சித்தத்துவிகம் –
முதல் 2 அத்யாயம் – பிரஹ்மமாகிற விஷயத்தை எடுத்து உரைப்பதால் இதை விஷயத்துவிகம் என்றும் சொல்லுவார்.
சமன்வயாத்யாயம் + அவிரோதாத்யாயம்
சாத்யத்துவிகம் –
பின் 2 அத்யாயம் – தத் விஷய ஞான ரூபமான சம்பந்தத்தால் அவனை அடைய வழியையையும்,
அடைந்த பின்பு பெறுகிற பேற்றையும் சொல்லுகிற விஷயீ துவிகம் என்பர் இதனை.
உபாஸனாத்தியாயம் + பலாத்யாயம் .
சாஸ்த்ர சங்கதி
காண்ட சங்கதி
பேடிகா சங்கதி
அத்யாய சங்கதி
பாத சங்கதி
அதிகரண சங்கதி
சூத்ர சங்கதி
சமன்வயாத்யாயத்தில் பிரஹ்மமே ஜகத் காரணம்தான் என்று
அயோக விவச்சேதம் , அந்யயோக விவச்சேதம் இரண்டாலும் காடாப்பட்டது.
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரஹ்ம காரணத்தை மட்டும் சொல்வதில்லை.
எத்தனையோ காரணத்வ வாக்கியங்கள் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் ஜகத் காரணம் என்கின்றன.
என்றாலும், அப்பின்ன நிமித்தோபாதான காரணம் பிரஹ்மம் மட்டுமே என்று
காரணத்வத்தை பிரஹ்மத்தோடு பொருத்தி சமன்வயப் படுத்தி காட்டினார் முதல் அத்தியாயத்தில்.
இரண்டாவது அத்யாயமான அவிரோதாத்யாயத்தில் ஸ்தூணான் நிகனன் நியாயத்தாலே பிரதிபக்ஷ வாதங்களை
கேடயம் கொண்டு மறுத்தும், வாதி ஸ்வபக்ஷ தோஷங்களை தர்க பாதத்தில் கத்தி கொண்டு நிரசித்தும்
ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கிறார் பாஷ்யகாரர்.
2-1-7- : இதர வியபதேச அதிகரணம் :
ஆரம்பணாதிகாரணத்துக்கு விலக்ஷணத்வாதிகரணத்தோடே சங்கதி.
அங்கு காரண-காரியத்துக்கு ஸாலக்ஷிண்யம் இருக்க வேண்டுமே என்கிற ஆக்ஷேப பரிகாரம் பண்ணப் பட்டது.
நித்ய சுத்த முக்த தத்துவமான பிரஹ்மத்துக்கும், ஸதத பரிணாம, துக்க மயமான ஜகத்துக்குமான விலக்ஷிணதவம் கொண்டு
பிரஹ்ம காரண வாதத்தை மறுத்து பிரதானம்-புருஷன் என்கிற 2 தத்துவங்களை ஒத்துக்கொண்டு
பிரஹ்மத்தை அடியோடு மறுக்கிறான் சாங்கியன் —
அதற்கு வைலக்ஷிண்யம் வஸ்து பேதத்தாலன்று அவஸ்தா பேதத்தைக் கொண்டு என்பதாகாச் சொல்லி ,
ஸாலக்ஷிண்ய நியமம் பிரஹ்ம காரண வாதத்துக்கு வேண்டியது இல்லை என்பதாக அங்கு சொல்லப் பட்டது.
நையாயிக, வைசேஷிகர்கள், ஸ்ருதி சித்தமான பிரஹ்மத்தை ஏற்காது, அனுமான சித்த பிரஹ்மத்தை
கேவலம் நிமித்த காரணமாக ஒத்துக் கொள்கிறார்கள்.
வைதிகர்களில் துவைதிகளும் பிரஹ்ம உபாதான காரணத்தை மறுக்கின்றனர்.
————-
சூத்ரம் 2-1-21 : இதர விபத்தேஸாத் ஹிதாகாரணாதி தோஷ ப்ரஸக்தி :
இது பூர்வ பக்ஷ சூத்ரம். இந்த அதிகரணத்தில் மற்ற இரண்டும் சிந்தாந்த சூத்திரங்கள்.
முதல் சூத்ரத்தால், காரணமான பிரஹ்மத்துக்கும், காரியமான ஜகத்துக்கும் ததனந்யத்வம் சொல்லும் பக்ஷத்தில்
அபரிஹார்யமான தோஷம் தட்டும் என்கிறான் வைசேஷிகன்.
தத்வமஸி
அயமாத்மா பிரஹ்ம
அஹம் பிரஹ்மாஸ்மி
என்கிற அபேத ஸ்ருதிகளைக் கொண்டு ததனந்யத்வம் சரீராத்மா பாவத்தை வைத்து நாம் சொல்ல,
ஸ்வரூப ஐக்கியத்தை வைத்து அத்வைதிகள் சொல்கிறார்கள் என்கிற வித்யாசத்தைத் தவிர,
இரண்டு பேரும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஜீவாத்மாவும் ஒன்றே என்று சொல்லப் போனால்
இரண்டு பக்கத்தாலும் கழுத்துக்கு சுருக்கு போட்டதாகிற தோஷம் வரும் என்கிறான்.
அநேந ஜீவேன ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – என்று பிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைந்து ஜகத் வியாபாரத்தை
செய்கிறது என்று சொல்லப் போனால் பிரஹ்மத்துக்கு அஹித ப்ரஸக்தி தோஷம் தான் மிஞ்சும் எனது பூர்வ பக்ஷம்-
ஸர்வஜ்ஞ , ஸர்வ சக்தித்வம் உடைய பிரஹ்மம் பேத பாவ ஜகத்தை ஸ்ருஷ்டிக்காது, நித்ய விபூதி போல ஏன் ஸ்ருஷ்டிக்கவில்லை?
கர்மானுகுணமாக பேதாஸ்பதமான ஜகத் உண்டாயித்து என்றால்,
ஜீவனும் பிரஹ்மமும் வேறு வேறு என்கிற – காரியம் வேறு காரணம் வேறு என்கிற
எங்கள் பக்ஷத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாக பூர்வ பக்ஷம்-
———–
சூத்ரம் 2-1-22 : அதிகம் து பேத நிர்தேசாத்.::
காரிய-காரணம் இரண்டும் ஒன்று என்று சொன்ன மாத்திரத்தாலே, பிரஹ்மமும்-ஜீவனும் ஒன்று என்பது நம்முடைய வாதம் இல்லை.
வியாசர்-ஆழ்வார்-இராமானுஜர் மதத்தவர் தத்வ த்ரய வாதிகளே ஒழிய ஏக தத்வ வாதிகள் அன்று –
ஜீவனோ தாபத்ர்யங்களால் பீடித்தன் பிரஹ்மம் அகர்ம வஸ்யன் என்கிற பல ஸ்ருதி வாக்கியங்களால்
பர ப்ரஹ்மமானது ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டது வேறு பட்டது என்பதே நம்முடைய மதம்.
எங்கெல்லாம் ஸது ஆத்மா பிரஹ்ம என்று சாமான்யாதிகரணத்தாலே சொல்லிற்றோ, சாக பசு நியாயத்தாலே
அங்கெல்லாம் தேவதா விசேஷமான நாராயண சப்தமே விவீக்ஷிதம்.
ஏத ஸர்வ பூத அந்தராத்மா திவ்யோ ஏகோ நாராயண: என்ற இடம் காண்க.
எப்படி அசேதனத்துக்கும் பரமாத்மாவுக்கும் ஐக்கியத்தை சொல்ல முடியாதோ, அதே போல
ஜீவாத்மாவுக்கும்-பரமாத்மாவுக்கும் ஐக்யத்தைச் சொல்லப் போகாது.
அசேதனத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் எந்த ஞானம் வியாவர்த்தமோ,அதே ஞானம் ஆத்ம- பரமாத்த்மாவுக்குமே (
மின்மினிப்பூச்சி) கத்யோதாக கல்ப-பரம்ஜியோதிஸ் வியாவர்த்தி என்னக் கடவது.
இரண்டு பேருக்கும் சாமானாதிகரண்யம் சொல்வது சரீராத்ம பாவத்தால் ஏற்கும் ஒழிய, ஸ்வரூப ஐக்கியத்தால் சொல்லப் போகாது.
அதனால் ஜீவாத்மாவுக்கும்-பரமாத்மாவுக்கு காரண-காரிய பாவம் பொய்ப்பதில்லை.
ராம: கமல பத்ராக்ஷ : ரூப சௌபாக்கிய தாயின்ய : ஸர்வ சத்வ மனோஹர :
இங்கு சொல்லப்பட்ட நான்கு சப்தங்களும் முதல் வேற்றுமை, – பிரதமா விபத்தி ஏக வசனம்.
ராமன் எவனோ அவனே கமல பத்ராக்ஷன்.-அவனே ரூப சௌபாக்ய தாயினன்.-அவனே ஸர்வ சத்வ மனோஹரன்.
நாலும் நாலு வியக்திகளை சொல்வதில்லை. நானா குணங்களைக் கொண்ட ஒரு வியக்தியைத்தான் சொல்வது சாமானாதிகரண்யம்.
தத்வமஸி ஸ்வேதகேதோ – என்ற வாக்கியத்தில் தது , துவம் அஸி இரண்டும் பிரதமா விபத்தி ஏக வசனம்.
அயம் ஆத்மா பிரஹ்ம – இதுவும் பிரதமா விபத்தி .
அஹம் பிரஹ்மாஸ்மி – இதுவும் பிரதம புருஷன்,
மத்யம புருஷன், உத்தம புருஷன் என்று அனைத்தும் சாமான விபத்தியிலேயே அமைந்துள்ள காரணத்தால் ,
ஜீவ-பர தத்வம் இரண்டும் ஒன்று என்று சொல்லுகிற வாதம் சரீராத்மா ஸ்வபாவ ஸ்வரூபத்தாலே ஸமஞ்சஸம்.
இந்த விஷயம் முன்னமே வாக்யான்வய அதிகரணத்தில் சொல்லப் பட்டது தான்.
காஸகிருஸ்னர் , ஒளடூலோமி–ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டம் காரண பிரஹ்மம் என்றும்
ஸ்தூல சிதசித் விசிஷ்டம் காரிய பிரஹ்மம் என்றும்-சரீராத்ம பாவத்தாலே ததனந்யத்வம் சொல்லலாவது.
இதை வைத்துக் கொண்டு பிரஹ்மத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் ஏகீ பாவமோ, அஹித தோஷமோ சொல்லப் போகாது .
ஸது ஏவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் என்கிற ஸ்ருஷ்டிக்கு பூர்வா அவஸ்த்தையிலும் கூட –
விசேஷ்ய-விசேஷணங்கள் வேறு வேறேயாய் – ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டம்தான் பிரஹ்மம் .
ஜீவோ பிரஹ்மைவ ந பர : என்று ஜகன் மித்யா வாதத்தை சொல்கிற சங்கரர் பிரஹ்ம வியதிருக்த ஸகல பதார்த்தங்களும்
மித்யை என்பதாகக் கொண்டு ததனந்யாத்வம் சாதிக்கிறார் அவர்.
இப்படி மாயா கல்பிதமான பிறகுதான் – சுத்திகையில் ராஜத புத்தி பண்ணுவது போல – பிரஹ்மம் தன்னிடத்தில் பேதத்தைப் பார்க்கிறது
என்று சொல்கிற அவர்கள் விஷயத்தில்
அதிகம் து பேத நிர்தேசாத் – என்கிற இந்த சூத்திரம் பொருந்தாது.
வியாசர் எந்த இடத்தில் இதுபோல உதாரணங்களைக் காட்டவில்லை என்பதே இதற்கு காரணம்.
————-
சூத்ரம் : 2-1-23 அஸ்மதாதிவத் ச தத் அநுபபத்தி :
பர்த்ரு பிரபஞ்சன் – பரிணாம வாதம்
சங்கரர் – பிரஹ்மாஜ்ஞான வாதம்
பாஸ்கரர் – ஒளபாதிக்க பேத வாதம்
பாமதிகாரர் – ஜீவாஜ்ஞான வாதம்
என்று இப்படி வேறு வேறு பிரகாரத்தாலே–ஜீவோ ந பிரஹ்ம பர : என்பதையே விசிஷ்டாத்வைதியான நீரும் –
தர்சனம் பேத ஏவச என்று ஜீவ-பர பேதம் சரீராத்மா பாவத்தால் வேறு பட சொன்னாலும், காரிய-காரண ஐக்கியம் சொல்லுகிறபடியால், –
பிரஹ்மமே காரியாவஸ்தையில் ஜீவ பாவத்தை அடைகிறது என்கிற அத்வைத பக்ஷத்துக்கே நீங்களும் வருகிறீர்கள்
என்பதாக வைசேஷிகன் வைத்துக் கொண்டு
துக்க மோஹாத்மாக ஜகத் ஸ்ருஷ்டியால், பிரஹ்மம் தனக்குத் தானே சுருக்கிட்டுக் கொள்வது போல் அஹிதத்தை உண்டாக்கினது என்கிறான்.
அதனால் பிரஹ்மம் கேவலம் நிமித்த காரணம். உபாதான காரணம் ஆகாது என்கிற எங்கள் பக்ஷத்தில்
சேர்ந்து கொள்வீர்களாக என்பதாக அனுராதனம் பண்ணினான்.
சாங்கியன் பிரகிருதி உபாதான காரணம் என்றான்.
வைசேஷிகன் பரமாணு ஜகத் காரணம் என்றும் , ஈஸ்வரன் கேவலம் நிமித்த காரணம். அந்த ஈஸ்வரனும் ஆநுமானிக சித்தம்.
ஸ்ருதி சித்தம் அன்று என்பதாக. சொல்லாமல் பிரஹ்மம் ஜகத்துக்கு அப்பின்ன நிமித்தோபாதான காரணம் என்று சொன்னால்
கீழே சொன்ன அஹிதாதி தோஷம் வரும் என்பது பூர்வ பக்ஷ ஆக்ஷேபமாய் .
அதற்கு பல பேத ஸ்ருதி வாக்கியங்களை எடுத்துக் காட்டி, சாமான்யாதி சப்தங்கள் விசேஷ சப்தத்தில் பர்யவசிக்கும் என்பதாக
சாக-பசும் நியாயத்தாலே வைசேஷிக பக்ஷத்தை நிரசித்தார்.
சேதநாசேதனாதமாகமான பிரபஞ்சமே பிரஹ்மம் – ஸ்தூல சேதநாசேதன விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் என்பதான காரணத்தால்,
ஜீவனும் பிரஹ்மமும் ஒன்றேயோ அல்லவோ என்கிற ஆக்ஷேபத்தை வைசேஷிகன் எழுப்ப கிடையாது என்பதாகச் சொல்லி,
வைசேஷிகனுடைய இந்த ஆரோபணம் அவர்கள் பக்ஷத்துக்கும் ஒவ்வாது என்பதாக
அஸ்மாதாபி அநுபபத்தேஹே என்கிறார் சூத்ரகாரர்.
ஜீவா-பர சாம்யம் சொல்ல வந்ததான ஆரோபம், அசித்தை வைத்தும் காட்டலாமே – பரமாத்மாவுக்கும் அசேதனத்துக்கு சாம்யம்
என்பதான அநுப பத்தி அஸ்மதாதபி அநிவார்ய : என்பதாக வைசேஷிக இதர வ்யபதேச வாதத்தைத் தள்ளி ,
ஸ்தூல-ஸூக்ஷ்மா அவஸ்தைகளில் விசேஷணங்களுக்கான பேதம், விசேஷயத்தில் கிடையாது என்பதால்
தத்துவங்கள் வேறு தான், ஆனாலும் காரண-காரியம் ஒன்றுதான் என்பதை அறுதியிட்டார்.
விலக்ஷணத்வாதிகரணத்தில் சொன்னதைத்தானே இங்கும் சொல்கிறார், என்பதால் புனருக்தி தோஷம் வாராதோ என்னில் ,
விலக்ஷணத்வாதிகரணத்தில் அசித்துக்கும் பிரஹ்மத்துக்கும் ஸாலாக்ஷிண்ய தோஷ பரிகாரம் பண்ண,
இந்த இதர வியாபதேச அதிகரணத்தில் சித்துக்கும் பிரஹ்மத்துக்குமான அஹித தோஷ பரிகாரம் செய்யலாயிற்று.
———-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply