ஸ்ரீ விஷ்ணு தர்மம் –ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம் —

விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியே விஷ்ணு தர்மம். விசிஷ்டாத்வைதத்தின் முக்கிய இதிகாசம் விஷ்ணு தர்மம். சதனீகர் என்னும் மன்னர் ‘பகவானை அடையும் வழி எது’ என்னும் தன் கேள்வியை செளனகர் என்னும் ரிஷியிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கமே விஷ்ணு தர்மம்.

ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம்
ஸ்ரீ தால்ப்யர் னென்கிற மகரிஷி ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி இடம் கேட்பதாக – ஸம்வாதம் -மூலமாக பிறந்த ஸ்லோகம்

தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு துஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்த்தவ்யம் தத் உச்யதாம் –1-
யேந ஆரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் சோப ஸாம்யதி
அமங்கலா நாம் திருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே –2-

ஏதாவது நற்காரியங்கள் தொடங்கும் போதும் -தீய கனாக்கள் கண்ட போதும் அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேரும் போதும்
எத்தை ஜபிக்க வேணுமோ அத்தை தேவரீர் அருள வேணும்

எத்தை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாமே ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் ஒழியுமோ
கண்ட அமலங்கள் கெடுதலை விளையாமல் போகுமோ
அத்தைச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்க

——

புலஸ்ய உவாஸ
ஜநார்தநம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான்யசேஷாண்யபஹந்தி ஸாதயத்யஸேஷ கார்யாணி ச யான்ய பீப்ஸதி –3-

சகல பிராணிகளுக்கும் சேஷியாய் -ஸகல சேதனர்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குபவராய் –
ஜனார்த்தனன் என்ற திருநாமம் கொண்ட பெருமாளை
இடைவீடு இன்றி சிந்தனை செய்யும் மனிதன் ஸகலவிதமான கெடுதல்களை தவிர்த்துக் கொள்கிறான்
சாதித்திக் கொள்ள விரும்பும் சகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்கிறான் –

———

ஸ்ருணுஷ்வ ஸான்யத் கததோ மமாகிலம் வதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் பிரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி–4-

மேலும் நான் உரைக்கக் கேளீர்
ஸர்வார்த்த ஸித்தியைத் தரவல்லதும் ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ -அது தன்னைச் சொல்லா நின்றேன் –

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

இது முதல் ஸ்தோத்ரம் தொடக்கம்
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்கிறபடியே
ஸகல சராசரங்களும் யாவன் ஒரு எம்பெருமான் பக்கலிலே ப்ரதிஷ்டிதம் பெற்று இருக்கின்றனவோ

ய ஜகத் த்ரயே
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணன் என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்று உலகினுள்ளும் பிரதிஷ்டித்தனாய் இரா நின்றானோ

யச் ச ஜகதஸ் ஹேது
ஸகல ஜகத் காரண பூதன் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -த்ரிவித காரணமும் யாவன் ஒருவனோ
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹகாரி காரணம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்

ய ஜகத் ச பாதி ச யத்தி
காரண பூதன் ஒருவனாய்
ரக்ஷக ஸம்ஹாரங்கள் வேறு ஒருவராய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கும் இவனே கர்த்தா
அத்தி -என்று ஸ்ருதி சாயையிலும் ஸூத்ர சாயையிலும் ஸம்ஹரதியைச் சொன்னவாறு
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும்
ஆதேய பூதனாயும்
தத்புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தனாயும்
இரா நின்ற ஸர்வேஸ்வரேஸ்வரன்

யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மங்கள விவ்ருத்தி ப்ரதானாக வேணும் என்றதாயிற்று
ஸர்வதா -மத்யம தீப நியாயத்தாலே மூன்றாம் பாதம் நான்காம் பாதம் இரண்டுடன் அன்வயம்

———-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணு தரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–6-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான்
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய் -என்கிறபடியே
பஞ்ச பூதங்களாக விரிந்தும்

யோ அணு தரோணு பாவாத்
அணு பாதார்த்தங்களிலும் அணுவாய்

அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும் ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும்
இருக்கும் பரம புருஷன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மாங்கள்ய விருத்தியைத் தந்து அருள வேணும்

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய்

————-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத நந்தாத் அநாதி மத்யாததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேது பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–7-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத்
அநந்தத்வமாவது -பரிச்சேத ரஹிதத்வம்-தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேத ராஹித்வத்தைச் சொல்கிறது
எப்பொருளும் தானாய் -வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாததிகம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே மத்யமும் இல்லாதவன்

ந கிஞ்சித் ஸ ஹேது ஹேது
கார்ய பதார்த்தங்களை எல்லாமே காரண பூதன்

ஸ ஹேது -பதம் கார்ய பதார்த்தங்களைச் சொல்லுகிறது —
ஹேதுவுடன் கூடியதாகில் அது கார்யமாகவேதானே இருக்க வேண்டும்

பரமேஸ்வரேஸ்வரோ –
பரமேஸ்வரன் என்ற பேர் பெற்றவனுக்கும் ஈஸ்வரனானவன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–8-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்டியும்
ருத்ரனை ஆவேசித்து ஸம்ஹாரத்தையும்
ஸ்வேந ரூபேண நின்று ரக்ஷணத்தையும்
பண்ணிப்போருவதாக ஸாஸ்த்ரம் சொல்வதையே பூர்வ அர்த்தம் சொல்லுகிறது

குணாக் ரணீர் யோ பகவான்
குண ஸப்தம் குணவான்களைச் சொல்லுகிறது –
குணவான்களுக்குள்ளே தலைவன் என்கை
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவன் என்றவாறு

ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதீநாம் பரமோ முனீ நாம்
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–9-

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தால்ப்ய மகரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading