ஸ்ரீ பாஷ்யம் —2-1-8 : உபாஸம்ஹரண தர்சன அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

2-1-8 : உபாஸம்ஹரண தர்சன அதிகரணம் –

சூத்ரம் 2-1-24 : உபஸம்ஹார தர்சநாத் ந
இதி சேத் , ந க்ஷீரவத் ஹி —

ஸது ஏவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் – என்கிற உபநிஷத் வாக்கியம் கொண்டு
சககாரி காரண ஸாமக்ரி – உபஸம்ஹார தர்சனம் – இருந்ததாக தெரியவில்லை–
ஆனால் லோகத்தில், சஹகாரி நிரபேக்ஷயா வஸ்து நிர்மாணம் செய்யப் போகாதால், பிரஹ்மமும் சககாரி காரணம் இன்றி
ஸ்ருஷ்டிக்க முடியாததால், பிரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்பதாக பூர்வ பக்ஷம் –

முதல் தனி வித்தேயோ? முழு முதல் ஆதிக் கெல்லாம் என்று ஆழ்வார் வாக்கு.
முதல் – நிமித்த காரணம்.
தனி – சககாரி காரணம்.
வித்து – உபாதான காரணம் என்பதாக நம்பிள்ளை ஈடு.

ஜ்ஞானம், சக்தி இச்சை இருந்தாலும் நமக்கு ஒரு காரியத்தை செய்ய , குயவனுக்கு தண்ட சக்ரம் போலே ,
நெசவாளிக்கு பாவும் உண்டையும் போலே சஹகாரி காரண அபேக்ஷை உண்டு.
ஆனால் பகவான் சத்ய சங்கல்பம் ஆகையால், அவன் சங்கல்ப மாத்திரத்திலே ஜகத் ஸ்ருஷ்டி வியாபாரத்தை செய்யக் கடவன்.
அவனுக்கு அகில ஹேய பிரத்யநீக தானத்வம் போலே
ஸர்வ கர்த்ருத்வம், ஸர்வவித காரணத்வம் ஆகிய உபய லிங்க விசிஷ்டன் ஆவான்.
ஸஹகாரி உபஸம்ஹார லக்ஷணம் மேல் சொன்ன உபநிஷத் வாக்கியத்தில் இல்லை யாகையால்,
ஜகத்துக்கு பிரஹ்ம காரணம் மறுக்கப் படுகிறது முற்பாதி சூத்திரத்தில்.

இதி சேத் ந, க்ஷீரவத் ஹி –

யஸ் ஸ்ருதேர் உத்தரம் பாகம் – பூர்வ மீமாம்சைக்கு மேற்பட்டதான என்கிற பொருளில் கொள்ளாமல்,
உது + தர = அதைக் காட்டிலும் சிறந்ததான பகுதி – தெளியாத மறை நிலம் என்று ஸம்சய விபர்யயங்கள் கலசின
வேதாந்த வாக்கியங்கள் போல் அல்லாமல் – அர்த்தங்கள் நேரே புலப்படும் படியாக
தெளியச் சொன்ன பெருமை ஆழ்வார் பாடின திராவிட சம்ஹத்தைக்கு உண்டு. அப்படி என்ன ஆழ்வார் தம்முடைய
திருவாய்மொழி கிரந்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால்
1. உபகிரமோ உபஸம்ஹாரௌ – முதலிலும் முடிவிலும் சொல்லப்பட்ட விஷயம்
2. அப்யாஸ – அடுத்தடுத்து சொல்லப்பட்ட விஷயம்
3. அபூர்வதா பலம் – வேறு எந்த கிரந்தங்களிலும் சொல்லப் படாததான பலம் விஷயம்
4. அர்த்தவாதோஸ் ச ஹேது தாத்பர்ய நிர்ணயம் – இன்னார் இப்படிச் செய்ய இன்ன பலத்தைப் பெற்றார் என்கிற
கதா புரஸ்சரமாய் சொல்லப்பட்ட விஷயம் அது அந்த கிரந்த தாத்பர்யம் ஆகும்.
அந்த வகையில் ஆழ்வார் பாடிய திருவாய்மொழிக்கு தாத்பர்யம் என்ன என்றால்

வேதாந்தம் கஸ்ச தியேய: – இன்ன பலம் வேண்டும் என்றால் இன்னாரை தியானம் பண்ண வேண்டும் –
நமக்கு இந்த சம்சாரமாகிற அளறு நீங்கி துக்கம் கழிந்து நிரதிசய ஆனந்தமாகிற மஹதானந்தத்தைப்
பெற என்ன செய்ய வேண்டும் என்றால்
காரணம்து தியேய : – கார்யமான எல்லா வஸ்துக்களையும் விட்டு, மூல காரணமான வஸ்து எதுவோ
அதையே தியானம் பண்ண வேண்டும்.

வேதாந்தத்தில் அபர பிரஹ்ம வித்தை பலவும் உள்ளன.
நாமாதி பிராண பர்யந்தம் எதை வேண்டுமானாலும் உபாசனம் பண்ணலாம். அவைகளுக்கு பலம் வேறு வேறாய்,
உயர்ந்ததான மோக்ஷ பலத்துக்கு
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே என்று யாரிடத்தில் இருந்து இந்த ஜகத்து உண்டாகி, ரக்ஷிக்கப் பட்டு
லயத்தை அடைகிறதோ அந்த பர பிரஹ்மத்தைத் தான் தியானம் பண்ணக் கடவது.
என்பதாக முதல் அத்யாயம் முதல் நான்கு சூத்ரங்களால் காட்டப் பட்டன.

அந்த காரணம் எத்தனை விதமாக உள்ளன என்றால்
உபாதான காரணம்
நிமித்த காரணம்
ஸககாரி காரணம்
என்பதாக த்ரிவித காரணமாகவும் அந்த பிரஹ்மமே இருக்கின்றது என்று சொல்ல

இந்த இந்த ஸ்ருதி வாக்கியங்கள் – பிரக்ருதியாய் இருக்கலாமே; ஜீவாத்மாவாக இருக்கலாமே அல்லது
ஒரு விசேஷமான வியக்தி ஜீவாத்மாவாக இருக்கலாமே – அதற்கு பரப்ரஹ்மமே என்று எப்படி அர்த்தம் சொல்வது?
என்று விப்ரதிபத்தி பண்ண – முதல் அத்யாயத்தில் மற்ற பாதங்களில்
பிரஹ்மமே காரணம்
பிரஹ்மம் ஒன்றே காரணம்
பிரஹ்மத்தைத் தவிர்ந்த மற்ற எதுவும் காரணம் ஆக முடியாது என்பதாக பிரஹ்மத்துக்கு மட்டுமே
ஜகத் காரணத்வம் பொருந்தும் என்பதாக சமன்வயப் படுத்தி காட்டினார் வியாசர்.

2வது அத்யாயமான அவிரோதாத்யாயத்தில்
பிரஹ்ம ஜகத் காரணத்வத்துக்கு எத்தனை விதமான விரோதம் வந்தாலும் அதை அழித்து கழித்துக் காட்டுகிறார் இதில்.
ஸ்மிருதி பாதம், தர்க பாதம் இவை இரண்டும் சேர ஒரு பேடிகா விபாகம்.
3-4வது பாதங்களான, வியத்பிராண பாதங்கள் இரண்டும் சேர்த்து, ஒரு பேடிகா விபாகம்.
முதல் ஸ்மிருதி பாதத்தில் 10 அதிகரணங்கள் .
அதில் இப்போது 8வது அதிகரணமாகிற உபஸம்ஹாரா தர்சநாதிகாரணம்

————–

சூத்ரம் : 2-1-24 :: உபஸம்ஹார தர்ஸநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்திஹி ::

ரிஷிம் ஜூஷாமஹே என்கிற ஸ்லோகத்தில் சொன்னபடி பகவான்தான் முதல் காரணம்.
அவனே ஸர்வ காரணம். நிஷ்காரணமும் அவனே.
ஸ்வேதர ஸமஸ்த, பிராட்டி உட்பட பிபீலிகா பர்யந்தம், அசேதனமுட்பட்ட அனைத்துக்கும் அவன் ஒருத்தனே தான் காரணம்.
அவனின் வேறுபட்ட காரணம் எதுவும் கிடையாது. என்? அவனும் காரணம். இன்னொன்றும் காரணம் என்னலாகாதோ?
கிடையவே கிடையாது. என்? இவன் ஒருவிதமான காரணம். மற்றது மற்ற விதமான காரணமாகக் கூடாதோ?
பானைக்கு உபாதான காரணம் களிமண். நிமித்த காரணம் குயவன்.
அதுபோல் ஜகத்துக்கு ஸர்வ சக்தி, ஸர்வஜ்ஞனான பகவான் நிமித்த காரணம்
பிரகிருதி உபாதானகாரணம் என்று ஆக்கக் கூடாது? என்றால் இல்லவே இல்லை.

உபஸம்ஹாரம் என்றால்
எல்லாவற்றையும் தன் அருகில் சேர்த்துக் கொள்ளுதல் .
குயவனுக்கு தண்ட சக்ரம் போலே, பிரஹ்மத்துக்கு சககாரி தானே என்பது எங்கனே ? என்னில்
கேவல பிரஹ்மம் ஜகத் காரணம் ஆக முடியாது. ஏதோ ஒரு பொருளோடு சேர்ந்து இருந்தால் தான் ஜகத் காரணமாக்க முடியும்.
அத்தை மாயா விசிஷ்ட பிரஹ்மம் என்றார் சங்கரர். அந்த மாயைதான் அவித்தை என்றார் அவர்.
பர்த்திரு பிரபஞ்சரின் ஸ்வரூப பரிணாம வாதத்தை தள்ளி
அந்த உபாதி சத்யம் . அந்த சத்ய உபாதி விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் காரணம் என்றான் பாஸ்கரன்.
அவன் சொன்னதில் உள்ள ஸ்ருதி விபிரதிபத்தி கொண்டு, நாம் சொல்வது
தேதனாசேதன விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதாக உபஸம்ஹாரம் பண்ணினோம்.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரண அவஸ்தை என்றும் ,
ஸ்தூல சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரிய அவஸ்தை என்றும் அறுதியிடலாவது.
உபாதான நிமித்த காரணத்தை சரீராத்மா பாவத்தை – கடக ஸ்ருதிகள் துணை கொண்டு – நிர்வகித்தாலும்,
சககாரி காரணமும் அவனே என்பது எப்படி சாத்தியம் ?

உலகத்தில் தண்ட சக்கரம் இல்லாமல் குயவன் பானை செய்வதோ
நெசவாளி பாவும், உண்டையும் இல்லாமல் துணி நெய்வதோ இல்லை. அங்கனாகில்,
பிரஹ்மத்துக்கு ஜ்ஞான சக்திகளால் நிமித்த காரணத்வமும், சரீராத்மா பாவத்தால் உபாதான காரணத்வமும் சித்தித்தாலும்,
ஏகோஹவை நாராயண ஆஸீத் – என்று வேத வாக்கியம் இருக்கிறபடியால்,
சககாரி இல்லாமல் ஜகத் ஸ்ருஷ்டி முடியாது என்பதாக லௌகீகத்தைக் காட்டி
பிரஹ்மம் ஜகத் காரணம் ஆக முடியாது என்பதாக முதல் அத்தியாயத்தில் சொன்ன
பிரஹ்ம காரண வாதத்தை ஸாங்க்யனும் மறுக்கிறான்.
வைசேஷிகனும் மறுக்கிறான்.
நையாயிகனும் மறுக்கிறான்.

ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத், ஏகமேவ அதுவிதீயம் பிரஹ்ம – என்ற இதில் 2வது வஸ்துவே இல்லை என்றாகில் ,
உபஸம்ஹார வஸ்து எதுவாக சககாரி காரணம் பிரஹ்மமே என்று சொல்வது என்பது ஆக்ஷேபம்.

தானோர் முதலாய் தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய (வளவேழ் உலகு பதிகம்) என்ற விடத்து
தானோர் வித்து
முதல் வித்து
தனி வித்து என்று
தருவித்துக் கொண்டு பார்த்தால்
வித்து = பீஜம் = ஹேது = த்ரிவித காரணமும் பகவானே என்கிறார்.
திருவாய்மொழி பிரபந்தம் முடிக்கும் போதும் – உபகிரம உபசம்ஹார விதிப்படி – முனியே நான்முகனே பதிகத்தில்
முதல் தனி வித்தேயோ முழுமூஉலகாதிக் கெல்லாம் என்று த்ரிவித பிரஹ்ம ஜகத் காரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதி சேத் ந, க்ஷீரவத் ஹி –
லௌகீகத்தை வைத்து கேள்வி கேட்டவனுக்கு லௌகீகத்வத்தை வைத்தே பதில் சொல்கிறார் வியாசர்.
ய ஏவ லௌகிகா : த ஏவ வைதிகா : என்பதாக
பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக சாஸ்திரம் இருக்க முடியாது. அப்படி இருந்தால் சாஸ்திரத்தைக் கொண்டு
பரிஹரிக்க வேண்டியது என்பதாக சித்தாந்தம்.

அத்வைதிகளுக்கு இது பாதிக்காது. பல-துர்பல நியாயத்தைப் பார்த்து, சத்தியமான ஜகத்தையும், மாயை என்று தள்ளி விடுவர்.
பேதத்தை சொல்லும் பிரயக்ஷத்தை உதறி, அபேதத்தை சொல்லும் சாஸ்திரம் தான் பிரதானம் என்பர் .

சககாரி நிரபேக்ஷமாக லோகத்தில் காரணம் காரியத்தை உண்டாக்கும் , எப்படி பால் தயராக பரிணமிக்குமோ
அதுபோல என்கிறார் வியாசர்.
பிரஹ்மமும் சங்கல்பத்தாலேயே ஜகத் வியாபாரம் செய்வனாகில், சஹகாரி அபேக்ஷை அவனுக்கு இல்லை .
பால் உறையவிட தயிர் வேண்டியுள்ளதே என்றால், அது சுவைக்காகவே ஒழிய,
பால் தயிராக தோய ஆதஞ்சன (உறை) அபேக்ஷை இல்லை.
தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதும் சககாரி நிரபேக்ஷமாகவன்றோ என்று வேறு ஒரு உதாரணத்தையும் காட்டி
ஆஷேபத்தை பரிகரிக்கிறார் ஸ்வாமி ராமானுஜர்.

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் — அம்புவியோர்
இந்த தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்த செயலறிக்கைக் கா. — உபதேச.38–என்பதாக பொய்யிலாத மணவாள மாமுனி திருவாக்கு :

நாட்டி வைத்தார் – கரிஷ்யே என்கிற அர்த்தத்தில் தானே பிரவர்தித்தார் என்கிற யோசனையோடு
நாட்டு வித்தார் – நிஜந்தத்தில் காரயிஷ்யே என்கிற அர்த்தத்தில்
தர்சனக்காரர்களைக் கொண்டு செய்வித்தார் என்றும் கொள்ளவுமாம்.
அந்த செயல் என்று சொன்னது எம்பெருமானாருடைய எந்த செயல் பற்றி என்றால்
அதற்கு வேதாந்தவாசியாருடைய எதிராஜ ஸப்ததி ஸ்லோகத்தையே பார்க்க வேண்டும்.

மத்வ பரம்பரையில் வந்த வித்யாரண்யர் என்பவர் ஸ்வாமி தேசிகருடைய சமகாலத்தவர் ஆவார்.
அவர் ஸர்வ தரிசன ஸங்கிரஹம் என்கிற ஒரு கிரந்தத்தை செய்ததாக பார்க்கிறோம்.
அதில் வைதிக தர்சனத்தில் அக்ரகண்யமாக இருக்கிற விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு எந்த ஸ்தானத்தை அளித்தார் என்றால்,
சாருவாக, பௌத்த, ஜைன மத வரிசையில் இத்தை சேர்த்துக் கொள்ளுங்கோள் என்பதாக காட்டியுள்ளார் .
இது குண மாத்சர்யத்தால் – எம்பெருமானாருடைய குணங்களைக் கொண்டு பொறாமையால் –
சொன்ன வார்த்தை என்றே எண்ண வேண்டும்.

பிரஹ்ம சூத்திரத்துக்கு ஏற்பட்ட பாஷ்யங்களில்
அத்யாச பாஷ்யம்
ஸம்பாவத பாஷ்யம்
பிரவாட பாஷ்யம்
என்று வகையறுத்து சொல்லுவர்.

அந்த விதத்தில், சங்கரருக்கு முற்பட இருந்த ஜரதத்வைதியான பர்த்ருபிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாத மதத்தை
சங்கரரே கண்டனம் செய்து வீழ்த்தி – யோகாசார மதத்தை இரவல் வாங்கியவராய் –
நூதன ஜகன் மித்யா வாதத்தை செய்து – இதுதான் வைதிக மதம் என்று பேசினார்.

அந்த அத்யாச பாஷ்யத்தில், இந்த உலகமெல்லாம் அத்தியாசத்தால் தான் உண்டாயிற்று .
அஹம் பிரஹ்மாஸ்மி என்கிற அபேத ஞானம் போய், பேத ஞானம் உண்டாயிற்று.
ஒன்றினுடைய தர்மம் மற்றோன்றில் தோன்றுவதாக சொல்லுவதுதான் அத்தியாசம் என்பது. இந்த அத்தியாசத்தால்தான்
உலகங்கள் எல்லாம் தோற்றுகின்றன என்பதே வேதாந்தத்தின் அர்த்தம் என்பதாக காட்டுகிறோம் என்று
பிரதிஞ்ஞை செய்து தன்னதேயான பாஷ்யத்தைத் தொடங்குகிறார் அவர்.

பிராசீனமான பர்த்ருபிரபஞ்சருடைய சிஷ்ய பரம்பரையில் வந்த பாஸ்கரர் என்பவர் அந்த ஜரதத்வைதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி –
ஏக தத்வ வாதமான சங்கர மதத்தை கண்டிக்கப் போந்தார். அப்படி செய்யப் புகுகையில், ஸ்வாபிப்ராயமாக செய்த
சங்கர பாஷ்ய போக்கை நிவர்த்திப்பிக்க வேண்டி தான் பாஷ்யம் செய்வதாக கூறிக் கொள்கிறார் இவரும்.

பரம் பிரஹ்மாஜ்ஞம் பிரம பரிஹதம் ஸம்சரதி தது – என்பது சங்கர மதம்.
அவித்யை ஆகிற உபாதியால் ஒன்றை பலதாக பிரமிக்கிறது பிரஹ்மம் என்பதான இதில் –
அவர் சொன்னது போல் உபாதி மாயை அன்று . அந்த உபாதி சத்யம் என்று பேசினார் பாஸ்கரர்.

எம்பெருமானார் என்ன செய்தார். இவர்களை எல்லாம் பராமர்ஷித்தாராய், நெல் செய்ய புல் தேயுமாபோலே ,
ஸ்வசித்தாந்தத்தை சொல்லப் போக பரசித்தாந்தம் தன்னடைவே இற்றுப் போகும் என்பதாக ,
டங்க, திரமிட குஹதேவ சித்தாந்தங்களைப் பிராகாசிப்பித்தார் என்பதே இவர் செய்த -”அந்த செயல்” ஆகும்.

கற்றினம் மேக்கப் பெற்றான்
காட்டுவாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பாவிகள் உங்களுக்கு ஏச்சுக்கொலோ ?–என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்தது போல

எம்பெருமானார் தரிசனத்தை பிரச்சன்ன ஜைன நூதன யுக்தி என்பதாக பழிப்பாருக்கு, அத்தால் என்ன?
இதில் உள்ள குணங்களை பாருங்கோள்.
சங்கர,பாஸ்கர பாஷ்யங்களால் டங்க, திரமிட , குஹதேவ நிஜமத (நிஜமதி ) திரஸ்காரம்தான் ஆகி இருந்தது.
சாரதா சோக விநாசகாய நம: என்கிற நாமாவளிக்குச் சேர, இராமானுஜருடைய ஸ்ரீபாஷ்யம் தானே அவர்களுடைய
நிராதங்க பெருமூச்சுக்கு வழிகோலிற்று என்பதாக ஸ்வாமி தேசிகன் யதிராஜ சப்ததியில் சாதிக்கிறார்.

அப்படிப்பட்ட எம்பெருமானார் என்ன சொல்லிக் கொண்டு தன் பாஷ்யத்தை ஆரம்பித்தார் ?
பகவத் போதாயன விருத்தி கிரந்த – தன் மாதாநுசாரேண வியாக்யாஸந்தி என்றல்லவோ பேசினார்.
நிஜத்தில் இவர் டங்க , திரமிட , குஹாதேவ பரம்பரா அநுசித ஸூத்ர வியாக்யானம் பண்ணினாதாக சொல்லிக் கொண்டாலும்
அது பரபக்ஷ நோக்கிலேயாய், உண்மையில்
எப்படி கோதை நாச்சியார் நாராயணனே நமக்கே பறை என்று உபக்கிரமித்து,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா என்று – நாட்டாருக்காக பறை என்று மறைத்துச் சொல்லி,
ஸ்வாபிப்ராயமாக கைங்கர்ய பிரார்த்தனையை அறுதி இட்டாளோ
அதுபோல கோதாகராஜரான ஸ்வாமியும் , ஸ கோஷ்டி நோக்கில் திருவாயமொழி ஆயிரமும், உபபிரம்மணங்களான 4 ஆயிரமும் சேர
பராங்குச, பரகால தர்சனத்தைக் கொண்டு ஸூத்ர வியாக்கியானம் நிஜத்தில் செய்தருளினார் என்பது தான்
மாமுனிகள் சாதித்த ”அந்த செயல் ” ஆகும்.
யோத்திராக்ஷிம் திராவிடீம் பிரஹ்ம ஸம்ஹிதாம் – என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட
பிரஹ்ம ஸம்ஹிதைக்கு 7 ரிஷிகள்போலே திராவிட ஸம்ஹிதைக்கும் 7 பேர் சொல்லலாம் படியான தர்சனம் இராமானுஜ தர்சனம்.

த்ரிகாண்ட அமரத்தின் படி 7 வகைப் பட்ட ரிஷிகளாவர் :
மஹரிஷி – வியாசர்
பரம ரிஷி – வேதாப்யாஸா :
தேவ ரிஷி – கணாதயர்
பிரஹ்ம ரிஷி – விசிஷ்டாத்யா
ஸுஸுருதாப்ய – ஸுதர்சய :
ராஜரிஷிய : – ருசுப்பன்னாதய :
காண்ட ரிஷிப்ய : – ஜைமினி

ரிஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண திருஷ்ணா தத்வம் இவோதிதம் – இந்த வரிசையில்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக் கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
திருமாலை ஆண்டான்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் –ஆகிய எழுவரைச் சொல்லலாம்.

உபஸம்ஹார தர்சநாத் என்று மற்றவர்கள் பிரஹ்ம சககாரி காரணத்தை திரஸ்கரித்து இருக்க,
ஆழ்வார் முதல் தனி வித்தோயோ என்று த்ரிவித காரணத்தை , பகவத் நிர்ஹேதுக கிருபையால் சாக்ஷத்கரித்துச் சொன்னதை
அடியொற்றி க்ஷீரவத் ஹி , ஜலதயா : என்கிற லௌகிக உதாரணத்துக்கு லௌகிக சமாதானம் அருளிச் செய்தார் கீழ்.
அடுத்து வைதிக சமாதானமாக, வேத வாக்கியத்தை இட்டுச் சொன்ன சூத்ரம்

—————

சூத். 2-1-25 :: தேவாதிவத் அபி லோகே ::

முப்பத்து முக்கோடி தேவர்கள் . அவர்களுக்கு என்று லோகங்கள். பரிவாரங்கள். கணாதிபர்கள்.
சங்கல்ப மாத்திரத்திலேயே ஸ்ருஷ்டியாதிகளைச் செய்கிற சக்தி சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு என்பதாக
வேத பூர்வ காண்டத்தில் சொல்லபப் பட்டிருக்கிறதே.
வேத பிராமாண்யத்தை ஒத்துக் கொண்டிருக்கிற வைசேஷிக, சாங்கியர்களான உங்களுக்கு இது தெரியாதோ ?
தேவர்களுக்கே இப்படிப் பட்ட சக்தி சொல்லப் பட்டு இருக்கையில் ,
புருஷோத்தமனான பிரஹ்மத்துக்கு ஸஹகாரி விவர்ஜித்த சிருஷ்டியை செய்ய என்ன தடை?
இத்தால் பர பிரஹ்மத்துக்கு சத்ய காமத்வத்தோடு சத்ய சங்கல்பத்துவமும் உண்டு என்பது சொல்லவும் வேண்டுமோ?
சத்ய காமத்துவமாவது உபய விபூதி நாதத்வம் என்பதாக சாதிக்கிறார் எம்பெருமானார்.
இதற்கு பிரதீகம் – வளவேழ் உலகு முதலாய வானோர் இறை என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்தி.

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading