Archive for December, 2022

ஸ்ரீ பராசரர் மஹிமை —

December 23, 2022

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 4 –-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

வியாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :  பௌத்ர மகல்மஷம் Iபராஸராத்மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம் I 

மத்ஸ்ய அவதாரம் வேதங்களை மீட்க -வ்யாஸ அவதாரம் வேதார்த்தங்களை மீட்க அவதாரம்

497. கோபதயே நமஹ (Gopathaye namaha)

வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.

பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்!  இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.

சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.

இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.

பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.

பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.

இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.

இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———-

வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் அத்ருஷ்யந்தி. பராசரர் தம் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி கல்மாசபாதன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும் போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திர யாகம் செய்தார்.

யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும், புலஸ்திய, பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்திய மகரிஷி பராசரருக்குப் பூர்ண ஸம்ஹிதை”என்ற நூலை எழுத அருள் செய்தார்.

இவர் தன் தாயின் கர்ப்பத்திலேயே வேதங்களைச் சொன்னவர். இவரது புதல்வர் தான் வேத வியாசர். பராசரரின் மனைவியின் பெயர் சத்யவதி.

பராசரரின் மக்கள் தத்தன், அநந்தன், நந்தி, சதுமுகன், பருதிபாணி, மாலி என்னும் அறுவரும் சரவணப் பொய்கையில் முதலையுருக் கொண்டு விளையாடினர்.

இவ்விளையாட்டினால் பொய்கையில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. பொய்கையில் நீராட வந்த பராசரர் இதனைப் பொறுக்காமல் அறுவரும் தன் மக்கள் என்றும் பாராமல் சபித்தார்.

சரவணப் பொய்கையில் ஆறு திருமேனிகள் கொண்டு விளங்கினான் ஒரு திருமுருகன்.இவ் ஆறு திருமேனிகளையும் ஆர்வத்துடன் அம்பிகை கட்டியணைத்தாள். ஆறு திருமேனிகளும் ஒன்றாக இணைந்து முருகன், கந்தன் என்னும் திருநாமம் பெற்றான்.

இக்கந்தப் பெருமானுக்கு அன்னை தன் திருமுலைப் பாலை ஊட்டினாள். அந்த சிவ ஞானப்பால் சரவணப் பொய்கையிலும் பெருகியது. அதனை உண்டு மீன்களாய் இருந்த பராசரரின் குமாரர் அறுவரும் சாபவிமோசனம் பெற்றனர்.

நட்சத்திரம், திதி முதலியன அனைத்தும் குறிப்பிட்ட ஒருநாளில் நல்ல நிலையில் உச்சத்தில் இருக்கும்போது, மனைவியின் வழி ஒரு குமாரனைப் பெற்றால் அவன் உலகம் போற்றும் உத்தமன் ஆக இருப்பான் என்பதனை உணர்ந்தார்.

அத்தகைய புனிதமான நாள் வர, அந்நாளில் தம் மனைவியை அடையப் பராசரர் தவத்தில் இருந்து தம் பர்ணசாலைக்குப் புறப்பட்டார். வழியில் யமுனை நதி குறுக்கிட்டது. தாசராஜனின் வளர்ப்பு மகள் யமுனையில் படகு விட்டுக் கொண்டு இருந்தவள், படகுத்துறையில் படகுடன் இருந்தாள்.

பராசரர் படகை அக்கரைக்கு விடுமாறு கூறினார். ஸ்வாமி! படகுக்குத் தேவையான பாரம் வேண்டுமே! தாங்கள் ஒருவர்தான் இருக்கின்றீர்! இன்னும் சிலர் வந்தால் படகினை ஆற்றில் இறக்கி விடலாம் என்றாள் மச்சகந்தி.

பெண்ணே! படகினுக்குத் தேவையான பாரமாக நான் ஒருவனே இருப்பேன். படகினை நதியில் விடு என்று அவசரப்படுத்தினார் முனிவர். யாரோ ஒரு மகானுபாவர் என்று எண்ணிய மச்சகந்தி படகினை விடச் சம்மதித்தாள். படகு யமுனைக்குள் சென்றது. முனிவர் வானை ஆராய்ந்தார். நட்சத்திரம் உச்சத்தினை அடைந்தது. தாம் கணித்த நேரம் வந்து விட்டதனை உணர்ந்தார். இனி தம் ஆசிரமம் செல்லுவதற்குள் குறிப்பிட்ட காலம் கடந்து விடும் என உணர்ந்தார். மச்சகந்தியிடம் செய்தியைத் தெரிவித்து அவள் சம்மதத்துடன் அவளைப் பரிமளகந்தியாக ஆக்கி நதியின் நடுவே ஒரு த்வீபத்தை (தீவை) உண்டாக்கி அங்கே அவளிடமாக ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை த்வீபத்தில் பிறந்ததால் துவைபாயனர் எனப்பட்டது. அக்குழந்தை தான் வேத வியாசர்.

ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்ப வாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் (தோல்வி) அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார்.மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் (காமத்தை வென்றவர் என்று பொருள்) பராசரர் எனப்பட்டார்.

இவர் எழுதியது ஸ்ரீ விஷ்ணு புராணம். இது இவர் உலகுக்கு வகுத்துக் கொடுத்த பக்தி மார்க்கம். ஸ்ரீமத் பாகவதத்திற்கு மூலநூல் ஆகும். ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வேதாந்த கருத்துகள் பின்னிப் பிணைந்து இருக்கும்,

இவர் கர்ம நெறிகள், வாழ்க்கை முறைகள். சமூகக் கோட்பாடுகள், தனிமனித நியாயங்கள். தர்ம சாத்திரமாக “பராசரர் ஸ்மிருதி’ என்று எழுதியுள்ளார்.

பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார்.

தாயின் கர்ப்பகத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து வயிற்றை பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார்.

தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார்.

வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார்.உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவாநி கூடலில் உள்ள நதி இதுவாம்.

பராசரர் முனிவர் மகாராஸ்டிர மாநிலத்தில் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. “பன்ஹலா கோட்டை” கோலாபூர் ஜில்லாவில் உள்ளது. அந்தக் கோட்டையில் உள்ள ஒரு குகை பராசரர் வாழ்ந்த இடம் என்று மக்கள் கருதுகின்றனர். இந்தியாவின் புராணங்களால் ஒரு மிகச் சிறந்த முனிவராக போற்றப்படுபவர் பராசரர். பீஷ்மரை அம்பு படுக்கையில் பார்த்தவர்.

பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

———————

அது வசந்த காலமாகையால், மன்னன் {உபரிசரன்} சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், சம்பகங்களும் {செண்பகங்களும்}, சுதங்களும் {மாமரங்களும்}, அதிமுக்தங்களும் {தினிசமரங்களும்} நிறைந்திருந்தன. அங்கே புன்னாகம் {புன்னை}, கர்ணீகரம் {கொன்றை}, வாகுலம் {மகிழம்}, திவ்யபாதாளம் {பாதிரிமரங்கள்},பாதாளம் {பலா}, நாரிகேளம் {தென்னை}, சந்தனம், அர்ஜுனம் {மருதமரம்} போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.
அந்த முழுக் கானகமே கோகிலப் பறவைகளின் {குயில்களின்} இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மன்னன் {உபரிசரன்} மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு,அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.
துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று, “இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது” என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.
அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.
அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.
இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.
உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.
வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.
சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.
அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.
அவர்கள் {மீனவர்கள்}, “ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்” என்றனர்.
ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.
அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.
அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.
அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.
அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, “இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்” என்றான்.
அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}.
தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.
பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்.
திரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், “அஞ்சாதே” என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் “யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்” என்று சொன்னார்கள்.
அத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்” என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.
முனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, “ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.
அதற்குச் சத்தியவதி, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?” என்றாள் {சத்தியவதி}.
அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.
முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி}, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே! {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.
ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றாள்.
அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, “எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.
ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை” என்றார்.
இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.
கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.
அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.
இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.
வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள்.
அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.
அவன், “சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்” என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.
அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர் (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும், வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக வேதங்களைத் தொகுத்தார்.
அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.
பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும்), வைசம்பாயனர் மூலமாகவும் வெளிப்பட்டது.
சூரியன் ஆகாயத்தில் எழுந்து கொண்டிருந்த நேரத்தில் பராசர முனிவர் காலையில் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது அவ்விடத்திற்கு மைத்ரேய முனிவர் தனது குருநாதரை காண்பதற்காக வந்திருந்தார். தன்னுடைய குருநாதரை கண்டதும் அவரை வணங்கி நின்றார்.
குருநாதரான பராசர முனிவர், அதிகாலைப் பொழுதில் தன்னுடைய சீடன் தன்னை காண வந்திருக்கின்றார் என்றால் அவருடைய மனதில் பலவிதமான எண்ணங்களும், ஐயங்களும் ஏற்பட்டிருக்கும் என்பதை அவரை வணங்கிய விதத்திலிருந்து கண்டறிந்தார். பின்பு குருநாதர் தனது சீடனை நோக்கி மனதில் என்ன குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றாய். ஏதேனும் ஐயம் உள்ளதா? என்று வினாவினார்.
மைத்ரேய முனிவரும் தனது குருநாதரை வணங்கி ஆம் குருநாதரே! அனைத்து வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும், வேதாந்தங்களையும் தங்களிடமிருந்து நான் கற்றறிந்தேன். இன்று பல சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிஞர்கள் பலர் எம்மை பாராட்டுவதற்கு முதன்மை காரணமே தங்களிடம் நான் கற்றதே ஆகும் என்று கூறினார்.
குருவும் தனது சீடனை நோக்கி சாஸ்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும், யாமறிந்த செய்திகளையும் உமக்கு எடுத்து கூறினோம். ஆயினும் அவைகள் உண்மை வந்தடைய வேண்டும் என்பது இருந்ததினால் மட்டுமே உம்மால் அதை முழுமையாக கற்றறிய முடிந்தது என்று கூறினார்.
சீடரும் தமக்கு கலைகளை கற்றுக்கொடுத்த குருவை வணங்கி பின்பு குருவே எமக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது அதை பற்றி தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறினார்.
குருவும் உமது சந்தேகங்களை எடுத்துரைப்பாயாக! எம்மால் முடிந்த அளவு அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றேன் என்று கூறினார்.
குருவே! தர்மங்கள் பல அறிந்தவரே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த உலகம் எவ்விதத்தில் உண்டாகியது?
இனி வரப்போகின்ற நாட்களில் இந்த உலகம் தன்னை எவ்விதத்தில் மாற்றிக்கொள்ள இருக்கின்றது? என்பதையும்
இந்த உலகம் எதன் சொரூபமாக விளங்குகின்றது?
உலகம் எப்படி உருவாயிற்று?
எங்கே இருக்கின்றது?
பஞ்சபூதங்கள் எப்படி உருவானது?
அவைகள் எவ்விதத்தில் நம்மை கட்டுப்படுத்துகின்றன?
மேலும் தேவதைகள், உயிரினங்கள் முதலியவற்றின் உற்பத்திகளையும், படைப்பு தொழிலானது எப்படி தோன்றியது? என்பதையும்
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய கடல்கள், மலைகள் எவ்விதத்தில் தோன்றி இருக்கின்றன? என்பதையும்
அவைகள் பூமியில் இருக்கக்கூடிய நிலைகளை பற்றியும்..
பூமிக்கு வெளிச்சத்தை அளிக்கக்கூடிய சூரியன் மற்றும் சந்திர கோள்களின் நிலைகளை பற்றியும்..
அவர்களுடைய அளவுகளை பற்றியும்..
தேவர்களுடைய அம்சங்களை பற்றியும்..
மனுக்கள், மனுவந்தாரங்ளையும், மகா கல்பங்களையும், நான்கு யுகங்களின் பிரிவுகளையும், அவைகளுடைய முடிவு நிலைகளையும், ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய தர்மங்களையும் நான் அறிந்துகொள்ள மிகுந்த ஆவல் கொண்டிருக்கின்றேன்.
“பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்?” என்று மைத்ரேயர் கேட்டார்.
பராசர மகரிஷி கூறலானார், “மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான்.
ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா?! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.
இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன்.”
“மைத்ரேயரே! நிமிஷகள் 15 கூடியது 1 காஷ்டை; அந்தக் காஷ்டை 30-தானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் 30-தானால் 1 முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு 1 அகோராத்திரம்; அதாவது 1 நாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் 2 பக்ஷங்களோடு கூடிய 1 மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் (12) தட்சணாயனம் உத்திராயணம் என்ற 2 அயனங்கள் சேர்ந்து 1 வருஷமாகும்.
தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் 12000 ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம் (4). அதில் கிருதயுகம் நாலாயிரமும் (4000) சந்தி, சந்தியம்சங்கள் 800 திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட 3600 ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட 2400 தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு 1000 சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறு(200)-மாக இருக்கும்
சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் (1000 x) திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் 14 மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக!”
“மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் 71 மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி 100 தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, 30 கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.
இப்படிப் 14 மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள்.
அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன்.
இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் 50 ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீ வராக கல்பம்!”
தரணீதராய நமஹ…..!!!
பிரம்மதேவர் உலகைப் படைப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஊழிக் கடலுக்குள்
மூழ்கி இருப்பதை உணர்ந்தார். அந்த நிலத்தை நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து நிறுத்தினால் தானே அவரால் உயிர்களைப் படைக்க முடியும்? அதனால் ஊழிக் கடலுக்குள் மூழ்கி இருக்கும் பூமியை உயர்த்துமாறு திருமாலிடம் பிரார்த்தனை செய்தார் பிரம்மா.
கடலுக்குள் மூழ்கிப் பூமியை மீட்டெடுப்பதற்கு ஏற்றபடி மிகப்பெரிய பன்றி வடிவில் தோன்றினார் திருமால். அதைத் தான் வராக அவதாரம் என்கிறோம். வேதமும் யாகங்களும் உலகைத் தாங்கி நிற்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் உலகைத் தாங்கிப் பிடிக்கப் போகும் வராகப் பெருமாள் வேதம், யாகம் இவற்றையே தனக்கு உடலாகக் கொண்டு அவதரித்தார்.
கடலுக்குள் அழுந்திக் கிடந்த பூமிதேவி, “தாமரைக் கண்ணனே! மாதவனே! நீர் தான் அடியேனைக் காத்தருள வேண்டும். நான் உன்னால் உருவாக்கப்பட்டவள். உன்னிடத்தில் நிலைநிற்பவள். உன்னையே சரணமாகப் பற்றியவள். மாதவனாகிய உன்னையே சார்ந்திருப்பதால் நான் மாதவி என்றழைக்கப்படுகிறேன். உடைமையை மீட்க வேண்டியது உடையவனின் பொறுப்பன்றோ?” என்று வராகப் பெருமாளிடம்
வேண்டினாள்.
நிலமடந்தையின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த வராகப் பெருமாள், பன்றிகளைப் போல் குர் குர் என்ற ஒலி எழுப்பினார். அந்த ஒலி சாம வேத கானதைப் போல் இனிதாக இருந்தது. அந்த ஒலியோடு கடலுக்குள் மூழ்கினார். கோரைக் கிழங்கைப் பன்றிகள் கொத்தி எடுப்பது போல், பூமியை இடந்தெடுத்தார். கடலில் இருந்து ஒரு நீல மலை, இரண்டு பிறை சந்திரன்களைத் தன் மேல் ஏந்தியபடி வந்தால் எப்படி இருக்கும்? அதுபோல் பிறைச் சந்திரனைப் போன்ற தனது இரண்டு கோரைப் பற்களுக்கு நடுவிலே பூமியை ஏந்தியபடி, நீல மலைபோல் கடலில் இருந்து மேலே வந்தார் வராகப் பெருமாள்.
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!”
என்று நம்மாழ்வார் இதை அனுபவிக்கிறார்.
அப்போது பூமி தேவி, “சுவாமி! இந்த ஊழிக் கடலில் இருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். ஆனால் பிறவிப் பெரும் கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் துன்பப் படுகிறார்களே! அவர்களைக் காக்க என்ன வழி?” என்று கேட்டாள்.
அப்போது அனைத்து ஜீவராசிகளும் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடியை அடைவதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லும் வராக புராணம் என்ற புராணத்தைப் பூமிதேவிக்கு வராகப் பெருமாள் உபதேசித்தார்.
அதில் முக்கியமாக, “ஒருவன் இளம் வயதில், உடலும் மனதும் வலிமையோடு இருக்கும் காலத்தில், எனக்குப் பூமாலை சமர்ப்பித்து, என் நாமங்களைப் பாமாலையாகப் பாடினால், அந்த பக்தன் முதுமைக் காலத்தில் என்னை மறந்தாலும் நான் அவனை மறக்காமல் அவனைக் காத்தருள்வேன்!” என்று வராகப் பெருமாள் வாக்களித்தார்.
பூமியை மீட்டுக் கொண்டு மேலே வந்த வராகரைத் தரிசித்த முனிவர்கள் யக்ஞவராகனாக அப்பெருமாளைக் கண்டு துதி செய்தார்கள். “இறைவா! யாகத்தின் அங்கங்கள் அனைத்தும் உனது திருமேனியின் அங்கங்களாக உள்ளன. உனது இரு கரங்களும் இரு திருவடிகளும் சேர்ந்து நான்கு வேதங்களாகும். உனது தலையே வேதத்தின் தொடக்கமாகிய பிரணவமாகும். உனது கோரைப் பல்லே யாகத்தில் பயன்படுத்தப்படும் யூபஸ்தம்பம் ஆகும். உனது மற்றைய பற்களே யாகங்கள். உனது நாக்கே அக்னி ஆகும். உனது ரோமங்களே தர்ப்பைப் புற்கள். யாகத்துக்குரிய காலங்களாகிய காலை, மாலை இரண்டும் உனது இரு கண்கள். உனது மூக்கே யாகக் கரண்டி!” என்றெல்லாம் வர்ணித்தார்கள் அம்முனிவர்கள்.
மேலும், “எங்களை எல்லாம் பூமி தேவி தாங்குகிறாள். நீயோ அந்த பூமியையே தாங்கிப் பிடித்து மீட்டெடுத்துள்ளாய்!” என்று சொல்லி வராகனைத் துதித்தார்கள் முனிவர்கள். வராகர் பூமியைக் கடல் மட்டத்துக்கு மேல் நிலைநிறுத்தியவாறே பிரம்மா படைப்புத் தொழிலை நடத்தியதாக வரலாறு.
(மேற்கூறிய வரலாறு விஷ்ணு புராணத்தை அடியொற்றிக் கூறப்பட்டுள்ளது. இரணியனின் தம்பி இரணியாக்ஷன் பூமியைக் கடலுக்குள் அழுத்தி வைத்ததாகவும், அவனைக் கொன்று பூமியை வராகர் மீட்டதாகச் சொல்லும் வேறு புராணங்களும் உண்டு.)
‘தாரணம்’ என்றால் தாங்குதல் என்று பொருள். அவ்வாறு தாரணம் செய்வதால், பூமி தேவியைத் ‘தரணீ’ என்று அழைக்கிறோம். அந்தத் தரணீயையே தரிப்பதால் (தாங்குவதால்), திருமால் ‘தரணீதர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 237-வது திருநாமம்.
“தரணீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் படி, பூமியை உயர்த்திக் காத்த வராகர் அருள்புரிவார்.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ பஞ்ச நாராயண -ஸ்ரீ ரெங்க -ஸ்ரீ ராம -ஸ்ரீ க்ருஷ்ண -ஸ்ரீ நரஸிம்ஹ ஷேத்ரங்கள்

December 23, 2022

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :

ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில்
எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டி தேவன் என்கிற விஷ்ணு வர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.

கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்–
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்
தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி ,
கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத் பரர் ஆகையால்,
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத் பரத்தையே இவர் கைவேல்.
திரு மந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு
ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.
கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது
முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார் மேனி நாராயணன் –
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவது போல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் –
என்றது செவ்வரி யோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.
மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும்
இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.

———-

பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன திருக் காவேரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின்  கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்- ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும் 

ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.

ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)

ஆதிரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்

காவிரிநதியின் முதல் தீவு கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உருவாகிறது.
இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது.
எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது

அரங்கநாதசுவாமி கோவில். சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார்.
பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார்.
பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார்.

இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் சிவசமுத்திரம் ஆகும்.
இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.

மத்தியரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

அரங்கநாதசுவாமி

தமிழ்நாட்டில் காவிரி நதி திருச்சிராப்பள்ளி அருகே மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும்.
இது மத்தியரங்கம் என்று பெயர் பெறுகிறது
சிலர் இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் காவேரிக் கரையில் அமைந்த, பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று.

ஸ்ரீரங்கம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம்.
இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்.

அப்பாலரங்கம்

அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் அப்பாலரங்கம் என்று சொல்லப்படும்
திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில்
இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில்,
கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும்.

இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று.
இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும்,
உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.
தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.

சதுர்த்தரங்கம்

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும்,
பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில்,
காவிரி நதி – காவிரி, அரசலாறு என்று – இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது.
தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன.
பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார்.
எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார்
இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது.
வேத சக்ர விமானத்தின் கீழ் பரிமள ரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பரிமள ரங்கநாதர் திருவடிகளில் யமதர்ம ராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாயாரின் திருப் பெயர் பரிமள ரங்கநாயகி ஆகும்.
சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் திரு இந்தளூர் எனப் பெயர் பெற்றது.

————

பஞ்ச சயன ரங்கம்

“பஞ்ச“  என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள். 

இந்த “பஞ்ச“  என்ற ஐந்தின் சிறப்பினை நாம் பஞ்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்.

பஞ்ச நிலைகள் ..பகவான் பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி  என்று ஐந்து நிலைகளில் அர்ச்சிக்கப்படுபவன்.

பாஞ்சராத்ரம்..பகவானை ஆராதிக்கும் ஒரு வழிமுறை.  ஐந்து ராத்ரிகளில் ஐந்து முனிவர்களுக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஒரு சிறந்த வழிப்பாட்டு முறை.

பஞ்ச சம்ஸ்காரம்,இது ஒவ்வொரு வைணவருக்கும் கட்டாயம் அமைய வேண்டிய “நல்வினை சடங்கு“.  (1)தாப ஸம்ஸ்காரம் (2) புண்ட்ர ஸம்ஸ்காரம் (3) நாம ஸம்ஸ்காரம் (4) மந்த்ர ஸம்ஸ்காரம் (5) யாக ஸம்ஸ்காரம் என்ற ஐந்து நிலைகளையும் குருவிடமிருந்து ஒரே சமயத்தில் பெறுதல்.

பஞ்சாங்கம்..பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:

  1. வாரம் 2.திதி3.கரணம் 4-நட்சத்திரம்,5.யோகம் என்பனவாகும்.

பஞ்ச கவ்யம் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.  சாத்திரப்படி சரீரத்திற்கும், இதர பொருட்கள் சுத்திக்கும்  இன்றியமையாதது.

பஞ்சாம்ருதம் பகவானுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவை.

தீபத்திலும் பஞ்ச முக விளக்கு  பஞ்ச முக தீபம் முதலியன சிறந்தனவாம்.
இது வரை பகவானோடு தொடர்புடைய சில ஐந்தின் சிறப்பினைப் பார்த்தோம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐந்து என்ற எண் புதன் கிரகத்திற்குரியது.  இந்த புதனின் அதிதேவதை விஷ்ணு அதாவது ஸ்ரீரங்கநாதனே..!. புதன் நன்கு அமையப் பெற்றவர்
அதிபுத்திசாலிகள்.  கணிதத் திறமை, கணினித் திறமை,  கலைத்திறன் வாய்ந்தவர்கள்.ஆக்கப்பூர்வமானவர்கள்….!

ஐந்து என்ற எண் இயக்க சக்தி..! காலில் மற்றும் கைகளில் உள்ள ஐந்து விரல்களின் இயக்கத்தினால் தான் ஒரு செயலை தடையின்றி செய்ய முடிகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வலிமைக் குன்றியவர்கள்,  மற்றும் நம்முடைய ஜாதகரீதியாக
புதன் மேலும் வலிமைப் பெற ஸ்ரீரெங்கநாதனை வணங்குபவர்கள் நீங்கப் பெறுவர்.

சயனம்‘சயனம்’ என்றால் ‘நித்திரை’  அல்லது ‘உறங்குதல்’ என்று பொருள்.  இது ஒரு தற்காலிக விடுதலை..! இது ஒரு வரப்பிரஸாதம்..!  இது சரிவர அமையப்பெறாதவர் அனைவரும் துர்பாக்கியசாலிகளே..!  இது ஜாதகத்தின் 12ம் இடமாகும்.  இந்த இடம் கெட்டிருந்தால் அந்த ஜாதகரின் நிம்மதியான நித்திரை என்பது சந்தேகமே..!சயனம் கொண்டிருக்கும் பகவானை அனுதினமும் ஸேவிக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்..!  நிம்மதியாக வாழ்வர்..!

பஞ்ச சயன ரங்கம்

ரங்கம் என்றால் அரங்கம்.  இந்த அரங்கமானது பாம்பணையின் மிருதுவான பள்ளிக்கட்டிலின் மேல்பரப்பு.  இங்கு பள்ளிக்கொண்டு உறங்குபவன் அரங்கன். அரங்கன் என்றாலே அழகு..!  இதனை நான் சொல்லவில்லை..!  ஆண்டாளின் திருவாயினால் கேட்போம்..!  ஆண்டாளுக்கு 108 திவ்யதேச எம்பெருமான்களில்  அரங்கனின் அழகுமட்டுமே நெஞ்சைக்கவர்கிறது…!

எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரேஎன்று பாடுகிறாள். 

01.ஸ்ரீரங்கம்.

வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!

வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..!

எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..!  அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை.

ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால் தான் வைணவத்திற்கு சிறப்பு..!

இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..!

அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!

இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள் புரிபவள்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகர்
“அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம்.
தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில்.
வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..!
செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.

இங்கே பெருமாள் “புஜங்க சயனம்”  –
விமானம் ப்ரணவாக்ருதி விமானம்.
தாயார் – ஸ்ரீரெங்கநாயகி.

எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் – ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்….“  என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர்.
இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள்.   இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!
இங்குள்ள தீர்த்தம்   சந்திரபுஷ்கரிணி தீர்த்தம்.
தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம்.
இந்த அரங்கன் தர்வவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.
இன்னமும் மெய்யன்போடு  இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன்.
தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள்.
இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது.
அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..!  உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..!  அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு

——–

02. உத்தமர் கோவில்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம்.
ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட ஸ்தலம் –
ஆழ்வார் மீது – ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.
ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹா லக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார்.
இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.
தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம் தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..?
கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர்.
கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.

இங்கு பெருமாள் புஜங்க சயனம் – கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.
விமானம் உத்யோக விமானம்.
தீர்த்தம் கதம்ப தீர்த்தம்.
ப்ரத்யக்ஷம் கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ
மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் – ஒரு பாடல்
ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த ஸ்தலம்.
பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும்

———–

03. கோபுரப்பட்டி
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.
இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.
அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் – இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.
வைணவம் காத்த ஊர் – வைணவம் வளர்த்த ஊர்.

ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.

பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்
தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்
சயனம் பால சயனம்
தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.
அர்ச்சகரின் அலைபேசி எண் +91 98655 56504.
வழி மண்ணச்சநல்லுார் – அழகிய மணவாளம் – கோபுரப்பட்டி

வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:

வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:

வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:

வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!
யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!. வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!. அவரே பரமஞானம்! கடும்தவமும் அவரை அறிவதற்கே!
மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..! எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..! வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!

03. திருஅன்பில்
கோபுரப்பட்டியினை தரிசித்தபின், சுமார் 1 கி.மீ தொலைவில் ’அழகிய மணவாளம்’ என்னும் திருத்தலம் உள்ளது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பித்துச் செல்கையில், இங்கு சிலகாலம் தங்கி சென்றதாக வரலாறு. நல்ல ஆகுரிதியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வீர் பின்னர் அருகில் சுமார் 2 கி.மீ தொலைவில்தான் “திருவெள்ளரை“ எனும் மிகவும் புராதனமான திவ்யதேசம் உள்ளது. இந்த திவ்யதேச பெருமாளையும் சேவித்து அங்கிருந்து திரும்பவும் மண்ணச்சநல்லுார் வழியாக டோல்கேட் அடைந்து இலால்குடி செல்லும் பாதையில் பயணித்து “திருஅன்பில்“ என்னும் நான்காவது சயனம் கொண்ட அரங்கனைத் தரிசிக்கலாம்

அறியாமல் செய்த பாபத்தினி்ன்று கூட தப்பி விடலாம். ஆனால் ஒருவர் சாபத்திலிருந்து விடுதலை பெறுதல் மிகவும் கடினம். ரிஷிகளின் காலத்தில் சாபங்களுக்கும், சாபவிமோசனங்களுக்கும் குறைவேயில்லை. ஒரு மகரிஷி தாம் பெற்ற சாபத்தினால் தவளையாகவே மாறிவிட்டார். தவியாய் தவித்தார். இத்தலத்து பெருமாள்தான் அவருக்கு சாபத்தினின்று விடுதலை அளித்தவர். “மண்டூகம்“ என்றால் சமஸ்கிருதத்தில் ‘தவளை’ என்று அர்த்தம். அந்த மகரிஷி இந்த சாபவிமோசனத்திற்குப் பிறகு ‘மண்டூக மகரிஷி’ என்றே அழைக்கப்பெற்றார். இந்த மகரிஷி தன் சாபவிமோசனம் பெற நித்யமும் நீராடிய குளம் ”மண்டூக புஷ்கரிணி’ என்று அழைக்கப்படுகின்றது. மகாசாபத்தினைப் போக்கிய இந்த புஷ்கரிணியும் பெருமாளும் நம் பாபத்தினைத் தொலையச் செய்ய மாட்டார்களா என்ன..? நம் முற்பிறவி பாபத்தினையும் சேர்த்துக் கண்டிப்பாக போக்குவார். இத்தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. மூன்று நதிகள் இணையும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். இந்த சங்கமம் நம் சங்கடங்களை போக்கும். சாபங்கள், பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும். இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் காவிரி, பல்குணி, சாவித்ரி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமம் ஆகுவதாக புராணங்கள் சொல்கின்றன. பல்குணியும், சாவித்ரியும் கீழே பாதாளத்தில் ஓடுவதாக கூறுகின்றது.. இந்த க்ஷேத்திரத்தினை “தக்ஷிண கயா“ என்றழைப்பர். கயா சென்ற பலனை இத்தலத்தில் நீராடி தரிசித்தால் அடைவோம்.
வால்மீகி ரிஷி இங்குதான் அவதரித்து பின்னர் வடநாடு சென்றார் என்பர். கம்பரும், ஓளவையாரும் இத்தலத்துப் பெருமாளை வழிப்பட்டிருக்கின்றார்கள்.
திருமழிசை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமிது.
பெருமாள் : வடிவழகிய நம்பி (சௌந்தரராஜன்)
தாயார் : அழகிய வல்லித் தாயார்
விமானம் : தாரக விமானம்
சயனம் : புஜங்க சயனம..

05. திருப்பேர்நகர் என்னும் கோவிலடி

பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம். திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.  அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.

‘இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய  உணர்தலுற்றேனே!’  – நம்மாழ்வார் திருவாய்மொழி

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
“இருப்பேன்” அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!”    – நம்மாழ்வார் திருவாய்மொழி

பெருமாள், “இந்த இடத்தை விட்டு பெயரேன்“ எனவருளியதால், ‘திருப்பேர்நகர்’ என்று பெயர்க்காரணம் .   நம்மாழ்வார் இந்த பெருமாளை தரிசித்தபின் “…அமுதுண்டு களித்தேனே…“ என்கின்றார்.  ஆம் இந்த அமுதம் நம் பிணி போக்கும் அமுதம். நம் பசி, நம்மை சுற்றியுள்ளோரின் பசியாற்றும் அமுதம்.  நம் பாபம் போக்கும் அமுதம். நமக்கு அழிவில்லா மோக்ஷானந்ததை காட்டிக்கொடுக்கும் அமுதம்! சோழ தேசத்தின் வழியாக கோயில் என்னும் திருவரங்கத்திற்குள் பக்தர்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில்  இருப்பதால் இந்த திவ்யதேசம் கோயிலடி என்று பெயர்பெற்றது! நம் மன இருளின் நடுவே ஜீவாத்மாவிற்கு சுஷும்னா நாடியை காட்டிக்கொடுக்கும் பேரொளியாய்!, பேரேன்! என்று உள்ளத்தினுள் இருக்கும் அந்தர்யாமியாக, நம் நெஞ்சுக்குள் நிறைபவரே இந்த திருபேர்நகர் எம்பெருமான்!.  நாம் ஸ்ரீவைகுண்டம் புகுவதற்கு ஆணிவேராய் உதவும் பெருமாள் இவர்!   எப்படி ஜீவாத்மா ஸ்ரீவைகுண்டம் அடைவதற்கு முதலடியாய் அந்தர்யாமி துனைபுரிகிராரோ! அப்படியே நாம் பூலோக வைகுண்டமான திருவரங்கம் புக துனைபுரிகிறார் இந்த பெருமாள்!  இந்த பெருமாள்,   பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்ஈ திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (33 பாசுரங்கள) ஆகியோரால் கொண்டாடப்பட்டவர்.

மேற்கு நோக்கி சயனம்.  தாயார் கமலவல்லித் தாயார்.  விமானம் – இந்திரவிமானம்.

தீர்த்தம்  காவிரி.

இங்கு இத்தலத்துப் பெருமாள் காவிரியின் கரையில், ஒரு கையினை அப்பக்குடத்தின் மேல் வைத்தப்படி, காவிரியன்னையின் தாலாட்டு அரவணைப்பில் குளர்ச்சியாய் பள்ளி கொண்டருளுகின்றார். எப்போதும் நதிதீரத்தில் குளிர பள்ளி கொள்ளும் இப்பெருமாளை வணங்குவோர் வாழ்வுதனையும் இத்தலத்து பெருமாள் குளிரக் கடாக்ஷிக்கின்றார்.  காவிரி கரையின் ஓரமாக ஒரு முறை பயணித்து இந்த பெருமாளையும் தரிசியுங்கள.வாழ்வில் உய்வு பெறுதல் திண்ணம்..!

—————

பஞ்ச ராமர் தலங்கள் – பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.

இத் தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன.

இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன. 

முடிகொண்டான் ராமர் கோயில்
அதம்பார் கோதண்டராமர் கோயில்
பருத்தியூர் ராமர் கோயில்
தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
வடுவூர் கோதண்டராமர் கோயில்

உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு.

இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு.

இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை.

அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்திவாய்ந்த ஆலயங்களாகும்.

இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.

அருள்மிகு தில்லை விளாகம் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர்தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.

அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார். 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு ‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர்.

1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் தை, ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

நடராஜருக்கும் இந்தக் கோவிலில் சந்நிதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமார் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்டஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தாலுகாவில் உள்ளது. வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குப் புறப்படத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர்.

இராமர் தன் உருவத்தை சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, இராமபிரானிடம், “இராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,”என்றனர்.

சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையைத் தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையைக் கொடுத்துவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.

தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜா தலைஞாயிறு எனும் இடத்தில், அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாகக் கனவு கண்டார். அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான இராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டை செய்தார்.

இந்த வடுவூர் இராமர் பேரழகு. பிராகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இந்த ஆலயந்தின் கோவில் குளம் ஸ்ரீ சரயு தீர்த்தம். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர்.

தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். இராமாயணச் சொற்பொழிவுகள் செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை.

ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது.

தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார்.

இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம்.

இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது.

இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம்.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான்.

ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல்தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் இராமர், சீதை, லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார்.

இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சனேயர் இல்லை. இராமரின் வருகை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சனேயர் சென்று விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்க பரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் இராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம்.

ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சந்நிதி உள்ளது. பரத்வாஜர் இராமனுக்கு முடிசூடியதைப் பார்க்காததால் அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சந்நிதி உள்ளது. இந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது.

சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இந்த அதம்பார் கிராமத்தின் அருகில் தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி, என்ற சிறிய கிராமங்கள் இராமாயணத்துடன் தொடர்புடையவை. தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம், அழகிய மானை சீதை பார்த்த இடம் நல்லமான்குடி, மான் வலப்புறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான், மாயா மாரீசன் என்று அறிந்து, அதனை வதம்(ஹதம்) செய்ய முடிவெடுத்த இடம் அதம்பார், மானைக் கொன்ற இடம் கொல்லுமாங்குடி, தன் பாத அணிகலன்களை சீதை கழற்றிய அடையாளம் காட்டிய இடம் பாடகச்சேரி. தெளிவாக சிந்தித்து மாரீசனைக் கொல்ல (ஹதம் செய்ய) முடிவு செய்தஇடத்தில் அதம்பார் இராமர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலின் விக்ரஹங்கள் ஸ்ரீராமர், சீதை. லக்ஷ்மணர், ஆஞ்சனேயர், மான் உருவில் மாரீசன் மற்றும் பிரதான மூலவர் அதம்பார் வரதராஜப் பெருமாள். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் பிரசித்தம்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

புத்திர் பலம் – அறிவில் வலிமை
யசோ – புகழ்
தைர்யம் – துணிவு(பொறுமை)
நிர்பயத்வம் – பயமின்மை
அரோகதா – நோயின்மை
அஜாட்யம் – ஊக்கம்
வாக் படுத்வம் – பேச்சு வலிமை
ச – இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால்
பவேத் – பிறக்கின்றன.

அஷ்ட ஸித்திகளும் கிட்டுமே

அறிவுக் கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத் திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன.

————

 

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்

திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை.

கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார்.

சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.

கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ‌ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.

108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது.

ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது.

திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.

இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது.

திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.

திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.

இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும்.

இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.

இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.

பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை

இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.

பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது.

திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.

திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.

இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார்.

வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

கஜேந்திர வரதப்பெருமாள், கபிஸ்தலம்

இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான்.

அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான்.

கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.

திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார்.

இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.

ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்

இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள்.

இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம்.

இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார்.

இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.

பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.

நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.

—————–

காயாம் பூ அரணங்கள்

“ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம் கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க் காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப் பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக் காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது

கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப் போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) “ஆதி மூலமே” எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். “ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்” எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.

கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். “கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்” என்பது திருமங்கையாரின் வாக்கு.

கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப் போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.

கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,”நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்” என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், “ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக” என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,”வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு” என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.

திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. “வையம் தகளியாய்” என்று பொய்கையாரும், “அன்பே தகளியாய்” என்று பூதத்தாரும், “திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.

——————

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1) மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2) மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில் செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க, செழுங் கோயில் அரையர்(4) வந்து
“எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை எங்கள் முனம் பொய்யா ன..தோ?”(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், “நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?” என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

1. கீழ்வீடு – 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் – மால்மேகன்

2. வளநாடன் – சோழன்
3. சென்னி – பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் – திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. “பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?” என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் – கைத்தாளம்
7. திகிரி – சக்கரம்.

—————

வரையாத அழகோடு, வடிவான உருவோடு, வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும், பழிக்கின்ற பருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள் புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும் புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில் நுழையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை, நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி கண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

புரைதல் – ஒப்புதல், பொருந்துதல்;
புரையாத திருமகள் – ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்;
கரையோடு ஊருலவும் திரு மேனி – கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம்(ப்ழைய கதை) உண்டு. இந்தத் தோற்றரவில்(அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. பெருமாள், பத்மினி நாச்சியாரைக் கைப்பிடிக்கும் விழா, கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் நடக்கிறது. மீனவனாய் மாற்றிச் சரம்(கைலி) கட்டி, பெருமாளின் ஊருலவுத் திருமேனி(உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். அங்கே, கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். இப்படி,”எங்கள் மாப்பிள்ளை” என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சிலகாலம் வரை இருந்திருக்கின்றது.

———-

“பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில் படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன் பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோடும், திகிரியொடும், செறி முழங்கு சங்கமொடும், செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் செளரியிலே வீழ்ந்தது எனச் செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம் மாலையினை அழகு பார்த்த
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய், வரி தவழச் செளரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப்(ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு என இருந்த மாலையையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடுநாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையிலொன்றிரண்டு முடியிழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, “ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டு இருக்கிறது” என்று மற்றவர்கள் பதறி மன்னனிடம் சொல்ல, அவன் பட்டரிடம் வினவ,”பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்” என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் தான் செய்கிற புரிசையில் தவறாத பட்டர் “அந்த முடியிழை பெருமாளுடைய செளரியில் இருந்துதான் வந்தது” என்று அடித்துச் சொல்ல, பக்தன் சொல்லியதை மெய்ப்பிப்பதுபோல், செளரி கொண்டு பெருமாள் காட்சியளித்துக் காத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டுவிடும் கரிய அழகு. எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீலமேகர். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. சீதேவி, பூதேவி போக, பத்மினி, ஆண்டாள் என்னும் அவர்களுடைய தோற்றரவுகள்(அவதாரங்கள்) ஆக தேவியர் நால்வர். ஊருலவரோடு(உற்சவருக்கு) நாலு நாச்சியார்களையும் அருகே வைத்துத் தான் திருமஞ்சனம் செய்வார்கள்.

————

தமிழ்நாட்டின் மாயவரம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர்  ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.  ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார். அவர் கள்ளர் எனும் பிரிவில் பிறந்தவர். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் எனும் ஊரில் பிறந்தவர்.

சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் உண்மையில் யார்?

சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்குறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அந்த நகரை நிர்வாகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருளினால் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்து வளர்த்தாலும், படை வீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை என்பதினால் அதற்கு பல்வேறு சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்தார்கள். ஆகவே சிறு வயது முதலே அது யுத்தக் கலையில் சிறந்து விளங்கியது. அதனால்  ஒரே நேரத்தில் யானை, குதிரை, காலாட்டுப் படை என அனைத்து படைகளையும் திறமையுடன் அவரால் கையாள முடிந்தது. அவருடைய திறமையைக் குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் அவரை அழைத்து வந்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். அவர் யுத்தங்களில் எதிரிகளை சுலபமாக வீழ்த்தி கொன்று வந்ததால் அவரை காலன் என அழைத்தார்கள். காலன் என்பது அனைவர் உயிரையும் பறிக்கும் எம தர்மராஜரைக் குறிக்கும் பெயர். அவர் திறமையினால் அவர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள்.

திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர். அவருக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் பூமியில் மனிதராகப் பிறந்து வைஷ்ணவத்தை பரப்ப வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் பூமியில் மனித உருவில் அவதரித்து இருந்த இன்னொரு தேவ கன்னிகையின் சாபத்தையும் விலக்க வேண்டும் எனவும் தெய்வ நியதி இருந்தது. அந்த தேவலோக மங்கையோ ஒருமுறை தேவலோகத்தில் கபில முனிவருடன் இருந்த அவலட்ஷணமான தோற்றத்தைக் கொண்ட இன்னொரு முனிவரை பரிகாசம் செய்ததினால் கோபமுற்ற கபில முனிவரின் சாபத்தைப் பெற வேண்டி இருந்தது. தான் செய்த தவறுக்கு அந்த தேவ கன்னிகை கபிலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதினால் அவர் தனது சாபத்தை மாற்றி அமைத்தார். அதன்படி அவள் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து அங்கிருக்கும் வேறொரு பிரிவை சார்ந்த ஒரு படைத் தலைவரை மணந்து கொண்டு அவரை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் மூலம் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவளுக்கு கிடைத்த சாபம் விலகும் என்றார்.

அந்த தெய்வ நியதியின்படி அவர்கள் இருவரும் திருமங்கை மன்னன் மற்றும் குமுதவல்லியாக பூமியில் பிறந்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்  தெய்வ நியதிப்படி அவருக்கு அவள் ஒரு நிபந்தனை போட வேண்டி இருந்தது. அது என்ன எனில் குமுதவல்லி திருமங்கை மன்னனை மணக்க வேண்டும் எனில் திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.அவர்கள் கால்களை அலம்பி விட்ட பின் அந்த நீரில் சிறிது எடுத்து வந்து அவள்  தலை மீது தெளிக்க வேண்டும்.  அப்படி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அவளை திருமங்கை மன்னனால் மணக்க முடியும். திருமங்கை மன்னனும் அவள் கூறிய நிபந்தனையை ஏற்று அதை செய்து வர இருவருக்கும் திருமணம் நடந்தது. இப்படியாக ஆன்மீக உலகில் திருமங்கை ஆழ்வாரை ஆன்மீகத்தில் நுழைந்து விட்டால் அவர் மூலம் வைஷ்ணவத்தை பரப்பி அந்த ஷேத்திரத்தில் ஐந்து நரசிம்ம அவதாரத்தில் தானும் காட்சி தரலாம் என விஷ்ணு பகவான் எண்ணினார்.

திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததினால் அவருடைய கஜானாவும் காலி ஆயிற்று. சோழ மன்னனும் திருமங்கை மன்னன் தனக்குத்  தர வேண்டிய கப்பத் தொகையை தராமல் இருந்ததினால் மிச்சம் மீதி இருந்த அவருடைய செல்வத்தை அவர் நாட்டில் இருந்து  எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆகவே பணம் இல்லாத நிலையை நிவர்த்தி செய்து கொள்ள திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்கத் துவங்கினார்.

திருமங்கை மன்னனின் நன் நடத்தையைக் கண்ட லட்சுமி தேவி அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணி  பகவான் விஷ்ணுவிடம் கேட்டபோது அவர் அவளை சற்று நாட்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறினார். அதன் பின் ஒரு சிறிய நாடகம் நடைபெற்றது. ஒருநாள் திருமால் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் புதியதாக மணம் செய்து கொண்ட தம்பதி போல உரு எடுத்து உடம்பில் பல்வேறு நகைகளை அணிந்து கொண்டு திருமங்கை மன்னன் ஆண்டு கொண்டு இருந்த இடத்தின் காட்டு வழியே சென்றார். அவர்களைக் கண்ட திருமங்கை மன்னன் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கொள்ளை அடித்தார். ஆனால் அந்த நகைகளை அவரால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அவை கனத்தன . அதன் காரணம் அந்த நகைகள் அனைத்துமே சில மந்திரங்களினால் கட்டடப்பட்டு இருந்தது என்பதே. ஆகவே அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு நகைகளை எளிதில் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்த திருமங்கை மன்னனுக்கு அந்த மந்திரத்தை போதிப்பதாக மாற்று உருவில் இருந்த திருமால் கூற அதை காது கொடுத்து கேட்க அவர் அருகில் சென்ற திருமங்கை மன்னன் காதில் மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல தோத்திரங்களை பாடத் துவங்கினார். அதன் பின் சில காலத்திலேயே அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை இயற்றத் துவங்கினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற ஹிரண்யகசிபுவின் வதமும் நிகழ்ந்தது. அதைக் கண்ட திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அவை உள்ள இடங்கள்:

  • குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்
  • மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்
  • திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்

(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள். ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த  திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய  ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.

(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.

(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.

(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள  ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார். இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது. ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன. அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார். அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி  மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் என்பதாக பண்டிதர் கூறினார்.

——————

திருக்குருகூர் பஞ்ச க்ஷேத்ரம் என்பர்

குருகு -பறவை சங்கு -சங்கன் வழி பட்ட துறை சங்கணித்துறை -தீர்த்த க்ஷேத்ரம்
குரு -க -அத்ர -மதர்சனம் -நான்முகன் வழி பட்ட -பிரளயம் பின்பு முதலில் தோன்றிய க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம்
சாளக்ராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இகழ -ஆச்சார்யர் சாபத்தால்
தாந்தன் என்ற இழி பிறப்பில் புல் வெட்டி ஜீவனம் செய்பவனாக
முன் செய்த புண்ய பலத்தால் இங்கே பிறக்க வடகரையில் இருந்து ஆதிநாதரை வழி பட்டு வீடு பேறு பெற்றதால் தாந்த க்ஷேத்ரம்
அர்த்த மண்டபத்தில் முதல் படிக்கட்டில் தான்தான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
அவன் புல் வெட்டி ஜீவனம் செய்த ஸ்தலம் அப்பன் கோயில் -ஆழ்வார் அவதாரம் -இதுவே செம் பொன் மாடத் திரு குருகூர் என்பர்
வராஹ மூர்த்தி முனிவர்களுக்கு தர்சனம் கொடுத்ததால் -இங்கு ஞானப்பிரான் சந்நிதி -வராஹ க்ஷேத்ரம்
திருப்புளி ஆழ்வார் -சேஷ க்ஷேத்ரம்

ஆக -தீர்த்த க்ஷேத்ரம்-ஆதி க்ஷேத்ரம்-தாந்த க்ஷேத்ரம்-வராஹ க்ஷேத்ரம்-சேஷ க்ஷேத்ரம்-பஞ்ச க்ஷேத்ரம் இது

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பதினெட்டின் பெருமை –ஸ்ரீ கல் கருடனின் மஹிமை —

December 23, 2022

ஸ்ரீ சுதர்சனாழ்வார் – ஹேதீஶ்வரர் – எல்லா ஆயுதங்களுக்கும் ராஜா அவர். 8,16,32 என்ற எண் வரிசையில் காட்சி அளிக்கிறார்.

சில ஆகமங்களில் 8,16,32 ஆயுதங்களுடன் சக்க்ரத்தாழ்வாரை ப்ரதிஷ்டை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரங்கத்தில் 32 என்ற எண் கணக்கில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம்.

அங்கு இருக்கும் 32 பேர் சக்கரத்தாழ்வாரின் 32 ஆயுத மூர்த்திகளாக இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் நித்ய ஸூரிகள், அவர்கள் சுதர்சனாழ்வார் போல் ஆயுத ரூபம் தரித்துப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணுகிறார்கள்.

ஆக, ஸ்ரீரங்கத்தில் உள்ள சுதர்சனாழ்வார் மூலவரைச் சுற்றி ஆயுத மூர்த்திகள் உள்ளனர் எனத் தெரிகிறது.

சுதர்சன ஆழ்வார் 8 பூஜங்களுடனும் 8 ஆயுதங்களுடனும் இருக்கின்றார். எல்லா ஆயுதங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். அதை காண்பிக்கும் படியாக 8 பூஜங்களில் 8 ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றார். 8 என்பது உபலக்ஷணம் தான்.

32 என்பது ஸம்ப்ரதாயத்தில் விசேஷமானது. வேதம், இதிஹாச புராணங்களில் இதன் சிறப்புக் காணப்படுகிறது.

நடாதூர் அம்மாள் இயற்றிய ஹேதி புங்கவஸ்தவத்தில் 32 வரிகள்.‌ ஒவ்வொரு வரியும் ஜய என்கின்ற சப்தத்தில் ஆரம்பமாகின்றது.

இதைப் பின்பற்றி ஸ்வாமி தேசிகனும் சுதர்ஶனாஷ்டகத்தில் 32 முறை உபயோகப்படுத்தி இருக்கின்றார். ஒரு ஶ்லோகத்தின் உடைய கடைசியில் நான்கு முறை ஜய வருகின்றது. 8 ஶ்லோகம் என்பதால் 32 கணக்காகின்றது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

—————————-

ராமாயணத்தில் 18 சர்க்கம் திருப்பு முனையாக இருக்கும்
பால காண்டத்தில் ராமாவதாரம்
அயோத்யா காண்டத்தில் கைகேயி வரம்
ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகை முக்கு அறுபட்டது
கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வதம்
ஸூ ந்தர காண்டத்தில் திருவடி சீதாப்பிராட்டியைக் காண்பது
யுத்த காண்டத்தில் இந்திரஜித்தை கொல்லும் ரஹஸ்யத்தை விபீஷணன் தெரிவித்தல்
உத்தர காண்டத்தில் வேகவதியின் சாபம்
ஆக அனைத்துமே ராவண வத நோக்குக்கே அமைந்தவை –

——————————-

மகாபாரதத்தை பொறுத்தவரை பருவங்கள் 18.
கீதையின் அத்தியாயங்கள் 18.
பாரதப் போர் 18, நாட்கள் நடைபெற்றது.
பாரதப்போரில் கலந்துகொண்ட படைகள் 18 அக்குரோணிகள்.
ஓரு அக்குரோணி என்பது ….
தேர்கள் 21870 : 2+1+8+7+0 = 18,
யானைகள்  21870 : 2+1+8+7+0 = 18,
குதிரைகள் 65610 : 6+5+6+1+0 = 18
வீரர்கள் 109350 : 1+0+9+3+5+0 = 18,
இவற்றின் மொத்தக் கூட்டுத்தொகை: 218700 : 2+1+8+7+0+0 = 18
தர்மருக்கு பீஷ்மர் உபதேசம் செய்த ராஜ தர்மங்கள் 18
அரசர் வழங்கவேண்டிய தண்டனைகள் 18
இராமாயணப்போர் 18 மாதங்கள் நடைபெற்றது.
தேவ அரசுப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது.
சபரிமலையின் படிக்கட்டுக்கள் 18
புராணங்கள் 18
கலம்பகத்தின் உறுப்புக்கள் 18
நூல்களை பதினெண் மேல் கணக்கு என்றும், பதினெண் கீழ்க்கணக்குகள் என்றும் பதினெட்டு பதினெட்டாக வகைப்படுத்தினர்.
சித்தர்கள் 18.
வேதத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் 18
ஆடிமாதம் 18ம் நாளை விதையிடச் சிறந்த நாளாகக் கொண்டு பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர்..
18 – இந்த எண்ணில்தான் அதன் தசம எண்களைக் கூட்டினால் (1+8)
வரும் எண் 9. 18-ஐ இரண்டாகப் பகுத்தாலும் 9.
வேறு எந்த எண்ணிலும் இந்தப் பண்பு இல்லை.
18 -> 1+8 = 9. 9 X 2 = 18.
18 108 (அஷ்டோத்தரம்), 1008 (சஹஸ்ரநாமம்) என விரியும்.
10, 100, 1000 – முன்பு தனித்தனிச் சின்னங்களாக எழுதுவது வழக்கம்.
பின்னர் ஆதி எண்ணான எட்டைச் சேர்த்துகிறோம்
ஒன்பதிற்றிரட்டி – பதினெட்டுக்கு-முதன்மை தந்து பேசுவார் இளங்கோவடிகள் :
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட் டுவன்..
தத்துவங்கள், ‘பதினெட்டு’
தமிழ் மெய் எழுத்துகள், ‘பதினெட்டு’
இலக்கியங்கள், ‘பதினெட்டு’
இணையில்லா சித்தர்கள், ‘பதினெட்டு’
இப்படி பதினெட்டின் பெருமைகளை பாங்காக பட்டியலிடலாம்!

குழந்தைகள் பேசும் மழலை மொழிக்கு செவிகொடுக்காத தாயும் உலகில் உண்டோ! குழந்தைகளின் குரலுக்கு இரங்காத ஒரு தாய் உலகில் உண்டோ? அதிலும் பெரும் பாரத நாட்டிற்கே அரசியான கோமகளுக்கு அந்த நிலை வருமா? என்று கவிஞர் கேட்கிறார். பாரதி காலத்தின் கணக்குப்படி பாரத மக்களின் மொழிகள் மொத்தம் பதினெட்டு. இன்றும் அம்மொழிகள் பாரத மக்களால் பேசப்பட்டும், வளர்க்கப் பட்டும் வருகின்றன. பாரத மக்கள் தங்களுடைய பதினெட்டு மொழிகளிலும் பாரத அன்னையைப் புகழ்ந்து, பாராட்டிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெருமை வேறு எந்த நாட்டிற்கு இருக்கிறது? அன்புடன் வந்து எங்களை ஆண்டு அருள் செய்வாயாக! ஈன்றவளே! உனது உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களைக் காப்பாயாக! என்று மகாகவி பாரதி பாடுவது நம் அனைவரின் உள்ளத்தை உருக்குவதாகும்.

மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை பொழிக்கிரங்கா தொரு தாயோ? கோமகளே! பெரும் பாரதர்க்கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்தெமை ஆண்டருள் செய்வாய் ஈன்றவளே! பள்ளி யெழுந்தருளாயே!

என்று பாரதி பாடி பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி முடிக்கிறார்.

பழந்தமிழ்ச் சமுதாயத்தில் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்எண் எழுத்து இகழேல் என்ற கூற்றுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கணித மேதை ஆரியபட்டரின் கண்டுபிடிப்பான பூச்சியம் ,கணித உலகுக்குக் கிடைத்த பெரிய வரம்.

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:

1.காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2.குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3.லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4.மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5.மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6.டம்பம் (வீண் பெருமை):
இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும்.அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7.அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8.சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9.ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10.தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 11.ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12.மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். 13.அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். 14.கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15.காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16.மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17.நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 18.மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

———–

1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.

கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.

வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி

“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.

பத்மம் என்றால் லட்சம்-கோடி, அதாவது 1012. பிரம்மாவின் ஒரு பகல் 432 கோடி மனித ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்து 824 x 107 ஆண்டுகள்

நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;

சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.

பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்

ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.

உலோகவியல்

4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.

பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

———–

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்” என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா” என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா” என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?” என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு” என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா… ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறாய்?” என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?” மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்” என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.”

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்” என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?” என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப் பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்று விடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்து கொண்டே வரும்” என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்” என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதச நாம ஸ்தோத்ரம்–ருண விமோசன ஸ்தோத்ரம்

December 23, 2022
ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதச நாம ஸ்தோத்ரம்
ப்ரதமஸ்து  மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து  விதாரண :
பஞ்சாஸ்ய :  பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந  :
ஸப்தமோ  தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :
த்வாதஸைதாநி  நாமாநி
ந்ருஸிம்ஹஸ்ய  மஹாத்மந :

ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

த்⁴யானம்

வாகீ³ஸா யஸ்ய வத³னே லக்ஷ்மீர்யஸ்ய ச வக்ஷஸி |
யஸ்யாஸ்தே ஹ்ருத³யே ஸம்வித் தம் ந்ருஸிம்ஹமஹம் ப⁴ஜே ||

ஸ்தோத்ரம்

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 1 ||

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் ப⁴க்தானாம் வரதா³யகம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||

ஆந்த்ரமாலாத⁴ரம் ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் கத்³ரூஜவிஷநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||

ஸிம்ஹநாதே³ன மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||

ப்ரஹ்லாத³வரத³ம் ஶ்ரீஶம் தை³த்யேஶ்வரவிதா³ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||

ய இத³ம் பட²தே நித்யம் ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் |
அந்ருணே ஜாயதே ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத் || 9 ||

இதி ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

———–

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 1 ||

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்காக
ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |-தூணில் இருந்து அரண்மனையில் சம்பவித்தது அருளின
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருணம் உக்தயே–அடியேனுடைய ருணம் -கடன் -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் ப⁴க்தானாம் வரதா³யகம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் -பிராட்டியார் இடது பக்கம் ஆலிங்கனம் செய்து அருளுகிறார்
ப⁴க்தானாம் வரதா³யகம் |–ஆஸ்ரியர்களுடைய அபேக்ஷித்ங்களை நிறைவேற்றி அருளுகிறீர்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -அடியேனுடைய ருணம் -கடன் -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

——–

ஆந்த்ரமாலாத⁴ரம் ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||

ஆந்த்ரமாலாத⁴ரம் -ஹிரண்யணாதிகள் மார்பகங்களையே மாலையாகத் தரித்தவனே
ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் –திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாமரை மற்றைய திவ்ய ஆயுதங்களைத் தரித்தவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே-பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———–

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் கத்³ரூஜவிஷநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் -ஸங்கல்ப லேச மாத்ரத்திலே ஸமஸ்த பாபங்களையும் போக்கி அருளுபவனே
கத்³ரூஜவிஷநாஶனம் -ஸமஸ்த நாக விஷங்களுக்கும் விஷமானவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————————–

ஸிம்ஹநாதே³ன மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||

ஸிம்ஹநாதே³ன -உமது ஸிம்ஹ கர்ஜனை நாதத்தாலேயே
மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் –திக் கஜங்களின் பயங்களைப் போக்கி அருளுபவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———

ப்ரஹ்லாத³வரத³ம் ஶ்ரீஶம் தை³த்யேஶ்வரவிதா³ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||

ப்ரஹ்லாத³வரத³ம் -ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அன்பனாகவே
ஶ்ரீஶம் -மாலோல நரஸிம்ஹ மூர்த்தியே
தை³த்யேஶ்வரவிதா³ரிணம் -அஸூர நிரசன சீலனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————–

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் -க்ரூர நவக்ரஹங்களின் பிபியில் இருந்து
ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் -பக்தர்களை ரக்ஷித்து அபய பிரதம் அளிப்பவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———–

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் -வேத வேதாந்த யாகங்கள் அனைத்துக்கும் பிரபுவே
ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம்-ப்ரஹ்ம ருத்ராதிகளால் ஆஸ்ரயிக்கப்படுபவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————-

ய இத³ம் பட²தே நித்யம் ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் |
அந்ருணே ஜாயதே ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத் || 9 ||

ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் -பிரதிபந்தங்கள் அனைத்தும் போகப் பெற
ய இத³ம் பட²தே நித்யம் -இந்த ஸ்தோத்ரத்தை நித்யம் செய்பவர்களுக்கு
அந்ருணே ஜாயதே -அவை அனைத்தும் போகப் பெற்று
ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத்-ஸத்ய செல்வம் ஸீக்ரமாகப் பெற்று ஜீவனமும் உஜ்ஜீவனமும் பெறுவார்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கீசுகீசு என்று எங்கும் —

December 22, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
பகவத் விஷயத்தில் சுவடு அறிந்தே -நாயகப் பெண் பிள்ளாய் –
மறந்து கிடக்கிறாள் ஒருத்தியை -பேய்ப் பெண்ணே-எழுப்புகிறார்கள் –

ஆறாம் பாட்டில் –
பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று –
இதில்
பழையவளாய் இருந்து வைத்து புதுமை பாவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

சிலரை எழுப்பினால் எழுந்து இருக்கிறவர்களைக் கொண்டு
கிருஷ்ணன் பாடு போகிறோம் -என்னுமவர்கள் அன்று இறே –
எல்லார்க்கும் நன்மை வேண்டும் என்று இருக்குமவர்கள் இறே

பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமா போலே எல்லாருடைய ஸம்ருத்திக்கும் உகக்க வேணும் இறே

அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -(2-3-10)–என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை-(10-9-10) என்றும் சொல்லுகிறபடியே
இக் குழாத்தில் இனிமை யுண்டானால் இறே அங்கும் இனிமை யுண்டாவது –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்பு அற்று
ஒளிகொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

வந்துஅவர் எதிர் கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம் இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்து அலர் பொழில்* குருகூர்ச் சடகோபன்* சொல்-
சந்தங்கள் ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே-10-9-10-

ஆட் கொண்ட வில்லி ஜீயர் எழுந்து அருளா நிற்கச் செய்தே-
நஞ்சீயர் தெண்டன் இட்டு நிற்க –
பகவத் விஷயத்தில் நமக்கு ருசி மெய்யாகப் பிறந்தது இல்லை காணும் -என்று அருளிச் செய்ய –
உம்மைப் போலே ஆச்சர்யவான்கள் யுண்டோ -இங்கனே அருளிச் செய்வான் என் என்ன –
பகவத் விஷயத்திலே மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது –
பாகவதர்களைக் கண்டால் உகக்கும் அன்று காணும் -என்று அருளிச் செய்தார் –

சிலரைச் சிலர் எழுப்பினால் -அவர்களைக் கொண்டு நோன்புக்கு போமவர்கள் அல்லரே இவர்கள் – பிறருடைய நன்மையே தங்களுக்கு பிரயோஜனம் என்று இருக்குமவர்கள் இறே
நாம் -வைஷ்ணவர்கள்-தந்தாமே சில நன்மைகள் சம்பாதித்துக் கொண்டாலும் பொறுக்க மாட்டோமே-
பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்தி
தன்னது என்று இருக்குமா போலே இருக்க வேணும் இறே
நாம் இவ்வர்த்தம் சொல்லுகை பறையர் ஒத்துச் சொல்லுமா போலே இறே
ஆசாரத்திலும் சிறிது உண்டாகா விடில் ஞானம் இல்லை என்னும் அத்தனை
ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்த வார்த்தைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –

ஸ்ரீ தேவி மங்கலத்திலே (மேல் கோட்டைக்கு அருகில் )கமுகிலே நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தை யுடைய சிலர் இருப்போரை யடைய அமுது செய்விக்கக் கண்டு
பட்டர் பிடாத்தை (முக்காடு )இட்டுக் கொண்டு ப்ரீதராய்
நம்முடைய கையில் சில மெய்யுண்டாய் அன்று -அடியிலே சில மெய்யர் யுண்டாய்
அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப் பேசுகிறது -என்று அருளிச் செய்தார் –
அடியார்கள் குழாங்களை– கூடுவது -என்றார்
யதாக்ரது ரஸ்மிந் லோகே புருஷ ததே த ப்ரேத்ய பவதி -என்கிற தத்க்ரது நியாயத்தாலே –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றார்
இங்கே இக் குழாம் இனிதானால் இறே அக் குழாம் ஸித்திப்பது-
கலியர் சோறுடையார் வாசலிலே சென்று கூப்பிடுமா போலே சென்று எழுப்புகிறார்கள்

கீழ் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் பழையளாய் இருந்து வைத்து புதுமை பாவித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறது –

இப் பாட்டில் பகவத் விஷயத்திலும்-பாகவத விஷயம் நன்று என்று அறிந்தும்
மறந்து இருப்பார் ஒருவரை எழுப்புகிறார்கள்

அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –

கலந்து பேசின பேச்சரவம்-
மத்தினால் ஓசைப்படுத்த – –
தயிர் அரவம் –
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் –
பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய்
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை விவேகித்து
தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும் படி சொல்லுகிறது

கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் இவ்வனுபவத்தை விஸ்மரித்துக் கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே
அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

—————-

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

வியாக்யானம் –
போது விடிந்தது -எழுந்து இராய் -என்ன –
விடிந்தமைக்கு அடையாளம் -என் -என்ன –
ஆனைச்சாத்தன் கீசுகீசு என்னா நின்றது –

கீசு -கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன்-அநஷர ரசமாய் இருக்கை
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் போது விடிந்ததாக வேணுமோ என்ன –
எங்கும் பேசா நின்றது என்ன –
அவற்றைக் கலக்குகைக்கு நீங்கள் உண்டே -என்ன
எங்களால் அன்று -தாமே உணர்ந்தன -என்ன
அதுக்கு அடையாளம் என் என்ன –
கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ-

கலந்து பேசினபடி அறிந்த படி என் -என்ன
பிரிந்து போனால் பகல் எல்லாம் தரிக்கும்படி கலந்து –
பிரியப் புகா நின்றோம் என்னும் தளர்த்தி தோற்ற பேசுகிற
மிடற்று ஓசை கேட்டிலையோ –
கேளாமைக்கு அங்கே ஆரவாரம் உண்டாயாகாதே செல்லுகிறது
என்று மர்மம் சொல்லுகிறார்கள் -கேட்டிலையோ -என்று –

கீழ்ச் சொன்ன
முனிவர்களும் யோகிகளும் -என்றதோடு –
ஆனைச் சாத்தான் -என்றதோடு –அவர்கள்
ஹரிர்ஹரி -என்றதோடு
இவை கீசு கீசு என்றதோடு வாசி அற எல்லாமே உத்தேச்யமாய் இருக்கிற படி –

கீசு கீசு –
இது அநக்ஷர ரசமாய் இருக்கிற படி –

(பாரத்வாஜர் மூன்று நூறு வருஷங்கள் வேதங்கள் கற்று முடிக்க முடியாமல் வேத சாரம் -சாவித்ரி வித்யை -திருப்பாவை–கற்றார் என்பர்
ப்ரஹ்ம முஹூர்த்தம் -ஆனைச் சாத்தன் ஒலியும் சேர்ந்து
ஆனையை நடத்திச் செல்லும்-walking – காலம்
வலியன் குருவி
கீசு கீசு கிச்சு கிச்சு கிருஷ்ணா கிருஷ்ணா-திருத்தாய் செம்போத்தே -என்று இத்தையே சொன்னதாம்
கீசு சுகீ அஹம் சுகீ -த்வம் சுகீ -மரா மரா –ராம போல் இங்கும்)

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-)திருமாலிருஞ்சோலை வண்டுகளும் ஆயிரம் நாமங்கள் சொல்வதாக பெரியாழ்வார் –

விவஷித்தால் திருநாமம் சொன்னதோடு
அநஷரமான இவற்றின் த்வனியோடு வாசியற உத்தேச்யமாய் இருக்கிறபடி
நாராயணாய என்றத்தோடு
நாராயண என்றத்தோடு வாசியற்று அவனுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே

இரவு எல்லாம் கலந்து மரக்கலம் ஏற்றுமவன் மீண்டு வரும் அளவும்
ஜீவனம் ஏற்றுக் கொண்டு போமா போலே
பகல் முப்பது நாழிகைக்கும் விளை நீர் அடைத்துக் கொண்டு
பிரிவு வருகிறது என்னும் தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு
விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –

கேட்டிலையோ–
இந்த த்வனி கேளாத படியோ -அங்கு ஓடுகிறது என் என்கிறார்கள் –
நிஸ்வனம் சக்ர வாகா நாம் நிஸம்ய புண்டரீக விசாலாக்ஷி –
(கிஷ்கிந்தா -பெருமாள் வார்த்தை -பிராட்டி இந்த ஒலி கேட்டு என்ன பாடு படுவாளோ )என்கிறபடியே –
இவற்றின் த்வனியைக் கேட்டால்-கடுக
கிருஷ்ணன் பக்கல் சென்று நிற்க வேண்டாவோ என்ன

எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து -கீசு கீசு -என்ற பேச்சரவம் கேட்டிலையோ –
சர்வோத்திகமாக அஹங்கார நிவர்த்தகரான மகா பாகவதர்-
நாம் பிரியப் புகா நின்றோமே -என்ற பிரிந்தால்
மறுபடியும் கூடும் தனையும் தரித்து இருக்கைக்காக
பரஸ்பரம் சம்ஸ்லேஷித்-கத்கத ஸ்வரம் ஆகையாலே அநஷர ரசமாக பேசின பேச்சரவம் –
விஸ்லேஷ வ்யசனம் தோற்றும்படியாக பேசின பேச்சின் உடைய த்வனியை
கேட்டிலையோ –

கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ –
கேளாமைக்கு மற்ற ஆரவாரம் யுண்டோ –
நிஸ்வநம் சக்ரவாகா நாம் –ஸஹ ஸாரினாம் -இத்யாதி -(கிஷ்கிந்தா -ராமன் வருந்தி சொல்வது )
இப் பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லை யாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் இத்யாதி (அயோத்யா) –
(ராமர் லஷ்மணன் இடம் சித்ர கூடம் புறப்பட நேரம் ஆனதே -காட்டுப் பறவைகள் ஓசை கேட்கிறதே நீ கேட்க வில்லையோ )
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும்
கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
இவர் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாவதே என்ன தர்ம ஹானி -என்று ஆய்த்தான் அருளிச் செய்வர் –

இரவு எல்லாம் கலந்து இப்போது பிரிக்கிறோம் என்று பகல் எல்லாம் பிரிந்து இருக்கைக்கு
விளை நீர் அடைத்து பிரியப் புகுகிறோம் என்று
தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு கேட்டிலையோ என்ன
மரக்கலம் ஏறுவார் ஆறு மாசத்துக்கு தண்ணீரும் சோறும் ஏற்றுமா போலே இக் கலவை அரவம் கேட்டிலையோ

நிஸ்வநம் சக்ரவாகா நாம் இத்யாதி –
இப்பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லையாவதே

சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் வல்கு வ்யாஹரதாம் ஸ்வநம் – இத்யாதி
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும்
கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
அவர்கள் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாய் –
வேறே சிலரையும் இப்பேச்சும் உன் செவியில் பட்டது இல்லையோ என்று
எழுப்புவதாய்த்தே என்ன தர்ம ஹானி –என்கிறான் ருஷி
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து இடைச்சியாய் கண்ணுறங்காதே எழுப்பித் திரிகிறாப் போலே இவர்களும்

மாளிகைகளிலே ஏத்தாளிகள் வம்சாவளி சொல்லக் கேட்டு எழுந்து இருக்குமவர்கள்
பக்ஷிகளினுடைய பேச்சுக் கேட்டு எழுந்து இருக்கும் படி யாவதே
இது என்ன தர்ம ஹானி என்று அவள் வெறுத்துக் கிடக்க

———–

பேய்ப் பெண்ணே –
இவர்கள் ஆகில் இப்படி சொல்லுகையே பணி என்று பேசாதே கிடக்க –
அறிந்து வைத்து காற்கடைக் கொள்வாயே -மதி கேடீ என்கிறார்கள் –

இவர்களுக்கு அறிவாகிறது -பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிகை-
அத்தை அறிந்து வைத்தே பேசாதே கிடைக்கயாலே சொல்லுகிறார்கள் –

பேய்ப் பெண்ணே –
என்கிறார்கள் –
உன்னுடைய அந்யதா ஞானம் இருந்தபடி என் –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தம் என்று
அறிந்து வைத்து ஆறி இருப்பதே -என்று க்ஷேபிக்க-

போது விடியாதே இருக்கச் செய்தே-
விடிந்தது என்று சொல்லுகிற நீங்கள் அன்றோ பேய்ப் பெண்கள் என்ன

போது விடியச் செய்தே விடிந்ததில்லை என்று
சொல்லுகிற நீ அன்றோ பேய்ப் பெண் என்ன

பேய்ப் பெண்ணே-
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் தன்னேற்றம் என்று அறிந்து வைத்துப் பேசாதே
கிடக்கையாலே சொல்லுகிறார்கள்
என்ன அறிவு தான் –
பேய்ப் பெண்ணே என்றதோடு
நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே
பின்னையும் எழுப்புகிறார்கள்

தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிந்து வைத்துப் பேசாதே கிடைக்கையாலே சொல்லுகிறார்கள் –
என்ன அறிவு தான் –
மிதுனமாய்க் கலந்தால் அடியேன் என்னிலும் என்பர் –
எதிர் தலையைத் தாழச் சொல்லிலும் சொல்லுவர்
பேய்ப் பெண்ணே என்றதோடு நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே

இது போதாது
வேறு ஒரு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

———-

என் அறியாமை சொல்லாதே விடிந்தமைக்கு அடையாளம்-சொல்லுங்கோள் என்ன –

தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ –

காம்யத்தில் பல ஸ்ரத்தை இல்லையாகில் தவிரலாம் –
நித்ய கர்மம் அவசியம் அனுஷ்டித்தே அற வேணும் –
அனுஷ்டானத்துக்கு பலம் இல்லை -அகரேண ப்ரத்யவாயம் உண்டு –
அப்படியே
ஜாதி உசிதமான நித்ய அனுஷ்டானம் அன்றோ
இவர்களுக்கு தயிர் கடைகை-இது விடிவுக்கு அடையாளம் போராதோ என்கிறார்கள் –

காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும் ஆமைத் தாலியும் –

காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும்-முளைத் தாலியும்-(இடைச்சிகள் பூணும் ஆபரணம் )

ப்ராஹ்மணர் சந்த்யா வேளையில் பூணூல் இடுமா போலே
தங்கள் அனுஷ்டான வேளையில் இவர்களுக்கு ஆபரணம் பூண வேணும் -என்கை –(ஆபரணம் பூணும் பயனே இந்த ஒலி -என்றவாறு )

கலகலப்ப –
கடைகிற போதை வ்யாபாரத்தாலே-
அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி -என்னுமா போலே
த்வநிக்கை –

கல கலப்ப-
ஆபரண த்வனியும் இவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கை –

காசு பிறப்பு – மாதர் அணியும் ஆபரண விசேஷம்.
கல கலப்ப – ஒலிக் குறிப்பு.
கடைய வேண்டிய தயிர் அளவற்றுள்ளமையாலும்,
கடைகின்ற தங்களுடைய ஸௌகுமார்யத்தாலும்,
கிருஷ்ணன் அருகில் வந்திருந்து கொண்டு ‘தயிரை மோராக்க வொட்டேன்’ என்று கடை கயிற்றைப் பற்றி வலிக்கையாலும்
கடைகையிலுள்ள அருமையைக் கூறுவது, கை பேர்த்து என்பது.

கை பேர்த்து –
தயிரின் பெருமையாலும்-
இவர்கள் சௌகுமார்யத்தாலும்-
மலை பேர்த்தாப் போலே கை பேர்க்கப் போகாதபடி –
கிருஷ்ணன் சந்நிதி இல்லாமையாலே கை சோர்ந்தது என்னவுமாம்
அன்றியே
அவன் சந்நிஹிதனாய் நின்று-தயிரை மோராக்க ஒட்டேன் என்று
கையைப் பற்றி நாலுகையாலே-என்றுமாம் –
மோரார் குடமுருட்டி -என்னக் கடவது இறே-

காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப
உபாய
புருஷார்த்த
ஞானம் தலையெடுத்து –

———–

வாச நறும் குழல் ஆய்ச்சியர்
ஆயாசத்தினாலே-மயிர்முடி நெகிழ்ந்து-பரிமளம் தானே புறப்பட்டு-ப்ரவஹிக்கிற படி

வாச நாறும் குழல்
கடைகிற ஆயாசத்தாலே மயிர் முடி கட்டு நெகிழ்ந்து முடை நாற்றத்தை மறைக்கும் படி யாய்த்து
பரிமளம் வெள்ளம் இடுகின்ற படி –
(சர்வ ரஸ ஸர்வ கந்த வஸ்துவை தங்கள் கொய்சகத்திலே வைக்குமவர்கள் அன்றோ )
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட் கரை -என்னக் கடவது இறே

(உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. 6.1)

வாச நறும் குழல் –
தயிர் கடைகைக்கு நியமித்து முடித்துக் கட்டிய மயிர் முடி -கடைந்த ஆயாசத்தாலே குலைந்து 
கடைந்த வேர்ப்பாலே அதி பரிமளிதமாய்
முடை நாற்றமும் தோற்றாத படி கிண்ணக வெள்ளம் கரையை உடைத்து பெருகுமா போலே
எங்கும் சுற்று வெள்ளம் இடா நின்றது
பரிமளம் ஊரை உறங்க ஓட்டுகிறது இல்லை

———-

மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ –
மந்தரத்தாலே கடலைக் கலக்கினாப் போலே-இந்த கோஷமும் செவியில் பட்டது இல்லையோ –

அவன் கண் அழகிலே தோற்று பாடுகிற த்வனியும்-
கடைகிற தயிர் ஓசையும்
ஆபரண ஓசையும்-கிளர்ந்து
ஊர்த்த்வ லோகங்களிலே சென்று கிட்டுவதான ஓசை
உன் செவியில் படாது ஒழிவதே –

ஆய்ச்சியர் –
ஒருத்தி யன்றோ என்று சொல்ல ஒண்ணாத படி இருந்ததே குடியாக –

மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம்-
மந்திரத்தால் கடலைக் கடைகிற போது -அரவூரு சுலாய் மலை தேய்க்கும் ஒலி-என்றபடி –

ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி —
அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி —
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி,
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே

(நான்கு ஒலிகள் -காசு பிறப்பு -கை கலப்பு -கடையும் ஒலி அரவிந்த லோசனா என்று சொல்லும் திருநாம-சங்கீர்த்தனம் -நான்கும் இங்கு
ஆழ்வார் -மூன்று ஒலிகள் பாற் கடல் கடையும் பொழுது)

உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி
தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் அமங்களம் –

கிருஷ்ணனுடைய கண் அழகுக்கு தோற்றுப் பாடுகிற இடைப் பெண்களுடைய த்வனி –
தயிர் கடைகிற ஓசையோடு கலசி பரம பதத்தில் சென்று த்வனித்தது-
அப்போது
கிருஷ்ண குணங்கள் பூமியிலே நடையாடா நிற்க –
மலையிலே இருப்பாரைப் போலே உயர இருப்பதே என்று
அவர்களை வசை பாடினால் போலே இருந்ததே

விக்ரீது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி –
தத்யாதிகம் மோஹ வசாத் அவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-

முரனைக் கொன்ற வீரத்தில் தோற்று கிருஷ்ணன் பக்கலிலே பக்த பாவைகளாக இருக்க
இதனின்றும் இவளை மீட்க்கும் விரகு ஏதோ என்று பார்த்து –
தாயார் பாலையையும் தயிரையும் நெய்யையும் கொடுத்து
இத்தை விற்றுக் கொண்டு வா என்று சொல்ல –

விற்கப் போன இடத்திலும் நினைவு இங்கேயே –
கோவிந்தனைக் கொள்ளுங்கோள் -கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள் –
ஸ்ரீ யபதியைக் கொள்ளுங்கோள் -என்று கூறிக் கொண்டு திரிந்தாள்

ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
இது கேளாத படி உள்ளேயும் ஒரு தயிர் உண்டோ கடைகிறது-

கெண்டை இத்யாதி –
தாமோதரா மெய் அறிவன் நானே —

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி* கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு* ஒல்லை நானும் கடைவன் என்று* கள்ள-விழியை விழித்துப் புக்கு*
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ* வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்* தாமோதரா மெய் அறிவன் நானே –ராஜகுல மஹாத்ம்யம் தோன்ற ஊடுகிறாள்

பண்டு போலேயோ-கிருஷ்ணன் பிறந்த பின்பு
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாகையாலே
அறுபது நாழிகையும் கறப்பது கடைவதாய் செல்லுமத்தனை அன்றோ
இது விடிவுக்கு உடலாமோ வென்று அவர்கள் நிருத்தராம் படி சொல்ல

வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய-பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய
அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால்
சிஷிதரான சம்சாரி சேதனர் உடைய-
திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ –

ஆய்ச்சியர்-மத்தினால்-ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
க்ருஹிணிகள் எல்லாரும்
விக்ரேதுகாமா கில கோப கந்யா–கோவிந்த தாமோதர மாதவேதி – -இத்யாதி
(கிருஹணீகள் கடைய கன்னி பெண்கள் விற்க போகும் பொழுது மனசு எல்லாம் இவன் இடமே கொண்டு சொல்வது )
ஊராகக் கிளர்ந்தது -மத்தினால் ஓசைப்படுத்துகிற த்வனியும் –
இவர்கள் சிலம்பின் த்வனியும் –
(கை கங்கணம் கால் சிலம்பு -தயிர் கடைய உட்கார்ந்து பண்ண முடியாதே –
வள்ளல் -பெரிய பானை நின்றே கடைய வேண்டும் )
குழல்களில் வண்டுகளின் த்வனியும் -(மது பானம் அருந்த வண்டுகள் குழல்களில் படிந்து த்வநிக்குமே )
ஆபரணம் தன்னில் கல கல வென்கிற ஒலியும்
கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரம பதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்களாய் எங்கும் பரப்புகை
கோவிந்த தாமோதர மாதவேதி-போலே

அரவம் கேட்டிலையோ
கெண்டை ஒண் கண்கள் மடவாள் ஒருத்தி இத்யாதிப் படியே -(பெருமாள் -6-2-)
(ராஜ குல மஹாத்ம்யம் தோன்ற ஊடல் )
(புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்
விடிந்தமைக்கு அடையாளம் கேட்டிலையோ

மத்தினால் ஓசை படுத்த
ஒரு மந்திரத்தாலே கடலைக் படுத்துமா போலே முழங்கா நின்றது –
உத்காய தீ நா மரவிந்த லோசநம் வ்ரஜாங்க நாநாம்-திவமஸ்ப் ருசத் த்வனி —
தத் நஸ்ச நிர்மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்கலம்
அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –
இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –
குழல்களில் வண்டுகளின் த்வனியும் –
ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க
இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று
அங்குள்ளாரை வசை பாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ -என்கிறார்கள் –

(பிராட்டிமாரும் கண்ணனைக் காண வைதிக பிள்ளைகளைக் கொண்டு போன வ்ருத்தாந்தம்)

விக்ரேது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித்த சித்த வ்ருத்தி தத் யாதிகம்
மோஹ வசாத் அவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-போலே
எம்பெருமான் பக்கலில் பிச்சேறிக் கிடக்கிற பெண்களை இவர்கள் அந்நிய பரதை தீர வேணும் என்று பார்த்து
தயிரும் பாலும் நெய்யும் விற்று வாருங்கோள்-என்று கொடுத்துவிட
விற்கும் போது நெஞ்சில் நினைப்பது கிருஷ்ணனை யாகையாலே
(கோவிந்த தாமோதர மாதவேதி )கோவிந்தனை கொள்ளுங்கோள் கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள்
ஸ்ரீயபதியைக் கொள்ளுங்கோள் -என்னா நிற்பார்கள் –

“உத் காயதீநாம அரவிந்த லோசநம் வரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருசத் த்வநி:-
தத்நச்ச நிர்மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்களம்.”
கண்ணபிரானுடைய கண்ணழகுக்குத் தோற்றுப் பாடுகிற ஆயர் மாதருடைய பாட்டினொலி
தயிர் கடைகிற ஓசையோடே கலசிப் பரமபதத்தே செந்றொலித்ததெனப்; புராண நூல் கூறுமாறறிக.

ஆய்ச்சிகள் தயிர் கடையும்போதும் கண்ணபிரானைப் பாடுவார்களோ வென்னில்;
“விக்ரேதுகாமா கில கோப கந்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி:-
தத்யாதிகம் மோஹவசாதவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி.”
ஓராய்ப்பெண், கண்ணபிரான் முரனை முடித்த வீரத்தில் தோற்று அவன் பக்கல் கருத்தை ஊன்ற வைத்து
வேறு சிந்தையின்றியிருக்க, வீட்டிலுள்ள பெரியோர் ‘இவளை இதினின்றும் மீட்கும் விரகு ஏதோ’ என்று பார்த்து,
பாலையும் தயிரையும் நெய்யையும் தந்து ‘இவற்றை விற்றுவா’ என்றனுப்ப,
அவளும் அங்ஙனமே விற்கச் செல்ல, நினைவு கண்ணபிரான் பக்கலிலாகையாலே,
‘கோவிந்தன் வாங்க வில்லையோ கோவிந்தன், கிருஷ்ணன் வாங்க வில்லையோ க்ருஷ்ணன்,
மாதவன் வாங்கவில்லையோ மாதவன்’ என்று க்ருஷ்ண நாமங்களைக் கூறிக் கொண்டு திரிந்தாள் என்னா நின்றால்,
தயிர் கடையும் போது கண்ணபிரானைப் பாடுவார்களென்னத் தட்டுண்டோ? நிற்க.

வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப
தண்டயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே -என்று சொல்லும்படி
ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்

விடிந்தமைக்கு அடையாளம் தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ – என்பான் என்
பண்டு போலே பசுக்களும் பால்களும் அளவுபட்டு இருந்ததோ –
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே
பசுக்களும் பாலும் பெருத்து கறக்கும் போது அறியாதே கடையும் போது அறியாதே செல்லுகிற ஊரிலே
இது ஒரு அடையாளமாக மாட்டாது –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று பேசாதே கிடந்தாள்

தயிர் கடைந்த ஓசை என்ன
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே எப்போதும் உண்டு என்ன –

———-

இவ் ஊரில் -முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்-என்று-
இரவும் பகலும் விடாதே தயிர் கடைகை ஸ்வ பாவம் அன்றோ-என்று பேசாதே கிடக்க

நாயகப் பெண் பிள்ளாய் –
இப் பெண்களுக்கு எல்லாம் நிர்வாஹகை யானபடி இதுவோ -என்கிறார்கள் –
சொல்லிற்றுக்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிக் கிடக்கிறது-
உன்னுடைய ஐஸ்வர்ய செருக்காலே -என்னவுமாம்

பேய்ப்பெண்ணே என்பதோடு-
நாயகப் பெண் பிள்ளாய் என்பதோடு வாசி இல்லை இறே-
அகவாயில் பாவம் ஒன்றாகையால்-

ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்-
தாழச் சொன்ன போதும்
உயரச் சொன்ன போதுமாய் இறே இருப்பது

நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்)
சேஷ பூதர் சேஷி பக்கல் சொல்வது ஓன்று உண்டோ
இதுக்கு எல்லாம் அழகியதாய் நிர்வாஹகை யானாய் என்று இவர்கள் பேசாது இருக்க –

நாயகப் பெண் பிள்ளாய் –
இது அன்றோ நமக்கு நீ நிர்வாஹைகை ஆனமைக்கு அடையாளம் –
அதாவது சொன்னதுக்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லி எழுந்து இருக்காமல் இருக்கை-

நாயகப் பெண் பிள்ளாய் –
சேஷ பூதர் சேஷிகளுக்குச் சொல்லுவார் உண்டோ -அழகிதாக நிர்வாஹகை யானாய்-
உனக்கு இது பரம் அன்று ஆகில் எங்களுக்கோ பரம் என்று –
ததோ மவ்நமுபாகமத் (சுக்ரீவன் ராமன் இடம் விபீஷண சரணாகதி -சொல்லி முடித்து பேசாமல் இருந்தானே )-என்கிறபடியே பேசாதே கிடக்க
உங்கள் அடியேனை இங்கனே சொல்லுவதே என்ன
நீ வாய் திறவா விட்டால் நாங்கள் செய்வது என் என்ன

இப் பாட்டில், ஒருகால் ‘பேய்ப்பெண்ணெ!’ என்பது,
மற்றொருகால், ‘நாயகப்பெண்பிள்ளாய்!’ என்பதாய்ச் சொல்லுகிறபடியைக் காண்மின்;

“ஒரு மிதுநமாய்ப் பரிமாற நின்றால் தாழச் சொன்ன
போதும் உயரச் சொன்ன போதுமாயிறே யிருப்பது” என்பர், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்;”

‘பேய்ப்பெண்ணே’ என்றத்தோடு ‘நாயகப்பெண்பிள்ளாய்’ என்றத்தோடு வாசி இல்லையிறே
அகவாயில் பாவம் ஒன்றாகையாலே” என்பர், பெரியவாச்சான் பிள்ளை.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

நான் உங்களுக்கு அடிமை யன்றோ –
திறக்கிறேன் என்ன –
இவள் துணுக் என்று எழுந்து இருந்து கடுகத் திறக்கைக்காக
கேசி வத விருத்தாந்தத்தை ஸ்மரிப்போம் என்று அத்தை பிரசங்கிக்கிறார்கள் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே துணுக் என்று உணரும் என்று

நாசகப் பெண் பிள்ளாய் -எதுகை -படி இரண்டாம் அக்ஷரம் சகாரம் -மங்களகரமாக நாயகப் பெண் பிள்ளாய்-கீசு-பேசி-காசு-வாச-ஓசை -நாய -கேச-தேச

——–

என்றவிடத்திலும் வாய் திறவாமையாலே
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
நீ எழுந்திருப்புதி என்று நாங்கள் பாட-
அதுவே குறங்குகுத்த கிடந்தது உறங்குகிறாயோ-

நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று-
வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –

மூர்த்தி –
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று-
நம் விரோதிகளை போக்குமவன்

பாடவும் –
வாத்சல்யத்தையும் –
சௌசீல்யத்தையும்-
ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்
பேசின விடத்திலும்-பின்னையும் இவர்கள் பேச்சே
தனக்கு தாரகமாக கிடைக்கையாலே

கேட்டே கிடத்தியோ -என்கிறார்கள் –
இவள் துணுக என்று எழுந்து இருக்கைக்காக
நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக-
அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் என்ன –
அதுக்கும் பேசாதே கிடந்தாள் –

பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே
நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து-
மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -என்றுமாம் —

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் –
கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான்
அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்

அது தன்னை விஜயாந்தமாக அனுசந்தித்து பேசாதே கிடந்தாள்

நீ கேட்டே கிடத்தியோ
அழகிதாக உன்னை எழுப்ப வழி பார்த்தோம் –
தொடை குத்தி உறக்கினோம் ஆகாதே
கேசி பட்ட அநந்தரம்-கர வதத்தின் அன்று
பிராட்டி -பர்த்தாராம் பரிஷஸ்வஜே -என்று
பெருமாளை அணைத்தால் போலே கிருஷ்ணனை எழுந்து அணைக்கப் பாராய்-

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்
கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்
கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ
அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து-உறங்கக் கடவையோ

நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்

மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –

கேசவனைப் –
பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –

பாடவும் கேட்டே கிடத்தியோ-தேசமுடையாய் –
உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –

பேச்சின் இனிமையைக் கேட்டு இவள் வாய் திறவாதே கிடந்த வாறே
ஜாலக த்வாரத்தாலே பார்த்தார்கள் –
அவனுடைய விஜயத்தை அனுசந்திக்கையாலே வந்த புகரை யடைய வடிவிலே காணும் படி கிடந்தாள்

————

தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-
உன்னைக் காணப் பெறாதே-அந்தகாரமாய் கிடக்கிற எங்களுக்கு-
இத்தை திறந்து புறப்பட்டு-உன்னுடைய நிரவதிக தேஜசாலே-
வெளிச் செறிப்பிக்கைகாகவும்-
உன்னுடைய அழகு காண்கைக்காகவும்-

நீயே வந்து திற -தேசமுடையாய் திற –
இவள் பின்னையும் பேசாதே கிடைக்கையாலே-ஜாலக ரந்த்ரத்தாலே பார்த்தார்கள் –
இவளுக்கு கிருஷ்ண விஜய அனுசந்தான அனுபவ ப்ரீதியாலே-
வடிவில் பிறந்த புகரைக் கண்டு-
கிண்ணகத்தை அணை செய்யாதே வெட்டி விடாய்-என்கிறார்கள் ஆகவுமாம்-

தேசமுடையாய் திற-
கிண்ணகத்துக்கு அணை செய்யாதே வெட்டி விடாய் -நாங்கள் வாழ்ந்து போக
எங்களுடைய ஹிருதயத்தில் அந்தகாரம் போகும் படி
உன் வடிவைக் காட்டி எங்களை அனுபவிக்கப் பாராய் –

தேசமுடையாய் திற –
இப்படி சொன்ன இடத்திலும் எழுந்திராமையாலே-ஜாலகரந்தரத்தாலே பார்த்து
பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே
இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே-நாங்கள் அனுபவிக்கலாம்படி
எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய் -என்கிறார்கள்-

அவள் துணுக் என்று
புறப்படுகைக்காக கேசி வத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –

நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்

மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –

கேசவனைப் –
கண்ணுக்குத் தோற்றி நின்று பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –
அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்-(சிலருக்கு அச்சம் கொடுக்கும் -அஸ்தானே பய சங்கை பண்ண வைக்கும் )

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ -தேசமுடையாய்
ஸ்ரோத்ர ஸூகமாய் இருந்தது தானே நீர் வாய்ப்பாக உறங்குகிறாயோ –
கர வதத்தினன்று போலே தழுவப் பாராய்
தம் த்ருஷ்ட்வா -இத்யாதி

தம் த்ருஷ்ட்வா
பண்டு மணக் கோலம் இறே கண்டது –
இப்போது வீரக் கோலத்தோடு காணப் பெற்றாள்

சத்ரு ஹந்தாரம்
தமக்கு ஒரு வாட்டம் இன்றிக்கே எதிரிகளை அழியச் செய்யப் பெற்ற படி

மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பிரஜையினுடைய ஆர்த்தி தீர்ந்து ஸூகிக்கக் காண்கை இறே தாய்க்கு ஸூகம் –
பர்த்தாவானவன் பார்யை பக்கல் முகம் பேரா விட்டால் பிரஜையை எடுத்துக் கொண்டு வருமா போலே
பிராட்டி முகம் பெறுகைக்காகப் பச்சையிடும்படி

பபூவ
சரணாகதருடைய ஆர்த்தியாலும் பெருமாளுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தாலும் அழிந்த ஸ்வரூபம்
அவர்களும் அவரும் உளராகப் போருகையாலே இப்போது யுண்டாய்த்து –
இரண்டு தலையும் யுண்டாய் இல்லையாகில் இல்லையாமவள் இறே

ஹ்ருஷ்டா
அதுக்கு மேலே நிரதிசய ப்ரீதி யுண்டாயிற்று

வைதேஹீ
அவதாரம் ச பிரயோஜனமாய்த்து

வைதேஹீ
வீர வாசி அறியும் குடியில் பிறந்தவள் –
ஒரு வில் முறிக்க ஐயர் என்றும் உகந்த படிக்கும்
இன்று தனியே பதினாலாயிரம் ராக்ஷஸரைப் பொடி படுத்தி நின்ற பெரிய பராக்ரமம் காணப் பெற்றோம்

பார்த்தாராம் பரிஷஸ்வஜே
பண்டு ஐயர் கொடுத்தார் என்று அந்த மணக் கோலத்தை தர்மத்துக்குத் தழுவினாள்
இப்போது வீரக் கோலம் கண்டு ஆண் என்று தழுவினாள்
அம்புவாய் தெரியாதபடி தனது ஸ்தநோஷ்ம தையாலே வேது கொண்டாள்
இவருக்கு சந்தான கரணியும் விசல்ய கரணியும் அதுவே –
ஜகத்துக்குத் தாயும் தமப்பனும்

கேட்டே கிடத்தியோ
இப் பிரமாதம் தப்பப் பெற்றுக் கிடக்கிறாயோ -என்ன
இவர்கள் பேசின பேச்சிலே ஈடுபட்டுக்
கிடக்கிற பெண் பிள்ளையைத் திரு ஜாலாகத்தாலே

சென்று
எட்டிப் பார்த்து

தேசமுடையாய் திற-என்கிறார்கள்
இவளுடைய நிரவதிக தேஜஸைக் கண்டு
உன்னைக் கண்டு வாழ
தேசமுடையாய் திறவாய் -என்கிறார்கள் –

திற-கதவை சொல்லாமல் -மனக் கதவைத் திறக்க -பாகவத ஸம்ஸ்லேஷ மஹாத்ம்யத்தை அறிந்தும் மறந்தவள் என்பதால் -இங்கு மனத்தைத் திறக்க அருளிச் செய்கிறார்கள்

நாம சங்கீர்த்தன பலத்தால் கீழ் பிள்ளாய் -வெளியே வந்தாள்
ஸத்ஸங்க மஹாத்ம்யத்தால் இந்த பெண் வெளியே வருகிறாள்

————————————————————————————

உபய வேதாந்தம் கலந்து -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசம் புராணம் -அருளிச் செயல்கள் -ஆனைச் சாத்தன் -சாரம் எங்கும் கலந்து பேசின பேச்சரவம் –
இதுவே தயிர் -உபநிஷத் பாற் கடல் -த்ரவிடம் புளி -புளியோதரை பிரதானம் –
ஆய்ச்சியர் -பகவத் அனுபவ நிஷ்டர் -வாச நறும் குழல் -ஸாத்ய -பர பக்தி பர ஞானம் பரம பக்தி நிஷ்டர்

கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன் தேர் முன்னாய்
கதிரொளி மால் கண்ணன் கேசவனன் — றோதிய
மெய்மைப் பெரு வார்த்தை ஒவ்வொன்றும்
மால் மாறன் வாய் மொழிக் குள்ளாதல் கொள்ளு.

—————-

ஸ்வாபதேசம்)–

பேய்ப் பெண் -என்கிறது –
பேயாழ்வாரை -அது எங்கனே என்னில்
திருக் கண்டேன் இத்யாதியாலே நாயகனுடைய வைபவத்தை தர்சிப்பிக்கையாலும்

மற்றும் ஸ்த்ரீத்வாபத்தியால் -வெற்பு என்று வேங்கடம் என்று தொடங்கி
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் என்கையாலும்

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி -என்று கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசுகையாலும்

பின்னைக்காய் எற்று உயிரை அட்டான்-என்று நப்பின்னைப் பிராட்டிக்காக
அவன் எருதுகளின் மேல் வியாபாரித்த படியை பேசுகையாலும்

பேய்ப் பெண்ணே -என்றது பேய் ஆழ்வாரை -என்றபடி –

————

இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக் கொண்டவர் இவ்வாழ்வார்.

ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னு புகழ்க் கௌசலை தன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.

“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும்,
ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அது போலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண் பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.

(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.

இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலை நாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.

காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.

“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.

(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.

(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

——————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —புள்ளும் சிலம்பின காண் —

December 22, 2022

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்ல பக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——–

அவதாரிகை –
முதல் பாட்டில் –
பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்து —

இரண்டாம் பாட்டில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய் குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்- கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று-

மூன்றாம் பாட்டில் –
பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

நாலாம் பாட்டில்-
தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

ஐந்தாம் பாட்டில்
இப்படியே பகவத் அனுபவத்தில் இழிந்தவருக்கு வரும் அனுபவ விரோதிகளை
அவ் வநுபவம் தானே நிரோதிக்கும் என்னும் இடம் சொல்லிற்று-

ஆக-இப்படி கீழ் ஐஞ்சு பாட்டாலே –
பிராப்யமான கிருஷ்ண அனுபவத்துக்கு-ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி

அநந்தரம் –
மேல் பத்து பாட்டாலே-
அந்த உபகரணங்களைக் கொண்டு-அனுபவிக்குமவர்களை-எழுப்புகிறது-

தம்தாமுக்கே அவ்வனுபவத்துக்கு பிரதான உபகரணமான ப்ரேமமும்-
கர்தவ்யதயா உக்தமான உபகரணங்களும்-
அனுபாவ்யனான கிருஷ்ணனும்-
அதுக்கு ஏகாந்தமான காலமும்-
ஊரிலே கோப வ்ருத்தர் உடைய இசைவும் உண்டான பின்பு-
தனித்தனியே அனுபவிக்க அமைந்து இருக்க-
ஒருவரை ஒருவர் எழுப்ப வேண்டுகிறது என் என்னில்-

பெருக்காற்றில் இழிவாருக்கு துணை தேட்டமாம் போலே
காலாலும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்றும் –
உயிர் காத்து ஆட் செய்யுமின் -என்றும்
ஆழியொடு பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்றும்-
இழிந்தாரை குமிழி நீரூட்டக் கடவதான விஷயத்தில் இழிகிறவர்கள் ஆகையாலே
துணை தேட்டமாய் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லுகிறபடியே
பர அவஸ்தையிலே புருஷோத்தமனை அனுபவிக்கும் போதும்
விஸ்ருங்கல ஜ்ஞான பலங்களை உடையரான நித்ய ஸூரிகளுக்கும் துணை தேட்டமாய் இருக்க –
இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல் -என்று
1-அந்த நித்ய ஸூரிகளுக்கும் அனுபவிக்க ஒண்ணாத படி
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
அழகுக்கும்
நிரவதிக ஆகாரமான கிருஷ்ணனை அனுபவிக்கும் இடத்தில்-
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சிகளுக்கு-துணைத் தேட்டம் என்னுமிடம் சொல்ல வேணுமோ-

அதுக்கு மேலே
2-நிரதிசய போக்யமான அவ்விஷயத்தை தனியே-
அனுபவிக்க மாட்டாத-பிரக்ருதிகள் ஆகையாலும் எழுப்புகிறார்கள் –

அதுக்கு மேலே
3-இவ் வஸ்துவை அனுபவிக்கைக்கு ருசி உடையராய் இருக்குமவர்கள் இழக்க ஒண்ணாது
என்னும் நினைவாலும் எழுப்புகிறார்கள் –

அதுக்கு மேலே
4-பகவத் விஷயத்தை அனுபவிக்கும் போது ததீயரை முன்னிட்டு அல்லது
அனுபவிக்க மாட்டாதவர்கள் ஆகையாலும் எழுப்பு கிறார்கள் –

5-விஷயம் தனியே அனுபவிக்க அரியது ஆகையாலும்-
6-இவர்கள் தனி அனுபவிக்கும் பிரக்ருதிகள் அல்லாமையாலும் –
7-ருசி உடையார் இழக்கை நெடும் தட்டு என்று இருக்கையாலும் –
8-ததீயரை ஒழிய அனுபவிக்க மாட்டாமையாலும் ‘-
முந்துற உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்பத் தட்டில்லை –

எல்லாருக்கும் ஒக்க கிருஷ்ண அனுபவத்தில் கௌதுகம்-அவிசிஷ்டமாய் இருக்கையாலும்-
சிலர் எழுப்ப
சிலர் உறங்குகை கௌதுகத்துக்கு குறை யன்றோ என்னில்-

அனுபாவ்யமான கிருஷ்ண குணங்கள்-நஞ்சுண்டாரைப் போலே சிலரை மயங்கப் பண்ணுகையாலும்-
சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே துடிக்கப் பண்ணுகையாலும்-
அவர்கள் கௌதுகத்துக்கு குறை இல்லாமையாலே
சிலரை சிலர் எழுப்பத் தட்டில்லை –

இதில்-இப் பாட்டுக்கு வாக்யார்த்தம்-
பகவத் விஷயத்தில் புதியவள் ஆகையாலே இந் நோன்பின் சுவடு அறியாதாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

செய்யாதன செய்யோம் -என்று அடியிலே பண்ணின ப்ரதிஞ்ஜையைத் தலைக் கட்டுகிறார்கள் –பெருமாள் நத்யஜேயம் என்ற ப்ரதிஞ்ஜையை –ஏதத் விரதம் மம -என்று தலைக் கட்டினால் போலேயும்-அர்ஜுனன் பண்ணின ப்ரதிஞ்ஜையை கிருஷ்ணன் செய்து தலைக் கட்டினால் போலேயும்

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் வந்து திரண்டு நாம் நீராடவே நம் விரோதிகளும் போம் -என்று புறப்பட
சிலர் வாராது ஒழிய போக மாட்டிற்று இலர்-

உறங்குகிறவர்களை எழுப்பிக் கொண்டு போகவே
1-அத் தலைக்கும் நமக்கும் புருஷகாரம் ஆவார்கள் என்றும்
2-போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்காகவும்
3-இவர்கள் இழவு பொறுக்க மாட்டாமையாலும்
4-ஏகஸ் ஸ்வாது ந புஞ்சீத-என்கிறபடியே ஒருவரை ஒழிய ஒருவர் புஜிக்க மாட்டாமையாலும் 
5-கிருஷ்ணரைக் காட்டிலும் இவர்கள் உத்தேசியர் ஆகையாலும் –
6-தனி அனுபவிக்கும் விஷயம் இல்லாமையாலும்
உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்களாகச் செல்லுகிறது-

பரம பதத்துக்கு அகப்பட அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
என்று கூட்டுத் தேடா நின்றது
கிருஷ்ண அனுபவத்துக்கு கூட்டுத் தேட சொல்ல வேணுமோ-

இமையோர் தமக்கும் -செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல் -என்று
நித்ய ஸூரிகளுடைய எத்திறம் இருக்கும் படி
இத்தை அனுபவித்த ஆழ்வார் எத்திறம் என்கிறார் –
தன்னையும் ஜென்ம கர்ம ச மே திவ்யம் -என்னப் பண்ணிற்று இறே-

ஒரு விடாய் ஆற்றி இருக்க வேண்டும் மனுசர் போரத் திரண்டு இவ்வூருக்காக
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் புதியவள் ஒருத்தியை –
போது விடிந்தது காண்-என்று எழுப்புவார்கள் –
உத்திஷ்ட நரசார்த்தூல-என்று விச்வாமித்ரன் போது விடிந்தது என்று எழுப்பினால் போலே-

(விடை ஆற்றி உத்சவம் திருவரங்கத்தில் இல்லை
ப்ரஹ்ம உஸ்தவங்களே மீண்டும் மீண்டும் வருவதால் இருக்கலாம் )

முதல் பாட்டில் பிராப்ய ஸ்வரூபத்தையும் பிராபக ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும்-சங்க்ரஹேன அருளிச் செய்து
இரண்டாம்பாட்டில் -அவ்வதிகாரிக்கு சம்பாவிதமான ஸ்வரூப தர்மங்களை அருளிச் செய்து 
மூன்றாம் பாட்டில் -அவ்வதிகாரிகள் அனுஷ்டானத்தாலே அவர்கள் இருக்கும் நாட்டில் பிறக்கும் சம்ருத்தியைச் சொல்லி –
நாலாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பகவத் அனுகூலரானவர்கள் கிஞ்சித் கரிக்கும் படியைச் சொல்லி-
அஞ்சாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பூர்வாக உத்தராகங்கள்-சித்தோ உபாய பலத்தாலே-நெருப்பில் இட்ட பஞ்சு போலே தன்னடையே நசித்துப் போம்படியைச் சொல்லி 

இனி மேல் பத்துப் பாட்டாலே
பகவத அனுபவ சஹகாரிகளை எழுப்புகிற படியை சொல்லுகிறது –

அதில் இப்பாட்டில் –
நூதனமாக பகவத் சம்பந்தம் பெற்ற அதிகாரியை எழுப்புகிறார்கள் –

உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதவர்களை எழுப்புகிறார்கள் –
இதில் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

1-செய்யாதன செய்யோம் -அனைவரையும் கூட்டியே செல்வோம் –
2-பகவத் அனுபவம் -இனியது தனியாக அனுபவிக்கக் கூடாதே –
3–கூடி இருந்து அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் -ஆனந்தம் பெருகும்
4-நதி ஆழம் -கூட துணை வேணுமே -இவனோ கடல்
5-அடியாருக்கு அடியாராக இருந்தால் மிகவும் விரும்பி -போக்கு காட்டாமல் காட்டியே தீருவான்
6-பாகவதர்கள் ப்ராப்யம் -கடைசி நிலை -இதனாலும் கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
இப்படி பல காரணங்கள் உண்டே –
விஞ்சி பாகவத உத்தமர்களுக்கு திருப்பள்ளி எழுச்சி –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிய வேண்டுமே
கீழே ஐந்து பாசுரங்களால் வேதம்
வேதம் வல்லார்கள் -இது முதல் 10 பாசுரங்கள் (6-15)-கடகர்கள் -(வைகல் பூம் கழிவாய் –6-1-)பத்து ஆச்சார்ய லக்ஷணங்கள் இவற்றால் அருளிச் செய்கிறார் –
விண்ணோர்கள் ஸ்தானம் -அடுத்த ஐந்தும் -(16-20)–அலர் மேல் மங்கை -பற்றி
பின்பே நேராக பற்றுவது -உறை மார்பனைப் பற்றுவது -(21-30 )
கொள் கொம்பு மூலம் பற்றுவது போல் –
புள்ளும் -உம்மைத் தொகைக்கும் வியாக்யானம் உண்டே
பத்து பாசுரங்களில் ஐந்தில் விடிந்தமைக்கு அடையாளம் உண்டு ஐந்தில் இல்லை )

1-பிள்ளாய் –
2-பேய்ப்பெண்ணே -(நாயகப் பெண் பிள்ளாய்)(தேசம் உடையாய்)
3-கோது கலமுடைய பாவாய்
4-மாமான் மகளே –
5-(ஆற்ற அனந்தல் யுடையாய் )அரும் கலமே-
6-புன மயிலே –
7-நற் செல்வன் தங்காய் –
8-போதரிக் கண்ணினாய் -(பாவாய் )-
9-(நங்காய் ) (நாணாதாய்) நாவுடையாய்
10-இளங்கிளியே)

ஒரு விடாயாற்றிக்கு வேண்டும் பெண்கள் திரண்டு சிலர் இழக்கச்
சிலர் புசிக்க மாட்டாமையாலும் –
எம்பெருமானிலும் இவர்கள் உத்தேச்யராய் இருக்கையாலும்-
இவ் விஷயம் தனி அனுபவிக்க ஒண்ணாதே திரளாக அனுபவிக்க வேண்டும் விஷயமாகையாலும்
மேல் பத்துப் பட்டாலும் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள் –

இவ் வனுபவம் ஆண்டாள் இங்கே இருந்து அனுபவித்தல் –
பரம பதத்தில் உள்ளார் அங்கே இருந்து அனுபவித்தல் செய்யும் அத்தனை –
சம்சாரிகளுக்கு நிலம் அல்ல –

சம்சாரிகள் உறங்குகைக்கு ஹேதுவும் வேறே –
உணர்ந்தால் அனுபவிக்கைக்கு விஷயமும் வேறே –
தமஸ்ஸூ அபீபவிக்க உறங்கிக் காலம் உணர்த்த உணர்ந்து விஷய ப்ரவணராவர்கள் –

எம்பெருமானுடைய உறக்கமும் உணர்ச்சியும் வேறுபட்டு இருக்கும் எங்கனே என்னில்
ஆஸ்ரித சம்ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகை உறக்கம் –
உணருகையாவது அவர்களுடைய ஆர்த்த நாதம் பொறுக்க மாட்டாமை-
உணர்ந்தால் அவர்கள் விரோதியைப் போக்கி அவர்களோடே கலக்கை போகமாய் இருக்கும்

இவர்களுக்கு
1-உறங்கப் பண்ணுவதும்
2-உணரப் பண்ணுவதும்
3-உணர்ந்தால் மறக்கப் பண்ணுவதும் –
4-போய் அனுபவிக்கப் பண்ணுவதும்
கிருஷ்ண குணங்களே

சின்னம் பின்னம் -இத்யாதிப்படியே
ஜ்ரும்பணாஸ்திரம்-
மோஹனாஸ்திரம்-
சில மோஹிக்கப் பண்ண சில துடிக்கப் பண்ணுமா போலே –

மநோ ரதம் முடிந்து ஓலக்கம் கிளம்பின போதே தொடங்கி-ஒருவரை ஒருவர் எழுப்பத் தொடங்கினார்கள் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானும் ஆஸூர ப்ரக்ருதிகள் ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்த்தான் –
இவர்கள் ராவண ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்க்குமவர்கள் –
தந்தாம் ஆபத்து பொறுக்க வல்லவர்களோ –

செய்யாதன செய்யோம் -என்று இவர்களுடைய ப்ரதிஜ்ஜை தான்
ததியர் முன்னிலையாக எம்பெருமான் பாடே செல்லுகையும் –
கூட அனுபவிக்கையும் –
இது ஸ்வரூபம் ஆகையாலும் அவஸ்யம் ஒருவரை ஒருவர் எழுப்ப வேணும் –
பர தசைக்கு அகப்பட அனுபவிக்கக் குழாங்கள் வேண்டா நின்றது
திருவாய்ப்பாடி வ்ருத்தாந்தத்தில் தனி இழியப் போமோ –
வர்ஷாயுதைரித்யாதி –
சதுர்முகாயுரித்யாதி –(வராஹ புராண ஸ்லோகம் -சதுர் முக ஆயுஸ் கிடைத்து கோடி வாயும் இருந்து புத்தியும் தெளிந்தாலும் குணம் ஒன்றைக் கூடப் பேசி முடிக்க முடியாதே )

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் எத்திறம் என்னும் அத்தனை –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றாரும் எத்திறம் என்னும் அத்தனை —
தான் தன்னை அனுசந்தித்தாலும் ஜென்ம கர்ம ச மே திவ்யம் என்று எத்திறம் என்னும் அத்தனை –

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது
மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

முதல் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் இளைய பெருமாள்
மத்யம பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ பரத ஆழ்வான்
மூன்றாம் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -அவன் படி இவர்களது

உற்றதும் உன்னடியார்க்கு அடிமை நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்னுமவர்களுடைய பெண் பிள்ளை இறே

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

ஆகையால் ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை –
உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதார் வாசல்களைப் பற்றி எழுப்புகிறார்கள்

பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –

புள்ளும் சிலம்பின் —வெள்ளை விளி சங்கின் பேரரவம் –அரி என்ற பேரரவம் –பிள்ளாய் எழுந்திராய்-பரி ஸூ த்தராய் வ்ருத்த்யாபாசத்தை யுடையவர்களுடைய சப்த பிரமாணத்தை முன்னிட்டு சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவான் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும் படி சொல்லுகிறது

கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் பெண்ணை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் ஏக போக்யாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வம் என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லிற்று –

பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –

———–——

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

வியாக்யானம் –
புள்ளும் சிலம்பின காண் –
இப் பெண்கள் –போதோடே வாசலில் சென்று உணர்த்தக் கடவதாக சங்கல்பித்து
போது விடியச் செய்தே கிடந்தது உறங்குவதே -என்று சிஷ்ட கர்ஹை பண்ணினவாறே –
போது விடிய வேண்டாவோ எழுந்திருக்க -என்ன –

போது விடிந்தது எழுந்திராய் -என்ன –

விடிந்தமைக்கு அடையாளம் என்ன என்று கேட்க –

நாங்கள் உணர்ந்து வந்தது போதாதோ என்ன –

உறங்கினார் உணரில் அன்றோ விடிந்தமைக்கு அடையாளம் ஆவது –
உண்டோ கண்கள் துஞ்சுதல் -என்கிறபடியே-உங்களுக்கு உறக்கம் உண்டோ
உங்கள் உணர்த்தி விடிந்தமைக்கு அடையாளம் அன்று
வேறு அடையாளம் உண்டோ -என்ன –

புள்ளும் சிலம்பின காண் —
போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன-
அது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன
ஏன் அல்லாவோ என்ன –
ஓம் அல்லவீ என்ன –
ஆவது என் என்ன –
நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பின வாறே கிளம்பிற்றன
அல்லது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன –

இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்

நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று கிடந்தாள் –

புள்ளும் சிலம்பின காண்–
மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே-
வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே
காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –

நாழிகை வட்டில் நீர் நிரம்பினவாறே கீழே விழுமா போலே
இரை யறுதியிலே உணரும் திர்யக்குகளும் கூட உணர்ந்தன

மின்னலே இடித்தாப் போலே உனக்கு முன்னே உணர்ந்தன கிடாய் -என்றுமாம்

சிலம்பின் காண்-
தலையிலே இடி விழுந்ததும் அறியாமே உறங்கும் அத்தனையோ என்ன -உங்கள் உணர்த்தி 
விடிவுக்கு அடையாளம் இல்லாதா போலே
நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகள் உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று –
காலை எழுந்து இருந்து (9-8 )-ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்து இருந்து
கரிய குருவிக் கணங்கள் – கிருஷ்ணனுடைய வடிவை ஸ்மரிக்குமவை
மாலின் வரவு சொல்லி -அவன் வியாமுக்தனாய் வரும் படியைச் சொல்லி –
மருள் (இந்தளம் என்னும் பண் ) பாடக் கடவதாம் படி இறே-பண்ணி வைப்பது –

பஷினோ அபிப்பிராயா சந்தோ (பக்ஷிகளும் பிரார்தித்தனவே பெருமாளை )–என்று
நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகளுடைய உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று
மற்றை அடையாளங்கள் உண்டாகில் சொல்லுங்கோள் என்று கிடந்தாள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –
மரங்களும் இரங்கும் வகை –
பஷினோபி பிரயாசைந்தே சர்வ பூதாநுகம்பிநம் –
மம த்வஸ்வா நிவ்ருத்தஸ்யசுமந்திரன் வார்த்தை குதிரைகளும் திரும்பாமல்
விஷய தே மஹாராஜ
ராமோ ராமோ ராம இதி
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை 

இப்போது இவள் புள் என்கிறது -சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே
ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால்
சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் –
பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்-
தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக
சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

பிள்ளாய் எழுந்திராய் –
பகவத் ஆராதன காலம் ஆயத்து -எழுந்திராய் -என்ன –
அவர்களும் -உங்கள் ஆரவாரம் கண்டு எழுந்து இருந்தார்கள்-வேறு அடையாளம் உண்டோ என்ன –

————-

புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
அது கிடக் கிடாய் -இதுவும் உன் செவிப் பட்டது இல்லையோ –
புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு –
அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்
அவனுடைய இல் -என்னுதல்-
புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் –
அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் -என்னுதல் –
திருப் பள்ளி எழுச்சியில் சங்கத் த்வனி கேட்டிலையோ –

கிருஷ்ணன் திரு வவதரித்து திரு வாய்ப்பாடியிலே இருந்ததே குடியாக-
அவன் அழகிலே பக்த பாவராய்ச் செல்லுகிற காலத்திலே-
கொண்டாடுகைக்கு ஒரு திரு முற்றம் உண்டோ என்னில் –

சக்கரவர்த்தி திருமகன் திருவவதாரம் பண்ணி-இருந்ததே குடியாக அவன் அழகிலே ஈடுபட்டு செல்லா நிற்க –
சஹா பத்ன்யா விசாலாஷி நாராயண -என்று-
அவர் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே-
கிருஷ்ணனையும் கும்பிடு கொள்கைக்கு ஒரு திரு முற்றம் உண்டு –

(பரத்வாதி ஐந்து நிலைகளும் எப்பொழுதுமே உண்டே –
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்வினி
திருநாராயணன் பெருமாளும் ஆய்ப்பாடியில் இருந்த பெருமாள் தானே )

ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவான் கதா -என்றும் –
பாலா அபிகிரீடா மானா-(அயோத்யா –6 )என்றும்
ஒரு தோளே -தோள் மாலையே -ஒரு வளப்பமே- ஒரு முறுவலே- ஒரு நோக்கே- என்றால் போலே
சக்கரவர்த்தி திருமகன் பக்கலில் -சிறு பிரஜைகளும் அகப்பட பெருமாளுடைய குணங்களில் தோற்றுச் செல்லா நிற்கச் செய்தே-
திரு அயோத்யையில் –
ஸஹ பத்நயா விசாலாஷா நாராயணம் உபாகமத் -என்று
பெருமாள் பிராட்டியோடே கூட பெரிய பெருமாளை உபாசிப்பர் என்றது இறே –
அப்படியிலே திருவாய்ப்பாடியிலும் ஒரு திரு முற்றம் உண்டு போலே—கிருஷ்ணனையும் கும்பீடு கொள்வான் ஒரு எம்பெருமான் உண்டு

(ராமபிரான் இங்கே ஆய்ப்பாடியில் இருந்து நம்பி மூத்த பிரான் மேல் கோட்டையில் ப்ரதிஷ்டை செய்து யாதவ கிரி ஆனதே)

(நூனம் ச கால மிருக ரூபம் -காலரூபத்தால் மாரீசன் வர —
ராமானுஜம் லஷ்மண பூர்வஜ-சேஷியை இட்டே சேஷனையும் சேஷனை இட்டே சேஷியையும் )

புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம்
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )
அகஸ்திய ப்ராதரம்-
நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

புள்ளரையன் –
பெரிய திருவடியை நிரூபகமாக உடையவன் –
ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இறே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே-பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –

புள் அரையன் –
லஷ்மண பூர்வஜம் -என்று இளைய பெருமாளை இட்டு பெருமாளை நிரூபிக்குமா போலே –
திருவடியை நிரூபகமாக யுடையவன் –
அவர்களை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டு
தங்கள் இருந்த இடத்தே கொடு வருமவன் ஆகையால் -புள்ளரையன்-என்றதாகவுமாம் –
புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்று இருக்குமவர்கள் இறே-

புள் அரையன் –
என்று கிருஷ்ணனைச் சொல்லிற்று ஆகவுமாம்

புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூ சகம் -ஆயர்பாடியில் ராம பிரியன் கோயில் –
விரோசனன் திருடிய வைரக் கிரீடம் -கருடன் மூலம் பெற்று கண்ணனுக்கு சாத்தி

யசோதை ராமபிரானுக்கு சாத்தி -திவ்ய ஆபரணங்கள் நித்ய ஸூரிகள் ஏற்ற வடிவு கொள்வார்களே
யாதவ கிரி பேர் பெற்றதே மேலக்கோட்டை -திரு நாராயண புரம் -இதனாலேயே திருப்பாவை ஜீயர் ஈடுபட்டு செல்வப்பிள்ளை –

———–

வெள்ளை விளி சங்கு –
சங்கு வெளுத்து இருக்குமது விடிந்தமைக்கு அடையாளமோ-
இது வ்யர்த்த விசேஷணம்

(வெளுப்பான சங்கு சொல்வதால் விடிந்தமைக்கு அடையாளம் ஆகுமோ –
இதுவும் வெட்டிப் பேச உறுப்பானதே -வெள்ளை -நிறத்தைச் சொல்லவரா வில்லை -சத்வ குணம் வளர்க்கும் – )

விளி சங்கு –
சாமங்கள் தோறும் முறை உடையோரை அழைக்கிறார்கள் ஆகில்-போது விடிய வேணுமோ -அங்கன் அல்ல

(அனைவரையும் ஓர் இடத்தில் அழைக்க சங்கம் ஒலிப்பது உண்டே –
இது விடிந்ததும் அடையாளம் இல்லை )

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் -என்றும்
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்றும் உண்டு இறே

பேரரவம் –
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வநியிலும் இது அதிகமாக வன்றோ த்வநிக்கிறது –
நீயும் உணருகைக்கு போரும் துவனி

இவர்கள் சங்கின் வெளுப்பு சொல்லுவான் என் என்னில் –
சங்கத் த்வனி வழியே ஊதும் போதை முக முத்ரையும்-
சங்கின் வெளுப்பும் உத்தேச்யம் ஆகையாலே-

விளி சங்கு -அழைக்கை –
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் என்னக் கடவது இறே-கையாலே அழைக்கை என்றபடி-
சத்வ உத்தரமான காலத்தில் அடிமை செய்ய வாருங்கோள்-என்று அழைக்கிறபடி-

பேர் அரவம் -ஏகார்த்த அபி லாஷை யுண்டு
எனக்கும் ஒக்கக் கேளாமையாலே அப்ரஸித்தம் -ஆகையால்
போது விடிவுக்கு அடையாளம் அன்று என்கிறாள்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் (நாச்சியார் )-என்று
உங்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சொல்லுகிறி கோள்-
இது போது விடிவுக்கு உடல் அல்ல என்ன

பேரரவம் கேட்டிலையோ-
இந்த த்வனி கேளாத படி உள்ளூச் செய்கிற அந்நிய பரத்தை ஏதோ

பேரரவம் கேட்டிலையோ
நாங்கள் சொல்லுகிற இவற்றுக்கு அனுபவத்தி சொல்லுகிற உனக்கும் அகப்பட
கேட்க்கும் படி அன்றோ த்வனியின் பெருமை –

பேர் அரவம்
நீயும் உணருகைக்கு போரும் சங்கின் த்வனி
மஹா ராஜர் வாசலிலே சென்று இளைய பெருமாள் சிறு நாண் ஏற்றி எறிந்தார் என்ன
அனந்தாழ்வான் -தாரையினுடைய ஸ்தநோஷ் மாவைப் பற்றிக் கிடந்த மஹா ராஜர்
ஆந்த்யமும் (காம மயக்கமும் )தீருகைக்குப் போரும் த்வனி என்றான் –

————–

கேட்டிலையோ –
இது கேட்க பாக்கியம் இன்றிக்கே ஒழிவதே –
இவர்கள் இப்படிச் சொல்ல பின்பு நிருத்தரையாய் கிடந்தாள் –

கேட்டிலையோ
இதுவும் கேளாதபடியோ அங்குத்தை அந்நிய பரதை -என்று பழி இடுகிறார்கள் –
இவள் அது கேட்டு துணுக் என்று எழுந்து இருக்கைக்கு –
போது விடிந்து சங்கு ஊதுகிறார்கள் அல்லர் -பணிக்குக் கடவர்களை அழைக்கிறார்கள் என்ன
தூஷணங்கள் தேடிச் சொல்லிப் போது விடியப் பார்த்து இருப்பதே என்று இவர்கள் சொல்ல
அந்தியம் போதே உணர வேணுமோ -அவர்கள் போது அறியாதே சங்கூதினார் அத்தனை -என்ன

புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ –
புள்ளுக்கு -பெரிய திருவடிக்கு
அரையன் -அரையனான எம்பெருமானுக்கு ப்ரதிபாதகத்வேன

கோயிலான திரு மந்த்ரத்தில் உகாரத்தை மத்யத்திலே உடைத்தாகையாலே பரி சுத்தமாய் –
அகில ஆத்ம வர்க்கத்துக்கும் பகவத் கைங்கர்ய உபாய உக்தமாய்
பகவத் சம்பந்த ஜ்ஞாபகமாய் –
தஷிணாவர்த்த சங்க துல்யமான பிரணவத்தின்
மகா த்வநியைக் கேட்டிலையோ

—————

பிள்ளாய் எழுந்திராய் –
பகவத் விஷயத்தில் புதியை இறே-பாகவத சம்ச்லேஷத்தில் இனிமை அறியாய் இறே
அனுபாவ்யங்களில் காஷ்டா பூமியான பாகவத சம்ச்லேஷ ரசம் பிறக்கும் அளவும்
பகவத் விஷயத்தில் அவஹாகிக்கப் பெற்றிலையே-

பிள்ளாய் எழுந்திராய்
பகவத் விஷயத்தில் அவகாஹிக்கை யாவது பாகவத சம்ச்லேஷ பர்யந்தமாகை-
அவ்வளவு அன்றிக்கே
கிருஷ்ண சம்ஸ்லேஷத்து அளவிலே பர்யவசிக்கிறது உன்னுடைய முஃத்யம் இறே என்ன

கிருஷ்ண சம்ஸ்லேஷ அளவிலேயோ நான் நிற்கிறது
உங்களுடைய பேச்சே தாரகமாக கேட்டுக் கிடக்கிற என்னை
பிள்ளாய் -என்கிற நீங்கள் அன்றோ பிள்ளைகள் என்ன –

பேச்சுக்கு கேட்டுக் கிடக்க அமையுமோ
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல்(பெருமாள் ) என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ(திருவாய் -2-3-) என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி -7-4-) என்றும்
அன்றோ நம்முடைய பூர்வர்கள் வார்த்தை –
அப்படியே உன் வடிவை நாங்கள் கண்டு -எங்கள் வடிவை நீ கண்டு அனுபவிக்க ஆசைப்படாதே இருக்கிற நீ அன்றோ பிள்ளை
நாங்கள் சொல்லிற்றை எல்லாம் அழிக்கைக்கு அடி உன் பால்யம் இறே

பிள்ளாய் எழுந்திராய் –
இந் நோன்புக்கு புதியையாய் இறே நீ உறங்குகிறது –
உனக்கு இன்னம் இளமை இறே –
அந்தியம் போது தான் இக் கோஷ்டி உத்தேச்யம் அன்றோ
பகவத் சம்ஸ்லேஷத்துக்கும் பாகவத சம்ஸ்லேஷத்துக்கும் வாசி அறியாயீ என்ன

(ஸம்ஸார துக்கம் இருள் -பகல் கண்டேன் -முக்தன் -ப்ரஹ்ம முஹூர்த்தம் முமுஷுவுக்கு உத்தேச்யம்)

பட்டர் திருவாய்ப்பாடியில் உள்ளாரில் சிந்தையந்தியோபாதி கிருஷ்ண சம்ச்லேஷித்தில் புதியார் இல்லை -என்று
அருளிச் செய்வார் -என் செய்ய என்னில்
குரு தர்சனம் பண்ணக் கண் உண்டாய்த்தே-
தச்சித்த விமலாஹ்லாத-இத்யாதி –
யயவ் ச காசித் ப்ரேமாந்தா என்று
ஒருத்திக்கு ப்ரேமமானது இருளை பண்ணுகையாலே காவல் கிடந்தாரைக் காணாமைக்கு உடலாய்த்து –
அது தான் வழி போகைக்கு உடலாய்த்து
குரவ கிங்கரிஷ்யந்தி–குருக்கள் கிடாய் என்ன -அவர்கள் விரஹ அக்நிக்கு ஒரு குட நீர் சொரிய வல்லார்களோ
அன்றியே வழித் துணை ஆவார்களோ என்றார்கள் –

(ஒருத்தி-திருக்கோளூருக்கு போன பராங்குச நாயகி தீர்க்க சிந்தயந்தி )

அவளுக்கு இவர்கள் பேச்சே அமையா நின்றது –
இவர்களுக்கு அவள் வடிவு காண வேண்டா நின்றது

இன்பமே நாளும் வாய்க்க –

(அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)

ஒருக்காலும் பிரிகிலேனே என்கிற இது ஆண்டாளுக்கு முதலிலே பிறந்து பிரக்ருதியாய் இருக்கிறது

(தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)

இது காண்கைக்கு மேலே அவனோடே அனுபவிக்க வேண்டாவோ என்ன
மாறி மாறி இரண்டும் உத்தேச்யமாகக் கடவது

பிள்ளாய்
எல்லாரும் -குரவ கிம் கரிஷ்யந்தி என்று போகா நிற்க
சிந்தயந்தி குரு தர்சனம் பண்ண
பிரணயித்வத்தில் புதியவள் என்றால் போலே இங்கும் இவளை பிள்ளை என்கிறது –

நீங்கள் சொன்ன படியே நானே பிள்ளை யாகிறேன் –
உங்கள் உணர்த்திக்கு அடி ஏது என்ன

நானோ புதியை-நீங்கள் அன்றோ –
காலம் அறியாதே எழுப்பினிகோள்-உங்களை உணர்த்தினார் யார் -என்ன
தங்களை உணர்த்தினவர்களைச் சொல்லுகிறார்கள்

எழுந்து இராய்
இருப்பு -சத்தை பெற வேண்டுமே -அதற்காக எழுந்திராய்

———

தாங்கள் உணர்ந்தமைக்கு ஹேது சொல்கிறார்கள்

நாங்கள் உன்னைக் காண ஆசைப்பட்டவோபாதி-
நீயும் எங்களைக் காண ஆசைப்பட வேண்டாவோ –
அறிந்து இருக்கிற உங்களை எழுப்பினார் ஆர் என்ன –

பேய் முலை இத்யாதி –
பேய் முலை நஞ்சுண்டு –
பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –

பேய் முலை நஞ்சுண்டு
போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காக
புகுந்த அபாயம் கேட்டிலையோ
பெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்
பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-

(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை –
உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )

சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்
அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறே
அவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்

பேய் இத்யாதி –
பேய் உண்டு -பிரகிருதி
முலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்
நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –

பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

————

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி –
பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்-
தாயே ரஷையாக வைத்த சகடம் –
அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –

கலக்கழிய காலோச்சி —
சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று-
மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –

இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது-
பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-

கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனது

கலக்கழிய காலோச்சி
கட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து

(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –
கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான் )

கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்த சகடம் -பூதனை தாய் வடிவு கொண்டாகிலும் வந்தாள்-
அப்படி அன்றிக்கே காவலாக வைத்த சகடம் தானே
அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக-தன் நினைவு இன்றிக்கே முலை வரவு தாழ்த்து
ஸ்தன்யார்த்தியாயத் தொட்டிலை உதைத்த திருவடிகள் புறப்பட்டு முடித்த அத்தனை இறே –

(அஸ்மான் ஹந்தும் -சுக்ரீவன் சொன்னது போல் இங்கு நம்மைக் கொல்ல வந்தான் )

ஊர்ந்த சகடமுதைத்த பாதத்தன் ( 5-3-3 ) -ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் –
திருக் காலாண்ட பெருமான் (6-9-)
ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போல

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

————

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை –
இவ் அபாய பிரசங்கம் இல்லாத இடத்தில்-
பரிவனான திரு அநந்த ஆழ்வான் மேலே சாயப் பெற்றதே -என்று ஹ்ருஷ்டைகள் ஆகிறார்கள் –

வெள்ளம்
சௌகுமார்யத்துக்கு சேர குளிர்ச்சி உண்டான படி –

அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலைக தாமநி- (ஸ்தோத்ர ரத்னம் )
ஞானம் இருவரையும் அறிகை-
விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை –
பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி –

அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை

அரவில் –
அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கை –
மென்மை குளிர்த்தி நாற்றங்கள் -பிரக்ருதியான திரு வநந்த ஆழ்வான் மேலே –
இவன் மூச்சு பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே பயப்படவும் வேண்டா -என்கை –
வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் -என்னக் கடவது இறே  –

துயில்
ஜகத் ரஷண சிந்தனை -பனிக் கடலில் பள்ளிக் கோளைப் பலகை விட்டு ஓடி வந்து
என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -என்று
ஓர் ஆஸ்ரிதனுடைய ஹிருதயத்தை கணிசித்துக் கிடக்குமவன் என்னவுமாம்

அமர்ந்த –
பிராட்டிமார் திரு முலைத் தடத்தால் நெருக்கினாலும் உணராமை –

வித்தினை –
திருவவதாரத்துக்கு நாற்றங்கால்-
பிறந்த பிறவிகள் போராமை திரியப் பிறக்கைக்கு அடி இட்ட படி —

வெள்ளத் தரவில் –
விரோதி பிரசங்கம் இல்லாத தொரு தேசமும் ஒரு பரிவனையும் பெறுவதே –
நீர் உறுத்தாத படி -நாற்றம் மென்மை குளிர்த்தி தொடக்கமான ஸ்வபாவங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே –

துயில் அமர்ந்த –
பிராட்டிமார் திரு முலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்பினாலும் கிளம்பாத படியாய் இருக்கை

வித்தினை
(ஜகத்துக்குக் காரணமானவனை )
கிருஷிகர் விரையை நீரிலே சேர்க்குமா போலே –
பிறந்தது நினையாது இருக்கையும் –
பிறந்தது எல்லாம் கிடக்க இன்னமும் பிறக்கைக்கு அடியாய் இருக்கையும் –
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணமாய் இருக்கிறவனை

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
பரப்பை யுடைத்தான திருப் பாற் கடலிலே அக்கடல் போலேயாய்-
சர்ப்ப ஜாதிக்கு அசாதாரணமான சைத்திய சவ் காந்திய சவ் குமார்ய பிரசுரமான
திருவனந்த ஆழ்வான் மேலே ஜகத் ரக்ஷண சித்தாத்மகமான யோக நித்திரையில் மிகவும் அவகாஹித்து
ராம கிருஷ்ணாத் யவதார கந்தமாய் அநிருத்த ரூபியாய்க் கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானை –

வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே
காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ –

(வித்தை நீரில் இட்டு வைக்குமா போல் பாற் கடல் -குட மூக்கும் இதே போல் உண்டே)

க்ஷீர ஸாகர தரங்க ஶீகர ஆஸாரதாரகித சாரு மூர்தயே | போகி போக ஶயனீய ஶாயினே மாதவாய மது வித் விஷே நம꞉-முகுந்த மாலை -பாற் கடல் பெருமாளை த்யானித்துக் கொண்டே உறங்கவும் எழவும் வேண்டுமே 

கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –

ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

——–

உள்ளத்துக் கொண்டு –
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -என்கிறபடியே
திருப் பாற் கடலோடும் திரு வநந்த ஆழ்வானோடும் நாய்ச்சிமாரோடும் கூட தங்கள் நெஞ்சிலே கொண்டு –

உள்ளத்துக் கொண்டு
திருப் பாற் கடலிலே திரு அனந்த ஆழ்வான் மேலே அவதார கந்தமாய்
அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனை
அரவத் தமளியினோடும் (பெரியாழ்வார் )-என்கிறபடியே
தங்கள் நெஞ்சு ஆகிற நாடுகளிலே ( 8-6-4)-குடி கொள்ளும் படி பண்ணி

உள்ளத்துக் கொண்டு
மது கைடபாதிகள் இல்லாத இடம்
பனிக் கடலிலே நீராடி உண்ட விடாய் தீர -மனக் கடலிலே கொண்டு -(பெரியாழ்வார் 5-4-9)

———

முனிவர்களும் யோகிகளும் –
யோக அப்யாசம் பண்ணுகிறவர்களும்-மனன சிலரும் -அவர்கள் ஆகிறார்கள் –
வ்ருத்தி நிஷ்டரும்-குண நிஷ்டரும் -இங்கு உறங்குகிறவர்களையும் எழுப்பு கிறவர்களையும் போலே இருக்கிறவர்கள் –

முனிவர்களும் யோகிகளும்
ஒரு பிரவ்ருத்திக்கு ஷமர் இன்றிக்கே இருக்கிற குண நிஷ்டரும் -கைங்கர்ய நிஷ்டரும் –
லஷ்மண பரதர்களைப் போலே இருக்குமவர்கள் –
பரமபதத்திலும் வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியாய் இறே இருப்பது

திருவாய்ப்பாடியில் அவர்கள் உண்டோ என்னில் –
கிருஷ்ணன் இங்கே அவதரிக்கையாலே ஊரில் பசு நிரைக் கொட்டில்களிலே படுகாடு கிடப்பார்கள் –
பாண்டவர்கள் வர்த்திக்கிற பணிக் கொட்டில்களிலும் இடைச் சேரியிலும் கிருஷ்ணன் படுகாடு கிடக்குமா போலே-
(அணைய–பெருமக்கள் பாரித்து –எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே )

உள்ளத்துக் கொண்டு -முனிவர்களும் யோகிகளும்-
ச பரிகரமாக (அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து)அடக்கவற்றான ஹ்ருதயங்களிலே கொண்டு –
பகவத் குணங்கள் ஸ்ம்ருதமானால் ப்ரவ்ருத்தி ஷமர் அன்றிக்கே சிதில அந்த கரணரான முனிவர்களும்
அவனோடு சேர்ந்து கொண்டு அல்லது நிற்க மாட்டாதே க்ஷண மாத்ர விஸ்லேஷத்திலே மாந்துமவரான யோகிகளும் –

———–

மெள்ள எழுந்து –
கர்ப்பிணிகள் பிரஜைகளுக்கு நோவு வாராமே எழுந்து இருக்குமா போலே
வளையம் அலையாமே என்று இறே எழுந்து இருப்பது –

திரு வாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்னில்
கிருஷ்ணன் வந்து திருவவதரித்த பின்பு இடையர் உடைய-பசு நிரைக் கொட்டில்களிலே வந்து அவர்கள் படுகாடு கிடப்பார்கள்-

அரி என்ற –
அரி என்கை யாவது-பகவத் அனுபவ விரோதிகளை போக்கி அருள வேணும் -என்கை

பின்னை இவர்களுக்கு பாபம் ஆவது –
கிருஷ்ணனுக்கு அசுரர்களால் வரும் தீங்கு-
அத்தை அவன் தானே போக்கி தந்து அருள வேணும் என்று-மங்களா சாசனம் பண்ணுகை என்றுமாம்

அவனாலே பயம் கெட்டால் பின்பு அத்தலைக்கு பயப்பட்டு-திருப் பல்லாண்டு பாடும் இத்தனை இறே

பகவத் சம்பந்த ஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு இழவு பேறுகள் தன்னளவிலே யாய் இருக்கும்-
சம்பந்த ஜ்ஞானம் பிறந்த பின்பு இழவு பேறுகள் அவன் அளவிலே யாய் இருக்கக் கடவது இறே-

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகள் பிள்ளைக்கு நோவு வாராத படி மெள்ள எழுந்து இருக்குமா போலே
ஹ்ருதயேந உத்வஹன் ஹரீம்-என்று
ப்ரஹ்லாத ஆழ்வான் தான் மலையில் நின்றும் விழா நிற்கச் செய்தேயும் – மலைமுடிகளினின்று
தள்ளுண்ணம் போது “ஹ்ருதயேநோத்வஹந் ஹரிம்” என்றபடி – ‘பார்த்தருள் பார்த்தருள்” என்று
ஹ்ருதய குஹரவாஸியான ஸர்வேச்வரனைப் பிடித்துக்கொண்டாற் போலவும்-ஹ்ருதயத்தில் இருக்கிற சர்வேஸ்வரன் தளும்பாத படி எழுந்து இருந்து

அரி என்ற
ரக்ஷதுத்வாம் அசேஷாணாம் -என்னுமா போலே
நீயே உன்னை நோக்கிக் கொள்ள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணின
அத ஸ அபயங்கதோ பவதி-தம் பயம் கெட்டால்-அங்குத்தைக்கு பரிகை இறே உள்ளது

——-

பேரரவம் –
பஞ்ச லஷம் குடியிலும்-இந்த த்வநியாயே இருக்கை
எல்லாரும் ப்ரபுத்தரான காலம் ஆகையாலே ஒருவர் சொல்லும் அளவன்றிக்கே எல்லாரும் சொல்லுகை –

பேரரவம்
ஒருத்தன் அரி என்றது கேட்டு
ஒருவர் இருவராய் ஊராக ஹரி -என்கையாலே ப்ராதேசிகம் அன்றிக்கே
திருவாய்ப்பாடி எல்லாம் இந்த மஹா த்வனியே யாய்த்து –

ஹரி ஹரி என்கை யாவது –
ரக்ஷது த்வாம் அசேஷாணாம்–( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே
உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

அள்ளி அம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – 4-10-7-நாலாயி:1344/3 -அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல் அன்றிக்கே அளியை அள்ளி என்னுதல்  -அத்தாலே தண்ணளி யாய் குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து ஹரி ஹரி என்னுமா போலே திரு நாம  சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து (மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து அங்குத்தை திர்யக்குகளுக்கும் –

——

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

அவஹிதராய்க் கொண்டு எழுந்திருந்து ஹரி ஹரி என்று எம்பெருமானும் உணர்ந்து(அரவம்)
கேட்டாராம் வாழும்படி பண்ணின (பேரரவம்)திரு நாம சங்கீர்த்தனம்
உறங்குவாருடைய படுக்கைக்கையிலே வெள்ளம் கோத்தால் போலே
கிருஷ்ண விஸ்லேஷத்தாலே கமர் பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள் நனைத்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது –
அது காண் எங்களை எழுப்பிற்று -என்கிறார்கள் –

பேய்முலை நஞ்சுண்டு இத்யாதி –
அவர்கள் பயப்படுகைக்கு சொன்னார்கள் -விரோதி போகப் பெற்றதே என்று இவள் பயம் கெடுகைக்கு உடலாய்த்து

கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்தது என்கை –
பேயை ஆராய்ந்து கொள்ளலாம் -தாய் ரக்ஷகமாக வைத்த சகடம் கிடீர் என்று அஞ்சுகை

கலக்கழிய காலோச்சி
அவன் அகப்பட்டுக் கொண்டு நின்றான் –
முலை தாழ்த்தது என்று மூரி நிமிர்ந்த திருவடிகள் அத்தை முடித்தது என்கை
அவன் ஆபத்துக்கும் நம் ஆபத்துக்கும் ரக்ஷை அவன் திருவடிகள் -ஆகையால் அன்றோ
நம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் அவற்றையே பற்றுகிறது

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த
கீழே பிறந்த ஆபத்துக்கு தப்பிப் போய் திருவனந்த ஆழ்வான் மேலே சாயப் பெறுவதே என்கிறார்கள் –

வெள்ளம்
திரு மேனியில் சவ்குமார்யத்துக்குச் சேர குளிர்த்தி யுண்டான படி –

அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலை கதாமநி
ஞானம் இருவரையும் அறிகை
விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
எல்லா அடிமை யாகிறது -சென்றால் குடையாம் இத்யாதி

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி -53-)

ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை
பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி
திருமேனிக்கு உறுத்தாமைக்கு படுத்த பரிமளம் படுக்கை –
பாம்புக்கு நாற்றம் குளிர்த்தி மென்மைகள் ஸ்வ பாவம் –
இனி திரு விடையாட்டத்தில் பாம்புக்கு வாசி வைத்துக் கொள்ளும் அத்தனை –
இவன் மூச்சுப் பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே-
இப்படுக்கை யுடையவனுக்கு பயப்பட வேண்டா என்கை –

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை

வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே இருக்கை-
காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ -என்கை
இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் போராமை இனி பிறக்கைக்கு அடியிட்டு இருக்கிறபடி-

உள்ளத்துக்கு கொண்டு
மதுகைடபாதிகள் இல்லாத இடம்
(பனிக்கடலில் )விடாய் தீர -மனக் கடலில் கொண்டு

முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே குணவித்தரும் கைங்கர்ய பரரும்-
இளைய பெருமாளும் பரத ஆழ்வானும் போலே இருப்பார்
உறங்குகிறவர்களையும் உணர்த்துகிறவர்களையும் போலே இருப்பார்

திருவாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன –
அவன் இங்கே வந்து அவதரிக்க-பின்பு இடையர் பசு நிரைக் கொட்டில்களிலே கடுகாடு கிடப்பர்கள் –

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகளைப் போலே
ஹ்ருதயே நோத் வஹன் ஹ்ரீம்

மெள்ள எழுந்து-

தங்கள் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானைத் திருப் பள்ளி யுணர்த்துகைக்காக
அவன் அசலாத படி ஸ்தநந்தய பிரஜையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டு உறங்கும் மாதா
அந்த பிரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்திருக்கும் போலேயும்

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைப் பெரிய கற்களோடே கட்டி மலையிலே நின்றும் கீழே தள்ளுகிற போது –
அவன் தன்னுடைய நோவு பாராதே
எம்பெருமானுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தால் தன் கைகளால் மார்வைப் புதைத்துக் கொண்டு
பார்த்தருளீர் என்றால் போலேயும்

அரி என்ற பேர் அரவம்
ஹரி ஹரி என்கை யாவது -ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி -என்னும்படியே
உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

பேர் அரவம்
பேர் அரவமாவது ஒருவர் ஹரி என்ன
பஞ்ச லக்ஷம் குடியிலும் ஒரு த்வநியாய் எழுகை முந்துற —
அத சோ அபயங்க தோ பவதி என்று இத்தலையில் பயம் கெட்டால் பின்னை
அத் தலைக்கு பயப்பட்டுத் திருப் பல்லாண்டு பாடும் அத்தனை இறே

பண்டு இழவு பேறுகள் தன்னளவில் –
இப்போது பேறு இழவுகள் அவனளவிலே

ரிஷிகளும் –முந்துற நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய–என்று தொடங்கி
கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் என்று பயம் கெடுவர்கள்

ஸ்ரீ பரத்வாஜ பகவான் பெருமாள் எழுந்து அருளும் தனையும்– வவந்தே நியதோ முநிம் -என்று
வயிறு எரிந்த படியே இருந்தான்

உள்ளம் புகுந்து குளிர்ந்து-
படுக்கைக்கு கீழே வெள்ளம் புகுந்தால் போலே இத் திரு நாமம்
செவி வழியே புக்கு உடம்பு வவ்வலிட உணர்ந்தோம் –

உள்ளம் புகுந்து குளிர்ந்து –
படுக்கைக்கு கீழே வெள்ளம் கோத்தாப் போலே-திருநாமம் செவி வழியே புகுந்து வவ்வலிட்டது-
அவன் அவர்கள் நெஞ்சிலே புகுந்து ஆனந்திப்பித்தாப் போலே-
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்து கிடக்கிற நெஞ்சு-பதம் செய்யும்படி-
இவர்கள் உடைய த்வனியும் எங்கள் நெஞ்சிலே புகுந்து எங்களை-ஆனந்திப்பித்தது-
ஆகையால் எழுந்து இரு என்கிறார்கள் —

கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்து கிடந்த ஹிருதயமானது ஒரு நீர்ப் பாய்ச்சினால் போலே பதம் செய்து

மறு நீர் பாய்ந்தால் போலே குளிர்ந்தது- அத்தாலே நாங்களும் உணர்ந்தோம் –பிள்ளாய் எழுந்திராய் –

வெள்ளத்து அரவில் –துயில் அமர்ந்த –வித்தினை –
திருப் பாற் கடலிலே–திரு வநந்த ஆழ்வான் மேலே –யோக நித்ரையில் அந்ய பரதை இல்லாமல் அமர்ந்து இருந்த ஜகத் காரண பூதனை –
உள்ளத்துக் கொண்டு –முனிவர்களும் யோகிகளும் –-மெல்ல எழுந்து அரி என்ற-
ஹிருதயத்தில் த்யானித்து–குணானுபவரும் கைங்கர்ய பரரும் –சாவதானமாக–ஜாக ரூகராய்–ஹரிர் ஹரி -என்ற
பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து
மகா த்வநியானது ஹிருதயத்திலே பிரவேசித்து –
குளிர்ந்தது–எழுந்திராய் -இத் அந்வய —

————————————————————————–———–

பிராட்டியார் -ஸ்ரீ ரெங்க நாயகி -பள்ளி கொள்ளும் இடம் ஸ்ரீ ரெங்கம் -வித்து இவரே -பேர் அரவம் -திரு அத்யயன உபய வேதாந்த ஒலி -இனிய கோஷம்

பிள்ளாய் :
கற்றதன்றி உற்றத வன்னடியார்க் காள் எற்றோ ?
பெற்ற பரமன் நமை உடைத்தாய் — மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நம என்பார் சாற்று.

———————-

(ஸ்வாபதேசம்)

பிள்ளாய் எழுந்திராய் -என்று பிள்ளைப் பெண் என்கிறது பொய்கை ஆழ்வாரை –
அது எங்கனே என்னில் –

அரவம் அடல் வேழம்-இத்யாதியாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்
சூடிக் கொடுத்த வடிவுக்கு –
வையம் தக்ளி இத்யாதி –
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை -என்றும்
மாலும் கரும் கடலே என்நோற்றாய் இத்யாதியாலே –
அவனுடைய அங்க சங்கத்தை ஆதரித்துப் பேசியும்

மணமருவ மால் விடை ஏழ் செற்று-என்று
நப்பின்னை பிராட்டியை பெறுகைக்கு எருதுகளின் மேல் வியாபாரித்த படியைப் பேசுகையாலும்

இதில்
பேய் முலை நஞ்சுண்டு -என்றத்தை –
பேய் முலை நஞ்சூணாக யுண்டான் -என்றும்

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி -என்று
கன்னிப் போரான சிறுச் சேவகத்தை -ஓரடியும் சாடுதைத்த -என்றும் –

வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றத்தை
வெள்ளத்தில் உள்ளானும் இத்யாதியால் பேசியும்

ஒன்றும் அதனை உணரேன் நான் -என்றும் –
முந்துற முன்னம் பகவத் விஷயத்திலே இழிந்தவர் ஆகையாலும்
பிள்ளைப் பெண் என்கிறது -பொய்கை ஆழ்வாரை —

பிள்ளை -மௌக்த்யம்-என்றவாறு

————

இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

கோவிலில் -அரண்மனையில் -வல்லப தேவன் பாண்டியன் -சங்க நாதம் -ஈண்டிய சங்கம் எடுத்தூத –

முனிவர் யோகி -கைங்கர்யமும் குண அனுபவமும் -மந்த்ர உபதேசம் -நாரணன் பேர் வைக்க -நீராடல் இத்யாதி -பஞ்ச ஸம்ஸ்கார வியாக்யானம் செய்து அருளினார்

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

————————————————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 471-502-திரு நாமங்கள்–

December 20, 2022

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

(திருநாமங்கள் 471 முதல் 482 வரை – தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)
(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

————–

471. வத்ஸராய நமஹ (Vathsaraaya namaha)

தர்ஷன் ஹர்ஷன் என்ற இரண்டு நண்பர்கள் பண்டரிபுரத்தில் சந்திரபாகா நதிக்கரையிலே அமர்ந்திருந்தார்கள். தாங்கள் உண்பதற்காக இருவரும் ரொட்டிகள் எடுத்து வந்திருந்தார்கள். தர்ஷன் ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தார். ஹர்ஷன் மூன்று ரொட்டிகள் வைத்திருந்தார்.அப்போது அந்த வழியே வழிப்போக்கர் ஒருவர் வந்தார். அவர் இருவரையும் பார்த்து, “நான் நீண்ட நாள்களாகப் பசியால் வாடி வருகிறேன்! எனக்கு ஏதாவது கொஞ்சம் ரொட்டி தர முடியுமா?” என்று கேட்டார். தர்ஷனிடம் உள்ள 5 ரொட்டிகளையும், ஹர்ஷனிடம் உள்ள 3 ரொட்டிகளையும் சேர்த்து மூவருக்குமாகச் சமமாகப் பிரிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. எட்டை மூன்றால் வகுக்க முடியாதல்லவா?

அந்த வழிப்போக்கர், “இதற்கு ரொம்ப எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று மூன்று துண்டு களாக வெட்டி விடுங்கள். எட்டு ரொட்டிகளையும் மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால், 24 துண்டுகள் கிடைக்கும். அதன்பின் ஆளுக்கு எட்டு துண்டுகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமே!” என்று சொல்ல, இந்த ஆலோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது என்று தர்ஷன் ஹர்ஷன் இருவருமே ஏற்றார்கள்.

ஆளுக்கு எட்டுஎட்டு ரொட்டித் துண்டுகள் என்று மூவரும் எடுத்துக் கொண்டபின், அந்த வழிப்போக்கர் தர்ஷன் – ஹர்ஷனிடம் எட்டுத் தங்க நாணயங்களைத் தந்து விட்டுப் போனார். தர்ஷன் ஹர்ஷனிடம், “நான்  நான்கு தங்கக் காசுகள் எடுத்துக் கொள்கிறேன். நீ நான்கு தங்கக்காசுகள் எடுத்துக் கொள். நமக்குள் சரிசமமாகப் பிரித்துக் கொள்வோம்!” என்று சொன்னான். ஆனால், ஹர்ஷன் ஒத்துக்கொள்ளவில்லை.

“தர்ஷன்! நீ செய்த தானத்தை விட நான் செய்த தானமே உயர்ந்தது. நீ ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தாய், நான் மூன்றுதான் வைத்திருந்தேன். ஐந்து ரொட்டிகள் வைத்திருப்பவன் தானம் செய்வது பெரிய விஷயம் இல்லை. மூன்று ரொட்டிகள் இருந்தபோதும் தானம் செய்தேனே, அதுதான் உயர்ந்த தானம். அதனால், எனக்குத் தான் நிறைய தங்கக் காசுகள் தரவேண்டும். சரிசமமாகப் பிரிப்பதை நான் ஏற்க மாட்டேன்!” என்றான்.

இதை தர்ஷன் ஏற்கவில்லை. சரிசமமாகத் தான் பிரிக்க வேண்டும் என்றான். இருவருக்குள்ளும் அது பெரிய வாக்குவாதமானது. இருவரும் ராஜாவிடம் சென்றார்கள். ராஜா வழக்கை விசாரித்து விட்டு, “எத்தனையோ அரசுப் பணிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு வழக்கா? நாளை பார்க்கலாம்!” என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்து விட்டார். அடுத்த நாள் காலை, ராஜா அரசவைக்கு வந்தார். தர்ஷன் ஹர்ஷன் இருவரும் வந்தார்கள். “தர்ஷனுக்கு ஏழு தங்க நாணயங்களும் ஹர்ஷனுக்கு ஒரு தங்க நாணயமும் வழங்கப்படும்!” என்று ராஜா தீர்ப்பு.

தீர்ப்பின் தாத்பரியம் புரியாமல் எல்லோரும் விழிக்க, ராஜா சொன்னார், “தர்ஷனுக்கும் ஹர்ஷனுக்கும் வழிப்போக்கனாக வந்து காட்சி தந்தவன் சாட்சாத் பாண்டுரங்கன். அதே பகவான்தான் என் கனவிலும் வந்து காட்சி தந்து, எனக்கு ஒரு கணக்கைச் சொல்லிக் கொடுத்தார். தர்ஷனிடம் ஐந்து ரொட்டிகள் இருந்தன. அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் 15 ரொட்டித் துண்டுகள் தேறும். ஹர்ஷனிடம் மூன்று ரொட்டிகள் இருந்தன.

அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் ஒன்பது ரொட்டித் துண்டுகள் தேறும். 15 துண்டுகள் வைத்திருந்த தர்ஷன், 7 துண்டுகளைத் தானமாக வழங்கிவிட்டான். 9 துண்டுகளை வைத்திருந்த ஹர்ஷன், ஒரு துண்டுதான் தானமாகக் கொடுத்திருக்கிறான். ஏழு ரொட்டித் துண்டுகள் கொடுத்தவனுக்கு ஏழு தங்கக் காசுகள், ஒரே ரொட்டித் துண்டு கொடுத்தவனுக்கு ஒரு தங்கக் காசு. இதுதான் பாண்டுரங்கன் தீர்ப்பு!” என்று விளக்கினார்.

இதன் மூலம் நாம் உணர்வது என்னவென்றால், நாம் செய்யும் தர்மம் அதர்மம் ஆகியவற்றை எல்லாம் பகவான் நம் கூடவே இருந்து கண்காணிக்கிறார். நாம் தர்மத்தைச் செய்தால் நமக்கு நன்மையை வழங்குகிறார். அதர்மத்தைச் செய்தால், அதற்குரிய தண்டனையை வழங்குகிறார். அந்தத் தர்மத்திலுமே ஏழு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஏழு தங்கக் காசுகள், ஒரு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஒரு தங்கக் காசு என்ற ரீதியில், என்ன தர்மம் செய்கிறோமோ அதற்குத் துல்லியமான கூலியைத் தருகிறார்.

இப்படியாக நம்மைக் கண்காணிப்பதற்காக நம் அனைவருள்ளும் எழுந்தருளி இருப்பதாலே, திருமால் ‘வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுதான் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தின் 471-வது திருநாமம். ‘வத்ஸர:’ என்றால் உள்ளே வசிப்பவர் என்று பொருள்.
நாமும் “வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், நம்முடைய தர்மங்களுக்கான சரியான பலன்
நம்மை வந்து சேரும்படி திருமால் நமக்கு அருள்புரிவார்.

———————-

472. வத்ஸலாய நமஹ: (Vathsalaaya namaha)

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய அற்புதமான ஒரு பாசுரம்:

“சினவில் செங்கண் அரக்கர் உயிர்மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்றேத்தும் மாமுனியை மரமேழ் எய்தமைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே”

அன்று எந்தத் திருமால், ராமனாக அவதரித்து, சீதையைத் தன்னிடம் இருந்து பிரித்து வைத்த ராவணனையும் அரக்கர்களையும் அழித்தாரோ, அதே திருமால் இப்போது நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்து, ஜீவாத்மாக்கள் தன்னை அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்துப் பாபங்களையும் போக்கி அருளிக்கொண்டு இருக்கிறார். தன் பக்தர்களான ஜீவாத்மாக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதைப் பற்றியே அனவரதமும் சிந்தித்துக் கொண்டு இருப்பதால், முனி – எந்நாளும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர் – என்று போற்றப்படுகிறார் அந்த ஸ்ரீநிவாசப் பெருமாள்.

ராமாவதாரத்தில், ராமனின் வலிமை மீது சந்தேகம் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக ஒரே பாணத்தால் ஏழு மரங்களைத் துளைத்துக் காட்டினார். கலியுகத்தில், நம்பிக்கை இல்லாதிருக்கும் நம் போன்றோருக்கு நம்பிக்கையை அருள நம்பிக்கை நட்சத்திரமாக நாச்சியார்கோவிலில் கோயில் கொண்டுள்ளார்.தெளிந்த ஞானம் பெற்ற மகான்களாலும் கூடக் காணமுடியாதவனாக விளங்கும் அந்த ஸ்ரீநிவாசன், ஞானமில்லாமல் கலங்கிய மனநிலையில் இருக்கும் அடியேனுக்குத் தன் கருணையால் தரிசனம் தந்தருளினான். அவ்வாறு அவனைத் தரிசித்த அளவிலே, என் கண்கள் களிப்பக் களிப்புற்றேன்!” என்று இப்பாசுரத்தில் தெரிவித்தார் திருமங்கையாழ்வார்.

இந்தத் தமிழ் அமுதைக் கேட்ட நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசன், திருமங்கை ஆழ்வாரிடம், “நான் உங்களுக்கு வலிய வந்து இப்படிக் காட்சி தந்தமைக்கு என்ன காரணம் என்று கூறுங்கள் பார்க்கலாம்!” என்றார். அடுத்த பாடலைப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்:

“தாய்நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்த தான் எனக்கு
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இவ்வையம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை”

“இறைவா! தாய்ப்பசுவின் ஸ்தானத்தில் இருக்கும் நீ, உன் கன்றுக்குட்டியான அடியேன்மீது இரக்கம் கொண்டாய். கன்றுக்குட்டி தன் தாயை நினைப்பது போல், அடியேன் உன்னை நினைத்திருக்கும்படி நீயே அடியேனுக்கு அருள்செய்தாய். நான் உன்னை நினைத்ததை நீ அங்கீகரிக்கவும் செய்து, இப்பேரருளையும் நீயே தந்து விட்டாய்!” என்று இப்பாசுரத்தில் பதில் உரைக்கிறார் ஆழ்வார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், தன்னிடம் சரணாகதி செய்யும் அடியார்களைத் தனது கன்றுக்குட்டியாய்க் கருதி, அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களின் மனங்களுக்குள் திருமால் குடிவந்துவிடுகிறார். அந்த பக்தர்களையும் தன்னுள் நிலைநிறுத்தி விடுகிறார்.

திருமங்கையாழ்வார் என்னும் கன்றுக்குட்டி, தாய்ப்பசுவான ஸ்ரீநிவாசனை நினைக்கும்படி, ஸ்ரீநிவாசன் அருள்புரிந்தார். அதன்விளைவாக, அவர் மனதில் ஸ்ரீநிவாசன் குடிகொண்டார். இன்றும் திருவாலி திருநகரியில் எழுந்தருளியிருக்கும் திருமங்கை ஆழ்வாரின் திருமார்பில், பதக்க வடிவில் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

இப்படித் தாய்ப்பசு கன்றிடம் அன்பு காட்டுவது போல், சரணாகதியானவர்களிடம் அன்பு காட்டி, அவர்களுக்குள் வசிப்பதால், திருமால் ‘வத்ஸல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘வத்ஸல:’ என்றால் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 472-வது திருநாமம்.“வத்ஸலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மீது திருமால் எல்லையற்ற தாயன்பைப் பொழிந்தருள்வார்.

————

473. வத்ஸிநே நமஹ: (Vathsiney namaha)

கண்ணன் பசுக்கள், எருமைகள், ஆடுகள் ஆகிய மூன்றையுமே மேய்த்திருக்கிறான் என்று புராணங்களைப் பார்க்கும்போது நமக்குத் தெரிய வருகிறது. ஆனாலும், நாம் எந்தத் திருக்கோயிலுக்குச் சென்றாலும், அங்கே ராஜகோபாலனாகப் பசுவோடுதான் கண்ணன் காட்சி தருகிறானே தவிர, எருமையோடோ ஆடுகளோடோ கண்ணன் காட்சி தருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தேன்.

அடியேனுடைய ஸ்ரீபாஷ்யாதி கிரந்த ஆசார்யன் டாக்டர் ஸ்ரீஉ.வே.கருணாகராச்சாரியார் சுவாமி, நகைச்சுவையோடு ஒரு விஷயம் கூறுவார். “எருமைமாடு யமனுடைய வாகனமாக இருப்பதாலே, கண்ணனை யமன் என்று தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் அஞ்சி விலகிவிடுவார்களோ எனக் கருதி, எருமையைத் தவிர்த்திருப்பார்கள். அவ்வாறே ஆடு என்பதும் வேறு நாடுகளிலும், மதங்களிலும் பயன்படுத்தப்படுவதால், கண்ணன் எந்த மதம் என்று கலக்கம் பிறக்க வாய்ப்பு வரும் என்று கருதி ஆட்டைத் தவிர்த்திருப்பார்கள். மீதமுள்ளது பசுதான், அதனால் அதனைப் பயன்படுத்துகிறார்கள்!” என்று ஹாஸ்யமாக ரசித்துச் சொல்வார்.

அந்த ஆசார்யரது திருவடிகளை அடியேன் தியானித்தபோது, அவரது திருவருளால் இதில் மற்றொரு விஷயம் பிடிபட்டது. மாடு, ஆடு வேறுபாட்டுக்குள் போகாமல், அவை உணர்த்தும் தத்துவங்களின் அடிப்படையில் மட்டும் இக்கருத்தை அணுகுமாறு வேண்டுகிறேன். என்னவென்றால், பசுமாடு சத்துவ குணத்தைக் குறிக்கிறது. ஆடு ரஜோகுணத்தைக் குறிக்கிறது. எருமை மாடு தமோ குணத்தைக் குறிக்கிறது.

பசு, எருமை, ஆடு ஆகிய மொத்தக் கால்நடைகளையும் மேயவிட்டுவிட்டுக் கண்ணன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொள்வான். அவற்றுள் எருமைகளும் ஆடும் புல் மேய்வதிலேயே தங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்தி விட்டுக் கண்ணனையே மொத்தமாக மறந்துவிடுமாம். ஆனால், பசுமாடுகள் மட்டும் கண்ணனின் குழலோசையில் மனதைப் பறிகொடுத்து, கண்ணனின் திருவடிகளையே நாடி வந்து, அத்திருவடித் தாமரைகளில் பொங்கும் தேனைப் பருகியபடி இருக்குமாம்.

இது உணர்த்துவது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள பல்வேறுபட்ட உயிர்களுக்குள், எருமை மாட்டால் உருவகப் படுத்தப்படும் தமோகுணம் மிக்கவர்களும், ஆடுகளால் உருவகப் படுத்தப்படும் ரஜோ குணம் மிக்கவர்களும் புல் மேய்வது போல் உலகியல் விஷயங்களை அனுபவித்து இன்பம் துய்ப்பதையே தங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டு, கண்ணனாகிய இறைவனை மறந்து தங்கள் காலத்தைக் கழிக்கிறார்கள்.

ஆனால், பசு மாடுகளால் உருவகப் படுத்தப்படும் சத்துவகுணம் மிக்கவர்கள், உலகியல் விஷயங்களாகிய புல்லை மேய்வதில் மனம் செலுத்தாமல், இறைவனான கண்ணனின் திருவடிகளை அடிபணிந்து, அவனையே சிந்தித்தபடி, அவனுக்குத் தொண்டுசெய்து வாழ்ந்து உய்கிறார்கள்.அதனால்தான் திருக்கோயில்களில் கண்ணனுக்கு அருகில் பசுமாடும், பசுங்கன்றுகளும் மட்டுமே நிற்பதாகச் சித்தரித்துள்ளார்கள். பல புகைப்படங்களிலும் கூட, எருமைகளும் ஆடுகளும் வெவ்வேறு திசைகளில் மேய்ந்துகொண்டிருக்க, பசுமாடு மட்டும் கண்ணன் திருவடிகளை வருடியபடி இருப்பதைக் காணமுடிகிறது.

ஆனாலும் கண்ணன், தன்னைக் கணிசிக்காத எருமை மாடுகளையோ, ஆடுகளையோ கைவிடுவதில்லை. பசுமாடுகளை மேய்ப்பது போலவே அவற்றையும் மேய்த்து அவைகளுக்குத் தேவையான உணவையும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறான். அதுபோலத்தான், இறைவனை அண்டாதவர்களுக்கும் கூட இறைவன் நன்மையைச் செய்து, அவர்கள் மெல்லமெல்லப் பக்குவம் அடையும்படி அருள்புரிந்து, அவர்களும் தன்னை வந்தடைய வழிகாட்டிக் கொண்டேதான் இருக்கிறான்.

இப்படி உயிர்கள் அனைத்தையும் தன் கன்றுகளாகக் கருதி, அவைகளிடம் அன்பு காட்டும் தாயாகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘வத்ஸீ’ என்று அழைக்கப்படுகிறார். வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. ‘வத்ஸீ’ என்றால் கன்றுகளை உடையவர். இங்கே ஜீவாத்மாக்களே திருமாலுக்குக் கன்றுகளின் ஸ்தானத்தில் உள்ளார்கள் என்பதை இத்திருநாமம் குறிக்கிறது. ‘வத்ஸீ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 473-வது திருநாமம்.“வத்ஸினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைக் கண்ணன் நல்வழிப்படுத்திக் காத்தருள்வான்.

—————

474. ரத்னகர்ப்பாய நமஹ (Rathnagarbhaaya namaha)

சுமார் பத்து வருடங்கள் முன்பு கேரளாவில் உள்ள திருச்சூர் பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்காரர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். குருவாயூரப்பனின் பெருமைகளையும், குருவாயூரப்பனுக்குச் சமர்ப்பிக்கப்படும் துலாபாரக் காணிக்கையைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டார். உடனே, “குருவாயூரப்பா! இன்று பிச்சைக்காரனாக இருக்கும் என்னை, நீ மட்டும் கோடீஸ்வரனாக ஆக்கிவிட்டால், உனக்கு என் எடைக்கு எடை தண்ணீரைத் துலாபாரக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்!” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார். விரைவிலேயே அந்தப் பிச்சைக்காரர், கையில் ஒரு லாட்டரி சீட்டு கிடைத்ததாம்.

அந்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ஒரு கோடி அவருக்குக் கிடைத்துவிட்டது. கண்கண்ட தெய்வமான குருவாயூரப்பன் செய்த இன்னருளை நினைத்து வியந்து போனார் அந்த நபர். பிரார்த்தனை செய்துகொண்ட படிக்காணிக்கையைச் செலுத்தி விடலாம் என்ற முடிவோடு குருவாயூரப்பனின் கோவிலுக்குச் சென்றார். ஆனால், அந்தப் புதிய கோடீஸ்வரருடைய மனதில் ஒரு சிறிய குறை இருந்ததாம். “குருவாயூரப்பனின் பேரருளும் கருணையும் மிகவும் உயர்ந்ததாக இருக்க, அவனுக்குக் காணிக்கையாக வெறும் தண்ணீரையா அளிப்பது?” என்று சிந்தித்து, தண்ணீருக்குப் பதிலாக எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பிக்கத் தீர்மானித்தார் அவர்.

துலாபாரத்தின் ஒரு தட்டில் கோடீஸ்வரர் அமர்ந்தார். மறுதட்டில் அவருடைய எடைக்கு இணையாகக் கற்கண்டை வைத்தார்கள். எவ்வளவு மூட்டை மூட்டையாகக் கற்கண்டு வைத்தாலும், அந்தக் கற்கண்டின் அளவு இவரது எடைக்கு நிகராக வரவில்லை. சுமார், 150 கிலோவுக்கு மேல் கற்கண்டு வைத்தும் கோடீஸ்வரர் அமர்ந்த தட்டுதான் கீழே இருந்தது.அதன்பின் திருக்கோயில் அர்ச்சகரை அழைத்து என்ன செய்வது என்று கேட்டார்கள்.

அவர் சிந்தித்துப் பார்த்து விட்டு, “நீங்கள் கற்கண்டு துலாபாரம்தான் பிரார்த்தித்திருந்தீர் களா? அல்லது வேறு ஏதாவது வேண்டிக் கொண்டீர்களா?” என்று கேட்டார். கோடீஸ்வரர், “நான் தண்ணீரைத் தான் எடைக்கு எடை தருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு செல்வத்தைக் குருவாயூரப்பன் அருளி இருக்கையில், வெறும் தண்ணீரையா அவனுக்குக் கொடுப்பது? அதனால்தான் எடைக்கு எடை கற்கண்டை அளிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன்!” என்றார்.

அர்ச்சகர், “நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதைக் கொடுத்தால்தான் குருவாயூரப்பன் ஏற்பான். அவன் என்ன செல்வம் இல்லாதவனா?  சொத்து இல்லாதவனா?  இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே அந்த பகவானின் சொத்துதான். நீங்கள் துலாபாரம் சமர்ப்பித்தால், உங்கள் பக்தியின் எடையைத்தான் குருவாயூரப்பன் பார்க்கிறானே ஒழிய, நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளின் எடையை அவன் பார்ப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் பொருளுக்காக அருள்புரிபவன் அல்லன் அவன். நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளால் புதிதாக அவனுக்குச் சொத்து வரவேண்டிய தேவையும் இல்லை. பிரார்த்தித்ததைச் சரியாகச் சமர்ப்பியுங்கள்!” என்றார்.

அவ்வாறே எடைக்கு எடை தண்ணீரைக் காணிக்கையாக இவர் சமர்ப்பித்தவாறே, துலாபாரம் நேராக நின்றது. காணிக்கையைக் குருவாயூரப்பனிடம் சமர்ப்பித்து விட்டு,குருவாயூரப்பனிடம் சென்ற கோடீஸ்வரர், “பகவானே!  அடியேனுக்குக் கிடைத்த இந்த ஒரு கோடி ரூபாய் செல்வமும் கூட உன் சொத்தில் இருந்து நீ அருளியது தானே? அதை உணராமல் உனக்குப் புதிதாக ஒரு சொத்தை நான் தருவதாக எண்ணி விட்டேனே! தவறு! என்னை மன்னித்தருள்வாயாக! எல்லையில்லாத சொத்தை உடைய நீ, உன் அடியார்கள் விரும்பினால், அவர்களுக்கு அச்செல்வத்தை அருள்கிறாய் என்று உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டுத் தன் இல்லம் திரும்பினார்.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், எல்லையில்லாத சொத்துகளை உடைய திருமால், செல்வம் வேண்டி வரும் அடியார்களுக்கு அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்கிறார். எனவே, நம்மிடம் செல்வம் இருக்கிறது என்று நாம் கர்வம் கொள்ளாமல், அவன் அருளிய செல்வம் என்று உணர்ந்து நன்றியுடன் இருப்பதே நலம்.

இவ்வாறு எல்லையில்லாத செல்வத்தோடு திகழ்வதால் திருமால் ‘ரத்னகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 474-வது திருநாமம்.“ரத்னகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வம் குறைவின்றி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

—————–

475. தனேஸ்வராய நமஹ (Dhaneshwaraaya namaha)

கண்ணபிரானின் பால்ய சினேகிதரான குசேலர் மிகவும் வறுமையில் வாடிவந்தார். அவரது மனைவியின் ஆலோசனையின் பேரில், நான்கு கைப்பிடி அவலை எடுத்துக் கொண்டு, தன் இளமைக்காலத்து நண்பன், கண்ணனைச் சந்திப்பதற்காகத் துவாரகைக்குச் சென்றார் குசேலர்.துவாரகையிலே பிரம்மாண்டமான அரண்மனையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட பொன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணன், குசேலரைக் கண்டதும் எழுந்து வந்து அவரை வரவேற்றான். தான் அதுவரை அமர்ந்திருந்த ஆசனத்தில் குசேலரை அமர்த்தினான். அதுவரை தனக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த ருக்மிணியிடம் குசேலருக்குச் சாமரம் வீசுமாறு கூறினான். அவளும் அவ்வாறே செய்தாள்.

பின், குசேலரின் பாதங்களுக்குப் பூஜை செய்து அவரது திருவடி நீரைத் தன் தலை மீதும், ருக்மிணியின் தலைமீதும் தெளித்துக்கொண்டான் கண்ணன். மேற்கொண்டு குசேலரைக் குசலம் விசாரித்த கண்ணன், “எனக்காக என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்று குசேலரைப் பார்த்துக் கேட்டான். கண்ணனின் பிரம்மாண்ட அரண்மனை, அங்கே அவன் அனுபவித்து வரும் ராஜபோகங்கள், அவனது ஆடை அலங்காரங்கள் போன்றவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போன குசேலர், நாம் வெறும் அவல் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால், அது கண்ணனின் பெருமைக்கு இழுக்காக இருக்குமோ என்று கருதி ஏதும் பேசாமலேயே இருந்துவிட்டார்.

ஆனால், கண்ணன் குசேலரோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவரது மேலாடைக்குள்ளே ஒளித்து வைத்திருந்த அவல் மூட்டையைப் பார்த்துவிட்டான். அதென்ன மூட்டை என்று கேட்டபடி அதை உருவிப் பிரித்துப் பார்த்தான். நான்கு பிடி அவல் அதில் இருந்தது.

முதல் பிடி அவலை எடுத்து கண்ணன் தனது வாயில் போட்டுக் கொண்டான். அடுத்த பிடி அவலை ருக்மிணிக்கு அளித்தான். தொடர்ந்து இன்னொரு பிடி அவலைத் தன் வாயில் கண்ணன் போட முற்படுகையில், ருக்மிணி கண்ணனைத் தடுத்து, “சுவாமி! நீங்கள் குசேலருக்குச் செல்வத்தை அருள்வதற்கு அந்த முதல் பிடி அவலே போதுமானதாயிற்றே. அதற்கு மேலும் ஒரு பிடி அவலை உண்டால்தான் அருள் புரிவீர்களா?” என்று கேட்டாளாம் ருக்மிணி.

அதற்கு கண்ணன் ரகசியமாக ருக்மிணியிடம், “ருக்மிணி! உனக்குத் தெரியாதா? ஏற்கனவே, தான் குசேலர் வீட்டில் தங்கமழை பொழிந்தாகிவிட்டதே!” என்றானாம். “எனக்குத் தெரியாமல் எப்போது பொழிந்தீர்கள்?” என்று ருக்மிணி தன் பார்வையாலேயே கேட்டாள்.அதற்கு ருக்மிணியின் காதில் கண்ணன், “குசேலர் இத்தனை நாட்கள் வறுமையில் வாடியதற்குக் காரணம் அவரைப் பிடித்திருந்த தரித்திரம் எனப்படும் அலக்ஷ்மியே ஆகும்.

அந்த அலக்ஷ்மி அவரை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காகத் தான் உன்னை அழைத்து அவருக்குச் சாமரம் வீசச் சொன்னேன். லக்ஷ்மியான நீ சாமரம் வீசியபின், உன் அக்காளான அலக்ஷ்மி அங்கே இருக்க மாட்டாள் இல்லையா? எனவே நீ எப்போது சாமரம் வீசினாயோ, அப்போதே தங்கமழை அவர் வீட்டில் பொழிந்துவிட்டது. அவர்மீது உள்ள அன்பினால் அவர் தந்த அவலை வாங்கி உட்கொண்டேனே ஒழிய, அவலுக்காகத் தங்க மழை பொழியவில்லை. அவரது அன்புக்காக அப்போதே பொழிந்துவிட்டேன்!” என்று கூறினான்.

ஆனால், அது குசேலருக்குத் தெரியாதே என்றாள் ருக்மிணி. இப்போது சொல்ல வேண்டாம் அவரே தன் இல்லம் திரும்பும் போது அனைத்தையும் புரிந்துகொள்வார் என்று சொல்லிவிட்டான் கண்ணன். இப்படித் தனது அடியார்களுக்குச் செல்வத்தை அருளும் போது, காலம் தாழ்த்தாமல் மிக விரைவாக அந்தச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளி வழங்கிவிடுவதால், திருமால் ‘தனேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தன’ என்றால் செல்வம், ‘ஈஸ்வர:’ என்றால் இவ்விடத்தில் விரைந்து அருள்பவர் என்று பொருள். ‘தனேஸ்வர:’ என்றால் செல்வத்தை விரைந்து அருள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 475-வது திருநாமம்.“தனேஸ்வராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு விரும்பிய செல்வம் விரைவில் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———————-

476. தர்மகுபே நமஹ (Dharmagupey namaha)

காஞ்சிபுரத்தில் சுவாமி வேதாந்த தேசிகன் வாழ்ந்துவந்த காலம். அதே காஞ்சியில் வசித்து வந்த ஒரு பிரம்மச்சாரிக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், அக்காலத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்குக் `கன்யாசுல்கம்’ என்று செல்வத்தை அளித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஏழையான இந்த பிரம்மச்சாரி கன்யாசுல்கம் கொடுப்பதற்குச் செல்வம் வேண்டிக் காஞ்சியில் உள்ள பலரை அணுகினான்.

அவர்களுள் சிலரிடம் பணம் இருந்தாலும் அதைத் தருவதற்குரிய மனம் இல்லாததால், அவர்கள் பிரம்மச்சாரியிடம், “நம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் என்று ஒருவர் இருக்கிறாரே! அவர்தான் இந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர்! நீ அவரது உதவியைப் போய் நாடு!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். உண்மையில் சுவாமி வேதாந்த தேசிகன், பேரருளாளப் பெருமாளையும் பெருந்தேவித் தாயாரையுமே தமக்குச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்து வந்தாரே ஒழிய, உலகியல் செல்வத்தை எல்லாம் அவர் கையாலும் தொட்ட தில்லை. அவரைச் சோதித்துப் பார்ப்பதாக எண்ணி இந்த பிரம்மச்சாரியை அவரிடம் சிலர் அனுப்பி வைத்தார்கள்.

அந்த பிரம்மச்சாரியும் அவர்களின் கூற்றை நம்பி சுவாமி வேதாந்த தேசிகனிடம் சென்று தான் திருமணம் செய்துகொள்வதற்குரிய செல்வம் வேண்டும் என்று கேட்டான். “நீ எதற்காகத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்டார் தேசிகன். அப்போது அந்த பிரம்மச்சாரி, “நான் வேதங்களைக் கற்று விட்டேன். மேற்கொண்டு அந்த வேதங்கள் கூறும் தருமங்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதைச் செய்ய வேண்டும் என்றால் ஒரு நல்ல இல்வாழ்க்கை வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!” என்றான்.

இதைக் கேட்டு வியந்தார் தேசிகன். “வெறும் இல்லற சுகத்தில் நாட்டம் கொள்ளாமல், இறைவனுக்கு ஆராதனமான தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி இவன் இல்வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறானே!” என்று பெருமைப்பட்டார். அந்த பிரம்மச்சாரியைக் காஞ்சிபுரத்தில் கல்யாணகோடி விமானத்தின் கீழே கோயில் கொண்டுள்ள பெருந்தேவித் தாயாரின் சந்நதிக்கு அழைத்து வந்தார். பெருந்தேவித் தாயாரைக் குறித்து `ஸ்ரீஸ்துதி’ என்ற அற்புதமான துதியை இயற்றி அருளினார் தேசிகன். அதிலே,

“யோகாரம்ப த்வரிதமனஸோ யுஷ்மத் ஐகாந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமம் இஹ யே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதி க்ருஹாத் அம்பராத் அம்புதேர் வா
தாரா நிர்யாந்தி அதிகம் அதிகம் வாஞ்சி தானாம் வஸூனாம்”
என்ற பதினாறாவது ஸ்லோகத்தை வேதாந்த தேசிகன் சொன்னவாறே, பெருந்தேவித் தாயார் தங்கமழையை அங்கே அப்போதே பொழிந்து விட்டாள். “இல்லற தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி, யார் ஒருவர் திருமகளையும் திருமாலையும் நாடி வருகிறார்களோ, அவர்களுக்கு பூமியில் இருந்தும் குபேரன் வீட்டில் இருந்தும் வானில் இருந்தும் கடலில் இருந்தும் எல்லாச் செல்வங்களும் வந்து மழையாகக் கொட்டும்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். பெருந்தேவித் தாயார் பொன்மழை பொழிந்த இக்காட்சி இன்றும் காஞ்சி பெருந்தேவித் தாயார் சந்நதியின் பிராகாரத்தில் சித்திர வடிவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

செல்வத்துடன் புறப்பட்ட பிரம்மச்சாரி, தேசிகனிடம், “சுவாமி! பெருமாளும் தாயாரும் அடியேனுக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைத் தந்து விட்டார்களே! இதனால் என் மனம் மாறி, தருமத்தையும் நான் மறந்து, ஒருவேளை செருக்குற்றுச் சுகபோகத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டால் என்ன ஆவது?” என்று கேட்டார்.

அதற்கு தேசிகன், “இது நீயாகத் தேடிய செல்வம் அன்று. திவ்ய தம்பதியர் அருளிய செல்வம். நாமாக ஈட்டிய செல்வமாக இருந்தால், அது நமக்கு கர்வத்தைக் கொடுக்கும். திவ்ய தம்பதியர் நமக்குச் செல்வத்தை அருளினால், செல்வத்தை அருளியதோடு அப்படியே விட்டு விடாமல், நாம் அதைக் கொண்டு அறவழியால் வாழ்கிறோமா என்பதையும் அவர்களே கண்காணித்து நம்மைக் காப்பார்கள். தன் அடியார்கள் தர்மத்தில் இருந்து விலகாமல் எப்போதும் காக்கும் அந்தப் பேரருளாளனும், பெருந்தேவியும் துணை நிற்க நீ அஞ்ச வேண்டாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இப்படி அடியார்கள் தருமத்தில் இருந்து விலகாமல் அவர்களைக் காப்பதால் திருமால் ‘தர்மகுப்’ – அடியார்களைத் தருமத்தில் இருந்து விலகாதபடி காப்பவர் – என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 476-வது திருநாமம்.“தர்மகுபே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், தருமத்தில் இருந்து என்றும் விலகாதபடி திருமால் காத்தருள்வார்.

—————–

477. தர்மக்ருதே நமஹ (Dharmakruthey namaha)

பட்டாபிஷேகத்தைத் துறந்து ராமன் வனவாசம் புறப்படும் சமயத்தில், தன் தாயான கௌசல்யாதேவியைச் சந்தித்து விடைபெறுவதற்காக அவளது அரண்மனைக்குள்ளே நுழைந்தான் ராமன். அவனை வரவேற்று ரத்தின சிம்மாசனத்தில் அமரச் சொன்னாள் கௌசல்யா. ஆனால் ராமன், “அம்மா! நான் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில் தான் அமர வேண்டும். சிம்மாசனத்தில் அமரக்கூடாது. தந்தை என்னைப் பதினான்கு வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டிருக்கிறார்.

அதை நிறைவு செய்துவிட்டு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன்!” என்றான்.இதைக் கேட்டு அதிர்ந்து போனாள் கௌசல்யா. “என்ன ராமா சொல்கிறாய்? உனக்கு இன்று பட்டாபிஷேகம் என்று நாங்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, வனவாசம் என்கிறாயே! உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்? என் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தி ஒருவேளை எனக்கு இருந்தால் இப்போதே என் உயிரை விட்டுவிடுவேன்! ராமா! என்னை விட்டு நீ போகவே கூடாது!” என்றாள்.

மேலும், “ராமா! நான் உனக்கு உயர்ந்த தருமம் ஒன்றைச் சொல்கிறேன்! அதைச் செய்! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தை மனதில் கொண்டு வனம் போக விரும்பினாய்! ஆனால், இந்த உலகிலேயே மிகவும் உத்தமமான தருமம், தாய்க்குத் தனயன் பணிவிடை செய்வதே ஆகும். இப்போது உன் தாயான நான் ஆணை இடுகிறேன். எனக்குப் பணிவிடை செய்து கொண்டு, நீ அயோத்தியில் இருக்க வேண்டும்!” என்று ராமனுக்கு ஆணை இட்டாள் கௌசல்யா.

அதற்கு ராமன், “தாயே! நீங்கள் சொன்னது மிகவும் உயர்ந்த தருமம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், தந்தையின் சொல்படி வனவாசம் என்ற ஒரு விரதத்தை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். இப்படித் தொடங்கிய ஒரு விஷயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது தருமம் ஆகாது. மேலும், நான் தருமத்தின் வழி நடக்க விரும்புவோருக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்க விழைகிறேன். நானே இப்போது திடீரென்று, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தில் இருந்து விலகி, தாய் சொல்லைத் தட்டாதே என்ற தருமத்தைக் கடைபிடிக்கப் போகிறேன் என்று சொன்னால், அது பின்னால் வருவோருக்குக் குழப்பத்தையே விளைவிக்கும்.

எனவே, தாயே! நீங்கள் இட்ட கட்டளையை அவசியம் நான் நிறைவேற்றத் தான் போகிறேன். அதை நான் மீற மாட்டேன். ஆனால், முதலில் தந்தையின் கூற்றுப்படி பதினான்கு வருட வனவாசத்தை நிறைவு செய்து விடுகிறேன். அதன்பின் நாட்டுக்குத் திரும்ப வந்து, உங்களுக்குக் கூடவே இருந்து அனைத்து விதமான பணிவிடைகளையும் செய்து உங்கள் கட்டளையையும் நிறைவேற்றுகிறேன்!” என்றான்.

இனியும் ராமனைத் தன்னால் தடுக்க முடியாது என்று உணர்ந்து விடுகிறாள் கௌசல்யா. அதனால், பலவிதமான ஆசீர்வாத வார்த்தைகளைச் சொல்லி ராமனைக் காட்டுக்கு வழியனுப்பி வைக்கிறாள் கௌசல்யா தேவி. இதிலிருந்து, தருமத்தில் இருந்து இம்மிகூட விலகாமல் ராமன் பின்பற்றிக் காட்டினான் என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா? தருமங்களை உலகுக்கு விதித்தவரும், உலகியல் சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவருமான திருமால், தானே ராமனாக அவதரித்தார்.

அந்தத் திருமால் எதற்காக இவ்வளவு தூரம் அந்தத் தருமத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் அத்தகைய தேவை அவருக்கு உள்ளதா? அவர் தருமங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் தான். ஆனால், மனிதர்கள் எல்லோரும் தருமத்தைப் பின்பற்றி அதன்வழி நடக்க வேண்டும் என்று திருமால் நினைக்கிறார். அதனால், தானே முன்னுதாரணமாக இருந்து பிறருக்கு வழிகாட்டி, அவர்களும் தரும வழியில் நடக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் திருமால் ‘தர்மக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். தர்மக்ருத் என்றால் தருமத்தைக் கடைப்பிடிப்பவர் என்று பொருள். அவருக்கு அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அடியவர்களான நாம் தருமத்தில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காக அவர் தருமத்தைக் கடைப்பிடிக்கிறார். ‘தர்மக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 477-வது திருநாமம்.“தர்மக்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தரும சிந்தனை என்றும் நிலைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

————-

478. தர்மிணே நமஹ (Dharminey namaha)

சீதையோடும் லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் சென்ற ராமன், வனவாசத்தின் இரண்டாம் நாள் இரவு வத்ச தேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தங்கினார்கள். அங்கே சயனித்தபடி தன் தாயான கௌசல்யாவை நினைத்து வருந்தி அழுதான் ராமன்.அதைக் கண்ட லட்சுமணன், “அண்ணா! நீங்கள் அன்னை கௌசல்யாவின் பேச்சைக் கேட்டு நாட்டிலேயே இருந்திருக்கலாமே!” என்று கேட்டான். ஆனால் ராமனோ, “இல்லை லட்சுமணா! தந்தை முதலில் கட்டளையிட்டு, அதை நான் ஏற்றபின் நடுவில் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாதல்லவா? அதனால்தான் காட்டுக்கு வந்தேன். ஆனால், ஒரு மகனாக இருப்பவன் தன் தாயை மகிழ்வித்துப் பார்க்க வேண்டும். தன் தாய் கண்ணீர் விடுவதற்கு மகனே காரணமாகக் கூடாதல்லவா? இப்போது நான் காட்டுக்கு வந்து, அங்கே என் அன்னை நிராதரவாகக் கண்ணீர் சிந்தி வருந்த நானே காரணமாகி விட்டேனே!” என்று கலங்கி அழுதான்.

மேலும் லட்சுமணனிடம், “இந்த அவதாரத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கருத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அவதரித்ததால், இப்படித் தாயைப் பிரியும் சூழல் வந்து விட்டது. அடுத்த அவதாரத்தில் பார்! அவதரித்த நாள் தொடங்கி நான் தாய் சொல்லைத் தட்டாமல் வாழ்ந்து காட்டப் போகிறேன்!” என்றானாம் ராமன். அதனால் தான் அடுத்த கிருஷ்ணாவதாரத்தில், ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாள் அன்று நள்ளிரவில், மதுராவில் உள்ள கம்சனின் சிறைச்சாலையில், தேவகி வசுதேவரின் மகனாகக் கண்ணபிரானாக அதே பகவான் வந்து அவதரித்தான்.

அற்புதக் குழந்தையாக, நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், தாமரைக் கண்களோடும், ஆச்சரியமான திரு ஆபரணங்களோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், நீலமேக சியாமள வண்ணத்தோடும் வந்து தோன்றிய கண்ணனைப் பார்த்த தேவகி, “குழந்தாய்! எட்டாவது குழந்தையான நீ நாராயணனாக இருப்பாயோ என்று ஏற்கனவே கம்சன் தேடிக் கொண்டிருக்கிறான். நீ பிறந்தவுடன் உன்னை அழிக்க வேண்டும் என்று துடிக்கிறான். இந்த நிலையில் நீயே உன்னை அடையாளம் காட்டிக் கொடுப்பது போல் இப்படி திருமாலுக்குரிய அடையாளங்களோடு வந்து தோன்றி விட்டாயே! கம்சன் இதைப் பார்த்து, நீ திருமால் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டால் என்ன செய்வது?” என்று அஞ்சி நடுங்கினாள்.

மேலும், “குழந்தாய்! தயவு செய்து உனது கூடுதலான இரண்டு திருக்கரங்களையும் சங்கு சக்கரங்களையும் மறைத்துக் கொண்டு சாதாரண மனிதக் குழந்தையாக நீ மாற வேண்டும்!” என்று வேண்டினாள் தேவகி.

“உபஸம்ஹர விச்வாத்மன் அதோ ரூபம் அலௌகிகம்-

சங்க சக்ர கதா பத்ம ச்ரியா ஜுஷ்டம் சதுர்புஜம்”–என்று ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்லோகம் வருகிறது.
இவ்வாறு தேவகி சொன்னவாறே, கண்ணன் சிரித்துக்கொண்டே, “அம்மா! இந்த அவதாரத்தில் தாய் சொல்லைத் தட்டக்கூடாது என்பதே என் சங்கல்பம். இப்போது பாருங்கள்!” என்று அடுத்த நொடியே இரண்டு கைகளைக் கொண்ட சாதாரணக் குழந்தையின் வடிவத்துக்கு மாறி விட்டானாம். அது மட்டுமில்லை, தனது பதினொன்றாவது வயதில் கம்சனை அழித்தான் கண்ணன். அழித்தவுடன், மறைத்து வைத்திருந்த இரண்டு கைகளையும் சங்கு சக்கரங்களையும் வெளியே கொண்டு வந்து, அதன்பின் அவதாரம் முழுவதும் நான்கு கைகளோடும் சங்கு சக்கரத்தோடுமே எழுந்தருளி இருந்தான்.
“பூய: ப்ராதுரபூத் தஸ்ய புஜயுக்மம் திரோஹிதம்”என்று இதை “யாதவாப்யுதயம்’’ என்னும் காவியத்தில் வேதாந்த தேசிகன் பாடியுள்ளார்.“ஏன் கைகளை வெளிக்கொணர்ந்தாய்?” என்று தேவகி கேட்டபோது, “தாய் சொன்னதைச் சொன்னபடி செய்பவன் நான். கம்சன் மீதுள்ள பயத்தால் கைகளை மறைத்துக் கொள் என்று நீங்கள் கட்டளை இட்டிருந்தீர்கள். அப்படியானால், கம்சன் அழிந்தபின் கைகளை வெளியே கொண்டு வரலாம் என்று தானே பொருள்படும். தாயின் கூற்றை இம்மி கூடப் பிறழாமல் கடைப்பிடிக்க விரும்புபவன் நான். எனவே இப்போது கம்சனை அழித்துவிட்டதால், இனி நான்கு கைகளோடும் சங்கு சக்கரங்களோடுமே இருப்பேன்!” என்றானாம் கண்ணன்.
ஆக, கண்ணன் நான்கு கைகளை இரண்டு கைகளாக ஆக்கிக் கொண்ட லீலைக்கும், மீண்டும் இரண்டு கைகளை நான்கு கைகளாக ஆக்கிக் கொண்ட லீலைக்கும் எது காரணம் என்றால், தாய் சொல்லை மீறக் கூடாது என்ற தருமமே காரணம். இப்படித் தான், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தருமத்தையே கருவியாகக் கொண்டு, தருமத்தின் அடிப்படையில் செயல்படுவதால் திருமால் ‘தர்மீ’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தர்மீ’ என்றால் தருமத்தைக் கருவியாகக் கொண்டு செயல்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 478-வது திருநாமம்.“தர்மிணே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் செயல்கள்யாவும் அறநெறிப்படி, விளங்கும்படி திருமால் அருள்புரிவார்.
———————–
479. ஸதே நமஹ (Sathey namaha)
(ஸ்ரீ பராசர பட்டருடைய விளக்கவுரையின் அடிப்படையில், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 479 முதல் 482 வரை உள்ள திருநாமங்கள்;“ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்”என்ற வரிசையில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. பொதுவாக நாம் சஹஸ்ரநாமம் சொல்லும் போது “ஸத் அஸத் க்ஷரம் அக்ஷரம்” என்று சொல்லிவந்தாலும், “ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்” என்று கொள்வது சிறப்பாகும் என்று பராசர பட்டர் விளக்குகிறார்.மேலும், இத்தொடரைத் திருநாமங்களாகப் பிரிக்கையில்,
479 – ஸத்
480 – அக்ஷரம் ஸத்
481 – அஸத்
482 – அஸத் க்ஷரம்
என்று பிரித்துள்ளார். எனவே ஸ்தோத்திரமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்லும் போது “ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்” என்று சொல்ல வேண்டும். தனித்தனித் திருநாமங்களாகச் சொல்லும்போது, ஸத், அக்ஷரம் ஸத், அஸத், அஸத்க்ஷரம் என்று சொல்ல வேண்டும்.) திருவரங்கத்தில் ராமானுஜர் சாந்தோக்ய உபநிஷத்தைத் தமது சீடர்களுக்கு விளக்கிவந்தார். அதில், “ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்” என்ற வாக்கியம் வந்தது.
“இந்த வாக்கியத்துக்கு மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், ‘ஸத்’ என்ற இறைவன் ஒருவன் மட்டுமே இருக்கிறான், அவனைத் தவிர இரண்டாவது பொருளே இல்லை!” என்றார் ராமானுஜர். அதைக் கேட்ட சீடர்கள், “அப்படியானால் உலகில் நாம் பார்ப்பவை அனைத்தும் பொய்த் தோற்றங்களா? நிற்பதும் நடப்பதும் பறப்பதும் எல்லாம் வெறும் சொப்பனம்தானா? பல தோற்ற மயக்கங்களா? கற்பதும் கேட்பதும் கருதுவதும் எல்லாம் அற்ப மாயங்களா? அவற்றுள் ஆழ்ந்த பொருள் இல்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு ராமானுஜர், “உலகம் பொய் அன்று. உலகம் சத்தியம். இவ்வுலகில் நமக்குக் கண்ணெதிரே எத்தனை அனுபவங்கள் ஏற்படுகின்றன? கானல்நீர் போலவோ கனவு போலவோ இவ்வுலகம் மறைந்து போகாது. இறைவனும் உண்மை, உயிர்களும் உண்மை, உலகமும் உண்மை!” என்றார்.“அப்படியானால் இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனைத் தவிர இரண்டாவது பொருளே இல்லை என்ற உபநிஷத் வாக்கியத்தை எவ்வாறு புரிந்துகொள்வது?” என்று சீடர்கள் கேட்டார்கள்.
அதற்கு ராமானுஜர், “இந்த உலகில் சோழ மன்னன் ஒருவன்தான் இருக்கிறான் என்று சொன்னால், சோழமன்னன் ஒருவன் மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறான், மற்றவர்கள் எல்லாம் பொய் என்றா பொருள்? அல்லவே! சோழ மன்னன் சிறப்பானவனாக, ஒப்பற்றவனாக இருக்கிறான். இந்தச் சோழ மன்னனைப் போல இன்னொருவன் இலன் என்று தானே பொருள்?
அதுபோலத் தான் “ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா” என்று நம்மாழ்வார் பாடிய படித் தனக்குச் சமமானவரோ, தன்னை விஞ்சியவரோ இல்லாதபடி ஒப்பற்ற ஒருவனாக இறைவன் இருப்பதாலே, ஸத் எனப்படும் இறைவன் ஒருவன்தான் இருக்கிறான்.
அவனைப் போல இரண்டாம் நபர் எவரும் இலர் என்று இங்கே உபநிஷத் சொல்கிறது. எனவே, உலகம் பொய் என்று கருதக் கூடாது!” என்று விளக்கினார். மேலும், `ஸத்’ என்ற வார்த்தைக்கு இருப்பவர் என்றும் பொருள் உண்டு, உயர்ந்து இருப்பவர் என்றும் பொருள் உண்டு. இங்கே சாந்தோக்ய உபநிஷத்தில் மிகவும் உயர்ந்தவராக இருப்பவர் என்ற பொருளில் `ஸத்’ என்ற வார்த்தை வந்துள்ளது.
உயர்ந்த தருமங்களைத் தன்னகத்தே கொண்டவராக, அவரைப்போல் இன்னொருவர் இலர் என்னும்படி மிக உயர்ந்து விளங்குவதாலே மிக உயர்ந்து இருப்பவர் – ‘ஸத்’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 479-வது திருநாமம்.“ஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில், மேன்மேலும் பல முன்னேற்றங்களைக் காணும்படி திருமால் அருள்புரிவார்.
————–
480. அக்ஷர ஸதே நமஹ:(Akshara Sathey namaha)

(திருநாமங்கள் 471 முதல் 482 வரை – தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)

நான்கு மாணவர்கள் கல்லூரி வகுப்புக்குத் தாமதமாகச் சென்றார்கள். பேராசிரியர் நால்வரிடமும் தாமத வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அப்போது, நால்வரும் ஒரே குரலில், “எங்கள் காரின் சக்கரம் பஞ்சராகி விட்டது. அதனால்தான் தாமதமாக வந்தோம்!” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பேராசிரியர், நால்வரையும் வகுப்புக்குள்ளே அனுமதித்தார். ஆனால், நால்வரையும் வகுப்பின் நான்கு மூலைகளிலே தனித்தனியாக அமர்த்தினார். அதன்பின் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பேப்பரை வழங்கினார். நால்வரையும் பார்த்து, “நீங்கள் வந்த கார் பஞ்சர் ஆனது என்று சொன்னீர்கள் இல்லையா? எந்த டயர் பஞ்சர் ஆனது என்பதை இந்தத் தாளில் நீங்கள் ஒவ்வொருவரும் வரைந்து காட்ட வேண்டும்!” என்று சொன்னார்.

நால்வரும் தாள்களோடு அமர்ந்திருக்க, பாடம் எடுக்கத் தொடங்கினார் பேராசிரியர். “உண்மை என்பது எப்போதும் மாறவே மாறாது. பொய் என்பது மாறிக்கொண்டே இருக்கும்!” என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அவர். இந்த மாணவர்கள் நால்வரும் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்கள். பேராசிரியரிடம் வசமாக மாட்டிக் கொண்டோமே, எப்படித் தப்பிப்பது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் நால்வரும் பேராசிரியர் சொன்னபடி அந்தத் தாளில் படத்தை வரைந்து பேராசிரியரிடம் வழங்கினார்கள்.

நான்கு தாள்களையும் எடுத்துக் கொண்டு கரும்பலகை அருகே சென்ற பேராசிரியர், அவற்றைத் தூக்கி வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுக்கும் காட்டினார். பார்த்தால், முதல் மாணவர் காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கை பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். இரண்டாவது மாணவர், காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கையின் எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். மூன்றாம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநர் பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். நான்காம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநருக்கு எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார்.

நான்கு தாள்களையும் மாணவர்களிடம் காட்டிவிட்டுப் பேராசிரியர் சொன்னாராம், “நான் அப்போதே சொன்னேன் அல்லவா? உண்மை என்பது என்றுமே மாறாது. பொய் என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று! இதோ இந்தத் தாள்களைப் பாருங்கள். இவர்கள் கார் பஞ்சர் என்று சொன்னது பொய். அதனால்தான் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு விதமாக மாறிமாறிப் படம் வருகிறது. உண்மையாகவே கார் பஞ்சர் ஆகியிருந்தால், மாறாமல் ஒரே மாதிரி வந்திருக்கும் அல்லவா?” என்று.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், இறைவனை ஸத்யம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஸத்யம் என்றால் உண்மை என்று பொருள். அதாவது, மாறாமல் இருப்பவர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடமொழியில், `க்ஷரம்’ என்றால் அழிவது தேய்வது என்று பொருள். `அக்ஷரம்’ என்றால் அழியாமல் தேயாமல் மாறாமல் இருப்பது என்று பொருள். திருமால் எந்த ஒரு மாறுதலுக்கும் உட்படாமல் இருப்பதால் ‘அக்ஷரம்’ என்று அழைக்கப்படுகிறார்.

அதனால்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் அவரை ‘அக்ஷரம் ஸத்’ என்று அழைக்கிறது.`அக்ஷரம்’ (Aksharam) என்றால் மாறாதவர்,ஸத் என்றால் உயர்ந்து இருப்பவர் (கடந்த திருநாம விளக்கத்தில் இதன் விரிவு உள்ளது). ‘அக்ஷரம் ஸத்’ (Aksharam sath) என்றால் தன்நிலை மாறாமல் எப்போதும் உயர்ந்து இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 480-வது திருநாமம்.

“அக்ஷரஸதே நமஹ:” (Akshara Sathey namaha) என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், அறநெறியிலிருந்து மாறாமல் இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.

———–
481. அஸதே நமஹ: (Asathey namaha)

திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு சனத்குமார முனிவர்கள் நால்வரும் சென்றார்கள். அங்கே வாயில் காப்பாளர்களாக நின்றிருந்த ஜயனும் விஜயனும் தடுத்தார்கள். “அடியார்கள் பகவானைத் தரிசிக்கச் செல்லும்போது, அவர்களைத் தடுக்கும் உரிமை யாருக்குமே கிடையாது! அப்படியிருக்க, எங்களை எப்படி நீங்கள் தடுக்க முடியும்? இறைவனின் தொண்டர்களாக இருக்கும் தகுதியே உங்கள் இருவருக்கும் இல்லை! ஆகவே, நீங்கள் பூமியில் போய்ப் பிறக்க வேண்டும்!” என்று சனத்குமாரர்கள் ஜய – விஜயர்களுக்கு சாபம் கொடுத்தார்கள்.

வெளியே நடப்பதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்த திருமால், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து சனத்குமாரர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அவரைத் தரிசித்த சனத்குமாரர்கள், திருமாலைப் பலவாறு துதிசெய்தார்கள். அதன்பின், “இறைவா! உனது அனுமதி இல்லாமல் உன் தொண்டர்களான ஜய – விஜயர்களை நாங்கள் சபித்துவிட்டோம்! எங்களை மன்னித்தருள வேண்டும்! தொண்டர்கள் தவறு செய்தால், தலைவனிடம் முறையிடுவது தானே முறையாகும்? நாங்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளலாமா? எங்களை மன்னிப்பாயாக!” என்று வேண்டினார்கள்.

அப்போது திருமால், “இல்லை முனிவர்களே! என் பக்தர்களுக்கு விரோதமாக இருக்கும் எதையுமே நான் விரும்பமாட்டேன். என் கை, என் பக்தர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால் என் கையை வெட்டிக் கொள்ளவும் நான் தயங்க மாட்டேன். எப்போது என் பக்தர்களான உங்களிடம் இவர்கள் அபச்சாரப்பட்டு விட்டார்களோ, இவர்களுக்கு சாபம் தந்ததில் எந்தத் தவறும் இல்லை!” என்றார். மேலும் ஜய – விஜயர்களைப் பார்த்து, “நீங்கள் ஆயிரம் ஜன்மங்கள் பூமியில் பிறக்க வேண்டும்!” என்று சொன்னார் திருமால். “ஆயிரம் ஜன்மங்கள் உன்னைப் பிரிந்திருக்க எங்களால் முடியாதே!” என்று பகவானிடம் கெஞ்சினார்கள் ஜய – விஜயர்கள். சனத்குமாரர்களின் பாதங்களிலும் விழுந்து தங்களை மன்னித்தருளுமாறு கோரினார்கள்.

மனம் இரங்கிய சனத்குமாரர்கள் திருமாலிடம், “இவர்களுக்கு நீங்கள் வழங்கிய தண்டனையைச் சற்றே குறைத்தருள வேண்டும்!” என்றார்கள். உடனே திருமால், “ஜய விஜயர்களே! உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். ஒன்று, நல்ல பக்தர்களாகப் பல பிறவிகள் பிறக்கிறீர்களா? அல்லது தீயவர்களாக மூன்றே பிறவி எடுக்கிறீர்களா?” என்று கேட்டார். “தீயவர்களாயினும் மூன்றே பிறவிகள் போதும்! அதற்கு மேல் பிறவிகள் வேண்டாம்!” என்றார்கள் ஜய – விஜயர்கள். “மூன்று பிறவிகளிலும் நானே உங்களை வந்து அழிப்பேன்! நீங்கள் அதன்பின் இதே காரிய வைகுண்டத்துக்குத் திரும்ப வந்துவிடுவீர்கள்!” என்று பதில் அளித்தார் திருமால்.

அதன்படி ஜயனும் விஜயனும் ஹிரண்ய கசிபுவாகவும், ஹிரண்யாட்சனாகவும் பிறந்தார்கள். அவர்களை முறையே நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் ஆகிய இரு அவதாரங்களால் அழித்தார் திருமால். அடுத்து ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் அவர்களே வந்து பிறக்க, ராமாவதாரத்தில் அவர்களை முடித்தார் திருமால். முடிவாக, சிசுபாலனாகவும் தந்தவக்த்ரனாகவும் வந்து பிறக்க, அவர்களைக் கிருஷ்ணாவதாரத்தில் முடித்தார் திருமால். இப்படி மூன்று பிறவிகளை நிறைவு செய்தபின், அவர்கள் பழையபடி வாயில் காப்பாளர் பதவிகளைப் பெற்றுவிட்டார்கள்.

ஆக, ஜய விஜயர்களைப் போல் அடியார்களுக்குத் தீங்கிழைத்தல் போன்ற பாபச் செயல்களில் ஈடுபடுவோர்க்குப் பிறவிப்பிணி என்னும் தண்டனையைத் திருமால் அளிக்கிறார். உலகியல் வாழ்க்கையாகிய பிறவிச் சுழற்சிக்கு அஸத் என்று பெயர். பாபிகளுக்கு அந்த அஸத் ஆகிய பிறவிச் சுழற்சியைத் தருவதாலே, திருமால் ‘அஸத்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 481-வது திருநாமம்.“அஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எந்தச் சூழலிலும் சிக்கிக் கொள்ளாதபடி திருமால் காத்தருள்வார்.

————-
482. அஸத் க்ஷராய நமஹ:(Asath-Ksharaaya namaha)
(குறிப்பு: ஸ்ரீபராசர பட்டர் தமது விளக்கவுரையில், அஸத்க்ஷரம் ஆகிய இரு பதங்களை ஒன்றாகச் சேர்த்து அஸத்க்ஷரம் என்று 482-வது திருநாமம் அமைந்திருப்பதாக விளக்கியுள்ளார்)
மகாபாரதப் போர் தொடங்கப் போகிறது. எந்தெந்த மன்னர்கள் யாரோடு கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்பதே அனைவரின் மத்தியிலும் பரபரப்பான பேச்சாக இருந்தது. கண்ணபிரானின் ஆதரவு யாருக்கு என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக விவாத மேடைகளில் இடம்பெற்று வந்தது.இந்தச் சூழலில், தர்மபுத்திரர் அர்ஜுனனிடம், “கண்ணன் எப்படியும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார். எனவே, அவரது ஆதரவு நமக்குத்தான். இருந்தாலும்கூட, நாம் பகவானிடம் முறைப்படி சென்று அவரது ஆதரவு வேண்டும் என்று கோருவதுதான் முறை. அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது. எனவே நீ போய்க் கண்ணனைச் சந்தித்து அவரது ஆதரவையும் ஆசியையும் பெற்று வா!” என்று சொல்லித் துவாரகைக்கு அனுப்பிவைத்தார்.மறுபுறம் சகுனி துரியோதனனிடம், “போர் என்று வந்துவிட்டால் மானம் அவமானம் எல்லாம் பார்க்கக் கூடாது. யார் நம் பக்கம் வந்தாலும் அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாண்டவர்களுக்குக் கண்ணன் மாமன் மகன் என்றால், உனக்குக் கண்ணன் சம்பந்தி ஆவான். எனவே கண்ணனின் ஆதரவைக் கேட்டு நமக்கு வாங்கி வந்து விடு!” என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தான். அர்ஜுனன் துரியோதனன் இருவரும் துவாரகையை அடைந்தார்கள். இதை அறிந்த கண்ணன், தனது பணியாட்களை அழைத்து, அரண்மனையில் உள்ள அனைத்து ஆசனங்களையும் ஒளித்து வைக்கச் சொன்னான். தனக்கே உரிய கட்டிலில் கண்ணன் பள்ளிகொள்ள, அவனது தலைமாட்டில் ஓர் ஆசனமும், திருவடிவாரத்தில் ஒரு முக்காலியும் மட்டுமே போடப்பட்டிருந்தன.முதலில் உள்ளே வந்த துரியோதனன், கண்ணன் துயில்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்? இந்த மாடு மேய்ப்பவன் விழிக்கும் வரை காத்திருந்துதான் ஆதரவு பெற வேண்டுமோ?” என்று சிந்தித்தபடி, தனது தலைகனத்துக்கு ஏற்றபடித் தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அடுத்து வந்த அர்ஜுனன், கண்ணன் விழித்துக் கொள்ளும் வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன், அடியவன் என்ற முறையில் கண்ணனின் திருவடிவாரத்தில் இருந்த முக்காலியிலே அமர்ந்து கொண்டான். இருவரும் வந்ததை அறிந்துகொண்ட கண்ணன் கண்விழித்து, “அர்ஜுனா! வா.. வா!” என்ன விஷயம் என்றான். துரியோதனன், “நான்தான் முதலில் வந்தேன்! என்னைக் கவனிக்கவில்லையா?” என்று கேட்டான்.கண்ணனோ, “நீ முதலில்
வந்திருக்கலாம். ஆனால், நான் முதலில்
அர்ஜுனனைத் தானே பார்த்தேன்!”

என்றான்.இருவரும் கண்ணனின் ஆதரவு யாருக்கு என்று கேட்டார்கள். அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்குமே உதவ நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனது நவகோடி நாராயண சேனையை விரும்புவோர் அதைக் கேட்கலாம். ஆயுதமே எடுக்காத என்னை விரும்புவோர் என்னைக் கேட்கலாம்!” என்றான்.“முதல் வாய்ப்பு இளையவனான அர்ஜுனனுக்கே! கேள் அர்ஜுனா!” என்று கண்ணன் சொல்ல, “எனக்கு நீ மட்டும் போதும்!” என்று சொல்லி விட்டான் அர்ஜுனன். துரியோதனனோ, பெரும் மகிழ்ச்சியோடு நவகோடி நாராயண சேனை என்ற மிகப்பெரிய சேனையைக் கண்ணனிடம் வாங்கிச் சென்றான். ஆனால், முடிவில் என்ன ஆனது? கண்ணனின் அருளும் வெற்றியும் அர்ஜுனனுக்குத் தான் கிடைத்தது. தலைக்கனத்தைக் காட்டிய துரியோதனனுக்கோ தோல்வியும் மரணமுமே கிடைத்தது.துரியோதனனைப் போல தீய எண்ணம் கொண்டவர்களுக்கு அஸத் என்று பெயர். க்ஷரம் என்றால் நிலையில்லாதவன் என்று பொருள். ‘அஸத்க்ஷரம்’ என்றால் தீயவர்களிடத்தில் நிலைத்து நிற்காதவர் என்று பொருள். நல்லவர்களை இறைவன் சோதித்தாலும் கைவிடமாட்டார், தீயவர்களுக்கு இறைவன் நிறைய கொடுப்பது போல் இருந்தாலும் கைவிட்டுவிடுவார் என்று பிரசித்தமாகச் சொல்லப்படுகிறது அல்லவா?

இப்படித் தீயவர்களிடம் நிலைத்து நில்லாமல் இருப்பதால், திருமால் ‘அஸத்க்ஷரம்’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 482-வது திருநாமம். “அஸத்க்ஷராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களிடம் திருமால் என்றும் நிலைத்திருந்து, மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி அருள்வார்.

————–
483. அவிக்ஞாத்ரே நமஹ: (Avignaathrey namaha)
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்”
என்று பெரியாழ்வார் பாடுகிறார்.இதன் கருத்து யாதெனில், ஒரு ஜீவாத்மா பற்பல தவறுகள் செய்துவிட்டு, பின்னொரு சமயம் மனம் திருந்தித் திருமகளின் திருவடிகளைப் பற்றி அவளது பரிந்துரையோடு திருமாலிடம் சரண் அடைகிறான். திருமகளின் பரிந்துரையை ஏற்ற திருமால், அவனை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்து விடுகிறார்.திருமால் சம்மதித்த பின் திருமகள்,“சுவாமி! இவன் இதுவரை செய்த பாபங்களை எல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? பலப்பலப் பொய்கள் பேசி இருக்கிறான். பிறருக்கு எந்த உதவியும் இவன் செய்ததில்லை. மனதில் ஈரமோ இரக்கமோ இல்லாதவனாக இருந்திருக்கிறான். இவனுக்குப் போய் அருள்புரியப் போகிறீர்களா? உங்கள் முடிவைச் சற்றே மறுபரிசீலனை செய்யுங்களேன்!” என்று சொல்கிறாளாம்.இப்படி மகாலட்சுமி சொன்னவாறே, திருமால், “இல்லை தேவி! அவன் எனது பக்தன் என்று அபிமானித்து விட்டேன்! அங்கீகரித்து விட்டேன்! என் பக்தன் அப்படிப்பட்ட தவறை ஒருநாளும் செய்ய மாட்டான்!” என்று பதில் சொல்வாராம். அவன் குற்றம் செய்தமைக்கான ஆதாரத்தைத் திருமகள் எடுத்துக் காட்டினாலும், “அப்படி என் பக்தன்தான் செய்திருக்கிறான் என்றால் அவன் நன்றாகத் தான் செய்திருக்கிறான், நல்ல செயல்தான் செய்திருக்கிறான் என்று பொருள்!எனவே, நான் அவனைக் காப்பாற்றியே தீருவேன்!” என்று பதில் சொல்வாராம்.தான் பரிந்துரைத்துத் திருமால் திருவடி களில் சேர்த்த பக்தன் மீது திருமகளே ஏன் பழிசொல்ல வேண்டும்? ஏனெனில், நாம் ஒரு குச்சியைப் பூமியில் நட்டால் அதை ஆட்டிப் பார்ப்போம். அது குச்சியை வெளியே எடுப்பதற்காக அன்று. குச்சி நன்றாக ஊன்றி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தானே?அதுபோலத்தான், மகாலட்சுமி பக்தனுக்காகத் திருமாலிடம் பரிந்துரை செய்துவிட்டு அந்த பக்தனைக் காப்பதில் அவருக்கு எவ்வளவு தூரம் உறுதி இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே அவரிடம் அப்பக்தனைப் பற்றிச் சில குறைகளைச் சொல்லிப் பார்க்கிறாள். “என் அடியார் அது செய்யார்!” என்றோ “என்னடி? யார் அது செய்யார்?” என்றோ திருமால் உறுதியாகப் பதில் சொன்னால், “நாம் செய்த பரிந்துரை பலித்துவிட்டது! இந்த பக்தனை இவர் நிச்சயம் காத்துவிடுவார்!” என்ற நம்பிக்கையைப் பெற்று மகாலட்சுமி மகிழ்கிறாள் என்பதுதான் இதில் உள்ள நுட்பம்.இதே கருத்தை ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், தமது வரதராஜ ஸ்தவம் என்ற துதியில், காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாளைப் பார்த்து,“அனன்யாதீனத்வம் தவ கில ஜகௌ வைதிக கிர:
பராதீனம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மனுமஹே
உபாலம்போ யம் போ ச்ரயதி பத ஸார்வஜ்ஞம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவாகலயஸி”

“வரதராஜா! நீ யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், நீயோ பக்தர்களுக்குக் கட்டுப்படுபவனாக இருக்கிறாய். நீ எல்லாம் அறிந்தவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், உனக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உன் பக்தர்கள் செய்யும் தோஷங்கள் மட்டும் உன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதாவது, அவற்றை நீ கண்டாலும், பக்தர்கள் மீதுள்ள அன்பால் கண்டு கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறாய்!” என்று தெரிவிக்கிறார்.

இப்படித் தன் அடியார்கள் செய்யும் குற்றங்களின் விஷயத்தில் அதை அறியாதவர் போல் இருந்து அவர்களை மன்னித்து விடுவதால், திருமால் அவிக்ஞாதா என்று அழைக்கப்படுகிறார். ‘அவிக்ஞாதா’ என்றால் அறியாதவர் – அடியார்கள் செய்யும் குற்றங்களை அறியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 483-வது திருநாமம். விளக்கவுரை வழங்கிய ஸ்ரீபராசர பட்டர், ‘ப்ரபன்ன க்ருத பாபானாம் கிஞ்சிதபி அவிசாரணாத் அவிக்ஞாதா’ என்று விளக்கியுள்ளார். சரணாகதர்கள் செய்த பிழை களைக் கொஞ்சமும் அறியாதவர் போல் இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.

“அவிக்ஞாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பிழைகளைத் திருமால் நிச்சயம் பொறுத்தருள்வார்.

—————
484. ஸஹஸ்ராம்சவே நமஹ: (Sahasraamshavey namaha)

கலி என்ற அசுரன் சிவனைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். அவனுக்குப் பரமசிவன் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “எனக்கு வைரம் பாய்ந்த உடல் என்னும்படி வலிமை மிக்க உடல் கட்டமைப்பு வேண்டும்! திருமால் என்னைக் கொல்லக் கூடாது!” என்று இரண்டு வரங்களைக் கேட்டான் கலி. சரி என்று வழங்கிவிட்டார் சிவன். வரங்களைப் பெற்று அதனால் கர்வம் அடைந்த கலி, பார்வதியிடம் அபச்சாரப் பட்டு விட்டான். “என் கணவர் தந்த வரங்களைப் பயன்படுத்திக் கொண்டு என்னிடமே தவறிழைக்கப் பார்க்கிறாயா? நீ இடுப்புக்கு மேல் வஜ்ரம் பாய்ந்த உடம்போடு இருந்தாலும் இடுப்புக்குக் கீழே வலிமையற்றவனாக ஆகிவிடுவாய்!” என்று சபித்து விட்டாள் பார்வதி.

பரமசிவனுடைய வரத்தையும், பார்வதியின் சாபத்தையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு, பூமியிலே வந்து பிறவி எடுத்தான் கலி அசுரன். அவன்தான் துரியோதனன். இது வியாச பாரதத்தில் வன பர்வத்தில் கோஷயாத்ரா உப பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ரகசியத்தை இளம்வயதில் அறிந்து கொண்ட துரியோதனன், கதாயுத்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். ஏனெனில், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கக்கூடாது என்ற விதி உள்ளது. மற்ற போர் முறைகளில் இடுப்புக்குக் கீழே தாக்கப்பட்டால் உடனே துரியோதனன் அழிந்து விடுவான். எனவே தன்னைக்காத்துக்கொள்ள கதாயுத்தம் மட்டுமே புரியவேண்டும் என்று தீர்மானித்து விட்டான் அவன்.

எந்த பலராமனிடம் பீமன் கதாயுத்தம் பயின்றானோ, அதே பலராமனிடம் கதாயுத்தம் கற்றான் துரியோதனன். அதன் விளைவாகவே கர்வம் தலைக்கு ஏறி, பாண்டவர்களைச் சூதுக்கு அழைத்து, திரௌபதியை அவமானப்படுத்தி பல கொடுமைகள் செய்தான். அவமானப்பட்ட திரௌபதி, “எந்தத் தொடையில் வந்து என்னை அமரச் சொன்னாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தனது கதையால் அடித்துப் பிளப்பான்!” என்று சபதம் செய்தாள். நான் அவ்வாறே செய்வேன் என்று பீமனும் சபதம் செய்தான்.

ஆனால், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கவே முடியாதே. எப்படித் தொடையில் அடிப்பது இந்தச் சபதமே தவறான சபதம் ஆகும். ஆனாலும், தனது பக்தர்கள் செய்த சபதத்தை நியாயப் படுத்த விழைந்தான் கண்ணன். அதனால், மைத்ரேய முனிவரைத் துரியோதனனிடம் அனுப்பி அவனுக்கு அறிவுரை வழங்க வைத்தான். பங்காளிகளைப் பகைத்துக் கொள்ளாமல், உரிய பங்கை அவர்களுக்குத் தருமாறு மைத்ரேய முனிவர் அறிவுரை சொல்ல, அதனால் கோபம் கொண்ட துரியோதனன் அலட்சியமாகத் தொடையைத் தட்டி, “நீங்கள் எல்லாம் வந்து எனக்கு அறிவுரை சொல்வதா?” என்றான். கோபம் கொண்ட மைத்ரேயர், “என்னை அவமானப் படுத்தும் விதமாக, எந்தத் தொடையை நீ தட்டினாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தன் கதையால் அடித்துப் பிளந்து விடுவான்!” என்று சாபம் கொடுத்தார். இப்போது இது ஒரு முனிவரின் சாபமாக மாறிவிட்டதால், பீமன் செய்த சபதம் நியாயப்படுத்தப்பட்டு விட்டது.

பாரதப் போரின் முடிவில், துரியோதனனைப் பீமன் தொடையில் அடித்து வென்ற போது, பலராமன் கோபம் கொண்டு பீமனைத் தாக்க வந்தார். “என்னிடம் கதாயுத்தம் பயின்றவன் என்று சொல்லிக்கொண்டு இப்படித் தவறான முறையில் தொடையில் அடிக்கலாமா?” என வெகுண்டார் பலராமன். அப்போது அவரைத் தடுத்த கண்ணன், “அண்ணா! பீமன் சரியாகத் தான் போரிட்டான். ஆனால் என்ன செய்வது? ரிஷியின் சாபம் வலிமையானது அல்லவா? தொடையில் அடிபட்டு இவன் மாளவேண்டும் என்பது மைத்ரேயர் துரியோதனனுக்கு இட்ட சாபம்! அதன்படி அவன் விதி முடிந்து விட்டது!” என்றான். பலராமனும் சமாதானம் அடைந்துவிட்டார்.

இங்கே கண்ணன் எவ்வளவு விஷயங்களை அறிந்து இந்த லீலையைச் செய்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். இடுப்புக்குக் கீழே வலிமையற்றுப் போவான் என்று துரியோதனனுக்குப் பார்வதி தந்த சாபம், நாராயணனால் மரணம் இல்லை என்று சிவன் கொடுத்த வரம், திரௌபதியும் பீமனும் செய்த சபதம் ஆகிய அனைத்தின் அடிப்படையிலும் பீமன், துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து அவனை வதைக்கும்படி கண்ணன் செய்தான். மேலும், பலராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதையும் முன்கூட்டியே அறிந்து, பீமன் செய்த சபதத்தை முனிவர் தந்த சாபமாகவும் மாற்றிவிட்டான்.

இப்படி அனைவரின் மனப்போக்கையும் அறிந்திருப்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ஸஹஸ்ராம்சு:’ என்றழைக்கப்படுகிறார். அம்சு என்றால் பொதுவாகக் கிரணம் என்று பொருள். இங்கே அம்சு என்ற வார்த்தை அறிவுக் கிரணத்தைக் குறிக்கிறது. ஸஹஸ்ரம் என்றால் ஆயிரக் கணக்கான என்று பொருள். ‘ஸஹஸ்ராம்சு:’ என்றால் ஆயிரக் கணக்கான அறிவுக் கிரணங்களைக் கொண்டவர் அதாவது, எல்லாம் அறிந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 484-வது திருநாமம்.“ஸஹஸ்ராம்சவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தைத் திருமால் அளித்தருள்வார்.

 ———————–

485. விதாத்ரே நமஹ (Vidhaathrey namaha)

அஜாமிளன் என்பவன் இளமைக் காலத்தில், தருமத்தில் நாட்டம் கொண்டவனாக நல்ல முறையில் இல்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால், காலப்போக்கில் தீய சகவாசத்தால், தருமத்தை மறந்து அறநெறிக்குப் புறம்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிப் பற்பல தீய செயல்களிலே ஈடுபடத் தொடங்கினான். வயது முதிர்ந்து அவனது ஆயுள் முடியும் தறுவாய் வந்த போது, யம தூதர்கள் அவன்மீது பாசக் கயிற்றை வீசுவதற்காக வந்தார்கள்.

அச்சமயம், அவன் இளம்வயதில் செய்த பக்தியின் நினைவு அவன் மனதில் தோன்றியது. எப்போதுமே நாம் செய்த சிறிய தருமச்செயல் கூட வீண் போகாது. அந்த நற்செயலின் பயனாக, தனது கடைசி மகனை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் அஜாமிளன் மனதில் தோன்றியது. அந்த மகனின் பெயர் நாராயணன். இவன் திருமாலை எண்ணிக் கூப்பிடாவிட்டாலும், மகனை எண்ணி “நாராயணா!” என்று அழைத்தான்.

உடனே, அங்கே விஷ்ணு தூதர்கள் வந்தார்கள். யம தூதர்களைப் பார்த்து, “இவன் பகவானின் திருநாமத்தை உச்சரித்துவிட்டான். இனி இவனை நாங்கள் விஷ்ணு லோகம் அழைத்துச் செல்வோம்! நீங்கள் யம லோகம் அழைத்துச் செல்லக்கூடாது!” என்றார்கள். இதைக் கேட்ட யமதூதர்கள், “என்ன சொல்கிறீர்கள்? இவன் தனது மகனின் பெயரைத் தானே சொன்னான்?” என்று கேட்டார்கள்.

அதற்கு விஷ்ணு தூதர்கள், “அவன் யாரை நினைத்துச் சொல்லி இருந்தாலும், சொன்னது திருமாலின் திருப்பெயர். அதற்குப் பலன் உண்டு. நீங்கள் நெருப்பில், தெரிந்து கை வைத்தாலும் தெரியாமல் கை வைத்தாலும் சுடும். மருந்தைத் தெரிந்து உட்கொண்டாலும், தெரியாமல் உட்கொண்டாலும் நோய் தீரும். அதுபோலத்தான் பகவானின் திருநாமங்களும்!” என்று விடையளித்தார்கள். “அப்படியே இருந்தாலும், ஒருமுறைதானே இவன் நாராயணா என்று சொன்னான்?” என்று கேட்டார்கள் யமதூதர்கள். விஷ்ணு தூதர்கள், “ஆயிரம் வருடங்கள் இருட்டாக இருந்த ஓர் அறையில், விளக்கை ஏற்றினால், அந்த நொடியே வெளிச்சம் வந்து விடுகிறது அல்லவா? அதுபோலத் தான் எத்தனையோ பிறவிகளாகப் பாபம் செய்திருந்தாலும், ஒருமுறை பகவானின் திருப்பெயரை உச்சரித்தவாறே பாபங்கள் நீங்கி, அவர்கள் தூய்மை அடைந்துவிடுகிறார்கள்.

அதன்பின், அவர்களின் மனம் பாபச் செயலில் ஈடுபடுவதில்லை!” என்று விளக்கினார்கள். அதைக் கேட்ட யமதூதர்கள், யம லோகத்துக்கே திரும்ப வந்துவிட்டார்கள். விஷ்ணு தூதர்கள், அஜாமிளனை நல்லோர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சென்று சேர்த்தார்கள். அடியார்களோடு கூடியதால், மனம் திருந்தி பக்தி வளரப்பெற்ற அஜாமிளன், அதன்பின் திருமாலைத் தஞ்சம் அடைந்து படிப்படியே முக்தி பெற்றான்.

யமதூதர்கள் யமனிடம், “நாங்கள் அஜாமிளனைப் பிடித்துவரச் சென்றபோது விஷ்ணு தூதர்கள் எங்களைத் தடுத்து விட்டார்கள்! இப்படிக் கடமை செய்யும் போது இடையூறு ஏற்படாமல் நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கோரினார்கள்.யமனோ, “அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? பகவானின் திருநாமங்களைச் சொல்வோருக்கு அருகில் நீங்கள் செல்லவே கூடாது! தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கிறார் என்றால், அவர்களை உங்களுக்குத் தலைவர்களாகக் கருதி வணங்கிவிட்டு நீங்கள் திரும்ப வந்துவிடுங்கள். உலகில் உள்ள மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் தலைவனாக இருக்கலாம். ஆனால், எனக்கும் மேல் தலைவராக இருப்பவர் திருமால். எனவே, அந்தத் திருமாலின் தொண்டர்களிடம் நீங்கள் அபச்சாரப் பட்டு விடாதீர்கள்!” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னானாம்.

இப்படி யமன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்கள், முனிவர்கள், கிரகங்கள் எல்லோரையும் நியமித்து இயக்குபவராகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார். ‘விதாதா’ என்றால் நியமித்து இயக்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 485-வது திருநாமம்.“விதாத்ரே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, யமபயம் வாழ்வில் ஏற்படாதபடித் திருமால் அருள்புரிவார்.

——–

486. க்ருதலக்ஷணாய நமஹ (Krutha Lakshanaaya namaha)

வானமாமலை மடத்தின் முதல் ஜீயரான பொன்னடிக்கால் ஜீயரைத் தரிசிக்க, அவரது சிஷ்யையான சின்னியம்மாள் என்ற பெண் தரிசிக்கச் சென்றார். ஜீயரின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தார் சின்னியம்மாள். வந்து நமஸ்கரித்த சிஷ்யையைப் பார்த்து பொன்னடிக்கால் ஜீயர், “உன் ஊர் என்ன?” என்று கேட்டாராம். சின்னியம்மாள், “நம்மாழ்வாரின் அவதாரத் திருத்தலமான திருக்குருகூர் தான் அடியேனுக்குப் பிறந்த ஊர்!” என்று சொன்னாராம். “நீ எந்தக் குலம்?” என்று ஜீயர் கேட்க, “அச்சுத குலம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.

(இறையடியார்களுக்குள் என்றுமே ஏற்றத்தாழ்வு கிடையாது. அச்சுதனாகிய திருமாலைப் பற்றிய அனைவரும் அச்சுத குலம் என்ற ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் தானே?) “உன் கோத்திரம்?” என்ன என்று ஜீயர் கேட்க, “பராங்குச கோத்திரம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். (வசிஷ்டர், விஸ்வாமித்ரர், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களின் பெயர்களில் கோத்திரங்கள் உண்டு. ஆனால், அவர்களை விட ஏற்றம் பெற்ற பராங்குசரான நம்மாழ்வாரை இட்டு, அவரது கோத்திரம் என்று இப்பெண் பதில் சொல்லியிருக்கிறார்.)

“நீ எந்த வேதத்தைப் பின்பற்றுகிறாய்?” என்று கேட்டார். ரிக்வேதமோ, யஜுர் வேதமோ, ஸாமவேதமோ, அதர்வண வேதமோ எதையுமே சொல்லாமல், “திராவிட வேதம்!” என்றார் சின்னியம்மாள். தமிழ்வேதமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களின் நெறியில், தான் நிற்பவள் என்று உணர்த்துகிறார். “உன் உறவினர்கள் யார்?” என்று ஜீயர் கேட்க, “ஆத்ம பந்துக்கள்!” என்று சொன்னார் சின்னியம்மாள். (உடல்ரீதியான உறவுகளுள் பக்திக்கு விரோதமாக இருப்போர் உண்மையான உறவினர்கள் அல்லர்.

ஆத்மா பரமாத்மாவை அடைய உதவும் சிறந்த பக்தர்களே உண்மையான உறவினர்கள் ஆவர் என்பது தாத்பரியம்)“உன் பெற்றோர் யாவர்?” என்று கேட்டார் ஜீயர். தனது ஊரான வானமாமலையில் கோவில் கொண்டுள்ள பெருமாள் – தாயாரின் திருப்பெயர்களையே தன் பெற்றோர் பெயராகக் குறிப்பிட்டு, “தெய்வநாயகனும் – ஸ்ரீவரமங்கைத் தாயாரும்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.

“உன் தொழில் என்ன?” என்று ஜீயர் கேட்க, “பாகவத கைங்கர்யம் – அடியார்களுக்குத் தொண்டு செய்வது!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். “அதற்கு என்ன பயன்?” என்று ஜீயர் கேட்டார். “அதுவே பிரயோஜனம், அடியார்களுக்குக் கைங்கரியம் செய்யும் பேற்றுக்கு மேல் வேறென்ன கூலி வேண்டும்?” என்று பதில் அளித்தார் சின்னியம்மாள்.

“என்ன பிரார்த்தனையோடு என்னிடம் வந்திருக்கிறாய்?” என்று ஜீயர் கேட்டார். “உங்களுக்கும் இறை அடியார்களுக்கும் இடைவிடாது தொண்டு செய்யும் பேற்றை அடியேனுக்கு அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் சின்னியம்மாள்.இந்த பதில்களைக் கேட்டு மகிழ்ந்த ஜீயர் சுவாமிகள், “உன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்த போதும், நான் உன்னிடம் இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்டேன் தெரியுமா? ஒரு பக்தனுக்குரிய இலக்கணங்கள் என்ன என்பதை உலகம், உன்மூலம் அறியட்டும் என்பதைக் கருதியே நான் கேட்டேன். நீ சொன்னது போல், தன் ஊருக்கு அருகிலுள்ள ஆழ்வாரின் அவதாரத் தலத்தையே தன் பிறந்த ஊராக ஒவ்வொரு பக்தனும் சொல்லிக்கொள்ளவேண்டும்.

அச்சுத குலம் என்றுதான் தன் குலத்தைக் குறிப்பிட வேண்டும். ஆழ்வாரை இட்டுப் பராங்குச கோத்திரம் என்றும், ஆழ்வார் பாசுரங்களை இட்டு திராவிட வேதம் என்றும் தனது உட்பிரிவுகளைக் குறிப்பிட வேண்டும். இறைவனையும் இறைவியையுமே பெற்றோராகவும், இறை அடியார்களையே உறவினர்களாகவும் கொள்ளவேண்டும். இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வதையே வாழ்வின் பயனாகக் கருதவேண்டும். இந்த இலக்கணங்கள், நீ தந்த எளிய பதில்கள் வாயிலாக உலகத்தோரின் மனங்களில் பதியட்டும்!” என்று ஆசீர்வாதம் செய்து அருளினார்.

இப்படித் தனது அடியார்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இலக் கணங்களைத் திருமாலே ஆசார்யர்கள் மூலம் வகுத்துக் கொடுத்திருப்பதால், திருமால் ‘க்ருதலக்ஷண:’ என்று அழைக்கப்படுகிறார். க்ருத என்றால் வகுத்தவர். லக்ஷண என்றால் இலக்கணம். ‘க்ருதலக்ஷண:’ என்றால் அடியார்களுக்கான இலக்கணங்களை வகுத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 486-வது திருநாமம். “க்ருதலக்ஷணாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, அடியார்களுக்கு உரித்தான அங்க அடையாளங்கள் அனைத்தும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————————–

488. ஸத்வஸ்தாய நமஹ (Sathvasthaaya namaha)

ஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசைப் பிரான், கும்பகோணத்தில் கோவில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைத் தரிசிக்கும், ஆவலுடன் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டுக் கும்பகோணத்தை நோக்கிப் பயணித்தார். வழியில் உள்ள பெரும்புலியூர் என்ற கிராமத்தில், ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்தார் திருமழிசைப்பிரான். அத்திண்ணையிலே வேதம் ஓதிக்கொண்டிருந்த அந்தணர்கள் திருமழிசைப் பிரானைக் கண்டு, `தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இவர் கேட்க நாம் வேதம் ஓதுதல் தகாது’ என்று எண்ணி, வேதம் சொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

திருமழிசைப் பிரான் அவர்களின் கருத்தை அறிந்து திண்ணையை விட்டு இறங்கினார். மறையவர்கள் உடனே வேதம் ஓதத் தொடங்கினார்கள். ஆனால், விட்ட வாக்கியம் தோன்றாமையால் தவறித் தடுமாறினார்கள். ஆழ்வாரும் அதைக் கண்டு, கருநெல்லை நகத்தால் பிளந்து, “க்ருஷ்ணானாம் வ்ரீஹீணாம் நக நிர்ப்பின்னம்” என்ற வேதத் தொடரைத்தான் நீங்கள் சொல்லி வந்தீர்கள் என்று குறிப்பால் காட்டியருளினார்.

அவர்கள் தெளிந்து வந்து ஆழ்வாரை வணங்கி, பிழையைப் பொறுத்தருள்க என வேண்ட, திருமழிசைப் பிரானும், அவர்களுக்குப் பல இன்மொழிகளைக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.பின்னர், அந்தப் பெரும்புலியூர் திருக்கோவிலின் வெளிப்புறத்தைத் திருமழிசைப் பிரான் பிரதட்சிணம் செய்ய, உள்ளே எழுந்தருளியிருக்கும் பெருமாள் இவ்வாழ்வார் எழுந்தருளுகிற திருவீதிகள் தோறும் தம் திருமுகத்தைத் திருப்பிக்கொண்டே வந்தார். இந்தச் செயலை அக்கோயில் அர்ச்சகராகிய நம்பி கண்டு, சில பக்தர்களுக்கும் காட்டினார். அந்தக் கிராமத்தில், பெரும்புலியூர் அடிகள் என்ற பெரியவர் யாகம் செய்துவந்தார்.

அந்தப் பெரும்புலியூர் அடிகளின் யாகசாலைக்குச் சென்று ஊர்மக்கள் இவரது பெருமையைக் கூறினார்கள். பெரும்புலியூர் அடிகள் உடனே அங்கு வந்து, திருமழிசைப் பிரானை வணங்கி யாகசாலைக்கு எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். திருமழிசைப் பிரானும் சம்மதிக்கவே, அவரை யாகசாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார் பெரும்புலியூர் அடிகள். பின்னர் யாகத்தில் செய்யும் `அக்கிர பூஜை’ என்ற முதல் மரியாதையை ஆழ்வாருக்குச் செய்தார் பெரும்புலியூர் அடிகள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வேள்விச் சடங்கர்கள், திருமழிசைப் பிரானை இழிவுபடுத்திப் பேசினார்கள். ஆழ்வாரும் வெறும் சடங்குகளை மட்டுமே பற்றி நிற்கும் அவர்களுக்கு நல்லறிவு உண்டாகும்படிச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் எம்பெருமானை எண்ணி,

“அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்மை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே”

– என்று பாடியருளினார்.

என் இதயத்தில் நீ இருப்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று திருமாலிடம் கோரினார் ஆழ்வார்.திருமாலும், யாவரும் காணும்படி ஆழ்வாரின் உள்ளத்தில், தான் பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் காண்பிக்க, ஆழ்வாரை இகழ்ந்து பேசிய சடங்கர்கள் எல்லோரும் இக்காட்சியினால் உள்ளம் மாறி ஆழ்வாரது திருவடிகளில் விழுந்து வணங்கி, “ஆழ்வாரே அக்கிர பூசைக்கு உரியவர்!” எனப் பன்முறை போற்றி, தாம் செய்த செயல்களை மன்னித்தருளுமாறு வேண்டினர்.

திருமழிசைப் பிரானும் அவர்களுக்குப் பல நன்மொழிகளைக் கூறி, பெரும்புலியூர் அடிகளிடத்தும் விடை பெற்றுக்கொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளினார். ஆக, திருமழிசைப் பிரான் போன்ற சிறந்த அடியார்களின் இதயத்தில் எப்போதும் வசிப்பதால் திருமால், ‘ஸத்வஸ்தஹ’ என்று அழைக்கப்படுகிறார். ஸத்வ என்பது இதயத்தைக் குறிக்கிறது. ஸ்த என்றால் நிலைநிற்பவர். ‘ஸத்வஸ்த:’ என்றால் அடியார்களின் உள்ளத்தில் வசிப்பவர். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 488-வது திருநாமம். “ஸத்வஸ்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் திருமால் எப்போதும் குடியிருப்பார்.

————

489. ஸிம்ஹாய நமஹ (Simhaaya namaha)

அம்பரீஷன் என்ற மன்னன் இட்சுவாகு குலத்திலே தோன்றியவன், ராமனுக்குக் குலமுன்னவர். அம்பரீஷனின் பக்திக்கு உகந்த திருமால், தனது சுதர்சன சக்கரத்தை அம்பரீஷனிடம் கொடுத்து, உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தாலும் இந்தச் சக்கரம் உன்னைக் காக்கும் என்று கூறியிருந்தார். இத்தகைய சிறந்த பக்தரான அம்பரீஷன், மதுவனம் என்னும் இடத்தில் ஒரு வருடம் தங்கி இருந்து நிறைய தானங்கள் செய்து ஏகாதசி விரதமும், அனுஷ்டித்து வந்தான்.

இப்படிப் பதினொரு மாதங்கள் ஏகாதசி விரதம் நிறைவு செய்த நிலையில், பன்னிரண்டாவது மாதம் வந்தது. ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் நீராடி, திருமாலுக்குப் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யும் நேரம். அப்போது, துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் அங்கே வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றான் அம்பரீஷன். “இத்தகைய மகான் இங்கே வந்தது அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நீங்கள் தங்கி இருந்து உணவு அருந்தி எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

துர்வாசரோ, “அம்பரீஷா! நான் எனது அனுஷ்டானங்களை இன்னும் நிறைவு செய்ய வேண்டிய உள்ளது. நான் நிறைவுசெய்துவிட்டு வந்து உண்கிறேன்!” என்றார். “சரி! அதுவரை காத்திருக்கிறேன்!” என்று மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டான் அம்பரீஷன். ஆனால், சிஷ்யர்களோடு நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றச் சென்ற துர்வாசர், வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. துவாதசி திதி நிறைவடைவதற்குள், பாரணை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலையில், காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதால் அம்பரீஷன் கலங்கினான்.
ஒருநிலையில், தன் குருவிடம் அம்பரீஷன், “சுவாமி! துவாதசி திதி முடியும் தறுவாய் வந்துவிட்டது. வந்திருக்கும் விருந்தினரான துர்வாசருக்கு உணவளிக்காமல் உண்டாலும் தவறாகிவிடும். அதே சமயம், துவாதசி திதி நிறைவடைவதற்குள் உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யாவிட்டாலும் தவறாகிவிடும். என்ன செய்வது?” என்று கேட்டான்.

அம்பரீஷனின் குரு, “நீ பெருமாளின் ஸ்ரீபாத தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்து விடு. தண்ணீரை உட்கொண்டதால், விரதம் நிறைவானதாகவும் கொள்ளலாம். அதே சமயம், வேறு உணவு உட்கொள்ளாததால், விருந்தினருக்கு முன் `உண்டாய்’ என்ற தோஷமும் வராது!” என்று வழிகாட்டினார். அப்படியே செய்தான் அம்பரீஷன். இறைவனின் திருவடி தீர்த்தத்தை அம்பரீஷன் உட்கொண்ட அடுத்த நொடி, அங்கே துர்வாசர் சீடர்களோடு வந்துவிட்டார்.

“எனக்கு உணவளிக்காமல் எப்படி நீ விரதத்தை நிறைவு செய்தாய்?” என்று கோபத்துடன் முழங்கினார். அம்பரீஷனை அழிப்பதற்காக ஒரு பிசாசை அவன்மீது ஏவினார் துர்வாசர். பகவான்மீதுள்ள நம்பிக்கையால், கலங்காமல் நின்றான் அம்பரீஷன். அவனுக்குக் காவலாகத் திருமால் தந்திருந்த சுதர்சனச் சக்கரம், துர்வாசர் ஏவிய பிசாசை விழுங்கியது. அந்தச் சக்கரத்தாழ்வார் அதன்பின் துர்வாசரைத் துரத்தத் தொடங்கினார். சக்கரத்தாழ்வார் துரத்த, பிரம்மா, ருத்ரன் என்று எல்லாத் தேவர்களின் உதவியையும் நாடினார் துர்வாசர். யாரும் அடைக்கலம் தரவில்லை.

திருமாலின் திருவடிகளில் விழுந்தார் துர்வாசர். “என் பக்தனிடம் மன்னிப்பு கேட்டாலே ஒழிய என் சக்கரம் உங்களை மன்னிக்காது!” என்று சொல்லிவிட்டார் திருமால். அதன்பின் நிறைவாக, அம்பரீஷனின் பாதங்களில் வந்து விழுந்தார் துர்வாசர். “ஆஹா! சுவாமி! நீங்கள் என் பாதங்களில் விழுவதா?” என்று பதறிய அம்பரீஷன், சக்கரத்தாழ்வாரைத் துதித்தான். அதனால், உகந்து சக்கரத்தாழ்வார் சாந்தம் அடைந்தார். இனி அடியார்களிடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ மோதவே கூடாது என்று சொல்லிக் கொண்டே, அம்பரீஷனிடம் இருந்து விடைபெற்றாராம் துர்வாசர்.

இப்படித் தன் அடியார்களுக்குத் தீங்கு இழைக்க நினைப்போரைத் தண்டிப்பதால், திருமால் ‘ஸிம்ஹ:’ தண்டிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 489-வது திருநாமம்.“ஸிம்ஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்க்கையில் எந்தத் தடைகளும் வராதிருக்கும்படிதிருமால் அருள்புரிவார்.

——————

490. பூதமஹேஸ்வராய நமஹ (Bhootha Maheshwaraaya namaha)

கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரம் என்ற திவ்யதேசத்தின் தலவரலாறு இது.தேவ-அசுரப் போரில் அசுரர்களின் கை ஓங்க, தேவர்கள், திருமாலின் உதவியை நாடினார்கள். தீயசக்திகளான அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதாக திருமால் தேவர்களுக்கு அபயம் அளித்தார். அசுரர்கள் பிரம்மாவின் உதவியை நாடி, எங்களுக்கு ஏதாவது புகலிடம் காட்டுங்கள் என்று கோரினார்கள். நீங்கள் சிவபெருமானின் உதவியை நாடுங்கள் என்று அவர் களிடம் சொன்னார் பிரம்மா. அசுரர்கள் சிவனின் உதவியை நாட, சிவனும் அவர்களைக் காப்பதாக வாக்களித்துவிட்டார். அடுத்து தேவ அசுரப் போர் நடந்தபோது, தேவர்களின் பக்கம் திருமாலும், அசுரர்களின் பக்கம் சிவபெருமானும் நின்றார்கள். திருமாலுக்கும் சிவனுக்கும் எதிராகப் பெரும் போர் மூண்டுவிட்டது.

(அடடா!!! சைவ-வைணவச் சண்டைகளே வேண்டாம் என்று சொல்லும் காலத்தில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை என்று நீ கதை எழுதுகிறாயே என்று நீங்கள் புருவங்களை உயர்த்த வாய்ப்புண்டு. ஆனால் இப்போதே முன் முடிவுக்கு வராமல், கதையை முழுமையாகப் படித்தால் ஒரு தத்துவம் நமக்குக் கிட்டும்.)

சிவபெருமான் தனது சூலத்தைத் திருமாலின் மீது ஏவினார். திருமாலின் சக்ராயுதம், சிவனின் சூலத்தை மறைத்துவிட்டது. “இனி என் கையில் ஆயுதமே இல்லை! நான் நாராயணனைச் சரண் அடையப்போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டு, திருமாலிடம் சரணடைந்தார் சிவபெருமான். “அடடா! நமக்குத் தலைவராக வந்த சிவனே திருமாலின் பாதங்களில் விழுந்துவிட்டாரே! இனி நாம் என்ன செய்வது?” என்று தெரியாமல் திகைத்தார்கள் அசுரர்கள். அப்போது, திருமால் மும்மூர்த்தி வடிவமாகத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காட்சி அளித்தார். திருமால் பிரம்மாவுக்குள் அந்தர்யாமியாக இருந்து உலகைப் படைக்கிறார்.

விஷ்ணுவாகத் தானே இருந்து காக்கிறார். ருத்திரனுக்குள் அந்தர்யாமியாக இருந்து அழிக்கிறார். இதை உணர்த்த, தனது திருக்கரத்தில் பிரம்மாவுக்கு அடையாளமான தாமரையை ஏந்தி இருந்தார். சிவபெருமானைக் குறிக்கும் விதமாக நெற்றியிலே மூன்றாவது கண்ணோடு விளங்கினார். அதனால் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் பெயர் பெற்றார்.இந்தக் கோலத்தில் காட்சி அளித்த தெய்வநாயகப் பெருமாள், “ஏ அசுரர்களே! நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! பிரம்மாவும் எனக்கு உடலாக இருக்கிறார். சிவனும் எனக்கு உடலாக இருக்கிறார். என் உடலைக்கொண்டு என்னையே அழிக்கப் பார்க்கிறீர்களா? என் கையைக் கொண்டு என் கண்ணையே குத்தமுடியுமா? முட்டாள்களே! நாங்கள் மூவரும் என்றைக்குமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்!” என்று கூறினார்.

“இனி வேறு வழியில்லை!” என்று உணர்ந்த அசுரர்கள், அத்தனை பேரும் திருமாலின் திருவடிகளை வந்து அடிபணிந்து மனம் திருந்தினார்கள். இன்றும் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரத்தில் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் திருநாமத்தோடு, மூன்றாம் கண்ணோடும் கையில் தாமரையோடும் எழுந்தருளி உள்ளார் திருமால்.

திருமங்கை ஆழ்வாரும் அப்பெருமாளைப் பாடும்போது, “மூவராகிய மூர்த்தியை மூவுலகு உண்டு உமிழ்ந்தானை” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இப்படி எல்லாத் தேவர்களையும் தனக்கு சரீரமாகக்கொண்டு, அவர்களையும் இயக்கும் தலைவராகத் திகழ்வதால் திருமால் ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். பூத என்பது உலகில் படைக்கப்பட்ட உயிர்களைக் குறிக்கும். பூதேஸ்வர: என்பது அந்த உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்னும் ஸ்தானத்தில் இருக்கும் பிரம்மா, இந்திரன் போன்றோரைக் குறிக்கும்.

பூதமஹேஸ்வர: என்றால், தலைவர்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களுக்கும் தலைவராக இருப்பவர் என்று பொருள். அப்படி, தேவர்களுக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதாலே, ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 490-வது திருநாமம், ‘பூதமஹேஸ்வர:’ என்றால் அனைத்து உயிர்களுக்கும் பெருந்தலைவர் என்று பொருள்.

“பூதமஹேஸ்வராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், யாரும் நம்மை வெறுக்காதபடி அனைவரோடும் நல்லிணக்க உணர்வுடன் இணைந்து வாழும் பக்குவத்தைத் திருமால் நமக்கு அருள்வார்.

———–

491. ஆதிதேவாய நமஹ (Aadhi Devaaya namaha)

முதலையிடம் சிக்கிக் கொண்ட கஜேந்திரன் என்ற யானை,
“நமோ நமஸ்தே அகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய”

– என்று திருமாலை அழைத்தது என்று ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்கிறது.

‘அகிலகாரண’ என்றால் அனைத்து உலகுக்கும் காரணமானவர். ‘நிஷ்காரண’ என்றால் தனக்கொரு காரணம் இல்லாதவர் என்று பொருள். ‘அத்புதகாரண’ என்றால் உலகியலில் நாம் காண்கின்ற காரண-காரியங்கள் போல் அல்லாமல், தானே உலகுக்கு மூலப்பொருளாகவும் படைப்பாளியாகவும் இருப்பவர் என்று பொருள். இதன் சுருக்கமாகவே, ஆதிமூலம் என்ற சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம்.யானை, முதலில் காரணப் பொருள் என்னைக் காக்கட்டும் என்று அழைத்தவாறே, அதைக் காக்க இந்திரன் புறப்பட்டானாம். “நாம்தான் தேவலோகத்தில் நடைபெறும் பல விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறோம்! எனவே யானை நம்மைத்தான் அழைக்கிறது!” என்ற எண்ணத்தில் போனான் இந்திரன்.

ஆனால், `அகில காரணாய’ என்று யானை சொன்னவாறே, “அடடா! நாம் அகில உலகுக்கும் காரணம் ஆகமாட்டோமே! அனைத்து உலகையும் படைத்தவர் பிரம்ம தேவர்தானே? இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டான் இந்திரன்.`அகில காரணாய’ என்ற வார்த்தையைக் கேட்டு யானையைக் காக்க பிரம்மதேவர் விரைந்தார். ஆனால் யானையோ, `நிஷ்காரணாய’ தனக்கொரு காரணம் இல்லாதவன் என்று மேலே குறிப்பிட்டது. இதைக் கேட்ட பிரம்மா, “நமக்கும் காரணப் பொருளாக நம்மைப் படைத்த திருமால் இருக்கிறாரே! அப்படியானால் இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டார்.

`அத்புத காரணாய’ என்று யானை கூறியவாறே உலகுக்கு ஒப்பற்ற காரணமாக விளங்கும் திருமாலையே யானை குறிப்பிடுகிறது என்பதை எல்லாருமே ஒருவாறு அறிந்து கொண்டார்கள். ஆனால், அதற்குள் யானையைக் காக்க வேண்டும் என்ற துடிப்போடு திருமால் வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு கருட வாகனத்திலே பறந்து கொண்டிருந்தாராம்.

அப்போது பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாரும், `இந்த கேஸ்’ அவரது ‘கேஸ்’ என்று சொல்லிவந்தோம்! இது உண்மையிலேயே ‘கேசவரது கேஸ்’ தான்! அதனால் தான் கேசவனே செல்கிறான்!” என்று கொண்டாடினார்களாம் (க என்பது பிரம்மாவைக் குறிக்கும், ஈச என்பது சிவனைக் குறிக்கும். க, ஈச ஆகிய இருவரையும் படைத்து இயக்குபவருக்குக் கேசவன் என்று திருநாமம். நான்முகன், ருத்திரன் போன்றோருக்கும் காரணமான ஆதிமூலம் திருமால் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.)

இப்படி தேவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலே, திருமால் குளக்கரையையே அடைந்துவிட்டார். விரைவாக முதலையை அழித்து கஜேந்திரனைக் காப்பாற்றி அதற்கு முக்தியும் அளித்தார். `ஆதி’ என்றால் மூலக் காரணமாக இருப்பவர் என்று பொருள். நான் முகனை, நாராயணன் படைத்தான் என்ற திரு மழிசைப் பிரான் பாசுரமும், தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதிகவயே என்ற ஸ்ரீமத் பாகவத சுலோகமும் காட்டுவது போல், பிரம்மாவைத் தனது உந்தித் தாமரையில் படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர் திருமால்.

உலகைப் படைக்கும் பிரம்மாவையே படைத்தவர் என்பதன் மூலம், அவரே ஆதிகாரணமானவர் என்பதை அறிகிறோம். தேவர்களுக்கு ஆதிகாரணமாக இருப்பதால் திருமால், ‘ஆதி:’ என்று குறிப்பிடப்படுகிறார்.‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) ஒளிமிக்கவர் என்று பொருள். தனது பொலிவின் முன் தேவர்கள் அத்தனை பேரும் மங்கிப்போகும் படி ஒளி வீசிக்கொண்டு திகழ்வதால் திருமால், தேவ என்று அழைக்கப்படுகிறார்.

ஆக, தேவர்களுக்கு ஆதியாகவும், மற்ற தேவர்களின் ஒளி தன் ஒளியின் முன் மங்கிப் போகும்படியாகவும் விளங்குவதால் திருமால் ‘ஆதிதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 491-வது திருநாமம். ஆதி மற்றும் தேவன் ஆகிய இரு பொருள்களையும் விளக்கும்படி நம்மாழ்வார் திருவாய்மொழியில், நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழியில்,

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?— என்றும்,

பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே
– என்றும் போற்றி இருக்கிறார்.

“ஆதிதேவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஒளிமயமான எதிர்காலமும் தலைமைப் பண்பும் நிறையும்படி அருள்புரிவார்.

————

492. மஹாதேவாய நமஹ (Mahaa Devaaya namaha)

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் என்ற மகான் திருவேங்கடமலையில் தங்கி, ராமானுஜன் என்ற தோட்டமும், இராமானுஜப் புத்தேரி என்ற பொய்கையும் ஏற்படுத்தி, அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்துத் திருவேங்கடமுடையானுக்குப் புஷ்பகைங்கர்யம் செய்துவந்தார்.ஒருநாள் இரவு அனந்தாழ்வானின் தோட்டத்துக்குள் ஒரு தம்பதியர் நுழைந்தார்கள். அந்தக் கணவன், தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொய்து அவற்றைத் தனது மனைவியின் மீது வீசி விளையாடினான்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த அனந்தாழ்வான், பெருமாளுக்கு என்று உள்ள பூக்களைக் கொய்து, இப்படி ஒரு தம்பதியர் விளையாடுவதைக் கண்டு கோபமுற்றார். அவர்களைப் பிடிக்க முயன்றபோது, கணவன் தப்பித்து ஓடிவிட்டான். மனைவியைப் பிடித்து அங்கிருந்த ஒரு சம்பங்கி மரத்தில் கட்டிவைத்தார் அனந்தாழ்வான். “உன்னை மீட்டுச் செல்ல உன் கணவன் வருவான் அல்லவா? அவன் வரும்போது அவனைக் கவனித்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி அந்த மரத்தின் எதிரிலேயே ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டார் அனந்தாழ்வான்.

இரவு முழுவதும் அந்த இளைஞனின் வருகைக்காக அனந்தாழ்வான் காத்திருந்தும், மனைவியைக் காப்பதற்காக அவன் வருவதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணும் அனந்தாழ்வானிடம், “சுவாமி! உங்களைப் பார்த்தால் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள்! தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்!” என்று கெஞ்சினாள். அனந்தாழ்வானோ, “நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மலையில் பூக்கும் அனைத்துப் பூக்களும் பெருமாளுக்கு மட்டுமே. ஆனால், அந்தப் பூக்களைக் கொய்து மானிடர்களான நீங்கள் இருவரும் விளையாடி இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? உன் கணவன் வரட்டும் நான் பேசிக்கொள்கிறேன்!” என்று கோபத்துடன் சொன்னார்.

இரவு நகர்ந்து நகர்ந்து, பிரம்ம முகூர்த்த நேரம் வந்தது. அர்ச்சகர்கள் திருவேங்கடமுடையானின் திருக்கோவிலைத் திறந்தார்கள். கருவறையைத் திறந்தால், மலையப்பனின் மார்பை அலங்கரிக்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. அடடா! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனின் மார்பில் அலர்மேல் மங்கை அகன்று விட்டாளே! என்ன ஆனதோ என்று எல்லாரும் திகைத்துப்போனார்கள்.

அப்போது திருவேங்கடமுடையானே வாய் திறந்து, “அலர்மேல் மங்கை நாச்சியார் அனந்தாழ்வானின் தோட்டத்தில் இருக்கிறாள். அனந்தாழ்வானின் பூக்கூடையில் அவளை எழுந்தருளச் செய்து இங்கே அழைத்து வரச்சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார்.இச்செய்தியை அர்ச்சகர்கள் சென்று அனந்தாழ்வானிடம் தெரிவிக்க, “ஆஹா! தம்பதியாக வந்தவர்கள் மலையப்பனும் மகாலட்சுமியுமான திவ்ய தம்பதியரா? அதை அறிந்து கொள்ளாமல் அபச்சாரப்பட்டுவிட்டேனே!” என்று கலங்கினார்.

பக்தனின் கட்டை அவிழ்த்துக் கொள்ள முடியாதவள் போல் கட்டுண்டு கிடந்த மகாலட்சுமியை அவிழ்த்துவிட்டார். பெருமாளின் நியமனப்படி அலர்மேல் மங்கைத் தாயாரைத் தன் பூக் கூடையில் அமரவைத்து, அவளைத் தலைமேல் சுமந்து கொண்டு பெருமாளின் கருவறை நோக்கி நடந்தார் அனந்தாழ்வான். “வாரும் மாமனாரே!” என்று அனந்தாழ்வானை வரவேற்றான் மலையப்பன். “நாச்சியார் உம்மைத் தந்தை என்று நேற்றிரவு அழைத்தாள் அல்லவா? அதனால் இன்று முதல் நீர் எமக்கு மாமனார் ஆவீர்!” என்று திருவாய் மலர்ந்தருளினான் மலையப்பன்.

ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கரியமாக எண்ணி, புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வான் என்ற பக்தரைக் கௌரவிப்பதற்காக இந்த விளையாட்டை அந்த திவ்ய தம்பதியர் செய்திருக்கிறார்கள். இப்படித் தனது பக்தர்களைக் காப்பதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் பற்பல லீலைகள் செய்வதால் திருமால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) விளையாடு பவர் என்று பொருள். ‘மஹாதேவ:’ என்று மிகப்பெரிய விளையாட்டை விளையாடுபவர் என்று பொருள். தோட்டத்தில் பூக்கொய்வது தொடங்கி, உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற அத்தனைச் செயல்களையும் விளையாட்டு போல் அனாயாசமாகச் செய்ய வல்லவர் திருமால். அதனால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 492-வது திருநாமம்.“மஹாதேவாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள், விளையாட்டுத் துறையில் உச்சம் தொடுவதற்குத் திருமால் அருள்புரிவார்.

———–

493. தேவேசாய நமஹ (Deveshaaya namaha)

திருமாலைக் குறித்துத் தியானத்தில் ஈடுபட விழைந்தார் பிரம்மா. ஆனால், அவரது முன் வினைகளாகிய கர்மா அவரது தியானத்துக்குத் தடையாக இருந்தன. அதனால், அவருக்குத் தியானத்தில் மனம் லயிக்கவில்லை. இறைவனின் வடிவைத் தியானிக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் பிரம்மா. அவரிடம் அசரீரியாகப் பேசிய திருமால், “பிரம்ம தேவனே! உங்கள் பாபங்கள் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்ய வேண்டும். அதன்பின்தான் உங்களுக்குத் தியானம் கைகூடும்!” என்றார்.

“ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆயிற்றே! என் துன்பத்தை விட அதற்கான பரிகாரம் கடினமானதாக உள்ளதே!” என்று பிரம்மா கேட்டார். “அப்படியானால் காஞ்சீபுரத்தில் ஒரு அஸ்வமேத வேள்வி செய்யுங்கள். அங்கே ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்விகள் செய்ததற்குச் சமம்!” என்று சொன்னார் திருமால். அதன்படி, காஞ்சீபுரத்தில் வேள்விச் சாலை அமைத்து, கிழக்குமுகமாக அமர்ந்து வேள்வி செய்யத் தொடங்கினார் பிரம்மா. அந்த வேள்வி செய்யும் போது, அவருக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அவை அனைத்தையுமே திருமால் போக்கிக் கொடுத்து, அவரது வேள்வி தொடர்ந்து இடையூறின்றி நடப்பதற்கு அருள்புரிந்தார்.

வேள்வியின் நிறைவுப்பகுதி வந்தது. வேள்வியில் அர்ப்பணிக்கப் படும் குதிரையின் வயிற்றுப் பகுதியைக் கொண்டு செய்யும் `வபா’ ஹோமத்தைச் செய்தபோது, பிரம்மாவுக்கு நடுக்கம் ஏற்பட்டதாம். எந்த ஒரு செயலுமே எடுத்து நடத்தும் போது, நிறைவுப் பகுதி வருகையில், அது நன்றாக நிறைவடைய வேண்டுமே என்ற நடுக்கம் வருவது இயற்கையல்லவா? தன் மகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் தந்தை, மகள் கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரத்தில் இனிதாகத் திருமணம் நிறைவடைய வேண்டுமே என்ற ஒருவிதப் பதற்றத்தில் இருப்பார் அல்லவா?

அதுபோல் பிரம்மாவும், “யாகத்தின் நிறைவுப் பகுதி நன்றாகப் பூர்த்தியாக வேண்டுமே! அந்தந்த தேவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகங்களைச் சரியாகத் தந்துவிட வேண்டுமே! யாருக்கும் எந்தக் குறையும் வரக்கூடாதே!” என்றெல்லாம் பலவாறாகப் பதறி நடுங்கிக் கொண்டிருந்தாராம். இந்த நடுக்கத்துடன் வபாஹோமத்தைப் பிரம்மா செய்ய, அந்த வேள்வித் தீயிலேயே அத்திகிரி வரதராஜப் பெருமாளாகத் திருமால், பிரம்மாவுக்குக் காட்சி அளித்தார்.

“அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரந்தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்
உத்திரவேதிக்கு உள்ளே உதித்தார் வந்தார்
உம்பர்தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!”

என்று தேவர்கள் போற்றிப் பூமாரி பொழியத் தோன்றிய வரதராஜப் பெருமாள், “பிரம்மா! உனது பாபங்கள் நீங்கிவிட்டன. நீ விரும்பியபடி நான் உனக்குக் காட்சி தந்துவிட்டேன் பார்!” என்று சொன்னார்.அப்போது பிரம்மா, “தேவர்கள் எனக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றாலும்கூட அவரவர்க்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகம் சரியாகப் போய்ச் சேர்ந்து எல்லாத் தேவர்களும் திருப்தி அடைய வேண்டுமே என்ற பெரும் கவலையோடு இருக்கிறேன்!” என்றாராம்.

அதற்கு வரதராஜன் பெருமான், “பிரம்மனே! அதைக் குறித்து நீங்கள் அஞ்சவே வேண்டாம்! தேவர்களின் தலைவனான நானே இப்போது தோன்றி, நீங்கள் சமர்ப்பித்த ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டுவிட்டேனே! தலைவனே திருப்தியடைந்த பின் தொண்டர்கள் குறைசொல்ல இனி ஒன்றுமில்லை! யாகம் இனிதே நிறைவேறிவிட்டது!” என்று சொல்லி
பிரம்மாவைத் தேற்றினார்.

“முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே!”

என்று ஆண்டாள் பாடிய பாசுரம், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னே யாகசாலைக்கு வந்து, அவர்களுக்கெல்லாம் பிரம்மா கப்பம் கட்ட வேண்டாதபடித் தவிர்த்து, மிடுக்கோடு நின்ற வரதராஜனைக் குறிப்பதாகவும் ரசிப்பதற்கு இடமுள்ளது. இப்படி எல்லாத் தேவர்களுக்கும் தலைவராக, அயர்வறும் அமரர்கள் அதிபதியாக, இமையோர் தலைவராக, தேவராஜனாக – திருமால் விளங்குவதாலே, ‘தேவேச:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 493-வது திருநாமம்.“தேவேசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், எடுத்த காரியம் அனைத்தும் இனிதே நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.

————-

494. தேவப்ருதே நமஹ (Devabhruthey namaha)

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதார ஸ்தலமான தேரழுந்தூரின், ஸ்தல புராணத்தில் உள்ள ஒரு சரித்திரம். (அங்குள்ள பெருமாள் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் இணைத்து ஸ்தல புராணம் இருப்பதை வேற்றுமை நோக்கில் காணாது, ஒற்றுமைநோக்கில் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.)பரமசிவனும் திருமாலும் சொக்கட்டான் விளையாட, பார்வதிதேவி நடுவராக அமர்ந்திருந்தாள். போட்டியில் ஒருநிலையில், “நான்தான் வென்றேன்!” என்று திருமால் கூறினார்.

“ஆம்! ஆம்!” என்று பார்வதி தலை ஆட்டினாள். “ஓஹோ! புகுந்த வீட்டை விடப் பிறந்த வீடுதான் உனக்கு முக்கியமோ? கணவனைவிட உன் அண்ணன்தான் உனக்கு முக்கியமோ? அவர் வென்றேன் என்று சொல்ல, நீயும் மாடு போல் தலை ஆட்டுகிறாயே! நீ மாடாகப் பூமியில் பிறப்பாய்!” என்று பார்வதியைச் சபித்தார் சிவன். (நம் வீட்டில் வரும் சண்டைகளைப் போலே சிவன்-பார்வதிக்குள் சண்டை வருமா என்று எண்ணிவிட வேண்டாம்! பூமியில் தேரழுந்தூர் திருத்தலம் உருவாவதற்காக அவர்கள் செய்யும் விளையாட்டு!)

சோழநாட்டிலுள்ள தேரழுந்தூரில் பசுவாக வந்து தோன்றினாள் பார்வதி. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று சொல்வதற்கேற்ப, பார்வதியைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தார் சிவன். அதனால் அவரும் தேரழுந்தூர் க்ஷேத்திரத்துக்கு வந்து, வேதபுரீஸ்வரர் என்ற பெயரோடு தவத்தில் ஈடுபட்டார்.நாம் விளையாடிய சொக்கட்டான் விளையாட்டால்தானே பார்வதியும் பரமசிவனும் பிரிய நேர்ந்தது. நாமே அவர்களை இணைத்து வைத்து விடுவோம் என்று முடிவெடுத்த திருமால், மாடு மேய்க்கும் கண்ணனாக ஆமருவி அப்பன் என்ற திருநாமத்தோடு தேரழுந்தூருக்கு வந்தார். மாடு வடிவில் வந்த பார்வதி தேவியை அவளது சகோதரனாகிய கண்ணன் காத்து ரக்ஷித்தார்.

கண்ணன் மாடு மேய்ப்பதைப் பார்த்த வேதங்கள், கன்றுக்குட்டிகளாக அவனை நாடி வந்துவிட்டன. கண்ணன் மேய்க்கும்போது அவனது திருக்கரத்தின் ஸ்பரிசம் பசுங்கன்றுகள் மீது படும் அல்லவா அதை விரும்பி வேதங்கள் கன்றுகளாயின.இப்படிப் பசுவையும், கன்றுகளையும் கண்ணன் மேய்த்து வருவதைச் சத்தியலோகத்தில் இருந்து பார்த்த பிரம்மா, அந்தப் பசுவையும் கன்றுகளையும் ஒரு குகைக்குள் ஒளித்து வைத்துவிட்டார். ஆமருவியப்பன் தன் திருமேனியில் இருந்தே பசுவையும் கன்றுகளையும் வெளியிட்டார்.

அதைக் கண்ட பிரம்மா தனது கர்வம் நீங்கப்பெற்று, ஆமருவியப்பனை அடிபணிந்தார்.“கண்ணா! நீதான் தேவர்களான எங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அதைப் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் அபச்சாரப் பட்டுவிட்டேனே!” என்று மன்னிப்பு கோரினார். அதன்பின் தொடர்ந்து மாடு கன்றுகளை மேய்த்தபடி சிவபெருமான் தவம் புரிந்து வந்த மரத்தின் அடிக்கு ஆமருவியப்பன் எழுந்தருளினார். அவரைப் பார்த்தவாறே, அவர்தான் திருமால் என்று பரமசிவன் புரிந்து கொண்டார்.

பசுவின் வடிவில் இருப்பவள் பார்வதி என்பதையும் புரிந்து கொண்டார். “உங்களிடம் பார்வதியை ஒப்படைக்கப் போகிறேன்!” என்று சிவனிடம் சொன்னார் ஆமருவியப்பன். சிவபெருமான், “நான் உனது ராமாவதாரத்தில் அதிகமாக ஈடுபட்டு இருப்பவன். எனவே நீ ராமன் வடிவில் வந்து பார்வதியை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்!” என்று ஆமருவியப்பனிடம் கோரினாராம். அப்படியே ஆகட்டும் என்றார் ஆமருவியப்பன். மாசிமாதம் புனர்ப்பூச நட்சத்திர நன்னாளில் சீதா லட்சுமணனோடு கூடிய ஸ்ரீராமனாகப் பரமசிவன் முன்தோன்றிய ஆமருவியப்பன், பசுவின் வடிவில் இருந்த பார்வதியைப் பழைய வடிவத்துக்கு மாற்றிப் பரமசிவனோடு இணைத்துவைத்தார். மீண்டும் பார்வதியை மணந்தபடி வேதபுரீஸ்வரராகத் தேரழுந்தூரிலே கோவில் கொண்டார் சிவபெருமான்.

ஆமருவியப்பனாகத் தேரழுந்தூரிலேயே கோவில் கொண்டார் திருமால். ஆண்டுதோறும் மாசிப் புனர்ப்பூசத்தன்று ஆமருவியப்பன் ராமனாகவும், தேரழுந்தூர் ரங்கநாதப் பெருமாள் சீதையாகவும், தேரழுந்தூர் கோவிந்தராஜப் பெருமாள் லட்சுமணனாகவும் வடிவம்கொண்டு, பசுவோடு புறப்பாடு கண்டருளி, வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சிவபெருமானிடம் பசுமாட்டைச் சேர்ப்பதாக இந்த உற்சவம்நடைபெற்று வருகிறது.

சக்தியால்தான் சிவனுக்குப் பெருமை என்று சொல்லப்படும் நிலையில், அந்தப் பார்வதியைப் பிரிந்த சிவனுக்கு அவளைப் பழையபடி மீட்டுத் தந்து, அவருக்கு அப்பெருமையைப் பெற்றுத் தந்தார் திருமால். அதுபோல், பிரம்மா போன்ற அனைத்துத் தேவர்களுக்கும் அவரவருக்குத் தேவையானவற்றைத் தந்து அவர்களைத் தாங்கிப் பிடிப்பதால், ‘தேவப்ருத்’ – தேவர்களைத் தாங்குபவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். தேரழுந்தூரில் மூலவருக்கு தேவாதிராஜன் என்றே திருநாமம்.

உற்சவர் ஆமருவியப்பன். தேவாதிராஜன் என்பதன் மற்றொரு வடிவமே தேவப்ருத் – தேவர்களுக்குத் தலைவராக இருந்து அவர்களைத் தாங்குபவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 494-வது திருநாமம்.“தேவப்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் அனைத்துப் பெருமைகளும் கிட்டும்படித் திருமால் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.

————-

495. குரவே நமஹ (Guravey namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

தன் உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்திலே அமர்த்தினார். ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் படைப்புக் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது. நாம் வேதம் வல்லவர், நம்மை விஞ்சியவர் யாரும் இலர் என்று கருதினார் பிரம்மா. “பதவி வரும்போது பணிவு வராமல் பகட்டோடு இருக்கிறாரே இவர்!” என்று கருதிய திருமால், ஓர் அசுரனை அனுப்பி வைத்து, பிரம்மாவிடம் உள்ள வேதங்களை அபகரித்து வரச்சொன்னார். அவனும் வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து அபகரித்து வந்துவிட்டான். வேதங்களை இழந்த நிலையில் பிரம்மாவால் படைப்புத் தொழிலைத்தொடர இயலவில்லை.

“அடடா! நாம் பெரியவன் என்று தவறாக நினைத்து, இறுமாந்து இருந்துவிட்டோமே! நம்மைப் படைத்தவன் ஒருவன் உள்ளானே! அந்த பகவான்தானே நமக்கு வேதங்களைத் தந்து இப்பதவியில் நம்மை அமர்த்தினான்? அவனது அருளும் அவன் தந்த வேதங்களும் இல்லாவிட்டால் நமக்கு எந்தப் பெருமையும் கிடையாதே!” என்று அப்போதுதான் உணர்ந்தார் பிரம்மா. மொத்த கர்வத்தையும் விட்டுத் திருமாலின் திருவடிகளைச் சரண் புகுந்தார். “பிரம்மதேவரே உங்களுக்குக் கொஞ்சம்பக்குவம் வர வேண்டிஉள்ளது. அந்தப் பக்குவம் வந்தால்தான் பிரம்மதேவன் என்ற பதவியால் வரும் செருக்குக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள். எனவே மனப்பக்குவம் பெறப் பூமியில் காவிரிக் கரையில் போய்த் தவம் இயற்றுங்கள்!” என்று கூறினார் திருமால்.

அதன்படி பூமிக்கு வந்தார் பிரம்மா. காவிரிக் கரையில் கும்பகோணத்தில் பிரம்மா தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவம் நிறைவடையும் தறுவாயில், மகாலட்சுமியோடு திருமால் வந்து பிரம்மாவுக்குக் காட்சி தந்தார்.“பிரம்மனே! உங்களுக்கு இப்போது நல்ல மனப்பக்குவம் வந்துவிட்டது. இனி நீங்கள் உங்கள் பணிகளைப் பணிவோடு தொடர்வீர்கள். நானே உங்களுக்கு வேதங்களை உபதேசிக்கிறேன். இந்த வேதங்கள் உங்களை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்கும். என் அருளையும் இவை உங்களுக்கு நினைவூட்டும்!” என்று சொல்லிப் பிரம்மாவுக்கு வேதங்களை மீண்டும் உபதேசித்து அவரை மீண்டும் படைப்புக் கடவுள் என்ற பதவியிலே அமர்த்தினார் திருமால்.

இவ்வாறு பிரம்மாவுக்குத் திருமால் வேதங்களை உபதேசித்த அந்த இடம்தான் இன்றும் கும்பகோணத்தில் வேதநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. வேதநாராயணனாகத் திருமால் காட்சி தருகிறார். இன்னும் பிரசித்தமாக அது பிரம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் பிரம்மாவுக்கென்று உள்ள வெகுசில கோவில்களில் இந்த பிரம்மன் கோவிலும் ஒன்றாகும். அட்சய திருதியை அன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை வைபவத்தில் முன்வரிசையில் இந்த வேதநாராயணப் பெருமாள் எழுந்தருள்வது வழக்கம்.

வேதங்களை அவர்மூலம் பெற்ற பிரம்மா, “வேதநாராயணா! முன்பு மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் என்னிடமிருந்து வேதங்களை அபகரித்துச் சென்றார்கள். அப்போது நீ குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாளாக அவதாரம் செய்து, அவர்களை அழித்து வேதங்களை எனக்கு மீட்டுத் தந்தாய். இப்போது எனது கர்வத்தின் காரணமாக நான் வேதங்களை இழந்த போதும், மீண்டும் நீயே வேதநாராயணனாக வந்து அவற்றை அடியேனுக்கு உபதேசித்து மீட்டுத் தந்துவிட்டாய். உன்னை என்சொல்லி வாழ்த்துவேன்?” என்று துதித்தார்.

“ஒரு மிகப்பெரிய வேள்வியை இங்கே செய்து உன்னை ஆராதிக்கப் போகிறேன்!” என்று சொல்லி பிரம்மா வேள்விக்கான ஏற்பாடு களைச் செய்தார். வேள்விக்கு உதவியாக ஒரு நீர்நிலை இருந்தால் நன்றாக இருக்குமே என்று பிரம்மா நினைக்க, திருமால் இங்கே ஒரு நதி உருவாகட்டும் என்று சொல்லித் தன் கதையால் நிலத்தைக் கீற, ஓர் ஆறு தோன்றியது. அரியின் சொல்லால் உருவான அந்த ஆறு அரிசொல் ஆறு என்று பெயர் பெற்றது. அதுதான் அரசலாறு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அதன்பின் அந்நீரைக் கொண்டு வேள்வி செய்து திருமாலை ஆராதித்தார் பிரம்மா.இப்படிப் பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் குருவாக இருந்து வேதங்களை உபதேசிப்பதால் ஹயக்ரீவப் பெருமாள் ‘குரு:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 495-வது திருநாமம்.“குரவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல ஞானத்தைத் திருமால் அருள்வார்.

———-

496. உத்தராய நமஹ (Uttharaaya namaha)

ஆதிகேசி என்று ஓர் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் தேவர்களைப் பலவாறுதுன்புறுத்திவந்தான். அவனால் பெருந்துயருக்கு ஆளான தேவர்கள், பிரம்மாவின் உதவியை நாடினார்கள். ஆதிகேசியை அழிக்கும் ஆற்றல் திருமால் ஒருவருக்கே உண்டு என்று சொல்லித் திருமாலின் உதவியை நாடுமாறு வழிகாட்டினார் பிரம்மா. பிரம்மா தலைமையில் அனைத்துத் தேவர்களும் திருப்பாற்கடலுக்குச் சென்றார்கள். தீராத இன்னல் தரும் ஆதிகேசியைத் தீர்த்துக் கட்டித் தம்மை ரட்சிக்குமாறு திருமாலின்திருவடிகளைப் பணிந்தார்கள். அப்போது திருமால், “தேவர்களே! என் திருவடியில் பணிந்தவர்கள் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதை அப்படியே நிறைவேற்றுபவன் நான்! அந்த அசுரனை நான் எப்படி அழிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள்! அப்படியே செய்துவிடுகிறேன்!” என்றார்.

தேவர்கள் தங்களுக்குள் ஆலோசித்துவிட்டுத் திருமாலிடம், “இறைவா! ஒவ்வோர் அசுரனும் ஏதோ ஒரு சக்தியைப் பெற்றுக் கொண்டு எங்களைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த ஆதிகேசியை வீழ்த்திவிட்டு அவன்மீதே பள்ளி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தீமை செய்ய நினைக்கும் அசுரர்கள் உனக்குக் கீழ் இருக்கும் ஆதிகேசிக்கு நிகழ்ந்ததைப் பார்த்து அஞ்சியாவது தீங்கு செய்யாதிருக்க வாய்ப்புண்டு!” என்று கோரினார்கள்.அப்படியே செய்கிறேன் என்று தேவர்களுக்கு வாக்களித்தார் திருமால். திருமால் ஆதிகேசியை எதிர்த்து மல்யுத்தம் புரிந்தார். அவனைத் தாக்கிக் கீழே தள்ளியபின் அவனுக்கு மேல் தனது ஆதிசேஷப் படுக்கையை இட்டு, ஆதிகேசியை அழித்தவன் என்பதற்குச் சான்றாக “ஆதிகேசவன்’’ என்ற திருநாமத்தோடு அவ்விடத்தில் பள்ளி கொண்டார்.

ஆதிகேசியின் மனைவியான அசுரப் பெண், கங்கை நதியின் உதவியை நாடினாள். “தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்த என் கணவனை அழித்துவிட்டு அவன்மீது திருமால் பள்ளி கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணின் மனதை மற்றொரு பெண்தானே அறிவாள்? எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று வேண்டினாள்.அதைக் கேட்ட கங்கை, தாமிரபரணி நதிக்குள்ளே நுழைந்தாள். ஆதிகேசி மீது பள்ளி கொண்டிருந்த ஆதிகேசவன் மீது மோதுவது போல் தாமிரபரணிக்குள் நுழைந்த கங்கை வந்தாள்.

திருமால், பூமிதேவியை ஒரு பார்வை பார்க்க, பூமிதேவி அப்பகுதியை மட்டும் சற்றே நிலப்பரப்புக்கு மேலே உயர்த்திவிட்டாள். வேகமாக வந்த கங்கையும் தாமிரபரணியும் அந்த உயர்ந்த நிலத்தில் மோதி அதைச் சுற்றி வட்டமாக ஓடத் தொடங்கின. மோதிய வேகத்தில் மனமாற்றம் அடைந்த காவிரியும் தாமிரபரணியும் திருமாலின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினார்கள். கங்கை, தாமிரபரணி இருவரையும் பார்த்து, “நீங்கள் எனக்கு வட்டமாக மாலை சூட்டித் தொண்டு செய்ததாக நான் அங்கீகரிக்கிறேன்!” என்று சொல்லி அருள்புரிந்தார் திருமால். ஆறு வட்டமாக ஓடியதால், அவ்விடம் வட்ட ஆறு, (வட்டாறு) என்று பெயர் பெற்றது. அதுவே ‘திருவட்டாறு’ என்ற திவ்யதேசமாக ஆனது. நம்மாழ்வார் ‘திருவாட்டாறு’ என்று இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

“அருள்பெறுவார் அடியார்தம் அடியனேர்க்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்து இனிப்பிறவி யான்வேண்டேன்
மருள் ஒழிநீ மடநெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே”

என்ற பாசுரத்தில், அடியார்கள் எப்படி விதிக்கிறார்களோ, அதாவது கட்டளை இடுகிறார்களோ, அப்படியே அருள்புரியும் பெருமாள் என்ற ஆதிகேசவப் பெருமாளைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். தேவர்கள் விரும்பிய படி ஆதிகேசியை வதைத்தமையைத் திருவுள்ளத்தில் கொண்டு இவ்வாறு ஆழ்வார் பாடியதாகப் பெரியோர்கள் ரசிப்பார்கள்.

பிரம்மாவிடமிருந்து வேதங்களை மது, கைடபர்கள் அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்துக் காத்தார் அல்லவா திருமால்? இதுபோல் தேவர்களுக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும், அந்த ஆபத்துகளில் இருந்து காப்பதால் திருமால் ‘உத்தர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உத்தர:’ என்றால் ஆபத்தில் காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 496-வது திருநாமம். “உத்தராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆபத்துகள் நேராதபடித் திருமால் காத்தருள்வார்.

————

497. கோபதயே நமஹ (Gopathaye namaha)

வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.

பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்!  இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.

சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.

இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.

பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.

பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.

இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.

இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———-

498. கோப்த்ரே நமஹ (Gopthrey namaha)

முன்னொரு சமயம் வாசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த பல முனிவர்கள் நம் தமிழகத்தில் காவிரிக் கரை ஓரமாக வசித்துவந்தார்கள். அம்முனிவர்கள் ஒன்றுகூடித் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறை என்ன என்று அறிய விரும்பினார்கள். அதற்காகப் பல முனிவர்களை அவர்கள் அண்டினார்கள். பாரததேசம் எங்கும் உள்ள பல முனிவர்களிடம் அவர்கள் சென்று பிரார்த்தித்த போதும், “திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையான ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது! அதனால் எங்களுக்குப் பூஜை முறைகள் தெரியாது!” என்று சொல்லிவிட்டார்கள்.

அதன்பின் அவர்கள் கஹோலர் என்ற முனிவரைச் சென்று பற்றினார்கள். கஹோலமுனிவர், “வேதங்களில் சொல்லப்பட்ட வேள்வி முறைகளை நான் அறிவேன். அவற்றின் மூலம் திருமாலை ஆராதித்து வருகிறேன். ஆனால் வீட்டிலோ, கோவிலிலோ, விக்கிரக வடிவில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்குப் பூஜை செய்யும் முறைகளை நான் அறியவில்லை. மேரு மலை அடிவாரத்தில் ஏகதர் என்றொரு முனிவர் உள்ளார். அவரிடம் சென்று பிரார்த்தியுங்கள்!” என்று சொன்னார்.

“யார் அந்த ஏகதர்?” என்று முனிவர்கள் கேட்க, கஹோலர், “பிரம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஏகதர், த்விதர், த்ரிதர் என்று அவர்களுக்குப் பெயர். ஏகதர் என்பவர் மூத்த மகன். த்விதரும், த்ரிதரும் உலகில் க்ஷேமமாக வாழ என்ன வழி என்பதைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். ஆனால் ஏகதரோ, திருமகளின் கேள்வனான திருமாலுக்குப் பூஜை செய்து வழிபட என்ன வழி என்று சிந்திக்கத் தொடங்கினார். நீண்ட நாட்கள் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தார் ஏகதர். திருமால், அவருக்குக் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்ற கேட்டபோது, திருமாலை ஆராதிக்கும் முறைகளையும், அவரைச் சரண் அடைந்து முக்தி அடையும் முறையையும் தனக்கு உபதேசிக்குமாறு பிரார்த்தனை செய்தார்.

திருமால், தன்னைப் பூஜிக்கும் முறையான “ஸ்ரீபாஞ்சராத்ரம்’’ என்ற ஆகமத்தின் ஒரு பகுதியான “ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதை’’ என்ற பகுதியை ஏகதருக்கு உபதேசம் செய்தார். எனவே நீங்கள் ஏகத முனிவரை நாடி, அவரிடம் இருந்து ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் அப்பகுதியை அறிந்து கொள்ளலாம்!” என்று சொன்னார்.

அதன்படி மேருமலை அடிவாரத்தில் உள்ள ஏகத முனிவரின் ஆசிரமத்துக்கு இந்த முனிவர்கள் சென்றார்கள். ஏகதரை வணங்கிப் பூஜித்தார்கள். “என்ன காரணமாக என்னைத் தேடி வந்துள்ளீர்கள்?” என்று முனிவர்களிடம் கேட்டார். “ஏகத முனிவரே! நாங்கள் திருமகளையும் திருமாலையும் பூஜிக்கும் முறையை அறிய விரும்பி வந்துள்ளோம்!” என்று முனிவர்கள் ஏகதரிடம் கூறினார்கள்.

ஏகதரும் கருணையோடு அவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் பகுதியான ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையை உபதேசம் செய்தார். அந்தப் பகுதி முழுவதும் மகாலட்சுமி திருமாலிடம் பூஜை முறைகள் குறித்துக் கேள்விகள் கேட்க, அதற்குத் திருமால் பதில் அளிப்பதாக அமைந்துள்ளது. இதை உபதேசம் செய்த ஏகதர், “முனிவர்களே! வாருங்கள்! பாரத தேசத்தின் தெற்குப் பகுதியில் காவிரிக் கரையில் உள்ள பாஸ்கர க்ஷேத்ரமான கும்பகோணத்தில் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். அவருக்குத் தொன்றுதொட்டு இந்த முறையில்தான் பூஜை நடந்துவந்தது. இடையில் இது வழக்கொழிந்து போய்விட்டது.

நாம் மீண்டும் அவரை இதே ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையின் அடிப்படையில் ஆராதிக்கலாம்!” என்று முனிவர்களை அழைத்தார். மேரு மலையில் இருந்து மீண்டும் காவிரிக் கரைக்கு ஏகதரோடு வந்து அம்முனிவர்கள் ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையில் காட்டப்பட்ட முறையின்படி, ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாளையும், கோமளவல்லித் தாயாரையும் ஆராதித்தார்கள்.

ஸ்ரீசாரங்கபாணி திருக்கோவிலின் சந்நதித் தெருவிலேயே தமது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு ஏகதர் தங்கிவிட்டார். இன்றும் அந்த ஆசிரமத்தைக் கும்பகோணத்தில் காணலாம். ஆக, உலகில் வேதங்களோ, வேதாந்தமோ, ஆகம சாஸ்திரங்களோ, ஆழ்வார் பாசுரங்களோ அடிக்கடி வழக்கொழிந்து போவதுண்டு. ஆனாலும் இறைவன் அவை அப்படியே அழிந்துபோகும்படி விட்டுவிடுவதில்லை. மறைந்துபோன, மறந்துபோன அந்த வித்யைகளைப் பலவித முறைகளைக் கையாண்டு திருமாலே மீட்டுத் தந்துவிடுகிறார்.

பூஜை முறையான ஸ்ரீபாஞ்சராத்திரம் வழக்கொழிந்துபோன போது, ஏகதர் மூலம் மீட்டார் அல்லவா..? ஆழ்வார்களின் பாசுரங்கள் வழக்கொழிந்து போன போது, நாதமுனிகள் மூலம் மீட்டார் அல்லவா..?அதுபோலத்தான் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் அசுரர்கள் வேதங்களை அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்து வேதங்களை மீட்டுத் தந்தார் திருமால்.

அதனால்தான் கோப்தா – வித்யைகள் அழிந்துபோகாமல் காப்பவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 498-வது திருநாமம். “கோப்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மறதி இல்லாத நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

499. ஞான கம்யாய நமஹ (Gnaana gamyaaya namaha)

1268-ம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், திருமலையப்பனின் மணியின் அம்சமாகக் காஞ்சிபுரத்தில் அவதரித்தவர் சுவாமி வேதாந்த தேசிகன். அவரின் இயற்பெயர் வேங்கடநாதன் என்பது. தேசிகனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவரது தாய் மாமாவான அப்புள்ளார் என்பவர் தன் மருமகனைப் பார்ப்பதற்காக அவரது இல்லத்துக்கு வந்திருந்தார். ஐந்து வயது தேசிகனைக் கொஞ்சி விட்டுக் காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் திருக்கோவிலுக்குப் புறப்பட்டார் அப்புள்ளார்.

“மாமா! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் தேசிகன். “குழந்தாய்! அத்திகிரி வரதர் சந்நதியில் நடாதூர் அம்மாள் என்ற மகான் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை விளக்கி வருகிறார். அவரது விளக்கவுரையைக் கேட்கச் செல்கிறேன்!” என்றார் அப்புள்ளார்.“நானும் வருவேன்!” என்று அடம்பிடித்தார் தேசிகன். “ஐந்து வயது குழந்தையான உனக்கு ஸ்ரீபாஷ்யம் புரியாது!” என்றார் அப்புள்ளார். ஆனால், தேசிகன் வந்தே தீருவேன் என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் தேசிகனையும் தம்மோடு வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார்.

நடாதூர் அம்மாள், ஸ்ரீபாஷ்ய விளக்கங்களை வழங்கிக்கொண்டிருக்க, நடுவே ஐந்து வயது பாலதேசிகனோடு அப்புள்ளார் நுழையவே, தேசிகன் முகத்தில் இருக்கும் பொலிவைப் பார்த்து அங்கிருந்தோர் அத்தனை பேரும் மயங்கி விட்டார்கள். உரையாற்றிக் கொண்டிருந்த நடாதூர் அம்மாளும், தான் விட்ட இடத்தை மறந்துவிட்டார், கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யர்களும் மறந்துவிட்டார்கள்.

எல்லாரும், பிரமிப்புடன் தேசிகனையும் அப்புள்ளாரையுமே பார்த்துக்கொண்டிருக்க, “ஏன் மாமா எல்லாரும் விழிக்கிறார்கள்?” என்று அப்புள்ளாரிடம் கேட்டார் தேசிகன். “சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நடுவில் போனால் இப்படித் தான் கவனம் சிதறும். நாம் நடுவில் வந்துவிட்டோம் அல்லவா? அதனால் எங்கே நிறுத்தினோம் என்று தெரியாமல் விழிக்கிறார்கள்! தவறு நம் மீதுதான்!” என்றார் அப்புள்ளார்.

தேசிகன் சிரித்துக்கொண்டே, “இதுதானா பிரச்னை? படஇ பராஸர ஸத்தம் என்ற இடத்தில் நடாதூர் அம்மாள் நிறுத்திவிட்டார்கள்.
மேற்கொண்டு சொல்லச் சொல்லுங்கள், கேட்போம்!” என்றார். ஐந்து வயது குழந்தையின் இந்த ஞானத்தைப் பார்த்து வியந்த நடாதூர் அம்மாள் தேசிகனை அழைத்துத் தம் மடியில் அமர்த்தி, “ப்ரதிஷ்டாபித வேதாந்த: ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயாஸ் த்ரைவித்ய மான்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜனம்” என்று வாழ்த்தினார். நீ வேத நெறியை நன்கு நிலைநாட்டி, சான்றோர்களால் கொண்டாடப் படுபவனாக, மங்கலங்கள் எல்லாம் நிறையப் பெற்றவனாக விளங்குவாய் என்பது இந்த சுலோகத்தின் கருத்து.

இப்படி வாழ்த்தியபின் அப்புள்ளாரை அழைத்த நடாதூர் அம்மாள், “நான் உங்களுக்கு உபதேசித்த எல்லா சாஸ்திரங்களையும் உரிய காலத்தில் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்! குறிப்பாக நான் உபதேசித்த கருட மந்திரத்தையும் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறினார். அதன்படி அப்புள்ளாரும் உரிய காலத்தில் தேசிகனுக்கு எல்லா சாஸ்திரங்களையும் உபதேசிக்க, 20 வயதுக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக ஆகிவிட்டார் தேசிகன். அப்புள்ளார் உபதேசித்த கருட மந்திரத்தை நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டு, கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஔஷதகிரி மலையில் அமர்ந்து, கருட மந்திரத்தை ஜபித்து கருடனைத் தியானித்தார் தேசிகன்.

கருடன் அவருக்குக் காட்சி தந்து, ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த ஹயக்ரீவ மந்திரத்தை தேசிகன் ஜபிக்க, ஹயக்ரீவர் தேசிகனுக்குத் தரிசனம் தந்து, தனது திருவாய் அமுதை தேசிகனுக்கு அருளினார். அந்த அருளால் மிகச்சிறந்த வாக்கு வன்மை பெற்று, கவிபாடுவதிலும், தர்க்கத்திலும் ஒப்பற்றவராக விளங்கினார் தேசிகன். கவிதார்க்கி சிம்மம் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்றும் விருதுகள் பெற்றார்.

தேசிகன், ஹயக்ரீவரின் தரிசனத்தையும்அருளையும் பெற்றதற்கு என்ன காரணம்? முதலில் அவர் பெற்ற நடாதூர் அம்மாள், அப்புள்ளார் போன்ற ஆசார்யர்களின் திருவருள். அதைத் தொடர்ந்து அவர் செய்த கருட மந்திரஜபமும், ஹயக்ரீவ மந்திரஜபமும். இப்படி குருவின் அருளோடு இறைவனை முறைப்படி தியானிப்பதற்குப் பரவித்யை என்றும் ஞானம் என்றும் பெயர்.

அந்தப் பரவித்யையாகிய ஞானத்தால் அறியப்படும் ஹயக்ரீவருக்கு ‘ஞானகம்ய:’ என்று திருநாமம். ‘ஞானகம்ய:’ என்றால் ஞானத்தால் அறியப்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 499-வது திருநாமம்.“ஞானகம்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

500. புராதனாய நமஹ (Puraathanaaya namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்) –

ஓர் ஊரிலே ஒரு பெரிய அமுதக் கடல் இருந்ததாம். விவசாயம் செழித்துப் பயிர்கள் விளைய வேண்டும் என்று அக்கடல் ஆசைப்பட்டது. ஆனால் கடல்நீர் நேராக வயலுக்குள் வந்தால் வயல் தாங்குமா அதனால் அக்கடல் ஒரு மேகத்தை அழைத்தது. என்னிடமிருந்து தண்ணீரை மொண்டு சென்று மழையாகப் பொழிவாய் என்றது.மேகம் அமுதை மொண்டு எடுத்துச் சென்று மழைபொழியப் பார்த்தது. ஆனால் பெரு மழையாக நேரே பொழிந்தால், பெரு வெள்ளம் ஆகி விடுமே என்று கருதிய மேகம், முதலில் ஒரு மலை உச்சியின் மேல் மழையைப் பொழிந்தது. அமுத மழையை உள்வாங்கிக் கொண்ட மலை, அதை இரண்டு அருவிகளாகப் பிரித்து விட்டது.

அவ்விரண்டு நீர்வீழ்ச்சிகளும் இணையவே ஒரு பெரும் காட்டாறு உருவானது. அது ஐந்து கிளைகளாகப் பிரிந்தது. அவை ஓர் ஏரியில் போய் இணைந்தன. அந்த ஏரியில் எழுபத்து நான்கு மடுக்களை அமைத்துத் தண்ணீரை நீர்ப்பாசனத்துக்காக வயல்நோக்கித் திருப்பினார்கள். அதன் விளைவாக விவசாயம் நன்றாகச் செழித்தது.அந்த அமுதக் கடல் வேறு யாரும் அல்லர், சாட்சாத் திருமால்தான். ஜீவாத்மாக்கள்தான் நெற்பயிர்கள்.

நெற்கதிர்கள் ஓங்கி வளர்வது போல் நம் உள்ளத்தில் சரணாகதி நிஷ்டை ஓங்கி வளர வேண்டும் என்று அமுதக் கடலாகிய திருமால் விரும்பினார். ஆனால் கடலாகிய அவர் நேரே பாய்ந்தால், அவ்வளவு அருளை நம்மால் தாங்க முடியாதல்லவா -அதனால் திருமால் என்னும் அமுதக் கடல், நம்மாழ்வார் என்னும் மேகத்தை அழைத்து அவரை மழையாகப் பொழியச் சொன்னார். நம்மாழ்வார் திருமால் அருளிய அந்த உபதேசத்தையே திருவாய்மொழி என்னும் அமுத மழையாக நாதமுனிகள் என்னும் மலைக்குமேல் பொழிந்தார்.

நாதமுனிகள் என்ற மலை, உய்யக்கொண்டார் என்றும் மணக்கால்நம்பி என்றும் இரண்டு அருவிகளாக அவ்வுபதேச மழை பாயும்படிச் செய்தார். அவ்விரண்டு அருவிகளும் சேர்ந்து ஆளவந்தார் என்னும் காட்டாறாக ஆயின. அக்காட்டாறு பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் என்னும் ஐந்து கிளைகளாகப் பிரிந்தது.

ஐந்து கிளைகளும் ராமானுஜர் என்னும் ஏரியில் வந்து இணைந்தன. கடல்நீரோ, மழைவெள்ளமோ, அருவியோ, காட்டாறோ விவசாயத்துக்குப் பயன்படாது. ஏரி நீரே பயன்படும். அவ்வாறு ராமானுஜர் என்னும் ஏரியின் மூலம் தான் உலகில் அனைத்து மக்களுக்கும் எல்லா நல் அர்த்தங்களும் சென்று சேரும்.எனவேதான் ராமானுஜர் என்னும் ஏரியிலிருந்து எழுபத்து நான்கு மடுக்களைப் போலே எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் ஆசார்யர்கள் உருவானார்கள். ராமானுஜர் அவர்கள் மூலம் சிஷ்யர்களுக்கு அனைத்து வித உபதேசங்களும் சென்றுசேர ஏற்பாடு செய்தார். குலம், பாலினம், கல்வி, செல்வம் உள்ளிட்ட எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் ஆசையோடு வருவோர் அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கொள்கையை வலியுறுத்தினார் ராமானுஜர்.

அதன் விளைவு, உலகில் சரணாகதர்கள் என்னும் பயிர்கள் நன்றாக விளைந்தார்கள். நம் போன்ற பாமரர் வரை அனைவருக்கும் ஞானம் என்பது வந்து சேர்ந்தது. அந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளின் வழியில் வந்த மகான்கள் இன்றளவும் எழுந்தருளி இருந்து சிஷ்யர்களைத் திருத்திப் பணிகொண்டு ராமானுஜர் திருவடிகளில் சேர்த்து வருகிறார்கள்.அவர்கள் மூலம் நாம் பெறக்கூடிய அந்த உபதேசம் என்னும் அமுதம் உண்மையில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், திருமால் என்னும் அமுதக் கடலிலிருந்தே வந்தது. தினகரன் அருள் தரும் ஆன்மீகம் இதழ்மூலம் நாம் அறியும் இந்தப் பொருள்களும் கூட உண்மையில் அந்த அமுதக் கடலில் இருந்து வந்தவையே.

இப்படி எல்லோருக்கும் புராதனமான, பழமையான குருவாக இருந்து, நாம் பெறும் அனைத்து உபதேசங்களுக்கும் மூலக் காரணமாக இருக்கிறார் . அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 500வது திருநாமம்.
புராதனாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தையும் குரு பக்தியையும் திருமால் தந்தருள்வார்.

—————–

502. போக்த்ரே நமஹ (Bhokthrey namaha)

தமது பரமாசார்யரான ஆளவந்தாரைத் தரிசிக்கப் பெரிய நம்பிகளோடு திருவரங்கத்துக்கு விரைந்தார் ராமானுஜர். ஆனால் ராமானுஜர் வருவதற்குள் ஆளவந்தார் பரம பதத்தை அடைந்துவிட்டார். ஆசார்யனைப் பிரிந்து துயரால் பலவாறு வாடி வருந்தினார் ராமானுஜர். பெரிய நம்பிகள் உள்ளிட்டோர் ஒருவாறு அவரைத் தேற்றினார்கள்.அதன்பின் ஆளவந்தாரின் சரமத் திருமேனியைத் திருவடி முதல் திருமுடி வரை உற்று நோக்கினார் ராமானுஜர். ஆளவந்தாரின் வலக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பதைக் கண்டார். அதற்கு முன்பு அப்படி மடங்கி இருந்ததில்லை என்று சுற்றி இருந்தவர்களும் வியந்து கூறினார்கள். அப்படியானால் ஆளவந்தாருக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் உண்டா என்று விசாரித்தார் ராமானுஜர்.

1. வேத வியாசர், பராசர முனிவர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட இரண்டு ஆசார்யர்களை உருவாக்க வேண்டும்.

2. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரையை உருவாக்க வேண்டும்.

3. போதாயன முனிவர் இயற்றிய விருத்தி நூலின் அடிப்படையில் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுத வேண்டும்.

ஆகிய இம்மூன்றுமே ஆளவந்தாரின் ஆசைகள் என்று சிஷ்யர்கள் தெரிவித்தார்கள். இந்த வரிசையை மாற்றியும் சொல்வதுண்டு, எப்படிக் கொண்டாலும் மூன்று ஆசைகளில் மாற்றமில்லை. இம்மூன்றையும் நிறைவேற்றியே தீருவேன் என்று ராமானுஜர் சபதம் செய்தவாறே மடங்கியிருந்த விரல்கள் மீண்டும் நீண்டுவிட்டன. கூரத்தாழ்வானின் இரு மகன்களுக்குப் பராசர பட்டர், வேதவியாச பட்டர் என்று பெயர்சூட்டி முதல் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் மூலம் ஆறாயிரப்படி என்ற திருவாய்மொழி விளக்கவுரையை உருவாக்கி இரண்டாம் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர். மூன்றாவது ஆசையின்படி பிரம்ம சூத்திர விளக்கவுரை எழுத, முதல்நூலான போதாயன விருத்தி என்ற நூலைத் தேடிக் காஷ்மீர் சாரதா பீடத்துக்குத் தம் சீடர் கூரத்தாழ்வானுடன் சென்றார் ராமானுஜர்.

அங்குள்ள பண்டிதர்கள் அவ்வளவு எளிதில் அந்த நூலைத் தருவதாக இல்லை. அவர்கள் அத்தனை பேரோடும் வாதம் செய்து அவர்களை வென்று போதாயன விருத்தி நூலைப் பெற்றார் ராமானுஜர்.அதைத் தமது இருப்பிடத்துக்கு எடுத்து வந்து நான்கு அத்தியாயங்களுள் ஓர் அத்தியாயத்தை மட்டும் முழுமையாகப் படித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார் ராமானுஜர். மறுநாள் காலை காஷ்மீர் பண்டிதர்கள் வந்து இனி நூல் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பறித்துச் சென்று விட்டார்கள். அடடா இன்னும் மூன்று அத்தியாயங்களை நாம் படிக்கவில்லையே என்று ராமானுஜர் வருந்தியபோது, சீடர் கூரத்தாழ்வான், குருவே அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு செயல் செய்துவிட்டேன். இரவு நீங்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் மொத்த போதாயன விருத்தியையும் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். அவற்றை இங்கே ஒப்பிக்கட்டுமா அல்லது இரு காவிரிக்கு மத்தியில் திருவரங்கத்தில் வந்து ஒப்பிக்கட்டுமா என்று கேட்டார்.ஆஹா இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ என்று மனம் மகிழ்ந்த ராமானுஜர் கூரத்தாழ்வானோடு திருவரங்கம் திரும்பினார். அவரது உதவியோடு பிரம்ம சூத்திர விளக்கவுரையை எழுதி நிறைவு செய்தார்.

பின்னாளில் ராமானுஜர் காஷ்மீர் யாத்திரை சென்றபோது, காஷ்மீர் சாரதா பீடத்தில் உள்ள சரஸ்வதி தேவி ராமானுஜரின் பிரம்ம சூத்திர விளக்கவுரையைப் பார்த்துவிட்டு, ஆஹா எனக்குக் குருவாய் விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளே இதில் தெரிகிறாரே என்று சொல்லி வியந்து தான் பூஜிக்கும் ஹயக்ரீவர் திருவடிகளில் அந்த நூலை அர்ப்பணித்தார்.

அதன்பின் அதை முழுமையாகப் படித்து விட்டு, இனி இது ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று கொண்டாடினார் சரஸ்வதி. தான் அதுவரை பூஜித்து வந்த ஹயக்ரீவ விக்கிரகத்தை ராமானுஜருக்கு அளித்தார் சரஸ்வதி. அதன்பின் ராமானுஜரின் அந்நூலுக்கு ஸ்ரீபாஷ்யம் என்றும், ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யகாரர் என்றும் பெயர் ஏற்பட்டது.வேதங்களை வழங்கிய பிரம்மாவுக்கும் கல்விக்குத் தலைவியான சரஸ்வதிக்கும் என அத்தனை பேருக்கும் குருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். எனவேதான் தேவர்கள் எந்த ஒரு பொருளைத் தாங்கள் பெற்றாலும் தங்களுக்கெல்லாம் குருவான ஹயக்ரீவருக்கு முதலில் அதை அர்ப்பணித்துவிட்டு அதன்பின் தான் தாங்கள் எடுத்துக் கொள்வார்களாம்.

எனவே தேவர்களுள் யாருக்கு எதை அர்ப்பணித்தாலும், அது ஹயக்ரீவருக்கு முதலில் போய்ச் சேர்கிறது. அவர் முதலில் அனுபவிக்கிறார். அவரது பிரசாதமாகவே தேவர்கள் அதன்பின் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் நாம் சமர்ப்பிக்கும் அனைத்தையும் அனுபவித்து மகிழ்பவர் – போக்தா என்று ஹயக்ரீவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 502-வது திருநாமம்.போக்த்ரே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குறையாத ஞானம் நிறைந்து பாரோர் புகழ விளங்கும்படி ஹயக்ரீவர் அருள்புரிவார்.
———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —மாயனை மன்னு வடமதுரை மைந்தனை —

December 20, 2022

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——–

அவதாரிகை –

பெண் பிள்ளைகளில் ஒருத்தி –
நாம் இப்படியே கனக்கப் பாரித்துக் கொண்டி இழியா நின்றோம் –
நமக்குத் தான் இது தலைக் கட்டுகைக்கு விஸ்வாசம் என் –
அநாதி கால சஞ்சிதமான கர்மங்கள் இதுக்கு விரோதத்தைப் பண்ணாதோ
பஹூ விக்நாநி அன்றோ -என்று பிரச்சனம் பண்ண-

அவர்களிலே வேதாந்த ஜ்ஞானம் உடையவள் ஒருத்தி –
நாம் நம்முடைய விரோதிகளைப் போக்கிக் கொண்டு வந்து இதிலே இழிகை என்று ஒரு பொருள் இல்லை –
நமக்கு அடைத்த பகவத் அனுபவத்தைப் பண்ணா நின்றால்-
சேர்பால் போக ரூபமாக பருகுமவனுக்கு தன்னடையே பித்தம் போமா போலே-
இவை தன்னடையே விட்டு ஓடிப் போம்-
ஆன பின்பு இனி அயோக்யதையைப் பார்த்து அகல வேண்டா -என்கிறாள்-

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை- தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
செப்பு –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –என்கிறாள் .

முதல் பாட்டிலே -நாராயணனே -என்று உபய விபூதி யோகத்தை சொல்லிற்று –
(கார் மேனி செங்கண் -நித்ய விபூதி கதிர் மதியம் போல் முகத்தான் லீலா விபூதி )

அநந்தரம் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -என்று
அவதாரார்த்தமாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைச் சொல்லிற்று –

அநந்தரம் இந்திரன் குறை தீர ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து –
ஒரு நாடாக வாசி வையாதே திருவடிகளைக் கொண்டு தீண்டின படியைச் சொல்லிற்று –

அநந்தரம் யோக்யராய் ஆச்சார பிரதானரான வசிஷ்டாதிகள் நியமிக்கும் படி
சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்து வாசி வைத்து உடம்பு கொடுத்த படி சொல்லிற்று –

இப் பாட்டில் வரையாதே எல்லார்க்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஒரு ஊருக்காக தன்னை முற்றூட்டாக கொடுத்த படி சொல்லுகிறது –

நோற்கின்ற பெண்களில் ஒருத்தி நாம் அனுபவிக்க இலை யகலப் படா நின்றோம் –
ஸ்ரேயாம்சி பஹு விக்நாநி என்று பெரியவர்களுக்கும் ஸ்ரேயஸ்ஸூக்கு விக்நம் உண்டாம் என்று சொல்லிற்று

பெருமாள் திரு அபிஷேகத்துக்கு ஸம்ப்ராந்தகனான தசரதன் பாரிக்கிறான்-
ராஜரிஷியை ப்ரஹ்ம ரிஷியாக்கிய வசிஷ்டன் முஹூர்த்த விதாநம் பண்ணுகிறான் –
ராமோ விக்ரஹவான் தர்ம -என்று பாக்யாதிகரான பெருமாள் முடி சூட்டுகிறார் –
சக பத்ந்யா விசாலாட்ஷயா நாராயணம் உபாகமத் -என்று
பெருமாள் பிராட்டியாரோடே கூட பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்கிறது –
இச்சாம என்று நாடு அடங்க அபிஷேக மங்களத்தை பிரார்த்தித்து இதுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது –
இப்படி இருக்க இதுக்கும் அன்றோ விக்நம் வந்தது –

நாம் அநாதி காலம் பண்ணின பாபம் கிடக்க இது கூடுமோ என்று கேட்க —

நாம் அவனுடைய அனுபவத்தில் இழியவே-
உத்தர பூர்வாகங்களுக்கு
அஸ்லேஷ
விநாசம் உண்டு என்று பரிஹரிக்கிறார்கள் –

ஈஸ்வரன் தான் சங்கல்ப்பித்தது குலைந்தாலும்
ததீயர் சங்கல்பம் தன்னை
தன்னை அழிய மாறியும் தலைக் கட்டிக் கொடுக்கும் –

அவர் தாமும் முடி தவிர்ந்து –
மஹா ராஜர்க்கும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் முடி சூட்டுக்கைக்கு இறே –

அர்ஜுனன் ஜெயத்ரனை அஸ்தமிக்கைக்கு முன்னே கொல்லக் கடவேன் -என்று சங்கல்ப்பிக்க-
ஆயுதம் எடேன் என்றவன் ஆயுதம் எடுத்தும் –
பொய் சொல்லியும் –
பகலை இரவாக்கியும் –
அர்ஜுனன் சங்கல்பத்தை இறே தலைக் கட்டிக் கொடுத்தது –

பற்றப் புகுகிற விஷயத்தினுடைய நன்மை ஏது –
பற்றப் புகுகிற நாம் எவ்வளவிலோம் –
பற்றுகையாவது தான் ஏது என்று
அயோக்யதா அநு சந்தானம் பண்ண

நோவு மிக்கதனையும் நாலைந்து குடி நீர் எழக் குடிக்குமா போலே
நாம் திரு நாம சங்கீர்த்தனத்திலே அதிகரிக்கவே இதுக்கு
விரோதி கர்மங்கள் அடைய நசிக்கும் என்கிறார்கள் –

மாயனைத் தாமோதரனைச் செப்பு –
1-மாயனைச் செப்பு –
2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு
3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு
4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு
5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு
6-தாமோதரனைச் செப்பு
குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –

இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

முதல் பாட்டில் –
பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று
சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்து —

இரண்டாம் பாட்டில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய்
குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்-
கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று

மூன்றாம் பாட்டில் –
பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

நாலாம் பாட்டில்
தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

ஐந்தாம் பாட்டில்
இப்படியே பகவத் அனுபவத்தில் இழிந்தவருக்கு வரும் அனுபவ விரோதிகளை
அவ் வநுபவம் தானே நிரோதிக்கும் என்னும் இடம் சொல்லிற்று-

ஆக-இப்படி கீழ் ஐஞ்சு பாட்டாலே –
பிராப்யமான கிருஷ்ண அனுபவத்துக்கு-ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லிற்று-

முதல் பாட்டில் பிராப்ய ஸ்வரூபத்தையும் பிராபக ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும்-சங்க்ரஹேன அருளிச் செய்து
இரண்டாம்பாட்டில் -அவ்வதிகாரிக்கு சம்பாவிதமான ஸ்வரூப தர்மங்களை அருளிச் செய்து மூன்றாம் பாட்டில் -அவ்வதிகாரிகள் அனுஷ்டானத்தாலே அவர்கள் இருக்கும் நாட்டில் பிறக்கும் சம்ருத்தியைச் சொல்லி –
நாலாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பகவத் அனுகூலரானவர்கள் கிஞ்சித் கரிக்கும் படியைச் சொல்லி-
அஞ்சாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பூர்வாக உத்தராகங்கள்-சித்தோ உபாய பலத்தாலே நெருப்பில் இட்ட பஞ்சு போலே தன்னடையே நசித்துப் போம்படியைச் சொல்லிற்று-

————————–

மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்
நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்
ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்
அடி பாட்டு சொல்கிறது

ஸ்ரேயாம் சிபஹூவிக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரஸ் லேக்ஷவிநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –

———–

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

வியாக்யானம்-
மாயனை-
பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு
தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து
அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே -மாயன் -என்கிறது –

கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே
பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே
எத்திறம் -என்கிறார்கள் –

மாயனை –
ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது-
ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே
ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-

அன்றிக்கே
நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்-
அவதரித்தான் என்று-
அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து-
அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு –
எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –

ஜாதோசி-
தேவகி வயிற்றில் பன்னிரண்டு மாசம் குடி இருந்து-பிறந்த பிள்ளைத் தனத்தில்
குறைவறப் பிறந்தவனுக்கும் இல்லை செய்ய ஒண்ணாத படி-மூதலித்து கொடுக்கலாய் இருக்கை-
ஆக இப்படி இருக்கிறவன் ஆர் என்னில் –
ஒரு காலத்திலும் கர்ம ஸ்பர்சம் இல்லாத நித்ய ஸூரி பரிஷன-நிர்வாஹகன் ஆனவன் –
அயர்வறும் அமரரர்கள் அதி பதி என்கை-

அது அறிந்த படி என் என்னில்-
பரமபத நிலையனுமுமாய்-
ஸூரி நிர்வாஹகமுமான வஸ்துவுக்கு அசாதாராணமான-சிஹ்னமான ஆழ்வார்களோடே அவதரிக்கையாலே –

மாயனை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –
உபய விபூதி உக்தனாய் –
ஸ்ரீ யபதியாய்
ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

யாதோ வாசோ நிவர்த்தந்தே–
யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்–
பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும்
வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் –
இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

(மலக்கு நாவுடையேர்க்கு மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -என்று
சொல்லிக் கொள்பவர்கள் அன்றோ-அவாக்ய அநாதரனாக இருப்பவனை தென்னா தென்னா என்னப் பண்ணுவார்கள் அன்றோ )

வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்று இவ் விடத்திலும் அவ் விடம் தனக்கு நிலமாய் இருக்கிறது என்னும் இடத்தைத் தானே அருளிச் செய்தாள் இறே

தோணி என்றது –
தன்னுடைய அபி நிவேசத்துக்கு ஒரு தோணி ஸ்தாநீயனாய் ஸ்ரீ வைகுண்ட நாதன் இருந்தபடி –

ஞானம் விசதம் ஆனால்-
அவ்விடம் அணித்தாய் –
இவ்விடம் தூரமாய் இருக்குமே –
உன் பேர் அருளால் இக்கரை ஏறி என்றார் இறே தமப்பனாரும் –

அவன் அபிமானத்திலே கிடக்கும் பேரே அங்குள்ளார் –
மனை அடைவே ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் அவர்கள் இறே இங்குள்ளார் –

மாயனை –
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவித்து -எத்திறம் -என்ற நம்மாழ்வாரைப் போலே
அங்குத்தை குணத்தை அனுசந்தித்து -எத்திறம் -என்கிறாள் –
இங்கு ஒரு ஊராக உடம்பு கொடுத்தமையைச் சொல்ல நினையா –
ஒரு நாட்டுக்காக உடம்பு கொடுத்தமையைச் சொல்லுகிறாள் –

(அங்கே இருந்து இங்கு இறங்க வந்த குணம் –
நதி மூலம் ரிஷி மூலம் -திரு நாட்டுக்காக -அங்கு -கோகுலத்துக்காக இங்கு
அவர்களுக்கும் எட்டாத மேன்மை உண்டே -ஆகவே அங்கும் ஸுலப்யம் உண்டே )

இங்குள்ளாருக்கு தன்னை அமைத்துக் கொடுக்குமா போலே காணும்
அங்குள்ளார்க்குத் தன்னை அமைத்துக் கொடுக்கும் படி –

அவனுடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தைப் பார்த்தால்
இங்குள்ளாரோடு அங்குள்ளோரோடு வாசி இல்லை இறே
இவ் வெளிமைக்கு அடியான இடம் இறே இவ்விடம் –
ஒருத்தி தாம்பாலே பந்தித்த படியை சொல்ல நினையா
சதா பஸ்யந்தி -என்று ஒரு நாடாக த்ருஷ்டிகளாலே பந்திக்கும் படியைச் சொல்லுகிறது

மாயனை
அப்படி பெரிய ஸர்வேஸ்வரன் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
இடையர்களுக்கும் பசுக்களுக்கும் தன்னை அணையலாம் படி நியமித்து
நவ நீத ஸுர்ய நகர ஷோபாதிகளால் உண்டான ஆச்சர்யத்தை நினைத்து
எத்திறம் என்கிறது ஆகவுமாம் –
சூட்டு நன் மாலைகள் இத்யாதி –

(சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே -திரு விருத்தம்–21-
அங்கு உள்ள நிலைக்கும் இங்கு கூத்து அடித்ததுக்கும் சரியான பாசுரம் அன்றோ இது
மாயையினால் அங்கு நம்மாழ்வார் -இங்கு மாயனை -ஆண்டாள்
ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே -திருச்சந்த விருத்தம் (41)
எல்லா தசைகளிலும் மாயம் உண்டே )

மாயனை -விஸ்ருங்கல ஜ்ஞாநிகளான நித்ய ஸூரிகளாலும்-கறை காண ஒண்ணாத பரத்வத்தை உடையவனை –

—————

மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
முன்பு சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் நெடும் காலம் தபஸு-பண்ணி-
சத்ருக்ன ஆழ்வான் வன்னிய மறுத்து படை வீடு செய்து-
சர்வேஸ்வரன் எப்போதும் அவதரித்து போருவதொரு தேசம்-

மல்லை  மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இறே –

மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – 6-8-10-நாலாயி:1527/1 –சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை  –இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

மல்லை மூதூர் வடமதுரை ––9-1-6-நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்-ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்- ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் –மூதூர் -என்கிறார் –ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –

வட மதுரை-
நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே-
பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் –
பரம பதம் கலவிருக்கை என்னும்படி-பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை –
விரோதி நிரசனத்துக்கும் தானே யாகை-
பிராப்யமும் தானே யாகை-

இத்தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை –
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு-அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –

அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே-
அஜஹத் ஸ்வபாவனாய் கொண்டு-நித்யனானவன்-
ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு

மன்னு வட மதுரை மைந்தனை –
சதைக ரூப ரூபாய என்கிறபடியே –
அங்கு ஏக ரூபனாய் நின்று உடம்பு கொடுத்த படியைச் சொல்லிற்று
இங்கு ப்ரவாஹ ரூபேண உடம்பு கொடுக்கும் படி சொல்லுகிறது –

மன்னு வட மதுரை –
ஆனை படும் ஆகரம் போலே அவதாரம் மாறாத வூர் –
சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாமனனாய் தபஸ்ஸூ பண்ணி வர்த்தித்ததும்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் வன்னியம் அறுத்து தனக்கு படைவீடாகப் பெற்று நெடு நாள் இருந்து ராஜ்ஜியம் பண்ணியும்
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும் –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –

வடமதுரை –
மல்லை மூதூர் வடமதுரை (9-10-6 )என்று நம்மாழ்வார் ஈடுபட்ட தேசம் இறே –
அப்படி இறே மஹரிஷிகள் ஈடுபட்டது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

மதுரா நாம –
பரம பதத்திலும் காட்டில் இவ்வூர் பிரசித்தம் போலே –
கலங்கா பெரு  நகரம் ஆகையால் கலங்காது இருக்கிறது அங்கு –
கலங்கும் தேசத்திலே கலங்காதே இருக்கிறது இங்கு –

நகரீ -விட்டுப் போந்த இடமோ -பிறந்து படைத்து விரும்பின விடமோ படை வீடாவது –
புண்யா -அபிமத லாபத்தை யுண்டாக்க வற்றாய் இருக்கை-அவனைப் பெறுகைக்கு உபாயமும் தானே –
பாப ஹரீ-அப் பேற்றுக்கு பிரதிபந்தக நிரசனமும் பண்ண வற்றாய் இருக்கை –
சுபா -ஒன்றைப் போக்கவும் ஒன்றைத் தரவும் வேண்டா -பரம பதம் போலே ப்ராப்யமும் தானேயாய் இருக்கும் –
யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத -யாதொன்றிலே ஜகந்நாதன் ஆனவன் ஜாதனானான் –
சம்சாரிகளுடைய குறை தீர்க்கைக்காக நியாந்தாவானவன் நியாம்ய கோடியிலே பிறந்தான் –(செங்கோலும் சிறு கோலும் )

சாஷாத் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும் –
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாயா -என்னும் படியே
மாயை -என்று ஞானமாய் -தன்னுடைய இச்சையால் அவதரித்தான் என்கிறது
விஷ்ணு -வியாபக வஸ்து -வியாப்பிய ஏக தேசத்திலே வந்து பிறந்தான் என்கை
எங்கும் உளனானவன் ஓர் இடத்திலே தோன்றின படி
சனாதன -என்றும் உளனானவன் ஒரு நாளிலே தோன்றின படி –

வட பத்ர ஸாயி -வட ஆல மரம் போல் ஸ்திரமாக மன்னி என்றுமாம்

————

மைந்தனை
மிடுக்கனை-
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருட் கண் வந்த எந்தை -என்று-
மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழல வந்து-திரு அவதரித்த படி -பிள்ளை -என்றுமாம்-

திரு அவதரித்து எனக்கு உபகரித்த பின்பு
இளகிப் பதித்த படியாததால் -ராஜா என்றுமாம் –
தன் அழகைக் காட்டி-இருந்ததே குடியாக தன் வசம் ஆக்கின படி-

மைந்தனை -தந்தை காலில் பெரு விலங்கு தாழ் அவிழ-என்று பிறந்த போதே
ஸ்ரீ வாஸூ தேவர் காலில் விலங்கு தானே விடும்படியான மிடுக்கைச் சொல்கிறது –
பருவம் நிரப்புவதற்கு முன்னே கம்சனை கொன்ற மிடுக்கைச் சொல்லிற்று ஆகவுமாம்

மைந்தன் -என்று
பிள்ளையாகவுமுமாம் –
ராஜா வாகவுமுமாம் –
வடமதுரையார் மன்னன் என்றாள் இறே –

பகவத் சம்பந்தம் மாறாத-வடமதுரையில் இருக்கிற ராஜாவாய்-மிடுக்கனாய்
யுவா வானவனை

————

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –
விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி –

தூய-
1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –
2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –
3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்

பெரு நீர் –
அத்ய காதமான ஆறு பாங்காக வற்றிக் கொடுத்தது –
மநோதரம் ஆகையாலும்-
பாவனம் ஆகையாலும்-
ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம்

யமுனைத் துறைவனை –
திருக் குரவை ஸ்தானம் ஆகையாலே-பெண்கள் படும் துறையை உடையவன்-

தூய பெரு நீர் யமுனை –
விட்ட வற்றை (நாட்டை -பரம பதத்தை -நதியை -விரஜையை ) மறக்கும் படியான ஆறு –
பரம பதத்தில் நின்றும் வந்து அவதரிக்கைக்கு இவ் வூர் உண்டானால் போலே
பரம பதத்துக்கு விரஜை போலே இவ்வூருக்கு இவ்வாறு –

அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே –
திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து
அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக
முழங்கால் மட்டாக வற்றிக் கொடுத்த சுத்தியைச் சொல்கிறது

யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்
பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

தூய்மை யாகிறது
பகவத் ஸ்பர்சம் இறே (கீழே கைங்கர்யம் )
வல்லவீ வதன உச்சிஷ்ட பவித்ர அதர வித்ரும -என்னுமா போலே
(இதனால் அவனுக்கே ஆனந்தம் பாவானத்வமாம் -இந்த பிரமாணம் ஆகாரம் தெரியவில்லை _
கிருஷ்ணனும் பெண்களுமாக ஜல க்ரீடை பண்ணி
ஒருவருக்கு ஒருவர் கொப்பளித்ததால் வந்த சுத்தி யாகவுமாம் –

தூய
பிரசாதம் நிம் நகா யாதா -என்று நீர் தெளிவைச் சொல்லிற்று ஆகவுமாம் –
(ரமணீயம் ப்ரஸானந்தம் -தமஸா நதி தெளிவு –
அதே போல் கறுமையாக இருந்தாலும் தெளிவு உண்டே இங்கு )

ஸ்ரீ வசுதேவர் கண்ணனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு
திருவாய்ப்பாடிக்கு எழுந்து அருளுகிற போது
ஜாநு மாத்ர உதாகரா – எழுந்து அருளலாம் படி பாங்காக வற்றிக் கொடுத்த
தூய்மையை ஆகவுமாம்

ஜலக் க்ரீடையிலே பெண்களும் அவனுமாக கொப்பளிக்கையால்
வந்த தூய்மை ஆகவுமாம்

(ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .-ஸ்ரீ கோதா ஸ்துதி -12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.)

——

பெரு நீர் –
கிருஷ்ணனும் பெண்களும் ஜலக்ரீடை பண்ணுகைக்கு போரும் படி –
சம்ருத்தமான ஜலம்-பெண்களுடைய விரஹ தாபம் கெட குளிக்கப் போரும் நீர் என்றுமாம் –
அன்றியே
நீரினுடைய ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம் –

மகா ஜலத்தை உடைத்தாகையாலே அத்யகாதமான

———-

யமுனைத் துறைவனை –
கவி பாடுவாருக்கு
ஊரும்
பேரும்
ஆறும் வேண்டக் கடவது இறே

யமுனைத் துறைவனை-
முத்துப் படும் துறை என்பாரைப் போலேயும் –
சங்கணித் துறை என்னுமா போலேயும் –
கிருஷ்ணனுக்கு பெண்கள் படும் துறை –

கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
“வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,
“தாமோதரனை” என்று பேரும்,
“யமுனைத்துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

“முத்துப்படுந்துறை, நவமணி படுந்துறை” என்னுமாபோலே,
கண்ணபிரானுக்கு எமுனையாறு பெண்கள் படுந்துறையாகையால் “யமுனைத்துறைவனை” எனப்பட்டது.

நற்சரக்கு படுவது நீரிலே யாகாதே –
அமுதில் வரும் பெண்ணமுது என்னுமா போலே

துறைவன்
கம்ச பயத்துக்கு அஞ்சி ஒளிக்க வந்து சேர்ந்தாரை சொல்லுமா போலே சொன்னபடி பாரீர் -என்பர் பட்டர்

யமுனையினுடைய துறையை தனக்கு நிரூபகமாக உடையவனை

—————

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –
பரம பதத்தில் காட்டில் குணங்கள்-இடைச் சேரியிலே அத்யுஜ்ஜ்வலம் ஆனபடி
அந்த காரத்தில் தீபம் போலே-தோன்றும் –
கர்ப்பத்தில் தொற்று இல்லாமை-
கீழைத் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம் இவளோடு அவனுக்கு உள்ளது –
ஸ்ரீ மதுரையிலே திரு அவதரித்து இருக்க செய்தே-
திரு அவதார பிரகாசம் திரு ஆய்ப்பாடியிலே சென்றது என்றுமாம் –

அணி விளக்கை-
திரு ஆய்ப்பாடிக்கு மங்கள தீபம் என்றுமாம் –

ஆயர் குலத்தினில் தோன்றும் –
பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் –
முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது

தோன்றும் –
ஆவீர் பூதம் மஹாத்மநா –
கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி –
பிறந்தது குணமாகைக்காக -பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்

“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி யென்க:

அணி விளக்கை –
ஸ்ரீ வைகுண்டத்திலும்
ஸ்ரீ மதுரையிலும் அனுஜ்ஜ்வலனாய் போலே இருப்பது –

ஆயர் பாடிக்கு அணி விளக்கு -என்கிறபடியே
இவர்களுக்கு கண் காட்டியாய் இருக்கை –
அந்தகாரத்தில் தீபம் போலே தாழ்ந்தார் பக்கலில் இறே குணம் பிரகாசிப்பது –
பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே
(ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )

மணி விளக்கு என்ற போது –
இங்கே புகுந்த பின்பு பரமபதத்தில் அழுக்கற்ற படி
(மாயன் அங்கு இங்கு வந்து விளக்கு ஆனான் அவன் அழுக்கு போந்ததாம் )

திரு ஆய்ப்பாடியிலே வாரா நின்று கொண்டு-அக்குலத்துக்கு மங்கள தீபமாய் உள்ளவனை

ஸம்ஸாரிகள் பத்து மாதம் கர்ப்ப வாஸம் பண்ணினால்,
“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி
தான் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் பண்ணுகையாலும்,
பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும்,
முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும்,
தன்னைக் கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க.

இனி, வடமதுரையிற் பிறந்த கண்ணபிரானை ஆயர் குலத்தினிற் பிறந்தனனாகக் கூறுவானென்னெனில்;
முலைப்பால் குடித்து அழுதவிடமே பிறந்த இடமாதல் பற்றி யென்க.
அன்றி, மதுரையில் மறைந்திருந்து ஆய்க் குலத்தில் வெளிப்பட்டமை பற்றியுமாம்.

தோன்றும் -தோன்றிய இறந்த காலமில்லாமல் -எப்பொழுதும் மேல் மேல் பிரகாசித்திக் கொண்டே இருப்பான் அன்றோ -திருவாவதரித்துத் தன்னுடைச் சோதிக்குப் போன பின்பும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளாலே மேல் மேல் பிரகாசிப்பவன் என்றபடி

———-

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
வயிற்றில் தழும்பாலே யசோதைப் பிராட்டி விளங்கப் பண்ணினவனை –

தாயைக் குடல் விளக்கம் செய்த-
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்-என்று
நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டினவனை –

பெற்ற தாயான தேவகிப் பிராட்டியையும் வளர்த்த தாயான யசோதாப் பிராட்டியையும் சொன்னபடி –

தாமோதரனை –
தன்னுடைய பவ்யதையாலும்-அவளை நாட்டார் கொண்டாடும்படி பண்ணினவனை –
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்கப் போகாதது போலே-அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க ஒண்ணாதே –
இப் பந்தத்தை அனுசந்தித்தால் ஆஸ்ரிதர் உடைய சம்சார பந்தம் போம் என்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த
வயிற்றிலே கட்டின தழும்பாலே ஒருத்திக்கு ஒரு பிள்ளை கட்டலாம் படி பவ்யனாவதே என்று
யசோதை பிராட்டியை விளங்கப் பண்ணினவனை –
கௌசல்யா சுசுபே-
இவனைப் பெற்ற வயிறுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -(பெரியாழ்வார் -2-2)

தாமோதரனை-
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய பந்தமும் அனுக்ரஹத்தாலே யாகையாலே அவனாலும் அறுக்க ஒண்ணாது –
நம்முடைய பந்தம் அவன் காலிலே விழத் தீரும் –
அவனுடைய அனுக்ரஹ கார்யம் ஆகையால் அனுபவித்தே அற வேணும் –
அவனுடைய பந்தத்தை அனுசந்திக்க சம்சார பந்தம் அறும் -என்னா நின்றது இறே
இவன் வயிற்றில் தழும்பைக் கொண்டாடுகை —
அவள் வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை –

பணைகளிலே தாவினவாறே உடை நழுவ தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள் –
அத் தழும்பு தோன்றாமைக்கு இறே
நம் பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது -என்பர் நஞ்சீயர்

கண்ணிக் குறும் கயிற்றால் உரலோடு கட்டுண்டு-பெற்ற தாயான யசோதை பிராட்டி உடைய
ஹிருதயதுக்கு-பிரகாசகன் ஆனவனே

————

தூயோமாய் வந்து நாம் –
அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –
இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை

வந்த நாம்-
அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-
முறை கெட வருவான் என் என்னில்-
உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே-
உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-

அவனே உபாயம் என்று இருக்கிற நாம்

தூயோமாய்
இடைச்சிகள் தூய்மை இறே –
தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )
விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று

ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா –
அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா –
நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –

மமஸாபி-கடல் கலங்கித் தெளித்தால் போலே ராம பக்தியால் கலங்கின என் நெஞ்சும் தெளிந்தது –
சம்சார பந்தத்தால் வந்த கலக்கம் தெளிகைக்கு பகவத் குணங்கள் உண்டு –
அந்த குணங்களால் வந்த கலக்கத்தை எத்தாலே தெளிய பண்ணுவது
(சுக்ரீவன் பொங்கும் பரிவால் கலங்கி என்ன ஆகுமோ என்று அன்றோ தடுத்தான்)

சுத்தம் வேத்தி விபீஷணம்-
வந்தவனுடைய சுத்தி அடங்கலும் வடிவிலே தெரியா நின்றது —
அவனுக்கு சுத்தியாக நினைக்கிறது ராம சம்பந்தத்தை இறே –
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
(பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ )

தூயோமாய்
அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்

வந்து –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று
அவன் வரவை நாம் செய்யக் கடவோம் –
உபஸ்தேயை ரூபஸ்தித-என்றும் –
பத்ம்யாமபி கமாச்சைவ-என்றும்
இட்ட நாலடிக்கும் புண் பட்டு இருக்குமவன் இறே

உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாது –
உபேயத்தில் துணிவு புறப்படாது இருக்க ஒட்டாது

பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் வந்து

சென்று இல்லாமல் வந்து -அக்கரை சம்சாரம் – இக்கரை பரமபதம் போல் இங்கும்

நாம்
க்ரம பிராப்தி பற்றாத நாம்

————-

தூ மலர் –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்-
அநந்ய பிரயோஜனமான பூ விறே

மலர் –
யோக்கியம் என்றும் அயோக்கியம் என்றும் பாராதே-
கண்ணுக்கு தோற்றின மலர் என்றுமாம் –

தூ மலர்
பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்
மிக்க சீர் தொண்டர் இட்ட பூ –
கள்ளார் துழாயும் -கணவலர்-அலரி விஜாதீயங்களையும் சொல்லுகிறது
அநந்ய பிரயோஜனர் தொட்டது ஏதேனுமாம்

புள்ளாய் ஓர் ஏனமாய்
இவன் ஏதேனும் இடிலும் கொள்ளுகைக்கு தன்னை அமைத்த படி –
ஸ்ரீ வராஹ கல்பத்தில் முத்தக்காசை அமுது செய்விக்கச் சொல்லிற்று

பத்ரம் புஷ்ப்பம்-த்ரவ்ய தார தம்யம் பார்ப்பது இல்லை –
இடுகிறவன் நெஞ்சிலே ஈரமே பார்ப்பது –
எல்லாம் கூட அஸ்நாமி இறே

யோக்யமோ அயோக்யமோ என்று தேடப் படாத மலர்களை

——–

தூவி
அடைவு கெட பரிமாறி-
பிரேமம் அடைவு பார்க்க ஒட்டாது இறே

தூவி
யதா ததா வாபி-என்கிறபடியே –
க்ரம விவிஷை அன்றிக்கே அடைவு கெட்டு இருக்கை

அக்ரமாக அவன் திருவடிகளிலே பரிமாறி –

——–

தொழுது
அவனுக்கு பொறுக்க ஒண்ணாத படி அஞ்சலியைப் பண்ணி-
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் அவர்கள் இறே தொழுகிறார்கள்-
பித்ராதிகளுக்கு அடைவு கேடு என்று தோற்றாதபடி அஞ்சலி பண்ணுகிறார்கள் -என்றுமாம்-

தொழுது –
விரோதிகள் கண்டால் முறை தப்பாமைக்கு —
கை படைத்த பிரயோஜனம் பெறுகை-

———-

வாயினால் பாடி –
வாய் படைத்த லாபம் பெற்றோம் என்று திரு நாமத்தைச் சொல்லி –
மனஸ் சஹகாரம் இன்றிக்கே -என்றுமாம்
வருவதற்கு மேலே-சொல்லுவதும் செய்தோம் -என்னவுமாம் –

வாயினால் பாடி –
வாக்குப் படைத்த பிரயோஜனம் பெறுகை —

உவாச ச மஹா ப்ரஞ்ஞா -என்று
வருகைக்கு மேலே வார்த்தையும் சொல்லுவதே -என்று
அவனை நோவு படுத்துகை –

———

மனத்தினால் சிந்திக்க –
மனஸ்ஸைப் பெற்ற லாபம் பெற்றோம் என்று –
மனஸ் அடியாக வரக் கடவ
உக்தியும்
வ்ருத்தியும் தவிர்ந்து

தொழுது-
வாயினால் பாடி-
மனத்தினால் சிந்திக்க -என்று
தனித் தனியே கரணங்கள் மேல் விழுந்த படியை சொல்லுகிறது –

ஸ்ருதி கிரமேண் அன்றிக்கே மனஸ்ஸூக்கு முன்பே
தொழுகையும்
பாடுகையும்

மனத்தினால் சிந்திக்கை –
மனசாதி கச்சதி -வாக்குத்தர என்கிற நிலை குலைந்து-
மனஸ்ஸூக்கு முன்பே தொழுகையும்
பாடுகையும்
முற்படுகையாலே ஆற்றாமையின் மிகுதி சொல்லிற்று –

மநோ வாக் காயங்கள் மூன்றும் அங்கே பிரவணமாம் படி –
உபாயம் ஆகில் இறே ஒன்றே அமைவது –

அவன் கொடுத்த கரணத்தால் அவனை ஆஸ்ரயிக்கப் பெற்றோம் -என்று

————

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் –
உத்தர-பூர்வாகங்கள்-தீயினில் தூசாகும் –
நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்

தூசு -பஞ்சு-பாலும் கண்ட சக்கரையும் குடிக்க பித்தம் தன்னடையே போம் போலே
பகவத் அனுபவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக் குவை போலே-உரு மாய்ந்து போம்

போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –
இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்

பூர்வமாகிறது –
ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்

உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –

தீயினில் தூசாகும்
நெருப்பில் பட்ட பஞ்சு போலேயாம் –
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத-என்ற வேதத்தில் சொன்ன அர்த்தம்
பெரியாழ்வார் மகள் ஆகையால்
இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

———

செப்பு –
சொல்ல அமையும் என்கை-
பூர்வாகம் ஆவது
அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்தவை

உத்தராகமாவது –
பகவத் ஞானம் பிறந்தால் பிரகிருதி வாசனையாலே ப்ராமாதிகமாக பிறந்தவை –

செப்பு –
வாக்கு மனஸ் காயங்களால் அனுபவிக்க வேணும் என்கிறது மிகை –
விரோதி போகைக்கு உக்திக்கு மேலே வேண்டா என்கை
அவன் இவன் அனுகூலித்த வாறே பூர்வாகத்தை விஸ்மரிக்கும் –
உத்தராகத்துக்கு அவ்விஞ்ஞாதாவாம் –
இனி யார் அனுபவிப்பார்
புண்ய பாபங்கள் ஆகின்றன அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்கள் இறே –
அவன் பொறுத்தேன் என்ன அனைத்தும் போம் –

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது-வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்-
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
மாயனை –
மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த
தாமோதரனை –
செப்பு –
என்று அந்வயம் –

—————————

தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன் கை கால் மெய் வாயும் கொடு அளைந்த காளிந்தி
போன் கரணம் மூன்றும் கொடு கண்ணன் — தன் நினைவால்
எண்ணம் மொழி செய்கை ஒன்றிச் செய் கிரியை
வண்ணம் அழகிய பூ நாறு.

——————

நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

———–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —ஆழி மழைக் கண்ணா —

December 20, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

———

அவதாரிகை –

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் இங்கே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து –
தன்னைத் தாழ விட்டு- பெண்கள் சொல்லிற்று செய்ய்ம்படிக்கு ஈடாக தான் கையாளாய் –
அவர்களுடைய அபேஷித சம்விதானம் பண்ணிப் போருகிறபடியைக் கண்டால்
இதர தேவதைகளுக்கு சொல்ல வேண்டா விறே-இவர்களும் அவனுடைய சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து அத்தாலே ஸ்வரூப லாபமாய் இருக்கும் இறே பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாருக்கு தேவதைகள் தாங்களே வந்து உபவஸ்தித்ராகக் கடவர் இறே-(உபஸ்திதர் -சேஷபூதர்-)

ஆக இப்படி பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அனுவர்த்திக்க கடவர் ஆகையாலே- வர்ஷ தேவதையான பர்ஜன்யன்-நாம் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் -என்று வந்து-
நான் இங்குத்தைக்கு செய்யும் அடிமையை நியமிக்க வேணும் -என்ன-
செய்யக் கடவ படியை – இன்ன படியும் இன்ன படியும் -என்று- எங்களை எல்லாரும் கொண்டாடும் படியே வர்ஷிக்க வேணும் அவன் செய்யும் அடிமைகளை கையோலை செய்து கொடுக்கிறார்கள்-

(சங்காரிதம் கல்லைப் பொழியும் மழை -நீல வர்ணம் நெருப்பைப் பொழியும் மழை போன்ற பல மழைகள் உண்டே-ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவன் உண்டாம் -பர்ஜன்ய தேவன் இவற்றுக்கு எல்லாம் தலைவன்)

திறம்பேன்மின் -திருமழிசைப் பிரான் அருளிச் செய்த படி –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்-
பர்த்த்ரந்தர ஸம்ஸ்லேஷம் உண்டானால் பார்யைக்கு யோக்யதை கெடும் இறே-
நமனும் தன் தூதுவரை -செவிக்கு -இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் -என்றான் இறே

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
யத் கீர்த்தநாத் ஸோ த்புத ரூப கேஸரீ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி-தர்மோத்தர புராணம்  -என்கிறபடியே பகவத் ஸமாச்ரயணம் பண்ணுவார்க்கு தேவதைகள் வந்து குட நீர் வார்க்கக் கடவது இறே  –

(ஸ்வ புருஷம்- அபீவீஷ்ய-பாச ஹஸ்தம்-வததியம் அகில யமகில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -ப்ரபுரஹம் அந்நிய நிரூணாம் ந வைஷ்ணவா நாம்-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் –3-7-15–அஜாமிளோ வ்யாக்யானம் )

ஸ்வ புருஷம்-ஓலக்கத்திலே சொல்லுகை அன்றிக்கே தன் மனிசராய் தனக்கு பரிவரானவர்களுக்கு –

அபீவீஷ்ய-தன்னது நாலைந்து சிறு முறி மறுக்கும் படி அவர்களுக்குத் தரம் செய்து கொடுத்து வைக்கும் படி –மெய்யே அழைக்கிறான் -என்று தோற்றும்படி சாதரமாகப் பார்க்கிறான் –

பாச ஹஸ்தம் –அவன் முன்பு கொண்ட கோலம் குலையாதே நின்றபடி

வததியம் அகில -நீங்கள் இப்படியே அவர்கள் முன் செல்லில் என் தலையும் இவ் விருப்பும் நிலை நில்லாது –

யமகில-ஸர்வேஸ்வரன் அவன் என்று தோற்றும் படி கூறாக விட்டவன்

தஸ்ய கர்ண மூலே-ராஜ தார ப்ராவண்ய நிஷேதமும் பிறர் அறியில் பொல்லாதே-

பரிகர மது ஸூதன ப்ரபந்நான் –ஆஸ்ரித விரோதிகளைக் கண்டால் தன்னைப் பேணாதே மேல் விழுமவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருக்கும் அவர்கள் இறே -நான் அவன் கையில் மது பட்டது படாமே கிடிகோள்

ப்ரபுரஹம் அந்நிய நிரூணாம் ந வைஷ்ணவா நாம் -நீயோ பிரபு என்று இருந்தோம் -உன்னை ஒழியவும் சிலர் உண்டோ என்ன-சோறும் தண்ணீரும் தாரகம் என்று இருப்பார்க்கு நான் பிரபு –ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் எனக்கு பிரபுக்கள் –என்கிறான்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–-நான்முகன் திருவந்தாதி -68-

திறம்பேல் மின் கண்டீர் -திறம்பவும் தானே கொடுத்து வைத்தான் போலே –
திருவடி தன் நாமம் மறந்தும் -வகுத்தவனுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –பவ சரணம் -என்கிறதுவும் கழியுண்கிறது(தாத பாத -அப்பாவைச் சொல்லுவது போல் திருவடி என்றது ஸ்வாமி என்றவாறு )
மறந்தும் புறம் தொழா மாந்தர் -தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்குமவர்களை -பர்த்தாவோடு பார்யைக்கு பொருத்தம் இல்லையே யாகிலும் ருசி உண்டானவன்று கூடலாம் – பர்த்தந்த்ர சம்ஸ்லேஷம் உண்டானால் யோக்கியதையும் கெடும் இறே

(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் கழிகையே பிரதானம் என்றவாறு )

இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் –வணங்கி அநு கூல வேஷத்தோடு போருங்கோள்-
நமனும் தன் தூதுவரை கூவிச் செவிக்கு-ஸ்வ புருஷம் என்றால் போலேயும் -கர்ண மூலே -என்றால் போலேயும்

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——முதல் திருவந்தாதி–55-

அவன் தமர் எவ் வினையர்-இத்யாதி –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட் பட்டார் பேர் ஆராயப் பட்டு அறியார் கண்டீர்-
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது அவனையும் எமன் கோஷ்ட்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-116-

மாறு செய்த வாள் அரக்கன் -கண்டால் ஜிதம் -என்று விழ இறே அடுப்பது
வாள் அரக்கன் நாள் உலப்ப-கொண்ட வரமும் ஆயுஸ் ஸூம் கூட முடிய

அன்று இத்யாதி -வர பல புஜ பலங்களாலே பூண் கட்டின வூரை வர பொர இருக்கை அன்றிக்கே –அவர்கள் இருந்த இடங்களிலே சென்று முடித்து

வென்றி கொண்ட -சக்கரவர்த்தி திரு மகனோடு ஒரு பேரிலே இருப்பான பின்பு இனி
அவர் குற்றம் உண்டாகில் பார்க்கும் அத்தனை என்கிறார்

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—-ஸ்ரீ பெரிய திருமொழி-8-10-7-

வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்னும் படி இறே
தேவதைகள் அஞ்சி வர்த்திக்கும் படி-ஆகையால் பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

ஸ்ரீ பாகவத சம்ச்லேஷம் –
ஸ்ரீ பகவத் சம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து
அபாகவாத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து-( பிறப்பித்து )
இவனையும் கரை மரம் சேர்த்து விடும் -என்று இறே ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்திற்று –சத் சங்காத் பவதி ஹி சாதுதாகிலா நாம் -என்னக் கடவது இறே –
(ஸத் சங்கம் நிஸ் சங்கம் -ஸத் சங்கமே விஷயாந்தர ப்ராவண்யம் கழிக்குமே )-வேதக பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-சூரணை -221

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு—69-

(இப்பாசுரம் நமஸ்ஸூ பதார்த்தம்
ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி
இரண்டுமே இப்பாசுரத்தில்
ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் )

இப் பாட்டில் இவர்களை வர்ஷ தேவதை-அடியேனுக்கு ஒரு கிஞ்சித் காரம் நியமித்து அருள வேணும்- என்று பிரார்த்திக்க-
இவர்கள் அவனுக்கு கைங்கர்யம் நியமித்த படியைச் சொல்லுகிறது –

 ராவண வத அநந்தரம் முன்பு மறந்த இந்திரன் தன் பதம் பெறுகைக்காக ஒரு வரம் கொள்ள வேணும் -என்றான் –(இறந்த வானர முதலிகளுக்கு மீண்டும் உயிர் அளித்த வ்ருத்தாந்தம் )
அங்கு தப்பினார்க்கு இவர்கள் உளராக அஞ்ச வேண்டா –
இங்கு தப்பினார்க்கு விநாசமே இறே யுள்ளது –

இப்படி தேவதைகள் வந்து இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்வார்களோ -என்னில் –
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
உன் தன் தமருக்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்றும் உண்டு இறே

இந்த ஆக்கரான தேவதைகள் அன்றிக்கே சாஷாத் தேவதைகளான அயர்வறும் அமரர்களும் இவர்களைத் தொழா நிற்பார்கள் -எங்கனே என்னில்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார்(திருவாய் 3-5-அன்பிலா மூடரை ஆழ்வார் நிந்திக்க நித்யர் அன்புள்ளவரைக் கொண்டாடுவார்கள் )
மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவையே
விரும்புவர் அமரர் மொய்த்தே
விண்ணுளாரிலும் சீரியர் –என்று சொல்லுகையாலே –

ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க-சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் –-தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்

சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி(தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் )தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம-எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது-இவர்கள் பெருமைக்கு இடைவிடாதே பண்ணுகிறேன் -எம்பெருமானுக்கு ஒருகால் அமையும் – ப்ராப்யரான இவர்களுக்கு சர்வ ஸ்வதானமாகத் தன்னைக் கொடுக்கும் அத்தனை இறே-

அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு
இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று
இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –

இத்தால் பல ஸ்வரூபம் -ஆச்சார்ய சமாஸ்ரயணம் -அந்தர்யாமித்வ நிஷ்டையைச் சொன்னபடி-

தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

கண்ணனே ஆஸ்ரித பாரதந்தர்யம் காட்ட திருவவதரித்து இவர்கள் கட்டவும் அடிக்கவும் இவர்கள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யத்துக்கு அலமந்து இருக்க இவர்கள் இப்படி இருக்கச் சொல்லவும் வேண்டுமோ-

——

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–

வியாக்யானம் –
ஆழி மழைக் கண்ணா –
கம்பீர ஸ்வபாவத்தை உடையவனாய்-வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –
சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்ம ருத்ரர் தலையிலே பொகட்டு-
ஸ்வரூபத்துக்கு சேர்த்த பாலன விதியை தானே நடத்துமா போலே-தஹ பேச -என்னும் காரியத்தை –நாட்டாரைக் கட்டுவது விடுவது ஆகிற க்ரௌரய வியாபாரத்தை-யமாதிகள் தலையிலே ஏறிட்டு- ப்ரக்ருத்யா உன்னுடைய நீர்மையைக் கண்டு நம்மோபாதி ஜகத்தை ஈரக் கையால் தடவி நோக்க வல்லன்-என்று ஈஸ்வரனாலே மதிக்கப் பட்டவன் அன்றோ நீ –

ஆழி மழைக் கண்ணா –
ஆழி -என்று சமுத்திரமாய் -அத்தால் -நினைக்கிறது –
காம்பீர்யத்தையும் –
இடமுடைமையுமாய் –
ஸர்வேஸ்வரன் தன் கார்யம் செய்கைக்கு அளவுடையவன் இவன் என்று
திரு உள்ளத்திலே தோற்றி நியமிக்கும் படி பிறந்தவன் அன்றோ நீ –
சமுத்திர இவ காம்பீர்யே-என்னக் கடவது இறே –

இத்தால் நாட்டார் சிறுமை பாராதே-உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி -என்கை

ஆழி மழை -என்று
மண்டல வர்ஷமாக்கி -ஆழி -வட்டம் -சுழித்து வர்ஷிக்கை –மண்டல வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -என்னவுமாம் –

ஸூஹ்ருதம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷித்தும்-
பாபம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷியாதும்-போருவது ஓன்று உண்டு இறே
எங்கள் பாக்யத்தை நினைத்து புஜிக்கும் நாடு ஆகையாலே-நீ அங்கன் புதைத்துப் பார்க்க ஒண்ணாது- எங்கள் கோடியிலே நீயும் ஆக வேணும்

நாட்டுக்கு இட்ட நினைவைக் கொண்டு படுக்கைப் பற்றிலே செல்லாதே கொள்
இவனை இங்கனே சொல்லுவான் என் என்னில்
இப்பெண்கள் பாலைகள் ஆகையாலே இவன் பேர் சொல்ல அறியார்கள்
ஆகையால்-இன்னது பிடித்தான் என்பது போலே –- இவன் அதிகரித்த கார்யம் தன்னை இட்டே சொல்கிறார்கள்-

ஆழி -என்று வட்டமாய் -அத்தாலே நினைக்கிறது -மண்டலத்தையாய் –ஒரோ இடங்களில் சுழித்து வர்ஷிக்கையும்-மண்டல வருஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவன் என்றுமாம் –பிராட்டி பிலவங்கம்-என்னுமா போலே –(அதே போல் இங்கும் குத்திப் பேசும் சொல்
பாகவத சேஷத்வம் சொல்லாமல் அதிகாரி தேவனே என்பது )

இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும்
கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்

பீஷாஸ்மாத் வாத பவத-
நெற்றி பெற்ற கண்ணன் -என்று தேவதைகள் அநு வர்த்திப்பதாக சொல்லப்படுகிற ஸர்வேஸ்வரன் அவதரித்து நோன்புக்கு சொல்லிற்று செய்யக் கடவனான பின்பு
பர்ஜன்யன் கிஞ்சித் கரித்து சத்தை பெறக் கடவன் இறே

(நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –திருச்சந்த–87- )

ஈஸ்வரன் பக்கல் கிஞ்சித் கரித்தவர்களுக்கு பல சித்தி இவர்களாலே யானால்
இங்கு கிஞ்சித் கரித்தவர்களுக்கு சொல்ல வேண்டா விறே

ஆழி-
அபரிச்சேத்யமான ஜ்ஞான வைபவத்தை உடையையாய்

மழைக் கண்ணா –
பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்
பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்
பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்

சம இதி லோக ஹிதாஹிதே நீ யுக்த -என்று யமனை அக் காரியத்துக்கு இட்டால் போலே
புண்ய பாப அனுரூபமாக வேண்டும் அளவிலே வர்ஷிப்பிக்கைக்கு சர்வேஸ்வரனாலே நியமிக்கப் பட்டுப் பேர் அளவுடையையாய் வர்ஷத்துக்கு நிர்வாஹகனானவனே

தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும்
இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –

தந்தாம் பாகத்து (புண்ணியத்துக்கு )அளவிலே கார்யம் செய்யும் போதைக்கு அன்றோ புதைத்து (குறைத்து )விட வேண்டியது எங்களுடைய பாக்ய பலமன்றோ எல்லாரும் புஜிக்கப் புகுகிறது சேதனனுடைய நன்மை தீமை கணக்கிட்டுப் படி வைக்கும் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்ட்டியின் படி அன்றியே வரையாதே பாபமே பச்சையாக ரஷிக்கும் எங்கள் (பிராட்டி சமர் )கோஷ்ட்டியில் படியே நடத்தித் தர வேணும்

மித்ர மவ்பயிகம் க்ருத்தம் –விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞா –
ஏவ முக்தா ஹநுமதா–இத்யாதி-பாபா நாம் வா –
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் –(ராஜா ஆணைப்படி செய்த ராக்ஷஸிகள் எய்தவன் இருக்க அம்பைச் சொல்வதோ )
அலமேஷா –(த்ரிஜடை வார்த்தை )இத்யாதி
மஹா பாரதம் தூது போனவன் ஏற்றமான நீர்மையைச் சொல்லுகிறது –
ஸ்ரீ ராமாயணம் பிராட்டி நீர்மையைச் சொல்லுகிறது-

ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது,
“குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால்
இவர்களும் அந் நடையை அடி யொற்றி “ஆழி மழைக் கண்ணா!” என்று
அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.

(நீராழி வண்ணனைப் பாலாழி நாதனை நின்மலனைச்
சீராழி யங்கைத் திருமகள் கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழி மாயனை மாலலங் காரனைக் கொற்றவெய்யோன்
ஓராழித் தேர் மறைத் தானை யெஞ் ஞான்று முரைநெஞ்சமே.  -திருமாலிருஞ்சோலைமலை அழகரந்தாதி-  1–)

———–

ஓன்று நீ கை கரவேல் –
உன்னுடைய ஔதார்யத்தில் ஒன்றும் மாறாத படி தோற்ற வேணும்-
கை -என்று கொடை
கரக்கை -மாறுகை
சேதனனுடைய நன்மை தீமைகளை கணக்கிட்டுப் படி வைக்கும்
குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியைப் பார்த்து விஷமமாக வர்ஷியாதே
பாபமே பச்சையாக -ரஷிக்கும் எங்கள் படியைப் பார்த்து எங்கும் ஒக்க வர்ஷிக்க வேணும்

ஓன்று நீ கை கரவேல்
அர்த்திகள்-கொடுக்குமவனை -கை பெரியன் என்று சொல்லுகையாலே
உன் கொடையில் ஒன்றும் வஞ்சியாது ஒழிய வேணும் –

புண்ணியம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷிக்கவும் –
பாபம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷியாது ஒழியவும் அன்றோ
ஈஸ்வரன் எங்களை நியமித்து விட்டது என்ன

ஈஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே அன்றோ புதைத்து விடுவது –
நல்லாரைக் கைக் கொண்டு தீயாரைக் கழித்தும் இருக்கும் ராம கோஷ்ட்டியில் பழக்கத்தை விட்டு –
மித்ர மௌபயிகம் கர்த்தும்-என்றும்
தேன மைத்ரீ பவது -என்றும்
பாபாநாம் வா சுபாநாம் வா -என்றும் நசை அற்ற
ராக்ஷஸிகளுக்கும் ஹிதம் சொல்ல அதிகரித்த எங்கள் கோஷ்ட்டியில் பரிமாறுமா போலே பரிமாற வேணும் –
(சீதா பிராட்டி கோஷ்டி தானே இவர்கள் )

கை கரக்கை யாவது -கொடை மாறுகை

ஒன்றும் நீ கை கரவேல் –
ஏக தேசமும் ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் பகவத் காருண்யத்துக்கு விஷயம் ஆக்கவல்ல நீ-
வர்ஷியா விட்டால் உடம்பு வெளுக்கும் நீ-பகவத் குண வர்ஷத்திலே சோராதே கொள்ளாய்

ஆர்த்திகள் கை பெரியன் என்று கொண்டாடுமா போலே
உன் படிகள் ஒன்றும் குறையாதபடி வந்து தோற்ற வேணும் என்கிறாள்
என்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -உங்களுக்கு வர்ஷிக்கைக்கு நீருண்டோ என்னில்

———–

ஆழி யுட்புக்கு –
சகரர் கல்லின சிறு குழியில் அன்றிக்கே-சமுத்ரத்திலே போய் புக்க வேணும்
அதிலும் வாய்கரையிலே ஆக ஒண்ணாது -நடுவே சென்று இழிய வேணும் –

ஆழி யுட் புக்கு –
கண்ட ஜலா சயங்களிலும் ஒண்ணாது –
சகரர் கல்லின குழியிலும் ஒண்ணாது –
மஹார்ணவத்திலே புக்கு –
அதிலும்
வாய் கரையிலும் ஒண்ணாது –
உள்ளே புக வேணும்-

————

முகந்து கொடு-
இழிந்தால் மேற்பட்ட ஜலம் கொண்டு போர ஒண்ணாது-
கடலை மணலே சேஷிக்கும்படி கிரஹிக்க வேணும்

முகந்து கொடு
அங்குத்தை நீரை மணல் பற்றோடு வாங்கி –
இலங்கு ஒலி நீர் பெரும் பவ்வம் மண்டி யுண்ட -என்கிறபடியே –
மேல் எழ ஒண்ணாது –
அடி மண் அடியோடு தட்டப் பருகி

இரு கையில் சங் கிவை நில்லா எல்லே பாவம் இலங்கொலி நீர் பெரும் பெளவம் மண்டி யுண்ட,
பெரு வயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங் கொரு கை மற் றாழி யேந்தி உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து, என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனலரங்க மூர் என்று போயினாரே–திரு நெடும் தாண்டகம்–24

பகவத் குணாம்ருத சாகரத்திலே உள்ளே அவஹாகித்து யாவத் குணங்களையும் புத்தி ஸ்தமாம் படி அகஞ்சுரிப்படுததிக் கொண்டு –
அதாவது
எப்பேர்பட்ட அபாரதிகள் ஆகிலும் தாம் அபிமானத்த வர்களில்-காருண்யத்தைப் பண்ணும்படி எம்பெருமான் விதேயமாம்படி-பண்ணிக் கொள்ளுகை

இந்த முன் வாயில் சகரர் கல்லின உப்புக் குழி ஒழிய பெரும் கடலிலே புக்கு
முகந்து கொண்டு பாதாளம் கிடக்க மணலோடே பருக வேணும்

————–

ஆர்த்து –
இரா மடம் ஊட்டுவாரைப் போலே-முகம் தோற்றாமல் வந்து ரஷிக்கும் ஈஸ்வரனைப் போலே-ஆக ஒண்ணாது –
அனசநத்திலே தீஷித்த முதலிகள் அடைய திருவடி வரவாலே சத்தை பெற்று சம்ப்ரமித்தால் போலே நாடு அடைய உங்கள் உடைய த்வனி கேட்டு வாழும்படி மின்னி முழங்கி வில்லிலிட்டுக் கொண்டு பெரிய சம்ப்ரமத்தோடு வந்து தோற்ற வேணும்-

ஆர்த்து
நாட்டார் விடாயும் எங்கள் விடாயும் கெடும்படி மின்னி முழங்கி
வில் விட்டுத் துளித்துக் கொடு வர வேணும்

அநசனத்திலே தீஷித்த முதலிகள் தளிர்க்கும் படி திருவடி பிராட்டியைக் கண்ட ஹர்ஷத்தாலே சப்த்தித்துக் கொண்டு வந்தால் போலேயும்
ஓக மேகஸ் வன க்ருஷ்ண -என்று கிருஷ்ணன் முழங்கின வார்த்தை கேட்டு நாங்கள் தரிக்குமா போலேயும் – நாடு தளிர்க்கும் படியாக

ஆர்த்து
முதலிகள் அநசனத்திலே தீஷித்துக் கிடந்தவர்கள் த்வனி கேட்ட போதே
எழுந்து இருந்து ஆடும் படி திருவடி பிராட்டியைத்
திருவடி தொழுத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஆர்த்துக் கொண்டு
வந்தால் போலே வர வேணும் –

———

ஏறி-
ஆகாச அவகாசம் இடமடையும் படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்க வேணும்
விண்ணீல மேலாப்பு விரித்தாப் போலே -என்றும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள் -என்றும்-சொல்லுகிறபடியே

ஏறி –
ஈஸ்வரனைப் போலே முகம் தோற்றாதே நின்று கார்யம் செய்ய ஒண்ணாது –
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்கிறபடியே
ஆகாச அவகாசம் எல்லாம் வெளியடையும் படி உங்கள் வடிவைப் பாரித்து காட்ட வேணும்

காட்டேல் மின் நும் உரு (திருவாய் -9-5-7)என்றும் –
காணும் தோறும் தொலைவன் நான் -என்றும்
இவற்றின் த்வனியும் வடிவும் பாதகம் ஆவது அநபேஷ தசையில் இறே

ஏறி
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி-என்னுமா போலே
கர்ப்பிணிகள் சுரம் ஏறுமாப் போலே மெள்ள மெள்ள ஏறி

ஸ சம்ப்ரமமாக ஆசார்ய பதத்திலே ஏறி

நாங்களும் ஜகத்தும் கண்ட காட்சியாலே தளிரும் முறியுமாம் படி மின்னி
முழங்கி வில்லிட்டுக் கொண்டு வர வேணும்
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி–
கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றம் ஏறுமா போலே ஏற வேணும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள்
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே ஆகாச அவகாசம் அத்தனையும் நிறையும்படி பாரித்துக் கொண்டு வர வேணும்

——–

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்-
ஜகத் காரண பூதன் ஆனவனுடைய வடிவு போல் இருக்க வேணும்
இந் நிர்தேசத்துக்கு கருத்து என் என்னில்-

நெடுநாள் தம் பக்கலிலே சம்ஹ்ருதமாய்க் கிடந்த ஜகத்தை-உண்டாக்குவதாக சங்கல்பித்தவாறே
பண்டு போல் அன்றிக்கே கரு வடைந்த பயிர் போலே
நிறத்திலே வருவது ஒரு வேறுபாடு உண்டு -அத்தை நினைக்கிறார்கள் –

காலோபலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கின வனுடைய வடிவு
உங்களுக்கு உண்டாக வேணும்

மெய் கறுத்து-
அகவாயில் நீர்மை உங்களால் உண்டாக்க ஒண்ணாது இறே-வர்ஷித்தால் அநந்தரம் வெளுத்துப் போமவை இறே இவை

(வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோ வெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோ மழை முகிலோ
ஐயோ விவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்-உருவம் போல் தான் பர்ஜன்யன் இருக்க முடியும்)

ஊழி முதல்வன் உருவம் போல்-
கால உபலஷித சகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
ஸ்ருஷ்ட்டி உன்முகனான சர்வேஸ்வரனுடைய திரு மேனி போலே –
அதாவது
இவர்கள் புண்ய பாப அனுகுணமாக அன்றிக்கே –
தன்னுடைய கேவல கிருபையால் இவற்றுக்கு உபகரணங்களைக் கொடுத்து –
நாமும் இவர்களுமாய்க் கலக்க வேணும் என்று திரு உள்ளத்திலே நினைக்கையாலே
தன் பேறாக இவற்றை உண்டாக்கும் போது
அவன் திரு நிறம் புகர் பெற்று இருக்குமாய்த்து -சிருஷ்ட்டியில்

யவ்க பத்யம் அனுக்ரஹ கார்யம் என்று இறே ஆழ்வார்கள் ஈடுபட்டு –
முந்நீர் ஞாலம் படைத்த -என்றும்
பாமரு மூ உலகம் படைத்த – என்றும் குணமாகக் கொண்டாடிற்று –

ஊழி முதல்வன்-
சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் -என்று
திரு உள்ளத்திலே நினைக்கையாலே கருவடைந்த பயிர் போலே
திரு மேனியும் கறுத்து இருக்கும் –
அப்படியே இருக்க வேணும் உன்னுடைய நிறமும்

உருவம் போல் மெய் கறுத்துப்-
அவன் அகவாயில் தண்ணளி இதுக்குத் தேட ஒண்ணாதே –
இதினுடைய அகவாயும் நீர் அன்றோ என்னில்
அவன் நீர்மையைப் பார்த்தால் இது நெருப்பு என்னலாம் படி யன்றோ இருப்பது –

உருவம் போல் –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதாப் போலே
அவனுடைய அகவாயில் நீர்மையை உங்களால் உண்டாக்கப் போகாது இறே
தன் நோயாசையாலே அவ் வடிவுக்கு போலி கண்டு தரிக்கப் பார்க்கிறாள் இறே

சர்வேஸ்வரனுடைய வியாவ்ருத்தி அறியச் செய்தேயும் அன்னலும் துன்னலும் நீரும் நெருப்புமான இத்தை ஒக்கும் அம்மான் உருவம் (8-5-8)-என்றார்கள் இறே -ஆற்றாமை இருந்த படி

ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய் அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள் சாயப்*
புக்க நல் தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?-திருவாய் 8-5-8-

உள்ளம் குழைந்து தோல் புரையே போம் அன்றிக்கே அகவாய் சிதிலமாய்
நாள் நாளும் -நாள் தோறும்
தொக்க மேக்கப் பல் குழாங்கள் -திரண்ட மேகங்களினுடைய பல திரள்களை காணக் காண சோகியா நிற்பன்
தக்க ஐவர் -உன்னைக் கடகாக விட்டு மார்பிலே அம்பேற்கப் பார்ப்பார் விரோதியோ போக்கலாவது-நூற்றுவராய் அளவுபடிலோ உதவலாவது – இத்தனை திரள் உண்டானால் உதவலாகாதோ

ஈரைம்பதின்மர் தாள் சாய-நூற்றுவர் கால் சந்ததி –அறும் படி பிரவேசித்த இம்மேகத்திலே ஒரு மயிர் மானத்துக்கு வாட்டம் வரில் ஆகாதோ –

புக்க -பீஷ்மாதிகள் சர வர்ஷத்தாலே நூக்க மதியாதே தேரை நடத்தின படி –

நல் தேர் தனிப் பாகா -ரதியைக் காண்கிறிலர் –
வாராய் -அத்தேரை இம்மேகத் திரளில் திரிய விட்டாலாகாதோ –
இதுவோ பொருத்தமே -அவர்களுக்கு கார்யம் செய்த படியும் இதுவோ —
ரிஷிகளுக்குக் கைக்கூலி கொடுத்து எழுது வித்துக் கொண்ட இத்தனை யாகாதே

சிருஷ்டி உன்முகனான ஈஸ்வரன் உடைய திரு மேனியைப் போலே-
காருண்ய சிருஷ்டி உன்முகனான உன் திரு மேனியிலும் வேறுபாடு உண்டாய்

ஸ்ருஷ்ட்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வை அன்றிக்கே-
ஸ்ருஷ்டிக்கு முன்பு
எல்லாரையும் ஐயோ என்று ஓக்கப் பார்க்குமா போலே
நீயும் இங்குத்தைக்கு ஒத்து இருக்கப் பார்க்க வேணும் என்று கருத்து-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் இறே

அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது நிறத்தை யாகிலும் கொள்ளுங்கோள்
நாச்சியார் விழி விழிக்கச் சொல்லுகிறார்கள் –
ஈஸ்வரனைப் போல் முகம் தோற்றாமல் நின்று உபகரிக்க ஒண்ணாது
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து கால உபலஷிதமான சர்வ பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று திரு உள்ளத்தில் கொண்டதாகையாலே
கருவடைந்த பயிர் போலே இருக்கும் திரு நிறம் -என்கை –

மெய் கறுத்து
அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன்-( 3-2-1-) இறே –

(முகில் வண்ணன் மேக வண்ணன் -மற்ற கவிகள் –
ஆண்டாளோ மேகத்தை அவனைப் போல் -இது அன்றோ யதாவஸ்திதம் -)

———-

பாழியம் தோளுடைப்–
உபய விபூதியும் ஒதுங்கினாலும் ஒதுங்கிய ரஷ்ய வர்க்கம் அளவு பட்டு-ரஷகனுடைய காவல் துடிப்பே மிக்கு இருக்கை –

பாழித் தோள் –
வலி உடைய தோள் என்னுதல்
இடம் உடைய தோள் என்னுதல்

அம் தோள்-
அழகிய தோள்

அங்கன் இன்றிக்கே
குழைச் சரக்கே யாகிலும் விட ஒண்ணாத போக்யதை மிக்கு இருக்கை –
ரஷகமுமாய் அது தானே போக்யமுமாய் இருக்கை –

பாழியம் தோளுடைப் பற்பநாபன் –
பிள்ளைகளே தொட்டிலே வளர்த்தி-புற்பா இட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு நோக்கி இருப்பாரைப் போலே-
திரு நாபீ கமலத்திலே வ்யஷ்டி சிருஷ்டிக்கு காரண பூதனான ப்ரஹ்மாவை பெற்று வைத்து-
திருத் தோள்களாலே காத்துக் கொண்டு இருக்கிறவன்

பாழி-
இடமுடைமை –
பஹுஸ் ஸ்யாம் வஷ்டப்த-ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –

புத்ரஸ் தே ஜாத -என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் எம்மனார் -என்று கொப்பூழ் அழகைக் கண்டு கிடக்குமவள் இறே

யம் தோள் –
உழறு பால் -ரக்ஷகமும் தானேயாய் -போக்யமும் தானேயாகை-
சுந்தரத் தோளுடையான் இறே -படவடித்தாலும் விட ஒண்ணாது-

பற்பநாபன் -கையில் -ஆழி போல் மின்னி –
சிருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை சிருஷ்டித்த திரு நாபீ கமலத்தை உடைய-சர்வேஸ்வரன் கையில்-திரு ஆழியோ பாதி மின்ன வேணும்-இந் நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில் –

பிள்ளை பெற்ற ஹர்ஷம் விஞ்சி இருக்கச் செய்தேயும்-காம்பீர்யத்தாலே அது தோற்றாது இருப்பர்கள்-
அவ்வவர்க்கு உரிய அகம்படியரானவர்கள் அந்த ப்ரீதிக்கு போக்கு விட்டு நெய்யாடல்-போற்றிக் கொண்டு திரியுமா போலே
பிரதம ஜனானான ப்ரஹ்மா உண்டான பின்பு-
சர்வேஸ்வரனுக்கு பிறந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கொண்டு ஆடினான் திரு ஆழி ஆழ்வான் –
ஆகையாலே அவனை ஒப்பாக சொல்லுகிறது –

பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்-
பாழி-
இடமுடைமை என்னுதல்-
வலி என்னுதல் –

பஹுச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மன
ரஷ்ய வர்க்கம் அடையத் தோள் நிழலிலே ஒதுங்கினாலும் -ஆள் சுருங்கி நிழல் பெருத்து இருக்கை –

அம் தோள் –
நோக்காதே படு குலை யடிக்கிலும் விடப் போகாதே தோள் –
உழுது பால் -ரக்ஷகமானது தான் போக்யமாய் இருக்கை –
சுந்தரத் தோளுடையான் இறே

பற்ப நாபன் –
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் -என்று தான் தோற்று இருக்கும் துறை
பற்ப நாபா ஓ -நம்மாழ்வாரைக் கூப்பிடப் பண்ணிற்று இறே

பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி-
புத்ரஸ் தே ஜாத -என்று பிதாவானவன் அளவுடைமையாலே பேசாது இருந்தாலும்
உரிய அடியார் பக்கலிலே இறே உகப்புக் காணலாவது –

அங்கைத் தலத்திடை யாழி கொண்டான் -என்று
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகிய கையிலே பிடித்த திருவாழி போலே மின்னி –

ஆழி யோடும் -என்று
வெளிச் சிறப்பிக்கைக்கும் –
மதி கெடுக்கைக்கும் பரிகரம் அதுவே இறே

பலிஷ்டமாய்-சர்வ அபாஸ்ரயமாய்-அதி சுந்தரமான புஜங்களை உடையனாய்
சமஷ்டி சிருஷ்டிக்கு கடவனாய் பிரம்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான திரு நாபீ கமலத்தை உடைய-
எம்பெருமான் உடைய திருக் கையிலே இருக்கிற திரு ஆழி ஆழ்வானைப் போலே-
காருண்யா சிருஷ்டிக்கு கடவரான எம்பெருமானை
யோக பலத்தாலே-சாஷாத் கரிக்கையால் வந்த மிக்க புகரை உடையராய்-

வெறும் புறமே அமையும் -அதுக்கு மேலே திருவாழி-
ராஜாக்களுக்கு பிள்ளை பிறந்தால் காம்பீர்யத்தால் அவர்கள் தங்கள் பேசாது இருக்க
உரிய வடியார் நெய்யாடல் போற்றுமா போலே திருவாழி நின்று ஜ்வலியா நிற்கும்
ஆழியோடும் பொன்னார் சாரங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வெளிச் செறிப்பிப்கைக்கும் அழிக்கைக்கும் பரிகரம் அதுவே

பஹுஸ் ஸ்யாம் அவஷ்டப்த யஸ்ய லோகாத் மஹாத்மன –
(திருவடி முதல் வார்த்தை -பெருமாளைக் கண்டவுடன் )
ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –
(தாரை வாக்கியம் -நாமி பலம் இது -அங்கு நாம பலம் )

———-

வலம் புரி போல் நின்று அதிர்ந்து-
பாரத சமரத்தில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி போலே இருக்க வேணும்-
அனுகூலர் வாழவும் பிரதி கூலர் முடியவும் ஆக வேணும் -நின்று அதிர்ந்து –
அது போல் ஒரு கால் முழங்கி விட ஒண்ணாது-மாறாதே நின்று அதிர வேணும் –

வலம் புரி போல் -நின்று அதிர்ந்து-
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்னா –
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -என்னுமவர்கள் இறே –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்று செவி மடுத்துக் கிடக்குமது இறே உண்பது சொல்லில் ஒண்ணாது மாறாதே நின்று அதிர வேணும்

இவ் விடத்திலும் பற்ப நாபன் கையில் என்று அநு ஷங்கிக்க வேணும்
அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து
அதாவது-
பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –

பாரத சமரத்தில் பாஞ்ச ஜன்யம் போலே முழங்கித் தோற்ற வேணும்
ச கோஷா தார்த்தாஷ்ட்ராணாம்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-
கை கழலா நேமியான் –இத்யாதி
ஸ்த்ரீத்வத்துக்கு முலை போலே அவனுடைய பும்ஸத்வத்துக்குத் திருவாழி

வலம் புரி
உண்பது சொல்லில் உலகலந்தான் வாயமுதம் –
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக் கால் -என்று தம் துறையில் உள்ளது இறே
தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே யன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினார் பெறுமா போலே பெற வேணும்
தேவ மாத்ருகம் போல் அன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் நதி மாத்ருகம் போலே சரதம் என்கை

வலம் புரி போல் நின்று அதிர்ந்து –
இவ்விடத்திலும் பற்ப நாபன் கையில் என்று அநு ஷங்கிக்க வேணும்
அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து
அதாவது-
பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை

வாழ —-
லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி
உலகினில்–லௌகிகர் இடங்களில்–பெய்திடாய்–பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

———

தாழாதே –
நோன்பிலே நின்று உபக்ரமித்து-
உபவாச க்ருசைகளாய் இருந்த எங்கள் வடிவு இருந்தபடி கண்டாய் இறே
அத்தனை கால விளம்பத்தோடே ஆக ஒண்ணாதே
ஆர்த்திக்கு முற்பாடனாய் ரஷிக்கும் ஈஸ்வரனைப் போல் ஆக வேணும்
தேவ மாத்ருகம் -வானம் பார்த்த நிலம் -போல் அன்றிகே
பகவத் சமாஸ்ரயணம் நதீ மாத்ருகம் போலே -சரதம் -என்கை –

தாழாதே –
நோன்பிலே நின்று உபக்ரமித்து உபவாச க்ருசைகளாய் இருந்த –
பொதுவாக உண்பதனை -என்று தான் சீறு பாறு என்னுமவர்கள் இறே –

நின்று அதிர்ந்து –
பாரத சமரத்தில் போலே ஒருகால் அதிர்ந்து விட ஒண்ணாது –
ஹர்தயா நிவ்யதாரயத்–என்று எதிரிகள் நெஞ்சு பிளக்கும் படி சப்திக்க ஒண்ணாது –
நாங்கள் வாழும்படி நின்று முழங்க வேணும் –

ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து –
இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு முலைகள் போலே இறே அவனுடைய பும்ஸத்வத்துக்கு திவ்யாயுதங்கள் –

தாழாதே –
தம் தாமை ஆஸ்ரயித்தார் நோவு பட ஆறி இருக்கும் தேவதாந்த்ரங்களைப் போல் அன்றிக்கே –
மித்ர பாவமே அமையும்-விளம்பம் பொறேன்-என்ற சக்கரவர்த்தி திரு மகனைப் போலே யாக வேணும் –

(கீழே உலகு அளந்த உத்தமன் ஸ்பஷ்டம் -இதில் சக்ரவர்த்தி திருமகன் ஸூ சகம் -அடுத்து மதுரை மைந்தன் )

தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே அன்றிக்கே
பகவத் ஸமாச்ரயணம் பண்ணினாரைப் போலே பெற வேணும் –

கர்ம அனுகுணமாக வரும் பலத்துக்கு இறே தேவமாத்ருகம் போலே விளம்பம் உள்ளது –
பகவத் ஸமாச்ரயணீயம் நதீ மாத்ருகம் போலே
சரதமுமாய்
நிச்சயமுமாய் – தாழ்ப்பதும் செய்யாதே ஒழியும் இறே

தசாரதாத்மஜன் -சரணம் என்று புகுந்தவர்களைக் கொண்டு அல்லது தரியாதாப் போலே வர வேணும் என்கை

——

சார்ங்கம் உதைத்த சர மழை போல்-
இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்-சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று –
எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –

சார்ங்கம் உதைத்த –
அகம்படியர் -சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இறே
அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும்-விலக்க ஒண்ணாதாய் இருக்கை-அகம்படியர் கோபித்தால் பின்னை அரசனால் மீட்கப் போகாது இறே
அவஷ்டப்யமஹத் தநு -பெருமாளால் அமைக்கப் போகாமை பற்றிக் கொண்டு நின்றார் அத்தனை –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே

சர மழை போல்
சர வர்ஷம் வவர்ஷ ஹ

அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான-
பகவத் காருண்ய வர்ஷத்தை

பெருமாள் கடைக் கணிக்கும் போதும் பெருமாளைப் பார்த்துப் பின்னைத் தானே பராக்ரமிக்கும் என்கை
பின்னை தானே பராக்ரமிக்கும் -அகம்படி கிளர்ந்தால் அரசனால் விலக்கப் போகாது இறே –
அவஷ்டப்ய மஹத் தநு–பெருமாள் தம்மால் அமைக்க ஒண்ணாம் பிடித்துக் கொண்டு நின்று ஊசலாடினார்
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் –

ஆழி மழை -வார்த்தை முறைப்பட்டது
சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று

———-

வாழ உலகினில் பெய்திடாய் –
த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்-
அழகிது -ஈஸ்வர ஆஞ்ஞையாலே நான் முன்பே அதிகரித்த தொரு கார்யம் அன்றோ –
இங்குத்தைக்கு நான் கிஞ்சித் கரித்தவனாம்படி என் என்ன –

வாழ உலகினில் பெய்திடாய்
சரம் போலே முடிக்க ஒண்ணாது –
அங்கு எதிரிகளான ராக்ஷசர் மேல் விட்டால் போலே அன்றிக்கே ஜகத்தடைய வாழ வேணும் லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

———

நாங்களும் மார்கழி நீராட –
நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக் கடவோம்-
அதுவும் முன்பே ஊராக நிச்சயித்த தொன்று அன்றோ –
இப்போது வந்த தன்னேற்றம் என் என்ன –

மகிழ்ந்து –
நாங்களும் நோன்பு நோற்றோமாய்
அந்த நோன்புக்கு பலமான வர்ஷமும் உண்டாய்த்தாய்-
கிருஷ்ணனோட்டை சம்ச்லேஷத்தால் மகிழ்ந்து நீராடக் கடவோம்

மகிழ்ந்து-
ஊரார்க்கு மார்கழி நீராடுகைக்கு மேலே ப்ரீதி பூர்வகமாக-குளிக்க வேண்டுவதொரு நிர்பந்தமும் இல்லையே-
உனக்கு பிரிய கரமாக புருஷார்த்தமாக – கிருஷ்ணனும் நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம் -என்கிறார்கள்-

ஈஸ்வரனாலே வர்ஷார்த்தமாக நியமிக்கப் பட்ட எனக்கு அடைத்த பணி யன்றோ நடத்துகிறது –
நீங்கள் இப்போது இரக்கிறது என் என்ன

நாங்களும்-மார்கழி நீராட -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-என்கிறார்கள் –
நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ –
நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி
ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –
இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்
ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்
என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

பகவத் கைங்கர்ய ஏக போகரான நாங்களும் -நோன்பு -என்கிற-வ்யாஜ்யத்தாலே-
பகவத் சம்ஸ்லேஷத்தைப் பண்ணி மகிழக் கடவோம்-அதாவது-
பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே
என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை

இப் பாட்டில்
வர்ஷ தேவதைக்கு அவன் அதிகரித்த கார்யத்தையே-தங்களுக்கு இஷ்டமாக நியமிக்கையாலே-
பகவத் பாகவத இஷ்டத்வேன-நித்ய நைமித்திகாதி தர்மங்களை
யதாவாக அனுஷ்டிக்கை-
பிரபன்ன அதிகாரிகளுக்கு அவசியம் என்றது ஆய்த்து  —

நாங்களும் கிருஷ்ணனும் மகிழ்ந்து குளித்துத் தருகிறோம் என்கிறார்கள் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி
நாங்கள் வியக்க இன்புறுதும் –
இவர்களுக்கு காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கது காலன்-என்ன வேண்டாவே –
கிருஷ்ணனைக் கண்டால் போலே இருக்க அமையும் –
ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜனகாத்மஜா உவாச தர்மஸஹிதம் ஹநூமந்தம் யசஸ்வி நீ –
தஹ பச -என்றும் –
கொள்ளை- கூத்து என்றும்
ராம கோஷ்ட்டியில் சொல்லும் வார்த்தையைச் சொல்லாதே
எங்கள் குடிப் பிறப்புக்கும்
பிறந்த மண் பாட்டுக்கும் தக்கபடி சத்ருக்களும் வாழ வேணும்
எங்கள் கோஷ்ட்டியில் வார்த்தையைச் சொல் என்று அருளிச் செய்தார் –

ஏல் ஓர் எம்பாவாய்-

———-

ஊழி முதல்வன் –
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடு தரணி எல்லாமும் — முன்னை போல்
தான் தோற்று மஃது சம நோக்கே! ஊன் உயிர்
கண் ஏற்றல் ஆம் தனி நோக்கு.

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

—————

இப் பிரபந்தத்திலே –
ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –
யாம் -என்றும் –
மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே
ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

(பாராசர்யா வச ஸூதாம் உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை ஸூ மநசோ பௌமா பிபந்து அந்வஹம்
ஷீரம்-சாரமானது–அப்தி – சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே முக்யார்த்தம் -சார தமம்-உத்த்ருத –ஆழமான ப்ரஹ்ம பரம்)

நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

ஸ்ரீ நம்மாழ்வாரை -ஆழி மழைக் கண்ணா-என்று விளித்து–ஆச்சார்ய பரம்பரையில் பிராப்தமான அர்த்தங்களை
உள் புக்கு முகந்து கொண்டு தேவபிரானுடைய கரிய கோலத் திரு உருவை உள்ளே விளங்கும்படி காட்டி அருளி–
திரு ஆழி ஆழ்வானைப் போலே விரோதி நிராசனம் செய்து கொண்டும் –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானைப் போலே கம்பீரமான மிடற்று ஓசையைக் காட்டிக் கொண்டு
ஸ்ரீ ஸூக்திகளைப் பெய்து உஜ்ஜீவிப்பிக்க பிரார்த்தனை

ஸ்ரீ லஷ்மீ நாதஸ்ய ஸிந்தோ –சடாரி -காருண்ய நீரம் -ராம மிஸ்ரர் புண்டரீகாஷர்-அருவிகள் மூலம் –
ஆளவந்தார் பெருக்காறு வழியாக
எம்பெருமானார் தடாகம் -நிறைத்து–74 மதகுகள் -–திக் கஜங்கள்-பயிருக்கு பாய்கிறது -நம் இடம்–நமக்கு
எம்பெருமானார் மேகம் -ஆழி மழைக் கண்ணா -செழும் கொண்டலே –
மறைப்பால் கடலை -தொண்டர்க்கு அமுது உண்ண —திரு நாவின் மந்தரத்தால் கடைந்து-துறைப்பால் படுத்தி–
தமிழ் ஆயிரத்தின் சுவை இன்பம் தவிர -சென்மம் விடாய்க்கு நிழல் இல்லை –

ஆச்சார்யர்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் -சிஷ்யர்களுக்கு -ஆத்ம ஞானம் -பால் ஊட்டி பொழிவதை ஓங்கி
இங்கு கருணா கடாக்ஷம் -ஞான வருக்ஷம்-பொழிந்து- தத்வ ஹித புருஷார்த்த சார தமம் –
வேத இதிஹாச புராண அருளிச் செயல் சாகரத்தில் –
ஆழி-கூர்மையான ஞானம் -பிரதிபந்தகங்கள் நிரசிக்கும் ஸாமர்த்யம்
அண்ணா -ஸ்வாமி -அபி நவ தசாவதாரம் -ஆழ்வார்கள் –
குண கண ஆர்ணவம் அன்றோ அருளிச் செயல்கள்
முகர்ந்து -சாத்மிக்க–புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -அர்த்த விசேஷங்கள்
ஆர்த்து -ஏறி -சிம்ம கர்ஜனை -பர மத நிரசனங்கள் -களைகளை அகற்றி பயிரை விளைக்கும்-போஷிக்கும் – க்ருஷிகன்
பயிரில் களை போல் அசுரரை களைந்தான் -தேசிகன் –

முதல் மூன்று பாசுரங்களால் ரஹஸ்ய த்ரயங்களும் -இதில் ஆச்சார்ய உபதேசமும் -என்றவாறு –
உபதேச திரு வாக்கு -ஓங்கார த்வனியும் -ஆழி போன்ற பிரகாசமும் உண்டே நம் ஆச்சார்யர்களுக்கு –
பஞ்ச சம்ஸ்காரம் -லாஞ்சனை உண்டே –

பகவதோஸ்ய தயையைக சிந்த்யோ -ஏரார் எதிராசர் இன் அருளால் –
ஆசை உடையார்க்கு எல்லாம் –
தாய்க்கும் மகனுக்கும் –இவர்க்கும் இவர் அடி பணிந்தோர்க்குமே இவை உள்ளது-
பஞ்ச ஆயுதங்களையும் சொல்லி -அடையார் –இந்த பூதலம் காப்பதற்கு இடையே ராமானுச முனி ஆயின–
கலியும் கெடும் கண்டு கொண்மின் -–பொலிக பொலிக பொலிக –தொல்லை வாதியருக்கு-வாழ்வு அற்றது
சார்ங்கம் உதைத்த சர மழை-போல்–வாழ உலகினில் பெய்திடாய் அடியார்கள் வாழ –
ஆசார்ய அபிமானம் தளைத்து ஓங்க

முதலாழ்வார் திருமழிசை பிரான் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானார் -மேகம் –கருணா ரச வர்ஷிகள்-
திருமால் சீர்க் கடலை உட் பொதிந்த சிந்தனையேன்
கல்யாண குணங்களை பருகி–திருமால் திருமேனி ஒக்கும்–உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
தீர்த்த கரராமின் திரிந்து–தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து–

தீங்கின்றி
அநர்த்த கந்தமும் இல்லாமல்-
இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோமே என்று வெள்கி–சிஷ்யர்கள் உஜ்ஜீவனம் தங்கள் பேறாக நினைத்து இருக்கும்-
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் ஆகிய முதல் ஆழ்வார்கள்-
உருவின வாளை உறையில் இடாது- அடியிலும் இடையிலும் முடிவிலும் தேவதாந்திர அப்ரத்வத்தையும்–
பகவத் பரத்வத்தையும் உபபாதிக்கும் திரு மழிசை பிரானும்
காரார் புயல் கை கலிகன்றி -அருள் மாரி ஔதார்யத்தில்–
மேகத்தை ஒத்து கருணையை வர்ஷிக்கும் திருமங்கை ஆழ்வார்
குணம் திகழ் கொண்டல் எம்பெருமானார்-

ஏறி
ஆச்சார்ய பதவியிலே ஏறி–
வலம்புரி போல்
பிரணவம் போல்–நின்று அதிர்ந்து வெளியிட்டு அருளி-

நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து–நீராட்டம் -ஐந்து பாசுரங்களில்
நீராடப் போதுவீர்–
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து–
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே–
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு–
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
கிருஷ்ண சம்ச்லேஷம் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ர்தம்
காலை நல் ஞானத் துறை படிந்தாடி -திருவிருத்தம்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம்
அப்பன் திருவருள் மூழ்கினாள்-

ஆச்சார்யர் =மேகம்
உப்புக்கடல் -மழை –வேத சாகரம் -திரு நா வீறு கொண்டு பரம போக்யமாக சாரார்த்தம்
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து -போலே
எண் திசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதி பேதைகாள் தீர்த்தகரராமின் திரிந்து –
திவ்ய தேசங்கள் எங்கும் எழுந்து அருளி ஆத்ம உஜ்ஜீவார்த்தமாக சார அர்த்த விசேஷங்களை பொழிவார்கள்
பள்ளத்தில் பொழியும் மழை போலே நீசர்களையும் உஜ்ஜீவிப்பார்கள்
மழை பொழியாமல் வாடுவது போலே உபதேசம் இல்லாமல் அல்வழக்குகள் மலியுமே
எவ்வளவு பொழிந்தாலும் திருப்தி இல்லாமல் -கைம்மாறு கருதாமல்
ஒன்றும் கை கரவாமல் -ஆசை உடையார்க்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் என்ற கட்டளை –
சர்வேஸ்வரனுக்கும் அன்றோ கை கொடுப்பார்கள் ஆச்சார்யர்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து –
குத்ருஷ்ட்டி குஹநா முகே நிபாதத பர ப்ரஹ்மண கரக்ரஹ விசேஷண –

மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை-என்று
பிள்ளை பலகாலும் அருளிச் செய்ய கேட்டிருக்கையாய் இருக்கும்

ஸ்வ ஸ்வா தந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று–
பகவத் ஸ்வா தந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று
ஆச்சார்யனைத் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோபாதி
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –

ஆழி மழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –
ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி –
74 சிம்ஹாசானாதிபதிகள் மூலம் -நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து-என்றவாறு –

லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்)

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

————

ஆழி மழைக் கண்ணா

கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகின்றதென்று சொல்லி (பெரியாழ்வார் திருமொழி 3.4.1)

வானத்தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி (பெரியாழ்வார் திருமொழி 2.10.9)

திரண்டெழுந்த மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே (பெரியாழ்வார் திருமொழி 3.6. 9)

ஒன்றிய திங்களைக் காட்டி ‘ஒளிமணி வண்ணனே’ என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி ‘நெடுமாலே! வா! என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் ‘நாரணன் வந்தான்’ என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே. [திருவாய்மொழி 4.4.4]

கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணொடென் செய் யுங்கொலோ? [திருவாய்மொழி 6.7.3]

கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே! [திருவாய்மொழி 7.2.7] .

பேரா யிரமுடைய பேராளன்……நீரார் மழை முகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்…(பெரிய திருமொழி 8.1.6)

தருமான ‘மழை முகிலை’ப் பிரியாது தன்னடைந்தார், திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை (பெரிய திருமொழி 8.9.2)

மன்னும் மழை தழும் வாலா நீண் மதி தோய், மின்னின் ஒளி சேர் விசும்பூரும் மாளிகை மேல்,
மன்னும் மணி விளக்கை மாட்டி- மழைக் கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப் படுத்த பள்ளி மேல்…….[பெரிய திருமடல் ]

அழைக்கும் கருங்கடல் வெண் திரைக் கை கொண்டு போய் அலர் வாய்
மழைக் கண் மடந்தை அரவணை யேற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேல் நின்றும்
ஆறுகளாய் மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே! [திருவிருத்தம்-52]

————

இப் பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும்,
பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

ஆழி மழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்

ஒன்று நீ கை கரவேல் – மூன்று மகா மந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்

ஆழியுட் புக்கு – வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து

முகந்து கொடு – அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து

ஆர்த்தேறி – கம்பீரமாக எழுந்து

ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து – கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால்,
ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்!
(பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)

இங்கே “மேகம்” என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!

எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல,
இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து
அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!

கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக
(உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்!

ஆழி போல் மின்னி – திவ்ய ஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற

ஆச்சார்யர்கள் (ஞானத்தால் ஒளி பெற்றதால்!) திருச் சக்கரமாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!

வலம்புரி போல் நின்றதிர்ந்து – ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்

தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் – ஞானத்தை மழை போல் பொழிந்து

நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில்
நாங்கள் சரண் புகுந்தோம் (“மார்கழி நீராட” என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது –
“ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து” எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
“ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து” எனும்போது வினை உவமையும்,
“சரமழை போல்” எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.

இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான “ழ” என்ற எழுத்து
“ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து” என்று
பதினோரு முறை வருவதைக் காணலாம்.

இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் !
பெரியாழ்வாரின் “குழல் இருண்டு” என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் “ழ” பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது –

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –

————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —ஓங்கி உலகளந்த —

December 20, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை –

ஸ்வர்க்கார்த்தமாக யஜிக்குமவனுக்கு -ஸ்வர்க்கம் பிரதானமான பலமாய் இருக்கச் செய்தேயும் –ஆயுராஸ்தே-என்கிறபடி-ஆயுஸ்ஸூ புத்ரன் என்று அவாந்தர பலமாய் இருப்பன சில உண்டாய் இருக்கும் –

இவர்களுக்கு அங்கனம் ஒன்றும் இன்றிக்கே
சர்வ லாபாய கேசவ —
மாதா பிதா பிராதா —
சேலேய் கண்ணியரும்-என்றும் எல்லாம் அவன் தானே யாகையாலே
தங்களுடைய நோன்புக்கு அனுமதி பண்ணினார்க்கு வரக் கடவதான பலம் இருக்கும் படியைச் சொல்லுகிறார்கள்

அநஸூயவே –என்று அஸூயையைப் பண்ணாது ஒழிய வமையும் இறே-அதிகாரிகள் ஆகைக்கு-

யத்ர அஷ்டாக்ஷர சம்சித்த இத்யாதியாலே ஒருத்தனைச் சொல்லக் கடவது –
ஆன பின்பு இவர்கள் இத்தனை பேர் இருந்தால் நாடு வாழச் சொல்ல வேண்டா இறே –

இவர்கள் முதலிலே தொடங்கி நாராயணன் என்று உபய விபூதி யோகத்தைச் சொல்லி
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று திருவவதார அர்த்தமாக பள்ளி கொண்டருளின படியைச் சொல்லி- அங்கு நின்றும் போந்து அவதரித்த அளவும் வர அடி ஒற்றுகிறார்கள்-

சேதனர் ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜேதே-என்று பிரதான பலம் ஸ்வர்க்கம் என்று இருப்பார்கள் –இனி ஆயுராசாஸ்தே -என்று தம் தாமுக்கு நன்மை வேண்டி இருக்கையாலே அவாந்தர பலம் புத்திரர்கள் க்ருஹ ஷேத்ரங்கள் த்ருஷ்டாதிகள் என்று இருப்பர்கள் –இவர்களுக்கு இரண்டுமே த்யாஜ்யம் இறே –உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னுமிதே இவர்கள் பிரதான பலமாக நினைத்து இருப்பது-

இனி அவாந்தர பலமாக நினைத்து இருப்பது தான் தங்கள் இருந்த நாடு சம்ருத்தமாய் இருக்கை – ஆகையால் இனி அதுக்கு அனுமதி பண்ணினார்க்கு ஆசைப்படும் அத்தனை இறே–ப்ரவஷ்யாம் யநஸூயவே (9-1)என்றான் இறே – அதிர்ந்து இருந்திராத மாத்திரமே இறே வேண்டுவது-அவன் உகப்பை பின் செல்லுகை ஸ்வரூபம் என்று இருக்குமவர்களே இவர்களும் –அவனும் பர சம்ருத்தயேக ப்ரயோஜனனே –(அதே போலும் தடுக்காமல் ஆபி முக்யம் செய்யாமல் இருந்தார்களே )

(யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் –நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே-ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் –அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்-நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்-நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்-மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –
முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு தானே ஆகதோ மதுரா நிலையன் –நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –-இது முதல் பேர் பாடுதல் தொடக்கம் -)

இப் பாட்டில் தங்கள் நோன்புக்கு அனுமதி தானம் பண்ணினாருக்கு வரக் கடவ-
த்ருஷ்ட பலத்தை சொல்லுகிறார்கள்-

தங்கள் நோன்பாலே லோகத்துக்குப் பலிக்கும் பலம் சொல்லுகிறது –
சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே-(பெரியாழ்வார் -3-6)என்று தங்களோடு ஒரு கோவையாகக் கூடுகை பரம புருஷார்த்தம் –அதில்லாத பின்பு ஐஹிக போக்யத்தை யாகிலும் இழவாதே பெற்றிடுவர்கள் என்கை —

நம்மார்த்தி தீர நாம் குளிக்க- நாடு வாழப் பெறுவதே -என்கிறார்கள் –
ருஷ்யருங்கன் திருவாயோத்த்யையிலே –அங்க தேசத்திலே ?-புகுந்த பின்பு
அநா வ்ருஷடி நீங்கி ஸம்ருத்தமானால் போலே –
ஸ்ரீ பரத ஆழ்வான் வியசனம் தீர -நாடு ப்வ்ரஹ்ருஷ்டம் உதித-ஆய்த்து இறே-
இவர்களும் கிருஷ்ணனும் கூடின பின்பு நாட்டுக்கு வ்ருஷ ஸம்ருத்தி இறே –
இவர்கள் விஸ்லேஷமே இறே நாட்டுக்கு அநா வ்ருஷடி —

பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே-ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

அஷ்டாக்ஷரம் -மார்கழி
த்வயம் வையத்து –
சரம ஸ்லோகம் ஓங்கி
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –

மகாபலி அதமன்–
இந்த்ரன் மத்யமன்–
இவன் அழிய மாறி உத்தமன்

அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –

ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்-
உத் -உத்தர –உத்தமன் –இத்தால் பர வ்யூஹங்களை கழித்து விபவம் –
அதிலும் -திருவிக்ரம -ராம -அவதாரங்களைக் கழித்து -வட மதுரை யில் -ஒருத்தி மகனாய் பிறந்த கோவிந்தன்

உலகளந்த உத்தமன் -பாற் கடல் துயின்ற பரமன் உத்தரன்-நாராயணன் -உத்-தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்டம்-உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்

நாராயணனே- பரம் தத்வம் -பரம் ஜோதி -பரம் ஆத்மா -பரம் ப்ரஹ்மம் –
இத்தையே நாராயணன் -பையத்துயின்ற பரமன் -உத்தமன் –
உத்க்ருஷ்ட -உத் -விவரணம் திருவாய்மொழி -தாரதம்யம் -தர தமம்

உயர்வற உயர்நலம் உடையவன் -குணங்களில் முதலில் இழிந்தார் நம்மாழ்வார் –
திவ்ய மங்கள விக்ரஹ அழகில் இழிந்தார் திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ வால்மீகியும் கோன் வஸ்மி குணவான் என்று உபக்ரமித்து
ஆண்டாளுக்கு ஸ்வரூப ரூப குணம் சேஷ்டிதங்கள் அனைத்தும் வேண்டுமே –

மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி
அனந்தரத்தில் —அதில் உக்தமான வ்யாப்த்திக்கு பிஜ்ஞ்ஞாகரமான
த்ரைவிக்ரம அபதானத்தை–அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே

மார்கழி வையத்து ஓங்கி –பக்தி யோக பிரபத்தி –ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபத்திக்கு ஐந்து அங்கங்கள் -பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –

பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

———–

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-

வியாக்யானம்
ஓங்கி –
ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் –
உவந்த உள்ளத்தனாய் -என்னக் கடவது இறே

அங்கன் இன்றிக்கே
இரப்பு பெறுவதற்கு முன்பு வாமனன் ஆனவன் இரப்பு-வாய்ந்த ப்ரீதியாலே வளர்ந்த படி ஆகவுமாம்-கையிலே நீர் விழுந்த பின்பு வளர்ந்த கடுமை-ப்ரஹ்மா திருவடிகள் விளக்கின நீரும் கூட விழுந்த படி-தாரா ஜலமும் ஸ்ரீ பாத தீர்த்தமும் கூட விழும்படியான வேகம் சொல்லிற்று-

ஓங்கி –
கீழில் பாட்டாலே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றார்கள் –
ஆர்த்த ரக்ஷணத்துக்காக இறே இக்கிடை-இந்த்ராதிகள் ஆர்த்த த்வனி கேட்டு ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து அவர்கள் கார்யம் செய்த படி-ஓங்கி –என்கையாலே இவ் வளர்த்திக்கு பூர்வ தசையில் வாமனத்வம் தோற்றுகிறது-(தசாவதாரங்களில் வாமனன் சொல்வதால் திரி விக்ரம அவதாரமும் ஸூசகம் ஆவது போல் இங்கும் )

இந்திரன் கண்ணீர் கொண்டு சிறாம்பின படியும்-மஹா பலி நீர் வார்த்தவாறே வளர்ந்த படியும் –பனி பட்டுச் சாய்ந்த மூங்கில் ஆதித்ய கிரணம் பட்டவாறே வளருமா போலே அபேக்ஷிதம் பெற்று வளர்ந்த படி-

சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே-சிறுப்பது பெருப்பதாகிறது–சம்சாரிகளுடைய வ்ருத்தி ஹ்ராசாதிகள் கர்ம அனுகுணம் ஆகையாலும்- ஸ்வார்த்தமாகையாலும் – தோஷாய ஆகா நிற்கும் –ஸர்வேஸ்வரன் செயல் பரார்த்தமாகையாலும் கிருபையால் யாகையாலும் குணாயாவாம் அத்தனை இறே –

ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் போது சம்சாரிகளுடைய இழவுக்கு திரு உள்ளம் நொந்து இருக்கும் -என்று பட்டர் அருளிச் செய்ய – சிலர் அத்தைக் கேட்டு அவாப்த ஸமஸ்த காமனாய் – நிரதிசய ஆனந்த யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு ஓர் இழவு உண்டோ திரு உள்ளத்தில் என்ன-வியசநேஷூ மனுஷ்யாணாம்-என்கிறது குண பிரகரணமோ -தோஷ பிரகரணமோ -என்று அருளிச் செய்தார் –

துக்கித-என்னா நிற்கச் செய்தே குணம் ஆகிறது இறே-ப்ருசம்-இவர்கள் அளவல்ல திரு உள்ளம் நொந்து இருக்கிற படி –இவன் தன் காவல் சோர்வாலே அன்றே படுகிறது
பவத் விஷய வாஸின –என்று எல்லைக்கு உள்ளே கிடக்கும் அத்தனை இறே இவனுக்கு வேண்டுவது –

பவதி -இவன் வியஸனம் கழிந்த வாறே உண்டு புடைவை உடுத்தி வெற்றிலையும் தின்று ஸூகித்துப் போம் –ரிணம் ப்ரவ்ருத்தம் இவம் மே -என்று உள்ளதனையும் இழவு பட்டு இருக்கும் அவன் –இங்கனம் இருப்பது திவ்ய அந்தப்புரத்துக்கோ என்னில்-மனுஷ்யாணாம்-ஜெனிதர்மாக்கள் எல்லார்க்கும் –

மாறனேரியில் -ராமானுஜ தாஸன் என்பார் ஒருவர் –அவன் வருகிற படியைக் கண்டு கடக்கப் போ என்பதே –நாலடி விலங்கிப் போதல் -இல்லையாகில் ஒரு முழுக்கு இட்டுக் கொள்ளுதல் செய்ய நன்றி அடுப்பது என்ன-சண்டாளனானே யாகிலும் ஆர்த்தனான சமயத்தில் ( த்விஜர்) அல்லாதார் விலங்கிப் போவார் –த்விஜனாகில் அவன் விலங்குவான் -என்று விதி விசேஷித்த அம்சம் அழிந்ததே-என்று அவர்கள் சொல்ல – கெடுவிகாள்-விதி பூர்வகமாயோ கிருபை இருப்பது -என்று அருளிச் செய்தார் –

பாபா நாம் வா சுபா நாம் வா -என்றாள் இறே பிராட்டி –இவர்களுடைய பூர்வ வ்ருத்தம் கிடக் கிடாய் –உன் கையிலே அகப்பட்டு வத ப்ராப்த்தைகளாய் நிற்கிறமை மெய்யே என்கிறார்கள் –ஆகையால் ஸர்வேஸ்வரன் செயல்களுக்கு எல்லாம் குணாதிக்யம் உண்டு அத்தனை இறே-ஏகதா பவதி -த்விதா பாவதி -என்று முக்தரும் பரார்த்தமாக பல வடிவு கொள்ளா நின்றார்கள் இறே –அதுவும் குணத்திலே செருகா நின்றது இறே –

சம்சார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக-பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி-ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்-ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே-சத்வ உத்ரேகம் பிறந்து-அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று- ரஷக அபேஷை பிறந்தவாறே-அதுவே விளை நீராக அபி விருத்தனாய்

ஓங்கி –பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே –உவந்த உள்ளதனாய் யுலகமளந்து அண்டமுற நீண் முடியன்-பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை –
ஓங்குகைக்கு அடியான வெய்யில் அங்கு –இங்கு ஆர்த்த நாதம் –வளர்ந்த சடக்கு –
கையில் விழுந்த நீரும் ப்ரஹ்மா திருவடி விளக்கினை நீரும் ஓக்க விழும் படியாகை –

ஓங்கி – வளர்ந்து-என்றும் நிமிர்ந்து என்றும் உகந்து என்றும் விரைந்து என்றும்-ஓங்கி உயர்ந்த -குணங்களால் உயர்ந்து என்றும்-ஓங்கி பேர் பாடி என்றுமாம்

விஸ்வரூபம் எடுத்துக் எல்லோரும் வீடு பெற்றால் உலகில்லையே -உலகு வேத சாஸ்திரம் -கீதா சாஸ்திரம் எழுவதற்காக ஏழு நூறு ஸ்லோகங்கள் –ஓங்கி பலம் அளிப்பவன் -கண்ணனே ஓங்கி உலகளந்த உத்தமன் -ஓங்கி மத்ஸ்யம் dolphin என்றுமாம் –பாண்டியர் மீன் கொடி -உலகளந்த உத்தமன் –ஓங்கி உயர்ந்த -குணங்களால் உயர்ந்து உலகங்களை ஜெயித்தவன் ராமன் -சத்யேன லோகான் ஜெயதி -புருஷோத்தமன்- ஓங்கி -உறுதியாக தெளிவாக கம்பீரமாக உபதேசிக்கும் ஆச்சார்யர் -உலகளந்த -ஸாஸ்த்ர ஞானம் -ஸ்திர தீ –

—————–

உலகு அளந்த-
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-

வ்யாப்திக்கு கருத்து
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக –
இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது
இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்-
உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-

வரையாமையும் –
அதி மானுஷ சேஷ்டிதங்களும்-
வடிவு அழகும்-
கிருஷ்ணாவதாரத்தொடு ஒத்து இருக்கையாலே
ஸ்ரீ வாமன அவதாரத்தை அனுபவிக்கிறார்கள்

உலகளந்த-
எதிர்த்தலை அறிந்து அபேக்ஷிக்கப் பெற்றது இல்லை கிடீர் –
என்னிது மாயம் -என்னப்பன் அறிந்திலேன் -என்ற நமுசிப் பிரப்ருதிகளைப் போலே
விலக்குகை இல்லாமையே பற்றாசாக செய்தது அத்தனை கிடீர் –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-என்று ஆசைப்பட்டு மடல் எடுக்க வேண்டும் படியான அத் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் மோடையும் அளந்தது –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று -என்றும் –
நீ அணியாய் -என்றும்
இரந்து பெற வேண்டும் கையைக் கொண்டு கிடீர் இரந்தது –

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்–
ஈஸ்வரன் உடைமையை -என்னது என்று இருந்தவன் பக்கலிலே குணம் கொண்டு –
தன்னுடைமையை -தன்னது என்று எல்லை நடந்து கொண்டவன் பக்கலிலே குற்றம் கொள்வதே –

நீள்வான் குறள் உருவாய் (திருமங்கை )-வளருகைக்கு நரிப் (கள்ளப் ) பூணூல் இட்டது அத்தனை –

தக்கணைக்கும் மிக்கானை -பூஜ்ய தமன் ஆனவனை -கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோமே-(பெரிய திருமொழி -7-2 )
எறும்புப் புற்றிலும் பாம்பு புற்றிலும் துளை போல் இவை –
பிலேபதோ ருக்ரம-சர்ப்பங்கள் புகும் பிலத்தோடு-அச் செவிகளோடு வாசி இல்லை –

இருக்க ஸ்ரீ வாமனாவதாரம் பிரசங்கிப்பான் என் என்னில்
செய்யும் ஆனைத் தொழில்களும் —
ஆஸ்ரித பக்ஷ பாதமும் –
வடிவு அழகும் –
வாத்சல்யமும் –
அவன் ஒரு வூருக்குக் கை யாளானால் போலே
இவன் ஒரு நாட்டுக்காக எளியனான படியாலுமாக-அணைந்து இருக்கையாலே சொல்லுகிறார்கள் –

ஆபிமுக்யம் உடைய சேதனனை மாத்ரம் அன்றிக்கே
எமர் –கீழ் மேல் – ஏழ் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் என்கிறபடியே
அவனோடு சம்பந்தம் உடைய அனைவரையும் தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷமாக்கிக் கொண்ட

இத்தால்
அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை
மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது

 

————–

உத்தமன் –
இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினான் ஆக அன்றிக்கே
தன் பேறாக நினைத்து இருக்கிறபடி-
பிறரை ஹிம்சித்து தான் வாழ வேண்டும் என்று இருக்குமவன் அதமன்
பிறரும் ஜீவிக்க வேணும் தானும் ஜீவிக்க வேணும் என்று இருக்குமவன் மத்யமன்
தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —

உத்தமன் ஆகிறான் —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்கிறபடியே-என்னையும் என்னுடைமையையும் நேர்ந்தாகிலும் ஆஸ்ரிதற்கு ஓரம் கொடுத்துச் செய்யக் கடவோம் -என்று இருக்குமவனே –அன்று கரு மாணியாய்(இரந்த கள்வனை -இரண்டாம் திரு )-உனக்கு வேண்டிச் செய்தாயோ –உன்னுடையார்க்கு வைத்த சந்தான சாபம் இறே

உத்தமன்
தன்னை அழிய மாறி ஆகிலும் பிறர் கார்யம் செய்யுமவன் ஆகையாலே உத்தமன் என்கிறது-தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –ந தே ரூபம் ந சாகார–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது
நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை

உத்தமன்
சர்வாதிகன் -என்கை –
தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்–அது தன் பேறாய் இருக்கையும் –-ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே-இவனே பரதத்வம்

தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே –
ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –( பர கத ஸ்வீ காரம் )

———-

பேர் பாடி –
இக் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –

பேர் பாடி
திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை

உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை –
முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி-
இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்-
இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும் திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –

திருமங்கை ஆழ்வார் மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி அனந்தரத்தில் –
அதில் உக்தமான வ்யாப்த்திக்கு அபிஜ்ஞ்ஞாகரமான–த்ரைவிக்ரம அபதானத்தை-அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே

உத்தமன் பேர் –
அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்–அவனுக்கும் திரு நாமத்துக்கும்-கட்டிப் பொன் போலே அவன்-பணிப் பொன் ஆபரண பொன் -போலே திருநாமம் – அவன் தன்னை இல்லை செய்கிறவர்களும் திரு நாமத்தை-கொண்டு கார்யம் கொள்ளா நிற்பர்–அதாவது வியாதி பரிகார அர்த்தமாக திரு நாம சங்கீ ர்தனத்தை விதித்தால்- அத்தை அப்போதே செய்யா நிற்பர்கள்-

இனி மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன பிராப்தி உண்டாம் போலே
திரு நாமம் சொல்லுகைக்கு எல்லாருக்கும் பிராப்தி உண்டாய் இருக்கும்
திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா இது தானே யோக்யதையை பண்ணிக் கொடுக்க வற்று-

பேர் பாடி –
கழஞ்சு மண் பெறுவாரும்–இழப்பாருமாய்- அதில் லாபம் அலாபம் இறே அவர்களுக்கு உள்ளது –அங்கன் இன்றிக்கே பேர் பாடுகையே எங்களுக்கு உத்தேச்யம் என்கிறார்கள் –வாஸ்ய பூதனானவன் சத்தியை உண்டாக்கும் –
அவனுக்கு வாசகமான திரு நாமங்களாலே இறே அனுபவிப்பது –

திரு நாமம் சொல்லுகைக்கு அதிகார ஸம்பத்தி வேண்டாவோ -என்று நஞ்சீயர் பட்டரை கேட்டருள- யோக்யனாகில் இருந்தபடியே சொல்கிறான் அயோக்யனாகில் யோக்யதை சம்பாதிக்க வேண்டா -என்று அருளிச் செய்தார் —
எங்கனே என்ன-மேல் உள்ள நன்மைகளை தரக் கடவதாக விஸ்வசித்தவனுக்கு
கீழ் உள்ள விரோதிகளையும் போக்கா மாட்டாதோ-என்று அருளிச் செய்தார் – கங்கையாடப் போமவனுக்கு வேறொரு குழியிலே முழுகிப் போக வேணுமோ – மாத்ருகாதனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன -பிராப்தி உள்ளவோபாதி பகவத் விஷயத்தில் விரோதித்தார்க்கும் திருநாமம் சொல்லப் பிராப்தி உண்டு –

விரோதியைப் போக்கி திரு நாமம் சொல்ல வேணும் என்னும் விளம்பம் பொறாதவன் இறே இதுக்கு அதிகாரி –-கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -கிருஷ்ணனுக்குத் தன்னை தநுவாக ஸ்மரிப்பான்- பிரகாரமாக ஸ்மரிப்பான் -என்றபடி –

பரம் –
அவனில் மேற்பட்டார் ஒரு சேஷி உண்டாகில் இறே தனக்கு பிராயச்சித்தம் பண்ண வேண்டுவது –

பேர் பாடி –
ப்ரீதி பூர்வகமாகப் பாடுகை -ஆர்வத்தால் பாடாதார் (11-7-4)-என்னுமா போலே –
(ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -நம்மாழ்வார் )

உத்தமன் பேர் பாடி
உத்தமன் பேர் உண்டு -அவனுடைய-வாத்சல்ய பிரகாசகமான திரு மந்த்ரம்-
அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி

பேர்
பிறர்க்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-திருநாமத்துக்கும் அவனுக்கும் உள்ள வாசி –
ஒருவன் திரு நாமத்தைச் செவியில் சொல்லி உறவை அறிவித்துத் தலையிலே திருவடிகளை வையாமையாலே யன்றோ-எனக்கு உன் திருவடிகள் சம்பந்தம் அந்தராத்மத்தையோடு ஒத்து நிலையில்லாதே போய்த்து

(நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே-தன் சரண் தந்திலன் தான் அது தந்து -இது தானே எல்லா ஸூத்தியையும் பிறப்பிக்கும்(பூதாஸ்மி ரகு நந்தன -சபரி சத்தை பெற்றாளே )

எம்பெருமானை ஒழிந்த ஸூத்திகள் இவனுக்கு துரபிமானத்தைப் பிறப்பித்து எம்பெருமானை அகலப் பண்ணும்-அவன் பண்ணும் ஸூத்தியே ஸூத்தியாக தான் அஸூத்தன் என்று இருக்குமவனுக்கு –தானும் தன்னை விட்டு -பிறரும் தன்னைக் கை விட்டு எம்பெருமான் பரிக்ரஹிக்கைக்கு உடலாகி விடும்

(அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||-ஶ்லோகம் 65 –எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)

கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும் திரு நாமம் வேணும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும் விரோதி போகைக்கும்
பக்திமானுக்கு விரோதி போகைக்கும் பக்தி வர்த்திகைக்கும்
பிரபன்னனுக்கு சோறும் தண்ணீரும் போலே தேஹ யாத்ரைக்கும் வேணும்
இப்படி எல்லார்க்கும் திரு நாமம் வேணும் -வேறே ஒன்றும் இது போல் இல்லை

பாடி
ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -(பெரிய திருமொழி-11-7-4 )–என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் –

(கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய்  மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ -11-7-4-)

உத்தமனை விட உயர்ந்த பேர் -கார்மேனி முதலில் அதை விட உயர்ந்த -பரமன் அடி -அதை விட உயர்ந்த -இங்கு பேர் –

————

நாங்கள்
திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்-
நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-
தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள் என்னவுமாம்

நாங்கள்
பாடி மடி கோலாதே-
இது தானே பிரயோஜனமாக யுடைய நாங்கள் –பாடி நெய் உண்ணோம் -என்றவர்கள் பாட்டு இறே-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-என்று இருக்குமவர்கள் இறே-என்னையும் கொடுத்து என்னுடைமையும் கொடுத்து என்கிறார்கள்-பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே

——-

நம் பாவைக்கு
ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு

பாவைக்கு சாற்றி நீராடினால் –
நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால் -என்றுமாம்

பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக-கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணினால்-பலமும்-பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை-

நம் பாவைக்குச் சாற்றி
நாட்டார்க்கு நோன்பு என்று ஓர் பேரை இட்டு

நீராடினால்
விரஹ தாபம் போகக் குளித்தால்

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி
அநந்ய உபாயரான நாங்கள்-ஸ்வயம் பிரயோஜனமான நோன்பை-உத்தேசித்து
வ்யாஜ்யமாக்கி-

நீராடினால்-
பகவத் அனுபவத்தைப் பண்ணினால்

நம் பாவைக்கு
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை —
அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை
பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் (நோன்பு -உபாயம் அல்லவே -பெறு வித்தவனுக்கு கைங்கர்ய மாத்திரமே)

சாற்றி நீராடினால்
நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்-
வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை –
ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹ தாபம் தீரும்

சாற்றி -சாற்றுமுறை -வெளியில் சம்ருத்தம் -மனசில் கிருஷ்ண அனுபவம் -அஸ்வத்தாமா குஞ்சர போல் -அனைத்துக்கும் அளிப்பவன் அன்றோ- நீங்காத செல்வம் -அவள் மூலம் அன்றோ இவர்கள் பெறுவார்கள் -செல்வத் திருமாலால் எங்கும் நிறையும் –

————-

தீங்கின்றி நாடெல்லாம்
நாட்டில் வியாதி துர்பிஷ்யாதி அமங்களங்கள் எல்லாம் போய் சம்ருதமாய்-
தம்தாமுடைய ஸூக்ருதம் அனுபவிக்கில் இறே அவ்வளவில் நன்மை யாவது
தம்தாமுடைய புண்ய அனுகுணமாக வன்றிக்கே-
பெருமாள் உடைய பாக்யத்தாலே என்று ராஜ்ஜியம் சென்றாப் போலே-
இவ் ஊரே அன்றிக்கே இவ் ஊருடன் சம்பாத்தித நாடெல்லாம் மங்களம் ஆகை

தீங்கின்றி நாடு எல்லாம்
யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ-மஹாபாகோ -மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா –அவித்யாதி சகல துரிதங்களும் போய்-
இவர்கள் தாங்களும் முதல் தன்னிலே நாராயணனே -என்று துணிந்து இறே இழிந்து –

நாடு எல்லாம் –
இத் திரளிலே உண்டாய்ப் போகிறது அன்றே பகவத் சம்பந்தம் – அசல் தாக்கும் இறே
தேவப் பிள்ளைக்கு -லோக ஹிதார்த்தமாகக் காண் நீ போகிறது -என்று அருளிச் செய்த வார்த்தை-(ஸ்ரீ முதலியாண்டான் வம்சத்தவரான ஸ்ரீ குமார அண்ணாவிலப்பன் ஸ்வாமிகளை
ஸ்ரீ மா முனிகள் ஆச்சார்யரான தமது திரு விக்ரஹம் கொடுத்து அருளி தம்மை விட்டுப் பிரிந்து ஸ்ரீ காஞ்சிபுரம் சென்று லோக ஷேம அர்த்தமாக இருக்க நியமித்து அருளினார் அன்றோ )

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கிக் கொண்டே இறே இருப்பது
தீதில் நன்னெறி காட்டித் (பெருமாள் திருமொழி )
தீர்த்த கரராமின் திரிந்து (இரண்டாம் )இறே
கலியும் கெடும் -என்னும் படி இறே –

தீங்கின்றி நாடு எல்லாம் –
ராமே ராஜ்ஜியம் பிரசாஸதி -என்கிற நாடு போலே –
நகராணி ச ராஷ்ட்ராணி தநதான்ய யுதா நிச
தம் தாம் புண்ய பாப அநு குணமாக அன்றிக்கே பெருமாள் சென்ற நிலையால் நாடு வாழ்தல் போலே –

தீங்கின்றி-
தேகாத்மா அபிமானாதி தோஷங்கள் ஒன்றும் இன்றிக்கே

தீங்கின்றி நாடெல்லாம் –
எல்லாப் பொல்லாங்குகளும் போகை–-தந்தாம் பண்ணின புண்ய பலமென்றே அனுபவிக்கிறது -சேஸ்வரமான ஜகத்தடைய வாழ –

————-

திங்கள் மும்மாரி பெய்து –
வெள்ளக் கேடும் வறட்சி கேடும் இன்றிக்கே ஊற எண்ணெய்  வெண்ணெய் விட்டாப் போலே இருக்கை –அபேக்ஷிதா சமயங்களில் வர்ஷிக்கை-ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையுமாய்-அபேஷித்த காலத்தில் உண்டாய் இருக்கை–

மும்மாரி பெய்து –
ரஹஸ்ய த்ரயம்- தத்வத்ரய -தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் –ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் என்றுமாம்

திங்கள் மும்மாரி பெய்து-
சத்வோத்தரமான காலத்திலே-
அனன்யார்ஹ சேஷத்வ-
அநந்ய சரணத்வ
அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்-
அத்தாலே அபிவிருதங்களாய்-ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த்த தேக தாரகரான ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க

யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹா பாகோ மஹியதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்றும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடியே –

(நம்பினேன் பிறர் நன் பொருள் -திருமந்திரம் அறியாமல் களவு -நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம் -நாராயணாய -சப்தம் அறியாமல் -விஷயாந்தர வியாதி -நம்பிக்கு அன்பனாய் -நம அர்த்தம் –
மும்மாரி -ஸ்வரூபம் விளக்கி -பிராபகம் விளக்கி -அறம் செய்யும் உலகளந்த உம்பர் கோமான் -ப்ராப்யம் -உலகந்தான் அடி போற்றி
ஸ்லோக த்ரயம் –17-18-19–போக்யம் தாரகம் துர்லபம் -வருத்தம் தீரநம்மாழ்வார்
ஸ்தான த்ரயம் -8-22–பக்தியால் மட்டுமே அடையப்படுவான் பரபக்தி 11-54–அறியவும் அடையவும் காணவும் பக்தி பரஞானம் 18-54–பரமபக்தி போல் இங்கும் ஒரே பாசுரத்திலேயே இவை மூன்றும் உண்டு)

மும்மாரி
மூன்று சோகங்கள் அர்ஜுனனுக்கு
ப்ரக்ருதி ஆத்ம பிராந்தி ஜெனித சோகம் -பூத உடல் -பஞ்ச பூத உடல் –
தேவ அசுரர் விபாக ஸ்ரவண ஜெனித சோகம்
முடிவு எடுக்க முடியாத பரதந்த்ரன் அறிவால் மூன்றாம் சோகம்
மூன்று மாஸூக

மூவாறு மாசம் மோகம் ஆழ்வாருக்கு-தர்ம வீர்ய ஞானத்தால் தெளிந்து வால்மீகி –-இவரோ அருளின பக்தியால் உள் கலங்கி -சோகித்து மூவாறு மாசம் மோகித்து-
பத்துடை அடியவர்க்கு எளியவன்-
அவாப்த ஸமஸ்த காமன் வெண்ணெய் திருடி ஆப்புண்டு – -1-3—
பிறந்தவாறும்-அகர்மவஸ்யன் பிறக்கவோ-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதிந்த உடம்பு ஏறிட்டுக் கொண்டு -5-10–
மாயக் கூத்தனின் கண்கள் வாயும் சோர்ந்து- இருத்தும் வியந்து –
வீற்று இருந்தான் கண்டு கொண்டே –கண்கள் சிவந்து -8-6–

மூன்று தீர்த்தம் -தேக மனஸ் ஆத்ம சுத்தி –

கிண்டி தீர்த்தம் -மேல் சென்று விழுவதால் கங்கையை போல் புனிதம் -சேஷ தீர்த்தம் -உள்ளே வரும் வழியும் வெளியில் வரும் வழியும் வெவ்வேறு இருக்கும் –

————–

ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள –
கீழ் சொன்ன திரு உலகு அளந்த சர்வேஸ்வரனோடு ஒத்து இருக்கை –
விடுவோரே நட்டு நாயிறு பட்டபோது வந்து பார்த்தால்-கை கவித்துப் பார்க்க வேண்டும்படி இருக்கை-மாரீசன் பெருமாளை -சீதா ராம பிரபாபாவம் சொன்னால் போலே ஆயிற்று
இவர்களுக்கும் வாமன நிமித்தமாக இருக்கிறபடி

ஓங்கு பெரும் செந்நெல்-
ஒரு முதலே ஒரு செய்யை விளாக்குலை கொண்டு அங்கன்-ஒரு வரம்பு இல்லாமையாலே-
ஆகாச அவகாசம் உள்ள அளவும் வளர்ந்து இருக்கை

ஊடு கயல் உகள –
செருக்காலே யானைக் கன்று போலே வளர்ந்த கயல்கள் ஆனவை செந்நெல் களின் உள்ளே புக்கு–போக இடம் பொறாமையாலே துள்ளா  நிற்கும்
விழுக்காடு அறியாமே அகப்பட்ட படி திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரனை
கண்ட அனுகூலர் பட்டது-படா நிற்குமாய்த்து இவை

ஓங்கு பெரும் செந்நெல்
குனிந்து நின்று முதலிட்டு மேலே நோக்கிப் பார்த்தால் ஆகாசத்தை வெளியடைப்பது காணும் –ஆகாசத்தில் வரம்பில்லையே –-திரு உலகு அளந்து அருளினவனைப் போலே

பெரும் செந்நெல் –
சுற்றிலே பணைக்கை-செய் கொள் செந்நெல் உயர் -என்னுமா போலே

ஊடு கயலுகளப்
வைரத் தூண் போலே நெல் நிற்கையாலே நேரே சஞ்சரிக்கப் பெறாது – ஒருக்கடித்து உலாவும் அத்தனை யாய்த்து –-ஜல சர தத்துவங்களும் நீரிலும் நிழலிலும் கிடந்து வளர்ந்த செருக்கால் களித்து மேல் நோக்கிப் பாயா நிற்குமாய்த்து

பள்ளச் செருவில் கயல் உகள (புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் )-என்னுமா போலே –
சலம் கொண்டு மலர் சொரியும் (பெரிய திருமொழி -மூன்றாம் பத்து )-இத்யாதி

ஓங்கு பெரும் செந்நெல்
வ்ருஷே வ்ருஷே(மாரீசன் எங்கு பார்த்தாலும் ராமனாகவே பார்த்தால் போல் )
ஊடு கயலுகளப்
பயிர் நெருக்கித் தனையும் ஆணைக் கன்று போலே செருக்கித் திரிகிற
கயல்களுக்குத் தாவித் திரியலாம் என்கை –

திரு யுலகு அளந்து அருளின எம்பெருமானைக் கண்டு அனுகூலர் செருக்கி ப்ரீதிக்குப் போக்கு விட்டு சஞ்சரிக்குமா போலே கயல்கள் திரிகிற படி –(ஆழி எழ சங்கும் வில்லும் எழ -ஜாம்பவான் பறை கொட்டி ஆர்பரித்தால் போல் இங்கு கயல்களும்)

————

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-
பூத்த குவளை -என்னுதல்-காலத்திலே என்னுதல் தர்ச நீயமான குவளைப் பூவிலே என்னுதல் –

பொறி வண்டு கண் படுப்ப –
மது பானத்தாலும்-அன்யோன்ய சம்ஸ்லேஷத்தாலும்-பிறந்த புகரை உடைய வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கிற வண்டுகள்-தன்னில் தான் ஒரு மகா பாரதத்தைப் பாரித்துக் கொண்டு புக்கு-புஷ்பத்திலே ஸ்பர்ச சௌக்யத்தாலே-நஞ்சு உண்டாரைப் போலே கிடந்தது உறங்கி உணர்ந்து–எழுந்து இருக்கும் பொழுது- என்னை நீ எழுப்பிற்று இல்லை என்னை நீ எழுப்பிற்று இல்லை-என்று ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு என்னா நிற்கும்-

பள்ளிக் கமத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி –நள்ளி ஊடும் -என்னக் கடவது இறே-

பகுவாய் அலவன் -பெரிய வாயை உடைய புருஷ நண்டு-நள்ளி பெண் நண்டு

ஊடு கயல் உகள –பூம் குவளைப் போதில் பொறி வண்டு-
குவளைப் பூவிலே வண்டு-மது பானம் பண்ண என்று படிந்த தசையிலே
கயல் ஊடே உகள
செந்நெலும் குவளையும் ஒக்க அசைந்து-தூங்கு மெத்தையில் உறங்கும் ராஜ புத்ரர்கள் போலே-
வாயில் மதுவோடு வண்டுகள் கண் படுப்ப -என்றபடி-
இது வயலின் சம்ருத்தி

பூங்குவளைப் போதில்-அழகிய குவளைப் பூவிலே – குவளைப் பூ அலர்ந்த போதிலே -என்று கால பரமாகவுமாம்

பொறி வண்டு-
மது பானத்தாலே இளகிப் பதித்து இறே வண்டு இருப்பது –

கண் படுப்ப-
அலருகிற செவ்வியில் -மது பானம் பண்ண என்று இழிந்து -படுக்கை வாய்ப்பாலே மயங்கிக் கிடந்து –நீ எழுப்பிற்றிலை நீ எழுப்பிற்றிலை என்று பெடையும் தானும் விடிவோறே -சீறு பாறு -என்னுமாய்த்து –

வயலில் ஸம்ருத்தி சொல்லி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது

பூங்குவளை இத்யாதி-
ஸும்ய  ரூப -என்கிறபடியே –
ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்-இடங்களிலே
ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்-
பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்-
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர –
இது சேதன சம்ருத்தி

இனி சைதன்ய சம்ருதியைச் சொல்லுகிறது
இது சிஷ்ய சம்ருதியைச் சொல்லிற்று ஆகவுமாம்

பூங்குவளைப் போதில்
அழகிய குவளை பூவிலே –
போது என்று கால பரமாகவுமாம்
கயல்களுடைய சஞ்சாரத்தால் பூக்கள் கட்டு நெகிழ்கிற படி

பொறி வண்டு
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே நரைதிரை மாறி இளகிப் பதித்து இருக்கை
இவர்களுக்கு அங்குள்ளது எல்லாம் உத்தேசியமாய் இருக்கை

(வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன்  வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—-6-7-6-)

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே
ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்-
பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-
சுகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––

ஹ்ருதயத்தில் நின்று இருந்து சயனித்து -சுருதி சொல்லுமே -சரணாகதனாக்கிய பின்பு க்ருதக்ருத்யனானான் -கண் வளர்கிறான்-வள்ளல் -காருண்யம் உதாரம் – பெரும் ஞான அனுஷ்டானங்கள் பூர்த்தி -பசுக்கள் ஆச்சார்யர்

இது சேதன சம்ருத்தி–இனி சைதன்ய சம்ருதியைச் சொல்லுகிறது-
இது சிஷ்ய சம்ருதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-

——–

இனி ஊரில் சம்ருத்தி இருக்கும்படி சொல்லுகிறது-
தேங்காதே புக்கிருந்து –
எத்தனையேனும் முன்கை யுரவியராய் இருப்பார்-இழிய வேணும் யாய்த்து பசு கறக்கப் புகும் போது-
இதுக்கு அடி –
பால் மாறாமையாலே எழுந்து இருக்கப் போகாது-
இத்தால்
பால் போரும் பெருமையை அனுசந்தித்த வாறே-கறக்க ஒருப்படுவார் இல்லை
திருவடி சமுத்ரம் கடக்க ஒருப்பட்டாப் போலே-ஒருப்பட்டுக் கொண்டு இழிய வேண்டும்படி யாய்த்து இருப்பது-

இருந்து –
பால் மாறில் இறே எழுந்து இருக்கலாவது-
ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து

தேங்காதே புக்கிருந்து-
பால் வெள்ளம் தான் -கறக்கப் புக்கவர்கள் அஞ்சி பிற்காலிக்கும் படி இறே இருப்பது
திருவடி சமுத்திர தரணத்துக்கு அஞ்சாதே இழிந்தால் போலே இழிய வேணுமாய்த்து –
முத்துக்கு முக்குமவர் கடலுக்கு அஞ்சாதாப் போலே –
நனைத்தில்லம் சேறாக்கும் இறே

இருந்து –
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக-இருந்து-பால் ஸம்ருத்தி யாலே தேங்கும் அத்தனை –
பால் வற்றி எழுந்து இருக்க விரகில்லை-

தேங்காதே புக்கிருந்து
இனி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது

தேங்காதே புக்கு
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை –
அத் தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே(நைச்யம் பாவித்து நீங்கக் கூடாதே )

இருந்து –
பால் மாறில் இறே எழுந்து இருக்கலாவது–ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து-
பிற்காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து–-ஸூஸ்த்ரனாய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு-பரம பத நாதனோடு–பரம சாம்யா-பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண–ஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்–சிஷ்ய விதேயராய்– நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய–அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை –
அத் தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே

———-

சீர்த்த முலை-
விரலிட்டு சுற்றிப் பிடிக்க ஒண்ணாது-பால் விம்மி இரண்டு கையாலும் பற்ற வேண்டும் படி இருக்கை-இரண்டு கையாலும் அணைத்து கறக்க வேண்டும்படி கனத்து இருக்கை

பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் –
வாங்குகை -வலிக்கையாய்-பற்றிக் கறக்க குடம் நிறைக்கும் என்னுதல்
முலையைப் பற்றி கை வாங்க தானே நின்று பால் சொரியும் என்னுதல்
இட்ட குடங்கள் வாங்க வாங்க நிறைக்கும் என்னுதல்
குடமிடாதார் இழக்கிறது பசுவின் குற்றம் அன்றே
இச்சை உடையார் ஈஸ்வரனைப் பற்றி க்ருதக்ருத்யராம் போலே யாய்த்து இவையும்

பற்றி-வாங்கக் குடம் நிறைக்கும்-பற்றி வலிக்க -தொட்டு விட குடங்களை நிறையா நிற்குமாய்த்து – பற்றிப் பற்றி வாங்கக் குடங்களை நிறைக்கும் என்றுமாம் –பற்றி வாங்க
தொட்டு விட அமையும்

வாங்கக் குடம் நிறைக்கும்
ஒரு கால் பற்றி வலிக்க இட்ட குடங்கள் நிறைக்கை-
வைப்பார் தாழ்வே –
வைத்த குடம் எல்லாம் நிறைக்கும் என்றுமாம்

————-

வள்ளல் –
கீழே பால் போரும் பெருமையை சொல்லிற்று ஆகில்
இனி வள்ளல் தனமாவது என் என்னில்-
கிருஷ்ணன் படி இவற்றுக்கும் உண்டாய் இருக்கை-
ஆரேனும் இவன் கழுத்தில் ஓலை கட்டி தூது போ என்றால்-போமாப் போலே யாய்த்து
இவையும்-சிறு பிரஜைகளும் கூட கட்டவும் அடிக்கவும் ஆம்படி-தன்னைக் கொடுத்துக் கொண்டு நிற்கை

———

பெரும் பசுக்கள்
புல்லும் தண்ணீரும் தாரகமாக வளர்ந்தவை அன்றிக்கே-
கிருஷ்ண ஸ்பர்சமே தாரகமாக வளர்ந்தவை ஆகையாலே-
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே யாய்த்து இருப்பதுபுல்லாலே வளருகை அன்றே –
தீம் குழல் ஓசை அசை இட்டு இறே வளருவது –

கானகம் படி இத்யாதி –

அவன் கணிசியாதே நடக்க –அவர்கள் கருதி ஆடுகிற கூத்தை மறந்தார்கள் –
நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே நடப்பது –

அவன் குழலூத இவர்கள் பாட்டு மறந்தார்கள்
சிறு விரல்கள் தடவிப் பரிமாற-இவருக்கு சிறு விரலில் கண் செல்லுகிற படி
செங்கண் கோட -துளை தோறும் கண் ஓடுகிற படி
செய்ய வாய் கொப்பளிப்ப -ஸுகுமார்யத்தாலே திருப் பவளம் கொப்பளிப்ப
குறு வியர்ப் புருவம் கூடலிப்ப -வேர்த்துப் புருவம் வளைய
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது -பசுக்கள் மேய்த்து அவற்றின் வயிறு நிறைந்த ஹர்ஷத்தாலே தான் குழலூதா நிற்குமாய்த்து

வள்ளல் –
சிறு பிள்ளைகளுக்கும் கட்டி விடலாய் கழுத்தைக் கட்டிக் கொண்டு நாலலாம் படி இருக்கை –

பெரும் பசுக்கள்
கண்ணன் குழலோசையை அசையிட்டு வளருகையாலும் –
அவனோட்டை ஸ்பர்சம் உண்டாகையாலும் ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை

எம்பெருமான் நியமனம் ஒரு முலை–
சிஷ்யர் பிரார்த்தனை சமித் பாணி ஒரு முலை —
துர்கதி கண்டு வருந்தியாவது -காருண்யத்தால் -தரித்து இருந்தேன் ஆகவே -நான்காவது முலை-
கீதாசார்யன் -அர்ஜுனன்–நாரதர் -வால்மீகி–பராசர பகவான் -மைத்ரேயர்
தேங்காதே -ஆசார்யர் இடம் புக்கு -இருந்து –
சீர்த்த முலை-
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள்-
குடம்
தயா பாத்ரம் -நிறைக்கும் ஆத்ம குணங்களால் -தன்னைப் போலே ஆக்கும் ஆசார்யர் –
இது தான் நீங்காத செல்வம்
வள்ளல் பெரும் பசுக்கள் –
கிருபாமாத்ரா பிரசன்னாசார்யர்கள் –
புள்ளு பாஷ்யகாரர் பிள்ளை நாம் -வேதாந்தங்கள் அநந்தம்-நமக்கு தேடிக் கொடுத்து –

பசுக்கள் –
பெரும் பசுக்கள் –
வள்ளல் பெரும் பசுக்கள் –
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
பஞ்சம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் அன்றோ

———

நீங்காத செல்வம் நிறைந்து-
அழிவில்லாத சம்பத்து நிரவதிமாம்படி-சேதனர் உடைய புண்ய பாப அனுரூபமாக படி விடும்-சர்வேஸ்வரன் அடியாக வந்த சம்பத்தாகில் இறே அளவு பட்டு இருப்பது
பகவத் ஸ்பர்சத்தால் வந்த சம்பத் ஊற்று உடைத்தாய் இருக்கும் இறே
ஆகையால் நீங்காத செல்வம் -என்கிறது-

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே –

தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி-வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்–நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்- பிற் காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து ஸூத்த ஸத்வராய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடு
பரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்
பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ணஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்
சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய-அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –

நீங்காத செல்வம் –
ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம் –
புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்று
அவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடி

(இவர்கள் -கடி மலர்ப் பாவைக்கு ஒப்பு உள்ளவர்கள் அன்றோ)

நிறைந்தேலோ ரெம்பாவாய் —

உத்தமன் –
பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
கரு மணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு-(இரண்டாம் திருவந்தாதி -61 )என்று
சிறு காலைக் காட்டி இரந்து பெரிய காலைக் கொண்டு அளந்து
நீ பண்ணின ஓரம் உன்னை ஆஸ்ரயித்தார் நிர்ப்பரராகைக்கு அவர்களுக்கு நீ வைத்த சந்தானச் சாபம் இறே –

(ஒரு சந்தானம் வைத்து வளர்ப்பது போல் விஸ்வாஸம் ஒன்றாலே உஜ்ஜீவனம்)

இவ்வாந்தராளிக த்ருஷ்டா த்ருஷ்டங்களில் ஒருவர்க்கு அஞ்சாதே
யமாதிகளுக்கு முழங்கை காட்டிச் செருக்கராய் இவர்கள் திரிகைக்கு அடி என் என்னில் அறிந்தோம் –

ஒரு பரம தார்மிகன் செவியிலே துரப்பலரான நம்மால் நம் கார்யம் நிர்வஹித்துக் கொண்டு கரையிலே ஏற ஒண்ணாது –
உன்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு பிரபலனை அண்டை கொண்டு
த்ருஷ்டா அதிருஷ்ட விஷயமான உன்னுடைய யத்னங்களை யடைய அவன் வசத்திலே பொகட்டு நிர்ப்பயனாய் இரு என்று சொல்லிப் போம் –

இவனும் அத்தையே விஸ்வஸித்து அப்படியே என்று இருக்கும் –
எம்பெருமான் கழுத்திலே ஓலை காட்டித் தூது போயும் மார்பிலே அம்பேற்றும் சாரத்யம் பண்ணியும்
பகலை இரவாக்கியும் சத்ய ப்ரதிஞ்ஞனாயும் அசத்ய ப்ரதிஞ்ஞனாயும் பொய் சொல்லியும் மெய் சொல்லியும்
வார்க்கொத்துக் (கொல்லா மாக்கோல )குத்தியும் எல்லை நடந்தும் – இங்கன் ஒத்த செயல்களை செய்து இவர்கள் காரியமே நிர்வஹியா நிற்கும் -என்றார் –

மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் மட நெஞ்சமே -என்று திருமந்த்ரத்துக்கு அர்த்தமாக
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் என்று அனுசந்தித்தால் போலே
இவளும்-
ஓங்கி உலகளந்த உத்தமன் -என்று திரு நாமத்தினுடைய அர்த்தத்தை முந்துற அனுசந்தித்து
பின்னை அதுக்கு வாசகமான -திரு மந்த்ரத்தை பாடி -என்கிறாள் –

(மந்த்ரத்திலும் மூன்று பதம் -இவனும் கண்ணால் மூன்று பதம் காட்டினானே)

(மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே –பெரியாழ்வார் -4-7-10-)

——–

பெரும் செந்நெல் -சரணாகதர்கள் – வரம்புற்ற கதிர் செந்நெல் -தலை சாய்த்து –
தாள் சாய்க்கும் தென்னரங்கம் -உரம் பெற்ற மலர்க்கமலம்-உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட –
சரணாகதி இங்கும் நடக்கிறது-

குவளை புஷ்பம் தாமரை தஹார புண்டரீகம் -ஆத்ம யாத்ரை சித்தம்-தேக யாத்ரைக்கு கரைய வேண்டாம்
கரைந்தால் நாஸ்திகன்-ஆத்ம யாத்ரைக்கும் கரைய வேண்டா கரைந்தான் ஆகில் சரணாகதன் ஆகான்

பொறி வண்டு –
தெய்வ வண்டு –

வாமனன் -போலே ஆச்சார்யர்கள் மனுஷ்ய சஜாதீயனாக்கிக் கொண்டு மஹாபலி போன்ற சம்சாரிகளுக்கு
ரஹஸ்ய த்ரயம் -ஷட்க த்ரயம் -தத்வ த்ரயம் -மூன்றையும் கேளுங்கோள் என்று இரப்பாளனாகி
அவன் கொள்ள கொண்ட வேஷம் -இவர்கள் கொடுக்கக் கொண்ட வேஷம் -வாசி உண்டே
ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பார்கள் அவனைப் போலவே

அதம குரு -புலையறமாகி நின்ற புத்தோடு சமணம் எல்லாம் –ஜைன புத்தாதி மதங்களை போதிப்பவர்
அனுவர்த்தித்தாலும் ஒன்றுமே உபதேசியாதாரும் அதம குரு
ஞானம் அனுஷ்டானம் ஏதும் இல்லாமல் எத்தையோ உபதேசிப்பவர் அதம குரு
மத்யம குரு -சாமான்ய ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர் –
அனுவ்ருத்தி நிர்பந்தங்கள் நிபபந்தனமாக வருந்தி உபதேசிப்பவர்களும் மத்யம குரு
ஞானம் அனுஷ்டானம் ஒன்றை மட்டும் இருந்து உபதேசிப்பவர் மத்யம குரு
பயன் நன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பனி கொண்டு
சாத்விக மஹார்த்தங்களை உபதேசித்து அருளுபவர் உத்தம குரு –
ஞானம் அனுஷ்டானம் இவை நன்டயராகவே கொண்டு உபதேசித்து அருளுபவர் உத்தமர் என்றுமாம் –

ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா —
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினேரே –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது
தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானை விட ஓங்கி அதிசயித்து –
தம் கருணையால் தாமே சென்று அருளி உத்தமர் –
உலகத்தை எல்லாம் ஸ்வ அதீனமாக ஆக்கிக் கொண்ட உத்தமர் அன்றோ –
ஓராண் – வழியாய் உபதேசித்தார்-முன்னோர் –
ஆசை உடையார்க்கு உபதேசிக்க -வரம்பு அறுத்த உத்தமர் அன்றோ –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –
நற்றவர் போற்றும் இராமானுசன் அன்றோ –

இப்பாசுரத்தில், “உத்தமன் பேர் பாடி” என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட,
அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!

அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் என்பதாகச் சொல்லலாம்.
சரீர நோக்கில் பார்க்கையில்,
தாரகம் – உணவு
போக்யம் – பால், நெய்
போஷகம் – வெற்றிலை, சந்தனம் (தாம்பூலம்)

ஆக, அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் என்ற மூன்று மட்டுமே அடியாரின் ஆத்மசுத்திக்கு போதுமானவை;
பரமனின் கல்யாண குணங்களை அனுபவிப்பதற்கு, மோட்ச சித்திக்கும் ஆதாரமானவை.
ஆக,கர்ம ஞான யோகங்களைக் காட்டிலும், பக்தி யோகமே சிறந்ததாக நாச்சியார் குறிப்பிலுணர்த்துகிறார்.

சாற்றி நீராடினால்’ என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.

‘மும்மாரி’ என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை
பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,
அ) ஆச்சார்ய உபதேசம்
ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்
இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்

“ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள” — செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள்,
தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.

“பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப” என்பதில் சுட்டப்படும் வண்டு,
அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.

“தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க” என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால்
ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

“வள்ளல் பெரும்பசுக்கள்” தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.

“நீங்காத செல்வம்” என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில்,
குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது.
ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆதலால் !

இதற்கு உள்ளுறை பொருள் வருமாறு:-
பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவதநுபவம் பண்ணினால் இவ்வுலகமெங்கும்
தேஹாத்மாபிமாநம் முதலிய தோஷங்களொன்று மின்றியே யொழியும்.

ஸத்வோத்தரமான காலத்தில்,
அநந்யார்ஹசேஷத்வம்,
அநந்யசரணத்வம்,
அநந்யபோக்யத்வமாகிற
ஆகார த்ரய ஜ்ஞானமுண்டாம்; (இது மூன்றாமடிக்கு)

பிரகிருதி மண்டலத்திலும் ஆத்ம வர்க்கங்கள் களித்துத் துள்ளும்; (இது நான்காமடிக்கு)
ஞானிகளுடைய போதிற்கமலவன்னெஞ்சினுள் தெய்வ வண்டெனப்படும்;

எம்பெருமான் வந்து புகுந்து சுகமாகக் கண் வளர்ந் தருள்வன்; (இஃது ஐந்தாமடிக்கு)
(தீரச் சரண முபகத:) என்றபடி –

சிஷ்யன் பிற்காலியாதே குருகுலத்திற் புக்கு நிலைத்திருந்து தனக்குத் தாரகங்களான ஆசிரியன்
பொற்பதங்களைப் பற்றிப் பிரார்த்திக்க,
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரைப் பரிபூரண ஞானிகளாக்குமவர்களாய்,
சிஷ்ய ஸுலபராய், இடைவிடாத பகவத் குணாநுபவத்தினால் பரிபுஷ்டரான ஆசார்யர்களுடைய
அவிச்சிந்நமான ஸம்பத்து மல்கும்படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.

——–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –