ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே ||
ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக.
பராசர பட்டர் ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் நோக்குடன் அஷ்ட ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். இதுவே ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை வெளிப்படுத்த ஏடுபடுத்தப்பட்ட முதல் ப்ரபந்தம்.
இந்தப் ப்ரபந்தத்தில் உள்ள எட்டு ச்லோகங்களுடன், ப்ரபந்த கர்த்தாவான பராசர பட்டரைக் கொண்டாடி அருளப்பட்ட தனியனும் உள்ளது.
ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –
பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும்
————
அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத்
மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் |
உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ:
த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் ||–1-
உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் புரியும் விஷ்ணுவே “அ”காரத்துக்குப் பொருள்; “ம”காரப் பொருள் ஜீவன்; வியாபித்திருக்கிற இவ்வுலகம் சேதனனுக்கு உபகரணமாக அமைந்தது. “உ”காரம் இருவர்க்கும் இடையில் மற்றொருவர்க்குப் பொருந்தாத ஒரு ஸம்பந்தத்தை நியமிக்கிறது. வேத ஸாரமான மூவகைப்பட்ட இந்த ப்ரணவம் இந்தப் பொருளை விளக்குகிறது.
அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்–மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம்
சமதிசத்–தெரிவித்தது –
ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –
—————
மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||–2-
பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்
நமஸா –
நமஸ் ஆனது
பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது
கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –
புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-
ஸ்தானத ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –
கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –
பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –
கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –
இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்
ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –
நாநியோசித-
அன்யோசித ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –
————————
அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: ||-3-
நான் எம்பெருமானுக்கே உரியவன். ஆகையால் எனக்குரியனல்லன். ஆத்மாக்கள் அழிகிற பொருள்களின் திரள் இரண்டுக்கும் கதி எம்பெருமான் என்பதை நாராயண பதம் கூறுகிறது. கைங்கர்யம் உடன் பிறந்தது. கால வரையறை இன்றி எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் கைங்கர்யத்தை வலியுறுத்துகிறது.
அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
அத
அதற்க்கு மேலே
அஹம் மஹ்யம் ந –
நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-
அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
நாராயண பதம் -நாராயண பதமானது
நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
-நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-
யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
அசமி -இந்த எம்பெருமானுக்கு
காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
சர்வத்ர -எல்லா இடங்களிலும்
சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
மம-என்னுடைய
சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –
————
தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
ஆத்மத்ராணோந்முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸலோல:
சப்தம் நாராயணாக்யம் விஷய சபலதீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||-4-
பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்தச்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும்போது நாராயண என்னும் பதப்பொருள் நோக்கத்தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம்போது சதுர்த்தியின் பொருள் உணரத்தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ்விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக்கொள்ள வேண்டியது.
தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம் யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –
விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்
ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –
திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –
————
நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||-5-
இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-
——————
ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: ||–6-
பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.
ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
உலகங்களுக்கு
அதீச தயிதாம் –
சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
நித்ய அநபாயாம் –
ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
ச்ரியம்-
பெரிய பிராட்டியாரை-
சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
சம்ச்ரித்ய –
புருஷகாரமாகப் பற்றி
ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
சரண வரணத்துக்கு பாங்கான சகல குணங்களையும் யுடைய
அங்க்ரீ ஹரே –
எம்பெருமானுடைய திருவடிகளை
ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –
ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
சர்வ சேஷியான நாராயணனுக்கு
அஹம் நிர்மம-
கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
தாஸ்யம் அசேஷம் –
அசேஷம் தாஸ்யம் –
சகலவித கைங்கர்யத்தையும்
அப்ரதிஹதம் நித்யம் –
இடையூறின்றி நித்யம்
அர்த்தயே கர்த்தும் –
செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –
கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது வாக்யார்த்த பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –
————
மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன:
மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு |
த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம்
மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: ||–-7-
என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை அடைய என்னையே ரக்ஷகமாக அடைவாய். மிக துக்கத்துடன் நிச்சயித்திரு. இப்படிப்பட்ட நிச்சயத்தை உடைய உன்னை, எல்லா வகையான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான், என்னை அடைவதற்குத் தடையாக உள்ளவைகளிலிருந்து உன்னை விடுதலை அடையச் செய்வேனாக. நீ சோகிக்க வேண்டா.
மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
மத் ப்ராப்தி அர்த்ததயா –
என்னைப் பெருகைக்கு யுபாயமாக
மயா உக்தம் –
உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
சகல தர்மங்களையும் விட்டு
புந மாம் ஏகம் –
மாம் ஏகம் புன –
என் ஒருவனையே குறித்து-
மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
ஆர்த்தி மிகுந்தவனாய்
என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
குரு-
செய்வாயாக –
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –
மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
சுசம் மா க்ருதா-
துக்கம் கொள்ளாதே-
—————
நிஸ்சித்ய த்வததீநதாம் மயி ஸதா கர்மாத்யுபாயான் ஹரே:
கர்த்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதாமி து:காகுல: |
ஏதத் ஞாநமுபேயுஷோ மம புனஸ் ஸர்வாபராதக்ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோஸ்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் ஸாரதே! ||—8-
என்னிடம் உள்ள கர்மம் முதலிய உபாயங்களை எப்போதும் உன் அதீநமாகவே நிச்சயித்து, எம்பெருமானே! கர்மங்களைச் செய்யவும், விடவும் அல்லது சரணாகதி செய்வதற்கும் திறமையற்றவனாக வருந்துகிறேன். மிக வருத்தத்தால் கலங்குகிறேன். இந்த அறிவை அடைந்துள்ள எனக்கு உள்ள எல்லா வகையான குற்றங்களையும் அழித்து ரக்ஷிக்கக் கடவாய் என்பதை உனது கடைசியான வார்த்தையைக் கேட்டுத் தெளிகிறேன்.
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
கர்மாதி உபாயான் –
கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
ஹரே-
எம்பெருமானே-
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
கர்த்தும் த்யக்தும் அபி –
செய்வதற்கும் விடுவதற்கும்
பிரபத்தும் –
பிரபத்தி பண்ணுவதற்கும் –
அநலம் ஸீதாமி துக்காகுல-
அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-
ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
ஏதத் ஞானம் உபேயுஷே மம –
பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
சகல பாப நிவ்ருத்தியையும்
தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-
த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
தே சாராதே –
பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –
நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-
பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
இவ்வதிகார்க்கு யாவாஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –
———————————————————————————–
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –