Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட மந்த்ரம்–ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்-ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த –ஸ்ரீ கருட கவசம்–ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி–ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்

August 30, 2022

பாத்ர பதமா ஸகத விஷ்ணு விமலர்ஷே வேங்கட மஹீத்ரபதி தீர்த்த தின பூதே

ப்ராதுர பவஜ் ஜகதி தைத்யரிபு கண்டா ஹந்த கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா —

ஸ்ரீ ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்தோத்ரம் -ஸ்வாமி ஸ்ரீ கண்ட அவதாரம் என்பதைக் காட்டும்

——–

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மணியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————

ததஸ் ச த்வாதசே மாஸே சைத்ரே நாவமிகே திதவ்
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்ச ஸூ
க்ரஹே ஷு கர்க்கடே லக்நே வாக் பதா விந்துநா ஸஹ
ப்ரோத்யமாநே ஜகந்நாதம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌசல்யா ஜனயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம் யுதம்–ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

———-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்

கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பஷிணாம் பதே
ந போகமாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாய கஸ்ய பஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

இதி கருட ஸ்தோத்ர ஸம் பூர்ணம் –

—————

ஸ்ரீ கருட மந்த்ரம்

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

————-

ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய
பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

—————-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட கவசம்

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
நாரத ருஷி
வைநதேயோ தேவதா
அனுஷ்டுப் சந்தஸ்
மமகாரா பந்த
மோசந த்வாரா வைநதேய ப்ரீத்யர்த்தே ஜபே விநியோகே

ஸிரோ மே கருட -பாத்து லலாடம் -விநதா ஸூதா
நேத்ர து ஸ்ர்பஹா பாது கர்ணவ் பாத்து ஸூ ரார்ச்சித–1-

நாசிகாம் பாது சர்பாரிர் வதனம் விஷ்ணு வாஹந
ஸூர ஸூத அநுஜ கண்டம் புஜவ் பாத்து மஹா பலவ்–2-

ஹஸ்தவ் ககேஸ்வர பாது கராக்ரே த்வ ருணாக்ருதி
நகான் நகாயுத பாது கஷவ் புக்தி பலப்ரத–3-

ஸ்தனவ் மே பாது விஹக ஹ்ருதயம் பாது ஸர்வத
நாபிம் பாது மஹா தேஜா கடிம் பாது ஸூதா ஹர –4-

ஊரூ பாது மஹா வீரோ ஜாநு நீ சண்ட விக்ரம
ஜங்கே துண்டாயுத பாது குல்பவ் விஷ்ணு ரத ஸூதா –5-

ஸூ பர்ணா பாது மே பாதவ் தார்ஷ்ய பாதங்குலீ ததா
ரோம கூபாணி மே வீர த்வசம் பாது பயாபஹ –6-

இத்யேவம் திவ்ய கவசம் பாபக்நம் ஸர்வ காமதம
யா படேத் ப்ராத ருத்தாய விஷ சேஷம் ப்ரணச்யதி –7-

த்ரி சந்த்யம் ய படேன் நித்யம் பந்த நாத் முச்யதே நர
த்வாத ஸாஹம் படேத் யஸ்து முச்யதே ஸத்ரு பந்த நாத் –8-

ஏக வாரம் படேத் யஸ்து முச்யதே ஸர்வ கில்பிஷை
வஜ்ர பஞ்ஜர நாமேதம் கவசம்ன் பந்த மோச நம் –9-

ய படேத் பக்திமான் நித்யம் முச்யதே ஸர்வ பந்த நாத் —

இதி ஸ்ரீ கவச ஆர்ணவ நாரத ப்ரோக்தம் கருட கவசம் ஸம் பூர்ணம்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

——————-

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

ஸ்ருணு தேவி பரம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம் நாம் அஷ்டாம் சதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்

அஸ்ய ஸ்ரீ கருட நாம அஷ்டோத்தர சத திவ்ய மஹா மந்தரஸ்ய
ப்ரம்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா கருடோ தேவதா
பிரணவேதி பீஜம்
அவித்யா சக்தி வேதா பிராணா ஸ்ம்ருதி கீலகம் தத்வ ஞானம் ரூபம்
ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தம் வி நோத ஸர்வ ஆம்நாய
சதுஸ் ஷஷ்டி கலாதாநம் க்ரியா மம ஸர்வ அபீஷ்ட ஸித்த்யர்த்தே
கருட ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக அத த்யானம்-

அம்ருத கலச யுக்தம் காந்தி ஸம் பூர்ண காத்ரம்
ஸகல விபுத வந்த்யம் வேத ஸாஸ்த்ரை ரசிந்த்யம்

விவித விமல பஷைர் தூயமா நாண்ட கோளம்
ஸகல விஷ விநாஸம் சிந்தயேத் பக்ஷி ராஜம்

வைநதேய ககபதி காஸ்யபேயோ மஹா பல
தப்த காஞ்ஜன வர்ணாப ஸூ பர்ணோ ஹரி வாஹந

சந்தோ மயோ மஹா தேஜா மஹா உத்ஸாஹ க்ருபா நிதி
ப்ரஹ்மண்யோ விஷ்ணு பக்தஸ் ச குந்தேந்து தவளா நந

சக்ர பாணி தர ஸ்ரீ மான் நாகாரிர் நாக பூஷண
விஞ்ஞாநதோ விசேஷஞ்ஜோ வித்யா நிதி ரநாமய

பூதிதோ புவந த்ராதா பயஹா பக்த வத்ஸல
சத்யச் சந்தோ மஹா பக்ஷஸ் ஸூராஸூரா பூஜித

கஜபுக் கச்ச பாசீ ச தைத்ய ஹந்தா அருணா நுஜ
அம்ருதாம் சோ அம்ருத வபுஸ் ராநந்த நிதிர் அவ்யய

நிகமாத்மா நிராதாரோ நிஸ் த்ரை குண்யோ நிரஞ்ஜன
நிர் விகல்ப பரஞ்சோதி பராத்பர தர ப்ரிய

ஸூபாங்கஸ் ஸூபதஸ் ஸூர ஸூஷ்ம ரூபீ ப்ருஹத் தமஸ்
விஷாசீ விஜிதாத்மா ச விஜயோ ஜய வர்த்தந

ஜாட்யஹா ஜகத் ஈஸஸ் ச ஜநார்த்தன மஹா த்வஜ
ஜன ஸந்தாப ஸம்ச் சேத்தா ஜரா மரண வர்ஜித

கல்யாணத கலாதீந கலா தர ஸமப்ரப
சோமபா ஸூர ஸங்கேசோ யஞ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந

மஹா ஜவோ அதிகாயஸ் ச மன்மத ப்ரிய பாந்தவ
சங்க ப்ருச் சக்ர தாரீ ச பாலோ பஹு பராக்ரம

ஸூதா கும்ப தர ஸ்ரீ மான் துரா தர்ஷோ அமராரிஹா
வஜ்ராங்கோ வரதோ வந்த்யோ வாயு வேகோ வரப்ரதா

விநதா நந்தக ஸ்ரீ மான் விஜி தாராதி சங்குல
பத தவ்ரிஷட்ட ஸர்வேச பாபஹா பாச மோசந

அக்னிஜிஜ் ஜய நிர்க்கோஷ ஜெகதாஹ்லாத காரகா
வக்ர நாஸஸ் ஸூ வக்த்ரஸ் ச மாரக்நோ மத பஞ்ஜந

காலஞ்ஞ கமலேஷ் டச்ச கலி தோஷ நிவாரண
வித் யுந்நிபோ விசாலாங்கோ விநதா தாஸ்ய மோசந

ஸோம பாத்மா த்ரி வ்ருந் மூர்த்தா பூமி காயத்ரி லோசநா
சாம காந ரத ஸ்ரக்வீ ஸ்வச் சந்த கதிரக்ரணீ

இதீதம் பரமம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் வைநதேயாய நம
ஓம் ககபதயே நம
ஓம் காஸ்யபேயாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் தப்த காஞ்ஜன வர்ணாபாய நம
ஓம் ஸூபர்ணாய நம
ஓம் ஹரி வாஹநாய நம
ஓம் சந்தோ மயாய நம
ஓம் மஹா தேஜஸே நம
ஓம் மஹா உத்ஸாஹாய நம

ஓம் க்ருபா நிதயே நம
ஓம் ப்ரஹ்மண்யாய நம
ஓம் விஷ்ணு பக்தாய நம
ஓம் குந்தேந்து தவளா நநயாய நம
ஓம் சக்ர பாணி தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் நாகாரயே நம
ஓம் நாக பூஷணாயா நம
ஓம் விஞ்ஞாநதாய நம
ஓம் விசேஷஞ்ஞாய நம

ஓம் வித்யா நிதயே நம
ஓம் அநாமயாய நம
ஓம் பூதிதாய நம
ஓம் புவந த்ராத்ரே நம
ஓம் பயக்நே நம
ஓம் பக்த வத்ஸலாய நம
ஓம் சத்யச் சந்தஸே நம
ஓம் மஹா பஷாய நம
ஓம் ஸூராஸூரா பூஜிதாய நம
ஓம் கஜபுஜே நம

ஓம் கச்ச பாசிநே நம
ஓம் தைத்ய ஹந்த்ரே நம
ஓம் அருணா நுஜாய நம
ஓம் அம்ருதாம்சுவே நம
ஓம் அம்ருத வபுஷே நம
ஓம் ஆநந்த நிதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் நிகமாத்மநே நம
ஓம் நிராதாராய நம
ஓம் நிஸ் த்ரை குண்யாய நம

ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் நிர் விகல்பாய நம
ஓம் பரஸ்மை ஜோதிஷே நம
ஓம் பராத்பர தர ப்ரியாய நம
ஓம் ஸூபாங்காய நம
ஓம் ஸூபதாய நம
ஓம் ஸூராய நம
ஓம் ஸூஷ்ம ரூபீணே நம
ஓம் ப்ருஹத் தமாய நம
ஓம் விஷாசிநே நம

ஓம் விஜிதாத்மநே நம
ஓம் விஜயாய நம
ஓம் ஜய வர்த்தநாய நம
ஓம் ஜாட்யஹ்நே நம
ஓம் ஜகத் ஈஸாய நம
ஓம் ஜநார்த்தன மஹா த்வஜாய நம
ஓம் ஜன ஸந்தாப ஸம்ச் சேத்ரே நம
ஓம் ஜரா மரண வர்ஜிதாய நம
ஓம் கல்யாணதாய நம
ஓம் கலாதீதாய நம

ஓம் கலா தர ஸமப்ரபாய நம
ஓம் சோமபே நம
ஓம் ஸூர ஸங்கேசாய நம
ஓம் யஞ்ஞாங்காய நம
ஓம் யஞ்ஞ வாஹநாயா நம
ஓம் மஹா ஜவாய நம
ஓம் அதிகாயாய நம
ஓம் மன்மத ப்ரிய பாந்தவாய நம
ஓம் சங்க ப்ருதே நம
ஓம் சக்ர தாரிணே நம

ஓம் பாலாய நம
ஓம் பஹு பராக்ரமாய நம
ஓம் ஸூதா கும்ப தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் துரா தர்ஷாய நம
ஓம் அமராரிக்நே நம
ஓம் வஜ்ராங்காய நம
ஓம் வரதாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் வாயு வேகாய நம

ஓம் வர ப்ரதாய நம
ஓம் விநதா நந்தகாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் விஜி தாராதி சங்குலாய நம
ஓம் பத தவ்ரிஷட்டாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் பாபக்நே நம
ஓம் பாச மோசநாய நம
ஓம் அக்னிஜிதே நம
ஓம் ஜய நிர்க்கோஷாய நம

ஓம் ஜெகதாஹ்லாத காரகாய நம
ஓம் வக்ர நாஸாய நம
ஓம் ஸூ வக்த்ராய நம
ஓம் மாரக்சாய நம
ஓம் மத பஞ்ஜநாய நம
ஓம் காலஞ்ஞாய நம
ஓம் கமலேஷ்டாய நம
ஓம் கலி தோஷ நிவாரணாய நம
ஓம் வித் யுந்நிபாய நம
ஓம் விசாலாங்காய நம
ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம
ஓம் ஸோம பாத்மநே நம
ஓம் த்ரி வ்ருந் மூர்த்நே நம
ஓம் பூமி காயத்ரி லோசநாய நம
ஓம் சாம காந ரதாய நம
ஓம் ஸ்ரக்விநே நம
ஓம் ஸ்வச் சந்த கதயே நம
ஓம் அக்ரண்யே நம

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சதா நாமாவளி ஸமாப்தம்
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————————

ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்-

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா விஷ்ணுர் கருடா தேவதா
ஓம் பீஜம் -வித்யா சக்தி -ஸ்வாஹா
கீலகம் -கருட ப்ரஸாத ஸித்த்யர்த்தே
ஜபே விநியோக

த்யானம்

ஆகுஞ்ச்ய ஸ்வயம பரம் ப்ரவிசார்ய பாதம் திர்யங்முகம் சலமசர்க்க விவ்ருத்த சங்கம்

அந்யோன்ய கட்டி தகரம் கலசப்தமோச முட்டீய மாந மநிசம் ஸ்மர துக்க சாந்த்யை–1-

மூர்த்தா நம் கருட பாத்து லலாடம் விநதா ஸூதா
நயநே காச்யப பாது ப்ருவவ் புஜக நாஸந–2-

கர்ணவ் பாது ஸூ பர்ணோ மே கபாலம் புஜ காதிப
நாஸி காம் பாது மே தார்ஷ்ய கருத்மான் வதனம் மம –3-

ரஸ நாம் பாது வேதாத்மா தச நாத் தைத்ய ஸூதந
ஓஷ்டவ் விஷ்ணு ரத பாது புஜவ் மே போகி பூஷண -4-

–பாது கரவ் கச்சப பஷண
–ரக்நிஜ பாது நகான் நக முகாயுத –5-

—ஹ்ருதயம் கேசவ த்வஜ
மத்யம் பாது விஷ ஹர –6-

குஹ்யம் குஹ்யார்த்த வேதீ ச பாது மே பச்சிமம் விபு
ஊரு ஸாஷ்ட புஜ பாது ஜாநுநீ சங்க சக்ர ப்ருத் –7-

வக்ர நாஸஸ் ததா ஜங்கே சரணவ் ஸூர பூஜித
ஸர்வாங்க மம்ருதாங்கோ மே பாது பக்த ஜன ப்ரிய –8-

புரத பாது மே வீர பச்சாத் பாது மஹா பல
தக்ஷிணம் பாது பார்ஸ்வம் மே மஹா காய விபீஷண –9-

பார்ஸ்வே முத்தர மவ்யக்ர பாதூர்த்வம் பாப நாஸந
அதஸ்தா தம்ருதா ஹர்த்தா பாது ஸர்வத்ர ஸர்வதா –10-

அஷ்டாபிர் போகிவர்யைர் த்ருத வர மணிபிர் பூஷிதம் சாத கும்பச்
சாயாபிர் தேஹ பாபிர் திவஸ சத கரம் த்ராகி வாதீப யந்தம்

சங்கம் சக்ரம் கரைஸ் ஸ்வைர் ததத மநு பமம் புஸ்தகம் ஞான முத்ராம்
வந்தே வேதாந்த தத்வம் ஸகல விஷ ஹரம் ஸர்வதா வைநதேயம் –11-

பல ஸ்ருதி

இதீதம் பரமம் குஹ்யம் ஸர்வ அபீஷ்ட ப்ரதாயகம்
காருடன் கவசம் கௌரி ஸமஸ்த விஷ நாஸநம் –12

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –32– தாரிகாவின் மூன்று நிலைகள் —

August 2, 2022

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட்பாயாக –

யா ஹி ஏஷா பரமா வித்யா தாரிகா பாவ தாரிணீ
ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் சேதி தஸ்யா ரூப த்ரயம் ய ஸ்ருணு –1-

சக்தியின் மூன்று நிலைகளான ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ப்பாயாக
இது உயர்ந்த தாரிகா என்னும் மந்திரமாகும் -இது உபாஸகனைக் காப்பதாகும் –

பஞ்ச வர்ணம் சதுர் வர்ணம் இதி ஸ்தூலத் மகம் வபுஸ்
த்ரி வர்ணா ஸூஷ்ம ஸம்ஜ்ஞா மே பரா விஷ்ணு மயீ ஸ்திதா –2-

ஸ்தூல வடிவமானது -ஐந்து அல்லது நான்கு ஒலிகளைக் கொண்டதாக உள்ளது இது ஹ்ரீம் என்பதாகும்
ஸூஷ்ம நிலையானது மூன்று ஒலிகளைக் கொண்டதாகும் -இது ஈம் என்பதாகும்
பரம நிலையானது விஷ்ணு என்னும் ஒலியைக் கொண்டதாகும் இது ஈ என்பதாகும் –

இமாஸ்திஸ்ரோ ஹி அவஸ்தா மே ப்ரத்யேகம் து த்ரிதா த்ரிதா
ஸ்தூலே து யா பராவஸ்தா பரமாத்மாஸ்ரயா து ஸா –3-
அசேஷ புவந ஆதார விஷ்ணு வ்யாபி சமாஸ்ரயா
போக்த்ரு போக்யாத்மிகா சேயம் தஸ்யா ரூபம் நிபோத மே –4-

எனது இந்த ஒவ்வொரு நிலையும் மூன்றாய்ப் பிரிக்கப் படுகின்றன
ஸ்தூலத்தில் உள்ள பரம நிலையானது
அசேஷ புவன ஆதரம் -ர
விஷ்ணு -ஈ
மற்றும் வ்யாபின் ஆகியவற்றுடன் இணைந்த பரமாத்மன் -ஹ
என்ற ஒலியைக் கொண்டதாகும்
இதுவே ஹ்ரீம் என்கிறதுகாக்கிறது
இந்த நிலையானது அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது

அதன் ரூபத்தை அடுத்து நான் வர்ணிக்கக் கேட்ப்பாயாக –

அசேஷ புவன ஆதார நிலய வ்யாபி ஜன்மநா
பரமாத்மாதி கேநைவ லலாட தடமேயுஷா –5-
ஆக்ரம்ய வைஷ்ணவம் ரூபம் ஸ்வே புனஸ் ப்ரதி திஷ்டதி
தார காரண நாதேந சோபமாநா ஹரி ப்ரியா –6-

ஸ்ரீ ஹரியின் பிரியையாக உள்ளவள் நான்
சஹஸ்ரார சக்ரம் எனப்படும்நெற்றிப்பகுதியின் பின்புறம் உள்ளாள்
இவள் அசேஷ புவன ஆதரம் -வ்யாபின் -பரமாத்மன் -ஆகிய ஒலிகளில் புறப்பட்டு
விஷ்ணு ரூபம் அடைந்து
அதன் பின்னர் தனக்கு உரிய ரூபம் எடுக்கிறாள்
இந்த ரூபமானது தாரா வெளிப்படும் நாதத்துடன் கூடியதாக உள்ளது –

போக்த்ரு போக்யாதிகம் ஸர்வம் புவனம் பிப்ரதீதியா
வ்யாபிநம் ஸர்வதோ தேவீ பரமாத்மாநம் ஆஸ்ரிதா –7-

போக்தா போக உபகரணங்கள் நிறைந்த இந்த உலகை தாரிகா தேவி தனது ஞானத்தால் சூழ்ந்த படி
பரமாத்வாவிடம் அண்டிய படி உள்ளாள்

தாவத்தயா ஸ்திதா விஷ்ணு ரூபா ஸ்தூலா கதி பரா
பஞ்ச க்ருத்ய கரீ சக்தி த்ரிவித ஐஸ்வர்ய ப்ரும்ஹிதா –8–
பிராணயந்தி ஸ்ரியா தேவம் ஜ்ரும்பா மாணோத் அதி பரபம்
ஆச்ரித்ய ஹி அநலம் பவமியம் ஸூஷ்மா கதிர் மதா–9-

அந்த தாரிகாதேவி ஸ்தூல நிலையில் விஷ்ணு ரூபம் கொண்டு அதிலேயே நிலைக்கிறாள்
ஸூஷ்ம நிலையிலே
ஸ்ருஷ்ட்டி முதலான ஐந்து செயல்களை செய்தபடி மூன்று வித ஐஸ்வர்யங்களுடன்
சமுத்திரம் போன்று ஓங்கி க்ரியா சக்தியின் அக்னி ரூபம் அண்டுகிறாள்

ஸ்ருஷ்ட்யாதிகம் விதாயாத வ்யோமஸ்தாம் பரமாஸ்திதா
ஸர்வ ஆச்சர்ய கரீ தேவீ ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தக்கரணம் –10-
ஸூர்யம் ஸமாஸ்ரிதா விஷ்ணும் கல யந்தீ ஜகத் ஸ்திதம்
கால பாவக தேஜோபி ஸ்தூல அஸ்தூல மயாத்துதா –11-

இப்படி ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உயர்ந்த நிலையில் உள்ளவளும் வ்யோமத்தில் -ம் -உள்ளவளும்
கால அக்னியின் -ர-துணையுடன் ஸூர்யன் -ஹ -விஷ்ணு -ஈ -ஆகிய ரூபங்களால் ஜகாத்தை நிலை பெறச் செய்கிறாள் –

கததா கத யஸ்திஸ்ரஸ் ஸ்தூலய மம வாஸவ
ஸூஷ்மா யாஸ்து கதீஸ் ஸ்திரஸ் ஸ்ருணு வ்ருத்ர நிஷுதந -12-

இப்படியாக எனது தாரகை நிலையுடைய மூன்று ஸ்தூலங்கள் குறித்துக் கூறப்பட்டன
வ்ருத்ரன் என்னும் அசுரனை அழித்தவனே -அடுத்து மூன்று ஸூஷ்ம நிலைகளைப் பற்றிக் கேள்

அகால கலாந ஸேயம் ஸூஷ்மா து பரமேஸ்வரீ
வ்யாபிநம் பரமாத்மா நம் ஸ்ரயந்தீ வர்த்ததே த்ருவா –13-

பரமேஸ்வரியின் ஸூஷ்ம ரூபமானது எப்போதும் நிலையாக –
வ்யாபிந் பரமாத்மா வின் அக்ஷரங்களில் உள்ளன
அதாவது ஹம்
இந்த நிலையானது காலத்திலேயே கட்டுப்படாததாகும் –

சுத்தோ வர்க்கஸ் தத அசுத்தோ த்வி விதம் ஸ்ருஜ்யம் உச்யதே
சுத்த இதரே ஸ்தித ஸ்தூலா சுத்தே ஸூஷ்மா ப்ரதிஷ்டிதா –14-

ஸ்ருஷ்டிக்கப்படும் அனைத்தும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரண்டு விதங்கள் –
ஸ்தூல ரூபம் அசுத்தத்தை உள்ளடக்கியும் ஸூஷ்ம ரூபம் சுத்தத்தை உள்ளடக்கியும் இருக்கும் –

திஸ்ரஸ் அப்யாஸாம் கதீ ஸம்யக் ஸ்தூலாயா இவ லக்ஷ்யேத்
பரா யா மே தனு சக்ர தஸ்யா ரூபம் நிஸாமய –15-

தாரிகையின் ஸ்தூல நிலைகள் போன்றே இந்த மூன்று ஸூஷ்ம நிலைகளும் தெளிவாகப் புலப்படுகின்றன
அடுத்து தாரிகையின் உயர்ந்த ரூபம் பற்றிக் கேள்

ஸர்வ வ்யாப்தி மதீ திவ்யா நிஷ்கலா ஸா நிரஞ்சநா
சா பரா மன்மயீ சக்தி கதிதா விஷ்ணு சம்ஜ்ஞயா –16-

அவள் எங்கும் நிறைந்தவளாகவும் திவ்யமாகவும் தோஷம் அற்றவளாகவும் உள்ளாள்
இந்த உயர்ந்த சக்தியான அவள் என்னை ஆத்மாவாகக் கொண்டவளாக
விஷ்ணு என்று அழைக்கப் படுகிறாள் -அதாவது ஈ –

ஏஷா ஸா வைஷ்ணவீ சத்தா ஸா ஏஷா அஹந்தா ஹரேர் மதா
ஏஷா ஸா யோகிநாம் நிஷ்டா ஸ ஏஷா சாங்யாத்மநாம் கதி –17-

அவளே விஷ்ணுவின் இருப்பாக உள்ளாள் -அவளே ஹரியின் நான் என்னும் நிலை
அனைத்து யோகிகளுக்கும் இவளே த்யான விஷயம்
சாங்க்ய -ஞான -நிலையின் கதியாக அவளே உள்ளாள் –

இயம் ஸா பரமா மூர்த்தி இயம் ஸா பரமா கதி
சக்தி குண்டலிநீ ச ஆத்யா ப்ரமரீ யோக தாயிகா –18-
அநா ஹதா ஹி ஆகோஷா ச நிர் மர்யாதா நதோத் கதா
ஸப்த ப்ரஹ்ம ததா சக்திர் மாத்ருகா யோநி உத்தமா –19-
காயத்ரீ ச கலா கௌரீ சசீ தேவீ ஸரஸ்வதீ
வ்ருஷாகபாயீ ஸத்யா ச ப்ராண பத்நீ யசஸ்விநீ –20-
இந்த்ர பத்நீ மஹாதேநு அதிதி தேவ நந்திநீ
ருத்ராணாம் ஐநநீ வஸூநாம் து ஹிதா ததா –21-
ஆதித்யா நாம் ஸ்வஸா நாபி அம்ருத தஸ்ய த்ருதி பரா
இடா ரதி ப்ரியா காரா கருதாத்ரீ மஹீ யஸீ –22-
மஹீ ச விஸ்ரு திஸ் சைவ த்ரயீ கௌஸ் ப்ரண வஸ்தலா
சக்திச்ச ப்ரக்ருதிச்சைவ மஹா ராஜ்ஜீ பயஸ்விநீ –23-
தாரா சீதா ததா ஸ்ரீஸ் ச காம வத்ஸா பிரியவ்ரதா
தருணீ ச வராரோஹ நிரூபா ரூப ஸாலி நீ –24-
அம்பிகா ஸூந்தரீ ஜ்யேஷ்டா வாமா கோரா மநோ மயீ
ஸித்தா ஸிந்தாந்திகா யோகா யோகிநீ யோக பாவிநீ –25-
ஏவ மாதீநி நாமானி ஸாஸ்த்ரே ஸாஸ்த்ரே மநீஷிபி
கதிதாநி ரஹஸ்யாநி ஸக்தே ஸித்தாந்த பாரகை –26-

அவளே உயர்ந்த ரூபமாகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியாகவும் உள்ளாள் –
சக்தி -குண்டலிநீ -ஆத்யா -ப்ரஹ்மரீ -யோக தாயிகா -அநாஹதா -அகோஷா -நிர்மர்யாதா -நதோத்கதா-
ஸப்த ப்ரஹ்மா -சக்திர் மாத்ருகா யோநி -உத்தமா -காயத்ரீ -கலா -கௌரீ -ஸசீ -தேவீ -ஸரஸ்வதீ –
வ்ருஷா கபாயீ -ஸத்யா -ப்ராண பத்நீ -யசஸ்விநீ -இந்த்ர பத்நீ -மஹா நேநு -அதிதி -தேவ நந்திநீ –
ருத்ரர்கள் மற்றும் வஸூ க்களுடைய தாய் -ஹிதா -ஆதித்யர்களுடைய ஸஹோதரி -அம்ருதத்தின் நாபி –
த்ருதி -இடா -ரதி -உயர்ந்த கருதாத்ரீ -மஹீ -விஸ்ருதி -த்ரயீ -கோ -ப்ரணவத்ஸலா -சக்தி -ப்ரக்ருதி –
மஹா ராஜ்ஜீ -பயஸ்விநீ -தாரா -ஸீதா -ஸ்ரீ -காம வத்ஸா -ப்ரியவ்ரதா -தருணீ -வராரோஹா -நிரூபா –
ரூபஸாலிநீ -அம்பிகா -ஸூ ந்தரீ -ஜ்யேஷ்டா -வாமா -கோரா -மநோ மயீ -ஸித்தா -சிந்தாந்திகா –
யோகா -யோகிநீ -யோக பாவி நீ -போன்ற பலவும்
அந்த சக்தியின் பல ரஹஸ்யப் பெயர்களாக பல்வேறு சாஸ்திரங்களில்
பல சான்றோர்களாலே கூறப்பட்டுள்ளன

ச ஏஷா சக்தி பரா திவ்யா த்ரிதா ரூபை அவஸ்திதா
ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந த்ரைதம் ஏதத் ப்ரதர்ச்யதே –27-

அந்த சக்தியானவள் மூன்று நிலைகளில் உள்ளாள் –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் உயர்ந்ததாகவும் உள்ள அவளுடைய
மூன்று வடிவங்கள் உனக்கு இப்போது கூறப்படுகின்றன –

அஸ்யா ஸ்வரூபம் ஈ ப்ரோக்தா சா அத்ரே தாவ திஷ்டதே
அப்ரமேய அதி ரூபேண தஸ்யா வ்யாக்யாம் இமாம் ஸ்ருணு –28-

ஈ என்னும் அக்ஷரமானது அவளுடைய ஸ்வரூபமாக உள்ளது
அதுவும் மூன்று விதங்களில் உள்ளது
அதன் உன்னதமான -அப்ரமேய -அதாவது அகார -வடிவத்தை இப்போது
நான் விளக்கக் கேட்ப்பாயாக

ஷாட் குண்யம் யத் பரம ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்யயம்
சங்க்ருதாகில பேதம் தத் ஏகம் ஏவ யதா ததா –29-
அப்ரமேயாக்யயா தேவஸ் ததா யோகி ப்ரீர்யதே
வ்யாப்ய வ்யாபக பேதோ வா ஸ்ருஸ்ஜ்ய ஸ்ருஷ்டி விதாபி வா –30-
ந ததான்ய ப்ரமேயத்வம் ந கிஞ்சித் அஸ்ய வித்யதே
ததா ஸூந்யம் அவிகாரை ப்ரஸூப்தாம் இவ ஸர்வத–31-
ஷாட் குண்யம் ப்ரஹ்ம ஸம்ஸ்திதா விஷ்ணு ஸம்ஜ்ஞயா
அதரங்கார்ண வாகாரா சக்தி சக்தி மதோர் கதி -32-

பர ப்ரஹ்மமானது ஆறு குணங்களுடன் கூடியவனும்
எப்போதும் உள்ளவனுமாகிய வாஸூ தேவன்
அனைத்து பேதங்களையும் ஒன்றாகத் திரட்டி தன்னுள் அடக்குகிறான்
இத்தகைய திவ்யமான ரூபமே யோகிகளால் அப்ரமேயம் எனப்படுகிறது
அத்தகைய நிலையில் -பரவப்படும் பொருள் -பரவப்பட்ட பொருள் -என்கிற வேறுபாடோ
படைக்கப்பட்ட பொருள் -படைக்கின்ற பொருள் -என்கிற வேறுபாடோ இல்லை
அந்த நிலையில் அந்த வஸ்துவை அறிய இயலாது
ஆறு குணங்களுடன் கூடிய அந்த ப்ரஹ்மமானது ஆழ்ந்த உரக்க நிலையில் உள்ளதாக
ஸூ ன்யமாகவே அனைவராலும் உணரப்படுகிறது
அப்போது தாரிகா -விஷ்ணுவின் பெயரைத் தரித்தவளாக அலையற்ற சமுத்திரம் போன்று
சக்தியைக் கொண்ட வஸ்துவின் சக்தியாக அறியப்படுகிறான் –

ததா யதா புநர் ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்ரணம்
உன் மிஷத் யாத்ம சங்கல்பாத் ததா ப்ரதம உச்யதே –33-

வாஸூ தேவன் என அழைக்கப்படும் அந்தத் தூய்மையான ப்ரஹ்மமானது
தன்னுடைய ஸங்கல்பம் காரணமாகவே மீண்டும் விழித்து எழுகிறது -இது பிரதமம் எனப்படும்

பிரததே ஹி யதா ப்ரஹ்ம ஸூத்த அஸூத் தாக்ய வர்த்மநா
மாயா நாம ததா த்வேஷா ப்ரஹ்ம ஸங்கல்ப ரூபிணீ –34-

அந்தப் ப்ரஹ்மம் ஸூத்தம் அஸூத்தம் -என்பதான ஸ்ருஷ்டியில் -தன்னை விரித்துக் கொள்ளும் போது
அந்தப் ப்ரஹ்மத்தின் சங்கல்பத்துக்கு நிகராக உள்ள சக்தியானது மாயா எனப்படுகிறாள்

சங்கர்ஷணாதி ஷித் யந்தஸ் தஸ்யா கர்பம் அவஸ்திதஸ்
யதா புநஸ் பரம் ப்ரஹ்ம ஸ்வ இச்சா ஸம்பாவதிதம் பிருதக்–35-
வியாப்ய வியாபக பேதேந ஸத்வி தீயம் அவஸ்திதம்
பஞ்ச பிந்துஸ் ததா தேவீ பஞ்ச க்ருத்ய விதாயி நீ –36-

ஸங்கர்ஷணன் தொடக்கமாக புல் பூண்டு முதலிய அனைத்து ஸ்ருஷ்டிகளும் அவளுடைய கர்ப்பத்தில் உள்ளன
ஒரு கட்டத்தில் ப்ரஹ்மமானது தனது இச்சையால்
வியாபிக்கும் பொருள் என்றும் வியாபிக்கப்படும் பொருள் என்றும் இரண்டாகப் பிரிகிறது
அப்போது ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களைச் செய்யும் தேவியானவள் பஞ்ச பிந்து என்று அழைக்கப் படுகிறாள்

ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களாவன -படைத்தல் காத்தல் அழித்தல் மயக்குதல் மற்றும் கடாக்ஷித்தல்

பராய இதி தே ப்ரோக்தோ மம தன்வா கதிஸ் த்ரயீ
ரூபம் ரூபம் விபஜ்யைஷா தத் தத் தத் வார்ண பேதி நீ –37-

இப்படியாக உள்ள எனது உயர்ந்த நிலை குறித்து உனக்கு உரைக்கப் பட்டது
அது பலவிதமான ரூபங்களை எடுப்பதாக உள்ளது
அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரத்தை -அதாவது
க தொடக்கமாக உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தை குறிப்பதாக வேறுபாட்டுடன் உள்ளது –

தத் தத் வாசகதாம் நீதா ஸ்வ காமாஜ் ஜகதீ தநு
தேஷு தேஷு ஹி தத் வேஷு ஸ்வாத்ம பூதா வதிஷ்டதே –38-

அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரமும் குறிக்கின்ற ஜகத்தின்
பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாகவும் உள்ளது
இப்படியாக ஒவ்வொரு தத்துவமும் எனது ஒவ்வொரு ரூபத்தைக் கொண்டதாகவே உள்ளது –

மத் அம்ச ஸூஷ்ம ரூபோ யோ மூட அக்னிரிவ தாரு ஷு
தத் தத் ரூப மநு ப்ராப்தா சேவ நீ நாம ஸாஸ்வதீ –39-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்திற்கான ரூபங்களை எடுத்த பின்னர்
எனது ஸூஷ்ம ரூபங்கள் அந்த அந்த அக்ஷரத்தில் நித்தியமாக மறைந்து உள்ளன
அதாவது விறகுக்கட்டையில் அக்னி எவ்வாறு மறைந்து உள்ளதோ அதை போன்று ஆகும்

தத் தத் வர்ணோ பரா கேண தத் தத் வியக்தி வபுஸ் ஸ்வயம்
அதி தைவத பாவேந தத்ர யோம்ச பராத்மக –40-

வைஷ்ணவ சக்தி ரூபோ மே நியச்சன்ன வதிஷ்டதே
தத் தத் வாசகதாம் யாதி தேவீ சேயம நஸ்வரீ –41-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்தின் அதிபதி தேவதையாக எனது பல்வேறு ரூபங்கள் உள்ளன
இதன் மூலம் விஷ்ணுவின் சக்தியாக உள்ள எனது உயர்ந்த நிலையானது
ஒவ்வொரு அக்ஷரத்தின் ஒலியிலும் அமைந்து உள்ளது
மேலும் அந்த அந்த அக்ஷரத்தின் ஓசை மற்றும் அமைப்பிற்கான அதிபதி தேவதையாகவும் உள்ளது –

அசேஷ புவநாதாரா யோகிநீ பரமேஸ்வரீ
கேவலஸ் தத்துவ வர்ணஸ்து த்ரை லோக்யை வர்யதாம் கத –42-

அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாக உள்ளவளும் -பரமேஸ்வரீயுமாகிய யோகிநீ -என்னும் நான்
அந்த அந்த வர்ணங்களுக்கு -அக்ஷரங்களுக்கு -அடிப்படையாக அமைகிறேன்

தத் தத் ஸ்தூல மயம் தத்துவம் மதீயம் சக்தி ஸாஸ்வதம்
தத் தத் பாவாபிதாநேந தன் நியந்த்ருத்வ தர்சதே–43-

அவள் அனைத்து தூய்மையான தத்துவங்களை வெளிப்படுத்தும் அக்ஷரங்களால் உணர்த்தப்படுகிறாள்
மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது எப்போதும் உள்ள சக்தியே யாகும்
இது ஏன் என்றால் ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது நிலையையே வெளிப்படுத்துகின்றன –
அவற்றில் நானே ஆதிக்யம் செலுத்துகிறேன்

இயமே வேஸ்வரா தேவீ த்விதா ஸக்தா வதிஷ்டிதே
ஷாதி சாந்தம் புரா யத்தே தர்சிதம் ப்ரஹ்ம பஞ்சகம் –44-
ஷ இத்யாதி ஸ்வரூபேண த்ரைலோக்ய ஐஸ்வர்யதாம் கதா
ஸ்வரூபே நியமே சைவ த்வேதா ஸேயமவஸ்திதா –45–

ஒவ்வொரு வஸ்துவையும் நியமிக்கும் தேவியானவள் அவற்றுடன் இரண்டு முறையான உறவு முறையில் உள்ளாள்
அதாவது
நான் முன்பே உனக்கு கூறியதான
ஷ தொடங்கி ஸ முடிய உள்ள ஐந்து ப்ரஹ்மத்திலும் அவள் உள்ளாள்
இவ்விதமாக மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
இரண்டு விதமான நிலையில் உள்ளாள்
அனைத்து வஸ்துக்களின் இருப்பாகவும்
அவற்றை நியமிப்பவளாகவும் உள்ளாள் –

தாரணா நாம் சதுஷ் கம் யத் வாதி யாந்த முதீ ரிதம்
தத்ர ஸூஷ்ம பர பாவே ஸ்தி தேயம் பூர்வவத் த்விதா –46-
த்ரைய வஸ்தோ மகார அயம் ப்ரோக்த சைதன்ய வாசக
தத்ராபி ஸூஷ்ம பரயோர்த்வ தேயம் தசயோர் த்வயோ -47-

வ காரம் தொடங்கி யகாரம் முடிய உள்ளதும் -முன்பு கூறப்பட்டதும் நான்கு தாரணைகளாக உள்ள சப்தங்கள்
முன்பு கூறப்பட்டதான தாரிகாவின் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகளைக் கொண்டதாக

அவளுடைய இரண்டு செயல்களை நிறைவேற்றுவதாக உள்ளன
சைதன்யத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பதாக ம அக்ஷரம் உள்ளதை முன்பே -கூறப்பட்டது
இதில் அவளுடைய ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த இரண்டு நிலைகளும் உள்ளாய்

மாயா ப்ரஸூதி த்ரை குண்ய ரூபோ யோ பார்ண உச்யதே
ஈ நாம பூர்வ வத் தேவீ தத்ர அபி தசயோர் த்வயோ -48

ப காரம் மூன்று தன்மைகளைக் கொண்ட மாயையைக் குறிக்கும்
மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளில் உள்ள தாரிகா ஈ என்னும் அஷரத்தால் கூறப்படுபவளாகவும் உள்ளாள்

புத்தி அஹங்கார மநஸாம் யத் தூபம் பாதிகம் த்ரயம்
தத்ர அபி பூர்வவத் த்வேதா தேவீ யம் தசயோர்த்வயோ –49-

பகாரம் -புத்தி அஹங்காரம் மனம் – ஆகிய வற்றைக் குறிக்கும் -அதில் அவள் இந்த இரண்டு நிலைகளில் உள்ளாள் –

நாதிகே ணாதிகே சைவ ததேந்த்ரிய குணத்வயே
தசயோ ஸூஷ்ம பர யோரியம் த்வேதா வதிஷ்டதே –50-

நா -ணா -இவற்றால் குறிக்கப்படும் இந்த்ரியங்களில் தேவியானவள் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகள் ஆகியவற்றில் நிலையாக உள்ளாள்

ஞாதிகே ஙதிகே சைவ ஸ்தூல ஸூஷ்ம ஸ்வரூபகே
விபூதி பஞ்சகே தேவீ தசயோ பூர்வ வத் ஸ்திதா –51-

ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உள்ள இரண்டு ஐந்து விபூதிகளும் -தன்மாத்ரைகளும் பூதங்களும்
ஞா -ங-எழுத்துக்களால் குறிக்கப்பட்டு அவற்றிலும் அந்த இரண்டு நிலைகளிலும் தேவீ உள்ளாள்-

சப்தத்யா விததா பேதை ஸூத்த அஸூத்த மயாத்வநி
நடீவ ஸ்வய மயீ சக்திர் பிபர்தி பஹுதா வபு –52-

ஈ -என்னும் எழுத்தால் குறிக்கப் படுபவளும்
ஒரு நடிகையைப் போன்று பல்வேறு பாத்திரங்களை ஏற்பவளும்
ஸூத்த அஸூத்த பொருள்களில் எழுபது விதமான தத்துவங்களில் உள்ளாள்

இயத் வஸ்த்ருதிம் ஆபந் நாமீ மிமாம் பரமேஸ்வரீம்
விசிந்த்ய பரமம் யாதி பதம் விஷ்ணோ ஸ்தானம் –53-

இப்படிப்பட்ட பரமேஸ்வரியை ஆராதிப்பவன் உயர்ந்த நிலையான விஷ்ணுவின் இடத்தை அடைகிறான்

யதா யத்ர கதா ஸேயம் ஸூத்த அஸூத்தே ததாத்வநி
தத்ர தத்ர த்வஜ ஹதீ விஷ்ணோ ஸம்பந்தமீ ஸ்திதா –54-

இப்படி பட்ட ஈ அஷரத்தால் குறிக்கப்படும் அந்த சக்தியானவள்-ஸூத்த அஸூத்த ஸ்ருஷ்டிகளில் ஈடுபட்டாலும்
தனக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் பிரியாமல் என்றுமே சேர்ந்தே உள்ளாள்

ஏக த்வி த்ரயாதி யோகேந ஸ்வர வ்யஞ்ஜந ரூஷிதா
ஸூத்த அஸூத் தாதவ வரகஸ்தா நாநா பேதோப பாதித–55-

அவள் பல ஸ்ருஷ்டிகளிலும் நிறைந்தவளாக -ஓன்று இரண்டு மூன்று என்று பல ஸ்வரங்கள் மற்றும்
வியஞ்ஜன வடிவங்களில் இருப்பவளாக பலவித பேதங்களுடன் உள்ளாள்-

ஜடோ பராக ஹீநயா அஸ்ய ஏவ புந ஸ் த்ரிதா
ஜேய ஸ்தூலாதி ரூபேண விபேதஸ் தத்த்வ சிந்தகை –56-

மேலும் உள்ளதான ஜ -ட -ஆகியவற்றுடன் சம்பந்தம் இல்லாததான அவளுடைய மூன்றுவிதமான பிரிவுகளை –
தத்வத்தைக் குறித்துச் சிந்தித்தபடி உள்ளவர்கள் அறிய வேண்டும்-

ஸ்ருஷ்டிக்ருத் ஸம்யுதா ஸ்தூலா ஸூஷ்மா வ்யாமேச ஸம்யுதா
நிரஞ்ஜநா பரா சேயமீ இத்யேவ அநு ராகிணீ –57-

ஸ்ருஷ்ட்டிக்ருதுடன்-அத்தியாவது-ஹ்-இணைந்து உள்ள போது அவள் ஸ்தூலமான நிலையில் உள்ளாள்
வ்யாமேசத்துடன் -அதாவது ம் -இணைந்து உள்ள போது அவள் ஸூஷ்மமான நிலையில் உள்ளாள்
அவள் ஈ -என்பதுடன் இணைந்த பொழுது தோஷம் அற்ற சக்தியாக உள்ளாள்

நிஷ்கம்பா தீப லேகேவ பத்நீ விஷ்ணோரியம் பரா
ஸர்வேஷூ ஆதார பத்மேஷு நிச்சல் ஏவ அவதிஷ்டதே–58-

மஹா விஷ்ணுவின் தர்மபத்னியான அவள் ஆதார பத்மங்களிலும் அசையாத தீபம் போன்று உள்ளாள் –

ஆபஸ்தி தேசாதா மூர்த்த ப்ரஹ்மயா நமநு வ்ரதா
ஏகேயம் உஜ்ஜ்வலா தீப்தா பாவாந ச யஸஸ்விநீ –59-
ப்ரஹ்ம ரந்த்ராத் விநிஷ் க்ரந்தா மஹா பத்மமுகே யுஷீ
ஓத ப்ரோதாத்மிகா சேயம் பரமா நந்தா வர்தமநி –60-
விலாப்ய மார்த்வயம் ரூபம் அம்ருதம் ப்லாவயேந் நரம்
மந்த்ராணாம் மந் மயா நாம் ஹி மந்த்ரைர் விஷ்ணு மயை ஸஹ –61-

வயிற்றின் அடிப்பாகம் தொடங்கி தலையின் உச்சி பாகம் முடிய ப்ரஹ்மத்தின் பாதையில் செல்கிற தேஜஸ் மிக்க ஒளிர்பவளான தூய்மைப்படுத்தும் சக்தியானவள்
தலையின் உச்சியில் உள்ள திவாரம் வழியே வெளியே செல்லுகிறாள்
இவ்வாறு வெளியேறும் அவள் உயர்ந்த தாமரையை அடைகிறாள்
உயர்ந்த ஆனந்தத்தின் பாதையாக உள்ள அவள் என்னையே சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்த்ரங்களுடைய சாரமாகவும்
மஹா விஷ்ணுவை சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்திரங்களின் சாரமாகவும் உள்ளாள்
அவளே உபாசகனுடைய இறப்பை அழித்து -மீண்டும் பிறக்காமல் செய்து -அம்ருதத்தால் நனைக்கிறாள்

ஸா மே நூந மநூந ஸ்ரீ ரிதி சங்க்யா பரா ஹி யா
தே ச சங்க்யா த்வயா மந்த்ரா ஜபாத் போக அபவர்கதா –62-

ஐநூறு எண்ணிக்கைகள் கொண்டதான அந்த உயர்ந்த மந்த்ரங்கள் மிகவும் சக்தி கொண்டவை ஆகும் –
இவற்றை சாங்க்யர்களுடைய அத்வயா மந்த்ரங்களுடன் சேர்த்துக் கூறும் போது
அவை இன்பம் மற்றும் மோக்ஷத்தை அளிக்கின்றன –

அஸ்யா ஏவ பரா யாஸ்து விப்ருஷ பரிகீர்த்திதா
யதா ஹி கிரண வ்ராதம் தேஜஸ்தவம் வியாப்ய திஷ்டதி -63-

யதா ஹி பார்த்திவான் பாவான் வியாப்ய ஸ்தைர்யம் வ்யவஸ்திதம்
நாநா விபவ ஸம்ஸ்தானம் நாநா ரஸந ஸம் ஸ்திதம் -64-

பாஹ்யாமாப் யந்தரம் சைவ பாவம் ஸப்த மயம் சமம்
வ்யாப்யைவமீ ஸ்திதா தேவீ விஷ்ணு பத்நீ யஸஸ்வி நீ –65-

இந்த்ர மந்த்ரங்கள் -தேவியின் துளிகளாக வர்ணிக்கப் படுகின்றன
எவ்விதம் தேஜஸ் நிறைந்த வஸ்துவில் ஒளியானது பரவி நிற்கின்றதோ -அதே போன்று
ஈ -என்னும் அக்ஷரத்தில் உள்ளவளும் அனைத்து விபவங்களிலும் பரவி நிற்பவளுமாகிய விஷ்ணுவின் பத்னியானவள்
அந்த விபாவங்களுடைய உள் மற்றும் புற இருப்பாக ஸப்த ப்ரஹ்மத்துடன் ஒன்றியவளாக இருக்கிறாள் –

ஸ்தூல ஸூஷ்மாதி பேத அயம் யதா வத் சக்ர தர்சித
தாரி காயா இதா நீம் த்வமங்காதீநி ஸ்ருணுஷ்வ மே –66-

சக்ரனே இப்படியாக தாரிக்காவின் ஸ்தூலம் மற்றும் ஸூஷ்மம் ஆகிய பல நிலைகள் குறித்து உனக்கு நான் கூறினேன்
அடுத்து அவளுடைய அங்க மந்த்ரங்கள் குறித்து உனக்குக் கூறுகிறேன்

ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -32- அத்யாயம் -ஸம்பூர்ணம் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம

ஸ்ரீ திருப்பாவையின் ஏற்றம் –ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

July 5, 2022

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம் இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு ஆங்கு வைய முழுதும் நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே

விவாகம் அற்றவனான ஒருவன்-மூடன் – விடாய் மிகு இருக்க
தார்மிகன் ஒருவன் இளநீர் நிறைந்த தேங்காயைத் தர
அவனோ இளநீர் பருகினவன் இல்லை -அதனுள் நீர் இருப்பதையும் அறியான் –
கை நோவ அசைத்து அசைத்துப் பார்த்தானாம்
அதனுள் இளநீர் நிறைந்து இருப்பதால் தளும்ப வில்லை -ஆகவே அதனுள் ஒன்றும் இல்லையென்று வீசி எரிந்து விட்டானாம் –

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு

இந்த உவமைக்கு உப மேயம் மேலே சொல்லுகிறது
எம்பெருமான் உலகம் எங்கும் வியாபித்து -நிறைந்துள்ளன
இளநீரின் படியைக் காட்டிலும் விசேஷம் உண்டே
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் –

பாக்கியசாலிகள் அனுபவிக்கஞான ஹீனர்களோ நிரீஸ்வர வாதம் செய்து படு குழியில் வீழ்ந்து அவதிப்படுகிறார்கள்

ஆங்கு வையமுழுதும்நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை

நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே
இவர்களுக்கும் ஆண்டாளுடைய திருப்பாவையை தஞ்சமாகிறது
சர்வேஸ்வரன் உளன்
நீ அவனுக்கு அடிமை
நாராயணனே நமக்கே பறை தருவான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை –
போன்றவற்றை அருளிச் செய்து
நம்மை எடுத்து ஆண்ட ஞான நிதி அன்றோ

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-

சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் -உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே-இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா-விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

தோண்டத் தோண்ட சுரக்கும் உபநிஷத் அர்த்தங்கள் பொதிந்து அன்றோ உள்ளன
பாதங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

 

————-

ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்

ஸ்ரீ தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு ஸூஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு ஜூஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம் ததுஸ்யதாம்

யே நாரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் ஸோப சாம்யதி
அமங்கல நாம் த்ருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே–1-2-

பூஜ நீயரான ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷியே
ஏதாவது நற் கார்யங்கள் தொடங்கும் போதும்
தீய கனாக்கள் கண்ட போதும்
அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேர்ந்த போதும்
எதை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாம் ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் தொலையுமோ
கண்ட அமலங்கள் கெடுதல் விளைக்காமல் நிற்குமோ
அத்தைச் சொல்ல வேணும் என்று கேட்க

———-

புலஸ்யர் சொல்கிறார் –

புலஸ்த்ய உவாஸ
ஜ நர்த்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான் அசேஷாண் யப ஹந்தி ஸாதயத் யசேஷ கார்யாணி ச யான்யபீப்ஸதி –3-

வாரீர் மஹ ரிஷியே
ஸகல பிராணிகளுக்கும் சேஷியாய்
ஸகல ஜகத்துக்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குமவராய்
ஜனார்த்தன என்ற பேர் பெற்ற பெருமாளை
இடைவிடாது சிந்தனை செய்யும் மனிதன் எந்த வித கெடுதல்களை தவிர்த்துக் கொள்வான்
சாதித்துக் கொள்ளும் ஸகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்

ஸ்ருணுஷ்வ ச அந்யத் கததோ மாம் அகிலம் வாதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி –4-

இன்னும் யான் உரைக்கக் கேளீர் மஹா முனிவரே
ஸர்வார்த்த சித்தியைத் தரவல்லதும்
ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதுமான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ அத்தைச் சொல்கிறேன்

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்ற படி ஸர்வ சராசன்களும் யாவன் ஒருவன் இடம் பிரதிஷடை பெற்று இருக்கின்றனவோ

ஜகத் த்ரயே யோ
நல்ல கோட்ப்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணன் -என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்றின் உள்ளும் ப்ரதிஷ்டிதனாய் இரா நிற்கிறானோ

தத் புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும் உண்டே

யஸ் ஜகதஸ் ச ஹேது
ஸகல ஜகத் காரண பூதனும் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய்
வேர் முதல் வித்தாய்
உபாதான நிமித்த ஸஹ காரியாய்
சேதன அசேதன விஸிஷ்ட வேஷத்தால் உபாதான காரணமாய்
ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷத்தால் ஸஹ காரியாய்
ஸங்கல்ப விஸிஷ்ட வேஷத்தால் நிமித்த காரியாய்
ஹேது -என்கிற பதமே த்ரிவித காரணமாய் இருப்பதைக்க காட்டும்

ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச
காரண பூதன் ஒருவனாய் ரக்ஷண பூதன் வேறே ஒருவனாய் ஸம்ஹார கர்த்தா மற்று வேறு ஒருவனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹார கரனும் அவனே
ஸம்ஹரதி என்னாதே அத்தி என்றது ஸ்ருதி ஸூத்ர சாயையாலே

ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும் ஆதேய பூதனாயும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹார காரகனாயும் இரா நின்ற
ஸர்வேஸ்வரன் எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதானன் ஆக வேணும் என்றதாயிற்று

ஸர்வதா -மூன்றாம் பாதத்திலும் நான்காம் பாதத்திலும் அந்வயம்

————-

வ்யோம அம்பு வாய் வக்னி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணுதரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் சததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –6-

நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடு வானாய் -என்கிறபடி விரிந்தும்
அணோர் அணீ யான் -என்கிறபடி சுருங்கியும்
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும்
ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும் இருக்கும் பரம புருஷன் எனக்கு மங்கள்ய விருத்தியைத் தர வேணும் –

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாராய் இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய் -திரு மழிசைப்பிரான்

பாவ ஸப்தம் பதார்த்த வாசகம்-

————

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யா ததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேதுஸ் பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –7-

அநந்தாத்-அந்நதத்வமாவது பரிச்சேத ரஹிதத்வம் -த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்கிறது -தேச வஸ்து கால பரிச்சேதம்
எப்பொருளும் தானாய் -இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாத் -ஆதியும் அந்தமும் இல்லாதபோது மத்யமும் இல்லை என்பது அர்த்தாத் ஸித்தம்

ஸ ஹேது -கார்ய பதார்த்தங்களை சொல்லும்

————-

ஹிரண்ய கர்ப்ப அச்யுத ருத்ர ரூபீ ஸ்ருஜத்ய சேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –8-

நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்ட்டியையும்
ஸ்வேந ரூபேண ஸ்திதியையும் பூர்வார்த்தம் சொல்கிறது
இரண்டாம் பாதத்தில் உள்ள மூன்று கிரியா பதங்களையும் முதல் பாதத்தில் உள்ள மூன்று வியக்திகளோடே அடைவே யோஜிக்க வேணும்
ஹிரண்ய கர்ப்ப ரூபீ சந் அசேஷம் ஹந்தி ச -என்று யோஜனை

குணா க்ரணீ -இங்கு குண ஸப்தம் குணவான்களை சொல்லுகிறது -குணவான்களுக்குள்ளே தலைவன் என்றவாறு
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவனே எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதன் –

——————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதிநாம் பரமோ முனீ நாம்
பரஸ் தமஸ் தஸ்ய ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –9-

—————–

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது—-50 ச்லோகங்கள்

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ தால்ப்யர் என்கிற மஹரிஷி கேட்க,

ஸ்ரீ புலஸ்த்ய மஹரிஷி சொல்வதாக, விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது.

இது, ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தையும், அவனே ஜகத் காரணன் என்பதையும்,

அனைத்துப் பாபங்களையும் ,த்வம்சம் செய்யும் திவ்ய மங்கள தேவதை அவன் என்றும்

இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல், கலங்காப் பெருநகரான வைகுண்டத்திலும்

ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிப்பவன் என்றும், உபதேசிக்கிறது—-

பகவானின்

ஸ்ரீ வராஹாவதாரம்,

ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம்

ஸ்ரீ வாமனாவதாரம்

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்

ஸ்ரீ பரசுராமாவதாரம்

ஸ்ரீ ராமாவதாரம்

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்

இவற்றை

ஓரிரு ச்லோகங்களில் சொல்லி, அப்படிப்பட்ட ”ஹரி ”

மங்களங்களை அருள்வாராக என்று வேண்டப்படுகிறது—

பல ச்ருதி –கடைசி 7 ச்லோகங்கள்

இந்த ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் என்கிற ஸ்தோத்ரம் ,

ஆண் ,பெண் , குழந்தைகள் என்கிற வித்தியாசமின்றி , தினமும் பாராயணம் செய்து,

அன்றாட வாழ்க்கையில் அல்லல் தவிர்த்து

,அனைத்து ஸௌபாக்கியங்களையும் பெற்றிட , அருமையான ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம்
—————————————–

ஸ்ரீ தால்ப்ய :——-

1 மற்றும் 2. கார்யாரம்பேஷு ஸர்வேஷு து : ஸ்வப்னேஷு ச ஸத்தம |

அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜ்ப்தவ்யம் ததுச்யதாம் ||

யே நாரம்பாச்ச ஸித்த்யந்தி து :ஸ்வப்நச்சோப சாந்தயே |

அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே || –

தால்ப்யர் சொல்கிறார் ———

ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் மிகப் பெரியவரே —-
கார்யங்களைத் தொடங்கும்போதும், துஸ்வப்னம் மற்றும் அமங்களம் நேரும்போது
எதை ஜபிக்க வேண்டும் ? தொடங்கும் கார்யங்கள், எதனால் இனிமையாக
நிறைவேறுகின்றன ? கெட்ட கனவுகள் எதனால் பலனற்றுப் போகின்றன ?
யாம் காணுகின்ற அசுபங்களுக்குப் பரிஹாரம் எதனால் உண்டாகிறது ?

ஸ்ரீ புலஸ்த்ய :——

3. ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே |

துஷ்டாந்யசேஷாண்ய பஹந்தி ஸாதயதி அசேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி ||—-2

ஸ்ரீ புலஸ்த்யர் பதில் :—

மஹாமுனிவரே ——பிறவிச் சங்கிலியை அறுக்க வல்லவரும், எல்லா உலகங்களிமுள்ள
எல்லாப் பொருள்களுக்கும் சொந்தக்காரரும் ,மிக உயர்ந்தவரும் ஆன எம்பெருமானை
த்யானித்துக்கொண்டிருக்கும் மனுஷ்யன் , தீயவற்றை யெல்லாம் போக்கி, தான் விரும்பிச் செய்யும்
எல்லாச் செயல்களும் நற்பயன் அளிக்கும்படி , எம்பெருமானால் ,அருளப்படுகிறான்

4. ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமியத்தே த்விஜவர்ய மங்களம் |

ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி ||

ஹே –ப்ராஹ்மண ச்ரேஷ்டரே —-எது உமக்கு சுபமளிக்க வல்லதோ , எது
வேண்டிய பலன்களை யாவும் கொடுக்க வல்லதோ, எது தீவினைகள் எல்லாவற்றையும்
அழிக்க வல்லதோ, அத்தகைய ஸ்தோத்ரத்தை உமக்குச் சொல்கிறேன் —
அதை முழுவதுமாகக் கேட்பீராக

5. ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்த்ரயே யோ ஜகதச்ச ஹேது ; |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

மூன்று உலகங்களிலும் , எவர் ஜங்கம ,ஸ்தாவர ரூபங்களுக்குக் காரணமோ ,
எவரிடத்தில், இவை கீழே விழாது நிலைத்துத் தாங்கப்படுகிறதோ,
எவர் இவற்றையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, ப்ரளய சமயத்தில் , எவர் இவற்றையெல்லாம்
உணவைப்போலத் தனக்குள் ஒடுங்கும்படி செய்கிறாரோ அனைத்துப் பாபங்களையும்
போக்கும் அந்த ஹரி , மங்களங்கள் பொங்கிப் பெருக ,எனக்கு அருள்வாராக

6.வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை : விஸ்தாரவாந் யோணுதரோணு பாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் , தம்மைப்
பெருக்கிக்கொண்டவரும் , சிறிய பொருட்களிலெல்லாம் மிகச் சிறிய நுட்பமானவரும் ,
சிறிய, பெரிய என்று உள்ள அளவில்லாப் பொருட்களில் இருந்து வேறுபட்டு , தனித்
தன்மை உள்ளவருமான ஹரி எல்லாக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக
அருள்வாராக

7. யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது : பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||
||

காலம்,இடம், குணம், இவற்றாலெல்லாம் அளவிட முடியாதவரும், பிறப்பு இல்லாதவரும் ,
முடிவு இல்லாதவரும், தம்மிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லாதவரும் படைத்தல் தொழில்
செய்பவரையும் படைப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

8. ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபி ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து, உலகங்களைப் படைத்தும்,
தானே அச்யுதனாக இருந்து அவற்றையெல்லாம் காத்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாக
இருந்து, எல்லாவற்றையும் அழித்தும், முதல் குணசாலியாகவும் , அளப்பரிய ஞானம்,
படைக்கும் பொருளாக ஆகும் ஆற்றல், எல்ல உலகங்களையும் தளர்ச்சி இல்லாமல்
தாங்கும் வலிமை ,எல்லோரையும் தன இஷ்டப்படி இயக்கும் மிடுக்கு, பிற பொருள்கள் எல்லாவற்றையும்,
ஸூர்ய ஒளியில் விளக்கு பிரகாசிப்பது போல, பேரொளி உடையவரும்
குற்றம் என்பதே இல்லாதவருமான ஹரி எனக்கு எப்போதும் சுபங்கள் பெருக அருள்வாராக

9. பரஸ் ஸுராணாம் பரமோஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

தேவர்கள், அஸுரர்கள் , துறவிகள், முனிவர்கள் இப்படி எல்லாருக்குமே மிகமிக
உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

10. த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர : |
மனோபிராம :புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

எல்லாக் காலங்களிலும் தன்னையே நினைத்து குற்றமில்லா உள்ளத்தால்
சதா சிந்தனை செய்து இருப்பவர்களுக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிப்பவரும்,
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வனப்புள்ளவரும் எல்லாப் பலன்களையும்
தர வல்லவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்-ஏக ஸ்லோக ஸ்ரீ பாகவதம்-ஏக ஸ்லோக ஸ்ரீ மஹாபாரதம்–

July 2, 2022

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ஸ்ரீ ராமாயணம்

—————

ஏக ஸ்லோக ஸ்ரீ பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

 ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே ஸ்ரீ பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

———–

ஏக ஸ்லோக ஸ்ரீ மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே ஸ்ரீ மஹா பாரதம்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்தோத்திரங்கள்–ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

April 6, 2022

ஸ்ரீ வராஹ மூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது.
இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில் வாழ இயக்கம் அடைந்த
நிலையை எடுத்துக் காட்டுகிறது

——-

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்லோகம்
ஸ்ரீ வராஹ மூர்த்தி பூமியைக் காக்க எடுத்த மூன்றாவது அவதாரமான
ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு உரிய ஸ்லோகம்

ஸுத்த ஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம் – –
தயா நிதிம் தயா ஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதா பாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம்

ஸுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே,
ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே,
கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே,
ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

———–

ஸ்ரீ வராக அவதாரத்தின் கதை இதுதான்

ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர்.
அங்கு காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷி களைத் தடுத்தார்கள்.

அந்த ரிஷிகள் கோபம் அடைந்து,
“நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.

ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி,
“உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை
மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்” என்று கேட்டனர்.
ஸ்ரீ விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், “இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான்.
இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து,
பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள்” என்று கூறினார்.

அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள்.
முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.
அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து,
‘ எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று,
மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களை சிறை பிடித்தான்.
அவர்கள் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான்.
அதற்கு வருண பகவான், “ அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்து வருவார். அவரிடம் போராடு” என்று சொன்னார்.
அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.
நீர்ப் பிரளயத்தில் பூலோகம் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார்.
அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச்
சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.
இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து,
அசுர லோகத்தில் சுகமாக இருந்தான். அப்போது நாரதர் அங்கே தோன்றி,
“இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும்
பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான்.
இருவருக்கும் கடும் போர் உண்டானது.
இரண்யாட்சன் அடித்த அடியால், மகா விஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன் கதாயுதத்தால் தாக்க,
மகாவிஷ்ணு தம் இடது காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.
இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது.
இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான்.
இருவருக்கும் உக்கிரமான போர் மூண்டது. இரண்யாட்சனால் சமாளிக்க முடியவில்லை.

பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.
சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகா விஷ்ணு.
அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.
அவர்கள் அத்தனை பேரையும் வதம் செய்தார் மஹாவிஷ்ணு.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று எண்ணிய மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத்
தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான்.
அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.
இது தான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது.

2. வராகரின் பேருருவம்

திரிவிக்கிரம அவதாரத்தை விட பல மடங்கு பெரிய அவதாரம் வராக அவதாரம் என்பதை
ஒரு எளிய உதாரணத்தின் மூலம் ஆழ்வார்கள் காட்டுகின்றார்கள்.
கீழே உள்ள ஏழு உலகங்கள்,மேலே உள்ள ஏழு உலகங்கள், அதைத் தாண்டி அண்ட ஆவரணங்கள் எல்லாம்
கடந்து சென்ற அவனுடைய திருவடியை, பிரம்மன் சத்திய லோகத்தில் வணங்கி கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.
ஆனால் வராக அவதாரம் திருவிக்கிரம அவதாரம் விட பெரியது.
‘‘குரமத் யகதோ யஸ்ய மேரு கண கணாயதே” என்ற சுலோகம் வராகத்தின் பேருருவைக் கூறுகிறது
மேருமலையும் வராகத்தின் குளம்படியில் சுருண்டு தூள்தூளாக ஆகியது என்றால்
அவன் உருவத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. அத்தனை பிரம்மாண்டமானது வராகரின் பேருருவம்.

3.வேதங்களில் வராக அவதாரம்

வராக புராணம் என்பது மகா புராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும்.
இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும்
சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.
இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள்
ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வராக அவதாரத்தை பொருத்தவரை முதல் குறிப்பு வேதத்தில் சதபத பிராமணத்தில் இருக்கிறது.
நிலவுலகில் வலிமை மிக்க பன்றி ஒன்று எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து வெளிவந்ததாகவும்
அந்தப் பன்றியும் படைப்பு கடவுளான பிரஜாபதியும் ஒருவரே என்றும் சதபத பிராமணம் கூறுகின்றது.

நாராயண வல்லியில் வராக அவதாரம் மிக அருமையான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது.
அதில் பூமிப் பிராட்டியை மீட்டவுடன் வராகன் ஆனந்த சொரூபமாக இருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பகவத் சாஸ்திரத்தில் ஸ்ரீ வராக பெருமானின் உருவம் விளக்கப்படுகிறது.

‘‘விஷ்னோர் மகா வராகஸ்ய நிர்மாண மது நோச்யதே” என்கிற மந்திரத்தில்
கழுத்து வரை மனித உருவாகவும் மேலே திருமுகமண்டலம் வராக முகமாகவும்
இடது முழங்கையில் பூமிப் பிராட்டியை ஏந்திக் கொண்டும்
வலது திருக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டும்
திருமுகமண்டலம் திரும்பி தேவியின் திருமேனித் தடங்களை முகரும் படியாகவும்
திருவாழ்மார்பன் ஆகவும் திவ்ய ஆபரண பூஷிதனாகவும் கர்ப்பக்கிரகத்தில்
வராக பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் ஸ்ரீ முஷ்ணத்தில் வராகர் காட்சியளிக்கிறார்.
விஷ்ணு புராணம் வராக அவதாரத்தின் தோற்றத்தை மிக விரிவாகக் கூறுகின்றது.
விஷ்ணு புராணத்தில் இரண்யாட்சனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை
ஆனால் கடலில் பூமி மூழ்கிய விஷயமும் பகவான் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய விஷயமும்,
அப்பொழுது பூமி பிராட்டி செய்த ஸ்தோத்திரம் மற்ற தேவதைகள் கூறிய ஸ்துதிகள் கூறப்பட்டுள்ளன.

விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ வராக அவதார வைபவம்
“தஸ்ய யஜ்ஞ வரஹஸ்ய விஷ்ணோ அமிததேஜச பிரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம:”
என்று குறிப்பிடப்படுகிறது
அவர் சப்த சமுத்திரத்திலும் நிற்கும் பொழுது அவருடைய முழங்கால் அளவுக்கு கூட சமுத்திரம் இருக்கவில்லை
என்று புராணங்கள் கூறுகின்றன.
சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது
(வராகர் பூமியை துக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வேர்வை
ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது)

தன்னுடைய 100 கைகளால் ஒரு பன்றி இப்பூவுலகை மேலேதூக்கி வந்தது என்று தைத்ரீய ஆரண்யகம் குறிப்பிடுகிறது.
மகாபாரதத்திலும் மார்க்கண்டேய புராணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக பூவராகர் பெருமை பேசப்படுகிறது.

பிரம்மாண்ட புராணத்தில் ஐந்தாம் அத்தியாயம் வராக பெருமானின் பேருருவை வருணிக்கிறது.

வராக சரம ஸ்லோகம்

வைணவ சமயத்தில் மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் ஒன்று சரம ஸ்லோகம்.
அந்த சரம ஸ்லோகத்தில் மூன்று விதமான மந்திரங்கள் உண்டு.
அதில் முதன்மையான சரம ஸ்லோகம் வராக அவதாரத்தில் வராகப்பெருமாள் பூமாதேவிக்கு சொன்னது.

“ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”

அவர் சொன்ன அந்த சரம ஸ்லோகத்தின் உடைய பொருள் வராக சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸ்,
ஒரு மனிதன் நல்ல உடல்நலத்தோடு இருக்கக் கூடிய நிலையில், வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அவர் அந்திம திசையில் ,அவரால் பகவான் திருநாமமும் சொல்ல முடியாத
ஒரு நிலையை அடைந்து,,நினைவிழந்து,இருக்கும்போது,தெய்வத்தினுடைய நாமமும் சிந்தனையோ செய்யவேண்டிய
அவசியம் இல்லாதபடி நானே அவனுடைய அருகில் சென்று அவனை என்னுடைய பதத்திற்கு அழைத்துக் கொள்கிறேன்.

இதை பெரியாழ்வார் மிக அழகான பாசுரத்தில் பாடுகின்றார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்பு என்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!”

யாகங்களும் வராகனும்
வராகர் பொதுவாக ஆதி வராகர்,
யக்ஞ வராகர் மற்றும்
பிரளய வராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார்.

வராக பெருமானுக்கு உள்ள தனிச்சிறப்பு, யாகங்களைக் காப்பாற்றுகின்ற மூர்த்தி.
யாகங்கள் நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அங்கே
வராக பெருமாள் யக்ஞ வராகராய் ஆவாஹனம் ஆக வேண்டும்.
120 (10 யோசனை)கிலோ மீட்டர் அகலமும் 1200 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவராக
மலையைப் போன்ற பெரிய உருவோடு வெண்மையான கூர்மையான பற்களைக் கொண்டு
தீயைப் பொலிகின்ற ஒளியும் சூரியனைப் போல ஜொலிக்கும் கண்களும் கொண்டு விளங்கியதாக
இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வராக மூர்த்தியின் வடிவம் வேத வேள்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒப்பிடப்படுகிறது.
அவரே ஒரு வேள்விச் சாலை.
உபநிடதங்களும் அவற்றின் மறைபொருளும் அவருக்கு இருக்கை.
சூரியனும் சந்திரனும் அவரது இரு கண்கள்.
வேதத்தின் சாகைகள் அவருடைய காதணிகள்.
அவருடைய நீண்ட முகம் வேள்வியின் சுருக்
அதாவது ஆஜ்யம் விடுகின்ற கரண்டி.
அவருடைய பெருத்த ஓசை சாமவேதம்.
அவருடைய வடிவம் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த வடிவம்.
வேத மேடையே அவரது இதயம்.
சோம பானமே அவரது குருதி எப்படி வர்ணிக்கப்படுகிறது.

வராகரைப் போற்றும் துதி நூல்கள்

திருமாலை போற்றும் ஸ்ஹஸ்ரநாமாவளிகள் ஏழு பெயர்கள் வராக அவதாரம் தொடர்புடைய
திருநாமங்கள் ஆக விளங்குகின்றன.
இந்த ஏழு திருநாமங்களும் திருவுருவத்தை வர்ணிக்கின்றன.
பூமியைத் தாங்கும் பெரிய உருவத்தை உடையவன்;
பூமியைத் தாங்கும் பெரிய கொம்புகளை உடையவன்;
வராக முகத்தை உடையவன்;
பூமியை திரும்பவும் அடைந்தவன்;
பர ஞானம் இவற்றைக் கொடுப்பவன் என்று திருநாமங்கள் போற்றுகின்றன.

ஆழ்வார்கள் அனைவருமே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பொய்கை ஆழ்வார் ஆறு பாசுரங்கள், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்கள், பேயாழ்வார் ஒரு பாசுரம்,
திருமழிசையாழ்வார் ஆறு பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், குலசேகர ஆழ்வாரும் ஆண்டாளும் ஒரு பாசுரம்,
பெரியாழ்வார் ஏழு பாசுரங்கள்,திருமங்கை ஆழ்வார் 15 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்

இது தவிர ஸ்ரீ வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்தம், தசாவதார ஸ்தோத்திரம்,பூஸ்துதி, ரகசிய சிகாமணி
போன்ற நூல்களிலும் வராகப் பெருமானைப் போற்றியுள்ளார்.

இது தவிர வராக கவசம், ஸ்ரீ வராக ஸ்தோத்திரம்,வராக உபநிஷத்,
ஸ்ரீ பூவராகர் சுப்ரபாதம், பிரபத்தி, மங்களம் போன்றவை
வராக பெருமானின் பெருமையைப் போற்றும் வண்ணம் உள்ளன.

வராக தலங்கள்

பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் காஞ்சி வரதர் சந்நதியிலும்,
மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் ,
திருமலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீ வில்லிபுத்தூர், முதலிய
தளங்களிலும் வராகர் சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீ முஷ்ணம் வராகருக் கென்றே உள்ள தலம்.
அக்கால அரசர்கள் பலரும் தங்கள் ஸ்தூபிகளில் வராகர் உருவைப் பயன்படுத்தினர்.
நாணயங்கள் வராகர் பெயரால் வராகன் என்றே வழங்கப்பட்டன.
வராகி மிகிரர் என்ற பெயரில் உள்ள ரிஷி ஜோதிட சாஸ்திரத்தை வரையறை செய்து கொடுத்தார்.
அரசு முத்திரைகளில் வராகர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டன.

முஸ்தா சூரணம்

ஆச்சாரியர்கள் வராக அவதாரத்தில் மேன்மையை மிக அற்புதமாகப் பேசுகின்றார்கள்.
பகவான் அவதாரம் எடுக்கும் பொழுது அந்த அவதாரத்துக்கு ஏற்ப அத்தனை இலக்கணங்களும்
பொருந்தும் படியாக ஆகி விடுகின்றார். இதற்கு “மெய்ப்பாடு” என்று பெயர்.
வராக அவதாரத்தில் அவருடைய உணவு என்ன என்று சொன்னால்
நிலத்திலேயே அடியில் முளைக்கக் கூடிய கோரைக்கிழங்கு.

தண்ணீர் நிறைந்து உள்ள சதுப்பு நிலங்களில் உண்டாகும் இந்த கோரைக்கிழங்கு சரீர வியாதிகளைப் போக்க வல்லது.
கபம், பித்தம், ஜுரம் முதலியவை இந்த மருந்தினால் தீர்ந்துவிடும்.வராக சேத்திரம் ஆகிய ஸ்ரீ முஷ்ணத்தில்
இந்த முஸ்தா கிழங்கு சூரணத்தை பிரசாதமாகத் தருவர்.
அதனை சர்க்கரையோடு அல்லது வெல்லத்தோடு சேர்ந்து உண்டால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய
பல்வேறு விதமான நோய்களும் நீங்கிவிடும்.
ஆசாரியர்கள் இந்த கோரைக்கிழங்கை முத்தக்காசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.

சங்கல்ப மந்திரம்

நாம் தினசரி சங்கல்ப மந்திரம் சொல்கிறோம்.
அதில் வராகப் பெருமான் பற்றிய குறிப்பு வருகிறது.
‘‘துவிதீய பரார்த்தே ஸ்ரீ சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே” என்று
சங்கல்ப மந்திரம் கூறுகிறோம்.
இது கலியுகத்தின் முதல் பாதம் ஆகும்.மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.
தேவர்களுக்கு 365 நாள் ஒரு தேவ ஆண்டு. 1200 தேவ ஆண்டு கலியுகம்.

கலியுகம் ஒரு மகாயுகம்

ஆயிரம் மகாயுகம் ஒரு பிரம்மாவின் பகல். இப்பகலின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்படும்.
அப்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருக்கும்.
இரவு முடிந்த பிறகு மறுபடியும் படைப்புத் தொழில் ஆரம்பிக்கும். இது ஒரு கால சுழற்சி.
இதை நாம் ஒரு கல்பம் என்று சொல்லுகின்றோம்.
ஒரு கல்பத்தில் 12 மனுக்கள் வாழ்ந்து போவார்கள்.
ஒரு மநுவின் காலம் ஒரு மன்வந்தரம் எனப்படும் இப்பொழுது 6 மனுக்கள் போய்விட்டனர்.

ஏழாவது மனுவில் கிருத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் முடிந்து
கலியுகத்தின் முற்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த கல்பம் உண்டாகும் பொழுது தான் பகவான் வராக ரூபம் எடுத்து தண்ணீரில் இருந்து
பூமிப் பிராட்டியை மேலே கொண்டுவந்து நிலை நிறுத்தினார்.
அதனால் நாம் வாழும் கல்பம் ஸ்ரீ ஸ்வேத வராக கல்பம் எனப்படுகிறது.
இதை தினசரி சொல்லி நம்மை அறியாமலே வராகப் பெருமானை வணங்கும் பேறு நமக்குக் கிடைக்கிறது.

————-

வராஹ அவதாரம்:
தியான ஸ்லோகம்

அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந் முக்தாபம் கண்ட
தேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம் ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள்
கட்ககேடே கதாக்யாம் ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹ ரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா

————

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர |
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ||

ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்பக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||

ஸ்ரீ இராமாயண சரம ஸ்லோகம்
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே|
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம யுத்த || 18.33

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் (பகவத் கீதை)
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||18.66
—-

காஷ்ட பாஷாணங்கள் விழுந்து கிடக்கும் போது என்ன செய்வது? –
காஷ்ட என்றால் கட்டை போலும், பாஷாணம் என்றால் கல் போலும்,
நினைவு தப்பி விழுந்து கிடக்கும் நிலையில் பெருமாளை நினைக்க முடியாதே என்ன செய்வதே?

பதில்:
வராஹ சரம ஸ்லோகத்தில் இதற்கான பதில் சொல்லப்பட்டுள்ளது –
“ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்வக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||”

வராஹ பெருமாள் பூமா தேவிக்கு தானே கூறும் விளக்கம்:
என்னை பிறப்பு அற்றவனாக நன்கு உணர்ந்து, மனது நல்ல முறையிலும், உடலில் சக்தி இருக்கும்போது
1) எவன் என்னுடைய திருநாமத்தை உரக்க தினமும் சொல்லுகிறானோ
2) எவன் என்மேல் விஸ்வாசம் கொண்டு என் திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ
3) அவனது முயற்ச்சியை விட்டு என்னை மட்டுமே உபாயம் என பற்றி
என்னுடைய திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ (சரணாகதி) அவனுக்கு:
அந்திம காலத்தில் அவன் கட்டை மாதிரி கிடக்கும் போது (காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்!),
எல்லாரும் கை விட்ட நிலையில்! பெருமாள் சொல்லறார், நான் கைவிடமாட்டேன்! (அஹம் ஸ்மராமி மத்பக்தம் )

அந்த காலத்தில் என் நாமத்தை சொல்ல வில்லை என்றால் நான் அவனை கை விடுவேனா?
சரணாகதி பண்ணிய நாளிலிருந்து நினைவு தப்பும் வரை என்னை நினைத்து இருந்தான், அவனை விட்டு விடுவேனா?

சரணாகதி செய்த அடியார்(மறந்தும் புறந்தொழா மாந்தர்)என்னுடைய பக்தன், என் பெயரை சொன்னவன்,
என்னுடைய திருவடியில் சரணாகதி பண்ணினவன், அவனை நான் ஒரு நாளும் கை விட மாட்டேன்..

நானே வருவேன், என்னுடன் அர்சிராத்ரி மார்கத்தில் வழித்துனையாக (வழித்துனை பெருமாள் – திருமோகூர்)
அழைத்துக்கொண்டு வைகுந்தம் சென்று (ந்யாயாமி பரமாம் கதிம்) நித்ய கைங்கரியத்தை கொடுத்து அருளுவேன்🙏

எம்பெருமானார் திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜ பெருமாளிடம் கேட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்று –
“அந்திம காலத்தில் பெருமாளை நினைத்தால்தான் வைகுந்தம் கிட்டுமா?
தேவாதி ராஜனும் இதற்கு சரணாகதி செய்து என் மேல் திட விஸ்வாசம் கொண்டிருக்கும்
அடியார்களை கடைசி காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் வைகுந்தம் கொடுப்போம்!

இதிலிருந்து நாம் அறியும் விஷயம் என்னவென்றால்
கடைசி காலத்தில் அவர் நம்மை நினைக்க வேண்டும் (அஹம் ஸ்மராமி மத் பக்தம்) என்றால்-
சரணாகதி செய்த பின்னர் நாம் அவரை எப்பொழுதும் (நினைவு தப்பும் வரை) நினைத்து இருக்க வேண்டும்!
கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்!

———–

த்விதீ யஸ்ய பரார்த்தஸ்ய வர்த்தமானச்ய வை த்விஜ
வராஹ இதி கல்போ அயம் பிரதம பரிகீர்த்தித –1-3-28-

ப்ரஹ்மா நாராயணாக்யோ அசௌ கல்பாதௌ பகவான் யதா
ஸ ஸர்ஜ சர்வ பூதானி ததா சஷ்வ மஹா முநே –1-4-1–என்று
மைத்ரேயர் வராஹ கல்ப படைப்பைப் பற்றியும் கேட்கிறார்-

பவதோ யத் பரம் தத்தவம் தன்ன ஜா நாதி கச்சன
அவதாரேஷூ யத்ரூபம் ததர்சந்தி திவௌ கச –1-4-17-

உனது நிஜமான ஸ்வரூபத்தை யார் தான் அறிவார் -நீ லீலையாக செய்து அருளின அவதாரங்களை அன்றோ
தேவர்கள் ஆராதிக்கின்றனர் -என்றபடி

யத் கின்ஜன் மநஸா க்ராஹ்யம் யத் க்ராஹ்யம் சஷூராதிபி
புத்த்யா ஸ யத் பரிச்சேத்யம் தத் ரூபம் அகிலம் தவ –1-4-19–என்று

மனத்தாலே கிரஹிக்கப் படும் சுகாதிகளும் –கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கப் படும் ரூபம் போன்றவைகளும்
-புத்தியினால் ஆலோசிக்கப் படும் பிரமாணாந்தரங்களும் உன்னுடைய ஸ்வரூபம் அன்றோ

ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்துதிக்கின்றாள்-ஹே சம்பூர்ண ஞான மயனே –ஹே ஸ்தூல மாயனே -ஹே அவ்யயனே –
ஹே அநந்த-ஹே அவ்யக்த -ஹே வ்யக்தமய பிரபோ –
ஹே பராபர ஸ்வரூப -ஹே விச்வாத்மன் -ஹே யஜ்ஞ பதே-ஹே அநக -ஹே பிரபோ – -இத்யாதி

———————

ஸ்ரீ தைத்திரயம் –
அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே -இத்யாதி பஞ்ச பிரகார பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபம்

ஸ்ரீ வராஹ புராணம் -சாத்விக புராணங்களில் ஓன்று -24000 ஸ்லோகங்கள் கொண்டது
கைசிக மஹாத்ம்யம் இதில் உள்ளது
48 அத்யாயம் -92- ஸ்லோகங்கள் இதில் உண்டே

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்

மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57-

மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58–

538-த்ரிபத-
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

539-த்ரிதச அத்யக்ஷாய
த்ரி தச -முப்பத்து மூவர் தேவர்களுக்கும் சேவியர் இவரே
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

540- மஹா ஸ்ருங்காய
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

541–க்ருதாந்தக்ருத
ஹிரண்யாக்ஷனை நிரசித்தவர்
யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

542-மஹா வராஹாய
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-ஸ்லோகம் சொல்லுமே
மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –

—————–

ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை–3-5-5-

எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே –5-2-3-

—————————-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே––நாச்சியார் –11-8-

————————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே-பெருமாள் திருமொழி -2-3-

———–

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய் –திருச்சந்த விருத்தம்–28-

——————————

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -திருச்சந்த விருத்தம்-114-

—————————-

வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் -ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-4-

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாசசிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – (வரம் கொள்ள -)
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவாய் நினைவார் என் நாயகரே –2-6-3-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செலும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவலையம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-1-

இவள் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-2-

என் தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-3

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-4-

ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-5-

என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-6-

இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-7-

இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-8-

வன முலையாளுக்கு என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-9-

இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை –பாடல் வல்லார் பழ வினை பற்று அறுப்பாரே -2-7-10-

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –திரு வயிந்திர புரமே-3-1-1-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம வின்னகரே சேர்மினீரே -3-4-3-

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
வானும் மண்ணும் நிறையைப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்தந் தன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன்னடியார் மனத்து என்றும்
தேனாகியமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திருவுருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-

பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் -7-8-10-

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

——————————————-

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-

——–

பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரமெய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என்னருகில் இலானே –1-9-2-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே -2-8-7-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–4-5-10-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5-6-1-

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

தானே உலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே––10-5-3-

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -10-10-7-

——–

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-2-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-9-

என்னுள்ளம் ஓவாது எப்போதும் —கேழலாய் பூமி இடந்தானை ஏத்தி எழும் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-25-

இடந்தது பூமி –பேரோத வண்ணர் பெரிது –ஸ்ரீ முதல் திருவந்தாதி-39-

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் -உராய் உலகளந்த ஞான்று -வராகத்
தெயிற்றளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி -ஸ்ரீ முதல் திருவந்தாதி-84

ஊனக் குரம்பையின் உள் புக்கிருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும் ஏனத்துருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-91-

———————————————————————————–

நீ யன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே நீ யன்று உலகிடந்தாய் என்பரால்
நீ யன்று காரோதம் முன் கடைந்து பின்னடைத்தாய் மா கடலை பேரோத மேனிப்பிரான் -இரண்டாம் திருவந்தாதி–30-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும் குரா நற் செழும் போது கொண்டு வராகத்
தணி யுவன் பாதம் பணியுமவர் கண்டீர் மணியுருவம் காண்பார் மகிழ்ந்து –இரண்டாம் திருவந்தாதி-31-

மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்நெஞ்சே இரு –இரண்டாம் திருவந்தாதி–36

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து -இரண்டாம் திருவந்தாதி-47

——————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——மூன்றாம் திருவந்தாதி–45-

கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர்
மாதுகந்த மார்வதற்கு பெண்ணகலம் காதல் பெரிது –மூன்றாம் திருவந்தாதி-54

——————————————

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்—நான்முகன் திருவந்தாதி -70-

வகையால் மதியாது மண் கொண்டாய்

—————————-

நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே
பொலிந்த எமக்கு எல்லா விடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலங்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -திரு விருத்தம் -39-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும்கேழ்பவருளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -திரு விருத்தம் -45-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99-

—————————————-

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் –ஸ்ரீ திருவாசிரியம்–6-

—————————————————

யாமே யாருவினையோம் செயோம் எண் நெஞ்சினார்
தானே அனுக்கராய்ச் சார்ந்து ஒளிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு -பெரிய திருவந்தாதி -7-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடமுன் படைத்தான் என்பரால் -பாரிட
மாவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகாவாலவை -42-

—————————————–

ஏழ உலகு எயிற்றினில் கொண்டனை –திருவெழு கூற்றிருக்கை

——————————-

மன்னிவ் வகலிடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை -பெரிய திருமடல்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமா தேவிப்பிராட்டி ஸமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

March 25, 2022

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமத் வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம் —

February 24, 2022

விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியே விஷ்ணு தர்மம். விசிஷ்டாத்வைதத்தின் முக்கிய இதிகாசம் விஷ்ணு தர்மம். சதனீகர் என்னும் மன்னர் ‘பகவானை அடையும் வழி எது’ என்னும் தன் கேள்வியை செளனகர் என்னும் ரிஷியிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கமே விஷ்ணு தர்மம்.

ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம்
ஸ்ரீ தால்ப்யர் னென்கிற மகரிஷி ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி இடம் கேட்பதாக – ஸம்வாதம் -மூலமாக பிறந்த ஸ்லோகம்

தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு துஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்த்தவ்யம் தத் உச்யதாம் –1-
யேந ஆரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் சோப ஸாம்யதி
அமங்கலா நாம் திருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே –2-

ஏதாவது நற்காரியங்கள் தொடங்கும் போதும் -தீய கனாக்கள் கண்ட போதும் அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேரும் போதும்
எத்தை ஜபிக்க வேணுமோ அத்தை தேவரீர் அருள வேணும்

எத்தை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாமே ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் ஒழியுமோ
கண்ட அமலங்கள் கெடுதலை விளையாமல் போகுமோ
அத்தைச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்க

——

புலஸ்ய உவாஸ
ஜநார்தநம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான்யசேஷாண்யபஹந்தி ஸாதயத்யஸேஷ கார்யாணி ச யான்ய பீப்ஸதி –3-

சகல பிராணிகளுக்கும் சேஷியாய் -ஸகல சேதனர்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குபவராய் –
ஜனார்த்தனன் என்ற திருநாமம் கொண்ட பெருமாளை
இடைவீடு இன்றி சிந்தனை செய்யும் மனிதன் ஸகலவிதமான கெடுதல்களை தவிர்த்துக் கொள்கிறான்
சாதித்திக் கொள்ள விரும்பும் சகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்கிறான் –

———

ஸ்ருணுஷ்வ ஸான்யத் கததோ மமாகிலம் வதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் பிரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி–4-

மேலும் நான் உரைக்கக் கேளீர்
ஸர்வார்த்த ஸித்தியைத் தரவல்லதும் ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ -அது தன்னைச் சொல்லா நின்றேன் –

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

இது முதல் ஸ்தோத்ரம் தொடக்கம்
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்கிறபடியே
ஸகல சராசரங்களும் யாவன் ஒரு எம்பெருமான் பக்கலிலே ப்ரதிஷ்டிதம் பெற்று இருக்கின்றனவோ

ய ஜகத் த்ரயே
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணன் என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்று உலகினுள்ளும் பிரதிஷ்டித்தனாய் இரா நின்றானோ

யச் ச ஜகதஸ் ஹேது
ஸகல ஜகத் காரண பூதன் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -த்ரிவித காரணமும் யாவன் ஒருவனோ
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹகாரி காரணம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்

ய ஜகத் ச பாதி ச யத்தி
காரண பூதன் ஒருவனாய்
ரக்ஷக ஸம்ஹாரங்கள் வேறு ஒருவராய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கும் இவனே கர்த்தா
அத்தி -என்று ஸ்ருதி சாயையிலும் ஸூத்ர சாயையிலும் ஸம்ஹரதியைச் சொன்னவாறு
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும்
ஆதேய பூதனாயும்
தத்புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தனாயும்
இரா நின்ற ஸர்வேஸ்வரேஸ்வரன்

யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மங்கள விவ்ருத்தி ப்ரதானாக வேணும் என்றதாயிற்று
ஸர்வதா -மத்யம தீப நியாயத்தாலே மூன்றாம் பாதம் நான்காம் பாதம் இரண்டுடன் அன்வயம்

———-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணு தரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–6-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான்
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய் -என்கிறபடியே
பஞ்ச பூதங்களாக விரிந்தும்

யோ அணு தரோணு பாவாத்
அணு பாதார்த்தங்களிலும் அணுவாய்

அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும் ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும்
இருக்கும் பரம புருஷன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மாங்கள்ய விருத்தியைத் தந்து அருள வேணும்

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய்

————-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத நந்தாத் அநாதி மத்யாததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேது பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–7-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத்
அநந்தத்வமாவது -பரிச்சேத ரஹிதத்வம்-தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேத ராஹித்வத்தைச் சொல்கிறது
எப்பொருளும் தானாய் -வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாததிகம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே மத்யமும் இல்லாதவன்

ந கிஞ்சித் ஸ ஹேது ஹேது
கார்ய பதார்த்தங்களை எல்லாமே காரண பூதன்

ஸ ஹேது -பதம் கார்ய பதார்த்தங்களைச் சொல்லுகிறது —
ஹேதுவுடன் கூடியதாகில் அது கார்யமாகவேதானே இருக்க வேண்டும்

பரமேஸ்வரேஸ்வரோ –
பரமேஸ்வரன் என்ற பேர் பெற்றவனுக்கும் ஈஸ்வரனானவன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–8-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்டியும்
ருத்ரனை ஆவேசித்து ஸம்ஹாரத்தையும்
ஸ்வேந ரூபேண நின்று ரக்ஷணத்தையும்
பண்ணிப்போருவதாக ஸாஸ்த்ரம் சொல்வதையே பூர்வ அர்த்தம் சொல்லுகிறது

குணாக் ரணீர் யோ பகவான்
குண ஸப்தம் குணவான்களைச் சொல்லுகிறது –
குணவான்களுக்குள்ளே தலைவன் என்கை
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவன் என்றவாறு

ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதீநாம் பரமோ முனீ நாம்
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–9-

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தால்ப்ய மகரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திருக்கண்ண புரம்-மூலவர் உத்சவர் -த்யான ஸ்லோகார்த்தம்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

February 14, 2022

மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.-ஸ்ரீநம்மாழ்வார்

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.

‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்

இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.

கோயிலின் பெருமைகள் ;

1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே

மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.

திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்

காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது

————————

புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே

புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்

16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்

புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்

2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே

3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்

4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்

5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து

சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக

7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்

8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –

நீலாத்ரி இவ –
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்

10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்

11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்

த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு

13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்

நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்

15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்

16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்

———————-

உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்

விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –

வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது

திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே

புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –

வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –

பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்

உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –

ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –

வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்

வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –

——————————————————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்

———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

———–

திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்

பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே

திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி

————

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்

——

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

——–

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே

அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்

வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-

திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —

கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்

இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீகண்ணபுரநாயகி ஸமேத ஸ்ரீநீலவண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ -ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

January 20, 2022

ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1 ॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுல-மஹிமானமஞ்ஜனா-பா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசனோதா³ரம் ।
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥

வானர-னிகராத்⁴யக்ஷம் தா³னவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼஶம் ।
தீ³ன-ஜனாவன-தீ³க்ஷம் பவன தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-னிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா
ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம் – ஸம்பூர்ணம் ॥

————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

“வீதாகி²ல-விஷயேச்ச²ம்” –
எல்லா விஷய இச்சைகள், புலன்களுக்கு இன்பத்தை தரக் கூடிய, போகப் பொருட்கள் மேல்
இருக்கிற ஆசைகளிடமிருந்து விடுபட்டவர்.

“ஜாதாநந்தா³ஶ்ர புலகம்” –
அவர் ராம நாமத்தை ஜபிச்சு,

‘ஆனந்த அஶு’ – ஆனந்த கண்ணீர் பெருகுபவராகவும்,
‘புலகம்’னா மயிர்கூச்செரியறது. அப்படி அந்த ராம நாமத்துனால, இடையறாது ராம நாம ஜபத்துனால,
எவருக்கு கண்களில் ஆனந்த பாஷ்பமும், உடம்புல மயிர்கூச்சலும் ஏற்படறதோ, அப்படி ராம பக்தி வந்துடுத்துனா,
எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் வராமாட்டான்! அப்பா கிட்ட பிள்ளைக்கு பயம்!
எங்க காமன் இருக்கானோ, அங்க ராமர் வர மாட்டார்!
அந்த மாதிரி அந்த காம வாஸனையே இத்து போன ஒரு
‘அத்யச்ச²ம்’ –
ரொம்ப நிர்மல வடிவானவர், தூய்மையே வடிவானவர் ஹனுமார்!

“ஸீதாபதி தூ³தாத்³யம்” –
ஸீதா பதியினுடைய, ஸீதையினுடைய கணவரான ராமருடைய தூதர்.
இந்த ‘ஸீதாபதி தூ³தாத்³யம்’ங்கறது கிஷ்கிந்தா காண்டத்துல, 3வது ஸர்கத்துல மொதல்ல
ஸுக்ரீவன அனுப்ச்சு ராமர் கிட்ட ஹனுமார் வேஷம் போட்டுண்டு வரார்!
ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து நமஸ்காரம் பண்ணி, ரொம்ப அழகா பேசறார்.
“நீங்க யாரு? உங்களைப் பார்த்தா ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள்! ஆனா ரிஷிகள் மாதிரி வேஷம் போட்டுண்டு இருக்கேள்!
சுத்திமுத்தி ஏதோ தேடிண்டே வரேள். சந்த்ர ஸூர்யாளே பூமில இறங்கி வர்றமாதிரி அவ்ளோ தேஜஸா இருக்கேள்!
உங்களுடைய தேஜஸுனால இந்த பம்பை ஏரியும் இந்த மலையும் ஒளிர்கிறது!”, அப்படீன்னு அழகா பேசி ,
ராம லக்ஷ்மணாளை வந்து பார்த்து நமஸ்காரம் பண்ணவொடனேயே அவா மேல பக்தி ஏற்படறது!

அதனால ஸுக்ரீவன் “சூழ்ச்சியா பேசி தெரிஞ்சுண்டு வா”னு சொன்னா கூட, ஹனுமார் உள்ளபடி சொல்லிட்டார்.
“நான் ஸுக்ரீவன் என்கிற வானர ராஜாவின் மந்திரி. என் பேர் ஹனுமான். ஸுக்ரீவன் உங்களோடு நட்பை விரும்புகிறார்!”
அப்படீன்னு சொல்லிடறார்.

அப்போ ஹனுமாருடைய இந்த பேச்சைக் கேட்டு ராமர் ரொம்ப கொண்டாடறார்.
“ரிக் யஜுஸ் ஸாம வேதங்களை அத்யயனம் பண்ணி, நவ வ்யாகரணங்களையும் பல முறை கேட்டாத் தான் இந்தமாதிரி பேச முடியும்!
இவளோ நேரம் பேசினார். இவர் பேசினதுல ஒருவிதமான grammatical mistake, அபசப்தம் ஒண்ணு கூட வரல!
இவர் ரொம்ப உரக்க பேசல! ரொம்ப அடி தொண்டைல பேசல! ரொம்ப விருவிருன்னு பேசல!
ரொம்ப இழுத்து இழுத்து subjectடுக்கே வராம பேசிண்டே இருக்கல!”

ஸம்ஸ்கார க்ரம ஸம்பந்நாம அத்3ருதாம விலம்பி3தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருத3ய ஹாரிணீம் ||

மனத்தை கொள்ளைக் கொள்ளும் மங்களகரமான வார்த்தைகளைப் பேசறார்.
‘ஸம்ஸ்காரம்’ – ரொம்ப பண்பாடோட cultureரோட இருக்கு இவரோட வார்த்தைகளும் பேச்சும்!
இப்பேர்ப் பட்ட ஒரு தூதன் ஒரு ராஜாக்கில்லைன்னா அவனோட காரியங்கள் எப்படி நடக்கும்!”

ஏவம் குணக3ணைர்யுக்தா யஸ்ய ஸ்யு: கார்யஸாத4கா: |
தஸ்ய ஸித்4யந்தி ஸர்வார்தா2 தூ3தவாக்ய ப்ரசோதி3தா: ||

“அதே நேரத்துல இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் இருந்தான்னா, அந்த ராஜாக்கு இந்த தூதனுடைய வார்த்தைகள்னால
எல்லா காரியங்களும் நடக்குமே!” அப்படீன்னு சொல்லி, ராமர் அந்த ஹனுமாரைப் பார்த்தவொடனேயே
‘இந்த ஹனுமார் தான் நமக்கு ஸஹாயமா இருக்கப் போறார்ன்னு ராமதூதன் அப்படீங்கற அந்த titleல அங்கேயே குடுத்துட்டார்!’

லக்ஷ்மணன்கிட்ட, “நீ நம்மளுடைய விஷயத்தை சொல்லிடு”னு லக்ஷ்மணன் ரொம்ப தயவா ரொம்ப பரிதாபமா சொல்றான் .
“இந்த சக்ரவர்த்தி குமாரர், தானா காட்டுக்கு வந்திருக்கார். மனைவியை இழந்து கஷ்டப்படறார்.
தனுங்கற கந்தர்வன் , ஸுக்ரீவன் ஸஹாயம் பண்ணுவான்னு சொல்லிருக்கான்.
எங்களுக்கு ஸுக்ரீவனோட தயவு வேணும்!”னு சொல்லும் போது,

ஹனுமார் சொல்றார் , “ஆஹா! நீங்க அப்படி சொல்லாமா? உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் ,
புலன்களையும் கோபத்தையும் ஜெயிச்சவர்களுமா இப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள் அந்த ஸுக்ரீவனுக்கு ஒரு நட்பா கிடைக்கறது
இப்ப அவன் பண்ண புண்ணியம்! அவன் இந்த ரிஷ்யமுக மலையிலேர்ந்து வெளியே போகமுடியாம மாட்டிண்டிருக்கான்!
அப்படி இருக்கும்போது நீங்க வந்தது அவன் பண்ண பாக்யம்! நான் உங்களை அவன்கிட்ட அழைச்சுண்டு போறேன்”னு அழைச்சுண்டு போறார்.

ஸுக்ரீவன்கிட்ட, அழகா ராம லக்ஷ்மணாளைப் பத்தி பெருமையா சொல்லி, , “இவாளுடைய நட்பை நீ கோர வேண்டும்.
இதனால உனக்கு காரியம் நடக்கும். உனக்கு உன்னுடைய மனைவி, ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்!”
அப்படீன்னு சொன்னவொடனே,

ஸுக்ரீவன் கை கூப்பி, “நான் ஒரு ஸாதாரண வானரம். என்னை நீங்க நண்பனா ஏற்றுக்கொள்வீர்களா?” அப்படீன்னு கேட்கறான்.

ராமரும் அவன் கையை பிடிச்சு ஆலிங்கனம் பண்ணிண்டு, “நானும் நீயும் நண்பர்கள்” அப்படீன்னு சொல்றார்.
உடனே ஹனுமார், அக்னியை மூட்டி, அக்னி சாட்சியா ராமரும் ஸுக்ரீவனும் ஸக்யம் பண்ணிக்கறா!

ஸுக்ரீவன் கிட்ட ராமரை அழைச்சிண்டு வந்ததுலேர்ந்து, ஸீதா தேவிகிட்ட ராம தூதனா போய், ராமருடைய சேதியை சொல்லி,
ஆச்வாஸப்படுத்தி, அவளுடைய உயிரையே காப்பாத்தினார். அவ உயிரையே விடறதா இருந்தா. அவகிட்ட மெதுவா,
அவ காதுல மட்டும் விழறமாதிரி ராம கதையை சொல்லி, அவ மனஸை ஸமாதானப்படுத்தி, அப்புறம் போய்
எதிர்ல நமஸ்காரம் பண்ணி, நம்பிக்கையை சம்பாதிச்சு, நடந்த விவரங்களெல்லாம் ஒண்ணு விடாம அழகா சொல்லி,
அப்புறம் ராமருடைய மோதரத்தைக் கொடுத்து,

ராம நாமாங்கிதம் சேத3ம் பஶ்ய தே3வி அங்கு3லீயகம் ||

“இதோ பாரம்மா! ராமருடைய மோதரம் கொடுத்திருக்கார்!” அப்படீன்னவொடனே ஸீதைக்கு பரம சந்தோஷம்!

விக்ராந்தஸ்த்வம் ஸமர்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம |

“ஹே வானரோத்தமா! ஹே ஹனுமான்! நீதான் ‘விக்ராந்த:’ – உன்னிடத்தில் தான் உடல் பலமிருக்கு!
‘ஸமர்த்த:’ – மனோபலம் இருக்கு! ‘ப்ராஞ:’ – புத்தி பலமிருக்கு! எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு!
இப்பேர்ப்பட்ட காரியத்தை இந்த ராவணனுக்கு பயப்படாம வந்து இத்தனை படையும் காவலையும் தாண்டி,
மீறி என்னை வந்து பார்த்து, என் உயிரைக் காப்பாத்தி, ராமருடைய செய்தியை சொல்லி என்ன ஆச்வாஸப்படுத்தினியே!”
அப்படீன்னு கொண்டாடறா.

“ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜம்” – எப்படி ஹனுமாரால இந்த ஸமுத்ரத்தை தாண்ட முடியறதுனா,
ஜாம்பவான் உத்ஸாஹப்படுத்தும் போது சொல்றார்,
“ஹே ஹனுமான்! நீ வாயுவோட அனுக்ரஹத்துனால அஞ்ஜனா தேவிக்கு பிறந்தவன்.
அதனால உன்னால வாயு மாதிரி, கருடன் மாதிரி ஆகாஶத்துல பறக்க முடியும்! கருடனுக்கு றெக்கைகள்ல என்ன பலமோ,
அந்த பலம் உன்னுடைய கைகள்ல இருக்கு! உன்னால இந்த காரியத்த பண்ண முடியும்!

த்வய்யேவ ஹனுமனஸ்தி பலம் புத்தி: பராக்கிரம:

உன்னால முடியும்னு சொல்லல. “உன்னாலதான் முடியும் ஹனுமான்!” அப்படீன்னு சொல்லி உத்ஸாஹப் படுத்தி,
எல்லா வானராளுமா ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணின உடனே,
“ஆமா. நான் என்னுடைய அப்பாவுக்கு நிகரான பலமும் பராக்ரமமும் படைத்தவன்! என்னாலேயே எங்கும் தடையில்லாம போகமுடியும்!
இதோ ஆகாசத்துல போறேன் பாருங்கோ!” அப்படீன்னு சொல்லிட்டு,

யதா2 ராக4வ நிர்முக்த: ஶர: ஶ்வஸன விக்ரம: |
க3ச்சேத் தத்3வத்3 க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||

“எப்படி ராம பாணம் தடையில்லாம போகுமோ, அந்த மாதிரி நான் கிளம்பி இப்போ இலங்கைல போய் குதிப்பேன்!
அங்க ஸீதை இல்லனா மூவுலகத்துலேயும் தேடி எப்படியாவது ஸீதைய கண்டுபிடிச்சிண்டு வருவேன்!
இராவணனை வால்ல கட்டி இழுத்துண்டு வருவேன்! எப்படியாவது காரியத்தை முடிச்சிண்டு வருவேன்!”
அப்படீன்னு கர்ஜனை பண்ணிண்டு ஆகாச மார்க்கமா, பல தடைகள்லாம் வர்றது. அதை மீறிண்டு போய் இலங்கைல குதிக்கறார்.

‘வாதாத்மஜம் அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ –
‘என்னுடைய ஹ்ருதயத்துல இன்னிக்கு நான் அவரை த்யானம் பண்றேன்!’ அப்படீன்னு சொல்றார்.

———–

அடுத்த ஸ்லோகம்,

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

‘தருணாருண முக²கமலம்’ –
‘அருண:’னா ஸூரியன். ‘தருணாருண:’னா இளம் ஸூரியன்! உதய ஸூரியன் போன்ற தேஜஸ் கொண்ட முகம்.
‘கமலம்’ – கமலம் போன்ற அழகான ஸூரியனை போன்ற அழகான அவருடைய முகம்!

‘கருணாரஸபூர’ –
கருணாரஸம் நிரம்பிய,

‘பூரிதாபாங்க³ம்’ –
கண்கள். அவருடைய கண்கள்ல கருணை நிரம்பியிருக்கு! அப்பேர்ப்பட்ட கருணை!
அதனால தானே அவர் ஸீதை படற கஷ்டத்தைப் பார்த்து தவிக்கறார்.
இந்த ஸீதை இப்படி கஷ்டப் படலாமா? ராமன் கணவரா, ஜனகர் அப்பாவா, தஶரதரை மாமனாராப் பெற்ற
இந்த ஸீதை இப்படி இங்க கஷ்டப் படறாளே!
இந்த ராமரையும் ஸீதையயும் சேர்த்து வெக்கணும். அந்த ராமர் அங்க அப்படி கஷ்டப்படறார் ஸீதைய பிரிஞ்சு!

ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந்ப்ரதிபு3த்4யதே৷৷

ராமர் தூங்காம சாப்படாம இந்த ஸீதைய நெனச்சுண்டு கஷ்டப்படறார்.
எப்பயாவது தூங்கினாகூட “ஸீதா!”னு சொல்லிண்டு எழுந்துண்டுடறார்.
அப்படி அங்க அவர் தவிக்கறார். இங்க இவ இப்படி தவிக்கறா. தபஸ் பண்ணிண்டிருக்கா.

நைஷா பஶ்யதி ராக்ஷஸ்யோ நேமாந்புஷ்பப2லத்3ருமாந் |
ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி৷৷

இவள், இந்த அசோகவனம் இவ்ளோ அழகா இருக்கு! இதையும் பார்க்கல!
ராக்ஷஸிகள் கோரமா இருந்துண்டு பயமுறுத்தறா! அதையும் பார்க்கல!

‘ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி’ –

‘ஒரே மனஸா ராமனயே பார்த்துண்டிருக்கா! தபஸ் பண்ணிண்டிருக்கா இவோ!
அதனால இந்த ராமனையும் ஸீதையையும் சேர்த்து வெக்கணும்!’
அப்படீன்னு அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் பண்றார்.
அங்கிருந்து வந்து, ராமரை பார்த்தவொடனே ஸீதை படற கஷ்டத்தை சொல்லி,

ஸர்வதா2 ஸாக3ரஜலே ஸம்தார: ப்ரவிதீ4யதாம்|

‘உடனே எப்படி கடல் தாண்டறது? அதுக்கான முயற்சியைப் பண்ணுவோம்’னு அப்படி கிளப்பறார் ஹனுமார் ராமரை!

‘ஸஞ்ஜீவநமாஶாஸே’ –
உயிரைக் கொடுத்த அந்த ஹனுமாரை போற்றுகிறேன்! ஹனுமார் இந்தமாதிரி ஸீதைக்கு மட்டுமா உயிர் கொடுத்தார்!
லக்ஷ்மணன் அடிப்பட்டு விழுந்த போது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.
எல்லா வானரப்படையுமே இந்திரஜித் ப்ரம்மாஸ்த்ரத்துனால வீழ்த்தினபோது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.

அப்படி நமக்கே ஹனுமாருடைய த்யானம்

அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமா பூஜிதா |

அவருடைய ஸ்தோத்ரம் பண்ணா, நம்முடைய உயிர் வளரும். அப்படி உயிரைக் கொடுப்பவர் எல்லாருக்கும்!

‘மஞ்ஜுள-மஹிமாநம்’ –
அவருடைய மஹிமை ரொம்ப அழகான மஹிமை அப்படீங்றார் ஆசார்யாள். அவரே ஸுந்தரர்னு பேரு!
அவருடைய மஹிமையும் ரொம்ப ஸுந்தரமா இருக்கு! அதனால தான் அந்த காண்டத்துக்கே ‘ஸுந்தர காண்டம்’னு பேரு!
‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவர் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார். ஏன்னா,

‘அஞ்ஜநா-பா⁴க்³யம்’ –
‘அஞ்ஜநா’ங்கறவ ஒரு அப்ஸர ஸ்த்ரீ வானரமா பொறந்திருக்கா! அந்த அப்ஸர ஸ்த்ரீக்கு குழந்தையா பொறந்து,
அந்த ஹனுமார் அவ்ளோ அழகா இருக்கார். ஸீதா தேவி ராம கதையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது,
ஸூர்யோதயம் போன்று மஞ்சள் பட்டு உடுத்திக்கொண்ட அழகான அந்த வானர வீரரைப் பார்த்து,
மனஸுல ஸந்தோஷப்பட்டா! அவர் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, ‘கொரங்கைப் பார்த்தேனே!’ன்னு கவலைப்படறா.
அப்பறம் இது கனவில்லை! கனவுல தான் கொரங்கைப் பார்த்தா கஷ்டம். இது நனவு தான்!
“ஏன்னா எனக்கு ஸுகமிருந்தாதான் தூக்கம் வரும். தூக்கமிருந்தாதான் கனவு வரும். எனக்கு கனவே கிடையாது.
இது நேரத்தான் நான் பார்க்கறேன். இவன் சொன்ன வார்த்தையெல்லாம் சத்தியமாகட்டும்”!
அப்படீன்னு. நமஸ்காரம் பண்ணும்போது இராவணனான்னு ஸந்தேஹம் வர்றது!
ஆனா சீதை சொல்றா, “அன்னைக்கு ஸந்யாஸி வேஷம் போட்டுண்டு வந்த இராவணனைப் பார்த்தபோது என் மனம் நடுங்கித்து!
இன்னிக்கு வானரமா நீ வந்திருக்க! ஆனாலும் உன்னைப் பார்த்து என் மனஸுல ஒரு உல்லாசம் ஏற்படறது! ஒரு சாந்தி ஏற்படறது!”ன்னு சொல்றா.

அப்படி ஒரு ரூபம் ஹனுமாருடைய ஒரு ரூபம்! அந்த ஹனுமார்ங்கறதே குருவினுடைய வடிவம்தான்!
ஸீதாதேவி, அம்பாளே ஒரு ஜீவனா இருந்து, ராமர்ங்கிற பகவானை அடையறதுக்காக தவிச்சிண்டிருக்கா.
தபஸ் பண்ணிண்டிருக்கா. அப்போ நம்ம மஹா பெரியவா மாதிரி, ஆசார்யாள் மாதிரி வர அந்த குரு,
அந்த குரு மாதிரி ஹனுமார் வந்தார்! அந்த ஸுந்தர காண்டத்துல, த்ரிஜடை ஸ்வப்னம் சொன்ன பின்ன ஒரு ஸ்லோகம் வர்றது.

பக்ஷீ ச ஶாகாநிலயம் ப்ரவிஷ்ட: புந: புநஶ்சோத்தமஸாந்த்வவாதீ3 |
ஸுஸ்வாக3தாம் வாசமுதீ3ரயாந: புந: புநஶ்சோதயதீவ ஹ்ரு’ஷ்ட:৷৷

ஒரு பக்ஷியானது மரக்கிளைல உட்கார்ந்துண்டு, ‘புந: புநஶ்ச உத்தமஸாந்த்வவாதீ3’ –
‘மீண்டும் மீண்டும் உத்தமமான மனஸ் ஸமாதானம் ஆகக்கூடிய வார்த்தைகளைப் பேசிண்டே இருக்கு’
அப்படீன்னு! இது ஹனுமார் வந்திருக்கார்ங்கறதுக்கு ஸூசகமா சொல்றார். வால்மீகி,
“ஒரு குருவானவர் ஒரு ஜீவன் கிட்ட, பகவான் வருவார்! உன்னை மீட்டுண்டு போவார்”.

“க்ஷிப்ரமேஷ்யதி ராகவா:”
சீக்கிரம் வருவார். வானரப் படைய இழுத்துண்டு வருவார். எப்படி கருடனை இழுத்துண்டு கஜேந்திரனைக்
காப்பாத்தறதுக்காக விஷ்ணு பகவான் வந்தாரோ, அந்த மாதிரி, வானரப் படைய இழுத்துண்டு வந்துருவார்.
உன்னை மீட்டுண்டு போவார். நான் போய் திரும்பி சொல்ற இந்த நேரம் தான் delay ஆகப் போறது!
இனிமே நீ கவலையே படவேண்டாம்!” அப்படீன்னு ஒரு 25 வாட்டி வர்றது அந்த பத்து ஸர்கத்துல!
அத்தனை வாட்டி சொல்லி ஆறுதல் சொல்றார். இதத்தான் ஒரு குருவானவர் பண்ணுவார்!
“பகவான் உன்னை நினைச்சுண்டிருக்கார். உன்னை வந்து மீட்பார்! நீ கவலைப்படாதே!”
அப்படீன்னு சொல்ற அந்த வார்த்தையை ஹனுமார் பண்றார்.
அதனால ஹனுமார் வந்து ஒரு குருவுக்கு உருவகம். அந்த ஹனுமாருடைய மஹிமை மஞ்ஜுள மஹிமை!
அஞ்ஜனையுடைய பாக்யமா அவதாரம் பண்ணவர்! அதனால ஆஞ்சநேயன்னு பேரு!

———-

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

‘ஶம்ப³ர:’ –
ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன்.
மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார்.
அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான்.
பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா.
அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார்.
ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார்.
“என்னடா இது? பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே!
இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு!”.
அப்புறம், “மனசு தான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு.
அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை.
ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன்.
நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்? மான் கூட்டத்துலயா தேட முடியும்?
அதனால நான் இங்க வந்தேன்!”னு சொல்றார்.

அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட
சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார்.
Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும்.
ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது.
“ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும்.
அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது.
நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால,
உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார்.
இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார்.
அப்படி அவருடைய வைபவம்! அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால! தனக்கு எந்த சக்தியுமே இல்லை.
ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார்
அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்!

‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.
அது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள்.
‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.
‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.
‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர்.
பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார்.
சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு! எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார்.
ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction!’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான்.
ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது.
உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்!”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார்.
உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும்,
இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன
வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார்.
அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.

‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.
‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது.

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

அப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம்,
நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும்.
ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .
பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர்,
இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம்.
அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும்.

அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை,
‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன்.

————

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ –
சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து,
அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான்.
கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா?”

“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”
ஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது? நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும்,
பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான்! தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன்.
நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண்,
ராமருடைய மனைவி சீதையா?”ன்னு கேட்கறார்.

அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும் போது,

“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”

“அம்மா! இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம்.
உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்!”னு
சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.

‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ –
ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார் தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி,
“என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ!”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார்.
“எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ,
அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.

‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ –
‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார்.
முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா! நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே!
சுகப்பட்டே! ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர் கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |
புனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||

“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர்! அவர்கிட்ட அபசாரம் பண்ணா,
நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது!”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான்.
விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான்.
அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.

‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ –
எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார்!
முதல்ல அசோக வனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான்.
அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார்.
அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.

ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||
தா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||–என்று கர்ஜிக்கறார்.

“1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது! ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம்.
ஆன ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன்! யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன்!
சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன்.
என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ ! நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார்.
அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான்.
அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.

‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்!”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார்.
அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது.

ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ,
எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ,
அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார்.

அப்பேற்பட்ட ஸ்லோகம்.
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

—————–

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ –
வானர கூட்டத்தில் சிறந்த தலைவர்! ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும் போது,
“ஹே ஹனுமான்! நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்!”னு சொல்றார்.
ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோக வனத்தை அழித்த போது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான்.
80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை.
சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன்,
ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே!”ன்னு ராவணனே சொல்றான்.
அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார்.

இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம்.
இப்ப இவாளே கூட்டிண்டு போறா!”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர்.
இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்
“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.

வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரித3ஶேஶ்வரோ வா
ஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஶ்ச ஸோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||

இது சாதாரண வானரமா தெரியலை! ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா.
சாக்ஷாத் எமனா? வருணனா? வாயுவா? ருத்ர பகவானா? அக்னியா? குபேரனா? சாதாரண சோமனா?
அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.

கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||

“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா?”

கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||

விஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா?
“மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்!”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது,
இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார்.
அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்!

‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ –
சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.

வலக்ஷஶ்ரீர்ருʼக்ஷாதி3பஶிஶு ஸத்3ரு’க்ஷைஸ்தவ நகை2:
ஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |
க்ஷணான்மே காமாக்ஷி க்ஷபிதப4வஸங்க்ஷோப4க3ரிமா
வசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||என்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு!

‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார்.
இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.
‘தா³நவகுல’ – ராக்ஷஸ குலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர்.
அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார்.
ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான்,
நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார்.
ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும்! நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு.
உன் பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன்.
ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா!”ங்கறார்.
உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான்.
ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்“இந்தா!”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார்.
அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான்.
இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான்! நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான்.

அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து
பலசாலின்னு சொல்றதாவது! எனக்கு அவமானம்”ங்கிறார்.
உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான்.
இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.
அப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான்.
அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான்.
லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால,
லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம்.
லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து,
“ஒரு குத்து பாக்கியிருக்கு! இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான்.
ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது!
லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர் கிட்ட சேர்த்துடறார்.
ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்!”னு ராவணனோட யுத்தம் பண்றார்.

ராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம்.
அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது! இவ்ளோ அம்பு வர்றது,
நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது!
ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே,
ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும்,
‘கர’ வதம் போது! இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு!
பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார்.
குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து.
தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார்.

முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது! ஆனா ராமர், “நீ பிழைச்சு போ! நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க.
ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன்.
நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா!”ங்கறார் ராமர்.
இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது!
அப்பேற்பட்ட வீரம்! ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.

‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ –
இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார்.
ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்!”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ,
அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்!”
அதுதான் நமக்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்!

‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ –
‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது.
அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்!’னு சொல்றார்.

போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்!”னு சொன்னார்.
“இங்க ஹனுமாரை கண்டேன்!”ங்கிறார்.
அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்!

——–

ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ –
இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,

‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ –
ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,

‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ –
வெகு காலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,

‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ –
ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான்! ஹனுமாரை தியானம் பண்ணா,
ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராம பக்தி வராதா?
அப்பேற்பட்ட ராமபக்தர் அவர்!

அவரை பார்க்கும் போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா!
பரத் வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத் வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு.
பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார்.
“உனக்கென்ன வரம் வேணும்?”ங்கிறார்.
ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும்
தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்!”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக!
பரத்வாஜரும், “ஆஹா!”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு.
என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார்.
நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார்.

ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராம காரியம் தான் அவருக்கு விருந்து!
ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.
சுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான்.
நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து,
‘த்ருஷ்டா சீதா!’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன்.
எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்!”னு சொல்றார்.
ஆனா யார் பார்த்துட்டு வந்தா? ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர்.
அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.

ஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும்.
தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு! ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல்,
எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ,
அந்த மாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும்!

———————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ திருவடி -ஸ்ரீ பரத ஸ்ரீ சத்ருக்ந ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டி ஸமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –31–ஸ்ரீ ஸதர்சனம் —

January 15, 2022

ஸ்ரீ உவாஸ
1- யா ஸா ஷாட் குண்ய தேஜஸ் ஸ்தா க்ரியா சக்தி ப்ரகாசிதா
ஆக் நேயம் ரூபம் ஆஸ்ரித்ய ஸா தத்தே பவ்ருஷம் வபுஸ்
2- சர்வ அஸ்த்ர சாஸ்த்ர ஸம்ஸ் யூதம் ஸூர்ய ஸோம அக்னி மூலகம்
மஹத் ஸூ தர்சனம் நாம நாநா ரூப உப ஸோபிதம்

ஆறு குணங்களில் தேஜஸ் பிரதாநம் -குணங்களின் சாரமே க்ரியா சக்தி -புருஷ ரூபம் கொண்டது –
அவள் அக்னி ரூபமாகக் கொண்டு உள்ளாள்
அவள் ஸூர்யன் சந்திரன் அக்னி யிலிருந்து வெளிப்படுகிறாள்
அனைத்து அஸ்த்ரங்களையும் தன்னுள் கொண்டவள்
பெருமை மிக்க ஸூ தரிசனமாக -பல பெயர்களைக் கொண்டும் பல ரூபங்களை உள்ளடக்கியவளாக இருக்கிறாள் –

3- தஸ்ய மத்யே ஸ்திதா ஸக்தி பவ்ருஷீம் தனுமாஸ்திதா
ஸுவ்ம்ய அக்னேய ஸ்வரூபேண தத் தத் கால வ்யவஸ்தயா

ஸூ தரிசனத்தில் இருதயத்தில் புருஷ வடிவில் சக்தி சோமன் அக்னி போன்று உள்ளது
அந்த அந்த நேரத்துக்கு ஏற்ப இயங்க வல்லது

4-புரஸ்தாத் தர்சிதஸ் தஸ்யா வாசகஸ் தே சதுர்வித
தத்ர ஸம்ஜ்ஞாமயோ மந்த்ரோ பூயஸா பல வத்தர

சக்தியைக் குறிக்க வல்ல நான்கு வித ஒலிகள் பீஜம் பிண்டம் ஸம்ஜ்ஞா பதம் குறித்து முன்பு பார்த்தோம்
இதில் ஸம்ஜ்ஞா மந்த்ரம் பலம் பொருந்தியது

5-தஸ்ய வ்யாக்யாம் இமாம் சக்ர கதந்த்யா மே நிசா மய
யா ஸா ஸோம ஆத்மிகா சக்தி உன்மேஷ ப்ரதமோ ஹரி

சோமனை உள்ளடக்கிய அந்த சக்தி ஹரியின் இயங்கு நிலையான உள்ள ஸ்ரீ என்னும் நானே ஆகிறேன்
இதுவே ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்து -ஸ -முதன்மையாக சக்தியாகும் –

மூல சக்திர் அஹம் ஸ்ரீ ஸா ப்ரதம அக்ஷர ஸம்ஸ்திதா
அம்ருதா த்ருப்தி ரூபா ச ஸோ மாத்மா ச அகிலேஸ்வரீ –6-

சோமனை உள்ளடக்கியது -மூல சக்தி நானே –
ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்தில் உள்ள அவள் அம்ருதம் ஆவாள்
சோமனுடைய ஆத்மாவாக உள்ள அவள் அனைத்திற்கும் ஈஸ்வரீ ஆவாள் –

அம்ருதீ கரணம் குர்யாத் ஸர் கஸ்ய இந்து கலாஸ்திதா
சீரஸ் பத்மா தயோ மந்த்ரா பரமேஸ்வர யுக்தயா –7-
அநயா ஸ்ருதயா குர்யாத் த்ருப்திம் ஸம் ஸித்தி மேவ ஸ
ஸ்ருஷ்டி க்ருத் ஸம்யுதா ஸேயம் ஜீவ ஸக்தி ஸநாத நீ –8-

சந்திரன் ஒளியில் உள்ள அம்ருதம் மூலம் ஸ்ருஷ்டி ஏற்படுத்துகிறாள்
ஓம் ஸ சீரஸே ஸ்வாஹா
ஓம் ஸ ஸ்ரீ நிவாஸ பத்மாய ஸ்வாஹா –சீர பத்ம மந்த்ரங்கள்
அவளால் இணையப்பட்டு -ஸ -பரமேஸ்வரனைக் குறிக்கும் அக்ஷரம் -அதாவது -ஹ -சேர்க்கப்பட்டு
மன நிறைவு -மற்றும் வெற்றியை அளிக்கும்
அதே எழுத்து -ஸ -ஸ்ருஷ்டி க்ருத் -என்னும் அஷரத்துடன் சேர்ந்து ஜீவ சக்தி ஆகிறது –

த்ரை லோக்ய ஐஸ்வர்யத உபேதா வாயு வேஸ்ம அக்ஷர ஸ்திதா
தாரா காரா ரிபோர் மூர்திநி சிந்த்யேச் சேதன ஸித்தயே –9-

எதிரிகளை வெல்லும் சக்தி -அவள் சப்தம் ஸ -வாயுவை உள்ளடக்கிய -ய -த்ரை லோக்ய ஐஸ்வர்யம் ம் சேர்த்து
ஸயம்-தாரகை உருவகம் செய்து எதிரில் தலை மேல் நிற்பதாகக் காண வேண்டும் –

அப்ரமேய உப கூடாயா அக்னீ ஷோம மயீ ஜூஷ
அஸ்யா ஸக்தே ஸமுத் பூதம் ஸூ க்தம் பவ்ருஷம் உஜ்ஜ்வலம் –10-

அப்ரமேயன் -அகாரத்தில் மறைந்து உள்ளவன் -அக்னி சோமன் மற்றும் உள்ள அனைத்திலும் அந்தர்யாமி –
பரம புருஷன் -தேஜஸ்ஸூ உடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இந்த சக்தியில் இருந்து வெளிப்படுகிறது –

ஏததா தீநி ஸூக்தாநி ஸஹஸ்ர ம்ருஷயோ விது
நித்யாம் ஆப்யா யதே மந்த்ர ஸ அயம் அக்னி ஜூஷா மயா –11-

புருஷ ஸூக்தம் -ஆயிரக் கணக்கான ரிஷிகள் அறிவார்
குனியில் வசிக்கும் என்னால் பரவசப்பட்டு உள்ள இந்த மந்த்ரம்
உபாசகனுக்கு அனைத்தையும் அளிக்கும்

தத் தத் கார்ய ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா
அநயா யந்ந ஸாத்யதே ந ததஸித ஜக த்ரயோ –12-

ஸூர்யன் சோமன் அக்னி -ஆகியவற்றையும் குறிக்கும் அக்ஷரங்களில் உள்ள மூன்று சக்திகளில் உள்ளதும்
அனைத்து வழிபாடுகளிலும் உள்ளதும் ஆகிய இந்த சக்தி மூலம்
மூன்று லோகங்களிலும் அடைய முடியாதது ஒன்றுமே இல்லையே –

ஸூதே ஸா ஸகலா சக்திர் அநு ஜாநாதி தா புந
ஸம் ஹரந்தீ புநஸ் சைதா இதி ச சமர்யதே தத –13-

ஸ்வம் உன்மேஷம் அதிஷ்டாய பரமாத்மா ஸ சக்தி ராட்
உதிதோ ஜகத அர்த்தாய ஹேதி தேவ ஸநாதன –14-

அவளே அனைத்து சக்தியையும் ஸ்ருஷ்டித்து -செயல்களில் ஈடுபடுத்தி -லயிக்கும் படி செய்கிறாள்

ஸூர்யச்ச போக்த்ருதாம் ப்ராப்ய ப்ராணயந் ப்ராண இஷ்யதே
ஆத்மாநம் தர்சயத்யேஷ த்ரை லோக்ய ஐஸ்வர்யத அந்வித –15–

ஹ்ருத் புண்டரீக மத்யஸ்தம் யம் விசின் வந்தி யோகிந
யதாவத்ம் த்யா யதோ வேத்யம் முக்தே ஷோர் வேக வத்தயோ –16-

ஸூர்யன் முக்கிய பிராணன் -ஹ
த்ரை லோக்ய ஐஸ்வர்யம் -ம்
ஹம -தாமரை போன்ற உபாஸகனது இதயத்தில் வெளிப்படும்

பிரகர்ஷேண ஓந் நயன் ப்ராணன் ப்ராண இத்யேஷ சப்த்யதே
இந்து மண்டல ஸம் வீதோ வ்யாபிமாந ப்ரமேயவான் –17-
ஜிஹ்வா மூலஸ் திதோ த்யாதோ வாக் ப்ரவ்ருத்திம் நியச்சதி
அம்மண்டலே ஸ்திதோ த்யாத ஸ ஏவ ஹி ஸூதாம் ஸ்ரவன் –18-
நிர்விஷீ கரணம் த்யாத கரோதி ஜகதாமபி
ராம உப கூடா தஸ் மத்தி ஸ்ரீ ய ஸூக்தம் சமுத்கதம்–19-

முக்கிய மூச்சுக்காற்றை சக்தி கொண்டதாகச் செய்வதால் அது பிராணன் எனப்படுகிறது
அந்த ஹ என்னும் எழுத்தானது சந்த்ர மண்டலத்தில் மறைவாக நின்று வ்யாபி மற்றும் அப்ரமேய எழுத்துக்களுடன் சேர்ந்து –
அதாவது ம் மற்றும் அ -இதன் மூலம் அஹம் என்பது கிடைக்கிறது
நாக்கின் வேர்ப்பாகத்தில் இருந்து வெளிப்படுவதாக த்யானிக்கப் பட்டு -வாக்கை உண்டாக்குகிறது
அதே எழுத்தானது அம் என்னும் ஓசையில் உள்ளதாக த்யானிக்கப்பட்டு
அம்ருதத்தை வெளிப்படுவதாக எண்ணப்பட்டு இந்த ஜகத்தில் உள்ள அறியாமை என்னும் விஷங்களை அகற்றுகிறது
இந்த எழுத்துடன் ராம என்னும் எழுத்தம் சேரும் போது ஸ்ரீ ஸூக்தம் வெளிப்படுகிறது –

ஏததாதீநி ஸூக்தாநி ஸஹஸ்ரம் ருஷயோ விது
தத் தத் கால ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா –20-
அநேந யன்ன ஸாத்யதே ந ததஸ்தி ஜகத் த்ரயே
ஹன்யதே சகலம் லோகம்கமயத் யமலம் பதம் –21-
வ்யாஜயத் யகிலம் க்லேசம் கம்யதே யோக சிந்தகை
ஹேத்யேவம் கத்யதே ஸத் பிரேவம் நிர்வச நாஸ்திதை –22–

இது போன்ற ஸூக்தங்களை ஆயிரக் கணக்கான ரிஷிகள் நன்றாக அறிவர்
ஒவ்வொரு ஸூ க்தமும் ஸூர்யன் அக்னி மற்றும் சந்திரன் ஆகிய சக்திகளைக் குறிக்கும் எழுத்துக்களுடன்
ஏதேனும் ஒரு கட்டத்தில் சம்பந்தம் கொள்கிறது
இந்த ஹ என்னும் எழுத்து கொண்டு மூன்று லோகத்தில் செய்ய இயலாதது என ஏதும் இல்லை
இது உபாசகனுடைய அனைத்து தடைகளையும் விலக்கி அவனைத் தூய்மையான நிலைக்குக் கொண்டு செல்கிறது
யோகிகள் விஷயத்தில் அந்த எழுத்தானது அனைத்து துன்பங்களையும் விலக்குவதாக உள்ளது
யார் ஒருவர் சத்வ வழியில் நிலை நின்று சரியான விளக்கத்தை அளிப்பவர்களாக உள்ளனரோ
அவர்கள் இவ்விதமே- ஹ -என்பதைக் குறித்து உரைக்கிறார்கள் –

அசேஷ புவன ஆதாரா சங்கல்ப ப்ரபல க்ருதா
ப்ரத்யபிஞ்ஞாயதே சைவ ஸத் பிரேவம் நிர்வசனஸ்திதை –23–
சரத்யஸ் யாச்சலம் ஸர்வம் ஸ்த்ரியதே சகலை ஸதா
ப்ருதிவீ ஸம்ஸ்திதா ஸேயம் ஸ்தம்பே ஸ்ருத்யா நியுஜ்யதே –24-

அசேஷ புவன ஆதார-ர என்னும் எழுத்து கொண்டவளும்
பரமாத்மாவின் அதே சக்தியானவளும் ஆகிய அவளை மேலும்
சுதந்திரமாக செயல்படத் தூண்டுவது -ஸ்ர -என்னும் ஒலியின் மூலம் அறியப்படுகிறது
அசையக்கூடிய அனைத்தும் அவள் இடம் இருந்தே வெளிப்பட்டு பாதுகாப்புக்காக அவளையே அண்டுகின்றன –
ப்ருத்வீ என்னும் ஒலியில் -அதாவது -க -உள்ள அதே சக்தியானவள் ஸ்ருஷ்ட்டின் அசையாமல் நிலை கொண்டு
அனைத்தையும் பாதுகாக்கும் செயலிலும் ஈடுபட்டபடி உள்ளாள் –

ஸஹோ நாம பலம் தத்ர ரமதே தத் ஸஹஸ்ர தா
ஸஹஸ்ர தி ஸஹஸ்ரா ஸ்யாத் அக்னீ ஷோ மாத்மநோ மம –25-

பலம் என்னும் பொருள் கொண்டதான ஸஹஸ் என்னும் ஸப்தம் ஆயிரக் கணக்கான வகையில் களித்தபடி உள்ளது
இப்படி அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய என் சக்தியானது ஆயிரக்கணக்கில் வெளிப்படுகிறது
இதுவே ஸஹஸ்ரா எனப்படுகிறது –

அக்னீ ஷோ மமயீ ஸ மே ஸக்தி ஸர்வ க்ரியா கரீ
ஸூ ஸங்கல்ப ஸமித்தா ஸா தேஜஸாம் ராசி ருர்ஜிதா –26-
ஸம் பிராப்யை வாநலம் பாவம் கால பாவ கதாம் கதா
ரேத்யேவம் கேவலீ பூத்வா ஜ்வலத்ய விரதோ தயா –27-
பரமேஸ்வர பூதா ஸ பரமாச்சர்ய காரிணீ
ர இத்யேவ மஹா சக்திர் மதீ யாத்யா க்ரியாஹ்வயா –28-

அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய எனது சக்தியானது அனைத்து விதமான செயல்களையும் செய்ய வல்லதாகும்
சரியான எண்ணங்கள் மற்றும் ஓங்கி நிற்கும் வலிமை ஆகியவற்றால் தூண்டப்படும் அவள் அக்னியின் உள்ளே இருப்பவளாக
அனைத்தையும் அழிக்க வல்ல அக்னி நிலையை அடைகிறாள்
ர -என்பதின் தூய்மையான நிலையில் அவள் மிகுந்த ஆற்றலுடன் ஒளிர்ந்தபடி உள்ளாள்
அவள் பரமேஸ்வரன் என்னும் -ஹ் -எழுத்துடன் சேர்ந்து வியக்க வைக்கும் செயல்களை செய்கிறாள்
ர் என்பதே எனது மஹா சக்தியான க்ரியா என்பதாகும் –

சங்க்யா அநந்த்யம் ஸஹஸ்ரம் ஸ்யாதரா நந்த்யம் தத் உச்யதே
வர்ம அஸ்த்ரயோ ஸ்வரூபம் ச தர்சிதம் தே புரந்தர –29–

ஸஹஸ்ரம் என்பது எண்ணற்ற என்பதைக் குறிக்கும்
இது ஸூதர்சனத்திலே உள்ள ஆரங்களாகும்
புரந்தரன் உனக்கு வர்மம் அஸ்திரம் இவற்றின் ஸ்வரூபம் பற்றி உனக்கு முன்பே கூறினேன் –

த்ருவச்ச ப்ரணவ அஸ்யாதி பூர்வமேவ நிரூபித
ஏவமேவ மஹா மந்த்ர ஸப்த ப்ரஹ்மோத்கதோ –30–

கிரியா சக்தியின் தொடக்கமாக பிரணவம் த்ருவம் உள்ளதாக முன்பே நிரூபித்தேன்
இப்படியாக இந்த மஹா மந்த்ரம் ஸப்த ப்ரஹ்மத்தின் முழு சக்தியும் உள்ளடக்கி இருக்கும் –

அதர்வணீ மஹா சக்திர் கிரியா சக்திர் ப்ரியா தநு
த்ரயீ சாரோ ஹி அர்த்த வாக்யா பஞ்ச பர்வா மஹா ஸ்ருதி –31-
மந்த்ரேண ஸூயதே அநேந சாரேணேவ வனஸ்பதி
அஸ்ய த்வங்க விதா நஜ்ஞா ஷடங்காநி ப்ரசக்ஷதே –32

மஹா ஸ்ருதி என்று கொண்டாடப்படும் அதர்வண வேதத்தில் உள்ள மஹா சக்தி கிரியா சக்தியின் பிரியமான சரீரம்
இந்த வேதம் ஐந்து பகுதிகளைக் கண்டது
நக்ஷத்ரம் விதாநம் விதிவிதாநம் ஸம்ஹிதை சாந்தி
இதுவே மற்ற மூன்று வேதங்களின் சாரம் -உரம் போல் வேத மரத்தை இதுவே வளர்க்கும்
சாஸ்திரஞ்ஞர் இத்தை ஆறு அங்கங்களாகக் கொண்டதாக உள்ளது என்பர் –

காயத்ரீம் அபி சக்ராக்யாம் ப்ராகாரம் ச அக்னி சம்ஜ்ஜிதம்
கோப நாத் வருணோத் ஸே தாத் ஸ உதயாத் அம்ருதாத் ததா –33-

அந்த ஸூதர்சனத்திற்கு சக்ரா என்னும் காயத்ரி மந்த்ரம் உள்ளது -அதனை அக்னி சூழ்ந்து உள்ளது
கோபந அக்ஷரம் -ஆ -வருண அஷரத்துடன்-வ – சேர்க்கப் படுகிறது
இது போன்று அம்ருத அக்ஷரம் -அ -உதய அஷரத்துடன் -உ-சேர்க்கப்பட்டு
வாம் ஸூ ம் என்ற மந்த்ரம் ஆகிறது –

சக்ராய ச ஸ்வாஹா ஹ்ருதா திஸ்து சிகா வதி
ஸூர்ய ஜ்வாலா பதாச்ச ஊர்த்வம் மஹா யுக்தாத் ஸூதர்சநாத் –34-

ஊர்த்வம் சக்ராய ஸ ஸ்வாஹா வர்மாத்ய அஸ்த்ராந்தகோ விதி –35-1-

இதைத் தொடர்ந்து சக்ராய ச ஸ்வாஹா என்பது அமைகிறது
அடுத்து ஹ்ருதயம் என்பது தொடங்கி சிகா முடிய முதல் மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப்படுகின்றன
இதன் பின்னர் ஸூர்ய அக்ஷரமும் -ஹ -ஜ்வாலா என்கிற பதமும் சேர்க்கப்படுகின்றன
அதன் பின்னர் ஸூ தர்சன என்கிற பதமும் சேர்க்கப் பட்டு தொடர்ந்து மஹா சப்தமும் இணைக்கப்படுகிறது –
அதன் பின்னர் சக்ராய ச ஸ்வாஹா -என்பது சேர்க்கப்படுகிறது
தொடர்ந்து வர்மம் தொடங்கி அஸ்திரம் முடிய உள்ள இறுதி மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப் படுகின்றன –

நமச் சக்ராய தஸ் யாந்தே வித்மஹே அசவ் சதுர்யுக –35-2-

ஜ்வாலாய ச ஸஹஸ்ராந்தே தீ மஹி இதி நவார்ணக
தந்ந ப்ரசோதயாந் மத்யே சக்ர இதி அஷ்ட வர்ணக–36-

அதன் பின்னர் நம சக்ராய -என்பதான நான்கு எழுத்துக்களும்
தொடர்ந்து -வித்மஹே -என்பதும் அமைகிறது
மேலும் தீ மஹி என்பதுடன் இணைந்த ஸஹஸ்ர என்பதன் பின்னால் ஜ்வாலாயா என்பது சேர்க்கப்படுகிறது
இந்த மந்த்ரம் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாகும்
இதன் பின்னர் சக்ர என்பது நடுவில் சேர்க்கப்பட்டதான
தந்ந மற்றும் ப்ரசோதயாத் என்பதுடன் கூடிய எட்டு அக்ஷரங்கள் இணைகின்றன

இந்த மந்திரத்தின் முழு வடிவமானது

வாம் ஸூம் சக்ராய ச ஸ்வாஹா
ஓம் ஹம் நாம ஓம் ஹம் ஸ்வாஹா
ஓம் ஹிம் வஷாத் ஹம்ஸாய
ஹ்ரம் மஹா ஸூ தர்சனாய சக்ராய ஸ்வாஹா
ஓம் ஹும் ஓம் ஓவ்ஷத் ஓம் பட் நம
சக்ராய வித்மஹே ஸஹஸ்ர ஜ்வாலாய தீ மஹி
தந் ந சக்ர ப்ரசோதயாத் –

முஷ்டிம் விதர்ஜ நீம் க்ருத்வா தர்ஜ நீம் தர்ஜ ஸம்ஸ்திதாம்
பரிதோ ப்ராமயேத் வஹ்நீம் த்யாயந் ப்ராகார ஸம்ஸ்திதம்–37-

கை விரல்கள் அனைத்தையும் முஷ்டியில் மடக்கி –
ஆள்காட்டி விரல்களை மட்டும் எச்சரிப்பது போன்று நீட்டியபடி
த்யானத்தில் ஆழ்ந்துள்ள உபாசகன் கீழே உள்ள அக்னியைத் தனது கரங்களால் சுற்ற வேண்டும் –

அந்யோன்ய சம்முகே பாணி தலே வை தஷிண உத்தரே
கநிஷ்ட அங்குஷ்ட யோரக்நே ஸ்லிஷ்டே தீர்க்காஸ் ததா பரா –38–

அதன் பின்னர் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஓன்று பார்க்கும் படியாக வைத்து
சுண்டு விரல் மற்றும் கட்டை விரல் ஆகியவற்றின் நுனிகள் தொடும்படி யாகச் செய்து
மற்ற அனைத்து விரல்களையும் நேரே இருக்கும்படியாக வைத்து
தனது கைகளை ஒரு வட்டம் வரைவது போல் சுற்ற வேண்டும் –

பரிதோ ப்ராமயே தேவம் சக்ர முத்ரே யமீ ரிதா
அங்க முத்ராஸ் து வஹ்யதே சக்தி க்ராஸ மநும் ஸ்ருணு –39-

இது சக்ர முத்திரை எனப்படும்
அங்க முத்ரை குறித்து பின்னர் கூறப்படும்
அடுத்து சக்தி க்ராஸம் என்னும் மந்த்ரம் பற்றிக் கேட்பாயாக –

பவித்ரம் அநலா ரூடம் ஸ வ்யாபி ப்ரணவாத் பரம்
மஹா ஸூ தர்சன இதி ஏவம் சக்ர ராஜம் மஹாத் வகம்–40-
ததஸ் அஸ்த கதத் இதி அஸ்மாத் ஸர்வ ஜூஷ்ட பயங்கர
சிந்தி சிந்தீத் யதஸ் பச்சான் பிந்தி பிந்தி ப்ரகீர்தயேத் –41-
விதாரய த்வயம் பச்சாத் பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ
த்விர் பக்ஷயேதி பூதாநி த்ராசயேதி த்விர் உச்சரேத் -42-
வர்மாஸ்த்ர வஹ்னி ஜாயா ஸ்யுர் சக்தி க்ரஸ ந க்ருந் மநு
ஸ்வயம் ஸூ தர்சநோ பூத்வா மந்த்ரம் உச்சாராயன் இமம் –43-
சக்திம் முக ஹ்ருதாதிப்ய பரஸ்யா ஸூஷ யோத்தியா
ஷட ஷரஸ்ய மந்த்ரஸ்ய ஸ்ருணு த்யானம் புரந்தர –44-

ப்ரணவத்தைத் தொடர்ந்து வருகின்ற பவித்ரம் -ப சப்தமானது
அநலம் -ர -என்பதுடன் சேர்க்கப்பட்டு
இதனுடன் வ்யாபின் -ம் -என்பது இணைக்கப்படுகிறது
அதன் பின்னர்
மஹா ஸூ தர்சன -சக்ர ராஜ -மஹாத் வக -என்னும் சொற்கள் சேர்க்கப்படுகின்றன
இவற்றைத் தொடர்ந்து
அஸ்த கத சர்வ துஷ்ட பயங்கர சிந்தி சிந்தி என்பதும் –
பிந்தி பிந்தி -என்பதும் உச்சரிக்கப்பட வேண்டும்
பின்னர்
விதாரய-என்பது இருமுறை கூறப்பட்டு
பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ -என்பது கூறப்பட்டு
பக்ஷய என்பது இரு முறை கூறப்பட்டு
தொடர்ந்து பூதாநி என்பது கூறப்பட்டு
த்ராஸய -என்பது இருமுறை கூறப்பட்டு
வர்மத்துடன் –ஹும் –
அஸ்த்ரத்துடன் -பட் –
அக்னியின் மனைவி பெயருடன் -ஸ்வாஹா –முடிக்கப்பட வேண்டும்

இந்த மந்த்ரம் மந்த்ர க்ரஸ்னம் எனப்படும்
இந்த மந்த்ரத்தை உச்சரித்த படியே உபாசகன் தன்னை ஸூதர்சனத்துடன் இணைத்து எண்ணி
தனது விரோதியின் சக்தியை அந்த விரோதியின் இதயம் மற்றும் வாய் வழியாக உறிஞ்ச வேண்டும்
இந்திரனே அடுத்த ஆறு எழுத்து கொண்ட மந்த்ர த்யானம் குறித்து கூறக் கேட்ப்பாயாக
இது ஸஹஸ்ரார மந்த்ரம் ஆகும் –

ந்யஸ்த அங்கச் சக்ர முத்ராபிர் வஹ்நி ப்ரகார மத்யக
ஸஹஸ்ரார மஹா சக்ரம யுதாக்நி சயோத் கடம் –45
ஷடத்வ மயம் உத் ப்ராந்தம் த்யாயேந் மச்சக்தி ஜ்ரும்பிதம்
அக்ஷஸ்தம் பரமாத்மாநம் நாராயணம் அநா மயம் –46-
சக்ர ரூபிணம் ஈஸாநாம் த்யாயேத் குங்கும ஸம் நிபம்
பீதாம்பரதரம் திவ்யம் முக்தாலங்கார பண்டிதம் –47–

சக்ர முத்ரையுடன் கூடிய அங்க ந்யாஸம் செய்த உபாசகன் ஒருவன் அக்கினியுடன் கூடிய புனிதமான இடத்தில்
ஆயிரம் ஆரங்கள் கொண்ட சக்ரத்தை தியானிக்க வேண்டும்
அந்தச் சக்ரமானது பல ஆயிரக் கணக்கான அக்னியின் பிரகாசம் கொண்டதாக உள்ளது
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளையும் வியாபித்து உள்ளது
எல்லையற்றதான அந்தச் சக்கரம் எனது சக்தியில் இருந்து விரிவதாக உள்ளது
அதன் அச்சுப்பகுதியில் தோஷங்கள் ஏதும் அற்றவனும் பரமாத்மாவுமாகிய நாராயணன் உள்ளான்
அவனையே அந்தச் சக்ர ரூபத்தில் ஈசனாகக் கொள்ள வேண்டும்
அவன் குங்குமக் குழம்பு நிறத்தில் பட்டுப் பீதாம்பரம் உடுத்தி திவ்யமாக முத்து ஆபரணங்கள் அணிந்தவனாக உள்ளான் –

ஏதம் அஷ்ட புஜம் த்யாயேந் மஹா வ்யஸந ஸம்ப்லவே
உத் யஜ்ஜா நும் அநேகாஸ்திரம் ஸ்திதம் பரம சோபனம் –48–

மிகுந்த ஆபத்தான நேரத்தில் அவன் எட்டுத் திருக்கரங்கள் மற்றும் திருவடிகளுடன் கூடியவனாக
திருக்கரங்களை உயர்த்தி நிற்பவனாக -பலவிதமான ஆயுதங்கள் தரித்தவனாக
மிகவும் அழகானவனாக இருப்பதை தியானிக்க வேண்டும் –

சக்ரம் முஸல முத்தாமம் அங்குசம் ஸரஸீ ருஹம்
யாம்யே கர சதுஷ்கே அத வாமே புஜ சதுஷ்டய –49–
சங்கம் பாண யுதம் சாபம் பாசம் குர்வீம் கதாம் அபி
ததாநம் தக்ஷிணம் திவ்யம் தம்ஷ்ட்ரா பாஸ்வரி தாநநம் –50-

தனது வலப்புற நான்கு திருக்கரங்களில் சக்ரம் சக்தி கொண்ட முஸலம் அங்குசம் மற்றும் தாமரை கொண்டவனாய் உள்ளான்
இடப்புற நான்கு திருக்கரங்களில் சங்கு வில் அம்பு பாசக்கயிறு மற்றும் வலிமையான கதை கொண்டவனாய் உள்ளான்
திவ்யமான திரு முகம் பற்களின் ஒளி மற்றும் கருணையுடன் கூடிய திருக்கண்களால் அழகாக உள்ளது –

பிங்காக்ஷம் பிங்க கேஸாடயம் ஜ்வாலா மாலா பரிஷ்க்ருதம்
அத ஷோடஸ ஹஸ்தம் ச த்யாயேத் ஏவம் ஸூ தர்சனம் –51-

அடர்த்தியான திருக்கேசம் கொண்ட அவனைச் சுற்றி அக்னியானது மாலை போன்று அமைந்து உள்ளது
இப்படியாக பதினாறு திருக்கரங்களுடன் கூடிய ஸூ தர்சனத்தை மட்டுமே தியானிக்க வேண்டும் –

பரைஸ் பரிபவ ப்ராப்தே ப்ரீதி கார விவர்ஜிதே
ஸ்தி தாவ நவ க்ல்ருப்தாயாம் அபி நிர்ஜித்ய வைரிண –52-
பயே மஹதி ஸஞ்ஜாதே சோர வ்யாக்ராத் விபாதிபி
ப்ரத்யா லீட ஸ்திதம் தேவீம் வைரி வர்கதி குந் முகம் –53-
ப்ரஹாரோத் யோகி பிர் பீ நைர் புஜைர் ஊர்த்வைர் அலங்க்ருதம்
சக்த்யா தீப்தேந கங்கே ந வஹ்னி நா சதார் சிக்ஷ –54-
அங்கு சேநாத தண்டேந குந்தே நாத ஜ்வலத் விசா
பரஸ்வதேந சக்ரேண தஷிணாத கரைஸ் க்ரமாத் –55-

சங்கேந சாப முக்யேந பாஸே நாத ஹலே நச
குலிசேந கதாஸ் த்ரேண முஸலே நாத ஸூலத –56-
ஊர்த் வாததஸ் ஸ்திதைர் வாபை ப்ரதீப்தை ராயுதைர் யுதம்
தம் ஷ்ட்ரா நிஷ்ட யூத கோராக் நி ஜ்வாலா கோலா ஹலா குலம் –57
ஸம்ஸ் யூத தத்த்வயா கீர்ணம் திவ்யஉலா வந மாலயா
கோராட்ட ஹாஸ ஸம் த்ரா சத்ர வதைத் யேந்திர தா நவம் –58
ஜ்வாலா குல ஜ்வலத் தைத்ய மேதோ மேதுர பாவகே
அயுதா யுத வஹ் நீ நாமஸ் பதே தீப்த தேஜஸாம் –59-
அத் வஷட் கமயே சக்ரே சக்ரிணம் சக்ரம் உத்தமம்
த்யாயே தேவம் விதம் தேவம் மயே மஹதி மாநவ –60-

வெல்ல இயலாதபடி உள்ள எதிரியிடம் தவிர்க்க இயலாத தோல்வியை அடையும் போதும்
அவர்கள் வெல்ல இயலாத படியான இடத்தில் உள்ள போதிலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்னும் போதும்
திருடர்கள் புலி இவற்றால் ஆபத்து நேரிடும் போதும்
பதினாறு திருக்கரங்களுடன் கூடியவனாக உள்ள ஸூதர்சனத்தை
இடது திருவடியை முன்பும் வலது திருவடியை பின்பும்
வைத்து எதிர்க்கத் தயாராக உள்ள நிலையில் இருப்பவனாகத் தியானிக்க வேண்டும்

விரோதியைத் தாக்கும் விதமாக வலிமையான அவன் திருக்கரங்கள் உயர்ந்து நிற்கின்றன
உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் கீழ் இருந்து மேலாக
ஜ்வாலையுடன் கூடிய உலோக உருண்டை வாள்
நூற்றுக் கணக்கான ஜ்வாலையுடன் கூடிய அக்னி மழு கோல்
ஜ்வாலையுடன் கூடிய குறு வாள் கோடாலி மற்றும் சக்கரம் ஆகியவை உள்ளன

உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் மேல் இருந்து கீழாக
சங்கு வில் அம்பு பாசக்கயிறு ஏர் இடி தண்டாயுதம் ஈட்டி ஆகியவை உள்ளன
அவனுடைய பற்களின் ஒளியில் இருந்து புறப்படும் அக்னியின் ஜ்வாலையால் அவன் சூழப்பட்டு உள்ளான்
மேலும் அவனைச் சுற்றி அழகான வனமாலையும் உள்ளது

தனது பயங்கரமான சிரிப்பால் ராக்ஷஸர்கள் மற்றும் தானவர்கள் ஆகியவர்களின் அரசர்களை ஓடும்படி செய்கிறான்
அச்சத்தில் உள்ளவர்கள் அவனுடைய இவ்வடிவை தியானிக்க வேண்டும்
அவனே மஹா விஷ்ணுவின் திருச்சக்கரத்தில் உள்ள அபிமான தேவதையாக உள்ளான்
அரக்கர்களின் எரிகின்ற சதையின் காரணமாக புகையுடன் கூடியதாக உள்ள அந்தச் சக்கரத்தில் அவன் உள்ளான்
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளிலும் இவனுடைய இந்த ஒளியானது காணப்படுகிறது –

ஏவம் த்யாத்வா புந த்யாயேத் சதுர் பாஹும் ஸூ தர்சனம்
அந்யதா நைவ சாந்தி ஸ்யாத் அஸ்தி தேஜஸ் ததா ஹரே –61

மீண்டும் ஒரு முறை நான்கு திருக் கைகளுடன் உள்ள ஸூ தர்சனம் தியானிக்க வேண்டும்
வித்தாகி ஸ்ரீ ஹரியின் சக்தியால் அமைதி ஏற்படும் –

கோர சாந்த விபேதேந பவ்ருஷம் த்யானம் ஈரிதம்
இதி தே ஸூர சார்த்தூல த்யானம் அந் யச்ச மே ஸ்ருணு –62-

இவ்வாறு கோரம் சாந்தம் இரு நிலைகளில் உள்ள புருஷ த்யானம் பற்றிச் சொன்னேன் –
மேல் மற்ற த்யானம் பற்றிக் கேள் –

ப்ரகாரா பவ்ருஷா யே யே த்யாநே அஸ்மின் பரி வர்ணிதா
தான் ஸர்வான் மன் மயா நேவ ஸம்ஸ்மரேத் சீக்ர ஸித்தயே –63-

என்னுடன் சம்பந்தம் பெற்ற பல்வேறு புருஷ நிலைகளை பற்றி ஸதா த்யானம் செய்ய வேண்டும் –
இது விரைவாகவே பலன் அளிக்க வல்லதாகும்

அத்யந்த அபூத மிதம் சக்ர ரஹஸ்யம் தே ப்ரகீர்த்திதம்
பூயோ ரஹஸ்யம் அந்யச்ச ஸ்ருணு மே ஸூர புங்கவ–64-

உனக்கு மிக உயர்ந்த ரஹஸ்ய பரம்பரை பற்றி உபதேசித்தேன் -மேலும் கேள்

ஆக்நேயீ யா மதீயா தே புரா சக்தி ப்ரகீர்த்திதா
ஸூர்ய கோட் யர்புதா பாஸா வஹ்னி கோட் யர் புதோமா –65-
இந்து கோட் யர் புதா பாஸா மம ஸ்பந்த மயீ தனு
அம்ருதம் பரமாத்மாநம் அசேஷ புவநாத் ருதிம் –66-
ஆஸ்தாய பஞ்ச பிந்து ஆத்மா ஸ்ப்ரு சந்தீ வ்யாபி நம் பரம்
ஹிதாய ஸர்வ பூதா நாமு தேதி பரமேச்வராத் –67-

அக்னியை உள்ளடக்கிய எனது சக்தி கோடிக்கணக்கான ஸூர்யன் மற்றும் அக்னி போன்று ஒளிர்ந்து
கோடிக்கணக்கான சந்திரன் போன்ற துடிப்பைக் கொண்டதாகவும் உள்ளது
ஸஹஸ்ரார என்று தொடங்கும் மாத்திரத்தில்
அம்ருதம் -ஸ -பரமாத்மன் -ஹ -அசேஷ புவன ஆதாரம் -ர -ஆகியவை
பஞ்ச பிந்து மற்றும் வ்யாபின் ஆகிய ஒலிகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன –
மிகவும் உயர்ந்த பரமேஸ்வரனிடம் இருந்து உத்பத்தி யாகும் இந்த சக்தியானது
அனைத்து உயிரிகளுக்கும் நன்மை அளிக்க வல்லதாக உள்ளது –

தாமஷம் கல்பயேச் சக்திம் தத் ப்ரபாம் நாபி மண்டலம்
அராணி ஷண் மநோ ரர்ணான் ஸூர்ய உத்தாமவ் ஸ பிந்துகவ் –68-
ஸூஸ்திதவ் நேமி கவ் த்யாயேச் சேஷம் து ப்ரதி மண்டலம்
ஆத்மாநம் மத்யதோ த்யாயேத் ஸ்வம் மாயா பரமாத்மநோ –69-

அந்த சக்தியே ஸூ தர்சனத்தின் நாபியாகும் -அதன் ஒளியே வெளிவட்டம் -மந்த்ரத்தின் ஆறு ஒலிகளும் ஆறு ஆரங்கள் –
ஸூர்ய உத்தாம பிந்து ஒலிகள் அந்த ஆரங்கள் சக்கரத்தில் சென்று இணையும் வட்டத்தில்
உறுதியாக இணைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்
மந்திரத்தில் எஞ்சிய பகுதி -பட் -சக்கரத்தை சூழ்ந்து உள்ளதாகக் கொள்ள வேண்டும்
தனது ஆத்மாவானது மஹா லஷ்மி மற்றும் பரமாத்மாவின் நடுவில் உள்ளதாக தியானிக்க வேண்டும் –

ஸூர்ய அநல அந்தரஸ்தம் ச நிரஸ்யந் ஸம்ஸ்மரேஜ் ஜனம்
த்யா யன்ன நிச மேவம் ஹி யோகீ த்யான பாராயண –70-
விதூய நிகிலம் தோஷம் ஸாம் ஸாரிகம் அசேஷத
மயி பக்திம் பராம் ப்ராப்ய மாமே வாந்தே ஸமஸ்நுதே –71-

தன்னை தனது சரீரத்தில் இருந்து வெளியே எடுத்ததாக எண்ணி
ஸூர்யன் மற்றும் அக்னியில் நான் இருப்பதாக தியானிக்க வேண்டும்
இவ்வாறு த்யானத்தில் ஆழ்ந்த யோகி தனது அனைத்து பாபங்களையும் அந்த த்யானம் மூலமாகவே கழிக்கிறான்
அதன் பின்னர் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவனாக என்னையே தஞ்சம் எனப் புகுகிறான்

அந்தரா பரமாத்மா நம் அம்ருதம் ச ஸ்திதோ ஜபன்
மநீஷீ மனஸா நித்யம் பியூஷாப் யாய நம் ஸ்மரேத்–72-

ஸூ தர்சன மந்திரத்தின் பரமாத்மா மற்றும் அம்ருதம் -ஸ மற்றும் ஹ -ஆகியவற்றை உறுதியுடன் ஜபித்தபடி உள்ள ஒருவன்
அம்ருதத்தைப் பருகினால் உண்டாகும் சுவையை எப்போதும் மனத்தில் சிந்தித்த படி இருக்க வேண்டும் –

ஸூதயா ப்லாவ்ய மாநோ ஹி ஸ்த்ருதயா சக்தி கோடராத்
ப்ராணேந ப்ராண்யமா நச்ச தக்த தோஷோ அநலத் விஷா –73-
பஞ்ச பிந்து க்ரியா லாபாத் ஐஸ்வர்யம் பரமாஸ்தித
சந்தத அப்யாஸ யோகேந வஸீ யுக்தோ ஜிதேந்த்ரிய –74-
விஹாய சகலம் க்லேசம் வேஷ மாஸ்தாய மா மகம்
த்ருப்தோ ஜானபலோ யோகீ க்ரியயா ஸர்வதோ வஸீ –75-

ஹ-அக்ஷரம் யோகிகளின் அனைத்து தோஷங்களும் அநலம் என்னும் அக்னியின் ஜ்வாலைகளால் பொசுக்கப் படுகின்றன
அப்போது அவன் பஞ்ச பிந்து மூலமாக உயர்ந்த ஐஸ்வர்யத்தை அடைகிறான்
தொடர்ந்து யோகத்தைக் கைக்கொண்டு புலன்களை அடக்குகிறான்
என்னால் ஸாம்யா பத்தி அருளப்பெற்று தன்னைத் தன் வசப்படுத்தியவனாக உள்ளான்

ஈஸ்வர பரமோ பூத்வா ஸர்வ வ்யாப்தி மய ஸ்தித
மாமேவ மாமகம் தாம மத் ப்ரஸாதாத் உபாஸ் நுதே –76-

சாம்யா பத்தி அடைந்த அவன் எனது கருணை மூலமாகவே என்னையே அனுபவித்து ஆனந்திக்கிறான் –
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -ஸாயுஜ்யம் அடைகிறான் –

யா கிரியா ஸா சிதாக்யாதா யா சித்தி ஸா பரா க்ரியா
ஏதே ஸ பரமா நந்தாஸ்த்ர யஸ்தே பரி கீர்த்திதா –77-

அகண்டை கா பரா சக்திச் சித் க்ரியா நந்த ரூபிணி
வைஷ்ணவீ ஸா பரா ஹந்தா ஸாஹம் ஸர்வார்த்த பூரணீ –78

கிரியை செயல்பாடு என்று அழைக்கப்படுவது எதுவோ -அது சித் -அறிவு -எனவும் கூறப்படும்
சித்த என்று அழைக்கப்படுவது எதுவோ அது உயர்ந்த கிரியை எனவும் கூறப்படும்
இந்த இரண்டும் மற்றும் பரமானந்தம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு உயர்ந்த சக்தியாக உள்ளது
இதுவே- சித்த கிரியை ஆனந்தம் -ஆகியவற்றின் ரூபமாக உள்ளது
அதுவே விஷ்ணுவின் நான் என்ற எண்ணமாக உள்ளது -அவை அனைத்தையும் நிறைவேற்றுபவன் நானே ஆவேன் –

ஸ்வாச் ஸந்த்யான் மம சங்கல்போ த்விதைவம் ப்ரவிஜ்ரும்பதே
ஏகா சக்திர் க்ரியாஹ் வாநா மஹா பூதிரதாபரா –79-

எனது இச்சையால் எனது சங்கல்பம் மூலம் நான் இரண்டு சக்திகளாக மாறுகிறேன்
அவற்றில் ஓன்று கிரியை எனவும் மஹா பூதி எனவும் கூறப்படுகிறது –

ஸாமான்யதஸ் அனயோர் சக்ர ஸ்திதாஹம் பரமேஸ்வரீ
ஏஷா தே சகலா சக்திர் க்ரியாரூபா பிரதர்சிதா –80-

இந்திரனே நான் அனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளதால் அந்த இரண்டு சக்திக்கும் பொதுவாக உள்ளேன்
இப்படி செயல் ரூபமாக உள்ள அந்த சக்தி மற்றும் அதன் அம்சங்கள் குறித்து அனைத்தும் உனக்கு கூறுகிறேன் –

ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந தாரிகாயா நிசாமய
நிமீ லித க்ரியாகாரா ஸ்பஷ்ட ஐஸ்வர்ய ஸ்வரூபிணீ –81–

தநு ஷாட் குண்ய ரூபா மே பூதிர் ஸா தாரி காஹ்தயா
தஸ்யா ஸ்தூலாதி ரூபாணி யதா வன்மே நிசாம்ய
உச்ய மாநாதி தேவே ச ஸாவதா நே ந சேத ஸா –82-

அடுத்து தாரிக்காவின் ஸ்தூல ஸூஷ்ம நிலையான வடிவம் குறித்துக் கேட் பாயாக
பூதி எனப்படும் தாரிகா ஆறு குணங்களுடன் கொண்ட ரூபம் உள்ளவளாக உள்ளாள்
ஆனால் அவளுடைய குணங்களில் செயல்படும் குணமானது மறைவாகவும் ஐஸ்வர்யம் என்ற குணமானது ஓங்கியும் உள்ளது

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட் பாயாக –

முப்பத்து ஒன்றாவது அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–361-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம