Archive for October, 2020

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -92–கர்ம-மிஸ்ர பக்தி–

October 2, 2020

வேதை3ஸ்ஸர்வாணி கர்மாணி அபல பர தயா
வர்ணிதாநீதி பு3த்3த்4வா
தானி த்வய்யர்பிதான்யேவ ஹி
ஸமனு சரன் யானி நைஷ்கர்ம்யமீச’|
மா பூ4த்3வேதை3ர் நிஷித்3தே4 குஹ சித3பி
மன: கர்ம வாசாம் ப்ரவ்ருத்தி
து3ர்வர்ஜம்சேத3வாப்தம் ததபி க2லு
ப4வத்யர்ப்பயே சித்ப்ரகாசே’ || (92 – 1)

வேதங்கள் எல்லாக் கர்மங்களையும் பலனில் விருப்பம் இல்லாமல் செய்யச் சொல்கின்றன.
அதை அறிந்து கொண்டு நான் செய்யும் எல்லாக் கர்மங்களையும் தங்களுக்கு அர்ப்பணிப்பேன்.
நிஷ்காம கர்மம் செய்து ஞானம் பெறுவேனாகுக! வேதங்கள் தடை செய்த எந்த ஒரு கர்மத்திலும்
என் மனம், வாக்கு, கர்மம் இவற்றில் பிரவிருத்தி உண்டாகக் கூடாது.
விலக்க முடியாத காரணத்தால் நான் ஒரு விலக்கப்பட்ட கர்மத்தைச் செய்ய நேர்ந்தால்
அதையும் தங்களுக்கு அர்ப்பணம் செய்வேனாகுக!

யஸ்த்வ்ன்ய: கர்மயோகஸ்தவ ப4ஜனமயஸ்
தத்ர சாபீ4ஷ்ட மூர்த்திம்
ஹ்ருத்3யாம் ஸத்வைகரூபாம் த்3ருஷதி3 ம்ருதி3
க்வாபி வா பா4வயித்வா |
புஷ்பைர் க3ந்தை4ர் நிவேத்3யைரபி ச விரசிதைச்’
ச’க்தி தோ ப4க்தி பூதை :
நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித3த4த3யி
விபோ4 த்வத்ப்ரஸாத3ம் ப4ஜேயம் || (92 – 2)

தங்களின் பஜன ரூபமானதும், வைதீகக் கர்ம யோகத்திலிருந்து வேறுபட்ட ஒரு கர்மத்தில்,
நான் ஒரு அழகானதும், எனக்குப் பிரியமானதும் ஆகிய ஒரு மூர்த்தியைக்
கல்லில் அல்லது மனதில் அல்லது மண்ணில் அல்லது வேறு பிரதிமையில் தியானம் செய்வேன்.
என் சக்திக்கு ஏற்ப ஈட்டிய பொருளைக் கொண்டு பக்தியுடன், புஷ்பம், சந்தனம், நிவேதனம் இவற்றால்
தினமும் தங்களைப் பூசித்துத் தங்கள் பிரசாதத்தை அடைவேனாகுக!

ஸ்திரீசூ’த்3ரா ஸ்த்வத்கதா2தி3 ச்’ரவண
விரஹிதா ஆஸதாம் தே த3யார்ஹா
ஸ்த்வத்பாதா3 ஸன்னயாதான் த்3விஜகுலஜனுஷோ
ஹந்த சோ’சாம்ய சா’ந்தான் |
வ்ருத்யர்த்தம் தே யஜந்தோ ப3ஹு கதி2தமபி
த்வாமனா கர்ண யந்தோ
த்3ருப்தா வித்3யா பி4 ஜாத்யை: கிமு ந
வித3த4தே தாத்3ருச’ம் மா க்ருதா2 மாம் | (92 – 3 )

ஸ்த்ரீக்களும், சூத்திரர்களும் தங்களின் கதைகள், நாமங்கள் இவற்றைக் கேட்கவும் கீர்த்தனம் செய்யவும்
அனுமதி இல்லாதவர்கள். அதனால் அவர்கள் இரங்கத் தகுந்தவர்கள்.
தங்களின் திருவடிகளின் சமீபத்தை அடைந்தவர்களில் பலரும் சாந்தி அடையாமல்
பிராமண, க்ஷத்திரிய, வைஸ்ய குலத்தில் பிறந்துள்ளனர். அவர்களுக்காகவும் நான் வருந்துகின்றேன்.
அவர்கள் ஜீவனத்துக்காக யாகங்கள் செய்கிறார்கள். பலர் உபதேசம் செய்த பிறகும் கூடத் தங்களைப் பற்றிக்
கேட்காமலும், வித்தை, உயர்குலப் பிறப்பு இவற்றால் கர்வம் கொண்டவர்களாகவும்
அவர்கள் என்ன என்ன தான் செய்யவில்லை? என்னையும் அது போல ஆக்கிவிடாதீர்கள்.

பாபோSயம் க்ருஷ்ண ராமேதி அபி4லபதி
நிஜம் கூ3ஹிதும் து3ச்’சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப3ஹுதர
கத2னீயானி மே விக்4நிதானி |
ப்4ராதா மீ வந்த்4யசீ’லோ ப4ஜதி கில
ஸதா3 விஷ்ணு மித்த2ம் பு3தா4ம்ஸ்தே
நிந்த3ன்த்யுச்சைர் ஹஸந்தி த்வயி நிஹித மதீம்
ஸ்தாத்3ருச’ம் மாக்ருதா2 மாம் || (92 – 4)

“பாவியான இவன் தன் துஷ்ட சரிதத்தை மறைத்து வைப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணா! ராமா! என்று பிதற்றுகின்றான்.
வெட்கம் இல்லாத இவன் பேச்சினால் நான் சொல்ல வேண்டியவை கெடுக்கப் படுகின்றன .
வீண் வேலை செய்யும் என் சகோதரன் ஸ்ரீ விஷ்ணுவை பஜிக்கின்றானம்!” என்று இவர்கள்
தங்களிடம் மனத்தைச் செலுத்தும் அறிவாளிகளை நிந்திக்கின்றனர். பரிஹசித்து உரக்கச் சிரிக்கின்றனர்.
என்னையும் அப்படிப் பட்டவனாகச் செய்து விடாதீர்கள்.

ச்வேதச்சா2யம் க்ருதே த்வாம் முனிவர வபுஷம்
ப்ரீணயந்தே தபோபி4:
த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்3யங்கிதம்
அருணதனும் யக்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ர மார்கை3ர் விலஸத3ரிக3த3ம்
த்3வாபரே ச்யாமளாங்கம்
நீலம் ஸங்கீர்த்தனாத்யை ரிஹ கலிஸமயே
மானுஷாஸ் த்வாம் ப4ஜந்தே || ( 92 – 5)

மனிதர்கள் கிருத யுகத்தில், வெண்ணிறமுடைய பிரம்மசாரியாகத் தங்களைத் தவம் செய்து வழிபட்டனர்.
திரேதா யுகத்தில் ஸ்ருக், ஸ்ருவம் முதலியவற்றால் அடையாளம் செய்யப்பட்ட தங்களைச்
சிவந்த நிறமுடைய யஜ்ஞ ரூபியாக வழிபடுகின்றனர்.
துவாபர யுகத்தில் பிரகாசிக்கும் ஸ்ரீ சக்கரம் ஸ்ரீ கதையுடன் கூடிய சியாமள வர்ணனாகத் தங்களை
தந்திர சாஸ்திரம் கூறும் மார்க்கங்களால் வழிபடுகின்றனர்.
கலி யுகத்தில் நீல வர்ணனான தங்களை நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் பஜிக்கின்றனர்.

ஸோSயம் காலேய காலோ ஜயதி முரரிபோ
யத்ர ஸங்கீர்த்தனாத்3யை:ர்
நிர்யத்னைரேவ மார்கை3ரகி2லத3 ந சிராத்
த்வத்ப்ரஸாத3ம் ப4ஜந்தே |
ஜாதாஸ்த்ரேதா க்ருதாதா3வபி ஹி கில
கலௌ ஸம்ப4வம் காமயந்தே
தை3வாத் தத்ரைவ ஜாதான் விஷய விஷரசைர்
மா விபோ4 வஞ்சயாஸ்மான் || ( 92 – 6 )

இந்த விதமாகக் கலிகாலம் மேன்மை பெற்று விளங்குகிறது. இந்தக் கலி காலத்தில் மக்கள்
ஸ்ரீ நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் அதிக பிரயத்தனம் இல்லாமலேயே வெகு சீக்கிரத்தில்
தங்கள் பிரசாதத்தை அடைகின்றனர். அதனால் திரேதா, கிருத யுகங்களில் பிறந்தவர்கள் கூடக்
கலி யுகத்தில் வந்து பிறக்க விரும்புகின்றனர் அல்லவா? எல்லாவற்றையும் கொடுக்கும் ஸ்ரீ இறைவா!
பாக்கிய வசத்தால் அந்தக் கலியுகத்தில் பிறந்துள்ள எங்களை
விஷய சுகங்கள் என்னும் விஷ ரசத்தால் வஞ்சித்து விடாதீர்கள்.

ப4க்தாஸ்தாவத் கலௌ ஸ்யூர்த்3ரமிள பு4வி
ததோ பூ4ரிச’ஸ் தத்ரசோச்சை:
காவேரீம் தாம்ரபர்ணீமனு கில
க்ருதமாலாஞ்ச புண்யாம் ப்ரதீசீம் |
ஹா மாமப்யேதத3ந்தர் ப4வமபி ச விபோ4
கிஞ்சித3ஞ்சத்3 ரஸம் த்வயி
ஆசா’பாசை’ர் நிப3த்4ய ப்4ரமய ந ப4க3வன்
பூரய த்வன்னி ஷேவாம் || (92 – 7)

கலியுகத்தில் பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள்.
அதிலும் அவர்கள் திராவிட தேசத்தில் மிகவும் அதிகமாக இருப்பார்கள்.
திராவிட தேசத்தில் பல புண்ணிய நதிகள் காவேரி, தாமிரபர்ணீ, வைகை போன்றவை உள்ளன.
நான் இந்த திராவிட தேசத்தில் பிறந்தவன் என்பதால் மட்டுமல்ல.
தங்களிடம் சிறிதளவு பக்தி கொண்டவன் என்பதால் என்னை, ஆசை என்னும் கயிற்றால்
இறுகக் கட்டிச் சுழற்றாதீர்கள் . தங்களிடம் ஏற்பட்டுள்ள என் பக்தியைப் பூரணமாக்குவீர்.

த்3ருஷ்ட்வா த4ர்மத்3ருஹம் தம் கலிமபகருணாம்
ப்ராங்மஹீக்ஷித் பரக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருஷ்ட க2ட்3கோ3பி ந விநிஹிதவான்
ஸாரவேதீ3 கு3ணாம்சா’த் |
த்வத்ஸேவாத்3யாசு’ ஸித்3த4யேத் அஸதி3ஹ
ந ததா2 த்வத்பரே சைஷ பீ4ரு :
யத்து ப்ராகே3வ ரோகா3தி3பி4: அபஹரதே
தத்ர ஹாசி’க்ஷயேனம் || (92 – 8 )

முன்னொரு காலத்தில் ஸ்ரீ பரீக்ஷித் என்ற அரசன், விருஷப ரூபியாகிய தர்மத்தைச் சிறிதும்
கருணையின்றித் துன்புறுத்திய கலிபுருஷனைக் கண்டான்.
உருவிய வாள் கையில் இருந்த போதிலும், கலியிடம் குணாம்சம் இருந்ததால் ஸ்ரீ பரீக்ஷித் அவனைக் கொல்லவில்லை .
இந்தக் கலி யுகத்தில் தங்களுக்குச் செய்யும் சேவை விரைந்து பலனை அளிக்கும்.
ஆனால் செய்யும் பாவம் விரைந்து பலனைக் கொடுப்பதில்லை
கலி புருஷன் தங்கள் பக்தர்களிடம் அஞ்சுகின்றான். அதனால் அவர்கள் தங்களை வழிபடும் முன்பே
ரோகம் முதலியவற்றால் அவர்களைத் தடுக்கின்றான். இதற்காக வேனும் நீங்கள் கலியைத் தண்டிக்க வேண்டும்.

க3ங்கா3 கீ3தா ச கா3யத்ர்யபி ச
துலஸிகா கோ3பிகா சந்த3னம் தத்
ஸாலக்3ராமாபி4 பூஜா பரபுருஷ
ததை2காத3சி’ நாமவர்ணா: |
எதான்யஷ்டாப்ய யத்னான்யபி கலி ஸமயே
த்வத் ப்ரஸாதா ப்ரவ்ருத்3த்4யா
க்ஷிப்ரம் முக்தி ப்ரதா3னீத் யபி4 த3து4:
ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா: || (92 – 8 )

ஸ்ரீ பரம புருஷா! கங்கை, கீதை, காயத்ரீ, துலஸீ, கோபி சந்தனம், சாளக் கிராம பூஜை, ஏகாதசி,
ஸ்ரீ பகவன் நாமாக்ஷரங்கள் என்ற எட்டும் கலி காலத்தில் அதிகப் பிரயத்தனம் இன்றியே
தங்கள் பிரசாதத்தைத் தருகின்றன என்று ஸ்ரீ மஹரிஷிகள் உபதேசித்துள்ளனர்
ஸ்ரீ ஈசா! இந்த எட்டிலும் என்னைப் பற்றுள்ளவனாகச் செய்யுங்கள்.

தே3வர்ஷீணாம் பித்ரூணாமபி ந புனர்ருணீ
கிங்கரோ வா ஸ பூ4மன்
யோSசௌ ஸர்வாத்மனா த்வாம் ச’ரண
முபக3தஸ் ஸர்வ க்ருத்யானி ஹித்வா |
தஸ்யோத்பன்னம் விகர்மாண்யகி2ல
மபனுதஸ்யேவ சித்தாஸ்திதஸ்த்வம்
தன்மேபாபோத்த2 தாபான் பவனபுரபதே
ருந்தி4 ப4க்திம் ப்ரணீயா: || (92 – 10)

எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ இறைவா ! எந்த பக்தன் எல்லாப் பிரவிருத்திகளையும் விட்டு விட்டுத்
தங்களையே முற்றிலுமாகச் சரண் அடைகின்றானோ அவன் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள்
இவர்களுக்குக் கடன்காரனாகவோ அல்லது ஒரு கிங்கரனாகவோ ஆவதில்லை.
அவன் மனத்தில் இருந்து கொண்டு தாங்கள் அவன் செய்யும் நிஷித்த கர்மங்களால் உண்டாகும்
பாவங்கள் அனைத்தையும் நிச்சயமாக அகற்றி விடுகின்றீர்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! பாபங்களால் உண்டாகும் தாபங்களைப் போக்க வேண்டும்.
பக்தியை உண்டு பண்ண வேண்டும்.அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -91–பக்தி மஹத்வம்–

October 2, 2020

ஸ்ரீக்ருஷ்ண த்வத்பா3தோபாஸன
மப4யதமம் பு3த்3தி4மித்2யார்த்த2 த்ரு3ஷ்டே:
மர்த்யஸ்யார்தஸ்ய மன்யே வ்யபஸரதி
ப4யம் யேன ஸர்வாத்மனைவ |
யத்தாவத் த்வத்ப்ரணீ தனிஹா ப4ஜன விதீ4
நாஸ்தி2தோ மோஹமார்கே3
தா4வன்னப்யாவ்ருதாக்ஷ: ஸ்க2லதி ந குஹசித்
தே3வதே3வாகி2லாத்மன் || ( 91 -1)

ஸ்ரீ தேவர்களின் தேவனே! ஸ்ரீ சர்வாத்மனே! ஸ்ரீ கிருஷ்ணா ! பொய்யான சரீரத்தில் “நான்” என்ற
தேக அபிமானம் கொண்டவனுக்கும், உடமைப் பொருட்களின் மேல் “இவை என்னுடையவை” என்று
உறுதியான அபிமானத்தை உடையவனுக்கும், இந்தக் காரணங்களால் மரணம் அடையும்படி விதிக்கப்பட்டவனுக்கும்,
அதனால் மிகுந்த மன வருத்தம் உற்றவனுக்கும், பயத்தைப் போக்கடிக்கும் ஒரே சாதனம்
தங்கள் திருவடிகளைத் தொழுவது என்று நான் கருதுகின்றேன்.
தங்கள் பாத சேவையால் பயம் முற்றிலுமாக விலகுகின்றது.
பஜன மார்க்கங்களில், தங்களால் உபதேசிக்கப்பட்ட பஜனை முறைகள் மேற் கொள்பவன்,
மயக்கம் தரும் பாதையில், கண்களை மூடிக் கொண்டு ஓடினாலும், எங்குமே இடறி விழ மாட்டான்.

பூ4மன் காயேன வாசா முஹுரபி
மனஸா த்வத்3ப3லப்ரேரிதாத்மா
யத்3யத் குர்வே ஸமஸ்தம் ததி3ஹ
பரதரே த்வய்யஸாவர்பயாமி |
ஜாத்யாபீஹ ச்’வபாகஸ்த்வயி நிஹித மன:
கர்மவாகி3ந்த்3ரியார்த்த2
ப்ராணோ விச்வம் புனீதே ந து விமுக2
மனாஸ் த்வத்3 பதா3த்3விப்ரவர்ய : || (91 – 2 )

எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ ஈசா! தங்களுடைய சக்தியால் பிரேரணை செய்யப்பட்டுள்ளது என் மனம்.
அதனால் சரீரத்தினாலும், வாக்கினாலும் மனத்தினாலும் நான் எதை எதைச் செய்கின்றேனோ அவற்றை எல்லாம்
ஸ்ரீ பரமாத்மாவாகிய தங்களிடம் அர்ப்பணம் செய்கின்றேன்.
மனம், கர்மங்கள், வாக்கு, இந்திரியங்கள், அவற்றின் விஷயங்கள், பிராணன் இவற்றைத் தங்களுக்கு
அர்ப்பணம் செய்பவன் தாழ்ந்த பிறவி எடுத்திருந்தாலும் உலகையே பரிசுத்தம் ஆக்குகின்றான்.
தங்களிடம் பராமுகமாக இருக்கும் அந்தணன் அவ்வாறு பரிசுத்தம் ஆக்குவதில்லை அல்லவா?

பீ4திர் நாம த்3விதீயாத்3 ப4வதி
நனு மன கல்பிதஞ்ச த்3விதீயம்
தேனைக்யாப்4யாஸ சீ’லோ ஹ்ருத3யமிஹ
யதா2ச’க்தி பு3த்3த்4யா நிருந்த்4யாத் |
மாயா வித்3தே4ஷு தஸ்மின் புனரபி ந
ததா2 பா4தி மாயாதி4நாத2ம்
தம் த்வாம் ப4க்த்யா மஹத்யா
ஸததமனுப4ஜனீச’ பீதி4ம் விஜஹ்யாம் || (91 – 3)

பயம் என்பது தன்னிடமிருந்து வேறுபட்ட ஒரு இரண்டாவது வஸ்துவிடம் தான் தோன்றுகின்றது.
அந்த இரண்டாவது வஸ்துவும் சங்கல்ப விகல்ப ரூபமான அந்தக்கரண விருத்தியால் மட்டுமே
அவ்வாறு மாறுபட்டதாகக் கற்பிக்கப் படுகின்றது.
காரண காரியங்கள் ஒன்று என்பதை நான் எப்போதும் அப்பியாசம் செய்வேன்.
மனத்தை அந்தக்கரண விருத்தியால் ஒரு வஸ்துவில் நிலை நிறுத்துவேன்.
அந்த மனம் மாயையின் காரியங்களாகிய காம குரோதங்களால் வியாபிக்கப் பட்டு விட்டால்,
முன் போல நிலை நிறுத்தப் பட்டபோதிலும், அது முன் போலப் பிரகாசிப்பதில்லை.
அதனால் மாயைக்கு அதிபதியான தங்களைத் திடமான பக்தியுடன் தொழுவேன்.
பயம் என்பதை முற்றிலுமாக விட்டு விடுவேன்.

ப4க்தேருத்பத்தி வ்ருத்3தி4
தவ சரணஜுஷாம் ஸங்க3மேனைவ பும்ஸாம்
ஆஸாத்3யே புண்யபா4ஜாம் ச்’ரிய இவ
ஜக3தி ஸ்ரீமதாம் ஸங்க3மேன |
தத்ஸங்கோ3 தே3வ பூ4யான்மம க2லு ஸததம்
தன்முகா2துன்மிஷத்3பி4 :
த்வன் மாஹத்ம்ய ப்ரகாரைர் ப4வதி ச
ஸுத்3ருடா4 ப4க்தி ருத்3தூ4த பாபா |(91 – 4 )

உலகில் செல்வந்தர்களின் சேர்க்கையால் ஒருவனிடம் செல்வம் பெருகும்.
அது போன்றே தங்களுடைய திருவடிகளைச் சேவிக்கும் பக்தர்களின் சேர்க்கையால் ஒருவனிடம்
பக்தி உற்பத்தியாகி அது வளரும்.
ஸ்ரீ தேவா! எப்போதும் எனக்குத் தங்கள் பக்தர்களின் சகவாசம் உண்டாகட்டும்.
அவர்கள் கூறுகின்ற தங்களின் மஹிமா விசேஷங்களால், எனக்குத் தங்களிடம் திடமான,
என் பாவங்களைப் போக்க வல்ல உறுதியான பக்தி உண்டாகட்டும்.

ச்’ரேயோ மார்கே3ஷு ப4க்தாவதி4க
ப3ஹுமதிர் ஜன்ம கர்மாணி பூ4யோ
கா3யன் க்ஷேமாணி நமான்யபி தது3ப4யத:
ப்ரத்3ருதம் ப்ரத்3ருதாத்மா |
உத்3யத்3தாஸ: கதா3சித் குஹசித3பி ருத3ன்
க்வாபி க3ர்ஜன் ப்ரகா3யன்
உன்மாதீ3வ ப்ரந்ருத்யன்னயி குரு கருணாம்
லோகபா3ஹ்யச்’சரேயம் || (91 – 5)

முக்கியமான புருஷார்த்தமான மோக்ஷத்தைத் தரும் மார்க்கங்களில் ஒன்று பக்தி.
அதில் அதிக ஆதரவு கொண்டவனாக நான்; க்ஷேமத்தையே தருகின்ற தங்களின் திரு அவதார லீலைகளையும்,
அவற்றினால் தங்களுக்கு உண்டான நாமங்களையும் கானம் செய்து கொண்டும்,
அவற்றால் மனம் உருகிச் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும், சில சமயங்களில் அழுது கொண்டும்,
சில சமயங்களில் கர்ஜித்துக் கொண்டும், பாடிக் கொண்டும், பித்தனைப் போல ஆடிக் கொண்டும்,
உலகில் பற்றின்றி சஞ்சரிப்பேனாகுக! அதற்குக் கருணை புரிவீர்!

பூ4தான்யேதானி பூ4தாத்மகமபி
ஸகலம் பக்ஷி மத்ஸ்யான் ம்ருகா3தீ3ன்
மர்த்யான் மித்ராணி ச’த்ரூனபி யமித
மதிஸ்த்வன் மயான்யானமானி |
த்வத்ஸேவாயம் ஹி ஸித்3த்யேன்மம
தவ க்ருபயா ப4க்தி தா3ர்ட்4யம் விராக3:
த்வத்தத்வ ஸ்யாவபோ4தோ4Sபி ச பு4வனபதே
யத்ன பே4த3ம் வினைவ || (91 – 6)

பஞ்ச பூதங்கள், அவற்றால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சங்கள், பறவைகள், மீன்கள், மான் முதலிய மிருகங்கள்,
மனிதர்கள், நண்பர்கள், பகைவர்கள், அனைவருமே
தங்களின் ஸ்வரூபம் என்று நிச்சயமான மனத்துடன் அவர்களை வணங்குவேனாகுக.
ஸ்ரீ லோக நாதா! தங்களுக்குச் சேவை புரியும் போது, தங்களின் கருணையால், திடமான பக்தியும்,
வைராக்கியமும், ஸ்ரீ பகவத் தத்துவத்தின் மெய்யான ஞானமும் வேறு கடின முயற்சிகள்
எதுவும் செய்யாமலேயே எனக்குச் சித்திக்கும்.

நோ முஹ்யன் க்ஷுத்ரு டா3த்3யைர்
ப4வஸரணி ப4வைஸ்த்வன்நிலீனாச’யத்வாத்
சிந்தாஸாதத்யசா’லீ நிமிஷலவமபி
த்வத் பதா3த3ப்ரகம்ப: |
இஷ்டாநிஷ்டேஷு துஷ்டி வ்யஸன விரஹிதோ
மாயிகத்வாவ போ3தா4த்
ஜ்யோத்ஸ்னாபி4ஸ்த்வன் நகே2ந்தோ ரதி4க
சி’சி’ரி தேனாத்மனா ஸஞ்சரேயம் || (91 -7 )

தங்களிடம் லயித்த மனம் கொண்டு; அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பசி, தாகம் போன்றவைகளால்
மயக்கம் அடையாது; தங்களை இடைவிடாது தியானம் செய்து கொண்டு;
ஒரு நிமிடம் கூடத் தங்கள் திருவடியிருந்து சலியாது; இவை மாயா காரியங்கள் என்ற அறிவினால்
பிரியமான வஸ்துக்களால் மன மகிழ்ச்சியும், பிரியமில்லாத வஸ்துக்களால் மன வருத்தமும் அடையாமல்,
தங்கள் திருவடிகளின் நகங்கள் வீசுகின்ற சந்திரிகையால் குளிர்ந்த மனத்துடன் சஞ்சரிப்பேன் ஆகுக!

பூ4தேஷ்வேஷு த்வதை3க்ய ஸ்ம்ருதி
ஸமதி4க3தௌ நாதி4காரோSது4னா சேத்
த்வத்ப்ரேம த்வத்கமைத்ரி ஜட3மதிஷு
க்ருபா த்3விட்ஸு பூ4யாது3பேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்ச்சா
குதுகமருதரச்’ரத்3த4யா வர்த்த4தாம் மே
த்வத்ஸம்ஸேவி ததா2Sபி த்3ருதமுபலப4தே
ப4க்தலோகோத்தமத்வம் || (91 – 8 )

எல்லாப் பிராணிகளிடமும் தங்களுடைய ஐக்கிய அனுசந்தானம் அடைவதற்கு எனக்கு இன்னமும்
தகுதி ஏற்படாமல் இருக்கலாம். அப்படியென்றால் தங்களிடம் பிரேமையும், தங்கள் அடியவர்களிடம் நட்பும்,
மூடர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் உபேக்ஷையும் எனக்கு உண்டாகட்டும்.
இதற்கும் நான் தகுதி பெறவில்லை என்றால், தங்கள் பிரதிமைக்குப் பூஜை செய்வதில் எனக்கு உள்ள
விருப்பம் அதிக சிரத்தையுடன் கூட இன்னமும் விருத்தி அடையட்டும்.
தங்களைச் சேவிக்கின்றவன் தங்கள் பக்தர்களில் சிறந்தவனாக விரைவாக மாறிவிடுகிறான்.

ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம்
க்ஷிதி ஜல மருதா3த்3யாத்மனா விக்ஷிபந்தீ
ஜீவான் பூ4யிஷ்டகர்மாவலி விவச’
க3தீன் துக்க2ஜாலே க்ஷிபன்தீ |
த்வன்மாயா மாS பி4பூ4ன் மாமயி
புவ4னபதே கல்பதே தத்ப்ரசா’ந்தை
த்வத்பாதே3 ப4க்திரேவேதி அவத3தி2 விபோ4
ஸித்3த4 யோகீ3 ப்ரபு3த்3த4 : || (91 – 9 )

ஹே ஸ்ரீ ஜகன் நாதா! தங்களுடைய பரமார்த்த ரூபத்தை மறைத்துக் கொண்டு, தங்களின் விக்ஷேப சக்தியால்
பூமி, ஜலம், வாயு போன்ற பல ரூபங்களில் தோன்றுகின்றீர்கள் .
பலவகைப்பட்ட கர்மங்களால் ஜீவாத்மாக்களைத் தன் வசம் இழக்கச் செய்து, துக்க வலையில் கொண்டு தள்ளுகின்றீர்கள்.
தங்களின் இந்த மாயை என்னை அடிமைப் படுத்தக் கூடாது.
ஹே ஸ்ரீ பிரபு ! தங்களின் திருவடி பக்தி ஒன்றே மாயையை வெல்லும் சாதனம் என்று
ஸ்ரீ பிரபுத்தர் என்ற சித்த யோகி ஸ்ரீ விதேக ராஜனுக்குக் கூறினார் அல்லவா?

துக்கா2ன்யாலோக்ய ஜந்துஷு அலமுதி3த
விவேகோSஹம் ஆசார்யவர்யாத்
லப்த்வா த்வத்3 த்ரூப தத்வம் கு3ண
சரிதகதா2த்3யுத்3ப4வத்3 ப4க்தி பூ4மா |
மாயாமேனாம் தரித்வா பரமஸுக2மயே
த்வத் பதே3 மோதி3தாஹே
தஸ்யாயம் பூர்வரங்க3: பவனபுரபதே
நாச’யாசே’ஷ ரோகா3ன் || ( 91 – 10)

நான் ஜீவர்களின் பற்பல துக்கங்களைக் கண்டு விவேகத்தைப் பெறுவேனாகுக!
சிறந்த ஒரு ஸ்ரீ குருவிடம் இருந்து தங்கள் ஸ்வரூபத்தின் உண்மையை அறிவேனாகுக!
தங்கள் குணங்ளையும், சரிதங்களையும், கானம் செய்து பக்திப் பெருக்கை அடைவேனாகுக!
இந்த மாயைத் தாண்டிப் பரமானந்த மயமான தங்கள் திருவடிகளில் மகிழ்ச்சி அடைவேன் ஆகுக!
இந்த மாயா ஜயம் அதற்கு நாந்தி போல அமையட்டும்!.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் !

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -90–ஸ்ரீ விஷ்ணு மஹத்வ ஸ்தாபனம்–

October 2, 2020

வ்ருக ப்4ருகு3 மோஹின்யம்ப3ரீஷாதி3 வ்ருத்தேஷு
அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ ச’ர்வாதி3 ஜைத்ரம் |
ஸ்தித மிஹ பரமாத்மன் நிஷ் கலார்வாக3 பி4ன்னம்
கிமபி தத3வபா4தம் தத்3தி4 ரூபம் தவைவ || (90 – 1)

ஹே ஸ்ரீ பரமாத்மா! விருகாசுரன், பிருகு முனிவர், அம்பரீஷன். போன்றவர்களின் சரித்திரத்தால்,
ஸ்ரீ பரமசிவன் முதலான பிற தேவதைகளைக் காட்டிலும் தங்கள் மஹிமை உயர்ந்தது என்று ஸ்தாபிக்கப்பட்டது.
நிஷ்களப் பரமாத்மாவாகிய தாங்கள் சகளர்களாகிய மற்ற தெய்வங்களைக் காட்டிலும்
இன்னவிதம் என்று சொல்ல முடியாதபடி வேறுபட்டுப் பிரகாசிக்கின்றீர்கள்.

மூர்த்தி த்ரயேச்’வர ஸதா3சி’வ பஞ்சகம் யத் ப்ராஹு :
பராத்மா வபுரேவ ஸதா3சி’வோSஸ்மின் |
தத்ரேச்’வரஸ்து ஸ விகுண்ட2 பத3ஸ்த்வ மேவ
த்ரித்வம் புனர் ப4ஜஸி ஸத்யபதே3 த்ரிபா4கே3 || (90 – 2)

ஸ்ரீ மூர்த்திப் பஞ்சகம் என்று ஸ்ரீ பிரமன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ ருத்திரன், ஸ்ரீ ஈச்வரன், ஸ்ரீ சதா சிவன் என்ற
ஐந்து தெய்வங்களைக் கூறுகின்றனர்.
அவர்களில் ஸ்ரீ சதாசிவன் என்னும் ஸ்ரீ பரமாத்மா ஸ்வரூபி தாங்களே. ஸ்ரீ ஈஸ்வரனும் தாங்களே.
ஸ்ரீ வைகுண்ட வாசியாகிய தாங்களே பிரமன், விஷ்ணு, ருத்திரன் என்ற மும் மூர்த்திகளாகவும் திகழ்கின்றீர்கள்.

தத்ராபி ஸாத்விக தனும் தவ விஷ்ணுமாஹூ
தா4தா து ஸத்வ விரலோ ராஜசைவ பூர்ண: |
ஸத்வோத் கட த்வமபி சாஸ்தி தமோ விகார
சேஷ்டாதி3 கஞ்ச தவ ச’ங்கர நாம்னி மூர்த்தௌ || (90 – 3 )

அந்த மும் மூர்த்திகளில் தங்களின் சுத்த சத்துவ ஸ்வரூபத்தை ஸ்ரீ விஷ்ணு என்று கூறுவர்.
ஸ்ரீ பிரமன் சத்துவ குணம் குறைந்தும் ரஜோ குணம் மிகுந்தும் உள்ளார்.
ஸ்ரீ சங்கரன் தமோ குணம் மிகுந்து காணப் படுகின்றார்.

தம் ச த்ரிமூர்த்யதிக3ம் பரபூருஷம் த்வாம்
ச’ர்வாத்மனாSபி க2லு ஸர்வ மயத்வ ஹேதோ: |
ச’ம் ஸந்த்யுபாஸான விதௌ4 தத3பி ஸ்வதஸ்து
த்வத்3ரூப மித்யதி த்3ருட4ம் ப3ஹு ந: ப்ரமாணம் || (90 – 4)

ஸ்ரீ மும் மூர்த்திகளுக்கு அதீதனக இருக்கும் அந்த ஸ்ரீ ஈஸ்வரனையும்,
பிரம்மாண்டத்துக்கு உள்ளும் வெளியும் வியாபித்து உள்ள ஸர்வ ஸ்வ்ரூபியும் ஸ்ரீ பரமாத்மாவும் ஆகிய
தங்களையும் உபாசன விதியில் ஸ்ரீ சிவ ஸ்வரூபமாகக் கூறுகின்றனர்.
இதற்குத் திடமான பிரமாணங்களும் உள்ளன.

ஸ்ரீ ச’ங்கரோSபி ப4க3வன் ஸகலேஷு தாவத்
த்வாமேவ மானயதி யோ ந ஹி பக்ஷபாதீ |
த்வன் நிஷ்ட2மேவ ஸ ஹி நாம ஸஹஸ்ரகாதி3
வ்யாக்2யத்3 ப4வத் ஸ்துதி பரச்’ச க3திம் க3தோSந்தே || (90 – 5 )

ஸ்ரீ சங்கர பகவத் பாதரும் ஸ்ரீ மும் மூர்த்திகளாகிய சகளர்களில் தங்களையே வெகுமானிக்கின்றார்.
அவர் பக்ஷ பாதி அல்ல. அவர் தங்களின் ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு வியாக்கியானம் செய்தார்.
தாங்களையே துதித்து நற்கதியும் அடைந்தார்.

மூர்த்தி த்ரயாதிக3ம் உவாச ச மந்த்ர சா’ஸ்த்ர
ஸ்யாதௌ3 கலாய ஸுஷுமம் ஸகலேச்’வரம் த்வாம் |
த்4யானம் ச நிஷ்கல மசௌ ப்ரணவே க2லூக்த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா3த3 நான்யம் || (90 – 6 )

ஸ்ரீ சங்கர பகவத்பாதர் மந்திர சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீ மும் மூர்த்திகளுக்கும் அதீதனாகிய தங்களைக்
காசாம்பூ நிறமுடையவராக வர்ணிக்கின்றார். பிரணவத்தில் நிஷ்கள தியானத்தையும் உரைத்து
அங்கு நிஷ்களனாகவும், சகளனாகவும் தங்களையே கூறியுள்ளார். வேறு எவரையும் அல்ல.

ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்3ரஹே
விஸம்ச’யம் த்வன் மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்த்தி யுக் ஸத்யபத3 த்ரிபா4க3த:
பரம் பத3ம் தே கதி2தம் ந சூ’லின : || (90 – 7 )

எல்லாவற்றினுடைய சாரத்தை கூறுகின்ற ஸ்ரீ புராண சங்க்ரஹம் என்ற கிரந்தத்திலும் சந்தேகமே இல்லாமல்
தங்கள் மகிமை தான் வர்ணிக்கப்படுகின்றது. தங்கள் ஸ்தானமே உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
ஸ்ரீ பரமேச்வரனுடைய ஸ்தானம் பற்றிக் கூறப் படவில்லை.

யத் ப்3ரஹ்ம கல்பம் இஹ பா4க3வத த்3விதீய
ஸ்கந்தோ4தி3தம் வபு ரனாவ்ருத மீச’ தா4த்ரே |
தஸ்யைவ நாம ஹரிச’ர்வ முக2ம் ஜகா3த3
ஸ்ரீ மாத4வ: சி’வ பரோSபி புராணஸாரே || (90 – 8 )

ஸ்ரீ பிரம்ம கல்பத்தில் ஸ்ரீ பிரம்ம தேவனுக்கு பிரத்தியக்ஷமாகக் கண்பிக்கப் பட்ட தங்கள் சரீரத்துக்கே
ஸ்ரீ ஹரி, ஸ்ரீ சர்வன் முதலிய திரு நாமங்களை ஸ்ரீ மாதவாச்சாரியார் (சிவபக்தனாக இருந்த போதிலும்)
ஸ்ரீ புராண சாரம் என்ற கிரந்தத்தில் உரைத்துள்ளார்.

யே ஸ்வ ப்ரக்ருத்யனுகுண கி3ரிச’ம் ப4ஜந்தே
தேஷாம் ப2லம் ஹி த்3ருட4யைவ ததீ3ய ப4க்த்யா |
வ்யாஸோ ஹி தேன க்ருத்வா நாதி4காரி ஹேதோ:
ஸ்காந்தா3தி3கேஷு தவ ஹானிவசோS ர்த்தவாதை3: || (90 – 9 )

எவர் எவர் தம் தம் வாசனைக்கு ஏற்ப ஸ்ரீ பரமேச்வரனைச் சேவிக்கின்றார்களோ அவர்களின் பலம்
அந்த ஸ்ரீ பரமேச்வர பக்தியினால் உண்டாகின்றது. அதனால் தான் ஸ்ரீ வியாச முனிவர் ஸ்காந்தம் முதலியவற்றில்
அதன் அதிகாரிக்கு உயர்வையும், தங்களுக்குத் தாழ்வையும் கூறியுள்ளார்.

பூ4தார்த்த2 கீர்த்தி ரனுவாத3 விருத்3த4 வாதௌ3
த்ரேதா4Sர்த்த2 வாத3 க3தய: க2லு ரோசனார்த்தா2: |
ஸ்காந்தா4தி3கேஷு ப3ஹவோத்ர விருத்3த4வாதா3
ஸ்த்வத்தாமஸத்வ பரிபூ4த்யுபசி’க்ஷணாத்3யா: || (90 – 10)

நடந்ததைச் சொல்லுவது, விரோதமில்லாத அர்த்தத்தைச் சொல்லுவது, விருத்தமான அர்த்தத்தைச் சொல்வது
என்று மூன்று வித அர்த்த வாதங்களும் கூறும் விஷயத்தில் ருசியை உண்டு பண்ணுவதற்காகவே
தங்களுக்குத் தாமசத்தையும், பராஜயத்தையும் கூறுகின்ற ஸ்காந்தம் முதலியவை
விருத்த வாதம் என்னும் அர்த்த வாதங்களே.

யத் கிஞ்சித3ப்யவிது3ஷாSபி விபோ4 மயோக்தம்
தன்மாத்ர சா’ஸ்த்ர வசனாத்3யபி4 த்3ருஷ்ட மேவ |
வ்யாஸோக்தி ஸாரமய பா4க3வதோபகீ3த
க்லேசா’ன் விதூ4ய குரு ப4க்திப4ரம் பராத்மன் || (90 – 11)

அறிவில்லாதவனாக இருந்தாலும் என்னால் கூறப்பட்டவை மந்திர சாஸ்திரம் முதலிவற்றில்
காணப் படுகின்ற விஷயங்களே. ஸ்ரீ வியாச முனிவரின் வசன சாரங்கள் நிறைந்த
ஸ்ரீ மத் பாகவதத்தில் துதிக்கப்படும் ஸ்ரீ பரமாத்மாவே! திடமான பக்தியைத் தந்தருள்வீர்!
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும்

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -89–வ்ருக அஸுர கதா–

October 2, 2020

ரமாஜானே ஜானே யதி3ஹ தவ ப4க்தேஷு விப4வோ
ந ஸத்3யஸ் ஸம்பத்3யஸ் ததி3ஹ மத3க்ருத்வா த3ச’மினாம்|
ப்ரசா’ந்தீம் க்ருத்வைவ ப்ரதி3ச’ஸீ தத: காம மகி2லம்
ப்ரசா’ந்தேஷு க்ஷிப்ரம் ந க2லு ப4வதீயே ச்யுதி கதா2|| ( 89 – 1 )

இவ்வுலகில் தங்களின் பக்தர்களிடம் ஐஸ்வர்யம் விரைவில் உண்டாவதில்லை.
அதன் காரணம் அது மதத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சாந்தி அடையாதவர்களுக்குச் சாந்தியைக் கொடுத்து;
சாந்தி அடைந்தவர்களுக்கு சீக்கிரமாக எல்லா அபீஷ்டங்களையையும் நிறைவேற்றுகிறீர்கள்.
நழுவுதல் என்பதே தங்கள் பக்தர்களிடம் கிடையாது அல்லவா? ( 89 – 1)

————-

ஸத்3ய: ப்ரஸாத3 ருஷிதான் விதி4 ச’ங்கராதீ3ன்
கேசித்3 விபோ4 நிஜ கு3ணானுகுணம் பஜந்த்ய:|
ப்4ரஷ்டா ப4வந்தி ப3த கஷ்ட மதீ3ர்க4 த்3ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா3ஹரணம் கிலாஸ்மின் || (89 – 2 )

ஹே பிரபு! சிலர் தங்கள் வாசனைக்குத் தகுந்தபடி, சீக்கிரத்தில் சந்தோஷம் அடைபவர்களும்,
கோபம் அடைகிறவர்களும், ஆகிய பிரமன், ஈசன் முதலியவர்களைச் சேவித்துத் தீர்க்க தரிசனம்
இல்லாத காரணத்தால் பிரஷ்டர்கள் ஆகின்றார்கள். இது மிகவும் கஷ்டமானதே!
இதற்கு விருகாசுரன் சிறந்த உதாரணம் ஆவான் அல்லவா? ( 89 – 2 )

———–

ச’குனி ஜஸ்ஸ து நாரத3 மேகதா3
த்வரித தோஷ மப்ருச்ச2 த3தீ4ச்’வ்ரம்|
ஸ சதி3தே3ஷ கி3ரீச’ முபாஸிதும்
ந து ப4வந்த மப3ந்து4 மாஸாது4ஷு || ( 89 – 3 )

சகுனியின் புத்திரனான விருகாசுரன் ஒரு நாள் நாரதரிடம் விரைவாக சந்தோஷம் அடையும் ஈசனைப் பற்றிக் கேட்டான்
அதற்கு ஸ்ரீ நாரதர் ஸ்ரீ பரமேஸ்வரனை உபாசிக்கச் சொன்னார்.
துஷ்டர்களின் பந்து அல்லாத உங்களை உபாசிக்கச் சொல்லவில்லை. ( 89 – 3 )

———–

தபஸ் தப்த்வா கோ4ரம் ஸ கலு குபிதஸ் ஸப்தம தி3னே
சி’ர: சி2த்வா ஸத்3ய: புரஹர முபஸ்தா2ப்ய புரத:|
அதி க்ஷுத்3ரம் ரௌத்3ரம் சி’ரசி’ கர தானேன நித4னம்
ஜகன்னாதாத் வவ்ரே ப4வதி விமுகா2னாம் க்வ சு’ப4தீ4:|| ( 89 – 4)

அந்த விருசாசுரன் கடுமையான தவம் புரிந்தான். ஏழாவது நாளே கோபம் அடைந்து தன் தலையைத் தானே
அறுத்து எடுத்த போது ஸ்ரீ பரமேஸ்வரன் அவன் முன் பிரத்தியக்ஷம்
ஆனார். அவரிடமிருந்து ” தலை மேல் கை வைப்பதால் மரணம் உண்டாக வேண்டும்!” என்ற
மிகவும் துச்சமானதும் கொடியதும் ஆன வரத்தைகே கேட்டுப் பெற்றான்.
தங்களிடம் பாராமுகம் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி எங்ஙனம் உண்டாகும்? ( 89 – 4 )

———

மோக்தாரம் ப3ந்த4முக்தோ ஹரிண பதி
ரிவ ப்ராத்3ரவஸ்தோ(S)த2 ருத்3ரம்
தை3த்யாத் பீ4த்யா ஸ்ம தே3வோ தி3சி’ தி3சி’
வலதோ ப்ருஷ்ட2தோ த3த்த த்3ருஷ்டி:|
தூஷ்ணீகே ஸர்வ லோகே தவ பத3 மதி4
ரோக்ஷ் யந்தம் உத்3வீக்ஷ்ய ச’ர்வம்
தூ3ரா தே3வ அக்3ரதஸ்த்வம் படு வடு
வபுஷா தஸ்தி2ஷே தா3னவாய|| ( 89 – 5 )

பிறகு அவன், கட்டிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட ஒரு சிங்கம், தன்னை அவிழ்த்து விட்டவனையே
பின் தொடருவது போலப் பரமசிவனைப் பின் தொடர்ந்தான். ஸ்ரீ பரமசிவனும் அசுரனிடம் கொண்ட பயத்தால்,
பின் புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திசைகளிலும் ஓடினார்.
அத்தனை பேரும் பேசாமல் இருக்கும் போது, ஸ்ரீ பரமசிவன் தங்கள் லோகத்திற்கு செல்ல உத்தேசித்ததைக்
கண்டறிந்து வெகு தூரத்திலேயே திறமை வாய்ந்த பிரம்மச்சாரியின் உருவத்தில்
அசுரனுக்கு எதிரில் பிரகாசமாக நின்றீர்கள் அல்லவா? ( 89 – 5 )

————-

ப4த்3ரம் தே சா’குநேய ப்4ரமாஸி கிமது4னா
த்வம் பிசா’சஸ்ய வாசா
ஸந்தே3ஹச்’சேன் மதுக்தௌ தவ கிமுந
கரேஷ் யங்கு3லீம் அங்க3 மௌலௌ|
இத்த2ம் த்வத்3 வாக்ய மூட4ச்’ சி’ரஸி
க்ருத கரஸ் ஸோsபதச் சின்ன பாதம்
ப்ரம்சோ’ ஹ்யேவம் பரோபாஸிது ரபி
ச கதி: சூ’லினோsபி த்வமேவ || ( 89 – 6 )

“ஹே விருகாசுரனே! நீ க்ஷேமமா? நீ இந்தப் பிசாசின் சொல்லைக் கேட்டுக் கொண்டு ஏன்
வீணாக ஓடித் திரிகின்றாய்? அப்பனே! உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே
ஏன் கையை வைக்கவில்லை?” இவ்வாறு தாங்கள் சொல்லக் கேட்டு மதி மயங்கிய அந்த விருகாசுரன்
தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டான். வேரறுந்த மரம் போல விழுந்து இறந்தான்.
வேறு கடவுளை உபாசிப்பவனுக்கு இவ் விதமாக நாசம் உண்டாகிறது.
அது மட்டுமல்ல! சூல பாணிக்குக் கூட தாங்களே அபயம். ( 89 – 6 )

———–

ப்3ருகு3ம் கில ஸரஸ்வதி நிகட வாஸினஸ் தாபஸாஸ்
த்ரிமூர்த்திஷு ஸமாதிச’ன்னதி4க ஸத்வதாம் வேதி3தும்|
அயம் புன ரனாத3ராத் உதி3த ருத்3த4 ரோஷே விதௌ4
ஹரேsபி ச ஜிஹீம்ஸிஷௌ கி3ரிஜயா த்4ருதே த்வாமகா3த் || (89 – 7 )

ஸ்ரீ சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த தபஸ்விகள் மும் மூர்த்திகளில் அதிகமான சத்துவ குணம்
உடையவரைக் கண்டறிவதற்கு ஸ்ரீ ப்ருகு முனிவரை அனுப்பினார்கள் அல்லவா?
அவரும் ஸ்ரீ பிரம்ம தேவர் தன்னை ஆதரிக்காததால் முதலில் கோபம் அடைந்து பிறகு சாந்தம் அடைந்தார்.
ஸ்ரீ பரமேஸ்வரனும் அவரைக் கொல்ல விரும்பிய போது ஸ்ரீ பார்வதியால் தடுக்கப்பட்டார்.
அதன் பின் தங்களை வந்து அடைந்தார் அல்லலவா?( 89 – 7 )

———

ஸுப்தம் ரமாங்கபு4வி பங்கஜ லோசனம் த்வாம்
விப்ரே விநிக்4னதி பதே3ன முதோத்திதஸ்த்வம்|
ஸர்வம் க்ஷமஸ்வ முனி வர்ய ப4வேத் ஸதா3 மே
த்வத் பாத3சிஹ்ன மிஹ பூ4ஷண மித்யவாதீ3: || ( 89 – 8 )

ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் மடியில் நித்திரை செய்கிறவரும், தாமரைக் கண்ணனும் ஆகிய தங்களை
அந்த ஸ்ரீ ப்ருகு முனிவர் காலால் எட்டி உதைத்த போது தாங்கள் மிகவும் சந்தோஷத்தோடு எழுந்து,
“ஹே முனி ஸ்ரேஷ்டரே! எல்லாவற்றையும் பொறுக்க வேண்டும். தங்கள் திருவடியின் அடையாளம் எனது
மார்பில் எப்போதும் அலங்காரமாக இருக்கட்டும்” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 89 – 8)

————

நிச்’சித்ய தே ச ஸுத்3ருட4ம் த்வயி ப3த்3த4 பா4வா:
ஸாரஸ்வதா முனிவர த3தி4ரே விமோக்ஷம்|
த்வாமேவ மச்யுத புனச்’ ச்யுதி தோ3ஷ ஹீனம்
ஸத்வாச்சயைக தனுமேவ வயம் ப4ஜாம:|| ( 89 – 9 )

ஸ்ரீ சரஸ்வதி நதி தீரவாசிகாளான அம் முனி ஸ்ரேஷ்டர்களும் நிச்சயம் பண்ணிக் கொண்டு
தங்களிடத்தில் திடமான பக்தி கொண்டு மோக்ஷம் அடைந்தார்கள்.
ஹே ஸ்ரீ அச்யுதா! இவ்விதம் ச்யுதி அல்லது நழுவுதல் என்ற தோஷம் இல்லாத சத்வ குணப் பிரதான
சரீரத்தை உடைய உங்கள் ஒருவரையே நாங்கள் சேவிக்கின்றோம். ( 89 – 9 )

———

ஜக3த் ஸ்ருஷ்ட்யாதௌ3 த்வாம் நிக3ம நிவஹைர் வந்தி3பி4ரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித் பரம ரஸ நிர் த்3வைத வபுஷம்|
பராத்மானம் பூ4மான் பசு’ப வனிதா பா4க்3ய நிவஹம்
பரீதாபச்’ராந்த்யை பவனபுர வாஸின் பரிப4ஜே || ( 89 – 10)

ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! உலக சிருஷ்டியின் துவக்கத்தில் ஸ்துதி செய்யும் பாடகர்கள் போல
தேவ சமூஹத்தினரால் துதிகப்பட்டவரும்; சச்சிதானந்த ரூபியும்; பரமார்த்த ரூபியும்;
ஸ்ரீ கோப ஸ்த்ரீக்களின் பாக்கியக் குவியலுமான தங்களைத் தாபத் த்ரய நிவர்த்திக்காக
அடியேன் நன்றாக சேவிக்கின்றேன்-அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 89 – 10 )

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -88–ஸ்ரீ சந்தான கோபாலம்–

October 2, 2020

ப்ராகே3வாசார்ய புத்ராஹ்ருதி நிச’மனயா
ஸ்வீய ஷட் ஸூனு வீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாது ருக்த்யா ஸுதல பு4வி
ப3லிம் ப்ராப்ய தேனார்சிதஸ்த்வம்|
தா4துச்’சா’பாத்3 தி4ரண்யான்வித கசி’பு
ப4வான் சௌ’ரிஜான் கம்ஸ ப4க்3னான்
ஆநீயையான் ப்ரத3ர்ஷ்ய ஸ்வபத3
மனயதா2: பூர்வ புத்ரான் மரீசே: || ( 88 – 1 )

ஸ்ரீ குரு புத்திரனை அழைத்து வந்ததைக் கேட்டதால், வெகு நாட்களாகவே தன்னுடைய
ஆறு புத்திரர்களைக் காண விரும்பினாள் ஸ்ரீ தேவகி.
தாங்கள் சுதல லோகம் சென்று மகா பலியால் பூஜிக்கப்பட்டீர்கள்.
பிரம்ம சாபத்தால் ஹிரண்ய கசிபுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்களும்,
பிறகு ஸ்ரீ வசுதேவருக்குப் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டவர்களும், மரீசியின் முதல் பிள்ளைகளுமான,
அவர்களை அழைத்து வந்து ஸ்ரீ தேவகிக்குக் காட்டிய பின்னர் அவர்களை
லோகத்துக்குத் திருப்பி அனுப்பினீர்கள் அல்லவா? ( 88 – 1 )

ச்’ருததே3வ இதி ச்’ருதம் த்3விஜேந்த்3ரம்
ப3ஹு லாச்’வம் ந்ருபதிம் ச ப4க்தி பூர்ணம் |
யுக3பத்தவ மனுக்3ரஹீது காமோ
மிதி2லாம் ப்ராபித தாபஸை: ஸமேத:|| ( 88 – 2 )

ச்ருததேவன் என்று பிரசித்தி பெற்ற பிராமாணோத்தமனையும், பக்தி நிறைந்த பஹுலாச்வன்
என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹிக்க விரும்பியதால்,
தாங்கள் தபஸ்விகளுடனேயே ஸ்ரீ மிதிலைக்குச் சென்றீர்கள் அல்லவா? ( 88 – 2 )

க3ச்ச2ன் த்3விமூர்த்தி ருப4யோர் யுக3பன்னிகேதம்
ஏகேன பூ4ரி விப4வைர் விஹிதோபசார:|
அன்யேன தத்3தி3ன பு4தைச்’ச’ ப2லௌ த3னாத்3யை:
துல்யம் ப்ரசஸேதி3த த3தா3த2 ச முக்தி பா4ம்யாம் || ( 88 – 3 )

இரண்டு உருவங்களை எடுத்துக் கொண்டு, இருவருடைய இல்லங்களுக்கும் ஒரே காலத்தில் சென்றீர்கள்.
அரசன் பஹுலாச்வனால் மிகுந்த வைபவத்துடனும், அந்தணன் ச்ருததேவனால் மிகவும் எளிமையாக அன்று
சம்பாதிக்கப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றால் உபசரிக்கப் பட்ட தாங்கள்,
இருவரிடத்திலும் ஒரே போல சந்தோக்ஷம் அடைந்தீர்கள் அல்லவா?
அவ் விருவருக்கும் ஒரே போல மோக்ஷத்தை அளித்தீர்கள் அல்லவா? ( 88 – 3 )

பூ4யோSத2 த்3வாரவத்யாம் த்3விஜ தனய
ம்ருதிம் தத் ப்ரலாபானபி த்வம்
கோ வா தே3வம் நிருந்த்4யாதி3தி கில
கத2யன் விச்’வ வோடா4Sப்ய ஸோடா4:|
ஜிஷ்ணோர் க3ர்வம் விநேதும் த்வயி மனுஜ தி4யா
குண்டி2தாஞ்சாஸ்ய பு3த்3தி4ம்
தத்வாரூடா4ம் விதா4தும் பரமதம
பத3 ப்ரக்ஷணேநேதி மன்யே || ( 88 – 4 )

பிறகு ஸ்ரீ மத் துவாரகையில் அடிக்கடி உண்டான ஒரு பிராமணனின் குமாரர்களின் மரணத்தையும்,
அந்த பிராமணனின் சோகமான புலம்பல்களையும், “தலை விதியை யாரால் தடுக்க முடியும்?” என்று
சொல்லியவாறு தாங்கள் சகித்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?
சமஸ்த பிரபஞ்சத்தையும் தரிக்க வல்ல தாங்கள் அவ்வாறு அவற்றைச் சகித்துக் கொண்டு இருந்தது
இந்தக் காரணங்களுக்காகவே என்று நான் எண்ணுகின்றேன்.
ஸ்ரீ அர்ஜுனனுடைய கர்வத்தைப் போக்க வேண்டும்; தங்களை வெறும் மனிதனாகவே எண்ணியிருந்த அவன்
கருத்தை மாற்ற வேண்டும்; விவேகம் இல்லாத அவன் புத்தியை ஸ்ரீ வைகுண்டத்தைக் காட்டுவதன் மூலம்
பரமார்த்த போதத்தை அடைந்ததாகச் செய்ய வேண்டும் என்பவையே அவை என்று நான் எண்ணுகின்றேன்.( 88 – 4 )

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புனரபி
தவ தூபேக்ஷயா கஷ்ட வாத3:
ஸ்பஷ்டோ ஜாதோ ஜனானா மத2
தத3வஸரே த்3வாரகாமாப பார்த்த2:|
மைத்ர்யா தத்ரோஷிதோSசௌ நவம
ஸுத ம்ருதௌ விப்ர வர்ய ப்ரரோத3ம்
ச்’ருத்வா சக்ரே ப்ரதிஞாம் அனுபஹ்ருத
ஸுதஸ் ஸன்னிவேக்ஷ்ய க்ருஷானும் || ( 88 – 5 )

அந்த பிராமணனுடைய எட்டுப் பிள்ளைகள் இறந்து விட்டனர். தங்கள் உபேக்ஷை காரணமாகவே
ஜனங்களுக்கு இடையில் “கஷ்டம்! கஷ்டம்!” என்ற பேச்சு ஸ்பஷ்டமாகக் கேட்கத் துவங்கியது.
அதே சமயத்தில் ஸ்ரீ அர்ஜுனனும் ஸ்ரீ மத் துவாரகைக்கு வந்தான்.
சிநேகத்தால் ஸ்ரீ அர்ஜுனன் அங்கு வசித்திருக்கும் பொழுது, ஒன்பதாவது புத்திரனும் இறந்து போனதால்
அந்த பிராமணன் கதறி அழுதான். அதைக் கேட்டு மனம் வருந்திய ஸ்ரீ அர்ஜுனன் கடுமையான ஒரு பிரதிக்ஞை செய்தான்,
“இனிப் பிறக்கும் குழந்தையை இறக்க விடமாட்டேன். அதையும் மீறி அது இறந்து போனால்
அதைத் திருப்பிக் கொண்டு வருவேன். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால்
நான் அக்னிப் பிரேவேசம் செய்வேன்!” என்று . ( 88 – 5 )

மானீ ஸ த்வா மப்ருஷ்ட்வா த்விஜ நிலய
க3தோ பா3ணஜாலைர் மஹாஸ்த்ரை:
ருந்தா4ன: ஸூதிகே3ஹம் புனரபி ஸஹஸா
த்3ருஷ்ட நஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்ரீம் ததா2ன்யாஸ் ஸுரவர
நக3ரீர் வித்3யயாSS ஸாத்3ய ஸத்3யோ
மோகோ4த்3யோக3: பதிஷ்யன் ஹுதபு4ஜி
ப4வதா ஸஸ்மிதம் வரிதோSபூத் || ( 88 – 6 )

செருக்குற்ற ஸ்ரீ அர்ஜுனன் தங்களிடம் சொல்லாமல் அந்த பிராமணன் வீட்டுக்குச் சென்றான்.
ஆக்கிநேயம் முதலிய பெரிய அஸ்திரங்களால் பிரசவ அறையை மறைத்து விட்டான்.
குழந்தை பிறந்தது. உடனே அது மறைந்தும் போயிற்று.
உடனேயே அதைத் தேட யமபுரி, இந்திரனின் பட்டணம் , மற்ற தேவர்களின் நகரங்களை
தன் யோக வித்தையால் அடைந்த ஸ்ரீ அர்ஜுனனால் குழந்தையைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
தன் பிரதிக்ஞைப்படி அக்னிப் பிரவேசம் செய்ய முற்படும் போது தங்களால் தடுக்கப்பட்டான். ( 88 – 6 )

ஸார்த்த4ம் தேன ப்ரதீசீம் தி3ச’மதி
ஜவினா ஸ்யந்த3னேனாபி4யாதே
லோகாலோகம் வ்யதீததாஸ்திமிர
ப4ரமதோ2 சக்ரதா4ம்னா நிருந்த3ன்|
சக்ராம்சு’ க்ளிஷ்ட் த்3ருஷ்டிம் ஸ்தி2தமத2
விஜயம் பச்’ய பச்’யேதிவாராம்
பாரே த்வம் ப்ராத3த3ர்ச’ கிமபி ஹி
தமஸாம் தூ3ர தூ3ரம் பத3ம் தே || ( 88 – 7 )

அந்த ஸ்ரீ அர்ஜுனனுடன் மிகவும் வேகமாகச் செல்லும் தேரில் ஏறிக் கொண்டு,
மேற்கு திசையை நோக்கிச் சென்று, லோகாலோக மலைகளைக் கடந்து, அங்கு நிலவிய
காரிருளை ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தால் அகற்றினீர்கள்.
அப்போது ஸ்ரீ சுதர்சனத்தின் ஒளியால் கண்கள் வருந்திய ஸ்ரீ அர்ஜுனனிடம்,
” பார்! பார்!” என்று சொல்லிக் காரண ஜலத்துக்கும் அப்பால், வெகு தூரத்தில் இருக்கும்,
இன்னந்தென்று வர்ணிக்க முடியாத தங்கள் உலகமான ஸ்ரீ வைகுண்டத்தைக் காண்பித்தீர்கள் அல்லவா? ( 88 – 7 )

தத்ராஸீனம் பு4ஜங்கா3தி4ப ச’யனதலே
தி3வ்ய பூ4ஷாயுதா4த்3யை:
ஆவீதம் பீதசேலம் ப்ரதினவ ஜலத3
ச்’யாமலம் ஸ்ரீமத3ங்க3ம் |
மூர்த்தினா மீசி’தாரம் பரமிஹ
திஸ்ருணா மேகமர்த்த2ம் ச்’ருதீனாம்
த்வாமேவ த்வம் ப்ராத்மன் ப்ரியஸக2
ஸஹிதோ நேமித2 க்ஷேம ரூபம்|| (88 – 8 )

அந்த ஸ்ரீ வைகுண்டத்தில் சர்ப்ப ராஜனாகிய ஸ்ரீ ஆதி சேஷன் அமைத்த படுக்கை மேல் வீற்றிருப்பவரும்;
சிறந்த ஆபரணங்களை அணிந்து இருப்பவரும்; சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும்;
மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; நீருண்ட புதுக் கார்மேகம் போன்ற ஷ்யாமள நிறம் உடையவரும்;
ஸ்ரீ பொருந்திய திருமேனி கொண்டவரும்; ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்வதற்கு மும்மூர்த்திகளை நியமிக்கின்றவரும்;
சர்வ காரண பூதரும்; வேதங்களுக்கு முக்கிய அர்த்தபூதரும்; மோக்ஷரூபியாகவும் இருக்கின்ற தங்களையே,
தாங்கள் தங்கள் நண்பன் ஸ்ரீ அர்ஜுனனுடன் வணங்கினீர்கள் அல்லவா? ( 88 – 8 )

யுவாம் மாமேவ த்3வாவதிக
வ்ருதாந்தர்ஹித தயா
விபி4ன்னௌ ஸந்த்3ரஷ்டும் ஸ்வய மஹ
மஹார்ஷம் த்3விஜ ஸுதான் |
நயேதம் த்3ராகே3 தானிதி க2லு
விதீர்ணான் புனரமூன்
த்3விஜாயா தா3யாதா3:ப்ரணுத
மஹிமா பாண்டு3ஜனுஷா || ( 88 – 9 )

பிரகாசமான ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதால் ஸ்ரீ பரமாத்மாவாகவும் ;
மறைந்த ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதால் ஜீவாத்மாவாகவும் இரண்டாகப் பிரிந்தவர்களும்,;
நானாகவே இருப்பவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும் என்று நானே
பிராமணனின் குழந்தைகளை இங்கே கொண்டு வந்தேன். அவர்களைச் சீக்கிரமாக அழைத்துச் செல்லுங்கள் ” என்று
சொல்லிக் குழந்தைகளைத் திருப்பித் தரவும், ஸ்ரீ அர்ஜுனனுடன் விரைந்து திரும்பி வந்து
அவனால் புகழ் பெற்றுவிட்ட அந்த பிரமணனிடம் குழந்தைகளைத் திருப்பித் தந்தீர்கள் அல்லவா? ( 88 – 9 )

ஏவம் நானா விஹாரைர் ஜக3த3பி4 ரமயன்
வ்ருஷ்ணி வம்ச’ம் ப்ரனுஷ்ணன்
ஈஜானோ யக்ஞபே4தை3 ரதுல
விஹ்ருதாபி: ப்ரீணயன்னேண நேத்ரா:|
பூ4பா4ர க்ஷேப த3ம்பாத் பத3 கமல
ஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண :
பூர்ணம் ப்ரஹ்மை ஸாக்ஷாத் யது3ஷு
மனுஜதா ரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ:|| ( 88 – 10)

இவ்விதம் பற்பல லீலைகளைச் செய்து கொண்டும்; உலகத்தைக் களிப்புறச் செய்து கொண்டும்;
ஸ்ரீ வ்ருஷ்ணீ வம்சத்தை ஓங்கி வளரச் செய்துகொண்டும்; பற்பல யாகங்களைச் செய்து கொண்டும்;
ஒப்பற்ற லீலா விஹாரங்களால் மான் கண்ணியரான பெண்களை சந்தோஷப்படுத்திக் கொண்டும்;
பூபாரத்தை ஒழிப்பது என்ற வியாஜத்தால் தங்கள் மலரடிகளைச் சேவித்தவர்களுக்கு மோக்ஷத்தைக்
கொடுப்பதற்கு என்றே யது வம்சத்தில் அவதரித்த; எங்கும் நிறைந்துள்ள பர ப்ரஹ்ம ஸ்வரூபியாகிய தாங்கள்;
மனிதத் தன்மையால் மறைக்கப்பட்டு விளங்கினீர்கள் அல்லவா? ( 88 – 10)

ப்ராயேண த்3வாரவத்யாம் அவ்ருதத3யி ததா 3
நரதஸ் த்வத்3 ராஸார்த்ரஸ்
தாஸ்மாம் லேபே4 கதாசித் க2லு ஸுக்ருத விதி4ஸ்
த்வத் பிதா தத்வ போ3த4ம் |
ப4க்தானா மக்3ரயாயீ ஸ ச க2லு
மதிமா நுத்3த4வஸ் த்வத்த ஏவ
ப்ராப்தோ விஞ்ஞான ஸாரம் ஸ கில
ஜனஹிதாயாதுனாssஸ்தே ப3த3ர்யாம் || ( 88 – 11 )

ஹே ஸ்ரீ பகவன்! ஸ்ரீ நாரதர் தங்கள் சேவையில் ஈடுபட்டவராக அதிக நாட்கள்
ஸ்ரீ மத் துவாரகையில் வசித்து வந்தார் அப்போது ஒரு நாள் தங்கள் பிதாவாகிய புண்ணிய சீலர்
ஸ்ரீ வசுதேவர் அந்த ஸ்ரீ நாரதரிடமிருந்து ஞானோபதேசத்தைப் பெற்றார்.
பக்தர்களில் முந்தியவரும் புத்திசாலியுமான அந்த ஸ்ரீ உத்தவரும் தங்களிடமிருந்தே ஞான சாரத்தை அடைந்தார்.
அந்த ஸ்ரீ உத்தவர் ஜனங்களின் நன்மைக்காக இன்றும் ஸ்ரீ பதரிகாசிரமத்தில் இருக்கின்றார் அல்லவா? ( 88 – 11 )

ஸோயம் க்ருஷ்ணாவதாரே ஜயதி தவ விபோ4
யத்ர சௌஹார்த பீ4தி ;
ஸ்நேஹ த்3வேஷானுராக3 ப்ரப்ருதிபி:
அதுலை: அச்’ரமை: யோக3 பே4தை3:|
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தா மம்ருதபதமகு:
ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விச்’வார்தி சா’ந்த்யை
பவனபுரபதே ப4க்தி பூர்த்யை ச பூ4யா:|| ( 88 – 12 )

ஹே பிரபூ! எந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சௌஹார்த்தம், பயம், துவேஷம், அனுராகம் முதலிய
ஒப்பற்ற, கஷ்டமில்லாமல் மனதைச் செலுத்தக் கூடிய உபாய விசேஷங்களால், எல்லா இடங்களிலும்
எல்லா ஜனங்களும் துன்பங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைந்தனரோ;
அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் உலகப்பிரசித்தி பெற்று விளங்கிகிறது. அப்படிப்பட்ட தாங்கள் எல்லோரும்
எல்லாத் துன்பங்களும் நீங்கி சாந்தி அடையவும், எல்லோருடைய பக்தி பரிபூரணம் அடையவும் அருள வேண்டும்.( 88 – 12)

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -87–ஸ்ரீ குசேல விருத்தாந்தம்–

October 2, 2020

குசேல நாம ப4வத: ஸதீர்த்2யாதாம்
கத : ஸ ஸாந்தீ3பனி மந்தி3ரே த்3விஜ:|
த்வதே3க ராகே3ண த4னாதி3 நிஸ்ப்ருஹோ
தி3னாதி3 நின்யே ப்ரச’மி க்3ருஹாஸ்’ரமீ || ( 87 – 1 )

ஸ்ரீ சாந்தீபனி முனியின் ஆசிரமத்தில் தங்களுடன் கல்வி கற்றவரும், சாந்த ஸ்வபாவம் உடையவரும்,
கிருஹஸ்தரும் ஆன ஸ்ரீ குசேலன் என்னும் பெயருடைய பிராமணன், தங்களிடம் கொண்ட பக்தியால்
பணம் முதலியவற்றில் பற்று இல்லாமல் நாட்களைக் கழித்து வந்தார். ( 87 – 1 )

கிழிந்த ஆடை -இதுவே நிரூபகம்-

———-

ஸமான சீ’லாSபி ததீ3ய வல்லபா4
ததை2வ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ |
கதா3சிதூ3சே ப3த வ்ருத்தி லப்த4யே
ரமாபதி: கின்ன ஸகா2 நிஷேவ்யதே || ( 87- 2 )

ஸ்ரீ குசேலனுக்குச சமமான சீலம் பெற்றவள் ஆயினும், அவர் மனைவி அவரைப் போல
மனத் தூய்மை பெற்று இருக்க வில்லை.
“செல்வம் கிடைக்கத் தங்கள் தோழனும், ஸ்ரீ லக்ஷ்மியின் கணவனும் ஆன
ஸ்ரீ கிருஷ்ணனை ஏன் சேவிக்கக் கூடாது?” என்று அவனிடம் கேட்டாள். ( 87 – 2 )

————

இதீரிதோSயம் ப்ரியயா க்ஷுதா4ர்தயா
ஜுகு3ப் ஸமானோSபி த4னே மதா3வஹே|
ததா3 த்வதா3லோகன கௌதுகாத்3யயௌ
வஹன் படாந்தே ப்ருது2கானுபாயனம் || ( 87 – 3 )

பசியால் வருந்தும் தன் மனைவி இவ்விதம் கூறியவுடன், அந்த ஸ்ரீ குசேலன் கர்வத்தை உண்டு பண்ணும்
செல்வத்தை வெறுத்த போதிலும், தங்களைத் தரிசிக்க விரும்பினர்.
தங்களுக்குக் காணிக்கையாக வஸ்திரத் தலைப்பில் கொஞ்சம் அவுலை எடுத்துக் கொண்டு
ஸ்ரீ மத் துவாரகைக்குச் சென்றார். ( 87 – 3 )

ஷுத் ஷாமா -பசியால் வாடுபவள் -இதுவே நிரூபிக்க இவளுக்கு

————–

க3தோSய மாச்சர்ய மயீம் ப4வத் புரீம்
க்3ருஹேஷு சை’ப்3யா ப4வனம் ஸமேயிவான் |
ப்ரவிஷ்ய வைகுண்ட2 மிவாப நிர் வ்ருதிம்
தவாதி ஸம்பா4வனயா து கிம் புன:|| ( 87 – 4)

அந்த ஸ்ரீ குசேலன், ஆச்சரியங்கள் நிறைந்த தங்கள் நகரை அடைந்து பதினெட்டாயிரம் வீடுகளுக்கு
இடையில் சை’ப்3யையின் வீட்டை அடைந்து ஸ்ரீ வைகுண்டத்தையே அடைந்து விட்டவர் போல ஆனந்தம் எய்தினார்.
தங்களுடைய சிறந்த உபசாரமே அதற்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ? ( 87 – 4 )

—————–

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்3ருஹீத்வா Sகத2ய: புராக்ருதம்|
யதிந்தனார்த2ம் கு3ருதார சோதி3தை:
அபர்து வர்ஷம் தத3மர்ஷி கானனே || (87 – 5 )

தங்களால் நன்கு பூஜிக்கப்பட்டார். தங்கள் பத்தினி விசிறி வீசினாள்.
ஸ்ரீ குசேலனைக் கையால் பிடித்துக் கொண்டு பழங்கதைகள் பேசினீர்கள்.
ஸ்ரீ குரு பத்தினி விறகு கொண்டு வரச் சொன்ன போது காலம் அல்லாத காலத்தில்
பெய்த மழையைப் பொறுத்தது எப்படி என்று. ( 87 – 5)

———-

த்ரபா ஜூஷோSஸ் மாத் ப்ருது2கம் ப3லாத3தா2
ப்ரக்3ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா3சி’தே த்வயா|
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்4ரமாத்
ரமா கிலோ பேத்ய கரம் ருரோத4 தே || ( 87 – 6 )

பிறகு ஸ்ரீபதிக்கு ஒரு பிடி அவல் கொடுப்பதற்கு வெட்கம் அடைந்த அந்த ஸ்ரீ குசேலனிடம் இருந்து
பலவந்தமாக அவலைப் பிடுங்கி உண்டீர்கள்.
ஒரு பிடி அவல் உண்டதுமே ஸ்ரீ லக்ஷ்மி தேவி ஓடி வந்து “போதும் போதும் இத்தனை அனுக்ரஹம் செய்தது!”
என்று தங்கள் கையைப் பற்றித் தடுத்தாள் அல்லவா? ( 87 – 6 )

———–

ப4க்தேஷு ப4க்தேன ஸ மானிதஸ் த்வயா
புரீம் வஸன்னேக நிசா’ம் மஹா ஸுக2ம் |
ப3தா புரேத்3யூர் த்3ரவிணம் வினாயயௌ
விசித்ர ரூபஸ் தவ க2ல்வனுக்3ரஹ:|| ( 87 – 7 )

அடியவர்களுக்கு அடியவர் ஆகிய தங்களால் நன்கு உபசரிக்கப்பட்டு, ஸ்ரீ குசேலர் அந்த இரவை மிகவும்
சுகமாக ஸ்ரீ மத் துவாரகையில் கழித்தார்.
அடுத்த நாள் செல்வம் எதுவும் தங்களிடமிருந்து பெறாமலேயே திரும்பிச் சென்றார்.
தங்களுடைய அனுகிரஹம் விசித்திரமானது அல்லவா? ( 87 – 7 )

———–

யதி3 ஹ்யாசிஷ்ய மதா3ஸ்யத3ச்யுதோ
வதா3மி பா4ர்யாம் கிமிதி வ்ரஜன்னசௌ |
த்வது3க்தி லீலாஸ்மித மக்3ன தீ4: புன
க்ராமாத3பச்’யன் மணி தீப்ர மாலயம் || ( 87 – 8 )

“நான் செல்வத்தை யாசித்து இருந்தால் நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ணன் தந்திருப்பான்.
ஆனால் நான் கேட்கவும் இல்லை! அவன் தரவும் இல்லை! பத்தினி கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்?” என்று
ஆலோசித்துக் கொண்டு நடந்த அந்த ஸ்ரீ குசேலன், உங்கள் இனிமையான வார்த்தைகளையும், மந்த ஹாசத்தையும்
நினைவில் கொண்டு மனம் லயித்தவனாகச் சென்றான்.
ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற ஒரு அழகிய கிருஹத்தைக் கண்டான். (87 – 8 )

————

கிம் மார்க3 விம்ப்4ரச’ இதி ப்4ரமன் க்ஷணம்
க்3ருஹம் ப்ரவிஷ்ட: ஸ த3த3ர்ச’ வல்லபா4ம் |
ஸகீ பரீதாம் மணி ஹேம பூ4ஷிதாம்
பு3போ3த4 ச த்வத் கருணாம் மஹாத்3பு4தாம் || ( 87 – 9 )

“வழி தவறி வந்துவிட்டேனா என்ன?” என்று சிறிது நேரம் பிரமித்து நின்றான் ஸ்ரீ குசேலன்.
பிறகு வீட்டுக்குள் சென்ற ஸ்ரீ குசேலன் தோழிகளால் சூழப்பட்டவளும், பொன்னாலும், மணிகளாலும்
அலங்கரிக்கப் பட்டவளும் ஆகிய தன் மனைவியைக் கண்டான். தங்களின் கருணையை உணர்ந்தான்.( 87 – 9 )

————

ஸ ரத்னசா’லாஸு வஸன்னபி ஸ்வயம்
ஸமுன்ன மத்3 ப4க்தி ப4ரோSம்ருதம் யயௌ |
த்வமேவ மாபூரித ப4க்த வாஞ்சி2தோ
மருத் புராதீ4ச’ ஹரஸ்வ மே க3தா3ன் || ( 87 – 10)

அந்த ஸ்ரீ குசேலன் அந்த இரத்தின மாளிகையில் வசித்த போதும், பொங்கும் பக்தி குறையாமல்
வாழ்ந்து மோக்ஷத்தை அடைந்தான்
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! இவ் விதம் பக்தர்களுடைய எல்லாக் கோரிக்கைகளை நிறைவேற்றிய தாங்கள்
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் -( 87 – 10 )

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -86–சால்வ வதம் – ஸ்ரீ மஹா பாரத யுத்தம் —

October 2, 2020

ஸால்வோ பை4ஷ்மீ விவாஹே
யது3குல விஜிதச்’சந்த்3ர சூடா3த்3 விமானம் |
விந்த3ன் சௌ’ப4ம் ஸமாயீ த்வயி வஸதி குரும்
ஸ்த்வத் புரீம் அப்4ய பா4ங்க்ஷீத் |
ப்ரத்3யும்னஸ்த்வம் நிருந்த4ன் நிகி2ல யது3 ப4டைர்
ந்யக்3ரஹீத் உ3க்3ர வீர்யம்
தஸ்யாமாத்யம் த்3யுமந்தம் வ்யஜனி ச ஸமரஸ்
ஸப்த விம்ச’த்ய ஹாந்தம் || (86 – 1)

ஸ்ரீ ருக்மிணியின் விவாஹத்தின் போது சால்வ ராஜன் யாதவ சேனையால் தோற்கடிக்கப்பட்டான்.
பிற்பாடு அவன் பரமேஸ்வரனிடம் சௌபம் என்ற விமானத்தைப் பெற்றுக் கொண்டான்.
தாங்கள் குரு தேசத்தில் இருக்கும் போது மாயாவியாகிய சால்வன், தங்கள் ஸ்ரீ மத் துவாரகை நகரைச் சேதப்படுத்தினான்.
ஸ்ரீ பிரத்யும்னன் யாதவ சேனைகளின் உதவியோடு அவனைத் தடுத்து நிறுத்தினான்.
சால்வனின் கொடிய மந்திரி த்யுமான் என்பவனைக் கொன்றான். இந்தப் போர் இருபத்தேழு நாட்களுக்கு நீடித்தது.

———–

தாவத்வம் ராமசா’லீ த்வரித முபக3த:
க2ண்டி3த ப்ராயசைன்யம்
சௌ4பேச’ம் தம் ந்யருந்தா4: ஸ ச கில
க3த3யா சா’ர்ங்க3 மம்ப்4ர ச’யதே |
மாயாதாதம் வ்யஹிம்ஸீ த3பி தவ புரதஸ்த
த்வயாSபி க்ஷணார்த்த4ம்
நாக்ஞாயீத்யாஹு ரேகே ததி3த3 மவமதம்
வ்யாஸ ஏவ ந்யஷேதீ4த் || (86 – 2)

தாங்களும், ஸ்ரீ நம்பி மூத்த பிரானும் விரைந்து வந்தீர்கள். முற்றிலும் அவன் சேனைகளை
முறியடித்துச் சால்வனைத் தடுத்து நிறுத்தினீர்கள்.
அவன் தன் கதையால் தங்களின் ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லை நழுவச் செய்தான்.
மாயையால் உண்டாக்கப்பட்ட தங்கள் தந்தையை தங்களின் முன்னிலையில் கொன்றான்.
அரைக் கணத்துக்குத் தாங்களே அந்த உண்மையை அறிந்து கொள்ள வில்லை என்று சிலர் சொன்னாலும்
அந்தக் கருத்தை ஸ்ரீ வியாச முனிவர் ஏற்றுக் கொள்ள வில்லை.

————

க்ஷிப்த்வா சௌபம் க3தா3 சூர்ணிதம்
உத3க நிதௌ4 மங்க்ஷு ஸால்வேSபி சக்ரேண
உத்க்ருதே த3ந்தவக்த்ர : ப்ரஸப4 மபி4பதன்னப்ய
முஞ்சத்3க3தா3ம் தே |
கௌமோத3க்யா ஹதேSஸாவபி ஸுக்ருத நிதி4ச்
சைத்3யவத் ப்ராப தை3க்யம்
ஸர்வேஷா மேவ பூர்வம் த்வயி த்4ருத மனஸாம்
மோக்ஷணார்த்தோதார: || (86 – 3)

சௌபம் என்ற விமானம் கதையால் உடைக்கபட்டு கடலில் எறியப் பட்டது.
சால்வனும் தங்களின் ஸ்ரீ சக்கராயுதத்துக்கு பலியானான். அப்போது தந்தவக்திரன் விரைந்து வந்து தங்கள் மேல் தன் கதாயுதத்தை விட்டெறிந்தான். புண்ணியங்களின் பொக்கிஷமாகிய அவனும் ஸ்ரீ கௌமோதகி என்னும் தங்கள் கதாயுதத்தினால் கொல்லப்பட்டான்.
சிசுபாலனைப் போலவே அவனும் சாயுஜ்ய முக்தியை அடைந்தான்.
முன்பே தங்களிடம் மனதைச் செலுத்தியவர்கள் எல்லோருக்கும் தங்களின்
இந்தத் திரு அவதாரம் மோக்ஷத்தைத் தந்தது அல்லவா

———

த்வய்யா யாதேSத2 ஜாதே கில
குரு ஸத3ஸி த்3யூதகே ஸம்யதாயா:
க்ரந்தந்த்யா யாக்ஞஸேன்யாஸ் ஸகருணாம்
அக்ருதா2ச்’ சேல மாலாம் அனந்தாம் |
அன்னாந்த ப்ராப்த ச’ர்வாம்ச’ஜ முனி சகித
த்3ரௌபதீ3 சிந்திதோS த
ப்ராப்தச்’சா’கான்ன மச்’ணன் முனி கண மக்ருதா2
ஸ்த்ருப்தி மந்தம் வனாந்தே || (86 – 4 )

தாங்கள் ஸ்ரீ மத் துவாரகைக்குத் திரும்பிச் சென்ற பிறகு, கௌரவ சபையில் நடந்த சூதாட்டத்தில்
ஸ்ரீ பாண்டவர்களால் ஸ்ரீ திரௌபதி அடகு வைக்கபட்டாள். சூதாட்டத்தில் அவளைத் தோற்று விட்டனர்.
அவளைக் கௌரவர்கள் ராஜ சபையில் மான பங்கம் செய்ய முயன்ற போது ஸ்ரீ திரௌபதி கதறி அழுதாள்.
அவளுக்கு மிகுந்த கருணையுடன் முடிவில்லாத வஸ்த்திரத்தை அளித்தீர்கள் அல்லவா?
பிறகு வனத்தில் ஸ்ரீ பாண்டவர்கள் வசித்து வந்தபோது அவர்கள் உணவு உண்ட பிறகு
ஸ்ரீ பரமேஸ்வரனின் அம்சமான ஸ்ரீ துர்வாசர் தன் கூட்டத்துடன் அங்கு உணவுக்கு வந்து சேர்ந்தார்.
முனிவரின் சாபத்துக்கு அஞ்சிய ஸ்ரீ திரௌபதி தங்களை – தியானித்தாள். தாங்கள் உடனே அங்கே வந்து,
அவள் அக்ஷய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சிறு கீரையை உண்டு அதன் மூலம்
ஸ்ரீ துர்வாசரையும் மற்றவர்களையும் வயிறார உண்டது போலத் திருப்தி அடையச் செய்தீர்கள் அல்லவா?

ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் தூரம் இடையில் நடக்கிறது புடவை வியாபாரம்

——-

யுத்3தோ4த்3யோகே3த2 மந்த்ரே
மிலதி ஸதி வ்ருத: ப2ல்கு3னேன த்வமேக:
கௌரவ்யே த3த்த சைன்ய: கரிபுர மக3மோ
தௌ3த்ய க்ருத் பாண்டவார்த்த2ம் |
பீஷ்ம த்3ரோணாதி3 மான்யே தவ கலு வசனே
தி4க்ருதே கௌரவேண
வ்யாவருண்வன் விச்’வ ரூபம் முனி ஸத3ஸி புரீம்
சோ’ப4யித்வாSS க3தோபூ4: || (86 – 5)

பிறகு போருக்கு வேண்டிய பிரயத்தனமும் , அதற்கான மந்திராலோசனையும் நடை பெற்றன.
ப2ல்கு3னேன த்வமேக:-ஸ்ரீ அர்ஜுனன் தாங்கள் ஒருவரையே துணையாக வேண்டினான்.
துரியோதனன் மொத்த யாதவ சேனையின் உதவியைப் பெற்றான்.
பிறகு ஸ்ரீ பாண்டவர்களின் தூதுவனாக ஹஸ்தினாபுரம் சென்றீர்கள். ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ துரோணர் போன்றவர்களால்
வெகுமானிக்கபடும் தங்கள் வாக்கு, துரியோதனனால் நிராகரிக்கப் பட்டது.
அங்கே சபையில் விச்வ ரூபத்தை எடுத்துக் கொண்டு பட்டணத்தைக் கதி கலங்கச் செய்து விட்டுத் திரும்பி வந்தீர்கள் அல்லவா?

——–

ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத:
க2லு ஸமர முகே2 ப3ந்து4 கா4தே த3யாலும்
கி2ன்னம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித3 மயி ஸகே2
நித்ய ஏகோSயமாத்மா |
கோவத்4ய: கோSத்ர ஹந்தா ததி3ஹவத4பி4யம்
ப்ரோஜ்ய மய் யர்பிதாத்மா
த4ர்ம்யம் யுத்3த4ம் சரேதி ப்ரக்ருதி மனயதா2
த3ர்ச’யன் விச்’வ ரூபம் || (86 – 6 )

ஹே ஸ்ரீ கிருஷ்ணா ! தாங்கள் ஸ்ரீ அர்ஜுனனுக்குச் சாரதி ஆனீர்கள்.
யுத்த ஆரம்பத்தில் யுத்த களத்தில் வீரனான அர்ஜுனன் மனம் கலங்கினான்.
தன் மித்ர பந்துக்ககளைக் கொல்ல விரும்பவில்லை.
அதனால் அவன் கருணையினாலும் மன வருத்தினாலும் குழம்பினான்.
அப்போது தாங்கள் ” ஓ நண்பனே! இது என்ன புதுக் குழப்பம்? ஆத்மா என்பவன் நித்தியமானவன்! அழிவில்லாதவன்!
இந்த உலகில் கொல்பவன் யார்? கொல்லப்படுபவன் யார்? இப்போது எழுந்துள்ள பயத்தை விட்டு விட்டு
என்னிடம் உன் மனதைச் செலுத்துவாய். தர்ம நெறி தவறாத யுத்தத்தைப் புரிவாய்” என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினீர்கள் .
ஸ்ரீ விச்வ ரூபத்தைக் காட்டி அவன் தன் இயல்பை அடையச் செய்தீர்கள் அல்லவா?

———–

ப4க்த்தோத்தம்ஸேSத பீ4ஷ்மே
தவ த4ரணி பரக்ஷேப க்ருத்யைக ஸக்தே
நித்யம் நித்யம் விபி4ன்த3தி அயுத ஸமாதி4க2ம்
ப்ராப்த ஸாதோ3 ச பார்த்தே2|
நிச்’சஸ்த்ர தவ ப்ரதிக்ஞாம் விஜ ஹத3ரிவரம்
தா4ராயன் க்ரோத4 சா’லீவ
ஆதா4வன் ப்ராஞ்ஜலிம் தம் நத சி’ரஸா மதோ2
வீக்ஷ்ய மோதா3த3 பாகா3 : || (86- 7)

பக்த சிரோன்மணியாகிய ஸ்ரீ பீஷ்மர், தாங்கள் செய்ய விரும்பியபடியே பூ பாரத்தை ஒடுக்கலானார்.
ஒவ்வொரு நாளும் பதினாயிரத்துக்கும் அதிகமான வீர்களைக் கொன்று குவித்தார்.
அதைக் கண்ட ஸ்ரீ அர்ஜுனன் மனம் சோர்ந்து விட்டான். போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று தாங்கள்
செய்திருந்த பிரதிக்ஞையை உதறித் தள்ளினீர்கள், கோபத்துடன் சக்ராயுதத்தை எடுத்துக்கொண்டு
ஸ்ரீ பீஷ்மரை நோக்கி ஓடினீர்கள்! தலையைக் குனித்து அஞ்சலி செய்து கொண்டிருந்த
ஸ்ரீ பீஷ்மரைக் கண்டதும் சந்தோஷத்துடன் திரும்பிச் சென்று விட்டீர்கள் அல்லவா?

———-

யுத்3தே4 த்3ரோணஸ்ய ஹஸ்தி ஸ்தி2ரரண
ப4க3த3த்தே ரிதம் வைஷ்ண வாஸ்த்ரம்
வக்ஷஸ்யாத4த்த சக்ரஸ்தகீ3த ரவி மஹா:
ப்ரார்த3யத் ஸிந்து4 ராஜம் |
நாகாஸ்த்ரே கர்ண முக்தே க்ஷிதிம் அவ நமயன்
கேவலம் க்ருத்த மௌலிம்
தத்ரே தத்ராபி பார்த்த2ம் கிமிவ நஹி ப4வான்
பாண்ட3வானாமகார்ஷீத் || (86 – 8)

ஸ்ரீ துரோண யுத்தத்தில் யானை மேல் திடமாக இருந்து கொண்டு போர் புரிந்தான் நரகாசுரனின் மகன் பகதத்தன்.
அவன் விடுத்த ஸ்ரீ நாராயண அஸ்திரத்தைத் தாங்கள் மார்பினில் தாங்கினீர்கள்.
ஸ்ரீ சக்கராயுதத்தால் சூரியனை மறைத்து விட்டு ஜெயத்ரதனைக் கொன்றீர்கள்.
ஸ்ரீ கர்ணன் நாகாஸ்திரத்தை விடுத்த போது பூமியைக் கட்டை விரலால் தாழ்த்தினீர்கள்.
ஸ்ரீ அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் அஸ்திரம் நீக்கியது. ஸ்ரீ அர்ஜுனனின் உயிர் காக்கப்பட்டது.
ஸ்ரீ பாண்டவர்களுக்காகத் தாங்கள் என்ன தான் செய்யவில்லை?

———

யுத்3தா4தௌ3 தீர்த்த2 கா3மீ
ஸ க2லு ஹலத4ரோ நைமிச’ க்ஷேத்ர மிச்சன்
அப்ரதயுத்தா2யி ஸூதக்ஷய க்ருத3த2 ஸுதம்
தத்பதே3 கல்பயித்வா |
யக்ஞாக்4னம் வல்வலம் பர்வணி பரித3லயன்
ஸ்நாத தீர்த்தோ2 ராணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ4ம து3ர்யோத4ன ரணம்
அச’மம் வீக்ஷ்ய யாத: புரீ தே || (86 – 9)

ஸ்ரீ மகா பாரத யுத்தத்தின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ நம்பி மூத்த பிரான் தீர்த்த யாத்திரை சென்று விட்டான்.
ஸ்ரீ நைமிசாரண்யத்துக்கு ஸ்ரீ நம்பி மூத்த பிரான் சென்ற போது சூத பௌராணிகர் தன் ஆசனத்தில்
இருந்து எழுந்து அவனுக்கு மரியாதை செய்யவில்லை. கோபம் அடைந்த ஸ்ரீ நம்பி மூத்த பிரான்
அவரைக் கொன்றுவிட்டு அவருடைய பிள்ளையை அவர் இடத்திற்கு நியமித்தான்.
பர்வ காலங்களில் யாகங்களைக் கெடுத்து வந்த பல்வலன் என்ற அசுரனைக் கொன்றான்.
தீர்த்த ஸ்நானத்தை முடித்துக் கொண்டு யுத்த முடிவில் திரும்பி வந்தான்.
பீமன், துரியோதனன் இவர்கள் இடையே நடந்த கதாயுத யுத்தம் முடிவடையாததைக் கண்டு
தங்கள் நகரமாகிய ஸ்ரீ மத் துவாரகைக்குத் திரும்பிச் சென்றான்.

————

ஸம்ஸுப்த த்3ரௌபதே3ய க்ஷபண ஹததி4யம்
த்3ரௌணி மேத்ய த்வது3க்தயா
தன்முக்தம் ப்3ராஹ்ம மஸ்த்ரம் ஸமஹ்ருத
விஜயோ மௌலி ரத்னம் ச ஜஹ்ரே |
உச்சித்யை பாண்டவானாம் புனரபி ச விச’த்
யுத்தரா கர்ப்ப4 மஸ்த்ரே
ரக்ஷன்னங்கு3ஷ்ட2 மாத்ர: கில ஜட2ர மகா3ச்’
சக்ரபாணி விபோ4 த்வம் || (86 – 10)

தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ திரௌபதியின் பிள்ளைகளைப் புத்தி கெட்ட அஸ்வத் தாமன் கொன்று விட்டான்.
அவன் விடுத்த ப்ரஹமாஸ்திரத்தைத் தங்கள் கட்டளைப் படி ஸ்ரீ அர்ஜுனன் உப சம்ஹாரம் செய்து விட்டான்.
அஸ்வத்தாமன் தலையில் இருக்கும் மணியையும் அகற்றி விட்டான்.
ஸ்ரீ பாண்டவர்களின் குலத்தையே நாசம் செய்வதற்காக அஸ்வத்தாமன் விடுத்த அஸ்த்திரம்
உத்தரையின் கர்ப்பதில் புகுந்து விட்டது. அப்போது தாங்கள் கட்டைவிரல் அளவு சரீரம் உடையவராகக்
கையில் ஸ்ரீ சுதர்சனத்துடன் ஸ்ரீ உத்தரையின் கர்ப்பத்தில் புகுந்து சிசுவைக் காப்பாற்றினீர்கள் அல்லவா?

——–

த4ர்மௌக4ம் த4ர்ம ஸூனோ: அபி4த3த4த்3
அகி2லம் ச2ந்த ம்ருத்யுஸ் ஸ பீ4ஷ்ம:
த்வாம் பச்’யன் ப4க்தி பூ4ம்னைவ ஹி ஸபதி3
யயௌ நிஷ்கல ப்3ரஹ்ம பூ4யம் |
ஸம்யாஜ்யாதாச்’வ மேதை4ஸ் த்ரிபி4:அதி மஹிதைர்
த4ர்மஜம் பூர்ண காமம்
ஸம் ப்ராப்தோ த்3வாரகாம் த்வம் பவன புர பதே
பாஹிமாம் ஸர்வ ரோ3கா4த் || (86 – 11)

தான் விரும்பிய போது மரணம் அடையும் வரத்தைப் பெற்றிருந்தார் ஸ்ரீ பீஷ்மர்.
அவர் ஸ்ரீ தர்ம புத்திரனுக்குத் தர்மங்களை எல்லாம் உபதேசம் செய்தார்.
தங்களையும் நேரில் தரிசனம் செய்து தன் பக்தியின் மேன்மையால் ப்ரஹ்ம பாவத்தை அடைந்தார்.
பிறகு தன் அபீஷ்டங்கள் அனைத்தும் நிறைவேறிய தர்ம புத்திரனுக்காக
மூன்று அச்வ மேத யாகங்களைச் செய்வித்தீர்கள்
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அப்படிப் பட்ட தாங்கள் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -83–பௌண்ட்ரக வாஸுதேவன் முக்தி

October 2, 2020

முதல் 8 ஸ்லோகங்கள் -வசந்த திலகம்
9 வது ஸ்லோகம் ஹரிணி
10 வது ஸ்லோகம் ஸ்ரத்தா

ராமேSத கோ3குல க3தே ப்ரமதா3 ப்ரஸக்தே
ஹூதானுபேத யமுனா த3மனே மதா3ந்தே4 |
ஸ்வைரம் ஸமாரமதி ஸேவக வாத3 மூடோ4
தூ3தம் ந்யயுங்க்த தவ பௌண்ட்3ரக வாஸுதே3வ: || (83 – 1)

பிறகு ஸ்ரீ நம்பி மூத்த பிரான் கோகுலத்துக்குச் சென்றான். கோபிகளிடம் அதிக விருப்பம் கொண்டு, கள் அருந்தி அது தந்த மதத்தில் மெய் மறந்தான். தான் அழைத்த போதும் தன்னிடம் வராத யமுனை நதியை அடக்கித் தன்னிஷ்டம் போல கிரீடைகள் புரிந்தான்.
அப்போது பௌண்ட்ரக வாஸுதேவன் என்பவன் தனது சேவகர்களின் புகழ்ச்சியில்
மெய் மறந்தவனாகத் தூதுவன் ஒருவனை தங்களிடம் அனுப்பினான்.

———–

நாராயணோSஹமவதீர்ண இஹாஸ்மி பூ4மௌ
த4த்ஸே கில த்வமபி மாமக லக்ஷணானி |
உத்ஸ்ருஜ்ய தானி ச’ரணம் வ்ரஜ மாமிதி த்வாம்
தூ3தோ ஜகா3த3 ஸகலைர்ஹஸித: ஸபா4யாம் || (83 – 2)

“சாக்ஷாத் நாராயணான நான் இந்த பூமியில் வந்து அவதரித்துள்ளேன்.
என்னுடைய சின்னங்களை நீயும் எப்படித் தரிக்கலாம்? அவைகளைத் துறந்து விட்டு
என்னிடம் வந்து சரணமடைவாய் ” என்று சபையில் அந்தத் தூதுவன் மொழிந்தான்.
பிறகு எல்லோராலும் அவன் பரிஹாசம் செய்யப்பட்டான்!

————-

தூதேSத யாதவதி யாத3வ சைனிகஸ்த்வம்
யாதோ த3த3ர்சி’த2 வபு: கில பௌண்ட்3ரகீயம் |
தாபேன வக்ஷஸி க்ருதாங்கம் அனல்ப மூல்ய
ஸ்ரீ கௌஸ்துப4ம் மகர குண்ட3ல பீத சேலம் || (83 – 3)

தூதன் திரும்பிச் சென்றதும் யாதவ சேனையுடன் தாங்கள் சென்றீர்கள்.
மார்வில் சூடு வைத்துச் செய்யப்பட் ட ஓர் அடையாளத்துடனும், விலையுயர்ந்த
ஸ்ரீ கௌஸ்துபம், மகரகுண்டலம், மஞ்சள் நிற ஆடைகள் தரித்த அந்தப்
பௌண்ட்ரக வாஸுதேவனைக் கண்டீர்கள் அல்லவா?

——————

காலாயஸம் நிஜ ஸுத3ர்ச’ன மஸ்ய தோSஸ்ய
கலானலோத்கர கிரேண ஸுத3ர்ச’னேன |
சீ’ர்ஷம் சகர்தித2 சாஸ்யா சைன்யம்
தன் மித்ர காசி’ப சி’ரோபி சகர்த்த2 காச்’யாம் || (83 – 4 )

கறுத்த இரும்பினால் செய்யப்பட்ட தனது சுதர்சனத்தைப் பிரயோகித்த அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவன் மீது காலாக்கினி சுவாலையை வாரி இறைக்கும் தங்களின் சுதர்சனச் சக்கரத்தைச் செலுத்தி அவன் தலையைத் தாங்கள் அறுத்தீர்கள். அவன் சேனையையும் நாசம் செய்து விட்டு அவன் நண்பனாகிய காசி ராஜனின் தலையைக் காசியில் சென்று விழும்படிச் செய்தீர்கள் அல்லவா?

————–

ஜாட்3யேன பா3லக கி3ராSபி கில அஹமேவ
ஸ்ரீ வாஸுதே3வ இதி ரூட4 மதிச்’சிரம் ஸ: |
ஸாயுஜ்யமேவ ப4வதைக்ய தி3யா க3தோSபூ4த்
கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கத2 மித்யவேயாத் || (83 – 5)

மூடத் தனத்தாலும், சிறு பிள்ளைகளின் பேச்சைக் கேட்டும் “நானே வாஸுதேவன் ” என்று
வெகு காலம் நம்பியிருந்த அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவன் தங்களிடம் கொண்ட ஐக்கிய புத்தியால் சாயுஜ்ய முக்தியையே அடைந்தான். யாருடைய புண்ணியத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?

———–

காசீ’ச்’வரஸ்ய தனயோSத ஸுத3க்ஷிணாக்2ய:
ச’ர்வம் ப்ரபூஜ்ய ப4வதோ விஹிதாபி4சார:|
க்ருத்யானலம் கமபி பா3ண ரணாதி பீதை :
பூதை: கத2ஞ்சன வ்ருதைஸ் ஸம மப்4யமுஞ்சத் || (83 – 6)

காசி ராஜனின் புதல்வன் சுதக்ஷிணன் பரமசிவனை ஆராதித்தான். தங்களுக்கு எதிராக அபிசாரம் செய்து பாணாசுர யுத்தத்தில் அஞ்சித் தோற்ற பூத கணங்களுடன் நட்புப் பூண்டான். அந்த பூத கணங்களுடன் அந்த அபிசார அக்கினியையும் அவன் தங்களிடம் அனுப்பினான்.

———

தால ப்ரமாண சரணா மகி2லம் த3ஹந்தீம்
க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதி2தோபி பௌரை: |
த்3யூதோத்ஸவே கிமபிநோ சலிதோ விபோ4 த்வம்
பார்ச்வஸ்த2 மாசு’ விஸஸர்ஜித கால சக்ரம் || (83 – 7)

ஒரு பனை மர உயரத்துக்குக் கால்களை உடையதும், எல்லாவற்றையும் எரிப்பதும் ஆன அந்த  அபிசார துஷ்ட தேவதையைக் கண்டு அஞ்சிய பட்டணத்து ஜனங்கள் தங்களுக்கு அதை அறிவுறுத்தினர்.-சூதாடும் உற்சாகத்தில் இருந்த தாங்கள் சிறிதும் அசையாமலேயே, தங்கள் அருகில் இருந்த காலச் சக்கரத்தை அதன் மீது ஏவினீர்கள் அல்லவா?

———-

அப்4யாபதத்யமித தா4ம்னி ப4வன் மஹாஸ்த்ரே
ஹா ஹேதி வித்3ருதவதி க2லு கோ4ர க்ருத்யா |
ரோஷாத் ஸுத3க்ஷிண மத3க்ஷிண சேஷ்டிதம் தம்
புப்லோஷ சக்ரமபி காசி’புரீ மதா4க்ஷீத் || (83 – 8)

அளவற்ற தேஜஸ் உடைய தங்களின் சக்கரம் எதிர்த்து வந்தவுடன், அந்த அபிசார துஷ்ட தேவதை “ஹா! ஹா!” என்று அலறிக் கொண்டு, விரைந்து ஓடிச் சென்று, தவறான காரியத்தைச் செய்த அந்த சுதக்ஷிணனையே எரித்து விட்டது. சுதர்சனச் சக்கரம் காசிப் பட்டணத்தை எரித்து விட்டது

—————

ஸ க2லு விவிதோ3 ரக்ஷோகா4தே க்ருதோபக்ருதி: புரா
தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா3 க2லதாம் க3த: |
நரக ஸசிவோ தே3ச’ க்லேச’ம் ஸ்ருஜன் நக3ராந்திகே
ஜ்ஜடிதி ஹலினா யுத்4யன்னத்3 தா4பபாத தலாஹத : || (83 – 9)

முற்காலத்தில் ராக்ஷஸ வதத்தின் போது உபகாரம் செய்து பிரசித்தி பெற்றான் விவிதன்.
பிற்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் போது துஷ்டனாக மாறி விட்டான்.
நரகாசுரனுடன் சேர்ந்து கொண்டு தேசத்துக்குத் தீங்கிழைத்தான். துவாரகைக்குப் பக்கத்தில் ஸ்ரீ நம்பி மூத்த பிரானுடன் யுத்தம் செய்த விவிதன், அவனால் அடிக்கப்பட்டு எளிதாக வீழ்ந்து மடிந்து போனான்.

(மைந்தன் விவிதன் அஸ்வினி தேவதைகள் குமாரர் இவர்களே -வானர முதலிகள் கூட்டத்தில் இருந்தவர்கள் -நீண்ட நாள் இருப்பார்கள்-நரகாஸுரனுடன் சேர்ந்து மந்திரியாகி தீய குணங்களால் பீடிக்கப்பட்டவன்)

———–

ஸாம்ப3ம் கௌரவ்ய புத்ரீ ஹரண நியமிதம் ஸாந்தவநார்த்தீ2 குரூணாம்
யாதஸ்தத்3வாக்ய ரோஷோத்3 த்4ருத கரி நக3ரோ மோசயாமாஸ ராம: |
தே கா4த்யா: பாண்3டவேயை ரிதி யது3 ப்ருதனாம் நாமுசஸ்த்வம் ததானீம்
தம் த்வாம் து3ர்போ3த4 லீலம் பவன புரபதே தாப சா’ந்த்யை நிஷேவே || (83 – 10)

துரியோதனின் பெண்ணை அபகரித்தால் சாம்பனைக் கட்டிப் போட்டு விட்டார்கள் கௌரவர்கள். அவர்களுடன் நல்ல வார்த்தைகள் பேசுவதற்காகச் சென்றான் ஸ்ரீ நம்பி மூத்த பிரான்-ஆனால் கௌரவர்கள் பேசிய பேச்சால் ஸ்ரீ நம்பி மூத்த பிரான் கோபம் அடைந்து ஹஸ்தினாபுரத்தையே-மேலே கிளப்பி விடுவித்தான். கௌரவர்கள் பாண்டவர்கள் கையால் மடிய வேண்டியவர்கள் என்பதால் தாங்கள் அப்போது யாதவ சேனையை அங்கு அனுப்பவில்லை.-ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! யாராலும் இன்னதென்று கூற முடியாத லீலைகளைப் புரியும் தாங்கள் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

சாம்பன் ஜாம்பவதி குமாரன்
துரியோதனன் பெண் லஷ்மணா

மண்ணின் பாரம் நீக்கி அருளவே வடமதுரையில் அவதரித்துச் செய்த லீலைகள்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -82–பாணாசூர யுத்தம் -ந்ருக மோக்ஷம் –

October 2, 2020

பர்த்3யும்னோ ரௌக்மிணே யஸ் : ஸ க2லு தவ கலா ச’ம்ப3ரேண ஆஹ்ருதாஸ்தம்
ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜ புரம் அஹரத்3 த்3ருக்மி கன்யாம் ச த4ன்யாம்|
தத் புத்ரோSதா2னிருத்3தோ4 கு3ண நிதி4: அவஹத்3 ரோசனாம் ருக்மி பௌத்ரீம்
தத்ரோத்3வாஹே க3தஸ் த்வம் ந்யவதி4 முஸலினா ருக்ம்யபி த்3யூத வைராத் || (82 – 1)ஸ்ராத்தரா சந்தஸ்

தங்கள் அம்சமும், ஸ்ரீ ருக்மிணியின் புதல்வனும் ஆகிய ஸ்ரீ பிரத்யும்னன் சம்பாசுரனால் அபகரித்துச் செல்லப்பட்டான்.
பிறகு அவன் அசுரனைக் கொன்று விட்டு, ரதி தேவியுடன் தன் நகருக்குத் திரும்பி வந்தான்.
ஸ்ரீ ருக்மியின் பெண்ணை -(ருக்மவதியை)அவன் அபகரித்தான். பின்னர் ஸ்ரீ பிரத்யும்னனின் புத்திரனும்
நற் குணங்களுக்கு இருப்பிடமும் ஆன ஸ்ரீ அநிருத்தன் ருக்மியின் பௌத்திரியான ரோசனையை
விவாஹம் செய்து கொண்டான். தாங்களும் அந்த விவாஹத்துக்குச் சென்றீர்கள்.
அங்கே சூதாட்டத்தில் எழுந்த விரோத்தால் ருக்மி ஸ்ரீ நம்பி மூத்த பிரானால் கொல்லப் பட்டான்.

———-

பா3ணஸ்ய ஸா ப3லி ஸுதஸ்ய ஸஹஸ்ர பா3ஹோ:
மாஹேச்’வரஸ்ய மஹிதா து3ஹிதா கிலோஷா |
த்வத் பௌத்ரமேன மனிருத்3த4 மத்3ருஷ்ட பூர்வம்
ஸ்வப்னேSனுபூ4ய : ப4க3வன் விரஹா துராSபூ4த் || (82 – 2)-வசந்த திலகம்

பகவன்! மஹா பலியின் புத்திரனும், நல்ல சிவ பக்தனும், ஆயிரம் கரங்கள் உடையவனும் ஆகிய
பாணாசுரனின் பெண் உஷை. அவள் முன்பின் பார்த்திராத தங்கள் பௌத்திரன் அநிருத்தனை
கனவில் அனுபவித்து விட்டு, நனவில் அவன் பிரிவினால் மிகவும் வருந்தினாள் அல்லவா?

பிரகலாதன் -விரோசனன் -மஹாபலி -பாணன்

———

யோகி3ன் யதீவ குச’லா க2லு சித்ர லேகா
தஸ்யா: ஸகீ2 விலிக2தீ தருணா அநசேஷான்|
தத்ராநிருத்3த4 முஷயா விதி3தம் நிசா’யாம்
ஆனேஷ்ட யோக3 ப3லதோ ப4வதோ நிகேதாத்|| (82 – 3)வசந்த திலகம்

யோக சித்தி பெற்றவளும், மிகுந்த சாமர்த்தியசாலியும், சித்திரம் தீட்டும் வல்லமை படைத்தவளும் ஆகிய
சித்திர லேகை உஷையின் தோழி. அவள் தீட்டிய ஓவியங்களில் இருந்து உஷையால் பகுத்து அறியப்பட்ட
ஸ்ரீ அனிருத்தனை தன் யோக பலத்தினால் தங்கள் மாளிகையில் இருந்து அவள் இரவில் எடுத்துச் சென்று விட்டாள்

———

கன்யா புரே த3யிதயா ஸுக2 மாரமந்தம்
சைனம் கத2ஞ்சன ப3ப3ந்து4ஷி ச’ர்வ ப3ந்தௌ4|
ஸ்ரீ நாரதோ3க்த தது3 த3ந்த து3ரந்த ரோஷை:
த்வம் தஸ்ய சோ’ணித புரம் யதுபி4ர் ந்யருந்தா4: || (82 – 4)வசந்த திலகம்

அந்தப்புரத்தில் பிராண நாயகி உஷையுடன் சுகமாக இருந்து வந்த ஸ்ரீ அனிருத்தனைப் பாணாசுரன்-(ச’ர்வ ப3ந்தௌ-சிவ பக்தன்)கட்டிப் போட்டு விட்டான். நாரதர் வாயிலாக இந்த விவரங்களை அறிந்து கொண்ட தாங்கள்
அளவில்லாத கோபம் கொண்டு யாதவ குல வீரர்களுடன் சென்று அந்த பாணாசுரனுடைய
சோணித புரத்தைத் தாக்கினீர்கள் அல்லவா?

———

புரி பால : சை’ல ப்ரிய து3ஹித்ரு நாத அஸ்ய ப4க3வான்
ஸமம் பூ4த வ்ராதோர் யது3ப3ல மச’ட்3கம் நிருருதே4 |
மஹா ப்ராணோ பா3ணோஜ் ஜடிதி யுயுதா4னேன யுயுதே4
குஹ: ப்ரத்3யும்னேன த்வமபி புரஹந்த்ரா ஜக4டிஷே || (82 – 5)சிகரிணி

அந்த பாணாசுரனுடைய நகர பாலகனும், ஸ்ரீ பார்வதி தேவியின் பதியுமான ஸ்ரீ பரம சிவன்,
தன் பூத கணங்களுடன் யாதவ சேனையைப் பயமின்றி எதிர்த்தார்.
பராக்கிரம சாலியான பாணாசுரன் (யுயுதா4னேன-)சத்யாகி யுடனும், ஸ்ரீ சுப்ரமணியர் ஸ்ரீ பிரத்யும்னனுடனும்,
திரி புரர்களைக் கொன்ற ஸ்ரீ சிவபெருமான் தங்களுடனும் போர் புரிந்தனர்.

———-

நிருத்தா சேஷாஸ்த்ரே முமுஹுஷி த்வ அஸ்த்ரேண கிரி ஸே
த்ருதா பூதா பீதா ப்ரமத குல வீரா ப்ரமதிதா
பராஸ் கந்த்த் ஸ்கந்த குஸூ மஸர பாணைஸ் ச ஸ சிவ
ச கும்பாண்டோ பாண்டம் நவமிவ பலேநாஸூ பிபிதே –(82 – 6)சிகரிணி

சிவனின் எல்லாப் பாணங்களையும் தடுத்த தங்கள் மோஹன அஸ்திரத்தைத் தொடுத்து அவரை மயங்கச் செய்தீர்கள் –
அதைக் கண்ட பூத கணங்கள் பயந்து ஓடின -குகனும் பிரத்யும்னன் எறிந்த மன்மத அம்பால் தோல்வி அடைந்தார்
கும்பாண்டான் என்ற பாணாசூரனின் மந்திரியை ஸ்ரீ நம்பி மூத்த பிரான் அடித்துக் கொன்றார் –

————-

சாபா நாம் பஞ்ச ஸத்யா பிரசப முபகதே சின்ன சாபே அத பாணே
வ்யர்த்தே யாதே சமேதோ ஜ்வர பதி ரஸநைர ஜ்வரி த்வஜ் ஜ்வரேண
ஞானீ ஸ்துத்வா அத தத்வா தவ சரித ஜூஷாம் விஜ்வரம் ச ஜ்வரோ அகாத்
ப்ரயோ அந்தர் ஞான வந்தோ அபி ச பஹு தமஸா ரௌத்ர சேஷ்டா ஹி ரௌத்ரா –(82 – 7)-ஸ்ரத்தாரா

பாணாசுரன் ஆயிரம் கைகளிலும் ஐந்நூறு அம்புகளையும் ஐந்நூறு வில்களையும்
எடுத்துக் கொண்டு போருக்கு வந்தான் –
தாங்கள் அவனுடைய ஆயுதங்கள் அனைத்தையும் நொறுக்கினீர் –
அதனால் அவன் பின் வாங்கித் திரும்பினான் –
சைவ ஜ்வரம் முன்னே வந்தது -வைஷ்ணவ ஜ்வரம் அத்தை முறி அடித்தது –
உமது மஹிமையை அறிந்த பின்பு அந்த சைவைப் படையானது தங்களைப் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணிற்றே –
உமது சரித்ரத்தைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஜ்வர பீடை விலகும் என்று
வேண்டிக் கொண்டு திரும்பிச் சென்றது
சிவ பக்தர்கள் ஞானம் மிக்கு இருந்தாலும் தமோ குணங்களால் பீடிக்கப் பட்டு
மூர்க்கமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் –

———-

பாணம் நாநா ஆயுதோக்ரம் புனரபி பதிதம் தர்ப தோஷாத் விதன்வந்
நிர்லூந அசேஷ தோஷம் ச பதி புபுதுஷா சங்கரேனோப கீத
தத் வாசா ஸிஷ்ட பாஹுத் விதய முபயதோ நிர் பயம் தத் ப்ரியம் தம்
முக்த்வா தத் தத்த மாநோ நிஜ புரம் அகம ஸா நிருத்த ஸ ஹோஷ -(82 – 8)-

ஆணவத்துடன் பாணன் மீண்டும் பல ஆயுதங்களையும் கொண்டு வந்து உம்மை எதிர்த்தான் –
அவனுடைய எல்லாக் கைகளையும் அறுத்து எறிந்தீர்
தங்களைப் பற்றி அறிந்த ஸ்ரீ பரம சிவன் தங்களை ஸ்துதித்தார் -அவர் வேண்டிக் கொண்ட படி
பாணனுக்கு இரண்டு கைகளை மிச்சம் வைத்துப் போக விடுத்தீர்
அவன் அன்புடன் சமர்ப்பித்த பொருள்களையும் ஸ்ரீ உஷையுடன் ஸ்ரீ அநிருத்தனனையும்
அழைத்துக் கொண்டு ஸ்ரீ மத் துவாரகைக்கு சென்றீர்–

————–

முஹுஸ் தாவச் சக்ரம் வருண மஜயோ நந்த ஹரேண
யமம் பாலா நீதவ் தவத ஹந பாநே அநில சகம்
விதிம் வத்ஸஸ் தேயே கிரிசமிஹ பாணஸ்ய சமரே
விபோ விஸ்வோத் கர்ஷீ ததய மவதாரோ ஜயதி தே -(82 – 9)-சிகரிணி

தங்கள் பல முறை இந்திரனை வென்றீர் -நந்தனைக் கவர்ந்து சென்ற வருணனை வென்றீர்-
சாந்தீப புத்ரனை மீட்டு யமுனை வென்றீர்-
காட்டுத் தீயைக் குடித்து அக்னியை வென்றீர்–கன்றுகளைக் கவர்ந்த பிரமனை வென்றீர்-
பாணாசூர யுத்தத்தில் சிவனையும் வென்றீர்-
ஸ்ரீ பிரபுவே தங்கள் இந்த திரு அவதாரம் மற்ற அனைத்து அவதாரங்களில் வீறு பெற்று விளங்குகிறதே –

———-

த்விஜ ருஷா க்ருகலா சவபுர் தரம் ந்ருக ந்ருபம் த்ரிதி வாலயம்  அபயன்
நிஜ ஜநே த்விஜ பக்தி ம நுத்தமா முபதி சந் பவநேஸ்வர பாஹி மாம் – -(82 –10)-புத விளம்பிதம்

ந்ருகன் என்ற அரசன் பிராமண கோபத்தால் பச்சோந்தி உருவம் அடைந்தான் –
அவனது சாபத்தைப் போக்கி அவனைத் தூய்மைப் படுத்தி ஸ்வர்க்கம் அளித்து அருளினீர் –
புனிதமான தேவரீர் பிராமணருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை உலகோர்க்கு உபதேசித்து அருளினீர்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

கோ தானம் கொடுத்த பசு மீண்டும் வர அறியாமல் அத்தையும் தன்னுடையதே என்று கொண்டதால் ஓணானாக சாபம் பெறப் பெற்றான் இந்த அரசன்
இவன் ஸ்பர்சத்தால் சாபம் நீங்கப் பற்ற வ்ருத்தாந்தம்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -81–நரகாசுர வதம்-பாரிஜாத ஹரணம் –

October 2, 2020

ஸ்ரீ ருக்மிணி -ஸ்ரீ ஜாம்பவதி ஸ்ரீ சத்யவதி மூன்று தேவிமார் திருக் கல்யாணங்கள் கீழ்
16008- திருக் கல்யாணங்கள்–சில இடங்களில் 16108 திருக் கல்யாணங்கள்-என்பர்
மீதம் உள்ள 16005 திருக் கல்யாணங்கள் இதில்
முதல் ஐந்தும் மந்தா க்ரந்த சந்தஸ் –
6-7-8சிகரிணி சந்தஸ்
9-சார்த்தூல விக்ரீதம் சந்தஸ்
10-ஸ்ரத்தரா சந்தஸ்

———-

ஸ்நிக்3தா4ம் முக்3தா4ம் ஸதத மபிதாம் லாலயன் ஸத்யபா4மாம்
யாதோ பூய ;சஹ க2லு தயா யாக்ஸேனீ விவாஹம் |
பார்த்த2 ப்ரீதியை புனரபி மனாகா3ஸ்திதோ ஹஸ்தி புர்யாம்
ச’க்ர ப்ரஸ்த2ம் புரமபி விபோ4 ஸம்விதா4 யா க3தோபூ:|| (81 – 1)

மிகவும் பிரியம் உள்ளவளும், அழகுள்ளவளும் ஆகிய ஸ்ரீ சத்திய பாமையை எப்போதும்
இன்புறச் செய்து கொண்டு இருந்தீர்கள். பிறகு அவளுனடனேயே ஸ்ரீ திரௌபதி விவாஹத்திற்குச் சென்றீர்கள்.
ஸ்ரீ பாண்டவர்கள் சந்தோஷத்திற்காக சில நாள் ஸ்ரீ ஹஸ்த்தினாபுரத்தில் வசித்தீர்கள்.
ச’க்ர ப்ரஸ்த2ம்-இந்திரப் பிரஸ்தம் என்ற பட்டணத்தையும் உருவாக்கினீர்கள் அல்லவா? ( 81 – 1 )

————–

ப4த்3ராம் ப4த்3ராம் ப4வத3வ ரஜாம் கௌர வேணார்த்2ய மானாம்
த்வத் வாசா தாமஹ்ருத குஹநாமஸ்கரி ச’க்ர ஸூனு:|
தத்ர க்ருத்3த4ம் ப3லம் அனு நயன் ப்ரத்ய கா3ஸ்தேன ஸார்த்த4ம்
ச’க்ர ப்ரஸ்த2ம் ப்ரிய ஸக2 முதே3 ஸத்யபா4மா ஸஹாய:|| ( 81 – 2 )

மிகுந்த அழகியாகிய தங்கள் தங்கை ஸ்ரீ சுபத்திரையை துரியோதனன் விரும்பினான்.
ஆனால் உங்கள் திருவாக்கின் படி -(குஹநாமஸ்கரி)கபட சந்நியாசி ஆகிய ச’க்ர ஸூனு:|-ஸ்ரீ அர்ஜுனனன் அவளை அபகரித்தான்.
இந்த விஷயத்தில் மிகுந்த கோபம் கொண்டார் ஸ்ரீ நம்பி மூத்த பிரான்.
அவரை சமாதானப்படுத்தி ஸ்ரீ சத்ய பாமையுடன் இந்திரப்ரஸ்தம் சென்றீர்கள் அல்லவா? ( 81 – 2 )

அடியார்கள் கார்யம் செய்து தலைக் கட்டின பின்பே தனது கார்யங்களைச் செய்யுமவன்

———-

தத்ர க்ரீட3ன்னபி ச யமுனாகூல த்3ருஷ்டாம் க்3ருஹீத்வா
தாம் காலிந்தீம் நக3ரம் அக3ம:கா2ண்ட3வ ப்ரீணி தாக்3னி:|
ப்3ராத்ருத்ராஸ்தாம் ப்ரணய விவசா’ம் தேவ பைத்ருஷ்வ ஸேயீம்
ராக்ஞாம் மத்4யே ஸப3தி ஜஹிஷே மித்ர விந்தா3 மவந்தீம் || ( 81 – 3)

அப்போது இந்திரப் பிரஸ்தத்தில் பொழுது போக்கிக் கொண்டு இருந்த தாங்கள்
காண்டவ வனத்தைக் கெடுத்து அக்னியைத் திருப்தி செய்தீர்கள்.
ஸ்ரீ யமுனைக் கரையில் காணப்பட்ட ஸ்ரீ காலிந்தீ என்பவளைப் பெற்றுக் கொண்டீர்கள்.
ஸ்ரீ மத் துவாரகை திரும்பினீர்கள். சகோதரர்களிடம் அஞ்சிய, தங்கள் மேல் உள்ள காதலால் தன் வசம் இழந்த,
(பைத்ருஷ்வ ஸேயீம்)அத்தை மகளாகிய, அவந்தி தேசத்து அரசன் மகளாகிய ஸ்ரீ மித்ர விந்தை என்பவளை,
அரசர்களுக்கு மத்தியில் விரைந்து அபகரித்தீர்கள் அல்லவா? ( 81 – 3 )

——-

ஸத்யாம் க3த்வா புனருத3வஹோ நக்3னஜின் னந்தனாம் தாம்
ப3த்3த4வா ஸப்தாபி ச வ்ருஷ வரான் ஸப்த மூர்த்திர் நிமேஷாத்|
பத்ராம் நாம ப்ரத3து3 ரத2 தேதே3வ ஸந்தர்த3நாத்3யாஸ்
தத் ஸோத3ர்யா வரத3 பவதஸ் ஸாபி பைத்ருஷ்வ ஸேயீ || ( 81 – 4)

ஒருநாள் ஸ்ரீ மத் அயோத்திக்குச் சென்று ஏழு உருவங்களை எடுத்துக் கொண்டீர்.
ஏழு சிறந்த காளைகளை ஒரு நொடியில் கட்டினீர்கள்.
நக்னஜித் என்ற அரசன் மகளாகிய ஸ்ரீ ஸத்தியை என்பவளை விவாஹம் செய்தீர்கள் அல்லவா?
பிறகு சந்தர்த்தனன் முதலியவர்கள் ஸ்ரீ பத்ரை என்னும் அவர்களின் சகோதரியைத் தங்களுக்குத் தந்தார்கள்.
அவளும் தங்கள் (ஸூப கீர்த்தி அத்தை)அத்தை மகளே. ( 81 – 4 )

———-

பார்தா2த்2யை ரப் யக்ருத லவனம் தோய மாத்ராபி4 லக்ஷ்யம்
லக்ஷம் சி2த்வா ச’பர ம்வ்ருதா2 லக்ஷ்மணாம் மத்3ர கன்யாம்|
அஷ்டாவேவம் தவ ஸமப4வன் வல்லபா4ஸ் தத்ர மத்4யே
சு’ச்’ரோத2 த்வம் ஸுரபதி கி3ரா பௌ4ம து3ச்’சேஷ்டிதான் || ( 81 – 5)

ஸ்ரீ அர்ஜுனன் முதலானவர்களால் கூட அறுக்கப் படாததும், நீரில் மட்டுமே பார்க்கக் கூடியதும்,
மீன் உருவம் கொண்ட இலக்கத்தை அறுத்து மத்ர தேசத்து அரசன் பெண் ஸ்ரீ லக்ஷ்மணை என்பவளை வரித்தீர்கள்.
இப்படித் தங்களுக்கு எட்டுப் பத்தினிகள் அமைந்தார்கள்.
இதற்கிடையில், தாங்கள் நரகாசுரனுடைய தீச் செயல்களை தேவேந்திரன் கூறக் கேட்டீர்கள் அல்லவா? ( 81 – 5 )

(பௌ4ம)ஸ்ரீ வராகப் பெருமாள் பூமி தேவி இவர்களின் மகனாக இருந்தும் அசுரர்கள் ஸஹ வாசத்தால் கெட்டவனாக இருந்தான்

——–

ஸ்ம்ருத்யாம் பக்ஷி ப்ரவர மதி4 ரூட4ஸ்த்வ மக3மோ
வஹன்னங்கே பாமாம் உபவன மிவாராதி ப4வனம் |
விபி4ந்தன் து3ர்கா3ணி த்ருடித ப்ருதனா சோ’ணி ஹதரசை:
புரம் தாவத் பராக்3 ஜ்யோதிஷ மகுருதா2ச்’ சோ’ணித புரம் || (81 – 6 )

தாங்கள் நினைத்த மாத்திரத்தில் வந்த ஸ்ரீ பெரிய திருவடி முதுகின் மேல் ஏறிக்கொண்டு மடியில்
ஸ்ரீ சத்யபாமையை வைத்துக் கொண்டு நந்த வனத்துக்குச் செல்பவர் போல சத்ருவின் இருப்பிடத்துக்குச் சென்றீர்கள்.
சென்ற உடனேயே கோட்டையை உடைத்தீர். கொல்லப்பட்ட சேனைகளின் ரத்த நீரால்
ஸ்ரீ பிராக் ஜோதிஷ புரம் என்ற பட்டணத்தைச் சோணித புரமாக மாற்றிவிட்டீர்கள் அல்லவா? ( 81 – 6 )(இரத்தம் சிந்தி சிவந்த மண்ணாக மாற்றி)

————

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி4 வன மத்4யா து3த3பதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரத3லித சி’ரா மங்க்ஷு ப4வதா |
சதுர் த3ந்தைர் த3ந்தாவல பதிபி4 ரிந்தா4ன ஸமரம்
ரதா2ங்கே3னந சி2த்வா நரக மகரோஸ் தீர்ண நரகம் || ( 81 – 7)

ஐந்து தலைகளை உடைய முரன் என்பவன் சமுத்திர நீரின் நடுவில் இருந்து தங்களை எதிர்த்து வந்தான்.
விரைந்து சக்கர ஆயுதத்தால் அவன் தலைகளை அறுத்துத் தள்ளினீர்கள்.
நான்கு கொம்புகள் உடைய சிறந்த யானைகளுடன் மேலும் மேலும் விருத்தி அடைந்த போர் புரியும்
நரகாசுரனை சக்கர ஆயுதத்தால் வெட்டி, நரகத்தைத் தாண்டி
மோக்ஷம் அடைந்தவனாகச் செய்தீர்கள் அல்லவா? ( 81 – 7)

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஸ்பர்சத்தால் வினைகள் தீரப் பெற்று மோக்ஷம் பெற்றான்

——–

ஸ்துதோ பூ4ம்யா ராஜ்யம் ஸபதி3 ப4க3த3த்தேSஸ்ய தனயே
கஜஞ்சைகம் த3த்வா ப்ரஜிக3யித2 நாகா3ன் நிஜ புரம் |
க2லேன ஆபத்3தா4னாம் ஸ்வக3த மனஸாம் ஷோட3ச’ புன:
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணா மபி ச த4ன ராசீ’ம் ச விபுலம் || ( 81 – 8)

ஸ்ரீ பூமி தேவியால் துதிக்கப்பட்டு, உடனே நரகாசுரானின் மகனான பகதத்தனிடம் ராஜ்ஜியத்தையும்,
ஒரே ஒரு யானையையும் ஒப்படைத்தீர். மற்ற யானைகள், நரகாசுரனால் பந்திக்கப்பட்டுத்
தங்களிடத்தில் மனம் லயித்திருந்த பதினாறாயிரம் பெண்களையும், செல்வக் குவியலையும்
தங்கள் நகருக்கு அனுப்பினீர்கள் அல்லவா?-(81 – 8 )

———-

பௌ4மாபாஹ்ருத குண்ட3லம் தத் அத3தி3தேர் தா3தும் ப்ரயதோ தி3வம்
ச’க்ராத்3யைர் மஹித ஸம்மதயியா த்3யு ஸ்த்ரஷு த3த்தா ஹ்ரியா |
ஹ்ருத்வா கல்ப தரூம் ருஷாSபி4 பதிதம் ஜித்வேந்த்3ரம் அப்4யாக3ம:
தத்து ஸ்ரீமத3 தோ3ஷ ஈத்3ருச’ இதி வ்யாக்2யாது மேவா க்ருதா2:|| ( 81 – 9 )

தேவ மாதர் நாணும் அழகுடைய ஸ்ரீ சத்ய பாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை
அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, ஸ்வர்க்க லோகம் சென்றீர்கள்.
இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்!
கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்து ஸ்ரீ மத் துவாரகைக்குத் திரும்பினீர்.
ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே
இவ்வாறு செய்தீர்கள் அல்லவா? ( 81 – 9)

———

கல்ப த்3ருமம் ஸத்யபா4மா ப4வனே பு4வி ஸ்ருஜன் த்3வ்யஷ்ட ஸாஹஸ்ர யோஷா:
ஸ்வீ க்ருத்ய ப்ரத்யகா3ரம் விஹித ப3ஹு வபு லீலயன் (லாலயன்)கே2லி பே4தை3:|
ஆச்சர்யான் நாரத3 லோகித விவித4 க3திஸ் தத்ர தத்ராபி கே3ஹே
பூ4ப: ஸர்வாஸு குர்வன் த3ச’ த3ச’ தனயான் பாஹி வாதால யேசா’|| ( 81 – 10 )

கற்பக விருக்ஷத்தை ஸ்ரீ சத்ய பாமையின் வீட்டில் கொல்லைப் புறத்தில் நடச் செய்தீர்கள்.
(த்3வ்யஷ்ட ஸாஹஸ்ர )பதினாறாயிரம் சரீரங்களை எடுத்துக் கொண்டீர்கள். பதினாராயிரம் ஸ்திரீக்களை விவாகம் செய்து கொண்டு,
பல கிரீடைகள் புரிந்து கொண்டு, எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்து பிள்ளைகளை உண்டாக்கி,
நாரதரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய, தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் ( 61 – 10 )

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்