ஸ்ரீ திருக் கச்சி நம்பி –18-படிகள் / ஸ்ரீ எம்பார் /ஸ்ரீ முதலி யாண்டான் – ஸ்ரீ ஸூ க்திகள்-உபதேச முத்துக்கள் –

ஸ்ரீ திருக்கச்சி  நம்பி -18 படிக்கட்டுகள் –

1-சம்சாரம் பீஜம்  நசிக்க வேண்டும்
2-அஹங்காரம் மமகாரம் தொலைந்து
3-தேகாத்ம அபிமானம் தொலைந்து
4-ஆத்ம ஞானம் பிறந்து
5-ஐஸ்வர்ய போகாதி உபேஷை பிறந்து
6- பகவத் ப்ரேமம் பிறந்து
7-விஷயாந்தரம் ருசி ஒழிந்து
8-பாரதந்த்ர்யம் ஞானம் பிறந்து
9-ராக த்வேஷாதிகள்  தொலைந்து
10-ஸ்ரீ வைஷ்ணவம்  பிறந்ததும் –
11-சாத்விக பரிக்ரகம் -ரஜோ தமோ குணம் ஜெயித்து
சாத்விகர் -பகவத் பக்தி உக்கும் சோறு அனைத்தும் கண்ணன்
12–பாகவத் பரிக்ரகம்
13-பகவத் பரிக்ரகம் -இப்பொழுது தான் கண் வைத்து கடாஷித்து
14-அநந்ய பிரயோஜனர்   -ஆக்கி அருளுகிறான் –
15-அனன்யார்க சேஷ பூதன் ஆக வேண்டும் -ஆண்டான் அடிமை -அதுவே பிரயோஜனம் அறிந்து –
ஆத்மா ஸ்வரூபம் சேஷத்வம்
பரகத அதிசய -அவன் சிரிப்பே
16-அநந்ய சரண்யன் ஆகி -அவனை பற்றி
திரு மந்த்ரார்தம் அறிந்து
அனன்யார்க சேஷ பூதன்
அவன் திருவடிகளே உபாயம்
அவனே பிரயோஜனம்
ஒழிவில் காலம்
17-அதிகாரி யோக்கியம் -பிறக்கும் -தகுதி திரு மந்த்ரம் பெற யோக்யதை
18–அதிகாரி புருஷனுக்கு திரு மந்த்ரம் கை கூடும் வேதத்தின் சுருக்காய்
வியாதி துர்பிஷை பஞ்சம் இல்லாமல்

————————————————————————————————-

ஸ்ரீ எம்பெருமானார்
அவரை காத்துக் கொடுத்த கோவிந்தர் -எம்பெருமானார் -எம்பார்
உள்ளம் கை நாயனார்
வித்த மாட்டுக்கு புல்லிடுவார் இல்லை –

பதச்சாயா
தண்டம்
பவித்ரம்
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுககர்களே-பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்கள்

உய்ய ஒரே வழி உடையவர் பாதங்களே-

1-சரீர அவதானத்திலே மோஷம்
2-அதுவும் அவனாலே பேறு என்று இருக்கை
3-தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து
4-சகவாசம் வருந்தியும் தவிர்ந்து
5-திவ்ய தேச பிரவணராய் கைங்கர்யம்
6-அனுகூல சங்கல்பம்
7-பகவத பாகவத  அசஹ்யா அபச்சாரம் தவிர்ந்து
8-இருக்கும் நாள் ஆழ்வார் அருளிச் செயல் அனுபவம் – சகவாசம்
9-ஆசார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருக்கை
10-ஆச்சார்ய கைங்கர்யம் செய்த  நாள் உகந்து இழந்த நாள்களுக்கு வருந்தி கால ஷேபம் செய்து இருக்கை

முதல் வார்த்தை —
எம்பெருமான் அருளையே நோக்கி இருக்க வேண்டும்
பேற்றுக்கு துவரிக்கவும் வேணும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –திருவாய் -8–5–2-/–
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய் –7–2–1-/
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய் -4–7–10-

இரண்டாம் வார்த்தை –
அப் பேறும் அவனாலே என்று இருக்க வேணும்
-அதாவது
-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் –5–8–3-
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –பெரியாழ்வார் –3–3-
யானே நீ என் உடைமையும் நீயே –திருவாய் -2–9–7-
இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால்– திருவிருத்தம் –62-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு ஒன்றையே நினைந்து தேவதாந்த்ர பஜனம் இல்லாமல் –

மறந்தும் புறம் தொழா மாந்தர்–நான்முகன் -68-
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளின் கீழ் வாழ்ச்சி –திருவாய் -3–2–1-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலா மகள் போல் –பெருமாள் -5-2-

நான்காம் வார்த்தை –
தேவதாந்த்ர பஜனம் செய்பவர் ஸஹவாசம் வருந்தியும் கை விடுதல்

எண்ணாதே இருப்பாரை இமைப் பொழுதும் எண்ணோமே –பெரிய திரு -2- 6-1-
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே –பெரிய திரு -11-6–7-

ஐந்தாம் வார்த்தை –
உகந்து அருளினை திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து கைங்கர்யம் செய்வது

நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் –நாச் -11–5-
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே –பெருமாள் -4–10-

ஆறாம் வார்த்தை –
அனுகூல்ய சங்கல்பனாய் இருக்கை -சர்வ ரக்ஷகன் தன் பேறாக

நிர்ஹேதுகமாக ரஷிப்பான் என்கிற திட விசுவாசம் உடையவனாய் இருக்கை

ஏழாம் வார்த்தை –
ப்ராதிகூல்ய வர்ஜனம் -பகவத் அபசாரம் பாகவத அபசாரம் அஸஹ்ய அபசாரம்-காம க்ரோதம் –
அகங்கார மமகாரங்கள் இல்லாமல் இருக்கை –

எட்டாம் வார்த்தை –
அருளிச் செயல்களின் ஈரச் சொற்களை சதா அனுசந்தித்து நெஞ்சம் நெகிழ்க்கை

ஓவாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளும் –சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் தத்துறுமாகில் அவை எனக்கு பட்டினி நாளே –என்றும்
உன்னை வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது-நான்முகன் -63-

ஒன்பதாம் வார்த்தை –
அருளிச் செயல்களில் பிரவணராய் இருப்பாரோடு ஸஹவாசம் செய்கை

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்
தொண்டீர் எல்லோரும் வாரீர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ /
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலோமே-

பத்தாம் வார்த்தை –
ஆச்சார்யர் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வான் போலேயும்-எச்சான் பருத்தி கொல்லை அம்மாள் என்ற

அடியவரை அநாதரித்ததால் உடையவர் உதாசீனப் படுத்த தவறை உணர்ந்து திருந்தினானே –
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருக்கை –

———————————————————————————————–

ஸ்ரீ முதலி யாண்டான் -வார்த்தைகள்
1-சீதை பிராட்டி இளைய பெருமாள் மேல் சொல்லிய வார்த்தையால் பட்ட பிரிவை நினைப்பது –
பாகவத அபசாரம் கூடாதே காட்டி அருளி
பாகவதர் காலிலே விழுந்து போக்கி கொள்ள -அம்பரீஷன் வ்ருத்தாந்தம்
பாகவத அபசாரம் பொறாமையாலே ஆனைத் தொழில்கள்
விளைந்த சீற்றம் விண் வெதும்ப
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு-
ஸ்ரீ நர சிம்ஹம் -ஸ்ரீ ராகவ சிம்ஹம் -ஸ்ரீ கேசவ சிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்தர  சிம்ஹம் –
திருப்பாண் ஆழ்வார் –தத் விஷயம் -ததீய விஷயத்தில் பண்ணும் அபசாரம் திரு வடியில் நினைவை அகற்ற வைக்கும்

2-பிராட்டிக்கு அசோக வனம் போலே பிரகிருதி சம்பந்தமான தேகம்

3-பிராட்டிக்கு தந்த -மூலாதிகள் -தர்ஜன பந்தநாதிகள் –ராஷசிகள் கொடுத்தால் -போலே
நமக்கு புத்திர பித்ராதிகள்-
அல்லிக் கமலக் கண்ணனை –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே-கொண்ட பெண்டிர் -திரிஜடை நல்லவள் உண்டே

4-பிராட்டிக்கு மாரீச தர்சனம் போலே இவனுக்கு விஷய தர்சனம்
சிறிய அபசாரம் இது -பகவத் அபசாரம்
அம்மான் இருக்க அம்மானைக் கேட்டாளே

5-பிராட்டி திருவடியைக் கண்டது போலே இவனுக்கு ஆச்சார்ய சம்பந்தம்-
தேசிகன் -உப்புக்கடல் -சம்சார கடல்/ராவணன் -மனஸ்/பத்து தலை -கர்ம ஞான இந்த்ரியங்கள்/
மறந்த உறவை சம்பந்தம் நினைவு காட்டி -வியாபாரி பிள்ளை கதை
அவ்வானவர் மவ்வானவர் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார்

6-பிராட்டிக்கு திருவடி ஸ்ரீ ராம குணங்கள் காட்டியது போல்
ஸ்ரீ இராமாயண புராண ரத்னங்கள் அருளிச் செயல் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ கதிகள் காட்டி அருளுவார் –
புராண ரத்னம் விஷ்ணு புராணம்

7-ஸ்ரீ முத்தரை கணை யாழி கொடுத்து காட்டியது போலே –
ஆச்சார்யர் சங்க சக்கர லாஞ்சனம்-

வரவு சொல்லி -அருணோதயம் சூர்யோதயம் -யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
74 சிம்ஹாதிபதிகள்
வேத கால பழக்கம் -வரை முறை செய்து ஸ்தாபித்து அருளினார்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறியில் இட்டு -பெரியாழ்வார்

8-எட்டு எழுத்து மந்த்ரம் -சூடா மணி -பல சிஷ்யர்களுக்கு உபதேசித்து
மந்திர ராஜா

9-பிராட்டிக்கு -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மகளார் திரிஜடை போலே
பாகவத சஹாவாசம் போலே -சொத்து ஸ்வாமி அடைய நினைப்பவர்

அந்தமில் பேரின்பத்து அடியவர்
மெய்யடியார் ஈட்டம் கண்டிடக் கூடல்
சம்சார விஜ வருஷம் பகவன் பக்தி பாகவத பக்தி
கேசவ பக்தி இரண்டாம் பஷம் எம்பெருமானார்
போதயந்த பரஸ்பரம் துஷ்யந்த ச ரமஸ்ய-மத் சித்த மத் கத பிராண
அரங்கன் கோயில் –சேறு

10-பிராட்டிக்கு விரோதி ராவண கும்ப கர்ணாதிகள்  முடித்து சேர்த்து அருளியது போலே-
நம்மையும் பிறவி முடித்து தாள் இணையில் சேர்த்து அருளுவான்-

தேவதாந்திர  -பஜனம் தவிர்த்து
மந்த்ராந்தரங்களை மாற்றி –
பிரகிருதி சம்பந்த்தம் தொலைத்து –
உடையவன் இச் சேதனனை  திருத்தி பணி கொண்டு
நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாக நித்ய அனுபவம் செய்யும்படி அருளுகிறான் -பக்தி உழவன் -அஹம் அன்னம்

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading