Archive for April, 2020

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–10- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

(கைமுதல் ஒன்றும் இல்லை -நன்மைகள் இல்லாத மாத்திரம் அல்லாமல் தீமைகள் நிறைந்தவன் -குற்றங்களையும் ஆவிஷ்காரம் செய்து -தோஷ பூயிஷத்வம் நிறைந்தவை –
மூர்க்கன் -மூன்று தடவை -(8-9-10-)-வரிசையாக சொல்லிக் கொள்கிறார்
வாக்குத் தூய்மை இல்லை –மூர்க்குப் பேசுகிறான் என்று முனிவாயேலும்–காக்காய் வாயிலும் கட்டுரை கொள்வார் –காரணா -நீயே காரணம் கருடக்கொடியானே – -பெரியாழ்வார்
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேனே மூர்க்கனேனே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்)

பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
1-அவ் விஷயங்களை பரிதவித்து -2-அதில் ஒரு பயமும் இன்றிக்கே-3- விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே-4-அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –

(ஓ மண் அளந்த தாடாளா -தண் குடந்தை நகராளா –வரை எடுத்த தோளாளா -வியாஸனம் மிக்கு
பா மறு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ–அளந்த பத்ம பாதாவோ -தாமரைக் கண்ணாவோ -தானியேல் -ஓ ஓ ஓ என்று -வியஸனம்)

தேவரீர் சம்பந்திகளை வஞ்சிக்கும் மாத்ரம் அன்றிக்கே தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேன் என்கிறார் –
ஹா ஹந்த ஹந்த-இத்யாதியால் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சததம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-

ஸ்ரீ யதி ராஜனே… ஆ ஆ ஐயோ ஐயோ.. நான் மனத்தாலும் செய்கையாலும் சொல்லாலும் சர்வ காலத்திலும் மூன்று வித
அபசாரங்களையும் செய்து கொண்டு உமக்கு பிரியத்தை செய்பவன் போல நடித்திக் கொண்டு
கால ஷேபம் செய்து கொண்டு இருக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன் .

பதவுரை:-

யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ய: அஹம் – எத்தகைய அடியேன்,-(தாழ்ந்த விஷயத்தில் அழுந்திய )அடியேன்

மநஸா வாசா க்ரியயா ச – (பகவத் விஷயத்தில் ஆழ்ந்து இருக்கக்கடவ 0மன மொழி மெய்களால்,

த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும்,

ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ,–வர்த்தமான நிர்த்தேசம்

ஸ:அஹம் – அத்தகைய அடியேன்,

தவ – அடியேனிடம் பரம தயாளுவாய்ப் பேரன்பு பூண்ட-(ரக்ஷணத்தில் கிருஷி பண்ணும் -)தேவரீருக்கு,

அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க் கொண்டு,

ப்ரிய க்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே,

காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன்.

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ– கஷ்ட -கஷ்ட தரம் -கஷ்ட தமம்

தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன்,

தத்வாரய – அந்த மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.

———-

ஹா ஹந்த ஹந்த மநஸா
பகவத் பாகவத ஆச்சார்யர்களை அனுசந்திக்கக் கண்ட மனஸ்ஸூ படும் பாடே

க்ரியயா
க்ரியா சப்தத்தால் க்ரியா ஹேதுவான காயத்தை லஷிக்கிறது –

ச வாசா
உத்தேஸ்யங்களைக் குறித்து அஞ்சலி பிரணாமாதி அனுகூல விருத்தி பண்ணுகைக்கும் –
தத் குணங்களைப் புகழுகைக்குமாகக் கண்ட காயமும் வாக்கும் அபராதங்கள் பண்ணி அநர்த்தப்படுவதுக்கு உறுப்பாவதே –

சததம் –
ஸ்வரூப அனுரூபமான விருத்தியில் அந்வயித்தவருக்கு கால விசேஷத்தில் விச்சேதம் வருகை
அஸஹ்யமானால் போலே யாய்த்து அந்த அபதார கரணத்திலும் கால விசேஷத்தால் உண்டான விச்சேதம் அஸஹ்யமான படி –

சராமி –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே சர்வ அவஸ்தையிலும் அபராதம் அனுவர்த்திக்கிறபடி

த்ரிவித அபசாரான்
ஓர் ஒரு விஷயத்தில் அபராதமே அதி க்ரூரமாய் இருக்க மூன்று அபராதங்களிலும் அந்வயித்த படி –
அது தான் கதி பய அபதாரத்திலே ஸூவறுகை அன்றிக்கே-நாநா வித அபசாரங்களிலும் (முக்காலம் மூன்றுவித அபசாரம் முக்கரணங்களால் )அந்வயித்த படியைப்
பற்ற (ஸர்வ தர்மான் -போல் இங்கு அபசாரான் )பஹு பவன பிரயோகம் பண்ணுகிறது
அஹம் சர்வம் கரிஷ்யாமிக்கு எதிர் தட்டு இருக்கிறபடி

ஸோஹம்
அபராத பண்ணின கையில் அறாத இந்த பாபிஷ்டன்

தவா ப்ரியகர
ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அன்வயித்து வாழ வேணும் என்று இதுக்கு கிருஷி
பண்ணிக் கொண்டு போகும் தேவரீருக்கு
பண்ணின கிருஷியைப் பாழாக்கி அநிஷ்ட கரனாய்ப் போருமவன்-

ப்ரியக்ருத் வதேவ
அர்த்த சித்தி இதுவாய் இருக்க -பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் இவன் அத்தனை
ப்ரேமம் உடையாரும் கைங்கர்ய ருசி உடையாரும் இல்லை -ஆன பின்பு இவனே நமக்குப் பிரிய கரன் -என்று
தேவரீரும் நினைக்கும்படி யாய்த்து வர்த்திப்பது –

ஏவம் காலம் நயாமி
இப்படி க்ரித்ருமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியா நின்றேன்(காலையில் சூதாட்டம் -மஹா பாரதம் –மாலையில் -ஸ்த்ரீ பிராயர் ராமாயணம் –இரவில் சோர பாகவதம் )

யதிராஜ ததோஸ்மி மூர்க்க
ரக்ஷண சாமர்த்தியமும் உடைய தேவரீரும் சன்னிஹிதராய் இருக்க இவ் வஸ்து அபராதத்திலே கை கழிகையாலே
என்னத்தனை மூர்க்கர் இல்லை என்கிறார் –(திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னும் அடியேன் உழல்வேனோ )

தாத்பர்யம்
பகவத் விஷய வ்ருத்தி செய்ய -யோக்கியமான மநோ வாக் காயங்களால்
மூன்றுவித அபசாரங்களையும் -இவையே யாத்திரையாக -செய்து போந்தேனே
ரக்ஷணத்துக்கு கிருஷி பண்ணும் தேவரீருக்கு அநிஷ்டம்
இப்படி இருந்த போதிலும் இவன் அத்தனை கைங்கர்ய ருசி உள்ளார் அல்ல என்று தேவரீருக்கு திரு உள்ளம் படும்படி காலத்தைப் போக்கா நின்றேன்
வியஸன மிகுதியால் ஹா ஹந்த ஹந்தஎன்கிறார்

————

ஹா ஹந்த ஹந்த-
வீப்சையால் விஷாதிசயம் தோற்றுகிறது-
தாம் அத் தலையில் கரண த்ரயத்தாலும் பண்ணுகிற அபராதங்களையும்(உபகாரங்கள் செய்பவன் போல் )வஞ்சனைகளையும் பார்த்து –
அவற்றை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே துக்கம் இரட்டித்து ஐயோ என்கிறார் –
அபராதங்களைச் செய்வது உபகாரக விஷயத்திலே யாகையாலே பொறுக்க மாட்டிற்று இலர்

மநஸா க்ரியயா ச வாசா –
சகாரம் சமுச்சயார்த்தகம் -அது தானும் ஒரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் செய்யப் பெற்றேன்

மநஸா க்ரியயா ச
பிரமாதிகமாக அன்றிக்கே சங்கல்ப பூர்வமாயிற்றுச் செய்வது

வாசா
நினைத்த போதே சொல்லில் -அறிந்து பரிஹரிப்பார்கள் என்று நினைத்து -செய்த பின்பாயிற்று சொல்லுவது

(வானில் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தையே -முதலில் அங்கு கூட்டிச் சென்று -ராஜகுமாரன் சிறையில் இருக்க கிரீடம் சாத்தி பின்பு விலங்கை அறுப்பாரைப் போல் -பரபரத்து அங்கு கூட்டிச் சென்று -நித்ய ஸூரிகள் நினைவூட்ட அறுத்து விடுவார்-அதே போல் மனசா வாசா கிரியா இல்லாமல் மனசா கிரியையா வாசா)

வாசா
அது தானும் கூடமாயோ -பிறர் அறிந்ததும் என் வாயாலே காணும்

மநஸா க்ரியயா ச வாசா –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் -என்கிறதுக்கு
எதிர் தட்டாய் கிடீர் அடியேன் செய்து இருப்பது –

யோ அஹம் –
பாபிஷ்ட ஷத்ர பந்துச -என்கிறபடியே பாபம் செய்கையிலே பிரசித்தனான அடியேன் —
யோ வஜ்ர பாத (அந்த அம்பு -ராம பாண பிரசித்தம் )-இத்யாதிகளாலே
ய சப்தம் பிரசித்த பராமர்சி இறே

(பாபிஷ்ட ஷத்ர பந்துச-புண்ய க்ருத புண்டரீகாக்ஷன் இருவரும் ஆச்சார்யரால் பேறு பெற்றார்கள் பிரமாணம்)

யோ அஹம் –
இப் பிரசித்தியை இட்டு நிரூபிக்கும் படி காணும் அடியேன் இருப்பது

சராமி
அனுதாபம் பிறந்து க்லேசிக்கிற தசையிலும் அபராதங்களை செய்கையை தவிருகிறிலேன்

சததம் –
தம் தாம் பிரசித்தியை ஒரு நாளும் கை விடார்கள் இறே –
அபராதங்கள் தான் எவை என்ன –

த்ரிவித அபசாரான்-
மூன்று வகைப் பட்டு இருந்துள்ள அபசாரங்களைக் காணும் அபராதங்கள் இருப்பது என்கிறார் –(முக்கரண – மூன்று வித -மூன்று பேர் இடமும் )
அவை யாவன -1-அக்ருத்ய கரண- க்ருத்ய அகரண -2-3-பகவத் அபசாரமும் -பாகவத அபசாரமும் -4-அசஹ்ய அபசாரமும் -என்று –நிஷித்தங்களை நாலு விதமாகச் சொல்லா நிற்க இங்கு அபராதங்களை மாத்ரம் சொல்லுகிறது –
விதி நிஷேதங்கள் இரண்டும் பகவத் ஆஜ்ஞா ரூபங்கள் ஆகையாலே
தத் அதிக் கிரமம் பகவத் அபசாரத்திலே சேரும் என்னும் அபிப்ப்ராயத்தாலே யாதல்
அக்ருத்ய கரணாத்ய பேஷயா பகவத் அபசாராதிகள் க்ரூரங்கள் ஆகையாலே அவற்றினுடைய அனுஷ்டானத்தைச் சொன்ன போதே
தத் அனுஷ்டானம் கிம் புனர் நியாய சித்தம் இறே என்னும் அபிப்ராயத்தாலே யாதல் –

அங்கன் அன்றிக்கே
மனசேத்யாதிக்கு சேர கரண பேத நிபந்தனமான கார்ய பேதத்தை திரு உள்ளம் பற்றி த்ரிவித அபசாரம் என்கிறார் ஆகவுமாம்
அப்போதைக்கு ஒரொரு அபசாரங்களை கரண த்ரயத்தாலும் அனுஷ்டித்தேன் என்று பொருளாகக் கடவது-

ஸோஅஹம் –
கீழ்ச் சொன்னபடியே அபராதங்களைச் செய்யா விடில் சத்தை பெறாத அடியேன்

தவ-
1-சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குருர் -ச ஏவ சர்வ பூதா நாம் உத்தர்த்தா நாஸ்தி சம்சய -என்கிறபடியே
சர்வ உத்தாரகரான தேவரீருக்கு என்னுதல்-

2-வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித –என்கிறபடியே
பர துக்கம் பொறுக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான தேவரீருக்கு என்னுதல்

அப்ரிய கர –
உபகாரத்தைப் பார்த்தாலும் -சௌகுமார்யத்தைப் பார்த்தாலும் பிரியமே செய்யத் தக்க விஷயத்தில் அப்ரியத்தைச் செய்யா நின்றேன் –
சிஷ்யன் ஆசார்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் என்கைக்கு எதிர்தட்டாய் யாயிற்று அடியேன் நிலை என்கிறார்

அப்ரியகர-
நெஞ்சாலும் அபிரியம் நினைக்க ஒண்ணாத விஷயத்தில் கிடீர் அடியேன் அபிரியத்தை காயிகமாகச் செய்வது என்கிறார்
ஆகில் நம் முன் நிற்கும் விரகு என் என்ன

ப்ரியக்ருத் வத் –
தேவரீர் திரு உள்ளம் அறிய தேவரீருக்கு அபிரியம் செய்தேனே யாகிலும் -அது தேவரீர் திரு உள்ளத்தில் தட்டாத படி
தேவரீர் திரு உள்ளத்தாலே பிரியம் செய்வான் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு தேவரீர் திரு முன்பே நிற்கலாய்த்து என்கிறார் –
ராவணன் சந்நியாசி வேஷத்தைக் கொண்டு பிராட்டியை வஞ்சித்தால் போலே அடியேன் சாத்விக வேஷத்தைக் கொண்டு
தேவரீரையும் வஞ்சித்தேன் என்று கருத்து

ஏவம் காலம் நயாமி –
இப்படி ஆசார்ய அபசாரம் பண்ணாது ஒழியில் அடியேனுக்கு காலம் செல்லாது என்கிறார்

கால மேவம் நயாமி
குணானுபவ கைங்கர்யங்களே போது போக்கு ஆகையும்-முமுஷுப்படி -என்கிறபடியே குணானுபவ கைங்கர்யங்களாலே
போக்கத் தக்க காலத்தைக் கிடீர் அடியேன் அவ் விஷயங்களை வஞ்சித்து அதுவே யாத்ரையாகப் போக்குகிறது என்கிறார் –

யதி ராஜ-
இவர் இப்படி விண்ணப்பம் செய்தவாறே இவர் செய்த அபராதங்களை தம் திரு உள்ளத்திலே தட்டாமல்
ஸ்வ அபராதங்களை அறிந்து -அனுதவித்து- பிராப்த விஷயத்தில் அவற்றை விண்ணப்பம் செய்யும் படி ஓர் அதிகாரியும் உண்டாவதே -என்று
இவர் திரு உள்ளம் உகந்து இருக்கும் படி இருக்கும் இருப்பைக் கண்டு -யதி ராஜ -என்று சம்போதிக்கிறார்-

அன்றிக்கே –
இவர் அனுதாபத்தைக் கண்டு இவர் இவ் வபசார கரணத்தில் நின்றும் மீண்டாராகும் விரகு ஏதோ வென்று
தம் திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு ஆஸ்ரித விஷயத்தில் உஜ்ஜீவன யத்னமே யன்றோ
தேவரீருக்கு புகர் என்று -ஸ்ரீ யதி ராஜ -சப்தத்தாலே சம்போதிக்கிறார் ஆகவுமாம் –

இப்படி சாநுதாபமாக ஸ்வ அபராதங்களை விண்ணப்பம் செய்த பின்பும் அபசாரங்களிலே அன்வயிக்கிற படியைக் கண்டு –
அபசாரங்கள் என்று அறிந்து வைத்து அவற்றில் அன்வயிக்கப் பெறுவதே என்று
ததோஸ்மி மூர்க்க —
ஆகாது என்று அறிந்து வைத்து அவை தன்னையே செய்கையால் இறே அடியேன் மூர்க்கன் ஆகிறது என்கிறார் –

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்———68-

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார்——-71-

—————–

பிரியமானவன் போல் ஏவ -அவதாரணம் -ஆபிராம் செய்தொமோ என்ற மனதில் தோன்றாதபடியே காலம் போக்கி உள்ளேன்
பெருமாள் திருவடிகளே சரணம் -ஹிதம் -நம்மை ரக்ஷிப்பதுக்கு வேறே ஒன்றும் இல்லை -உறுதியாக இருப்பார்கள் பிரபன்னர்கள் – பிரியமான கைங்கர்யம் செய்வதிலேயே கால ஷேபம் செய்வார்கள்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் செய்யாமல் இவ்வாறு செய்வதால் துக்கம் அதி பூமி -துக்க த்ரயம் –
அபசார த்ரய அனுசந்தானாம் -தத் ப்ரயுக்த துக்கத்த்ரயம் -ஹா ஹந்த அந்த-
பகவத அபசாரம் -ஹா
பாகவத அவசரம் ஹந்த
அஸஹ்யா அபசாரம் -ஹந்த
கவலை படாமல் இருப்பதே மூர்க்கன் -அத்தைப் போக்கி அருள பிரார்திக்கிறார்

மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும் போக்கி யருள வேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில்

மன மொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யாபஸு(7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மன மொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும்,

ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதை யொட்டி மெய்யின் செயலையும்,

ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும்,

பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்ம ருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம்.

பாகவதாபசாரமாவது – தனது தந லாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவர்க்குப் பண்ணும் விரோதம் ஆகும்.

அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியே யிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும்.

இதன் விரிவு ஸ்ரீவசந பூஷணத்தில் காணத் தக்கது.

மூன்று அபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க.

ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப் பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது.

தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில் ‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப் பற்றிக் குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–9- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம்

————–

கீழும் மேலும் ஸ்வ கதமாக அனுசந்திக்கிற வஞ்சநாதி தோஷங்களுக்கு எல்லாம் நிதானத்தை விண்ணப்பம் செய்கிறார் –
நித்யம் த்வஹம் இத்யாதியால்
அன்றிக்கே –
இவர் மித்யா சராமி -என்றவாறே -நீர் பிறர் விஸ்வசிக்கும் படி மித்ரா வேஷத்தை தரித்து திரியா நின்றீர் யாகில்
உமக்கு குரு மந்திர தேவதைகளில் விஸ்வாசம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஐயோ அடியேனுக்கு இவ் விஷயங்களில் விஸ்வாசம் இல்லாமை மாத்ரம் அன்றிக்கே
அவ் விஷயங்களை பரிபவியா நின்றேன் -என்கிறார் –

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதா மபி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப் யசடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதி ராஜ ததோஸ்மி மூர்க்க –9-

ஸ்ரீ யதி ராஜனே நான் நித்ய காலமும் ஆச்சார்யனையும் மந்த்ரத்தையும் மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையும் அவமதிக்கிறேன் .
சிறிதும் அச்சம் படுவது இல்லை..இது என்ன விந்தை –இப்படி ஏமாற்றும் குணம் உடையவன் ஆனாலும் உம் அடியவர் திரளில்
மோசக்காரர் அல்லாதவர் போல சந்தோஷமாக நடிக்கிறேன் –ஆகையால் நான் மூர்க்கன்–

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

குரும் – அறியாதவற்றை அறிவித்து அக விருளைப் போக்கும் ஆசார்யனையும்,

மந்த்ரம் – (அவ் வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும்,

தத் தேவதாம் அபி – அம் மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனையும்,

நித்யம் து – எப்போதுமே,

பரிபவாமி – அவமதிக்கிறேன்.

கிஞ்சித் அபி – சிறிதும்,

 பிபேமி – இம் மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடு விளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை.

அஹோ – இது என்ன ஆஸ்சர்யம்.

இத்தம் – இவ் விதமாக,

ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கை யில்லாதவனாயிருந்து வைத்தும்,

அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன் கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்க வேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கை மிக்க ஆஸ்திகன் போலவும்,

பவதீய ஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில்,

ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சி யடைந்தவனாய்க் கொண்டு,

சராமி – ஸஞ்சரிக்கிறேன்.

தத: – அதனால்

அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன்.

தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.

—–

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்-
அஹேதுகமாக அங்கீ கரித்து -ஸ்வ உபதேசத்தால் தத்வ ஞானத்தைப் பிறப்பித்து –
ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரகாசகமான திரு மந்திரத்தையும் சார்த்தமாக ப்ரசாதித்து அருளி ஸ்வரூப விருத்தங்கள் புகுராதபடி
இரவு பகல் அவஹிதனாய் நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்யன் அருளிச் செய்தபடி அனுஷ்டியாமையாலும் –
தத் உபதிஷ்ட மந்த்ர ரஹஸ்யங்களை அநதி காரிகளுக்கு உபதேசிக்கையாலும்
சர்வ காலமும் பிரதி க்ஷணம் பரிதவியா நின்றேன் –

அவ்வளவும் இன்றிக்கே
மந்த்ரம் பரிபவாமி
அனுசந்தாக்களுக்கு ரக்ஷகமாய் இருக்கையாலே -மந்த்ர ஸ்வ பாவமாய் -சகல வேதாந்த சாரமான திரு அஷ்டாக்ஷரத்தையும்
ஆச்சார்யர் அதுக்கு அருளிச் செய்த யதார்த்தத்தையும் மறக்கையாலும்-அயதார்த்தத்தை அதுக்கு அர்த்தமாக நினைக்கையாலும்
அதின் சீர்மை குன்றும்படி பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே –

தத் தேவதா மபி-நித்யம் – பரிபவாமி
அந்த மந்திரத்துக்கு சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வ வேஷத்தாலே ப்ரதிபாத்யனான ஸ்ரீ எம்பெருமானையும்
தத் ஸமாச்ரயணத்தைப் பற்ற ஸ்ருஷ்டங்களான கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காமையாலும் –
தத் இதர விஷயங்களில் ப்ரவணம் ஆக்குகையாலும் பரிதவியா நின்றேன் –

தத் தேவதா மபி ந கிஞ்சித ஹோபி பேமி-
எப்போதும் உத்தேச்யமாகவே அநு சந்தித்து கௌரவிக்கத் தக்க குரு மந்த்ர தேவதைகளை அநவரதம் பரிபவித்து
இதுவே யாத்ரையாய்ப் போரா நின்றால்-இதிலே ஒரு சுற்றும் பயம் இன்றிக்கே இரா நின்றேன்

இத்தம் ச ஸோபி
மேல் எழவென்றிக்கே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் சடனாய் இருக்கச் செய்தேயும்

அசடோப்ய அசடவத்–சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி —
ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உபகரித்த மந்த்ர விஷயத்திலும் -தத் ப்ரதிபாதிதமான தேவதா விஷயத்திலும்
யுக்த கிரமம் தப்பாமல் யதா பிரதிபத்தியோடே வர்த்திக்குமவர்களாய்
தேவரீருடைய திருவடிகளில் சம்பந்தத்தை இட்டே நிரூபிக்கப் படுபவர்களான மஹாத்மாக்கள் நடுவே
குரு மந்த்ர தேவதைகள் அளவில் இவன் அத்தனை ப்ரேம அதிசயம் உடையவர்கள் இல்லை என்று தோற்றும்படி
நிரதிசய ஹர்ஷ யுக்தனாய்க் கொண்டு ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு இதஸ் ததஸ் சஞ்சரியா நின்றேன்

ததோஸ்மி மூர்க்க–
இப்படி குரு மந்த்ராதிகளை பரிஹரித்து அதில் ஒன்றும் பயமும் இன்றிக்கே -விலக்ஷணர் நடுவே புக்கு –
நானும் அவர்களில் ஒருவன் என்று கண்டவர்களுக்குத் தோற்றும் படி மசக்குப் பரலிட்டு ( சந்தேகம் விளைக்கும் விதை)களித்துத் திரியா நின்றேன் –
என்பது யாது ஓன்று உண்டோ அத்தாலே என் அத்தனை மூர்க்கர் இல்லை –

தாத்பர்யம்
ஆச்சார்யர் உபதேஸித்த தத்வ ஞானம் அனுஷ்ட்டிக்காமல் -மாத்ரம் அல்லாமல் விபரீதமாக அனுஷ்ட்டித்தும்
அநாதிகாரிகளுக்கு உபதேசித்தும்
எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட முக் கரணங்கள் வேறே விஷயத்தில் பயன்படுத்தி இவ்வாறு ஆச்சார்யர் -மந்த்ரம் எம்பெருமான் மூவரையும் பரிதவித்து
இதற்கும் மேல்
இவன் போல் பிரேம அதிசயம் உள்ளார் இல்லார் என்று விஸேஞ்ஞர்களும் கொண்டாடிச் சொல்லும்படி திரியா நின்றேன் –
இவற்றை மாற்றி அடியேனைத் திருத்திப் பணி கொண்டு அருள வேண்டும் என்கிறார்

———

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம் –தத்தேவதாமபி
யாவதாத்மா பாவியாக ஸ்லாக நீயமான விஷயங்களை கிடீர் அடியேன் நித்தியமான பரிபவிப்பது

அஹம் து
என்று பரிபவிக்கிற தம்முடைய வை லஷண்யத்தைச் சொல்லுகிறார் –
அதாவது சம்சாரிகளிலும் முமுஷூக்களிலும் வேறு பட்டு இருக்கை-
அதாவது சம்சாரிகள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் அல்லாமையாலே குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பார்கள்
முமுஷூக்கள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் ஆகையாலே ஸ்லாகியா நிற்பார்கள்
அடியேன் ஸ்வரூப ஜ்ஞனாய் இருந்து வைத்து பரிபவியா நிற்பன் என்கிற இதுவாய்த்து அடியேன் வை லஷண்யம் –(நானோ என்னில் என்று முதலில்)

நித்யம் து பரிபவாமி
உச்சி வீடு விடுமா போலே அல்ப கால விச்சேதமும் இன்றிக்கே பரிபவியா நின்றேன்

அஹம் து நித்யம் பரிபவாமி
லோகத்தில் உள்ளவர்கள் ப்ரம ப்ரமாதிகளாலே காதா சித்கமாக பரிபவிப்பார்கள் ஆகில் அடியேன் அப்படி இன்றிக்கே புத்தி பூர்வகமாக
யாவத் காலமும் பரிபவியா நின்று கொண்டு அதில் நின்றும் கை வாங்குகிறிலேன்

அஹம் து நித்யம் பரிபவாமி
லௌகிகரும் கூட நித்யமாக ஆதரிப்பார்கள் ஆகில் அடியேன் நித்யமாக பரிபவியா நிற்பன் என்கிறார்

து சப்தம்
ஏவ காரார்த்தமாய் அடியேனைப் போலே நித்தியமாய் பரிபவிப்பார் மற்று ஒருவர் இல்லை என்கிறார் ஆகவுமாம் –
இப்படி பரிபவிக்கிறது தான் எவற்றை என்னில்

குரும் ச மந்த்ரம் தத்தேவதாமபி
ஸ்வ உபதேசாதிகளால் தேஹாத்மா அபிமானம் முதலான அஜ்ஞ்ஞானத்துக்கு நிவர்த்தகனாய் –
ந குரோர் அபரஸ் த்ராதா-என்கிறபடியே
இவன் தனக்கு சர்வ வித ரஷகனான ஸ்ரீ ஆசார்யனையும் –

மந்தாரம் த்ராயதே இதி மந்திர -என்கிறபடியே
ஸ்வார்த்த பிரகாசந த்வாரா -இவன் தனக்கு ஸ்வ ஆச்சார்ய உபதேஷ்டார்த்தங்களில் விஸ்ம்ருதியும்-
தத் அனுரூபமான அனுஷ்டான ப்ரஸ்யுதியும் வாராமல்
ரஷகமான மந்தரத்தையும்

அம் மந்த்ரத்துக்கு உள்ளீடாய் ஸ்வ ஆசார்யனாலே இவ் வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியாக உபதேசிக்கப் பட்ட ஸ்ரீ தேவதையையும்
கிடீர் அடியேன் பரிபவிப்பது -என்கிறார் –

சகாரம்
சமுச்சாயார்தமாய் -குரு மந்திர தேவதைகளையும் என்று சமுச்சயிக்கிறது

அபி சப்தம்
விரோதார்த்தமாய் –
யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ–ஸ்வேதா -6-23-என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர ப்ரதே குரௌபத் ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இச் சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு பிரதம காரணமாக விதிக்கப் பட்ட பக்திக்கு விஷயமான குரு மந்திர தேவதைகளையும்
அதுக்கு எதிர் தட்டாக பரிபவியா நின்றேன் -என்னும் இவ் வர்த்தத்தைச் சொல்லுகிறது –

இதில் குரு பரிபவமாவது
கேட்ட அர்த்தத்தின் படி நடவாது ஒழிகையும்-அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –

மந்திர பரிபவமாவது
அதின் அர்த்தங்களின் விஸ்ம்ருதியும் -விபரீதார்த்த பிரதிபத்தியும்

தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் -இதர விஷயங்களில் பிரவணம் ஆக்குகையும் –
இவை இறே அடியேனுக்கு உள்ளது -என்று கருத்து –

இப்படி இருந்து பரிபவிக்கையில் பயம் தான் இல்லையோ என்ன
ந கிஞ்சித ஹோபி பேமி –
ந கிஞ்சித்
அல்பாம்சமும் பயப்படுகிறது இல்லை –
லோகத்தில் புராண வைராக்கியம் போலே -ஸ்ரவண தசையில் பயம் உண்டாகலாம் இறே –
அதுவும் இல்லை அடியேனுக்கு என்கிறார்

அஹோ
தம்முடைய நிலை தமக்கு ஆச்சர்யமாகத் தோற்றுகையாலே-அஹோ -என்கிறார்
அன்றிக்கே –
இப்படி பிராப்த விஷயங்களைப் பரிபவித்தாலும் பரிபவித்தோம் என்கிற பயம் அல்பாம்சமும் இல்லாது ஒழிவதே
என்று வியசனப் படுகிறார் என்றுமாம்

கிஞ்சித் அபி ந பிபேமி -என்ன வேண்டி இருக்க –
முன்னே ந கிஞ்சித் -என்கிறது –
நிஷேத்யமான பய லேசத்தினுடைய அத்யந்தா பாவத்தைப் பற்ற

மத்யே -அஹோ -என்று பிறந்த ஆச்சர்ய விஷாதங்கள் உள் அடங்காமையாலே –
நீர் இப்படி குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பது தான் பிறர் அறியும்படியாயோ என்ன கூடமாய்க் காணும் என்கிறார்

இத்தம் சடோப்ய
கீழ்ச் சொன்ன படியே குரு மந்திர தேவதைகளை கூடமாய் பரிபவித்து பய லேசமும் இன்றிக்கே இருந்தேனே யாகிலும்

அசடவத்
அது பிறர் நெஞ்சில் தட்டாத படி கரண த்ரயத்தாலும் தேவரீர் திரு உள்ளத்துக்கு அபிமதம் செய்பவன் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு –

பவதீய சங்கே
தேவரீருடைய சம்பந்தமே நிரூபகமாய் இருக்குமவர்கள் அடியேனை பாவ பரிஷை பண்ணாமல் ஸ்வ கோஷ்டியில் புகுர விட்டார்கள்

ஹ்ருஷ்டஸ்
இவர்களை வஞ்சித்து இவர்கள் சங்கத்தில் புகுந்தேனாவது எப்போதோ என்று இருந்த அடியேன்
அது பெற்றவாறே மனஸ் சந்தோஷம் உடையவனாய்

சராமி
நிவாரகர் இல்லாமையாலே யதேச்சமாக சஞ்சரியா நின்றேன்

பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி
இவ் வஞ்சனை தான் புறம்பே செய்யப் பெற்றதோ
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -86- என்கிறபடியே –
இவ் வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியான தேவரீர் சம்பந்திகள் திறத்தில் கிடீர் செய்யப் பெற்றது -என்கிறார்

(பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே.–86-)

அன்றிக்கே –
அடியேனுக்கு ஸ்வ வஞ்சனத்தால் பிறந்த ஹர்ஷத்தை அவர்கள் ஸ்வ கோஷ்டியில் புகுருகையால்
வந்தது என்னும் படி காணும் -என்கிறார் ஆகவுமாம்

யதிராஜ
அடியேனுக்கு இந்த்ரிய நிக்ரஹத்திலே ருசியை உண்டாக்கி அன்றோ தேவரீர் ஸ்ரீ யதிராஜராக வேண்டியது என்கிறார் –
ரஞ்ஜ நாத் ராஜா விறே

பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ
இந்த்ரிய நியமனத்தால் புகர் பெரும் தேவரீருக்கு -அடியேன் இந்த்ரிய வஸ்யனாய் தேவரீர் சம்பந்திகளை வஞ்சித்து திரிவதே -என்கிறார்
அறிந்து வைத்து வஞ்சிப்பான் என் என்ன

ததோஸ்மி மூர்க்க
கீழ்ச் சொன்னவை எல்லாம் ஸ்வரூப விரோதிகள் என்று அறிந்து இருக்க பய லேசமும் இன்றிக்கே
அவற்றை விட மாட்டாமையால் செய்கையாலே மூர்க்கன் ஆகிறேன் –

மூர்க்கோஸ்மி
அடியேனுக்கு மௌர்க்க்யம் யாயிற்று சத்தை என்கிறார் –
கீழ் க்ருதி நோபி (7)–என்றும் –
சிஷ்ட ஜநௌக மத்யே (8-)என்றும் சாமான்யேன சொன்னதை –
பவதீய சங்கே -என்று ஒரு விசேஷத்திலே பர்யவசிப்பிக்கிறார் –
இத்தால் பவதீய சங்கே-ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகள் யாய்த்து –க்ருதி நோபி-சாஸ்தரார்த்த வித்துக்களும் சிஷ்ட ஜநௌக மத்யே-தத்தர்த்த பிராமாண்ய வாதிகளும் என்கிறது –

——–

கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர் மாறாக குரு மந்த்ர தேவதைகளை வாயார வைது பரிபவித்தலாகிற கெட்ட காரியங்களில் வாக்கு ஊன்றி யிருப்பதை யறிந்து, இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும் போக்கி யருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விட வேண்டியவற்றை விடாமலிருத்தல், பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ தந லாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதி யற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம்.

மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப் பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம்.

மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந் நாராயணனால் ஸ்ருஷ்டி காலத்தில் தரப்பட்ட மன மொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும்.

இவற்றின் விரிவு ஸ்ரீவசந பூஷணாதிகளில்  காண்க.

அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும் தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

—————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–8- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

நீர் சரணாகதர் அன்றோ -உமக்கு ஆநு கூல்யாதிகள் இல்லையோ -அவை ஜ்ஞான கார்யங்கள் அன்றோ என்ன
அவை விபரீதமாய்க் காணும் இருப்பது என்கிறார் -துக்கா வஹோ அஹம்-இத்யாதியால் –

(தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்,
உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்,
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31)

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே--32–மித்யா சராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-)

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணாகதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-

ஸ்ரீ யதி ராஜனே நான் அல்லும் பகலும் துஷ்ட வ்யாபாரங்களை செய்பவன்
உமக்கு துக்கத்தை தருபவன்
சரணாகதன் என்று பெயர் வைத்து கொண்டு விஷயங்களின் போகத்தில் ருசியோடு அனுபவித்துக் கொண்டு
சாதுக்களாய்-பெரியோர்கள் நடுவில் உமது திருவடிகளில் பக்தி உடையவன் போல்
பொய்யாக- வேஷம்- நடிக்கிறேன் பொல்லாதவன் ஆகிறேன்..

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய்,

ஸப்தாதி போக நிரத: – ஸப்தாதி நீச விஷயங்களை அநுபவிப்பதில் மிக வூன்றி யவனாய்,

துஷ்ட சேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கிய கெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) தவ – தேவரீருக்கு,-அநிசம் -இடைவிடாமல் –

து: ஆவஹ: – (தேவரீருக்கே) -துக்கத்தை உண்டு பண்ணுமவனாய் இருக்கிற,

அஹம் – அடியேன்,

த்வத் பாத பக்தஇவ – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட ப்ரபந்நன் போல்,

சிஷ்ட ஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் -அக்ருத்ரிம பக்தி கொண்ட விலக்ஷண -ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில்,

மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன்,

தத: – அக் காரணத்தினால்,

மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன்,-கீழ் நர பஸூ–இங்கு மூர்க்கன் -மனிதன் என்று மறுக்க வில்லை -பக்தி உடையவன் போல் ஏமாற்றியவன் –

தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கி யருள வேணும்.

———

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட–
தேவர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாம்படியான ஸ்வரூபத்தை யுடைய நான் இவ் வாத்மாவுக்கு வகுத்த சேஷியான
தேவரீருக்கு இடைவிடாமல் ஹர்ஷாவாஹனாய்ப் போர வேண்டி இருக்க –
(பர கத அதிசய ஆதானமாக இல்லாமல் )அது செய்யாத அளவன்றிக்கே
தத் விருத்த்யமாக துக்காவஹோமானாய்க் கொண்டு போரா நின்றேன் –
இது என்னுடைய பிரதம பதார்த்த நிஷ்டை இருந்தபடி –

துஷ்ட சேஷ்ட
தயாதி குண பூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அருவருக்கும் படி துர் விருத்தியே யாய்த்து செய்து போருவது-

சப்தாதி போக நிரதஸ்
தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து அதுக்கு விருத்தமான சப்தாதி விஷய அனுபவத்தில்
ஒரு சர்வ சக்தியாலும் விடுவிக்க ஒண்ணாத படி மிகவும் பிரவணனாய்ப் போருகிறவன்(ரதி ஆசை -நிரத -மிக்க ப்ராவண்யம் )

சரணா கதாக்ய-
சரணாகதன் என்கிற பேர் மாத்திரம் உள்ளது -அதிலும் நிஷ்டை இல்லை என்கை –
இத்தால் மத்யம பதார்த்த நிஷ்டா ஹானி சொல்கிறது

சப்தாதி போக நிரதஸ்-என்கையாலே
த்ருதீய பதார்த்த நிஷ்டை இல்லை என்னும் இடம் சொல்லிற்று –

இதர விஷய ப்ரவணனாய் துஷ்ட சேஷ்டானாகையாலே இவனைக் கைக் கொள்ளப் போகிறது இல்லை –
சரணாகதன் என்றும் பேர் இட்டு இருக்கையாலே கை விடப் போகிறது இல்லை
இப்படி தள்ளவும் கொள்ளவும் போகாது இருக்கிற இவனை நாம் என் செய்வது என்று புண் படும் படி இருக்கையாலே
நித்யம் துக்காவாஹனாயே இருக்கை என்கை –

த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே-மித்யா சராமி யதிராஜ
நம் படி இதுவானால் -நமக்கும் இவ் விஷயத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு என்று நடுங்கிக் கடக்க வர்த்திக்க வேண்டி இருக்க
அது செய்யாதே தேவரீர் திருவடிகளில் பாரமார்த்திக ப்ரேம பரிபூர்ணரரைப் போலே க்ருத்ரிமமாக சரியா நின்றேன் –

ததோ அஸ்மி மூர்க்க —
நிஸ் ஸ்நேஹனாய் இருக்கச் செய்தே ஸ்நேஹ யுக்தரைப் போலே அனுகூல கைங்கர்யங்களை ஆசைப்படுவது –
அர்த்திப்பதாய்க் கொண்டு க்ருத்ரிமமாக வர்த்தியா நின்றேன் என்பது யாது ஒன்றாலே –
அத்தாலே மூர்க்கனாகா நின்றேன்  –ஞான ஹீனன் என்னைப் போல் யாரும் இல்லை -என்கிறார்-

தாத்பர்யம்
யதிபதியே
தேவரிருக்கே அநந்யார்ஹ சேஷத்வ பூதனாய் இருந்து
ஹர்ஷ வாஹமாய் கைங்கரியம் செய்ய ப்ராப்தனாக இருந்து வைத்தும்
அது செய்யாத மாத்திரம் அன்றிக்கே மேலும் மேலும் தேவரீர் திரு உள்ளம் நித்தியமாக துக்கப்படும்படி விஷயாந்தரங்களே பரம புருஷார்த்தம் என்று எண்ணி வர்த்தித்து இருந்தாலும் தேவரீர் விலக்கித் தள்ள முடியாத படி சரணாகதன் பேர் மாத்திரம் கொண்டு
யதார்த்த பக்தி உடைய விலக்ஷணரான கோஷ்டியில் உள்ளவன் போல் ஏமாற்றி வர்த்திக்கிறேன்-திருத்திப் பணி கொண்டு அருள வேண்டும்-என்கிறார்

——-

துக்கா வஹோ அஹம் –
இது வாய்த்து அடியேனுடைய ஆனுகூல்ய சங்கல்ப்பம் –
சர்வ பிரகாரத்தாலும் ஆனுகூல்ய சங்கல்பம் செய்கைக்கு யோக்யமான விஷயத்தில்
ப்ராதி கூல்யம் செய்கை மாத்ரம் அன்றிக்கே
ப்ராதி கூல்ய கரணத்தால் உண்டான துக்கத்தை தேவரீர் அனுபவிக்கும் படி பண்ணினேன் -என்கிறார் –

துக்கா வஹோ அஹம்
ஆனுகூல்யம் செய்கையை இட்டு நிரூபிக்கை தவிர்ந்து துக்காவஹன் என்றாய்த்து அடியேனுக்கு நிரூபகம் இருக்கும் படி

அஹம் –
இப்படியானது தான் மற்று ஆரேனும் ஒருவன் என்று ஆறி இருக்கலாமோ
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாய -என்கிறபடியே(சுமத்ரா தேவி இளையபெருமாளுக்கு 24 திரு நஷரத்தில் வனவாசம் செல்ல அருளிச் செய்த வார்த்தை )
தேவரீர் திருவடிகளிலே சமஸ்த வித கைங்கர்யங்களையும் செய்கைக்கு
இட்டுப் பிறந்த அடியேன் காணும் துக்காவஹன் என்னலாம் படி யாவது –

அநிசம் –
இது தான் ஒரு காலத்தில் அன்றிக்கே ஸ்வரூபம் உள்ளதனையும் இதுவே யாத்ரை யாய்த்து என்கிறார்
இப்படி துக்கவஹனாய் இருந்தது யாருக்குத் தான் என்னில்

தவ
மற்றை யாரேனும் விஷயத்திலே யாகில் ஆறி இரேனோ –
காமாதி தோஷ ஹரம்-என்று கீழ்ச் சொன்ன படியே ஆஸ்ரயித்து துக்க நிவர்த்தகரான தேவரீர்
விஷயத்திலே கிடீர் அடியேன் துக்கத்தைச் செய்வது

தவ துக்கவஹா
இது வாய்த்து அடியேன் செய்யும் பிரத்யுபகாரம் என்கிறார் –
அன்றிக்கே –
ரிபூணாமபி வத்சலா என்கிறபடியே
குற்றம் செய்தவர்கள் திறத்திலும் வத்சலரான தேவரீருக்கு என்னுமாம் –

துஷ்ட சேஷ்ட
இப்படி உபகாரகர் விஷயத்தில் துக்கம் செய்வது மாநசிகமாக வன்றிக்கே
காயத்தாலும்  துர் வ்யாபாரங்களைச் செய்தாயிற்று துக்கத்தை உண்டாக்குவது என்கிறார் –
அவை யாவன -தேவதாந்திர பஜநாதிகள்–மானசிகமாகவுமாம்

துஷ்ட சேஷ்ட
மானசிகமாகவும் துக்கம் செய்ய நினைக்க ஒண்ணாத விஷயத்தில் அடியேன் காயிகமாக துர் வ்யாபாரங்களைச் செய்தாய்த்து துக்கத்தைச் செய்வது என்கிறார்
இது தனக்கு அடி என் என்ன

சப்தாதி போக நிரத-
அனுதபிக்கைக்கு மனஸ்ஸூ தான் இல்லை –
அது சப்தாதி விஷயங்களில் மிகவும் ஆசக்தமாகைக்கு த்வாரமாய்த்து என்கிறார் –
ரதி -மன கார்யம் இறே–நிரத--நல்ல விருப்பம் உடையவன்
நீர் சப்தாதி விஷய பிரவணராய் நிந்திதங்களைச் செய்தீர் ஆகில் நமக்கு துக்கா வஹம் ஆகும் படி எங்கனே என்ன –

சரணாக தாக்ய
சரணாகதன் தன் குறை சரண்யனது அன்றோ –
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -(2-40)என்றும் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம -என்றவனோடு பழகினவன் அன்றோ தேவரீர்(கர்மாதீன துக்கம் இல்லை கிருபா கார்யம் )

(உண்டது உருக்காட்டாதே -ஸ்ரீ வைகுண்ட நாதனே சம்சாரிகள் அநர்த்தப்படுவது பார்த்து துக்கப்படுவானே-நிர்ப் பயம் நிர்ப் பரம் அஸ்தி –அஹம் மத் ரஷண பரோ பலம் ந மம ஸ்ரீ பதி ரேவ –அவன் இடம் விடுகிறோம்-ப்ராப்தாவும்  – பிராபகனும் -பிராப்திக்கு உகப்பானும் அவனே )

சரணா கதாக்ய
பிரசித்தி மாத்ரமே யாய்த்து உள்ளது

சரணா கதாக்ய
தேவரீர் துக்கப் படுக்கைக்கு போரும் -அதில் வ்யுத்பத்தி இல்லை என்கிறார் –ந நாம்நி வ்யுத்பத்தி இறே

உமக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டே -அது ஆனுகூல்யாதிகளிலே ஏக தேசம் அன்றோ என்ன
அது அடியேனுடைய வஞ்சன சாமர்த்தியத்தால் உண்டான இத்தனை போக்கி சத்யம் அன்று என்கிறார் மேல் –
வஞ்சித்த படி தான் எங்கனே என்ன

தவ பாத பக்த இவ –
அடியேனை சிஷ்டர் பரிக்ரஹிக்கைக்கு அடியேன் அனுஷ்டித்த உபாயம் –தேவரீர் திருவடிகளிலே ப்ரீதி உள்ளவன் போலே வர்த்தித்தது –
தத் பின்னத்வே சதி தத் கத பூயோ தர்மம் இறே -சாத்ருச்யம்

தத் பேதம் –
பக்தி இல்லாமை –தத் கத பூயோ தர்மம் –பக்திமான்கள் செய்யும் செயல்கள் –
அவை யாவன ஸ்வர நேத்ராங்க விக்ரியாதிகள்

(மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா ,
ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே -( கருட புராணம்- மத்ஸ்ய புராணம் ஸ்லோகம் )– என்கிற படியே
(என்னை பூஜிக்கும் அளவாவது செய்ய வேண்டும் )
ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்
1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –
2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்
3-தானே ஆராதிக்கையும்
4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –
5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –
6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –
7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –
8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –)

சிஷ்ட ஜனக மத்யே –
இவ் வநுகார மாத்ரத்தாலே பிரமாண பரதந்த்ரரானவர்கள் அடியேனை மெய்யே தேவரீர் சம்பந்தியாக
பிரதிபத்தி பண்ணி ஸ்வ கோஷ்டியிலே புகுர விட்டார்கள் –

மித்யா சராமி –
அவ்வளவிலும் ஒரு விசேஷம் இன்றியே அக் கோஷ்டியின் நடுவே கோமுக வ்யாக்ரம் (பசுத்தோல் போத்திய புலி )போலே
அவர்கள் மேல் மேலும் விஸ்வசிக்கும் படி அன்ருதத்தையே (பொய் ஆச்சார்யத்தையே )அனுஷ்டியா நின்றேன் –
அதாவது பூர்வ அநு காரத்தை விடாது ஒழிகை –

சிஷ்ட ஜநௌக மத்யே மித்யா சராமி –
ஒருவர் இருவர் அன்றிக்கே மஹா சங்கமான சிஷ்ட ஜனங்கள் உடைய நடுவில் அடியேன்
அன்ருத்தத்தையே அனுஷ்டியா நின்றேன் என்கிறார் –
இத்தால் மஹா ஜனோ யேன கதஸ் ஸ பந்தா –வன பர்வம் -313-17-என்கிற மார்க்கத்தையும் தப்பினேன்(மஹா ஜனங்கள் மார்க்கத்தின் மேலையார் செய்வனகளையே செய்ய வேண்டும் )-என்கிறது –
அதாவது பாவ பந்தம் இல்லாமை –

யதி ராஜ
இக் கோஷ்டிக்கு நிர்வாஹகர் தேவரீர் என்று அறிந்து வைத்துச் செய்யும் வஞ்சனத்தை தவிருகிறிலேன்-

அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே இந்த்ரிய ஜயத்தால் புகர் பெற்று சஞ்சரிக்குமா போலே யாய்த்து
அடியேன் வஞ்சனத்தால் புகர் பெற்று சஞ்சரிக்கும் படி என்கிறார் ஆகவுமாம்

அங்கனும் அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே சத்யத்தை ஆஸ்ரயித்து புகர் பெறுமா போலே யாய்த்து
அடியேன் மித்யா சரணத்தாலே புகர் பெறும்படி என்கிறார் ஆகவுமாம் –

நம்மை இக் கோஷ்டிக்கு நிர்வாஹகராக அறிந்து வைத்து- பயமும் இன்றிக்கே -இப்படி வஞ்சனத்தை செய்வான் என் என்ன

ததோ அஸ்மி மூர்க்க –
ஆகை இறே அடியேன் மூர்க்கன் ஆகிறேன் -என்கிறார்

மூர்க்கோ அஸ்மி
இம் மௌர்க்யம்-மூர்க்கம்- அடியேனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஹித அஹித விவேகம் இன்றிக்கே பிடித்தது கை விடாமல் இருக்குமவனே
மூர்க்கனாவது –மூர்க்க வைதேய பாலிஸா -என்று இறே அமர கோசம் –

————–

அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தை யுண்டாக்குமாகையால் அவ் வூற்றத்தை நஸிப்பித்தருள வேணுமென்று வேண்டுகிறாரிதனால்.

யதிராஜர் – மனத்தை யடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மன வடக்கத்தாலே மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி.-யதிகளுக்கு ரஞ்சனம் -ஆனந்தம் அளிப்பவர்

ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனே யொழிய, ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறு கதி யில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி.

ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக் கூடிய நன்மையே செய்ய வேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம்.

1. ஆனுகூல்ய ஸங்கல்பம்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்.
3. மஹா விஸ்வாஸம்.
4. கோப்த்ருத்வ வர்ணம் (கதியில்லாத் தன்மை)
5. கார்பண்யம் (எம்பெருமானே ரக்ஷகன் என வரித்தல்)
6-இந்த ஐந்தையும் உறுப்பாகக் கொண்டு ஆத்மாவை ஸமர்ப்பித்தால் அது “அங்கி”யாகிறது

து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதி போக நிரதனாய் துஷ்ட சேஷ்டனாயிருப்பது – ‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி.(அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு சூடாமல் திருவாய் மொழிப் பிள்ளை கூர குலோத்தம தாஸர் இவர்களையும் சரம பர்வதத்தில் அன்றோ வஞ்சித்தேன் -)

அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர் படைத்திருப்பதினால் இவனைக் காக்க வேணுமோ, துஷ்ட சேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிட வேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்ம சங்கடமாகிய துக்கத்தை யுண்டாக்குமென்றும் சொல்லலாம்.

மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான் பிடித்தது விடாமலிருக்குமவன். இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்க வேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.-மோஹம் -நிறைந்த மூர்க்கன் -ஆர்ய வாரய -அத்யாஹாரம் கொண்டு போக்கிக் கொடுத்து அருள வேணும் என்கிறார் –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–7- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள் /ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்தவர்
மீளவும்
பத த்ரய நிஷ்டா விரோதிகளாய் அநாதி காலமே பிடித்துப் பண்ணிப் போந்த
அக்ருத்ய கரண பகவத் பாகவத அபராதிகளையும் –
இப்போது பண்ணிப் போகும் ஸூத்ர மந்த்ர ஸூத்ர தேவாந்தர பஜனாதிகளையும் -(பரிபவாதிகளையும் )
இவை தொடக்கமானவற்றையும் அனுசந்தித்து –
இப்படி தோஷ பூயிஷ்டமான நான் தேவரீர் முன்னே கூசாதே நின்று இதை விண்ணப்பம் செய்கிறேன் என்று பீதராய்
தம்முடைய முஃயத்தை அனுசந்தித்து அருளுகிறார்
மேல் நான்கு ஸ்லோகங்களால் –(7-10)

கீழ் இவர் இப்படி நிர்பந்திக்கையாலே-நீர் மனுஷ்யர் அல்லீரோ –
ஆஸ்திக்யாதிகளை உண்டாக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேன் சரீர மாத்ரத்தாலே மனுஷ்யன் –
வ்ருத்தியாலே பஸூ சஜாதீயனும் பஸூ வ்யாவ்ருத்தனும் -என்கிறார் –
வ்ருத்த்யா பஸூர்-இத்யாதியாலே

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத் யாதரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-

ஸ்ரீ யதிகட்க்கு இறைவரே நான் நடைத்தையால் சீலத்தால் மிருகம் போலும்
சரீரத்தால் மனுஷ்ய ஜந்து போலும் இருந்தும்
என்னை ஆஸ்ரயித்து பக்தியோடும் அன்போடும் விஸ்தாரமாய் புகழ்ந்து
இந்த பாவன புண்ய ஸ்ரீ அரங்க ஷேத்ரத்தில் உம்முடைய ஆச்சர்ய பீட ஸ்தானத்தில் இப்பொழுதும் நடந்து வருகிறேன்–(சூதனாயக் கள்வனாய் -திருமாலை )

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

வஞ்சந பர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான,

அஹம் – அடியேன்,

நர வபு: – மனித வுடல் கொண்ட,

பஷு:து – ஜன்ய ஜனக விபாகம் அற வர்த்திக்கும் விலங்காகவே (விலங்கென்றே)

வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே,

(ஜ்ஞாயே – அறியப் படுகிறேன்.)

(உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக் கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.)

ஈத்ருஸஅபி – இப்படிப் பட்டவனாக இருந்த போதிலும்,

ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்ம குண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்ம குணங்களுக்கும் இருப்பிடமானவன்,

அயம் – இந்த மணவாளமாமுனிவன்’

இதி – என்றிவ்வாறாக,

க்ருதிநஅபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட,

ஆதரேண – ப்ரீதிக்குப் போக்குவிட்டு மனமார்ந்த அன்போடு,

மித: – தங்களில் ஒருவர்க்கொருவர்,

ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்ல வேண்டிய நல் வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்க படியாக,

அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும்,

அத்ய – இப்போது,

வர்த்தே – இருக்கிறேன்.

தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கி யருள வேணும்.

——

ஸாஸ்த்ர அப்யாசிகளுக்கு யோக்கியமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறக்கையாலும்
தத் விருத்தமான க்ருத்யாதிகளிலே தடையற நடக்கையாலும்
நர சாம்யமும் பசு சாம்யமும் தமக்கு உண்டாக அனுசந்திக்கிறார்

வ்ருத்தயா பஸூர்
என்னுடைய விருத்தியைப் பார்த்தால் ஜன்ய ஜனக விபாகமற வர்த்திக்கும் பஸூ விருத்தியோடே ஒக்கும்

நர வபு
எடுத்த உடம்பைப் பார்த்தால் ஸாஸ்த்ர வஸ்யமான மனுஷ்ய சரீரமாய் இருக்கும்

து சப்தத்தால்
மனுஷ்ய சரீர பரிக்ரஹம் பண்ணி வர்த்திக்கிற அல்லாதாரில் தமக்கு உண்டான
வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார்

மீத் ருஸோ அபி
கீழ்ச் சொன்னபடியே யுடையனாய் இருக்கச் செய்தேயும் -தம்முடைய தோஷ பரப்புக்கு பாசுரம் இடப் போகாமையாலே –
இப்படிப்பட்டவன் என்கிறார் –
நம்முடைய தோஷம் இதுவான பின்பு நாம் இவ்விஷயத்தை கிட்டுகை அயுக்தம் என்று கை வாங்க வேண்டி இருக்க
அது செய்யாத அளவன்றிக்கே-இவனைப் போலே ஆத்ம குண பூர்ணன் இல்லை –
ஆகையால் இவ் விஷயத்தை கிட்டிப் பரிமாறுகைக்கு இவன் அத்தனை அதிகாரிகள் இல்லை -என்று
அறிவில் தலை நின்றார்கள் எல்லாரும் தங்களில் ஏக கண்டராய் ப்ரீதிக்குப் போக்கு வீடு இட்டுப் புகழும் படி அன்றோ
இப்போதும் வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் கொண்டு-வஞ்சன பரனாய்க் கொண்டு -வர்த்தியா நின்றேன்(யசோதை போல் நடித்து -பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன் -ஆழ்வார் பிரதம பர்வத்தில் )

யதீந்திர –
ரோக நிவர்த்தகனான பிஷக்கைப் பற்றி இருக்கச் செய்தேயும் நோயின் கையிலே துகை யுண்ணும் வியாதி க்ரஸ்தனைப் போலே
ஆஸ்ரித தோஷங்களைக் கழிக்கைக்கு சக்தரான தேவரீரைப் பற்றி இருக்கிற அடியேன்
இத் தோஷ சாகரத்தில் கிடந்து அழுந்துகை பிராப்தமோ பிரானே என்கிறார்-

(கருணைக் கடல் இருக்க அநந்த கிலேச பாஜன ஸம்ஸார சாஹரத்தில் அழுந்த ப்ரஸக்தி தான் உண்டோ)

தாத்பர்யம்
சாஸ்திரங்களில் விதித்த படியே சத்துக்களாய் வாழ மனுஷ்ய சரீரத்தைப் பரிக்ரஹித்த போதிலும் அவற்றில் லவ கேசமும் அனுஷ்டியாமல் -பகவத் பாகவத அஸஹ்ய அபசாராதிகளான அக்ருத்யாதிகளில் தடையற நடக்கையால் ஜன்ய ஜனன விபாகம் அற வர்த்திக்கும் பசுக்களோடு ஓக்க தோஷ பூயிஷ்டனாய் இருந்தாலும்
மஹாத்மாக்கள் கூட அடியேனுடைய வஞ்சன வ்யாபாரங்களைக் கண்டு இவன் அத்தனை அதிகாரி இல்லை என்று பரஸ்பரம் புகழும் படி அன்றோ வர்த்தியா நின்றேன் -கருணைக் கடலான தேவரீரே பாபங்களையும் அப்ராப்த விஷயாந்தர ப்ராவண்யத்தை அடியோடு போக்கி -ப்ராப்த விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி வளர்த்து அருள வேணும் என்கிறார்

——-

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
து சப்தம் -வ்யாவ்ருத்யர்த்தமாய் –
அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது தம்முடைய மனுஷ்யத்வம் லோக விலஷணம் என்கை-அத்தை விவரிக்கிறார் –
அடியேன் வ்ருத்தியாலே பஸூ என்னவுமாய் -சரீரத்தாலே மனுஷ்யன் என்னவுமாய் இருப்பான் ஒருவன் என்கிறார் –(மனுஷ்யத்தவே பரத்வம் அவனுக்கு பஸூத்வே மனுஷ்யன் நாம் )பஸூத்வே நரத்வம் லோக விலஷணம் இறே –
இத்தால் அடியேனுக்கு உள்ளது பஸூவுக்கு போலே 1-ஆஹார 2-நித்ரா 3-பய 4-மைதுந நிமித்தமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஒழிய
ஸ்வ ஆத்ம உஜ்ஜீவன ரூபமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இல்லை -என்கிறது

ஆகில் உமக்கு வ்ருத்தி யன்றோ சிஷணீயை-அத்தை சத்துக்களை அனுவர்த்தித்து சிஷித்துக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது அவர்கள் என் பக்கல் தாங்கள் வ்ருத்தி சிஷை பண்ணி
வைத்துக் கொள்ளும் படி காணும் என்கிறார் –

ஈத்ருசோ அபி –
இப்படி நர பஸூவாய் இருந்தேனே யாகிலும் -பிறர் அடியேனைக் கண்டால்
ஐயோ -இவன் மனுஷ்யனாய் இருந்து வைத்து தத் அநு ரூபமான சாஸ்திர வஸ்யதா ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிவது என்று
தயை பண்ணும்படி வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
அவர்கள் இவன் சர்வஜ்ஞன் என்னும் படி காணும் என்னும் படி வர்த்தித்தது -என்கிறார்

ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம் -இத் யாதரேண க்ருதிநோ அபி மித ப்ரவக்தும் -அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ
நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமாய் -என்றும்
ஒக்க -குரு முக ஸ்ரவண சித்தமான ஸ்ருதியாலும்-
தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரங்களாலும்-
சாந்தோ தாந்தோ -ப்ருஹத -6-4-23-இத்யாதிப்படியே
சம்சய விபர்யயம் (ஐயம் திரிபு )அற பிரதிபாதிக்கப் படா நின்றுள்ள சமஸ்த ஆத்ம குணங்களுக்கும் வகுத்த இடம் இவன் என்று அறுதி இட்டு

இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே இப்படி இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று
ப்ரீதியுடனே அல்பஜ்ஞ்ஞர் அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஸ்ருத்யாதிகள் அடைய அர்த்தங்களை யாதாவாக அறியும்படியான
ஜ்ஞான சக்த்யாதிகளை யுடையவர்களும் தங்களிலே தாங்கள் விஸ்வாச பூர்வகமாகச் சொல்லுகையே பிரயோஜனமாக
ஸ்வ வ்ருத்தியை தேவரீர் சந்நிதியிலே விண்ணப்பம் செய்யும் தசையிலும் பர வஞ்சனத்திலே
அத்யாதர விசிஷ்டனாய்க் கொண்டு இவ் விபூதியில் வர்த்தியா நின்றேன் –

வஞ்சன பர –
அவர்கள் அடியேனுடைய பாஹ்யாகாரத்தில் ஆதாரத்தைப் பண்ணுமா போலே யாய்த்து அடியேன் அவர்களை
வஞ்சிக்கையில் பண்ணும் ஆதாரமும் -என்கிறார் –

அத்யாபி வஞ்சன பர –
இப்படி விண்ணப்பம் செய்கிறதும் ஒரு வஞ்சனா விசேஷம் என்கிறார்

வஞ்சன பர –
இது வாய்த்து வ்ருத்தியால் யுண்டான பஸூவில் வ்யாவ்ருத்தி -இதுக்கு ஹேது ஏது என்ன

அத்ர
இவ் விபூதியில் இருப்பாய்த்து -என்கிறார் –

யதீந்திர
ஜிதேந்த்ரியரில் தலைவராகைக்கும் அடியேன் பர வஞ்சன பரனாகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு என்கிறார்(என்னையும் பார்த்து என் இயல்பையும் பார்த்து எண்ணில் பல் குணத்து உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் )
அன்றிக்கே –
இத்தால் பெற்ற பலம் ஏது என்ன
அத்ர வர்த்தே –
பத்தும் பத்தாக சம்சாரத்துக்கு ஆளானேன்

யதீந்திர வர்த்தே-
தார்மிகர் கரையில் இருக்க பெருக்காற்றில் மூழ்கிப் போவார் கூவுமா போலே
தாம் சம்சார ஆர்ணவ நிமக்னராய் -தத் உத்த்ரண ரக்ஷகரான – ஸ்ரீ எம்பெருமானாரைக் கண்டு –
தேவரீர் சந்நிஹதராய் இருக்க அடியேன் இப்படி சம்சார சாகர நிமக்னன் ஆவதே என்று கூப்பிடுகிறார் –

ப்ரவக்தும் வஞ்சன பர –
சாஸ்த்ரார்த்தங்களை அறிந்து வைத்து -அனுஷ்டியாமல் பர வஞ்சனம் பண்ணுகிற அடியேன் நாஸ்திகன் ஆகையாலே
அடியேனை ஒரு நாளும் திருத்தலாகாது -என்று கருத்து –
அன்றிக்கே –
து -சப்தம் –
வ்யாவ்ருத்யர்த்தமாய் –அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது மனுஷ்யன் என்கிற பிராந்தி விஷயனான அடியேன் மனுஷ்யன் அன்று என்கை –
ஆனால் பின்னை யார் என்னில்

பஸூ
பஸூ என்கிறார்

உம்மிடத்தில் தத் வ்யாவ்ருத்தி தோற்றா நின்றதே என்ன
நர வபு பஸூ
அது தன்னிலும் விஜாதீய பஸூ என்கிறார் –
அதாவது பாஹ்யமான சதுஷ் பாதத்வம் இல்லை யாகிலும் ஆந்தரமான அஜ்ஞ்ஞானம் உண்டு என்கை –
ஜ்ஞா நேன ஹீன பஸூபிஸ் சமான -என்கிறபடியே த்விபாத்வ பஸூவும் உண்டு என்கிறார் ஆகவுமாம் –
இத்தால் பிரயோஜக ஜ்ஞான அபாவ நிபந்தன பஸூத்வம் அடியேன் இடத்தில் உண்டு என்கிறார் –

அஹம் நர வபு பஸூ –
பஸூவான வடியேன் த்விபாத் பஸூ வாகையாலே –
கேவல நரனும் அன்று -கேவல பஸூவும் அன்று -உபய வ்யாவ்ருத்தன் என்கிறார்

இத்தால் கேவல நரனைப் போலே சாஸ்திர வஸ்யனும் அன்றிக்கே
கேவல பஸூவைப் போலே கட்டவும் விடவுமாம் படி பர வஸ்யனும் அன்றிக்கே –
ஸ்வ இச்சாரியாய் இருப்பான் ஒருவன் என்கிறது

இத்தால் சாத்ய சித்த உபாயங்களுக்கு அநதிகாரி என்கிறது (சித்த உபாயம் கண்ணன் -அத்வேஷம் மாத்திரமே பற்றாசாகக் கொண்டு உகந்து ரஷிப்பான்)-

ஆகில் உமக்கு ஜ்ஞானம் அன்றோ வேண்டுவது –
அத்தை சத்துக்களை அநு வர்த்தித்து உண்டாக்கிக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் வ்ருத்தியாலே அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது
அவர்கள் தாங்கள் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி அடியேன் பக்கல் பண்ணி வைத்துக் கொள்ளலாம் படி காணும் என்கிறார் மேல்

ஈத்ருசோ அபி
இப்படி நர பஸூ வ்யாவ்ருத்தனாய் ஜ்ஞான அபாவ நிபந்தனமான பஸூத்வம் உடையேனாய் இருந்தேனே யாகிலும்
தத் அநு ரூபமான பாஹ்ய ஆகாரத்தோடு வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
தத் விருத்தமாய்க் காணும் வர்த்தித்தேன் என்கிறார் –

வ்ருத்த்யா
கேவல பாஹ்ய ஆகாரத்தாலே கிடீர் அவர்கள் இப்படி சாரஜ்ஞ்ஞர் என்று தாங்கள் விஸ்வாச பூர்வகமாக சொல்லும் படி
காணும் அவர்களை வஞ்சித்தேன் -என்கிறார் –

வ்ருத்த்யா அத்யாபி வஞ்சன பர –
இப்படி தேவரீரை அனுவர்த்தித்துப் போருகிறதும் வஞ்சனா விசேஷம் என்கிறார்

அத்ர யதீந்திர வர்த்தே –
தேவரீர் இவ் விபூதியிலே ஜிதேந்த்ரியரில் தலைவராய் வர்த்திக்குமா போலே
அடியேன் வஞ்சகரில் தலைவனாய் வர்த்திக்கும் படி என்கிறார் –

யதீந்திர வர்த்தே –
தேவரீருக்கு இந்த்ரிய ஜயத்தால் பிறந்த ஐஸ்வர்யம் தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இருக்க
அடியேன் இந்த்ரிய பரவசனாய் சம்சாரத்துக்கு ஆளாவதே என்கிறார் –

———

தாஸ்யம் செய்யாமல் இருப்பது மாட்டும் அன்றி
அப்ராப்த விஷயங்களில் போக்கிக்கொடும் என்று விண்ணப்பமும் செய்யாத படி வஞ்சிக்கும் படி உள்ளேனே-நர பஸூத்வான் அஹம் -குணவான் போல் இதுவே நிரூபகம்

ஸ்வத ஸர்வஞ்ஞரான எம்பெருமானாரும் பிரமிக்கக் கூடாது என்று உண்மையைக் கூறுகிறேன் -வ்ருத்யா நர பஸூ என்கிறார்

அஹிம்ஸை -மெய் பேசுதல்- கொடுமை யில்லாமை -தூய்மை- பொறி யடக்கம் -கொடைத் தன்மை -மன வடக்கம் -பொறுமை -அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப் படுகின்ற ஆத்ம குணங்கள் (உயிரின் நற் பண்புகள்) ஆகும்.

‘இவன் ஆத்ம குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால் மற்றும் சிலரும் ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத் தோன்றக் கூடுமென்று நினைத்து அப்படிச் சொல்லாமல், ‘ஆத்ம குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால், ‘அத் தகையவன் இம் மணவாள மா முனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப் பற்றி -(உத்தேச்ய தம -விதேய -பதம் -ஆதாரத்துடன் )மகிழ்ந்து பேசுமளவிற்குத் தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க.-அவசியம் தர்ம பிரசாரம் பேசுவது போல் பரஸ்பரம் பேசிக் கொள்ளுகிறார்கள்

அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத நாத யாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின (அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கத்திலேயே )மிகப் புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே, இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

இவற்றை மாற்றி அருள வேணும் -நிவர்த்தய ஆர்ய முன்பே அருளிச் செய்தார் அன்றோ-

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–6- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ப்ராப்ய ருசியை யுடையராய் -புறம்புள்ள போக்யங்களில் நசையற்ற ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் அன்றோ
நம்மை அனுபவிப்பவர்களாகச் சொன்னீர் -உமக்கும் இரண்டும் உண்டோ-என்ன –
ஏகதேசமும் ப்ராப்ய ருசி அற்று இருக்கிறபடியையும் –
இதர விஷய ருசி கொழுந்து விட்டு வளருகிற படியையும் விண்ணப்பம் செய்து
இவ்விரண்டுக்கும் அடியான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

கீழ் சரணம் என்று பிரஸ்துதமான உபாய க்ருத்யம் இஷ்ட ப்ராபணமும் அநிஷ்ட நிவாரணமும் யாகையாலே-ப்ராபணமான இஷ்டத்தை மூன்று ஸ்லோஹங்களாலே விண்ணப்பம் செய்து-

மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே(6-12)
நிவர்த்த நீயமான அநிஷ்டத்தை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும்
தோஷ பூயஸ்வத்தையும் விண்ணப்பம் செய்கிறார் –

அதில் பிரதமத்தில்
நீர் திரு மந்த்ரத்தினுடைய பத த்ரயார்த்த நிஷ்டையை பிரார்த்தியா நின்றீர் –
உமக்கு இதில் பிரேமமும்-தத் இதரங்களில் அருசியும் உண்டோ என்ன -அடியேனுக்கு இவை இரண்டும் இல்லை-தேவரீரே இவற்றையும் உண்டாக்கித் தர வேணும் என்கிறார்

அன்றிக்கே –
அஷ்டாஷாக்ரய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய -என்றவாறே
உமக்கு இது இல்லையோ என்ன-இல்லை என்கிறார் ஆகவுமாம் –

அல்பா அபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –6-

ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ-மூன்றும் விழிச் சொற்கள்

கருணை ஒன்றே நிரம்பிய சமுத்திரமே–உத்தம ஆச்சர்யரே–ஸ்ரீ யதி தலைநாதனே
எனக்கு தேவருடைய திருவடி தாமரைகளில் பக்தி எனபது கொஞ்சம் கூட இல்லை
புலன் விஷயங்களில் ஆசை தினம் தோறும் வளர்கிறது –என் செய்கேன் பாபியேன்
என் பாபம் தான் மூல காரணம் -மற்று வேறு காரணம் இல்லை தேவரீர் தடுத்து தகைய வேணும்..

பதவுரை:-

தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே,

ஆர்ய – ஆசார்யரே,-ரக்ஷண உபயோகியான ஞான சக்திகளில் பூர்ணரான

யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே,

மே – -ஸப்தாதி விஷயங்களில் சபலனான அடியேனுக்கு,

பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித் தாமரைகளில் ஆசையானது,-ஸ்நேஹ பூர்வ இடைவிடாமல் சிந்தனையே பக்தி

அல்பா அபி – சிறிது கூட,

 (அஸ்தி) – இல்லை,

ஸப்த ஆதி போக ருசி: – ப்ராப்தமான தேவரீர் திருவடித் தாமரைகளை மறைக்க வைக்கும் ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது,

அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும்,

ஏததே – வளர்ந்து வருகிறது,

ஹா – கஷ்டம்,

அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு,

நிதாநம் – மூல காரணம்,

மத் பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும்.

அந்யத் ந – வேறொன்றுமன்று,

தத் – அந்த பாபத்தை,

வாரய – போக்கி யருள வேணும்.-அந்த பாபங்கள் பலன்களைப் போக்கி அருள வேணும்

———-

அல்பா அபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி-
தேவரீர் திருவடித் தாமரைகளில் பூர்ண பக்தி இல்லாத மாத்திரம் அன்றிக்கே அத்யல்ப பக்தியும் இதர விஷய ப்ரவணனான எனக்கு இல்லை –
ஆனுகூல்ய லேசம் இல்லை என்றாலும் பிரதிகூல நிவ்ருத்தி தான் உண்டாக வேணும் இறே –அதுவும் எனக்கு இல்லை என்கிறார் –

சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா-
தேவரீர் திருவடிகளில் அனுபவத்துக்கு விரோதியான சப்தாதி விஷய அனுபவ ரஸ்யதை(ஸ்ரத்தை ) வர்த்திஷ்ணுவாய்ச் செல்லா நின்றது –
இத்தால் த்ருதீய பதார்த்த நிஷ்டா விரோதி சொல்லிற்று –

இவ் விரண்டும் (ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் -அப்ராப்த விஷய ப்ராவண்யத்துக்கும்)அடி எது என்ன

மத் பாபமேவ ஹி நிதானம் அமூஷ்ய நாந்யத்
ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் -அப்ராப்த விஷய ப்ராவண்யத்துக்கும் காரணம்
பாபியான என்னுடைய துஷ் கர்மம் இறே(பாவமே செய்து பாவி ஆனேன் -சுழற்சி )
அவதாரணத்தாலே ஹேத்வந்தரத்தைக் கழிக்கிறது

ஹி-சப்தம்
இவ் வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்கிறது

நாந்யத்
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இதுக்கு ஹேது அன்று -(ஆழ்வாரை இங்கே வைத்தது போல் அன்றே )
அவன் உஜ்ஜீவனத்துக்கு ஹிருஷீ பண்ணுகிறவன் ஆகையால் –(பக்தி உழவன் அன்றோ
கர்மமும் கிருபையும் -அவன் அனுமதியால் கர்மமும் –இவன் அனுமதியால் பேறும் என்று மாறாடி நினைக்கக் கூடாதே )

உம்முடைய கர்ம தோஷத்தால் வந்ததாகில் நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
என்- செய்யலாவது இல்லையோ –
அத்தை அடியேன் அளவில் கிட்டாதபடி தகைந்து அருள வேணும்
நாம் அதுக்கு சக்தரோ என்ன

தத் வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –
ஆர்ய-
செய்யும் விரகு அறிகைக்குத் தக்க அறிவு இல்லையோ

யதி ராஜ
அறிந்தபடி செய்ய வல்ல சக்தி இல்லையோ
ஜிதேந்த்ரியர்களான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆகையால் அபிமான அந்தர் பூதருடைய பாபத்தைப்
போக்குதற்கு சக்தியில் குறை இல்லை

(அதிகாரம் இல்லாதவருக்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும்
அப்போது ஒரு சிந்தை செய்தே -போக்க வல்லவர் அன்றோ நீர்)

தயை ஏக சிந்த்யோ
அந்த ஞான சக்திகளை ரக்ஷண உபயோகியாக நடத்தும் கிருபைக்கும் சங்கோசமும் உண்டோ(தயை இல்லாவிடில் ஞான பலாதிகள் தோஷம் ஆகுமே -தயா சதகம் )
அஸ்ய தயை ஏக சிந்த்யோ -என்று விசேஷஜ்ஞர் ஆழங்கால் படும்படி அன்றோ கிருபா பிராஸூர்யம்(காரேய் கருணை ராமானுசா )
ஏக சப்தத்தால்
காரணாந்தரங்களை தடவிப் பிடிக்க வேண்டும் படி சொல்கிறது-

தாத்பர்யம் –
இதர விஷய ப்ராவண்யம் பூர்ணமாகவும்
ப்ராப்த விஷய தேவரீர் திருவடிகளில் பக்தி அதி அல்பமும்
இவ்வாறு அனுகூல அம்ச லேஸமும் இன்றி பிரதிகூல ப்ராவண்யம் வளர்ந்து கொண்டே இருக்கும் நீசனான அடியேனுக்கு
ஞான சக்தி உபயோகி கொண்ட -தயாரிக்க சிந்துவான தேவரீர் பாபியான துஷ்கர்ம பலன்கள்
அடியேன் அளவு கிட்டாதபடி அருள வேண்டும்

————–

அல்பாபீத்யாதி
பிராப்தியையும் -போக்யதையும் விசாரித்தால் பரி பூரணமாக ப்ரேமம் செய்ய வேண்டும் விஷயத்தில்
அடியேனுக்கு அல்பாம்சமும் பிரேமம் இன்றிக்கே ஒழிவதே என்று இன்னாதாகிறார்
அல்பாபி
அப்ராப்த விஷயங்களில் பரி பூரணமான பிரேமத்தைச் செய்யும் அடியேனுக்கு
பிராப்த விஷயத்தில் ப்ரேமம் அல்பாம்சமும் இன்றிக்கே ஒழிவதே என்கிறார்

மே-
அப்ராப்தனாய் இருந்து வைத்து செய்யாது ஒழிந்தேனோ –
பிராப்தனாய் இருந்து வைத்து காணும் செய்யாது ஒழிந்தது காணும் -என்கிறார்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே –ஸ்ரீ பகவச் சாஸ்திரம்-ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -இறே

மே
தேவரீர் திருவடிகளிலே நிரவதிகமான ப்ரேமம் செய்யக் கடவ வம்சத்தில் பிறந்த அடியேனுக்கு என்னுமாம்

பவதீய
அடியேனுடைய உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணுகிற தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்–
பிராப்தரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்-

உபகாரகர் அன்று என்று ஆறி இருக்கலாமோ –
அப்ராப்தர் என்று ஆறி இருக்கலாமோ -என்கிறார்

பதாப்ஜ பக்தி
ஸ்வரூப அனுரூபமான திருவடித் தாமரைகளில் பக்தியானது –
பதாப்ஜ-
போக்யதை இல்லை என்று ஆறி இருக்கலாமோ என்கிறார்

நாஸ்தி
இத்தால் பக்தியில் ஸ்வல்ப அம்சமும் இல்லை என்று பக்தி சப்த வாச்யத்தினுடைய த்வம்ச பிராக பாவங்களைச் சொல்லுகை யன்றிக்கே அத்யந்த அபாவத்தை சொல்லுகிறது(இல்லாமை -முதலிலே இல்லை- இருந்து அழிந்து போனது -அத்யந்த அந்யோன்ய அபாவம்-நான்கும் உண்டே )

அன்றிக்கே –
பவதீய பஜாப்ய பக்தி –
நல்லார் பரவும் -44- என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
கரண த்ரயத்தாலும் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும்
சமஸ்த வித கைங்கர்யங்களைப் பிரார்த்திதுச் செய்ய வேண்டும் விஷயமாய்
தேவரீர் சம்பந்திகளான ஸ்ரீ ஆழ்வான் முதலானோர் திருவடிகளில் பக்தியானது
அடியேனுக்கு அல்பாம்சமும் இல்லை என்னவுமாம்
ஆக பிரதம பாதத்தால் பிரதம பதார்த்தம் இல்லை என்கிறது –

(சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.–44-)

இவர் இப்படி சாநுதாபமாக (தாபம் -அநு தாபம் நினைந்து நினைந்து தாபம் படுவது )விண்ணப்பம் செய்தவாறே –
உமக்கு நம்மிடத்தில் பக்தி இல்லையாகில் உண்டாக்கித் தருகிறோம்
இதர விஷயங்களில் அருசி தான் உண்டோ என்ன -அதுவும் இல்லை என்கிறார் மேல்
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா -என்று
சப்தாதி விஷய அனுபவத்தில் கிடீர் அடியேனுக்கு ப்ரேமம் உண்டாகிறது -என்கிறார் –

போக ருசி
விஷயம் போலே தானும் ஸ்லாக்யமாய் இருக்கை-அஸ்லாக்யமாக இருந்தாலும் –

அன்வஹம்
அது தன்னில் ஒரு கால் உண்டாய் கழிகை யன்றிக்கே தினம் தோறும் உண்டாகா நின்றது -என்கிறார்

ஏததே
அது தன்னிலும் -ஒருபடிப் பட்டு இருக்கை யன்றிக்கே ஸ்வயம் பிரயோஜனமாக
அபி விருத்தம் ஆகா நின்றது என்கிறார் –

அல்பா அபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
விரோதி வாசனையும் இல்லாமையாலே சப்தாதி விஷயத்தில் பிரேமமானது அகுதோபயமாக அநு தினம்
அபிவிருத்தமாகா நின்றது என்கிறார்

அன்வஹம் ஏ ததே
அஹோ ராத்ரங்களை இரண்டையும் சொல்லாமல் அஹஸ் சை மாத்ரம் சொன்னது
பகல் முப்பதும் ஆசையை வளர்த்து
இரா முப்பதும் அனுபவித்தாலும் விடிய விடிய ஆசை வளரா நிற்கையாலே –

ஹா
பிராப்த விஷயத்தில் ருசி அல்பாம்சம் இல்லாமையையும் –
அப்ராப்த விஷயத்தில் அநு தினம் அபிவிருத்தம் ஆகிறபடியையும் நினைத்து ஐயோ என்று கிலேசிக்கிறார் —
இத்தால் சரம பதார்த்தம் இல்லை என்கிறது –

நீர் இப்படி கிலேசிப்பான் என்-இவை இரண்டுக்கும் அடி ஆராய்ந்து பரிஹரிக்கலாகாதோ என்ன –
அது பிரசித்தம் அன்றோ என்கிறார் –
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய –
இவை இரண்டுக்கும் அடி அடியேன் பண்ணி வைத்த பாபமே யன்றோ என்கிறார்
மத் பாபம் என்று
தாம் அறிந்ததாகச் சொல்லுகையாலே ப்ராமாதிகத்தை (கவனக்குறைவால் )வ்யாவர்த்திக்கிறது
ஏவ காரத்தாலே
த்விஷந்த பாப க்ருத்யாம்-ஷாட்யாயன ஸ்ருதி -என்கிறபடியே -ப்ராப்தமான சங்க்ராந்த பாபத்தை வ்யாவர்த்திக்கிறது
மத் பாபம் -என்று தாம் அறிந்ததாகவும் -தாம் செய்ததாகவும் தோற்றுகையாலே-அவை இரண்டும்
சந்திக்தம் -தள்ளி ஏவ காரத்திலே வ்யவச்சேதிக்கப் படுகிறது –

பாபமாகில் பிராயச் சித்த விநாச்யமாய் யன்றோ இருப்பது –
நீர் பிராயச் சித்தங்களைப் பண்ணி போக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேனுக்கு கர்த்ருத்வம் உள்ளது பாபங்களிலே யாகையாலே பிராயச் சித்தங்களிலே அன்வயிக்க அவசரம் இல்லை என்று
பிராயச்சித்த அந்வய அநவகாசம் ஆகவுமாம் –
இத்தால் பிராயச்சித்த அந்வய அவகாச அசஹமான பாபமே காரணம் -என்கிறது –

மத் பாபம் என்கையாலே
லௌகிக பாபம் போலே அனுபவ விநாஸ்யமாதல் பிராயச்சித்த விநாஸ்யமாதல் அன்றிக்கே
ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யத்துக்கு காரணமாய் -அனுபவ அநு தின வர்திஷ்ணுவாய் இருக்கும்
பாபம் என்று
பாப வைஷண்யத்தைச் சொல்லவுமாம் –

அன்றிக்கே –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ் தின சம்சய -சுந்தர -38-46-என்கிறபடியே –(அம்மான் இருக்க அம்மானைக் கேட்டது சிறியது -இளைய பெருமாள் இடம் அபசாரம் மஹத் )ஜ்ஞாதாம்சம் அல்பமாய்
அஜ்ஞ்ஞாதாம்சம் பஹூவாய் இருக்கும் பாபம் என்னவுமாம்

ஹி
இவ் வர்த்தம் அடியேன் சொல் கொண்டு அறிவது அன்றிக்கே ஜகத் விதிதமாய் யன்றோ இருப்பது -என்கிறார்

நிதானம்
பாப சேஷத்தால் பிறந்த பாபம் அன்றிக்கே பாபங்களுக்கு எல்லாம் மூலமான பாபம் -என்கிறார் –
நிதாநந்தவாதி காரண -அமரம் -இறே(நிதானம் து ஆதி காரணம் )

அமூஷ்ய
இம் மகா அனர்த்தத்துக்கு-இது ஒழிய மற்று ஓன்று காரணமோ என்கிறார்
பாப விஜாதீயமான ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் ஆனாலோ என்ன

நாந்யத்
ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் -அன்று -என்கிறார் –
பரம தயாளுவான ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பர அனர்த்த அவஹமாய் இருப்பதொரு ஸ்வாதந்த்ர்யம் உண்டோ என்று கருத்து –
இத்தால் மத்யம பதார்த்தம் இல்லை என்கிறது –
ஆகில் நிலை நிற்குமே என்ன -நிவாரகர் இல்லாமையோ நிலை நிற்பது -என்ன -ஆகில் நிவாரகர் ஆர் என்ன –

தத் வாரய
பிராயச் சித்த அனுபவங்களால் நசிக்கை யன்றிக்கே -அநு தின வர்திஷ்ணுவாய் பிரசித்தமான
அப் பாபத்தை தேவரீரே போக்கி யருள வேணும் -என்கிறார்

வாரய
தேவரீருக்கு அசக்யமானது ஓன்று உண்டோ என்று விதிக்குத் தாத்பர்யம் -என் கொண்டு இந் நிர்பந்தம் என்னில்

ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ
1-பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு தேவரீர் சர்வஜ்ஞ்ஞர் அல்லீரோ –
2-அஸூத்தரையும் ஸூத்தராக்க வல்ல சக்தி உடையீர் அல்லீரோ
3-இது இஷ்டமாய் இருக்குமவர் அல்லீரோ –
4-பர துக்கம் பொறுக்கைக்கு கிருபை உடையீர் அல்லீரோ
அடியேன் பாபத்தைப் போக்கி யருளாமைக்கு -என்கிறார் –

ஆர்ய
அடியேன் பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு போரும்படி சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே -என்கிறார்

யதிராஜ
அறிந்தபடி செய்கைக்கு தக்க சக்தியை உடையவராய் -அத்தாலே விளங்குமவரே என்கிறார்
பிரகாசம் இஷ்ட சித்தி அதீநம் ஆகையாலே இது இஷ்டமாய் இருக்குமவர் என்கிறார்

தயைக சிந்தோ
ஜ்ஞான சக்திகள் இரண்டும் கார்யகரமாம் படி தயா குணம் உடையவரே -என்கிறார்

தயைக சிந்தோ
ஸ்ரீ ராம பாணம் போலே தயை குறி யழியாமல் கிடப்பது தேவரீர் இடத்திலே என்கிறார்
தயைக சிந்தோ
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை -25-என்கிறபடியே அபரிச்சின்னமான தயா குணம் உடையவரே என்கிறார்
இதில் த்ருதீய பாதத்தாலே ஆகிஞ்சன்யத்தைச் சொல்லுகிறது –(மத்யம பதார்த்தம் நமஸ் இல்லை என்றார் கீழ் -ஆகிஞ்சன்யமே நான் எனக்கு அல்லேன் என்பது )

(காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-)

———-

நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர் முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ? இத்தகைய முரண்பாட்டை, அதன் காரணமான பாபத்தோடு கூடப் போக்கி யருள வேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால்.யதார்த்தம் மாற்றி ஆசைப்பட்டதை அருள வேணும் -அதுவே ஸ்வரூப அநு ரூபம்

தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல் போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால், எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும், எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது.

ஆர்ய ஸப்தம் (1) ஆசார்ய ஸப்தத்தோடு ஒரே பொருளை யுடையதாய்க் கொண்டு அறியாத தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது.குரு அஞ்ஞானம் போக்கி மோக்ஷம் அளிப்பவர் -சரம குரு நிர்ணயம் பார்த்தோம்

(2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரம வைதிகர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் – அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப் படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடு பேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது.

வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச் சொல் – முறையே – தக்க பொருளில் ஆசை யின்மையும், தகாத பொருளில் ஆசை யுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, -(ஸப்தாதி -ஆதி சப்தம் ஸ்வர்க்காதிகளில் ப்ராவண்யம்) -மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டு பண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும்.

மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூல காரணம்’ என்பதனால் – பக்திமான்களைப் பகைப்பதனால் அப் பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூல காரணம் என்று தெரிகின்றது.பவதி -பதம் சேர்த்துக் கொள்ள வேண்டும் -அத்யாஹாரம்

அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத் தன்மையினாலோ, அடியேனை யிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும் தக்க பொருளில் ஆசை யில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்; பின்னையோ வென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

—————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–5- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ஸ்ரீ எம்பெருமானே சேஷியும் உபாயமும் உபேயமும் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க –
நீர் நம்மையும் நம் உடையாரையும் சேஷிகளும் உபாய பூதராகவும் சொல்லா நின்றீர்-
அது என் கொண்டு நீர் சொல்லுகிறது என்று ஸ்ரீ எம்பெருமானார் நினைவாக
சகல ஸாஸ்த்ர ரூபமான ஸ்ரீ திருமந்திரம் இதுக்கு மூல பிரமாணம் –
அதில் பிரதிபாதிக்கிற அர்த்தத்துக்கு அனுரூபமான நிஷ்டையையும்
தத் பலமான தேவரீர் திருவடிகளில் அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்களுக்கு பிரமாணமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை ப்ரசக்தி பண்ணி-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்கள் ஸ்ரீ திரு அஷ்டாஷரத்தின் பத த்ரயார்த்தங்கள் யாகையாலே –தந் நிஷ்டையை அடியேனுக்கு பிரசாதித்து அருளி
அடியேன் புத்தியானது தேவரீர் திருவடிகளை அனுபவித்து ஹ்ருஷ்டமாம் படி செய்து அருள வேணும் என்கிறார் –

கீழ் ஸ்லோகத்தாலே
பிரதம பாதத்தாலே -(யதீந்த்ர தவ -ஸ்வரூபம் )ப்ரணவார்த்தமும் –
வாக் குண கீரத்தநே அசௌ -என்றத்தாலே வாத்சல்யாதி குண கீர்த்தனத்திலே என்ற போதே –
அக் குணங்கள் உபாய குணங்கள் ஆகையாலே மத்யம (நமஸ் )பதார்த்தமும்
த்ருதீய பாதத்தாலே -(நாராயணாயா )சரம பதார்த்தமும் –
சதுர்த்த பாதத்தாலே -பிரதம சரம பத ஸ்தான அந்வித நமஸ்(ஓம் நம – -நாராயண நம )சப்தார்த்தமும் சொல்லப் பட்டது இறே(அவனுக்கே கைங்கர்யம் -அவன் உகப்புக்காக -ஸ்வரூப புருஷார்த்த தீக்ஷை )

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –5-

ஸ்வரூப உபாய உபேயங்கள் -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள் -திரு மந்த்ரம் -பத த்ரய -ஆந்தர அர்த்தம் ததீய பர்யந்தம் -பாகவத ஆச்சார்ய கைங்கர்யமே ப்ராப்யம்–மற்று எல்லாம் பேசினும் திரு எட்டு எழுத்தும் கற்று நான் –கண்ணபுரத்து உறை அம்மானே உற்றதும் உன் அடியாருக்கு அடிமை –குறையல் பிரான் அடிக்கீழ் -ஸ்வாமி இன்றும் சேவிக்கிறோமே ஆங்கு அப்பொழுதே -அத்ர அத்ய –

ஸ்ரீ யதிகளுக்குள் ஸ்ரேஷ்டரே –ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்கு ஸ்வாமியே
ஸ்ரீ திரு மந்தர பொருள்களில் வழுவாத நிஷ்டையை எனக்கு இப்பொழுதே தானம் செய்ய வேண்டும்
என்னுடைய புத்தி சிஷ்டர்களால் நெருங்கி சேவிக்க தக்க உம்முடைய திருவடி இணையை
எக்காலமும் அனுபவித்து ஓயாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்..

பதவுரை:-

நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய,

யதீந்த்ர – யதிராஜரே,

அத்ர – சரமபர்வம் ருசி அறியாத -இருள் தரு மா ஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில்,

அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில்,

மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு,

அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்தி பெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள,-மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் த்வயம்

பத த்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய-அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய ஸரணத்வம், அநந்ய போக்யத்வம்-(எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,-எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.)என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை,

விதர – தந்தருள வேணும்.

ஸிஷ்ட அக்ர கண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சி யில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத் தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக் குருகைப் பிரான்பிள்ளான் முதலான ஸஜ் ஜநங்களாலே அடிமை செய்யத் தக்க தேவரீருடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,

நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,

அஸ்ய மம புத்தி: – மிகத் தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது,(சம்பந்த சாமான்ய சஷ்ட்டி -என் பொருட்டு -எனக்கு நாலாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை அர்த்தம் )இந்த ப்ராப்யம் கிட்டாவிடில் தரிக்காத என்னுடைய புத்தி-

ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக,

அஸ்து – ஆயிடுக.

———

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
ஸ்ரீ திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –

மனு சப்தம் -மந்த்ர வாசி
மனு ராஜம் -என்றது மந்த்ர ராஜம் என்றபடி –(மந்த்ர ராஜம் உக்ரம் வீரம் இத்யாதி வியாவர்த்திக்க அஷ்டாக்ஷர விசேஷணம் )
ஸ்ரீ திரு மந்திரத்துக்கு ராஜாவாகையாவது –
1-வேதங்களும் ரிஷிகளும் வைதிக புருஷர்களும் ஏக கண்டமாக பரிக்ரஹிக்கையாலும் –
2-அர்த்த பூர்த்தியாலும் –
3-தானே ஸ்வ தந்திரமாய்க் கொண்டு சகல பலன்களையும் கொடுக்க வற்றாகையாலும் –
4-உபாயாந்தார சஹகாரியாகையாலும் –
5-தன்னை ஒழிந்த வியாபக அவியாபக சகல பகவன்-மந்திரங்களிலும்
உத்க்ருஷ்டமாய் இருக்கை–

பத த்ரயங்களின் அர்த்தமாவது –
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -இவைகளும்
தத் பிரதிகோடியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் –

அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத் த்ரயமும் தத் விஷயத்தில் போலே ததீய விஷயத்திலும் உண்டாய் இறே இருப்பது
ஆகை இறே ஸ்ரீ திருமந்திரம் கற்ற ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -(8-10-3)என்று அருளிச் செய்தது –

இப்படி சாமான்யேன ததீயருக்கு எல்லாம் தத் சம்பந்தம் மூலமாக சேஷித்வாதிகள் உண்டாகையாலே
ததீய விஷயமாக நிர்ஹேதுகமாக அடியிலே தன்னை அங்கீ கரித்து அருளி
இவ் வவஸ்யாபன்னனான ஸ்வாச்சார்ய விஷயத்திலும் சேஷித்வாதிகள் அனுசந்திக்கக் குறையில்லை –

நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஆகையால் பத த்ரயத்திலும் சொல்லுகிற அர்த்தங்களில் சரம பர்வ பர்யந்தமான நிஷ்டையை –
இதில் அபேக்ஷை உடைய அடியேனுக்கு
இவ்வர்த்தத்தில் ருசி உடையாரைக் கிடையாத இவ் விபூதியிலே இப்பொழுதே(அத்ர அப்ய )தந்து அருள வேணும் –
பெரு விடாய்ப் பட்டு -தண்ணீர் தண்ணீர் -என்று துடிக்கிறவனுக்கு இவ்விடத்தில் இப்பொழுதே விடாய் தீர்க்க வேணும் இறே –
நீர் நம்மை அபேக்ஷித்தால் இப்படி உமது அபேக்ஷை செய்ய வேணும் ஹேது என் என்ன சொல்கிறது மேல்

நாத – என்று –
இத் தலையில் சொல்லலாவதொரு ஹேது இல்லை -இவ் வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவர் –
இது நம்முடைமை அன்றோ -என்று இச் சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் -என்கை

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –
சிஷ்டர் ஆகிறார் –
ஞான அனுஷ்டான பூர்ணராய் -கண்ணழிவு அற்ற ப்ராப்ய ருசியை உடையவர்கள் –
அவர்களுக்கு அக்ர சரண்யர் ஆகிறார்
ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் -இப்படி இருந்தவர்களால் நிரந்தரம்
அனுபவிக்கப்படா நிற்பதாய் இருக்கிற வகுத்த சேஷியான தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை –
இந்த ப்ராப்யம் பெறா விடில் தரியாத படியான இந்த என்னுடைய சிந்தையானது
யதா மநோ ரதம் அனுபவித்துக் களிப்பதாக
உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பால் அதுவே போந்தது
என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு– என்ற ஐஸ்வர்யத்தைப் பிரார்த்தித்த படி –

(போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்  ஒண் சீ
ராம்  தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- உனதடிப் போதில்-பவத் பதாப்ஜே-ப்ராப்யமும் போக்யமும் )
தாத்பர்யம் -50

——–

அஷ்டாஷராக்ய –
ஏதத்வை நாராயணஸ் யஷ்டாஷரம் பதம் -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார் (திருச்சந்த விருத்தம் -77)-என்றும்
கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம்-என்றும்
மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத் -என்னும் இத்யாதி பிரமாணங்களாலே-
ஸ்ரீ அஷ்டாஷரம் -என்று பிரசித்தமான -என்னுதல்-
ஸ்ரீ அஷ்டாஷரம் என்ற திரு நாமம் உடைய என்னுதல்

மநு ராஜ –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
ராஜாதி ராஜ சர்வேஷாம் -என்றும்
வானோர் இறை -(1-5)என்றும்
அமரர்கள் அதி பதி -என்றும்
தேவ தேவேச -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வாச்யனான ஸ்ரீ ஈஸ்வரன்
ஸ்வ அபேஷயா நியாமக அந்தர ஸூந்யனாய்-தான் சர்வ நியந்தாவாய் இருக்குமா போலே வாய்த்து
வாசகமான ஸ்ரீ திரு அஷ்டாஷரமும்

மந்த்ராணாம் பரமோ மந்திர -என்றும்
ந மந்த்ரோ அஷ்டாஷராத் பர -என்றும் சொல்லுகிறபடியே
பகவன் மந்த்ரங்களில் ஸ்வ அபேஷயா அதிசயித மந்த்ராந்திர ரஹீதமாய்
தான் பிரதானமான படியும்
ஈஸ்வரனை ஒழிந்தவர்களுக்கு ரஷகத்வம் உண்டாம் போதாய்த்து மந்த்ராந்தங்களுக்கு மந்த்ரத்வம் உள்ளதும் –
ஆக இப்படி
பகவத் மந்த்ரங்களில் பிரதானமான ஸ்ரீ திரு மந்த்ரத்தினுடைய –
அவனுடைய பிரதாந்யம்-குண பௌஷ்கல்யாதி நிபந்தனம்-
இதனுடைய பிரதானம் அர்த்த பௌஷ்கல்யாதி நிபந்தனம்-

பத த்ரயார்த்த –
பத த்ரய-பிரணவ -நமோ -நாராயணாய -என்கிற பத த்ரயத்தினுடைய
யர்த்த-அனந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வங்கள் ஆகிற அர்த்தங்களிலே

நிஷ்டாம்
அவிசால்யமான இருப்பை –
அர்த்த ஸ்திதியில் அவிசால்யத்வமாவது –
விரோத் யுதய அஸஹிஷ்ணுத்வம் -அதாவது –
அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான அந்ய சேஷத்வத்தினுடையவும் –
அநந்ய சரணத்வ விரோதியான உபாயாந்தர சம்பந்தத்தினுடையவும் –
அநந்ய போக்யத்வ விரோதியான உபேயாந்தரங்களுடையவும் உதயத்தை பொறாது ஒழிகை
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ஸ்வார்த்ததா புத்தி தவிர்கை யாக்கவுமாம் –
இது இறே நமஸ் சப்தத்தாலே
பூர்வ உத்தர பதங்களோடு காகாஷி ந்யாயத்தாலே அன்வயித்து (ஸ்வார்த்ததா புத்தி )கழி யுண்கிறது

அஸ்ய மம-
உண்டியே உடையே உகந்தோடும் (பெருமாள் திருமொழி -3-பகவத் -விஷயம் முதல் பதிகம் -பாகவத விஷயம் அடுத்து -விஷயாந்தர ப்ராவண்யம் மூன்றாவது -அதே போல் இங்கும் )-என்கிறபடியே அன்ன வஸ்த்ராதி விஷயார்ஜன லோலனான அடியேனுக்கு என்னுதல்-
அதில் ஆசா லேசம் இல்லாத அடியேனுக்கு என்னுதல் –

மேலே –விதர -என்றதுக்கு அனுகுணமாக மஹ்யம் -என்ன வேண்டி இருக்க
மம -என்கிறது சம்பந்த சாமான்ய அபிப்ப்ராயத்தாலே
அன்றிக்கே –
அஸ்ய மம -அதில் ஆசை உடைய அடியேனுக்கு -என்னுதல்

விதர
பிராசாதித்து அருள வேணும் -என்கிறார் –
தேவரீர் தரப் பார்க்கில் அத்தை இப்போதே தர வேணும் என்ன –
தேச விசேஷத்திலே யாகிறது -என்ன

அத்ர
இருள் தரு மா ஞாலமான இத் தேசத்திலேயாக வேணும் என்கிறார் –
தேவரீர் சம்பந்திகளுக்கு இதுவன்றோ அசாதாரண லஷணம்-
ஆகில் தருகிறோம் –பொறுத்து இரும் என்ன

அத்ய
அபேஷையுடைய இக் காலத்திலேயாக வேணும் -என்கிறார் –
நின்றவா நில்லா நெஞ்சு-(க்ஷிப்ரம் நிவேதயத மாம் விபீஷணன் )இறே
அன்றிக்கே –
உமக்கு இப்படி ஸ்வரூப அனுரூபங்களான அர்த்தங்களில் ஆசை இல்லாமைக்கு அடி என் என்ன

அத்ராத்ய –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசமும் –
சத் அனுஷ்டான விரோதியான இக் காலமும் -என்கிறார்
காலம் கலி இறே –
தேச கால -பாத்ரங்களைப் பாராமல் தேவரீர் இந்த சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் என்கிறார்
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டுவது -(ஆர்த்தி பிரபந்தம் =14)
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் -(உபதேசரத்னமாலை -37)-என்று
அத் தலையில் நினைவு அறிந்து இறே இவர் அருளிச் செய்தது
இப்படி அநதிகாரயாய் இருந்து வைத்து நம்மை நிர்பந்திக்கிறது என் என்ன

யதீந்திர –
நம் குறை ஆராயும்படி யன்றோ தேவரீர் பூர்த்தி –
தேவரீருக்கு உள்ள சம தம யாத்ம குணங்கள்
தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இறே தேவரீர் மதிப்பு –
ஆகில் உமக்கு என் என்ன –

நாத
தேவரீர் இத்தலைக்கு ஸ்வாமி யன்றோ நாம் கார்யம் செய்யாமைக்கு என்கிறார் –
யாசித்தும் பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார் –(வாமனன் சீலன் -அனைத்துலகும் வாழப்பிறந்த எதிராசா -நீ வேண்டாம் என்றாலும் விடேன் )
ஸ்வாமி யானமையை நீ என் கொண்டு அறிந்தீர் என்ன –

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய
பிரமாணங்களில் பிரதானமான சிஷ்டாசாரம் கொண்டு அறிந்தேன் -என்கிறார் –
தர்மஜ்ஞ சமய பிரமாண-இறே –
வேத பிரமாண்ய வாதிகளிலே முதல் எண்ணத் தக்கவர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ முதலி யாண்டான் –
முதலான சிஷ்ட ஜனங்களாலே சேவிக்கத் தகுதி யானவரே என்று சம்போதிக்கிறார்-
இவர்கள் ஆஸ்ரயிக்கும் போது-பிராப்த விஷயமாக வேணும் என்று அறிந்தேன் என்று கருத்து –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்யருடைய சம்பந்தி ஜனங்களால் சேவிக்கத் தகுந்தவரே என்னவுமாம் –
அப்போது அவர்கள் தந்தாமைப் பற்றினவர்களுக்கு ப்ராப்த விஷயம் என்று உபதேசித்துக் காட்ட –
அவர்களும் கண்டு ஆஸ்ரயிக்கை யாலே தேவரீர் ஸ்வாமி யானயமையை அறிந்தேன் என்று கருத்து

ஆகில் தருகிறோம் என்று இவர் பிரார்த்தித்த படியே பிரதம பர்வதத்தை வெளிச் சிறப்பிக்க –
அடியேனுக்கு இவ்வளவால் போராது-
இதினுடைய எல்லை நிலமான தேவரீர் திருவடிகளை அனுபவித்து
அடியேனுடைய புத்தியானது ஹ்ருஷ்டமாக வேணும் என்கிறார் –

ஆசார்ய கைங்கர்யம் பகவத் கைங்கர்யத்தினுடைய சரம அவதி யானமை எங்கனே என்னில்
ப்ராப்யத்துக்கு பிரதம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் -என்று தொடங்கி-(412)
சரம பர்வம் பாகவத கைங்கர்யம் -என்று அருளிச் செய்து
அதுக்கு அர்த்தம் ஆசார்யன் உகப்புக்காக பண்ணும் பகவத் கைங்கர்யம் ஆசார்ய கைங்கர்யம் என்று தொடங்கி –
பாகவதர்கள் உகப்புக்காக பண்ணும் ஆசார்ய கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் -என்று ஆசார்ய கைங்கர்யத்தை
சரம பர்வமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –

ஸ்ரீ ஆசார்யன் ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபதேசித்து அதுக்கு அர்த்தமாக ஸ்ரீ பகவத் தாதர்த்தமாக உபதேசிக்க
ஸ்ரீ பகவானும் –மத் பக்த ஜன வாத்சல்யம் -என்று தொடங்கி -ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் என்றும்
தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் -(போனகம் தருவரேல் புனிதம் அன்றே )என்று பாகவத தாதர்யத்தை உபதேசிக்கையாலே
அவர்களுடைய ஆசார்ய சம்பந்தத்தை யிட்டு இவனை அங்கீ கரித்து
பதி வ்ரதைகள் பதி வ்ரதைக்கு பாதி வ்ரத்யத்தை உபதேசிக்குமா போலே
குருரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிகளாலே ஆசார்ய தாதர்யத்தை உபதேசிக்கையாலே ப்ராப்யத்தில்
சரம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் என்கிறது –
இத்தை இறே-திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது

(ம்லேச்சனும் பக்தன் ஆனால் சதுர் வேதிகள் அனுவர்த்திக்க அறிவு கொடுத்து -குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா ,
ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே –( கருட புராணம்- மத்ஸ்ய புராணம் ஸ்லோகம் )– என்கிற படியே
(என்னை பூஜிக்கும் அளவாவது செய்ய வேண்டும் )
ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்
1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –
2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்
3-தானே ஆராதிக்கையும்
4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –
5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –
6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –
7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –
8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –
அஷ்ட விதயாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-)

ஸ்ரீ பகவத் கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்யன் உகப்புண்டு —
ஸ்ரீ பாகவத கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ பகவத் ப்ரீதி உண்டு
ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவதர்கள் உகப்பு உண்டு –
ஆகையால் ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யம் ததீய கைங்கர்ய கர்ப்பமாய் இருக்கும்
ஆகையால் ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யமே ஸ்ரீ திரு அஷ்டாஷரத்துக்கு பிரதான ப்ரமேயமாகக் கடவது

அன்றிக்கே
சிஷ்டேத்யாதி-க்கு
இப்படி சம்பந்த மாத்ரம் கொண்டு நாம் ஆருக்கு அதிகாரம் உண்டாக்கி உதவினோம் என்ன
சிஷ்டேத்யாதி –
சாஸ்திர விஸ்வாச சாலிகளான ஜனங்கள் உண்டு -ஸ்ரீ யாதவ பிரகாச -ஸ்ரீ யஜ்ஞ மூர்த்தி யாதிகள் -அவர்களாலே
சேவ்யர் ஆனவரே -என்றுமாம் –
அவர்களை அதிகாரிகள் ஆக்கி யன்றோ தேவரீர் ஸ்ரீ திரு மந்த்ரார்த்தை உதவி யருளிற்று –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய- ஜன சேவ்ய -என்று இரண்டும் சம்போதனம் ஆகவுமாம் —
அப்போது நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -என்றும்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம(ஸூந்தர காண்டம் )-என்றும் சொல்லுகிறபடியே
சகல சாஸ்திர தாத்பர்யமான ஆன்ரு சம்சய பிரதானரில் முதல் எண்ணத் தக்கவர்
ஆகையாலே சர்வ ஜனங்களாலும் சேவிக்கத் தக்கவர் என்று பொருள் –

இவருக்கு ஆன்ரு சம்சய பிரதானரில் அக்ர கண்யத்வம் ஆவது –
முன்புள்ள முதலிகள் க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-ஆன்ரு சம்சய பிரதானராய்
பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதே- ஆஸ்திக்யாதி பரிஷை பண்ணி ஹிதம் அருளிச் செய்வார்கள் ஆகில் –
இவர் அங்கன் அன்றிக்கே
பர அனர்த்தமே பற்றாசாக ஆஸ்திக்யாதர பரிஷை பண்ணாமல் ஹிதம் அருளிச் செய்து போருகை
ஸ்ரீ ஆழ்வானை மாச உபவாசம் கொண்டது ஸ்ரீ நம்பி நியமனத்துக்காக –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய -என்கிறது பதாப்ஜ விசேஷணம் ஆகவுமாம் -அப்போது
ஸ்ரீ ராமானுஸ்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிந -என்றும்
ஸ்ரீ இராமானுசன் தன் இணை யடியே –உதிப்பன உத்தமர் சிந்தையுள் (50)-என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வான் முதலான சிஷ்ட ஜனங்களால் சேவிக்கத் தகுதியான பதாப்ஜங்கள் -என்கிறது –
இத்தால் தாம் அயோக்யர் என்கிறது –

(உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50)

பவத் பதாப்ஜே-
பரம பிராப்யரான தேவரீருடைய பரம போக்யங்களான திருவடித் தாமரைகளை –

அனுபூய ஹ்ருஷ்டாஸ்து-என்ன வேண்டி இருக்க முதலில் ஹ்ருஷ்டாஸ்து என்றது திருவடிகளுடைய போக்யதாதிசயம்
அனுபவ உன்முகமாகும் தசையிலும் அனுபவ ஜனித ஆனந்தத்தை உண்டாக்கவற்று என்னும் அபிப்ராயத்தாலே

நித்யம் –
அனுபாவ்ய வஸ்துவோபாதி-அனுபவமும் ரசித்து இருக்கையாலே இது நித்யமாக வேணும் என்கிறார் –
அன்றிக்கே –
ஹ்ருஷ்டா அனுபூயாஸ்து-
திருவடிகளினுடைய போக்யாதிசயத்தைக் கண்டு அலப்யங்களான இத் திருவடிகள் நமக்கு
அனுபாவ்யங்களாகக் கடவது என்று ஹ்ருஷ்டமாய் அனுபவித்து தான் சத்தை பெறக் கடவது (ஸ்து)-என்கிறார் ஆகவுமாம் —
முன்பு அசந்நேவ -இறே-

அன்றிக்கே –
அனுபூயாஸ்து ஹ்ருஷ்டஸ்து-அனுபவித்து தான் உளதான மாத்ரம் அன்றிக்கே –
ஸ்வ தர்மமான ஆனந்த ரூபத்தையும் அடைந்ததாக வேணும் என்கிறார்
நித்யம் அனுபூய ஹ்ருஷ்டஸ்து –
இவ் வனுபவம் போக்யமாய் இருக்கையாலே கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து அனுபவ ஜனிதமான ஹர்ஷம்
புறம்பு ஒசிந்து காட்டும்படியாக வேணும் என்கிறார்

ஏன் தான் என்னில் –
மமாஸ்து புத்தி –
நிரூபகம் முன்னாக நிரூப்ய சித்தி யாகையாலே நிரூபகமான அனுபவத்தை முன்னே சொல்லி
அநந்தரம் நிரூப்யமான தம்மை அனுசந்திக்கிறார்

மமாஸ்ய
தேவரீருடைய திருவடிகளை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகனாம் படியான அடியேன் இப்படி ஸ்வரூப நாசகங்களான
விஷயங்களிலே சபலன் ஆவதே என்கிறார் –
இப்படி விஷய சாபல்யனான அடியேனுடைய -என்னுதல்-
இவ்வளவான மனஸ் ஸ்வ பாவம் உடைய அடியேனுடைய -என்னுதல்

புத்தி
ஞானமாதல்
மனஸ் ஆதல்

மமாஸ்ய புத்தி –
ஜ்ஞானமாகில் தேவரீரை ஒழிய மற்று ஒன்றில் புகாது –
அது விஷயாந்தரத்தில் புகுருகைக்கு அடி அடியேனுடைய சம்பந்தம் யாய்த்து
இப்படி இருந்துள்ள அடியேனுடைய புத்தி -என்னவுமாம்

(மே ராம -சக்ரவர்த்தி -மம ஸூதா ஜனகராஜன்)

அன்றிக்கே –
மமாஸ்ய புத்தி –
தேவரீராலே கொடுக்கப் பட்ட அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டையை யுடையனாய்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய புத்தியானது -என்னவுமாம்

(உடையவர் சம்பந்த ஞானம் பெறுவதற்கு முன்னும் பின்னும் மம புத்தி மாறும் அன்றோ -இந்த இரண்டையும் அருளிச் செய்கிறார்-நான் என்னுடைய -முன்பு அடியேன் தாஸ்ய ரஸம் அறிந்த என்றபடி )

இத்தால் பிரதம பர்வம் அதி விலஷணமாய் இருந்ததே யாகிலும் அதில்
சரம பர்வ நிஷ்டனுடைய புத்தியானது புகாது என்கிறார்

சிஷ்டேத்யாதி–பதாப்ஜ விசேஷணம் ஆன போது-நாத -என்ற அநந்தரம் —
ஆகில் செய்கிறோம் இத்யாதி சங்கதி கண்டு கொள்வது –

————-

இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், ‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. ‘ஸ்ரீமந் யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் யதீந்த்ர தாஸ கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உப ஸம்ஹாரமாக அமைந்துள்ளது. ‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோ வென்னில் முதல் முடிவு நடுப் பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித் திடப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கலியும் கெடும் கண்டு கொண்மின் -கலி ஸாம்ராஜ்யம் பண்ணும் இக்காலத்தில் இங்கேயே கொடுத்த அருள வேண்டும்

அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது – ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும்.

நடு வெல்லையோ வெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத் தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பர்வம் எம்பெருமான், மத்யம பர்வம் – பாகவதர்கள், சரம பர்வம் – ஆசார்யன். ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும் நேரான பதப் பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து, பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப் பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப் படுத்தி நின்று விடுகின்றன. ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம பர்வம் பகவான், மத்யம பர்வம் – பாகவதர், சரம பர்வம் – ஆசார்யன்.

ஆக இந்த ஸ்லோகத்தில் முற் பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப் பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருள வேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று.

நின் திரு எட்டு எழுத்தும் கற்று உன் அடியாருக்கு அடிமை -நின்னும் உன்னும் -இதுவே உனக்கே ஆனந்தம் அளிக்கும் அடியாருக்கு அடிமை

மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது.

இவனுக்கே சேஷ பூதன் ஆகவே இவனே புருஷார்த்தமும் சாதனமும் உபேயமும் உபாயமும் –சேர்ந்தே -அர்த்தம்-நிஷ்டை -வேறே ஒன்றையும் ஸஹிக்காமல் இருப்பது –
பர்யவஸான நிவ்ருத்தியைக் கொள்ள வேண்டும் -எம்பெருமான் எம்பருமானார் அளவும் யாவதாத்மா பாவி செல்ல வேண்டுமே

இதில் பிற்பகுதியினால், (இந்த சரம பர்வ தத்வ ஹித புருஷார்த்தம் பிரமம் இல்லாத -யாதாத்ம்யம் அறிந்துள்ள )ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சி யடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித் தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள் புரிய வேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் அடியாகவே ஹர்ஷ ப்ரகர்ஷ -வளரும்படி அருள வேண்டும் –

——————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–4- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநா பூதராய்-
அவரை அல்லது அறியாத ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளில் சேஷத்வத்தையும் பிரார்த்தித்து அருளி –
அவர்கள் அளவில் ஊற்றத்தாலே-அவர்கள் உகந்த விஷயமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் கரண த்ரயமும் ப்ரவணமாம் படி பண்ணி அருள வேணும்
என்று அவரைப் பிரார்த்தித்து அருளுகிறார்

கீழ் ஸ்லோகத்தில் உபகார விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்று பிரார்த்தித்து
ததுபக்ருதமான (அவர்களால் உபகரிக்கப்பட்ட )ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே கைங்கர்யம் தம்முடைய கரண த்ரயத்துக்கும்
அநவரத அந்வயம் உண்டாக வேணும் என்று அவர் தம்மையே பிரார்த்திக்கிறார்
அன்றிக்கே –
பாத அநு சிந்தன பரஸ் சததம் பவேயம் -என்று தாம் பிரார்த்தித்த புருஷார்த்தம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அது தனக்கும் அடியான தத் விஷய ப்ரேமமும் போனதாகக் கொண்டு அது தன்னை பிரார்த்திக்கிறார் ஆகவுமாம்

(அவர்களைப் பற்றி நம்மிடம் வராமல் எம்மைப்பற்றி அவர்களைப் பற்றப் பார்க்கிறீரோ
ஆடி ஆடி -நரஸிம்ஹா –பாகவத ஸமோஹம் கிட்டாமல் வருந்தி அவனையே கால்கட்டி ஆழ்வார் அழுதால் போல்-அதே நிலை இங்கு ஒரு படி கீழ் -)

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு ஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்தநேசௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய
வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச –4-

ஸ்ரீ யதி தலை நாதனே ஒழிவில் காலம் எல்லாம் உம் திரு மேனியின் நினைவில் என் மனம்
ஆசை கொண்டு இருக்க வேண்டும்
இந்த என் வாக்கு உம் குண கீர்த்தனத்தில் ஆசக்தமாய் இருக்க வேண்டும்
இரு கைகளின் செய்கையும் ஊழியம் செய்வதிலே இன்புற வேண்டும்
முக் கரணங்களும் மற்ற வ்யாபரங்களில் கண் எடுத்து பாராமல் இருக்க வேண்டும்..

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர்-ஸார்வ பவ்மரான -யதீந்த்ரரே,

மே – விஷயாந்தரங்களில் பழகிப் போந்த அடியேனுடைய,

மந: – மனமானது,

தவ – தேவரீருடைய,

திவ்யவபுஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில்,

நித்யம் – எப்போதும்,

ஸக்தம் – பற்றுடையதாக,

பவது – இருந்திடுக.

அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகு தூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது,-அஸௌ-இந்த நாக்கு -இவளவு தாழ்ந்த ஒன்றுக்கு உம்மை ஸ்துதிக்க வாய்த்த பாக்யம் என்னே

தவ – தேவரீருடைய,

குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாண குணங்களை ஆசையோடு துதிப்பதில்,

ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கர த்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும்,

தவ – தேவரீருக்கு,

தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே,

க்ருத்யம் – கடமையாக,

அஸ்து – இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கரண  த்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும்,

வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில்,

விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

——-

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ்ருதௌ மே-சக்தம் மநோ பவது மே மநோ –
தவ திவ்ய வபுஸ்ருதௌ-நித்யம் -சக்தம்-பவது
அநாதி காலம் இதர விஷயங்களில் பழகிப் போந்த என்னுடைய மனஸ்ஸானது தேவருடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே
சர்வ காலமும் மண்டி விஷயாந்தர ஸ்மரணத்துக்கு ஆளாகாத படி நன்றாகச் செய்வதாகவும் –

உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்கிறபடி
மனஸ்ஸுக்கு ஸூபாஸ்ரயமான அவலம்பனம் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரகமேயாக வேணும் என்கை –(எதிராசர் வடிவு அழகு –இல்லை எனக்கு எதிர் )

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!–104-

(பற்பமெனத் திகழ் பைங்கழலும் தண்பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!)

வாக் குண கீரத்த நே சௌ–பவது
இதுக்கு முன் பஹுர் (துர்)விஷயங்களை ஜல்பித்துப் போந்த வாக்கு தேவருடைய கல்யாண குணங்களையே வர்ணித்துக் கொண்டு
பேசுகையில் சகிதமாக வேணும் என்கை –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
அந்ய வ்ஷயங்களுக்கு நிஹீன வ்ருத்தி செய்து போந்த கைகள் இரண்டுக்கும் க்ருத்யம் தேவருடைய நித்ய கைங்கர்யம் ஆவதாக –

வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –
தேவரீர் விஷயத்தில் கரண த்ரயமும் அபிமுகமானாலும் விஷயாந்தரங்களில் வைமுக்யம் இல்லாத போது
இது நிலை நில்லாது என்று பார்த்து
புறப் பூதமான வை லக்ஷண்யத்தை யுடைய ஹேய விஷயங்களை நினைக்கை- தொழுகை -சொல்லுகை யாகிற வியாபாரத்தில்
நின்றும் கரண த்ரயமும் முகம் மாறுவதாக
இத்தால் நையும் மனம் உன் குணங்களை யுன்னி (102)-இத்யாதிப்படியே
கரண த்ரயத்துக்கும் ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யத்தை இதர நிவ்ருத்தி பூர்வகமாக
பிரார்த்தித்து அருளினார் ஆய்த்து –

நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-

(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -அடுத்து தானே மாம் ஏகம் வ்ரஜ –
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே-8-2-11-ஆழ்வார் பிரதம விஷயத்தில் அருளிச் செய்ததையே இங்கு சரம விஷயத்தில் அருளிச் செய்கிறார்)

தாத்பர்யம்
எம் பெருமானாரே
அநாதி காலம் அபிராப்த விஷயங்களிலே பழகிப் போந்த அடியேன் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸூபாஸ்ரயமாக த்யானம் செய்வதாகவும்
அப்ராப்த விஷயங்களையே புகழ்ந்து போன எனது வாக்கானது -தேவரீருடைய கல்யாண குணங்களையே புகழ்கையில் நிரதமாக -நித்தியமாக ஆகும்படியாகவும்
அப்ராப்த விஷயங்களை நிஹீன கைகளுக்கு விஷயமாக ஆக்கிக் கொண்ட அடியேன் கைகளுக்கு தேவரீருடைய நித்ய கைங்கர்யமே யாத்திரையாக ஆகும்படியாகவும்
இப்படி மனோ வாக் காயம் நினைக்கை முதலான தவிர்ந்து தேவரீர் திருவடிகளில் ப்ரவணமாகும் படி அருள வேண்டும் -அருள வேண்டும்

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோகய லோசநத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥ 16॥

————-

நித்யம் யதீந்திர தவதிவ்ய -வபுஸ்ருதௌ-
நித்யம்-மேல் தாம் அபேஷிக்கிற ஸ்ம்ருதி தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அத்தை பிரார்த்திப்பதற்கு முன்னே அதனுடைய அவிச்சேதத்தை பிரார்த்திக்கிறார் -நித்யம் என்று –
யதீந்திர-ஸ்வ அபேஷிதம் செய்கைக்குத் தக்க சக்தி விசேஷத்தை யொப்பி சம்போதிக்கிறார்-யதீந்திர என்று –

அன்றிக்கே
இதர விஷய வைராக்யத்தால் உண்டான பெரு மதிப்புத் தோற்ற இருக்கும் இருப்பு கண்டு
யதீந்திர -என்று சம்போதிக்கிறார் ஆகவுமாம் –

தவ –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து (5-2-8)-என்றும் –
சாஷான் நாராயண தேவகாருண்யாத் ஸாஸ்த்ர பாணி –(ஜெயாஸ்தா சம்ஹிதை)-என்றும் –
ஆசார்யஸ் ச ஹரிஸ் சாஷாத் -என்றும் சொல்லுகிறபடியே பகவத் அவதார விசேஷமான தேவரீருடைய -என்னுதல்-

காருண்யாத் குரு ஷூத்தமோ யதிபதி -என்கிறபடியே க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யரான தேவரீருடைய -என்னுதல்

எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக வந்துதித்த (29)-என்கிறபடியே
அடியோங்களை உத்தரிப்பிக்க அவதரித்த தேவரீருடைய -என்னுதல்
இவை எல்லா வற்றாலும் பிரார்த்திக்கிறது அத்தலைக்கு அவஸ்ய கர்த்தவ்யம் என்கிறது

(ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –)

(எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் –உபதேச ரத்னமாலை-29-)

திவ்ய
திவி பவம் திவ்யம் -என்கிற வ்யுத்பதியாலே அப்ராக்ருதம் -என்னுதல் –(ஸ்வரூபம்)
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் –104- என்கிறபடியே(ரூபம்)மிக்க தேஜஸ்சை உடைத்தான என்னுதல் –
ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –என்றது ததியர்க்கும் ஒக்கும் இறே-(நமே ஸ்நாநம் –பரதாழ்வான் இல்லாமல் குளிக்க மாட்டேன் -பஞ்ச ஜன்ய அம்சம் )
ஆவிர்பாவைஸ் ஸூர நர சமோ தேவ தேவஸ் ததீயா -என்றும் –(வாமனன் -தேவர் அதீதி புத்ரன் ராமன் கிருஷ்ணன் நர)
தருணவ் ரூப சம்பன்னௌ-(தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14–என்றாள் சூர்ப்பணகை-திருமேனி வர்ணனை – இறுதியில் த்ருஷ்ட்டி போல் மான் தோல் மரவுறி)என்றும் சொல்லக் கடவது இறே

(கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!–104-)

(சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-)

தவ திவ்ய
ப்ராப்தமானதுவே போக்யமாய் இருக்கும் என்கிறது

வபு ஸ்ம்ருதௌ
திருமேனி ஸ்மரணத்திலே த்யேயம் ஸூபாஸ்ரயம் இறே

வபு 
திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கும் (உம்மைத்தொகை இத்தை விட)
திவ்ய மங்கள விக்ரஹம் போக்யமாய் இருக்கிறது காணும் இவர்க்கு(ரிஷிகள் ஸ்வரூபத்தில் இழிய ஆழ்வார்கள் திவ்விய மங்கள ரூபத்தில் இழிவார்கள் அன்றோ )

ஸ்ம்ருதௌ
விஷயத்தோபாதி ஸ்ம்ருதி தானும் போக்யமாய் இருக்கிற படி

தவ -என்று
ஸ்ரீ பகவத் அவதாரங்களையும் -ஸ்ரீ ஆழ்வார்களையும் வ்யாவர்த்திக்கிறது
திவ்ய என்று
இவர் தம்முடைய விக்ரஹாந்தரங்களையும் வ்யாவர்த்திக்கிறது –

இத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் –
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று தொடங்கி-
1-உயர் நலம் உடையவன்-ஸ்ரீ ஈஸ்வரனுடைய ஆநந்தாதி குணங்களையும்
2-உயர்வற-திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
3-அருளினன் -நிர பேஷா உபாயத்வத்தையும்-4-அயர்வறும் அமரர்கள் அதிபதி பரத்வத்தையும் அனுசந்தித்து தாம்
துயர் அறு சுடர் அடி -என்று திருமேனியிலும் சௌந்தர்யாதிகளிலும்-ஈடுபட்டு
தமக்கு அந்தரங்கமான திரு உள்ளத்துக்கு
தொழுது எழு என் மனனே -என்று உபதேசித்தாப் போலே(சக்தம் மநோ பவது)

இவரும் -தவ -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும்
ஆத்ம குணங்களான க்ருபா சௌலப்யாதிகளையும் அனுசந்தித்து
திவ்ய வபு -என்று
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானமான திரு மேனியிலே ஈடுபட்டு ஸ்வ சம்பந்தியான மனஸ்ஸூம் திருமேனி ஸ்மரணத்திலே சக்தமாக வேணும் என்கிறார் என்கிறது –

வபு
உப்யதே பித்ரேதி வபு -என்கிற வ்யுத்பத்தியாலே –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ –(ஆரண்ய பர்வம் )என்றும் –
தேவ தேவோ ஹரி பிதா -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-த்வம் மாதா சர்வ லோககானாம் தேவ தேவோ ஹரி:பிதா  த்வயைதத் விஷ்ணுநா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் )என்றும்
பூதாநாம் யோ அவ்யய பிதா (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் )–என்றும் சொல்லுகிறபடியே –
சகல ஜகத் பிதாவான ஸ்ரீ எம்பெருமானாலே கேவலம் ஸ்வ இச்சையாலே சர்வ சேதன விஷயமாக
ஹித பிரவர்த்தன உபயோகி தயா க்லுப்தமாகையாலே-ஜன்ம ஜரா மரணங்களாலே விவர்ஜிதமாய் –
நித்தியமாய் -பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வர்த்தகமான திருமேனியுடைய ஸ்மரணத்தாலே என்னவுமாம் –
திருமேனி அப்ராக்ருதம் ஆகையாலே ஜ்ஞான வர்த்தகமாய் இறே இருப்பது

(ஆத்ம ஸ்வரூபத்துக்கு வர்த்தகமான திருமேனியுடைய ஸ்மரணத்தாலே -மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனேகண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-நமக்கு சரீரம் ஆத்ம ஸ்வரூபத்துக்கு திரோதானம்- ஸ்வாமிக்கு திவ்ய மங்கள விக்ரஹம் -ஸூத்த ஸத்வமய அப்ராக்ருதம் )

மே
1-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -(2-6)என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற என்னுடைய -என்னுதல் –
2-திருமேனி ஸ்மரணத்துக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய என்னுதல் –
3-திருமேனி ஸ்மரணத்த்தில் போக்யதை அறியும் அடியேனுடைய என்னுதல் –
4-அசௌ-என்றத்தை லிங்க வ்யக்தமாக்கி -அதோ மன -என்று மனஸ்ஸூக்கு விசேஷணம் ஆக்கி –
இதர விஷயங்களில் சபலமாய் இதன் வாசி அறியும் மனஸ் -என்னுதல் –
5-ஜ்ஞான ப்ரசரண த்வாரமான மனஸ் -என்னுதல்

(நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு ஸ்ருதௌ மே சக்தம் மநோ பவது –அசௌ-இந்த மனம் இல்லை -எனது மனம் இருக்கிறது -நகு பும்ஸம் -அசௌ-கொள்ள முடியாது லிங்கம் பொருந்தாது -அத மனஸ் -மாற்றிக்கொள்ளலாம்
வாக் குண கீரத்தநேசௌ-இந்த வாக்கு -ஸ்த்ரீ லிங்கம் -எனது வாக்கு இங்கு இல்லை -கீழ் இருந்து கொண்டு கூட்டுப்பொருள்)

(மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-)

மே மன
மனஸ்ஸூ தான் ஜ்ஞான ப்ரசரண த்வாரமே யாகிலும்
அது ப்ராப்த விஷயத்தில் ஆகாமல் அப்ராப்ருத விஷயங்களிலேயாய்த் தடுமாறுகைக்கு அடி
அடியேனுடைய சம்பந்தம் என்கிறார் –

மே மன
அடியேனுக்கு பவ்யமான மனஸ் -என்கிறார் -இத்தால் ஸ்வ சம்பந்திகளுக்கும் இவை உண்டாக வேணும் என்கிறது –(ஸ்வாமி திரு உள்ளம் போல் அணுக்கராக வேணுமே நாமும்)

சக்தம் மநோ பவது
அப்ராப்த விஷயத்தில் அநவரத சஞ்சரணத்தால் உண்டான உறாவுதல் தீரும் படி தேவரீர் திரு மேனியை நினைக்கையே
தனக்கு ஸ்வரூபமாம் படி யாக வேணும் என்கிறார் –(தொழுது எழு என் மனனே என்கிறார்)

ஜ்ஞான இந்த்ரியங்களிலே பிரதானமான மனஸ்ஸூக்கு விஷயம் சொன்ன போதே உப லஷண தயா
மற்ற சஷூராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் (ஐந்து செயல்கள் மேல் சொல்லி இங்கு -ஆதி -கண் மெய் காது மூக்கு நாக்கு )தத் தர்சன தத் சௌகுமார்ய-தத் குண ஸ்ரவண –
தத் திவ்ய கந்த -தத் தீர்த்த பிரசாத -மாதுர்யாதிகள் விஷயங்களாக வேணும்
என்னுமதுவும் சொல்லப் பட்டது –

மனஸ்ஸூக்கு சேஷம் இறே மற்ற இந்த்ரியங்கள் –குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்னக் கடவது இறே

அசௌ வாக்
நிதியைப் பொழியும் முகில் என்று –மன்னா மனிசரைப் பாடி (3-9-4)-இளைத்து இருக்கிற என் நா என்னுதல்
தேவரீருடைய குண கீர்த்தன லுப்தையான என் நா வென்னுதல்

(நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –)

(என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-)

குண கீர்த்தன
தேவரீருடைய ஆத்ம குணங்களான வாத்சல்யாதிகளுக்கும்
திரு மேனி குணங்களான சௌந்தர்யாதிகளுக்கும் வாசகங்களான
திரு நாமங்களைச் சொல்லுகையாலே –
நித்யம் சக்தா பவது -சொலப்புகில் வாயமுதம் பரக்கும் -என்கிறபடியே
திரு நாம அனுசந்தானம் -உபக்ரமே தொடங்கி போக்யமாய் இருக்கையாலே
இதில் என் நாவானது
அநாதி காலமே பிடித்து விஷயாந்தரங்களை ஸ்துதித்து இளைத்துக் கிடந்த தன்னிளைப்பு எல்லாம் தீரும் படி
என்றும் ஒக்க சக்தமாக வேணும் என்கிறார்

(சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே )

குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
இவ்விடத்தில் குண சப்தத்தாலே திரு நாமத்தை லஷிக்கிறது
இப் பிரமாண அநு குணமாக குண அவிநாபத்தைப் பற்றவுமாம் –(குணத்தைப் பிரிந்து ப்ரஹ்மம் இருக்காது என்பதற்கு இதுவே பிரமாணம் )

யாநி நாமாநி கௌணானி

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை சேவிக்க எழுந்து அருளின போது-
அவர் த்யானத்தில் எழுந்து அருளக் கண்டு பின்பு
தண்டன் சமர்ப்பித்து த்யானம் எது மந்த்ரம் எது -என்று கேட்க அவரும் –
த்யானம் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனி
மந்த்ரம் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் -என்று அருளிச் செய்தார் ஆகையாலே
த்யாநாந்ந்தர (த்யான அநந்தர பிராப்தி )பிராப்தி திரு நாமத்துக்கு இறே

பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்தி தே-(அயோத்யா -2-26-அயோத்யா மக்கள் சக்ரவர்த்தி இடம் -தயரதன் பெற்ற மரகத மணித்தடம் இடம் உள்ள கல்யாண குணங்கள் )- என்கிறவிடத்தில் குண சப்தத்தை
திரு நாமத்துக்கு வாசகமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பெரிய ஜீயர்

இப்படி மநோ வாக் காயங்களுக்கு விஷயத்தைச் சொல்லி –
மேல் காயிக வியாபாரம் தேவரீர் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார் க்ருத்யம் -இத்யாதியால்-(க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய)
அன்றிக்கே
காயம் தனக்கு விஷயத்தைச் சொல்லுகிறார் ஆகவுமாம் –விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய விஷ்ணு தத்வம் -விறே

கர த்வயஸ்ய-
கைங்கர்யம் செய்யும் இடத்தில் மற்றொரு துணை தேட வேண்டாத படி அந்யோந்ய சஹாயமான-கரத் வயத்தினுடைய –

க்ருத் யஞ்ச –
வியாபாரமும்

தவ தாஸ்ய கரணம் து பவேத் –
தேவரீர் விஷயமாய் -விலஷணமாய் இருக்கிற கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார்

து -சப்தம் –(அதுவோ என்னில் )
வைஷ்ணவ வாசி -கைங்கர்யத்துக்கு வைஷண்யமாவது-இதர விஷய ஸூஸ்ருஷை போலே ஸ்வரூப விரோதியாய்
துக்கோ தர்க்கமாய் இருக்காய் யன்றிக்கே ஸ்வரூப அநுரூபமாய் ஸூ கோதர்க்கமாய் இருக்கை-
(2)அன்றிக்கே –
பகவத் கைங்கர்யம் போலே சாஸ்த்ரைகசமிதி கம்யமாய் இருக்கை யன்றிக்கே தேவரீர் ஸ்ரீ ஸூக்திகளால்
அறியத் தக்கதாய் இருக்கை யாகவுமாம்
(3)அன்றிக்கே –
கரத்வயஸ்ய து கர்த்தவ் யஞ்ச -என்று அந்வயித்து-முன்பு எல்லாம் இதர விஷயங்களை ஸூஸ்ருஷித்து அதுவே
யாத்ரையாய்ப் போந்த இந்த கரத்வயத்தினுடைய வ்ருத்தி என்னவுமாம் –
(4)அங்கன் அன்றிக்கே –
து சப்தம் -அப்யர்த்தமாய்(அதுவும் என்கிற பொருளில் )காயிக வியாபாரமும் தாஸ்ய கரண ரூபமாக வேணும் என்கிறார் ஆகவுமாம்
உபாய வரணாத்மகத்வம் உண்டு இறே அஞ்சலிக்கு

இத்தால் கரண த்ரயத்துக்கும் உபாய உபேயங்களில் அந்வயம் உண்டு என்கிறது
இத்தால் கர்மாத் யுபாயங்களுக்கு பகவன் நிஷ்ட உபாயத்வ அபி வ்யஞ்சகத்வம் ஒழிய சாஷாத் உபாயத்வம் இல்லை என்கிறது
நிதித்யாசிதவ்ய என்கிறதும் இவனுடைய அஜ்ஞ்ஞதையைப் பற்றி இறே

(5)யத்வா (க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய)சகாரா துகாரங்கள் இரண்டும்(உம்மைத் தொகையும் பிரசித்த அர்த்தமும் )-ஏவகாரார்த்தமாய் -கரண த்வயத்தினுடைய வியாபாரம் தானே
ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமே யாக வேணும் -என்கிறார் ஆகவுமாம்

(6)அங்கனும் அன்றிக்கே –
து -சப்தம் -ஏவகாரார்த்தமாய் விஷயாந்தர ஸூஸ்ருஷையை வ்யவச்சேதிக்கிறது ஆகவுமாம் –

(7)அன்றிக்கே
கர த்வயச்ய ச தவ தாஸ்ய கரணந்து க்ருத்யம் பவேத் -என்று யோஜிக்கவுமாம் –
குரோர் வார்த்தாச் ச கதயேத்-என்னக் கடவது இறே –
இவ் விடத்திலே ச காரத்தாலே கைங்கர்யத்தைச் சொல்லுகிறது

இப்படி கரண த்ரயமும் அநு கூல விஷயங்களில் மண்டி இருந்தாலும் வ்யாபாராந்தரங்களில் ஆனால் கொத்தையாம் இறே –
ஆகையால் கரண த்ரயமும் வ்யாபாராந்தரத்தில் விமுகமாக வேணும் என்கிறார் –

வ்ருத்யந்தரே அஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச -என்று
இது ஏவ கார பர்யாயமான து சப்தத்தாலே நிரசிக்கப் பட்டது அன்றோ என்னில் –
அத்தாலே தாஸ்யே தரங்கள் யாய்த்து வ்யவச்சேதிக்கப் படுகிறது
இங்கு பகவத் கைங்கர்யம் தாஸ்யம் ஆகையாலே அத்தை வ்யவச்சேதிக்கிறது –
ஆசார்ய நிஷ்டனுக்கு த்வய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யம் விரோதி இறே –

கரண த்ரயஞ்ச வ்ருத்யந்த்ரே விமுக மஸ்து –
து சப்தம் வை லஷண வாசியான போது இங்கு விஷயாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது

அன்றிக்கே –
சகாரம் -இவ -வர்த்தமாய் (அதே போல் )-கரண த்ரயமானது வகுத்த விஷயத்தில் சக்தமானால் போலே- தத் இதர விஷயங்களில்
விமுகமாக வேணும் என்கிறார் என்னவுமாம் –
குரோர் அந்யன் ந பாவயேத் -என்னக் கடவது இறே –

———

கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்.

‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது.

இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மன மொழி மெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்க வேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று.

அது இது உது –
இது -சந்நி -ஸமீப வர்த்தி
நடுவில் ஏகது
தள்ளி -அது
தத் -அந்த பரோக்ஷம்
அசவ் மனம் தள்ளி விஷயாந்தரங்களில் சஞ்சரிக்கும்
இவற்றை மாற்றி -சத்தா பவதி -உம்மிடமே ஈடுபட வேண்டும்
அஸேவ்ய சேவை பண்ணிப் போந்த கரங்கள் தாஸ்யத்திலே ஈடுபட்டும்

அபிராப்த விஷயங்களில் -சஞ்சலம் ஹி மனஸா -மாற்றி சேஷி ப்ராப்தமான போக்யமான உம்மிடமே ஈடு படட்டும்

பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட் ப்ரத்யயாந்தங்கள்.

க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி.

முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–3- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம்

—————–

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார்

(ஆச்சார்யர் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருக்கு சிஷ்யர் -தொண்டர் தொண்டர் –தொண்டன் சடகோபன்
குருவி தலையில் பனங்காயை வைக்கக் கூடாதே
அனைவருமே எம்பெருமானார் இடமும் சேர்ப்பார்
நாங்கள் கொள்வான் அன்று -காண் கோவிந்தா -ஆண்டாள் மூலம்
திருமங்கை ஆழ்வாரும் மற்று எல்லாம் பேசினாலும் உன் அடியார்க்கு அடிமை
உபகாரகர் கௌரவம் நம் ஆச்சார்யருக்கே -உத்தாராக கௌரவம் எம்பெருமானாருக்கே -)

கீழ் இரண்டு ஸ்லோஹத்தாலும் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்து –(பராங்குச பாத பக்தம் -ஞானம் பக்தி விசேஷம் -அந்த முற்றிய ஞானத்துக்குத் தக்க அனுஷ்டானம் -ராஜ ஹம்சம் -ப்ருங்க ராஜம் -முகாப்ய மித்ரம் -)
மேல் மூன்று ஸ்லோஹத்தாலே
ப்ராப்ய பிரார்த்தனை செய்து அருளுகிறார் -உபாய வரணம் ப்ராப்ய சேஷம் இறே –

அதில் முதல் ஸ்லோஹத்திலே
கரண த்ரயத்தாலும் ஸ்ரீ தேவரீர் திருவடிகளையே உபாய உபேயங்களாக அத்யவசித்து இருக்கும்
ஸ்ரீ பூர்வாசார்யர்களுடைய திருவடிகளை அடியேன் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்க கடவேனாக வேணும் என்கிறார் –

அன்றிக்கே –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று பிரஸ்துதமான உபாய க்ருத்தியம் இஷ்ட பிராப்தியும் அநிஷ்ட நிவாரணமும் ஆகையாலே
அதில் இஷ்டத்தை மூன்று ஸ்லோஹத்தால் அருளிச் செய்கிறார்

அதில் பிரதமத்தில்
ஆசார்ய அன்வயத்துக்கு அவஸ்ய அபேஷிதராய் (உபகார ஆச்சார்யரைப் பற்றியே உத்தராக ஆச்சார்யரான இவரைப் பற்ற முடியும்-வானர முதலிகளைப் பற்றியே பெருமாளை பற்றினான் விபீஷணன்-எறும்பி அப்பாவும் கோயில் அண்ணன் மூலமே மா முனிகளைப் பற்றினார்   )கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வ அனுஷ்டான உபதேசங்களாலே தத் விஷய ப்ரீதி வர்த்தகரான உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை தமக்கு யாவதாத்ம பாவியாக வேணும் என்கிறார் –வாசா -இத்யாதியால் –(யாவதாத்மா பாவி -நித்ய விபூதியிலும் இது –உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை-நடக்கும் அன்றோ )

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –3-

ஸ்ரீ யதீந்த்ர தலைவனே வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் உம் திருவடி தாமரைகளை இடைவிடாமல் உபாசிக்கும்
ஆச்சர்யர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருக் குருகை பிரான் பிள்ளான் முதலிய புருஷர்களின் திருவடிகளை
ஸ்மரிப்பதிலேயே நோக்கோடு சர்வ காலமும் இருப்பேனாக

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

மநஸா – மனத்தினாலும்,

வாசா – நாவினாலும்,

வபுஷா  – தேஹத்தினாலும்,

யுஷ்மத் – தேவரீருடைய,

பாதாரவிந்த யுகளம் – தாமரை மலர் போன்ற திருவடிகளின் இரட்டையை,

பஜதாம் – நிரந்தரமாக ஸேவித்துக் கொண்டிருக்கிற,

குரூணாம் – ஆசார்யர்களாகிய,

கூராதி நாத குரு கேஸ முக ஆத்ய பும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய்,

ஸததம் பாத அநு சிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக,-அநு சிந்தந-சேஷத்வ சிந்தனை

பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

———-

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா -என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –

(பரோஷா மித்ரா பாந்தவ –உறவினரை பின்பும் கார்யாந்தரே வேலைக்காரர்கள் -பிள்ளையை எப்பொழுதும் கொண்டாடக் கூடாது)

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்-(ஸ்ரீ விஷ்ணு தத்வம் )இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ் விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

வாசா
வாய் அவனை அன்றி வாழ்த்தாது -என்று பிரதம பர்வ நிஷ்டர் பகவத் விஷயம் அல்லது மற்ற ஒரு விஷயத்தை
ஏத்தாதாப் போலே இவர்களும் வகுத்த விஷயம் ஒழிய மற்ற ஒன்றை ஏத்தாத படி –
அவர்களுக்கு வ்யாவ்ருத்தம் தேவதாந்த்ரம் –
இவர்களுக்கு பகவத் விஷயம் -நாவ கார்யம் (4-4-1)-என்றவர்கள் இறே இவர்கள்

(நாக்குக்கு அகார்யம் -ஓம் நமோ நாராயண கூடாது ஸ்ரீ மத் ராமாநுஜாயா நம சொல்பவர்கள்)

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-

மநஸா
மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –
வாய் திறக்க இவ்விஷயத்தில் அல்லது வாய் திறக்காதது போலே
நெஞ்சுக்கும் விஷயம் அது அல்லது வேறே இல்லையாய்த்து இவர்களுக்கு –

பாட்டினால் நீ நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களுக்கு க்ரமம் இல்லையே

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை -உமக்கு தியானத்துக்கு விஷயம் எது என்று கேட்ட பின்
அவர் அருளிச் செய்த திரு வார்த்தையை நினைப்பது –(ஆளவந்தார் திருமேனியையே நித்ய நினைவு )

வாசா மனசா வபுஷா ச
என்று தம் கரணங்களின் ப்ராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –

யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம்
இவர்கள் வேப்பங்குடி நீர் இருக்கிற படி-(மருந்து உபாயம் -)
இவ் வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமாய் சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளை
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் நிரந்தரமாக ஸேவிக்குமவர்களுடைய-

நித்யம் யதிவர சரணவ் சரணம் மதீயம்-என்று ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும்
ஸ்ரீ பரமாச்சாரியார் அருளிச் செய்தார் இறே

திருவடிகளை வாக்காலே பஜிக்கை யாவது தத் வைலக்ஷண்யத்தை புகழுகை
மனஸ்ஸாலே பஜிக்கையாவது -திருவடிகளை நெஞ்சால் நினைக்கை-
சரீரத்தாலே பஜிக்கையாவது ப்ரணமாமிக்கு விஷயம் ஆக்குகை –

கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ ஆழ்வான் என்ன –
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாற்றத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் ஸ்ரீ குருகைப் பிரான் என்று சாத்தப் பட்ட திரு நாமத்தை உடைய
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுடைய

முக சப்தத்தாலே
ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது –
இவர்களுடைய கரண த்ரய சமாஸ்ரயணமும் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி பூர்வாக ஜ்ஞான பிரதத்வமும்
இவர்கள் கிரந்தங்களிலே காணலாம்

பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம்
அவர்கள் தேவரீருடைய பாதாரவிந்தங்களை அநுவரதம் த்யானம் பண்ணுமா போலே
இவ்வநுஸந்தானம் காதாசித்கமாகை அன்றிக்கே நித்தியமாக வேணும் என்கிறது –

அநு விந்தனம்-என்ற பாடமான போது-
அநுஸ் யூதம் விந்தனம் -என்று கொள்ளும் போது சதத சப்தம் சங்கதமாகாது

அநு -ஹித அர்த்தத்திலேயாய் கிருஷ்ண அநு ஸ்மரணம்-என்னும் இடத்தில் போலே
தத் விஷயத்வ சேஷத்வ அனுசந்தானத்தைச் சொல்கிறது –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்தே(107) -என்கிற அர்த்தத்தைச் சொல்கிறது –

இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.–107-

இவருக்கு இவ் விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம்-அமுதனார் சரமத்தில் அருளியதை இவர் மூன்றாம் ஸ்லோகத்திலே பிரார்த்தித்து அருளுகிறார்
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம் அவரவர் திருவடிகளில் பிரார்த்திக்கை அவர் இடமே பிரார்த்திக்கும் படி யாய்த்து

தாத்பர்யம்
எம்பெருமானாரே
தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை மனத்தினால் த்யானித்தும் வாயினால் அவற்றின் வைலக்ஷண்யங்களை ஸ்தோத்ரம் பண்ணியும் சரீரத்தால் வணங்கியும் -இப்படி கரண திரயத்தால் நிரந்தர சேவை செய்யும் பாக்யவான்களான கூரத்தாழ்வான் பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி தத் ஏக பரமாய் இருக்கும் படி அனுக்ரஹிக்க வேணும்
எம்பெருமானார் சம்பந்திகளின் திருவடிகளில் ப்ராவண்யம் நித்தியமாக செல்லும்படியும் அவர்களுக்கு சேஷ பூதனாக இருப்பதற்கு அவர் இடமே பிரார்த்தித்து அருள்கிறார்

(அபகத கதமாநைரந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தைரர்த்த காமாநபேக்ஷை: ||
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவரமுநி ப்ருத்யை ரஸ்து மே நித்ய யோக:|| 97-இதே போல் எறும்பி அப்பாவும் மா முனிகளின் அடியார் அடியார் சம்பந்தத்தைப் பிரார்த்திக்கிறார் )

(மதம் மானம் என்று சொல்லக்கூடிய துர்க்குணங்களற்றவர்கள்,
சரமோபாயம் என்று சொல்லக்கூடிய ஆசார்ய நிஷ்டை உள்ளவர்கள், உண்மைப் பொருள் அறிந்தவர்கள்,
அர்த்தம் காமம் இவற்றை வெறுத்தவர்கள், எல்லா ஜனங்களுக்கும் நண்பர்களாயுள்ளவர்கள், –
இவர்களுடன் எனக்கு ஸம்பந்தம் நித்யமாக இருக்க வேண்டும்.)

———–

வாசா
திருவடிகளுடைய போக்யதாதிசயம் நெஞ்சால் நினைப்பதற்கு முன்னே
வாயால் சொல்லலாம் படி காணும் இருப்பது

வாசா -என்ற அனந்தரம்-
யதீந்திர -என்கிறது
இந்த்ரிய நிக்ரஹத்தால் பிறந்த ஐஸ்வர்யம் ஸ்வ சம்பந்திகள் அளவும் சென்று –
அத்தை அறியும்படியாய் இருக்கையாலே –
இத்தால் தம்முடைய கரணங்களையும் நியமிக்க வேணும் என்று கருத்தாகிறது

மநஸா வபுஷா ச
மனஸ் அடியாக வரும் க்ரமம் குலைந்தது -கரணங்களுடைய பதற்றத்தாலே –
ப்ரேமம் தலை எடுத்தால் க்ரமம் பார்க்க ஒட்டாது இறே(யத் ஹி மனஸா த்யாயதி -தத் வாஸா வசதி- யத் வாஸா வததி -தத் கர்மணா கரோதி. மனஸ் ஏகம்ந ஸாஸ்த்ரம் ந ஏவ க்ரம -பத்திமை நூல் வரம்பில்லையே )

வாங் மன காயை -என்று கூட்டிச் சொல்லாதே பிரித்துச் சொல்லுகையாலே
கரண ஏக தேச சமாஸ்ரயணமும் கார்யகரம் என்கிறது

யுஷ்மத்
ப்ராப்தரான தேவரீருடைய -என்னுதல் –
ஆன்ரு சம்சய பிரதானரான தேவரீருடைய என்னுதல்

பாதார விந்த யுகளம்
அப்ராப்தமாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயத்தை யுடைய திருவடிகளுடைய யுகளத்தை-

யுகளம் என்கையாலே
மற்றொரு துணை தேட வேண்டாத படி நிரபேஷமாய் போந்திருக்கையும் –
சேர்த்தி அழகையும் -சொல்லுகிறது

பஜதாம்
போக்யதாதிசயத்தாலே இடைவிடாமல் ஆஸ்ரயித்து கொண்டு இருக்குமவர்களாய்-
உபாயமாக ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல்
பஜனம் -பக்தி விசேஷம் இறே

குருணாம்
திருவடிகள் சம்பந்தத்தால் தங்கள் அஜ்ஞ்ஞானம் போகிற மாத்ரம் அன்றிக்கே தாங்களும் ஸ்வ சம்பந்திகளுக்கு
தேஹாத்ம பாவ அஜ்ஞ்ஞாந நிவர்த்தகராம் படி யாகிறதும் இவர் திருவடிகளை ஆஸ்ரயித்ததாலே–
அஜ்ஞ்ஞான நிவர்த்தகதவம் இறே குரு சப்தார்த்தம் –

யுஷ்மாத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
1-ப்ராப்தமான விஷயத்தை பற்றினவர்கள் ஆகையாலே -அப்ராப்த விஷயங்களிலே ப்ராப்தத்வ புத்தி நிவர்த்தகரான என்னுதல் –
2-பரம போக்யமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே -அபோக்ய விஷயத்தில் போக்யதா புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
3-நிரபேஷ உபாயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே சாபேஷ உபாயங்களிலே உபாயத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல் –
4-க்ருபா மாத்ர பிரசன்னமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே –தேஹி மே ததாமி தே-என்கிறபடியே
இத் தலையில் ஏதேனும் ஒன்றை அபேஷிக்கும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
அன்றிக்கே –
5-பரித்யஜ்ய -வ்ரஜ -மோஷயிஷ்யாமி -என்னும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்(சேஷி ராமானுஜன் கண்ணன் போல் அல்லவே சேஷ ராமானுஜன்-அவனைப் போல் பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் அன்றி இவர் மோக்ஷ ஏக ஹேது அன்றோ )

இவருடைய த்யாக ஸ்வீ காரங்கள் இரண்டும் சம்சாரிகளுடைய சம்சார மோஷத்துக்கு இறே
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று மண்ணின் தலை உதித்தவர்-95- இறே –(விண்ணின் தலை நின்று-நித்ய விபூதி தியாகம் –மண்ணின் தலத்துதித்து-லீலா விபூதி ஸ்வீ காரம் -இதுக்குப் பிரமாணம் )

(உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-)

——–

கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ ஆழ்வான் என்ன –
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாற்றத் திரு உள்ளமாய் –ஸ்ரீ எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் ஸ்ரீ குருகைப் பிரான் என்று சாத்தப் பட்ட திரு நாமத்தை உடைய
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுடைய

முக சப்தத்தாலே
ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது –
இவர்களுடைய கரண த்ரய சமாஸ்ரயணமும் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி பூர்வாக ஜ்ஞான பிரதத்வமும்
இவர்கள் கிரந்தங்களிலே காணலாம்

பாதாநுசிந்தன பரஸ்
இவர்கள் பண்ணின உபகாரங்களை நினைத்து இவர்கள் ஸ்ரீ பாதங்களுடைய அவிச்சின்ன ஸ்ம்ருதியிலே
தாம் ஆசக்தராக வேணும் என்கிறார் –

சததம்
இது தான் கால தத்வம் உள்ளதனையும் நடக்க வேணும் என்கிறார்

பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –
உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு தாரகம் ஆகையாலே அது தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்கிறார்

பாதாநுசிந்தன பாரோ பவேயம்
வ்யதிரேகத்தில் தாம் உளர் அன்று போலே காணும் -உபேயத்வ அபிரதிபத்தி இறே கருதக்நதா பீஜம்(செய்ந்நன்றி கொல்ல விதையாகுமே )
அன்றிக்கே
நாம் ஆதரிக்கைக்கு ஸ்ரீ எம்பெருமானாருடைய சாஷாத் சம்பந்தி சம்பந்தம் வேணுமோ –
அவர்களுடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே அமையாதோ என்கிறார் –

———–

மங்களா சாசனம் செய்து அருளி ஸ்தோத்ரம் ஆரம்பிக்கிறார்
இரண்டாம் மூன்றாம் ஸ்லோகங்களில் யதீந்த்ரர் அடியார்கள் உண்டு
மேல் யதீந்த்ரர் -அது ஸித்திக்க இவை வேண்டுமே

முதலில் அரங்கன் ஆழ்வார்
அடுத்து ஆழ்வார் -அங்கமான ஆழ்வார்கள் கூரத்தாழ்வான்
அடுத்து அனைத்து பூர்வர்கள்

மனஸ் -மத்யமம் -மனஸா வாஸா -மனஸா வபுஷா

யுஷ்மத் -உன்னுடைய -பூஜ்ய பஹு வசனம்

அன்றிக்கே பலர் -உன்னுடைய -என்று ராமானுஜர் ஆழ்வார் எம்பெருமான் மூவருடைய திருவடிகள் என்றுமாம்
யுகளம் -இரட்டை -என்றது -த்வயம் சரணவ் -இரட்டை இல்லை -பூர்வ வாக்கியம் உபாயம் மட்டும் -இரண்டு ஆகாரமும் அங்கு இல்லையே
இங்கு இரண்டு ஆகாரங்களையும் காற்றலாம் -பாவானத்வமும் போக்யமும்
ஸஹாயாந்தர நிரபேஷ்யம் காட்டவுமாம்

மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு, அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்கூராதிநாதர்-கூரத்தாழ்வான். குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான். முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க. குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை (அருளிச் செயல்களுக்கு வியாக்யானமும் ஸ்தோத்ரங்களும் அருளிச் செய்தவர்கள் அன்றோ )இந்த குருஸப்தம் குறிக்கும்.

மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும். இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும்.

பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால் பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய்,(ஷேத்ரஞ்ஞர்களுக்கு யதிராஜர் ஞானம் பிறக்க பாவனத்வம் உண்டாகும்-அரவிந்த சப்தம் பிராப்தம் போக்யம் காட்டவே )பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும்.

அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால் கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–2- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

இப்படி தொடங்கின ஸ்தோத்ரம் நிர் விக்னமாகத் தலைக் கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அத்தாலே நிறம் பெற்றவராய்க் கொண்டு ஸ்ரீ எம்பெருமானாருடைய பகவத் பாகவத ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஆஸ்ரித ஜனங்களுக்கு சரம ப்ராப்யராய் இருக்கும் படியையும் சொல்லி சாதரமாக ஏத்துகிறார் –

உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதிர்
ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தமம் -( சேர்ப்பாரை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு ஆக்கி -ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக உடைய குருவை அடைந்து  )என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பகவத் பிராப்தி சாதனமாக சாஸ்திர விஹிதம் ஆகையாலே(கற்க கசடறக் கற்க -கற்ற பின் நிற்க அதற்குத் தக-அனுஷ்டானம் )
கீழ் ஸ்லோஹத்திலே இவருடைய ஜ்ஞான பூர்த்தியைச் சொல்லி
இஸ் ஸ்லோகத்திலே தத் அனுகுணமான
அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ரங்கேத்யாதியாலே

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-

ஸ்ரீ ரெங்கராஜனின் திருவடி தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சமும்
ஸ்ரீ பராங்குசர் திருவடி தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் வட்டம் இடும் வண்டை ஒத்தவரும்
ஸ்ரீ பட்டார் பிரான் பர காலர் இவர்களின் திருமுகங்களுக்கு மலர்ச்சி தரும் ஸூரியனாகவும் மித்ரராயும்
ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு அடைக்கலமாகவும் உள்ள ஸ்ரீ யதி ராஜரை துதிக்கிறேன் —

பதவுரை:-

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜ ஹம்ஸம் போன்றவரும்,

இது எதனால் என்றால் மேல்-

ஸ்ரீமத் பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – சம்சாரிகளை அங்குசம் இட்டு தலை வணங்கப் பண்ணும் -ஸ்ரீமத் பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய பரமபோக்யமான திருவடிகளென்னும் தாமரை மலர்களில் (தேனைப் பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,

ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – மங்களா ஸாஸன பரரான ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு மிருத்யு -பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரை மலர்களை மலரச் செய்கிற ஸூர்யன் போன்றவரும்,

ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் – சிஷ்ய ஆச்சார்ய இரண்டுக்கும் ஸீமா பூமியான ஸ்ரீவத்ஸ சிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,-ப்ராப்ய ப்ராபக பூமியாக –

யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,

ஈடே –துதிக்கிறேன்.

———–

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்

ஸ்ரீ பகவத் விஷயத்தில் வந்தால் வெளிறான அம்சத்தைக் கழித்து சாரமான அம்சத்திலே யாயத்து இருப்பது –
பர வ்யூஹங்கள் நித்ய முக்தருக்கும் முக்த பிராயருக்கும் (சனகாதிகள் பஃதாஞ்சலி ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டர் )முகம் கொடுக்கும் இடமாகையாலும்
விபவ அந்தர்யாமிகள் புண்யம் பண்ணினாருக்கும் உபாசகருக்கும் முகம் கொடுத்து நிற்கிற நிலையாகையாலும்
அவ்வோ நிலைகளுக்கு ஓரொரு குறைகள் உண்டு

அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -(நீர் இந்தளூரீரே-4-9-5)என்று பரத்வாதிகளுக்கு ஆளாகாத பிற்பாடாருக்கும் முகம் கொடுத்து நிற்கும்
அர்ச்சாவதாரத்துக்கு சொல்லலாவது குறை ஒன்றும் இல்லையே

(தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-)

இப்படி நீர்மைக்கு எல்லை நிலமான அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் வேர் பற்றான ஸ்ரீ கோயில் நிலையிலே யாயத்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆழங்கால் பட்டு இருப்பது –
ஆகையால் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் மிக்க போக்யதையை அனுசந்தித்து
சரஸ சஞ்சரணம் பண்ணும் படி சொல்கிறது –(பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும்)

பரமபத ஐஸ்வர்யத்தையும் சிராங்கிக்கும் படியான விபவ ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் –
ரதிங்கத-(ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம்ஸ்ரீ ரெங்கம் ஆசைப்பட்டு வந்த இடம் )என்கிறபடியே சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனையும் ஸ்வ போக்யத்தையாலே ஆழங்கால் படுத்தும் படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியை –
அரங்கமாளி-(திருவாய்7-3)என்கிறபடியே –
ஸ்வ அதீனமாக ஆண்டு கொண்டு போருகையாலே வந்த பெருமையை யுடைய
ஸ்ரீ அரங்கத்தம்மான் திருக் கமலப் பாதத்தில் அலை யெறிகிற மது ப்ரவாஹத்திலே சிறகு அடித்துக் கொண்டு வர்த்திக்கிற ஹம்ஸ ஸ்ரேஷ்டராய் உள்ளவரை -என்கை –

(அறுகால சிறு வண்டும் திருவடித்தாமரைகளும்
சேஷி சேஷ திருவடி இணைகள் சேர்ந்து ஸேவை தானே நமக்கு உத்தேச்யம் )

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –)

(அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?)

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் –என்னும்படி இறே
இவ்விஷயத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –

(நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –)

ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-

இனி பாகவத விஷயத்தில் வந்தாலும் -(1)ஸ்வ யத்னத்தால் ஸ்ரீ ஈஸ்வரனைப் பெறப் பார்க்கும் ப்ரபத்தியிலே
அன்வயித்து இருக்கச் செய்தே தங்கள் ஸ்வீ காரத்தை சாதனமாக கொள்ளுமவர்களையும்
(2)அவனே உபாயமாகக் கொள்ளா நிற்கச் செய்தேயும் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருக்கிறவர்களையும்
(3)மகிழ்ந்து ப்ராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்கிறதை அத்யவசித்து -இப்போதே பெற்று அனுபவிக்க வேணும்
என்னும் அபிநிவேசத்தாலே கண்ணும் கண்ணீருமாய் யாய்த்து இருக்கும்படியான ஆர்த்தியை உடையராய்

பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டில்-கண்டியூர் அரங்கம் (திருக்குறும் தாண்டகம் -19)-இத்யாதிப்படியே
ஸ்ரீ கோயில் முதலான ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களில் ஆழங்கால் பட்டு இருக்கும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலே யாய்த்து திரு உள்ளம் ஊன்றி இருப்பது

ஆகையால் கைங்கர்ய அபிநிவேசம் ஆகிற ஸ்வரூப அனுரூபமான சம்பத்தை உடையவராய்
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஈஸ்வரோஹம் என்று இருக்கும் சம்சாரிகளையும்
ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே வசீக்ருதராய் தலை சீய்க்கும் படி பண்ணுகையாலே ஸ்ரீ பராங்குசர் என்னும்
திரு நாமத்தை யுடையராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார்களில் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில்
போக்யதா அனுசந்தானமே நித்ய ஜீவனமாய் யுடையவர் என்கை –

கீழே பராங்குச பாத பக்தம்-என்று
அவர் பக்கல் ப்ரேமத்தை உடையவர் என்கிற மாத்திரம் சொல்லிற்று –
இங்கு அந்த ப்ரேம அனுரூபமாக
அவர் திருவடிகளில் போக்யத்தையுள் புக்கு அனுபவிக்கும் படி சொல்கிறது –

(கீழ் ஞானத்துக்கு ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
இங்கு குண க்ருத அனுபவம்-அனுஷ்டானத்துக்கு உபயோகி)

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களில் காட்டில் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தி தோற்ற அவர்களோடே கூட அநுஸந்திக்குமது
மாத்திரம் போராது என்று தனியே முற்பட அனுசந்தித்தார்
இப்போது அவர்களோடு கூட அனுசந்தித்து அருளுகிறார் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை அல்லாத நாய்ச்சிமாரோடு கூட அநுஸந்தியா நிற்கச் செய்தேயும் முந்துறவே
ஸ்ரீ யபதி -என்று அவள் வ்யாவ்ருத்தி தோற்ற உடையவர் அனுசந்தித்து அருளினால் போலே
அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களில் இவருக்கு அவயவ பூதர் என்னும்படி இறே இவருடைய ஏற்றம்

ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-

மங்களா சாசன ரூபமாக ஐஸ்வர்யத்தை உடையவராய் ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வாருடையவும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற பிரதிபக்ஷங்களுக்கு ம்ருத்யு பூதரான (பர காலனான )ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடையவும்
திருமுக மண்டலம் ஆகிற தாமரையை அலர்த்தும் ஆதித்யன் -என்கை –

ஆளுமாளார் (8-3-3)-என்கிறவன் தனிமை தீர ஆள்கள் சேர்த்து அருளுகையாலும்
பாஹ்ய குத்ருஷ்டிகளைக் கிழங்கு எடுத்துப் பொகடுகையாலும் இவரைக் கண்ட போதே அவர்கள் திரு முகம் அலர்ந்த படி –

(ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-)

(நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –)
(பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாசநி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–-தாடீ பஞ்சகம்–1-)

ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே

கீழே –காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்-என்று சாமாந்யேந திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு உபாய பூதர் என்னும் இடம் சொல்லிற்று –(சாமான்யேந அதி தைவம் -ஸாம்யம் காட்ட -த்வார த்ரயம் -அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராசர் )
இங்கு அவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாம் படியான ஏற்றத்தை யுடையராய்
சிஷ்ய வர்க்க க்ரமத்துக்கு சீமா பூமியான ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு
ப்ராப்ய -பிராபகங்களாக இரண்டுமே தாமேயாக இருக்கும் படி சொல்கிறது

யதிராஜமீடே-
இப்படி ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய்
ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்

(ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் யதிராஜ மீடே-ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் யதிராஜ மீடே-ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே-தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய் ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்)(இருப்பிடம் மாத்திரம் அங்கு –அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ –ஹம்ஸம்
நம்மாழ்வார் இடம் வண்டு -உண்டு அனுபவிப்பார்-இரண்டும் தாமரை தான் ஆனாலும் அங்கு இருப்பிடம் மாத்திரம் -ஆழ்வார் உகந்த விஷயம் என்பதால் –
மதுரகவி நிஷ்டை –கரிய கோலத்திருவுரு காண்பர் -இங்கு உண்டு களிப்பர்)

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் * உயர் குருவும்
வெறிதரு பூமகள் நாதனும் * மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர்
அறி தர நின்ற * இராமானுசன் எனக்கு ஆரமுதே.
 
தாத்பர்யம்
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி போல் அன்றிக்கே -ஸர்வ ஜனங்களும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமாக கோயிலிலே திருவனந்தாழ்வான் மேல் இனிதாகக் கண் வளரும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக்கமல பாதத்தில் அலை எரிகிற மது பிரவாஹத்திலே சிறகு அடித்து சஞ்சரிக்கும் ராஜ ஹம்ஸம் போன்றவராய் (இருப்பிடம் மாத்திரம் இங்கு – -எம்பெருமானையும் தென்னா தென்னா என்று தலை குவிக்க வைக்க ஆழ்வார் -அவர் திருவடிகளில் போக்யதையை அனுபவிக்கும் –மாறன் அடி பணிந்து உய்யும் எம்பெருமானார் )
ஸூவ ஸூக்திகளால் ஈஸ்வரனையும் சம்சாரிகளையும் வசீகரித்து தலை சீய்க்கும் படி பண்ணுகையால் பராங்குசர் என்னும் திருநாமம் உடையவராய்-
ஸர்வ வித பகவத் கைங்கர்ய அபிநிவேசம் -ஸ்வரூப அனுரூப சம்பத்தை உடைய -இதுவே ஆழ்வாருக்கு நித்ய ஜீவனம் –
நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில் போக்யதா அனுபவமே நித்ய ஜீவனமாகக் கொண்டவராய்
மங்களா சாசனத்துக்கு ஆள் சேர்த்து அருளுகையாலும் பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து ஸூவ மத சம்ஸ்தானம் பண்ணி அருளுகையாலும் பெரியாழ்வார் பரகாலன் இவர்களுடைய திரு முக மலர்த்திக்கு ஹேது பூதராய்-

ஒரு மகள் தன்னை உடையேன்*  உலகம் நிறைந்த புகழால்* 
திருமகள் போல வளர்த்தேன்*  செங்கண் மால் தான் கொண்டு போனான்* 
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*  பெரும்பிள்ளை பெற்ற அசோதை* 
மருமகளைக் கண்டு உகந்து*  மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?-என்னும்படி ஏற்றமுடைய கூரத்தாழ்வானுக்கு ப்ராப்ய ப்ராபக பூதராய் எம்பெருமானாரை இக் குணங்களில் கால் தாழ்ந்து ஸ்துதிக்கிறேன் -என்கிறார்

(மூன்று வரிகளிலும் தாமரை -ஒன்றில் வசிக்கும் ஹம்சம் -அடுத்ததில் மதுவைக் குடிக்கும் வண்டாய்- -இறுதியில் மலர்த்தும் ஸூர்யன் -மூன்று ப்ரபாவங்கள் )

———-

ஸ்ரீ ரங்க-
ஈஸ்வரனே உபாயம் என்று இருக்குமவர்க்கு ஜ்ஞான அனுஷ்டானங்களை கொண்டு பிரயோஜனம் என் என்னில்
இவருக்கு இவற்றால் வருவதொரு பிரயோஜனம் இல்லை யாகிலும் இவை தான்
ஸ்வரூப அநு பந்திகள் ஆகையாலே விட அரிதாய் இருக்கும்
ஸ்வரூப அநு பந்தங்கள் யாய்த்து கைங்கர்ய ரூபங்கள் யாகையாலே –
ரஜ்யதே அநேநேதி ரங்கம்-ரஜ்யதே அஸ்மின் இதி ரங்கம் (மநோ ரஞ்சனம் இதனால் ஸந்தோஷம்-இந்த தேசத்தில் மகிழ்கிறார் )என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் சர்வ சேதனரும் தன்னை ஆஸ்ரயிக்கையால் வந்த ப்ரீதிக்கு காரணம் ஆகையால்-அவர் தமக்கே ப்ரீதி விஷயமான தேசம் என்கிறது(அற்ற பத்தர் சுற்றி வாழும் அரங்கம் )

அதுக்கு மேலே ஸ்ரீ மத்வம் ஆகிறது-
தேசாந்தர கதோ வா அபி த்வீபாந்தர கதோ அபி வா ஸ்ரீ ரெங்க அபிமுகோ பூத்வா ப்ரணீபத்யந சீததி மரங்கம் ரங்கமதி ப்ரூயாத் ஷூத் ப்ரசகல நாதிஷூ ப்ரஹ்ம லோகம் அவாப்நோதி சத்யா பாப ஷயன் நரபி–இத்யாதியில் சொல்லுகிறபடியே
இதுக்கு உண்டான பகவத் அங்கீகார பலத்தாலே-தான் இந்த திக்கை நோக்கி தண்டம் சமர்பித்தல்-பேரைச் சொல்லுதல் செய்வார் என்ன –
அவ்வளவாலே அவர்களுக்கு உண்டான சமஸ்த துரிதங்களையும் போக்கி அபிமத பல விசேஷத்தையும் கொடுக்கைக்கு ஈடான சக்தி விசேஷமாதல்(தேசோயம் சர்வ காம துக் )

ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமாநம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே
ஸ்வயம் வ்யக்த தேசங்களில் பிரதான்யமாதல் –
ஸ்ரீ சப்தம் பூஜ்ய வாசியாகையாலே பகவத் சம்பந்தத்தால் உண்டான பூஜ்யதையைச் சொல்லவுமாம்-ப்ராப்யதையைச் சொல்லவுமாம் – –

அன்றிக்கே
ஸ்ரியா ரங்கம் -ஸ்ரீரங்கம் என்கிற வ்யுத்பத்தியாய் –
அத்தாலே ஔதார்ய காருணிகதா ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத -ஸ்ரீ குண ரத்ன கோசம் – 57-
என்கிறபடியே ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய ஔதார்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசம் -என்னவுமாம்-

(ஔதார்ய காருணிகதா ஆஸ்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-)

(தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.)

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கை பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-

பேணுமூர் –அவன் விரும்பி வர்த்திக்கும் தேசம்-பேரும் அரங்கமே –அவ் ஊரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம்அவனும் பெண் ஆளன் ஊரும் அரங்கம்
பெண்களுக்கு எல்லாம் பொது என்றபடி –)

ராஜ –
1-அத்தேசத்துக்கு நிர்வாஹகன் ஆகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்-
2-தன்னுடைய சௌலப்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசத்தைப் பெறுகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்
3-ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னைத் தனக்கு கொடுக்கைக்கு பாங்கான தேசத்தைப் பெறுகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல் –

ஸ்ரீ ரங்க ராஜ –
உபய விபூதி ஐஸ்வர்யத்தைக் காட்டில் இவ்வைஸ்வர்யம் இவனுக்கு விலஷணமாய் காணும் இருப்பது என்கிறார் –

ஸ்ரீ ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது அது தனக்கு நிரூபகமாக இறே அபிமாநிப்பது

சரணாம் புஜ
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளுக்கு உபமானம் நேர் இல்லாமையாலே
உபமேயம் தன்னையே உப மானமாகச் சொல்லுகிறது

ஸ்ரீ ராஜ ஹம்சம் –
அத் திருவடித் தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சம் காணும் இவர் என்கிறார் —
1-அதாவது ராஜ ஹம்சதுக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆகிறாப் போலே
இவருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானம் ஆன படியும் என்கை
ரமந்தே யோகிந ச அனந்தே சத்யா நந்தே சிதாத்மநி -என்னக் கடவது இறே -ஆகையாலே
அத்ரைவ ஸ்ரீ ரங்க ஸூக மாஸ்வ-என்று ஸ்ரீ பெரிய பெருமாள் அனுக்ரஹித்ததும்

அன்றிக்கே
2-தாமரைக்கு ராஜ ஹம்சம் பிரகாசகம் ஆனாப் போலே இவரும் திருவடிகளுக்கு பிரகாசகர் -என்னவுமாம்-சேஷ சேஷிகள் ஒருவருக்கு ஒருவர் பிரகாசகர் இறே

அன்றிக்கே –
3-கபர்த்திமத கர்தமம் -யதிராஜ சப்ததி -38- இத்யாதியில் சொல்லுகிறபடியே
ஸ்ரீ பகவத் தத்வத்துக்கு பாஹ்ய குத்ருஷ்டிகளால் உண்டான அப்ரகாசதையைப் போக்கி அந்த தத்வத்தை ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களால் பிரகாசிப்பிக்குமவர் என்னவுமாம்

(கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹநா முகே நிபதத பர ப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி-(38-உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்)

(பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-)

(ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே )

பகவத் தத்வம் ஸ்வயம் பிரகாசகமாய் யன்றோ இருப்பது -இவர் பிரகாசகராவது என் என்னில் –
அது ஸ்வயம் பிரகாசகமே யாகிலும்
தத் விஷய ஜ்ஞானம் இல்லாதவர்க்கு அபிரகாசமாய் யன்றோ இருப்பது –
அவர்களுக்கும் தத் விஷய ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தை
பிரகாசகமாம் படி பண்ணுகை-ஆகையால் ஈஸ்வரர் சேதனர் இருவருக்கும் உபகாரகர் என்கிறது
இவ் வுபகாரம் சேஷி முக விகாச ஜனகம் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமாய் இருக்கும்

கீழ் இவருக்கு உண்டான பகவத் அங்கீகாரத்துக்கு நிதானத்தைச் சொல்லுகிறது -மேல் –

(கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.)
(ஸ்ரீ ரெங்க ராஜனுக்கு ஸ்ரீ -ஆழ்வாருக்கு ஸ்ரீ மத் பராங்குசம் -இதுவே ஸ்ரேஷ்டம் -உண்டோ சடகோபருக்கு ஒப்பு-ராமன் இஷ்வாகு வம்சம் -விசாகம் குல நக்ஷத்ரம் -)

ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
இவருக்கு ஸ்ரீ மத்வமாவது
1-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று
அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் -(6-5-11)என்கிறபடியே ஸ்ரீ ஈஸ்வரனை சர்வ வித பந்துவாகப் பற்றின சீர்மை யாதல்
2-உண்ணும் சோற்றில் படியே அவன் தன்னையே தாரக போஷக போக்யங்களாகப் பற்றின சீர்மையாதல் –
3-ஒழிவில் காலப்படியே சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சமஸ்த வித கைங்கர்யங்களையும் தாம் ஒருவருமே செய்ய வேணும் என்கிற மநோ ரதமாதல் –
அன்றிக்கே
4-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி தம்படி
ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் உண்டாம்படி பண்ணுகை யாதல்

பராங்குச
இப்படிகளாலே பாஹ்ய குத்ருஷ்டிகளை வசீகரிக்க வல்லரான ஸ்ரீ ஆழ்வாருடைய

பதாம் புஜ ப்ருங்க ராஜம்
அத் திருவடித் தாமரைகளின் மதுவைப் புஜித்து-மதுபான மத்தமாய் சுழன்று திரிந்து விளங்குகின்ற ப்ருங்க ஸ்ரேஷ்டரான
இத்தால் பிரமரமானது தாமரையின் மதுவை உண்டு தன் குறை தீர்ந்தற்று அன்றிக்கே மதுபான மத்தமாய் சுழன்று திரியுமா போலே
இவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து- கவியமுதுண்டு களித்து -குமதி க்ருதிகளை மதியாதே- பூ மண்டலம் எங்கும் விஜய யாத்ரையாய் சஞ்சரிக்குமவர் என்கிறது(ஸ்ரீ ரெங்கம் கரி சலம் அஞ்சன கரீம் -இத்யாதி )

ப்ருங்கத்துக்கு மது ஜீவனம் ஆனாப் போலேயும்
ராஜ ஹம்சத்துக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆனாப் போலேயும்
இவருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் தாரகமாயும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானமாயும் இருக்கும் என்கிறது
ஆசார்யவான் புருஷோ வேத -(சாந்தோக்யம் )என்கிறபடியே ஸ்ரீ ஆசார்ய ஆதீனம் இறே உஜ்ஜீவனம் –
சிஷ்யன் பிரதம பர்வத்தில் இழிகிறதும் அவன் உகந்த விஷயம் என்றாய்த்து

இனி இவர் ததீய விஷயத்தில் கிஞ்சித் கரித்த படியைச் சொல்லுகிறது மேல்

(இராமானுச நூற்றந்தாதியிலும் முதல் பாசுரம் மாறன் அடி பணிந்து உய்ந்தமையும் அடுத்த பாசுரத்தில் குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் போல் இங்கும்)

(அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் -தென் குரு கூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி போல் இங்கும் மூன்று நிலைகள்)
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் –ஸ்ரீ பட்ட நாத ஸ்ரீ பரகால முகாப்ஜ மித்ரம்

ஸ்ரீ சப்தம்
1-பூஜ்யதையைச் சொல்லுகிறதாதல்-
2-ஸ்ரீ மத்வத்தை சொல்லுகிறதாதல்

இவர்களுக்கு ஸ்ரீமத்வமாவது
1-ஸ்ரீ மாலா காரரைப் போலே திரு நந்தவனம் செய்து திருமாலை சமர்ப்பிக்கையும்
2-பரமத நிரசன பூர்வகமாக ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற தத்தவத்தை ஸ்தாபித்து அவன் தன்னை சாஷாத் கரித்து-தம்மைப் பேணாதே (பொங்கும் பரிவாலே )அத் தலைக்கு மங்களா சாசனமே பண்ணுகையும்-
3-ஸ்ரீ கோபுர ஸ்ரீ பிரகார நிர்மாணம் முதலிய கைங்கர்ய கரணங்களும் ப்ராப்யத்வமாதல் –
ஆக இப்படி ஸ்ரீ மான்களாய் இருந்துள்ள

பட்ட நாத
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரியாழ்வார் என்ன
இவருக்கு -ப்ராஹ்மணரில் ஸ்ரைஷ்டைமாவது –
மந்திர ப்ரஹ்மண ஸ்ரீ திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தாலே சொல்லப் படுகிற
ஸ்வரூப அநு ரூபமான மங்களா சாசனமும் –
அஸ்தானே பய சங்கையும்
மேன் மேலும் மங்களா சாசனமும்

பரகால
சத்ரு ம்ருத்யுவான ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் என்ன –
இவருக்கு சத்ருக்கள் பகவத் விட்டுக்கள்-அவர்கள் ஆகிறார் ஆத்மைக்யம் -இத்யாதியில்
சொல்லப் படுகிற ஆத்மைக்ய வாதிகள் முதலானவர்கள் -இவர்களுடைய

முகாப்ஜ
திரு முக மண்டலங்கள் ஆகிற தாமரைகளுக்கு -முகத்தை தாமரையாகச் சொல்லுகிறது –
தாமரை உடைய சௌகுமார்யம் ஸ்பர்ச சஹம் அன்றிக்கே இருக்குமா போலே
திரு முக மண்டலமும் பர துக்கம் பொறுக்க மாட்டாத சௌகுமார்யத்தை உடையது என்கிறது

மித்ரம்
ஸூர்யனாய் இருக்குமவராய்-
அதாவது ஆதித்யன் ஸ்வ உதயத்தாலே தாமரையை அலர்த்துமா போலே
இவரும் பர மத பிரதி ஷேபாத்ய அநேக வித கைங்கர்யங்களாலே இவர்களுக்கு அபிமதமான ஸ்ரீ பெரிய பெருமாளை உகப்பிக்கை –(ஆச்சார்யன் உகக்கும் கைங்கர்யம் ஆச்சார்யனுக்கு நேராகச் செய்யும் கைங்கர்யத்திலும் ஸ்ரேஷிடம் -சரம பர்வம்)

அன்றிக்கே –
முக சப்தம் -ஆதி சப்த பர்யாயமாய் –
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் முதலான ஸ்ரீ ஆழ்வார்கள் ஆகிற
தாமரைகளுக்கு மித்ரரானவர் என்னவுமாம்
அப்போதைக்கு அவர்கள் உகந்த விஷயம் என்று ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அனந்த கைங்கர்யங்களையும் செய்து
அருளுகையாலே அவர்கள் திருமுக மண்டலத்துக்கு விகாசகர் என்கிறது

ஆக கீழ் ஸ்லோஹத்தில்-பூர்வார்த்தத்தில் சொல்லப் படுகிற இவருடைய ததீய சேஷத்வ பர்யந்தமான தத் சேஷத்வ ஜ்ஞானத்துக்கு
குணமான பர்வ த்ரய கிஞ்சித் காரம் சொல்லிற்று யாயிற்று(பெருமாள் ஆழ்வார் தன்னைப் பற்றிய ஆஸ்ரிதர் மூன்றும் கீழும் இதிலும் உண்டே )

இனி ஆஸ்ரித விஷயத்தில் இவர் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன அம்ச பூதராகையாலே ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு
ஸ்ரீ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் பிரபத்யே –ஸ்ரீ வை ஸ்தவம் -1- என்று
தம் வாயாலே சொல்லலாம் படி உபாய பூதராய்-ஸ்ரீ ஆழ்வான்- இறே –

ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா -(வரவர விஷய முக்தக ஸ்லோகம்-5 ) -என்று வ்யதிரேகத்திலும்
ஸ்ரீ ராமானுஜ அங்கரி சரணோஅஸ்மி -(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -102)என்று அன்வயத்தாலும் இவருடைய உபாயத்வத்தை அருளிச் செய்தார்
ஆகையாலே –ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்கிறார் -இது எல்லாருக்கும் ஒக்குமாகையாலே உப லஷணம்-

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ வை ஸ்தவம் -1-

(யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்)

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-)

கீழ் ஸ்லோஹத்திலே காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதா நாம் -என்கிற விடத்தில் தாத்பர்ய விதயா தோற்றுகிற உபாயத்வம்(அநிஷ்ட நிவர்த்தகம் உபாயம் அர்த்தமாக அங்கு)
இங்கு ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்று சரண சப்தத்தாலே வியாக்யானம்

யதிராஜம்
கீழ்ச் சொன்ன ஆகாரங்களால் உண்டான ஸ்வ உத்கர்ஷம் நெஞ்சிலே தட்டாத படியான
வைராக்கியம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை

அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஏற்றங்களுக்கு எல்லாம் நிதானமான வைராக்கியம் உடைய எம்பெருமானாரை என்னவுமாம்
இவ் வைராக்யம் இறே இவருக்கு பிரகாச ஹேது –

ஈடே
வாக் இந்த்ரியம் படைத்த பலம் பெற்றோம் என்று ஸ்தோத்ரத்தில் பிரவ்ருத்தர் ஆகிறார்
ஈடே
கீழே மூர்த்நா ப்ரணமாமி -என்று காயிகமான கைங்கர்யத்தைச் சொல்லி
இதுலே ஈடே என்று
வாசிகமான அடிமையைச் சொல்லுகிறது

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி போலே குணா ஜிதர்க்கு ஸ்தோத்ரம் இறே க்ருத்யமாவது –

———

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -1755–ஜய நாம ஸம்வத்சரம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்-ரகுவராச்சார்யர் திருத் தாத்தா -சகல மஹீ ப ரத்ன கனக மகுடி -பூமிசார -புண்ய பலமாக அவதரித்த வரகுரு வீரராகவாச்சார்யர் -மகுட ரத்ன ஒளி பெற்று -மஹீசார க்ஷேத்ரம் -வரகுரு வீரராகவாச்சார்யர் -இயல் பெயர் -வாதூல குல திவாகர் -51 திருநக்ஷத்ரம் இருந்தவர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

  • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
  • வேதவல்லி சதகம்
  • ஹேமலதாஷ்டகம்
  • அபீஷ்ட தண்டகம்
  • சுக சந்தேசம்
  • கமலா கல்யாண நாடகம்
  • மலயஜா பரிணய நாடிகா
  • ந்ருஸிம்ஹாஷ்டகம்
  • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
  • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
  • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
  • மஹாவீரசரித வ்யாக்யா
  • உத்தர ராம சரித வ்யாக்யா
  • சத ச்லோகீ வ்யாக்யா
  • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
  • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
  • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
  • துஷ்க்கர ச்லோக டிப்பணி
  • தினசர்யா
  • ஷண்மத தர்சனி
  • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
  • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
  • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
  • தத்வ ஸுதா
  • தத்வ ஸார வ்யாக்யா
  • ஸச்சரித்ர பரித்ராணம்
  • பழனடை விளக்கம்
  • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
  • லக்ஷ்மீ மங்கள தீபிகா
  • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
  • அநு பிரவேச ச்ருதி விவரணம்
  • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
  • மஹீஸார விஷய சூர்ணிகா
  • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
  • ஸச்சர்யக்ஷகம்
  • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
  • ந்யாய மந்தரம்
  • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
  • வசஸ் சுதா மீமாம்ஸா
  • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
  • ப்ரஹ்மவத்வ தங்கம்
  • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
  • வரணபஞ்ச விம்சதி:.

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:)

———–

துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)

[உயிர்களுக்கு, கண நேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,அது கிடைத்த போதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது] என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லை யாகையால்,(இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருப்பதைப் பார்த்து உகந்து இருப்பதுஅதி துர்லபம் -அன்றோ)

பாகவத கைங்கர்யமாகிய யதிராஜ விம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,-அத் தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் –

ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ் வுலகுமாகிய இரு வகைச் செல்வங்களைக் காட்டுமதாய் அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.

அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப் பெற்ற ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித் தாமரைகளைத் தெரிவிக்கிறது.

இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத் தோன்றும்.

பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்-அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய – ஜீவாத்ம ஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.

காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,-கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம், -கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர். இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.-பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும் அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.

ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.ஹம்சம் போல் ஸூத்த ஸத்வம் -பரம ஹம்சர்

ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய், முறையே பரம் பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும், புறச் சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரிய கோயிலில் மதிள்கட்டுதல்,

மங்களா சாசனம் -பூ கைங்கர்யம்
பரவாதி நிரசன திவ்ய தேச கைங்கர்யம் -விஸ்லேஷ அஸஹத்வம் -தூது விடவும் நான்கு பாசுரங்களுக்கு மேல் விட மாட்டாதவர்
அல்லாதார் மலையாள ஊட்டு போல்
தர்மங்களைச் செய்து -முக விகாஸம்
முகாதி -அனைத்து ஆழ்வார்களும் சொல்லும்

எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத் தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.

இத்தகைய மென்மைத்தன்மையை ‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில், சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.

தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான் எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.

முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.-இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாசிக மங்களம் செய்யப்படுகிறது.

வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின் கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் – மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிக மங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத் தக்கது.

இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத் தொடங்குகிறார் மாமுனிகள் என்க.

இங்கும் அமுதார்ய ப்ரபந்ந காயத்ரியின் இரண்டாம் பாசுரமும் அனுசந்திக்கக் கடவது

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி -பிரவேசம்–/ ஸ்லோகம்–1- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸ்ரீ ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 28, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

பூர்வ தினசரிக்குப் பின்பு-அபிகமன இஜ்ஜயா பின்பு – ஸ்வாத்யாய – சரம பரவம் -இத் தனியனை ஸாதித்து பின்பு உத்தர தினசரி அருளிச் செய்துள்ளார் என்பர்

—————–

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

——————-

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –

————-

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –

————-

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருள பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –

————–

திருமழிசை அண்ணா ஸ்வாமிகளும் சமஸ்க்ருத வியாக்யானம் செய்துள்ளார்

பஞ்சகால பாராயணம்-ஸ்வ ஆச்சார்யர் வரவர முனி அனுஷ்டானம் அனுபவித்து எறும்பி அப்பா
அபிகமன உபாதான இஜ்ஜயா ஸூ -க்ரமமாக -பூர்வ தினசரி அருளிச் செய்து 18 நாழிகை கழிந்த பின்பு
அடுத்த கடைசி இரண்டும் –ஸ்வாத்யாயம் யோகம்
ஸ்வாத்தியாயம் காலத்தில் பூர்வர்கள் -வியாக்யானம் செய்து -எழுதி -கிரந்த நிர்மாணம் செய்து -சிஷ்யர்களுக்கு
ஸ்ரீ வசன பூஷணம் –வாக்யங்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்கியம் -வியாக்யானம் கிரந்த நிர்மாணம் -தனது அதிகார அனுரூபமாக -சரம உபாய நிஷ்டைக்கு -அனுரூபமாக யதீந்த்ர ப்ரபாவம் செய்யவே யதிராஜ விம்சதி அருளிச் செய்து
வசன ஸ்ரவணம் கேட்டு கடாக்ஷம் பெற்று ஆணைக்கு எதிர்பார்த்து இருக்கும் சிஷ்யரான எறும்பி அப்பா –
ஆனந்தம் அடைந்து –உத்தர தினசரி முதல் ஸ்லோகம் இதி ஆரம்பித்து
என்றாய் தொடங்கி -யதி குல பதியைப் போற்றி ஆரம்பிக்கிறார்
இதி சப்தத்தால் யதிராஜ விம்சதி குறிப்படுகிறது -என்கிறார்

(தத ஸூபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மன யதீந்த்ர ப்ரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் –பூர்வ தினசர்யா 32-

யோக அப்யாஸத்திற்குப் பிறகு அந்த ஸூபாஸ்ரய வஸ்துவில் லயித்து நிச்சயமாய் இருக்கின்ற திரு உள்ளத்தை மீட்டு
எம்பெருமானார் இடத்தில் ஊன்ற வைப்பதற்கு முயற்சி செய்து அருளா நின்ற அந்த மணவாள மா முனிகளைத் தொழுகின்றேன் –
ஹேய ப்ரத்ய நீகத்வே சதி சித்த ஆகர்ஷகத்வம் ஸூபாஸ்ரயத்வம் –ஸூபாஸ்ரய லக்ஷணம் –யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவனே நைவ சேதஸா –16-என்றாரே கீழே -யதீந்த்ர பிரவணர் என்றே நிரூபகம்
இடையில் – புருஷே புஷ்கரேஷனே சேதஸ் சமாதானம் -30-ப்ராப்தமான படியால் அந்த நிலையில் நின்றும் மீண்டும் பழைய படியே-யதீந்த்ர பிரவண ஹ்ருதயரானமை சொல்லிற்று ஆயிற்று –
எம்பெருமானார் திருவடிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு கலந்து பரிமாறப்ப புகுந்த படியை மேலே உத்தர தினசரியைக்கு அவதாரிகை போலே அருளிச் செய்தபடி
அபராஹ்நத்தில் ஸ்ரீ வசன பூஷணாதி திவ்யாக்ரந்த காலஷேபம் அடுத்தபடியாக அருளிச் செய்யப்படுகிறது அன்றோ- -அதற்கு இந்த ஸ்லோகம் அவதரணிகை போலும்

உத்தர தின சர்யா — பிரவேசம்

இதி யதிகுல துர்ய மேதமாநை ஸ்ருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷயந்தம் வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம்

இத்தால் யதிராஜ விம்சதியின் அனுசந்தானம் தெரிவிக்கப் பட்டதாயிற்று –இவ்விதமாக செவிக்கு இனிய செஞ்சொற்கள் நிறைந்த ஸ்துதியினால்
எம்பெருமானாரை ஸ்துதித்து திரு உள்ளம் உகந்து அருளா நின்ற மா முனிகளையே சிந்தனை செய்யும் என் மதியானது நிகரற்ற தெளிவு பெற்று விளங்குகின்றது –

(நம்மை ஆளவந்த கற்பகமே” இவர் எனில் குறைவில்லை.-
எம்பெருமானரின் குணாம்ருதசாகரத்தை ,தான் மட்டுமே பருக வொண்ணாது, அடியார்களும் இன்புற வேண்டி , யதிராஜ விம்ஸதி எனும் இச்சதகத்தை , த்வயத்தின் பூர்வ பாகமாகவும் ,ஆர்த்தி பிரபந்தத்தையும், உத்தரபாகமாவும் போக்கு வீடாக வெளியிட்டருளினார்!!)

———-

பிரவேசம்(ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்)
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பூஸூரர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாக திருவதரித்த ஸ்ரீ திருவாய் மொழியிலே அவகாஹித்து
அதில் சாஸ்த்ரார்த்த ரசம் -(ஸப்த ரசமும் அர்த்த ரசமும்-)பாவ ரசம் இவற்றை அனுபவித்து -தத் ஏக நிஷ்டராய் -தத் வ்யதிரிக்த சாஸ்திரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே- ஸ்ரீ திருவாய் மொழி அமுத தாத்பர்ய அர்த்தத்தையே தமக்கு நிரூபகமாக உடையராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்ரீ திருப் பாதத்தில் ஆஸ்ரயித்து

ஸ்ரீ திராவிட வேத அங்க உப அங்கங்களான ஸமஸ்த திவ்ய பிரபந்த தாத்பர்யங்களையும் அவர் உபதேசத்தால் லபித்து
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருளான சரம பர்வத்தில் நிஷ்டராய்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை இடம் அன்வயித்து தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயரை
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தாமே உகந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுக்கையாலே
அவர் திருவடிகளில் மிகவும் பிரவணராய் தத் குண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கும் படியான தசை பிறந்து தத் வைபவத்தைப் பேசுகிற இவர்-சரம உபாய நிஷ்டரான சரம அதிகாரிகளுக்கு அநவரதம் அநுசந்தேயங்களான சரம அர்த்தங்களை இப் பிரபந்த முகேந வெளியிடா நின்று கொண்டு
ஸ்வ அபேக்ஷிதங்களையும் அவர் திருவடிகளில் அபேக்ஷித்துத் தலைக் கட்டுகிறார்

(யதிராஜ விம்சதி முழுவதும் -தனக்கு அபேக்ஷிதங்களை அருளிச் செய்து -அதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார்
தொழுது எழு என் மனனே -என்று நம்மாழ்வார் காட்டி அருளிய படியே மா முனிகளும் -மதுரமாக அருளிச் செய்கிறார்)

(மதுரேண ஸமாப்த்தம் -நம் பூர்வர் பரம்பரை -ஸ்வாமி உடன் முடியுமே_

———

பிரவேசம்(ஸ்ரீ ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்)

ஸ்ரீ யபதியாய் -பரம காருணிகரான-ஸ்ரீ சர்வேஸ்வரன் அந்தமில் பேரின்பமான த்ரிபாத் விபூதியிலே
ஸ்ரீ வைகுண்டாக்ய திவ்ய நகரத்திலே சஹஸ்ர ஸ்தம்ப சோபிதமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே –
சஹஸ்ர பணா மண்டல மண்டிதமான ஸ்ரீ திரு வனந்த ஆழ்வான் ஆகிற கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே –
திருமகள் மண்மகள் ஆயர் மட மகள் -திருவாய் -1-9-4 –ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா சமேதனாய்
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

க்ருஹீத்ய அனந்த பரிசார சாதநைர்தி ஷேவ்யமாணாம் சசிவைர்ய சோசிதம்-(ஸ்தோத்ர ரத்னம் )என்கிறபடியே
சத்ர சாமர தாஸ வ்ருத்தாத்ய ஏக கைங்கர்ய உபகரண சோபித ஹஸ்தரான-அயர்வறும் அமரர்களாலே
அனவரத பரிசர்யமாண சரண விதனாய்க் கொண்டு –

ஏதத் சாம காயத் நாஸ்தே -தைத்ரியம் 
சாம வேத கீதனாய –திருச் சந்த -14-
தன்னை இன் கவி பாடின ஈசனை -திருவாய் -7-9-1- என்றும்
யானாய் தன்னைத் தான் பாடி தென்னா வென்னும் என்னம்மான் -திருவாய் -10-7-5-என்கிறபடியே
சஹஸ்ர சாக உபநிஷத் மயமான திருவாய் மொழி கேட்டு அருளா நிற்க(திருவாய் மொழியும் அங்கும் உண்டே -ஆகவே வேதம் போல் அருளிச் செயல்களும் நித்யம் )

ச ஏகாகி ந ரமேதே -மஹா உபநிஷத்-என்றும்
ஆற்றல் மிக்காளும்-4-5-4-
ந அதி ஸ்வஸ்த மகா -என்கிறபடியே
தேசாந்தர கதனான புத்ரன் இடத்தில் பித்ரு ஹிருதயம் செல்லுமா போலே சம்சாரி சேதனன் இடத்தில் திரு உள்ளம் குடி புகுந்து
உண்டது உருக்காட்டாதே சம்பந்தம் ஒத்து இருக்க இவர்கள் இவ்வனுபவத்தை இழந்து இருக்கிறது
தம் தாமை யறியாமையால் யன்றோ-என்று -போர நொந்து-திரு உள்ளம் இரங்கி

இனியாகிலும் இவர்கள் உஜ்ஜீவிக்கும் விரகு யாம்படி என்-என்று விசாரித்து
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் –
நிவாசாய சய்யா ஆசன பாதுகா -இத்யாதிப்படியே
தம் திருவடிகளிலே ஒழிவில் காலத்தில் படியே எல்லா அடிமைகளும் தாம் ஒருவருமே செய்வதாகப் பாரித்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ திரு வனந்த ஆழ்வானைக் கடாஷித்து அருள

அவனும் ததஸ் தத் இங்கிதம் தஸ்ய ஜாதன் நேஷம் ஜகத்திதே -என்றும்
தஸ்மின் தாம்நி சடாராதே புரே புநராவாத் (யதீந்த்ர ப்ரவண பிரபாவம்)–(ஆழ்வார் திருவவதரித்த அதே திவ்ய தேசத்தில் ஆதி சேஷனே ராமானுஜர் அவதரித்த பின்பு மீண்டும் அவதரித்த மா முனிகள் )பூத்வோ பூயோவர வர முனிர் யோகி நாம் சார்வ பௌம–(ஸ்ரீ சைலேச அஷ்டகம் )என்கிறபடியே
பாவஜ்ஞ்ஞன் ஆகையாலே
சம்சாரிகள் இருக்கும் இவ்விடத்திலேயே ஸ்ரீ மாறன் மறை பயிலுமவர் ஆகையாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவவதார ஸ்தலமான ஸ்ரீ திரு நகரியிலே ஸ்ரீ அழகிய மணவாள மா முநிகளாய் திருவவதரித்து
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளாலே யதிவர தத்த்வ வித் தமராய் சம்சாரிகள் துர்கதியைக் கண்டு திரு உள்ளம் இரங்கி
இவர்கள் ரஷ்யம் அபேஷம் ப்ரதீஷதே (லஷ்மி தந்திரம் -சம்சாரிகள் பரார்த்த பின்பு ரக்ஷிக்கிறேன் -ஸர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக )-என்கிறபடியே
ரஷ்ய அபேஷ ப்ரதீஷரான பகவத் விஷயத்துக்கு ஆளாகாமையைத் திரு உள்ளம் பற்றி

இனி இவர்களுக்கு காரேய் கருணை இராமானுசா -25-என்கிறபடியே
கிருபா மாத்ர பிரசன்னாசார்யாரான ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் இன்றி
மற்று ஒரு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று அறுதியிட்டு

உபதேசாதிகளாலே அறிவிக்கப் பார்க்கில் ஸ்வ உத்கர்ஷாதிகளையிட்டு அத்யவசிப்பார்கள் அன்று
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட –(கீதை )என்கிற நியாயத்தை திரு உள்ளம் பற்றி ஸ்வ அனுஷ்டானத்தாலே
திருத்தப் பார்க்கிறார் இப்பிரபந்தத்தில்(கத்ய த்ரயமும் ஸ்வ அனுஷ்டான கிரந்தம் தானே )

அனுசந்தித்தார் விஷயத்தில் ஸ்ரீ எம்பெருமானார்க்கு கிருபை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத படியான
இப் பிரபந்தத்தை அருளிச் செய்கிறார் என்னவுமாம் –

ஸ்ரீ எம்பெருமானாருடைய உபாயத்வமாய்த்து பிரதிபாதிக்கப் படுகிறது உபக்கிரம உபசம்ஹாரங்களில்
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராபகத்வம் பர்யந்தமாகத் தோற்றுகையாலே-
எங்கனே என்னில் –

உபக்ரமத்தில் –
ஸ்ரீ மாதவாங்கரி ஜல ஜத்வய நித்ய சேவா -பிரேம ஆவிலாசய பராங்குச பாத பக்தம் -என்று ததீய பர்யந்தமான
பகவத் கைங்கர்யத்தை பிரசக்தி பண்ணி –
மேல்
காமாதி தோஷ ஹர மாத்ம பதார்ஸ்ரிதா நாம் -என்று
தத் விருத்தங்களான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்கையாலும்-
முடிவில் –
தாமன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம்–என்கையாலும்
உபாயம் ஸ்ரீ எம்பெருமானாரே -என்கிறது(ஆர்த்தி பிரபந்தம் எம்பெருமானாரே உபேயம் )

ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களாலே உபாய உபேயங்களுடைய ஐக்யம் சொல்லப் படா நிற்க -இங்கு
உபாயம் ஸ்ரீ எம்பெருமானாரும் உபேயம் ஸ்ரீ எம்பெருமான் என்கையும் சேருமோ என்னில் சேரும்
அங்கும் திருவடிகளை உபாயமாகவும் ஸ்ரீ யபதியை உபேயமாகவும் சொல்லிற்று இறே-
அங்கு திருவடிகள் அநந்யங்கள் யன்றோ என்னில் –
இவர் தாமும் திருவடிகள் ஆகையாலே -அநந்யராகக் குறையில்லை -ஆகையாலே இறே –
விஷ்ணுஸ் சேஷதீ –என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக
ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப் பட்ட ஸ்லோஹம் திருவவதரித்தது
அன்றிக்கே
இவர் தாமே உபாயமும் உபேயமாகவும் -ஐக்யம் என்னவுமாம்
சரம உபாய உபேயங்கள்-பிரதம உபாய உபேயங்களுக்கு சேஷங்கள் ஆகையாலே பிரபத்தி சாஸ்திர விரோதம் இல்லை

இனி உபாயத்துக்கு வேண்டுவது
1-விஷய பூர்த்தியும் –
2-அபராத பூயஸ்தவமும் –
3-ஆகிஞ்சன்யமும் –
4-அநந்ய கதித்வமும் –
5-உபாய உபேய பிராத்தனையும் ஆகையாலே

1-அதில் முதல் இரண்டு ஸ்லோஹத்தாலே விஷய பூர்த்தியையும் –

2-மேல் ஸ்லோஹ த்ரயத்தாலே (3-4-5)பிராப்ய பிரார்த்தனையும் –

3-மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே (6-7-8-9-10-11-12-)தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -தம்முடைய தோஷ பூயஸ்தவத்தையும்-

4-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (13)விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனையையும் –

5-மேல் இரண்டு ஸ்லோகங்களாலே (14-15)தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –

6-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (16)விரோதி நிவ்ருத்தி பூர்வக பிராப்ய சரமாவதி பிரார்த்தனையையும் –

7-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (17)அத்தலையில் கார்யகரத்வ உபயோகியான சக்தி விசேஷத்தையும் –

8-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (18)எம்பெருமானாருடைய ஸ்வ சம்பந்தி பரம்பரா விஷயமாக பிரவ்ருத்தமான
பகவத் ஏக உபாயத்வ பிரார்த்தனையே தத் சம்பந்திகளுக்கு ரஷகம் என்னுமத்தையும் –

9-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (19)ஆச்சார்ய ருசி பரிக்ரக்ருஹீத மாமதுவே தத் சம்பந்திகளுக்கு பிராப்யம் என்னுமத்தையும் அருளிச் செய்து –

10-நிகமத்தில் (20)அடியேனுடைய அஜ்ஞாநாதிகளைக் கடாஷித்து இவன் அநந்ய கதிகன் என்று திரு உள்ளம் பற்றி
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து தலைக் கட்டுகிறார் –

இதில் பிரதி ஸ்லோஹமும்-ஸ்ரீ எம்பெருமானாரை –ஸ்ரீ யதிராஜ -ஸ்ரீ யதீந்திர –என்று சம்போதிக்கிறது-
யதத் இதி -யச்சதீதி யதி -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் சொல்லப் படுகிற
(யதத் இதி)ஸ்ரீ ப்ரஹ்ம பிராப்தி ப்ரயத்தனமும் -(யச்சதீதி யதி) இதர விஷய வைராக்யமுமே இவருக்கு பிராப்ய ஹேதுவாகையாலே என்றாதல்
ஸ்வார்த்த பிரயத்யத்தையும் இதர விஷயத்தோடு சேர்த்து அதில் நின்றும் வ்யாவ்ருத்தராய் பரார்த்த ஏக பிரயத்தராய் இருக்குமதுவே தத் சம்பந்திகளுக்கு பற்றாசு என்று இருக்குமவர் யாகையாலே என்றாதல் –
இதுவே இங்குத்தைக்கு அசாதாரணமான குணம் –

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி ஸ்ரீ திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாம் போலேயும் –
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை ஸ்ரீ குரு பரம்பரா சங்க்ரஹமாம் போலேயும்-
இப் பிரபந்தம் ஸ்ரீ பிரபன்ன காயத்ரி சங்க்ரஹமாக இருக்கும் –

———–————

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-

மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

——

இதில் முதல் ஸ்லோகத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஸ்வ அபிமான அந்தர் ஹுதருடைய ஸ்வ பாவங்களைப் போக்கி ரஷிக்கும் படியையும் பேசா நின்று கொண்டு
தொடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக ஸ்ரீ உடையவர் திருவடிகளில் விழுகிறார்-

ஸ்ரீ எம்பெருமானாருடைய1- ஜ்ஞான பூர்த்தியையும் -(பராங்குச பாத பக்தம் – -ஞான விசேஷம் பக்தி அன்றோ -பகவத் லாபாரத்தி ஞானி கீதையிலும் உண்டே )
2-அதினுடைய சம்ப்ரதாய ப்ராப்தியையும் –(பெருமாள் தாயார் விஷ்வக்சேனர் ஆழ்வார் -ஆழ்வார் திருவடி -குரு பரம்பரை )
3-அத்தால் இவர் பெற்ற நன்மையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு –
ப்ராரீப்சித(ஆரம்பிக்கப்பட்ட )க்ரந்த பரிசமாப்த்யர்த்தம் ஸ்ரீ ஆசார்ய அபிவாத ரூப மங்களத்தை செய்து அருளுகிறார் –(பல்லாண்டு -போற்றி- ஜிதந்தே -தோற்றோம் -நம-எல்லாமே மங்களா சாசனம் )

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாத பக்தம்
காமாதி தோஷ ஹர ஆத்ம பத ஆஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-

ஸ்ரீ மாதவ அங்க்ரி ஜலஜ த்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க,

நித்ய ஸேவா – ப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய,

பராங்குஸ பாத பக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும்,

ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய,

காம ஆதி தோஷ ஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும்,

யதி பதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான,

ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை,

மூர்த்நா – தலையால்,

ப்ரணமாமி – வணங்குகிறேன்.

மிதுனத்தில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை ரசத்தில் மையல் ஏறிய
ஹ்ருதய கமலத்தை உடைய ஸ்ரீ பராங்குசன் திரு அடிகளை நிரந்தரம் பிரீதி சேவை செய்பவரும்
தம்முடைய திரு அடிகளை அடைந்தவரின் காமம் போன்ற தோஷங்களை நீக்குபவருமான
யதிகட்க்கு இறைவன் ஸ்ரீ ராமானுசனை தலையால் வணங்குகிறேன் ..

(ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா பிரேம ஆவிசாஸய பராங்குஸ
பராங்குஸ பாத பக்தம் காமாதி தோஷ ஹர ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதி பதிம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா
பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா
பா மன்னு மாறன்
மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த இராம னுசன்
இராம னுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.)

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்-என்கிறபடியே மிதுன சேஷத்வமே ஸ்வரூபம் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் மிதுன விஷய கைங்கர்யமாகவே இருக்கும் –
திருமாற்கு அரவு –சென்றால் குடையாம்-என்று நித்ய ஸூரிகளில் தலைவரான ஸ்ரீ திருவனந்த வாழ்வான்
அவனும் அவளுமான சேர்த்தியிலே கிஞ்சித்க் கரிக்கும் என்று சொல்லிற்று –

அந்த கருந்தலையில் வாசனையால் இறே-தொடர்ந்து குற்றேவல் செய்யப் போந்த இடத்திலும் –
பாவாம்ஸ்து சக வைதேஹ்யா-என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றும் அவர் அவரைப் பார்த்து பிரார்த்தித்தது

அப்படியே ஸ்ரீ ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாலுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதி சம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாத பக்தம்
ஆகையால் ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமான் திருவடித் தாமரைகளில் நித்ய கைங்கர்யத்தில் ஆசையால் கலங்கின
திரு உள்ளத்தை உடையரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமமே தமக்கு நிரூபகமாய் உடையவராய் இருக்குமவர் என்கிறது –
மா–ஸப்தத்தாலே  ஸ்ரீ யபதித்தவம் ஸித்த மாகையாலே ஸ்ரீ சஸ்தம் ஓவ்பவாரிகம்
சீ மாதவன் கோவிந்தன் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை உட் கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

ஸ்ரீ உடையவருக்கு வைபவம் சொல்லுகிற அளவில் ஞான பக்தி வைராக்யங்களை இட்டுச் சொல்லுகை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தத்தையே இட்டுச் சொல்லுகைக்கு அடி –
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தி ஆய்த்து –

அங்க்ரி சப்தத்தால்
திவ்ய மங்கள விக்ரஹ யோகம் சொல்கிறது –
ஜலஜ சப்தத்தால்
திருவடிகளின் போக்யதையைச் சொல்கிறது –
த்வய சப்தத்தால்-உன் இணை அடித் தாமரைகள் -என்கிறபடி இரண்டு தாமரைப் பூவை ஒழுங்கு படி நிரைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகைச் சொல்கிறது
சேவா சப்தத்தால்
சேஷ விருத்தியைச் சொல்கிறது

நித்ய சப்தத்தால்
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடி யாவதாத்மா பாவி என்னும் இடம் சொல்கிறது
இது தான் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று சொன்ன
சர்வ தேசத்திலும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் பண்ணக் கடவ சர்வ வித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்

ஏவம்விதமான கைங்கர்யத்தைப் பெற வேணும் என்னும் ப்ரேம பாரவஸ்யத்தாலே (ஆவிசாஸய)யாய்த்து
சிந்தை கலங்கி திருமாலே என்று அழைப்பன்-என்று இவர் கூப்பிட்டது
நாடு அடங்க அன்ன பாநாதிகளுக்கு வாய் புலற்றிக் கூப்பிடா நிற்க கைங்கர்யத்தால் அல்லது செல்லாமல் கூப்பிட்டு
அலமாக்கிற இவர் படி உபய விபூதியிலும் வ்யாவருத்தமாய் இருக்கையாலே
இப்படி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்வ பாவத்தில் வித்தராய்
இவருடைய திருவடிகளில் நிரவதிக ப்ரேம யுக்தராய் யாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் இருக்கும் படி

காமாதி தோஷ ஹரம் ஆத்மபத ஆஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —–
பகவத் கைங்கர்ய விரோதியான சப்தாதி ரூப ப்ராவண்ய விஷயமான காமமும்
ஆதி சப்தத்தாலே
சங்க்ருஹீதைகளான பகவதேக ரஷ்ய விரோதியான அர்த்த திருஷ்ணையும்
தத் ஏக சேஷத்வ விரோதியான அகங்காரமும் முதலான துர் குணங்களை –
தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வ உபதேச அனுஷ்டங்களாலும் ஸ்வ கடாக்ஷ விசேஷங்களாலும் ச வாசனமாகப் போக்குமவர் -என்கை

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று
அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –

யதி பதிம்
ஜிதேந்த்ரியரான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆனவர் என்கை –
இத்தால் கீழ்ச் சொன்ன ஆச்ரித தோஷ நிவர்த்தகத்துக்கு அடியான குண யோகம் சொல்லுகிறது

ப்ரணமாமி -என்கிற மாத்திரமே அமைந்து இருக்க
ப்ரணமாமி மூர்த்நா
என்கிறது விஷய வைபவத்தை அனுசந்தித்து மாநஸமான பிரணவ மாத்திரத்தில் நிற்கை அன்றிக்கே
தம்முடைய ஆதார அதிசயத்தாலே நிர்மமராய் திருவடிகளில் தலையை மடுக்கிறார் என்னும் இடம் தோற்றவே-

தாத்பர்யம்
சகல புருஷார்த்த பிரதமாய்
நிரதிசய போக்யமான ஸ்ரீ யபதியுடைய
திருவடித் தாமரைகளில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்ய வேண்டும் என்று ஸகலவித அடிமை செய்யப் பாரித்து ப்ரேம பரவசராய் கலங்கின திரு உள்ளம் கொண்டு இருக்கும்
நம்மாழ்வாருடைய திருவடிகளில் நிரவதிக பிரேம யுக்தராய்
தம்முடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தவர்களுடைய பகவத் ப்ராவண்யத்துக்கு பிரதிபந்தகங்களான -விஷயாந்தர ப்ராவண்யம் முதலான தோஷங்களை –
கடாஷாதிகள்-ஆதி சப்தத்தால் உபதேசம் அனுஷ்டானம் -போன்றவற்றாலும் -போக்கி அருளும்-யதிகளுக்கு தலைவரான ராமானுஜர் திருவடிகளில் முக்கரணங்களால் சரணம் அடைகிறார் -ஸாஷ்டாமாக தெண்டன் சமர்ப்பிக்கிறார்- பிரபந்த உபக்ரமத்தில் நமஸ்கார பாவமான மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
(வணக்குடை தவ நெறி என்றபடியே -இதுவே மங்களா சாசனம் )
————————

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா(7 அர்த்தங்கள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ –
1-ஸ்ரீ மாயாதவ -மாதவ -என்கிற வ்யுத்பத்தியாலே
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மாதவ சப்தத்துக்கு விசேஷணம் ஆகையாலே –
ஸ்ரீ சப்தம் ஸ்ரீ யபதியினுடைய –
திருவுக்கும் திருவாகிய செல்வா –
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரிய– ஸ்ரியஸ் ஸ்ரியம்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ மங்கள அவஹையான ஸ்ரீ பெரிய பிராட்டிக்கும் மங்களா வஹம் என்கிற மேன்மையைச் சொல்லுகிறது

அன்றிக்கே –
2-ஸ்ரீ சப்தம் லஷணையாக ஸ்ரீமத் வாசகமாய் மேல் சொல்லப் படுகிற ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தாலே தலை எடுத்த வாத்சல்யாதி குண சம்ருத்தம் ஸ்ரீ யபதி என்னுமத்தைச் சொல்லுகிறது –(இவள் ஸந்நிதியாலே -நீரிலே நெருப்பு பூக்குமா போல் கல்யாண குணங்கள் -ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து இவை தலை எடுக்கும் அன்றோ-மா சம்பந்தத்தால் வரும் குணங்களை ஸ்ரீ சொல்லும் இங்கு )

அதுவும் அன்றிக்கே
3-ஸ்ரீ சப்தம் மா சப்தத்துக்கு விசேஷணமாய் ஸ்ரீ மான் மா என்று பிராட்டியுடைய பிராப்யத்வ புருஷகாரத்வ உபயோகிகளான சேவ்ய சேவதாதி பாவங்களையும்
ஜ்ஞான ஸ்வரூப ஜ்ஞான குணகத் வாதிகளையும் சொல்லுகிறது –(இங்கு மா வுடைய ஸ்ரீ -இவளுடைய தவன் மாதவன்-ஸ்ரேயதே ஸ்ரீயதே )

அங்கனும் அன்றிக்கே –
4-ஸ்ரியா மாதவா -என்ற வ்யுத்பத்தியாய் (ஸ்ரீ யாலே மாவுக்கு தவன் )-ஸ்ரீ சப்தத்தாலே –
யதிதம் சௌந்தர்ய லாவண்யா யோ -ஸ்ரீ ஸ்தவம் -7- என்கிறபடியே
சௌந்தர்ய சௌகுமார்யாதி குண சம்ருத்தியைச் சொல்லி அத்தாலே ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபன் என்னுமத்தைச் சொல்லுகிறது(ஸ்வரூப குண தாஸ்யம் தானே பிராட்டிக்கு இருந்தாலும் -குணங்களைப் பிரிக்க முடியாதே -அகல்யை இடம் சீதாபிராட்டி )

அங்கனும் அன்றிக்கே –
5-மாதவ சப்தம் ரூட்யா பகவத் வாசகமாய்ஸ்ரியா யுக்தோ மாதவ -என்று மத்யம பத லோப சமாசமாய் ஸ்ரீ யபதியினுடைய –என்றுமாம் –(பங்கஜம் – ரூடி தாமரை -போல் மாதவன் -பிரிக்காமல் பெருமாள்-கூடி இருக்கும் மத்யம பதம் லோபம் -)

அங்கனும் அன்றியே
6-ஸ்ரீ சப்தம் அங்க்ரி த்வய சப்தத்துக்கு விசேஷணமாய்திருவடிகளுடைய பரஸ்பர
சாஹித்யத்வத்தால் வந்த போக்யதாசிசயத்தைச் சொல்லவுமாம்

மாதவ
7-மாதவ -சப்தத்தாலே த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களில் ஸ்ரீ மச் சப்தார்த்தமும் –குண சம்ருத்தி வாசகமான ஸ்ரீ சப்தத்தாலே பூர்வ உத்தர கண்டங்களில் நாராயண சப்தார்த்தமும் சொல்லப் பட்டது –
ஆக
சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீயபதியினுடைய என்கையாலே பிராப்யமும் பிராபகமும் ஒரு மிதுனம் என்கிறது –

அங்க்ரி ஜலஜ-
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்யாதிகளாலே தாமரைக்கு ஒரு போலியான திருவடிகளுடைய
மாதவங்க்ரி -என்கையாலே -திருவடிகளினுடைய உத்தேச்யத்வமும்(வகுத்த பிராப்தி )
ஜலஜ சாம்யத்தாலே அனுத்தேச்யமாய் இருந்ததே யாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயமும் சொல்லப் படுகிறது –

(அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ –43-)

(அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே
அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே
க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே)

(தாமரை திருக்கண்களுக்கு ஒவ்வாது என்று கூரத்தாழ்வான் -அதே போல் திருவடி இணைகளுக்கும் கொள்ளலாமே-ஒப்பு வேறே ஒன்றும் இல்லையே-ஒன்றுக்கு ஒன்றே ஒப்பு)

த்வய –
த்வய-இரண்டினுடைய -இத்தால் –சஹாயாந்தர நைரபேஷயமும் சத்ருசாந்தர ராஹித்யமும்
பரஸ்பர ராஹித்யத்தால் வந்த சோபாதிசயமும் சொல்லப்படுகிறது

அங்க்ரி ஜலஜத்வயம் என்கையாலே
சரணவ் சப்தமும் த்வி வசநார்த்தமும் சொல்லப்படுகிறது –

நித்ய
நித்ய –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –
சர்வேஷூ தேச காலேஷூ சர்வ அவஸ்தாச சாஸயுத கிங்கரோஸ்மி-என்கிறபடியே
சர்வ தேச சர்வகால சர்வ அவஸ்தைகளிலும் உளதான —
நித்யோ நித்யானாம் –
ஒண் பொருள் ஈறில-என்கிறபடியே
ஸ்வரூபம் நித்யமானதால் தன் நிரூபக தர்மமும் நித்தியமாய் செல்லும் இறே(ஆத்மா நித்யம் -ஸ்வரூபம் நித்யம் -அடியேன் உள்ளான் ஸ்வரூப நிரூபக தர்மமான தாஸ்யமும் நித்யம் )

சேவா
சேவா -தாஸ்ய பர்யாயமான சேவா சப்தத்தாலே –
வழு விலா வடிமை -என்கிறபடியே ஸ்வ போக்த்ருத்வ கந்த ரஹிதமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது

இது தான் சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ யபதி விஷயத்திலே செய்யுமதாகையாலே
ஸூக ரூபமாயும்
ஸ்வரூப அநு ரூபமாயும் இருக்கும் –

இத்தால்
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சரணம் பிரபத்யே என்கிற பதங்களினுடைய அர்த்தமும்
உத்தர கண்டத்தில் நமஸ் சப்தார்த்தோடு கூடின சதுர்த்தி யர்த்தமும் சொல்லப் படுகிறது –
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே –
இது தானும் ஸ்ரீ ஈஸ்வர கிருஷி பலமாகையாலே ப்ராப்ய யந்தர்கதமாய் (ஈஸ்வரனால் வந்தது ப்ராப்யத்துக்குள்ளே அடங்கும் )இறே இருப்பது –(நித்ய சேவா என்பதால் ப்ரபத்யே உபாயமும் ஆய நம களையற்ற கைங்கர்யமும் சொல்லிற்று)

ஆக இவ்வளவால் ஸ்ரீ த்வயார்த்தம் சொல்லப் படுகையாலே –
உபாசகனுக்கு ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே உபாசனம் அத்யந்த பிரியம் ஆகிறாப் போலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு ஸ்ரீ த்வயம் அத்யந்த பிரியம் என்கிறது –
பிரபன்ன ஜன கூடஸ்தர் இறே ஸ்ரீ ஆழ்வார்
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே –

பிரேம
பிரேம-சப்தத்தாலே -பிராப்தமுமாய் -போக்யமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமான நித்ய கைங்கர்யத்திலே
பிரேமை இல்லாவிடில் தரிக்க மாட்டாத படியான பிரேமத்தைச் சொல்லுகிறது –
இத்தால் ப்ராப்ய த்வராதிசயத்தைச் சொல்லுகிறது

ஆவிசாஸய –(கலங்கின உறுதி என்றபடி)
(பிரேம காதல் அன்பு வேட்க்கை அவா-பர்யாய சொற்கள் )  -ஆசயமாவது-கலங்கின ஆசயததை உடையரான-ஆவிசாஸய –ஆசயமாவது -அபிப்ராயம் -அதாவது திவ்யாத்மக ஜ்ஞானம் –(உறுதி)
இத்தால் ஸ்ரீ ஈச்வரனே உபாய உபேயங்கள் என்கிற அத்யாவசாயத்தைச் சொல்கிறது
ஆவிசமாவது -பிராப்ய த்வரை அதிசயத்தாலே அநந்ய உபாயத்வ விரோதியான மடல் எடுக்கை-முதலிய ஸ்வ யத்னத்திலே அன்வயிக்கை –

ஆனால் இது கூடுமோ என்னில் –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பற்றி வரும் கலக்கமாய்த்து த்யாஜ்யம் ஆகிறது –
அத்தலையில் வை லஷண்யம் அடியாக வருமவை எல்லாம் பிராப்யாந்தர்கதமாகையாலே கூடும் –
ஆக இப்படி கலங்கின ஆசயததை (உறுதியை அபிப்ராயத்தை )உடையரான

பராங்குஸ
ஸ்ரீ பராங்குஸ-
பரர்கள் உண்டு -ஸ்ரீ ஈஸ்வரனுக்கு குணம் இல்லை -விக்ரஹமும் இல்லை -விபூதி இல்லை –
முதலிலே அவன் தானும் இல்லை என்னும் குத்ருஷ்டிகளும் ஸூந்யவாதிகளும் –
அவர்களுக்கு அங்குசம் ஆகையாவது –
மத்த கஜத்தின் தலையிலே அங்குசத்தை நாட்டி -மதத்தை நிரசித்து -அத்தை ஸ்வ வசமாக்கிக் கொள்வாரைப் போலே
ஸ்ரீ ஈஸ்வரனை இவரை இட்டு குமதிகளுடைய துர்மதத்தைப் போக்கி ஸ்வ வசமாகக் கொள்ளுகைக்கு சாதனமாய் இருக்கை-

இவர் தாம்
உயர்வற உயர் நலம் -என்று தொடங்கி-
குண விக்ரஹ விபூதி விசிஷ்ட ஸ்ரீ ஈஸ்வரனை அவன் மயர்வற மதி நலம் அருளக் கண்டு அனுபவித்து பிறர்க்கும் உபதேசித்து – ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கினார் இறே -ஆகையால் அங்குசம் என்னக் குறையில்லை –

அன்றிக்கே –
பரன் -என்று –ஸ்ரீ ஈஸ்வரன் –
அவனுக்கு அங்குசமானவர்-என்றுமாம் –
அப்போதைக்கு அங்குசம் ஆவது -ஆனையின் தலை மேலே தான் இருந்து தன் ஸ்துதியாலே அத்தை ஸ்வீகரிக்குமா போலே
இவரும் தம்முடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே ஸ்ரீ ஈஸ்வரனை தலை துலுக்கும் படிஎமர் கீழ் மேல் எழு பிறப்பும் கேசவன் தமர் –என்று தம் வாயாலே சொல்ல வல்லராம் படி பண்ணி வசீகரித்தவர் என்கிறது

(பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-நான்கு ஆனைகளை வசப்படுத்தியவர் அன்றோ )

ஆக ஸ்ரீ ஈஸ்வர சேதனர் இருவரையும் வசீகரித்த ஸ்ரீ ஆழ்வாருடைய –
ஸ்ரீ ஈஸ்வரர் சேதனர் இருவரையும் வசீகரித்து ஒருவரோடு ஒருவர் சேர விடுபவர் இறே ஸ்ரீ ஆசார்யர் –
இவர் தாம் ஸ்ரீ பரமாச்சார்யார் இறே

(தென்னரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்தார் வாழியே என ராமானுஜருக்கு பெருமை சொல்வதுண்டு. அது போல் திருகுரு கூர் செல்வம் அனைத்தும மாமுளிகள் திருத்தி வைத்தார். ஆழ்வார்கள் பாசுரங்கள் வாயிலாய் நம்மாழ்வார் ப்ரபாவம் தெரிந்து கொண்டோம்.- பட்டயம் வாசித்தல் – தங்கததால் எழுதப்பட்ட பட்டையத்தை நம்மாழ்வாருக்கு சாத்தப்படும். இந்த பத்தியை ஏற்படுத்தியதே மாமுளிகளாகும். இன்றளவும் க்ரமப்படி திருக்குருகூரில் நடக்கிறது. யதீந்திர ப்ரணவரான மாமுனிகள் ஏற்படுத்திய ப்ரமேய லக்ஷணம், ப்ரமாண லக்ஷணம், ப்ரமாதா லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது. ரொம்ப பெரியவரான ஸ்லாமி ராமானுஜரின்-ராமானுஜ மா முனிகளின் -பெருமைகளை பேச அதற்கு தகுந்தவரான மா முனிகள் பேசினால் தான் சது ரசமாய் சிறப்பாய இருக்கும். அதனால் இந்த யதிராஜ விம்சதியை மாமுனிகள் அருளிச் செய்ததே மிக பொருத்தமாய் அமைந்துள்ளது)

பாத பக்தம்
பாத பக்தம் -திருவடிகள் விஷயமான பக்தியே தமக்கு நிரூபகமாய் இருக்குமவராய் –

இத்தால்
ஸ்ரீ பரமாச்சார்யரான ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் பிரேமம் நிரூபகமாம் போலேயும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே பக்தி யாய்த்து நிரூபகம் என்கிறது
பக்தம் -என்று(க்ருஷ்ண த்ருஷ்ண தத்வ த்ருஷ்ண தத்வம் நம் ஸ்வாமிகள் )
சாமான்யமாகச் சொல்லுகையாலே ஈஸ்வர விஷயத்தில் ஆழ்வாருக்கு உண்டான பர பக்தி பர ஞானம் பரம பக்தி ரூப அவஸ்தய த்ரய விசிஷ்டையான பக்தி இவர் தமக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே என்கிறது —
இவர் தான் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் இறே

ஆக பூர்வார்த்தத்தாலே
ஆச்சார்யஸ்ய ஜ்ஞாந வத்தாதுமாய -என்றும் –
ஜ்ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –என்றும் சொல்லுகிறபடியே
சஹேதுகமாக இவருடைய ஜ்ஞான பூர்த்தியையும் அதினுடைய ஸத் சம்ப்ரதாய பரம்பரா பிராப்தியையும் அருளிச் செய்தாராய்த்து

ஸ்வ ஆஸ்ரித விஷயத்தில் இவர் செய்யும் உபகாரத்தைச் சொல்லுகிறது மேல்
காமாதி தோஷ ஹர மாத்மபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –
காமமாவது –
அபேஷ்யக ஜ்ஞானம் -அதாவது -(கண்ணனுக்கே காமம் உத்தேச்யம் )
விஷயாந்தர ஸ்ப்ருஹை-அத்தை அடியாக உடைத்ததான தோஷங்கள் உண்டு
அதாவது குரோத லோப மோஹ மத மாஸ்ரயங்கள்-அவைகளைப் போக்குமவர் என்னுதல்-

காமத்தை ஸ்வ காரணமாக உடைத்தான தோஷங்கள் உண்டு குரோத லோபாதிகள் -அவற்றைப் போக்குமவர் என்னுதல் –
காமம் அடியாக விறே குரோத லோபாதிகள் உண்டாகுவது –
அவற்றுக்கு அடியான காமத்தைப் போக்கவே அவை எல்லாம் தன்னடையே போக்கினவையாம் இறே

காமம் உப லஷணமாய்-
அத்தாலே அபிஷட் வர்க்கத்தைச் சொல்லி ஆதி தோஷ சப்தங்களாலே அஹங்காரத்தைச் சொல்லி –
ஹரம் என்று அத்தை போக்குமவர் -என்னுதல் –
இவை எல்லாவற்றாலும் அஹங்கார மமகார நிவர்த்தகர் -என்கிறது

கீழ் நித்ய சேவா -என்று பகவத் கைங்கர்யத்தைச் சொல்லி
பராங்குச பாத பக்தம் -என்று அதின் வ்ருத்தி ரூபமான ததீய கைங்கர்யத்தைச் சொல்லி
காமாதி தோஷ ஹரம் என்று தத் பிரதிபந்தக நிவர்த்தகர் என்கையாலே
கீழ்ச் சொன்ன ததீய பர்யந்தமான பகவத் கைங்கர்யத்துக்கு இவரே பிராபகர் -என்கிறது –

இப்படிச் செய்கிறது தான் ஆருக்கு என்னில்
ஆத்ம பத ஆஸ்ரிதாநாம்
தம் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்கிறார் –
பத ஆஸ்ரிதாம் -என்று
திருவடிகள் சம்பந்தத்தையே நிரூபகமாகச் சொல்லுகையாலே -வர்ணாஸ்ரமாதி நியதிகள் இல்லை -என்கிறது
இத்தால் –
பிரதம பர்வமோபாதி சரம பர்வமும் சர்வாதிகாரம் என்கிறது –(ஸமோஹம் ஸர்வ பூதேஷு-ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம் –பூ சத்தா வாசி -அனைத்தைக்கும் )

ஆத்ம பத –
தம் திருவடிகளை –

ஆஸ்ரிதாநாம்
மாதா பிதா இத்யாதிப் படியே சர்வ பிரகார ப்ராப்யமாய்ப் பற்றினவர்களுக்கு –
ததேவ லோகாந்தமனனம் -அயோத்யா -32-5–(லஷ்மணன் வார்த்தை -தேவ லோகமும் வேண்டாம் கைங்கர்யமே வேண்டும்–இவரோ நமக்காகவும் பிரார்தித்துப் பெற்றுத் தந்தார் )இத்யாதிப்படியே
தத் விருத்தமான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்னவுமாம் –
அப்போது ஸேவாயும்  பக்தியும் இவருக்கு நிரூபகங்கள் –
இத்தால் இவர் தாமே உபாயமும் உபேயமும் -என்கிறது –

இவ் விடத்தில் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் ஆகிறது –
ஸ்ரீ எம்பெருமானாருடன் சாஷாத் சம்பந்தமும் –
அவராலே ஸ்ரீ ஆசார்ய பதத்திலே நியுக்தரான எழுபத்து நாலு சிம்ஹாசனஸ்தர் உடைய சம்பந்த பரம்பரையிலே தானும் ஒருவனாகை
இத்தாலே நியுக்தருடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே கார்ய கரம் (அவ்யஹித உபாயம் ராமசரம் போல் அமோகம் -பலன் தந்தே தீரும் )என்கிறது –
இவர் தமக்கு வாசகமான திரு நாமம் ஏது என்ன

ராமானுஜம் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு அல்லாத திரு நாமங்களும் கிடக்க ஸ்ரீ கோவிந்தன் -என்கிற திரு நாமம் –
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிதம் (கண்ணன் வார்த்தையால் பிரமாணம்-உத்யோக பர்வம் )என்கிறபடியே- பிரதானாம் ஆனாப் போலே –
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா -(வரவர விஷய முக்தக ஸ்லோகம்-5 )என்னும்படி
இவ்வதாரத்துக்கு பிரதானமாய்க் காணும் ஸ்ரீ ராமானுஜன் என்கிற திரு நாமம் இருப்பது

(ராமானுஜம் ப்ரேமம் கைங்கர்யம் பக்தி -இஷ்ட பிராப்தி
யதிபதி பிரயத்தனம் -யதி – யத்னம் -அநிஷ்ட நிவ்ருத்தி)

யதி பதிம் –
ஜிதேந்த்ரியரில் தலைவரான ஸ்ரீ எம்பெருமானாரை —
ஜிதேந்த்ரியராவார் -சஷூராதி இந்த்ரியங்களை ரூபாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே சேர்க்குமவர்கள்-
அவர்களில் தலைவராகை யாவது –
சர்வ இந்த்ரியாப்யாயகமான பகவத் அனுபவமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை யன்றிக்கே
அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தால் உண்டான அத் தலையில் முக விலாசமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை –

யதி பதிம்
ஆஸ்ரித பிரத்யஸா அபேஷர் அன்றிக்கே தாமே மேல் விழுந்து ரஷிக்கும் ஸ்வ பாவரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னுமாம்

(யதியாக மட்டும் இருந்தால் ஸ்வ கத ஸ்வீ காரம் -தாமே யத்னம் பண்ணி அடைபவர்
யதிபதி -பரகத ஸ்வீ காரம் -ஆம் முதல்வன் இவன் என்று ஆளவந்தார் தாமும் கடாக்ஷித்து பேரருளாளன் இடமும் பிரார்த்திப் பெற்றவர் அன்றோ
ராமானுஜரான பின்பு தானே யதிபதி யானார்)

ராமானுஜம் யதி பதிம்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே
சர்வாங்க ஸூத்தரான ஸ்ரீ பெருமான் இடத்தில் திரு உள்ளத்தை வைத்து திருவவதரித்தவர் ஆகையாலே
இதர விஷய விரக்தரான ஸ்ரீ எம்பெருமானாரை என்னவுமாம் –

(பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரம் -முதலில் ராமானுஜராகி பின்பு யதிபதி -பொய்கை ஆழ்வார் பாசுரம் படியே ரமயதீ ராமன் -பெருமாள் அழகிலே ஈடுபட்டு -ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட திரு உள்ளத்துடன் ஸ்ரீ திருவேங்கடத்தில் ஸ்ரீ சீதா ராமர் ப்ரதிஷ்டை கர்ப்ப க்ருஹத்திலே ஸ்தாபித்தார் அன்றோ)

த்வயி கிஞ்சித் சமா பத்தே கிம் கார்யம் சீதயா மம–என்றும்
அபிஷிச்ய ச லங்கா யம் ராஷசேந்த்ரம் விபீஷணம் க்ருத்க்ருத்யயஸ்தத -ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ – என்று
அவன் ஸ்வார்த்த நிரபேஷனாய் பரார்த்த ஏக பரனாய் இருக்குமா போலே யாய்த்து
அவனை அனுசரித்து திருவவதரித்த இவர் ஸ்வார்த்த நிரபேஷராய் பரார்த்த ஏக பரராய் இருக்கும் படி என்னவுமாம் –

அன்றிக்கே
இவர் ஆஸ்ரிதர்க்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களை செய்யும் படி எங்கனே என்ன –
ராமானுஜம் –
அதுவோ திரு நாமத்தாலே அறியலாம் -என்கிறார் –
ராமம் அநு ஸ்ருத்ய ஜாத ராமானுஜ -என்று வ்யுத்பத்தியால் அத்தால்
நாரீணாம் உத்தமியான ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து திருவவதரித்தவர் ஆகையாலே –
ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு ஹிதம் சொல்லியும் ஏகாஷீ ஏக கரணி முதலான எழுநூறு ராஷசிகளுக்கு
தம் கிருபையாலே தாமே பவேயம் சரணம் ஹிவ -(ஸுந்தரகாண்டம் (58-90)ஸ்வப்னம் கண்ட த்ரிஜடை வார்த்தை -இயலாமல் தவித்ததே கொண்டு –லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -)என்றால் போலே –
இவரும் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு பொறுக்க மாட்டாதே தாமே மேல் விழுந்து இவர்களுக்கு ஹிதம் செய்வது
தம் கார்யத்துக்காக வன்றி அவர்கள் உஜ்ஜீவிக்கையே பிரயோஜனமாகை என்கை –

ராமானுஜ யதி பதிம்
இராமானுஜன் என்னும் மா முனியே -16-என்கிறபடியே ஸ்ரீ ராமானுசன் என்னும் திரு நாமம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை

யதி பதிம்
ஸ்வ அனுஷ்டானத்தாலே ஸ்வ ஆஸ்ரித ரஷகரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னவுமாம்
கீழே பாத பக்தம் -என்று சொல்லி வைத்து –
இங்கே யதி பதிம் -என்கையாலே இவருடைய ஞான பக்தி வைராக்யங்கள் சொல்லப் பட்டன –

பிரணமாமி மூர்த்த்நா
கீழ்ச் சொன்ன படியே இவர் செய்து அருளிய மகா உபகாரகங்களைக் கண்டு
ஸ்ரீ பெருமாள் விஷயத்தில் ஸ்ரீ பிராட்டி சிரஸா ச அபி வதாயா -என்றாப் போலே
தாமும் இவ் விஷயத்தில் தலையால் வணங்குகிறார் –

மூர்த்த்நா-பிரணமாமி –
க்ருதஜ்ஞ்ஞாதிசயம் இருந்த படி என் தான் –நினைவும் சொல்லும் பிற்படும்படி காயம் தானும் முற்பட்டபடி –(மன பூர்வ வாக் உத்தர காயம் பின்பு மாறாடியபடி )
அன்றிக்கே –
மூர்த்த்நா–என்று காயிகத்தை முற்படச் சொல்லி
மேல் பிரணமாமி -என்றதுக்கு பூர்வ பாவியான வாசகத்தைச் சொல்லி
உப லஷணதயா இரண்டுக்கும் அடியான மானசிகத்தைத் சொல்லுவதாகவுமாம் –
ஆக கரண த்ரயத்தாலும் சேவிக்கிறார் என்னவுமாம் –

அன்றிக்கே
தத் விஜ்ஞாதார்த்தம் குருமேவ அபி கச்சேத்-(முண்டகம் -அவனை அறிய குருவைப் பற்ற வேண்டும் )என்றும் –
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும் சொல்லுகிறபடி
சிஷ்யனுக்கு ஜ்ஞான லாபம் ஸ்ரீ ஆசார்யனாகையாலே ததார்த்தமாக அவர் தம்மையே சரணமாகப் பற்றுகிறார் என்றுமாம்

பிரணமாமி
நமாமி -என்று ந நமேயம் -என்று இருக்கும்படி பண்ணுகிற அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லி
பிர -என்ற உபசர்க்கத்தாலே அதினுடைய நிச்சேஷ நிவ்ருதியை சொல்லுகிறது

(வணங்காமல் தாழ்ந்து -வணங்கினால் வாழ்ந்து -நன்றாக வணங்கினால் – அவன் இசைவிக்க வணங்கி அவன் உகப்புக்காக கைங்கர்யம் -நித்ய வாழ்வு)

இத்தால்
ஆத்ம ரஷணத்தில் தனக்கு ஒரு அன்வயம் இன்றிக்கே அவன் இட்ட வழக்காய் இருக்கும் படியைச் சொல்லுகிறது
சிஷ்ய லாபம் ஸ்ரீ ஆசார்யனுக்கு புருஷார்த்தம் இறே-
ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யத்தாஸ்தீதி நிச்சயாத் அங்கீ கர்த்தும் இவ பிராப்தம் அகிஞ்சதமிமம் ஜதம்ய -என்று
ஸ்வ அங்கீ காரத்தை அத் தலைக்கு புருஷார்த்தமாக விறே அப்பா அருளிச் செய்தது –

ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||-பூர்வ தினசரியா -11–

ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன் தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,

அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,

பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,

இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,

அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,

இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),

அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள் கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக் கொள்வதற்கென்று,

ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….)

யதி பதிம் மூர்த்நா ப்ரணமாமி
அவர் மேன்மைக்கு எல்லை நிலமானவோ பாதி இவர் தாழ்மைக்கு எல்லை நிலமாகிறார் –
அவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
இவர் ஸ்ரீ யதீந்திர மூர்த்நா ப்ரணமாமி-
இத்தால் ஸ்ரீ ஆச்சார்ய அபிவாத ரூப மங்களத்தைச் செய்து அருளுகிறார் –

—————–

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள்

பரம பூஜ்யரான மணவாளமாமுனிகள், ப்ரபந்ந ஜன கூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) நம்மாழ்வார் முதலான பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும்தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும், திருமந்த்ரம் த்வயம் சரம ஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய – முடிந்த பொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம் (மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும், ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும் யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளிய வருளிச் செய்ய விரும்பி, தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக,-ஸ்வ அதிகார அநு ரூபம் – தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.

தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு-சரம பர்வ நிஷ்டை –ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
குருவின் ஞானம் முதல் ஸ்லோகம் -அனுஷ்டானம் இரண்டாவது ஸ்லோகம்

ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் . திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து, இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க. விம்சதி = இருபது.

ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்” (பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதி கலங்கப் பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச் செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார். ‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும். அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன, வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தம்-. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே, தம்மை யடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம் மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும். குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும் ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு, அவர்தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸ பாத பக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை – பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால் ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது. திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால்

மாதவன் -741-பக்த வாத்சல்யன் -742–ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -ப்ரேமம் மாதவன் இடம் வைக்க அவனும் பக்தர்களுக்கு வாத்சல்யம் காட்டி அருளுவான்-
ப்ராப்த விஷயத்தில் இழியவே அபிராப்த விஷய ப்ராவண்யம் தன்னடையே விலகிப்போகுமே-வாத்சல்யம் ஆழ்வார் அளவில் நிற்காமல் ஆழ்வார் தமர்கள் அளவும் பர்யவசிக்குமே

ராமானுஜர் பக்தியை வளர்த்து யதிபதி விஷயாந்தர ப்ராவண்யம் கழித்து அருள்வார்
மாதவ பெருமாள்-ஜலஜ த்வய திருவடித் தாமரை -குணக்ருத தாஸ்யம் –
பராங்குச பாத பக்தம் -இங்கு கமல பதம் இல்லையே -ஸ்வரூப ப்ரயுக்த பாகவத ப்ராவண்யம் அதிக அதிசயம்-ஸ்வாமிக்கு –
சரம பர்வ நிஷ்டர் உத்தம ஆஸ்ரமம் -இரண்டும் ராமானுஜர் யதிபதி
பக்திஸ்ய நியதா வீரா பாவோ நான்யத்ர கச்சதி -ப்ராப்த விஷய ப்ரேமம் -வைராக்யம் -இங்கும் இதே இரண்டு விஷயங்கள்
அமுதார்யர் -திருவரங்கத்து அமுதனார் -பெரும் புறக்கடல் பிருஹத் பஹி சிந்து போல் -ப்ரபந்ந சாவித்ரி போலவே இங்கும்

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –