Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்-ஏக ஸ்லோக ஸ்ரீ பாகவதம்-ஏக ஸ்லோக ஸ்ரீ மஹாபாரதம்–

July 2, 2022

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ஸ்ரீ ராமாயணம்

—————

ஏக ஸ்லோக ஸ்ரீ பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

 ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே ஸ்ரீ பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

———–

ஏக ஸ்லோக ஸ்ரீ மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே ஸ்ரீ மஹா பாரதம்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்தோத்திரங்கள்–ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

April 6, 2022

ஸ்ரீ வராஹ மூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது.
இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில் வாழ இயக்கம் அடைந்த
நிலையை எடுத்துக் காட்டுகிறது

——-

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்லோகம்
ஸ்ரீ வராஹ மூர்த்தி பூமியைக் காக்க எடுத்த மூன்றாவது அவதாரமான
ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு உரிய ஸ்லோகம்

ஸுத்த ஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம் – –
தயா நிதிம் தயா ஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதா பாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம்

ஸுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே,
ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே,
கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே,
ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

———–

ஸ்ரீ வராக அவதாரத்தின் கதை இதுதான்

ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர்.
அங்கு காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷி களைத் தடுத்தார்கள்.

அந்த ரிஷிகள் கோபம் அடைந்து,
“நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.

ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி,
“உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை
மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்” என்று கேட்டனர்.
ஸ்ரீ விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், “இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான்.
இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து,
பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள்” என்று கூறினார்.

அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள்.
முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.
அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து,
‘ எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று,
மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களை சிறை பிடித்தான்.
அவர்கள் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான்.
அதற்கு வருண பகவான், “ அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்து வருவார். அவரிடம் போராடு” என்று சொன்னார்.
அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.
நீர்ப் பிரளயத்தில் பூலோகம் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார்.
அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச்
சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.
இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து,
அசுர லோகத்தில் சுகமாக இருந்தான். அப்போது நாரதர் அங்கே தோன்றி,
“இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும்
பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான்.
இருவருக்கும் கடும் போர் உண்டானது.
இரண்யாட்சன் அடித்த அடியால், மகா விஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன் கதாயுதத்தால் தாக்க,
மகாவிஷ்ணு தம் இடது காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.
இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது.
இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான்.
இருவருக்கும் உக்கிரமான போர் மூண்டது. இரண்யாட்சனால் சமாளிக்க முடியவில்லை.

பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.
சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகா விஷ்ணு.
அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.
அவர்கள் அத்தனை பேரையும் வதம் செய்தார் மஹாவிஷ்ணு.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று எண்ணிய மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத்
தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான்.
அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.
இது தான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது.

2. வராகரின் பேருருவம்

திரிவிக்கிரம அவதாரத்தை விட பல மடங்கு பெரிய அவதாரம் வராக அவதாரம் என்பதை
ஒரு எளிய உதாரணத்தின் மூலம் ஆழ்வார்கள் காட்டுகின்றார்கள்.
கீழே உள்ள ஏழு உலகங்கள்,மேலே உள்ள ஏழு உலகங்கள், அதைத் தாண்டி அண்ட ஆவரணங்கள் எல்லாம்
கடந்து சென்ற அவனுடைய திருவடியை, பிரம்மன் சத்திய லோகத்தில் வணங்கி கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.
ஆனால் வராக அவதாரம் திருவிக்கிரம அவதாரம் விட பெரியது.
‘‘குரமத் யகதோ யஸ்ய மேரு கண கணாயதே” என்ற சுலோகம் வராகத்தின் பேருருவைக் கூறுகிறது
மேருமலையும் வராகத்தின் குளம்படியில் சுருண்டு தூள்தூளாக ஆகியது என்றால்
அவன் உருவத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. அத்தனை பிரம்மாண்டமானது வராகரின் பேருருவம்.

3.வேதங்களில் வராக அவதாரம்

வராக புராணம் என்பது மகா புராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும்.
இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும்
சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.
இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள்
ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வராக அவதாரத்தை பொருத்தவரை முதல் குறிப்பு வேதத்தில் சதபத பிராமணத்தில் இருக்கிறது.
நிலவுலகில் வலிமை மிக்க பன்றி ஒன்று எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து வெளிவந்ததாகவும்
அந்தப் பன்றியும் படைப்பு கடவுளான பிரஜாபதியும் ஒருவரே என்றும் சதபத பிராமணம் கூறுகின்றது.

நாராயண வல்லியில் வராக அவதாரம் மிக அருமையான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது.
அதில் பூமிப் பிராட்டியை மீட்டவுடன் வராகன் ஆனந்த சொரூபமாக இருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பகவத் சாஸ்திரத்தில் ஸ்ரீ வராக பெருமானின் உருவம் விளக்கப்படுகிறது.

‘‘விஷ்னோர் மகா வராகஸ்ய நிர்மாண மது நோச்யதே” என்கிற மந்திரத்தில்
கழுத்து வரை மனித உருவாகவும் மேலே திருமுகமண்டலம் வராக முகமாகவும்
இடது முழங்கையில் பூமிப் பிராட்டியை ஏந்திக் கொண்டும்
வலது திருக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டும்
திருமுகமண்டலம் திரும்பி தேவியின் திருமேனித் தடங்களை முகரும் படியாகவும்
திருவாழ்மார்பன் ஆகவும் திவ்ய ஆபரண பூஷிதனாகவும் கர்ப்பக்கிரகத்தில்
வராக பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் ஸ்ரீ முஷ்ணத்தில் வராகர் காட்சியளிக்கிறார்.
விஷ்ணு புராணம் வராக அவதாரத்தின் தோற்றத்தை மிக விரிவாகக் கூறுகின்றது.
விஷ்ணு புராணத்தில் இரண்யாட்சனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை
ஆனால் கடலில் பூமி மூழ்கிய விஷயமும் பகவான் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய விஷயமும்,
அப்பொழுது பூமி பிராட்டி செய்த ஸ்தோத்திரம் மற்ற தேவதைகள் கூறிய ஸ்துதிகள் கூறப்பட்டுள்ளன.

விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ வராக அவதார வைபவம்
“தஸ்ய யஜ்ஞ வரஹஸ்ய விஷ்ணோ அமிததேஜச பிரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம:”
என்று குறிப்பிடப்படுகிறது
அவர் சப்த சமுத்திரத்திலும் நிற்கும் பொழுது அவருடைய முழங்கால் அளவுக்கு கூட சமுத்திரம் இருக்கவில்லை
என்று புராணங்கள் கூறுகின்றன.
சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது
(வராகர் பூமியை துக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வேர்வை
ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது)

தன்னுடைய 100 கைகளால் ஒரு பன்றி இப்பூவுலகை மேலேதூக்கி வந்தது என்று தைத்ரீய ஆரண்யகம் குறிப்பிடுகிறது.
மகாபாரதத்திலும் மார்க்கண்டேய புராணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக பூவராகர் பெருமை பேசப்படுகிறது.

பிரம்மாண்ட புராணத்தில் ஐந்தாம் அத்தியாயம் வராக பெருமானின் பேருருவை வருணிக்கிறது.

வராக சரம ஸ்லோகம்

வைணவ சமயத்தில் மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் ஒன்று சரம ஸ்லோகம்.
அந்த சரம ஸ்லோகத்தில் மூன்று விதமான மந்திரங்கள் உண்டு.
அதில் முதன்மையான சரம ஸ்லோகம் வராக அவதாரத்தில் வராகப்பெருமாள் பூமாதேவிக்கு சொன்னது.

“ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”

அவர் சொன்ன அந்த சரம ஸ்லோகத்தின் உடைய பொருள் வராக சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸ்,
ஒரு மனிதன் நல்ல உடல்நலத்தோடு இருக்கக் கூடிய நிலையில், வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அவர் அந்திம திசையில் ,அவரால் பகவான் திருநாமமும் சொல்ல முடியாத
ஒரு நிலையை அடைந்து,,நினைவிழந்து,இருக்கும்போது,தெய்வத்தினுடைய நாமமும் சிந்தனையோ செய்யவேண்டிய
அவசியம் இல்லாதபடி நானே அவனுடைய அருகில் சென்று அவனை என்னுடைய பதத்திற்கு அழைத்துக் கொள்கிறேன்.

இதை பெரியாழ்வார் மிக அழகான பாசுரத்தில் பாடுகின்றார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்பு என்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!”

யாகங்களும் வராகனும்
வராகர் பொதுவாக ஆதி வராகர்,
யக்ஞ வராகர் மற்றும்
பிரளய வராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார்.

வராக பெருமானுக்கு உள்ள தனிச்சிறப்பு, யாகங்களைக் காப்பாற்றுகின்ற மூர்த்தி.
யாகங்கள் நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அங்கே
வராக பெருமாள் யக்ஞ வராகராய் ஆவாஹனம் ஆக வேண்டும்.
120 (10 யோசனை)கிலோ மீட்டர் அகலமும் 1200 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவராக
மலையைப் போன்ற பெரிய உருவோடு வெண்மையான கூர்மையான பற்களைக் கொண்டு
தீயைப் பொலிகின்ற ஒளியும் சூரியனைப் போல ஜொலிக்கும் கண்களும் கொண்டு விளங்கியதாக
இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வராக மூர்த்தியின் வடிவம் வேத வேள்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒப்பிடப்படுகிறது.
அவரே ஒரு வேள்விச் சாலை.
உபநிடதங்களும் அவற்றின் மறைபொருளும் அவருக்கு இருக்கை.
சூரியனும் சந்திரனும் அவரது இரு கண்கள்.
வேதத்தின் சாகைகள் அவருடைய காதணிகள்.
அவருடைய நீண்ட முகம் வேள்வியின் சுருக்
அதாவது ஆஜ்யம் விடுகின்ற கரண்டி.
அவருடைய பெருத்த ஓசை சாமவேதம்.
அவருடைய வடிவம் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த வடிவம்.
வேத மேடையே அவரது இதயம்.
சோம பானமே அவரது குருதி எப்படி வர்ணிக்கப்படுகிறது.

வராகரைப் போற்றும் துதி நூல்கள்

திருமாலை போற்றும் ஸ்ஹஸ்ரநாமாவளிகள் ஏழு பெயர்கள் வராக அவதாரம் தொடர்புடைய
திருநாமங்கள் ஆக விளங்குகின்றன.
இந்த ஏழு திருநாமங்களும் திருவுருவத்தை வர்ணிக்கின்றன.
பூமியைத் தாங்கும் பெரிய உருவத்தை உடையவன்;
பூமியைத் தாங்கும் பெரிய கொம்புகளை உடையவன்;
வராக முகத்தை உடையவன்;
பூமியை திரும்பவும் அடைந்தவன்;
பர ஞானம் இவற்றைக் கொடுப்பவன் என்று திருநாமங்கள் போற்றுகின்றன.

ஆழ்வார்கள் அனைவருமே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பொய்கை ஆழ்வார் ஆறு பாசுரங்கள், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்கள், பேயாழ்வார் ஒரு பாசுரம்,
திருமழிசையாழ்வார் ஆறு பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், குலசேகர ஆழ்வாரும் ஆண்டாளும் ஒரு பாசுரம்,
பெரியாழ்வார் ஏழு பாசுரங்கள்,திருமங்கை ஆழ்வார் 15 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்

இது தவிர ஸ்ரீ வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்தம், தசாவதார ஸ்தோத்திரம்,பூஸ்துதி, ரகசிய சிகாமணி
போன்ற நூல்களிலும் வராகப் பெருமானைப் போற்றியுள்ளார்.

இது தவிர வராக கவசம், ஸ்ரீ வராக ஸ்தோத்திரம்,வராக உபநிஷத்,
ஸ்ரீ பூவராகர் சுப்ரபாதம், பிரபத்தி, மங்களம் போன்றவை
வராக பெருமானின் பெருமையைப் போற்றும் வண்ணம் உள்ளன.

வராக தலங்கள்

பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் காஞ்சி வரதர் சந்நதியிலும்,
மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் ,
திருமலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீ வில்லிபுத்தூர், முதலிய
தளங்களிலும் வராகர் சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீ முஷ்ணம் வராகருக் கென்றே உள்ள தலம்.
அக்கால அரசர்கள் பலரும் தங்கள் ஸ்தூபிகளில் வராகர் உருவைப் பயன்படுத்தினர்.
நாணயங்கள் வராகர் பெயரால் வராகன் என்றே வழங்கப்பட்டன.
வராகி மிகிரர் என்ற பெயரில் உள்ள ரிஷி ஜோதிட சாஸ்திரத்தை வரையறை செய்து கொடுத்தார்.
அரசு முத்திரைகளில் வராகர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டன.

முஸ்தா சூரணம்

ஆச்சாரியர்கள் வராக அவதாரத்தில் மேன்மையை மிக அற்புதமாகப் பேசுகின்றார்கள்.
பகவான் அவதாரம் எடுக்கும் பொழுது அந்த அவதாரத்துக்கு ஏற்ப அத்தனை இலக்கணங்களும்
பொருந்தும் படியாக ஆகி விடுகின்றார். இதற்கு “மெய்ப்பாடு” என்று பெயர்.
வராக அவதாரத்தில் அவருடைய உணவு என்ன என்று சொன்னால்
நிலத்திலேயே அடியில் முளைக்கக் கூடிய கோரைக்கிழங்கு.

தண்ணீர் நிறைந்து உள்ள சதுப்பு நிலங்களில் உண்டாகும் இந்த கோரைக்கிழங்கு சரீர வியாதிகளைப் போக்க வல்லது.
கபம், பித்தம், ஜுரம் முதலியவை இந்த மருந்தினால் தீர்ந்துவிடும்.வராக சேத்திரம் ஆகிய ஸ்ரீ முஷ்ணத்தில்
இந்த முஸ்தா கிழங்கு சூரணத்தை பிரசாதமாகத் தருவர்.
அதனை சர்க்கரையோடு அல்லது வெல்லத்தோடு சேர்ந்து உண்டால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய
பல்வேறு விதமான நோய்களும் நீங்கிவிடும்.
ஆசாரியர்கள் இந்த கோரைக்கிழங்கை முத்தக்காசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.

சங்கல்ப மந்திரம்

நாம் தினசரி சங்கல்ப மந்திரம் சொல்கிறோம்.
அதில் வராகப் பெருமான் பற்றிய குறிப்பு வருகிறது.
‘‘துவிதீய பரார்த்தே ஸ்ரீ சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே” என்று
சங்கல்ப மந்திரம் கூறுகிறோம்.
இது கலியுகத்தின் முதல் பாதம் ஆகும்.மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.
தேவர்களுக்கு 365 நாள் ஒரு தேவ ஆண்டு. 1200 தேவ ஆண்டு கலியுகம்.

கலியுகம் ஒரு மகாயுகம்

ஆயிரம் மகாயுகம் ஒரு பிரம்மாவின் பகல். இப்பகலின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்படும்.
அப்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருக்கும்.
இரவு முடிந்த பிறகு மறுபடியும் படைப்புத் தொழில் ஆரம்பிக்கும். இது ஒரு கால சுழற்சி.
இதை நாம் ஒரு கல்பம் என்று சொல்லுகின்றோம்.
ஒரு கல்பத்தில் 12 மனுக்கள் வாழ்ந்து போவார்கள்.
ஒரு மநுவின் காலம் ஒரு மன்வந்தரம் எனப்படும் இப்பொழுது 6 மனுக்கள் போய்விட்டனர்.

ஏழாவது மனுவில் கிருத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் முடிந்து
கலியுகத்தின் முற்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த கல்பம் உண்டாகும் பொழுது தான் பகவான் வராக ரூபம் எடுத்து தண்ணீரில் இருந்து
பூமிப் பிராட்டியை மேலே கொண்டுவந்து நிலை நிறுத்தினார்.
அதனால் நாம் வாழும் கல்பம் ஸ்ரீ ஸ்வேத வராக கல்பம் எனப்படுகிறது.
இதை தினசரி சொல்லி நம்மை அறியாமலே வராகப் பெருமானை வணங்கும் பேறு நமக்குக் கிடைக்கிறது.

————-

வராஹ அவதாரம்:
தியான ஸ்லோகம்

அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந் முக்தாபம் கண்ட
தேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம் ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள்
கட்ககேடே கதாக்யாம் ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹ ரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா

————

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர |
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ||

ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்பக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||

ஸ்ரீ இராமாயண சரம ஸ்லோகம்
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே|
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம யுத்த || 18.33

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் (பகவத் கீதை)
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||18.66
—-

காஷ்ட பாஷாணங்கள் விழுந்து கிடக்கும் போது என்ன செய்வது? –
காஷ்ட என்றால் கட்டை போலும், பாஷாணம் என்றால் கல் போலும்,
நினைவு தப்பி விழுந்து கிடக்கும் நிலையில் பெருமாளை நினைக்க முடியாதே என்ன செய்வதே?

பதில்:
வராஹ சரம ஸ்லோகத்தில் இதற்கான பதில் சொல்லப்பட்டுள்ளது –
“ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்வக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||”

வராஹ பெருமாள் பூமா தேவிக்கு தானே கூறும் விளக்கம்:
என்னை பிறப்பு அற்றவனாக நன்கு உணர்ந்து, மனது நல்ல முறையிலும், உடலில் சக்தி இருக்கும்போது
1) எவன் என்னுடைய திருநாமத்தை உரக்க தினமும் சொல்லுகிறானோ
2) எவன் என்மேல் விஸ்வாசம் கொண்டு என் திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ
3) அவனது முயற்ச்சியை விட்டு என்னை மட்டுமே உபாயம் என பற்றி
என்னுடைய திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ (சரணாகதி) அவனுக்கு:
அந்திம காலத்தில் அவன் கட்டை மாதிரி கிடக்கும் போது (காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்!),
எல்லாரும் கை விட்ட நிலையில்! பெருமாள் சொல்லறார், நான் கைவிடமாட்டேன்! (அஹம் ஸ்மராமி மத்பக்தம் )

அந்த காலத்தில் என் நாமத்தை சொல்ல வில்லை என்றால் நான் அவனை கை விடுவேனா?
சரணாகதி பண்ணிய நாளிலிருந்து நினைவு தப்பும் வரை என்னை நினைத்து இருந்தான், அவனை விட்டு விடுவேனா?

சரணாகதி செய்த அடியார்(மறந்தும் புறந்தொழா மாந்தர்)என்னுடைய பக்தன், என் பெயரை சொன்னவன்,
என்னுடைய திருவடியில் சரணாகதி பண்ணினவன், அவனை நான் ஒரு நாளும் கை விட மாட்டேன்..

நானே வருவேன், என்னுடன் அர்சிராத்ரி மார்கத்தில் வழித்துனையாக (வழித்துனை பெருமாள் – திருமோகூர்)
அழைத்துக்கொண்டு வைகுந்தம் சென்று (ந்யாயாமி பரமாம் கதிம்) நித்ய கைங்கரியத்தை கொடுத்து அருளுவேன்🙏

எம்பெருமானார் திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜ பெருமாளிடம் கேட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்று –
“அந்திம காலத்தில் பெருமாளை நினைத்தால்தான் வைகுந்தம் கிட்டுமா?
தேவாதி ராஜனும் இதற்கு சரணாகதி செய்து என் மேல் திட விஸ்வாசம் கொண்டிருக்கும்
அடியார்களை கடைசி காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் வைகுந்தம் கொடுப்போம்!

இதிலிருந்து நாம் அறியும் விஷயம் என்னவென்றால்
கடைசி காலத்தில் அவர் நம்மை நினைக்க வேண்டும் (அஹம் ஸ்மராமி மத் பக்தம்) என்றால்-
சரணாகதி செய்த பின்னர் நாம் அவரை எப்பொழுதும் (நினைவு தப்பும் வரை) நினைத்து இருக்க வேண்டும்!
கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்!

———–

த்விதீ யஸ்ய பரார்த்தஸ்ய வர்த்தமானச்ய வை த்விஜ
வராஹ இதி கல்போ அயம் பிரதம பரிகீர்த்தித –1-3-28-

ப்ரஹ்மா நாராயணாக்யோ அசௌ கல்பாதௌ பகவான் யதா
ஸ ஸர்ஜ சர்வ பூதானி ததா சஷ்வ மஹா முநே –1-4-1–என்று
மைத்ரேயர் வராஹ கல்ப படைப்பைப் பற்றியும் கேட்கிறார்-

பவதோ யத் பரம் தத்தவம் தன்ன ஜா நாதி கச்சன
அவதாரேஷூ யத்ரூபம் ததர்சந்தி திவௌ கச –1-4-17-

உனது நிஜமான ஸ்வரூபத்தை யார் தான் அறிவார் -நீ லீலையாக செய்து அருளின அவதாரங்களை அன்றோ
தேவர்கள் ஆராதிக்கின்றனர் -என்றபடி

யத் கின்ஜன் மநஸா க்ராஹ்யம் யத் க்ராஹ்யம் சஷூராதிபி
புத்த்யா ஸ யத் பரிச்சேத்யம் தத் ரூபம் அகிலம் தவ –1-4-19–என்று

மனத்தாலே கிரஹிக்கப் படும் சுகாதிகளும் –கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கப் படும் ரூபம் போன்றவைகளும்
-புத்தியினால் ஆலோசிக்கப் படும் பிரமாணாந்தரங்களும் உன்னுடைய ஸ்வரூபம் அன்றோ

ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்துதிக்கின்றாள்-ஹே சம்பூர்ண ஞான மயனே –ஹே ஸ்தூல மாயனே -ஹே அவ்யயனே –
ஹே அநந்த-ஹே அவ்யக்த -ஹே வ்யக்தமய பிரபோ –
ஹே பராபர ஸ்வரூப -ஹே விச்வாத்மன் -ஹே யஜ்ஞ பதே-ஹே அநக -ஹே பிரபோ – -இத்யாதி

———————

ஸ்ரீ தைத்திரயம் –
அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே -இத்யாதி பஞ்ச பிரகார பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபம்

ஸ்ரீ வராஹ புராணம் -சாத்விக புராணங்களில் ஓன்று -24000 ஸ்லோகங்கள் கொண்டது
கைசிக மஹாத்ம்யம் இதில் உள்ளது
48 அத்யாயம் -92- ஸ்லோகங்கள் இதில் உண்டே

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்

மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57-

மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58–

538-த்ரிபத-
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

539-த்ரிதச அத்யக்ஷாய
த்ரி தச -முப்பத்து மூவர் தேவர்களுக்கும் சேவியர் இவரே
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

540- மஹா ஸ்ருங்காய
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

541–க்ருதாந்தக்ருத
ஹிரண்யாக்ஷனை நிரசித்தவர்
யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

542-மஹா வராஹாய
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-ஸ்லோகம் சொல்லுமே
மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –

—————–

ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை–3-5-5-

எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே –5-2-3-

—————————-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே––நாச்சியார் –11-8-

————————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே-பெருமாள் திருமொழி -2-3-

———–

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய் –திருச்சந்த விருத்தம்–28-

——————————

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -திருச்சந்த விருத்தம்-114-

—————————-

வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் -ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-4-

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாசசிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – (வரம் கொள்ள -)
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவாய் நினைவார் என் நாயகரே –2-6-3-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செலும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவலையம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-1-

இவள் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-2-

என் தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-3

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-4-

ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-5-

என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-6-

இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-7-

இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-8-

வன முலையாளுக்கு என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-9-

இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை –பாடல் வல்லார் பழ வினை பற்று அறுப்பாரே -2-7-10-

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –திரு வயிந்திர புரமே-3-1-1-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம வின்னகரே சேர்மினீரே -3-4-3-

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
வானும் மண்ணும் நிறையைப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்தந் தன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன்னடியார் மனத்து என்றும்
தேனாகியமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திருவுருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-

பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் -7-8-10-

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

——————————————-

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-

——–

பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரமெய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என்னருகில் இலானே –1-9-2-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே -2-8-7-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–4-5-10-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5-6-1-

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

தானே உலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே––10-5-3-

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -10-10-7-

——–

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-2-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-9-

என்னுள்ளம் ஓவாது எப்போதும் —கேழலாய் பூமி இடந்தானை ஏத்தி எழும் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-25-

இடந்தது பூமி –பேரோத வண்ணர் பெரிது –ஸ்ரீ முதல் திருவந்தாதி-39-

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் -உராய் உலகளந்த ஞான்று -வராகத்
தெயிற்றளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி -ஸ்ரீ முதல் திருவந்தாதி-84

ஊனக் குரம்பையின் உள் புக்கிருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும் ஏனத்துருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-91-

———————————————————————————–

நீ யன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே நீ யன்று உலகிடந்தாய் என்பரால்
நீ யன்று காரோதம் முன் கடைந்து பின்னடைத்தாய் மா கடலை பேரோத மேனிப்பிரான் -இரண்டாம் திருவந்தாதி–30-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும் குரா நற் செழும் போது கொண்டு வராகத்
தணி யுவன் பாதம் பணியுமவர் கண்டீர் மணியுருவம் காண்பார் மகிழ்ந்து –இரண்டாம் திருவந்தாதி-31-

மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்நெஞ்சே இரு –இரண்டாம் திருவந்தாதி–36

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து -இரண்டாம் திருவந்தாதி-47

——————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——மூன்றாம் திருவந்தாதி–45-

கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர்
மாதுகந்த மார்வதற்கு பெண்ணகலம் காதல் பெரிது –மூன்றாம் திருவந்தாதி-54

——————————————

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்—நான்முகன் திருவந்தாதி -70-

வகையால் மதியாது மண் கொண்டாய்

—————————-

நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே
பொலிந்த எமக்கு எல்லா விடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலங்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -திரு விருத்தம் -39-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும்கேழ்பவருளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -திரு விருத்தம் -45-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99-

—————————————-

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் –ஸ்ரீ திருவாசிரியம்–6-

—————————————————

யாமே யாருவினையோம் செயோம் எண் நெஞ்சினார்
தானே அனுக்கராய்ச் சார்ந்து ஒளிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு -பெரிய திருவந்தாதி -7-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடமுன் படைத்தான் என்பரால் -பாரிட
மாவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகாவாலவை -42-

—————————————–

ஏழ உலகு எயிற்றினில் கொண்டனை –திருவெழு கூற்றிருக்கை

——————————-

மன்னிவ் வகலிடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை -பெரிய திருமடல்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமா தேவிப்பிராட்டி ஸமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

March 25, 2022

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமத் வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம் —

February 24, 2022

விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியே விஷ்ணு தர்மம். விசிஷ்டாத்வைதத்தின் முக்கிய இதிகாசம் விஷ்ணு தர்மம். சதனீகர் என்னும் மன்னர் ‘பகவானை அடையும் வழி எது’ என்னும் தன் கேள்வியை செளனகர் என்னும் ரிஷியிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கமே விஷ்ணு தர்மம்.

ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம்
ஸ்ரீ தால்ப்யர் னென்கிற மகரிஷி ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி இடம் கேட்பதாக – ஸம்வாதம் -மூலமாக பிறந்த ஸ்லோகம்

தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு துஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்த்தவ்யம் தத் உச்யதாம் –1-
யேந ஆரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் சோப ஸாம்யதி
அமங்கலா நாம் திருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே –2-

ஏதாவது நற்காரியங்கள் தொடங்கும் போதும் -தீய கனாக்கள் கண்ட போதும் அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேரும் போதும்
எத்தை ஜபிக்க வேணுமோ அத்தை தேவரீர் அருள வேணும்

எத்தை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாமே ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் ஒழியுமோ
கண்ட அமலங்கள் கெடுதலை விளையாமல் போகுமோ
அத்தைச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்க

——

புலஸ்ய உவாஸ
ஜநார்தநம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான்யசேஷாண்யபஹந்தி ஸாதயத்யஸேஷ கார்யாணி ச யான்ய பீப்ஸதி –3-

சகல பிராணிகளுக்கும் சேஷியாய் -ஸகல சேதனர்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குபவராய் –
ஜனார்த்தனன் என்ற திருநாமம் கொண்ட பெருமாளை
இடைவீடு இன்றி சிந்தனை செய்யும் மனிதன் ஸகலவிதமான கெடுதல்களை தவிர்த்துக் கொள்கிறான்
சாதித்திக் கொள்ள விரும்பும் சகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்கிறான் –

———

ஸ்ருணுஷ்வ ஸான்யத் கததோ மமாகிலம் வதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் பிரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி–4-

மேலும் நான் உரைக்கக் கேளீர்
ஸர்வார்த்த ஸித்தியைத் தரவல்லதும் ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ -அது தன்னைச் சொல்லா நின்றேன் –

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

இது முதல் ஸ்தோத்ரம் தொடக்கம்
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்கிறபடியே
ஸகல சராசரங்களும் யாவன் ஒரு எம்பெருமான் பக்கலிலே ப்ரதிஷ்டிதம் பெற்று இருக்கின்றனவோ

ய ஜகத் த்ரயே
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணன் என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்று உலகினுள்ளும் பிரதிஷ்டித்தனாய் இரா நின்றானோ

யச் ச ஜகதஸ் ஹேது
ஸகல ஜகத் காரண பூதன் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -த்ரிவித காரணமும் யாவன் ஒருவனோ
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹகாரி காரணம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்

ய ஜகத் ச பாதி ச யத்தி
காரண பூதன் ஒருவனாய்
ரக்ஷக ஸம்ஹாரங்கள் வேறு ஒருவராய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கும் இவனே கர்த்தா
அத்தி -என்று ஸ்ருதி சாயையிலும் ஸூத்ர சாயையிலும் ஸம்ஹரதியைச் சொன்னவாறு
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும்
ஆதேய பூதனாயும்
தத்புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தனாயும்
இரா நின்ற ஸர்வேஸ்வரேஸ்வரன்

யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மங்கள விவ்ருத்தி ப்ரதானாக வேணும் என்றதாயிற்று
ஸர்வதா -மத்யம தீப நியாயத்தாலே மூன்றாம் பாதம் நான்காம் பாதம் இரண்டுடன் அன்வயம்

———-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணு தரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–6-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான்
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய் -என்கிறபடியே
பஞ்ச பூதங்களாக விரிந்தும்

யோ அணு தரோணு பாவாத்
அணு பாதார்த்தங்களிலும் அணுவாய்

அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும் ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும்
இருக்கும் பரம புருஷன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மாங்கள்ய விருத்தியைத் தந்து அருள வேணும்

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய்

————-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத நந்தாத் அநாதி மத்யாததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேது பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–7-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத்
அநந்தத்வமாவது -பரிச்சேத ரஹிதத்வம்-தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேத ராஹித்வத்தைச் சொல்கிறது
எப்பொருளும் தானாய் -வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாததிகம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே மத்யமும் இல்லாதவன்

ந கிஞ்சித் ஸ ஹேது ஹேது
கார்ய பதார்த்தங்களை எல்லாமே காரண பூதன்

ஸ ஹேது -பதம் கார்ய பதார்த்தங்களைச் சொல்லுகிறது —
ஹேதுவுடன் கூடியதாகில் அது கார்யமாகவேதானே இருக்க வேண்டும்

பரமேஸ்வரேஸ்வரோ –
பரமேஸ்வரன் என்ற பேர் பெற்றவனுக்கும் ஈஸ்வரனானவன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–8-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்டியும்
ருத்ரனை ஆவேசித்து ஸம்ஹாரத்தையும்
ஸ்வேந ரூபேண நின்று ரக்ஷணத்தையும்
பண்ணிப்போருவதாக ஸாஸ்த்ரம் சொல்வதையே பூர்வ அர்த்தம் சொல்லுகிறது

குணாக் ரணீர் யோ பகவான்
குண ஸப்தம் குணவான்களைச் சொல்லுகிறது –
குணவான்களுக்குள்ளே தலைவன் என்கை
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவன் என்றவாறு

ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதீநாம் பரமோ முனீ நாம்
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–9-

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தால்ப்ய மகரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திருக்கண்ண புரம்-மூலவர் உத்சவர் -த்யான ஸ்லோகார்த்தம்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

February 14, 2022

மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.-ஸ்ரீநம்மாழ்வார்

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.

‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்

இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.

கோயிலின் பெருமைகள் ;

1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே

மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.

திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்

காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது

————————

புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே

புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்

16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்

புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்

2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே

3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்

4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்

5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து

சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக

7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்

8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –

நீலாத்ரி இவ –
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்

10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்

11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்

த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு

13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்

நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்

15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்

16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்

———————-

உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்

விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –

வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது

திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே

புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –

வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –

பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்

உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –

ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –

வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்

வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –

——————————————————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்

———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

———–

திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்

பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே

திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி

————

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்

——

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

——–

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே

அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்

வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-

திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —

கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்

இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீகண்ணபுரநாயகி ஸமேத ஸ்ரீநீலவண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ -ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

January 20, 2022

ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1 ॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுல-மஹிமானமஞ்ஜனா-பா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசனோதா³ரம் ।
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥

வானர-னிகராத்⁴யக்ஷம் தா³னவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼஶம் ।
தீ³ன-ஜனாவன-தீ³க்ஷம் பவன தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-னிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா
ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம் – ஸம்பூர்ணம் ॥

————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

“வீதாகி²ல-விஷயேச்ச²ம்” –
எல்லா விஷய இச்சைகள், புலன்களுக்கு இன்பத்தை தரக் கூடிய, போகப் பொருட்கள் மேல்
இருக்கிற ஆசைகளிடமிருந்து விடுபட்டவர்.

“ஜாதாநந்தா³ஶ்ர புலகம்” –
அவர் ராம நாமத்தை ஜபிச்சு,

‘ஆனந்த அஶு’ – ஆனந்த கண்ணீர் பெருகுபவராகவும்,
‘புலகம்’னா மயிர்கூச்செரியறது. அப்படி அந்த ராம நாமத்துனால, இடையறாது ராம நாம ஜபத்துனால,
எவருக்கு கண்களில் ஆனந்த பாஷ்பமும், உடம்புல மயிர்கூச்சலும் ஏற்படறதோ, அப்படி ராம பக்தி வந்துடுத்துனா,
எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் வராமாட்டான்! அப்பா கிட்ட பிள்ளைக்கு பயம்!
எங்க காமன் இருக்கானோ, அங்க ராமர் வர மாட்டார்!
அந்த மாதிரி அந்த காம வாஸனையே இத்து போன ஒரு
‘அத்யச்ச²ம்’ –
ரொம்ப நிர்மல வடிவானவர், தூய்மையே வடிவானவர் ஹனுமார்!

“ஸீதாபதி தூ³தாத்³யம்” –
ஸீதா பதியினுடைய, ஸீதையினுடைய கணவரான ராமருடைய தூதர்.
இந்த ‘ஸீதாபதி தூ³தாத்³யம்’ங்கறது கிஷ்கிந்தா காண்டத்துல, 3வது ஸர்கத்துல மொதல்ல
ஸுக்ரீவன அனுப்ச்சு ராமர் கிட்ட ஹனுமார் வேஷம் போட்டுண்டு வரார்!
ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து நமஸ்காரம் பண்ணி, ரொம்ப அழகா பேசறார்.
“நீங்க யாரு? உங்களைப் பார்த்தா ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள்! ஆனா ரிஷிகள் மாதிரி வேஷம் போட்டுண்டு இருக்கேள்!
சுத்திமுத்தி ஏதோ தேடிண்டே வரேள். சந்த்ர ஸூர்யாளே பூமில இறங்கி வர்றமாதிரி அவ்ளோ தேஜஸா இருக்கேள்!
உங்களுடைய தேஜஸுனால இந்த பம்பை ஏரியும் இந்த மலையும் ஒளிர்கிறது!”, அப்படீன்னு அழகா பேசி ,
ராம லக்ஷ்மணாளை வந்து பார்த்து நமஸ்காரம் பண்ணவொடனேயே அவா மேல பக்தி ஏற்படறது!

அதனால ஸுக்ரீவன் “சூழ்ச்சியா பேசி தெரிஞ்சுண்டு வா”னு சொன்னா கூட, ஹனுமார் உள்ளபடி சொல்லிட்டார்.
“நான் ஸுக்ரீவன் என்கிற வானர ராஜாவின் மந்திரி. என் பேர் ஹனுமான். ஸுக்ரீவன் உங்களோடு நட்பை விரும்புகிறார்!”
அப்படீன்னு சொல்லிடறார்.

அப்போ ஹனுமாருடைய இந்த பேச்சைக் கேட்டு ராமர் ரொம்ப கொண்டாடறார்.
“ரிக் யஜுஸ் ஸாம வேதங்களை அத்யயனம் பண்ணி, நவ வ்யாகரணங்களையும் பல முறை கேட்டாத் தான் இந்தமாதிரி பேச முடியும்!
இவளோ நேரம் பேசினார். இவர் பேசினதுல ஒருவிதமான grammatical mistake, அபசப்தம் ஒண்ணு கூட வரல!
இவர் ரொம்ப உரக்க பேசல! ரொம்ப அடி தொண்டைல பேசல! ரொம்ப விருவிருன்னு பேசல!
ரொம்ப இழுத்து இழுத்து subjectடுக்கே வராம பேசிண்டே இருக்கல!”

ஸம்ஸ்கார க்ரம ஸம்பந்நாம அத்3ருதாம விலம்பி3தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருத3ய ஹாரிணீம் ||

மனத்தை கொள்ளைக் கொள்ளும் மங்களகரமான வார்த்தைகளைப் பேசறார்.
‘ஸம்ஸ்காரம்’ – ரொம்ப பண்பாடோட cultureரோட இருக்கு இவரோட வார்த்தைகளும் பேச்சும்!
இப்பேர்ப் பட்ட ஒரு தூதன் ஒரு ராஜாக்கில்லைன்னா அவனோட காரியங்கள் எப்படி நடக்கும்!”

ஏவம் குணக3ணைர்யுக்தா யஸ்ய ஸ்யு: கார்யஸாத4கா: |
தஸ்ய ஸித்4யந்தி ஸர்வார்தா2 தூ3தவாக்ய ப்ரசோதி3தா: ||

“அதே நேரத்துல இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் இருந்தான்னா, அந்த ராஜாக்கு இந்த தூதனுடைய வார்த்தைகள்னால
எல்லா காரியங்களும் நடக்குமே!” அப்படீன்னு சொல்லி, ராமர் அந்த ஹனுமாரைப் பார்த்தவொடனேயே
‘இந்த ஹனுமார் தான் நமக்கு ஸஹாயமா இருக்கப் போறார்ன்னு ராமதூதன் அப்படீங்கற அந்த titleல அங்கேயே குடுத்துட்டார்!’

லக்ஷ்மணன்கிட்ட, “நீ நம்மளுடைய விஷயத்தை சொல்லிடு”னு லக்ஷ்மணன் ரொம்ப தயவா ரொம்ப பரிதாபமா சொல்றான் .
“இந்த சக்ரவர்த்தி குமாரர், தானா காட்டுக்கு வந்திருக்கார். மனைவியை இழந்து கஷ்டப்படறார்.
தனுங்கற கந்தர்வன் , ஸுக்ரீவன் ஸஹாயம் பண்ணுவான்னு சொல்லிருக்கான்.
எங்களுக்கு ஸுக்ரீவனோட தயவு வேணும்!”னு சொல்லும் போது,

ஹனுமார் சொல்றார் , “ஆஹா! நீங்க அப்படி சொல்லாமா? உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் ,
புலன்களையும் கோபத்தையும் ஜெயிச்சவர்களுமா இப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள் அந்த ஸுக்ரீவனுக்கு ஒரு நட்பா கிடைக்கறது
இப்ப அவன் பண்ண புண்ணியம்! அவன் இந்த ரிஷ்யமுக மலையிலேர்ந்து வெளியே போகமுடியாம மாட்டிண்டிருக்கான்!
அப்படி இருக்கும்போது நீங்க வந்தது அவன் பண்ண பாக்யம்! நான் உங்களை அவன்கிட்ட அழைச்சுண்டு போறேன்”னு அழைச்சுண்டு போறார்.

ஸுக்ரீவன்கிட்ட, அழகா ராம லக்ஷ்மணாளைப் பத்தி பெருமையா சொல்லி, , “இவாளுடைய நட்பை நீ கோர வேண்டும்.
இதனால உனக்கு காரியம் நடக்கும். உனக்கு உன்னுடைய மனைவி, ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்!”
அப்படீன்னு சொன்னவொடனே,

ஸுக்ரீவன் கை கூப்பி, “நான் ஒரு ஸாதாரண வானரம். என்னை நீங்க நண்பனா ஏற்றுக்கொள்வீர்களா?” அப்படீன்னு கேட்கறான்.

ராமரும் அவன் கையை பிடிச்சு ஆலிங்கனம் பண்ணிண்டு, “நானும் நீயும் நண்பர்கள்” அப்படீன்னு சொல்றார்.
உடனே ஹனுமார், அக்னியை மூட்டி, அக்னி சாட்சியா ராமரும் ஸுக்ரீவனும் ஸக்யம் பண்ணிக்கறா!

ஸுக்ரீவன் கிட்ட ராமரை அழைச்சிண்டு வந்ததுலேர்ந்து, ஸீதா தேவிகிட்ட ராம தூதனா போய், ராமருடைய சேதியை சொல்லி,
ஆச்வாஸப்படுத்தி, அவளுடைய உயிரையே காப்பாத்தினார். அவ உயிரையே விடறதா இருந்தா. அவகிட்ட மெதுவா,
அவ காதுல மட்டும் விழறமாதிரி ராம கதையை சொல்லி, அவ மனஸை ஸமாதானப்படுத்தி, அப்புறம் போய்
எதிர்ல நமஸ்காரம் பண்ணி, நம்பிக்கையை சம்பாதிச்சு, நடந்த விவரங்களெல்லாம் ஒண்ணு விடாம அழகா சொல்லி,
அப்புறம் ராமருடைய மோதரத்தைக் கொடுத்து,

ராம நாமாங்கிதம் சேத3ம் பஶ்ய தே3வி அங்கு3லீயகம் ||

“இதோ பாரம்மா! ராமருடைய மோதரம் கொடுத்திருக்கார்!” அப்படீன்னவொடனே ஸீதைக்கு பரம சந்தோஷம்!

விக்ராந்தஸ்த்வம் ஸமர்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம |

“ஹே வானரோத்தமா! ஹே ஹனுமான்! நீதான் ‘விக்ராந்த:’ – உன்னிடத்தில் தான் உடல் பலமிருக்கு!
‘ஸமர்த்த:’ – மனோபலம் இருக்கு! ‘ப்ராஞ:’ – புத்தி பலமிருக்கு! எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு!
இப்பேர்ப்பட்ட காரியத்தை இந்த ராவணனுக்கு பயப்படாம வந்து இத்தனை படையும் காவலையும் தாண்டி,
மீறி என்னை வந்து பார்த்து, என் உயிரைக் காப்பாத்தி, ராமருடைய செய்தியை சொல்லி என்ன ஆச்வாஸப்படுத்தினியே!”
அப்படீன்னு கொண்டாடறா.

“ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜம்” – எப்படி ஹனுமாரால இந்த ஸமுத்ரத்தை தாண்ட முடியறதுனா,
ஜாம்பவான் உத்ஸாஹப்படுத்தும் போது சொல்றார்,
“ஹே ஹனுமான்! நீ வாயுவோட அனுக்ரஹத்துனால அஞ்ஜனா தேவிக்கு பிறந்தவன்.
அதனால உன்னால வாயு மாதிரி, கருடன் மாதிரி ஆகாஶத்துல பறக்க முடியும்! கருடனுக்கு றெக்கைகள்ல என்ன பலமோ,
அந்த பலம் உன்னுடைய கைகள்ல இருக்கு! உன்னால இந்த காரியத்த பண்ண முடியும்!

த்வய்யேவ ஹனுமனஸ்தி பலம் புத்தி: பராக்கிரம:

உன்னால முடியும்னு சொல்லல. “உன்னாலதான் முடியும் ஹனுமான்!” அப்படீன்னு சொல்லி உத்ஸாஹப் படுத்தி,
எல்லா வானராளுமா ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணின உடனே,
“ஆமா. நான் என்னுடைய அப்பாவுக்கு நிகரான பலமும் பராக்ரமமும் படைத்தவன்! என்னாலேயே எங்கும் தடையில்லாம போகமுடியும்!
இதோ ஆகாசத்துல போறேன் பாருங்கோ!” அப்படீன்னு சொல்லிட்டு,

யதா2 ராக4வ நிர்முக்த: ஶர: ஶ்வஸன விக்ரம: |
க3ச்சேத் தத்3வத்3 க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||

“எப்படி ராம பாணம் தடையில்லாம போகுமோ, அந்த மாதிரி நான் கிளம்பி இப்போ இலங்கைல போய் குதிப்பேன்!
அங்க ஸீதை இல்லனா மூவுலகத்துலேயும் தேடி எப்படியாவது ஸீதைய கண்டுபிடிச்சிண்டு வருவேன்!
இராவணனை வால்ல கட்டி இழுத்துண்டு வருவேன்! எப்படியாவது காரியத்தை முடிச்சிண்டு வருவேன்!”
அப்படீன்னு கர்ஜனை பண்ணிண்டு ஆகாச மார்க்கமா, பல தடைகள்லாம் வர்றது. அதை மீறிண்டு போய் இலங்கைல குதிக்கறார்.

‘வாதாத்மஜம் அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ –
‘என்னுடைய ஹ்ருதயத்துல இன்னிக்கு நான் அவரை த்யானம் பண்றேன்!’ அப்படீன்னு சொல்றார்.

———–

அடுத்த ஸ்லோகம்,

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

‘தருணாருண முக²கமலம்’ –
‘அருண:’னா ஸூரியன். ‘தருணாருண:’னா இளம் ஸூரியன்! உதய ஸூரியன் போன்ற தேஜஸ் கொண்ட முகம்.
‘கமலம்’ – கமலம் போன்ற அழகான ஸூரியனை போன்ற அழகான அவருடைய முகம்!

‘கருணாரஸபூர’ –
கருணாரஸம் நிரம்பிய,

‘பூரிதாபாங்க³ம்’ –
கண்கள். அவருடைய கண்கள்ல கருணை நிரம்பியிருக்கு! அப்பேர்ப்பட்ட கருணை!
அதனால தானே அவர் ஸீதை படற கஷ்டத்தைப் பார்த்து தவிக்கறார்.
இந்த ஸீதை இப்படி கஷ்டப் படலாமா? ராமன் கணவரா, ஜனகர் அப்பாவா, தஶரதரை மாமனாராப் பெற்ற
இந்த ஸீதை இப்படி இங்க கஷ்டப் படறாளே!
இந்த ராமரையும் ஸீதையயும் சேர்த்து வெக்கணும். அந்த ராமர் அங்க அப்படி கஷ்டப்படறார் ஸீதைய பிரிஞ்சு!

ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந்ப்ரதிபு3த்4யதே৷৷

ராமர் தூங்காம சாப்படாம இந்த ஸீதைய நெனச்சுண்டு கஷ்டப்படறார்.
எப்பயாவது தூங்கினாகூட “ஸீதா!”னு சொல்லிண்டு எழுந்துண்டுடறார்.
அப்படி அங்க அவர் தவிக்கறார். இங்க இவ இப்படி தவிக்கறா. தபஸ் பண்ணிண்டிருக்கா.

நைஷா பஶ்யதி ராக்ஷஸ்யோ நேமாந்புஷ்பப2லத்3ருமாந் |
ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி৷৷

இவள், இந்த அசோகவனம் இவ்ளோ அழகா இருக்கு! இதையும் பார்க்கல!
ராக்ஷஸிகள் கோரமா இருந்துண்டு பயமுறுத்தறா! அதையும் பார்க்கல!

‘ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி’ –

‘ஒரே மனஸா ராமனயே பார்த்துண்டிருக்கா! தபஸ் பண்ணிண்டிருக்கா இவோ!
அதனால இந்த ராமனையும் ஸீதையையும் சேர்த்து வெக்கணும்!’
அப்படீன்னு அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் பண்றார்.
அங்கிருந்து வந்து, ராமரை பார்த்தவொடனே ஸீதை படற கஷ்டத்தை சொல்லி,

ஸர்வதா2 ஸாக3ரஜலே ஸம்தார: ப்ரவிதீ4யதாம்|

‘உடனே எப்படி கடல் தாண்டறது? அதுக்கான முயற்சியைப் பண்ணுவோம்’னு அப்படி கிளப்பறார் ஹனுமார் ராமரை!

‘ஸஞ்ஜீவநமாஶாஸே’ –
உயிரைக் கொடுத்த அந்த ஹனுமாரை போற்றுகிறேன்! ஹனுமார் இந்தமாதிரி ஸீதைக்கு மட்டுமா உயிர் கொடுத்தார்!
லக்ஷ்மணன் அடிப்பட்டு விழுந்த போது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.
எல்லா வானரப்படையுமே இந்திரஜித் ப்ரம்மாஸ்த்ரத்துனால வீழ்த்தினபோது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.

அப்படி நமக்கே ஹனுமாருடைய த்யானம்

அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமா பூஜிதா |

அவருடைய ஸ்தோத்ரம் பண்ணா, நம்முடைய உயிர் வளரும். அப்படி உயிரைக் கொடுப்பவர் எல்லாருக்கும்!

‘மஞ்ஜுள-மஹிமாநம்’ –
அவருடைய மஹிமை ரொம்ப அழகான மஹிமை அப்படீங்றார் ஆசார்யாள். அவரே ஸுந்தரர்னு பேரு!
அவருடைய மஹிமையும் ரொம்ப ஸுந்தரமா இருக்கு! அதனால தான் அந்த காண்டத்துக்கே ‘ஸுந்தர காண்டம்’னு பேரு!
‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவர் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார். ஏன்னா,

‘அஞ்ஜநா-பா⁴க்³யம்’ –
‘அஞ்ஜநா’ங்கறவ ஒரு அப்ஸர ஸ்த்ரீ வானரமா பொறந்திருக்கா! அந்த அப்ஸர ஸ்த்ரீக்கு குழந்தையா பொறந்து,
அந்த ஹனுமார் அவ்ளோ அழகா இருக்கார். ஸீதா தேவி ராம கதையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது,
ஸூர்யோதயம் போன்று மஞ்சள் பட்டு உடுத்திக்கொண்ட அழகான அந்த வானர வீரரைப் பார்த்து,
மனஸுல ஸந்தோஷப்பட்டா! அவர் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, ‘கொரங்கைப் பார்த்தேனே!’ன்னு கவலைப்படறா.
அப்பறம் இது கனவில்லை! கனவுல தான் கொரங்கைப் பார்த்தா கஷ்டம். இது நனவு தான்!
“ஏன்னா எனக்கு ஸுகமிருந்தாதான் தூக்கம் வரும். தூக்கமிருந்தாதான் கனவு வரும். எனக்கு கனவே கிடையாது.
இது நேரத்தான் நான் பார்க்கறேன். இவன் சொன்ன வார்த்தையெல்லாம் சத்தியமாகட்டும்”!
அப்படீன்னு. நமஸ்காரம் பண்ணும்போது இராவணனான்னு ஸந்தேஹம் வர்றது!
ஆனா சீதை சொல்றா, “அன்னைக்கு ஸந்யாஸி வேஷம் போட்டுண்டு வந்த இராவணனைப் பார்த்தபோது என் மனம் நடுங்கித்து!
இன்னிக்கு வானரமா நீ வந்திருக்க! ஆனாலும் உன்னைப் பார்த்து என் மனஸுல ஒரு உல்லாசம் ஏற்படறது! ஒரு சாந்தி ஏற்படறது!”ன்னு சொல்றா.

அப்படி ஒரு ரூபம் ஹனுமாருடைய ஒரு ரூபம்! அந்த ஹனுமார்ங்கறதே குருவினுடைய வடிவம்தான்!
ஸீதாதேவி, அம்பாளே ஒரு ஜீவனா இருந்து, ராமர்ங்கிற பகவானை அடையறதுக்காக தவிச்சிண்டிருக்கா.
தபஸ் பண்ணிண்டிருக்கா. அப்போ நம்ம மஹா பெரியவா மாதிரி, ஆசார்யாள் மாதிரி வர அந்த குரு,
அந்த குரு மாதிரி ஹனுமார் வந்தார்! அந்த ஸுந்தர காண்டத்துல, த்ரிஜடை ஸ்வப்னம் சொன்ன பின்ன ஒரு ஸ்லோகம் வர்றது.

பக்ஷீ ச ஶாகாநிலயம் ப்ரவிஷ்ட: புந: புநஶ்சோத்தமஸாந்த்வவாதீ3 |
ஸுஸ்வாக3தாம் வாசமுதீ3ரயாந: புந: புநஶ்சோதயதீவ ஹ்ரு’ஷ்ட:৷৷

ஒரு பக்ஷியானது மரக்கிளைல உட்கார்ந்துண்டு, ‘புந: புநஶ்ச உத்தமஸாந்த்வவாதீ3’ –
‘மீண்டும் மீண்டும் உத்தமமான மனஸ் ஸமாதானம் ஆகக்கூடிய வார்த்தைகளைப் பேசிண்டே இருக்கு’
அப்படீன்னு! இது ஹனுமார் வந்திருக்கார்ங்கறதுக்கு ஸூசகமா சொல்றார். வால்மீகி,
“ஒரு குருவானவர் ஒரு ஜீவன் கிட்ட, பகவான் வருவார்! உன்னை மீட்டுண்டு போவார்”.

“க்ஷிப்ரமேஷ்யதி ராகவா:”
சீக்கிரம் வருவார். வானரப் படைய இழுத்துண்டு வருவார். எப்படி கருடனை இழுத்துண்டு கஜேந்திரனைக்
காப்பாத்தறதுக்காக விஷ்ணு பகவான் வந்தாரோ, அந்த மாதிரி, வானரப் படைய இழுத்துண்டு வந்துருவார்.
உன்னை மீட்டுண்டு போவார். நான் போய் திரும்பி சொல்ற இந்த நேரம் தான் delay ஆகப் போறது!
இனிமே நீ கவலையே படவேண்டாம்!” அப்படீன்னு ஒரு 25 வாட்டி வர்றது அந்த பத்து ஸர்கத்துல!
அத்தனை வாட்டி சொல்லி ஆறுதல் சொல்றார். இதத்தான் ஒரு குருவானவர் பண்ணுவார்!
“பகவான் உன்னை நினைச்சுண்டிருக்கார். உன்னை வந்து மீட்பார்! நீ கவலைப்படாதே!”
அப்படீன்னு சொல்ற அந்த வார்த்தையை ஹனுமார் பண்றார்.
அதனால ஹனுமார் வந்து ஒரு குருவுக்கு உருவகம். அந்த ஹனுமாருடைய மஹிமை மஞ்ஜுள மஹிமை!
அஞ்ஜனையுடைய பாக்யமா அவதாரம் பண்ணவர்! அதனால ஆஞ்சநேயன்னு பேரு!

———-

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

‘ஶம்ப³ர:’ –
ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன்.
மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார்.
அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான்.
பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா.
அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார்.
ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார்.
“என்னடா இது? பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே!
இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு!”.
அப்புறம், “மனசு தான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு.
அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை.
ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன்.
நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்? மான் கூட்டத்துலயா தேட முடியும்?
அதனால நான் இங்க வந்தேன்!”னு சொல்றார்.

அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட
சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார்.
Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும்.
ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது.
“ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும்.
அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது.
நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால,
உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார்.
இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார்.
அப்படி அவருடைய வைபவம்! அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால! தனக்கு எந்த சக்தியுமே இல்லை.
ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார்
அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்!

‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.
அது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள்.
‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.
‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.
‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர்.
பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார்.
சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு! எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார்.
ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction!’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான்.
ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது.
உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்!”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார்.
உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும்,
இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன
வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார்.
அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.

‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.
‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது.

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

அப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம்,
நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும்.
ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .
பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர்,
இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம்.
அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும்.

அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை,
‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன்.

————

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ –
சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து,
அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான்.
கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா?”

“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”
ஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது? நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும்,
பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான்! தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன்.
நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண்,
ராமருடைய மனைவி சீதையா?”ன்னு கேட்கறார்.

அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும் போது,

“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”

“அம்மா! இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம்.
உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்!”னு
சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.

‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ –
ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார் தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி,
“என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ!”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார்.
“எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ,
அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.

‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ –
‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார்.
முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா! நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே!
சுகப்பட்டே! ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர் கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |
புனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||

“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர்! அவர்கிட்ட அபசாரம் பண்ணா,
நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது!”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான்.
விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான்.
அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.

‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ –
எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார்!
முதல்ல அசோக வனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான்.
அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார்.
அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.

ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||
தா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||–என்று கர்ஜிக்கறார்.

“1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது! ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம்.
ஆன ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன்! யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன்!
சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன்.
என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ ! நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார்.
அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான்.
அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.

‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்!”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார்.
அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது.

ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ,
எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ,
அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார்.

அப்பேற்பட்ட ஸ்லோகம்.
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

—————–

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ –
வானர கூட்டத்தில் சிறந்த தலைவர்! ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும் போது,
“ஹே ஹனுமான்! நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்!”னு சொல்றார்.
ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோக வனத்தை அழித்த போது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான்.
80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை.
சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன்,
ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே!”ன்னு ராவணனே சொல்றான்.
அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார்.

இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம்.
இப்ப இவாளே கூட்டிண்டு போறா!”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர்.
இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்
“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.

வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரித3ஶேஶ்வரோ வா
ஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஶ்ச ஸோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||

இது சாதாரண வானரமா தெரியலை! ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா.
சாக்ஷாத் எமனா? வருணனா? வாயுவா? ருத்ர பகவானா? அக்னியா? குபேரனா? சாதாரண சோமனா?
அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.

கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||

“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா?”

கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||

விஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா?
“மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்!”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது,
இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார்.
அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்!

‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ –
சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.

வலக்ஷஶ்ரீர்ருʼக்ஷாதி3பஶிஶு ஸத்3ரு’க்ஷைஸ்தவ நகை2:
ஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |
க்ஷணான்மே காமாக்ஷி க்ஷபிதப4வஸங்க்ஷோப4க3ரிமா
வசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||என்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு!

‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார்.
இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.
‘தா³நவகுல’ – ராக்ஷஸ குலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர்.
அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார்.
ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான்,
நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார்.
ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும்! நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு.
உன் பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன்.
ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா!”ங்கறார்.
உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான்.
ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்“இந்தா!”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார்.
அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான்.
இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான்! நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான்.

அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து
பலசாலின்னு சொல்றதாவது! எனக்கு அவமானம்”ங்கிறார்.
உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான்.
இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.
அப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான்.
அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான்.
லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால,
லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம்.
லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து,
“ஒரு குத்து பாக்கியிருக்கு! இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான்.
ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது!
லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர் கிட்ட சேர்த்துடறார்.
ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்!”னு ராவணனோட யுத்தம் பண்றார்.

ராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம்.
அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது! இவ்ளோ அம்பு வர்றது,
நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது!
ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே,
ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும்,
‘கர’ வதம் போது! இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு!
பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார்.
குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து.
தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார்.

முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது! ஆனா ராமர், “நீ பிழைச்சு போ! நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க.
ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன்.
நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா!”ங்கறார் ராமர்.
இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது!
அப்பேற்பட்ட வீரம்! ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.

‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ –
இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார்.
ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்!”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ,
அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்!”
அதுதான் நமக்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்!

‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ –
‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது.
அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்!’னு சொல்றார்.

போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்!”னு சொன்னார்.
“இங்க ஹனுமாரை கண்டேன்!”ங்கிறார்.
அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்!

——–

ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ –
இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,

‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ –
ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,

‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ –
வெகு காலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,

‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ –
ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான்! ஹனுமாரை தியானம் பண்ணா,
ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராம பக்தி வராதா?
அப்பேற்பட்ட ராமபக்தர் அவர்!

அவரை பார்க்கும் போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா!
பரத் வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத் வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு.
பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார்.
“உனக்கென்ன வரம் வேணும்?”ங்கிறார்.
ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும்
தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்!”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக!
பரத்வாஜரும், “ஆஹா!”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு.
என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார்.
நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார்.

ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராம காரியம் தான் அவருக்கு விருந்து!
ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.
சுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான்.
நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து,
‘த்ருஷ்டா சீதா!’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன்.
எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்!”னு சொல்றார்.
ஆனா யார் பார்த்துட்டு வந்தா? ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர்.
அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.

ஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும்.
தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு! ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல்,
எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ,
அந்த மாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும்!

———————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ திருவடி -ஸ்ரீ பரத ஸ்ரீ சத்ருக்ந ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டி ஸமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –31–ஸ்ரீ ஸதர்சனம் —

January 15, 2022

ஸ்ரீ உவாஸ
1- யா ஸா ஷாட் குண்ய தேஜஸ் ஸ்தா க்ரியா சக்தி ப்ரகாசிதா
ஆக் நேயம் ரூபம் ஆஸ்ரித்ய ஸா தத்தே பவ்ருஷம் வபுஸ்
2- சர்வ அஸ்த்ர சாஸ்த்ர ஸம்ஸ் யூதம் ஸூர்ய ஸோம அக்னி மூலகம்
மஹத் ஸூ தர்சனம் நாம நாநா ரூப உப ஸோபிதம்

ஆறு குணங்களில் தேஜஸ் பிரதாநம் -குணங்களின் சாரமே க்ரியா சக்தி -புருஷ ரூபம் கொண்டது –
அவள் அக்னி ரூபமாகக் கொண்டு உள்ளாள்
அவள் ஸூர்யன் சந்திரன் அக்னி யிலிருந்து வெளிப்படுகிறாள்
அனைத்து அஸ்த்ரங்களையும் தன்னுள் கொண்டவள்
பெருமை மிக்க ஸூ தரிசனமாக -பல பெயர்களைக் கொண்டும் பல ரூபங்களை உள்ளடக்கியவளாக இருக்கிறாள் –

3- தஸ்ய மத்யே ஸ்திதா ஸக்தி பவ்ருஷீம் தனுமாஸ்திதா
ஸுவ்ம்ய அக்னேய ஸ்வரூபேண தத் தத் கால வ்யவஸ்தயா

ஸூ தரிசனத்தில் இருதயத்தில் புருஷ வடிவில் சக்தி சோமன் அக்னி போன்று உள்ளது
அந்த அந்த நேரத்துக்கு ஏற்ப இயங்க வல்லது

4-புரஸ்தாத் தர்சிதஸ் தஸ்யா வாசகஸ் தே சதுர்வித
தத்ர ஸம்ஜ்ஞாமயோ மந்த்ரோ பூயஸா பல வத்தர

சக்தியைக் குறிக்க வல்ல நான்கு வித ஒலிகள் பீஜம் பிண்டம் ஸம்ஜ்ஞா பதம் குறித்து முன்பு பார்த்தோம்
இதில் ஸம்ஜ்ஞா மந்த்ரம் பலம் பொருந்தியது

5-தஸ்ய வ்யாக்யாம் இமாம் சக்ர கதந்த்யா மே நிசா மய
யா ஸா ஸோம ஆத்மிகா சக்தி உன்மேஷ ப்ரதமோ ஹரி

சோமனை உள்ளடக்கிய அந்த சக்தி ஹரியின் இயங்கு நிலையான உள்ள ஸ்ரீ என்னும் நானே ஆகிறேன்
இதுவே ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்து -ஸ -முதன்மையாக சக்தியாகும் –

மூல சக்திர் அஹம் ஸ்ரீ ஸா ப்ரதம அக்ஷர ஸம்ஸ்திதா
அம்ருதா த்ருப்தி ரூபா ச ஸோ மாத்மா ச அகிலேஸ்வரீ –6-

சோமனை உள்ளடக்கியது -மூல சக்தி நானே –
ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்தில் உள்ள அவள் அம்ருதம் ஆவாள்
சோமனுடைய ஆத்மாவாக உள்ள அவள் அனைத்திற்கும் ஈஸ்வரீ ஆவாள் –

அம்ருதீ கரணம் குர்யாத் ஸர் கஸ்ய இந்து கலாஸ்திதா
சீரஸ் பத்மா தயோ மந்த்ரா பரமேஸ்வர யுக்தயா –7-
அநயா ஸ்ருதயா குர்யாத் த்ருப்திம் ஸம் ஸித்தி மேவ ஸ
ஸ்ருஷ்டி க்ருத் ஸம்யுதா ஸேயம் ஜீவ ஸக்தி ஸநாத நீ –8-

சந்திரன் ஒளியில் உள்ள அம்ருதம் மூலம் ஸ்ருஷ்டி ஏற்படுத்துகிறாள்
ஓம் ஸ சீரஸே ஸ்வாஹா
ஓம் ஸ ஸ்ரீ நிவாஸ பத்மாய ஸ்வாஹா –சீர பத்ம மந்த்ரங்கள்
அவளால் இணையப்பட்டு -ஸ -பரமேஸ்வரனைக் குறிக்கும் அக்ஷரம் -அதாவது -ஹ -சேர்க்கப்பட்டு
மன நிறைவு -மற்றும் வெற்றியை அளிக்கும்
அதே எழுத்து -ஸ -ஸ்ருஷ்டி க்ருத் -என்னும் அஷரத்துடன் சேர்ந்து ஜீவ சக்தி ஆகிறது –

த்ரை லோக்ய ஐஸ்வர்யத உபேதா வாயு வேஸ்ம அக்ஷர ஸ்திதா
தாரா காரா ரிபோர் மூர்திநி சிந்த்யேச் சேதன ஸித்தயே –9-

எதிரிகளை வெல்லும் சக்தி -அவள் சப்தம் ஸ -வாயுவை உள்ளடக்கிய -ய -த்ரை லோக்ய ஐஸ்வர்யம் ம் சேர்த்து
ஸயம்-தாரகை உருவகம் செய்து எதிரில் தலை மேல் நிற்பதாகக் காண வேண்டும் –

அப்ரமேய உப கூடாயா அக்னீ ஷோம மயீ ஜூஷ
அஸ்யா ஸக்தே ஸமுத் பூதம் ஸூ க்தம் பவ்ருஷம் உஜ்ஜ்வலம் –10-

அப்ரமேயன் -அகாரத்தில் மறைந்து உள்ளவன் -அக்னி சோமன் மற்றும் உள்ள அனைத்திலும் அந்தர்யாமி –
பரம புருஷன் -தேஜஸ்ஸூ உடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இந்த சக்தியில் இருந்து வெளிப்படுகிறது –

ஏததா தீநி ஸூக்தாநி ஸஹஸ்ர ம்ருஷயோ விது
நித்யாம் ஆப்யா யதே மந்த்ர ஸ அயம் அக்னி ஜூஷா மயா –11-

புருஷ ஸூக்தம் -ஆயிரக் கணக்கான ரிஷிகள் அறிவார்
குனியில் வசிக்கும் என்னால் பரவசப்பட்டு உள்ள இந்த மந்த்ரம்
உபாசகனுக்கு அனைத்தையும் அளிக்கும்

தத் தத் கார்ய ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா
அநயா யந்ந ஸாத்யதே ந ததஸித ஜக த்ரயோ –12-

ஸூர்யன் சோமன் அக்னி -ஆகியவற்றையும் குறிக்கும் அக்ஷரங்களில் உள்ள மூன்று சக்திகளில் உள்ளதும்
அனைத்து வழிபாடுகளிலும் உள்ளதும் ஆகிய இந்த சக்தி மூலம்
மூன்று லோகங்களிலும் அடைய முடியாதது ஒன்றுமே இல்லையே –

ஸூதே ஸா ஸகலா சக்திர் அநு ஜாநாதி தா புந
ஸம் ஹரந்தீ புநஸ் சைதா இதி ச சமர்யதே தத –13-

ஸ்வம் உன்மேஷம் அதிஷ்டாய பரமாத்மா ஸ சக்தி ராட்
உதிதோ ஜகத அர்த்தாய ஹேதி தேவ ஸநாதன –14-

அவளே அனைத்து சக்தியையும் ஸ்ருஷ்டித்து -செயல்களில் ஈடுபடுத்தி -லயிக்கும் படி செய்கிறாள்

ஸூர்யச்ச போக்த்ருதாம் ப்ராப்ய ப்ராணயந் ப்ராண இஷ்யதே
ஆத்மாநம் தர்சயத்யேஷ த்ரை லோக்ய ஐஸ்வர்யத அந்வித –15–

ஹ்ருத் புண்டரீக மத்யஸ்தம் யம் விசின் வந்தி யோகிந
யதாவத்ம் த்யா யதோ வேத்யம் முக்தே ஷோர் வேக வத்தயோ –16-

ஸூர்யன் முக்கிய பிராணன் -ஹ
த்ரை லோக்ய ஐஸ்வர்யம் -ம்
ஹம -தாமரை போன்ற உபாஸகனது இதயத்தில் வெளிப்படும்

பிரகர்ஷேண ஓந் நயன் ப்ராணன் ப்ராண இத்யேஷ சப்த்யதே
இந்து மண்டல ஸம் வீதோ வ்யாபிமாந ப்ரமேயவான் –17-
ஜிஹ்வா மூலஸ் திதோ த்யாதோ வாக் ப்ரவ்ருத்திம் நியச்சதி
அம்மண்டலே ஸ்திதோ த்யாத ஸ ஏவ ஹி ஸூதாம் ஸ்ரவன் –18-
நிர்விஷீ கரணம் த்யாத கரோதி ஜகதாமபி
ராம உப கூடா தஸ் மத்தி ஸ்ரீ ய ஸூக்தம் சமுத்கதம்–19-

முக்கிய மூச்சுக்காற்றை சக்தி கொண்டதாகச் செய்வதால் அது பிராணன் எனப்படுகிறது
அந்த ஹ என்னும் எழுத்தானது சந்த்ர மண்டலத்தில் மறைவாக நின்று வ்யாபி மற்றும் அப்ரமேய எழுத்துக்களுடன் சேர்ந்து –
அதாவது ம் மற்றும் அ -இதன் மூலம் அஹம் என்பது கிடைக்கிறது
நாக்கின் வேர்ப்பாகத்தில் இருந்து வெளிப்படுவதாக த்யானிக்கப் பட்டு -வாக்கை உண்டாக்குகிறது
அதே எழுத்தானது அம் என்னும் ஓசையில் உள்ளதாக த்யானிக்கப்பட்டு
அம்ருதத்தை வெளிப்படுவதாக எண்ணப்பட்டு இந்த ஜகத்தில் உள்ள அறியாமை என்னும் விஷங்களை அகற்றுகிறது
இந்த எழுத்துடன் ராம என்னும் எழுத்தம் சேரும் போது ஸ்ரீ ஸூக்தம் வெளிப்படுகிறது –

ஏததாதீநி ஸூக்தாநி ஸஹஸ்ரம் ருஷயோ விது
தத் தத் கால ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா –20-
அநேந யன்ன ஸாத்யதே ந ததஸ்தி ஜகத் த்ரயே
ஹன்யதே சகலம் லோகம்கமயத் யமலம் பதம் –21-
வ்யாஜயத் யகிலம் க்லேசம் கம்யதே யோக சிந்தகை
ஹேத்யேவம் கத்யதே ஸத் பிரேவம் நிர்வச நாஸ்திதை –22–

இது போன்ற ஸூக்தங்களை ஆயிரக் கணக்கான ரிஷிகள் நன்றாக அறிவர்
ஒவ்வொரு ஸூ க்தமும் ஸூர்யன் அக்னி மற்றும் சந்திரன் ஆகிய சக்திகளைக் குறிக்கும் எழுத்துக்களுடன்
ஏதேனும் ஒரு கட்டத்தில் சம்பந்தம் கொள்கிறது
இந்த ஹ என்னும் எழுத்து கொண்டு மூன்று லோகத்தில் செய்ய இயலாதது என ஏதும் இல்லை
இது உபாசகனுடைய அனைத்து தடைகளையும் விலக்கி அவனைத் தூய்மையான நிலைக்குக் கொண்டு செல்கிறது
யோகிகள் விஷயத்தில் அந்த எழுத்தானது அனைத்து துன்பங்களையும் விலக்குவதாக உள்ளது
யார் ஒருவர் சத்வ வழியில் நிலை நின்று சரியான விளக்கத்தை அளிப்பவர்களாக உள்ளனரோ
அவர்கள் இவ்விதமே- ஹ -என்பதைக் குறித்து உரைக்கிறார்கள் –

அசேஷ புவன ஆதாரா சங்கல்ப ப்ரபல க்ருதா
ப்ரத்யபிஞ்ஞாயதே சைவ ஸத் பிரேவம் நிர்வசனஸ்திதை –23–
சரத்யஸ் யாச்சலம் ஸர்வம் ஸ்த்ரியதே சகலை ஸதா
ப்ருதிவீ ஸம்ஸ்திதா ஸேயம் ஸ்தம்பே ஸ்ருத்யா நியுஜ்யதே –24-

அசேஷ புவன ஆதார-ர என்னும் எழுத்து கொண்டவளும்
பரமாத்மாவின் அதே சக்தியானவளும் ஆகிய அவளை மேலும்
சுதந்திரமாக செயல்படத் தூண்டுவது -ஸ்ர -என்னும் ஒலியின் மூலம் அறியப்படுகிறது
அசையக்கூடிய அனைத்தும் அவள் இடம் இருந்தே வெளிப்பட்டு பாதுகாப்புக்காக அவளையே அண்டுகின்றன –
ப்ருத்வீ என்னும் ஒலியில் -அதாவது -க -உள்ள அதே சக்தியானவள் ஸ்ருஷ்ட்டின் அசையாமல் நிலை கொண்டு
அனைத்தையும் பாதுகாக்கும் செயலிலும் ஈடுபட்டபடி உள்ளாள் –

ஸஹோ நாம பலம் தத்ர ரமதே தத் ஸஹஸ்ர தா
ஸஹஸ்ர தி ஸஹஸ்ரா ஸ்யாத் அக்னீ ஷோ மாத்மநோ மம –25-

பலம் என்னும் பொருள் கொண்டதான ஸஹஸ் என்னும் ஸப்தம் ஆயிரக் கணக்கான வகையில் களித்தபடி உள்ளது
இப்படி அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய என் சக்தியானது ஆயிரக்கணக்கில் வெளிப்படுகிறது
இதுவே ஸஹஸ்ரா எனப்படுகிறது –

அக்னீ ஷோ மமயீ ஸ மே ஸக்தி ஸர்வ க்ரியா கரீ
ஸூ ஸங்கல்ப ஸமித்தா ஸா தேஜஸாம் ராசி ருர்ஜிதா –26-
ஸம் பிராப்யை வாநலம் பாவம் கால பாவ கதாம் கதா
ரேத்யேவம் கேவலீ பூத்வா ஜ்வலத்ய விரதோ தயா –27-
பரமேஸ்வர பூதா ஸ பரமாச்சர்ய காரிணீ
ர இத்யேவ மஹா சக்திர் மதீ யாத்யா க்ரியாஹ்வயா –28-

அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய எனது சக்தியானது அனைத்து விதமான செயல்களையும் செய்ய வல்லதாகும்
சரியான எண்ணங்கள் மற்றும் ஓங்கி நிற்கும் வலிமை ஆகியவற்றால் தூண்டப்படும் அவள் அக்னியின் உள்ளே இருப்பவளாக
அனைத்தையும் அழிக்க வல்ல அக்னி நிலையை அடைகிறாள்
ர -என்பதின் தூய்மையான நிலையில் அவள் மிகுந்த ஆற்றலுடன் ஒளிர்ந்தபடி உள்ளாள்
அவள் பரமேஸ்வரன் என்னும் -ஹ் -எழுத்துடன் சேர்ந்து வியக்க வைக்கும் செயல்களை செய்கிறாள்
ர் என்பதே எனது மஹா சக்தியான க்ரியா என்பதாகும் –

சங்க்யா அநந்த்யம் ஸஹஸ்ரம் ஸ்யாதரா நந்த்யம் தத் உச்யதே
வர்ம அஸ்த்ரயோ ஸ்வரூபம் ச தர்சிதம் தே புரந்தர –29–

ஸஹஸ்ரம் என்பது எண்ணற்ற என்பதைக் குறிக்கும்
இது ஸூதர்சனத்திலே உள்ள ஆரங்களாகும்
புரந்தரன் உனக்கு வர்மம் அஸ்திரம் இவற்றின் ஸ்வரூபம் பற்றி உனக்கு முன்பே கூறினேன் –

த்ருவச்ச ப்ரணவ அஸ்யாதி பூர்வமேவ நிரூபித
ஏவமேவ மஹா மந்த்ர ஸப்த ப்ரஹ்மோத்கதோ –30–

கிரியா சக்தியின் தொடக்கமாக பிரணவம் த்ருவம் உள்ளதாக முன்பே நிரூபித்தேன்
இப்படியாக இந்த மஹா மந்த்ரம் ஸப்த ப்ரஹ்மத்தின் முழு சக்தியும் உள்ளடக்கி இருக்கும் –

அதர்வணீ மஹா சக்திர் கிரியா சக்திர் ப்ரியா தநு
த்ரயீ சாரோ ஹி அர்த்த வாக்யா பஞ்ச பர்வா மஹா ஸ்ருதி –31-
மந்த்ரேண ஸூயதே அநேந சாரேணேவ வனஸ்பதி
அஸ்ய த்வங்க விதா நஜ்ஞா ஷடங்காநி ப்ரசக்ஷதே –32

மஹா ஸ்ருதி என்று கொண்டாடப்படும் அதர்வண வேதத்தில் உள்ள மஹா சக்தி கிரியா சக்தியின் பிரியமான சரீரம்
இந்த வேதம் ஐந்து பகுதிகளைக் கண்டது
நக்ஷத்ரம் விதாநம் விதிவிதாநம் ஸம்ஹிதை சாந்தி
இதுவே மற்ற மூன்று வேதங்களின் சாரம் -உரம் போல் வேத மரத்தை இதுவே வளர்க்கும்
சாஸ்திரஞ்ஞர் இத்தை ஆறு அங்கங்களாகக் கொண்டதாக உள்ளது என்பர் –

காயத்ரீம் அபி சக்ராக்யாம் ப்ராகாரம் ச அக்னி சம்ஜ்ஜிதம்
கோப நாத் வருணோத் ஸே தாத் ஸ உதயாத் அம்ருதாத் ததா –33-

அந்த ஸூதர்சனத்திற்கு சக்ரா என்னும் காயத்ரி மந்த்ரம் உள்ளது -அதனை அக்னி சூழ்ந்து உள்ளது
கோபந அக்ஷரம் -ஆ -வருண அஷரத்துடன்-வ – சேர்க்கப் படுகிறது
இது போன்று அம்ருத அக்ஷரம் -அ -உதய அஷரத்துடன் -உ-சேர்க்கப்பட்டு
வாம் ஸூ ம் என்ற மந்த்ரம் ஆகிறது –

சக்ராய ச ஸ்வாஹா ஹ்ருதா திஸ்து சிகா வதி
ஸூர்ய ஜ்வாலா பதாச்ச ஊர்த்வம் மஹா யுக்தாத் ஸூதர்சநாத் –34-

ஊர்த்வம் சக்ராய ஸ ஸ்வாஹா வர்மாத்ய அஸ்த்ராந்தகோ விதி –35-1-

இதைத் தொடர்ந்து சக்ராய ச ஸ்வாஹா என்பது அமைகிறது
அடுத்து ஹ்ருதயம் என்பது தொடங்கி சிகா முடிய முதல் மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப்படுகின்றன
இதன் பின்னர் ஸூர்ய அக்ஷரமும் -ஹ -ஜ்வாலா என்கிற பதமும் சேர்க்கப்படுகின்றன
அதன் பின்னர் ஸூ தர்சன என்கிற பதமும் சேர்க்கப் பட்டு தொடர்ந்து மஹா சப்தமும் இணைக்கப்படுகிறது –
அதன் பின்னர் சக்ராய ச ஸ்வாஹா -என்பது சேர்க்கப்படுகிறது
தொடர்ந்து வர்மம் தொடங்கி அஸ்திரம் முடிய உள்ள இறுதி மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப் படுகின்றன –

நமச் சக்ராய தஸ் யாந்தே வித்மஹே அசவ் சதுர்யுக –35-2-

ஜ்வாலாய ச ஸஹஸ்ராந்தே தீ மஹி இதி நவார்ணக
தந்ந ப்ரசோதயாந் மத்யே சக்ர இதி அஷ்ட வர்ணக–36-

அதன் பின்னர் நம சக்ராய -என்பதான நான்கு எழுத்துக்களும்
தொடர்ந்து -வித்மஹே -என்பதும் அமைகிறது
மேலும் தீ மஹி என்பதுடன் இணைந்த ஸஹஸ்ர என்பதன் பின்னால் ஜ்வாலாயா என்பது சேர்க்கப்படுகிறது
இந்த மந்த்ரம் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாகும்
இதன் பின்னர் சக்ர என்பது நடுவில் சேர்க்கப்பட்டதான
தந்ந மற்றும் ப்ரசோதயாத் என்பதுடன் கூடிய எட்டு அக்ஷரங்கள் இணைகின்றன

இந்த மந்திரத்தின் முழு வடிவமானது

வாம் ஸூம் சக்ராய ச ஸ்வாஹா
ஓம் ஹம் நாம ஓம் ஹம் ஸ்வாஹா
ஓம் ஹிம் வஷாத் ஹம்ஸாய
ஹ்ரம் மஹா ஸூ தர்சனாய சக்ராய ஸ்வாஹா
ஓம் ஹும் ஓம் ஓவ்ஷத் ஓம் பட் நம
சக்ராய வித்மஹே ஸஹஸ்ர ஜ்வாலாய தீ மஹி
தந் ந சக்ர ப்ரசோதயாத் –

முஷ்டிம் விதர்ஜ நீம் க்ருத்வா தர்ஜ நீம் தர்ஜ ஸம்ஸ்திதாம்
பரிதோ ப்ராமயேத் வஹ்நீம் த்யாயந் ப்ராகார ஸம்ஸ்திதம்–37-

கை விரல்கள் அனைத்தையும் முஷ்டியில் மடக்கி –
ஆள்காட்டி விரல்களை மட்டும் எச்சரிப்பது போன்று நீட்டியபடி
த்யானத்தில் ஆழ்ந்துள்ள உபாசகன் கீழே உள்ள அக்னியைத் தனது கரங்களால் சுற்ற வேண்டும் –

அந்யோன்ய சம்முகே பாணி தலே வை தஷிண உத்தரே
கநிஷ்ட அங்குஷ்ட யோரக்நே ஸ்லிஷ்டே தீர்க்காஸ் ததா பரா –38–

அதன் பின்னர் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஓன்று பார்க்கும் படியாக வைத்து
சுண்டு விரல் மற்றும் கட்டை விரல் ஆகியவற்றின் நுனிகள் தொடும்படி யாகச் செய்து
மற்ற அனைத்து விரல்களையும் நேரே இருக்கும்படியாக வைத்து
தனது கைகளை ஒரு வட்டம் வரைவது போல் சுற்ற வேண்டும் –

பரிதோ ப்ராமயே தேவம் சக்ர முத்ரே யமீ ரிதா
அங்க முத்ராஸ் து வஹ்யதே சக்தி க்ராஸ மநும் ஸ்ருணு –39-

இது சக்ர முத்திரை எனப்படும்
அங்க முத்ரை குறித்து பின்னர் கூறப்படும்
அடுத்து சக்தி க்ராஸம் என்னும் மந்த்ரம் பற்றிக் கேட்பாயாக –

பவித்ரம் அநலா ரூடம் ஸ வ்யாபி ப்ரணவாத் பரம்
மஹா ஸூ தர்சன இதி ஏவம் சக்ர ராஜம் மஹாத் வகம்–40-
ததஸ் அஸ்த கதத் இதி அஸ்மாத் ஸர்வ ஜூஷ்ட பயங்கர
சிந்தி சிந்தீத் யதஸ் பச்சான் பிந்தி பிந்தி ப்ரகீர்தயேத் –41-
விதாரய த்வயம் பச்சாத் பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ
த்விர் பக்ஷயேதி பூதாநி த்ராசயேதி த்விர் உச்சரேத் -42-
வர்மாஸ்த்ர வஹ்னி ஜாயா ஸ்யுர் சக்தி க்ரஸ ந க்ருந் மநு
ஸ்வயம் ஸூ தர்சநோ பூத்வா மந்த்ரம் உச்சாராயன் இமம் –43-
சக்திம் முக ஹ்ருதாதிப்ய பரஸ்யா ஸூஷ யோத்தியா
ஷட ஷரஸ்ய மந்த்ரஸ்ய ஸ்ருணு த்யானம் புரந்தர –44-

ப்ரணவத்தைத் தொடர்ந்து வருகின்ற பவித்ரம் -ப சப்தமானது
அநலம் -ர -என்பதுடன் சேர்க்கப்பட்டு
இதனுடன் வ்யாபின் -ம் -என்பது இணைக்கப்படுகிறது
அதன் பின்னர்
மஹா ஸூ தர்சன -சக்ர ராஜ -மஹாத் வக -என்னும் சொற்கள் சேர்க்கப்படுகின்றன
இவற்றைத் தொடர்ந்து
அஸ்த கத சர்வ துஷ்ட பயங்கர சிந்தி சிந்தி என்பதும் –
பிந்தி பிந்தி -என்பதும் உச்சரிக்கப்பட வேண்டும்
பின்னர்
விதாரய-என்பது இருமுறை கூறப்பட்டு
பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ -என்பது கூறப்பட்டு
பக்ஷய என்பது இரு முறை கூறப்பட்டு
தொடர்ந்து பூதாநி என்பது கூறப்பட்டு
த்ராஸய -என்பது இருமுறை கூறப்பட்டு
வர்மத்துடன் –ஹும் –
அஸ்த்ரத்துடன் -பட் –
அக்னியின் மனைவி பெயருடன் -ஸ்வாஹா –முடிக்கப்பட வேண்டும்

இந்த மந்த்ரம் மந்த்ர க்ரஸ்னம் எனப்படும்
இந்த மந்த்ரத்தை உச்சரித்த படியே உபாசகன் தன்னை ஸூதர்சனத்துடன் இணைத்து எண்ணி
தனது விரோதியின் சக்தியை அந்த விரோதியின் இதயம் மற்றும் வாய் வழியாக உறிஞ்ச வேண்டும்
இந்திரனே அடுத்த ஆறு எழுத்து கொண்ட மந்த்ர த்யானம் குறித்து கூறக் கேட்ப்பாயாக
இது ஸஹஸ்ரார மந்த்ரம் ஆகும் –

ந்யஸ்த அங்கச் சக்ர முத்ராபிர் வஹ்நி ப்ரகார மத்யக
ஸஹஸ்ரார மஹா சக்ரம யுதாக்நி சயோத் கடம் –45
ஷடத்வ மயம் உத் ப்ராந்தம் த்யாயேந் மச்சக்தி ஜ்ரும்பிதம்
அக்ஷஸ்தம் பரமாத்மாநம் நாராயணம் அநா மயம் –46-
சக்ர ரூபிணம் ஈஸாநாம் த்யாயேத் குங்கும ஸம் நிபம்
பீதாம்பரதரம் திவ்யம் முக்தாலங்கார பண்டிதம் –47–

சக்ர முத்ரையுடன் கூடிய அங்க ந்யாஸம் செய்த உபாசகன் ஒருவன் அக்கினியுடன் கூடிய புனிதமான இடத்தில்
ஆயிரம் ஆரங்கள் கொண்ட சக்ரத்தை தியானிக்க வேண்டும்
அந்தச் சக்ரமானது பல ஆயிரக் கணக்கான அக்னியின் பிரகாசம் கொண்டதாக உள்ளது
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளையும் வியாபித்து உள்ளது
எல்லையற்றதான அந்தச் சக்கரம் எனது சக்தியில் இருந்து விரிவதாக உள்ளது
அதன் அச்சுப்பகுதியில் தோஷங்கள் ஏதும் அற்றவனும் பரமாத்மாவுமாகிய நாராயணன் உள்ளான்
அவனையே அந்தச் சக்ர ரூபத்தில் ஈசனாகக் கொள்ள வேண்டும்
அவன் குங்குமக் குழம்பு நிறத்தில் பட்டுப் பீதாம்பரம் உடுத்தி திவ்யமாக முத்து ஆபரணங்கள் அணிந்தவனாக உள்ளான் –

ஏதம் அஷ்ட புஜம் த்யாயேந் மஹா வ்யஸந ஸம்ப்லவே
உத் யஜ்ஜா நும் அநேகாஸ்திரம் ஸ்திதம் பரம சோபனம் –48–

மிகுந்த ஆபத்தான நேரத்தில் அவன் எட்டுத் திருக்கரங்கள் மற்றும் திருவடிகளுடன் கூடியவனாக
திருக்கரங்களை உயர்த்தி நிற்பவனாக -பலவிதமான ஆயுதங்கள் தரித்தவனாக
மிகவும் அழகானவனாக இருப்பதை தியானிக்க வேண்டும் –

சக்ரம் முஸல முத்தாமம் அங்குசம் ஸரஸீ ருஹம்
யாம்யே கர சதுஷ்கே அத வாமே புஜ சதுஷ்டய –49–
சங்கம் பாண யுதம் சாபம் பாசம் குர்வீம் கதாம் அபி
ததாநம் தக்ஷிணம் திவ்யம் தம்ஷ்ட்ரா பாஸ்வரி தாநநம் –50-

தனது வலப்புற நான்கு திருக்கரங்களில் சக்ரம் சக்தி கொண்ட முஸலம் அங்குசம் மற்றும் தாமரை கொண்டவனாய் உள்ளான்
இடப்புற நான்கு திருக்கரங்களில் சங்கு வில் அம்பு பாசக்கயிறு மற்றும் வலிமையான கதை கொண்டவனாய் உள்ளான்
திவ்யமான திரு முகம் பற்களின் ஒளி மற்றும் கருணையுடன் கூடிய திருக்கண்களால் அழகாக உள்ளது –

பிங்காக்ஷம் பிங்க கேஸாடயம் ஜ்வாலா மாலா பரிஷ்க்ருதம்
அத ஷோடஸ ஹஸ்தம் ச த்யாயேத் ஏவம் ஸூ தர்சனம் –51-

அடர்த்தியான திருக்கேசம் கொண்ட அவனைச் சுற்றி அக்னியானது மாலை போன்று அமைந்து உள்ளது
இப்படியாக பதினாறு திருக்கரங்களுடன் கூடிய ஸூ தர்சனத்தை மட்டுமே தியானிக்க வேண்டும் –

பரைஸ் பரிபவ ப்ராப்தே ப்ரீதி கார விவர்ஜிதே
ஸ்தி தாவ நவ க்ல்ருப்தாயாம் அபி நிர்ஜித்ய வைரிண –52-
பயே மஹதி ஸஞ்ஜாதே சோர வ்யாக்ராத் விபாதிபி
ப்ரத்யா லீட ஸ்திதம் தேவீம் வைரி வர்கதி குந் முகம் –53-
ப்ரஹாரோத் யோகி பிர் பீ நைர் புஜைர் ஊர்த்வைர் அலங்க்ருதம்
சக்த்யா தீப்தேந கங்கே ந வஹ்னி நா சதார் சிக்ஷ –54-
அங்கு சேநாத தண்டேந குந்தே நாத ஜ்வலத் விசா
பரஸ்வதேந சக்ரேண தஷிணாத கரைஸ் க்ரமாத் –55-

சங்கேந சாப முக்யேந பாஸே நாத ஹலே நச
குலிசேந கதாஸ் த்ரேண முஸலே நாத ஸூலத –56-
ஊர்த் வாததஸ் ஸ்திதைர் வாபை ப்ரதீப்தை ராயுதைர் யுதம்
தம் ஷ்ட்ரா நிஷ்ட யூத கோராக் நி ஜ்வாலா கோலா ஹலா குலம் –57
ஸம்ஸ் யூத தத்த்வயா கீர்ணம் திவ்யஉலா வந மாலயா
கோராட்ட ஹாஸ ஸம் த்ரா சத்ர வதைத் யேந்திர தா நவம் –58
ஜ்வாலா குல ஜ்வலத் தைத்ய மேதோ மேதுர பாவகே
அயுதா யுத வஹ் நீ நாமஸ் பதே தீப்த தேஜஸாம் –59-
அத் வஷட் கமயே சக்ரே சக்ரிணம் சக்ரம் உத்தமம்
த்யாயே தேவம் விதம் தேவம் மயே மஹதி மாநவ –60-

வெல்ல இயலாதபடி உள்ள எதிரியிடம் தவிர்க்க இயலாத தோல்வியை அடையும் போதும்
அவர்கள் வெல்ல இயலாத படியான இடத்தில் உள்ள போதிலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்னும் போதும்
திருடர்கள் புலி இவற்றால் ஆபத்து நேரிடும் போதும்
பதினாறு திருக்கரங்களுடன் கூடியவனாக உள்ள ஸூதர்சனத்தை
இடது திருவடியை முன்பும் வலது திருவடியை பின்பும்
வைத்து எதிர்க்கத் தயாராக உள்ள நிலையில் இருப்பவனாகத் தியானிக்க வேண்டும்

விரோதியைத் தாக்கும் விதமாக வலிமையான அவன் திருக்கரங்கள் உயர்ந்து நிற்கின்றன
உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் கீழ் இருந்து மேலாக
ஜ்வாலையுடன் கூடிய உலோக உருண்டை வாள்
நூற்றுக் கணக்கான ஜ்வாலையுடன் கூடிய அக்னி மழு கோல்
ஜ்வாலையுடன் கூடிய குறு வாள் கோடாலி மற்றும் சக்கரம் ஆகியவை உள்ளன

உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் மேல் இருந்து கீழாக
சங்கு வில் அம்பு பாசக்கயிறு ஏர் இடி தண்டாயுதம் ஈட்டி ஆகியவை உள்ளன
அவனுடைய பற்களின் ஒளியில் இருந்து புறப்படும் அக்னியின் ஜ்வாலையால் அவன் சூழப்பட்டு உள்ளான்
மேலும் அவனைச் சுற்றி அழகான வனமாலையும் உள்ளது

தனது பயங்கரமான சிரிப்பால் ராக்ஷஸர்கள் மற்றும் தானவர்கள் ஆகியவர்களின் அரசர்களை ஓடும்படி செய்கிறான்
அச்சத்தில் உள்ளவர்கள் அவனுடைய இவ்வடிவை தியானிக்க வேண்டும்
அவனே மஹா விஷ்ணுவின் திருச்சக்கரத்தில் உள்ள அபிமான தேவதையாக உள்ளான்
அரக்கர்களின் எரிகின்ற சதையின் காரணமாக புகையுடன் கூடியதாக உள்ள அந்தச் சக்கரத்தில் அவன் உள்ளான்
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளிலும் இவனுடைய இந்த ஒளியானது காணப்படுகிறது –

ஏவம் த்யாத்வா புந த்யாயேத் சதுர் பாஹும் ஸூ தர்சனம்
அந்யதா நைவ சாந்தி ஸ்யாத் அஸ்தி தேஜஸ் ததா ஹரே –61

மீண்டும் ஒரு முறை நான்கு திருக் கைகளுடன் உள்ள ஸூ தர்சனம் தியானிக்க வேண்டும்
வித்தாகி ஸ்ரீ ஹரியின் சக்தியால் அமைதி ஏற்படும் –

கோர சாந்த விபேதேந பவ்ருஷம் த்யானம் ஈரிதம்
இதி தே ஸூர சார்த்தூல த்யானம் அந் யச்ச மே ஸ்ருணு –62-

இவ்வாறு கோரம் சாந்தம் இரு நிலைகளில் உள்ள புருஷ த்யானம் பற்றிச் சொன்னேன் –
மேல் மற்ற த்யானம் பற்றிக் கேள் –

ப்ரகாரா பவ்ருஷா யே யே த்யாநே அஸ்மின் பரி வர்ணிதா
தான் ஸர்வான் மன் மயா நேவ ஸம்ஸ்மரேத் சீக்ர ஸித்தயே –63-

என்னுடன் சம்பந்தம் பெற்ற பல்வேறு புருஷ நிலைகளை பற்றி ஸதா த்யானம் செய்ய வேண்டும் –
இது விரைவாகவே பலன் அளிக்க வல்லதாகும்

அத்யந்த அபூத மிதம் சக்ர ரஹஸ்யம் தே ப்ரகீர்த்திதம்
பூயோ ரஹஸ்யம் அந்யச்ச ஸ்ருணு மே ஸூர புங்கவ–64-

உனக்கு மிக உயர்ந்த ரஹஸ்ய பரம்பரை பற்றி உபதேசித்தேன் -மேலும் கேள்

ஆக்நேயீ யா மதீயா தே புரா சக்தி ப்ரகீர்த்திதா
ஸூர்ய கோட் யர்புதா பாஸா வஹ்னி கோட் யர் புதோமா –65-
இந்து கோட் யர் புதா பாஸா மம ஸ்பந்த மயீ தனு
அம்ருதம் பரமாத்மாநம் அசேஷ புவநாத் ருதிம் –66-
ஆஸ்தாய பஞ்ச பிந்து ஆத்மா ஸ்ப்ரு சந்தீ வ்யாபி நம் பரம்
ஹிதாய ஸர்வ பூதா நாமு தேதி பரமேச்வராத் –67-

அக்னியை உள்ளடக்கிய எனது சக்தி கோடிக்கணக்கான ஸூர்யன் மற்றும் அக்னி போன்று ஒளிர்ந்து
கோடிக்கணக்கான சந்திரன் போன்ற துடிப்பைக் கொண்டதாகவும் உள்ளது
ஸஹஸ்ரார என்று தொடங்கும் மாத்திரத்தில்
அம்ருதம் -ஸ -பரமாத்மன் -ஹ -அசேஷ புவன ஆதாரம் -ர -ஆகியவை
பஞ்ச பிந்து மற்றும் வ்யாபின் ஆகிய ஒலிகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன –
மிகவும் உயர்ந்த பரமேஸ்வரனிடம் இருந்து உத்பத்தி யாகும் இந்த சக்தியானது
அனைத்து உயிரிகளுக்கும் நன்மை அளிக்க வல்லதாக உள்ளது –

தாமஷம் கல்பயேச் சக்திம் தத் ப்ரபாம் நாபி மண்டலம்
அராணி ஷண் மநோ ரர்ணான் ஸூர்ய உத்தாமவ் ஸ பிந்துகவ் –68-
ஸூஸ்திதவ் நேமி கவ் த்யாயேச் சேஷம் து ப்ரதி மண்டலம்
ஆத்மாநம் மத்யதோ த்யாயேத் ஸ்வம் மாயா பரமாத்மநோ –69-

அந்த சக்தியே ஸூ தர்சனத்தின் நாபியாகும் -அதன் ஒளியே வெளிவட்டம் -மந்த்ரத்தின் ஆறு ஒலிகளும் ஆறு ஆரங்கள் –
ஸூர்ய உத்தாம பிந்து ஒலிகள் அந்த ஆரங்கள் சக்கரத்தில் சென்று இணையும் வட்டத்தில்
உறுதியாக இணைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்
மந்திரத்தில் எஞ்சிய பகுதி -பட் -சக்கரத்தை சூழ்ந்து உள்ளதாகக் கொள்ள வேண்டும்
தனது ஆத்மாவானது மஹா லஷ்மி மற்றும் பரமாத்மாவின் நடுவில் உள்ளதாக தியானிக்க வேண்டும் –

ஸூர்ய அநல அந்தரஸ்தம் ச நிரஸ்யந் ஸம்ஸ்மரேஜ் ஜனம்
த்யா யன்ன நிச மேவம் ஹி யோகீ த்யான பாராயண –70-
விதூய நிகிலம் தோஷம் ஸாம் ஸாரிகம் அசேஷத
மயி பக்திம் பராம் ப்ராப்ய மாமே வாந்தே ஸமஸ்நுதே –71-

தன்னை தனது சரீரத்தில் இருந்து வெளியே எடுத்ததாக எண்ணி
ஸூர்யன் மற்றும் அக்னியில் நான் இருப்பதாக தியானிக்க வேண்டும்
இவ்வாறு த்யானத்தில் ஆழ்ந்த யோகி தனது அனைத்து பாபங்களையும் அந்த த்யானம் மூலமாகவே கழிக்கிறான்
அதன் பின்னர் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவனாக என்னையே தஞ்சம் எனப் புகுகிறான்

அந்தரா பரமாத்மா நம் அம்ருதம் ச ஸ்திதோ ஜபன்
மநீஷீ மனஸா நித்யம் பியூஷாப் யாய நம் ஸ்மரேத்–72-

ஸூ தர்சன மந்திரத்தின் பரமாத்மா மற்றும் அம்ருதம் -ஸ மற்றும் ஹ -ஆகியவற்றை உறுதியுடன் ஜபித்தபடி உள்ள ஒருவன்
அம்ருதத்தைப் பருகினால் உண்டாகும் சுவையை எப்போதும் மனத்தில் சிந்தித்த படி இருக்க வேண்டும் –

ஸூதயா ப்லாவ்ய மாநோ ஹி ஸ்த்ருதயா சக்தி கோடராத்
ப்ராணேந ப்ராண்யமா நச்ச தக்த தோஷோ அநலத் விஷா –73-
பஞ்ச பிந்து க்ரியா லாபாத் ஐஸ்வர்யம் பரமாஸ்தித
சந்தத அப்யாஸ யோகேந வஸீ யுக்தோ ஜிதேந்த்ரிய –74-
விஹாய சகலம் க்லேசம் வேஷ மாஸ்தாய மா மகம்
த்ருப்தோ ஜானபலோ யோகீ க்ரியயா ஸர்வதோ வஸீ –75-

ஹ-அக்ஷரம் யோகிகளின் அனைத்து தோஷங்களும் அநலம் என்னும் அக்னியின் ஜ்வாலைகளால் பொசுக்கப் படுகின்றன
அப்போது அவன் பஞ்ச பிந்து மூலமாக உயர்ந்த ஐஸ்வர்யத்தை அடைகிறான்
தொடர்ந்து யோகத்தைக் கைக்கொண்டு புலன்களை அடக்குகிறான்
என்னால் ஸாம்யா பத்தி அருளப்பெற்று தன்னைத் தன் வசப்படுத்தியவனாக உள்ளான்

ஈஸ்வர பரமோ பூத்வா ஸர்வ வ்யாப்தி மய ஸ்தித
மாமேவ மாமகம் தாம மத் ப்ரஸாதாத் உபாஸ் நுதே –76-

சாம்யா பத்தி அடைந்த அவன் எனது கருணை மூலமாகவே என்னையே அனுபவித்து ஆனந்திக்கிறான் –
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -ஸாயுஜ்யம் அடைகிறான் –

யா கிரியா ஸா சிதாக்யாதா யா சித்தி ஸா பரா க்ரியா
ஏதே ஸ பரமா நந்தாஸ்த்ர யஸ்தே பரி கீர்த்திதா –77-

அகண்டை கா பரா சக்திச் சித் க்ரியா நந்த ரூபிணி
வைஷ்ணவீ ஸா பரா ஹந்தா ஸாஹம் ஸர்வார்த்த பூரணீ –78

கிரியை செயல்பாடு என்று அழைக்கப்படுவது எதுவோ -அது சித் -அறிவு -எனவும் கூறப்படும்
சித்த என்று அழைக்கப்படுவது எதுவோ அது உயர்ந்த கிரியை எனவும் கூறப்படும்
இந்த இரண்டும் மற்றும் பரமானந்தம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு உயர்ந்த சக்தியாக உள்ளது
இதுவே- சித்த கிரியை ஆனந்தம் -ஆகியவற்றின் ரூபமாக உள்ளது
அதுவே விஷ்ணுவின் நான் என்ற எண்ணமாக உள்ளது -அவை அனைத்தையும் நிறைவேற்றுபவன் நானே ஆவேன் –

ஸ்வாச் ஸந்த்யான் மம சங்கல்போ த்விதைவம் ப்ரவிஜ்ரும்பதே
ஏகா சக்திர் க்ரியாஹ் வாநா மஹா பூதிரதாபரா –79-

எனது இச்சையால் எனது சங்கல்பம் மூலம் நான் இரண்டு சக்திகளாக மாறுகிறேன்
அவற்றில் ஓன்று கிரியை எனவும் மஹா பூதி எனவும் கூறப்படுகிறது –

ஸாமான்யதஸ் அனயோர் சக்ர ஸ்திதாஹம் பரமேஸ்வரீ
ஏஷா தே சகலா சக்திர் க்ரியாரூபா பிரதர்சிதா –80-

இந்திரனே நான் அனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளதால் அந்த இரண்டு சக்திக்கும் பொதுவாக உள்ளேன்
இப்படி செயல் ரூபமாக உள்ள அந்த சக்தி மற்றும் அதன் அம்சங்கள் குறித்து அனைத்தும் உனக்கு கூறுகிறேன் –

ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந தாரிகாயா நிசாமய
நிமீ லித க்ரியாகாரா ஸ்பஷ்ட ஐஸ்வர்ய ஸ்வரூபிணீ –81–

தநு ஷாட் குண்ய ரூபா மே பூதிர் ஸா தாரி காஹ்தயா
தஸ்யா ஸ்தூலாதி ரூபாணி யதா வன்மே நிசாம்ய
உச்ய மாநாதி தேவே ச ஸாவதா நே ந சேத ஸா –82-

அடுத்து தாரிக்காவின் ஸ்தூல ஸூஷ்ம நிலையான வடிவம் குறித்துக் கேட் பாயாக
பூதி எனப்படும் தாரிகா ஆறு குணங்களுடன் கொண்ட ரூபம் உள்ளவளாக உள்ளாள்
ஆனால் அவளுடைய குணங்களில் செயல்படும் குணமானது மறைவாகவும் ஐஸ்வர்யம் என்ற குணமானது ஓங்கியும் உள்ளது

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட் பாயாக –

முப்பத்து ஒன்றாவது அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–361-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம

ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த ஸ்ரீ முகுந்த3மாலை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

January 14, 2022

ஶ்ரீமுகுந்த₃மாலா
கு₃ஷ்யதே யஸ்ய நக₃ரே ரங்க₃யாத்ரா தி₃நே தி₃நே
தமஹம் ஶிரஸா வந்தே₃ ராஜாநம் குலஶேக₂ரம்

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்த ப்ரியேதி ப⁴வலுண்ட²ந கோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயநேதி ஜக³ந் நிவாஸேதி
ஆலாபநம் ப்ரதி பத³ம் குரு மாம் முகுந்த³ ॥ 1॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீநந்த³நோঽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரநாஶோ முகுந்த:³ ॥ 2॥

முகுந்த³! மூர்த்⁴நா ப்ரணிபத்ய யாசே ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³ ப⁴வே ப⁴வே மேঽஸ்து ப⁴வத் ப்ரஸாதா³த் ॥ 3॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வம த்³வந்த்³வஹேதோ:
கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யா ராமா ம்ருʼது³தநுலதா நந்த³நே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³ய ப⁴வநே பா⁴வயேயம் ப⁴வந்தம் ॥ 4॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுநிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வந் பூர்வ கர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹு மதம் ஜந்ம ஜந்மாந்தரேঽபி
த்வத் பாதா³ம்போ⁴ருஹ யுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 5॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரித-ஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேঽபி சிந்தயாமி ॥ 6॥

க்ருʼஷ்ண! த்வதீ³ய பத³பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விஶது மாநஸ ராஜ ஹம்ஸ: ।
ப்ராண ப்ரயாண ஸமயே கப² வாத பித்தை:
கண்டா²வரோத⁴நவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 7॥

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ ஹஸிதாந நாம்பு³ஜம்
நந்த³கோ³ப தநயம் பராத்பரம் நாரதா³தி³ முநிவ்ருʼந்த³ வந்தி³தம் ॥ 8॥

கரசரணஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமரு பரிகி²ந்ந: க்லேஶமத்³ய த்யஜாமி ॥ 9॥

ஸரஸிஜ நயநே ஸஶங்க²சக்ரே முரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுக²தரமபரம் ந ஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம்ருʼதேந துல்யம் ॥ 10॥

மாபீ⁴ர்மந்த³மநோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ் சிரம் யாதநா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாப ரிபவ: ஸ்வாமீ நநு ஶ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபநீய ப⁴க்தி ஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத³நகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 11॥

ப⁴வ ஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்
ஸுத து³ஹித்ருʼகளத்ர த்ராண பா⁴ரார்தி³தாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ப⁴வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 12॥

ப⁴வஜலதி⁴ மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மாஸ்மகா:³ காதரத்வம் ।
ஸரஸி ஜத்³ருʼஶி தே³வே தாரகீ ப⁴க்திரேகா
நரகபி⁴தி³ நிஷண்ணா தார யிஷ்யத் யவஶ்யம் ॥ 13॥

த்ருʼஷ்ணா தோயே மத³நபவநோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தநய ஸஹஜ க்³ராஹ  ஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மந்
பாதா³ம் போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்திநாவம் ப்ரயச்ச² ॥ 14॥

மாத்³ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்தி ஹீநாந் பதா³ப்³ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்ய ப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யாந்ய தா³க்²யாந ஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வந பதே சேதஸா பஹ்நுவாநாந்
மாபூ⁴வம் த்வத் ஸபர்யா வ்யதிகர ரஹிதோ ஜந்ம ஜந்மாந்தரேঽபி ॥ 15॥

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோகய லோசநத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥ 16॥

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: ।
அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷத⁴ம் விதநுதே நிர்வாநமாத்யந்திகம் ॥ 17॥

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நாநாஜ்ஞாநமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥ 18॥

ப்ருʼத்²வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ঽநல:
தேஜோ நி:ஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।
க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தாஸ் ஸுரா:
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ॥ 19॥

ப³த்³தே⁴நாஞ்ஜலிநா நதேந ஶிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:
கண்டே²ந ஸ்வரக³த்³க³தே³ந நயநேநோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³நா ।
நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ள த்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 20॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலநிதே⁴ ஹே ஸிந்து⁴கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।
ஹே ராமாநுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீஜநநாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21॥

ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணி: த்ரைலோக்யரக்ஷாமணி:
கோ³பீலோசநசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி:
ய: காந்தாமணிருக்மிணீக⁴நகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ஶ்ரேயோ தே³வஶிகா²மணிர்தி³ஶது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 22॥

ஶத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபநிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ்ஸங்க⁴நிர்யாணமந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸநபு⁴ஜக³ ஸந்த³ஷ்ட ஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்மஸாப²ல்யமந்த்ரம் ॥ 23॥

வ்யாமோஹப்ரஶமௌஷத⁴ம் முநிமநோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிஜக³தாம் ஸஞ்ஜீவநைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸநைகௌஷத⁴ம்
ஶ்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மந: ஶ்ரீக்ருʼஷ்ண தி³வ்யௌஷத⁴ம் ॥ 24॥

ஆம்நாயாப்⁴யஸநாந்யரண்யருதி³தம் வேத³வ்ரதாந் யந்வஹம்
மேத³ஶ்சே²த³ப²லாநி பூர்தவித⁴யஸ் ஸர்வேஹுதம் ப⁴ஸ்மநி ।
தீர்தா²நாமவகா³ஹநாநி ச க³ஜஸ்நாநம் விநா யத்பத³ –
த்³வந்த்³வாம்போ⁴ருஹ ஸம்ஸ்ம்ருʼதிர் விஜயதே தே³வஸ் ஸ நாராயண: ॥ 25॥

ஶ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கே ந ப்ராபுர்வாஞ்சி²தம் பாபிநோঽபி ।
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மிந் –
தேந ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

மஜ்ஜந்மந: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே!
மத்ப்ரார்த²நீயமத³நுக்³ரஹ ஏஷ ஏவ ।
த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரக ப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-
ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகநாத² ॥ 27॥

நாதே² ந: புருஷோத்தமே த்ரிஜக³தா மேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேஶ மல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 28॥

மத³ந பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மநஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்நி ।
ஹரநயநக்ருʼஶாநுநா க்ருʼஶோঽஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 29॥

தத்த்வம் ப்³ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் ப²லாநி ।
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ³சராணி ॥ 30॥

இத³ம் ஶரீரம் பரிணாமபேஶலம் பதத்யவஶ்யம் ஶ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் ।
கிமௌஷதை:⁴ க்லிஶ்யஸி மூட⁴ து³ர்மதே நிராமயம் க்ருʼஷ்ணரஸாயநம் பிப³ ॥ 31॥

தா³ரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருʼத்யவர்க:³ ப்ரஸாத:³ ।
முக்திர்மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ்த்வய்யதோঽந்யந்ந ஜாநே ॥ 32॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருʼஷ்ணேநாமரஶத்ரவோ விநிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।
க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோঽஸ்ம்யஹம்
க்ருʼஷ்ணே திஷ்ட²தி விஶ்வமேதத³கி²லம் ஹேக்ருʼஷ்ண! ஸம்ரக்ஷ மாம் ॥ 33॥

தத் த்வம் ப்ரஸீத³ ப⁴க³வந் குரு மய்யநாதே²
விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: க²லு த்வம் ।
ஸம்ஸாரஸாக³ரநிமக்³நமநந்த தீ³நம்
உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோঽஸி ॥ 34॥

நமாமி நாராயண பாத³பங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸதா³ ।
வதா³மி நாராயணநாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35॥

ஶ்ரீநாத² நாராயண வாஸுதே³வ
ஶ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।
ஶ்ரீபத்³மநாபா⁴ச்யுத கைடபா⁴ரே
ஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 36॥

அநந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।
வக்தும் ஸமர்தோ²ঽபி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி⁴முக்²யம் ॥ 37॥

த்⁴யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।
ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்
தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38॥

க்ஷீரஸாக³ர தரங்க³ஶீகரா ஸாரதாரகித சாருமூர்தயே ।
போ⁴கி³போ⁴க³ ஶயநீயஶாயிநே மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 39॥

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ
மித்ரே த்³விஜந்மவரபத்³ம ஶராவபூ⁴தாம் ।
தேநாம்பு³ஜாக்ஷ சரணாம்பு³ஜ ஷட்பதே³ந
ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலஶேக²ரேண ॥

॥ இதி ஶ்ரீகுலஶேக²ரேண விரசிதா முகுந்த³மாலா ஸம்பூர்ணம் ॥

—-

தனியன்:
গুஷ்யதே யஸ்ய நগரே ரங்গயாத்ரா দিநே দিநே
தமஹம் শিரஸா வந்দে ராஜாநம் குலশেখரம்.

கு₃ஷ்யதே யஸ்ய நக₃ரே ரங்க₃யாத்ரா தி₃நே தி₃நே
தமஹம் ஶிரஸா வந்தே₃ ராஜாநம் குலஶேக₂ரம்

யஸ்ய – யாவரொரு குலசேகரப் பெருமாளுடைய,
நகரே – கொல்லியென்னும் நகரத்தில்,
திநே திநே – நாள்தோறும்,
ரங்க யாத்ரா – ‘ஸ்ரீரங்க யாத்ரை’ என்கிற சப்தமானது,
குஷ்யதே – (ஜநங்களால்) கோஷிக்கப்படுகிறதோ,
தம் ராஜாநம் – அந்த ராஜாவாகிய,
குலசேகரம் – ஸ்ரீ குலசேகராழ்வாரை,
அஹம் – அடியேன்,
சிரஸா வந்தே – தலையினால் வணங்குகின்றேன்.

——-

ஶ்ரீவல்ல◌ேভதி வர◌ேদதி দயாபரேதி ভக்தப்ரியேதி ভவலுண்ঠநகோவி◌ேদதி ।
நா◌ேথதி நாগஶயநேதி ஜগந்நிவாஸேதி ஆலாபிநம் ப்ரதிபদம் குரு மாம் முகுந்দ ॥ 1॥

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்த ப்ரியேதி ப⁴வலுண்ட²ந கோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயநேதி ஜக³ந்நிவாஸேதி
ஆலாபநம் ப்ரதிபத³ம் குரு மாம் முகுந்த³ ॥ 1॥

ஹே முகுந்த! – உபய விபூதியை அளிக்க வல்ல எம்பெருமானே!,
ஸ்ரீ வல்லப! இதி -ஶ்ரிய:பதி என்றும்,
வரத! இதி – (அடியார்க்கு) அபேஷிதங்களை அளிப்பவனே! என்றும்,
தயா பர! இதி – அடியார் படும் துக்கங்களைப் பொறுக்க மாட்டாத ஸ்வபாவமுடை யவனே! என்றும்,
பக்த ப்ரிய! இதி – அடியார்கட்கு அன்பனே! என்றும்,
பவலுண்டந கோவித! இதி – ஸம்ஸாரத்தைத் தொலைக்க வல்லவனே! என்றும்,
நாத! இதி – ஸர்வ ஸ்வாமிந்! என்றும்,
நாக சயந! இதி – அரவணை மேல் பள்ளி கொள்பவனே! என்றும்,
ஜகந் நிவாஸ! இதி – திரு வயிற்றை இருப்பிடமாக்கி அவற்றை நோக்குமவனே! என்றும்,
ப்ரதிபதம் – அடிக்கடி,
ஆலாபிநம் – சொல்லுமவனாக,
மாம் – அடியேனை,
குரு – செய்தருளாய்.

———

ஜயது ஜயது ◌ேদவோ ◌ேদவகீநந்দநோயம்
ஜயது ஜயது கৃஷ்ணோ வৃஷ்ணிவம்ஶப்ரদீபঃ ।
ஜயது ஜயது மேঘஶ்யாமலঃ கோமலாங்◌ேগা
ஜயது ஜயது பৃথ்வீভாரநாஶோ முகுந்দঃ ॥ 2॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீநந்த³நோঽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணி வம்ஶ ப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரநாஶோ முகுந்த:³ ॥ 2॥

அயம் – இந்த,
தேவ: – தேவனான,
தேவகீ நந்தந: – தேவகியின் மகனான கண்ணபிரான், – வாழ்க! வாழ்க!!,
வ்ருஷ்ணி வம்ச ப்ரதீப: – வ்ருஷ்ணி என்னும் அரசனுடைய குலத்துக்கு விளக்காய்த் தோன்றிய கண்ணன், ஜயது ஜயது-;
மேகச்யாமல: – காளமேகம் போற் கரிய பிரானாய்,
கோமள அங்க: – அழகிய திருமேனியை யுடையனான் கண்ணபிரான், ஜயது ஜயது-;
ப்ருத்வீபார நாச: – பூமிக்குச் சுமையான துர்ஜநங்களை ஒழிக்குமவனான,
முகுந்த: – கண்ணபிரான், ஜயது ஜயது – வாழ்க! வாழ்க!!

————

முகுந்দ மூர்ধ்நா ப்ரணிபத்ய யாசே ভவந்தமேகாந்தமியந்தமர்থம் ।
அவிஸ்மৃதிஸ்த்வச்சரணாரவிந்◌ேদ ভவே ভவே மேঽஸ்து ভவத்ப்ரஸாদாத் ॥ 3॥

முகுந்த³! மூர்த்⁴நா ப்ரணிபத்ய யாசே ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ் த்வச் சரணாரவிந்தே³ ப⁴வே ப⁴வே மேঽஸ்து ப⁴வத் ப்ரஸாதா³த் ॥ 3॥

முகுந்த – புக்தீ முக்திகளைத் தரவல்ல கண்ணபிரானே!,
பவந்தம் – தேவரீரை,
மூர்த்நா – தலையாலே,
ப்ரணிபத்ய – ஸேவித்து,
இயந்தம் அர்த்தம் ஏகாந்தம் – இவ்வளவு பொருளை மாத்திரம்,
யாசே – யாசிக்கின்றேன்! (அஃது என்? எனில்),
மே – எனக்கு,
பவே பவே – பிறவிதோறும்,
பவத்ப்ரஸாதாத் – தேவரீருடைய அநுக்ரஹத்தினால்,
த்வத் சரணாரவிந்தே – தேவரீருடைய திருவடித் தாமரை விஷயத்தில்,
அவிஸ்ம்ருதி: – மறப்பு இல்லாமை,
அஸ்து – இருக்க வேணும்.

—————

நாஹம் வந்◌ேদ தவ சரணயோர்দ்வந்দ்வமদ்வந்দ்வஹேதோঃ
கும்ভீபாகம் গுருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யாராமாமৃদுதநுலதா நந்দநே நாபி ரந்தும்
ভாவே ভாவே ஹৃদயভவநே ভாவயேயம் ভவந்தம் ॥ 4॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வம த்³வந்த்³வ ஹேதோ:
கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யா ராமா ம்ருʼது³தநு லதா நந்த³நே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³ய ப⁴வநே பா⁴வ யேயம் ப⁴வந்தம் ॥ 4॥

அஹம் – அடியேன்,
தவ – தேவரீருடைய,
சரணயோ:த்வந்த்வம் – திருவடியிணையை,
அத்வந்த்வஹேதோ: – ஸுக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்.;
கும்பீபாகம் – கும்பீபாகமென்னும் பெயரையுடைய,
குரும் – பெருத்த [கொடிதான],
நாரகம் – நரகத்தை,
அபநேதும் அபி – போக்கடிப்பதற்காகவும்,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்;
ரம்யா: – அழகாயும்,
ம்ருது தநு லதா: – ஸுகுமாரமாய்க் கொடி போன்ற சரீரத்தையுடையவர்களுமான,
ராமா: – பெண்களை [அப்ஸரஸ்ஸுக்களை],
நந்தநே – (இந்திரனது) நந்தநவநத்தில்,
ரந்தும் அபி – அநுபவிப்பதற்காகவும்,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்; (பின்னை எதுக்காக ஸேவிக்கிறீரென்றால்;),
ஹே ஹரே! – அடியார்களின் துயரத்தைப் போக்குமவனே!,
பாவே பாவே – பிறவி தோறும்,
ஹ்ருதய பவநே – ஹ்ருதயமாகிற மாளிகையில்,
பவந்தம் – தேவரீரை,
பாவயேயம் – த்யாநம் பண்ணக் கடவேன். (இப் பேறு பெறுகைக்காகத் தான் ஸேவிக்கிறேனென்று சேஷ பூரணம்.)

————

நாஸ்থா ধர்மே ந வஸுநிசயே நைவ காமோப◌ேভা◌ேগ
யদயদ் ভவ்யம் ভவது ভগவந் பூர்வகர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்থ்யம் மம বஹுமதம் ஜந்மஜந்மாந்தரேঽபி
த்வத்பாদாம்◌ேভাருஹயுগগதா நிஶ்சலா ভக்திரஸ்து ॥ 5॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுநிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வந் பூர்வ கர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹு மதம் ஜந்ம ஜந்மாந்தரேঽபி
த்வத் பாதா³ம்போ⁴ருஹ யுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 5॥

ஹே பகவந் – ஷாட்குண்ய பூர்ணனான எம்பெருமானே!,
மம – அடியேனுக்கு,
தர்மே! – (ஆமுஷ்மிக ஸாதனமான) தர்மத்தில்,
ஆஸ்தா ந – ஆசையில்லை;
வஸு நிசயே – (ஐஹிக ஸாதநமான) பணக் குவியலிலும்,
ஆஸ்தா ந – ஆசையில்லை;
காம உபபோகே – விஷய போகத்திலும்,
ஆஸ்தா ந ஏவ – ஆசை இல்லவே யில்லை;
பூர்வ கர்ம அநுரூபம் – ஊழ்வினைக்குத் தக்கபடி,
யத் யத் பவ்யம் – எது எது உண்டாகக் கடவதோ,
(தத் – அது) பவது – உண்டாகட்டும்;
(ஆனால்)
த்வத் பாத அம்போ ருஹ யுக கதா – தேவரீருடைய திருவடித் தாமரையிணையிற் பதிந்திருக்கிற,
பக்தி: – பக்தியானது,
ஜந்ம ஜந்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்,
நிஶ்சலா – அசையாமல்,
அஸ்து – இருக்க வேண்டும்;
(இதி யத் – என்பது யாதொன்று)
ஏதத் – இதுவே,
மம பஹுமதம் – எனக்கு இஷ்டமாய்,
ப்ரார்த்யம் -ப்ரார்த்திக்கத் தக்கதுமாயிருக்கிறது.

————–

দிவி வா ভுவி வா மமாஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவধீரித-ஶாரদாரவிந்◌ெদள சரணௌ தே மரணேঽபி சிந்தயாமி ॥ 6॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரித-ஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேঽபி சிந்தயாமி ॥ 6॥

ஹே நரக அந்தக – வாராய் நரக நாசனே!,
மம – எனக்கு,
திவி வா –ஸ்வர்க்கத்தி லாவது,
புவி வா – பூமியிலாவது,
நரகே வா – நரகத்திலாவது,
பர காமம் – (உனது) இஷ்டப்படி,
வாஸ: – வாஸமானது,
அஸ்து – நேரட்டும்,
அவதீரிதசாரத அரவிந்தெள – திரஸ்கரிக்கப்பட்ட சரத் காலத் தாமரையை யுடைய
[சரத்காலத் தாமரையிற் காட்டிலும் மேற்பட்ட],
தே சரணெள – தேவரீருடைய திருவடிகளை,
மரணே அபி – (ஸகல கரணங்களும் ஓய்ந்திருக்கும்படியான) மரண காலத்திலும்,
சிந்தயாமி – சிந்திக்கக் கடவேன்.

————

கৃஷ்ண! த்வদீய பদபங்கஜ பஞ்ஜராந்த:
அদ்யைவ மே விஶது மாநஸ ராஜஹம்ஸঃ ।
ப்ராணப்ரயாணஸமயே கফவாதபித்தைঃ
கண்ঠாவரோধந-வி◌ெধள ஸ்மரணம் குதஸ்தே ॥ 7॥

க்ருʼஷ்ண! த்வதீ³ய பத³பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விஶது மாநஸ ராஜ ஹம்ஸ: ।
ப்ராண ப்ரயாண ஸமயே கப²வாத பித்தை:
கண்டா²வரோத⁴நவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 7॥

க்ருஷ்ண! – கண்ண பிரானே!,
ப்ராண ப்ரயாண ஸமயே – உயிர் போகும் போது,
கப வாத பித்தை: – கோழை, வாயு, பித்தம் இவற்றால்,
கண்டாவரோதந விதெள – கண்டமானது அடைபட்டவளவில்,
தே – தேவரீருடைய,
ஸ்மரணம் – நினைவானது,
குத: – எப்படி உண்டாகும்?, (உண்டாக மாட்டாதாகையால்)
மே – என்னுடைய,
மாநஸ ராஜ ஹம்ஸ: – மநஸ்ஸாகிற உயர்ந்த ஹம்ஸமானது,
த்வதீய பத பங்கஜ பஞ்சர அந்த: – தேவரீருடையதான திருவடித் தாமரைகளாகிற கூட்டினுள்ளே,
அத்ய ஏவ – இப்பொழுதே,
விசது – நுழையக் கடவது.

——

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்দமந்দ ஹஸிதாநநாம்বுஜம்
நந்দ◌ேগাப தநயம் பராத்பரம் நாரদாদி முநிவৃந்দ வந்দிதம் ॥ 8॥

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ ஹஸிதாந நாம்பு³ஜம்
நந்த³கோ³ப தநயம் பராத் பரம் நாரதா³தி³ முநி வ்ருʼந்த³ வந்தி³தம் ॥ 8॥

மந்த மந்த ஹஸித ஆநந அம்புஜம் – புன்முறுவல் செய்கின்ற தாமரை மலர் போன்ற திருமுகத்தை யுடையனாய்,
நாரத ஆதி முநி ப்ருந்த வந்திதம் – நாரதர் முதலிய முனிவர் கணங்களால் தொழப் பட்டவனாய்,
பராத் பரம் – உயர்ந்தவர்களிற் காட்டிலும் மேலான உயர்ந்தவனாய்,
ஹரிம் – பாவங்களைப் போக்குமவனாய்,
நந்தகோப தநயம் ஏவ – நந்தகோபன் குமாரனான கண்ண பிரானையே,
ஸந்ததம் – எப்போதும்,
சிந்தயாமி – சிந்திக்கின்றேன்.

—————

கரசரணஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி ভுஜவீசிவ்யாகுலேঽগாধமார்◌ேগ ।
ஹரிஸரஸி விগாஹ்யாபீய தேஜோ ஜலௌঘம்
ভவமருபரிখிந்நঃ க்லேஶமদ்ய த்யஜாமி ॥ 9॥

கர சரண ஸரோஜே காந்திமந் நேத்ர மீநே
ஶ்ரம முஷி பு⁴ஜ வீசி வ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யா பீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வ மரு பரிகி²ந்ந: க்லேஶ மத்³ய த்யஜாமி ॥ 9॥

கர சரண ஸரோஜே – திருக்கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய்,
காந்திமந் நேத்ர மீநே – அழகிய திருக்கண்களாகிற கயல்களை யுடையதாய்,
ச்ரமமுஷி – விடாயைத் தீர்க்குமதாய்,
புஜ வீசி வ்யாகுலே – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய்,
அகாத மார்க்கே – மிகவும் ஆழமான,
ஹரி ஸரஸி – எம்பெருமானாகிற தடாகத்தில்,
விகாஹ்ய – குடைந்து நீராடி,
தேஜோ ஜல ஓகம் – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை,
ஆபீய – பாநம் பண்ணி,
பவ மரு பரிகிந்ந – ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்,
கேதம் – அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை,
அத்ய – இப்போது,
த்யஜாமி – விடுகின்றேன்.

—————-

ஸரஸிஜநயநே ஸஶங்খசக்ரே முரভிদி மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுখதரமபரம் ந ஜாது ஜாநே ஹரிசரணஸ்மரணாமৃதேந துல்யம் ॥ 10॥

ஸரஸிஜ நயநே ஸஶங்க²சக்ரே முரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுக²தரம பரம் ந ஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம்ருʼதேந துல்யம் ॥ 10॥

ஸ்வ சித்த – எனக்குச் செல்வமான நெஞ்சே!,
ஸரஸிஜ நயநே – தாமரை போன்ற கண்களை யுடையனாய்,
ஸ சங்க சக்ரே – திருவாழி திருச் சங்குகளோடு கூடினவனாய்,
முரபிதி – முராஸுரனைக் கொன்றவனான கண்ண பிரானிடத்து,
ரந்தும் – ரமிப்பதற்கு,
மா விரம – க்ஷணமும் விட்டு ஒழியாதே;
ஹரி சரண ஸ்மரண அம்ருதேந – எம்பெருமானது திருவடிகளைச் சிந்திப்பதாகிற அம்ருதத்தோடு,
துல்யம் – ஒத்ததாய்,
ஸுக தரம் – மிகவும் ஸுககரமாயிருப்பதான,
அபரம் – வேறொன்றையும்,
ஜாது – ஒரு காலும்,
ந ஜாநே – நான் அறிகின்றிலேன்.

—————–

மாভீர் மந்দமநோ விசிந்த்ய বஹுধா யாமீஶ்சிரம் யாதநாঃ
நாமீ நঃ ப்ரভவந்தி பாபரிபவஸ் ஸ்வாமீ நநு ஶ்ரீধரঃ ।
ஆலஸ்யம் வ்யபநீய ভக்திஸுலভம் ধ்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோদநகரோ দாஸஸ்ய கிம் ந க்ஷமঃ ॥ 11॥

மாபீ⁴ர் மந்த³மநோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ் சிரம் யாதநா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாப ரிபவ: ஸ்வாமீ நநு ஶ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபநீய ப⁴க்தி ஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத³ந கரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 11॥

ஹே! மந்த மந:! – ஓ அற்பமான நெஞ்சே!,
யாமீ: – யமனுடையதான,
யாதநா: – தண்டனைகளை,
சிரம் – வெகு காலம்,
பஹுத: – பலவிதமாக,
விசிந்த்ய – சிந்தித்து (உனக்கு),
பீ: மா(ஸ்து) – பயமுண்டாகவேண்டாம்;
அமீ – இந்த,
பாப ரிபவ: – பாவங்களாகிற சத்ருக்கள் நமக்கு,
ந ப்ரபவந்தி – செங்கோல் செலுத்துமவையல்ல;
நநு – பின்னையோவென்றால்,
ஸ்ரீதர: – திருமால்,
ந:ஸ்வாமி – நமக்கு ஸ்வாமியாயிருக்கிறார்,
ஆலஸ்யம் – சோம்பலை,
வ்யபநீய – தொலைத்து,
பக்தி ஸுலபம் – பக்திக்கு எளியனான,
நாராயணம் – ஸ்ரீமந்நாராயணனை,
த்யாயஸ்வ -த்யாநம் பண்ணு;
லோகஸ்ய – உலகத்துக்கு எல்லாம்,
வ்யஸந அபநோதந கர: – துன்பத்தைப் போக்குகின்ற அவர்,
தாஸஸ்ய – அவர்க்கே அடிமைப்பட்டிருக்கும் எனக்கு,
ந க்ஷம: கிம் – (பாபத்தைப் போக்க) மாட்டாதவரோ?

——————

ভவஜலধிগதாநாம் দ்வந்দ்வவாதாஹதாநாம்
ஸுதদுஹிதৃகளத்ர த்ராணভாரார்দிதாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ভவது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 12॥

ப⁴வ ஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வ வாதாஹதாநாம்
ஸுதது³ஹித்ருʼகளத்ர த்ராண பா⁴ரார்தி³தாநாம் ।
விஷம விஷய தோயே மஜ்ஜ தாம ப்லவாநாம்
ப⁴வது ஶரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் ॥ 12॥

பவ ஜலதி கதாநாம் – ஸம்ஸார ஸாகரத்தில் வீழ்ந்தவர்களாயும்,
த்வந்த்வ வாத ஆஹதாநாம் – ஸுகதுக்கங்களாகிற பெருங்காற்றினால் அடிபட்டவர்களாயும்,
ஸுத-துஹித்ரு களத்ர த்ராண பார-அர்த்திதாநாம் – மகன், மகள், மனைவி, இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப்பட்டவர்களாயும்,
விஷம விஷய தோயே -க்ரூரமான சப்தாதி விஷயங்களாகிற ஜலத்தில்,
மஜ்ஜதாம் – மூழ்கினவர்களாயும்,
அப்லவாநாம் – (இப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்துதற்கு உரிய) ஓடமற்றவர்களாயுமிருக்கிற,
நாரணாம் – மனிதர்களுக்கு,
விஷ்ணு போத: ஏக: – விஷ்ணுவாகிற ஓடம் ஒன்றே,
சரணம் – ரக்ஷகமாக,
பவது – ஆகக்கடவது.

———-

ভவஜலধிமগாধம் দுஸ்தரம் நிஸ்தரேயம்
கথமஹமிதி சேதோ மாஸ்மগாঃ காதரத்வம் ।
ஸரஸிஜদৃஶி ◌ேদவே தாவகீ ভக்திரேகா
நரகভிদி நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் ॥ 13॥

ப⁴வஜலதி⁴ மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மாஸ்மகா:³ காதரத்வம் ।
ஸரஸி ஜத்³ருʼஶி தே³வே தாரகீ ப⁴க்தி ரேகா
நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத் யவஶ்யம் ॥ 13॥

ஹே சேத:! – வாராய் மனமே!,
அகாதம் – ஆழமானதும்,
துஸ்தரம் – தன் முயற்சியால் தாண்டக் கூடாததுமான,
பவ ஜலதிம் – ஸம்ஸார ஸாகரத்தை,
அஹம் – நான்,
கதம் – எப்படி,
நிஸ்தரேயம் – தாண்டுவேன்?,
இதி – என்று,
காதரத்வம் – அஞ்சி யிருப்பதை,
மாஸ்ம கா: – அடையாதே; [அஞ்சாதே என்றபடி],
நரகபிதி – நரகாஸுரனைக் கொன்றவனும்,
ஸரஸிஜ த்ருசி – தாமரை போன்ற திருக் கண்களை யுடையனுமான,
தேவே – எம்பெருமானிடத்தில்,
நிஷண்ணா – பற்றி யிருக்கிற,
தாவகீ – உன்னுடையதான,
பக்தி: ஏகா – பக்தி யொன்றே,
அவஶ்யம் – நிஸ் ஸம்சயமாக,
தாரயிஷ்யதி – தாண்டி வைக்கும்.

—————–

தৃஷ்ணாதோயே மদநபவநோদ்ধூதமோஹோர்மிமாலே
দாராவர்தே தநயஸஹஜগ்ராஹ ஸங்ঘாகுலே ச ।
ஸம்ஸாராখ்யே மஹதி ஜல◌ெধள மஜ்ஜதாம் நஸ்த்ரிধாமந்
பாদாம்◌ேভাஜே வரদ! ভவதோ ভக்திநாவம் ப்ரயச்ছ ॥ 14॥

த்ருʼஷ்ணா தோயே மத³ந பவநோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தநய ஸஹஜ க்³ராஹ ஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ் த்ரிதா⁴மந்
பாதா³ம் போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தி நாவம் ப்ரயச்ச² ॥ 14॥

த்ரிதாமந் – மூன்று இடங்களில் எழுந்தருளியிருக்கிற,
ஹே வரத! – வாராய் வரதனே!,
த்ருஷ்ணா தோயே – ஆசையாகிற ஜலத்தை யுடையதும்,
மதந பவந உத்தூத மோஹ ஊர்மி மாலே – மந்மதனாகிற வாயுவினால் கிளப்பப்பட்ட மோஹமாகிற அலைகளின் வரிசைகளை யுடையதும்,
தார ஆவர்த்தே – மனைவியாகிற சுழிகளை யுடையதும்,
தநய ஸஹஜ க்ராஹ ஸங்க ஆகுலே ச – மக்கள் உடன் பிறந்தவர்கள் இவர்களாகிற முதலைக் கூட்டங்களால் கலங்கி யுமிருக்கிற,
ஸம்ஸார ஆக்க்யே – ஸம்ஸாரமென்கிற பெயரை யுடைய,
மஹதி – பெரிதான,
ஜலதெள – கடலில்,
மஜ்ஜதாம் ந: – மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு,
பவத: – தேவரீருடைய,
பாத அம்போஜே – திருவடித் தாமரையில்,
பக்தி நாவம் – பக்தியாகிற ஓடத்தை,
ப்ரயச்ச – தந்தருள வேணும்.

————

மாদ்ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபிভவதோ ভக்திஹீநாந் பদாব்ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யবந்ধம் தவ சரிதமபாஸ்யாந்ய দாখ்யாநஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாধவ! த்வாமபி ভுவநபதே! சேதஸாபஹ்நுவாநாந்
மாভூவம் த்வத்ஸபர்யாவ்யதிகரரஹிதோ ஜந்மஜந்மாந்தரேঽபி ॥ 15॥

மாத்³ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷண மபி ப⁴வதோ ப⁴க்தி ஹீநாந் பதா³ப்³ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்ய ப³ந்த⁴ம் தவ சரிதம பாஸ்யாந்ய தா³க்²யாந ஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வந பதே சேதஸா பஹ்நுவாநாந்
மாபூ⁴வம் த்வத் ஸபர்யா வ்யதிகர ரஹிதோ ஜந்ம ஜந்மாந்தரேঽபி ॥ 15॥

ஹே புவந பதே! – வாராய் லோகாதிபதியே!,
பவத: – தேவரீருடைய,
பத அப்ஜே – திருவடித் தாமரையில்,
க்ஷணம் அபி – க்ஷண காலமும்,
பக்தி ஹீநாந் – பக்தியற்றவர் களான,
க்ஷீண புண்யாந் – தெளர்ப்பாக்யசாலிகளை,
மாத்ராக்ஷம் – நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்;
ச்ராவ்ய பந்தம் – செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய,
தவ சரிதம் – தேவரீருடைய சரித்திரத்தை,
அபாஸ்ய – விட்டு,
அந்யத் – வேறான,
ஆக்க்யாந ஜாதம் – பிரபந்தங்களை,
மாச்ரெளஷம் – காது கொடுத்துக் கேட்க மாட்டேன்;
ஹே மாதவ – திருமாலே!,
த்வாம் – தேவரீரை,
அபஹ்நுவாநாந் – திரஸ்கரிக்குமவர்களை,
சேதஸா – நெஞ்சால், மாஸ்மார்ஷம் – நினைக்க மாட்டேன்,
ஜன்ம ஜன்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்,
த்வத் ஸபர்யாவ்யதிகா ரஹித: – தேவரீருடைய திருவாராதனமில்லாதவனாக,
மா பூவம் – இருக்க மாட்டேன்.

—————–

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ভஜ ஶ்ரீধரம்
பாணிদ்வந்দ்வ ஸமர்சயாச்யுத கথாঃ ஶ்ரோத்ரদ்வய த்வம் ஶৃணு ।
கৃஷ்ணம் லோகய லோசநদ்வய ஹரேர் গச்ছாங்ঘ்ரியுগ்மாலயம்
ஜிঘ்ர ঘ்ராண முகுந்দபாদதுலஸீம் மூர்ধந் நமா◌ேধাக்ஷஜம் ॥ 16॥

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணி த்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ர த்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோக்ய லோசந த்³வய ஹரேர் க³ச்சா²ங்க்⁴ரி யுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥ 16॥

ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
கேசவம் – கேசியைக் கொன்ற கண்ணபிரானை,
கீர்த்தய – ஸ்தோத்ரம் செய்;
ஹே சேத: – வாராய் நெஞ்சே!,
முரரிபும் – முராஸுரனைக் கொன்ற கண்ணபிரானை,
பஜ – பற்று;
பாணி த்வந்த்வ – இரண்டு கைகளே!,
ஸ்ரீதரம் – திருமாலை,
ஸமர்ச்சய – ஆராதியுங்கள்;
ச்ரோத்ர த்வய! – இரண்டு காதுகளே!,
அச்யுத கதா: – அடியாரைக் கைவிடாதவனான எம்பெருமானுடைய சரித்ரங்களை,
த்வம் ச்ருணு – கேளுங்கள்;
லோசந த்வய – இரண்டு கண்களே!,
க்ருஷ்ணம் – கண்ண பிரானை,
லோக்ய – ஸேவியுங்கள்;
அங்க்ரியுக்ம – இரண்டு கால்களே!,
ஹரே: – எம்பெருமானுடைய,
ஆலயம் – ஸந்நிதியைக் குறித்து,
கச்ச – போங்கள்;
ஹே க்ராண! – வாராய் மூக்கே!,
முகுந்த பாத துளஸீம் – ஸ்ரீக்ருஷ்ணனது திருவடிகளிற் சாத்திய திருத்துழாயை,
ஜிக்ர – அநுபவி;
ஹே மூர்த்தந்! – வாராய் தலையே!,
அதோக்ஷஜம் – எம்பெருமானை,
நம – வணங்கு.

—————–

ஹே லோகாঃ ஶ்ருணுத ப்ரஸூதி மரணவ்யா◌ேধஶ் சிகித்ஸாமிமாம்
யோগஜ்ஞாঃ ஸமுদாஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாদயঃ ।
அந்தர்ஜ்யோதி ரமேய மேகமமৃதம் கৃஷ்ணாখ்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷধம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் ॥ 17॥

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதி மரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞ வல்க்யாத³ய: ।
அந்தர் ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்
தத் பீதம் பரமௌஷத⁴ம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் ॥ 17॥

ஹே லோகா: – ஜநங்களே!,
யோகஜ்ஞா: – யோக முறையை அறிந்தவர்களான,
யாஜ்ஞவல்க்ய ஆதய: – யாஜ்ஞ வல்க்யர் முதலிய,
முநய – ரிஷிகள்,
யாம் – யாதொன்றை,
ப்ரஸூதி மரணவ்யாதே: – பிறப்பு இறப்பாகிற வ்யாதிக்கு,
சிகித்ஸாம் – பரிஹாரமாக,
ஸமுதாஹரந்தி – கூறுகின்றார்களோ,
இமாம் – இந்த சிகித்ஸையை,
ச்ருணுத – கேளுங்கள்;
அந்தர் ஜ்யோதி: – உள்ளே தேஜோ ராசியாயும்,
அமேயம் – அளவிடக் கூடாததாயும்,
க்ருஷ்ண ஆக்க்யம் – ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயரை யுடையதாயுமுள்ள,
அம்ருதம் ஏகம் – அம்ருதமொன்றே,
ஆரியதாம் – (உங்களால்) பாநம் பண்ணப் படட்டும்;
தத் பரம ஒளஷதம் – அந்தச் சிறந்த மருந்தானது,
பீதம் ஸத் – பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு,
ஆத்யந்திகம் – சாச்வதமான,
நிர்வாணம் – ஸெளக்கியத்தை,
விதநுதே – உண்டு பண்ணுகிறது.

—————–

ஹே மர்த்யாঃ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபதঃ
ஸம்ஸாரார்ணவமாபদூர்மிবஹுளம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்থிதாঃ ।
நாநாஜ்ஞாநமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயধ்வம் முஹுঃ ॥ 18॥

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மி ப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நாநா அஜ்ஞாநம்  அபாஸ்ய  சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸ ப்ரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥ 18॥

ஆபத் ஊர்மி பஹுளம் – ஆபத்துக்களாகிற அலைகளால் மிகுந்த,
ஸம்ஸார அர்ணவம் – ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே,
ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்திதா: – ஆழ அழுந்திக் கிடக்கிற,
ஹே மர்த்யா: – வாரீர் மனிதர்களே!,
வ: பரமம் ஹிதம் – உங்களுக்கு மேலான ஹிதத்தை,
ஸம்க்ஷேபத: – சுருக்கமாக,
வக்ஷ்யாமி – (இதோ) சொல்லப்போகிறேன்;
ச்ருணுத – கேளுங்கள்; (என்னவென்றால்),
நாநா அஜ்ஞாநம் – பலவிதமான அஜ்ஞானங்களை,
அபாஸ்ய – விலக்கி;
ஸ ப்ரணவம் – ஓங்காரத்தோடு கூடிய,
“நமோ நாராயணாய” இதி அமும்மந்த்ரம் – ‘நமோ நாராயணாய’ என்கிற இத் திருமந்த்ரத்தை,
சேதஸி – மனதில்,
முஹு: – அடிக்கடி,
ப்ரணாம ஸஹிதம் (யதா ததா) – வணக்கத்தோடு கூடிக் கொண்டிருக்கும்படி,
ப்ராவர்த்தயத்வம் – அநுஸந்தியுங்கள்.

————-

பৃথ்வீ ரேணுரணுঃ பயாம்ஸி கணிகாঃ ফல்গுஸ்ফுலிங்◌ேগা லগুঃ
தேஜோ நிঃஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்ধ்ரம் ஸுஸூக்ஷ்மம் நভঃ ।
க்ஷுদ்ரா ருদ்ரபிதாமஹப்ரভৃதயঃ கீடாঃ ஸமஸ்தாঃ ஸுராঃ
দৃஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே ভூமாவধூதாவধிঃ ॥ 19॥

ப்ருʼத்²வீ  ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ঽநல:
தேஜோ நி:ஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।
க்ஷுத்³ரா ருத்³ர பிதாமஹ ப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தாஸ் ஸுரா:
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ॥ 19॥

யத்ர – யாதொரு மஹிமையானது,
த்ருஷ்டே ஸதி – காணப்பட்டவளவில்,
ப்ருத்வீ – பூமியானது,
அணு: -ஸ்வல்பமான,
ரேணு: – துகளாகவும்,
பயாம்ஸி – ஜலதத்வமானது,
பல்கு: கணிகா – சிறு திவலையாகவும்,
தேஜ: – தேஜஸ்த்தவமானது,
லகு: – அதிக்ஷூத்ரமான,
ஸ்புலிங்க: – நெருப்புப் பொறியாகவும்,
மருத் – வாயு தத்வமானது,
தநுதரம் – மிகவும் அற்பமான,
நிஶ்வஸநம் – மூச்சுக் காற்றாகவும்,
நப: – ஆகாச தத்துவமானது,
ஸு ஸூக்ஷ்மம் – மிகவும் ஸூக்ஷ்மமான,
ரந்த்ரம் – த்வாரகமாகவும்,
ருத்ர பீதாமஹ ப்ரப்ருதய: – சிவன், பிரமன் முதலிய, ஸமஸ்தா:
ஸுரா: – தேவர்களெல்லோரும்,
க்ஷுத்ரா: கீடா: – அற்பமான புழுக்களாகவும்
(ஆலக்ஷ்யந்தே) – தோன்றுகிறார்களோ,
ஸ: – அப்படிப்பட்டதாய்,
அவதூத அவதி: – எல்லையில்லாததாய்,
தாவக: – உம்முடையதான,
பூமா – மஹிமையானது,
விஜயதே – மேன்மையுற்று விளங்குகின்றது.

————-

বদ்◌ேধநாஞ்ஜலிநா நதேந ஶிரஸா গாத்ரைঃ ஸரோமோদ்গமைঃ
கண்◌ேঠந ஸ்வரগদ்গ◌ேদந நயநேநோদ்গீர்ணবாஷ்பாம்বுநா ।
நித்யம் த்வச்சரணாரவிந்দ யுগளধ்யாநாமৃதாஸ்வாদிநாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பদ்யதாம் ஜீவிதம் ॥ 20॥

ப³த்³தே⁴நாஞ்ஜலிநா நதேந ஶிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:
கண்டே²ந ஸ்வர க³த்³க³தே³ந நயநே நோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³நா ।
நித்யம் த்வச் சரணாரவிந்த³யுக³ள த்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 20॥

ஹே ஸரஸீருஹாக்ஷ! – தாமரை போன்ற திருக் கண்களையுடைய பெருமானே!,
பத்தோ – சேர்க்கப்பட்ட,
அஞ்சலிநா – அஞ்சலி முத்ரையாலும்,
நதேந – வணங்கிய,
சிரஸா – தலையினாலும்,
ஸரோம உத்கமை: – மயிற்கூச்செறிதலோடு கூடிய,
காத்ரை: – அவயவங்களினாலும்,
ஸ்வரகத்கதேந – தழுதழுத்த ஸ்வரத்தோடு கூடிய,
கண்டேந – கண்டத்தினாலும்,
உத்கீர்ண பாஷ்ப அம்புநா – சொரிகிற கண்ணீரை யுடைய,
நயநேந – நேத்திரத்தினாலும்,
நித்யம் – எப்போதும்,
த்வத் சரண அரவிந்த யுகள த்யாந அம்ருத ஆஸ்வாதிநாம் – தேவரீருடைய இரண்டு
திருவடித் தாமரைகளைச் சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற,
அஸ்மாகம் – அடியோங்களுக்கு,
ஜீவிதம் – ஜீவநமானது,
ஸததம் – எக்காலத்திலும்,
ஸம்பத்யதாம் – குறையற்றிருக்க வேண்டும்.

—————–

ஹே ◌ேগাபாலக! ஹே கৃபாஜலநி◌ேধ! ஹே ஸிந்ধுகந்யாபதே!
ஹே கம்ஸாந்தக! ஹே গஜேந்দ்ரகருணாபாரீண! ஹே மாধவ! ।
ஹே ராமாநுஜ! ஹே ஜগத்த்ரயগுரோ! ஹே புண்ডரீகாக்ஷ! மாம்
ஹே ◌ேগাபீஜநநாথ! பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபா ஜலநிதே⁴ ஹே ஸிந்து⁴கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ர கருணாபாரீண ஹே மாத⁴வ ।
ஹே ராமாநுஜ ஹே ஜக³த் த்ரய கு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீ ஜந நாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21॥

ஹே கோபாலக! – ஆநிரை காத்தவனே!,
ஹேக்ருபாஜலநிதே! – கருணைக்கடலே!,
ஹே ஸிந்து கந்யாபதே! – பாற்கடல் மகளான பிராட்டியின் கணவனே!,
ஹே கம்ஸ அந்தக! – கம்ஸனை யொழித்தவனே!,
ஹே கஜேந்த்ர கருணாபாரீண! – கஜேந்திராழ்வானுக்கு அருள் புரிய வல்லவனே!,
ஹே மாதவ! – மாதவனே!,
ஹே ராமாநுஜ – பலராமானுக்குப் பின் பிறந்தவனே!,
ஹே ஜகத் த்ரய குரோ! – மூவுலகங்கட்கும் தலைவனே!,
ஹே புண்டரீகாக்ஷ! – தாமரைக் கண்ணனே!,
ஹே கோபீ ஜந நாத! – இடைச்சியர்க்கு இறைவனே!,
மாம் – அடியேனை,
பாலய – ரக்ஷித்தருள வேணும்;
த்வாம் விநா – உன்னைத் தவிர,
பரம் – வேறொரு புகலை,
ந ஜாநாமி – அறிகிறேனில்லை.

—————-

ভக்தாபாயভுஜங்গগாருডமணிஸ் த்ரைலோக்யரக்ஷாமணிர்
◌ேগাபீலோசந சாதகாம்বுদமணிঃ ஸௌந்দர்யமுদ்ராமணிঃ ।
யঃ காந்தாமணிருக்மிணீ ঘநகுசদ்வந்দ்வைகভூஷாமணிঃ
ஶ்ரேயோ ◌ேদவஶிখாமணிர் দிஶது நோ ◌ேগাபால சூডாமணிঃ ॥ 22॥

ப⁴க்தாபாய பு⁴ஜங்க³கா³ருட³மணி: த்ரைலோக்ய  ரக்ஷாமணி:
கோ³பீ லோசந சாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்ய முத்³ராமணி:
ய: காந்தாமணிருக்மிணீ க⁴நகுச த்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ஶ்ரேயோ தே³வ ஶிகா²மணிர் தி³ஶது நோ கோ³பால சூடா³மணி: ॥ 22॥

பக்த அபாய புஜங்க காரூடமணி: – அடியார்களின் ஆபத்துக்களாகிற ஸர்ப்பத்துக்கு கருடமணியாயும்,
த்ரைலோக்ய ரக்ஷாமணி: மூவுலகங்கட்கும் ரக்ஷணார்த்தமான மணியாயும்,
கோபீ லோசநசாதக அம்புதமணி: – ஆய்ச்சிகளின் கண்களாகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்நமாயும்,
ஸெளந்தர்ய முத்ராமணி: – ஸெளந்தர்யத்துக்கு முத்ராமணியாயும்,
காந்தாமணி ருக்மணீ கநகுச த்வந்த்வ ஏக பூஷாமணி: – மாதர்களுக்குள் சிறந்தவளான ருக்மணிப் பிராட்டியின்
நெருங்கிய இரண்டு ஸ்தநங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்,
தேவ சிகாமணி – தேவர்களுக்குச் சிரோபூஷணமான மணியாயும்,
கோபால சூடாமணி: – இடையர்களுக்குத் தலைவராயுமிருப்பவர்,
ய: – யாவரொருவரோ,
(ஸ:) – அந்த ஸ்ரீக்ருஷ்ணன்,
ந: – நமக்கு,
ச்ரேய: – நன்மையை,
திசது – அருள வேணும்.

————–

ஶத்ருச்◌ேছ◌ைদகமந்த்ரம் ஸகலமுபநிஷদ்வாக்ய ஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசித தமஸஸ்ஸங்ঘ நிர்யாணமந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸநভுஜগ ஸந்দஷ்ட ஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீகৃஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்மஸாফல்யமந்த்ரம் ॥ 23॥

ஶத்ருச்சே²தை³க மந்த்ரம் ஸகலமுபநிஷத்³வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார மந்த்ரம் ஸமுசித தமஸ் ஸங்க⁴நிர்யாண மந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைக மந்த்ரம் வ்யஸந பு⁴ஜக³ ஸந்த³ஷ்ட ஸந் த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீக்ருʼஷ்ண மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்ம ஸாப²ல்ய மந்த்ரம் ॥ 23॥

ஶத்ருச் சேத ஏக மந்த்ரம் – சத்ருக்களின் நாசத்திற்கு மந்த்ரமாய்,
உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம் – வைதிக வாக்கியங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப்பட்ட மந்த்ரமாய்,
ஸர்வ ஐச்வர்ய ஏக மந்த்ரம் – துன்பங்களாகிற ஸர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் மந்த்ரமாய்,
ஸம்ஸார உத்தார மந்த்ரம் – ஸம்ஸாரத்தில் நின்றும் கரையேற்ற வல்ல மந்த்ரமாய்,
ஸமுபசிததமஸ் ஸங்க நிர்யாண மந்த்ரம் – மிகவும் வளர்ந்திருக்கிற அஜ்ஞாநவிருளைப் போக்க வல்ல மந்த்ரமாய்,
ஜந்ம ஸாபல்ய மந்த்ரம் – ஜந்மத்திற்குப் பயன்தரவல்ல மந்த்ரமாயிருக்கிற,
ஸகலம் ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரம் – ஸமஸ்தமான ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரத்தையும்,
ஹே ஜிஹ்வே – வாராய் நாக்கே,
ஸததம் – எப்போதும்,
ஜப ஜப – இடைவிடாமல் ஜபம் பண்ணு.

—————

வ்யாமோஹப்ரஶமௌஷধம் முநிமநோவৃத்திப்ரவৃத்த்யௌஷধம்
◌ைদத்யேந்দ்ரார்திகரௌஷধம் த்ரிஜগதாம் ஸஞ்ஜீவநைகௌஷধம் ।
ভக்தாத்யந்தஹிதௌஷধம் ভவভயப்ரধ்வம்ஸநைகௌஷধம்
ஶ்ரேயঃப்ராப்திகரௌஷধம் பிব மநঃ ஶ்ரீகৃஷ்ணদிவ்யௌஷধம் ॥ 24॥

வ்யாமோஹ ப்ரஶமௌஷத⁴ம் முநி மநோ வ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிஜக³தாம் ஸஞ்ஜீவநைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்த ஹிதௌஷத⁴ம் ப⁴வ ப⁴ய ப்ரத்⁴வம்ஸநைகௌஷத⁴ம்
ஶ்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மந: ஶ்ரீக்ருʼஷ்ண தி³வ்யௌஷத⁴ம் ॥ 24॥

ஹே மந: – வாராய் மனதே!,
வ்யாமோஹ ப்ரசம ஒளஷதம் – (விஷயாந்தரங்களிலுள்ள) மோஹத்தைப் போக்க வல்ல மருந்தாயும்,
முநி மநோ வ்ருத்தி ப்ரவ்ருத்தி ஒளஷதம் – முனிவர்களின் மனதைத் தன்னிடத்திற் செலுத்திக் கொள்ளவல்ல மருந்தாயும்,
தைத்யேந்த்ர ஆர்த்தி கர ஒளஷதம் – அஸுரர்களில் தலைவரான காலநேமி முதலியவர்களுக்குத் தீராத துன்பத்தைத் தரும் மருந்தாயும்,
த்ரிஜகதாம் – மூவுலகத்தவர்க்கும்,
ஸஞ்சீவந ஏந ஒளஷதம் – உஜ்ஜீவனத்துக்குரிய முக்கியமான மருந்தாயும்,
பக்த அத்யந்தஹித ஒளஷதம் – அடியவர்கட்கு மிகவும் ஹிதத்தைச் செய்கிற ஒளஷதமாயும்,
பவ பயப்ரத் வம்ஸந ஏக ஒளஷதம் – ஸம்ஸார பயத்தைப் போக்குவதில் முக்கியமான மருந்தாயும்,
ச்ரேய:ப்ராப்திகா ஒளஷதம் – கண்ணபிரானாகிற அருமையான மருந்தை,
பிப – உட்கொள்ளாய்.

————–

ஆம்நாயாভ்யஸநாந்யரண்யருদிதம் வேদவ்ரதாந் யந்வஹம்
மேদஶ்◌ேছদফலாநி – பூர்தவிধயஸ் ஸர்வேஹுதம் ভஸ்மநி ।
தீர்থாநாமவগாஹநாநி ச গஜஸ்நாநம் விநா யத்பদ –
দ்வந்দ்வாம்◌ேভাருஹ ஸம்ஸ்மৃதிர் விஜயதே ◌ேদவஸ்ஸ நாராயணঃ ॥ 25॥

ஆம்நாயாப்⁴யஸநாந்யரண்யருதி³தம் வேத³வ்ரதாந் யந்வஹம்
மேத³ஶ் சே²த³ப²லாநி பூர்தவித⁴யஸ் ஸர்வே ஹுதம் ப⁴ஸ்மநி ।
தீர்தா²நாமவகா³ஹநாநி ச க³ஜ ஸ்நாநம் விநா யத் பத³ –
த்³வந்த்³வாம்போ⁴ருஹ ஸம் ஸ்ம்ருʼதிர் விஜயதே தே³வஸ் ஸ நாராயண: ॥ 25॥

யத் பத த்வந்த்வ அம்போருஹ ஸம்ஸ்ருதீ: விநா – யாவனொரு ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித் தாமரையிணைகளின்
சிந்தனையில்லாமற் போனால்,
ஆம்நாய அப்யஸநாநி – வேதாத்யயநங்கள்,
அரண்ய ருதிதம் – காட்டில் அழுததுபோல் வீணோ;
அந்வஹம் – நாள்தோறும் (செய்கிற),
வேத வ்ரதாநி – வேதத்திற் சொன்ன (உபவாஸம் முதலிய) வ்ரதங்கள்,
மேதச்சேத பலாநி – மாம்ஸ சோஷணத்தையே பலனாக உடையனவோ,
ஸர்வே பூர்த்த வீதய: – குளம் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம காரியங்கள் யாவும்,
பஸ்மநி ஹுதம் – சாம்பலில் செய்த ஹோமம் போல் வ்யர்த்தமோ,
தீர்த்தாநாம் – கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில்,
அவகாஹநாநி ச – நீராடுவதும்,
கஜ ஸ்நாநம் – யானை முழுகுவதுபோல் வ்யர்த்தமோ,
ஸ: தேவ: நாராயண: – அப்படிப்பட்ட தேவனான நாராயணன்,
விஜயதே – அனைவரினும் மேம்பட்டு விளங்குகின்றார்.

————–

ஶ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாখ்யம்
கே ந ப்ராபுர்வாஞ்ছிதம் பாபிநோঽபி ।
ஹா நঃ பூர்வம் வாக்ப்ரவৃத்தா ந தஸ்மிந் –
தேந ப்ராப்தம் গர்ভவாஸாদிদுঃখம் ॥ 26॥

ஶ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கே ந ப்ராபுர் வாஞ்சி²தம் பாபிநோঽபி ।
ஹா ந: பூர்வம் வாக் ப்ரவ்ருʼத்தா ந தஸ்மிந் –
தேந ப்ராப்தம் க³ர்ப்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

நாராயண ஆக்க்யம் – நாராயணென்கிற,
ஸ்ரீமந் நாம – திருமாலின் திருநாமத்தை,
ப்ரோச்ய – சொல்லி,
கே பாபிந: அபி – எந்த பாபிகளானவர்களுந்தான்,
வாஞ்சிதம் – இஷ்டத்தை,
ந ப்ராபு: – அடையவில்லை;
ந: வாக் – நம்முடைய வாக்கானது,
பூர்வம் – முன்னே,
தஸ்மிந் ந ப்ரவ்ருத்தா – அந்த நாராயண நாமோச்சாரணத்தில் சொல்ல வில்லை;
தேந – அதனால்,
கர்ப்ப வாஸ ஆதி து:க்கம் – கர்ப்ப வாஸம் முதலான துக்கமானது,
ஹா! ப்ராப்தம் – அந்தோ! நேர்ந்தது.

—————

மஜ்ஜந்மநঃ ফலமிদம் மধுகைடভாரே
மத்ப்ரார்থநீய மদநுগ்ரஹ ஏஷ ஏவ ।
த்வদ்ভৃத்யভৃத்யபரிசாரக ভৃத்யভৃத்ய-
ভৃத்யஸ்ய ভৃத்ய இதி மாம்ஸ்மர லோகநாথ ॥ 27॥

மஜ் ஜந்மந: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே!
மத் ப்ரார்த²நீய மத³நுக்³ரஹ ஏஷ ஏவ ।
த்வத்³ப்⁴ருʼத்ய ப்⁴ருʼத்ய பரிசாரக ப்⁴ருʼத்ய ப்⁴ருʼத்ய-
ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோக நாத² ॥ 27॥

ஹே மதுகைடப அரே! – மதுகைடபர்களை அழித்தவனே!,
மத் ஜந்மந: – அடியேனுடைய ஜன்மத்திற்கு,
இதம் பலம் – இதுதான் பலன்;
மத் ப்ரார்த்தநீய மதநுக்ரஹ: ஏஷ: ஏவ – என்னால் ப்ரார்த்திக்கத் தக்கதாய் என் விஷயத்தில்
நீ செய்ய வேண்டியதான அநுக்ரஹம் இதுவேதான்; (எது? என்னில்;)
ஹே லோக நாத! – வாராய் லோக நாதனே!,
மாம் – அடியேனை,
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய: இதி – உனக்குச் சரமாவதி தாஸனாக, திருவுள்ளம் பற்ற வேணும்.

—————-

நா◌ேথ நঃபுருஷோத்தமே த்ரிஜগதாமேகாধிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பদஸ்ய দாதரி ஸுரே நாராயணே திஷ்ঠதி ।
யம் கஞ்சித்புருஷாধமம் கதிபயগ்ராமேஶ மல்பார்থদம்
ஸேவாயை மৃগயாமஹே நரமஹோ! மூகா வராகா வயம் ॥ 28॥

நாதே² ந: புருஷோத்தமே த்ரி ஜக³தா மேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித் புருஷாத⁴மம் கதி பய க்³ராமேஶ மல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 28॥

புருஷ உத்தமே – புருஷர்களில் தலைவனாயும்,
த்ரி ஜகதாம் ஏக அதிபே – மூன்று லோகங்களுக்கும் ஒரே கடவுளாயும்,
சேதஸா ஸேவ்யே – நெஞ்சினால் நினைக்கத் தக்கவனாயும்,
ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி – தன் இருப்பிடமான பரம பதத்தை அளிப்பவனாயுமுள்ள,
நாராயணே ஸுரே – ஸ்ரீமந் நாராயணனான தேவன்,
ந: நாதே திஷ்டதி ஸதி – நமக்கு நாதனாயிருக்குமளவில் (அவனைப் பற்றாமல்),
கதிபய க்ராம ஈசம் – சில க்ராமங்களுக்குக் கடவனாயும்,
அல்ப அர்த்ததம் – ஸ்வல்ப தநத்தைக் கொடுப்பவனாயும்,
புருஷ அதமம் – புருஷர்களில் கடைகெட்டவனாயுமிருக்கிற,
யம்கஞ்சித் நரம் – யாரோவொரு மனிதனை,
ஸேவாயைம்ருகயா மஹே – ஸேவிப்பதற்குத் தேடுகிறோம்;
அஹோ! – ஆச்சரியம்!,
வயம் மூகா: வராகா: – இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகமற்றவர்களாயுமிரா நின்றோம்.

————–

மদந பரிஹர ஸ்থிதிம் மদீயே
மநஸி முகுந்দபদாரவிந்দধாம்நி ।
ஹரநயந கৃஶாநுநா கৃஶோঽஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரேঃ ॥ 29॥

மத³ந பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மநஸி முகுந்த³பதா³ர விந்த³தா⁴ம்நி ।
ஹர நயந க்ருʼஶாநுநா க்ருʼஶோঽஸி
ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே: ॥ 29॥

ஹே மதந! – வாராய் மன்மதனே!,
முகுந்த பதாரவிந்த தாம்நி – ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித்தாமரைகட்கு இருப்பிடமான,
மதீயே மநஸி – எனது நெஞ்சில்,
ஸ்திதிம் பரிஹர – இருப்பை விட்டிடு;
ஹர நயந க்ருசாதுநா – சிவனின் நெற்றிக் கண்ணில் நின்றுமுண்டான நெருப்பினால்,
க்ருச: அஸி – (முன்னமே) சரீரமற்றவனாக இருக்கிறாய்;
முராரே! – கண்ணபிரானுடைய,
சக்ர பராக்ரமம் – திருவாழி யாழ்வானது பராக்கிரமத்தை,
ந ஸ்மரஸி? – நீ நினைக்கவில்லையோ?

————

தத்த்வம் ব்ருவாணாநி பரம் பரஸ்மாத்
மধு க்ஷரந்தீவ ஸதாம் ফலாநி ।
ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே!
நாமாநி நாராயண◌ேগাசராணி ॥ 30॥

தத்த்வம் ப்³ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் ப²லாநி ।
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலி ரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ³சராணி ॥ 30॥

ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
பரஸ்மாத் பரம் – மேலானதிற் காட்டிலும் மேலானதாகிய [மிகவுஞ் சிறந்த],
தத்வம் – தத்துவத்தை,
ப்ருவாணாநி – சொல்லுகின்றனவாய்,
ஸதாம் மது க்ஷரந்தி – ஸத்துக்களுக்கு மதுவைப் பெருக்குகிற,
பலாநி இவ – பழங்களைப் போன்றனவாய்,
நாராயண கோசராணி – ஸ்ரீமந் நாராயணன் விஷயமான,
நாமாநி – திருநாமங்களை,
ப்ராவர்த்தய – அடிக்கடி அநுஸந்தானம் செய்; [ஜபஞ்செய்.]
ப்ராஞ்ஜலி: அஸ்மி – (நீ அப்படி செய்வதற்காக உனக்குக்) கைகூப்பி நிற்கின்றேன்.

————-

இদம் ஶரீரம் பரிணாமபேஶலம்
பதத்யவஶ்யம் ஶ்லথஸந்ধி ஜர்ஜரம் ।
கிமௌஷ◌ைধঃ க்லிஶ்யஸி மூঢ দுர்மதே!
நிராமயம் கৃஷ்ணரஸாயநம் பிব ॥ 31॥

இத³ம் ஶரீரம் பரிணாம பேஶலம்
பதத் யவஶ்யம் ஶ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் ।
கிமௌஷதை:⁴ க்லிஶ்யஸி மூட⁴ து³ர்மதே
நிராமயம் க்ருʼஷ்ண ரஸாயநம் பிப³ ॥ 31॥

இதம் சரீரம் – இந்த சரீரமானது,
பரிணாம பேஷலம் – நாளடைவில் துவண்டும்,
ச்லத ஸந்தி ஜர்ஜரம் – தளர்ந்த தாதுக்களை யுடையதாய்க் கொண்டு சிதலமாயும்,
அவச்யம் பததி – அவச்யம் நசிக்கப் போகிறது;
ஹே மூட! துர்மதே – வாராய் அஜ்ஞாநியே! கெட்ட புத்தியை யுடையவனே!,
ஒளஷதை: – மருந்துகளினால்,
கிம் க்லிஶ்யஸி – ஏன் வருந்துகிறாய்?,
நிராமயம் – (ஸம்ஸாரமாகிற) வியாதியைப் போக்குமதான,
க்ருஷ்ண ரஸாயநம் – ஸ்ரீக்ருஷ்ணனாகிற ரஸாயநத்தை,
பிப – பாநம் பண்ணு.

————

দாரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்சঃ
ஸ்தோதா வேদஸ்தவ ஸுரগணோ ভৃத்யவர்গঃ ப்ரஸாদঃ ।
முக்திர்மாயா ஜগদவிகலம் தாவகீ ◌ேদவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ்தவய்யதோঽந்யந்ந ஜாநே ॥ 32॥

தா³ரா வாராகர வர ஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுர க³ணோ ப்⁴ருʼத்ய வர்க:³ ப்ரஸாத:³ ।
முக்திர் மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே
மாதா மித்ரம் வலரிபு ஸுதஸ் த்வய்யதோঽந்யந்ந ஜாநே ॥ 32॥

தே தாரா: – தேவரீருக்கு மனைவி,
வாராகர வர ஸுதா – திருப்பாற்கடலின் மகளான பிராட்டி,
தநுஜ: விரிஞ்ச: – மகனோ சதுர்முகன்;
ஸ்தோதா வேத: துதி பாடகனோ வேதம்;
ப்ருத்ய வர்க்க: ஸுரகண: – வேலைக்காரர்களோ தேவதைகள்;
முக்தி: தவ ப்ரஸாத: – மோக்ஷம் தேவரீருடைய அநுக்ரஹம்;
அவிகலம் ஜகத் – ஸகல லோகமும்,
தாவகீ மாயா – தேவரீருடைய ப்ரக்ருதி;
தே மாதா தேவகீ – தேவரீருக்குத் தாய் தேவகிப் பிராட்டி;
மித்ரம் வலரிபு ஸுத: – தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்;
அத: அந்யத் – அதைக் காட்டிலும் வேறானவற்றை,
த்வயி ந ஜாநே – உன்னிடத்தில் நான் அறிகிறேனில்லை.

—————-

கৃஷ்ணோ ரக்ஷது நோ ஜগத்த்ரயগுருঃ கৃஷ்ணம் நமஸ்யாம்யஹம்
கৃஷ்ணேநாமரஶத்ரவோ விநிஹதாঃ கৃஷ்ணாய தஸ்மை நமঃ ।
கৃஷ்ணா◌ேদவ ஸமுத்থிதம் ஜগদிদம் கৃஷ்ணஸ்ய দாஸோঽஸ்ம்யஹம்
கৃஷ்ணே திஷ்ঠதி விஶ்வமேதদখிலம் ஹே! கৃஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥ 33॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த் த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருʼஷ்ணேநாமர ஶத்ரவோ விநிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।
க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோঽஸ்ம்யஹம்
க்ருʼஷ்ணே திஷ்ட²தி விஶ்வ மேதத³கி²லம் ஹே க்ருʼஷ்ண! ஸம் ரக்ஷ மாம் ॥ 33॥

ஜகத்த்ரய குரு: – மூன்று லோகங்களுக்கும் தலைவனான்,
க்ருஷ்ண: ந: ரக்ஷது -க்ருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுக;
அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி – நான் க்ருஷ்ணனை வணங்குகிறேன்;
யேந க்ருஷ்ணேந – யாவனொரு க்ருஷ்ணனால்,
அமரசத்ரவ: விநிஹ தா: – அஸுரர்கள் கொல்லப்பட்டார்களோ,
தஸ்மை க்ருஷ்ணாய நம: – அந்த க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம்;
இதம் ஜகத் – இவ்வுலகமானது,
க்ருஷ்ணாத் ஏவ – கண்ணனிடமிருந்தே,
ஸமுத்திதம் – உண்டாயிற்று; (ஆகையால்)
அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ: அஸ்மி – நான் கண்ணனுக்கு அடியனாயிருக்கிறேன்;
ஏதத் ஸர்வம் அகிலம் – இந்த ஸமஸ்த பிரபஞ்சமும்,
க்ருஷ்ணே திஷ்டதி – கண்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது.
ஹேக்ருஷ்ண! – ஸ்ரீக்ருஷ்ணனே!,
மாம் ஸம்ரக்ஷ – அடியேனைக் காத்தருள வேணும்.

————

ஸத்த்வம் ப்ரஸீদ ভগவந் குரு மய்யநா◌ேথ
விஷ்ணோ! கৃபாம் பரமகாருணிகঃ খலு த்வம் ।
ஸம்ஸாரஸாগர நிமগ்நமநந்த দீநம்
உদ்ধர்து மர்ஹஸி ஹரே! புருஷோத்தமோঽஸி ॥ 34॥

தத் த்வம் ப்ரஸீத³ ப⁴க³வந் குரு மய்ய நாதே²
விஷ்ணோ க்ருʼபாம் பரம காருணிக: க²லு த்வம் ।
ஸம்ஸார ஸாக³ர நிமக்³ந மநந்த தீ³நம்
உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோঽஸி ॥ 34॥

ஹே பகவந்! – ஷாட்குண்ய பரிபூர்ணனே!,
விஷ்ணோ! – எங்கும் வ்யாபித்திருப்பவனே!,
ஸ:த்வம் – வேதப்ரஸித்தனான நீ,
அநாதே மயி – வேறு புகலற்ற என்மீது,
க்ருபாம் குரு – அருள்புரியவேணும்;
ப்ரஸீத – குளிர்ந்த முகமாயிருக்கவேணும்;
ஹே ஹரே! – அடியார் துயரைத் தீர்ப்பவனே!,
அநந்த! – இன்ன காலத்திலிருப்பவன், இன்ன தேசத்திலிருப் பவன், இன்ன வஸ்துவைப்போலிருப்பவன்
என்று துணிந்து சொல்லமுடியாதபடி மூன்றுவித பரிச்சேதங்களுமில்லாதவனே!,
த்வம் பரம காருணிக: கில – நீ பேரருளாளனன்றோ?,
ஸம்ஸார ஸாகர நிமக்நம் – ஸம்ஸாரக் கடலில் மூழ்கினவனாய்,
தீநம் – அலைந்து கொண்டிருக்கிற அடியேனை,
உத்தர்த்தும் அர்ஹஸி – கரையேற்றக் கடவை;
புருஷோத்தம: அஸி – புருஷர்களிற் சிறந்தவனாயிருக்கிறாய்.

—————-

நமாமி நாராயணபாদபங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸদா ।
வদாமி நாராயணநாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35॥

நமாமி நாராயண பாத³ பங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸதா³ ।
வதா³மி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35॥

நாராயண பாத பங்கஜம் – ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடித் தாமரையை,
நமாமி – ஸேவிக்கிறேன்;
நாராயண பூஜநம் – எம்பெருமானுடைய திருவாராதநத்தை,
ஸதா கரோமி – எப்போதும் பண்ணுகிறேன்;
நிர்மலம் – குற்றமற்ற,
நாராயண நாம – ஸ்ரீமந்நாராயண நாமத்தை,
வதாமி – உச்சரிக்கிறேன்;
அவ்யயம் நாராயண தத்வம் – அழிவற்ற பர தத்வமான நாராயணனை,
ஸ்மராமி – சிந்திக்கிறேன்.

—————

ஶ்ரீநாথ! நாராயண! வாஸு◌ேদவ! ஶ்ரீகৃஷ்ண ভக்தப்ரிய! சக்ரபாணே! ।
ஶ்ரீபদ்மநாভாச்யுத! கைடভாரே! ஶ்ரீராம! பদ்மாக்ஷ! ஹரே! முராரே ॥ 36॥

ஶ்ரீநாத² நாராயண வாஸுதே³வ
ஶ்ரீக்ருʼஷ்ண ப⁴க்த ப்ரிய சக்ர பாணே ।
ஶ்ரீபத்³மநாபா⁴ச்யுத கைடபா⁴ரே
ஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 36॥

—————

அநந்த! வைகுண்ঠ! முகுந்দ! கৃஷ்ண! ◌ேগাவிந்দ! দாமோদர! மாধவேதி ।
வக்தும் ஸமர்◌ேথাঽபி ந வக்தி கஶ்சித் அஹோ! ஜநாநாம் வ்யஸநாভிமுখ்யம் ॥ 37॥

அநந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।
வக்தும் ஸமர்தோ²ঽபி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி⁴முக்²யம் ॥ 37॥

ஸ்ரீநாத! – ஹே லக்ஷ்மீபதியே!,
நாராயண – நாராயணனே!,
வாஸுதேவ – வாஸுதேவனே!,
ஸ்ரீக்ருஷ்ண – ஸ்ரீக்ருஷ்ணனே!,
பக்தப்ரிய – பக்தவத்ஸலனே!,
சக்ரபாணே – சக்கரக்கையனே!,
ஸ்ரீபத்மநாப – ஹே பத்மநாபனே!,
அச்யுத – அடியாரை ஒருகாலும் நழுவவிடாதவனே!,
கைடப அரே! – கைடபனென்னும் அசுரனைக் கொன்றவனே!,
ஸ்ரீராம – சக்ரவர்த்தி திருமகனே!,
பத்மாக்ஷ – புண்டரீகாக்ஷனே!,
ஹரே! – பாபங்களைப் போக்குமவனே!,
முராரே – முராசுரனைக் கொன்றவனே!,
அநந்த – முடிவில்லாதவனே!,
வைகுண்ட – வைகுண்டனே!,
முகுந்த – முகுந்தனே!,
க்ருஷ்ண – கண்ணபிரானே!,
கோவிந்த – கோவிந்தனே!,
தாமோதர – தாமோதரனே!,
மாதவ! இதி – மாதவனே என்றிப்படி (பகவந்நாமங்களை),
வக்தும் – சொல்லுவதற்கு,
ஸமர்த்த: அபி – ஸமர்த்தனாயினும்,
கச்சித் ந வக்தி – ஒருவனும் சொல்லுகிறதில்லை,
ஜநாநாம் – இவ்வுலகத்தவர்களுக்கு,
வ்யஸந ஆபிமுக்யம் – (விஷயாந்தரங்களில் மண்டித்) துன்பப்படுவதிலேயே நோக்கமாயிருக்குந் தன்மை,
அஹோ! – ஆச்சரியம்!

————

ধ்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹৃத்பদ்மமধ்யே ஸததம் வ்யவஸ்থிதம் ।
ஸமாஹிதாநாம் ஸததாভயப்ரদம்
தே யாந்தி ஸிদ்ধிம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38॥

த்⁴யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருʼத் பத்³ம மத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।
ஸமாஹிதாநாம் ஸததாப⁴ய ப்ரத³ம்
தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38॥

ஹ்ருத் பத்ம மத்யே – ஹ்ருதய கமலத்தின் நடுவில்,
ஸததம்வ்யவஸ்திதம் – எப்போதும் வீற்றிருப்பவரும்,
ஸமாஹிதாநாம் – ஸமாதியிலே ஊன்றியிருக்கும் யோகிகளுக்கு,
ஸதத அபய ப்ரதம் – ஸர்வ காலத்திலும் ‘அஞ்சேல்’ என்று அபயப்ரதாநம் பண்ணுமவரும்,
அவ்யயம் – ஒருநாளும் அழியாதவரும்,
அநந்தம் – அபரிச்சிந்நராயு முள்ள,
விஷ்ணும் – ஸ்ரீமஹாவிஷ்ணுவை,
யே த்யாயந்தி – எவர் த்யானம் செய்கிறார்களோ,
தே – அவர்கள்,
பரமாம் வைஷ்ணவீம் ஸித்திம் – சிறந்த வைஷ்ணவ ஸித்தியை,
யாந்தி – அடைகின்றார்கள்.

———-

க்ஷீரஸாগரதரங்গஶீகரா –
ஸாரதாரகித சாருமூர்தயே ।
◌ேভাগி◌ேভা গஶயநீயஶாயிநே
மாধவாய மধுவிদ்விஷே நமঃ ॥ 39॥

க்ஷீர ஸாக³ர தரங்க³ஶீகர
ஆஸார தாரகித சாரு மூர்தயே ।
போ⁴கி³போ⁴க³ ஶயநீய ஶாயிநே
மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 39॥

க்ஷீரஸாகர தரங்க சீகர ஆஸார தாரகித சாரு மூர்த்தயே – திருப்பாற்கடலில் அலைகளின் சிறு திவலைகளின்
பெருக்கினால் நக்ஷத்திரம் படிந்தாற்போன்று அழகிய திருமேனியை யுடையராய்,
போகி போக சயநீய சாயிநே – திருவனந்தாழ்வானுடைய திருமேனியாகிற திருப்படுக்கையில் கண்வளருமவராய்,
மதுவித்விஷே – மதுவென்கிற அசுரனைக் கொன்றவரான,
மாதவாய – திருமாலுக்கு,
நம: – நமஸ்காரம்.

————

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதிধரௌ கவிலோகவீரௌ
மித்ரே দ்விஜந்மவரபদ்ம ஶராவভூதாம் ।
தேநாம்বுஜாக்ஷ சரணாம்বுஜ ஷட்ப◌ேদந
ராஜ்ஞா கৃதா கৃதிரியம் குலஶேখரேண ॥ 40॥

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதி த⁴ரௌ கவி லோகவீரௌ
மித்ரே த்³வி ஜந்ம வர பத்³ம ஶராவபூ⁴தாம் ।
தேநாம்பு³ஜாக்ஷ சரணாம்பு³ஜ ஷட் பதே³ந
ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலஶேக²ரேண ॥

யஸ்ய – யாவரொரு குலசேகரர்க்கு,
ஸ்ருதிதரெள – வேத வித்துக்களாயும்,
கவி லோக வீரெள – கவிகளுக்குள் சிறந்தவர்களயும்,
த்விஜந்மவர பத்மசரெள – ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாயுமுள்ள ‘பத்மன்’ ‘சரண்’ என்னும் இருவர்கள்,
ப்ரியெள மித்ரே அபூதாம் – ஆப்த மித்திரர்களாக இருந்தார்களோ,
அம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட் பதேந – தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு
வண்டு போல் அந்தரங்கரான,
தேந – அந்த,
குலசேகரேணராஜ்ஞா – குலசேகர மஹாராஜராலே,
இயம் க்ருதி: க்ருதா – இந்த ஸ்தோத்ர க்ரந்தம் செய்யப் பட்டது.

——–

॥ இதி ஶ்ரீகுலஶேখர விரசித முகுந்দமாலா ஸம்பூர்ணம் ॥

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் அருளிச் செய்த ஸ்ரீ ஸூதர்சன சதகம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஸ்தல சயனத்துறைவார் ஸ்வாமி தெளிவுரை —

January 10, 2022

ஸ்நானே, தானே, ஜபாதௌச
ச்ராத்தே சைவ விஷேத:
சிந்ததீய: சக்ரபாணி: ஸர்வா
கௌக விநாசந: ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத

என்று பிரம்மன் நாரதருக்கு, ஸ்ரீ சுதர்சனர் ஸ்நானம், தானம், தவம், ஜபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி,
எக்காலத்திலும் த்யானிக்கத் தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.

திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார் ..

சுதர்ஸன காயத்ரி
ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி தந்நோ சக்ர ப்ரஜோதயாத்.

சக்கரத்தாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள் உள்ளன.
அவை, சக்கரம் மழு ஈட்டி தண்டு அங்குசம் அக்னி கத்தி ஆகியவை வலப்புற கையிலும்
வேல் சங்கம் வில் பாசம் கலப்பை வஜ்ரம் கதை உலக்கை சூலம் ஆகியவை இடது கையிலும் ஏந்தியுள்ளார்

———-

ஸ்ரீ ஸூதர்சன உபாசகர் –
நூறு ஸ்லோகங்கள் -மந்த்ர ரூபம் –
ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் நோவு சாத்தி இருக்க
ஸ்ரீ கூரத்தாழ்வான் நியமித்து அருளிச் செய்த கிரந்தம்
பூர்ண ஸ்வஸ்தம் அடைந்து மீண்டும் கைங்கர்யம் செய்தாராம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனம் என்றும் சொல்வர் –

ஆழி எழ -திருவாய் -7-4-வென்றி தரும் பத்து மேவிக் கற்பாருக்கே

மார்கழி கேட்டை
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பெரிய நம்பி போல் இவரதும்
கீழ திருச்சித்ர வீதி திரு மாளிகை

——–

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்:
ஸ்ரீ ஸூதர்சன சதகம்,
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்,
ஸ்ரீ ஸூக்த பாஷ்யம்,
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யம்,
ஸ்ரீ நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்:
ஸ்ரீ சேமம் ஜீயர்,
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் ஜீயர்,
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்,
ஸ்ரீ நாராயண முனி,
ஸ்ரீ பெரிய ஜீயர்,
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “ஸ்ரீ எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில்  ஸ்ரீ ஆழ்வானிடமும் பின் ஸ்ரீ பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்ரீ ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்தையும் ஸ்ரீ நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ஸ்ரீ நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை ஸ்ரீ பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸ்ரீ ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம்,
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
ஸ்ரீ எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

முன்பு ஸ்ரீ நம்பெருமாள் திருக்காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்தி ஸ்ரீ பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட,
ஸ்ரீ ஜீயர் ஸூதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் ஸ்ரீ கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்
ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் –

———————–

ஸ்ரீ ரெங்கேச விஜ்ஞப்தி கராம யஸ்ய சகார சக்ரேஸ நுதிம் நிவ்ருத்தியே
ஸமாஸ்ரயேஹம் வர பூரணீம் யஸ் தம் கூர நாராயண நாமகம் முநிம்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரின் நோய் தீர்க்க -அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல
ஸ்ரீ திருவாழி ஆழ்வான் விஷயமாக ஸ்ரீ ஸூ தர்சன சதகத்தை அருளிச் செய்த
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமியை வணங்குவோம் –

இந்த திவ்ய கிரந்தம் க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யரான ஸ்ரீ ராமானுஜருடைய
திவ்ய ஆஜ்ஜையாலே நமக்கு கிடைத்த மஹா நிதியாகுமே –

—–

ஸுவ் தர்சன் யுஜ்ஜி ஹாநா திசி விசிதி திரஸ் க்ருத்ய சாவித்ர மர்ச்சிஸ்
பாஹ்யா பாஹ்ய அந்தகார ஷதஸ் ஜகதக தங்கார பூம்நா ஸ்வதாம் நா
தோர் கர்ஜு தூர கர்ஜத் விபு தரிபுஸ் வதூ கண்ட வைகல்ய கல்யா
ஜ்வாலா ஜாஜ்வல்யமாநா விதரது பவதாம் வீப்ஸயா பீப்ஸிதாநி —1–

அகவிருள் புறவிருள் எனப்படும் இரண்டாலும் தடுமாறும் உலகோருக்கு
அந்த இருட்டுக்களைத் தொலைத்து வாழ வைக்க வல்ல
தன்னொளியாலே ஸூர்யனின் ஒளியைக் கீழ்ப்படுத்தி எங்கும் ஒளி விட்டு வியாபித்து விளங்குவதும்
தம் புஜ பலத்தால் கொக்கரிக்கும் அசுரர்களின் பெண்களைக் கைம் பெண்களாக ஆக்குவதில் வல்லமை பெற்றதும்
எப்போதும் ஒப்புயர்வற்று ஜ்வலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ஸூதர்சன ஜ்வாலையானது
உங்களுடைய விருப்பங்களை எல்லாம் பரிபூர்ணமாக நிறைவேற்றட்டும் –

——–

தேஜஸ்ஸூ பிறவியைப் போக்கி அருளி அந்தமில் பேர் இன்பமே கொடுக்க வல்லது அன்றோ –

ப்ரத்யுத்யா தம் மயூகைர் நபஸி தின க்ருதஸ் ப்ராப்த சேவம் ப்ரபாவிர்
பூமவ் ஸுவ்மேர வீபிர் திவிவரி வஸிதம் தீப்திபிர் தேவதாம் நாம்
பூயஸ்யை பூதயே வஸ் ஸ்புரது ஸகல திக் ப்ராந்த்ர ஸாந்த்ர ஸ்பு லிங்கம்
சாக்ரம் ஜாக்ரத் ப்ரதாபம் த்ரி புவன விஜய வ்யக்ர முக்ரம் மஹஸ் தத் –-2-

பூ லோகத்தில் மேரு மலையில் ஒளிகளினால் ஸேவிக்கப் பெற்றதும்
ஆகாசத்தினில் ஸூர்ய கிரணங்களால் எதிர் கொண்டு உபசரிக்கப் பட்டதும்
ஸ்வர்க்க லோகத்தில் தேவர்களுடைய மாளிகைகளின் ப்ரகாசங்களால் ஸூஸ்ருஷை செய்யப் பெற்றதும்
மூ உலகங்களையும் வெல்லும் முயற்சி யுடையதும்
எப்போதும் ப்ரதாபத்தோடு இருந்து கொண்டு எதிரிகளுக்கு பயத்தை உண்டு பண்ணக் கூடியதும்
மிகவும் பிரசித்தமான ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானின் தேஜஸ்ஸூ உங்களுக்கு
அபரிமித ஐஸ்வர்யங்களைக் கொடுப்பதாக விளங்கட்டும் –

——————————–

கவலையை நீக்கி நிரந்தரமான மகிழ்ச்சியை அளிக்கும் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் கற்பக வ்ருக்ஷம் என்கிறார் –

பூர்ணே பூரைஸ் ஸூதாநாம் ஸூ மஹதி லஸதஸ் ஸோம பிம்பாலவாலே
பாஹா ஸாகா வருத்த ஷிதி ககன திவஸ் சக்ர ராஜ த்ருமஸ்ய
ஜ்யோதிஸ் சத்மா பிரவாள பிரகடித ஸூமநஸ் ஸம்பதுத்தம் ஸ லஷ்மீம்
புஷ்ணன் நாஸா முகேஷு ப்ரதிஸது பவதாம் ஸ ப்ரகர்ஷம் ப்ரஹர்ஷம் –3-

அம்ருத ப்ரவாஹங்களால் நிறைந்து பரிபூர்ணமாய் –
மிகப் பெருமை பொருந்திய சந்த்ர பிம்பமாகிற பாத்தியில் விளங்குகின்றதும்
திருக் கைகள் ஆகிற கிளைகளினால் பூமி ஆகாசம் ஸ்வர்க்கம் முதலிய இடங்களில் வியாபித்ததாகவும்
இருக்கும் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் ஆகிற கற்பக மரத்தின் புஷ்ப ஸம்ருத்தியையும்
தேவர்களின் செல்வத்தையும் விளங்குவதாகவும்
திசைகளில் எங்கும் பரவி அவற்றுக்கு ஸீரோ பூஷணமாகவும் இருந்து கொண்டு
அழகைத் தருவதாயும் இருந்துள்ள ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் ஜ்யோதிஸ்ஸூ ஆகிற தளிர்
உங்களுக்கு மேன்மை பொருந்திய சந்தோஷத்தை அளிக்கட்டும் –

———–

அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்க வல்லது என்கிறார் –

ஆராதாராத் ஸஹஸ்ராத் விசரதி விமத ஷேப தஷாத்ய தஷாத்
நாபேர் பாஸ்வத்ஸ நாபேர் நிஜ விபவ பரிச்சின்ன பூமேஸ் ச நேமே
ஆம் நாயை ரேக கண்டைர் ஸ்துத மஹிமமஹோ மாதவீ யஸ்ய ஹேதே
தத்வோ திஷ்வேதமாநம் சதஸ்ரு ஷு சதுரஸ் புஷ்யதாத் பூருஷார்த்தான் –4-

அரம் அக்ஷம் நாபி நேமி ஆகியவை ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் அவயவங்கள்
அவற்றில் இருந்து தோன்றிக் கிளர்ந்து எழும் ஜ்வாலையே ஸூ தர்சனுடைய ஜ்வாலையாகும்
அப்படிப்பட்ட ஸூ தர்சனுடைய தேஜஸ்ஸூ
உங்களுக்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் மிகுதியாக அள்ளிக் கொடுக் கட்டும் –

————-

ஸ்யாமம் தாம பர ஸ்ருத்யா க்வசன பகவதஸ் க்வாபி பப்ரு ப்ரக்ருத்யா
சுப்ரம் சேஷஸ்ய பாஸா க்வசன பணி ருசா க்வாபி தஸ்யைவ ரக்தம்
நீலம் ஸ்ரீ நேத்ர காந்த்யா க்வசிதபி மிது நஸ்யாதி மஸ்யேவ சித்ராம்
வ்யாதன்வா நம் விதானஸ்ரியம் உபசி நுதாத் சர்ம வச் சக்ர பாநம் –5-

பகவானின் திருமேனி நிறத்தின் பரவலால் சில இடங்களில் ஸ்யாம -பாசியின் நிறமாகவும் –
சில இடங்களில் மஞ்சள் நிறமாகவும்
திருவனந்த ஆழ்வானின் நிறத்தால் சில இடங்களில் வெள்ளை நிறமாகவும்
திருவனந்த ஆழ்வானின் திருமுடியில் இருக்கும் மாணிக்க ஒளியினால் சில இடங்களில் சிகப்பு நிறமாகவும்
கரு நெய்தல் போன்ற பிராட்டியின் கண் ஒளியினால் சில இடங்களில் நீல நிறமாகவும்
ஆக பல பல நிறங்கள் நிறைந்த ஸ்ரீ ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ
பெருமாளும் பிராட்டியுமான திவ்ய தம்பதிகளுக்கு அழகிய விதானம் -மேற்கட்டி போல் விளங்குகின்றது
அப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்களுக்கு ஸூ கத்தைத் தந்திடுக –

————-

ஸம் ஸந்த்யுந்மேஷ முச்சோஷித பரம ஹஸோ பாஸ்வத கைட பாரே
இந்தே சந்த்யேவ நக்கஞ்சர விலயகரீ யா ஜகத் வந்த நீயா
பந்நூ கச்சாய பந்துச்ச விகடித கநச்சேதமே தஸ்விநீ ஸா
ராதாங்கீ ரஸ்மி பங்கீ ப்ரணதது பவதாம் ப்ரத்ய ஹோத்தா நமே ந –6-

சந்திரன் முதலிய கிரஹங்களின் தேஜஸ்ஸை -மறைத்து -அழித்து -இல்லாதபடி செய்கிறது ஸூர்யனின் ஒளி
அந்த ஸூர்ய உதயத்தை விளங்கச் செய்கிறது ப்ராதஸ் ஸந்த்யை
அதே போல் பிரதிபஷிகளின் வலிமைகளை-தேஜஸ்களை – எல்லாம் அழிக்கும் எம்பெருமான்
சோபையை -சாதுர்யத்தை -விளங்கச் செய்கிறது ஸூ தரிசனத்தின் தேஜஸ்
இரவில் திரியும் துஷ்ட கொடிய ஜந்துக்கள் எல்லாம் ஸூர்ய உதயத்தைக் கண்டவாறே மறைந்து போகும்
இரவில் திரியும் அஸூர ராக்ஷஸர்கள் ஸூ தர்சன ஜ்வாலையைக் கண்டவாறே மறைந்து அழிந்து போவார்கள்
உதய ஸூர்யனின் செவ்விய கிரணங்கள் மேகத்தோடே கலந்து மேகத்தையும் சிவக்க வைக்கும்
ஸூ தர்சன கிரணங்கள் காள மேகத்தோடே கலந்து காள மேகத்தையும் சிவக்கச் செய்யும்
அப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்கள் பாவத்தை அழிக்கட்டும்

———

ஸாம்யம் தூம்யா ப்ரவ்ருத்தயா ப்ரகடயதி நபஸ் தாரகா ஜாலகா நி
ஸ்பவ் லிங்கீம் யாந்தி காந்திம் திசதி யதுதயே மேரு ரங்கார சங்காம்
அக்நிர் மக்ந அர்ச்சிர் ஐக்யம் பஜதி திநநிசா வல்லபவ் துர்ல பாபவ்
ஜ்வாலா வர்த்தா விவ ஸ்தஸ் ப்ரஹரண பதிஜம் தாம வஸ் தத் திநோது –7-

ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ கிளர்ந்து எழும் காலத்தில் தோன்றும் புகை மண்டலம் ஆகாசம் முழுவதும் பரவுதலால்
ஆகாசம் புகைக் கூண்டு போல் தோற்றம் அளிக்கிறது
நக்ஷத்திரங்கள் எல்லாம் நெருப்புப் பொறிகளாகத் தோற்றம் அளிக்கின்றன
ப்ரகாசகமான மேரு மலையானது பாதி எரிந்த கொள்ளிக் கட்டையைப் போலே ஒளி குன்றிக் காட்சி அளிக்கிறது
ஸூர்ய சந்திரர்கள் ஒளியை இழந்து சிறுவர்கள் விளையாடும் மாவலியில் இருந்து தோன்றும்
ஒளி வட்டம் போல் தோற்றம் அளிக்கின்றனர்
இப்படி எல்லா ஒளிப் பொருள்களைக் காட்டிலும் மேம்பட்டு விளங்கும் ஸூதர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்களை மகிழ்விக்கட்டும் –

————-

த்ருஷ்டே திவ்யோம சக்ரே விகச நவ ஜபா ஸன்னிகாஸே சகாசம்
ஸ்வர் பாநுர் பானுரேஷ ஸ்புடமிதி கலயன் நாகதோ வேக தோஸ்ய
நிஷடப்தோ யைர் நிவ்ருத்தோ விதுமிவ ஸஹஸா ஸ்ப்ரஷ்டு மத்யாபி நேஷ்டே
கர்மாம்சும் தே கடந்தா மஹித விஹதயே பாநவோ பாஸ்வரா வஸ் –-8-

ஒரு சமயம் திருவாழி ஆழ்வான் ஆகாசத்தில் ஜபா புஷ்பம் போலே செக்கச்செவேல் என்று காணப்பட்டார்
ராஹு அவரை ஸூர்யனாக எண்ணி அருகிலே செல்ல ஒளியின் மிகுதியால் தாக்கப்பட்டுத் திரும்பினான்
அது முதல் கிரஹண காலத்திலும் உண்மையான ஸூர்யனைப் பிடிக்கச் சென்றாலும்
இவன் ஸூர்யனா ஸூ தர்சன ஆழ்வானா என்று சிந்தித்து முடிவுக்கு வந்த பின்பே ஸூர்யனைத் தாமதித்துப் பிடிக்கிறானாம்
ஸூர்யனை விட பன்மடங்கு ஒளி யுள்ள திருவாழி ஆழ்வானின் கிரணங்கள் உங்கள் பகைவர்களை அழித்து ரக்ஷிக்கட்டும் –

————–

தேவம் ஹே மாத்ரி துங்கம் ப்ருது புஜ சிகரம் பிப் ரதீம் மத்ய தேசே
நாபி த்வீபாபி ராமாமர விபி நவதீம் சேஷ சீர்ஷா ஸநஸ்த்தாம்
நேமிம் ப்ர்யாய பூமிம் தினகர கிரணா த்ருஷ்ட ஸீம பரீத்ய
ப்ரீத்யை வஸ் சக்ர வாலா சல இவ விலஸந்நஸ்து திவ்யாஸ்த்ர ரஸ்மி–9-

திருவாழி ஆழ்வானின் நேமியைச் சுற்றி விளங்கும் ஜ்வாலையைப் பார்த்தால் பூமியைச் சுற்றி
லோகாலோக பர்வதம் -சக்ர வாள மலை -விளங்குவது போல் இருக்கிறது –
பூமி பெரிய சிகரத்தை யுடைய மேரு மலையைத் தன்னிடம் கொண்டு இருக்கிறது
தீவுகள் காடுகள் முதலியவற்றோடு திருவனந்த ஆழ்வானின் திரு முடியின் மீது இருக்கிறது
ஸூ தர்சன நேமியும் பூமியைப் போலவே இருக்கிறது
நேமியின் நடுவில் ஸ்ரீ ஸூ தர்சன உருவமே மேரு மலை
அவருடைய புஜங்கள் மேரு மலையின் சிகரம்
அவரது நாபியே தீவு
அரங்களே காடுகள்
பூமியைச் சுற்றி லோகாலோக பர்வதம் இருக்கிறது -இது ஸூர்ய கிரணங்களே புகாத இடம் -இருள் மயம்
இப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதி எப்போதும் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கட்டும் –

———-

ஏகம் லோகஸ்ய சஷுர் த்விவித மப நுதத் கர்ம நம் ரத்ரி நேத்ரம்
தாத்ரார்த்தாநாம் சதுணாம் கமய தரிகணம் பஞ்ச தாம் ஷட் குணாட்ட்யம்
ஸப்தார்ச்சி ஸ்ஸோஷி தாஷ்டா பத நவ கிரண ஸ்ரேணி ரஜ்யத் தஸாஸம்
பர்யஸ்யாத்வ ஸ்ஸதாங்க வயவ பரிப்ருட ஜ்யோதிரீ தீஸ் ஸஹஸ்ரம் —10-

உலகத்திற்குக் கண் போன்றதும் -புண்ய பாபங்கள் ஆகிற இரு வினைகளையும் போக்கடிப்பதும்
முக் கண்ணனால் -பரமசிவனால் -வணங்கப்படுவதும் –
தர்மார்த்த காம மோக்ஷங்களை அளிப்பதும் -பகைவர்களின் கூட்டங்களை அழிப்பதும்
ஞானம் சக்தி முதலிய ஆறு குணங்கள் நிறையப் பெற்றதும்
தீயில் காய்ச்சப்பட்ட தங்கம் போன்ற சிவந்த கிரணங்களால் பத்து திசைகளையும் வியாபித்து
இருப்பதுமான ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ
உங்களுடைய அனைத்து துன்பங்களையும் அழித்து உங்களை ரக்ஷிக்கட்டும்

இந்த ஸ்லோகத்தில் எண்களின் பெயர்கள் அமைத்துள்ளது போல்
கருட பஞ்சாசத்தில் ஐந்தாம் ஸ்லோகம் அமைந்துள்ளது

ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம் பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி -சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது பயம் வீத சங்க்யோ தயோ ந –5-

ஒன்றே அத்விதீயம் -இரண்டே பெரிய திருவடி சங்கர்ஷணன் அம்சம் -மூவர் நால்வர் தானே பஞ்ச வர்ணீ ரஹஸ்யம் அறிவார்கள்
ஞான பல வீர்யம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் -ஆறிலும் விளங்குவான் -சாம வேத சப்த ஸ்வரம் –
அணிமா மஹிமா -லகிமா கரிமா பிராப்தி பிரகாம்யம் ஈஸத்வம் வஸித்வம் அஷ்ட -யோக சித்தன்
நவ -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் / ஆயிரம் கண்ணன் ஆயிரம் இந்திர எதிரிகளை நிரசனம் –
இவன் சிறகுக்கு லஷ்யம் கோடிக் கணக்கான பாகவத அபசாரிகள்
தர்வீக ராரி–தர்வீ -பணைத்த படங்கள் கொண்ட -பாம்புகளுக்கு பகைவன் என்றபடி
விஹதயாது பயம்-நம் பயங்களை போக்கி அருளுகிறார் –
வீத சங்க்யோ-எண்ணில்லாத -சொல்லி நிகமிக்கிறார் –

———–

உச்சண்டே யச்சி கண்டே நிபிடயதி நப க்ரோட மர்க்கோட தித்யாம்
அப்யஸ்ய ப்ரவ்டதாப க்லபித வபுரபோ பிப்ர தீர பிரப்பங்க்தீ
தத்தே சுஷ்யத் ஸூ தோத் ஸோ விதுரப மதுந ஷவ்த்ர கோசஸ்ய ஸாம்யம்
ரக்ஷந் த்வஸ்த்ர ப்ரபோஸ்தே ரசித ஸூ சரித வ்யுஷ்ட யோ க்ருஷ்ட யோவ –11-

எந்த ஸூதர்சன ஆழ்வானின் கிரணங்கள் -சுடர்க்கொழுந்து -சுடர் ஒளி ஆகாசத்தை அடைந்தவுடன் அதனால் மிகவும் தபிக்கப்பட்டு
ஸூர்யன் மழை மேகங்களான கரு முகிலுக்குள் புகுந்து புகுந்து ஸஞ்சரிக்கிறானோ
தன்னிடமுள்ள அம்ருதப் பெருக்கு வற்றிப் போய் தேன் அற்ற தேனடை போல் சந்திரன் ஆகிறானோ
மேன்மேலும் புண்ணியத்தை வளர்க்க வல்ல அப்படிப்பட்ட திருவாழி ஆழ்வானின் கிரணங்கள் உங்களைக் காத்து அருளட்டும் –
ஆழ்வார்கள் கனலாழி அனலாழி என்றே அருளிச் செய்கிறார்கள் அன்றோ –

————-

திருவாழி ஆழ்வானின் கிரண ஸமூஹம் -ஒளிக்கூட்டம் எங்கும் வியாபித்து
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சி அளிக்கிறது –

பத்மவ்கோ தீர்க்கி காம்ப ஸ்வயநி தர தடே கைரி காம்பு ப்ரபாத
ஸிந்தூரம் குஞ்ஜ ராணாம் திசி திசி ககநே ஸாந்த்யமேக ப்ரபந்த
பாராவாரே ப்ரவாளோ வந புவி ச ததா ப்ரேஷ்ய மாண ப்ரமுக்தை
ஸாதிஷ்டம் வ ப்ரபோதம் ஜனயது தநு ஜத் வேஷிண ஸ்த்வைஷ ராஸி –12-

ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் திக்கஜங்களிடம் சிந்தூரப்பொடியாகவும்
ஆகாசத்தில் அந்திப்பொழுது தோன்றும் சிவந்த மேகத்திரளாகவும்
கடலில் பவழமாகவும் காடுகளில் செந்தளிராகவும் பாமர மக்களால் பார்க்கப்படுகின்ற
திருவாழி ஆழ்வானின் கிரண ஸமூஹம் -ஒளிக்கூட்டமானது உங்களுக்கு நல்ல அறிவை உண்டாக்கட்டும்

————

பாநோ பாநோ த்வதீயாஸ் புரதி குமுதி நீ மித்ர தே குத்ர தேஜஸ்
தாராஸ் ஸ்தாரா ததீ ரோஸ்ய நல ந பவதஸ் ஸ்வைர மை ரம்ம தார்ச்சிஸ்
ஸம்ஸன் தீத்தம் நபஸ் ஸ்தா யதுதய ஸமயே சக்ர ராஜாம் சவஸ்தே
யுஷ் மாகம் ப்ரவ்டதாப ப்ரபவ பவகதா பக்ரமாய க்ரமந்தாம் —13-

ஸூ தர்சன கிரணங்களின் உதய காலத்தில் ஆகாசத்தில் திவ்ய விமானங்களில் செல்லும் தேவ கந்தர்வாதிகள்
ஓ ஸூர்யனே உன் ஒளியும் மங்கிப் போய் விட்டதே –
சந்திரனே உன் தேஜஸ்ஸூ என்னவாயிற்று
நக்ஷத்ரங்களே வெகுதூரம் சென்று விடுங்கள்
ஓ அக்னி பகவானே நீ இப்படி ஒளி குறைந்து பல ப்ரகாஸ -ஹீனனாக -ஆகி விட்டாயே
ஓ வஜ்ர அக்னியின் தேஜஸ்ஸே நீ ஸூ தர்சன ஒளியில் கலந்து உருவழிந்து தனித்தன்மையை இழந்து விட்டாயே
என்று கூறும்படி பெருமை வாய்ந்த
ஸூ தர்சன ஆழ்வானின் கிரணங்கள் தாப த்ரயங்களுக்கு பிறப்பிடமாகிய பிறவி நோயைத் தீர்க்கட்டும் –

————

ஜக்த்வா கர்ணே ஷு தூர் வாங்குர மரி ஸூத் ருசா மஹிஷு ஸ்வர்வதூ நாம்
பீத்வா ஸாம்ப ஸ்ஸரந்த்யஸ் ஸ வ்ருஷ மநு கதா வல்லவே நாதி மேந
காவோ வஸ் சக்ர பர்த்துஸ் பரமம்ருத ரஸம் ப்ரஸ்ரிதாம் துஹாநா
ருத்திம் ஸ்வா லோக லுப்த த்ரி புவன தமஸ ஸானு பந்தாம் ததந்தாம் –14-

அஸூர அரக்கர் மாதர்கள் மங்களகரமாகக் காதுகளில் அணிந்து கொண்டிருக்கும் அறுகம் புல்லைத் தின்று
தேவ மாதர்களின் கண்ணீரைப் பருகுகின்றனவும்
தரும நெறியில் சென்று மோக்ஷத்தில் ருசியை உண்டாக்குகின்ற ஸூ தர்சன கிரணங்கள்
நிலையான செல்வத்தை உங்களுக்குக் கொடுக்கட்டும்
அறுகம் புல்லைத் தின்று தண்ணீரைப் பருகி காளையொடு
சேர்ந்து திரிகின்றவையும் தங்களுக்குப் பின்னால் கண்ணனை கோபாலனை வரப் பெற்றவையும்
அம்ருதம் போன்ற பாலைக் கொடுப்பவையும்
தம் கடாக்ஷத்தினால் மூன்று உலகத்தாரின் அறியாமையும் ஆகிற இருளைப் போக்கி அருளுவதுமான
கண்ணபிரானின் பசுக்கள் உங்களுக்குத் தொடர்ந்து நிலையான செல்வத்தை அளிக்கட்டும் –

————

ஸேநாம் ஸேநாம் மகோநோ மஹதி ரண முகேலம் பயம் லம் பயந்தீ
உத்ஸே கோஷ்ணுலு தோஷ் ணாம் ப்ரதம த்விஷதா மா வலீர்யா வலீடே
விஸ்வம் விஸ்வம் பராத்யம் ரத பததி பதேர் லீலயா பால யந்தீ
வ்ருத்திஸ் ஸா தீதிதீ நாம் வ்ருஜிந மநு ஜனுர் மார் ஜயத் வார்ஜிதம் வ –15–

பெரிய போர் களத்தில் தலைவர்களோடு கூடிய இந்திர சேனையைப் பயமுறுத்தி செருக்கினால்
போர் செய்யத் துடிக்கின்ற வலிய கைகளைக் கொண்ட அசுரர்களின் கூட்டங்களை அழித்து
பூமி முதலிய எல்லா உலகங்களையும் அவலீலையாக ரஷிக்கின்ற ஸூ தர்சன ஆழ்வானுடைய கிரணங்கள்
நீங்கள் பிறவி தோறும் ஈட்டிய பாவங்களை அழிக்கட்டும்

———

தப்தா ஸ்வேநோஷ் மணேவ ப்ரதிபட வபுஷா மஸ்ர தாரா தயந்தீ
ப்ராப்தேவ ஷீபபாவம் ப்ரதி திச ம ஸக்ருத் தன்வதீ கூர்ணிதாநி
வம்ஸாஸ்த்தி ஸ்போட ஸப்தம் ப்ரகடயதி படூன் யாவ ஹந்த்யட்ட ஹாஸான்
பாஸா வ ஸ்யந்த நாங்க ப்ரபு சமுதயிநீ ஸ்பந்த தாம் சிந்தி தாய –16-

தனது உஷ்ணத்தினால் தாபம் அடைந்தது போல் எந்த திருவாழி ஆழ்வானின் பிரகாஸமானது
எதிரிகளின் உடலில் தோன்றும் ரத்தைப் பெருக்கைப் பருகி பெருமிதம் கொண்டு எல்லாத் திசைகளிலும்
சுற்றிக் கொண்டும் சத்ருக்களின் முதுகு எலும்பை முறிக்கும் பேர் ஒலியை எழுப்பிக் கொண்டும்
அட்டஹாஸ மான பெரும் சிரிப்பை வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறதோ
அந்த ஸூ தர்சன ப்ரபையானது உங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சிறிது புறப்படட்டும் –

———–

தேவை ராஸேவ்ய மாநோ தநு ஜபட புஜா தண்ட தர்போஷ் மதப்தை
ஆசாரோ தோதி லங்கீ லுடதுடு படலீ லஷ்ய டிண்டீரபிண்ட
ரிங்கஜ்ஜ்வாலா தரங்க த்ருடித ரிபு தரு வ்ராத பாதோக்ர மார்க
சாக்ரோ வஸ்ஸோசி ரோக ஸ்ஸ மயது துரிதா பஹ் நவம் தாவ வஹ்னிம் –17-

திருவாழி ஆழ்வானின் ஜ்வாலை ப்ரவாஹம் போன்றது -ஸூர்ய வெப்பத்தினால் தபிக்கப் படுகிறவர்கள்
ஜல ப்ரவாஹத்தில் ஆழ்ந்து மூழ்குவார்கள்
அது போல் அஸூரர்களின் புஜ பலத்தின் செருக்கினால் தபிக்கப் பட்ட தேவர்கள் திருவாழி ஆழ்வானின்
ஜ்வாலப் ப்ரவாஹத்தில் மூழ்கி வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்
ஜலப் ப்ரவாஹம் நுரைகள் மிகுந்து ஜ்வாலையும் கரை கடந்து செல்லும் திசைகளைக் கடந்து செல்கிறது
வெள்ளம் மரங்களை அறுத்து வீழ்த்தி வழிகளை எல்லாம் பயங்கரமாக ஆக்கும்
ஜ்வாலைப் ப்ரவாஹமும் சத்ருக்களின் உடல்களை அறுத்து வீழ்த்தி அச்சத்தை ஏற்படுத்து கிறது
இத்தகைய ஜ்வாலைப் பிரவாகம் உங்களுடைய பாவங்கள் ஆகிற காட்டுது தீயை அணைக்கட்டும் –

———–

ப்ராம் யந்தீ ஸம்ஸ்ரிதாநாம் பிரம சம நகரீச் சத்ந ஸூர்ய ப்ரகாசா
ஸூர்யா லோகாநு ரூபா ரிபுஹ்ருதய தமஸ் காரிணீ நிஸ்தமஸ்கா
தாரா ஸம்பாதி நீ ச பிரகடித தஹநா தீப்திரஸ்த்ரே சிதுர் வ
சித்ரா பத்ராய வித்ரா வித விமத ஐநா ஜாய தாமாய தாய –18–

தன்னிடம் புத்தி பிரமம் இல்லாவிட்டாலும் பிரமத்தினால் சுழற்சியினால் ஆஸ்ரிதர்களின் பிரமத்தைப் போக்குவதும்
ஸூர்யனை மறைத்தாயினும் (ஆழி கொண்டு இரவி மறைத்தான் -நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற -பெரியாழ்வார் )
ஸூரி ஜனங்களின் பண்டிதர்களின் -நல்லறிவு வளர்வதற்கு உதவுவதும்
தன்னிடம் தமஸ்ஸூ இல்லா விட்டாலும் சத்ருக்களின் நெஞ்சில் அஞ்ஞான இருளை உண்டு பண்ணுவதும்
பெரு மழையைத் தருவதாயினும் சத்ருக்களின் மீது அக்னியை வெளிப்படுத்துவதுமான
ஸூ தர்சன ஜ்வாலை உங்களுக்கு மங்களங்களை அளிக்கட்டும் –

———-

நிந்யேவந்யேவ காசீ தவசிகி ஜடில ஜ்யோதிஷா யேந தாஹம்
க்ருத்யா வ்ருத்யா விலில்யே சலப ஸூலபயா யத்ர சித்ர ப்ரபாவே
ருத்ரோப் யத்ரேர் துஹித்ரா ஸஹ கஹந குஹாம் யத் பயா தப்ய யாஸீத்
திஸ்யாத் விச்வார்ச்சிதோ வஸ் ஸ சுப ம நிப்ருதம் சவுரி ஹேதி ப்ரதாப –19-

முன்பு ஒரு கால் ஸூ தர்சன ஜ்யோதி காசீ பட்டணத்தைக் கொளுத்தியது –
பவ்ண்டர வாஸூ தேவ வத வ்ருத்தாந்தம் இத்தை விவரிக்கும் –
துர்வாஸ முனிவரால் தோற்றுவிக்கப் பட்ட க்ருத்யையானது -ஏவல் -ஸூ தர்சன தேஜஸ்ஸில்
வீட்டில் பூச்சி போல் மாண்டு ஒழிந்தது (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-34-31இத்தை விவரிக்கும் )
ஒரு சமயம் திருவாழியின் தேஜஸ்ஸைக் கண்டு பயந்து பரமசிவன் பார்வதியோடு ஓடிச் சென்று
மலைக்குகையில் ஒளிந்து கொண்டு தப்பித் பிழைத்தான் (ஸ்ரீ கூரேச விஜயம் -14 ஸ்லோகம் இத்தை விவரிக்கும் )
அப்படிப்பட்ட பெருமை கொண்ட ஸூ தர்சன ப்ரபாபமானது உங்களுக்கு நிலையான மங்களங்களைக் கொடுக்கட்டும் –

————-

உத்யன் பிம்பாது தாரான் நயன ஜல ஹிமம் மார்ஜயன் நிர் ஜரீணாம்
அஞ்ஞான த்வாந்த மூர்ச்சாகர ஜநிரஜநீ பஞ்ஜந வ்யஞ்ஜி தாத்வா
ந்யக் குர்வாணோ க்ரஹாணாம் ஸ்புரண மப ஹரன் நர்ச்சிஷஸ் பாவ கீயாஸ்
சக்ரே சார்க்க ப்ரகாசோ திசது தச திசோ வ்யச் நு வாநம் யசோவ -20-

ஸூ தர்சன ஸூர்ய பிரகாசம் ஸூ தர்சன ஸூர்ய பிம்பத்தில் இருந்து உண்டாகிறது
தேவமாதரின் கண்ணீர் ஆகிய பனியை நீக்குகிறது
மோகத்தை உண்டு பண்ணும் ஸம்ஸாரமாகிற ராத்ரியை அழித்து விவேகத்தை ஏற்படுத்தி
நல்ல வழியை விளக்கிக் காட்டுகிறது
கிரஹங்களின் ஒளியை மழுங்கச் செய்கிறது -அக்னியின் ஒளியைக் கொள்ளை கொள்கிறது
கோடி ஸூர்ய ப்ரகாஸத்தை யுடைய இந்த ஸூ தர்சன ஸூர்ய ப்ரகாஸம்
பத்துத் திசைகளிலும் பரவக்கூடிய புகழைக் கொடுக்கட்டும் –

———–

வர்கஸ்ய ஸ்வர்க்க தாம் நாமபி தநுஜ நுஷாம் விக்ரஹம் நிக்ர ஹீதும்
தாதும் ஸத்யோ பலா நாம் ஸ்ரீ ய மதி சயி நீம் பத்ர பங்கா நு வ்ருத்யா
யோக்தும் தே தீப்யதே யா யுகபதபி புரோ பூதி மய்யா ப்ரக்ருதியா
ஸாவோ நுத்யா தவித்யாம் த்யுதி ரம்ருத ரஸ ஸ்யந்தி நீ ஸ் யாந்த நாஙகீ--21-

மோக்ஷ ரஸத்தைப் பெருக்கும் திருவாழி ஆழ்வானின் ப்ரகாஸமானது ஒரே சமயத்தில்
அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்படும் விரோதத்தையும் அசுரர்களை ஒழிப்பதற்கும்
ஒரே சமயத்தில் தேவ லோகப் பெண்களுக்கு மென்மேலும் ஸம்பத்தைக் கொடுப்பதற்கும்
அசுரர்களின் சேனைகளின் உள்ள வாகனங்களை அழிப்பதால் செல்வத்தை அழிப்பதற்கும்
ஒரே சமயத்தில் தேவ லோகத்தில் ஐஸ்வர்யம் நிரம்புவதற்கும்
அசுரப் பட்டணங்களை சாம்பலாக்குவதற்கும் சக்தி யுள்ளதாக விளங்குகின்றது
அப்படிப்பட்ட ஸூ தர்சன த்யுதியானது உங்களுடைய அஞ்ஞானத்தை நீக்கட்டும் –

அஸுர ஸமூஹ த்வம்சமும் தேவ ஸமூஹ ஜீவனமும் ஒரே சமயத்தில் நிகழ்வது ஆலங்காரிக நியாயம்

—————

தாஹம் தாம் ஸபத் நான் சமரபுவி லஸத் பஸ்மநா வர்த்மநா யான்
க்ரவ்யாத ப்ரேத பூ தாத்யபி லஷித புஷா ப்ரீத காபாலிகே ந
கங்கா லை கால தவ்தம் கிரிமிவ குருதே யஸ் ஸ்வ கீர் தேர் விஹர்த்தும்
க்ருஷ்டிஸ் ஸாந்த்ருஷ்ட்டிகம் வ ஸகல முப நயத்வாயு தாக்ரே சரஸ்ய –-22-

திருவாழி ஆழ்வானின் கிரணமானது போர்க்களத்தில் அசுரர் ராக்ஷஸர்கள் தேஹங்களை நீறு படக் கொளுத்தி பஸ்மம் படிந்ததும்
அவர்களுடைய சரீரத்தின் மாம்சங்களால் பூத ப்ரேத பிசாசுகளுக்கு திருப்தி அளித்ததும்
அழித்த உடல்களின் வெண்மையான எலும்புகளை மலையாகக் குவித்துத் தன் காதலியான கீர்த்திக்கு புகழுக்கு
விளையாட்டு வெள்ளி மலையாகச் செய்ததுமாய் விளங்குகிறது
அந்த ஸூ தர்சன கிரணம் உங்களுக்கு எல்லா வகையான பலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் –
___________________________________________

“தக்தாநாம் தாநவாநாம் ஸபஸிதநிசயை;அஸ்த்திபிஸ் ஸர்வ சுப்ராம்
ப்ருத்வீம் க்ருத்வாபி பூயோ நவருதிர ஜரீ கௌதுகம் கௌணபேப்ய:
குர்வாணம் பாஷ்ப பூரை: குசதடகுஸ்ருண க்ஷாலநைஸ் தத்வநூ நாம்
பாபம் பாபச்யமாநம் சமயது பவதாம் சஸ்த்ரராஜஸ்ய தேஜ:”.–23-

ஸூதர்சன தேஜஸாலே அசுரர்கள் கொளுத்தப்பட்டு, அவர்களுடைய சரீரத்திலுள்ள மாம்ஸங்களும் நன்கு உண்ணப்பட்டு ,
எலும்பும் நீறுமே எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டு , இனி நமக்கு உணவு கிதைக்க வழியே இல்லையே என்று
பூதப்ரேதாதிகள் ஏங்கி இருந்தன.
ஸூதர்சன கிரண பிரகாசத்தைக் கண்ட அசுரமாதர்கள் தங்களுடைய கணவர்கள் இறந்தார்கள் என்பதை அறிந்து
கண்ணீர்விட்டு அழுந்தார்கள். அக்கண்ணீர் பெருக்கு அவர்களுடைர மார்பில் இருந்த குங்குமங்களை அழித்து சிவப்பாகப் பெருகிறது.
இதைக் கண்ட அந்த பூதப்ரேதாதிகள் நமக்கு புதிய இரத்தம் கிடைத்துவிட்டது.பருகி மகிழ்வோம் என்று ஆசைப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஸூதர்சன த்யுதி உங்களுடைய பாபங்களை போக்கடிக்கட்டும்.

___________________________________________

மாகாந் மோஷம் லலாடநல இதி மதநத்வேஷிணா த்யாயதேவ
ஸ்ரஷ்ட்ரா ப்ரோந்நித்ரவாஸாம்புஜ தலபடலப்லோஷமுத்பச்யதேவ,
வஜ்ராக்நிர் மாஸ்ம நாசம் வ்ரஜதிதி சகிதேநேவ சக்ரேண பத்தை:
ஸ்தோர்த்ரைரஸ் த்ரேச்வரஸ்ய த்யது துரிதசதம் த்யோதமாநா த்யுதிர் வ”.--24-

தன்னுடைய நெற்றிக்கண் நாசம் அடையாமல் இருக்கவேண்டும் என்று எப்போதும் தியானம் செய்யும் ருத்திரனும்,
தன்னுடைய இருப்பிடமான தாமரை மலர் எரிந்து போய்விடாமல் இருக்கவேண்டும் என்று சிந்திக்கும் பிரம்மாவும் ,
தன்னுடைய வஜ்ராயுதத்தின் அக்னி நாசம் அடையாமல் இருக்க வேண்டுமே என்று பயப்படும் இந்திரனும்
எப்போதும் ஸூதர்சன த்யுதியை ஸ்தோத்திரம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஸூதர்சன தேஜஸ் உங்களுடைய நூற்றுக் கணக்கான பாவங்களைக் போக்கட்டும்.

———-

(இதுவரை ஸூதர்சன ஜ்வாலை வர்ணனம்)
25 முதல் 38 வரை நேமி(சக்ரத்தின் மறுபக்கம்) வர்ணம்.
தனித்தனியே பாகங்களை வர்ணித்தாலும் திருவாழியான சுதர்சன பெருமைகளே ஆகும்.

சஸ்த்ராஸ்த்ரம் சாத்ரவாணாம் சலபகுலமிவ ஜ்வாலயா லேலிஹாநா
கோஷை: ஸ்வை: க்ஷோபயந்தீ விகடித பகவத்யோக நித்ராந் ஸ்முத்ராந்
வ்யூடோர: ப்ரௌடசார த்ருடித படு ரடத் கீகஸ க்ஷுண்ணதைத்யா
நேமிஸ் ஸெளதர்சநீ வ: ச்ரியமதிசயநீம் தாசதாதா சதாப்தம்”.--25-

விட்டில் பூச்சிகளின் கூட்டங்களைக் கவர்ந்து அழிப்பது போல் அசுர ராக்ஷஸர்களின் அஸ்த்ர சஸ்திரங்களை அழிப்பதும்
எம்பெருமானின் யோக நித்திரையைக் தம் ஓசையினால் கலைக்கும் சமுத்திரத்தை தன் கோஷங்களினால் கலங்கச் செய்வதும்,
அசுரர்களின் உடலை அழிப்பதுமான ஸூதர்சன நேமி நூறாண்டுகள் உங்களுக்குச் செல்வம் அளிக்கட்டும்.

மந்த்ர சுத்தமான ஆயுதங்கள் அஸ்திரங்கள்
அமந்த்ரமானவை அஸ்திரங்கள்

———

தாரா சக்ரஸ்ய தாராகண கண விததி த்யோதிதத்யுப்ரசாரா
பாராவாராம்புபூர க்வதன பிசுநிதோத்தாள பாதாளயாத்ரா,
கோத்ராத்ரிஸ்போடசப்த ப்ரகடித வஸுதாமண்டலீ சண்டயாநா
பந்தாநம் வ: ப்ரதிச்யாத் ப்ரசமநகுசலா பாப்மநாமாத்ம நீநம்”.–26-(கண விததிகுப் பதில் -கபிச க்ருணி பாட பேதம் )

நக்ஷத்திர கூட்டங்கள் போல் தன் தீப்பொறிகளினால் வானத்தை நிறைத்துக்கொண்டு ஆகாச சஞ்சாரம் செய்வதும்,
கடல் நீரையும் வற்றச்செய்து கொண்டு பாதாள லோகத்தில் சஞ்சரிப்பதும் ,
குல பர்வதங்களை யெல்லாம் பிளந்து கொண்டு பூமண்டலத்தில் திரிகின்றதும் ,
பாவங்களைத் தணியச் செய்யவல்லதுமான திருவாழியின் நேமியானது
உங்களுக்கு ஆத்ம ஹிதமான வழியை (அர்ச்சிராதி மார்கத்தை) அல்லது அதற்கு நிகரான ஸத் மார்கத்தையோ கொடுக்கட்டும்.

___________________________________________

யாத்ரா யா த்ராதலோகா ப்ரகடித வருணத்ராஸமுத்ரே ஸமுத்ரே
ஸத்த்வாஸத்த்வா ஸஹோஷ்மா க்ரு தஸகமிதகஸ்பந்தகாநா ததாநா,
ஹாநிம் ஹா நிந்திதாநாம் ஜகதி பரிஷதாம் தாதவீநாம் நவீநாம்
சக்ரே சக்ரேசநேமிஸ் சமுபஹரது ஸா ஸப்ரபாவப்ரபா வ:”.–27-

உலகங்களை ரக்ஷிப்பதும், ‘தமக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ’ என்று வருணன் நடுங்குவதை
விளக்கிக் கொண்டிருக்கும் கடலில் அடிக்கடி சஞ்சரிப்பதும் , சேதன அசேதனங்களால் தாங்க முடியாத ப்ரதாபத்தை கொண்டதும்,
தன்னுடைய இறகுகளின் உதவியால் ஆங்காங்கு பறந்து சென்று ஜனங்களுக்குப் பலவகையாகத் தொல்லைகளைக்
கொடுத்துக் கொண்டிருந்த மலைகளின் இறகுகளை அழித்து மலைகளின் சஞ்சாரத்தை நிறுத்தி
மலைகளை ஒரே இடத்தில் இருக்குமாறு ஆக்கியதும், அசுரக் கூட்டங்களை அழித்து மேலும் ஒளி பெற்று விளங்குவதுமான
ஸூதர்சன நேமியானது உங்களுக்கு சுகத்தை கொடுக்கட்டும்.

(இந்திரனின் வஜ்ராயுதமே மலைகளின் இறகுகளை வெட்டியதாக சரித்திரம்.ஆயினும்
ஸூதர்சன ஆழ்வானின் சக்தியே வஜ்ராயுதத்தில் அமைந்து இச் செயலை செய்ததாக கொள்ள வேண்டும்.)

___________________________________________

யத்ராமித்ராந் திதக்ஷௌ ப்ரவிசதி பலிநோ நாம நிஸ்ஸீமதாம்நி
க்ரஸ் தாச ஸ்தாபசீர்ணை: ப்ரகுணிதஸிகதோ மௌக்திகைச் சௌக்திகேயை:
ராசிர் வாராமபாராம் ப்ரகடயதி புநர் வைரி தாராச்ருபூரை:
வ்ருத்திம் நிர்யாதி நிர்யாபயது ஸ துரிதாந்யஸ்த்ரராஜப்ராதி வ:”.--28-

அபரிமிதமான தேஜஸையுடைய ஸூதர்சன நேமியானது சத்ருக்களை அழிப்பதற்கு கடல் வழியாக பாதாள லோகத்திற்கு
சென்ற போது கடல்நீர் வற்றிப்போய் , ஸூதர்சன வெப்பத்தால் சிதறி விழுந்த முத்துக்கள் எங்கும் மணலில் நிறைந்திருந்தன.
அங்கு சென்று அசுரர்களை அழித்துத் திரும்பிய பிறகு , அசுர பத்தினிகளின் கண்ணீர் பெருக்கால் மீண்டும் கடல் நிரம்பியது.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸூதர்சன நேமியானது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.

___________________________________________

கக்ஷ்யாதௌல்யேந கத்ரூ தநயபணமணீந் கல்யதீபஸ்ய யுஞ்ஜந்
பாதாளநத ப்ரபாதீ நிகிலமபி தம: ஸ்வேந தாம்நா நிகீர்ய,
தைதேப்ரேயஸீநாம் வமதி – ஹ்ருதி ஹதப்ரேயஸாம் பூயஸா ய:
சக்ராக்ரீயாக்ரதேசோ தஹது விலஸிதம் பஹ்வஸாவம்ஹஸாம் வ:”.–29-

திருவாழி ஆழ்வானின் நேமியானது பாதாள லோகம் சென்று நாகங்களின் படங்களிலுள்ள மாணிக்கங்களை ,
தன்னுடைய தேஜஸினால் ஒளி குன்றச் செய்து , அவற்றைப் பகல் விளக்குகளாக ஆக்கியது.
தன் ஒளியினால் அங்கிருந்த இருளைக் கவர்ந்து , விதவைகளான அசுர ஸ்திரீகளின் நெஞ்சில் கொண்டு வந்து தேக்கியது.
இப்படிப்பட்ட திருவாழியாழ்வான் உங்கள் பாவங்களின் பெருமிடுக்கை எரித்து அழிக்கட்டும்.

___________________________________________

க்ருஷ்ணாம் போதஸ்ய பூஷா க்ருத நயந நய வ்யாஹதிர் பார்கவஸ்ய
ப்ராப்தாமாவே தயந்தீ ப்ரதிபட ஸுத்ருசாம் உத்படாம் பாஷ்ப வ்ருஷ்டிம்,
நிஷ்டப்தாஷ்டாபத ஸ்ரீஸ் ஸமமர சமு கர்ஜிதைருஜ்ஜிஹாநா
கீர்திம் வ: கே தகீபி ப்ரதயது ஸத்ருசம் சஞ்சலா சக்ர தாரா”.–30-

எம்பெருமானாகிற கருமேகத்திற்கு ஆபரணமாகவும் , சுக்கிரனின் கண்ணை அழித்தவனும்,
அசுர ராக்ஷ ஸ்த்ரீகளிடமிருந்து கண்ணீராகிய மழையப் பெருகச் செய்ததும்,
நன்கு காய்ச்சப்பட்ட பொன் போன்று பளப்பளபாக விளங்குவதும் ,
தேவ சேனைகளின் விஜய முழக்கங்களோடு புறப்படுகின்றதும், மின்னல் போன்று சஞ்சலமாயும் இருக்கிற
ஸூதர்சன நேமியானது உங்களுக்குத் தாழம்பூ போன்ற புகழை செழிப்பாக வளரச்செய்யட்டும்.

——–

வப்ராணாம் பேதநீம் ய: பரிணதிம் அகிலச்லாகநீயாம் ததாந:
க்ஷúண்ணாம் நக்ஷத்ர மாலாம் திசி திசி விகிரந் வித்யுதா துல்யகக்ஷ்யா:
நிர்யாணே நோத்கடேந ப்ரகடயதி நவம் தாநவாரிப்ரகர்ஷம்
சக்ராதீசஸ்ய பத்ரோ வசயது பவதாம் ஸ ப்ரதிச் சித்த வ்ருத்திம்”.–31-

ஸூதர்சன நேமி பத்ரம் என்னும் யானை போன்றது. அந்த யானை தந்தங்களால் கரைகளை இடித்துத் தள்ளும்;
ஸூதர்சனமும் சத்ருக்களின் பட்டணங்களிலுள்ல ப்ராகாரங்களைப் பிளக்கிறது.
தனக்கு அணிவிக்கப்பட்ட இருப்பத்தேழு முத்துக்களைக் கொண்ட நக்ஷத்திர மாலையை யானை
கீழே வீழ்த்திப் பொடியாக்கி இறைத்துவிடும்.
ஸூதர்சனமும் மின்னல் போல் ஒளி மிக்கு இருக்கிறது.
அந்த யானை அபாங்க வழியாக மதஜலத்தைப் பெருக்கும்;
ஸூதர்சனம் ஆடம்பரமாக வெளியில் புறப்படும்போதே எம்பெருமானின் பெருமையை வெளிபடுத்திக் கொண்டு புறப்படும்.
அனைவராலும் கொண்டாடத்தக்க மங்களகரமான அந்த ஸூதர்சன நேமியானது உங்களுடைய மனத்தை இஷ்சப்படி திரியாமல் அடக்கியாளட்டும்.

கஜ ஜாதியில் பத்ரம் ஓன்று

___________________________________________

நாகௌகச் சத்ரு ஜத்ரு த்ருடந விகடித ஸ்கந்த நீரந்த்ர நிர்யத்
நவ்யக்ரவ்யாஸ்ரஹவ்ய க்ரஸந ரஸ லஸஜ்ஜ்வால ஜிஹ்வால வஹ்நிம்
யம் த்ருஷ்ட்வா ஸாம்யுகீநம் புநரபி விததத்யாசி ஷோ வீர்ய வ்ருத்த்யை
கீர்வாணா நிர்வ்ருணாநா விதரது ஸ ஜயம் விஷ்ணு ஹேதி ப்ரதிர் வ:”.–32-

தேவ சத்ருக்களான அசுர ராக்ஷஸர்களின் தோள் பட்டைகளை அறுத்து வீழ்த்துவதால் விரிந்த தோள்களிலிருந்து
பெருகும் மாமிச ரத்தங்களைப் புதிய ஹவிஸ்ஸை பெறுவதில் ஆசையோடு ஜ்வாலையாகிற நாக்கைத்
தீட்டிக்கொன்டு இருக்கும் அக்னியை உடையதும்,யுத்தம் செய்வதில் வல்லதும் மேன் மேலும் வீர்யம் வளர வேண்டும் என்று
தேவர்களால் மங்களாசாசனம் செய்யப்படுவதுமான ஸூதர்சன நேமியானது
எப்போதும் ஐய ப்ரதமாக இருந்து கொண்டு உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்.

___________________________________________

“தந்வாத் வந்யஸ்ய தாராஸ லிலமிவ தநம் துர்கதஸ்யேவ த்ருஷ்டி:
ஜாத்யந்தஸ்யேவ பங்கோ: பத விஹ்ருதிரிவ ப்ரீணநீ ப்ரேம பாஜாம்:
பத்யுர் மாயா க்ரியாயாம் ப்ரகட பரிணதிர் விச்வ ரக்ஷாக் ஷமாயாம்
மாயா மாயாமிநீம் வஸ் த்ருடயது மஹதீ நேமிர ஸ்த்ரேச்வரஸ்ய”.--33-

பாலைவனத்தில் நடந்து சென்று பெருந்தாகம் கொண்டவனுக்கு ஓடும் தண்ணீர் கிடைத்தது போலவும்,
குருடனுக்குப் பார்வை கிடைத்தது போலவும்,நொண்டிக்கு காலால் நடப்து விளையாடும் நிலை கிடைத்தது போலவும் ,
பக்தர்களுக்கு ப்ரீதியை உண்டு பண்ணக் கூடியதும் ஸ்ரீபதியான எம்பெருமானின் இவ்வுலகங்களை ரக்ஷிக்கும் சமயத்தில்
எம்பெருமானாகவே பரிணமிப்பதுமான (மாறுவதுமான) ஸூதர்சன நேமியானது
உங்களுடைய தொடர்ச்சியாக வுள்ள அவித்யையை நீக்கட்டும்.

___________________________________________

த்ராணம் யா விஷ்டபாநாம் விதரதி ச யயா கல்ப்யதே காம பூர்த்தி:
ந ஸ்தாதும் யத் புரஸ்தாத் ப்ரபவதி கலயா ப்யோஷதீ நாமதீச:,
உந்மேஷோ யாதி யஸ்யா ந ஸமயநியதிம் ஸா ச்ரியம் வ: ப்ரதேயாத்
ந்யக்க்ருத்ய த்யோதமாநா த்ரிபுர ஹர த்ருசம் நேமிர ஸ்த்ரேச்வரஸ்ய”.--34-

சிவன் சம்ஹாரத்தைச் செய்கிறவனாதலால் அவனுடைய நெற்றிக் கண் உலகங்களுக்கு நாசத்தை அழிக்கும்.
ஸூதர்சன நேமியானது லோக ரக்ஷணத்தில் ஊற்றமுடையதாக இருக்கும்.
தவ நிலையில் இருக்கும் சிவனுடைய நெற்றிக் கண்னால் மன்மதன் எரிக்கப்பட்டு சரீரம் இழந்தான்.
தக்ஷ முனிவனின் சாபத்தால் கலைகள் குறைந்து ஒளி குன்றிய சந்திரன் முக்கண்ணனின் கண் எதிரில் காலமாத்ரனாக நின்றான்.
அந்த சந்திரன் கலாமாத்ரனாகவும் சக்ர நேமியின் எதிரில் நிற்க இயலாதவனானான்.
முக்கண்ணனின் நெற்றிக்கண் ஏதோ ஒரு கால விசேஷத்தில் சம்ஹார காலத்தில் திறந்துப் பிரகாசமாயிற்று.
சக்கர நேமியின் பிரகாசம் எல்லாக் காலத்திலும் உண்டு.
இப்படி பலவகைகளாலே முக்கண்ணனின் நெற்றிக் கண்ணை வென்று விளங்கும் சக்ர நேமியானது உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கட்டும்.

___________________________________________

நக்ஷத்ர க்ஷோத பூதி ப்ரகர விகிரண ச்வேதி தாசாவகாசா
ஜீர்ணை: பர்ணைரிவ த்யாம் ஜலதர படலைச் சூர்ணி தைரூர் ணுவாநா,
ஆஜா வாஜாந வாஜா நதரிபுஜ நதாரண்ய மாவர்தமாநா
நேமிர் வாத்யேவ சாக்ரி ப்ரணுதது பவதாம் ஸம்ஹதம் பாப தூலம்.--35-

நக்ஷத்திர கூட்டங்களாகிற சாம்பலை நான்கு பக்கமும் வீசி திகந்தங்களை எல்லாம் வெளுக்கச் செய்ததும்,
மேகக் கூட்டங்களைப் பொடியாக்கி ஆகாசத்தை மறைத்ததும், அசுர ராக்ஷஸர்களாகிற அரண்யத்தில் பெரு வேகத்தோடு சுழல்வதும்
பெருங்காற்று போன்றதுமான சக்ர நேமியானது உங்களுடைய பாபமாகிற பஞ்சுகளை உருவழிக்கட்டும்.
காற்று நிலத்திலுள்ள நீறுகளை வாரியிறைத்துத் திசைகளை வெளுக்கடிக்கும்.
சக்ர நேமியும் நக்ஷத்திரங்களைப் பொடியாக்கி வீசி திகந்தங்களை வெளுக்கச் செய்யும்.
காற்று பழுத்து விழுந்த இலைகளை எல்லாம் வீசி எறிந்து வானத்தை மறைக்கும்.
நேமியும் மேகங்களைப் பொடியாக்கி சிதிலமாக்கி ஆகாசத்தை மறைக்கச் செய்யும்.
காற்று, பெருங்காடுகளை நோக்கிச் செல்லும்.
நேமியும் சத்ருக்களாகிற அரண்யத்தை நோக்கிச் சுழன்று செல்லும்.
காற்று பஞ்சுகளைப் பறக்கடிக்கும்.
சக்ர நேமியும் பாப ராசிகளைப் பறக்கடிக்கும்.
___________________________________________

க்ஷிப்த்வா நேபத்த்ய சாடீமிவ ஜல தகடாம் ஜிஷ்ணு கோதண்ட சித்ராம்
தாரா புஞ்ஜம் ப்ரஸூநாஞ்ஜலிமிவ விபுலே வ்யோம ரங்கே விகீர்ய,
நிர்வேத க்லாநி சிந்தா ப்ரப்ருதி பரவசா நந்தரா தாந வேந்த்ராந்
ந்ருத்யந் நாநா லயாட்யம் நட இவ தநுதாம் சர்ம சக்ர ப்ரதிர் வ:”.–36-

நடன அரங்கில் நாட்டியமாடும் நாட்டியக்காரனைப் போன்றது சக்ர நேமி.
நாட்டியமாடுகிறவன் நடன அரங்கில் புகும் போது பல வண்ணங்களைக் கொண்ட திரையைத் தள்ளிவிட்டு புஷ்பாஞ்சலி செய்வான்.
சக்ர நேமியும் ஆகாசத்தில் புகும் போது வான வில்லால் பல நிறங்களோடு காட்சியளிக்கும் மேக மண்டலத்தை நீக்கிக் கொண்டு
நக்ஷத்திரக் கூட்டங்களை வாரி இறைக்கும்.
நாட்டியக்காரன் நாட்டியமாடும்போது அபிநயத்தினால் சபையில் சிலருக்கு துக்கம், சிலருக்கு முகவாட்டம்,
சிலருக்கு விசாரம் முதலியவற்றை ஏற்படுத்துவான்.
சக்ர நேமியும் அசுர ராக்ஷஸர்களிடையே துக்கம் வாட்டம் விசாரம் முதலியவற்றை ஏற்படுத்திக் கொண்டு
பலவகை லயங்களோடு கூத்தாடுகிறது.அப்படிப்பட்ட சுதர்சன நேமியானது உங்களுக்கு சுகத்தை உண்டு பண்ணட்டும்.
___________________________________________

ஸூதர்சன நேமியை மேகமாலையாக உருவகித்துக் கூறும் சுலோகம் இது.

தௌர்கத்யப்ரௌடதாப ப்ரதிபட விபவா வித்ததாராஸ் ஸ்ருஜந்தீ
கர்ஜந்தீ சீத்க்ரியாபிர் ஜ்வலதநல சிகோத்தாமஸெள தாம நீகா,
அவ்யாத் க்ரவ்யாத்வதூடீ நயந ஜலபரைர் திக்ஷú நவ்யாநநாவ்யாந்
புஷ்யந்தீ ஸிந்துபூராந் ரதசரணபதேர் நேமிகா தம் பிநீவ:”--37-

மேகமாலை தாங்கமுடியாத தாபத்தையும் மழையையும் கொடுக்கும்.
ஏழ்மையினால் ஏற்படும் அளவற்ற துக்கத்தைப் போக்கடிக்கும் வகையில் ஸூதர்சன நேமி செல்வ மழையைக் கொடுக்கும்.
மேகங்கள் இடி இடித்துக் கொண்டுக் கிளம்பும்.
பளபளப்பான மின்னல்களைக் கொண்டிருக்கும்.சக்ர நேமியும் கர்ஜித்துக் கொண்டு கிளர்ந்து எழும்; அக்னி ஜ்வாலை மின்னும்.
மேகங்கள் மழை பொழிந்து நதிகளில் பிரவாஹத்தை ஏற்படுத்தும்.
சக்ரநேமியும் அசுர ராக்ஷஸ பத்னிகளின் கண்களில் கண்ணீர் பிரவாஹத்தை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட ஸூதர்சன நேமியானது உங்களை காப்பாற்றட்டும்.

___________________________________________

ஸூதர்சன நேமியை யாகம் செய்யும் யஜமானனாக உருவகப்படுத்துகிறது இந்த ஸ்லோகம்.

“ஸந்தோஹம் தாந வாநாம அஜஸமஜமிவாஸ் லப்ய ஜாஜ்வல்ய மாநே
வந்ஹாவந்ஹாய ஜுஹ்வத் த்ரிதச பரிஷதே ஸ்வ ஸ்வபாக ப்ரதாயீ,
ஸ்தோத்ரைர் ப்ரஹ்மாதி கீதைர் முகர பரிஸரம் ச்லாக்க்யசஸ்த் ப்ரயோகம்
ப்ராப்தஸ் ஸங்க்ராம ஸத்ரம் ப்ரதிரஸுர ரிபோ: ப்ரார்த்திதம் ப்ரஸ்நுதாம் வ:”.–38-

யஜமானன் ‘பசூந் ஆலபேத’ என்கிற விதிக்குச் சேர ஆடுகளை வெட்டி யாகாக்னியில் ஆஹூதிகளைச் செய்கிறான்.
ஸூதர்சன நேமியானது அசுர வர்கங்களை வெட்டி வீழ்த்தி யுத்தாக்னியில் இடுகிறது.
பிரம்மா,உத்காதா முதலானவர்கள் உச்சரிக்கும் ஸ்தோத்திரம் ஒலிகள் நிறைந்த இடம் யாக பூமி;
பிரம்மா முதலான தேவர்களால் துதிக்கப்படும் ஸ்தோத்திர ஒலிகள் நிறைந்தது யுத்த பூமி.
சாஸ்த்ர ரூபமான மந்த்ர வாக்யமும் சஸ்த்ர ரூபமான வேத வாக்கியமும் கேட்கப்படும் இடம் யாகபூமி.
கத்தி முதலான சஸ்திரகளின் சப்தங்கள் கேட்கும் இடம் யுத்தபூமி.
இவ்வாறு அசுர ராக்ஷஸர்களை வீழ்துவதும் , தேவ சமூஹம் விரும்புவடைக் கொடுக்கின்றதுமான
திருவாழியின் நேமியானது உங்களுடைய அபேக்ஷித்தைப் பெருக்கட்டும்.

___________________________________________

இனி முதல் 50 வது ஸ்லோகம் வரை அர வர்ணனம்.

அரம் என்பது திருவாழியாழ்வானின் பாகங்களில் ஒன்று.
குடைகளில் கம்பி போல சக்கரத்தில் விளங்கும் பாகம்.
அரங்களை வர்ணித்தாலும் அது திருவாழி யாழ்வானையே துதித்ததாக ஆகும்.

உத்பாதாலாத கல்பாந் யஸுர பரிஷதா மாஹவ ப்ரார்த்தி நீநாம்
அத்வாந த்வாவபோத க்ஷபண சண தம: க்ஷேபதீபோமாநி
த்ரைலோக்யாகார பாரோத்வஹந ஸஹமணி ஸ்தம்ப ஸம்பத் ஸகாநி
த்ராயந் நாமந்தி மாயாம் விபதி ஸபதி வோஸ்ராணி ஸெளதர்சநாநி”.–39-

உத்பாதம் திடீர் என்று தோன்றும் அசூப நிமித்தங்கள்
யுத்தத்தை விரும்புகிற அசுர கூட்டங்களுக்கு ஏற்படப் போகும் விநாசத்தை முன் கூட்டியே தோற்றுவிக்கும் ஆகாசக்
கொள்ளிக் கட்டை போன்றவைகளாயும்
நல்ல வழி தீய வழிகளை தெரிந்து கொள்வதைக் கெடுக்கும் இருளை நீக்குவதில் தீவட்டிகள் போன்றவைகளாயும்,
மூவுலகமாகிற மாளிகையின் சுமைகளைத் தாங்கும் ரத்ன ஸ்தம்பம் போன்றவைகளாயும் இருக்கிற
திருவாழி யாழ்வானின் அரங்கள் உங்களைக் கடைசி கால ஆபத்திலிருந்து காப்பாற்றட்டும்.

___________________________________________

கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் சக்ர அரங்கள் -கநக லதைகளாக உருவகம் இதில் –

ஜ்வாலாஜால ப்ரவாள ஸ்தபகித சிரஸோ நாபி மாவால யந்த்ய:
ஸிக்தா ரக்தம்பு பூரைச் சகலித வபுஷாம் சாத்ரவா நீகிநீநாம்,
சக்ரா க்ரீட ப்ரரூடா புஜக சய புஜோ பக்ந நிச்ந ப்ரசாரா:
புஷ்யந்த்ய: கீர்த்தி புஷ்பாண்யர கநக லதா: ப்ரீ தயே வ: ப்ரதந்தாம்”.--40-

திருவாழியாகிறத் தோட்டத்தில் முளைத்தவை யாகிற நாபி என்னும் அவயவத்தைப் பாத்திகளாகக் கொன்டு,
சத்ரு சேனைகளின் ரத்தமாகிற ஜலத்தினால் நனைக்கப்பட்டு ,
அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளின் புஜத்தையே தான் வளர்வதற்குக் கொழு கொம்பாக நாடிச் செல்வதுமாயும் ,
ஜ்வாலைகளாகிற கொழுந்துகளைக் கொத்தாக கொண்டும் விளங்கும் அரங்களாகிற பொற்கொடிகள்
உங்களுடைய ப்ரீதி அதிகமாவதற்காக வளர்ந்து வ்ருத்தி அடையட்டும்.

___________________________________________

சக்கரத்தின் அரங்களும் ஆதிசேஷன் படங்களும் ஒன்று.

“ஜ்வாலா ஜாலாப்தி முத்ரம் க்ஷிதிவலய மிவா விபிப்ரரதீ நேமி சக்ரம்
நாகேந்த்ரஸ்யேவ நாபே; பண பரிஷதிவ ப்ரௌடாத்ந ப்ரகாசா,
தத்தாம் வோ திவ்ய ஹேதேர் மதிமரவிததி: க்க்யாத ஸாஹஸ்ர ஸங்க்க்யா
ஸங்க்க்யாவத் ஸங்க்க சித்தஸ் ஸ்ரவண ஹர குணஸ் யந்தி ஸந்தர்ப்ப கர்ப்பாம்”.–41-

ஆதிசேஷனின் பணங்கள் பூ மண்டலத்தைத் தாங்கி கொண்டிருக்கும்.
அரங்களும் சக்கரத்தின் நேமியைத் தாங்கி நிற்கும்.
பூமண்டலம் சமுத்திரத்தின் திரத்தினால் சூழப்பட்டு இருக்கும்.
நேமியும் ஜ்வாலையால் சூழப்பட்டிருக்கும்.
சுருண்டிருக்கும் பாம்பின் உடம்பிலிருந்து பல படங்கள் பரவி பரந்து இருக்கும்.
ஸூதர்சன நாபியிலிருந்து பல அரங்கள் பணைந்திருக்கும்.
பாம்பு பணங்களில் ரத்தினங்கள் இருக்குமாதலால் ரத்தின ப்ரகாசமாக இருக்கும்.
அரங்களும் ரத்தின ப்ரகாசங்கள் நிறைந்தவையாக இருக்கும்.

இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு பண்டிதர்களின் நெஞ்சையும் காதுகளையும் கவரக் கூடிய சொற்களைச்
சொல்லும்படியான வாக் விலாஸங்களைப் பெருக்கும் புத்தியை அளிகட்டும்.

___________________________________________

ப்ரம்ஹேசோப க்ரமாணாம் பஹுவித விமத க்ஷோத ஸம்மோதி தாநாம்
ஸேவாயை தேவதாநாம் தநுஜ குலரிபோ: பிண்டிகாத் யங்க பாஜாம்,
தத்தத் தாமாந்த ஸீமா விபஜந விதயே மாநத கண்டாயமாநா
பூமாநம் பூயஸா வோ திசது தசசதீ பாஸ்வராணா மராணாம்”.--42-

தங்கள் தங்களுடைய சத்ருக்களைத் திருவாழி வாழ்வான் பங்கப்படுத்தி அழித்து அருளினர் என்கிற காரணத்தினால்
நன்றி தெரிவிக்கும் வகையில் அத்திருவாழி யாழ்வானை எப்போதும் ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு சேவிப்பதற்காக
பிரம்மா சிவன் இந்திரன் முதலிய தேவர்கள் சக்கரத்தின் நாபி முதலிய அவயவங்களை வந்து அடைந்திருக்கிறார்கள்.
அவரவர்களுக்கு உரிய இடங்களை உலகத்தை அளந்து கொடுக்கும் அளவு கோல்களோ என்னும்படி இருக்கும்
அரங்கள் உங்களுக்கு அதிசயமான வியக்கத்தக்க பெருமையை அளிக்கட்டும்.
(சக்கரத்தாழ்வாரின் நாபி முதலான அவயவங்களில் பிரம்மேசாதி தேவர்களை ஆவாஹனம் பண்ணி
இருப்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறது.)

___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனாழ்வான் ஒரு சமுத்திரமாக ரூபிக்கப்படுகிறார்.

“ஜ்வாலா கல்லோல மாலா நிபிட பரிஸராம் நேமி வேலாம் ததாநே
பூர்வேணா க்ராந்த மத்த்யே புவந மய ஹவிர் போஜிநா பூருஷேண,
ப்ரஸ்ப் பூர்ஜத் ப்ராஜ்ய ரத்நே ரதபத ஜலதா வேதமாநை: ஸ்புலிங்கை:
பத்ரம் வோ வித்ருமாணாம் ச்ரயமர விததிர் விஸ்த்ருணாநா விதத்தாம்”.–43-

சமுத்திரம் அலைகள் மோதுகின்ற கரையை உடையதாக இருக்கும்.
ஸ்ரீ ஸூதர்சனாழவான் ஜ்வாலைகளாகிற அலைகள் மோதும் நேமியாகிற கரையை உடையவர்.
ஜல ரூபமான ஹவிஸ்ஸைப் புஜிகின்ற பூர்வ புருஷனை தன் நடுவில் கொண்டிருக்கும் சமுத்ரம் ,
உலகங்களை எல்லாம் புஜிக்கும் ஸூதர்சன புருஷன் வீற்றிருக்கும் மத்திய ப்ரதேசத்தைக் கொண்டிருக்கும் சக்கரம்.
கடலின் பவழங்கள் இருக்கும்.
பவழம் போன்ற தீப் நொறிகளை யுடைய அரங்களைக் கொண்டிருக்கும் திருவாழி.அரங்களே பவழ ஜ்வாலையை ஒத்திருக்கும்.
கடலில் ரதனங்கள் இருக்கும். திருவாழியிலும் ரத்னங்களே அமைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு க்ஷேமத்தை அளிகட்டும்.

வைஸ்வாரன அக்னியே -கடலில் வடவாக்னியாக ஜாலமாகிற ஹவிஸ்ஸைப்
புஜிக்கும் பரமாத்மா -ப்ரஹ்ம ஸூதரம் சொல்லுமே

___________________________________________

ஸூதர்சன நாபியும் தாமரையும் ஒன்று.-

நா ஸீரஸ் வைர பக்ந ப்ரதிபட ருதிரா ஸார தாரா வஸேகாந்
ஏகாந்த ஸ்மேர பத்ம ப்ரகர ஸஹ சரச் சாயயா ப்ராப்ய நாப்யா,
முக்தாநீ வாங்குராணி ஸ்புரத நல சிகா தர்சித ப்ராக் ப்ரவாளா நி
அவ்யாகாதேந பவ்யம் ப்ரதது பவதாம் திவ்ய ஹேதேரராணி.–44-

தாமரையிலிருந்து அங்குரங்கள் தோன்றும்;
அது போல் நாபியிலிருந்து வெளியில் தோன்றும் அரங்கள் காட்சியளிக்கின்றன.
நாபியே தாமரைப்பூ.
தண்ணீர் பாய்ச்சப் பெற்று தண்ணீரில் நனைந்த விதையிலிருந்தே முளைகள் தோன்றும்.
போர் களத்தில் அழிக்கப்ட்ட அசுர ராக்ஷஸர்களின் ரத்த தாரைகளையே தண்ணீராகப் பெற்று
அரங்களாகிய அங்குரங்கள் தோற்றுவிக்கப் பட்டனவாம்.
அங்குரங்கள் தோன்றும் போது நுனியில் சிவந்த தளிர்களைக் கொண்டிருக்கும்.
இங்கும் ஆரங்களின் அக்னி ஜ்வாலைகள் தளிர்கள் போல் சிவந்திருக்கின்றன.
நன்றாக மலர்ந்த தாமரைகளின் சோபைகளைக் கொண்டது ஸூதர்சன நாபீ கமலம்.
இப்படிப்பட்ட ஸூதர்சன அரங்கள் உங்களுக்கு இடையூறு இன்றி க்ஷேமத்தை அளிக்கட்டும்.

___________________________________________

தாவோல்கா மண்டலீவ த்ரும கண கஹநே பாட பஸ்யேவ வஹ்நே
ஜ்வாலா வ்ருத்திர் மஹாப்தௌ பரவயஸி தமஸி ப்ராதரர்க்க ப்ரபேவ.
சக்ரே யா தாநவாநாம் ஹய கரடிகடா ஸங்கடே ஜாகடீதி
ப்ராஜ்யம் ஸா வ: ப்ரதேயாத் பதமர பரிஷத் பத்மநாபா யுதஸ்ய”.–45-

காட்டுத் தீ பற்றி யெரிந்து மரங்கள் அடர்ந்த காட்டை அழிப்பது போலவும்,
கடலில் படபாக்னி ஜ்வலித்து மிகுதியான தண்ணீரை உட்கொள்வது போலவும்,
ஸூரியன் உதயமாகிப் பேரிருளை அழிப்பது போலவும்,
திருவாழியாழ்வானின் அரச சமூஹம், யானைக் கூட்டம் குதிரைக் கூட்டங்கள் நிறைந்த
அசுர மண்டலத்தில் புகுந்து அசுரர்களை அழிக்கின்றது.
அப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுக்கட்டும்.

___________________________________________

திருவாழியே குடை.-

தாபாத் தைத்ய ப்ரதாபாத பஸமுசிதாத் த்ராயமாணம் த்ரிலோகீம்
லோலைர் ஜ்வாலா கலாபை; ப்ரகடய தபிதச் சீந பட்டாஞ் சலாநி,
ச்சத்ராகாரம் சலாகா இவ கநக க்ருதாச் ஸெளரிதோர் தண்டலக்நம்
பூயாஸுர் பூஷ யந்த்யோ ரத சரண மர ஸ்ப்பூர்த்தய; கீர்தயே வ”.–46-

வெய்யிலிலிருந்து குடை நம்மைக் காப்பாற்றுகிறது.ஆதலால் குடைக்கு ஆதபத்ரம் என்று பெயர்.
திருவாழி, அசுர ராக்ஷஸர்களின் ப்ரதாபமாகிற தாபத்திலே அகப்பட்டுக் கொண்டு வருந்துகிற உலகங்களைக் காப்பாற்றுகிறது.
குடையில் குடைக் கம்பிகள் இருக்கும்.
அதுபோல சக்கரத்திலும் பொற் கம்பிகள் போன்ற அரங்கள் இருக்கும்.
குடையில் சீனப்பட்டு ஜாலர்கள் தொங்க விடப்பட்டு இருக்கும்.
சக்கரத்தைச் சுற்றி ஜ்வாலைகள் சுழன்று கொண்டிருக்கும். அவை ஜாலர்களாக இருக்கும்.
ஒரு காம்பில் குடை மாட்டப்பட்டு இருக்கும்.
சக்கரமும் பகவானின் திருக் கையாகிற மணிக் காம்பில் மாட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்குக் கீர்த்தியை (புகழை) உண்டு பண்ணட்டும்.

___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனத்தின் அரங்கள், யானை கட்டும் கம்பங்களைப் போன்றவை.

நாபீ சாலா நிகாதாம் நஹந ஸமுசிதாம் வைரிலக்ஷ்மீ வசாநாம்
ஸம்யத் வாரீ ஹ்ருதாநாம் ஸமநுவிதததீ காஞ்ச நாலாந பங்க்திம்.
ராஜ்யா ச ப்ராஜ்யத் தைத்ய வ்ரஜ விஜய மஹோத்தம் பிதாநாம் புஜாநாம்
துல்யா சக்ராரமாலா துலயது பவதாம் தூலவச் சத்ரு லோகம்”.–47-

ஒரு பெரிய சாலையில் யானைகளைக் கட்டுவதற்கென்று பல கட்டுத் தறிகள் நாட்டப் பட்டிருக்கும்.
அது போல் சக்ர நாபியாகிற சாலையில் பல அரங்கள் இருக்கின்றன.
போர்களமே யானைப் படுகுழி. அதில் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்ட யானைகள் அசுர ராக்ஷஸர்கள்.
அவர்களுடைய சம்பத்துக்களே யானைப் பேடைகள்.
அவற்றைக் கட்டும் ஆலாநபங்க்தியே ஸ்வர்ணமயமான அரங்கள்.
பகைவர்களை வெல்லும் காலத்தில் கைகளை உயரே தூக்கி ஆராவாரம் செய்வதுண்டு.
அசுர வர்கங்களை வெல்லும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்ய உயரே தூக்கிய புஜ பங்க்திகள் போல் இருக்கின்றன அரங்கள்.
இப்படிப்பட்ட சக்கரத்தாழ்வாரின் அரங்கள் உங்களுடைய சத்ரு வர்க்கத்தை பஞ்சு போல் பறக்கடிக்கட்டும்.

___________________________________________

பூமியைச் சுற்றி இருக்கும் மலை
உள்ளும் புறமும் இரண்டும் இடைவெளி இன்றி உள்ளதால் லோகாலோகம் எனப்படும்
சக்ரவாளம் லோகாலோக பர்வதம் -ஸூர்ய கிரணங்கள் பிரவேசிக்காத பாகம் உண்டே அங்கு
நேமி சக்ரத்தைச் சுற்றி இருப்பதால் லோகாலோகம் -சக்ரவாளமாக ரூபிக்கப்படுகிறது –

ஆநேமச் சக்ரவாலாத் த்விஷ இவ விததா: பிண்டிகாசண்டதீப்தே:
தீப்தா தீபா இவாஸ்ராத் கஹநரணதமீகாஹீந: பூருஷஸ்ய,
சரணே ரேகாயிதாநாம் ரதசரணமயே சத்ருசௌண்டீர்யஹேம்நாம்
ரேகா: ப்ரத்யக்ரலக்நா இவ புவநமரச்ரேணய: ப்ரீணயந்து”.–48-

நேமியாகிற லோக பர்வதம் வரை பரவி இருக்கும் நாபியாகிற ஸூரிய கிரணங்கள் போன்றவயையும்,
போர்களத்தில் நள்ளிரவில் புகும் ஸூதர்சன புருஷன் அருகில் விளங்கும் தீவட்டிகள் போன்றவையும் ,
சக்கரமாகிற உரைகல்லில் உரைக்கப்பட்ட சத்ரு பராக்ரமமாகிற ஸ்வர்ணத்தின் ரேகைகள் போன்றவையுமான
ஸ்ரீஸூதர்சன அரங்கள் உலகை மகிழ்வுடன் வாழ வைக்கட்டும்.

___________________________________________

திருவாழியைத் தாமரையாக ரூபிக்கிறார்.

தீப்தைரர்சி : ப்ரரோஹைர் தலவதி வித்ருதே பாஹு நாளேந விஷ்ணோ:
உத்யத் ப்ரத்யோத நாபம் ப்ரதயதி புருஷம் கர்ணிகா வர்ணிகாயாம்,
சூடாலம் வேத மௌளிம் கலயதி கமலே சக்ரநாம் நோபலக்ஷ்யே
லக்ஷ்மீம் ஸ்ப்பாரா மராணி ப்ரதி விததது வ: கேஸர ஸ்ரீகராணி”.–49-

தாமரை பல இதழ்களைக் கொண்டிருக்கும்.
திருவாழியின் வர்த்துலாகாரமான ஜ்வாலையின் ஸமூஹமே இதழ்கள்.
தாமரை மலர் நாளத்தின் நுனியில் இருக்கும்.
திருவாழியும் எம்பெருமானின் திருக் கைகளாகிற நாளத்தினால் தரிக்கப்பட்டு இருக்கிறது.
தாமரையின் நடுவில் கர்ணிகை (மகரந்தம் அடங்கிய பாகம்) என்று ஒன்று இருக்கும்.
சக்கரமாகிய கமலத்தின் நடுவில் மிகவும் ப்ரகாசமுடைய ஸூதர்சன புருஷன் இருக்கிறார்.
தாமரை சிரோ பூஷணமாக இருந்து அலங்கரிக்கும்.
திருவாழியும் வேத சிரஸ்ஸான உபநிஷத்தை அலங்கரிக்கின்றார்.
கமலத்தின் செந்நிறமான தாதுக்கள் உள்ளன.
திருவாழிக் கமலத்தில் அரங்கள் கேஸரங்களாக இருக்கின்றன.
அந்த அரங்கள் உங்களுக்கு லக்ஷ்மீ கடாக்ஷத்தை அளிகட்டும்.

மஹா உபநிஷத் சதபதம் போன்ற வேதாந்த பாகங்களில்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் மகிமைகள் பேசப்படும் –

___________________________________________

சக்கரமே மலை –
நேமியும் நாபியும் அதன் தாழ்வரை –
சிவந்த மலை அருவிகளே அரங்கள்

தாதுஸ் யந்தைர மந்தை: கலுஷித வபுஷோ நிர்ஜ் ஜராம்ப: ப்ரபாதாந்
அர்சிஷ் மத்யா ஸ்வ மூர்த்யா ரத சரண கிரேர் நேமி நாபீ தடஸ்ய,
வ்யாகுர்வாணார பங்க்திர் விதரது விபுதா லிஸ்த்ருதிம் வித்த கோடீ
கோடீ ரச்சத்ர பீடிகடக கரிகடா சாமர ஸ்ரக்விணீம் வ:”.–50-

நேமியும் நாபியுமாகிற தாழ்வரையைக் கொண்ட சக்ரமாகிற பர்வதத்திலிருந்து ,
கைரிகாதி தாதுப் பொருள்களால் கலங்கி மேலிருந்து கீழே விழும் மலை யருவி வீழ்ச்சிகளைப் போன்ற
ஒளி மிக்க அரங்கள் உங்களுக்கு தன ராசிகளையும் ,
கீரிடம் தோள்வளை மாலை முதலியவற்றை அணிந்து கொண்டு,
திவ்ய சிம்மாசனத்தின் மேல் ஒற்றைக் குடையின் நிழலில் இருபுறமும் சாமரம் வீசப் பெற்று அமரும் பாக்யத்தையும்
பல்லாயிரம் யானைகளைக் கட்டிக் காப்பாற்றி வாழும் வைபவத்தையும் விளைவிக்கட்டும்.

___________________________________________

4- நாபி வர்ணனம்
இது முதல் அறுபத்தொன்றாம் சுலோகம் முடிய நாபி வர்ணனம்.
சுதர்சனாழ்வானின் அவயவங்களில் ஒன்று நாபி.
அவயவங்களுக்கு தனித்தனியாகப் பெருமையைச் சொன்னாலும் அது சுதர்சனாழ்வானுக்கே சொன்னதாக ஆகும்.

ஜக்யேந் த்வாத சாநா மசிசிர மஹஸாம் தர்சயந்தீ ப்ரவ்ருத்திம்
தத்த ஸ்வர்லோக லக்ஷ்ம்யாஸ் திலக இவ முகே பத்ம ராகத்ரவேண,
தேயாத் தைதேய தர்பக்ஷித கரண ரண ப்ரீணிதாம் போஜநாபி:
நாபிர் நாபித்வ முர்வ்யாஸ் ஸுரபதி விபவ ஸ்பர்கிஸெள தர்சநீ வ:“.–51-

திருவாழியாழ்வானின் நாபி த்வாதச ஆதித்யர்களும் ஒன்று சேர்ந்து சக்ர நாபியாக ஆயிற்றே
என்று சொல்லும்படி ப்ரகாசமாக இருக்கிறது.
ஸ்வர்க லோக சாம்ராஜ்ய லக்ஷ்மியின் முகத்தில் பத்மராக மணியின் திரவத்தால் இடப்பட்ட திலகம் போன்று இருக்கிறது.
அசுரர்களின் கொழுப்பை அடக்கவல்ல போர் முறையினால் எம்பெருமானை மகிழ்விப்பதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நாபியானது செல்வச் சிறப்பு மிக்க இந்திரனுடைய ஆட்சிக்கு சமமான அரசாட்சியை உங்களுக்கு அளிக்கட்டும்.

___________________________________________

ஸூதர்சன நாபியை படபாக்னியாக ரூபகம் செய்கிறார்.

சஸ்த்ர ஸ்யாமே சதாங்க க்ஷிதிருப்தி தரளை ருத்தரங்கே துரங்கை:
த்வங்கந் மாதங்க நக்ரே குபிதபட முகச்சாய முக்த ப்ரவாளே:
அஸ்தோகம் ப்ரஸ்துவாநா ப்ரதிபட ஜலதௌ பாடவம் பாடபஸ்ய
ஸ்ரேயோ வஸ் ஸம்விதத் தாம் ஸ்ரித துரித ஹரா ஸ்ரீதராஸ் த்ரஸ்ய நாபி:”–52-

சமுத்திரம் கறுத்து இருக்கும்.
சத்ரு சைன்யமாகிற கடலும் சஸ்திரங்களால் கறுத்திருக்கும்.
மைநாகம் முதலிய மலைகளைக் கொண்டது சமுத்திரம் .
மலை போன்ற தேர்களைக் கொண்டது சத்ரு சைன்யம்.
கடலில் பெரிய பெரிய அலைகள் தாவி வரும்.
சத்ரு சைன்யத்தில் பெரிய பெரிய வெண் குதிரைகள் தாவி வரும்.
கடலில் மிகப் பெரியதாக கறுத்த முதலைகள் இருக்கும்.
சத்ரு சைன்யத்திலும் போர் வீரர்களின் முகங்கள் சீறிச் சிவந்து காணப்படுகின்றன.
இப்பட்டிப்பட்ட சத்ரு சைன்யக் கடலில் இருந்து கொண்டு சைன்யத்தையே விழுங்கும் படபாக்னி போன்ற
சக்ர நாபியானது உங்களுக்கு மங்களத்தை உண்டு பண்ணட்டும்.

___________________________________________

ஜ்வாலா சூடால காலநல சலந ஸமாடம்பரா ஸமாம்பராயம்
யாஸாவாஸாத்ய மாத்யத் ஸுரஸு பட புஜாஸ்போட கோலாஹலாட்யம்,
தைத்யாரண்யம் தஹந்தீ விரசயதி யசோபூதி சுப்ராம் தரித்ரீம்
ஸா வச் சக்ரஸ்ய நக்ரஸ்யத ம்ருதித ஜகத் த்ராயிணீ நாபிரவ்யாத்”.–53-

தேவாசூரர்கள் போர் செய்யும் போர் களத்தில் புகுந்து, காலாக்னி போல் ஜ்வாலைகளினால்
அசுர ராக்ஷஸ சைன்யமாகிற பெருங்காட்டைக் கொளுத்தி சத்ருசைன்யத்தை அழித்ததால் ஏற்பட்ட புகழாகிற
சாம்பலை பூமி முழுவதும் பரப்பி வெளுப்பாக ஆக்கிய சக்ர நாபியானது,
முதலை வாயில் அகப்பட்டுத் துடித்த கஜேந்திராழ்வானை ரக்ஷித்தது போல் உங்களை ரக்ஷிக்கட்டும்.

___________________________________________

சக்ர நாபி ராத்ரியாக வர்ணிக்கப்படுகிறது.

விந்தந்தீ ஸாந்த்ய மர்சிர் விதலித வபுஷ: ப்ரத்யநீகஸ்ய ரக்தை:
ஸ்பாயந் நக்ஷத்ர ராசிர் திசிதிசி கணச கீகஸை: கீர்யமாணை:
நாகௌக: பக்ஷ்மலாக்ஷீ நவமத ஹஸித ச்சாயாயா சந்த்ர பாதாந்
ராதாங்கீ விஸ்த்ருணாநா ரசயது குசலம் பிண்டி காயாமிநீ வ:”.–54-

ராத்திரியானது சாயங்காலத்தில் சந்தியா வேளையின் சிவந்த ஒளியைப் பெற்று சிவந்திருக்கும்.
சக்ர நாபியானது ராக்ஷஸர்களின் உடல்களைச் சிதைத்து அவற்றிலிருந்து தோன்றிய
ரக்தங்களால் நனைக்கப்பட்டு சிவந்திருக்கும்.
ராத்திரியானது நக்ஷத்திர கூட்டங்களால் வியாபிக்கப்பட்டு இருக்கும்.
சக்கர நாபியானது சத்ருக்களின் எலும்புகளைப் பொடியாக்கி எங்கும் இறைத்து இருப்பதால்
நக்ஷத்திரங்களால் நிரப்பப்பட்டது போல் இருக்கும்.
ராத்திரியானது சந்திரனின் ஒளியைப் பெற்றிருக்கும்.
சக்ர நாபியும் தேவதாஸ்த்ரீகள் சிரிப்பொளியால் நிலவு ஒளி வீசுவது போல் இருக்கும்.
இப்படிப்பட்ட சக்ர நாபியானது உங்களுக்கு க்ஷேமத்தை பண்ணட்டும்.

___________________________________________

சக்ர நாபியானது சக்ர ஜ்வாலையாகிற நதியில் ஏற்பட்ட சுழிபோல் இருக்கிறது.

நிஸ் ஸீமம் நிஸ் ஸ்ருதாயா: புஜதரணி தராகாடாத: கைடபாரே
ஆசாகூலங்க ஷர்த்ரே ஹதபல மஹாம் போதி மாஸாதயந்த்யா:
சக்ர ஜ்வாலா பகாயாச் சலதர லஹரீ மாவிகா தந்துராயா:
பிப்ரத்யா வர்தபாவம் ப்ரமயது புவநே பிண்டிகா வ: ப்ரசஸ்திம்”.–55-

பெரிய ஆறுகள் எல்லாம் மலைகளிலிருந்தே தோன்றி வெளிவரும்;பெருகும்.
எம்பெருமானின் மலை போன்ற புஜத்திலிருந்தே சக்ரஜ்வாலையாகிற நதி வெளிவருகிறது.
மஹாநதிகள் கரை புரண்டு ஓடும். ஜ்வாலா நதியும் திசைகளை மறைத்துக் கொண்டு பரவியுள்ளது.
நதிகள் கடலில் போய் சேரும்.சக்ர ஜ்வாலையும் தேவாசூர சைன்யமாகிற பெருங்கடலில் கலந்திருக்கும்.
நதிகள் அலைகளைக் கொண்டிருக்கும். சக்ரஜ்வாலா நதியும் பல ஆரங்களாகிற அலைகளைக் கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட சக்ர நாபியானது உலகமெங்கும் உங்கள் புகழைப் பரப்பட்டும்

———————–

ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.

பாணௌ க்ருத வாஹ வாக்ரே ப்ரதிபட விஜயோ பார்ஜிதாம் வீரலக்ஷ்மீம்
ஆநீதா யாஸ்த தோஸ்யா: ஸ்வ ஸலித மஸுரத்வேஷிணா பூருஷேண,
ப்ராஸாதம் வாஸ ஹேதோர் விரசித மருணை ரச்மிபிஸ் ஸூசயந்தி
நாபீர்வோ நிர்மிமீதாம் ரதசரண பதேர் நிர்வ்ருதிம் நிர்விகாதாம்”.–56

சத்ருக்களை வென்று சம்பாதித்து கொள்ளப்பட்ட வீரலக்ஷ்மியைப் போர்களத்தில் பாணி க்ரஹனம்
செய்து கொண்டு அழைத்து வந்து அவள் சுகமாஎ வாழ்வதற்காக
ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.
தர்சன புருஷனால் சிவந்த கிரணங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மாட மாளிகைகள் போன்ற
ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.
தர்சன நாபியானது உங்களுக்கு இடையூறு இல்லாத சுகத்தை உண்டு பண்ணட்டும்.

———–

டிண்டீரா பாண்டு கண்டை ரரியுவதி முகை: பிண்டிகா க்ருஷ்ணஹேதே:
உச்சண்டாச்ரு ப்ரவர்ஷை ருபரததிலகை: உக்த சௌண்டீர்ய சர்யா,
த்வித்ர க்ராமாதி பத்ய த்ருஹிண மதமஷீ தூஷிதாக்ஷ க்ஷமாப்ருத்
ஸேவாஹேவா கபாகம் சமயது பவ தாம் கர்ம சர்மப்ர தீபம்.–57-

பர்த்தாக்களின் விரஹத்தினால் வெளுத்திருக்கிற சத்ரு ஸ்த்ரீகளின் கன்னங்களும்
அவர்களும் எப்போதும் அழுது கொண்டே இருப்பதும்,
நெற்றியில் மங்களகரமான திலகம் இல்லாததுமான நிலைகள் சக்ர நாபியின் மிடுக்கை அறுதி இடுகின்றன.
இரண்டு மூன்று கிராமங்களுக்கு அதிபதியாக இருப்பதைக் கொண்டே, தங்களை பிரம்மாவாக நினைத்துக் கொண்டும் ,
அஹங்கார மமகாரங்களால் இந்திரியங்கள் கெட்டு இருக்கும் அரசர்களுக்கு அடிமைப் பட்டிருக்க வேண்டும் என்ற
துர்புத்தியைத் தோற்றுவிக்கும் துஷ்கர்மாவை சக்ர நாபியானது போக்கி அருளட்டும்.

___________________________________________

பர்யாப்தா முந்நதிம் யா ப்ரதயதி கமலம் யா திரோபாவ்ய பாதி
ஸ்ரஷ்டுஸ் ஸ்ருஷ்டேர் தவீய: குவலய மஹிதம் யா பிபர்தி ஸ்வரூபம்,
பூம்நா ஸ்வேநாந்தரிக்ஷம் கபலயதி ச யா ஸா விசித்ரா விதத்தாம்
தைதேயாராதிநாபிர் த்ரவிண பதிபத த்வேஷிணீம் ஸம்ப தம் வ:”–58-

பரிபூர்ணமான உயர்வை விளக்கி பிரகாசப்படுத்தி கொண்டிருப்பதும் ,
தாமரைப் பூவையும் திரஸ்கரித்து விளங்குவதும் பூமண்டலத்திலுள்ளவர்களாலும் பூஜிக்கப்படும்
ஸ்வரூபத்தை உடையதும் தன் பெருமையினால் அந்தரிக்ஷ லோகத்தையும் வெல்வதுமாகிற
விசித்திரமான ஸூதர்சன நாபியானது உங்களுக்கு குபேர செல்வத்தினும் மேலான செல்வத்தை அளிக்கட்டும்.
___________________________________________

பிரம்மா விஷ்ணு ருத்ரர்களாகிற த்ரீமூர்த்திகளின் பத்னி சாதர்ம்யம்
சக்ர நாபிக்கு உண்டு என்று இதில் கூறப்படுகிறது

வாணி வாங்கைச் சதுர்பிஸ் ஸதஸி ஸுமநஸாம் த்யோதமாந ஸ்வரூபா
பாஹ்வந்தஸ்த்தா முராரே பிமத மகிலம் ஸ்ரீரிவ ஸ்பர்சயந்தீ,
துர்கேவோக்ரா க்ருதிர் யா த்ரிபுவந ஜநந ஸ்தேம ஸம்ஹார துர்யா
மர்யாதா லங்கநம் வ: க்ஷபயது மஹதீ ஹேதி வர்யஸ்ய நாபி:”--59-

வாக்தேவதையான சரஸ்வதியானவள் பண்டிதர்கள் நிரம்பி ஸதஸ்ஸில்
பரா பச்யன்தீ மத்யமா வைகரீ என்ற நான்கு அவயவங்களோடு கூடினவளாய் விளங்குவாள்.
சக்ர நாபியும் ஜ்வாலா நேமி அரம் அக்ஷம் என்கிற சக்ர அவயவங்களோடு கூடினதாய் தேவ ஸதஸ்ஸில் விளங்கும்.
மஹாலட்சுமி யானவள் பகவானின் திருமார்பில் அகலகில்லேன் இறையும் என்று இருந்து கொண்டு
எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பாள்.
சக்ர நாபியானது பகவானின் கை நுனியில் இருந்து கொண்டு வேண்டியதெல்லாம் தரும்.
பார்வதி போல் உக்ரமான ரூபத்தோடு இருந்து கொண்டு அசுர ராக்ஷஸர்களின்
சம்ஹார காரியத்தைக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட சக்ர நாபியானது உங்களுடைய ஸ்வாதந்திரிய அபிமானத்தைப் போக்கி
சேஷ்வத மர்யாதையை வளர்க்கட்டும்.
___________________________________________

ஸ்ரக்பிஸ் ஸந்தான ஜாபிர் மதுர மது ரஸ ஸ்யந்த சந்தோஹி நீபிஸ்
பாடீரை ப்ரவ்ட சந்த்ரா தப சய ஸூஷ மாலோ பநைர் லேப நைச்ச
தூபை காலா கரூணாமபி ஸூர ஸூத்ருஸோ விஸ்ர மர்ச்சா ஸூ யஸ்யா
கந்தம் ருந்தந்தி சா வ சிரம ஸூ ரபிதோ நபி ரவ்யதா பவ்யாத் –60-

தேவதா ஸ்தீரிகள் திருவாராதனங்களில் தேன் மணம் வீசும் கற்பக மலர் மாலைகளாலும்
பாரிஜாத புஷ்பங்களாலும் நிலாவின் ஒளியையும் வெல்லும் சந்தனப் பூச்சுக்களாலும்
காரகில் தூபங்களாலும் ஆராதிப்பதால்
அசுர ராக்ஷஸ சரீரங்களின் மாம்ச சம்பந்தத்தினால் ஏற்பட்ட துர்கந்தங்கள் நீங்கிப் பரிமளம் வீசும்
சக்ர நாபியானது நெடுநாட்கள் வரை உங்களை அசுபத்திலிருந்து ரக்ஷிக்கட்டும்.

___________________________________________

அம்ஹஸ் ஸம்ஹத்யா தக்த்வா ப்ரதிஜநி ஜநிதம் ப்ரௌட ஸம்ஸார வந்யா
தூராத் வந்யாந தந்யாந் மஹதி விநதிபிர் தாமநி ஸ்தாபயந்தீ,
விச்ராந்திம் சாச்வதீம் யா நயதி ரமயதாம் சக்ர ராஜஸ்ய நாபி:
ஸம்யந்மோ முஹ்யமாந த்ரி தச ரிபுதசா ஸாக்ஷணீ ஸாக்ஷிணீ வ:”–61-

சம்சாரமாகிற மருகாந்தாரத்தில் காதம் பலவும் திரிந்து உழன்று வருந்தினவர்களின் பல ஜன்மங்களில்
செய்து ஒன்று சேர்ந்த பாவங்களைக் கொளுத்திவிட்டு,
பாபமில்லாதவர்கள் அடையும் இடமாகிய பரமபதத்திற்கு அழைத்து சென்று, அவர்களை நிலை நிறுத்தி
முடிவில்லாத பேரின்பத்தை அளிக்கின்ற சக்ர நாபியானது அநிஷ்டத்தை நீக்குவதிலும் இஷ்டத்தைக் கொடுப்பதிலும்
வல்லமை பொருந்திய சக்ர நாபியானது உங்கள் கண்களை மகிழ்விக்கட்டும்.
___________________________________________

அஷ வர்ணனம் –

ஸ்ருத்வா யந்நாம சப்தம் ச்ருதி பத கடுகம் தேவ ந க்ரீட நேஷு
ஸ்வர்வைரி ஸ்வைரவத்யோ பய விவசதிய: காதரந்யஸ்தசாரா:
மந்தாக்ஷம் யாந்த்யமந்தம் ப்ரதி யுவதி முகைர் தர்சிதோத் ப்ராஸதர்பை:
அக்ஷம் ஸெளதர்சநம் தத் க்ஷபயது பவதா மேதமாநம் தநாயாம்”.–62-

சக்கரத்தின் நடுவில் குறி போன்று ஓரிடம் உள்ளது.இது ஸூதர்சன அவயவங்களில் ஒன்று,
இதற்கு அக்ஷம் என்று பெயர். சொக்காட்தம் என்ற விளையாட்டிற்கும் அக்ஷம் என்று பெயர்.
அக்ஷம் என்ற பெயரைக் கேட்டாலே அசுரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் நடுக்கம்.
ஒரு சமயம் அசுர ஸ்தீரிகள் தேவ மாதர்களோடு சொக்காட்டம் விளையாடினார்கள்.
அப்போது தேவ மாதர்களில் ஒருத்தி எதிர் பாராத விதமாய் அக்ஷம் என்று சொன்னாள்.
ஸூதர்சனத்தால் தாங்கள் விதவைகளாக ஆனபடியால் அக்ஷம் என்ற சொல்லைக் கேட்டவுடனே
ஸூதர்சனாழ்வானின் பெயர் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி விட்டது என்று அஞ்சி நடுங்கி ஆட்டக்காய்களை வீசி எறிந்தார்கள்.
இவர்களுக்கு அஸ்தாநஞ பயசங்கை ஏற்படுவதைக் கண்ட தேவமாதர்கள் சிரிக்க, இவர்கள் வெட்கிதலை குனிந்தார்கள்.
இப்படிப்பட்ட சக்ராக்ஷமானது உங்களுக்கு மேன் மேலும் ஏற்படும் பொருளாசையைத் தடுக்கட்டும்.
___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனத்தின் அக்ஷத்தை வானத்தில் முழங்கும் இடியாக உருவகம் செய்கிறார்.

வ்யஸ்த ஸ்கந்தம் விசீர்ண ப்ரஸவ பரிகரம் ப்ரத்த பத்ரோப மர்தம்
ஸம்யத் வர்ஷாஸு தர்ஷா துர கக பரிஷத் பீ தரக்தோ தகாஸு
அக்ஷம் ரக்ஷஸ் தரூணாமச நிவத்சநை: ஆபதந் மூர்த்நி மூர்த்நி
ஸ்தா தஸ்த்ரா தீசி துர்வ : ஸ்பதகித யசஸோ த்வேஷிணாம் ப்லோஷணாய”.–63-

மழைக் காலங்களில் இடியானது வானத்திலிருந்து மரங்களின் மீது விழுந்து மரக் கிளைகளை முறிக்கும்.
சுதர்சனாக்ஷம் போர்க் காலங்களில் அசுர ராக்ஷஸர்களின் மீது விழுந்து அவர்களுடைய தோள் பட்டைகளை முறிக்கும்.
இடியானது புஷ்பங்களைச் சிதற அடித்துக் கொண்டு விழும்.
அக்ஷமும் அசுர ராக்ஷஸர்களின் பிரஜைகளையும் பரிஜனங்களையும் சிதற அடிக்கும்.
இடியானது மரங்களில் இருக்கும் இலைகளுக்கு நாசத்தை உண்டு பண்ணும்.
அக்ஷமும் அசுர ராக்ஷஸர்களின் ரதகஜ துரக பதாதிகளாகிற சேனைகளுக்கு நாசத்தை உண்டு பண்ணும்.
மழை காலத்தில் நீர்நிலைகளில் சேரும் தண்ணீர் சிவந்திருக்கும்.
தாஹத்தோடு திரியும் பக்ஷிகள் அந்தத் தண்ணீரைப் பருகும்.
அது போல் போர் களங்களில் ஏற்படும் ரக்த தாரைகளை தேவ சமூஹம் பாணங்கள் பருகுவது போல் இருகின்றன.
இப்படிப்பட்ட மகா யசஸ்வியான சக்ராக்ஷமானது உங்களுடைய சத்ருக்களை அழித்து
உங்களுக்கு ஸம்ருத்தியான கீர்த்தியை உண்டாக்கட்டும்.

___________________________________________

திருவாழியாழ்வானை யுத்தமாகிற யக்ஞத்தில் தீக்ஷிதனாகவும்,
சக்ர நாபியை யாக வேதியாகவும்
சக்ர நேமியை சக்ர நேமியை தர்வியாகவும்,
அசுரகுலத்தை ஹவிஸாகவும் ,
அக்ஷத்தை ஹோம குண்டமாகவும் இதில் கூறுகிறார்.

தீக்ஷாம் ஸங்க்ராம ஸத்ரே மஹதி க்ருதவதோ தீப்திபிஸ் ஹம்ஹதாபி:
ஜிஹ்வாலே ஸப்த ஜிஹ்வே தநுஜகுல ஹவிர் ஜுஹ்வதோ நேமி ஜுஹவா,
வைகுண்டாஸ்ரஸ்ய குண்டம் மஹதிவ விலஸத் பிண்டிகா வேதி மத்யே
திச்யாத் திவ்யர்த்திதேச்யம் பதமிஹ பவதா மக்ஷதோந்மேஷ மக்ஷம்”.–64-

மஹாஸத்ரம் என்னும் யாகத்தில் பெரிய யக்ஞத்தில் தீக்ஷிதன் அக்னியில் ஹவிஸ்ஸை இடுவான்.
அது போல் திருவாழி யாழ்வானும் தன்னிடத்தில் உள்ள அக்னியில் அசுர ராக்ஷஸர்களாகிற ஹவிஸ்ஹை இடுகிறார்.
ஹோம ஸாதன பாத்ரங்களில் ஒன்று ஜுஹூ என்பது
அது ஹோமத்திற்கு உரிய பொருள்களை அக்னியில் கொண்டு வந்து சேர்க்கும்.
சக்ர நேமியும் அசுர ராக்ஷஸர்களைத் திரட்டிப் பிடித்து குண்டலத்தில் சேர்க்கிறது.
அக்ஷமே ஹோம குண்டம், ஹோமகுண்டம் ஹோமம் முடிந்த பிறகு நேரம் செல்லச் செல்ல
ஒளி குறைந்து கரியாய் கிடக்கும்.
இங்கு சக்ராக்ஷம் எப்போதும் ஒளி குன்றாமல் இருக்கும்.
இந்த அக்ஷம் உங்களுக்கு திவ்ய பதவியை கொடுக்கட்டும்.

அக்னி
காளீ கராளீ மநோஜவா ஸூலோஹிதா ஸூதூம்ரவர்ணா ஸ்பிலிங்கிநீ விஸ்வதாஸா –
என்று அக்னிக்கு ஏழு நாக்குகள்
___________________________________________

திருவாழியின் அக்ஷமும் சிம்மமும் ஒன்றே.
அக்ஷத்தின் செயலும் ஒன்றாகவே இருக்கிறது.

துங்காத் தோர த்ரி ச்ருங்காத் தநுஜவி ஜயிந: ஸ்பஷ்ட தாநோத்யமாநாம்
சத்ருஸ்தம் பேர மாணாம் சிரஸி நிபதித: ஸ்ரஸ்த முக்தாஸ்த்தி புஞ்ஜே,
ரக்தைரப்யத மூர்த்தேர் விதலந கவிதைர் வ்யக்த வீராயிதர்த்தே:
ஹர்யக்ஷஸ்யாரி பங்கம் ஜநயது ஜகதாம் ஈடிதம் க்ரீடிதம் வ:”--65-

சிம்மம் மலை சிகரத்திலிருந்து யானைகளின் தலை மீது பாய்ந்து, அவற்றின் தலைகளிலிருந்து
முத்துக்களை உதிர்த்து ரத்தத்தில் அளைந்து தன் வீர்யத்தை காட்டும்.
அக்ஷமும் திருவாழியும் எம்பெருமானுடைய ஈரிரண்டு மால் வரைத் தோளிலிருந்து அசுர ராக்ஷஸர்களாகிற
யானைகளின் மீது பாய்ந்து, எலும்புகளைச் சிதற அடித்து ரத்தத்தில் அளைந்து தன் வீரியத்தைக் காட்டுகிறது.
எல்லா லோகங்களாலும் புகழப்படுகிற திருவாழியின் திருவிளையாடல்
உங்களுடைய சத்ருக்களுக்குத் தோல்வியை உண்டு பண்ணட்டும்.

___________________________________

உந்மீலத் பத்ம ராகம் கடகமிவ த்ருதம் பாஹுநா யந் முராரே:
தீப்தாந் ரச்மீந் ததாநம் நயநமிவ யதுத்தாரகம் விஷ்டபஸ்ய,
சக்ரேசார்கஸ்ய யத்வா பரிதிரபிததத் தைத்யஹத்யாமிவ த்ராக்
அக்ஷம் பக்ஷே பதித்வா பரிகடயது வ: தத் த்ரடிஷ்டாம் ப்ரதிஷ்டாம்”.–61-

எம்பெருமான் அணிந்து கொள்ளும் தோள் வளை பத்மராகக் கற்களால் இழைக்கப்பட்டுருக்கும்.
திருவாழி யாழ்வானின் அக்ஷம் தாமரை போல சிவந்திருக்கும். உலகுக்கு ஓர் கண்ணாக இருக்கும் .
இன்னார் இனியார் என்று இல்லாமல் பக்தர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி உஜ்ஜீவிக்கச் செய்யும்.
ஸூரியனைச் சுற்றி இருக்கும் அக்ஷம் , அசுர ராக்ஷஸர்களின் அழிவை அறிவிக்கும் பரிவேஷம் போல் இருக்கிறது.
இப்படிப்பட்ட அக்ஷமானது உங்களுக்கு நிலையான பெருமதிப்பை விரைவில் அளித்திடுக.

ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் பகவானுக்கு நித்ய திவ்ய ஆபரணமாகவும்
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பரிந்து காவல் புரியும் நித்ய ஸூரியாகவும்
ஆஸ்ரித ஸம் ரக்ஷகராயும் இருக்கிறார் அன்றோ –

___________________________________

இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு அடிகள் வராஹ அவதாரத்தின் சரீரத்தை கூறுகிறது.
(ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் தன் வலிமையினால் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட்டான். தேவர்கள், மஹாரிஷிகள் ஆகியோரின் வேண்டுக்கோளை ஏற்றுத்
திருமால் வராஹாவதாரத்தை மேற்கொண்டு கடலுள் சென்று அவ்வசூரனை தேடிப் பிடித்துப் போர் செய்து
அவனை தந்தங்களினால் குத்திக் கொன்று, பாதாளத்தோடு சேர்ந்திருந்த பூமியைத் தன் கோடுகளினால்
மேலே கொண்டு வந்து ஜல தத்துவத்தின் மேல் விரித்தனன்).
ஆதி வராஹம் -வராஹ நாயனார் –
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத்துருவாய்

க்ரீடத் ப்ராக் க்ரோட தம்ஷ்ட்ராஹதி தளித ஹிரண்யாக் ஷவக்ஷ: கவாட
ப்ராதுர்ப் பூத ப்ரபூத க்ஷதஜ ஸமுதி தாரண்ய முத்ரம் ஸமுத்ரம்,
உந்மீலத் கிம்சுகாபை ருபஹஸ தமிதை: அம்சுபி: ஸம்சயக்நீம்
அக்ஷம் சக்ரஸ்ய தத்தாமக சதசமநம் தாசுஷீம் மேமுஷீம் வ:”.–67-

முருக்க மலர் போன்று தேஜஸ்ஸை உடைய கோல வராஹம் தன் கோடுகளினால் ஹிரண்யாக்ஷனை
மார்பில் குத்திய போது ரத்தம் கிளர்ந்து கடல் நீரையே செந்நிறமாக்கியது.
அந்த நிறத்தையும் தோற்கடிப்பதாக இருக்கிறது ஸூதர்சன அக்ஷத்தின் நிறம்.
அந்த அக்ஷம் உங்களது பாவ சமூகத்தையும் அழித்து சம்சயங்களைப் போக்கவல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.
___________________________________

உலகில் தேஜஸானது ஸூர்யன் சந்திரன் அக்னி என்று மூன்றும் சேர்ந்து அக்ஷமாக இருக்கிறது
என்று இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.

பத்மோல்லாஸ ப்ரதம் யஜ் ஜநயதி ஜகதீ மேதமாந ப்ரபோ தாம்
யஸ்ய ச்சாயா ஸமாநா லஸதி பரிஸரே ரோஹிணீ தாரகாக்ரியா,
நாநா ஹேத் யுந்நதத்வம் பரகடயதி ச யத் ப்ராப்த க்ருஷ்ண ப்ரயாணம்
த்ரேதா பிந்நஸ்ய தாம்நஸ் ஸ்முதய இவ தத் பாது வச் சாக்ரமக்ஷம்”.–68-

ஸூரியன் தாமரையை மலர்விக்கிறது. இருளை நீக்கி பிரகாசத்தை வளர்கிறான்.
தீயோரை அழித்து நல்லோரை ரக்ஷிப்பது என்ற சங்கல்பம் கொண்ட பெரிய பிராட்டியாரின் திருவுள்ளத்தை உகப்பிக்கிறான்.
உத்க்ருஷ்டமான ஞானத்தை வளர்கிறான்.
கார்த்திகை நக்ஷத்திரங்கள் ஏழு.மற்ற அஸ்வினி முதலான நக்ஷத்திரங்கள் இருப்பத்தாறு.
ஆக மொத்தம் முப்பத்து மூன்று நக்ஷத்திரங்கள்.இவற்றுள் ரோகிணி நக்ஷத்திரத்தின் மீது சந்திரனுக்கு ப்ரேமம் அதிகம்.
ஸூதர்சன யந்திர அமைப்பில் ப்ரணவஸ்தாபனம் உண்டு என்று கூறப்படுகிறது.
இப்படி ஸ்ரேஷ்டமாய் சிவந்த ஒளியுடன் அக்ஷம் விளங்குகிறது.
பல ஜ்வாலைகளில் அக்னி ஜ்வாலையே உயர்ந்தது.புகையைப் பின்பற்றி புகை வழயே அக்னி செல்லும்.
அஸ்திரங்களில் சிறந்தது திருவாழி. க்ருஷ்ண பரமாத்மாவின் திருவுள்ளத்தைப் பின் பற்றியே இது செல்லும்.
இப்படிப்பட்ட ஸூதர்சன அக்ஷம் உங்களை ரக்ஷிக்கட்டும்.
___________________________________

இந்த ஸ்லோகத்தில் பரசு ராம விருந்தாந்தம் கூறப்படுகிறது.
(ஸ்ரீமந்நாராயணனன் ஜமத்கனி மஹரிஷிக்கும் ரேணுகைக்கும் குமாரனாக அவதரித்தவர்.
இவர் பரசு எனப்படும் கோடாலிப் படையை ஆயுதமாக வைத்திருந்தார்.
தந்தையைக் கொன்ற கார்த்த வீர்யார்ஜுனன் மீது கொண்டிருந்த கோபத்தினால் அவனையும் அழித்து
இருபத்தொரு தலை முறை க்ஷத்திரிய அரசர்களையும் கொன்று, அவர்களுடைய ரத்தத்தினால் ஏற்பட்ட
குளத்தில் நீராடி அதில் பித்ரு தர்பணம் செய்ததாக வரலாறு).

சோசிர்பி: பத்மராக த்ரவஸம ஸுஷமைச் சோபமாநாவகாசம்
ப்ரத்ய க்ராசோக ராக ப்ரதிபட வபுஷா பூஷிதம் பூருஷேண
அந்த: ஸ்வச் சந்த மக்நோத்தி ப்ருகு தநயம் க்ஷத்ரியாணாம் ஹதாநாம்
ஆரப்தம் சோணி தௌகைஸ் ஸர இவ பவதோ திவ்ய ஹேத் யக்ஷமவ்யாத்.”–69-

பத்ம ராகத்வம் போல் சிவந்து பெரிய குழிபோல் இருக்கிறது சக்ராக்ஷம்,
அசோக மலர் போல் சிவந்த ஒளியை உடைய ஸூதர்சன புருஷன் அக்ஷத்தின் நடுவில் இருப்பதானது,
ரக்த தடாகத்தில் மூழ்க்கிக் கிளம்பும் பரசுராமனே என்று சொல்லும்படி இருந்தது.
அப்படிப்பட்ட சக்ராக்ஷம் உங்களை ரக்ஷிக்கட்டும்.
___________________________________

மத்தாநாமிந் த்ரியாணாம் க்ருத விஷய மஹா காநந க்ரீடநாநாம்
ஸ்ருஷ்டம் சக்ரேச்வரேண க்ரஹண திஷணயா வாரிவத் வாரணாநாம்,
கம்பீரம் யந்த்ரகர்தம் கமபி க்ருததியோ மந்வதே யத் ப்ரதேயாத்
அஸ்தூலாம் ஸம்விதம் வஸ் த்ரிஜக தபிமத ஸ்தூலலக்ஷம் தத்க்ஷம்”--70-

பெரிய காடுகளில் கொழுத்து திரியும் யானைகளை பிடிப்பதற்காக அரசர்கள் மிகவும் ஆழமான
பெரும் பள்ளத்தை வெட்டுவிப்பார்கள். இந்த யானை விழும் பள்ளத்திற்கு வாரீ என்று பெயர்.
விஷயாந்தரங்களாகிற காடுகளில் மதம் கொண்டு திரியும் ஐம்புலன்களாகிற இந்திரியங்களை
மடக்கிப் பிடிக்கும் குழியாக இருக்கிறது சக்ராக்ஷம்.
இந்தக் குழியை வெட்டினவர் திருவாழியாழ்வான்.
அப்படிப்பட்ட ஸூதர்சன சக்கரமானது உங்களுக்கு ஸூக்ஷ்ம புத்தியை அளிக்கட்டும்.

———-

ப்ராணாதீந் ஸம்நியம்ய ப்ரணி ஹித மநஸாம் யோகிநாமந் தரங்கே
துங்கம் ஸங்கோச்ய ரூபம் விரசித தஹராகாச க்ருச்ச் ராஸிகேந,
ப்ராப்தம் யத் பூருஷேண ஸ்வ மஹிம ஸத்ருசம் தாம காம ப்ரதம் வ:
பூயாத் தத் பூர்புவஸ் ஸ்வஸ்த்ரய வரிவஸிதம் புஷ்கராக்ஷா யுதாக்ஷம்”.--71-

ப்ராணன் முதலான வாயுக்களை அடக்கி மனோ திடத்துடன் இருக்கும் யோகிகளின் ஹ்ருதயத்தில்
உள்ள மிகவும் ஸூக்ஷ்மமான தஹாரகாசத்தில், தன் பெரிய வடிவைச் சுருக்கிக் கொண்டு
திருவாழியாழ்வான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு வீற்றிருக்கிறார்.
அவருக்குத் தன் பெருமைக்கு ஏற்றவாறு தாராளமாக வீற்றிருக்க அக்ஷஸ்தானம் கிடைத்தது.
அதில் திருவாழி யாழ்வான் விசாலமான திருமேனியுடன் மிகவும் மகிழ்வுடன் இருக்கிறார்.
மூவுலகங்களிலும் பூஜிக்கப்படுகிற செங்கண்மாலின் திவ்யாயுதத்தினுடைய மிகப் பெரிய
சக்ராக்ஷமானது உங்களுக்கு சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கட்டும்.
___________________________________

இலையுதிர் காலத்தில் ஸூர்யோதய மையத்தில் தோற்றமளிக்கும் ஆகாசம் போல்
சக்கரத்தின் அக்ஷம் இருக்கிறது.

வித்தாந் வீத்ரேண தாம்நா சரண நகபுவா பத்த வாஸஸ்ய மத்யே
சக்ராத் யக்ஷஸ்ய பிப்ரத் பரிஹஸித ஜபாபுஷ்ப கோசாந் ப்ரகாசாந்:
சுப்ரை ரப்ரைர தப்ரைச் சரதி தத இதோ வ்யோம விப்ராஜமாநம்
ப்ராதஸ் த்யாதி த்யரோசிஸ் ததமிவ பவத: பாது ராதாங்கமக்ஷம்”.–72-

இலையுதிர் காலத்தில் ஸூர்யோதய மையத்தில் ஆகாசத்தில் வெண்ணிறமான மேகக் கூட்டங்கள் நிறைந்திருக்கும்.
சில இடங்களில் வெண்மையான நிறமும்
சில இடங்களில் அடி வானத்தில் தோன்றும் ஸூரியனின் செஞ்சுடர் பரவி இருக்கும்.
அது போல் திருவாழியாழ்வானின் திருவடி நகங்களிலிருந்து தோன்றும் வெண்சுடர்களும்
ஜபாகுஸுமம்(செம்பருத்தி) என்ற புஷ்பம் போன்ற செஞ்சுடர்களும் எங்கும் கலந்து காணப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஆகாசம் போல் இருக்கும் திருவாழியின் அக்ஷம் உங்களைக் காப்பாற்றட்டும்.
___________________________________

ஸ்ரீ வாணீ வாங் ம்ருடாந்யோ விதததி பஜநம் சக்தயோ யஸ்ய திக்ஷú
ப்ராஹ வ்யூஹம் யதாத்யம் ப்ரதமமபி குணம் பாரதீ பாஞ்சராத்ரீ,
கோராம் சாந்தாம் ச மூர்த்திம் ப்ரதயதி புருஷ: ப்ராக் தந: ப்ரார்த்தநாபி:
பக்தாநாம் யஸ்ய மத்யே திசது ததந காமக் ஷமத்யக்ஷதாம் வ:”–73-

ஸ்ரீ ஸூதர்சன அக்ஷமானது,
வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்கள் என்று சொல்லப்படுகின்ற ப்ரதம வியூகமாகவும்
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்களுள்
ஞானம் என்கிற ப்ரதம(முதல்) குணமாக அஹிர்புத்நிய சம்ஹிதைகளிலே சொல்லப்படுகிறது.
ஸ்ரீ, வாணீ,வாக், ம்ருடாநீ ஆகிய நான்கும் வாசுதேவாதிகளான நான்கு மூர்த்திகளின் சக்திகள்.
இவை நான்கும் நான்கு திசைகளிலும் இருந்து கொண்டு ஸூதர்சனரின் அக்ஷத்தை ஸ்தோத்திரம் செய்கின்றன
என்று பாஞ்சராத்ர சாஸ்திரம் கூறுகிறது.
பக்தர்கள் மங்களாசாசனம் செய்வதற்காக சேவிக்கும் போது சாந்த மூர்த்தியாக ஸூதர்சனாழ்வான் சேவை சாதிக்கிறார்.
பக்தர்கள் அநிஷ்ட நிவாரணத்திற்காக பிரார்த்திக்கும் போது பயங்கர உருவத்துடன் சேவை சாதிக்கிறார்.
அப்படிப்பட்டவர் உங்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் தன்மையை அளிக்கட்டும்.
___________________________________

ரக்ஷ: பக்ஷேண ரக்ஷத் க்ஷதமமரகணம் லக்ஷ்ய வைலக்ஷ்ய மாஜௌ
லக்ஷ்மீ மக்ஷீய மாணாம் வல மதந புஜே வஜ்ர சிக்ஷாநபேக்ஷே,
நிக்ஷிப்ய க்ஷிப்ர மத்ய க்ஷயதி ஜகதி யத் தக்ஷ தாம் திவ்ய ஹேதே:
அக்ஷாமா மக்ஷமாம் தத் க்ஷபயது பவதாமக்ஷ ஜில்லக்ஷ மக்ஷம்”.--74-

போர் களத்தில் ராக்ஷஸர்களாலே தாக்கப்பட்டு வெட்கமடைந்து தலை குனிந்து நிற்கும்
தேவ கணத்தை ரக்ஷித்து நிற்கிறது ஸூதர்சன அக்ஷம்.
வஜ்ராயுதத்தைப் பிரயோகிக்கும் முறை அறிய இசையாத இந்திரனுடைய கையில் குன்றாத
விஜய லட்சுமியை கொண்டுவந்து சேர்த்து
(வஜ்ராயுதத்தினால் ஆக வேண்டிய காரியத்தை தானே நிர்வகித்து)
தன் சாமர்த்தியத்தைச் சக்ராக்ஷம் உலகுக்கு உணர்த்துகிறது.
இப்படிப்பட்ட ஸூதர்சனத்தின் அக்ஷத்தினால் கொடிய வியாதி போன்ற பொறாமை நீங்கட்டும்.

இந்த்ரிய கிங்கரர்கள் ஜெயித்தவர்கள் அஹிர் புத்ந்யாதிகள் என்கிறார் ஸ்வாமி தேசிகன்

___________________________________

(இது முதல் 100 ஸ்லோகம் வரை சுதர்சன புருஷ வர்ணநம்)

ஜ்யோதிச் சூடால மௌளிஸ் த்ரி நயந வதன: க்ஷோடசோத் துங்க பாஹு:
ப்ரத்யாலீடேந திஷ்டந் ப்ரணவ சச தராதார ஷட்கோண வர்தீ,
நிஸ் ஸீமேந ஸ்வதாம்நா நிகிலமபி ஜகத் க்ஷேமவந் நிர்மிமாண:
பூயாத் ஸெளதர் சநோ வ: ப்ரதிபட பருஷ: பூருஷ: பௌருஷாய”.--75-

ஜோதிர் மயமான ஊர்த்வாக்ரமான ஜடா முடியை உடையவராய்,
மூன்று கண்களைக் கொண்டவராய்,
பதினாறு திருக்கைகளைக் கொண்டவராய்,
இடத் திருவடியை நீட்டிக் கொண்டு வலத் திருவடியைக் குறுக்கி நிற்பதாகிற ப்ரத்யாலீட ஸ்திதியில் நிற்பவராய்,
ப்ரணவத்தையும் சந்திரமண்டலத்தையும் ஆதாரமாக கொண்ட ஷட் கோணத்தில் இருப்பவராய்
எல்லை யில்லாத தன் தேஜஸ்ஸால் எல்லா உலகங்களுக்கும் க்ஷேமத்தை அளிப்பவராய்,
அசுர ராக்ஷசர்களுக்கு கொடியவராகவும் இருக்கும் திருவாழியாழ்வான் உங்களுக்கு பௌருஷத்தை அளிக்கட்டும்.

முன் பக்கம் சந்த்ர மண்டலத்தையும்
அதில் ப்ரணவத்தையும்
அதன் மேல் ஷட் குணத்தையும் எழுதி
அதன் மேல் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானை ப்ரதிஷ்டானம் செய்து
ஸ்ரீ ஸூ தர்சன யந்த்ரம் அமைப்பார்கள் –

———

வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷணம் கைடபாரே:
சக்திர் யஸ்யேஷு தம்ஷ்ட்ரா நக பரசு முக வ்யாபிநீ தத் விபூத்யாம்
கர்தும் யத் தத்வ போதோ ந நிசிதமதிபிர் நாரதாத்யைச்ச சக்ய:
தைவீம் வோ மாநுஷீம் ச க்ஷிபது ஸ விபதம் துஸ்தரா மஸ்த்ர ராஜ:”.–76-

பகவத் சாஸ்த்ரங்கள் திருவாழி யாழ்வானை பரவாசுதேவனுடைய சங்கல்பமாக தெரிவிக்கின்றன.
திருவாழி யாழ்வானுடைய சக்தியானது எம்பெருமானின் விபவாவதாரங்களில்
ராமாவதாரத்தில் அவனது பாணங்களிலும்
வராஹாவதரத்தில் கோரைப் பற்களிலும்
நரசிம்ம அவதாரத்தில் நகங்களிலும்
பரசுராம அவதாரத்தில் கோடாலியிலும்
மற்ற அவதாரங்களில் அந்தந்த அவதாரங்களில் மேற்கொண்ட ஆயுதங்களிலும் ஆவேசித்து இருந்தது.
வாமனாவதாரத்தில் வாமனனின் கை பவித்திரத்திலும் திருவாழியின் சக்தி ஆவேசித்து இருந்தது.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையன் -பெரியாழ்வார்
திருவாழியின் உண்மையான ஸ்வரூபத்தை நாரத மகரிஷிகளாலும் அறிந்து கொள்ள முடியாது.
அப்படிப்பட்ட திருவாழி யாழ்வான் தைவாதீனமும் மனுஷ்யாதீநமுமான ஆபத்தைப் போக்கட்டும்.

___________________________________

ரூடஸ் தாரா லவாலே ருசிர தலசய: ச்யாமலைச் சஸ்த்ர ஜாலை:
ஜவாலாபிஸ் ஸப்ரவாள: ப்ரகடித குஸுமோ பத்த ஸங்கை: ஸ்புலிங்கை:,
ப்ராப்தாநாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயா ச்சாயயா தாபஹ்ருத் வ:
தத்தா முத்தோ: ப்ரகாண்ட: பலமபி லஷிதம் விஷ்ணு ஸங்கல்ப வ்ருக்ஷ:”.--77-

விரும்பிய பலன்களை கொடுக்கும் விஷ்ணு சங்கல்பமும் சக்கரத்தாழ்வாராகிற கல்ப விருக்ஷமும் ஒன்றே.
திருவடிகளை வணங்கியவற்கு இயற்கையான தன்னுடைய நிழலால் சம்சார தாபத்தைப் போக்கி
பகவத் சங்கல்பமானது விரும்பிய பலன்களைக் கொடுக்கும்.
ஓம் என்கிற ப்ரணவமாகிற பாத்தியில்
கறுத்த ஆயுத சமூகங்களாகிற இலைகளையும்
ஜ்வாலைகளாகிற தளிர்களையும்
தீப்பொறிகளாகிற புஷ்பங்களையும் கொண்டிருக்கும் திருவாழி யாழ்வானாகிற கற்பக மரம்,
தன்னை அடைந்தவர்களுக்கு நிழல் தந்து வெப்பத்தைப் போக்கி
உயர்ந்த கிளைகளாகிற திருக் கைகளால் உங்களுக்கு வேண்டிய பலன்களைக் கொடுக்கட்டும்.
___________________________________

தாம்நா மைரம் மதாநாம் நிசயமிவ சிரஸ்தாயிநாம் த்வாதசாநாம்
மார்த்தண்டாநாம் ஸமூடம் மஹ இவ பஹுலாம் ரத்ன பாஸா மிவர்த்திம்
அர்சிஸ் ஸங்காதமேகீ க்ருதமிவ சிகிநாம் பாட பாக்ரே ஸராணாம்
சங்கந்தே யஸ்ய ரூபம் ஸ பவது பவதாம் தேஜஸே சக்ர ராஜா”.–78-

நிலைத்து மிளிரும் ( அபூத உவமை )மின்னோலிகளின் திரளோ!
த்வாதச ஆதித்யர்களின் திரண்ட தேஜஸ்ஸோ!
ரத்னங்களின் ஒளி ஸ்ம்ருத்தியோ!
படபாக்னிகளைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமான அக்னிகளின் தேஜோ ராசியோ! என்று
மகான்கள் கலங்கி கூறும்படியான ரூபத்தை யுடைய திருவாழி யாழ்வான் உங்களுக்கு தேஜஸை அளிக்கட்டும்.
___________________________________

உக்ரம் பச்யா க்ஷமுத்யத் ப்ருகுடி ஸமுகுடம் குண்டலி ஸ்பஷ்ட தம்ஷ்ட்ரம்
சண்டாஸ்த்ரைர் பாஹு தண்டைர் லஸதநல ஸமக்ஷௌளம லக்ஷ்யோருகாண்டம்,
ப்ரத்யா லீடஸ்த பாதம் ப்ரதயது பவதாம் பாலந வ்யக்ரமக்ரே
சக்ரேசோ காலகாலேரித பட விகடாடோப லோபாய ரூபம்”.–79-

தீப்பொறி பறக்கும் கண்களையும், நெறித்த புருவங்களையும்,
கீரிடம், காதணிகள் முதலியவற்றையும் கோரப் பற்களையும்
கைகளில் பயங்கரமான ஆயுதங்களையும்
மெல்லிய பட்டு வஸ்திரம் அணிந்திருப்பதால் விரும்பிக் காணும் தொடைகளையும்
இடக்காலை நீட்டி வலக்காலைக் குறுக்கி நின்று ரக்ஷிப்பதில் ஊக்கமுடையதுமான ரூபத்தை யுடைய திருவாழி யாழ்வான்,
அகாலத்தில் ம்ருத்யுவினால் ஏவப்பட்ட யம படர்களுடைய கோலகலங்களை ஒழிப்பதற்குப் ப்ரகாசிப்பிக்க வேணும்.
யம படர்களை வெருட்டி ஓட்டி அருள வேணும்.
___________________________________

சக்ரம் குந்தம் க்ருபாணம் பரசுஹு தவஹா வங்குசம் தண்ட சக்தீ
சங்கம் கோ தாண்டபாசௌ ஹல முஸல கதா வஜ்ர சூலாம்ச் ச ஹேதீந்,
தோர்பிஸ் ஸவ்யாபஸவ்யைர் தததுலபல ஸ்தம்பி தாராதிதர்பை:
வ்யூஹஸ் தேஜோபிமாநீ நரக விஜயிநோ ஜரும்பதாம் ஸம்பதே வா:”.--80-

சக்ரம் முதலிய பதினாறு ஆயுதங்களையும்
ஒப்பற்ற பலத்தினால் சத்ருக்களின் கொழுப்பை அடக்கின தன்னுடைய இடக்கை வலக்கைகளால் தாங்கி நிற்பவரும்,
நரகாசுரனை அழித்த எம்பெருமானுடைய தேஜஸ் எல்லாம் தன்னுடையது என்று அபிமானிக்கும்
அவதாரமான திருவாழியாழ்வான் உங்களுடைய சம்பத்துகளுக்காக ஓங்கி விளங்கட்டும்.

(வலப்பக்கம் எட்டு கைகள் வலப்பக்கம் எட்டு கைகள்.
வலப்பக்கம் : சக்கரம் ,ஈட்டி, கத்தி,கோடாலி, சதமுகாக்கனி, மாவட்டி, தண்டு, வேல்.
இடப்பக்கம்: சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை,கதை, வஜ்ரம், சூலம்.)
___________________________________

பீதம் கேசே ரிபோரப்யஸ்ருஜி ரதபதே ஸம்ச்ரிதேப் யுத்கடாஷம்
சந்த்ராத : காரி யந்த்ரே வபுஷி ச தளநே மண்டலே ச ஸ்வராங்கம்,
ஹஸ்தே வக்த்ரே ச ஹேதி ஸ்தபகி தமஸமம் லோசநே மோசநே ச
ஸ்தாதஸ்தோகாய தாம்நே ஸுர வர பரிஷத் ஸேவிதம் தைவதம் வ:”.–81-

ஸூதர்சனம் பொன் மயமான கேசத்தை உடையது;
சத்ருக்களின் ரத்தத்தை குடித்தது.
சக்கரத்தில் கம்பீரமான அக்ஷத்தை உடையது;
பக்தர்கள் பால் தோன்றும் கடாக்ஷத்தை உடையது.(அக்ஷம் உத் கடாக்ஷம் )
யந்திரத்தில் சந்திரனைத் தாழ்த்தியது;
(ஸூதர்சன யந்திரத்தில் சந்திரனை எழுதி அதன் மேல் அன்றோ யந்த்ர ஸ்தாபனம் )
ஒளியினால் சந்திரனை வென்றது.
சத்ருக்களைக் கண்டிக்கும் போது வெற்றியை உணர்த்தும் சிம்ம நாதம்;
சந்திர மண்டலம் ப்ரணவத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும்.
ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் கை;
திருக் கண்களில் சமமில்லாத பார்வை;
தேவர்களின் தலைவர்களால் சேவிக்கப்படும் திருவாழியாகிற தெய்வம் உங்களுக்கு
அளவற்ற தேஜஸைக் கொடுக்கட்டும்.
___________________________________

திருவாழி ஆழ்வான் ஸக்ரவர்த்தீ சாம்யம்

சித்ராகாரை: ஸ்வசாரைர் மித ஸகல ஜகஜ் ஜாக ரூக ப்ரதாப:
மந்த்ரம் தந்த்ராநுரூபம் மநஸி கலயதோ மாநயந்நாத்ம குஹ்யாந்.
பஞ்சாங்கஸ் பூர்த்தி நிர்வர்திந ரிபுவிஜயோ தாம ஷண்ணாம் குணாநாம்
லக்ஷ்மீம் ராஜா நைஸ்த்தோ விதரது பவதாம் பூருஷச் சக்ரவர்த்தீ”.--82-

திருவாழி யாழ்வான் கண்டநலுண்டன ஹரணம் ஆகியவற்றைச் செய்து கொண்டு,
சஞ்சாரங்களால் எல்லா லோகங்களிலும் வியாபித்து இருப்பார்.
சக்ரவர்த்தி தன்னுடைய ஒற்றர்களை உலகமெங்கும் பரவச் செய்வான்.
அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் சொல்லியபடி சுதர்சன மந்திரத்தை மறைத்து வைத்துக் கொண்டு
தியானிப்பவர்களிடம் திருவாழி யாழ்வான் திருவுள்ளம் இரங்குவார்.
ராஜ ரகசியமான விஷயங்களை வெளியிடாமல் அந்தரங்கமாக வைத்துப் பேசும் ராஜாங்க புருஷர்களை அரசன் பஹீமானிப்பான்.
திருவாழி யாழ்வான் ஜ்வாலை நாபி நேமி அரம் அக்ஷம் என்ற ஐந்து அங்கங்களால் சத்ருக்களை வெல்வார்.
அரசனும் ஐந்து கர்மங்களை செய்து எதிரிகளை வெல்வார்.
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு இருப்பிடமானவர் திருவாழி.
சந்தி விக்ரஹ யான ஆசன த்வைநீ பாவ சம்ச்ரயங்களுக்கு இருப்பிடமானவன் அரசன்.
திருவாழி சந்த்ர மண்டல ஆசனத்திலும் அரசன் சிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பான்.
சக்கரவர்த்தியான இத்தகைய திருவாழி உங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும்.

___________________________________

(ஸ்ரீ ஸூதர்சனாழ்வாரின் பயண வேகத்தை இந்த ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார் ஸ்ரீ கூர நாராயணர்)

அக்ஷா வ்ருத்தா ப்ரமாலாந்யர விவர லுடச் சந்த்ர சண்டத்யுதீநி
ஜ்வாலா ஜாலாவ்லீட ஸ்புடதுடு படலீ பாண்டு திங்மண்டலாநி,
சக்ராந்தா க்ராந்த சக்ராசல சலித மஹீ சக்ர வாலார்த சேஷாணி
அஸ்த்ர க்ராமாக்ரீமஸ்ய ப்ரததது பவதாம் ப்ரார்த்திதம் ப்ரஸ்த்திதாநி”.–83-

ஸ்ரீ ஸூதர்சனர் வேகமாக செல்லும் போது மேகக் கூட்டங்கள் அக்ஷங்களில் சுழன்று வரும்.
ஸூரியனும் சந்திரனும் அரங்களுக்கு இடையே புரளும்.
நக்ஷத்திரக் கூட்டங்கள் ஸூதர்சன ஜ்வாலைகளால் மோதப்பட்டு திசைகளின் எல்லையில்
சிதறிப் பரவி வெளிச்சத்தை உண்டாக்கும்.
சக்ர நேமியானது சக்ரவாள பர்வதம் வரை செல்வதால் மலை நடுங்கி அதனால் பூமியும் நடுங்கி
பூமியைத் தாங்கும் அரவரசனும் (திருவனந்தாழ்வானும்) துன்பமடைவார்.
இத்தகைய திருவாழியின் சஞ்சாரமானது நீங்கள் விரும்பியவற்றை உங்களுக்குக் கொடுக்கட்டும்.
___________________________________

சூலம் த்யக்தாத்ம சீலம் ஸ்ருணி ரணுக க்ருணி: பட்டிஸ: ஸ்பஷ்டஸாத:
சக்திச் சாலீ நசக்தி: குலிசமகுசலம் குண்டதார: குடார:
தண்டச் சண்டத்வ சூந்யோ பவதி தநு தநுர் யத் புரஸ்தாத் ஸ வ: ஸ்தாத்
க்ரஸ்தாசேஷாஸ்த்ர கர்வோ ரத சரணீபதி: கர்மணே சார்மணாய”.–84-

மிகப் பிரசித்தமான ஆயுதங்கள் திருவாழியின் முன்னே இருந்தும் இல்லாதது போல் ஆயின.
சூலம் சத்ருக்களை அழிக்கும் சாமர்த்தியத்தை விட்டது.
அங்குசம் ஒளி மழுங்கிப் போயிற்று.
பட்டாக்கத்தி களைத்துப் போய்விட்டது. (பட்டிஸ:-பட்டாக்கத்தி)
சக்தி என்ற ஆயுதம் வலிமை யற்று வெட்கமடைந்து தலை குனியப் பெற்றது.
வஜ்ராயுதம் சாமர்த்யம் அற்றுப் போய் விட்டது.
கோடாலி கூர்மை மழுங்கப் பெற்றது.
தண்டாயுதம் சாதுவாகி விட்டது.
வில் இளைத்துப் போய் விட்டது.
இப்படி எல்லா அஸ்திரங்களுடைய செருக்கையும் கொள்ளை கொண்ட திருவாழி யாழ்வான்
பிரம்மானந்த சாதனமான நல்ல காரியங்களில் உங்களுக்கு முயற்சியை உண்டு பண்ணட்டும்.
___________________________________

க்ஷாண்ணா ஜாநேய ப்ருந்தம் ஷுபித ரத கணம் ஸந்த ஸாந்நாஹ்ய யூதம்
க்ஷ்வேலா ஸம்ரம்ப ஹேலா கலகல விகலத் பூர்வகீர் வாண கர்வம்,
குர்வாணஸ் ஸாம்பராயம் ரத சரணபதி: ஸ்தேயஸீம் வ: ப்ரசஸ்திம்
துக்தாம் துக்தாப்தி பாஸம் பய விவச சுநா ஸீர நாஸீர வர்தீ.--85-

சத்ருக்களால் ஏற்படும் பயத்திற்கு அஞ்சி இந்திரன் ஓடி வந்து ஸூதர்சனாழ்வானைச் சரணமடைந்தான்.
அதனால் தேவாசுர யுத்தத்தில் ஸூதர்சனாழ்வான் இந்திரனுடைய சேனைகளுக்கு சகாயமாகச் சென்று
சத்ருக்களின் ரத கஜ துரகபதாதிகள் அழியும்படியாக சிம்ம நாத லீலா கோலகலங்களைச் செய்து போர் செய்தார்.
அப்படிப்பட்ட திருவாழி யாழ்வான் பாற்கடல் போன்ற வெண்மையான புகழை மேன் மேலும் வளரச் செய்யட்டும்.

கீர்த்தியை வெண்மையாகக் கூறுவது கவி மரபு

_____________________________

த்ருஹ்யத் தோச்சாலி மாலி ப்ரஹரண ரபஸோத்தாநிதே வைநதேயே
வித்ராதி த்ராக் ப்ரயுக்த: ப்ரதந புவி பராவர் தமாநேந பர்த்ரா,
நிர்ஜ்த்ய ப்ரத்ய நீகம் நிரவதிக சரத்தாஸ்தி காச்விய ரத்த்யம்
பத்த்யம் விஸ்வஸ்ய தாச்வாந் ப்ரதயது பவதோ ஹேதிரிந்த்ராநுஜஸ்ய”.–86-

பிறர்க்குத் தீங்கு இழைக்கும் புஜ பலத்தை உடைய மாலி என்ற அரக்கனுடைய ஆயுதத்தினால்
போர்களத்தில் தாக்கப்பட்டு கருடன் ஓடிச் சென்றவளவில்,
பகவான் அக்கருடன் மேல் ஏறிக்கொண்டு போர்களத்திற்கு வந்துத் திருவாழியினால் பகைவர்களின்
ரத கஜ துரகபதாதிகளை அழித்து மாலியின் தலையை அறுத்துத் தள்ளி வென்றான்.
உத்தர ராமாயணம் 7 சர்க்கம் இத்தைச் சொல்லும்
அப்படிப்பட்ட பகவானின் திருவாழியாழ்வான் உங்களைப் புகழுடையவராக ஆக்கட்டும்.
___________________________________

நந்தி ந்யாய நந்த சூத்யே கலதி கண பதௌ வ்யாகுலே பாஹுலேயெ
சண்டே சாகித்ய குண்டே ப்ரமத பரிஷதி ப்ராப்தவத்யாம் ப்ரமாதம்,
உச்சித் யாஜௌ பலிஷ்டம் பலிஜ புஜவநம் யோத தாவாதி பிக்ஷோ:
பிக்ஷாம் தத் ப்ராண ரூபாம் ஸ பவத குசலம் க்ருஷ்ண ஹேதி: க்ஷிணோது”.–87-

மஹாபலியின் வம்சத்தில் பிறந்தவன் பாணாசுரன்.இவன் பரம சிவனிடமிருந்து வர பலங்களைப் பெற்றவன்.
ஆயிரம் கைகளையும் தன் நகரத்தைச் சுற்றி ரக்ஷகமாக இருக்கும்படி நெருப்பு மதில்களையும்
அளவற்ற செல்வத்தையும் பெற்றவன். சிவன் தன் கணங்களோடு பாணசுரனின் மாளிகையைப் பாடுகாத்து வந்தான்.
ஒரு சமயம் தன் பெண்ணாகிய உஷையின் காரணமாகக் கண்ணனின் நேரனாகிய அநிருத்தனைச் சிறையில் வைத்தான்.
இதை அறிந்த கண்னன் பாணசுரனோடு போர் செய்தான்.அப் போரில் நந்தி மகிழ்ச்சி இழந்தார்.
விநாயகர் போரிலிருந்து பின் வாங்கினார். சுப்ரமண்யர் கலங்கினார்.சண்டன் செயலற்றுப் போனான்.
ப்ரதம (முதன்மை) கணங்களெல்லாம் பயந்தோடின.
அப்போது ஸூதர்சனாழ்வான் வாணசுரனின் ஆயிரம் தோள்களை துணித்தார். உயிர் பிச்சை அளித்தார்.
அப்படிப்பட்ட திருவாழி உங்கள் தீமைகளை அழிக்கட்டும்.
___________________________________

ரக்தௌ காப்யக்த முக்தாபல லுலித லலத் வீசி வ்ருத்தௌ மஹாப்தௌ
ஸந்த்யா ஸம்பத்த தாரா ஜலதர சபலாகாச நீகாச காந்தௌ,
கம்பீராரம்ப மம்பச் சரம ஸுரகுலம் வேத விக்நம் விநிக்நந்
நிர்விக்நம் வ: ப்ரஸூதாம் வ்யபகத விபதம் ஸம்பதம் சக்ர ராஜ:”–88-

ஒரு காலத்தில் பிரம்மாவிடமிருந்து அசுரர்கள் வேதங்களைக் கவர்ந்து சென்று கடலுக்குள் ஒளிந்துக் கொண்டார்கள்.
ஸூதர்சனாழ்வான் அதனுள் புகுந்து அவர்களை கொன்றார்.
அப்போது அசுரர்களின் உடம்பிலிருந்து கிளம்பிய இரத்தத் தாரைகள் கடலில் இருக்கும் முத்துக்களோடு சேர்ந்து
முத்துக்களை செந்நிறமாக்கிக் கொண்டு அலைகளோடு சேர்ந்து வீசின.
அந்தக் காட்சி நக்ஷத்திரங்களாலும் காள மேகங்களாலும் சூழப்பட்ட சந்தியா கால ஆகாசம் போல் இருந்ததாம்.
இப்படி வேதாபஹார அசுரர்களை அழிப்பதில் கம்பீரமான முயற்சியைக் கொண்ட
திருவாழி யாழ்வான் உங்களுக்கு அபாயமற்ற செல்வத்தை இடையூறு இன்றி அளிக்கட்டும்.
___________________________________

காசீ விப்லோஷ சைத்ய க்ஷபண தரணிஜ த்வம்ஸ ஸூர்யாபிதாந
க்ராஹத் வேதாத்வ மாலி த்ருடநமுக கதா வஸ்து ஸத் கீர்தி காதா:
கீயேந்தே கிந்நரீபி: கநக கிரி குஹா கேஹிநீபீர் யதியா:
தேயாத் தைதேயவைரீ ஸ ஸகல புவந ஸ்லாகநீயாம் ஸ்ரியம் வ:”–89-

மேரு மலைக் குகைகளில் வாழும் கின்னர ஸ்தீரிகளால் காசீ தகனம் சிசுபால வதம் நகராசூர வதம்
சூர்யனை மறைத்த வரலாறு கஜேந்திரனைக் காப்பாற்ற முதலையை அழித்தல் மாலிக வதம் ஆகியவை
எந்த ஸூதர்சனாழ்வானின் வெற்றிச் சரிதங்களாகப் பாடப் படுகின்றனவோ அப்படிப்பட்ட
சக்கரத்தாழ்வார் எல்லோரும் புகழும் சம்பத்தை உங்களுக்குக் கொடுக்கட்டும்.

சீ மாலிகனவன் -பாசுரத்தில் பெரியாழ்வார் மாலிகன் வதம் அருளிச் செய்கிறார்

___________________________________

நாநா வர்ணாந் விவ்ருண்வந் விரசித புவநாநுக்ரஹாந் விக்ரஹாந் ய:
சக்ரேஷ் வஷ்டாஸு ம்ருஷ்டா ஸுர வர தருணி கண்ட்ட கஸ்தூரிகேஷு;
ஆதாரா தர்ண மாலாவதிஷு வஸதி ய: பூருஷோ வஸ் ஸ தேயாத்
வ்யத்வை ருத்தூத ஸத்த்வை: உபஹிதம பஹிர் த்வாந்த மத்வாந்த வர்தீ”.–90-

ஸ்ரீ ஸூதர்சன புருஷன் எட்டுச் சக்கரங்களில் வீற்றிருக்கிறார் என்றும்
ஆறு சக்கரங்களில் வீற்றிருக்கிறார் என்றும் பல ஸந்நிவேசங்கள் சொல்லப்படுகின்றன.
முதல் சக்கரம் ப்ரணவ சக்கரம். எட்டாம் சக்கரம் மாத்ருகா சக்கரம் எனப்படும்.
இந்த எட்டு சங்கரங்களும் அசுரர்களை அழித்தமையால் அவர்களுடைய பத்னிகள் தம் கழுத்தில் அணிந்த
கஸ்தூரி அழிந்து போய் விதவையானார்கள்.
ஸாத்விகர்களின் நெஞ்சில் வகிக்கும் ஸ்ரீ ஸூதர்சனாழ்வான் உலக மக்களை அனுக்ரகிப்பதற்காக
நீலம் மஞ்சள் முதலிய நிறங்களைக் கொண்ட திருமேனியுடன் இந்த எட்டு சக்கரங்களில் எழுந்தருளியிருப்பார்.
ரஜோ குணத்தினாலும் தமோ குணத்தினாலும் கெட்ட வழிகளில் சென்று நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட
அஞ்ஞான அந்தகாரத்தை இந்த ஸூதர்சனாழ்வான் அழிக்கட்டும்.
___________________________________

த்வாத் ரிம்சத் ஷோட ஸாஷ்ட ப்ரப்ருதி ப்ருது புஜ ஸ் பூர்த்தி பிர் மூர்த்தி பேதை
காலாத்யே சக்ர ஷட்கே பிரகடித விபவ பஞ்ச க்ருத்ய அநு ரூபம்
அர்த்தா நா மர்த்தி தாநா மஹரஹ ரகிலம் நிர் விலம்பைர்
குர்வாணோ பக்த வர்கம் குசலி நம வதா தாயு தக்ரா மணீர் வ--91-

ஷடரம் கால சக்ரம் பஞ்சாரம் ப்ருத்வீ சக்ரம் சதுரரம் அப் சக்ரம் த்ரி அரம் தேஜஸ் சக்ரம் த்வி அரம்
வாயு சக்ரம் ஏகாரம் ஆகாச சக்ரம் ஆகிய ஆறு சக்கரங்களுக்கும்
உத்பத்தி ஸ்திதி ஸம்ஹாரம் நிக்ரஹம் அனுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில் களுக்கும் ஏற்றவாறு
முப்பத்திரண்டு -பதினாறு -எட்டு -நான்கு -இரண்டு புஜங்களுடன் கூடிய திருமேனியுடன்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வார் சேவை சாதித்து அருள்கிறார்
இவ்வாறு இருப்பது பக்தர்கள் விரும்பிய பலன்களை கால விளம்பம் இல்லாமல் அளித்து ரக்ஷிக்கவே
இவ்வாறு க்ஷேமத்தை அளிக்கும் திருவாழி ஆழ்வான் உங்களை ரக்ஷிக்கட்டும் –

___________________________________

கோணை ரர்ணைஸ் ஸரோஜை ரபி கபிச குணை ஷ் ஷட் பிருத் பின்ன சோபே
ஸ்ரீ வாணீ பூர் விகாபிர் தததி விலஸதஸ் சக்திபிர் கேசவாதீன்
தாரந்தே பூபுரா தவ் ரத சரண கதா சார்ங்க கட்க அங்கி தாஸே
யந்த்ரே தந்த் ரோதிதே வஸ் ஸ்புரது க்ருத பதம் லஷ்ம லஷ்மீ ஸகஸ்ய –92-

ஷட் கோணங்களும் ஷட் அக்ஷரங்களும் ஷட் பத்மங்களும் அமைந்தது ஸூ தர்சன யந்த்ரம்
யந்திரத்தின் நடுவில் இருக்கும் ஸூ தர்சன புருஷன் சிவந்த உடலும் சிவந்த வஸ்திரமும்
சிவந்த தலை மயிரும் சிவந்த கண்களும் கொண்டவராய் இருப்பர்
அந்த நிற ஒளியால் பத்மங்கள் எல்லாம் செம்பட்டை நிறமுடையதாக -கபிச குணம் இருக்கும் –
இந்த யந்திரத்தில் கேசவன் முதல் தாமோதரன் வரை யில் உள்ள பன்னிரண்டு மூர்த்திகள்

கேசவன் நாராயணன் மாதவன் –இவர்கள் வாஸூதேவ வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று ஸ்ரீ சக்திகள்
கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன் -இவர்கள் ஸங்கர்ஷண வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று வாணீ சக்திகள்
திரிவிக்ரமன் வாமனன் ஸ்ரீ தரன் -இவர்கள் ப்ரத்யும்னன் வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று வாக் சக்திகள்
ஹ்ருஷீகேசன் பத்ம நாபன் தாமோதரன் -இவர்கள் அநிருத்த வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று ம்ருடாநீ சக்திகள் சக்திகள்
என்ற முறையில் அமைந்து இருப்பார்கள் –

எந்திரத்தை அமைக்கும் போது முதலில் பூ புரத்தையும் முடிவில் ப்ரணவத்தையும் அமைப்பர்
யந்திரத்தின் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் சக்கரம் கதை வில் கத்தி ஆகிய நான்கு ஆயுதங்களை அமைப்பர்
இப்படிப்பட்ட யந்திரத்தில் இருக்கும் ஸூ தர்சனர் ஸ்ரீ யபதி ரூபமாக இருப்பர்
இது உங்களுக்கு ப்ரத்யக்ஷம் ஆகட்டும்

___________________________________

அஹிர் புத்ன்ய ஸம்ஹிதையில் சொல்லப்படும் மா ஹேந்திர மண்டலம்-என்ற
எந்திர அமைப்பை இந்த ஸ்லோகம் கூறுகிறது –

தம்ஷ்ட்ரா காந்த்யா கடாரே கபட கிடிதநோ கைடபாரே ரதஸ்தாத்
ஊர்த்வம் ஹாஸேந வித்தே நரஹரி வபுஷா மண்டலே வாஸ வீயே
ப்ராக் ப்ரத்யக் சாந்த்ய சாந்த்ரச் சவி பர பரிதே வ்யோம் நி வித்யோத மாந
தைதேயோத் பாத ஸம்ஸீ ரவிரிவ ரஹயத் வஸ்த்ர ராஜோ ருஜம் வ –-93-

யந்த்ரத்தின் கீழ் பாகத்தில் வராஹ நாயனாரையும்
மேல் பாகத்தில் நரஸிம்ஹ மூர்த்தியையும் தியானிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது
கீழே வராஹத்தின் தந்த காந்தியும்
மேல் இருந்து நரஸிம்ஹனுடைய சிரிப்பு ஒளியும் கலந்து யந்த்ரம் கடார வர்ணம் பெற்று இருக்கும்
கிழக்கு மேற்கு ஸந்த்யா காலம் போல் சிவந்து இருக்கும்
வராஹத்தின் தந்த காந்தி இயற்கையிலே வெளுத்ததாயினும் ஹிரண்யாக்ஷனைக் கொல்லும் போது
அவனுடைய உடலில் தோன்றிய ரத்தத்தின் ஒளியினால் சிவந்ததாயிற்று
நரஸிம்ஹனின் சிரிப்பு ஒளியும் ஹிரண்யன் ரத்த ஒளியால் சிவந்ததாயிற்று
இவை இரண்டும் சந்த்யா காலம் போல் தோற்றம் அளித்தது
இதன் நடுவில் இருக்கும் திருவாழி ஆழ்வான் அசுரர் குலம் அழிய ஆகாசத்தில் தோன்றும்
உத்பாத ஸூர்யன் போல் தோன்றுவார் –
இப்படிப்பட்ட ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் -உங்களுடைய ரோகத்தை -வியாதியை -நீக்கட்டும்
கடார வர்ணம் -கபில வர்ணம் –

___________________________________

கோணே க்வாபி ஸ்திதோபி த்ரி புவன விததச் சந்த்ர தாமாபி ரூஷ
ருக்மச்சாயோபி க்ருஷ்ணா க்ருதி ரநல மயோ ப்யாச்ரித த்ராண காரீ
தாரா ஸாரோபி தீப்தோ தினகர ருசி ரோப் யுல்லஸத் தாரக ஸ்ரீ
சக்ரே சச் சித்ர பூமா விதாது விமத த்ரா ஸனம் ஸாஸனம் வா —94-

திருவாழி ஆழ்வான் எந்திரத்தின் ஏக தேசத்தில் எழுந்து அருளி இருந்தாலும் மூன்று லோகங்களையும் வியாபித்தவராயும் இருக்கிறார்
சந்தோஷத்தை அளிப்பவராயினும் தீஷ்ண ஸ்வ பாவத்தை யுடையவராயும்
சந்திரனை இருப்பிடமாகக் கொண்டு இருந்தாலும் சத்ருக்களுக்கு பயத்தை அளிப்பவராயும்
பொன் நிறம் கொண்டவராயினும் பகவானைப் போலே நீல நிறம் உடையவராயும்
அக்னி மயமாக இருந்தாலும் ஆஸ்ரித ரக்ஷகராயும்
குளிர்ந்த மழையைக் கொடுப்பவராயினும் ஜ்வலித்துக் கொண்டு இருப்பவராயும்
ஸூர்யன் போலே பிரகாசிப்பவராயினும் நக்ஷத்ர சோபையை உடையவராயும் இருக்கிறார்
இவ்வாறு விருத்த தர்மங்கள் உறைவிடமாய் இருந்து கொண்டு ஆச்சர்யமான மஹிமையை யுடையவரான
திருவாழி ஆழ்வான் உங்களுடைய ப்ரதிபஷிகளுக்கு பயத்தை உண்டு பண்ணட்டும்

___________________________________

சுக்லச் சக்ர ஸ்தவஸ்தே ஸஹ தஹந கலாம் கால தேயம் ந கால
கிம் வோ ரஷாம் ஸி ரஷா தவ பலது பதே யாத ஸாம் பாத ஸேவா
வாயோ ஹ்ருத்யோ ஸி பர்த்து ஸ்த் யஜ தநத மதம் ஸேவ்ய தாம் த்ர்யம்ப கேதி
ப்ரா ஹுர் யத் யந்த்ர பாலா ஸதனுஜ விஜயீ ஹந்து தந்த்ரா லு தாம் வ — 95-

தேவேந்த்ரனே நீ ஸ்தோத்ரம் செய்வது சுத்தமாக இருக்கிறது –
அக்னி பகவானே சிறிது நேரம் நில்
யமதர்மன் உனக்கு இது சமயம் அன்று
ராக்ஷஸர்களே உங்களுக்கு இனிமேல் ரக்ஷணம் இல்லை
எது
வருணனே நீ பண்ணிக் கொண்டு இருந்த ஸூ தர்சன கைங்கர்யம் பலித்திடுக
வாயு பகவானே நீ திருவாழி ஆழ்வானுக்கு உகப்பாக இருக்கிறாய்
குபேரனே துர் அஹங்காரத்தை விடு
வாராய் முக்கண்ணனே திருவாழியை வணங்கு
என்று எந்த ஸூ தர்சனுடைய யந்த்ர பாலகர்கள் சொல்லுகிறார்களோ
அந்தத் திருவாழி ஆழ்வான் உங்களுடைய சோம்பேறித்தனத்தை ஒழிக்கட்டும் –

___________________________________

இது ஒரு யந்த்ர அமைப்பு -அஹிர் புத்ன்ய ஸம்ஹிதையில் சொல்லப்படுகிறது –

காயத்ர்யர் ணார சக்ரே ப்ரதம மநு சக ஸ்மேரே பத்ராரவிந்தே
பிம்பம் வந்ஹேஸ் த்ரி கோணம் வஹதி ஜயி ஜயாத் யஷ்ட சக்தவ் நிஷண்ணா
சோகம் வோ அசோக மூலே பத ஸவித லஸத் பீம பீமா ஷபீ மா
பும்சோ திவயாஸ்த்ர தாமா புருஷ ஹரி மயீ மூர்த்தி ரஸ்ய த்வ பூர்வா –96-

ஓம் நமோ பகவதே வாஸூதேவாய -என்பது த்வாதச அக்ஷர மந்த்ரம்
யந்திரத்தில் பன்னிரண்டு தளங்கள் உள்ள பத்மம் அமைக்க வேண்டும்
நடுவில் அக்னியின் த்ரிகோண பிம்பத்தை அமைத்தல் வேண்டும்
ப்ராசீ திசையில் -ஐயை
ஆக்நேய திசையில் மோஹிநீ
யாம்ய திசையில் -விஜயை
நிருரித திசையில் -ஹலாதி நீ
மேற்கு திசையில் -அஜிதை
வாயு திசையில் மாயை -கறுப்பு நிறம்
வடக்கில் -அபராஜிதை
ஈசான்ய திசையில் -ஸித்தி
என்று அது அஷ்ட சித்திகளை உடையதாக இருக்க வேண்டும்
இருபத்து நான்கு அரங்களைக் கொண்ட சக்கரத்தில் -(காயத்ரியின் அக்ஷரங்கள் இருபத்து நான்கு )
அசோகா மரத்தடியில் -திருவாழியின் திருவடி வாரத்தில் பயத்தை உண்டு பண்ணும் இரண்டு பீமாஷர்கள் அமைய வேண்டும்
இப்படிப்பட்ட சக்கரத்தில் ஸூ தர்சன மூர்த்தியின் நரஸிம்ஹ மூர்த்தி இருப்பார்
இவர் நான்கு கைகளில் நான்கு சக்கரங்களை வைத்துக் கொண்டு யோக பட்டம் சாத்திக் கொண்டு இருப்பார்
இந்த நரஸிம்ஹ மூர்த்தியான ஸூ தர்சனர் உங்களுடைய துக்கத்தைப் போக்கட்டும்

___________________________________

பாச்சாத் யாசோக புஷ்ப ப்ரகர நிப திதைஸ் ப்ராப்த ராகம் பராகை
ஸந்த்யா ரோசிஸ் ஸ்கந்தைர் ஸ்வ பத சச தரம் ப்ரேஷ்ய தாராநு ஷக்தம்
பத்மா நா பத்த கோசா நிவ ஸூர நிவஹை ரஞ்ஜலீன் கல்ப்ய மாநான்
சக்ராதீ ஸோபி நந்தன் ப்ரதி சது ஸத்ரு ஸீம் உத்தம ஸ்லோக தாம் வ –97–

யந்திரத்தின் அமைப்பில் -எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கிற அசோகா மரத்தில் உள்ள
புஷபங்களில் இருந்து மகரந்தத் தூள் கீழே விழுகின்றன
மகரந்துக்களின் நிறம் ஸந்த்யா காலம் போல் சிவந்து இருக்கிறது –
அந்தத் தூள்களால் சிவந்து இருந்துள்ள பிரணவ ஸம்பந்தமுடைய -நக்ஷத்ரம் -சம்பந்தமுடைய –
திருவாழி ஆழ்வானின் சந்த்ர மண்டலத்தைப் பார்த்து
தேவ கணங்கள் தாமரை மொட்டு போல் அஞ்சலியை ச் செய்கின்றன –
அவற்றைக் கொண்டு திரு உள்ளம் உகக்கும் திருவாழி ஆழ்வான்
தன் கீர்த்தி போன்ற உத்தமமான கீர்த்தியை உங்களுக்கு அளிக்கட்டும்

___________________________________

ரக்தா சோகஸ்ய வேதஸ்ய ச நிஹி தபதம் ப்ராப்த சாகஸ்ய மூலே
சக்ரை ரஸ்த்ரை ஸ்த தாத்யைரபி மஹித சதுர்த் விச் சதுர் பாஹு தண்டம்
ஆஸீ நம் பாச மாநம் ஸ்தித மபி பயதஸ் த்ராய தாம் தத்வ மேகம்
பச்சாத் பூர்வத்ர பாகே ஸ்புட நர ஹரிதா மாநுஷம் ஜாநு ஷாத்வா –-98-

சக்கரத்தின் பின் பாகத்தில் சாகோப சாகமாக வளர்ந்து இருக்கிற அசோக மரத்தின் அடியிலும்
வேத மூலமான ப்ரணவத்திலும்
நான்கு திருக்கைகளிலும் சக்கரத்தைத் தரித்துக் கொண்டு
சக்கரத்தின் பிற்பகுதியில் வீற்று இருந்த திருக் கோலத்தில் இருக்கும் நரசிம்மரின் தன்மையும்
சக்கரம் முதலிய எட்டு ஆயுதங்களைக் கொண்ட திருக்கைகளுடன் முன் பக்கத்தில் நிற்கும்
மனிதத்தன்மையும் கொண்டு விளங்கப்பெற்ற ஒரு தத்வம்
உங்களை ஸம்ஸாரிக பயத்தில் இருந்து காப்பாற்றட்டும் –

___________________________________

ப்ராணே தத்த ப்ரயாணே முஷி ததிசி த்ருசி த்யக்த சாரே சரீரே
மத்யாம் வ்யாமோஹ வத்யாம் சதமஸி மனஸி வ்யாஹதே வ்யாஹ்ருதே ச
‘சக்ர அந்தர் வர்த்தி ம்ருத்யு ப்ரதி பய முபயாகார சித்திரம் பவித்ரம்
தேஜஸ் தத் திஷ்ட் டதாம் வஸ்த்ரி தச குல தனம் த்ரீ க்ஷணம் தீஷ்ண தம்ஷ்ட்ரம் –99-

உடல் இளைத்து மதி மருண்டு நெஞ்சு இருண்டு கண்களில் பார்வை மறைந்து பேச்சு தடுமாறி
உயிர் போகும் அளவில் அந்த ம்ருத்யுவுக்கும் பயத்தை அளிக்க வல்லவரும்
ஸூ தர்சன சக்கரத்தில் நடுவில் இருக்கும் மிகவும் பரிசுத்தமான-இரண்டு உருவம் கொண்ட –
ஆபத் தனமாவன -முக்கண்களை யுடைய – நரஸிம்ஹர் உங்களுக்கு சேவை சாதித்து
உங்களுடைய பயத்தை நீக்கி உங்களைக் காப்பாற்றட்டும் –

___________________________________

யஸ்மிந் விந்யஸ்ய பாரம் விஜயிநி ஜகதாம் ஜங்கம ஸ்தாவராணாம்
லஷ்மீ நாராயணாக்க்யம் மிதுன மநு பவத்யத் யுதாரான் விஹாரான்
ஆரோக்யம் பூதி மாயுஸ் க்ருதமிஹ பஹு நா யத்யதாஸ்த் தாபதம் வ
தத் தத் ஸத்யஸ் ஸமஸ்தம் திசது ச புருஷோ திவ்ய ஹேத்யக்ஷ வர்த்தீ –-100-

பெருமாளும் பிராட்டியும் ஸகல சராசரங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஜெயசீலனான
ஸூ தர்சன ஆழ்வானிடம் ஒப்படைத்து விட்டுப் போக லீலைகளிலே ஈடுபடுவார்கள்
அப்படிப்பட்ட நிர்வாஹப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனை நடத்தி வரும் திருவாழி யாழ்வான்
உங்களுக்கு ஆரோக்யம் ஐஸ்வர்யம் நீண்ட ஆயூஸ்ஸூ மற்றும் நீங்கள்
அர்த்தித்த புருஷார்த்தங்களை எல்லாம் உடனே கொடுத்து அருளட்டும்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் ஸர்வ அபீஷ்ட பல ப்ரதன் அன்றோ –
இந்த ஸ்ரீ ஸூ தர்சன சதகம் அவன் கடாக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் –

___________________________________

பத்யா நாம் தத்வ வித்யா த்யு மணி கிரிச வீத் யங்க சங்க்யா தராணாம்
அர்ச்சிஷ்யங்கேஷு நேம்யா திஷு ச பரமத பும்ஸி ஷட் விம்ச தேச்ச
சங்கைஸ் சவ் தர்சனம் ய படதி க்ருதமிதம் கூர நாராயணே ந
ஸ்தோத்ரம் நிர் விஷ்ட போகோ பஜதி ஸ பரமாம் சக்ர ஸாயுஜ்ய லஷ்மீம் –-101-

இந்த ஸ்தோத்ரத்தில்
ஸூ தரிசன ஜ்வாலையை வருணித்துக் கூறும் 24 ஸ்லோகங்கள்
நேமியை வருணித்துக் கூறும் 14 ஸ்லோகங்கள்
அரங்களை வருணித்துக் கூறும் 12 ஸ்லோகங்கள்
நாபியை வருணித்துக் கூறும் 11 ஸ்லோகங்கள்
அஷத்தை வருணித்துக் கூறும் 13 ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஸூ தர்சன புருஷனை வருணித்துக் கூறும் 26 ஸ்லோகங்கள்
பல ஸ்ருதி ஸ்லோகம் ஓன்று
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீ ஸூ தர்சன சதகத்தை வாசிப்பவர்கள்
இந்த உலகில் ஐஹிக போகங்களை எல்லாம் பூர்ணமாக அனுபவித்துப்
பின்பு
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரோடு பரம ஸாம்யம் என்னும் அந்தமில் பேர் இன்பம் பெற்று மகிழ்வார்கள்

_____________________________________________________________________

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஸ்தல சயனத்துறைவார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ விஜய வல்லி ஸமேத ஸ்ரீ ஸூ தர்சன பர ப்ரஹ்மணே நம
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–

January 6, 2022

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன்,
புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.
அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர்.
அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

———

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

————

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.