Archive for June, 2015

ஸ்ரீ பாஷ்யம்-3-2– மூன்றாம் அத்யாயம் -சாதனா அத்யாயம்-இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் –

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————————————————————————————————-

மூன்றாம் அத்யாயம் -சாதனா அத்யாயம்-இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
குற்றம் குறை அற்றவன் -அளவற்ற திருக் கல்யாண குணங்களை கொண்டவன் தாழ்வு அற்றவன் -என்கிறார் இதில்-

——————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்- விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன -அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7  ஸூத்ரங்கள்–ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
————————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது
———————————————————-
3-2-1-சந்த்யே சிருஷ்டி ஆஹஹி

கனவு நிலையில் உள்ளதைப் பற்றி ப்ருஹத் உபநிஷத் -4-3-10-ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தா நோ பவந்தி அத ரதான்
ரதயோகான் பத –ஸ்ருஜதே ந தத்ர ஆனந்தா முத பிரமுதோ பவந்தி அத ஆனந்தான் முத
ப்ரமுத ஸ்ருஜதே ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்யோ பவந்தி அத வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ச ஹி கர்த்தா
சந்த்யம் -கனவில் உள்ள இடம் /ச ஹி கர்த்தா -அவனே செய்கிறான் -படைப்பவன் ஜீவனா பரமாத்மாவா பூர்வ பஷி ஜீவன் என்பார்-

—————————————————————————————————————-
3-2-2-நிர்மாதாரம் ச ஏகே புத்ராய ச

கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்கிறது விரும்பியவற்றை தூங்கும்பொழுது தானே படைக்கின்றான் -பூர்வ பஷி
விரும்பியவற்றை -புத்ராதிகளையும் –
கட உபநிஷத் -1-5-சர்வான் காமான் சந்தத ப்ரார்த்தயஸ்வ /கட உபநிஷத்-1-23- -சதாயுஷு புத்திர பௌத்ரான் வ்ருணீஷ்வ-என்கிறது மேலே சித்தாந்த பதில்
——————————————————————————————————————
3-2-3-மாயா மாத்ரம் து கார்த்ஸ் யேன அநபிவ்யக்த ஸ்வரூபத்வாத்

து -பூர்வ பஷ வாதங்களை மறுக்கிறது -மாயா -ஆச்சர்யம் -மித்யை அல்ல-ஜனகச்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27-
ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது -இந்த ஆச்சர்யமே மாயா-சத்யசங்கல்பன் அன்றோ –
கட உபநிஷத் -5-8-எ ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி -இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்
மேலும் அதே வரியில் -தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உச்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று
அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன -அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று பரம புருஷனைப் பற்றிக் கூறியது

———————————————————————————————————————–

அபஹதபாப்மத்வம் ஜீவனுக்கு சம்சாரத்தில் இல்லாத காரணம்
3-2-4-பராபித்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயௌ –
பரம புருஷனின் சங்கல்பம் காரணமாகவே மறைக்கப் பட்டு சம்சார பந்தம் ஏற்படுகின்றது
பராபித்யா நாத் -சங்கல்பமே
து -பூர்வ பஷம் நிரசனம்
தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச
அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்
2-8-1-பீஷாச்மாத்வாத பவதே -என்றும் கூறும்-

—————————————————————————————————————————

3-2-5-தேக யோகாத்வா ச அபி –

ஜீவனின் ஸ்வரூப மறைவு உடல் சேர்க்கையின் பொழுது உண்டாகிறது –ஸூ ஷ்மம் நிறைந்த பிரக்ருதியின் தொடர்பால் -ஆக ஜீவன் படைக்க சக்தன் அல்லன்
கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -எனபது பரம் பொருளுக்கே பொருந்தும்-

—————————————————————————————————————————

3-2-6-ஸூ கச்ச ஹி ஸ்ருதே ஆச ஷதே ச தத்வித —

கனவுகள் நற்பலன் தீய பலன்களை உணர்த்தும் ஸ்ருதிகளும் அப்படியே சொல்லும்
சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —
எனவே கனவும் சர்வேஸ்வரன் நியமனம் என்றதாயிற்று-

—————————————————————————————————————————–

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

———————————————–

3-2-7-தத் பாவ நாடீஷூ தத் ஸ்ருதே ஆத்மநி ச –

ஆழ்ந்த உறக்க நிலை -கனவுகள் அற்ற -ஸூ ஷுப்தி நிலை -நாடிகளில் நுழைந்து –
சாந்தோக்யம் -8-6-3-யத்ர ஏதத் ஸூ ப்த சமஸ்த சம்ப்ரசந்தம ஸ்வப்னம் ந விஜா நாதி ஆ ஸூ ததா நாடீஷூ ஸூ ப்தோ பவதி -என்றும்
ப்ருஹத் உபநிஷத் -2-1-19-அத யதா ஸூ ஷூப்தோ பவதி யதா ந கஸ்ய ச ந வேத ஹிதா நாம நாட்யோ த்வாசப்ததி சஹஸ்ராணி ஹ்ருதயாத் புரீததம் அபி பிரதிஷ்டந்தே தாபி பிரத்யவஸ்ருப்ய புரீதாதி சேத -என்று
ஹிதா நாடிகள் என்று கூறப்படும் 74000 நாடிகள் இதயத்தில் நின்றும்ன் புறப்பட்டு புரீதத் என்னும் இடத்தை அடைந்து ஜீவன் இவைகளால் சூழப் பட்டு உறங்குகின்றான்
சாந்தோக்யம் -6-8-1- யத்ர ஏதத் புருஷ ஸ்வபுதி நாம சதா நாம்ய ததா சம்பன்னோ பவதி -என்று
ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவன் பரமாத்வா உடன் சேர்ந்து உள்ளான் -என்கிறது -ஆக ஜீவன் உறங்கும் இடங்கள் நாடிகள் புரீதத் ப்ரஹ்மம் மூன்றும் கூறப் பட்டன
மூன்றும் வெவ்வேற இடங்கள் இல்லை மாடியில் கட்டில் மேல் -மெத்தை மேல் உறங்குகிறான் போலே -நாடி மாடி /புரீதத் -கட்டில் /பரமாத்மா மெத்தை -போலே –

————————————————————————————————————————————–

3-2-8-அத பிரபோத அஸ்மாத் —

ப்ரஹ்மத்திடம் உறங்குவதால் அங்கே இருந்தே விளித்து எழுதல் எனபது பொருந்தும்
சாந்தோக்யம் -6-10-2-சத ஆகம்ய ந விது சதா ஆகச்சாமஹே-என்றபடி ப்ரஹ்மத்திடம் உறங்கி விட்டு வந்த போதிலும் தாங்கள் அவ்விதம் செய்வதை ஜீவன் அறிவதில்லை

————————————————————————————————————————————–

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் -உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது

—————————————————————

3-2-9-ச ஏவது கர்மானு ஸம்ருதி சப்த விதிப்ய-

கர்மம்– ஞாபகம் –வேத வரி –விதிகள் –ஆகிய நான்கு காரணங்களாலும் அதே ஜீவனே விழித்து எழுகிறான்
உண்மையான ஞானம் வரும் வரை கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டுமே
சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி ததா பவந்தி -என்று
புலி சிங்கம் ஓநாய் பன்றி புழு பறவை ஈ கொசு -அதே உருவில் எழுந்து வருகிறான்
சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ
இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி -என்றும்
முக்தனைப் பற்றி -சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்
7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்
7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

—————————————————————————————————————————————

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் -விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

————————————————————————————–

3-2-10- முக்தே அர்த்த சம்பதி பரி சேஷாத்–

பூர்வ பஷம்-மயக்கம் மூர்ச்சை மற்ற மூன்று நிலைகளுக்குள் சேர்ந்ததே என்பர்
மரணத்தின் பாதி நிலையே -ஞானம் இல்லாததால் விழிப்போ கனவோ இல்லை
ஆழ்ந்த உறக்கம் இறந்த நிலை யும் இல்லை -மரணத்தின் பாதி நிலையே பிராணன் இருப்பதால்
—————————————————————————————————————————————–
ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

—————————————————————

3-2-11-நஸ்தா நத அபி பாஸ்ய உபயலிங்கம் சர்வத்ர ஹி

அகில ஹேய நீயகத்வ -சமஸ்த கல்யாண ஏக குணங்கள் கொண்டவன் -ப்ரஹ்மத்தை அடையும் பொருட்டு சம்சார விரக்தி பிறந்த பின்பு அவனது உபய லிங்கத்வம் விளக்குகிறார் –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-2-8-சம்போக பிராப்தி இதி சேத் ந வைசேஷ்யாத்–என்று அந்தராத்மாவாக இருப்பது உபாசகன் தன்னை அடைய -சுக துக்கங்களை அனுபவிக்க இல்லை –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-3-6-ஸ்தித்யத நாப்யாம்-ச -இருப்பதாலும் உண்பதாலும் -ஒரு மரம் இரண்டு பறவைகள் -முண்டக உபநிஷத்
ப்ரஹ்ம சூத்ரம் -3-2-5–தேஹயோகாத்வாத் -தேக சம்பந்தம் இருப்பதாலும் –ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -பூமியில் இருப்பதாலும்
ப்ருஹத் உபநிஷத் -3-7-22–ய ஆத்மநி திஷ்டன் -ஆத்மாவில் இருப்பதாலும் /ப்ருஹத் உபநிஷத்-3-7-18- -ய சஷூஷூ திஷ்டன்
ப்ருஹத் உபநிஷத்-3-7-23- -ய ரேதஸ் திஷ்டன் -ரேதசில் இருப்பதாலும் -தோஷங்கள் தட்டும் என்பர் பூர்வ பஷி —
சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84/85– சமஸ்த கல்யாண குணாத் மகோ சௌ ஸ்வ சக்தி லேசோத்ருத பூத வர்க்க தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைகராசி
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதய சந்தி பராவரே சே-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51-சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமபதம்  -தோஷம் அற்றவன் என்றதாயிற்று

————————————————————————————————————————————-

3-1-12-பேதாத் இதி சேத் ந ப்ரத்யோகம் அதத் வசநாத் –

சரீர தொடர்பு கூறும் இடங்களிளும்பரமாத்மா தோஷம் அற்றவன் -ப்ருஹத் உபநிஷத் -3-7-3-ய ப்ருதிவ்யான் திஷ்டன் -3-7-23- ய ஆத்மா நி திஷ்டன் -இடங்களிலும்
ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத -தோஷம் அற்று தானாகவே -கர்மம் அடியாக அன்று -உள்ளான்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -3-2-4-பராபித்யா நாத் து திரோஹிதம் -ஸூ த்ரத்தில் நிரூபிக்கக் கண்டோம்
அசேதனப் பொருள்களும் சில கால கட்டத்தில் அவனது சங்கல்பத்தின் படி இன்பம் பயக்கும் படியைக் காண்கிறோம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48-நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச –
கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே –
தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி
ப்ரஹ்மத்துக்கு உடல் தொடர்பு லீலைகளுக்கு மட்டுமே இருக்கும்-

————————————————————————————————————————————

3-2-13-அபி ச எவம் ஏகே –

முண்டக உபநிஷத் -3-1-1-த்வா ஸ்பர்ணா சயுஜா சகாய சமா நம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயரன்யே பிப்பலம் ச்வாத்வத்தி
அனச்னன் அந்ய அபிசாகசீதி -என்றும்
சாந்தோக்யம் -அநேன ஜீவேன ஆத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி –என்றும் உண்டே
கர்மவசப்படுவானோ பரம் பொருளும் என்றால் ரூபம் அற்றவன் என்கிறது அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————————–
3-2-14-அரூபவதேவ ஹாய் தத் ப்ரதா நத்வாத் —

கர்மம் அடியாக தேவாதி மனுஷ்ய தேகம் எடுப்பது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லையே –
உள்ளே புகுந்தாலும் நாம ரூபன்களால் பாதிக்கப் படுவதில்லை
சந்தோக்யம் -8-14-1-ஆகாசோ வை நாம ரூபாயோ நிர்வஹிதா தே யதந்த்ரா தத் ப்ரஹ்மம்-

அந்தர்யாமியாக இருந்தும் தோஷம் தட்டாமல் உள்ளான்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -1-1-ஒளி ரூபம் என்றும் –
-ப்ருஹத் உபநிஷத் –நேதி நேதி-இல்லை இல்லை -என்பதால் கல்யாண குணங்கள் உள்ளவை எனபது எவ்வாறு என்றால்
————————————————————————————————————————————-
3-2-15–பிரகாசவத் ச அவையர்த்தாத் —

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்ற சுருதி பொய்யாகக் கூடாது என்பதால் ஒளி மயமானது ப்ரஹ்மம் எனபது போலே
சத்யசங்கல்பன் ஜகத் காரணன் அந்தர்யாமி அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் அனந்த கல்யாண குண சாகரம் என்ற சுருதி வாக்யங்களையும் ஏற்க வேண்டும்
—————————————————————————————————————————————

3-2-16-ஆஹ ச தந்மாத்ரம்–

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மம் என்று ஒளிமயம் என்றது மற்றையவற்றை மறுக்க வில்லை –
நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -4-2-4- எதனால் என்பதை மேலே பார்ப்போம்
————————————————————————————————————————-
3-2-17-தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-

உபய லிங்கத்வம் அநேக ஸ்ருதி ஸ்ம்ருதி களும் சொல்லுமே –
ச்வேதாச்வதார உபநிஷத் -6-7-தம் ஈச்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்
6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்
6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருச்யதே பராச்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்
முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தப -என்றும்
தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாச்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்
தைத்ரிய ஆனந்த வல்லி-2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்
2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்ந பிபேதி குதச்சந-என்றும்
ச்வேதாச்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்

ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – -10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் -என்றும் -10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் -என்றும்
9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்
15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விச்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47– சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ
க்லமதந்த்ரீ
பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-என்றும்
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்தும் உபய லிங்கங்கள் நிறைந்தவன் என்பதை பல இடங்களிலும் சொல்லிற்றே –

———————————————————————————————————————————–

3-2-18-அத ஏவ ச உபமா சூரியகாதிவத்

ஆகவே நீரில் -கண்ணாடியில் -பிரதிபலிக்கும் சூர்யன் போன்றவை பர ப்ரஹ்மத்துக்கு உபமானமாக சொல்லப் பட்டன
யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144-ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான்
–ஏக ஏவ ஹி பூதாத்மா போதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் –ஒரே தன்மையுடன் பல பொருள்களில் ப்ரஹ்மம் இருப்பான் என்கிறது-

———————————————————————————————————————————–

3-2-19-அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம் —

நீரில் உள்ளது போலே பொய்யானவன் அல்லவே ப்ரஹ்மம்-உண்மையாகவே உள்ளான் -ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய பிருதிவ்யாம் திஷ்டன் -என்றும் -3-7-4- ய அப்ஸூ திஷ்டன் -என்றும் -3-7-22-ய ஆத்மநி திஷ்டன் -என்றும்
தோஷம் தட்டாது என்பதற்கு சொல்லிய திருஷ்டாந்தம் உண்மையாக இருப்பவன் ஆகையால் பொருந்தாது என்பர் பூர்வ பஷி

—————————————————————————————————————————————-

3-2-20-வ்ருத்தி ஹ் ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய சமஞஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச –

சிறிய நீர் நிலை பெரிய நீர் நிலை பிம்மம் தோன்றுவது போலே சுருக்கமும் விரிவும் இல்லாதவன் என்பதற்கே திருஷ்டாந்தம்
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் -வெற்றிடம் குடங்களில் தனித் தனியே உள்ளது போலே
ஜலதாரேஷூ இவ அம்சுமான் -நீர் நிலைகளில் சூரியன் போலே பலவற்றிலும் உள்ளான்-

ப்ருஹத் உபநிஷத் -2-3-1-த்வே வாவா ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ச -என்று ஸ்தூல அஸ்தூல ரூபங்கள் இரண்டும் உண்டு என்று சொல்லத் தொடங்கி–2-3-6-தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹாரஜநம் வாச -என்று திவ்யமான ரூபம் உள்ளது என்று சொல்லி தொடர்ந்து -அதாத ஆதேச நேதி நேதி இதி நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரம் அஸ்தி என்று
இதி -என்றது –மூர்த்தம் அமூர்த்தம் ஸூ ஷ்மம் ஸ்தூலம் போன்றவை சொல்லி உடனே ந -என்று இவற்றை நிராகரித்து
ப்ரஹ்மம் மட்டுமே உண்மை மற்றவை அவன் மேல் ஏறிட்டுக் கூறப்பட்டன என்று சொல்லி
தோஷம் அற்றவன் என்று எவ்வாறு சொல்ல முடியம் என்பர் பூர்வ பஷி கள்
அதற்கு பதிலாக அடுத்த ஸூ த்த்ரம் –

——————————————————————————————————————————————-
3-2-21-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய

முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் -அத்தையே நிராகரித்தது நேதி நேதி என்று
தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது
பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் -இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்
ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்மவச்யன் இல்லை -அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –
ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே நேதி நேதி என்கிறது சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்

———————————————————————————————————————————————–
3-2-22-தத் அவ்யக்தம் ஆவ ஹி –

சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் என்பதை கட உபநிஷத் -6-9-ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச ந ஏ நம் -என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்கிறதே –
மேலும் ஒரு ஸூ த்ரத்தால் உணர்த்துகிறார் –

———————————————————————————————————————————————-

3-2-23-அபி சம்ராதனே ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–

பக்தி என்னும் உபாசனம் கொண்டே ப்ரஹ்மத்தை அறிய -ப்ரஹ்மத்துக்கு மகிழ்வு ஏற்ப்படுத்தி -உணர இயலும் என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும் –
முண்டக உபநிஷத் -3-2-3-நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தென் லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்
ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்
-11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே
சம்ராதனே -ஆழ்ந்த பக்தி என்னும் உபாசனத்தையே ஸூ தரத்தில் குறிக்கப் படுகிறது -இதுவே அவனுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்றதாயிற்று-

———————————————————————————————————————————————-

3-2-24-பிரகாசாதி வத் அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத் –
ஞான ஆனந்த மயம் போலேவே மூர்த்தமாகவும் அமூர்தமாகவும் உள்ள பொருள்களை உடலாகக் கொண்ட
ப்ரஹ்மம் என்றே யோகிகள் இடைவிடாத உபாசனத்தால் உணர்ந்து காண்கிறார்கள்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூ ர்யச்ச-என்கிறது –

———————————————————————————————————————————————-
3-2-25- அதோ அனந்தேன ததாஹி லிங்கம்

மேலே கூறியவற்றால் உபய லிங்கமாகவே உள்ளது என்று காட்டி அதிகரணத்தை நியமிக்கிறார்
அளவற்ற திருக் கல்யாணங்களை கொண்டதாயும் அகில ஹேய ப்ரத்ய நீகனாயும்ந ப்ரஹ்மம் உண்டு என்று நிரூபித்தாயிற்று-

———————————————————————————————————————————————–

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன -அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————-

3-2-26-உபய வ்யபதேயாத் து அஹி குண்டலவத் —

இது பூர்வ பஷ ஸூத்ரம் -சுருண்டும் நீண்டும் உள்ள பாம்பு போலே ப்ரஹ்மம் -த்வேவாவ ப்ரஹ்மணோ ரூப-மூர்த்தம் அமூர்தம் இரண்டும் ப்ரஹ்மத்தின் ரூபம்
தொடர்ந்து அதாத ஆதேச நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -2-3-6- என்று ப்ரஹ்மம் அசித் பொருள்கள் அளவு மட்டும் அல்ல என்றது
நஹி ஏ தஸ்மாத் ந அத்ய அன்யத பரமச்ய-என்று ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் இல்லை -என்றும் இதையே திருடமாக
அத நாமதேயம் சத்யச்ய சத்யம் பிராண ஏவ சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -6-16-பிரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச – என்றும் -6-13-நித்யோ நித்யச் சேதநச்சேதநா நாம் -என்றும்
மஹா நாராயண உபநிஷத் -13-1-பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –என்றும் ம்சொல்லிற்று-

சுருண்டும் நீண்டுமுள்ள பாம்பு போலேயா
சூரியனும் ஒளிக் காற்றையும் போலேயா
அம்சம் அம்சி பாவமா -மூன்று வித கேள்விகள் ப்ரஹ்மத்துக்கும் அசித்துக்கும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-4-23-பிரக்ருதிச்ச பிரதிஜ்ஞாத் ருஷ்டாந்தா னுபரோதாத் -என்று பிரமமே உபாதான காரணம் என்றும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1-15-தத நன்யத்வம் ஆரம்பண சப்தாதிப்ய-பொருளும் காரணமும் வேறு அல்ல -என்றும்
அம்ச அம்சி பாவம் முன்பே கூறப்பட்டது
மூன்றில் பாம்பு போலே நீட்டியும் சுருண்டும் என்பதே அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் என்பதே சரியான விடையாகும்
ப்ரஹ்ம ஏவ இதம் சர்வம் -ப்ருஹத் உபநிஷத் -4-5-1- இவை அனைத்தும் பிரமமே என்றும்
சாந்தோக்யம் -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் -இவை அனைத்தும் ஆத்மாவே
சாந்தோக்யம் -6-3-2-ஹந்தா ஹமிமாஸ் திஸ்ரோ தேவதா அநேன ஜீவேன ஆத்ம அநு ப்ரவச்ய -என்று தேஜஸ் நீர் பூமி மூன்றின் உள்ளே புகுந்து அநேக நாம ரூபங்களை எடுக்கிறேன்
எனவே அசித் என்பதும் ப்ரஹ்மத்தின் ஒருவகையான விசேஷ நிலை என்றதாயிற்று-

——————————————————————————————————————————————–

3-2-27-பிரகாசஸ்ரயவத்வா தேஜஸ் த்வாத் —

ஒளியும் உத்பத்தி இடமும் போன்று -காரணம் இரண்டும் தேஜஸ் என்ற ஜாதியினால்
இது பூர்வ பஷ ஸூ த்ரம்
வா என்றது பாம்பு போன்று நீண்டும் சுருங்கியும் -அம்ச அம்சி பாவம் இரண்டையும் தள்ளுகிறது
அசித் ரூபம் என்றால் இரண்டும் வெவ்வேறே என்கிற பேத ஸ்ருதிகள் தள்ளப்படும் -அவிகாராய சுருதி வாக்யமும் தள்ளுபடும்

——————————————————————————————————————————————–
3-2-28-பூர்வவத் வா

முன்பு கூறப் ஒப்ட்டது போன்று என்றவாறு -கடந்த இரண்டு ஸூ த்ரங்களில் உள்ள பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முதல் வாதம் படி அசித் ஸ்வரூபம் ப்ரஹ்மத்துக்கு வரும் தோஷங்களும் தட்டும்
ஒழி ஒளிக்கதிர் என்று கொண்டால் பசு குதிரை இரண்டு பிரிவுகளான ப்ரஹ்மம் ஸ்ருதி வாக்ய விரோதம் ஆகும்
ஆக முன்பு கூறிய படி ஒரு அம்சமாகவே கொள்ள வேண்டும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-42-அம்சோ நாநா வ்யபதேசாத் -ஒரு அம்சமாகவே ஆகும்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-45-பிரகாசாதிவத் து நைவம்பர-பரமாத்மாவின் அம்சம்
பிரிக்க இயலாது
பேத அபேத ஸ்ருதிகளும் கொள்ள முடியும்
தோஷங்களால் தீண்டப் படாததது என்ற வாதமும் கொள்ளப் படும்
ஆக ஒளி ரத்னக் கல்லை விட்டு பிரிக்க முடியாதது போலேயும்
குணம் குணம் உள்ளவன் -ஆத்மா உடல் போலே
ஜீவனும் அசித்தும் ப்ரஹ்மத்தின் அம்சங்களே -என்றாகிறது-

————————————————————————————————————————————————

3-2-29-பிரதிஷேதாச்ச

தள்ளப் படுவதாலும் -கடந்த ஸூ த்ரச்  சித்தாந்தம் தொடர்கிறது
ப்ருஹத் உபநிஷத் -4-4-25-ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அஜரோ அமர -பரமாத்மா பிறப்பு இறப்பு கிழத் தன்மை அற்றவன் -என்றும்
சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயா ஏதத் ஜீரயதி -வயதாகி கிழத் தன்மை அடைவது இல்லை
தோஷங்கள் தட்டாமல்
காரணமாகவும்
அம்ச அம்சி பாவமே பொருந்தும் என்றதாயிற்று
ஸூ ஷ்மமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாக காரணமாயும்
ஸ்தூலமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாகக் கார்யமாகவும்
கார்ய கார்யங்களுக்கு இடையில் பேதம் இல்லை -அபேத ஸ்ருதியும்
காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தவன் கார்யப் பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கொண்டு
ப்ரஹ்மத்தை தோஷங்கள் தீண்டுவது இல்லை என்றும் சமஸ்த கல்யாண குணங்கள் கொண்டவன் என்றும்
உபய லிங்கத்வம் நிரூபிக்கப் பட்டது

————————————————————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————

3-2-30-பரமத சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-

அணை அளவு தொடர்பு வேறுபாடு ஆகியவை கூறப்பட்டதால் இதை விட உயர்ந்தது உள்ளது
சாந்தோக்யம் -8-4-1-அத ய ஆத்மா ச சேது வித்ருதி -இந்த ஆத்மாவைத் தாங்கும் பாலமாக உள்ளான்
சாந்தோக்யம் -8-4-2-ஏதம் சேதும் தீர்த்தவா அந்தஸ் சந் அனந்தோ பவதி -பாலத்தை கடந்து குருடனானவன் நிலை மாறப் பெறுகிறான்
இவற்றால் ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை உண்டு என்றதாயிற்று
உந்மிதம்-என்று அளவு பட்டு ப்ரஹ்மம் கூறப் படுகிறது
சாந்தோக்யம் -3-18-2-சதுஷ்பாத் ப்ரஹ்ம-நான்கு பாதங்கள் கொண்டது என்றும்
ப்ரசன உபநிஷத் -ஷோடாசகலம் -பதினாறு பிரிவுகள் கொண்டது -என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -6-19-அம்ருதஸ்ய பரம் சேதும் தக்தேந்த மிவா நலம் -தானாக வெளிப்படும் மோஷத்தை அடைய உதவும் பாலமாக ப்ரஹ்மம் உள்ளான் என்றும்
முண்டக உபநிஷத்-2-2-5- -அம்ருதஸ்யைஷ சேது -மோஷத்தை அடைவிக்கும் பாலம் ப்ரஹ்மம் என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-பராத்பரம் புருஷம் உபைதி -பரமாத்மாவை விட உயர்ந்த புருஷன் அடைகிறான் என்றும்
தைத்ரிய நாராயண வல்லி -1-5- பராத்பரம் யத் மஹதோ மஹாந்தம் -பெரியதான பரமாத்மாவை விட பெரியதான என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -3-9-தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -அந்த புருஷனால் இவை நிரம்பி உள்ளன -என்றும்
3-10-ததோ யதுத்தரதரதரம் தத் அரூபம் அநாமயம் -அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது-உருவம் அற்றது -துன்பம் அற்றது -என்றும்
இப்படி பல ஸ்ருதிகள் அந்த பிரமத்தைக் காட்டிலும் மேலான வஸ்து உள்ளதைச் சொல்லிற்று
இனி இந்த பூர்வ பஷத்துக்கு பதில் மேலே –

——————————————————————————————————————————————–
3-2-31-சமான்யாத்து-

பொதுவான தன்மை காரணத்தால் ஆகும் -து -பதம் பூர்வ பஷத்தை தள்ளுகிறது
சேது என்று ஒரு கரையில் இருந்து அடுத்த கரைக்கு செல்வதை சொல்ல வில்லை
சாந்தோக்யம் -8-4-1-ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய-இந்த உலகங்கள் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருக்க -என்கிறது
சேதனம் அசேதனங்களை தன்னுள் வைத்து ஒன்றுடன் ஓன்று கலவாமல் காப்பதால் சேது எனப்படுகிறான்
சாந்தோக்யம் -8-4-2- ஏதும் சேதும் தீர்த்தவா -தீர்த்தவா அடைதல் பொருளில் கடந்து என்று அல்ல –
வேதாந்தத்தை கடக்கிறான் முற்றிலும் அறிந்தவன் ஆகிறான் என்றே பொருள்

—————————————————————————— —————————————————————
3-2-32-புத்த்யர்த்த பாதவத் —

பாதம் போன்று உபாசனத்துக்கு கூறப் பட்டது -சதுஷ்பாத் ப்ரஹ்ம /ஷோடசகலம் /பாதோச்ய விசவா பூதானி /என்று
உபாசனத்துக்கு புத்திக்கு அளவு படுத்தி சொன்னவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-தெளிவாக உள்ளதே -இவனே காரணம் என்பதை
தைத்ரியம் -2-1-தஸ்மாத்வா ஏ தஸ்மாத் ஆத்ம ந ஆகாச சம்பூத –இதில் இருந்து ஆத்மாவும் ஆகாசமும் வெளிப்பட்டன
என்றும்
தைத்ரியம்-2-6- -சோகாமயாத பஹூச்யாம் பிரஜாயேய-அது தன்னைப் பலவாகக் கடவது என்று எண்ணியது -என்றும்
சாந்தோக்யம் -3-18-2-வாக் பாத பிராண பாத சஷூ பாதோ மன பாத –பாதங்களாக வாக் போன்றவை உள்ளன என்றது உபாசனைக்கு எளிதாக்கவே என்றவாறு

———————————————————————————————————————————————-

3-2-33-ஸ்தான விசேஷாத் பிரகாசாதிவத்

அளவிட முடியாத வஸ்துவை உபாசனை பொருட்டு மாதரம் எப்படி அளவிட்டு சொல்ல முடியும் என்றால் -ஒளி முதலான ஸ்தானங்களின் சம்பந்தம் காரணம் ஆகும்
ஜன்னல் ஒளி –குட ஆகாசம் போலே

———————————————————————————————————————————————-
3-2-34-உபபத்தேச்ச–

தன்னை அடையும் உபாயமாக தானே உள்ள தன்மை பொருந்துவதால் –
முண்டகம் -அம்ருதஸ்யைஷ சேது -அடியைப் படும் இலக்கே அவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்
முண்டகம் -3-2-3-நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா

ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தே ந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்-என்று
பரமாத்மாவை கேட்டோ ஆழ்ந்த ஞானத்தாலோ அறிய அடைய முடியாது -அவனே யாரைத் தெரிந்து எடுத்து அவன் மட்டுமே அடைகிறான் அவனுக்கு தனது ரூபத்தை வெளிப்படுத்துகிறான்-

—————————————————————————————————————————————–

3-2-35-ததா அந்ய பிரதிசேஷாத்-

இ[ப்படி அவனைக் காட்டிலும் வேறு இல்லை என்று மறுப்பதால் ஆகும்
ததோ எதுத் தர தரம் -என்றும் பராத்பரம் புருஷம் -என்றும் -அஷராத் பரத பர -என்றும் உயர்ந்த வஸ்து வேறே உண்டு என்கிறீர்கள்
அதே ச்வேதாச்வதர உபநிஷத் -3-9-யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் ந அணீய ந ஜ்யோயோஸ்தி கச்சித் என்றதே
ப்ருஹத் உபநிஷத்

2-3-6-நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரமஸ்தி-என்றும்
நாராயண வல்லி -1-2- ந தஸ்ய ஈசே கச்ச ந தஸ்ய நாம மஹத்யச-என்றும் -சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா நதி -என்றும் ச ஆப ப்ரதுகே உபே இமே -என்றும்
1-3-அத்ப்யஸ் சம்பூத ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டௌ-என்றும் அவனே ஜகத் காரணம் என்றதே
ஆனால் ச்வேதாச்வதர -3-10- ததோ எதுத் தர தரம் என்று சொன்னது எதனால் என்றால் -இந்த வரிக்கு முன்னால் -3-8-
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ புரஸ்தாத் தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நான்ய பன்னா வித்யதே அயநாயா -என்று முழங்கி
3-9-யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீய நஜ்யா யோஸ்தி கச்சித் வருஷ இவஸ்தப்த திவி திஷ்டதி ஏக தே நேதம் பூர்ணம் புருஷே ந சர்வம் -என்றும்
நிகமத்தில் -3-10-ததோ எதுத் தர தரம் தத் அரூபம் அநாமயம் ய எதத் விது அம்ருதாச்தே பவந்தி அதே தர துக்க மேவ அபியந்தி -என்றது
மேலும் முண்டகம் 3-2-8–பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்பதை 2-1-2-அஷராத் பரத பர -என்றதே –

————————————————————————————————————————————
3-2-36-அநேக சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய —

ஆயாம -அனைத்தும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப் பட்டது என்கிறது-சர்வ வ்யாபகத்வம்
ச்வேதாச்வதர உபநிஷத் -தே நதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும் -நாராயண வல்லி -11-6-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ச்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்
‘முண்டகம் -1-1-6-நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஷூஷ்மம் யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
ஸூ தரத்தில் உள்ள ஆதி என்ற பதம் ப்ரஹ்மத்துக்கு அனைத்துமாய் இருக்கும் பெருமையை
ப்ருஹத் உபநிஷத் -4-5-1-ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும் சாந்தோக்யம் -ஆதமை வேதம் சர்வம் -என்றும்
ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்தது என்று முழங்கும் –

————————————————————————————————————————————-

எட்டாவது அதிகரணம் -பலாதிகரணம் -கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————

3-2-37-பலம் அத உபபத்தே —

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் -எங்கும் உள்ளவன் -அனைத்தும்ம் அறிந்தவன் -சர்வ சாக்தம் -உதாரன் -யஜஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து
அளிக்கின்றான் ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

————————————————————————————————————————————-

3-2-38-ஸ்ருதத்வா ச

இப்படியே ஸ்ருதி வரிகள் -பல போகங்களையும் மோஷத்தையும் பரம் பொருளே அளிப்பதாக கூறுகின்றன –
ப்ருஹத் -4-4-24-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா அந்நாத வஸூதான -என்றும்
தைத்ரிய ஆரண்யகம் -2-7- எஷஹி ஏவ ஆனந்த யாதி -என்றும் கூறும்

—————————————————————————————————————————————–

3-2-39-தர்மம் ஜைமினி அத ஏவ

தர்மம் முதளியவைகளே பலன் அளிப்பதாக ஜைமினி கூறுகிறார்
கண்களில் புலப்படாத அபூர்வா -எதிர்காலத்தில் அந்த பலன்களை அளிக்கின்றது
சாஸ்திரம் யஜேன ஸ்வர்க்க காமா -யாகம்மூலம் ஸ்வர்க்கம் கிட்டும் என்றதே –

—————————————————————————————————————————————-
3-2-40-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத் —

பலனை அளிப்பதால் முந்தையதே -என்கிறார் பாதராயணர்-
து -பூர்வ பஷத்தை தள்ளுகிறது
வாயு அக்னி குறித்து யாகம் பண்ணும் பொழுது யஜ் -அந்த யாகங்களின் எஜமானனாக உள்ள தேவதைகளே பலன்களை அளிப்பதாக கூறும்
தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயவ்யாம் ச்வேதமால பேத பூதி காமோ வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா வாயுமேவ ஸ்வேன பாக தேயேன உபதாவதி ச ஏவ எனம் பூதிம் கமயதி -என்று
இது போன்ற வாதங்களை அர்த்த வாதங்கள் என்று தள்ள இயலாது -இதனை மருத்துன் கண்களுக்கு புலப்படாத அபூர்வம் என்பதை உருவாக்கி பலன் அளிப்பதாக சொல்வதை பிரமாணிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
பூர்வ பஷிகள் யஜேத என்பதை யஜ் ஏத என்று பிரித்து
யஜ் தவத்தை என்றும் ஏத அபூர்வம் என்றும் சொல்வதை ஏற்க இயலாது
ஏத எனபது கர்த்தாக்கள் மூலம் இயற்றப்படும் கர்மங்களைக் குறிக்கும்
இதனை உணர்த்தவே-தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயுர்வை ஷேபிஷ்டா த்கேவதா -என்றன -ஆயினும் ஆராதிக்கத் தகுந்தவனாக உள்ளவன் பரம புருஷனே –
அவனே அந்தர்யாமியாக இருந்து கொண்டு பலனை அளிக்கின்றான் என்பதை நாராயண வல்லி -1-2-
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமா நம் விச்வம் பிபர்த்தி புவனச்ய நாபி –ததே வாக்னி தத் வாயு தத் ஸூ ர்ய தாது சந்த்ரமா -என்று கூறியது
ப்ருஹத் உபநிஷத்- 3-7-7- யோ வாயௌ திஷ்டன் யஸ்ய வாயு சரீரம் என்றும் -3-7-5-யோ அக்னௌ திஷ்டன் -என்றும் 3-7-9–யோ ஆதித்யே திஷ்டன் -என்றும் சொல்லிற்று
ஸ்ரீ கீதையிலும் -7-21-யோ யோ மாம் யாம் தநும் பக்த ச்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம் தாம் ஏவ வித்தாம் யஹம் -என்றும்
7-22-ச தயா ச்ரத்தயா யுக்த தஸ்ய ஆராதன மீஹதே லபதே சே தத காமான் மயைவ விஹிதான் ஹிதான் -என்றும்
9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்றும்
7-23-தேவான் தேவ யஜோ யாந்தி மத் பக்தோ யாந்தி மாம்பி -என்றும்
9-25-யாந்தி மத்யாஜி நோபிமாம் -என்றும் அரசன் தானே நேரடியாகவோ வேலையாட்கள் மூலமாகவோ மகிழ்ந்து பரிசு அளிப்பது போலே
பரமபுருஷன் இடம் இருந்தே ஸ்வர்க்கம் போன்ற போகங்களும் மோஷமும் கிட்டுகிறது என்று நிரூபணம் ஆயிற்று -அனைத்து அர்த்தவாதங்களும் பொருந்தி விடுகின்றன —

—————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-3-1– மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்-முதல் பாதம் —வைராக்ய பாதம்–

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————-

சாதனா அத்யாயம்
55 அதிகரணங்கள்
181 சூத்ரங்கள்

————————————————————-
முதல் பாதம் -வைராக்ய பாதம்-ஜீவனுக்கு உள்ள தோஷங்களை விளக்கி -இவை இல்லாத ப்ரஹ்மத்தை அடைய வைராக்கியம் ஏற்பட இவை முதலில் கூறப்படுகின்றன –6 அதிகரணங்கள்-27-ஸூ த்ரங்கள்-

——————————————————————-

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7  ஸூ த்ரங்கள் -ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூ த்ரங்கள்அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

-மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூ த்ரங்கள்–பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பதுநிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூ த்ரம்-மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூ த்ரம்-ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூ த்ரங்கள்–மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

—————————————————————————————————————————

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

——————————————————————————————————————————-
3-1-1-ததந்திர ப்ரதிபத்தௌ ரம்ஹதி சம்பரிஷ்வக்த ப்ரசன நிரூபணாப்யாம்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை /ஸ்வப்னம் -கனவு நிலை /ஸூஷுப்தி -தூக்க நிலை /மூர்ச்சை -மயக்க நிலை
பூத ஸூ ஷ்மங்களுடன் சேர்ந்தே செல்வதை நிரூபிக்கிறார்
2-4-17-சம்ஜ்ஞா மூர்த்திக் லுப்தி -பெயர் ரூபம் மாறுதல் -பற்றி சொல்லி மூர்த்தி பதம் உடலைக் குறிக்கும் அதையே இங்கே தத் பதம் சொல்லும்
-ததந்திர ப்ரதிபத்தௌ -மற்று ஒரு உடலை அடையும் பொழுது
சம்பரிஷ்வக்த -பூத ஸூ ஷ்மங்களுடன் இணைந்து
ரம்ஹதி -செல்கிறான்
ப்ரசன நிரூபணாப்யாம் -கேள்வி பதில்கள் ஆகும் சாந்தோக்யம் பஞ்சாக்னி வித்யையில் உள்ளவை கொண்டு நிரூபணம்-

ஆருணி என்பவரின் பிள்ளை ஸ்வேதகேது-என்பவன் பாஞ்சால தேசம் சென்று ப்ரவாஹணன் அரசன் இடம்
1-யாகம் முதலானவற்றை இயற்றினவர்கள் உயிர் பிரிந்த பின்பு எங்கு செல்கின்றனர்
2-மீண்டும் எந்த பாதையில் உலகிற்கு வருகின்றார்கள்
3-தேவ யானம் பித்ரு யானம் வலிகளின் வேறுபாடு
4-ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள் யார்
5- கேள்வியாக சாந்தோக்யம் -5-3-3- வேதத யதா பஞ்சம் யா மாஹூதாவாப் புருஷ வசசோ பவந்தி -என்று
ஐந்தாவது ஆஹூதியாக அளிக்கப் படும் நீர் எனபது எவ்விதம் புருஷன் என்று கூறப்படுகிறது என்று அறிவாயா
இதற்கு -ஸ்வர்க்கம் என்பதையே அக்னியாகக் கொண்டு பதில் உள்ளது -சூரியன் சமித்துக் கட்டை -சூர்ய கிரணங்கள் புகை -சந்தரன் தணல் நட்ஷத்ரங்கள் பொறிகள்
சாந்தோக்யம் இதனை தொடர்ந்து -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதே சோமராஜாபவதி-என்று
ஸ்வர்க்கம் என்னும் அக்னியில் தேவர்கள் -இந்த்ரியங்கள் -அனைத்தும் இணைந்து ஸ்ரத்தை என்னும் நீரை ஆஹூதியாக அளிக்க சோமராஜா என்ற பெயருடன் அழகிய உடலை அடைகிறான் என்கிறது
கர்மபலன்கள் முடிவைந்த நிலையில் பர்ஜன்யம் என்ற அக்னியில் பிராணன்கள் சோமராஜாவை இட உடல் நீராக மாறி ஜீவனுடன் சேர்ந்து மழை ஆகிறது
அந்த மழையைபூமி என்ற அக்னியில் அதே இந்த்ரியங்கள் இட -ஹோமம் செய்கின்றன என்ற கருத்து –
மழை நீர் நெல் போன்ற உணவாக மாற -அந்த உணவை புருஷன் என்ற அக்னிக்கு அதே இந்த்ரியங்கள் ஹோம திருவ்யமாக இட
புருஷன் இடம் சென்ற அன்னம் ரேதசாக மாறி அந்த விந்துவை இந்த்ரியங்கள் பெண் என்ற அக்னியில் ஆஹூதியாக இட கர்ப்பம் ஆகிறது
சாந்தோக்யம் -5-9-1-இதி து பஞ்சம்யாமாஹூதா வாப புருஷவசசோ பவந்தி -இப்படியாக ஐந்தாவது ஆஹூதியாக விடப்படும் நீர் -விந்து -புருஷனாக பெயர் அடைகின்றது
புதிய உடல் எடுக்க பூதங்களுடன் ஸூ சமமாகவே செல்கின்றான் என்று உணரலாம்
ஆப புருஷ வசஸ -சாந்தோக்யம்-5-9-1-நீரான ரேதஸ் புருஷன் ஆகிறது
பஞ்ச பூதங்களுடன் செல்வதாக சொல்ல முடியுமோ -இதற்கு பதில் அடுத்த ஸூத்ரம்

——————————————————————————————————————————-

3-1-2-த்ர்யாத்மகத்வாத் து பூயஸ்த்வாத்

து -நீர் மட்டும் கொண்டு உடல் உண்டாக வாய்ப்பில்லையே
தாஸாம் த்ரிவ்ருத்தம் த்ரிவ்ருத்தம் ஏகைகாம் -சாந்தோக்யம் -6-3-3-நீர் நெருப்பு நிலம் -ஒவ் ஒன்றிலும் மற்ற இரண்டின் பகுதியைச் சேர்த்து உருவாக்குவதே த்ரிவ்ருத்தம் ஆகும்
ஸ்தூல நீர் -பாதி ஸூ ஷ்ம நீரும் கால் பகுதி ஸூ ஷ்ம நெருப்பும் கால் பகுதி ஸூ ஷ்ம நிலமும் சேர்ந்தது ஆகும்-

———————————————————————————————————————————-

3-1-3-பிராண கதே ச

பிராணன்களும்-இந்த்ரியங்களும் -செல்வதால் இந்த்ரியங்களுக்கு ஆதாரமாக உள்ள பூத ஸூ ஷ்மங்களுடன் ஜீவன் செல்கின்றான்
ப்ருஹத் உபநிஷத் -4-4-2- தம் உத்க்ராமந்தம் பிராண அநூத்க்ராமாதி பிராணம் அநூத்க்ராமந்தம் சர்வே பரானா அநூத்க்ராமந்தி -என்றும்
ஸ்ரீ கீதை 15-7/8-மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி
உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே
ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான் இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூ சமங்களும் கூட செல்கின்றன –

————————————————————————————————————————————-
3-1-4-அக்னி நயாதி கதி ஸ்ருதே இதி சேத ந பாக்தத்வாத் –

மரண காலத்தில் இந்த்ரியங்கள் அக்னியுடன் இணைவதாகக் கூறுவதால் பிராணன் ஜீவனுடன் செல்வது இல்லை எனபது பூர்வ பஷம்
புருஹத் உபநிஷத் -5-12-13-யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதச்ய அக்னிம் வாக் அப்யேதி வாதம் பிராண சஷூராதித்யம் -என்று
இறந்தபின்பு வாக்கு அக்னியிலும் பிராணன் வாயுவிலும் கண்கள் சூரியனிலும் இணைகின்றன
எனவே ஜீவனுடன் இந்த்ரியங்கள் செல்வது இல்லை என்பர்
தம் உத்க்ராமந்தம் சர்வே ப்ராணா உத்க்ராமந்தி -என்று
அந்த அந்த அபிமான தேவதைகள் அவற்றின் மீது தங்கள் தொடர்பை கை விடுகின்றன என்றே கொள்ள வேண்டும்
அதே உபநிஷத்தில் -ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா -தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்கிறது
ஆக அந்த அந்த தேவதைகளின் கட்டுப்பாட்டை நீக்கி ஜீவன் இந்த்ரியங்களுடன் அவற்றின் பூதங்களுடன் செல்கின்றான் –

—————————————————————————————————————————————-

3-1-5-ப்ரதமே அச்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே –

சாந்தோக்யம் -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –தேவ லோகம் –ஸ்ரத்தை நீர் அல்லவே
நீர் என்பதே ஸ்ரத்தை -சோமராஜா -வர்ஷம் -அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் பல விதமாக மாறும் -இத்தையே ஏவம் ஆப புருஷவசச
தைத்ரீய பிரமாணம் –3-2-4- அப பிரணயதி ஸ்ரத்தா வா ஆப -என்று அவன் நீரை எடுக்கிறான் -ஸ்ரத்தை என்பதே நீர்
ஜீவன் சோமராஜாவாக மாறுவது நீரால் தான் என்பதை சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி -என்று கூறியது
எனவே நீர் முதலான பூத ஸூ ஷ்மங்களுடன் இணைந்து ஜீவன் கிளம்புகின்றான்

———————————————————————————————————————————————-
3-1-6-அசருத்வாத் இதி சேத் ந இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –

இஷ்டம் பூர்த்தம் தானம் -பலனை விரும்பி யாகம் செய்பவர்கள் -சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –
குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்துது மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –
இதை முடிக்கும் பொழுது -5-10-4/5-பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி
தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று
பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்
சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி
இத்தால் ஸ்ரத்தை போன்ற மன நிலையை கொண்டு யாகம் செய்த ஜீவனே
தம் தேவா பஷயந்தி -5-10-4-சோமோ ராஜாவை உண்கிறார்கள் -ஜீவனை உன்ன முடியுமா கேள்விக்கு பதில் அடுத்த ஸூ த்ரம்

———————————————————————————————————————————————
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-

ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் -மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்
இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –
ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து
இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்
ஆக ஜீவர்கள் பூத ஸூ ஷ்மங்களுடனே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் பட்டது-

——————————————————————————————————————————————

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்

அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————-

3-1-8-க்ருதாத்யயே அநு சயவான் த்ருஷ்ட சம்ருதிப்யாம் யதேதேம் அநேவம் ச –

புண்யம் செய்தவர்கள் தூ மாதி மார்க்கம் தொடங்கி பித்ரு மார்க்கம் அடைந்து சந்திர மண்டலம் செல்கிறார்கள்
புண்ய பலன்களை அனுபவித்த பின்பு சாந்தோக்யம் -5-10-5-யாவத் சம்பாதம் உஷித்வா அத ஏதமேவ அத்வானம் புன நிவர்த்தந்தே -என்று
கர்ம பலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து எஞ்சிய கர்மங்களுடன் உலகிற்கு திரும்புகின்றார்கள்
யாவத் சமபாதம் உஷித்வா -என்று எந்த கர்மத்தின் மூலமாக ஸ்வர்க்கம் புகுந்தாரோ அந்த கர்ம பலன் அனுபவித்த பின்பு என்றபடி
இதனை ப்ருஹத் உபநிஷத் -4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத் கிஞ்சேஹ கரோத்யாயம் தஸ்மாத் லோகாத் புனரேத்யச்மை லோகாய கர்மணே-என்றது-

த்ருஷ்ட ஸ்ம்ருதி ப்யாம்–ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் இப்படியே கூறும்
சாந்தோக்யம் -5-10-7-தத்ய இஹ ரமணீய சரணா அப்யாசோ ஹ யத் தே ராமணீயாம் யோநிம் ஆபத்யேரன் ப்ராஹ்மண யோநிம் வா ஷத்ரிய யோநிம் வா வைசிய யோநிம்வா அத யே இஹ கபூய சரணா
அப்யாசோ ஹ யத் தே கபூயாம் யோ நிம் ஆபத்யேரன் ஸ்வ யோ நிம் வா ஸூகர யோநிம் வா சண்டாள யோநிம் வா -என்று பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன் நாய் பன்றி சண்டாளன் ஆக பிறக்கிறார்கள்
இதே ப்கருத்தை கௌதம ஸ்ம்ருதி -2-11/12/13-வர்ண ஆச்ரமாச்ச ஸ்வ கர்ம நிஷ்டா ப்ரேத்ய கர்மபலம் அநுபூய தத சேஷேண விசிஷ்ட தேச ஜாதி குல ரூப ஆயு ஸ்ருத வித்த வ்ருத்த
ஸூ க மேதசா ஹி ஜன்ம பிரதிபத்யந்தே விஷ்வஞ்ச விபரீதா நச்யந்தி -என்றும்
ஆபஸ்தம்ப தர்ம ஸூ த்ரமும்-2-1/2/3–தத பரிவ்ருத்தௌ கர்ம பல சேஷேண ஜாதிம் ரூபம் வர்ணம் பலம் மேதாம் பிரஜ்ஞாம் த்ரவ்யாணி தர்ம அனுஷ்டானம் இதி
பிரதிபத்யந்தே தத் சக்ரவத் உபயோர் லோகயோ ஸூ கே ஏவ வர்த்ததே -என்றும் கூறும்
சாந்தோக்யம் -5-10-5-யாவத் சமபாதம் என்றது பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்கள் ஆகும் -ப்ருஹத் உபநிஷத் 4-4-6–யத் கிஞ்சேஹ கரோத்யம் இதே பொருளில் சொல்லும்
எஞ்சிய கர்மங்களுடன் திரும்புகிறான் -மேலே கிளம்பும் பொழுது தூமம் -புகை

இரவு கிருஷ்ண பஷம் தஷிணாயணம் பித்ரு லோகம் ஆகாயம் சந்தரன் பாதையிலும்
கீழே வரும் பொழுது ஆகாயம் காற்று தூமம் -மேகம் மழை என்ற பாதையில் இறங்குகின்றனர்
—————————————————————————————————————————————
3-1-9-சரணாத் இதி சேத ந தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –

ஆசாரம் என்பதே கபூய சரணா ரமணீய சரணா பதங்கள் கூறப்பட்டது அவை கர்மங்கலையே குறிக்கும் என்று கார்ஷ்ணாஜி நி முனிவர் கூறுகிறார்
தைத்ரிய சம்ஹிதை -1-11-12- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி தானி த்வயா உபாச்யாநி–
இதனால் இன்ப துன்பங்கள் புண்ய பாப கர்மாக்களே ஆகும்

—————————————————————————————————————————————–
3-1-10-ஆ நர்த்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்

புண்ய பாபா கர்மங்கள் ஆசாரத்தையே சார்ந்து உள்ளன –
தஷ ஸ்ம்ருதி -2-027-சந்த்யா ஹீ நோ அசுசி நித்யம் அனர்ஹா சர்வ கர்ம ஸூ -சந்த்யா வந்தனம் செய்யாதவன்
அசுத்தமானவன் -அவன் எந்தக் கர்மங்களை செய்ய தகுதி அற்றவனாகிறான் –
வசிஷ்ட ஸ்ம்ருதி -6-3-ஆசார ஹீ நம் ந புநந்தி வேதா –ஆசாரம் இல்லாதவனை வேதத்தாலும் புனிதன் ஆக்க முடியாது –

———————————————————————————————————————————————–

3-1-11-ஸூ க்ருத துஷ்க்ருதே ஏவ இது து பாதரி —

புண்யம் கர்ம ஆசரதி பாபம் கர்ம ஆசரதி- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி என்று
சரண என்ற பதமும் கர்ம என்ற பதமும் தனித் தனியே சொல்லப்பட்டன -யானி அன்வத் யானி கர்மாணி -என்று ஸ்ருதிகளில் நேராகக் கூறப்பட்ட கர்மங்கள் உணர்த்தப் பட்டன –
யானி அஸ்மாகம் ஸூ சரிதானி -ஆசாரம் மூலமாக செய்யும் கர்மங்கள் -கோபலீவர்த்த ந்யாயம்-மாடுகளை அழைத்து வா எருதுகளை அழைத்து வா சிறப்பித்து சொல்வது போலே
ஆக இத்தால் எஞ்சிய கர்மங்களுடன் ஜீவன் மீண்டும் வருகிறான் என்றதாயிற்று –

———————————————————————————————————————————————-

-மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-

பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பதுநிரூபிக்கப் படுகிறது

————————————————————————–

3-1-12-அநிஷ்டாதிகாரிணாம் அபி ச ச்ருதம்-

யாகம்-இஷ்டங்கள் -குளங்கள் வெட்டுதல் -பூர்த்தம் -தத்தம் தானம் – போன்றவற்றை செய்யாமல் பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது கூறப்படுகிறது –
பூர்வபஷ ஸூ த்ரங்கள்-இதுவும் அடுத்த நான்கும் -கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும் சந்திர மண்டலம் செல்கிறார்கள்
—————————————————————————————————————————————-
3-1-13-சம்யமனே து அனுபூய இதரேஷாம் ஆரோஹ அவரோஹா தத்கதி தர்சநாத்–

யமனின் ஆணைக்கு ஏற்ப தண்டனை அனுபவித்த பின்பே சந்திர மண்டலம் செல்வதும் இறங்குவதும் நடக்கும்
கட உபநிஷத் -அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புன புன வசமாபத்யே மே-என்றும்
தைத்ரீய ஆரண்யகம் -2-1-வைவஸ்வதம் சங்கமனம் ஜனா நாம் யமம் ராஜா நாம் –

—————————————————————————————————————————————–

3-1-14-ச்மரந்தி ச

பராசரர் போன்ற மகரிஷிகள் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -3-7-5–சர்வே சைதே வசம் யாந்தி யமச்ய பகவன்கில -என்று அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பர்

——————————————————————————————————————————————

3-1-15-அபி சப்த –

ரௌரவம் மஹா ரௌரவம் தாபனம் அவீசி சம்ஹாரம் கால சூத்ரம் கும்பீபாகம் ஆகிய ஏழு நரகங்கள் ஸ்ம்ருதிகளில்கூறப்படுகிறது

ஏழு நரகங்களுக்குச் செல்பவராக சொல்லி யமனிடம் செல்வதாக எங்கனம் சொல்ல முடியும் என்றால்

——————————————————————————————————————————————

3-1-16-தத்ர அபி தத் வ்யாபாராத் அவிரோத —

யமனுடைய ஆணைக்கு உட்பட்டே நரகங்கள் உள்ளதால் விரோதம் இல்லை
இனி இந்த பூர்வ பஷங்களுக்கு பதில் கூறப்படுகிறது

——————————————————————————————————————————————-
3-1-17-வித்யா கர்மணோ இதி து பிரக்ருதத்வாத்

ப்ரஹ்ம வித்யை உள்ளவர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கமும் கர்மங்களை சரிவர இயற்றுபவர்களுக்கு தூமாதி மார்க்கமும் கிட்டும் என்றே படிக்கப் படுகிறது
தேவயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-1- தத்ய இத்தம் விது யே ச இமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாஸ்யதே–தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷ அஹ -என்றும்
பித்ருயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-3-அத யே இமே க்ராமா இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே –தே தூமம் அபி சம்பவந்தி -என்றது
கௌஷீதகி உபநிஷத் -யே கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி -என்று அனைவரும் சந்திர மண்டலம் செல்கின்றனர்
பாவம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்லா விடில் ஐந்தாவது ஆஹூதி ஏற்படாமல் உடலும் தோன்றாதே என்ன அடுத்த ஸூ த்ரத்தில் சமாதானம்

——————————————————————————————————————————————–

3-1-18-ந த்ருதீயே ததா உபலப்தே

மூன்றாவது இடமாகிய நரகம் செல்லும் பாபம் செய்தவர்களுக்கு பொருட்டு ஐந்தாவது ஆஹூதி அவசியம் இல்லை என்று ஸ்ருதி கூறும்
சாந்தோக்யம் -5-3-3-வேத்த யதா கே நா சௌ லோகோ ந சம்பூர்யதே –என்று கேட்டு விடையாக -5-10-8-அத எதையோ பதோர்ந கதரேண ச தானி இமானி ஷூத்ராணி அசக்ருதா வர்த்தீநி பூதானி பவந்தி
ஜாயாஸ்ய ம்ரியச்வேதி ஏதத் த்ருதீயம் ஸ்தானம் தே நா சௌ லோகோ ந சம்பூர்யதே
ஐந்தாவது ஆஹூதி இல்லாமலேயே உடல் எடுத்தவர்கள் உண்டே -என்கிறது-

——————————————————————————————————————————————–

3-1-19-ஸ்மர்யதே அபி ச லோகே —

த்ரௌபதி திருஷ்டத்யும்னன் போன்ற புண்ணியம் செய்தவர்களுக்கு ஐந்தாவது ஆஹூதி இல்லாமலே உடல் உண்டானதே -மகாபாரதம் சொல்லும்
——————————————————————————————————————————————–
3-1-20-தர்சநாத் ச –

சுருதியிலும் இதே கருத்தைக் காணலாம் -சாந்தோக்யம் -6-3-1-தேஷாம் கலு ஏஷாம் பூதானாம் த்ரீண்யேவ பீஜானி பவந்தி அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று
தேஜஸ் உஷ்ணம் மூலம் முட்டை உடைந்து உயிர் பிறப்பதும்
ரேதஸ் விந்து மூலம் கர்ப்பம் மூலம் பிறப்பவை -பூமியை பிளந்து செடி போன்றவை பிறப்பதும் -வியர்வை மூலம் போன்றும் கிருமிகள் -போன்றவை ஐந்தாவது ஆஹூதி இல்லாமல் உண்டானவை
———————————————————————————————————————————————
3-1-21-த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய

சாந்தோக்யம் -அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று உத்பிஜ்ஜம் பதம் மூலம் வெப்பத்தாலும் வியர்வையாலும் உண்டாகும் கிருமிகள் பற்றிக் கூறப்பட்டது
எனவே பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது எனபது பொருந்தாது என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் –
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————————————

3-1-22- தத் ஸ்வா பாவ்யாபத்தி உபபத்தி

ஆகாயம் போன்றவற்றின் ஸ்வ பாவம் அடைகிறான் என்று கூறுவதே பொருந்தும்
சாந்தோக்யம் ஜீவன் திரும்பும் வரிசையை -5-10-5/6-அத ஏவம் ஏவ அத்வானம் புன -நிவர்த்தந்தே யத் ஏதம் ஆகாசம் –ஆகாசாத் வாயும் வாயுர்பூத்வா தூமோ பவதி தூமோ பூத்வா அப்ரம் பவதி -அப்ரம் பூத்வா மேகோ பவதி -மேகோ பூத்வா ப்ரவர்ஷதி–
சோமராஜா சரீரம் போலே ஆகாயம் முதலான சரீரங்களை எடுக்கின்றான் பூர்வ பஷம்
ஸ்வா பாவ்யா பதி என்பதால் சரீரம் எடுக்க வில்லை -தன்மைகளை மட்டுமே அடைகின்றான் எனபது சித்தாந்தம்-

———————————————————————————————————————————————-

-ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————–

3-1-23-நாசிசிரேண விசேஷாத்

சாந்தோக்யம் -5-10-6-அதோவை கலு துர் நிஷ் பிரபதரம் சிரமப்பட்டு அரிசியில் இருந்து வெளியேறுகின்றான்
எனவே ஆகாசம் முதலானவற்றில் குறிகிய காலமே இருந்து வெளியேறுகின்றான் என்றதாயிற்று –

—————————————————————————————————————————————

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் –
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று

——————————————————————————————————————————
3-1-24-அந்யா திஷ்டிதே பூர்வவத் அபிலாபாத் —

தொடர்பு மட்டுமே கொள்கின்றான்
சாந்தோக்யம் -5-10-6-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தா இஹ வ்ரீஹியவா ஓஷதி வனச்பதய திலாமாஷா இதி ஜாயந்தே
தேவா ஜாயந்தே-மனுஷா ஜாயந்தோ போலே இங்கும் கூறப்படுவதால் த்காஅவர உடல்களுடன் பிறக்கிறான் என்பர் பூர்வ பஷி –
அப்படி அல்ல -ஆகாயம் மழை மேகம் போலே தொடர்பு மட்டுமே கொள்கிறான்-
சாந்தோக்யம் -ரமணீய சரணா கபூய சரணா -சந்திர மண்டலத்தில் பலன்கள் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடிந்தன
பஞ்ச ஆஹூதிக்கு பின்பு எடுக்கும் உடலிலே மீண்டும் கர்ம பலன்கள் அனுபவிக்க வேண்டும்
இடைப்பட்ட காலத்தில் அனுபவிக்க கர்மங்கள் இல்லை என்பதால் தொடர்பு மட்டுமே என்றதாயிற்று-

—————————————————————————————————————————————-

3-1-25-அசுத்தம் இதி சேத ந சப்தாத் –

அக்னி ஷோமம் போன்ற பசு ஆடு வதையுடன் கூடிய யாகங்களால் -பெற்ற பாவங்களால் தான்ய உடல் கொள்வான் என்பர் பூர்வ பஷி
ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -சாந்தி பர்வம் -278-5–சாஸ்திர விதி என்பதால் பாபம் வாராது என்றாலும் ஏதாவது பலனை குறித்து செய்யும் யாகத்தில் பசு வதை பாபம்ஆகுமே என்றால்
தைத்ரிய சம்ஹிதை -2-5-5-சவர்க்க காமோ யஜேத-என்றும் ஆபஸ்தம்ப சூ த்ரம்-2-1-2-2-சர்வ வர்ணானாம் ஸ்வ தர்ம அனுஷ்டானே பரம் அபரிமிதம் ஸூ கம் –
ஆக ஆசை விருப்பத்தின் அடியாகவே யாகம் செய்வதால் பாபம் கிட்டி தான்ய உடலை பெறுகிறான் என்பர் பூர்வ பஷி
மனு ஸ்ம்ருதி -1-2-9-சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -என்றும் சொல்லும்
சித்தாந்தம் -பசு வதை இல்லை -ஸ்வர்க்கம் செல்லவே -என்பர் -ஹிரண்ய சரீர ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமேதி -என்று சொல்லுவரே
தைத்ரிய பிராமணமும் -நா வா வு ஏதன் ம்ரியதே ந ரிஷ்யசி தேவான் இதேஷி பதிபி ஸூ கேபி
எத்ர யந்தி ஸூ க்ருதோ நாபி துஷ்க்ருத தத்ர த்வா தேவ சவிதா ததாது என்று
சவிதா என்னும் சூர்யன் அந்த மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இடம் அழைத்துச் செல்வான் -என்றதே-

—————————————————————————————————————————————-

3-1-26-ரேதஸ் சிக்யோக-அத —

விந்துவை விடுபவனாக கூறுவது போன்று -சாந்தோக்யம் -5-10-6-யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி -போலே
நெல் போன்றவைகளுடன் சேர்த்தி அடைகின்றான் என்றே கொள்ள வேணும்

—————————————————————————————————————————————–

3-1-27- யோ நே சரீரம்

கர்ப்பத்தை அடைந்த பின்னரே உடல் தோன்றுகிறது
ஆகாயம் போன்றவற்றுடன் சேர்த்தி மட்டுமே கொள்கிறான் என்றதாயிற்று-

————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-1-4- முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் —

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை

1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –

பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது

கட உபநிஷத் –
இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷான்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –
இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
சித்தாந்தம் -முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்
விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்
இத்தால் பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

————————————————————-

1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –

சூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே –
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

————————————————————

1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

——————————————————————–

1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-

———————————————————————-

1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–

கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே–
இந்த வரிகளுக்கு முன்னால்
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்
அதற்கு கீழே -ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்
சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு
பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –
புத்தரோத்மா மஹான் பர -என்றும் மேலானவன் என்று உணர முடியலாம்-

—————————————————

1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –

மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு –
யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்துக் கேட்டான் –
மோட்ஷம் பெற்றவர் சென்று அடையும் இடம் –மோட்ஷம் பெற விரும்புவர்களின் தன்மைகள் -வழி ஆகியவற்றை பற்றி –
ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி
ஆக மூன்றிலும் பிரக்ருதியைப் பற்றி இல்லை-

——————————————————

1-4-7-மஹத்வத் ச –

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
புத்தேராத்மா மகான் பர -புத்திக்கு மேலே உள்ள ஆத்மாவைப் பற்றி -சாங்க்ய மத மஹான் பற்றி இல்லை
மேலும் மஹத பரம் அவயகதம் -என்று மஹானை விட மேலானது அவ்யக்தம்-
இங்கு சாங்க்ய மத அவ்யக்தம் பிரகிருதி பற்றி இல்லை-

ஆநுமாநிகாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி

1-4-8-சமசவத் அவிசேஷாத்-

உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-
சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –
பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-

———————————————————————–

1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –

ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹூயா நாத்மா–திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –

—————————————————————————-

1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

பிரகிருதி பிறப்பற்றது என்றும் கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –
தைத்ரிய உபநிஷத்தில் -5-7-
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் -என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 -என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –
சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு –
அசௌவா ஆதித்யோ தேவமது -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்
பிரளய காலத்தில் –
நை வோதே தா நாஸ்த மேதா-என்று சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
இரண்டு நிலைகளுக்கும் முரண்பாடு இல்லை-

சமசாதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –

1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று
5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து
இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்
சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-

———————————————————————–

1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று –
பிராணன் கண் காது அன்னம் அல்லது நாக்கு மனம் என்பவை ஆகும்

—————————————————————————

1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

காண்வ முனிவரின் உபநிஷத் வரியில் அன்னம் என்று கூறவில்லை என்றாலும் அதற்கு முந்திய வரியில்
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயூர் ஹோபாசதேம்ருதம் -ஜ்யோதிகள் அனைத்துக்கும் ஜ்யோதி என்று
புலன்கள் ஐந்துக்கும் ஜ்யோதியான பர  ப்ரஹ்மத்தை சொல்லிற்று-

சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –

1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –

ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

சாந்தோக்யம் -2-7-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -சத் என்பதே காரணப் பொருள்
தைத்ரிய உபநிஷத்தில் -3-19-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று முதலில் அசத் என்பதே காரணப் பொருள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று காரணப் பொருள் அவ்யாக்ருதமாக இருந்தது
சாங்க்ய மதத்தில் அவ்யாக்ருதம் பிரகிருதி
தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும் தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று
பரமாத்வா விடம் இருந்து ஆகாசம் தோன்றிற்று என்றும்
சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் -பலவாக தோன்றுவேன் என்பதால் சத் அசத் அவ்யாக்ருதம்
போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று
இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

——————————————————————————-

1-4-15-சமாகர்ஷாத் –

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்
அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

காரணத்வாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –

1-4-16-ஜகத் வாசித்வாத்

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று

—————————————————————————

1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –

அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –

—————————————————————————–

1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்
விடையாக அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்
சாந்தோக்யம் -சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே
ப்ருஹத் உபநிஷத் -ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-

————————————————————————————

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

1-4-19-வாக்ய அந்வயாத்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்று அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால் பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

————————————————————————————-

1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால் அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்

———————————————————————————–

1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே -சாந்தோக்யம் –
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்
முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

—————————————————————————————

1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா -அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன ஸ்வரூபம் அழிய முயலாதே
ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால் முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோட்சத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————————-

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –

1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —

பிரமமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் -அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்
பூர்வ பஷி -இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும் அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்
சித்தாந்தம் பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம்பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்
சாந்தோக்யம் -திருஷ்டாந்தம் -யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

————————————————————————————-

1-4-24-அபித்யோப தேஸாத் ச-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் -ததைஷத பஹூச்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூச்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

——————————————————————————————–

1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
ம நீ ஷி ணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

—————————————————————————————–

1-4-26-ஆத்மக்ருதே

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் -ஸோ காமயத பஹூச்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது
உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது
இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

————————————————————————————

1-4-27-பரிணாமாத்–

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் -தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
சூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

———————————————————————————-

1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது
கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

பிரக்ருத்யதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-1-3- முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் —

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————————————————————————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –

பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –

1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –

பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்
நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்
ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா  -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்
ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்
முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன  –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –

——————————————-

1-3-2- முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –

முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்
யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்
நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-
பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –

——————————————-

1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –

முன்பு உள்ள சூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் -இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –

———————–

1-3-4-பேத வ்யபதேசாத் –

ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான -ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹி
மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் -அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும்
வேறுபட்டவன்-நியமிப்பவன் -மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –

—————

1-3-5- பிரகரணாத்–

முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்-
முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –

————————

1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை பரம் பொருளுக்கு

பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே -ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –
த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி -உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி

முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று

————————————-

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்

1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –

பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் -யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க
வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி
ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி -உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்
சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்
சம்ப்ரசாதா என்றது ஜீவனை யா என்கிற சங்கைக்கு -ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான் இதன் மூலம் ஸம்ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்

——————

1-3-8-தர்மோபபத்தே ச-

பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்
சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –

பூமாதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –

1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –
யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-/
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு
ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-

—————————————————

1-3-10-சா ச பிரசாச நாத் –

அஷரம் சூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால் உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் -ப்ருஹத் ஆரண்யாகாவில்-

அஷரச்ய பிரசாச நே கார்க்கி சூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று சூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே

———————

1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க -தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால் அஷரம் பரம் பொருளே –

அஷர அதி கரணம் சம்பூர்ணம்

———————————————–

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே

1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று -ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று
புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று என்பர் பூர்வபஷத்தில்
ஆனால் மேலே -யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச -என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேதாந்த -என்று நித்ய சூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-

ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே

1-3-13-தஹர உத்தரேப்ய-

இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –
அதே உபநிஷத்தில் மேலே -ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்யகாம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே
மேலும் அதே உபநிஷத்தில் மேலே -யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-

——————————————————————-

1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –

அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும் ப்ரஹ்ம லோகம் என்பதாலும் தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே
சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

———————————————-

1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –

அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –
சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

——————————————–

1-3-16-பிரசித்தே ச –

ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால் தஹரா பர ப்ரஹ்மமே –
தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-
மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே –

———————————————–

1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –

தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்
சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும் பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-

——————————————–

1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –

பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச்
சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –
ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல் இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-

——————————————

1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –

ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-

———————————————

1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –

தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 சூத்ரம் சொல்லவே சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-

———————————————–

1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –

முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

————————————————-

1-3-22- அபி ஸ்மர்யதே-

ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –

1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்று பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம்
என்பதால் அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை
பரம் பொருளுக்கே உண்டு -எனவே அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

———————————————————–

1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்

————————————————————-

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு

1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –
சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

———————————————————–

1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–

தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

————————————————–

1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-

தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-

———————————————–

1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —

விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை -இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

————————————————-

1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே  –

தேவாதிகரணம் சம்பூர்ணம்

—————————————————-

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு

1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-

மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
சூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் -நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் -தேவர்கள் முன்பே வஸூக்களாய்
உள்ளதால் எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –

—————————————————-

1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

———————————————————

1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி இது சித்தாந்தம்
மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் -தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

————————————————————

1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –

அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்
இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் சூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-

——————————————————————-

1-3-34-ஷத்ரியத்வ கதே -ச

தானம் அன்னதானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை

———————————————————————

1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —

சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே -சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான
காபேயனும்-காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க -இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி சாயாத -என்பதன் மூலம் அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்
இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞானஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –
அதனால் சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று

————————————————————–

1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –

ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம்
செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
சூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை
ந சூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
எனவே சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

—————————————————————-

1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —

சூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்
ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் -எனவே உனக்கு
ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

——————————————————————-

1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —

சூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் சூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

——————————————————————–

1-3-39- ச்ம்ருதே ச-

ஸ்ம்ருதி களும் சூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-

அப ஸூ த்ராதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————–

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்

1-3-40-கம்ப நாத் –

அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-
தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –
இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————————————-

1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –
இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-

ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்

————————————————–

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —

ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே
முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –
சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –
சித்தாந்தம் -ஆகாயத்தைக் கூறும் பொழுது -நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –

———————————————————

1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –

தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால் ஜீவன் வேறு பரம்பொருள் வேறு
பூர்வ பஷி -தத் த்வமசி–அஹம் பிரம்மாஸ்மி –நேஹ நா நாஸ்தி -என்பர்
சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்
ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்
எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-

————————————————————-

1-3-44-பத்யாதி சப்தேப்ய —

பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல
ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-

அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-1-2- முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் —

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————————
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் —33 ஸூத்ரங்கள் –
—————————————————————————

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே-

1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதிசாந்த உபாசீத -அனைத்தும் ப்ரஹ்மமே
தோஷங்களும் கூட -கர்மம் தொடர்பு -தோன்றி மறைந்து -இவையுமா ப்ரஹ்மம்
அந்த்ர்யாமிதயா-என்பதால் –
எந்த ஒன்றிடம் இருந்து அனைத்தும் தோன்றுகிறதோ -எதனைச் சார்ந்து வாழ்கின்றதோ –
எதனிடம் சென்று மறைகின்றதோ அதுவே ப்ரஹ்மம்-

சாந்தோக்யம் -3-14-1- சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி
தைத்ரிய -3-1- யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே யேன ஜாதாநி ஜீவநதி யத்ப்ரத்யபி சம்விசந்தி தத்விஜ்ஞாச ஸ்வதத் ப்ரஹ்ம –
தைத்ரிய உபநிஷத் –6-9-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜா நாத் ஆனந்தாத் ஏவ கல்வி மானி பூதானி ஜாயந்தே -என்று
ஆனந்தமாகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
ச்வேதாச்வர உபநிஷத் -6-9- ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சித் ஜா நிதா ந சாதிப –அவனே காரணம் –
அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக உள்ளவனும் அவனே -என்கிறது

———————

1-2-2-விவஷித குணோபபத்தே —
குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்

சாந்தோக்யம் -3-14-2-
மநோமய பிராண சரீரோ பாருப சத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்ம சர்வ காம சர்வ கந்த
சர்வ ரசசர்வ மிதயப்யாத்த அவாக்ய அநாதர-
அனைத்து குணங்களும் பரமாத்மாவிடம் மட்டுமே பொருந்தும்
மநோ மாயா -தூய்மையான மனத்தால் மட்டுமே அறியப்படுபவன்
பிராண சரீர -உயிர்களுடைய பிராணனை தாங்கி உள்ளவன்
யாரிடம் பிராணன் கட்டுப்பட்டு உள்ளதோ யாரிடம் அடங்கி உள்ளதோ யாருக்கு அடிமையாக உள்ளதோ
யாருக்கு சரீரமாக உள்ளதோ அவனே பிராண சரீரன் எனப்படுகிறான் –
சரீரம் எனபது -ஒன்றைத் தன்னுள் கொண்டும் -ஒன்றுக்கு அடங்கி -ஒன்றுக்கு அடிமையாக உள்ளது -என்பரே –

பாருப -என்றால் பிரகாசத்துடன் கூடியவன் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
சத்ய சங்கல்ப -தடையற்ற உறுதி -சங்கல்பத்தாலேயே செயல் ஆற்றும் தன்மை
ஆகாசாத்மா -தெளிவு ஸூஷ்மம் சர்வ வ்யாபி -அனைத்துக்கும் ஆத்மா
சர்வ கர்ம -இந்த உலகங்கள் அனைத்தும் அவன் செயல்கள்
சர்வ காம -அனுபவிக்கும் பொருள் அனுவ அனைத்தும் தூய்மை
சர்வ கந்த சர்வ ரச-இத்தால்
கட 3-15-அ சப்தம் அ ஸ்பர்சம் -இவ்வுலகில் காணப்படும் மணம் சுவை போன்றவை அல்லவே அவனது
தோஷம் அற்ற -எல்லை அற்ற -மங்களமானவை-அவனாலே மட்டும் அனுபவிக்கக் கூடிய பல என்றவாறு
சர்வ மிதயப்யாத்த -இந்தத் தன்மைகள் வந்தேறி அல்ல -ஸ்வா பாவிகம்
அவாக்ய அநாதர-அவாப்த ஸமஸ்த காமன் அன்றோ -சாரேவேஸ்வரேஸ்வரன் அன்றோ

—————–

1-2-3-அநுபபத்தே து ந சாரீர –

முன்பு கூறப்பட்ட குணங்கள் யாவும் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது என்பதால் -இவன் ஜீவன் அல்லன் -என்றவாறு

—————

1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –

பரமாத்மாவை அடையப்படுபவனாகவும் ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்

சாந்தோக்யம் -3-14-4-ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –

—————————

1-2-5-சப்த விசேஷாத் –

ஒரு விதமான சப்த காரணமாக இவன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறானாவான்

சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம் ஆத்ம அந்தர்ஹ்ருதயே -என்று
இதயத்தில் உள்ளவன் என்னுடைய ஆத்மா என்றும்

இதே பிரகரணத்தில் உள்ள மற்ற ஒரு வாக்கியத்தில்
மே என்று ஜீவாத்மாவை ஆறாம் வேற்றுமையாலும்
ஆத்மா என்று பரமாத்மாவை முதல் வேற்றுமையாலும் –
சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ
ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –
நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க
இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –

———————

1-2-6-ச்ம்ருதேச்ச
ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –

சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ச்ம்ருதிர் ஞான அபோஹனம் -ஸ்ரீ கீதை -15-15-
யோ மாமேவ சம்மூடோ -15-19-
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்திர ரூடானி மாயயா–18-61-
தமேவ சரணம் கச்ச -18-62-

————————–

1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ

அர்ப்ப கௌகசஸ்வாத -மிகவும் சிறிய இடத்தில் இருத்தல்
சிறியதான ஹ்ருதயத்தை இருப்பிடமாகக் கொண்டதாலும் -சிறியவன் என்று ஓதப்படுவதாலும்
பரமாத்மா அல்ல என்று கூறுவது சரி இல்லை
உபாசன ஸுகர்யத்துக்காக தன்னை இப்படி அமைத்துக் கொள்கிறான் -ஆகாயம் போன்ற விபுவே அவன்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம ஆதமானந்தர் ஹ்ருதயே
அணீயான் வ்ரீஹேர் வா யாவத்
சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் பரிபச்யந்தி தீரா-
இவற்றால் அவனே ஜீவாத்மா -என்பர்

சித்தாந்தம் –
ஜீவாத்மா அல்ல -உபாசனையின் பொருட்டே பரமாத்மாவே தான் சொல்லப் படுகிறான் –
அவன் ஆகாசம் போன்று மிகப்பெரியவன் என்பதை
சாந்தோக்யம் 3-14-3-
ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாத் ஜ்யாயான் திவோ ஜ்யாயாத் அப்யோ லோகேப்ய–என்று சொல்லுமே

சந்தோக்ய உபநிஷத் -3-14-1-
சர்வே கல்விதம் ப்ரஹ்மம் தஜ்ஜலாநிதி சாந்த உபாசித-என்று
இவை அனைத்தும் ப்ரஹ்மமே – -காரணம் அனைத்தும் இதிலே உத்பத்தியாகி இதிலே லயிக்கிறது
ஆத்மாவாகவும் அந்தர்ப்ரேவேசித்து தரிக்க வைப்பதும் ப்ரஹ்மமமே -உபாசன வஸ்துவும் அவனே
சாந்தோக்யம் -3-14-1-
அத கலு க்ரதுமயோயம் புருஷோ யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்று
புருஷன் நம்பிக்கை வடிவன் ஆவான் -அதே நம்பிக்கையுடன் இங்கு இருந்து செல்கிறான்
உபாசனை எவ்விதம் செய்யப்படுமோ அவ்விதமாகவே பலன் கிட்டும்
ஸ க்ரதும் குர்வீத -என்று சிறந்த நம்பிக்கையுடன் உபாசிப்பானாக –
சந்தோக்ய உபநிஷத்-3-14-4-
மநோ மய பிராண சரீரோ பாருப சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா
சர்வகந்த சர்வரச சர்வ மிதமப்யாத்த அவாக்ய அநாதர-என்று
தூய்மையான மனத்தால் அறியத் தக்கவன் -பிராணனை சரீரமாகக் கொண்டவன் -பிரகாசம் ஆனவன் –
தடையில்லா சங்கல்பம் கொண்டவன் -ஆகாசம் போன்ற ஸூ ஷ்மரூபம் கொண்டவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -தான் விரும்பும் அனைத்தையும் கொண்டவன் –
அனைத்து கல்யாண குணங்களையும் ஏற்றுக் கொண்டு யாரையும் சார்ந்து இராமல் யாரிடமும் வாய் பேசாமல் -என்கிறது
சாந்தோக்யம் -3-14-3-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே அணியான் வ்ரீஹேர்வா யவாத்வா சர்ஷபாத்வா ச்யாமாகாத்வா ச்யாமாக தண்டுலாத்வா -என்று
இதயத்துள் ஆத்மாவாக உள்ள இவன் நெல்லைக் காட்டிலும்
கோதுமையைக் காட்டிலும் -கடுகைக் காட்டிலும் சயாமாகத்தைக் காட்டிலும் சிறியவன் என்றும்
சாந்தோக்யம் -3-14-3/4-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே ஜ்யாயாத் ப்ருதிவ்யா ஜ்யாயாத் அந்தரிஷாத் ஜ்யாயாத் தயவோ ஜ்யாயாத்
அப்யோ லோகேப்ய சர்வ கர்ம சர்வகாம சர்வகந்த சர்வமிதப்யாத்தோ அவாக்ய அநாதர -என்று
இதயத்தில் உள்ள அவன் ஏன் ஆத்மா -பூமி -அந்தரிஷம் தேவ லோகம் அனைத்து லோகங்கள் காட்டிலும் முகப் பெரியவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பெற்றவன்
அனைத்து நறுமணம் சுவைகள் கொண்டவன்
யாரையும் ஆதரீக்க வேண்டிய அவசியம் அற்றவன் –
உபாசிக்கப் படும் வஸ்து அவனே -அவனே அடைய வேண்டிய இலக்கு –

சாந்தோக்யம் –3-14-4-
ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஏதத் ப்ரஹ்ம —
இந்த ஆத்மா எனது இதயத்தில் உள்ளது -இது ப்ரஹ்மம்-
கருணை அடியாக நமது இதயத்தில் வந்து அமர்கின்றான்
சாந்தோக்யம் -3-14-4-
ஏதமித ப்ரேத்யாபி சம்பவி தாஸ்மி -என்று
இங்கு இருந்து புறப்படும் நான் அவனைச் சென்று அடைவேன் -உபாசனை மூலம் கிட்டப் பெறுவதைக் கூறும்
சாந்தோக்யம் -3-14-5-
யஸ்ய ஸ்யா தத்தா ந விசிசித் சாஸ்தி –என்று இத்தகைய உறுதி உள்ளவன் குறித்து எந்த சங்கையும் இல்லை

———————

1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

சரீரத்துக்குள் இருப்பதால் சுக துக்கங்கள் ஏற்படுமோ என்றால் அல்ல -வேறுபாடு உள்ளதால் ஆகும் –

பூர்வ பக்ஷம்
சரீர சம்பந்தம் அடியாக ஸூக துக்கங்கள் ப்ரஹ்மம் அனுபவிக்க வேண்டி வருமே

சித்தாந்தம்
அப்படி அல்ல –
கர்மங்கள் அடியாகவே ஜீவாத்மா ஸூக துக்கங்கள் அனுபவிக்கிறான்
ஸ்வாபாவிகமாக அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள் கொண்ட ப்ரஹ்மம் வ்யாப்திகத தோஷம் அற்றவன்

முண்டக உபநிஷத் -3-1-1-
தயோரன்ய பிப்பலம் ஸ்வா து அத்தி அநஸ்நன் அன்யோ அபி சாகசீதி -என்று
மரத்தில் இரண்டு பறவைகள் ஓன்று பழங்களை உண்கிறது மற்று ஓன்று அதனை நோக்கியபடி உள்ளது —

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-

1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்

அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -சேதன அசேதனங்களை உணவாகக் கூறப்படுவதால் ஆகும் –

விஷயம்
கடவல்லி –1-2-24-
யஸ்ய ப்ரஹ்ம ஸ ஷத்ரம் ஸ உபேபவத ஓதன –ம்ருத்யுர் யஸ்ய உபசேசநம் க இத்தா வேத யத்ர ஸ —
யாருக்கு அந்தணர் மற்றும் ஷத்ரியர் இருவரும் உணவாகிறார்களோ
யமன் யாருக்கு ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் -என்கிறது

பூர்வ பஷம் –
உண்பவனாக சொல்பவன் ஜீவாத்மாவே தான் -கர்ம பலன்களை அனுபவிப்பதால்

சித்தாந்தம்
சராசர க்ரஹணாத்-அனைத்தையும் உண்பவன் பரமாத்மாவே தான்
உண்பது என்றது கர்மம் காரணமாக அல்ல
படைத்து காத்து அழிக்கும் தன்மையைச் சொல்லும்
கடவல்லி -3-9-
ஸோ அத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால்
அந்த விஷ்ணுவின் மிக உயர்ந்த இடத்தை அடைகிறான் என்பதால்
யமன் அனைவரையும் சம்ஹரிக்கிறான் -அந்தணர் ஷத்ரியர் என்ற்டது அனைத்துக்கும் உப லஷணம்
ஆகவே இங்கு உண்பவனாக கூறப்படுவது பரமாத்வே தான் -எனபது சித்தாந்தம் –

——————————————————————

1-2-10-ப்ரகரணாத் ஸ –

இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –

கடவல்லி -1-2-22-
மஹாந்தம் விபு மாதமா நம் மத்வா தீரோ ந சோசதி –
உய்ரந்தவனும் -எங்கும் வியாபித்து உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை உபாசிக்கும் அறிவாளி
ஒருத்தன் எதற்கும் வருத்தம் அடைய மாட்டான் –
கடவல்லி -1-2-23-
நாயமாத்மா ப்ரவசநேந லப்ய–ந மேதயா ந பஹிநா ச்ரு நேந யமைவைஷ வ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று
பரமாத்மா சரவணம் மனனம் த்யானம் மூலம் மட்டுமே அடையச்ப் படுபவன் அல்லன் –
யார் ஒருவனைப் பரமாத்மா தேர்ந்து எடுக்கிறானோ அவனால் மட்டுமே அடையப் படுபவனாக உள்ளான் –
அவனுக்கு மட்டும் தனது ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான்
கடவல்லி -1-2-24-
க இத்தா வேத யத்ர ஸ –
பரம்பொருள் இப்படிப் பட்டது என்பதை யார் அறிவார்கள் –
முன் கூறப்பட்ட பரமாத்மாவின் கருணையாலே மட்டுமே அவனை அடைய முடியும் என்றதாயிற்று –

பூர்வ பக்ஷம்
இங்கு உணவாக கொள்பவன் -என்று கர்ம பலனை அனுபவிப்பவனாகச் சொல்வது பரமாத்மாவாக இருக்க முடியாது
ஜீவாத்மாவாகவே தானே இருக்க முடியும்-
கடவல்லி -1-3-1-
ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பலன்களை அனுபவிப்பவர் புண்ய லோகமான இந்த உலகில் இதயம் என்ற குகையில் நுழைந்து
இருப்பவர் என இருவர் உண்டு
இருளும் ஒளியும் போன்று -என்று இப்படி பஞ்சாக்னி செய்பவர்களும் மூன்று அக்னி கார்யம் செய்பவர்களுமான
ப்ரஹ்ம வித்துக்கள் கூறுவார்கள்-
இரண்டாவது என்றது புத்தி பிராணனை என்பவர் -பரமாத்மாவுக்குப் பொருந்தாது என்பர் –
இங்கு ஜீவாத்மாவும் புத்தி பிராணன் சொல்வதாகக் கொள்ள வேண்டும்-

——————————————————————————–

1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —

இதயம் என்கிற குகைக்குள் நிறைந்து இருப்பவர்கள் பரமாத்மாவும் ஜீவாத்மாவுமே —
புத்தியும் ஜீவாத்மாவும் அல்லர்-இவர்களுக்கு அவ்விதம் நுழைந்தது காணப்படுவதால்

சித்தாந்தம்
ஹ்ருதய குகையில் புகுந்து பலனைப் பருகுபவர்கள் பிராணனும் ஜீவாத்மாவுமோ புத்தியும் ஜீவாத்மாவுமோ அல்லர்
மாறாக ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஆவர் -ஏன் -என்றால்
தர்ச நாத் -இப்படியே காணப்படுவதால் ஆகும்

பரமாத்மாவைக் குறித்து
கடகவல்லி –2-12-
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி-என்று
காண்பதற்கு அரியவனும் -நம்முடைய கர்மம் காரணமாக மறைவாக உள்ளவனும் எங்கும் வியாபித்து உள்ளவனும்
இதயம் என்னும் குகையில் உள்ளவனும் -அந்தர்யாமியாக உள்ளவனும் -புராணமானவனும் தேவாதி தேவனும்
ஆகிய பரமாத்மாவை அறியும் ஒருவன் இன்ப துன்பங்களை விடுகிறான்

ஜீவாத்மாவைக் குறித்து
கடக வல்லி -4-7-
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-என்று
கர்ம பலத்தை உண்பதால் அதிதி என்று கூறப்படும் எந்த ஒரு ஜீவாத்மா -அதிதி-
பிராணனுடன் வாழ்கின்றானோ -ப்ராணேந சம்பவதி-
தாமரை போன்ற இதயம் என்கிற குகையில் நுழைந்து -பிரவிச்ய திஷ்டந்தீ-உள்ளானோ –
தேவர்கள் எனப்படும் இந்திரியங்கள் மூலம் இன்பங்களைப் பெறுகிறானோ -தேவதா மயீ
பஞ்ச பூதங்களுடன் பிறக்கிறானோ -யா பூதேபிர் வ்யஜாயத–தேவாதி ரூபமாக பிறக்கிறான் –
என்று ஜீவாத்மாவைப் பற்றி கூறியது
ஆகவே
ருதம் பிபந்தௌ-இருவரும் புஜிக்கிறார்கள்-ஜீவாத்மா புஜிக்க பரமாத்மா புஜிக்கச் செய்கிறான் என்கிறது-

————————————————————————————————

1-2-12-விசேஷணாத் ச –

ஜீவன் பரம்பொருள் தன்மைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதால்
சிறப்பித்துக் கூறப்படுவதால் -பரமாத்மாவே

கடவல்லி -1-7-
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி -என்று
ஜீவாத்மா உபாசிப்பவன் என்று அதன் தன்மையை அறிந்த பின்னர் அவன் சாந்தியைப் பெறுகிறான்
ப்ரஹ்மஜஜ்ஜம்-ப்ரஹ்மத்தில் இருந்து வெளிப்பட்டவன் -ஞானம் நிறைந்தவன் -என்று ஜீவாத்மாவைக் குறிக்கும்
தேவ மீட்யம் விதித்வா-உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உள்ளவன்
கடவல்லி -3-2-
ய சேதுரீ ஜாநாநா மக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் அபயம் ததீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி –என்று அடைபடும் ப்ரஹ்மம்
கடவல்லி -3-3-
ஆத்மாநம் ரதி நம் வித்தி சரீரம் ரதமேவ ச –என்று தொடங்கும் வரி மூலம் உபாசிப்பவனாக ஜீவாத்மா -என்றும்
கடவல்லி -3-9-
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
கடவல்லி -3-1-
சாயாதபவ் -நிழலாகவும் ஸூர்ய ஒளியாகவும் -என்று அஞ்ஞாந மய ஸர்வஞ்ஞத்வ-
ஜீவாத்மாவைப் பற்றியும் பரமாத்மாவையும் பற்றி உண்டே –

பூர்வ பக்ஷம்
கடவல்லி-1-20-
யேயம் ப்ரேயதே விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத் ஏக நாயமஸ்தீந சைகே -என்று ஒரு மனிதன் மரணம் அடைந்த பின்னர்
சிலர் இதுவே அவன் என்றும் இது அவன் அல்லன் என்றும் சொல்வது ஜீவாத்மாவைப் பற்றியே

சித்தாந்தம்
அப்படி அல்ல -இங்கு சரீரத்தில் இருந்து கிளம்பிய ஜீவாத்மா உள்ளதா இல்லையா என்ற சங்கை பற்றிய கேள்வி இல்லை –
இப்படிக் கேட்க்கப் பட்டது என்று கொண்டால் கீழ் கேட்கப்பட்ட இரண்டு வரங்கள் பொருந்தாமல் இயலாமலுமாகும்
வாஜஸ்வரஸர் புத்ரன் நசிகேதஸ் -விஸ்வஜித் யாகம் நடத்தும் பொழுது கிழட்டுப்பசுக்கள் தானம் –
யமன் -மூன்று வரம் -வ்ருத்தாந்தம் கதை
இங்கு மரணத்தின் பின் மோக்ஷமான பரம புருஷார்த்தம் அடைவதையும் அடையாளத்தையும் பற்றிய கேள்வியே இது
பிருஹத் -2-4-12-ந ப்ரேத்ய சம்ஜ்ஞாஸ்தி -என்று உயிர் பிரிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
குறைவற்ற ஞானம் இல்லை என்கிறதே

சம்சார பந்தத்தில் விடுபட்ட பின்னர் உள்ளானா இல்லையா என்று ஸ்வரூபத்தைப் பற்றிய கேள்வி இது
மோக்ஷம் பற்றி பல தப்பான கருத்துக்கள் உண்டே
புத்தன் -அத்வைதி -நையாயிகன் -பாஸ்கரன் -நம் சித்தாந்தம் –
யமன் அவனை பரிஷித்த பின்பே உபதேசம்
கட 2-12-தம் துர்த்தர்சே கூட மநு ப்ரவிஷ்டம் -தொடங்கி -3-9-சோத்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -முடிய
உபாசனம் பற்றியும் நசிகேதஸ் அறிய வேண்டியதைக் குறித்தும் உபதேசம்
ஆக இங்கு அனைத்தும் பொருந்தும் -சராசரங்களை உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே –

உபாசிப்பவன் உபாசிப்பிக்கப்படுபவன் -அடைபவன் -அடையப்படுபவன் -என்று கூறப்படுவதைக் காணலாமே
கட உபநிஷத் -ஜீவனைக் குறித்து –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்-ஞானம் உள்ளவன் பிறப்பதும் இறப்பதும் இல்லை என்றும்
மஹாந்தம் விபு மாத்மானம் மத்வாதீரோ ந சோசதீ-என்று பரம்பொருளை
மிகப் பெரியவன் -எங்கும் உள்ளவன் -வருத்தப் படாதவன் -என்றும்
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் என்றும் கூறுவதால்
முன்பு சொல்லியவை ப்ரஹ்மத்தையும் ஜீவனையும் பற்றியவையே
பிராணன் அல்லது புத்தி பற்றியவை அல்ல என்கிறது-

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி —

த்ரயந்த ஒஷ்ணா தஸ்து நிகில ஜகத் ஏக காரணஸ்ய -அசேஷ ஹேய ப்ரத்ய நீக -அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபஸ்ய-
ஸ்வ பாவிக அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கரஸ்ய -சகல இதர விலக்ஷனஸ்ய –
சர்வாத்ம பூதஸ்ய–பரஸ்ய ப்ரஹ்மண –ஜீவஸ்ய –பரமாத்மா அனுபவம் ஏவ மோஷமா சஷதே

யுக்தம் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா ஜிஜ்ஞாஸ்யம் ஜெகஜ் ஜென்மாதி காரணம்
ப்ரஹ்ம அசித் வஸ்துன –பிரதான ரத –சேதநாச்ச -பக்த முக்த உபாய வஸ்தாத் விலக்ஷணம் –
நிரஸ்த ஸமஸ்த ஹேய காந்தம் சர்வஞ்ஞம் சர்வ சக்தி ஸத்யஸங்கல்பம்
ஸமஸ்த கல்யாண குணாத்மகம் சர்வாத்ம அந்தராத்மா பூதம் நிரங்குச ஐஸ்வர்யம் இதி

அத்தா அதிகரணம் சம்பூர்ணம்

——————————————————

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –

1-2-13-அந்தர உபபத்தே –

கண்ணில் இருப்பவனாக கூறப்படுபவன் பரம்பொருளே-அங்கு கூறுவது அவனுக்கு மட்டுமே பொருந்தும்

விஷயம்
சாந்தோக்யம் -4-15-1-
ய ஏஷோ ஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹேவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம-
அவனே ஆத்மா -அம்ருதம் -அபயம் -ப்ரஹ்மம்

சங்கை
அபிமான தேவதையா -ஜீவாத்மாவா -பரமாத்மாவா

பூர்வபக்ஷம்
காணப்படுபவன் என்பதால் அங்கு பிரதிபலிக்கும் ஒருவனே -ஜீவாத்மாவே –
உயிர் இருக்கிறதா இல்லையா என்று திறந்த கண்கள் மூலம் அறிவதால் அபிமான தேவதையே
பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று ஸூரயனில் காணப்படும் புருஷனே
இந்த மூவரில் ஒருவனே கண்ணில் உள்ளான்

சித்தாந்தம்
அங்கு கூறப்படும் விஷயங்கள் பொருந்த வேண்டும் என்பதால் -பரமாத்மாவே
சாந்தோக்யம்–4-15-3-
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏததம்ருதமபயமேதத் ப்ரஹ்மேதி
ஏதம் சம்யத்வாம இத்யா சஷதே ஏதம் ஹி சர்வாணி வாமான்யபி சம்யந்தி
ஏஷ உ ஏவ வாமநீ ஏஷ ஹி சர்வாணி வாமானி நயதி
ஏஷ உ ஏவ பாம நீ ஏஷ ஹி சர்வேஷூ லோகேஷூ பாதி -சாந்தோக்யம் -என்று
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் -அமிர்தமாகவும் -அச்சம் இல்லாதவனாகவும் –
கல்யாண குணங்கள் நிரம்ப உடையவனாயும்–எல்லா நன்மை அளிப்பவனாயும் -எங்கும் உள்ளவனாயும் – போன்ற
பல தன்மைகள் உள்ளவனாய் சொல்லியதால் ப்ரஹ்மத்தையே சொல்லிற்று-

———————————————————————

1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்

ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் -என்று கண்ணில் உள்ளவன் -நியமிப்பவன் -என்று இருப்பதால்
சாந்தோக்யம் 4-15-1- ய ஏஷ அஷிணி புருஷ -கண்ணில் உள்ள புருஷன் பரமாத்மாவே
மேலும் சாந்தோக்யம் 4-15-1-த்ருஸ்யதே -காணப்படுகிறான் -என்பதால்
யோகிகளால் கண்ணில் இவனைக் காண இயலும் என்பதால் பொருத்தமே யாகும்

————————————————-

1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –

சாந்தோக்யம் -4-10-5–கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் –
சுகத்துடன் பெரியதாக உள்ளவன் -ப்ரஹ்மமே
ய ஏஷோ அஷிணி –சுகமாக உள்ளவன் என்பதால் ப்ரஹ்மமே

மேலும் யாரிடம் அனைத்து விரும்பத்தக்க தன்மைகளும் உள்ளதோ அந்த ப்ரஹ்மம் என்றும் இங்கு உணர்த்தப்படுகிறது –
ஏவ -என்று இங்கு எடுக்கப்படும் வாதங்கள் மற்றவற்றுடன் தொடர்வு உடையவை அல்ல -இங்கு தனி வாதம்
கீழே -12–13-ஸூத்ர வாதங்கள் -18-ஸூத்ரத்தத்தில் நிகமனம்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம்-4-10-5- -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் —தொடர்ந்து
சாந்தோக்யம்-4-15-1–ய ஏஷோ அஷிணி இரண்டையும் இணைக்க இயலாது
இரண்டுக்கும் நடுவில்-4-11-/-4 -13-முடிய உள்ளவற்றில் -மூன்று அக்னிகள் குறித்த வித்யை உபதேசம் -உபகோஸலனுக்கு –
அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-கார்ஹபத்யம் என்ற அக்னி தேவதை உபதேசம்
இதனால் பெற்ற ஞானம் பலமாக நீண்ட ஆயூஸூ -பரம்பரை இத்யாதிகள் ப்ரஹ்ம வித்யையின் பலன்களுக்கு
விருத்தியாகும் -என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
உபக்ரமம் உபஸம்ஹாரம் இரண்டிலும் ப்ரஹ்ம பதம் தெளிவாக உண்டே
சாந்தோக்யம் -4-10-5-ப்ரானோ ப்ரஹ்ம -என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-1-ஏதத் அம்ருதம் அபயம் ப்ரஹ்ம –
மேலும் சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று பரம கதிக்கு ஆச்சார்யர் உபதேசிப்பார் –
என்பதால் ப்ரஹ்ம விதியையே உபதேசம்
மேலும் -அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள
ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
மேலும் சாந்தோக்யம் 4-10-3–வ்யாதிபி பிரதி பூர்ணோஸ்மி -என்று உலகவிஷய பீதனாக இருக்கும் படி சொல்லி
சாந்தோக்யம் -4-14-1-ஏஷா சோம்ய தே அஸ்மாத் வித்யா ஆத்மவித்யா ச -என்பதால்
இந்த அக்னி வித்யையானது ப்ரஹ்ம வித்யையின் அங்கமே
இவ்வாறு அறிந்த பின்பு மற்ற பலன்கள் குறித்த வாக்கியங்கள் அர்த்தவாதம் -வெறும் புகழ்ச்சி வாக்கியங்கள்
மட்டுமே என்று கொள்ள வேண்டும் –

மேலும் மோக்ஷத்துக்கு விரோதமாக எந்த ஒரு வாக்கியமும் காணப்பட வில்லை
சாந்தோக்யம் -4-11-2-
அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம்
தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று
அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள்
இது தவிர ப்ரஹ்ம வித்யையின் பலமாக முண்டக -3-2-9-/ மாண்டூக்ய -3-3-
நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி –என்று அவனுடைய குலத்தில் ப்ரஹ்ம வித்யை அறியாதவர்கள் பிறப்பது இல்லை
உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச —
வயம் என்றால் இங்கு -அக்னி என்று பொருள்
தம் -மோக்ஷ அதிகாரி
உப புஞ்ஜாமோ-ப்ரஹ்ம பிராப்தி வரை அனைத்து பிராப்தி பிரதிபந்தகங்களிலும் இருந்து காப்பாற்றுவோம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா –
ஆச்சார்யர் உனக்கு மார்க்கத்தைக் குறித்து உபதேசிப்பார்
என்பதால் போகும் பாதையை மட்டும் உபதேசம் –
மாறாக ப்ரஹ்ம உபாசனத்துக்கு இருப்பிடமோ அதன் குணங்களோ இந்தப்பகுதியில் சொல்வதாகக் கொள்ள முடியாது

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று
உபாஸனை பற்றி இல்லாமல் அர்ச்சிராதி பற்றி சொல்வது
அவன் வருந்தி இருக்க -அவனது கைங்கர்யத்தால் மகிழ்ந்த அக்னிகள் அவனைத் தேற்ற ப்ரஹ்ம ரூபம் குறித்து
ப்ரஹ்ம வித்யையின் அங்கமாக அக்னி வித்யை உபதேசித்தன-
அதன் பின்னர் –சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு

இதனால் தான் ஆச்சார்யனும் -சாந்தோக்யம் -4-14-3-
அஹம் து தே தத் வஹ்யாமி –என்றும்
யதா யுஷ்கரபலாச ஆபோ ந ஸ்லிஷ்யந்த ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே–என்றும்
கல்யாண குணங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் கண்ணின் உள்ளே இருப்பதாக உபதேசிக்க -ஆகவே
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்ற வரியில் கூறப்பட்ட ப்ரஹ்மமே
கண்ணில் உள்ள பரமாத்மா என்றதாயிற்று

இதுக்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்று உபதேசிப்பதன் பொருட்டு –
ஒன்றை மற்ற ஒன்றின் மேலே ஏறிட்டு -7-1-5-நாம ப்ரஹ்ம என்றும் -7-3-2-மநோ ப்ரஹ்ம என்றும்
போன்றதே என்பர்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————————————————–

1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
இத்தகைய காரணங்களால்–க என்ற சப்தம் மூலம் கூறப்படும் ஆகாசமும் – ப்ரஹ்மம் என்றதாயிற்று

உபகோசலனுக்கு -ப்ரஹ்ம வித்யையை அக்னி தேவன் -பிராணனே ப்ரஹ்மம் சுகமே ப்ரஹ்மம் ஆகாசமே ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் –4-10-5–
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம் -என்று
ஆகவே கம் -ஆகாசத்தைக் குறிக்காது -ஸூகத்தையே குறிக்கும் –
ஆகாயம் போன்ற அளவற்ற சுகத்துடன் இருப்பவனே ப்ரஹ்மம் -என்பதால்
ஜீவனுக்கு பொருந்தாது -பரம் பொருளுக்கே பொருந்தும் —

இங்கே கூறப்படுவது இதுவே ஆகும் –
அக்னிகள் சாந்தோக்யத்தில் 4-10-5-
ப்ரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -பிராணனே ப்ரஹ்மம் ஸூகமே ப்ரஹ்மம் -ஆகாசமே ப்ரஹ்மம் -என்று கூற
அப்போது உபகோஸலன் -சாந்தோக்யம் 4-10-5-
ஜீவனாம் யஹம் யத் ப்ரானோ ப்ரஹ்ம கம் ச து கம் ச ந ஜீவா நாமி –என்று
நான் முக்கிய பிராணன் ப்ரஹ்மம் என்று அறிவேன் –
ஆனால் அத்தகைய ப்ரஹ்மம் ஸூகம் என்றும் ஆகாசம் என்றும் நான் அறிய வில்லை என்றான்
ஸூகம் ஆகாசம் இவை ப்ரஹ்மத்தின் சரீரமே -ப்ரஹ்மத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவையே –
தனித்தனியே இவை உள்ளதால் ப்ரஹ்மத்தின் அபரிமித ஆனந்தத்தை சொல்லுமோ
இத்தை அறிந்த அக்னிகள் -சாந்தோக்யம் -4-10-5-
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம்-என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் நிரதிசய ஆனந்த மயம் என்று சொல்லி நிறைவில் —
பிராணம் ச ஹாஸ்மை ததாகாசம் சோசு-என்றும் சொல்லி இந்த ப்ரஹ்மமே கண்ணுக்குள் உள்ளதாக சாந்தோக்யம் கூறும்

ஆகவே கண்ணுக்குள் உள்ளவன் பரமாத்மாவே தான் -என்றதாயிற்று

—————————————————————

1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
உபகோசலனுக்கு அக்னி தெளிவாக கூறியதால் கண்களில் உள்ளவன் பரம்பொருளே
பரமாத்மாவைக் குறித்து யாதாத்ம்ய ஞானம் உள்ளவன் அர்ச்சிராதி கதி சிந்தனம் எப்போதும்
பண்ணியபடியே இருக்க வேண்டும் என்பதால் கண்ணில் உள்ளவன் பரம புருஷனே ஆவான் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-15-5-
தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–
சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந
பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–என்று நிகமிக்கப்பட்டது–
இந்தக் காரணத்தாலும் கண்களில் உள்ளவான் பரமாத்மாவே ஆவான் –
பரம்பொருளை அறிந்தவர்கள் அர்ச்சிராதி கதி மூலம் அவனை அடைகிறார்கள்

————————————————————

1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச
ஜீவன் எப்போதும் கண்களில் நிலை பெற்று இல்லையே –
மரணம் இன்றி இருப்பவன் என்பதும் ஜீவனுக்கு பொருந்தாது –

சித்தாந்தம்
கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –
அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே –
இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –

ப்ருஹத் ஆரண்யகா -7-5-10-
ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான்
அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை
மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது –
ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்

அந்த்ராதிகரணம் சம்பூர்ணம்

————————————————————

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –

1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்

அதிதைவம் அதிலோகம் அந்தர்யாமியாக உள்ளவன் பரம் பொருளே-அவனுக்கே உரிய தர்மங்கள் கூறப்படுவதால்

விஷயம் –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்-என்பதன் மூலம்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் — என்பதில் பரமாத்மாவே கண்ணில் உள்ளதாக ஓதப்படுகிறது என்று நிச்சயிக்கப்பட்டு –
அது மெய்யானதே ஆகும் என்று கூற உள்ளார் –
வாஜசநேயர்களில் இரண்டு பிரிவுகளான காண்வம் மற்றும் மாத்யந்தினம் ஆகிய இரண்டிலும்
பிருஹத் 3-7-3-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர யம் ப்ருத்வீ நீ வேத
யஸ்ய ப்ருத்வி சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயதி ஏஷ தா ஆத்மா அந்தர்யாமி யம்ருத -என்று
யார் ஒருவன் இந்த பூமியிலே நிற்கிறானோ -பூமியின் உள்ளே உள்ளானோ -அப்படி அவன் உள்ளதை பூமி அறியாமல் உள்ளதோ –
யாருடைய உடலாக இந்த பூமி உள்ளதோ -பூமியில் உள்ளே இருந்து இயக்குபவன் யாரோ
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அந்தர்யாமி யாவான் என்று படிக்கப்பட்டது –
இதன் பின்னர் – நீர் நெருப்பு வானம் -அந்தரிக்ஷம் -காற்று -த்யு லோகம் – சூர்யன்- திசைகள் சந்தரன் ஆகாசம் இருள் ஒளி–
போன்றவற்றின் அபிமான தேவதைகளின் உள்ளே வசிப்பவனாகவும் -அவனே அனைத்து உயிர்களின் உள்ளும் வசிப்பவனாகவும்
பிராணன் வாக்கு கண்கள் காதுகள் மனம் தோல் விஞ்ஞானம் புத்தி ரேதஸ் போன்ற அனைத்திலும் அந்தர்யாமியாக உள்ளவன்-
இப்படி ஒருவன் உள்ளதாகக் கூறி -ஒவ் ஒன்றின் உள்ளிலும் உள்ளவனாகப் படிக்கப் பட்டு –
அவ்விதம் அவன் உள்ளதை அவை அறியாமல் –ஒவ் ஒன்றும் அவன் சரீரமாக உள்ளன என்றும்
அவற்றை அவன் நியமிப்பவனாகவும் கூறி முடித்து
அவனை ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத –என்று முடிக்கப்பட்டது

ஆனால் மாத்யான சாகையில் மேலும் சில கருத்துக்கள் உள்ளன -அதாவது
ய சர்வேஷு லோகேஷு திஷ்டன் சர்வேஷு வேதேஷு ய சர்வேஷு யஜ்ஜேஷு -என்று
லோகங்கள் வேதங்கள் யஜ்ஜ்ங்களிலும் உள்ளான் என்றும் படிக்கப்பட்டுள்ளது
காண்வ சாகையில் -ப்ருஹு 3-7-22-
யோ விஞ்ஞாநே திஷ்டன் –யார் விஞ்ஞானத்தில் உள்ளானோ என்று படிக்கப்பட்டுள்ளது –
மேலும் ஏஷ த அந்தர்யாமி அம்ருத என்பதற்குப் பதிலாக
ச த அந்தர்யாமி அம்ருத -என்னும் வேறுபாடும் உள்ளது

இதில் சங்கை -அந்தர்யாமி ஜீவாத்மாவா பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
அந்தர்யாமியாகக் கூறப்படுபவன் ஜீவாத்மாவே –
அவனே–பிருஹத் -3-7-23- த்ரஷ்டா ஸ்ரோதா –என்று
அந்தர்யாமியாக உள்ளவன் கண்ணால் பார்ப்பவன் காதால் கேட்பவன்
இப்படி இந்திரிய ஜன்ய ஞானம் ஜீவாத்மாவுக்கே
மேலும் ப்ருஹ 3-7-23–
ந அந்ன்யோ தோஸ்தி த்ரஷ்டா -இவனை விடப் பார்ப்பவன் வேறே யாரும் இல்லை –
ஆக இங்கு அந்தர்யாமி ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்
அதிதைவம் -மற்ற தேவதைகளுக்கும் தைவம்
அதி லோகம் -அனைத்து லோகங்களுக்கும் தெய்வம் –
இவற்றால் அந்தர்யாமியாக சொல்பவன் பரமாத்மாவே
காண்வ சாகையில் உள்ள அதி தைவம் மாத்யந்தின சாகையில் உள்ள அதி லோகம் பதங்களை ஒட்டியே இந்த ஸூத்ரம்-
தர்ம வ்யபதேசாத்–பரமாத்மாவுக்கே உரிய தர்மங்கள் ஓதப்பட்டுள்ளதால் ஆகும்

இந்தப் பகுதியில் உத்தாலகர் ஒரு கேள்வி -பிருஹத் 3-7-1-
ய இமம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வாணி பூதாநி யோ அந்தரோ யமயதி –என்று தொடங்கி
பிருஹத் 3-7-2-தம் அந்தர் யாமிணம் ப்ரூஹி -என்று முடித்து
அதுக்குப் பதிலாக யஜ்ஞவல்க்யரால் 3-7-3-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதியால்
அனைத்தையும் நியமிக்கும் தன்மையும் சர்வாத்மாவாக உள்ள தன்மையும் பரமாத்மாவுக்கு பொருந்தும்
தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
தைத்ரியம் -2-6-
தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6-
நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண
சஷுச் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம்
ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில்
யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மா
அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே

ஆக சர்வாத்மாவால்வும் அனைத்தையும் சரீரமாகக் கொண்டும் அனைத்தையும் நியமித்தல்
பரமாத்மாவுக்கே பொருந்தும்

மேலும் த்ரஷ்டா -காண்பவன் என்றாலும் பரமாத்மாவைச் சொல்வதில் குறை இல்லையே
ஸ்வபாவிக்க சர்வஞ்ஞத்வம் ஸத்யஸகல்ப்பத்வம் உண்டே
ஸ்வேதாஸ்வர -3-19-
பச்யத்ய  சஷூ ச ஸ்ருணோத்ய கர்ண –அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா –
இந்திரியங்களின் அவசியம் இல்லையே அவனுக்கு
மேலும் பிருஹத் -3-7-23-
நாந்யே அதோ அஸ்தி த்ரஷ்டா என்று இவனைப் போலே இல்லையே
இவனே நியமிக்கிறான்-இவனை நியமிப்பவர்கள் யாரும் இல்லை —
யாராலும் பார்க்கப்படாமல் பார்க்கிறான்
மேலும் காணவ சாகை பிருஹத் -3-7-23-ஏஷ த ஆத்மா -இது உனது ஆத்மா என்றும்
மாத்யாந்தின சாகையில் -ச த ஆத்மா அவன் உனது ஆத்மா என்று வெவ்வேறு விதமாகவும் உண்டு
ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக தே என்று வேற்றுமை உருபால் பிரித்து சொல்வதால்
ஜீவாத்மாவின் அந்தராத்மாவாக ஜீவாத்மாவே இருக்க முடியாதே

————————————————————-

1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச

பிரக்ருதியும் ஜீவன்களும் அந்தர்யாமியாக இருக்க ஓயயலாதே-அவர்களுக்கு பொருந்தாத தன்மை கூறப்படுவதால்

சித்தாந்தம்
ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
ஸ்மார்த்தம்-என்பது ப்ரக்ருதி
சாரீர-என்பது ஜீவாத்மா
கீழே சொல்லப்பட்ட தன்மைகள் இவற்றுக்குப் பொருந்தாதே

———————————————————–

1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

இரண்டு சாகைகளிலும் அந்தர்யாமியாய் வேறுபட்டவனாக கூறப்பட்டுள்ளதே

ப்ருஹத் ஆரண்யாகவில் -மாத்யந்தின சாகையில் -3-7-22-
ய ஆத்ம நி திஷ்டன் ஆத்ம நோ அந்தர யமாத்மா நவேத யச்யாத்மா சரீரம்
யா ஆத்மா நமந்த்ரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் அம்ருத -என்றும் –
காண்வ சாகையில் -3-7-22-
யோ விஜ்ஞான திஷ்டன் -என்றும் சொல்லி இருப்பதால் பரமாத்வையே சொன்னதாயிற்று –

2-4-அந்தர்யாமி யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே

1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-

அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்

முண்டக உபநிஷத் –
அத பரா யயா தத் அஷரம் அதி கமே யத் தத் த்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்த்ரம் அவர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத் அபாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
முண்டக உபநிஷத்-2-1-2-
அஷராத் பாரத பர -என்றும்-

சங்கை -இங்கே காணப்படாத தன்மைகளுடன் கூடிய அக்ஷரம் இரண்டு இடங்களில் படிக்கப்படுகிறது –
ப்ரக்ருதியும் புருஷனுமா -இரண்டுமே பரமாத்மாவா

பூர்வ பக்ஷம்
இங்கு பிரக்ருதியும் புருஷர்களும் சொல்லிற்று
பிருஹத் 3-7-23-அத்ருஷ்டோ திருஷ்டோ –
முண்டக -2-1-2-அஷராத் பரத பர -என்று அஷரத்துக்கு காணப்படாத தன்மையும் –
ஸ்தூல மூல பிரக்ருதியைச் சொல்லி -இந்த பிரதானத்தைக் காட்டிலும் மேலான சமஷ்டி புருஷனையும் சொல்லிற்று
இப்படி புருஷனால் நிர்வகிக்கப்படும் பிரதானமானது மஹத்தாதி அனைத்தையும் ஏற்படுத்துகிறது என்பர் –
இதனை அடி ஒட்டியே முண்டக 1-1-7-
யதோர்ணாபி ஸ்ருஜதே க்ருஹ்ணேதே ச யதா ப்ருதிவ்யாம் ஒளஷதய சம்பந்தி யதா சதா புருஷாத் கேஸலோமாநி
ததா ஷராத் சம்பவ தீஹ விஸ்வம் –என்று
சிலந்திப்பூச்சி வலை -மண் தாவரம் -உடலில் முடி நகம் -போலே அக்ஷரத்தில் இருந்து உலகம் –
ஆகவே இங்கு பிரதானமும் ஜீவாத்மாவும் சொல்லப்பட்டது

சித்தாந்தம்
முண்டகம் 1-1-5-யயா தத் அக்ஷரம் அதிகம்யதே-என்று எந்த ஒரு வித்யையால் அக்ஷரம் அறியப்படுகிறதோ -என்றும்
முண்டக -1-1-7-தத் அஷராத் சம்பவ தீஹ விஸ்வம் -இந்த அக்ஷரத்தில் இருந்து இந்த உலகம் வெளிப்படுகிறது
என்பதால் இந்த அக்ஷரமே காரணம்
தொடர்ந்து -முண்டக -1-1-9-
ய சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தபஸ் தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே -என்று
அனைத்துக்கும் பிறப்பிடம் அவனே என்றும்
ததாஷராத் சம்பவதீஹ விச்வம் -என்றும்
பரம் பொருளில் இருந்து அஷரம்-அழிவு இல்லாத -உலகில் உள்ள அனைத்தும் தோன்றின-
மேலும் முண்டக -2-1-2-அஷராத் பரத பர-என்று அஷரத்துக்கும் அப்பால் பட்டவன்
இங்கு கீழே சொன்ன அக்ஷரம் இல்லை
இங்கு அக்ஷரம் அசேதனமான பிரக்ருதியையே சொல்லும்

————————————————————–

1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-

தனித்துக் கூறுவதாலும் -வேறுபாட்டினை உரைப்பதாலும் -பிரகிருதி மற்றும் புருஷர்கள் கூறப்பட வில்லை

சித்தாந்தம்
முண்டகம் 1-1-1-
ச ப்ரஹ்ம வித்யாம் சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் அதர்வாய ஜ்யேஷ்ட புத்ராய பிராஹா -என்று
நான்முகன் தனது மூத்த புத்திரனான அதர்வனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க
அந்த பரம்பரையில் வந்த அங்கிரஸ்ஸும் ப்ரஹ்ம வித்யை அறிந்து இருந்தான்
முண்டக -1-1-3-
ஸுவ்நகோ ஹ வை மகாசாலோ அங்கிரஸம் விதிவத் உபசன்ன பப்ரச்ச கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே
ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -என்று மகாசாலர் என்னும் ஸுவ்நக பகவான் அங்கிரஸ்ஸு இடம் கேட்க
முண்டக 1-1-4-
தஸ்மை ச ஹி உவாச த்வே வித்யே வேதி தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்ரஹ்ம விதோ வதந்தி பரா ச ஏவ அபரா ச -என்று
உயர்ந்த தாழ்ந்த இரண்டு ப்ரஹ்ம வித்யை பற்றிச் சொல்ல -ப்ரஹ்மத்தை நேராகவும் ஆழ்ந்த த்யானத்தாலும் –
உபாசனத்தால் அந்தர்யாமி தயாவாகும் இரண்டு விதம்
நேரடியாக -அபரோக்ஷ ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –
இதனை முண்டகம் -3-2-3-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய-என்று சொல்லுமே
உபாசனம் -சாதன சப்தகம் -விவேகாதிகள் -இதனை பிருஹத் -4-4-22-
தமேதம் வேதாநு வசநேந ப்ரஹ்மணா விவிதஷயந்தி யஜ்ஜேன தாநேந தபஸா நாசகேந -என்று சொல்லும்
இவை இரண்டையும் ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-60-60-
தத் பிராப்தி ஹேதுர் ஞானம் ச கர்ம சோக்தம் மஹா முநே ஆகமோத்தம் விசோகச்ச த்விதா ஞானம் ததோச்யதே–என்று
வேத ஜன்ய ஞானமும் -விவேகாதி ஜன்ய கர்மம் -என்றும் உண்டே
முண்டக -1-1-5-தத்ர அபரா ருக்வேதா யஜுர் வேதா -அபார வித்யை ருக் யஜு வேதங்களால் கிட்டும் -என்றும்
தர்ம சாஸ்த்ராணி -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம் யதே -என்று
எந்த ஒரு மேலான வித்யையில் அக்ஷரம் என்ற ப்ரஹ்மம் அறியப்படுகிறதோ -என்றும் சொல்லுமே

தொடர்ந்து -1-1-6-யத் தத்ரேஸ்யம் -எதனைக் காண இயலாதோ -என்று பரோக்ஷ அபரோக்ஷ ஞானங்கள் இரண்டுக்கும்
விஷயமான ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லி -1-1-7-யதோர்பண நாபி ஸ்ருஜதே க்ருண்ஹதே ச –என்று
சிலந்திப் பூச்சி நூலை உமிந்து இழுத்துக் கொள்வதைப் போலே பிரபஞ்ச ஸ்ருஷ்ட்டி –
என்பதை -1-1-8-தபஸா சீயதே-( சீயதே என்றால் வளருகிறது ) ப்ரஹ்ம ததோ அன்னம் அபி ஜாயதே அந்நாத் பிரானோ
மன சத்யம் (சத்யம் என்று அனைத்து சரீரங்கள் ) லோகா கர்மஸூ சாம்ருதம் -என்று
தபஸ்ஸால்-ஞானத்தால் – ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தில் இருந்து அனைத்து -உத்பத்தி
யஸ்ய ஞான மாயம் தபஸ் 1-1-9-
அடுத்து முண்டக -1-1-9-ய சர்வஞ்ஞ சர்வ வித் -என்று அனைத்தையும் அறிபவன் -எண்ணியதை முடிக்க வல்லவன்
அக்ஷர ஏதத் கார்ய ஆகாரம் ப்ரஹ்மம் நாம ரூபம் ச ஜாயதே -உயர்ந்த ப்ரஹ்மத்தில் இருந்தே வெளிப்படுகிறது

தத் ஏதத் சத்யம் –ப்ரஹ்மத்தின் ஸ்வபாவிக சத்யத் தன்மை சொல்லி
மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஸ்யன் தாநி த்ரேதாயாம் பஹுதா சந்த தாநி தாந்யா சரத நியதம் சத்ய காமா -என்று
ப்ரயோஜனாந்தரங்களை விட்டு ப்ரஹ்ம ப்ராப்திக்கே -ஏஷ வா பன்ன-இதுவே உனது மார்க்கம்
ப்லவா ஹி ஏதே அத்ருடா யஜ்ஜ ரூபா அஷ்டாத ஸோக்தமவரம் ஏஷு கர்ம ஏதச்சேயோ யே அவி நந்ததி மூடா
ஜரா ம்ருத்யும் தே புனரேவாபி யந்தி –என்று மூடர்கள் அல்ப பலன்களுக்கு யாகம் செய்கிறார்கள்
முண்டக 1-2-11-தபஸ் ஸ்ரத்தே ஹி உபவஸந்தி –என்று பலத் த்யாக பூர்வக தபஸ்ஸால் ப்ரஹ்ம பிராப்தி
பரீஷ்ய லோகான் – அல்ப அஸ்திரத்வாதி தன்மைகள் கொண்ட லோகங்களைப் புரிந்து கொண்டு
முமுஷுவாக குருவை அணுக அவனுக்கு குரு உபதேசம்
முண்டக -2-1-1-ததே தத் சத்யம் யதா ஸூ தீப்தாம் -என்று தொடங்கி
முண்டக -2-1-10-ஸோ அவித்யா க்ரந்திம் விக்ர தீஹ ஸோம்ய-என்று அறியாமை என்னும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்கிறான்
முண்டக -2-2-1–ஆவி சந்நிஹிதம்-யோகிகளால் காணப்படுகிறான்
சாம்யாபத்தி பெறுகிறான் -இப்படியாக சுருதியில் பிரகரணம் முடிகிறது

இவ்வாறு பல அசாதாரண விசேஷணங்களையும் சொல்லி மேலே ப்ரஹ்மத்துக்கும் பிரகிருதி ஜீவ வேறுபாட்டை
முண்டக -2-1-2-
திவ்யோ ஹி அமூர்த்த புருஷ ச பாஹ்யாப் யந்தரோ ஹி அஜ அப்ரானோ ஹி அமாந சுப்நோ ஹி அஷராத் பரத பர-என்றும் சொல்லுமே
ஆகவே அக்ஷரம் என்பது பரமாத்மாவே தான் –அச் -தாது -பரவி இருப்பதை குறிக்கும்
ஷர -வெளி வருதல் -உண்டாக்குதல் பொருளில்
அக்ஷரம் -வேறு ஒன்றால் உண்டாக்கப்பட்டு வருதல் இல்லாதது என்றுமாம்
ஆகவே நாம ரூபம் வேறுபாடு இல்லாத பிரதானம் அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்பட்டாலும்
ஸூஷ்ம நிலையில் அனைத்திலும் பரவி உள்ளது என்பதாலும் -மஹத்தாதிகள் போலே உண்டாவது இல்லை என்பதாலும்
இவ்விதம் அக்ஷரம் என்ற பதம் கொண்டு கூறப்பட்டாலும் அது எதில் இருந்தும் வெளி வருவது இல்லை என்பதால்
தனிப்பெயர் கொண்டு அழைக்கப்பட வேண்டிய தகுதி அதற்கு இல்லையே

——————————————————————-

1-2-24-ரூப உபன்யா சாத் ச –

உலகம் அனைத்தும் -அக்ஷரத்தின் சரீரம் -பரம்பொருளின் அங்கம் என்பதால் அஷரம் எனபது பரம் பொருளே

முண்டக உபநிஷத் -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷூஷீ சந்திர சூர்யௌதிச-ஸ்ரோத்ரே வாக்விவ்ருதாச்ச வேதா
வாயு பிரானா ஹ்ருதயம் விச்வமச்ய பத்ப்யாம் ப்ருத்வி ஹ்யேஷ சர்வ பூதாந்தராத்மா -என்று
அவனுக்கு அக்னி எனப்படும் த்யுலோகம் தலை -சந்திர ஸூர்யர்கள் கண்கள்-திசைகள் காதுகள் -வேத ஒலியே பேச்சு-
வாயு மூச்சு – உலகம் இதயம் -பூமியே கால்கள் -அனைத்துக்கும் அந்தராத்ம்னா-

அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்டுள்ள இப்படிப்பட்ட வடிவம் –
அனைத்துக்கும் அந்தராத்மாவாக உள்ள பரமாத்மாவுக்கே மட்டுமே கூடும்
ஆகவே அத்ருஸ்யத்வம் -காணப்படாமை -போன்ற தன்மைகள் கொண்டதாகக் கூறப்படும்
பூத யோனி அக்ஷரம் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் சம்பூர்ணம்

————————————————————-

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-

1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-

சாந்தோக்யத்தில் வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-பொதுவான பதத்தைச் சிறப்பித்து கூறுவதால்

விஷயம்
சாந்தோக்யம் -5-11-6-
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் சம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி –நீர் உபாசிக்கும் வைச்வா நாராத்மாவை
எங்களுக்கு உபதேசிப்பீராக -என்று தொடங்கி
சாந்தோக்யம் -5-18-1-
யஸ் த்வேவ மேதம் ப்ராதே சமாத்ரமபி விமானமாத்மாநம் வைச்வாநரம் உபாஸ்தே -என்று எங்கும் பரந்து –
அதனால் அளவற்ற வைச்வாநராத்மாவை –யார் உபாசிக்கிறானோ -என்று நிகமனம்

சங்கை வைச்வாநராத்மா பரமாத்மாவா அல்லது வேறே யாரையேனும் குறிக்குமோ

பூர்வ பக்ஷம்
வைச்வாநரன் என்னும் பதம் நான்கு வித பொருள்களில் வரும்
பிருஹத் -5-9-1-
அயம் அக்னிர் வைச்வா நரோ யேநேதம் அன்னம் பச்யதே யதிதமத்யதே தஸ்யைஷ கோஷா பவதி யமேதத் கர்ணாவபிதாய
ஸ்ருனோதி ச யதோக்தபிஷ்யன் பவதி நைநம் கோஷம் ஸ்ருனோதி –என்று ஜடாராக்னி பொருளில் உண்டு
ரிக்வேதத்தில்
விச்வாத்ம அக்னி புவநாய தேவ வைச்வா நரம் கேதுமஹம் க்ருண்வன்-என்று தேவர்கள் பகல் இரவு வேறுபடுத்த
அக்னியை உண்டாக்கி என்று பஞ்ச பூத அக்னியே வைச்வா நரன் என்கிறது இங்கு
ருக்வேதம் 1-98-1-
வைச்வா நரஸ்ய ஸூமதவ் ஸ்யாம ராஜா ஹி கம் புவாநாநாமவி ஸ்ரீ –என்று அவன் ராஜா –
அவன் இடம் நற் பெயர் பெறுவோம் என்று தெய்வம் பொருளில்
தைத்ரிய ப்ராஹ்மணம் 3-11-8-
ததாத் மந்யேவ ஹ்ருதயே அக்நவ் வைச்வா நரே பிராஸ்யத்-என்றும்
ப்ரஸ்ன உபநிஷத் -1-7-
ச ஏஷ வைச்வா நரோ விஸ்வ ரூப ப்ரானோ அக்னிருதயதே -என்று
பரமாத்மா பொருளில் படிக்கப்படுகிறது
ஆக இங்கு பரமாத்மாவையே கூறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம் –
சாதாரண சப்த விசேஷாத்-பொதுவான சப்தம் சிறப்பித்துக் கூறப்படுவதால்
ப்ராசீன சாலர் – சத்ய யஜ்ஜர் இந்த்ரத்யும்னர் -ஜனர் -புடிலர் -ஐந்து மஹ ரிஷிகளும்
சாந்தோக்யம் -5-11-1-
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்ற கேள்வி கேட்டு விவாதம் தொடங்கி
அவர்களுக்கு ஆருணி என்பவரின் புத்திரர் உத்தாலகர் என்பவர் ஆத்மாவை வைச்வா நரன் என்று கருதி உபாசிக்கிறார் –
சாந்தோக்யம் 5-11-2-
உத்தாலகோ வை பகவந்தோ அயம் ஆருணி ஸம்ப்ரதீ மாமாத்மா நம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
இவர்கள் வர தனக்கு முழுமையான ஞானம் இல்லாமையால்
சாந்தோக்யம் -5-11-4-
அச்வபதிர்வே பகவந்தோ அயம் கேகய ஸம்ப்ரதீ மமாத்மாநம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
கேகேய நாட்டு அரசன் அஸ்வபதி இத்தை நன்கு அறிந்து உபாசிக்கிறார் -அவர் இடம் செல்வோம் என்று
ஆறு பெரும் சேர்ந்து அங்கே சென்றனர் –

அஸ்வபதி அவர்களை வரவேற்று கௌரவித்து சாந்தோக்யம் 5-11-5-ந மே ஸ்தேந –என்று தொடங்கி
யஷயமானோ ஹ வை பவந்தோ அஹம் அஸ்மி -என்றும்
யாவேதைகை காத்மா ருத்விஜே தானம் தாஸ்யாமி தாவத் பகவத்ப்யோ தாஸ்யாமி வசந்த பகவந்தோ –என்றும் உபசரித்து —
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம –என்று இவர்கள் அவன் இடம் கேட்க –
ஆத்ம ப்ரஹ்ம சப்தத்தால் வைச்வா நரன் பரமாத்மாவே என்றதாயிற்று
மேலும் சாந்தோக்யம் 5-18-1-
ச சர்வேஷு லோகேஷு சர்வ வேஷு பூதேஷு சர்வேஷ் வாத்மஸ் வந்ந மத்தி -என்று அவன் அனைத்திலும் உள்ளான் என்றும்
சாந்தோயம் -5-24-3-
தத்ய சேஷீகாத் லபக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூயந்தே –என்று எஜமானின் பாபங்கள் போகின்றன –

பரமாத்மாவே என்பதற்கு மேலும் ஒரு காரணம் அடுத்த ஸூத்ரத்தில்

————————————————————————

1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –

இவ்விதமாக உலகம் அனைத்தையும் உருவமாகக் கொண்டதாக அறிவுறுத்தப்படுவதால்
வைச்வா நரன் பரமாத்மாவே -என்று கூறப்படும் விஷயத்தில் அடையாளமாகக் கூடும்

சித்தாந்தம்
அதர்வண வேதம் -முண்டக -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷுஷி சந்த்ர ஸூர்யவ் திச ஸ்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா வாயு பிரானோ ஹ்ருதயம்
விஸ்மஸ்ய பத்ப்யாம் ப்ருத்வீ ஹி ஏஷ சர்வ பூத அந்தராத்மா –இங்கு அக்னி த்யு லோக அர்த்தம்
சாந்தோக்யம் -5-4-1-
அசவ் வை லோக அக்னி -என்றும்
த்யாம் மூர்த்தா நாம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபி சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே திச ஸ்ரோத்ரே வித்தி பாதவ்
ஷுதி ச ஸோ அசித்யாத்மா சர்வ பூத ப்ரணேதா -என்றும்
சாந்தி பர்வம் -47-68-
யஸ் யாக்னி ராஸ்யம் த்யவ் மூர்த்தா கம் நாபிச் சரணவ் ஷிதிஸ் ஸூர்யச் சஷுர் திச ஸ்ரோத்ரம்
தஸ்மை லோகாத்மநே நம -என்றும் உண்டே

————————————————————————–

1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –

சப்தம் போன்றவற்றாலும் சரீரத்தின் உள் இருப்பவன் என்பதாலும் வைச்வா நரன் பரமாத்மாவே ஆவான் என்று கூற இயலாது
என்று சொல்வாய் ஆனால் அது சரி அல்ல –
ஜாடராக்னியைச் சரீரமாகக் கொண்டதாகவே பரமாத்ம உபாசனம் கூறப்படுவதாலும் –
அந்த ஜடராக்கினிக்கு மூன்று லோகத்தையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் என்பது பொருந்தாது என்பதாலும்
வைச்வா நரனே பரமாத்மா ஆகிறான் -இவனையே புருஷன் என்று வேதம் கூறும்

பூர்வ பக்ஷம்
வைச்வா நரன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது சரி யல்ல –
சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச -சப்தம் போன்றவற்றாலும் உள்ளே இருப்பவன் என்பதாகும் –
யஜுர் வேதம் பின்பற்றும் வாஜசநேர்களின் வைச்வானர வித்யை பகுதியில் அக்னி என்பது வைஸ்வானரனுடன்
ஒத்தது போன்றே படிக்கப்பட்டுள்ளது –
சதபத ப்ராஹ்மணத்தில் 13-6-1-11–ச ஏஷ அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யம் -5-18-2-ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோந் வாஹார்யபசந ஆஸ்யமாவஹநீய-என்று
வைச்வா நரனுடைய இதயம் கார்ஹபத்ய அக்னியாகவும் -மனம் அன்வாஹார்ய அக்னியாகவும் –
வாய் ஆஹவனீய அக்னியாகவும் -மூன்று வித அக்னிகளாக படிக்கப்படுகிறான் –
மேலும் சாந்தோக்யம் -5-19-1-
தத் யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்தோமீயம் ச மாம் பிரதமா மாஹிதம் ஜூஹூ யாத் ப்ராணாய ஸ்வாஹா –என்று
ப்ராணனுக்கு ஆதாரமாக வைச்வா நரன் கூறப்படுகிறான்
இது போன்று சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச யோ ஏதமேவ மாக்நிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷேந்த ப்ரதிஷ்டிதம் –என்று புருஷனின்
சரீரத்துக்குள்ளே இருப்பதாக ஓதப்பட்டுள்ளது
இந்தக் காரணங்களால் வைச்வா நரன் வயிற்றில் உள்ள ஜாடராக்நியாக உள்ளான் –
எனவே பரமாத்மாவாக இருக்க முடியாது

சித்தாந்தம்
ததா தட்ருஷ்த்யுபதேசாத் -இவ்விதம் பரமாத்ம உபாசனம் என்பது
ஜாடராக்கினியைச் சரீரமாகக் கொண்டுள்ள -என்றே கூறப்பட்டதால் –
வைச்வா நரவித்யா பிரகரணம் –
ச ஏஷா அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யத்தில் –
ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோ அன்வா ஹார்யப ஆஸ்யமா ஹவ நீய-என்றும்
யாம் ப்ரத மாமா ஹூதிம் ஜூஹூயாத் தாம் ஜூஹூயாத் பிராணாய ஸ்வாஹா -என்றும்
ஏதமே வாக்னிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் -என்றும்-
அசம்பவாத் -ஜாடராக்னிக்கு மூன்று லோகங்களையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் பொருந்தாதே
எனவே ஜாடராக்னியை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும்
புருஷம் அபி ஏ நம் அதீயதே –
இந்தக்கருத்தையே ஸ்ரீ பகவானும் ஸ்ரீ கீதையில் -15-14-
அஹம் வைச்வா நரோ பூத்வா பிராணி நாம் தேஹம் ஆஸ்ர த பிராண அபாந சமாயுக்த பசாம் யந்நம்
சதுர்விதம் –நான்கு வித உணவுகளை ஜீரணிக்கிறேன் -கடித்து -உறிஞ்சி -நாக்கில் தடவி குடிப்பது -என்றும் சொல்லுமே
மேலும் சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச ஏஷோ அக்னிர் வைச்வா நரோ யத் புருஷ -என்று அந்த புருஷனே இந்த அக்னி
ஸ்வேதாஸ்வர -3-14-
சஹஸ்ரசீர்ஷா புருஷ -என்றும் –
ஸ்வேதாஸ்வர -3-15-
ததா புருஷ இத்யபி ஏவேதம் சர்வம் -என்றும் பரம் பொருளையே சொல்லிற்று-

———————————————————————————

1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –

தேவதையான ஸூர்யனும் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியும் வைச்வா நரன் அல்ல

——————————————————————————–

1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –

வைச்வா நரன் அக்னி இரண்டுமே பரம் பொருளையே குறிக்கும் என்று ஜைமினி கூறுகின்றார் –
அக்னி என்ற பதத்துக்கு நேராகவே பரமாத்மா என்று பொருள் கொண்டாலும் விரோதம் இல்லை என்றபடி

சித்தாந்தம்
வைச்வா நரன் அக்னி இரண்டுக்கும் சாமா நாதி கரண்யத்தால் ஒற்றுமை கூறப்பட்டு –
அக்னியே பரமாத்மா வாகும்-ஜாடராக்கினியை பரமாத்மாவை சரீரமாக கொண்டதால் –
ஆகவே பரமாத்மாவையே உபாஸிக்க வேண்டும் என்கிறார் ஜைமினி
விச்வேஷாம் நராணாம் நேத வைச்வா நர–அனைத்து உயிர்களையும் வழி நடத்துபவன் -என்றும்
அக்ரம் நயதீத்  யக்நி-என்றும் நல்ல நிலைக்கு அழைத்து செல்பவன்  என்றும் ஜைமினி கூறுகிறார்-
பரமாத்மாவை போலே அக்னி உயர்ந்த கதியான அர்ச்சிராதி கதிக்கு அழைத்து செல்வதால்
அக்னி பதமும் பரமாத்மாவையே குறிக்கும் என்றவாறு –

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -5-18-1-
யஸ்த்வேவ மதம் ப்ராதேச மாத்திரம் அபி விமானம் –என்று
யார் ஒருவன் அளவற்றவனாக வைச்வா நரனை இப்படியாக த்யு லோகம் போன்ற பிரதேசங்களில் மட்டும்
அளவுபட்டவனாக உபாசிக்கிறானோ என்று உள்ளதே
ஆகவே உயர்ந்த ப்ரஹ்மம் அளவு படாதாக உள்ள போது பூமி மற்றும் த்யு லோகம் ஆகியவற்றுக்கு இடையே
அளவு கொண்டதாகக் கூறப்பட்டது எப்படி
ஆகவே வைச்வா நரன் ப்ரஹ்மம் அல்ல -என்பர் பூர்வ பக்ஷி

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————

1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-

உபாசகனுக்கு சங்கை இன்றி இருக்க ஆஸ்மத்ரயர் கூறுகின்றார் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமா நம் –
பிரதேச மாதரம் -பரம்பொருளின் உடலின் அங்கங்களாக-
ஸ்வர்க்கம் தலை என்றும் -ஆதித்யன் கண்கள் என்றும் -வாயு பிராணன் என்றும் -ஆகாசம் சரீர நடுப்பாகம் என்றும்
நீர் மூத்திரப்பை என்றும் -பூமி பாதங்கள் என்றும் –
உபாசகனுக்கு தோற்றுவதற்காக மட்டுமே இவ்விதம் அளவுபடுத்திக் கூறப்பட்டது

இதுக்கு பூர்வ பக்ஷம்
பரம புருஷனுக்கு தலை போன்றவை உள்ளதாக அவனை புருஷ ரூபியாக ஏன் கூற வேண்டும்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————–

1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-

பாதரி உபாசகனுக்கு -எளிதாகும்படி –அளவில்லாத பரம்பொருளை அளவு படுத்தி கூறுகின்றார்-

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமாந மாத்மா நம் வைச்வா நரம் உபாஸ்தே ச சர்வேஷு லோகேஷு
சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம ஸ்வந் நமத்தி –என்று ப்ரஹ்மம் அடைய உபாசனம் கூறப்பட்டது
ஏதம் ஏவம் -இந்த ரூபம் கொண்ட அவன்
சர்வேஷு லோகேஷு சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம-அனைத்து லோகங்களிலும் அனைத்து பூதங்களிலும்
அனைத்து ஆத்மாக்களிலும் உண்கிறான்
ப்ரஹ்மம் இது போன்று இருப்பதால் உபாசகன் பேர் ஆனந்தம் அடைகிறான்
கர்ம வஸ்யர் கர்ம பலமான அன்னத்தை உண்கிறார்கள் -முமுஷு அனுபவிக்கும் அன்னம் வேறாகும் –
அவன் மற்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் அன்னத்தைக் கை விட வேண்டும்

இதுக்கு பூர்வ பக்ஷம்
வைச்வா நரனே பரமாத்மா என்றால் உபாசகனுடைய ஹ்ருதயம் போன்ற அவயவங்களை ஏன் பலி பீடம்
போன்றவையாகக் கூற வேண்டும்
ஆனால் ஜடராக்னியைக் கூறுகிறது என்றால் சரியாகும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————-

1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –

உபாசகனுடைய பல்வேறு அங்கங்களை பலி பீடம் போன்றவையாக உரைப்பது என்பது
வைச்வா நர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னி ஹோத்ரம் ஆக்குவதற்காகவே ஆகும்
என்று ஜைமினி எண்ணுகிறார் -ஸ்ருதியும் அப்படியே

சாந்தோக்யத்தில் –
உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹபத்ய-என்று
மார்பே வேதி என்னும் இடம் – -மயிர்களே தரப்பை -இதயமே கார்ஹபத்யம் என்றும்
சாந்தோக்யம் -5-24-1-
ய ஏததேவம் விதவாந் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி தஸ்ய
சர்வேஷூ லோகேஷூ பூதேஷு சர்வேஷ்வாத்மஸூ
ஹிதம் பவதி தத்யா சேஷீ கதூல மக்னௌ ப்ரோதம்
ப்ராதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று
ஐந்து முறை மந்த்ரம் சொல்லி பிரானா ஹூதி செய்பவன் வைச்வா நரனின் அக்னி ஹோத்ரமாக கொள்ளலாம்-

—————————————————————————-

1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

இப்படி உபாசனம் செய்பவனின் உடலிலே வைஸ்வ நரன் உள்ளதாக உபநிஷத் சொல்லும்

உபாசகன் தலையே பரமபதம் -கண்களே சூர்யன் -மூச்சுக் காற்றே வாயு -இடுப்பே ஆகாயம் –
மூத்திரப் பைகளே நீர் -கால்களே உலகம்
இப்படிப்பட்ட வைஸ்வ நரனுக்கு அக்னி ஹோத்த்ரம் அளிக்க வேண்டும் என்றதாயிற்று-

சித்தாந்தம்
சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று உபாசகனுடைய தலையே
த்யு லோகம் என்னும் ஸ்வர்க்கம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்தேவமதம் ப்ராதேச மாத்ரபி விமான மாத்மாநம் வைச்வா நரம் உபாஸதே -என்று மூன்று லோகங்களையும்
சரீரமாகக் கொண்டதாக பரமாத்மா உபாசனம் சொல்லப்படுகிறது
தொடர்ந்து சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று தொடங்குவதன் மூலம் ப்ராணாஹூதியை
அக்னி ஹோத்ரமாக கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வைச்வா நர உபாஸனையின் அங்கம் எனப்பட்டது —

உபாசகனின் தலை -ஸூ தேஜஸ் -த்யு லோகம்
உபாசகனின் கண்கள் -ஸூர்யன் -விஸ்வரூபம்
உபாசகனின் மூச்சுக்கு காற்று பிராணன் -வர்த்தமான்
உபாசகனின் இடைப்பகுதி பஹுளம்-ஆகாசம்
உபாசகனின் மூத்திரப்பை -வைச்வா நரேனின் மூத்திரப்பை
உபாசகனுடைய பாதங்கள் -வைச்வா நரனுடைய பாதங்கள் -பூமி
உபாசகனுடைய மார்பு -வேதி -பலி பீடம்/சரீர முடி -தர்பை /இதயம் கார்ஹபத்ய அக்னி /
மனாஸ் -அன்வாஹார்ய அக்னி /முகம் ஆஹவனீய அக்னி /
இவற்றைக் கொண்டு அக்னி ஹோத்ரம் செய்து ப்ராணாஹுதியை பரமாத்மாவுக்கு அளிக்கிறான்
இத்தை நிரூபிக்கவே அவயவங்கள் இது போன்று கூறப்படுகின்றன

இப்படியாக பரமாத்மாவான புருஷோத்தமனே வைச்வா நரன் என்று நிரூபிக்கப் பட்டான் –

2-6-வைச்வா நராதிகரணம் சம்பூர்ணம் –

இரண்டாம் பாதம் சம்பூர்ணம்

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-1-1-முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- முதல் பாதம் —

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————-

545 ஸூத்ரங்கள் –
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

—————————————————–

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-7-அந்தர் அதிகரணம் -ஸூ ரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-11-இந்திர பிராணாதி கரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –

————————————————————-

2-1- சர்வத்ர பிரசித்தி அதிகரணம் –ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
2-2-அத்த்ரதி கரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
2-4-அந்தர்யாம் யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
2-5-அத்ருத்யச்வாதி குணா திகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-

———————————————————————–

3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
3-3- அஷராதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
3-9- அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
3-10-அர்த் தாந்தரத்வாதி கரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

———————————————————————

4-1- ஆநுமா நிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
4-2-சமசாதி கரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
4-3-சங்க்யோப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

————————————————————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் —32 ஸூத்ரங்கள் –

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –

1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோட்ஷபலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

ஜிஞ்ஞாசாதி அதிகரணம் சம்பூர்ணம்

—————————————

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே–

1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —
மூன்று செயல்களையும் குறிக்கும் ப்ரஹ்மம் ஒன்றே -மூன்று அல்ல
அரைக் கொம்பு கொம்பு இல்லாதது முழு கொம்பு உள்ளது –
வெவ்வேறு காலங்களில் –
சத் புருஷன் அத்விதீயம் ஏகமேயம்-சகபத்னி -திரு உள்ள தேவனே தேவன் ஆவான்-

அஸ்ய–ஜாத –யத–யஸ்மாத் சர்வேஸ்வராத்- நிகில ஹேய ப்ரத்ய நீக ஸ்வரூபாத் -ஸத்ய சங்கல்பாத்
ஞான ஆனந்த அனந்த கல்யாண குணாத் பும்ஸ -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலயா பிரவாத்தன்தேதத் ப்ரஹ்மத்தி சூத்ரார்த்த

ஜந்மாத்யாதி அதிகரணம் சம்பூர்ணம்

——————————————————–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் –வேதங்களே பிரமாணங்கள்

அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

சாஸ்திர யோநித்வாதிகரணம் சம்பூர்ணம்
————————————

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –

1-1-4-தத் து சமன்வயாத் –

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

சமந்வயாதிகரணம் சம்பூர்ணம்

——————————————

1-5-ஈஷத் யதிகரணம்-சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே

1-1-5- ஈஷதேர் நா சப்தம் –
ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது

சத் வித்தை -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் –
பஹூஸ்யாம் -சங்கல்பித்து கொண்டு பலவாகிறான் ப்ரஹ்மம்
அக்னி நீர் இவை இப்படி சொல்வதும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருப்பதால் -காரணப் பொருள் ப்ரஹ்மமே –

——————————————————

1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –
ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே

சாந்தோக்யம்
ஜகத் ஆத்மயம் இதம் சர்வம் -அனைத்தும் பணியாற்றவும் ப்ரஹ்மமே காரணம்

—————————————————-

1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் –
சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –

சாந்தோக்யம் -3-14-1-
யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதே ஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் -சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே
அவனுக்கு கால தாமதம் -சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் -சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

—————————————————

1-1-8-ஹேயத்வா வச நாத் ச –
சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

—————————————————–

1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –
சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

——————————————————–

1-1-10 –ஸ்வாப்யயாத்–
தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத்புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

———————————————————————————-

1-1-11-கதி சாமான்யாத் –
சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று

————-

1-1-12- ஸ்ருதத்வாச்ச –

சாந்தோக்யம் -7-26-1-
ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம் என்று இந்த ப்ரஹ்மத்தில் இருந்து
சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

1-5-ஈஷத் யதிகரணம்-சம்பூர்ணம்

————————————————-

1-6-ஆனந்தமயாதிகரணம்-ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –

1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –

ஆனந்த வல்லி-
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -என்று
முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

இதற்கு பூர்வபஷம் –
ஆத்மாவுக்கு உடல் உள்ளது என்பதால் இது ஜீவனைக் குறிக்கும் –
தைத்ரியம்
தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –
ஞானமயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்தமயன் பரமாத்மா –
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது -சைஷா நந்தச்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்
யச்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால் அந்த பரம்பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்தமயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

—————————-

1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
மயன் உருவம் என்பதால் பரம் பொருள் அல்ல -என்றால் –
மயன் மிகுதியையும் குறிக்கும்-மிகுதியான ஆனந்தம் உடையவன் -என்றதாயிற்று –

——————————–

1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச
ப்ரஹ்மத்தின் ஆனந்தம் மற்றவர்களுக்கும் ஆனந்தம் அளிக்கும் –

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்

————————————–

1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

————————————-

1-1-17-ந இதர அநுபபத்தே –

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்தமயன் ஜீவன் அல்ல –

———————————

1-1-18-பேத வ்யபதேசாத் ச

தைத்ரியம்
தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய – என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

———————————–

1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை

——————————–

1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –
ஆனந்தமயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

1-6-ஆனந்தமயாதிகரணம் சம்பூர்ணம்-

————————————————————————————-

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் –
கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

———————————-

1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்
ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அந்தர் அதிகரணம் சம்பூர்ணம்

——————————————————–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும்
ஹ வை -முன்பு சொல்லிய பிரமத்தின் தொடர்ச்சியே சொல்லிற்று –
பேத வ்யபதேசாத் ச அந்ய -1-2-22–என்பதில் இருந்து அந்நிய பதம் வருவித்துக் கொள்வது
சாந்தோக்யம் –
சர்வாணி ஹ வா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -என்று
ஆகாச சப்தத்தால் சொல்லப் படுபவன் –
அந்நிய –
பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
தல் லிங்காத்–
பரமாத்மாவுக்கு அசாதாரணமான
லிங்கம் ச்ருதமாய் இருப்பதால் -என்பதே ஸூத்ரம் பொருள் –

சர்வாணி ஹ வா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே–ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி
ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயான் ஆகாச பாராயணம் –
சர்வ பூத உத்பத்தி காரணத்வமும் -சர்வ பூத லய காரணத்வமும் -சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் -பராயணத்வமும் -சொல்லிற்றே
ஜ்யேஷ்டத்வம் -குணங்களாலும் ஸ்வரூபத்தாலும் உத்க்ருஷ்டமாய் இருக்கை/ பராயணத்வம் -பரம ப்ராப்யம் என்றபடி –
அப்படிப்பட்டவை பரமாத்மாவுக்கு சம்பாவிதம் -பூதாகாசத்துக்கு சம்பவிக்க மாட்டாதே –
அசேதனமாயும் ஹேயமாயும் அன்றோ இருக்கும் –
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –
விச்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணன் ஹ்ரீம்
நாராயணம் மஹாஜ்ஜேயம் விச்வாத்மநாம் பாராயணம் -என்பதால்
பரம புருஷனையே இந்த ஆகாச சப்தம் சொல்லும் என்றதாயிற்று –
ஈஷாணம் முதலானவை முக்கியமாக கொள்ளலாம் என்பர் பூர்வ பக்ஷிகள் -ஸ்ருதியை விட லிங்கத்துக்கு பிராபல்யம் –
காங்காயாம் கோஷ–கங்கா பதஸ்ய கங்கா தீரே லக்ஷணா
ஆ -சமந்தாத் -காசாதே -பிரகாசதே-வியுத்பத்தியால் -நாராயணன் -பர ப்ரஹ்மத்தையே கொள்ள வேண்டும் –

ஆகாசாதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————-

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

1-1-24-அத ஏவ பிராண –

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –
கல் மரக்கட்டைகளுக்கு பிராணன் இயங்க தேவை இல்லையே
தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –
சாந்தோக்யம்
சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –
ஹை வை -பிரதித்தம் -பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதி களை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

ப்ராணாதி கரணம் சம்பூர்ணம்

——————————-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்

சாந்தோக்யம் –
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னியை-
ஆகாசாத் வாயு –வாயோர் அக்னி -என்பதால் -ஆகாசம் வாயு அக்னி மூன்றுக்கும் காரணத்வம் சங்கித்து மறுக்கப் படுகிறது

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ உத்தமேஷூ
லோகேஷூ இதம் வா வத்யதித மந்த புருஷே ஜ்யோதி –
என்று அக்னியே காரணம் என்று பூர்வபஷ வாதம்
பாதோச்ய சர்வ பூதானி த்ரிபாதச்யாம்ருதம் திவி -என்று பாதத்தில் நான்கில் ஒரு பாகமே பஞ்ச பூதங்களும்
அனைத்து லோகங்களும் என்று சாந்தோக்யம் சொல்லுமே
உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————————-

1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

—————————————

1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்

சாந்தோக்யத்தில் பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

————————————

1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரமபதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை மரத்தின் மேலே பறவை என்பதும் மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

1-10–ஜ்யோதிர் அதிகரணம் சம்பூர்ணம்

————————————-

1-11-இந்திர பிராணாதி கரணம்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

—————————–

1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

——————————–

1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூ ர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

———————————-

1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

இந்திர பிராணா அதிகரணம் சம்பூர்ணம்

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

நம் ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார் அருளிச் செயல் அமுதம் –

June 2, 2015

மாறன் பனித்த தமிழ் மறைக்கு
ஆறங்கம் கூற அவதரித்த
வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் பதினாலும் போலே
இந்நூலுக்கும் இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்
ருக் யஜுஸ் சாம அதர்வண வேதங்களுக்கு
சீஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்திரங்கள் -உப அங்கங்கள் எட்டும்
நம் ஆழ்வார் திரு உள்ளத்தை பின் பற்றியே இவர் அருளிச் செய்து உள்ளார்-
திவ்ய தேச அனுபவம் -நம் ஆழ்வார்
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து
வாழ்ந்து அங்கு அடியார உடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி -பதிகத்தில்
ஏழாம் பாட்டில் குடந்தை எம் கோவலன் குடி குடியார்க்கே தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்
திரு நாட்டிலும் மறக்க முடியாத திருக்குடந்தை
தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
சொற்பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும்
திருமொழி தொடங்கும் பொழுதே அருளிச் செய்து
சரம பிரபந்தம் திரு நெடும் தாண்டகத்தில் முடிவிலும்
தண் குடந்தை  கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேன் -என்றும் அருளிச் செய்து
தனியாகவும் திரு எழுக் கூற்று இருக்கை பிரபந்தம் அருளிச் செய்தார்

அர்ச்சாவதாரம் போலே விபவ அவதாரத்திலும்
திரு விருத்தம் -பெரும்  கேழலார்  தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ  வைத்தார் -என்றும்
ஏனத்துருவாய் இடந்த ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும் அருளிச் செய்து
இறுதியில் அவா பெற்று வீடு பெறுவதற்கு முன்பு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
உன்னைப் பெற்று இனி போக்குவனோ -என்று
ஸ்ரீ வராஹ நாயனார் பக்கலில் நம் ஆழ்வார்  திரு உள்ளம் சேர
திருமங்கை  ஆழ்வாரும்
திருமொழி தொடக்கத்தில்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன்

இமையோர் தலைவா மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவன் துயரறு  சுடரடி தொழுது எழு என் மனனே -என்று அருளியதுக்கு சேர
திருமங்கை ஆழ்வார்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு
அமரர் பெரும் விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான்

நம் ஆழ்வார் விஸ்தரித்தத்தை
திருமங்கை ஆழ்வார் சுருக்கி
அஞ்சிறைய மட நாராய் –
வைகல் பூங்கழிவாய் –
பொன் உலகு ஆளீரோ-
எம் கானல் அகம் கழிவாய்
என்ற நான்கு பதிகம் தூது விட்டு அருளியதை
தூ விரிய மலர் உழக்கி -3-6 பதிகத்தில் நான்கு பாசுரங்களால் மட்டுமே தூது விட்டார்
மேலே 9-4 திருப் புல்லாணி பதிகத்தில்
புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனை செப்புமினே -9-4-2- என்று ஒரே பாசுரத்தாலும்
திருவிருத்தத்தில் தூது விடும் இரண்டு பாசுரங்களுக்கு சேர் திரு நெடும் தாண்டகத்தில் இரண்டு பாசுரங்களால் தூது விட்டு அருளுகிறார்

சொன்னால் விரோதம் இது -சொன்னாவில் வாழ் புலவர் சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும் -2-9-திருவாய் மொழி பதிகம் சுருக்கினை
பெரிய திருமொழி முதல் பதிகத்தில்
இப்பிறப்பு அறியீர் கற்பகம்   புலவர்களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்ற பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-என்னும் பதிகத்தில்
கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கல் உற்று திடமாக  வாய்ந்தவனாய் தான் பேசும் மாறன் -என்பதை பெரிய திரு மொழி 8-2-6-தெள்ளியீர் பதிகத்தில்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்-என்று
நம் ஆழ்வார் போலே தாய் பேச்சால் அனுகரித்து பேசி அருளுகிறார்

திருவாசிரியத்தில்
தளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெரு மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்றுடையமோயாமே-என்று சுருக்கி அருளியதை  விஸ்தரித்து
பெரிய திருமொழி -11-6-மைந்நின்ற கரும் கடல் வாயுலகின்றி பதிகத்தில்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகம பதிகம் விஸ்தரித்து அருளுகிறார் –

5-3 மாசறு சோதிப் பதிகம் குதிரியுயாய் மடலூர்துமே  -5-3-9-என்றும்
யாம் -மடலூர்ந்தும் -5-3-10-என்றும் அருளிய ப்ரஸ்தாவத்தை
சிறிய திருமடல் பெரிய திரு மடல் இரண்டு பிரபந்தன்களால் விஸ்தரித்து அருளிச் செய்கிறார்

பயிலும் சுடர் ஒளி -3-7-
நெடுமாற்கு அடிமை -8-10-
பாகவத சேஷத்வத்தை
நண்ணாத வாள் அவுணர் -2-6-
கண் சோர வெங்குருதி -7-4-
இவரும் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்கிறார்

இழந்தது சங்கே இழந்தது மாமை நிறமே இழந்தது பீடே இழந்தது கட்டே -மாலுக்கு வையம் அளந்த -6-6- திருவாய் மொழியில் தாய் பேச்சாலே தெரிவிக்கப் பட்டதை
பெரிய திருமொழி -8-3-கரை எடுத்த சுரி சங்கு பதிகத்தில்
இழந்தேன் என் வரி வளையே
இழந்தேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே
இழந்தேன் என் பெய் வளையே -என்று
தாம் இழந்ததை தம் திருவாக்காலே வெளி இட்டு அருளுகிறார்

கங்குலும் பகலும் -7-2-பதிகத்தில்
இவள் திறத்து என் செய்கின்றாயே
இவள் திறத்து என் சிந்தித்தாயே
போலே
திவளும் வெண் மதி போல் -பெரிய திருமொழி -2-7- பதிகத்தில்
உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய்
பாசுரம் தோறும் தாய் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

தீர்ப்பாரை யாமினி திருவாய்மொழி -4-6-தேவதாந்தர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திருமடளிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பாசுரம் -11-
பகவத் ப்ரவணையான கட்டுவிச்சி உடைய பேச்சு வெளி இடப் பட்டது

உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-1- தாமே தனியே திருக்கோளூர்  செல்வது போலே
கள்வன் கொல்-பெரிய திருமொழி -3-6- வயலாலி மணவாளன் வந்து ழ்வாரைக் கைப் பற்றிக் கொண்டு போனதை சொல்லிற்று-

————————————————————————————————————————————————————–

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் கச்சி நம்பி –18-படிகள் / ஸ்ரீ எம்பார் /ஸ்ரீ முதலி யாண்டான் – ஸ்ரீ ஸூ க்திகள்-உபதேச முத்துக்கள் –

June 2, 2015

ஸ்ரீ திருக்கச்சி  நம்பி -18 படிக்கட்டுகள் –

1-சம்சாரம் பீஜம்  நசிக்க வேண்டும்
2-அஹங்காரம் மமகாரம் தொலைந்து
3-தேகாத்ம அபிமானம் தொலைந்து
4-ஆத்ம ஞானம் பிறந்து
5-ஐஸ்வர்ய போகாதி உபேஷை பிறந்து
6- பகவத் ப்ரேமம் பிறந்து
7-விஷயாந்தரம் ருசி ஒழிந்து
8-பாரதந்த்ர்யம் ஞானம் பிறந்து
9-ராக த்வேஷாதிகள்  தொலைந்து
10-ஸ்ரீ வைஷ்ணவம்  பிறந்ததும் –
11-சாத்விக பரிக்ரகம் -ரஜோ தமோ குணம் ஜெயித்து
சாத்விகர் -பகவத் பக்தி உக்கும் சோறு அனைத்தும் கண்ணன்
12–பாகவத் பரிக்ரகம்
13-பகவத் பரிக்ரகம் -இப்பொழுது தான் கண் வைத்து கடாஷித்து
14-அநந்ய பிரயோஜனர்   -ஆக்கி அருளுகிறான் –
15-அனன்யார்க சேஷ பூதன் ஆக வேண்டும் -ஆண்டான் அடிமை -அதுவே பிரயோஜனம் அறிந்து –
ஆத்மா ஸ்வரூபம் சேஷத்வம்
பரகத அதிசய -அவன் சிரிப்பே
16-அநந்ய சரண்யன் ஆகி -அவனை பற்றி
திரு மந்த்ரார்தம் அறிந்து
அனன்யார்க சேஷ பூதன்
அவன் திருவடிகளே உபாயம்
அவனே பிரயோஜனம்
ஒழிவில் காலம்
17-அதிகாரி யோக்கியம் -பிறக்கும் -தகுதி திரு மந்த்ரம் பெற யோக்யதை
18–அதிகாரி புருஷனுக்கு திரு மந்த்ரம் கை கூடும் வேதத்தின் சுருக்காய்
வியாதி துர்பிஷை பஞ்சம் இல்லாமல்

————————————————————————————————-

ஸ்ரீ எம்பெருமானார்
அவரை காத்துக் கொடுத்த கோவிந்தர் -எம்பெருமானார் -எம்பார்
உள்ளம் கை நாயனார்
வித்த மாட்டுக்கு புல்லிடுவார் இல்லை –

பதச்சாயா
தண்டம்
பவித்ரம்
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுககர்களே-பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்கள்

உய்ய ஒரே வழி உடையவர் பாதங்களே-

1-சரீர அவதானத்திலே மோஷம்
2-அதுவும் அவனாலே பேறு என்று இருக்கை
3-தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து
4-சகவாசம் வருந்தியும் தவிர்ந்து
5-திவ்ய தேச பிரவணராய் கைங்கர்யம்
6-அனுகூல சங்கல்பம்
7-பகவத பாகவத  அசஹ்யா அபச்சாரம் தவிர்ந்து
8-இருக்கும் நாள் ஆழ்வார் அருளிச் செயல் அனுபவம் – சகவாசம்
9-ஆசார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருக்கை
10-ஆச்சார்ய கைங்கர்யம் செய்த  நாள் உகந்து இழந்த நாள்களுக்கு வருந்தி கால ஷேபம் செய்து இருக்கை

முதல் வார்த்தை —
எம்பெருமான் அருளையே நோக்கி இருக்க வேண்டும்
பேற்றுக்கு துவரிக்கவும் வேணும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –திருவாய் -8–5–2-/–
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய் –7–2–1-/
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய் -4–7–10-

இரண்டாம் வார்த்தை –
அப் பேறும் அவனாலே என்று இருக்க வேணும்
-அதாவது
-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் –5–8–3-
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –பெரியாழ்வார் –3–3-
யானே நீ என் உடைமையும் நீயே –திருவாய் -2–9–7-
இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால்– திருவிருத்தம் –62-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு ஒன்றையே நினைந்து தேவதாந்த்ர பஜனம் இல்லாமல் –

மறந்தும் புறம் தொழா மாந்தர்–நான்முகன் -68-
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளின் கீழ் வாழ்ச்சி –திருவாய் -3–2–1-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலா மகள் போல் –பெருமாள் -5-2-

நான்காம் வார்த்தை –
தேவதாந்த்ர பஜனம் செய்பவர் ஸஹவாசம் வருந்தியும் கை விடுதல்

எண்ணாதே இருப்பாரை இமைப் பொழுதும் எண்ணோமே –பெரிய திரு -2- 6-1-
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே –பெரிய திரு -11-6–7-

ஐந்தாம் வார்த்தை –
உகந்து அருளினை திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து கைங்கர்யம் செய்வது

நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் –நாச் -11–5-
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே –பெருமாள் -4–10-

ஆறாம் வார்த்தை –
அனுகூல்ய சங்கல்பனாய் இருக்கை -சர்வ ரக்ஷகன் தன் பேறாக

நிர்ஹேதுகமாக ரஷிப்பான் என்கிற திட விசுவாசம் உடையவனாய் இருக்கை

ஏழாம் வார்த்தை –
ப்ராதிகூல்ய வர்ஜனம் -பகவத் அபசாரம் பாகவத அபசாரம் அஸஹ்ய அபசாரம்-காம க்ரோதம் –
அகங்கார மமகாரங்கள் இல்லாமல் இருக்கை –

எட்டாம் வார்த்தை –
அருளிச் செயல்களின் ஈரச் சொற்களை சதா அனுசந்தித்து நெஞ்சம் நெகிழ்க்கை

ஓவாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளும் –சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் தத்துறுமாகில் அவை எனக்கு பட்டினி நாளே –என்றும்
உன்னை வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது-நான்முகன் -63-

ஒன்பதாம் வார்த்தை –
அருளிச் செயல்களில் பிரவணராய் இருப்பாரோடு ஸஹவாசம் செய்கை

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்
தொண்டீர் எல்லோரும் வாரீர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ /
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலோமே-

பத்தாம் வார்த்தை –
ஆச்சார்யர் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வான் போலேயும்-எச்சான் பருத்தி கொல்லை அம்மாள் என்ற

அடியவரை அநாதரித்ததால் உடையவர் உதாசீனப் படுத்த தவறை உணர்ந்து திருந்தினானே –
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருக்கை –

———————————————————————————————–

ஸ்ரீ முதலி யாண்டான் -வார்த்தைகள்
1-சீதை பிராட்டி இளைய பெருமாள் மேல் சொல்லிய வார்த்தையால் பட்ட பிரிவை நினைப்பது –
பாகவத அபசாரம் கூடாதே காட்டி அருளி
பாகவதர் காலிலே விழுந்து போக்கி கொள்ள -அம்பரீஷன் வ்ருத்தாந்தம்
பாகவத அபசாரம் பொறாமையாலே ஆனைத் தொழில்கள்
விளைந்த சீற்றம் விண் வெதும்ப
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு-
ஸ்ரீ நர சிம்ஹம் -ஸ்ரீ ராகவ சிம்ஹம் -ஸ்ரீ கேசவ சிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்தர  சிம்ஹம் –
திருப்பாண் ஆழ்வார் –தத் விஷயம் -ததீய விஷயத்தில் பண்ணும் அபசாரம் திரு வடியில் நினைவை அகற்ற வைக்கும்

2-பிராட்டிக்கு அசோக வனம் போலே பிரகிருதி சம்பந்தமான தேகம்

3-பிராட்டிக்கு தந்த -மூலாதிகள் -தர்ஜன பந்தநாதிகள் –ராஷசிகள் கொடுத்தால் -போலே
நமக்கு புத்திர பித்ராதிகள்-
அல்லிக் கமலக் கண்ணனை –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே-கொண்ட பெண்டிர் -திரிஜடை நல்லவள் உண்டே

4-பிராட்டிக்கு மாரீச தர்சனம் போலே இவனுக்கு விஷய தர்சனம்
சிறிய அபசாரம் இது -பகவத் அபசாரம்
அம்மான் இருக்க அம்மானைக் கேட்டாளே

5-பிராட்டி திருவடியைக் கண்டது போலே இவனுக்கு ஆச்சார்ய சம்பந்தம்-
தேசிகன் -உப்புக்கடல் -சம்சார கடல்/ராவணன் -மனஸ்/பத்து தலை -கர்ம ஞான இந்த்ரியங்கள்/
மறந்த உறவை சம்பந்தம் நினைவு காட்டி -வியாபாரி பிள்ளை கதை
அவ்வானவர் மவ்வானவர் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார்

6-பிராட்டிக்கு திருவடி ஸ்ரீ ராம குணங்கள் காட்டியது போல்
ஸ்ரீ இராமாயண புராண ரத்னங்கள் அருளிச் செயல் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ கதிகள் காட்டி அருளுவார் –
புராண ரத்னம் விஷ்ணு புராணம்

7-ஸ்ரீ முத்தரை கணை யாழி கொடுத்து காட்டியது போலே –
ஆச்சார்யர் சங்க சக்கர லாஞ்சனம்-

வரவு சொல்லி -அருணோதயம் சூர்யோதயம் -யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
74 சிம்ஹாதிபதிகள்
வேத கால பழக்கம் -வரை முறை செய்து ஸ்தாபித்து அருளினார்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறியில் இட்டு -பெரியாழ்வார்

8-எட்டு எழுத்து மந்த்ரம் -சூடா மணி -பல சிஷ்யர்களுக்கு உபதேசித்து
மந்திர ராஜா

9-பிராட்டிக்கு -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மகளார் திரிஜடை போலே
பாகவத சஹாவாசம் போலே -சொத்து ஸ்வாமி அடைய நினைப்பவர்

அந்தமில் பேரின்பத்து அடியவர்
மெய்யடியார் ஈட்டம் கண்டிடக் கூடல்
சம்சார விஜ வருஷம் பகவன் பக்தி பாகவத பக்தி
கேசவ பக்தி இரண்டாம் பஷம் எம்பெருமானார்
போதயந்த பரஸ்பரம் துஷ்யந்த ச ரமஸ்ய-மத் சித்த மத் கத பிராண
அரங்கன் கோயில் –சேறு

10-பிராட்டிக்கு விரோதி ராவண கும்ப கர்ணாதிகள்  முடித்து சேர்த்து அருளியது போலே-
நம்மையும் பிறவி முடித்து தாள் இணையில் சேர்த்து அருளுவான்-

தேவதாந்திர  -பஜனம் தவிர்த்து
மந்த்ராந்தரங்களை மாற்றி –
பிரகிருதி சம்பந்த்தம் தொலைத்து –
உடையவன் இச் சேதனனை  திருத்தி பணி கொண்டு
நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாக நித்ய அனுபவம் செய்யும்படி அருளுகிறான் -பக்தி உழவன் -அஹம் அன்னம்

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி உபன்யாச -சாரம் ..

June 2, 2015

10

பாரோர் புகழ -புகழ்ச்சி கூடாதே
கர்ம யோகம் செய்ய செய்ய பாரோர் வாழ அதனால் ஏற்பட்ட புகழ்ச்சி
அந்தணர் -ராஜா -கற்புடைய மாந்தர் மூன்று மழை -மாதம் மும்மாரி
வேதம் ஓதியும் ஓதுவாருக்கு கைங்கர்யம்செயதும்
ஓங்கி  உலகு அளந்த -வெளியில்
-கொள்ள குறைவற்று இலங்கி கொளுத்து விட்டு ஓங்கிய வள்ளல் தனம்
அங்கு கபடம் வஞ்சனையால் ஓங்கி -அதனால் வெளி தான் அங்கு
இவரோ கொழுந்து விட்டுஓங்கிய வள்ளல் தனம் –
அங்கு தான் கொள்ள ஓங்கினான்  வாமனன்
இங்கு கொடுக்க –பொன் உலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ
உபய விபூதி கொடுக்கும் வள்ளல் தன்மை
வல் வினையர் மனத்தில்புகுந்தார் ராமானுஜர்
நீராடுதல் -அவனே தடாகம் -திருவடியில் சரணாகதி –
மும்மாரி -தத்வ ஹித புருஷார்த்தம் -விஷய ஞானம் -எம்பெருமானார் புகழ் அறிந்த அடியார் வழங்குவது இவை
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
புலன் புரந்து பொன் விளைந்த களத்தூர் நெல் -மணிகள் -பொன் ச்ப்ருஹநீயமாக
கயல் உகள ஸ்திரீ கயல் கண்ணி காரிகையே சரணா கத  கண்டு களித்து
கண் -ஞானம் –
குவளைப்பூ -சாமான்ய புஷ்பம் -சிஷ்யர் பொறி வண்டு -அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆசார்யர்கள் -நம் இடம் உஜ்ஜீவிக்க திருத்தி –
தேங்காதே புக்கு இருந்து -அபேஷிக்கிற அளவும்  வழங்கி சொரிய –சீர்த்த முலை பற்றி வாங்கி
கிரந்தசதுஷ்ட்யம் முலை
11
சகடம்-சரீரம்
சேஷ பூதன் வாமன அவதாரம் காட்டி
பவனம்ராமன் -இலங்கை பிரம புரம் சரீரம் -அவன் கோயிலை நம்மதாக கொள்கிறோம்
அடுத்து சகடாசுரன் -சரீரம் போக்கி -திருவடி பற்றி மோட்ஷம் -எப்படி –
கன்று –கீழே இருக்க -இது கொண்டு -விளாம் பழம் உயரம் -இரண்டையும் அழித்து -கழல் போற்றி –
இரண்டு வஸ்து -அவன் தூர பிராட்டி கிட்டே -கன்று கிட்டே இருப்பது போலே
குன்று புண்ய பாவம் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இதை கொண்டே காத்து
வென்று பகை கெடுக்கும் -அவனே நீக்கி –
ஆச்சார்யா பாரமாகவும் அர்த்தம் –
 20
பூ நிலைய ஐன்துமாய் சப்தத்தால் மங்களம் பூமி
பூ மன்னு
சப்தம் பொருள் இரண்டாலும் மங்களம்
பூ பூமி என்றும் கொண்டு -சிருஷ்டி பிராட்டி திரு முகம் கொண்டு
வணங்க வைத்து மோட்ஷம் கூட்டி போக -அங்கெ மன்னுகிறாள் –
மரு பிருகிறுதி அதிஷ்டான தேவதை – ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ நிவாசம்
பத்ம கோசம் இதய தாமரை –
மார்பன் சுபாஸ்ரம திரு மேனி –திவ்ய மங்கள விக்ரகம்
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் போல் பூ -மார்வன் –
 21
22
பல்கலையோர் -சாஸ்திர கலைகள் அறிந்த ஆண்டான் ஆழ்வான் போல் வர மட்டும் இன்றி
அனைவரும் மன்னி
சக்ருதேப்வ பிரபன்னாய இன்னார் இல்லை ராமன்
ராமானுஜர்

சர்வ பூதானாம் -அனைத்தும் போக்கி -என்றும் –அனைவர் இடமும் காத்து

நெஞ்சை கூப்பிட்டதும் -அவர் இடமே ஈடு பட்டு –
பாக்யம்பெற்றோம் என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
பூ மண்ணு -பொதுவாக பர ரூபம் சொல்லி -தன்னை அடைய தானே வலி -அங்கே பரம பதம் –
கள்ளார் -பச்சை மா மலை -அனைத்தும் தாமரை -அங்கு பரம் ஜோதிஸ் -இங்கு பொழில் போல் திரு மேனி –
அரங்கத்துக்கும் -அரங்கனுக்கும் அடை மொழி
குறையால் பிரான் -பாடாத -செவி அல்ல -நா அல்லா -உள்ளமாய் கொள்ளோமே அருளிய –
23
பிரியாது ஆள் செய்ய பிறப்பு அறுத்து -திரு வாட்டாறு -அரி ஆழி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
நாதனை நரசிங்கனை -பெரிய ஆழ்வார்
24
25
பயிரின் களை போல் அசுரர்களை களைந்தான் –
சேராதவரை –சேராமல்
நயவேன் பிறர் பொருளை -முதல் திருவந்தாதி -நள்ளேன் கீழாரோடு –
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் –திரு மாலை அல்லால் -நான்கும் -சொல்லி -வருமாறு நம் மேல் வினை
duty பிரஸ்ட் ot  பின்பு -வர்ணாஸ்ரமம் தர்மம் முக்கியம் –
வேதப் பொருள் நம் ஆழ்வார் சொல்லி
கலியன் -குறையல் பிரான் -குறை அல்லாதவர் -தீயவர் சேர்க்கை இன்றி
இவர் அவதாரத்தால் ஊர் பெயரும் குறையலூர் பிரான் உபகாரகன்
-நான் கண்டு கொண்டேன் -சொல்லிலும் நல்லாம் துஞ்சும் பொது நினைமின்
அங்கு மாறன் முன்பு சொல்லி -புகழ் மலிந்த -உலகு இயல்புக்கு மாறி –
இராமானுசன் தவிர –
ஓன்று -நெஞ்சு -ஓன்று அறியேன் -எனக்கு உற்ற பேர் இயல்பே -நாமம் சொல்லிய பலன் உடனே கிட்டியது
நம் கடைமைகளே பகவத் ஆராதனம் உள் கருத்து –

26

மனம் ஏவ பந்த மோஷ ஹேது
நெஞ்சை கொண்டாடுகிறார் மூன்றாம் பாசுரத்தில் –
பெரிய திருவந்தாதியில் மனசை உரு துணையாக ஆழ்வார் கொண்டாரே
முதல் ஞானம்
அடுத்து அனுஷ்டானம் கடைசி நிலை பேசி
இதில் உபகாரம் செய்பவரை ச்மரித்து -கிருதக்ஜன்
27
ஆதி வண்  சடகோப -திரு அவதாரம் -திரு வரசு திரு நாராயண புரம்
ஊழி முதல்வன் –நான் முகனை நாராயணன் படைத்தான்
தொகுத்த வரத்தனாய் -தோலாதான் மார்பம் -வகித்த வளை-மாலோலன் –
உயர்த்தி -சிருஷ்டி செய்தவன் நரசிங்கன் -உள் வாங்கி பிரளயத்தில் –
அரு நான்கும் ஆனான் -தேவ மனுஷ்ய -அறிய முடியாமல் உள் இருக்கிறாய் –
செல்லப்பிள்ளையும்  திரு நஷத்ரம் அன்று இங்கு எழுந்து அருளுகிறார்
28
கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி வந்த மணம் -திரு நஷத்ரம் தேசிகன் சன்னதி
செல்லப்பிள்ளை இங்கே எழுந்து அருளி
முன்ப்ற்ற நெஞ்சே முயற்சிசுமந்து எழுந்து -சகாவாக கொண்டார் முன்னம்
வேதாந்தம் -அதில்
அனுஷ்டானம் இரண்டாம்பாட்டில் -நெஞ்சை கொண்டாடி மூன்றாம் பாசுரத்தில் புகழ்ந்து

29

ஆழ்வார் உத்சவம் முதல் மூன்று நாள்கள் அஹோபிலம் ஜீயர்
ஐந்தாம் பாசுரம்-
நான்காவது பாசுரம் -அடியார் இடம் சேர்ந்த நன்மை பேசினார் -கூரத் ஆழ்வான் –
கானம் சேர்ந்து உண்போம்
நாகம் திருப்பி -வைகுண்டம் –
திருவடி நிழல் முன்னாடி பார்த்து சாயை போல் பின்னாடி பார்த்து பெரும் பதம் எய்துவோம்
இயல்பு இது என்றே ஸ்வாபம்-பக்தியே ஸ்வாபம் கொண்டாடுவார்கள் –
இயல் கட்டளை கலித் துறை
அடுத்து பக்தி இல்லாவிடிலும் -அவர் கீர்த்தி –
முயல்வது -யதா சக்தி
உபநிஷத்தும் சொல்லி பின் வாங்கினது போலே
முயல்கின்றணன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே மதி இன்மையால்

30

33

பேர் இருள்
 இருள் -தேக ஆத்மா -சாருவாக மதம் ஓன்று தான் -ஆத்மா ஒத்துக்காத மதம்
கண்டதே காட்சி கொண்டதே கோலம்

34

35

பாண் பெருமாள் பத்தும் பழ மறையின் பொருள்- என்று பரவுகின்றோம் தேசிகன்
16 பாதங்கள் ஸ்ரீ பாஷ்யம்
10 தத்வ ஞானம் மோஷ உபயதுக்கு -அகில புவன அ காரத்தில்
மேல் உபாசனம் -பிரம ப்ராப்தி -ஹிதம் புருஷார்த்தம் –
பலம் சொல்லும் பலாதிகாரத்திலும் உக்தம் உண்டு –
உபாசனம் சொல்லும் பொழுதும் -உக்தம் -உ காரத்தில் ஆரம்பித்து -நடு எழுத்தாக –
சர்வ சமஞ்சயயம்-ம காரத்தில் முடித்து

36-

இடம் கொண்ட கீர்த்தி -ஷேத்ரத்துக்கும் ஆழ்வாருக்கும் சேரும்
உலகும் வலிது –
வேத செழும் பொருள் நான்முகன் -கொண்டே ஸ்ரீ பாஷ்யம்

முன்பு அகரம் உகந்த மந்தி -அகில புவன

அகில புவன -ஜன்ம ச்தேம பங்காதி லாலே -மங்கள ச்லோககங்கள்
விநித விகித பூதவ் விராத ரஷைதாக தீஷே –
மூன்றாம் அடி -அந்தாதி -சுருதி சிரஸ் இதீஷே பிரமனே  ஸ்ரீநிவாசே -பிரகாசிக்கும் ஜோதி
மேலிட்டு -பிரகர்ஷம் -ஈடுபாடு -பிரகாசிக்கும் -பக்தி மேல் இட்டு இருக்கும்
பக்தி ரூபா -பவது மம சரசி ஷேமுஷு பக்தி ரூப
நாரணனை நன் முகனைப் படைத்தான்
யான் முகமாய் சங்கரனை தான் படைத்தான் -யானே என் தனதே இருந்தேன்
யானும் நீயே என் உடைமையும் நீயே
தன்னையே நாடித் தொளுவருக்கு தன்னையே ஒக்க அருள் தருவான் –
மந்திர ராஜ பத ஸ்தோத்ரம் நரசிம்கன் தொழுது முக்கண்ணன்
பிரதோஷ கால பூஜை
யான் முகமாய்  அந்தாதி -என் மூலமாக வெளி இட்ட –
வேதாந்தத்தில் ஆதி -ஆதி அம் சோதி உரு -அவன் தானே –

மேலிட்டு அறிவித்தேன் ஆல பொருளை –

ஆழ பொருளை –
பாராசர்யா -வாக்கு அமிர்தம் -உபநிஷத் ஆகிய பாற் கடல் -மத்யத்தில் இருந்து ஏகப் பட்டது -ஆழ பொருள்
அறிவித்தேன் -சொல்லுதல்-ஹிதம் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் வர -சம்சாரம் அநிஷ்டம் -கைங்கர்யம் -இஷ்டம்
ஆத்ம சஞ்சீவன மருந்து -சம்சார அக்நி-சிந்தாமல்-அபாத்ரம் -பூர்வாசார்யார் சுரஷதாம் -சிந்தாமல் காத்து
பகு மதி -தூரஸ்த்திதாம் -ரகஸ்யம் –
கொள்மின் நீர் -நீர் கொள்மின் -ஒவ்ஷதம் ஜன்மதி தோயம் -நீர் -பிதந்து-பருகு வீர் -சுமனசா –

தேர்ந்து –

போதாயன விருத்தி கிரந்தம் -திராவிட உபநிஷத் சுருக்கம்
சூத்திர ஷராங்களுக்கு  வியாக்யானம் செய்கிறேன் தேர்ந்து –
இணை அடி கொண்டு -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தார்

37

பொய்கை -அனுஷ்டானம்
பூ – சத்தாயம் –
சேஷத்வ ஞானம் அடுத்து
பாகவத சேஷத்வம் -சாரம் பாண் பெருமாள்
அவன் ஒருவன் தான் ஏக தத்வம் -ஜகத் காரண பூதன் -திரு மழிசை
அதுக்கு காலையில் திரு நாம சங்கீர்த்தனம் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
பள்ளி உணர்த்தி அடியார்க்கு ஆள் படுத்தி
அளியன் நம் பையல் –
செய்யும் -தானே தோட்டங்கள் வைத்து -தானே பறித்து -பசுமை – -துளவ மாலை
பேராத சீர் -வீடில் சீர் அரங்கனுக்கும் ஐயனுக்கும் சொல்லலாம்

38

தோள் இணை மேலும் -நன் மார்பின் மேலும் தாழ் இணை மேலும்
தோள் மாலை யாயினும் தளம் ஆயினும் வேர் ஆயினும் கொம்பு ஆயினும் மண் ஆயினும் கொண்டு வீசுமினோ
மண்-கர்ம யோக நிஷ்டர்
வேர் -ஞான யோக நிஷ்டர்
கொம்பு -பக்தி யோக நிஷ்டர்

தளம் -பிரபத்தி

தொல் அருள் -சரணா கதி –
எங்கள் மேல் விழியாவோ -பலருக்கும் ஒருவரே பிரபத்தி செய்யலாம்
செய்யும் பசு துளவ மாலை -திருவடியில் சமர்ப்பிக்க –
எம்பெருமானார் –
மிக்க சீர் தொண்டர் அடி இட்ட பூம் துவள வாசனை -ஆழ்வார் –
ராமானுச -காதல் செய்யும் திடம் கொண்ட –
வண்டு கொண்டு ஊதுமாகில் –
தொண்டர் –
பண்டை நாள் ..நின் திரு அருளும் கொண்டு -குடி குடி ஆள் செய்யும் தொண்டர் -மிதுன கடாஷத்தால் தொண்டு
சீர் தொண்டர்
குடிக்கு கிடந்தது ஆக்கம் செய்து — நின் தீர்த்த அடிமை குற்றேவல் -பரம எகாந்திகள்
அடியயோர்க்கு அருளி -தீர்த்த அடிமை அடுத்த பாசுரம் -கல்யாண குணங்கள் நிறைய பெற்ற தொண்டர்
மிக்க சீர் தொண்டர் -தொண்டர் அடி பொடி –
தொல் அடிமை -இடம் கொள் -தொடர்ந்து குற்றேவல் செய்து –

39-

முதல் பதிகம் அவா பாரிப்பு -என் கண் இணைகள் என்று கொலோ காணும் நாளே
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே -கண்ணாரா கண்டு உகக்கும் காதல் தன்னால்
அடுத்து பாகவத கலவி எப்போ கிட்டும் அவா பாரிப்பு அடியார்கள் தங்கள் குழாம் கண்டு யானும் இசைந்து –
தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் -கங்கை நீர் ஆட வேண்டாமே -பெரும் சேறு என் சென்னிக்கு அணிவனே
எல்லையில் அடிமை திறத்தினில் மேவும் நாள்
மூன்றம் பதிகம் கிடைத்த படியை அனுபவம்சொன்னார் -பித்தனே -யானும் ஒரு பேயனே –
நான்காவது -இரண்டாவது பாகவத சேர்க்கை கிடைத்தது பற்றி பேசி -குருகு மீன் -ஏதேனும் ஆவேனே –
ஐந்தாவது -தனக்கு உண்டான சம்சார பயமும் -அவனையே உபாயம் -புகல்-
ஆசார்யர் பெற ஆறு வேண்டுமே ஆச்சார்யா ப்ராப்தி
ஈஸ்வர சொவ்கார்த்தம் –
யதிர்ச்சா சூக்ருதம்
ஜாயமான கடாஷம்
அத்வேஷம்
ஆபி முக்கியம்
சாத்விக சம்பாஷணம்
குருகு வெண்மை சாத்விக -தன்மை சின்ன மீன் கொள்ளாமல் -சலனம் இன்று
உறு மீன் வரும் அளவும் -அல்ப பலன் இன்று பேரின்பம் ஒன்றே வைஷ்ணவன் –
ஆசையோ பெரிது அலைகடல் வண்ணர் மேல் –
கோனேரி வந்து கைங்கர்ய பரர் மூலம்  இந்த தன்மை அவர்கள் பார்த்து வரும் –
போப் வட்டில் -விஷ்ணு கடாஷம்
அடுத்து அத்வேஷம் இன்றி ஸ்தாவரம் -செண்பகப்பூ
தம்பகம் –
ஆறு போலே பாயும் -பாகவதர்கள் -உபயோக்கிக்க
மேல் இருந்து கீழே வந்து
பிரவ்ருத்தி தர்மம் காட்டும் -கருத்து உடையேன் ஆவேனே
சரீர தர்மம் சாஸ்திர விதி என்று அவன் ப்ரீதிக்கு
நெறி -திருவடி சேர்க்கும் –
படி -ஆசார்யர் திருவடி பட -பவள வாய் காண்பேனே அடுத்து
ஏதேனும் -பாகவதர் உகந்த கைங்கர்யம்

40

கண்ணி நுண் சிறு தாம்பு
பத்தும்
அடியார் சங்கரகம்
ஒவ்வொரு பத்தும் அடியார் பக்கலில் சொல்லி –
ஆழ்வார் -தாயின் இன்பம் –
1இன்பத்தில் ..2 இறைஞ்சுதலில்3 இசையும் பேற்றில்4 -ராகம் மாற்றப்பட்டு -பறவை கூம்பில் –
5தன் பற்றில்- வெம் கதிரோன் தன் பக்கல்
6வினை விலக்கில் -அகிஞ்சனன் ஆக இருந்து அவனையே பார்த்து –

7அநந்ய கதித்வம் சக ஒக்கத்தில் -ஆறுகள் கடலிலே சங்கமம் –

8தத்துவத்தை உணர்த்துவதில் -நின்னையே தான் வேண்டி -நிற்பன் அடியேனே
மற்று யாரும் பற்றிலேன் என்று –
தன்மை ஆக்கில் தொல் வழியே –

41-

ரகஸ்ய மாத்ரிகை -கிரந்தம் – செம் பொன் கழல் இணையை செய்யாள் அமரும் திருவரங்கர்
அன்பவர்க்கு அடியவராய் அடி சூடிய நாம் உரைத்தோம் -அடியவர் குலசேகர ஆழ்வார் –
இன்ப தொகையை அனைய – -மூன்றின் எழுத்தின் அடைவே -ஐம்பத்து ஒரு பொருள் ஆர் உயிர் க்கு  ஆக்கும் அமுது –
ஆஸ்ரித -முதல் ஐந்து திரு மொழி – ஆஸ்ரிதர் அச்சம் தீர்த்த -மேல் அவதார லீலைகள் அப்புறம் -காட்டாறு வெள்ளம் போலே இவை –
தேங்கினமடு போலே அர்ச்சாவதாரம்முதல் ஐந்தும் -பின்னானார் வணங்கும் ஜோதி –
முதல் முப்பது வாக்யங்கள் திரு அஷ்டாத்ரம் –
40 வரை த்வயம்
41 51 —11 வாக்யங்கள் சரம ஸ்லோகம்
சில்லறை ரகசியம்
ரகஸ்ய   த்ரய சாரம் –
கொல்லி காவலன் கலை பதித்த –

42

51 பாசுரங்கள் திவ்ய தேச பதிகங்கள் 5 -30 பாசுரம் திருவரங்கம் திரு மந்த்ரம்
11 பாசுரங்கள் திருவேம்கடம் 11 த்வயமும் சரம ஸ்லோக அர்த்தம் தரு துயரம்தடாயேல் அனுசந்தானம் செய்யலாமே
திரு மந்த்ரத்தில் -முதல் பதத்தில் ஞானம் தோன்றி முளைத்து -இரண்டாம் பதத்தில் வளர்ந்து
மூன்றாம் பதத்தில் பல பர்யந்தம் -அதுக்கு வழி காட்டும் த்வயம்
கோனேரி வாழும் குருகு வைஷ்ணவ லஷணம் கொக்கு போல்
மீன் -நித்ய யோகம் மத் போலே
இப்படி 51 அர்த்தங்கள் அருளி
நாராயண அர்த்தம் சௌசீல்யம் சௌசீல்யம் பொன் வட்டில்  ஏந்தி புகப் பெறுவேன் ஆவேனே
சரணவ் -திருவடி-திரு மேனி செண்பகமாய் -தம்பகமாய்
தபஸ் உடையவன் -சரணாக கொள்ளும் -கம்பத்துக்கு தெண்டம் போலே விழ –
பிரபத்யே -அடிக் கீழ் அமர்ந்து புகுந்து மகா விசுவாசம்-அத்யவசயாம்-அரும் தவத்தவன் ஆவேனே
கானாறாய் பாயும் கருத்துடை-பலன் கருதாமல் கருமம் செய்வதை காட்டும் –
நெறியாய் கிடக்கும் பாதை உபாயம்-திரு வேம்கடம்-வெறியார் தண்  சோலை -ஸ்ரீ உடனே இருக்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் -மா சுச -சொல்லிய வாயை -சோதி வாய் திறந்து அருளிய சரம ஸ்லோகம்
நிரதிசய போக்யத்வம் -வகுத்த சேஷி
பொன் மலையில் ஏதேனும் -தன் இஷ்டம் கலக்காமல் களை அற்ற படி அவன் சங்கல்பம் அடியாக –
வித்துவக்கோடு பதிகம் -பரித்யஜ்ய -கை முதல் இன்றி -விட்டு விட்டு -ஆகிஞ்சன்யம் முன்னிட்டு
அருள் நினைந்தே –
மாம் -பத அர்த்தம்- மலர் மகள் விரும்பும் -நமரும் பெறல் அடிகள் -கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –
ஏகம்-ஒருவனை–தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்கும் -கார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போல் –
பற்றிலார் பற்ற நிற்கும் படியை எம்பெருமான் இருக்கிறான்
சரணம் -வகுத்த சேஷி-மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் –
செங்கமலம் வெங்கதிரோனுக்கு அல்லால்-அலராது-அஹம் சப்தார்தம்
த்வா -உன்னை-கைக் கொண்ட பின் யாரால் குறை-மா முகிலே பார்த்து இருக்கும் –
சர்வ பாபேப்யோ -நானே நானா வித நரகம் புகும் பாவன் செய்தேன்-
ஆறுகள் மேடு பள்ளம் போய் கடலை கலப்பது போல் –
மோஷ இஷ்யாமி–நின்னையே தான் வேண்டி -தன் பால் மனம் வைக்க திருத்தி –
மாசுச -வாக்கியம்-செய்த வேள்வியர் –
வித்துவக் கோட்டு அம்மா நீ வேண்டாதே யாகிலும் –

43-

மகா வீர காவ்யம் கொல்லி காவலன் கலை பதித்த தேசிகன்-
ரகஸ்ய சாரம் 51பாசுரங்கள் கொண்டு அனுபவித்தார் –
கொல்லி காவலன் கலை சொல் -பதிக்கும்-பாடும் பெரியவர் பாதங்களை –
அனுபவ பரிவாக ரூபமான உக்தி மா முனிகள் உரை -ரத்னங்கள் பதித்து போல் நிறைத்து வைத்த
சாஸ்திர ரூபமாய் இருந்து உள்ள கவி –
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன் -இரண்டுக்கும் கர்த்தா –இவர் சோராத காதல்
நீ என்னை இன்றி இல்லை நான் உன்னை அன்று இல்லை -அங்கு
நவ வித பக்தியும் காட்டி -காப்பிட்ட பதிகத்தில்
சீத பரதன் சபரி -அங்கும் நவ வித பக்தி
ச்ரவணம்-சுளிப்பாள் -மீண்டும் மீண்டும் இதே நவ வித பக்தி காட்டி இருக்கிறார் –
பிறந்தமை விரித்து உரைத்த –முதலில்
விருப்பால் உரைத்த -கீர்த்தனம் -அவள் சொன்ன படியே
மாணிக்கம் -ஆய்ச்சி தாலாட்டிய -விதைத்ததை நினைத்து ஸ்மரணம் இது
சந்தரனை அழைத்து ஒப்பன சொல்லி -மேன்மை சொல்லி -இகழேல்-பத சேவனம் சொன்னபடி
செங்கீரை -அர்ச்சனம் -ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுக -சம்போதித்து பாடுகிறார் –
சப்பாணி -வேட்கையால் சொன்ன -சப்பாணி ஈரைந்து -அவன் தட்ட நாம் அஞ்சலி –
தளர் நடை நடவோனா தாயார்  மகிழ –பிரதி கூலர் தளர -தாஸ்யம்
அச்சோ பருவம்-அணைத்து கொண்டு -குகன் -மாருதி சுக்ரீவன்-விபீஷணன் பரிஷ்வங்கம்- தோழமை  –
சக்யம்
புறம் புல்குதல் அடுத்து -கொஞ்சம் வாசி- முதுகில் தூக்கி -நாம் முன் அவன் பின் –
ஆத்மா சமர்ப்பணம் -பண்ணியவரை -கௌஸ்துபம் ஸ்தானம் -ஒன்பதாவது பக்தி –
அச்சோ அணைக்கும் பொழுதும் மார்பு படியுமே –
ரத்னம் -கட்ட வேண்டுமே
மேலும் ஒன்பது வித பக்தி சுளிப்பால் நிறைய சோராத வரும் மேலும் –
தொல்லை மாலை- நெய்க்குடம் – மெய்க்கொண்டு வந்து புகுந்து -வேதப்பிரானார் கிடந்தார் –
அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்ந்தாலும் -தன்னை வணங்க இசைவித்து –
தென் புலத்து -தூதுவரோடு ஒழித்தார்
பண்டு அன்றுபட்டினம் காப்பே –

–44

சோராத பெறும் சுழிப்பு- சுந்தத் தோழனுடைய சுழலில் நின்று உய்துன்களோ ஆண்டாள்

நல்லை நெஞ்சே -மாதர் -ஆயிரம் தோளன் -ஆஸ்ரிதர் அனுக்ரகம்
நான்கு புருஷார்த்தம் நான்கு தோள்கள் -பல்லாயிர கணக்கில் பலர் பல அபெஷிக்க அசந்கேய தோள்கள்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-பிராட்டி அணைக்க -மாலோலன் நித்யமாக இங்கே ஆலிங்கனம்
சத்ரு ஹந்தாராம் மக ரிஷி சுகம் கொடுத்த பர்த்தாரம் பரிசஷ்யதே சீதை பெருமாளை அணைக்க –
அவன் கோயில் நம் சரீரம் உணராமல் இருக்கிறோம் -தொல்லை மால்- 5 2 பெரியாழ்வார் நெய் குடத்தை பற்றி
பண்டு அன்று பட்டணம் காப்பே –

வேதப்பிரானார் கிடந்தார் –

உறகல் உறகல் பாகவதர் விக்ஜாபனம்

தொல்லை மாலை ஒன்றும் பாராதவனை

45

ஒன்றும் எதிர்பாராமல் கூரை சோறு இவை கேட்க்காமல்

இந்திரனோடு பிரமன் பதிகம்-நவ ரசம் சொல்லி காப்பிட்டார் -அந்தியம் போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய்

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர்

சேவடி செவ்வி திருகாப்பு

46
ஸ்ருங்கார –ஷாந்தி ரசம் கூடி ஒன்பதும் சேர்ந்த காப்பு இடுவது –
அந்தி /அந்தி இரண்டுமே -வீரம் அடுத்து -குழந்தை கொஞ்சி -இவர்கள் பய சங்கை நால் சந்தியில் நிற்காதே –
வீரம் பிரதானம்–அற்புதம் ஆஸ்ர்யம் -ஹாஸ்யம்-பயம் அஞ்சுவன் -கள்ள சகடம் உதைத்த பிள்ளை அரசே –
திரு காப்பு சாத்த ஷாந்தி ரசம்-ஒன்பதையும் -ரஷை தான் திருக்காப்பு -பூரணமான ரஷை –
சேஷிக்கு அதிசயம் விளைத்தல் -சைதன்ய விசேஷம் –
பான்மையன் -பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -ஒன்பதையும் இட்டு ரஷை –
ஒன்றும் பாராதவனை அவாப்த சமஸ்த காமன் -ஒன்றும் பாராது -அவனை பிரித்து இரண்டு அர்த்தம்
ஆக்ஜா கைங்கர்யம் முக்கியம் கிரிசைகள் -பான்மையன் ச்வாபம் -நித்ய நைமித்திய கர்மங்கள் விடாமல் –
பரகத அதிசய -ஆதாநேசய-உபாதயத்வ யஸ்ய ஸ்வரூபம் – பர சேஷி -வர்ணாஸ்ரம தர்மங்கள் உடன் கூடிய
-உபாசனம் வேண்டும் -இங்கு தான் சாரா மனிசரை சாரா மனிசரை சேரேன்
பிறங்கிய சீர் சேர்ந்தவரை சேருவேன்
இரண்டு negativu சொல்லி -மற்று ஓர் தெய்வம் இருப்பார் உடன் ஒற்றிலேன் போலே –
47
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -மதி விகர்ப்பால் பிணங்கும் சமயம் பல பல -திரு விருத்தம்
முறையால் வணங்கின நான் மறையாளர்கள் இருந்தனர் தில்லையில் -முன்பு சபா பதி
48
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து -வைஷ்ணவர்கள் கூட –
சூத்திர காரரே பாஹ்ய குத்ருஷ்டிகள் -அப்பொழுதே உண்டே இவர்கள்
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மயிலை -அனைவரும் ஸ்திரீகள் பர்ரதந்திரமே ஸ்வாபம்
பண்டு அரங்கனருக்கு  துழாய் மாலை முடி சூடி கொடுத்த மாதே -ஆண்டாள் -தேசிகன் –
49
தொல் அருள் குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது

பாரார்த்த்யம் அறிய பண்ணி –

யானே என் தனதே போய் யானும் நீ என் உடை,மையும் நீ உணர்ந்து
அன்று நான் பிறந்திலன் பிறந்த பின் மறந்திலேன்
கொள்ளாமல் போகாது -அத்யாபயந்தி
கூடல் பதிகம் -பெரி ஆழ்வார் சம்பந்தம் சொல்ல வில்லை
கண்ணன்  என்னும் கரும் தெய்வம்-அவனுக்கே அற்று -இம்மை பிறவி செய்யாதே –
ஆச்சர்ய நிஷ்டை -அருளிய தொல் அருள் -இதையே மனனம் செய்த மா முனி
50
துலா மாசம் பேய் ஆழ்வார் நிறுத்து வைத்தது போல் -தேசிகன் –
சக்கரத்தான் தாள் நமக்கு சார்வு –
51
வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா -தன்மை
கண்ண மங்கை -சொல்லி
சாரம் பூர்வம் -பிரணவம் சாரத்வம் போலே சமஸ்தானம் கொண்ட பாஞ்ச சன்யம்

சப்தத்தாலும் -உருவத்தாலும் சாரம் போலே –

சொல் ஆழி வெண் சங்கே -ஆண்டாளும்
மணியை வானவர் கண்ணனை –
கண்ணா -தலைவன் நிர்வாகன் -அறிவு புகட்டி –
ஞானம் ஸ்வரூபம் ரூபம் குணா விபவம் விபூதி காட்டி -ஞானம் புகட்டி ரஷகன் சேஷி ஆத்மா சரீரம் பாவம்
உபாயம் உபேயம் -அனைத்தையும் காட்டி -உன் தனக்கும் குரிப்பாகில் கற்கலாம் –
கற்கலாம் திரு செவி சாத்தலாம் -கலை பரவும் தனி யானை
துருவனுக்கும் சங்கு தீண்டி நல் ஞானம் அளித்தது
பீதக வாடை பிரானார் பிரதம குரு -குறிப்பாகில் திரு உள்ளம் –ஆகில் –

யானைக்கும் அவனுக்கும் சாம்யம் –

பெரும் புறக் கடலை -விசாலம்-கடலும் புறமும் விசாலம்-
அடல் ஏற்றினை -செருக்கு உடைய -நிரந்குச ஸ்வா தன்ரியம் கொண்டவன்
பெண்ணை யானை -மிதுனம் –
எண்ணில்-அசந்கேயமான -முனிவர்க்கு அருள் தரும்
பத்தர் ஆவி-பக்தர்க்கு ஆவி-பக்தர் இவனுக்கு ஆவி – ஞானி ஆத்மைவ மேமதம் –மம ஆத்மா -பிரிய மனம் இன்றி
நித்திலத் தொத்து முத்து குவியல்-நிரதிசய கொள்ளக் குறை இலன் வேண்டிற்று எல்லாம் அளிக்கும் மணி வண்ணன் –

52

அரும்பு யுவா குமார -அலரை -த்யானம் செய்பவர்களுக்கு –
அமுதம் பொதியும் சுவை கரும்பினை-கனியை -உபாயம் உபேயம்-கரும்பும் கனியும் –
பெரியது சத் இருப்பது பிரமம் -க்ருபா சமுத்ரம் -விசிஷ்ட அத்வைதம்-கடல்-பெரும் புறம் வைத்து
சித் அசித் விசிஷ்ட -நிர் குணம் இல்லை –
திருக் கண்ண மங்கை -ஒரே திவ்ய தேசம் மிதுன பெயர் விளை நிலம் –

53

நீலன்-கலி கருமை நீலன் தனக்கு –
நான்கு விதம் -காக்கும் கண்ணன் உடையவன் காப்பான்
முனிய வேண்டாமே உடம்பு பகுதியில் வாசி பார்க்க வில்லையே நாம் –
மிதுனம் இருப்பதால் -நிச்சயம் காப்பான் –
அடைதல் -ஞானம் கத்யர்த்தா புத்யர்த்தா
எய்தற்கு அரிய மறைகளை –
54
பொலிந்து நின்ற பிரான்-ஸ்திர பிரதிஷ்டன் சர்வச்மாத்பரன் -சலிக்காமல் உபகாரம் செய்யும் பிரான் –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –
பெரியவர் -மதுர கவி–ஸ்ரீ ஆண்டாள் -பூதம் எதீந்த்ரர் பாஷ்ய காரர் – மிஸ்ரான்-மதுர கவி -அவயவங்கள்
55
உறு பெரு -செல்வம் -தந்தை தாய் அனைத்துக்கும் அந்வயம் –
மாதா பிதா -நம் ஆழ்வார் விஷயம் ஆள வந்தார்
அபிம்தன தன்ஜயம் – அப்பு இந்தனம் -தனம்-சரீரம் -பயன் அற்றது -வரதராஜ -தேசிகன்-இது உறு பெரும் செல்வம்
தனஞ்சய நிவர்தனம்-கோவர்த்தனம் -உபாதனம் அபாதனம் –
வரவாறு ஒன்றும் -வாழ்வு இனிதாய் -உரு மாறி தானே இருந்தான் -ஆயன்-
அளவிறந்த அந்தாதி ஆயிரம்-கல்யாண குணங்கள் -அளவு இன்றி

56

த்வத் ப்ராப்ய த்வமேவ -சாதனம் அவனை அடைய அவனே வழி -இதை சொல்லவே அருளி செயல்-
சம்சார நிவர்தக திரு மந்த்ரம் உபதேசித்த ஆசார்யர் மூலம் –
யானே என் தனதே இருந்த நிலை மாறி
யானும் நீ என் உடைமையும் நீ –
சீர் தொடை ஆயிரம் -மாறன் சீர் என்றும் திரு வாய் மொழியும் சீரும்
பர பக்தி பர ஞானம் பரம பக்தி -ஆழ்வாருக்கு
வகுளாபிராமம் ராமானுசன் -அவருக்கு அனுஜன் –
ஓடித் திரியும் யோகிகள் முதல் ஆழ்வார் -இடை கலி இருந்த இடத்தில் சேவை
திர்ஹன் இருப்பிடம் அழைக்கப்பட்டு -அடுத்து சேவை சாதிக்க
ஆழ்வார் சொன்ன படி இருந்ததை காட்டி -அர்ச்சாவதார சமாதி கடந்து
அதிலே இருந்து அழகை காட்டி ஆள கொண்ட தொண்டர் அடி பொடி ஆழ்வார்
கர்ம ஆராதனம் பொய்கை நீர் வேண்டுமே பொய்கை ஆழ்வார் முதலில் சொல்லி -தேவ அர்ப்பணம் வந்தோம் –
அடுத்து -இதயத்து இருள் கெட இறை -உடையவன் காட்டி -அடுத்து சொல்லி -நாராயணன் -பர்யந்தம்
அடுத்து மா மலராள் தன்னோடு மாயன்-திருமால் காண்பித்த –
சாஸ்திரம் தான் -அனுபவித்து அருளி செயல்-
சீரிய நான் மறை செம்பொருளை செம் தமிழால்  அளித்த பாண் பெருமாள்-
இடம் கொண்ட கீர்த்தி -உலகு வைத்து எடுத்த பக்கம்-புலவர் புகழ் கோலால் அளக்க -கற்று தெளிந்து
இனி அறிந்தேன் -காரணம் நீ கற்றவை நீ-தேறின பொருள் பரமத நிரசன பூர்வகமாக அருளியவர் –
சரீரம் ஆத்மா உடன் அவனை அணைந்து இருக்க வேண்டுமே அவன் என்று அறிந்த பின் –
தோளில் மாலை சரீர பிரத்யுக்தம் செம் தமிழ் மாலை ஆத்மா -விட்டு பிரியாமல் –
உற்றமும் உன் அடியார்க்கு அடிமை கொல்லி காவலன் -ஆழ்வாருக்கு   விசெஷணம் இங்கே சொல்ல வில்லை –
உயிர் கொல்லி அஹங்காரதிகள் கொன்று பாகவத நிஷ்டை அருளியவர் -அவர்களுக்கு வாரம் கொடுத்த
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என் ஆவதே –
கர்ம நிஷ்டையுடன் பல்லாண்டு காப்பு -இடுவது -பெரி ஆழ்வார் நிஷ்டை சொல்லி
ஆண்டாள்-
விசிஷ்ட அத்வைதம் காட்டிய கண்ண மங்கை நின்றான் நீலன் –
மிக்க வேதத்தின் உல் பொருள் நிறுத்தினான்
‘திருவாய் மொழியே தாரக போஷாக போக்யங்கள் –
57
ஆரப் பொழில் சந்தன மரங்கள் சூழ்ந்த -கோதா ஸ்துதி ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன வல்லி
கோல் தேடி ஓடும் – -ஹரி சந்தன மரம் சுத்தி உள்ள கொடி –
மாக வைகுந்தம் ஏகம் என்னுமே  ஆகம் சேர் -நர சிங்கமதம் ஆகி –
அவனை காண ஏகம் என்னும் -இரும் தமிழ் நூல் புலவன் –
ஒன்பது நரசிம்கர் மட்டுமே சிந்தனை பண்ணி –
இரும் தமிழ் சாரம் -நவ வித புக்தி -கற்றவர் – ஈரத் தமிழ் இசை உணர்ந்தோர் க்கு இனியவர் –
58
கல்பக கொடியாக ஆக்கக் கூடியவர் நம்மையும்
பிராட்டி அவனுக்கு போல் ஆரப் பொழில்
செய்த வேள்வியர் வையத்து  தேவராக -வாழ்வாராக ஆக்கி வைத்து –
திருவாய் மொழி இசை உணர்ந்த பெரியவர் சீரை பயின்று உய்யும்  சீலம் கொள் நாத முனி
நெஞ்சால் வாரிப் பருகும் இங்கு
திரு மழிசை -ஆழ்வார் இணை அடி -ஸ்ரீ பாஷ்யம் அருளி
பாண் பெருமாள் -சென்னிக்கு -பிரணவ -அகில புவன –உக்தம்-சமஞ்சசம் –
59
ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகம் – 8-  திரு மந்த்ரம்
25 த்வயம் 32 சரம ஸ்லோகம் அதனால்-
சதுச்லோகி -பிரம மீமாம்சம் 4 அத்யாயம் பிரமத்வமும் பிராட்டி மூலம் தான்
காரணத்வம்-விரோதி புற மத கண்டனம் -உபாயம் உபேயம்-
பிரேம பிரகர்ஷம் இயற்க்கை நாத முனிகளுக்கு -அதை பார்த்து அருள் பண்ணு ஆள வந்தார் –
60
நன் நெறியை அவர்க்கு  உரைத்த உய்யக்கொண்டார் -தேசிகன்
தூய நெறி -பிரபத்தி
யோக சாஸ்திரம் குருகை காவல் அப்பன் -பக்தி சாஸ்திரம் -அது நெறி இது தூய நெறி
தை புஷ்யம் வர நாள் குறித்து –
தூயோமாய் வந்து தூ மலர் தூவி தொழுது –தூய நெறி
உள்ளம் உடல்  தூய்மை இரண்டும்
வாயினால் பாடி சரீர சுத்தி
மனோ வாக் காயம் மூன்றும் சுத்தம்
உள்ள தூய்மை முக்கியம்-
மனத்திலோர் தூய்மை இல்லை-
ஆழியை அரங்க மாலை -அழுக்கு உடம்பு எச்சில் வாயால்-தூய்மை இல் தொண்டனேன் –
மனசால் அடிமை -தொண்டன் -சொல்லினேன் தொல்லை நாமம் –
மகா விசுவாசம் பூர்வகமாக வேண்டுமே –
யஸ்ய பிரசாதய கலையா – வரதனை சரண் அடைந்து -ஆள வந்தார்  எம்பெருமானாரை கடாஷிக்க வந்த பொழுது
சரம ஸ்லோகம் காட்டிய அந்த யமுனை துறைவன்
அருளிய தூய நெறியை இந்த யமுனை துறைவன் ஆள வந்தார்
எம்பெருமானாருக்கு காட்ட –
61
92-29
பாவினால்  இன் சொல் பன் மலர் கொண்டு -த்வயம் -அஷ்டாஷரம் வேத சாம்யம் –
த்வயம் அனைவருக்கும் அதிகாரம்
93-35
100-
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ .திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —