மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.
இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.-ஸ்ரீநம்மாழ்வார்
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.
இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.
திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.
கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்
இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.
கோயிலின் பெருமைகள் ;
1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.
2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.
3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.
4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.
5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.
6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .
திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:
புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே
மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.
திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்
காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது
————————
புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே
புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்
16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்
புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்
2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே
3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்
4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்
5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து
சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக
7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்
8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –
நீலாத்ரி இவ –
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்
10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்
11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்
த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு
13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்
நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்
15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்
16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்
———————-
உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்
விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –
வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது
திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே
புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –
வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –
பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்
உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –
ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –
வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்
வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –
——————————————————–
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-
தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்
———–
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே
———–
திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்
பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே
திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி
————
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-
செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-
பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-
செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-
வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-
ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்
——
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-
——–
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்
வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-
திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —
கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்
இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது
———–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீகண்ணபுரநாயகி ஸமேத ஸ்ரீநீலவண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply