ஸ்ரீபாஷ்யத்தில் அறுதியிடப் படலாவதுதான விஷயம் என் என்னில்
சித்தசித் தத்வேபி ஸத்யம் தத் சேஷி ஸ்ரீமந் நாராயண பிரக்யாபவந் இவ இத்தம்
தத்துவங்கள் மூன்று. சித்தும் அசித்தும் ஈஸ்வர தத்வத்தைப் போலவே ஸத்யம் .நித்யம்.
ஆகிலும் அவை ஸ்வதந்ர தத்வமன்று.சேஷியான ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டவை என்பதாகும்.
கணாத பரிபாடிப் கபில கல்பனா நாடகைஹி
குமாரில குபாஷிதைஹி குருநிபந்தன கிரந்திபிஹி
ததாகத கதாஸதைஹி ததௌத்வாரி ஜல்பைரபிஹி
பிரசாரித மிதம் ஜகத்து பிரகுணிதம் யதீந்த்ரோத்திபிஹி
நியாய வைசேஷிகன்
கபில சாங்கிய யோகிகள் என்ன
பிராபாகர மீமாம்ஸகன் குமாரில பட்டன் ஜைமினி என்ன
ஜைன, பௌத்தர்கள் என்ன,
சாங்கியனை ஒட்டி வந்த அத்வைதிகள் என்ன,
நையாயிகனை ஒட்டி வந்த துவைதிகள் என்ன
இத்தனைவகையான மதங்களால் உலகத்தில் எல்லோருக்கும் உண்மை எது என்று தெரியாமல் மதி கலங்கிப் போயிருக்க
அவர்களை எல்லாம் தன் பக்தி பிரபாவத்தாலே கட்டிப் போட்டு கலி கோலாகலத்தை நிவர்த்திப்பித்தார்
பகவத் ராமானுஜர் என்பது இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.
அத்யாயம் 2 தர்க்க பாதம் – 2 அதிகரணம் -1
ரசநாநுபபத்தி அதிகரணம்
இவ்வதிகாரணத்தில் ஸாங்கியர்களின் சித்தாந்தம் நிரசிக்கப்டுகிறது. கீழே
ஈக்ஷதேர் ந அஸப்தம் போன்று சூத்திரங்களில் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று சொல்ல வந்த இடத்தில்
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர யஸீத்
என்பதில் உள்ள ஸத் ஸப்த வாச்யன் – நாம் சொல்லுகிற பரபிரஹ்மம் கிடையாது தான் சொல்லுகிற பிரதானமே என்று அவன் சொல்லி வர,
தது ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயே ஏவ – என்று ஈக்ஷணத்தை இட்டுத்தான் ஸ்ருஷ்டி என்பதால்
அசேதனமான பிரக்ருதிக்கு ஈக்ஷணமான சங்கல்ப சக்தி கிடையாதாகையால் அது ஜகத் காரணமாக முடியாது என்று அவர்கள் வாதம் தள்ளப்பட்டது.
அதே விஷயத்தையே இங்கு அவர்களுடைய மத ஸ்வரூபத்தை பூர்ணமாகக் காட்டி, ஒவ்வொன்றுக்கும் நீங்கள் சொல்வது சரியில்லை
என்பதாக பிரதிகிரியை வெளியிடுகிறார் பாஷ்யகாரர்.
இனி சாங்கிய சம்பிரதாயம் விளக்கப் படுகிறது.
மூல பிரகிருதி – பரம காரணம் . இதற்கு ஒரு காரணம் கிடையாது. அவிகிருதி. அதாவது எதனுடைய விகாரமும் இது இல்லை என்பது பொருள்.
நித்தியமானது. த்ரிகுணாத்மந : 3 குணங்களாகவே ஆனது. அதாவது முக்குணங்களும் திரவ்யம் என்கின்றனர்.ஈச்வராதிஷ்டானம் அற்றது.
அதீந்திரியமானது.புலன்களுக்கு அகப்படாதது. அப்படியானால் எதைக் கொண்டு தெரிந்து கொள்வது என்றால் காரியாத் காரணம்
அநுமீயதே. சைதன்யமற்றது.. ஸதத விகிரியாய் , போகாபவர்கங்களை அளிக்கவல்லது.
பிரகிருதி புருஷனை விட்டு விலகுகையே மோக்ஷம் எனப்படுவது.
பிரக்ருதி -விக்ருதி – காரியம். மஹான் அஹங்காரம் 5 தன்மாத்ராங்கள் (தது மாத்ரம் =essence) ஆகிய 7ம் .
சில தத்துவங்களுக்கு விகாரமாய், சில தத்துவங்களுக்கு காரணமாய் இருப்பதால் இவை பிரக்ருதி -விக்ருதி எனப்படுகின்றன.
அஹங்காரம் சாத்விகாஹங்காரம், ராஜசகாககாரம், தாமஸாஹங்காரம் என்று 3 வகைப்படும்.
இவைகளிலிருந்து பொங்கைம்புலனும், பொறி ஐந்தும் , பூத தத்துவங்களுமான 15ம், மனசுமாக சேர்ந்து 16 ம் மற்ற
தத்துவங்களின் விகாரமாய் தாம் ஒரு தத்வத்துக்கும் காரணமாய் இராமையால் கேவல விகாரங்கள் என்றும், விக்ருதிகள் என்றும் கூறப்படுகின்றன.
ஆக மொத்தம் 24 தத்வங்கள்.
இவ்வளவுதானா? இன்னும் உண்டா என்றால்
இதற்குமேல் உண்டாகிற கட, படாதிகள் பதார்த்தங்கள் .
(நம்முடைய ஸம்பிரதாயத்திலும் மூலப்பிரக்ருதி நித்யமானது தான். ஆனால் த்ரிகுணாத்மவதி. 3 குணங்களோடு கூடியது.
ஈஸ்வராதிஷ்டிதமாய், பிரஹ்மத்துக்கு சரீரமாக விகாரத்தை அடைகிறது. பிரகிருதி என்கிற திரவ்யத்துக்கு
சத்வ, ரஜஸ், தமஸ் குணமாக இருக்கின்றன, திரவ்யம் 1 யாய் குணங்கள் 3ம் உடையது..
பதிம் விசஸ்வஸ்ய ஆத்மநிகும் ஸ்வயம் – என்று தனக்கொரு காரணமில்லாத ஸகலேதர ஸர்வ காரணன் பரமாத்மா என்கிற
ஸ்தானத்தில் அவன் மூல பிரக்ருதியைச் சொல்கிறான் )
25வது தத்வம் புருஷன்.- இவன் ந பிரக்ருதி ந விக்ருதிம். புருஷன் நிஷ்க்ரியன். கேவல க்ஞான ஸ்வரூபன்.
புருஷனுக்கு க்ஞாத்ருத்வ, போக்த்ருத்வ, கர்த்ருத்வங்கள் பிரகிருதி அத்யாஸத்தாலே. நிர்தர்மஹ = ஞான ஸ்வரூபன் மட்டுமே
ஞான குணகன் அன்று . அதாவது தர்ம பூத ஞானத்தை இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை.
சைதன்ய மாத்ரம் ஆத்மா என்பது இவர்கள் கொள்கை. ஸர்வ கத : என்று ஆத்மாவை விபுவாக சொல்கிறார்கள்.
பிரதி சரீரம் பின்னத்வ என்று அநேகாத்மாவாதிகாளே இவர்களும். .
அஹங்காரத்துக்கு 3 அர்த்தங்கள் உண்டு. யதார்த்த ஞானத்துக்கும் அஹங்காரம் என்று பெயர்.
1. அஹமர்த்தத்துக்கு வாசிகமான ஞானானந்த ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறிகை அஹங்காரம் – இந்த ஞானம் உபாதேயம்.
2. (பாவார்த்தே) அநஹம் அஹம் இத்யேத் அஹங்கார — அஹம் அல்லாதத்தை அஹம் என்று பிரமிக்கை –
அஹமல்லாத சரீரத்தை அஹம் புத்தி பண்ணுகை – இது தியாஜ்யம்.
3. (கரணார்த்தே) எத்தாலே இந்த அஹம் புத்தி உண்டாகிறதோ அந்த பிரக்ருதி மஹதஹங்கார தத்வத்துக்கும்
அஹங்காரம் என்று பெயர் – இதுவும் தியாஜ்யம்.
இந்த அஹங்காரமான ஜீவனுக்கு – பிரபா பிரபாவான் போலே – நித்தியமான தர்ம பூத க்ஞானம் அதனுடைய தர்மம்.
அந்த அவினா பாவ தர்மத்தை சாங்கியனோ, அத்வைதியோ ஒத்துக் கொள்வதில்லை. அதனை ப்ரக்ருதிக்கான தர்மம் என்கிறார்கள். அங்கனாகில்
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் எப்படி உண்டாகிறது என்றால்
1. சித் ஸாநித்யத்தாலே – ஜபா குஸும சாமீப்யம் போலே – என்றும்
2. சித் அவித்யா ஸம்பர்க்கத்தாலே – அயப் பிண்டத்துக்கு அக்நி சம்பந்தத்தாலே ஒளஷ்ணயத்வம் வருவது போலே – என்றும்
3. சித் சாயாப்பத்தியாலே – பிம்ப பிரதிபிம்ப பாவத்தாலே – என்றும் –மூன்று விதமாக சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட அஜ்ஞானதால் துக்க, மோக , போகம் பிராப்தமாகிறது–தத்வ ஜ்ஞானாது அபவர்க -ஸம்பிரப்தம் என்பது அவர்கள் சித்தாந்தம்.
ஜீவாத்மா நிர்தர்மகன் என்ற ஜ்ஞானம் வந்தால் அதுவே மோக்ஷ ஹேது–.
இதற்கு பிரத்யக்ஷம்,, அனுமானம் , ஸப்த ரூபமான வேதங்களையும் பிரமாணமாக இட்டு தன்னுடைய சித்தாந்தமே சரியான மார்க்கம் என்கிறார்கள்.
வைசேஷிகர்களும் ஆங்கிலனைப் போல ஜீவாத்மா ஸர்வ கத : என்று விபுவாய்ச் சொல்லுகின்றனர்.
ஜீவஸ்து பிரதி சரீரம் பின்னம் என்றும் சொல்கின்றனர். புருஷ பஹுத்வம் சித்தம் என்றால் விபு பதார்த்தங்கள் ஏகத்தில் இருப்பது எப்படி சாத்தியம்?
அது கூடுமா என்றால்
ஆத்மா பின்ன : ஸ்வதஸுகி என்பது நம்முடைய பக்ஷமும் கூட. ஆனால் ஆத்மா அணு ஸ்வரூபி. பரமாத்மா விபு என்பது நம்முடை கொள்கை.
புருஷ பஹுத்வம் எத்தாலே சித்தமாகிறது என்றால் ஜன, மரண, கரணாது. ஒருத்தன் பிறந்தால் எல்லோரும் பிறப்பதில்லை.
ஆயுர் போகங்கள் எல்லாம் வேறு வேறுதான். மரணம் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் சம்பவிப்பதில்லை.
இந்திரியங்கள், மனசு எல்லாம் ஒருவிதமாக இல்லாமல், அவனவனுக்கே கர்மானுகுணமாக பகவான் அன்றோ நியமிக்கிறான்.
அயுக பிரவிருத்தேஸ் ச , ஒவ்வொருவருடைய பிரவிருத்தியும், நிவ்ருத்தியும் ஒன்றாய் இருப்பதில்லை. ஒரே காலத்திலயுமாய் இருபத்தில்லை.
இத்தாலே ஆத்மா அநேகமென்பது நமக்கும் சம்மதம்.
காற்றுக்கு ரூபம் இல்லை. ஸ்பர்சம் உண்டு. அத்தகைய பொருள் களுக்கு விபுத்வம் சொல்ல முடியாது.
எதற்கு ஸ்பர்சமும் இல்லையோ அதற்கு காதம் ( தடுப்பு, அடைப்பு) ஏற்படாது. அப்பிரதிகாதாம் உண்டு என்பது
கால, தேச, ஆகாசம், ஆத்மா இவை நாலும் விபு பதார்த்தங்கள்.
ஆத்மா துவித : ஜீவாத்மா பரமாத்மா இதி சேத் என்று தர்க்க ஸங்க்ரகத்தில் சொல்லப்பட்டது.
நம்முடைய சித்தாந்தப் படி பரமாத்மா விபு. ஆத்மா அணு ஆகும். அதனுடைய தர்ம பூத ஞானம் பத்த தசையில் சங்குசிதமாக இருக்கும்.
மோக்ஷ தசையில், பகவத் அனுகிரஹத்தாலே தர்மபூத க்ஞானம்தான் விபுவாகிறது என்பது நம்முடைய சித்தாந்தம்.
நையாயிகன் சொல்வதாவது – அனுமானிக பிரஹ்மம் ஸகர்த்ருகம்
உதயனாச்சார் நியாய குஸுமாஞ்சாலி, ஆத்ம தத்வ விவேகம் என்று 2 கிரந்தங்களை பண்ணி அதிலே
ஆத்மாவை சித்தி பணி, ஈஸ்வரனையும் சித்தி பண்ணி அந்த பௌத்தர்களையும் , ஜைனர்களையும் வீழ்த்தின படியாலே
அவர்கள் சொன்ன அனுமானிக்க ஈஸ்வரன் பிரசாதித்த வேதம் பரதப்-பிரமாணம் ஆனபடிக்கு , ஸ்வதப்பிராமாண்யத்தை ஒப்பினார்கள் இல்லை.
சாங்கியனோ என்னில், பிரகிருதி புருஷன் என்ற இரண்டு தத்துவங்களை மட்டும் சொல்லி தங்களதேயான கபில ஆகமத்தையே
பிரமாணமாகச் சொன்னார்கள். அதில் சொல்லப்பட்ட படியே வேதத்திலும் உள்ளது என்பதை காட்டுவே வேதத்தை அவர்கள் ஏற்கின்றனர்.
கர்ம காண்டம் தேவதா காண்டம் , சாரீரக மீமாம்ஸா காண்டம் என்று மூன்றுமாக சேர்ந்து மீமாம்ஸா ஏக சாஸ்திரம்.
அதில் அத்தியாயங்கள் 12+4+4 = 20ம் அடங்கும். பூர்வ மீமாம்சை 12 அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் சொல்லப்படுகிற விஷயம்
தர்ம தீ – இந்த ஞானமான புத்தி எப்படி உண்டாகிறது என்பதை
1. மான 2. பேத 3. அங்க 4. பிரயுக்தி 5. கிரம 6. கர்த்ருபிஹி 7.கியாதி 8. தேச 9. விசேஷ 10. ஊக 11. பாத 12 தந்த்ர .பிரசக்திபிஹி –
என்று 12 அத்யாயத்தில் 12 விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அதில் முதல் அத்தியாயத்தில் பிரமாணம் என்பதை பற்றி சொல்லி இருக்கிறார் ஜைமினி மஹரிஷி.
அதையே 1. தந்த்ர வார்த்திகா 2. ஸ்லோக வார்த்திகா 3. ஸூக்டிகா என்று மூன்ரூ கிரந்தமாக பண்ணினார் குமாரில பட்டர்.
அவைகளை சற்று பாரிஷ்காரம் செய்து பிரபாகர் குருமத்தத்திலும் – நித்ய நிரவாத்யமான அநாதி அவிச்சின்னமான வேதம் தான் பிரமாணம்.
என்று அவர்களால் ஸ்தாபித்தமான படியாலே , இந்த காபில ஆகம அபிராமாண்யத்தை இவ்விடத்தில் சொல்லிற்றார் இல்லை.
இவை எல்லாம் மஹா பூர்வ பக்ஷத்தில் தள்ளுபடியானவையே. ஏற்கனவே தள்ளப்பட்ட சாங்கிய மதத்தை
மறுபடி இங்கு தள்ள வேண்டிய அவசியம் என்ன? எனில் அங்கு வேதாந்த வாக்கியங்கள் சாங்கிய மத்தத்தைச் சொல்லவில்லை
என்று காட்டுவதில் நோக்காய் இருந்தது ; இங்கு அந்த மதம் தோஷமுடையது என சொல்வத்திலே நோக்காக உள்ளது.
இந்த ரசநாநுபபத்ய அதிகரணத்தில் மேலும் விவிரிக்கிறார் சூத்ரகாரர்.
————–
சூத். 2-2-1 :: ரச நாநுபபத்தேஸ்ச ந அனுமாநம் ப்ரவ்ருத்தேஸ்ச ::
பிரத்யக்ஷ பிரமாணத்தைப் பற்றி விவாத விஷயம் ஏதுமில்லை.
காபில ஆகம பிராமாண்யமும் பூர்வ மீமாசகர்களால் தள்ளுண்ணப்பட்டது. இனி, விடுபட்டது ஆநுமானிக பிரமாணம் ஒன்றே.
சாங்கியன் அநுமானத்தால் ஈஸ்வரனை சித்தி பண்ணு, அந்த அநுமான யுக்தியை நிரஸ்தம் பண்ணினால்,
அவன் மதம் பூர்ணமாக கண்டிதமானபடியே அன்றோ?
நையாயிகனுடைய பரமாணு வாதத்தை நிராஸன மாக்கினான் சாங்கியன் .
எத்தனை காரியம் இருந்தாலும் , காரணம் ஒன்று தான் இருக்க வேண்டும்.
கரோதி இதி காரணம்.
கிரியதே இதி காரியம்..
தான் சொல்லுகிற பிரதானம் தான் காரணம். நையாயிகன் சொல்லுகிற பரமாணு காரணம் ஆகாது என்பது அவர்கள் வாதம்.
பலவற்றை காரணமாக சொல்லப் போனால், அநவஸ்தா தோஷம் வரும்.
தன்னுடைய பிரதான காரண வாதத்தில்
1. காரண அவஸ்தா வியவஸ்தவ்யம் . ஷட்பி பார்ஸ்வை ( six dimensional) பரமாணு வாதத்தில் அது அவியவஸ்தவ்யம்
2. பிரதானம் ஏக திரவ்யம் . அவர்களின் பரமாணுக்கள் பல பலவாக வேண்டியுள்ளன.
3. காரிய காரண ஸாரூபியம் . காரியம் சுக, துக்க, மோஹாத்மகம். காரணம் அவைகளுக்கு ஹேதுர்பூதமான
ஸத்வ ரஜஸ் தமஸோடு கூடி இருக்க ஸாலக்ஷிண்யத்தோடு அமைகிறது.
யதா ஊர்ணநாபி – பிரதானம் விபாக – அவிபாக தன்மையோடு ஸ்ருஷ்டி லயங்களைக் சமன்வயித்துக் காட்டுகிறது.
குலாலன் பரிமிதமான கட, சராவங்களைத்தான் பண்ணமுடியும். நெய்பவனும் பரிமிதமான வஸ்திரங்களைத்தான் தயாரிக்க முடியும்.
அவர்களுடய சக்தி அளவுபட்டபடியாலே. பிரதான சக்தி அபரிமிதமானது. எனவே ஜகத் ஸ்ருஷ்டி சார்த்தகம்.
காரண காரிய அவிபாகஸ்ய வைஸ்வ ரூபஸ்ய. எனவே அவ்வியக்தம், பிரதானம், மூல பிரகிருதி என்று சொல்லப்படுகிற
ஒன்றே அனைத்துக்கும் மூல காரணமாக உள்ளது. மண்ணால் ஆக்கப் பட்ட பொருளுக்கு மண் தான் காரணமாக முடியும் . பொன் காரணமாக முடியாது.
அதுபோல பொன்னால் ஆன பொருளுக்கு பொன்னே தான் காரணமாக முடியும்.
அவ்வாறே சுக, துக்க, மோஹாத்மக ஜகத்துக்கு த்ரிகுணாத்மக பிரதானம்தான் காரணம் என்பதால்
குண ஸாம்யம் சித்தம் என்பதாக பூர்வ பக்ஷம் இதுவரை சொல்லப்பட்டது.
ஞானாந் மோக்ஷரேவ ஜாயதே ராஜ ஸிம்ஹா ! நத்வத் அக்ஞானாது. – என்பது பீஷ்மர் தர்மபுத்ரருக்கு உபதேசித்தது.
பூர்வ மீமாம்ஸகன் மட்டும் கர்மா, கர்மா என்று சொல்ல , மற்ற எல்லா சம்பிரதாயத்தவருக்கும் ஸம்மதம் ஞானாந் மோக்ஷம் என்பதே.
அவைதிகனும் சொல்லுவது இதையே.
ஆனால் அந்த ஞானம் எப்படி இருக்கிறது. முத்தி ஸ்வரூபம் எப்படி இருக்கிறது என்பதிலேதான் விசம்வாதம்.
அவித்யா விமுக்திரேவ மோக்ஷ : என்ற அந்த லகு சித்தாந்தம், லகு பூர்வ பக்ஷத்தில் என்ன நடந்தது?
அது கேவலம் வாக்கியாத் வாக்கியார்த்த க்ஞானமாக இருந்தால் போதாது. அது பக்தி ரூபாபன்ன ஞானமாக –
ஞானம் கலந்த நலமாகவேணும் என்பது ஆழ்வார், நாதமுனிகள் சம்பிரதாயம்.
நாதாய முநயே ஆகாத பகவத் பக்தி ஸிந்தவே –
என்று இவர்கள் விஷயமாகச் சொன்ன பக்தி யோகம் – சாதன பக்தி யோகமா? என்னில் கிடையாது.
பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு 3வது ஷாட்கத்தில் சொன்ன பக்தி யோகம் என்ன;
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டதான 32 பிரஹ்ம வித்தைகளில் சொன்ன சாதன பக்தி என்ன ;
பாகவதத்தில் 11வது ஸ்கந்தத்தில் நாரதருக்கு, உத்தவருக்கு கண்ணன் சொன்ன சாதன பக்தி என்ன;
அனந்தபத்மநாபன் விஷயமாக ஸ்வாதித் திருநாள் பண்ணின 1000 ஸ்லோகம் கொண்ட பக்தி மஞ்சரியில் சொல்லப்பட்ட சாதன பக்தி என்ன
இதெல்லாம் கிலஷ்டமான பக்தி சாதனம். ஆழ்வாரும் நாதமுனிகளும் அவதரித்து அகிலஷ்டமான இந்த பிரபத்தியாகிற
ஸாத்ய பக்தியை தந்திரா விட்டால் நாம் வைஷ்ணவர் களாக இருந்திருப்போமே அல்லாது ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகி இருக்க மாட்டோம்.
ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாரயண: பரம்ப்ரஹ்ம கீதா ஸாஸ்த்ரே ஸமீரத: (கீதார்த்த ஸங்க்ரஹம்-1)
என்ற ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி இங்கு ஸ்மாரகம்.
அந்த உபபத்தேஸ்ச என்கிற சூத்தரத்தில் சூசகமாக நாயமாத்மா பிரவசநேந லப்ய : என்ற விஷய வாக்கியத்தை இட்டு
அநன்யோபாய ஸ்ரவணாத் என்றிருக்கிற பக்வதநுக்ரஹத்தாலே லப்தமாகிற சாத்ய பக்தி தான் ராமானுஜீயம்.
நம்முடைய ஸம்பிரதாயத்தில் வேதாந்தச்சாரியாரின் பாட்டனாரான உய்யக்கொண்டார் ஒருவர்தான் ஸாதன பக்தியில் நின்றவர்.
அவர் இராமாநுஜரிடம் எத்தனைதான் பிரபத்தியைப் பற்றி உபதேசம் பெற்றாலும், தனக்கு அதில் மனம் போகவில்லை என்று சொல்ல,
அதற்கு உடையவர் நீவீர் வித்வாம்ஸ ராகையால் இதற்கு இசைந்தீர். கர்ம வசத்தால் பாக்யஹீனராய் இழந்தீர் என்று
சொன்னதாக ஐதிஹ்யம் ஒன்று காட்டப்படுகிறது.
ஸாதனா பக்தி ஸ்தானத்தில் பகவானை வைத்து, பிரபத்தி பலமாக – உபாய புத்தி விலக்காக –
அந்த சாதன பக்தியாகிற யாக யஜ்ஞாதிகளை பண்ணலாவது – கர்மம் கைங்கர்யத்தில் புகும் – என்பதாலே.
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத (ஸ்தோத்ர ரத்னம்-65) வசனத்தின் படி, அதற்கு ஆச்சாரிய சம்பந்தம் அவஸ்யாபேக்ஷிதம்.
ஆச்சார்ய சம்பந்தம் அல்லாதபோது தாமரையை அலர்த்தக்கடவ சூரியன் தீர்த்தத்தை விட்டு அகன்றபோது உலர்த்துமா போலே –
விண்ணாடு தர வேண்டி இரான் அவன்.
சேதன பிராஜ்ஞா அநதிஷ்டிதமாக பிரக்ருதி தானே ஸ்ருஷ்டிக்கிறது. இதற்கு பர பிரஹ்மம் வேண்டியதில்லை என்பது சாங்கிய பக்ஷம்.
பிராஜ்ஞனான பகவததிஷ்டானத்தை நையாயிக்கனும் ஒத்துக் கொள்வதில்லை. உபாதான காரணமாக பிரக்ருதியைத்தான் சொல்லுகிறான் அவன்.
சரீராத்மா பாவத்தை இசைவதில்லை இருவரும்.
கொத்தனார் வீடு கட்டும்போது ஒவ்வொரு செங்கலாக , ஒன்றன் மேல் ஒன்றாய் , நீளத்தோடு நீளமும், அகலத்தோடு அகலமும்
சேரும்படியாக கட்டிப்போகிறான். இந்த ஷட் பரிமாண பாவம் இந்த சுவற்றுக்குப் போலே , செங்கல் எத்தாலே ஆனது என்றால்,
அதற்குள்ள பாகத்தாலே, அது எத்தாலே ஆனது? என்றால் அது அதற்குள்ள பாகத்தாலே என்று
அணுபரியந்தம் இந்த ஷடம்சம் சொல்லப்படுகிறது. அது அநவாஸ்தா தோஷத்தோடே முடிகிறபடியால் விலக்கு.
ஆன படியாலே , பிரதானம் தான் ஜகத்காரணம் . அது -விபுவாயிருக்கிறபடியாலே ;-நாநாவிதமாய் இருக்கிறபடியாலே;
மூன்று விதமான திரவ்யத்தோடே ஆனபடியாலே; த்ரிகுணாத்மிகா என்று குணத்தை இட்டுச் சொன்னாலும், அது குணமில்லை திரவ்யம்தான்.
நாம் சொல்வது பிரகிருதி த்ரிகுணவதி – மூன்று குணங்களோடு கூடிய ஒரு திரவியம் என்பதாக.
இதுவரை பூர்வ பக்ஷம் விவரிக்கப்பட்டது. இனி சித்தாந்தம் :
ரசநாநுபபத்தேஸ்ச ந அநுமானம் ப்ரவ்ருத்தேஸ்ச –
அனுமானத்தாலே சித்தி பண்ண பிரக்ருதிக்கு சிருஷ்டி பொருந்தாது. உண்டாக்கும் ஸாமர்த்தியமும் கிடையாது.
தேர் சமைக்க வேண்டிய மரம், உபகரணம் எல்லாம் இருந்தாலும், சக்தி, சாமர்த்திய, இச்சா, சங்கல்ப பிரக்ஞனான தச்சன் ஒருவன்
இல்லாமல் ரத்தம் எப்படி சித்திக்கும்? பகவான் ஸர்வஜ்ஞ, ஸர்வசக்தி , ஸத்திய சங்கல்பனாகையாலே ,
சககாரி வஸ்து இல்லாமலே ஸ்ருஷ்டிக்க தடை இல்லை. அசேதனமான பிரகிருதி காரியமாக , ஒரு சேதனன் வேண்டாவோ? –
என்று சூத். 2-1-24 ல் உபஸம்ஹார தர்சநாத் அதிகரணத்தில் அவன் சொன்ன ஆக்ஷேபங்களை அவனுக்கே திருகு பணமாயிற்று.
ரதத்துக்கு தாரு போல பவனத்துக்கு செங்கல், குண்டலத்துக்கு ஸ்வர்ணம் – உபாதானம் இருந்தாலும் அவை எல்லாம் அசேதனமாய் ,
அதனைக் காரியம் கொள்ள,எதை, எப்படி, எதுவாக செய்ய வேண்டிய ஞானமுள்ள சேதனன் கை வைத்தால் அல்லது காரியம் ஈடேறாது.
ஆக,பிராஜ்ஞ அநதிஷ்டதமானது தன்னாலே தான் உண்டாக்க கடவதில்லை.
ஸத்வ, ரஜஸ், தமஸுகள் குணமாக இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எங்களுடைய சித்தாந்தத்தில் அவை திரவ்யமானபடியாலே
கழிப்பதற்கு இல்லை என்று சாங்கியன் சொல்ல,
அதற்கு பிரதிகோடியாக பகவத் ராமானுஜர் கூறுவதாவது :
தத்வாதிகள் திரவ்யத்தினுடைய குணமாகத்தான் வேணுமே ஒழிய, சாஷாத் திரவ்யமாக முடியாது.
உதாரணத்திற்கு, செம்மண், கறுமண், சுத்தமான மண் என்று ஸத்வ, ரஜஸ் , தமஸ் மண்ணுக்கு குணமாக முடியுமே தவிர,
மண்ணாகவே அவை ஆகமுடியாது.
அப்படியே நீ பரமாணு காரண வாதத்தை நிராஸனம் பண்ணும்போது சொன்ன அநவாஸ்தா தோஷம் உங்களுக்கும் உண்டு.
காரண வஸ்து ஏகமூலமாக இருக்க வேண்டும் என்று சொன்னபடிக்கு அல்லாமல் . பிரதானம் மூன்று பொருளின் கலவையான படியாலே.
ஏகத்வம் போய் அனேகதவம்தான் சித்திக்கிறது..
பிரதானம் அபரிமிதம் என்றாய்.. அவ்வழியாலும் உன்னுடைய சித்தாந்தம் நிற்காது.
காரணம் – அபரிமிதமான ஒன்றைக் கொண்டு காரியம் கொள்ள முடியாது. மூன்று தத்துவமும் சமமாக இருந்த ஒன்றில்,
வைஷம்யம் ஏன் எப்படி உண்டாயித்து? என்பது கூறப்பட்ட வில்லை. எனவே காரியாரம்பம் அசம்பவம்.
காரியம் ஆரம்பமாக வேண்டுமென்றால், அது பரிமிதமாகத் தான் இருக்க வேண்டும்.
பர்வதோ வஹ்நிமான் என்றதில், பக்ஷம் பர்வதம் போலே, ரத, பவன, குண்டலம் போலேயாய் பிரதானமும் பக்ஷீயமாகத்தான் உள்ளது.
யாரை நாம் மனனம் பண்ண வேண்டும் ? என்றால்
ஆத்மா வா அரே திரஷ்டவ்ய :ஸ்ரோதவ்ய : மந்தவ்ய : நிதித்யாஸிதவ்ய : என்று ஸ்ரவண மனன நிதித்யாஸிதவ்யங்களாலே
அந்த பகவானைத்தான் ஸாஷாத்காரம் பண்ண வேண்டியது.
கஸ்ச த்யேய : காரணம் து த்யேய — என்று அந்த பரப்ரஹ்மம் தான் தியேய வஸ்து என்பதற்கு
யாதோ இமாநி பூதாநி ஜாயந்தே –என்பதான காரண வாக்ய ஸப்தத்துக்கு வியுத்பத்தியைச் சொல்லி லக்ஷணத்தையும் காட்டி
இந்த சரீரக மீமாம்ஸா சாஸ்திரம் பிரவர்த்தமான மாயித்து.
நமக்கு இங்கு மனன விஷயமாக இருப்பது ஆச்சார்ய குரு பரம்பரையே. அத்தாலே பகவானை ஸ்ரவண, மனன, நிதித்தியாசனத்துக்கு
விஷயமாக சொன்னதை விட்டுவிட வேண்டியதோ என்னில் , இல்லை.
குரூர் உபேத்ய ஸ்ரோத்ரியம் ஸமித் பாணி :,என்று குருவை மனனம் பண்ணி ஸாஷாத் கரிக்காமல், அந்த பகவத் ஸாஷாத் காரம் கிட்டாது.
வக்தவ்யம் , ஜப்தவ்யம் குருபரம்பரையும், துவயமும் என்று ஸ்வாமி பிள்ளைலோகாச்சார்யார், ஸ்ரீவசனபூஷண ஸாஸ்த்ரத்தில்
காட்டியபடி அதனையே மனனம் பண்ணக் கடவது.
வேத சாஸ்திரத்துக்கு கண்டகர்களான
பௌத்தன் – க்ஷணிக விஜ்ஞானமே ஆத்மா , சூன்யமே ஆத்மா என்றும்;
ஜைனன் – ஆத்மாவை ஒத்துக் கொண்டு , வேதத்தைத் தள்ளியும்;
மாயாவதி – ஆத்மாவும் பரபிரஹ்மமும் ஒன்றே என்றும்
வேதத்துக்கு கண்டகமான பொருள்களை சொல்லி குதஸ்தது ? குதஸ்தது ? என்று வந்த பாஹ்ய குத்ருஷ்டிகளுடன்
வாதமிட்டு நேர் பண்ணின நேதாரம் பகவத் பக்தாரம் யாமுநேயம் மனமாமஹே – என்பது பட்டர் திருவாக்கு.
சடகோப முனி
நாதமுனி
யாமுனமுனி
இராமாநுச முனி மற்றும்
மணவாள முனி
என்ற பஞ்சமுனி சம்பிரதாயம் நம்முடையது.
முதல் முன்னம் ஸ்வாசார்யரைக் கொண்டு , எம்பெருமானார் உள்ளிட்ட குரு பரம்பரையை அனவ்ரதம் மனனம் பண்ண வேண்டியது.
மயிஸர்வம் ஜகத் என்று பகவத் சரீரமாய், சேஷபூதனாய் இருக்கிற நாம், அது பாகவத , ஆசார்ய பரியந்தம் ஆக்கி ,
அதற்கு கிஞ்சித்தும் ஸ்காலித்யம் இல்லாதபடிக்கு தினமும் அவர்களை நினைவில் கொண்டு பகவத் தியானம் செய்ய வேண்டும்.
—————
சூத். 2-2-2 :: பய : அம்புவத் சேத் தத்ராபி ::
கீழே, காரண வஸ்து ஏக மூலம் காரிய வியவஸ்திதமாக இருக்க வேண்டும் என்று குணாத்மக மான
ஸத்வ, ரஜஸ், தமஸையே திரவ்யமாகக் கொண்ட ஏக வஸ்துவாகிற பிரக்ருதியையே காரணம் என்று நீங்கள் சொன்னது பொருந்தாது –
காரண பகுத்வா அநவாஸ்தா ததவஸ்தேவ என்று சித்தாந்திகள் சொல்ல;
விஷம அவஸ்தை ஸ்ருஷ்டி என்பதாலே காரியம் ஆரம்பமாக பரிமிதாவஸ்தை அவசியம்.
அதற்கு ஸர்வஜ்ஞ; ஸர்வ சக்தி ; ஸகல குணாத்மகத்தை ஒத்துக் கொண்டு இருக்கிற
ஸகலேதர விலக்ஷண பர பிரஹ்மத்துக்கு இது கூடுமே ஒழிய , நீங்கள் சொல்லுகிற சலனமில்லாத சமான தோலனத்தில் உள்ள
அபரிமித மூல ப்பிரக்ருதிக்கு காரியாரம்பம் அசம்பவம்.
புருஷனை அதர்மகனாகவும், பிரக்ருதியை அசேதனமாகவும் சொல்லுவதால் இது பொருந்தாது என்பதை கீழ் ஸூத்ரத்தில் பார்த்தோம்.
அதற்கு சாங்கியன் பயஸு = பாலைப் போலே ; அம்பு = தீர்த்தத்தைப் போலே என்று அநுமானித்துக் காட்ட , அதாவது
பய : அம்புவத் சேத் தத்ராபி அநுபபத்தேஹே –
சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றும் மூன்று காரணம் என்று சொன்னால் அநவஸ்தை வந்து விடுகிறது.
இல்லை மூன்றும் சேர்ந்து ஒரு காரணம் தான். காரியாவஸ்தையில் அது வேறு வேறாக பரிணமிக்கிறது. என்றால்
காரியமாகிய ஜகத்துக்கு ஸாலக்ஷிண்யம் போய்விடுகிறது–
ஒரே காரணமான பிரதானத்திடமிருந்து விவிதமான ஜகத்து எப்படி வந்தது? என்பது கேள்வி.
காரணம் மூன்று என்றால் – 3 திரவ்யத்தால் ஆன பிரதானம் ஒன்றே என்கிற வாதம் போய்விடும்.
இல்லை மூன்றும் சேர்ந்த ஒரே காரணத்தால் வந்தது ஜகத்து என்றால், காரண காரியம் ஒன்றாக இருக்க வேண்டுமே,
நானாத்வம் ஏன் வந்து ? என்ற கேள்வி வரும்.
அம்புவது – எப்படி பாகீரதி, அலக்நந்தா, விஷ்ணு தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தம் சேர்ந்து கங்கையாகி ,
பிறகு அது கிளைகளாக பிரிந்து நாட்டுக்கும், நகரத்துக்கும் பாய்கிறதோ அதுபோல
முக்குணங்கள் பிரதானம் என்கிற ஒரு தத்வமாய், பிறகு, காரியாவஸ்தையில் நானாத்வம் சித்திக்கிறது. அல்லது
ஆகாசத்தில் இருந்து விழும் மழை ஜலமானது ஏக ரஸத்தோடே இருந்தாலும், அதை உண்ட மா, வாழை, பலாச் செடிகள்
வேறு வேறு ரசத்தோடு ஆன காய் கனிகளை ஈவதும் ஸ்வதஹா நடப்பதுதான். இதற்கு யாரும் எதுவும் செய்ய வேண்டியது உண்டோ?
அதேபோல பிரதானம் கூட ஸதத பரிணாமியாய் பரமாத்ம அதிஷ்டானம் இல்லாமலே ஆஸ்ரய விவிதத்வாது நாநாத்தவம் சித்திக்கிறது என்றும்
பயஸ்வது – வேதாந்திகளே , நீங்கள் சூத். 2-1-24 – உபஸம்ஹாரதர்ஸநாத் நேதி சேத் ந, க்ஷீரவத்தி அதிகரணத்தில் சொன்னபடிக்கு
பால் உறை விடாமல் தயிராவதுபோல் , அசேதனமான மூலப் பிரகிருதி தன்னாலேயே பரிணமிக்கிறது என்றும் சொல்லுவீர்களானால்
தத்ராபி அநுபபத்தேஹே – க்ஷீரவத்தி என்பதில் சொல்லப்பட்ட விஷயம் சஹகாரி காரணம் வேண்டியது இல்லை ,
ஸத்ய ஸங்கல்பத்தாலேயே அந்த பிரஹ்மத்துக்கு காரியம் கொள்ள அமையும் என்பது போக்கி,
பிராஜ்ஞா அநதிஷ்டதமாக ஸ்ருஷ்டி நடக்கிறது என்று ஒப்புக் கொண்டதாக நினைப்பிடுகை அபத்தம் .
பால் தயிராம் போதும், மழைநீர் இளநீர் ஆம்போதும் அவை பரம சேதனனால் அதிஷ்டிக்கப்பட்டே பரிணாமம் அடைகின்றன.
இப்படி பால், மழைநீர் இரண்டும் அவ்வனுமானத்தில், பக்ஷமாக இருக்கும் போது, அதையே திருஷ்டாந்தம் ஆக்கி
அனுமானத்தை உடைப்பது முறையல்லவே.
யோ அப்ஸு திஷ்டந் (ப்ரஹதாரண்யகம்) : என்கிற ஸ்ருதியை அடி யொற்றி பகவததிஷ்டித பிரகிருதி பரிணமிக்கிறது என்றே
அவ்விடத்தில் நாம் சொன்னதாகக் கொள்ள வேண்டும். அத்தை அனுமான திருஷ்டி கொண்டு தகர்க்கப் போகாது என்பது சித்தாந்தம்.
பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன் – என்கிற நம்மாழ்வார் திருவாக்கும் இதற்கு உபயுக்தம்.
தற்கால மின்சார உபகாரங்கள் போல ஜகத்து என்று வைத்துக் கொண்டு, அவைகளை நடத்த மின்சாரம் போல புருஷன் என்று கொண்டாலும்,
அவைகள் வேலைக்கு ஆகும்படியாய் தட்டிவிட்டு, நிறுத்த (On / Off செய்ய) சேதன அதிஷ்டிதம் அவசியம் போலே –
ஸர்க பிரதி ஸர்கம் (ஸ்ருஷ்டி-பிரளயம்) விவஸ்திதமாக பகவத் சங்கல்ப ரூப பிரஜ்ஞாதிஷ்டித பிரக்ருதிகல்லது பொருந்தாது என்ன
நீங்கள் பிரதானத்தின் பேரில் சொல்லுகிற விஷம ஸ்ருஷ்டி தோஷங்களுக்கு ஸத்வ ரஜஸ் தமஸ் காரணம் என்று சொல்ல வழியுண்ண்டு.
அதே விஷம ஸ்ருஷ்டி காரணமாக, பலமடங்கு வைஷம்ய நைர்க்ருண்யாதி தோஷங்கள்
பிரஹ்மததுக்கு தான் அதிகம் , நாநாவாப்த அவாப்தவ்யம் என்று அவாப்த ஸமஸ்த காமனான படிக்கு.என்ன இதி அவாச்யம்.
பரிபூர்ணனான போதும் ஸ்ருஷ்டி லீலார்த்தே ஸம்பவம் என்பது முன்னமே கடப்பட்ட ஒன்று.
சரீர பிரதத்வத்துக்கு மட்டுமே பிரஹ்மம் காரணம் . மழை நீர் ஏக ரசத்தோடே இருக்க, மா பலா வாழை விவித ரசத்தோடே அமைவது
அதனதன் பிஜா சக்தி யாலேயாய் , ஜீவனுடைய புண்யபுண்ய பலத்துக்குச் சேர நடக்கிற சுக துக்கானுபவம்
அவரவர் கர்மமானுகுணமாக வந்தது அன்றி பிரஹ்மம் காரணம் அல்லவே.
ஆகையால் சாங்கியன் சொல்லுகிற தோஷங்கள் வைதிகமதத்துக்கு கிடையாது என்பதே சமாதானம்.
நாம் சொல்லுகிற புண்யாபுண்யங்கள், அசேதன வஸ்துவாகையாலே, அதுவும் பிரகிருதி காரியம் என்று தங்களுக்கு
சாதகமா உள்ளதே ? என்று சாங்கியன் மேலும் ஆக்ஷேபிக்க அடுத்த சூத்ரம் அத்தை நிவர்த்திப்பிக்கிறது.
————————-
சூத். 2-2-3 –வ்யதிரேகா அனவஸ்தி , தேஸ்சா அனபேக்ஷத்வாத் ::
அநபேக்ஷத்வாத் – ஒரு ஸர்வ சேதனனால் அதிஷ்டிக்கப் படுமதை ஏற்க வில்லையானால்
வ்யதிரேகா – ஸ்ருஷ்டியிலும் வேறுபட்டதான பிரளயத்தில்
அநவஸ்திதே : ச – நில்லாமல் ஸ்ருஷ்டியே நடவா நிற்கும்.
ஆக ஸ்வதந்த்ர பிரகிருதி ஜகத் காரணமாக முடியாது.
அதாவது –
பிராஞனாக , ஸத்ய ஸங்கல்பனாய் இருக்கிறவன் தான் ஆதி ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான். அதில் வைஷமயத்துக்குக் காரணம்
அவ்வோ ஜீவாத்மாக்களுடைய புண்ய, பாப ரூபமான கர்மா காரணம் என்று சித்தாந்தி சொன்ன விடத்து தனக்கேற இடம் கிடைத்தாப் போல் ;
புண்ய பாப – சுக, துக்க ஜகத்து உண்டு. ஜீவாத்மா உண்டு . இத்தனையே போதும் சம்சாரம் நடக்க. பரமாத்மா ஏதுக்கு? என்று வினவ
புண்ய பாப கர்ம பிரவாகத்தையும் ஜீவனையும் ஸம்பந்தப் படுத்த வேண்டி வருவதே காரணம் என்ன
அதற்கு சாங்கியன் – ஜீவாத்மா ஜ்ஞான ஸ்வரூபன். அவனுடைய தர்மம் ஜ்ஞாத்ருத்வ, கர்த்ருத்வ, போக்த்ருத்வம் என்று
நீங்கள் சொல்வதைக் கொண்டு அவன் தன்னாலே சம்பந்தத்தைப் பண்ணிக் கொண்டு போகிறான். ஈஸ்வரன் வேண்டுமோ ?
க்ருதம் ஈஸ்வரேண அதிஷ்டாதா ? – அதாவது கர்மங்களுக்கு ஏற்ப பயன் அளிக்கப் படுகிறது என்றால் பரமாத்மா எதற்கு?
ஜீவாத்மா ஸ்வாதந்த்ரியத்தால் என்ன பயன்? இந்த தோஷங்கள் வாராமைக்கு வேண்டுமானால்,
ஸேஸ்வர சாங்கியன் போல நீங்களும் பரமாத்மாவை சாக்ஷி மாத்ரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதாக
குதர்க்கமாக பேசினான் நிரீஸ்வர சாங்கியன் .
இது எப்படி இருக்கிறது என்றால்
போஜ ராஜன் பாக சாலையில் உமி நீக்கிய அரிசியும், முழு பயறும் சேர்த்து பொங்கல் செய்வது வழக்கமாய் இருக்க,
ஒருநாள் , அரிசியும் பயத்தம் பருப்பும் சேர்த்து பொங்கல் சமைத்திருந்தார்கள். ராஜா இது என்ன வழக்கம் போல் இல்லாமல்
இன்று தொட்டு நீக்கிய பயத்தம் பருப்பு சேர்த்து இருக்கிறீர்கள் என்ன காளிதாசன் அதற்கு அரிசிக்கு உமி நீக்கினார்ப்போல் ,
பயறுக்கும் தொட்டு விலக்கினார்கள் போலும் என்பதை
அந்த வல்லப ஸம்யோகே ஜாதா விகத கஞ்சுகா என்று பாட்டு படித்தான். இதன் பொருள்
நாட்டியக்காரி தான் நடனம் மேடையில் ஆட, அதை அந்தகன் ஒருவன் அமரிக்கையாய் அமர்ந்து வீக்ஷணம் பண்ணுமா போலே
என்று சூசகமாக கூறினான்.
அந்த நாட்டியக்காரி போலேயோ ஜீவாத்மா? அந்தகன் போலே சாக்ஷி மாத்ரமோ பரமாத்மா? அல்ல கண்டீர்.
இந்த பார பக்ஷ சிருஷ்டியுமே – அங்கா – அங்கி பாவத்தாலே
தேவ ஜாதி ஸத்வ உத்கடத்தாலேயாய் ராஜஸ, தாமஸம் உதாசீனமாய் – சுகித்தும் ;
மனுஷ்ய ஜாதி ரஜஸ் உத்கடத்தாலேயாய் ஸத்வ, தாமஸம் உதாசீனமாய் – துக்கித்தும் ;
திர்யக் ஸ்தாவர ஜாதி தமஸ் உத்கடத்தாலேயாய் ஸத்வ , ரஜஸ் உதாசீனமாய் – மோஹித்தும் கிடக்கும்படியான ஸ்ருஷ்டி சம்பவிக்கிறது.
எது போலே என்றால், பஞ்சிகரண த்ரிவிருத்கரணம் போலே இதுவும் எனக் கொள்வது.
எப்படி பூ தத்துவத்தில் 1/2 சதம் பிரகிருதி தத்வம் அங்கியாய்; மற்ற தேஜஸ், அப்பு, வாயுர் ஆகாசம் 1/8 + 1/8 + 1/8 + 1/8 சதம்
அங்கமாய் கலந்து உண்டாகிறதோ – அதேபோல இந்த ஸத்வம் , ரஜஸ். தமஸ் மூன்றில் ஒன்று அங்கியாய் மற்ற இரண்டும் அங்கமாய்
இருந்து விபுதா ஸ்ருஷ்டி உண்டாகிறது
அப்படி உண்டான அவ்வோ ஜீவாத்மாவினுடைய பாப புண்ய தாரத்ம்யத்தைக் வைத்து ,
பகவந் நிக்ரகஹ-அனுக்ரகஹ ரூபமாக வருவதே யாகும் . இப்படி ஒரு பரம சேதனானவன் க்ஷேத்ரஜ்ஞனுடைய
கர்ம ஸாபேஷை கொண்டு சம்பந்தத்தை செய்ய வேண்டி இருக்க அது தன்னாலே நடக்கும் என்று எப்படிச் சொல்வது என்ன ,
ஒளஷத சேவையை உதாரணம் காட்டி கால தேசத்தை அனுசரித்து நடக்கும் என்கிறான்.
தேஸகால வியவஸ்தத்வாத் :
வியாதிக்கு மருந்து கொடுக்கும் போது தேச கால நியமம் உண்டு. ஏதோ ஒரு மருந்து, ஏதோ ஒரு காலத்தில் கொடுப்பது என்பது இல்லை.
தேச காலம் மருத்துக்கு எப்படி வியவஸ்திதமாக உள்ளதோ, அதுபோல பிரக்ருதி இந்த புண்ய பாபாபத்தை ஸம்ஸ்கிரதமாக்க பலனை அளிக்கும்.
முக்கிய பிராணன் பஞ்ச விருத்தி பிராணனாக வர்த்திக்கும் போது கபவாத பித்தம் ஏற்ற தாழ்வுக்குச் சேர
ஒளஷத சேவை கால பிரமாணத்தை இட்டு 3 நாள் 3 வேளை அல்லது 5 நாள் 5 வேளை என்பதான நியமங்கள்
ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. இது கால வியவஸ்தா.
தேச வியவஸ்தா என்பது சீதள தேசம், உஷ்ண தேசம் என்பதிலான பத்தியா, அபத்யா விவஸ்தை யாகும்–
ஒளஷதத்துக்கு அனுபானமாக தேனில் குழைத்துச் சாப்பிடவும். க்ஷீர சேவை பண்ணவும். வெந்நீர் எடுத்துக் கொள்ளவும் போன்ற
அனுபான நியமங்களும் உண்பதற்கு முன், உண்பதற்கு பின் , வெறும் வயிற்றில் என்பதான நியமங்களும் ஒளஷத சேவைக்கு உண்டு.
இப்படி புண்ய பாபா சம்பந்தம் புருஷனுக்கு பிரக்ருதி தன்னாலே நடத்தும் என்று சாங்கியன் சொல்ல ,
அதற்கு சித்தாந்தி
உனக்கு புண்ய பாப ஸ்வரூபமே இன்னதென்று தெரியவில்லை. அது ஸாஸ்த்ரைக அதிகம்யம் –
அபௌருஷேயமான சாஸ்திரத்தை இட்டே அறியவேண்டுமவை.. மற்றவை எல்லாம் கிருதகிருத்யம்.
வேதம் பூர்வ காண்டத்தில் சொல்லப்பட்ட பகவன் முகோல்லாஸகர ஆராத்ய ரூபமான கர்மங்கள் தான் புண்யம்.
தத் வியதிரிக்த, தந் நிக்ரஹ பாகியான நிஷித்த காரியம் பாபம் . அவை கர்மத்திலோ, பிரக்ருதியிலோ கிடையாது.
ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுடைய நினைவில் இருக்குமவை.. இதை எல்லாம் கொண்டு பலாபலன்களை அளிப்பவன் பரமாத்மாவே .
இதை நாமாக சொல்லவில்லை. திரமிடாசார்யர் சொன்னதும்; ஸ்ருதியையை அனுவர்த்தித்து பகவானும் சொன்னவையே.
அதைவிடுத்து பலபிரதத்வம் நேரே கர்மத்திடமோ, அபூர்வத்திடமோ உள்ளது என்பது அதிவாதமாகும்.
வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேஸவாத் பரம்.
தேஹேந்த்ரியமும் சாஸ்திர பிரதானமும் பண்ணி பிரதம பிரவிருத்தியில் அனுமதி பிரதானம் பண்ணி, அநுமந்தாவாக இருந்து ,
தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புண்ய பாப கர்மங்களை சேதனர்கள் இயற்ற – பலமத் உபபத்தேஹே என்றபடி – தர்மார்த்த மோக்ஷ வர்ததே.
ஆக அவன்தான் புண்யபாப ஸ்வரூபத்தை நிர்த்தாரணம் பண்ணி பலபிரதாவாகவும் இருக்கிறான்.
ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொருவிதமாக, பாபம் செய்தால் தண்டிப்பதும், உதாசீனப் படுத்துவதுமான அவனை
தயை இல்லாதவன் என்று காட்டாதோ என்றால்
தகாதவர்கள் குறித்துக் காட்டும் தயை குணமாகாது. மாறாக , விரோதிகளை நிரசிப்பது குற்றமும் ஆகாது.
இதற்கு பர ஹிம்சை அஸஹிஷ்ணுத்வம் காரணம். பசு பாலகன் கோல் வைத்து ஆக்களை ரக்ஷ்ணம் பண்ணுவதுபோல்,
பர துக்க துக்கித்வனாய், கிஞ்சித் அத்துவேஷ ஆபிமுக்யம் பிறந்து தனக்கேற இடம் கிடைத்தவாறே,
யாதிருச்சிக, ஆனுஷாங்கிக பிராசங்கிக ஸுக்ருதங்களை ஒன்று பத்தாகிப் போந்து
தேஷாம் ஏவாநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞாநஜம் தம:
நாஸயாமி ஆத்ம பாவஸ்தோ ஜ்ஞான தீபேந பாஸ்வதா – கீதை 10-11.
என்று சேதன உஜ்ஜீவனார்த்தமாக ஸதா உத்தியோகிப்பவனை நிர்க்ருணன் , பக்ஷபாதி என்று சொல்வது பொருந்தாதது மட்டும் அல்லாமல்,
ஈஸ்வர அநதிஷ்டித பிரதானம் ஜகத் காரணம் என்பதும் நிராஸ்யம்.
—————————
தத்வம் ஏகோ மஹாயோகி விபும் ஹரி நாராயண பிரபு :
சதுர்முக பிரம்மா ரஜோகுண பிரசுரனாய், ருத்ரன் தமோ குண பிரசுரனாய், ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே
ஸத்வமே தலை எடுத்தவனாய் இருக்கிற தத்வம்.
சூத். 2-2-4 :: அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத் ::
த்ருணாதிவத் ச – பசுவானது புல்லைத் தின்று பால் சுரப்பது போல , புருஷனுடைய ஸாநித்யம் இருந்தால் போதும்
பிரகிருதி தன்னாலேயே எல்லாம் பண்ணிக் கொண்டு போகும் என்று சொல்வது
ந – சேராது.
அந்யத்ர அபாவாத் – காளை மாடும் அதே புல்லை உண்டாலும் பால் கறப்பதில்லை.
காரணம் இங்கு சேதநாதிஷ்டானம் இல்லையாய்க் கொண்டு.
அதாவது
பசுமாட்டுக்கு சைத்தன்யம் இருந்தாலும் அது இந்த நிர்தர்ம, சின்மாத்ரா புருஷனைப் போல சாக்ஷி அளவே.
பசுமாட்டின் வயிற்றில் சென்று புல்லானது தன்னாலேயே பாலாய் பரிணமிக்கிறது. அதுபோல பிரக்ருதியும் தன்னாலே ஜகத்தாக பரிணமிக்கும் .
ந -நஹி தது உபபத்யதே . நீங்கள் சொல்வது பொருந்தாது.
காரணம் ஸர்வத்ர ந சித்யதே. காளைமாடு எருதுகள் விஷயத்தில் இப்படி நடப்பதில்லை யாதலால்.
சேதன சாந்நித்யம் மாத்திரம் இருந்தால் போதும் என்றால் காளை மாடும் பால் கொடுக்க வேண்டுமே? அப்படி நடப்பதில்லை.
அந்யத்ர ஆபாவாத் -அல்லது புல்லு, புண்ணாக்கு, கழுநீர் தண்ணி இவை பசுவின் வயிற்றில் தன்னால்
பாலாக பரிணமிக்கின்றன என்றால், அவை மூன்றும் கலந்து ஓரிடத்தில் வைத்தாலும் பாலாக வேண்டும். அப்படியும் நடப்பதில்லை.
ஆகையால் பசு சாப்பிட்டால் தான் பாலாகும் என்பது பகவத் சங்கல்ப ஸ்ருஷ்டி முகத்தாலேயாதல் காண் என்பது சித்தாந்தம்.
———————
சூத். 2-2-5 :: புருஷாஸ்மவதி இதி சேத் தாதாபி ::
புருஷாஸ்மவதி இதி சேத் –
இன்னும் சில உதாரணம் கொண்டு கீழே சொன்ன விஷயத்தையே வேறுவிதமாக வலியுறுத்தப் பார்க்கிறான்.
எப்படி அந்தையான பெண்ணின் தோளில் முடவனான புருஷன் இருந்து செலுத்துவனோ அது போலே
புருஷ சன்னிதானம் அசேதனம் பிரவர்த்ததே என்கிறான்.
இன்னும் அயக்காந்தம் போலே என்று காந்தமணியின் சந்நிதியில் இரும்பு ஆகர்ஷணம் ஆவது போல் புருஷனின் சந்நிதியில் பிரகிருதி செல்படலாம்.
ததா அபி – இப் பூர்வ பக்ஷமும் தவறு.
புருஷ சந்நிதியை ஒப்புக் கொண்டாலும், குருடனுக்கு நொண்டி காட்டும் வழியைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவு இருக்க வேண்டும்.
குருடன் ஸ்தானத்தில் இருக்கும் பிரக்ருதியோ அசேதனம். புருஷனும் நிர்தர்மகன் என்றபோது நொண்டியைப் போல் நியமிக்கக் கூடுமோ ?
அயப்பிண்ட உதாஹரணத்திலும் சமீபத்தில் வந்தால் தான் ஆகர்ஷ்ணமாகும்.
கர்த்ருத்வமில்லாத புருஷனுக்கு சமீபத்தில் வருத்தலாகிற கிரியைகள் சொல்வது முடியாதே? என்ன
அதற்கு அவர்கள் காந்தகல் போல் அருகில் வருதல் என்பது இல்லை ,
காரணம் புருஷன் எப்போதுமே பிரகிருதியின் அருகிலேயே இருக்கிறான் ;
பிரகிருதி விபு என்றும், புருஷன் ஸர்வகதன் என்று சொன்னதாலே. அதுவே காரணமாக பரிமாற்றம் நிகழ
ஸ்ருஷ்டி -பிரளயம் நித்தியமாய் முடியும் .
———————
சூத். 2-2-6 ::அங்கித்தவ அநுபபத்தேஸ் ச —
கீழே சொன்ன அங்கா – அங்கி பாவத்தை ஏற்காததால்
அதாவது முக்குணங்களில் ஒன்றின் மிகுதியால் வரும் அங்கி பாவம் ஸ்வதந்திர பிரக்ருதிக்கு பொருந்தாதாகையால்,
ஸர்க – பிரதி ஸர்கங்கள் ஏற்பட்ட வழியில்லை.
முக்குணங்கள் ஸம தோலனத்தில் இருந்தால் பிரளயம். அப்படி ஸமநிலையில் இருக்கும் முக்குணங்களில்
ஒன்று கூடுதலாகி அங்கியாய் மற்ற இரண்டும் குறைந்து அங்கமாக பிரஸக்தி – யாதொரு காரணமும் ஒப்புக் கொள்ளப்படாத போது,
ஸ்ருஷ்டி அசம்பவம்.
இப் புடைகளால், பிராஜ்ஞா அநதஷிடித ப்ரக்ருதி , ஜகத் காரணமாவே மாட்டாது.
———————-
சூத். 2-2-7 :: அந்யதா அநுமிதௌ ச ஜ்ஞான ஸக்தி வியோகாத் ::
அந்யதா அநுமிதௌ ச – கீழே சொன்ன தோஷாஸ்பதமான பிரதானத்தை விலக்கி, வேறுவிதமாக அனுமானம் செய்தாலும்
ஜ்ஞான ஸக்தி வியோகாத் – அறிவுடையதான சக்தி இல்லையாகில், அந்த பிரதானமும் ஜகத் காரணமாக முடியாது.
—————-
சூத். 2-2-8 :: அப்யுபகமே அபி அர்த்தா பாவாத் ::
போகட்டும். இப்படிப்பட்ட தோஷங்கள் எல்லாம் விட்டு அனுமானத்தாலே வேறு ஒரு பிரதானத்தை சித்தி பண்ணுகிறேன் என்றாலும்,
அந்த பிரதானத்தாலே ஒரு புருஷார்த்தமும் கிடையாது. புருஷனுக்கு பந்த மோக்ஷங்களை உண்டாக வல்லது அல்லவே இந்த பிரதானம்
காரணம் நீங்கள் சொல்லுகிற சைதன்ய மாத்ர புருஷன் நிஷ்கிரியன். நிர்விகாரன். நிர்மலன். இத்யாதி பிரகாரங்களாலே
முக்த ஸ்வரூபனான படியாலே, போக மோக்ஷங்கள் இரண்டுமே புருஷனுக்கு ஒட்டாது.
இப்படி பயன் அற்ற பிரதானத்தை அனுமானத்தால் சாதிக்க தக்கது அன்று.
—————–
சூத். 2-2-9 :: விப்பிரதிஷேதாச்ச அஸமஞ்ஜஸம் ::
சாங்கியர் முன்னுக்குப் பின் முரணாக பேசுகையால் அவர்கள் மதத்தில் பொருந்தம்மையே மிஞ்சுகிறது.
இதை மேலும் விளக்கமாக பார்ப்போம்.
1. பந்த மோக்ஷ காரக பிரகிருதி – புருஷன் நித்ய யோகத்தால், ஒன்று ஸ்ருஷ்டியே நடக்க வேண்டும்
அல்லது மோக்ஷமே நடக்க வேண்டும்,
வத்ச விவிருத்த நிமித்தம் க்ஷீரஸ்ய யதா பிரவ்ருத்தம் அஜ்ஞஸ்ய
புருஷ விமோக்த நிமித்தம் ததா பிரவ்ருத்தி பிரதானஸ்ய
தன்னுடைய கன்றுக் குட்டியை நினைத்த போதே பசுவுக்கு பால் தன்னாலேயே சரக்குமா போலே
இந்த ஜீவாத்மாவுடைய பந்தத்தையும், மோக்ஷத்தையும் பிரதானம் கொடுக்கிறது.
கர்த்ருத்வம் , திருஷ்டுத்வம், சாக்ஷித்வம் எல்லாம் சைதன்யம் என்கிற தர்மத்தை –
தர்ம பூத ஜ்ஞானத்தை – ஒத்துக் கொண்டால் மட்டுமே பொருத்தும். கேவல ஜ்ஞான ஸ்வரூபன் என்றால் அவனுக்கு
கிரியை, பார்த்தல் , சாக்ஷியாகல் எதுவும் முடியாது. அந்த பிரக்ருதியினுடைய தரிசனமே ஆவதில்லை.
அல்லது பிரதானம் தானே பண்ணிக் கொண்டு போகிறது என்றால் அதற்கு சைதன்யமே கிடையாது என்பதால் இதுவும் பொருந்தாது.
பந்தனம் சேதனனுக்கு உண்டானால் தான் அல்லவோ கைவல்ய மோக்ஷத்துக்கு இடமுண்டு?
மற்று என்ன புருஷார்த்தம் விளையும் அது போக மோக்ஷ சூன்யமாக இருந்த போது?.
கிராமத்தில் பொழுது புலர்ந்தால், கிருஷிகன் உழுதல் தொழிலை செய்யப் புறப்படுகிறான்.
அங்கு உள்ள சந்நியாசியோ ஏதாவது செயலில் ஈடுபடுகிறோனோ? கேவல ஜ்ஞான தியானாதிகளில் மட்டும் இருப்பான் அல்லவா?
அதுபோல கர்த்ருத்வம் பிரக்ருதிக்குத்தான். புருஷன் உதாசீனனாகத்தான் இருக்கிறான் என்று சொன்னால்
அகர்மஸ்ய கைவல்யஸ்ய ஸ்வரூபம் ந ஸம்பவந்தி .
ஜபா-குஸும ஸாமீப்யத்தாலே , குஸுமம் தான் ஸ்படிகத்தை சிகப்பாக காட்டுகிறேன் என்கிற ஜ்ஞானமோ,
ஸ்படிகம் தான் சிகப்பாக காண்கிறேன் என்கிற ஜ்ஞானமோ – அஸத் – அஸத் கல்பமான இரண்டுக்கும் இருப்பதில்லை,
ஜ்ஞாத்ருவம் உடைய இன்னொரு சேதனனுக் கன்றோ அது தோற்றுகிறது?
அத்யாசமோ, பிரமையா அது புத்தி விகாரமானபடியாலே – நிர்விசேஷ புருஷனுக்கு அவை ஒத்து வராது.
இல்லை – பத்யதே முச்யதே நானாஸ்ச பிரகிருதி : என்று பிரகிருத்திக்கே பத்த-மோக்ஷத்தைச் சொல்லுவையோ ?
போக-மோக்ஷ சூன்யத்வம் பிரக்ருதிஸ்ச .என்பதாக அது சேதன தர்மமே யன்றோ?
அத்யாஸோ நாம –
ஒன்றின் தருமம் இன்னொன்றில் ஏறிக் காண்பதாகும். சேதனன் தன்னிடம் இல்லாத ஒரு தர்மத்தை
மற்ற ஒன்றினிடமிருந்து ஆரோபித்தலாகிற அன்ய தர்ம அநுசந்தானம் – அத்யாஸம். அது சேதனுக்கேயான தன்மை. விகாரமும்கூட.
புருஷன் நிர்விசேஷம். நிர்தர்மகன் என்று சொன்னதால், அத்யாஸம் அவனுக்கு ஏற்பட இடமில்லை.
சந்நிதியாலே அது ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அது நித்தியமாய்,
பத்யதே – முச்யதே என்கிற உபகாரம் பிரதானம் பண்ணிற்று என்று எப்படி சொல்லக் கூடும்?
ஒரு தடாகம். அதில் நித்யம் ஒரு யுவதி தீர்த்தமாடிப் போக, ஒரு புருஷன் மறைவில் இருந்து அவளை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
ஒருநாள் இந்த விஷயம் அவளுக்கு தெரிந்துபோக, அவள் லஜ்ஜித்து, அந்த தடாகத்துக்கு வருவதை நிறுத்தி விடுகிறாள்.
அல்லது புருஷனுக்கு சபலம் தீர்ந்துவிட்டாலும் அவ்விருவருக்குமான திருஷ்டாமயத்வாத் சம்பந்தம் விடுபட்டுப் போகிறது.
நாடக மேடையில் நர்த்தகி நாட்டியம் பார்க்க வந்தவன் ஆட்டம் முடிந்து பிரிந்து செல்லலாம்.
அல்லது இவன் எத்தனை நேரம்தான் பார்ப்பது என்று விலக்கிப் போகலாம்.
அதுபோல பிரகிருதி-புருஷ விவேக தத்வ ஜ்ஞானம் வந்தது என்றால் அதுவே மோக்ஷம் என்று
இப்படி வேறு வேறு விதமாக கூறுவீர்களானாலும்
நித்ய முக்தனாய், நிர்விகாரனாய் இருக்கிற புருஷன் பார்க்கிறான் என்பது சேராது.
காரணம் புருஷனுக்கு சைதன்யம் இருந்தாலும், சைதன்ய காரியம் எதுவும் கிடையாது என்பதை
அந்த புருஷ தர்மமாக சொல்லியிருக்கிறபடியாலே. அத்யாஸம் ஏற்படுகிறது என்பதும் கிடையாது.
இல்லை ஸாந்நித்யத்தையே தர்சனம் என்று கொள்ள வேண்டும் என்கிறாயா?
தத்வ ஜ்ஞானம் இல்லாது பார்த்தபோது பத்தம் உண்டாயிற்று – தத்வ ஜ்ஞானம் உண்டான பின்பு
பார்த்த போது மோக்ஷம் உண்டாயித்து என்கிறாயா? எப்படிப் பார்த்தாலும் பந்தமே மோக்ஷமாய் -மோக்ஷமே பந்தமாய் முடியும்.
அல்லது பிரகிருதி தன்னைத் தான் பார்க்கிறது என்பதும் முடியாது, அது அசேதனமாக இருக்கிறபடியால்.
இல்லை. அயதார்த்த தர்சனம் பந்த ஹேது. யதார்த்த தர்சனம் மோக்ஷ ஹேது என்பாயே ஆனால்
நீதான் பார்க்கிறது என்பதையே ஒத்துக் கொள்ள வில்லையே. பிரகிருதி பார்க்க முடியாது.
புருஷன் நிர்தர்மகன் ஆனபடியால் பார்க்கப் போகாது – உபய பிரசங்காது அஸம்பவமே அன்றோ?
எதுவும் வேண்டாம். பிரகிருதி ஸ்வரூபம் பந்தாத்மகம் . புருஷ ஸ்வரூபம் மோக்ஷத்வம். என்பதாலேயே சித்தம் என்றால்
பந்தமோ மோக்ஷமோ நித்தியமாய் ஸர்க்க-பிரளயம் அஸம்பவம்.
இப்படி பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் சாங்கிய சித்தாந்தம் அஸமஞ்ஜசம் .
இது இவர்களுக்கு மட்டும் அல்ல. யாரெல்லாம் இந்த சேதநாசேதனங்கள் எல்லாம் சரீர ஸ்தானத்தில் இருக்கிறது.
இந்த விசேஷாணாம்சமான சரீரத்தில்தான் அவனுடைய சங்கல்பத்தாலே விகாரம் ஏற்படுகிறது ,
விசேஷ்யமான பகவான் நிர் விகாரம்தான் என்பதை ஒழிய வேறு எவ்வகையிலும் சித்தாந்த ஸ்தாபனம் பண்ண முற்பட்டாலும் ,
அவர்களுக்கும் ஆஸாமஞ்ஜசம்தான் தட்டும் .
சாங்கியன் பிரக்ருதி – ஜீவாத்ம சம்பந்தத்தை அத்யாசத்தால் சொன்னான்.
அத்வைதி பரமாத்மாவுக்கே பிரக்ருதி அவித்தை என்றான். அந்த பிரக்ருதியும் பொய்யானது என்றும், பந்தமும் அபாரமார்த்திகம் என்றான்.
ஜ்ஞான ஸ்வரூபமான பிரஹ்மம் அவித்தையான அஜ்ஞானத்துக்கு சாட்சியாக உள்ளது என்பது –
பரிபூர்ண ஜ்ஞானத்தின் பக்கல் அஜ்ஞானம் வருவது என்பது ஒவ்வாது. பிரஹ்ம ஸ்வரூபமே நசிந்து போகும்.
இவையெல்லாம் மஹா பூர்வபக்ஷ-மஹா சித்தாந்தத்தில் அஸமஞ்சஸம் என்று காட்டப்பட்டவையே.
சாங்கியனும், நையாயிக்கனும் ஜீவன்து பிரதி சரீரம் பின்னம் என்று ஜீவ-நாநாத்மத்தை ஒத்துக் கொண்டார்கள்.
பிரஹ்மாஜ்ஞான வாதி அதற்கும் கேடாக ஜீவ – நாநாத்மத்வத்தை ஒத்துக் கொள்ளாதது போக ஏக-சரீர வாதமும் பண்ணி
மஹத்தான தோஷத்தை சூழ்துக் கொண்டார்கள். பிராதிபாசிக சத்யம் , வியாவஹாரிக சத்யம், பாரமார்த்திக சத்யம் என்று
மூன்றைச் சொல்லி மற்றதெல்லாம் அபாரமார்த்திகம் என்று எப்படிப் பேசினாலும்
நிர்விசேஷ பிரஹ்மத்துக்கு சாக்ஷித்வம் கீழே சொன்னது போல் பொருந்தாது.
புருஷன் நிர்விகாரம். நிர்விசேஷம் என்றான் சங்கியான்.
அதையே பரபிரஹ்மத்துக்கு ஆக்கி. சங்கரர். பிரக்ருதியை அவித்தை என்று சொல்லி, உபாதி பொய் -மாயா என்றும் சொன்னார்.
பாஸ்கரனோ உபாதி ஸத்யம் என்று சொல்லி – ஜீவோ நாவைவ பர : – பிரஹ்மமே உபாதியால் ஜீவனாகிறது என்றான்.
இப்படி தத்வத்ரயத்தை மறைத்து இரண்டு தத்வம் அல்லது ஒரே தத்வம் என்று சொல்வதெல்லாம் குத்சித த்ருஷ்டியாகும்.
சாங்க்கியன் தத்துவங்களை பிரகிருதி , புருஷன் என்று 25 ஆக பிரித்தான் .
வியாசரும் ஆழ்வாரும் அத்தை பிராஜ்ஞா அதிஷ்டிதமாக்கி 26 என்றனர்.
கால தத்வமாகவும் சேர அவை 27 ம் ஆகக்கடவது.
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழின்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டும்
மண்ணும் நீரும்எரியும் நல்வாயுவுமமாய்
விண்ணுமாய் விரியம் எம்பிரானையே –நம்மாழ்வார்.
ஷட்விம்சாலம்பிதாம்ஸம் தத்வம் :
உண்மைப் பொருள் ஓர் இருபத்தி நாலொடு
நண்ணரு ஞானத் துயர் ஆவி — யூண்காலம்
ஆய இவை சேர்ந் திருபத்தி ஆறும் நம்
மாயனார் தாம் மேய வீடு.
——- ——————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply