Archive for July, 2020

ஸ்ரீ பாஷ்யம் —2-1-7- -இதர வியபதேச அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

சித்தத்துவிகம் –
முதல் 2 அத்யாயம் – பிரஹ்மமாகிற விஷயத்தை எடுத்து உரைப்பதால் இதை விஷயத்துவிகம் என்றும் சொல்லுவார்.
சமன்வயாத்யாயம் + அவிரோதாத்யாயம்

சாத்யத்துவிகம் –
பின் 2 அத்யாயம் – தத் விஷய ஞான ரூபமான சம்பந்தத்தால் அவனை அடைய வழியையையும்,
அடைந்த பின்பு பெறுகிற பேற்றையும் சொல்லுகிற விஷயீ துவிகம் என்பர் இதனை.
உபாஸனாத்தியாயம் + பலாத்யாயம் .

சாஸ்த்ர சங்கதி
காண்ட சங்கதி
பேடிகா சங்கதி
அத்யாய சங்கதி
பாத சங்கதி
அதிகரண சங்கதி
சூத்ர சங்கதி

சமன்வயாத்யாயத்தில் பிரஹ்மமே ஜகத் காரணம்தான் என்று
அயோக விவச்சேதம் , அந்யயோக விவச்சேதம் இரண்டாலும் காடாப்பட்டது.
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரஹ்ம காரணத்தை மட்டும் சொல்வதில்லை.
எத்தனையோ காரணத்வ வாக்கியங்கள் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் ஜகத் காரணம் என்கின்றன.
என்றாலும், அப்பின்ன நிமித்தோபாதான காரணம் பிரஹ்மம் மட்டுமே என்று
காரணத்வத்தை பிரஹ்மத்தோடு பொருத்தி சமன்வயப் படுத்தி காட்டினார் முதல் அத்தியாயத்தில்.

இரண்டாவது அத்யாயமான அவிரோதாத்யாயத்தில் ஸ்தூணான் நிகனன் நியாயத்தாலே பிரதிபக்ஷ வாதங்களை
கேடயம் கொண்டு மறுத்தும், வாதி ஸ்வபக்ஷ தோஷங்களை தர்க பாதத்தில் கத்தி கொண்டு நிரசித்தும்
ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கிறார் பாஷ்யகாரர்.

2-1-7- : இதர வியபதேச அதிகரணம் :

ஆரம்பணாதிகாரணத்துக்கு விலக்ஷணத்வாதிகரணத்தோடே சங்கதி.
அங்கு காரண-காரியத்துக்கு ஸாலக்ஷிண்யம் இருக்க வேண்டுமே என்கிற ஆக்ஷேப பரிகாரம் பண்ணப் பட்டது.
நித்ய சுத்த முக்த தத்துவமான பிரஹ்மத்துக்கும், ஸதத பரிணாம, துக்க மயமான ஜகத்துக்குமான விலக்ஷிணதவம் கொண்டு
பிரஹ்ம காரண வாதத்தை மறுத்து பிரதானம்-புருஷன் என்கிற 2 தத்துவங்களை ஒத்துக்கொண்டு
பிரஹ்மத்தை அடியோடு மறுக்கிறான் சாங்கியன் —
அதற்கு வைலக்ஷிண்யம் வஸ்து பேதத்தாலன்று அவஸ்தா பேதத்தைக் கொண்டு என்பதாகாச் சொல்லி ,
ஸாலக்ஷிண்ய நியமம் பிரஹ்ம காரண வாதத்துக்கு வேண்டியது இல்லை என்பதாக அங்கு சொல்லப் பட்டது.
நையாயிக, வைசேஷிகர்கள், ஸ்ருதி சித்தமான பிரஹ்மத்தை ஏற்காது, அனுமான சித்த பிரஹ்மத்தை
கேவலம் நிமித்த காரணமாக ஒத்துக் கொள்கிறார்கள்.
வைதிகர்களில் துவைதிகளும் பிரஹ்ம உபாதான காரணத்தை மறுக்கின்றனர்.

————-

சூத்ரம் 2-1-21 : இதர விபத்தேஸாத் ஹிதாகாரணாதி தோஷ ப்ரஸக்தி :

இது பூர்வ பக்ஷ சூத்ரம். இந்த அதிகரணத்தில் மற்ற இரண்டும் சிந்தாந்த சூத்திரங்கள்.

முதல் சூத்ரத்தால், காரணமான பிரஹ்மத்துக்கும், காரியமான ஜகத்துக்கும் ததனந்யத்வம் சொல்லும் பக்ஷத்தில்
அபரிஹார்யமான தோஷம் தட்டும் என்கிறான் வைசேஷிகன்.
தத்வமஸி
அயமாத்மா பிரஹ்ம
அஹம் பிரஹ்மாஸ்மி
என்கிற அபேத ஸ்ருதிகளைக் கொண்டு ததனந்யத்வம் சரீராத்மா பாவத்தை வைத்து நாம் சொல்ல,
ஸ்வரூப ஐக்கியத்தை வைத்து அத்வைதிகள் சொல்கிறார்கள் என்கிற வித்யாசத்தைத் தவிர,
இரண்டு பேரும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஜீவாத்மாவும் ஒன்றே என்று சொல்லப் போனால்
இரண்டு பக்கத்தாலும் கழுத்துக்கு சுருக்கு போட்டதாகிற தோஷம் வரும் என்கிறான்.
அநேந ஜீவேன ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – என்று பிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைந்து ஜகத் வியாபாரத்தை
செய்கிறது என்று சொல்லப் போனால் பிரஹ்மத்துக்கு அஹித ப்ரஸக்தி தோஷம் தான் மிஞ்சும் எனது பூர்வ பக்ஷம்-

ஸர்வஜ்ஞ , ஸர்வ சக்தித்வம் உடைய பிரஹ்மம் பேத பாவ ஜகத்தை ஸ்ருஷ்டிக்காது, நித்ய விபூதி போல ஏன் ஸ்ருஷ்டிக்கவில்லை?
கர்மானுகுணமாக பேதாஸ்பதமான ஜகத் உண்டாயித்து என்றால்,
ஜீவனும் பிரஹ்மமும் வேறு வேறு என்கிற – காரியம் வேறு காரணம் வேறு என்கிற
எங்கள் பக்ஷத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாக பூர்வ பக்ஷம்-

———–

சூத்ரம் 2-1-22 : அதிகம் து பேத நிர்தேசாத்.::

காரிய-காரணம் இரண்டும் ஒன்று என்று சொன்ன மாத்திரத்தாலே, பிரஹ்மமும்-ஜீவனும் ஒன்று என்பது நம்முடைய வாதம் இல்லை.
வியாசர்-ஆழ்வார்-இராமானுஜர் மதத்தவர் தத்வ த்ரய வாதிகளே ஒழிய ஏக தத்வ வாதிகள் அன்று –
ஜீவனோ தாபத்ர்யங்களால் பீடித்தன் பிரஹ்மம் அகர்ம வஸ்யன் என்கிற பல ஸ்ருதி வாக்கியங்களால்
பர ப்ரஹ்மமானது ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டது வேறு பட்டது என்பதே நம்முடைய மதம்.
எங்கெல்லாம் ஸது ஆத்மா பிரஹ்ம என்று சாமான்யாதிகரணத்தாலே சொல்லிற்றோ, சாக பசு நியாயத்தாலே
அங்கெல்லாம் தேவதா விசேஷமான நாராயண சப்தமே விவீக்ஷிதம்.
ஏத ஸர்வ பூத அந்தராத்மா திவ்யோ ஏகோ நாராயண: என்ற இடம் காண்க.

எப்படி அசேதனத்துக்கும் பரமாத்மாவுக்கும் ஐக்கியத்தை சொல்ல முடியாதோ, அதே போல
ஜீவாத்மாவுக்கும்-பரமாத்மாவுக்கும் ஐக்யத்தைச் சொல்லப் போகாது.
அசேதனத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் எந்த ஞானம் வியாவர்த்தமோ,அதே ஞானம் ஆத்ம- பரமாத்த்மாவுக்குமே (
மின்மினிப்பூச்சி) கத்யோதாக கல்ப-பரம்ஜியோதிஸ் வியாவர்த்தி என்னக் கடவது.
இரண்டு பேருக்கும் சாமானாதிகரண்யம் சொல்வது சரீராத்ம பாவத்தால் ஏற்கும் ஒழிய, ஸ்வரூப ஐக்கியத்தால் சொல்லப் போகாது.
அதனால் ஜீவாத்மாவுக்கும்-பரமாத்மாவுக்கு காரண-காரிய பாவம் பொய்ப்பதில்லை.

ராம: கமல பத்ராக்ஷ : ரூப சௌபாக்கிய தாயின்ய : ஸர்வ சத்வ மனோஹர :
இங்கு சொல்லப்பட்ட நான்கு சப்தங்களும் முதல் வேற்றுமை, – பிரதமா விபத்தி ஏக வசனம்.
ராமன் எவனோ அவனே கமல பத்ராக்ஷன்.-அவனே ரூப சௌபாக்ய தாயினன்.-அவனே ஸர்வ சத்வ மனோஹரன்.
நாலும் நாலு வியக்திகளை சொல்வதில்லை. நானா குணங்களைக் கொண்ட ஒரு வியக்தியைத்தான் சொல்வது சாமானாதிகரண்யம்.

தத்வமஸி ஸ்வேதகேதோ – என்ற வாக்கியத்தில் தது , துவம் அஸி இரண்டும் பிரதமா விபத்தி ஏக வசனம்.
அயம் ஆத்மா பிரஹ்ம – இதுவும் பிரதமா விபத்தி .
அஹம் பிரஹ்மாஸ்மி – இதுவும் பிரதம புருஷன்,
மத்யம புருஷன், உத்தம புருஷன் என்று அனைத்தும் சாமான விபத்தியிலேயே அமைந்துள்ள காரணத்தால் ,
ஜீவ-பர தத்வம் இரண்டும் ஒன்று என்று சொல்லுகிற வாதம் சரீராத்மா ஸ்வபாவ ஸ்வரூபத்தாலே ஸமஞ்சஸம்.
இந்த விஷயம் முன்னமே வாக்யான்வய அதிகரணத்தில் சொல்லப் பட்டது தான்.
காஸகிருஸ்னர் , ஒளடூலோமி–ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டம் காரண பிரஹ்மம் என்றும்
ஸ்தூல சிதசித் விசிஷ்டம் காரிய பிரஹ்மம் என்றும்-சரீராத்ம பாவத்தாலே ததனந்யத்வம் சொல்லலாவது.
இதை வைத்துக் கொண்டு பிரஹ்மத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் ஏகீ பாவமோ, அஹித தோஷமோ சொல்லப் போகாது .

ஸது ஏவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் என்கிற ஸ்ருஷ்டிக்கு பூர்வா அவஸ்த்தையிலும் கூட –
விசேஷ்ய-விசேஷணங்கள் வேறு வேறேயாய் – ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டம்தான் பிரஹ்மம் .

ஜீவோ பிரஹ்மைவ ந பர : என்று ஜகன் மித்யா வாதத்தை சொல்கிற சங்கரர் பிரஹ்ம வியதிருக்த ஸகல பதார்த்தங்களும்
மித்யை என்பதாகக் கொண்டு ததனந்யாத்வம் சாதிக்கிறார் அவர்.
இப்படி மாயா கல்பிதமான பிறகுதான் – சுத்திகையில் ராஜத புத்தி பண்ணுவது போல – பிரஹ்மம் தன்னிடத்தில் பேதத்தைப் பார்க்கிறது
என்று சொல்கிற அவர்கள் விஷயத்தில்
அதிகம் து பேத நிர்தேசாத் – என்கிற இந்த சூத்திரம் பொருந்தாது.
வியாசர் எந்த இடத்தில் இதுபோல உதாரணங்களைக் காட்டவில்லை என்பதே இதற்கு காரணம்.

————-

சூத்ரம் : 2-1-23 அஸ்மதாதிவத் ச தத் அநுபபத்தி :

பர்த்ரு பிரபஞ்சன் – பரிணாம வாதம்
சங்கரர் – பிரஹ்மாஜ்ஞான வாதம்
பாஸ்கரர் – ஒளபாதிக்க பேத வாதம்
பாமதிகாரர் – ஜீவாஜ்ஞான வாதம்
என்று இப்படி வேறு வேறு பிரகாரத்தாலே–ஜீவோ ந பிரஹ்ம பர : என்பதையே விசிஷ்டாத்வைதியான நீரும் –
தர்சனம் பேத ஏவச என்று ஜீவ-பர பேதம் சரீராத்மா பாவத்தால் வேறு பட சொன்னாலும், காரிய-காரண ஐக்கியம் சொல்லுகிறபடியால், –
பிரஹ்மமே காரியாவஸ்தையில் ஜீவ பாவத்தை அடைகிறது என்கிற அத்வைத பக்ஷத்துக்கே நீங்களும் வருகிறீர்கள்
என்பதாக வைசேஷிகன் வைத்துக் கொண்டு
துக்க மோஹாத்மாக ஜகத் ஸ்ருஷ்டியால், பிரஹ்மம் தனக்குத் தானே சுருக்கிட்டுக் கொள்வது போல் அஹிதத்தை உண்டாக்கினது என்கிறான்.
அதனால் பிரஹ்மம் கேவலம் நிமித்த காரணம். உபாதான காரணம் ஆகாது என்கிற எங்கள் பக்ஷத்தில்
சேர்ந்து கொள்வீர்களாக என்பதாக அனுராதனம் பண்ணினான்.

சாங்கியன் பிரகிருதி உபாதான காரணம் என்றான்.
வைசேஷிகன் பரமாணு ஜகத் காரணம் என்றும் , ஈஸ்வரன் கேவலம் நிமித்த காரணம். அந்த ஈஸ்வரனும் ஆநுமானிக சித்தம்.
ஸ்ருதி சித்தம் அன்று என்பதாக. சொல்லாமல் பிரஹ்மம் ஜகத்துக்கு அப்பின்ன நிமித்தோபாதான காரணம் என்று சொன்னால்
கீழே சொன்ன அஹிதாதி தோஷம் வரும் என்பது பூர்வ பக்ஷ ஆக்ஷேபமாய் .
அதற்கு பல பேத ஸ்ருதி வாக்கியங்களை எடுத்துக் காட்டி, சாமான்யாதி சப்தங்கள் விசேஷ சப்தத்தில் பர்யவசிக்கும் என்பதாக
சாக-பசும் நியாயத்தாலே வைசேஷிக பக்ஷத்தை நிரசித்தார்.

சேதநாசேதனாதமாகமான பிரபஞ்சமே பிரஹ்மம் – ஸ்தூல சேதநாசேதன விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் என்பதான காரணத்தால்,
ஜீவனும் பிரஹ்மமும் ஒன்றேயோ அல்லவோ என்கிற ஆக்ஷேபத்தை வைசேஷிகன் எழுப்ப கிடையாது என்பதாகச் சொல்லி,
வைசேஷிகனுடைய இந்த ஆரோபணம் அவர்கள் பக்ஷத்துக்கும் ஒவ்வாது என்பதாக
அஸ்மாதாபி அநுபபத்தேஹே என்கிறார் சூத்ரகாரர்.
ஜீவா-பர சாம்யம் சொல்ல வந்ததான ஆரோபம், அசித்தை வைத்தும் காட்டலாமே – பரமாத்மாவுக்கும் அசேதனத்துக்கு சாம்யம்
என்பதான அநுப பத்தி அஸ்மதாதபி அநிவார்ய : என்பதாக வைசேஷிக இதர வ்யபதேச வாதத்தைத் தள்ளி ,
ஸ்தூல-ஸூக்ஷ்மா அவஸ்தைகளில் விசேஷணங்களுக்கான பேதம், விசேஷயத்தில் கிடையாது என்பதால்
தத்துவங்கள் வேறு தான், ஆனாலும் காரண-காரியம் ஒன்றுதான் என்பதை அறுதியிட்டார்.

விலக்ஷணத்வாதிகரணத்தில் சொன்னதைத்தானே இங்கும் சொல்கிறார், என்பதால் புனருக்தி தோஷம் வாராதோ என்னில் ,
விலக்ஷணத்வாதிகரணத்தில் அசித்துக்கும் பிரஹ்மத்துக்கும் ஸாலாக்ஷிண்ய தோஷ பரிகாரம் பண்ண,
இந்த இதர வியாபதேச அதிகரணத்தில் சித்துக்கும் பிரஹ்மத்துக்குமான அஹித தோஷ பரிகாரம் செய்யலாயிற்று.

———-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரணம்-2-1-6—ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரண பிரவேசம்

சங்கதி – விலக்ஷணத்வாதிகாணத்தோடே. –
அஸ்ய (ஜகத்) விலக்ஷணத்வாத் (பிரஹ்ம காரிய பாவம்) ந -அங்கு சொல்லப் பட்டது பிரஹ்மமும் ஜகத்தும் விலக்ஷணத்தையோடே கூடினது.
ஆகிலும் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பது வேதாந்த பக்ஷம்.
ஜ்ஞான ஆனந்த மயமான பிரஹ்மம் அஜ்ஞான, துக்க பூயிஷ்டமான ஜகத்துக்கு காரண-காரியம் என்பது
பிரஹ்மத்திடத்தில் இல்லாத ஒன்றிலிருந்து ஜகத்தில் இருக்கிற அஜ்ஞான, துக்க மிஸ்ரமான ஜகத் பிறந்தது என்பது
அஸத் கல்ப வாதத்தோடே சேரும் – என்பது சாங்கிய பூர்வ பக்ஷம்-

காரணமும் காரியமும் ஸாலக்ஷிண்யத்தோடே கூடித் தான் இருக்க வேண்டும் என்கிற நியமமில்லை .
சாணத்தில் இருந்து தேள் தான் என்றில்லை, கிருமி, கீடங்கள் உண்டாவதும் ,
ஊர்ணநாபி கட்டுகிற சிலந்தி வலையும், முட்டையில் இருந்து புழு, புழு கூடுகட்டி பட்டாம் பூச்சி ஆவது போலே,
வித்யாசமானத்திலிருந்து வித்தியாசமானவை ஜனிக்கலாமே.
அப்பனைப் போலே பிள்ளை என்றாலும், சில அம்சங்கள் தாத்தா, முத்தாத்தா (அ) பாட்டியிடத்து இருந்தும் வந்து
சேருமாப்போலே ஸர்வதா ஸாம்யம் நிர்பந்தமில்லை.
ஆகவே அஸத் வாத இதை சேத் – வேதாந்த வாதம் அஸத் வாதிகள் வாதம்போலே என்று ஆரோபித்தால்,
அப்படிக் கிடையாது என்பதாக சாக்கியர்கள் ஆஷேபத்துக்கு பரிகாரம்.

இப்போது வைசேஷிகனான – தார்கிகள் விவாதத்தில் நுழைய , அதற்கு முகாந்திரம்
சாங்கியன் சொல்வது ஜகத்துக்கும், மூல பிரக்ருதிக்குமே ஸாலக்ஷிண்யம் இருப்பதால், பிரஹ்ம காரிய வாதத்தை மறுக்கிறான்.
வைசேஷிகன் பிரஹ்ம காரிய வாதத்தை நிராகரிப்பது
காரணப் பொருளான பிரஹ்மமும் வேறு. காரிய பொருளான ஜகத்தும் வேறு வேறாக காரியமும், காரணமும் பின்னமாக காண்கையாலே .
சாங்கியன் பிரஹ்ம தத்துவத்தையே ஒத்துக்கொள்ள வில்லை.
நையாயிகன் ஆநுமானிக பிரஹ்மத்தை ஒத்துக் கொண்டாலும், பிரஹ்மத்துக்கு நிமித்த காரணம் மட்டும் உண்டு,
உபாதான காரணத்வம் கிடையாது என்கிறான்.
இவர்கள் பக்ஷத்தில் ஜகத்துக்கு காரணம் எதுவென்றால்,
சாங்கியன் பிரதானம் காரணம் என்றான்.
வைசேஷிகன் பரமாணு காரணம் என்றான்.

ஆக, நையாயிகன் சொல்ல வந்தது என்னவென்றால்,
காரியத்துக்குள்ளே காரணம் அடங்கி இருக்கிறது என்கிற வைதிக பக்ஷத்தை மறுத்து,
காரியமும், காரணமும் வேறு வேறு என்று மறுக்கப் புகுந்தான் மற்ற இருவருடைய வாதத்துக்குள்.
திரவ்யாந்தரம் ஜகத் காரணம் என்கிற இவர்களுடைய வாதமானது
பிரஜ்ஞா திருஷ்டாந்த அனுபரோதாஸ் ச என்கிற அதிகரணத்திலேயே மறுக்கப் பட்டாலும், மீண்டும் இங்கு அதுவே கண்டிக்கப்படுகிறது.
அங்கு வந்த விஷயம், ஸேஸ்வர சாங்கியனான யோகன்,
பிரஹ்மத்துக்கு நிமித்த காரணம் உண்டு, உபாதான காரணத்வம் கிடையாது என்று மறுதலித்ததால்.
பிரக்ருதிஸ் ச ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் கதா – என்கிற ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் என்கிற
பிரதிக்ஞை சேர பொருள் கொள்ள வேண்டும் . அனுபரோதமாக சொன்னால் என்னா என்றால், ஜகத்துக்கு, நிமித்த காரணத்தோடு,
உபாதான காரணமும் பிரஹ்மம் தான் என்பது தேறும். இதற்கு விரோதமாக சொல்லக் கூடாது என்பது அவ்விடத்தில் விஷயம்.

குண கிரியாவகம் திரவியம். குணத்துக்கும், கிரியைக்கும் ஆஸ்ரயமாக இருப்பது திரவியம் என்பதாக.
இதன் அடிப்படியில், தர்ம பூத ஜ்ஞானம் நம்முடைய சம்பிரதாயத்தில், குண கோடியிலும் சேரும், திரவ்ய கோடியிலும் சேரும்.
வெண்மை நிறமானது, வேஷ்டியில், (அயுத) பிரிக்க முடியாத சம்பந்தத்தோடே இருக்குமோ அது சமவாயி காரண சம்பந்தம்.
சமவாயி காரணம், அபாவம் இந்த இரண்டும் நம்முடைய சம்பிரதாயத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
பாவத்தை குமாரில பட்டரும், பாஸ்கர அனுயாயிகளும் வேறு வேறு விதமாக சொல்கிறார்கள்.
அனால், நம்முடைய சித்தாந்தத்தில்,
பாஸ்கர பக்ஷமான அபாவம் என்பது பாவாந்தர ரூபமாக இருக்கிறது – என்பதே ஏற்றுக் கொல்லப் படுகிறது.
திருவாராதனத்துக்கு வெள்ளிக்கு குடம் கொண்டு வா என்றால், சென்றவன் திரும்பி வந்து,
வெள்ளிக் குடம் இல்லை – மண் குடம் தான் இருக்கிறது என்றால். வெள்ளிக் குடத்தின் அபாவம் அந்த மண் குடத்தின்
பாவாந்தர ரூபமாக இருப்பதாகக் கொள்ள வேண்டும் .
தார்க்கீகன் சொல்லுகிற சமவாயி, அபாவம் எல்லாம் அநுபலப்தி என்கிறதோடே சேர்த்து விடலாம் என்பது நம்முடைய பக்ஷம்.

10 விதமான கரிய-காரண பேதத்தை சொல்கிறார்கள் தார்க்கிகர்கள்.
1. புத்தி போதாத் = மிருக் பிண்டம் என்றால் நம் புத்திக்கு வருவது களிமண் கட்டி.
கடம் என்றால் புத்திக்கு வருவது கடத்தினுடைய ஆகாரம். இந்த இரண்டுக்குமான காரிய-காரண ஜ்ஞானம் வேறு வேறு.
2. சப்த பேதாத் = கடம் என்கிற சப்தமே வேறு. மிருக் பிண்டம் என்கிற சப்தமே வேறு.
3. க்ரிய பேதாத் = உபயோகமும் வேறு வேறு. குடத்தைக் கொண்டு நீர் எடுக்கலாம். களிமண் கட்டியைக் கொண்டு நீர் எடுக்கவோ ? முடியாதே.
4. கால பேதாத் = பூணுல் விவிரணம் . காரணம் இருக்கிற காலமே வேறு. காரியம் ஆகும் வேளையே வேறு.
முன் பின்னாகத் தான் நடக்க வேணும் என்பதால், கால பேதம். ஸ்தோத்திரத்துக்கு (நூல் கயிறுக்கு) பிரம்ம முடிச்சு போட்டு,
மந்திரங்களால் பிரதிஷ்டாபனம் பின்னால் அன்றோ அது பூணூல் ஆகும். அதற்கு கால அளவு தேவையாகும் பக்ஷ்த்தில்,
5. ஆகார போதாத் = நூல் என்றும், பூணூல் என்றும் பேதம் பார்க்கிறோமே. ஆக, பூணூல் என்பதே வேறு. அது செய்கிற நூல் உண்டையே வேறு என்கிற பேதம்.
6. பரிணாம பேதாத் = ஆகார பேதம், பரிணாம பேதம் இரண்டுக்கும் பெருத்த வித்யாசம் கிடையாது.
7. பாவா-அபாவ பேதம் = 7 விதமான அபாவும் சொல்கிறான் ஜைனன்..
8. சங்கியா பேதம் = களிமண் கட்டி ஏக ரூபமாய், அதில் செய்யப்படும் பானை, மடக்கு, விளக்கு என்பவை அநேகமாய் இருக்கிற சங்கியா பேதம்.
9. காரக வியாபாரம் = பானையை செய்ய ஒரு குயவன் மண்ணை ஆறு, ஏரியில் இருந்து கொணர்வது, தகைப்பது,
சக்ர தண்டங்களைக் கொண்டு பானையாக பண்ணும் படியான காரக வியாபாரம் இல்லாமல் , காரியம் வாராது.
காரியமும் காரணமும் ஒன்று என்றால் காரிய வியாபாரத்தின் அவசியம் இருக்காதே.
பிரத்யக்ஷத்தில் அப்படி எதுவும் உண்டாக/படைக்கப் படுவதில்லையே. ஆகவே காரியம் வேறு. காரணம் வேறு.
தில இது தைலம். எண்ணைப் பசை இருப்பதிலிருந்து எடுப்பது தைலம் என்று ஆகி விட்டது.
மணலை சுக்கில இட்டு ஆட்டினாள் தளம் வருமோ? வராது. எனவே காரக வியாபாரம் காரியம் காரணத்தில் இருந்தால் தான்
அதை இதுவாக மாற்ற முடியும். தவிர, பிரஹ்மம் தன்னுடைய சங்கல்பத்தாலேயே ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறதே ஒழிய,
அதற்கென்று குயவனைப் போல மண், சக்ரம், தண்டம் இவைகளைப் போல ஒரு காரிய வியாபாரம் செய்து படைப்பதில்லை.
பிராட்டியை ஈக்ஷணா சக்த்தியைக் கொண்டு, தது ஐக்ஷத என்கிற மட்டிலே படைக்கிறது. தனது நினைவு கொண்டே படைக்கிற
இவனுக்கு செய்ய வேண்டிய காரக வியாபாரம் எதுவும் இல்லை – என்பது ஆக்ஷேப சமாதானம். அங்கனாகில் ஜகத்தில் வஸ்த்துக்கள்
மறைந்து தோன்றுவதால், ஸ்ருஷ்டி இன்றளவும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்,
எப்படி தைலம் வேண்டுமானால் செக்கு ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டுமோ அதுபோலே என்று பிரதியுத்தரம்.
10. நித்யாநித்யா அனுப்பபத்தி பேதம் = எல்லா வஸ்துவும் ஆத்தால் எப்போதும் உண்டு என்கிறது ஏற்படும். இது நித்யம்,
இது அநித்தியம் என்கிறதுக்கு இடமில்லாமல் போகும்.
என்று 10 விதமாக பிரஹ்மத்துக்கு கார்ய – காரண அந்யத்வம் பேசுகிறான் – அநந்யதவத்தை மறுக்கிறான், வைசேஷிகன்.
இதற்கு சாங்கியன் பதில் சொல்லும் முன், சங்கர அத்வைதி தன் வாதத்தை முன் இடுகிறான்.

காணாத-வைசேஷிகர் : காரணம் வேறு காரியம் வேறு ஜகத்துக்கு பிரஹ்மம் காரணம் அன்று என்றார்.
காபில-சங்கியன் : பிரஹ்மம் கிடையாது. ஆனால் காரண-காரியம் 2ம் ஓன்றே என்கிறார்.
குமாரில பட்டர் – ஜகத்து பிரவாகதோ அநாதி.
பௌத்தன் – காரணமே கிடையாது. இலாததில் இருந்து இல்லாதவை உண்டாகின்றன. என்றான்.
சங்கரர் – காரணம் ஒன்றுதான் சத்தியம். காரியம் எல்லாம் மித்யை .

பௌத்தர்கள் அஸத் காரிய வாதிகள். காரணத்தையே அஸது என்கிறார்கள். இல்லாத காரணத்தில் இருந்து காரியம் உண்டாவதால்,
காரியமும் அஸத்தேதான். அஸத்தினின்றும் காரியம் என்கிற 5 ஆம் வேற்றுமை இட்டுச் சொல்கிறான்.
இது வைதிக சித்தாந்தத்துக்கு முரணானது.

பிரஹ்ம விது ஆப்னோதி பரம்
சத்யம்.ஜ்ஞானம்.அனந்தம் பிரஹ்ம .
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத்.
ஆகாசாத் வாயு, வாயுர் அக்நி :
அக்நிர் ஆப: ஆபப்ருதிவி
ஸோ தா பிரஜாயா ஏவ
என்று பிரஹ்மமானது சங்கல்பித்து, தன்னுடைய சரீரத்தோடே சூக்ஷ்ம அவஸ்தையில் இருந்த சேதனா சேதநங்களை விடுவித்து
தா விசித்ரா தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அனுப்பிரவிஸ்ய என்று
தேஜோத்பன்னமான மூன்று தேவதைகளை சிருஷ்டித்து அதற்குள் பிரவேசித்து தானே பரிணமிப்பதாகிற ஸத்துத்தான் காரணம்.
அந்த ஸத்துத்தான் பர பிரஹ்மம். அத்தால் ஸத்தான காரியம் உண்டாயிற்று என்பது தான் ஸத்காரிய வாதம்.

இப்போது வைசேஷிகன், நையாயிகன் இவர்கள் என்ன சொல்கிறாகள் என்றால்,
அஸத : காரியம் என்கிற 6 வது வேற்றுமையை இட்டு, இல்லாத காரியத்தின் உற்பத்தி என்பதாக.
சாங்கியன் சொல்வது காரியம் ஸது ஏவ – என்பதாக 5 காரணங்களை இட்டுச் சொல்கிறான்.
புதிதாக காரியம் உண்டாவது இல்லை. இருப்பது தான் உண்டாகிறது.
எத்தாலே என்றால்
1. அஸது அகரணாது = இல்லாததை யாரும் உண்டாக்க முடியாதாகையாலே.
லவணத்துக்கு கந்தமோ, காகத்துக்கு தந்தமோ உண்டாக்க முடியுமோ? கூர்மத்துக்கு ரோமத்தை உண்டாக்க முடியுமோ? முடியாது.
அஸது அஸதே தான். ஸது ஏவ காரியமாக பரிணமிக்கிறது என்பது சாங்கிய காரிகை.

2. உபாதான கிரஹணாது = தைலம் வேண்டும் என்றால், அதற்கு இடு பொருளான = உபாதானமான எள்ளை செக்கிலிட்டு ஆட்ட வேண்டும்.
மணலைக் கொண்டு தைலம் எடுக்க முடியுமோ? முடியாதே.
மிருக் இதிலிருந்து குடத்தை பண்ணலாம் பருத்தியில் இருந்து ஆகாதே. பருத்தியில் இருந்து ஆடை நெய்யலாம்.
வளையல், காது தோடு ஆகாதே. ஆடக பொன்னிலிருந்து வளையல், காது தோடு செய்ய முடியும், மண்குடம் ஆகாதே.
அதுபோல, காரியம் காரணத்தில் உண்டு என்பதால், எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் உண்டாக்க முடியுமோ என்று கேட்க வேண்டாம்.
வைதிகனுக்கும் இது சம்மதமே . ஆனால் சில வித்யாசம் உண்டு வைதிக பக்ஷத்தில்.

3. ஸர்வஸ்ய ஸர்வ காரிய அபாவாது = காரணத்திலே காரியம் இருக்குமானால், மரத்தில் பழம் காய்ப்பதுபோல ,
காரக வியாபாரமே வேண்டாம். ரிஷிகள் நினைத்ததை மனசால் செய்து சாதிப்பது போலவும்,
பகவான் தன் நினைவால் சிருஷ்டியை செய்வது போலவும் காரணத்தைக் கொண்டே காரியம் கொள்ளலாமே என்று நையாயிகன் கேட்க
அப்படி ஆகாது.
மண் கட்டியானது தீர்த்தம் கொண்டு வர கார்யோபயோகி ஆக வேண்டும் என்றால், அது வாயும் வயிறுமான குடமாக வேண்டும்.
காரணத்தில் காரியம் இருந்தால் அன்றோ, காரக வியாபாரத்தால், மண்ணிலிருந்து குடம் வெளிப்பட முடியும்?
என்பதாக சாங்கியன் எதிர் வாதம் செய்தான்.
அதற்கு நையாயிகன் சொல்வது –
மண்ணில் இருந்து குடம் வந்தாலும் , ஆகாரத்தாலும், உபயோகத்தாலும் குடம் வித்தியாசமானது.
எனவே காரியம் புதுசானபடியாலே காரியம் வேறு. காரணம் வேறுதான் என்றான்.
அதற்கு சாங்கியன் சொல்வது – மண்ணில் குடம் இல்லை. ஒத்துக் கொள்வோம்.
தந்துவில் குடம் இல்லை. இன்னொன்றில் குடம் இல்லை . மூன்றிலும் இல்லை,
இல்லை, இல்லை என்று சித்திப்பதால் காரக வியாபாரத்தால் மண்ணில் இருந்து குடம் செய்வது போலே
தந்துவிலிருந்தோ இனொன்றிலிருந்தோ குடத்தை பண்ண முடியுமோ? முடியாது.
ஆக , அததன் காரணத்திலில்லாத ஒன்றை, மறொன்றின் காரியமாக்க முடியாதே என்பதாக சாங்கியன் பதில்.

4. ஸர்வஸ்ய ஸர்வதா சம்பவாது = எல்லாமும் எப்போதும் நடந்து கொண்டு இருக்க வேண்டும் என்கிறது ஏற்படுகிறதே ?
என்ன இருப்பது தான் அபிவியக்தியாகிறது = உண்டாகிறது என்றான் சாங்கியன். இத்தைச் சொன்ன உடனே வைசேஷிகன்

5. அநவஸ்தா = என்கிற தோஷ ஆரோபணம் பண்ணிக் காட்டினான், காரியத்துக்கும் காரணத்துக்கும் நடுவில் அபிவியக்தி
என்கிற ஒன்று உண்டாக வேண்டும் என்றால், ஒரு அபிவியக்திக்கு இன்னொரு அபிவியக்தி,
அதற்கு இன்னொன்று என்கிற அநவாஸ்தா = தொடர்கதையாகிற தோஷம் வரும் என்றான். இருக்கட்டும்.
இருட்டறையில் பல பொருள் கிடக்க, எதோ ஒன்றை எடுக்க நினைத்தவன் தீபம் கொண்டு அறைக்குள் சென்றவனுக்கு,
அந்த தீபம் நினைத்த பொருளை மட்டும் அல்லாது, அனைத்துப் பொருளையும் வெளிச்சம் போட்டு காட்டுமா போலே
மண் கட்டியில் பானை, மடக்கு, விளக்கு யானை என்கிற பலவும் இருக்கிற போது, பானை செய்ய யானை வரலாமே,
மடக்கு செய்ய விளக்கு வரலாமே? என்றான் வைசேஷிகன்.
ஆகவே காரியமும் காரணமும் வேறு தான். சாங்கியன் சொல்கிற சத்காரிய வாதம் சித்திக்காது என்ன – இந்த வாதம் சரியில்லை.
வைசேஷிகனான நீ சொல்கிறது போல் மண்ணில் பானை இல்லை. தந்துவில் வேஷ்டி இல்லை.
ஆடகப் பொன்னில் ஆபரணம் இல்லை. என்று சொன்னாயே, உன் பிரகாரம் இல்லாத்தில் இருந்து இருப்பதை உண்டாக்கும் போதும்
இந்த மாதிரியான – பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆகிற – தோஷம் வரலாமே என்றான் சாங்கியன்.

இப்படி, சாங்கியனும் , வைசேஷிகனும் காரியம் ஸது, காரியம் அஸது , காரணத்தில் காரியம் இருக்கு, காரணத்தில் காரியம் இல்லை
என்று சொல்லாநிற்க , சுற்றுகிற ராட்டினத்தில், குதித்து உள் புகுமா போலே ,
நிர்விசேஷ சின்மாத்ர பிரஹ்ம ஏக தத்வ – பிரஹ்ம அஜ்ஞான வாதியான – சாங்கரத்வைதிகளும் வாதத்தில் இணைந்தனர்.

ஸ்ருஷ்டிக் கிரமத்தில், பிரஹ்ம காரிய-காரண வாத சதுஷ்டயம் :
1. வைசேஷிகருடைய ஆரம்ப வாதம் – அஸத் காரிய வாதம்.
பாய் முடைபவன், இல்லாத ஒன்றான பாய் நெய்வதற்கு கோரைப் புல்லைக் கொன்டு ஆரம்பிக்கிறான்.
பிரவர்த்திக்கிறான் என்பதால் இது ஆரம்ப வாதம். அஸத் காரண வாதம்.

2. சாங்கிய / விசிஷ்டாத்வைதிகளுடைய பரிணாம வாதம்.
ஆகாஸாத் வாயு: வாயுர் அக்நி , அக்நிர் ஆப:, ஆப பிருதிவி என்பதாக சித்தசித் விசிஷ்ட பிரஹ்மம் ,
தாட பத்ரம் போலே ஸூக்ஷ்மாவஸ்தையை விட்டு ஸ்தூல அவஸ்தயை பரிகிரஹிப்பது என்பதே பரிணாம வாதம்.
தாட பத்ரமாவது காது ஓலைத் தோடு . விரித்தால் ஓலை. சுருட்டினால் காதணி தோடு.
சென்றால் குடையும், இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம், நீள்கடலுள் — என்றும்
புணையும் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையும் திருமாற் கரவு. –என்பதாக சேஷன் பலவடிவு கொண்டு கைங்கர்யம் செய்வது போலே ,
பிரஹ்ம விசிஷ்ட ஸூக்ஷ்ம (மூல) பிரகிருதி ஸ்தூல ஜகத்தான பலவாக பரிணமிக்கிறது .
இந்த அவஸ்தா பேதம் ஆதங்குகம். அவ்வப்போது வரக்கூடிய தர்மமே ஒழிய சங்கியான் சொல்வது போல ஸர்வதா ஸ்திதமான ஒன்று அல்ல.
இன்னும் சாங்கியர்களுக்கும் நமக்குமான வித்யாசம் என்ன வென்றால்,
அவர்கள் பரிணாம காரிணி பிரஹ்மம் என்பதும், ஸ்தூல ஸூக்ஷ்ம அவஸ்தைகளையும் ஒப்புக் கொள்வதில்லை.
காரியம் காரணத்தில் முழுவதுமாக அடங்கி உள்ளது என்பதான நிஷ்ப்புற ஸதத பரிணாம வாதம் அவர்களது.
இதுதான் ஸத் காரிய வாதம்.

3. ஸங்காத வாதம் :
கோபுர, கலச, மண்டப, பிராகாராதிகள் கோயில் எனுமா போலே அவயவங்கள் சேர்ந்த அவயவி என்கிற
ஸங்காத வாதம் பௌத்தனுடையது. அவர்களில் ஜகத் அசத்திய வாதி யோகாசாரன் .
அறப்பு அறுத்த நெல் தூற்றி தாற்றி மரக்கால்,கலம், சாக்கு, குதிர் என சங்கிரஹித்து கூடிடுமா போலே
பரமாணு சங்காதத்தாலே ஜகத் சித்திக்கிறது என்பது பௌத்தர்களுக் குள்ளேயே ஜகத் சத்யவாதியான வைபாஷிக பக்ஷம்.

4. விவர்த்த வாதம் :
கடலில் அலைகள் கரையைத் தொட்டு திரும்புவது போல – சுவற்றில் அடித்த பந்து திரும்புமா போலே
இது நான்கு வகைப் படும்.
அ) ஜகத் மித்யா விவர்த்த வாதம்
க்ஷணிக விஜ்ஞான ஆத்மா சத்யம். அத்தியாசத்தாலே ஆன ஜகத்து மித்யை . ஜகத்து எத்தாலே உண்டாயித்து என்றால்
விஜ்ஞானத்தாலே உண்டாயித்து. இது யோகாசார பக்ஷம்.
ஆ) சூன்ய விவர்த்த வாதம் :
க்ஷணிக விஜ்ஞானமான ஆத்மாவும் கிடையாது. சூன்யமே தான் பிரமமான ஜகத்துக்கு காரணம் என்பது மாத்யமிக பக்ஷம்.
இவை இரண்டும் பௌத்த மதத்துக்கு சேர்ந்தவை.
இ) சப்த விவர்த்த வாதம் :
வையாகரணர்களில் ஏகதேசியான பர்த்ருஹரி சொன்ன அபிரஹ்மாத்மகமான சப்த ஸ்போடத்தால் (Big Bang Theory )
பிரபஞ்சம் உண்டாயித்து என்கிறதான Modern Scientists சொல்கிற வாதம்.
ஈ) பிரஹ்ம விவர்த்த வாதம் :
இது சங்கர அத்வைதம். நிரதிஷ்டான விவர்த்தம் இல்லை. ஸாதிஷ்டான பிரஹ்ம விவர்த்தம் என்பதாக .

ஸர்வம் சூன்யம் என்கிற
கடலளவாகிற எட்டினுள்ளும் கலியிருள் சூழ்ந்த காலத்து மிடைதரு ஜ்ஞானம் என்னும்
பிரஹ்ம சத்ய வாதமாகிற விளக்கை சங்கரர் ஏற்ற
பிற்பாடு வந்த இராமானுஜர் ஜகத் சத்தியத்தை பிரதிஷ்டாபித்து
லக்ஷ்மி விலக்ஷண நாராயணனே வேதாந்த விழுப் பொருள் என்பதாக வைதிகமத விசிஷ்டாத்வைத
தர்சன புனுர்த்தாரணம் பண்ணினார் என்கிற இந்த பெருமை முறையே இவ்விருவரையுமே சாரும்.

கடல் அளவாம் திக்கெட்டும் காண்ட வனம் போல்
மிடைந்தெங்கும் முண்டர் சமணர்— கிடந்தியங்க
அஃதழித்து இந்ர பிரஸ்த நாடுசமை
தஃதொப்ப வாழும் மறை.

கௌரவர்கள் அஸ்தினாபுரத்தை தங்கைகளுக்கு வைத்துக் கொண்டு , நெருஞ்சி முள் காடான காண்டவ வானத்தை
பாண்டவர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்காகக் கொடுக்க, கிருஷ்ண சகாயத்தில் அதனை எரித்து ,
மயனைக் கொண்டு இந்திரபிரஸ்தத்தை ஸ்தாபித்தாப் போலே ஆயித்து இவர்கள் இருவருடைய சாகஸம் என்னத்தகும்.

அந்த வகையில் சாங்கிய-வைசேஷிகர்கள் வாதத்தில் இடை மறித்து இருவரையும் கண்டிக்கும் முகமாக
சங்கராத்வைதிகள் தங்கள் பக்ஷத்தை பிரஸ்துதமாக்கினார் .

வாத விவாத சரணி 5 அங்கங்களோடே கூடியது.
1. பிரதிஜ்ஞா – பர்வதோ வந்நி மான்
2. ஹேது – தூமாது
சந்திக்க சாத்யவாந் பக்ஷ :
3. உதாரணம் – யாத பாக சாலய : யத்ர யத்ர தூம: தத்ர வந்நி மான் ; யதா ஜலாச்ரய :
யத்ர யத்ர வந்நி அபாவ : தத்ர தூம அபாவ : யோயோ தூமாவாந் தத்ர வந்நி :
4. உபநயம் – வியாப்தி – வியாபக பாவம் இருப்பதாலே
5. நிகமனம் – ஆனபடியாலே , பர்வதோ வந்நி மாந்
நவீன மீமாம்சகன் உதாரண உபநயனம் இருந்தால் போதுமானது என்ன,
பிராசீன மீமாம்சகன் 10 அம்சங்களை நியாய சாஸ்திரம் சொல்லுகிறான்.
1. சங்கதி
2. விஷயம்
3. சம்சயம்
4. சம்சய காரணம்
5. சம்சய பிரகாரம்
6. சம்சய விசாரம்
7. சம்சய பரிகாரம் , காரிய-காரண ஹேதுமத் பாவத்தைக் கொண்டு சம்சய பரிகாரம்.
8. நியாயம்
9. நிர்ணயம்
10.பலம்.

சங்கராதிகளுடைய பிரஸ்தாபம் இங்கு வரக் காரணம் சம்சய பிரகாரத்தை சொல்லுமிடத்தால் அன்றி
பூர்வாக்ரஹம் (முன்விரோதம்) என்பது அல்ல.
சாங்கியன் காரணத்தில் காரியம் உண்டு என்று சொல்ல, வைசேஷிகன் அதை மறுத்து காரிய காரண அனுப பன்னத்தை சொல்ல ,
சம்சயம் சத்காரிய வாதமா அஸத் காரிய வாதமா , என்கிற விசாரத்தில் காரிய-காரண பாவத்தில் எத்தனை விதம் உள்ளது
என்கிற சம்சய பிரகாரத்தை விவரிக்க வந்த இடத்தில் காரிய-காரண பாவத்தை அபலாபம் செய்கிறவர்களை பற்றியும் சொல்ல வேண்டி,
சாங்கராத்வைதம் பிரசுத்துத மாயிற்று எனலாம்.

காரிய-காரண பாவத்தை அபலாபம் செய்பவர்கள் மூன்று பேர்.
1. ஆகஸ்மிக வாதம் – பௌத்தர்களின் மாத்யமிகன் தவிர்ந்த மற்ற மூன்று பிரிவினரும் இந்த வாதத்தையே முன் வைக்கின்றனர்.
மாத்யமிகனும் சில சமயங்களில் இந்த வழியே செல்கிறான் என்றால் தவறாகாது.
காரியம் ஸர்வம் ஆகஸ்மிகம் ஏவ – (coincidental) ஒரு காரியத்துக்கு பல காரணங்கள் இருக்கிற படியாலே ,
இந்த காரியத்துக்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது.,

2. ஸ்வபாவ வாதம் – இது சாருவாக பக்ஷம். பௌத்தனைப் போல இவர்கள் பிரத்யக்ஷத்தை அபலாபம் பண்ணுபவர்கள் இல்லை.
இயற்கையையும் , ப்ரத்யக்ஷத்தையும் ஒத்துக் கொள்பவர்கள். இயற்கையில் நடப்பவைகளுக்கு காரிய-காரண பாவம் எதுவும் கிடையாது.
நெருஞ்சிக்கும், தர்பத்துக்கும் முள்ளை வைத்தது யாருமில்லை. அதனதன் ஸ்வபாவத்தால் உண்டானது போலே ஆகஸ்மிகம் .

3. சூன்ய வாதம் – ஆகாசமிகமும் இல்லை. .ஸர்வம் சூன்யம் என்பது மாத்யமிக பக்ஷம்.
இவனை நிஸ் ஸ்வபாவதா வாதி. அநிர்வசனீயத்வ வாதி என்றும் சொல்லுவர்.
கீழே சொன்ன 4 விதமான விவர்த்த வாதிகளும் அநிர்வசனீயத்துவ வாதிகளே எனலாம்.

ஸத் காரிய வாதியான சாங்கியன் என்ன,
அஸத் காரிய வாதியான வைசேஷிகன் என்ன இவர்கள் இடையில் நடக்கிற வாதத்தில்,
இந்த அநிர்வசன ஏகதத்வ நிர்விசேஷ சிந்மாத்ர பிரஹ்ம வாதியான சங்கராதிகளும் தங்கள் பக்ஷத்தை ஸ்தாபிக்கப் புகுகின்றனர்.

——————–

சூத்ரம் 2-1-15 : ததனனயத்வம் ஆரம்பண ஸப்தாதிப்ய :

சூத்திரத்தில் உள்ள ததனனயத்வம் , என்கிற சொல்லுக்கு
பரமார்த்ததயா வஸ்து ந அஸ்தி – பாரமார்த்தமா அபாவம் எனக் கொள்ள வேண்டும்.
வியாவகாரிகமாகவோ, பிராதிபாச மாகவோ இல்லை என்பது அல்ல. வஸ்துதா இல்லை.
பிரஹ்மத்தை தவிர்ந்த இரண்டாவது பொருள் இருந்தால் அல்லவோ அந்ய : – வேறுபட்டது – என்றோ அநந்ய : – வேறுபடாதது – என்று சொல்ல .
பிரத்யக்ஷ கத வஸ்து, பசு புத்ர பத்னியாதிகளை நாம் அனைவரும் தின நித்யம் கண்டு கேட்டு உற்று மோந்து அனுபவித்துக் கொண்டிருக்க,
அவைகளை இல்லை என்று சொல்வதும் தான் எப்படி என்ன,
அது லௌகிக வியாவகாரிகம். எப்படி காரண திரவ்யமான மண் ஒன்று மட்டும் சத்தியம்,
அதற்கு வந்தேறியான கட சாராவாதிகள் அநித்யமோ அது போல,
நிர்விசேஷ சின்மாத்ர பிரஹ்மம் ஒன்று தான் சத்தியம். மஹதகங்காராதி கிருஸ்ன ஜகத்து மித்யை .
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா இதி வேதாந்த டின்டிம : ஜீவோ பிரஹ்மைவ ந பர: என்பது இவர்கள் பக்ஷம்.
எப்படிச் சொல்கிறார் என்றால், அகங்காராதி வியவகார ஆலம்பனம் ஜகது என்பதாக.

இந்த அஹங்காராதி ஆலம்பன ஸப்தத்துக்கு எத்தனை விதமான பொருள்,
இதில் சங்கராதிகள் எந்த பொருளில் சொல்லுகிறார்கள்,
சித்தாந்திகளான விசிஷ்டாத்வைதிகள் எந்த கொண்டார்கள் என்பது இங்கு நோக்கத் தக்கது.
எது சதர்த்தம் . எது அபார்த்தம். எந்த இடத்தில் எந்த அர்த்தத்தைக் கொள்ள வேண்டும் என்பதை முதலில்
நிச்சயம் செய்து கொண்டு மேலே சொல்லுவோமாக.

ஆத்மா அஹமர்த்தமா? அஹமர்த்தம் கிடையாதா? என்பதிலே தான் சர்ச்சை முதல் முன்னம்.
நிர்விசேஷ சின் மாத்ரம் பிரஹ்மத்துக்கு சஜாதீய , விஜாதீய, ஸ்வகத பேதம் எதுவும் கிடையாது என்பதாக சங்கராதிகள்.
போக்தா போக்யம் பிரேரித்தம் ச மத்வா த்ரிவிதம் தத்வம்
போக்தா – அனுபவிப்பவன் சேதனன்.
போக்கியம் – அனுபவிக்கப் படுமவை அசேதனம்.
பிரேரித்தம் – பரமாத்மா பரம சேதனன்.
என்கிற இவற்றுள் பரமாத்மாவுக்கு சஜாதீய வஸ்துவான ஜீவாத்மா கிடையாது என்பது சஜாதீய ராஹித்வம்.
பரமாத்மாவுக்கு விஜாதீய ஜட வஸ்துவான இந்த ஜகத்து கிடையாது என்பது விஜாதீய ராஹித்வம்.
இத்தால் சேதனா சேதனங்கள் இல்லை என்றாகி விட்டது. போகட்டும்,
அந்த பரமாத்மாவுக்கு வைகுந்தம் பரமபதம், திவ்ய மஹிஷிகள், அனந்த கருட விஷ்வத்க்ஷேனாதி பரிவாரங்கள் உண்டோ?
என்றால் குண, விக்ரஹ, விபூதி, ஐஸ்வர்யங்கள் எதுவும் கிடையாது என்பது ஸ்வகத ராஹித்யம் .
த்ரிவித ராஹித்யமும் சொல்லியாயிற்று.

என்னதான் இருந்தது என்றால். ஜ்ஞானம் ஒன்றே இருந்தது. போகட்டும்
அந்த ஜ்ஞானம்தான் பாலக : பலம் காததி – என்பது போல ஸகர்மத்தோடே இருக்குமா? அகர்மகமா? என்றால் அதுவும் கிடையாது.
அஹம் இதம் கடம் ஜ்ஞாநாமி , நான் இதை அறிகிறேன் இத்யாதி சப்தங்களால் அறியப்படுகிற
ஸகர்மக ரூபமான தர்மபூத ஜ்ஞான ராஹித்யமும் சொல்லுகிறது.
அதாவது அஹம் என்கிற ஜ்ஞானம் கிடையாது . அது கேவல ஜ்ஞானமா இருக்கிறது .
அஹங்கார வியவகார ஆலம்பனமாக இருக்கிறது. பரம் பிரஹ்மைவாஜ்ஞம் பிரம பரிஹதம் ஸம்ஸாரத்தி ஸது என்பதே அத்வைதம்.
அந்த பிரஹ்மத்துக்கு ஸ்வரூப கதமான ஜ்ஞானம், கேவல ஸத்தா மாத்ரமான ஜ்ஞானம் பிரக்ருதி மஹதாதி அகங்கார
வரிசையில் 3வதாக உள்ள அஹங்காரத்தில் பிரதிபலித்து இந்த ஜகத்து உண்டாகிறது என்கின்றனர்.

நையாயிக, தார்க்கிகள் போலே விசிஷ்டாத்வைதிகளும் இதனை கண்டிக்கிறார்கள்.
அஹமர்த்த மேவ ஆத்மா என்பது நம்மவர்கள் சித்தாந்தம் .
முதலாளி, தொழிலாளி, தொழிலில் இருவருக்குமான சம்பந்தம் என்று தனித் தனி சப்தங்களால் வியவகரிப்பது வாடிக்கை.
ஆனால் சம்ஸ்கிருத பாஷையில், இந்த பாவே லுடு , கர்த்தரி லுடு , கர்மணி லுடு மூன்றும்
ஒரு சப்தத்தாலேயே வழங்குகிற இடங்கள் உண்டு.
ஆதேச : என்பது கட்டளையை சொல்லுகிறது. ஆதித்ய : அநேந ஆதேச : என்று கட்டளையை இடுமவரையும் குறிப்பதாக
பிரயோகங்கள் ஸத் வித்யா பிரகாரணத்தில் உள்ளன.

அதுபோல இந்த அஹங்கார ஸப்தத்துக்கும் 3 விதமான பிரயோகங்களைப் பார்க்கலாம்.
முதலில், அஹம் கரோதி இதி அஹங்கார : என்கிற வழக்கில் ,
அந்த ஆத்ம தத்துவத்தை குறிக்கிற யதார்த்த ஜ்ஞானத்திற்கு அஹங்கார : என்று பெயர்.
ஆத்மாவிடத்தில் இது ஆத்மா என்கிற ஸ்வரூப ஜ்ஞானம் உபாதேயம் .
ஆத்மா அல்லாத அநாத்ம வஸ்துவில் ஆத்ம ஜ்ஞானம் ஆத்மபகாரமா கருதப்படுகிறது.
கிம் தேந ந கிருதம் பாபம் சோரேண ஆத்மபகாரிணா — சாகுந்தலம் என்கிற இடம் காண்க.
ஆத்மா அல்லாத இந்த சரீரத்தில் ஆத்ம புத்தி சம்ஸார ஹேது .

அயதார்த்த ஜ்ஞானத்துக்கும் அஹங்கார : என்றுதான் பெயர். இது இரண்டாவது வியுத்பத்தி .
அநஹம் அஹம் கரோதி இதி அஹங்கார : – இல்லாத ஒன்றை இருப்பதாக பண்ணுகிற அபூத தத் பாவம்.
இவை இரண்டும் பாவார்த்தே லுடு பிரத்யயம். இந்த அயயதார்த்த ஜ்ஞானம் தியாஜ்யம்.
இதனை ஸத்குரு உபதேசத்தாலும் , பாகவத சகவாசத்தாலும் அவ்வியாஸத்தாலும் போக்கிக் கொள்ளலாம்.

அடுத்து மூன்றாவதாக டுக்ருங் கரணே என்கிற கணக்கில், இப்படியான அயதார்த்த ஜ்ஞானம்
எத்தாலே உண்டாயித்தோ அதையும் இந்த அஹங்கார சப்தத்தை இட்டுச் சொல்லாம் என்பதான விஷயம்.
இந்த 3 வது அஹங்கார காரணி எது என்றால் அதுதான் பிரக்ருதி.
பொய் நின்ற ஜ்ஞானம், பொல்லா ஒழுங்கும், அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாமுறாமை – என்கிற நம்மாழ்வார்
திருவிருத்த பாசுரம் இங்கு நோக்கத்தக்கது.
பகவத் ஸ்வரூப திரோதந கரீம் ஸ்வ விஷயாஸ்ச போக்கிய புத்தேர் ஜனனீம் – என்பதாக ஸ்வாமி எம்பெருமானார்
கத்யத்தில் தெரிவித்தாற்போல் அயயதார்த்த புத்தியை உண்டு பண்ணுகிற பிரக்ருதிக்கும் அஹங்கார : என்று பெயர்.
இந்த அயயதார்த்த ஜ்ஞானத்தை பகவத் கிருபையைக் கொண்டுதான் போக்கிக்கொள்ள வேண்டும்.

பகவத் பிரசாதத்தாலேயே மோக்ஷ லாபம் என்கிறத்தை –
மாமேவ யே பிரபத்யந்தே மாயாம் எதாம் தரந்தி தே – என்கிற கீதா ஸ்லோகம் காட்டுகிறது..
ஆசாரிய புருஷகார மென்ன, பிராட்டி புருஷகார மென்ன, அவைகளைக் கொண்டு பகவதனுக்ரஹத்தாலே
இந்த பிரகிருதி சம்பந்தம் போய், அயதார்த்த ஜ்ஞானம் போய் , யதார்த்த ஜ்ஞானம் உண்டாகி
அந்த யதார்த்த ஜ்ஞான மனந்தரத்தான மோக்ஷத்தில்
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னாதோ அஹமன்னாதா அஹமன்னநாத -என்று நடக்கிற அனுபவ வியாப்தியை,
அதிலும் அஹம் என்கிற ஜ்ஞானம் அந்த ஜ்ஞான ஸ்வரூபத்தில் கிடையாது என்பதாக மறுக்கிறார்கள் இந்த அத்வைதிகள்.
ஜகத்து இந்த அஹங்கார தத்துவத்தால்தான் பிரதிபலிதமாகிறது . இது ஆரூடமானது. வந்தேறி. ஸ்வாபாவிகம் கிடையாது .
ஆகையாலே அஹங்கார ஆலம்பனாதிகளாலே கிருஸ்ன பிரபஞ்சம் மித்யா. காரியம் எல்லாம் மித்யை ஆனபடியாலே ,
இரண்டாவது என்பதே கிடையாது. ஆகையால் ததனன்யத்வம் என்பதே கிடையாது என்கிறான்.

பிரஹ்ம சூத்திரம் 4 அத்யாயம், 16 பாதங்களும் 16 விதமான பகவத் குண விசேஷணங்களை நிரூபிக்கின்றன.
1. ஸ்ரஷ்டா – அகில புவந ஸ்தேம ஸ்தேம பங்காதி லீலே என்கிற பிரஹ்ம காரியம் ஜகத்து என்பதாக.
2. தேஹி – நிர்விசேஷ சின்மாத்ரம் பிரஹ்மம் என்பதற்கு எதிர் தட்டாக , சேதனா சேதன விக்ரக விசிஷ்ட பிரஹ்மம் என்பதாக.
அசேதனங்களுக்கு ஸ்வரூப விகாரமும், சேதனமான ஜீவாத்மாக்கு ஜ்ஞான சங்குசித விகாசமாகிற ஸ்வபாவ விகாரம் மட்டுமே ஆகக் கடவது.
3. ஸ்வ நிஷ்ட:
4. நிருப உபமான:
5. அபார்த்த அதிகம்ய : –
ஆரம்பணாதிகாரண சங்கதி விலக்ஷணத்வாதி கரணத்தோடே .
ஸ்மிருதி பாதமான இதில் அபவாத நிரஸனம் பலம்.
வைலக்ஷண்யோஹோ காரிய ஹேதுஹு
முதல் அத்தியாயத்தில் சொன்ன பர பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று சொன்னது தவறு,
ஸாலக்ஷிண்யம் இல்லாமையாலே என்பது சாங்கியனுடைய வாதம்.
பிரபஞ்சவகமானது சுக துக்காதி மோஹாத்மகமாக இருக்கிறது. அந்த பிரஹ்மம் நிர்துஷ்ட நிர்தோஷனாக இருக்கிறான்.
இங்கு வைலக்ஷிண்யம் வந்தது. அத்தாலே எங்கள் பக்ஷமான அஸத் காரிய வாதத்துக்கு அல்லவோ வந்தீர்கள்.
உங்கள் சத்காரிய வாதம் என்னவாயிற்று விசிஷ்டாத்வாதிகளே ? என்பதாக வைசேஷிகன் அபவாதம் சொல்ல,
தன் நிமித்தமாக இந்த ஆரம்பணா திகரணம் பிரஸ்துதமாயிற்று .

ஸ்ருஷ்டி விஷயமான காரிய-காரண பாவத்தில் பல வாதங்கள் உள்ளன.
அதில் வைசேஷிக பக்ஷமான ஆரம்ப வாதம் காரியமே வேறு. காரணமே வேறு என்பதாக.
ஆனால், பத்ர தாடங்கவது நீண்டு சுருள்கிறது போல காரணமாக இருக்கிற அவஸ்தை ஒருநிலை.
காரியமாக பரிணமித்து இன்னொரு நிலையாகிற அவஸ்தா பேதமே ஒழிய வஸ்து பேதம் அன்று .
சென்னால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்கிற கணக்கிலே திருமாற்கு அரவு என்பது ஒரே திரவ்யமாய்,
கைங்கரியார்த்தமாய் அவஸ்தை வேறுவேறாக சமைத்துக் கொள்கிறபடி. இது ராமாநுஜ பக்ஷம்.

சாங்கியன் காரியம் எப்போதும் அவஸ்தாந்தரத் தோடே கூடி இருப்பது என்கிறான்.
வைசேஷிகன் வஸ்துவே வேறு என்றான். உண்மையில் ஒன்றின் காரியம், இன்னொன்றின் காரணம் என்பதே சரி.
காரிய-காரண பாவத்தை அபலாபம் பண்ணுகிறவர்கள் 3 பேர்.
ஆகஸ்மிக வாதம் (Coincidence) பௌத்தர்களின் ஒருவனான மாத்யமிகனுடையது.
ஸ்வபாவ வாதம் (Scientist-பிரத்யக்ஷ வாதி) சாருவாகனுடையது.
தர்பை புல்லில் கண்டக ஸ்ருஷ்டி ஸ்வபாவமே தவிர, ஒரு வியக்தியால் உருவாக்கப் பட்டதல்ல என்பதாக.
அடுத்து அநிர்வசனீய வாதம் சங்கராத்வைதி களுடையது . வசநீயம் பிரஹ்மம் ஒன்றுதான். மற்றதெல்லாம் நிர்வசனீயம்.
ஸது பிரஹ்மம் ஒன்றேதான். ஸசஸ்ருங்கம் போல அஸது. ஆனால் இந்த பிரபஞ்சம் இருக்கிறதே அது இருப்பதைப் போல தோன்றுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல. எனவே அது ஸதஸது ஆகும். ரஜ்ஜு-ஸர்ப – பழுதைப் பார்த்து பாம்பு என்று பிரமிப்பது போல
இல்லாத ஒன்றை இருப்பதாக தோற்றுவதால் அநிர்வசனீயம் . ஆக காரிய காரண பாவம் கிடையாது என்கிற விவர்த்த வாதம் இவர்களுடையது.

ந அந்யது – நாம் சொல்லுகிற அந்யது – இதுவும், இதுவும் ஒன்றே – பிரஹ்மமும் ஜகத்தும் ஸத்யம் .
அந்த பிரஹ்மமே ஜகத்துக்கு உபாதான காரணமாக இருப்பதால் ஸவிசேஷ பிரஹ்மம் ஒன்றே என்பதாக.
நைதத்வ ஸமாஸம் –
ந தேவாம்ஸோ தாதாத் அன்னம்
ந ருத்ர: கண பாடக :
ந ரிஷி குருதே காவ்யம்
ந விஷ்ணு பிருத்வி பதிஹி
ந ருத்ர: = அருத்ர :
ந ரிஷி : = அந்ருஷி
மனுஷ்யாத் அனன்ய : பிராம்மண : – மநுஷ்யர்கள் பலர் நடுவில் இவர் பிராமணர் என்றால், மனுஷ்யர் அல்லவோ என்று கேட்பாருண்டோ?
விருட்சாத் அனன்ய : பலாச : – விருட்சங்கள் நடுவில் இது புரச மரம் என்றால், மரம் இல்லையா என்பது போலே தத்புருஷ ஸமாஸத்தால் சொல்லாது
பஹுவ்ரீகி ஸமாஸத்தால் இரண்டாவது வஸ்துவே இல்லை என்பதாக பொருள் கொள்கிறார்கள்.
ஸத் வித்யா பிரகரணத்தில் காட்டிய உதாரணங்கள் வேறு.
சங்கரர் காட்டுகிற ரஜ்ஜு, சுத்திகே இவை வேறு , என்பதாக வைசேஷிகன் ஆக்ஷேபிக்க,
அதிஷ்டானம் தான் சத்யம், மற்றவை பிரமம் போனவாறே அசத்யமாகிறபடியான உக்தி இரண்டுக்கும் ஒன்றே தான்
என்பதாக ஆக்ஷேப பரிகாரம் சொல்லினர் அத்வைதிகள்.
அநுவர்த்தமான ம்ருது ம்ருது ம்ருது என்பது ஒன்றே சத்தியம்.
சர்ப்பம், பூதளம், அம்புதாரா என்பதான வியாவர்த்தமானம் அனைத்தும் அசத்தியம். சுத்திகா,
மருத்திகா போலே ரஜ்ஜு மேலே ஆன ஜ்ஞானம் பொய்யான ஜ்ஞானம். விதமானது துவைத்த வாக்யங்களைப் பேசுவானேன் என்னில்?
பொய்யானதுக்கு உதாரணம் காட்டவேண்டி சொன்னவை விடுமாறு பணிக்கவே என்பதாக சங்கர பக்ஷம்.

——–

தர்க்க பாதம் –
பகவத் ராமானுஜருக்கு முன்பு வந்த பாஹ்ய மாதங்கள் என்ன, வேதாந்திகள் என்ன பலரும் பலவிதமாக
லோகத்தை – லோக: = லோக இதி லோக: கண்ணால் பார்க்க கூடியதாக உள்ளபடியால் லோகம். லோகம் என்பது இடவாகு பெயராய்,
லோகத்திலுள்ள மநுஷ்யர்களை – புத்தி பேதலிக்கும்படியாக தங்கள் தங்கள் மதங்களை பிரச்சாரம் செய்து போந்தனர்.
கணாத வைசேஷிகர்கள் – காரியம் வேறு காரணம் வேறு என்று சொல்லி, பிரஹ்மம் என்கிற ஒன்று கிடையவே கிடையாது என்றான்.
சாங்கிய பிரவர்த்தகரான கபிலர் – என் மனதுக்கு தோன்றுவதை சொல்லுகிறேன். வேதாந்தமும் இதைத் தான் தெரிவிக்கிறது.
பரப் பிரம்மம் கிடையாது. ஆனாலும் காரிய காரணம் இரண்டும் ஒன்றே என்கிறார்.
குமாரில பட்டர் – இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி, பிரளயம் என்பதே கிடையாது. பிரவாகதா இது அநாதி என்றான்.
பௌத்தன் – அசத்து தான் காரணம். இல்லாத பொருளாலேயே இல்லாத பொருள் உண்டாகிறது.
கஸ்சத் தேய: காரணம் து தியேய : என்று ஏன் அலையை வேண்டும் ? என்றான் அவன்.
சங்கராதிகள் – காரணம் ஒன்று தான் சத்யம். அத்தால் உண்டாகிற காரியம் எல்லாம் மித்யை .
இத்தனை அல்லலெல்லாம் பண்ணி, பிரஹ்ம காரணத்தையே மறுப்பவர்களை வேலி இட்டு அடக்கி வைத்தார் இராமானுஜர் என்றபடி.

இந்த ஸ்ரீபாஷ்யத்தில் பிரஹ்மண : பிரஹ்மண: என்று வரும் போதெல்லாம் அது
பஞ்சமி விபக்தியா ஷஷ்டி விபக்தியா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். அதாவது
பரபிரஹ்மத்தினின்றும் – என்பது 5 வது வேற்றுமை
பரபிரஹ்மத்தினுடைய – என்பது 6 வது வேற்றுமை.
ஸத் காரிய, அஸத் காரிய வாதத்தில் இது முக்கியமாக நோக்க வேண்டி உளது.
பௌத்தர்கள் எல்லாரும் அஸத் காரிய வாதிகள். அஸதஹ காரியம் என்று 5 வது வேற்றுமையில் சொல்லுகிறான்.
இல்லாத அஸத்திலிருந்து இல்லாத காரியம் உண்டாகிறது . ஆகவே காரியமும் அஸது -தான் என்பதாக.
இது வைதிக சித்தாந்தத்துக்கு நேர் முறணானது .
ஆத்மந : ஆகாஸாத் ஸம்பூத:
ஆகாஸாத் வாயு
வாயுர் அக்நி :
அக்நிர் ஆப :
ஆபஃ பிருத்வி என்ற கணக்கில்
ஸோ தா ஏதாம் பிரஜாயே ஏவ – என்பதாக பிரஹ்மம் தானே பஹுவாகக் கடவேன் என்று தன் சரீரத்தில் ஏகதேசமான
ஸூக்ஷ்மாவஸ்தையில் உள்ள சேதனா சேதனங்களை ஒட்டு விடுவித்து
அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய என்று தேஜோ ரூபமான 3 தேவதைகளை ஸ்ருஷ்டி பண்ணி தானே பரிணமித்தது .

ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீத் என்றதாலே அதுதான் பர பிரஹ்மம். அந்த ஸத்தான காரணத்திலிருந்து
ஸத்தான காரியம் உண்டாவதைச் சொல்வதே ஸத் காரிய வாதம்.
பௌத்தன் காரணம் அஸது என்கிறான். வைதிகர்கள் காரணம் ஸது என்கிறார்கள்.
காரணம் அஸது என்பதால் காரியமும் அஸது என்பது அவர்களுடையது. காரியம், காரணம் இரண்டும் ஸது என்பதே வைதிகர்கள் வாதம்.
கணாத வைசேஷிக சாங்கியர்கள் 6 வது வேற்றுமையில் கார்யஸ்ய அஸதஹ – இல்லாத காரியம் உண்டாவதாக சொல்கின்றனர் .
சாங்கியன் சொல்வது இருக்கிற காரியம் தான் உண்டாகிறது என்பதாக. இதுவும் 5 ஆம் வேற்றுமை ஆகும்.

காரியம் ஸதேவ என்பதற்கு சாங்கியன் 5 காரணங்களை இட்டுச் சொல்கிறான்.
அஸது அகரணாது – காகத்துக்கு தந்தத்தையும், கூர்மத்துக்கு ரோமத்தையும் உண்டாக்க முடியுமோ?
அஸது – அஸதே தான். ஸது ஏவ ஸத்தான காரியமாக பரிணமிக்கிறது என்றான்.
இந்த பரிணாம வாதத்தில் வைதிகனுக்கும் அபேக்ஷை உண்டு.
ஆனாலும், வைதிக பக்ஷத்தில் சிறிது வைலக்ஷிண்யம் உண்டு என்பதைக் குறிக்கவும்.
உபாதான கிரஹணாது – தைலத்துக்கு எள்ளும், பிரசாதத்துக்கு அரிசியும் போலே காரிய உபயுக்தமான
உபாதானத்தை அன்றோ தேடித் போகிறோம்.
எண்ணை வேண்டி மணலை செக்கில் இடுவாருண்டோ?
ஸர்வஸ்ய ஸர்வ சம்பவ அபாவாது – வைசேஷிகனே காரணத்தில் காரியம் இல்லை என்கிறாய்.
மிருக் பிண்டத்தில் கட்டம் இல்லை.-தந்துவில் கடம் இல்லை. -விரீஹியில் கடம் இல்லை.
இல்லாததான கடத்தை தந்துவில் இருந்தோ, விரீஹியிலிருந்தோ உண்டாக்க முடியுமா? முடியாதே.

சக்தயஸ்ய சக்த காரணாது – இருப்பதிலிருந்துதான் உண்டாக்க வல்லது – என்பதாக ஸாங்க்யன் கூற,
காரிய வியாபாரம் – இல்லாமலே காரணத்திலிருந்து காரியத்தை , ரிஷிகள் மனசாலும், பகவான் சங்கல்பத்தாலும் ஸ்ருஷ்டித்தாப் போலே,
ஜனங்களும் , மரத்தில் பழம் விளையுமாபோலே அகர்மகமாக காரியப்பயனை பெறலாமே என்றான் வைசேஷிகன்.
அதற்கு சாங்கியன்
அப்படியல்ல. காரணம் காரிய உபயோகியாக வேண்டி –மண்ணை நீர் சேந்து குடமாக்க வேண்டி இந்த காரக வியாபாரமே ஒழிய,
காரியம் இல்லாத காரணத்திலிருந்து காரக வியாபாரத்தால் என்ன பயனும் இல என்பதாக சாங்கியன் சொல்ல .
அப்படியானால் ஸர்வஸ்ய ஸர்வதா ஸம்பவாது என்கிற தோஷத்தால், உண்டாயித்து-நஷ்டமாயித்து என்கிற வெவஸ்தை இல்லாமல்
போய்விடும் என்பதாக மறுமாற்றம் செய்தான் வைசேஷிகன்.
இதற்கு உத்தரமாக, அபிவியக்தி உத்பன்னம் என்பதான இருக்கிற காரியம் காரணத்திலிருந்து அபிவியக்தியாகிறது – தோற்றமளிக்கிறது
என்று சொல்ல, இதுவும் சரியல்ல, அநவஸ்தா தோஷம் தட்டுவதாலே .
அநவஸ்தா தோஷமாவது ஒரு அபிவியக்கத்திக்கு, இனொரு அபிவியக்தி, அதற்கு மற்றோன்று என்பதான முடிவற்ற தன்மை.

விவரண காரார் Vs வாசஸ்பதி மிஸ்ரர்/பாமதி காரர்.
ஜீவ – அஜ்ஞாத வாதம் Vs பிரஹ்ம – அஜ்ஞாத வாதம்.
யாதவ பிரகாச, பாஸ்கர, சங்கராத்வைதம்.
சாங்கியன் Vs சங்கரர்
சாங்கியன் பேசுவது பிரக்ருதி – புருஷன் என்கிற 2 தத்வத்தைப் பற்றி. பரமாத்ம தத்வத்தைப் பற்றி பேச்சு இல்லை.
ஸ்படிகத்திலே ஜபா குஸும ரக்த வர்ணம் அத்தியாசத்தாலே தோன்றுவது போல, பந்த – மோக்ஷங்கள் புருஷனுக்கு.
உண்மையில் அவன் நபத்யதே – நமுச்யதே நாதி
ஸம்சரதே என்பதான நிர்லிப்த்தன் தான்–புருஷனுக்கு பந்த மோக்ஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் என்பதாக சாங்கிய காரிகை.
இதை ஒரு ரூபகத்தால் – உதாரணம் கொண்டு விளக்கப் படுகிறது.
பிரக்ருதி என்பதான பெண் ஒருத்தி சுனையாடுகிற போது, அதனை வேற்றுப் புருஷன் ஒருவன் அவள் அறியாதபடிக்கு
மறைவில் இருந்து பார்ப்பது போல சம்சாரத்தில் அனுபவங்களை பண்ணி இருக்க, ஒருநாள் அல்லது ஒருநாள் அந்த ஸ்த்ரீக்கு
இது தெரியும்போது அவள் அங்கு ஸ்நானம் பண்ணுவதையே விலக்கி விடுவாள்.
அதுபோல இந்த புருஷனுக்கு பிரக்ருதி -ஆத்ம விவேகம் – தான் வேறு, பிரக்ருதி வேறு – தன் குணங்கள் வேறு, பிரகிருதியின் குணங்கள் வேறு
என்கிற ஜ்ஞான பிறந்தவாறே இந்த சம்சார பந்தம் விலகி விடும்.

இதே கருத்தையே சங்கரருடைய ஆசாரியரான கௌட பாதர் தன்னுடைய காரிகையில் சொல்லுகிறார்.
இவர் சொல்லுவது மூன்று நிலைகளை பற்றி. அவையாவன
பாரமார்த்திக நிலை
பிராதிபாஸிக நிலை
வியாவகாரிக நிலை.
பாரமார்த்திக நிலையில் பரமாத்மா தத்வம் ஒன்றுதான் உள்ளது. அதுக்கு ஜகத் காரணத்வம் என்பதான குணங்கள் எதுவும் கிடையாது.
நிர்குணன். பந்த-மோக்ஷங்கள் பாரமார்த்திக நிலையில் இருப்பதில்லை என்பதாக.
ஆக இந்த பிரஹ்ம ஜ்ஞானத்தைக் கொண்டு அனுஷ்டானங்களை பண்ணி முமுக்ஷுவாகுதல் என்பதெல்லாம் கிடையாது.
பரமார்த்ததகா பொய் – நவை முக்த : பத்த : இத்யேஷா பரமார்த்தகஹா – என்கிறார்.

ஸ்ருஷ்டி திருஷ்டி வாதம் Vs திருஷ்டி ஸ்ருஷ்டி வாதம் : என்பதாக அடிப்படையில் 2 வாதங்கள்.
மாயயை தான் உபாதானம். பிரஹ்மம் உபாதானம் என்று சொல்வதெல்லாம் மாயா விசிஷ்டாத்வாது பிரஹ்ம உபாதானம் உச்யதே.
இந்த மாயயைக்கு உபாதானமான ஜகத்தை பார்ப்பவன் யார் என்றால் அந்த அவித்யையால் ஜீவ பாவம் அடைந்த ஜீவன் தான் பார்க்கிறான் என்பது –
ஜீவ: பஸ்யதீதி ஸ்ருஷ்டி திருஷ்டி வாத : – ஸ்ருஷ்டி ஆன பிற்பாடு இந்த ஜகத்துடைய தர்சனம் உண்டாயித்து இந்த ஜீவனுக்கு என்பதாக.
இதுவே ஜீவாஜ்ஞான வாதமாகும். முத்து சிப்பியை வெள்ளி என்று நினைப்பதுபோல மித்யா ஜ்ஞானம் உண்டாயித்து என்பதாக .
இவர்கள் ஜகத்தை இருப்பதாக ஒத்துக் கொள்கிறார்களோ ? என்னில் கிடையாது.
ந ஸ்வார்த்ததா பர்யாயி – ந பிரயோஜனா பாவாது . தாத்பர்யத்தில் பதார்த்தம் கிடையாது என்பதாக.

பிரஹ்மாஜ்ஞானத்துக்கு மூலமாக இருக்கிற திருஷ்டி ஸ்ருஷ்டி வாதம் என்ன என்றால் அத்யாசம் தான் ஸ்ருஷ்டி-
பிரஹ்மத்துக்கு அஜ்ஞானம் மூடுவதால் ரஜ்ஜுவில் ஸர்பத்தைப் பார்ப்பது போல இந்த ஜகத்து ஒரு தோற்றமே என்பதாக-
ஸ்ருஷ்டி பூர்வகா திருஷ்டிஹி ஸ்ருஷ்டி திருஷ்டி : – தர்சனமேவ ஸ்ருஷ்டிஹி என்கிறது இத்தாலே.
வஸ்து ஸத் பாவ : ஜ்ஞாநார்த்தகஹா – வஸ்து இருக்கிறது என்பது அதனுடைய ஜ்ஞானம் ஏற்பட்ட பின்பல்லவோ ?
ஜ்ஞாத்ரு – ஜ்ஞேய பாவம் அத்யஸ்த : ஜ்ஞானம் ஒன்றுதான் ஸத்யம் . மற்றவை எல்லாம் தோற்றம் என்கிற
பிரஹ்மாஜ்ஞானம்தான் முக்கிய வேதாந்த பக்ஷம் என்பது இவர்கள் கருத்து.
மற்றபடியான வேத வாக்கியங்கள் எல்லாம் பாலோபசந்தானம் போலே —
குழந்தைக்கு கசப்பு மருந்தை இனிப்பு தடவி கொடுப்பது போலே என்கிறார்கள்.
உண்மை என்ன வென்றால் பதார்த்தமே கிடையாது என்பது. நித்ய சுத்த புத்த தத்துவமான பரமாத்மா ஒரு ஜ்ஞானத்தால்
அவித்யயை சூழ்துக் கொண்டு இனொரு ஜ்ஞானத்தால் அத்தை விடுவித்துக் கொள்கிறது .
அதுவே அதனுடைய சைதன்ய பிரயோஜனம் என்று கொள்க. இவர்களுக்கு மோக்ஷமாவது பிரகிருதி சம்பந்த நிவிர்த்தி.
அதற்கு மேற்பட்ட பரமபத சாயுஜ்யமோ, பரம பதத்தில் நிரதிசிய பகவதனுபவமோ , படியாய்க் கிடந்து பவளவாய் காண்பதாகிற
ஸ்வரூபானுரூப அனுபவங்களோ கிடையாது. கேவல ஆத்மானுபவமாகிற கைவல்யானுபவம் – ஜீவன்முக்தி –
சம்சார மண்டலத்திலேயே நிவிருத்த ஆத்மாவாகப் போருகை பிராப்பியம்.

நையாயிக்கணும் ஏகவிம்சதி (21) துக்க துவம்சமே மோக்ஷம் என்றான். இந்த நையாயிகன் மேலும் ஜகத்தையும்,
அனுமானிக்க பிரஹ்மத்தையும் ஒத்துக்க கொண்டாலும் இரண்டும் ”அன்யது ஏவ” என்று முடிக்கிற படியால்
இவர்களும் நமக்கு பூர்வ பக்ஷம் ஆகிறார்கள்.
தத அநன்யத்வம் என்கிற சூத்ரத்தால் வியாசரும் இதை மறுக்கிறார்.

இன்னும் ஏகாத்ம வாதம் – பரமாத்மா ஒருவன் தான் ஸத்யம் . மற்ற அனைத்தும் மித்யா. இவர்கள் பிரஹ்ம விவர்த்த வாதிகள்.
அப்படியானால் நடைபெறுகிற அனுபவம் எல்லாம் பொய்யோ?
பிரத்யக்ஷத்துக்கும் – சாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால் பிரத்யக்ஷம் அல்லவா பிரமாணம்? . இல்லை.இல்லை. சாஸ்திரம் தான் பிரமாணம்.
பிரத்யக்ஷத்தில் ஏற்படுகிற அனுபவம் இத்தனையும் அவித்யையால் உண்டாயித்து என்பது தான் சாரம்.
அப்படியானால், அவித்யை என்றால் என்ன? என்றால் வித்யா இதறது. வித்யைக் காட்டிலும் வேறுபட்டது.
இந்த மாயயை இப்படி என்று சொல்லக் கூடியது இல்லை.
ஸத்யம் தான் என்று பாஸ்கரர் சொல்லி வந்தார்.
அஸது என்று பாமனிகாரர் சொல்லி வந்தார். ஸத்தா? அஸத்தா? என்று சொல்ல முடியாது.
சதத அநிர்வசனீயம் மாயா என்கிற குழப்பம் எல்லாம் உண்டு.
இதில் மாயா- அவித்யா விபாக த்விபக்ஷ வாதம் பிற்பகுதியில் எடுத்துக் காட்டப் படுவதை பிறகு பார்ப்போம்.

இப்படி இராமானுஜருக்கு முன்னான சங்கரருக்கும் முற்பட்ட பர்த்ரு பிரபஞ்சர் என்ன, கௌட பாதர், சங்கர-பாஸ்கர-யாதவ பிரகாசர் என்ன
அனைத்து மதங்களையும் அலசி ஆராய்ந்து, போதாயன விருத்திக் கிரந்தத்தை வாசித்து பிறகே தம்முடைய
விசிஷ்டாத்வைத பரமான ஸ்ரீபாஷ்யத்தை அவதரிப்பித்தார் எம்பெருமானார் என்பதைச் சொல்லப் போனால்
எப்படி விஜய ராகவனாக புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிற ராமன், சீதைக்கு இதோ பார்
இங்குதான் நீ உன் ஆபரணங்களை கழட்டி பொகட்டாய் , இங்குதான் நீ ராவணனால் அபகரிக்கப் பட்டய் ,
இது நான் மாய மாரீசனை அடித்து வீழ்த்தின இடம் என்பதாக காட்டிக் காட்டி நாடு திரும்பினானோ,
அதுபோல இது பாமினி பக்ஷம், இது விவிரணகாரர் பக்ஷம், இது சங்கர பகஷம் என்பதாக கட்டிக் காட்டி
முடிவாக ஸ்வபக்ஷத்தை தம்முடைய கிரந்தத்தில் நிலை நாட்டுகிறார் பாஷ்யகாரர்.

ஏக ஜீவ வாதம் Vs அநேக ஜீவ வாதம் –
பாமதிகாரரான வாசஸ்பதி மிஸ்ரர் தன்னுடைய பிரஹ்மாஜ்ஞான – அநேக ஜீவ – பிம்ப-பிரதிபிம்ப – அவச்சேத வாதத்தை
சொல்லுகிற போக்கில், விவிரண காரரான மற்ற அத்வைதிகளுடைய ஜீவாஜ்ஞான – ஏக ஜீவ – வாதத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
அவருடைய ஸ்வ பக்ஷமாவது : பட்டை தீட்டிய மணியில் முகம் சிறுத்து, பருத்து, நெடிது காண்பது உபாதையால் வருவது.
நீல கண்ணாடியில் பார்க்கும் போது பிம்பம் நீலமாகவும், மஞ்சள் கண்ணாடியில் பார்க்கும் போது
பிம்பம் மஞ்சளாகவும் காண்பது பிம்பத்தின் குறை அல்ல. சாயம் பூசிய கண்ணாடி – உபாதி காரணம்.
இப்படியே உபாதிக்கு ஆட்பட்ட ஜீவர்கள் சுக-துக்கங்களை அனுபவிக்கிறார்கள். அந்த உபாதியும் மித்யை என்பதாக.

விவிரண காரர் – இப்படியாக பிரஹ்மத்துக் அவித்யையினால் ஜீவ பாவம் வருகிறது என்றால்
நித்ய சுத்த புத்த பிரஹ்மத்துக்கு அவித்தை வாராது. ஒருவேளை ஜீவனுக்கு அவித்தை வந்தது என்றால்,
முதலில் ஜீவன் வந்திருக்க வேண்டும். அதற்கு பிரஹ்மத்துக்கு அவித்தை உண்டாக வேண்டும்.
இப்படி இதரே இதர ஆச்ரய தோஷம் வருகிறதே என்ன அப்படி இல்லை .
ஜீவர்கள் அநாதி, பீஜ-விருக்ஷ நியாயத்தாலே. எப்படி விதை முதலில் வந்ததா? செடி முதலில் வந்ததா? என்று
சொல்ல முடியாதாப் போலே அநாதி என்று பதில் சொன்னார் பாமதிக்காரர்.
பிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைந்திருப்பதால் ஜீவனுக்கும் பர பிரஹ்மத்தைப் போல அசுத்தி என்பதே கிடையாது.
இப்படி ஜீவனிடத்தில் தோற்றுகிற நானாத்வம் , சுக தூக்காதி அசுத்தி எல்லாம் அவித்தையாகிற உபாதியாலேயாய்,
பிரவாகதயா அநாதி என்கிற காரணத்தால் அந்த அவித்யைக்கு கூட எந்த தோஷமும் தட்டாது.

ஜீவ பாவம் கல்பிதம் அன்று. அகல்பிதம் என்றால், பிரஹ்மத்துக்கே அவித்யா பாவம் சொன்னாப் போலே ஆயித்து.
ஆக மொத்தம் , பாமதிகாரரே நீங்களும் எங்ககள் பக்ஷத்துக்கே அல்லவோ வருகிறீர்.
ஜீவனும், பிரஹ்மமும் ஒன்றே, ஜகத்து மித்யை என்று ஆன பின்பு அவித்யைக்கே அவித்யை வந்தாப்போல –
புடவைக்கே புடவை காட்டினாப் போலே ஆகிறது. ஒரு வியக்தி புடவை கட்டினாப்போல் தெரியவில்லை.
இத்தால் ஆத்மாஸ்ரய தோஷம் வருகிறது என்பதாக விவரணக்காரர் சொல்ல ,
அதற்கு பாமதிகாரர் கிடையாது , பந்தமும் அபாரமார்த்திகமே என்கிறார்.
அப்படியாகில் இவர்கள் பாஸ்கர பக்ஷமான பேதாபேத கோஷ்டியிலும் இல்லை.
அவித்யையும், பிரஹ்மமும் தவிர்ந்த இன்னொன்று கிடையாது என்கிற பிரஹ்மாஜ்ஞான அத்வைத கோஷ்டியிலும் இல்லை
என்பதாகச் சொல்லி, விவரணகாரர் பாமதிகாரருடைய ஜீவாத்வைத வாத அனுப்பபத்திகளை எடுத்துக் கூறுகிறார்.

எப்படி பஞ்சரத்தில் வைத்த கோழி குஞ்சுகளை பூனை இடறி ஒன்றை பிடிக்கப்போய், மற்ற கோழிக் குஞ்சுகள் எல்லாவற்றிற்கும்
விடுதலை கிடைக்குமோ, அதுபோல அவித்தை ஒன்றேயாய், ஒரு ஆத்மாவுக்கு அவித்தை கழிந்தவாறே ஏனைய ஜீவர்களுக்கும்
மோக்ஷம் சித்திக்க ஸர்வ முக்தி பிரசங்கம் வருமே? –ஜீவ பேதத்தை ஆஸ்ரயித்த அவித்தையும் பஹு விதமாக –
தனித்தனியே ஒவ்வொரு ஜீவனையும் பீடிக்குமா? ஏற்றாலும் பொருந்தாது. காரணம் ஜீவ பேதம் ஸ்வாபாவிகமா ? கால்பிகமா ? என்கிற
கேள்வி வருகிறது. பிரஹ்மத்தைக் காட்டிலும் ஜீவன் வேறு அல்ல என்கிற பக்ஷத்தில், ஜீவ பேதம் ஸ்வாபாவிக மாக முடியாது.
கல்பிதமானால் ஜீவாஜ்ஞானமா? பிரஹ்மாஜ்ஞானமா? என்று விளக்கவேண்டி வரும். பிரஹ்மத்துக்கு அஜ்ஞானம் என்றால்
எங்கள் பக்ஷத்துக்கு வந்ததாகிறது. இல்லை ஜீவர்களுக்கே அஜ்ஞம் என்றால், இதரா இதர தோஷம் போனபாடில்லை,
என்பதாக உதங்கர் கிருணனை மடிப்பிடித்து துரியோதனாதிகளையும் நல்ல புத்தி கொடுத்து திருத்தி, பாரத போர் வராமல் தடுத்திருக்கலாமே?
ஏன் ஆப்படிச் செய்யாது போனாய்? என்று கேட்க, இதோ சந்தியாவந்தனத்துக்கு நாழியாயிற்று முடிக்கப் போம் என்று சொல்லி
கை நழுவிக் கொண்டு விலகிப் போனாப்போலே, பாமதிக்கார பக்ஷம் நிரஸமாயித்து .

ஏகாத்ம சரீர வாதம்

அத்வைதிகளுக்கு எப்படி அஹங்கார சப்த வியத்பத்திகள் 3ல் –
அஹமர்த்த ஆத்மா அஹங்கார :
அயதார்த்த ஜ்ஞானம் அஹங்காரம்
அயதார்த்த ஜ்ஞான ஜனகமான பிரக்ருதி அஹங்காரம்
என்பதில் எதை எடுப்பது என்பதில் குழப்பம் இருந்ததோ , அதுபோல இவ்விடத்தில்
மாயா, அவித்யா நிஷ்பன்னங்களில், ஸ்வாபாவிக அர்த்த விந்யாசத்திலும் இவர்களுக்கு குழப்பம் உண்டு.

மாயா என்பதற்கு அவர்கள் சொல்லுகிற அர்த்தம் மித்யா = பொய் என்பதாக. உண்மையாக மாயா என்பது பிரக்ருதியைச் சொல்லும்.
மாயாந்து பிரக்ருதிம் வித்தி, மாயினந்து மஹேஸ்வரம்.
மாயா என்பது பகவத் யோகமாயை என்பதாய் எம்பெருமானுக்கு சரீர ஸ்தானத்தில் இருக்கிற மூல பிரக்ருதியை குறிப்பதாகும். அதுபோல
வித்யா என்பது ஜ்ஞானம். அவித்யா என்பது ஜ்ஞானே இதரது என்பதாக பிரசங்கானுகுணமாக அர்த்தத்தைக் கொள்ளவேண்டும்.
அவித்யா = ஜ்ஞானே இதரது கர்மா என்பதாக. அதை விட்டு பரம் பிரஹ்மைவ அஜ்ஞம் என்பதாக
சூழ்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழ் என்பதான பிரக்ருதி தத்வத்துக்கு அந்தராத்மாவான பிரஹ்மத்தை
அஜ்ஞானம் சூழ்தது என்கிற வாதம் சரிப்படாது என்கிறார் இவ்விடத்தில். வேதமே அவனை

நிஷ்களம் நிரஞ்சனம் சாந்தம் என்றும்
சத்யம் ஜ்ஞானம் அனந்தம் பிரஹ்ம
ரிதஹும் சத்யம் பரப்ரஹ்ம புருஷம் கிருஷ்ண பிங்களம் –என்பதாக வன்றோ வியவகரிக்கிறது.
இப்படியான பகவத் ஸ்வரூபத்துக்கு அஜ்ஞம் என்கிற மாயா வாதிகளான உங்களிடத்தில் தான் அஜ்ஞம் சூழ்ந்திருக்கிறது என்பதாக — வேதாந்தச்சார்யர் .
பகவானுக்கு உபய லிங்கங்கள் அகில ஹேய பிரத்யநீக கல்யாணைக தானத்வம் போலே
ஜீவாத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வங்கள் தடஸ்தமாய், சேஷத்வ, பார்த்தந்திரியங்கள் அகஇதழ் போலே .
பிரக்ருதிக்கு லக்ஷணம் பகவத் ஸ்வரூப திரோதான கரீம், ஸ்வ விஷயே போக்ய புத்தேர் ஜனனீம் என்பதாக.
கரணம் = இந்திரியம்.
காரியம் (களேபரம்) = தேகம்.
பரபிரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனான படியாலே, அவனுக்கு காரண களேபரங்களைக் கொண்டு சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை.
எதுவேண்டுமானாலும் ஸ்வ சங்கல்பத்தாலேயே செய்யக் கூடியவன்.
அவனுக்கு சரீரத்தினுடைய அபேக்ஷையோ இந்திரியங்களுடைய அபேக்ஷையோ கிடையாது. எனவே அவனுக்கு சரீரம் கிடையாது என்பது அல்ல.
அஸ்மதாதிகளைப் போல கர்மவஸ்யமான சரீரம் கிடையாது. இச்சா கிருஹீத அபிமத உரு தேஹ : என்பதாக ஸ்வேச்சையா பரிகிரகிக்கிற
திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு என்பதே . இச்சையால் சாதிக்கிறான் என்றால் இச்சைக்கு அவன் ஆதீனமோ என்றால் ? அல்ல
இச்சை என்பது அவனுடைய ஆதீனத்தில் நின்று காரியம் பார்ப்பது என்றே கொள்ள வேண்டும்.
அவனுடைய ஜ்ஞான இச்சா காரியங்கள் பெரிய பிராட்டியார் சாநித்யத்தாலே என்பது நம்முடைய சம்பிரதாயம்.

ஜ்ஞான அபாவம் அஜ்ஞானம் . ஆனால் அத்வைதிகள் அஜ்ஞானத்தை பாவ ரூபமான அஜ்ஞானம் என்கின்றனர்.
கணித சாஸ்திரத்தில் negative intiger ஐ -i (minus i ) என்பதாக சொல்கிறார்களோ அதைப்போல எனக் கொள்ளக் கடவதோ ? என்னில்
திதி, அதிதி என்பது திதிக்காட்டிலும் வேறுபட்டவள் என்கிறத்தாலே அது பாவ ரூபமே. அபாவ ரூபம் அன்று.
இருவரும் கர்த்தம பிரஜாபதிக்கு பத்நி =மார்களே அன்றோ?
ஸுர: அஸுர: என்பதில் அஸுர: என்பது ந-ஸுர : என்றே பொருள் படுமே அல்லாது அபாவத்தைச் சொல்லாது.
அது போல , அவித்யா என்பது வித்யா அந்யது கர்மா என்று கொள்ள வேண்டும். பொய் என்றோ, மாயை என்றோ கொள்ளக் கூடாது.
மா + யா
மா – மாந்தி யஸ்யாம் என்று பிரளயகாலத்தில் – தம பரே தேவ ஏகீ பவதி – என்பதாக யாரிடத்தில் போய் லீன மாகிறதோ
யா – யாந்தி யஸ்யா : என்று யா = பிராபணே , யாரிடத்தில் இருந்து ஸ்ருஷ்டியில் உண்டாகிறதோ என்கிற பொருளில் பிரக்ருதியைச் சொல்லும்.
மாயா என்பதற்கு அநிருதம் என்பதாக பொருள் கிடைக்காது என்பதாக வியுத்பத்திகளைக் காட்டி நிரூப்பித்துள்ளார்கள் நம்முடைய பூர்வாசார்யர்கள்.

இப்படி பிரஹ்ம வியதிரிக்த வஸ்து எதுவுமில்லை என்று சொல்லி பரபிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைகிறது என்றான போது
பந்த மோக்ஷ வெவஸ்தை கிடையாதே என்கிற குழப்பம் வர , அதை தவிர்த்துக் கொள்ள ஜீவாஜ்ஞான மாகிற பாமதிகாரர் பக்ஷம் வந்தது.
அதை விவரணகாரரான பிரஹ்மாஜ்ஞாந வாதி மறுத்து கண்டனம் பண்ணுமத்தை பார்ப்போம்.
பிரஹ்மத்துக்கு அவித்யையாலே ஜீவபாவம் ஏற்பட்டது என்றும்,
ஜீவனுக்கு அவித்யையாலே நாநாதவம் உண்டாயிற்று என்றும் சொல்லுமிடத்து ஜீவன் முதலிலா, அவித்யை முதலிலா என்கிற
இதரேதர தோஷம் வருமே என்ன, ஜீவன் பீஜாங்குர -விருக்ஷ நியாயத்தாலே அநாதி. விதை முதலா? மரம் முதலா? என்று யார் சொல்ல முடியும்.
விதை முளைத்து செடி-மரம்-பூ-காய்-பழம் என்று மீண்டும் விதை வந்தாலும், போட்ட விதை திரும்புவதில்லை. புதிய விதை தானே உண்டாகிறது?
அதாவது ஒரு விதை நசிந்து இன்னொரு விதை வருவது என்பது ஜீவன் நீர் குமிழ்போல் தோன்றி மறைவதாக ஏற்படுகிறது.
இந்த விளக்கமும் சரிப்போகாது. ஜீவா அநித்யத்வம் சித்தித்தால் , அந்த ஜீவன்களுடைய பாப புண்ய கணக்கு என்னவாகும்?
ஆகவே இந்த பீஜாங்குர நியாயம் செல்லாது.

ஜீவனுக்கு அஜ்ஞானம் சொல்ல வந்தது பந்த-மோக்ஷ வெவஸ்தை சரிக் கட்டத் தானே.
இந்த அவித்யையானது தத்வமஸி வாக்யார்த்த ஜ்ஞானத்தாலே அயமாத்மா என்கிற ஜ்ஞானம் உண்டாகி
அஹம் பிரஹ்மாஸ்மி என்கிற முக்த நிலையை அடையும்போது , அவித்யையோடு இந்த ஜீவாத்மாவும் நாசமடைகிறதா? இல்லையா?
நாசமடையும் போது மோக்ஷ அனுபவத்தை யார் பண்ணுவர்? நாசமடையவில்லை என்றால் அது மோக்ஷமாகாதே?
என்பதான தோஷங்கள் ஏற்படுவதால் ஜீவாஜ்ஞான வாதம் எடுபடாது.

பர்த்ரு பிரபஞ்சர் சிஷ்ய பரம்பரையில் வந்த பிரம்ம தத்தர் என்கிற ஒரு அத்வைதி மட்டும்
ஜீவ-ஸ்வரூப-விச்சேத = ஜீவோத்பத்தி-விநாச வாதத்தை பண்ணுகிறார் என்று தெரிகிறது.
ஆனால் இது மற்ற எந்த சம்பிரதாயத்தவர்களுக்கும் உடன்பாடு இல்லை.
பிம்ப ஸ்தானத்தில் பிரஹ்மம். பிரதிபிம்பம் ஜீவன். கண்ணாடி உபாதி . ஜீவ பாவம் கழிவது உபாதி கழியும்போது –
கண்ணாடி உடைந்தால் பிரதிபிம்பம் இருக்குமா? இருக்காதா? என்பது கேள்வி. பிரதிபிம்பம் இருக்கும் என்றால் ஜீவனுக்கு மோக்ஷம் சித்திக்காது.
பிம்பம் போய்விடும் என்றால் ஜீவ-பங்குர ஏவ .
கண்ணாடியில் முகம் பார்க்கும்போது , அதை உணர்வது அசேதனமான முகமும் அன்று, பிரதிபிம்பமும் அன்று. ஆத்மா ஒன்றே.
மேலும் ரூபம் இல்லாத காற்றின் பிரதிபிம்பம் கண்ணாடியில் தெரியுமா? அல்லது ஆத்மாவையோ, பரமாத்மாவையோ கண்ணாடி பிரதிபலிக்குமோ?
இல்லையாகில் பிரஹ்மத்துக்கு அவித்யை என்று வருமானால், பானுமதிக்காரரே நீரும் பிரஹ்மாஜ்ஞான வாதத்துக்கே வந்ததாகும்.
பிரஹ்மம் ஜீவனை பார்த்ததா? இல்லையா ? என்ற கேள்விக்கு இல்லை என்றால் ததைக்ஷத பிரஜாயே ஏவ என்பதான வாக்கியங்கள் பொய்ததாகும்.
ஜீவ பாவத்தை ப்ரஹ்மம் பார்த்தது என்றால், நிர்குண, நிராகார சுத்த பிரஹ்மத்துக்கு அது ஆகாது. அவித்யையோடு கூடிய பிரஹ்மமே பார்க்க முடியும்.
பிம்ப-பிரதிபிம்ப வாதத்தை விவரணகாரரும் சொல்கிறார். இவர் காட்டுகிற உதாரணம் –
சந்திர-பிரதிபிம்ப வாதம். எப்படி ஒரு சந்திரன் ஏரி, குளம், குட்டை என்று பலவற்றில் பிரதிபலிக்கிறதோ,
அதுபோல ஒரே பிரஹ்மம் பலவாகிற ஜீவ பாவத்தை அடைகிறது என்கிறார்.

விஹங்கமாங்க காமிநே
புஜங்கமாங்க சாயிநே
துரங்கமாங்க பேதிநே
நமோ ராதாங்க தாரிணே.

இதுவரை பிரஹ்ம சத்யம் ஜகன் மித்யா என்று சொல்லுகிற வாதித்தேலே, அந்தந்த அதிகாரி பேதத்தாலே வாத பேதம் இருக்கின்றன.
அதில் விவரணகாரருடைய பிரஹ்மாஜ்ஞான வாதமும், வாசஸ்பதி மிஸ்ரருடைய அநேக ஜீவாஜ்ஞான வாதமும் பார்த்தோம்.
அதற்கு முன்பாக ஸ்வரூப பரிணாமத்தையே சொல்கிற ஜலதத்வைதியான பர்த்ரு பிரபஞ்சர் ஏகதேசியாவார்.
இவைகளுக்கு புறம்பான மாயா-அவித்யா விபாக வாதமாவது :
அவித்தைக்கு ஆச்ரயமான ஜீவ பாவத்தை ஜீவன் பார்த்து பண்ணிற்றா ? பிரஹ்மம் பார்த்து பண்ணிற்றா ?
இல்லை அவித்தை பார்க்கிறதா? என்பது தான் வாதம். பிரஹ்மம் தான் பார்த்து என்றால் அது தான் பிரஹ்மாஜ்ஞான வாதம்.
இந்த மூன்றில் அவித்யை அசேதனம். அது தன்னைத் தானோ மற்றவற்றையோ பார்க்க இயலாது.
அடுத்து ஜீவன் பார்த்தது என்றும் சொல்ல வராது. காரணம் முத்து சிப்பியில் வெள்ளியை பார்ப்பது போல் மாயைக்கு ஆட்பட்டு
தான் பிரஹ்மம் இல்லை அவித்தைக்கு ஆஸ்ரயமான பின்பு தானே ஜீவ பாவம் ஏற்படுகிறது என்று நீ சொல்கிறாய்.
இப்படி பிரஹ்மம் தான் பார்த்தது என்றால் அது பிரஹ்மாஜ்ஞான வாதமே ஆயிற்று அன்றோ? என்ற விவரணகாரர்,
இப்படி எங்கள் பக்ஷத்துக்கு வாராமல் அஜ்ஞத்துக்கு ஆச்ரயமான பிரஹ்மம் தான்
ஸ்வகத , விகத , நாநா பேதங்களை பார்த்தது என்பது உண்டா? இல்லையா? என்பதை முதலில் கூறு என்பதாக பாமதிக்காரரை கேட்க,
பிரஹ்மம் பார்க்கவில்லை என்றால் தது ஐக்ஷத நாம ரூபே வியாகரவாணி என்பதான வாக்கியங்கள் எல்லாம் பொய்யாகுமே?

நம்முடைய சம்பிரதாயத்தில் , பிரஹ்மம் ச விசேஷமானபடியாலே , பிரஹ்மமானாலும், ஜீவனானாலும்
தர்ம பூத ஜ்ஞானத்தைக் கொண்டு பார்க்கிறது என்பது ஸதர்த்தம் . ஆனால் இவர்களுடைய மதத்தில் பிரஹ்மம் நிர் விசேஷமானபடியாலே,
அது அவித்தைக்கு / மாயைக்கு ஆட்டப்பட்டுத்தான் தன்னையோ, மாற்றதையோ, நாநா ரூபத்தையோ பார்க்க முடியும்.
பாஸ்கரர் பிரஹ்மம் உபாதி விசிஷ்டம் என்றார்.
இவர்கள் மாயா/அவித்யா விசிஷ்ட பிரஹ்மம்தான் ஜகதுபாதனம் என்றனர்.
சக்தி விசிஷ்ட பிரஹ்மம் என்கிறார் யாதவ பிரகாசர்.
ஸ்வரூப பரிணாமம் என்கிறார் பர்த்திரு பிரபஞ்சர்.

ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீதத் – என்பதாக பிரஹ்மம் ஒன்று தானே முதலில் இருந்தது.
அது தன்னைக் காட்டிலும் ஸஜாதீயமான ஜீவனை பார்க்க வேண்டுமானால் அவித்யை அதற்கு ஏற்பட வேண்டும்.
ஆக, அவித்யை இல்லாமல் அதற்கு பார்வையே உண்டாகாது. இது பிரஹ்மாஜ்ஞான வாதம்.
நவிரோதோ நச உத்பத்திர் ந பத்தோ நச சாதக :
ந முமுக்ஷுர் நவை முக்த : இத்யேவை பரமார்த்தக : – என்பது கௌட காரிகை.
ஸ்ருஷ்டி, ஸம்ஸாரம் இத்தனையும் பிராதிபாஸிக , வியாவகாரிக சப்தமே ஒழிய பாரமார்த்திகமாக எதுவும் கிடையாது .
இந்த உலகமே ஆகவில்லை என்பது வரைக்குமாக இந்த மித்யா வாதத்தை எடுத்துக் கொண்டு போகிறார் கௌடபாதர்.

ஏகாத்ம ஏக சரீர வாதம் :
ஒரு பிரஹ்மம். ஒரே சரீரம்தான். இந்த ஜகத்து, ஸ்ருஷ்டி எல்லாம் ஸ்வப்பன நாடகம் போலே பிரஹ்மம் பார்க்கிறது என்பதாக .
அநேக சரீர வாதமாவது பிம்ப-பிரதிபிம்ப வாதம். இத்தைதான் வாசஸ்பதி மிஸ்ரர் விஷயமாக பார்த்தோம்.
இப்படி அநேக வாதங்கள் அத்வைதிகள் மத்தியில் உண்டு.

பர்த்ரு பிரபஞ்சருடைய மாயா-அவித்யா விபாக வாதம்.
பிரஹ்மைவ ஸ்வ அவித்யையா ஸம்ஸரத்தி ஸ்வ வித்தையா விமுச்யதே .
ஸம்ஸாரம் எப்படி உண்டாகிறது? எப்படி பத்தனாகிறது? என்றால் பிரஹ்மமே தன்னுடைய அவித்யையால் பத்தனாகிறது.
தன்னுடைய ஜ்ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறது என்பதாக. அந்த அவித்தைக்கும் விஷயம் பிரஹ்மமே தான் என்கிற
பிரஹ்மாஜ்ஞான தோஷத்தை களைய அவித்தை ஜீவாஸ்ரயம். மாயா பிராஹ்மணாஸ்பதம் என்பதாக வேறுபடுத்தி காட்டினார்.
லோகத்தில் மாயா ஜாலம் பண்ணுகிறவன் தன்னைத் தானே பிராந்தனாக பண்ணிக்க கொள்வானோ?
பிரேக்ஷகர்கள் தானே மோகித்தார்கள் ஆகிறார்கள். அதனால், வேதாந்தங்களில் சொன்ன நிர்துஷ்ட, நிர்தோஷ பிரஹ்மத்தை
சாதிக்க இந்த வாதம் உதவாதே என்ன; அவித்யை ஜீவாத்மா பக்கலேயாக அதை பார்க்கிற பிரஹ்மத்துக்கும்
தன் வசத்தில் வைத்துள்ள மாயையால் அதன் பாதை உண்டாகும்.
எப்படி என்றால் அங்குல்யாவஷ்டப்யா துவி சந்திர தரிசனம் போலே என்கின்றனர்.
ஒரு விரலால் கண்ணை குறுக்கிப் பார்க்க, ஒரு சந்திரன், இரண்டாக காண்பது போல நிரதுஷ்ட பிரஹ்மத்துக்கு பேத தர்சனம் என்பதாக.
ஏக சந்திர ஜ்ஞானம் இருந்தாலும், துவி சந்திர தர்சனம் என்பது தோஷம்தானே.
அத்தால் இவர்கள் சொல்கிற அவித்யைக்கும், மாயைக்கும் வித்யாசம் கிடையாது.
கட்ட-சுத்தியாம் பிரபாதாம் நியாயத்தாலே பிரஹ்மத்துக்கு தோஷம் சொன்னாப் போலதான் ஆகிறது.

கட்ட – சுத்தி நியாயம் :
வாணிஜ்யன் ஒருவன் பொருள்களை ஓரிடத்தில் சேகரித்து, மற்ற இடங்களுக்கு கட்டைமாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று
வியாபாரம் செய்கிறான். வழியில் சுங்கச் சாவடியில் திறை செலுத்த வேண்டி வரும் என்று, குறுக்கு வழியில் மாட்டை ஓட்ட,
இரவு வந்தவாறே தூங்கி விடுகிறான். ஆனால் அந்த மாடுகள், பழக்க தோஷத்தால் சுங்கச் சாவடி இடத்துக்கே போய்ச் சேர ,
கண்விழித்த வணிகன் தண்டம் கட்டின கதையாயிற்று – என்பதாக மாயா-அவித்யா வாதம் வியர்த்தமனானது என்கிறார் விவரணகாரர்.
ஸர்வார்த்த முனிக்கு கடகாத்வைதி சொன்னதாகவும் கொள்வது.
துவி சந்திர தர்சனம் அபுருஷார்த்தம் என்றால் நாநாத்வ தோஷம் போகாது. புருஷார்த்தமே என்றால் ஸ்ருஷ்டி நிரந்தரமாய், முக்தி இருக்காது.
அபேத ஸ்ருதிகளும் நஷ்டமாகும். பெத்த ஸ்ருதிகள் அபாரமார்த்திகத்தைக் காட்டவே வந்தன.
அபேதமே பாரமார்த்திகம் என்பது இத்தாலேயே விளங்கும் என்ன;
பிரஹ்மத்துக்கு சாக்ஷாத்தாக மாயா தர்சனம் உண்டானால் அல்லது துவைத ஜ்ஞானம் பிறக்காது .
அத்தாலேயே பிரஹ்மாஜ்ஞான வாதம் உண்டாயித்து என்பர். எனவே
பரிணாம வாதிகளும் (பர்த்ரு பிரபஞ்சர்)
அநேக ஜீவ வாதிகள் (வாசஸ்பதி மிஸ்ரர்)
அவச்சேத வாதிகள் எல்லோரும் இத்தால்
பிரஹ்மைவ அநாதி அவித்யா ஸபளம் ஸ்வகத நாநாத்வம் பஸ்யதி இதி அதுவீயத்வம் பிரஹ்மணோ அப்யுபேத்திஹி – என்று
கொள்ளக்கடவர் என்கிறார் சங்கர்ராத்வைதியான விவரணகாரர்.
ஏக சரீர-ஏக ஜீவ பாவத்தாலே பிரஹ்மத்துக்கே தான் ஜ்ஞாதா திரஷ்டா என்று பார்த்து அநேக ஜீவ பாவம் ஏற்படுகிறது.
அந்த ஜீவ பாவ உணர்த்தி எப்போது போகிறதோ, அப்போது முக்தி என்பதாக உபாஸம்ஹரம் பண்ணி , அடுத்து
துவைதியான வைசேஷிகன் என்ன
தார்க்கிக , நையாயிகன் என்ன
விசிஷ்டாத்வைதி என்ன

தர்சனம் பேத ஏவச என்கிற பக்ஷத்தை எடுத்துக் கொண்டு
நம்முடைய தர்சனம் ஸ விசேஷ பிரஹ்ம வாதம். நாம் பேதத்தைத் தான் சொல்லுகிறோம்.
ஐக்கியத்தை நாம் எப்படிச் சொல்லுகிறோம்? விசிஷ்ட பிரஹ்மத்திடத்தில் தான் – விசேஷ்யத்தில்தான் – ஐக்யத்ததை சொல்லுகிறோம்.
விசேஷணங்களில் பேதத்தைத்தான் சொல்ல வேண்டியது.
ஆத்மா பின்ன: ஆத்மஸ்த்து பிரதி சரீரம் பின்ன: என்று கொண்டாலும் ஸுஜ்ஞானத்தால் ஒவ்வொருவராக மோக்ஷம் போனால்,
ஒருநாள் அல்லது ஒருநாள் முமுக்ஷுகளே இல்லையாக, பந்த-மோக்ஷ வெவஸ்தை அற்றுப்போகுமல்லவா? என்று ஆக்ஷேபிக்க – அல்ல.
அனந்தாவை ஆத்மா என்பதால், ஸம்சாரம் களை எடுக்கப் போகாது.

பரமபதம் எவ்வளவு பெரியது என்றால் ஸ்ரீரங்கநாயகித் தாயே! உன்னுடைய கிருபை எப்படி நிரவத்யமோ அதுபோல பரமபதம்.
திருக்கோவலூர் இடைகழி போலாவோ அது அன்று – தும் கிருபாவது நிரவத்திகமதா விஸ்ரம அவகாசம் என்கிறார், ஸ்ரீ பராசர பட்டர்.
அனந்தத்வ நாம கிம்? என்று பிரதிஷேதிக்க , அஸங்கேயத்வம் – தனித்தனியாகவும் எண்ண முடியாது.
ஜாத்யேக வசனமாக சொன்னாலும் கணக்கிட முடியாது என்பதாம். ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுக்கும் எண்ணப் போகாதோ?
அப்படியானால் அவனுடைய ஸர்வஜ்ஞத்வத்துக்கு சுதி வருமே என்ன- அப்படி இல்லை.
அதை எண்ணி முடிக்க முடிவில்லாத படியாலே அஸங்கேயம் என்பதே உத்தரம்.
எது எது எல்லாம் பின்னமோ, அதுவெல்லாம் சங்கியா தத்வமே .
ஏக சரீர – ஏக ஜீவ வாதத்தை ஒத்துக்கொண்டால் அல்லது அஸங்கேயத்வம் ஜீவியாது.
மேலும் ஸத்யம் ஜ்ஞாம் அனந்தம் பிரஹ்ம என்கிற ஸ்ருதிக்கும் பின்னத்வம் சேராது என்பதாக.

கால-தேச-வஸ்து பரிச்சேதம் ஜீவாத்மாவுக்கு இருந்ததாக, உத்பத்தி-விநாசாதிகள் விசிஷ்ட பிரஹ்மாத்வைதத்துக்கும் விரோதிக்குமே என்ன –
இந்த வேறு வாறு வாதத்தினுள்ளும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு.
அதுதான் தது அந்யது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறாக காண்கிற ஜகத்து மித்யை – என்பது.
இத்தனை வாதங்களையும் பிடி-திமிங்கிலம் போலே விழுங்கிவிட்டு,
விவரணகாரர் தன்னுடைய பிரஹ்மாஜ்ஞான வாதம்தான் சிறந்தது என்பதாக
நித்ய முக்த ஸ்வபிரகாச ஸ்வபாவமாக இருக்கிற தத்வமான பிரஹ்மம் அநாதியான
அநிர்வசனமான அவித்யா வஸாது ஜகதாகாரமாக விவர்த்ததே. சேதநாசேதனங்களான இந்த பிரபஞ்சமாக தோற்றமளிக்கிறது.
விவர்த்ததே = பொய்யாக தோற்றுகிறது. முத்து சிப்பியை வெள்ளி என்று நினைப்பிடுவதை போல தோற்றமளிக்கிறது.
பரிணமிப்பது இல்லை. பரமார்த்தாது பிரஹ்ம வியாதிரிக்த அபாவது . பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள்கள் எதுவும் கிடையாது.
ஆன படியாலே ததனன்யத்வம் ஜகத : பரமார்த்ததா அபாவ : என்று இப்படிச் சொல்லி தலைக்கட்டுகிறார்.

இதற்கு மேற்பட வைசேஷிகன் தன்வாததால் இந்த சங்கராத்வைதத்தை நிரசனம் பண்ணி ,
காரியம் வேறு. காரணம் வேறு. காரியம் தான் ஸத்யம் என்று சொல்ல,
அதனை ராமானுஜர் இல்லை செய்து, காரியம், காரணம் இரண்டுமே சத்யம் என்பதாக நிரூபணம் செய்கிறார் இனி.

கத்யர்த்தம் புத்யர்த்தம் – ஒருவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கமனம் பண்ணுகிறார் என்றால்
தன்னுடைய சரீரத்தாலே தான் என்பது இல்லை. மனதளவிலும் செல்ல முடியும்.
தத்வம் ஏகோ மஹா யோகி ஹரிர் நாராயண பிரபு :
தத்வம் என்றால் என்ன ?
தஸ்ய பாவ : தத்வம். அதனுடைய உண்மையான இருப்பு. பூ = ஸத்தாயாம்
ஸ்வபாவதா அறிகை = உள்ளதை உள்ளபடி அறிகை. ஸ்வரூபதயா அறிகை.
ஸ்வம் ரூப இதிதீதி ஸ்வரூபம். ஸ்வஸ்ய ரூபம் ஸ்வரூபம்.
தன்னைக் காட்டுகையில் தன்னைக் காட்டிலும் மற்றவர்களை பிரித்தும் காட்ட வேண்டும்.
தன்னையே மட்டும் காட்ட வேண்டும். இதுதான் ஸ்வஸ்ய ரூபம் ஸ்வரூபம்.
தத்வம் எது?
ஹரிர் நாராயண பிரபு :
ஆபிரளயாந்தரம் மட்டுமல்ல, அதன் பின்பும் இருப்பதுதான் தத்வம்.
சேதனா சேதனங்கள் யாரிடத்தில் இருக்குமோ
சேதனா சேதனங்களை யார் இருப்பிடமாக கொண்டுள்ளானோ
அவனையே நாராயண சப்தம் பிரஹ்மமாக சொல்கிறது.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரணம் வேறயோ ?
ஸ்தூல சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரியம் வேறயோ?–என்பது ஆரம்பணாதிகாரணத்தில் நடக்கிற சர்ச்சை .

திரவ்யாந்தர வாதியான வைசேஷிகன் காரணம் வேறு. காரியம் வேறு என்றான்.
சாங்கியன் காரணத்தில் காரியம் அடங்கியே இருக்கிறது. காரியமும் காரணமும் ஒன்றுதான் என்கிறான்.
காரியாவஸ்தையோடே கூட்டியே இருக்கிறது என்பதாக.
நமக்கும் அது சம்மதம்தான். காரியாவஸ்தை கூட்டியே இருந்தாலும் அது அபிருதத் சித்த ஆதுங்குக தர்மம் என்பதே நம்முடைய கொள்கை.
திரவியம் என்றால் என்ன? அது உபாதானமாகத்தான் இருக்கும். உபாதானம் அவஸ்தாச்ரயமாக இருக்கும்.
அவஸ்தாஸ்ரயம் என்றால் என்ன? திரவியம் ஒருபடிப்பட்டிருக்க, அவஸ்தா பேத்தத்தோடே ஆகுமது. அவஸ்தை நிரந்தரம் அல்ல.
மாறுபாட்டை அடைந்து கொண்டே போனாலும் (ஆதங்குகம் ), வஸ்துவை விட்டு பிரியாதது (அபிருதத் சித்தம்).
எந்த காரியத்துக்கு எது உபாதானம் என்பது விவஸ்திதம்.
எள்ளைக் கொண்டு எண்ணை எடுக்கலாம் அன்றி, மணலைக் கொண்டு ஆகாதே.
திருக்கண்ணமுது செய்ய செந்நெல்லரிசி சிறுபருப்பு நறுநெய் அக்காரம் பால் என்று எதை பயன்படுத்துகிறோமோ
அது உப ஆதீயதே இதி உபாதான :
திருக்கண்ணமுது செய்ய அரிசியை உலையில் இட்டால், அரிசி சாதமாகிறது, சாதம் அமுதாகிறது, அமுது அன்னமாகிறது.
அன்னம் போஜ்யமாகிறாது இத்யாதி போல.

தத்துவங்கள் மூன்று. அவைகளிடைப்பட்ட பேதங்கள் மூன்று.
சித்து தன்தனக்குள்ளே பேதம்.
அசித்து தன்தனக்குள்ளே பேதம்.
ஈஸ்வரன் ஒன்றேயாய், தன்தனக்குள்ளே பேதம் வர வழியில்லை.

சித்துக்கும் ஈஸ்வரனுக்குமான பேதம்.
அசித்துக்கும் ஈஸ்வரனுக்குமான பேதம்.
சித்துக்கும் அச்சித்துக்குமான பேதம்.
இவைகளைச் சொல்லும் பேதாபேத ஸ்ருதிகள் சரீராத்மா பாவத்தால் கடக ஸ்ருதியைக் கொண்டு ஒருங்கவிட அமையும்.
ஜ்ஞாத்ரு, ஞேய, ஜ்ஞானம் என்கிற த்ரிபுடிக்கும் கொத்தை வாராது.

ஸத்யம் ஜ்ஞானம், அனந்தம் பிரஹ்ம என்கிற அபரிச்சேத நித்ய வஸ்து ஒன்றே ஸது.
ததஅரிக்த கடபடாதி அனைத்துமே சுத்திகையில் ரஜத புத்தி உண்டாகி கழிக்கிறாப்போலே ஸதஸத் அநிர்வசனீயம்.
அதனால் காரணம் சத்யம். காரியமெல்லாம் அசத்தியம் என்று அவர்கள் சொல்வதால் அநித்தியம் சித்திக்கும் ஒழிய மித்யை ஆகாது.
கிளிஞ்சலை வெள்ளி என நினைத்து எடுத்து பார்க்கையில் அது வெள்ளி அல்ல கிளிஞ்சல் என்று உணரும்போது ,
இது வெள்ளி ஆகா விட்டாலும், வெள்ளி என்கிற வஸ்துவே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை.
எனவே சுத்திகையைப் பார்த்து வெள்ளி என்று அறிவு தோன்றி மறைவதால் அநித்யத்வம் சாதிக்கப் பட்டதே ஒழிய,
மித்யாத்வம் சாதிக்கப்பட்ட வில்லை அன்றோ? பூதளே கடம் நாஸ்தி என்றால், அந்யத்ர கடம் அஸ்தி என்று சொல்ல வாய்பு உண்டல்லவா?
காரணம் சத்யமானபடியாலே, காரியமும் சத்யம்தான், ஆனால் ஆகார பரிவர்ததனத்தால் பிரஹ்மணோ அந்நியது ஏவ என்றான் வைசேஷிகன்.

இப்போது பகவத் ராமானுஜர் தமது பக்ஷ்த்தை எடுத்து வைக்கிறார்.
சித்தசித் விசிஷ்ட ஸூக்ஷ்ம காரண பிரஹ்மத்தைக் காட்டிலும்
சித்தசித் விசிஷ்ட ஸ்தூல காரிய பிரஹ்மம் அநந்ய :–இரண்டும் வேறு பட்டதல்ல . எப்படி என்றால்
எதா சௌம்ய! ஏகேந மிருக் பிண்டேந ஸர்வம் மிருண்மயம் ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் ஸ்யாத்.
ஒரு காரணப்பொருளை அறிந்தால் எல்லா காரியப் பொருளையும் அறிந்ததாகும்.
நாம, ரூப பேதமுண்டானாலும், அத்தனையும் மண்ணால்தானே பண்ணப்பட்டதாகையாலே,
காரியத்தைக் காட்டிலும் காரணம் வேறு பட்டது அல்ல என்பதையே –தத அநநயத்வம் என்கிறது.
மிருத்திகையும், கடமும் ஒன்றே என்றால், கடோ நஷ்ட : என்கிற உற்பத்தி,விநாச விவகாரம் எல்லாம் எதற்கு ?
பானை உண்டாயித்து. பானை உடைந்தது என்று ஏன் சொல்லவேண்டும் ? இரண்டும் வேறு வேறு ஆனபடியலே தானே? என்று வைசேஷிகன் ஆக்ஷேபிக்க
கடே பூதள அபாவ : . மண் பானை ஆகிறது. பானை உடைந்தால் கபாலமாகிறது. கபாலம் உடைந்தால் சில்லாகிறது.
சில்லு பொடிந்தால் சூர்ணமாகி மறுபடியும் மண்ணாகிறது. இப்படியான அவஸ்தாந்தரம்தான் உற்பத்தி விநாசமாகும்.
அப்படியாகில், வஸ்து பரிணாமத்தால் பிரஹ்மத்துக்கு விகாரம் சொல்லப்பட்டதாகதோ எண்ணில்? இல்லை.
சித்தசித் வஸ்த்துக்கள், பிரஹ்மத்துக்கு பிரகாரதாய விசிஷ்டமாகையாலே , விசேஷணங்களின் விகாரம் விசேஷ்யத்தில் பர்யவசிக்காது ,
எப்படி சரீரகத தோஷம் ஆத்மாவுக்கு இல்லையோ அதுபோல என்று கொள்ள வேண்டும்.
விகாரம்தான் அசித்திலே ஸ்வரூபதாஹ விகாரமும், சித்திலே ஜ்ஞான சங்கோச, விகாசமும் ஸ்வபாவ விகாரமாய் இரண்டுக்கும்
அந்தராத்மாவான பிரஹ்மத்தின்பக்கல் அவை தட்டாது.

அவஸ்தா பேதம் தான் அபிருதத் சித்த ஆதந்துக தர்மம் .
திரவியம் எது? எது உபாதானமோ அதுவே திரவ்யம்.
திரவ்யம் என்றால் என்ன? அவஸ்தா ஆஸ்ரயமானது எதுவோ அதுதான் .
அவஸ்தாவும்தான் ஆதந்துகமான அபிருதத் சித்த தர்மத்தோடு கூடியது.
ஏகத்வமாவது ஸ்ருஷ்டிக்கு முன் இருக்கிற காரண அவஸ்தை – ம்ருக் பிண்டாவஸ்தை.
நாநாத்தவமாவது ஸ்ருஷ்டிக்குப் பின் பார்க்கப்படுகிற காரிய அவஸ்தை. கடபடாதி பஹுபவன ஸ்ருஷ்டங்கள் போல.
ஆகவே பிரஹ்மமும் அதற்கு விசேஷணமான ஜகத்தும் ந அந்யது என்பது தேறிற்று.

காரண பிரஹ்மத்தை – ஸேயம் தேவதா ஐகஷத என்கிற – தத் சப்தத்தை சொன்னபோதும் ,
தமஸ் பிரக்ருதி லீயதே என்று தமஸ் சப்த வாசியான பிரக்ருதியோடே நாம ரூப விபாகமற கலந்து பிரஹ்மத்திடத்தில் ஏகதேசமாக ஒட்டிக் கிடப்பதால்
பிரகிருதி விசிஷ்ட பிரஹ்மத்தையே தத் சப்தம் சொல்கிறது.
ஐக்ஷத என்று திருஷ்டி ரூபமாக பிராட்டி இருந்து ஸ்ருஷ்டி நடக்கிற படியால்,
அவளுக்கு நேரே தனித்த காரணத்வம் இல்லையானாலும், அவனுடைய விக்ரஹத்தோடே வியாப்தமாய் என்றும் பிரியாதவளாய் இருக்கிற காரணத்தால் ,
அவனுடைய திருஷ்டி தர்மமாக இருந்து ஜகத் வியாபாரம் நடக்கிறது என்று கொள்க.
தர்மிக்கு காரணத்வம் சொல்லலாமே ஒழிய பிரஹத்துக்கு விதேயமான தர்மத்துக்கு காரணத்வம் சொல்லப் போகாது அல்லவா?
நாம ரூபா அபாவது ஏகமேவ ஏதது . அநேந நாம ரூபே வியாகரவாணி என்று சங்கல்ப மாத்ரேண
நாம ரூப நாநா ரூப பாஹுபவன ஸ்ருஷ்டி.

ஸ்வரூபத்தாலே விகாரம் என்றான் ஜலதத்வைதி .
மற்றதெல்லாம் மித்யை யானபடியாலே , பிரஹ்மம் ஒன்றே என்றான் அத்வைதி.
இதெல்லாம் தப்பான வார்த்தை.
திருவாய் மொழி 5ஆம் பத்து கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
என்கிற பதிகத்தில் அத்வைதி புகுர வாய்ப்புண்டோ எனில்?
பிரஹ்லாதாழ்வானுடைய வார்த்தையான ”மயி ஸர்வம் மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் ஸநாதனே” என்பதைக் கொண்டு பரிகரிக்க வேண்டும்.
மயி , ஸநாதனே – இரண்டும் 7ஆம் வேற்றுமையில் உள்ள சப்தங்கள்.
ஸப்தமியில் 2 வகை. ஒன்று அதிகரண ஸப்தமி . இன்னொன்று பாவ லக்ஷணே ஸப்தமி .
ராமே ஸகல கல்யாண குண: வர்த்தந்தே என்பது அதிகரண ஸப்தமி – ராமனிடத்திலே என்பதாகிற 7ஆம் வேற்றுமை உருபு
நாராயணேதி ஸதி – நாராயணனாக இருக்கிற தன்மைக்குச் சேர – இது பாவ லக்ஷணே ஸப்தமி .
மயி ஸநாதனே ஸதி ஸர்வம் என்று அடைவு.
மயி – எனக்குள்ளே – அதிகரண ஸப்தமி .
ஸநாதனே ஸதி – அந்த பரப் பிரஹ்மம் எனக்குள் இருக்குங்கால் – பாவ லக்ஷணே ஸப்தமி
எனக்குள்ளே அந்தராத்மாவாக இருக்கிற காரணத்தால் – பிரகார , பிரகாரி நியமத்தாலே சரீராத்மா விசிஷ்ட பாவம் கொண்டு
”மயி ஸர்வம் மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் ஸநாதனே” என்பதாக சொல்லிற்று.
அத்வைதிகள் மயி என்பதையும், ஸநாதனே என்பதையும் விசேஷணமாகச் சொல்லி, இரண்டையும்
அதிகரண ஸப்தமி பொருளில் ஏகீ பாவத்தை சொல்கின்றனர்.

இப்படி சரீராத்மா பாவத்தால் தான் காரண-காரியம் ந அந்யது என்று சொல்லலாமே ஒழிய
ஸ்வரூப ஐக்கியத்தால் சொல்லப் போனால், பேத ஸ்ருதிகள் என்னாகும்?
ஸேயம் தேவதா ஐக்ஷத – என்று தேவதா விசேஷத்தை சொல்லி, ஐக்ஷத என்று சங்கல்ப ரூபமான
பஹு பவன ஸ்ருஷ்டியை பிரகாரணமாக சொல்லிற்று.

நிர்குண, நிராகார. கேவல சின்மாத்ரா பிரஹ்ம வாதமே செய்து நாங்கள் தான் முக்கிய வேதாந்திகள் என்று கொக்கரித்துக் கொண்ட
அவர் காலத்தில் -வேதங்களின் உண்மையான பொருள் பரபிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணன் தான்.
அவனுக்கு குண விக்ரஹ விபூதித் துவயங்கள் உண்டு என்பதைச் சொல்வதிலே தான் நோக்கு
என்பதாக பகவத் ராமானுஜர் நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
ஆத்மா என்றால் இன்னதுக்கு ஆத்மா என்று சொல்ல வேண்டாவோ?-அனுயோகி பிரதியோகி இல்லாத ராஜ்யம் ராஜ்யமா?
கைகேயி பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்று கேட்டபோது தசரதன் தந்தேன் என்று சொல்லி
சுமந்திரா! நம்முடைய எல்லா சேனைகளும், நகரவாசிகளும் எல்லோருமாக ராமன் இருக்கிற காட்டுக்கே செல்லலாம்
பரதனும் இவளும் இந்த வெறிச்சோடிய அயோத்தியை ஆளட்டும் என்று சொல்ல அப்படி இல்லை,
பிரஜைகள் சமிர்த்தி இல்லாத ராஜ்யம் , ராஜ்யமா? ராமன் மட்டும் தான் காட்டுக்குப் போகவேண்டும் என்பதே என்னுடைய வரம் என்றாளாம்.
அதுபோல ஆத்மா என்றால், யாருக்கு ஆத்மா என்கிற கேள்வி வரும் அல்லவா?
பகவான் மட்டும் தான் நித்யம். குண, விக்ரக, வீபூதி எல்லாம் வந்தேறி என்று சொல்லி விட்டால்,
பிரஜைகள் இல்லாத ராஜா போல் அல்லவா அவன் ஆகி விடுவான்?

பிரஹ்மமே கிடையாது என்று சங்கியனானவன் சொல்லிவிட்டான், ஸாலக்ஷிண்யம் இல்லாயாய்க் கொண்டு.
அத்துவைதிகள் எல்லோரும் வேதம் அபௌருஷேயம் என்பதை ஒத்துக்கொண்டாலும், ஜகத்து மித்யை ஆனபடியால்,
பிரஹ்ம அதிரிக்த அந்யது ந என்கிற அர்த்தத்தில் ததந்யது என்று சொல்லி விட்டனர்.

கப்யாசம் புண்டரீகம் அக்ஷிணீ
ஆபிரணாகாத ஸ்வர்ணயேவ ஹிரண்ய கேச : ஹிரண்ய ஸ்மஸ்ருஹு என்கிற திவ்விய மங்கள விக்ரஹமுண்டு;
தத் விஷ்ணோர் பரமம்பதம் என்கிற ஸ்தானம் உண்டு;
ஸதா பஸ்யந்தி ஸூரய: ஹாவு ஹாவு ஹாவு என்று நித்யானுபவம் செய்கிற பரிவாரங்கள் உண்டு;
லோகவஸ்து லீலா கைவல்யம் என்று லீலா விபூதியும்
குன்றிலிட்ட விளக்கு போலே அவன் குணங்கள் பிரகாசிக்கும்படியான இருள்தருமா ஜ்ஞாலத்து பத்த ஜீவர்கள் உண்டு
என்பதெல்லாம் ஆழ்வாருக்கு எம்பெருமான் காட்டியருள,
அந்த ஆழ்வாருடைய பாசுரங்களில் அவகாகித்து இருந்த படியாலே ராமானுஜரும் இத்தனையும் வேதாந்தத்தில் உண்டு என்று பேசி
முண்டிகளையும், ஏக தண்டிகளையும் நிரசித்தார் என்பதே ஸ்ரீபாஷ்ய கிரந்தத்திலிருந்து நாம் அறிவது.

வைசேஷிகன் பிரஹ்மத்தை ஒத்துக்க கொண்டு, அனுமான கம்யம் ஈஸ்வரன் என்று வேத பிராமாண்யத்தைச் சொல்லி
அதை பௌருஷேயம் என்றும், பகவான் நிமித்த காரணம் மட்டும் என்று சொல்லி பிரஹ்மமே ஜகத்தாக பரிணமிக்கிறது என்றும்,
காரணமும் காரியமும் வேறான படியாலே , காரணாத் அந்யதேவ என்று சொல்லிப் போனான்.
ம்ருக் பிண்டம் என்று சொன்னால் நம்முடைய புத்திக்கு தெரிகிற வஸ்து வேறு. கடம் என்றால் நம் புத்திக்கு தெரிகிற வஸ்து வேறு.
இரண்டையும் வேறு வேறு சம்பதம் கொண்டுதான் சொல்கிறோம். எனவே திராவியாந்தரம் காரணம் = காரணம் அந்யதேவ என்றான்.
நாம் சொல்லுவதாவது, ம்ருக் பிண்டம், கடம் என்று சொல்லும்போது புத்தியில் ஒளிர்கின்றது
வஸ்து பேதம் அல்ல அவஸ்தா பேதம் தான் . உருண்டையாய் இருந்தது வாயும் வயிறுமாயித்து.
இப்படி ஆகாரத்தில் உண்டான பேதம் அவஸ்தா பேதமே, உபாதானம் ஒன்றேயாய் திரவ்யாந்தரம் ஆகாது என்பதாக
புத்தி, ஸப்தாந்தரங்களுக்கு அவஸ்தாந்தரமே காரணம், திரவ்யாந்தரம் அல்ல என்பதாக.

இப்படியான
1-2-15 : தத் அநந்யத்வம் ஆரம்பண ஸப்தேப்ய : – சூத்ர விவரண வாத பிரதி வாதத்தில் பலாபலம் சமமாக
அடுத்து சூத்ரமிடுகிறார் வியாசர் பிரபலஸ்ச துர்பலேன பாதா என்று வைசேஷிகனை மீதூறும் படியாக
1-2-16 : பாவே ச உபலப்தே :
பாவே உபலப்பதே : காரணம் காரியத்தில் தென்படுவதாலே
ச – தத் அநந்யத்வம் என்பதாக கீழே பார்த்தை தருவித்து சேர்த்து படிக்க வேண்டும்.
அடுத்து
1-2-17 : ஸத்த்வாத் ச அபரஸ்ய
இதம் குண்டலம் ஸ்வர்ணம் – என்பதாக ஒரு பொருளை பார்க்கும்போது அதன் உபாதானம் எது என்கிற பிரத்யபிஜ்ஞை உண்டாகின்றபடியால்
அபரஸ்ய – காரிய காரணங்களில் , காரியத்துக்கு அந்யமான காரணம்
ஸத்த்வாத் ச – இரண்டும் ஒன்றே. எதைக் கொண்டு என்றால்,
அபரஸ்ய காரணஸ்ய காரியே ஸத்வாச்ச – காரியப் பொருளில் காரணமானது இருக்கிற படியாலே,
காரியமானது காரணத்தைக் காட்டிலும் வேறு பட்டது அல்ல.
லோக வேதயோர் ஹி – திருஷ்டத்துக்கும் வேதத்தில் சொல்லப் படுமவைக்கும் விரோதம் கிடையாது.
தது துவமஸி என்கிற வேதாந்த வாக்கியத்துக்கு காட்டப்படுகிற ம்ருக் பிண்ட உதாரணம் லௌகீக உதாரணம்தானே.
ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞான பிரதிஜ்ஞைக்குச் சேர லோகத்து திருஷ்டாந்தங்களை கோர்த்து சொல்வதால்,
வேத வாக்கியங்கள் லோக விவகாரத்தோடே பொருந்துமையே அன்றி விரோதம் எதுவும் கிடையாது என்பதாக சொல்ல ,
தது அயுக்தம் – யுக்திக்கு பொருந்தாது என்று வைசேஷிகன் ஆக்ஷேபித்தான்.

சூத்திரம் 2-1-18 : அஸத் வ்யபதேஸாத் ந இதி சேத் ந தர்மாந்தரேண வாக்யா சேஷாத் யுக்தே: சப்தாந்தராச்ச
அஸத் வ்யபதேஸாத் – நாங்கள் சொல்லுகிற அஸத் காரிய வாதத்துக்குச் சேரத்தான் வேதம் பேசுகிறதே ஒழிய,
இவர்கள் சொல்லுகிற ஸத் காரியத்தை வேதம் சொல்லவில்லை என்று ஆக்ஷேபித்தான் இடையில்.
பௌத்தன் என்ன சொன்னான், இல்லாத காரணமான அஸதிலிருந்து உண்டான ஜகத்து மித்யை என்றான்.
விவர்த்த வாதியான அத்வைதியும் ஜகன் மித்யை என்றனர். வைசேஷிகன் ஜகத்து சத்யம் என்கிற ஸத் காரிய வாதிதான்.
ஆனாலும் காரியாது காரணம் அந்யது ஏவ என்று பேசுமவன்.

1 அத்யாயம். 4ஆம் பாதம். காரணத்தவாதிகரணத்தில் என்ன நடந்தது? அங்கு சாங்கியன் பூர்வ பக்ஷம்
பாம்பணையார்க்கு தன் பாம்பின் நாவு போல் வேதம் ஒருபடி பேசுவதில்லை. அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்கிறது .
ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ர அஸீத் என்றும் வியாஹ்ருத, ஆவியாஹ்ருதங்களாக சொல்லுகிறது .
இந்த லக்ஷணங்கள் சாங்கிய தத்துவமான பிரக்ருதிக்குத்தான் பொருந்தும், பிரஹ்மத்துக்குப் பொருந்தாது , காரணம் –
பிரஹ்மம் என்றும் ஒருபடியாக ஸத்தாகவே இருப்பது.
மூலப்பிரக்ருதி தான் நாம, ரூபங்களை ஏற்று ஸத்தாகவும், காரண அவஸ்தையில் அஸத்தாகவும் இருப்பது என்று சொல்லி
பிரஹ்ம காரணத்தை மறுத்தான் அவன்.

அந்த அஸத் காரணத்தைப் பற்றிக் கொண்டு, வைசேஷிகன் இங்கு
அஸத்வா இதம் அக்ர அஸீத் என்கிற காரணத்தில் ஸத்தான காரியம் எப்படி இருக்கப் போகும் ? என்பது அவனுடைய ஆக்ஷேபம் –
இதி சேத்
தந் ந – அங்கனில்லை .
தர்மாந்தரேண உச்யதே – 80-90 பிராயமான கிழவருக்கு குட்டி என்கிற பெயர் வழக்காய் இருக்க, அவருடைய பௌத்திர, தௌஹித்ரன்
இவர்களோடு விளையாடும் போது , குட்டி என்று அழைத்தால் ,
அது அந்த மூத்தவரைச் சொல்லுமா, உண்மையிலேயே குட்டியான குழந்தையைச் சொல்லுமா?
அதுபோல ஸஹஸ்ர நாமங்களில் ஒரு பெயர் ஆயித்து ”அஸது” என்கிற திருநாமம் கூட பகவானுக்கு.
அத்தால் அஸத்வா இதம் அக்ர ஆஸீத் என்றாலும் , ஸது என்கிற பிரஹ்ம வாச்யமாகத்தான் கொள்ள வேண்டும் .
பிரக்ருதியை அல்ல. மேலும் அஸது என்றது முயல் கொம்பு போலே , கானல் நீரைப் போலே (அபாவ) துச்ச பதார்த்தமாகாது.
தர்மாந்தரேண நாம, ரூப விபாகமற்ற ஸூக்ஷ்மா அவஸ்தையோடு கூடியதான பிரஹ்மத்தையே சொல்லும் – தர்மாந்தரம் அஸது என்பதாக.

உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன் இருதகைமையினோடு ஒழிவிலன் பரந்தே — திருவாயமொழி 1-1-9. என்று ஆழ்வாரும் காட்டியபடி
உளன் = ஸது
அலன் = அஸது
என்கிற இரண்டுமே அந்த பிரஹ்மத்தையே சொல்லும்.
அஸது தர்மாந்தரம் – என்று எதைக் கொண்டு சொல்கிறீர் என்றால் , அது விஷயமாக 3 காரணங்களை எடுத்துக் காட்டுகிறார் சூத்திரத்தின் பிற்பகுதியில்.

வாக்ய சேஷாத் – அஸது என்று வருகிற பிரகரணத்தை முன்னும், பின்னும் சேர்த்து பார்க்கும்போது விளங்குமது.
அஸது என்றுபெயருடைய பிரஹ்மம் தன்னுடைய மனத்தால் பஹுஸ்யாம் என்று நினைகை ஒரு தர்மம்.
தது ஐக்ஷத என்கிற பார்வை ஒரு தர்மம். இந்த இரண்டில் நினைகை தர்மாந்தரம் தானே.
யுக்தே : அஸது , ஸத் சப்த்த வாச்யனான பிரஹ்மத்துக்கான தர்மாந்தரம்.
பூணூல் கேட்டு சென்றபோது, பூணூல் இல்லை என்றால், அது முறுக்கின நூலாக உள்ளது,
பிரஹ்ம முடிச்சு போட்டு பூணூல் என்று சொல்லும்படியாக காரியம் முழுமை அடையாத பூர்வாவஸ்தையில் உள்ளது என்று பொருள்.
கடம் அஸ்தி. கடம் நாஸ்தி என்றால் தயார் நிலையில் இல்லை. அவஸ்தாந்தரத்தில் உள்ளது என்றுதானே பொருள் .
அதுபோல யுக்திதான் இங்கும். ஸது ஏவ இதம் அக்ர ஆஸீத் என்றால் – நாமரூபத்தோடே கூடிய ஜகத் விசிஷ்டமாக ஆனது.
அஸது என்றால் – நாம ரூப விபாகமற ஏகீ பாவத்தில் இருந்தது என்கிற தர்மாந்தர ஸ்திதி பேதத்தைச் சொல்லும்.
அவ்வோர் காலத்தும் காரணாது அநன்யதேவ காரியம். ஆகையால் பிரஹ்மமே ஜகத் காரணம் .
ஸப்தாந்தராச் ச – கடாவஸ்தை ஸது, கபாலாவஸ்தை கடாவஸ்தைக்கு அஸத் அம்சம், என்பதாக
ஒன்றை ஸது என்றும், இனொன்றை அஸது என்றும் சொல்லுகை தர்மாந்தரம் என்று கொள்க.

இனி பேதோ நாம துர் நிரூப்யம்
ஆத்மா துவித : ஜீவாத்மா பரமாத்மா சேதி
ஜீவஸ்து பிரதி சரீரம் பின்ன:
இதுதான் துவைதிகளுடைய, நையாயிக, வைசேஷிக பக்ஷம்.
தத்வம் பேத ஏவச – என்பதாக விசிஷ்டாத்வைதிகளும் இதைத்தான் சொல்லுகிறோம்.
இப்படிச் சொல்வதால் என்ன பாதை வருகிறது என்றால்
சத்யம், ஜ்ஞானம், அனந்தம் பிரஹ்ம – என்பதான வாக்கியத்தில் அனந்த சப்தம்
துவைதிகளான உங்களுக்கு பொருந்த விடப் போகாது என்பதாக மாயா வாதி கூறி ஆக்ஷேபித்தான்.

அனந்த சப்தம் த்ரிவித ராஹித்யத்திச் சொல்லுகிறது. அதாவது கால, தேச, வஸ்து பரிச்சேதம் இல்லாததான தன்மை.
அது சித்திக்க எந்த வஸ்து பரபிரஹ்மமோ அது ஸர்வ வஸ்து தாதாத்மயத்தை அடைந்திருக்க வேண்டும்.
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம என்பதாக
ஸர்வ வஸ்து பிரமத்துக்கும் ஆஸ்பதமான ஏக வஸ்துவாக இருக்க வேண்டும்.
ஸ்வேதர ஸகல வஸ்துவுக்கும் சத்யத்வம் இல்லாதிருக்க வேண்டும்.
ஸ்வேதர ஸகல வஸ்துவுக்கும் நித்யத்வம் இல்லாதிருக்க வேண்டும்.
இப்படியான வஸ்து பரிச்சேதம் அத்வைதத்தில்தான் இருக்கிறது.
நீங்கள் சொல்லும் பேத வாதத்தால் அனந்தியத்துக்கு தக்கை உண்டாகி, த்ரிவித பரிச்சேதமும் ஜீவியாது.
இத்தால் சத்யம், ஞானம், அனந்தம் பிரஹ்ம என்கிற ஸ்ருதிக்கு சுதி உண்டாகும் என்பதான பிரபல ஆக்ஷேபம் வர

வைசேஷிகன் மாயாவாதிகளைப் பார்த்து உன்னுடைய சித்தாந்தத்திலும் துவைதம்தானே சொல்கிறாய் –
பிரஹ்மமும் , அவித்தையும் ஒன்றேவா? இரண்டா? சொல்லு. வேறு என்றால் துவைதம் தான் சித்திக்கிறது.
இல்லை இரண்டும் ஒன்றே என்றால், அஜ்ஞானமே பிரஹ்மம் என்பதாக வல்லவோ முடியும் என்று பிரத்யஸ்திரம் விடுத்தான்.
மாயாவதி சொல்லுகிற வஸ்து பரிச்சேதத்துக்கான விவிரணம் சரியில்லை என்று கூறி,
இயத்தா ராஹித்யம் – இப்படி அளவு பட்டிருப்பது என்பதாக சொல்ல முடியாத அளவைதான் வஸ்து பரிச்சேத ராஹித்யம் என்று கொண்டார்.

நம்முடைய சித்தாந்தத்தில்
ஸர்வம் கல்வித்தம் பிரஹ்ம தத் ஜலான் என்ற வாக்கியத்தில் , வாக்கிய சேஷமான
தத் ஜலான் – தத்ஜத்வாது, தல்லத்வாது, ததந்தத்வாது –
யாதோ இமாநி பூதாநீ ஜாயந்தே என்று பிரஹ்மத்தின்றும் உண்டாகி, பிரஹ்மத்தினின்றும் ஸ்திதி அடைந்து,
அந்த பிரஹ்மத்தையே சேருதலாகிற ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காலங்கள் மூன்றிலும் பிரஹ்மத்தையே ஆத்மாவாக கொண்டு இருக்கிற படியாலே –
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம என்பதாக கடக்க சுருதி உதவியோடே சரீர-ஆத்ம பாவத்தை இட்டுச் சொல்லுகிறோம்.

இப்போது நம்மைப் பார்த்து இந்த வைசேஷிகன்
நீங்கள் எங்களைப்போல்
ஜகத்து சத்யம்,
த்ரிவித தத்வத்துக்கும் இடையிலான பஞ்சவித பேதம் ஸ்வாபாவிகம் என்றும் சொல்லி
எங்களுடைய ஸ்வதந்திர பேதத்தை ஒதுக்கி
அதையே பரதந்திர பேதம் என்பதாக சொல்லுகிற உங்கள் பக்ஷத்தில் தோஷம் உண்டு என்று நம்பக்கம் திரும்பி
அபேத வாதிகளான அத்வைதிகள் சொல்லுகிற
தத்வமஸி ஸ்வேதகேதோ
அஹம் பிரஹ்மாஸ்மி
ஆகிய வாக்கியங்களை நீங்கள் மறுக்கவில்லையே என்? சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் ஐக்கியம் சொல்ல முடியாதே.
சரீரம் அசேதனம். ஜ்ஞானமற்றது. அழியக் கூடியது. ஆத்மா சேதனன். ஜ்ஞான ஸ்வரூபன். ஜ்ஞான குணகன். நித்தியமானது.
இப்படி எதிர்த்தட்டான இரண்டுக்கும் ஐக்கியம் எப்படிச் சொல்ல போயிற்று?
அநந்திவத்தை சரிக்கட்ட சரீராத்மா பாவத்தை சொன்னாலும், காரண-காரிய ஐக்கியம் சொல்லப் போகாது என்ன ,
அத்தாலே எம்பெருமானாருக்கு பிரவேசாவகாசம் கிட்டிற்று.

நித்யோ நித்யாநாம் சேதந சேதநாநாம்
ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் – என்கிற பேத ஸ்ருதி வாக்கியத்தில்
ஏக: சேதந : நித்ய: – யார் என்றால், அவன்தான் பரமாத்மா. அவன்
பஹுநாம் சேதநாநாம் நித்யாநாம் – பஹு விதமாக இருக்கிற நித்தியமான இந்த ஜீவாத்மாக்களுக்கு
யோ விததாதி காமாந் – இஷ்டார்த்தங்களை அளிக்கிறான் என்பதாக சொல்லி இருக்க
அபேத ஸ்ருதிகள் எல்லாவற்றையும் கெளணம் என்று கைவிடுங்கள் என்பதாக வைசேஷிகன் சொல்ல,
பேதாபேத சுருதிகள் இரண்டுமே உபாதேயம்,
அதை கடக ஸ்ருதி உதவி கொண்டு சரீராத்ம நிர்வாகத்தை இட்டு சமன்வய படுத்துவதுதான் விசிஷ்டாத்வைத பக்ஷம்.

அந்தப்பிரவிஸ்ய சாஸ்தா ஜனாநாம்
யஸ்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் ஸ்ரூயதே பிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்பிய நாராயண ஸ்திதா :
பரபிரஹ்மம் அத்தனைப் பொருளுக்கும் பிரகாரமாக உள்ளது. ஆத்மாவாக உள்ளது. என்பதை இந்த ஸ்ருதி வாக்கியங்கள் தெரிவிப்பதைக் கொண்டு
இதம் கட: பிரஹ்ம
இதம் பட: பிரஹ்ம
தேவதத்தோ பிரஹ்ம
இத்தால் ஆநதித்வம் சித்திச்சாலும் காரண-காரிய ஐக்கியமான அநநன்யத்வம் சித்திக்காது என்பதாக வைசேஷிகனுடைய ஆக்ரம்.

சூத்ரம் 2-1-19 : படவச்ச – லௌகிக திருஷ்டாந்தம்.
சூத்ரம் 2-1-20 : யதா ச பிராணாதி : – வைதிக திருஷ்டாந்தம்
இரண்டும் கொண்டு இப்போது வைசேஷிகனுடைய ஆக்ஷேபத்துக்கு உத்தரமாக –
லோக வேதேப்யாம் என்று முன்பு சொன்னதை திருடிகரிக்கிறார் எம்பெருமானார்.

தேச பேதம், கால பேதம், சங்கியா பேதம் என்று 10 விதமான காரணங்களால் காரியம் காரணத்தைக் காட்டிலும் வேறாக இருக்கிறது
என்று சாங்கிய-வைசேஷிக ஸம்வாதத்தில் காட்டின படிக்கு
மண் வேறு அதிலிருந்து உண்டான காரியப்பொருள்கள் வேறு மட்டும் அல்ல பலவாகவும் இருக்கின்றன. என்கிற
வைசேஷிகனுடைய உதாரணத்தையே எடுத்து
படவச்ச – காரணம் பலவாக இருந்து காரியம் ஒன்றே ஆவது –
தரியில் பல நூல்களை பாவில் இட்டு, உண்டையை இழுத்து மடக்கி செருகி ஒரு வஸ்திரம் நெய்யப்படுமோ
அது போல பிரஹ்மமும் பலவான பிரக்ருதி தத்வத்துள் புகுந்து சரீரமும் ஜகத்தும் ஆகிறது.
யதா ச பிராணாதி : பிராண வாயு ஹ்ருதயத்தில் இருந்தால் பிராணன் என்று அழைக்கப்படும்.
நாபியில் சமானம் என்றும் ; உபஸ்தம்- ஆசன துவாரத்தில் இருந்தால் அபானம் என்றும்; கண்டத்தில் இருந்தால் உபானம்;
உடல் மயிர் கால்களில் இருந்தால் வியானம் என்றும் ஒரே மனசின் கிரியா விசேஷங்கள்.
ஒரே வாயு சரீரத்தில் வெவ்வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களால் அழைக்கப் படுவதுபோல
பிரஹ்மம் ஸ்திர-சரஸ்ய ; ஸ்தாவர – ஜங்கமமாய் , அவன் ஒருத்தனே தான் காரணம்,
மற்றெல்லா பொருட்களும் அவனுடைய காரியமாய் ஜகத்து அவனைக் காட்டிலும் வேறுபட்டது அல்ல என்கிற அநன்யத்வம் சித்தம்.

அதிகரண சாராவளியில் வேதாந்த தேசிகர் சொல்வதாவது :
ஜகத் ஸ்ருஷ்டி வாதத்தில் பல படியான வாதங்கள் உள்ளன. அவை
பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதை ஒத்துக் கொள்பவர்;
பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதை ஒத்துக் கொள்ளாதவர் –என்று இருவகைப்பட்டு அதில்
1. பிரஹ்ம நிராகாரணம் பண்ணுகிற சாங்கியன்;
2. கேவல நிமித்த காரணம் பிரஹ்மம் என்று சொல்கிற வைசேஷிகன்;
பிரஹ்ம வியதிரிக்த்த ஜகத் மித்யை என்கிற அத்வைதிகளில்
3. விவர்த்த வாதியான சங்கர்;
4. பிரஹ்மத்திடத்திலேயே சேதனா சேதன ஈஸ்வராம்சங்கள் உண்டு என்கிற யாதவ பிரகாசன்;
5. பிரஹ்மத்துக்கான பிரமத்துக்கு உபாதி காரணம் என்று சொல்கிற பாஸ்கரர்;
6. இவ்விருவருடைய சக்தி பரிணாம வாதம்;
7. சாங்கியனுடைய அபிவியக்த வாதம் – ஒரு பெண்ணோ, பையனோ பால்ய பருவத்தில் இருக்கும் போது
பிரஜோத்பத்தி தசை மறைந்து கிடந்து, ஒரு கால விசேஷத்தில் வெளிப்படுமா போலான அம்சம் அபிவியக்தம்.
8. சாங்கியனுடைய உல்லாச வாதம் – ஒரு மலரானது அரும்பாகி, மொட்டாகி, அலர்ந்து பிறகு மலர்வது போல ஜகத் ஸ்வதாக உருவாகுவது.
9. சாங்கியனுடைய விஸ்ருஷ்டி வாதம் – குதிர் நெல் துவாரத்தின் வழி வெளிப்படுமா போலே தமக்குத்தாமே வெளிப்படுவது.
முத்துச் சிப்பியிலிருந்து முத்து வெளிப்படுமாப்போலே பிரக்ருதியே தன்னை வெளிப்படுத்துவது .
10. ஸரதத்வைத்தியான பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாதம்
11. ஆகாஸாத் வாயு, வாயுர் அக்நி : அக்நிர் ஆப: ஆபஃ பிருத்வி என்கிற ஸக்ரம-அக்கிரமங்கள் எதுவும் கிடையாது என்கிற அநீயதா வாதம்

இப்படி வேதத்துக்கு அபார்த்தம் சொல்பவர்களை ஸ்வாமி எம்பெருமானார்,
மஹாபலியை திருவிக்ரமன் பாதாளத்தில் அழுத்தி தேவர்களுக்கு மூன்று லோகங்களையும் மீட்டாப்போலே ,
வைதிகர்கள் என்று சொல்லிக்கொண்டு வேதத்துக்கு அபார்த்தங்களை கற்பிப்பவர் அபவாதங்களை
தலை எடுக்க ஒட்டாமல் அழுத்தி உபசமனம் பண்ணி
ஸூக்ஷ்ம சேதனா சேதந விசிஷ்ட பிரஹ்மமே அவஸ்தாந்தரத்தை அடைகிறது
காரணமாகிய பொருள்தானே அபின்ன நிமித்த உபாதான காரணமாய் இருந்து
திரவியம்-;உபாதானம்-அவஸ்தாந்தரம்-ஆதுங்கமான அபிருதத் சித்த தர்மம் பிரதிதிஷ்டிதமாய் ,
ஸ்தூல சித்தசித் விசிஷ்ட காரிய ஜகத்தாக அந்த பிரஹ்மமே பரிணமிக்கிறபடியால் இது இரண்டுக்கும் அநந்யத்துவம் உண்டு
என்பதாக அதிகரணத்தை தலைக் கட்டுகிறார்.

வரம் ஈத்த ஈசன் தலையே பதம்பார்க்கக் கோரும் அசுரன் அவன்போல் — கூறும்
மறை நான்கும் ஓதி அவைத் தந்த அம்மால் இறையே இலை செய்வார் யாதோ?

இதனை ஸ்ருதப் பிரகாசிகாச்சார்யார்
அஹம் இதி பிரஹ்ம பிரதமோ அத்யாச : அஹங்கார: தேஷாம் அத்யாச கிரந்த : என்கிறார்.

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யகாரர் பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்ஷம் நிரசனம்-

July 15, 2020

ஸ்ரீ பாஷ்ய காரர்
பாஹ்ய மதம் 11ம், குதிருஷ்டி மதம் 6 மாக , 17 மதங்களும் தத்வ ஹித புருஷார்த்தங்களை
விவிதமாக விப்பிரதிபத்தி பண்ணினபடியை —

லோகாயதிகன் :
ஆத்மா – தேகமே
பரமாத்மா – இல்லை
கர்மம் – இல்லை.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கிற நாஸ்திகர்கள் இவர்கள்.
ஸ்வர்கம் – உலக இன்பம்.
நரகம் – சத்ரு சைன்யம் , பசி, பிணி, வியாதி —
இதற்கு மேற்பட அவ்வருகில்லை .
தத்வம் – ஒன்றே. தேக அதிரிக்த எதுவும் இல்லை.
ஜகத் – பரமாணு சங்காதம்
சம்ஸாரம் – பூத சதுஷ்டய கூட்டரவு
சாதனம் – பூத சதுஷ்டய பிரிவு
முக்தி – சைதன்ய நாசம்.

வெற்றிலை+பாக்கு+சுண்ணாம்பு சேர
பச்சை+பழுப்பு+வெளுப்பு நிறம் சேர
உதட்டில் சிகப்பு நிறம் உண்டாவதுபோல
பூத சதுஷ்டய கூட்டரவில் சைதந்யம் உண்டாகும்.
மரணத்தில் அந்த சைதன்யம் நசிகை மோக்ஷம்.

ஞானான் மோக்ஷம் என்று சாஸ்திரம் செல்லுகையில், ஞானம் நசிகை மோக்ஷம் என்பது இவர்கள் கொள்கை.

————-

ஜைனன் :
ஸப்த பங்கி வாதிகள் –
1. ஸ்யாத் அஸ்தி – உள்ளதாக இருக்கலாம்
2. ஸ்யான் நாஸ்தி – இல்லாததாக இருக்கலாம் .
3. ஸ்யாத் அஸ்திச நாஸ்திச – உளதாகவும் இல்லாததாகவும் இருக்கலாம்.
4. ஸ்யாத் அ வக்தவ்யம்ச – சொல்லும் வகை இல்லது இருக்கலாம்.
5. 1 &4 – ஸ்யாத் அஸ்திச அ வக்தவ்யம்ச
6. 2 & 4 – ஸ்யான் நாஸ்திச அவக்தவ்யம்ச
7. 3 & 4 – ஸ்யாத் அஸ்திச நாஸ்திச அ வக்தவ்யம்ச
இவை
சத்யாஸத்யம் = அஸ்தி x நாஸ்தி x 7
நித்யாநித்யம் = அழிவது x அழியாதது x 7
பின்னாபின்னம் = ஒன்று x பல x 7
என்பதாக 21 விதமான வாதம் உண்டு .

ஆத்மா – தேக வியதிரிக்த ஆத்மா உண்டு. ஆனைக்கு ஆனை அளவும், பூனைக்கு பூனை அளவுமாக தேக பரிமாணமாய், விபுவாய் இருக்கும்
பரமாத்மா – இல்லை.
கர்மம் – உண்டு.
தத்வம் – ஆறு. அவை தர்மம், அதர்மம், ஜீவன், புத்காலம், ஆகாசம், காலம்.
ஜகத் – சத்யாசத்தியமாய், நித்யாநித்யமாய், பின்னாபின்னமாய் ஒருபடி படலாகா ஒன்று.
சம்ஸாரம் – தேகம் கர்மாதீனம். அநாதி.
சாதனம் – (மயிற்பீலியும் கையுமாய்) அஹிம்சை , அமணத்வம் (திகம்பரர் = திக்கே ஆடை) , (வாய்க்கு துணியைக் கட்டி) மௌனியாகை ,
மழித்த தலை, பாணிபத்ர போஜனம், இந்திரிய நிக்ரகம் இத்யாதி நியமமங்கள்.
முக்தி – சம்ஸார நிவிர்த்தி + ஊர்த்வ கதியை பிராபிக்கை.

நிரசனம் :
வஸ்துக்களில் இரண்டு விருத்த தர்மங்கள் ஒரே காலத்தில் இருக்க வழியில்லை. எனவே அது சம்பவம் என்று சொல்லுகிற ஜைன மதம் தள்ளுபடி.
தவிற யானைக்கு யானை அளவு ஆத்மா என்றால் , அடுத்த பிறவியில் பூனையாகவோ, நாயாகவோ பிறக்க நேரிட்டால்,
அந்த ஆத்மா எடுத்துக்க கொண்ட சரீரத்துக்குள் அடங்காமையாகிற – அகார்ஷியமாகிற – தோஷம் வரும்.
இல்லை சரீரம் அளவுக்கு கூடுதல், குறைதல் என்கிற விகாரத்தை ஆத்மாவுக்கு ஒத்துக்க கொள்ள வேண்டும்.

ஆத்மா விகாரமற்றதாய், ஸூக்ஷ்ம ரூபியாய், தர்ம பூத ஞானம் கொண்டே அதிஷ்டானம் பண்ணி இருக்கிற சரீரம் முழுதும் வியாபிப்பவன் என்று சாஸ்திரம் சொல்லுகிறபடியால், அது கொண்டும் ஜைனமதம் தள்ளாத தக்கது.

———————-

பெளத்தன் :
சூன்யத்தாலே சூன்யத்தை பிராபிக்கை சூன்யமான மோக்ஷம். – பொதுக் கொள்கை.
(பிரமேயம்) ஜகத்து – வாயு பரமாணு (ஸ்பர்சம்) + அக்நி பரமாணு (ரூபம்) +அப்பு பரமாணு
(ரஸம் ) + பிருதிவி (கந்தம்) என்கிற பூத சதுஷ்டயங்களின் கூட்டரவு. பிரத்யக்ஷ சித்தம்.
(பிரமாணம்) ஞானம் – க்ஷணிகம் (Flux) – மாறிக் கொண்டே இருப்பது.
(பிரமாதா) ஆத்மா – பிராமண பின்னமான ஆத்மா இல்லை. அதாவது. ஞானமே ஆத்மா. அவன் ஞான குணகன் அன்று.

வைபாஷிகன் –
ஆத்மா – லோக விவகார ரூப ஞானமே ஆத்மா. அதுவும், பிரவாகதயா க்ஷணிகம்.
பரமாத்மா – இல்லை.
கர்மம் – இல்லை.
தத்வம் – 35 . ஆனால் அவைகள் ஞானம் ; ஞேயம் என்ற இரண்டுக்குள் அடக்கலாம்.
ஜகத் – பரமாணு சங்காதம். க்ஷணிகம். பிரயக்ஷ சித்தம்.
சம்ஸாரம் – ஜகத் ஸ்திரம் என்கிற நினைவு.
சாதனம் – ஜகத் க்ஷணிகம் என்கிற அறிவு.
முக்தி – சூன்யம்.

நிரஸனம் :
உபய ஹேது கேது.
1. கூட்டரவு ஏற்பட்ட பரமாணுக்கள் இடையில்
நெருக்கம்
ஈர்ப்பு
கலப்பு
என்பவை அடுத்தடுத்து நிகழ வேண்டும். அதற்கு அவைகளின் ஸ்திர தன்மை அவசியம். ஒரு க்ஷணத்தில் இருந்து
அடுத்த க்ஷணத்தில் அழியாக் கூடிய வஸ்துக்கள் மத்தியில், கூட்டரவு ஏற்பட்ட வழியில்லை.
2. இல்லாதது ஜகத்
ஜல பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி ஜல தத்வம்.
வாயு பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி வாயு தத்வம்
நிலத்துக்கான பரமாணு ஒன்றொன்றாக் கூடி பிருதிவி தத்வம்
நீருக்கான பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி அப்புவும்
இப்படி உருவான பூத சதுஷ்டயங்கள், உருவான அடுத்த க்ஷணம் நிலைக்காவிடில் கூட்டரவு சாத்தியமில்லை.
இரண்டிலும் அஸ்திரமே பேசப்படுவதால் உபய ஹேது கேது பிரத்யக்ஷ சித்த ஜகத்தோடு ஒவ்வாது.

ஸௌத்ராந்திகன் – சித்தாந்தம் அதுவே.
ஜகத்து – பிரத்யக்ஷ சித்தம் என்றால் சூன்யத்தை ஸ்தாபிக்க முடியாது. எனவே ஜகத் ஆனுமானிக சித்தம் என்றான். அது ஒன்றே வேறுபாடு.
ஞானம் – க்ஷணிகம்.
ஆத்மா – ஞான அதிரிக்த ஆத்மா இல்லை. அறிவும் (கட த்வ ஞானம்) அறியப்படும் பொருளும் (கடமும்),
இரண்டும் ஒன்றாகவே கிரகிக்கப் படுவதால் , ஞானம் உண்டு , ஞேயம் இல்லை என்றான்.
கருப்பான, வாயும் வயிறுமான குடத்தை பார்த்த கூடலே , கடமும் – கடத்வ ஞானமும் இரண்டும் ஒன்றாக புத்தியுள்
கிரகிக்கப் படுவதால் ஞானம் ஒன்றே போதும். ஞேயமான ஜகத் பிரமம் அதாவது பொய் என்றான் .

நிரஸனம் :
3. உருவானது அழியுமானால், ஜகத் துவம்சம் – சூன்யம்தான் சித்திக்கும் . அது அனுமான சித்த மாகாது என்கிற ஆக்ஷேபம் எழ
வஸ்து அழிந்தாலும் அதன் ஆகாரம் புத்திஸ்த்த மானபோது அனுமான சாத்தியம் என்கிற சமாதானம் கூறப்பட்டது. அது நிற்க.
4. க்ஷணிக வாதத்தால் முயற்சியும் – பல வியாப்தியும் ஒரு வியக்தியில் இல்லாது, உதாசீனர்கள் பலத்தை அனுபவிப்பதாக முடியும். இது கூடாதே .

யோகாசாரன் – இவர்களுக்கும் ஸித்தாந்தம் அதுவே.
க்ஞாத்ரு , ஞேயங்கள் – பிரமம். பிரமாதா (ஆத்மா), பிரமேயம் (ஜகத்து) இரண்டும் – பொய். ஞானமே உண்டு. அதுவும் க்ஷணிகம்.

ஆத்மா – ஞானம்

பரமாத்மா – இல்லை.
கர்மம் – இல்லை.
தத்வம் – ஞானம் ஒன்றே. க்ஷணிகம்.
ஜகத் – பிரமம்.
சம்ஸாரம் – ஜகத் பிரத்யக்ஷம் (அ ) அனுமான சித்தம் என்றிருக்கை.
சாதனம் – க்ஷணிக ஞானம்.
முக்தி – சூன்யம்.

மாத்யமிகன் – பக்ஷமும் அதுவே.
பிரமாணம், பிரமேயம், பிரமாதா மூன்றை – உண்டு என்று அறிக்கை பிரமம் – மூன்றும் பொய் என்கிறான்.
மோக்ஷம் – ஞானத்தால் பரமபதத்தைப் பிராபிக்கை மோக்ஷம் என்கிற வைதிக மதத்துக்கு எதிராக சூன்யத்தாலே சூன்யம்
என்று அறிகை மோக்ஷம் என்பதான ஸர்வ சூன்ய வாதம் இவனுடையது.

நிரஸனம் :
அபாவோ: ந, உபலத்தே:
ந பாவ: அநுபலப்பதே:
அறிபவன், அறியப்படும் பொருள் இரண்டையும் பற்றாமல் அறிவு ஏற்படாது. எனவே ஜகத், ஞானம் இரண்டுமே உண்டு.

அனுப்பபத்தேஸ் ச
அஸ்தி சப்தத்தாலோ
நாஸ்தி சப்தத்தாலோ
சூன்யத்தை ஸ்தாபிக்க முடியாது.

ஆக்ஷேபம் :
கடம் நாஸ்தி என்றால் அதன் பொருள் என்ன?
கடம் இங்கு இல்லை (அ )
கடம் இப்போது இல்லை (அ )
குட வடிவில் வஸ்து இல்லை என்றுதான் தேறும்
குடம் என்கிற வஸ்துவே இல்லை என்று பொருள் படாது,
இங்கு இல்லையேனும் வேறு இடத்தில் உண்டு.
இப்போது இல்லையேனும் முன்பு இருந்திருக்க வழி யுண்டு.
குடமாக இலையெனும், சில்லாக, மடக்காக இருக்க வகை யுண்டு.
ந+அஸ்தி யில் அஸ்தி தொக்கி உள்ளதால்.

சமாதானம் :
மண்ணில் இருந்து குடம் உருவாகும் போது
மண் என்கிற ஸ்திதி போய் குடம் என்கிற ஸ்திதி கிட்டுகிறது.
மண்ணின் அபாவம் குடத்தின் உற்பத்திக்கு காரணமாகிறது.
எனவே அபாவம் = சூன்யம் குடத்திற்கு காரணமாகிறதே? என்றான்.

நிரஸனம்:
மண்ணின் அபாவம் குடம்
நூலின் அபாவம் வேட்டி
கட்டிப் பொன்னின் அபாவம் பணிப் பொன்.

அபாவம்தான் வஸ்துவின் காரணம் என்றால்
ஒன்றின் அபாவம் இன்னொன்றின் காரியமா கலாமே?
மண்ணில் இருந்து வேட்டியோ , நகையோ (அ )
நூலில் இருந்து குடமோ , நகையோ (அ )
கட்டிப் பொன்னிலிருந்து வேட்டியோ , மண் குடமோ வருமோ? இல்லையே .

ஆக, பாவமான மண்ணில் இருந்துதான் பாவமான குடம் பிறக்கிறதே ஒழிய , அபாவத்தில் இருந்து அன்று.
மண் , குடம் இரண்டுக்கும் வஸ்து பேதம் இல்லை. ஸ்திதி பேதமே உள்ளது. உள்ளத்தில் இருந்து உள்ளது பிறக்கும் ஒழிய ,
இல்லத்தில் இருந்து உள்ளது பிறக்காது. இதுவே ஸத் காரண வாதம்.

அடுத்து, சூன்யத்தை சாதிக்க பிரமாணம் வேண்டுமே ?
ஸதான பிரமாணத்தால் சூன்யத்தை ஸ்தாபித்தால், ஸர்வ சூன்ய வாதம் நிற்காது.
மாறாக பொய்யைக் – அ-ஸத்தானதைக் – கொண்டு சூன்யம்தான் உண்மை என்று சாதிக்கவும் முடியாது, எப்படிப் பார்த்தாலும் சூன்ய வாதம் பழுதே.

ஆத்மா – இல்லை
பரமாத்மா – இல்லை
கர்மம் – இல்லை
தத்வம் – இல்லை
ஜகத் – பிரமம்
சம்ஸாரம் – தத்துவங்கள் உண்டு என்கிற பிரமம்
சாதனம் – சூன்ய புத்தி
முக்தி – சூன்யம்

நையாயிக (தார்கிக) பக்ஷம் – பிரவர்த்தகர் – அக்ஷபாதர்.
வைசேஷிக பக்ஷம் – பிரவர்தகர் – கணாதர் .
ஈஸ்வரன்.- ஆனுமானிக நிமித்த காரணம்
ஜகத்துக்கு – உபாதான காரணம் – பரமாணுக்கள் சமவாயி காரணம். வேட்டிக்கு, நூல் உண்டையும் பாவும் பின்னிப் பிணைகை காரணம் அது போலே
குணம் – குணி
அவயவம் – அவயவி
கிரியா – கிரியாவான்
இரண்டின் சம்பந்தம், இரண்டில் ஒன்று நசியும் வரை நீடிப்பது போலே .
அசமவாயி காரணம் – வேட்டியின் வண்ணத்துக்கு நூலின் வண்ணம் காரணமாவதில்லை.
சம்ஸாரம் – அநாதி.
மோக்ஷம் – சுக, துக்க, ஞானம் நாசிகை – பாஷாண கல்பம் – கல்லு போலே , கட்டை போலே ஆகை.
உபாயம் – பகவத் உபாசனம்

நிரஸனம் :
வேட்டி நெய்யும் போது நூலின் 4 பக்கங்களில் , இரண்டு பக்கங்கள் இதர இழையோடு சம்பந்தப் பட்டு, மற்ற இருபக்கங்கள்
ஆடை உடுத்தலாம்படி , அவயவங்களோடு கூடி இருக்கப் பார்த்திருக்கிறோம். ஆனால், பரமாணுக்கள் அவையவம் அற்றவை.
அவைகள் சேருவது எங்கனே?

பரமாணு, துவயணுகம் , த்ரியணுகம் என்று சேருவதற்கு காரணம் யார்?
அதற்கு அதிருஷ்டம் காரணம் என்றால் அது வஸ்துவில் உள்ளதா? ஆத்மாவில் உள்ளதா?
வஸ்துவில் உள்ளது என்றால் , அவைகளுடைய சேர்கையால் ஸ்ருஷ்டி அநாதிகாலமாய் நடக்க வேணும். புதிதாக ஏற்பட்ட வேண்டிய ஒன்று இல்லை.
அதிருஷ்டம் ஆத்மாவில் உள்ளது என்றால், அது எப்படி பரமாணுவை இணைக்கப் போகும்? – என்று இப்படி பலபல ஒவ்வாமை வந்து சேரும்.

ஆத்மா – உண்டு.
பரமாத்மா – அனுமானிக நிமித்த காரணம் ஈஸ்வரன்.
கர்மம் – உண்டு
தத்வம் – 16
ஜகத் – பரமாணு சேர்கை
சம்ஸாரம் – அநாதி
சாதனம் – பகவத் உபாசனம்
முக்தி – சுக, துக்கம் போய் , ஞானமும் நசிகை பாஷாண கல்பம்

————

பாசுபதர் :
காளா முகர்கள்
பாசுபதர்கள்
சைவர்கள்
காபாலிக்கர்கள் (கபாலத்தை மாலையாக அணிந்திருப்பவர்கள்)
என்று நான்கு பிரிவு.
ஜகத்துக்கு – பரமாணுக்கள் உபாதான காரணம். சைவ ஆகம ஸித்த ஈஸ்வரன் நிமித்த காரணம்.
சம்ஸாரம் – அநாதி.
மோக்ஷம் – ஆகம விதிப்படி => .
6 முத்திரைகளை அணிதல் அதாவது கழுத்து, கை, காது சிகை ஆகிய இடங்களில் ருத்ராக்ஷ மாலையைத் தரித்தல்,
பஸ்ம தாரணம் , (சைவாகமத்தில் பிராம்மணனுக்கே மோக்ஷம் என்று இருக்கிற படியால்) யக்ஞோபவீதம் தரிப்பது இவை
6ம் – ஷட் முத்ரிகா எனப்படும். இப்படி இருப்பவர்கள் பிராம்மண்யத்தை அடைந்து விடுகிறார்கள். இவர்கள் சன்யாசிகளாகவும் ஆகி விடுகிறார்கள்.

பெண் குறியிலே
காடி சால் மூலையில் (கள் பானை = ஸுரா கும்பத்தில் ) ஸ்தாபிக்கப் பட்டு இருக்கிற லிங்கத்தை
பஸ்ம தாரணர்களாக
பகாசனத்தில் அமர்ந்து
பிரணவத்தை தியானிப்பவர்களே
ஆகம விதிப்படி கர்மங்களை நன்றாக அனுஷ்டித்தவர்கள் ஆகிறார்கள். அவர்களே பசுபதி ஸாரூப்யம் பெற்று மோக்ஷத்தை அடைகின்றனர்.

நிரஸனம் :
பரமபதமாகிற வைகுந்தத்தை அடைந்து, நாராயண ஸாரூப்யம் பெறுதல் மோக்ஷம்
என்று சாஸ்திரம் – ஸுபாலோபநிஷத், நாராயணா அநுவாகம் , புருஷ ஸூக்தம் இவைகளில் சொல்லி இருக்க –
பசுபதி ஸாரூப்யம் பெறுதல் மோக்ஷம் என்கை வேதத்தோடு அசமஞ்சஸம் .
சிவ: சம்பு: , ருத்ர: , ஹிரண்யகர்ப: என்கிற திருநாமங்கள், விசேஷித்து நாராயணனையே குறிக்கும் என்பதும் வைதிகர்கள் சம்மதம்.
ஸ்ருஷ்டிக்கு ஸத் காரணமா அஸத் காரணமா என்கிற விசாரம் வந்தபோது , உபநிஷத்
ஸது ஏவ இதம் அக்ர ஆஷீத் – உள்ளது காரணம் என்றது.
அது ஆத்மாவா? அநாத்மாவா? அறிவுள்ளதா, அறிவற்றதா என்று கேட்க
ஆத்மாவா இதம் ஏகமேவ அக்ர ஆஷீத் – அறிவுள்ளது காரணம் என்றது.
அது பிரஹத்தா? அணுவா? என்ன
பிரஹ்ம வா இதம் ஏக அக்ர ஆஸீத் – பிரஹ்மமே ஜகத் காரணம் என்றது.
அந்த பிரஹ்மம் யார் என்பதை ஒருபடிச் சொல்லாமல்
இந்திரன் என்றும்
சிவன் என்றும்
ஹிரண்யகர்பன் என்றும்
நாராயணன் என்றும்
நாலு விதமாக பேசிற்று.

நால்வரில் ஒருத்தர் தான் பிரஹ்மம் என்பது சரி. மற்றய திருநாமங்களை அந்த பிரஹ்மத்தோடு ஸமன்வயப் படுத்த
ஸாமான்யாதிகரண்யம் செய்ய வேண்டும். பொதுச்சொல் சிறப்புச் சொல்லில் பர்யவாசித்துதானிப்படுத்டுமாகில் அது சாமான்யாதிகரணம்.
மாணவர்கள் குழுமத்தில், ஒரு மாணாக்கணை தனித்து அழைக்க வேண்டுமாகில், மாணவன் என்ற சொல்லோடு, அந்த மாணாக்கனுக்கான
சிறப்பு அம்சத்தை, எடுத்துக் காட்டாக மற்றவர்கள் கையில் இல்லாது, அவன் மட்டும் குடை பிடித்து இருந்தால், அந்த குடை பிடித்த
மாணாக்கனைத் தருவியியுங்கோள் என்று சொல்லலாம். குடை பிடித்த என்ற சொல் மாணாக்கன் என்பதை விசேஷித்து, மற்றயோர்களைக் கழிக்கிறது.

அந்த கணக்கில், ஸது , ஆத்மா , பிரஹ்மம் என்பன பொதுச் சொல்லாய் நாராயணனைக் குறிக்கும்.
அதேபோல பிரம்மா, சிவன், இந்திரன் என்ற சொற்களும் பொதுச் சொல்லாய் நாராயணனையே குறிக்கும்.
நாராயண பரத்வத்தை ஆதரியாதவர்கள் இதே போல நாராயணி பொதுசொல்லாக்கி சிவன், இந்திரன், பிரமன் இவர்களை குறிக்கும்
என்று வாதிட இயலாது. காரணம் :
யோகி அர்த்தம் – பாத சேர்க்கை யால் கிடைக்கும் பொருள்.
ரூடி அர்த்தம் – பொது வழக்கில் உள்ள அர்த்தம்.

பங்கஜம் = பங்க + ஜ = சேற்றில் பிறந்தது என்று பொருள் படும். காளானும் சேற்றில் பிறக்கிறது.
ஆனால் பங்கஜம் என்பது தாமரையைக் குறிப்பதாக பிரசித்தம்.
பங்கஜம் என்ற சொல் தாமரையைக் குறிப்பதாக கொள்வது ரூட்டியர்த்தம் . ரூடியர்த்ததில் சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே உண்டு.
பத சேர்க்கையைக் கொண்டு பொருள் கொள்வது யோகிகம். இதில் ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கலாம்.

த்விஜ என்பதற்கு – ; யோகிக் அர்த்தம் => பிராம்மணன், பல், பறவை etc ரூடியர்த்தம் – பிராம்மணன் என்பது.
அது போல
பிரஹ்மம் என்பதற்கு ரூடியர்த்தம் – நாராயணன் என்பது.
யோகிகம் -சிவன் ; மங்கலகாரகன் , சம்பு – சுகம் பவதீதி சம்பு , ஸ்தாணு – பிரதிஷ்டிதமாய் இருப்பவர்,
ருத்ரன் – ரோதயதீதி ருத்ர: ஆழப்பண்ணுமவன். அடியார்களை குண சேஷ்டிதங்களால் தழுதழுக்கச் செய்ப்பவன் என்ற இத்தனையும்
நாராயணன் விஷயத்தில் யோகிக்க முறையில் பொருத்தி அர்த்தம் பண்ணலாம்.
அதுவே நாராயண சப்தத்தை மற்றவர்கள் பெயரில் ஏற்றமுடியாது. காரணம் சமஸ்கிருத வியாகரணம் இடம் கொடுக்காது.

பூர்வ பதாது ஸம்ஞாயாம் : அக: – பாணினி சூத்திரத்தின் படி
நார + அயந – நாராயண என்று மாறும். அது விசேஷித்து ஒருத்தரையே குறிக்கும்.
எப்படி சூர்ப்ப + நக என்பது சூர்ப்பணகை என்றாகி ராவண தங்கையை மட்டுமே குறிக்குமோ அதுபோல.
இந்த சூத்திரத்தின் படி நாராயண பதம் சிவன், சம்பு, ருத்ரன் இவர்களைச் சொல்லாது.
ண-த்வம் பரம் பாததே என்று அப்பய்ய தீக்ஷிதர் வியசனம் .

அதிஷ்டான மனுப்பபத்தேஸ்ச — அதிஷ்டானம் பொருந்தாமையாலும் பாசுபத்தர்கள் மதம் நிரசனா யோக்கியம் .
ஸ்ருஷ்டி கர்த்தா சிவன் என்றால், நிமித்த காரணமான அவன் சரீரத்தோடே அதிஷ்டானம் பண்ணுகிறாரா? சரீரம் இல்லாமலா? என்ற
கேள்விக்கு பதில் எப்படிச் சொன்னாலும் அது ஒவ்வாது. சைவர்கள் சம்பிரதாயத்தின் படி சிவன் – அ-சரீரி.
ஸ்ருஷ்டிக்கோ சரீர அதிஷ்டானம் தேவை. சரீரத்தோடே என்றால், அதிஷ்டானம் நித்தியமாய், ஸ்ருஷ்டியும் இன்றளவும் நடந்து கொண்டே போரும்.
அவனை அதிஷ்டானம் செய்யத் தக்க படைப்பாளி ஒருவன் வேண்டும். அவரைப் படைத்தவர் யார்? , இன்னும் அவரைப் படைத்தவர் யார்
என்று கேள்விக் கணைகள் பிரவாகமாக நீளும். எனவே அதிஷ்டானம் எக்காரணம் கொண்டும் இந்த சம்பிரதாயத்தின் படி பொருந்தாது.

ஆகையால், பாசுபதம் வேத சமஞ்சஸம் அல்ல.

——————-

சாங்கிய மத பிரவர்த்தகர் – கபிலாசாரியர். யோக மதம் – பிரவர்த்தகர் – பதஞ்சலி (எ ) ஹிரண்ய கற்பர்.
இருவர் மதத்திலும் பல ஒற்றுமை இருந்ததாலும் , ஈஸ்வர விஷயத்தில் ஒத்துப் போவதில்லை.
சாங்கிய மதம் ஸேஸ்வர சாங்கியம் என்றும் நிரீஸ்வர சாங்கியம் என்றும் இரண்டு பிரிவு.
பிரம்மாவினால் கொடுக்கப் பட்ட யோகி மதம் ஈஸ்வரனை ஒப்புக் கொண்டாலும், அவன் சிருஷ்டிக்கு உபாதான காரணம் என்று
ஒப்புக் கொள்ளாமல், நிமித்த காரணம் அளவாக சேஸ்வர சாங்கியனோடு ஒத்துப்போவர் .

தத்வங்கள் -அசேதனம் 24 + சேதன தத்வம் ஜீவாத்மா 1 = ஆக மொத்தம் 25.
ஆத்மா – உண்டு. அபிரஹ்மாத்மகம் ஆத்மா என்பது யோகி மதம்.- ஆத்மாவுக்கு அந்தராத்மா ஈஸ்வரன் என்பது இல்லை .
வைதிக மதத்தின் படி அபிரஹ்மாத்மாக வாஸ்த்துவே கிடையாது.
ந இஹ நானா அஸ்தி – இங்கே பல என்று கிடையாது. ஒன்றே உள்ளது என்று உபநிஷத் ஓதுகிறது .
இதற்குப்பொருள் = . பிரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத இரண்டாவது கிடையாது . இவ்வாறு பாற்காதவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.
ஸர்வத்ர பிரமாத்மஹமாக இருக்கிற ஒன்றே உண்டு என்று பாற்பவன் ஞானி என்பது இதன் பொருள்.
ஈஸ்வரன் – நிரீஸ்வர சாங்கியத்தில் சாங்கியத்தில் இல்லை.. ஸேஸ்வர சாங்கியன் மற்றும் யோகி மதத்தில் உண்டு.
ஆனாலும், ஈஸ்வரன் ஜகத்துக்கு உபாதான காரணம் என்பதில்லை. நிமித்த காரணம் மட்டுமே.
ஜகத் – ஜகத் உபாதான காரணம் பிரதான் என்கிற மூலப் பிரகிருதி. ஈஸ்வரன் இல்லாமலே, பிரகிருதி ஸ்வதந்திரமாக
தானே படைக்கும் என்கிற இவர்கள் பிரகிருதி காரண வாதிகள்.
நமக்கும் ஒருவகையில் ஜகத்துக்கு மூலப்பிரகிருதி தான் காரணம். ஆனால், பகவத் சரீரமான பிரகிருதி
ஈஸ்வர அதிஷ்டித பிரதானம் ஜகத் காரணம் என்பது வைதிக மதம்

பிரகிருதி – கர்த்ருத்வம் உடையது. ஞானம் அற்றது.
புருஷன் (ஆத்மா) – ஞாத்ருத்வம் உடையவன். பிரகிருதி கருவியாக செயல் படுமவன்.
இவைகளுக்குண்டான நெருக்கம் – அத்தியாஸம் .
இந்த அநாதி ஸம்பந்தத்தின் விளைவு சம்ஸாரம் – ஸ்படிக + ஜபாகுஸுமம் போலே –
நிறமற்ற ஸ்படிகத்தில் செம்பருத்தி நிறம் ஏறிடப் படுவது போலே, பிரகிருதியின் தன்மை ஆத்மாவிலும்,
புருஷனின் தன்மை பிரகிருதியிலும் இருப்பதாக அறிவது சம்ஸாரம்.
மோக்ஷம் – ஆத்மா பேரிலான பிரகிருதி அத்யாஸம் நீங்குகை.
மோக்ஷ உபாயம் – பிரகிருதி, புருஷ விவேக ஞானம் . அதனதன் தன்மையை மறாடி நினைக்காமல், பிரித்து அறிதல்.

நிரஸனம் :
ரசனாத் அநுப பத்தேஸ்ச :
பிரதானம் , பகவதிஷ்டானம் இல்லாமல், தானே ஜகத்தை படைக்கிறது என்பது பொருந்தாது. காரணம்
குயவன் என்கிற ஜீவாத்மா அதிஷ்டிக்காமல் மண் குடமாகாது.
நெசவாளி இல்லாமல், நூல் ஆடையாகாது.
பொற்கொல்லன் இல்லாமல் பொன் ஆபரணமாகாது.. அதனால்
பரமாத்ம அதிஷ்டானம் இல்லாமல் பிரதானம் படைக்கும் என்பது பொருந்தாது.
ந, அனுமானம்ஸ்ச
படைக்கப் பட்ட பொருள் அறிவுள்ள வஸ்து (ஆத்ம) அதிஷ்டானம் இல்லாமல் பிரவர்த்திக்கவும் மாட்டாதே.
பால் தயிராவதும், தண்ணீர் இளநீர் ஆவதும் , அறிவுள்ள வஸ்துவின் அதிஷ்டானம் இல்லையாய்த்தானே ஏற்படுகிறது என்றால், அப்படி இல்லை.
இரும்பு கதவாக கொல்லன் வேண்டுவது போல , பால் தயிராகவும், தண்ணீர் இளநீர் ஆகவும் ஒரு ஆத்ம வாஸ்துவின் அதிஷ்டானம்
உண்டு என்பதை அனுமானத்தால் உணரலாம்;
எல்லா பாலும், எல்லா தண்ணீரும், தயிராகவோ, இளநீராகவோ ஆகாத காரணத்தால்.
மாடு புல்லைத் தின்ன பாலாகிறதே , அதுபோல என்று பூ.ப.சொல்ல, அதுவும் தவறு.
காளை மாடு புல்லைத் தின்றால் பால் கிடைப்பதில்லையே, அதற்கு அதிஷ்டிக்கப் படாமை காரணம் ஆகிறது.
எனவே புல் பாலாவதற்கு அறிவுள்ள பசு காரணம் .
மேலும் ஈஸ்வர அதிஷ்டானம் இல்லாமல், ஸ்வதந்த்ரமாக பிரதானம் தானே ஜகத்துக்கு காரணமானால், ஜகத்துக்கு பிரளயம் என்பதே ஏற்படாது.
காரணம் பிரதானம் அசித்து.
ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம் மாறி மாறி ஏற்படுவதிலிருந்தே அது ஈஸ்வர சங்கல்பத்தாலே நடப்பதாகத் தேறுகிறது.

—————-

குதிருட்டிகள் :

பாட்ட பிரபாகரன் -மீமாம்சகர்கள்.

ஆத்மா – உண்டு. ஆத்மா நித்யம். அநேகம். விபு.
ஸம்ஸார – ஹேது அநாதி கர்மம்.
ஈஸ்வரன் – இல்லை .
ஜகத் – பிரவாஹ ரூபேண நித்யம். ஜகத்து இப்படி, இப்படி என்று சொல்லுகிறோமே ஒழிய, அது இல்லாத போது
இப்படி இருக்கும் என்று யாரும் சொல்வதில். எனவே ஜகத் நித்யம். எனவே ஸ்ருதி கர்த்தா என்கிற ஈஸ்வர ஸத்பாவத்துக்கு இடம் இல்லை.
கர்மம் – உண்டு . ஈஸ்வர ஸத்பாவம் இல்லாததால் , கர்மங்களுக்கு பயனளிப்பது , வேதோக்த கர்மங்களை அனுஷ்டிப்பதால்
பிறக்கும் அபூர்வம் என்பதால். அது இரண்டு விதம்.
நித்யாபூர்வம்- பாலாபிஸந்தி ரஹித கார்மோபாசன மடியாக உண்டாவது.
அநித்யாபூர்வம் – பல உத்திஸ்ய கார்மோபாசன மடியாக உண்டாவது.
மோக்ஷம் – ஆத்ம பிராப்தி.
ஹேது – யக்ஞாதி கர்மங்களால் பிறந்த நித்ய அபூர்வம்.

மாயாவதி :
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா . ஜீவோந் ந பர:
சங்கரர் – பரம் பிரஹ்மைவ அக்ஞம் (அவித்யா சபளித பிரஹ்மம்) ; பிரம பரிகதம் (ஜகத், ஆத்மா பல என்று பேதலிக்கிறது) ;
ஸம்ஸரதி (அதுவே சம்ஸாரத்துக்கு காரணம்). – (வேதார்த்த சங்கிரகம்.)
பிரஹ்மம் – அநிர்வசனீயம் . ஞானமே ஆத்மா. ஞான குணகன் அன்று.
நிர்விசேஷம் – விசேஷங்கள் வியாவர்த்தகமாய் பிரஹ்மம் வேறுபாடு அற்றது .
ஸ்வ ஜாதீய பேதம் – ஆலமரம், புளிய மரத்துக்கான வேறுபாடு..
விஜாதீய பேதம் – மரமும் , மலையுக்குமான வேறுபாடு..
ஸ்வகத பேதம் – ஒரே மரத்தில், பூ, இலை, கிளை என்கிற வேறுபாடு.
அதுபோல
ஆத்மா – பரமாத்மா இரண்டும் ஒரே ஜாதி, ஞானத்தைப் பார்க்க – ஸஜாதீய பேதம்..
பரமாத்மா, அசித்து இரண்டும் வேறு ஜாதி அஜடம், ஜடம் என்று பார்க்கும் போது – விஜாதீய பேதம்.
பரமாத்மாவினுடைய திவ்யாத்மா ஸ்வரூபம், திய்வ மங்கள விக்ரகம், திருக் கல்யாண குணங்கள் இவை அனைத்தும் – ஸ்வகத பேதம்.
இப்படியான மூன்று வித வேறு பாடும் அற்றது பிஹ்மம் என்பது சங்கரர் பக்ஷம். காரணம்
பிரஹ்மத்தைத் தவிர்ந்த வேறு ஒரு ஆத்மா கிடையாது. எனவே ஸஜாதீய பேதம் இல்லை.
பிரஹ்மம் ஒன்றே உண்டு. அசித்து கிடையாது. எனவே விஜாதீய பேதம் இல்லை.
பிரஹ்மத்துக்கு சரீரமோ, குணங்களோ கிடையாது. ஆகவே ஸ்வகத பேதமும் கிடையாது.

இப்படிச் சொன்னால், முயல் கொம்பு போலே , பிரஹ்ம துச்சம் – இல்லாத ஒன்று ஆகிவிடாதோ?
என்ன – பதில் :
சின்மாத்ரம் – ஸ்வயம் பிரகாச சைதன்யம் மாத்ரம் பிரஹ்மம். தர்மா-தர்மி விபாகம் இல்லை.
அவித்யை – மாயா சபளித பிரஹ்மம் – ஜகத் உண்டு என்றும், ஆத்மாக்கள் பல என்றும் பிரமிக்கிறது.
நிலவு – அதன் ஒளி – குளம், கண்ணடி, பளபளக்கும் கத்தி இவைகளில் பட்டு பலவாக தோற்றுவது போல ஏற்படுவது பேத ஞானம்.
ஜகத்து பொய்யானது ஆகையால், அவித்யை ஸ்தானத்தில் இருக்கிற குளம், கண்ணாடி, கத்தி இவையோடு அந்த அவித்யையும் பொய் என்பது சங்கரர் வாதம்.
அக்ஞானத்தை போக்க வேண்டிய பிரஹ்மத்துக்கே அவித்தை என்றால், போக்குமவர் யார் என்று கேட்டால்
இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிப்பது, போலே பொய்யான ஜகத்தை உண்மை என்றும்,
ஒன்றேயான ஆத்மாவை பலவென்றும் விபிரதிபத்தி பண்ணுகை அக்ஞானம். அவித்தை.
இருட்டு – உபாதி.
அஹம் பிரஹ்மாஸ்மி;
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா!
தத்வமஸி ஸ்வேதகேதோ!
ஸது ஏவ ஸௌம்ய! இதம் அக்ர ஆஸீத் ; ஏக மேவ அதுவிதீயம்
இத்யாதி வாக்கியார்த்த ஜன்ய ஐக்கிய ஞானத்தாலே , அவித்யை யாகிற இருட்டு போய், பாம்பல்ல பழுது என்கிற தெளிவு பிறத்தல் போல்,
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா . ஜீவோந் ந பர: என்று ஏற்படுகிற ஞான தசையே மோக்ஷம். இதுவே ஜீவன் முக்தி.

கோயில் அர்ச்சகர், கோயில் கதவை பூட்டி, சாவியை தோளில் சாத்தி புஜிக்கச் சென்று பூஜித்த பின்பு சாவியை எங்கு வைத்தோம்
என்று தேடப் புகுந்தால், அப்போது வேறொருவர் அவர் தோளிலேயே இருப்பதாக உணர்த்தினால், சாவிக் கொத்து அங்கு புதிதாக வந்ததோ? இல்லையே.
எனவே தியான, ஆசன, உபாஸனாத்தி கர்மாக்களோ, பக்தி ரூபாபன்ன ஞானமும் ஏதுக்கு?
வாக்கியஜன்ய வாக்கியார்த்த ஞானமே போதுமானது.
நாயம் ஸர்ப்ப இதி ஞான மாத்ர நிவர்த்த இதி தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயனாய வித்யதே –
என்பவை காண்க.என்பது இவருடைய மதம். .
தத்வம் – ஆத்மா ஒன்றே. அதுவே நிர்விசேஷ பிரஹ்மம் .
ஈஸ்வரன் – உண்டு. அதுவே பிரஹ்மம். சகுண பிரஹ்மம் அல்ல. நிர்குணம்.
ஜகத்து – மித்யா- கானல் நீர் போல பொய் தோற்றமானது. இந்த ஜகத்துக்கு பரமாணு காரணமில்லை.
பிரதானம் காரண மில்லை. ஆத்மா காரண மில்லை. பிரஹ்மத்துடைய அவித்தையே காரணம்.
கர்மங்கள் – உண்டு.
சம்ஸாரம் – பிரஹ்மத்தினுடைய அக்ஞானத்தால் ஏற்படுகிற பேத ஞானம் .
மோக்ஷம் – பிரஹ்ம ஐக்கியம்
சாதனம் – தத்துவார்த்த வாக்யார்த்த ஞானம்.ஒன்றே போதுமானது.

நிரஸனம் :

தத்வமஸி ஸ்வேதகேதோ!
என்பதற்கு சங்கரர் காட்டியது :

தது – அந்த பிரஹ்மமே
துவம் – நீ
அஸி – ஆகிறாய்.
என்பதான ஸ்வரூப ஐக்கிய அத்வைதம்

ஆனால்
மட்குடம் என்று ஜகல் லக்ஷணையாகச் சொன்னாலும், அது மண் + ஆன + குடம் என்பதாக விசிஷ்டத்தையைத் தருவித்துக் கொள்ள வேண்டும்.
மிருக் பிண்ட மாக இருந்த மண் வாயும் வயிறுமான விசேஷணங்களோடு கூடிய பானை ஆயிற்று என்பதே ஸதர்த்தம் .
தத்வமஸி வார்த்தைக்கு முன்னால் சொல்லப்பட்ட
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா!
என்பதிலுள்ள காரண-கார்ய, சரீர-ஆத்ம பாவத்தை தத்வமஸி வார்த்தையோடு சேர்த்துப் படிக்க மறந்தார் சங்கரர்..

விட்டிலக்கணை – விசேஷங்களை விட்டுச் சொல்வது ஜகல் லக்ஷனை என்றும் அழைக்கப் படும்.
விடா இலக்கணை – அடைமொழிகளை சேர்த்துச் சொல்வது.
விட்டுவிடா இலக்கணை – சிலவற்றைச் சொல்லி, மற்றவைகளை விரிவுக்கு அஞ்சி விடுகை.- என்கிற மூன்றில்
விட்டிலக்கணை விதியை அனுசரித்து , விடுபட்ட
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா! என்பதிலான
காரண-கார்ய, சரீர-ஆத்ம விசேஷணங்களைத் தருவித்துக் கொண்டால்

தது – அந்த (காரண) பிரஹ்மம்
துவம் -(அந்தராத்மாவாகக் கொண்ட ) நீ
அஸி – ஆகிறாய்
என்கிற விளக்கம் விசிஷ்டாத்வைத பரமான வைதிக மதம்.

சங்கரர் மாயா என்பதற்கு பொய் என்று பொருள் கூறினார்.
மாயாந்து பிரகிருதிம் வித்தியாத் மாயியந்து மஹேஸ்வரம் என்பதற்கு ஏற்ப, மாயா என்றால் ஆச்சர்யம் என்பது பகவத் ராமானுஜர் விளக்கம்.
பகவத் திரோதான கரீம் என்று உள்ளிருக்கிற பரமாத்மா ஸ்வரூபத்தை பிராகிருதமான சரீரம் மறைப்பதால் அதுவே ஆச்சர்யம்.
ஸோஹம் – ஸஹ : ஹம்

சங்கர மதத்தில் உபாதி பொய். பொய்யான உபாதி உண்மையான பிரஹ்மத்தை மறைக்கமுடியுமா ?
அப்படியே மறைத்தாலும், பொய்யான ஒன்றை போக்குவது என்பது எங்கனே?
உபாதி போகவில்லை யானால் சம்ஸாரம் விலகாதே?. சம்ஸாரம் விலகாத போது அபேத க்ஞானமும் ஏற்பட
வழியில்லையாய் மோக்ஷமும் சித்திக்காது – என்கிற பெரிய வியசனம் வரும் .
இதிலிருந்து வெளிவர,

பாஸ்கரர் :
தத் ப்ரோபாத் தியாலீடம் விவசம் -> பிரஹ்மம் உபாதிக்கு உட்பட்டு கர்மவஸ்யராய் ஜீவ பாவம் அநுபவதி .
அவித்தை சத்யம் என்று ஒத்துக் கொண்டு, அபேத ஞான உபாஸனத்தாலே அந்த அவித்தை விலக ஐக்கியம் பிறக்கும். அதுவே மோக்ஷம் என்றான் .
ஆக, இவர் மதத்தில் உண்மையான அவித்யையால், ஆத்மாக்கள் பல என்கிற அபேதம் தோற்றுகிறது .
உபாதிகளான புத்தி, இந்திரியம், சரீரம். இதில் பிரஹ்மம் பட்டு பலவாகப் பிரமிக்கிறது,
எப்படி ஒரே நிலவு, தண்ணீர், கண்ணாடி, கத்திகளில் பட்டு பல பிம்பங்கள் தோற்றுகின்றனவோ அதுபோல என்றான்.
உபாதி நசிவதும் அபேத ஞான உபாசனத்தாலே.
சரீரம் – கடம்
ஈஸ்வரன் – கடாகாசம்.
கடம் – உபாதி தொலைந்தால்
பிரஹ்மம் – மஹாகாசத்தோடு ஏகீ பாவம்.

தத்வம் – பிரஹ்மம், உபாதி என்று இரண்டைச் சொன்னாலும், ஏகீ பாவத்தில் ஒன்று தான்.
ஆத்மா – உண்டு. பிரஹ்மதுக்கு ஜீவா பாவம்
ஈஸ்வரன் – சகுண ஈஸ்வரன்.
ஜகத் – சத்யம். பிரஹ்ம கர்ம உபாதி தசையில்.
கர்மம் -உண்டு
சம்ஸாரம் – உபாதி தசையில் சுக துக்கானுபவம்
மோக்ஷம் – ஐக்கியம்.
உபாயம் – வர்ணாஸ்ரம தர்மங்களை அனுஷ்டித்து அபேத ஞான வாச்சயமான உபாசனம். சங்கர பக்ஷத்தில் உபாதி பொய் என்பதால்
பிரம பர்கர ஞானம் மட்டும் போதும் உபாதி கழிய. பாஸ்கரீயத்தில் உபாதி சத்யமாதலால், ஞானத்தோடு உபாசனமும் சொல்லப்பட்டது.

யாதவபிரகாசர் :
அஸுபஸ்ச ஆஸ்பதம் – ஜீவன், அசித்து இரண்டுக்கும் பிரஹ்மம் ஆஸ்பதமாக இருக்கிறது – என்பது இவருடைய பக்ஷம்.
இவருடைய மதத்தில் , பிரஹ்மமே சிதசித் ஈஸ்வரர் என பரிணமிக்கிறது. பிரஹ்மமும், சிதசித் ஈஸ்வரர்களும் ஒன்றுதான்,
ஆனால் இரண்டும் வேறு என்பதான பிரமம் பிரம்மத்துக்கு இருப்பது விலகி இரண்டும் ஒன்றே என்று உணரும்போது மோக்ஷம் என்கிறார்.

வித்யாம் ச அவித்யாம் ச யத்யத் வேத உபயகும் ஸக
அவித்தையா மிருத்யும் தீர்த்வா வித்யயா அமிருதம் அஸ்நுதே

வித்யா – ஞானம் .
அவித்யா – ஞான பின்னம் – கர்மம்.

அநிஷ்டம் – சம்ஸாரம் . அதன் நிவிருத்தி கர்ம யோகத்தாலே.
மோக்ஷம் – பிரஹ்ம ஏகீ பாவம் – அது ஞான யோகத்தாலே .
சங்கரர் சொன்ன ஞானமும் ; பாஸ்கரன் சொன்ன உபாசனம் இரண்டும் சேர
கர்ம- ஞான சமுச்சயத்தாலே – உபாய-உபேய துவயத்தாலே – மோக்ஷம் என்றார் இவர்..

வைதிக மதத்திலும் கர்ம-ஞானங்கள் மோக்ஷ ஸாதனம். ஆனால் ஒரு வேறுபாடு. கர்ம ஞானங்கள் பக்திக்கு அங்கமாகக் கொண்டு
பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே மோக்ஷம் என்பது ராமானுஜ பக்ஷம்.

சம்ஸாரம் – ஸ்வஸ்மாத் அபின்னமான சிதசித் ஈஸ்வரர்களை வேறுபட்டதாக பிரமிக்கை

பேதாபேத வாதம் :
அசித்துக்கும் பிரஹ்மத்துக்கும் பேதம் , அபேதம் இரண்டும் ஸ்வாபாவிகம் .
சித்திக்கும், பிரஹ்மத்துக்கும் அபேதம் ஸ்வாபாவிகம். பேதம் ஒளபாதிகம் – இது பாஸ்கர பக்ஷம்.

அசித்துக்கும் , பிரஹ்மத்துக்கும் பேதாபேதம் ஸ்வாப்பாவிகம் போலே ,
சித்துக்கும் , பிரஹ்மத்துக்கும் பேதாபேதம் ஸ்வாபாவிகம் – இது யாதவபிரகாச பக்ஷம்.

தத்வம் – சிதசித் ஈஸ்வரன் என்ற மூன்றைச் சொன்னாலும் , ஏகீ பாவத்தில் ஒன்று தான்.
ஆத்மா – உண்டு. பிரஹ்மமே விகாரமடைந்து ஆத்மாவாக பிரமிக்கிறது.
ஈஸ்வரன் – உண்டு. அதுவும் ஸகுண ஈஸ்வரன்.
ஜகத் – ஸத்யம் . உபாதியும் உண்மை.
கர்மங்கள் – உண்டு.- சுக துக்கானுபவம் .
சம்ஸாரம் – பேத ஞானம் சம்ஸாரம்
மோக்ஷம் – ஐக்கியம்.
சாதனம் – கர்ம க்ஞான ஸமுச்சயம் .

ஏகாயனர் :
ஏகம் பிராப்பியம் .

ஹரிப் பரதர :
ஸத்யம் ஜகத்
தத்துவதோ கிண்ணா: ஜீவ கணா :
ஹரேர் அநுசரா :
நீசோச்ச பாவம் கதா:
முக்திஹி நைதி சஸுகாதி அநகா :
பக்திஸ்ச தத் ஸாதனம் .

ஈஸ்வர ஸத்பாவம் ஆத்மாவுக்கு சொல்லப் படவில்லை. அதாவது, ஆத்மா ஸ்வதந்திரன் .
ஆத்ம-பரமாத்மா சம்பந்தம் சரீராத்மகமானது என்பதை ஏற்கவில்லை.
ஸர்வதா ஸ்வதந்திரன் ஆத்மா – துவைதம்.
ஸ்வரூபேண ஒன்று – அத்வைதம்.
தத்துவங்கள் வேறானாலும், சாமான்யாதிகரண்ய சரீராத்மா நிபத்தனமாக ஒன்று என்னல் – விசிஷ்டாத்துவைதம்.

ஸ்ரீமந் நாராயணனாகிய மிதுனத்தை அயனமாக உடைய நமக்கு எதிர் தட்டாக
நாராயணனை மட்டும் அயனமாக உடைய மாத்வர்கள் ஏகாயனர்கள்.
இருவருக்குமான சேர்த்தியிலே கைங்கர்யம் – சேஷ விருத்தி நம்முடையது.
நாராயணன் ஒருவனுக்காய் சேஷ விருத்தி அவர்களுடையது.

அபூர்ண (கதித ) ஸக்தி விசிஷ்ட பிரஹ்மம் அவர்களுடையது. பிராட்டி விசிஷ்ட பிரஹ்மம் என்பதால்
பூர்ண ஸக்தி விசிஷ்டன் ஸ்ரீமன் நாராயணனாகிற பிரஹ்மம் என்பது நம்முடைய பக்ஷம்.

தத்வம் – சிதசித் ஈஸ்வரன் என்கிற 3.
ஆத்மா – ஸர்வதா ஸ்வதந்திரன் . ஆனாலும், எப்போதும் ஹரியை அனுசரித்தே செல்பவன்.
ஈஸ்வரன் – லக்ஷ்மி சக்தி தவிர்ந்த சீமித சக்தியுக்தன்.
ஜகத் – உண்டு. அது பிரஹ்ம காரியம்.
கர்மங்கள் – உண்டு.
சம்ஸாரம் -கர்மங்களே காரணம்.
மோக்ஷம் – வைகுந்தப் பிராப்தி.
உபாயம் – பக்தி உபாசனம்.

இப்படியாக, பாஹ்ய குத்திருட்டி மாதங்கள் 17ம் பரிதியாஜ்யம்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதார பரமான அருளிச் செயல்கள்—

July 15, 2020

I .ஸ்ரீ பெரியாழ்வார் (முதலாயிரம் )

1.எந்தை தந்தை தந்தை ( திருப்பல்லாண்டு -6)
2.பிறங்கிய பேய்ச்சி 1—-3—-5
3.கோளரியின் 1—-6—-2
3.அன்னமும் 1—-6—-11
4. அளந்திட்ட தூணை 1—-7—-9
5.குடங்கள் எடுத்து 2—-7—-7
6.முன் நரசிங்கமதாகி 3—-6—-5
7.கதிராயிரம் 4—-1—-1
8.பூதமைந்தொடு 4—-4—-6
9.கொம்பினார் பொழில் 4—-4—-9
10.வல்லெயிற்று 4—-8—-8

11.உரம் பற்றி இரணியனை 4—-9—-8
12.தேவுடைய மீனமாய் 4—-9—-9
13.நம்பனே 5—-1—-9
14.மங்கிய வல்வினை 5—-2—-4

II ஸ்ரீ ஆண்டாள் —திருப்பாவை

15.முப்பத்து மூவர்- 20
16.மாரி மலை முழைஞ்சில் 23
17.கூடாரை வெல்லும் 27

நாச்சியார் திருமொழி

18. நாளை வதுவை மணம் 1—-6—-2
19.வரிசிலை 1—-6—-9
20. வான் கொண்டு 1—-8—-5

III திருமழிசை ஆழ்வார் –திருச்சந்தவிருத்தம்

21.வால் நிறத்தோர் சீயமாய் 23
22.கங்கை நீர் பயந்த 24
23.வரத்தினில் 25
24. கரண்ட மாடு 62
25.விள்விலாத 102

IV திருப்பாணாழ்வார்

26.பரியனாகி வந்த 8

V திருமங்கை ஆழ்வார்–பெரிய திருமொழி

27.மருங்கொள் ஆளரி 1—-2—-4
28.மான் முனிந்து 1—-4—-8
29.ஏனோர் அஞ்ச 1—-5—-7
30 முதல் 39அங்கண்ஞாலம் முதலாக –10 1—-7—-1 to
1—7—10
40. எண் திசைகளும் 1—-8—-6
41.தெரியேன் பாலகனாய் 1—-9—-7
42.தூணாய் அதனூடு 1—-10—-5
43.பள்ளியில் ஓதி வந்த 2—-3—-8
44.காண்டாவனம் 2—-4—-2
45.தாங்காத தொராளரி 2—-4—-4
46.புகராருருவாகி 2—-4—-7
47.உடம்புருவில் 2—-5—-3
48.பேணாத வலி அரக்கர் 2—-5—-7
49.பெண்ணாகி இன்னமுதம் 2—-5—-8
50.பட நாகத்தணை 2—-5—-10

51. அன்னமும் மீனும் 2—-7—-10
52. திரிபுரம் 2—-8—-1
53. மாறுகொண்டு 3—-1—-4
54.பொங்கி அமரில் 3—-3—-8
55.பஞ்சிய மெல்லடி 3—-4—-4
56.சலங்கொண்ட 3—-9—-1
57. திண்ணியதோர் 3—-9—-2
58. ஓடாத வாளரியின் 3—-10—-4
59.உருவாகி 4—-1—-7
60.உளைய ஒண் திறல் 4—-2—-7

61. கெண்டையும் குறளும் 4—5—-6
62.முடியுடை அமரர்க்கு 4—10—8
63.வெய்யனாய் 5—-3—-3
64.ஏன மீனாமையோடு 5—-4—-8
65.வளர்ந்தவனை 5—-6—-4
66.எங்கனே உய்வர் 5—-7—-5
67.வக்கரன் வாய் 5—-9—-5
68. முனையார் சீயமாகி 6—-5—-2
69.பைங்கண் ஆளரி 6—-6—-4
70. அன்றுலகம்
6—-6—-5

71. ஓடா அரியாய்
6—-8—-4
72.அத்தா ! அரியே ! 7—-1—-8
73. ஓடா ஆளரியின் 7—-2—-2
74.ஆங்கு வெந்நகரத்து 7—-3—-5
75.அடியேன்
7—-3—-9
76.வந்திக்கும் 7—-4—-5
77.சிங்கமதாய்
7—-6—-1
78.விண்டான் 7—-7—-5
79.சினமேவும் 7—-8—-5
80. பன்றியாய் 7—-8—-10

81. மடலெடுத்த 8—-3—-6
82. நீர் மலிகின்றது 8—-4—-4
83. ஆமையாகி அரியாகி 8—-6—-5
84. உளைந்த அரியும் 8—-8—-4
85. மீனோடு ஆமை 8—-8—-10
86. மிக்கானை
8—-9—-4
87. மாணாகி வையம் 8—-10—-8
88. பரிய இரணியது 9—-4—-4
89.சிங்கமதாய் அவுணன் 9—-9—-4
90. துளக்கமில் சுடரை 10—-1—-4

91. உளைந்திட்டெழுந்த 10—-6—-3
92. தளர்ந்திட்டு 10—-6—-4
93. பொருந்தலன் 10—-9—-8
94. அங்கோர் ஆளரியாய் 11—-1—-5
95. தளையவிழ் கோதை 11—-4—-4
96.கூடா இரணியனை 11—-7—-4

திருக்குறுந்தாண்டகம்
97. காற்றினைப் புலனைத் தீயை 2

சிறிய திருமடல்
98. —- போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
சீரார் திருமார்பின் மேல் கட்டி செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆராவெழுந்தான் அரியுருவாய்———

பெரிய திருமடல்
99.—–ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து
கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே —வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி —அவனுடைய
பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த
மின் இலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை ———–

———தன்னைப் பிறர் அறியாத்தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அருமறையை ———-

——கொல் நவிலும் ஆழிப்படையானை ,கோட்டியூர்
அன்ன உருவில் அரியை , திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை ,இந்தளூர் அந்தணனை
மன்னும் மதிட்கச்சி வேளுக்கைஆளரியை ——–

VI .பொய்கை ஆழ்வார் இயற்பா–முதல் திருவந்தாதி

100. அடியும்பட கடப்ப 17
101.தழும்பிருந்த 23
102 புரியொரு 31
103. முரணவலி 36
104. எளிதில் இரண்டையும் 51
105. ஏற்றான் 74
106. வரத்தால் வலி நினைந்து 90
107. வயிறழல 93

VII .பூதத்தாழ்வார் –இரண்டாம் திருவந்தாதி

108.கொண்டதுலகம் 18
109. மாலையரியுருவன் 47
110. வரங்கருதி 84
111.உற்று வணங்கி 94
112.என் நெஞ்சமேயான் 95

VIII .பேயாழ்வார் —மூன்றாம் திருவந்தாதி

113.இவையவன் கோவில் 31
114. கோவலனாய் 42
115. அங்கற்கிடரின்றி 65
116. புகுந்திலங்கும் 95

IX . திருமழிசை ஆழ்வார் –நான்முகன் திருவந்தாதி

117. தொகுத்தவரத்தனாய் 5
118. மாறாய தானவனை 18
119. இவையா ! பிலவாய் 21
120. அழகியான் தானே 22

ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்

121.மட நெஞ்சமென்னும் 46

பெரிய திருவந்தாதி

122. நின்றுமிருந்தும் 35
123. வழித்தங்கு வல்வினையை 57

திருவாய்மொழி

124. ஆடியாடி அகம் கரைந்து 2—-4—-1
125.உன்னைச் சிந்தை செய்து 2—-6—-6
126.எங்குமுளன் கண்ணன் 2—-8—-9
127. தோற்றக் கேடவையில் 3—-6—-6
128. கிளரொளியால் 4—-8—-7
129. ஆனானாளுடையான் 5—-1—-10
130. சூழ் கண்டாய் 5—-8—-6

131. அரியேறே 5—-8—-7
132. என் செய்கின்றாய் 7—-2—-2
133. வட்கிலன் 7—-2—-3
134.சிந்திக்கும் 7—-2—-5
135. போழ்து மெலிந்த 7—-4—-6
136.செல்லவுணர்ந்தவர் 7—-5—-8
137. புக்க அரியுருவாய் 7—-6—-11
138. ஆம்வண்ணம் 7—-8—-11
139. கூடுங்கொல் ? 7—-10—-3
140. எடுத்த பேராளன் 8—-1—-3

141. மாலரி கேசவன் 8—-2—-7
142. அற்புதன் 8—-6—-10
143. அறிந்தன 9—-3—-3
144. ஆகம்சேர் 9—-3—-7
145. உறுவது 9—-4—-4
146.அரியாய 9—-4—-5
147. உகந்தே உன்னை 9—4—-7
148. மல்லிகை 9—-9—-1
149. அன்பனாகும் 9—10—-6
150. என் நெஞ்சத்துள்ளிருந்து 10—-6—-4

151. பிரியாது ஆட்செய 10—-6—-10

திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி

152. மடங்கல் 103
——————————————————————-

ஸ்வாமி தேசிகன் தான் அருளிய ப்ரபந்தத்தில் (தேசிக ப்ரபந்தம் )
திருவஹீந்த்ரபுரம் அடியவர்க்கு மெய்யன் விஷயமாக
மும்மணிக்கோவையில் 4வது பாசுரத்தில்( மழையில் எழுந்த
மொக்குள் போல் வையம் என்கிற பாசுரம் )
மீனோடாமை கேழல் கோளரியாய் —–என்று துதிக்கிறார்.

பின்னும், நவமணிமாலை 2ம் பாசுரத்தில் ( மகரம் வளரு மளவில்
பௌவ மடைய வுற்ற லைத்தனை என்கிற பாசுரம் )
வலிகொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்குதித்தனை —
என்று போற்றுகிறார்

இவ்விதமாக, ஆழ்வார்கள், ஆசார்யன் அனுபவித்துத் துதித்ததை
அறிந்து, உணர்ந்து ,அனுபவித்தோம்

அடியேனின் மந்த மத்தியில் தோன்றியதையும் இங்கு
எழுதியுள்ளேன் —பிழை பொறுத்து, குணம் கொள்வீராக !

ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
—————————–

1. அருமைப் புதல்வனை அழிக்க நினைத்து
அவனது சொல்லால் ஆத்திரம் அடைந்து
அன்று ஒருநாள் மாலைத் துணைத் தட்ட,
அடுத்த கணமே கம்பம் பிளந்தது !

2. அண்டம் அதிர்ந்தது; அமரர்கள் அஞ்சினர் ;
எண்திசை அழிந்தது;பிரளயம் நேர்ந்தது;
நான்முகன் நலிந்தான்; அவன் மகன் மெலிந்தான்
அறுமுகன் பயந்தான்;அனைத்தும் வீழ்ந்தது.

3.சிங்கத்தின் பிடரிகள் சிதறிப் பறந்தன ;
சீறியது கண்ணும்; பற்களும் நெறிந்தன ;
அட்டகாசத்தின் ஆரம்ப நிலைதான்,
கிட்ட நெருங்கத் தேவரும் பயந்தனர் !

4. கரங்கள் பிறந்தன ;வளர்ந்தன எங்கும்,
விரல்களின் நகங்கள் ,வீறிட்டுப் பாய்ந்தன !
இரணியன் மார்பைக் கீறிக் கிழித்தன !
தரணியெங்கும் குருதியின் ஓட்டம் !

5. நரசிங்கம்! நாரணன் கருணை அவதாரம் !
பிரகலாதனுக்காகப் பிறந்த அவதாரம் !
பிரதோஷ வேளையிலே பூசிக்க அவதாரம் !
சரபத்தை முடித்திட்ட சீரிய அவதாரம் !

6. நரசிங்கா ! ஆளரியே ! நாயேன் அடிபணிந்தேன்
கருணைக் கண்கொண்டு காத்திடுவாய் அடியேனை
உருவாய், உருவுக்கும் உருவாய் வந்தவனே !
பிரகலாத வத்ஸலனே ! பஜிக்கின்றேன் உன் நாமம் !

7. உன் நாமம் தனைக் கேட்க உன்மத்தமாகிடுவர் !
உன் நாமம் தியானிக்க உச்சநிலை பெற்றிடுவர் !
உன் நாமம் உச்சரிக்க உயர்நிலை அடைந்திடுவர் !
உன் நாமம் உயர்வாகும், உத்தமுமே அதுவாகும் !

8. சிங்கப் பெருமானே ! சீறினும் நீ அருள்வாயே !
எங்கும் உள்ளவனே ! இதயத்தில் இருப்பவனே !
பொங்கும் பக்தியினால், போற்றுகிறேன் பொற்பாதம் ,
ஏங்கும் அடியேன் நான்; இனிப் பிறவி யான்வேண்டேன் .

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்தோத்ர மஞ்சரி —

July 15, 2020

ஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் –ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன்

அஹோ பிலம் நாராஸிம்ஹம் கத்வாராம : ப்ரதாபவான் |
நமஸ்க்ருத்வா ஸ்ரீ ந்ருஸிம்ஹம் அஸ்தௌஷீத் கமலாபதிம் ||

1. கோவிந்த கேசவ ஜநார்த்தன வாஸுதேவ விச்வேச விச்வ மதுஸுதந விச்வ ரூப |
ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம புஷ்கராக்ஷ நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே ||

2. தேவாஸ் ஸமஸ்தா : கலுயோகிமுக்யா : கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச |
யத்பாதமூலம் ஸததம் நமந்தி தம்நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||

3. வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ர கர்ப்பாந் வித்யாபலேகீர்திமதீஞ்ச லக்ஷ்மீம் |
யஸ்ய ப்ரஸாதாத் ஸததம் லபந்தே தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||

4. ப்ரும்மா சிவஸ்தவம் புருஷோத்தமஸ்ச நாராயணாஸௌ மருதாம் பதிஸ்ச |
சந்த்ரார்க்கவாய்வக்னி மருத்கணாஸ்ச த்வமேவ தம்த்வாம் ஸததம் நதோஸ்மி ||

5. ஸ்வப்நேபி நித்யம் ஜகதாம் த்ரயாணாம் ஸ்ரஷ்டா ச ஹந்தா விபுரப்ரமேய : |
த்ரா தாத்வ மேகஸ்த்ரிவிதோவிபந்ந : தம் த்வாம் ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி ||

இதிஸ்துவா ரகுச்ரேஷ்ட பூஜயாமாஸ தம் விபும் |
புஷ்ப வ்ருஷ்டி :பபாதாசு தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி ||
ஸாதுஸாத்விததம் ப்ரோசு : தேவாரிஷி கணைஸ்ஸ ஹ |” தேவா ஊசு :
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம் பஞ்சாம்ருதமனுத்தமம் |
படந்தியேத்விஜ வரா : தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத : ||

————

யஸ்யாபவத் பக்தஜநார்த்தி ஹந்து பித்ருத்வமந்யேஷ்வவிசார்ய தூர்ணம் |
ஸ்தம்பேவதார ஸ்தமநந்யலப்யம் லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||

அஹோபிலே காருடசைல மத்யே க்ருபாவசாத் கல்பித ஸந்நிதானம் |
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாமபாகம் லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||

வ்யாஸ பகவான், ”ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம் ”
தன்னுடைய பக்தர்களின் வார்த்தையை, ஸத்யமாக்க ஸ்தம்பத்தில் தோன்றிய அவதாரம்;

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்
என் உயிர் யானே மாய்ப்பல் ; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் ” என்றனன் அறிவின் மிக்கான் –இரணியன் வதைப்படலம் (126)

நசை திறந்து இலங்கப்பொங்கி , ”நன்று, நன்று” என்ன நக்கு ,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ,ஓர் தூணின் , வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் ;எற்றலோடும் ,
திசை திறந்து ,அண்டம் கீறச் சிரித்தது ,செங் கண் சீயம் (127)

நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும், —-நான்முகனாலேகூடக் காண இயலாத செய்யாளுறை மார்பன் இப்படிச் சிரித்ததும்,
ப்ரஹ்லாதன், ஆடினான், அழுதான், பாடி அரற்றினான், சிரத்தில் செங்கை சூடினான், தொழுதான், ஓடி, உலகு எலாம் துகைத்தான் துள்ளி—

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்;பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பர்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது,கீழும் மேலும்

———

அரே க்வாஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தேஸ்ம ஸ்தம்பம் சலிதகரவலோ திதி ஸுத :
அத : பஸ்சாத் விஷ்ணோ ந ஹி வதிது மீஸோஸ்மி ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வாத்மன் பவனபுர வாஸின் ! ம்ருட யமாம்–ஸ்ரீ நாராயண பட்டத்ரி , நாராயணீயத்தில்-

———–

ப்ரஹ்லாதஸ்ய வ்யஸநமிதம் தைத்ய வர்கஸ்ய தம்பம்
ஸ்தம்பம் வக்ஷஸ்தலமபி ரிபோ : யோக பத்யேன பேத்தும் |
பத்தச்ரத்தம் புருஷ வபுஷா மிச்ரிதே விச்வ த்ருஷ்டே
தம்ஷ்ட்ரா ரோசிர் விசித புவனே ரம்ஹஸா ஸிம்ஹ வேஷே ||–காளிதாசன்–போஜ சம்பூ

பகவான் , ந்ருஸிம்ஹனாக அவதரித்து, ஒரே க்ஷணத்தில், ப்ரஹ்லாதனின் கவலை,அசுரர்களின் ஆணவப் போக்கு,
அக்ரமங்கள், தூண் ஹிரண்யனின் மார்பு ஆக , இந்த நான்கையும் பிளந்தார் உலகம் உய்ந்தது
இப்படி மகா உக்ரமான அவதாரமாக இருந்தாலும் ,பக்தியுடன் பூஜிப்பவர்களின் மனக் கவலை தீர்த்து, விரோதிகளை விரட்டி,
அனுக்ரஹம செய்யும் உத்தமமான அவதாரம்.

————

முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர்—–(வைகுண்ட வாஸி )

1.யோகி த்யேயம் ஸதா நந்தம் பக்தாநாம் அபயங்கரம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

2. ஸர்க–ஸ்திதி –விநாசாநாம் கர்த்தா கர்த்ருபதி : ஸ்வயம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

3. நமாஸகம் தயாபூர்ணம் ஸர்வலோக -நமஸ்க்ருதம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

4. ப்ரஹ்லாத —வரதம் ச்ரேஷ்டம் கருடாத்ரி –நிவாஸிநம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

5. வேதாந்த கருணா நித்யம் ஸேவ்ய மாநம் பரம் சுபம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

6. ஸ்ரீ ரங்கயோகி க்ருபயா ப்ரோக்தம் ஸ்தோத்ரமிதம் சுபம் |
ய : படேத் ச்ரத்தயா நித்யம் ஸர்வபாபை : ப்ரமுச்யதே ||

1-அஷ்டாங்க ஸித்தி பெற்றவர்கள் தினமும் த்யானிக்கும் மூர்த்தி ;எப்போதும் பரமானந்த ஸ்வரூபி ;பக்தர்களின் பயத்தைப்
போக்குபவன்; தாமரைக் கண்ணன்;சமஸ்த பாபங்களையும் சம்ஹரிப்பவன் ; வேண்டும் வரங்களை அளிப்பவன்; இப்படிப்பட்ட
ஸ்ரீ மாலோலனைப் பற்றுகிறேன்

2.ஜென்மத்தை அழிப்பவன்;ஜீவன்கள் உஜ்ஜீவிக்க பரம கருணையுடன் முத்தொழிலையும் செய்யும் பிரான்; தாமரைக் கண்ணன்;
எல்லாப் பாபங்களையும் போக்குபவன்;வேண்டிய வரம் தருபவன்;இப்படிப்பட்ட ஸ்ரீ மாலோலனையே அடைகிறேன்.

3. லக்ஷ்மிலோலன்; காருண்ய நிதி;எல்லா உலகத்தாரும் ஸேவிக்கும் ஏற்றம் உடையவன்; தாமரைக் கண்ணன்; பாபங்கள் அனைத்தையும்
போக்குபவன்; வேண்டிய வரம் அனைத்தையும் தருபவன்; ஸ்ரீ மாலோலனையே தஞ்சம் என்று கருதி, அவனையே சரணம் அடைகிறேன்.

4. பக்தனான ப்ரஹ்லாதனைக் காத்தவன்; ஒப்பாரும் மிக்காரும் இல்லா மேன்மையாளன்; கருடகிரி வாஸி ; தாமரைக் கண்ணன்;
சிங்கமுக ஸ்வரூபி ; கோரிய வரம் அளிக்கும் ஸ்ரீ மாலோலனைச் சரணம் அடைகிறேன்;

5. 44ம் பட்ட அழகிய சிங்கரால் தினமும் ஆராதிக்கப் பெற்றவன்; மிக மேலானவன்; பங்கயக் கண்ணன்;பாபங்களைப் பொசுக்குபவன்;
வேண்டியதெல்லாம் அருளும் ஸ்ரீ மாலோலனையே தஞ்சமெனப் பற்றுகிறேன்

6. 42ம் பட்டம் ஸ்ரீ இஞ்சிமேட்டு அழகியசிங்கர் கிருபையால், அடியேனால் சொல்லப்பட்ட மங்களத்தை அருளும் இந்த ஸ்தோத்ரத்தைத்
தினமும் சொல்பவர்கள் எல்லாவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஸ்ரீ மாலோலன் கிருபையைப் பெறுவார்கள்

———————-

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ளது

21.தம்ஷ்ட்ரா –கராளம் ஸுரபீதிநாசகம் க்ருதம் வபுர் –ந்ருஸிம்ஹ –ரூபிணா |
த்ராதும் ஜகத் யேந ஸ ஸர்வதா ப்ரபு : மமாஸ்து மாங்கள்யவிவ்ருத்தயே ஹரி : ||

தேவர்களின் பயத்தைப் போக்கவல்லதும், கோரைப் பற்களால் பயத்தை உண்டாக்குவதுமான நரங்கலந்த சிங்கத்
திருவுருவை ,உலகைக் காப்பாற்ற யார் தரித்தாரோ ” ஸ்ரீ ஹரி ”எனக்கு மங்களங்களைப் பெருகச் செய்வாராக

22.தைத்யேந்த்ர–வக்ஷஸ் ஸ்தல —தார –தாருணை :கரேருஹைர் ய :க்ரகசாநு காரிபி : |
சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய–விவ்ருத்தயே ஹரி : ||

இரணியன் மார்பைக் கிழித்ததும் ரம்பம் போன்றதுமான நகங்களால் ,உலகின் பயத்தைப் போக்கிய ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

23.தந்தாந்த –தீப்தத்யுதி -நிர்மலாதி ய :சகார ஸர்வாணி திசாம் முகாநி |
நிநாத –வித்ராஸித –தாநவோ ஹ்யஸௌ மமாஸ்து மாங்கள்ய –விவ்ருத்தயே ஹரி : ||

பற்களின் ப்ரகாசத்தால் திசை முடிவிலும் காந்தியைப் பரப்புகிறவரும், ஸிம்ஹநாதத்தால் அஸுரர்களை
நடுங்கச் செய்பவருமான ஸ்ரீ ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக –

24. யந்நாம -ஸகீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ -மாப்நோதி ந ஸம்சயம் நர : |
ஸ ஸர்வ-லோகார்த்தி –ஹரோ ந்ருகேஸரீ மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

தன்னுடைய நாமத்தைச் சொல்பவரின் பெரும் பயத்தைப் போக்கி க்ருபை செய்பவரும்,உலகங்களின் கஷ்டத்தைப்
போக்குபவரான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-

25. ஸடா –கராள ப்ரமணாநிலாஹதா : ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ் ஸமந்தத : |
ஸ திவ்யசிம்ஹ :ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

பிடரிக் கேசங்கள் அலைந்து மேகக்கூட்டங்களை நாலாபுறமும் சிதறும்படி செய்பவரும் நெருப்புக் கனல் ஜ்வலிக்கும்
நேத்ரங்களை உடையவருமான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-

26. யதீக்ஷண –ஜ்யோதிஷி ரச்மி -மண்டலம் ப்ரலீந -மீஷந் ந ரராஜ பாஸ்வத : |
குத :ச சாங்கஸ்ய ஸ திவ்யரூப -த்ருக் மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

எவருடைய திருக்கண்களின் தீக்ஷ்யண்யத்தில் ஸுர்யனின் ஒளிக்கதிர்கள் மங்குமோ,சந்திரனின் ப்ரகாசத்தைப் பற்றிச்
சொல்லவே வேண்டாமோ அந்த திவ்ய ரூபமான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக—

27. அசேஷ –தேவேச –நரேச்வரேச் வரை : ஸதா ஸ்துதம் யச்சரிதம் மஹாத்புதம் |
ஸ ஸர்வ–லோகார்த்தி -ஹரோ மஹாஹரி : மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

எந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனுடைய மகோன்னத சரித்ரத்தை தேவர்களும், உலகத்தோரும் புகழ்ந்து கொண்டாடுகிறார்களோ
உலகங்களின் துக்கத்தையும் பாவங்களையும் அழிக்கவல்ல அந்த ஸ்ரீ ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

28. த்ரவந்தி தைத்யா : ப்ரணமந்தி தேவதா : நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத –ரூப கேஸரீ எந்த ந்ருஸிம் மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

யாருடைய திருநாமத்தைச் சொன்னவுடனே அசுரர்கள் ஓடுகிறார்களோ ,தேவர்கள் நமஸ்கரிக்கிறார்களோ, அரக்கர்கள் அழிவார்களோ,
எதிரிகள் திரும்பி ஒடுவார்களோ அந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

————

44ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் ஸ்ரீ மாலோலன் விஷயமாக, பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்,

1-மாலோலம் ப்ரணிபத்யாஹம் ஸ்வர்ண ஸ்ரீந்ருஹரிம்ததா |
மங்களாத்ரி ரமாஸிம்ஹம் க்ருஷ்ணம் நர்த்தன கோவிதம் ||
2. ஸ்ரீ ரங்கநாதம் ஹஸ்தீசம் லக்ஷ்மீபூமி ஸமன்விதம் |
சேஷாசலேசம் ஸ்ரீவாஸம் யாதவாத்ரி ரமாஸகம் ||
3. ஸ்ரீ பூ ஸுரபி ரங்கேசம் ஸ்ரீவராஹௌ ஹயாநநம் |
பூமாதி கேசவம் சக்ரம் கோதாம் வடதளேசயம் ||
4. ஸஸீதாலக்ஷ்மணம் ராமம் அபர்யாப்தாம்ருதம் ஹரிம் |
ஸ்ரீ மூர்த்தி : ஸ்ரீ சடாரீ ச ஸேநேசம் சடமாதிநம் ||
5. பரகாலம் யதீந்த்ரம் ச வேதசூடா குரூத்தமம் |
ஆதிவண் சடகோபாதீந் யதிவர்யாந் பஜே நிஸம் ||
6. பஞ்சாம்ருதமிதம் புண்யம் ய : படேத் ஸததம்முதா |
ரமா நர ஹரிஸ்தஸ்ய தத்யாதீப்ஸிதமாதராத் ||

————-

ஸ்ரீ ஸுதர்சன கவசத்தில்—-
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸுதர்சன கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அஹிர்புத்ந்யே பகவான் ரிஷி :
அநுஷ்டுப் சந்த :
ஸ்ரீ ஸுதர்சன ஸ்ரீ மஹா ந்ருஸிம்ஹோ தேவதா
சஹஸ்ரார இதி பீஜம்
ஸுதர்சன மிதி சக்தி :
சக்ரமிதி கீலகம்
மம ஸர்வ ரக்ஷார்த்தே
ஸ்ரீ ஸுதர்சன புருஷ ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரீத்யர்த்தே
ஜபே விநியோக:
என்று சொல்கிறோம்—–ஸ்ரீ ஸுதர்சனரைச் சொல்லும்போதெல்லாம் ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் சொல்கிறோம்

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் , நவ க்ரஹங்களில் ஒருவரான சுக்ரன் சொன்ன ஸ்தோத்ரம் உள்ளது-

ஸ்ரீ சுக்ர உவாச :–

1. நமாமிதேவம் விச்வேசம் வாமனம் விஷ்ணுரூபிணம் |
பலி தர்ப்பஹரம் சாந்தம் சாச்வதம் புருஷோத்தமம் ||

2.தீரம் சோரம் மஹாதேவம் சங்கசக்ர கதாதரம் |
விஸுத்தம் ஞான ஸம்பன்னம் நமாமி ஹரிம் அச்யுதம் ||

3.ஸர்வசக்தி மயம் தேவம் ஸர்வகம் ஸர்வபாவனம் |
அநாதிமஜரம் நித்யம் நமாமி கருடத்வஜம் ||

4.ஸுராஸுரைர் பக்திமத்பி : ஸ்துதோ நாராயண : ஸதா |
பூஜிதம் சஹ்ருஷீகேசம் தம் நமாமி ஜகத்குரும் ||

5.ஹ்ருதி ஸங்கல்ப யத்ரூபம் த்யாயந்தி யதய :ஸதா |
ஜ்யோதிரூபம் அனௌபம்யம் நரஸிம்ஹம் நமாம்யஹம் ||

6. நஜாநந்தி பரம் ரூபம் ப்ரம்மாத்யா தேவதாகணா |
யஸ்யாவதார ரூபாணி ஸமர்ஸந்தி நமாமிதம் ||

7. ஏதஸ் ஸமஸ்தம் யேதாதௌ ஸ்ருஷ்டம் துஷ்டவதாத் புன : |
த்ராதம் யத்ர ஜகல்லீனம் தம் நமாமி ஜனார்த்தனம் ||

8பக்தைர் ரப்யர்ச்சிதோ யஸ்துநித்யம்பக்தப்ரியோஹிய : |
தம் தேவம் அமலம் திவ்யம் ப்ரணமாமி ஜகத்பதிம் ||

9. துர்லபம் சாபி பக்தாநாம் ய : ப்ரயச்சதி தோஷித : |
தம் ஸர்வசாக்ஷிணம் விஷ்ணும் ப்ரணமாமி சநாதனம் ||

ஸ்ரீ மார்க்கண்டேய உவாச :-

இதிஸ்துதோ ஜகந்நாத புரா சுக்ரேண பார்த்திவ |
ப்ராதுர்பூவ தஸ்யாக்ரே சங்கசக்ரகதாதர : ||

11. உவாச சுக்ரமேகாக்ஷம் தேவோ நாராயண :ஸ்ததா |
கிமர்த்தம் ஜாஹ்நவிதீரே ஸ்துதோஹம் தத்ப்ரவீஹிமே ||

சுக்ர உவாச :–

12.தேவதேவம் பூர்வமபவாதோ மஹாந்க்ருத : |
தத்தோஷஸ்யாபநுத்யர்த்தம் ஸ்துதவானஸ்மி ஸம்ப்ரதம் ||

ஸ்ரீ பகவானுவாச :–

13. மமாபராதாந் நயனம் நஷ்டமேகம் தவாதுனா |
ஸந்துஷ்டோஸ்மிதத : சுக்ர ஸ்தோத்ரேண நேனதேமுநே ||

14. இத்யுகத்வா தேவதேவேசஸ்தம் முநிம் ப்ரஹஸந்நிவ |
பாஞ்சஜன்னேய தத்சக்ஷீ :பஸ்பர்ச ச ஜனார்த்தன ||

15. ஸ்பிருஷ்ட மாத்ரேது சங்கேன தேவதேவேன சார்ங்கிணா |
பபூவ நிர்மலம் சக்ஷு :பூர்வந்நிருபஸத்தம || |

16ஏவம் தத்வாமுனே சக்ஷு பூஜிதஸ்தேன மாதவ : |
ஜகாமாதர்ஸனம் ஸத்ய: சுக்ரோபி ஸ்வாச்ரமம் யயௌ ||

17. இத்யேத துக்தம் முநிநா மஹாத்மனா ப்ராப்தம் புரா தேவவர ப்ரஸாதாத் |
சுக்ரேண கிம்தே கதயாமி ராஜந் புநஸ்ச மாம் பிருச்ச மனோரதாந்த : ||

—————————

அபாமார்ஜன ஸ்தோத்ரம்

சஞ்சத் சந்த்ரார்த தம்ஷ்ட்ரம் ஸ்புர துருரதநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத் பர்ஜந்ய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம் |
த்ரஸ்தாஸா ஹஸ்தியூதம் ஜ்வல தநல ஸடா கேஸரோத்பாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம் ||

————–

ஸ்ரீ கூரத்தாழ்வான், அதிமாநுஷ ஸ்த்வம்

க்ரீடாவிதே :பரிகர :தவ யா து மாயா ஸா மோஹிநீ ந கதமஸ்யது ஹந்த ஜந்தோ : |
ஸஹ ! மர்த்யஸிம்ஹவபுஷ :தவ தேஜஸோ ம்சே சம்பு :பவன் ஹி சரப :சலபோ பபூ

ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸுந்தர பாஹுஸ்தவத்தில் கூறுகிறார் :–

ந வாயு பஸ்பந்தே ,யயது ரதவாஸ்தம் சசிரவீ திசோநச்யந் ,விச்வாப்யசலத் அசலா ஸாசலகுலா |
நபச்ச ப்ரச்ச்யோதி ,க்வதிதமபி பாதோ நரஹரௌ த்வயி ஸ்தம்ப்பே சும்ப்பத் வபுஷி ஸதி ஹே ஸுந்தர புஜ : ||

அராளம் பாதாளம் த்ரிதசநிலய :ப்ராபி தலய : தரித்ரீ நிர்தூதா ,யயுரபி திச :காமபி தசாம் |
அஜ்ரும்பிஷ்டாம் போதி :குமுகுமிதி கூர்ணத் ஸுரரிபோ :விபந்தாநே வக்ஷ :த்வயி நரஹரௌ ஸுந்தரபுஜ ! ||

நகக்ரகசக ப்ரதி க்ரதித தைத்ய வக்ஷஸ்ஸ்த்தலீ ஸமுத் தருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வம் வபு : |
விலோக்ய ருஷித :புந : ப்ரதி ம்ருகேந்திர சங்காவசாத் ய ஏஷ நர கேஸரீ ஸ இஹ த்ருச்யதே ஸுந்தர : ||

——————-

தைத்திரீய உபநிஷத்தில் நாராயண வல்லியில் உள்ள ந்ருஸிம்ஹ மந்த்ரமாவது

ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோ ஜாதாய வை நம :பவே பவே நாதிபவே பஜஸ்வமாம் பவோத்பவாய நம :
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நமோ ருத்ராய நம :காலாய நம :கலவிகரணாய நமோ பலவிகரணாய
நமோ பலாய நமோ பலப்ரமதனாய நமஸ் ஸர்வ பூத தமனாய நமோ மனோன்மனாய நம :
அகோரேப்யோ அதகோரேப்யோ கோரகோர தரேப்யஸ் ஸர்வதஸ் ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய :

——–

108 திவ்ய தேசங்களில், வடநாட்டு திவ்யதேசங்களில் பெருமை பெற்ற திவ்ய தேசம் அஹோபிலம்—-
சிங்கத்தின் குகை– 9 சிங்கங்களின் குகை-ஒன்பது ந்ருஸிம்ஹ மூர்த்திகள் —-
அஹோபில ந்ருஸிம்ஹன்
வராஹ ந்ருஸிம்ஹன்
மாலோல ந்ருஸிம்ஹன்
யோகானந்த ந்ருஸிம்ஹன்
பாவன ந்ருஸிம்ஹன்
காரஞ்ச ந்ருஸிம்ஹன்
சக்ரவட ந்ருஸிம்ஹன்
பார்க்கவ ந்ருஸிம்ஹன்
ஜ்வாலா ந்ருஸிம்ஹன்

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்

ப்ரதமஸ்து மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து விதாரண :
பஞ்சாஸ்ய : பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந :
ஸப்தமோ தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :

த்வாதஸைதாநி நாமாநி ந்ருஸிம்ஹஸ்ய மஹாத்மந :

———-

ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே | வஜ்ரதேஹாய வஜ்ராய நமோ வஜ்ரநகாயச ||

காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம : | காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச | ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே ||

சத்ருக்னாய ஹ்யவிக்நாய விக்நகோடி ஹராய ச | ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம : ||

பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிநே | பூதவேதாள காதாய பூதாதிபதயே நம : ||

பூதக்ரஹ விநாஸாய பூதஸம்யமிதே நம : | மகாபூதாய ப்ருகவே ஸர்வபூதாத்மநே நம : ||

ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வ கார்ய விதாயிநே | ஸர்வஜ்ஞாயா ப்யநந்தாய ஸர்வ ஸக்தி தராய ச ||

ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே | பிங்காக்ஷாயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே ||

அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே அந்நதாயாந்ந ரூபாய ஹ்யந்நாயாந்த புஜே நம : ||

அமீ ஹி த்வா ஸுர ஸங்கா விஸந்தி கேசித் பீதா : ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்த ஸங்கா : ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி : புஷ்கலாபி : ||

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா : விஸ்வே தேவா மருதஸ்சோஷ்மபாஸ்ச |
கந்தர்வ யக்ஷாஸுர ஸித்த ஸங்கா : வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஸ் சைவ ஸர்வே ||

லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத் லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி : |
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ் தவோக்ரா : ப்ரதபந்தி விஷ்ணோ ||

ஸுஜ்யோதிஸ்வம் பரம்ஜ்யோதி :ஆத்மஜ்யோதி :ஸநாதந : |
ஜ்யோதிர் லோகஸ்வரூபஸ் த்வம் ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி : ||

கவயே பத்ம கர்ப்பாய பூதகர்ப்ப க்ருணாநிதே | ப்ரஹ்மகர்பாய கர்ப்பாய ப்ருஹத் கர்ப்பாய தூர்ஜடே ||

உன்மத்தாய ப்ரமத்தாய நமோ தைத்யாரயேநம : | ரஸஜ்ஞாய ரஸேஸாய ஹ்யரக்த ரஸநாய ச ||

நாக கேயூரஹாராய நாகேந்த்ராயாக மர்திநே | நதீவாஸாய நக்நாய நாநாரூபதராய ச ||

கதாபத்ம தராயைவ பஞ்சபாண தராய ச |காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே ||

நம : காமவிஹாராய காமரூப தராய ச |ஸோமஸுர்யாக்நி நேத்ராய ஸோமபாய நமோ நம : ||

தர்ம நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர | புண்ய நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தேபீஷ்ட தாயக ||

நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப |
நமோ நமஸ்தே ரண ஸிம்ஹ ரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப ||

—————-

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ,ஆர்த்தார்த்தி நிர்வாபணாத்
ஔதார்யாத் அகஸோஷ்ணாத், அகணித ச்ரேய ப்ராணாத் |
ஸேவ்ய : ஸ்ரீபதிரேக ஏவ ஜகதாம் ஏதேச ஷட்ஸாக்ஷிண :
ப்ரஹ்லாதச்ச விபீஷணச்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ : ||

யா ப்ரீதிர்ரவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயிநோ |
த்வா மநுஸ்மரதஸ்ஸா மே ஹ்ருதயாந் மா ப ஸர்பது ||

நதோஸ்ம்யநந்தா ய துரந்த சக்தயே விசித்ர வீர்யாய பவித்ர கர்மணே |
விஸ்வஸ்ய ஸர்கஸ்திதிஸம்யமாந் குணை :ஸ்வலீலயா ஸந்ததே அவ்யயாத்மநே ||

அளவில்லாதனவும் , வெல்ல முடியாதனவும்திறமையும் பலமும் உடையவனும் , இவ்வுலகத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் –
கார்யங்களை விளையாட்டாகச் செய்பவனும் மாறுதல் அற்றவனுமான பரமாத்மாவை வணங்குகிறேன்

தத்தே மஹத்தம ! நம ; ஸ்துதிகர்ம பூஜா கர்ம ஸ்ம்ருதிச் சரணயோ : ச்ரவணம் கதாயாம் |
ஸம்ஸேவயா த்வயி விதேதி ஷடங்கயா து பக்திஞ்ஜந : பரமஹம்ஸ கதௌ லபேத ||

ஸ்ரீ பகவாநு வாச —

வத்ஸ ப்ரஹ்லாத பத்ரம்தே ப்ரீதோஹம்தே ஸுரோத்தம |
வரம் வ்ருணீஷ்வா பிமதம் காமபூரோஸ்ம்யஹம்ந்ருணா ||ம

ஏவம் ப்ரலோப்யமாநோபி வரைர்லோக ப்ரலோபனை |
ஏகாந்தித்வாத் பகவதி நைச்சத்தாநஸு ரோத்தம : ||

————-

ப்ரஹ்லாத —-
ஸ்ரீ கோவிந்த முகுந்த கேஸவ ஸிவ ஸ்ரீ வல்லப ஸ்ரீ நிதே
ஸ்ரீ வைகுண்ட ஸுகண்ட குண்டிதகல ஸ்வாமின்
அகுண்டோதய ஸுத்தத்யேய விதூததூர்த தவள ஸ்ரீ மாதவாதோக்ஷஜ
ஸ்ரத்தாபத்த விதேஹி நஸ்த்வயி தியம் தீராம் தரித்ரீதர

அச்யுத குணாச்யுத கலேஸ ஸகலேஸ ஸ்ரீதர தராதர விபுத்த ஜனபுத்த |
ஆவரண வாரண விநீல கனநீல ஸ்ரீகர குணாகர ஸுபத்ர பலபத்ர ||
கர்ண ஸுக வர்ணன ஸுகார்ணவ முராரே ஸுவர்ண ருசிராம்பர ஸுபர்ணரத விஷ்ணோ |
அர்ண வநிகேதன பவார்ணவபயம் நோ ஜீர்ணய லஸத்குணகணார்ணவ நமஸ்தே ||

———-

ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம : க்ஷணம் பாணிஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : |
யத் ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா யாதிருச்சிகா த்வேதஸாம்
யாகாசித்ஸஹஸா மஹாஸுர க்ருஹஸ் தூணாபிதாமஹ்யபூத் ||

ஸ்தூணா —தூண் அதாவது கம்பம்
அவந்த்ய —மலடு இல்லாத
ஜடரா—-வயிற்றைப் பெற்று
வேதஸாம் பிதாமஹீ அபூத்—-ப்ரும்மாக்களுக்குத் தகப்பனைப் பெற்ற தாயாக ஆயிற்று—
( இந்த மணி வயிற்றால் ந்ருஸிம்ஹனைப் பெற்ற தூணும் மோக்ஷம் அடைந்ததோ ! )

——————

ஸ்ரீ மத் பாகவதம் –ஸ்கந்தம்-7-ஸ்லோகங்கள்- 19-22

mimamsa manasya samutthito ‘grato
nrsimha-rupas tad alam bhayanakam
pratapta-camikara-canda-locanam
sphurat sata-kesara-jrmbhitananam
karala-damstram karavala-cancalaksuranta-
jihvam bhrukuti-mukholbanam
stabdhordhva-karnam giri-kandaradbhutavyattasya-
nasam hanu-bheda-bhisanam
divi-sprsat kayam adirgha-pivaragrivoru-
vaksah-sthalam alpa-madhyamam
candramsu-gaurais churitam tanuruhair
visvag bhujanika-satam nakhayudham
durasadam sarva-nijetarayudhapraveka-
vidravita-daitya-danavam

Hiranyakasipu studied the form of the Lord, trying to decide who the
form of Nrsimhadeva standing before him was. The Lord’s form was
extremely fearsome because of His angry eyes, which resembled molten
gold; His shining mane, which expanded the dimensions of His fearful
face; His deadly teeth; and His razor-sharp tongue, which moved about
like a dueling sword. His ears were erect and motionless, and His
nostrils and gaping mouth appeared like caves of a mountain. His jaws
parted fearfully, and His entire body touched the sky. His neck was very
short and thick, His chest broad, His waist thin, and the hairs on His
body as white as the rays of the moon. His arms, which resembled flanks
of soldiers, spread in all directions as He killed the demons, rogues and
atheists with His conchshell, disc, club, lotus and other natural
weapons.

(ஸ்ரீ மத் பாகவதம் -7-ஸ்கந்தம்-19-22- வர்ணனை ஸூ கர் -நரஸிம்ஹ ரூபம்
மீமாம்சமானசய சமுதிதோ கிராதோ நரஸிம்ஹ ரூபஸ் தத் அலம் பயங்கம்-ப்ரதாப்த-சமிகர சண்ட லோசனம்-
ஸ்புரத் சதகேசர ஜ்ரும்பிதநனம்-கரள தம்ஸ்த்ரம்-கராவல கஞ்சலஸுரந்த ஜிஹ்வம் ப்ருகுதி முகோல்பணம்-
ஸ்தப்தோர்த்வ கர்ணம் -கிரி கந்தரத்புத வ்யதஸ்ய நாஸம் ஹனு பேத பிஷணம் த்வி ஸ்ப்ர்சத் கயம்
அதிர்ஹ பிவர கிரிவோரு வஷஸ்தலம் -அல்ப மத்யம் சந்திராம்சு கௌரைஸ் சுரிதம் தனுருஹைர் விஸ்வக் புஜங்கிக-
சதம் நகாயுதம் துரஸ்தம் சர்வ நிஜேதர யுத ப்ரவேக வித்ரவித-தைத்ய தனவம்-

ஹிரண்யன் -ஸ்ரீ நரஸிம்ஹ ரூபம் கண்டான் -பயங்கர ரூபம் -உருகும் தங்கம் போன்ற கண்கள் -ஒளி வீசும் பயங்கர முகம் –
பயங்கர பற்கள் -ஒளி வீசும் வாள் போன்ற நாக்கு -நீண்ட அசையாத காதுகள் -குகை போன்ற மூக்குத் த்வாரங்கள் –
பயங்கரமாக அசையும் தாடைகள் -ஆகாசம் வரை வளர்ந்த திரு மேனி -குறுகிய அடர்ந்த கழுத்து -அகன்ற மார்பகம் –
குறுகிய இடை -சந்த்ர கிரணங்கள் போலே வெளுத்த ரோமங்கள் -திவ்ய ஆயுதங்கள் கொண்டு நிரசித்த அசுரர் ராக்ஷசர்
கூட்டங்கள் போலே திரு உகிராலே நிரசிக்க வல்ல திரு உருவம் )

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 14, 2020

சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும் இதர விஷயங்களிலே ருசி யற்று
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது –
ஹேயத்திலே ஹேயதா புத்தியும் உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும் வேண்டாவோ -பேற்றுக்கும்
கீழில் பாட்டில்-ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று –
இதில் – ருசி தான் வேண்டுவது – என்கிறது –

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும் அப்பெரிய பேற்றை பெரும் போது
தனக்கு ருசி வேண்டாவோ – இத்தலை நினையாத போதும் நினைத்திருந்து நோக்குமவன் –
விரோதியான இவ்வாகாரத்தை யன்றோ துடைத்தது– ஏனத்துருவாய் இடந்த –ஞானப் பிரான்
இவை அழிந்து கிடந்த சம்ஹார காலத்திலும் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வ பாவனான வனுடைய
திருவடிகளை நாள் தோறும் பொருந்தி ஆஸ்ரயியாதார்க்கு பரமாகாச சப்த வாஸ்யமான பரமபதம் உண்டாமோ –

———————-

அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக
நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது -அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –
ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்-இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ  நீ செய்தது –
பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்றை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ – என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

———————-

கீழ்ப் பாட்டிலே ஆஸ்ரித வாத்சல்யம் சொல்லிற்று -இதில் ஆஸ்ரித வாத்சல்ய கார்யமான
அவர்கள் விரோதிகள் பக்கல் யுண்டான சீற்றம் சொல்லுகிறது –

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று -93-

கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இறே வாத்சல்யம்
முன்னணை  கன்றைக் கொம்பிலே சூடுகை இறே –
கொண்ட சீற்றம் உண்டு என்று-முடிந்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே -முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு –
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்
கோபச்ய வசமே இவான்-அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்

——————

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –
இறையேனும் -பர வ்யூஹாதிகளில் போகாது –எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

————–

இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு சேதனர் சம்சாரத்துக்குப் பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என்
என்று விஸ்மிதர் ஆகிறார் –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

இவை இங்கனே குறைவற்று இருக்க சம்சாரத்தைச் சென்று ப்ராபிக்கிற பிரகாரம் இருந்தபடி என்
உஜ்ஜீவிக்கைக்கு நேர் வழி கிடக்க விநாசத்துக்கு ஈடான விலக்கடி தேடி அனர்த்தப் படுவதே

—————-

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்களுக்கு புறம்பாய் நின்று பல பிரதமாக வல்லது ஓன்று இல்லை கிடாய்
விஹிதத்தைச் செய்து நிஷிதத்தைப் பரிஹரித்து போருகிற  நம்மோடு விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில்-சர்வமும் பகவததீனம் அன்றோ-
கார்யத்தில் ஒன்றும் இல்லை பிரதிபத்தி மாத்ரமே இவனுக்கு உள்ளது
அவன் கிருபையாலே இவன் சத்தை அழியாதே கிடக்கிற இத்தனை –

—————

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில்-உன் திருவடிகளை கிட்டி அன்றோ அவள்
அந்த பிரசாதம் பெற்றது-இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது-
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது-பிறரை ஸூத்தராக்கும் படி பார்த்து அருளினான் –
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை-உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை

—————–

அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது-அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

——————–

ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

நீயும்  உளையாய்   இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க்  காண் –
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்-பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன்  என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத்  தடுக்காதார் நெஞ்சை வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்–அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம்–
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –

————-

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்
பெறுவதும் அவனையே-பெறுகைக்கு சாதனமும்-அவனே என்று -அத்யவசித்துப்   போவாய் -என்கிறார் –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட ஒரு திருவடிகளும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும் ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் -திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் அவனே –
இப்படி அத்யவசிக்க-அனந்தரம் பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம் பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி வாழும் அத்தனை என்கிறார்  –

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 14, 2020

ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய திரு நாமமே அன்றோ
பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும் எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –
எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள் கரையிலே முதலிகளை வைத்தால் போலே
பரம பதத்திலே வைத்து தாஸ்யாம்ருத தத்தைக்  கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
திரு நாமம் தானே அள்ளி எடுத்துக் கொடு போய் பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –

—————

கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

இப் பாட்டால் சர்வ சமாஸ்ரயணீயத்வமும் சௌலப்யமும் ஆஸ்ரித பாரதந்த்ர்யமும் போக்யதையும்
விரோதி நிரசனமும் குறை வற்று வர்த்திக்கிற தேசம் என்கிறது –
பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —

—————

அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன
மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ-அது கொண்டு கார்யம் கொள்ளாதே-
மலையை எடுப்பது ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து வெருமனேயோ என்கிறார்

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் -83-

இத்தால் ஆஸ்ரிதர்க்கு விரோதம் வந்த போது சங்கல்பத்தால் அன்றியே தன்னுடம்பு நோவக்
கார்யம் செய்யும் என்றபடி –

—————

ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு-

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

உரோஸிக் கொண்டு எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு-அநாயாசேன அளந்த வன்று –
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது இப்போது திரு எயிற்றுக்கு
ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ

—————-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

சாஷாத் கரிப்பதுக்கு முன்னே ஜ்ஞான லாபத்தைக் கொண்டு ஆறி இருக்கக் கடவதோ
ப்ராப்தி சமயத்திலும் கூட அபர்யாப்தி வேண்டி இருக்க ஜ்ஞான லாபத் தளவிலே திருப்தி பிறந்து இருக்கவோ
இனி அவ்வளவு அமையும் என்னும் படி இருக்குமாகில் அது பிராப்யமாக மாட்டாதே
பிறந்த ஞான லாபத் தளவிலே பர்யவசித்து ஆறி இருக்குமது அஞ்ஞான கார்யமேயாம் அத்தனை இறே
மயர்வற மதி நலம் அருளினன் என்ற அனந்தரத்திலே இறே மடல் எடுத்தது –

—————

இவர் இருந்த இடத்திலே பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –
இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன–தரியான் இறே அவன்  

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இறே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத படி –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்-புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம்  விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு-
திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது -தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –
ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப் பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –

————-

சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆன பின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே -இனி நரகத்துக்கு ஆள் கிடையாது-
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று-
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் -அல்லாத இடம் காடு-

————

வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப்  பெற்றேனே -என்கிறார் –

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்
நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ-நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே

————

சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் எம்பெருமான் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –

———-

அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு-அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்த படி சொல்லுகிறார் –
நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலன் -இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 14, 2020

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பால் குடிக்க இரக்கிறேன் இறே-நீ முற்பட்டு இருக்க உன்னை இரக்கிறேன் இறே -கைக்கூலி கொடுத்துப் பற்ற வேண்டும் விஷயம்
பிரதிபஷத்தின் மேலே சினந்து வாரா நின்றுள்ள திரு வாழியைக் கையிலே யுடையவன் பக்கல் உண்டான
ஸ்நேஹத்தை விடாதே ஒழிய வேணும்-எனக்கும் உபதேசிக்க வல்ல-அளவுடைய நெஞ்சே

இவ் வேப்பங்குடி நீரைப் பருகைக்கு உன் காலைப் பிடித்து வேண்டிக் கொள்கிறேன் கிடாய் -என்கிறார் –

————–

இவருடைய கரணங்கள் ஆனவை இவருக்கு முன்னே அங்கே  ப்ரவணமாய்-
ஆழ்வீர்-இவ்விஷயத்தை விடாதே கிடீர் -என்று உபதேசிக்கப் புக்கன
குரு சிஷ்ய க்ரமம் மாறி நின்றபடி –

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

நெஞ்சு சென்ற கடல் ஸ்தானத்திலே அன்பு என்னலாம் படி காணும் சமைந்த படி-

அன்பு என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தெரியாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
நெஞ்சானது திருவாழி யுடையவனானவனைக் கிட்டி அனுபவி என்று உபதேசியா நிற்கும் –

சாபராதராய் இருந்துள்ள நம்மால் அவனைக் கிட்டப் போமோ என்னில்
ஓர் அடி வர நின்றால் குற்றமே அன்றியே குற்றம் கிடக்கும் நாளும் காண வரியான் என்கிறது-

—————

அவை மத்யஸ்தமாம் படி தாம் அவ்விஷயத்திலே ப்ரவணரான படி சொல்லுகிறது –

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பூந்துழா  யானை -புகழ்ந்து அல்லது நிற்க ஒண்ணாத விஷயம் –

உடலும் உயிரும் ஏற்றான் -இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்யதயா சேஷம்-அவன் சேஷி -என்கிறது-

ஏற்றான் -தரித்தான் -என்றுமாம் –

இவை யாகில் தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –

ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று-ரஷகத்வத்தைப் பற்றிலும் அவனையே பற்ற வேணும் –

————–

அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன் என்கிறார் -உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு
அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும்-இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் –

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

ஏற்றான்-எயில் எரித்தான்-நீற்றான்=கூற்றொரு பால் மங்கையான் வார் சடையான்-கங்கை யானானவன்
புள்ளூர்ந்தான்-மார்விடந்தான்-நிழல் மணி வண்ணத்தான்-பூ மகளான்-நீண் முடியான் நீள் கழலாவனுடைய காப்பு -ரஷை என்றபடி

—————–

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

ஈஸ்வரனுக்குப் புரவர் போலே பதினாலு பேர் உண்டு இ றே –
சூர்யன் -சந்தரன் -காற்று -நெருப்பு -ஆகாயம் -பூமி நீர் மனம் -யமன் -பகல் இரவு -ப்ராதாஸ் சந்த்யை -சாயம் சந்த்யை -தர்மம் –
இச் சேதனர் செய்யும் கர்மங்களை ஆராயக் கடவர்கள்
அவர்கள் உன்னை அனுசந்திக்க-விட்டுக் கடக்க நிற்பார்கள்
அவனுடையாரை நோக்கக் கடவன் அவனே யன்றோ -நாம் என்-என்று கடக்க நிற்பார்கள் –

உன்னை அனுசந்திப்பார்க்கு ஜராதிகளான ஷட்பாவ விகாரங்களும் முதலிலே இல்லை –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் போம் வழி என்னும் படி நிரதிசய போக்யமான
அர்ச்சிராதி மார்க்கத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள் -நல்ல வழியே போகப் பெறுவார்கள் என்றுமாம்-

—————————–

பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப் பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-

ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –

—————-

நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்-செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை
அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக-நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத்
தன்னடையே ஓடிப் போம் என்கிறார் –
உகந்து அருளின தேசங்கள் பூமியிலே உண்டாய் இருக்க -சம்சாரம் உண்டோ -என்கிறது

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

இவ்வோ இடங்களிலே அச் செயல்களைச் செய்தான் என்று அனுசந்தித்துச் சொல்லுவோர்க்குத்
தாம் தாம் பண்ணிக் கொண்ட துக்கங்கள் அடையத் தாம்தாமை விட்டோடிப் போம் என்கிறார் –

———–

அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால்
நமக்கு-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் என்கிறார் –

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-

சோறு உண்டாய் இருக்க யார் பசியோடு இருக்க வல்லார் -என்னுமா போலே-
இனி நமக்கு இடர் வந்ததாகில் முதலை பட்டது படும் அத்தனை –
இத்தால் ஆஸ்ரிதர் பக்கலிலும் அநாஸ்ரிதர் பக்கலிலும் அவன் இருக்கும் படி சொல்லுகிறது
விரோதியைப் போக்கி திரு அநந்த ஆழ்வானைப் போலே அடிமை கொள்ளும் -என்றபடி   –
பண்டு பூப் பறித்தான் ஒருவன் இடரைப் போக்கித் தனக்காக்கிக் கொண்டான் கண்டாயே
நமக்கும் அப்படியே செய்யும் காண் –

—————-

ஆஸ்ரிதர் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் –

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  –79-

நீ செய்த செயலை அனுசந்தித்து நாட்டார்   உன்னைக் கொண்டாடும்படி தான் செய்தாயோ –
குணமே குற்றமாய்க் குற்றமும் குணமாம் கிடீர் சம்சாரம் –
கொடுத்த பின்பும் -தன்னத்தையே கொடுத்ததாக நினைத்து இருந்தான்
கொண்டாரை என்று பாடமான போது-பிரயோஜனத்தைச் சொல்லிற்று ஆகிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் வேண்டா கிடீர்-இந்தச் செயலைக் காண வமையும் கிடீர் -நமக்கு ஸ்ரோத்ராதிகள் உண்டாகைக்கு –

————————

ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும்
ந ஷமாமி -என்கிறத்தைப்  பாராதே
அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் – என்கிறது –

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் –80-

சரணம் என்றொரு உக்தி மாதரம் சொன்னால்-பின்னை மேலுள்ளதனை தன் தலையிலே
ஏறிட்டுக் கொண்டு நோக்குமவனை யன்றோ பற்ற அடுப்பது –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27-
வத்யதாம்-என்றவரையே -அஸ்மாபிஸ் துல்யோ பவது-என்னப் பண்ணுகை –

——————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 13, 2020

இதில்-அவனே அறிந்து இவற்றை நோக்க  வேண்டுகிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –
ஹிதம் அறியாமையே அல்ல-தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள் -என்கிறது –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி அடங்கலும் பிராட்டியும் தானும் லீலா ரசம் அநுபவிக்கும் படியாய் இருக்கிறது
அவளுக்குப் பிரியமாகத் தன் திரு உள்ளத்தாலே சங்கல்ப்பித்தவை இவை-

இத்தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

——————-

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்-அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  சுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்-படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

——————

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

நாட்டார் சப்தாதி விஷயங்களை விரும்பிவது நிர் லஜ்ஜராய் கொண்டாய்த்து
அப்படியே நானும் நிர் லஜ்ஜனாய்க் கொண்டு அவற்றைச் செறியேன்
விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு -ஜ்ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும்படியால் இறே –

—————————————

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

எம்பெருமான் மறக்க பூர்வாகங்கள் நசிக்கும்
அவன் அவிஜ்ஞாதாவாய் இருக்க
உத்தராகம் ஸ்லேஷியாது
இது திருவாய்க் குலத் தாழ்வானுக்கு  ஜீயர் அருளிச் செய்த வார்த்தை-

————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

தான் கொடுத்த அறிவு கொண்டு தன்னை அனுபவிப்பார்க்கு இழிந்த விடம் எங்கும் துறையாம்படி
குண சேஷ்டிதாதி களுக்கு வாசகமான-ஆயிரம் திரு நாமங்களை உடையானாய்
வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடையனாய்-ஸ்ரமஹரமான வடிவை உடையனானவனை ஆஸ்ரயித்தால்
வினையால் அடர்ப்படார் -வெந்நரகில்  சேரார்  -தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –
பால் குடிக்க நோய் தீருமா போலே-அஞ்சலி மாத்ரத்தாலே போம் –

———————-

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

ஓதுவதும் ஒர்ப்பனவும் ஸ்ரவண மனனம் பண்ணுவதும்
ரஷணத்துக்கு  பரிகரமான திரு வாழியை உடைய ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை
கீழ்ச் சொன்ன இவ்வர்த்தத்துக்கு சாதன ரூபமாகச் செய்யுமவை இறே –

பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்

————————————

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம் எல்லாம் அஸத் கல்பம் –

தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இறே

————————

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக உடையயையுமாய்-சம்சாரத்திலே வந்து அவதரிக்கும் ஸ்வ பாவனுமாய்
இரண்டு இடத்துக்கும் சாதாரணமாகத்-திருமலையில் நின்று அருளுவானுமாய் –
நல்ல ஸ்வரத்தை யுதைத்தான வேதைக சமதி கம்யமாய் உள்ள நீ-கிடந்த பால் உணர்வார் யார்-வேதம் காட்டுகிற அர்த்த சக்தி உன்னாலே

———————

உணர்வார் ஆர் என்று பிறர் விஷயமாகச் சொல்லிற்று–அது கிடக்க உன்னாலே தான் உன்னை அறியப் போமோ
என்கிறார் –

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

உன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியம் கண்ணால் கண்டு போம் இத்தனை போக்கி-ஓரடி ஆராயப் போமோ
இவ்வாதார ஆதேய பாவம் புறம்பு கண்டிலோம் -என்கிறார்
இத்தால்
அவன் தன்னாலும் அவன் படி சொல்லப் போகாது -என்றபடி
இந்த ஆலுக்கு ஆதார பூமி தான்-நீருக்கு உள்ளே கரையாதே கிடந்தது ஆரைப் பற்றி  –

இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார்

————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

நாமத்தால் –மந்த்ரத்துக்கு தேச கால நியதியும்=அதிகார நியதியும் வேணும் என்று இருந்தி கோளாகில்
நாமத்தால் ஏத்துவது -ஆரை என்னில் -திருமாலை –வகுத்த விஷயத்தை -அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –
மாதா பிதாக்கள் பேர் சொல்லச் சடங்கு வேணுமோ -இம்மாத்ரத்தைக் குவாலாக்குகைக்கு அவள் கூடி இருந்தாள்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 13, 2020

நெஞ்சே -அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நமக்கு இனிதாக நாம்
இவ்வாயாலே திரு நாமத்தைச் சொல்லவே
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் விரோதியைப் போக்கித் தன்னை அவனுக்குக் கொடுத்தாப் போலே
நம் விரோதியையையும் போக்கி நமக்குத் தன்னைக் கொடு வந்து தரும் கிடாய் என்கிறார் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

அவனுடைய திரு நாமத்தை அனுசந்தி
நமக்கு வேண்டுவது அச் சிறுக்கனோபாதி திரு நாமத்தை எண்ணுகை –
பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் நம்மை விட்டுக் கொடான்
எண்ண வொட்டாதவன் பாடு   அறிதியிறே-

————-

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

திருமால் -வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி-

அபிமதங்களைக் கடிப்பிக்கும் கடகையான பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிற சர்வேஸ்வரன்

—————————–

கார்ய காலத்திலே வந்து – பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே –
கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள் அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது –
எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று கீழ்
இதில் தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

கைங்கர்யம் ஸ்வ புத்த்யதீனம் அன்று -என்கிறது-இருப்பு அபேஷிதமான போதைக்கு சிம்ஹாசனமாய் இருக்கும் –

நிற்கை திரு உள்ளமான போது பாதுகையாய் இருக்கும்-திருக் கண் வளர்ந்து அருளும் போதைக்கு
பள்ளி மெத்தையாய் இருக்கும்-ஒரு மிதுனத்துக்கு இளைய பெருமாளைப் போலே அந்தரங்க சேவை –

பிராட்டியும் தானும் கூடத் துகைக்கையால் ஒரு சேதனன் என்று அவர்கள் கூச வேண்டாத படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருக்கும் படி –

———————————–

அப்படுக்கையும் தள்ளிப் பொகட்டுத் தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக
இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன் என்கிறார் –
எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து   பரிமாறும்படி   அவன் ஸ்வரூபம் –

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

காளியன் ஆகிற  அரவத்தை விட்டு
குவலயா பீடத்தை இறுத்து
பசுக்களை மேய்த்து
குருந்தத்தை ஒசித்து
புள்ளைக் கீண்டு
குரவையைக் கோத்து
குடமாடி
பேய் முலை உண்டு
மல்லரை முடித்து
கோவர்த்தனத்தை குடையாக எடுத்து
இது எல்லாம் செய்தான் -அவன் –அப்படுக்கையும் அங்கு உள்ளார் பரிமாற்றத்தையும் விட்டு வந்து கிடீர்
ஆஸ்ரிதர்க்காக இப்பாடு படுகிறது -இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் –

இது நிரல் நிரை என்று தமிழர் சொல்லும் லக்ஷணம் –

—————–

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –
செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் -பேர் ஆராயில் குவலயா பீடம் தொடக்கமானவை பட்டது படும்

—————————–

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

கடற்கரையிலே குடில்;  கட்டி இருக்கும் காட்டில் கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ
அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்

பேரே வரப் பிதற்றல் -கன்று நின்ற இடத்தே தாய் வருமா போலே வாசிதமாக-திரு நாமம் வாயிலே வரும் படி

அக்ரமமாகச் சொல்லிக் கூப்பிடும் அத்தனை

அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி ஒருவரால் அறிந்ததே விடப் போமோ
என்கிறார் –

————————

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

நயிக்கப் படுகின்ற திரு மந்த்ரத்துக்கு நிர்வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு
அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன்  –

திரு நாமம் ஆஸ்ரயித்து-அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் –

அயல் நின்ற வல்வினையென்று திரு நாமம் சொல்லாத போது தமக்கு உள்ள வியசனம்-

————————–

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

நாம் திரு மந்த்ரம் தன்னில் வாசனை பண்ணுகிறது பழுதின்றி மாலடியிலே   கை தொழுகைக்காக –
விச்சேத சங்கை வாராத படி சர்வேஸ்வரன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்காக

ஆன பின்பு நமக்கு ஆறி இருக்க அவசரம் இல்லை கடுகச் சென்று கிட்டு –

—————————–

போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்
விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில் தசரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் –

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

அம்பின் கூர்மையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை
இத்தால் தன்னைப் பற்றி இருப்பார்க்கு பிராட்டியோடு ஒக்கப் பரிந்து கார்யம் செய்யும் என்னும் இடத்தையும்
அப்பிராட்டி அம்பு எய்யும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம்   உள்ளது என்னும் இடத்தையும்
நம் அபேஷிதங்கள் செய்விக்கைக்கு அவள் புருஷகாரம் என்கையும்
அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணன் பட்டது படுவார் என்னும் இடத்தையும்-சொல்லுகிறது-

கீழே இந்திரிய ஜெயம்  பண்ணு என்றது-தொழு என்றது-திரு நாமம் சொல் என்றது நினை என்றது
என்றதாகப் பல படிகளை சொல்லிற்று –
இதுக்கு கீழ் எல்லாம் ஷட்க த்ரயத்தில் வார்த்தை போலே ஸ்வரூபம் விசதமாகைக்குச் சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே-உணர்ந்த வன்று அவனல்லது இல்லை –

———————–

இவர்கள் கீழ்ப் பட்டதும்
இப்போது படுகிறதும்
மேல் படக் கடவதும்
எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே
அவனே உபாயமாம் இத்தனை இறே –

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

இத்தால் சிறியாரோடு பெரியாரோடு வாசியற தம் தம்முடைய ரக்ஷணம் தங்கள் அறிய மாட்டார்கள் –
இவனே சர்வர்க்கும் ரக்ஷண பிரகாரம் அறியுமாவான் என்றதாய்த்து –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –