Archive for July, 2020

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ கோதா சதுஸ்லோகி–

July 17, 2020

ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.

தனியன் –

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||

சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்

——————————————————————————————————-

நித்யா பூஷா நிகம ஶிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா: கசவிலு லிதை: காமுகோ மால்ய ரத்நை: |
ஸூக்த்யா யஸ்யா: ஶ்ருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
ஸைஷா தேவீ ஸகல ஜனனீ ஸிஞ்சதாம் மாமபாங்கை: ||–ஸ்லோகம் -1-

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்ய ஸ்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூத்திரம் -போலே

நிஸ் சமோத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூக்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகள் –

ஸூ ப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–
இத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்-

எந்த நாச்சியாரது இணையற்ற மேலான அருளிச்செயலானது (திருப்பாவை) வேதத்தின் உச்சியான வேதாந்தத்திற்கு
நித்ய பூஷணமாய் ஆகிறதோ, எந்த நாச்சியாரது காதலன் (பரந்தாமன்) அவள் குழலினின்று களைந்த அழகிய பூமாலையில்
மிக்க ஆசையுடையவனாயுள்ளானோ, எந்த நாச்சியாரின் ச்ருதிகள் போன்ற போன்ற மங்களமான திருவாக்கிலே பூமி
நல்ல விடிவாகிறதோ அப்படிப்பட்ட லோக மாதாவான இந்த கோதா நாச்சியார் அடியேனைத் தமது கடாக்ஷமாகிற
அமுத மழையால் நனையச் செய்ய வேண்டும்

————————————————————————————————

மாதா சேத் துலஸீ பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹாந்
ப்ராத சேத் யதி ஶேகர ப்ரியதம ஸ்ரீரங்க தாமா யதி |
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தன்யேன ஸம்வர்த்திதா:
கோதா தேவி கதம் த்வம் அந்யஸூலபா ஸாதாரணா ஸ்ரீரஸி ||—ஸ்லோகம் -2-

மாதா சேத்துலசி-
த்வ மாதா துளசி –
மே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான் –

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதார-
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள் –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்
வாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்தன்யேன –
ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூலபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீயை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

ஶ்ரீகோதா தேவியே! உனது தாய் துளசிச் செடியாகும். உனது தந்தை ஆழ்வாராகிய ஶ்ரீவிஷ்ணுசித்தர் ஆவார்.
உனது அண்ணனோ யதிராஜராகிய ஶ்ரீராமாநுஜர் ஆவார். உனக்கு மிகவும் பிரியமானவர் ஶ்ரீரங்கநாதர் ஆவார்.
உனது பிள்ளைகள் உனது வாய் சொல் (ஶ்ரீகோதை அன்னையின் பாசுரங்கள்) அமுதத்தையே
முலைப் பாலாக பருகி வளர்ந்த ஞானவான்கள்.
அன்னையே! நீ எங்ஙனம் சாமான்யமான ஜனங்களுக்கு கிட்ட தகுந்த நிதியாக ஆவாய்?

—————————————————————————————————-

கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிரஸூ நார்ப்பணம் |
ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிஶம் ஸ்ரீதந்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்துமே: ||–ஸ்லோகம் – 3–

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணாஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்
தன் காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட
அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

ஸ்வஸ்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூ நார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப் பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –

உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உன் தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப் பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

கல்பத்தின் ஆதியில் பகவானால் உலகில்லோர்கள் யாவருடைய உஜ்ஜீவனத்தை மனதிற் கொண்டு
தன்னையேத்திப் பாடுதல், ஆச்ரயித்தல், பூவிட்டு அர்ச்சித்தல் சொல்லப்பட்டது கேட்ட பூமிப் பிராட்டி இவற்றை
உலக மக்கள் யாவரும் எப்போதும் அறியும்படி செய்வதற்காக ஶ்ரீவில்லிபுத்தூரிலே பரம வைதிகரான
ஶ்ரீவிஷ்ணு சித்தரான பெரியாழ்வார் திருமகளாக வந்து பிறந்த பரம உதாரகுணமுடைய
ஶ்ரீகோதா தேவியை நமஸ்கரிக்கிறேன்

—————————————————————————————————-

ஆகூ தஸ்ய பரிஷ்க்ரியாம் அநுபமாம் ஆசேஸநம் சக்ஷூஷோ:
ஆனந்தஸ்ய பரம் பராம் அநுகுணாம் ஆராம ஶைலேஶிது: |
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத ஸமேதிதாத்ம விபதாம் கோதாம் உதாராம் ஸ்துமே: ||–ஸ்லோகம் – 4-

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியாம் அநுபமாம் ஆசேஸ நம் சஷூஷோ
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தஸ்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூக ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம் கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

சோலைமலை மணாளனுடைய அபிப்ராயம் நிறைந்த செயல்களுக்கு இணையற்ற அழகூட்டு மவளாயும்,
காணும் கண்களுக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டுபண்ணுமவளாணும், அவனுக்கு எவ்விதத்திலும் தக்கவளாய்,
நிரந்தர ஆனந்த வெள்ளமூட்டும்படி, அவன் நன்மார்பின் மேலும், சுடர்முடி மேலும்,
தான் சூடிக்களைந்த கஸ்தூரி, பூமாலைகளின் பெருகும் நன்மணத்தினால், அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்யும்
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-
திருமாலிருஞ்சோலை, திருவேங்கட மலை என இரண்டையும் “ஆராமசைலம்” என்றும் கூறுவர்

———————————————————————————————-

இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –

ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –

மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே -அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே-நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை
உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்-நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்-

————

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே -அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று –இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே – அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –
இப்படி நினைக்குமவர்கள் -இவ்வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-

———————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய
விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய பரம உத்தேச்யமாக
பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல-

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய
லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று சஞ்சிதமான தனம் யுண்டு
என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர் முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –
சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –
இத்தை அன்றோ-உண்ணும் சோற்றில் முற் கூறும்-துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்ன நோற்ற விதி கொலோ-முகில் வண்ணன் மாயம் கொலோ –
நான் பண்ணின ஸூ க்ருதமோ -இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –

————–

இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டா இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
சர்வேஸ்வரன் –தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-
மால்-சர்வாதிகன் -பிச்சன்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே -இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –

———

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47–

ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

————-

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் -கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –
எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

வேதங்களையும் யுண்டாக்கினாய்- அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும்
எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்
மாலே-திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று-

—————–

நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு-அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம்-

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில்
புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –
அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை பாகனாபிமன்னராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கொண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

————

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

——————————

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ்வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

——————

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-
தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

————–

அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும்
ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –
இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இறே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு
அறிய ஒண்ணாது இருக்கும் படி என்பர் –இவர் இந்த நாட்டிலும் இல்லையே-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-
இதுக்கு மித்ர பாவம் அமையும் –இவ்விஷயத்தில் ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்-

—————–

நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

அனவரதம் அனுசந்தித்து ஸ்வீகார மாத்ரத்தையே பற்றி – மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே
நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————–

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37–

ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இறே –
அதற்குப் புறம்பான பின்பு அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –

————-

ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும்
நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார்

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –
நமக்கு என்றும் ஸ்ரீ யபதியானவனே ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லுகையே ஒத்து ஆவது

—————–

விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே-சகல வேத சஙக்ரஹமான
திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு பற்றப் பாருங்கோள்-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு
அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத் பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-

————-

இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக்
கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே
அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும்
அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்-அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி

———–

சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்-
ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –விலக்காமை-

—————–

ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும்

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள்-
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது- உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————–

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ -அடியே துடங்கி
இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய வேறு புண்ய பாபங்கள் இல்லை
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன்

————-

அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன்-தானே கோபத்தின் வழக்காய் முடித்து வில் இருக்கச் செய்தேயும் கோபத்தால் கொன்றான் –
நின்றதும் வேங்கடமே –அவதாரத்துக்கு பிற்பாடர் ஆனவர்கள் இழக்க ஒண்ணாது என்று அவர்கள் விரோதியைப்
போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –
வந்து –தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –

——-

கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26-

படி யமரர் வாழும் பதி –பூஸூரரான வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற திரு மலை –அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை-

———————-

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்—-27-

கரை கட்டா காவேரி போலே சர்வாதிகான-சர்வேஸ்வரனை
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் தேடி ஓடா நின்ற நெஞ்சு-

————-

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப்
போவது வருவதாக ஒண்ணாது என்று திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே -அது தன்னிலும்
திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே

————————

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி-கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 15, 2020

இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூ த்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே-
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் –

————

அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப்
போகா நின்ற பின்பு இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

ஆஸ்ரய ணீயராக பிரசித்தரான தேவர்களோடு -அவர்களை ஆஸ்ரயித்த மனுஷ்யரோடு வாசி அற-
பெற்ற தாய்க்கு ஆகாத பிரஜை யுண்டோ –
இது வகுத்தது என்று இராதே -பிரயோஜனங்களைக் கொண்டு இழப்பதே –
பலத்தைக் கூலியாக்கி த்யாஜ்யமான ஐஸ்வர் யத்தைப் பலமாகக் கொள்வதே -என்ன தர்ம ஹாநி-

————-

ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு————–13–

இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்கிற நியதி யுண்டோ –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் சர்வாதிகாரம் அன்றோ

———-

அவன் படி இதுவான பின்பு -சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூ த்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

ஜங்கம விமானம் காண் என்று சொல்லித் திரியும் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஈஸ்வரனையும் ஆத்மாவையும் அழிய மாறி உடம்பை வளர்ப்பதே
ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –
தீர்த்த கரராமின் திரிந்து-ஜகத்துக்கு அடங்க ஸூ பாவ ஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
பிள்ளானுக்கு மூத்த தேவப்பிள்ளை பட்டரைக் கண்டு -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க ஆர் முகத்திலே விழிக்க
மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
பட்டர் -தருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -குசலவர்களுக்கு –
திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே-
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத் தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –

————————

தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-
அதி ஸூ குமாரமான திரு மேனியோடு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை
நினைத்து அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—————–15-

இஃது ஒரு ஆஸ்ரித ரஷணம் இருக்கும்படியே
முதல் அழியவோ ஆஸ்ரித ரஷணம் பண்ணுவது -என்று நோவு படுகிறார் —

—————

அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால் இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –
எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ
அகர்ம வச்யனானவன் கர்ம வச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ -ஆனபின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-

அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால் அப்போது இடம் கொடுப்பது
இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது- இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –
வடுக நம்பி -எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –
அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திரு நாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –
நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின
இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –
இத்தால் -ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி-

அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் –
இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ -இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ
அவன் தானே ருசி ஜனகனாயும் பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ

மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும்
ருசி மாத்ரமே உடையானாகை என்றும்
ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்
ஓன்று பட்டரது
ஓன்று திருமலை நம்பியது
ஓன்று ஆழ்வானது-

மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை யடுவித்து மழை பெய்விப்பானும்-அவன் தானே யன்றோ என்கிறார் –
அப்படியே மனத்திடரில்-அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி -ருசி உண்டாக்குவானும் –
தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும் அவனே யன்றோ

——————

செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே தொழும் தகையார் —12-சேஷிகள் இல்லை என்கிறார்-
இங்கு இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-

துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து -அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை
தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆன பின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாச்ரயணீயனாய் இருப்பர்

—————

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீ யனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

அபரிச்சேத்யனானவன்- நித்ய சூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்–ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –

—————–

அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

திரு மாலே- பிராட்டியும் நீயுமாய் இருந்து போது போக்கை அன்றோ உன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த செயல்
இவை யுனக்குப் போருமோ–அன்றிக்கே பிராட்டி பரிய இருக்கும் விஷயம் படும் பாடே -என்றுமாம்-
அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் -விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –

————-

கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து -இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

நாரணன் தன் நாமங்கள் – தாய் பேர் சொல்லுமா போலே – நன்குணர்ந்து –பக்தியாலே உணர்ந்து
நன்கேத்தும்-ஏத்தினால் அல்லது செல்லாமை –காரணங்கள் –ஹேதுக்கள்-அவை யாவன –
இதுக்கடியான பக்தியை யுடையராய் -அதுக்கடியான ருசியை யுடையராய் -அதுக்கடியான ஸூ க்ருதத்தை யுடையராய் –
அதுக்கடியான பகவத் கடாஷத்தை யுடையவர் ஆனவர்களும்
பழி பாவம் கை யகற்றி -பலகாலும் நின்னை வழி வாழ்வார் ஆனவர்களும் வாழப் பெறுவார்-இவ்விரண்டு அதிகாரிகளும்
அழகியதாக அனுசந்திக்கப் பெறுவர்கள்-இத்தால் -உனக்குப்பரியப் பிறந்தார் உன் பிரசாதம் உடையார் அன்றோ –
பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியத் தலைக் கட்டப் பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 15, 2020

ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –கோயில் திருமலை திருக்கடல்மலை திருக்கோவலூர்-

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே-குருக்கத்திப் பூவில் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்-
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்–திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன்

பூதம் -சத்தை பெற்றவர் -எம்பெருமான் திருக் கல்யாண குணங்களை அனுபவித்தே சத்தை பெற்றவர்
கடல் வண்ணன் பூதம் -திருவாய் மொழி -5-2-1–
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது

————

அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-

————

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

பரபக்தி யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–
சூடுதற்கவா -என்று பர பக்தி–பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் –

————–

இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் -அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாகிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு
சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி -நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

நன்கு உணர்ந்து-உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் -அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும் ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
தானத்தால் –பக்தியினுடைய ஸ்தானத்திலே –பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு பூஷணமாக-நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணும்
இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே-அடைவு கெட்டுக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும்

———–

ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என்-

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆஸ்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால் அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-

———-

அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளியும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை-ஒரு புஷ்பமாக ரூபித்து -இதழும் -அல்லியும்-தளமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்-அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பைங்கமலம் -பரந்த பூ ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்
இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ஸ்நேஹத்தை–மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை
நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே-
நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான விலக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –
நெஞ்சை நகரமாக நிரூபிக்கிறது -கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக –

————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் -நகரம் கோயிலாகப் பேசினார் -இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –
அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது-சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

நீரோத மேனி நெடுமாலே –அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது-

———–

இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

————

நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

உகப்பைக் கொண்டே ஓர் –தேவைக்காக ஒண்ணாது –ஓர் –ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-

————

ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க -அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்–இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்-
பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது –
உனக்கு மித்ர பாவமும் அமைந்து இருக்கச் செய்தே அவளை முடித்து உன்னை தந்தது
ஆஸ்ரிதர் பக்கல் உண்டான ஓரம் இறே

————-

பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பூமியை அளந்தது இந் நீர்மைக்கு ஒக்குமோ -அவளுடைய நீர்மைக்கு பூமி சத்ருசமோ –
உன்னுடைய அளந்த வியாபாரம் தான் ஒக்குமோ-

————-

யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண வி றே எடுப்பது –
அந்த ச்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி
தேவர் நோக்கி யருள வேணும்

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
அடியேன் பட்ட கடை – உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம்
அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாஷ்யம் —மஹத்தீர்க்காதிகரணம் :: 2-2-2–ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

சூத். 2-2-10 :: மஹத்தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம் ::

ஐஹிக, ஆமுஷ்கிக பலன்களை அடைய வேண்டுமானால் யாரை நாம் தியானிக்க வேண்டும் ?
கஸ்ச தியேய : ? என்பது ஸகஸ்ரமான காலத்திலிருந்தே கேட்கப்படும் கேள்வி.
காரணம் து தியேய : என்பது உபநிஷத்தின் பாடம். காரணம்தான் எது ? என்றால்
யாதோவா இமாநி பூதாநி ஜாயந்தே—-தத் பிரஹ்மேதி — தன்னை ஒழிய எல்லா பொருளுக்கும் காரணமானது எதுவோ
தனக்கொரு காரணம் இல்லாதது எதுவோ அது தான் பர பிரஹ்மம். அந்த பர பிரஹ்மத்தைத்தான் நாம் சிந்தை பண்ண வேண்டும் .

இந்த பர பிரஹ்மத்துக்கு காரணத்வம் இல்லை என்று சொல்லி வந்தனர் பலர்.
எங்கெல்லாம் காரணத்வ வாக்கியம் உள்ளதோ அவையெல்லாம் பர பிரஹ்ம பரமாகா இல்லை.
அவை சேதனாசேதன பரமாகத்தான் உள்ளன என்று சாங்கியன் என்ன, இந்த நையாயிகன் என்ன இவர்கள் பிரதிக்ஷேபணம் பண்ணவே
அவர்கள் எல்லாருக்கும் இந்திந்த ஸ்ருதி வாக்கியங்களை நீங்கள் கூறுகிற அர்த்தம் பொருந்தாது . இதுதான் அர்த்தம்.
பர பிரஹ்மத்தைத்தான் அவை சொல்லுகின்றன. காரணம் என்று எவை எவைகளை ஸ்ருதி வாக்கியம் சொல்லுகின்றனவோ
அவை அனைத்தும் பர பிரஹ்மத்தான் காட்டுகின்றன என்பதாக
அயோக விவச்சேத, அந்யயோக விவச்சேதத்தாலே அந்த பர பிரஹ்மத்துக்கு காரணத்வத்தை சமன்வயப் படுத்தினார்
ஸமன்வயாத்யத்திலே.

அதைத் தொடர்ந்து வந்த அவிரோதாதியத்திலே முதல் பாதமான ஸ்மிருதி பாதத்தில்
பரிகரிக்கப்பட்ட ஸ்ம்ருதி விபிரதிபதிக்கு யுக்த்யாபாசம் இருக்கு.
அதாவது இன்னும் உண்டான வேறு சில ஸ்ருதி வாக்கியங்களை கொண்டு பார்த்தால் பிரஹ்ம காரண வாதம் எடுபடாது
என்கிற விஷயம் பிரஸ்துதமாக – இத்தனை தூரம் இதரர்கள் வாள் கொண்டு வீச, கேடயம் கொண்டு தடுத்த வியாசர்,
இப்போது கிருஸ்ந பிரசக்தி அதிகாரணத்தோடே இந்த இரண்டாவது தர்க்க பாதத்தோடே நேரே சங்கதி உண்டு.
இதில் பரபக்ஷ பிரதிக்ஷேபத்துக்கே இறங்குகிறார் சூத்ரகாரர்.

ஸ்வ பக்ஷ தோஷாஸ்ச என்று ஸ்ம்ருதி பாதத்தில் கோடிட்டு காட்டினத்தை தர்க்க பாதத்தில் கம்பீரமாக
பர தர்ம வாதிகளை ஒவ்வொருவராக வாத விவாதத்துக்கு அறைகூவி அழைத்து அவள் பக்ஷத்தை எல்லாம் நிரஸனம் பண்ணுகிறார்.
அந்த வகையில் மஹாதீர்க்கதிகரணத்தில் கணாத பக்ஷமான பரமாணுகாரணவாதமும் அஸமஞ்ஜசஹ என்று காட்டப் படுகிறது.
இதுதான் கீழுள்ள விஷயங்களுக்கும் இதற்குமான சங்கதி.

பரமாணுவாதிகள் சொல்வதாவது –
பரமாணுகளின் உள்ளே இடமே கிடையாது. நிரம்சமானது. நிரவயவம் (Dimentionless) –
அகல, நீள , உயர, கன பரிமாணங்கள் அதற்கு கிடையாது. காரணம் அத்யந்த ஸூக்ஷ்மமானது .
ஜகத்து பரமாணு சமூகத்தால் ஆனது அதாவது பரமாணுக்களே ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறான்.
காபில அநுயாயிகளான சாங்கியன் ஆநுமானிக பிரதானத்தை உபாதானமாக சொன்னது போலே,
இவர்களும் ஆநுமானிக பரமாணுவை ஜகத் உபாதான காரணம் என்கின்றனர்.
விப்ரதிஷேதாச்ச அசமஞ்சஸம் என்று கீழ் அதிகாரணத்தில் சொன்ன பொருந்தாமையை
இந்த அதிகரண பிரதி ஸூத்ரத்திலும் அன்வயித்துக் கொள்ள வேண்டும்.

மஹத்தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம் —
பரிமண்டலம் = பரமாணு
ஹ்ரஸ்வம் = த்வயணுகம்
மஹத்தீர்க்கம் = த்ரியணுகம்
இது எதுவும் கூட காரணமாகாது.

வா ஸப்தே ச அர்த்தே = அதுவா, இதுவா என்றல்லாமல், அதுவும் கூட என்கிற சமுச்சயார்த்ததில் வந்துள்ளது.
பரமாணு 2 சேர்ந்தால் த்வியணுகம் . 3 த்வியணுகம் சேர்ந்தால் அது த்ரியணுகம் .அப்பேர்பட்டது 4 சேர்ந்தால் சதுரணுகம் ஆகிறது.
இப்படி ஸூக்ஷ்ம அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஸ்தூல ஜகத்தாகிறது என்பது அவர்களுடைய மதம்.

ஷட் பார்ஸ்வ ஸம்யோகம் :
ஷட்பார்ஸ்வ முடைய செங்கல் ஒவ்வொன்றாக சேர்த்து சுவர் எழும்புவதுபோல ஷட்பார்ஸ்வ முடைய பரமாணு முறையே
த்வியணுகம் , த்ரியணுகம் என்று உண்டாவது. அணுக்கள் நிரவயமானதால், அணுவுக்குள் அணு பிரவேசித்தல் முடியாது,
செங்கலுக்குள் செங்கல் போகாதாப்போலே பரமாணுகளின் உள்ளே இடமே கிடையாது.
அப்படி போக முடிந்தால், பஹுத்வம் (அ) ஸ்தூலத்வம் சித்திக்காது,
ஸாம்சமான அணுவுக்குள் ஸாம்சமான அணு , அதனுள் இன்னொன்று என்று அநவஸ்தா தோஷம் வந்து சேரும்.
அத்யந்த அணுப் பிரமாணம்.
அல்ப பரிமாணம்
மத்யம பரிமாணம்
மஹத் பரிமாணம்
பரம பரிமாணம்
விபு
என்று அடுத்தடுத்து அணு மஹத்தாக விகரிக்கிறது என்கிறான்.
இதில் நிரவயவத்தை ஒத்துக் கொண்டால் தருமமே சித்திப்பதில்லை.
ஸாவயவத்தை ஒத்துக் கொண்டால் தர்மியே சித்திப்பதில்லை. அதாவது
வேஷ்டிக்கு அவயவம் ஓத பிரோத்தங்கள் (உண்டை, பாவு) என்கிற நூல் ஒன்றோடு ஒன்று சேரும்போது வஸ்திரம் ஆகிறது.
இப்படி இரண்டு அவயவங்கள் ஒன்று சேரும் போது அவற்றைக் காட்டிலும் பெரிதான அவையவம் உண்டாகிறது.
இது போல இரண்டு பரமாணுக்கள் ஒன்று சேரும் போது அதைக் காட்டிலும் பெரியதான த்வியணுகம் உண்டாக்கவேண்டும்.
ஆனால் அணுக்கள் நிரவயமாக சொல்லப் படுவதால், அவைகளைக் காட்டிலும் பெரிய பரிமாணம் உள்ள பொருளே (தருமமே) உண்டாக வழி இல்லை.

இந்த தோஷத்தை கழிக்க, அணுக்கள் ஸாவயவம் என்றால், அனவஸ்தா தோஷம் சித்திக்கும்.
ஸாவயவம் என்றால் அவை மேலும் பல அவயவங்களாக பிரிக்கக் கூடும் என்பதால் முடிவில் ,
பிரிக்க முடியாத மூல காரணம் ஒன்று (தர்மியே) இல்லையாகிவிடும். .
இதுபோலவே இவர்களுடைய மற்ற கொள்கைகளும் பொருந்தாதவையே – என்பதை ”வா” சப்தத்தால் குறிப்பிடப் படுகிற ”ச”காரம் காட்டும்.

—————–

சூத். 2-2-11 :: உபயதா அபி ந கர்ம : அத : ததபாவ :

பரமாணுக்கள் சேர்ந்து த்வ்யணுகம், த்ரஸரேணு என அடுத்தடுத்து உண்டாக மூல காரணம் பரமாணுவில் ஏற்படும் முதற்கிரியை என்றும்,
புண்ய பாபங்களால் உண்டாகும் அதிருஷ்டம் பக்குவமாகிற போது அதுவே முதற் கிரியைக்குக் காரணமாகிறது என்கின்றனர்.
காரணங்கள் இரண்டு.
1. அசாதாரண காரணம் = அவியஹிதமான இவைகள் இருந்தால் அல்லது காரியம் நடவாதான நாம் சொல்லும்
உபாதான, நிமித்த காரணங்கள் எல்லாம் அஸாதாரண காரணம் என்றும்
2. சாதாரண காரணம் = மற்ற கால தேசாதிகள் சாமான்ய காரணம் போல, பகவானும் ஸாதாரண காரணம் என்கின்றனர்.
அங்கனாகில் பரமாணுவில் ஏற்படும் இந்த முதற்கிரியைக்குக் காரணமான அதிருஷ்டம்
பரமாணுவில் உள்ளதா? (அ) ஜீவனிடம் உள்ளதா? என்ற கேள்வி பிறக்கிறது.

முதல் யோஜனையாக ஜீவன் செய்த புண்ய பாப க்ரியைகளால் உண்டாகும் அதிருஷ்டம் பரமாணுவில் இருக்க வழியில்லை.
அதை ஏற்றாலும், எப்போதுமே கிரியை ஏற்பட்டு, ஸ்ருஷ்டி நித்யமாகப் போகும்.
இரண்டாவது யோஜனையாக, அந்த அதிருஷ்டம் ஜீவனிடத்தில் தான் இருக்கிறது என்று கொள்வோமானால் ,
பரமாணுவில் கிரியை ஏற்படுவது சாத்தியமில்லை.
இரண்டுக்குமான ஸம்யோகத்தால் பரமாணுவில் கிரியை ஏற்படலாகுவது என்றாலும் , கர்ம பிரவாஹம் நித்தியமாய்,
சிருஷ்டியும் எப்போதும் நடந்து கொண்டே இருக்க, விஸர்க்காதிகள் அஸம்பவம்.

உபயதா அபி – இந்த அத்ருஷ்டம் அணுவிலோ, ஜீவனிடமோ இரண்டில் எத்தனிடத்தில் இருந்தாலும்
ந கர்ம – சொல்லப்பட்ட முதற்கிரியை ஏற்படமுடியாது.
அத – ஆதலால்
ததபாவ — பரமாணுக்கள் சேர்ந்து த்வ்யணுகம், த்ரஸரேணு இத்தியாதி ஏற்படுகின்றன என்பது பொருந்தாது.

மேலும் புண்ய, பாபங்கள்தான் ஒரு மொத்தமாக பலன் கொடுப்பதில்லை. அவை
சஞ்சித கர்மா ஜன்மாந்தரத்திலும்
ஆரப்த்த கர்மா கிடைத்த இந்த ஜன்மத்திலுமாக பலன் அளிப்பவை என்கிற விபாகமும்
ஆத்மாக்கள் அநேகம். அவர்கள் பல காலங்களில் பலவிதமாக செய்யும் கர்மங்கள் ஒரே காலத்தில் பக்குவம் ஆனால் அன்றோ ,
ஸ்ருஷ்டி ஒருமுகமாக நடக்க வல்லது? அதுதான் ஈஸ்வர சங்கல்பத்தாலே அணுக்களில் கிரியை ஏற்படுவதாகக் கொண்டல்லது
அவை தமக்குத் தாமே செயலாற்று மிடத்து பொருந்தாது.
இன்னும் பிரம்மாவுக்கு எத்தனைக் காலம் ஸ்ருஷ்டியோ, அத்தனைக் காலம் பிரளயம் என்பதான பரார்த்த விவஸ்தை;
ஏக கால ஸ்ருஷ்டி இயலாதபோது, ஸம்ஹரமும் ஒருகாலத்தில் ஏற்படுவது என்பதும் முடியாது.

ஆக, யுக்தா யுக்திகளைக் கொண்டு ஈஸ்வரன் அதிஷ்டியாத பரமாணுக்கள் ஜகத்காரணம் என்று சொல்வது அஸமஞ்சஸம்.

—————————-

சூத். 2-2-12 :: ஸமவாயாப் யுபகமாச்ச ஸாம்யாதநவஸ்திதே —

முதல் யுக்ம 2 சூத்ரத்தில் காரணப் பொருள் ஸாவயவமா ? நிரவயவமா? என்பதற்கு உதாரணம்
ஷட் பார்ஸ்வமுடைய செங்கல்லும் (Building blocks) , ஒன்றுக்குள் ஒன்று போடக்கூடிய ஸசகமும் (Tumbler) காட்டப்பட்டன.
ஸாவயவம் என்ற போது அநவஸ்தா தோஷமும், நிரவயவம் என்றபோது காரியம் உண்டாக்காத படிக்கு,
ஸ்தூலத்வ அஸித்தியும் தோஷமாக பொருந்தாமையை சொல்ல,
ராஜாவானவன் செயல் பட, மந்திரி மண்டலம் துணை புரிவது போலே இந்த பரமாணுக்கள் செயல்பட,
அத்ருஷ்டமானது மந்திரி மண்டலி போல ஆத்ய-ஸ்பந்தனம் – ஈஸ்வர ஸ்தானத்தில் இருந்து செயல் புரிகின்றன.
சங்கியான் பிரஹ்மத்தை இல்லை என்றே சொன்னான். இந்த நையாயிகன் ஈஸ்வரனை ஆமோதித்து அது ஆநுமானிக சித்தம் என்றான்.

பாக அறையில் அக்கினியை புகை ஸாகச்சர்யத்தோடு பார்த்திருந்தால் தானே , ஸந்திக்த சாக்ஷிவாந் பக்ஷத்திலே
புகையைப் பார்த்து நெருப்பு உள்ளது என்று ஊகிக்க, முடியும்.
அந்த ஆநுமானிக ஈஸ்வரனும், ஜீவாத்ம கோஷ்டியிலே விலக்ஷணனான ஒருவன் சித்தப்பனே ஒழிய, ஸ்ருதியிலே சொல்லப் பட்ட,
போக்தா, போக்கியம் பிரேரிதாரம் ச மாத்வா
ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம :
என்கிற மூன்றாவது தத்துவமான ஈஸ்வரன் சித்திப்பதில்லை.
அந்த ஸ்ருதிதானே
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் – என்றதில்
காம்யந்த காமா : இதி கல்யாண குணா –என்பதான அத்தனையும் சித்திக்காதே.

ஸ்ருதியை அனுசரித்துப் போகிற எங்களுக்கு ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் இவையெல்லாம் ஈஸ்வரன் விஷயத்தில் சித்திக்குமே ஒழிய ,
உங்களுடைய ஆநுமானிக ஈஸ்வரனக்கு சொல்லப் போகாது. அதுவும் அன்றி இவைகளை எல்லாம் நீங்கள் ஸ்ம்ருதி பாதத்தில்
ஒன்றொன்றும் கிடையாது, கிடையாது என்று மறுத்து இருக்கிறீர்கள் அல்லவா?.
அப்படி இருக்க இந்த அத்ருஷ்டத்தை ஜீவகதம் என்றும் சொல்ல வருவதில்லை. அசேதனமான பரமாணு கதம் என்றும் சொல்ல வருவதில்லை.
உன்னுடைய ஈஸ்வரன் ஆநுமானிக ஈஸ்வரனாக இருக்கிற படியால் அவன் விஷயத்திலும் அதிருஷ்டம் பொருந்துவ தில்லை.
ஸ்ருதேர் து ஸர்வ மூலத்வாத்
ஸர்வ தர்மோ உபபத்தி
என்று இருக்கிற எங்களுடைய ஈஸ்வரனுக்கே அது சாத்தியம்.
இனி அடுத்துள்ள, இரண்டாவது யுக்மமான 2 சூத்திரங்களையும் பார்ப்போம்.

———————————-

திரவ்ய குண கர்ம சாமான்ய விசேஷ ஸமவாய அபாவாத் ஸப்த பதார்த்த :
பதம் + அர்த்தம் = பதார்த்தம்.
அர்த்தம் என்பது இங்கு பதத்தால் குறிக்கப்படுகிற கடபடாதி பொருளைச் சொல்லும்.

பூதலே கட : – பூமி மேல் பானை உள்ளது. இது ஸம்யோகம் . பானை பூமியை விட்டு அகற்றப்பட்டால் அது வியோகம்.
இது பிரதக் சித்தம், வியோக, நாசமடையக்கூடிய சம்பந்தம். . அப்பிரதக் சித்தம் என்றால் விடமுடியாத சம்பந்தம்.
வேட்டியில் வெண்மை உள்ளது. கரையில் செந்நிறம் உள்ளது. இது இரண்டுக்கும் சம்பந்தம் எப்படி என்றால்
ஸமவாயி சம்பந்தம் என்கிறான் நையாயிகன். எத்தனை திரவ்யங்களில் இந்த சம்பந்தம் உள்ளது என்பதற்கு

அவயவ – அவயவிக்குமான சம்பந்தம் – கட – கபாலம் . பானைக்கு வயிறு பாகமும், கழுத்து பாகமும் போல.
குண – கர்மம் சம்பந்தம் – திருமண வெண்ணிறம். ஸ்ரீசூர்ணம் சிகப்பு நிறம். சக்கரை இனிப்பு.
இவைகளில் உள்ள நிறத்தையோ, சுவையையோ த்ரவ்யத்திலிருந்து பிரித்துக் காட்ட முடியோ. முடியாது.
அப்படி இவைகளுக்கான அபிரதக் சம்பந்தம் ஸமவாயி சம்பந்தம் என்கின்றனர்.
திரவ்யத்துக்கு குணம் போல கர்மத்துக்கு சலநாத்திகள் உ.ம். வெள்ளை குதிரை ஓடுவதை பார்க்கலாமே ஒழிய ,
வேகத்தை தனித்துப் பார்க்க முடியோ முடியாது.
ஜாதி – கடத்தில் உள்ள கடத்வம் போல , மனித ஜாதியில் மனுஷ்யத்வம் , அதேபோல தேவத்வம், மிருகத்வம் , அஸ்வத்வம்
இத்யாதி வியக்கத்திகளில் உள்ள தர்மம்.
They are separate but not separable . சம்பந்த பின்னத்வே ஸதி விசிஷ்ட புத்தி நியாமகத்வம். இது தான் சமவாயி காரணம்.
இத்தை ஒரு திரவியமாக இவர்கள் ஒத்துக் கொள்கிறபடியால், அது எங்கு இருக்கிறது என்றால்,
அதற்கு ஒரு சமவாயி காரணம் என்று இப்படி அநவஸ்தா ஆஸ்பதமாக இருக்கிறது என்பதே இதற்குண்டான தோஷம்.

இந்த சமவாயி சம்பந்தத்தை ஆகாச முஷ்டிகம் ( இரண்டு மல்லர்கள் குத்திக் கொண்டு சண்டையிடுவது பலசாலி யார் என்று சொல்ல.
அதுவே ஆகாசத்தை நோக்கி குத்துவதால் என்ன வரும்?) போலேயோ இந்த சமவாயி தத்வ நிராகாரணம்? என்றால்
ஸ விசேஷ பிரஹ்மவாதியான வியாசர் நியாய-வைசேஷிக சமவாயி பக்ஷத்தை கண்டனம் செய்கிறபடியால்,
சூத்ரகாரரைப் பின்பற்றி சுவாமி ஸ்ரீபாஷ்ய கிரந்தத்த்தில் அதை கண் டிக்கிறார்–
இது வேதார்த்த சங்கிரகம் போலே ஸ்வதந்திர பிரபந்தம் அன்று. அனுயாயி கிரந்தமானபடியாலே.

சாங்கியன் பரமாத்மாவையே ஒத்துக் கொள்ள வில்லை.
சேஸ்வர சாங்கியனும், யோககாரும் சாக்ஷி மாத்ர ஈஸ்வரனை ஒத்துக்க கொண்டனர்.
வைசேஷிக நையாயகர்கள் ஆநுமானிக ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும் , கேவல நிமித்த காரணமாக மட்டுமே.
உபாதான காரணம் இந்த பராமாணு திரவியம் என்பதாக.
அந்தப் பிரவிஸ்ய நியமன சீலம், இச்சா பூர்வக ஸ்ருஷ்டி எல்லாம் வேதத்தில் சொன்னபடிக்கு இவர்கள் ஈஸ்வரன் விஷயத்தில்
ஒத்துக் கொள்வதில்லை. கால, தேச, அத்ருஷ்டத்தின் ஸ்தானத்தில் ஈஸ்வரனைக் கொள்கிறார்கள் தவிர,
ஸர்வஜ்ஞத்வம் , ஸர்வசக்தித்வம், ஸத்யகாம்தவம் இவைகளை ஒப்புக் கொள்ளவில்லை.

ஸமவாயாப் யுபகமாச்ச – சமவாயம் என்கிற சம்பந்தத்தை ஒத்துக் கொண்டாலும்
ஸாம்யாத் – பிரதத் சித்த சம்பந்த ஆதார-ஆதேய பாவத்தாலே சையோகம் உண்டாவது போல
அப்பிரதத் சம்பந்தத்தாலே சொல்லப்படுகிற இரண்டு பதார்த்தங்களுக்கான சம்பந்தமே சமவாயம் –
இத்தை அதற்கான பொருளோடு சம்பந்தப்படுத்தி பொருத்திக் காட்ட வேறொன்றை ஒப்புக்கொள்ள வேண்டி வருவதால்
அநவஸ்திதே – இதை ஒரு திரவியமாகவே இவர்கள் ஒத்துக் கொள்கிறபடியால்,
அது எங்கு இருக்கிறது என்றால், அதற்கு ஒரு சமவாயி காரணம் என்று இப்படி
அநவஸ்தா ஆஸ்பதமாக இருக்கிறது என்பதே இதற்குண்டான அஸமஞ்சஸம்,
ஜாதி முதலானவை திரவ்யத்தோடே ஸ்வரூபம் என்று ஒத்துக் கொண்டு விட்டால் ஸமவாய சம்பந்தத்தை கற்பிக்க வேண்டிய தேவையே இல்லை.
ஆகையால் சமவாயத்தை கற்பிப்பதால் ஒரு சார்த்தகமும் இல்லை.
தானாக ஆகிற காரியத்துக்கு – மத்யே கிம் தேந ? – இடைத் தரகர் ஏதுக்கு என்ற கணக்காம் இது.

———————-

சூத். 2-2-13 :: நித்யமேவ ச பாவாத் ::

நையாயிகன் சமவாயம் ஒரே பொருள். நித்தியமானது என்றான்.
பிராபகர மீமாம்ஸகன் சமவாயம் அநேகமாக உள்ளது. அநித்யமான சமவாயமும் உண்டு என்பதாகச் சொன்னான்.
சமவாயத்தை நித்தியமாக ஒத்துக் கொண்டிருக்கிற வைசேஷிக பக்ஷம் கண்டிக்கப் படுகிறது இந்த சூத்ரத்தால்.
சம்பந்தமும், அதை உடைய பொருள்களும் நித்யம் என்றால் , சம்பந்தி பதார்த்தங்களும் நித்யமாக வேண்டி வரும்.
சம்பந்தம் நித்யமானால் — கட்டமும் நித்யமாகும். அதற்கு சம்பந்தப்பட்ட ரூபமும் நித்யமாகப் போகும்.
ஜகத் சிருஷ்டியும் நித்தியமாய், பிரளயமே ஏற்படாது. உண்மை என்னவென்றால் ,எந்தெந்த பொருள்கள்
ஆகாரத்தோடும் ரூபத்தோடும் இருக்கின்றனவோ அவை அநித்தியம். கட , படாதிகள் போல. கடம் உடைந்து போகலாம்.
படம் ஜீர்ணமாக்கிப் போகலாம். அவை நித்யமில்லை. அபாவம் என்கிறதை தனி ஒரு பதார்த்தமாக நாம் ஒத்துக் கொள்வதில்லை.
பூதலே கடம் நாஸ்தி என்றால் அது பாவாந்தரத்தில் உள்ளது என்றுதான் பொருளே ஒழிய வஸ்து அபாவத்தை சொல்லாது,
தத்துவங்கள் அனைத்தும் சத்யமான படியாலே.

தத்வம் ஜிக்ஞாஸ மாநானாம் ஹேதுவை ஸர்வதோ முகை :
தத்வம் ஏகோ மஹாயோகி ஹரிர் நாராயண ப்ரபு :/பர :

ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யச புநப்புந :
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி :

ஸத்யம் ஸத்யம் புந ஸத்யம் உதிருத்ய புஜமுச்யதே
வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி நத்தைவாதம் கேசவாத் பரம் — வியாசர்.

இந்த 3 வியாச ஸ்லோகங்களைக் கொண்டு அவர் ஸவிசேஷ பிரஹ்ம வாதி என்பதும்,
அந்த பர பிரஹ்மம் நாராயணனே என்பதும் விளங்கும்.
———————————————————————————————————
வஸ்து – பிரமாணம் (3) – பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் – ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் – பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் – பரத பாஸமானம் (தன்னைத்தான் அறியாது
| பிறரால் அறியாத தக்கது)
| நித்ய விபூதி + தர்ம பூத ஞானம்
| தர்மி பூத ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் – ஸ்வயம் + ஸ்வஸ்மை பாஸமானம்
| பர (நித்ய விபூதி)
| வியூக(4)(கார்ய வைகுண்டம்)
| க்ஷீராப்தி
| பிரத்யும்ன (பிரம்மா)
| அநிருத்த (விஷ்ணு)
| ஸங்கர்ஷணர் (சிவன்)
| விபவ – ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி (தகராகாசம்)
| அர்சை (106 பூலோக திவ்ய தசங்கள்)
| ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
|
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு – அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமை காந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

————————————————————————————————————

இதத்தனையும் பகவானுக்கு சரீரமாக உள்ளன.
தர்ம பூத ஜ்ஞானம் , ஸத்வம், ரஜஸ், இவைகள் திரவ்ய த்வாரா பகவானுக்கு சரீரமாக உள்ளன,
தனித்து அவனுக்கு சரீரம் என்று சொல்லப் பட வில்லை.
ஈஸ்வரன் சரீரீ ஆகும்போது கூட தானும் தர்மபூத ஜ்ஞானத்தோடே சரீரீ ஆகிறான் என்பதும் சித்தாந்தம்.

இந்த சரீராத்மா ஸம்பந்தத்தை சமவாயி சம்பந்தத்தால் சாதிக்க முடியாது.
துவைதிகள், ஏகாயனர்கள், சைவர்கள், நியாய வைசேஷிகர்கள் அனைவரும் இந்த சரீர-ஆத்ம பாவத்தை
அடியோடு ஒத்துக் கொள்வ தில்லை.

சமவாயி என்பது அஸமஞ்சஸமாக இருக்கிறது என்று கீழ் சூத்ரங்களால் காட்டப்பது.
அது நித்யம் என்று சொன்னபடியாலே – ஜகத்து, அத்தோடு கூடி இருக்கிற சம்பந்தி பதார்த்தங்களும் நித்தியமாக வேண்டி வரும்.
இது பிரத்யக்ஷ விரோதம் மட்டுமல்லாது ஸம்ஹாரம் என்பதே ஏற்பட்டாது. எனவே பரமாணு ஜகத் காரணமாக மாட்டாது.
இத்தால், பிரஹ்ம காரண வாதமே ஸ்ருதிக்கு தாத்பர்யம் என்பது நிரூபிக்கப் பட்டது.

ஜ்ஞானம் ஸ்வரூப அநுபவகதமானால் ஆனந்தமாகும்.

————————————

சூத். 2-2-14 :: ரூபாதி மத்வாச்ச விபர்யயோ தர்ஸநாத் —

பிரஹ்ம வித்தை 32ம் அதிகருத்தாதிகாரம். எப்படி ஆற்றங்கரைப் புல் பசுமாட்டுக்கும் , காட்டிலுள்ள கோரைப்புல் யானைக்கும்
உணவாகுமோ அதுபோல விசேஷாதிகாரிகளுக்கு மட்டுமே அவை ஆனாலும் ,
அதற்குள் அந்தரகதமாக இருக்கிற ஜ்ஞாஸ வித்தை (அ ) பிரபத்தி மார்கம் ஸர்வாதிகாரம்.
பிராஹ்மனேப்யோ ததி நீயதாம் தக்ரம் கௌண்டின்யாய – என்ற நியாயத்தாலே
பிரஹ்ம வித்தைக்குள் அடக்கம் மானாலும் ஸத்-சூத்திராதிகாரிகளுக்கும் இந்த நியாஸ வித்தையில் அதிகாரம்
என்பது ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞை . .

ரசநானுப்பபத்தி அதிகரணத்தில் பிரதான காரண வாதியான சாங்கியனை நிராஸனம் பண்ணி அடுத்து
இன்னமொரு பிரதான காரணவாதியான பாசுபதனை எடுக்காமல் இடையில் பரமாணு காரணவாதியான
நையாயிக வைசேஷிகரை நிரசிக்க தொடங்கியது , பாசுபதனுடைய பாஹ்யத்வ ஆதிக்கத்தாலே.
பாசுபதன் சிவ பாரமயத்தை சொல்வதோடு அதற்கு வேதப் பிரமாணத்தையும், வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரமான
மந்வாதி ஸ்மிருதிகளையும் நிராகாரணம் பண்ணி, சைவ ஆகமங்களையே அவலம்பித்த நிக்ருஷ்டதை யாலே
அவர்களை விசேஷித்து கண்டிக்க வேண்டி தனித்து சூத்ரமிட்டார் சூத்ரகாரர்.
இது எதைப்போலே என்றால், ஸர்வ தர்ம ஸங்கிரகத்தில் சங்கரர், அடுத்து வரும் பௌத்த பக்ஷ நிரஸன கிரமத்தில்
வியாச சூத்திரங்களை பின்னிருந்தது முன் அவலிம்பித்தாப்போலே இது என்று சொல்லலாம்பட்டி உள்ளது.
பௌத்தர்கள் 4 வகை. -வைபாஷிக + சௌத்திராந்திகன் -யோகாசாரன் -சூன்யவாதியான மாத்யமிகன்
இவர்கள் மதத்தை வியாசர் 3 கோஷ்டியையையும் 3 அதிகரணம் கொண்டு நிரசிக்கிறார்.
ஆனால் சங்கரரோ தம்முடைய ஸர்வதர்ம ஸங்கிரகத்தில் முதலில் மாத்யமிகன் அடுத்து யோகாசாரன், வைபாஷிக , சௌத்திராந்திகன் என்று
இவர்கள் பரஸ்பரம் கண்டனம் பண்ணிக் கொள்வதாக அதிகரண பரிக்ரம பங்கமாக பேசியபடி போலே என்று கொள்ள அமையும்.

நடுவில் சமவாய தத்வ நிரசனம் பிரஸ்துதமானதுக்கு காரணம் என் வந்தது ? என்றால்
நாம் சொல்லுகிற தத்வங்களான ராமானுஜ சித்தாந்தமென்ன? வியாச சித்தாந்தமென்ன? அதற்கடிப்படையான தத்துவங்கள் என்ன?
அதன்படி தத்வ விபாகம் பண்ணிப் போனால் பகவானை அடையலாம் அன்றி வேறு எந்த விதித்தாலும் பிரஹ்மத்தை கிட்ட முடியாது .
குறிப்பாக ஜகத் காரணத்வத்தை சொல்ல வந்தபோது நையாயிகன் கால தேச ஈஸ்வரன் அதிருஷ்டம் இவை
சாதாரண காரணம் என்றும் , அசாதாரண காரணம் (அ ) உபாதான காரணம் பரமாணு என்றும் சொன்னான்.
பகவானை நிமித்த காரணம் என்று மட்டும் கொண்டு அந்த ஈஸ்வரனை அனுமானத்தாலே சித்திக்கிறேன் என்று சொல்லி
ஸமவாயி , அஸமவாயி காரணங்களை பற்றிப் பேசினான்.

நம்முடைய சித்தாந்தம் எப்படி இருக்கிறது ? என்றால்
தத்வம் ஜிஞாஸ மாநானாம் ஹேதுவை ஸர்வதோ முகை :
தத்வம் ஏகோ மஹாயோகி ஹரிர் நாராயண ப்ரபு :
என்று தத்வம் ஒன்றே தான். அது ஸூக்ஷ்ம சித்தசித் விசிஷ்டமானபோது காரணமாயும்,
ஸ்தூல சித்தசித் விசிஷ்டமானபோது காரியமாயும் வியாபரிக்கிறது . இது அவஸ்தாந்தர பேதமே ஒழிய திரவியம் ஒன்றே தான்.
அவன்தான் காரியமாகிறான். அதனால் உபாதானகாரணமும் அவனே என்ற இதைக் கொண்டு அவனுக்கு அபேதத்தையே சொல்லலாம்.

நையாயிகன் அவயவத்தைக் காட்டிலும் அவயவி அதிருக்தம் – வேறு பட்டது. காரியம் வேறு. காரணம் வேறுதான் என்றான்.
சாங்கியன் காரியத்தில் காரணம் அடங்கி உள்ளது. அவஸ்தா பேதமும் அதனுள்ளேயே அடக்கம் என்று சொல்லி வைத்தான்.
இவை எல்லாம் ஆரம்பணாஅதிகாரணத்தில் விளக்கப்பட்டன.
அவ்விடத்தில் நம் முடைய சித்தாந்தம் என்ன காட்டப் பட்டது என்றால்
திரவியத்தைப் பற்றி சொல்லும்போது, எது உபாதான காரணமாக இருக்கிறதோ – அதாவது எது அவஸ்தாஸ்ரயமாக இருக்கிறதோ –
அதுவே திரவியம் என்றதாயித்து. அவஸ்தா பேதமாவது அப்பிரதத் சித்தமானது ஒரு நிலையில் இருந்தது இன்னொரு நிலைக்கு
மாறுவது காதாசித்கமாய் , ஸ்வரூபம் தான் நித்தியமாய் பிரஹ்மத்துக்கு
1. அபின்ன நிமித்தோபாதான காரணத்வம் இரண்டும்
2. ”பதிம் விஸ்வஸ்ய மீஸ்வரகும் ” என்று அத்தனைக்கும் உள்ளே பிரவிஸ்ய நியமன சீலனாய் வர்த்திக்கிற சரீராத்மா பாவம்
இவை அனைத்தும் சித்திக்க இந்த ஸமவாயி பதார்த்தத்தை கண்டிக்க வேண்டிய அவசியம் வந்தது.

சாவயவ, நிரவயவ தோஷம் வேதோக்த பகவத் தத்துவத்துக்கு ஏன் பொருந்தாது என்பதை
கிருஸ்ந பிரஸக்தி அதிகாரணத்தில் ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் என்ற சூத்திரத்தின் மூலம் விளக்கிய தோடு
வேதம் வல்லாரைக்கு கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து – என்று வேதம் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறதோ
ஸர்வஜ்ஞ
ஸர்வ சக்தி
கல்யாண குணாகர
ஸத்ய காம
ஸத்யசங்கல்பத்வாதி
அஷ்ட குணங்களோடு கூடிய பர பிரஹ்மத்தை வேதாந்தம் காட்டிய வழியில் ஈஸ்வரனை அறியலாமே ஒழிய –
வேதாந்தத்தில் சொல்லப்பட்டதான இத்தனை விதமான கல்யாண குணங்களை வேத விருத்தமும், இல்லாததுமான
ஸமவாயி , அஸமவாயி , அபாவ பதார்த்தங்களைக் கொண்டு அனுமானிக்க ஈஸ்வரனிடத்திலோ சாக்ஷி மாத்ர ஈஸ்வரனிடத்திலோ
பொருத்துவதற்கில்லை.
அதனல் இடையில் வந்த ஸமவாயி நிராகரணம் தான் கீழ் சூத்ரத்துக்கும், இதுக்கும் அடுத்த சூத்ரத்துக்குமான சம்பந்தம்.

ரூபாதி மத்வாச்ச விபர்யயோ தர்ஸநாத் ::
பகவானுக்கு காரியமாக உள்ள இந்த பிருத்வி, அப்பு தேஜஸ் ஆகிற அசேதனம் என்ன, சேதனம் இவை
ததேவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீத் – என்பதில் இதம் ஸப்த வாச்சயமாய் இப்போது நாம ரூபத்தோடு விளங்கா நிற்க,
பிரளயாவஸ்தையில், அவை ஆவியாஹ்ருதங்களாய் ஸூக்ஷ்ம நாம ரூபங்களோடு அந்த மூலப் பிரக்ருதியில் இருக்க வேண்டும்.
காரணம் இல்லாதது உண்டாக்க முடியாதாகையாலே.

படத்திலே தந்து அவியாஹ்ருதமாய் இருக்கிறது. அந்த படத்தின் வர்ணம் தந்துவின் ரூபத்தின் பேரில் அமைகிறது.
சிகப்பு வர்ண தந்துவால் சிகப்பு வர்ண படம் கிட்டுகிறது. அதுபோல ரக்த, பீத,, விசித்திர வர்ண படங்கள் உண்டாகின்றன .
ஆக பட ரூபத்துக்கு தந்து ரூபம் காரணம். படத்துக்கு தந்து ஸமவாய காரணம்.
இப்படி, காரணத்தில் உள்ள ரூபாதி குணங்கள், காரியத்தில் பரிணமிக்கின்றன என்பதாகச் சொன்னான்.

——————–

சூத். 2-2-15 :: உபயதா ச தோஷாத் ::

அப்படியானால், ஜகத்துக்கு ரூபம் உண்டு. பரமாணுவுக்கு ரூபம் கிடையாது என்று சொல்ல,
ஜகத்துக்கு ரூபம் எப்படி வந்தது ? என்பது கேள்வி.
பரமாணுவுக்கு ரூபம் உண்டு என்று சொல்லுவையேல், ரூபாவத்தானது எல்லாம் அநித்யமாமே.
அப்போது பரமாணு அநித்தியம் என்றல்லவோ தேறும்? அன்றி ரூபம் உண்டு என்றால் சூக்ஷ்மத்வம் தொலையும்.
ரஸ, கந்தங்கள் உண்டு என்றால் நிரவயவத்வம் தொலைந்து கடபடாதிகள் போலேயாகும்.
இல்லை ரூபம் கிடையாது என்றால், காரியத்துக்கும் ரூபா சூன்யத்வம் சித்திக்க வேண்டும்.
அது பிரத்யக்ஷத்துக்கு விரோதம். எப்படிக்கு கொண்டாலும் இந்த அசமவாய சம்பந்தம் அஸமஞ்ஜஸம் .

————-

சூத். 2-2-16 :: அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநபேக்ஷஆ ::

ஸாங்கிய கபில மத ஸத்காரியவாதம் என்ன, தத்வ விபாகம் என்ன இப்படி சில அம்சங்கள் நமக்கு ஒத்துப் போகின்றன.
ஆனால் இந்த தார்கிக, நையாயிகள் பக்ஷம் ஒரு அம்சத்திலேயும் ஒத்துப் போவதில்லை.
ஆகவே இந்த காணாத , கௌதம பக்ஷம் வைதிகர்களுக்கு அத்யந்த அநபேக்ஷைவ :மோக்ஷஅர்த்த பிரவர்தனமாக உள்ள
இந்த சாரீரக சாஸ்திரம் இதில் முற்கூறியபடி இம்மதம் முழுவதும் பொருந்தாமை கொண்டு அநாதரணீயம்.

சூத்திரத்தில் உள்ள ”ச”காரம் முன் சூத்திரங்களில் சொன்ன பொருந்தாமை களை கூட்டிக் கொள்கிறது.

ஸர்வம் ஸ்வலக்ஷணம் ஸலக்ஷணம்.
ஸர்வம் துக்கம், துக்கம்.
ஸர்வம் சூன்யம், சூன்யம்
என்று ஸ்வரூபமே தொலைவதாக சொல்கிற பௌத்தன் பூர்ண வைநாசிகன் என்றால்
இந்த தார்கிகன் அர்த வைநாசிகன் என்று சிஷ்ட கோஷ்டியில் பிரசித்தம்.
தார்கிகன் சொல்வது என்ன வென்றால் இந்த சரீரம் க்ஷணிகம் என்பதாக. இது நாம் உண்ணுகிற ஆகாரம், பருகிற தீர்த்தம்,
ஒளஷதம் தன்மூலம் உபசய, அபசயங்கள் பிரதிக்ஷணம் உண்டாகிற காரணத்தால், காரியமாய் இருக்கிற இந்த சரீரமும் க்ஷணிகம் என்கிறான்.
உதாரணத்துக்கு மேகம் உண்டாவதும், மழை பொழிவதும், கணுக் கணு நீரால் உண்டாகும் சமுத்திரம் போலேயும்;
கடி எந்திரம் கொண்டு சால் சாலாக நீர் கிணற்றில் இருந்து இறைப்பது போலேயும் ஸர்வம் க்ஷணிகம் என்கிறான்.
எனவே இவர்கள் தள்ளத்தக்கவர்களே.

ஆனால் இவர்களுடைய தர்க்க சாஸ்திரத்தால், அரண்மனைக்கு புறத்தே மதிலை சுற்றியுள்ள அகழி போல
பௌத்தாதிகளை தூரத்தே வைக்குமளவாகக் கிஞ்சித்து ரக்ஷணை உண்டு அவ்வளவே.
வேதாந்த சாத்திரமும் கூட நம்முடைய ராணுவப் படை போல பர பக்ஷ நிரசனத்துக்கே ஆக வேண்டும்.
அந்தப்புர ஸ்தானத்தில், நம் ஆழ்வார், ஆசாரியர்களுடைய ஸ்ரீ ஸூக்திகள் என்ன, அதில் சொல்லப்பட்ட நாயகா- நாயகி பாவம் என்ன,
அதனால் கிட்டுகிற பரபக்தி, பரஜ்ஞான மென்ன அதன் மூலமாக ஆண்டு அனுபவிக்கிற
பகவத் ஸ்வரூப, ரூப, குண அனுபவம் என்ன இவைகளையே தேக யாத்திரைக்கு உபஜீவனமாக கொள்ள அமையும்.

—————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —அத்யாயம் 2- தர்க்க பாதம் – 2 அதிகரணம் -1 ரசநாநுபபத்தி அதிகாரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

ஸ்ரீபாஷ்யத்தில் அறுதியிடப் படலாவதுதான விஷயம் என் என்னில்
சித்தசித் தத்வேபி ஸத்யம் தத் சேஷி ஸ்ரீமந் நாராயண பிரக்யாபவந் இவ இத்தம்
தத்துவங்கள் மூன்று. சித்தும் அசித்தும் ஈஸ்வர தத்வத்தைப் போலவே ஸத்யம் .நித்யம்.
ஆகிலும் அவை ஸ்வதந்ர தத்வமன்று.சேஷியான ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டவை என்பதாகும்.

கணாத பரிபாடிப் கபில கல்பனா நாடகைஹி
குமாரில குபாஷிதைஹி குருநிபந்தன கிரந்திபிஹி
ததாகத கதாஸதைஹி ததௌத்வாரி ஜல்பைரபிஹி
பிரசாரித மிதம் ஜகத்து பிரகுணிதம் யதீந்த்ரோத்திபிஹி

நியாய வைசேஷிகன்
கபில சாங்கிய யோகிகள் என்ன
பிராபாகர மீமாம்ஸகன் குமாரில பட்டன் ஜைமினி என்ன
ஜைன, பௌத்தர்கள் என்ன,
சாங்கியனை ஒட்டி வந்த அத்வைதிகள் என்ன,
நையாயிகனை ஒட்டி வந்த துவைதிகள் என்ன
இத்தனைவகையான மதங்களால் உலகத்தில் எல்லோருக்கும் உண்மை எது என்று தெரியாமல் மதி கலங்கிப் போயிருக்க
அவர்களை எல்லாம் தன் பக்தி பிரபாவத்தாலே கட்டிப் போட்டு கலி கோலாகலத்தை நிவர்த்திப்பித்தார்
பகவத் ராமானுஜர் என்பது இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.

அத்யாயம் 2 தர்க்க பாதம் – 2 அதிகரணம் -1

ரசநாநுபபத்தி அதிகரணம்

இவ்வதிகாரணத்தில் ஸாங்கியர்களின் சித்தாந்தம் நிரசிக்கப்டுகிறது. கீழே
ஈக்ஷதேர் ந அஸப்தம் போன்று சூத்திரங்களில் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று சொல்ல வந்த இடத்தில்
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர யஸீத்
என்பதில் உள்ள ஸத் ஸப்த வாச்யன் – நாம் சொல்லுகிற பரபிரஹ்மம் கிடையாது தான் சொல்லுகிற பிரதானமே என்று அவன் சொல்லி வர,
தது ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயே ஏவ – என்று ஈக்ஷணத்தை இட்டுத்தான் ஸ்ருஷ்டி என்பதால்
அசேதனமான பிரக்ருதிக்கு ஈக்ஷணமான சங்கல்ப சக்தி கிடையாதாகையால் அது ஜகத் காரணமாக முடியாது என்று அவர்கள் வாதம் தள்ளப்பட்டது.
அதே விஷயத்தையே இங்கு அவர்களுடைய மத ஸ்வரூபத்தை பூர்ணமாகக் காட்டி, ஒவ்வொன்றுக்கும் நீங்கள் சொல்வது சரியில்லை
என்பதாக பிரதிகிரியை வெளியிடுகிறார் பாஷ்யகாரர்.

இனி சாங்கிய சம்பிரதாயம் விளக்கப் படுகிறது.
மூல பிரகிருதி – பரம காரணம் . இதற்கு ஒரு காரணம் கிடையாது. அவிகிருதி. அதாவது எதனுடைய விகாரமும் இது இல்லை என்பது பொருள்.
நித்தியமானது. த்ரிகுணாத்மந : 3 குணங்களாகவே ஆனது. அதாவது முக்குணங்களும் திரவ்யம் என்கின்றனர்.ஈச்வராதிஷ்டானம் அற்றது.
அதீந்திரியமானது.புலன்களுக்கு அகப்படாதது. அப்படியானால் எதைக் கொண்டு தெரிந்து கொள்வது என்றால் காரியாத் காரணம்
அநுமீயதே. சைதன்யமற்றது.. ஸதத விகிரியாய் , போகாபவர்கங்களை அளிக்கவல்லது.
பிரகிருதி புருஷனை விட்டு விலகுகையே மோக்ஷம் எனப்படுவது.

பிரக்ருதி -விக்ருதி – காரியம். மஹான் அஹங்காரம் 5 தன்மாத்ராங்கள் (தது மாத்ரம் =essence) ஆகிய 7ம் .
சில தத்துவங்களுக்கு விகாரமாய், சில தத்துவங்களுக்கு காரணமாய் இருப்பதால் இவை பிரக்ருதி -விக்ருதி எனப்படுகின்றன.
அஹங்காரம் சாத்விகாஹங்காரம், ராஜசகாககாரம், தாமஸாஹங்காரம் என்று 3 வகைப்படும்.
இவைகளிலிருந்து பொங்கைம்புலனும், பொறி ஐந்தும் , பூத தத்துவங்களுமான 15ம், மனசுமாக சேர்ந்து 16 ம் மற்ற
தத்துவங்களின் விகாரமாய் தாம் ஒரு தத்வத்துக்கும் காரணமாய் இராமையால் கேவல விகாரங்கள் என்றும், விக்ருதிகள் என்றும் கூறப்படுகின்றன.
ஆக மொத்தம் 24 தத்வங்கள்.
இவ்வளவுதானா? இன்னும் உண்டா என்றால்
இதற்குமேல் உண்டாகிற கட, படாதிகள் பதார்த்தங்கள் .

(நம்முடைய ஸம்பிரதாயத்திலும் மூலப்பிரக்ருதி நித்யமானது தான். ஆனால் த்ரிகுணாத்மவதி. 3 குணங்களோடு கூடியது.
ஈஸ்வராதிஷ்டிதமாய், பிரஹ்மத்துக்கு சரீரமாக விகாரத்தை அடைகிறது. பிரகிருதி என்கிற திரவ்யத்துக்கு
சத்வ, ரஜஸ், தமஸ் குணமாக இருக்கின்றன, திரவ்யம் 1 யாய் குணங்கள் 3ம் உடையது..
பதிம் விசஸ்வஸ்ய ஆத்மநிகும் ஸ்வயம் – என்று தனக்கொரு காரணமில்லாத ஸகலேதர ஸர்வ காரணன் பரமாத்மா என்கிற
ஸ்தானத்தில் அவன் மூல பிரக்ருதியைச் சொல்கிறான் )

25வது தத்வம் புருஷன்.- இவன் ந பிரக்ருதி ந விக்ருதிம். புருஷன் நிஷ்க்ரியன். கேவல க்ஞான ஸ்வரூபன்.
புருஷனுக்கு க்ஞாத்ருத்வ, போக்த்ருத்வ, கர்த்ருத்வங்கள் பிரகிருதி அத்யாஸத்தாலே. நிர்தர்மஹ = ஞான ஸ்வரூபன் மட்டுமே
ஞான குணகன் அன்று . அதாவது தர்ம பூத ஞானத்தை இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை.
சைதன்ய மாத்ரம் ஆத்மா என்பது இவர்கள் கொள்கை. ஸர்வ கத : என்று ஆத்மாவை விபுவாக சொல்கிறார்கள்.
பிரதி சரீரம் பின்னத்வ என்று அநேகாத்மாவாதிகாளே இவர்களும். .

அஹங்காரத்துக்கு 3 அர்த்தங்கள் உண்டு. யதார்த்த ஞானத்துக்கும் அஹங்காரம் என்று பெயர்.
1. அஹமர்த்தத்துக்கு வாசிகமான ஞானானந்த ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறிகை அஹங்காரம் – இந்த ஞானம் உபாதேயம்.
2. (பாவார்த்தே) அநஹம் அஹம் இத்யேத் அஹங்கார — அஹம் அல்லாதத்தை அஹம் என்று பிரமிக்கை –
அஹமல்லாத சரீரத்தை அஹம் புத்தி பண்ணுகை – இது தியாஜ்யம்.
3. (கரணார்த்தே) எத்தாலே இந்த அஹம் புத்தி உண்டாகிறதோ அந்த பிரக்ருதி மஹதஹங்கார தத்வத்துக்கும்
அஹங்காரம் என்று பெயர் – இதுவும் தியாஜ்யம்.

இந்த அஹங்காரமான ஜீவனுக்கு – பிரபா பிரபாவான் போலே – நித்தியமான தர்ம பூத க்ஞானம் அதனுடைய தர்மம்.
அந்த அவினா பாவ தர்மத்தை சாங்கியனோ, அத்வைதியோ ஒத்துக் கொள்வதில்லை. அதனை ப்ரக்ருதிக்கான தர்மம் என்கிறார்கள். அங்கனாகில்
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் எப்படி உண்டாகிறது என்றால்
1. சித் ஸாநித்யத்தாலே – ஜபா குஸும சாமீப்யம் போலே – என்றும்
2. சித் அவித்யா ஸம்பர்க்கத்தாலே – அயப் பிண்டத்துக்கு அக்நி சம்பந்தத்தாலே ஒளஷ்ணயத்வம் வருவது போலே – என்றும்
3. சித் சாயாப்பத்தியாலே – பிம்ப பிரதிபிம்ப பாவத்தாலே – என்றும் –மூன்று விதமாக சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட அஜ்ஞானதால் துக்க, மோக , போகம் பிராப்தமாகிறது–தத்வ ஜ்ஞானாது அபவர்க -ஸம்பிரப்தம் என்பது அவர்கள் சித்தாந்தம்.
ஜீவாத்மா நிர்தர்மகன் என்ற ஜ்ஞானம் வந்தால் அதுவே மோக்ஷ ஹேது–.
இதற்கு பிரத்யக்ஷம்,, அனுமானம் , ஸப்த ரூபமான வேதங்களையும் பிரமாணமாக இட்டு தன்னுடைய சித்தாந்தமே சரியான மார்க்கம் என்கிறார்கள்.

வைசேஷிகர்களும் ஆங்கிலனைப் போல ஜீவாத்மா ஸர்வ கத : என்று விபுவாய்ச் சொல்லுகின்றனர்.
ஜீவஸ்து பிரதி சரீரம் பின்னம் என்றும் சொல்கின்றனர். புருஷ பஹுத்வம் சித்தம் என்றால் விபு பதார்த்தங்கள் ஏகத்தில் இருப்பது எப்படி சாத்தியம்?
அது கூடுமா என்றால்
ஆத்மா பின்ன : ஸ்வதஸுகி என்பது நம்முடைய பக்ஷமும் கூட. ஆனால் ஆத்மா அணு ஸ்வரூபி. பரமாத்மா விபு என்பது நம்முடை கொள்கை.

புருஷ பஹுத்வம் எத்தாலே சித்தமாகிறது என்றால் ஜன, மரண, கரணாது. ஒருத்தன் பிறந்தால் எல்லோரும் பிறப்பதில்லை.
ஆயுர் போகங்கள் எல்லாம் வேறு வேறுதான். மரணம் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் சம்பவிப்பதில்லை.
இந்திரியங்கள், மனசு எல்லாம் ஒருவிதமாக இல்லாமல், அவனவனுக்கே கர்மானுகுணமாக பகவான் அன்றோ நியமிக்கிறான்.
அயுக பிரவிருத்தேஸ் ச , ஒவ்வொருவருடைய பிரவிருத்தியும், நிவ்ருத்தியும் ஒன்றாய் இருப்பதில்லை. ஒரே காலத்திலயுமாய் இருபத்தில்லை.
இத்தாலே ஆத்மா அநேகமென்பது நமக்கும் சம்மதம்.
காற்றுக்கு ரூபம் இல்லை. ஸ்பர்சம் உண்டு. அத்தகைய பொருள் களுக்கு விபுத்வம் சொல்ல முடியாது.
எதற்கு ஸ்பர்சமும் இல்லையோ அதற்கு காதம் ( தடுப்பு, அடைப்பு) ஏற்படாது. அப்பிரதிகாதாம் உண்டு என்பது

கால, தேச, ஆகாசம், ஆத்மா இவை நாலும் விபு பதார்த்தங்கள்.
ஆத்மா துவித : ஜீவாத்மா பரமாத்மா இதி சேத் என்று தர்க்க ஸங்க்ரகத்தில் சொல்லப்பட்டது.
நம்முடைய சித்தாந்தப் படி பரமாத்மா விபு. ஆத்மா அணு ஆகும். அதனுடைய தர்ம பூத ஞானம் பத்த தசையில் சங்குசிதமாக இருக்கும்.
மோக்ஷ தசையில், பகவத் அனுகிரஹத்தாலே தர்மபூத க்ஞானம்தான் விபுவாகிறது என்பது நம்முடைய சித்தாந்தம்.

நையாயிகன் சொல்வதாவது – அனுமானிக பிரஹ்மம் ஸகர்த்ருகம்
உதயனாச்சார் நியாய குஸுமாஞ்சாலி, ஆத்ம தத்வ விவேகம் என்று 2 கிரந்தங்களை பண்ணி அதிலே
ஆத்மாவை சித்தி பணி, ஈஸ்வரனையும் சித்தி பண்ணி அந்த பௌத்தர்களையும் , ஜைனர்களையும் வீழ்த்தின படியாலே
அவர்கள் சொன்ன அனுமானிக்க ஈஸ்வரன் பிரசாதித்த வேதம் பரதப்-பிரமாணம் ஆனபடிக்கு , ஸ்வதப்பிராமாண்யத்தை ஒப்பினார்கள் இல்லை.

சாங்கியனோ என்னில், பிரகிருதி புருஷன் என்ற இரண்டு தத்துவங்களை மட்டும் சொல்லி தங்களதேயான கபில ஆகமத்தையே
பிரமாணமாகச் சொன்னார்கள். அதில் சொல்லப்பட்ட படியே வேதத்திலும் உள்ளது என்பதை காட்டுவே வேதத்தை அவர்கள் ஏற்கின்றனர்.

கர்ம காண்டம் தேவதா காண்டம் , சாரீரக மீமாம்ஸா காண்டம் என்று மூன்றுமாக சேர்ந்து மீமாம்ஸா ஏக சாஸ்திரம்.
அதில் அத்தியாயங்கள் 12+4+4 = 20ம் அடங்கும். பூர்வ மீமாம்சை 12 அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் சொல்லப்படுகிற விஷயம்
தர்ம தீ – இந்த ஞானமான புத்தி எப்படி உண்டாகிறது என்பதை
1. மான 2. பேத 3. அங்க 4. பிரயுக்தி 5. கிரம 6. கர்த்ருபிஹி 7.கியாதி 8. தேச 9. விசேஷ 10. ஊக 11. பாத 12 தந்த்ர .பிரசக்திபிஹி –
என்று 12 அத்யாயத்தில் 12 விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அதில் முதல் அத்தியாயத்தில் பிரமாணம் என்பதை பற்றி சொல்லி இருக்கிறார் ஜைமினி மஹரிஷி.
அதையே 1. தந்த்ர வார்த்திகா 2. ஸ்லோக வார்த்திகா 3. ஸூக்டிகா என்று மூன்ரூ கிரந்தமாக பண்ணினார் குமாரில பட்டர்.
அவைகளை சற்று பாரிஷ்காரம் செய்து பிரபாகர் குருமத்தத்திலும் – நித்ய நிரவாத்யமான அநாதி அவிச்சின்னமான வேதம் தான் பிரமாணம்.
என்று அவர்களால் ஸ்தாபித்தமான படியாலே , இந்த காபில ஆகம அபிராமாண்யத்தை இவ்விடத்தில் சொல்லிற்றார் இல்லை.

இவை எல்லாம் மஹா பூர்வ பக்ஷத்தில் தள்ளுபடியானவையே. ஏற்கனவே தள்ளப்பட்ட சாங்கிய மதத்தை
மறுபடி இங்கு தள்ள வேண்டிய அவசியம் என்ன? எனில் அங்கு வேதாந்த வாக்கியங்கள் சாங்கிய மத்தத்தைச் சொல்லவில்லை
என்று காட்டுவதில் நோக்காய் இருந்தது ; இங்கு அந்த மதம் தோஷமுடையது என சொல்வத்திலே நோக்காக உள்ளது.
இந்த ரசநாநுபபத்ய அதிகரணத்தில் மேலும் விவிரிக்கிறார் சூத்ரகாரர்.

————–

சூத். 2-2-1 :: ரச நாநுபபத்தேஸ்ச ந அனுமாநம் ப்ரவ்ருத்தேஸ்ச ::

பிரத்யக்ஷ பிரமாணத்தைப் பற்றி விவாத விஷயம் ஏதுமில்லை.
காபில ஆகம பிராமாண்யமும் பூர்வ மீமாசகர்களால் தள்ளுண்ணப்பட்டது. இனி, விடுபட்டது ஆநுமானிக பிரமாணம் ஒன்றே.

சாங்கியன் அநுமானத்தால் ஈஸ்வரனை சித்தி பண்ணு, அந்த அநுமான யுக்தியை நிரஸ்தம் பண்ணினால்,
அவன் மதம் பூர்ணமாக கண்டிதமானபடியே அன்றோ?

நையாயிகனுடைய பரமாணு வாதத்தை நிராஸன மாக்கினான் சாங்கியன் .
எத்தனை காரியம் இருந்தாலும் , காரணம் ஒன்று தான் இருக்க வேண்டும்.
கரோதி இதி காரணம்.
கிரியதே இதி காரியம்..
தான் சொல்லுகிற பிரதானம் தான் காரணம். நையாயிகன் சொல்லுகிற பரமாணு காரணம் ஆகாது என்பது அவர்கள் வாதம்.
பலவற்றை காரணமாக சொல்லப் போனால், அநவஸ்தா தோஷம் வரும்.
தன்னுடைய பிரதான காரண வாதத்தில்
1. காரண அவஸ்தா வியவஸ்தவ்யம் . ஷட்பி பார்ஸ்வை ( six dimensional) பரமாணு வாதத்தில் அது அவியவஸ்தவ்யம்
2. பிரதானம் ஏக திரவ்யம் . அவர்களின் பரமாணுக்கள் பல பலவாக வேண்டியுள்ளன.
3. காரிய காரண ஸாரூபியம் . காரியம் சுக, துக்க, மோஹாத்மகம். காரணம் அவைகளுக்கு ஹேதுர்பூதமான
ஸத்வ ரஜஸ் தமஸோடு கூடி இருக்க ஸாலக்ஷிண்யத்தோடு அமைகிறது.
யதா ஊர்ணநாபி – பிரதானம் விபாக – அவிபாக தன்மையோடு ஸ்ருஷ்டி லயங்களைக் சமன்வயித்துக் காட்டுகிறது.

குலாலன் பரிமிதமான கட, சராவங்களைத்தான் பண்ணமுடியும். நெய்பவனும் பரிமிதமான வஸ்திரங்களைத்தான் தயாரிக்க முடியும்.
அவர்களுடய சக்தி அளவுபட்டபடியாலே. பிரதான சக்தி அபரிமிதமானது. எனவே ஜகத் ஸ்ருஷ்டி சார்த்தகம்.
காரண காரிய அவிபாகஸ்ய வைஸ்வ ரூபஸ்ய. எனவே அவ்வியக்தம், பிரதானம், மூல பிரகிருதி என்று சொல்லப்படுகிற
ஒன்றே அனைத்துக்கும் மூல காரணமாக உள்ளது. மண்ணால் ஆக்கப் பட்ட பொருளுக்கு மண் தான் காரணமாக முடியும் . பொன் காரணமாக முடியாது.
அதுபோல பொன்னால் ஆன பொருளுக்கு பொன்னே தான் காரணமாக முடியும்.
அவ்வாறே சுக, துக்க, மோஹாத்மக ஜகத்துக்கு த்ரிகுணாத்மக பிரதானம்தான் காரணம் என்பதால்
குண ஸாம்யம் சித்தம் என்பதாக பூர்வ பக்ஷம் இதுவரை சொல்லப்பட்டது.

ஞானாந் மோக்ஷரேவ ஜாயதே ராஜ ஸிம்ஹா ! நத்வத் அக்ஞானாது. – என்பது பீஷ்மர் தர்மபுத்ரருக்கு உபதேசித்தது.
பூர்வ மீமாம்ஸகன் மட்டும் கர்மா, கர்மா என்று சொல்ல , மற்ற எல்லா சம்பிரதாயத்தவருக்கும் ஸம்மதம் ஞானாந் மோக்ஷம் என்பதே.
அவைதிகனும் சொல்லுவது இதையே.
ஆனால் அந்த ஞானம் எப்படி இருக்கிறது. முத்தி ஸ்வரூபம் எப்படி இருக்கிறது என்பதிலேதான் விசம்வாதம்.

அவித்யா விமுக்திரேவ மோக்ஷ : என்ற அந்த லகு சித்தாந்தம், லகு பூர்வ பக்ஷத்தில் என்ன நடந்தது?
அது கேவலம் வாக்கியாத் வாக்கியார்த்த க்ஞானமாக இருந்தால் போதாது. அது பக்தி ரூபாபன்ன ஞானமாக –
ஞானம் கலந்த நலமாகவேணும் என்பது ஆழ்வார், நாதமுனிகள் சம்பிரதாயம்.
நாதாய முநயே ஆகாத பகவத் பக்தி ஸிந்தவே –
என்று இவர்கள் விஷயமாகச் சொன்ன பக்தி யோகம் – சாதன பக்தி யோகமா? என்னில் கிடையாது.
பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு 3வது ஷாட்கத்தில் சொன்ன பக்தி யோகம் என்ன;
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டதான 32 பிரஹ்ம வித்தைகளில் சொன்ன சாதன பக்தி என்ன ;
பாகவதத்தில் 11வது ஸ்கந்தத்தில் நாரதருக்கு, உத்தவருக்கு கண்ணன் சொன்ன சாதன பக்தி என்ன;
அனந்தபத்மநாபன் விஷயமாக ஸ்வாதித் திருநாள் பண்ணின 1000 ஸ்லோகம் கொண்ட பக்தி மஞ்சரியில் சொல்லப்பட்ட சாதன பக்தி என்ன
இதெல்லாம் கிலஷ்டமான பக்தி சாதனம். ஆழ்வாரும் நாதமுனிகளும் அவதரித்து அகிலஷ்டமான இந்த பிரபத்தியாகிற
ஸாத்ய பக்தியை தந்திரா விட்டால் நாம் வைஷ்ணவர் களாக இருந்திருப்போமே அல்லாது ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகி இருக்க மாட்டோம்.
ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாரயண: பரம்ப்ரஹ்ம கீதா ஸாஸ்த்ரே ஸமீரத: (கீதார்த்த ஸங்க்ரஹம்-1)
என்ற ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி இங்கு ஸ்மாரகம்.

அந்த உபபத்தேஸ்ச என்கிற சூத்தரத்தில் சூசகமாக நாயமாத்மா பிரவசநேந லப்ய : என்ற விஷய வாக்கியத்தை இட்டு
அநன்யோபாய ஸ்ரவணாத் என்றிருக்கிற பக்வதநுக்ரஹத்தாலே லப்தமாகிற சாத்ய பக்தி தான் ராமானுஜீயம்.
நம்முடைய ஸம்பிரதாயத்தில் வேதாந்தச்சாரியாரின் பாட்டனாரான உய்யக்கொண்டார் ஒருவர்தான் ஸாதன பக்தியில் நின்றவர்.
அவர் இராமாநுஜரிடம் எத்தனைதான் பிரபத்தியைப் பற்றி உபதேசம் பெற்றாலும், தனக்கு அதில் மனம் போகவில்லை என்று சொல்ல,
அதற்கு உடையவர் நீவீர் வித்வாம்ஸ ராகையால் இதற்கு இசைந்தீர். கர்ம வசத்தால் பாக்யஹீனராய் இழந்தீர் என்று
சொன்னதாக ஐதிஹ்யம் ஒன்று காட்டப்படுகிறது.

ஸாதனா பக்தி ஸ்தானத்தில் பகவானை வைத்து, பிரபத்தி பலமாக – உபாய புத்தி விலக்காக –
அந்த சாதன பக்தியாகிற யாக யஜ்ஞாதிகளை பண்ணலாவது – கர்மம் கைங்கர்யத்தில் புகும் – என்பதாலே.

பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத (ஸ்தோத்ர ரத்னம்-65) வசனத்தின் படி, அதற்கு ஆச்சாரிய சம்பந்தம் அவஸ்யாபேக்ஷிதம்.
ஆச்சார்ய சம்பந்தம் அல்லாதபோது தாமரையை அலர்த்தக்கடவ சூரியன் தீர்த்தத்தை விட்டு அகன்றபோது உலர்த்துமா போலே –
விண்ணாடு தர வேண்டி இரான் அவன்.

சேதன பிராஜ்ஞா அநதிஷ்டிதமாக பிரக்ருதி தானே ஸ்ருஷ்டிக்கிறது. இதற்கு பர பிரஹ்மம் வேண்டியதில்லை என்பது சாங்கிய பக்ஷம்.
பிராஜ்ஞனான பகவததிஷ்டானத்தை நையாயிக்கனும் ஒத்துக் கொள்வதில்லை. உபாதான காரணமாக பிரக்ருதியைத்தான் சொல்லுகிறான் அவன்.
சரீராத்மா பாவத்தை இசைவதில்லை இருவரும்.

கொத்தனார் வீடு கட்டும்போது ஒவ்வொரு செங்கலாக , ஒன்றன் மேல் ஒன்றாய் , நீளத்தோடு நீளமும், அகலத்தோடு அகலமும்
சேரும்படியாக கட்டிப்போகிறான். இந்த ஷட் பரிமாண பாவம் இந்த சுவற்றுக்குப் போலே , செங்கல் எத்தாலே ஆனது என்றால்,
அதற்குள்ள பாகத்தாலே, அது எத்தாலே ஆனது? என்றால் அது அதற்குள்ள பாகத்தாலே என்று
அணுபரியந்தம் இந்த ஷடம்சம் சொல்லப்படுகிறது. அது அநவாஸ்தா தோஷத்தோடே முடிகிறபடியால் விலக்கு.

ஆன படியாலே , பிரதானம் தான் ஜகத்காரணம் . அது -விபுவாயிருக்கிறபடியாலே ;-நாநாவிதமாய் இருக்கிறபடியாலே;
மூன்று விதமான திரவ்யத்தோடே ஆனபடியாலே; த்ரிகுணாத்மிகா என்று குணத்தை இட்டுச் சொன்னாலும், அது குணமில்லை திரவ்யம்தான்.
நாம் சொல்வது பிரகிருதி த்ரிகுணவதி – மூன்று குணங்களோடு கூடிய ஒரு திரவியம் என்பதாக.
இதுவரை பூர்வ பக்ஷம் விவரிக்கப்பட்டது. இனி சித்தாந்தம் :

ரசநாநுபபத்தேஸ்ச ந அநுமானம் ப்ரவ்ருத்தேஸ்ச –
அனுமானத்தாலே சித்தி பண்ண பிரக்ருதிக்கு சிருஷ்டி பொருந்தாது. உண்டாக்கும் ஸாமர்த்தியமும் கிடையாது.
தேர் சமைக்க வேண்டிய மரம், உபகரணம் எல்லாம் இருந்தாலும், சக்தி, சாமர்த்திய, இச்சா, சங்கல்ப பிரக்ஞனான தச்சன் ஒருவன்
இல்லாமல் ரத்தம் எப்படி சித்திக்கும்? பகவான் ஸர்வஜ்ஞ, ஸர்வசக்தி , ஸத்திய சங்கல்பனாகையாலே ,
சககாரி வஸ்து இல்லாமலே ஸ்ருஷ்டிக்க தடை இல்லை. அசேதனமான பிரகிருதி காரியமாக , ஒரு சேதனன் வேண்டாவோ? –
என்று சூத். 2-1-24 ல் உபஸம்ஹார தர்சநாத் அதிகரணத்தில் அவன் சொன்ன ஆக்ஷேபங்களை அவனுக்கே திருகு பணமாயிற்று.

ரதத்துக்கு தாரு போல பவனத்துக்கு செங்கல், குண்டலத்துக்கு ஸ்வர்ணம் – உபாதானம் இருந்தாலும் அவை எல்லாம் அசேதனமாய் ,
அதனைக் காரியம் கொள்ள,எதை, எப்படி, எதுவாக செய்ய வேண்டிய ஞானமுள்ள சேதனன் கை வைத்தால் அல்லது காரியம் ஈடேறாது.
ஆக,பிராஜ்ஞ அநதிஷ்டதமானது தன்னாலே தான் உண்டாக்க கடவதில்லை.
ஸத்வ, ரஜஸ், தமஸுகள் குணமாக இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எங்களுடைய சித்தாந்தத்தில் அவை திரவ்யமானபடியாலே
கழிப்பதற்கு இல்லை என்று சாங்கியன் சொல்ல,

அதற்கு பிரதிகோடியாக பகவத் ராமானுஜர் கூறுவதாவது :
தத்வாதிகள் திரவ்யத்தினுடைய குணமாகத்தான் வேணுமே ஒழிய, சாஷாத் திரவ்யமாக முடியாது.
உதாரணத்திற்கு, செம்மண், கறுமண், சுத்தமான மண் என்று ஸத்வ, ரஜஸ் , தமஸ் மண்ணுக்கு குணமாக முடியுமே தவிர,
மண்ணாகவே அவை ஆகமுடியாது.
அப்படியே நீ பரமாணு காரண வாதத்தை நிராஸனம் பண்ணும்போது சொன்ன அநவாஸ்தா தோஷம் உங்களுக்கும் உண்டு.
காரண வஸ்து ஏகமூலமாக இருக்க வேண்டும் என்று சொன்னபடிக்கு அல்லாமல் . பிரதானம் மூன்று பொருளின் கலவையான படியாலே.
ஏகத்வம் போய் அனேகதவம்தான் சித்திக்கிறது..

பிரதானம் அபரிமிதம் என்றாய்.. அவ்வழியாலும் உன்னுடைய சித்தாந்தம் நிற்காது.
காரணம் – அபரிமிதமான ஒன்றைக் கொண்டு காரியம் கொள்ள முடியாது. மூன்று தத்துவமும் சமமாக இருந்த ஒன்றில்,
வைஷம்யம் ஏன் எப்படி உண்டாயித்து? என்பது கூறப்பட்ட வில்லை. எனவே காரியாரம்பம் அசம்பவம்.
காரியம் ஆரம்பமாக வேண்டுமென்றால், அது பரிமிதமாகத் தான் இருக்க வேண்டும்.

பர்வதோ வஹ்நிமான் என்றதில், பக்ஷம் பர்வதம் போலே, ரத, பவன, குண்டலம் போலேயாய் பிரதானமும் பக்ஷீயமாகத்தான் உள்ளது.

யாரை நாம் மனனம் பண்ண வேண்டும் ? என்றால்
ஆத்மா வா அரே திரஷ்டவ்ய :ஸ்ரோதவ்ய : மந்தவ்ய : நிதித்யாஸிதவ்ய : என்று ஸ்ரவண மனன நிதித்யாஸிதவ்யங்களாலே
அந்த பகவானைத்தான் ஸாஷாத்காரம் பண்ண வேண்டியது.

கஸ்ச த்யேய : காரணம் து த்யேய — என்று அந்த பரப்ரஹ்மம் தான் தியேய வஸ்து என்பதற்கு
யாதோ இமாநி பூதாநி ஜாயந்தே –என்பதான காரண வாக்ய ஸப்தத்துக்கு வியுத்பத்தியைச் சொல்லி லக்ஷணத்தையும் காட்டி
இந்த சரீரக மீமாம்ஸா சாஸ்திரம் பிரவர்த்தமான மாயித்து.

நமக்கு இங்கு மனன விஷயமாக இருப்பது ஆச்சார்ய குரு பரம்பரையே. அத்தாலே பகவானை ஸ்ரவண, மனன, நிதித்தியாசனத்துக்கு
விஷயமாக சொன்னதை விட்டுவிட வேண்டியதோ என்னில் , இல்லை.

குரூர் உபேத்ய ஸ்ரோத்ரியம் ஸமித் பாணி :,என்று குருவை மனனம் பண்ணி ஸாஷாத் கரிக்காமல், அந்த பகவத் ஸாஷாத் காரம் கிட்டாது.
வக்தவ்யம் , ஜப்தவ்யம் குருபரம்பரையும், துவயமும் என்று ஸ்வாமி பிள்ளைலோகாச்சார்யார், ஸ்ரீவசனபூஷண ஸாஸ்த்ரத்தில்
காட்டியபடி அதனையே மனனம் பண்ணக் கடவது.

வேத சாஸ்திரத்துக்கு கண்டகர்களான
பௌத்தன் – க்ஷணிக விஜ்ஞானமே ஆத்மா , சூன்யமே ஆத்மா என்றும்;
ஜைனன் – ஆத்மாவை ஒத்துக் கொண்டு , வேதத்தைத் தள்ளியும்;
மாயாவதி – ஆத்மாவும் பரபிரஹ்மமும் ஒன்றே என்றும்
வேதத்துக்கு கண்டகமான பொருள்களை சொல்லி குதஸ்தது ? குதஸ்தது ? என்று வந்த பாஹ்ய குத்ருஷ்டிகளுடன்
வாதமிட்டு நேர் பண்ணின நேதாரம் பகவத் பக்தாரம் யாமுநேயம் மனமாமஹே – என்பது பட்டர் திருவாக்கு.

சடகோப முனி
நாதமுனி
யாமுனமுனி
இராமாநுச முனி மற்றும்
மணவாள முனி
என்ற பஞ்சமுனி சம்பிரதாயம் நம்முடையது.
முதல் முன்னம் ஸ்வாசார்யரைக் கொண்டு , எம்பெருமானார் உள்ளிட்ட குரு பரம்பரையை அனவ்ரதம் மனனம் பண்ண வேண்டியது.

மயிஸர்வம் ஜகத் என்று பகவத் சரீரமாய், சேஷபூதனாய் இருக்கிற நாம், அது பாகவத , ஆசார்ய பரியந்தம் ஆக்கி ,
அதற்கு கிஞ்சித்தும் ஸ்காலித்யம் இல்லாதபடிக்கு தினமும் அவர்களை நினைவில் கொண்டு பகவத் தியானம் செய்ய வேண்டும்.

—————

சூத். 2-2-2 :: பய : அம்புவத் சேத் தத்ராபி ::

கீழே, காரண வஸ்து ஏக மூலம் காரிய வியவஸ்திதமாக இருக்க வேண்டும் என்று குணாத்மக மான
ஸத்வ, ரஜஸ், தமஸையே திரவ்யமாகக் கொண்ட ஏக வஸ்துவாகிற பிரக்ருதியையே காரணம் என்று நீங்கள் சொன்னது பொருந்தாது –
காரண பகுத்வா அநவாஸ்தா ததவஸ்தேவ என்று சித்தாந்திகள் சொல்ல;

விஷம அவஸ்தை ஸ்ருஷ்டி என்பதாலே காரியம் ஆரம்பமாக பரிமிதாவஸ்தை அவசியம்.
அதற்கு ஸர்வஜ்ஞ; ஸர்வ சக்தி ; ஸகல குணாத்மகத்தை ஒத்துக் கொண்டு இருக்கிற
ஸகலேதர விலக்ஷண பர பிரஹ்மத்துக்கு இது கூடுமே ஒழிய , நீங்கள் சொல்லுகிற சலனமில்லாத சமான தோலனத்தில் உள்ள
அபரிமித மூல ப்பிரக்ருதிக்கு காரியாரம்பம் அசம்பவம்.

புருஷனை அதர்மகனாகவும், பிரக்ருதியை அசேதனமாகவும் சொல்லுவதால் இது பொருந்தாது என்பதை கீழ் ஸூத்ரத்தில் பார்த்தோம்.
அதற்கு சாங்கியன் பயஸு = பாலைப் போலே ; அம்பு = தீர்த்தத்தைப் போலே என்று அநுமானித்துக் காட்ட , அதாவது
பய : அம்புவத் சேத் தத்ராபி அநுபபத்தேஹே –
சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றும் மூன்று காரணம் என்று சொன்னால் அநவஸ்தை வந்து விடுகிறது.
இல்லை மூன்றும் சேர்ந்து ஒரு காரணம் தான். காரியாவஸ்தையில் அது வேறு வேறாக பரிணமிக்கிறது. என்றால்
காரியமாகிய ஜகத்துக்கு ஸாலக்ஷிண்யம் போய்விடுகிறது–
ஒரே காரணமான பிரதானத்திடமிருந்து விவிதமான ஜகத்து எப்படி வந்தது? என்பது கேள்வி.

காரணம் மூன்று என்றால் – 3 திரவ்யத்தால் ஆன பிரதானம் ஒன்றே என்கிற வாதம் போய்விடும்.
இல்லை மூன்றும் சேர்ந்த ஒரே காரணத்தால் வந்தது ஜகத்து என்றால், காரண காரியம் ஒன்றாக இருக்க வேண்டுமே,
நானாத்வம் ஏன் வந்து ? என்ற கேள்வி வரும்.

அம்புவது – எப்படி பாகீரதி, அலக்நந்தா, விஷ்ணு தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தம் சேர்ந்து கங்கையாகி ,
பிறகு அது கிளைகளாக பிரிந்து நாட்டுக்கும், நகரத்துக்கும் பாய்கிறதோ அதுபோல
முக்குணங்கள் பிரதானம் என்கிற ஒரு தத்வமாய், பிறகு, காரியாவஸ்தையில் நானாத்வம் சித்திக்கிறது. அல்லது
ஆகாசத்தில் இருந்து விழும் மழை ஜலமானது ஏக ரஸத்தோடே இருந்தாலும், அதை உண்ட மா, வாழை, பலாச் செடிகள்
வேறு வேறு ரசத்தோடு ஆன காய் கனிகளை ஈவதும் ஸ்வதஹா நடப்பதுதான். இதற்கு யாரும் எதுவும் செய்ய வேண்டியது உண்டோ?
அதேபோல பிரதானம் கூட ஸதத பரிணாமியாய் பரமாத்ம அதிஷ்டானம் இல்லாமலே ஆஸ்ரய விவிதத்வாது நாநாத்தவம் சித்திக்கிறது என்றும்

பயஸ்வது – வேதாந்திகளே , நீங்கள் சூத். 2-1-24 – உபஸம்ஹாரதர்ஸநாத் நேதி சேத் ந, க்ஷீரவத்தி அதிகரணத்தில் சொன்னபடிக்கு
பால் உறை விடாமல் தயிராவதுபோல் , அசேதனமான மூலப் பிரகிருதி தன்னாலேயே பரிணமிக்கிறது என்றும் சொல்லுவீர்களானால்

தத்ராபி அநுபபத்தேஹே – க்ஷீரவத்தி என்பதில் சொல்லப்பட்ட விஷயம் சஹகாரி காரணம் வேண்டியது இல்லை ,
ஸத்ய ஸங்கல்பத்தாலேயே அந்த பிரஹ்மத்துக்கு காரியம் கொள்ள அமையும் என்பது போக்கி,
பிராஜ்ஞா அநதிஷ்டதமாக ஸ்ருஷ்டி நடக்கிறது என்று ஒப்புக் கொண்டதாக நினைப்பிடுகை அபத்தம் .

பால் தயிராம் போதும், மழைநீர் இளநீர் ஆம்போதும் அவை பரம சேதனனால் அதிஷ்டிக்கப்பட்டே பரிணாமம் அடைகின்றன.
இப்படி பால், மழைநீர் இரண்டும் அவ்வனுமானத்தில், பக்ஷமாக இருக்கும் போது, அதையே திருஷ்டாந்தம் ஆக்கி
அனுமானத்தை உடைப்பது முறையல்லவே.
யோ அப்ஸு திஷ்டந் (ப்ரஹதாரண்யகம்) : என்கிற ஸ்ருதியை அடி யொற்றி பகவததிஷ்டித பிரகிருதி பரிணமிக்கிறது என்றே
அவ்விடத்தில் நாம் சொன்னதாகக் கொள்ள வேண்டும். அத்தை அனுமான திருஷ்டி கொண்டு தகர்க்கப் போகாது என்பது சித்தாந்தம்.
பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன் – என்கிற நம்மாழ்வார் திருவாக்கும் இதற்கு உபயுக்தம்.

தற்கால மின்சார உபகாரங்கள் போல ஜகத்து என்று வைத்துக் கொண்டு, அவைகளை நடத்த மின்சாரம் போல புருஷன் என்று கொண்டாலும்,
அவைகள் வேலைக்கு ஆகும்படியாய் தட்டிவிட்டு, நிறுத்த (On / Off செய்ய) சேதன அதிஷ்டிதம் அவசியம் போலே –
ஸர்க பிரதி ஸர்கம் (ஸ்ருஷ்டி-பிரளயம்) விவஸ்திதமாக பகவத் சங்கல்ப ரூப பிரஜ்ஞாதிஷ்டித பிரக்ருதிகல்லது பொருந்தாது என்ன

நீங்கள் பிரதானத்தின் பேரில் சொல்லுகிற விஷம ஸ்ருஷ்டி தோஷங்களுக்கு ஸத்வ ரஜஸ் தமஸ் காரணம் என்று சொல்ல வழியுண்ண்டு.
அதே விஷம ஸ்ருஷ்டி காரணமாக, பலமடங்கு வைஷம்ய நைர்க்ருண்யாதி தோஷங்கள்
பிரஹ்மததுக்கு தான் அதிகம் , நாநாவாப்த அவாப்தவ்யம் என்று அவாப்த ஸமஸ்த காமனான படிக்கு.என்ன இதி அவாச்யம்.

பரிபூர்ணனான போதும் ஸ்ருஷ்டி லீலார்த்தே ஸம்பவம் என்பது முன்னமே கடப்பட்ட ஒன்று.
சரீர பிரதத்வத்துக்கு மட்டுமே பிரஹ்மம் காரணம் . மழை நீர் ஏக ரசத்தோடே இருக்க, மா பலா வாழை விவித ரசத்தோடே அமைவது
அதனதன் பிஜா சக்தி யாலேயாய் , ஜீவனுடைய புண்யபுண்ய பலத்துக்குச் சேர நடக்கிற சுக துக்கானுபவம்
அவரவர் கர்மமானுகுணமாக வந்தது அன்றி பிரஹ்மம் காரணம் அல்லவே.
ஆகையால் சாங்கியன் சொல்லுகிற தோஷங்கள் வைதிகமதத்துக்கு கிடையாது என்பதே சமாதானம்.

நாம் சொல்லுகிற புண்யாபுண்யங்கள், அசேதன வஸ்துவாகையாலே, அதுவும் பிரகிருதி காரியம் என்று தங்களுக்கு
சாதகமா உள்ளதே ? என்று சாங்கியன் மேலும் ஆக்ஷேபிக்க அடுத்த சூத்ரம் அத்தை நிவர்த்திப்பிக்கிறது.

————————-

சூத். 2-2-3 –வ்யதிரேகா அனவஸ்தி , தேஸ்சா அனபேக்ஷத்வாத் ::

அநபேக்ஷத்வாத் – ஒரு ஸர்வ சேதனனால் அதிஷ்டிக்கப் படுமதை ஏற்க வில்லையானால்
வ்யதிரேகா – ஸ்ருஷ்டியிலும் வேறுபட்டதான பிரளயத்தில்
அநவஸ்திதே : ச – நில்லாமல் ஸ்ருஷ்டியே நடவா நிற்கும்.
ஆக ஸ்வதந்த்ர பிரகிருதி ஜகத் காரணமாக முடியாது.

அதாவது –
பிராஞனாக , ஸத்ய ஸங்கல்பனாய் இருக்கிறவன் தான் ஆதி ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான். அதில் வைஷமயத்துக்குக் காரணம்
அவ்வோ ஜீவாத்மாக்களுடைய புண்ய, பாப ரூபமான கர்மா காரணம் என்று சித்தாந்தி சொன்ன விடத்து தனக்கேற இடம் கிடைத்தாப் போல் ;
புண்ய பாப – சுக, துக்க ஜகத்து உண்டு. ஜீவாத்மா உண்டு . இத்தனையே போதும் சம்சாரம் நடக்க. பரமாத்மா ஏதுக்கு? என்று வினவ
புண்ய பாப கர்ம பிரவாகத்தையும் ஜீவனையும் ஸம்பந்தப் படுத்த வேண்டி வருவதே காரணம் என்ன
அதற்கு சாங்கியன் – ஜீவாத்மா ஜ்ஞான ஸ்வரூபன். அவனுடைய தர்மம் ஜ்ஞாத்ருத்வ, கர்த்ருத்வ, போக்த்ருத்வம் என்று
நீங்கள் சொல்வதைக் கொண்டு அவன் தன்னாலே சம்பந்தத்தைப் பண்ணிக் கொண்டு போகிறான். ஈஸ்வரன் வேண்டுமோ ?
க்ருதம் ஈஸ்வரேண அதிஷ்டாதா ? – அதாவது கர்மங்களுக்கு ஏற்ப பயன் அளிக்கப் படுகிறது என்றால் பரமாத்மா எதற்கு?
ஜீவாத்மா ஸ்வாதந்த்ரியத்தால் என்ன பயன்? இந்த தோஷங்கள் வாராமைக்கு வேண்டுமானால்,
ஸேஸ்வர சாங்கியன் போல நீங்களும் பரமாத்மாவை சாக்ஷி மாத்ரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதாக
குதர்க்கமாக பேசினான் நிரீஸ்வர சாங்கியன் .

இது எப்படி இருக்கிறது என்றால்
போஜ ராஜன் பாக சாலையில் உமி நீக்கிய அரிசியும், முழு பயறும் சேர்த்து பொங்கல் செய்வது வழக்கமாய் இருக்க,
ஒருநாள் , அரிசியும் பயத்தம் பருப்பும் சேர்த்து பொங்கல் சமைத்திருந்தார்கள். ராஜா இது என்ன வழக்கம் போல் இல்லாமல்
இன்று தொட்டு நீக்கிய பயத்தம் பருப்பு சேர்த்து இருக்கிறீர்கள் என்ன காளிதாசன் அதற்கு அரிசிக்கு உமி நீக்கினார்ப்போல் ,
பயறுக்கும் தொட்டு விலக்கினார்கள் போலும் என்பதை
அந்த வல்லப ஸம்யோகே ஜாதா விகத கஞ்சுகா என்று பாட்டு படித்தான். இதன் பொருள்
நாட்டியக்காரி தான் நடனம் மேடையில் ஆட, அதை அந்தகன் ஒருவன் அமரிக்கையாய் அமர்ந்து வீக்ஷணம் பண்ணுமா போலே
என்று சூசகமாக கூறினான்.
அந்த நாட்டியக்காரி போலேயோ ஜீவாத்மா? அந்தகன் போலே சாக்ஷி மாத்ரமோ பரமாத்மா? அல்ல கண்டீர்.

இந்த பார பக்ஷ சிருஷ்டியுமே – அங்கா – அங்கி பாவத்தாலே
தேவ ஜாதி ஸத்வ உத்கடத்தாலேயாய் ராஜஸ, தாமஸம் உதாசீனமாய் – சுகித்தும் ;
மனுஷ்ய ஜாதி ரஜஸ் உத்கடத்தாலேயாய் ஸத்வ, தாமஸம் உதாசீனமாய் – துக்கித்தும் ;
திர்யக் ஸ்தாவர ஜாதி தமஸ் உத்கடத்தாலேயாய் ஸத்வ , ரஜஸ் உதாசீனமாய் – மோஹித்தும் கிடக்கும்படியான ஸ்ருஷ்டி சம்பவிக்கிறது.

எது போலே என்றால், பஞ்சிகரண த்ரிவிருத்கரணம் போலே இதுவும் எனக் கொள்வது.
எப்படி பூ தத்துவத்தில் 1/2 சதம் பிரகிருதி தத்வம் அங்கியாய்; மற்ற தேஜஸ், அப்பு, வாயுர் ஆகாசம் 1/8 + 1/8 + 1/8 + 1/8 சதம்
அங்கமாய் கலந்து உண்டாகிறதோ – அதேபோல இந்த ஸத்வம் , ரஜஸ். தமஸ் மூன்றில் ஒன்று அங்கியாய் மற்ற இரண்டும் அங்கமாய்
இருந்து விபுதா ஸ்ருஷ்டி உண்டாகிறது
அப்படி உண்டான அவ்வோ ஜீவாத்மாவினுடைய பாப புண்ய தாரத்ம்யத்தைக் வைத்து ,
பகவந் நிக்ரகஹ-அனுக்ரகஹ ரூபமாக வருவதே யாகும் . இப்படி ஒரு பரம சேதனானவன் க்ஷேத்ரஜ்ஞனுடைய
கர்ம ஸாபேஷை கொண்டு சம்பந்தத்தை செய்ய வேண்டி இருக்க அது தன்னாலே நடக்கும் என்று எப்படிச் சொல்வது என்ன ,
ஒளஷத சேவையை உதாரணம் காட்டி கால தேசத்தை அனுசரித்து நடக்கும் என்கிறான்.

தேஸகால வியவஸ்தத்வாத் :
வியாதிக்கு மருந்து கொடுக்கும் போது தேச கால நியமம் உண்டு. ஏதோ ஒரு மருந்து, ஏதோ ஒரு காலத்தில் கொடுப்பது என்பது இல்லை.
தேச காலம் மருத்துக்கு எப்படி வியவஸ்திதமாக உள்ளதோ, அதுபோல பிரக்ருதி இந்த புண்ய பாபாபத்தை ஸம்ஸ்கிரதமாக்க பலனை அளிக்கும்.
முக்கிய பிராணன் பஞ்ச விருத்தி பிராணனாக வர்த்திக்கும் போது கபவாத பித்தம் ஏற்ற தாழ்வுக்குச் சேர
ஒளஷத சேவை கால பிரமாணத்தை இட்டு 3 நாள் 3 வேளை அல்லது 5 நாள் 5 வேளை என்பதான நியமங்கள்
ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. இது கால வியவஸ்தா.
தேச வியவஸ்தா என்பது சீதள தேசம், உஷ்ண தேசம் என்பதிலான பத்தியா, அபத்யா விவஸ்தை யாகும்–
ஒளஷதத்துக்கு அனுபானமாக தேனில் குழைத்துச் சாப்பிடவும். க்ஷீர சேவை பண்ணவும். வெந்நீர் எடுத்துக் கொள்ளவும் போன்ற
அனுபான நியமங்களும் உண்பதற்கு முன், உண்பதற்கு பின் , வெறும் வயிற்றில் என்பதான நியமங்களும் ஒளஷத சேவைக்கு உண்டு.
இப்படி புண்ய பாபா சம்பந்தம் புருஷனுக்கு பிரக்ருதி தன்னாலே நடத்தும் என்று சாங்கியன் சொல்ல ,

அதற்கு சித்தாந்தி
உனக்கு புண்ய பாப ஸ்வரூபமே இன்னதென்று தெரியவில்லை. அது ஸாஸ்த்ரைக அதிகம்யம் –
அபௌருஷேயமான சாஸ்திரத்தை இட்டே அறியவேண்டுமவை.. மற்றவை எல்லாம் கிருதகிருத்யம்.
வேதம் பூர்வ காண்டத்தில் சொல்லப்பட்ட பகவன் முகோல்லாஸகர ஆராத்ய ரூபமான கர்மங்கள் தான் புண்யம்.
தத் வியதிரிக்த, தந் நிக்ரஹ பாகியான நிஷித்த காரியம் பாபம் . அவை கர்மத்திலோ, பிரக்ருதியிலோ கிடையாது.
ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுடைய நினைவில் இருக்குமவை.. இதை எல்லாம் கொண்டு பலாபலன்களை அளிப்பவன் பரமாத்மாவே .
இதை நாமாக சொல்லவில்லை. திரமிடாசார்யர் சொன்னதும்; ஸ்ருதியையை அனுவர்த்தித்து பகவானும் சொன்னவையே.
அதைவிடுத்து பலபிரதத்வம் நேரே கர்மத்திடமோ, அபூர்வத்திடமோ உள்ளது என்பது அதிவாதமாகும்.

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேஸவாத் பரம்.
தேஹேந்த்ரியமும் சாஸ்திர பிரதானமும் பண்ணி பிரதம பிரவிருத்தியில் அனுமதி பிரதானம் பண்ணி, அநுமந்தாவாக இருந்து ,
தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புண்ய பாப கர்மங்களை சேதனர்கள் இயற்ற – பலமத் உபபத்தேஹே என்றபடி – தர்மார்த்த மோக்ஷ வர்ததே.
ஆக அவன்தான் புண்யபாப ஸ்வரூபத்தை நிர்த்தாரணம் பண்ணி பலபிரதாவாகவும் இருக்கிறான்.
ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொருவிதமாக, பாபம் செய்தால் தண்டிப்பதும், உதாசீனப் படுத்துவதுமான அவனை
தயை இல்லாதவன் என்று காட்டாதோ என்றால்

தகாதவர்கள் குறித்துக் காட்டும் தயை குணமாகாது. மாறாக , விரோதிகளை நிரசிப்பது குற்றமும் ஆகாது.
இதற்கு பர ஹிம்சை அஸஹிஷ்ணுத்வம் காரணம். பசு பாலகன் கோல் வைத்து ஆக்களை ரக்ஷ்ணம் பண்ணுவதுபோல்,
பர துக்க துக்கித்வனாய், கிஞ்சித் அத்துவேஷ ஆபிமுக்யம் பிறந்து தனக்கேற இடம் கிடைத்தவாறே,
யாதிருச்சிக, ஆனுஷாங்கிக பிராசங்கிக ஸுக்ருதங்களை ஒன்று பத்தாகிப் போந்து
தேஷாம் ஏவாநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞாநஜம் தம:
நாஸயாமி ஆத்ம பாவஸ்தோ ஜ்ஞான தீபேந பாஸ்வதா – கீதை 10-11.
என்று சேதன உஜ்ஜீவனார்த்தமாக ஸதா உத்தியோகிப்பவனை நிர்க்ருணன் , பக்ஷபாதி என்று சொல்வது பொருந்தாதது மட்டும் அல்லாமல்,
ஈஸ்வர அநதிஷ்டித பிரதானம் ஜகத் காரணம் என்பதும் நிராஸ்யம்.

—————————

தத்வம் ஏகோ மஹாயோகி விபும் ஹரி நாராயண பிரபு :
சதுர்முக பிரம்மா ரஜோகுண பிரசுரனாய், ருத்ரன் தமோ குண பிரசுரனாய், ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே
ஸத்வமே தலை எடுத்தவனாய் இருக்கிற தத்வம்.

சூத். 2-2-4 :: அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத் ::

த்ருணாதிவத் ச – பசுவானது புல்லைத் தின்று பால் சுரப்பது போல , புருஷனுடைய ஸாநித்யம் இருந்தால் போதும்
பிரகிருதி தன்னாலேயே எல்லாம் பண்ணிக் கொண்டு போகும் என்று சொல்வது
ந – சேராது.
அந்யத்ர அபாவாத் – காளை மாடும் அதே புல்லை உண்டாலும் பால் கறப்பதில்லை.
காரணம் இங்கு சேதநாதிஷ்டானம் இல்லையாய்க் கொண்டு.

அதாவது
பசுமாட்டுக்கு சைத்தன்யம் இருந்தாலும் அது இந்த நிர்தர்ம, சின்மாத்ரா புருஷனைப் போல சாக்ஷி அளவே.
பசுமாட்டின் வயிற்றில் சென்று புல்லானது தன்னாலேயே பாலாய் பரிணமிக்கிறது. அதுபோல பிரக்ருதியும் தன்னாலே ஜகத்தாக பரிணமிக்கும் .

ந -நஹி தது உபபத்யதே . நீங்கள் சொல்வது பொருந்தாது.
காரணம் ஸர்வத்ர ந சித்யதே. காளைமாடு எருதுகள் விஷயத்தில் இப்படி நடப்பதில்லை யாதலால்.
சேதன சாந்நித்யம் மாத்திரம் இருந்தால் போதும் என்றால் காளை மாடும் பால் கொடுக்க வேண்டுமே? அப்படி நடப்பதில்லை.
அந்யத்ர ஆபாவாத் -அல்லது புல்லு, புண்ணாக்கு, கழுநீர் தண்ணி இவை பசுவின் வயிற்றில் தன்னால்
பாலாக பரிணமிக்கின்றன என்றால், அவை மூன்றும் கலந்து ஓரிடத்தில் வைத்தாலும் பாலாக வேண்டும். அப்படியும் நடப்பதில்லை.
ஆகையால் பசு சாப்பிட்டால் தான் பாலாகும் என்பது பகவத் சங்கல்ப ஸ்ருஷ்டி முகத்தாலேயாதல் காண் என்பது சித்தாந்தம்.

———————

சூத். 2-2-5 :: புருஷாஸ்மவதி இதி சேத் தாதாபி ::

புருஷாஸ்மவதி இதி சேத் –
இன்னும் சில உதாரணம் கொண்டு கீழே சொன்ன விஷயத்தையே வேறுவிதமாக வலியுறுத்தப் பார்க்கிறான்.
எப்படி அந்தையான பெண்ணின் தோளில் முடவனான புருஷன் இருந்து செலுத்துவனோ அது போலே
புருஷ சன்னிதானம் அசேதனம் பிரவர்த்ததே என்கிறான்.
இன்னும் அயக்காந்தம் போலே என்று காந்தமணியின் சந்நிதியில் இரும்பு ஆகர்ஷணம் ஆவது போல் புருஷனின் சந்நிதியில் பிரகிருதி செல்படலாம்.

ததா அபி – இப் பூர்வ பக்ஷமும் தவறு.
புருஷ சந்நிதியை ஒப்புக் கொண்டாலும், குருடனுக்கு நொண்டி காட்டும் வழியைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவு இருக்க வேண்டும்.
குருடன் ஸ்தானத்தில் இருக்கும் பிரக்ருதியோ அசேதனம். புருஷனும் நிர்தர்மகன் என்றபோது நொண்டியைப் போல் நியமிக்கக் கூடுமோ ?
அயப்பிண்ட உதாஹரணத்திலும் சமீபத்தில் வந்தால் தான் ஆகர்ஷ்ணமாகும்.
கர்த்ருத்வமில்லாத புருஷனுக்கு சமீபத்தில் வருத்தலாகிற கிரியைகள் சொல்வது முடியாதே? என்ன

அதற்கு அவர்கள் காந்தகல் போல் அருகில் வருதல் என்பது இல்லை ,
காரணம் புருஷன் எப்போதுமே பிரகிருதியின் அருகிலேயே இருக்கிறான் ;
பிரகிருதி விபு என்றும், புருஷன் ஸர்வகதன் என்று சொன்னதாலே. அதுவே காரணமாக பரிமாற்றம் நிகழ
ஸ்ருஷ்டி -பிரளயம் நித்தியமாய் முடியும் .

———————

சூத். 2-2-6 ::அங்கித்தவ அநுபபத்தேஸ் ச —

கீழே சொன்ன அங்கா – அங்கி பாவத்தை ஏற்காததால்
அதாவது முக்குணங்களில் ஒன்றின் மிகுதியால் வரும் அங்கி பாவம் ஸ்வதந்திர பிரக்ருதிக்கு பொருந்தாதாகையால்,
ஸர்க – பிரதி ஸர்கங்கள் ஏற்பட்ட வழியில்லை.
முக்குணங்கள் ஸம தோலனத்தில் இருந்தால் பிரளயம். அப்படி ஸமநிலையில் இருக்கும் முக்குணங்களில்
ஒன்று கூடுதலாகி அங்கியாய் மற்ற இரண்டும் குறைந்து அங்கமாக பிரஸக்தி – யாதொரு காரணமும் ஒப்புக் கொள்ளப்படாத போது,
ஸ்ருஷ்டி அசம்பவம்.
இப் புடைகளால், பிராஜ்ஞா அநதஷிடித ப்ரக்ருதி , ஜகத் காரணமாவே மாட்டாது.

———————-

சூத். 2-2-7 :: அந்யதா அநுமிதௌ ச ஜ்ஞான ஸக்தி வியோகாத் ::

அந்யதா அநுமிதௌ ச – கீழே சொன்ன தோஷாஸ்பதமான பிரதானத்தை விலக்கி, வேறுவிதமாக அனுமானம் செய்தாலும்
ஜ்ஞான ஸக்தி வியோகாத் – அறிவுடையதான சக்தி இல்லையாகில், அந்த பிரதானமும் ஜகத் காரணமாக முடியாது.

—————-

சூத். 2-2-8 :: அப்யுபகமே அபி அர்த்தா பாவாத் ::

போகட்டும். இப்படிப்பட்ட தோஷங்கள் எல்லாம் விட்டு அனுமானத்தாலே வேறு ஒரு பிரதானத்தை சித்தி பண்ணுகிறேன் என்றாலும்,
அந்த பிரதானத்தாலே ஒரு புருஷார்த்தமும் கிடையாது. புருஷனுக்கு பந்த மோக்ஷங்களை உண்டாக வல்லது அல்லவே இந்த பிரதானம்
காரணம் நீங்கள் சொல்லுகிற சைதன்ய மாத்ர புருஷன் நிஷ்கிரியன். நிர்விகாரன். நிர்மலன். இத்யாதி பிரகாரங்களாலே
முக்த ஸ்வரூபனான படியாலே, போக மோக்ஷங்கள் இரண்டுமே புருஷனுக்கு ஒட்டாது.
இப்படி பயன் அற்ற பிரதானத்தை அனுமானத்தால் சாதிக்க தக்கது அன்று.

—————–

சூத். 2-2-9 :: விப்பிரதிஷேதாச்ச அஸமஞ்ஜஸம் ::

சாங்கியர் முன்னுக்குப் பின் முரணாக பேசுகையால் அவர்கள் மதத்தில் பொருந்தம்மையே மிஞ்சுகிறது.
இதை மேலும் விளக்கமாக பார்ப்போம்.
1. பந்த மோக்ஷ காரக பிரகிருதி – புருஷன் நித்ய யோகத்தால், ஒன்று ஸ்ருஷ்டியே நடக்க வேண்டும்
அல்லது மோக்ஷமே நடக்க வேண்டும்,
வத்ச விவிருத்த நிமித்தம் க்ஷீரஸ்ய யதா பிரவ்ருத்தம் அஜ்ஞஸ்ய
புருஷ விமோக்த நிமித்தம் ததா பிரவ்ருத்தி பிரதானஸ்ய
தன்னுடைய கன்றுக் குட்டியை நினைத்த போதே பசுவுக்கு பால் தன்னாலேயே சரக்குமா போலே
இந்த ஜீவாத்மாவுடைய பந்தத்தையும், மோக்ஷத்தையும் பிரதானம் கொடுக்கிறது.
கர்த்ருத்வம் , திருஷ்டுத்வம், சாக்ஷித்வம் எல்லாம் சைதன்யம் என்கிற தர்மத்தை –
தர்ம பூத ஜ்ஞானத்தை – ஒத்துக் கொண்டால் மட்டுமே பொருத்தும். கேவல ஜ்ஞான ஸ்வரூபன் என்றால் அவனுக்கு
கிரியை, பார்த்தல் , சாக்ஷியாகல் எதுவும் முடியாது. அந்த பிரக்ருதியினுடைய தரிசனமே ஆவதில்லை.
அல்லது பிரதானம் தானே பண்ணிக் கொண்டு போகிறது என்றால் அதற்கு சைதன்யமே கிடையாது என்பதால் இதுவும் பொருந்தாது.

பந்தனம் சேதனனுக்கு உண்டானால் தான் அல்லவோ கைவல்ய மோக்ஷத்துக்கு இடமுண்டு?
மற்று என்ன புருஷார்த்தம் விளையும் அது போக மோக்ஷ சூன்யமாக இருந்த போது?.

கிராமத்தில் பொழுது புலர்ந்தால், கிருஷிகன் உழுதல் தொழிலை செய்யப் புறப்படுகிறான்.
அங்கு உள்ள சந்நியாசியோ ஏதாவது செயலில் ஈடுபடுகிறோனோ? கேவல ஜ்ஞான தியானாதிகளில் மட்டும் இருப்பான் அல்லவா?
அதுபோல கர்த்ருத்வம் பிரக்ருதிக்குத்தான். புருஷன் உதாசீனனாகத்தான் இருக்கிறான் என்று சொன்னால்
அகர்மஸ்ய கைவல்யஸ்ய ஸ்வரூபம் ந ஸம்பவந்தி .
ஜபா-குஸும ஸாமீப்யத்தாலே , குஸுமம் தான் ஸ்படிகத்தை சிகப்பாக காட்டுகிறேன் என்கிற ஜ்ஞானமோ,
ஸ்படிகம் தான் சிகப்பாக காண்கிறேன் என்கிற ஜ்ஞானமோ – அஸத் – அஸத் கல்பமான இரண்டுக்கும் இருப்பதில்லை,
ஜ்ஞாத்ருவம் உடைய இன்னொரு சேதனனுக் கன்றோ அது தோற்றுகிறது?
அத்யாசமோ, பிரமையா அது புத்தி விகாரமானபடியாலே – நிர்விசேஷ புருஷனுக்கு அவை ஒத்து வராது.

இல்லை – பத்யதே முச்யதே நானாஸ்ச பிரகிருதி : என்று பிரகிருத்திக்கே பத்த-மோக்ஷத்தைச் சொல்லுவையோ ?
போக-மோக்ஷ சூன்யத்வம் பிரக்ருதிஸ்ச .என்பதாக அது சேதன தர்மமே யன்றோ?

அத்யாஸோ நாம –
ஒன்றின் தருமம் இன்னொன்றில் ஏறிக் காண்பதாகும். சேதனன் தன்னிடம் இல்லாத ஒரு தர்மத்தை
மற்ற ஒன்றினிடமிருந்து ஆரோபித்தலாகிற அன்ய தர்ம அநுசந்தானம் – அத்யாஸம். அது சேதனுக்கேயான தன்மை. விகாரமும்கூட.
புருஷன் நிர்விசேஷம். நிர்தர்மகன் என்று சொன்னதால், அத்யாஸம் அவனுக்கு ஏற்பட இடமில்லை.
சந்நிதியாலே அது ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அது நித்தியமாய்,
பத்யதே – முச்யதே என்கிற உபகாரம் பிரதானம் பண்ணிற்று என்று எப்படி சொல்லக் கூடும்?

ஒரு தடாகம். அதில் நித்யம் ஒரு யுவதி தீர்த்தமாடிப் போக, ஒரு புருஷன் மறைவில் இருந்து அவளை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
ஒருநாள் இந்த விஷயம் அவளுக்கு தெரிந்துபோக, அவள் லஜ்ஜித்து, அந்த தடாகத்துக்கு வருவதை நிறுத்தி விடுகிறாள்.
அல்லது புருஷனுக்கு சபலம் தீர்ந்துவிட்டாலும் அவ்விருவருக்குமான திருஷ்டாமயத்வாத் சம்பந்தம் விடுபட்டுப் போகிறது.
நாடக மேடையில் நர்த்தகி நாட்டியம் பார்க்க வந்தவன் ஆட்டம் முடிந்து பிரிந்து செல்லலாம்.
அல்லது இவன் எத்தனை நேரம்தான் பார்ப்பது என்று விலக்கிப் போகலாம்.
அதுபோல பிரகிருதி-புருஷ விவேக தத்வ ஜ்ஞானம் வந்தது என்றால் அதுவே மோக்ஷம் என்று
இப்படி வேறு வேறு விதமாக கூறுவீர்களானாலும்

நித்ய முக்தனாய், நிர்விகாரனாய் இருக்கிற புருஷன் பார்க்கிறான் என்பது சேராது.
காரணம் புருஷனுக்கு சைதன்யம் இருந்தாலும், சைதன்ய காரியம் எதுவும் கிடையாது என்பதை
அந்த புருஷ தர்மமாக சொல்லியிருக்கிறபடியாலே. அத்யாஸம் ஏற்படுகிறது என்பதும் கிடையாது.

இல்லை ஸாந்நித்யத்தையே தர்சனம் என்று கொள்ள வேண்டும் என்கிறாயா?
தத்வ ஜ்ஞானம் இல்லாது பார்த்தபோது பத்தம் உண்டாயிற்று – தத்வ ஜ்ஞானம் உண்டான பின்பு
பார்த்த போது மோக்ஷம் உண்டாயித்து என்கிறாயா? எப்படிப் பார்த்தாலும் பந்தமே மோக்ஷமாய் -மோக்ஷமே பந்தமாய் முடியும்.
அல்லது பிரகிருதி தன்னைத் தான் பார்க்கிறது என்பதும் முடியாது, அது அசேதனமாக இருக்கிறபடியால்.

இல்லை. அயதார்த்த தர்சனம் பந்த ஹேது. யதார்த்த தர்சனம் மோக்ஷ ஹேது என்பாயே ஆனால்
நீதான் பார்க்கிறது என்பதையே ஒத்துக் கொள்ள வில்லையே. பிரகிருதி பார்க்க முடியாது.
புருஷன் நிர்தர்மகன் ஆனபடியால் பார்க்கப் போகாது – உபய பிரசங்காது அஸம்பவமே அன்றோ?

எதுவும் வேண்டாம். பிரகிருதி ஸ்வரூபம் பந்தாத்மகம் . புருஷ ஸ்வரூபம் மோக்ஷத்வம். என்பதாலேயே சித்தம் என்றால்
பந்தமோ மோக்ஷமோ நித்தியமாய் ஸர்க்க-பிரளயம் அஸம்பவம்.
இப்படி பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் சாங்கிய சித்தாந்தம் அஸமஞ்ஜசம் .

இது இவர்களுக்கு மட்டும் அல்ல. யாரெல்லாம் இந்த சேதநாசேதனங்கள் எல்லாம் சரீர ஸ்தானத்தில் இருக்கிறது.
இந்த விசேஷாணாம்சமான சரீரத்தில்தான் அவனுடைய சங்கல்பத்தாலே விகாரம் ஏற்படுகிறது ,
விசேஷ்யமான பகவான் நிர் விகாரம்தான் என்பதை ஒழிய வேறு எவ்வகையிலும் சித்தாந்த ஸ்தாபனம் பண்ண முற்பட்டாலும் ,
அவர்களுக்கும் ஆஸாமஞ்ஜசம்தான் தட்டும் .

சாங்கியன் பிரக்ருதி – ஜீவாத்ம சம்பந்தத்தை அத்யாசத்தால் சொன்னான்.
அத்வைதி பரமாத்மாவுக்கே பிரக்ருதி அவித்தை என்றான். அந்த பிரக்ருதியும் பொய்யானது என்றும், பந்தமும் அபாரமார்த்திகம் என்றான்.
ஜ்ஞான ஸ்வரூபமான பிரஹ்மம் அவித்தையான அஜ்ஞானத்துக்கு சாட்சியாக உள்ளது என்பது –
பரிபூர்ண ஜ்ஞானத்தின் பக்கல் அஜ்ஞானம் வருவது என்பது ஒவ்வாது. பிரஹ்ம ஸ்வரூபமே நசிந்து போகும்.
இவையெல்லாம் மஹா பூர்வபக்ஷ-மஹா சித்தாந்தத்தில் அஸமஞ்சஸம் என்று காட்டப்பட்டவையே.

சாங்கியனும், நையாயிக்கனும் ஜீவன்து பிரதி சரீரம் பின்னம் என்று ஜீவ-நாநாத்மத்தை ஒத்துக் கொண்டார்கள்.
பிரஹ்மாஜ்ஞான வாதி அதற்கும் கேடாக ஜீவ – நாநாத்மத்வத்தை ஒத்துக் கொள்ளாதது போக ஏக-சரீர வாதமும் பண்ணி
மஹத்தான தோஷத்தை சூழ்துக் கொண்டார்கள். பிராதிபாசிக சத்யம் , வியாவஹாரிக சத்யம், பாரமார்த்திக சத்யம் என்று
மூன்றைச் சொல்லி மற்றதெல்லாம் அபாரமார்த்திகம் என்று எப்படிப் பேசினாலும்
நிர்விசேஷ பிரஹ்மத்துக்கு சாக்ஷித்வம் கீழே சொன்னது போல் பொருந்தாது.

புருஷன் நிர்விகாரம். நிர்விசேஷம் என்றான் சங்கியான்.
அதையே பரபிரஹ்மத்துக்கு ஆக்கி. சங்கரர். பிரக்ருதியை அவித்தை என்று சொல்லி, உபாதி பொய் -மாயா என்றும் சொன்னார்.
பாஸ்கரனோ உபாதி ஸத்யம் என்று சொல்லி – ஜீவோ நாவைவ பர : – பிரஹ்மமே உபாதியால் ஜீவனாகிறது என்றான்.
இப்படி தத்வத்ரயத்தை மறைத்து இரண்டு தத்வம் அல்லது ஒரே தத்வம் என்று சொல்வதெல்லாம் குத்சித த்ருஷ்டியாகும்.

சாங்க்கியன் தத்துவங்களை பிரகிருதி , புருஷன் என்று 25 ஆக பிரித்தான் .
வியாசரும் ஆழ்வாரும் அத்தை பிராஜ்ஞா அதிஷ்டிதமாக்கி 26 என்றனர்.
கால தத்வமாகவும் சேர அவை 27 ம் ஆகக்கடவது.

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழின்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டும்
மண்ணும் நீரும்எரியும் நல்வாயுவுமமாய்
விண்ணுமாய் விரியம் எம்பிரானையே –நம்மாழ்வார்.

ஷட்விம்சாலம்பிதாம்ஸம் தத்வம் :
உண்மைப் பொருள் ஓர் இருபத்தி நாலொடு
நண்ணரு ஞானத் துயர் ஆவி — யூண்காலம்
ஆய இவை சேர்ந் திருபத்தி ஆறும் நம்
மாயனார் தாம் மேய வீடு.

——- ——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —2-1-9 : க்ருஸ்ந ப்ரஸக்தி அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

அதி. 2-1-9 : க்ருஸ்ந ப்ரஸக்தி அதிகரணம்

சூத். 2-1-26 :: க்ருஸ்ந ப்ரஸக்தி : நிரவயவத்வ ஸப்தகோப : வா ::

கீழே க்ஷீர, ஜலாதி திராஷ்டாந்தங்கள் சொல்லப் போக , அவைகள் ஸாம்ச , ஸாவயவத்தோடு கூடியவைகள் ஆயிற்றே ?
திராஷ்டாந்திகமான பிரஹ்மமும் ஸாம்ச , ஸாவயவத்தோடு கூடியதோ? நிரம்ச , நிரவயவமோ ? என்பது கேள்வி.

சாது ஜனங்களை நலியும் காஞ்சனை சாதிப்பதற்கு
ஆதியும் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் – நம்மாழ்வார்.

அங்கு வைத்து இங்குப் பிறந்த – என்றதால் அவதார காலத்தில் அவன் இங்கு இருக்க, அங்கு பரமபத்தில் இருப்பு போலியோ?
ஸாம்சமான ஸாவயவ பிரஹ்மம் இரண்டு இடத்திலும் இருப்பது சாத்தியம் இல்லையே .
கறந்த பால் குவளையில் போட்டு நிறைத்த பின்பு குடத்தில் இல்லையாமாப் போலே ? – என்பதான உதங்க பிரஸ்னம் இங்கு.

ஸாவயத்தை ஒத்துக்க கொண்டால் க்ருஸ்ந பிரஸ்னம் வரும். அதாவது
இந்த பிரஹ்மம் முழுமையாக காரிய பொருளாக ஆயிற்று என்பதாய்
அதனுடைய சித் அம்சம் சேதனர்களாகவும் , அசித் அம்சம் ஜகத்தாகவும் மாறியது –
அங்கு வைத்து என்பது போலியாய், காரணப் பொருள் இல்லையாய், காரிய பொருட்கள் வந்தது –
எப்படி குடத்தில் இருந்த பால் குவளைகளில் நிரப்பப் பட்டு இல்லை ஆகிறதோ , அதுபோல் என்று கொள்ள வேண்டி வரும்.
நிரவயவத்வம் பிரஹ்ம ஸ்வரூபம் என்றால், திருஷ்டாந்தமும், திராஷ்டந்திக்கமும் ஒத்துப் போகிறது இல்லை என்பது மட்டும் அல்ல
பகு பவன சங்கல்பமும் ஒத்துப் போவதில்லை.
என்ன தான் சரீராத்ம பாவத்தை இட்டுச் சொன்னாலும், சரீரம் ஆத்மாவுக்கு அம்சம் என்பதிலேதான் முடியும்.
அத்தாலும் க்ருஸ்ந பிரஸ்னம் (தீர்ந்து போகும் நிலை) அநிவாரியம் என்பதாக நையாயிகனுடைய பூர்வ பக்ஷம்-

ப்ரஹ்மானந்தவல்லீ
ஸச்ச தயச்சாபவத் |
நிருக்தம் சாநிருக்தம் ச | நிலயநம் சாநிலயநம் ச |
விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச | ஸத்யம் சாஅநுருதம் ச ஸத்யமபவத் |
யதிதம் கிஞ்ச | ததசத்யமித்யாசக்ஷதே |
ததப்யேஷ ஸ்லோகோபவதி

ஸுத்த துவைதிகளான நையாயிகன் , வைசேஷிகன், மத்வ சம்பிரயதாயத்தவர்களான இவர்கள்
சரீராத்மா பாவத்தை ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை. சரீர தர்மம் வேறு. ஆத்ம தர்மம் வேறு
ஸூக்ஷ்ம சித்தசித் காரண பிரஹ்மமானாலும், ஸ்தூல சித்தசித் கரிய பிரஹ்மமானாலும்,
அம்சா-அம்சி; அவயவ-அவயவி ஒட்டு ஒழியாது. அதனால் இது
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத் அதுவிதீயம் பிரஹ்ம என்கிற நிரவயவி வாக்கியத்துக்கு விரோதிப்பதாய்
ஸாஅம்சமே சித்திக்கும். க்ருஸ்ந பிரஸக்தி வந்தே தீரும்.

அல்லது பிரஹ்மம் நிரவயவி என்று சொல்லுவதானால் –
ஸககாரி காரண வர்ஜிதமான பஹுஸ்யாம் பிரஜாயா யேதி என்கிற பஹுபவந சங்கல்பம் நோபபத்யதே – சேரவே சேராது.
ஆக பிரஹ்மம் ஜகத் காரணமாகாது. பிரஹ்ம க்ஞான ஆரம்பணம் அர்த்த மற்றது.
பிரஹ்மம் நிமித்த காரணம் மட்டுமே. பரமாணு உபாதான காரணம், கால, தேசம் சககாரி காரணம் என்கிற
எங்கள் சித்தாந்தம் தான் சாதுவானது. ஸமஞ்சஸமானது அத்தை ஏற்று நடங்ககோள் என்று
சொல்லும்படியான பூர்வ பக்ஷ சூத்ரம் இது.

ஜகத் அஸ்தமிதம் பூதம் என்பதான பரிஸ்திதி – கேசி என்கிற குதிரை வாயில் கண்ணன் தன் தோள் வரை கையைவிட ,
இனி என்ன அவனையும் உள்ளே இழுத்து விடுவானோ? என்கிற பர்யந்தமான பரிஸ்திதி.
அதிலிருந்து மீண்டு எப்படி கண்ணனெம்பெருமான் கோபர்களை ரக்ஷித்தானோ, அதுபோல இந்த வேதாந்த விசாரம்
அடியோடு விலக்கத்தக்கது என்கிற நிலைக்குத் தள்ளுகிற இந்த வைசேஷிக ஆக்ரஹத்துக்கு,
ஸ்வாமி எம்பெருமானார் என்ன பிரத்யஸ்திரம் கொண்டு அவர்களை நிரசிக்கிறார் என்பதை இனி பார்ப்போமாக.

வேதம் – 4.
அங்கம் – 6.
உபாங்கம் – 4
ஆக வித்யா ஸ்தானங்கள் 14.
இத்தோடு
ஆயுர்வேதம்
தனுர்வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த சாஸ்திரம்
சேர்த்து வித்யா ஸ்தானங்கள் 18 என்றும் சொல்வர்.
மீமாம்ஸா சாஸ்திரம் 3 காண்டமாக
ஜைமினியுடைய கர்ம காண்டம் 12 அத்யாயம்
காஸக்ருஸ்னருடைய தேவதா காண்டம் 4 அத்யாயம்
பாதராயணருடைய சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயம் என
மீமாம்ஸா சாஸ்திரம் முழுவதும் அககண்டமாய் சூத்ரே மணிகணா இவ என்கிறபடியே ஒரே சாஸ்திரம் என்பதே நம் முடைய சம்பிரதாயம்.

அதில் , பிரஹ்ம மீமாம்ஸா சித்த துவிகம், ஸாத்ய துவிகம் இத்தால் பிரமேயமான பகவத் ஸ்வரூபம்,
பிரஹ்ம பிரதிபாத்யமான குண விக்ரக விபூதியாதிகள்,
அவனை அடைய ஆறு, தடை, பலன் இத்யாதிகளை 4 அத்யாயங்களால் காட்டுமுகமாக
அவனுக்கு ஆராத்யமான யஞ்ஞ யாகாதிகளை பூர்வ மீமாம்ஸையிலும்;
அங்காண்யங்காணி தேவதா: என்றவகையில் முப்பத்து முக்கோடி தேவதைகள் விஷயமான
தேவதா காண்டமும் சேர மூன்றும், மூன்று ஸாகளைகளை உடைய ஒரு விருக்ஷம் போலே – ஸா த்ரிதா பவதி.

அதில் முதல் அத்யாயத்தில்
பிரஹ்மம் ஜிக்ஞாசம்தான் என்றும், பிரஹ்ம காரணத்வம் சொல்லப்பட்டது.
அடுத்து முதல் சூத்ரத்தால் சித்த வஸ்துவான பிரஹ்மத்தை சொல்லி,
அதற்கு ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரத்வாதி லக்ஷணத்தை 2வது சூத்திரத்தாலும் சொல்ல
இது பிரமாணாந்தர கோசரமே, சாஸ்திரம் ஏதுக்கு? அனுமானத்தாலே கொள்ளலாமே என்ன
ஸ்ருதி சிரஸி விதீப்யே என்கிறபடி
ஸ்ருத்யைக அநதிகம்யன் என்பதாக – சாஸ்திர யோனித்வாத் என்கிற 3வது சூத்ரத்தால் காட்டப்பட்டது.
அவனைக் கொண்டு இன்னொன்றை அடைகை அன்றிக்கே , ஸ்வயம் பிரயோஜனமாக இருக்கிறான் பகவான் என்பதை
தத் து ஸமன்வயாத் என்பதான 4வது சூத்ரத்தால் காட்டி, இந்த 4 அதிகரணத்தால் , சொல்லப்பட்ட விஷயங்களே
மீதமுள்ள மூன்று அத்யாயத்தில் விவரிக்கப்படுகின்றன.

இப்படி முதல் அத்தியாயத்தில், அயோக விவச்சேதம், அந்யயோக விவச்சேதம் இவைகளைக் கொண்டு
பிரதானம் போன்ற வேறு வேறு வஸ்துக்கள் ஏன் காரணமாக் கூடாது என்பன போன்ற ஸ்ருதி விபிரதிபத்திகளை பரிகரித்து
சித்தசித் விசிஷ்ட பிரஹ்மமே த்ரிவித காரணம் அதிலும் விசேஷித்து ஜகத் உபாதான அந்த பிரஹ்மமே காரணம் என்று காட்டப்பட்டது.

பிரகிருதம் அவிரோதாதியாயம் ஸ்ருதி பாதத்தில் வாதீய விப்ரதிபத்திகளைப் பரிகரிக்கிறது.
இங்கு போலே முதல் அத்தியாயத்திலும் வாதங்கள் உண்டு. அங்கு போலவே இங்கும் ஸ்ருதி வாக்கியங்கள் உண்டு.
அங்கு பரிகரித்தது ஸ்ருதி விப்ரதிபத்தியை . இங்கு வாத பிரதிபத்தியைப் பரிகரிக்கிறது. .

வேதார்த்தம் அருதியிடுவது ஸ்மிருதி இதிஹாச புராணங்களாலே – என்பதாலே தத்வ பிரதானமான
கபில ஸ்ம்ருதியாலே வைத்துக் கொண்டே வேத வாக்கியங்களை அர்த்தம் சொல்ல வேண்டும்.
அதை விடுத்து வேத வாக்கியங்கள் மட்டுமே கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை சரியில்லை.
எனவே எம்மையும் வாத பிரதிவாத்ததில் சேர்க்க வேண்டும் என்று நையாயிகர் வேண்ட,
பிரஹ்ம காரண வாதத்தை விடுத்து வேத விருத்தமான பிரதான காரண வாதத்த்தையே அவலம்பித்த காபில ஸ்ம்ருதி ,
அன்ய ஸ்மிருதி அநவகாச தோஷ பிரசங்க : என்பதால், உமக்கு பிரவேசமில்லை என மறுத்தார்கள்.

வேத: என்கிற சொல் புல்லிங்கம். ஸ்மிருதி என்பது ஸ்த்ரீ லிங்கம்.
தக்ஷ ஸ்மிருதி , மநு ஸ்மிருதி, ஆரீத ஸ்மிருதி, சௌநக ஸ்மிருதி இத்யாதிகள் பிரஹ்ம காரண வாதத்தை ஒப்புக் கொள்வதால்,
இப்படிப்பட்ட அன்யோன்ய தாம்பத்யமுடைய ஸ்மிருதிகளே போதும் என்ன ,
மநு ஸ்மிருதி ஆச்சார பிரதானமாய், வர்ணாஸ்ரம தர்மத்தை சொல்வதால், அது பூர்வ மீமாசைக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கால்.
உத்தர மீமாம்சா ஞான காண்டத்துக்கு விஷயமாக எங்களுடைய யோக விஷயமான காபில ஸ்மிருதியே சரி என்று மேலும் வாதிட
அதுவும் ரஜ தமோபூதனான பிரம்மா வாய் வழி வந்த படியால் அதுவும் தியாஜ்யம் என முதல் 2 அதிகரணத்தால் சொல்லப்பட்டது.

இந்த 3 வது அதிகரணத்தால் ஸாலக்ஷண்ய ஹேதுமத்வம் பிரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் இல்லையாய்க் கொண்டு –
ஜகத்து சுக துக்க மோக அனுபவத்தோடு இருக்க, சுத்த முக்த ஞானந்த ஸ்வரூபமாக பிரஹ்மம் இருக்க
இரண்டுக்கும் ஸாலக்ஷ்ண்ய அபாவத்தால், முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட பிரஹ்ம ஜகத் காரணத்வம் சேராது
காரணம் காரிய காரண சாலாக்ஷிண்யம் இன்மையையால் என்று பிரதிபக்ஷி காட்ட ,
கோமய விருச்சிக உதாரணத்தை இட்டு ஸர்வ பிரகாரத்தாலும் ஸாலக்ஷண்ய நிர்பந்தம் வேண்டியதில்லை என்று சொல்லி
பிரசங்காது சரீராத்மா பாவத்தையும் விலக்ஷ்ணத்வாதிகரணத்தில் நிரூபித்தார் ஸ்வாமி எம்பெருமானார்.
இப்படி பிரதானம் ஜகத் காரணம் அல்ல, பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பதை சொல்லி
ஏதேன யோக ப்ரத்யுக்த :
ஏதேன சிஷ்டா அபரிக்கிரஹா :
ஏதேன ஸர்வ வியாக்யாதா வியாக்யாத – என்று 3 இடங்களில் ஏதேன ஏதேன என்று எந்த வகையில்
வேதங்களில் ஏற்கப்படாத சாங்கியர்களுடைய ஜகத் காரண வாதங்கள் தள்ளப் பட்டனவோ -அதே வகையில் வேத விருத்தமான
கணாபருடைய வைசேஷிக பக்ஷம்
தார்கிகர்களான கௌதம பக்ஷம்
க்ஷபணர்களான ஜைன பக்ஷம்
பௌத்தர்களான பிக்ஷு பக்ஷம்
ஆகியோர்களுடைய வாதங்களும் தள்ளப் பட்டன.

சரீராத்மத்தைப் பிடித்துக் கொண்டு சேதானாசேதன தத்துவாராவருகிற சுக துக்கங்கள் சரீரியான பிரஹ்மத்துக்கும் வருமே என்ன,
அதற்கு சரீரம் காரணம் ஆகாது. கர்மம் தான் காரணம் அகர்ம வஸ்யனான பிரஹ்மத்துக்கு
ஸ்வேச்சா கிருஹீத அபிமத உரு தேஹ: என்பதாலே சுக துக்கங்கள் தட்டுவதில்லை.
நிக்ரானுக்கிரக சம்பந்தமே உள்ளது என்பதாக
போக்த்ராபத்தே: அதிகாரணத்தில் நிவர்த்தி பண்ணித்து.

இப்படி சாங்கியன் தலை மடிய,
வைசேஷிகன் காரணத்தைக் காட்டிலும் காரியம் வேறுதான் என்பதை நாம் காட்டுவோம் என்று
ததனன்யத்வம் ஆரம்பணாதிகரணத்துக்கு விஷயம்.
பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாதம்
சங்கரருடைய மாயா வாதம்
பாஸ்கரருடைய உபாதி வாதம்
பாமதிக்காரர் , யாதவ பிரகாசர் இவர்களுடைய ஜீவாத்வைத வாதம்
இவைகளைத் தள்ளி காரணாது காரியம் அந்யதேவ என்று புறப்பட்டான்.

நம்முடைய பக்ஷத்தில் காரண காரியம் ஒன்றே என்ற போது, ஜீவனும்-பிரஹ்மமும் ஒன்றே என்று தேறாதோ?
ஜீவனுக்கான துக்க மோகங்கள் பிரஹ்மத்துக்கும் ஆகாதோ?
யாராவது கூரை தலைமேல் விழும்படியாக அல்லது தனக்குத்தான் நெருப்பு பாக சாலையில் வைப்பானா
அதுவுமன்றி தான் அடித்து செல்லும்படியான பிரவாகத்தை சூழ்த்துக் கொள்வானோ? என்பதாக வாதிக்க
சரீராத்ம பாவத்தால் ஒன்று என்கிறதே ஒழிய ஸ்வரூபத்தால் திரவ்யமே ஒன்று என்பதில்லை
பிரஹ்மம் வேறு தான். ஜீவன் வேறு தான்.
ஜீவன் அவித்யா கர்ம பந்தித்தன்தான். பகவத் பிரசாதத்தாலேயே அவித்யை விலக்கப்பெற்று அவனுக்கு மோக்ஷம்.
தர்சனம் பேத ஏவச.
பிரஹ்மம் தனக்குத் தானே அதிக்ருதம் பண்ணிக்கொள்கிற பிரசங்கமே இல்லை என்று
அதிகம் து பேத நிர்தேசாத் என்ற சூத்ரதால் விளக்கப் பட்டது.

முதல் தனி வித்தேயோ – என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்தி படிக்கு பிரஹ்மம் த்ரிவித காரணமாயும் இருக்கிறது என்பதை நிராகரித்து,
லோகத்தில் குயவனோ, நெய்பவனோ தண்ட, சக்கரம் , உண்டை, பாவு ஸககாரம் இல்லாமல் கேவலம் சங்கல்பத்தாலே
கட, படாதிகளை நிர்மாணிக்கப் போகாது என்பதால், பிரஹ்மம் உபாதான மில்லாமல் சங்கல்பத்தாலேயே ஜகத் வியாபாரம் செய்யப் போகாது
ஏகமேவ அதுவிதீயம் என்று சககாரி உபகரண அபாவம் சொல்லப்பட்டதாலே
பிரஹ்மம் ஜகத்துக்கு காரணமாக இருக்க முடியாது பூர்வ பக்ஷ ஆக்ஷேபம் பண்ணினான் வைசேஷிகன்.

இரவில் வைத்த பால் தன்னாலேயே காலையில் தயிராக மாறிப் போலே,
பனிப்பாறை தன்னாலேயே நீர்ப்பண்டமாவது போலே, பிரஹ்மம் உபகரணம் இல்லாமல் சங்கல்பத்தாலேயே
ஸ்ருஷ்டியைக் செய்கிறது என்பதாக உபஸம்ஹார தர்சநாத் என்ற சூத்திரத்தில் சித்தாந்தமாக காட்டினார் எம்பெருமானார்.

———–

சூத் . 2-1-26 :: க்ருத்ஸ்ந பிரசக்தி :நிரவயவத்வ சப்தகோப: வா ::

க்ஷீரவத்தி என்று ஸாவயவ திருஷ்டாந்தத்தை சொன்னபடியால்,
பிரஹ்மம் ஸாவயவமா ? நிரவயவமா ? ஸாம்சமா? நிரம்சமா? என்கிற கேள்வி எழ அத்தை பரிகரிக்கிறது
க்ருத்ஸ்ந பிரஸக்தி அதிகாரணத்தில்.
ஸாவயவம் என்றால் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி பாசுரத்தில் சொன்னபடி பகவான் பரமபதத்தின்றும்
நப்பின்னையைப் புணர கீழ் இறங்கிய காலத்தில் மேல வைகுந்தத்தில் இல்லை என்பதும்;
நிரவயவம் என்றால் ஸ்ருஷ்டிக்குப் பின் அவன் இல்லை – காரிய வஸ்து உண்டான பின் காரண வஸ்து இல்லை என்பதான நிலை வருமே
அத்தால் பிரஹ்ம காரணவாத்ததை விட்டு ஜகத் உபாதான காரணம் பரமாணு என்கிற எங்களுடைய ஸம்பிரதாயத்துக்கு
வாருங்கோள் என்பதாக உத்கட ஸ்திதிக்கு தள்ளிவிட்டான் வேதாந்திகளான நம்மை.
அதற்கு வியாசர் காட்டும் பிரத்யுத்தரம்

—————-

சூத். 2-1-27 ::ஸ்ருதேஸ்து ஸப்த மூலத்வாத் —

பிரஹ்மம் நிரவயவம்தான்–பூர்வ பக்ஷ தோஷங்கள் பிரஹ்மத்துக்கு தட்டுவதில்லை, ஸ்ருதியாலே.
பிரஹ்மம் அவயவமற்றது; விசித்திர சக்தி கொண்டது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதால், அதனை மறுப்பதற்கில்லை.
பர பிரஹ்மத்தையே ஒத்துக்கொள்ளாத சாங்கியர்களுக்கோ, அனுமானிக்க பிரஹ்மவாதிகளான உங்களுக்கோ
அது ஒப்புக்கொள்ளும்படி இல்லாமல் போகலாம். பரம வைதிகர்களான எங்களுக்கு வேதமே பிரமாணம்.
வேதத்தில் பிரஹ்மம் நிரவயவம் என்பதும், அந்த பிரஹ்மமே ஜகத் காரணம் என்றும் சொல்லப்பட்டுள்ளதாலே
விரோதிப்பதில்லை என்பது சித்தாந்தம்.
வேதம் நித்ய, நிர்துஷ்ட, ஸம்சய , விபரியாதி தோஷங்கள் இல்லையாய்க் கொண்டு, யதா வியவஸ்திதம் கொள்ள வேண்டியது.
ஸ்ருத்யைவ ஸமதிகம்யமான பிரஹ்மத்திடத்தில் தோஷங்களுக்கு பிரசக்தியே இல்லை. என்றாலும்
இனி வேத பிராமாண்யத்தைக் கொண்டே பிரமாணங்களை காட்டுகிறோம் என்று பலவான ஸ்ருதி வாக்கியங்களை உதாகரிகலாவது. .

திருப்பாற்கடலில் சயனித்திருக்கிற எம் பெருமான் நீலமேனி தான் நீல கடல் போலே காட்சி அளித்தாலும்,
கரையில் நின்றவன் கண்ணுக்கு, எப்படி ரத்நாகரமான கடலில் உள்ள முத்தும் மணியும் புலப்படுவதில்லையோ அது போல
அவனுடைய குணங்களாகிற ரத்னங்கள் பூர்வாச்சார்ய ஸ்ரீஸூக்திகள் கொண்டல்லது புலப்படுவதில்லை.

இந்த க்ருத்ஸன பிரஸக்தி அதிகாரணத்தில்
பிரதான காரண வாதியான சங்கியன் தான் முக்கிய பூர்வ பக்ஷி.
அவனோடு சேர்ந்து பரமாணு காரண வாதியான வைசேஷிகனும் உள்ளான்.

சாங்கியனுக்கும், நமக்கும் உள்ள வித்யாசம் தான் என்ன?
த்ரிகுணாத்மிகா மூல ப்ரக்ருதி ஜகத் காரணம் என்பது அவர்கள் பக்ஷம்.
நாமும்தான் –மாயாம் து பிரகிருதம் வித்தி, மாயினந்து மஹேஸ்வரம் – என்று த்ரிகுணவதியான பிரக்ருதியைக் கொண்டே
பகவான் ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் என்கிறோம்.
த்ரிகுணவதி என்றால் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களை உடையது என்று பொருள்.
த்ரிகுணாதமிகா என்றால் , குணா -குணி அபேதத்தை சொல்லும்
அஸ்மாந் மாயி ஸ்ருஜதே என்று .ஈஸ்வர அதிஷ்டான மூலப் பிரக்ருதியைச் சொல்லுகிறோம்.
அவர்கள் த்ரிகுண ஸ்வரூபமாகவே இருக்கிற பிரக்ருதி,, ஈஸ்வரன் அதிஷ்டிக்காமலே ஸ்ருஷ்டிக்கிறது என்கிறார்கள்.

இப்போது இங்கு உள்ள விவாதம் பிரஹ்மம் ஸாவயவமா? நிரவயவமா? ஸாம்சமா ? நிரம்ஸமா ? என்பது.
ஸாவயவம் என்றால் நிஷ்களங்கம், நிரஞ்சனம், பரமம் என்கிற நிரவயவ, நிராகாரதத்வம் பிரஹ்மம் என்பதற்கு விரோதிக்கிறது.
ஸாவயவம் என்றால் விபுத்வத்துக்கும் விரோதிக்கிறது என்ன
ஆநுமானிக பிரஹ்மம் போலேயாவோ – என்ற வகையில் .
ஸ்ருத்யைக அநதிகம்யன் ஈஸ்வரன், ஸகலேதர விசஜாதியன்.ஸர்வசக்தன் என்பதற்கு பல ஸ்ருதி வாக்கியங்களை

சூத். 2-1-28 :: ஆத்மநி ச ஏவம் விசித்ராஸ்ச ஹி —

என்கிற சூத்திரத்தாலே காட்டுகிறார். –அக்நிக்கு உஷ்ணம், நீருக்கு குளிர்த்தி என்று ஒவ்வொரு பொருளிலும்
அதற்கே உரிய சக்தி இருப்பதற்கான காரணம் தர்க்க வாத விவாதங்களுக்கு அப்பாற்பட்டது.
அந்த பொருளைக் குறித்து உரைக்கவல்ல வேதமே இதற்கு பிரமாணம்.
ஜீவாத்மாவிடமும் இதுபோன்றே அசேதனத்தில் இல்லாத விசித்திர சக்தி உள்ளது.
சித்தசித் விலக்ஷண ஈஸ்வரனிடத்திலும் மற்றோன்றில் இல்லாத ஸ்ருஷ்டி முதலான சக்திகள் உள்ளன – என்பதை
ஸ்ரீ விஷ்ணுபுராண ஸ்லோகம் 1-3-2,3 களில் பராசரர் மைத்ரேயருக்கு பிரச்னோத்தரமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

முகம் தாமரையைப் போல. நிலாவைப் போல என்றால் திருஷ்டாந்தத்தில் எவ்வளவு அம்சம் திராஷ்டாந்திக்கத்திலே பொருந்துமோ
அவ்வளவே கொள்ள அமையும். பிராகிருத விஷயத்தில் இப்படியாக, பிரஹ்மத்தின் விஷயத்தில், சாதாரணமாக நாம் காணும்
பொருள்களை வைத்து இதில் சொல்லப்படும் –
இவ்விடத்தில் க்ஷீரவது என்பதிலான – ஆக்ஷேபங்கள் பிரஹ்மத்தின் விஷயத்தில் பொருந்தாது என்பது கருத்து.

சூத். 2-1-29 :: ஸ்வபக்ஷ தோஷாத் ச —

ஜகத் காரணியான மூலப் பிரக்ருதி நிரவயவம் என்கிற சாங்கியர்களான தங்கள் பக்ஷத்துக்குத் தான் இந்த தோஷங்கள் உள்ளன
என்று அவர்களுக்கே திருகு பாணம் ஆக்கி இட்டார் இந்த சூத்ரத்தாலே வியாசர் .
அவர்கள் சித்தாந்தம் – ஸத்வ, ரஜஸ் , தமஸ் சம நிலையில் இருந்தால் பிரளயம் என்றும்,
சமநிலை மாறி ஏற்றக்குறைவால் சிருஷ்டி நடக்கிறது என்றும் சொல்லப் படுகிறது.
முக்குணங்களும் ஒன்றோடு ஒன்று கலக்கும் போது , ஸ்ருஷ்டி தாரதம்யத்தாலே, ஒன்று தீர்ந்து, மற்றது மிக்கும்படியான நிலை ஏற்படலாம் –
எப்படி குமார சம்பவத்தில் பார்வதி தேவியை உத்பன்னம் பண்ணுகிற சமயத்தில்,
லாவண்ய, யௌவன, ஸ்ருங்காராதிகள் கால், ஜாநுவளவாக தீர்ந்து போக மற்ற அவயவங்களை படைக்க,
இன்னும் எங்கே அவை என்று தேடப் புறப்பட்டாப்போலே ஸாவயவ தோஷம் சாங்கிய பக்ஷத்திலே அநிவாரியமாகவன்றோ உள்ளது.

ஒன்றொன்றே – ஸத்வம் தனியாக காரியம் ஆகிறது.
ரஜஸ் தனியாக காரியம் ஆகிறது. தமஸ் தனியாக – காரியம் ஆகிறது என்னு சொல்வதானால்,
த்ரிகுணாத்மகம் சம்சாரம் என்பதை விரோதிக்கிறது–
அதாவது ஸத்வ, ரஜஸ் , தமஸ் குணாத்மகமான பிரதானம் விபு – நிரவயவம் என்றால்
ஸ்ருஷ்டி – ஸ்தூல வஸ்து பிராரம்பமாக பிரசித்தி இல்லை.
சாவயவம் என்றால் பிரகிருதி காரியமான 24 தத்துவங்களுக்கு மேற்பட , காரியமாகாத மூலப் பிரகிருதி என்று தனித்து இருக்க
தத்துவங்கள் எண்ணிக்கையில் 25 (அ ) 27 என்கிற குழப்பம் வரும்.
இங்கு இன்னுமொரு கேள்வி.
ஸத்வ, ரஜஸ் , தமஸ் சமூகம் பிரதானம் என்பதா? ஸத்வ, ரஜஸ் , தமஸ் சேர்ந்தத்தாலே பிரதானம் உண்டாயித்தா?
இரண்டாவது கருத்தால், பிரதான காரணவாதம் நிற்காது. காரணம் அதற்கும் காரணம் முக்குணம்.
முதல் கருத்தான முக்குண சமூகம் பிரதானம் என்றால் தேச அபரிச்சேத வஸ்துவால் ஸ்தூல காரிய பொருளை உருவாக்க இயலாது.
.
இதே காரணத்தால், பரமாணுவத்திகள் விஷயத்திலும் நிரவயவ நிரம்ஸ பரமாணுக்கள் ஸ்தூலமான
காரிய வஸ்துவை உண்டாக்கும் திறன் அற்றது என்றும் தேறுகிறது.

நாம் சொல்லுகிற பிரஹ்ம காரிய வாதத்தில், பிரஹ்மத்துக்கு தோஷம் இல்லை
சாஸ்திர பிரமாணத்தை வைத்துக் கொண்டு கூறுவதால். – என்பது சித்தாந்தம்.

————

சூத் . 2-1-30 :: ஸர்வோ பேதாச தத் தர்சநாத் —

கீழே சொன்ன ஸகல வஸ்து விஜாதீயம் பிரஹ்ம ஸர்வ சக்திமத்வம்
இரண்டுக்கும் பிரமாணங்களை எடுத்துக் காட்டுகிறார் இத்தால்.
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ க்ஞான பல க்ரியா ச – ச்வே .உபநிஷத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக : விஜிகத்ஸ : அபிபாஸ : – சாந்தோ. உபநிஷத்
இந்த 6 குணங்கள் ஜீவாத்மாவுக்கும் முக்த தசையில் சொல்லப் பட்டாலும், பிரஹ்மத்துக்கு அவை எப்போதுமே மழுங்காத ஒன்று.
ஸத்ய காம: ஸத்ய ஸங்கல்ப – – சாந்தோ. உபநிஷத்
மநோமய ப்ராண சரீரோ பாரூப—
ஸர்வமிதம் அப்யாத்த : அவாகீ அநாதர : – சாந்தோ. உபநிஷத்
இப்புடைகளால், பிரஹ்மம் அனைத்து வஸ்த்துக்களையும் விட வேறானதும் ,
தன்னைப் போல மற்ற எதற்கும் இல்லாததான உயர் பண்புகளைக் கொண்டது ஆகும் என்று சுருதிகள் பேசுகின்றனவே.

இதற்கு மேலும், ஒரு ஆக்ஷேபம் எழுபப்படுகிறது.. அது என்னவென்றால்

——————-

சூத். 2-1-31 :: விகரணத்வாத் ந இதி சேத் தத் உக்தம் —

கீழ் 24 வது சூத்ரத்தில் .- உபஸம்ஹார தர்சாநாத் – என்கிற அதிகரணத்தில் பிரஹ்மத்துக்கு ஸத்ய சங்கல்பத்துவம் இல்லை
அதாவது ஞான, சக்திகள் இருக்கலாம், சங்கல்பத்தாலேயே பண்ணுகிற ஜகத்வியாபாரம் கிடையாது என்பதை அங்கு பரிகரித்தார்.
இங்கு சிருஷ்டியை செய்ய அவசியமான
ந தஸ்ய கார்யம் கரணம் தத் வித்யதே – என்று உபநிஷத் சொல்லி இருக்கிறபடியால்
தேக இந்திரிய கரண்ங்கள் பிரஹ்மத்துக்கு கிடையாதே. அப்படிப்பட்ட பிரஹ்மம் நிமித்த காரணம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்
என்கிற பூர்பக்ஷ ஆக்ஷேபத்துக்கு , பதில் முன்பே – கீழ் 24வது சூத்திரத்திலேயே உரைக்கப்பட்டது என்கிறார்.

கீழேயே பதில் சொல்லப்பட்டது என்றால். புநருக்தி தோஷம் வாராதோ ? என்னில்
அங்கு கழிக்கப்பட்ட அம்சம் சத்ய சங்கல்பத்தைப் பற்றி.
இங்கு கழிக்கிற அம்சம் விக்கிரக விஷயமான ஆக்ஷேபம். ஆகவே இதில் புநருத்தி தோஷம் ஏதுமில்லை.

கர்ம வஸ்யர்களான நமக்குப் போல் பாஞ்ச பௌதிகமான சரீரம் பகவானுக்கு இல்லையே ஒழிய,
பஞ்ச உபநிஷத் மயமான அபிராக்ருத திவ்விய மங்கள விக்ரகம் உண்டு என்பதே வைதிக சித்தாந்தம்.
இத்தால் நிர்விகார ஸ்ருதிக்கும் , காரண ஸ்ருதிக்கும் பரஸ்பரம் விரோதம் வரக் கூடாதாகில்–
அதற்கு சரீராத்மா பாவத்தை சொல்லுகிற விசிஷ்டாத்வைத சித்தாந்தமே ஏற்புடைத்தாகும்.

விசிஷ்ட பிரஹ்மமே ஸ்ருஷ்டி செய்ய முடியும் என்பதை உணர்ந்து,
பிரஹ்மாக்ஞான வாதியான சங்கரர் பிரஹ்மத்தை மாயா விசிஷ்ட பிரஹ்மம் என்றார்.
அடுத்து வந்த பாஸ்கரர் அந்த பிரஹ்மத்தை உபாதி விசிஷ்ட பிரஹ்மம் என்கிறார்.
உபாதியாவது தேகேந்திரிய மனப்ராண சம்பந்தம் என்றே கொள்ளத்தக்கது.
இதில் நாம் சொல்லக் கூடியதும் என்னவென்றால் பிரக்ருதியாகிற உபாதி பிரளயத்தில் ஸூக்ஷ்ம சிதசித்தாக பிரஹ்மத்தோடு
ஒட்டிக் கிடக்க, சிருஷ்டியில் அவை காரண சரீரமான திரிமூர்த்தி சரீரம், அதன் பிறகு ஆகாசம் இவை அனைத்தும்
கர்ம நிபந்தனமாக படைக்கப்படுகிற காரணத்தால், பிரஹ்மத்துக்கான சரீரம் அபிராக்ருதம். கர்மம் காரணம் அன்று.
பிரஹ்மத்துக்கு கரணங்கள் இல்லை என்றாலும், அவனுடைய ஸர்வ சக்திமத்வதுக்குச் சேர
ஸ்ருஷ்டியை செய்து போர இயலும் என்பதே சித்தாந்தம்.

இந்த க்ருஸ்த்ந பிரஸக்தி அதிகாரணத்தில் சொல்லப்பட்ட விஷயம் என்ன வென்றால்
பிரஹ்மம் நிரவயவம், நிரம்சம் என்பதே.
ஸாம்ச மாகாத போது ஜகத் ஸ்ருஷ்டி ஆகாதே என்றால், பிரஹ்மத்துக்கு விசித்திரமான சக்தி உண்டு.
அது கொண்டு படைக்கிறது என்று பார்த்தோம்.

ஸ்வாமி ஆளவந்தார் கஸ்ஸ்ரீ : ஸ்ரிய 😕 பரம ஸத்வ ஸமாச்ரயே க 😕 என்கிற ஸ்தோத்தர ரத்னம் 12 ஸ்லோகத்தில்
கஸ்யாயுதாயுத ஸதைக கலாம்ச காம்ஸே –விஸ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்? –என்பதாக பிரஹ்மம் ஸாம்சம் என்றே பேசுகிறார்.

ஆரம்பணாதிகரணத்தில் என்ன சொல்லிற்று ?
ததனனயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய : என்பதாய் காரணப் பொருளான பிரஹ்மத்துக்கும் காரியப் பொருளான ஜகத்துக்கும்
வேற்றுமை இல்லை என்பதால், பிரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது.

இதர வ்யபதேசாதிகரணத்தில் ,
காரிய காரணங்கள் ஒன்றே என்று சொன்னபடியால், ஜீவனும் பிராமமும் ஒன்றே என்று ஆகிவிடும்
அப்போது ஜீவனுக்குண்டான தோஷங்கள் எல்லாம் பர பிரஹ்மத்துக்கும் உண்டாகும். பிரஹ்மம் தனக்குத் தான் அஹிதத்தை
உண்டு பண்ணிக் கொண்டதாகும் என்பதாக. அதை நிராகரிக்க
அதிகம் து பேத நிர்தேஸாத் – ஜீவனும் பிரஹ்மமும் வேறு வேறுதான் என்றதாயிற்று.

தற்போது க்ருத்ஸந பிரஸ்நத்தில் என்ன வந்தது?
பிரஹ்மம் ஸாம்சமா? நிரம்ஸமா ? என்பதற்கு நிரம்சம்தான் என்று காட்டப்பட்டது.

இவைகளில், இதுவா – அதுவா ? எது ? என்று கேட்டால்
பிரஹ்மம் விசிஷ்ட வஸ்து ஏகம் தான்.
பிரஹ்மத்துடைய ஸ்வரூபம் விபுதான். நிரவயவம் தான்.
ஆனாலும், அந்த பிரஹ்மம் நிர்விசேஷம் கிடையாது. ஸவிசேஷம்தான்.
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்திலும் பிராட்டிக்கு சாந்நித்யம் உண்டு.
அவள் பிரக்ருதிக்கு அபிமாநினி தேவதை என்பதால் சேதநாசேதனங்கள் விசிஷ்ட பிரஹ்ம ஏகதேசமாகக் கடவது.
ஞானா ஆநந்தங்கள் ஸ்வரூப ஏகதேசம் என்றால் சேதனாசேதனங்கள் திவ்யமங்கள விக்ரக ஏகதேசம்.

ஆக சித்தசித் விசிஷ்டம் ஹி பிரஹ்மண ஸ்வரூபம் . எதுபோல என்றால்
ஜாதி-வியக்தி களுக்குண்டான அபிரதத் சித்த சம்பந்தம் போலே.
நீல விசிஷ்ட-உத்பலத்திலான அபிரதத் சித்த ரூபாதிகளைப் போலே.
சரீர – சரீரி சம்பந்தம் போல பேதம் முக்கியமாக இருக்க, அப்பிரதத்வமாவது
நிரவயவத்வம் பாதியாத விசித்திர சக்தி யோகத்தோடே கூடிய பிரஹ்மத்துக்கு இவை அம்சமாகக் கடவது என்று கொள்க.

திலேவ தைலம் ததி மேய ஸர்பி : – வித்தினுள் எண்ணை போல் , பாலினுள் நெய்யேபோல் ஈஸா வாஸ்யம் ஜகத்து .

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —2-1-8 : உபாஸம்ஹரண தர்சன அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

2-1-8 : உபாஸம்ஹரண தர்சன அதிகரணம் –

சூத்ரம் 2-1-24 : உபஸம்ஹார தர்சநாத் ந
இதி சேத் , ந க்ஷீரவத் ஹி —

ஸது ஏவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் – என்கிற உபநிஷத் வாக்கியம் கொண்டு
சககாரி காரண ஸாமக்ரி – உபஸம்ஹார தர்சனம் – இருந்ததாக தெரியவில்லை–
ஆனால் லோகத்தில், சஹகாரி நிரபேக்ஷயா வஸ்து நிர்மாணம் செய்யப் போகாதால், பிரஹ்மமும் சககாரி காரணம் இன்றி
ஸ்ருஷ்டிக்க முடியாததால், பிரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்பதாக பூர்வ பக்ஷம் –

முதல் தனி வித்தேயோ? முழு முதல் ஆதிக் கெல்லாம் என்று ஆழ்வார் வாக்கு.
முதல் – நிமித்த காரணம்.
தனி – சககாரி காரணம்.
வித்து – உபாதான காரணம் என்பதாக நம்பிள்ளை ஈடு.

ஜ்ஞானம், சக்தி இச்சை இருந்தாலும் நமக்கு ஒரு காரியத்தை செய்ய , குயவனுக்கு தண்ட சக்ரம் போலே ,
நெசவாளிக்கு பாவும் உண்டையும் போலே சஹகாரி காரண அபேக்ஷை உண்டு.
ஆனால் பகவான் சத்ய சங்கல்பம் ஆகையால், அவன் சங்கல்ப மாத்திரத்திலே ஜகத் ஸ்ருஷ்டி வியாபாரத்தை செய்யக் கடவன்.
அவனுக்கு அகில ஹேய பிரத்யநீக தானத்வம் போலே
ஸர்வ கர்த்ருத்வம், ஸர்வவித காரணத்வம் ஆகிய உபய லிங்க விசிஷ்டன் ஆவான்.
ஸஹகாரி உபஸம்ஹார லக்ஷணம் மேல் சொன்ன உபநிஷத் வாக்கியத்தில் இல்லை யாகையால்,
ஜகத்துக்கு பிரஹ்ம காரணம் மறுக்கப் படுகிறது முற்பாதி சூத்திரத்தில்.

இதி சேத் ந, க்ஷீரவத் ஹி –

யஸ் ஸ்ருதேர் உத்தரம் பாகம் – பூர்வ மீமாம்சைக்கு மேற்பட்டதான என்கிற பொருளில் கொள்ளாமல்,
உது + தர = அதைக் காட்டிலும் சிறந்ததான பகுதி – தெளியாத மறை நிலம் என்று ஸம்சய விபர்யயங்கள் கலசின
வேதாந்த வாக்கியங்கள் போல் அல்லாமல் – அர்த்தங்கள் நேரே புலப்படும் படியாக
தெளியச் சொன்ன பெருமை ஆழ்வார் பாடின திராவிட சம்ஹத்தைக்கு உண்டு. அப்படி என்ன ஆழ்வார் தம்முடைய
திருவாய்மொழி கிரந்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால்
1. உபகிரமோ உபஸம்ஹாரௌ – முதலிலும் முடிவிலும் சொல்லப்பட்ட விஷயம்
2. அப்யாஸ – அடுத்தடுத்து சொல்லப்பட்ட விஷயம்
3. அபூர்வதா பலம் – வேறு எந்த கிரந்தங்களிலும் சொல்லப் படாததான பலம் விஷயம்
4. அர்த்தவாதோஸ் ச ஹேது தாத்பர்ய நிர்ணயம் – இன்னார் இப்படிச் செய்ய இன்ன பலத்தைப் பெற்றார் என்கிற
கதா புரஸ்சரமாய் சொல்லப்பட்ட விஷயம் அது அந்த கிரந்த தாத்பர்யம் ஆகும்.
அந்த வகையில் ஆழ்வார் பாடிய திருவாய்மொழிக்கு தாத்பர்யம் என்ன என்றால்

வேதாந்தம் கஸ்ச தியேய: – இன்ன பலம் வேண்டும் என்றால் இன்னாரை தியானம் பண்ண வேண்டும் –
நமக்கு இந்த சம்சாரமாகிற அளறு நீங்கி துக்கம் கழிந்து நிரதிசய ஆனந்தமாகிற மஹதானந்தத்தைப்
பெற என்ன செய்ய வேண்டும் என்றால்
காரணம்து தியேய : – கார்யமான எல்லா வஸ்துக்களையும் விட்டு, மூல காரணமான வஸ்து எதுவோ
அதையே தியானம் பண்ண வேண்டும்.

வேதாந்தத்தில் அபர பிரஹ்ம வித்தை பலவும் உள்ளன.
நாமாதி பிராண பர்யந்தம் எதை வேண்டுமானாலும் உபாசனம் பண்ணலாம். அவைகளுக்கு பலம் வேறு வேறாய்,
உயர்ந்ததான மோக்ஷ பலத்துக்கு
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே என்று யாரிடத்தில் இருந்து இந்த ஜகத்து உண்டாகி, ரக்ஷிக்கப் பட்டு
லயத்தை அடைகிறதோ அந்த பர பிரஹ்மத்தைத் தான் தியானம் பண்ணக் கடவது.
என்பதாக முதல் அத்யாயம் முதல் நான்கு சூத்ரங்களால் காட்டப் பட்டன.

அந்த காரணம் எத்தனை விதமாக உள்ளன என்றால்
உபாதான காரணம்
நிமித்த காரணம்
ஸககாரி காரணம்
என்பதாக த்ரிவித காரணமாகவும் அந்த பிரஹ்மமே இருக்கின்றது என்று சொல்ல

இந்த இந்த ஸ்ருதி வாக்கியங்கள் – பிரக்ருதியாய் இருக்கலாமே; ஜீவாத்மாவாக இருக்கலாமே அல்லது
ஒரு விசேஷமான வியக்தி ஜீவாத்மாவாக இருக்கலாமே – அதற்கு பரப்ரஹ்மமே என்று எப்படி அர்த்தம் சொல்வது?
என்று விப்ரதிபத்தி பண்ண – முதல் அத்யாயத்தில் மற்ற பாதங்களில்
பிரஹ்மமே காரணம்
பிரஹ்மம் ஒன்றே காரணம்
பிரஹ்மத்தைத் தவிர்ந்த மற்ற எதுவும் காரணம் ஆக முடியாது என்பதாக பிரஹ்மத்துக்கு மட்டுமே
ஜகத் காரணத்வம் பொருந்தும் என்பதாக சமன்வயப் படுத்தி காட்டினார் வியாசர்.

2வது அத்யாயமான அவிரோதாத்யாயத்தில்
பிரஹ்ம ஜகத் காரணத்வத்துக்கு எத்தனை விதமான விரோதம் வந்தாலும் அதை அழித்து கழித்துக் காட்டுகிறார் இதில்.
ஸ்மிருதி பாதம், தர்க பாதம் இவை இரண்டும் சேர ஒரு பேடிகா விபாகம்.
3-4வது பாதங்களான, வியத்பிராண பாதங்கள் இரண்டும் சேர்த்து, ஒரு பேடிகா விபாகம்.
முதல் ஸ்மிருதி பாதத்தில் 10 அதிகரணங்கள் .
அதில் இப்போது 8வது அதிகரணமாகிற உபஸம்ஹாரா தர்சநாதிகாரணம்

————–

சூத்ரம் : 2-1-24 :: உபஸம்ஹார தர்ஸநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்திஹி ::

ரிஷிம் ஜூஷாமஹே என்கிற ஸ்லோகத்தில் சொன்னபடி பகவான்தான் முதல் காரணம்.
அவனே ஸர்வ காரணம். நிஷ்காரணமும் அவனே.
ஸ்வேதர ஸமஸ்த, பிராட்டி உட்பட பிபீலிகா பர்யந்தம், அசேதனமுட்பட்ட அனைத்துக்கும் அவன் ஒருத்தனே தான் காரணம்.
அவனின் வேறுபட்ட காரணம் எதுவும் கிடையாது. என்? அவனும் காரணம். இன்னொன்றும் காரணம் என்னலாகாதோ?
கிடையவே கிடையாது. என்? இவன் ஒருவிதமான காரணம். மற்றது மற்ற விதமான காரணமாகக் கூடாதோ?
பானைக்கு உபாதான காரணம் களிமண். நிமித்த காரணம் குயவன்.
அதுபோல் ஜகத்துக்கு ஸர்வ சக்தி, ஸர்வஜ்ஞனான பகவான் நிமித்த காரணம்
பிரகிருதி உபாதானகாரணம் என்று ஆக்கக் கூடாது? என்றால் இல்லவே இல்லை.

உபஸம்ஹாரம் என்றால்
எல்லாவற்றையும் தன் அருகில் சேர்த்துக் கொள்ளுதல் .
குயவனுக்கு தண்ட சக்ரம் போலே, பிரஹ்மத்துக்கு சககாரி தானே என்பது எங்கனே ? என்னில்
கேவல பிரஹ்மம் ஜகத் காரணம் ஆக முடியாது. ஏதோ ஒரு பொருளோடு சேர்ந்து இருந்தால் தான் ஜகத் காரணமாக்க முடியும்.
அத்தை மாயா விசிஷ்ட பிரஹ்மம் என்றார் சங்கரர். அந்த மாயைதான் அவித்தை என்றார் அவர்.
பர்த்திரு பிரபஞ்சரின் ஸ்வரூப பரிணாம வாதத்தை தள்ளி
அந்த உபாதி சத்யம் . அந்த சத்ய உபாதி விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் காரணம் என்றான் பாஸ்கரன்.
அவன் சொன்னதில் உள்ள ஸ்ருதி விபிரதிபத்தி கொண்டு, நாம் சொல்வது
தேதனாசேதன விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதாக உபஸம்ஹாரம் பண்ணினோம்.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரண அவஸ்தை என்றும் ,
ஸ்தூல சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரிய அவஸ்தை என்றும் அறுதியிடலாவது.
உபாதான நிமித்த காரணத்தை சரீராத்மா பாவத்தை – கடக ஸ்ருதிகள் துணை கொண்டு – நிர்வகித்தாலும்,
சககாரி காரணமும் அவனே என்பது எப்படி சாத்தியம் ?

உலகத்தில் தண்ட சக்கரம் இல்லாமல் குயவன் பானை செய்வதோ
நெசவாளி பாவும், உண்டையும் இல்லாமல் துணி நெய்வதோ இல்லை. அங்கனாகில்,
பிரஹ்மத்துக்கு ஜ்ஞான சக்திகளால் நிமித்த காரணத்வமும், சரீராத்மா பாவத்தால் உபாதான காரணத்வமும் சித்தித்தாலும்,
ஏகோஹவை நாராயண ஆஸீத் – என்று வேத வாக்கியம் இருக்கிறபடியால்,
சககாரி இல்லாமல் ஜகத் ஸ்ருஷ்டி முடியாது என்பதாக லௌகீகத்தைக் காட்டி
பிரஹ்மம் ஜகத் காரணம் ஆக முடியாது என்பதாக முதல் அத்தியாயத்தில் சொன்ன
பிரஹ்ம காரண வாதத்தை ஸாங்க்யனும் மறுக்கிறான்.
வைசேஷிகனும் மறுக்கிறான்.
நையாயிகனும் மறுக்கிறான்.

ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத், ஏகமேவ அதுவிதீயம் பிரஹ்ம – என்ற இதில் 2வது வஸ்துவே இல்லை என்றாகில் ,
உபஸம்ஹார வஸ்து எதுவாக சககாரி காரணம் பிரஹ்மமே என்று சொல்வது என்பது ஆக்ஷேபம்.

தானோர் முதலாய் தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய (வளவேழ் உலகு பதிகம்) என்ற விடத்து
தானோர் வித்து
முதல் வித்து
தனி வித்து என்று
தருவித்துக் கொண்டு பார்த்தால்
வித்து = பீஜம் = ஹேது = த்ரிவித காரணமும் பகவானே என்கிறார்.
திருவாய்மொழி பிரபந்தம் முடிக்கும் போதும் – உபகிரம உபசம்ஹார விதிப்படி – முனியே நான்முகனே பதிகத்தில்
முதல் தனி வித்தேயோ முழுமூஉலகாதிக் கெல்லாம் என்று த்ரிவித பிரஹ்ம ஜகத் காரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதி சேத் ந, க்ஷீரவத் ஹி –
லௌகீகத்தை வைத்து கேள்வி கேட்டவனுக்கு லௌகீகத்வத்தை வைத்தே பதில் சொல்கிறார் வியாசர்.
ய ஏவ லௌகிகா : த ஏவ வைதிகா : என்பதாக
பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக சாஸ்திரம் இருக்க முடியாது. அப்படி இருந்தால் சாஸ்திரத்தைக் கொண்டு
பரிஹரிக்க வேண்டியது என்பதாக சித்தாந்தம்.

அத்வைதிகளுக்கு இது பாதிக்காது. பல-துர்பல நியாயத்தைப் பார்த்து, சத்தியமான ஜகத்தையும், மாயை என்று தள்ளி விடுவர்.
பேதத்தை சொல்லும் பிரயக்ஷத்தை உதறி, அபேதத்தை சொல்லும் சாஸ்திரம் தான் பிரதானம் என்பர் .

சககாரி நிரபேக்ஷமாக லோகத்தில் காரணம் காரியத்தை உண்டாக்கும் , எப்படி பால் தயராக பரிணமிக்குமோ
அதுபோல என்கிறார் வியாசர்.
பிரஹ்மமும் சங்கல்பத்தாலேயே ஜகத் வியாபாரம் செய்வனாகில், சஹகாரி அபேக்ஷை அவனுக்கு இல்லை .
பால் உறையவிட தயிர் வேண்டியுள்ளதே என்றால், அது சுவைக்காகவே ஒழிய,
பால் தயிராக தோய ஆதஞ்சன (உறை) அபேக்ஷை இல்லை.
தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதும் சககாரி நிரபேக்ஷமாகவன்றோ என்று வேறு ஒரு உதாரணத்தையும் காட்டி
ஆஷேபத்தை பரிகரிக்கிறார் ஸ்வாமி ராமானுஜர்.

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் — அம்புவியோர்
இந்த தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்த செயலறிக்கைக் கா. — உபதேச.38–என்பதாக பொய்யிலாத மணவாள மாமுனி திருவாக்கு :

நாட்டி வைத்தார் – கரிஷ்யே என்கிற அர்த்தத்தில் தானே பிரவர்தித்தார் என்கிற யோசனையோடு
நாட்டு வித்தார் – நிஜந்தத்தில் காரயிஷ்யே என்கிற அர்த்தத்தில்
தர்சனக்காரர்களைக் கொண்டு செய்வித்தார் என்றும் கொள்ளவுமாம்.
அந்த செயல் என்று சொன்னது எம்பெருமானாருடைய எந்த செயல் பற்றி என்றால்
அதற்கு வேதாந்தவாசியாருடைய எதிராஜ ஸப்ததி ஸ்லோகத்தையே பார்க்க வேண்டும்.

மத்வ பரம்பரையில் வந்த வித்யாரண்யர் என்பவர் ஸ்வாமி தேசிகருடைய சமகாலத்தவர் ஆவார்.
அவர் ஸர்வ தரிசன ஸங்கிரஹம் என்கிற ஒரு கிரந்தத்தை செய்ததாக பார்க்கிறோம்.
அதில் வைதிக தர்சனத்தில் அக்ரகண்யமாக இருக்கிற விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு எந்த ஸ்தானத்தை அளித்தார் என்றால்,
சாருவாக, பௌத்த, ஜைன மத வரிசையில் இத்தை சேர்த்துக் கொள்ளுங்கோள் என்பதாக காட்டியுள்ளார் .
இது குண மாத்சர்யத்தால் – எம்பெருமானாருடைய குணங்களைக் கொண்டு பொறாமையால் –
சொன்ன வார்த்தை என்றே எண்ண வேண்டும்.

பிரஹ்ம சூத்திரத்துக்கு ஏற்பட்ட பாஷ்யங்களில்
அத்யாச பாஷ்யம்
ஸம்பாவத பாஷ்யம்
பிரவாட பாஷ்யம்
என்று வகையறுத்து சொல்லுவர்.

அந்த விதத்தில், சங்கரருக்கு முற்பட இருந்த ஜரதத்வைதியான பர்த்ருபிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாத மதத்தை
சங்கரரே கண்டனம் செய்து வீழ்த்தி – யோகாசார மதத்தை இரவல் வாங்கியவராய் –
நூதன ஜகன் மித்யா வாதத்தை செய்து – இதுதான் வைதிக மதம் என்று பேசினார்.

அந்த அத்யாச பாஷ்யத்தில், இந்த உலகமெல்லாம் அத்தியாசத்தால் தான் உண்டாயிற்று .
அஹம் பிரஹ்மாஸ்மி என்கிற அபேத ஞானம் போய், பேத ஞானம் உண்டாயிற்று.
ஒன்றினுடைய தர்மம் மற்றோன்றில் தோன்றுவதாக சொல்லுவதுதான் அத்தியாசம் என்பது. இந்த அத்தியாசத்தால்தான்
உலகங்கள் எல்லாம் தோற்றுகின்றன என்பதே வேதாந்தத்தின் அர்த்தம் என்பதாக காட்டுகிறோம் என்று
பிரதிஞ்ஞை செய்து தன்னதேயான பாஷ்யத்தைத் தொடங்குகிறார் அவர்.

பிராசீனமான பர்த்ருபிரபஞ்சருடைய சிஷ்ய பரம்பரையில் வந்த பாஸ்கரர் என்பவர் அந்த ஜரதத்வைதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி –
ஏக தத்வ வாதமான சங்கர மதத்தை கண்டிக்கப் போந்தார். அப்படி செய்யப் புகுகையில், ஸ்வாபிப்ராயமாக செய்த
சங்கர பாஷ்ய போக்கை நிவர்த்திப்பிக்க வேண்டி தான் பாஷ்யம் செய்வதாக கூறிக் கொள்கிறார் இவரும்.

பரம் பிரஹ்மாஜ்ஞம் பிரம பரிஹதம் ஸம்சரதி தது – என்பது சங்கர மதம்.
அவித்யை ஆகிற உபாதியால் ஒன்றை பலதாக பிரமிக்கிறது பிரஹ்மம் என்பதான இதில் –
அவர் சொன்னது போல் உபாதி மாயை அன்று . அந்த உபாதி சத்யம் என்று பேசினார் பாஸ்கரர்.

எம்பெருமானார் என்ன செய்தார். இவர்களை எல்லாம் பராமர்ஷித்தாராய், நெல் செய்ய புல் தேயுமாபோலே ,
ஸ்வசித்தாந்தத்தை சொல்லப் போக பரசித்தாந்தம் தன்னடைவே இற்றுப் போகும் என்பதாக ,
டங்க, திரமிட குஹதேவ சித்தாந்தங்களைப் பிராகாசிப்பித்தார் என்பதே இவர் செய்த -”அந்த செயல்” ஆகும்.

கற்றினம் மேக்கப் பெற்றான்
காட்டுவாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பாவிகள் உங்களுக்கு ஏச்சுக்கொலோ ?–என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்தது போல

எம்பெருமானார் தரிசனத்தை பிரச்சன்ன ஜைன நூதன யுக்தி என்பதாக பழிப்பாருக்கு, அத்தால் என்ன?
இதில் உள்ள குணங்களை பாருங்கோள்.
சங்கர,பாஸ்கர பாஷ்யங்களால் டங்க, திரமிட , குஹதேவ நிஜமத (நிஜமதி ) திரஸ்காரம்தான் ஆகி இருந்தது.
சாரதா சோக விநாசகாய நம: என்கிற நாமாவளிக்குச் சேர, இராமானுஜருடைய ஸ்ரீபாஷ்யம் தானே அவர்களுடைய
நிராதங்க பெருமூச்சுக்கு வழிகோலிற்று என்பதாக ஸ்வாமி தேசிகன் யதிராஜ சப்ததியில் சாதிக்கிறார்.

அப்படிப்பட்ட எம்பெருமானார் என்ன சொல்லிக் கொண்டு தன் பாஷ்யத்தை ஆரம்பித்தார் ?
பகவத் போதாயன விருத்தி கிரந்த – தன் மாதாநுசாரேண வியாக்யாஸந்தி என்றல்லவோ பேசினார்.
நிஜத்தில் இவர் டங்க , திரமிட , குஹாதேவ பரம்பரா அநுசித ஸூத்ர வியாக்யானம் பண்ணினாதாக சொல்லிக் கொண்டாலும்
அது பரபக்ஷ நோக்கிலேயாய், உண்மையில்
எப்படி கோதை நாச்சியார் நாராயணனே நமக்கே பறை என்று உபக்கிரமித்து,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா என்று – நாட்டாருக்காக பறை என்று மறைத்துச் சொல்லி,
ஸ்வாபிப்ராயமாக கைங்கர்ய பிரார்த்தனையை அறுதி இட்டாளோ
அதுபோல கோதாகராஜரான ஸ்வாமியும் , ஸ கோஷ்டி நோக்கில் திருவாயமொழி ஆயிரமும், உபபிரம்மணங்களான 4 ஆயிரமும் சேர
பராங்குச, பரகால தர்சனத்தைக் கொண்டு ஸூத்ர வியாக்கியானம் நிஜத்தில் செய்தருளினார் என்பது தான்
மாமுனிகள் சாதித்த ”அந்த செயல் ” ஆகும்.
யோத்திராக்ஷிம் திராவிடீம் பிரஹ்ம ஸம்ஹிதாம் – என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட
பிரஹ்ம ஸம்ஹிதைக்கு 7 ரிஷிகள்போலே திராவிட ஸம்ஹிதைக்கும் 7 பேர் சொல்லலாம் படியான தர்சனம் இராமானுஜ தர்சனம்.

த்ரிகாண்ட அமரத்தின் படி 7 வகைப் பட்ட ரிஷிகளாவர் :
மஹரிஷி – வியாசர்
பரம ரிஷி – வேதாப்யாஸா :
தேவ ரிஷி – கணாதயர்
பிரஹ்ம ரிஷி – விசிஷ்டாத்யா
ஸுஸுருதாப்ய – ஸுதர்சய :
ராஜரிஷிய : – ருசுப்பன்னாதய :
காண்ட ரிஷிப்ய : – ஜைமினி

ரிஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண திருஷ்ணா தத்வம் இவோதிதம் – இந்த வரிசையில்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக் கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
திருமாலை ஆண்டான்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் –ஆகிய எழுவரைச் சொல்லலாம்.

உபஸம்ஹார தர்சநாத் என்று மற்றவர்கள் பிரஹ்ம சககாரி காரணத்தை திரஸ்கரித்து இருக்க,
ஆழ்வார் முதல் தனி வித்தோயோ என்று த்ரிவித காரணத்தை , பகவத் நிர்ஹேதுக கிருபையால் சாக்ஷத்கரித்துச் சொன்னதை
அடியொற்றி க்ஷீரவத் ஹி , ஜலதயா : என்கிற லௌகிக உதாரணத்துக்கு லௌகிக சமாதானம் அருளிச் செய்தார் கீழ்.
அடுத்து வைதிக சமாதானமாக, வேத வாக்கியத்தை இட்டுச் சொன்ன சூத்ரம்

—————

சூத். 2-1-25 :: தேவாதிவத் அபி லோகே ::

முப்பத்து முக்கோடி தேவர்கள் . அவர்களுக்கு என்று லோகங்கள். பரிவாரங்கள். கணாதிபர்கள்.
சங்கல்ப மாத்திரத்திலேயே ஸ்ருஷ்டியாதிகளைச் செய்கிற சக்தி சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு என்பதாக
வேத பூர்வ காண்டத்தில் சொல்லபப் பட்டிருக்கிறதே.
வேத பிராமாண்யத்தை ஒத்துக் கொண்டிருக்கிற வைசேஷிக, சாங்கியர்களான உங்களுக்கு இது தெரியாதோ ?
தேவர்களுக்கே இப்படிப் பட்ட சக்தி சொல்லப் பட்டு இருக்கையில் ,
புருஷோத்தமனான பிரஹ்மத்துக்கு ஸஹகாரி விவர்ஜித்த சிருஷ்டியை செய்ய என்ன தடை?
இத்தால் பர பிரஹ்மத்துக்கு சத்ய காமத்வத்தோடு சத்ய சங்கல்பத்துவமும் உண்டு என்பது சொல்லவும் வேண்டுமோ?
சத்ய காமத்துவமாவது உபய விபூதி நாதத்வம் என்பதாக சாதிக்கிறார் எம்பெருமானார்.
இதற்கு பிரதீகம் – வளவேழ் உலகு முதலாய வானோர் இறை என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்தி.

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-