமித்த சக்திகளே காரணமாகும். எனவே, ஒவ்வொரு நாமத்திற்கும் அதன் நிமித்த சக்தியை பொறுத்தும், த்யானிப்பவரின் தன்மையை பொறுத்தும் வெவ்வேறான பலன்கள் கிடைக்கின்றன.

யச்சக்தி நாம யத்தஸ்ய தத்தஸ்மின்னேவ வஸ்துனி |

சாதகம் புருஶவயாக்ர சௌம்யே க்ரூரேஶு வஸ்துஶு ||

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஹே மனிதர்களில் புலி போன்றவனே!!! ஒவ்வொரு திருநாமத்திற்கும் உள்ள சக்தியானது, (த்யானிப்பவரின்) மன நிலையை பொறுத்து மென்மையான அல்லது கடினமான உருக்கொள்கிறது.

இதி விஶ்ணுதர்மவசனாத்யத்யபி பரஸ்ய ப்ரஹ்மண: ஶஶ்டிகுணக்ரியாஜாதிரூடீனாம் ப்தப்ரவ்ருத்திஹேதுபூதானாம் நிமித்தக்தினாம் ஸ அஸம்பவ:

இந்த விஶ்ணுதர்மோத்தர புராணத்தின் வாக்கியத்தின் படி, (நிர்குண, நிர்விஷேஷன) பரப்ரஹ்மத்தை உறவு, குணம், செயல், ஜாதி மற்றும் குறிப்பு சொற்கள் (போன்ற நாமங்களால்) மூலம் விவரிக்க இயலாது.

ததாபி ஸகுணே ப்ரஹ்மணி ஸவிகாரே ச ஸர்வாத்மகத்வாத்தேஶாம் ப்தப்ரவ்ருத்திஹேதூநாம் ஸம்பவாத் ஸர்வே ப்தா: பரஸ்மின் பும்ஸி வர்தந்தே ||

ஆயினும் பரப்ரஹ்மம் அனைத்துமாய் இருப்பதனால் சகுண ப்ரஹ்மத்தை இத்தகைய நாமங்களால் விவரிக்க இயலும். அனைத்தும் ப்ரஹ்மமேயாதலால், அனைத்தும் நாமங்களும் அந்த ஒப்பற்ற பரம்பொருளையே குறிக்கும்.

தத்ர அவற்றுள் எந்தெந்த திருநாமங்களை கூறுகிறார் என்பதை பீஶ்மாசார்யார் அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |

ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||

யானி, நாமானி, கௌணானி, விக்யாதானி, மஹாத்மன: |

ரிஶிபி:, பரிகீதானி, தானி, வக்ஷ்யாமி, பூதயே ||

(அந்த பரப்ரஹ்மத்தின் திருநாமங்களுள்) அவரது குணங்களினின்று தோன்றியதும், (அந்த குணங்களை வர்ணிக்கும் திருநாமங்களுள்) மிகவும் புகழ் பெற்றதும், (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களாலும் மற்றும் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும், நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

யானி நாமானி கௌனானி குண ஸம்பந்தீனி குணயோகாத் ப்ரவ்ருத்தானி தேஶு ச யானி (அந்த பர ப்ரஹ்மத்தின்) குணங்களினின்று தோன்றியதும்

விக்யாதானி ப்ரஸித்தானி (அந்த குணங்களினின்று தோன்றிய திருநாமங்களில்) மிகவும் புகழ் பெற்றதும்,

ரிஶிபி: மந்த்ரைஸ்தத்தர்ஶிபிஶ்ஸ்ச (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களால்

பரிகீதானி பரித: ஸமந்தத: பரமேஶ்வராக்யானேஶு தத்ர தத்ர கீதானி மஹாம்ஸ்சாஸாவாத்மேதி பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும் மஹாத்மா தஸ்யாசிந்த்யப்ரபாவஸ்ய அந்த மஹாத்மாவின் நினைத்தற்கரிய பெருமைகளை

தானி வக்ஷ்யாமி பூதயே புருஶார்த்தசதுஷ்ட்யஸித்யை பூதயே புருஶார்த்த சதுஷ்ட்யார்தினாமிதி நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

மஹாத்மா

யச்சாப்னோதி யதாதத்தே யச்சாத்தி வியாநிஹ |

யச்சாஸ்தி சந்ததோ பாவஸ்தஸ்மாதாத்மேதி கீர்த்யதே || (லிங்க புராணம் 1.70.96)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் ஸுஷுப்தி தசையில் ப்ரஹ்மத்தை உணர்கிறான், ஸ்வப்ன தசையில் இந்த்ரியங்கள் இல்லாமலே விஷய சுகத்தை அனுபவிக்கிறான் மற்றும் ஜாக்ரத தசையில் (இந்த்ரியங்களோடு) விஷயங்களை அனுபவிக்கிறான், இவ்வாறு எப்பொழுதும் அவன் நிகழ் காலத்திலேயே இருப்பதால் அந்த புருஶனை ஆத்மா என்று அழைக்கிறார்கள்.

இதி வசனாதயமேவ மஹாநாத்மா இந்த லிங்க புராண வாக்யத்தின் மூலம் அந்த பரப்ரஹ்மமே மஹாத்மா என்று அறியப்படுகிறார்.

ரிஶிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஶ்டுப்  ததா தேவோ பகவான் தேவகி ஸுத: ||
இந்த ஸஹஸ்ரநாமத்தை நமக்கு அளித்தவர் மஹா முனிவரான (தபஸ்வியான) வேத வ்யாஸர். இதை (ஒரு ஸ்லோகத்திற்கு எட்டு பதங்களைக் கொண்ட) அனுஶ்டுப் சந்தத்தில் அமைத்துள்ளார். இந்த ஸ்தோத்ரத்திற்கு உரிய தெய்வம் தேவகி ஸுதனான பகவான் க்ருஶ்ண பரமாத்மா ஆவார்.
விஶ்ணு ஸஹஸ்ரநாமமாக இருப்பினும், இதை நேரடியாக கேட்டு, ஆமோதித்தவர் பகவான் ஸ்ரீக்ருஶ்ணன் ஆவார்.

அம்ருதாம்ஸூத்பவோ பீஜம் ஶக்திர் தேவகி நந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஶாந்த்யர்த்தே வினியுஜ்யதே || 
இந்த ஸ்லோகம் ந்யாஸத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸஹஸ்ரநாமத்திலுள்ள சில திருநாமங்களை பீஜ ஆகியவற்றை குறிப்பதாக இந்த ஸ்லோகம் உரைக்கிறது. ந்யாஸம் மற்றும் இந்த ஸ்லோகங்களுக்கு பெரியவர்களிடம் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொள்வோமாக.

விஶ்ணும் ஜிஶ்ணும் மஹாவிஶ்ணும் ப்ரபவிஶ்ணும் மஹேஶ்வரம் |
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஶோத்தமம் ||

எங்கும் நிறைந்துள்ளவரும், அனைவரையும் வெல்பவரும், மஹேஸ்வரனும், பற்பல வடிவெடுத்து (அல்லது பற்பல வடிவம் கொண்ட) அஸுரர்களை அழிப்பவரும், புருஷோத்தமனுமான பகவான் மஹாவிஷ்ணுவை நான் வணங்குகிறேன்.

விஶ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவரே- பொதுவாக விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்துள்ளவர் அல்லது எங்கும் வியாபித்துள்ளவர் என்று பொருள்.

ஜிஶ்ணும் – அனைவரையும் வெல்பவரே. பகவான் அன்பு மற்றும் அழகினால் அடியவர்களையும், பராக்ரமத்தால் அசுரர்களையும் வெல்கிறார்

மஹாவிஶ்ணும் – மகாவிஷ்ணுவே!!

ப்ரபவிஶ்ணும் – அனைவரையும் அடக்கி ஆள்பவரே. (ப்ரபவிஷ்ணு என்றால் அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்துவது. பகவான் ப்ரஹ்மா முதலானோரையும் அடக்கி ஆள்கிறார்)

மஹேஶ்வரம் – ஒப்புயர்வற்ற இறைவனே. ஸஹஸ்ரநாமத்தில் ‘பூதமஹேஸ்வர:’ என்ற திருநாமத்தில், இந்த பதத்திற்கு  ‘மஹான்’ (ஒப்புயர்வற்ற, சிறந்த) ‘ஈஸ்வரன்’ (இறைவன் அல்லது ஆள்பவர்) என்று விளக்கம் அளித்துள்ளார்.

அனேக ரூப தைத்யாந்தம் – பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே. பகவான் வராஹ, நரசிம்மர் போன்ற பல்வேறு வடிவெடுத்து அசுரர்களை அழிக்கிறார். அல்லது, இதை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம் – வண்டிக்குள் இருந்த அசுரன் (சகடாசுரன்), காற்று வடிவில் இருந்த அசுரன் (த்ருணாவர்த்தன்), காக்கை வடிவ அசுரன் (காகாசுரன்), பாம்பு வடிவெடுத்த அசுரன் (அகாசுரன்), கழுதை / நரி வடிவில் வந்த தேனுகாசுரன், கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்று பல்வேறு வடிவெடுத்து வந்தாலும் அசுரர்களை பகவான் அழிக்கிறார்

நமாமி – உம்மை வணங்குகிறேன்

புவனேஶ்வரம் – இந்த பிரபஞ்சத்தின் தலைவரே!

எங்கும் நிறைந்திருப்பவரே, அனைவரையும் வெல்பவரே, அனைவரையும் அடக்கி ஆள்பவரே, ஒப்புயர்வற்ற இறைவனே, பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே, இந்த பிரபஞ்சத்தின் தலைவரே, மகாவிஷ்ணுவே!! உம்மை வணங்குகிறேன்.

ந்யாஸம்:
அஸ்ய ஸ்ரீவிஶ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய… என்று தொடங்கும் இப்பகுதி ந்யாஸம் என்று அழைக்கப்படும்.

த்யானம்

க்ஷீரோர் தன்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகானாம் | 
மாலா க்லுப்தாஸனஸ்த ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க: |
ஶுப்ரைரப்ரைரதப்ரைருபரிவிரசிதைர் முக்த பீயூஶ வர்ஶை: |
ஆனந்தீன: புநீயாதரிநளின கதா ஶங்க பாணிர் முகுந்த: ||   

க்ஷீரோதன்வத்ப்ரதேசே – திருப்பாற்கடலில்

ஶுஶிமணி விலஸத் – அழகிய மணிகளின் ஒளியால் (நிறைந்த)

ஸைகதே – மணற்பரப்பில் (பாற்கடலின் கரையில்)

மௌக்திகானாம் மாலாக்லுப்தா – முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில்

ஸ்படிகமணி நிபைர் மௌக்திகைர் – ஸ்படிகத்திற்கு ஒப்பான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட

மண்டிதாங்க:- அவயவங்களை உடையவரும்

ஶுப்ர: – தூய (வெண்மையான)

அப்ர: – மேகங்கள்

அதப்ரை: – பொழியும்

முக்தபீயூஶ வர்ஶை: – அமுத மழையை

ஆனந்தீ – மகிழ்பவரும்

ந: புநீயாத் – என்னை புனிதமாக்கட்டும்

அரி – ஆழிப்படை (சக்ரம்)

நளின – தாமரை

கதா – கதை

ஶங்கபாணிர் – சங்கு ஆகியவற்றை கைடலில் தாங்கியவருமான

முகுந்த:- பகவான் முகுந்தர்

வைரம் போன்று மின்னும் மணல் துகள்களைக் கொண்ட பாற்கடலின் கரைகளிலே, உயர்ந்த முத்து மலைகளால் அலங்கரிக்கப்பெற்றவரும், அவருக்கு மேலே சூழ்ந்துள்ள வெண்மேகங்கள் அமுத மழையைப் பொழியவும், ஆனந்தமே வடிவானவரும், தனது திருக்கரங்களில் கதை, சங்கு மற்றும் சக்கரங்களை ஏந்தியவரும், அனைவருக்கும் முக்தியை அளிப்பதால் முகுந்தன் என்று பெயருடையவருமான பகவான் (ஸ்ரீமந்நாராயணன்) நம்மை புனிதப்படுத்தட்டும்.

பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸு: (அ)நில சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே |
கர்ணாவாசாஸ் ஶிரோத்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயம் அப்தி |
அந்தஸ்தம் யஸ்ய விஶ்வம் ஸுர நர கக கோ போகி கந்தர்வ தைத்யை: |
சித்ரம்ரம்ரம் யதேதம் த்ரிபுவன வபுஶம் விஶ்ணும் ஈஶம் நமாமி ||
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய |

எங்கும் நிறை பரம்பொருளாம், அனைவர்க்கும் ஈசனாம் பகவான் விஷ்ணுவை மூவுலகின் வடிவிலே தியானிக்கின்றேன். (இந்த விராட் வடிவில்) பூமியே அவரது திருவடிகளாக, சுவர்க்கம் அல்லது ஆகாயமே அவரது நாபியாக (தொப்புள் பகுதி), திங்களும், கதிரவனும் அவரது இரு திருக்கண்களாக, திசையே அவரது காதுகளாக, சூரியமண்டலமே அவரது தலையாக, அக்னி அவர் வாயாக (அல்லது முகம் என்றும் கூறுவர்), கடல்கள் அவரது வயிறாக (உள்ளது). அவருக்குள் தேவர்கள் (ஸுரர்), மனிதர்கள் (நர), கக (பாம்புகள்), கோ (பசுக்கள், கால்நடைகள்), கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரும் சஞ்சரிக்கின்றனர்.

பூ:பாதௌ – பூமியே அவரது திருவடிகள். இந்த பூமியில் வாழும் நாம் அனைவரும் ஏற்கனவே அவரது திருவடிகளில் தான் இருக்கிறோம். அதை உணர்ந்து தவறிழைக்காது வாழ்ந்தாலே போதும். அதுவே தவம். வேறொன்றும் வேண்டாம்.

யஸ்ய நாபிர்வியதஸுரநில: – எவருடைய (அவரது) தொப்புள் பகுதியே தேவர்கள் சஞ்சரிக்கும் ஆகாயம்

சந்த்ரஸூர்யௌ ச நேத்ரே – பகலில் நம்மை காத்து, இரவில் நம்மை மகிழ்விக்கும் சந்திர, சூரியர்களே அவரது இரு கண்கள். இதன் தத்துவம் என்னவென்றால், பகவான் ஒரே நேரத்தில் சூரியன் போன்ற விழியால் நமது பாபங்களை எரிக்கிறார், சந்திரன் போன்ற விழியால் நமது துன்பங்களை போக்கி மகிழ்விக்கிறார் (கதிர்மதியம் போல் முகத்தான் – திருப்பாவை 1). மேலும், சந்திரன், சூரியன் என்ற இரு விழிகளின் மூலம் இரவு, பகல் ஆகிய இரு வேளைகளிலும் நாம் செய்யும் கர்மங்களை அவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

கர்ணாவாஶா: – அவரது செவிகளே திசைகள். அவருக்கு எல்லாம் கேட்கும். அவருக்குத் தெரியாத இரகசியம் இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது

ஶிரோத்யௌர் – த்யௌ எனப்படும் சூரிய மண்டலமே அவரது தலை (சிலர் த்யௌ என்பதற்கு ஆகாயம் என்றும் கூறுவர். இரண்டும் ஏற்புடைய அர்த்தங்களே)

முகமபி தஹனோ – அக்னி அவரது வாயில் இருக்கிறார். தனது கிருஷ்ணாவதாரத்தில் ஒருமுறை பகவான் அக்னியை வாயினால் பருகி தமது இடையர்குல நண்பர்களை காத்தான். அக்னி அவனது வாய்க்குள் அடக்கம் என்பதை ஒரு திருவிளையாடலாகவே காட்டி அருளினான்.

யஸ்ய வாஸ்தேயமப்தி: – கடல்களே அவரது வயிறு

அந்த:ஸ்தம் யஸ்ய விஶ்வம் – அவருக்குள்ளே இந்த உலகமே அடங்கியுள்ளது

ஸுர – தேவர்கள்

நர – மனிதர்கள்

கக – பாம்புகள் (இங்கு பாம்புகள் என்பது ஊர்வனவற்றை குறிப்பது)

கோ – மாடுகள் (இது அனைத்து மிருகங்களையும் குறிக்கும்)

போகி – மகிழ்கின்றன

கந்தர்வ – கந்தர்வர்கள் (இது மனிதர்களை தவிர்த்த, தேவர்களுக்கும்-மனிதர்களுக்கும் இடையிலுள்ள மற்ற இனத்தவர்களை குறிக்கும்)

தைத்யை: – அசுரர்களை

சித்ரம் – பல்வேறு (இவ்வாறு பல்வேறு வகையான ஜீவன்களும்)

ரம்ரம்யதேதம் – ரமிக்கின்றன (இன்புறுகின்றன)

த்ரிபுவன வபுஶம் – இத்தகைய மூவுலக வடிவினரான

விஶ்ணுமீஶம் – அனைவருக்கும் ஈஸ்வரனான பகவான் விஷ்ணுவை

நமாமி – அவரது இந்த விராட் ரூபத்தில் வணங்குகிறேன்.

பகவானை உள்ளபடி தியானிக்க வேண்டுமென்றால் இவ்வாறான விராட் ரூபத்தில் தான் தியானிக்க வேண்டும். ஆனால், இது அனைவராலும் இயலாத காரியம். எனவே தான் அந்த பரம்பொருள் “நமது உள்ளத்திற்கும்” விளங்குமாறு ஒரு எளிய வடிவை ஏற்கிறார்.

இது நற்றிணையில் கடவுள் வாழ்த்து. இந்த செய்யுளின் பொருளுக்கும், மேற்கண்ட தியான சுலோகத்திற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே.’

நிலமே சேவடி, ஆகாயமே உடல், மதியும், கதிரவனுமே திருக்கண்கள் … அவனே வேத முதல்வன் என்று தெளிவுறக் கூறுகிறார் “பாரதம் பாடிய பெருந்தேவனார்”.

பகவான் வாஸுதேவனான ஸ்ரீ கிருஶ்ணனுக்கு எனது வணக்கங்கள்!!!
ஶாந்தாகாரம் புஜகஶயனம் பத்மநாபம் ஸுரேஶம்
விஶ்வாதாரம் ககனஸத்ருஶம் மேகவர்ணம் ஶுபாங்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத் த்யானகம்யம்
வந்தே விஶ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் ||

ஶாந்தாகாரம் – அமைதியான வடிவானவரும்

புஜகஶயனம் – பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளவரும்

பத்மநாபம் – கொப்பூழில் எழுகமல பூவழகர் (உந்தித் தாமரை படைத்தவரும்)

ஶுரேஶம் – சுரர்களுக்கு (தேவர்களுக்கு) ஈஸ்வரன், அதாவது தேவாதி தேவன்

விஶ்வாதாரம் (விஶ்வாகாரம்) – இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய் இருப்பவர். விஶ்வாகாரம் என்றும் கூறும் வழக்கம் உள்ளது. இவ்வாறு கூறினால், சென்ற சுலோகத்தில் அனுபவித்தார் போல இந்த பிரபஞ்சமே தனக்கு திருவுடலாக உடையவர்

ககனஶத்ருஶம் – ஆகாயம் போன்றவர் (எங்கும் பரந்துள்ளவர்)

மேகவர்ணம் – கார்மேக வண்ணத்தர் (கண்ணன் என்னும் கருந்தெய்வம்…)

ஶுபாங்கம் – அழகிய அவயவங்களை உடையவர் (என்னரங்கத் தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்)

லக்ஷ்மீகாந்தம் – திருமகள் கேள்வன்!

கமலநயனம் – தாமரை இதழை ஒத்த திருக்கண்களை உடையவர்

யோகிஹ்ருத்யான கம்யம் – தியானத்தில் திளைக்கும் யோகிகளின் உள்ளத்தாமரையில் வீற்றிருப்பவர்

வந்தே விஶ்ணும் – பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்

பவபயஹரம் – சம்சார அச்சத்தை போக்குபவர். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று ஆச்சார்யாள் கூறியபடி, இந்த சம்சாரத்தில் புல், பூண்டு முதற்கொண்டு தேவராய், அசுரராய், தாவர ஜங்கமமாய், எல்லா பிறப்பும் பிறந்து, நிலையில்லா இன்ப-துன்பங்களில் உழல்பவர்களுக்கு தமது திருவடி நிழல் அளித்து, மீளா இன்பமான முக்தியை நல்குகிறார்.

ஸர்வலோகைக நாதம் – பிரம்மா வாழும் சத்திய லோகம் முதல் பாதாள லோகம் வரையிலும் உள்ள ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் ஒப்பற்ற ஒரே இறைவனும் (ஆன விஷ்ணுவை வணங்குகிறேன்)

அமைதியே வடிவானவரும், அரவணை மேல் துயில் கொள்கின்றவரும், நாபியில் (கொப்பூழில்) தாமரையை உடையவரும், தேவர்களின் தலைவரும், இந்த ப்ரபஞ்சத்திற்கே ஆதாரமானவரும்*, ஆகாயத்திற்கு ஒப்பானவரும், நீருண்ட கார்மேக வண்ணரும், அழகிய அங்கங்களை உடையவரும் (மங்களங்களை அள்ளித்தரும் அங்கங்களை உடையவரும்), திருமகள் கேள்வனும், தாமரைக் கண்ணனும், யோகிகளின் இதயத்திற்குள் த்யானத்தால் அடையப்படுபவரும், ஸம்ஸார பயத்தைப் போக்குபவரும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.
சிலர் விஶ்வாதாரம் என்பதற்கு பதிலாக விஶ்வாகாரம் என்று கூறுவது வழக்கம். இதற்கு இந்த ப்ரபஞ்சமே வடிவானவரும் என்று பொருள்.
ககனஸத்ருஶம்: ஆகாயத்திற்கு ஒப்பானவர். இதற்கு பல பொருள்கள் கூறலாம். பகவான் ஆகாயத்தைப் போன்று எங்கும் பரந்து, சூழ்ந்திருப்பவர் என்பது ஒரு பொருள். உபநிடதங்களில் பல இடங்களில் ஆகாயம் (ஆகாஶ) என்ற சொல்லிற்கு பகவான் நாராயணன் என்றே பலரும் பொருளுரைத்திருக்கின்றனர்.
மேகஶ்யாமம் பீதகௌஶேயவாஸம் 
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாஷம் 
விஶ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்||

மேகஶ்யாமம் – நீருண்ட கார்மேகம் போன்ற மேனிநிறம் கொண்டவரும்

பீதகௌஸேயவாஸம் – உருக்கிய பொன்போன்ற மஞ்சள் பட்டாடையை உடுத்தியுள்ளவரும்

ஸ்ரீவத்ஸாங்கம், கௌஸ்துபோத்பாஸிதாங்கம் – பகவானின் திருமார்பில் அவருக்கென்றே உள்ள இரு அடையாளங்கள், ஸ்ரீவத்ஸம் என்னும் மரு மற்றும் கௌஸ்துபம் என்ற மணி. கௌஸ்துப மணி திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன

புண்யோபேதம் – புண்ணியமே ஒரு வடிவெடுத்தாற்போல உள்ளவரும் (அல்லது புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும்)

புண்டரீகாயதாக்ஷம் – தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்

ஸர்வலோகைக நாதம் (ஸர்வ லோக ஏக நாதம்) – ஈரேழ் பதினான்கு உலகங்களுக்கும் ஒரே கடவுளான (கிமேகம் தைவதம் லோகே?)

விஶ்ணும் வந்தே – பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்

நீருண்ட கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவை மார்பில் தாங்கியுள்ளவரும், மார்பில் கௌஸ்துப மணியை அணிந்துள்ளவரும், புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும், தாமரைக் கண்ணனும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.
நம: ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய பூப்ருதே |
அநேக ரூப ரூபாய விஶ்ணவே ப்ரபவிஶ்ணவே ||

நம: – வணங்குகிறேன்

ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய – அனைத்து பருப்பொருட்களுக்கும் ஆதியானவராய் இருப்பவரும். இந்த ப்ரபஞ்சமாய் நமக்கு தெரியும் அனைத்துமே, மூல பிரகிருதி என்னும் சூக்ஷ்ம சக்தியிலிருந்து தோன்றியவை ஆகும். மூல பிரகிருதி பகவானிடமிருந்து தோன்றுகிறது. எனவே, நாம் காணும் அனைத்திற்கும் ஆதியானவர் பகவானே

பூப்ருதே – இந்த பிரபஞ்சத்தை தாங்குபவரும் (பகவான் ஆதிசேட வடிவில் தனது ஆயிரம் பணாமுடிகளால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்குகிறார். வராஹ அவதாரத்தில் பூமியை தாங்கினார்)

அநேகரூப ரூபாய – பல்வேறு வடிவங்களை ஏற்பவரும் (பகவான் நல்லோரை காக்கவும், தீயோரை தண்டிக்கவும், அறத்தை நிலைநாட்டவும் பகவான் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்)

விஶ்ணவே – எங்கும் நிறை பரப்ரஹ்மமான விஷ்ணுவை

ப்ரபவிஶ்ணவே – அனைவருக்கும் பிரபுவானவருமான (நான்முகன் முதலானோருக்கும் பிரபு பகவான்)

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதியாய் (அவை உருவாவதற்குக் காரணமாய்), இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குபவராய் (பூ என்ற சொல் பொதுவாக பூமியைக் குறித்தாலும், இங்கு பிரபஞ்சம் என்று பொருள் கொள்வதே தகும்) பற்பல வடிவங்களைத் தாங்குபவராய், எங்கும் நிறைந்தவரான பகவான் விஶ்ணுவை நான் வணங்குகிறேன்.
ஸஶங்க ஶக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |

ஸஹார வக்ஷஸ்தல ஶோபி கௌஸ்துபம் நமாமி விஶ்ணும் ஶிரஸா சதுர்புஜம் |

 |
கையில் நன்மையை பயக்கவல்ல சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளவரும், அழகிய கிரீடம் மற்றும் குண்டலத்தை தரித்துள்ளவரும், மஞ்சள் பட்டாடை அணிந்துள்ளவரும், தாமரைக் கண்ணனும், அழகிய மாலைகளாலும், தனது திருமார்பில் கௌஸ்துபம் எனும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளவரும், நான்கு திருக்கைகளை உடையவருமான பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன்.
ஸஶங்கசக்ரம் – பாஞ்சசன்யம் என்னும் சங்கத்தையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் இரு கைகளில் ஏந்தி

ஸகிரீடகுண்டலம் – அழகிய கிரீடம் மற்றும் குண்டலங்களை தரித்துக்கொண்டு

ஸபீதவஸ்த்ரம் – அழகிய மஞ்சள் பட்டாடை உடுத்திக்கொண்டு

ஸரஸீருஹேக்ஷணம் – தாமரை இதழை ஒத்த இரு திருக்கண்களுடன்

ஸஹாரவக்ஷஸ்தலஶோபி கௌஸ்துபம் – திருமார்பில் அழகிய ஆரங்கள் (தங்க மாலைகள்) மற்றும் கௌஸ்துபம் என்னும் மணியை தரித்துக்கொண்டு

நமாமி விஶ்ணும் ஶிரஸா – பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன்

சதுர்புஜம் – நான்கு திருக்கரங்களுடன் அருள்பவருமான

சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி

ஆஸீனமம்புதஶ்யாமம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம் |
சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷம் 
ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீகிருஶ்ணம் ஆஶ்ரயே ||     

சாயாயாம் பாரிஜாதஸ்ய – பாரிஜாத மரத்தின் நிழலில்

ஹேமஸிம்ஹாஸனோபரி ஆஸீனம் – தங்கமயமான சிங்காதனத்தில் வீற்றிருப்பவரும்

அம்புதஶ்யாமம் – நீருண்ட கார்மேகம் போன்ற மேனி வண்ணம் கொண்டவரும்

ஆயதாக்ஷம் – நீண்ட திருக்கண்களை உடையவரும் (கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்)

அலங்க்ருதம் – (அழகிய திருவாபரணங்கள் மற்றும் வனமாலை ஆகியவற்றால்) நன்கு அலங்கரிக்கப்பெற்றவரும்

சந்த்ரானனம் – முழுமதியை போன்ற குளிர்ந்த திருமுகத்தை உடையவரும் (நீருண்ட மேகத்தை மேனிநிறத்திற்கு ஒப்புமை கூறிவிட்டு படியால் இங்கு சந்திரனை அதன் குளிர்ந்த தன்மைக்கு ஒப்புமை கூறுவதே தகும்)

சதுர்பாஹும் – (சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை ஏந்திய) நான்கு திருக்கரங்களை உடையவரும்

ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் – ஸ்ரீவத்ஸம் என்னும் மருவுடன் கூடிய திருமார்புடையவரும்

ருக்மிணி ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் – திருமகளாம் ருக்மிணியும், பூதேவியான ஸத்யபாமையுடனும் சேர்ந்து திருக்காட்சி தரும்

ஸ்ரீகிருஷ்ணம் ஆஶ்ரயே – கண்ணனை நான் சரணடைகிறேன்! இது விஷ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இதை நேரடியாக கேட்டு மகிழ்ந்தவர் கண்ணன்–எனவே, இந்த சஹஸ்ரநாமத்திலுள்ள திருநாமங்களை அனுபவிப்பதற்கு முன்னர் கண்ணனின் கழலினைத் தொழுது, அவனையே சரணடைவோம்.

பாரிஜாத மரத்தினடியில் உள்ளதொரு பொன்மயமான ஸிம்மாஸனத்தில் வீற்றுள்ளவரும், நீருண்ட கார்மேகத்தை ஒத்த திருமேனி வண்ணம் கொண்டவரும், நீண்ட, பெரிய திருக்கண்களை உடையவரும், திருமேனி எங்கும் தக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பெற்றவரும், வெண்மதியைப் போன்ற குளிர்ந்த திருமுகம் உடையவரும், நான்கு திருக்கைகளை உடையவரும், ஸ்ரீவத்ஸம் எனும் மறுவால் அலங்கரிக்கப் பெற்ற திருமார்பை உடையவரும், ருக்மிணீ பிராட்டியாரும், ஸத்யபாமையும் உடனிருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நான் சரணடைகிறேன்.
ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இது ஸ்ரீகிருஶ்ணாவதாரத்தில் தான் நமக்கு  கிடைத்தது. எனவே, ஸஹஸ்ரநாமம் தொடங்கும் முன்பாக பகவான் ஸ்ரீகிருஶ்ணரின் திருவடி தொழுவது உசிதமாகும்.
—————————————————————————————–

ஸ்ரீமத் பாகவதம் -திரிவிக்ரமன் சரித்திரம் -8 ஸ்கந்தம் -அத்தியாயங்கள் -15-23-ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 30-31–

January 20, 2023

ஸ்ரீமத் பாகவதம் -திரிவிக்ரமன் சரித்திரம் -8 ஸ்கந்தம் -அத்தியாயங்கள் -15-23-

8-15-3-மஹா பாலி இந்திர வஜ்ராயுதத்தால் அடி பட்டு மாண்டு போனான் தொடங்கி -சுக்ராச்சாரியார் -ஆச்சார்ய பக்தியால் போன உயிரும் திரும்பும் -விஸ்வஜித் யாகம் -ரிஷிகள் செய்து மூ உலக அரச பட்டம் -ஹோம தீ-தங்க தேர் எழுந்து சிங்கக் கொடி -சுக்ராச்சாரியார் சங்கு வழங்க -வாடாத மாலை பிரஹலாதன் வழங்கி ஆசீர்வாதம் -தேவ குரு ப்ருஹஸ்பதி இடம் தேவர்கள் பக்தி இல்லாமல் வீழ்ந்தார்கள்-அஹங்காரம் மிக்கு ஆச்சார்யர் சொன்னதையே மீறி வீழ்வான் -அவர் சாபத்தால் –

காஸ்யப முனி -அதிதி பயோ விரதம் அனுஷ்ட்டித்து -பால் மட்டும் உட்க் கொண்டு விரதம்-பால்குன மாசம் -மாசி அம்மாவாசை -பங்குனி அம்மாவாசை -சுக்ல பக்ஷம் முதல் 12 நாள்கள் -நாராயணன்-ஆதி புருஷன் பீ த வாசா சதுர் புஜம் சங்குசக்ர கதா தரனாக சேவை -தண்டவத் பிரணாமம்

என்னைக் குறித்து செய்த விரதம் வீணாகாது -ஸ்ரத்தையே பண்ண வேண்டுவது -தானே வைகுந்தம் தரும் -விண்ணாடு அளிக்க மாட்டான் -உபதேச ரத்ன மாலை-ஞான சாரம் சப்த காதை போன்றவை முழங்குமே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்

பாத்ரபத மாதம் ஆவணி அமாவாசை புரட்டாசி அமாவாசை -அவதாரம் -8-18-1- அபிஜித் முஹூர்த்தம் விஜய ஏகாதசி -ஆவணி திருவோணம் -வாமன மூர்த்தியாக நாடகம் போல் -ஜாதகர்மா -பிறப்பின் போது வைதிக கர்மம் -சூரியனே காயத்ரி உபதேசம் -ப்ருஹஸ்பதி பூணல் -கஸ்யபர் -மேகலை -கிருஷ்ணாஜினம் மான் தோல் பூமா தேவி -பலாச தண்டம் -வன தேவதை -குடை ஸ்வர்க்க அதிஷ்டான தேவதை -கமண்டலம் நான்முகன் -சப்த ரிஷிகள் தர்ப்பைப்புல் -ப்ரஹ்ம எஜ்ஜம் -பிஷா பாத்திரம் குபேரன் -பார்வதி தேவி முதல் பிக்ஷை இட்டாள் –

மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய் -மா வலி –தாளால் அளந்த பெருமானை –திரு வேங்கடத்தானை –நறையூரிலே கண்டேனே – இங்கு சனிக்கிழமை சேவிக்க 16 முறை திருவேங்கடம் சென்ற பலன் –

நர்மதா நதிக்கரையில் அஸ்வமேத யாக நிறைவு நாள் -அடிக்கு அடி பூமி நடுங்கும் படி -ஆச்சார்யர் அருள் உள்ளவன் இடம் செல்ல இவனே நடுங்க -சரீரமான பூமியும் நடுங்க -முடிச் சோதி அடிச்சோதி கடிச்சோதி -திருமாலே கட்டுரையே -பரஞ்சோதி

வாமனன் -12 திரு நாமங்கள் -153-164-உபேந்த்ரோ -தம்பியாக அவதாரம்-அடுத்து -வாமன -குள்ளமானவன் இல்லை -திருமேனி ஒளியால் நன்மை செய்பவன் —அதீந்த்ர –நியம எம-கஸ்யபர் -தேவர்களை ஸ்தாவர ரூபமாக செல்லச் சொல்ல -ஒளி பட்டதுமே இழந்த செல்வம் பெற்றார்கள் -ஸ்ரீ பாத தீர்த்தம் மஹா பாலி ஸ்வீ கரித்தான் -தீர்த்த தீர்த்தம் –தீர்த்தன் உலகு அளந்த சேவடி –

பித்ருக்கள் ஆசீர்வாதத்தால் தான் வாமன சரித்திரம் கேட் கிறோம்-அடியேன் என்ன சமர்ப்பிக்க வேண்டும் பவ்யமாக கேட்டு –

கஸ்யபர் திதி -ஹிரண்ய கசிபு வம்சம் -புகழ்ந்து பேச-சின்ன வடிவுடன் ஹிரண்யன் உள்ளே ஒளிந்து இருக்க -கார்ய வைகுண்டத்தில் அவன் காணவில்லை- பதானி -எனது அடியால் மூவடி கேட்டு

தத் -நீர் யார் -அபூர்வம் -குவா தவ வசதி -ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உலகமே -அநாத -நைவ தாய் தந்தை -கிம் அபீஷ்டம் -அத்யல்பம் -இத்தை கொடுக்க மனுடியுமோ அல்பனே-த்ரி விக்ரமி -மூன்று அடிக்கு திருப்தி அடையாதவன் மூன்று உலகு கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டான் –

வண் கையில் நீர் ஏற்றான் -முதல் திருவந்தாதி-ஒண் மிதியில்-குடை – -திலகம் -கௌஸ்துபம் -உந்தித்தாமாரை -வளர வளர சூர்யன்

உள்ளங்காலில் கீழ் லோகங்கள் -தொடை வாயு -நாபி ஆகாசம் -திரு மார்பில் நக்ஷத்ரம் -கழுத்தில் சாம வேதம் -முடியில் மேகங்கள் -வாக்கில் வேதம் -பிறவிருத்தி நிவ்ருத்தி இமைகள் -நிழல் யமன் -பநரம்புகளைக் நதி -புத்தி நான்முகன் -பிராம்சு -பேர் உருவம் -மூன்று அடி வாய்ப்பு -வலது திருவடியால் மண்ணுலகம் அளந்து-காலோபதி வைத்தியம் -ஞானம் கொஞ்சம் பெற்று முன்னுக்கு வர முயல்கிறோம் -முதல் சடாரி சாதித்து –

மீண்டும் குள்ள வாமனனாக மாற ஜாம்பவான் பறை அடைந்து உலகங்கள் சுற்றி

நமுசி வானில் சுழற்றிய -பெரியாழ்வார் -பாகவதத்தில் இல்லை-பகவான் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது -அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாதே-மாவலியை சிறையில் வைத்த –

மூன்றாவது அடி கிரீடம் கழற்றி வணங்கி தலையில்,வைக்கபிரார்திக்க -பிரகலாதன் பல்லாண்டு பாட -தொழுதால் எழலாம்

விந்தியா வளி -அவன் மனைவி -இவனுக்கு இன்னம் கர்வம் போக வில்லை -தானே கொடுத்தான் என்றும் -எனது தலையில் வைக்க -யானே என்று அறியக்கில்லாத -யானே நீ என்னுடைமையும் நீயே அறியாமல் உள்ளான்

அனுக்ரஹம் பண்ணி உள்ளேன் -அளவுக்கு அதிகமாக உள்ள செல்வம் தட்டிப் பறித்து -கர்வம் இல்லாதவனே எனது அருளுக்குப் பாத்திரம் ஆவான் –

சுதல லோகம் அனுப்பி -நானே காவலாளி -கதா பாணியாக இன்றும் உள்ளான் -ராவணனை விரட்டிய சரித்திரம் ஸ்ரீ ராமாயணத்திலும் உண்டு -ப்ரஹ்லாதன் சத்சங்கம் இருக்க அவனையும் அங்கே போகச் சொல்லி -அடுத்த கல்பம் இந்திர பதவி உண்டு

யாகம் நிறைவேற திரு நாம சங்கீர்த்தனமே பிராயச்சித்தம் -சுக்ராச்சாரியார்-தீயினில் தூசாகும் செப்பு -உபேந்த்ரனாக தேவ லோக காவல் இன்றும்

1-மஹா பலி பிரார்த்தித்த மூன்றாவது அடி எங்கே வைத்தான் -பெருமாளுக்கு மட்டும் தெரியும் -பட்டர்-நஞ்சீயர் -நாச்சியார் திருமொழி வியாக்யானத்தில் உண்டு -பரோ மாத்ரா -வேதம் இத்தைச் சொல்லும் -நம் புத்தியால் அறிய முடியாது -அவனே அவனைக் காட்டிக் கொடுக்க வேண்டும்

2-தலை மேல் வை என்றதும் திருப்தி அடைந்தான் -உடையவனைத் தான் கேட்ப்பான் உடைமையை அல்ல

3-மேலோட்டமாக பார்க்காமல் உத்தமன் -தேவர்களுக்கும் -இந்திரனுக்கும் -அடகிஹிதி கஸ்யபர் -மஹா பலிக்கும் – நமக்கும் -உகந்த -நாச்சியார் திருப்பாவை மூன்று பத்திலும் -மார் தட்டும் அஹங்காரம் கழிந்தால் மதி -மார்கழி

4-ஆச்சார்யர் பெருமை

பலன் சொல்லி நிகமனம்

————–

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 15-மஹாபலி தேவர்களை வெல்லுதல்-

ராஜோவாச
ப³லே꞉ பத³த்ரயம்ʼ பூ⁴மே꞉ கஸ்மாத்³த⁴ரிரயாசத .
பூ⁴த்வேஶ்வர꞉ க்ருʼபண வல்லப்³தா⁴ர்தோ²(அ)பி ப³ப³ந்த⁴ தம் .. 1..

ஏதத்³வேதி³துமிச்சா²மோ மஹத் கௌதூஹலம்ʼ ஹி ந꞉ .
யஜ்ஞேஶ்வரஸ்ய பூர்ணஸ்ய ப³ந்த⁴னம்ʼ சாப்யநாக³ஸ꞉ .. 2..

ஶ்ரீஶுக உவாச
பராஜிதஶ்ரீரஸுபி⁴ஶ்ச ஹாபிதோ
ஹீந்த்³ரேண ராஜன் ப்⁴ருʼகு³பி⁴꞉ ஸ ஜீவித꞉ .
ஸர்வாத்மனா தானப⁴ஜத்³ப்⁴ருʼகூ³ன் ப³லி꞉
ஶிஷ்யோ மஹாத்மார்த²நிவேத³னேன .. 3..

தம்ʼ ப்³ராஹ்மணா ப்⁴ருʼக³வ꞉ ப்ரீயமாணா
அயாஜயன் விஶ்வஜிதா த்ரிணாகம் .
ஜிகீ³ஷமாணம்ʼ விதி⁴நாபி⁴ஷிச்ய
மஹாபி⁴ஷேகேண மஹானுபா⁴வா꞉ .. 4..

ததோ ரத²꞉ காஞ்சன பட்டனத்³தோ⁴
ஹயாஶ்ச ஹர்யஶ்வ துரங்க³வர்ணா꞉ .
த்⁴வஜஶ்ச ஸிம்ʼஹேன விராஜமானோ
ஹுதாஶ நாதா³ஸ ஹவிர்பி⁴ரிஷ்டாத் .. 5..

த⁴னுஶ்ச தி³வ்யம்ʼ புரடோபனத்³த⁴ம்ʼ
தூணாவரிக்தௌ கவசம்ʼ ச தி³வ்யம் .
பிதாமஹஸ் தஸ்ய த³தௌ³ ச மாலா-
மம்லான புஷ்பாம்ʼ ஜலஜம்ʼ ச ஶுக்ர꞉ .. 6..

ஏவம்ʼ ஸ விப்ரார்ஜிதயோத⁴னார்த²ஸ்தை꞉
கல்பித ஸ்வஸ்த்யயனோ(அ)த² விப்ரான் .
ப்ரத³க்ஷிணீ க்ருʼத்ய க்ருʼத ப்ரணாம꞉
ப்ரஹ்லாத³மாமந்த்ர்ய நமஶ் சகார .. 7..

அதா²ருஹ்ய ரத²ம்ʼ தி³வ்யம்ʼ ப்⁴ருʼகு³த³த்தம்ʼ மஹாரத²꞉ .
ஸுஸ்ரக்³த⁴ரோ(அ)த² ஸன்னஹ்ய த⁴ன்வீ க²ட்³கீ³ த்⁴ருʼதேஷுதி⁴꞉ .. 8..

ஹேமாங்க³த³லஸத்³பா³ஹு꞉ ஸ்பு²ரன்மகரகுண்ட³ல꞉ .
ரராஜ ரத²மாரூடோ⁴ தி⁴ஷ்ண்யஸ்த² இவ ஹவ்யவாட் .. 9..

துல்யைஶ்வர்யப³லஶ்ரீபி⁴꞉ ஸ்வயூதை²ர்தை³த்யயூத²பை꞉ .
பிப³த்³பி⁴ரிவ க²ம்ʼ த்³ருʼக்³பி⁴ர்த³ஹத்³பி⁴꞉ பரிதீ⁴னிவ .. 10..

வ்ருʼதோ விகர்ஷன் மஹதீமாஸுரீம்ʼ த்⁴வஜினீம்ʼ விபு⁴꞉ .
யயாவிந்த்³ரபுரீம்ʼ ஸ்வ்ருʼத்³தா⁴ம்ʼ கம்பயன்னிவ ரோத³ஸீ .. 11..

ரம்யாமுபவனோத்³யானை꞉ ஶ்ரீமத்³பி⁴ர்நந்த³நாதி³பி⁴꞉ .
கூஜத்³விஹங்க³மிது²னைர்கா³யன்மத்தமது⁴வ்ரதை꞉ .. 12..

ப்ரவாலப²லபுஷ்போருபா⁴ரஶாகா²மரத்³ருமை꞉ .
ஹம்ʼஸஸாரஸசக்ராஹ்வகாரண்ட³வகுலாகுலா꞉ .
நலின்யோ யத்ர க்ரீட³ந்தி ப்ரமதா³꞉ ஸுரஸேவிதா꞉ .. 13..

ஆகாஶக³ங்க³யா தே³வ்யா வ்ருʼதாம்ʼ பரிக²பூ⁴தயா .
ப்ராகாரேணாக்³நிவர்ணேன ஸாட்டாலேனோன்னதேன ச .. 14..

ருக்மபட்டகபாடைஶ்ச த்³வாரை꞉ ஸ்ப²டிககோ³புரை꞉ .
ஜுஷ்டாம்ʼ விப⁴க்தப்ரபதா²ம்ʼ விஶ்வகர்மவிநிர்மிதாம் .. 15..

ஸபா⁴சத்வரரத்²யாட்⁴யாம்ʼ விமானைர்ன்யர்பு³தை³ர்வ்ருʼதாம் .
ஶ்ருʼங்கா³டகைர்மணிமயைர்வஜ்ரவித்³ருமவேதி³பி⁴꞉ .. 16..

யத்ர நித்யவயோரூபா꞉ ஶ்யாமா விரஜவாஸஸ꞉ .
ப்⁴ராஜந்தே ரூபவன்னார்யோ ஹ்யர்சிர்பி⁴ரிவ வஹ்னய꞉ .. 17..

ஸுரஸ்த்ரீகேஶவிப்⁴ரஷ்டனவஸௌக³ந்தி⁴கஸ்ரஜாம் .
யத்ராமோத³முபாதா³ய மார்க³ ஆவாதி மாருத꞉ .. 18..

ஹேமஜாலாக்ஷநிர்க³ச்ச²த்³தூ⁴மேநாகு³ருக³ந்தி⁴னா .
பாண்டு³ரேண ப்ரதிச்ச²ன்னமார்கே³ யாந்தி ஸுரப்ரியா꞉ .. 19..

முக்தாவிதானைர்மணிஹேமகேதுபி⁴-
ர்னானாபதாகாவலபீ⁴பி⁴ராவ்ருʼதாம் .
ஶிக²ண்டி³பாராவதப்⁴ருʼங்க³நாதி³தாம்ʼ
வைமானிகஸ்த்ரீகலகீ³தமங்க³லாம் .. 20..

ம்ருʼத³ங்க³ஶங்கா²னகது³ந்து³பி⁴ஸ்வனை꞉
ஸதாலவீணாமுரஜர்ஷ்டிவேணுபி⁴꞉ .
ந்ருʼத்யை꞉ ஸவாத்³யைருபதே³வகீ³தகை-
ர்மனோரமாம்ʼ ஸ்வப்ரப⁴யா ஜிதப்ரபா⁴ம் .. 21..

யாம்ʼ ந வ்ரஜந்த்யத⁴ர்மிஷ்டா²꞉ க²லா பூ⁴தத்³ருஹ꞉ ஶடா²꞉ .
மானின꞉ காமினோ லுப்³தா⁴ ஏபி⁴ர்ஹீனா வ்ரஜந்தி யத் .. 22..

தாம்ʼ தே³வதா⁴னீம்ʼ ஸ வரூதி²னீபதிர்ப³ஹி꞉
ஸமந்தாத்³ருருதே⁴ ப்ருʼதன்யயா .
ஆசார்யத³த்தம்ʼ ஜலஜம்ʼ மஹாஸ்வனம்ʼ
த³த்⁴மௌ ப்ரயுஞ்ஜன் ப⁴யமிந்த்³ரயோஷிதாம் .. 23..

மக⁴வாம்ʼஸ்தமபி⁴ப்ரேத்ய ப³லே꞉ பரமமுத்³யமம் .
ஸர்வதே³வக³ணோபேதோ கு³ருமேதது³வாச ஹ .. 24..

ப⁴க³வன்னுத்³யமோ பூ⁴யான் ப³லேர்ன꞉ பூர்வவைரிண꞉ .
அவிஷஹ்யமிமம்ʼ மன்யே கேனாஸீத்தேஜஸோர்ஜித꞉ .. 25..

நைனம்ʼ கஶ்சித்குதோ வாபி ப்ரதிவ்யோடு⁴மதீ⁴ஶ்வர꞉ .
பிப³ன்னிவ முகே²னேத³ம்ʼ லிஹன்னிவ தி³ஶோ த³ஶ .
த³ஹன்னிவ தி³ஶோ த்³ருʼக்³பி⁴꞉ ஸம்ʼவர்தாக்³நிரிவோத்தி²த꞉ .. 26..

ப்³ரூஹி காரணமேதஸ்ய து³ர்த⁴ர்ஷத்வஸ்ய மத்³ரிபோ꞉ .
ஓஜ꞉ ஸஹோ ப³லம்ʼ தேஜோ யத ஏதத்ஸமுத்³யம꞉ .. 27..

கு³ருருவாச
ஜாநாமி மக⁴வன் ஶத்ரோருன்னதேரஸ்ய காரணம் .
ஶிஷ்யாயோபப்⁴ருʼதம்ʼ தேஜோ ப்⁴ருʼகு³பி⁴ர்ப்³ரஹ்மவாதி³பி⁴꞉ .. 28..

(ஓஜஸ்வினம்ʼ ப³லிம்ʼ ஜேதும்ʼ ந ஸமர்தோ²(அ)ஸ்தி கஶ்சன .
விஜேஷ்யதி ந கோ(அ)ப்யேனம்ʼ ப்³ரஹ்மதேஜ꞉ஸமேதி⁴தம் .)
ப⁴வத்³விதோ⁴ ப⁴வான் வாபி வர்ஜயித்வேஶ்வரம்ʼ ஹரிம்
நாஸ்ய ஶக்த꞉ புர꞉ ஸ்தா²தும்ʼ க்ருʼதாந்தஸ்ய யதா² ஜனா꞉ .. 29..

தஸ்மாந்நிலயமுத்ஸ்ருʼஜ்ய யூயம்ʼ ஸர்வே த்ரிவிஷ்டபம் .
யாத காலம்ʼ ப்ரதீக்ஷந்தோ யத꞉ ஶத்ரோர்விபர்யய꞉ .. 30..

ஏஷ விப்ரப³லோத³ர்க꞉ ஸம்ப்ரத்யூர்ஜிதவிக்ரம꞉ .
தேஷாமேவாபமானேன ஸானுப³ந்தோ⁴ வினங்க்ஷ்யதி .. 31..

ஏவம்ʼ ஸுமந்த்ரிதார்தா²ஸ்தே கு³ருணார்தா²னுத³ர்ஶினா .
ஹித்வா த்ரிவிஷ்டபம்ʼ ஜக்³முர்கீ³ர்வாணா꞉ காமரூபிண꞉ .. 32..

தே³வேஷ்வத² நிலீனேஷு ப³லிர்வைரோசன꞉ புரீம் .
தே³வதா⁴னீமதி⁴ஷ்டா²ய வஶம்ʼ நின்யே ஜக³த்த்ரயம் .. 33..

தம்ʼ விஶ்வஜயினம்ʼ ஶிஷ்யம்ʼ ப்⁴ருʼக³வ꞉ ஶிஷ்யவத்ஸலா꞉ .
ஶதேன ஹயமேதா⁴நாமனுவ்ரதமயாஜயன் .. 34..

ததஸ்தத³னுபா⁴வேன பு⁴வனத்ரயவிஶ்ருதாம் .
கீர்திம்ʼ தி³க்ஷு விதன்வான꞉ ஸ ரேஜ உடு³ராடி³வ .. 35..

பு³பு⁴ஜே ச ஶ்ரியம்ʼ ஸ்வ்ருʼத்³தா⁴ம்ʼ த்³விஜதே³வோபலம்பி⁴தாம் .
க்ருʼதக்ருʼத்யமிவாத்மானம்ʼ மன்யமானோ மஹாமனா꞉ .. 36..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ பஞ்சத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 15..

———————————————————-

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 16-ஸ்ரீ அதிதி தேவி -பய விரத அனுஷ்டானம்-

அத்தியாயம் 16/17

அசுரர்களால் தேவலோகம் அபகரிக்கப்பட்டு தேவர்கள் துயருற்றபோது, அவர்களின் தாயாகிய அதிதி பரிதவித்தாள். அப்போது ஒரு சமயம் நீண்ட கால சமாதியில் இருந்த கச்யபர் அங்கு வந்தார். அவள் அவரிடம் தன் துக்கத்திற்குக் காரணம் என்னவென்று கூறி எவ்வாறு தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெரும் உபாயத்தைக் கூறுமாறு வேண்டினாள். கச்யபர் அவளிடம் பயோ வ்ரதத்தை அனுஷ்டித்து ஹரியைப் பூஜிக்குமாறு கூறினார்.

பயோ வ்ரதம் என்பது பங்குனி மாதம் சுக்லபக்ஷத்தில் பன்னிரண்டு நாட்கள் அனுசரிக்க வேண்டியதாகும். பகவானை பாலால் அபிஷேகம் செய்து ஆராதிக்க வேண்டும். இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்கும்போது பால் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுக்லபக்ஷ பிரதமையில் தொடங்கி த்ரயோதசி வரை இந்த வ்ரதத்தை அனுஷ்டித்த பிறகு குருவுக்கும் ரித்விக்குகளுக்கும் தக்ஷிணை கொடுத்து எல்லா குலத்தவருக்கும் பாகுபாடின்றி உணவளிக்க வேண்டும். அதற்குப்பிறகே பந்துக்களுடன் உணவருந்த வேண்டும்.

அவ்வாறே அதிதியும் அந்த பயோவ்ரதத்தை நியமத்துடன் அனுஷ்டித்தாள். அதன் பின் பகவான் சங்கு சக்கரத்துடனும் கதையுடனும் பீதாம்பரம் அணிந்து அவள் முன் காட்சி அளித்தார். அவளுடைய வ்ரதத்தால் ப்ரீதியடைந்து தன்னுடைய அம்சமாக அவளிடம் காச்யபர் மூலம் தோன்றி தேவர்களைக் காப்பதாகக் கூறி இந்த ரகசியத்தை ஒருவருக்கும் கூறாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறி மறைந்தார்.

அடுத்து வாமனாவதாரம் வர்ணிக்கப்படுகிறது.

——————

ஶ்ரீஶுக உவாச
ஏவம்ʼ புத்ரேஷு நஷ்டேஷு தே³வமாதாதி³திஸ்ததா³ .
ஹ்ருʼதே த்ரிவிஷ்டபே தை³த்யை꞉ பர்யதப்யத³நாத²வத் .. 1..

ஏகதா³ கஶ்யபஸ்தஸ்யா ஆஶ்ரமம்ʼ ப⁴க³வானகா³த் .
நிருத்ஸவம்ʼ நிரானந்த³ம்ʼ ஸமாதே⁴ர்விரதஶ்சிராத் .. 2..

ஸ பத்னீம்ʼ தீ³னவத³னாம்ʼ க்ருʼதாஸனபரிக்³ரஹ꞉ .
ஸபா⁴ஜிதோ யதா²ந்யாயமித³மாஹ குரூத்³வஹ .. 3..

அப்யப⁴த்³ரம்ʼ ந விப்ராணாம்ʼ ப⁴த்³ரே லோகே(அ)து⁴னா(ஆ)க³தம் .
ந த⁴ர்மஸ்ய ந லோகஸ்ய ம்ருʼத்யோஶ்ச²ந்தா³னுவர்தின꞉ .. 4..

அபி வாகுஶலம்ʼ கிஞ்சித்³க்³ருʼஹேஷு க்³ருʼஹமேதி⁴னி .
த⁴ர்மஸ்யார்த²ஸ்ய காமஸ்ய யத்ர யோகோ³ ஹ்யயோகி³னாம் .. 5..

அபி வாதித²யோ(அ)ப்⁴யேத்ய குடும்பா³ஸக்தயா த்வயா .
க்³ருʼஹாத³பூஜிதா யாதா꞉ ப்ரத்யுத்தா²னேன வா க்வசித் .. 6..

க்³ருʼஹேஷு யேஷ்வதித²யோ நார்சிதா꞉ ஸலிலைரபி .
யதி³ நிர்யாந்தி தே நூனம்ʼ பே²ருராஜக்³ருʼஹோபமா꞉ .. 7..

அப்யக்³னயஸ்து வேலாயாம்ʼ ந ஹுதா ஹவிஷா ஸதி .
த்வயோத்³விக்³னதி⁴யா ப⁴த்³ரே ப்ரோஷிதே மயி கர்ஹிசித் .. 8..

யத்பூஜயா காமது³கா⁴ன் யாதி லோகான் க்³ருʼஹான்வித꞉ .
ப்³ராஹ்மணோ(அ)க்³நிஶ்ச வை விஷ்ணோ꞉ ஸர்வதே³வாத்மனோ முக²ம் .. 9..

அபி ஸர்வே குஶலினஸ்தவ புத்ரா மனஸ்வினி .
லக்ஷயே(அ)ஸ்வஸ்த²மாத்மானம்ʼ ப⁴வத்யா லக்ஷணைரஹம் .. 10..

அதி³திருவாச
ப⁴த்³ரம்ʼ த்³விஜக³வாம்ʼ ப்³ரஹ்மன் த⁴ர்மஸ்யாஸ்ய ஜனஸ்ய ச .
த்ரிவர்க³ஸ்ய பரம்ʼ க்ஷேத்ரம்ʼ க்³ருʼஹமேதி⁴ன் க்³ருʼஹா இமே .. 11..

அக்³னயோ(அ)தித²யோ ப்⁴ருʼத்யா பி⁴க்ஷவோ யே ச லிப்ஸவ꞉ .
ஸர்வம்ʼ ப⁴க³வதோ ப்³ரஹ்மன்னனுத்⁴யானான்ன ரிஷ்யதி .. 12..

கோ நு மே ப⁴க³வன் காமோ ந ஸம்பத்³யேத மானஸ꞉ .
யஸ்யா ப⁴வான் ப்ரஜாத்⁴யக்ஷ ஏவம்ʼ த⁴ர்மான் ப்ரபா⁴ஷதே .. 13..

தவைவ மாரீச மன꞉ஶரீரஜா꞉
ப்ரஜா இமா꞉ ஸத்த்வரஜஸ்தமோஜுஷ꞉ .
ஸமோ ப⁴வாம்ʼஸ்தாஸ்வஸுராதி³ஷு ப்ரபோ⁴
ததா²பி ப⁴க்தம்ʼ ப⁴ஜதே மஹேஶ்வர꞉ .. 14..

தஸ்மாதீ³ஶ ப⁴ஜந்த்யா மே ஶ்ரேயஶ்சிந்தய ஸுவ்ரத .
ஹ்ருʼதஶ்ரியோ ஹ்ருʼதஸ்தா²னான் ஸபத்னை꞉ பாஹி ந꞉ ப்ரபோ⁴ .. 15..

பரைர்விவாஸிதா ஸாஹம்ʼ மக்³னா வ்யஸனஸாக³ரே .
ஐஶ்வர்யம்ʼ ஶ்ரீர்யஶ꞉ ஸ்தா²னம்ʼ ஹ்ருʼதானி ப்ரப³லைர்மம .. 16..

யதா² தானி புன꞉ ஸாதோ⁴ ப்ரபத்³யேரன் மமாத்மஜா꞉ .
ததா² விதே⁴ஹி கல்யாணம்ʼ தி⁴யா கல்யாணக்ருʼத்தம .. 17..

ஶ்ரீஶுக உவாச
ஏவமப்⁴யர்தி²தோ(அ)தி³த்யா கஸ்தாமாஹ ஸ்மயன்னிவ .
அஹோ மாயாப³லம்ʼ விஷ்ணோ꞉ ஸ்னேஹப³த்³த⁴மித³ம்ʼ ஜக³த் .. 18..

க்வ தே³ஹோ பௌ⁴திகோ(அ)னாத்மா க்வ சாத்மா ப்ரக்ருʼதே꞉ பர꞉ .
கஸ்ய கே பதிபுத்ராத்³யா மோஹ ஏவ ஹி காரணம் .. 19..

உபதிஷ்ட²ஸ்வ புருஷம்ʼ ப⁴க³வந்தம்ʼ ஜனார்த³னம் .
ஸர்வபூ⁴தகு³ஹாவாஸம்ʼ வாஸுதே³வம்ʼ ஜக³த்³கு³ரும் .. 20..

ஸ விதா⁴ஸ்யதி தே காமான் ஹரிர்தீ³னானுகம்பன꞉ .
அமோகா⁴ ப⁴க³வத்³ப⁴க்திர்னேதரேதி மதிர்மம .. 21..

அதி³திருவாச
கேனாஹம்ʼ விதி⁴னா ப்³ரஹ்மன்னுபஸ்தா²ஸ்யே ஜக³த்பதிம் .
யதா² மே ஸத்யஸங்கல்போ வித³த்⁴யாத்ஸ மனோரத²ம் .. 22..

ஆதி³ஶ த்வம்ʼ த்³விஜஶ்ரேஷ்ட² விதி⁴ம்ʼ தது³பதா⁴வனம் .
ஆஶு துஷ்யதி மே தே³வ꞉ ஸீத³ந்த்யா꞉ ஸஹ புத்ரகை꞉ .. 23..

கஶ்யப உவாச
ஏதன்மே ப⁴க³வான் ப்ருʼஷ்ட꞉ ப்ரஜாகாமஸ்ய பத்³மஜ꞉ .
யதா³ஹ தே ப்ரவக்ஷ்யாமி வ்ரதம்ʼ கேஶவதோஷணம் .. 24..

பா²ல்கு³னஸ்யாமலே பக்ஷே த்³வாத³ஶாஹம்ʼ பயோவ்ரத꞉ .
அர்சயேத³ரவிந்தா³க்ஷம்ʼ ப⁴க்த்யா பரமயான்வித꞉ .. 25..

ஸினீவால்யாம்ʼ ம்ருʼதா³(ஆ)லிப்ய ஸ்னாயாத்க்ரோட³விதீ³ர்ணயா .
யதி³ லப்⁴யேத வை ஸ்ரோதஸ்யேதம்ʼ மந்த்ரமுதீ³ரயேத் .. 26..

த்வம்ʼ தே³வ்யாதி³வராஹேண ரஸாயா꞉ ஸ்தா²னமிச்ச²தா .
உத்³த்⁴ருʼதாஸி நமஸ்துப்⁴யம்ʼ பாப்மானம்ʼ மே ப்ரணாஶய .. 27..

நிர்வர்திதாத்மநியமோ தே³வமர்சேத்ஸமாஹித꞉ .
அர்சாயாம்ʼ ஸ்த²ண்டி³லே ஸூர்யே ஜலே வஹ்னௌ கு³ராவபி .. 28..

நமஸ்துப்⁴யம்ʼ ப⁴க³வதே புருஷாய மஹீயஸே .
ஸர்வபூ⁴தநிவாஸாய வாஸுதே³வாய ஸாக்ஷிணே .. 29..

நமோ(அ)வ்யக்தாய ஸூக்ஷ்மாய ப்ரதா⁴னபுருஷாய ச .
சதுர்விம்ʼஶத்³கு³ணஜ்ஞாய கு³ணஸங்க்²யானஹேதவே .. 30..

நமோ த்³விஶீர்ஷ்ணே த்ரிபதே³ சது꞉ஶ்ருʼங்கா³ய தந்தவே .
ஸப்தஹஸ்தாய யஜ்ஞாய த்ரயீவித்³யாத்மனே நம꞉ .. 31..

நம꞉ ஶிவாய ருத்³ராய நம꞉ ஶக்தித⁴ராய ச .
ஸர்வவித்³யாதி⁴பதயே பூ⁴தானாம்ʼ பதயே நம꞉ .. 32..

நமோ ஹிரண்யக³ர்பா⁴ய ப்ராணாய ஜக³தா³த்மனே .
யோகை³ஶ்வர்யஶரீராய நமஸ்தே யோக³ஹேதவே .. 33..

நமஸ்த ஆதி³தே³வாய ஸாக்ஷிபூ⁴தாய தே நம꞉ .
நாராயணாய ருʼஷயே நராய ஹரயே நம꞉ .. 34..

நமோ மரகதஶ்யாமவபுஷே(அ)தி⁴க³தஶ்ரியே .
கேஶவாய நமஸ்துப்⁴யம்ʼ நமஸ்தே பீதவாஸஸே .. 35..

த்வம்ʼ ஸர்வவரத³꞉ பும்ʼஸாம்ʼ வரேண்ய வரத³ர்ஷப⁴ .
அதஸ்தே ஶ்ரேயஸே தீ⁴ரா꞉ பாத³ரேணுமுபாஸதே .. 36..

அன்வவர்தந்த யம்ʼ தே³வா꞉ ஶ்ரீஶ்ச தத்பாத³பத்³மயோ꞉ .
ஸ்ப்ருʼஹயந்த இவாமோத³ம்ʼ ப⁴க³வான் மே ப்ரஸீத³தாம் .. 37..

ஏதைர்மந்த்ரைர்ஹ்ருʼஷீகேஶமாவாஹனபுரஸ்க்ருʼதம் .
அர்சயேச்ச்²ரத்³த⁴யா யுக்த꞉ பாத்³யோபஸ்பர்ஶநாதி³பி⁴꞉ .. 38..

அர்சித்வா க³ந்த⁴மால்யாத்³யை꞉ பயஸா ஸ்னபயேத்³விபு⁴ம் .
வஸ்த்ரோபவீதாப⁴ரணபாத்³யோபஸ்பர்ஶனைஸ்தத꞉ .
க³ந்த⁴தூ⁴பாதி³பி⁴ஶ்சார்சேத்³த்³வாத³ஶாக்ஷரவித்³யயா .. 39..

ஶ்ருʼதம்ʼ பயஸி நைவேத்³யம்ʼ ஶால்யன்னம்ʼ விப⁴வே ஸதி .
ஸஸர்பி꞉ ஸகு³ட³ம்ʼ த³த்த்வா ஜுஹுயான்மூலவித்³யயா .. 40..

நிவேதி³தம்ʼ தத்³ப⁴க்தாய த³த்³யாத்³பு⁴ஞ்ஜீத வா ஸ்வயம் .
த³த்த்வா(ஆ)சமனமர்சித்வா தாம்பூ³லம்ʼ ச நிவேத³யேத் .. 41..

ஜபேத³ஷ்டோத்தரஶதம்ʼ ஸ்துவீத ஸ்துதிபி⁴꞉ ப்ரபு⁴ம் .
க்ருʼத்வா ப்ரத³க்ஷிணம்ʼ பூ⁴மௌ ப்ரணமேத்³த³ண்ட³வன்முதா³ .. 42..

க்ருʼத்வா ஶிரஸி தச்சே²ஷாம்ʼ தே³வமுத்³வாஸயேத்தத꞉ .
த்³வ்யவரான் போ⁴ஜயேத்³விப்ரான் பாயஸேன யதோ²சிதம் .. 43..

பு⁴ஞ்ஜீத தைரனுஜ்ஞாத꞉ ஶேஷம்ʼ ஸேஷ்ட꞉ ஸபா⁴ஜிதை꞉ .
ப்³ரஹ்மசார்யத² தத்³ராத்ர்யாம்ʼ ஶ்வோபூ⁴தே ப்ரத²மே(அ)ஹனி .. 44..

ஸ்னாத꞉ ஶுசிர்யதோ²க்தேன விதி⁴னா ஸுஸமாஹித꞉ .
பயஸா ஸ்னாபயித்வார்சேத்³யாவத்³வ்ரதஸமாபனம் .. 45..

பயோப⁴க்ஷோ வ்ரதமித³ம்ʼ சரேத்³விஷ்ண்வர்சநாத்³ருʼத꞉ .
பூர்வவஜ்ஜுஹுயாத³க்³னிம்ʼ ப்³ராஹ்மணாம்ʼஶ்சாபி போ⁴ஜயேத் .. 46..

ஏவம்ʼ த்வஹரஹ꞉ குர்யாத்³த்³வாத³ஶாஹம்ʼ பயோவ்ரத꞉ .
ஹரேராராத⁴னம்ʼ ஹோமமர்ஹணம்ʼ த்³விஜதர்பணம் .. 47..

ப்ரதிபத்³தி³னமாரப்⁴ய யாவச்சு²க்லத்ரயோத³ஶீ .
ப்³ரஹ்மசர்யமத⁴꞉ஸ்வப்னம்ʼ ஸ்னானம்ʼ த்ரிஷவணம்ʼ சரேத் .. 48..

வர்ஜயேத³ஸதா³லாபம்ʼ போ⁴கா³னுச்சாவசாம்ʼஸ்ததா² .
அஹிம்ʼஸ்ர꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ வாஸுதே³வபராயண꞉ .. 49..

த்ரயோத³ஶ்யாமதோ² விஷ்ணோ꞉ ஸ்னபனம்ʼ பஞ்சகைர்விபோ⁴꞉ .
காரயேச்சா²ஸ்த்ரத்³ருʼஷ்டேன விதி⁴னா விதி⁴கோவிதை³꞉ .. 50..

பூஜாம்ʼ ச மஹதீம்ʼ குர்யாத்³வித்தஶாட்²யவிவர்ஜித꞉ .
சரும்ʼ நிரூப்ய பயஸி ஶிபிவிஷ்டாய விஷ்ணவே .. 51..

ஶ்ருʼதேன தேன புருஷம்ʼ யஜேத ஸுஸமாஹித꞉ .
நைவேத்³யம்ʼ சாதிகு³ணவத்³த³த்³யாத்புருஷதுஷ்டித³ம் .. 52..

ஆசார்யம்ʼ ஜ்ஞானஸம்பன்னம்ʼ வஸ்த்ராப⁴ரணதே⁴னுபி⁴꞉ .
தோஷயேத்³ருʼத்விஜஶ்சைவ தத்³வித்³த்⁴யாராத⁴னம்ʼ ஹரே꞉ .. 53..

போ⁴ஜயேத்தான் கு³ணவதா ஸத³ன்னேன ஶுசிஸ்மிதே .
அன்யாம்ʼஶ்ச ப்³ராஹ்மணான் ஶக்த்யா யே ச தத்ர ஸமாக³தா꞉ .. 54..

த³க்ஷிணாம்ʼ கு³ரவே த³த்³யாத்³ருʼத்விக்³ப்⁴யஶ்ச யதா²ர்ஹத꞉ .
அந்நாத்³யேநாஶ்வபாகாம்ʼஶ்ச ப்ரீணயேத்ஸமுபாக³தான் .. 55..

பு⁴க்தவத்ஸு ச ஸர்வேஷு தீ³னாந்த⁴க்ருʼபணேஷு ச .
விஷ்ணோஸ்தத்ப்ரீணனம்ʼ வித்³வான் பு⁴ஞ்ஜீத ஸஹ ப³ந்து⁴பி⁴꞉ .. 56..

ந்ருʼத்யவாதி³த்ரகீ³தைஶ்ச ஸ்துதிபி⁴꞉ ஸ்வஸ்திவாசகை꞉ .
காரயேத்தத்கதா²பி⁴ஶ்ச பூஜாம்ʼ ப⁴க³வதோ(அ)ன்வஹம் .. 57..

ஏதத்பயோவ்ரதம்ʼ நாம புருஷாராத⁴னம்ʼ பரம் .
பிதாமஹேநாபி⁴ஹிதம்ʼ மயா தே ஸமுதா³ஹ்ருʼதம் .. 58..

த்வம்ʼ சானேன மஹாபா⁴கே³ ஸம்யக் சீர்ணேன கேஶவம் .
ஆத்மனா ஶுத்³த⁴பா⁴வேன நியதாத்மா ப⁴ஜாவ்யயம் .. 59..

அயம்ʼ வை ஸர்வயஜ்ஞாக்²ய꞉ ஸர்வவ்ரதமிதி ஸ்ம்ருʼதம் .
தப꞉ஸாரமித³ம்ʼ ப⁴த்³ரே தா³னம்ʼ சேஶ்வரதர்பணம் .. 60..

த ஏவ நியமா꞉ ஸாக்ஷாத்த ஏவ ச யமோத்தமா꞉ .
தபோ தா³னம்ʼ வ்ரதம்ʼ யஜ்ஞோ யேன துஷ்யத்யதோ⁴க்ஷஜ꞉ .. 61..

தஸ்மாதே³தத்³வ்ரதம்ʼ ப⁴த்³ரே ப்ரயதா ஶ்ரத்³த⁴யா சர .
ப⁴க³வான் பரிதுஷ்டஸ்தே வராநாஶு விதா⁴ஸ்யதி .. 62..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ அதி³திபயோவ்ரதகத²னம்ʼ நாம ஷோட³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 16..

——————————————————

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 17-ஸ்ரீ பர ப்ரஹ்மமே திருவவதரிக்க ஒப்புக் கொள்ளுதல்-

அத்தியாயம் 16/17

அசுரர்களால் தேவலோகம் அபகரிக்கப்பட்டு தேவர்கள் துயருற்றபோது, அவர்களின் தாயாகிய அதிதி பரிதவித்தாள். அப்போது ஒரு சமயம் நீண்ட கால சமாதியில் இருந்த கச்யபர் அங்கு வந்தார். அவள் அவரிடம் தன் துக்கத்திற்குக் காரணம் என்னவென்று கூறி எவ்வாறு தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெரும் உபாயத்தைக் கூறுமாறு வேண்டினாள். கச்யபர் அவளிடம் பயோ வ்ரதத்தை அனுஷ்டித்து ஹரியைப் பூஜிக்குமாறு கூறினார்.

பயோ வ்ரதம் என்பது பங்குனி மாதம் சுக்லபக்ஷத்தில் பன்னிரண்டு நாட்கள் அனுசரிக்க வேண்டியதாகும். பகவானை பாலால் அபிஷேகம் செய்து ஆராதிக்க வேண்டும். இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்கும்போது பால் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுக்லபக்ஷ பிரதமையில் தொடங்கி த்ரயோதசி வரை இந்த வ்ரதத்தை அனுஷ்டித்த பிறகு குருவுக்கும் ரித்விக்குகளுக்கும் தக்ஷிணை கொடுத்து எல்லா குலத்தவருக்கும் பாகுபாடின்றி உணவளிக்க வேண்டும். அதற்குப்பிறகே பந்துக்களுடன் உணவருந்த வேண்டும்.

அவ்வாறே அதிதியும் அந்த பயோவ்ரதத்தை நியமத்துடன் அனுஷ்டித்தாள். அதன் பின் பகவான் சங்கு சக்கரத்துடனும் கதையுடனும் பீதாம்பரம் அணிந்து அவள் முன் காட்சி அளித்தார். அவளுடைய வ்ரதத்தால் ப்ரீதியடைந்து தன்னுடைய அம்சமாக அவளிடம் காச்யபர் மூலம் தோன்றி தேவர்களைக் காப்பதாகக் கூறி இந்த ரகசியத்தை ஒருவருக்கும் கூறாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறி மறைந்தார்.

அடுத்து வாமனாவதாரம் வர்ணிக்கப்படுகிறது.

—————-

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்தா ஸாதி³தீ ராஜன் ஸ்வப⁴ர்த்ரா கஶ்யபேன வை .
அன்வதிஷ்ட²த்³வ்ரதமித³ம்ʼ த்³வாத³ஶாஹமதந்த்³ரிதா .. 1..

சிந்தயந்த்யேகயா பு³த்³த்⁴யா மஹாபுருஷமீஶ்வரம் .
ப்ரக்³ருʼஹ்யேந்த்³ரியது³ஷ்டாஶ்வான் மனஸா பு³த்³தி⁴ஸாரதி²꞉ .. 2..

மனஶ்சைகாக்³ரயா பு³த்³த்⁴யா ப⁴க³வத்யகி²லாத்மனி .
வாஸுதே³வே ஸமாதா⁴ய சசார ஹ பயோவ்ரதம் .. 3..

தஸ்யா꞉ ப்ராது³ரபூ⁴த்தாத ப⁴க³வாநாதி³புருஷ꞉ .
பீதவாஸாஶ்சதுர்பா³ஹு꞉ ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉ .. 4..

தம்ʼ நேத்ரகோ³சரம்ʼ வீக்ஷ்ய ஸஹஸோத்தா²ய ஸாத³ரம் .
நநாம பு⁴வி காயேன த³ண்ட³வத்ப்ரீதிவிஹ்வலா .. 5..

ஸோத்தா²ய ப³த்³தா⁴ஞ்ஜலிரீடி³தும்ʼ ஸ்தி²தா
நோத்ஸேஹ ஆனந்த³ஜலாகுலேக்ஷணா .
ப³பூ⁴வ தூஷ்ணீம்ʼ புலகாகுலாக்ருʼதி-
ஸ்தத்³த³ர்ஶனாத்யுத்ஸவகா³த்ரவேபது²꞉ .. 6..

ப்ரீத்யா ஶனைர்க³த்³க³த³யா கி³ரா ஹரிம்ʼ
துஷ்டாவ ஸா தே³வ்யதி³தி꞉ குரூத்³வஹ .
உத்³வீக்ஷதீ ஸா பிப³தீவ சக்ஷுஷா
ரமாபதிம்ʼ யஜ்ஞபதிம்ʼ ஜக³த்பதிம் .. 7..

அதி³திருவாச
யஜ்ஞேஶ யஜ்ஞபுருஷாச்யுத தீர்த²பாத³
தீர்த²ஶ்ரவ꞉ ஶ்ரவணமங்க³லநாமதே⁴ய .
ஆபன்னலோகவ்ருʼஜினோபஶமோத³யாத்³ய
ஶம்ʼ ந꞉ க்ருʼதீ⁴ஶ ப⁴க³வன்னஸி தீ³னநாத²꞉ .. 8..

விஶ்வாய விஶ்வப⁴வனஸ்தி²திஸம்ʼயமாய
ஸ்வைரம்ʼ க்³ருʼஹீதபுருஶக்திகு³ணாய பூ⁴ம்னே .
ஸ்வஸ்தா²ய ஶஶ்வது³பப்³ருʼம்ʼஹிதபூர்ணபோ³த⁴-
வ்யாபாதி³தாத்மதமஸே ஹரயே நமஸ்தே .. 9..

ஆயு꞉ பரம்ʼ வபுரபீ⁴ஷ்டமதுல்யலக்ஷ்மீ-
ர்த்³யோர்பூ⁴ரஸா꞉ ஸகலயோக³கு³ணாஸ்த்ரிவர்க³꞉ .
ஜ்ஞானம்ʼ ச கேவலமனந்த ப⁴வந்தி துஷ்டாத்த்வத்தோ
ந்ருʼணாம்ʼ கிமு ஸபத்னஜயாதி³ராஶீ꞉ .. 10..

ஶ்ரீஶுக உவாச
அதி³த்யைவம்ʼ ஸ்துதோ ராஜன் ப⁴க³வான் புஷ்கரேக்ஷண꞉ .
க்ஷேத்ரஜ்ஞ꞉ ஸர்வபூ⁴தாநாமிதி ஹோவாச பா⁴ரத .. 11..

ஶ்ரீப⁴க³வானுவாச
தே³வமாதர்ப⁴வத்யா மே விஜ்ஞாதம்ʼ சிரகாங்க்ஷிதம் .
யத்ஸபத்னைர்ஹ்ருʼதஶ்ரீணாம்ʼ ச்யாவிதானாம்ʼ ஸ்வதா⁴மத꞉ .. 12..

தான் விநிர்ஜித்ய ஸமரே து³ர்மதா³னஸுரர்ஷபா⁴ன் .
ப்ரதிலப்³த⁴ஜயஶ்ரீபி⁴꞉ புத்ரைரிச்ச²ஸ்யுபாஸிதும் .. 13..

இந்த்³ரஜ்யேஷ்டை²꞉ ஸ்வதனயைர்ஹதானாம்ʼ யுதி⁴ வித்³விஷாம் .
ஸ்த்ரியோ ருத³ந்தீராஸாத்³ய த்³ரஷ்டுமிச்ச²ஸி து³꞉கி²தா꞉ .. 14..

ஆத்மஜான் ஸுஸம்ருʼத்³தா⁴ம்ʼஸ்த்வம்ʼ ப்ரத்யாஹ்ருʼதயஶ꞉ஶ்ரிய꞉ .
நாகப்ருʼஷ்ட²மதி⁴ஷ்டா²ய க்ரீட³தோ த்³ரஷ்டுமிச்ச²ஸி .. 15..

ப்ராயோ(அ)து⁴னா தே(அ)ஸுரயூத²நாதா²
அபாரணீயா இதி தே³வி மே மதி꞉ .
யத்தே(அ)னுகூலேஶ்வரவிப்ரகு³ப்தா
ந விக்ரமஸ்தத்ர ஸுக²ம்ʼ த³தா³தி .. 16..

அதா²ப்யுபாயோ மம தே³வி சிந்த்ய꞉
ஸந்தோஷிதஸ்ய வ்ரதசர்யயா தே .
மமார்சனம்ʼ நார்ஹதி க³ந்துமன்யதா²
ஶ்ரத்³தா⁴னுரூபம்ʼ ப²லஹேதுகத்வாத் .. 17..

த்வயார்சிதஶ்சாஹமபத்யகு³ப்தயே
பயோவ்ரதேனானுகு³ணம்ʼ ஸமீடி³த꞉ .
ஸ்வாம்ʼஶேன புத்ரத்வமுபேத்ய தே ஸுதான்
கோ³ப்தாஸ்மி மாரீசதபஸ்யதி⁴ஷ்டி²த꞉ .. 18..

உபதா⁴வ பதிம்ʼ ப⁴த்³ரே ப்ரஜாபதிமகல்மஷம் .
மாம்ʼ ச பா⁴வயதீ பத்யாவேவம்ʼ ரூபமவஸ்தி²தம் .. 19..

நைதத்பரஸ்மா ஆக்²யேயம்ʼ ப்ருʼஷ்டயாபி கத²ஞ்சன .
ஸர்வம்ʼ ஸம்பத்³யதே தே³வி தே³வகு³ஹ்யம்ʼ ஸுஸம்ʼவ்ருʼதம் .. 20..

ஶ்ரீஶுக உவாச
ஏதாவது³க்த்வா ப⁴க³வாம்ʼஸ்தத்ரைவாந்தரதீ⁴யத .
அதி³திர்து³ர்லப⁴ம்ʼ லப்³த்⁴வா ஹரேர்ஜன்மாத்மனி ப்ரபோ⁴꞉ .. 21..

உபாதா⁴வத்பதிம்ʼ ப⁴க்த்யா பரயா க்ருʼதக்ருʼத்யவத் .
ஸ வை ஸமாதி⁴யோகே³ன கஶ்யபஸ்தத³பு³த்⁴யத .. 22..

ப்ரவிஷ்டமாத்மனி ஹரேரம்ʼஶம்ʼ ஹ்யவிததே²க்ஷண꞉ .
ஸோ(அ)தி³த்யாம்ʼ வீர்யமாத⁴த்த தபஸா சிரஸம்ப்⁴ருʼதம் .
ஸமாஹிதமனா ராஜன் தா³ருண்யக்³னிம்ʼ யதா²னில꞉ .. 23..

அதி³தேர்தி⁴ஷ்டி²தம்ʼ க³ர்ப⁴ம்ʼ ப⁴க³வந்தம்ʼ ஸனாதனம் .
ஹிரண்யக³ர்போ⁴ விஜ்ஞாய ஸமீடே³ கு³ஹ்யநாமபி⁴꞉ .. 24..

ப்³ரஹ்மோவாச
ஜயோருகா³ய ப⁴க³வன்னுருக்ரம நமோஸ்து தே .
நமோ ப்³ரஹ்மண்யதே³வாய த்ரிகு³ணாய நமோ நம꞉ .. 25..

நமஸ்தே ப்ருʼஶ்னிக³ர்பா⁴ய வேத³க³ர்பா⁴ய வேத⁴ஸே .
த்ரிநாபா⁴ய த்ரிப்ருʼஷ்டா²ய ஶிபிவிஷ்டாய விஷ்ணவே .. 26..

த்வமாதி³ரந்தோ பு⁴வனஸ்ய மத்⁴ய-
மனந்தஶக்திம்ʼ புருஷம்ʼ யமாஹு꞉ .
காலோ ப⁴வானாக்ஷிபதீஶ விஶ்வம்ʼ
ஸ்ரோதோ யதா²ந்த꞉ பதிதம்ʼ க³பீ⁴ரம் .. 27..

த்வம்ʼ வை ப்ரஜானாம்ʼ ஸ்தி²ரஜங்க³மானாம்ʼ
ப்ரஜாபதீநாமஸி ஸம்ப⁴விஷ்ணு꞉ .
தி³வௌகஸாம்ʼ தே³வ தி³வஶ்ச்யுதானாம்ʼ
பராயணம்ʼ நௌரிவ மஜ்ஜதோ(அ)ப்ஸு .. 28..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ வாமனப்ராது³ர்பா⁴வே ஸப்தத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 17..

———————————————————

ஸ்ரீமத்பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம் – 18-ஸ்ரீ வாமன மூர்த்தி திருவவதாரம்-

ஶ்ரீஶுக உவாச
இத்த²ம்ʼ விரிஞ்சஸ்துதகர்மவீர்ய꞉
ப்ராது³ர்ப³பூ⁴வாம்ருʼதபூ⁴ரதி³த்யாம் .
சதுர்பு⁴ஜ꞉ ஶங்க²க³தா³ப்³ஜசக்ர꞉
பிஶங்க³வாஸா நலினாயதேக்ஷண꞉ .. 1..

ஸர்வத்ர கோ³விந்த³நாமஸங்கீர்தனம்ʼ கோ³விந்த³ கோ³விந்த³ .
ஶ்யாமாவதா³தோ ஜ²ஷராஜகுண்ட³ல-
த்விஷோல்லஸச்ச்²ரீவத³னாம்பு³ஜ꞉ புமான் .
ஶ்ரீவத்ஸவக்ஷா ப³லயாங்க³தோ³ல்லஸ-
த்கிரீடகாஞ்சீகு³ணசாருநூபுர꞉ .. 2..

மது⁴வ்ரதவ்ராதவிகு⁴ஷ்டயா ஸ்வயா
விராஜித꞉ ஶ்ரீவனமாலயா ஹரி꞉ .
ப்ரஜாபதேர்வேஶ்மதம꞉ ஸ்வரோசிஷா
விநாஶயன் கண்ட²நிவிஷ்டகௌஸ்துப⁴꞉ .. 3..

தி³ஶ꞉ ப்ரஸேது³꞉ ஸலிலாஶயாஸ்ததா³
ப்ரஜா꞉ ப்ரஹ்ருʼஷ்டா ருʼதவோ கு³ணான்விதா꞉ .
த்³யௌரந்தரிக்ஷம்ʼ க்ஷிதிரக்³நிஜிஹ்வா
கா³வோ த்³விஜா꞉ ஸஞ்ஜஹ்ருʼஷுர்னகா³ஶ்ச .. 4..

ஶ்ரோணாயாம்ʼ ஶ்ரவணத்³வாத³ஶ்யாம்ʼ முஹூர்தே(அ)பி⁴ஜிதி ப்ரபு⁴꞉ .
ஸர்வே நக்ஷத்ரதாராத்³யாஶ்சக்ருஸ்தஜ்ஜன்ம த³க்ஷிணம் .. 5..

த்³வாத³ஶ்யாம்ʼ ஸவிதாதிஷ்ட²ன்மத்⁴யந்தி³னக³தோ ந்ருʼப .
விஜயா நாம ஸா ப்ரோக்தா யஸ்யாம்ʼ ஜன்ம விது³ர்ஹரே꞉ .. 6..

ஶங்க²து³ந்து³ப⁴யோ நேது³ர்ம்ருʼத³ங்க³பணவானகா꞉ .
சித்ரவாதி³த்ரதூர்யாணாம்ʼ நிர்கோ⁴ஷஸ்துமுலோ(அ)ப⁴வத் .. 7..

ப்ரீதாஶ்சாப்ஸரஸோ(அ)ந்ருʼத்யன் க³ந்த⁴ர்வப்ரவரா ஜகு³꞉ .
துஷ்டுவுர்முனயோ தே³வா மனவ꞉ பிதரோ(அ)க்³னய꞉ .. 8..

ஸித்³த⁴வித்³யாத⁴ரக³ணா꞉ ஸகிம்புருஷகின்னரா꞉ .
சாரணா யக்ஷரக்ஷாம்ʼஸி ஸுபர்ணா பு⁴ஜகோ³த்தமா꞉ .. 9..

கா³யந்தோ(அ)திப்ரஶம்ʼஸந்தோ ந்ருʼத்யந்தோ விபு³தா⁴னுகா³꞉ .
அதி³த்யா ஆஶ்ரமபத³ம்ʼ குஸுமை꞉ ஸமவாகிரன் .. 10..

த்³ருʼஷ்ட்வாதி³திஸ்தம்ʼ நிஜக³ர்ப⁴ஸம்ப⁴வம்ʼ
பரம்ʼ புமாம்ʼஸம்ʼ முத³மாப விஸ்மிதா .
க்³ருʼஹீததே³ஹம்ʼ நிஜயோக³மாயயா
ப்ரஜாபதிஶ்சாஹ ஜயேதி விஸ்மித꞉ .. 11..

யத்தத்³வபுர்பா⁴தி விபூ⁴ஷணாயுதை⁴-
ரவ்யக்தசித்³வ்யக்தமதா⁴ரயத்³த⁴ரி꞉ .
ப³பூ⁴வ தேனைவ ஸ வாமனோ வடு꞉
ஸம்பஶ்யதோர்தி³வ்யக³திர்யதா² நட꞉ .. 12..

தம்ʼ வடும்ʼ வாமனம்ʼ த்³ருʼஷ்ட்வா மோத³மானா மஹர்ஷய꞉ .
கர்மாணி காரயாமாஸு꞉ புரஸ்க்ருʼத்ய ப்ரஜாபதிம் .. 13..

தஸ்யோபனீயமானஸ்ய ஸாவித்ரீம்ʼ ஸவிதாப்³ரவீத் .
ப்³ருʼஹஸ்பதிர்ப்³ரஹ்மஸூத்ரம்ʼ மேக²லாம்ʼ கஶ்யபோ(அ)த³தா³த் .. 14..

த³தௌ³ க்ருʼஷ்ணாஜினம்ʼ பூ⁴மிர்த³ண்ட³ம்ʼ ஸோமோ வனஸ்பதி꞉ .
கௌபீனாச்சா²த³னம்ʼ மாதா த்³யௌஶ்ச²த்ரம்ʼ ஜக³த꞉ பதே꞉ .. 15..

கமண்ட³லும்ʼ வேத³க³ர்ப⁴꞉ குஶான் ஸப்தர்ஷயோ த³து³꞉ .
அக்ஷமாலாம்ʼ மஹாராஜ ஸரஸ்வத்யவ்யயாத்மன꞉ .. 16..

தஸ்மா இத்யுபனீதாய யக்ஷராட் பாத்ரிகாமதா³த் .
பி⁴க்ஷாம்ʼ ப⁴க³வதீ ஸாக்ஷாது³மாதா³த³ம்பி³கா ஸதீ .. 17..

ஸ ப்³ரஹ்மவர்சஸேனைவம்ʼ ஸபா⁴ம்ʼ ஸம்பா⁴விதோ வடு꞉ .
ப்³ரஹ்மர்ஷிக³ணஸஞ்ஜுஷ்டாமத்யரோசத மாரிஷ꞉ .. 18..

ஸமித்³த⁴மாஹிதம்ʼ வஹ்னிம்ʼ க்ருʼத்வா பரிஸமூஹனம் .
பரிஸ்தீர்ய ஸமப்⁴யர்ச்ய ஸமித்³பி⁴ரஜுஹோத்³த்³விஜ꞉ .. 19..

ஶ்ருத்வாஶ்வமேதை⁴ர்யஜமானமூர்ஜிதம்ʼ
ப³லிம்ʼ ப்⁴ருʼகூ³ணாமுபகல்பிதைஸ்தத꞉ .
ஜகா³ம தத்ராகி²லஸாரஸம்ப்⁴ருʼதோ
பா⁴ரேண கா³ம்ʼ ஸன்னமயன் பதே³ பதே³ .. 20..

தம்ʼ நர்மதா³யாஸ்தட உத்தரே ப³லேர்ய
ருʼத்விஜஸ்தே ப்⁴ருʼகு³கச்ச²ஸஞ்ஜ்ஞகே .
ப்ரவர்தயந்தோ ப்⁴ருʼக³வ꞉ க்ரதூத்தமம்ʼ
வ்யசக்ஷதாராது³தி³தம்ʼ யதா² ரவிம் .. 21..

த ருʼத்விஜோ யஜமான꞉ ஸத³ஸ்யா
ஹதத்விஷோ வாமனதேஜஸா ந்ருʼப .
ஸூர்ய꞉ கிலாயாத்யுத வா விபா⁴வஸு꞉
ஸனத்குமாரோ(அ)த² தி³த்³ருʼக்ஷயா க்ரதோ꞉ .. 22..

இத்த²ம்ʼ ஸஶிஷ்யேஷு ப்⁴ருʼகு³ஷ்வனேகதா⁴
விதர்க்யமாணோ ப⁴க³வான் ஸ வாமன꞉ .
ச²த்ரம்ʼ ஸத³ண்ட³ம்ʼ ஸஜலம்ʼ கமண்ட³லும்ʼ
விவேஶ பி³ப்⁴ரத்³த⁴யமேத⁴வாடம் .. 23..

மௌஞ்ஜ்யா மேக²லயா வீதமுபவீதாஜினோத்தரம் .
ஜடிலம்ʼ வாமனம்ʼ விப்ரம்ʼ மாயாமாணவகம்ʼ ஹரிம் .. 24..

ப்ரவிஷ்டம்ʼ வீக்ஷ்ய ப்⁴ருʼக³வ꞉ ஸஶிஷ்யாஸ்தே ஸஹாக்³னிபி⁴꞉ .
ப்ரத்யக்³ருʼஹ்ணன் ஸமுத்தா²ய ஸங்க்ஷிப்தாஸ்தஸ்ய தேஜஸா .. 25..

யஜமான꞉ ப்ரமுதி³தோ த³ர்ஶனீயம்ʼ மனோரமம் .
ரூபானுரூபாவயவம்ʼ தஸ்மா ஆஸனமாஹரத் .. 26..

ஸ்வாக³தேநாபி⁴னந்த்³யாத² பாதௌ³ ப⁴க³வதோ ப³லி꞉ .
அவநிஜ்யார்சயாமாஸ முக்தஸங்க³மனோரமம் .. 27..

தத்பாத³ஶௌசம்ʼ ஜனகல்மஷாபஹம்ʼ
ஸ த⁴ர்மவின்மூர்த்⁴ன்யத³தா⁴த்ஸுமங்க³லம் .
யத்³தே³வதே³வோ கி³ரிஶஶ்சந்த்³ரமௌலிர்த³தா⁴ர
மூர்த்⁴னா பரயா ச ப⁴க்த்யா .. 28..

ப³லிருவாச
ஸ்வாக³தம்ʼ தே நமஸ்துப்⁴யம்ʼ ப்³ரஹ்மன் கிம்ʼ கரவாம தே .
ப்³ரஹ்மர்ஷீணாம்ʼ தப꞉ ஸாக்ஷான்மன்யே த்வா(ஆ)ர்ய வபுர்த⁴ரம் .. 29..

அத்³ய ந꞉ பிதரஸ்த்ருʼப்தா அத்³ய ந꞉ பாவிதம்ʼ குலம் .
அத்³ய ஸ்விஷ்ட꞉ க்ரதுரயம்ʼ யத்³ப⁴வாநாக³தோ க்³ருʼஹான் .. 30..

அத்³யாக்³னயோ மே ஸுஹுதா யதா²விதி⁴
த்³விஜாத்மஜ த்வச்சரணாவனேஜனை꞉ .
ஹதாம்ʼஹஸோ வார்பி⁴ரியம்ʼ ச பூ⁴ரஹோ
ததா² புனீதா தனுபி⁴꞉ பதை³ஸ்தவ .. 31..

யத்³யத்³வடோ வாஞ்ச²ஸி தத்ப்ரதீச்ச² மே
த்வாமர்தி²னம்ʼ விப்ரஸுதானுதர்கயே .
கா³ம்ʼ காஞ்சனம்ʼ கு³ணவத்³தா⁴ம ம்ருʼஷ்டம்ʼ
ததா²ன்னபேயமுத வா விப்ரகன்யாம் .
க்³ராமான் ஸம்ருʼத்³தா⁴ம்ʼஸ்துரகா³ன் க³ஜான் வா
ரதா²ம்ʼஸ்ததா²ர்ஹத்தம ஸம்ப்ரதீச்ச² .. 32..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ வாமனப்ராது³ர்பா⁴வே ப³லிவாமனஸம்ʼவாதே³ அஷ்டாத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 18..

————————————-

ஸ்ரீ பகவானுடைய அவதார காலம் நெருங்கியபோது திசைகள் நிர்மலமாயின. நீர்நிலைகள் தெளிந்தன.
மக்கள் மகிழ்ச்சியுற்றனர். வானோரும் வேதியரும் மகிழ்வுற்றனர்.

ஸ்ரீ வாமனர் ஆவணி மாதம் சுக்லபக்ஷம் ஸ்ரவண நஷத்திரத்துடன் கூடிய த்வாதசியில் அபிஜித் முஹுர்த்தத்தில் அவதரித்தார்.
நான்கு புஜங்களுடனும் சங்கு சக்கரம் பீதாம்பரம் இவைகளுடனும் தாமரை போன்ற கண்களுடனும் தோன்றினார்.
கச்யபரும் அதிதியும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் அற்புத நடிகனைப் போல் உருமாறி குட்டை பிரம்மச்சாரியாக ஆனார்.

ரிஷிகள் அவருக்கு ஜாதகர்மம் நாமகரணம் இவைகளைச் செய்தனர். சூரியனே காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான்.
உபவீதத்தை ப்ரஹஸ்பதி கொடுக்க கச்யபர் மேகலையைக் கொடுத்தார்.

பூதேவி மான் தோல் கொடுத்தாள்.மரங்களுக்குப் பதியாகிய சந்திரன் தண்டத்தைக் கொடுத்தான்.
உலக நாயகரான வாமனருக்கு கௌபீனமும் வஸ்திரமும் தாயான அதிதியால் கொடுக்கப்பட்டன. ஆகாசத்தின் அதிதேவதை குடை கொடுத்தது.

பிரம்மா கமண்டலுவையும் சப்த ரிஷிகள் தர்ப்பைகளையும் கொடுத்தனர். அழிவற்ற வடிவினராகிய அவருக்கு சரஸ்வதி
அக்ஷமாலையைக் கொடுக்க குபேரன் பிக்ஷாபாத்திரத்தை அளித்தான்.

அன்ன பூரணியான பார்வதி தேவி வாமனருக்கு பிக்ஷை அளித்தாள். இவ்விதம் போற்றப் பெற்ற வாமனர் பிரம்ம ரிஷிகள்
நிறைந்த அந்த சபையை தனது பிரம்ம தேஜஸால் பிரகாசிக்கச் செய்தார்

பிறகு வாமனர் அக்னியை பிரதிஷ்டை செய்து ஹோமம் செய்தபிறகு மகாபலியின் யாகசாலையை நோக்கிப் புறப்பட்டார்.
நர்மதையின் வடக்குக் கரையில் அமைந்த அந்த யாகசாலையில் உள்ள ரித்விக்குகள் சூரியனைப்போல் பிரகாசித்த வாமனரைக் கண்ணுற்றனர்.

அவருடைய தேஜஸ்ஸால் கவரப்பட்டு அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று எதிர்கொண்டு வரவேற்றனர்.
பலிச் சக்கரவர்த்தியும் அவருடைய உருவத்தால் கவரப்பட்டு மகிழ்ச்சி பொங்கியவனாய் அவருக்கு ஆசனம் அளித்து
அவருடைய திருவடிகளுக்கு நீராட்டி அவரை பூஜித்தான்.

பிறகு அவன் கூறினான்.
“பிரம்ம ஸ்வரூபியான தங்களுக்கு நமஸ்காரம். பூஜித்தற்குரியவரே எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அதையெல்லாம் கேட்டு
வாங்கிக் கொள்ளலாம். நீர் பிரம்மசாரியாதலால் பொருளில் நாட்டமுடையவராக நினைக்கிறேன்.

பசுவோ, பொன்னோ, பொருளோ விவாகத்திற்குரிய பெண்ணோ, குதிரைகளோ, யானைகளோ, தேர்களோ,
எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.”

அவாப்த சமஸ்த காமனும், லக்ஷ்மீபதியுமான பகவானிடம் இவ்விதம் கூறினான்!

உண்மையில் நாமும் இவ்விதம் தான் செய்கிறோம். பகவானிடம் என் பிரார்ததனை நிறைவேறினால்
இதை செய்கிறேன் அதைசெய்கிறேன் என்று சொல்கிறோமே அதுவும் அகந்தைதான்.
எல்லாம அவனுடையதாக இருக்க நாம் எதை அவனுக்கு அளிப்பது?

——————————————————————————-

ஸ்ரீமத்பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம் – 19-யஜ்ஜ வாடம் சென்று யாசித்தல்-

ஶ்ரீஶுக உவாச
இதி வைரோசனேர்வாக்யம்ʼ த⁴ர்மயுக்தம்ʼ ஸ ஸூந்ருʼதம் .
நிஶம்ய ப⁴க³வான் ப்ரீத꞉ ப்ரதினந்த்³யேத³மப்³ரவீத் .. 1..

ஶ்ரீப⁴க³வானுவாச
வசஸ்தவைதஜ்ஜனதே³வ ஸூந்ருʼதம்ʼ
குலோசிதம்ʼ த⁴ர்மயுதம்ʼ யஶஸ்கரம் .
யஸ்ய ப்ரமாணம்ʼ ப்⁴ருʼக³வ꞉ ஸாம்பராயே
பிதாமஹ꞉ குலவ்ருʼத்³த⁴꞉ ப்ரஶாந்த꞉ .. 2..

ந ஹ்யேதஸ்மின் குலே கஶ்சிந்நி꞉ஸத்த்வ꞉ க்ருʼபண꞉ புமான் .
ப்ரத்யாக்²யாதா ப்ரதிஶ்ருத்ய யோ வாதா³தா த்³விஜாதயே .. 3..

ந ஸந்தி தீர்தே² யுதி⁴ சார்தி²னார்தி²தா꞉
பராங்முகா² யே த்வமனஸ்வினோ ந்ருʼபா꞉ .
யுஷ்மத்குலே யத்³யஶஸாமலேன
ப்ரஹ்லாத³ உத்³பா⁴தி யதோ²டு³ப꞉ கே² .. 4..

யதோ ஜாதோ ஹிரண்யாக்ஷஶ்சரன்னேக இமாம்ʼ மஹீம் .
ப்ரதிவீரம்ʼ தி³க்³விஜயே நாவிந்த³த க³தா³யுத⁴꞉ .. 5..

யம்ʼ விநிர்ஜித்ய க்ருʼச்ச்²ரேண விஷ்ணு꞉ க்ஷ்மோத்³தா⁴ர ஆக³தம் .
நாத்மானம்ʼ ஜயினம்ʼ மேனே தத்³வீர்யம்ʼ பூ⁴ர்யனுஸ்மரன் .. 6..

நிஶம்ய தத்³வத⁴ம்ʼ ப்⁴ராதா ஹிரண்யகஶிபு꞉ புரா .
ஹந்தும்ʼ ப்⁴ராத்ருʼஹணம்ʼ க்ருத்³தோ⁴ ஜகா³ம நிலயம்ʼ ஹரே꞉ .. 7..

தமாயாந்தம்ʼ ஸமாலோக்ய ஶூலபாணிம்ʼ க்ருʼதாந்தவத் .
சிந்தயாமாஸ காலஜ்ஞோ விஷ்ணுர்மாயாவினாம்ʼ வர꞉ .. 8..

யதோ யதோ(அ)ஹம்ʼ தத்ராஸௌ ம்ருʼத்யு꞉ ப்ராணப்⁴ருʼதாமிவ .
அதோ(அ)ஹமஸ்ய ஹ்ருʼத³யம்ʼ ப்ரவேக்ஷ்யாமி பராக்³த்³ருʼஶ꞉ .. 9..

ஏவம்ʼ ஸ நிஶ்சித்ய ரிபோ꞉ ஶரீர-
மாதா⁴வதோ நிர்விவிஶே(அ)ஸுரேந்த்³ர .
ஶ்வாஸானிலாந்தர்ஹிதஸூக்ஷ்மதே³ஹ-
ஸ்தத்ப்ராணரந்த்⁴ரேண விவிக்³னசேதா꞉ .. 10..

ஸ தந்நிகேதம்ʼ பரிம்ருʼஶ்ய ஶூன்ய-
மபஶ்யமான꞉ குபிதோ நநாத³ .
க்ஷ்மாம்ʼ த்³யாம்ʼ தி³ஶ꞉ க²ம்ʼ விவரான் ஸமுத்³ரான்
விஷ்ணும்ʼ விசின்வன் ந த³த³ர்ஶ வீர꞉ .. 11..

அபஶ்யன்னிதி ஹோவாச மயான்விஷ்டமித³ம்ʼ ஜக³த் .
ப்⁴ராத்ருʼஹா மே க³தோ நூனம்ʼ யதோ நாவர்ததே புமான் .. 12..

வைரானுப³ந்த⁴ ஏதாவானாம்ருʼத்யோரிஹ தே³ஹினாம் .
அஜ்ஞானப்ரப⁴வோ மன்யுரஹம்ʼமானோபப்³ருʼம்ʼஹித꞉ .. 13..

பிதா ப்ரஹ்லாத³புத்ரஸ்தே தத்³வித்³வான் த்³விஜவத்ஸல꞉ .
ஸ்வமாயுர்த்³விஜலிங்கே³ப்⁴யோ தே³வேப்⁴யோ(அ)தா³த்ஸ யாசித꞉ .. 14..

ப⁴வானாசரிதான் த⁴ர்மானாஸ்தி²தோ க்³ருʼஹமேதி⁴பி⁴꞉ .
ப்³ராஹ்மணை꞉ பூர்வஜை꞉ ஶூரைரன்யைஶ்சோத்³தா³மகீர்திபி⁴꞉ .. 15..

தஸ்மாத்த்வத்தோ மஹீமீஷத்³வ்ருʼணே(அ)ஹம்ʼ வரத³ர்ஷபா⁴த் .
பதா³னி த்ரீணி தை³த்யேந்த்³ர ஸம்மிதானி பதா³ மம .. 16..

நான்யத்தே காமயே ராஜன் வதா³ன்யாஜ்ஜக³தீ³ஶ்வராத் .
நைன꞉ ப்ராப்னோதி வை வித்³வான் யாவத³ர்த²ப்ரதிக்³ரஹ꞉ .. 17..

ப³லிருவாச
அஹோ ப்³ராஹ்மணதா³யாத³ வாசஸ்தே வ்ருʼத்³த⁴ஸம்மதா꞉ .
த்வம்ʼ பா³லோ பா³லிஶமதி꞉ ஸ்வார்த²ம்ʼ ப்ரத்யபு³தோ⁴ யதா² .. 18..

மாம்ʼ வசோபி⁴꞉ ஸமாராத்⁴ய லோகாநாமேகமீஶ்வரம் .
பத³த்ரயம்ʼ வ்ருʼணீதே யோ(அ)பு³த்³தி⁴மான் த்³வீபதா³ஶுஷம் .. 19..

ந புமான் மாமுபவ்ரஜ்ய பூ⁴யோ யாசிதுமர்ஹதி .
தஸ்மாத்³வ்ருʼத்திகரீம்ʼ பூ⁴மிம்ʼ வடோ காமம்ʼ ப்ரதீச்ச² மே .. 20..

ஶ்ரீப⁴க³வானுவாச
யாவந்தோ விஷயா꞉ ப்ரேஷ்டா²ஸ்த்ரிலோக்யாமஜிதேந்த்³ரியம் .
ந ஶக்னுவந்தி தே ஸர்வே ப்ரதிபூரயிதும்ʼ ந்ருʼப .. 21..

த்ரிபி⁴꞉ க்ரமைரஸந்துஷ்டோ த்³வீபேனாபி ந பூர்யதே .
நவவர்ஷஸமேதேன ஸப்தத்³வீபவரேச்ச²யா .. 22..

ஸப்தத்³வீபாதி⁴பதயோ ந்ருʼபா வைன்யக³யாத³ய꞉ .
அர்தை²꞉ காமைர்க³தா நாந்தம்ʼ த்ருʼஷ்ணாயா இதி ந꞉ ஶ்ருதம் .. 23..

யத்³ருʼச்ச²யோபபன்னேன ஸந்துஷ்டோ வர்ததே ஸுக²ம் .
நாஸந்துஷ்டஸ்த்ரிபி⁴ர்லோகைரஜிதாத்மோபஸாதி³தை꞉ .. 24..

பும்ʼஸோ(அ)யம்ʼ ஸம்ʼஸ்ருʼதேர்ஹேதுரஸந்தோஷோ(அ)ர்த²காமயோ꞉ .
யத்³ருʼச்ச²யோபபன்னேன ஸந்தோஷோ முக்தயே ஸ்ம்ருʼத꞉ .. 25..

யத்³ருʼச்சா²லாப⁴துஷ்டஸ்ய தேஜோ விப்ரஸ்ய வர்த⁴தே .
தத்ப்ரஶாம்யத்யஸந்தோஷாத³ம்ப⁴ஸேவாஶுஶுக்ஷணி꞉ .. 26..

தஸ்மாத்த்ரீணி பதா³ன்யேவ வ்ருʼணே த்வத்³வரத³ர்ஷபா⁴த் .
ஏதாவதைவ ஸித்³தோ⁴(அ)ஹம்ʼ வித்தம்ʼ யாவத்ப்ரயோஜனம் .. 27..

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்த꞉ ஸ ஹஸன்னாஹ வாஞ்சா²த꞉ ப்ரதிக்³ருʼஹ்யதாம் .
வாமனாய மஹீம்ʼ தா³தும்ʼ ஜக்³ராஹ ஜலபா⁴ஜனம் .. 28..

விஷ்ணவே க்ஷ்மாம்ʼ ப்ரதா³ஸ்யந்தமுஶனா அஸுரேஶ்வரம் .
ஜானம்ʼஶ்சிகீர்ஷிதம்ʼ விஷ்ணோ꞉ ஶிஷ்யம்ʼ ப்ராஹ விதா³ம்ʼ வர꞉ .. 29..

ஶுக்ர உவாச
ஏஷ வைரோசனே ஸாக்ஷாத்³ப⁴க³வான் விஷ்ணுரவ்யய꞉ .
கஶ்யபாத³தி³தேர்ஜாதோ தே³வானாம்ʼ கார்யஸாத⁴க꞉ .. 30..

ப்ரதிஶ்ருதம்ʼ த்வயைதஸ்மை யத³னர்த²மஜானதா .
ந ஸாது⁴ மன்யே தை³த்யானாம்ʼ மஹானுபக³தோ(அ)னய꞉ .. 31..

ஏஷ தே ஸ்தா²னமைஶ்வர்யம்ʼ ஶ்ரியம்ʼ தேஜோ யஶ꞉ ஶ்ருதம் .
தா³ஸ்யத்யாச்சி²த்³ய ஶக்ராய மாயாமாணவகோ ஹரி꞉ .. 32..

த்ரிபி⁴꞉ க்ரமைரிமாம்ˮல்லோகான் விஶ்வகாய꞉ க்ரமிஷ்யதி .
ஸர்வஸ்வம்ʼ விஷ்ணவே த³த்த்வா மூட⁴ வர்திஷ்யஸே கத²ம் .. 33..

க்ரமதோ கா³ம்ʼ பதை³கேன த்³விதீயேன தி³வம்ʼ விபோ⁴꞉ .
க²ம்ʼ ச காயேன மஹதா தார்தீயஸ்ய குதோ க³தி꞉ .. 34..

நிஷ்டா²ம்ʼ தே நரகே மன்யே ஹ்யப்ரதா³து꞉ ப்ரதிஶ்ருதம் .
ப்ரதிஶ்ருதஸ்ய யோ(அ)னீஶ꞉ ப்ரதிபாத³யிதும்ʼ ப⁴வான் .. 35..

ந தத்³தா³னம்ʼ ப்ரஶம்ʼஸந்தி யேன வ்ருʼத்திர்விபத்³யதே .
தா³னம்ʼ யஜ்ஞஸ்தப꞉ கர்ம லோகே வ்ருʼத்திமதோ யத꞉ .. 36..

த⁴ர்மாய யஶஸே(அ)ர்தா²ய காமாய ஸ்வஜனாய ச .
பஞ்சதா⁴ விப⁴ஜன் வித்தமிஹாமுத்ர ச மோத³தே .. 37..

அத்ராபி ப³ஹ்வ்ருʼசைர்கீ³தம்ʼ ஶ்ருʼணு மே(அ)ஸுரஸத்தம .
ஸத்யமோமிதி யத்ப்ரோக்தம்ʼ யன்னேத்யாஹாந்ருʼதம்ʼ ஹி தத் .. 38..

ஸத்யம்ʼ புஷ்பப²லம்ʼ வித்³யாதா³த்மவ்ருʼக்ஷஸ்ய கீ³யதே .
வ்ருʼக்ஷே(அ)ஜீவதி தன்ன ஸ்யாத³ந்ருʼதம்ʼ மூலமாத்மன꞉ .. 39..

தத்³யதா² வ்ருʼக்ஷ உன்மூல꞉ ஶுஷ்யத்யுத்³வர்ததே(அ)சிராத் .
ஏவம்ʼ நஷ்டாந்ருʼத꞉ ஸத்³ய ஆத்மா ஶுஷ்யேன்ன ஸம்ʼஶய꞉ .. 40..

பராக்³ரிக்தமபூர்ணம்ʼ வா அக்ஷரம்ʼ யத்ததோ³மிதி .
யத்கிஞ்சிதோ³மிதி ப்³ரூயாத்தேன ரிச்யேத வை புமான் .
பி⁴க்ஷவே ஸர்வமோம்ʼ குர்வன் நாலம்ʼ காமேன சாத்மனே .. 41..

அதை²தத்பூர்ணமப்⁴யாத்மம்ʼ யச்ச நேத்யந்ருʼதம்ʼ வச꞉ .
ஸர்வம்ʼ நேத்யந்ருʼதம்ʼ ப்³ரூயாத்ஸ து³ஷ்கீர்தி꞉ ஶ்வஸன் ம்ருʼத꞉ .. 42..

ஸ்த்ரீஷு நர்மவிவாஹே ச வ்ருʼத்த்யர்தே² ப்ராணஸங்கடே .
கோ³ப்³ராஹ்மணார்தே² ஹிம்ʼஸாயாம்ʼ நாந்ருʼதம்ʼ ஸ்யாஜ்ஜுகு³ப்ஸிதம் .. 43..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ வாமனப்ராது³ர்பா⁴வே ஏகோனவிம்ʼஶோஶோ(அ)த்⁴யாய꞉ .. 19..

———————–

இவ்வாறு மகாபலியால் வேண்டுவதை தானமாகப் பெற்றுக் கொள்ளும்படி கூறப்பட்ட பகவான் ஒருவரிடம்
தானம் பெறுபவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டுபவராக பலியின் முன்னோரைப் புகழ்ந்தார்.
ஹிர்ணய கசிபு ஹிரண்யாக்ஷன் இவர்களின் பராக்ரமத்தையும் பலியின் பாட்டனாரான ப்ரஹ்லாதனின் பெருமையையும் புகழ்ந்தார்.

இது ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு இவர்களின் ஆணவத்தால் விளைந்த அழிவை பலிக்கு நினைவு படுத்துவார் போல் தோன்றியது.
பிறகு ப்ரஹ்லாதனை’ பிதாமஹ: குலவ்ருத்த: பிரசாந்த: ‘ என்று குறிப்பிட்டு பக்தி இருந்தாலும் அடக்கம் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

பிறகு வாமனர் தனக்கு வேண்டுவது தன் பாதத்தால் அளந்த மூன்றடி அளவு பூமியே என்று உரைத்தார்.
அதைக் கண்டு வியந்த மகாபலி தன்னிடம் வந்தவர் பின்னர் வேறு ஒருவரிடம் செல்லக்கூடாது என்று கூறி
எவ்வளவு பூமி வேண்டுமோ எடுத்துக்கொள்ள வேண்டினான்.

அதற்கு வாமனர் எவ்வளவு அவசியமோ அதை மட்டும் ஏற்பவன் பாவத்திற்காளாக மாட்டான் என்றும்,
அதிகமாக ஆசைப்படுபவன் திருடன் ஆதலால் தண்டனைக்குரியவன், மூவுலகிலும் உள்ள அனைத்தும் கூட
இந்திரிய அடக்கம் இல்லாதவனை திருப்தி செய்ய இயலாதது என்றும் கூறினார்.
அதனால் மூவடி மண் மட்டுமே தான் விரும்புவதாகக் கூறிய வாமனரிடம் பலி சிரித்து வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்என்று பதிலளித்தான்.

பிறகு தானம் கொடுக்க ஜலபாத்திரத்தைக் கையில் எடுத்த பலியை தன் யோகபலத்தால் வந்தவர் யாரென அறிந்த சுக்ராச்சாரியார் தடுத்து,

ஏஷ வைரோசனே சாக்ஷாத் பகவான் விஷ்ணுரவ்யய:
கச்யபாதிதே: ஜாதோ தேவானாம் கார்யஸாதக: (SB-8.19.30)

“விரோசன புத்திரரே, இவர் ஸாக்ஷாத் பகவான் விஷ்ணு. கச்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனாக தேவர்களின்
காரியத்தை முடித்துக் கொடுக்க அவதரித்தவர். “ என்று கூறி மேலும்,
“அனர்த்தம் விளையப் போகிறது. அசுரர்களுக்கு பெரிய நாசம் விளையப் போகிறது. மாய பிரம்மசாரியான இவர்
உனது பதவி, ஆட்சி , செல்வம் வன்மை , கீர்த்தி இவ்வனைத்தையும் அபகரித்து இந்திரனுக்கு அளிக்கப் போகிறார்.
கொடுத்த வாக்கை மீறுவது என்பது உயிருக்கு ஆபத்து விளையும்போது தவறில்லை” என்று கூறினார்-

——————–———————————————

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம் -20-ஓங்கி உலகு அளந்த விருத்தாந்தம்-

ஶ்ரீஶுக உவாச
ப³லிரேவம்ʼ க்³ருʼஹபதி꞉ குலாசார்யேண பா⁴ஷித꞉ .
தூஷ்ணீம்ʼ பூ⁴த்வா க்ஷணம்ʼ ராஜன்னுவாசாவஹிதோ கு³ரும் .. 1..

ப³லிருவாச
ஸத்யம்ʼ ப⁴க³வதா ப்ரோக்தம்ʼ த⁴ர்மோ(அ)யம்ʼ க்³ருʼஹமேதி⁴னாம் .
அர்த²ம்ʼ காமம்ʼ யஶோ வ்ருʼத்திம்ʼ யோ ந பா³தே⁴த கர்ஹிசித் .. 2..

ஸ சாஹம்ʼ வித்தலோபே⁴ன ப்ரத்யாசக்ஷே கத²ம்ʼ த்³விஜம் .
ப்ரதிஶ்ருத்ய த³தா³மீதி ப்ராஹ்லாதி³꞉ கிதவோ யதா² .. 3..

ந ஹ்யஸத்யாத்பரோ(அ)த⁴ர்ம இதி ஹோவாச பூ⁴ரியம் .
ஸர்வம்ʼ ஸோடு⁴மலம்ʼ மன்யே ருʼதே(அ)லீகபரம்ʼ நரம் .. 4..

நாஹம்ʼ பி³பே⁴மி நிரயான்னாத⁴ன்யாத³ஸுகா²ர்ணவாத் .
ந ஸ்தா²னச்யவனான்ம்ருʼத்யோர்யதா² விப்ரப்ரலம்ப⁴னாத் .. 5..

யத்³யத்³தா⁴ஸ்யதி லோகே(அ)ஸ்மின் ஸம்பரேதம்ʼ த⁴நாதி³கம் .
தஸ்ய த்யாகே³ நிமித்தம்ʼ கிம்ʼ விப்ரஸ்துஷ்யேன்ன தேன சேத் .. 6..

ஶ்ரேய꞉ குர்வந்தி பூ⁴தானாம்ʼ ஸாத⁴வோ து³ஸ்த்யஜாஸுபி⁴꞉ .
த³த்⁴யங் ஶிபி³ப்ரப்⁴ருʼதய꞉ கோ விகல்போ த⁴ராதி³ஷு .. 7..

யைரியம்ʼ பு³பு⁴ஜே ப்³ரஹ்மன் தை³த்யேந்த்³ரைரநிவர்திபி⁴꞉ .
தேஷாம்ʼ காலோ(அ)க்³ரஸீல்லோகான் ந யஶோ(அ)தி⁴க³தம்ʼ பு⁴வி .. 8..

ஸுலபா⁴ யுதி⁴ விப்ரர்ஷே ஹ்யநிவ்ருʼத்தாஸ்தனுத்யஜ꞉ .
ந ததா² தீர்த² ஆயாதே ஶ்ரத்³த⁴யா யே த⁴னத்யஜ꞉ .. 9..

மனஸ்வின꞉ காருணிகஸ்ய ஶோப⁴னம்ʼ
யத³ர்தி²காமோபனயேன து³ர்க³தி꞉ .
குத꞉ புனர்ப்³ரஹ்மவிதா³ம்ʼ ப⁴வாத்³ருʼஶாம்ʼ
ததோ வடோரஸ்ய த³தா³மி வாஞ்சி²தம் .. 10..

யஜந்தி யஜ்ஞக்ரதுபி⁴ர்யமாத்³ருʼதா
ப⁴வந்த ஆம்னாயவிதா⁴னகோவிதா³꞉ .
ஸ ஏவ விஷ்ணுர்வரதோ³(அ)ஸ்து வா பரோ
தா³ஸ்யாம்யமுஷ்மை க்ஷிதிமீப்ஸிதாம்ʼ முனே .. 11..

யத்³யப்யஸாவத⁴ர்மேண மாம்ʼ ப³த்⁴னீயாத³நாக³ஸம் .
ததா²ப்யேனம்ʼ ந ஹிம்ʼஸிஷ்யே பீ⁴தம்ʼ ப்³ரஹ்மதனும்ʼ ரிபும் .. 12..

ஏஷ வா உத்தமஶ்லோகோ ந ஜிஹாஸதி யத்³யஶ꞉ .
ஹத்வா மைனாம்ʼ ஹரேத்³யுத்³தே⁴ ஶயீத நிஹதோ மயா .. 13..

ஶ்ரீஶுக உவாச
ஏவமஶ்ரத்³தி⁴தம்ʼ ஶிஷ்யமநாதே³ஶகரம்ʼ கு³ரு꞉ .
ஶஶாப தை³வப்ரஹித꞉ ஸத்யஸந்த⁴ம்ʼ மனஸ்வினம் .. 14..

த்³ருʼட⁴ம்ʼ பண்டி³தமான்யஜ்ஞ꞉ ஸ்தப்³தோ⁴(அ)ஸ்யஸ்மது³பேக்ஷயா .
மச்சா²ஸனாதிகோ³ யஸ்த்வமசிராத்³ப்⁴ரஶ்யஸே ஶ்ரிய꞉ .. 15..

ஏவம்ʼ ஶப்த꞉ ஸ்வகு³ருணா ஸத்யான்ன சலிதோ மஹான் .
வாமனாய த³தா³வேநாமர்சித்வோத³கபூர்வகம் .. 16..

விந்த்⁴யாவலிஸ்ததா³(ஆ)க³த்ய பத்னீ ஜாலகமாலினீ .
ஆனின்யே கலஶம்ʼ ஹைமமவனேஜன்யபாம்ʼ ப்⁴ருʼதம் .. 17..

யஜமான꞉ ஸ்வயம்ʼ தஸ்ய ஶ்ரீமத்பாத³யுக³ம்ʼ முதா³ .
அவநிஜ்யாவஹன்மூர்த்⁴னி தத³போ விஶ்வபாவனீ꞉ .. 18..

ததா³ஸுரேந்த்³ரம்ʼ தி³வி தே³வதாக³ணா꞉
க³ந்த⁴ர்வவித்³யாத⁴ரஸித்³த⁴சாரணா꞉ .
தத்கர்ம ஸர்வே(அ)பி க்³ருʼணந்த ஆர்ஜவம்ʼ
ப்ரஸூனவர்ஷைர்வவ்ருʼஷுர்முதா³ன்விதா꞉ .. 19..

நேது³ர்முஹுர்து³ந்து³ப⁴ய꞉ ஸஹஸ்ரஶோ
க³ந்த⁴ர்வகிம்பூருஷகின்னரா ஜகு³꞉ .
மனஸ்வினானேன க்ருʼதம்ʼ ஸுது³ஷ்கரம்ʼ
வித்³வானதா³த்³யத்³ரிபவே ஜக³த்த்ரயம் .. 20..

தத்³வாமனம்ʼ ரூபமவர்த⁴தாத்³பு⁴தம்ʼ
ஹரேரனந்தஸ்ய கு³ணத்ரயாத்மகம் .
பூ⁴꞉ க²ம்ʼ தி³ஶோ த்³யௌர்விவரா꞉ பயோத⁴ய-
ஸ்திர்யங் ந்ருʼதே³வா ருʼஷயோ யதா³ஸத .. 21..

காயே ப³லிஸ்தஸ்ய மஹாவிபூ⁴தே꞉
ஸஹர்த்விகா³சார்யஸத³ஸ்ய ஏதத் .
த³த³ர்ஶ விஶ்வம்ʼ த்ரிகு³ணம்ʼ கு³ணாத்மகே
பூ⁴தேந்த்³ரியார்தா²ஶயஜீவயுக்தம் .. 22..

ரஸாமசஷ்டாங்க்⁴ரிதலே(அ)த² பாத³யோர்மஹீம்ʼ
மஹீத்⁴ரான் புருஷஸ்ய ஜங்க⁴யோ꞉ .
பதத்த்ரிணோ ஜானுனி விஶ்வமூர்தே-
ரூர்வோர்க³ணம்ʼ மாருதமிந்த்³ரஸேன꞉ .. 23..

ஸந்த்⁴யாம்ʼ விபோ⁴ர்வாஸஸி கு³ஹ்ய ஐக்ஷ-
த்ப்ரஜாபதீன் ஜக⁴னே ஆத்மமுக்²யான் .
நாப்⁴யாம்ʼ நப⁴꞉ குக்ஷிஷு ஸப்தஸிந்தூ⁴-
நுருக்ரமஸ்யோரஸி சர்க்ஷமாலாம் .. 24..

ஹ்ருʼத்³யங்க³ த⁴ர்மம்ʼ ஸ்தனயோர்முராரே꞉
ருʼதம்ʼ ச ஸத்யம்ʼ ச மனஸ்யதே²ந்து³ம் .
ஶ்ரியம்ʼ ச வக்ஷஸ்யரவிந்த³ஹஸ்தாம்ʼ
கண்டே² ச ஸாமானி ஸமஸ்தரேபா²ன் .. 25..

இந்த்³ரப்ரதா⁴னானமரான் பு⁴ஜேஷு
தத்கர்ணயோ꞉ ககுபோ⁴ த்³யௌஶ்ச மூர்த்⁴னி .
கேஶேஷு மேகா⁴ன் ஶ்வஸனம்ʼ நாஸிகாயா-
மக்ஷ்ணோஶ்ச ஸூர்யம்ʼ வத³னே ச வஹ்னிம் .. 26..

வாண்யாம்ʼ ச ச²ந்தா³ம்ʼஸி ரஸே ஜலேஶம்ʼ
ப்⁴ருவோர்நிஷேத⁴ம்ʼ ச விதி⁴ம்ʼ ச பக்ஷ்மஸு .
அஹஶ்ச ராத்ரிம்ʼ ச பரஸ்ய பும்ʼஸோ
மன்யும்ʼ லலாடே(அ)த⁴ர ஏவ லோப⁴ம் .. 27..

ஸ்பர்ஶே ச காமம்ʼ ந்ருʼப ரேதஸோ(அ)ம்ப⁴꞉
ப்ருʼஷ்டே² த்வத⁴ர்மம்ʼ க்ரமணேஷு யஜ்ஞம் .
சா²யாஸு ம்ருʼத்யும்ʼ ஹஸிதே ச மாயாம்ʼ
தனூருஹேஷ்வோஷதி⁴ஜாதயஶ்ச .. 28..

நதீ³ஶ்ச நாடீ³ஷு ஶிலா நகே²ஷு
பு³த்³தா⁴வஜம்ʼ தே³வக³ணான் ருʼஷீம்ʼஶ்ச .
ப்ராணேஷு கா³த்ரே ஸ்தி²ரஜங்க³மானி
ஸர்வாணி பூ⁴தானி த³த³ர்ஶ வீர꞉ .. 29..

ஸர்வாத்மனீத³ம்ʼ பு⁴வனம்ʼ நிரீக்ஷ்ய
ஸர்வே(அ)ஸுரா꞉ கஶ்மலமாபுரங்க³ .
ஸுத³ர்ஶனம்ʼ சக்ரமஸஹ்யதேஜோ
த⁴னுஶ்ச ஶார்ங்க³ம்ʼ ஸ்தனயித்னுகோ⁴ஷம் .. 30..

பர்ஜன்யகோ⁴ஷோ ஜலஜ꞉ பாஞ்சஜன்ய꞉
கௌமோத³கீ விஷ்ணுக³தா³ தரஸ்வினீ .
வித்³யாத⁴ரோ(அ)ஸி꞉ ஶதசந்த்³ரயுக்த-
ஸ்தூணோத்தமாவக்ஷயஸாயகௌ ச .. 31..

ஸுனந்த³முக்²யா உபதஸ்து²ரீஶம்ʼ
பார்ஷத³முக்²யா꞉ ஸஹலோகபாலா꞉ .
ஸ்பு²ரத்கிரீடாங்க³த³மீனகுண்ட³ல-
ஶ்ரீவத்ஸரத்னோத்தமமேக²லாம்ப³ரை꞉ .. 32..

மது⁴வ்ரதஸ்ரக்³வனமாலயா வ்ருʼதோ
ரராஜ ராஜன் ப⁴க³வானுருக்ரம꞉ .
க்ஷிதிம்ʼ பதை³கேன ப³லேர்விசக்ரமே
நப⁴꞉ ஶரீரேண தி³ஶஶ்ச பா³ஹுபி⁴꞉ .. 33..

பத³ம்ʼ த்³விதீயம்ʼ க்ரமதஸ்த்ரிவிஷ்டபம்ʼ
ந வை த்ருʼதீயாய ததீ³யமண்வபி .
உருக்ரமஸ்யாங்க்⁴ரிருபர்யுபர்யதோ²
மஹர்ஜநாப்⁴யாம்ʼ தபஸ꞉ பரம்ʼ க³த꞉ .. 34..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ விஶ்வரூபத³ர்ஶனம்ʼ நாம விம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 20..

———————————–

மகாபலி கூறினான்.
பிரஹ்லாதன் வம்சத்தில் தோன்றிய நான் கொடுப்பதாக வாக்களித்ததை எவ்வாறு இல்லை என்று சொல்லுவேன்?
நல்ல காலமும் பாத்திரமும் கிடைக்கும்போது ஸ்ரத்தையுடன் பொருளை த்யாகம் செய்பவர்களே மேலானவர் ஆவார்.

வேதங்களும் முனிவர்களும் பூஜிக்கும் அந்த விஷ்ணுவே இவராகும்போது இவர் வரமளிப்பாரோ இல்லையோ
இவருக்கு இவர் விரும்பும் பூமியை கொடுக்கப் போகிறேன்.

அதைக் கேட்ட சுக்ராச்சாரியார் சினந்து “கெட்டிக்காரன் என்று நினைக்கும் நீ ஒன்றும் அறியாதவன்.
என்னை மதியாமல் என் கட்டளையை மீறி நடக்கும் நீ விரைவில் செல்வததை இழப்பாய்.” என்று கூறினார்.

இவ்வாறு குருவால் சபிக்கப்பட்டும் உண்மையிலிருந்து வழுவாத பெருமை உடைய பலி வாமனரை அர்ச்சித்து
நீர் வார்த்து அவர் கேட்ட பூமியை கொடுக்கலானான்.

அவன் மனைவி விந்த்யாவளியினால் கொண்டுவரப்பட்ட பொற் பாத்திரத்தில் உள்ள நீரால் வாமனரின் பாதத்தை அலம்பி
அந்த நீரைத் தன் தலையில் சேர்த்துக் கொண்டான்.அவனுடைய செய்கையைக் கண்டு தேவர்கள் பூமாரி பெய்தனர்.

அப்போது அந்த வாமன உருவம் வளர ஆரம்பித்தது. மகத்தான பெருமை வாய்ந்த அந்த சரீரத்தில் பஞ்சபூதங்கள் இந்திரியங்கள்,
இந்திரிய விஷயங்கள், அந்தக்கரணம் , ஜீவன் இவற்றுடன் கூடிய இந்தப் பிரபஞ்சத்தை பலிச்சக்கரவர்த்தி கண்டான்.
அர்ஜுனன் ஞானக்கண் கொண்டு பார்த்த அதே விச்வரூபத்தை பலி ஊனக் கண்ணால் கண்டான்.

பகவான் ஒரு அடியால் பூமியையும் ஆகாயத்தை உடலாலும் திசைகளைக் கைகளாலும் வியாபித்து நின்றார்.
இரண்டாவது அடி எடுக்கும்போது சுவர்க்கலோகம் முழுவதும் வியாபித்து நிற்க மூன்றாவதற்கு கொடுக்க பலியினுடையதாக எதுவும் இல்லை.

———————–

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம் – 21-மகாபலியை வெல்லுதல்–

ஶ்ரீஶுக உவாச
ஸத்யம்ʼ ஸமீக்ஷ்யாப்³ஜப⁴வோ நகே²ந்து³பி⁴-
ர்ஹதஸ்வதா⁴மத்³யுதிராவ்ருʼதோ(அ)ப்⁴யகா³த் .
மரீசிமிஶ்ரா ருʼஷயோ ப்³ருʼஹத்³வ்ரதா꞉
ஸநந்த³நாத்³யா நரதே³வ யோகி³ன꞉ .. 1..

வேதோ³பவேதா³ நியமான்விதா
யமாஸ்தர்கேதிஹாஸாங்க³புராணஸம்ʼஹிதா꞉ .
யே சாபரே யோக³ஸமீரதீ³பித-
ஜ்ஞாநாக்³னினா ரந்தி⁴தகர்மகல்மஷா꞉ .
வவந்தி³ரே யத்ஸ்மரணானுபா⁴வத꞉
ஸ்வாயம்பு⁴வம்ʼ தா⁴ம க³தா அகர்மகம் .. 2..

அதா²ங்க்⁴ரயே ப்ரோன்னமிதாய விஷ்ணோ-
ருபாஹரத்பத்³மப⁴வோ(அ)ர்ஹணோத³கம் .
ஸமர்ச்ய ப⁴க்த்யாப்⁴யக்³ருʼணாச்சு²சிஶ்ரவா
யந்நாபி⁴பங்கேருஹஸம்ப⁴வ꞉ ஸ்வயம் .. 3..

தா⁴து꞉ கமண்ட³லுஜலம்ʼ தது³ருக்ரமஸ்ய
பாதா³வனேஜனபவித்ரதயா நரேந்த்³ர .
ஸ்வர்து⁴ன்யபூ⁴ன்னப⁴ஸி ஸா பததீ நிமார்ஷ்டி
லோகத்ரயம்ʼ ப⁴க³வதோ விஶதே³வ கீர்தி꞉ .. 4..

ப்³ரஹ்மாத³யோ லோகநாதா²꞉ ஸ்வநாதா²ய ஸமாத்³ருʼதா꞉ .
ஸானுகா³ ப³லிமாஜஹ்ரு꞉ ஸங்க்ஷிப்தாத்மவிபூ⁴தயே .. 5..

தோயை꞉ ஸமர்ஹணை꞉ ஸ்ரக்³பி⁴ர்தி³வ்யக³ந்தா⁴னுலேபனை꞉ .
தூ⁴பைர்தீ³பை꞉ ஸுரபி⁴பி⁴ர்லாஜாக்ஷதப²லாங்குரை꞉ .. 6..

ஸ்தவனைர்ஜயஶப்³தை³ஶ்ச தத்³வீர்யமஹிமாங்கிதை꞉ .
ந்ருʼத்யவாதி³த்ரகீ³தைஶ்ச ஶங்க²து³ந்து³பி⁴நி꞉ஸ்வனை꞉ .. 7..

ஜாம்ப³வான் ருʼக்ஷராஜஸ்து பே⁴ரீஶப்³தை³ர்மனோஜவ꞉ .
விஜயம்ʼ தி³க்ஷு ஸர்வாஸு மஹோத்ஸவமகோ⁴ஷயத் .. 8..

மஹீம்ʼ ஸர்வாம்ʼ ஹ்ருʼதாம்ʼ த்³ருʼஷ்ட்வா த்ரிபத³வ்யாஜயாச்ஞயா .
ஊசு꞉ ஸ்வப⁴ர்துரஸுரா தீ³க்ஷிதஸ்யாத்யமர்ஷிதா꞉ .. 9..

ந வா அயம்ʼ ப்³ரஹ்மப³ந்து⁴ர்விஷ்ணுர்மாயாவினாம்ʼ வர꞉ .
த்³விஜரூபப்ரதிச்ச²ன்னோ தே³வகார்யம்ʼ சிகீர்ஷதி .. 10..

அனேன யாசமானேன ஶத்ருணா வடுரூபிணா .
ஸர்வஸ்வம்ʼ நோ ஹ்ருʼதம்ʼ ப⁴ர்துர்ன்யஸ்தத³ண்ட³ஸ்ய ப³ர்ஹிஷி .. 11..

ஸத்யவ்ரதஸ்ய ஸததம்ʼ தீ³க்ஷிதஸ்ய விஶேஷத꞉ .
நாந்ருʼதம்ʼ பா⁴ஷிதும்ʼ ஶக்யம்ʼ ப்³ரஹ்மண்யஸ்ய த³யாவத꞉ .. 12..

தஸ்மாத³ஸ்ய வதோ⁴ த⁴ர்மோ ப⁴ர்து꞉ ஶுஶ்ரூஷணம்ʼ ச ந꞉ .
இத்யாயுதா⁴னி ஜக்³ருʼஹுர்ப³லேரனுசராஸுரா꞉ .. 13..

தே ஸர்வே வாமனம்ʼ ஹந்தும்ʼ ஶூலபட்டிஶபாணய꞉ .
அனிச்ச²தோ ப³லே ராஜன் ப்ராத்³ரவன் ஜாதமன்யவ꞉ .. 14..

தானபி⁴த்³ரவதோ த்³ருʼஷ்ட்வா தி³திஜானீகபான் ந்ருʼப .
ப்ரஹஸ்யானுசரா விஷ்ணோ꞉ ப்ரத்யஷேத⁴ன்னுதா³யுதா⁴꞉ .. 15..

நந்த³꞉ ஸுனந்தோ³(அ)த² ஜயோ விஜய꞉ ப்ரப³லோ ப³ல꞉ .
குமுத³꞉ குமுதா³க்ஷஶ்ச விஷ்வக்ஸேன꞉ பதத்த்ரிராட் .. 16..

ஜயந்த꞉ ஶ்ருததே³வஶ்ச புஷ்பத³ந்தோ(அ)த² ஸாத்வத꞉ .
ஸர்வே நாகா³யுதப்ராணாஶ்சமூம்ʼ தே ஜக்⁴னுராஸுரீம் .. 17..

ஹன்யமானான் ஸ்வகான் த்³ருʼஷ்ட்வா புருஷானுசரைர்ப³லி꞉ .
வாரயாமாஸ ஸம்ʼரப்³தா⁴ன் காவ்யஶாபமனுஸ்மரன் .. 18..

ஹே விப்ரசித்தே ஹே ராஹோ ஹே நேமே ஶ்ரூயதாம்ʼ வச꞉ .
மா யுத்⁴யத நிவர்தத்⁴வம்ʼ ந ந꞉ காலோ(அ)யமர்த²க்ருʼத் .. 19..

ய꞉ ப்ரபு⁴꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ ஸுக²து³꞉கோ²பபத்தயே .
தம்ʼ நாதிவர்திதும்ʼ தை³த்யா꞉ பௌருஷைரீஶ்வர꞉ புமான் .. 20..

யோ நோ ப⁴வாய ப்ராகா³ஸீத³ப⁴வாய தி³வௌகஸாம் .
ஸ ஏவ ப⁴க³வானத்³ய வர்ததே தத்³விபர்யயம் .. 21..

ப³லேன ஸசிவைர்பு³த்³த்⁴யா து³ர்கை³ர்மந்த்ரௌஷதா⁴தி³பி⁴꞉ .
ஸாமாதி³பி⁴ருபாயைஶ்ச காலம்ʼ நாத்யேதி வை ஜன꞉ .. 22..

ப⁴வத்³பி⁴ர்நிர்ஜிதா ஹ்யேதே ப³ஹுஶோ(அ)னுசரா ஹரே꞉ .
தை³வேனர்த்³தை⁴ஸ்த ஏவாத்³ய யுதி⁴ ஜித்வா நத³ந்தி ந꞉ .. 23..

ஏதான் வயம்ʼ விஜேஷ்யாமோ யதி³ தை³வம்ʼ ப்ரஸீத³தி .
தஸ்மாத்காலம்ʼ ப்ரதீக்ஷத்⁴வம்ʼ யோ நோ(அ)ர்த²த்வாய கல்பதே .. 24..

ஶ்ரீஶுக உவாச
பத்யுர்னிக³தி³தம்ʼ ஶ்ருத்வா தை³த்யதா³னவயூத²பா꞉ .
ரஸாம்ʼ நிர்விவிஶூ ராஜன் விஷ்ணுபார்ஷத³தாடி³தா꞉ .. 25..

அத² தார்க்ஷ்யஸுதோ ஜ்ஞாத்வா விராட் ப்ரபு⁴சிகீர்ஷிதம் .
ப³ப³ந்த⁴ வாருணை꞉ பாஶைர்ப³லிம்ʼ ஸௌத்யே(அ)ஹனி க்ரதௌ .. 26..

ஹாஹாகாரோ மஹானாஸீத்³ரோத³ஸ்யோ꞉ ஸர்வதோதி³ஶம் .
நிக்³ருʼஹ்யமாணே(அ)ஸுரபதௌ விஷ்ணுனா ப்ரப⁴விஷ்ணுனா .. 27..

தம்ʼ ப³த்³த⁴ம்ʼ வாருணை꞉ பாஶைர்ப⁴க³வானாஹ வாமன꞉ .
நஷ்டஶ்ரியம்ʼ ஸ்தி²ரப்ரஜ்ஞமுதா³ரயஶஸம்ʼ ந்ருʼப .. 28..

பதா³னி த்ரீணி த³த்தானி பூ⁴மேர்மஹ்யம்ʼ த்வயாஸுர .
த்³வாப்⁴யாம்ʼ க்ராந்தா மஹீ ஸர்வா த்ருʼதீயமுபகல்பய .. 29..

யாவத்தபத்யஸௌ கோ³பி⁴ர்யாவதி³ந்து³꞉ ஸஹோடு³பி⁴꞉ .
யாவத்³வர்ஷதி பர்ஜன்யஸ்தாவதீ பூ⁴ரியம்ʼ தவ .. 30..

பதை³கேன மயாக்ராந்தோ பூ⁴ர்லோக꞉ க²ம்ʼ தி³ஶஸ்தனோ꞉ .
ஸ்வர்லோகஸ்து த்³விதீயேன பஶ்யதஸ்தே ஸ்வமாத்மனா .. 31..

ப்ரதிஶ்ருதமதா³துஸ்தே நிரயே வாஸ இஷ்யதே .
விஶ த்வம்ʼ நிரயம்ʼ தஸ்மாத்³கு³ருணா சானுமோதி³த꞉ .. 32..

வ்ருʼதா² மனோரத²ஸ்தஸ்ய தூ³ரே ஸ்வர்க³꞉ பதத்யத⁴꞉ .
ப்ரதிஶ்ருதஸ்யாதா³னேன யோ(அ)ர்தி²னம்ʼ விப்ரலம்ப⁴தே .. 33..

விப்ரலப்³தோ⁴ த³தா³மீதி த்வயாஹம்ʼ சாட்⁴யமானினா .
தத்³வ்யலீகப²லம்ʼ பு⁴ங்க்ஷ்வ நிரயம்ʼ கதிசித்ஸமா꞉ .. 34..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ வாமனப்ராது³ர்பா⁴வே ப³லிநிக்³ரஹோ நாமைகவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 21..

———————————–

பகவானுடைய பாதம் பிரம்ம லோகத்தை அடைந்த போது அவருடைய நகங்களின் ஒளியானது பிரம்மலோகத்தின் ஒளியை மங்கச் செய்தது.

பிரம்மா அவருடைய பாதங்களை பூஜிக்கத் தன் கமண்டலுவில் இருந்து வார்த்த நீர் பெருகி அதுவே ஆகாச கங்கை ஆயிற்று.
அதுவே பகவானின் நிர்மலமான கீர்த்தியைப் போல் மூவுலகையும் பாவனம் ஆக்குகின்றது.

ஜாம்பவான் பேரிகை முழக்கத்துடன் பகவானின் வெற்றியைக் கொண்டாடி மூவுலகும் பாவனை வந்தாராம்.
வாமன பிரும்மசாரி இவ்வாறு பலியை வஞ்சித்தார் என்ற கோபத்தில் அசுரர்கள் கோபமடைந்து
மறுபடி வாமனராகி நின்ற பகவானை எதிர்த்தனர்.

அப்போது மஹாபலி அவர்களிடம் எந்த கால ரூபியான பகவான் முன்னம் அசுரர்களின் வெற்றிக்கும் தேவர்களின் அழிவிற்கும்
காரணம் ஆக இருந்தாரோ அவரே இப்போது அதற்கு மாறாக இருக்கிறார்.
ஆகவே அநுகூலமான காலத்தை எதிரபார்த்து காத்திருக்க வேண்டும் என்று கூறினான்.

பிறகு அவர்கள் விஷ்ணு பாரிஷதர்களால் அடிக்கப்பட்டு தங்கள் யஜமானர் சொல்படி அவர்களை எதிர்க்காமல்.
பூலோகம் முழுவதும் வாமனருக்குக் கொடுக்கப்பட்டபடியால் பாதாள லோகம் புகுந்தார்கள்.

அதன்பின் கருடன் மகாபலியை வருண பாசத்தால் கட்டினார்.
உயர்ந்த கீர்த்தி உள்ளவனும் பொருளை இழந்தாலும் புத்தியை இழக்காதவனும் அருணா பாசத்தால் கட்டப்பட்டவனும் ஆன
அவனிடம் வாமனர் தனக்குத் தர வேண்டிய மூன்றாம் அடி எங்கே என்று வினவினார்.

————————–—————————

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 22-மஹாபலி முடிவு-

ஶ்ரீஶுக உவாச
ஏவம்ʼ விப்ரக்ருʼதோ ராஜன் ப³லிர்ப⁴க³வதாஸுர꞉ .
பி⁴த்³யமானோ(அ)ப்யபி⁴ன்னாத்மா ப்ரத்யாஹாவிக்லவம்ʼ வச꞉ .. 1..

ப³லிருவாச
யத்³யுத்தமஶ்லோக ப⁴வான் மமேரிதம்ʼ
வசோ வ்யலீகம்ʼ ஸுரவர்ய மன்யதே .
கரோம்ய்ருʼதம்ʼ தன்ன ப⁴வேத்ப்ரலம்ப⁴னம்ʼ
பத³ம்ʼ த்ருʼதீயம்ʼ குரு ஶீர்ஷ்ணி மே நிஜம் .. 2..

பி³பே⁴மி நாஹம்ʼ நிரயாத்பத³ச்யுதோ
ந பாஶப³ந்தா⁴த்³வ்யஸநாத்³து³ரத்யயாத் .
நைவார்த²க்ருʼச்ச்²ராத்³ப⁴வதோ விநிக்³ரஹா-
த³ஸாது⁴வாதா³த்³ப்⁴ருʼஶமுத்³விஜே யதா² .. 3..

பும்ʼஸாம்ʼ ஶ்லாக்⁴யதமம்ʼ மன்யே த³ண்ட³மர்ஹத்தமார்பிதம் .
யம்ʼ ந மாதா பிதா ப்⁴ராதா ஸுஹ்ருʼத³ஶ்சாதி³ஶந்தி ஹி .. 4..

த்வம்ʼ நூனமஸுராணாம்ʼ ந꞉ பாரோக்ஷ்ய꞉ பரமோ கு³ரு꞉ .
யோ நோ(அ)னேகமதா³ந்தா⁴னாம்ʼ விப்⁴ரம்ʼஶம்ʼ சக்ஷுராதி³ஶத் .. 5..

யஸ்மின் வைரானுப³ந்தே⁴ன வ்யூடே⁴ன விபு³தே⁴தரா꞉ .
ப³ஹவோ லேபி⁴ரே ஸித்³தி⁴ம்ʼ யாமு ஹைகாந்தயோகி³ன꞉ .. 6..

தேனாஹம்ʼ நிக்³ருʼஹீதோ(அ)ஸ்மி ப⁴வதா பூ⁴ரிகர்மணா .
ப³த்³த⁴ஶ்ச வாருணை꞉ பாஶைர்னாதிவ்ரீடே³ ந ச வ்யதே² .. 7..

பிதாமஹோ மே ப⁴வதீ³யஸம்மத꞉
ப்ரஹ்லாத³ ஆவிஷ்க்ருʼதஸாது⁴வாத³꞉ .
ப⁴வத்³விபக்ஷேண விசித்ரவைஶஸம்ʼ
ஸம்ப்ராபிதஸ்த்வத்பரம꞉ ஸ்வபித்ரா .. 8..

கிமாத்மனானேன ஜஹாதி யோ(அ)ந்தத꞉
கிம்ʼ ரிக்த²ஹாரை꞉ ஸ்வஜனாக்²யத³ஸ்யுபி⁴꞉ .
கிம்ʼ ஜாயயா ஸம்ʼஸ்ருʼதிஹேதுபூ⁴தயா
மர்த்யஸ்ய கே³ஹை꞉ கிமிஹாயுஷோ வ்யய꞉ .. 9..

இத்த²ம்ʼ ஸ நிஶ்சித்ய பிதாமஹோ மஹா-
நகா³த⁴போ³தோ⁴ ப⁴வத꞉ பாத³பத்³மம் .
த்⁴ருவம்ʼ ப்ரபேதே³ ஹ்யகுதோப⁴யம்ʼ ஜநாத்³பீ⁴த꞉
ஸ்வபக்ஷக்ஷபணஸ்ய ஸத்தம .. 10..

அதா²ஹமப்யாத்மரிபோஸ்தவாந்திகம்ʼ
தை³வேன நீத꞉ ப்ரஸப⁴ம்ʼ த்யாஜிதஶ்ரீ꞉ .
இத³ம்ʼ க்ருʼதாந்தாந்திகவர்தி ஜீவிதம்ʼ
யயாத்⁴ருவம்ʼ ஸ்தப்³த⁴மதிர்ன பு³த்⁴யதே .. 11..

ஶ்ரீஶுக உவாச
தஸ்யேத்த²ம்ʼ பா⁴ஷமாணஸ்ய ப்ரஹ்லாதோ³ ப⁴க³வத்ப்ரிய꞉ .
ஆஜகா³ம குருஶ்ரேஷ்ட² ராகாபதிரிவோத்தி²த꞉ .. 12..

தமிந்த்³ரஸேன꞉ ஸ்வபிதாமஹம்ʼ ஶ்ரியா
விராஜமானம்ʼ நலினாயதேக்ஷணம் .
ப்ராம்ʼஶும்ʼ பிஶங்கா³ம்ப³ரமஞ்ஜனத்விஷம்ʼ
ப்ரலம்ப³பா³ஹும்ʼ ஸுப⁴க³ம்ʼ ஸமைக்ஷத .. 13..

தஸ்மை ப³லிர்வாருணபாஶயந்த்ரித꞉
ஸமர்ஹணம்ʼ நோபஜஹார பூர்வவத் .
நநாம மூர்த்⁴நாஶ்ருவிலோலலோசன꞉
ஸவ்ரீட³நீசீனமுகோ² ப³பூ⁴வ ஹ .. 14..

ஸ தத்ர ஹாஸீனமுதீ³க்ஷ்ய ஸத்பதிம்ʼ
ஸுநந்த³னந்தா³த்³யனுகை³ருபாஸிதம் .
உபேத்ய பூ⁴மௌ ஶிரஸா மஹாமனா
நநாம மூர்த்⁴னா புலகாஶ்ருவிக்லவ꞉ .. 15..

ப்ரஹ்லாத³ உவாச
த்வயைவ த³த்தம்ʼ பத³மைந்த்³ரமூர்ஜிதம்ʼ
ஹ்ருʼதம்ʼ ததே³வாத்³ய ததை²வ ஶோப⁴னம் .
மன்யே மஹானஸ்ய க்ருʼதோ ஹ்யனுக்³ரஹோ
விப்⁴ரம்ʼஶிதோ யச்ச்²ரிய ஆத்மமோஹனாத் .. 16..

யயா ஹி வித்³வானபி முஹ்யதே யதஸ்தத்கோ
விசஷ்டே க³திமாத்மனோ யதா² .
தஸ்மை நமஸ்தே ஜக³தீ³ஶ்வராய வை
நாராயணாயாகி²லலோகஸாக்ஷிணே .. 17..

ஶ்ரீஶுக உவாச
தஸ்யானுஶ்ருʼண்வதோ ராஜன் ப்ரஹ்லாத³ஸ்ய க்ருʼதாஞ்ஜலே꞉ .
ஹிரண்யக³ர்போ⁴ ப⁴க³வானுவாச மது⁴ஸூத³னம் .. 18..

ப³த்³த⁴ம்ʼ வீக்ஷ்ய பதிம்ʼ ஸாத்⁴வீ தத்பத்னீ ப⁴யவிஹ்வலா .
ப்ராஞ்ஜலி꞉ ப்ரணதோபேந்த்³ரம்ʼ ப³பா⁴ஷே(அ)வாங்முகீ² ந்ருʼப .. 19..

விந்த்⁴யாவலிருவாச
க்ரீடா³ர்த²மாத்மன இத³ம்ʼ த்ரிஜக³த்க்ருʼதம்ʼ தே
ஸ்வாம்யம்ʼ து தத்ர குதி⁴யோ(அ)பர ஈஶ குர்யு꞉ .
கர்து꞉ ப்ரபோ⁴ஸ்தவ கிமஸ்யத ஆவஹந்தி
த்யக்தஹ்ரியஸ்த்வத³வரோபிதகர்த்ருʼவாதா³꞉ .. 20..

ப்³ரஹ்மோவாச
பூ⁴தபா⁴வன பூ⁴தேஶ தே³வதே³வ ஜக³ன்மய .
முஞ்சைனம்ʼ ஹ்ருʼதஸர்வஸ்வம்ʼ நாயமர்ஹதி நிக்³ரஹம் .. 21..

க்ருʼத்ஸ்னா தே(அ)னேன த³த்தா பூ⁴ர்லோகா꞉ கர்மார்ஜிதாஶ்ச யே .
நிவேதி³தம்ʼ ச ஸர்வஸ்வமாத்மாவிக்லவயா தி⁴யா .. 22..

யத்பாத³யோரஶட²தீ⁴꞉ ஸலிலம்ʼ ப்ரதா³ய
தூ³ர்வாங்குரைரபி விதா⁴ய ஸதீம்ʼ ஸபர்யாம் .
அப்யுத்தமாம்ʼ க³திமஸௌ ப⁴ஜதே த்ரிலோகீம்ʼ
தா³ஶ்வானவிக்லவமனா꞉ கத²மார்திம்ருʼச்சே²த் .. 23..

ஶ்ரீப⁴க³வானுவாச
ப்³ரஹ்மன் யமனுக்³ருʼஹ்ணாமி தத்³விஶோ விது⁴னோம்யஹம் .
யன்மத³꞉ புருஷ꞉ ஸ்தப்³தோ⁴ லோகம்ʼ மாம்ʼ சாவமன்யதே .. 24..

யதா³ கதா³சிஜ்ஜீவாத்மா ஸம்ʼஸரன் நிஜகர்மபி⁴꞉ .
நானாயோநிஷ்வனீஶோ(அ)யம்ʼ பௌருஷீம்ʼ க³திமாவ்ரஜேத் .. 25..

ஜன்மகர்மவயோரூபவித்³யைஶ்வர்யத⁴நாதி³பி⁴꞉ .
யத்³யஸ்ய ந ப⁴வேத்ஸ்தம்ப⁴ஸ்தத்ராயம்ʼ மத³னுக்³ரஹ꞉ .. 26..

மானஸ்தம்ப⁴நிமித்தானாம்ʼ ஜன்மாதீ³னாம்ʼ ஸமந்தத꞉ .
ஸர்வஶ்ரேய꞉ப்ரதீபானாம்ʼ ஹந்த முஹ்யேன்ன மத்பர꞉ .. 27..

ஏஷ தா³னவதை³த்யாநாமக்³ரணீ꞉ கீர்திவர்த⁴ன꞉ .
அஜைஷீத³ஜயாம்ʼ மாயாம்ʼ ஸீத³ன்னபி ந முஹ்யதி .. 28..

க்ஷீணரிக்த²ஶ்ச்யுத꞉ ஸ்தா²னாத்க்ஷிப்தோ ப³த்³த⁴ஶ்ச ஶத்ருபி⁴꞉ .
ஜ்ஞாதிபி⁴ஶ்ச பரித்யக்தோ யாதநாமனுயாபித꞉ .. 29..

கு³ருணா ப⁴ர்த்ஸித꞉ ஶப்தோ ஜஹௌ ஸத்யம்ʼ ந ஸுவ்ரத꞉ .
ச²லைருக்தோ மயா த⁴ர்மோ நாயம்ʼ த்யஜதி ஸத்யவாக் .. 30..

ஏஷ மே ப்ராபித꞉ ஸ்தா²னம்ʼ து³ஷ்ப்ராபமமரைரபி .
ஸாவர்ணேரந்தரஸ்யாயம்ʼ ப⁴விதேந்த்³ரோ மதா³ஶ்ரய꞉ .. 31..

தாவத்ஸுதலமத்⁴யாஸ்தாம்ʼ விஶ்வகர்மவிநிர்மிதம் .
யன்னாத⁴யோ வ்யாத⁴யஶ்ச க்லமஸ்தந்த்³ரா பராப⁴வ꞉ .
நோபஸர்கா³ நிவஸதாம்ʼ ஸம்ப⁴வந்தி மமேக்ஷயா .. 32..

இந்த்³ரஸேன மஹாராஜ யாஹி போ⁴ ப⁴த்³ரமஸ்து தே .
ஸுதலம்ʼ ஸ்வர்கி³பி⁴꞉ ப்ரார்த்²யம்ʼ ஜ்ஞாதிபி⁴꞉ பரிவாரித꞉ .. 33..

ந த்வாமபி⁴ப⁴விஷ்யந்தி லோகேஶா꞉ கிமுதாபரே .
த்வச்சா²ஸனாதிகா³ன் தை³த்யாம்ʼஶ்சக்ரம்ʼ மே ஸூத³யிஷ்யதி .. 34..

ரக்ஷிஷ்யே ஸர்வதோ(அ)ஹம்ʼ த்வாம்ʼ ஸானுக³ம்ʼ ஸபரிச்ச²த³ம் .
ஸதா³ ஸந்நிஹிதம்ʼ வீர தத்ர மாம்ʼ த்³ரக்ஷ்யதே ப⁴வான் .. 35..

தத்ர தா³னவதை³த்யானாம்ʼ ஸங்கா³த்தே பா⁴வ ஆஸுர꞉ .
த்³ருʼஷ்ட்வா மத³னுபா⁴வம்ʼ வை ஸத்³ய꞉ குண்டோ² வினங்க்ஷ்யதி .. 36..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ வாமனப்ராது³ர்பா⁴வே ப³லிவாமனஸம்ʼவாதோ³ நாம த்³வாவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 22..

—————————————–

இவ்விதம் பகவானால் வினவப்பட்ட பலி தன் வாக்கை பொய்யாக்கக் கூடாது என்றெண்ணி வாமனருடைய
மூன்றாவது அடியைத் தன் தலை மேல் வைக்கும்படி கூறினான். அவன் கூறியதாவது,

பிபேமி நாஹம் நிரயாத் பதச்யுத:
ந பாசபத்தாத் வ்யஸனாத் துரத்யயாத்
நைவார்த்த க்ருச்ராத் பவதோ விநிக்ரஹாத்
அஸாதுவாதாத் ப்ருசம் உத்விஜேத் யதா

“பொய்யன் என்ற அபகீர்த்தியில் அஞ்சுவது போல் நரகம் புகுவதிலோ, பாசத்தால் பிணிக்கப்படுவதிலோ ,
கடத்தற்கரிய துன்பத்தை அடைவதிலோ ,பொருளை இழப்பதிலோ உங்களிடம் தண்டனை பெறுவதிலோ நான் அஞ்சவில்லை.”

இங்கு முதலடியால் பூமி முழுவதும் அளந்த போது அதில் பலியும் உட்பட்டவன் அல்லவா ?
அப்படி இருக்க மூன்றாவது அடி அவன் தலையில் வைப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில்,
உடைமையை விட உடையவன் பெரியோன் . அதனால் அது பொருத்தமே என்று கூறப்படுகிறது.

பின்னர் பலி பகவானின் பக்தனான பிரஹ்லாதன் வம்சத்தில் தோன்றிய புண்ணியத்தினால்
பகவானின் திருவடி தன் சிரசில் படும் பாக்கியம் கிடைத்தது என்று கூறினான்.

பலி இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையில் அவனுடைய பாட்டனாரான பிரஹ்லாதன் அங்கு தோன்றினார். அவர் பகவானிடம் ,
“ உயர்வான இந்திர பதவி கிடைத்ததும் உம் அருள். இப்போது எடுத்துக்கொள்ளப்பட்டதும் நன்மையே ஆகும்.
புத்தியை மயக்கும் செல்வத்தை விட்டுப் பிரிந்தது இவனுக்கு செய்த அநுக்ரஹம்.” என்றார்.

அப்போது பிரம்மா பலியைக் கட்டிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்
ஏனென்றால் அவனுடைய் உடமை அனைத்தும் பறித்துக் கொண்ட பிறகு அவனை சிக்ஷித்தல் தகாது என்றார்.

அதற்கு பகவான் “ எவனுக்கு அருள் புரிய எண்ணுகிறேனோ அவனுடைய பொருளை போக்கி விடுகிறேன். “என்றார்.
மகாபலிக்கு பகவானின் அருள் கிடைக்கத் தடையாய் இருந்தது செல்வத்தில் மமகாரமும் உடலில் அஹங்காரமும்.
இவைகளை பலியிடம் இருந்து கவர்ந்து பகவான் வஞ்சிப்பது போல் லீலை புரிந்தார்.

ஆயினும் பிறப்பு , தொழில், இளமை, அழகு, கல்வி, செல்வாக்கு, பொருள் இவற்றால் ஒருவருக்கு
கர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லவா? அப்பேர்ப்பட்டவன் பகவானின் அருளுக்கு பாத்திரம் ஆனவனாவான்.

மகாபலி ஒரு சிறந்த பக்தன். அவன் ஸாவர்ணி மன்வந்தரத்தில் இந்திர பதவியை அடைவான் என்று கூறி
அவனை தேவர்களும் விரும்பும் ஸுதல லோகம் செல்லும்படியும் அங்கு எப்போதும் அருகில் இருந்து
அவனைத் தான் காப்பாற்றுவதாகவும் பகவான் வாக்களித்தார்.

ஒருமுறை ராவணன் பலியை வெல்லும் பொருட்டு ஸு தல லோகம் வந்ததாகவும் அவனை பகவான்
தன் கால் கட்டைவிரலால் தூக்கி எறிந்ததாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

பலி ப்ரஹ்லாதனைப் போல் சிரஞ்சீவியாக ஸுதல லோகத்தில் சுற்றம் சூழ
ப்ரஹ்லாதனுடன் பகவானை எப்போதும் கண்டு மகிழ்வுடன் வசித்தான்–

———————–————

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 23-தேவர்கள் இழந்த ஐஸ்வர்யம் பெறுதல்–

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்தவந்தம்ʼ புருஷம்ʼ புராதனம்ʼ
மஹானுபா⁴வோ(அ)கி²லஸாது⁴ஸம்மத꞉ .
ப³த்³தா⁴ஞ்ஜலிர்பா³ஷ்பகலாகுலேக்ஷணோ
ப⁴க்த்யுத்³க³லோ க³த்³க³த³யா கி³ராப்³ரவீத் .. 1..

ப³லிருவாச
அஹோ ப்ரணாமாய க்ருʼத꞉ ஸமுத்³யம꞉
ப்ரபன்னப⁴க்தார்த²விதௌ⁴ ஸமாஹித꞉ .
யல்லோகபாலைஸ்த்வத³னுக்³ரஹோ(அ)மரை-
ரலப்³த⁴பூர்வோ(அ)பஸதே³(அ)ஸுரே(அ)ர்பித꞉ .. 2..

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்த்வா ஹரிமானம்ய ப்³ரஹ்மாணம்ʼ ஸப⁴வம்ʼ தத꞉ .
விவேஶ ஸுதலம்ʼ ப்ரீதோ ப³லிர்முக்த꞉ ஸஹாஸுரை꞉ .. 3..

ஏவமிந்த்³ராய ப⁴க³வான் ப்ரத்யானீய த்ரிவிஷ்டபம் .
பூரயித்வாதி³தே꞉ காமமஶாஸத்ஸகலம்ʼ ஜக³த் .. 4..

லப்³த⁴ப்ரஸாத³ம்ʼ நிர்முக்தம்ʼ பௌத்ரம்ʼ வம்ʼஶத⁴ரம்ʼ ப³லிம் .
நிஶாம்ய ப⁴க்திப்ரவண꞉ ப்ரஹ்லாத³ இத³மப்³ரவீத் .. 5..

ப்ரஹ்லாத³ உவாச
நேமம்ʼ விரிஞ்சோ லப⁴தே ப்ரஸாத³ம்ʼ
ந ஶ்ரீர்ன ஶர்வ꞉ கிமுதாபரே தே .
யன்னோ(அ)ஸுராணாமஸி து³ர்க³பாலோ
விஶ்வாபி⁴வந்த்³யைரபி⁴வந்தி³தாங்க்⁴ரி꞉ .. 6..

யத்பாத³பத்³மமகரந்த³நிஷேவணேன
ப்³ரஹ்மாத³ய꞉ ஶரணதா³ஶ்னுவதே விபூ⁴தீ꞉ .
கஸ்மாத்³வயம்ʼ குஸ்ருʼதய꞉ க²லயோனயஸ்தே
தா³க்ஷிண்யத்³ருʼஷ்டிபத³வீம்ʼ ப⁴வத꞉ ப்ரணீதா꞉ .. 7..

சித்ரம்ʼ தவேஹிதமஹோ(அ)மிதயோக³மாயா-
லீலாவிஸ்ருʼஷ்டபு⁴வனஸ்ய விஶாரத³ஸ்ய .
ஸர்வாத்மன꞉ ஸமத்³ருʼஶோ(அ)விஷம꞉ ஸ்வபா⁴வோ
ப⁴க்தப்ரியோ யத³ஸி கல்பதருஸ்வபா⁴வ꞉ .. 8..

ஶ்ரீப⁴க³வானுவாச
வத்ஸ ப்ரஹ்லாத³ ப⁴த்³ரம்ʼ தே ப்ரயாஹி ஸுதலாலயம் .
மோத³மான꞉ ஸ்வபௌத்ரேண ஜ்ஞாதீனாம்ʼ ஸுக²மாவஹ .. 9..

நித்யம்ʼ த்³ரஷ்டாஸி மாம்ʼ தத்ர க³தா³பாணிமவஸ்தி²தம் .
மத்³த³ர்ஶனமஹாஹ்லாத³த்⁴வஸ்தகர்மநிப³ந்த⁴ன꞉ .. 10..

ஶ்ரீஶுக உவாச
ஆஜ்ஞாம்ʼ ப⁴க³வதோ ராஜன் ப்ரஹ்லாதோ³ ப³லினா ஸஹ .
பா³ட⁴மித்யமலப்ரஜ்ஞோ மூர்த்⁴ன்யாதா⁴ய க்ருʼதாஞ்ஜலி꞉ .. 11..

பரிக்ரம்யாதி³புருஷம்ʼ ஸர்வாஸுரசமூபதி꞉ .
ப்ரணதஸ்தத³னுஜ்ஞாத꞉ ப்ரவிவேஶ மஹாபி³லம் .. 12..

அதா²ஹோஶனஸம்ʼ ராஜன் ஹரிர்நாராயணோ(அ)ந்திகே .
ஆஸீனம்ருʼத்விஜாம்ʼ மத்⁴யே ஸத³ஸி ப்³ரஹ்மவாதி³னாம் .. 13..

ப்³ரஹ்மன் ஸந்தனு ஶிஷ்யஸ்ய கர்மச்சி²த்³ரம்ʼ விதன்வத꞉ .
யத்தத்கர்மஸு வைஷம்யம்ʼ ப்³ரஹ்மத்³ருʼஷ்டம்ʼ ஸமம்ʼ ப⁴வேத் .. 14..
ஶுக்ர உவாச
குதஸ்தத்கர்மவைஷம்யம்ʼ யஸ்ய கர்மேஶ்வரோ ப⁴வான் .
யஜ்ஞேஶோ யஜ்ஞபுருஷ꞉ ஸர்வபா⁴வேன பூஜித꞉ .. 15..

மந்த்ரதஸ்தந்த்ரதஶ்சி²த்³ரம்ʼ தே³ஶகாலார்ஹவஸ்துத꞉ .
ஸர்வம்ʼ கரோதி நிஶ்சி²த்³ரம்ʼ நாமஸங்கீர்தனம்ʼ தவ .. 16..

ததா²பி வத³தோ பூ⁴மன் கரிஷ்யாம்யனுஶாஸனம் .
ஏதச்ச்²ரேய꞉ பரம்ʼ பும்ʼஸாம்ʼ யத்தவாஜ்ஞானுபாலனம் .. 17..

ஶ்ரீஶுக உவாச
அபி⁴னந்த்³ய ஹரேராஜ்ஞாமுஶனா ப⁴க³வானிதி .
யஜ்ஞச்சி²த்³ரம்ʼ ஸமாத⁴த்த ப³லேர்விப்ரர்ஷிபி⁴꞉ ஸஹ .. 18..

ஏவம்ʼ ப³லேர்மஹீம்ʼ ராஜன் பி⁴க்ஷித்வா வாமனோ ஹரி꞉ .
த³தௌ³ ப்⁴ராத்ரே மஹேந்த்³ராய த்ரிதி³வம்ʼ யத்பரைர்ஹ்ருʼதம் .. 19..

ப்ரஜாபதிபதிர்ப்³ரஹ்மா தே³வர்ஷிபித்ருʼபூ⁴மிபை꞉ .
த³க்ஷப்⁴ருʼக்³வங்கி³ரோமுக்²யை꞉ குமாரேண ப⁴வேன ச .. 20..

கஶ்யபஸ்யாதி³தே꞉ ப்ரீத்யை ஸர்வபூ⁴தப⁴வாய ச .
லோகானாம்ʼ லோகபாலாநாமகரோத்³வாமனம்ʼ பதிம் .. 21..

வேதா³னாம்ʼ ஸர்வதே³வானாம்ʼ த⁴ர்மஸ்ய யஶஸ꞉ ஶ்ரிய꞉ .
மங்க³லானாம்ʼ வ்ரதானாம்ʼ ச கல்பம்ʼ ஸ்வர்கா³பவர்க³யோ꞉ .. 22..

உபேந்த்³ரம்ʼ கல்பயாஞ்சக்ரே பதிம்ʼ ஸர்வவிபூ⁴தயே .
ததா³ ஸர்வாணி பூ⁴தானி ப்⁴ருʼஶம்ʼ முமுதி³ரே ந்ருʼப .. 23..

ததஸ்த்விந்த்³ர꞉ புரஸ்க்ருʼத்ய தே³வயானேன வாமனம் .
லோகபாலைர்தி³வம்ʼ நின்யே ப்³ரஹ்மணா சானுமோதி³த꞉ .. 24..

ப்ராப்ய த்ரிபு⁴வனம்ʼ சேந்த்³ர உபேந்த்³ரபு⁴ஜபாலித꞉ .
ஶ்ரியா பரமயா ஜுஷ்டோ முமுதே³ க³தஸாத்⁴வஸ꞉ .. 25..

ப்³ரஹ்மா ஶர்வ꞉ குமாரஶ்ச ப்⁴ருʼக்³வாத்³யா முனயோ ந்ருʼப .
பிதர꞉ ஸர்வபூ⁴தானி ஸித்³தா⁴ வைமானிகாஶ்ச யே .. 26..

ஸுமஹத்கர்ம தத்³விஷ்ணோர்கா³யந்த꞉ பரமாத்³பு⁴தம் .
தி⁴ஷ்ண்யானி ஸ்வானி தே ஜக்³முரதி³திம்ʼ ச ஶஶம்ʼஸிரே .. 27..

ஸர்வமேதன்மயா(ஆ)க்²யாதம்ʼ ப⁴வத꞉ குலநந்த³ன .
உருக்ரமஸ்ய சரிதம்ʼ ஶ்ரோத்ரூʼணாமக⁴மோசனம் .. 28..

பாரம்ʼ மஹிம்ன உருவிக்ரமதோ க்³ருʼணானோ
ய꞉ பார்தி²வானி விமமே ஸ ரஜாம்ʼஸி மர்த்ய꞉ .
கிம்ʼ ஜாயமான உத ஜாத உபைதி மர்த்ய
இத்யாஹ மந்த்ரத்³ருʼக்³ருʼஷி꞉ புருஷஸ்ய யஸ்ய .. 29..

ய இத³ம்ʼ தே³வதே³வஸ்ய ஹரேரத்³பு⁴தகர்மண꞉ .
அவதாரானுசரிதம்ʼ ஶ்ருʼண்வன் யாதி பராம்ʼ க³திம் .. 30..

க்ரியமாணே கர்மணீத³ம்ʼ தை³வே பித்ர்யே(அ)த² மானுஷே .
யத்ர யத்ரானுகீர்த்யேத தத்தேஷாம்ʼ ஸுக்ருʼதம்ʼ விது³꞉ .. 31..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா-
மஷ்டமஸ்கந்தே⁴ வாமனாவதாரசரிதே த்ரயோவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 23..

————————-

ப்ரஹ்லாதன் பலியின் பாக்கியத்தைப் பின்வருமாறு போற்றினார்.
நைவம் விரிஞ்சோ லபதே பிரஸாதம் ந ஸ்ரீ: ந சிவ: கிமுதாபரே தே
யன்னோ அஸுராணாம் அபி துர்கபால: விச்வாபிவந்த்யைரபி வந்திதாங்க்ரி:

“இத்தகைய அருளை பிரம்மாவும் லக்ஷ்மீ தேவியும் ருத்திரனும் கூட அடையவில்லை.மற்றவர் எவ்வாறு அடைய முடியும்?
எவரகளை உலகமெல்லாம் வணங்குகிறதோ அவர்களும் வணங்கும் திருவடியுடைய தாங்கள்
எங்கள் கோட்டைக்கு காவலராக அல்லவா ஆகிறீர் !”

பின்னர் சுக்ராசாரியர் பகவானின் அனுமதியுடன் பலியின் தடைப்பட்ட யாகத்தை பூர்த்தி செய்தார்.
பகவான் பலியுனால் அபகரிக்கப்பட்டிருந்த ஸ்வர்க லோகத்தை இந்திரனுக்களித்தார்.

சுகர் கூறினார்.
கேட்பவரின் பாவங்களைப் போக்கக்கூடிய இந்த வாமனாவதாரத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே
ஒருவன் ஒப்புயர்வற்ற பதவியை அடைவான்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 30—ஸ்ரீ வாமன அவதார ஸ்லோகங்கள்–

வசந்த திலகத்தின் இதில் அனைத்து ஸ்லோகங்களும் -14 அச்சு எழுத்துக்கள் -கோதா ஸ்துதி போல்-பாதம் தோறும் -இனிமையான காலம் உண்டானதே
இந்த அத்யாயம் ஸுலப்யம் -அடுத்து பரத்வம்

சக்ரேண ஸம்யதி ஹதோபி பலி: மஹாத்மா
சுக்ரேண ஜீவிததனு: க்ரது வர்த்திதோஷ்மா
விக்ராந்திமான் பய நிலீந ஸூராம் த்ரிலோகீம்
சக்ரே வசே ஸ தவ சக்ரமுகாந் அபீத:–1-

பொருள்: கிருஷ்ணா, குருவாயூரப்பா, பரந்த மனம் உடைய பலி என்ற அசுரன் இந்திரனால் கொல்லப் பட்ட போதும்,
சுக்ராச்சாரியாரால் உயிர் பிழைத்தான். பின்னர் சுக்ராச்சாரியார் மேற்கொண்ட -அதர்வண வேதத்தில் சொல்லிய -விஸ்வஜித் என்ற யாகம் மூலமாக
மிகுந்த சக்தியையும், வலிமையையும் பெற்றான். அதனால் உன்னுடைய சக்ராயுதத்திற்குக் கூட பயப்படாமல்
அனைத்து உலகங்களையும் தன் வசமாக்கினான். தேவர்களை ஓடி ஒளிய வைத்தான்.

மஹாத்மா -பிரகலாதன் பிள்ளை விரோசனன் பிள்ளை இவன் –தானம் நிறைய புண்ணியவான் –
ஸ்ரத்தாயா தேயம் அஸ்ரத்தையா தேயம் –சிரத்தை யுடன் தானம் செய்ய வேண்டும் -தானம் செய்ய பாக்யம் இத்தை வாங்க வந்தவனால் பெற்றோமே என்று மரியாதை காட்டியும்- தானம் கொடுக்கும் பொருளில் சிரத்தை வைக்காமலும் தானம் செய்ய வேண்டும் -ஆச்சார்ய பக்தி நிறைந்தவன் -ஆகிய மூன்றும் உண்டே இவன் இடம்

ஏழு சிரஞ்சீவியின் ஒருவன் -மஹாபலி
பீஷ்மர் -திருவடி -விபீஷணன் -துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன்- -வியாசர் -கிருபாச்சார்யர்
மிருகண்ட முனிவர் – மருத்துவதி குமாரர்-மார்க்கண்டேயன் -என்றும் சொல்வர்

அஸ்தமன கிரியில் -கொண்டு செல்ல நாரதர் உபதேசம் -அசுரர்களும் இவர் உபதேசம் பெற்று செய்வார்கள்
சஞ்சீவினி மந்த்ரம் -பிரயோகித்தார்-யாகத்தீயில் இருந்து பெற்ற சேனை
பிரகலாதன் தாத்தா அணிந்த மாலை தரித்து மஹாபலி சென்றான்
ஆச்சார்ய பக்தியால் பெற்ற பலம் மீண்டும் உயிர் பெற்றான்

அம்புயர் கோன் விண்ணாடு அளிக்க மாட்டானே குரு பக்தி இல்லாவிடில் -இருந்தால் தானே வைகுந்தம் தருவான்

தவ சக்ரமுகாந் அபீத:-சக்ராயுதத்துக்குப் பயப்படாமல் இருந்ததே குற்றம்
நாராயணனுக்கு பயந்தால் எதுக்கும் அஞ்ச வேண்டாம் -இல்லையால் அனைத்துக்கும் பயந்து போக வேண்டியது தானே

————

புத்ரார்த்தி தர்சன வசாத் அதிதி: விஷண்ணா
தம் காச்யபம் நிஜபதிம் சரணம் ப்ரபந்நா
த்வத் பூஜநம் ததுதிதம் ஹி பயோ வ்ரதாக்யம்
ஸா த்வாதசாஹம் அசரத் த்வயி பக்தி பூர்ணா–2-

குருவாயூரப்பா, தனது புத்திரர்களான தேவர்கள் நிலையைக் கண்ட அவர்கள் தாயான அதிதி, வருத்தம் கொண்டாள்.
(காசியப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள்; அவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் தேவர்கள்.)
தனது கணவரான காசியப முனிவரின் பாதங்களில் விழுந்து சரணம் அடைந்தாள்.
அவரும் பயோ வ்ரதம் என்னும் பெயர் கொண்ட உன்னுடைய பூஜையை அவருக்கு உபதேசித்தார்.
அவளும் அந்தப் பூஜையை மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டு நாட்கள் செய்தாள்.

தம் காச்யபம்-அந்த -சுட்டு -அந்த உயர்ந்தவரான காஸ்யபர்-இந்த சரீரம் விட்டு அந்த வைகுந்தம் அடைகிறான்
பஸ்ய -பார்ப்பவர் -முக்காலம் அறிவு கொண்டவர் -த்ருஷ்டிக்காக -கஸ்யபர் பெயர் வைத்தார்களாம் –

பயோ வ்ரதம் –பயஸ் பால் மட்டும் குடித்து
மாசி அம்மாவாசை பங்குனி அம்மாவாசை நடுவில் பல்குநி மாதம் -சந்திரன் அடிப்படையில்
நதியில் அழுந்தி நீராடி -பால் மட்டும் குடித்து -விருந்து ஓம்பி 12 நாள் -இருக்க வேண்டும்

—————-

தஸ்ய அவதௌ த்வயி நிலீனமதே: அமுஷ்யா
ச்யாம: சதுர்புஜ வபு: ஸ்வயம் ஆவிராஸீ!
நம்ராம் ச தாம் இஹ பவத்தனய: பவேயம்
கோப்யம் மதீக்ஷணம் இதி ப்ரலபன் அயாஸீ:–3-

குருவாயூரப்பா, அத்தகைய விரதத்தின் இறுதியில் அதிதி உன்மீது தனது மனதை முழுவதுமாக செலுத்தியிருந்தாள்.
அப்போது நீ அவளுக்கு முன்பாக கறுத்த உனது திருமேனியுடன், நான்கு திருச் சக்கரங்களுடன் கூடிய உருவமாகத் தோன்றினாய்.
அவள் உன்னைக் கண்டதும் துதித்து நின்றாள். நீ அவளிடம், ‘‘நான் உனக்கு மகனாகப் பிறக்கப் போகிறேன்.
இவ்விதமாக என்னை நீ இங்கு பார்த்த காட்சியை ரகசியமாக வைத்துக் கொள்’’ என்று கூறி மறைந்தாய்.

அமுஷ்யா-ப்ரத்யக்ஷமாக தோன்றி அருளினாய்-கருணை வள்ளல் -நீலமேக ஸ்யாமளன் -நான்கு புருஷார்த்தம் -நான்கு திருக்கரங்கள் –
தோன்றினாய் -எங்கும் நிறைந்த விபு -அன்றோ -தன்னைக் காட்டிக் கொடுக்கவே வேண்டும்-நம்ராம் ச தாம்—தண்டம் சமர்ப்பித்து சேவிக்க வேண்டுமே –
மஹாபலி ஆச்சார்ய பக்தன் கொல்ல முடியாதே -பிரகலாதன் பேரன் —

————–

திரு அவதார ஸ்லோகம்

த்வம் காச்யபே தபஸி ஸந்நித தத் ததானீம்
ப்ராப்த: அஸி கர்ப்பம் அதிதே: ப்ரணுத: விதாத்ரா
ப்ராஸுத ச ப்ரகட வைஷ்ணவ திவ்ய ரூபம்
ஸா த்வாதசீ ச்ரவண புண்யதினே பவந்தம்–4-

குருவாயூரப்பா, அதன் பின்னர் காசியப முனிவரின் தவ வலிமையால் உண்டான வீரியத்தில் நீ புகுந்தாய்.
அதன் மூலம் அதிதியின் கர்ப்பத்தில் புகுந்தாய். அப்போது பிரம்ம தேவன் உன்னைத் துதித்தான்.
அதிதியானவள் ஒளி வீசும்படியான சங்கு சக்கரம் கொண்ட திருமேனி உடைய உன்னை,
துவாதசி திதியன்று, சிரவண நட்சத்திர தினத்தில் பெற்றாள்.

என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
நான்கு திருக்கரங்களுடன் தோன்றினாய்
சங்கு சக்கர தாமரை கதாதரனாய்-பட்டுப்பீதாம்பரம் -ஸ்ரீ வத்ஸ-வண்டுகள் மொய்க்கும் வனமாலை -கௌஸ்துபம்
குருவாயூர் அப்பன் போலவே –
ஜடராஜ குண்டலர் -மகர நெடும் குழைக்காதர் -தேஜஸ் மிக்கு -பரம புருஷன் -நூபுரம் அணிந்து –

பாத்திர பாத மாதம் -ஆவணி அமாவாசை புரட்டாசி அம்மாவாசை -ஸ்ரவணம் அபிஜித் முஹூர்த்தம் –

————–

புண்யாச்ரமம் தம் அபிவர்ஷதி புஷ்ப வர்ஷை:
ஹர்ஷாகுலே ஸுரகுலே க்ருத தூர்ய கோஷே
பத்வா அஞ்சலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்யாம்
த்வம் தத் க்ஷணே படு தமம் வடு ரூபம் ஆதா:–5-

குருவாயூரப்பா, நீ பிறந்ததால் மிகுந்த புண்ணியம் அடைந்த காசியபரின் ஆசிரமத்தை அனைத்து திசைகளில் இருந்தும்
மலர்கள் தூவி ஸ்தோத்திரம் செய்தனர். உனது பிறப்பால் மிகுந்த மகிழ்வுற்ற தேவர்கள் இப்படிச் செய்தனர்.
உனது தாய், தந்தை உன்னை வாழ்த்தினர். அந்த நொடியிலேயே நீ பிரம்மச்சாரியாக உனது உருவத்தை மாற்றிக் கொண்டாய்.

ஸுரகுலே க்ருத தூர்ய கோஷே-தேவர் கூட்டம் ஒளிந்து பூ மாறி -தூர்ய கோஷம் -ஜய ஜயேதி-பல்லாண்டு பாட-

நாராயணனாகப் அவதாரம் வாமனனாக மாறி -கண்ணனைப் போலவே இவனும் –

—————

தாவத் ப்ரஜாபதி முகை: உபனீய மௌஞ்ஜீ
தண்ட அஜின அக்ஷ வலயாதிபி: அர்ச்யமாந:
தேதீப்யமாந வபு: ஈச க்ருத அக்னி கார்ய:
த்வம் ப்ராஸ்திதா: பலிக்ருஹம் ப்ரக்ருத அச்வமேதம்-6-

குருவாயூரப்பா, அப்போது உனது தந்தையான காசியப பிரஜாதிபதி உனக்கு உபநயனம் செய்து வைத்தார்.
நீ மௌஞ்சி என்னும் இடுப்பில் உள்ள கயிறு, பலாசதண்டம், கிருஷ்ணாஜினம் என்னும் மான் தோல், ருத்ராட்ச மாலை
ஆகியவற்றை அப்போது அணிந்தாய். அதன் பின்னர் நீ உனது அக்னி ஹோமத்தைச் செய்தாய்.
தொடர்ந்து, மகாபலி நடத்தும் அஸ்வமேத யாகம் நடைபெறுகின்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டாய்.

ப்ரம்மா கமண்டலம்-சப்த ரிஷிகள் தர்ப்பம்-தாய் கௌபீனம்
சோமன் வனதேவதை-பலாச தண்டம்,-பிரஹஸ்பதி பூணல் -சூர்யன் காயத்ரி உபதேசம் -கைங்கர்யம்
மான் தோல் -பூமி தேவி-ஜப மாலை ஸரஸ்வதி-குபேரன் பிச்சை பாத்திரம் -பார்வதி முதல் பிச்சை
ஜாத கர்மம் ரிஷிகள் பிறந்த உடன் செய்ய -தாய் பாலை கொடுக்கும் முன்பே செய்ய வேண்டும்

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய், மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை,
தேன் கொண்ட சாரல் திருவேங் கடத்தானை,
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே. -சனிக்கிழமை நம்பியை சேவிக்க 16 தடவை திருவேங்கடத்தானை சேவித்த பலன்

வாமனன் -ஒளி மிக்க திரு மேனி-ப்ரஹ்மசாரி -பிச்சை எடுத்து -பணிவு விநயம் வர இந்த கார்யம்

—————-

காத்ரேண பாவி மஹிமோசித கௌரவம் ப்ராக்
வ்யா வ்ருண்வதா இவ தரணீம் சலயந் அயாஸீ:
சத்ரம் பரோஷ்மதிரணார்த்தம் இவ ஆததாந:
தண்டம் ச தானவ ஜனேஷு இவ ஸந்நிதாதும்–7

குருவாயூரப்பா, பின்னால் உனக்கு உண்டாகப் போகும் பெருத்த மகிமையை இப்போதே இந்தப் பூமி தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக உனது உடல் அசைவின் மூலம் பூமியே நடுங்கும்படி நடந்தாய். அரக்கர்களின் பெருமையை மறைப்பது போன்று
உனது கைகளில் குடை இருந்தது. அசுரர்களை ஒடுக்குவதற்காக கையில் தண்டம் இருந்தது. இப்படியாக நீ சென்றாய்.

ஸ்வர்க்க தேவதை குடை அசுரர் வெப்பம் தங்குவதற்காக
அசுரர் இடம் தண்டம் பிரயோகிக்க கையில் தண்டம்
சாம தான பேத -உதவாதே அவர்கள் இடம்

நர்மதா வடக்குக்கரையில் அஸ்வமேதம் செய்யும் இடம்
ஓங்கி உலகு அளக்கும் பொழுது பெறும் எடை பாரம் -இப்பொழுதே
பட்டர் -பூமி நடுங்கிற்றெ -இவன் யாசகம் போவதை அறிந்து நஞ்சீயர் -இவனே நடுங்கினான் -முதல் தடவை யாசகம் போனதால் –

—————–

தாம் நர்மதோத்தரதடே ஹயமேதசாலாம்
ஆஸேதுஷி த்வயி ருசா தவ ருத்த தேத்ரை:
பாஸ்வாந் கிம் ஏஷ: தஹனோ நு நைத்குமாரோ
யோகீ நு கோ அயம் இதி சுக்ரமுகை: சசங்கே–8-

குருவாயூரப்பா, நர்மதை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த அந்த அஸ்வமேத யாகசாலையை நீ அடைந்தாய்.
அப்போது உனது உடலில் இருந்து தோன்றிய ஒளி மிகவும் பிரகாசமாக இருந்தது. அந்த ஒளியால் தங்கள் கண்கள்
கூசியதால் பார்வை பாதிக்கப்பட்டு விளங்கிய சுக்ராச்சாரியார் போன்ற முனிவர்கள் உன்னைக் கண்டு,
‘இந்தச் சிறுவன் யார்? சூரியனா, அக்னி தேவனா? முனிவரான ஸனத் குமாரரா?’ என்று சந்தேகத்துடன் கேட்டனர்.

————–

ஆநீதம் ஆசு ப்ருகுபி: மஹஸா அபிபூைத:
த்வாம் ரம்ய ரூபம் அஸுர: புலகா வ்ருதாங்க:
பக்த்யா ஸமேத்ய ஸுக்ருத: பரிபூஜ்ய பாதௌ
தத்தோயம் அந்வத்ருத மூர்த்தநி தீர்த்த தீர்த்தம்–9-

குருவாயூரப்பா, உன்னுடைய ஒளியைக் கண்டு திகைத்து நின்ற சுக்ராச்சாரியார் போன்றவர்கள் சுதாரித்துக் கொண்டு
உன்னை வரவேற்றனர். மிகுந்த அழகிய உருவம் படைத்த உன்னைக் கண்டவுடன் மஹாபலிக்கு மெய் சிலிர்த்தது.
அவன் விரைந்து உன்னிடம் வந்து உனது திருவடிகளை நீரில் கழுவினான்.
எந்தவித சுத்தமான நீரையும் புனிதமாக்கும் அந்த நீரை தனது தலையில் தெளித்துக் கொண்டான்.

அஸுர: புலகா வ்ருதாங்க:-அசூரனே மெய் சொல்லிருக்க பக்தர்களுக்குச் சொல்ல வேண்டுமோ
ஸ்ரீ பாத தீர்த்த மஹிமை சொல்லிற்றே -தீர்த்தங்களில் தீர்த்தம் -தீர்த்தான் அவனே -தீர்த்தனுடைய தீர்த்தம் அன்றோ
இதனால்  தான் முதலில் மஹாத்மா என்று மஹா பலியைச் சொன்னார்

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-1011-

—————

ப்ரஹ்லாத வம்ச ஜதயா க்ரதுபி: த்வஜேஷு
விச்வாஸத: து ததிதம் திதிஜோபி லேபே
யத்தே பதாம்பு கிரீசஸ்ய சிரோ பிலால்யம்
ஸ த்வம் விபோ குரு புராலய பாலயேதா:–10-

எங்கும் உள்ளவனே, குருவாயூரப்பா, உனது பாதங்கள் கழுவப்பட்ட நீரானது சிவனின் தலையில் வைத்துக் கொண்டாடும்
அளவிற்கு உயர்ந்தது. அத்தனை உயர்வான நீரை திதியின் மகனான அசுரன் தனது தலையில் தெளித்துக் கொள்ளும்
வாய்ப்பு கிடைத்தது என்றால், அது அவன் பிரஹலாதனின் குலத்தில் தோன்றியதால் அல்லது யாகம் செய்தால் அல்லது
அந்தணர்களை மதிப்பதால் ஆகும். இவ்வாறு அவனுக்கு அருள்புரியும் ஸ்ரீஅப்பனே, என்னையும் காக்க வேண்டும்.

அடியார்க்கு அடியான் என்பதாலா -ஆச்சார்ய பக்தியா -யாகம் தானம் பலனா -அறியேன்
உனது திருவடி தீர்த்த மஹிமை அறிவேன்
சிவனே சிரஸா வஹிக்கும் படியான மஹிமை உண்டே

————————————————————————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 31–பலி தர்ப ஹரணம் -ஸ்ரீ த்ரிவிக்ரம அவதார ஸ்லோகங்கள்–

மந்தா ஆக்ரந்த–அடி வைப்பு அர்த்தம் -17 அச்சு எழுத்துக்கள் -8 எட்டாதவை எட்ட வைக்கும் –

ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்

ப்ரீத்யா தைத்ய: தவ தனு மஹ: ப்ரேக்ஷணாத் ஸர்வதாபி
த்வாம் ஆராத்யந் அஜித ரசயந் அஞ்ஜலிம் ஸஞ்ஜகாத
மத்த: கிம் தே ஸமலபிஷிதம் விப்ரஸுனோ வத த்வம்
வ்யக்தம் பக்தம் பவனம் அவனீம் வாபி ஸர்வம் பிரதாஸ்யே–1-

குருவாயூரப்பா, யாராலும் வெல்லப்பட முடியாதவனே! உனது உடலில் இருந்து வெளிப்பட்ட கம்பீரமான ஒளியைக் கொண்டு
உன் மீது மிகுந்த அன்பு கொண்ட மகாபலி, உன்னை நோக்கி கைகளைக் கூப்பினான்.
அதன் பிறகு உன்னிடம், ‘‘அந்தணச் சிறுவனே, உனக்கு வேண்டியது என்ன? உணவா, வீடா, நிலமா அல்லது
இவை அனைத்துமா, எது வேண்டும், கேள், தருகிறேன்’’ என்று கூறினான்.

ஸர்வதாபி த்வாம் ஆராத்யந்-எல்லாவித ஆராதனம் -அர்க்கியம் இத்யாதி -ப்ரஹ்ம தேஜஸ்ஸுக்காகவே மரியாதை
அஜிதன் -வாயாலே வந்த வார்த்தை
அஞ்சலி -அம் ஜலயதி -அவனை நீராய் உருக்க வைக்கும்-

அஸ்வமேத யாகம் பூர்த்தி அன்று யார் எத்தைக் கேட்டாலும் கொடுக்க வேண்டுமே

பசு தங்கம் வீடு உணவு தண்ணீர் கல்யாணப்பெண் கிராமங்கள் குதிரை யானை ரதங்கள் -அனைத்தும் தருவேன்

———————

தாம் அக்ஷீணாம் பலிகிரம் உபாகர்ண்ய காருண்ய பூர்ண: அபி
அஸ்ய உத்ஸேகம் ச மயிது மனா: தைத்ய வம்சம் ப்ரசம்ஸன்
பூமிம் பாத த்ரய பரிமிதாம் ப்ரார்த்தயாம் ஆஸித த்வம்
ஸர்வம் தேஹீதி து நிகதிதே கஸ்ய ஹாஸ்யம் நவாஸ்யாத் –2-

குருவாயூரப்பா, மகாபலியின் வார்த்தைகளைக் கேட்ட, எந்த செல்வக் குறையுமில்லாத நீ, கருணையுடன் அமைதியாக நின்றாய்.
அவன் கர்வத்தை அடக்குவதற்காக அவனது குலத்தை உயர்வாகப் புகழ்ந்து பேசினாய். பின்னர் அவனிடம்,
‘‘என் கால்களில் மூன்று அடி அளவு நிலம் வேண்டும்’’ என்று நீ கேட்டாய். உனது சிறிய வடிவத்தைக் கண்டும்,
உனது கால்களின் அளவு கண்டும், உனது இந்த யாசகத்தை நினைத்தும் யார் தான் சிரிக்க மாட்டார்கள்?

அக்ஷீணாம்-குற்றம் அற்ற வார்த்தைகளைச் சொன்னான்
உத்ஸேகம் ச மயிது மனா-அவன் கர்வம் அடக்கி உனது கருணையால் -அவனுக்கு நன்மை செய்யவே வஞ்சித்தாய்
ஸ்தோத்ரம் பண்ண வம்சப் புகழ்ச்சி செய்து -அர்த்தவாதம் -ஹிரண்யனைப் பார்த்து நாராயணனே பயந்து ஓடும் படி வீர வம்சம்

——————-

விச்வேசம் மாம் த்ரி பதம் இஹ கிம் யாசஸே பாலிச: த்வம்
ஸர்வாம் பூமிம் வ்ருணு கிம் அமுனா இதி ஆலபத் த்வாம் ஸ த்ருப்யந்
யஸ்மாத் தர்பாத் த்ரிபத ப்ரிபூர்த்ய க்ஷம: க்ஷேமவாதான்
பந்தம் ச அஸௌ அகமத் சுததர்ஹோபி காடோபசாந்த்யை -3-

குருவாயூரப்பா, இதனைக் கேட்ட மகாபலி உன்னிடம், ‘நான் மூன்று உலகங்களுக்கும் தலைவன்.
என்னிடம் வெறும் மூன்று அடிகளையா யாசிப்பது? இத்தனை சிறிய இடத்தினைப் பெற்று என்ன பயன்?
நீ கேட்பது பேதைத் தனமாக உள்ளதே’ என்று மிகுந்த கர்வத்துடன் கூறினான். இந்தக் கர்வத்தினால் மட்டுமே அவனால்
அந்த மூன்றடிகளைத் தர இயலாமல் போனது; அதனால் பழிச் சொல்லுக்கு ஆளானான்.
இத்தகைய அவமானங்களை அவன் கர்வத்தால் அடைந்தான்.

யஸ்மாத் தர்பாத்இந்த அஹங்காரமே இவனுக்கு இந்த நிலை-மேல் சிறை வைக்கும் படி ஆனதே -மார் தட்டி -கழிக்க வேண்டுமே -மார்கழி

————

பாத த்ரய்யா யதி ந முதித: விஷ்டபை ந அபி துஷ்யேத்
இதி உக்தே அஸ்மின் வரத பவதே தாது காமே அத தோயம்
தைத்யாசர்யத்: தவ கலு பரீக்ஷார்த்தின: ப்ரோணாத்தம்
மா மா தேயம் ஹரி: அயமிதி வ்யக்தமேவ ஆபபாஷே -4-

குருவாயூரப்பா, நீ மகாபலியிடம், ‘அரசனே! மூன்று அடி நிலம் தரவில்லை என்றால், தான் யாசித்ததை பெறாமல்
போகும் ஒருவன், மூன்று உலகங்கள் கிடைத்தாலும் மகிழ்வு கொள்ள மாட்டான்,’ என்றாய்.
உடனே மகாபலி நீ விரும்பியபடி நிலத்தை அளிக்க தான நீருடன் தயாராக நின்றான். அப்போது அவன் குருவான
சுக்கிராச்சாரியார், உனது தூண்டுதல் காரணமாக, ‘அரசனே, கொடுக்காதே! இவன் அந்த ஹரியே ஆவான் என்றார் அல்லவா?

வரதா -உனக்கும் தாரை வாரத்துக்கு கொடுக்க இவன் இருந்தானே-

வ்யக்தமேவ-வெளிப்படையாகச் சொன்னானே
சுக்ராச்சார்யருக்கு மட்டும் -தெரிந்ததே –
உனது பிரேரித்ததால் -மஹாபலிக்கு பரீஷை பண்ணிப் பார்க்கவே -நீயே உணர்த்தி அருளினாய்
நாயமாத்மா ஸ்ருதி -காட்டவே காணலாம்

————-

யாசத்யேவம் யதி ஸ பகவான் பூர்ண காம: அஸ்மி ஸ: அஹம்
தாஸ்யாமி ஏவ ஸ்திரம் இதி வதந் காவ்ய சப்தோபி தைத்ய:
விந்த்யா வல்யா நிஜதயிதயா தத்தபாத்யாய துப்யம்
சித்ரம் சித்ரம் ஸகலம் அபி ஸ: ப்ராப்பயத் தோய பூர்வம் -5-

குருவாயூரப்பா, சுக்கிராச்சாரியாரின் சொற்களைக் கேட்ட மகாபலி அவரிடம், ‘அந்தப் பகவானே இங்கு வந்து என்னிடம்
யாசிக்கிறான் என்றால் எனது விருப்பம் அனைத்தும் நிறைவேறியவனாகவே நான் உள்ளேன்.
எனவே நான் தானம் அளிக்கவே போகிறேன்’ என்றான்.
உடனே சுக்கிராச்சாரியார் ‘நீ உனது நாட்டை இழக்கப் போகிறாய்,’ என்று சபித்தார். சுக்கிராச்சாரியாரின் சாபத்தை ஏற்ற மகாபலி,
தனது மனைவியான விந்தியாவளீ என்பவள் தான நீரை அவன் கைகளில் விட, அவனும் நீ கேட்டவற்றை தானமாக அளித்தான்.

பாகவத ஸ்லோகம் ஐந்து இடங்களில் பொய் சொல்லலாம் -அந்தப்புர ஏகாந்தம்- கல்யாணம் ஆக – உயிர் போகும் தருணம் போன்றவை

காவ்ய சப்தோபி-சுக்ராச்சாரியார் சாபம் கொடுத்தார் –

சித்ரம் சித்ரம்–என்ன ஆச்சார்யம்

தாடகை வதம் -வேத பிரமாணங்கள் வேண்டாம் -ஆச்சர்யரான நீர் சொன்னாலே பிரமாணம் -பெருமாள் விசுவாமித்திரர் இடம்

—————-

நிஸ் ஸந்தேஹம் திதி குல பதௌ த்வயி அஷோர்ப்பணம் தத்
வ்யாதன்வாநே முமுசு: ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம்
திவ்யம் ரூபம் தவ ச தத் இதம் பச்யதாம் விச்வ பாஜாம்
உச்சை: உச்சை: அவ்ருதத் அவதீக்ருத்ய விச்வாண்ட பாண்டம் -6-

ஸந்தேஹம்-தயக்கம் இங்கு -பூ மாரி பொழிய -அளந்தாயே –

குருவாயூரப்பா, திதியின் குலத்தின் வழிவந்த மகாபலி சிறிதளவும் சந்தேகமே இல்லாமல் உன்னிடம் நீ கேட்டவற்றை
அர்ப்பணம் என்று அளித்தான். அவனது இந்தச் செயலைக் கண்ட தேவர்கள், ரிஷிகள் அவன் மீது மலர்களைத் தூவினர்.
அப்போது இந்த உலகில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,
குருவாயூரப்பா, உனது இந்த சிறிய உருவம் அனைத்து அண்டங்களுக்கும் மேலே மேலே வளரத் தொடங்கியது.

உச்சை: உச்சை: அவ்ருதத் அவதீக்ருத்ய விச்வாண்ட பாண்டம்-மேலே மேலே வளர்ந்து -கடந்து ஓங்கி உலகு அளந்தாயே –
கீழ் லோகங்கள் உள்ளங்கால் -பூ லோகம் திருவடியில் -கணுக்கால் மலைகள் -தொடை வாயு நபி ஆகாசம் -வயிற்றில் ஏழு கடல் -இதயம் -தர்மம் -மார்பில் லஷ்மீ-கழுத்தில் சாம -காதுகள் திக்குகள் முகம் அக்னி வாக்கில் வேதம் -நாக்கில் வருணன் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இமைகள் பகல் இரவும் -நிழல் எமன் –

—————

த்வத் பாதாக்ரம் நிஜபதகதம் புண்டரீ கோத்பவ அஸௌ
குண்டீ தோயை: அஸிசத் அபுநாத் யஜ்ஜலம் விச்வலோகான்
ஹர்ஷோத் கர்‌ஷாத் ஸுபஹு நந்ருதே கேசரை: உத்ஸவே அஸ்மின்
பேரீம் நிக்நந் புவனம் அசரத் ஜாம்பவாந் பக்திசாலீ -7-

குருவாயூரப்பா, இப்படி நீ வளர்ந்தபோது உனது திருவடியானது ஓர் அடி எடுத்து வைக்க, அது ப்ரும்ம லோகமான
ஸத்ய லோகத்தை அடைகிறது. உடனே பிரம்மா தனது கமண்டலத்தில் உள்ள நீரினால் உனது திருவடியைக் கழுவினார்.
அந்த நீரானது இந்த பூமியை கங்கையாக வளப்படுத்தியது. இதனைக் கண்ட தேவர்கள் நடனம் ஆடினர்.
உன்னிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த ஜாம்பவான் தனது வாத்தியத்தை முழங்கியபடி இந்த உலகத்தைச் சுற்றி வந்தான்.

இடது திருவடி மேல் லோகம் -கமண்டல தீர்த்தம் -கங்கா நீர் –
பாகவதம் -சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியது இல்லையே
சதுர் முகம் கையில் -சதுர் புஜன் தாளில் சங்கரன் தலையில்
ஜாம்பவான் பேரி வாத்யம் -ப்ரத்யக்ஷம் பண்ணி கொண்டாடி

—————-

தாவத் தைத்யா: து அவமதிம் ருதே பாத்து: ஆரப்த யுத்தா:
தேவ: உபேதை: பவ தனு சரை: ஸங்கதா பங்கமாபந்
காலாத்மா அயம் வஸதி புரதோ யத்வசாத் ப்ராக்  ஜிதா: ஸ்ம:
கிம் வோ யுத்தை: இதி பலிகிரா தே அத பாதாலமாபு: -8-

குருவாயூரப்பா, அந்த நேரம் அசுரர்கள் தங்கள் அரசனான மகாபலியின் உத்தரவு இல்லாமல் உன்னைத் தாக்கத் தொடங்கினர்.
அவர்கள் உனது அடியார்களால் தடுக்கப் பட்டனர். மகாபலி அசுரர்களிடம், ‘நாம் யாருடைய தயவால் முன்பு வெற்றியை அடைந்தோமோ,
அந்த பகவானே இதோ நம் கண் முன்னே காலத்தை கடந்து நிற்கிறான். நாம் யுத்தம் செய்து என்ன பயன்?’ என்றான்.
இதனைக் கேட்ட அசுரர்கள் பாதாள லோகத்திற்கு ஓடி விட்டனர்.

கால சக்ரம் பார்த்து பயப்படாமல் கீழ் இருந்தான் -30 அத்யாயம் முதல் ஸ்லோகம் பார்த்தோம்
இப்பொழுது உணர்ந்தது காட்டி அருளுகிறார்
எனது கர்வம் அடக்கவே இந்த லீலை -அது அடங்கினது இங்கே காட்டி அருளுகிறார்

—————–

பாசை: பத்தம் பதக பதினா தைத்யம் உச்சை: அவாதீ:
தார்த்தீயீகம் திச மம பதம் கிந்த விச்வேச்வரோஸி
பாதம் மூர்த்னி ப்ரணய பகவந் இதி அகம்பம் வதந்தம்
ப்ரஹ்லாத: தம் ஸ்வயம் உபகத: மாநயந் அஸ்தவீத் த்வாம் -9-

குருவாயூரப்பா, அப்போது கருடனால் வருணன் என்ற பாசக் கயிற்றால் மகாபலி கட்டப்பட்டான்.
அதன் பின்னர் நீ அவனை நோக்கி, ‘நீ இந்த உலகம் அனைத்திற்கும் அதிபதி என்றாயே! எனக்கு உரிய
மூன்றாவது அடி நிலத்தைக் கொடு!’ என்றாய். அப்போது மகாபலி சிறிதும் பயமோ கோபமோ கொள்ளாமல்,
‘பகவானே, நாராயணா, எனது தலை மீது உனது மூன்றாவது அடியை வைத்துக் கொள்,’ என்றான்.
இதனைப் பாராட்டியபடி பிரஹலாதன் அங்கு வந்து உன்னைப் பாராட்டினான்.

விச்வேச்வரோஸி-கீழே இவனே விசுவான்களுக்கு அரசன் நானே என்றானே –
இப்பொழுது கிரீடம் அகற்றி வணங்க -பிரகலாதன் வந்தான் –
யானே நீ என்னுடைமையும் நீயே –

————

தர்ப்போசித்யை விஹிதம் அகிலம் தைத்ய ஸித்த: அஸி புண்யை:
லோக: தே அஸ்து த்ரிதிவ விஜயீ வாஸவத்வஞ்ச பச்சாத்
மத் ஸாயுஜ்யம் பஜ ச புன: இதி அன்வ க்ருஹ்ணா பலிம் தம்
விப்ரை: ஸந்தாநித மகவர: பாஹி வாதாலயேச -10-

குருவாயூரப்பா, நீ மகாபலியை நோக்கி, ‘திதியின் குலத்தில் உதித்தவனே, உனது கர்வத்தை அடக்கவே நான் இப்படிச் செய்தேன்.
நீ செய்த புண்ணிய காரியங்களால் நீ நன்மை பெற்றவனாக உள்ளாய்.
சொர்க்கத்திற்கும் மேலான ஸுதலம் எனும் பாதாள கீழ்லோகம் உண்டாகட்டும். அதன் பின்னர் இந்திரப் பதவியும் நீ அடைவாய்.
இறுதியில் எனது மோட்ச ராஜ்ஜியமும் அடைவாய்’ என்றாய். இப்படியாக நீ என்னையும் காப்பாற்ற வேண்டும்.

நீ செய்த புண்யங்கள் வீணாகாதே -நானே உனக்கு காவலாக இருப்பேன்-

கதா பாணியாக ஸூதல லோகம் காவல் –உபேந்த்ரனாக இந்திரா லோகம் காவல்
கர்வம் கழிந்த பின்பு இந்திர லோகம் கொடுத்தால் மேல் ஸாயுஜ்யமும் அருளினாயே
மூன்றாவது அடி தலை மேல் வைக்கச் சொன்னாலும்
மூன்றாவது அடி எங்கே வைத்தான் யாரும் அறியார் -அவனே அறிவான்

GOD wants posseser-not possetion-ஆத்ம சமர்ப்பணம் பண்ணவும் வேண்டும் -பண்ணினத்துக்கு அனுதாபமும் பண்ணவும் வேண்டுமே

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும் —

January 20, 2023

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும்

இவ்வுலகத்தினர் அனனவருக்கும் அறிவு செயல் இனவகளுக்கான திறமையை அளிப்பவரர்
இவ்வுலகில் உள்ள யோகிகள் அனனவருக்கும் தலைவர்
எல்லோராலும் அவசியம் அறியப்பட வேண்டிய
உண்னமப் பொருனள அறிந்தவர்-
இவ்வுலகமனனத்தையும் ஆட்டி னவக்கும் சிறந்த நாயகனாக இருப்பவர்-
அத்தகைய எங்கும் நினறந்த மஹா விஷ்ணுனவ உள்ளத்தால் தியானிக்கிறேன்.

பாகம்-1–பர ப்ரஹ்ம ஸ்வரூபம்

1.சச்சினாநந்த ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்துடன் ஒன்றாகி ஐக்யம் அடைவதான பரம பக்தி பரவஸ்யத்தையே
உபநிஷத்துக்கள் சாதனா மார்கத்தின் உச்சக்கட்டமாக விவரிக்கின்றன.
அந்த பர ப்ரஹ்ம தத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது -மேலும் மற்ற ஒன்றுடன் ஒப்பிட்டுக்கூற இயலாது.
அது கால தேச வர்த்தமானத்திற்கு கட்டுப்படாத ஓன்று -எவ்வளவு முயன்றும் வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் விவரிக்க
முடியாத ஓன்று-
அவனைப் ப்பற்றி விவரிக்குங்கால்,அது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல் நேதி நேதி
(இதுவல்ல,இதுவல்ல) என்று இதர வஸ்துக்களுக்கு விலக்காகத்தான்
வர்ணிக்கப் பட்டுள்ளது-
இப்படி “ யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ” என்றபடி
மனத்திற்கும்,வாக்கிற்கும் எட்டாதது பர ப்ரஹ்ம ஸ்வரூபம்.

2.இந்த பஞ்ச பூதங்களாலான சரீரமும் ஜகத்தும் அழிவுள்ளனவ.
நான்,எனது என்ற எண்ணத்தால்-அனவகளுடன் ஓன்றுபடும் நிலைகளும், தோற்றங்களும், எண்ணங்களும்,
அவ்வாறே அனவகளுக்கெல்லாம் ஆதாரமாக,மாற்றம் இல்லாத சாக்ஷியாக ஸ்வயம் ப்ரகாசமாக விளங்குவதே
தன்னுனடய உண்னமயான ஸ்வரூபம் என்ற த்ருடமான முடிவுடன் அப்யாச அதிசயத்தினால், ஜீவன், ஸதா அவ்விதமான நினனவுடன்,
பர ப்ரஹ்மத்தோடு இரண்டறக் கலப்பதையே , மோக்ஷம் என்று சொல்லப்படுகிறது
“நாஹம் தேஹோ ந சான்யோஸ்மி ப்ரஹ்மை வாஹம் ந ஸோகபாக்
ஸச்சதானந்த ரூபோஹம் நித்ய முக்த ஸ்வபாவான்”

3.இப்படி தன்னுனடய ஜீவனானது பர ப்ரஹ்மமே என்ற ஐக்ய பாவமான பேர் உண்மையை அறிவதனால் தான்
அக்ருத்ரிம புருஷார்த்தமான மோக்ஷத்தை அனடயலாம்-
ஸ்வ விமர்ச:புருஷார்த்த :–தன்னுடய உண்னமயான இந்த ஸ்வரூபத்தை அவித்யா (மானயயினால்) மறந்து மயங்கிக் கிடக்கும் மனுஷ்யனானவன்,
அப்படி மறந்து போன ஸ்வரூபத்தை அறியப் பெறுவது தான் ஞானத்தின் முடிவு-
மேற் சொன்ன மாயை ஸத்வ, ரஜோ , தமோ எனும் முக் குணங்களின் வாயிலாக நாம ரூப
குணங்கணளாடு, ஜகத்தாகவும், ஜீவனாகவும், பரிணமிக்கிறது

4.சத்வ குணம் எனப்படுவது மற்ற குணங்களாகிற -ரஜோ ,தமோ குணங்களிலிருந்து-முற்றிலும் விடுபட்டு
சுத்தமானதாக இருக்கிறது.
வேத வ்யாசர் தன்னுனடய பல புராணங்களின் வாயிலாக, பர ப்ரஹ்மமும்,
மானயயும் சேர்ந்து ஸ்ருஷ்டி, ஸ்த்தி ஸம்ஹாரம் என்ற முத் தொழினலச் செய்ய, பல ரூபங்களை
ஏற்றுக் கொண்டு,
பல நாமங்களால் அனழக்கப்பட்டு,குணங்களிலிருந்து வேறுபட்டு,சுத்த சத்வ ஸ்வரூபத்துடன்,
அவதாரம் என்ற தொழிலை ஏற்றுக் கொள்கிறது என்று தெரியப் படுத்தி உள்ளார்,

5.ஸ்ரீமத் பாகவத்தில் ஸ்ரீகிருஷ்ேன், தேவகியின் கர்பத்தில் ஆவிர்பவிக்கும் சமயம்,தேவர்களுடன்,
ப்ரஹ்மா, மஹாவிஷ்ணுவின் அவதார தத்துவத்தையும்  நோக்கத்தையும் கீழ் கண்டவாறு ஸ்துதி செய்கிறார்.
“தாமரைக் கண்ணா ! சுத்த ஸத்வ ஸ்வரூபியான தங்களிடத்தில் சமாதி நினலயில் ஸ்திரமாக னவக்கப்பட்ட மனத்தினால்,
மநோ லயம் அடையப் பெற்ற ஒரு சிலரே , நின் திருவடியாகிற மரக் கலத்தால் ,ஸம்ஸார சாகரத்தை ,பசுங்கன்றின் குளம்படி போல் எளிதில் தாண்டுகிறார்கள் ( ஸ்ரீ மத் பாகவதம்-ஸ்கந்தம் – 10 அத்யா,-2 ஸ்லோ,30)

6.மேலும் இந்த ப்ரஹ்ம ஸ்துதியில் , பகவானுனடய அவதார தத்துவத்தை விளக்குங்கால்,”எல்லா
ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக,ஒளியாகப் ப்ரகாசிப்பவனே
ப்ரகிருதி வசத்தால் மனறக்கப்பட்ட
ஜீவாத்மாக்கள் அந்த ஒளியான ப்ரகாசத்தினாலேயே தங்களுனடய மநோ , வாக், காயங்களால்,
உலக அனுபவத்தை அடைகின்றன என்று அறிவதில்னல.
அந்த மாயையை உன் வசத்திலே னவத்துக் கொண்டு,
மேலும் “ஸத்வம் விஸுத்தம்” (ரஜோ ,தமோ குணங்கள் கலக்காத ) உன் சுத்த சத்வ ரூபத்தோடு,அதர்மத்தை
அழிக்க அவ்வப்போது தோற்றம் அனடகிறீர்.
அந்த அவதார தத்துவத்தையும் நாம,ரூப,குணங்கனளயும் விவரிக்க இயலாது.
அவை , ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய ப்ரமாணங்களால் அறியக் கூடியனவ அல்ல.
ஆயினும் அநந்ய பக்தி யாலும், இடை விடா முயற்சியால் அனடயப் பெற்ற சுத்த மனத்தில் நின்
அருளால், அந்தா நாம ரூப குணங்களை ஜீவர்களுக்கு அனுபவ பூர்வமாய் உணர்த்துகிறீர்கள்.
”இந்த ஸ்துதி யினால் வ்யாச பகவான்,நமக்கு பக்தி மார்கமே ஞானத்தை அளித்து மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று விளக்குகிறார்.
பக்தி யற்ற ஞானம்,மேல் உலகங்களில் தற்காலிகமாக, சுகத்தை யளித்து திரும்பவும் மறுபிறப்னபயும் அளிக்குமே தவிர
ஸம்ஸார ஸாகர சுழலிலிருந்து விடுவிக்காது என்று அறுதியிட்டு கூறுகிறார்..(ஸ்ரீ மத் பாகவதம் -10-2-35-37)

7.அப்படிப்பட்ட ஸச்சிதானந்தப் பரம் பொருளை விட்டகலாத கிருஷ்ேண பக்தியே ராஸ லீலையில்
கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனோடு அனுபவித்த பரமானந்தம்,
அதுவே பக்தன் பகவானுடன் அனுபவிக்கும் பரமானந்தம்.
அதுவே முக்தனுடன் சேர்ந்து முமுஷுக்கள் அனுபவிக்கும் ப்ரஹ்மானந்தம்.

8.அப்படிப் பட்ட ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கி திளைத்த மஹான்கள் பலருண்டு.
அவர்களில் பாகவத ஸமுதாயம்,
என்றென்றும் மறக்காமல் ஆராதித்துவரும் ஸ்ரீ ஜயதேகவியும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் முக்கியமானவர்கள்.
அவர்கள் அப் பரம்பொருனள அறிந்து,தான்,தனது என்ற பாவம் ஒழிந்து, அதனுடன் இரண்டறக் கலந்து பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்தனர்.
“ஏகம் ஸ்வாது ந புஞ்ஜீத ” என்ற கூற்றுப்படி, தான் அனுபவித்த அந்த பரமானந்தத்தை ,மற்ற பாமர மக்களும் அனுபவித்து
மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனடய வேண்டும் என்ற பரம கருணையால் தங்களுனடய ஆனந்த அனுபவங்கனள,
தங்களின் தெய்வீகப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாம் இப் பாடல்கனளப் பாடும் போதும்,மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும்,நம்மை மறந்த நினைவில் ,
பரவசமாகி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும்,இதற்குத் தக்க ப்ரமாணமாகும் எனபதில் ஐயமே இல்லை ,

9.ஸ்ரீஜயதேவர்”கீதா கோவிந்தம் ”என்ற நூலையும்,ஸ்ரீ நாரா யண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூலையும்,பனடத்து,
தாங்கள் ருசித்த பரமானந்த ரஸத்தை பாமர மக்களும் ருசித்து அனுபவிக்க ,ராக தாளங்களுடன் கூடிய ஜன ரஞ்சகமான பாடல்களாக அருளிச் செய்தார்கள்.

இக்கட்டுரை 3 பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
1ம் பாகத்தில் ப்ரஹ்ம ஸ்வரூப விளக்கமும்,
2ம் பாகத்தில் நூல்களும் அதன் ஆசிரியர்களும்-என்ற தலப்பில் ஸ்ரீ ஜயதேவரின் கீதா கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூல்களின் சிறப்புகளைப் பற்றியும்
3ம் பாகத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் என்ற தலைப்பில் இந் நூல்களின் இடையே உள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாமும் இப் பாடல்களின் உட்பொருள் அறிந்து, அந்த அமிர்த ரஸத்தை முடிந்த வரை பருகி அனுபவிக்க,
முதற் கண் இந் நூல்களின் காவியத் தலைவனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹ புரி ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீவேங்கடேசப் பெருமாளையும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

————————-

பாகம் -2- நூல்களும் அதன் ஆசிரியர்களும்
ஸ்ரீஜயதேவரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீ கீத கோவிந்தமும்
1.கிபி 12வது நூற்றாண்டு ஸ்ரீஜயதேவர், ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி ஷேத்திரத்தின் அருகில் உள்ள
கெண்டுபில்வா என்றகிராமத்தில் போஜதேவர் ராதா தேவி தம்பதியினரின் மைந்தனாக அவதரித்தார்.
ஸ்ரீஜயதேவரும் அவரதுமனனவி பத்மாவதியும் பூரி ஜகன்னாதரின் பரம பக்தர்கள்.
அவர் ஸ்ரீ கீத கோவிந்தம் என்கிற தெய்விக காவ்யத்தைப் படைத்து அதனை பூரி ஜகன்னாதரின் ஸந்நிதியில் தம்பதியினர்
தினந்தோறும் பாடியும்,நடனம் ஆடியும், பக்தி பரவசத்தில் மெய்மறந்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

2. காதல் எனும் சொல் தத்வரீதியில் மிக நுண்ணிய அர்த்தத்தை யுடையதாக இருக்கிறது.
ஸாதாரணமாக பொது வாழ்வில், மனித உறவுகளில், நடைமுனறயில் இது அன்பு என்று அனழக்கப்படுகிறது.
அந்த அன்பின் பரிமாணம் ஓவ்வொரு உறவுகளிலும் வேறுபடுகின்றது.
தாய்-குழந்தை , ஸ்த்ரீ-புருஷன்,நாயகி- நாயகன், கணவன்-மனைவி,பெற்றோர்-குழந்தைகள் என்ற உறவுகளில்,
அன்பின் அளவு வேறுபாட்னட நாம் உணர முடிகிறது.
இந்த அன்பு அல்லது ப்ரேமை , மனித உறவுகளைக் கடந்து, தெய்வத்திடம் காட்டப் படும் போது, அது பக்தி என்று அழைக்கப் படுகிறது.

3.ஸ்ரீ கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ராதையும், மற்ற கோபிகைகளும் கொண்ட காதல்
ஸாதாராணமாக ஸ்த்ரீ-புருஷ வேறுபாட்டினால், இந்த்ரிய வசத்தால் தோன்றும் மானிடக் காதல் அல்ல.
அது தெய்வீகக் காதல்.
இத்தகைய தெய்வீகக் காதலை ராதையும் , மற்ற கோபிகைகளும் பரமாத்மாவிடம் செய்ததும்,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவர்களின் பேரில் கொண்ட காதலையும்
ஸ்ரீஜயதேவர் தனக்கே உரித்தான கவிநயத்துடன் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களாக தன் நூலின்
முலம் வெளிப்படுத்தி யுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
தன்னையே ராதையாகவே கற்பனை செய்து கொண்டு பரமாத்மாவுடன் சேர்ந்து அனுபவித்த
பேர் ஆனந்தத்தை , தன் பாடல்கள் வாயிலாக
வெளிப்படுத்தி யுள்ளார் என்பது பாடல்களின் பாவத்திலிருந்து, நாம், நன்கு உணர முடிகிறது..

4.காவ்யம் என்ற பெயருக்கு ஏற்ப ஸ்ரீ கீத கோவிந்தம் பண்ணிரண்டு ஸர்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இருபத்து நான்கு அஷ்டபதிகள் கொண்ட இக் காவ்யத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கு ஏற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன.
இதற்கு விதி விலக்காக முதல் அஷ்டபதியிலும் மற்றும் சில அஷ்டபதிகளிலும் எட்டுக்கு மேற்பட்ட பதங்கள் உள்ளன.
இந்த அஷ்டபதிகளில் ஒவ்வொன்றிலும் கூறப்படும் கருத்துக்களுக்கு தொடர்பு உள்ளபடி 90 ஸ்லோகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

5.முன்னுரை ஸ்லோகங்களுக்குப் பின்னர் முதல் அஷ்டபதி விஷ்ணுவின் பத்து அவதாரங்கனளயும் விவரிக்கிறது.
பின்னர் வஸந்த கால வர்ணனையும் கோபியருடன் கண்ணன் மகிழ்ந்து குலாவுவதை
ராதையிடம் அவள் தோழி வர்ணிப்பதையும் கூறப்பட்டுள்ளது.
ராதையின் பிடிவாதம் கனலந்த பின், இன்னமும் கோபப் பட்டாலும்,மீண்டும் மீண்டும் கண்ணனை நினனந்து மனம் வருந்துகிறாள்.
ராதையின் விரஹ தாபத்தை கவி மிகவும் அழகாக விவரித்துள்ள பாங்கு மிகவும் போற்றி பாராட்டப்படுகிறது,

6.கண்ணனும்,தான் ராதைக்கு மனத் துயர் அளித்ததை எண்ணி மனம் வருந்துகிறான்.
ராதையின் தோழிஅவர்களிடையே தூது சென்று அவர்களிடையே ஏற்பட்ட பிணக்கு நீங்க வழி செய்கிறாள்.
மீண்டும் ராதையும் கண்ணனும் முன் போலவே ஆனந்த மயமான கேளிக்கைகளில் ஈடுபடுவதை ,
கவி வர்ணனை செய்து இந்தக் காவ்யத்தை நிறைவு செய்துள்ளார்.

7.பதினெட்டு புராணங்களில் ஒன்றான ப்ரஹ்ம வைவர்த்த புராணம் விவரிக்கும் ராதா கிருஷ்ண
சரித்ரத்தின் அடிப்பனடயில் இந்த காவ்யம் அமைக்கப் பட்டுள்ளது.
மேலே எழுந்த வாரியாகப் பார்க்கும்
போது ச்ருங்கார ரஸமே ப்ரதானமாக வுள்ளது போலே தோன்றினாலும்,கூர்ந்து நோக்குங்கால்,
பக்தியின் உன்னத நினலக்கு நம்மை ஈர்த்துச் செல்லும் பக்தி ரஸம் நினறந்துள்ள காவ்யமாகும்.
ஒவ்வொரு அஷ்டபதியின் முடிவிலும் கண்ணனிடம் உள்ள பக்திப் பெருக்கால் பக்தர்கள் மேன்மை அடையட்டும்
என்று வேண்டி முடிக்கிறார்.
பஜனை சம்பிரதாயத்லே கீத கோவிந்தம் பாடாத பத்ததியே இல்லை என்று கூறும்படி அவ்வளவு ப்ரஸித்தம் அடைந்துள்ள காவ்யமாகும்.
இந்தியாவில் வடநாட்டில் இக் காவ்யம்
உருவானாலும் தென் நாட்டில் மிகவும் விரும்பி பரம பக்தி யுடன் பாகவதர்களால் கையாளப்பட்டு வருகிறது .
இக் காவ்யம் ஸமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருந்தாலும் அந்த பாஷை தங்களுக்கு பரிச்சியமில்லாவிடினும்
அது அமர காவ்யம் என்று உணர்ந்து அதை ராகத்துடன் கற்றறிந்து
பாகவதர்கள் பாடி பரவசமடைந்து கேடபோரையும் நெகிழ னவக்கிறார்கள்,

8.இதற்கு அடிப்படைக் காரணம் என்ன வென்றால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற
மனிதனுடைய ஆத்மாவின் உள்ள கிடக்கையையும்,படிப் படியாக முன்னேறி, அதில் வெற்றி காண்பதையும்,
பரமானந்தத்தை அனுபவிப்பதையும்,  உட்கருத்தாகக் கொண்டு இக் காவ்யம் அமைக்க பட்டதேயாகும்,

9.இக் காவ்யம் ராதா என்பவளை ஜீவாத்மாவாகவும்,ஸ்ரீகிருஷ்ணனை பரமாத்மாவாகவும் பாவித்து
அவர்களின் ஐக்யத்னே -ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை -புகழ்ந்து போற்றி, சிருங்கார ரஸம் ததும்ப எழுதப்பட்டதாகும்.
ஸ்ரீஜயதேர் பூரி ஜகன்நாதரை ராதா கிருஷ்ண ஐக்கியமாகப் பாவித்து இந்த மஹா காவ்யத்தைப் படைத்தருளினார்.

10.ஸ்ரீஜயதேவர் மாபெரும் கவியாக இந்தியா முழுவதும் கருதப்படுகிறார்.
அவருடைய சங்கீத அறிவும் சமஸ்கிருதத்தில் அவருக்கு உள்ள பாண்டித்யமும் அவருடைய அஷ்டபதிகளின் வாயிலாகத் தெள் எனத் தெரிகின்றது.
அவருடைய கவித்துவத்தைப் பாராட்டாத பண்டிதர்களே இல்லை .
சொற்களின் கோர்வை ,மற்றும் பொருள் செறிவைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்,
ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இக் கவி தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அதைத் தொடர்ந்து ஜெர்மன்,பிரான்சு மேலும்
சில ஐரோப்ய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதிலிருந்து கீத கோவிந்தம்
என்ற காவ்யம் சிறந்த இலக்கியமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

11.இப்போது நாம் சில முக்கிய ஸ்லோகங்கள்,அஷ்டபதிகள் அதன் பிண்ணனி ஆகியவைகளை அனுபவிக்கலாமே .
ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,

12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,

13.ஸ்ரீ ஜயதேவர் முேல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.இதில் புத்த அவதாரத்தையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்கனளயும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார் என்று கூறுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும்
“கேசவா த்ருத ” -கேசவன் தரித்தான் -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன் முலம்
ஸ்ரீகிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதானுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோஹம்- 5 ல் தெளிவாக வராக அவதாரம் எடுத்து,வேதத்தை மீட்டவனான
ஸ்ரீகிருஷ்ணன் பத்து அவதாரங்கனள எடுத்தான்,அவனுக்கு நமஸ்காரம்.-கிருஷ்ணாய துப்யம் நமஹ- என்று கூறுகிறார்.

14. “ஸ்ரித கமலா குச மண்டலா”என்று தொடங்கும் 2வது அஷ்டபதியில்
“தவ சரணே ப்ரண தாவயமிதி பாவய ஏ குருகுசலம் ப்ரணதேஷூ ஜய ஜய தே வ ஹரே ” என்று-உன்னைச் சரணமடைந்தோம் என்று அறிவாயாக.
சரணமடைந்த எங்களுக்கு நன்னம பயக்கச் செய் -என்று சரணா கதி மஹத்வத்தை -மார்ஜார பக்தி தத்துவத்தை -விளக்குகிறார்.
மேலும் வஸந்த கால மேக வர்ணனை மஹாகவி காளி தாஸரின் மேக தூதத்தை நினனவு கூறுகிறது

15.ஸ்ரீஜயதேவர் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சிதபி”என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,
7வது சரணத்தில் அவர் கண்ணன் காதல் உன்மத்தம் கொண்டு ராதையிடம் பேசுவதாக உள்ள வரிகளில்,
அவர், ஸ்ரீ ஜகன்நாதரிடம் மனம் லயித்து தன்னன மறந்த நிலையில்,”கண்ணன் ராதையிடம்
காதல் உன்மத்தம் கொண்ட என் ஸிரஸ்ஸில் உன் மிருதுவான பாதத்தை வைத்து, அதை குளிரச் செய்”
என்று சொல்வது போலஂ எழுதி விட்டார்.-பின் சுய நினைவுடன் அதைப் படித்த பின் திடுக்கிட்டார்.
”என்ன அபச்சாரம் செய்து விட்டேன் பரமாத்மா கண்ணனின் தலையிலே ராதையின் பாதமா”என்று வருந்தி
அந்த வரிகனள நீக்கி வேறு விதமாக மாற்றி எழுத பல தடவை முயன்றும் முடியாமல் போயிற்று.
எழுது கோலை கீழே வைத்து விட்டு கங்கையில் நீராடச் சென்று விட்டார்.
திரும்பி வந்ததும் எழுதுவதற்காக ஓலையை எடுத்தார் -என்ன ஆச்சர்யம்!! அவர் முதலில் எழுதிய வாறே அந்த
நீக்கிய வரிகள் எழுதப் பட்டு இருந்ததைப் பார்த்து, வியந்து, தன் மனனவியிடம் விசாரிக்கும் போது, அவர்
மனனவி “நீங்கள் தானே சற்று முன் வந்து எழுதி விட்டு, சாப்பிட்டு விட்டு வெளியே சென்றீர்கள்” என்று சொன்னார்.
ஸ்ரீ ஜயதேவரும் பத்மாவதி தேவியும் அப்போது தான் உணர்ந்தார்கள்- பூரி ஸ்ரீ ஜகன்நாதரே
ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து அந்த வரிகனள எழுதினார் என்றும்
பத்மாவதி தேவி கையால் உணவும் அருந்திச் சென்றார் எனறும் அறிந்து ஆனந்த பாஷ்பம் பெருக மெய் மறந்தனர்.

இது ஒன்றே போதுமே “கீத கோவிந்தம் “ஒரு தெய்வீக காவ்யம்” என்பதற்கு.
பகவானால் எழுதப்பட்ட அந்த தெய்வீக வரிகனளப் பார்ப்போம்.
”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம்
தேஹி பத பல்லவமுதாரம் ஜ்வலதி மயி தாருணோ
மதன கத நாருணோ ஹரது தது பாஹித
விகாரம் ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்”
“வஞ்சிக் குறமகள் பாதம் வருடிய மணவாளா” என்று அருண கிரிநாதர் தன்
திருப் புகழில் முருகனைப் போற்றி எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

16.மேலும் இந்த அஷ்டபதி மரணத்திலிருந்து மீட்டு உயிரளிக்கும் ம்ருத சஞ்ஜீவினி மந்திரமாகவும்
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது கீழ்கண்ட சம்பவத்திலிருந்து அறிகின்றோம்
ஒரு சமயம் பத்மாவதி தேவி கஜபதி ராஜா அரண்மனையில் மஹாராணியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் ராணி வினளயாட்டாக பத்மாவதி தேவியிடம் ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீ ஜகன்நாதர் ஆலயத்தில் த்யானத்தில்
இருந்த போது உயிர் நீத்தார் என்று சொல்ல,
அதனைக் கேட்ட பத்மாவதி தேவியார் துக்கம் தாங்காமல் அந்த ஷணமே தானும் உயிர் நீத்தார்.
வினளயாட்டு விபரீதாமானதைப் பார்த்த ராணி மிகவும் வருந்தினாள்.
ராஜாவும் உடனே ஸ்ரீ ஜயதேவரிடம் சென்று நடந்ததைக் கூறி வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
ஸ்ரீ ஜயதேவர் துளியும் கவலைப் படாது உடனே பத்மாவேி தேவியின் உடலுக்கருகில் சென்று ஸ்ரீ ஜகன்நாதரை மனதால் வேண்டி
அஷ்டபதி – 19ல் உள்ள “ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்” என்ற வரிகனள இசை மீட்டிப் பாடினார்.
உடனே பத்மாவதி தேவியார் தூக்கத்திலிருந்து எழுவது போல உயிர் பெற்றெழுந்து ஸ்ரீஜயதேவருடன் சேர்ந்து
இந்த அஷ்டபதியை இசை மீட்டிப் பாடி ஸ்ரீஜகன்நாதரை ஸ்துதித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.

17. “ரதி ஸுக ஸாரே ” எனத் தொடங்கும் – 11வது அஷ்டபதியில் விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை கவி வர்ணிக்கிறார்,
கிருஷ்ணன் யமுனா நதிக் கனரயில் ராதையின் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறான்.
5வது சரணத்தில் கிருஷ்ண ராதையின் ஆனந்த ஆலிங்கனத்தை , கார் மேகத்தின் இடையே தோன்றும் மின்னலாகவும்,
கரு மேகங்களின் இடையே பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களாகவும் வர்ணித்துள்ள அழகு,கவியின் மஹா கவித்துவத்தைப் பறை சாற்றுகிறது.

18.”பச்யதி திஸி திஸி” எனத் தொடங்கும் 12வதுஅஷ்டபேியில் தன்னிடத்தே விட்டு துளியும் அகலாது, மனம் கண்ணனையே நினனத்து,
அவன் பிரிவாற்றா மையை சஹிக்க இயலாது, அவன் வரவை எதிர் நோக்கி விரஹ தாபத்தினால் வேதனை யுறும், ராதையைக் கண்ணுற்று,
தோழி, ராதையின் நிலமையைக் கண்ணனிடம் கூறுவதை விளக்கியுள்ள அழகே தனி.

19.கீத கோவிந்தத்தின் பெருமையை விளக்க மேலும் ஒரு ருசிகரமான நிகழ்ச்சி-
ஒரு இலந்தைப்பழம் விற்கும் ஒரு வயதான மூதாட்டி காட்டிற்குள் சசன்று முட்கள் அடர்ந்த மரங்களிலிருந்து
இலந்தைப் பழம் திரட்டச் சென்ற போது ,
பக்திப் பரவசத்துடன் தன் இனிமையான குரலில் கீத கோவிந்தப் பாடல்கனளப் பாடினாள்.
அந்த இசையில் மயங்கித் தன் ஆலயம் விட்டு, ஸ்ரீஜகன்நாத கிருஷ்ணர் அக் கிழவியைப் பின் தொடர்ந்தார்.
அங்குள்ள முட்கள் அவருனடய ஆடைகளைத் துண்டு துண்டாகக் கிழித்தது.
மறுநாள் அர்சகர்கள் பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் சென்று பார்க்கையில் ஸ்ரீஜகன்நாதரின் ஆடைகள்
முட்களால் கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு, என்ன காரணம் என்று அறிய முடியாமல் அதிர்சியுற்றனர்.
அவர்கள் கனவில் ஸ்ரீஜகன்நாதர் தோன்றி நடந்த நிகழ்சியைக் கூறினார் என்று கீத கோவிந்த்தத்தின் பெருமையைக் கூறுகின்றனர்

20.தினமும் ஸ்ரீஜகன்நாதரின் ஸன்நிதானத்தில் கீத கோவிந்தப் பாடல்கள் பக்க வாத்யங்களுடன் பாடப்பெற்று
நடன மாதர்களால் நாட்யமும் ஆடப் பட்டு பகவானுக்கு நித்ய ஸேவையாகச் சமர்பிக்கப்படுகிறது.

21 இவருனடய புகழிலும், கீத கோவிந்தத்தின் பிராபல்யத்தைக் கண்டும், பொறாமை கொண்ட மஹாராஜா கஜபதி
தானும் கீத கோவிந்தத்தின் மையக் கருத்தின் அடிப்படையில் பாடல்கனள எழுதி அப் பாடல் களையே , பாடகர்கள் சங்கீதத்துடன்
ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடவேண்டும் என்றும்,-கீத கோவிந்தப் பாடல்களைப் பாடக்கூடாது, என்றும் கட்டளை இட்டான்.
இருப்பினும்,ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடுவதையும்ஆடுவதையும் நிறுத்த வில்னல.
ராஜா மிகவும் கோபம் கொண்டு ஸ்ரீ ஜயதேவரிடம், எந்த வகையில் கீத கோவிந்தம் தன்கவி தையை விட உயர்ந்தது என்று வாக்குவாதம் செய்தார் .
இருவரின் பனடப்புகளில் எது சிறந்தது என்று தீர்மானிக்க இரண்டு கவிதைகளையும் , ஸ்ரீஜகன்நாதரின் திருப் பாதங்களில் னவத்து, கதவைத் தாளிட்டு, கோயிலுக்கு வெளியே சென்று விட்டனர்-சில நேரங்கள் கழித்து மறுபடி கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.என்னஆச்சர்யம்!!
ராஜாவின் கவிதை எழுதப் பட்ட ஓலை கீழே தரையில் தள்ளப்பட்டு கீத கோவிந்தமுள்ள ஓலை மட்டும் ஸ்ரீஜகன்நாதரின் பாதத்தில் காணப் பட்டது.
அதைப் பார்த்த அனைவரும் ஸ்ரீஜகன்நாதாரே கீத கோவிந்தம் தான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கி விட்டார் என்று உணர்ந்து பெரும் உவகை யடை ந்தனர்.
அன்றிலிருந்து கீத கோவிந்தத்தின் பெருமை பன் மடங்காயிற்று.
மக்கள் அனைவரும் அதை தெய்வீக காவ்யம் என்று போற்றிப் புகழலானார்கள்.

22. ஆழ்ந்த கிருஷ்ண பக்தி யுடைய ஸ்ரீஜயதேவரால் விவரிக்கப்பட்ட கீத கோவிந்தத்தின் மூலம்,அறிவாளிகள், இசைக் கலையில் திறமையும்,
விஷ்ணுவின் மேன்மையை இனடவிடாது த்யானம் செய்தலும், வெவ்வேறு காவ்யங்களில் சிறப்பாக விவரிக்கப்பட்ட ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய
ஸ்ரீகிருஷ்ணனுடைய ராஸ லீலை தத்வத்தை உணர்ந்து அறியவும், இவை அனைத்தையும்
ஒருங்கு இணைந்து , பெறட்டும் என்று 12வது ஸர்கம் ஸ்லோஹம் 88ல் பல ஸ்ருதியும் கூறி யுள்ளார்.

23.”ஸாத்வீ மாத்வீக” எனத் தொடங்கும் ஸ்லோகம் 90 ல்- “இனிய மது பானமே !நீ இனிமை என்று இனியும் நினனயாதே !
சர்க்கரையே நீ கடினம்! த்ராஷையே உன்னன காண எவர் விரும்புவர்,-அம்ருதமே இனி நீ உயிரற்றது!
பாலே நீ ருசியற்றது! மாம்பழமே (பயனற்றது என்று)ஓலமிடு!
அழகிய பெண்களின் சிவந்த உதடே ஸ்ருங்கார ரஸம் நினறந்த மங்களமான ஜயதேவனின் மிகச் சிறந்த சொற்கள் உள்ளவரை ,
இனிமைக்கு ஸமம் என்று கூற வினழயாதே !.”-என்று கூறி காவ்யத்தை நினறவு செய்கிறார்.

24.கீத கோவிந்த மாகிற அந்த அம்ருத ஸாகரத்தில் மூழ்கித் திளைத்து நம் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண பக்தி மேலிட்டு,
ஸ்ரீ ஜயதேவர் போல், அந்த பர ப்ரஹ்மத்துடன் இரண்டற கலந்து ப்ரஹ்மானந்த மாகிற மோக்ஷப் ப்ராப்தி கிட்ட,
ஸ்ரீ ஜயதேவரின் திவ்ய பாத சரணங்கனளப் பற்றுவோமாக.

“ஸ்ரீகோபால விலாஸி நீவலய ஸத் ரத்நாதி முக்தாக் க்ருதி ஸ்ரீராதா பதி பாத பத்ம ஜநா நந்தாப்தி
மக்நோ (அ) நிஸம் லோகே ஸத் கவி ராஜ ராஜ இதி ய: க்யாதோ தயாம் போநிதி : தம் வந்தே
ஜயதேவ ஸத் குரு வரம் பத்மாவதீ வல்லபம்”

கோபியர்களின் வனளகளிலுள்ள சிறந்த முத்து முதலான ரத்னங்களின் வடிவம் கொண்ட ராதையின்
மணவாளனின் பாதத் தாமரையைத் தொழுது எப்போதும் ஆனந்தக் கடலில் மூழ்கிய வரும், உலகிலேயே
சிறந்த கவியரசர் எனப் பெற்றவரும்,கருணைக் கடலும், பத்மாவதியின் பதியும்,உன்னதமான குருவுமான
ஸ்ரீ ஜயதேவரை வணங்குகிறேன்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும்–

1.ஸ்ரீநாராயண தீர்த்தர் கிபி 17ம் நூற்றாண்டில் ஆந்திர ப்ரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில்
விளத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்த தாகச் சொல்லப் படுகிறது.
பூர்வாஸ்ரமத்தில் அவருடைய பெயர் மாதவன் என்றும் கோவிந்த சாஸ்திரி என்றும் இருந்த தாகச் சொல்லப் படுகிறது.
அவர், தன் இளம் வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டு, பல ஷேத்திரங்களுக்குச் சென்று, பகவத் தரிஸனம் செய்தார் என்றும்
அவர் வேதாத்ரியைச் சேர்ந்த பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்றும், கரண பரம்பரை வாயிலாகத் தெரிகிறது.
அவர் இளமையிலேயே வேத சாஸ்த்திரங்கள்,சங்கீத சாஹித்யங்களில் விற்பன்னராக இருந்தார் என்றும் தெரிகிறது.

2. ஒரு சமயம் கிருஷ்ணா நதியின் அக்கரையிலுள்ள தன் மாமனார் வாழ்ந்த வேதாத்திரி கிராமத்தை அடைய நீந்திச் செல்கையில்
நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் அவரை உருட்டிச் சென்று விட்டது.
அவர் உயிருக்குப் பேர் ஆபாயம் ஏற்பட்ட சூழ் நிலையில், அவர் தான் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தைத் துறந்து,
ஸந்நியாச மார்கத்தைத் தழுவுகின்றேன் என்று ப்ரதிஜ்ஜையை எடுத்துக் கொண்டார்.
வெள்ளமும் வடிந்து அக்கரையிலுள்ள மாமனாரின் வீட்டை அடைந்தார் .
அவரைப் பார்த்த அவரின் மனனவி அவரிடம் ஒரு ஸந்யாசியின் காந்தி வீசுவதை உணர்ந்தார்
அவரிடம் விசாரித்த போது நடந்தவற்னற அறிந்தாள்.
பின் தன் மனனவிடம் அனுமதி பெற்று இல்லற வாழ்வைத்
துறந்து காஞ்சீபுரம் சென்று ஸ்ரீசிவராம தீர்த்தர் என்ற மஹானிடம் முறைப்படி ஸந்நியாசம் பெற்றார் என்று சொல்லப் படுகிறது.
கிருஷ்நா நதி வெள்ளம் ஸ்ரீ தீர்த்தரை ஸந்நியாசி ஆக்கியது , ஸ்ரீ கிருஷ்ண மஹா ஸாகரம் அவனர ப்ரஹ்ம ஞானி ஆக்கியது போலும்.
இது ஆதி சங்கரர், முதலை ,தன் காலை ப் பிடித்துக் கொண்டதையே வ்யாஜ்யமாகக் கொண்டு,
ஸந்நியாசம் வாங்கிக் கொண்டதை நினனவு படுத்துகிறது.

3.அதற்கு பிறகு, அவர் தன் குருவின் ஆஜ்ஜைப்படி தீர்த்த யாத்திரை மேற் கொண்டு காசி, ப்ரயாகை ,
மதுரா.பூரி போன்ற ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்,
காசியில் பல வருடங்கள் தங்கி ப்ரஹ்ம உபாசனையில் ஈடுபட்டார்.
பிறகு காவேரிக் கரையிலுள்ள பல ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரும் போது
அவருக்குத் தீராத வயிற்று வலி வந்து மிகவும் சிரமப்பட்டார்

4.இப்படியாகத் திருவையாறு வந்தடைந்தார் . அவ் வூரின் தெற்கே உள்ள நடுக் காவேரி எனும் கிராமத்தை அனடந்த போது,
அவரின் வயிற்று வலி மிக அதிகமாகி அங்குள்ள வினாயகர் கோயிலில் இரவு படுத்துறங்கினார்.
அவர் கனவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி “நீ காலையில் விழித்தெழும் போது முதலில் எந்த
மிருகத்தைப் பார்க்கிறாயோ ,அதைத் தொடர்ந்து செல்,உன் வயிற்று வலி நீங்கும்”என்று சொல்லி அருளினார்.

5.அது போலவே மறுநாள் காலையில் கண்விழித்த போது, ஓரு வெள்ளைப் பன்றியைக் கண்ணுற்றார்.
காலையில் கண் விழிக்கும் போது பன்றியைப் பார்ப்பது அப சகுனம் என்று மனத்தில் தோன்றினாலும்
ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஜ்ஜையை சிரமேற் கொண்டு அப் பன்றியைப் பின் பற்றிச் சென்றார்,
சுமார் 4 கி.மீ தொலைவு வரை அதனைத் தொடர்ந்து சென்றபின் மிகவும் களைப்புற்றார்.

6.அத் தருணம் ,அப் பன்றி ,அருகாமையில் உள்ள ஒரு கோயிலினுள் சென்று மனறந்தது.
அச் சமயம் ஆகாச வாணியின் குரலைக் கேட்கலுற்றார்.
”என்னைத் தேடாதே .உன்னன இங்கு வர வழைக்கவே நான் இவ்வாறு செய்தேன்”எனற குரலொலி கேட்டது.
அதைக் கேட்ட அவர் மெய் சிலிர்த்து ,ஆனந்த பரவசம் அனடந்தார்.
அந்த ஷணமே அவருனடய தீராத வயிற்று வலியும் மனறந்தது,
பூபதி ராஜ புரம் என்ற பெயர் பெற்ற அக் கிராமம், அன்று முதல் வராஹ புரி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
வராஹ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் பன்றி என்று பொருள்,

7.ஸ்ரீ தீர்த்தர் அந்த இடத்தின் மஹிமையை உணர்ந்து கிராம ஜனங்களின் உதவியுடன் அந்த பூமியை அகழ்ந்து பார்த்ததில்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தேவியை அணைத்தவாறு உள்ள ஸ்வயம்பு ஸிலா மூர்த்தியைக் கண்டெடுத்து அந்த இடத்தில்
ஒரு கோயிலை , பக்தர்களின் சஹாயத்துடன் நிர்மாணித்து, பகவானைப் ப்ரதிஷ்டை செய்து, பூஜா வழிபாடுகள் தினமும் நடக்க ஏற்பாடுகள் செய்தார்,

8.அவர் தம் வாழ் நாள் முழுவதும் அந்த புண்ணிய வராஹ ஷேத்ரத்திலேயே தங்கி உலகப் புகழ் பெற்ற
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பக்தி சுனவ சொட்டும் பாடல்கள் நிரம்பிய காவ்யத்தை அருளிச் செய்தார்.
அவர் ஸங்கீதத்திலும்,நடன சாஸ்த்திரத்திலும் வல்லுநராக இருந்ததால் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ளத்தின் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்து வதற்காக ஸங்கீதத்தையும் நாட்யத்தையும் தன் பாடல்களில் சேர்த்துள்ளார்.
இந்த காவ்யத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
ஸ்ரீகிருஷ்ண ஸன்நிதியில் அவர் எழுதிய அத்தனைப் பாடல்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீருக்மிணி தேவியுடன் நடமாடி தன் அங்கீகாரத்தை வழங்கினார் என்றும்
அவர்களின் சலங்னக ஒலியை மட்டும் ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார் என்றும் சொல்லப் படுகிறது.
இங்கு, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீநாராயண பட்டத் திரியின் ஸ்ரீநாராயணீயம் முழுவதற்கும் அங்கீகாரம் வழங்கியதை நினனவு கூறுவோம்.

9.வடமொழியில் தரங்கிணி என்ற சொல், அனலகளுடன் கூடிய ஆற்னற குறிப்பதாகும்.
ஸ்ரீகிருஷ்ணனுனடய லீலைகள் ஆகிற அனலகளை 12 தரங்க பிரிவுகளுடன் கொண்டுள்ளதால்
இந்நூலுக்கு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நூலில் 303 -ஸ்லோகங்கள் 153-கீதங்கள் 31 -ஸூர்ணிகைகள் அடங்கியுள்ளன.

10.ஸ்ரீநாராயண தீர்த்தர் கடினமான சொற்களைத் தவிர்த்து லலிதமான சொற்களாலேயே தன்
கத்யங்களையும், பத்யங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வனகயில் அனமத்துள்ளார்.
ஸ்லோகங்கனளயும் ஸூர்ணிகைகளையும் கீதங்களிடையே சந்தர்பத்துக்கேற்ப அழகுபட பொருத்தி யுள்ளார்.
ஸ்லோகங்கள் 17அழகிய பல விருத்தங்களிலும்,கீதங்கள் 34 மனம் கவரும் ராகங்களிலும்,
கேட்போரை நடனம் ஆட வைக்கும் 10 தாளங்களிலும் அனமக்கப் பட்டுள்ளன.

11.இந்த நூலில் ஸ்ரீமத் பாகவதம் தஸம ஸ்கந்தம் 1 முதல் 58 வரையுள்ள அத்யாயங்களில் கூறப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம்,பால லீலைகள்,
கன்றுகளை மேய்த்தல் ,கோபீ வஸ்த்ராபஹரணம்,கோவர்த்தன கிரி உத்தாரணம்,ராஸக் கிரீடை , கம்ஸன் முதலிய துஷ்டர்களை அழித்தல்,
கடலின் நடுவே துவாரகையை நிர்மாணித்து அதனுள் ப்ரவேசித்தல் ஸ்ரீ பலராம விவாஹம்,ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தை வர்ணிப்பதோடு அஷ்ட மஹிஷிகளுடன் விவாஹமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12.ஒவ்வொரு தரங்கத்திலும் இன்ன இன்ன லீலைகள் அபிநயிக்கப் பட்டுள்ளன,
இந்த இந்த பாத்திரங்கள் வருகின்றனர் என்று கூறி, ஸ்லோகம்,கீதம்,ஸூர்ணிகை – இவைகளால் அந்த அந்த லீலைகளை விளக்கி யுள்ளார்,
கிருஷ்ண லீலைகனள அபிநயம் செய்தல் என்ற முனறயைத் தழுவியே இந்த நூலானது படைக்கப் பட்டுள்ளது.
ஹரி கதா கால ஷேபம் செய்யும் பாகவதர்கள் கதையின் ஆரம்பத்தில்,
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் தொடக்கத்தில் உள்ள “ஹிம கிரி தனய” பத்யத்தைப் பாடுகிறார்கள்
என்பது இதன் தனிப் பெருமையை விளக்குகிறது.

13.ஸ்ரீநாராயண தீர்த்தர், வேதார்த்தங்களில் விசாரம் செய்து நிர்ணயித்தவாறு,
ஜாதி ,குணம்,கிரியை , இவைகளற்றதும்,ஆனந்தம், பிரகாசம்,சத்து (எப்போதும்,எங்கும்,எல்லாமுமாக இருப்பது) ஆகிய லக்ஷணங்களைக் கொண்ட
பரம்பொருனள எப்போதும் உள்ளத்தில் இருத்தி ஆராதித்தவர் ஆயினும் அத்தகைய நிர்குணமான பரம்பொருனள அடைவதற்கு அவன்
ராம,கிருஷ்ண வடிவங்கனள உபாஸிக்க வேண்டும்.
இந்த ச குண வழிபாட்டை நாளடைவில் தனக்கு தானே நிர் குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீ சுகப்ப்ரஹ்மம் நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயில் தீ விரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவேத்தை – ஸ்ரீ கிருஷ்ண லீலைகனள -உபதேஸித்தார்,
ஒவ்வொரு லீலையிலும் தன் உள்ளத்திலுள்ள பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப் பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே
பரம் பொருளின் ச குண வடிவங்கனளத் துதித்து தன் பாடல்கள் மூலம் வழிபட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச் சிறப்பு.

14–முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின்” என்ற கீதத்தில்,கணபதியையும்,
”துர்கே துர்கதி ஹாரிணீ ” என்ற ஸ்லோகத்திலும் “ஜயஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவினயயும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தானோது மதுஸூதன ஸதா ” என்ற கீதத்தில் கங்காதரன்,தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் ேரங்கங்களில் நர ஸிம்ஹனரயும்,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வ ஞான க்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல், மஹா விஷ்ணுனவயும்,
3ம் கீதத்தில், வராஹ புரி வேங்கடேசப் பெருமானளயும் துதித்துள்ளார்.

15.ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலைகனள வர்ணிக்கும் போது ஸ்ரீ ஜயதேவனரப் பின்பற்றாமல்,
ஸ்ரீவேத வ்யாஸர், ஸ்ரீமத் பாகவேத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலைகனள வர்ணித்த முறையையே பின் பற்றி யிருக்கிறார்.
முதலில் ஸ்ரீகிருஷ்ண அவதார கட்டத்தில்”தம் அத்புதம் பாலகம் அம்புஷேணம் ”(ஸ்ரீ மத் பாகவதம் -10-3-9)கருத்தை
”கல்யாணம் விதநோது” என்று தொடங்கும் முதல் தரங்கம் ஸ்லோஹம் -.27 ல் “சங்கம் சக்ரம்,கதை ,தாமரைப்பூ கதை ,வில்,
பல இரத்தினங்கள் பதித்த கிரீடம்,மகர குண்டலம்,மஞ்சள் பட்டு, கழுத்தில் கௌஸ்துப மணி ,இவற்றுடன் கூடியவரும்,
யாதவ குலத்தின் தலைவனான வஸுதேவருடையவும், தேவகியினுடையவும், குழந்தையாகத் தோன்றியவருமான கிருஷ்ணன்
எல்லாவிதமான மங்களங்களையும் அளிக்கட்டும்” என்று கூறுகிறார்.
இதில் கிருஷ்ணனுடைய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போதே கல்யாணம் என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறார்,
நாராயண பட்டத்திரி நாராயணீ யத்தில் கிருஷ்ணனுனடய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போது “ஆனந்த ரூப பகவன்” (தஸகம் 38,)என்று ஆரம்பிப்பதை நினைவு கூறுவோம்.
மேலும் நாராயணீ யம் ஆரம்பிக்கும் போதும் “ஸாந்த்ரானந்த ” என்றும்
ஆனந்த ஸ்வரூபியான பரப்ரஹ்மத்தை வர்ணிப்பதும் குறிப்பிடத்தக்கது.

16.ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் ஸூதபா என்ற ப்ரஜாபதி , ப்ருச்னி என்ற மனைவியுடன் நல்ல
பிள்ளையை அனடய 12000 தேவ ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்,
விஷ்ணு அத் தவத்தின் பலனை யளிக்க அவர்கள் முன் தோன்றினார்,
அப்பொழுது அந்த தம்பதிகள் விஷ்ணுவைப் போன்ற புத்திரனையே வரமாக வேண்டினர்.
அதனால் விஷ்ணுவும், ப்ரச்னி கர்பன் என்ற பெயருடன் பிறந்தார்.
அந்த தம்பதிகள், அதிதி -கஸ்யபராகத் தோன்றிய போது, அவர்களுக்கு உபேந்திரன்(வாமனன்)
என்ற குழந்தையாகப் பிறந்தார்.
மூன்றாவது முனறயாக, அந்த தம்பதிகள் தேவகி-வஸூ தேவராகத் தோன்றிய போது அவர்கள் செய்த புண்யத்தினால் விஷ்ணுவே அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ராக அவேரித்தார். (பாக.ஸ்க.10-அத்யா. 3-ஸ்லோ . 32-45).
மேலே குறிப்பிட்ட விஷயத்தையே “தத் ப்ராக்தனை : கர்மபி: என்ற சொற் தொடரால் குறிப்பிட்டுள்ளார் (முதல் தரங்கம் ஸ்லோ .28)

17.ஸ்ரீ பாகவதத்தில் வியாசர் கிருஷ்ணர்,ராமர்,ந்ருஸிம்ஹ அவதாரங்கனளக் குறிப்பிடும் போது ஸ்ரீமன்
நாராயணன் எல்லை யற்ற கருணையினாலேயே அவதாரங்களை எடுத்தார் என்று வலியுறுத்த
ஒவ்வொரு அவதாரத்தினைக் கூறும் போதும் “அத்புத ” என்ற அடை மொழியைச் சேர்த்து இருக்கிறார்.
இவ்விஷயத்தையே ஸ்ரீ தீர்த்தர் “மங்களாலய மாமவ தேவ என்று தொடங்கும்” முதல் தரங்கம் கீதம்10-ல்
“அதி கருண வித்ருத அத்புத ரூபா” என்ற சொற் தொடரால் விளக்கியுள்ளார்.
இதையே ஸ்ரீ ஜயதேவர் முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றி சொல்லும் போதும்
“கேஶவா த்ருத ” -கேஶவன் தரித்த -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா
என்று எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறே ஸ்ரீ தீர்த்தரும் தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும் சூர்ணிகைகளிலும் கீதத்திலும்
ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு இறப்பு அற்றவன்,
எங்கும் நினறந்திருப்பவன் ,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நிலையான ஆனந்த வடிவு உடையவன்,தன்
அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி, என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப் பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விதிதம்” என்று கூறியுள்ளார் (தரங்கம் -3,கீதம்-34ல்7வது சரணம்).
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய கால் வாய்கள் ஆயிரம் தோன்று கின்றதோ ,
அது போலே மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூர்ண தத்வம்–. மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவேம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

18.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குத் தந்தையாகப் போகிறார் என்ற காரணத்தால் வஸூதேவர்
பிறப்பின்போதே மங்கள வாத்யங்களை தேவர்கள் முழக்கினர் என்ற காரணத்தால் வஸூதேவருக்கு
“ஆனகதுந்துபி” என்ற பெயர் ஏற்பட்டது, (பாகவேம் ஸ்க.9-அத்யா. 24-ஸ்லோ . 29&30).
இதையே ஸ்ரீ தீர்த்தர் “அ லௌகிக மிதம் ரூபமாலோக்யானக துந்துபி:” என்று குறிப்பிடுகிறார் (முதலாவது தரங்கம் ஸ்லோ .29).

19.”பங்க்தி ” எனப்படும் சந்தஸ் (விருத்தம்) ஒரடிக்கு ஐந்து எழுத்துள்ளதாகும். அவ்விதம் ஐந்து
பொருட்கள் அடங்கிய கூட்டங்கள் சேர்ந்தே இவ்வுலகம் “பாங்க்தம்” என்று அழைக்கப் படுகிறது.
இவை உலக பாங்க்தம்,தெய்வ பாங்க்தம்,பூத பாங்க்தம்,வாயு பாங்க்தம்,இந்திரிய பாங்க்தம்,தாது பாங்க்தம் என்று ஆறு வகைப்படும்
இவ்வித ஆறு பாங்க்தங்களும் சேர்ந்தே உள்ளிலும், வெளியிலுமுள்ள உலகமாகும்.
இதை , ப்ரஹ்மமாக உபாஸிப்பவன், பரம் பொருளாகவே ஆகின்றான் என்று தைத்திரீய உபநிஷத் சிக்ஷாவல்லி,7ம் அனுவாகத்தில்
”பாங்க்தம் வா இதகும் ஸர்வம், பாங்தேனைவ பாங்க்தக்
ஸ்ப்ருணோதேதி ஓம் இதிப் ப்ரஹ்மா ஓம் இதீ தகும் ஸர்வம்”எனபதின் கருத்தையே
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம் ஸ்லோ .44ல் “பாங்க்த கர்ம க்ரமேண வேத்யம்” எனக் கூறுகிறார்,

20.பகவத் கீதையிலுள்ள (அத்,4ஸ்லோ 8) “பரித்ராணாய ஸாதூனாம்……ஸம்பவாமி யுகே யுகே ”.என்று
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வுலகில் தீயவர்களை யழித்து அதர்மத்தை யகற்றி பக்தர்களை ரக்ஷிக்கவும்,தர்மத்தை தழைக்கச் செய்வதற்கு, நான் இஷ்டப்படி பிறப்பு எடுக்கிறேன் என்ற கூற்றை விளக்க,
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம்,சூர்ணிகை 15ல் “ஸ்வ பத அநுக்ரஹ சிகீர்ஷயா ஸ்வேச்சயா ப்ராப்த கோபால விக்ரஹ:” என்ற சொல் தொடனரப் ப்ரயோகப்படுத்தி யுள்ளார்,

21.2வது தரங்கம்,சூர்ணிகை -17ல், ஸ்ரீ தீர்த்தர்,”ஆருருஷுநிவாரூடயோகி” என்ற சொல் தொடரைப் ப்ரயோகப் படுத்தி யுள்ளார்.
எல்லாம் அறிந்த கண்ணன் உயரத்தில் உள்ள உரிகளில் வைக்கப் பட்டிருக்கும் தயிர்,பால்,வெண்ணைய் முதலியவைகளை எடுப்பதற்கு
வழி தெரியாத கோப குழந்தைகளுக்கு, உபாயங்கனளக் கற்றுக் கொடுத்தான் என்பது பொருள்
.”ஆருருஷுநிவாரூடயோகி”- நிஷ்காம கர்மாக்களினால் சித்த ஸுத்தி அடைந்தவன் ஆரூட யோகி.
அதைப் பெற விரும்புபவன் ”ஆருருக்ஷு யோகி. என்று ஸாஸ்த்திரங்கள் கூறுகின்றன.முன்னவர் பின்னவருக்கு வழி காட்டுபவர்
.”ஆருருணக்ஷார் முனேர் யோகம்” என்று தோடங்கும் பகவத் கீதை அத்.6,ஸ்லோ.3 லும் இக் கருத்தே கூறப்படுகிறது.

22. வராஹ புரி புண்ய ஷேத்ரத்தில் ஸ்ரீநாராயண தீர்த்தரால் ஆரம்பிக்கப் பட்டதும்,பக்தர்களால்
இன்று வரை பக்தி ஸ்ரத்தை யுடன் நடத்தப் பட்டு வரும் உரியடி தத்வத்தை விளக்குவது இந்த இடத்தில்
பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது,
மனிதன் தன்னுள்ளேயே இருக்கும் ப்ரஹ்மத்தை
உணர்ந்து,தானும் அதுவாகவே ஆகி பேர் ஆனந்தத்தை அனுபவிக்க அக்ஞானம்(அறியாமை ) தடையாக உள்ளது.
வாழ்கையில் பல்வேறு இடர்கள் மனிதனை அவன் லக்ஷியத்தை அடைய முடியாமல் குறுக்கிடுகின்றன
இவற்னற ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவனம் .அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம்,ஸக்யம்,ஆத்ம நிவேதனம் ஆகிற ஒன்பது வகைப்பட்ட
பக்தியில் ஈடுபடு வதால் ஏற்படும் ஞானத்தால், இடர்களைத் தகர்த்து, பகவத் அநு க்ரஹத்தாலும், ஞானிகளின் துணை கொண்டும்,
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து, ப்ரஹ்மானந்தம் அடைவதையே விளக்குவது போல், உரியடி உத்ஸவம் அமைந்துள்ளது

23.மூங்கில் பெட்டியால் பின்னப்பட்ட உரியடிப் பெட்டியும் வழுக்கு மரத்தில் பூசப்பட்டிருக்கும் பசை முதலியவையும் அக்ஞானமாகும்,
பலவித மான இடையூறுகளுக்கிடையில் தடிகளால் உரியை அடித்தும்,கைளால் பிடித்து பெட்டியை உடைப்பதும்,
வழுக்கு மரத்தின் மீது பூசப்பட்ட அக்ஞானமாகிற பாச பந்தங்கனளக் கனளந்தும் படிப்படியாக மேலே ஏறுவதும்,
ஸ்ரவணம் முதலிய ஸாதனங்களால் உண்டாகிற அறிவாகும்.
வழுக்கு மரத்தின் அடியில் ஸ்திரமாக நின்று மேலே ஏறிச் செல்பவர்களுக்கு உதவுபவர்கள் ஆரூடயோகி க்கும், மேலே ஏறிச் செல்பவர்கள் ஆருருக்ஷுவிற்கும் ஸமமானவர்களே ,
இத் தத்துவமே உரியடித் தத்துவம்.– உரியிலும்,வழுக்கு மரத்தின் மேலும் தொங்கும் ப்ரஸாதத்தை பகவத் ப்ரஸாதமாக ஏற்று,பக்தர்கள் பகிர்ந்து கொள்வது, பகவத் அனுக்ரஹத்தினாலேயே , பர ப்ரஹ்ம ஞானம் கிட்டி பூர்ண ஆனந்தம் கிட்டும் என்பதைக் காட்டுகிறது.

24. 2வது தரங்கம்,சூர்ணிகை -17ல் ஸ்ரீ தீர்த்தர் “முக்ய ப்ராண இவ வாகாதீன்” என்ற சொல் தொடரை உபயோகித்து
ஸ்ரீகிருஷ்ணனே ப்ராணனுக்கு இணையாகவும் கோபர்கனள வாக்கு முதலிய புலன்களுக்கு இணையாகவும் உருவகப்படுத்தி ,
வாக்கு முதலிய புலன்கனளக் காட்டிலும் ப்ராணனே சிறந்தது என்று விளக்குகிறார்.
ப்ராணனே ஐம்புலன்களிலும் சிறந்தது என்ற விஷயமானது, ப்ரச்ந உபநிஷத் 2வது ப்ரசனம் 4வது வாக்யத்திலும்,
சாந்தோக்ய உபநிஷத்5வது அத்யாயம் 1வது கண்டத்திலும், ப்ரஹதாரண்ய உபநிஷத் 6வது அத்யாயம் 1வது கண்டத்திலும் கூறப்படுள்ளது.
வேத ஸாஸ்த்திரங்களையும்,வேதாந்தங்களையும் நன்கு கற்றறிந்த ஸ்ரீ தீர்த்தர்,
பாமர மக்களுக்கும் எளிதாக புரியக் கூடிய வனகயில் ஸகல வேதாந்த ஸாரங்களைத் தன் நூலில் இடை இடையே நன் மணிகளாகக் கோர்த்திருக்கிறார்.

25.ஸ்ரீ தீர்த்தர்,”பாஹி பாஹி ஜகன் மோஹன கிருஷ்ணா பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” (4வது தரங்கம்- கீதம்
35) என்று குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் அழகு உலகம் அனைத்தையும் மயங்கவைக்கும் அழகு என்றும்
பரமானந்த வடிவுடையவன் என்றும் கூறுகிறார்.
சாதாரணமாக ஒரு குழந்தையின் கள்ளம் கபடற்ற சிரிப்பைப் பார்த்தாலே நமக்கு இனம் தெரியாத ஆனந்தம் கிட்டுகிறது.
ஏன் என்றால் அது பூர்வ ஸத்வ குணத்துடன் இருப்பதாலேயே . அதற்கு அன்ன ப்ராசனம் ஆகும் வரை இந்த பூர்ண ஸத்வ குணம் அதனிடம் நீடிக்கிறது.
அதற்குப் பின் அதற்கு ரஜோ தமோ , குணங்களின் கலப்பு வந்து விடுகிறது.ஸத்வ குண அளவும் குறைய ஆரம்பிக்கிறது.
அப்படியிருக்க ஸுத்த சத்வ குணமே உருவெடுத்து இருக்கும் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் போது பரமானந்தமாக இல்லாமல் எப்படி இருக்க முடியும்.-அதையே “பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்,

26.மேலும் (4வது தரங்கம்- கீதம் 35) 3வது சரணத்தில் ஸுலபமாக மாந்தர்களால் அறிய முடியாத ,
உள்ளடங்கிய மஹிமை வாய்ந்தவர் எனபதை “கூடமஹிம ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்.
நந்த கோகுலத்தில், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யாத சாஹசங்கள் இல்லை .
பூதனை வதம், சகடாஸுர வதம்,காளிங்க நர்தனம், கோவர்தனகிரி உத்தாரணம்,போன்ற வளர்ந்த மனிதனாலேயே முடியாத பல
அதிசயிக்கும் சாஹசங்களைச் செய்தாலும்,கோபர்கள் அவனுடைய பராக்கிரமத்தை அறியவில்னல,
ஒரு குளத்தில் இருக்கும் மீன்கள் தண்ணீரில் தெரியும் பூர்ண சந்திர ப்ரதி பிம்பத்தைக் கண்டு அதன் பெருமையை அறியாமல்,
அந்த சந்திரனையும் தன்னைப் போல் ஒரு மீன் என்று எண்ணுமாம்.
அது போல கோபர்களும் ஸ்ரீ கிருஷ்ணனை தங்கனளப் போல ஒரு சாதாரண இனடயன் என்றே எண்ணினார்கள்,என்று இதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இந்தப் பாடலை ஸ்ரீ ஜேஸு தாஸ் அவர்கள், தன்னுனடய இனிமையான குரலில்,அர்த்த பாவத்துடன் பாடும் போது மயங்காதவர்உண்டோ .கல்லும் கனரந்து உருகுமே .

27.அத்வைத வேதாந்த ஸித்தாந்தப்படி ஆத்ம ஸ்வரூபம் ஒன்றே ப்ரகாசமாக இருக்கும் பொருள்.
அந்த ஆத்ம ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்துப் ப்ரபஞ்சமே , ப்ரகாசம் அற்ற ஜடப் பொருளாகும்.
எனவே ,ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணம்(மனறப்பு) தேவை யில்னல.
மாயையின் வசத்தில் கட்டுப்பட்டு கோபிகள் இருந்தாலும், அவர்கள் தன்னிடம் கொண்ட அத்யந்த ப்ரேமையால் கவரப்பட்டு அவர்களை
அனுக்ரஹிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய லீலையே கோபிகா வஸ்த்ராபஹரணம்.
வஸ்திரம், ஸ்தூல தேஹத்தை மறைக்கும் ஆவரணம்(திரை ).மாயை , சூக்ஷ்ம தேகத்தையும் காரண தேகத்தையும் மறைக்கும் ஆவரணம்.
அபஹரணம் என்றால் பரிப்பது,களையும்படி செய்வது என்று பொருள்.
காத்யாயணி வ்ரதம் மேற்கொண்ட கோபிகை களின் ஸ்தூல தேஹ ஆவரணம் இந்த லீலையால் நீங்குகிறது.
உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ணனிடமும் கோபிகைகளிடமும் ஒன்றே .
கோபிகை களுக்கு ஸ்வயம் ப்ரகாச ஸ்வரூபமான தன்னிடம், மனம்,சித்தம்(சூக்ஷ்ம தேஹம்),
மாயை யாகிற ஆவரணம் களையப்பட்டு தன்னிடம் பூர்ணமாக லயிக்கப் பெற வேண்டும் என்று
வஸ்த்ராபஹரணம் என்ற வ்யாஜத்தால் உபதேசித்த போது கோபிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கடிக்கப் பட்டது.
மேலும், “என்னிடம் உள்ளத்தை நினலயாக இருக்கச் செய்தவர்களுக்கு மறுபடி உடலை யடைந்து சம்ஸாரத்தில் உழலுவது என்பது கிடையாது
தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு,உளுந்து,கோதுமை போன்ற வித்துக்கள் ஒரு பொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முனளத்த தில்லை .
ஆகவே , நீங்கள் பிறவி யற்றவர்கள் ஆனீர்கள்”-என்று கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்,(பாகவதம் ஸ்க.10அத்யா 22-ஸ்லோ . 26).
வஸ்த்ராபஹரண தத்துவத்தை , ஸ்ரீதீர்த்தர் 5வது தரங்கத்தில் “ஆவரணம் மம நஹி தே தாதும் பாவய கோப வதூ ஜன ப்ருந்த ” என்ற கீதம் 45ல்
கிருஷ்ண கோபிகள் ஸம்பாஷணையின் வாயிலாகத் தெளிவு படக் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரமணரின் அக்ஷர மணி மாலாவில் கூறப்பட்ட வரிகளை இங்கு நினனவு கூர்வோம்
“மானங்கொண்டு உறுபவர் மானத்தை யழித்து அபிமான இல்லாது ஒளிர் அருணா சலா”-(அருணாசலர்
ஒளி வடிவானவர்-அக்னி தத்வம் )

28.மேலும்,”கோபிகைகள் நான்கு பிரிவாக உள்ளனர்,
உபநிஷத்துக்கள்,தண்டகாவனத்திலுள்ள ரிஷிகள்,நித்ய ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவ ஸ்த்ரீகள் ஆகியவர்களே
கோகுலத்தில் கோப ஸ்த்ரீகளாக இருப்பவர்கள். மானிடப் பிறவி உள்ளவர்கள் ஒருவரும் இல்லை “எனற ப்ரஹ்ம வைவர்த்த புராண வசனக் கருத்தை
ஸ்ரீதீர்த்தரும் 5வது தரங்கத்தில் ஸ்லோ .135 ல் “ச்ருதி சிரோ வாக் கோபிகா வல்லப:”என்று கோபிகைகள் வடிவம் எடுத்த
உபநிஷத் தேவதைகளுக்கு மிகப்ரியமானவராக விளங்குபவர் என்று ஸ்ரீகிருஷ்ணரை வரணித்துள்ளார் –

29.கங்கை , கோதாவரி , யமுனை ,காவேரி,முதலிய நதிகள் கடலில் கலந்தவுடன் பெயரையும், உருவத்தையும் இழந்து
ஒரே கடலின் வடிவத்தை அடைகின்றன,-அவ்வண்ணமே முக்தி பெற்றவர்கள்
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து தம் சுயத்தன்மையை இழக்கிறார்கள்.-என்று முண்டகோபநிஷத்தில் கூறிய கருத்தை
ஸ்ரீதீர்த்தர் 6வது தரங்கத்தில் சூர்ணிகை 24 ல் இங்கு கிருஷ்ண ஸமுத்ரத்தில் கோபிகைகளான நதிகள் கலந்து விி்ட்டன என்று வர்ணிக்கிறார்.

30.கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஒலியானது வெளி விஷயங்களில் ஈடுபாடுனடய கோபிகைகளை
கண்ணனிடம் கொண்டு போய்ச் சேரத்தது, என்று 6வது தரங்கம் ஸ்லோ 142,143 ல் ஸ்ரீதீர்த்தர் கூறுகிறார்.,
இக் கருத்து பாகவேத்திலும் (ஸ்க.10அத்யா 29-ஸ்லோ . 3-8). காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்கள் அறம்,பொருள், இன்பம் ஆகியவை களிலிருந்து முதலில் விடுபட வேண்டும் என்பது வேதாந்தங்கள் முடிவு.

31.ஸ்ரீதீர்த்தர் “ப்ருந்தாவன மதுனா மன்யே ஸகி ப்ரஹதாரண்யமஹம்” (6வது தரங்கம் கீதம் 52)
கண்ணனுடன் சேர்ந்து இருக்கும் ப்ருந்தாவனத்தை ,
“ப்ரஹதாரண்யகம்” என்ற உபநிஷத்தாகவே கருதுகின்றேன் என்றும்,
பிருந்தாவனம், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை உளமாற நேசிப்பவர்களுனடய, பல காலமாகத் தொடர்ந்து வரும்
அக்ஞானத்தை அடியோடு அழிக்கக் கூடியது என்றும்,
ப்ரஹதாரண்யகம் முமுக்ஷுக்கள் பலருக்கு ஜீவ பரமாத்ம ஐக்ய ஞானத்தை அளிப்பதன் மூலம்
அக்ஞானத்தை அறவே அழிக்க வல்லது என்பது போல் ,இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை களையும்
ஒரு தோழி மற்ற ஓரு தோழியிடம் விளக்குவது போல் ஸ்ரீதீர்த்தர் கூறுவது அவரது சிறந்த வேதாந்த ஞானத்தை பனற சாற்றுகிறது,

32. “நிமிஷமபி யுக ஸஹஸ்ர ஸம தயா நீயம் மயா தின மாஸாயம் -” (6வது தரங்கம் கீதம் 58, 2வது சரணம்) –
கண்ணனைப் பார்க்காத க்ஷணநேரம் ஆயிரம் யுகங்களுக்கு ஸமமாகும் என்று கோபிகள்
கூறுவதாக ஸ்ரீதீர்த்தர் ,அவர்களின் பிரிவாற்றாமையை விளக்கியுள்ளார். ,
பாகவதம் ஸ்க.10அத்யா. 31-ஸ்லோ . 15ல் கோபிகா கீத த்தில் “த்ருடிர் யுகாயதே த்வாம் அபஸ்யதாம்” என்ற வரியை இப்போது நினனவு கூர்வோம்.

33.மேலும் ஸ்ரீதீர்த்தர், ‘பூயோ பூயோ யாசேஞ்ஜலினா”-என்று தொடங்கும் மிக அருமையான கீதம் 57ல்(தரங்கம்6)
அரை நிமிஷம் கூட கிருஷ்ணனைப் பார்க்காதிருக்கும் இந்தா உடல் வெறுக்கத் தக்கதாகும்.என்றும்
“காந்தம் காந்தாரமபி தவ யோகே,……காந்தாரம் க்ருஹமபிது வியோகே கருண
தருணீ மயி தவ பவது” -எனறு கண்ணன் இருக்குமிடமானால் காடும் நாடு போன்று அழகுள்ளதாகும்,
கண்ணன் இல்லையேல் வீடானாலும் அது கஷ்டங்கள் நினறந்த காடாகும் என்று ஸ்வானுபவத்தை
கூறும் அழகு கிருஷ்ண பக்தர்களை மிகவும் கவருகிறது.
மேலும் புன்னாகவராளி ராகத்தில்
அர்த்த பாவத்துடன் உனடயாளூர் அனுபவித்துப் பாடும் போது, அதைக் கேட்போர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .

35.மேலும் 7வது தரங்கம், கீதம் 1 ல் “அத்வயம் கண்டிதம்” என்ற சரணத்திலிருந்து 20 வது சரணம் வரை
20 சரணங்கள் அடங்கிய கீதத்தால்-ஸாம வேதத்தைச் சார்ந்ததும் 16 பிரிவுகள் கொண்டதுமான
சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ருஷியால் தன் புதல்வனும் சீடனுமான, ச்வேதகேது என்ற முனிகுமாரனுக்கு,
உபதேஸிக்கப்பட்ட ஆத்ம தத்வ ஸாரத்தை ,ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ராஸ மண்டலத்தில் உள்ள கோபிகைகளுக்கு
கான ரூபமாக உபதேஸித்துள்ளதாக,ஸ்ரீதீர்த்தர் வர்ணித்துள்ளது அவரின் கவித்வத்தையும் உயர்ந்த ஆத்ம ஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது,

36.மிகச்சிறந்த தத்வக்ஞானம் பெற்றவர்களுள் இணையற்றவள் என்று ஒரு கோபியைக் குறிப்பதற்காக
“ஹ்ருதய நிஹிதம் காந்தம் காசித் களிந்த ஸூதா தடே ” என்ற வரியில் காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கடோபநிஷத்தில், “மிகச் சிறந்த அறிவாளி ஆத்ம தத்வத்தைக் கண்டான்” என்று கூறுகையில்
“காசித்” பதம் ப்ரயோகிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்தில் ஒருவனே ஆத்ம ஞானத்திற்காக முயற்சி செய்வான் .முயற்சிப்பவர்களுள் ஆயிரத்தில் ஒருவனே தத்துவத்தை அறிகின்றான் என்று
பகவத்கீதையிலும் “மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு……..கச்சின் மாம் வேத்தி தத்வத “(அத்.7 ஸ்லோ .3)-என்று கூறப்பட்டுள்ளது.
இங்கேயும், ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மா, காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கோபியர்கள் அத்தகைய கினடத்தற்கரிய ஆத்ம தத்வ ஞானத்தை ஸ்ரீகிருஷ்ணனுனடய அருகாமையில் இருந்த
காரணத்தாலேயே கை வரப் பெற்றனர் என்று விளக்கவே ஸ்ரீதீர்த்தர், காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார். (தரங்கம் 7 ஸ்லோ . 12).

37.“சத்யம் ஞானம் அனந்தம்– ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோஸ்நுதே
ஸர்வான் காமான் ஸஹ-“என்று தைத்ரிய உபநிஷத் ஆனந்த வல்லி கூறுகிறது,
ஹ்ருேயத்தில் இருக்கும் உபநிஷத் ஸாரச் சுருக்கமான” “புத்தியால் நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்
என்று உணருபவன் பேர் ஆனந்தத்தை அடைகிறான்-பேர் ஆனந்தத்தில் முழ்கித் திளைத்த அந்த ஜீவன்
முக்தன், நானே அந்த பர ப்ரஹ்மம் என்று பாடுகிறான்” என்று தைத்ரீய உபநிஷத் ப்ருகுவல்லி
கூறுகையில் ‘ஹாவ் ஹாவ் ஹாவ்’ என்று ஆனந்தக்கூத்து ஆடுகிறான் என்றும் கூறுகிறது.
இக் கருத்தையே ஸ்ரீதீர்த்தர், தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து இந்த பரமானந்தத்தைத் தான் அனுபவித்து,
அதையே கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் அனுபவித்தாக எழுதி யுள்ளார்.(தரங்கம் 7 ஸ்லோ . 12).

38.”நிரங்குச த்ருப்தித ”- என்ற சொல்லால் ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மாவும் நானும் ஒன்றே , வேறில்னல–அதாவது
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே , வேறில்னல என்ற ஆத்ம ஞானத்தினால் ஏற்படும் பேர் ஆனந்தம் நிகரற்றது
என்ற மஹா வாக்யங்களின் அர்த்தத்தையே உணர்த்துகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ ?. (தரங்கம் 7 ஸ்லோ . 12).

39.கோபிகைகள் யமுனாநதியில் நீராடும் போது தங்களுக்கு கிருஷ்ணனைப் போலே அழகுள்ள
கணவனை அருள வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தனர்.
கல்யாண சந்தர்பத்தில் ஓதும் வேத மந்திரங்கள் கூறுகின்றன-சோமோ கந்தர்வர்களே ,அக்னியே ,மற்ற தேவர்களே இந்தா விட்டு விலகிச் செல்லுங்கள்.
அவள் பூலோக சம்பிராதாயப்படி தன் கணவனின் மூலம் தாய்மை அனடய வேண்டியுள்ளது.-
இந்த மந்திரங்கள் அவளுக்கு அனுகூலமாக,சாதாரண உணர்ச்சி பூர்வமான அநுபவங்களிலிருந்து விடுவித்து,
அவளைத் தாய்மை எனும் உன்னதமான உயர்ந்த நிலையை அடையச் செய்ய ஹேதுவாக இருக்கிறது.

40. இந்த வேத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் நீராடப் போகு முன் அவர்கள்
மரத்தில் வைத்திருந்த வஸ்திரங்கனள அபகரித்த ஸ்ரீகிருஷ்ணனிடம் அவைகளைத் திருப்பிக்
கொடுக்குமாறு வேண்டிய அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் செய்த உபதேஸமும், ஆகியவை அழகுற சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ராஸ லீலை , கோபிகாகீதம், யுகளகீதம் ஆகியவைகள் தொடர்ச்சியாக விவரிக்கப்பட்டு
அவை மூலம் கோபியர்கள் கண்ணன் பால் கொண்டிருந்த பரம ப்ரேமையையும் ,
அவர்களின் எண்ண ஓட்டங்களையும், அவர்கள் எது பொய் எது உண்னம என்று அறிந்து மனப் பக்குவம்
அடைந்து, பரமாத்மாவுடன் ஐக்யமனடந்து ஆனந்தத்தாய் அடைந்து, சிறந்த பேற்றை அடைவது
ஆகியவை அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன .
ஸ்ரீநாரத பக்தி ஸூத்ரத்தில் (19,55,57,88 ) பரம ப்ரேமையின்
லக்ஷணங்களும்,வெளிப் பாடுகளும் எத்தகையது விளக்கப்பட்டு இருப்பதையே , மேற்கண்ட ஸர்கங்கள்,
ஸ்ரீகிருஷ்ணர் கோபிகைகளுடன் நடத்திய லீலைகளின் வாயிலாக சித்தரிக்கின்றன.

41.சாதாரணமான மனித அனுபவங்களில், விழிப்பு நினலயில், மனத்தில் தோன்றும் பூரண நினறவு பெறாத எண்ணங்கள்
நினனவுகள் உருவெடுத்து,நம் உறக்க நினலயில் கனவுகளாக மாறுகிறது.
இதையே கவிதை நயத்துடன் பார்க்கும் போது நம் கனவுகளே விழிப்பு நினலயில் நினறவு பெற்ற நிகழ்வுகளாக மாறுகிறது.
இதைத்தான் .ஸ்ரீலீலா சுகர் தான் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் (அங்கநாம் அங்கநாம் என ஆரம்பிக்கும் (2-வது ஆஸ்வாசம் ஸ்லோகம்- 35)
ராஸ லீலையை விவரிக்கும் போது,எப்படி ஒரு கனவு,விழிப்பு நினலயில் உண்மை நிகழ்வாக மாறுவதை கவி நயத்துடன் வர்ணிக்கிறார்.
இந்த நினலயில் நமது வலுப் பெற்ற ஏகாக்ர சிந்தனைகள்
பகவான் பால் இருந்தால் ,அவனருளால்,அவை நிறை வாகும் தன்மையை ராஸ க்ரீடா நிகழ்ச்சி மூலம் விவரிக்கிறார்.
இதில் கிருஷ்ணன் எப்படி தன்னை பல கிருஷ்ணன்களாக ஆக்கிக் கொண்டு கோபியர்களின் இடையே நடனம் புரிந்த நிகழ்ச்சியை அழகாக வர்ணித்துள்ளார்.
மேலும் கோபியர்கள் அனமத்த வட்டத்தின் நடுவிலும் நின்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருக்கிறான்.
அவர்களுக்கு மற்ற கோபியர்கள் மனறந்து, ஒவ்வொரு கோபியும் தான் ஒருவளே கண்ணனுடன் தனியாக
ஆடிக் கொண்டிருப்பதாகவே எண்ணி ஆனந்திக்கிறாள், அப்போது கனவும் நினனவும் ஒன்று இணைந்து,
அவர்களுக்கு தான் கனவுலகத்தில் தான் அனுபவித்த தனிப் பட்ட ஆனந்தம், நினனவு நினலயில்,ஒரு உண்மை நிகழ்வாகவே தோன்றுகிறது.
இந்த தன் உணர்வு இல்லாது ,தான்,தனது என்ற தளைகளையும் உதறித் தள்ளிவிட்டு அப்பரமாத்மாவிடம் அனன்ய பக்தி யுடன் சரணா கதி அடைவதையே ஒவ்வொரு பக்தனும்( ஜீவாத்மாவும்) விரும்புகிறான்.
இந்த விவரிக்க இயலாத , உன்னத ப்ரேம பக்தி பெருக்கு, நினைவுலகத்தையும்,கனவாக மாற்ற வல்லது என்பதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில்
(விக்ரேது காமா எனத் தொடங்கும் ஸ்லோகம் 55-2வது ஆஸ்வாஸம்), லீலா சுகர் மற்ற ஓரு நிகழ்ச்சியால் வர்ணிக்கிறார்
தயிர் விற்கும் ஒரு கோபிகை ப்ருந்தா வனத்தி ல் “த யிர், தயிர்” என்று கூவிக் கொண்டு செல்லும் போது ,கிருஷ்ணனின் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்தி
அவனுனடய பால லீலைகளில் மனம் லயித்து, தன்னை மறந்த நிலையில், “தயிர் தயிர்” என்று கூவுவதை மறந்து
“கோவிந்தா மாதவா ,தாமோதரா “என்று தன் இனிய குரலில் கூவ ஆரம்பித்தாள்.
கனவு, நினனவுகளைத் தாண்டி,பக்திப் பரவசம் ஒருவரை எப்படி மதி மயங்கச் செய்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது.
தன் ஸ்வானுபவங்களை கவிகளா லேயே இப்படி நயம் பட வர்ணிக்கமுடியும்.

42.மேலும் பாகவத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோபியர்களுடன் ராஸ க்ரீடையில் ஈடுபட்டபோது,
இவ்விதம் கோபியர்கனளக் கட்டிக் கொள்வது, கைகளால் தொடுவது, அன்பு ததும்பப் பார்பது,
அழகிய கம்பீரமான சிரிப்பு இவைகளினால் தன் நிழனலப் பார்த்து வினளயாடும் குழந்னதை போல் வினளயாடினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.-
“ ரே மே ரமேஸோ வ்ரஜ ஸுந்தரீபி: யதார்பக: ஸ்வ ப்ரதி பிம்ப விப்ரம:”( பாகவதம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ. 17)

43.நம்முனடய வேதங்கள், புராணங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.
புராணங்கள் காவ்யங்களும், கவிதைகளும் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
பலிபீடம் யக்ஞம்(அக்னி கார்யங்கள்) செய்வது எல்லாம் ப்ரக்ருதி ,புருஷன் என்ற இரண்டு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையே .
நமது திருமணங்களில் தம்பதிகளின் நலன் குறித்து ஓதப்படும் வேத மந்திரங்கள் எல்லாம் தாய்மை
அடைவது,புத்திர உற்பத்தி என்ற புனிதமான நிகழ்வுகளுக்கு ஆசி வழங்குபவைகளாகவே இருக்கின்றன.
“ஆத்மாவை புத்ர நாமாஸி ப்ரஜாமனு ப்ரஜாயஸே ”-என்று விவாஹ சமயம் செய்யப்படும், சேஷ ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்கள்,
கணவன்-மனைவி, தங்களுடைய குழந்தைகளிடத்தில் மறுபிறப்பு அனடகிறார்கள் என்ற கருத்தை
ப்ரதான ஹோமத்தில்,வடு ஹோமம் செய்யப்படும்போது கீழ் கண்டவாறு மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
”இந்திரனே ! இந்த வதுவிற்கு பத்து பிள்ளைகள் பிறக்கும்படி அருள் செய்.கணவனை பதினோராவது புத்திரனாகப் பாவித்து அன்பை வழங்கட்டும்”
என்று ப்ரார்திக்கப்படுகிறது.
வேத மந்திரங்களால் சுத்தி கரிக்கப்பட்ட மனத்துடன் இணையும் தம்பதிகள் பெறுவது ப்ரஹ்மானந்தத்தின் சிறு ப்ரதி பலிப்பே .
இல்லற வாழ்க்கையில் தேடிச் செல்லும் மற்ற விஷயங்களால் ஏற்படும் சுகங்கள் நினலயற்றதே .
நம்மில் அந்தர்யாமியாய் இருக்கும் சுத்த ஸத்வமான பரமாத்வ ஸ்வரூபத்தை உள்நோக்கி மனனம், முதலிய ஒன்பது ஸாதனங்களால் செலுத்தும் போது
ஏற்படும் ஆனந்தம், ஸாமீப்யம்,ஸாரூப்யம்,ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைகளில் அடையப்படுகிறது..
கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் (ஸாலோகம்) ஸ்ரீ கிருஷ்ணன் ஸமீபத்தில் (ஸாமீப்யம்) அவனுனடய ரூப,லாவண்யத்தில் ஈடுபட்டு(ஸாரூப்யம்),
ராஸ க்ரீனடயில் மனம் லயம் அனடந்து(ஸாயுஜ்யம்) ஏற்பட்ட பரம ஆனந்தமே இவை ..
வெளி நோக்கிச் செல்லும் எண்ணங்களுக்கும்,வாஸனைகளால் நினைவுகளுக்கும் அப்பாற்பட்டவை ,
இந்த அனுபவம்.ஸ்ரீநாரதரின் பக்தி ஸூத்ரம் 21ல்-எவ்விதம் கோகுலத்துக் கோபிகைகளுக்கு பக்தி இருந்ததோ
அப்படி பக்தி செய்ய வேண்டும் என்று பக்திக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
வேத வ்யாஸரும்,இந்த பாகவத ஸர்கத்தை சுத்த மனதுடன் பாராயணம் செய்பவர்களும்,கேட்பவர்களும் விகாரமான எண்ணங்கள், துர்வாஸனை நீங்கப்
பெற்றவர்களாக, சுத்த மநோ பாவத்தை அடைகிறார்கள் என்று பல ஸ்ருதியில் சொல்வதே இதன் மேன்மைக்கு தக்க சான்றாகும். (பாகவத ம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ.40)

44. ராஸ க்ரீடா வர்ணனையை விவரிக்கும் போது, ராஜா பரீக்ஷித், கேள்வியாகக் கேட்பது போலும் ஸ்ரீசுகர் பதிலளிப்பது போலவும்
நமக்கு ஏற்படும் சம்சயங்கனள போக்கும் நோக்கத்துடன் ,பாகவேத்தில் கூறப்படுகிறது,
கோபியர்களின் உள்ளத்திலும் மற்றும் எல்லாப் பிராணிகளின் உள்ளத்திலும் எந்த பகவான் புத்தி சாக்ஷியாக உள்ளாரோ
அந்த பகவானே பூலோகத்திலுள்ள அனைவருக்கும் அனுக்ரஹம் செய்யவே மானிட சரீரத்தை எடுத்து பல லீலைகளைப் புரிகிறார்.
அந்த லீலைகளை சிரத்தை யுடன் கேட்ட மாத்திரத்தி லேயே மனிதன் அப் பரமாத்மாவிடம் உறுதியான பக்தி நிறைந்த வனாகிறான்.
அவன் மனத்தை வருத்தும் காமம் தன்னைப்போல் ஒழிந்து விடுகிறது என்றும் கூறுகிறார். ”( பாகவதம் ஸ்க.10- அத்யா. 33-ஸ்லோ . 27-40)

அங்கப்ரேக்ஷிேம்
45. வரஹூர் உரியடி உத்ஸவம் அன்று இரவு கடுங்காலிலிருந்து பகவான் ஸகல அலங்காரத்துடன்,தன்
மனைவி மார்களுடன் ஊர் கோலமாய் பவனி வருகிறார்,
அவருக்குப் பின் பக்தர்கள் நீராடி,ஈரமான
உடைகளுடன் பெருமாளின் திருவருள் வேண்டி, தரையில் படுத்துப் புரண்டு,அங்க ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள்.
அப்போது கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று உரக்க கூறிக் கொண்டு பக்தியுடன் மஞசள் பூசிய தேங்காயை கூப்பிய கைகளில் னவத்துக் கொண்டு
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தொடர்ந்து பின் செல்கின்றனர் என்று ஸ்ரீ கிருஷ்ண சிக்யோத்ஸவ ப்ரபந்தம் கூறகிறது.
இந்த வழிபாட்டை ஸ்ரீதீர்த்தரே ஆரம்பித்து னவத்தார் என்று கூறப்படுகிறது-

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் பெருமை பெற்ற கோயில்கள் பல. இவற்றோடு அங்கு நடைபெறும் திருவிழாவாலும் பெருமையுறும் கோயில்களும் உண்டு.
 
அவ்வகையில் திருவிழாவினால் பெருமை கொள்ளும் ஊர், வரகூர். இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் மிகப் பிரசித்தம். இந்திய நாட்டின் எந்தக் கோயிலிலும் இதுபோன்ற உறியடி உற்சவத்தைக் காண முடியாது.
 
வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளைத் தான் தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். முடி இறக்குதல், காது குத்துதல் போன் வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
 
வேலை கிடைத்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் இவ்வூர் இளைஞர்கள், தங்கள் முதல் மாதச் சம்பளத்தை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்) இக்கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
 
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். அடுத்து, பாகவதர்கள், நாராயண தீர்த்தர்  இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள்.
 
இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள். கோயில் வாயிலின் முன்புறத்தில் நீளமான மூன்று மூங்கில் மரங்களை ஒன்றாக இணைத்து, ஆழமாகத் தோண்டப்பட்ட ஒரு குழியில் நடுவார்கள். மரத்தின் நடுவே 10 அடி உயரத்தில் குறுக்கே ஒரு மூங்கிலைக் கட்டித் தொங்க விடுவார்கள். அதன் ஒரு முறையில் மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.
 
போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர் மக்கள் இந்தக் கயிற்றை அப்படியும் இப்படியும் ஏற்றி இறக்கி ஆட்டங் காட்டுவார்கள். (ஆட்டம் காட்டுவது என்பது இதுதானோ?) கையால் எட்டிப் பிடிக்க முடியாமல், இளைஞர்கள் தடிகொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள் மீது தணீணரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
 
உறியடியை அடுத்து, வழுக்குமரம் ஏறுதல். உயராமான ஒரு தேக்கு மரத்தை சில நாட்கள் தண்ணீரிலே போட்டு ஊற வைப்பார்கள். பின், புளியங்கொட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒருவித பசையை இதன் மீது பூசி, காயப்போடுவார்கள். உறியடி தினத்தில் இம்மரத்தின் மீது கடுகு எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் தடவி உறியடி மரத்திற்குத் தெற்கில் நடுவார்கள். உறியடி முடிந்தவுடன் எல்லோரும் இங்கு கூடுவார்கள். ஒருவர் மீது ஒருவராகத் தோள் மீது ஏறி 10 அல்லது 12 அடி உயரம் வரை ஏறிவிடுவார்கள். பின்னர் வேட்டிகளை இம்மரத்தில் சுற்றிக் கட்டி அதன் மீது காலை வைத்து ஏற முயற்சிப்பார்கள். வேட்டியும் எண்ணெயில் தோய்ந்து வழுக்கும். இளைஞர்கள் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வழுக்குமர உச்சியை அடைய முயலுவார்கள்.
 
எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும் இவர்கள் மீது தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அப்படி இப்படி என்று 25 அடி உயரம் ஏறி, ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து விடுவார். மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம். இதற்குள் பொழுது விடிந்த விடும்.
 
விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.
 
வரகூரில் 1868-ல் பிறந்து 1935 வரை வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் “கிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பெயரில் வடமொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து, உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழாவைப் பற்றி இந்நூலில் வர்ணிக்கப்படுகிறது.
 
இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. கிருஷ்ண அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.
 
உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே சாரும். அவரது கிருஷ்ண லீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி (கொண்டாடும் முறை) தெளிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. வரகூர் உறியடி விழாவை நேரில் கண்டு இன்புறும் அனுபவத்தை, வார்த்தைகளில் எளிதில் விவரித்துவிட முடியாது.

46.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால், அங்க ப்ரதக்ஷிண வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர்-பாகவத உத்தமரான ஸ்ரீஅக்ரூரே ஆவார்.
எப்படி என்று பார்ப்போம்.-கோகுலத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணரை மதுரைக்கு அழைத்து வர ஸ்ரீஅக்ரூரர்,
கம்ஸனின் உத்திரவின் பேரில் புறப்பட்டு ,மாலைப் பொழுதில் சபாழுேில் கோகுலத்தை அடைந்தார்.
அங்கு இந்திரன் முதலிய திக்பாலகர்களுனடய கிரீடங்களுடன் சேர்ந்ததும் தூய்மை வாய்ந்த திருவடிப் பொடிகளை யுடையதும்,
பூதேவிக்கு மகிழ்ச்சி யளிப்பதும் தாமரை மலர், யனவ,அங்குசம் முதலிய கோடுகளுடன் கூடியதுமான, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகனளக் கண்ணுற்றார்.-கண்ட வுடனேயே ,எல்லை யற்ற ஆனந்தம் அடைந்து உணர்ச்சி வசப்பட்டார். -கண்களில் ஆனந்தக் கண்ணீர் நினறந்தது.
”இவைகள் என் தெய்வத்தின் திருவடிகள் பட்ட பொடிகள் அல்லவா” என்று எண்ணி ,தேரிலிருந்து துள்ளிக் குதித்து கண்ணனுனடய திருவடிகள் பட்ட மண்
பொடிகள் மீது மீண்டும் மீண்டும் புரண்டார் அங்கப்ரதக்ஷிணமும் செய்தார்..,(பாக.ஸ்க.10-அத்யா. 38- ஸ்லோ . 25,26)

47.இதி “தேஷு அசேஷ்டத ” என்று திருவடிப் பொடிகள் மீது விழுந்து புரண்டார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
இக் கருத்தை ஸ்ரீதீர்த்தர் (தரங்கம் 7 ஸ்லோ . 14)”.”புத்யாதி தத்வ பரிசிந்ஹித கோபவேஷம்,
ஸித்தானுபாவிதம் அசேஷ ஜகந் நிதானம்”என்ற சொல் தொடரால் கோபிகைகள் ,அக்ரூரர் முதலியோர் ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகளை , பத்மம் முதலிய ரேகைகளால் கண்டு பரவசமனடந்த நிலையை ,விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்தா அங்க ப்ரதக்ஷிண வழிபாட்னட வராஹ புரியில் ஆரம்பித்து வைத்து, தான் அனடந்த ஆனந்தத்தை மற்ற பக்தர்களும் அடைய வழி செய்துள்ளார் என்றே தோன்றுகிறது,

48.இருப்பினும்,இது கோகுலம் அல்லவே ஸ்ரீகிருஷ்ண னுனடய பாத தூளிகள், இவ் வராஹ புரி மண்ணில்
இருப்பது எப்படி. பொருந்தும் என்ற வினா எழும் போது,
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஊருக்கு ஸ்ரீதீர்த்தரை வரவழைக்க பன்றியின் ரூபம் தரித்ததும்,
ஸ்ரீதீர்த்தர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் தன் சலங்கை ஒலி கேட்கச் செய்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் வராஹ புரியில் நித்ய வாஸம் செய்கிறார் என்பதற்கு
ப்ரமாணமாகிறது.
அவரது பாத தூளிகள் இந்த மண்ணில் நினறந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
மேலும் ஸ்ரீதீர்த்தருக்கும்,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வித்யாசமே இல்லை என்பது உறுதி .
ஸ்ரீதீர்த்தர் வராஹ புரியிலேயே பலகாலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலா விநாேதங்களைப் பாடிப் பாடி
அவனையே ஸதா ஸர்வ காலம் நினைந்து, நினைந்து உருகி அவனுள்ளே ஐக்யமாகி,பரம அத் வைதியான அவரே ,
ப்ரஹ்மைவ ப்ரஹ்மவித் பவதி என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கிருஷ்ணராக பாவித்து ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டார் என்பதில் ஒருவித ஐயமும் இல்னல.
இதை அவரே நிரூபணமும் செய்திருக்கிறார்.-தேவர்களின் ப்ரார்த்தனை யுடன் தொடங்கும்
“பாஹிமாம் பாஹிமாம் பரம தயாளோ ” எனத் தொடங்கும் 10வது தரங்கம் கீதம்40 ல் ஈடற்ற தன் பரம பக்தியால் இப்பாடலின்
ஒவ்வொரு சரணத்திலும் ஸ்ரீவிஜய கோபாலா என்ற சொல்லை 12 தடவைகள் ப்ரயோகித்து முத்திரை சரணத்தில்
நாராயண தீர்த்த விஜய கோபாலா என்று நாராயண தீர்த்தராகவே அவரிடமிருந்து வேறு படாமல் இருப்பவரே என்று கூறியிருப்பது
ஸ்ரீதீர்த்தர், தான் ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டதை உணர முடிகிறது.
தரங்கப் பாடல்களில், தான் வேறு தரங்கம் வேறு என்றில்லாமல் ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யக்ஷமாகக் குடி கொண்டுள்ளான் என்பது ஸத்ய வாக்காகும்.
இதை உணர்ந்து, பாட்டு,பாடுபவர் என்ற வேறுபடாத
மநோ நிலையில் ,தரங்கப் பாடல்கனளப் பாடும் போது வராஹ புரியில் நித்ய வாசம் செய்யும்,ஸ்ரீகிருஷ்ணன் ப்ரஸன்னமாகிறார் என்பதில் ஐயமே இல்லை .
அப்படி ஸ்ரீதீர்த்தர் உருவில் ஸ்ரீ கிருஷ்ணர் ஐக்யமாகி இருக்கும் போது, அம் மஹானின் பாத தாமரைகள் பட்ட வராஹ புரியில்
ஸ்ரீகிருஷ்ணனின் பாத தூளிகள் என்றென்றும் விளங்கும் என்பது ப்ரமாணம்.

49.இந்த இடத்தில் பாகவதம் முதல் ஸ்கந்தம் .அத்யா.13 ஸ்லோகம்10 நினனவுக்கு வருகிறது.
இதில் தீர்த்த யாத்ரை சென்று விரும்பிய விதுரரை வரவேற்று யுதிஷ்டிர் பேசுவதாக வருகிறது.
“பவத் விதா பாகவதாஸ் தீர்த்த பூதா : ஸ்வயம் விபோ தீர்த்து குர்வந்தி தீர்த்தானி ஸ்வாந்தஸ் ஸ்தேன கதாப்ருதா
“ஹே ப்ரபோ தங்களைப் போன்ற பகவத் பக்தர்கள், புண்ய தீர்த்த ரர்களாக இருந்து கொண்டு, தங்களது மனத்தில் உனறயும்
ஸ்ரீவாஸுதேவனால், பாபிகளின் சேர்க்கையால் மாசு படிந்த புண்ய ஸ்தலங்கனளக் கூட, மாசு நீக்கி மறுபடியும் சுத்தமாக்கி
புண்ய ஸ்தலங்களாகச் செய்து விடுகின்றனர் – என்று விதுரரைப் புகழ்கிறார்.

50.ஸ்ரீநாராயண தீர்த்தர் தன் பெயரிலேயே தீர்த்தர் என்று கொண்டு, வாழ்ந்த புண்ய ஆத்மாவாகும்.
அவர் வராஹ புரியிலேயே பல காலங்கள் வாழ்ந்து வந்ததால், புண்ய ஷேத்திரமான வராஹ புரியின்
பவித்ரம் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சொல்லவும் வேண்டுமா?
அப்பேர்பட்ட இந்த மஹானின் பாத சுவடுகள் பட்ட வராஹ புரி பூமி, ஒப்புயர்வற்ற புண்ய பூமியே .
அவருடைய திருவடித் தாமரைகள் பட்ட மண் பொடிகள் நினறந்த பூமியில், பக்தர்கள் அங்க ப்ரத க்ஷிணம்
செய்ய தம் பாவங்கள் தொலைந்து நற்கதி அடைவார்கள் என்பதில் ஐயமே இல்லை .

51.இத்துணை பவித்திரமான வராஹ புரி மண்ணில் பூர்வ ஜன்ம புண்யத்தால் பிறந்தவர்கள் மிகவும் பாக்யசாலிகளே .
அதுவும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வரூபமான,ஸ்ரீநாராயண தீர்த்தர் காலடி பட்ட மண்ணில் விழுந்து புரள மிகவும் பாக்யம் பெற்றவர்களே
”அஹோ பாக்யம் அஹோ பாக்யம் வராஹ புரி ஜனித மஹா ஜனானாம்”.

52.வேத ,புராணங்கள்,சாஸ்த்திரங்கள்,வேதாந்தம் இவைகளில் மிகத் தேர்ச்சி யுடையவராக இருந்தது மட்டுமல்லாது
நாட்டிய ஸங்கீதக் கலைகளிலும் தேர்ச்சி மிக்கவராக இருந்தார் என்பது அவருடைய நூலிலிருந்து விளங்குகிறது.
தரங்கம் 7 ஸ்லோகம் 16ல் ராஸ லீலைகளை விவரிக்கும் போது கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் வாத்யங்களிலிருந்தும் னககளிலிருந்தும் தோன்றுகின்ற
த்ருவ தாளம்,மட்ய தாளம்,ரூபகம், ஜம்பா,த்ரிபுட என்ற உயர்ந்த பல தாளங்களுடனும்,
அகற்றியும், குறுக்கியும்,நீட்டியும்,வனளத்தும்,காலடிகளை வைத்தல் போன்ற அழகிய பாத வின்யாஸங்களுடன் கூடிய நாட்டியத்தை
கோபிகைகள் மிக்க ஆனந்தத்துடன் அபிநயம் செய்து கொண்டு ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டதை விவரிக்கிறார்.

53. பாகவதத்தில் (பாக.ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ . 10) ஒரு கோபி ஸ்ரீகிருஷ்ணனுடன் ஸ்வர ஜாதிகளை
ஒன்றக்கொன்று கலக்காமல் பாடி, ஸ்ரீகிருஷ்ணனுடைய பாராட்டுக்களைப் பெற்றாள்.
மேலும் அதே ஸ்வர ஜாதியை த்ருவ தாளம் போட்டு கானம் செய்ய ஸ்ரீகிருஷ்ணனால் வெகுமதி அளிக்கப் பட்டாள், என்றும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்சியையே , ஸ்ரீதீர்த்தர்,மனக் கண்ணால் பார்த்து ஆனந்தம் அடைந்து, தரங்கம் 7 கீதம்6 லிருந்து 12 வரை
நாட்டை -துருவ தாளம்,மத்யமாவதி -மட்ய தாளம்,முகாரி-ரூபக தாளம்,வராளி-ஜம்பக தாளம், மோஹனம் திரிபுட தாளம்,
ஆனந்த பைரவி-அட தாளம்,காம்போஜி- ஏக தாளம்,ஆகிய பல ராகங்களிலும்,பல தாளங்களிலும் கோபிகள் பாடி ஆடினார்கள்.என்றும் கூறுகிறார்.
ராகம்- தாளத்திற்கு ஏற்ப பாடல்களின் மூலம் ராஸ லீனல மஹத்வத்தைத் தெரியப் படுத்துதில் அவருடைய ஸங்கீத -நடன புலமை வெளிப்படுகிறது..

54.அக்ரூரருடன், ஸ்ரீகிருஷ்ணர் மதுரா நகரம் செல்லும் போது, கோபிகைகள் ,பிறிவாற்றாமையால், வெட்கத்தை விட்டு,
கோவிந்தா மாதவா தாமோதரா என்று கூக்குரலிட்டு அழுதனர் என்று ஸ்ரீவ்யாசர் விவரித்துள்ளார்.
நமக்கு வேண்டியவர்கள் பயணம் கிளம்பும் போது அழுவது அமங்கலமாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீவியாசர், இதை உணர்ந்தே ,கோபிகைகள் ஸுஸ்வரத்துடன் அழதனர் என்று குறிப்பிட்டுள்ளார். (பாக.ஸ்க.10-அத்யா.39-ஸ்லோ . 31)
ஸ்ரீநாராயண தீர்த்தர்,இதை நன்கு உணர்ந்து ,சந்தேகத்திற்கு துளியும் இடமளிக்காமல், தரங்கம் 9 – “விஜய கோபால தே மங்களம்” – எனத் தொடங்கும்
கீதம்32ல் , கோபிகைகள் ,ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கல்யாண குணங்கனளப் புகழ்ந்து கூறி, மதுராவில்
அவருக்கு வெற்றியும் ,எல்லா நலன்களும் கிட்டவேண்டும்,என்று மங்களம் பாடினார்கள்,என்று மங்களகரமாக வர்ணித்துள்ளார்,
இச் சமயம், ஸ்ரீராமபிரான் தந்தையின் வாக்னக நிறை வேற்ற நாடு துறந்து காட்டுக்குச் செல்லும்போது ,தாய் கௌஸல்யா தேவீ மகனின் பிரிவைத் தாங்க
முடியா விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல்,ஸ்வஸ்தி வாக்யங்கனளக் கூறிக் காப்பிட்டுஆசி
வழங்கி மங்களகரமாக ஸ்ரீராமரை வழியனுப்பினாள் என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள்
நினனவிற்கு வருகிறது. (வால்மீ,ராமா-.அயோத்யாகாண்டம் 25 வது ஸர்கம்)

55.உத்தவர் கோகுலம் சென்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளிய தத்வ உபதேஸங்களை ஸ்ரீகிருஷ்ணனை
பிரிந்து மனம் வருந்திய கோபியர்களுக்கு அளித்து-அவர்களை மனச் சமாதானம் அனடயச் செய்ததும்
அவர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தெரிவித்ததையும்,
ஸ்ரீதீர்த்தர் தரங்கம் 11 ஸ்லோ .94 முதல் 99,கீதம் 41-44 வரை விவரிக்கும் போது கோபியர்களின் வாயிலாகத் தான்
ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்டிருக்கும் அத்யந்த ப்ரேம பக்தியை வெளிப்படுத்தி யுள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது,
உத்தவர், கோபியர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து “எந்த கோப ஸ்திரிகளினால் செய்யப்படும் ஸ்ரீகிருஷ்ண லீலா கானமானது,
மூவுலகத்தையும் புனிதமாக்குகிறதோ அந்த கோப ஸ்திரிகளின் பாத தூளியை நான் அடிக்கடி வணங்குகிறேன்” என்று கூறியது
ஸ்ரீதீர்த்தரின் ப்ரேம பக்திக்கும் பொருந்துகிறது அல்லவா!! (பாக.ஸ்க.10-அத்யா. 47ஸ்லோ . 63)

56.ஸ்ரீதீர்த்தர் ,”கோபாலமேவ தைவதம் ” (தரங்கம் 12 கீதம் 50) என்ற கீதத்தைப் பாடும் போதே திவ்யமான
தன் கண்களால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், தன் முன்னே நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும்
ஸ்ரீகிருஷ்ணனே கண் குளிரக் கண்டு பரவசமடைந்தார் என்றும்,மேலும் ஸ்ரீதீர்த்தர் மீது உள்ள அபார
கருணையினால், தரங்கிணி நூல் முடியும் வரை , ஸ்ரீகிருஷ்ணன் திவ்ய தரிஸனம் தந்து அவரை
ஆனந்தக் கடலில் முழுகச் செய்தார் என்றும், ஸ்ரீகிருஷ்ணனின் விருப்பப்படியே ஸ்ரீருக்மிணி
விவாஹத்துடன் தரங்கிணியை முடித்தார் என்று சிறந்த பாகவதோத்தமர்கள் கூறுகின்றனர்,
இந்தப் பாடலில்” மிக்க பாக்யசாலியான தனக்கு உண்மைப் பொருளைக் காணும் திவ்ய சக்ஷூஸை (தெய்வீகப்
பார்வையை ) ஸ்ரீகிருஷ்ணன் அளித்தான்“ என்று புகழ்கிறார்.
கோபாலன் என்ற தெய்வத்தினையே வழிபடுகிறேன், வேறு ஒருவரையும் தெய்வமாகக் கருத மாட்டேன், என்றும் கூறுகிறார்.

57.ஸ்ரீதீர்த்த ர், “காங்ஷே தவ ப்ரஸாதம்” (தரங்கம் 12 கீதம் 51) என்ற கீதத்தில் தான், பல ஷேத்திரங்களில்
தங்கியிருந்த போதிலும் , தீராது தன்னைத் தொடர்ந்து வாட்டி வந்த வயிற்று வலி, வராஹ புரி பெருமாள்
ஸந்நிதியில் தான் தீர்ந்தது என்ற விவரத்தை கடைசி சரணத்தில் “வர நாராயண தீர்த்த வாரித துஸ்தரா நர்தக “ என்று தெரிவிக்கிறார்.

58.தரங்கம்12 “ப்ரஹ்ம க்ரந்திம்” என்று தொடங்கும் கீதம்58ல் ஸ்ரீதீர்த்தர், லக்னாஷ்டகம்,ஸ்ரீகிருஷ்ண
ருக்மிணி விவாஹ நிகழ்ச்சிகளை -மண மகள் மண மகனுக்கு முத்துக்களால் அபிஷேகம்
செய்வது,ப்ரஹ்ம க்ரந்தி ,லாஜ ஹோமம்,ஸ்தாலீ பாகம்,நாக பலி,ஆகிய
கல்யாண ஸம்ப்ரதாயங்களை ஆந்திரர்களின் அனுஷ்டானப்படி விவரித்துள்ளார்.

59.“மஙகளாதீனி ,மங்கள மத்யானம்,மங்களான் தானி ஸாஸ்த்ராணி வீர்யவத் புருஷ கர்த்ரு காணி
ப்ரேந்தே ”-துவக்கம் ,நடுவு,முடிவு இவற்றில் மஙகளா ஸாஸனத்துடன் கூடிய நூல்கள் இவ்வுலகில்
நீண்ட காலம் புகழுடன் விளங்குகின்றன என்ற ஆன்றோர் வசனப்படி ஸ்ரீதீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில் தொடக்கத்தில்
“ஹிம கிரி தனயா பத்யம்” என்ற வினாயக ஸ்துதியுடன் ஆரம்பித்து
நடுவில் “கல்யாணம் வித னோது” என்ற பால கிருஷ்ண ஸ்துதியையும்
“தா ⦂குர்வந்த்வபிதானி” என்ற ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தில் பங்கு கொண்ட நல் முத்துக்களின் ஸ்துதியை அமைத்து,
முடிவில் ஜய மங்களம் என்ற மங்கள கீதத்துடனும் முடித்து அருளிச் செய்திருக்கிறார் என்பது இந்நூலின் தனிச் சிறப்பு.
ஆன்றோர் வாக்குப்படி இந்த தெய்வீக காவ்யம் சூர்ய சந்திரர்கள் இருக்கும் வரை புகழோடு இவ்வுலகில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .

60.ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள் ,புராணங்கள் இவைகளைப் ப்ரமாணமாகக்
கொண்டு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை அருளிச் செய்தார்.
மேலும் ஸ்ரீதீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை ஸ்ரீமத் பாகவேத்தை அனுஸரித்தே தஸம ஸ்கந்த கிருஷ்ண லீலைகள் ,ஸ்ரீ ருக்மிணி விவாஹ பர்யந்தம் அருளியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதத்தில், ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீ தீர்த்தர் 8வது தரங்கத்ேில், கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவைகளை விவரித்துள்ளார்.
ஏன் இந்த மாறுபாட்னடச் செய்தார் என்று ஆராயுங்கால் கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.
1.ஸ்ரீதீர்த்தர் கீத கோவிந்தத்தை இயற்றிய ஸ்ரீஜயதேவரின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
2. வராஹ புரி பெருமாள் யாராலும் பிரிக்க முடியாதவாறு ஆதரவாகப் பிராட்டியை அணைத்தவாறும்,
பிராட்டியும், பெருமாளை விட்டுப் பிரியாமல் அன்பு பெருக்கெடுத்து ஆரத் தழுவியுள்ளார்.
இக் காட்சியை தினமும் பார்த்தாலும்.ஓவ்வொரு தரங்கிணிப் பாடலையும், சலங்கை ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து தன் தேவியுடன் காட்சி கொடுத்தும்,-
கிருஷ்ண ராதையே – ஜீவாத்மா பரமாத்ம ஐக்கிய ருபமாக- என்று அவர் மனக் கண் முன் தோன்றிய தாலும் அவர் ராதா கிருஷ்ணனைப் பற்றி எழுதி யிருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.

61.பத்ம புராணத்தில் உள்ள ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் சிறிது பார்க்கலாம்
சுகருனடய வாயிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் கதாம்ருதத்தின் பலன் அளவிட முடியாது.
கங்கை ,கயா ,காசி,புஷ்கரம்,ப்ரயாகை அளிக்கும் பலன்கள் யானவயும் இந்த பாகவத பலன்களுக்குச் சமமாகாது.என்று கூறப்பட்டுள்ளது.(அத்.3.ஸ்லோ.32)
இந்தப் பெருமையும்,புகழும் ஸ்ரீமத்பாகவதத்தை அனுஸரித்தே ஸ்ரீதீர்த்தரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கதாம்ருதமான ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ ?

62.ஸ்ரீதீர்த்தர் 12 தரங்கம்- “காமதா காமினா மேஷா”- எனத் தொடங்கும் ஸ்லோ .161ல் இந்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற சிறந்த பக்தி நூலை
பக்தியுடன் பாடுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்,அவரவர்களின் விருப்பம் போல, அறம்,பொருள்,இன்பம்,வீடு இவற்றை இந்த நூல்
அளிக்கிறது என்று பல ஸ்ருதியும் கூறிவிட்டார்.

63.ஸ்ரீதீர்த்தரின் நாமாவை உச்சரிப்ப தாலேயே நம் பாவங்கள் தொலைந்து அக்ஞான இருள் நீங்கி
ஆத்ம ஞானத்தை அடைந்து பரமானந்தத்தை அனடயலாம் என்பதில் ஒரு ஐயமே இல்லை .
ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருநாமத்தை ஒருமுனற கூறுவது லக்ஷம் தடவைகள் ஓங்காரத்தை ஜபிப்பதால் கிட்டும்
புண்ணி யத்தைக்காட்டிலும் அதிக புண்ணியத்தை அளிப்பதாகும்.
அவரின் திருவுருவத்தை வழிபடுவது ப்ரஹ்மா, சிவன்.நாராயணன், இவர்கனள வழிபடுவதால் கிட்டும் பலனுக்கு ஸமமான பலனைத்தரும்
என்று குரு த்யான ஸ்லோகத்தில் சொல்லப்பட்டதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் அவ்வரிகள் அனுபவ பூர்வமாகவே வந்ததில் என்ன சந்தேகம்.அத்தகைய மஹான் ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருவடித் தாமரைகளை வணங்கி
நமக்கும் தூய்மையான உள்ளத்தை யளித்து,பரமாத்ம அநுபவம் ஏற்பட்டு ஆனந்த ஸ்வரூபியான பரம் பொருளுடன் ஐக்யமாகிற மோக்ஷத்தைப் பெறுவோமாக..

————–

பாகம்-3

ஒற்றுமையும் வேற்றுமையும்

1.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் சிருங்கார ரஸம் இனழந்த பக்தி ரஸம் ததும்பும் இனிமையான பாடல்களைக் கொண்டது.
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி பக்தி ரஸத்துடன் ஆத்ம ஞானத்தை போதிக்கும் இனிமையான தெய்வீகப் பாடல்களைக் கொண்டது.
2.இந்த இரண்டு நூல்களுக்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ேண பரமாத்மாவே .ஸ்ரீமத் பாகவேத்திற்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே .
3.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் 12 ஸர்கங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும் 12 தரங்கிணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமத் பாகவதமும் 12 ஸ்கந்தங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,

4.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் த்வாேஸாக்ஷரி மந்திரம் 12 அக்ஷரங்களைக் கொண்டது. ஒவ்வொரு
ஸ்கந்தம் ஆரம்பிக்கும் போது வியாசர், இந்த மூல மந்திரத்தை ஸ்மரித்தே தொடங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
துருவ சரித்திரத்தில் ஸ்ரீநாரத மஹரிஷி, துருவனுக்கு,இந்த மூல மந்திரத்தை உபதேஸிப்பதாக ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
( பாக.ஸ்க.4அத்யா.8-ஸ்லோ .54).மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திர அக்ஷரங்களின் எண்ணிக்கை 12
ஆனதால்,.ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களான ஸ்ரீஜயதேவரும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் ஸ்ரீமத் பாகவதத்தை அனுசரித்து தம் தம் நூல்களை 12 பாகமாக
பிரித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

5.ஸ்ரீஜயதேவர், சிருங்கார ரஸம் ப்ரதானமாக உள்ள இந்த நூலை 18புராணங்களில் ஒன்றான
ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் ராதா கிருஷ்ண சரித்திரத்தின் அடிப்படையில் படைத்தருளினார்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிேணியை ,ஸ்லோகங்கள் .சூர்ணிகைகள் ,கீதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீமத் பாகவேத்தை அனுசரித்து,
தஸம ஸ்கந்தம் ருக்மிணி விவாஹம் வரையில் படைத்தருளினார்.
ஸ்ரீமத்பாகவதத்தில் ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாசாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீதீர்த்தர் 8வது தரங்கத்தில் கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவை களை விவரித்துள்ளார்.
இதுஒரு சிறிய வேறுபாடு ஆகும்.எனினும் இந்நூலின் இப்பகுதி ,ஆத்ம ஞானத்தை போதிப்பதால் சிறந்து விளங்குகிறது.

6.மேலும் ஸ்ரீநாராயண தீர்த்தர் தத்வங்கள் அடங்கிய பாகவதம் ஏகாதஸ ஸ்கந்தம் பற்றி எழுதாமல்
விட்டு விட்டரே என ஏக்கப்பட வைக்காமல்
ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள்
இவைகளின் ஸாரத்தை ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி யிலேயே சந்தர்பத்துக்கு ஏற்றவாறு
புகுத்தி ,
தனக்கே உரித்தான எளிய நடையில், அருளிச் செய்தார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு..

7.ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் இருவருமே சங்கீதம்,நாட்டிய கலைகளில் பாண்டித்யம் பெற்று
இருந்ததனால்,
எல்லாப் பாடல்களையும் பல ராகங்களிலும், தாளங்களிலும், நடனமாடக் கூடியவகையில் அனமத்து மெருகு ஊட்டியுள்ளனர்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஒருபடி மேலே போய் நாட்டிய ஜதிகளையும் அனனவரும் வியக்கும் வண்ணம் னகயாண்டிருப்பது அவரின் புலமையை நன்கு பறை சாற்றுகிறது.

8.இவ் விரண்டு நூல்களுமே ,ஆத்ம ஞானம் பெற்று பரமாத்ம ஐக்கியத்தில் ஈடுபட்டு ப்ரஹமானந்தத்தில் திளைத்த
ஸ்ரீஜயதேவர்,ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆகிய ப்ரஹ்ம நிஷ்டர்களால் ஸ்வானுபவத்தில் எழுதப் பெற்றதால், அவர்களின் பாடல்களில் பக்தி ரஸம் சொட்டுகிறது.
எனவே இப்பாடல்களை நாம் பாடும் போதும், மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும் மெய் மறந்து பரமானந்தத்தில் திளைத்து கண்ணீர் மல்கி பரவசமாகின்றோம்.
இப்படி ப்ரேம பக்தியில் முழ்கிய உறுதியான பக்தன் தனக்குப் பிரியமான பகவன் நாம கீர்த்தனைகளைப் பாடும் போது மனமுருகி உலக விவஹாரங்களை அறவே மறந்து பித்தன் போல உரக்கச் சிரிப்பான்,சில சமயம் அழுவான்,உறக்க கூச்சலிடுவான்,பாடுவான்,ஆடுவான்
என்று நவ யோகிகளில் ஒருவரான கவியோகி, விதேஹ ராஜாவிற்கு பக்தனின் லக்ஷணத்தை தெரிவிக்கிறார்( ஸ்ரீமத் பாகவேம் .ஸ்க.11அத்யா2ஸ்லோ 40).
இம்மாதிரி, ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் எழுதிய பாடல்கள், மேலே கூறியவாறு ஸ்ரேஷ்ட பக்தர்களை உருவாக்குகிறது என்று சொன்னால்
மிகையாகாது.

9.இவ் விரண்டு நூல்களுமே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்டவைகளே .
ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தம் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சதபி “ என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,7வது சரணத்தில்
ஸ்ரீ ஜகன்நாதரே ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து, .”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம் தேஹி பத பல்லவமுதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கத நாருணோ ஹரது தது பாஹித விகாரம் ப்ரியே சாருஸீல முஞ்ச மயி மாமை நிதானம்”, என்ற வரிகளை எழுதினார் என்று கூறுவர். இது ஒன்றே போதுமே கீத கோவிந்தம் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.

10.ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் ஓவ்வொரு பாடனலயும் சலங்னக ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து திவ்ய தரிஸனம் கொடுத்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அங்கீ கரித்தார் என்பது ஒன்றே போதுமே இந் நூல் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.
மேலும் கிருஷ்ண ருக்மிணி விவாஹத்துடன் முடிக்கச் சொன்னதும்,ஸ்ரீகிருஷ்ணரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாராயண பட்டத்திரி அருளிய ஸ்ரீநாராயணீயமும் தரங்கிணி யைப் போலவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் முழுவதும் அஙகீகரிக்கப்பட்ட நூலாகும்.

11.ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் குறித்தே எல்லாப் பாடல்கனளயும்
பாடியுள்ளார். மற்ற தெய்வங்கனளப் பற்றிப் பாடவில்னல.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே  மற்ற தேவதைகளையும் துதிப்பது தரங்கத்தின் தனிச் சிறப்பு.
இந்த ச குண வழி பாடே நாளனடவில் தனக்குத் தானே நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீசுகப் ப்ரஹ்மம் நிர்குண பரப் ப்ரஹ்ம உபாஸனையில் தீவிரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவதத்தை – கிருஷ்ண லீலைகளை -உபதேஸித்தார்,ஒவ்வொரு லீலையிலும் தன்
உள்ளத்திலுள்ள பரப்ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப்
பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே பரம் பொருளின் சகுண வடிவங்களைத் துதித்து தன் பாடல்கள் மூலம்வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச்சிறப்பு.

12.முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின் “என்ற கீதத்தில்,கணபதியையும்,”
துர்கே துர்கதி ஹாரிணி ” என்ற ஸ்லோகத்திலும்“ஜய ஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவியையும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தனோது மதுஸூதன ஸூ தா “என்ற கீதத்தில் கங்காதரன் தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் தரங்கங்களில் நரஸிம்ஹரையும் ,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வக்ஞானக்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல் மஹா விஷ்ணுவையும்,
3ம் கீதத்தில் வராஹ புரி வேங்கடேசப் பெருமாளையும் துதித்துள்ளார்.

13.ஸ்ரீஜயதேவர்,கீத கோவிந்தத்தில் முதல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.
இதில் புத்த அவதாரத்னையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்களையும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார்.என்று கூ றுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் “கேசவா த்ருத ” -கேசவன் தரித்த -என்று கூறி அந்த
அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதா னுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோகம் 5 தெளிவாக வராக அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டவனான
ஸ்ரீ கிருஷ்ணன் பத்து அவதாரங்களை எடுத்தான் –அவனுக்கு நமஸ்காரம். -கிருஷ்ணாய துப்யம் நமஹ-.என்று கூறுகிறார்.

14.ஸ்ரீ தீர்த்தர் “அதி கருணா வித்ருதாத்புதரூபா” என்ற சொல் தொடரால் பகவானின் அவதாரங்களை விளக்கி யுள்ளார்
மேலும், தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும், சூர்ணிகைகளிலும் ,கீதத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு,இறப்பு அற்றவன்,எங்கும் நிறைந்திருப்பவன்
,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நினலயான ஆனந்த வடிவு உடையவன் ,தன் அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப்பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விகிதம்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய
கால்வாய்கள் ஆயிரம் தோன்றுகின்றதோ , அது போல் மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள்
அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூரண தத்வம். மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவதம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

15.ஸ்ரீ தீர்த்தர் தன் நூலின் துவக்கத்தில் முதல் தரங்கத்தில் “ராம கிருஷ்ண கோவிந்த ” எனத் தொடங்கும் கீதம் 6ல், ஸனகாதி யோகிகள்
“ராம கிருஷ்ண கோவிந்த ” என்று கூறிக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனுனடய ஸந்நிதிக்கு வந்தனர் என்றும்,
நூலின் முடிவிலும் தரங்கம் 12ல் தரு 8 ல் கிருஷ்ணனிடம், ருக்மிணிக்காக தூது சென்ற அறிவாளியான அந்தணர்
“கோவிந்த ராம,கோவிந்த ராம” என்று பகவானின் திரு நாமங்களைக் கூறிக் கொண்டு வருகிறார் என்று வர்ணித்து, கலியுகத்தில்
நாம ஸங்கீர்தனம் என்ற எளிதான வழியில் கடவுளை அனடய முடியும் என்பதால்,
மற்ற முன்று யுகங்களிலும் பிறந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டும், அதிலும் புண்ணிய நதிகளான காவேரி,
தாமிரபரணி ஓடும் திராவிட நாட்டில் பிறக்க வேண்டும் என்று பாகவதம்,ஸ்க-11 ,அத்யா.5 ஸ்லோ .38-
40ல் கூறப்பட்டதை நினனவு கூர்கிறார். ஆழ்வார்கள்,நாயன்மார்கள் இவர்களின் பாடல் பெற்ற
பல ஷேத்திரங்கள் உள்ள திராவிட நாட்டில்,காளிந்தி நதி பாயும் வராஹ புரி ,பூலோக வைகுண்டம் என்று பெயர் பெற்றதற்கு,இவையே சான்று.-

16.இந்த இரண்டு நூல்களுமே ஓப்பு உயர்வு அற்ற அமர காவியங்களாகும்.இரண்டும் தெய்வீக மணம் வீசும் உயர்ந்த காவியங்கள்,
இதில் எது சிறந்தது என்ற கேள்விக்கே இடமில்லை ஒருவனின் இரு கண்களில் எது சிறந்தது என்று கூற இயலாது. ஏன் எனில் இயல்பான பார்வைக்கு, மனிதனுக்கு இரு கண்களுமே முக்கியமானது.
அது போலே ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தமும், ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும், பாகவத சமுதாயத்தின் இரண்டு கண்கனளப் போன்றவை
இவை இல்லாத பஜனை சம்பிரதாயமே இருக்க முடியாது.
ராதா கல்யாணம், திவ்ய நாமம்.தீப ப்ரதக்ஷிணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவை இரண்டும் முக்ய பங்கு வஹிக்கின்றன.
நாமும் இவ் விரண்டு கிருஷ்ண ஸாகரத்தில் முழ்கித் திளைத்து பரமானந்தம் பெற அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹபுரி ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமானளயும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

“நவநீத சோராய நந்தாதி கோப கோ ரக்ஷிணே கோபிகா வல்லபாய,
நாரத முனீந்த் ரனுத நாமதே யாயதே நாராயண ஆனந்த தீர்த்த குரவே ”
என்று அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கும், ஸ்ரீநாராயண தீர்த்த குருவிற்கும் மங்களம் பாடி நினறவு செய்வோம்.

————————-

இக் கட்டுரை ,திருவையாறு P.நடராஜ ஸர்மாவும், கும்ப காேணம் M.S.கோபால கிருஷ்ண ஸர்மாவும்
இணைந்து,வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாளிடமும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரிடமும் கொண்ட பக்தி மேலீட்டால் எழுதப்பட்டது.

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை ஒரு புதிய கண்ணோட்டம் —

January 17, 2023
ஸ்ரீ  திருப்பாவை ஒரு புதிய கண்ணோட்டம்

கிருஷ்ணாவதாரம் தசாவதாரத்தில் ஒன்பதாவது. எட்டு அவதாரத்தில் செய்ய முடியாததைச் செய்ய கிருஷ்ணாவதாரம் எடுத்தாராம். ஏனென்றால் இதில்தான் நம்மை உய்யச்செய்யும் கீதை சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வர் பெரியோர்..

பகவான் பாமர ஜனங்களையும் உய்விக்க அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் , அதாவது சாஸ்திர அறிவு இல்லாமல் அன்பு ஒன்றையே அறிந்த ஆய்க்குலத்தில் வளர்ந்து அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தான். இந்த அன்பே பின்னர் கீதையாய் மலர்ந்தது.

ஸஹஸ்ரநாம்னாம் புண்யானாம் த்ரிருக்தானாம் யத் பலம்–தத் பலம் லபதே ஜந்து: க்ருஷ்ண இத்யக்ஷரமாதரத:

கிருஷ்ணா என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே ஆயிரம் நாமங்களை மூன்று முறை கூறிய பலன் , மனிதர் மாத்திரம் அல்ல எந்த உயிருக்கும் கிடைக்கிறது.

அப்படி இருக்கையில் கிருஷ்ணனை சதா ஸ்மரித்துக் கொண்டிருந்த கோப கோபியரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

த்வாபர யுகத்தில் கண்ணன் செய்ததை கலியுகத்தில் செய்தவள் ஆண்டாள். திருப்பாவை மூலம் பக்தி, கரம யோகம் ஞானயோகம் எல்லாவற்றையும் காட்டியவள். பக்தியில் மூன்று வகை. முதலாவது பூஜை, அவன் பாதங்களில் மலரிட்டு வணங்குவது. இரண்டாவது நாம சங்கீர்த்தனம் – அவன் நாமங்களை கீர்த்தனம் செய்வது, மூன்றாவது அவனையே சரணம் என்று அடைவது. இந்த மூன்று விதங்களும் முறையே திருப்பாவையின் முதல் பத்து, இரண்டாவது பத்து, மூன்றாவது பத்து பாசுரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கோதா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்க்கலாமா?

காம் ததாதி இதி – பகவானை அடைய உதவும் வாக்கை அளித்தவள்

கவா தத்தா –பூமியால் கொடுக்கப்பட்டவள்

கா: தமயதி- புலனடக்கத்தை போதிப்பவள்.

அரங்கன் திருவரங்கத்தை விட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தான். திருப்பாவை எல்லா இடத்திலும் ஒலிக்கிறதே அதற்கு ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று கேட்டாள் அவனுடன் கலந்து ஒன்றாக இருக்கும் ஆண்டாள். அதற்கு அவன் கூறினான். “ எப்போதும் விளை நிலத்திலேயே போய் விளைந்ததை வாங்குவது வாங்குவது விசேஷம் அல்லவா? ஆகையால் திருப்பாவையை அது விளைந்த நிலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே கேட்டு ரசிக்க வேண்டும் என்று எனக்கு ஆவல். நான் வடபத்ரசாயியாக அங்கு இருக்கிறேன் நீயும் அங்கு கோயில் கொண்டுள்ளாய் அல்லவா. இருவருமாக உன் தீஞ்சுவைத் தேன் ஆகிய பாசுரங்களை ரசிப்போம். “ என்றான்.

இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து கொண்டிருக்கிறது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்

அரங்கன் கேட்டான் “ கோதை , நீ என் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தாய்?” என்று.

கோதை கூறினாள். “ மாதங்களில் நான் மார்கழி என்று கூறிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இந்தக் கேள்வி ஏன்? அது மட்டும் அல்ல. உங்கள் நாமங்களில் கேசவன் என்ற நாமம் மார்கழி மாதத்திற்கு உரியது அல்லவா? அதில் என்ன விசேஷம் என்றால் ‘க’ என்றால் பிரம்மா, ‘ஈச’ என்றால் சிவன். நாராயணன் ஆகிய பரப்ரம்மத்தின் வசம் இருவரும் என்ற பொருள் ‘வ’ என்னும் சொல்லாகும். “

ஒன்றும் அறியாதவன் போல் “அப்படியா” என்ற அரங்கன், மேலும் மார்கழி தேவர்களின் விடியற்காலை அல்லவா? “ என்றான்.

“ அதுமட்டுமா. இந்த மாதம் ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் வித்தைக் கொண்டது. இந்த பல காரணங்களால் இந்த மாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் செய்யும் புண்ணிய காரியங்கள் நற்பயனை அளிக்கின்றன.” என்றாள் ஆண்டாள்.

அரங்கன் சிரித்து, “ நீ பூமாதேவி என்பதை நிரூபித்துவிட்டாய் . அதுசரி, மதி நிறைந்த நன்னாள் என்று கூறியுள்ளாயே, மாதம் பௌர்ணமி அல்லாத நாளில் பிறந்தால் இது சரிவராதே ?” என்றான்.

“நீ இதயத்தில், வரும் நாள் மதி நிறைந்த நாள் அல்லவா?”என்றாள் கோதை.

“ஆஹா, உன் வார்த்தைகள் எனக்கு என் பிரிய சகோதரியைக் குறித்து அபிராமி பட்டர் கூறியது நினைவுக்கு வருகிறது. அமாவாசை அன்று அவர் பௌர்ணமி இன்று எனக்கூற அவர் வார்த்தையை மெய்ப்பிக்க அவள் அருளால் முழு நிலா வந்ததே !” என்றான் அந்த மாயவன்.

“ ஆம் அவளும் பெரிய மாயக்காரி அல்லவா? உன் மறுபக்கம் தானே அவள்?” “ என்றாள் கோதை.

“இந்த மார்கழியில் எல்லா பெண்களையும் கூட்டிக்கொண்டு நீராடச் சென்றாய், “ என்ற அரங்கனை இடை மறித்து கோதை கூறினாள். “நீராடுவது என்பது உண்மையில் உன்னை அடைவது என்று பொருள்.”

“ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் மகளான நீ ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்களை அழைக்கக் காரணம்? , என்ற அரங்கனைப் பார்த்து கோதை,

“எங்கே பிறந்தால் என்ன ? நீ உள்ளத்தே இருக்கையில் நாங்கள் செல்வமுடையோர் , செல்வச் சிறுமீர். அப்சர ஸ்திரீகள் கோபியர்களாக மாறலாம், நாங்கள் மாறக்கூடாதா? “ என்றாள்.

“நீ கிருஷ்ணனானால் நாங்கள் எல்லோரும் கோபியர்தான் , “ என்று ஆண்டாள் சொன்னவுடன் அரங்கன் கிருஷ்ணனாக மாறிவிட்டான்.

கண்ணனாகக் கேட்டான், “ என் தந்தை நந்தகோபர் ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத சாதுவானவர். அவரைப் போய் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறியது நியாயமா?”

ஆண்டாள் கூறினாள். சாதுப் பிராணியான பசுவும் தன் கன்றைக் காக்க புலியையும் எதிர்ப்பதில்லையா ? அது போல உனக்கு தீங்கு நினைப்பவரை எதிர்க்கும் திறன் கொண்டவரஅல்லவோ உன் தந்தை? “

“ஆனாலும் என் தாய் ஏரார்ந்த கண்ணி,அழகிய கண்ணை உடையவள் என்று சொன்னது சரிதான் என்ற கண்ணனிடம்,

”அந்த கண்ணுக்கு அழகு எப்படி வந்தது தெரியுமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்ததனால்தான்.” என்ற கோதை , “இந்த வார்த்தை உன்னையும் நினைவுபடுத்தியது, ஏரார்ந்தகண்ணி என்றபோது உன் மார்பில் விளங்கும் வைஜயந்தி மாலை நினைவுக்கு வந்ததும் உன் அழகில் ஆழ்ந்துவிட்டேன். அதனால் உன்னை யசோதை இளம் சிங்கம்,கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று வர்ணிக்கத்தோன்றியது” என்றாள்.

கண்ணன் முறுவல் செய்து, “ முதலில் நந்தகோபன் குமரன் , பிறகு யசோதை இளம் சிங்கம், “ என்றவனிடம் ,’ ஆம் உன் தந்தையுடன் இருக்கும்போது தந்தைக்கடங்கின இளம் பிள்ளை. ஆனால் தாயிடம் ஒரு இளம் சிங்கம் போல் இருப்பாய். செல்லப்பிள்ளை அல்லவா? “

“ உன்னை கார்மேனிச் செங்கண் என்று ஏன் வர்ணித்தேன் தெரியுமா? அன்பர்களுக்கு கருணை என்ற மழையைப பொழிவதால். மழை மேகம் போன்று வண்ணம் கொண்டவன் நீ. பக்தர்களைக் கண்டு ஆனந்த மிகுதியால் உன் கண் செந்நிறம் கொண்டது.”

“ கதிர்மதியம் போல் முகத்தான் என்றது உன் கண்கள் பக்தர்களுக்கு தீங்கு இழைப்பவரை நோக்கும்போது கதிரவனைப் போல் தீவிழிக்கும் . பக்தரை நோக்கையில் மதியைப் போல் குளிர்ந்திருக்கும் அல்லவா?” என்றாள் ஆண்டாள்.

“ ஆனால் இடைச் சிறுவனைப் போல் நீ போட்ட வேஷம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தாயா? நீதான் நாராயணன் என்றறிவோம்,. அதனால்தான் ‘நாராயணனே நமக்கே பறை தருவான் ,’ என்றேன் “ என்ற கோதையைப் பார்த்து கண்ணன் ,

“கோதையே , இந்த உலகம்தான் ஆயர்பாடி . சுலப பக்தியால் என்னை அடையலாம் என்று ஒரு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து வழி காட்டினாய். நீ காட்டிய பாதை ஒரு மார்க்க சீர்ஷம், தலையான பாதை. இதை மார்கசீர்ஷம் என்னும் இந்த மார்கழியில் கூறியது பொருத்தமே. “ என்றான்.

————-

வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பைய துயின்ற பரமனடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்

“மிகவும் கடுமையான விரதம்தான் அதுவும் உலகத்தில் உள்ளோர் எல்லோருக்கும் “ என்றான் கண்ணன் இந்தப் பாசுரத்தைக் கேட்டு.

“ ஆம். வையத்து வாழ்வீர்காள் என்று எல்லோரையும் ஏன் கூவி அழைக்கிறேன் தெரியுமா? இந்த மண்ணுலகம் மற்ற உலகங்களைக் காட்டிலும் சிறந்தது. ஏனென்றால் இங்குதான் உன்னை பக்தியுடன் அடைய முடியும். அதனால் தானே பராசர பட்டர் அரங்கனாகிய உன்னை இங்கிருந்து பக்தி செய்வதை விட்டு பரமபதமானாலும் வேண்டாம் என்றார். என்றாள் ஆண்டாள்.

“ அது சரி ஆயினும் உன்னுடைய சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானதாகத் தோன்றுகிறது. நான் இப்படி எல்லாமா இருக்கச் சொல்கிறேன்? “ என்ற கண்ணனிடம், “ நீ பக்தவத்சலன். ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுப்ஹ்ருதம் அச்னாமி பிரயதாத்மன: ‘ என்று ஒரு இலை பூ பழம் அல்லது வெறும் நீர் எதுவானாலும் பக்தியுடன் தருவதை ஏற்கிறேன் என்றாய் . “

“ஆனால் இந்த மனிதர்கள் ஒரு கட்டுப்பாடு இல்லாவிட்டால் நீ ‘பக்தியுடன்’ என்றதையே மறந்து ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிடுவார்கள். எல்லோரும் கோபியர் அல்லவே. உலகத்தில் உள்ள இன்பங்களில் ஈடுபட்டு உன்னை மறந்து விடுவார்கள்.அதனால் உடல் உள்ளம் இவைகளுக்கு ஒரு ஒழுக்க நெறியை விதிக்க வேண்டும். அதனால் உன்னையே நினைக்கும் பக்குவம் வரும் “ என்றாள் ஆண்டாள்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றது கர்மேந்த்ரியங்களை கட்டுப்படுத்த.. மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றது உடல் பற்றை அகற்ற.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் நீங்கள் ஒரு அலங்காரமுமே செய்து கொள்ளாமல் வந்தால் உங்களை யார் பார்ப்பது?” என்று நகைத்தான்.

“ நாங்கள் உன்னை அலங்காரம் செய்வதில் இன்பம் காண்கிறோமே தவிர எங்கள் உடலை அல்ங்கரிப்பதில் அல்ல. ஆனாலும் பரமனடிபாடி என்று உன் நாமசங்கீர்த்தனம் செய்து வரும் எங்களை பார்க்காமல் இருப்பாயா? ‘மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத’, என் பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் செய்யும் இடத்திலெல்லாம் நான் இருக்கிறேன் என்று சொன்னவன் ஆயிற்றே” என்றால் ஆண்டாள்.

“ வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது இதுதான் ,” என்ற கண்ணனிடம் “ நீ இந்த நோன்பு முடியும்போது நாங்கள் கேட்டதை கொடுப்பயல்லவா, அது வரை நாங்கள் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம், பிறகு எல்லா அலங்காரமும் செய்து கொள்வோம் சுவையான பாற்சோறு சாப்பிடுவோம் “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் குறும்புப் புன்னகையுடன் கூறினான்,

“ இது எனக்கு போன அவதாரத்தில் கைகேயியை நினைவூட்டுகிறது .” என்று.

அதற்கு ஆண்டாள் கூறினாள். அவள் உன் பிரிவை விரும்பினாள். நாங்கள் உன் சேர்க்கையை அல்லவா விரும்புகிறோம்? “

“ எங்கள் விரதம் எப்படி வேறுபட்டது என்றால் மனம் திரிந்த கைகேயி போல் இல்லாமல் மனத்தூய்மையை மேற்கொள்ளும் விரதம் இது.

“செய்யாதனசெய்யோம் என்றால் இரண்டு வகையான காரியங்கள் செய்ய மாட்டோம். அதாவது க்ருத்ய அகரணம், செய்யவேண்டியதை செய்யாமல் இருப்பது அதாவது உன் வழி பாடு எங்கள் நித்ய கடமைகள் முதலியவை. இன்னொன்று அக்ரருத்ய கரணம் செய்யக்கூடாததை செய்வது. இதில் தீக்குறளை சென்றோதோம் என்பது அடங்கும் . தீக்குறளை அதாவது கடும் சொற்கள் கூறுதல் , பிறரை இழித்துரைக்கல் முதலியன, என்று சொன்னவளை இடைமறித்து கண்ணன் கேட்டான் , “அதென்ன சென்றோதோம் , எங்கு சென்று இவைகளை செய்வீர்கள்.?என்றான். ஆண்டாள் கூறினாள், பிறரை பற்றி அவதூறு சொல்பவர்கள் அவரிருக்கும் இடம் சென்றோ அல்லது மற்றவர் இருக்கும் இடம் சென்றோ இதே வேலையை செய்வார்கள் அல்லவா., அதைக் குறிப்பிட்டேன். “

“செய்யாதன செய்யோம், என்று கூறி விட்டாய் . எதை செய்வோம் என்று கூறவில்லையே?’என்ற கண்ணனை நோக்கி அடுத்து என்ன கூறினேன் என்று பார்க்கவில்லையா ? ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி , இவையெல்லாம் செய்ய வேண்டியவை. “

“இதற்கும் விளக்கம் சொல்லிவிடேன் “என்றான் கண்ணன்.

“ ஐயம் என்பது கேட்காமலேயே கொடுப்பது, பிச்சை கேட்டபின் கொடுப்பது , ஆம்தனையும் கைகாட்டி என்றால் இயன்ற அளவு கொடுப்பது. கேட்காமலேயே கொடுப்பவன் நீ., கேட்டபிறகு கொடுத்தவன் மகாபலி. அவனுக்கு இயலாத அளவு த்ரிவிக்ரமனாய் நின்றவன் நீ” என்ற ஆண்டாளிடம் “ இதைத்தான் எதிர்பார்த்தேன் “ என்று சிரித்தான் அக்கள்ளன்.

“ ஆனால் இந்த விதிமுறை எல்லாம் கடுமையாகத் தோன்றுகிறதே தவிர உன்னை மனதில் கொண்ட எங்களுக்கு , உடல் பற்றோ, பசியோ தோன்றுமா என்ன ? உன் நாம்சங்ககீர்த்தனம் என்னும் அமுதம் நாவில் இருக்க வேறு எந்தச் சுவை வேண்டும், உய்யும் ஆறு எண்ணி உகந்திருக்கையில்?” என்ற கோதையிடம். “அதென்ன ஆறு எண்ணி,” என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “ பகவானாகிய உன் குணங்கள் ஆறு, பிரபத்தியின் அங்கங்கள் ஆறு, அன்று நீ வரதனாக திருக்கச்சிநம்பிகளுக்கு ராமானுஜரின் பொருட்டு கூறிய வார்த்தைகள் ஆறு , த்வயமந்த்ரத்தின் பதங்கள் ஆறு,”

“ அடேயப்பா, அதற்கு மேல் ஆறாகப் பெருகும் உன் பக்தி கடலாகிய என்னை அடைந்துவிட்டது அல்லவா? என்ற கண்ணன் ,

“ நான் பாற்கடலில் பையத் துயின்றவன் என்றாயே அதற்கு என்ன அர்த்தம் ? “ என்றான்

“ அதாவது நீ துயில்கின்றாய் என்று நாங்கள் ஒருபோதும் ஏமாறவில்லை என்று அர்த்தம்” என்ற கோதை, அதனால் தான் பையத்துயின்ற பரமன் என்றேன். நீ பரம்பொருள் , உண்மையில் துயின்றால் உலகம் அழிந்துவிடுமே? ஒரு தந்தை தூங்குவதுபோல் குழந்தைகளை கண் காணிப்பது போலவும் ஒரு குடியானவன் தன் பயிரைக் காக்க வீட்டை விட்டு வந்து வயலில் துயில்வது போலவும், நீ உன் பரமபதத்தை விட்டு எங்களைக் காக்க பாற்கடலில் துயில் கொண்டவன் போல் இருக்கிறாய். ஒரு ஆபத்து என்றால் துள்ளி எழுந்து விடுவாய் என்று எங்களுக்குத் தெரியாதா? அதனால் தான் நாங்களும் இந்த உலகில் நிம்மதியாக இருக்கிறோம். என்றாள் ஆண்டாள்.

கண்ணனின் மயக்கும் புன்னகையே இதற்கு பதிலாக அமைந்தது.

——————-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

கண்ணன் கூறினான்.

“கோதை, முதலில் என்னை நந்தகோபன் குமரன் என்றும், யசோதை இளம் சிங்கம் என்றும் கூறினாய். பிறகு பாற்கடலில் துயில்பவனாகக் காட்டினாய் . இப்போது என்னை ஒருகாலில் நிற்க வைத்து விட்டாய் “ என்றான்.

அதற்கு கோதை பதிலளித்தாள். “ ஒரு முறை அல்ல மூன்று முறை உன் த்ரிவிக்ரமாவதாரத்தை திருப்பாவையில் சொல்லி இருக்கிறேன். ஏன் தெரியுமா? இந்த அவதாரம் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அது உன்னுடைய பராக்கிரமம் கருணை இரண்டையும் காட்டிற்று அல்லவா!”

“ ஆனால் சிலர் நான் மகாபலியை வஞ்சித்து விட்டேன் என்று சொல்கிறார்களே? ஒரு வாமனனாய் வந்து அவனை ஏமாற்றிப் பிறகு உலகளந்தானாக மாறியது வஞ்சகம் என்று சொல்கிறார்கள்.”

“விஷயம் தெரியாதவர்கள் ஏதோ கூறிவிட்டுப் போகட்டும். நீ வந்தது அவனை தண்டிக்க அல்ல. அவனுடைய இகலோக சாம்ராஜ்யத்தை எடுத்து விட்டு பக்தி சாம்ராஜ்யத்தைக் கொடுக்க அல்லவா? வாமனனாக வந்தாய் என்றால் அது உன் மாயை. எந்த அவதாரத்தில் நீ மாயம் செய்யாமல் இருந்தாய் ?” என்றாள் கோதை.

அதுவும் அல்லாமல் எல்லாமே உன்னுடையது அதை எடுத்துக்கொள்வது எப்படி வஞ்சகம் ஆகும்? மகாபலியுடன் உன் கருணை முடிந்துவிட்டதா? இல்லையே . உன் பாதகமலத்தில் இருந்து உற்பத்தியான கங்கை உலகம் முழுவதையும் புனிதப் படுத்தவில்லையா? அதனால் தான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றேன். என்றாள் ஆண்டாள்.

“மூன்றடி மண் கேட்ட உனக்கு மகாபலி கொடுத்தது ஓரடி மண்தானே . இதை நான் சொல்லவில்லை . நம்மாழ்வார் கூறுகிறார். ஓரடியால் உலகம் முழுதும் வ்யாபித்தான். இரண்டாவது அடிக்கு எங்கே இடம்? என்கிறார். “ என்ற கோதையிடம், “இந்த விரதத்தால் நீவேண்டுவது என்ன?” என்றான் கண்ணன் .

“வேறு என்ன உன்னை அடைவதுதான்’” என்றவளிடம், “ஆனால் இந்த பாசுரத்தில் நீ வேண்டுவது வேறாக உள்ளதே?

1.தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,

2.ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகள

3. பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

4.வள்ளல் பெரும் பசுக்கள்

5. இவைகளால் நீங்காத செல்வம்

இவைதானே நீ கேட்பது என்றான்.

ஆண்டாள் கூறினாள். “இவை என் வேண்டுகோள் அல்ல.உன் நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தேன். ஓங்கி உலகளந்த உத்தமனாகிய உன் பேர் பாடினால் இவை எல்லாம் கிடைக்கும் என்றும் நாமம் நாமியை விட உயர்ந்தது என்று காட்டவும்தான். திரௌபதியையும் கஜேந்திரனையும் காத்தது உன் நாமம் அல்லவா? “

“நீராடல் என்பது உடல் மற்றும் உள்ளத்தூய்மை. சாற்றி நீராடுவது என்றால் எந்தச் செயலையும் உன் கைங்கர்யமாகச் செய்வது “.

இதைச் சொல்கையில் நான் கோகுலத்திற்கே சென்று விட்டேன்.,” என்றாள் ஆண்டாள்.

“ அப்படியானால் மற்ற வரிகள் கோகுலத்தை வர்ணிப்பனவா? என்றான் கண்ணன் .

“ஆம். நீ வந்த பிறகு கோகுலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது, தீங்கின்றி , அதாவது அளவாக. அதன் விளைவாக நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்தன. நீர்ப் பெருக்கினால் நிறைந்த வயல்களில் மீன்கள் விளையாடின. குவளை மலர்களில் தேன் உண்ட வண்டுகள் வயிறு நிரம்பியதால் அங்கேயே கண் வளர்ந்தன. “ என்றால் ஆண்டாள்.

அதற்கு கண்ணன் “ எனக்கும் கோகுலத்தில் இருப்பதுபோல் இருக்கிறது.” என்றான்,.

“ஆனால் என் மனதில் தோன்றிய காட்சி வேறு. .” என்றாள் ஆண்டாள். “ ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள “ என்றபோது அந்த ஓங்கிய பயிர்கள் உன் பக்தர்களின் மனத்தை ஒத்திருந்தன .அதனூடே சென்று விளையாடிய மீன் எது தெரியுமா? பக்தர்கள் மனம் புகுந்து விளையாடும் மகா மத்ஸ்யமான நீயே. அவர்கள் இதயமான் குவளை மலரில் புகுந்து ஆனந்தமாகக் கண்வளர்ந்த பொறிவண்டும் நீயே. என்றாள் கோதை.”

“என் பிரியமான ஆவினத்தைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டாய். ‘தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என்று கூறி. உண்மை. பக்கத்தில் வந்து கை வைக்கும்போதே பாலை சொரிந்து குடம் நிறைத்தவை அவை “ என்ற கண்ணனிப் பார்த்து,

கோதை கூறினாள், “ அவை பெரும் பசுக்களாக இருந்ததற்கும் கை வைத்தவுடன் பாலை சொரிந்ததற்கும் அவை உன்மேல் கொண்ட அன்பல்லவா காரணம் ?”

“நீ சொல்வது முற்றும் உண்மை. கோகுலத்தில் நான் பெற்ற ஆனந்தம் வைகுண்டத்திலும் எனக்கு ஏற்படவில்லை .” கோபாலன்.

“உன்னிடம் வருவோர்க்கெல்லாம வாரி வழங்கும் வள்ளல் பெரும் பசு நீயே அல்லவா? எங்கள் சிறுமதியால் உன்னிடம் குடத்துடன் வருவதற்கு பதில் ஒரு சிறு கோப்பையுடன் வருகிறோம்.. . உன்னையே தரத் தயாராக இருக்கும் உன்னிடம் அல்ப உலக சுகங்களைக் கேட்கிறோம். அது எங்கள் மதியீனமே தவிர உன் கருணையின் குறை அல்ல.” என்றாள் ஆண்டாள்.

——————-

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி

ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து

பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்

ஆண்டாளும் கண்ணனும் பேசிக் கொண்டிருக்கையில் மேக மூட்டம் காணப்பட்டது. அதைக்க்கண்டு ஆண்டாள் கூறினாள்.

“ கண்ணா உன்னை நான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று கூறியதைக் கேட்டு மேகங்கள் நீ எங்கே கங்கைபெருக்கை உண்டாகியது போல் மழையையும் உண்டாக்கி அவைகளை பயனற்றவையாக செய்துவிடுவாயோ என்று பயந்து விட்டன போலும்.தாமாகவே வந்து நின்றுவிட்டன. “ என்றாள்.

“அல்ல. ஆழிமழைக்கண்ணா என்ற உன் பாசுரத்தைக் கேட்டு கீழ்ப்படிந்து வந்து விட்டன. பஞ்ச பூதங்களும் என் பக்தர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். “ என்றான் கண்ணன்.

அதற்கு ஆண்டாள், “ அது சரி. ஆனால் நான் ஆழிமழைக்கண்ணன் என்றது உன்னையல்லவா? எல்லாவற்றிலும் உள்ளே இருந்து இயக்குபவன் நீதானே? கருணையாகிற மழை பொழியும் மேகம் நீயல்லவா? அதனால் ஒன்று நீ கை கரவேல் என்றது பாரபட்சம் இல்லாமல் எங்கும் மழை பொழியட்டும் என்ற பொருள் காணப்பட்டாலும், என் குழந்தைகளான இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்கட்கும் உன் கருணை மழையைப் பொழிவாயாக என்று உன்னை வேண்டிக்கொள்கிறேன்.” என்றாள்.

“மேகங்கள் நான் அவைகளைத்தான் சொல்கிறேன் என்று வந்து நின்று விட்டதால் அவைகளுக்கு ‘ஆழியுள் புக்கு’ என்று கடலின் உள் புகுந்து நீர் மட்டும் அல்ல, மற்ற முத்து ரத்தினங்கள் இவற்றையும் எடுத்துக்கொண்டு, ‘முகர்ந்து கொடு ஆர்த்தேறி,’ உயரச்சென்று , நடுவில் எங்கும் பெய்து விடாமல் எல்லா உயிர்களும் நன்மை அடையுமாறு , ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்றேன், என்ற ஆண்டாள்,

“அந்த மேகங்களைப் பார்த்ததும் உன் கார்மேக வண்ணம்தான் நினைவுக்கு வந்தது. அதனால் ஊழி முதல்வன் போல் ‘மெய்கறுத்து,’ என்றேன்.

கண்ணன் கேட்டான் அதென்ன ‘ஊழிமுதல்வன் போல் ‘?

ஆண்டாள் கூறினாள்,” பிரளயத்திற்குப் பின் படைப்புக்கு முன் கருணையினால் கறுத்த உன் மேனி எல்லா உயிர்களையும் உள்ளே அடக்கினதால் நீருண்ட மேகம்போல் உள்ளதல்லவா? ஆனால் மேகம் மழையைப் பொழிந்த பின்னர் வெண்மை நிறம் கொண்டதாகி விடுகிறது. ஆனால் உன் கருணை என்ற மேகம் எவ்வளவு பொழிந்த போதிலும் நிறம் இழப்பதில்லை. வற்றா நீருள்ள கடலைப்போல. “.

“ஊழிக்காலம் என்றவுடன் அடுத்து வரும் சிருஷ்டி நினைவுக்கு வந்தது போலும். அதனால் என்னை பத்மநாபன் என்றாய் இல்லையா ?” என்றான் கண்ணன்.

“ஆம். பத்மநாபன் என்றபோது உன் நாபியில் உள்ள பிரம்மாவும் நினைவுக்கு வருகிறார் அல்லவா? அதன்பின், சிருஷ்டிக்குப் பிறகு உன் கருணையை வெளிப்படுத்தும் செயல்கள் நினைவுக்கு வந்ததில் என்ன அதிசயம்? ‘ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து ‘ என்றது உன் துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றைக் குறிக்கும் சொற்கள். மின்னல் போல மின்னி தீயோர்க்கு பயத்தை விளைவிக்க, சங்கம் இடிபோல் அவர்களை நடுங்க வைக்கிறது. “ என்றாள் கோதை. “

“ இந்திரன் ஆணைப்படி கோகுலத்தில் பெய்த மழை ஆயர்களை இப்படித்தான் நடுங்க வைத்தது , என்றான் கண்ணன்.

“ஆனால் உன் கருணை என்ற மலை அவர்களைக் காத்ததே? “ என்ற கோதை, “உன் ஆயுதங்களும் உலகைக் காக்கவே. ‘சார்ங்கம் உதித்த சரமழை ,’ என்றது உன்னை சரண் புகுந்த முனிவர்களைக் காக்க ராமாவதாரத்தில் உன் வில்லிலிருந்து புறப்பட்ட சரமழை. மகாபாரதப் போரில் நீ சங்கம் எடுத்து ஊதியவுடன் கௌரவர் மனதில் நடுக்கம் ஏற்பட்டது என்றாரே வியாசர். “ என்றாள் கோதை.

“ இந்த உவமை எனக்கு வேறொரு மேகத்தை நினைவூட்டுகிறது. நம்மாழ்வார் என்ற மேகம் நானாகிய கடலில் இருந்து என் அருளாகிய நீரை எடுத்து நாதமுனியாகிய மலை மேல் வர்ஷிக்க , அது உய்யக்கொண்டார் ராமமிச்ரர் என்கிற அருவிகள் மூலம் ஆளவந்தார் ஆகிய நதியை அடைந்து கடைசியில் ராமானுஜர் ஆகிய ஏரியில் எல்லோரும் நலம் பெறுமாறு தங்கியது. “என்ற கண்ணனிடம் ,

“அந்த நீர் ஆழ்வார்கள் என்ற பல ஊற்றுகளாகவும் பரிணமித்து மக்களுக்கு நன்மை செய்தது. “ என்றால் கோதை.

“ ஆமாம் அந்த ஊற்றுகளில் பேரூற்று நீதானே என்று நகைத்தான் கண்ணன்.

———————-

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

“ கோகுலத்தில் ஆரம்பித்து நந்த கோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் என்று சொல்லிப் பிறகு, நாராயணன், பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், பத்ம நாபன் என்றாய். இப்போது மறுபடி புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டாய் போலும். நான் இப்போது மதுரை மைந்தன், யமுனைத் துறைவன் ஆகிவிட்டேன் . “ என்றான் கண்ணன்.

“ நான் உன்னை மாயன் என்றேன். ஏன் தெரியுமா? உன் கிருஷ்ணாவதாரம் முழுதும் விளக்க முடியாத மாயம். மதுரையில் பிறந்தாய் ஆகையால் மதுரை மைந்தன். கோகுலம் வந்து ஆயர்குலத்து அணி விளக்காக ஆனாய். தூய பெருநீர் யமுனைத் துறையில் நீ செய்த மாயங்கள் கொஞ்சமா? , “என்ற ஆண்டாளிடம்,“அதென்ன தூய பெருநீர் யமுனை ? “ என்றான் கண்ணன்.

“ஆம், யமுனையின் தூய்மை கங்கையிலும் மேலானது. ஏனென்றால் நீ புகுந்து விளையாடியதால். மேலும் வசுதேவர் உன்னைச் சுமந்து வரும்போது கம்சனுக்கு பயப்படாமல் வழி விட்டாள் அல்லவா? கோதாவரியைப்போல் அல்லாமல்? “ என்றால் கோதை.

“ஏன் கோதாவரியுடன் ஒப்பிடுகிறாய்? “ என்ற கண்ணனிடம் கோதை, “ “ராமனாக நீ சீதை எங்கே என்று கேட்ட போது ராவணனுக்கு பயந்து கோதாவரி பதிலுரைக்கவில்லை அல்லவா?’ என்றாள்.

கண்ணன் கூறினான். “ஆனால் வேதாந்த தேசிகர் . சொல்கிறார். ‘ப்ராயேண தேவி பவதீவ்யபதேச யோகாத் கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே,’ கோதாவரி நதி கோதா என்ற உன் பெயரை தன்னுள் கொண்டதால் தன் நீரால் இந்த உலகை புனிதமாக்குகிறது என்று.”

அதைக்கேட்டு நாணத்தால் தலை குனிந்த கோதையை பார்த்து , “அதிருக்கட்டும் , தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்று நான் உரலில் கட்டுப்பட்டதைத்தானே சொல்கிறாய்? “ என்றான்.

“ ஆம். நவநீத சோரனாய் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தாய். உரலில் கட்டுப்பட்டு தாமோதரன் என்று பெயர் பெற்றாய். உன் தாய் உன்னைக் கட்ட எந்தக் கயிறு எடுத்தாலும் அது இரண்டு அங்குலம் குறைவாக இருக்கக் கண்டு அயர்ச்சியுற அப்போது அவ்ளுக்கிறங்கி கட்டுப்பட்டாய். அதை நினைவு கூர்ந்த நம்மாழ்வார் ‘எத்திறம்’ என்று அதிசயித்து ஆறுமாதம் உணர்ச்சிப்பெருக்கால் நினைவற்று இருந்தார் அல்லவா?”

கண்ணன் “ ஆம். அந்த அடையாளத்தை இப்போதும் அரங்கனான என் உந்தியில் காணலாம். என் தாயின் நினைவாக அதை இன்னும் சுமக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“தாயைக் குடல் விளக்கம் செய்தவன் அல்லவா, தாமோதரன், உதரத்தில் கயிறால் கட்டுப்பட்டவன், என்று சொல்லும்போதே உன் தாய் நினைவும் கூட வருகிறதே அத்துடன் இந்த மாயமும் வாய் திறந்து உலகம் காட்டிய மாயமும் நினைவுக்கு வருகிறது. அதனால் தான் தாயைக் குடல் விளக்கம் செய்தவன் என்றேன். அதாவது அவளுக்கு புகழ் அளித்தவன். “

“அதுவும் உன் மாய லீலை. நலகூபுரர்களின் சாபத்தைத் தீர்க்க. “ என்றவளிடம் கண்ணன் கூறினான்.

“அதனால் தான் வேதாந்த தேசிகர் என்னை உரலில் கட்டுப்பட்டவனாக யார் நினைக்கிறார்களோ அவர்கள் மறுபடி சம்சாரம் என்ற கட்டுக்குள் புக மாட்டார்கள் என்று சொல்லி, அந்த உரலை என் ,மேனி சம்பந்தம் பெற புண்ணியம் செய்த உரல் என்கிறார்.”

“ மிகுதியுள்ள வரிகளைப் பார்க்கலாமா? “ என்ற கண்ணிடம் கோதை கூறினாள்.

“தூயோமாய் வந்து தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க. ‘மலர் தூவித் தொழுவது , உடல் தூய்மை, வாயினால் பாடி என்பது வாக்குத்தூய்மை, உன்னை சிந்திப்பது மனத்தூய்மை. இதனால் என்ன பயன்?

“போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். போய பிழை என்பது இதுவரை பயன் கொடுக்காத ஆனால் வரப்போகும் ஜன்மங்களில் பயன் கொடுக்கும் கர்மம். சஞ்சித கர்மா. புகுதருவான் என்பது இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மம் இனிமேல் பலனளிக்கக் கூடியது, ஆகாமி கர்மா. நின்றனவும் என்பது இப்போது அனுபவிக்கும் கர்ம பலன் பிராரப்த கர்மா. இம்மூன்றும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்துவிடும்.”

“ இனி மற்றவரை எழுப்பி பாகவதானுபவத்தில் திளைக்கச் செய்யும் உன் இனிய பாசுரங்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்றான் கண்ணன்.

—————-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்

வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

கண்ணன் இதைக் கேட்டுவிட்டு கூறினான்.

கோதையாக வந்த உன் நோக்கம் பக்தி ஒன்றே என்னை அடைய எளிதான வழி என்பதைக் காண்பிக்கவே என்று அறிவேன். இந்தப் பாவை நோன்பைத் தொடங்கி இளம் கன்னியரை அதிகாலையில் எழுந்து உன்னுடன் நாம சங்கீர்த்தனம் செய்து அதன் மூலம் அதைக் காண்போர் மனதில் பக்தியை ஊட்டுவது என்பது நல்ல முடிவு. ஆனால் உன் சொற்கள் ஆயர்பாடி சிறுமியரை அல்லவா நினைவூட்டுகின்றன? “ என்றான்.

“ஆம் . என்னை ஒரு கோபியாக பாவித்து மற்ற என் தோழிகளையும் அவ்வாறே கற்பனை செய்தேன். இந்த பாவை நோன்பு வியாசரால் பாகவதத்தில் கோபியர் செய்ததாகத்தானே சித்தரிக்கப் பட்டுள்ளது? “ என்றாள் கோதை.

“முடிவில் என்னைக் கண்டு உங்கள் கோரிக்கையை முன்வைக்கத்தான் கூட்டமாக வந்தீர்களாக்கும் . அப்போது நான் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? என்றான் கண்ணன்.

“நாங்கள் கூட்டமாக வந்ததன் காரணம் என்னவென்றால், தனியாக வந்தால் உன்னைக் கண்டதும் உலகமே மறந்து விடும்.அப்புறம் எப்படி வேண்டுவன கேட்பது? அதற்குத்தான் சேர்ந்து வந்தோம். ஒருவருக்கொருவர் தைரியம் சேர்க்க,” என்ற கோதை, மேலும் கூறலுற்றாள்.

“ ஒரு மனதிற்கினிய நிகழ்வு மற்றவருடன் சேர்ந்து அனுபவித்தால் அதிகம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நல்லதை நாலுபேருடன் பகிந்துகொள்ள வேண்டும் அல்லவா? பரதன் கௌசல்யையிடம் தனக்கு ராமன் காட்டுக்குப் போவதைப் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் என்னென்ன பாவத்தின் பலனை அனுபவிப்பான் என்று கூறும்போது, ஒரு இனிய பண்டத்தை யாருக்கும் கொடுக்காமல் உண்ணும் பாவத்தையும் செர்த்த்குக் கொள்கிறான் அல்லவா? எங்களுக்கு உன்னை விட இனியது எது?” என்றாள்.

புள்ளினம் கூவும் , சங்கம் ஒலிக்கும் கோவில் புள்ளரையன் கோவில் என்றாயே அது கருடனைத்தானே குறிக்கும் ? என்ற கண்ணனிடம் ,

“புள்ளரையன் கோவில் என்றது உன் கோவிலை. புள்ளரையன் என்பது கருடன் தான் பட்சிகளுக்கு அரசன் என்ற அர்த்தத்தில்ஆனால். அந்தப் புள்ளரையனின் கோ, நீதானே. உன் இல் அல்லது இல்லம் தானே கோவில். “

“ அங்கு ஒலிக்கும் சங்கு உன் அன்பர்களின் மனதில் புகுந்து உன்னை நினைவூட்டுகிறது. அதனால் அதன் ஓசை பேரரவம் ஆகிறது. “

கண்ணன் கூறினான். “பூதனை சகடாசுரன் இவர்களைப் பற்றி சொல்ல விசேஷ காரணம் ஏதும் உளதோ?”

“ஆம், சிறு குழந்தையாய் இருந்தபோதே நீ செய்த அற்புதச் செயல்கள் அல்லவா அவை? “ என்றாள் ஆண்டாள்.

“ நீ பூதனயிடம் ஸ்தன்யபானம் செய்தபோது கண்ணை மூடிக்கொண்டாயாமே அவள் உன் கடாக்ஷம் பட்டால் அவளை கொள்ள முடியாது என்றா? “ என்ற கோதையைப் பார்த்து சிரித்த கண்ணன் “ ஆம் அப்படித்தான் என் பக்தர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். நாராயண பட்டாத்ரி என் கால் பட்டு உடைந்த சகடத்தின் ஒரு துகள் கூட காணப்படவில்லை என்று கூறின மாதிரி.” என்றான்.

“ ஆமா அவர்களுக்கு நீ ஆயர் குல சேய் அல்ல , வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்து என்பது தெரியாதல்லவா? என்றாள் கோதை.

“உலகத்தின் வித்தாகிய நீ பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொள்ள உன்னை முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் கொண்டு மெல்ல எழுந்திருக்கிறார்கள் தங்கள் த்யானத்தில் இருந்து. ஏன்தெரியுமா ? உன் துயில் கலையக்கூடாதாம். அப்போதுதானே அவர்கள் வந்து உனக்கு திருப்பள்ளி எழுச்சி பாடமுடியும்? “

“அப்படியானால் ஹரி என்ற பேரரவம் எங்கிருந்து வந்தது என்றான்” கண்ணன்.

“அப்படிக்கேள் , நீ உறங்கினால் அல்லவா உன்னை எழுப்ப முடியும்? உன்னைக் கண்டவுடனே மெய்ம்மறந்து ஹரி ஹரி என்று பேரரவம் செய்தார்கள். ‘ என்றாள் ஆண்டாள்.

“வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து கொண்டு,” என்ற சொற்கள் எனக்கு உன் தந்தையான பெரியாழ்வாரையே சொல்வது போல் இருக்கிறது. அவர்தானே ‘ அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து ‘ என்று நான் அவர் உள்ளத்தில் எவ்வாறு ஆதிசேஷனுடனும் பாற்கடலுடனும் , லக்ஷ்மி யோடும் வந்து புகுந்தேன் என்று பாடினாரே!” என்றான் கண்ணன்.

அதற்குக் கோதை “ அவர் மட்டும் அல்ல, உன் பக்தர்கள் அனைவரும் முனிவர்களும் எல்லோரும் உன் நாமத்தைச் சொல்ல அதுவே பேரரவம் ஆயிற்று.” என்றாள்.

‘ஆம். அந்த பக்தி வெள்ளத்தில் நானும் மூழ்கினேன்.” என்றான் கண்ணன்.

“உண்மையில் சொல்லப்போனால் பாற்கடல் எது? பாலைப்போல் தூயதாக உள்ள உள்ளமே அல்லவா? அதில் அரவு என்னும் ஆயிரம் தலை நாகம் அதாவது உலக இச்சைகள் எல்லாம் அடங்கி அதில் நீ மட்டுமே துயில் கொள்கிறாய். மற்ற இச்சைகள் அடங்கி உள்ளம் பால்போல் தூயதாக ஆகுமேயானால் இறைவனாகிய நீ தானாகவே வந்து வாசம் செய்கிறாய் என்று அர்த்தம்.” என்று சொன்ன கோதையிடம் “நன்று நன்று” என்றான் அந்த ரங்கசாயி.

—————-

கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்

கண்ணன் கூறினான். “ விடியற்காலையைப் பற்றி ஒரு அழகான வர்ணனை. ஆனைச்சாத்தன் என்ற வலியன் குருவி கீச் கீச் என்று ஒன்றோடுஒன்று கலந்து பேசும் அரவம், ஆய்ச்சியர் தயிர் கடையும் அரவம். இதுதான் எனக்குப் பிடித்தது. வெண்ணை கிடைக்கும் அல்லவா?”

“ தயிர் கடையும் அரவம்ஆயர்பாடியில் ஏன் உரக்கக் கேட்கிறது தெரியுமா? நீ வந்தபின்னர் பால் மிகுந்த ஆடையுடன் இருக்க தயிர் பாறைபோல் கெட்டியாக ஆகிவிட்டது. அதை மிகுந்த பிரயாசையுடன் கடையும்போது , காசும் பிறப்பும் என்னும் அவர்கள் கழுத்தில் உள்ள ஆரம் சப்தம் செய்தது.” என்ற ஆண்டாளைப் பார்த்து,

“வாச நறும் குழல் என்றாயே , நக்கீரர் காதில் விழப்போகிறது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது என்று கூறிக்கொண்டு வரப் போகிறார், “ என்று நகைத்தான் கண்ணன்.அதற்கு கோதை பதில் கூறினாள்.

“அவர்கள் யார்? அப்சர ஸ்திரீகள் தானே கோபியராக வந்தனர். அவர்கள் கூந்தலில் நறுமணம் வீசுவதில் வியப்பென்ன?”

“நான் பேசின பேச்சரவம் என்று கூறியது பட்சிகளின் பேச்சை அல்ல. ஒரு யானையைக் கொன்று மற்றொரு யானைக்கு அபயம் அளித்ததால் ஆனைச்சாத்தன் என்றது உன்னை. கலந்து பேசின பேச்சரவம் நீயும் திருமகளும் பக்தர்களைக் காக்க நிகழ்த்திய சம்பாஷணை. உங்களைப் பற்றி நினைவே இல்லாமல், நாங்கள் நாராயணன் மூர்த்தி கேசவன் ஆகிய உன்னைப் பாடுவது கேட்டும் மஞ்சத்தில் கிடந்தவளை பேய்ப்பெண்ணே என்றேன்.” என்றால் ஆண்டாள்.

அப்போது கண்ணன் கேட்டான். “உடனே நாயகப் பெண்பிள்ளாய் என்றாயே , அவள் கோபித்துக் கொள்வாள் என்றா?”

“ இல்லை. அவள் நாங்கள் கூப்பிட்ட உடனே வந்து சேர்ந்து நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டதால் நாயகப் பெண்பிள்ளாய் என்றேன்.

“உன் சொற்களுக்கு சில அன்பர்கள் வேறு உள் அர்த்தம் கொள்கிறார்கள். காசு பிறப்பு என்பது ஸ்ருதியும் ஸ்ம்ருதியும். கலகலப்ப என்றால் அவை சேர்ந்து ,என் புகழ் பாடுவது. வேதத்தை நன்கு கற்றுணர்ந்த, வாச நறும் குழல் ஆய்ச்சியர், பக்தி என்னும் மணம் வீசும் ஆசார்யர்கள், கை பேர்த்து, உயர்ந்த கைகளுடன் என் பெருமையைக் கூறுகிறார்கள், என்று பொருள் எனக் கூறுகிறார்கள்.

“அது நான் செய்த பாக்கியம், உன் திருவருள்,” என்ற கோதை, தயிர் கடைவது என்பது பக்தி என்ற மத்தினால் மனத்தைக் கடைவது என்று வைத்துக் கொண்டால் நீ வெண்ணை என உன்னை வெளிப்படுத்துவாய். “ என்றாள்.

—————–

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய

பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்

“ கீழ் வானம் வெள்ளென்று அதாவது கிழக்கு வெளுக்க, நீராடப் போகும் மிக்குள்ள பிள்ளைகளை போகாமல் காத்து இந்தப் பெண்ணை எழுப்புகின்றாய். சரி. எருமை சிறு வீடு மேய்வான் என்றாயே அது எதற்கு.” என்ற கண்ணனிடம்,

பொழுது விடிந்ததும் முதலில் எருமைகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள் பிறகுதான் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப்போவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஏன் என்று கோபாலனாகிய உன்னையன்றி வேறு யார் அறிவார்? “ என்றால் ஆண்டாள்.

“ ஆம். அதைக் கூறவே இந்தக் கேள்வி, “ என்ற கண்ணன் , விடியல்காலையில், புற்கள் மீது பனி படர்ந்திருக்கும்.இது பசுக்களுக்கு ஒவ்வாதது. ஆனால் எருமைகள் அந்தப்புல்லைத் தின்று அதிகமாக பால் கறக்கும் இயல்புடையவை.,.” என்றான் .

“கோதுகலமுடைய பாவை என்றால் அது கௌதூஹலம் என்ற வடமொழிச்சொல்லின் திரிபா “என்றவனிடம் ஆண்டாள் கூறினாள்.

“அப்படியும் எடுத்துக்க்கொள்ளலாம். இது உனக்குப பிரியமான பக்தரைக் குறிக்கிறது. பாவை என்றால் பதுமை போல உன்னையே நினைத்து அசைவற்றிருப்பவர்.

“கோதா என்ற பெயருக்கேற்ப சொல்லின் சக்தியால் பக்தியை ஊட்டும் உன்னை விடவா எனக்கு பிரியமானவர் ஒருவர் இருக்க முடியும்.”

“ சரி, அடுத்த வரிகளைப் விளக்குகிறாயா? “ என்றான் கண்ணன்.

“மாவாய் பிளந்தான் என்பது நீ கேசி என்ற குதிரை வடிவில் வந்த அரக்கனை வாய் பிளந்து அழித்தது. மல்லரை மாட்டிய, என்பது கம்சனால் ஏவப்பட்ட மல்லரை வீழ்த்தியது.”

“அப்படிப்பட்ட உன்னை சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து, நம் பக்தியை உள்ளபடி அறிந்து அருள்வாய் என்று கூறினேன்.” என்றாள் ஆண்டாள்.

“நான் ஆராய்ந்தா அருளுகிறேன்? என் பக்தர்கள் யாவரும் எனக்கு ஒன்றுதானே? “என்றான் கண்ணன்.

“ஆம் உண்மை. ஆனால் முதல் அடி நாங்கள் எடுத்து வைக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் சென்று நாம் சேவித்தால் நம் பக்தியை உணர்ந்து கேட்டதெல்லாம் அருள்வான் என்றேன்.” என்றாள் கோதை.

“கோதா என்ற பெயர் படைத்தவளான உன் வாக்கிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் உயரிய அர்த்தம் வாய்ந்தவை. இநத பாசுரத்தை என் அன்பர்கள் எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்கள் தெரியுமா? “ என்ற கண்ணன் மேலும் கூறினான்.

“மாவாய் பிளந்தான் என்பது இந்த்ரியங்களாகிய குதிரைகளை அடக்கி , மல்லரை மாட்டிய அதாவது எதிர்வாதம் செய்தவர்களை ஜெயித்து உலகில் பக்தியை நிலைநாட்டிய ராமானுஜர் போன்ற ஆசார்யர்களைக் குறிக்கிறது. .”

“போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் என்பது இந்த்ரியங்களின் வழியில் போகின்றவர்களை காத்து நல்வழிபடுத்தும் ஆசார்யர்கள். “

கோதை , “எல்லாம் உன் திருவுள்ளமே அல்லவா? என் வாக்கில் வந்த வார்த்தைகள் நீ தந்தது தானே?” என்றாள்.

————–

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்

நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்

“தூமணி மாடம் என்றதும் எனக்கு கோகுலம் நினைவுக்கு வருகிறது. அங்குள்ள எல்லா மாளிகைகளிலும் ரத்தினங்கள் பதிக்கப் பட்டு தூமணி மாடங்களுடன் ஜகஜ்ஜோதியாக விளங்கும் .ஒரு சம்ப்ரதாயத்திற்காகத்தான் அங்கு விளக்கு ஏற்றுவது வழக்கம்.” என்றான் கண்ணன்.

“நானும் கோகுலத்திற்கே போய்விட்டேன் கற்பனையில், அதனால் தான் அந்த மாளிகையில் உறங்கும் பெண்ணை மாமன்மகளே என்றேன். “

“உண்மையில் பக்தர்களுக்கு பகவத்ஸம்பந்தம் உடையோர்தான் பந்துக்கள். அல்லாதார் பிறப்பினால் உற்றார் ஆனாலும் மற்றாரே. மாதவா வைகுந்தா என்று உள்ளத்தில் பக்தியை பிறப்பிப்போரே உண்மையான பெற்றோர்.” என்ற கோதையிடம் “ என்னை மறுபடியும் மாமாயன் என்று கூறிவிட்டாயே?” என்றான் கண்ணன்.

“மாமாயன் என்றால் மா அதாவது லக்ஷ்மியின் பதி , மாதவன் என்று பொருள். ஆனாலும் நீ மாமாயன்தானே. உன் மாயை என்பது ஒரு கறுப்புக் கண்ணாடிக் கதவு. அதன் மூலம் நீ எங்களைப் பார்க்கிறாய் ஆனால் அது உன்னை எங்களுக்கு மறைக்கிறது. “

“விராதன் கூறினானே, ‘பசு அதன் கன்றை எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்ளும். அதுபோல எங்களை நீ அறிவாய் . ஆனால் உன் திருவுள்ளம் அன்றி நாங்கள் உன்னை அறிய முடியாது.; என்று. இந்திரன் முதலிய தேவர்களாலேயே உன்னை இனம் கண்டுகொள்ள முடியாமல் உன் மாயை மறைத்தல்லவா?” என்றாள் கோதை.

“‘அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே ,’ என்று நம்மாழ்வார் கூறினபடி உன் மாயையை யாரால் அறிய முடியும்? என்ற ஆண்டாளிடம் , “ம்ம், அப்புறம்? “ என்றான் அந்த மாயவன்.

“உன் மாய லீலைகளுக்கு ஒரு எல்லை உண்டா என்ன ? வராஹாவதாரத்தில் சமுத்திரம் உன் கணுக்கால் வரை தான் இருந்தது . ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் உன் தாய் ஒரு கை ஜலத்தால் உன்னை நீராட்டினாள். அதுமட்டுமா? ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ,’ என்பாதத்தை சரணமடை,’ என்று சொன்னவன் தாய் நீராட்டும்போது அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாயே!” என்றாள் கோதை.

“இப்போது மற்ற வரிகளைக் காண்போமா? “ என்றான் கண்ணன்.“தூமணி என்றது வேதங்கள் ஸத்யஸ்ய ஸத்யம் என்ற உன்னைத்தான் .நீ இருக்கும் உள்ளமே மாடம். சுற்றும் சுருதி ஸ்ம்ருதி புராணம் என்ற விளக்குகள் உன்னைப்பற்றிய அறிவை விளக்குகின்றன. உன்னில் ஆழ்ந்து இருப்பதே துயிலணை மேல் கண் வளர்வது, அந்த நிலையில் உள்ளவன் இந்த்ரியங்கள் வெளிப்பார்வை அற்று ஊமையைப் போலவும் , செவிடைப் போலவும், அனந்தல், அதாவது பித்தனைப் போலவும் தோற்றம் அளிக்கிறான். உலக சிந்தனை அற்று ஏமப் பெருந்துயில் கொண்டவன் போல் காணப் படுகிறான் . அப்படி உள்ளவர்கள் வெளிப்போந்து மற்றவர்க்கு வழி காட்டுவதென்பதே மணிக்கதவம் தாள் திறப்பது.அது நீ திருவுள்ளம் கொண்டால் தான் இயலும் . அதற்குத்தான் மாமீர் என்று புருஷகாரபூதையான திருமகளை அழைக்கிறோம். “ என்றாள்.

“அடேயப்பா, நான் ஏதோ பெரிய மாளிகையில் சுகமான பஞ்சணையில் தூங்கும் பெண்ணை எழுப்புகிற வரிகள் என்று நினைத்தேன்.” என்றான் கண்ணன்.

“ ஒரு பகவதனுபவத்தில் ஈடுபட்ட ஒருவரை உருவகப்படுத்தியதுதான் அந்தப் பெண்ணைப பற்றிய வர்ணனை. “ என்றால் கோதை.

“உன் அடுத்த பாசுரத்திற்காக நான் வேறு வேடம் அணிகிறேன் “ என்று நகைத்தான் கண்ணன்.

“ஆம் வில்லேந்தி வரவேண்டும்.” என்றாள் கோதை.

———————

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே

தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

“நீ கும்பகர்ணனை சொல்லப்போவதால் நான் ராமனாகிவிட்டேன் .”என்றான் கண்ணன்.

“இந்தப் பெண் உன்னை அடைவதே சுவர்க்கம் என்ற எண்ணத்தை உடையவள். ஆனால் அதை மறந்து இங்கே தூங்குகிறாள். கதவையும் திறக்கவில்லை , மறுமொழியும் தரவில்லை.அதனால் தான் கும்பகர்ணன் என்றேன்.” என்ற கோதை,

உண்மையில் எங்களுக்கு சுவர்க்கம் என்பது உன்னை அடைவதுதான். நோற்று என்றால் பக்தி மூலம் அடைவது. புகுகின்ற அம்மனார் என்பது உன்னை சேர்கின்ற பக்தர்கள்.”

“ வாசல் திறவாதார் யார் ? உன்னை சேரவொட்டாமல் தடுக்கும் த்வாரபாலகர்களான இருவினைகள் . அவை மாற்றமும் தாராரோ, அதாவது புண்ணியமாக மாறி விடாவோ?’

“உனக்கு சர்வ நிச்சயமாக பக்தர்களுக்கு எந்தத்தடையும் ஏற்படாது என்று தெரியுமா?” என்றான் கண்ணன்.

“ஆம், ஏனென்றால் நீ நாராயணன் ஆனாலும் நம் மால் , பக்தர்களை இனவேறுபாடில்லாமல் ஏற்றுக் கொள்பவன். போற்றப் பறை தரும் புண்ணியன். ஜடாயு சபரி இவர்கள் நினவு வந்ததால் ராமனாக உன்னைக் காண்கிறேன் “ என்றாள்.

”அது சரி, அவர்களுடன் கும்பகர்ணனும் நினைவுக்கு வந்தானோ ?” என்று குறும்புப் புன்னகை புரிந்தான் ராமனாக நின்ற கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “ முக்திக்கு முக்கிய இடையூறுகள் , உன்னைப் பற்றிய அறிவின்மை, அதனால் உலக இன்பங்களில் ஈடுபாடு. கும்பகர்ணன் இந்த்ரிய சுகங்களில் ஈடுபடாத சமயங்களில் உறங்குவான். இதுதான் கூற்றத்தின் வாய் வீழ்வது,.மரணம், ஜனனம், மரணம் என்ற சுழலில் அகப்படுவது. அவன் ராமனான உன்னால் வீழ்ந்தான் அந்தப பெரும் துயிலை கலியில் மக்களுக்கு அளித்துவிட்டு. அதைத்தான் கூற முயன்றேன். “ என்றாள்.

“அதெல்லாம் சரி. திடீரென்று ராமனாக என்னைக் காண விரும்பியது ஏன்.”

“ சொல்கிறேன் . ராமனான நீ புண்ணியன் , ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி. மேலும் சரணாகத ரக்ஷகன், ‘அபயம் சர்வபூதானாம் ததாமி இதி ஏதத் வ்ரதம் மம, என்னை சரணம் புகுந்தவன் யாரானாலும் ராவணனே ஆயினும் அவனைக் காப்பாற்றுவேன் என்ற விரதம் பூண்டவன் அதனால் போற்றப்பறை தரும் புண்ணியன் என்றவுடன் உன் ராம ஸ்வரூபம் மனக்கண்முன் தோன்றியது. “ என்றாள் கோதை.

“ஆற்ற அனந்தல் உடையாய் என்பது பரம ஏகாந்தியாக உன்னையே நினைத்திருப்பவர். அவர் அருங்கலமாக எல்லோருக்கும் ஒரு தீபத்தைப் போல் வழி காட்டுகிறார். “ என்ற கோதையிடம் , “நான் வேஷத்தைக் கலைத்துவிடவா ,”என்றவனை “இரு, இரு, இன்னும் ஒரு பாசுரம் ஆகட்டும் அப்புறம் மறுபடி இவ்விதமே வரவேண்டி இருக்கும்.” என்றால் கோதை.

—————-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்

“ இப்போது பசுக்களை கறக்கும் நேரம் வந்துவிட்டதாக்கும்.” என்ற கோபாலன் ,” கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்று நீ சொல்வது மிகவும் சரியானதே. ஆயர்பாடியில் கணக்கிலாத பசுக்கள். பால் ஏராளமாக இருந்த போதிலும் அவைகளின் மடிக்கனத்தைக் குறைப்பதற்காகவே கறப்பது வழக்கம். அதுவும் ஒரு தேகப் பயிற்சியாகவே யாதவர்கள் செய்வார்கள். ஏனென்றால் நீ கூறியுள்ளபடி செற்றார் திறலழிய சென்று செருச்செய்பவர்கள் அல்லவா? எதிர்ப்பவர்களை வெல்ல பலம் வேண்டுமே” என்றான் கண்ணன்.

“ ஆனால் ஆயர்களுக்கு யார் எதிரிகள்? உனக்கும் உன் அன்பர்களுக்கும் கெடுதல் நினைப்போரே. ஏனென்றால் அவர்கள் குற்றம் ஒன்றில்லாத கோவலர்கள் அல்லவா?” என்றாள் கோதை.

“ நீ எழுப்ப நினைக்கும் பெண் அப்படி ஒருவர் பெண்ணல்லவா? பொற்கொடி, அழகான பொற்கொடியைப்போன்றவள் , புற்றரவு அல்குல், புற்றில் இருந்து வெளிப்படும் பாம்பைப் போன்ற அளகபாரம் உடையவள், புன்மயில், ஆடும் மயில் என்று வர்ணித்தாயே , பாம்பும் மயிலும் எங்காவது ஒரே இடத்தில் இருக்குமா? “ என்றான் கண்ணன்.

“ பொற்கொடி என்றால் கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் மனம் படைத்த பக்தர் , பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவர். போன்றவர். புற்றரவல்குல் என்றால் ஊருக்குள் இருக்கும் பாம்பு போன்ற பரம ஏகாந்தி. தன் பெருமையை மறைத்துக் கொள்பவர். அதே சமயம் முகில் வண்ணனாகிய உன்னைக் கண்டபோது மேகத்தைக்கண்ட மயில்போல் ஆனந்தம் அடைபவர். “

“அப்படிப்பட்டவர் உன்னுடைய செல்வப்பெண்டாட்டி போன்றவர். உன்னையே நினைந்து சிற்றாதே , அசைவின்றி, பேசாதே , பேச்சின்றி, எற்றுக்கு உறங்கும், , உறங்குவது போல் உன்னில் ஆழ்ந்திருப்பர். “ என்றாள் கோதை.

“ அப்படியானால் முதல் இரு வரிகளின் பொருள் என்ன” என்றான் , கோவிந்தன்.

ஆண்டாள் கூறினாள்.

“கற்றுக் கறவைகணங்கள் என்பது வேதம் உபநிஷத் எல்லாம்.அதை கறந்து பாலை எல்லோருக்கும் கீதை மூலம் வாரி வழங்கியவன் நீ. ‘ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன: ,’ என்று சொல்வர் பெரியோர், உபநிஷத் என்ற பசுக்களிடம் இருந்து பாலைக் கரந்தவன் , என்று உன்னை.”

செற்றார் திறல் அழிய சென்று செருச்செய்பவனும் நீயே . பக்தர்களுக்கு ஓர் இடையூறு செய்பவர்களை உடனே சென்று அழிக்கவில்லையா.? கஜேந்திரனுக்கு ஓடி வந்து அபயம் அளித்தாய். பாண்டவர்களுக்கு கெடுதலே செய்துவந்த கௌரவர்களை குருக்ஷேத்ரம் சென்று அழித்தாய்.. ஆகவே குற்றம் ஒன்றில்லாத கோவலன் உனக்கு செல்வப் பெண்டாட்டி போல உள்ள பக்தர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்? “ என்றாள்.

“ என்னைசரண் அடைந்தவர்களைக் காப்பது என் கடன்.” என்றான் கோவிந்தன்.

—————-

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

“கும்பகர்ணன் வதத்திற்குப் பிறகு இப்போது ராவண வதமா? நான் இன்னும் ராமனாகவே காத்துக்கொண்டிருக்கிறேன் என்றான் கண்ணன்.”’

“ சினந்திங்கு தென்னிலங்கைக் கோமானைச் செற்ற , என்ற வரியின் பொருள் ராவண வதம் மட்டும் அல்ல, “ என்ற கோதையை வியப்புடன் பார்த்து நின்றவனிடம் அவள் கூறினாள்.

‘நோற்றுச்சுவர்க்கம் ‘ என்ற பாசுரத்தில் ‘சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலன் ‘ என்று உன்னைக் குறிப்பிட்டதன் பொருள், நீ எப்போதும் மக்களை விட்டு விலகிச் சென்றுதான் போர் புரிவாய். மதுரை மக்களுக்கு இடையூறு நேராத வண்ணம் ஜராசந்தனை வெளியிலே சந்தித்து அவனை நீ ஓடுவதாக ஏமாற்றி த்வாரகைக்கு மக்களையும் அழைத்துச் சென்று விட்டாய். மஹாபாரதப போரும் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தூரத்தில் குருக்ஷேத்ரத்தில்தான் நடந்தது. ராமாவதாரத்திலும் இலங்கைக்கு வெளியேதான் போர் புரிந்தாய் “ என்ற கோதையைப் பார்த்து, இலங்கையை நான் ஏற்கெனவே விபீஷணனுக்குக் கொடுத்துவிட்டேனே, அதைக் காப்பாற்ற வேண்டாமா என்றான் கண்ணன்.

“அதனால்தான் சினந்து இங்கு தென்னிலங்கைக் கோமானை செற்ற , இலங்கை அரசனைத்தான் அழித்தாயே தவிர இலங்கையை அல்ல , என்ற பொருளில் கூறினேன்.” என்றாள்.

மேலும் கோதை கூறினாள். அதிருக்கட்டும். ராவணனேயானாலும் சரண் அடைந்தவனைக் காப்பேன் என்றாயே, இலங்கையை விபீஷணனுக்கு கொடுத்த பின்பு ராவணன் சரண் அடைந்தால் நீ கொடுத்த வாக்கு என்ன ஆவது?” என்றாள் .

“உன்னையே இழந்தாலும் லக்ஷ்மணனையே இழந்தாலும் கொடுத்த் வாக்கைக் காப்பேன் , என்று நான் சீதையிடம் கூறியதை வைத்துக்கொண்டு என்னை மடக்குகிறாயாக்கும். ராவண யுத்தத்தின்போது என் பதினான்கு வருட வனவாசம் முடியும் தருணம் அல்லவா? அப்போது அயோத்தி என் வசம்தானே? அதை கொடுத்திருப்பேன், என்று சொன்னதும் கோதை, “அய்யய்யோ” என்றாள்.

“பயப்படாதே . அது என் சரணாகதரக்ஷகன் என்ற பெயரை நிலை நாட்டவே. ராவணன் சரணடைய மாட்டான் என்பது எனக்கு மட்டும் தெரிந்த தேவ ரகசியம். அதனால்தான் விபீஷணனுக்கு ‘இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்ஜியம்’ என்று கொடுத்தேன்.” என்றான் கண்ணன்.

“ நீ ராமன் வேடத்தில் இருந்தாலும் மாயக் கண்ணன்தான் என்பதை நிரூபித்துவிட்டாய்,” என்ற கோதை,

“அதனால்தான் உன்னை மனத்துக்கினியான் என்று குறிப்பிட்டேன். உன்னை வால்மீகி ‘ஸோமவத் பிரியதர்சன: ‘, உன் தரிசனம் சந்திரனைக் கண்டது போல் ஆனந்தம் அளிக்கிறது என்று கூறினார்.

எருமை தன் கன்றை நினைத்த மாத்திரத்தில் கனைத்து முலைவழியே பால் சோர நிற்பது போல நீ எங்களை நினைத்து உன் அருளாகிய பாலை சொரிந்துகொண்டே இருக்கிறாய், “ என்ற கோதையைப் பார்த்து, “ ஆம் பசுவுக்கு கன்றைப் பார்த்தால்தான் பால் சுரக்கும். பசுக்களைக் கற்க நேரம் ஆனால் அதற்குள் எருமைகள் கன்றை நினைத்து பால் சுரக்கும்,” என்ற கண்ணன் குறும்புடன் கூறினான்.

“ நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் ஆக இருந்த நான் இப்போது எருமை ஆகிவிட்டேனே.”

கோதை அவனுக்கு சளைத்தவளா? “ நீ மட்டும் அல்ல , உன் துணைவியும் கூட.” என்றாள்.

“அப்படியானால் சரி. ஒரு மகிஷத்தின் துணைவியும் மகிஷியாக இருப்பதுதானே நியாயம் “ என்றான் கண்ணன்.

‘ந கச்சித் நாபராத்யதி,’ யார்தான் தவரிழைக்கவில்லை என்று கூறிய சீதா பிராட்டி தன் கன்றை நினைத்துக் கருணைப்பால் சொரியும் மகிஷி , பெண் எருமை போல.அதோடு மட்டும் அல்ல . அவள் உனக்கே கருணையை உபதேசித்தவள், ராவணனுக்கும் ஹிதோபதேசம் செய்தவள்.

நற்செல்வன் தங்காய் என்ற சொல்லும் ஸ்ரீதேவியையே குறிக்கும். தங்காய் என்றது அவள் பொன் வண்ண உருவம். அவள் நற்செல்வனாகிய உனக்கே உரியவள் அல்லவா? செல்வத்திருமகளை அடைந்ததால் நீயும் நற்செல்வன் ஆகிறாய். “ என்ற ஆண்டாளைப் பார்த்து,

“அவளைப் போலவே பூதேவியான உன்னையும் ஆடைந்ததுதான் என்னுடைய பெரும் செல்வம். அவளைப்போலவே நீயும் உன் குழந்தைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு என்னிடம் அவர்களுக்கு அருளும்படி யாசிக்கிறாய் அல்லவா? அதற்காகத்தானே இங்கு அவர்களை நல்வழிப் படுத்த ஆண்டாளாகவும் வந்திருக்கிறாய். “ என்ற கண்ணன் ,

“எனக்கு இந்தப்பாசுரத்தில் ‘அனைத்தில்லம் சேறாக்கும்’, ‘பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி ‘ என்ற வர்ணனை பிடித்திருக்கிறது. இதற்கும் எதாவது விசேஷ விளக்கம் சொல்லப்போகிறாயா” என்றான்.

“ஆம். தலைக்குமேல் நீர்வண்ணம் , அதாவது நீ, கீழே பால்வண்ணம் பாலாக ஓடும் எங்கள் பக்தி, உன்னையே நினைந்து மால்வண்ணம் கொண்ட நாங்கள் அன்பு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் நாங்கள் வந்த காரியத்தை மறந்து விடாமல் இருக்க இந்த உடல் உணர்வு என்ற வாசற்படியை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதாகிறது.

பேருறக்கம் என்பது பகவத் சிந்தனை இன்றி இத்தனை ஜன்மம் கழித்தோமே அதுதான். .” என்றாள்.

————–

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

“இந்தப் பாசுரத்தில் என்னுடைய எந்த ரூபத்தை வர்ணிக்கிறாய் என்று தெரியவில்லையே ? கிருஷ்ணனாகவா, ராமனாகவா அல்லது நரசிம்ஹனாகவா?” என்றான் எல்லாம் அறிந்தவன் ஒன்றும் அறியாதவன் போல்.

ஆண்டாள் கூறினாள். “ என் வாக்கிலிருந்து வரும் எல்லா சொற்களுமே உன் சங்கல்பத்தினால் வருவது. உனக்குத் தெரியாதாக்கும். என் வாயிலாகக் கேட்கவேண்டும் என்பது உன் விருப்பம். சொல்கிறேன்.

“ உண்மையில் மூன்று அவதாரங்களையும் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்பதைப் பிரித்து அர்த்தம் கொண்டால்,புள்ளின் வாய் கீண்டான் என்பது நீ கிருஷ்ணனாக நாரை வடிவில் வந்த பகாசுரனைக் கொன்றது. பொல்லா அரக்கன் என்பது ராவணனையும் குறிக்கும் ஆதலால் அது உன் ராமாவதாரத்தையும் சொன்னதாக ஆகிறது. கிள்ளிக்களைநதானை என்பது உன் நரசிம்ஹாவதாரத்தைக் குறிக்கும் , இரணியனை நகத்தால் கிள்ளி அழித்ததால். பிரிக்காமல் ஒரே தொடராகக் கொண்டால், புள்ளின்வாய் கீண்டான், அதாவது ஜடாயுவைக் கொன்ற பொல்லா அரக்கன் ராவணனைக் கிள்ளிக் களைந்தானை, அதாவது ராமனை என்று பொருள்கொள்ளலாம்.”

“பிரமாதம்” என்ற கண்ணன் , “ஆனால் ஒரு சின்ன சந்தேகம். அரக்கன் என்றால் ராக்ஷசன். ஹிரண்ய கசிபு அசுரன் அல்லவா , சுரர்களின் அதாவது தேவர்களின் மாற்றாந்தாய் மக்கள்,” என்ற கண்ணனைப் பார்த்து, “ராமன் என்றதும் கம்ப ராமாயணம் நினைவுக்கு வந்துவிட்டதாக்கும்.. அதையும் என் வாயால் கேட்கவேண்டுமாக்கும் . .கம்ப ராமாயண அரங்கேற்றத்தில் திருவரங்கத்தில் இரணியவதைப் படலத்தின் போது நரசிங்கமாக ஆர்ப்பரித்ததை நானும் கேட்டேனே, “ என்ற ஆண்டாள் கூறினாள்.

“ கம்பன் சொற்படி, “இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார், அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்.” இந்த முறையில் இரணியனும் அரக்கன் ஆகிறான். பெற்ற பிள்ளை என்று கூடப பாராமல் ப்ரஹ்லாதனைக் கொல்ல முயற்சித்தான் அல்லவா?”

“அருமையாகச் சொன்னாய் “ என்றான் கண்ணன்.

“கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் , எல்லாப்பெண்களும் உன் புகழ் பாடிக்கொண்டு பாவை நோன்புக்காக வந்து விட்டார்கள். வர மனமிருந்தாலும் எழுந்திருக்க மனமில்லாமல் பள்ளிகொண்டு இருப்பவளைப பற்றிய பாட்டு இது. ‘. போதரிக்கண்ணினாய் என்பது தாமரைக்கண் என்ற பொருளில் சொல்லப்பட்டாலும், அரி அல்லது மனம் என்ற வண்டு, போது அல்லது இந்த்ரியங்களாகிய மலருக்குள் சிறைப்பட்டுக்கிடக்கின்றது. . அதனால் கள்ளம் தவிர்ந்து , கள்ளத்தூக்கத்தை விட்டு வந்து கலந்து கொள் என்று பொருள்,” என்ற ஆண்டாளைப்பார்த்து ,

“அழகான விளக்கம் “ என்ற கண்ணன் கேட்டான், “ஆமாம் நீராடுவது சரி. அதென்ன குள்ளக்குளிர குடைந்து நீராட்டம்? “

ஆண்டாள் கூறினாள், “ நீராட்டம் என்பது உன்னை நினைப்பது. குடைந்து நீராடுவது, உன்னை அர்ச்சாவதாரமாக வழிபடுவது., குளிர நீராட்டம் உன் அவதார ரூபத்தை வழிபடுவது. குள்ளக் குளிர நீராடுவது உன்னை வைகுண்டத்தில் தரிசிப்பது. முதல் இரண்டும் மூன்றாவதற்கு வழி வகுக்கும்,.”

“ ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய் “ என்றான் கண்ணன்.

——————-

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

“சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று என்னை நாராயணனாகக் காண்கிறாய் அல்லவா இப்போது?” என்றான் கண்ணன்.

“இல்லை , இன்னும் உன்னை கண்ணனாகவே காண்கிறேன். நீ கண்ணனாக அவதாரம் செய்தபோது உன் பெற்றோருக்கு இப்படித்தானே தோன்றினாய்? மேலும் உன்னை பங்கயக்கண்ணன் என்றேனே, எந்த அவதாரம் எடுத்தாலும் நீ உன் தாமரைக் கண்களைக் கொண்டு உன்னை அறிந்துகொள்வோம். ஏனமாய் வந்தாலும் சீயமாய் வந்தாலும் உன் கமலக்கண் உன்னைக் காட்டிக்கொடுக்குமே. “ என்றாள் ஆண்டாள்.

“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும்.செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் குவிந்தது என்றால் சூரிய உதயம் ஆகிவிட்டது என்று பொருள் அல்லவா? செங்கழுநீர் மலர்வதை வாய் நெகிழ்ந்து என்று கூறினதன் பொருள்? என்ற கண்ணனுக்கு கோதை மறுமொழி கூறினாள்.

“ஏனென்றால் அது வாய் திறந்து சிரிப்பது போல் உள்ளது சூரிய உதயத்தினால் அல்ல. உன் கோவில் திறப்பதை உணர்த்தும் சங்கொலி கேட்டு, உன்னை தான் அலங்கரிக்கப் போவதை உணர்ந்த மகிழ்ச்சியால். அதே காரணத்தால் ஆம்பல் வாய் கூம்பி வருத்தத்தை தெரிவிக்கிறது.”

“செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் என்பது எனக்கு திருப்பாவை ஜீயரான ராமானுஜரை நினைவுபடுத்துகிறது. திருவரங்கத்தில் செங்கல் வண்ண வஸ்திரம் அணிந்து முதலில் தரிசனத்திற்கு வரும் அவரை மனக்கண்முன் காண்கிறேன். “ என்றான் கண்ணன்.

“நினைவுக்கு வருகிறதா? உன் அடியாரை நீ மறந்தால் அல்லவா நினைவுக்கு வருவதற்கு ?” என்றாள் ஆண்டாள்.

“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும், செங்கழுநீர் மலர்கள் எங்கும் மலர்ந்திருக்க ‘உங்கள் புழக்கடை தோட்டத்து வாவி என்று சொல்லகாரணம்?” என்றான் கண்ணன் அவள் வாய்மூலம் தத்துவ விளக்கம் வேண்டி,.

“ மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதுதான் பொருள். ஆனால் உங்கள் புழக்கடை என்றால் அது சம்சாரம்.அதில் உள்ள தோட்டம் சரீரம். செங்கழுநீர் என்பது ஆத்மகுணங்களான அஹிம்சை, இந்திரிய நிக்ரஹம், ஜீவ காருண்யம், பொறுமை, ஞானம், தவம், தியானம் , சத்யம் இவையாகும். அவை உன் நினைவு என்ற சூரியன் உதிக்கும் போது மனதில் மலர்கின்றன. காமக்ரோதம் முதலிய ஆம்பல்கள் கூம்பி விடுகின்றன.”

“நாணாதாய் என்றால் நாமசங்கீர்த்தனம் செய்ய தயக்கம் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. உன் நாமம் சொல்பவர்தான் நாவுடையவர்கள் . மற்றவர்களின் நாவு உண்பதற்கு மட்டுமே. பிற விஷயங்களைப் பற்றி பேசும் நாவு ஒரு வேண்டாத உபயோகமற்ற அங்கம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்.‘கோதை, நீ மக்களை நல்வழிப்படுத்த படாத படுகிறாய். . ஆனால் எவ்வளவு தூரம் அது பலனைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். ஏனென்றால் ‘இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரஸபம் மன’: , இந்த்ரியங்கள் பலம் வாய்ந்தவை மனத்தை பலவந்தமாக இழுத்து விடுகின்றன, என்று நான் அன்று அர்ஜுனனுக்கு சொன்னது போல மனித மனம் சஞ்சலிக்கும் சுபாவம் கொண்டது. அதை அடக்குவது மிகவும் கடினம்.” என்றான்.

அதற்கு கோதை, அப்படிச் சொன்ன நீயே ‘ அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன ச கிருஹ்யதே ‘ என்றுஅதற்கு ஒரு வழியும் கூறினாய் அல்லவா? அதனால் நான் அப்யாஸம், அதாவது முயற்சி, வைராக்கியம், பற்றை விடுவது ஆகிய வழிமுறைகளை உபதேசிக்க முயலுகிறேன். ஒரு சிறு சதவிகிதம் மக்கள் இதைப பின்பற்றினாலும் என் முயற்சி வெற்றி பெற்றதாகக் கருதுவேன்” என்றாள் நம்மை எல்லாம் உய்விக்க வந்த பூமி பிராட்டியான கோதை.

‘எந்த உருவில் நீ வந்தாலும் உன் கமலக்கண் உன்னை காட்டிக் கொடுக்கும்” என்ற கோதையின் வார்த்தைகளை மனதில் கொண்டு எழுந்த பாடல்: ஒரு பக்தன் பகவானை நோக்கிப் பாடும் வகையில் அமைந்தது.

மாயம் எத்தனை செய்தாலென்ன உன் ஜாலம் நானறிவேன்

மறைபொருளாய் நின்று (மாயம் )

சீயமாய் வந்தாலும் ஏனமாய் வந்தாலும் உன்

கமலநயனம் உன்னைக் காட்டிகொடுத்ததே ( மாயம்)

வாமனனாய் வந்து மூவுலகளந்தாய்

வாய் திற என்ற தாய்க்கு புவனம் காட்டினாய்

ஆமையாய் வந்து மலை தாங்கி அமுதம் தந்த

நாடகத்தின் ஊடே நாரணன் உனை அறிந்தேன் ( மாயம்)

——————–

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

“இது ஒரு புதுமாதிரியாகக் காணப்படுகிறது. வாய்ச்சொல்லில் உனக்கு இணையான பெண்ணாக இருக்கிறாள்.” என்றான் கண்ணன்.

“ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. எல்லே இளம்கிளியே என்றது எல்லோரையும் விட வயதில் குறைந்தவள் என்ற அர்த்தத்தில் இருந்தாலும் உலகப்பற்று என்ற தங்கக் கூண்டில் உள்ள கிளியைப்போல் பகவத் தியானம் இல்லாமல் இருப்பது உறங்குவதுபோல. பால அல்லது இளம் வயதினர் என்ற சொல் வடமொழியில் ‘ஒன்றும் அறியாத’ என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது அல்லவா?”

“அறியாமை என்ற உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் அதிலிருந்து எழுந்திருக்க விரும்புவதில்லை. இன்னம் உறங்குதியோ, என்று எழுப்ப முயற்சி செய்பவர்களையும் நிந்திக்கிறார்கள்..”

:” சில்லென்றழைக்காதீர் , நானே வருவேன் உரிய காலத்தில் என்று சொல்கிறார்கள். “ என்ற ஆண்டாளிடம்

“உரிய காலம் என்றால் ? என்றான் கண்ணன்..

கோதை கூறினாள்.”உரிய காலம் என்றால் இந்த உலக இன்பத்தை அனுபவித்து முடித்த பிறகு என்று அர்த்தம் .”

“அது எப்போது வரும்? அது யயாதிக்கு வரவே இல்லையே .” என்றான் கண்ணன்.

“ இது சங்கரரின் வாக்கை நினைவூட்டுகிறது,

பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: , குழந்தைப் பருவத்தில் விளயாட்டில் நாட்டம், தருணஸ்தாவத் தருணீஸக்த:, யுவனாக இருக்கையில் பெண்கள் மீது நாட்டம். வ்ருத்தஸ் தாவத் சிந்தா ஸக்த: முதுமையில் தான் அனுபவித்த இப்போது அனுபவிக்க முடியாததை எண்ணி கவலை. ஆனால் எந்த வயதிலும் பகவத் ஸ்மரணம் வருவதில்லை என்று கூறி ‘பஜகோவிந்தம்’ என்றாரே? “

“ஆனால் நீ இந்த மக்களை பகவ்த்பக்தியில் ஈடுபடுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாய். அதைத்தான் வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் என்றாய் அல்லவா? “ என்றான் கண்ணன்.

“ஆம். உன்னை அடைய விருப்பம் இல்லாதவர் ஆயிரம் வாதங்கள் செய்வார். வல்லீர்கள் நீங்களே , நீங்கள்தான் விதண்டா வாதம் செய்கிறீர்கள் என்று நம்மையே குற்றம் சாட்டுவார்’ பிறகு கொஞ்சம் அறிவு வந்த பின் , சரி சரி என் மேல் தான் தவறு என்று கூறி அப்போதும் வரமாட்டார். நாள் கடத்துவார். “ அதைத்தான் ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை என்றேன்.”

“ வேறுடையை என்றால் தன்னை தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று தானே பொருள்? என்றான் கண்ணன்.

“ஆம் ஆனால் உன்னை நினைக்கவும் உன்னைப் பாடவும் எதற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். நான் இன்னும் அந்த நிலைக்கு தயாராகவில்லை என்று ஒருவர் சொன்னால் அது அவர் எந்த நிலையிலும் தயாராக மாட்டார் என்று அர்த்தம்.”

“எப்போது உலகப்பற்று விடும்? நாம்தான் அதை விட வேண்டும்.. கடைசியாக எல்லோரும் போந்தாரோ என்று எல்லோருமா பகவத்த்யானத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு போந்தார் போந்தெண்ணிகொள் என்ற பதில் ஒருவர் பகவத் தியானத்தில் ஈடுபட்டுவிட்டால் பக்தர்களைத்தவ்ற வேறு யாரையும் காண மாட்டார்கள் என்பது. “என்ற ஆண்டாளைப் பார்த்து,

“வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க என்றது கஜேந்த்ரனைப் பற்றிய மேற்கோள்தானே ?’என்றான் கண்ணன்.

“வல்லானையாவது குவலயாபீடம் . அதைக் கொன்றவன் நீ. அதற்கு மாற்றாக இருந்த இன்னொரு யானை கஜேந்திரன். அதற்கு மாற்று எதிரியாக வந்த முதலையை அழித்தவன் என்று பொருள் கொள்ளலாம்—- “என்று இன்னும் ஏதோ சொல்ல வருபவள் போல இருக்கும் கோதையைப் பார்த்து கண்ணன்,

“ம்ம் சொல்லு என்றான்.”

“மாறனை மாற்று அழிக்க வல்லான் என்பதற்கு இன்னொரு பொருள் நீ மாற்றான் அதாவது விரோதியை அழிக்காமல் அவனுடைய மாற்று , விரோதத்தை மட்டும் அழிக்க முயல்பவன் என்பது.”

“ அப்படியா ?” என்றான் அந்த மாயன் அவள் வாயிலிருந்தே அதைக் குறித்து கேட்கும் ஆவலில்.

ஆண்டாள் கூறினாள்.

“ ஆம். நீ அவ்வாறு பல சமயங்களில் செய்து இருக்கிறாயே. இரணியனுக்கு கடைசி வரை திருந்த வாய்ப்புக் கொடுத்தாய். ராவணனுக்கு ‘இன்று போய் நாளை வா என்றாய். மகாபலியின் கருவத்தை மாத்திரம் அழித்தாய். இந்திரன் பிரமன் இவர்களின் அகந்தையையும் அழித்தாய்..

அதனால் நீ வல்லான் , எல்லா விரோதிகளையும் அழிக்க வல்லவன் ஆயினும் அவர்களுக்கு கடைசி வரை கருணை காட்டுபவன். ஆனால் மாயன் , மாயைதனை படைப்பாய் மாயையும் துடைப்பாய். “

கண்ணன் கூறினான். “ இப்போது என் மாளிகை வரை வந்தாகிவிட்டது இனிமேல் நேருக்கு நேர் கலந்துரையாடல் தான்”

அதற்கு ஆண்டாள் கூறினாள். “ நீ மாயன் என்பதை இது மூலமே நிரூபித்து விட்டாய். நேருக்கு நேர் உரையாடலா? நான் தானே பேசிக்கொண்டிருந்தேன். நீ எங்கே மறுமொழி கூறினாய் ? “ என்றாள்

“அதற்குத்தான் இப்போது வந்திருக்கிறேனே ,” என்று நகைத்தான் கண்ணன்

————-

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

“ இப்போது என் மாளிகை வாயில் காப்பானை கதவைத் திறக்குமாறு வேண்டிக்கொள்கிறாயாக்கும் “ என்றான் கண்ணன்.

அதற்கு கோதை விடையளித்தாள். “ துவாரகையில் உன் மாளிகைக் கதவுகள் திறந்தே இருக்கும். உன்னைப் பார்க்க வந்த குசேலர் நேராக உள்ளே வந்தாரே . ஆனால் ஆயர்பாடியில் நீ செல்லப் பிள்ளை அல்லவா அதனால் உன் பெற்றோர் கதவை மூடியே வைத்திருப்பார்கள். அதனால் வாயில்காப்போனை வேண்டவேண்டியதாயிற்று. “

“ உன் வாயில் காப்போன் கோயில் காப்போனாகவும் இருப்பதால் இலகுவில் எங்களை அனுமதிக்கவில்லை . அவனை நாயகனாய் நின்றவனே. கொடி பறக்கும் தோரண வாயில் காப்பவனே என்று முகஸ்துதி பண்ண வேண்டியதாயிற்று . “

“ த்வார பாலகர்களை திருப்தி செய்துதானே எல்லா இடங்களுக்குள்ளும் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் உன் த்வார பாலகர்கள் உன் பாகவதோத்தமர்கள். அதனால் அவர்கள் முதலில் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள். “ என்றாள் ஆண்டாள்.

“பிறகு என்ன சொல்லி உள்ளே வந்தீர்கள் ? “ என்றான் கண்ணன்.

“ நாங்கள் ஆயர் சிறுமியர் . எங்களால் ஒன்றும் ஆபத்தில்லை .தூயோமாய் வந்தோம் கண்ணன் துயில் எழப் பாடுவதற்கு என்று கூறினோம். “

“அப்போதும் உங்களை அவன் அனுமதிக்கவில்லை அல்லவா? “ என்ற கண்ணனிடம் ,

“நீதான் மாயன் மணிவண்ணன் ஆயிற்றே, உன் திருவுள்ளம் இன்றி எது நடக்கும்? ஆனாலும் வைகுண்டத்தில் உன் தவார பாலகர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தோ என்னவோ கதவைத் திறந்துவிட்டான். ஆனாலும் கொஞ்சம் அழ வைத்தான். அதனால் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா என்று அவனைக் கெஞ்ச வேண்டியதாயிற்று. பின்னர் கண்ணன் எங்களுக்கு நென்னலே வாய் நேர்ந்தான், முன்னமே அனுமதி அளித்துள்ளான் என்ற பிறகுதான் அந்த நேய நிலைக்கதவம் திறந்தது.”

“ நான் எப்போது அனுமதி அளித்தேன் ?” என்றவனிடம்,

“ என்னை நாடி வந்தவரை நான் கைவிட மாட்டேன் என்று கீதையில் கூறினாய், ராமனாக செய்து காண்பித்தாய். அதனால் இப்போது கிருஷ்ணனான உன்னை சரணமடைந்தோம். என்றாள் ஆண்டாள்,

“இவ்வளவுதானா இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா?” என்றான் கண்ணன்.

அதற்கு ஆண்டாள் கூறினாள்,

“இந்த பாசுரம் ரஹஸ்ய த்ரயம் என்று சொல்லப்படும் மூன்று மந்திரங்களையும் குறிப்பிடுகிறது. முதல் இரண்டு வரிகள் மூல மந்திரமான் ஓம் நமோ நாராயணாய என்பதைக் குறிக்கும்.

நாயகனாய் என்றது உலகநாயகனாகிய உன்னை.நந்த கோபன் என்பது ஆனந்தத்தை கொடுப்பதனாலும் , கோபன் அதாவது ரக்ஷிப்பவனாக இருப்பதாலும்.கோயில் என்றது ப்ரணவம். ஆனந்தம் ப்ரபத்தியின் மூலமாகவே கிடைப்பதால் நம என்ற சப்தமும் இதில் அடங்கி விட்டது.

கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே என்றது த்வய மந்திரத்தை சுட்டுகிறது. கொடித்தோன்றும் தோரணவாயில் என்பது வைகுண்டத்தில் நீ திருமகளுடன் தோன்றுவது. காப்பான் என்பது சரணமடைந்தவர்களை நீ காப்பதைக் குறிக்கிறது.

ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது சரமச்லோகம். அதாவது ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று சரணம் அடைய பக்தி ஒன்றே போதும் குலமோ கல்வியோ ஒரு பொருட்டில்லை என்பதைக் காட்டுகிறது.

நேய நிலைக் கதவம் என்பது, மூன்று மந்திரங்களிலும் உள்ள இரு பாகங்கள். ஓம்,மற்றும் நமோ நாராயணாய, த்வயத்தின் இரு பாகங்கள் சரமஸ்லோக்த்தின் இரு வரிகள்.

இந்தக் கதவுகள் திறக்க வேண்டுமானால் வாயில் காப்போனாகிய ஆசார்யன் கிருபை வேண்டும்.” என்ற ஆண்டாளை கைகொட்டிப் பாராட்டினான் கண்ணன்.

———

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

“ரொம்ப சாமர்த்தியம்தான் ,”.

“முதலில் உன் மாமனார் மாமியாரை வேண்டிக்கொண்டு அப்புறம் என்னிடம் வருவதைச் சொன்னேன்.” என்றான் கண்ணன்

கோதை கூறினாள் “ நான் உன் பள்ளியறையில் முதலில் உன் பெற்றோரைத்த் தான் கண்டேன். உடனே உன் தந்தையின் தாராள குணம் நினைவுக்கு வந்தது. அவர் அம்பரம் , தண்ணீர் , சோறு, அதாவது உடுக்க உடை, பருக நீர், உண்ண உணவு, வாரி வாரித்தந்தவர் ஆயிற்றே. அதனால்தானே வேதாந்த தேசிகர் , யாதவாப்யுதயம் என்னும் காவியத்தில், நீ பிறந்தவுடன் நந்தகோபர் கொடையில் கல்பதருவையும் மிஞ்சிவிட்டார் என்றார். ?” என்றாள் ஆண்டாள்.

“ ஆம். யாதவாப்யுதயம் என் சரிதத்தை மிகவும் அழகாகக் கூறுகிறது. தேசிகரின் அறிவார்ந்த புலமைக்கு ஈடு இணை உண்டோ?”

“அடுத்தது உன் அன்னையைக் கண்டேன். கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்றதன் மூலம் அவளுடைய கொடிபோன்ற மேனி படைத்த எல்லா மாதரிலும் சிறந்தவள் என்றேன். மேலும் அவள் யாதவகுல விளக்குஅல்லவா. “

“உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று நாங்கள் உணர உன்னை எங்களுக்கு அளித்தனால் நந்தகோபர் எம்பெருமான் ஆகிறார்,. யசோதை எம்பெருமாட்டி. மேலும் யச: என்றால் பிரம்மம் என்கிறது வேதம் அந்த பிரம்மத்தை ஒரு குழந்தையாக உலகுக்கு தந்தவள் , யச: ததாதி இதி யசோதா.” என்ற ஆண்டாளிடம் கண்ணன் கேட்டான்.

“அத்புதமான விளக்கம் . அது சரி. நீ படுத்திருக்கும் வரிசைக்க்ரமத்தில் எழுப்பி வந்தவள் எனக்கு முன்னாள் படுத்திருந்த அண்ணனை விட்டுவிட்டு என்னை முதலில் எழுப்பக் காரணம் ?

“ ஆண்டாள் கூறினாள். “ அதுவா, பலராமன் காலில் இருந்த செம்பொற் கழலைப்பார்த்து நீ என்று நினைத்தேன் . அதனால் உன்னை முதலில் எழுப்ப முயற்சித்தேன். பிறகுதான் உண்மை தெரிந்தது அதனால் அவனை மகிழ்விக்க உம்பியும் நீயும் உறங்கேலாரெம்பாவாய் என்றேன். , உன் சயனமாகிய ஆதிசேஷன் ஆயிற்றே, அவன் எழுந்தால் நீ எழுந்துதானே ஆகவேண்டும்?”

“ நல்ல சாதுர்யம் “ என்ற கண்ணன் “அன்னை அருகில் இங்கு சாதுவாகப் படுத்து உறங்கும் என்னை உலகளந்தானாக பாவிக்க ஏதும் விசேஷ காரணம் உண்டோ” என்றான்.

“நல்ல சாதுப்பிள்ளை “ என்ற ஆண்டாள்,

‘அம்பரம் அதாவது ஆகாயத்தை ஊடறுத்து, பிளந்து ஓங்கி உலகளந்தவன் நீ. உனக்கு உறங்குவதற்கு ஏது இடம் என்று பொருள். “ என்றாள் கோதை.

“ எல்லோரையும் திருப்திப் படுத்தி விட்டாய்,” என்ற கண்ணனைப் பார்த்து கோதை கூறினாள்.

“ நாங்கள் எல்லோரிடமும் உன்னையே காண்கிறோம் அல்லவா? நந்த கோபாலன் என்றது உன்னைத்தான். நந்தம் அல்லது ஆனந்தம் என்பது நீதான், கோ அதாவது, பூமி, வாக்கு, ஆவினம், இந்த்ரியங்கள் முதலிய எல்லாவற்றிற்கும் பாலன், காப்பாற்றுகிறவன் நீதானே.” அம்பரம், வஸ்திரம் திரௌபதிக்குக் கொடுத்தாய் . பாரத யுத்தத்தில் தேரோட்டியாகி களைத்த குதிரைகளுக்கு உன் கையால் நீர் கொடுத்தாய்., சோறு அதாவது உணவு, வற்றின அக்ஷயபாத்திரத்தில் இருந்து துர்வாசர் முதலியோருக்கு உணவளித்தாய்.” என்றாள் கோதை. “ நன்று. நீ செம்பொற்கழல் என்று சொன்னது என் அண்ணனின் காலில் இருந்த வீரக்கழல்.,அவன் வீரச்செயல்களை அறிவாயல்லவா? அவமதித்த கௌரவருக்கு புத்தி புகட்ட தன கோடரியால் ஹஸ்தினாபுரத்தையே கங்கையில் தள்ளவில்லையா? ஒருசமயம் யமுனையை தான் இருக்கும் இடத்திற்கு இழுத்தானே.” என்றான் கண்ணன்.

“ அது மட்டுமா? ஆதிசேஷனான அவன் ஏழு குழந்தைகளை இழந்த பின்னர் உன் தாயான தேவகியின் கர்ப்பத்தில் புகுந்து சர்ப்ப தோஷ நிவாரணம் செய்பவன் போல அதை சுத்தமாக்கி உன் பிறப்புக்கு வழிவகுத்தவன் அல்லவா? “என்றாள் கோதை.

“ நீ சொல்வது உண்மை, சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் என்று எங்கும் என்னைத் தொடர்பவன் அல்லவா? “ என்றான் கண்ணன்.

“சேஷனாகியவனும், சேஷியாகிய நீயும் ஒன்றே. வால்மீகி ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனை ராமனாகிய உன் உடலுக்கு வெளியே உள்ள உயிர், பஹிர்கதபிராண: என்றல்லவா கூறுகிறார்?’ என்ற கோதையிடம் கண்ணன் கூறினான்.

“எம்பெருமான் நந்த கோபாலன் என்பது, எம்பெருமானார் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை நினைவூட்டுகிறது. எல்லோருக்கும் பக்தியை ஊட்டி ஆனந்தத்தை அளித்தததனால் அவரும் நந்த கோபாலனாகிறார். “ என்ற கண்ணிடம் ஆண்டாள் கூறினாள்.

“ உன் அருளால் வரும் எல்லா சொற்களும் எந்த காலத்திற்கும் ஓட்டிவரும் அல்லவா? அம்பரம் என்பது உன் அருள். தண்ணீர் அதனால் பெருகும் பக்தி. சோறு என்றால் பகவத்கைங்கர்யம். இது எல்லாம் ஆசார்யன் அருளால் வருவது.”

“மேலும் அவர் என் பிரியமான அண்ணன் ஆயிற்றே. நான் நேர்ந்து கொண்ட நூறு தடாவில் வெண்ணையும் அக்கறை வடிசிலும் திருமாலிருன்சொலையில் உள்ள உனக்குக் கொடுப்பேன் என்றதை நிறைவேற்றினவர் அல்லவா !” என்றாள் ஆண்டாள்.

“ஆம். அடுத்த பாசுரம் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்ட அவருக்கு உகந்ததாயிற்றே!” என்றான் கண்ணன்.

———–

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

“இந்தப்பாசுரத்தில் நீ நப்பின்னையை வந்து தாழ் திறக்கும்படி வேண்டுகிறாய். நப்பின்னை கிருஷ்ணாவதாரத்தில் என் தந்தையான நந்தகோபரின் மருமகள். அவள் நீளா தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். அதனால் நந்தகோபாலன் மருமகள் என்று நீ சொன்ன இரு அர்த்தத்திலும் சரியாகப் படுகிறது. “ என்றான் கண்ணன்.

“ நந்தகோபாலன் மருமகள் என்று நான் சொன்னது ஏனென்றால் ஒரு பெண்ணை விவாகம் ஆகுமுன் அவள் இன்னாரின் பெண் என்று சொல்வது போல விவாகம் ஆனதும் இன்னாரின் மருமகள் என்று சொல்வதுதானே சிறப்பு?.சீதை தன்னை ராவணனிடமும் அனுமனிடம் ‘ஸ்னுஷா தசரதஸ்யாஹம்,’ நான் தசரதருடைய மருமகள் என்றுதானே அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்?’

“அவள் மேலும் ‘ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹானாம் முக்யஸ்ய ‘ இந்த மண்ணுலகில் சிம்ஹம் போன்ற அரசர்களுக்குள் முக்கியமான தசரதர் ‘ என்று சொன்னது போல் நான் ‘உந்துமதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்றேன். மத்த கஜம் போல் வலிவுடையவன் அல்லது மத்தகஜம் போன்ற உன்னை உடையவன் , உனக்குத் தீங்கு இழைப்போரைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து நிற்பவன் என்ற அர்த்தத்தில்.”

“ ஆனால் உண்மையில் நாங்கள் புருஷகார பூதையான திருமகளை எழுப்புகிறோம். ஏனென்றால் நீ கண்ணனாக வந்தாலும் எங்களுக்கு.நாராயணன்தானே. அவள் உன் மார்பில் மருவைப் போல் இருப்பதால் மருமகள். நப்பின்னை என்ற சொல் நல்+ பின்னை, உன் அவதாரங்களில் உன்னைத் தொடர்ந்து வருபவள் என்ற பொருளில்.” என்றாள் ஆண்டாள்.

“ அப்படியானால் பந்தார் விரலி, கைகளில் பந்தை வைத்துக் கொண்டிருப்பவள் , உன் மைத்துனன் பேர் பாட, என்ற சொற்களுக்கு என்ன பொருள்? “ என்றான் கண்ணன்.

“எல்லா ஜீவர்களும் உங்கள் இருவருடைய லீலாவிநோதம் என்ற கைப்பந்து போலத்தானே. ஆனால் அந்த பந்து எப்போதும் திருமகளின் கைகளில்தான் முடிவில் இருக்கும். ஏனென்றால் உன் கருணையை எங்கள் மேல் வீசிக் காப்பது அவள் அல்லவா? “

“ மைத்துனன் என்பது மைதுனம், ஒன்றாக இணைவது, என்ற கருத்தில் ஸ்ரீதேவியின் இணையான உன்னைக் குறிப்பிடுவதாகும்.”

“கந்தம் கமழும் குழலி என்பது திருமகள் கேசத்தின் இயற்கை வாசம்,செந்தாமரைக்கையால் என்றது அவள்கையில் எப்போதும் உள்ள தாமரை.. ஆக, இது திருமகளைக் குறிக்கும் பாசுரம்.

“ நன்று. வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் ,’ என்ற வரிகளுக்கும் விளக்கம் தந்துவிடு,” என்றான் கண்ணன்.

கோதை கூறினாள், “நேரிடைப் பொருள் கோழிகள் கூவுவதும் குயில்கள் மாதவிக் கொடிகளில் கூவுவதும் தான் என்று இருந்தாலும், கோழி என்பது பகவ்த்பக்தி இல்லாதோர். குயில்கள் பக்தர்கள். எங்கும் காணப் படும் கோழியின் குரல் எப்போதும் உரக்க இருக்கும். குயில்களின் குரல் இனிமையானது. பக்தி இல்லாதவர்கள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். இதன் நடுவில் பக்தர்களின் இனிய நாமசங்கீர்த்தனம் கேட்பதில்லை. “

“உலகப்பற்றைக் குறிக்கும் விஷயங்கள் எங்கும் உள்ள கோழியின் கூவலைப் போல் நாடெங்கும் இறைந்து கிடக்கின்றன. பகவத்விஷயமான வாக்குகள் , குயில் கூவிவதைப் போல் இனிமையானவை. மாதவிப்பந்தல் என்பது திருமகளின் கேள்வனாகிய உன்னைக் குறிக்கும்.”

“கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்” என்றபடி,, உன் நிழலில் கவிதை என்னும் கிளையில் இருந்துகொண்டு வால்மீகி , வ்யாசர் போன்ற குயில்கள் மதுரமாக உன் பெருமையை இசைக்கின்றன. அவைகளை தேடிப் போகவேண்டும்.” என்றாள்.“

இந்தப் பாசுரம் இன்னொரு விதத்திலும் மேன்மை வாய்ந்தது. ராமானுஜர் உகந்த பாசுரம். திருப்பாவை சொல்லிக்கொண்டே பிக்ஷைக்குப் போகும்போது, அவர் குருவான பெரியநம்பியின் வீட்டு வாசலில் அவர் மகள் அத்துழாய் பிக்ஷைபோட வெளியில் வந்தாள். இந்தப பாசுரத்தில் லயித்த ராமானுஜர் அவளை ஸ்ரீதேவியாகவே கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.” என்ற கண்ணன் ,

“இன்னொரு சிறப்பையும் நான் இந்தப பாசுரத்தில் காண்கிறேன். இது பதினெட்டாவது பாசுரம் .” என்றான்.

கோதை கூறினாள், “ ஆம் திருமகளைப் பற்றிய இந்தப பாசுரம் அப்படி அமைந்தது எனக்கும் வியப்பைத் தருகிறது. ஏன் தெரியுமா?ஒன்று , எட்டு இவ்விரண்டின் கூட்டுத்தொகை ஒன்பது. அது ஒரு தெய்வீக எண். அதோடு எந்த எண்ணைக் கூட்டினாலும் கழித்தாலும் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும். அதுபோல ஸ்ரீதேவி என்றும் மாறாத கருணை உடையவள். மேலும், பதினெட்டு என்ற எண் உன்னோடு சம்பந்தப்பட்டது. நீ கூறிய பகவத் கீதை பதினெட்டு அத்தியாயம் கொண்டது, உன் மகிமையைக் கூறும் பகவத் புராணத்தில் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள். உன் கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நோக்கமான் பூபாரம் தீர்க்க நீ நடத்திய பாரத யுத்தமும் பதினெட்டு நாள் நடந்தது.” என்றாள் கோதை.

கண்ணன் கூறினான். “ கருணையில் இருந்து என்றும் மாறாதவள் என்று நீ கூறியதைக் கேட்கையில், எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருவரங்கத்தில் நான் மோகினி அலங்காரத்தில் இருக்கையில் திருமகளைப் போல் அழகாக இருக்கிறேனா என்று ஒரு பக்தரிடம் கேட்க அவர் ஆம் ஆனால் அவள் கண்களில் உள்ள கருணை என்னிடம் குறைகிறது என்றார்.”

ஆண்டாள் சிரித்து, “ அது உண்மைதான். நான் ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் பாடியும் நீ இரங்கவில்லையே?” என்றாள்.

“ அது உன் தீஞ்சுவைத் தமிழமுதம் பருகவே.” என்றான்.

ஆண்டாள் கூறினாள். “ அதனால் எவ்வளவு மன வேதனை அனுபவித்தேன் என்று உணர்வாயோ? “என்றாள்.

:”அது உன் பக்தியை உலகறியச் செய்வதற்கே ,” என்ற கண்ணன் “ நான் உன் உள்ளத்தில் எப்போதும் இருக்கிறேனே, என்னை எங்கு சென்று தேட வேண்டும். “ என்றான்.

————–

19. குத்து விளக்கெரிய

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

“பதினேழாவது பாசுரத்தில் உன்னை எழுப்ப முனைந்தோம். புருஷகார பூதையான தாயாரை முன்னிட்டுத்தான் உன்னை ஆராதிக்க வேண்டும் என்ற முறையில் போன பாசுரம் அமைந்தது. இது அவளையும் உன்னையும் சேர்த்துக் கூறுவது. அன்னை உன்னைக் கேட்காமலேயே கருணை காட்டும் இயல்புடையவள். ஆனால் தண்டிப்பது மட்டும் உன் ஆணையின்றி செய்ய மாட்டாள். “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் “அப்படியா?” என்றான்.

“ஆம் ஹனுமானுக்கு வாலில் நெருப்பு வைத்தபோது அது சுடாமலிருக்க ‘சீதோ பவ ஹநூமத: , குளிர்ந்திருப்பாயாக’ என்று அக்னிதேவனுக்கு ஆணையிட்டாள். ஹனுமனின் கோபத்தில் இருந்து ராக்ஷசிகளை ‘ ந கச்சித் ந அபராத்ய்தி?’ யார்தான் தவறு செய்யவில்லை? ‘ என்றுகூறிக் காப்பாற்றினாள். ஆனால் ‘ராமரின் ஆணையில்லாதனால் உன்னை விடுகிறேன் இல்லையென்றால் பஸ்மமாக்கிவிடுவேன்’ என்று ராவணனிடம்கூறினாளே.” என்றாள் கோதை.

“தியாகராஜரின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன.. மாஜானகி சட்டபெட்டகா என்ற க்ருதியில் சீதைக்கு ராவணனை அழிக்க எல்லா சக்தியும் இருந்தது. ஆனால் ‘ஸ்ரீநாயக யசமு நீகே கல்க,’ உன் புகழுக்கு மாசு ஏறபடக்கூடாது என்று அப்படிச் செய்யவில்லை என்கிறார்.”

“ ஏக லக்ஷ்யம்தயாயா:’என்று தேசிகர் ஸ்ரீ ஸ்திதியில் சொல்வது போல உங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் கருணை காட்டுவதுதானே,” என்றஆண்டாளிடம் கண்ணன் ,

“இப்போது பாசுரத்திற்குப் போவோம். கு’த்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா ‘ என்று அழகாக நான் சயனித்திருப்பதை வர்ணித்தாய் . அப்படிப்பட்ட நிலையில் ‘வாய் திறவாய்’ என்றால் என்னால் எப்படி முடியும்? “ என்றான் குறும்புப் புன்னகையுடன்.
“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காட்ட வேண்டாம். குத்துவிளக்கு எனப்படுவது ஞான தீபம்.உன் பஞ்ச சயனம் ஆதிசேஷன். பஞ்ச சயனம் என்றால் அதற்கு. மிருதுத் தன்மை , வெண்மை ,நல்ல வாசனை, குளிர்ந்து இருத்தல், அழகு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். இது ஆதிசேஷனுக்கு இருக்கிறது. “ என்ற ஆண்டாளைப் பார்த்து, கோகுலத்தில் நான் ஆதிசேஷனுக்கு எங்கே போவேன்?” என்றான் கண்ணன்.

“ இந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஒரு பிரபு எங்காவது போவதென்றால் அவன் மெத்தை முன்னால் அனுப்பப்படும். அது போல நீ வருமுன்பே ஆதிசேஷனை அனுப்பி விடுகிறாயே. அதனால் தானே விஸ்வாமித்ரர் காட்டில் தரையில் படுத்துறங்கும் உன்னை ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதாகக் கண்டார்?” என்றால் கோதை.

“ ஸ்ரீதேவியும் உன்னை விட்டு எங்கும் போவதில்லை. அதனால்தானே நீ ‘அகலகில்லேன் இறையும் என அலர்மேல் மங்கை உறை மார்பா ‘ என்று அழைக்கப் படுகிறாய். இதுதான் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்பதன் பொருள்.

“.சரி. அவளை எல்லையில்லாக் கருணை உடையவள் என்று சொல்லிவிட்டு இப்போது ‘மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,’ என்பது ஒட்டவில்லையே ? “ என்றான் கண்ணன்.

“ அவளுக்கு உன்னை எப்படி எப்போது எழுப்ப வேண்டும் என்று தெரியும் உன்னை உடனே எழுப்ப மாட்டாள். ஏனென்றால் அவசரமாக எழுந்தாயானால் எங்கள் குற்றங்கள் உன் கண்ணில் படும். நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்று பிறகு சொல்கிறேன்.”என்றாள் கோதை.

“ நான் உண்மையில் உறங்கவில்லை . உன்னுடைய தேனினும் இனிய சொற்களைக் கேட்கவே தாமதித்தேன்.” என்றான் கண்ணன்.

“எனக்குத் தெரியும் அதனால்தான் தத்துவம் அன்று. தகவேல் என்றேன்.

தத் கேட்டும் வாளாவிருபப்து த்வம் அன்று உன் ஸ்வபாவம் இல்லை. தகவேல்- இரங்க வேண்டும் என்று பொருள்.

மேலும் தத் த்வம்(அஸி), என்று உன்னோடு பிரிவில்லாமல் இருப்பது தகவு அல்லது உன் அருள் இன்றேல் சித்திக்காது. அதற்காகத்தான் பிராட்டியின் கருணை வேண்டும்.” என்றாள் ஆண்டாள்.

————

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

“போன பாசுரத்தைக் கேட்டும் நீ எழுந்திருக்க வில்லை. நப்பின்னை நங்காய் திருவே என்று நாங்கள் கூப்பிட்ட்தும் அவள் எழுந்து வந்து விட்டாள் ஆனால் அவளால் உன்னை எழுப்ப முடியவில்லை அல்லவா?> தூங்குகிறவனைத்தானே எழுப்ப முடியும்.” என்றாள் ஆண்டாள்.

“ அவள் உங்களுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்ட பின் நான் வேறு என்ன செய்வது. . எழுந்திருக்கத்தானே வேண்டும், என்ற கண்ணனிடம் ஆனால் நீ உடனே வந்தாயா? சாவகாசமாகத்தானே வந்தாய்?” என்றாள் ஆண்டாள்.

“அதனால்தானே இன்னும் சில பாசுரங்களைக் கேட்க முடிந்தது. இந்தப் பாசுரத்தில் ஒரே புகழ் மாலையாக இருக்கிறதே ? “ என்றான் கண்ணன்.

“ முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே என்று ஏன் கூறினேன் தெரியுமா? முப்பதுமுக்கோடி தேவர்களுக்கும் ஏதாவது ஆபத்து என்றால் அதை வருமுன்பே காப்பதில் நாட்டம் உடையவன் நீ. அதுமட்டுமா செப்பம் உடையாய் அதாவது நேர்மை உடையவன் , திறலுடையாய் , சாமர்த்தியம் உடையவன். “

“ ஏலாப் பொய்களுரைப்பான் என்று சொன்னதும் நீதானே இப்போது நேர்மையுடையவன் ஆகிவிட்டேனா? “ என்றான் கண்ணன்.

“நேர்மை அல்லது ஆர்ஜவம் என்பது சாமர்த்தியத்துடன் சேர்ந்து இருந்தால் தான் பலன். உன்னுடைய செய்கைகள் ஏமாற்றுவது போல் தெரிந்தாலும் அது நல்லவர்களைக் காக்கவே .பாரத யுத்தத்தின் போது அமாவாசையை ஒரு நாள் முன்பாக வரவழைத்தது போலும் ஜயத்ரதனை அழிக்க சூரியனை மறைத்தது போலும். அங்கு ஆர்ஜவம் பயன்படாது. கேடுதான் விளைவிக்கும்.”

“ மற்றும் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் என்றது, உன் அன்பர்களுக்கு தீங்கு விளைவிப்பவரைத் தீயாய் சுடுவாய் என்று பொருள்.”

“ அதெல்லாம் சரிதான் , அதென்ன உக்கம் தட்டொளி நீ கேட்டது? உக்கம் என்றால் விசிறி தட்டொளி என்றால் கண்ணாடி. இதனால் உனக்கு என்ன பயன்? “ என்றான் கண்ணன்.

. “ உக்கம், விசிறி என்பது தான் எனற மமதையை அகற்றுவது. தட்டொளியாவது ஆத்மஸ்வரூபத்தை கண்ணாடிபோல் காண்பிக்க.அதற்காக தாயாரின் அருளை வேண்டினேன். “ என்றாள் கோதை.

————

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

இன்னாரின் மைந்தன் என்று அபிவாதயே சொல்வது போல் என் தந்தை பெயரை முதலில் கூறிவிட்டாய்.” என்றான் கண்ணன்.

“ ஆம். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் ஆயிற்றே. கலங்கள் நிரம்பி வழிய மாற்றாதே பால் சொரியும் பசுவைப் போல நாங்கள் கேட்டதை விட மேலான பலனை அளிக்கும் வள்ளலாகிய உன்னைத்தந்தவன் அல்லவா?”

“நீ ஊற்றம் உடையாய் சர்வ சக்திமான், பெரியாய் , எங்கும் நிறைந்தவன், உலகெலாம் தோற்றமாய் நின்ற சுடர், உலகில் தோன்றுவது எல்லாம் நீயே. உன்னிடம் என்ன கேட்பது? நாங்கள் என்ன கேட்டாலும் அது ஒரு சக்ரவர்த்தியிடம் சில பொற்காசுகள் கேட்பது மாதிரி. “ என்ற ஆண்டாளிடம், நான்தான் எல்லாம் தரத் தயாராக உள்ளேனே .நீங்கள் கேட்பதை யார் தடுத்தார்கள்? “என்றான் கண்ணன்.

‘யாவானர்த்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே’ என்று நீ கீதையில் சொன்னபடி, எங்கும் ஜலம் நிறைந்தாலும் ஒரு கிணறு எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் அதில் நிற்கும். அதுபோல எங்கள் கர்மா அறிவை மறைக்கிறது. அதனால் நீ உன்னையே தரத் தயாராக இருந்தாலும் எங்கள் அறிவுக்கெட்டினவரை தான் உன்னைக் கேட்கத் தோன்றுகிறது. “

“அதனால் மாற்றார் , உன்னை எதிர்த்தோர் , வலி தொலைந்து, உன்னால் ஜெயிக்கப்பட்டு, உன் வாசற்கண் வந்து அடி பணிவது போல, நாங்களும் எங்கள் அறிவற்ற நிலை உணர்ந்து உன்னைப் போற்றுகின்றோம், உன் புகழ் பாடி, “ என்றாள் கோதை.

“உன் வார்த்தைகளில் ஆழமான பொருளை உணர்கிறேன்.ஆற்றப்படைத்தான் என்பது ராமானுஜரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.ஏனெனில் வற்றாது பால் சொரியும் பசுக்களைப்போல அவருடைய சிஷ்ய பரம்பரை அவர் உபதேசங்களை எங்கும் பரப்புகின்றனர்.அவர் ஆற்றபடைத்தான் என்றால் அவர் மகன் யார்? நானே . ஏனென்றால் என்னை அவர் ‘செல்வப்பிள்ளாய் வருக’ என்று அழைத்தாரல்லவா?” என்றான் கண்ணன் .

“ஊற்றம் உடையாய், பெரியாய், உலகெலாம் தோற்றமாய் , நின்ற, சுடரே , இந்த ஐந்து சொற்களும் சில வைணவப்பெரியார்களால் உன் ஐந்து ரூபங்களைக் குறிப்பிடுவதாக சொல்லப் படுகிறது.”

‘ஊற்றம் உடையாய்’ என்பது உன் பரத்வம், பரவாசுதேவன். ‘பெரியாய்’ என்பது வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யுமான, அநிருத்தன் என்ற உன் வ்யூஹ ரூபம், .’ உலகெலாம் தோற்றமாய்’ என்பது உன் விபவம், அதாவது அவதாரங்கள் , ‘நின்ற ‘ உன் அர்ச்சாவதாரம் ‘சுடரே’ என்பது அந்தர்யாமி ஸ்வரூபம்.

“ இன்னும் சொல்லப்போனால், பரத்வம் என்பது ஆவரண ஜலம் போல வைகுண்டத்தில் இருக்கும் தோற்றம்.நித்ய சூரிகள் மட்டுமே காண்பது. வியூஹம் என்பது பாற்கடல், தேவர்களும் முனிவர்களும் காண்பது அல்லது ஞானிகள் யோகத்தால் காண்பது. விபவம் என்பது பெரும் மழையினால் எப்போதாவது ஏற்படும் வெள்ளம் போல. அந்த சமயம் ஞானிகள் மட்டுமே உன் உண்மை ஸ்வரூபத்தை உணர்வர். மற்றவர் மாயையினால் மயக்குறுவர். அர்சாவதாரம் என்பது ஏரி, குளம் இவற்றில் தங்கியுல்ல நீர் போல எல்லோரும் நன்மையடையக் கூடியது. அந்தர்யாமி ஸ்வரூபம் நிலத்தில் மறைந்துள்ள ஜலம். பக்தியின் மூலம் தோண்டினால் மட்டுமே தெரிவது.” என்றாள்ஆண்டாள்.

‘ அடேயப்பா உன்சொற்களுக்கு இவ்வளவு அர்த்தங்களா என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். என் வாக்கில் வருவதெல்லாம் உன் சொற்கள் அல்லவா? என் கையில் உள்ள கிளியைப்போல நீ சொல்லச்சொல்வதை அல்லவா சொல்கிறேன். என்றாள்.

————

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

“உன்னை எழுப்பும் பாசுரங்களில் இதுதான கடைசி. அடுத்த பாசுரத்தில் இருந்து நீ நேரில் வர உன்னைக் கண்டு எங்கள் கோரிக்கைகளை முனவைக்கிறோம்.” என்றால் ஆண்டாள்.

“ இந்தப் பாசுரத்தில் உன் பள்ளிக்கட்டிற்கீழே நீ கண்விழிப்பதைக் காண வந்துள்ளோம், அங்கண்மாஞாலம் , இந்த அழகிய உலகத்தில் அரசர் அபிமான பங்கமாய் அதாவது தங்கள் அகம்பாவம் அழிந்து வந்து உன்னை சூழ்ந்தாற்போல ,” என்ற ஆண்டாளை நோக்கி ,

“அரசர்கள் என்று யாரைச் சொல்லுகிறாய் ,” என்றான்.

எனக்கு ஜராசந்தனால் சிறைப் பிடிக்கப் பட்டு உன்னால் விடுவிக்கப்பட்ட அரசர்கள் ஞாபகம் வந்தது. அவர்கள் தங்கள் ராஜ்யத்திற்குப் போவதை விட உன் கைங்கர்யத்துக்கே ஆசைப்பட்டார்கள் அல்லவா? “

“ பள்ளிக்கட்டிற்கீழே என்றால் உன் காலடியில் என்று பொருள். அதாவது அர்ஜுனன் உன்னை காண வந்து உன் காலடியில் அமர்ந்தது போல வந்து தலைப்பெய்தோம், எவ்வளவோ பிறவிகளுக்குப் பின்னர் புண்ய வசமாக உன்னை அடைந்தோம். நீ கண்விழித்ததும் முதலில் எங்களைக் காணவேண்டும் என்பதற்காக.” என்ற ஆண்டாளை நோக்கி கண்ணன் கூறினான்.

“ கண் விழிப்பது எப்படி என்றும் கூறிவிட்டாயே , செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ என்று.”

“ ஆம்.உன் கண்களை தாமரை மலர்வது போல சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். ஏன் தெரியுமா? பாதி மூடிய கண் எங்கள் குறைகளைக் காணாதிருப்பதற்கு. பாதித் திறந்த கண் எங்களைக் காப்பதற்கு. உன் அழகிய கண் , அங்கண் கொண்டு எங்களை நோக்கினாயானால் எங்கள் மேல் உள்ள சாபங்கள் எல்லாம் அழிந்து விடும்.

உன் கண்கள் விழிக்கும்போது, சூர்ய சந்த்ரௌ ச நேத்ரே என்று வேதம் கூறியபடி, திங்களும் ஆதித்தியனும் சேர்ந்து உதித்தது போல. சூரியனைப் போல எங்கள் பாவத்தை எரித்துவிடும்.சந்திரனைப் போல குளிர்ச்சியைத் தந்து எங்களைக் காக்கும். தாமரை சூரியன் உதித்தால் மலரும் சந்திரன் உதிக்கும்போது மூடி விடும். இரண்டும் சேர்ந்து உதித்தால் பாதி மலர்ந்த தாமரை போல் இருக்கும்.” என்ற ஆண்டாளின் சொற்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணன் எழுந்து வர ஆண்டாள் பரவசமாகிக் கூறுவது அடுத்த பாசுரம்.

—————-

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

“நான் நேரில் வந்தபோது என்னை கண்ணனாக அல்லாமல் நரசிங்கமாக கண்டது ஏன்? என்றான் கண்ணன்.

“அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. பிறகு சொல்கிறேன்.” என்ற ஆண்டாளைப்பார்த்து ,

“ என்னை மலைக்குகையில் உள்ள சிங்கத்துக்கு ஒப்பிட்டது எதனால் “ என்றான் கண்ணன்,.

“உறங்கும் சிங்கம் என்றும் சொன்னேன் அல்லவா? மாரி என்பது பாற்கடலைக் குறிக்கும். மலை என்றது ஆதிசேஷன்.குகை போன்ற அவனுடைய விரித்த படத்தினுள் உறங்கும் நாராயணனான நீ நரசிங்கமாக வந்தாய் அல்லவா?” என்றாள் ஆண்டாள். அதன் பின் வேரி மயிர் பொங்க , உன் சிலிர்த்த பிடரியை எப்பாடும் பேர்த்து உதறி , எடுத்து வீசிவிட்டு, பூவைப்பூ வண்ணனான கண்ணனாக மாறினாய்.”

“மாரிமலை என்பது மலை போன்ற இரணியனின் மாளிகையையும் குறிக்கும்.அதில் குகை போன்ற தூணில், மன்னிக் கிடந்து உறங்கும் சிங்கமாய் இருந்த நீ மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு வந்தாயே அது போல இங்கு வந்து சீரிய சிம்மாசனத்தமர்ந்து எங்கள் கோரிக்கைத்யைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்தப் பாசுரம் “ என்றாள் கோதை.

“ அறிவுற்று தீ விழித்து சீரிய சிங்கம் என்றாயே நான் இரணியனைக் கொல்ல அல்லவா அப்படி வந்தேன். உங்களிடையே அப்படி வரலாமா? “ என்றான் கண்ணன்.

“பயங்கரமான உருவமா இல்லை பூவைப்பூவண்ணன் என்றாயே அதுபோல அழகிய உருவத்திலா எதில் வரவேண்டும் “ என்றான் கண்ணன்.

“அந்த உன் உருவத்தைக் அகண்டு பிரஹ்லாதன் பயப்படவில்லையே. நீ பக்தர்களைக் காக்க அல்லவா எந்த உருவத்திலும் திருவுள்ளம் கொண்டுள்ளாய்? “

“ நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான் என்றல்லவா பீஷ்மர் உன் சஹஸ்ரநாமத்தில் கூறுகிறார். அதாவது நரசிம்ஹ உருவத்திலும் நீ ஸ்ரீமான் அழகியவன் என்று? அதனால்தானே உன்னை அழகிய சிங்கர் அன்று பக்தர்கள் கூறுகிறார்கள்?’என்றாள் ஆண்டாள்.

” ஏதோ முக்கிய காரணம் என்றாயே அது என்ன? “ என்றான் கண்ணன்.

“சொல்கிறேன் அதற்கு முன் இன்னொரு விளக்கம்.”என்ற ஆண்டாளைப் பார்த்து, ‘” காத்திருக்கிறேன் “ என்றான் அந்தக் குறும்புக்காரன்.

ஆண்டாள் கூறினாள், “ விளையாட்டு வேண்டாம் கண்ணா. என் வாயிலிருந்து வரும் சொற்கள் உன் அருளால் அல்லவா? ஆனாலும் குழந்தைகள் மழலையில் இன்புறும் தந்தையைப்போல் எங்கள் வார்த்தைகளை ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு இன்புறுகிறாய்.”

“மாரிமலை என்பது வேதங்கள். உபநிஷதங்கள் அதில் உள்ள குகைகள். அதில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்பது பரப்ரம்மமாகிய வேத வேத்யனாகிய நீ.”

உபநிஷதங்களின் பொருள் அறிந்தோர் அறிவுற்று தீ விழித்து, அறிவுத்தீ சுடரிட, வேரிமயிர் பொங்க, எப்பாடும் பேர்த்துதறி, உடல் மனம் வாக்கு இவை உன் சேவைக்கே அர்ப்பணித்தவராக போதருமாப்போலே , உலகில் உன் புகழ பரப்ப வருவது போல,” என்று பொருள்.

“ நன்று நன்று, இப்போதாவது உன் முக்கிய காரணத்தை சொல்கிறாயா?’ என்ற கண்ணனிடம்,

“அதற்கு முன் நீ இந்த சிங்காசனத்தில் வந்து உட்காரவேண்டும்.இது சீரிய சிங்காசனம். இதில் உட்கார்ந்து கொடுத்த வாக்கை மீற முடியாது உன்னால்” , என்ற கோதையிடம்.

“ ஏதேது கைகேயி தசரதனிடம் வாக்குறுதி கேட்ட மாதிரி இருக்கிறதே?” என்று சிரித்தான் கண்ணன்.

“ நீ பிரம்மாவின் வரத்தை மீறாமலும் பிரஹ்லாதனின் வார்த்தையை மெய்ப்பிக்கவும் நரசிம்ஹனாகத் தோன்றினாய் அல்லவா? அதனால் தான் உன்னை நரசிம்ஹனாகவே பாவித்தேன்..” என்ற ஆண்டாளிடம்“இவ்வளவுதானா,” என்றான் கண்ணன்.“இல்லை, இன்னும் இருக்கிறது , “ என்ற ஆண்டாள்,

“நான் என் கனவைப்பற்றிய பாசுரத்தில் உன்னை அரிமுகன் அச்யுதன் என்றேன் அல்லவா, அது ஏனென்றால் அரிமுகன், அதாவது சிங்கப்பிரானாகிய நீ அச்யுதன், கொடுத்த வாக்கிலிருந்து வழுவாதவன்,. அதனால் தான் ருக்மிணி அவள் கடிதத்தில் உன்னை அச்யுதா என்றும் நரசிம்ஹா என்றும் அழைத்தாள். ஏனென்றால் நீதான் ஏலாப்பொய்கள் உரைப்பவன் ஆயிற்றே? அதனால் கிருஷ்ணா என்று சொல்லவில்லை. “என்றாள்.

“ நல்ல சான்றிதழ் அளித்தாய் ,” என்ற கண்ணன், இது என் லீலாவதாரம் ஆயிற்றே. என் செயல்களைப புரிந்து கொள்ளாவிட்டால் அப்படித்தான் தோன்றும். “.

“ பரம் பாவம் அஜானந்த: மம பூத மஹேச்வரம்,” என்று நான் அர்ஜுனனுக்கு சொன்னபடி, என் உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ளாதவர் என்செயல்களில் குற்றம் காண்பது இயல்பு. “ என்றான்.

“ உன் மாயையை யார் அறிவார்? ஆனால் இப்போது எங்கள் கோரிக்கையைக் கேட்டு அருளவேண்டும்.” என்றாள் ஆண்டாள்.

——————

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

கண்ணன் ஆண்டாளைப பார்த்து, நான் வந்து இந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டேன். உங்கள் கோரிக்கைகளைக் கூறு என்றான்.

நீ வந்தமர்ந்த சிம்ஹாசனம் எங்கள் மனம் அல்லவா? உன்னைப் பார்த்ததும் ஆனந்தத்தில் என்ன கேட்கவேண்டும் என்பதே மறந்துவிட்டது.” என்றாள்.

கண்ணன் கூறினான். “நல்லது, என் திரிவிக்ர்மாவதாரத்தை மூன்று முறை கூறிவிட்டாய் அல்லவா? ‘ஓங்கி உலகளந்த உத்தம பேர்பாடி,’ அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகலந்த,’ என்றும், இங்கு ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,” என்றும்.

அதற்கு ஆண்டாள் “நீ உலகளந்தபொது உனக்குக் கிடைத்தது ஓர் அடி மண்தான் . ஏனென்றால் நீதான் ஒரு அடியில் மண்ணுலகம் முழுவதையும் அளந்து விட்டாயே. இரண்டாவது அடியில் விண்ணை அளந்தாய். மூன்றாவது அடி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் மகாபலியின் தலை நீ ஏற்கெனவே எடுத்துக்கொண்ட முதலடியில் அடங்கினது அல்லவா? அதனால் தான் நான் இங்கு உனக்கு மூன்று அடி தந்தேன்.” என்றாள்.

“ நன்றி. ஆனால் ஏன் சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் என்று சொன்னாய் நான் இலங்கையை விபீஷணனுக்குக் கொடுத்ததால் அதை அழிக்கவில்லையே? என்றான் கண்ணன்.

இந்தப் பாசுரம் உன்னைப் போற்றுவது போலத் தோன்றினாலும் இது உன் பாதங்களின் சிறப்பைக் கூறுவது. அன்று உலகளந்த பாதங்கள். அயோத்தியிள் இருந்தவாறே ராவணனை அழிக்கும் திறமை இருந்தாலும் முனிவர்களுக்கு அருள தண்டாகாரண்யம் முழுவதும் நடந்த பாதங்கள். அதனால்தான் சென்றங்கு என்று சொன்னேன்.

.தென்னிலங்கை செற்றாய் என்றால் இலங்கையை அழித்தாய் என்று அர்த்தம் இல்லை.இதை நான் ஏற்கெனவே தென்னிலங்கைக் கோமானைச் செற்ற என்ற இடத்தில் சொல்லியிருக்கிறேனே. தென்னிலங்கை என்றால் தென்- அழகிய, நிலம் – தேசம், கை – கைக்கொண்ட , அதாவது ராவணன். அவனை செற்றாய் அழித்தாய் என்று பொருள்.” என்றாள் ஆண்டாள்.

“அடேயப்பா “ நீ உண்மையில் சொல்லின் செல்விதான், “ என்ற கண்ணன் , பின்வரும் அடிகளும் என் அடியைப் போற்றுவதுதானோ?” என்றான்.

ஆம். ‘பொன்றச் சகடம் அதாவது சகடாசுரனை உதைத்தது இந்த அடிதானே இதன் புகழ் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம்,

“ ஆனால் என் தாய் நான் உதைத்து அந்தச்சக்டம் பொடிப்பொடியாயிற்று என்று மற்ற சிறுவர்கள் சொன்னதை நம்பவில்லை. என் பாதங்கள் வலிக்குமே என்று தொட்டுப் பார்த்தாள்.” என்றார் கண்ணனிடம்,

“ நீதான் மாயவன் ஆயிற்றே, வேதாந்த தேசிகர் கூறியுள்ளபடி அந்த சகடத்தின் உடைந்த துகள் கூட காணவில்லையோ என்னமோ/” என்றாள் ஆண்டாள்.

கண்ணன் கூறினான். “ அதிருக்கட்டும், கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி என்று கூறியிருக்கிறாயே , என் கைகள் அல்லவா அந்தச் செயல் செய்தன? “ என்றான்.

“ ஆம். ஆனால் நீ அந்த செயலை செய்வதை மனக்கண்ணில் காணும்போது உன் பாதங்கள் ஒன்று முன் ஒன்று பின்னாக வைத்து இருந்த அழகுதான் தெரிந்தது. அதனால்தான் கழல் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம் ,“ ஆனால் அடுத்த வரியில் ‘குன்று குடையாய் எடுத்தாய் , என்றது என் கரத்தைப் போற்றுவது தானே ,” என்ற கண்ணனிடம்,

“இல்லை, அங்கும் உன் பாதங்களையே போற்றினேன். பெரும் மழையைக் கண்டு பயந்து உன் பாதங்களில்தானே கோபர்கள் சரணமடைந்தனர். அதனால் உன் பாதங்களுக்கே அந்த மகத்துவம் உரித்தாகும், “ என்றாள் கோதை.

“ அதுவுமல்லாமல் ஏழு நாட்கள் அயராமல் நின்றது உன் பாதங்கள் அல்லவா? அதனால் உன் கரத்துக்கொப்பான பெருமை உன் பாதங்களுக்கும் உண்டு, ஆயர்களைக் காக்க ஏழு நாட்கள் தூக்கிய கரத்துடன் நின்ற உன்ன பக்தவாத்சல்யத்தையே குணம் போற்றி என்று குறிப்பிட்டேன்.” என்றாள் ஆண்டாள்.

“வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்று சொல்லி எதிரிகளை அழிக்கும் உன் ஆயுதத்தையும் அதைத் தாங்கும் கரத்தையும் போற்றி விட்டேன், “ என்ற ஆண்டாள், தந்தை கையில் வேல் என்றால் தனயன் கையிலும் அதுதானே இருக்கவேண்டும்?” என்றாள்.

இந்தப் பாசுரத்திற்கு வேறு ஏதாவது பொருள் சொல்லப் போகிறாயா? என்ற கண்ணன்., “இரு நானே சொல்கிறேன் “என்றான்.

“இந்தப்பாசுரம் சரணாகதியைக் குறிக்கிறது. ஆறு போற்றிகளும், பாஞ்சராத்ர ஆகமத்திள் என்னால் சொல்லப்பட்ட சரணாகதியின் ஆறு அங்கங்கள். தென்னிலங்கை என்றால் அழகான இருப்பிடம் கொண்ட , அதாவது தேகத்தைக் கொண்ட மனம்.. செற்றாய் என்றால் அந்த மனத்தை சரியான வழியில் நடத்துவதைக் குறிக்கிறது. சகடம் என்பது ஜீவனை ஜனனமரணம் என்னும் சுழற்சியில் கொண்டு செல்லும் கர்மா. என்னைச் சரணடையும்போது நான் இந்த சக்கரத்தை உதைத்துத் தள்ளுகிறேன். இதைத்தானே சொல்லப் போகிறாய் ? என்றான் கண்ணன்.

“ இன்னும் இருக்கிறது, “ என்ற ஆண்டாள் கூறினாள்.

போற்றி என்று ஆறுமுறை கூறியது, நாராயணனான உன் ஞானம், பலம், ஐஸ்வர்யம், சக்தி,தேஜஸ், வீர்யம் ஆகிய ஆறு பகவத் குணங்களைக் கூறுவது. “

“பொன்றச்ச்கடம் உதைத்தது , கர்ணனுடைய நாகாஸ்திறத்தில் இருந்து அர்ஜுனனைக் காப்பாற்ற நீ தேர்ச்சக்கரத்தை அழுத்தியது. சகடம் உதைத்தாய் என்றால் நீ காளியன் தலைமேல் சுழன்று சுழன்று ஆடியதையும் குறிக்கும்.”

“குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்பது, உன் சௌலப்யம், சௌசீல்யம்,வாத்சல்யம், ஸ்வாமித்வம் என்ற குணங்களை குடையாகக் கொண்டு எங்களைக் காப்பது. உன் பாதத்தை சரண் அடையத் தடையை உள்ள எங்கள் பாபங்களை அழிப்பது உன் கை வேல்.”

“அபாரம். சரி. உங்கள் கோரிக்கை என்ன?” என்றான் கண்ணன்.

“என்றென்றும் உன் சேவகமே வேண்டியே இன்று வந்தோம் “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்

“அன்று பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் பெண் என்பதை நிரூபித்து விட்டாய், போற்றி போற்றி என்ற இந்தப்பாசுரத்தின் மூலம்” என்றான்.

————-

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

“என்றென்றும் உன் சேவகமே வேண்டும் என்பதையே இதிலும் வலியுறுத்துகிறாய். ஆனாலும் அடுத்த பாசுரத்தில் ஒரு நீண்ட பட்டியல் காணப்படுகிறதே? “ என்றான் கண்ணன் .
“அதைப்பிறகு விளக்குகிறேன். “ என்ற ஆண்டாள் “இது உன் அவதார ரஹஸ்யத்தை விளக்கும் பாசுரம்.” என்று மேலும் கூறலுற்றாள்.

“ஒருத்தி மகனாய் பிறந்து என்பதே உன் மாயை. சாதாரண மானிடப் பிறவி என்பது உனக்கு எப்படி வாய்க்கும்? கிழக்கு திக்கில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்கிறோம். ஆனால் அது உண்மை அல்லவே? சூரியன் எப்போதும் இருக்கிறான் ஆனால் நமக்கு கிழக்கு திக்கில் தோன்றுகிறான். அதே போல நீ தேவகியின் மதலையாய் பிறக்கவில்லை, தோன்றினாய். எங்கேயாவது நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் குழந்தை பிறக்குமா? அதனால் தான் பாகவதம் ‘தம் அத்புத பாலகம் ,’ என்று கூறிற்று.”

“பிறகு, ஒருத்தி மகனாய் ஒளித்து வளரந்தாய். அது தரிக்கிலானாகி, தான் தீங்கு நினைந்த கம்சனைப் பற்றிய பயத்தால் அல்ல.உண்மையில் பயம் அவனுக்குத்தான் அவன் வயிற்றில் கனன்ற நெருப்பென உன்னை நினைத்து பயந்து கொண்டே இருந்தான்.’ஒளித்து வளர்ந்த’ என்றால் உன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு ஆயர்சிறுவனாக வளர்ந்தாயே அதைச் சொல்வது.” என்றாள் கோதை.

கண்ணன் கூறினான் . “ ஆம் என் அவதார ரஹஸ்யம் இதுதான். அதனால்தான் அர்ஜுனனிடம், ‘ஜன்ம கர்ம ச மே திவ்யம் யம் ஏவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர்ஜனம் ந ஏதி, மாம் ஏதி’ என் ஜன்மம் கர்மம் இவைகளை யார் தெரிந்துகொண்டார்களோ அவர்கள் மறுபடி பிறப்பதில்லை, என்னை அடைகிறார்கள்’ என்றேன். “

ஆண்டாள் கேட்டாள், “என் ஜன்மம் என்று எதைக் கூறுகிறாய் ? உனக்கு ஏது ஜன்மம்?”

“ அஜாயமானோ பஹுதா விஜாயதே என்ற உபநிஷத் வாக்கியப்படி நான் பிறப்பற்றவன் ஆனால் பலவாகத் தோன்றுகிறேன். தேவகி, கௌசல்யை, அதிதி இவர்கள் என்னைப் பெற்றதாக நினைத்தது என் மாயை. என் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு இதர உருவத்தில் தோன்றினேன், என்ற கண்ணனைப் பார்த்து, ஆண்டாள் ,

“ உன்னை மறைத்துக் கொள்வது என்பது உன் கைவந்த கலை ஆயிற்றே. இரணியனின் தூணில் மறைந்து இருந்தவன் அல்லவா?, மகாபலியை ஆட்கொள்ள வாமனனாகவும் தண்டகாரண்ய ரிஷிகளைக் காப்பாற்ற ராமனாகவும் வந்த நீ இப்போது யாதவகுலத்தைக் காக்க கோபாலனாய் தோன்றி உள்ளாய்.” என்றாள்.

“ வராஹமாகத் தோன்றி பூதேவியாகிய உன்னை எடுத்து வந்ததை மறந்துவிட்டாயே” என்றான் கண்ணன்.

“ ராமாவதாரத்தை நினைக்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. தசரதர் செய்த தவப்பயன் நான்கு புதல்வர்கள். கிருஷ்ணாவதாரத்தில் நான்கு பேரின் தவப்பயனாக ஒரு புதல்வன். மேலும் ராமனாக பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தது வயது வந்த பின். ஆனால் கிருஷ்ணனாக பித்ருவாக்ய பரிபாலனம் பிறந்ததுமே “ என்றாள் ஆண்டாள்.

“எப்படி?என்ற கண்ணனிடம், “கம்சனுக்கஞ்சி உன் திவ்ய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்ளும்படி உன் பெற்றோர் கேட்டதால் சாமானிய மானுடக்குழந்தை போல் ஆனாயே அதைச் சொல்கிறேன். “ என்றாள்.

“கிருஷ்ணாவதாரத்திலும் உன் ஸ்வரூபம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்தது. வசுதேவர் தேவகியிடம் உன் நிஜ ரூபத்தைக் காட்டினாய். யசோதையிடம் வாய் திறந்து புவனம் காட்டினாய். நீ அசுரர்களை வதைத்தது, காளியனை வென்றது கோவர்தனம் தாங்கியது ஒவ்வொன்றுமே உன் திவ்ய ஸ்வரூபத்தை வெளிப்படுத்தினாலும், உன் மாயையால் எல்லாவற்றையும் மறைத்து விட்டாய்.” என்றாள்.

“ ஆயினும் என் பக்தர்களும் முனிவர்களும் என்னை உணர்ந்திருந்தார்கள், என்ற கண்ணன் , ஒருத்தி மகனைப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த என்ற உன் சொற்கள் எனக்கு நம்மாழ்வாரையும் ராமானுஜரையும் நினைவு படுத்துகின்றன. திருவாய்மொழி என்பது வேதம் அதில் உள்ளவன் வேதஸ்வரூபனான நானே. ஆகவே நம்மாழ்வார் தேவகியைப்போல, திருவாய்மொழியை உலகுக்கு அளித்த ராமானுஜர் யசோதையைப் போல.’என்றான் .”

—————

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

“நீங்கள் வேண்டுவது என்ன என்று கேட்டாயல்லவா? பதில் கூறிவிட்டேன், “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் “ ஏது பெரிய பட்டியலாக இருக்கிறதே?”என்றான்.

“ எங்கள் மூத்தோர் கூறியபடி பாவை நோன்பு செய்வதற்கு வேண்டிய சாமக்ரியைகள் இவை.” என்ற ஆண்டாளைப்பார்த்து,

“நீ கூறியவை தருவதில் ஒரு சங்கடம் இருக்கிறதே. உலகமே நடுங்கும் ஓசை கொண்ட என் பாஞ்சஜன்யம் போன்ற சங்கங்கள் பால் போல் வெண்மையானவை வேண்டும் என்றாய். பாஞ்ச ஜன்யத்தைப் போலே இன்னொரு சங்கம் ஏது? இதை உனக்கு கொடுத்துவிட்டு நான் என் செய்ய?” என்றான்.

“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காண்பிக்கிறாய். நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? பாலன்ன வண்ணம் என்று சொன்னது வெண்மையான சங்கம் தான் அதிக ஓசை எழுப்பும் என்பதனால். இங்கு வெண்மை என்பது சத்துவ குணம்.அது மனதில் பக்தி என்னும் பெரிய ஓசை எழுப்பி ரஜஸ் தமஸ் இவற்றை போக்கிவிடும்.

“ மேலும் உன்னை ஆலின் இலையாய் என்று குறிப்பிட்ட காரணம் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் துயின்ற நீ ஒரு ஆலிலை மேல் பாலகனாக தோன்றினாயே உன்னால் ஒன்று என்ன, ஆயிரம் வெண்சங்கங்களை உண்டாக்க முடியாதா?”

“ உன் பாஞ்ச ஜன்யத்தின் ஒலியாலேயே உலகத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் அது பிரணவமல்லவா. நீ பாஞ்சஜன்யத்தை ஞாலம் எல்லாம் நடுங்க முழங்கினபோதே அத்தனை கௌரவர்களும் அழிந்தனர். யுத்தம் என்பது ஒரு நாடகம். அதனால் கன்னத்தைத் தடவப் பெற்ற துருவன் ஞானத்தைப் பெற்றானே.”

“ஒரு தர்ப்பைப்புல்லை ப்ரும்மாஸ்திரமாக்கினாய். கடல் ஒரு கால்வாய் போல கடந்தாய். குரங்கு சேனையுடன் சென்று ராவணனை ஒரு கொசுவை அடிப்பது போல அழித்தாய். மேலும் கிருஷ்ணாவதாரத்தில் நீ செய்யாத அத்புதமா? என்றாள் ஆண்டாள்.

கண்ணன் கூறினான் . “அது சரி. பாஞ்ச ஜன்யத்தின் உனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு மூன்று வரிகளை கொடுத்திருக்கிறாயே?”

“மூன்று வரிதானா ? உன் அதரத்தில் அமரும் பாக்கியம் பெற்ற அதற்கு பத்து பாசுரங்கள் அல்லவா அளித்திருக்கிறேன் “ என்ற ஆண்டாள் மேலும் கூறினாள்.

“இங்கு மூன்றுவரிகள் அமைக்கக் காரணம் பஞ்சஜன்யத்தின் த்வனி ஓம்காரம். அதற்கு அ, உ, ம் என்று மூன்று மாத்திரைகள் . அது மட்டுமா. பாஞ்சஜன்யம் கடலில் பிறந்து அசுரன் உடலில் வளர்ந்து உன் கரத்தை அடைந்தது என்ற மூன்று நிலை. அதே போல நீயும் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகையில் குடியேறினாய் அல்லவா?”

“அபாரம்,” என்ற கண்ணன் சங்கத்தைப் போல மற்றவைகளுக்கும் என்ன உண்மையான பொருள் என்று கூறவேண்டியதுதானே ?” என்றான்.

ஆண்டாள் விடையளித்தாள்.

“சாலப்பெரும்பறை பறை வாத்தியம் அல்ல. உன் நாமசங்கீர்த்தனம்.அது எங்கும் முழங்கி மற்ற சப்தங்களை விலக்க வேண்டும். பல்லாண்டிசைப்பாரென்றது உன் பக்தர்களை . அவர்களின் சத்சங்கத்தால் உலக விஷயங்கள் மீது பற்று விலகும்.”

கோலவிளக்கு உன்னைப்பற்றிய ஞானமாகிய தீபம். கொடி, உன் புகழ் பரப்பும் பக்தி என்ற த்வஜம், விதானம் உன் அருள் என்கிற பந்தல்.”

கண்ணன் கூறினான்.

“ இது 26 ஆவது பாசுரம்.. இது அஷ்டாக்ஷரத்தையும் த்வய மந்திரத்தையும் குறிப்பதாக அடியார்கள் கூறுகின்றனர். 2+6 =8, அஷ்டாக்ஷரம். ,2 த்வயமந்த்ரம்.6 என்பது அதன் ஆறு பாதங்களைக் குறிக்கிறது என்று கூறுவர். “

————

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

“இப்போது கோவிந்த நாம சங்கீர்த்தனமா? “என்ற கண்ணன் , ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்த நாமம். “ என்றான்,

“ இது உன் பக்தரகளுக்கும் பிடித்த நாமம் ஆயிற்றே. ஒருமுறை அல்ல மூன்றுமுறை இந்த நாமத்தால் உன்னை அழைக்கிறேன். அது பற்றிய விளக்கம் என் அடுத்த பாசுரத்தில் வரும்.:” என்ற ஆண்டாள்’

“நீ உன்னை நினையாதவரையும் உன் அன்பினாலும் குணங்களினாலும் தடுத்தாட்கொள்பவன் . அதனால் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் என்றேன். ஆனால் உன்னிடம் அன்புள்ளவர்களால் நீ வெல்லப்படுகிறாய். உன்னை முதலில் நிந்தித்த வாலி பின்னர் புகழவில்லையா? தாராவும் மண்டோதரியும் அவர்கள் கணவர்களைக் கொன்ற உன்னைப புகழ்ந்தார்களே. அவர்கள் உன் குணத்தால் வெல்லப்பட்டார்கள். ராவணன் உன் வீரத்தாலும் சூர்பனகை உன் அழகினாலும், விபீஷணன் உன் கருணையினாலும் வெல்லப்படவில்லையா? “ என்றாள்.

“நீங்கள் கேட்டதைத் தந்தேன். இப்போது உங்கள் அடுத்த நடவடிக்கையைக் காண ஆவல் கொண்டுள்ளேன்.” என்ற கண்ணனிடம்,

ஆண்டாள் கூறினாள்.

“எங்களுடைய கோரிக்கை உன்னுடன் சேர்வதே. நீ அதைத் தர சம்மதித்ததால் நாங்கள் மையிட்டேழுதோம் , மலரிட்டு முடியோம் என்று அன்று சொன்னதன் மாறாக,சூடகம்- வளை, தோள்வளை , தோடு, செவிப்பூ என்னும் ஆபரணம் , பாடகம்- கால் கொலுசு முதலியவை அணிவோம். புத்தாடை அணிவோம். ஏனென்றால் அரசர்க்கரசனான உன் முன் நிற்கத் தகுதி வேண்டும் அல்லவா.”

“நெய்யுண்ணோம் பால் உண்ணோம் என்று அன்று சொன்னோம். இன்று சர்க்கரைப் பொங்கல் மூட நெய் பெய்து முழங்கை வழியாக ஓடும்படி உண்போம்.” என்றாள்.

கண்ணன் கேட்டான். “ அதென்ன முழங்கை வழி வார, நெய்யை ஓடவிடுவானேன். அதை சாப்பிட வேண்டியது தானே ? “ என்றான்.’

“ அது ஏன் என்றால் உனக்கு பால்சோறு அதாவது அக்காரவடிசில் நைவேத்யம் செய்து விட்டு உன் முகத்தையே பார்த்துக் கொண்டு அதை சாப்பிட மறந்து விடுவோம்.” என்றாள்.

“நெய்யிடை சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும்

கையிடைக்காயும் கழுத்துக்குப்பூனோடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிடை சாந்தமும் தந்து எம்மை வெள்ளுயிராக்கவல்ல

பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

என்று பாடிய பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை அல்லவா நீ? “ உன்னிடமிருந்து இந்த சொற்கள் வருவதில் வியப்பென்ன? “என்றான் கண்ணன்.

“உண்மையில் நாங்கள் அணியும் பல்கலன் அஷ்டாக்ஷர மந்த்ரம், த்வய மந்த்ரம் , சரம ஸ்லோகம் இவையே . உன்னோடு சேர்ந்து இருக்கும்போது, உண்டாகும் ஆனந்தமே உன் அருளாகிற நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல். புத்தாடை என்பது உன் கைங்கர்யம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து, “ உன் முகத்தைப் பார்த்தால் இன்னும் ஏதோ சொல்ல வருவது போல் தெரிகிறதே?” என்றான் கண்ணன்.

“ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் என்றது நீ இருக்கும் அதே பூமியில் இருப்பது. சாலோக்யம். உன் மாளிகை வருவது சாமீப்யம், உன் அருகாமை. இதற்கு முந்தைய பாசுரத்தில் நாங்கள் கேட்டவை உன்னோடு ஒத்துப்போகும் தன்மை அதாவது சாரூப்யம்.இந்த பாசுரத்தில் கேட்பது உன்னோடு கலத்தல் , சாயுஜ்யம். உன்னோடு கூடியிருந்து அடையும் ஆனந்தமே பாற்சோறு.

————-

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

போன பாசுரத்திற்குப் பிறகு தன்னை ஆயர்பாடியில் இருப்பதாகவே கற்பனை செய்துகொண்ட ஆண்டாள் கூறினாள்.

“உன்னுடன் இணையும் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்று கேட்டோம் நீயும் தந்தேன் என்றாய் . ஆனால் எங்களுக்கு அதற்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை.”

“ ஏன் இந்த திடீர் சந்தேகம்? “ என்றான் கண்ணன்.

“ ஆண்டாள் கூறினாள்.” நீ குறைவொன்றும் இல்லாத கோவிந்தன், நான் இப்போது உன்னை எங்கும் நிறைந்தவனாகக் காண்கிறேன்.

நாங்கள் பசுக்கள் பின்னால் சென்று கானகத்தில் உணவு உண்ணும் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம். நீ பிறந்து இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம். அறியாத பிள்ளைகளாகிய உன் பெருமை தெரியாமல் உன்னை எங்களுக்கு இணையனானவன் போல கண்ணா கோபாலா என்று சிறு பேரால் அழைக்கிறோம். நீ சீறினால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது. ஆனாலும் உன்னை விட்டுவிட்டு எங்களால் இருக்க முடியாது ஆதலால் அருள வேண்டும்.” என்றாள்.

கண்ணன் கூறினான் .”கண்ணா கோபாலா என்பது சிறு பேறல்ல. நான் இங்கு கிருஷ்ணனாக இருக்கையில் என்னை நாராயணா, என்று அழைத்தால்தான் சிறுபேர்,. வேஷத்திற்கேற்ற பெயர் சொல்லித்தானே கூப்பிடவேண்டும். நாடகத்தில் நடிக்கும் ஒருவனை அவன் இயற்பெயர் சொல்லி அழைப்பார்களா? “

“நான் இந்த இடைக்குலத்திற்கு ஏன் வந்தேன் தெரியுமா? நீங்கள் செய்த புண்ணியம் கோஸம்ரக்ஷணம். பசுவின் தேஹத்தில் பதினான்கு லோகங்களும் இருக்கின்றன. ஆதலால் பசுவை மூன்று தரம் சுற்றி வருவது இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருவதாகும்.”

“ஆமா அறிவேன். அதனால்தானே கௌதமர் காமதேனுவைச் சுற்றி வந்து அஹல்யையை அடைந்தார். “ என்றால் ஆண்டாள்.

“ நீ அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் என்றாயே , நான் பக்தியை மட்டுமே பெரிதாகக் கருதுகிறேன். சாஸ்த்ர அறிவையோ யாகம் தவம் இவைகளையோ அல்ல. ‘நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந ச இஜ்யயா, பக்த்யா து அனந்யயா லப்ய: என்று அன்று பார்த்தனுக்குக் கூறியபடி பக்தியால் மட்டுமே என்னை அடைய முடியும் . தவத்தினாலோ தானதர்மங்கள் செய்வதாலோ யாகங்கள் செய்வதாலோ அல்ல” என்றான் கண்ணன். .

“ ஆம் அறிவேன். சபரியும் குஹனும் உன் அருள் பெறவில்லையா.? ஆனால் சபரி குருவின் அருளால் அவள் கொடுத்த பழங்களை நீ உண்ணும் பாக்கியம் பெற்றாள். குஹனுக்கு அது கிடைக்கவில்லையே. ஆயர் சிறுமியர் குருவுக்கு எங்கே போவது? “ என்றாள் ஆண்டாள்.

“ஆயர்களுக்கு அவர்கள் சேவை செய்யும் பசுக்களே குருமார்கள். திலீபன் நந்தினிக்கு சேவை செய்து அருள் பெற்றது போல.”

“உண்மை அறிவு என்பது என்னை அறிவது மற்றதெல்லாம் அறியாமையே, “ என்ற கண்ணன் , இந்த பாசுரத்தில் கோவிந்தன் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுவதாக உரைத்தாயே.” என்றான்.

.” சொல்கிறேன், என்ற கோதை,

“கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் நீ கோவிந்தன்..

கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். அதை நீ விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன்.

கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன்.

கோ என்றால் வேதம் நீ வேதத்தால் அறியப்படுபவன்..

கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.

உன்னை வேதம் சஹஸ்ராக்ஷ: என்று சொல்கிறது கோ என்றால் கண் என்றும் பொருள்.

கோ என்றால் நெருப்புஜ்வாலை. நீ சூர்யமண்டல மத்ய வர்த்தி என்று கூறுகிறது வேதம்.

கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். நீ வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தாய், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தாய், வேதங்களின் உட்பொருள் ஆனாய். இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்துபவன் , ஹ்ருஷீகேசன்,

“ஆச்சரியமான விளக்கம், “ என்ற கண்ணன் , “ எனக்கே மறந்துவிட்ட பல அர்த்தங்களைக் கூறினாய். அதனால் தான் நீ பிறந்த இந்த ஸ்ரீவில்லிபுத்தூரை கோவிந்தன் வாழுமூர் என்று சொல்கிறார்களோ. “ என்ற கண்ணன் , முக்கியமான அர்த்தத்தை மறந்து விட்டாயோ? ‘ என்றான்.

“இல்லை மறக்கவில்லை . கோவர்தனத்தைத் தாங்கியதால் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்ததல்லவா? கோ என்றால் மலை என்றும் அர்த்தம் கோ வர்தனம் என்ற பெயர் கோ அதாவது பசுக்களை வர்தனம், செழிக்கச் செய்வதால் அதற்கு கோவர்தனம் என்ற பெயர் பொருத்தமே,’ என்ற ஆண்டாள், உன் கோவிந்த பட்டாபிஷேகம் நீ ராமனாக பட்டாபிஷேகம் செய்துகொண்டதை விட உயர்ந்தது என்று கூறுகிறார்களே , ஏன் தெரியுமா?” என்ற ஆண்டாளைப் பார்த்து

“‘சொன்னால் தானே தெரியும் என்றான்,” அந்த குறும்புக்காரன் கள்ளப் புன்னகையுடன்.

“ வால்மீகி கூறுகிறார் ராமருக்கு வசிஷ்டர் பட்டாபிஷேகம் செய்தது, ‘வஸவோ வாஸவம் யதா’ தேவர்கள் இந்திரனுக்கு செய்தது போல் இருந்தது, என்று. கோவிந்த பட்டாபிஷேகம் அந்த இந்திரனே உனக்கு செய்தானே!” என்றாள் ஆண்டாள்.

“ கோவிந்தா என்று என்னை அழைப்பவர் யாராயினும் அவரை உடனே வந்து காக்கக் கடமைப்பட்டுள்ளேன், த்ரௌபதி கோவிந்தா என்று கூவியவுடன் காத்தது போல. அதனால் எனக்கும் கோவிந்தன் என்பது மிகவும் பிடித்த பெயர். என்றான் கண்ணன்.

————

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

“சிற்றம் சிறு காலே, அதிகாலையில் வந்து கோவிந்தா என்று கூறி உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் சொல்கிறேன் கேளாய் . சற்றுத் தாமதமாக வந்தால் நீ மாடு மேய்க்கப போய்விடுவாய். மேலும். உன்னுடைய சிற்று அம் சிறுகால் உன் கட்டிலில் இருந்து வெளித்தெரிவதை காண்பது எத்தனை இன்பம்! உன் அந்த பொற்றாமரை அடிதான் எங்களை இங்கு இழுத்து வந்தது.அதைப் போற்றவே வந்தோம்.”
“ என்னைக் கூப்பிட்டால் நானே வந்திருப்பேனே. பனித்தலை வீழ நீங்கள் இவ்வளவு காலையில் வந்திருக்க வேண்டாமே ?” என்ற கண்ணனிடம்,

‘நாங்கள் கூப்பிட்டால் நீ வருவதற்கு நாங்கள் என்ன கஜேந்த்ரனா இல்லை திரௌபதியா? நாங்கள் அவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்: அல்ல. ஆயினும் பெற்றம் மேய்த்துண்ணும் ஆயர்குலத்தில் உதித்த நீ எங்களைக் கைவிடமாட்டாய் , எங்கள் குற்றேவலை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் வந்தோம் . என்றாள் ஆண்டாள்.

“மேலும் சிற்றம் சிறு காலை என்பது பிராம்ம முஹூர்த்தம். முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம் செய்யும் வேளை. பேரரரவம் என்றால் அவர்கள் த்யானிக்கும் உன் ஸ்வரூபம் ஒன்றாகச் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்தது போல. அப்போது உன்னை வழிபடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உலக வ்யவஹாரத்தின் சபலம் தூண்டுமுன் உன்னை நினைப்பது சுலபம்.”

“ஆன்மீகப் பொருளாவது, சிற்றம் சிறுகாலை என்பது பகவத் விஷயமான அறிவு ஏற்படுவது. அதற்கு முன் அறியாமை என்ற இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறோம். “

“என்னைப் போற்றும் பொருள் என்ன என்பதை இன்னும் சொல்லவில்லையே? “ என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “இற்றைப் பறைகொள்வான் அன்று , எங்களுக்கு இந்த உலகத்தின் பொருள் எதுவும் வேண்டாம். கோவிந்தா எனக் கூறி வந்து அன்று விபீஷணன் ‘த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத:’ என்று உற்றார் உறவினர் எல்லோரையும் விடுத்து வந்தது போல் உன்னையே சரண் எனப்புகுந்தோம். “

எங்களுக்கு வேண்டியதெல்லாம் இற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் உன்னோடு உற்றோராக இருக்க வேண்டும்.உனக்கே ஆட்செய்ய வேண்டும். இனி வரும் பிறவிகளிலும் உன் அடியவர்களாகி உன் சேவையில் ஈடுபடவேண்டும். “ மற்றை காமங்கள் மாற்றி எங்களை ஆட்கொள்வாயாக.:” என்றாள் ஆண்டாள்

“ இன்னும் ஏழேழு பிறவி என்றால் முக்தியை நீங்கள் விரும்பவில்லையா? “ என்றான் கண்ணன்.”

ஆண்டாள் கூறினாள். உன் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் ஏழேழு பிறவியும் ஒரே பிறவி போலத்தான் இருக்கும். முக்தி என்பதில் அக்கறை இல்லை. நீ ஒருவன்தான் எல்லாப் பிறவிகளிலும் எங்கள் பந்து. மற்ற பந்துக்கள் இந்தப் பிறவியோடு சரி. “

“ அதாவது மாதா ச லக்ஷ்மீ தேவி பிதா தேவோ நாராயண:, பாந்தவா விஷ்ணுபக்தா: ச வசுதைவ குடும்பகம் “ என்ற வாழ்க்கை வேண்டும் என்கிறாய்”., என்ற கண்ணன் “உன் பாசுரங்கள் மூலம் சரணாகதிதத்துவத்தை நிலைநாட்டிவிட்டாய்.” என்றான்.

ஆண்டாள் கூறினாள். “எவரிடம் சரணாக்தி அடைகிறோம் என்பது முக்கியம். யாரிடம் சக்தி, காருண்யம் இவை உள்ளதோ அவரே சரணம் அடையத் தகுந்தவர். த்வய மந்திரமான ஸ்ரீமன் நாராயண சரணௌசரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம: , பிராட்டியுடன் கூடிய உன்னை சரணம் அடைவதைக் கூறுகிறது. லக்ஷ்மணன் சீதையுடன் நீ இருக்கும்போது காலில் விழுந்தான் தன்னை வனதுக்கு அழைத்துப்போகக் கோரி. சீதையை விட்டு உன்னை மட்டும் கோரிய சூர்பனகை காது மூக்கு இழந்தாள். உன்னை விட்டு சீதையை மட்டும் கவர்ந்த ராவணன் அழிந்தான்.

அதே சமயம் சக்தியற்றவரை சரணம் அடைவது பயனற்றது என்று நீ சமுத்ரராஜனை சரணம் என்று கூறியது காட்டுகிறது. ஏனென்றால் அவன் அஸமர்த்தன்.உன்னைவிட சக்திபடைத்தவன் அல்ல. எனவே ஸமர்த்தனாகவும் காருண்யனாகவும் பிராட்டியுடன் கூடியனாகவும் உள்ள உன்னை சரணம் அடைந்தோம்.” என்றாள் ஆண்டாள்.

மேலும் கூறினாள்.

சரணாகதி என்பது ஒரு யக்ஞம். ஆத்மாதான் ஹவிஸ். அச்சுதனாகிய நீ யாகத்தீ. பிரணவம் என்பது வில். ஆத்மா அம்பு. ஆத்மாவை பிரணவத்தில் பூட்டி பிரம்மமாகிய உன்னைக் குறிவைக்க வேண்டும். “

“கண்ணன் கூறினான்.

“ஆம். உன்னுடைய திருப்பாவை ஆத்ம சமர்ப்பணம் என்ற ஒரு மகாயக்ஞம்.”

————

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

இந்தப பதிவு ஆரம்பத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை சாற்றுமுறை நடக்கையில் அரங்கனும் ஆண்டாளும் வந்து கலந்து கொண்டனர். இப்போது இவர் இருவர் சந்நிதியிலும் அன்பர்கள் பலஸ்ருதி ரூபத்தில் உள்ள இந்த பாசுரத்தைக் கூறி சேவிக்கிறார்கள்.

வங்கக்கடல் கடைந்த மாதவன் மற்றும் கேசவன். அவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் , கோதை தலைமையில் அழகிய முகம் கொண்ட பெண்கள் சென்று, அவன் மாளிகைக்குச்சென்று, இறைஞ்சி, ப்ரார்த்தித்த, பட்டர்பிரான் மகளான் கோதையின் இந்த முப்பது சங்கத்தமிழ் மாலையை எவர் ஈரிரண்டுமால்வரைத் தோள் கொண்ட திருமாலுக்கு சமர்ப்பிக்கிறார்களோ அவர்கள் என்றும் இன்புற்று வாழ்வார் என்பது இதன் சாராம்சம்.இப்போது பாசுரத்தைப் பார்க்கலாம்.

வங்கக்கடல் என்றால் வங்காள விரிகுடாக்கடல் என்று சிலர் நினைக்கலாம் ! மாதவன் கடைந்தது திருப்பாற்கடல். ஏன் வங்க க்கடல் என்று கூறினாள்? வங்க என்றால் அழகிய என்று பொருள். பாற்கடல் அச்சுதன் குடிகொண்டதால் அழகியது. மேலும் அழகே உருவான திருமகளைத் தந்ததாலும் அமுதம் தந்ததாலும் அது அழகியது. வங்க என்ற சொல்லுக்கு அலைகள் நிரம்பிய என்றும் பொருள்.

கடைந்த மாதவன் – இங்கு மாதவன் என்ற பெயர் பொருத்தம் .ஏனென்றால் மாயா: தவ: மாதவ: . மா என்றால் லக்ஷ்மி தவ என்றால் பதி. கடலைக் கடைந்ததனால் லக்ஷ்மீபதியான அவனை இங்கு மாதவன் என்று சொல்கிறாள்.கடைந்தது மட்டும் அல்லாமல் முதலிலிருந்து கடைசி வரை, அவன் உதவினான் அல்லவா?

யாமுனாசார்யர் ஸ்தோத்ரரத்தினத்தில் கூறுகிறார் ,” யதர்த்தம் அம்போதி: அமந்தி அபந்தி ச ,” யார் பொருட்டு கடல் கடையப்பட்டதோ கட்டப்பட்டதோ என்று. அதாவது திருமகளை அடைய கடலைக் கடைந்தான் , திருமகள் அவதாரமான சீதையை அடையக் கடலைக் கட்டினான்.என்கிறார்.

இதை ஆராய்ந்து பார்க்கையில், திருமகளை அடையவே அவ்வளவு ஸ்ரமம் எடுத்துக்கொண்டான் என்று வைத்துக் கொண்டாலும், அவளைத்தன் திருமார்பில் வைத்து அவன் ஹ்ருதயத்தை தயைக்கு இருப்பிடமாகக் கொள்வதற்கே என்று அறியலாம். ஆகையால் அவன் உலகக்ஷேமத்துக்காகவே திருமகளை அடைய விரும்பினான் என்று விளங்குகிறது.

பாற்கடலைக் கடைந்தவன் கோகுலத்தில் தயிர்கடலையும் கடைந்தான் கோபியர் உள்ளத்தையும் கடைந்தான், இது பின்னர் மகாபாரதம் என்ற ரணக்கடலைக் கடைவதற்கோ என்று தோன்றுகிறது.

கேசவன் என்ற சொல் அழகிய கேசத்தை உடையவன் , கேசி என்ற அசுரனைக் கொன்றவன், நாராயணன் என்கிற பரப்ரம்மஸ்வரூபம் க என்ற பிரம்மாவையும் ஈஸ என்னும் சிவனையும் வசத்தில் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம். கேசவன் மார்கழி மாதத்தின் அதிஷ்டான தெய்வம், இந்த பாசுரம் கடைசி ஆதலால் அடிபாடி என்று தொடங்கி கேசவன் என்று கேசத்தைக் குறிப்பதாக உள்ளதால் இது பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் ஆகிறது.

அடுத்து பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் என்றதன் பொருள், விஷ்ணுசித்தர் அதாவது பெரியாழ்வார் தாமரை மற்றும் துளசி அணிவாராம்.தாமரை ஸ்ரீதேவியையும் துளசி நாராயணனையும் குறிப்பது.

கோதையின் பாசுரங்கள் மேன்மையில் சங்கத்தமிழை ஒத்தது. அதனால் சங்கத்தமிழ் மாலை என்பது பொருத்தமே.சங்கம் என்றால் சேர்வது. பல பக்தர்கள் கூடி இதை அனுபவிக்கிறார்கள்.

ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால். மால் போல் அதாவது மலை போன்ற நான்கு தோள்களை உடையவன், தாமரைச்செங்கண் கொண்டவன். இதுவரை சரி. அதென்ன செல்வத்திருமால்?

இதற்குப் பல பொருள் கூறுகிறார்கள்.

திருமால் என்பது ஸ்ரீனிவாசன் திருமகளுடன் சேர்ந்து செல்வத்திருமால் ஆகிறான்.

எண்ணற்ற பக்தகோடிகள்ஆகிய செல்வம் உடையவன்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பாடிக்கொடுத்த பாமாலை என்ற செல்வம் உடையவன்.

நம்மாழ்வார் அவனை செல்வ நாரணன் என்று குறிப்பிடுகிறார்.

ராமானுஜரால் செல்வப் பிள்ளாய் என்று அழைக்கப் பட்டவன்.

இந்த திருப்பாவையை அறிந்து திருமாலை வணங்குபவர் எங்கும், இக லோகம் பரலோகம் இரண்டிலும் திருவருள் பெற்று இன்புறுவர்,

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –