ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –
ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-
கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய திரு நாமமே அன்றோ
பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும் எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –
எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள் கரையிலே முதலிகளை வைத்தால் போலே
பரம பதத்திலே வைத்து தாஸ்யாம்ருத தத்தைக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
திரு நாமம் தானே அள்ளி எடுத்துக் கொடு போய் பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –
—————
கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –
படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-
இப் பாட்டால் சர்வ சமாஸ்ரயணீயத்வமும் சௌலப்யமும் ஆஸ்ரித பாரதந்த்ர்யமும் போக்யதையும்
விரோதி நிரசனமும் குறை வற்று வர்த்திக்கிற தேசம் என்கிறது –
பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —
—————
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன
மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ-அது கொண்டு கார்யம் கொள்ளாதே-
மலையை எடுப்பது ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து வெருமனேயோ என்கிறார்
வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ் செற்றவா றேன்னே உரவுடைய
நீராழி யுள் கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் -83-
இத்தால் ஆஸ்ரிதர்க்கு விரோதம் வந்த போது சங்கல்பத்தால் அன்றியே தன்னுடம்பு நோவக்
கார்யம் செய்யும் என்றபடி –
—————
ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு-
பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-
உரோஸிக் கொண்டு எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு-அநாயாசேன அளந்த வன்று –
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது இப்போது திரு எயிற்றுக்கு
ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ
—————-
படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-
சாஷாத் கரிப்பதுக்கு முன்னே ஜ்ஞான லாபத்தைக் கொண்டு ஆறி இருக்கக் கடவதோ
ப்ராப்தி சமயத்திலும் கூட அபர்யாப்தி வேண்டி இருக்க ஜ்ஞான லாபத் தளவிலே திருப்தி பிறந்து இருக்கவோ
இனி அவ்வளவு அமையும் என்னும் படி இருக்குமாகில் அது பிராப்யமாக மாட்டாதே
பிறந்த ஞான லாபத் தளவிலே பர்யவசித்து ஆறி இருக்குமது அஞ்ஞான கார்யமேயாம் அத்தனை இறே
மயர்வற மதி நலம் அருளினன் என்ற அனந்தரத்திலே இறே மடல் எடுத்தது –
—————
இவர் இருந்த இடத்திலே பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –
இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன–தரியான் இறே அவன்
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-
அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இறே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத படி –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்-புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு-
திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது -தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –
ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப் பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –
————-
சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆன பின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –
இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே -இனி நரகத்துக்கு ஆள் கிடையாது-
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று-
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் -அல்லாத இடம் காடு-
————
வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப் பெற்றேனே -என்கிறார் –
நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-
நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்
நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ-நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே
————
சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் எம்பெருமான் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு-
எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-
அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –
———-
அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு-அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்த படி சொல்லுகிறார் –
நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-
வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலன் -இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply