ஸ்ரீ உவாஸ
1- யா ஸா ஷாட் குண்ய தேஜஸ் ஸ்தா க்ரியா சக்தி ப்ரகாசிதா
ஆக் நேயம் ரூபம் ஆஸ்ரித்ய ஸா தத்தே பவ்ருஷம் வபுஸ்
2- சர்வ அஸ்த்ர சாஸ்த்ர ஸம்ஸ் யூதம் ஸூர்ய ஸோம அக்னி மூலகம்
மஹத் ஸூ தர்சனம் நாம நாநா ரூப உப ஸோபிதம்
ஆறு குணங்களில் தேஜஸ் பிரதாநம் -குணங்களின் சாரமே க்ரியா சக்தி -புருஷ ரூபம் கொண்டது –
அவள் அக்னி ரூபமாகக் கொண்டு உள்ளாள்
அவள் ஸூர்யன் சந்திரன் அக்னி யிலிருந்து வெளிப்படுகிறாள்
அனைத்து அஸ்த்ரங்களையும் தன்னுள் கொண்டவள்
பெருமை மிக்க ஸூ தரிசனமாக -பல பெயர்களைக் கொண்டும் பல ரூபங்களை உள்ளடக்கியவளாக இருக்கிறாள் –
3- தஸ்ய மத்யே ஸ்திதா ஸக்தி பவ்ருஷீம் தனுமாஸ்திதா
ஸுவ்ம்ய அக்னேய ஸ்வரூபேண தத் தத் கால வ்யவஸ்தயா
ஸூ தரிசனத்தில் இருதயத்தில் புருஷ வடிவில் சக்தி சோமன் அக்னி போன்று உள்ளது
அந்த அந்த நேரத்துக்கு ஏற்ப இயங்க வல்லது
4-புரஸ்தாத் தர்சிதஸ் தஸ்யா வாசகஸ் தே சதுர்வித
தத்ர ஸம்ஜ்ஞாமயோ மந்த்ரோ பூயஸா பல வத்தர
சக்தியைக் குறிக்க வல்ல நான்கு வித ஒலிகள் பீஜம் பிண்டம் ஸம்ஜ்ஞா பதம் குறித்து முன்பு பார்த்தோம்
இதில் ஸம்ஜ்ஞா மந்த்ரம் பலம் பொருந்தியது
5-தஸ்ய வ்யாக்யாம் இமாம் சக்ர கதந்த்யா மே நிசா மய
யா ஸா ஸோம ஆத்மிகா சக்தி உன்மேஷ ப்ரதமோ ஹரி
சோமனை உள்ளடக்கிய அந்த சக்தி ஹரியின் இயங்கு நிலையான உள்ள ஸ்ரீ என்னும் நானே ஆகிறேன்
இதுவே ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்து -ஸ -முதன்மையாக சக்தியாகும் –
மூல சக்திர் அஹம் ஸ்ரீ ஸா ப்ரதம அக்ஷர ஸம்ஸ்திதா
அம்ருதா த்ருப்தி ரூபா ச ஸோ மாத்மா ச அகிலேஸ்வரீ –6-
சோமனை உள்ளடக்கியது -மூல சக்தி நானே –
ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்தில் உள்ள அவள் அம்ருதம் ஆவாள்
சோமனுடைய ஆத்மாவாக உள்ள அவள் அனைத்திற்கும் ஈஸ்வரீ ஆவாள் –
அம்ருதீ கரணம் குர்யாத் ஸர் கஸ்ய இந்து கலாஸ்திதா
சீரஸ் பத்மா தயோ மந்த்ரா பரமேஸ்வர யுக்தயா –7-
அநயா ஸ்ருதயா குர்யாத் த்ருப்திம் ஸம் ஸித்தி மேவ ஸ
ஸ்ருஷ்டி க்ருத் ஸம்யுதா ஸேயம் ஜீவ ஸக்தி ஸநாத நீ –8-
சந்திரன் ஒளியில் உள்ள அம்ருதம் மூலம் ஸ்ருஷ்டி ஏற்படுத்துகிறாள்
ஓம் ஸ சீரஸே ஸ்வாஹா
ஓம் ஸ ஸ்ரீ நிவாஸ பத்மாய ஸ்வாஹா –சீர பத்ம மந்த்ரங்கள்
அவளால் இணையப்பட்டு -ஸ -பரமேஸ்வரனைக் குறிக்கும் அக்ஷரம் -அதாவது -ஹ -சேர்க்கப்பட்டு
மன நிறைவு -மற்றும் வெற்றியை அளிக்கும்
அதே எழுத்து -ஸ -ஸ்ருஷ்டி க்ருத் -என்னும் அஷரத்துடன் சேர்ந்து ஜீவ சக்தி ஆகிறது –
த்ரை லோக்ய ஐஸ்வர்யத உபேதா வாயு வேஸ்ம அக்ஷர ஸ்திதா
தாரா காரா ரிபோர் மூர்திநி சிந்த்யேச் சேதன ஸித்தயே –9-
எதிரிகளை வெல்லும் சக்தி -அவள் சப்தம் ஸ -வாயுவை உள்ளடக்கிய -ய -த்ரை லோக்ய ஐஸ்வர்யம் ம் சேர்த்து
ஸயம்-தாரகை உருவகம் செய்து எதிரில் தலை மேல் நிற்பதாகக் காண வேண்டும் –
அப்ரமேய உப கூடாயா அக்னீ ஷோம மயீ ஜூஷ
அஸ்யா ஸக்தே ஸமுத் பூதம் ஸூ க்தம் பவ்ருஷம் உஜ்ஜ்வலம் –10-
அப்ரமேயன் -அகாரத்தில் மறைந்து உள்ளவன் -அக்னி சோமன் மற்றும் உள்ள அனைத்திலும் அந்தர்யாமி –
பரம புருஷன் -தேஜஸ்ஸூ உடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இந்த சக்தியில் இருந்து வெளிப்படுகிறது –
ஏததா தீநி ஸூக்தாநி ஸஹஸ்ர ம்ருஷயோ விது
நித்யாம் ஆப்யா யதே மந்த்ர ஸ அயம் அக்னி ஜூஷா மயா –11-
புருஷ ஸூக்தம் -ஆயிரக் கணக்கான ரிஷிகள் அறிவார்
குனியில் வசிக்கும் என்னால் பரவசப்பட்டு உள்ள இந்த மந்த்ரம்
உபாசகனுக்கு அனைத்தையும் அளிக்கும்
தத் தத் கார்ய ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா
அநயா யந்ந ஸாத்யதே ந ததஸித ஜக த்ரயோ –12-
ஸூர்யன் சோமன் அக்னி -ஆகியவற்றையும் குறிக்கும் அக்ஷரங்களில் உள்ள மூன்று சக்திகளில் உள்ளதும்
அனைத்து வழிபாடுகளிலும் உள்ளதும் ஆகிய இந்த சக்தி மூலம்
மூன்று லோகங்களிலும் அடைய முடியாதது ஒன்றுமே இல்லையே –
ஸூதே ஸா ஸகலா சக்திர் அநு ஜாநாதி தா புந
ஸம் ஹரந்தீ புநஸ் சைதா இதி ச சமர்யதே தத –13-
ஸ்வம் உன்மேஷம் அதிஷ்டாய பரமாத்மா ஸ சக்தி ராட்
உதிதோ ஜகத அர்த்தாய ஹேதி தேவ ஸநாதன –14-
அவளே அனைத்து சக்தியையும் ஸ்ருஷ்டித்து -செயல்களில் ஈடுபடுத்தி -லயிக்கும் படி செய்கிறாள்
ஸூர்யச்ச போக்த்ருதாம் ப்ராப்ய ப்ராணயந் ப்ராண இஷ்யதே
ஆத்மாநம் தர்சயத்யேஷ த்ரை லோக்ய ஐஸ்வர்யத அந்வித –15–
ஹ்ருத் புண்டரீக மத்யஸ்தம் யம் விசின் வந்தி யோகிந
யதாவத்ம் த்யா யதோ வேத்யம் முக்தே ஷோர் வேக வத்தயோ –16-
ஸூர்யன் முக்கிய பிராணன் -ஹ
த்ரை லோக்ய ஐஸ்வர்யம் -ம்
ஹம -தாமரை போன்ற உபாஸகனது இதயத்தில் வெளிப்படும்
பிரகர்ஷேண ஓந் நயன் ப்ராணன் ப்ராண இத்யேஷ சப்த்யதே
இந்து மண்டல ஸம் வீதோ வ்யாபிமாந ப்ரமேயவான் –17-
ஜிஹ்வா மூலஸ் திதோ த்யாதோ வாக் ப்ரவ்ருத்திம் நியச்சதி
அம்மண்டலே ஸ்திதோ த்யாத ஸ ஏவ ஹி ஸூதாம் ஸ்ரவன் –18-
நிர்விஷீ கரணம் த்யாத கரோதி ஜகதாமபி
ராம உப கூடா தஸ் மத்தி ஸ்ரீ ய ஸூக்தம் சமுத்கதம்–19-
முக்கிய மூச்சுக்காற்றை சக்தி கொண்டதாகச் செய்வதால் அது பிராணன் எனப்படுகிறது
அந்த ஹ என்னும் எழுத்தானது சந்த்ர மண்டலத்தில் மறைவாக நின்று வ்யாபி மற்றும் அப்ரமேய எழுத்துக்களுடன் சேர்ந்து –
அதாவது ம் மற்றும் அ -இதன் மூலம் அஹம் என்பது கிடைக்கிறது
நாக்கின் வேர்ப்பாகத்தில் இருந்து வெளிப்படுவதாக த்யானிக்கப் பட்டு -வாக்கை உண்டாக்குகிறது
அதே எழுத்தானது அம் என்னும் ஓசையில் உள்ளதாக த்யானிக்கப்பட்டு
அம்ருதத்தை வெளிப்படுவதாக எண்ணப்பட்டு இந்த ஜகத்தில் உள்ள அறியாமை என்னும் விஷங்களை அகற்றுகிறது
இந்த எழுத்துடன் ராம என்னும் எழுத்தம் சேரும் போது ஸ்ரீ ஸூக்தம் வெளிப்படுகிறது –
ஏததாதீநி ஸூக்தாநி ஸஹஸ்ரம் ருஷயோ விது
தத் தத் கால ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா –20-
அநேந யன்ன ஸாத்யதே ந ததஸ்தி ஜகத் த்ரயே
ஹன்யதே சகலம் லோகம்கமயத் யமலம் பதம் –21-
வ்யாஜயத் யகிலம் க்லேசம் கம்யதே யோக சிந்தகை
ஹேத்யேவம் கத்யதே ஸத் பிரேவம் நிர்வச நாஸ்திதை –22–
இது போன்ற ஸூக்தங்களை ஆயிரக் கணக்கான ரிஷிகள் நன்றாக அறிவர்
ஒவ்வொரு ஸூ க்தமும் ஸூர்யன் அக்னி மற்றும் சந்திரன் ஆகிய சக்திகளைக் குறிக்கும் எழுத்துக்களுடன்
ஏதேனும் ஒரு கட்டத்தில் சம்பந்தம் கொள்கிறது
இந்த ஹ என்னும் எழுத்து கொண்டு மூன்று லோகத்தில் செய்ய இயலாதது என ஏதும் இல்லை
இது உபாசகனுடைய அனைத்து தடைகளையும் விலக்கி அவனைத் தூய்மையான நிலைக்குக் கொண்டு செல்கிறது
யோகிகள் விஷயத்தில் அந்த எழுத்தானது அனைத்து துன்பங்களையும் விலக்குவதாக உள்ளது
யார் ஒருவர் சத்வ வழியில் நிலை நின்று சரியான விளக்கத்தை அளிப்பவர்களாக உள்ளனரோ
அவர்கள் இவ்விதமே- ஹ -என்பதைக் குறித்து உரைக்கிறார்கள் –
அசேஷ புவன ஆதாரா சங்கல்ப ப்ரபல க்ருதா
ப்ரத்யபிஞ்ஞாயதே சைவ ஸத் பிரேவம் நிர்வசனஸ்திதை –23–
சரத்யஸ் யாச்சலம் ஸர்வம் ஸ்த்ரியதே சகலை ஸதா
ப்ருதிவீ ஸம்ஸ்திதா ஸேயம் ஸ்தம்பே ஸ்ருத்யா நியுஜ்யதே –24-
அசேஷ புவன ஆதார-ர என்னும் எழுத்து கொண்டவளும்
பரமாத்மாவின் அதே சக்தியானவளும் ஆகிய அவளை மேலும்
சுதந்திரமாக செயல்படத் தூண்டுவது -ஸ்ர -என்னும் ஒலியின் மூலம் அறியப்படுகிறது
அசையக்கூடிய அனைத்தும் அவள் இடம் இருந்தே வெளிப்பட்டு பாதுகாப்புக்காக அவளையே அண்டுகின்றன –
ப்ருத்வீ என்னும் ஒலியில் -அதாவது -க -உள்ள அதே சக்தியானவள் ஸ்ருஷ்ட்டின் அசையாமல் நிலை கொண்டு
அனைத்தையும் பாதுகாக்கும் செயலிலும் ஈடுபட்டபடி உள்ளாள் –
ஸஹோ நாம பலம் தத்ர ரமதே தத் ஸஹஸ்ர தா
ஸஹஸ்ர தி ஸஹஸ்ரா ஸ்யாத் அக்னீ ஷோ மாத்மநோ மம –25-
பலம் என்னும் பொருள் கொண்டதான ஸஹஸ் என்னும் ஸப்தம் ஆயிரக் கணக்கான வகையில் களித்தபடி உள்ளது
இப்படி அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய என் சக்தியானது ஆயிரக்கணக்கில் வெளிப்படுகிறது
இதுவே ஸஹஸ்ரா எனப்படுகிறது –
அக்னீ ஷோ மமயீ ஸ மே ஸக்தி ஸர்வ க்ரியா கரீ
ஸூ ஸங்கல்ப ஸமித்தா ஸா தேஜஸாம் ராசி ருர்ஜிதா –26-
ஸம் பிராப்யை வாநலம் பாவம் கால பாவ கதாம் கதா
ரேத்யேவம் கேவலீ பூத்வா ஜ்வலத்ய விரதோ தயா –27-
பரமேஸ்வர பூதா ஸ பரமாச்சர்ய காரிணீ
ர இத்யேவ மஹா சக்திர் மதீ யாத்யா க்ரியாஹ்வயா –28-
அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய எனது சக்தியானது அனைத்து விதமான செயல்களையும் செய்ய வல்லதாகும்
சரியான எண்ணங்கள் மற்றும் ஓங்கி நிற்கும் வலிமை ஆகியவற்றால் தூண்டப்படும் அவள் அக்னியின் உள்ளே இருப்பவளாக
அனைத்தையும் அழிக்க வல்ல அக்னி நிலையை அடைகிறாள்
ர -என்பதின் தூய்மையான நிலையில் அவள் மிகுந்த ஆற்றலுடன் ஒளிர்ந்தபடி உள்ளாள்
அவள் பரமேஸ்வரன் என்னும் -ஹ் -எழுத்துடன் சேர்ந்து வியக்க வைக்கும் செயல்களை செய்கிறாள்
ர் என்பதே எனது மஹா சக்தியான க்ரியா என்பதாகும் –
சங்க்யா அநந்த்யம் ஸஹஸ்ரம் ஸ்யாதரா நந்த்யம் தத் உச்யதே
வர்ம அஸ்த்ரயோ ஸ்வரூபம் ச தர்சிதம் தே புரந்தர –29–
ஸஹஸ்ரம் என்பது எண்ணற்ற என்பதைக் குறிக்கும்
இது ஸூதர்சனத்திலே உள்ள ஆரங்களாகும்
புரந்தரன் உனக்கு வர்மம் அஸ்திரம் இவற்றின் ஸ்வரூபம் பற்றி உனக்கு முன்பே கூறினேன் –
த்ருவச்ச ப்ரணவ அஸ்யாதி பூர்வமேவ நிரூபித
ஏவமேவ மஹா மந்த்ர ஸப்த ப்ரஹ்மோத்கதோ –30–
கிரியா சக்தியின் தொடக்கமாக பிரணவம் த்ருவம் உள்ளதாக முன்பே நிரூபித்தேன்
இப்படியாக இந்த மஹா மந்த்ரம் ஸப்த ப்ரஹ்மத்தின் முழு சக்தியும் உள்ளடக்கி இருக்கும் –
அதர்வணீ மஹா சக்திர் கிரியா சக்திர் ப்ரியா தநு
த்ரயீ சாரோ ஹி அர்த்த வாக்யா பஞ்ச பர்வா மஹா ஸ்ருதி –31-
மந்த்ரேண ஸூயதே அநேந சாரேணேவ வனஸ்பதி
அஸ்ய த்வங்க விதா நஜ்ஞா ஷடங்காநி ப்ரசக்ஷதே –32
மஹா ஸ்ருதி என்று கொண்டாடப்படும் அதர்வண வேதத்தில் உள்ள மஹா சக்தி கிரியா சக்தியின் பிரியமான சரீரம்
இந்த வேதம் ஐந்து பகுதிகளைக் கண்டது
நக்ஷத்ரம் விதாநம் விதிவிதாநம் ஸம்ஹிதை சாந்தி
இதுவே மற்ற மூன்று வேதங்களின் சாரம் -உரம் போல் வேத மரத்தை இதுவே வளர்க்கும்
சாஸ்திரஞ்ஞர் இத்தை ஆறு அங்கங்களாகக் கொண்டதாக உள்ளது என்பர் –
காயத்ரீம் அபி சக்ராக்யாம் ப்ராகாரம் ச அக்னி சம்ஜ்ஜிதம்
கோப நாத் வருணோத் ஸே தாத் ஸ உதயாத் அம்ருதாத் ததா –33-
அந்த ஸூதர்சனத்திற்கு சக்ரா என்னும் காயத்ரி மந்த்ரம் உள்ளது -அதனை அக்னி சூழ்ந்து உள்ளது
கோபந அக்ஷரம் -ஆ -வருண அஷரத்துடன்-வ – சேர்க்கப் படுகிறது
இது போன்று அம்ருத அக்ஷரம் -அ -உதய அஷரத்துடன் -உ-சேர்க்கப்பட்டு
வாம் ஸூ ம் என்ற மந்த்ரம் ஆகிறது –
சக்ராய ச ஸ்வாஹா ஹ்ருதா திஸ்து சிகா வதி
ஸூர்ய ஜ்வாலா பதாச்ச ஊர்த்வம் மஹா யுக்தாத் ஸூதர்சநாத் –34-
ஊர்த்வம் சக்ராய ஸ ஸ்வாஹா வர்மாத்ய அஸ்த்ராந்தகோ விதி –35-1-
இதைத் தொடர்ந்து சக்ராய ச ஸ்வாஹா என்பது அமைகிறது
அடுத்து ஹ்ருதயம் என்பது தொடங்கி சிகா முடிய முதல் மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப்படுகின்றன
இதன் பின்னர் ஸூர்ய அக்ஷரமும் -ஹ -ஜ்வாலா என்கிற பதமும் சேர்க்கப்படுகின்றன
அதன் பின்னர் ஸூ தர்சன என்கிற பதமும் சேர்க்கப் பட்டு தொடர்ந்து மஹா சப்தமும் இணைக்கப்படுகிறது –
அதன் பின்னர் சக்ராய ச ஸ்வாஹா -என்பது சேர்க்கப்படுகிறது
தொடர்ந்து வர்மம் தொடங்கி அஸ்திரம் முடிய உள்ள இறுதி மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப் படுகின்றன –
நமச் சக்ராய தஸ் யாந்தே வித்மஹே அசவ் சதுர்யுக –35-2-
ஜ்வாலாய ச ஸஹஸ்ராந்தே தீ மஹி இதி நவார்ணக
தந்ந ப்ரசோதயாந் மத்யே சக்ர இதி அஷ்ட வர்ணக–36-
அதன் பின்னர் நம சக்ராய -என்பதான நான்கு எழுத்துக்களும்
தொடர்ந்து -வித்மஹே -என்பதும் அமைகிறது
மேலும் தீ மஹி என்பதுடன் இணைந்த ஸஹஸ்ர என்பதன் பின்னால் ஜ்வாலாயா என்பது சேர்க்கப்படுகிறது
இந்த மந்த்ரம் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாகும்
இதன் பின்னர் சக்ர என்பது நடுவில் சேர்க்கப்பட்டதான
தந்ந மற்றும் ப்ரசோதயாத் என்பதுடன் கூடிய எட்டு அக்ஷரங்கள் இணைகின்றன
இந்த மந்திரத்தின் முழு வடிவமானது
வாம் ஸூம் சக்ராய ச ஸ்வாஹா
ஓம் ஹம் நாம ஓம் ஹம் ஸ்வாஹா
ஓம் ஹிம் வஷாத் ஹம்ஸாய
ஹ்ரம் மஹா ஸூ தர்சனாய சக்ராய ஸ்வாஹா
ஓம் ஹும் ஓம் ஓவ்ஷத் ஓம் பட் நம
சக்ராய வித்மஹே ஸஹஸ்ர ஜ்வாலாய தீ மஹி
தந் ந சக்ர ப்ரசோதயாத் –
முஷ்டிம் விதர்ஜ நீம் க்ருத்வா தர்ஜ நீம் தர்ஜ ஸம்ஸ்திதாம்
பரிதோ ப்ராமயேத் வஹ்நீம் த்யாயந் ப்ராகார ஸம்ஸ்திதம்–37-
கை விரல்கள் அனைத்தையும் முஷ்டியில் மடக்கி –
ஆள்காட்டி விரல்களை மட்டும் எச்சரிப்பது போன்று நீட்டியபடி
த்யானத்தில் ஆழ்ந்துள்ள உபாசகன் கீழே உள்ள அக்னியைத் தனது கரங்களால் சுற்ற வேண்டும் –
அந்யோன்ய சம்முகே பாணி தலே வை தஷிண உத்தரே
கநிஷ்ட அங்குஷ்ட யோரக்நே ஸ்லிஷ்டே தீர்க்காஸ் ததா பரா –38–
அதன் பின்னர் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஓன்று பார்க்கும் படியாக வைத்து
சுண்டு விரல் மற்றும் கட்டை விரல் ஆகியவற்றின் நுனிகள் தொடும்படி யாகச் செய்து
மற்ற அனைத்து விரல்களையும் நேரே இருக்கும்படியாக வைத்து
தனது கைகளை ஒரு வட்டம் வரைவது போல் சுற்ற வேண்டும் –
பரிதோ ப்ராமயே தேவம் சக்ர முத்ரே யமீ ரிதா
அங்க முத்ராஸ் து வஹ்யதே சக்தி க்ராஸ மநும் ஸ்ருணு –39-
இது சக்ர முத்திரை எனப்படும்
அங்க முத்ரை குறித்து பின்னர் கூறப்படும்
அடுத்து சக்தி க்ராஸம் என்னும் மந்த்ரம் பற்றிக் கேட்பாயாக –
பவித்ரம் அநலா ரூடம் ஸ வ்யாபி ப்ரணவாத் பரம்
மஹா ஸூ தர்சன இதி ஏவம் சக்ர ராஜம் மஹாத் வகம்–40-
ததஸ் அஸ்த கதத் இதி அஸ்மாத் ஸர்வ ஜூஷ்ட பயங்கர
சிந்தி சிந்தீத் யதஸ் பச்சான் பிந்தி பிந்தி ப்ரகீர்தயேத் –41-
விதாரய த்வயம் பச்சாத் பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ
த்விர் பக்ஷயேதி பூதாநி த்ராசயேதி த்விர் உச்சரேத் -42-
வர்மாஸ்த்ர வஹ்னி ஜாயா ஸ்யுர் சக்தி க்ரஸ ந க்ருந் மநு
ஸ்வயம் ஸூ தர்சநோ பூத்வா மந்த்ரம் உச்சாராயன் இமம் –43-
சக்திம் முக ஹ்ருதாதிப்ய பரஸ்யா ஸூஷ யோத்தியா
ஷட ஷரஸ்ய மந்த்ரஸ்ய ஸ்ருணு த்யானம் புரந்தர –44-
ப்ரணவத்தைத் தொடர்ந்து வருகின்ற பவித்ரம் -ப சப்தமானது
அநலம் -ர -என்பதுடன் சேர்க்கப்பட்டு
இதனுடன் வ்யாபின் -ம் -என்பது இணைக்கப்படுகிறது
அதன் பின்னர்
மஹா ஸூ தர்சன -சக்ர ராஜ -மஹாத் வக -என்னும் சொற்கள் சேர்க்கப்படுகின்றன
இவற்றைத் தொடர்ந்து
அஸ்த கத சர்வ துஷ்ட பயங்கர சிந்தி சிந்தி என்பதும் –
பிந்தி பிந்தி -என்பதும் உச்சரிக்கப்பட வேண்டும்
பின்னர்
விதாரய-என்பது இருமுறை கூறப்பட்டு
பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ -என்பது கூறப்பட்டு
பக்ஷய என்பது இரு முறை கூறப்பட்டு
தொடர்ந்து பூதாநி என்பது கூறப்பட்டு
த்ராஸய -என்பது இருமுறை கூறப்பட்டு
வர்மத்துடன் –ஹும் –
அஸ்த்ரத்துடன் -பட் –
அக்னியின் மனைவி பெயருடன் -ஸ்வாஹா –முடிக்கப்பட வேண்டும்
இந்த மந்த்ரம் மந்த்ர க்ரஸ்னம் எனப்படும்
இந்த மந்த்ரத்தை உச்சரித்த படியே உபாசகன் தன்னை ஸூதர்சனத்துடன் இணைத்து எண்ணி
தனது விரோதியின் சக்தியை அந்த விரோதியின் இதயம் மற்றும் வாய் வழியாக உறிஞ்ச வேண்டும்
இந்திரனே அடுத்த ஆறு எழுத்து கொண்ட மந்த்ர த்யானம் குறித்து கூறக் கேட்ப்பாயாக
இது ஸஹஸ்ரார மந்த்ரம் ஆகும் –
ந்யஸ்த அங்கச் சக்ர முத்ராபிர் வஹ்நி ப்ரகார மத்யக
ஸஹஸ்ரார மஹா சக்ரம யுதாக்நி சயோத் கடம் –45
ஷடத்வ மயம் உத் ப்ராந்தம் த்யாயேந் மச்சக்தி ஜ்ரும்பிதம்
அக்ஷஸ்தம் பரமாத்மாநம் நாராயணம் அநா மயம் –46-
சக்ர ரூபிணம் ஈஸாநாம் த்யாயேத் குங்கும ஸம் நிபம்
பீதாம்பரதரம் திவ்யம் முக்தாலங்கார பண்டிதம் –47–
சக்ர முத்ரையுடன் கூடிய அங்க ந்யாஸம் செய்த உபாசகன் ஒருவன் அக்கினியுடன் கூடிய புனிதமான இடத்தில்
ஆயிரம் ஆரங்கள் கொண்ட சக்ரத்தை தியானிக்க வேண்டும்
அந்தச் சக்ரமானது பல ஆயிரக் கணக்கான அக்னியின் பிரகாசம் கொண்டதாக உள்ளது
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளையும் வியாபித்து உள்ளது
எல்லையற்றதான அந்தச் சக்கரம் எனது சக்தியில் இருந்து விரிவதாக உள்ளது
அதன் அச்சுப்பகுதியில் தோஷங்கள் ஏதும் அற்றவனும் பரமாத்மாவுமாகிய நாராயணன் உள்ளான்
அவனையே அந்தச் சக்ர ரூபத்தில் ஈசனாகக் கொள்ள வேண்டும்
அவன் குங்குமக் குழம்பு நிறத்தில் பட்டுப் பீதாம்பரம் உடுத்தி திவ்யமாக முத்து ஆபரணங்கள் அணிந்தவனாக உள்ளான் –
ஏதம் அஷ்ட புஜம் த்யாயேந் மஹா வ்யஸந ஸம்ப்லவே
உத் யஜ்ஜா நும் அநேகாஸ்திரம் ஸ்திதம் பரம சோபனம் –48–
மிகுந்த ஆபத்தான நேரத்தில் அவன் எட்டுத் திருக்கரங்கள் மற்றும் திருவடிகளுடன் கூடியவனாக
திருக்கரங்களை உயர்த்தி நிற்பவனாக -பலவிதமான ஆயுதங்கள் தரித்தவனாக
மிகவும் அழகானவனாக இருப்பதை தியானிக்க வேண்டும் –
சக்ரம் முஸல முத்தாமம் அங்குசம் ஸரஸீ ருஹம்
யாம்யே கர சதுஷ்கே அத வாமே புஜ சதுஷ்டய –49–
சங்கம் பாண யுதம் சாபம் பாசம் குர்வீம் கதாம் அபி
ததாநம் தக்ஷிணம் திவ்யம் தம்ஷ்ட்ரா பாஸ்வரி தாநநம் –50-
தனது வலப்புற நான்கு திருக்கரங்களில் சக்ரம் சக்தி கொண்ட முஸலம் அங்குசம் மற்றும் தாமரை கொண்டவனாய் உள்ளான்
இடப்புற நான்கு திருக்கரங்களில் சங்கு வில் அம்பு பாசக்கயிறு மற்றும் வலிமையான கதை கொண்டவனாய் உள்ளான்
திவ்யமான திரு முகம் பற்களின் ஒளி மற்றும் கருணையுடன் கூடிய திருக்கண்களால் அழகாக உள்ளது –
பிங்காக்ஷம் பிங்க கேஸாடயம் ஜ்வாலா மாலா பரிஷ்க்ருதம்
அத ஷோடஸ ஹஸ்தம் ச த்யாயேத் ஏவம் ஸூ தர்சனம் –51-
அடர்த்தியான திருக்கேசம் கொண்ட அவனைச் சுற்றி அக்னியானது மாலை போன்று அமைந்து உள்ளது
இப்படியாக பதினாறு திருக்கரங்களுடன் கூடிய ஸூ தர்சனத்தை மட்டுமே தியானிக்க வேண்டும் –
பரைஸ் பரிபவ ப்ராப்தே ப்ரீதி கார விவர்ஜிதே
ஸ்தி தாவ நவ க்ல்ருப்தாயாம் அபி நிர்ஜித்ய வைரிண –52-
பயே மஹதி ஸஞ்ஜாதே சோர வ்யாக்ராத் விபாதிபி
ப்ரத்யா லீட ஸ்திதம் தேவீம் வைரி வர்கதி குந் முகம் –53-
ப்ரஹாரோத் யோகி பிர் பீ நைர் புஜைர் ஊர்த்வைர் அலங்க்ருதம்
சக்த்யா தீப்தேந கங்கே ந வஹ்னி நா சதார் சிக்ஷ –54-
அங்கு சேநாத தண்டேந குந்தே நாத ஜ்வலத் விசா
பரஸ்வதேந சக்ரேண தஷிணாத கரைஸ் க்ரமாத் –55-
சங்கேந சாப முக்யேந பாஸே நாத ஹலே நச
குலிசேந கதாஸ் த்ரேண முஸலே நாத ஸூலத –56-
ஊர்த் வாததஸ் ஸ்திதைர் வாபை ப்ரதீப்தை ராயுதைர் யுதம்
தம் ஷ்ட்ரா நிஷ்ட யூத கோராக் நி ஜ்வாலா கோலா ஹலா குலம் –57
ஸம்ஸ் யூத தத்த்வயா கீர்ணம் திவ்யஉலா வந மாலயா
கோராட்ட ஹாஸ ஸம் த்ரா சத்ர வதைத் யேந்திர தா நவம் –58
ஜ்வாலா குல ஜ்வலத் தைத்ய மேதோ மேதுர பாவகே
அயுதா யுத வஹ் நீ நாமஸ் பதே தீப்த தேஜஸாம் –59-
அத் வஷட் கமயே சக்ரே சக்ரிணம் சக்ரம் உத்தமம்
த்யாயே தேவம் விதம் தேவம் மயே மஹதி மாநவ –60-
வெல்ல இயலாதபடி உள்ள எதிரியிடம் தவிர்க்க இயலாத தோல்வியை அடையும் போதும்
அவர்கள் வெல்ல இயலாத படியான இடத்தில் உள்ள போதிலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்னும் போதும்
திருடர்கள் புலி இவற்றால் ஆபத்து நேரிடும் போதும்
பதினாறு திருக்கரங்களுடன் கூடியவனாக உள்ள ஸூதர்சனத்தை
இடது திருவடியை முன்பும் வலது திருவடியை பின்பும்
வைத்து எதிர்க்கத் தயாராக உள்ள நிலையில் இருப்பவனாகத் தியானிக்க வேண்டும்
விரோதியைத் தாக்கும் விதமாக வலிமையான அவன் திருக்கரங்கள் உயர்ந்து நிற்கின்றன
உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் கீழ் இருந்து மேலாக
ஜ்வாலையுடன் கூடிய உலோக உருண்டை வாள்
நூற்றுக் கணக்கான ஜ்வாலையுடன் கூடிய அக்னி மழு கோல்
ஜ்வாலையுடன் கூடிய குறு வாள் கோடாலி மற்றும் சக்கரம் ஆகியவை உள்ளன
உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் மேல் இருந்து கீழாக
சங்கு வில் அம்பு பாசக்கயிறு ஏர் இடி தண்டாயுதம் ஈட்டி ஆகியவை உள்ளன
அவனுடைய பற்களின் ஒளியில் இருந்து புறப்படும் அக்னியின் ஜ்வாலையால் அவன் சூழப்பட்டு உள்ளான்
மேலும் அவனைச் சுற்றி அழகான வனமாலையும் உள்ளது
தனது பயங்கரமான சிரிப்பால் ராக்ஷஸர்கள் மற்றும் தானவர்கள் ஆகியவர்களின் அரசர்களை ஓடும்படி செய்கிறான்
அச்சத்தில் உள்ளவர்கள் அவனுடைய இவ்வடிவை தியானிக்க வேண்டும்
அவனே மஹா விஷ்ணுவின் திருச்சக்கரத்தில் உள்ள அபிமான தேவதையாக உள்ளான்
அரக்கர்களின் எரிகின்ற சதையின் காரணமாக புகையுடன் கூடியதாக உள்ள அந்தச் சக்கரத்தில் அவன் உள்ளான்
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளிலும் இவனுடைய இந்த ஒளியானது காணப்படுகிறது –
ஏவம் த்யாத்வா புந த்யாயேத் சதுர் பாஹும் ஸூ தர்சனம்
அந்யதா நைவ சாந்தி ஸ்யாத் அஸ்தி தேஜஸ் ததா ஹரே –61
மீண்டும் ஒரு முறை நான்கு திருக் கைகளுடன் உள்ள ஸூ தர்சனம் தியானிக்க வேண்டும்
வித்தாகி ஸ்ரீ ஹரியின் சக்தியால் அமைதி ஏற்படும் –
கோர சாந்த விபேதேந பவ்ருஷம் த்யானம் ஈரிதம்
இதி தே ஸூர சார்த்தூல த்யானம் அந் யச்ச மே ஸ்ருணு –62-
இவ்வாறு கோரம் சாந்தம் இரு நிலைகளில் உள்ள புருஷ த்யானம் பற்றிச் சொன்னேன் –
மேல் மற்ற த்யானம் பற்றிக் கேள் –
ப்ரகாரா பவ்ருஷா யே யே த்யாநே அஸ்மின் பரி வர்ணிதா
தான் ஸர்வான் மன் மயா நேவ ஸம்ஸ்மரேத் சீக்ர ஸித்தயே –63-
என்னுடன் சம்பந்தம் பெற்ற பல்வேறு புருஷ நிலைகளை பற்றி ஸதா த்யானம் செய்ய வேண்டும் –
இது விரைவாகவே பலன் அளிக்க வல்லதாகும்
அத்யந்த அபூத மிதம் சக்ர ரஹஸ்யம் தே ப்ரகீர்த்திதம்
பூயோ ரஹஸ்யம் அந்யச்ச ஸ்ருணு மே ஸூர புங்கவ–64-
உனக்கு மிக உயர்ந்த ரஹஸ்ய பரம்பரை பற்றி உபதேசித்தேன் -மேலும் கேள்
ஆக்நேயீ யா மதீயா தே புரா சக்தி ப்ரகீர்த்திதா
ஸூர்ய கோட் யர்புதா பாஸா வஹ்னி கோட் யர் புதோமா –65-
இந்து கோட் யர் புதா பாஸா மம ஸ்பந்த மயீ தனு
அம்ருதம் பரமாத்மாநம் அசேஷ புவநாத் ருதிம் –66-
ஆஸ்தாய பஞ்ச பிந்து ஆத்மா ஸ்ப்ரு சந்தீ வ்யாபி நம் பரம்
ஹிதாய ஸர்வ பூதா நாமு தேதி பரமேச்வராத் –67-
அக்னியை உள்ளடக்கிய எனது சக்தி கோடிக்கணக்கான ஸூர்யன் மற்றும் அக்னி போன்று ஒளிர்ந்து
கோடிக்கணக்கான சந்திரன் போன்ற துடிப்பைக் கொண்டதாகவும் உள்ளது
ஸஹஸ்ரார என்று தொடங்கும் மாத்திரத்தில்
அம்ருதம் -ஸ -பரமாத்மன் -ஹ -அசேஷ புவன ஆதாரம் -ர -ஆகியவை
பஞ்ச பிந்து மற்றும் வ்யாபின் ஆகிய ஒலிகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன –
மிகவும் உயர்ந்த பரமேஸ்வரனிடம் இருந்து உத்பத்தி யாகும் இந்த சக்தியானது
அனைத்து உயிரிகளுக்கும் நன்மை அளிக்க வல்லதாக உள்ளது –
தாமஷம் கல்பயேச் சக்திம் தத் ப்ரபாம் நாபி மண்டலம்
அராணி ஷண் மநோ ரர்ணான் ஸூர்ய உத்தாமவ் ஸ பிந்துகவ் –68-
ஸூஸ்திதவ் நேமி கவ் த்யாயேச் சேஷம் து ப்ரதி மண்டலம்
ஆத்மாநம் மத்யதோ த்யாயேத் ஸ்வம் மாயா பரமாத்மநோ –69-
அந்த சக்தியே ஸூ தர்சனத்தின் நாபியாகும் -அதன் ஒளியே வெளிவட்டம் -மந்த்ரத்தின் ஆறு ஒலிகளும் ஆறு ஆரங்கள் –
ஸூர்ய உத்தாம பிந்து ஒலிகள் அந்த ஆரங்கள் சக்கரத்தில் சென்று இணையும் வட்டத்தில்
உறுதியாக இணைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்
மந்திரத்தில் எஞ்சிய பகுதி -பட் -சக்கரத்தை சூழ்ந்து உள்ளதாகக் கொள்ள வேண்டும்
தனது ஆத்மாவானது மஹா லஷ்மி மற்றும் பரமாத்மாவின் நடுவில் உள்ளதாக தியானிக்க வேண்டும் –
ஸூர்ய அநல அந்தரஸ்தம் ச நிரஸ்யந் ஸம்ஸ்மரேஜ் ஜனம்
த்யா யன்ன நிச மேவம் ஹி யோகீ த்யான பாராயண –70-
விதூய நிகிலம் தோஷம் ஸாம் ஸாரிகம் அசேஷத
மயி பக்திம் பராம் ப்ராப்ய மாமே வாந்தே ஸமஸ்நுதே –71-
தன்னை தனது சரீரத்தில் இருந்து வெளியே எடுத்ததாக எண்ணி
ஸூர்யன் மற்றும் அக்னியில் நான் இருப்பதாக தியானிக்க வேண்டும்
இவ்வாறு த்யானத்தில் ஆழ்ந்த யோகி தனது அனைத்து பாபங்களையும் அந்த த்யானம் மூலமாகவே கழிக்கிறான்
அதன் பின்னர் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவனாக என்னையே தஞ்சம் எனப் புகுகிறான்
அந்தரா பரமாத்மா நம் அம்ருதம் ச ஸ்திதோ ஜபன்
மநீஷீ மனஸா நித்யம் பியூஷாப் யாய நம் ஸ்மரேத்–72-
ஸூ தர்சன மந்திரத்தின் பரமாத்மா மற்றும் அம்ருதம் -ஸ மற்றும் ஹ -ஆகியவற்றை உறுதியுடன் ஜபித்தபடி உள்ள ஒருவன்
அம்ருதத்தைப் பருகினால் உண்டாகும் சுவையை எப்போதும் மனத்தில் சிந்தித்த படி இருக்க வேண்டும் –
ஸூதயா ப்லாவ்ய மாநோ ஹி ஸ்த்ருதயா சக்தி கோடராத்
ப்ராணேந ப்ராண்யமா நச்ச தக்த தோஷோ அநலத் விஷா –73-
பஞ்ச பிந்து க்ரியா லாபாத் ஐஸ்வர்யம் பரமாஸ்தித
சந்தத அப்யாஸ யோகேந வஸீ யுக்தோ ஜிதேந்த்ரிய –74-
விஹாய சகலம் க்லேசம் வேஷ மாஸ்தாய மா மகம்
த்ருப்தோ ஜானபலோ யோகீ க்ரியயா ஸர்வதோ வஸீ –75-
ஹ-அக்ஷரம் யோகிகளின் அனைத்து தோஷங்களும் அநலம் என்னும் அக்னியின் ஜ்வாலைகளால் பொசுக்கப் படுகின்றன
அப்போது அவன் பஞ்ச பிந்து மூலமாக உயர்ந்த ஐஸ்வர்யத்தை அடைகிறான்
தொடர்ந்து யோகத்தைக் கைக்கொண்டு புலன்களை அடக்குகிறான்
என்னால் ஸாம்யா பத்தி அருளப்பெற்று தன்னைத் தன் வசப்படுத்தியவனாக உள்ளான்
ஈஸ்வர பரமோ பூத்வா ஸர்வ வ்யாப்தி மய ஸ்தித
மாமேவ மாமகம் தாம மத் ப்ரஸாதாத் உபாஸ் நுதே –76-
சாம்யா பத்தி அடைந்த அவன் எனது கருணை மூலமாகவே என்னையே அனுபவித்து ஆனந்திக்கிறான் –
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -ஸாயுஜ்யம் அடைகிறான் –
யா கிரியா ஸா சிதாக்யாதா யா சித்தி ஸா பரா க்ரியா
ஏதே ஸ பரமா நந்தாஸ்த்ர யஸ்தே பரி கீர்த்திதா –77-
அகண்டை கா பரா சக்திச் சித் க்ரியா நந்த ரூபிணி
வைஷ்ணவீ ஸா பரா ஹந்தா ஸாஹம் ஸர்வார்த்த பூரணீ –78
கிரியை செயல்பாடு என்று அழைக்கப்படுவது எதுவோ -அது சித் -அறிவு -எனவும் கூறப்படும்
சித்த என்று அழைக்கப்படுவது எதுவோ அது உயர்ந்த கிரியை எனவும் கூறப்படும்
இந்த இரண்டும் மற்றும் பரமானந்தம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு உயர்ந்த சக்தியாக உள்ளது
இதுவே- சித்த கிரியை ஆனந்தம் -ஆகியவற்றின் ரூபமாக உள்ளது
அதுவே விஷ்ணுவின் நான் என்ற எண்ணமாக உள்ளது -அவை அனைத்தையும் நிறைவேற்றுபவன் நானே ஆவேன் –
ஸ்வாச் ஸந்த்யான் மம சங்கல்போ த்விதைவம் ப்ரவிஜ்ரும்பதே
ஏகா சக்திர் க்ரியாஹ் வாநா மஹா பூதிரதாபரா –79-
எனது இச்சையால் எனது சங்கல்பம் மூலம் நான் இரண்டு சக்திகளாக மாறுகிறேன்
அவற்றில் ஓன்று கிரியை எனவும் மஹா பூதி எனவும் கூறப்படுகிறது –
ஸாமான்யதஸ் அனயோர் சக்ர ஸ்திதாஹம் பரமேஸ்வரீ
ஏஷா தே சகலா சக்திர் க்ரியாரூபா பிரதர்சிதா –80-
இந்திரனே நான் அனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளதால் அந்த இரண்டு சக்திக்கும் பொதுவாக உள்ளேன்
இப்படி செயல் ரூபமாக உள்ள அந்த சக்தி மற்றும் அதன் அம்சங்கள் குறித்து அனைத்தும் உனக்கு கூறுகிறேன் –
ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந தாரிகாயா நிசாமய
நிமீ லித க்ரியாகாரா ஸ்பஷ்ட ஐஸ்வர்ய ஸ்வரூபிணீ –81–
தநு ஷாட் குண்ய ரூபா மே பூதிர் ஸா தாரி காஹ்தயா
தஸ்யா ஸ்தூலாதி ரூபாணி யதா வன்மே நிசாம்ய
உச்ய மாநாதி தேவே ச ஸாவதா நே ந சேத ஸா –82-
அடுத்து தாரிக்காவின் ஸ்தூல ஸூஷ்ம நிலையான வடிவம் குறித்துக் கேட் பாயாக
பூதி எனப்படும் தாரிகா ஆறு குணங்களுடன் கொண்ட ரூபம் உள்ளவளாக உள்ளாள்
ஆனால் அவளுடைய குணங்களில் செயல்படும் குணமானது மறைவாகவும் ஐஸ்வர்யம் என்ற குணமானது ஓங்கியும் உள்ளது
அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட் பாயாக –
முப்பத்து ஒன்றாவது அத்யாயம் சம்பூர்ணம் –
——————————————————–361-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம
Leave a Reply