ஸ்ரீ முதல் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

இதில்-அவனே அறிந்து இவற்றை நோக்க  வேண்டுகிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –
ஹிதம் அறியாமையே அல்ல-தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள் -என்கிறது –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி அடங்கலும் பிராட்டியும் தானும் லீலா ரசம் அநுபவிக்கும் படியாய் இருக்கிறது
அவளுக்குப் பிரியமாகத் தன் திரு உள்ளத்தாலே சங்கல்ப்பித்தவை இவை-

இத்தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

——————-

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்-அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  சுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்-படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

——————

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

நாட்டார் சப்தாதி விஷயங்களை விரும்பிவது நிர் லஜ்ஜராய் கொண்டாய்த்து
அப்படியே நானும் நிர் லஜ்ஜனாய்க் கொண்டு அவற்றைச் செறியேன்
விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு -ஜ்ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும்படியால் இறே –

—————————————

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

எம்பெருமான் மறக்க பூர்வாகங்கள் நசிக்கும்
அவன் அவிஜ்ஞாதாவாய் இருக்க
உத்தராகம் ஸ்லேஷியாது
இது திருவாய்க் குலத் தாழ்வானுக்கு  ஜீயர் அருளிச் செய்த வார்த்தை-

————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

தான் கொடுத்த அறிவு கொண்டு தன்னை அனுபவிப்பார்க்கு இழிந்த விடம் எங்கும் துறையாம்படி
குண சேஷ்டிதாதி களுக்கு வாசகமான-ஆயிரம் திரு நாமங்களை உடையானாய்
வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடையனாய்-ஸ்ரமஹரமான வடிவை உடையனானவனை ஆஸ்ரயித்தால்
வினையால் அடர்ப்படார் -வெந்நரகில்  சேரார்  -தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –
பால் குடிக்க நோய் தீருமா போலே-அஞ்சலி மாத்ரத்தாலே போம் –

———————-

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

ஓதுவதும் ஒர்ப்பனவும் ஸ்ரவண மனனம் பண்ணுவதும்
ரஷணத்துக்கு  பரிகரமான திரு வாழியை உடைய ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை
கீழ்ச் சொன்ன இவ்வர்த்தத்துக்கு சாதன ரூபமாகச் செய்யுமவை இறே –

பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்

————————————

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம் எல்லாம் அஸத் கல்பம் –

தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இறே

————————

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக உடையயையுமாய்-சம்சாரத்திலே வந்து அவதரிக்கும் ஸ்வ பாவனுமாய்
இரண்டு இடத்துக்கும் சாதாரணமாகத்-திருமலையில் நின்று அருளுவானுமாய் –
நல்ல ஸ்வரத்தை யுதைத்தான வேதைக சமதி கம்யமாய் உள்ள நீ-கிடந்த பால் உணர்வார் யார்-வேதம் காட்டுகிற அர்த்த சக்தி உன்னாலே

———————

உணர்வார் ஆர் என்று பிறர் விஷயமாகச் சொல்லிற்று–அது கிடக்க உன்னாலே தான் உன்னை அறியப் போமோ
என்கிறார் –

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

உன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியம் கண்ணால் கண்டு போம் இத்தனை போக்கி-ஓரடி ஆராயப் போமோ
இவ்வாதார ஆதேய பாவம் புறம்பு கண்டிலோம் -என்கிறார்
இத்தால்
அவன் தன்னாலும் அவன் படி சொல்லப் போகாது -என்றபடி
இந்த ஆலுக்கு ஆதார பூமி தான்-நீருக்கு உள்ளே கரையாதே கிடந்தது ஆரைப் பற்றி  –

இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார்

————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

நாமத்தால் –மந்த்ரத்துக்கு தேச கால நியதியும்=அதிகார நியதியும் வேணும் என்று இருந்தி கோளாகில்
நாமத்தால் ஏத்துவது -ஆரை என்னில் -திருமாலை –வகுத்த விஷயத்தை -அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –
மாதா பிதாக்கள் பேர் சொல்லச் சடங்கு வேணுமோ -இம்மாத்ரத்தைக் குவாலாக்குகைக்கு அவள் கூடி இருந்தாள்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading