Archive for December, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-10–

December 30, 2018

இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள் சொல்ல
அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

நகரமும் நாடும் பிறவும் தேர்வன்-
உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி சொல்லுகிறார்களே!’ என்ன,
எனக்குத் தான் தேட்டம் அவனேயோ?
நகரம், நாடு பத்தநம் முதலானவைகள், இவற்றிலுள்ளாருடைய பழியே யன்றோ எனக்குத் தேட்டம்?
தேர்வன்’ ‘
தேடுகிறேன்’ என்றபடி.
நீங்கள் சேர்க்கிலீர் கோளாகில், அவன் தானாக வாரானாகில், அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்கள் அன்றோ
என் சத்தையை -ஆத்மாவை நோக்குகிறார்கள்?
அலர் எழ ஆருயிர் நிற்கும்’ என்றான் அன்றோ?
பிறவும் –
மற்றுமுள்ளனவும்.

நாண் எனக்கு இல்லை –
லஜ்ஜை -நாணம் இங்கு இல்லாமையே அன்று;
அங்குப் போனாலும் இல்லை. இந்தச் சரீரத்தில் முதலிலே இல்லாமை.

என் தோழிமீர்காள் –
இது நான் உங்களுக்குச் சொல்லி அறிய வேண்டுபடி ஆவதே!

சிகரம் மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த –
மலைகளின் சிகரங்களைக் கொடு வந்து வைத்தால் போலே ஓக்க முடைத்தாய்,
ரத்தின மயமான மாடங்களை யுடைய பெரிதான தென் திருப்பேரெயில் வீற்றிருந்த.

மகர நெடுங்குழைக்காதன் –
மகரத்தின் ஆகாரமான -வடிவமான பெரிய ஆபரணத்தை யுடைய கர்ண பாசங்களை யுடையவன்.
தோள் கண்டார் தோளே கண்டார்; தொடு கழற் கமல மன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.’-கம்பராமாயணம்

அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்தாரை மீட்கலாயோ இருப்பது?

மாயன் –
சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்ம குணங்ளையும் நினைக்கிறது. அன்றிக்கே,
மாயன் –
அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தை யுடையவன்’ என்னுதல்.

நூற்றுவரை அன்று மங்க நூற்ற –
சிலரை அழிக்க நினைத்தால் ஒருவரும் தப்பாதபடி அழிக்குமவன்.
துரியோதனன் முதலாயினோர்களைப் பாரதப் போர் உண்டான அன்று நசிக்கும்படி மந்திரித்த.

நிகர் இல் முகில் வண்ணன்-
ஒப்பில்லாத காள மேகம்போலே இருக்கிற வடிவழகு.
இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடி வழகு’ என்கை.

நேமியான் –
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தை யுடையவன்.
திருவாழியைக் கொண்டு பீஷ்மாதிகள் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ?

நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் –
துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய்,
பாண்டவர்கள் ஆர்த்தி -துன்பம் தீர மழை பெய்து நின்றபடி.
அவன் உன் விரோதிகளைப் போக்கிக் கூட நினையாத பின்பு, அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்திரத்தாலோ?’ என்ன,

என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே –
அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு?
வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலம் தான்?
எனை ஊழியானே –
பல கல்பங்கள் உண்டு. துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினால் போலே,
என் நெஞ்சினை அபஹரிக்கைக்கு – கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-9–

December 30, 2018

நீங்கள் இனி என்னைத் தேற்றிப் பிரயோஜனம் இல்லை;
தென் திருப் பேரெயிலைப் போய்ப் புகக் கடவேன்,’ என்கிறாள்.

சேர்வன் சென்று என்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே–7-3-9-

சேர்வன் சென்று –
உன் ஆற்றாமையாலே சில சொல்லுகிற யாகில் இது கடைப் படவற்றோ?’ என்ன,
அவசியம் அங்கே புக்கு அல்லது விடேன்!’ என்கிறாள்.

என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் –
எனக்காக இருப்பாரும்,
என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும்
ஒன்றும் சொல்ல வேண்டா.
தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு.
அஞ்ஞரோ -அறிவில்லாத மாக்களோ வியவசிதரை -ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்?
விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத்தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்?
இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்;
அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள்.

நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு –
கலங்கினாரோ தெளிந்தாரைத் தேற்றுவார்?
நீங்கள் நிற்கிற நிலை எது? என் நிலை எது? போகையிலே துணிந்திருக்கிற என்னை,
புறப்படுகை பழி’ என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்?
இதற்கு –
எனக்கு ஓடுகிற நிலைக்கு.
ஆனாலும், நெஞ்சும் அடக்கமுடையார்க்கு இது வார்த்தையோ?
நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுக வேண்டாவோ?’ என்ன,

நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள்.
மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டு வைக்கும் கலம்.
நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம் படியோ அவன் படி இருக்கிறது?

கார் வண்ணன் –
தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாத படியாக வடிவைப் படைத்தவன்.
வெறும் வடிவழகேயோ உள்ளது?’ என்னில்,

கார்க் கடல் ஞாலம் உண்ட –
தளர்ந்தார் தாவளம், ஆபத்து வந்தால் காப்பாற்றி விடும் அத்தனையோ?’ என்னில்,

கண்ணபிரான் –
தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன்.

வந்து வீற்றிருந்த-
தன் ஐஸ்வர்யம் -செல்வம் எல்லாம் தோற்றும்படி இருந்த.

ஏர் வளம் ஒண் கழனிப் பழனம் தென் திருப் பேரெயில் மாநகரே –
ஏரினுடைய ஸம்ருத்தியை -நிறைவினை யுடையனவாய்,
அழகியனவான கழனிகளையும் நீர் நிலங்களையுமுடைய
திருப் பேரெயிலாகிற மா நகரிலே சென்று சேர்வேன்.
உங்கள் தடைக்கு மீளுதல், அவ் வழியில் நிற்றல் செய்யேன்.
என்னைத் தேற்ற வேண்டா.’ வளம் – மிகுதிக்குப் பெயர் .

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-8–

December 30, 2018

‘எனக்கு ‘அவனைக் காண வேணும்’ என்னும் அபிநிவேசம் -காதல் கடலின் மிகப் பெரிது’
என்னுமளவு அன்றிக்கே, அற மிக்கது, ஆன பின்பு, நீங்களாக இசையீர் கோளாகில்,
தன் வேண்டற்பாடு தோன்ற எழுந்தருளியிருக்கிற தென் திருப்பேரெயிலை நான் சென்று சேர்வன்’ என்கிறாள்.

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-

கண்டதுவே கொண்டு –
அவன் பேர் சொல்லுதல்,
தலையில் வணங்கவுமாம் கொலோ?’ திருவாய். 5. 3 : 7.-என்று
ஒரு பிராணாமம் -வணக்கம் செய்தல் செய்யுமன்றோ? அவ் வளவினையே கொண்டு;
புற இதழ் கண்டு படுகிறபடி இது வானால், அக வாயில் ஓடுகிறது அறியில் என் படுவார்கள்?

எல்லாரும் கூடி –
பரிவரோடு, ஹித காமரோடு -நலத்தை விரும்புமவரோடு,
இவை இரண்டும் தான் என்?’ என்று இருப்பாரோடு வாசி அறக்கூடி.
பிறரைப் பழி சொல்ல என்னில், தம்மில் தாம் சேராதவர்களும் சேர்வார்கள் அன்றோ?

கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு –
இவள் நிறம் விவர்ணமாம் -பசலை நிறமாம் போது, அவன் திறத்தே இழந்ததாக வேண்டாவோ?
கடல் ஏறி வடிந்த இடம் என்று தோற்றுகிறத் இல்லையோ?
என் இடையாட்டத்தை -செயலை ஸ்ரமத்தைப் போக்குகிற நிறத்தை யுடையவனோடே கூட்டி.

அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் –
இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் ஸூகமே இரேனோ?
நான் பழிக்கு அஞ்சி மீளுவேன் என்று காணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது.
அலர் தூற்றிற்று –
அலர் தூற்றினார்கள்.
அது முதலாக் கொண்ட என் காதல் –
அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது சதசாகமாக -நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.
ஊரவர் கவ்வை’- என்றி திருவாய்மொழிப் பாசுரம் 5. 3 : 4
ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.’-திருக்குறள்.

காதல் உரைக்கில்
தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
யதோவாசோ நிவர்த்தந்தே’ தைத்தீரியம்.
எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும்
இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?
சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,
அதனில் பெரிய என் அவா’ என்றார் அன்றோ?

தோழீ –
இந்தக் காதலை விளைக்கைக்கு நீ செய்யும் கிருஷி அறிதி அன்றோ? இது இருந்தபடி பாராய்.

மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிது –
காதல், கடலின் மிகப்பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;
ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில்,
பெரியவற்றில் பெரியது என்னுமித்தனையல்லது,
ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.
மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக் கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும்
என்னுமிவை இத்தனைக்கும் அவ் வருகு பட்டிருக்கை.
இப்படிக் காதல் கரை புரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,

தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வான்
இந்தக் காதல் மறு நனையும் படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப் புகுமத்தனை.
தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயிலே போய்ப் புகுமத்தனை.
தஸ்ய உபவந ஷண்டேஷூ நாநாபுஷ்ப ஸூகந்திஷூ
விஹ்ருத்ய ஸலிலக்லிந்நா தவாங்கே ஸமுபாவிஸம்’-, சுந். 38 : 14.
பலவித மலர்களினுடைய சிறந்த வாசனை நிறைந்த அந்தச் சித்ர கூட மலையில் பல உத்தியானங்களில் விளையாடி
அதனால் வியர்வை யடைந்து வாட்ட முடையவளாய்த் தேவரீருடைய மடியில் படுத்துக் கொண்டேன்’ என்கிறபடியே,
அனுபவத்திற்குத் தகுதியான யோக்யமான – தேசத்திலே போய்ப் புகக் கடவோம்.

சேர்வன் சென்றே –
இனிப் பகட்டால் தீராது, புக்கு அல்லது விடேன்.
ஆள் விடுதல், அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.
சென்று சேர்வன் –
இனி எதிரே அவன் வரிலும் மீளேன்.
அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம், அங்கே சென்று கிட்டகை.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-7–

December 30, 2018

‘அஹஞ்ச அநுகமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’- உத்தர காண்டம்-
இளைய பெருமாள் சென்ற வழியை நானும் பின் பற்றுகிறேன்’ என்ற பெருமாளைப் போலே
இந்தப் பிராட்டியும் ‘என் நெஞ்சு, தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப் பேரெயில் புக்கால் போலே
நானும் அங்கு புகுமத்தனை,’ என்கிறாள்.
கீழ் பாசுரங்களில் கூறியவாறே முடிந்த பின்பு, ‘இனி, நான் செய்யப் பார்த்தது இது என்கிறாள்,’ என்னுதல்.

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் –
மதிளுக்கு அகழாம்படி அம் மதிளைச் சூழ்ந்த கடலை யுடைத்தாய்,
கேட்க அஞ்சும் படியான ஊரை மூலை அடியே நடக்கச் செய்த உபகாரகன்.
பேர் எயில் – பெரிய மதிள்.

வந்து வீற்றிருந்த-
அப்போது முகம் மாற வைத்த இழவு தீர அணைக்கலாம்படி கிட்ட வந்திருக்கிற.
வதாம் உதித பூர்ண’ சுந்த்ரகாந்தம் விமல ஸஸாங்க நிபாநநா ததாஸீத்’ – , யுத்,. 117 :
விமல சசாங்க நிபாநநா’ என்கிறபடியே, எப்போது பெருமாள் முகம் வைக்க ஒண்ணாதபடி கொடியராய் இருந்தார்,
அவ் வளவிலும் இவள் மறுவற்ற சந்திர மண்டலம் போலே முகத்தில் குளிர்ச்சி மாறாதே இருந்தாள்.
‘தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 118:17.
கண் நோய் கொண்டவனுக்கு விளக்குப் போன்று எனக்குப் பிரதி கூலமாய் இருக்கிறாய்; நிச்சயம்’
என்பது பெருமாள் திருவார்த்தை
நேத்ர -கண்களின் தோஷத்தால் வந்தது போக்கி, விளக்கின் தோஷத்தால் வந்தது அன்று,’
என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்வார்.
பிரதிகூல நிரசனம் -பகைவர்களைக் கொன்று அதனாலே விடாய்த்து வந்திருப்பார்,
பர்த்தாரம் பரிஷஸ்வஜே’ ஆரண்ய, 30 : 40.
கணவனைத் தழுவிக் கொண்டாள்’ என்கிறபடியே,
குளிர்ந்த உபசாரங்களைச் செய்வதற்குப் போக வேணும்.

பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் –
அவன் இருந்த திருப் பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன்.
மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்;
அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்!
நெஞ்சும் கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்லா வேண்டா அன்றோ?
நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்து காணும் இவள் நிற்கிறது.
அன்றிக்கே, கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனை யன்றோ?’ என்னுதல்.
அபிமதன் -நாதன் வரும் தனையும் அவனுக்காக அவன் செயல்களைப் பாடிக் கொண்டு தரித்திருக்க வேண்டாவோ?’ என்னில்,

ஆரை இனி இங்கு உடையும் தோழீ! –
நெஞ்சும் இல்லாத அன்று இனி யார் உளர்?

தோழீ –
நெஞ்சில் அண்ணியன் நானோ?’ என்றாயாகில், நீ நீ ஆனாயே.
இப்போது நான் இங்கு இல்லையோ? உன் நெஞ்சினை அழைத்துக்கொள்ளுவதற்கு என்?’ என்ன,

என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை –
நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமே-
நெஞ்சினை அவனுக்கு ஆக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்;
உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:
அல்லாதார்க்குக் ‘கூட்ட வேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?

ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது-
யாரைக் கொண்டு தான் சாதிப்பது?
இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?
நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே? இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?
ஆனால், செய்யப் பார்த்தது என்?’ என்னில்,

என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே –
மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.
அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’- உத்தர காண்டம்-
நான் இப்பொழுதே லஷ்மணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே,
நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-6–

December 30, 2018

நீங்களும் ‘கொடு போவோமோ அல்லோமோ? என்று விசாரிக்கும் தசை -நிலை அன்றிக்கே,
எனக்கு அபிநிவேசமானது – காதலானது அற மிக்கது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது;
ஈண்டென என்னைத் தென் திருப்பேரெயில் கொடு புக்கு
மகர நெடுங்குழைக் காதனைக் காட்டுங்கோள்’ என்கிறாள்.

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே–7-3-6–

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
குடிக்குப் பரிஹாரம் இல்லை யாகிலும் எனக்குப் பரிஹாரம் இது அல்லது இல்லை.
இனி என் மேல் குற்றம் இல்லை. ‘என்? இப்படிக் கடுக வேண்டுவான் என்?’ என்னில்,

காதல் கடலின் மிகப் பெரிதால் –
இந்தக் காதல் அளவு பட்டோ இருக்கிறது?
முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.
கடல் புரைய’ திருவாய், 5. 3:4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
ஆனாலும், காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?’ என்ன,

நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான் –
நான் உங்கள் வழியே போகவோ, இவன் வழியே போகவோ?
என்னை அப்படிச் சேர்த்து விட வந்து முன்னே நிற்க, நான் மீளும்படி என்?
அப்படியாலே அவன் துவக்கா நிற்க, உங்கள் வார்த்தையைக் கேட்கவோ?
ஸ்ரமஹரமான -ஸ்ரமத்தைப் போக்கும் படியான வடிவினைக் கொண்டு முன்னே நின்று
காதலை வளர்க்கின்றவனாகா நின்றான். இக் காதலை ஒரு படியே வளர்க்கிறது அன்றோ?
கடல் புரைய விளைவித்ததும் காரமர் மேனி அன்றோ? திருவாய். 5. 3 :

நிற்கும் முன்னே வந்து –
இவன் கிட்ட நின்றிலனாகில் நான் உங்கள் வார்த்தையைக் கேட்டு மீளேனோ?
ஆனால் உனக்குப் பொல்லாதோ?’ என்ன,

என் கைக்கும் எய்தான் –
அழகிது அன்றோ, எனக்கு இப்படித் தரப் பெறில்! வார்த்தை சொல்லுதல், அணைத்தல் செய்யாமையே அன்று;
என் கைக்கும் எட்டுகின்றிலன். ‘இனி நீ செய்யப் பார்த்தது என்?’ என்ன,
உருவெளிப்பாடு அன்றியிலே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திற்குப் போகப் பார்த்தேன்,’ என்கிறாள் மேல்:

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த –
தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரம பதத்தில் ஐஸ்வரியம் எல்லாம் இங்கே தோற்றும்படி இருந்த.

நான் மறையாளரும் வேள்வி ஓவா –
வேதார்த்த வித்துகளும் சமாராதனத்திலே நிரந்தரமாக -எப்பொழுதும் ஈடுபட்ட வர்களானார்கள்.
என்னோடு சஜாதீயரும் -ஒத்தவர்களும். தங்கள் தங்களுக்கு வகுத்த கைங்கரியம் பெற்று வாழா நிற்பார்கள்.

கோலம் செந்நெல் கவரி வீசும் கூடுபுனல் திருப்பேரெயில் –
மழை சோறு முதலியவைகள் விஷயமாக அங்குள்ளார்க்கு முயற்சி செய்ய வேண்டாமலே இருக்கை.
அவை ஆநுஷங்கிக பலமாய் வருமத்தனை;
நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும்’ பெருமாள் திருமொழி, 5 : 9. -என்றும்,
அங்கங்கே அவை போதரும்’ பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 4.-என்றும் சொல்லக் கடவதன்றோ?
தர்ச நீயமான -காட்சிக்கு இனிய செந்நெல் களானவை அங்குத்தைக்குக் கவரி வீசினால் போலே அசையா நிற்கும்.
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே
தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடு புனல் திருப்பேரெயில்’ என்கிறது.

திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும் படியான தேசத்திலே கொடு போய்ப் பொகடப் பாருங்கோள்.
அன்றிக்கே, ‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே,
இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-5–

December 30, 2018

இங்ஙனம் விரைதல் ஸ்த்ரீத்வத்துக்கு பெண் தன்மைக்குப் போராதுகாண்,’ என்று தாய்மார் அலைக்க,
அதுவும் பண்டே போயிற்று; பிரயோஜனம் இல்லாத நிலையிலே கொடு போக நில்லாதே.
என்னை முன்னரே கொடு சென்று தென் திருப்பேரெயிலிலே விடுங்கோள்,’ என்கிறாள்.
முனிகிறது தான் என்னுடைய ஹிதத்தை -நலத்தைப் பார்த்தே யானால்
என் ஹிதத்திலே நலத்திலே செல்லப் பாருங்கோள் என்கிறாள்.’

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-

முனிந்து சகடம் . . . . . . . . . . தோற்றேன் –
என்னுடைய நினைவு தன்னைப் புத்தி பண்ணுங்கோள்;
அவன் முனிவிலே அகப்பட்ட நான் இனி உங்கள் முனிவிற்கு மீளுவேனோ?
ஹிதமுமாய்ப் பிரியமுமான முனிவிலே அகப்பட்ட நான், ஹிதம் இல்லாததுமாய்ப் பிரியம் இல்லாததுமான
உங்கள் முனிவிற்கு மீளுவேனோ?

முனிந்து சகடம் உதைத்து –
முலை வரவு தாழ்த்தது என்று சீறி நீட்டின திருவடிகளுக்கு இலக்காய்ப் பொடி பட்ட தாயிற்றுச் சகடம்.
சிக்ஷேப் பரணா வூர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ’-ஸ் ரீவிஷ்ணு புரா. 5. 6 : 1.
முலைப் பாலை விரும்பினவராய்த் திருவடிகளை மேலே நிமிர்த்தார் அழுதார்’ என்கிற தன்றோ?

மாயப் பேய் முலை உண்டு –
முலையை நினைத்துச் சீறினான்’ என்று முலை கொடுக்கத் தாய் வடிவு கொண்டு வந்த
வஞ்சனை யுடையவளான பேய்ச்சியை முடித்து.

மருதிடை போய் –
முலை உண்டால் தவழுமத்தனை அன்றோ?
புறம்பு நின்றும் வந்து.நலிகை அன்றிக்கே, நின்ற இடத்தே நின்று தப்பாமல் கொல்ல நினைத்த
மருத மரங்கள் இரண்டனையும் பொடி படுத்தி.

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த –
அசுர ஆவேசத்தாலே ஒன்று கனிந்த விளவாய், ஒன்று கன்றாய் நின்றது;
அதிலே ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து இரண்டையும் முடித்த.

கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –
அழியுமற்றையும் அழித்தான்: அழியாததனையும் அழித்தான்.
வன்மையாலே அழித்தான் அவற்றை; மென்மையாலே அழித்தான் இவளை.
அவற்றின் கையிலே தான் அகப்படாமல் தப்பித் தன்னைத் தந்த உபகாரத்துக்கு எழுதிக் கொடுக்கிறாள் காணும்
பிரானுக்கு’ என்று, சேஷியான தன்னை உண்டாக்கி, என்னைச் சேஷத்வத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான்.
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’-, ஸ்ரீகீதை, 4 : 5.
என்னுடைய பல பிறவிகள் கடந்தன்’ என்கிற அவதாரங்களைப் போன்று பரப்புப் போரும் காணும்
இவ் வவதாரத்தில் இவளைப் பெறுகைக்குச் செய்த ப்ரவ்ருத்திகளும் -செயல்களும் அவனுக்கு
அடியார்களிடத்துள்ள வாத்சல்யத்தின் காரியமான முனிவே அன்றோ?

கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –
ஆகையால் ‘அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:’ ஸ்ரீ கீதை, 15 : 18.
வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறேன்’ என்றும்
ஜாநாதி புருஷோத்தமம்’ , ஸ்ரீ கீதை, 15 : 19.
என்னைப் புருஷோத்தமன் என்று எவன் தெரிந்து கொள்ளுகின்றானோ’ என்றும் சொல்லுகிற தன்னுடைய
பும்ஸ்த்வத்தை -ஆண் தன்மையைக் காட்டிக் காணும் இவளுடைய பெண்மையைக் கொள்ளை கொண்டது.
பெண்மை தோற்றேன் –
தோலாதது தோற்றேன்.

முனிந்து இனி-
இனி மீட்கலாம் என்றே நினைக்கிறது?
மீட்க நினைக்கிற நீங்கள் அவனுடைய வெற்றிச் செயல்கட்கு முன்னே அன்றோ மீட்கப் பார்ப்பது?

என் செய்தீர் –
எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர்; மீட்கத் தொடங்கினது தலைக் கட்டிற்று அன்று.

அன்னைமீர்காள் –
ஜென்ம ப்ரப்ருதி என் பிரகிருதி -பிறந்தது முதல் கொண்டு என் இயல்பினை அறிந்து போருகிற நீங்கள் மீட்கப் பார்ப்பதே!
அவன் செய்த உபகாரங்களை அறியாமல் அன்றோ நீங்கள் பொடிகிறது?
அவன் செய்த உபகாரங்கள் மறக்க ஒண்ணாதாகில் நினைக்கிறாய்;
பெற்று வளர்த்த எங்களுடைய உபகாரமும் நினைக்க வேணும் காண்!’ என்ன,

முன்னி அவன் வந்து வீற்றிருந்த –
உபகாரத்தில் முற்பாடன் அவன் காணுங்கோள். முன்னி – முற்பாடனாய் நின்று;
பூர்வஜ-முன்னே உண்டாவனவனே’ என்னும்படியே, என்னைப் பெறுகைக்குக் காலத்தை
எதிர் நோக்கினவனாய்க் கொண்டு தன் வேறுபாடு தோற்ற இருக்கிற.

கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே –
கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; அங்குள்ளன எல்லாம் பக்குவ பலமாக இருக்கும்.
கனிந்த மரம் கண்டால், ‘அசுர ஆவேசம் உண்டு’ என்று அஞ்ச வேண்டாத சோலை.

காலம் பெற என்னைக் காட்டுமினே –
இக் குடிக்கும் எனக்கும் பரிஹாரம் ஒன்றே அன்றோ?
பின்னையும் என்னை அங்கே கொண்டு போய் விடுதலைத் தவிரீர்கோள்;
நான் உளேனான போதே அதனைச் செய்யப் பாருங்கோள்.
பின்பு -கதே ஜலே சேது பந்தம் ஆகாதே -தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டப் பாராமல்,
நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-4–

December 30, 2018

ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருந்தியாகிலும் போது போக்காதே இங்ஙனே செய்யலாமோ?’ என்று
பொடிகிற தாய்மாரைக் குறித்து, ‘என் நெஞ்சம் அவனாலே அபஹ்ருதமாகா -கொள்ளை கொள்ளப்பட்டது;
நான் எதனைக் கொண்டு போது போக்குவது?’ என்கிறாள்.

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நாணும் நிறையும் இழந்தது என்ற இடம், நிறத்திற்கும் உபலக்ஷணமன்றோ?
ஆதலால், அநு பாஷணத்திலே நிறம் இழந்ததையும் தோற்றச் சொல்லா நின்றாள்.
அத் தலையில் உள்ளனவற்றை முழுவதையும் நாம் சர்வ ஸ்வ அபஹரணம் -நமக்கு உரித்தாகச் செய்கை போய்.
நமக்கு உள்ளனவற்றிலே ஒன்றினைச் சிலர் கொடு போகையாவது என்?’ என்று செருக்குக் கொண்டு
இப்போதே மீட்டுக் கொடு வருகிறேன்’ என்று விரைந்து சென்ற மனமும் அங்கே படையற்றது.
என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?‘
நெஞ்சினார்
அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக் கடித்துத் திரியா நின்றாராயிற்று.
ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’ யுத். 19:23.
தூசித்தலையில்-தூசித்தலை – படையின் முன்னிடம்- வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?‘

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார்.
வினைத் தலையிலே படை அறுக்குமாறு போலே, வரிசையும் கொடுத்துத்
தம்மோடு சாம்யா பத்தியும் -ஒப்புமையையும் கொடுத்தார்.
ராஜஹ்யேஷவிபீஷண;’ யுத். 28:27. 1‘இந்த விபீஷணன் ராஜா வன்றோ?’ என்னுமாறு போலே,
வரிசை பெற்றுத் திரியா நின்றார்.
இது, இராவணனைப் பார்த்துச் சாரன் கூறியது.

தாருலா மணி மார்ப!நின் தம்பியே
தேரு லாவு கதிருந் திருந்து தன்
பேரு லாவு மளவினும் பெற்றனன்
நீரு லாவு மிலங்கை நெடுந் திரு.’, கம்பராமாயணம், ஒற்றுக்கேள்விப்படலம், 60.

இராவணன் முன்னே, அவன் சோற்றை உண்ட சுகசாரணர்கள் ஸ்ரீவிபீஷணாழ்வானை ‘ராஜா’ என்பான் என்?’ என்னில்
எழுத்து உரு அழியாதே கிடந்தாலும், புள்ளி குத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாறு போலே,
முடி கொடுக்குமவர் கையாலே வைக்கையாலே ‘ராஜா’ என்றார்கள்.
ஒன்றாலும் ராவணனுடைய கொடுமையை அறிந்து வைத்துக் கூசாதே இங்ஙன் சொல்லுவான் என்?’ என்னில்,
சித்திரம் குத்துமோ’ என்று இருந்தார்கள்.
நிலவரைக் கொண்டு வினை செய்யலாம்’ என்று தரம் கொடுப்பர் அன்றோ?

என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.
இத் தலையில் வெறுமை கண்டு போனதுவும் -பவ்ங்கல்யம்- நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.
போவார் போவார் எல்லாரும் இத் தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது!
அவன் தானே ‘இத் தலையில் ஊற்று இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’
இது இத் தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று.
நாம் தாம் அவர்களை வெறுக்கிறது என்?’
நோபஜனம் ஸ்மரன்- முத்தன் இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே, புக்கார் மீளாத தேசமான பின்பு.
அங்கே ஒழிந்தார் –
கடலுக்குக் குறை நிரப்ப வேணும்’ என்று திரியா நின்றார்.
பண்டு நெஞ்சு இழந்தவர்களும் வருந்தித் தரித்துச் சிலரோடே அவனுடைய
செயல்களைச் சொல்லிக் கொண்டு இருந்திலர்களோ?
நீயும் அப்படியே வருந்தியாகிலும் சிலரோடே காலம் கழிக்க வேண்டாவோ?’ என்ன,

இனி உழ்ந்து ஆரைக்கொண்டு என் உசாகோ –
என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.போக்குவது?
உழந்து – வருந்தி.
இலங்கையிலே இருந்தவளுக்கு ஒருவனாதல் ஒருவன் குடியாதல் உண்டு; அதுவும் இல்லையே எனக்கு!
ஜ்யேஷ்டா கந்யா அநலாநாம விபீஷணஸூதா கபே
தயா மமஇதம் ஆக்யாதம் மாத்ரா ப்ரேஷிதயா ஸ்வயம்’. சுந். 37:11. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
ஜ்யேஷ்டா கந்யாநலா நாம விபீஷண ஸூதா – இங்கே இருந்தே அங்குத்தைக்கு -பெருமாளுக்கு.-ஆவாள் ஒருத்தி காண்!
கபே – ஒரோ நிலைகளிலே நீ உதவுமாறு போலே காண் இவளும் ஒரோ நிலைகளிலே உதவ வல்லபடி.

அன்ன சாவ முளதென ஆண்மையான்
மின்னு மௌலியன் வீடணன் மெய்ம்மையான்
கன்னி என்வயின் வைத்த கருணையாள்
சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவாள்.’-கம்பராமாயணம்,. சூடாமணிப்பட. 22.

பல சொல்லி என்? உன்னோடு ஒப்பாள் ஒருத்தி.

ஆரைக் கொண்டு என் உசாகோ –
தேகாத்ம -சரீரத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ?
பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்ய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத் தலையை உரி சூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?
யாரைக் கொண்டு எதனை உசாவுவது? என் உசாகோ –
நான் அங்கே பன்னிரண்டு வருடங்கள்’ என்று சொல்லலாமன்றோ பிராட்டிக்கு?
அப்படியே நமக்கும் ஏதேனும் உண்டோ?
கலவியில் அபர்யாப்தி -நிறைவு பெறாமை இருக்கிறபடி.
ஆரைக்கொண்டு –
நெஞ்சு போலே நமக்குப் பாங்காய் இருப்பார் உளரோ? ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில்,

ஓதம் கடல் ஒலி போல எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த –
அங்குத்தையது இங்கே நடையாடா நின்ற பின்பு, நாமும் அங்கே போய்ப் புகுமத்தனை
ஓதம் கிளர்ந்த கடல் போலே இருந்துள்ள வேத ஒலியானது எங்கும் பரம்பா நின்ற தென் திருப்பேரெயில் வீற்றிருந்த.
நல்வேதம் –
வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ ஸ்ரீ கீதை, 10 : 22.வேதங்களுக்குள்ளே சாம வேதம் நானாகிறேன்’ என்கிற
சாமத்தின் ஒலியாய்க் கிடக்குமத்தனை, பார்த்த பார்த்த இடம் எங்கும்,
அவ் விருப்பைக் கண்டு முத்தர் சாமகானம் பண்ணிப் பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே.

முழங்கு சங்கக் கையன் –
வேத ஒலியானது ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கிட்டி பிரதி த்வனி -எதிர் ஒலி எழா நிற்கும்.

மாயத்து ஆழ்ந்தேன் –
அவனுடைய புன்முறுவல் கடைக் கண் நோக்கம் முதலியவைகளிலே மீள ஒண்ணாதபடி அகப்பட்டேன்.

அன்னையர்காள் என்னை என் முனிந்தே –
சம்பந்தம் உண்டு என்னாச் சீறுமத்தனையோ?
சீற்றத்துக்கு எதிர்த் தலையும் வேண்டாவோ? தர்மி உண்டாய் முனிய வேணுமே!

மாயத்து ஆழ்ந்தேன் என்னை என் முனிந்தே –
ஸ்வாதீனமுள்ளவரை அன்றோ முனிந்தால் பிரயோஜனமுள்ளது!

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-3–

December 30, 2018

சேர்க்குமவள் ஒருத்தி யுமேயாக, அல்லாத பங்களம் அடங்கலும் ‘நமக்கு நிலம் அன்று’ என்று கை வங்கிற்று
தோழியானவள், ‘இது நமக்குப் போராது காண்; நெஞ்சை ஒருங்கப் பிடித்துத் தரித்து இருக்க வேண்டாவோ?’ என்ன,
அந் நெஞ்சு தான் இனிச் செய்வது என்? அவயவம் முதலியவற்றின் சோபைகளிலே அகப்பட்டு
அதுவும் தனக்குள்ளது அடங்கலும் இழந்தது காண்!’ என்கிறாள்.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே–7-3-3-

செங்கனி வாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண் முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும், நெஞ்சும் நாணும் நிறையும் இழந்தது காண்!’ என்கிறாள்.
சௌபரி என்பான் ஒருவன் ஒரு ஸூஹ்ருதம் -நல் வினை அடியாக ஐம்பது வடிவு கொண்டான் அன்றோ?
அவ்வளவு அன்றே, இவள் கலந்த விஷயம் செய்ய வல்லது?
அன்றிக்கே, ,ஸ ஏகதாபவதி த்ரிதாபவதி’ சாந்தோக்யம்,7:26.
ஒரு பிரகாரமாக ஆகிறான், மூன்று பிரகாரமாக ஆகிறான்’ என்கிறபடியே அனுபவியா நின்றால் பிறக்கும் நாநா பாவம்,
பிரிவிலே நெஞ்சுக்கு உண்டாகா நின்றது,’ என்னுதல்.
அன்றிக்கே, அவன் வ்யக்தி -உருவம் தோறும் பர்சமாப்ய வர்த்திக்குமா- நிறைந்து வசிக்குமாறு- போலே யாயிற்று,
இதுவும் அவயம் தோறும் தனித் தனி அகப்பட வல்லபடி’என்னுதல்.

செங்கனி வாயின் திறத்ததாயும் –
பிரிந்து கடக்க இருக்கில் என்? உன் கண் வட்டத்திலே கிடக்கில் என்? இது உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லத் தொடங்கி, தழு தழுத்து வருகிற திரு வதரத்திலே அகப்பட்டபடி.
அதிலும், அதரத்தில் பழுப்புக்குள் இழிய மாட்டுகிறது இல்லை.
வாயின் திறத்ததாயும் –
அதுதான் ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் ஆகாதே?

செஞ் சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும் –
பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று
தோற்றும்படி இருக்கிற திரு அபிஷேகத்தை -முடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய், வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய
ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –
தவாஸ்மி- உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின
திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,
பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

இதுவும் விஷயத்திற்குத் தகுதியாகப் பல வடிவு கொள்ளுகிறபடி,’ என்னுதல்
அவனுடைய ஐஸ்வர்யமடைய இதற்கு உண்டாகக் கடவதன்றோ?

திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டால் போலே காணும்,
ஓருரு வெற்பைத் தரித்தது தானவர் உம்பர் உள்ளாய்
ஈருரு நின்று கடைந்தது வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமுதோடே பிறந்தது பெண்மை கொண்டோர்
நாருரு நின்ற தரங்கா! இது என்ன நற்றவமே?’திருவரங்கத்து மாலை.
இப்பாசுரத்திற்கூறப்பட்ட ஐந்து வடிவோடு, வாசுகி மந்தரம் இவற்றுக்கு அந்தரியாமியாய் நின்ற வடிவு இரண்டு;
உபேந்ரனாய் நின்ற வடிவு ஒன்று: ஆக, மூன்றதனையும் கூட்டிக் காண்க.

திங்களும் நாளும் விழா அறாத –
உத்தேஸ்யமான பூமியிலே நித்யோத்ஸவம் செல்லா நிற்க, அது இங்கே நம் கண் வட்டத்தே
துக்கத்துக்கு இலக்காய் இருக்குமோ!
மாதத் திருநாளும் நித்ய -நாள் திருநாளும் ஓவாத.

தென் திருப்பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு-
இவ்விருப்பு நமக்கு ஆக்கிக் கொண்டிருக்கிற உபகாரகனுக்கு. என்றது,
பரத்வம், நித்ய முத்தர்கட்கு;
வியூகம், முத்தரைப் போன்றவர்கட்கு;
விபவம், புண்ணியம் செய்தார்க்கு’
இவ் விருப்பு, பாபம் செய்த சம்சாரிகளுக்காக அன்றோ?’ என்றபடி.

என் நெஞ்சம்-
அவனுடைய உபகாரமும் அழகு முதலானவைகளும் வயிர உருக்கு ஆகை.
நெஞ்சினுடைய வன்மை அறிதி அன்றோ? நெஞ்சம் அவனும் ஒரு கோவையிலே அடைப்பு உண்டபடி.

நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் –
ராகவோர்ஹதி வைதே ஹீம்’சுந். 16:5.
ஸ்ரீ ராகவனுக்குத் தகுந்தவள் ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்’ என்னுமாறு போலே.

தோழீ –
நெஞ்சினைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதி அன்றோ’
இப்போது நீயும் கூட எதிர்த்தலை யாம்படி யன்றோ வாய்த்தது?

நாணும் நிறையும் இழந்ததுவே –
இது இழவாதது உண்டோ!
அரை ஷணம் அவன் பேர நின்று படுத்தின பாடு எல்லாம் என் தான்!
நான், தன்னை இழந்தேன்:
தாய்மார் தோழிமார்கள், என்னை இழந்தார்கள்:
நெஞ்சு, நாணும் நிறையும் இழத்தது.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-2–

December 30, 2018

தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாளாய் அன்றோ கீழ் பாசுரத்தில் நின்றது?
இவள் இவ் வளவிலே மீளுமவள் அன்றிக்கே இருந்தாள்’ என்று
தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரி யுள்ளாரோடு வாசி அற வந்து திரண்டு ஹிதம் சொல்லப் புக்கார்கள்.
உங்களுடைய நல் வார்த்தையைக் கேளாதபடி நிரவதிகமான பரத்வ ஸௌலப்யங்களை யுடையவன் பக்கலிலே
சக்தமாய் போன – சென்று சேர்ந்த என் நெஞ்சினைத் தகைய மாட்டுகின்றிலேன்;
என் நெஞ்சினைக் கடல் கொண்டது காணுங்கோள்!’ என்கிறாள்.

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப் பகல் போய்த்
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே–7-3-2-

நானம் கருங்குழல் தோழிமீர்காள் –
அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாறு போலே சொல்லுகிறாள்,
அவர்கள் தலையான நறு நாற்றத்தையுடையவர்கள் வந்து நிற்கையாலே, நானம் – நறு நாற்றம்.
மயிர்பட மாந்தும்படி அன்றோ இவள்படி?
உங்கள் சந்நிதி இல்லையாகில் நான் இங்கே இரேனோ?
மை வண்ண நறுங்குஞ்சியினை நினைப்பு ஊட்டுகிறதாய் இரா நின்றாதே இவர்கள் குழல்.
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’–கிஷ். 5:18.-
நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே’ என்று இவளுடைய இன்ப துன்பங்களையே தங்களுக்கும்
இன்ப துன்பங்களாக இருக்கை அன்றோ தோழிமாராவது?
இவள் மயிர் முடி பேணாதே பரிமளம் -நறு நாற்றம் காணில் முடியும் படியாக இருக்க,
இவர்கள் கூந்தலைப் பேணி நறு நாற்றம் கொண்டு காரியம் கொள்ளப் போருமோ?’ என்னில்,

கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே –
சர்வ ஸ்வதானம் -எல்லாவற்றையும் கொடுப்பது இவர்களுக்கே;
அப்போது அவன் செய்த மிகுந்த திருவருளாலே, அது சருகு ஆனாலும் அவர்கள் மாறாதே வைத்துக் கொண்டு இருப்பார்களே!
அது இவளுக்கு நினைப்பு ஊட்டுவதாய் நலிகிறபடி.
அன்றிக்கே, ‘இவர்கள் தாம் நறு நாற்றம் கொண்டு காரியங்கொள்ளவும் வல்லர்கள்’ என்னுதல். என்றது,
தாங்கள் தளரந்து காட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டு இருப்பர்கள்’ என்றபடி.
தங்கள் தங்களுடைய பொறாமையும் பாரார்களாயிற்று, இவளை-உஜ்ஜீவிப்பிக்க -பிழைப்பிக்கைக்காக.

அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பலகாலம் போகச் செய்தேயும்,
உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே.
இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை?
அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்க வேணுமே. சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர்,
தங்கள் தங்களுடைய கிலேசம் -துக்கத்தைப் பாரார்களே அன்றோ?
பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய ரஷணத்துக்காக இளைய பெருமாள்
தம்மைப் பேணிக் கொண்டு தரித்து இருக்குமாறு போலே.
இளைய பெருமாள் தாம் பரம் போகி அன்றோ?
ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா: சித்ராஸூ வநராஜிஷூ
கிந்நரா நரஸார்த்தூல விசரந்தி ததஸ்தத;’ கிஷ்கிந். 1:60
ஸௌமித்ரே பஸ்யபம்பாயா:- அங்குத்தை இனிமை நெஞ்சிலே படச் செய்தேயும், பெருமாளுக்கு
வேற் ஒன்றிலே நோக்கை விளைக்கைக்காக முகத்தை மாற வைத்துக் கொண்டு நின்றார்;
பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!’ என்கிறார்.

நானம் கருங்குழல் –
ஒரு புலவன் ‘நானம் என்பது குழலுக்கு விசேஷணம் ஆகையாலே, நாவி போன்ற குழல்’ என்றான்.
அதனால் நினைக்கிறதும் பரிமளத்தையே -நறுநாற்றத்தை.

தோழிமீர்காள் –
பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவார் கோடியிலே புகுவதே!

தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!-
தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே இருப்பது ஒரு அவஸ்தையும் -நிலையும்,
தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு அவஸ்தையும் -நிலையும்,
தானும் தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதே இருப்பது ஒரு அவஸ்தையும் – நிலையுமாயிற்று இருப்பது;
அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி.
பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயிருக்க, பிரதி கூலர்க்கும் கூட தயை -அருள் பண்ண வேண்டும்படி காணும் இவளுடைய ஆர்த்தி -துன்ப நிலை.

ஸாது ராவண ராமேண மாம் ஸமாநய துக்கிதாம்
வநே வாஹிதயா ஸார்த்தம் கரேண்வேவ கஜாதிபம்’-சுந். 21:18.
‘மாம் ஸமாநய துக்கிதாம்-துக்கத்தை அடைந்திருக்க என்னை ஸ்ரீராகவனோடு சேர்ப்பாயாக’ என்கிறபடியே,
‘ததா குரு தயாம் மயி’ . சுந்.
என்னை நீ பெருமாளுடனே கூட்ட வல்லையே’ என்றாளன்றோ இராவணனை?
அப்படியே என் விஷயத்தில் அருள் செய்’ என்றும்,
‘வாசா தர்ம மவாப்நுஹி’ , , சுந். 39:10.‘வாக்கினால் தருமத்தை அடையக் கடவாய்’ என்றும்,
ஒரு திருவடி போல்வார்க்குச் சொல்லக் கடவ வார்த்தையை அன்றோ, பிரித்தவனைப் பார்த்துச் சொல்லிற்று?

தோழிமீர்காள்-இத்யாதி –
எங்ஙனே நான் உகந்தது உகந்தீர்கோள்! என்பாள், ‘தோழிமீர்காள்!’ என்கிறாள்.
‘எங்ஙனே எனக்குப் பிரியமான ஹிதத்தைப் பார்த்தீர்கோள்!’ என்பாள், ‘அன்னையர்காள்!’ என்கிறாள்.
‘எங்ஙனே உதாசீனர்களாய் -நொதுமலாளர்களாய் இருந்தீர்கோள்!’ என்பாள், ‘அயற் சேரியீர்காள்!’ என்கிறாள்.
‘எங்கள் பக்கல் குறை உண்டோ? நீ மரியாதை தப்பினவாறே நாங்களும் முறை தப்பினோமித்தனை அன்றோ?’ என்ன,

நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்-
‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம் உண்டோ முறை தப்புகைக்கு நான்?
நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி.
இத் தனி நெஞ்சம்-
உங்களில் நான் வியாவ்ருத்தை -வேறுபட்டவள் ஆனால் போலே யாயிற்று,
என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி. என்றது, ‘சொல்லிற்றுக் கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி.
தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்’ சுந், 39:30. ‘
அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று இருப்பார் நெஞ்சமும் இதற்கு ஒப்பு அன்று.
காக்க மாட்டேன்-
பாரண ஸாமர்த்யம் வேணுமே காக்க முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி’ பெரிய திருவந்.1.-என்று இருக்குமித்தனை ஒழிய,
இவளால் தடுத்து வைக்கப் போகாதே.
‘குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா’
ஸ்ரீவிஷ்ணு புரா. 5.18:22.தாய் தந்தையர்கள் என்ன செய்வார்கள்?’
என்கிறபடியே, ஒருவரையும் பாராதே போகா நின்றது; ஒன்று கேட்டு மீளும் அளவு அன்று;
மீட்கலாம் அளவும் காற்கட்டிப் பார்த்து, முடியாமையாலே கை வாங்கினமை தோற்றுகிறது காணும்,
மாட்டேன்’
என்ற உறைப்பாலே. சம்சாரிகள் சப்தாதி விஷயங்களில் -ஐம்புல இன்பங்களினின்றும் மீள மாட்டாதவாறு போலே அன்றோ,
இவர் பகவத் விஷயத்தினின்றும் மீள மாட்டதபடி?
மாட்டேன்’
என்று சொல்லுகிற இது வார்த்தையோ?
எல்லா அளவிலும் தங்கள் தங்கள் மனம் தங்கள் தங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டாவோ?’ என்ன,

என் வசம் அன்று இது-
என் செய்வோம், தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்?
கைகேயி சொற் கேட்டு ஸ்ரீபரதாழ்வான் அரசினைச் செலுத்தும் அன்று ஆயிற்று,
இவளும் இத் தாயார் வார்த்தை கேட்டு மீளுவது.
இப்போது நான் உங்கள் மகள் அன்றோ? என்னைப் போலும் அன்றே என் நெஞ்சு?’ என்றது,
எனக்குத் தான் என்று இருக்கும் நிலை குலைந்து, தன் வழியே நான் ஒழுகும்படி யாயிற்று என்றபடி.
தங்கள் தங்களுடைய மனம் அபவ்யமானாலும் -அடங்கியிராது போயினும்,
அடங்கி யிருப்பது ஒரு போது பார்த்து ஹ்தம் சொல்ல வேண்டாவோ?’ என்ன,

இராப் பகல் போய் –
ஸ்ருஷ்டமான படைக்கப்பட்ட காலத்திலே இதற்கு ஹிதம் சொல்லலாவது, ஒரு போது காண்கின்றிலேன்;
ஒரு போது பகவத் விஷயத்திலும் கை வைத்து, ஒரு போது சம்சார யாத்திரையிலும் கை வைக்கும் அளவு அன்றே, இவளுடைய ஈடுபாடு.
இங்கே இருப்பது ஒரு போது உண்டாகில் அன்றோ ஒன்று சொல்லி மீட்கலாவது?

தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் திருப்பேரெயில் –
இது மீட்கலாம் விஷயத்திலோ அகப்பட்டது? அவ்வூரில் இனிமையிலே படிந்தாரையும் மீட்கப் போமோ?
தேன் – வண்டு.பூத்த பொழிலையும் குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைய தென்திருப்பேரெயில்.

வீற்றிருந்த-
பரமபதத்தில் இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை.
அவ் விடம் போன்றது அன்றே இவ் விடம்?
ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ?
அவ் விடத்தைப் போன்று இவ் விடத்தையும் திருத்திக் கொண்டிருக்கிற இடம் அன்றோ?

வானப் பிரான் –
இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது.

தென்திருப்பேரெயில் வீற்றிருந்த வானப்பிரான் –
ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன்.

மணி வண்ணன்-
மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி.

கண்ணன் –
அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டு இருக்கிறவன்.

ஆக,
மேன்மை அளவிடவோ?
வடிவழகு அளவிடவோ?
நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

செங்கனி வாயின் திறத்ததுவே –
கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப் படுவாரைப் போலே, வாய்க் கரையிலே அகப்பட்டது;
ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?
சிவந்து கனிந்து திருப்பவளத்தின் இடையாட்டத்தது;
இது மீள நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-1–

December 30, 2018

கீழில் திருவாய்மொழியில், ‘இட்ட கால் இட்ட கை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க,
இவளுக்கு முன்னே தோழி மாரும் தரைப்பட,
திருத் தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர
இப் பெண் பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது.
அதற்கு அடி: ‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய-அசரண்ய சரண்யத்வம் –
பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான, இவளுக்குப் பற்றாசான குணங்களையும்
அழகு முதலான விக்ரஹ குணங்களையும் இவள் தான் வாய் வெருவியும் திருத் தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள்.
போன உயிரை மீட்க வற்றா யன்றோ குணங்களின் ஸ்வபாவம் -இருப்பது?
‘இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதாம் ஆஹ’-ஸஹஸ்ரநாம பாஷ்யம்
அவித்த ஜம்புலத் தவ ராதியாயுள
புவித் தலை யுயிரெலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்றுரைக்கவே களித்த தாலது
செவிப் புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’- அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

கீழில் திருவாய் மொழியில் பிறந்த மோகமும் தெளிந்து விஸ்லேஷ வியசனமும் அனுசந்திக்க வல்லளாய், பின்பு,
அவனைக் கிட்டி யல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து,
அது பெறாமையாலே அவசன்னையாக -துக்க முடையவளாக, இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத்
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதனுடைய-அபேஷாதிகளில் –
புன் சிரிப்பு, கடைக் கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தை யுடையவளாய்,
அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட,
பழையபடியே தோழி மாரும் தாய் மாரும் அவளைச் சூழப் போந்து,
உனக்கு இத் துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன,
நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாகமாட்டாது. நான் அவன் பக்கலிலே சென்ற மனத்தை யுடையவள் ஆனேன்;
ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடு போய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’ என்று
தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

அங்ஙன் அன்றிக்கே,
முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ’- சுந். 33.17.
நான் அங்கும் ராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
பெரிய பெருமாளோடே சிர -நெடுங்காலம் உன்மஸ்தகரசமான சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாய் -பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடாவிடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.
இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஆகையாலே, பிரியா விடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ் வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும்
ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே பிரிவைப் பற்றிப் பேசினான்;
பேச, இவளும் விஸ்லேஷத்தில் -பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே,
சம்ச்லேஷத்தில் ‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்;
இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திரு அணுக்கன் திரு வாசல் அளவும் ஒருப் படுத்தி மீண்டாள்:
எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ?
பின் இவள் நோவு படப் புக. இதனைக் கண்ட தோழி மாரும் தாய் மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க,
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும் கூட இருந்து
அனுபவித்தால் போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்;
அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன,
அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப் படோம்’ என்ன,
ஆகில், நானே யாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

ஸமா த்வாதச தத்ர அஹம்-இப்போது ஒருவேளை தரிசனமும் கூட அரிதாம்படி இருக்கிற நான்,
முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன்காண்!
ராகவஸ்ய நிவேசநே-எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடும் காலம் அனுபவித்தேன்.
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
ஸர்வாந் காமாந்’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன். அப்படியும் அன்றே இங்கு:
பஸவோ ந்ருப கல்யாண குணா:’ , அயோத். 2:26.
அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?

ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
நமக்கு சப்தாதி -ஐம் புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது:
இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.
திருத்தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேஷம்:
தலைமகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேஷம்:
அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின்,
அவற்றுள், விலகுகின்ற திருத் தாயார் முகத்தால் சொல்லுகிறது,
ஸ்வரூபமான பிராவண்யம் உபாயத்தில் சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது;
பெண் பிள்ளை கருத்தால் சொல்லுகிறது. ‘உபாயம் அவனே யாகில் பிராவண்யம் ஸ்வரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது.
ஆக, இவ் விரண்டு அர்த்தத்தையும் இரண்டு முகத்தாலே ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது.
மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத் திருவாய் மொழிக்கு ஏற்றம்.

——————————-

இந்தப் பிராட்டி, வாசா மகோசரமாம் படி தனக்கு வர்த்திக்கிற வியசனத்தாலே,
தென் திருப் பேரெயில் போக வேணும் என்று தனக்குப் பிறந்த தசையை –
வினவுகிற திருத் தாய்மார்க்குச் சொல்லுகிறாள்.

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி –
தவள ஒண் சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
கூரார் ஆழி வெண் சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்’ -7. 2:1.-என்றும்
கையும் திருவாழியுமான அழகு கை விடாதே இவரை அனுவர்த்திக்கிற – தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ?
அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியை யுமுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாத படியான அழகை யுடைத்தான திருவாழியையும் ஏந்தி,

தாமரைக் கண்ணன்-
தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திரு மேனிக்குத் திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் நோக்கு -பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி.
பிரதிகூலர்களுக்கு -பகைவார்களுக்குத் திவ்ய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்ய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?
திருக் கண்களோடே திவ்ய ஆயுதங்களையும் திவ்ய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
திவ்ய ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்த படிக்கு;
ஜிதந்தே -உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணு மன்றோ?
திருக் கண்களோடு திவ்ய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
இவ் விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் ஜீயர்.
திருக் கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று,
திரு முகத்துக்கு திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்-செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என் ஆழி வண்ணன் பால் இன்று’
என்று வடிவழகைப் போன்று திவ்ய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவா யன்றோ இருப்பன?
ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரண கோடியிலே இருப்பார்கள். கை செய்தல் – அலங்கரித்தல்.

என் நெஞ்சினூடே-
தங்கள் நெஞ்சல் இல்லாமையாலே இது கூடாது என்று இருப்பார்கள் அன்றோ? ஆதலின், ‘என் நெஞ்சினூடே’ என்கிறாள்.

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்-
இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி ‘நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தா யிருக்கை.
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,
இவர் நெஞ்சினுள்ளே ச்ருங்கலகமாக -தடை இல்லாமல் அழகு செண்டு ஏறுகிறபடி.

நெஞ்சினூடே-
அக வாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.
நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’- பாரதம், ஆரண்
குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்மாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’ என்னுமாறு போலே.
நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக் காண்’ என்று இருக்கிறாள் இவள்.
ஒரு வாசத் தடத்தில்
ஹம்ச -அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும், காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற
திவ்ய அவயவங்களும், அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய-கபளீகரிக்க.- ஒரு மேரு தாங்கினால் போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி.
இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாகச்
சாயல் சாமத் திருமேனித் தண்பா சடையா தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவாளே! ஒருநாள் காண வாராயே.’திருவாய். 8. 5;1.

கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத் தேந்தி ஏடலர்த்
திரு வொடும் பொலி யவொர் செம் பொற் குன்றின் மேல்
வருவ போற் கழலுன் மேல் வந்து தோன்றினான்.- கம்பராமா. திருவவதாரப் படலம் . 13.

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு
ஈஸ்வரனுக்குச் ஸ்வரூப வியாப்தியேயோ, விக்ரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க,
பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது,ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;
ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தல் பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’
குஹாயம்’ தைத். ஆரண். மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும்,
கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத்.‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ என்றும்,
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி
வந்து புகுந்து’ பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.-என்றும்,
‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’ ஸ்ரீராமா.-
‘எவர்களுடைய மனத்தில் கரு நெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும்,
என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

ஸூ பாஸ்ரய பிரகரணங்களிலும் -தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும்
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’- முண்டகோபிநிஷதம்.. 3. 2:3.
‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு இந்தப் பரமாத்துமா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே
அவ் வடிவே ஆயிற்றுத் தியானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது;
பின்பு
ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’-யுத். 1:13.
இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’ என்று கொடுப்பது அவ் வடிவே யாயிற்று
புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்;
நம் ஆழ்வார்கள் போன வழி இதற்கு மேற்பட இல்லை: இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’ என்று சொல்லுகிறவர்கள்,
ஸ்வரூபத்தின் ஸத்பாவம் -உண்மை சொல்லுகிறார்களித்தனை; விக்ரஹம் இல்லை என்று அன்று.

புள்ளைக் கடாநின்ற-
அக வாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க
ஓம் காண்! நீ அறிந்தாயோ?’ என்று ப்ரேரித்து -தூண்டி மீளா நிற்கும்;
தீ மத -அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷ பாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும் பணி?
கடாகின்ற –
பூதமாய் -நடந்து போனதாய் விஸ்மரிக்கிறிகோள் -மறக்கிறீர்கள் அன்று;
பவிஷ்யமாய் -இனி வருவதனை உபதேசிக்கிறது அன்று;
இப்பொழுது நடப்பதற்கு உபதேசம் வேணுமோ?

காணீர் –
காண்கின்றிலீர். வர்த்தமானமும் -இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ?
உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான அர்த்தம் -பொருளை உபதேசிக்க வேண்டுவதே.
காணீர்-
உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது?
என்னைப் போலே உட் கண்ணாலே காணீர் கோள்!
நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக் காணாய்!’ என்றார்கள்; என்ன, சொல்லுகிறாள் மேல்:

என் சொல்லிச் சொல்லுகேன் –
எனக்குச் சொல்லலாவது இல்லை! என்ன பாசுரமிட்டு எதனைச் சொல்லுவது?
உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை.
இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லை காணும்!
என் சொல்லிச் சொல்லுகேன் –
நான் பல ஹானியால்- வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்லமாட்டேன்.
விஷயம் இயத்தா ராஹித்யத்தாலே -இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது;
எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பிரதிபத்தி பண்ணுகைக்கு பரிகரம் இல்லாமையாலே சொல்லத் தான் வேண்டா.

அன்னைமீர்காள்-
ஞாதாம்சம் -அறிந்த விஷயம் கொண்டு போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக் கொள்ளல் செய்யலாம்
அன்றோ எனக்கு ஒத்தவர்கள் ஆனிர் கோளாகில்?
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் –
எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை;
அவஸ்த்தா ஞானம் -நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடு கின்றீர்கோள் இத்தனை யன்றோ?
நிஷேதிக்கைக்கு -விலக்குவதற்கு -அனுவர்த்தனீயை- என்னைப் பின் பற்றி வருகின்றவர்களா மத்தனையோ வேண்டுவது?
எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லை யாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள்
நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’ சாந்தோக்யம். 8. 12:3.
முத்தன் ஜனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே
பிரிந்தவர்கள் நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?

வெள்ளம் சுகமவன்-
இன்ப வெள்ளத்தை யுடைடயவன். என்றது,
விஸ்லேஷ -‘பிரிந்திருக்கும் நிலையிலும் -சம்ச்லேஷ ஜெனிதமான கலந்திருக்கும் காலத்தில் உண்டாகிற
நிரதிசய ஸூகம் -பேரின்பம் மாறாதவன்’ என்றபடி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பிரிவிலும் அரையாறு படாதபடி காணும் கலவியில் அவன் தேக்கின பேரின்பம் இருந்தபடி’ என்பதனைச் சொல்லியபடி.
வெள்ளை’ என்பது பாடமான போது, மறுவற்ற இன்பம் என்று பொருள் கொள்க.

அவன் வீற்றிருந்த –
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த் தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது,
இத் தலையைத் துடிக்க விட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான ஸூகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, இத் தலையைத் தோற்பித்த தன் வெற்றி எல்லாம் அவ் விருப்பிலே தோற்றும் படி இருக்கிறபடி என்னுதல்.
அவன் மெய்ம் மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய்ம் மறந்திருக்கவோ?
பரிபூர்ணனாய் -நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ?
அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?
பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம்; விஷயத்துடனே கலந்தோமாகில் அன்றோ நாம் ஆறி இருக்கலாவது?
முறையை அழித்தாகிலும் மடலை எடுத்துக் கொண்டு போமித்தனை அன்றோ?
நமக்கே நலம் ஆதலின்’ என்னக் கடவதன்றோ?-பெரிய திருமொழி. 9. 3 : 9.

வேத ஒலியும் –
அவன் நெஞ்சு ஒழிந்து பழம் புணர்ப்புக் கேளா நின்றான் காணும். என்றது,
பண்டு தான் வென்ற வெற்றி மாலைகள் கேட்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, ஜிதந்தே புண்டரீகாக்ஷ -‘புண்டரீகாக்ஷனே! உனக்கு வெற்றி’ என்கிற வெற்றி மாலைகளைத் தெரிவித்தபடி.

விழா ஒலியும் –
இவளைத் தோற்ப்பித்ததற்கு நெய்யாடல் போற்றுகிறபடி.

அறா-
தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தா நிற்குமத்தனை.
சமந்தக மணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தால் போலே,
அவர்க்கும் அடுத்து அடுத்துத் திரு விழாவாகச் சொல்லுகிறதித்தனை;
பெண் மணி அன்றோ இவள்? இவள் இருக்கிற இடம் அன்றோ மங்கள ஒலிகள் மாறிக் கிடக்கிறது?

பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா-
பருவம் நிரம்பி இருக்கச் செய்தே -நிஷேதிப்பார் -விலகுகிறவர்கள் இருக்கிற ஊரை விட்டு,
பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற
ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள்.
அவ் வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகர நெடுங்குழைக் காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவா நிற்பர்கள்.
‘பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: சக்ருரேவ மித: கதா:-. அயோத். 6:16.
விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர் ராம ஸ்தோத்திர
விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராம்பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’- உத்தரராமாயணம்.
‘ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம்பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க ராமன் ஒருவன் ஆனபடி.
நித்ய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை;
ராம்பாக்யமே அனுபவித்து விட்டது.’
நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-, சங்க்ஷேப ராமாயணம், 1:92.
நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.
நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:- கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது
ராமசரத்துக்கு அஞ்சி. பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான். வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

திருப் பேரெயில் சேர்வன் நானே-
வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?
தாமரைக்கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ?
ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்